Tuesday 8 December 2015

விஜயசுந்தரி 38

அனிதாவின் பார்வை அவனை எரித்துவிடும் அளவுக்கு இருந்த்து. நாங்கள் கிளம்ப முயல் இன்ஸ்பெக்டர் எங்களை பார்த்து

“மேடம் இவன நாங்க திருவள்ளூர் ஸ்டேஷன்ல ஓப்படைக்கனும் இந்த கேச அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்தான் விசாரிக்கிராரு, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர சிலர் அட்டாக் பண்ணி ஒரு கைதிய தப்ப வெச்சதால இன்ஸ்பெக்டர் ஹாஸ்பெட்டல்ல இருக்காரு, அதனால் இன்னும் ரெண்டு நாளைக்கு இவன இங்கதான் வெச்சிருப்போம்” என்று கூற அனிதா எதுவும் புரியாமல் அவரை பார்த்து

“அதனால் என்ன சார்” என்றாள்.


“அதனால் ஒன்னுமில்ல மேடம் இவரு உங்க முன்னால் கணவருனு சொன்னீங்க ஒரு வேல நீங்க பரிதாப பட்டு இவரு மேல இருக்குற கேச வாப்பஸ் வாங்க நெனைக்கலாம் இல்லயா அதான் ரெண்டு நாள் டைம் இருக்குனு சொன்னேன்”என்று அவர் கூறியதும் அனிதாவுக்கு பயங்கர் கோவம் வந்துவிட்ட்து.

“சார் இவன் ஜெயிலுக்குள்ளயே செத்தாலும் பரவால்ல என்ன கொல்ல பார்த்த இவன நான் எந்த காலத்துலையும் மன்னிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேற நாங்களும் அவளுடன் சென்றோம். அணைவரும் திருவள்ளூர் புறக்காவல் நிலையம் சென்றோம். அங்கே இன்ஸ்பெக்டர் கையிலும் தலையிலும் கட்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அனிதாவை பார்த்த்தும்

“வாங்க மேடம் அந்த அக்யூஸ்ட் மாட்டிக்கிட்டானு கேள்விப்பட்டேன். ஆனா இங்க இருந்த அக்யூஸ்ட் எங்கள அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி போய்ட்டான்” என்று சோக்மான முகத்துடன் சொன்னார்.

“அவன் தான் முக்கியமானவன், இவன் சொம்மா அவனோட அடியாளு தான் சார்” என்று ராமனாதன் சொல்ல

“இல்ல் சார் இவன் வெரும் அடியாளா இருந்தாலும் இவனுக்கும் அவனுக்கும் ஏதோ முட்டிகிட்டிருக்கும் போல அதனால் அவன கொல்லாம விடமாடேனு சொல்லி இவன் போய்ருக்கான். அவன ஏதாவது பண்ணிடுவானோனு எங்களுக்கு பயமா இருக்கு, ஏதாவது நடந்தா நாங்க பதில் சொல்லனும்” என்று பேசவே கஸ்டப்பட்டு பேசினார். அனிதாவின் முகத்தில் கொஞ்ச்ம பீதி தெரிந்த்து. நான் அதை கவனித்தேன். சிறையில் கிடந்தாலும் த்ன் கணவன் உயிரோடு இருக்க வேண்டும் என்று அவள் நினைப்பது என்க்கு புரிந்த்து.

“இவ்ளோ போலீஸ் இருந்தும் அவன் எப்டி சார் தப்பிச்சான்” என்று ராமனாதன் இன்ஸ்பெக்டரையே விசாரித்துக் கொண்டிருக்க அவரும் மூச்சு வாங்கியபடி

“அந்த கொடுமைய ஏன் சார் கேக்குரீங்க” என்று நடந்தவற்றை கூற தொடங்கினார்.


காலையில் சிறையில் இன்ஸ்பெக்டரை பார்த்துவிட்டு நாங்கள் சூளைமேடு நோக்கி கிளம்பிக் கொண்டிருந்த சில மணி நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் தலப்பாகட்டு பிரியாணியை நன்றாக மேய்ந்து கொண்டிருக்க ஸ்டேஷன் வாசலில் இரண்டு சுமோ கார்கள் வேகமாக் வந்து நின்றது.

உள்ளிருந்து முகமூடி கட்டிய 10 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கையில் கத்தி அரிவாள்களுடன் ஸ்டேஷனுக்குள் புகுந்த்து. ஒவ்வொரு காவலர்களின் கழுத்திலும் கத்தியை வைத்துக் கொண்டு ஒரு முகமூடிக்காரன் நிற்க கடைசியில் கையில் லெக் பீசுடன் இருந்த இன்ஸ்பெக்டர் கழுத்திலும் கத்தி வைக்கப்பட அவர் கையில் லெக் பீசுடன் அப்படியே அசையாம்ல் உட்கார்ந்திருந்தார்.

அவருக்கு பிரியாணி பரிமாறிய ஏட்டும் கையில் கரண்டியுடன் நிற்க, சுமோவின் உள்ளிருந்து இன்னொருவன் முகமூடியுடன் இறங்கி வந்தான். வந்தவன் நேராக ஏட்டையாவின் அருகே சென்று

“சாவி எங்க” என்றான். ஏட்டு ஒரு கையை நீட்ட அந்த திசையில் மாட்டியிருந்த சாவியை எடுத்து சிறைக்கதவை திறந்து உள்ளே இருந்த மணியை வெளியே கூட்டி வந்தான். இருவரும் கிளம்பும் நேரம் முகமூடிக்காரன் மணியிடம்

“அண்ணே இந்த இன்ஸ்பெக்டர போட்ருவோமா” என்றான்.

“இவன விடுடா, எங்கூடவே இருந்துட்டு என்ன தனியா விட்டுட்டு ஓடுன அந்த பொட்ட பயன் ராசாவ எங்க இருந்தாலும் கொல்லனும்டா, இவன் கெடக்குறான்” என்று இன்ஸ்பெக்ட்ர் இருந்த சேரை எட்டி உதைக்க அவர் லெக் பீசுடன் சேரில் பறந்து சென்று சுவரில் மோத மண்டை உடைந்து ரத்தம் பீறிட்ட்து. மற்றவர்கள் காவலர்களை அடித்து போட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி புழுதியை கிளப்பிக் கொண்டு ப்றந்துவிட்ட்னர்.


“இதான் மேடம் நடந்துச்சி, போனவன் சும்மா போகாம என்னையும் தள்ளிவிட்டு மண்டையும் கையும் உடஞ்சி போச்சி”என்று முனக நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அனிதாவின் முகத்தில் அந்த பீதி இன்னும் அப்படியே இருந்த்து.

கதையின் ஸ்வாரசியத்துக்காக நான் காணாத ஒரு நிகழ்வை இங்கு பதிவு செய்கிறேன்.


சிறையிலிருந்து தப்பித்த கஜமணி (காசிமேடு மணி) நேராக சூளைமேடு பகுதிக்குதான் வந்திருக்கிறான்,. அவனுகு ராஜா எங்கு இருப்பான் என்பது தெரிந்திருக்கிறது. நாங்கள் காரில் ராஜா இருக்கும் இட்த்தை கண்டுபிடித்து அவனை பின் தொடர தொடங்கும் நேரம் கஜமணி எங்கள் பின்னால் காரில் வந்திருக்கிறான்.

போலீஸ் ஜீப் இடையில் எங்களுடன் தொடர ஆரம்பித்த்தும் மணியின் கார் கொஞ்ச்ம பின் தங்கிவிட கும்ரன் ராஜாவை நிறுத்திய நேரம் போலீஸ் ஜீப்புக்கு பின்னால் காரிலிருந்து இறங்கிய கஜமணி ராஜாவை நோக்கி துப்பாக்கியில் குறி வைக்க அதை பார்த்துவிட்ட ராஜா அங்கிருந்து தப்பித்து ஓடினான். அதன் பின் போலீஸ் ராஜாவை விடாமல் துரத்தியதால் கஜமணி நடப்பவற்றை கவனித்துக் கொண்டே எங்களை பின் தொடர்ந்து வந்திருக்கிறான்.


நான் அனிதா ராதா மற்றும் ராமனாதம் நால்வரும் வீடு வந்து சேர்ந்தோம். அனிதா கவலை தோய்ந்த முகத்துடனே இருந்தாள். நான் அவளுடன் பேச முயன்றேன். ஆனால் ராமனாதனும் அவர் மனைவியும் இருந்த்தால் என்னால் அவளுடன் பேச முடியவில்லை. ராதாவை தனியாக அழைத்து

“ராதா அனிதா மேடம் கிட்ட நான் பேசனும் எப்டியாவது ஏற்பாடு பண்ணு” என்றேன். அவளும் என்னை அனிதாவின் ரூமுக்கு கூட்டி சென்றாள். அனிதா பெட்டுக்கு அருகே இருந்த ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். ராதா அனிதாவின் முன் சென்றாள்.

“அக்கா முத்து உன் கிட்ட ஏதோ பேசனுமா” என்றாள். அனிதா எழுந்து தன் கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு

“வா முத்து என்ன, என்ன பேசனும்” என்றாள். நான் அவள் முன் உட்கார்ந்தேன். ராதாவை பார்த்து அவளையும் உட்கார சொன்னேன். ராதா என் அருகே உட்கார்ந்தாள். நான் அனிதாவை பார்த்து

“மேடம் ஏன் சோக்மா இருக்கீங்க” என்றதும் அவள் தொண்டையை கணைத்துக் கொண்டு போலித்தனமாக

“இல்லையே அப்ப்டிலாம் ஒன்னுமில்லையே” என்றாள்.

“பொய் சொல்லாதீங்க ஸ்டெஷன்லயே நான் கவனிச்சேன், அந்த மணி ராஜா சார கொன்னுடுவேனு சொன்னதா இன்ஸ்பெக்டர் சொன்னதுமே உங்க முகம் டல்லாயிடுச்சி” என்றதும் தான் ராதாவும் இதை பற்றி யோசித்தாள்.

“அப்டி...எலலாம்..ஒன்னுமில்ல முத்து நான் நார்மலாதான் இருக்கேன்” என்றாள். அவள் கூறியதில் இருந்த போலித்தனம் எனக்கு புரிந்தது.

“இல்ல்க்கா நீ நார்மலா இல்லனு நானும் இப்பததான் ஃபீல் பண்றேன்” என்று ராதா கூற அனிதா கண்கள் மெல்ல கலங்கின.

“மேடம் உங்களுக்கு இன்னமும் உங்க ஹஸ்பண்ட் மேல லவ் இருக்குனு நெனைக்கிறேன்” என்று அனிதாவை பார்த்து நான் கூற ராதா என்னை பார்த்தாள். அனிதா எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

“மேடம் நான் கேட்ட்துக்கு......” என்று நிறுத்த அவள் என்னை பார்த்து

“ஆமா முத்து எனக்கு இன்னமும் அவர் மேல லவ் இருக்கு” என்று கூற இது எனக்கு கொஞ்ச்ம அதிர்ச்சியாகவும் சங்கடமாக்வும் இருந்த்து.

“அக்கா என்ன சொல்ற” என்று ராதா வியப்புடன் கேட்டாள்.

“ஆமா, அவன் தான் என்ன பணத்துக்காகவும், என்ன பழி வாங்கவும் லவ் பண்ணானே தவுற நான் அவன மேல வெச்சிருந்த காதல் உண்மையானது. அது இப்பவும் அதே உணமையோட இருக்கு, ஆனா அவன் தான் அதுக்கு தகுதியானவனா நடந்துக்கல” என்று கூறிவிட்டு மீண்டும் விம்மி அழ தொடங்கினாள்.

“அவன் மேல் எனக்கு கோவம் இருக்கு அதுக்காக அவன் செத்தாலும் பரவால்லனு என்னால் இருக்க முடியாது” என்று கூறிவிட்டு முகத்தை மூடிக் கொண்டாள். ராதா என்னை பார்த்து

“அந்த மணி எப்டியாவது ராஜாவ கொல்ல பார்ப்பான் அதுக்குதான் அக்கா பயப்படுறா” என்று சொல்ல நான் என்ன் செய்யலாம் என்று யோசித்தென்.

“மேடம் நீங்க கால பாடாதீங்க, ராஜா சாருக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்குறேன்” என்று கூற அனிதா என்னை நிமிர்ந்து பார்த்தாள் .அவள் கண்ணில் என் மேல் இப்போது மரியாதை மட்டுமே இருந்த்து. என் பார்வையிலும் தான். எப்போது அவள் தன் க்ணவன் மேல் இன்னும் காதலுடன் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேனோ அப்போதே அவள் மேல் எனக்கு இருந்த காம ஈர்ப்பு விலகிப்போனது. நான் அவள் வீட்டிலிருந்து கிளம்பினேன். 


அனிதாவின் வீட்டிலிருந்து கிளம்பி நேராக குமரன் ஏற்கனவே தங்கி இருந்த ஹாஸ்டலுக்கு சென்றேன். முன்பே குமரனுக்கு போன் செய்த்தால் அவனும் அவன் நண்பன் செல்வமும் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர், ரவி ஏற்கனவே அங்கி இருந்த்தால் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தோம்.

எங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்களையும் அழைத்தோம். அணைவரிடமும் விஷயத்தை சொன்னேன். “அந்த கஜமணிக்கு ஒரு முடிவு கட்டனும், ராஜாவ கஜமணி கிட்ட இருந்து காப்பாத்தனும்” என்று நான் சொல்ல கஜ மணி யார் என்று தெரியதவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் எங்களில் வினோத் என்பவன் மட்டும் கஜமணி பெயரை கேட்ட்தும்

“கஜமணியா” என்று அதிர்ச்சியானான். எல்லோரும் அவனை ரவுண்டு கட்டினோம்.

“வினோத் உனக்கு கஜமணிய பத்தி தெரியுமா” என்றேன் நான்.

“நான் அவன பார்த்த்தில்ல ஆனா அவன பத்தி கேள்வி பட்டிருக்கேன்” என்றான்.

“நீ எந்த ஏரியாடா” என்று குமரன் கேட்க

“என் வீடு காசிமேடு” என்றதும் எனக்குள் பல்பு எரிந்தது. நான் மற்றவர்களை பார்த்து

“ஃப்ரெண்ஸ் கஜமணி ஒரு மோஸ்ட் வாண்ட்ட் கிரிமினல் அவன் போலீஸ் கிட்ட மாட்டிவிட்டா அவன் எப்டியும் கொஞ்ச நாள்ல திரும்பி வ்ந்து பழைய வலையெல்லாம் ஆரம்பிச்சிடுவான், நாம் அனிதா மேடமோட ஹஸ்பண்ட் ராஜாவ அவன்கிட்ட இருந்து காப்பாத்தனும், அதுக்கு......” என்று நிறுத்த

“அதுக்கு என்னடா பண்ன்னும்” என்று கும்ரன் கேட்க நான் அவன் பக்கம் திரும்பி

“கஜமணிய ஒரே அடியா முடிக்கனும்” என்றதும் எல்லோர் வயிறும் கலங்கி போனது முகத்தில் தெரிந்த்து.

“டேய் அவனே பெரிய ரௌடி அவன போய் நாம் எப்டிடா” என்றான் செல்வம்.

“அவன் கதைய முடிக்கனும்னுதான் சொன்னேனே தவற நாம அவன கொல்லப்போறோம்னு சொல்லவே இல்லையே”என்றதும்.

“அப்புறம் எப்டி அவன முடிக்கிறது.

“சாதாரணமான் ஒருத்தன போடனும்னா கஜமணி மாதிரி ரௌடி கிட்ட போலாம். ஆனா கஜமணியே ரௌடினும்போது அவன போட அவன் விட ரௌடி எவனயாவது புடிக்கனும்” என்றதும் கும்ரன்

“அவன விட ரௌடிய எங்க போய் தேடுறது” என்றான். உடனே வினோத் சுறுசுறுப்பாக

“அப்டி ஒருத்தன் இருக்காண்டா” என்றான்.

“யாரு” என்று எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்க வினோத் எங்கள் அருகே வந்து மெல்லிய குரலில்

“கஜமணியோட அண்ணன், ராஜமணி” என்றதும் எங்களுக்கு இப்போது வயிற்றை கலக்கியது.


மெயின் வில்லன் பில்டப்:


சென்னை ராயபுரம் பகுதியிலிருந்து ஒரு கண்டயினர் லாரி கிளம்புகிறது. லாரி திருவெற்றியூர் சாலையை கடந்து மாதவரம் பைபாஸ் சாலை வழியாக செங்குன்றம் தாண்டி ஆந்திர எல்லை நோக்கி செல்கிறது. ஒரு போலீஸ் ஜீப் அந்த கண்டைனர் லாரியை முந்தி சென்று மடக்குகிறது.

லாரி நிற்க உள்ளிருந்து ட்ரைவர் இறங்குகிறான் போலீஸ் கார்ர்கள் ட்ரைவரை இழுத்து

“லாரியில என்ண்டா இருக்கு” என்று கேட்க போலீஸ் கார்ர்களுடன் வந்த சுங்க அதிகாரி ஒருவர்

“இன்ஸ்பெக்டர் இவன் கிட்ட என்ன பேச்சி, கண்டைனர ஓப்பன் பண்ணுங்க” என்று கூறிக் கொண்டு லாரியின் பின்பக்கம் வர ட்ரைவர்

“சார் இது ராஜமணி வண்டி வேணா” எங்கிறான். இன்ஸ்பெக்டர் அவன் மேலிருந்து கையை எடுத்துவிட்டு

“சார் நாம கொஞ்ச்ம நிதானமா பார்க்கலாமே” என்கிறார் ஆனால் அந்த அதிகாரியோ

“ஏன் சார் ராஜமணி பேர கேட்ட்தும் உங்க தொட நடுங்குது, இது ராஜமணி வண்டினு தெரிஞ்சிதான் மடக்குனேன்”என்று கூறிக் கொண்டே லாரிக்கு பின்னால் சென்று அதன் தாழ்ப்பாலை திறக்கிறார். கண்டைனர் கதவு திறக்கிறது. அந்த அதிகாரி எதிர் பாராத நேரம் உள்ளிருந்து ஒரு துப்பாக்கியின் தோட்டா அவர் மார்பில் பாய்கிறது.

அதிகாரி மார்பை பிடித்துக் கொண்டே அலற உள்ளிருந்து ஆஜானுபாகுவாய் ஒருவன் இறங்குகிறான். இறங்கியவன் அந்த அதிகாரியின் முன்னால் வந்து நின்று

“டேய் அதான் போலீஸே சொல்லுதில்ல பொறுமையா பார்க்கலாம்னு அப்புறம் ஏண்டா நீ அவசர படுற, நீ அவசர பட்ட்தாலதான் நான் உன்ன சீக்கிரம் அனுப்பிட்டேன், போய்ட்டு வா” என்று இன்னொரு முறை சுட அந்த அதிகாரி நாடி அட்ங்கி கீழெ சாய்கிறான். வந்தவன் போலீஸ் இன்ஸ்பெக்டரை பர்த்து

“யோவ் போலீஸெ என்ன பண்ணனும்னு தெரியுமில்ல, இவன் கூப்டானு ஏன்யா நீங்களும் வண்டிய எடுத்துக்கிட்டு வரீங்க, ஏதோ நான் வந்த்தால இந்தாளோட போச்சி, எங்க அண்ண ராஜமணி வந்திருந்தா நீயும் செத்திருப்ப” என்று கூறிவிட்டு முன்னால் பார்க்க அங்கே ஒரு கார் ஹோண்டா சிட்டி கார் வந்து நின்றது உள்ளே இருந்த ட்ரைவர்

“அண்ண உங்கள கூட்டிவர சொன்னாரு” என்றதும் இவன் காரில் ஏறிக் கொண்டான். போலீஸ்காரர்கள்

“அந்த ராஜமணிக்கு பயப்படுறது இல்லாம அவன் அடியாளுக்குலாம் பயப்பட வேண்டியதா இருக்குயா” என்று புலம்பிக் கொண்டே யாருக்கோ போன் செய்தார்கள்.


ராயபுரத்திலிருந்து மூன்று கிலோமீட்ட்ட் தூர கடலில் ஒரு மீன்பிடி கப்பல் சென்று கொண்டிருக்க அதில் ஒருவன் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில்

“ராஜமணி என்ன விட்டுடு, நான் இனிமே அப்டி பண்ண மாட்டேன், என்ன விட்டுடு” என்று கத்திக்கொண்டிருக்கிறான். கப்பலின் உள்ளே இருந்து ராஜமணி வருகிறான். கயிற்றால் கட்டப்பட்டிருந்தவனை பார்த்து

“ஒம்மாள் புண்ட மவனே நான் ஆந்திராவுக்கு என்ன கட்த்துனா உன் சுண்ணிக்கு என்னடா வந்துச்சி, நீ சூத்த மூடிக்கினு இருக்காம் கஸ்டம்சுக்கு போட்டு குடுக்குறியா, ஒத்தா எனக்கு வந்த கோவத்துக்கு உன் குடும்பத்தையே காலி பண்னி இருப்பேன், ஏதோ போனா போதுனு உன்ன் மட்டும் தூக்கினு வர சொன்னேன்” என்று கூறும்போதே இன்னொரு படகு வருகிறது அதிலிருந்து ஒருவன் தாவி இந்த படகுக்கு வருகிறான். இவந்தான் அந்த கஸ்டம்ஸ் அதிகாரியை கொன்றவன். படகில் வந்த்தும்

“அண்ணா என்ன்னா உடனே வர சொன்னியாமே” என்று ராஜமணியை பார்த்து கேட்க

“இதோ இந்த பூலாட்டிதான் நம்மள் போட்டு கொடுத்த்து” என்று காட்ட வந்தவன் கயிற்றில் இருந்தவனை பார்த்து

“அடிங் கோத்தா தெவிடியா பையா, உனக்கு ஏண்டா இந்த ஊம்புற வேல, காட்டி கொடுத்து சம்பாதிக்கிறதுக்கு பதில் உன் பொண்டாட்டிய எவனுக்காவது கூட்டி கொடுத்து சம்பாதியே” என்று கூற அவன் இவனை பார்த்து

“மன்னிச்சிடுங்கண்ணே தெரியாம பண்ணிட்டேன்” என்று கெஞ்சுகிறான்.

“டேய் இவன் தொல்ல தாங்க்ல்டா இவன முடிக்கனும்டா” என்று தன்னிடம் இருந்த ஒரு கையெறி குண்டை எடுத்து அதன் மூடியை திறக்கிறான். கயிற்றில் இருந்தவன் வயிற்றில் ஒங்கி ஒரு குத்துவிட அவன் ஆ என்று அலறி வாயை துறக்க அவன் வாய்க்குள் இந்த குண்டை திணித்து அவனை கயிர்றில் கட்டி இருந்தபடியே கடலில் தள்ளிவிட அவன் விழுந்த சில வினாடிகளில் வெடித்து சிதறுகிறான்.


ராஜமணி வந்தவனை பார்த்து “போன வேல என்னாச்சிடா” என்று கேட்க

“அந்த ஆஃபீஸர அனுப்பி வெச்சிட்டேன், சரக்கு இன்னேரம் தடா ஏரியாவ தாண்டியிருக்கும்” என்றான். இருவரும் படகினுள் சென்றனர். அடுத்த நாள் செய்திதாள்களில் சுங்க அதிகாரி ரயிலில் அடிபட்டு மரணம் என்று செய்தி வெளிவந்தது.


“மச்சான் இவன் தான் கஜமணிக்கு சரியான ஆளு, ராஜமணியும் கஜமணியும் ஒரு அப்பன் ரெண்டு அம்மாக்கு பொறந்தவ்னுங்க. அதனால் எப்பவும் ரெண்டு பேருக்கும் நடுவுல பொகஞ்சிக்கிட்டே இருக்கும். இவன் எப்ப அவன போடுவான் அவன் எப்ப இவன போடுவானுதான் ரொம்ப நாளா போலீஸே வெய்ட் ப்ண்ணிக்கிட்டு இருக்கு,

ஒருத்தன் இன்னொருத்தன போட்ட்தும் மீதி இருக்கவன போலீஸ் போட்ரும்” என்று வினோத் வினோதமாய் விளக்கினான். நான் ஒரு முடிவுக்கு வ்ந்தவனாய் எழுந்தேன்.

“மச்சான் என்னடா பண்னப்போற” என்றான் கும்ரன்.

“நான் அத செஞ்சிட்டு அப்புறம் சொல்றேன், இப்பவே சொன்னா எல்லாரும் இங்கயே ஒன்னுக்கு போய்டுவீங்க” என்று கூற கும்ரன் பயத்தில் எச்சில் விழிங்க் கூட முடியாமல் தவித்தான். நான் அங்கிருந்து கிளம்பும் நேரம்

“மச்சி, உனக்கு ஏதாவது பிரச்சினைனா...... தயவு செஞ்சி என்ன கூப்ட்ராதடா” என்று கூறிவிட்டு கும்ரன் ஒபடினான். நான் அங்கிருந்து கிளம்பினேன். கதையில் இதுவரை மற்றவர்களே ஹீரோயிசம் செய்து வர இப்போது நானும் ஹீரொயிசம் செய்ய போகிறேன்.

நேராக ராயபுரம் பகுதிக்கு வினோத்துடன் சென்றேன். அங்கு ஏகப்பட்ட கண்டைன்ர் லரிகளும் கார்க்ளுமாக இருந்த்து. கடற்கரையை ஒட்டிய இட்த்தில் சில படகுகளும் இருந்த்து.

“டேய் இதுல ராஜமணிய எப்டிடா கண்டுபிடிக்குறது” என்று நான் கேட்க

“வெய்ட் பண்ணு மச்சி, அவன் காலையில தான் ஒருத்தன் மேட்டர முடிக்க கடலுக்குள்ள போய்ருக்கான் எப்டியும் திரும்பி வருவான்” என்று கூறி கடலை பார்த்துக் கொண்டிருந்தான். நானும் அவனுடன் கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க தூரத்தில் ஒரு படகு வந்து கொண்டிருந்த்து. அதை பார்த்த்தும் வினோத் என்னை அழைத்து என் காதில்

“அதோ வருது பாருடா அதுதான் ராஜமணியோட்து” என்றான். படகு கட்டும் இட்த்திற்கு வ்ந்த்தும் என்னை ஒரு இட்த்தில் மறைவாக இழுத்து சென்றான் வினோத். அங்கு இருந்தபடி

“டேய் அதோ வரானே அவன் தான் ராஜமணி” என்று காட்ட நான் அவனை பார்த்தேன். முழு ஆட்டையும் ஓரே ஆளாக திண்பவன் போல் இருந்தான். க்ருப்பாக ஆப்ரிக்க காட்டில் சுற்றிவிட்டு வ்ந்தவன் போல் இருந்தான். வினோத் என்னை மீண்டும் இழுத்து

“டே அதோ வரானே அவன் தான் ராஜமணியோட லெஃப்ட் ஹாண்ட் கபாலி, இவன் தான் எல்லாத்தையும் முடிக்கிறது”என்று காட்ட நான் அவனை பார்த்தேன். நல்ல உயரமாக சினிமா வில்லனுக்குண்டான அணைத்து அம்சங்களுடனும் இருந்தான். இவன் தான் கஸ்டம்ஸ் ஆஃபீசரை முன் போட்டு தள்ளியவன். இருவரும் தங்கள் ஆட்கள் சூழ வேகமாக சென்று நின்றிருந்த காரில் ஏற சென்று கொண்டிருந்தனர்.

நான் எழுந்தேன் வேகமாக அவர்களை நோக்கி நடந்தேன். என் கைகள் முறுக்கின. என் பற்கள் நரநரவேன உரச அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்த்துமே வினோத் என்னை தடுத்தான்,

“டேய் வேணாண்டா” என்று இழுத்தான் நான் அவனை தள்ளிவிட்டு ராஜமணியையும் கபாலியையும் நோக்கி நடக்க கபாலி என்னை திரும்பி பார்த்தான்


ராஜமணியை நோக்கி சென்ற என்னை தடுத்து நிறுத்தி கபாலி

“ஹலோ யாருடா நீ எங்க இவ்ளோ வேகமா போற” என்றான். நான் அவன் காதருகில் சென்று

“ஒரு மட்ட விஷயமா அண்ணன் கிட்ட பேசனும்” என்றதும். கபாலி கொஞ்ச்ம யோசித்துவிட்டு

“அண்ண இப்ப்லாம் மட்ட பண்றத விட்டுட்டாரு” என்றான். நானோ

“கபாலி அண்ணே எனக்கு எல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்கேன், பெரிய எட்த்துல இருந்து வந்திருக்கேன்” என்றதும் அவன் என்னை கொஞ்ச்ம உற்று பார்த்துவிடு

“சரி எதுவா இருந்தாலும் அண்ண வீட்டுக்கு வந்து பேசிக்க, நான் சொல்லி வெக்கிறேன்” என்று கூறிவிட்டு அவனும் காருக்குள் ஏற கார் கிளம்பியது. அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து

“என்ன மச்சான் பேசுன அவன் கிட்ட” என்று கும்ரன் குரல் கேட்க திரும்பி பார்த்தேன்.

“நீ எப்படா வந்த பயந்துகிட்டு ஓடுன, இப்ப மட்டும் எங்க வந்த” என்று நான் கேட்க “இல்லடா உன்ன தனியா அனுப்பிட்டோமேனு மனசு கேக்கல அதான் வந்தேன்” என்றதும்

“டேய் உண்மைய சொல்லு” என்றதும்

“அனிதா மேடம் கிட்ட நீ இப்டி போய்ருக்கனு சொன்னேன், அவங்க தான் ஏன் அவன தனியா அனுப்புன்னு என்ன புடிச்சி ஏறு ஏறுனு ஏறினாங்க, அதான் வந்தேன்” என்றதும்

“அப்டி சொல்லு, இல்ல்னா நீயாவது வரதாவது” என்று வினோத் சொல்ல

“சரிடா அடுத்து என்ன பண்ணப்போற” என்றான் கும்ரன் மூவரும் ராஜமணியின் வீடு நோக்கி சென்றோம். குமரனையும் வினோத்தையும் சற்று தொலைவான இட்த்தில் நிற்க சொல்லிவிட்டு நான் மட்டும் சென்றேன். ராஜமணி வீட்டின் அருகே சென்றதும் அங்கு இருந்தவர்கள் எல்லாரும் பயங்கர குண்டாக பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் இருந்தார்கள். ஒவ்வொருவனின் பின்னாலும் இரண்ட்டி நீள அரிவாளை சட்டைக்குள் சொறுகி இருந்தார்கள். அதன் பிடி கழுத்துக்கு பின்னால் தெரிந்த்து.

நான் வீட்டு வாசல் அருகே சென்றதுமே ஒருவன் என்னை தடுத்து நிறுத்தி

“டேய் யாருடா நீ நேரா உள்ள போற” என்றான். உடனே உள்ளிருந்து கபாலியீன் குரல் கேட்ட்து. என்னை த்டுத்தவன் என்னை உள்ளே அனுமதிக்க நேராக கபாலியை நோக்கி சென்றேன். அவன் என்னை வீட்டின் ஒரு அறைக்குள் இருந்த ராஜமணியிடம் கூட்டி சென்றான்.

கையில் பிராந்தி ஊற்றப்பட்ட டம்ப்ளருடன் ஊறுகாயை தொட்டு நக்கிக் கொண்டிருந்தான் ராஜமணி. நானவன் எதிரே சென்றதும்

“என்ன தம்பி யாரையோ போடனும்னு சொன்னீங்களா, ஏதோ பெரிய எட்த்துல இருந்து வரேனு சொன்னீங்களாமே, யாரு நீ யார மட்ட பண்ணனும்” என்று பீராந்தியை குடித்தபடி கேட்டான்.

“யாருன்றத நான் உங்க கிட்ட மட்டும் சொல்லனும்னே” என்று நான் மற்றவர்களை பார்த்தபடி சொல்ல ராஜமணி அவனை சுற்றி இருந்த அடியாட்களை பார்த்து

“டேய் கொஞ்ச் நேரம் வெளியில் இருங்கடா” என்றான். அணைவரும் வெளியே கிளம்ப ராஜமணியும் கபாலியும் மட்டும் இருந்தனர். அவர்கள் எதிரே தனி ஆளாக இருந்தேன்.


“இப்ப சொல்லு நீ யாரு, நான் யார போடனும்” என்றான். “நான் அவன் அருகே சென்று

“காசிமேடு......கஜமணி” என்றதும் அவன் அதிர்ந்தான். அவன் முகத்தில் கோபத்தீ பறந்தது. நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத்தால் எனக்கே பயம் தட்டியது. அடுத்த நொடியே பேய் சிரிப்பு சிரித்தான் ராஜமணி. சிரித்து அடங்கியபின்

“தம்பி என்ன காமடி பண்ற, கஜமணிய நான் போடனுமா, அவனும் ரௌடி நானும் ரௌடி, எங்களுக்குள்ளே ஏன் மோதவிட்டு பர்க்க ஆசபடுற” என்றான். நான் மீண்டும் அவன் அருகே சென்று உட்கார்ந்தேன்.

“அண்ணே உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிரச்சனை எனக்கு தெரியும், நீங்களும் அவனும் எப்ப சான்ஸ் கெடைக்கும் போட்டு தள்ளலம்னு பார்த்துக்கிட்டு இருக்கீங்கன்றதும் தெரியும்” என்றதும் ராஜமணி என்னை முறைத்து பார்த்தான்.

“சரி அவ்ன போடுறேன், ஆனா நீ யாரு உனக்கும் அவனுக்கும் என்ன பக அத சொல்லு” என்றான். நான் அவனிடம்

“அண்ணே நான் மத்திய அமைச்சர் ராமசாமியோட பையன், எங்க அப்பாவோட சிபாரிசாலதான் கஜமணி போலீஸ் எங்கவுண்ட்ர்ல இருந்து தப்பிச்சான், ஆனா ஒழுங்கா இல்லாம இப்ப யாரோ ஒரு பொம்பளைய போட்டு தள்ள பாத்து அந்த கேஸ்ல மாட்டிக்கிட்டான், அதுல இருந்து என்ன காப்பாத்தி விடுனு கேட்டு எங்க அப்பாவ மெரட்டுறான், சட்ட ரீதியா போனா எங்க் அப்பா பேரு டேமேஜ் ஆகிடும் அதான் அப்பா உங்க்கிட்ட பேச சொன்னாரு” என்றதும் ராஜமணி யோசித்தான்.

“ஓஹோ, மினிஸ்டர் தயவு இருக்குறதால தான் அவன் இன்னும் எங்கவுண்டர்ல சாவாம இருக்கானா” என்று யோசித்துக் கொண்டிருக்க

“அண்ணே நீங்க கஜமணிய போட்டுடீங்கனா எங்க அப்பாவோட ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்” என்றதும் என்னை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் யோசித்தான்.

“அண்ணே தம்பி சொல்றது வாஸ்தவமா தெரியுது, மினிஸ்டர் சப்போர்ட் இருந்தா நாமலும் நம்ம தொழில இன்னும் நல்லா டெவலப் பண்லாம்” என்று கபாலி கூற மீண்டும் ராஜமணி யோசித்துவிட்டு

“சரி நான் அந்த பொரம்போக்க போடுறேன், ஆனா நீ மினிஸ்டர் பையன்றதுக்கு என்ன ஆதாரம்” என்று நேராக பாயிண்டை பிடித்தான் ராஜமணி. எனக்கு முதலில் கொஞ்ச்ம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவன் செல்லையே வாங்கி. அதிலிருந்து ஒரு எண்ணுக்கு டயல் செய்து ஸ்பீக்கர் போனில் போட்டேன்.

“ஹ்லோ சென்ட்ரல் மினிஸ்டர் ராமசாமிஸ் பீயே” என்று ஒரு குரல் கேட்ட்தும் நான் “ஹலோ நான் முத்து” என்றேன். உடனே அந்த குரல் “சார் இதோ அப்பாகிட்ட கனக்ட் பண்ரேன்” என்று கூறிவிட்டு ஒரு பீப் சத்த்த்திற்கு பிறகு இன்னொருவர் குரல் கேட்ட்து

“ஹலோ முத்து செல்லம் எங்கபா இருக்க நான் சொன்ன வேலைய முடிச்சிட்டியாபா” எனறது, நான் பதிலுக்கு

“அப்பா நான் இப்ப ராஜமணி வீட்லதான் இருக்கேன். அவரு உங்க்கிட்ட பேசனுமா” என்று கூறிவிட்டு போனை ராஜமணியிடம் நீட்ட

“ஹலோ மினிஸ்டர் சார்” என்றான்.

“ராஜமணி அந்த கஜமணி கதைய நீதான் முடிக்கனும்” என்றது அந்த குரல்

“கவலப்படாதீங்க சார், அவன நான் பார்த்துக்குறேன், நீங்க என்ன மறந்துடாதீங்க” என்றான். அந்த குரலோ

“ராஜமணி நீ மட்டும் இத முடிச்சிட்டீனா உனக்கு என் ஃபுல் சப்போர்ட் எப்பவும் இருக்கும்” என்று கூற ராஜமணி சிரித்துக் கொண்டே போனை கட் செய்துவிட்டு என்னிடம் கொடுத்தான்.

“தம்பி நாளைக்கு மதியானம் அந்த கஜமணி பாடி கூவத்துல மெதக்கும் நீ கெளம்பு” என்றான். நான் எழுந்து

“அப்ப வரேண்ணே” என்று கூறிவிட்டு வெளியே வந்தேன். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நின்றிருந்த கும்ரனும் வினோத்தும் நான் வருவதை பார்த்துவிட்டு என்னிடம் ஓடி வந்தனர்.

“டேய் என்னடா ஓகேவா” என்றான் கும்ரன்

“ஓகே மச்சி, நீதான் அப்டியே அந்த மினிஸ்டர் மாதிரியே பேசுனியே அத அவனும் நம்பிட்டான்” என்று நான் கூற

“இவன்லாம் என்னடா பெரிய ரௌடி” என்றதும் வினோத் அவனை பார்த்து

“ஏண்டா அப்டி சொல்ற” என்றான்.

“பின்ன் என்ன மச்சான் இவன் மினிஸ்டர் பையனு சொன்னதையும் நம்பிட்டான், நான் மினிஸ்டர் பேசுரனு சொன்னதையும் நம்பிட்டான். இவ்ளோ பெரிய ஏமாளியா இருக்கானெ” என்றான். நான் அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு

‘அவன் நம்புனதால தான் நான் முழுசா வந்திருக்கேன்” என்று மூவரும் அங்கிருந்து கிளம்பினோம். செல்லும் வழியில் குமரன் மீண்டும்

“மச்சான் எனக்கு ஒரு டௌட்டு” என்றான்.

“என்ன டௌட்டு” என்றேன் நான்.

“இப்ப இவன விட்டு இவன் தம்பிய போட சொல்லி இருக்கியே ஒரு வேல இவன் அவன போடாம அவன் கூடவே ஒன்னா சேர்ந்துட்டா என்ன பண்னுவே” என்றதும் வினோத் திடுக்கிட்டு நின்றான்.

“டேய் ஆமாண்டா அப்டி ஆச்சினா அவ்ளோதான்” என்றான் பயந்தபடி நான் சிரித்துக் கொண்டே

“ஆமாண்டா மச்சி, அப்டித்தான் நடக்கும்” என்றதும் இருவரும் என்னை வியப்புடன் பார்த்து

“டேய் அப்டி சேர்ந்தா நீ காலிடா, அவனுங்க உன் முகத்த பார்த்திருக்கான்ல” என்றான் குமரன் மரண பயத்தில்.

“கவலப்படாத எல்லாத்தையுமே முன்னாடியே யோசிச்சிட்டுதான் ஆரம்பிச்சிருக்கேன்” என்று கூற வினோத் என்னை பார்த்து

“சரி அடுத்து என்ன பண்ணப்போற” என்றான்.


“இப்ப் நேரா காசிமேடுக்கு போறோம்” என்றதும் அவன் அதிர்ச்சியானான்.

“டேய் எதுக்குடா” என்று அடிவயிறு கலங்க கேட்டான்.

“வா சொல்றேன்” என்று இருவாய்யும் இழுத்துக் கொண்டு கிளம்பினேன்.
மூவரும் காசி மேடு பகுதிக்கு வ்ந்து சேர்ந்தோம். வினோத் எங்களை பார்த்து
“மச்சி இப்ப இங்க எதுக்குடா வந்த” என்று கேட்க

“இங்க கொஞ்சம் வேல இருக்கு, கஜமணி வீடு உனக்கு தெரியுமா” என்று நான் கேட்க

“தெரியும் மச்சி, ஆனா அவன இப்ப போலீஸ் தேடுறதால அவன் வீட்ல இருக்காம அவன் தங்க்ச்சி வீட்லதான் இருப்பான்” என்றான்.

“அந்த வீடு எங்க இருக்கு” என்று கேட்க வினோத் என்னை அங்கு அழைத்து சென்றான். தூரத்தில் இருந்து வீட்டை காட்டிவிட்டு

“நான் இதே ஏரியா மச்சி, அதனால் கிட்ட வந்தா மாட்டிக்குவேன்” என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றான். நானும் கும்ரனும் அந்த வீட்டை நோக்கி நடந்தோம்.

“டேய் இப்ப என்னடா பண்ணப்போற” என்று என்னை பார்த்து கேட்க நான் என் திட்ட்த்தை அவனிடம் சொன்னேன்.

“எல்லாம் சரிடா ஆனா அவன் உன்ன அடையாலம் கண்டுபிடிச்சிட்டா” என்று கேட்க

“அதான் இல்ல அவன் இதுவரைக்கும் என்ன பார்த்த்தே இல்ல” என்று கூறிவிட்டு இருவரும் ஆன் வீட்டை நோக்கி நடந்தோம். நாங்கள் சரியாக அவன் வீட்டிற்கு இரண்டு வீடு முன்னால் செல்லும் நேரம் கஜமணி வெளியே தன் அடியாட்களுடன் வந்தான் .

கும்ரனுக்கு அவனை பார்த்த்தும் கை கால்கள் நடுங்கின.

“டேய் மச்சான் அவ்ன் தான் கஜமணியா” என்றான்.

“ஆமா வா” என்று அவனை கூட்டி செல்ல அவனும் அவன் அடியாட்களும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். 



No comments:

Post a Comment