Tuesday 12 November 2013

சுகன்யா.. 4


காலையிலிருந்து காய்ந்த வெய்யிலுக்கு, வானம் லேசாக கருத்து மேக மூட்டத்துடனிருந்தது. நடராஜன் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், மழை வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. நாளை திங்கள் கிழமை, ஆபீசுக்கு போயே ஆகணும். கடந்த ரெண்டு நாட்களாக செல்வாவால் வீட்டில் நடக்கும் கூச்சலையும், ரகளையையும், இன்று இப்படி ஆஸ்பத்திரிக்கு வந்து நிற்பதையும் நினைத்தப்போது அவருக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்து ஒரு காபி குடித்தால் தேவலையாக இருக்கும் என தோன்றியது. சீனு ரெண்டு மணிக்கெல்லாம் தன் வீட்டுக்குப் போய்விட்டான். ராத்திரிக்கு செல்வாவுடன் அவன் இருப்பதாக சொல்லியிருந்தான். மாலை ஏழு மணிக்கு வரும்போது அவன் சாப்பிட தன் வீட்டுலேருந்தே டிபன் கொண்டு வருவதாகவும் சொல்லி சென்றிருந்தான். சீனு வந்ததும், மற்றவர்கள் வீடு திரும்பவும், போகும் வழியில் சுகன்யாவை டிராப் செய்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.
மருத்துவமனைக்குள்ளேயே இருந்த கேண்டீனுக்கு போகலாம் எனத் திரும்பிப்பார்க்க, மீனாவும், சுகன்யாவும் நெருங்கி உட்கார்ந்து, தாங்கள் இருக்குமிடத்தையே மறந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் முகத்திலும் ஒரு இனம் தெரியாத உற்சாகம் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருந்தது. ஒத்த வயசு பொண்ணுங்க; சட்டுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்னியோன்யமாயிட்டாங்க; தொடர்ந்து ஒரு மணி நேரமா வாய் ஓயாம பேசறதுக்கு அப்படி என்னத்தான் இருக்கும் இந்த பொண்ணுங்க நடுவுல? நடராஜன் மெல்ல நடந்து அவர்கள் பக்கத்தில் போக, அவரை பார்த்ததும் சுகன்யா மரியாதையாக எழுந்து நின்றாள். பெத்தவளை காலையில பாத்தேன். பொண்ணை காலையிலேருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நூலைப் போலத்தானே சேலையிருக்கும். அவர் மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார். "வாங்கடா கண்ணுங்களா, கேண்டீனுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம்" "அப்பா இந்த நேரத்துக்கு சுகன்யா சூடா பஜ்ஜியோ, வடையோ சாப்பிடுவாங்களாம்" மீனா சிரித்தாள். "பாக்கலாம் ... பக்கத்துல ஏதாவது கிடைக்குதான்னு" "சும்மா இரு மீனா, அதெல்லாம் எனக்கு வேணாம். செல்வாவுக்கு வேணா எதாவது வாங்கிக்கலாம், காலையிலேருந்து அவர் ஒண்ணுமே சாப்பிடலே; கண் விழிச்சா குடுக்கலாம்ன்னு நான் சொல்லிக்கிட்டிருந்தேன்." "சுகன்யா, நாளைக்கு நீ ஆபீஸ் போகணுமில்லையாம்மா?" காபியை உறிஞ்சியவாறே நடராஜன் வினவினார். "ஆமாம் ... அங்கிள், லீவு போடணுமின்னா போட்டுக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்சனையில்லை; சுகன்யா, மெது வடையை கடித்துக்கொண்டே சொன்னாள். "நோ ... நோ ... நான் சாதாரணமா கேட்டேன்ம்மா ... நீ லீவெல்லாம் எடுக்க வேண்டாம். மீனாவுக்கு இப்ப காலேஜ் செமஸ்டர் லீவு தானே; நாளைக்கு பகல்லே மீனாவும் அவங்க அம்மாவும் அவனைப் பாத்துக்குவாங்க ... நீ இவனை பாக்கறதுக்கு சாயந்திரமா ஒரு நடை வந்து போயேன் ..." புன்னகையுடன் பேசினார் நடராஜன். "சரி அங்கிள் ... இன்னைக்கு மாமா மட்டும்தான் ஊருக்கு திரும்பி போறார்; இன்னும் ஒரு வாரம் அம்மா என் கூடத்தான் இருப்பாங்க, ஈவினிங் இங்க வரதுலே எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்லே" அவர்கள் மூவரும் கேண்டீனிலிருந்து செல்வா இருக்குமிடத்துக்கு சென்ற போது, ஐ.ஸி.யூ. விலிருந்து மல்லிகா வெளியில் வந்தாள். "செல்வா முழிச்சிக்கிட்டிருக்கான். உடம்பு வலி குறைஞ்சிருக்காம். விழுந்தப்ப அவன் பைக் ஹேண்டில் பார் மேல விழுந்தானாம். உள் காயம் பட்டிருக்கும் போல தெரியுது, மெதுவா பொரண்டவனைப் பாத்தேன்; செவப்பா ரத்தம் கட்டிகிட்டு இருக்கு; அதனால இப்ப இடுப்புல மட்டும் வலி அதிகமா இருக்குதுங்கறான். சாயந்திரம் ரவுண்ட்ஸ் வர்ற டாக்டர் கிட்ட சொல்லணும்; எல்லாம் அவன் நேரம் தான்; அவனைப்படுத்தி எடுக்குது". "இப்ப பசிக்குதாம் அவனுக்கு; டாக்டரிடம் கேட்டதுக்கு, லைட்டா எது வேணா சாப்பிடட்டும், படுத்துக்கிட்டே இருக்கணுமில்லயா, அதனால சுலபமா செரிக்கற மாதிரி குடுங்கன்னு சொல்றாங்க" மல்லிகா முகத்தில் கேள்விக்குறியுடன் நடராஜனைப் பார்த்தாள். "எங்கிட்ட பேசற மாதிரி நீ சும்மா அவன் கிட்ட நல்ல நேரம், கெட்ட நேரம்ன்னு பேசிகிட்டு நிக்காதே; நல்ல நேரம் நடக்கவேதான், இந்த மாதிரி ஒரு பொண்ணு சரியான நேரத்துல வந்து அவன் கூட நின்னா; புரிஞ்சுதா; இந்தா, இந்த பார்சல்ல ரெண்டு மெதுவடை, தேங்காய் சட்னியோட இருக்கு; நல்லா மென்னு தின்னச் சொல்லு; எல்லாம் ஜீரணமாயிடும்; ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு; கொண்டு போய் குடுத்துட்டு வா. நீயும் காஃபியை குடி. சீனு வந்ததும், நாம கிளம்புவோம். நேரத்துல சுகன்யாவை அவ வீட்டுல விட்டுட்டு போகணும்." அவர் மீண்டும் மரத்தடிக்குச் சென்று சிமிட்டி பெஞ்சில் உட்க்கார்ந்து கொண்டார். இப்ப எப்படி இருக்கு செல்வா ... உடம்பு வலி பரவாயில்லயா?" சுகன்யாவின் குரலில் பரிவு நிரம்பி வழிந்தது. மல்லிகா பேப்பர் கப்பில் காஃபியை ஊற்றியவாறு அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகன்யாவைக் கண்டதும் தன் மகனின் முகத்தில் பளிச்சென்று ஏற்பட்ட மாற்றத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை. இவ தான் என் வீட்டுக்குள்ள வந்து கரண்டி புடிக்கணும்ன்னு எழுதியிருந்தா அதை நான் தடுக்கவா முடியும்; நான் நிக்கறேன்னு கூட அவ தயங்கலை; உரிமையா தலை மாட்டில நின்னுகிட்டு அவன் நெத்தியை அழுத்தி விடறா; தலையை கோதிவிடறா; தாயும், தாலிக்கட்டிகிட்டவளும் தானே இப்படி நிக்கமுடியும். ஜோடிப் பொருத்தம் என்னமோ நல்லாத்தான் இருக்கு. அவள் மனதில் அலை அலையாக எண்ணங்கள் படையெடுக்கத் தொடங்கின. "பரவாயில்லே சுகு; தலைதான் பாரமா இருக்கு" வடையை மென்று கொண்டே பேசியவன் குரலில் தெளிவு வந்திருந்தது. நெற்றியில் அவள் கை படுவது அவனுக்கு இதமாக இருந்தது. "தலையில இறுக்கி கட்டு போட்டு இருக்காங்களே, அதனால இருக்கும்" மல்லிகா குறுக்கிட்டு சொன்னாள். "நீங்க சொல்றது சரிதான் அத்தே" அத்தை என்ற சொல்லை அழுத்திச் உச்சரித்தாள் சுகன்யா. செல்வாவின் உதடுகளில் புன்முறுவல் தோன்றியது. அம்மாவை அத்தேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாளா? நம்ம அம்மாவை சீக்கிரமா தன் வழிக்கு கொண்டு வந்துடுவா போலேருக்கே; இவ கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டா போதும்; அதுக்கு அப்புறம் இவளாச்சு; நம்ம அம்மாவாச்சு. அவன் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், மல்லிகா கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சினான். "செல்வா, நாளைக்கு நான் ஆபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்து உங்களைப் பாக்கிறேன். உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுங்கற விஷயத்தை உங்க ஆபிசுக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிடாவா? நார்மல் ஸ்ர்கம்ஸ்டான்ஸ்ல நீங்க நாளைக்கு அங்க போய்த்தானே ஆகணும்?" "ம்ம்ம்... சொல்லித்தான் ஆகணும் ... முதல்ல நீ யார்ன்னு அந்த கிறுக்கன் மாரிமுத்து கேப்பான்? சொல்ற விஷயத்தை அவன் புரிஞ்சுக்க மாட்டான். இவன்ல்லாம் அங்க ஆபீஸர்ன்னு குப்பை கொட்டிக்கிட்டு இருக்கறான்; எதுக்கு உனக்குத் தொந்தரவு? நானே நாளைக்கு காலைல போன் பண்ணிச்சொல்லிடறேன்; நீ இங்க கோபலன் சார் கிட்ட மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடு. அவர்தானே எங்க ஆபீசுக்கு லீவ் சேங்க்ஷனிங் அத்தாரிட்டி; அவர் நல்ல மனுஷன்; நாளைக்கே என்னைப் பாக்க வந்தாலும் வந்திடுவார். "சரி செல்வா" அவன் காஃபி குடித்த கப்பை வாங்கி மூலையில் இருந்த கூடையில் போட்டவள் திரும்பிய போது, மல்லிகா அறையை விட்டு வெளியேறி இருந்தாள். "உங்கம்மா எங்க செல்வா" முகத்தில் விஷமம் தவழ செல்வாவை நோக்கினாள். "எங்கிட்ட சொல்லலை, எங்கே போறேன்னு" அவனும் நமட்டுத்தனமாக சிரித்தான். "சுகு, கொஞ்ச நேரம் முன்னே அவங்களை அத்தேன்னு சொன்னே; இப்ப உங்கம்மான்னு சொல்றே? "நீ ஒண்ணும் தெரியாத பாப்பா ... எல்லாம் நான் சொல்லித்தான் உனக்குப் புரியணும்? காலையில் மல்லிகா இவனைப் பாக்க வந்துட்டு நடத்திய டிராமாவைப்பத்தி இவனுக்கு என்னத் தெரியும் ... அவள் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். "சுகு ... சுகும்ம்மா" "ம்ம்ம்" "கிட்ட வாடி .. ஆசையா இருக்குடி; இன்னைக்கு இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப ரொம்ப அழகா ஸ்வீட்டா இருக்கடி; ராத்திரிக்கு நீ இங்கேயே இருக்கியாடி? உடலில் சிறிது தெம்பு வர அவன் தன் ஆசைக் காதலியை கொஞ்சினான். "...." "என்ன சுகு பேச மாட்டேங்கிற?" "எனக்கும் மட்டும் ஆசையில்லயா? உன் கூடவே இருக்கறதுக்கு; ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வர வேண்டாமா?" "எப்ப அந்த நேரம் வரும்" "ம்ம்ம் ... உங்கம்மாவை உள்ள கூப்பிடறேன்; அவங்களை நீயே கேளு; அவங்க சொல்லட்டும்; இன்னைக்கே உங்கூட இருக்கறதுக்கு நான் தயார்." அவள் அவன் அருகில் நெருங்கி ஆசை பொங்கும் கண்களுடன் அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்துகொண்டாள். "நிஜமாவா சொல்றே" அவள் கிண்டல் பண்ணுவதை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக பேசியவன் செல்வாவின் கை சுகன்யாவின் இடது மார்பின் மேல் படிந்திருந்ததால், அவன் கை அவள் இதயத்துடிப்பை தெளிவாக உணர்ந்தது. "மாமா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டார்" "மாமா? எந்த மாமா என்ன சொன்னார்?" "ம்ம்ம் ... கிண்டலா, உங்கப்பா சீமான் நடராஜன்தான் சொன்னார்; சுகன்யா, லீவெல்லாம் எடுக்க வேண்டாம் , நீ ஆபீசுக்கு போ; நாளைக்கு சாயந்திரம் வந்து செல்வாவை மீட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டார். ... சீனு இப்ப வந்துடுவான் ... ராத்திரிக்கு செல்வா கூட அவன் இருப்பான்; நான் உன்னை உன் வீட்டுகிட்ட விட்டுல டிராப் பண்றேன்னு." "அப்படியா; அப்ப ஒண்ணே ஒண்ணு குடுடி; நீ போறதுக்கு முன்னே" அவன் குரலில் மிதமிஞ்சிய தாபமும் ஆசையும் கலந்திருந்தன. "வேணாம் செல்வா உங்கம்மா வந்துடுவாங்க ... காலையிலேயே நான் உனக்கு முத்தம் குடுக்கும் போது அவங்க பாத்துட்டாங்க ... அப்புறம் இது ஒரு விவகாரமாய் போச்சுன்னா, என்னை இங்க வர வேணாம்ன்னு சொல்லிட்டா; என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதுப்பா" கண்களில் மெல்லிய பயத்துடன் சுகன்யா கிசுகிசுத்தாள் "நீ எங்கம்மாவை இன்னும் சரியா புரிஞ்சிக்கல" "என்ன சொல்றே நீ; இப்ப நீ சொல்றதுதான் எனக்கு புரியலை" "அதாண்டி, நாம சின்னஞ் சிறுசுங்க தனியா இருக்கட்டுமேன்னுத்தான் அவங்க வெளியே போயிட்டாங்கன்னு சொல்றேன்" சிரித்தவாறே அவன் அவளைப் பார்த்து தன் உதடுகளைக் குவித்தான். "ஏண்டா இப்படி அலையறே; உனக்கு உடம்பு பூரா வலிக்குதுங்கறே; நிம்மதியா சித்த நேரம் படுத்துகிட்டு இரேன்!" சுகன்யா அறைக்கதைவைப் பார்த்தவாறே அவனை நெருங்கினாள். செல்வா அவள் இடுப்பில் தன் கையைத் தவழவிட்டு தன் புறம் அவளை மனதில் ஆசை பொங்க வலுவாக இழுத்தான். தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு சுகன்யா அவன் முகத்தில் குனிந்து, அவன் வாயைக் கவ்வினாள். அவன் கீழுதட்டை மென்மையாக உறிஞ்சியவளின் கை அவன் மார்பை இதமாக தடவியது. வினாடிகள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும் காலத்தையும் மறந்தனர். செல்வா தன் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். அவன் அப்பொழுதுதான் காஃபி குடித்திருந்ததால் அவன் உதடுகள் சுகன்யாவுக்கு இனித்தது. பெண் மனம் எந்த சூழ்நிலையிலும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது. யாரோ கதவை நெருங்கி வரும் ஓசை சுகன்யாவின் காதில் விழ, ஆசையுடன் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி நின்று தன் உதடுகளை துடைத்துக் கொண்டாள். செல்வா தன் கண்களை மூடிக்கொண்டான். அடுத்த நொடி கதவை வேகமாக திறந்து கொண்டு டாக்டர் மாதவனும், சிஸ்டரும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பின் மல்லிகாவும், நடராஜனும் வந்தனர். சுகன்யா அவர்கள் பின் நின்று கொண்டு செல்வாவைப் பார்த்து முகத்தில் கள்ளத்தனத்துடன் கண்களில் உல்லாசம் பொங்க சிரித்தாள். "மாமா, நீங்க மீனா, அத்தையோட மேல ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்து போங்களேன்." காரிலிருந்து இறங்கிய சுகன்யா அவர்களை அழைத்த போது மணி எட்டாகியிருந்தது. "சுகன்யா, டயமாயிடுச்சில்லே, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்மா" ... நடராஜன் வினயத்துடன் பேச, மல்லிகா மறுபுறம் கார் கண்ணாடியின் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருக்க, மீனா தன் கையை ஆட்டி விடை பெற்றாள். "வாம்மா சுகன்யா, நான் கிளம்பறேன்; உனக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன், எப்படி இருக்கான் செல்வா" மாடியில் தன் அறையில் நுழைந்த போது வேணி சுந்தரியுடன் பேசிக்கொண்டிருக்க, ரகு தன் பெட்டி கைப்பையுடன் கிளம்பிக் கொண்டிருந்தார். "உடம்புல வலி குறைஞ்சிருக்குன்னு சொல்றார். நாளைக்கு காலையில ஹிப்லேயும், இடது கால் வீங்கியிருக்கறதுக்கும், எக்ஸ்ரே எடுக்கப் போறாங்க ... நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க மாமா; அம்மா இங்கேருந்து கிளம்பும் போது நானும் ஊருக்கு வர்றேன். செல்வா இப்படி இருக்கும் போது நான் டெல்லி ட்ரெய்னிங்கு போகப் போறது இல்லை. அடுத்த க்வார்ட்ட்ர்ல போலாம்ன்னு இருக்கேன். நான் வேணா ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?" "வேண்டாம்ம்மா, நீ காலையிலேருந்து சாப்பிடக்கூட இல்லே ... நிம்மதியா சாப்பிட்டு தூங்கு ... இந்தா, இதை பத்திரமா வெச்சுக்க; இது காலையில 50,000/- பணம் கட்டினதுக்கான ஹாஸ்பெட்டல் ரெசீப்ட், செல்வா டிஸ்சார்ச் ஆகும் போது தேவைப்படும். நான் வர்றேன் சொல்லிக்கொண்டு அவர் கிளம்பினார். "எப்ப வந்தே வேணி, உங்கப்பா எப்படி இருக்கார் ... ஜீன்ஸ்ல டக்கரா தூள் கிளப்பறேடி ... " அவள் வேணியைக் கட்டிக்கொண்டாள். "ம்ம்ம் ... அப்பா வீட்டுக்கு வந்துட்டார் சுகன்யா ... இப்ப நல்லாயிருக்கார் ...ரெகுலர் மெடிசின் ... நடைப்பயிற்சி .. உப்பு கம்மியா சாப்பிடணும் ... டாக்டர்ஸ் இதெல்லாம் சொல்லியிருக்காங்க. இப்ப மெதுவா நடக்க ஆரம்பிச்சுட்டார். " "சுந்தரி அத்தை எல்லாம் சொன்னாங்க ... தைரியமா இருடி சுகன்யா ... எல்லாம் நல்லபடியா நடக்கும் ... இப்பத்தான் எல்லாம் அவங்க வீட்டுக்கும் தெரிஞ்சுப் போச்சு ... அவங்க வீட்டுல எல்லோருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. உங்க வீட்டுல அத்தையும், மாமாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க; இரண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க. அப்புறம் என்னடி தைரியமா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க; இப்ப நீ ஒருத்தி இங்க இருக்கே; கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரா இங்க இருக்கப் போறீங்க அவ்வளவு தான். உனக்குன்னு ஒரு புள்ளை பொறந்தா தன்னால அந்த மல்லிகா இங்க ஓடி வராங்க" வேணி சிரித்தாள். "இல்லை வேணி, நான் அவங்க அம்மா மனசு நோகமாத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இருக்கேன் ... பாக்கலாம்." "ஓ.கே. ஆல் த பெஸ்ட் ... காலையில பாக்கலாம் ... எனக்கும் டயர்டா இருக்கு ... சாப்பிட்டு தூங்கணும் ... வரேன் அத்தே ... துள்ளி எழுந்த வேணியுடன், சுகன்யாவும் வெளியில் வந்தாள். "வேணி, இந்த ஜீன்ஸ்ல நீ இருக்கறதை, உங்காள் பார்த்தாரா ..." "ஏன் ..." "சும்மா சொல்லக்கூடாதுடி ... இந்த காட்டன் ஜீன்ஸ், குர்த்தாவிலே சூப்பரா சினேகா மாதிரி இருக்கேடி நீ ... ஃபிட்டிங் உனக்கு பர்ஃபெக்ட்டா இருக்கு ... நீ தூங்கணுங்கறே ... பத்து நாளா வேற நீ இங்கே இல்ல ... அவரு எங்க உன்னைத் தூங்க விடப்போறாரு ... அதைச்சொன்னேன்... ஆல் த பெஸ்ட் அண்ட் குட் ட்ரீம்ஸ்" சுகன்யா அவள் காதில் கிசுகிசுத்தாள். "என்ன பண்றதுடி; பஸ்ல வந்தது உடம்பு ரொம்ப அலுப்பா இருக்குடி ... விட்டா இங்கேயே இப்படியே தூங்கிடுவேன்; ஆனா இந்த மனசு இருக்கே, அது பைத்தியம் புடிச்சு அலையுது என் புருஷனோட நெருக்கத்துக்காக; என் வீட்டுல நாலு நாள் நிம்மதியா இந்த நெனப்பு இல்லாம இருந்தேன்; அதுக்கு மேல என்னால முடியலடி; அவனும் பாவம் ... ஏங்கிப் போயிருக்கான்ம்பா ... எல்லாத்துக்கும் மேல அவனை கட்டிபுடிக்கலன்னா என்னாலயும் இன்னைக்கு நிம்மதியா தூங்க முடியாது; அதனாலதான் நான் உங்கிட்ட கூட சரியா பேசாம கீழே ஒடறேன்" கண்ணை சிமிட்டிக்கொண்டே கீழே ஒடினாள் வேணி."கண்ணு சுகா, யார் கிட்ட வந்ததுலேருந்து போன்ல பேசிகிட்டு இருக்கேம்மா, வந்து ஒரு வாய் சாப்பிடும்மா; காலையிலேருந்து சாப்பிடாமா கூட அலைஞ்சுட்டு வந்திருக்கே" சுந்தரி தட்டில் சாதத்தை போட்டுவிட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். "இதோ வந்துட்டேம்மா ... கோபலன் சார் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேம்மா ... நீ படுத்துக்கோ ... சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் நான் ஒழிச்சி போட்டுடறேன்." "அம்மா, வாழைக்காய் பொறியல் நல்லா இருந்ததும்மா ... மாமா போறதுக்கு முன்னாடி சாப்பிட்டாரா?" லைட்டை அணைத்துவிட்டு அம்மாவின் பக்கத்தில் கட்டிலில் படுத்தாள் சுகன்யா. "ஆமாண்டி ... நீ வர்றதுக்கு முன்னேயே அவன் அவசர அவசரமா ரெண்டு வாய் அள்ளிப் போட்டுகிட்டான்" சுந்தரி எழுந்து கவிழ்ந்து படுத்திருந்த தன் பெண்ணின் முடியை அவிழ்த்து அவள் முதுகின் ஈரத்தை மெல்லிய டவலால் துடைத்தாள். "எம்மா ... நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே? சுகன்யா திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தைப் பார்த்தாள். "என்ன பீடீகையெல்லாம் பெரிசாயிருக்குது" "ம்ம்ம் ... நான் கேக்கறதை நீ எப்படி எடுத்திப்பியோன்னு இருக்குதும்மா" சுந்தரி சற்று ஆச்சரியமானாள். எப்போதும் பட படவென்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் மகள் இன்னைக்கு எங்கிட்ட பேச ஏன் தயங்கறா? "சொல்லுடி என்ன விஷயம்?" "என் அப்ப்பா எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமாம்மா? தயக்கத்துடன் வந்தன வார்த்தைகள். சுந்தரியும் ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள். தன் பெண்ணிடமிருந்து எள்ளளவும் இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த விடிவிளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்திலிருந்து தெரிந்தது. "அந்தாள் பேச்சை யாராவது எடுத்தாக்கூட எண்ணையில விழுந்த வடை மாவு மாதிரி பொசுங்குவே, இப்ப இந்த கேள்விக்கு என்ன அவசியம்ன்னு எனக்கு புரியலை." " உன் மனசை நான் புண்படுத்தியிருந்தா ... சாரிம்ம்மா ... சுகன்யாவின் குரல் தழுதழுத்தது." சொல்லிவிட்டு சரெலென திரும்பி படுத்துக்கொண்டாள் சுகன்யா. சுந்தரியின் மனம் ஒரு நிமிடம் அதிர்ந்தது, தன் பெண் அழுகிறாளா? "சுகா ... சுகா என்னடி ஆச்சு; இப்ப ஏன் அழுவறே? இப்படி திரும்பு என் பக்கம்." சுந்தரி அவள் தோளைப்பிடித்து தன் புறம் திருப்பினாள். சுகன்யா விம்மிக்கொண்டே எழுந்து, உட்க்கார்ந்திருந்த தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், தன் முகத்தை அவள் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் முதுகு குலுங்கியது. பாவம் இந்த பொண்ணு; மனசுல எதை வெச்சுக்கிட்டு இப்படி புழுங்கிப் போறா? அழட்டும்; அவள் அழுது முடிச்சா அவ மனசுல இருக்கற பாரம் குறையும் என மவுனமாக இருந்த சுந்தரியின் முகம் உணர்ச்சிகளின்றி இருந்தது. சுகன்யாவுக்கு அப்ப வயசு என்ன? ஏழா இல்ல எட்டா? தன் கணவன் குமார் வீட்டை விட்டுப் போன பதினைஞ்சு வருசத்துக்குப்பறம், "அப்பா எங்கம்மா?" என் பொண்ணு என்னைக் கேக்கிறா? அவன் மேல இவளுக்கு தீடீர்ன்னு என்ன பாசம் பொங்குது? அவனா போனானா? நான் தானே அவன் தொல்லைத் தாங்கமா, வீட்டை விட்டு அடிச்சு விரட்டினேன்? அதனாலதான் இவ இந்த அளவுக்கு வாழ்க்கையில உருப்புட்டு இருக்கா; இல்லன்னா அவன் இவளையே வித்து குடிச்சிட்டிருப்பான்?" "இப்ப அவன் எங்க இருப்பான்? இருக்கிறானா? இல்ல செத்துத்தான் தொலைஞ்சானா? அப்படி உயிரோட எங்க இருந்தாலும் எங்க நெனப்பு அவனுக்கு இருக்குமா? யாருக்குத் தெரியும். நான் மட்டும் அவன் கட்டின தாலியை கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு இருக்கேன். அவனைப் பத்திய எல்லா நெனைப்பையும் என் மனசுலேருந்து வேரோட பிடுங்கி எரிச்சு, எரிச்ச சாம்பலையும் தண்ணியில கரைச்சிட்டேன். என் மனசே அவனைப் பத்திய எந்த எண்ணமும் இல்லாம மரத்துப் போச்சு; இப்ப இவ ஏன் இந்த கேள்வியை கேட்டு மரத்துப் போன என் மனசை கீறிப்பாக்கிறா? இவ கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லையே?" சுந்தரி ஒரு நீண்டப் பெருமூச்சினை வெளியேற்றினாள். அழுது முடித்து தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சிறு குழந்தையைப் போல், தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தன் பெண்ணை, சுந்தரி ஒரு முறை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். பின் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். "கண்ணு, நான் இருக்கேண்டா உனக்கு; உனக்கு என்ன வேணும் சொல்லு; ஏன் மனசு குழம்பிப் போறே; என் லைப்ல அவன் சாப்டர் எப்பவோ முடிஞ்சிப்போச்சு; எனக்கு இப்ப அவன் மேல எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் நிம்மதியா இருக்கேண்டா செல்லம். அவன் நெனைப்பு என் மனசுல சுத்தமா இல்லடி கண்ணு; உன் அப்பாவைப்பத்தி செல்வா வீட்டுல கேட்டாங்கன்னு சொன்னப்ப; ஒரு வினாடி; ஒரே ஒரு வினாடி அவன் நெனப்பு என் மனசுல வந்தது உண்மைதான். இவனால என் பொண்ணுக்கு, அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கறதுல தடங்கல் வந்துடுமோன்னு நினைச்சேன்; ஆனா இன்னைக்கு உன் செல்வாவோட அப்பாவை பாத்ததுக்கு பின்னாடி, அவர் எங்ககிட்ட நடந்துகிட்டதை பாத்ததுக்கு அப்புறம் அந்த பயமும் என் மனசை விட்டு நீங்கிடுச்சி; இப்ப என் மனசு நிம்மதியாயிருக்கு." "நான் என் கல்யாணத்தைப் பத்தி கவலைப் படலைம்மா" "பின்னே" "செல்வாவோட நான் பழக ஆரம்பிச்சு முழுசா, இன்னும் மூணு மாசம் கூட ஆகலே" ஆனா அவனை ஒரு நாள் பாக்கலைன்னா என் மனசும், உடம்பும் அப்படி துடிச்சுப் போகுது; அவன் நிலமையும் அப்படித்தான் இருக்குன்னு அவன் சொல்றான்; அது உண்மையாத்தான் இருக்கணும். "வெக்கத்தை விட்டு சொல்றேம்மா; உங்கிட்ட நான் பேசக்கூடிய பேச்சு இல்லம்மா இது; காலையில அப்படி வலியோட மருத்துவ மனை கட்டில்ல துடிக்கறவன்; என்னைப் பாத்ததும் தன் உதட்டை குவிச்சிக் காட்டறான். டாக்டர் வெளியில போன அடுத்த செகண்ட், நானும் இருப்புக்கொள்ளாமா அவன் உதட்டுல முத்தம் குடுத்தேன். அதை அவன் அம்மாவும் அப்பாவும் பாத்துட்டாங்க; அவங்க அம்மா திருப்பியும் அங்க பிரச்சனை பண்ணி, மாமா தன் பொறுமையை இழந்துடுவாரோன்னு பயந்துகிட்டு இருந்தேன்; உங்க பேரை கெடுக்கற மாதிரி நடந்துகிட்டேனேன்னு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருந்தேன். ஆனா, என் மனசை கட்டுப்படுத்த முடியாமா, இப்ப சாயங்காலம் திரும்பி வரும் போதும், வெக்கமில்லாமா எப்படா சமயம் கிடைக்கும்ன்னு தவிச்சுகிட்டு இருந்து, கடைசியில அவனுக்கு திருட்டுத்தனமா ஒரு முத்தம் குடுத்துட்டுத்தான் வந்தேன்." "வீட்டுக்கு வந்தா என் ஃப்ரெண்டு வேணி சொல்லிட்டுப் போறா; நாலு நாளைக்கு மேல அவ அம்மா வீட்டுல அவளால தனியா தூங்க முடியலைன்னு; பத்து நாளுக்குள்ள என் புருஷன் நான் இல்லாம ஏங்கிபோய்ட்டான்ங்கறா; நீயும் அப்பாவும் காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணிகிட்டீங்க; அவரு தப்பெல்லாம் குடிச்சுட்டு உன்னை தொந்தரவு பண்ணதுதான்; அதில்லாம நீங்க ரெண்டு பேரும் வேற எதுக்காகவும் சண்டைப் போட்டுக்கிட்டதா எனக்கு ஞாபகமில்லை; அப்படி இருக்கும் போது எனக்காக நீ அவரை அடிச்சு வெரட்டிட்டு; உன் உடம்பையும், மனசையும் இப்படி எரிச்சிக்கிட்டு இருந்திருக்கியேம்மா; அதை நெனைச்சேன் என்னால தாங்க முடியலைம்மா;" சுகன்யா தன் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல், மீண்டும் விம்ம ஆரம்பித்தாள். சுந்தரி தன் மகள் பேசியதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் மனசு மகிழ்ச்சியில் முழுமையாக பூரித்துப் போனது. சுகன்யா பேசி முடித்து விம்மத் தொடங்கியதும், அவளை மீண்டும் தன் புறம் இழுத்து மார்புடன் தழுவிக்கொண்டு சுகன்யாவின் கன்னத்தில் ஒழுகும் கண்ணீருடன் சேர்த்து, தன் தாய்மை உணர்ச்சி பொங்க முத்தமிட்டவள், அவள் முதுகை வருடிக்கொடுத்தாள். "சுகன்யா! கண்ணு, உன்னை நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படறேண்டா செல்லம். என் பொண்ணுக்கு, இன்னொரு பொம்பளையோட மன உணர்ச்சிகளையும், உடல் உணர்ச்சிகளையும் மதிக்கற பெரிய மனசு இருக்கு; நான் உன்னை சரியாகத்தான் வளர்த்திருக்கிறேண்டி. உன்னை ஒரு சுயநலவாதியா நான் வளர்க்கலை. உன் சுகத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையை நீ கெடுக்கமாட்டே; இன்னைக்கு இது தெரியறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு. "நீ சொன்ன மாதிரி நாலைஞ்சு வருஷம் முன்னால வரைக்கும் கூட என் உடம்பு என்னை பாடாப் படுத்தியிருக்கு; உடம்பு சுகம் என்னான்னு நல்லா தெரிஞ்சவதானே நான்? நானும் கல்யாணமாகி, நாலு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாமா, அவன் கூட சந்தோஷமா இருந்து, உன்னை பெத்துகிட்டவ தானேடி; அதுக்கு அப்புறம் தானே எங்க வாழ்க்கையில பிரச்சனை தொடங்குச்சு; ஆனா எப்படியோ இது வரைக்கும், என் மனசை கட்டுப்படுத்திகிட்டு, சோத்துல கொஞ்சம் உப்பை கம்மியா போட்டு திண்ணுகிட்டு, ரோட்டுல போகும் போது தலையை குனிஞ்சி நடந்து, ஆம்பிளைங்களை திரும்பி பாக்காமே என் வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்". "எவன் கண்ணும் என் உடம்புல பட்டது இல்லேன்னு என்னால சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு தரம், கொஞ்சம் அழகான, ஆம்பளைங்க என்னை, கடைத்தெருல, கோவில் குளத்துல, உத்து பாத்திருக்காங்க; அப்ப என் உடம்பும் சித்த நேரம் சிலுத்து போனதை என்னால மறுக்க முடியாது. எத்தனையோ நாய் என் பின்னால முரட்டுத்தனமா கொலைச்சுப் பாத்துச்சுங்க; ஆனா அந்த நாய்ங்க எவனையும் மனசுல நான் நினைக்காமா, எவன் கையும் என் உடம்புல படாமா இருந்தேட்டேன்னு உறுதியா உன் கிட்ட என்னால சொல்லமுடியும். இப்பல்லாம் என் மனசும் சரி, உடம்பும் சரி அந்த அளவுக்கு என்னைத் தொந்தரவு பண்ணல. மனசு மரத்துப் போச்சுன்னு வெச்சிக்கோயேன்" சுந்தரி பேசுவதை நிறுத்தினாள். "அம்மா, மாமா சொன்னாருல்ல; தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு; இங்க சென்னைக்கு வந்து, நான் தனியா இருக்க ஆரம்பிச்சதுலேருந்து, நாலு பேரை பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், முகம் தெரியாத ஜனங்களோட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், மத்தவங்க வாழ்க்கையில அவங்க அனுபவிக்கற சுக துக்கங்களையும், துயரங்களையும், நல்லது கெட்டதுகளையும் பத்தி கேள்வி பட்டதுக்கு அப்புறம், என் கண்ணால பாக்கறதுக்கு பின்னாடி, என் அப்பா மேல இருந்த கோபம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சி. "அவர் நல்லவராத்தான் இருக்கணும்ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி. ஏன்னா நீ ஒரு தரம் அவரை தொடப்பத்தால அடிச்சதும், மாமா அரிவாளை தூக்கினதுக்கு அப்புறம், ஒரு தரம் கூட நம்ம வீட்டுப்பக்கம், ஏன் நம்ம ஊர்லேயே அவரை நான் பாக்கல; குடிக்கறது அவருக்கு ஒரு வியாதின்னு நினைக்கிறேன்; குடிப்பழக்கத்துக்கு அடிக்ட் ஆன ஒரு மன நோயாளி அவர்; நான் என்ன சொல்றேன்னா, அப்பா இருக்கற இடம் உனக்கோ, மாமாவுக்கோ தெரிஞ்சிருந்தா, எங்கிட்ட சொல்லும்மா, எனக்கு அவரை ஒரு தரம் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா; இத்தனை நாள்லே அவர் திருந்தியும் இருக்கலாமில்லயா? "ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேம்மா, உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன். எனக்கு உன் மன நிம்மதிதாம்மா முக்கியம். இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். உனக்குஅப்புறம்தான் எனக்கு எல்லாமே; என் அப்பா, என் வேலை; என் செல்வா, என் கல்யாணம் எல்லாமே உனக்கு அப்புறம்தாம்மா." சுகன்யா தன் முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக பேசினாள். "நீ உன் அப்பாவை போய் பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல; அவன் எனக்கு புருஷன் மட்டுமில்லே; உன் அப்பாவும் கூடத்தான்; ஆனா என்னைக் கூப்பிடாதே; அவங்க அப்பா, அம்மாவுக்கு அவன் புள்ளை; எனக்காக அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு என் கூட வந்தான். இப்ப அவன் தன் பெத்தவங்களோடத்தான் இருக்கான்னு நெனைக்கிறேன்; அஞ்சாறு வருஷம் முன்னாடி என் மாமனாரையும், மாமியாரையும் தற்செயலா ஒரு முறை கல்கத்தாவுல உன் மாமா பாத்ததா சொன்னான்; அவனுக்குத்தான் ஊர் ஊரா அலையற வேலையாச்சே; அவங்க ரெண்டு பேரும், ரகு கிட்ட, தங்களோட பிள்ளை, எனக்கு பண்ண கொடுமைக்கு மன்னிப்பு கேட்டாங்களாம்." "என்னையும் உன்னையும் நேரா ஒரு தரம் பாக்கணுமின்னு சொன்னாங்களாம். என்னைப் பாத்து மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாங்களாம். ஆரம்பத்துல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்காத அவங்க, வயசானதால வேற வழியில்லாமா, ஆதரவில்லாமா, கல்கத்தாவுல ஏதோ வேலை செய்துகிட்டு இருந்த, உன் அப்பாவோட போய் சேர்ந்துகிட்டாங்களாம். உன் மாமனும் ஒரு தரம் வயசானவங்க சொன்னாங்களே, அட்ரஸ் எல்லாம் குடுத்தாங்க; அவங்களை மட்டுமாவது போய் பாத்துட்டு வரலாமான்னு என்னைக் கேட்டான். நான் வேணாம்ன்னு தீத்து சொல்லிட்டேன்." "அவங்கக்கூட எனக்கு எப்பவும் எந்த பழக்கமோ, உறவோ இருந்ததே இல்லைம்மா. பார்க்காத, பழகாத ஒருத்தர் கிட்ட எப்படி பாசம் வரும்; எனக்கு எந்த பாசமும் அப்ப அவங்க மேல வரலை. புதுசா எதுக்கு இந்த வயசுல சிக்கல்களை வளர்த்துக்கிட்டு, அதன் மூலமா நீ பாதிக்கப்படக்கூடாதுன்னு நான் நெனைச்சேன். அப்பதான் நீ காலேஜ்ல சேர்ந்தே... ஹாஸ்டல்ல தனியா இருந்தே; யார் தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி, நேரத்துக்கு எழுந்து, மனசு ஒன்றி நல்லாப் படிச்சு, ஒரு சாதாரண வாழ்க்கைக்கு நீ மாறிகிட்டு இருந்த நேரம்; எந்த காரணத்தாலும் உன் மனசுல எந்த குழப்பமும், அந்த கொடுமைக்காரன் நினைவும் வந்து உன் படிப்பு கெட்டுப் போகறதை நான்விரும்பலை." "அம்மா ... நீ எனக்காக உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கேம்மா ... எப்படிம்மா இதுக்கு நான் நன்றி சொல்லப்போறேன்" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள். "கண்ணு ... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே ... பெத்துக்கிட்ட நான் ... என் கடமையைச் செய்யறேண்டி ... உங்கிட்ட நான் எதையும் எதிர்ப்பாத்து இதையெல்லாம் செய்யலை; இப்ப நீ நிம்மதியா தூங்கு ... நாளைக்கு நீ ஆபீசுக்கு போகணும் ..." "அம்மா ... அப்ப நான் என் கடமையை செய்ய வேண்டாமா உனக்கு?" "நீ எனக்குத்தான் திருப்பி செய்யணும்ன்னு அவசியம் இல்லை" "அப்புறம் வேற யாருக்கு செய்ய?" "நான் உனக்கு செய்யறேன்; நீ உன் புள்ளைங்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமால் செய் ... " சுந்தரி மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டு சுவரைப் பார்த்தாள். அதுவரை தன் மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் பெண் தான் அழுவதை உணர்ந்துகொள்ளாத படி, தன் கண்களில் வழியும் கண்ணீரை அவள் சத்தமில்லாமல் துடைத்துக் கொண்டாள். சுகன்யா வழக்கம் போல் தன் கையைத் தன் தாயின் இடுப்பில் போட்டு அவளை வளைத்துக்கொண்டாள் ... சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் மனம் தளர தூக்கத்திலாழ்ந்தாள். டைனிங் டேபிளில், கணவனுக்கும், மகனுக்கும் இரவு உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள் வசந்தி. அத்தை நீங்க உக்காருங்க, நான் எடுத்துப் போடறேன், தன் மாமியாரின் கையிலிருந்த சாதம் நிறைந்த கிண்ணத்தையும், கரண்டியையும் வாங்கிக் கொண்டாள் வேணி. "எப்படிம்மா இருக்கார் உங்கப்பா?" "பரவாயில்லே மாமா ... உங்களை மாதிரி ரெகுலரா வாக்கிங் போக மூக்கால அழறார். தெனமும் இதுக்கு ஒரு சண்டை காலையில அம்மாவுக்கும் அவருக்கும் நடுவில ..." "முதல்ல கொஞ்ச நாள் அப்படித்தான் இருப்பார். ராத்திரியில சீக்கிரம் தூங்கணும். அப்பத்தான் காலையில எழுந்துக்க முடியும். தொடர்ந்து ஒரு வாரம் நடக்கறதுக்கு ஆரம்பிச்சுட்டா, அப்புறம் போகாதேன்னு சொன்னாலும் கேக்கமாட்டார் அவர். உன் வீட்டுக்காரனையும், ராத்திரியில சீக்கிரமா தூங்கி, காலையில ஆறு மணிக்குள்ள எழுந்து நடக்கச் சொல்லு. நீ உன் வூட்டுக்கு போன நாளா, "நெட்டு நெட்டுன்னு" ராத்திரி ஒரு மணிக்கு முன்னே தூங்கறது இல்லை. அதுல என்னாதான் அப்படி இருக்குன்னு எனக்கு தெரியல. இந்த வயசுலேயே உக்காந்து உக்காந்த்து தொப்பை விழுது; காலையில எட்டு, எட்டரை மணிக்கு முன்னே எழுந்துக்கறது இல்லை; அப்புறம் அவசரம் அவசரமா ஓடி, ஆபீஸ் கேண்டீன்ல கண்டதை வாங்கித் திண்ண வேண்டியது; இது நல்லதுக்கு இல்லை" மாணிக்கம் எழுந்துகொண்டார். "நல்லா காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க; உங்க எதிர்லேதானே இருக்கார். நான் சொன்னா உங்க புள்ளை எங்க கேக்கப் போறார்; உடம்பு வெயிட் ஏறிக்கிட்டே போவுது." வேணி அவரைத் தூண்டிவிட்டாள். எங்கப்பன் வாத்தியா இருந்து ரிடையர் ஆனவன்; லெக்சர் குடுக்கறதுதான் அந்தாளுக்கு வேலை; அவருக்கு ஜால்ரா அடிக்கறதுதான் உன் வேலை; உன் மாமானார் கிட்ட நல்ல பேரு வாங்கிட்டா உனக்கு போதும்ன்னு நீ நெனைச்சுக்கிட்டு இருக்க; உள்ள வாடி மவளே; வெச்சுக்கிறேன் உன்னை; சங்கர் தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தவன், பேசாமல் மனதுக்குள் குமைந்தவாறே எழுந்து வாஷ் பேசினை நோக்கி நடந்தான். "வேணி, நீ உக்காரும்மா, இன்னைக்கு நான் பரிமாறேன் உனக்கு; மேல சுந்தரி வந்திருக்கா இல்லையா ... அவ நல்லெண்ணைய் ஊத்தி, வடகம் போட்டு தாளிச்சுப் பண்ண வத்தக்குழம்பும், வாழைக்காய் பொடிமாசும் கொண்டு வந்து குடுத்துட்டுப் போனா, நல்லா அருமையா இருக்கு; நீயும் கொஞ்சம் போட்டுக்கோ சாதத்துக்கு." அவர் ஆசையுடன் தன் மருமகளுக்கு எடுத்து பக்கத்தில் வைத்தார். "தேங்க்ஸ் மாமா, எல்லாம் பக்கத்துலதானே இருக்கு; அத்தையும் நானும் போட்டு சாப்பிட்டுக்கிறோம் ... நீங்க உக்காருங்களேன் மாமா" வேணி புன்னகைத்தாள். "ஏங்க; நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா செத்த நேரம்; கல்யாணம் ஆன பையனை அவன் பொண்டாட்டி எதிரிலேயே, எதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க; அவனாச்சு; அவன் பொண்டாட்டியாச்சு; அவன் இப்ப மூஞ்சை தூக்கிக்கிட்டு எழுந்து போறான். இவ உள்ளப் போனா இவளைப் போட்டு கொடாய்வான்; வயசாச்சு உங்களுக்கு; சொன்னாப் புரியலை இதெல்லாம்" வசந்தி எரிச்சலுடன் பேசினாள். "ஆமாண்டியம்மா, எனக்கு வயசாய் போச்சு; நீ நேத்து தான் வயசுக்கே வந்திருக்கே; உன் புள்ளையை ஒண்ணும் சொல்லிடக்கூடாது? நீயாச்சு; உன் புள்ளையாச்சு; உன் மருமவளாச்சு. அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தன் படுக்கையறையை நோக்கி நடந்தார். வேணி, தன் வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல், தன் மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சிரித்தாள். சாப்பிட்ட பின் வேணி கிச்சனில் பாத்திரங்களை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தாள். வசந்தி பாலைக் காய்ச்சிக்கொண்டிருந்தாள். "ஏம்மா வேணி, ஒரு மாசம் இருந்துட்டு வர்றேன்னு சொன்னே; உங்கப்பா உடம்பும் அதுக்குள்ள முழுசா தேறியிருக்கும். இன்னும் பத்து நாள் உங்கம்மாவுக்கு ஒத்தாசையா இருந்துட்டு வர்றது தானே? நீ ஏன் ஓட்டமா ஓடி வந்துட்டே? உங்க வீட்டுல என்னைத் தப்பா நினைக்கறதுக்கா ... நான் தான் கூப்பிட்டேன்னு?" "இவர்தான் போன் பண்ணார்; எப்ப வரேன்னு? மூன்று நாள் கழிச்சு, புதன் கிழமை சாயந்திரம் நான் டூர்ல வேற போறேன்னார். திரும்பி வர்றதுக்கு ரெண்டு வாரம் ஆகுமின்னு இழுத்தார்; எங்க அம்மா கூட சொன்னாங்க இவருகிட்ட, இப்பத்தானே வந்தா; இன்னும் ஒரு வாரம் கழிச்சு அனுப்பறேன்னு சொன்னாங்க; அவங்ககிட்ட சரின்னு சொன்னார். என்னாச்சுன்னு தெரியலை. சாயந்திரம் திருப்பியும் போன் பண்ணார் எனக்கு." "ம்ம்ம்ம்" வசந்தி மருமகளை தன் ஒரக்கண்ணால் நோக்கினாள். "காலையில சரின்னு எங்கம்மாகிட்ட சொன்னவர், எப்ப வர்றேடின்னு திருப்பியும் திருப்பியும் கேட்டார். செவ்வாய் கிழமை சாயந்திரம் டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வெச்சிருக்கேன்னும் சொன்னார்." "யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ... இவன் வாங்கி வெச்சிருக்கான்" வசந்தியின் குரலில் ஆச்சரியம் தொனித்தது. "எனக்குத்தான் அத்தே ... இந்த மாசம் ரெண்டு வாரம் "நாள்" தள்ளிப் போயிருக்கு எனக்கு ... லேடி டாக்டர் கிட்ட அம்மாவும் நீயுமா ஒரு தரம் போய் வந்துடுன்னார்; அதான் கிளம்பி வந்திட்டேன்." "நல்ல சேதி சீக்கிரமா சொல்லுடியம்மா; ஆனா இதுக்கு இவ்வளவு தூரம் இங்க ஓடி வரணுமா? உங்க ஊர்லே லேடி டாக்டரே இல்லையா?" "நானும் அதைத்தான் சொன்னேன் அவருகிட்ட" "ம்ம்ம்" வசந்தி சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு அவளை உற்றுப்பார்த்தாள். "லேடி டாக்டர் ஆயிரம் பேர் இருக்காளுங்க ... நீ யார்கிட்ட வேணா, எங்க வேணா, உன் உடம்பை காமிக்கலாம்; ஆனா நான் உன் ஒருத்திக்குத்தாண்டி தாலி கட்டியிருக்கேன்னார் ... எனக்கு எதாவது வேணும்னா நான் உன்னைத்தான் கூப்பிட முடியும்ன்னார்; அதுக்கு மேல பேசி புண்ணியம் இல்லைன்னு கிளம்பி வந்துட்டேன்" வேணி முகம் சிவக்க பேசினாள். "புரியுதுடியம்மா ... அவனுக்கு ஒரு டம்ளர் பாலை குடுத்துட்டு, நீயும் இனிமே ராத்திரியில ஒரு டம்ளர் இளஞ்சூட்டுல படுக்கறதுக்கு முன்னாடி பாலைக்குடிச்சுட்டு படு. எப்பவும் போல பால் வாசனை எனக்கு புடிக்கலைன்னு இனிமே சொல்லிக்கிட்டிருக்காதே. லேடி டாக்டரும் நான் சொல்றதைத்தான் சொல்லுவா. "அலமாரியிலே இருக்கே அந்த சில்வர் சொம்பு அதை எடுத்துக்கோ; அதை யூஸ் பண்றதேயில்லை; அதுல ரெண்டு கிளாஸ் பால் தாராளமா ஊத்தலாம்; அதை முழுசா ரொப்பி எடுத்துக்கிட்டு போம்மா; ஏற்கனவே வீட்டுத்தலைவர் நோட்டீஸ் குடுத்துட்டு போயிருக்கார்; அவன் நேரத்துல தூங்கலேன்னு; நீ சட்டுன்னு கிளம்பி போய் நேரத்துல ரெண்டு பேரும் தூங்கற வழியைப் பாருங்க ... " வசந்தி வேணியின் கன்னத்தை பாசமுடன் வழித்து களுக்கென சத்தமெழ நெட்டி முறித்தாள்.விளக்கை அணைத்துவிட்டு, அறை இருட்டில் தன் மனைவிக்காக மனதில் பொங்கி எழும் ஆசையுடன் காத்திருந்தான் சங்கர். வேணி இல்லாமல் பத்து நாளாகத் தனியாக, தலையணையை காலுக்கு நடுவில் இடுக்கிக்கொண்டு தூங்கியதன் ஏக்கம் இன்று தீரப்போகிறது. "ஏன் இப்படி ரூமை இருட்டாக்கி வெச்சிருக்கீங்க, தடுக்கி விழுந்து என் கை கால் உடையறதுக்கா? நைட் லேம்பையாவது போடலாம்லே?" முகத்தை கழுவிக்கொண்டு, உள்ளே நுழைந்த வேணி கேட்ட கேள்விக்கு சங்கர் பதிலேதும் சொல்லாமல், இருட்டிலேயே அவள் மேல் பாய்ந்து, இறுக்கி அணைத்து, இலேசாக ஈரத்துடனிருந்த அவளின் கழுத்து வளைவில் ஆசையுடன் முகம் புதைத்து, ஓசையுடன் அவளை முகர்ந்தான். அவள் கழுத்திலிருந்து வந்த சந்தன சோப்பின் வாசத்தை முகர்ந்தவன் தடி துள்ளி எழுந்து வேணியின் அடிவயிற்றில் முட்டியது. "விடுங்க என்னை", வேணி தன் உடல் சிலிர்த்தவள், அவன் மார்பில் தன் கைகளை வைத்து பலமாக அவனை உதறினாள். உதறியவள் அறையின் விடிவிளக்கைப் போட்டாள். "ஏண்டி இப்படி தொட்டா சிணுங்கி மாதிரி உன் உடல் சிலுத்துப்போவுது?” என்னமோ புதுசா ஒரு ஆம்பளை இன்னைக்குத்தான் உன்னைத் தொடற மாதிரி பண்ணிக்கிறீயே? நான், உன் புருஷன்தானே தொட்டேன்?" "தொட்டது யாருன்னு தெரியாம போறதுக்கு நான் என்ன சொரனை கெட்ட ஜென்மமா? இப்படி இருட்டுல நின்னுக்கிட்டு உள்ள வந்ததும் வராததுமா புலி மாதிரி பாஞ்சு எதுக்குப் பயமுறுத்தறீங்கன்னுதான் தெரியலை? " "நம்ப ரூம்ல என்னை விட்டா வேற யாருடி உன்னை கட்டிப்புடிக்க போறது?" ஏண்டா கண்ணு பயந்துட்டியா? சாரிடாச் செல்லம்." அவன் இன்னும் அவள் முதுகின் பின் நின்று கொண்டிருந்தான். "டைனிங் டேபிள் மேல காய்ச்சின பாலை வெச்சிட்டு வந்துட்டேன். அதைப் போய் எடுத்துக்கிட்டு வாங்களேன்" வேணி ஒய்யாரமாக அவனைப் பார்த்தவாறு தன் தலை முடியை பிரித்து உதற, முடிக்கற்றைகள் அவள் அடி முதுகை தொட்டது. . "ஏண்டி நீயே உன் பாலை குடுத்துடேண்டி..." சொல்லிக்கொண்டே அவள் மார்புகளை இதமாக தொட்டு அழுத்தினான். "முதல்ல உங்க கையை எடுங்க; எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு; சொல்றதை கேக்க மாட்டீங்க; உங்கம்மா ஸ்பெஷலா உங்களுக்கு ஏலக்காயை இடிச்சிப்போட்டு, பால் காய்ச்சி குடுத்துவிட்டு இருக்காங்க. காலையில டேபிள் மேல இருக்கறதைப் பாத்தாங்கன்னா, என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க; அவங்க கிட்ட என்னைப் பாட்டு வாங்க வெக்காதீங்க; அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" வேணி தலையை திருப்பி, திருட்டுத்தனமாக ஒரு முறை குறு குறுக்கும் விழிகளால், தன் கணவனைப் பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த தாபத்தையும், பொங்கும் ஆசை வெறியையும் பார்த்தவளுக்குப் புரிந்து விட்டது, இன்னைக்கு இவன் என்னை சாறு புழியாம விடப்போறதில்லை - அவள் தன் மனதில் பொங்கும் உவகையை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், தன் முதுகை அவனுக்கு காட்டியவாறு தான் அணிந்திருந்த குர்த்தாவை தன் இரு கைகளையும் உயர்த்தி நிதானமாக கழற்றத் தொடங்கினாள். விடிவிளக்கின் கண்ணுக்கு குளிர்ச்சியான வெளிச்சத்தில், தன் கைகளை உயர்த்தி மேல் சட்டையை கழற்றியவளின் பரந்த முதுகையும், அவள் வெண்மையான முதுகை இறுக்கமாக பற்றியிருந்த கருப்பு பிராவையும், ததும்பும் அவள் முலைகளின் பக்கச்சதைகளையும், இறுக்கமான காட்டன் பேண்டில் பிதுங்கிக்கொண்டிருந்த பின்னெழில்களையும் பார்த்த சங்கரின் மண்டைக்குள் காமத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இன்னைக்கு நான் இவளை இடிக்கற இடியில போதும் போதும்டான்னு இவ கதறணும், அவன் மனதுக்குள் வெறி ஏறியது. "சரி ... சரி ... நான் போய் பாலை எடுத்துக்கிட்டு வர்றேன். கொஞ்சம் பொறுடி வேணி; நான் வந்து உன் ட்ரெஸ்ஸை அவுத்து விடறேன் ..." அவன் வெளியில் வேகமாக ஓடினான். "நீ அவுக்கறதுலதான் எக்ஸ்பர்ட் ஆச்சே; இதை சொல்லி வேற காட்டணுமா!" வேணி குதுகலத்துடன் சிரித்தாள். "என்னடி இவ்வளவு பால் வெச்சிருக்காங்க; நான் என்னா மொடா குடியனா ... நீதான் பால் குடிக்கவே மாட்டே ... எல்லாம் எனக்கேவா?" பால் சொம்புடன் திரும்பி வந்தவன் வியப்புடன் கேட்டான். "எனக்கு என்னாத் தெரியும்; இன்னைக்கு ஆசைப்புள்ளை நீங்க களைச்சிப் போயிடுவீங்கன்னு உங்கம்மா நெனைச்சாங்களோ என்னமோ?" அவள் கலுக்கென சிருங்காராமாகச் சிரித்தாள். "கிண்டல் பண்ணாதடி" "கிண்டல் என்னா இருக்கு இதுல ... பேசாம போத்திக்கிட்டு தூங்கவா போறிங்க நீங்க இப்ப?" "வேணி, உன்னைப் பாக்கும் போது கிக்கு ஏறுதுடி. இந்த காட்டன் ஜீன்ஸ்ல சும்மா கிண்ணுன்னு இருக்கே! அப்புறம் பேசாம எப்படி தூங்கறது? இந்த ஜீன்ஸ் உங்க ஊர்ல தெச்சிக்கிட்டியா? இல்ல ரெடிமேடா வாங்கினியா?" தன் உடலை அவள் முதுகில் ஒட்டிக்கொண்டு, அவள் பேண்டில் புடைத்துக்கொண்டிருந்த செழித்த புட்டங்களை ஒரு கையால் தடவிக்கொண்டே, மறு கையை அவள் இடுப்பில் ஓடவிட்டான். "அப்பாவை பாக்கப்போனப்ப, என் அண்ணி, வேணி இந்த ஜீன்ஸை நீ போட்டுக்கடி உனக்கு சரியா இருக்கும்ன்னு எனக்கு குடுத்தாங்க; அவங்களுக்குன்னு எங்கண்ணன் பாம்பேலேருந்து, துணி ரொம்ப நல்லாயிருக்கேன்னு, ஆசை ஆசையா வாங்கிட்டு வந்தாராம். வீட்டுக்கு வந்து அவங்க ட்ரை பண்ணா, அவங்களுக்கு ஒரு ஸைஸ் சின்னதா இருந்ததாம், தொடைக்கு மேல ஏறலையாம்." "உங்கண்ணன் ஒரு மொக்கைப் பார்ட்டிப்பா" அவன் மெலிதாக சிரித்தான். சிரித்தவன் கை விரல்கள் அவள் ஜீன்ஸினுள் நுழைய முயற்சி செய்தன. "இப்ப எதுக்கு எங்கண்ணனை மொக்கைங்கறீங்க." அவள் சிணுங்கித் தன் முட்டியால் அவன் மார்பில் குத்தினாள். "பின்ன ... பொண்டாட்டியோட சூத்து சைஸ் தெரியாம பேண்ட் வாங்கிட்டு வர மனுஷனை என்னான்னு சொல்றதுடி ... நான் எப்ப எது வாங்கினாலும் கரெக்ட்டா உன் சைஸ் படி வாங்கிட்டு வரேன்ல்லா ... அப்படி என்னா வயசு ஆயிடுச்சி அவருக்கு, வாரத்துல ரெண்டு நாளாவது, பொண்டாட்டி சைஸை அவரு அளந்து பாக்கணும்டி! "உங்கண்ணியோட உடம்பு வாகு அப்படி; பெருத்துக்கிட்டே போறாங்க; உன் அண்ணியோட தங்கச்சி விமலியைப் பாரு அவளுக்கும் இடுப்புக்கு கீழே சொர்க்கம்டி ... என்னா தள தளன்னு வெச்சிக்கிட்டு இருக்கா? ... அவளுக்கு எந்த மொக்கைப் பார்ட்டி வரப்போறானோ தெரியலை." அவன் கொச்சையாக பேசியதை கேட்ட, வேணியின் மனதில் சட்டென கிளுகிளுப்பு ஏற, அவன் கைகளுக்குள் சிக்கியிருந்த தன்னுடலை லேசாகத் திருப்பி தன் உதடுகளை ஆசையுடன் அவன் கன்னத்தில் பதித்தாள். "அவரு உங்களை மாதிரி தெனம் தெனம் பொண்டாட்டி இடுப்பு பெருக்குதா, பின்னாடி சூத்தாமட்டை பெருக்குதான்னு தடவி பாக்கற ஆளு இல்லே; இதெல்லாம் உங்க பரம்பரைக்கே உள்ள குணம்; ஒரே அலைச்சல், ராத்திரியாச்சுன்னா வூட்டு பொம்பளைங்களை புடுங்கி எடுக்கறது?" அவனை அவள் ஆசையுடன் முத்தமிட்ட போதிலும், அவன் தன் உறவுகளை பற்றி கொச்சையாகப் பேசியது அவள் மனதை உறுத்தியது. "ஆமாம் உங்கண்ணியை கேட்டாத்தான் தெரியும் என் மச்சான் லட்சணம் என்னான்னு; ஏண்டி நாங்க என்ன ஊர்ல இருக்கறவளுங்களையா கையை புடிச்சு இழுக்கறோம்; கட்டிக்கிட்டவ புடவையைத்தானே தூக்கிப் பாக்கிறோம்; நீ என்னமோ எங்க பரம்பரையைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்ட, எங்க பரம்பரையைப் பத்தி உனக்கென்னடித் தெரியும்?" - சொல்லிக் கொண்டே சங்கர் அவள் பின் கழுத்தை தன் ஈர நாக்கால் நக்க, வேணி தன் உடல் சிலிர்த்து கிசுகிசுத்தாள், "சும்மா நக்காதேடா அங்க எனக்கு கூசுது." "ஆமாண்டி நீ சொல்றதும் சரிதான் ...நக்கினா கூசத்தான் செய்யும் " சொல்லிக்கொண்டே, சங்கர் அவள் முதுகை தன் மார்புடன் அழுத்தி, தன் பிடியை இறுக்கி அவளைத் தழுவ, சூடான அவன் மூச்சு காற்று அவள் கழுத்தையும், கன்னத்தையும் வருட, வேணியின் உடலில் கிளுகிளுப்பு மெதுவாக ஏறத் தொடங்கியது. கழுத்துக்கு கீழ் ஆரம்பித்து அவள் முதுகை தொடும் மெல்லிய பூனை முடி சிலிர்க்க சிலிர்க்க, அவள் கூந்தலை விலக்கி, அவளின் பின் கழுத்தில் முத்தமிட்டவன் வலது கை அவள் அடிவயிற்றில் நகர்ந்து அவள் ஜீன்ஸின் இடுப்பு பட்டனைத் தேடி அவிழ்த்தது. "என்ன ஆமாம் ... என்ன சரிதான்" ஆரம்பிச்சுட்டான் இவன் தன் வேலையை, அவுக்கட்டும் எல்லாத்தையும் ஒண்ணு ஓண்ணா, கொஞ்ச நேரம் அவன் இஷ்ட்டப்படி இருந்துட்டு போறேன். இவன் பாட்டுக்கு இன்னைக்கு நான் ஆடித்தான் ஆகணும்; இவனை இனி நிறுத்தமுடியாதென முடிவுக்கு வந்த வேணியின் குரல் முணுமுணுப்பாக வந்தது. "வேணாண்டியம்மா ... நான் இருக்கறதைச் சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கிட்டு வரும்" அவன் நமட்டுத்தனமாக சிரித்தாவாறே, வேணி அணிந்திருந்த புது ஜீன்ஸின் "ஜிப்பை" சர்ரென்ற ஓசையுடன் கீழே இறக்கி தன் ஆள்காட்டி விரலை உள்ளே நுழைத்து பாண்டிஸோடு சேர்த்து அவள் அந்தரங்கப்பிளவைத் தடவினான். கணவனின் கை அவள் உப்பிய உளுந்து வடையின் மேட்டைத் தன் உள்ளாடையுடன் சேர்த்து அழுத்தி தொட்டதுமல்லாமல், தன் காம வாயிலின் பிளவைத் தடவியதும், அவள் தொடைகள் மெல்ல நடுங்க, நடுங்கிய வேணி தன் நடுங்கும் தொடைகளை சீராக்கிக்கொள்ள, தன் பின்புறத்தை மெதுவாக அசைக்க, அதே நேரத்தில் அவன் தன் இடுப்பை அவள் இடுப்புடன் முட்ட, சங்கரின் புடைத்திருந்த தண்டு, பேண்டீஸில் பிதுங்கிக் கொண்டிருந்த அவள் புட்டச் சுவர்களை மேலும் வலுவாக உரசியது. "என்னமோ சொல்ல வந்தீங்க; இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா?" தன் சூத்து சதைகளில் உரசிய, அவன் தடியின் திண்மை வழக்கத்தை விட இன்று அதிகமாக இருப்பதை உணர்ந்த வேணியின் பிராவுக்குள் அவள் மார்புகள் பருக்கத் தொடங்கின. இன்னைக்கு அவன் குத்தப் போற குத்துல நீ கிழியப்போறே; இடுப்பு வுட்டுப்போச்சுன்னு நாளைக்கு அவங்கிட்ட அழுவப் போறே? நாளைக்காவது உன்னை விட்டு வைப்பானா; அதுவும் கிடையாது; ரெண்டு நாள் கழிச்சுத்தான் டூர்ல போறான். போற வரைக்கும் இவன் ஆட்டம் தாங்கமுடியாது. நீ அனுபவிச்சுத்தான் தீரணும். பத்து நாளாச்சு அவன் கை என் மார்ல பட்டு; அவனை மட்டும் கேக்கிறேன் - ஏண்டா அலையறேன்னு? என் மனசும்தான் கள்ளு குடிச்ச குரங்கு மாதிரி தறிக்கெட்டு கிளைக்கு கிளை தாவி ஓடுது; பொம்பளை நான், வீட்டுக்குள்ள கிடக்கறவ; என் மனசு அடங்கி கிடக்குதா; மனசு அடங்கினாத்தான் உடம்புல நமைச்சல் இருக்காதே? ம்ம்ம் ... வீட்டுல இருக்கற எனக்கே அவன் எப்ப வருவான்? அவனை எப்ப கட்டிப் புடிச்சு பொரளலாம்ன்னு வெறியா கிடந்து துடிக்கிறேனே? எனக்கு இருக்கற மாதிரி அவன் மனசுலேயும் ஆசை இருக்காதா? என்னை எதையாவது பண்ணி இன்னைக்கு சந்தோஷமா இருந்துட்டு போவட்டும். நான் என்ன வேணாம்ன்னா சொல்லப் போறேன்? எனக்கும் சந்தோஷம்தானே. என் புருஷன் நாலு எடத்துக்குப் போறவன்; மீட்டிங்க்ன்னு சொல்றான்; இன்ஸ்பெக்ஷன்னு சொல்றான்; போற எடத்துல நாலு பொம்பளைங்களைப் பாக்கிறான்; இந்த காலத்துல வேலை நிமித்தம் வெளியப் போன பின்னாடி அன்னியப் பொம்பளைங்க கிட்ட பேசாம, பழகாம இருக்கமுடியுமா? பொண்ணுங்கத்தான் போத்தி போத்திகிட்டு ஆபீசுல நிக்க முடியுமா? ஒருத்தியை மாதிரியே எல்லாரும் ஒழுங்க இருக்கணும்ன்னு என்ன அவசியம்? ஒருத்தியில்லன்னா ஒருத்தி கண்ணை சிமிட்டி பேசலாம்; தன் மாரை, அதன் வனப்பை இலை மறைவு காய் மறைவா காட்டலாம். வெளுப்பான இடுப்பையும், தொப்புள் பள்ளத்தையும் இலேசா தொறந்து காட்டி, பார்க்க நல்லா இருக்கறவனை சீண்டிப்பார்க்கலாம். வீட்டுல கிடைக்கலன்னா வெளியில கிடைக்குமான்னு ஆம்பளைங்க தேடறமாதிரி, இப்ப பொண்ணுங்களும் இந்த விஷயத்துல துணிச்சல் வந்துடுத்து. பொண்ணுங்க, இன்னைக்கு உடம்பை தொறந்து காட்டறதுலதான், நீயா நானான்னு ஒருத்தியோட ஒருத்தி போட்டி போடறாளுங்களே; இவனை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்?.வெளியில பாத்துட்டு வந்ததை மனசுல வெச்சுக்கிட்டு என்னைப் பந்தாட நினைக்கிறான். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போயிடும்ன்னு நினைச்சு இப்பல்லாம் என்ன வேணா பேசறான். அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு அவரைப் பாக்கப் போனேன்; நாலு நாள் நிம்மதியா அம்மா வீட்டுல இருந்தனா? அந்த நாலு நாளே பெரிய நரகமா இருந்தது; எப்ப ஊருக்கு திரும்பி வரப்போறேன்னு மனசு பறந்துகிட்டு இருந்தது; பாழும் மனசு இவனைப் பத்தியே நெனைச்சுக்கிட்டு கிடந்தது; சங்கர், சங்கர்ன்னு, இவனையே சுத்தி சுத்தி வந்தது. என் புருஷன் சாப்பிட்டானா? அவன் ஆபீசுக்கு ஒழுங்கா போயிருப்பானா? அவனைத் தனியாப் படுடான்னு விட்டுட்டு வந்துட்டேனே; தனியா இருக்கும் போது என் புடவையை எடுத்து மோந்து மோந்து அதுல என் உடம்பு வாசனையை தேடுவானே; நேரத்துக்கு தூங்கியிருப்பானான்னு என் மனசு அலை பாய்ஞ்சுகிட்டு கிடந்துது. மாமானார் சொல்றாரே - ராத்திரி ஒரு மணி வரைக்கும் நெட்ல என்னப் பாக்கிறான் இவன்? இன்னைக்கு கேக்கிறேன், அப்படி என்னப் பாக்கிறே; எனக்கும் காட்டுடான்னு? மாமியார் அன்னைக்கு சொன்னாளே; ஒரு மாசம் தனியா இருந்து பாருன்னு, என்னால முடியுமா? வேணாண்டா அப்பா ... இவனை பாக்காத வேதனையிலேயே நான் செத்துடுவேன். இப்பவும் என் மனசு கிடந்து தவிக்குது; எப்ப என் உதட்டுல இவன் தன் வாயால எச்ச முத்தம் குடுப்பான்னு; எச்சில் முத்தத்தின் எதிர்ப்பார்ப்புடன் இருந்த வேணி, சங்கர் தன் மார்புகளை தொட்டு கசக்கினா நல்லா இருக்குமே என்ற தவிப்புடன், அவன் தன் முலைகளைத் தொட்டு வருடி, கசக்குவதற்கு வசதியாக, தன் கைகளை, பின்புறம் உயர்த்தி சங்கரின் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டாள். "உன் அண்ணிக்கு எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்; அதுலயும் அவங்களுக்கு மாரை விட சூத்து கொஞ்சம் பெரிசு. சும்மா அவங்க நடக்கும் போது பின்னால குலுங்கி குலுங்கி ஆடுது பாரு; பாக்கற கிழப்பயலுக்கு கூட சூடு பிடிச்சு சுண்ணி கிளப்பிக்கும்; அன்னைக்கு உங்கப்பாவை பாக்க வந்த போது நான் உன் வீட்டுல ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேண்டி அவங்களைப் பாத்து; என் பையன் டக்குன்னு எழுந்துட்டான். சீக்கிரத்துல அடங்கலை." "நம்ம கல்யாணத்துல பாத்ததுக்கு இப்ப அவங்க குண்டி சைஸ் கொஞ்சம் பெரிசாயிட்டு இருக்கு" தன் மனைவியின் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல், யாரைப்பற்றி யாரிடம் என்னப் பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் உளறிக் கொண்டிருந்தான் சங்கர். "சனியன் புடிச்சவனே! உன் மனசு ஏண்டா இப்படி புழுத்துப் போயிருக்கு; அவங்களுக்கும் உனக்கும் நடுவுல இருக்கற உறவு என்னா? அவங்களை இந்த மாதிரி எண்ணத்தோட நம்ம கல்யாணத்தப்பவே பாத்தியா? இப்ப சாவகாசமா கம்பேர் வேற பண்ணி பாக்கறே; எங்க அண்ணி என்னடான்னா ... வேணிக்கு நல்ல புருஷன் கிடைச்சிருக்கான்; வேணி, வேணின்னு, உருகறான்; கண்ணுல வெச்சி பொத்தி பொத்தி பாத்துக்கறான்; என் தங்கச்சி விமலிக்கு வரன் தேடறோம்; தேடறோம்; சங்கர் மாதிரி நல்ல மனசுள்ளவன் ஒருத்தன் கிடைக்கலைன்னு உன்னை மெச்சிகிட்டாங்க." "நீ என்னடான்னா அவங்க சைஸ் எங்கண்ணனுக்கு தெரியலன்னு கிண்டல் பண்றே? பெருத்துக்கிட்டே போறாங்கறே? பத்தாக்குறைக்கு அவங்க தங்கச்சி சைஸ் பத்தியும் என் கிட்ட சொல்றே? அவ உடம்பையும் மேஞ்சிட்டு வந்திருக்கே? உனக்கு என்னடா ஆச்சு; கல்லு மாதிரி நான் இருக்கும் போது நீ ஏன் அடுத்த பொம்பளைங்க உடம்பை பத்தி எங்கிட்ட பேசறே? இது கேக்கறதுக்கு நல்லாவா இருக்கு; அவங்க உன் பேச்சை கேட்டா உன்னை காறித் துப்ப மாட்டாங்க" வேணி எரிச்சலுடன் சிடுசிடுத்தாள். "ஏண்டி உன் புருஷன் என்னா மனசால கெட்டவனா? அவங்க ரெண்டு பேரும் அழகா இருக்காங்கன்னு சாதாரணமா வாயால சொன்னேண்டி; இந்த சின்ன விஷயத்தை ரொம்ப பெரிசா எடுத்துக்கிட்டு உன் மூஞ்சை சுளிச்சு, இப்ப என் மூடைக் கெடுக்கறே? உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டிருக்கேன். ஆசையா புருஷனுக்கு ரெண்டு முத்தம் குடுப்போம்ன்னு இல்லை; சண்டையை ஆரம்பிக்கிறே? அப்படி என்னாடி நான் தப்பா சொல்லிட்டேன்? அழகை ரசிக்கறது தப்பாடி; எவளாவது அழகா இருக்காண்ணு சொல்லிட்டா, ஏண்டி இப்படி பொட்டைச்சிங்க நீங்க இப்படி பொறாமையில வெந்து சுண்ணாம்பா போறீங்க?" "அழகை ரசிக்கிறேன்; ரசிக்கிறேன்னு, எவ பின்னாடியாவது போய் நல்லா செருப்படி பட்டுக்கிட்டு வாங்க; அப்பத்தான் உங்களுக்கு புத்தி வரும். எனக்கென்னப் போச்சு?; என் உடம்பைப் பத்தி உங்ககிட்ட எவனாவது பேசினா, உன் பொண்டாட்டிக்கு குலுங்கி குலுங்கி ஆடுதுன்னு சொன்னா, அவன் என் அழகை ரசிக்கிறான்னு சும்மா இருப்பீங்களா? இல்லை அவன் பேசினதை கேட்டு பூரிச்சுப்போய், எங்கிட்ட வந்து, வேணி உன் அழகை அவன் ரசிக்கணுமாம்; இன்னும் கொஞ்சம் அவுத்து காட்டுடின்னு சொல்லுவீங்களா? உங்க புத்தி போயும் போயும் இப்படியா சீரழியணும்?" "நீங்க அடுத்தவன் பொண்டாட்டி அழகை ரசிக்கற விஷயத்தையும், அந்த அழகை ரசிச்சுட்டு பேசற பேச்சையும் உங்களோட வெச்சுக்குங்க; உங்க ஆபீசுல உங்க ஃப்ரெண்ட்ஸோட வெச்சுக்குங்க; அவன் பேரு என்னா? மோகனா உங்க புது ஃப்ரெண்ட், அவனை இன்னொரு தரம் வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டுகிட்டு வராதீங்க; அவன் கண்ணா அது, கொள்ளிக்கண்ணு; வாயால அண்ணி அண்ணின்னு என்னை கூப்பிடறதுல மட்டும் குறைச்சலில்லை; எப்ப வந்தாலும் என் மார்லேயேதான் அவனுக்கு கண்ணு; அவன் சொந்த அண்ணியை இப்படித்தான் பாக்கிறானா? நம்ம பொண்டாட்டியை கண்ணாலேயே எக்ஸ்ரே எடுக்கறான்னு கூட புரிஞ்சிக்காம நீங்க அவன் பின்னால சுத்திகிட்டு இருக்கீங்க;" "அடுத்த விஷயம், இதை நல்லா கேட்டுக்குங்க; இப்ப பேசின மாதிரி என் ரிலேடிவ்ஸ் பத்தி இனிமே எப்பவும் முறை கெட்டத்தனமா, அவமரியாதையா எங்கிட்ட பேசாதீங்க; எனக்கு பிடிக்கலை இந்த பேச்சு; உங்க மூடைப்பத்தி நீங்க பேசறீங்களே; கூடப் படுத்துக்க போறவ மூடைப் பத்தி ஒரு நிமிஷம் கவலைப்பட்டிருந்தீங்கன்னா, இப்படி பேசி இருக்க மாட்டீங்க?" "சரிடி ... நீ இப்ப என்னப் பண்ணணும்ன்னு சொல்றே? சும்மா நீ பாட்டுல பேசிக்கிட்டே போறே? அவன் பேச்சு சற்று காட்டமாக வந்தது. "இப்ப என்னை விடுங்க ... என் மூடும் தான் கெட்டுப் போச்சு; சித்த நேரம் நான் தூங்கணும் நிம்மதியா; என் உடம்பெல்லாம் வலிக்குது ... " அவள் குரலில் ஏமாற்றமும், சலிப்பும் கலந்து வந்தது. தன் மார்பில் படர்ந்திருந்த சங்கரின் கைகளை வெடுக்கென பிரித்து எறிந்த வேணி, தன் உடலில் பாதி அவிழ்ந்து கிடந்த ஜீன்ஸைத் தானே முழுவதுமாக கழட்டினாள். பிராவையும், பாண்டீசையும் ஒரே வீச்சில் கழட்டி எறிந்தவள், கொடியில் கிடந்த ஒரு நைட்டியை உருவி, அதில் தன்னை நுழைத்துக் கொண்டாள். கட்டிலில் விழுந்து சுவரை நோக்கி ஒருக்களித்து படுத்து ஒரு போர்வையை எடுத்து தன்னைப் போர்த்திக்கொண்டாள். அவள் உடலில் ஏறத்தொடங்கியிருந்த சூடு தணிந்து கொண்டிருந்தது. சங்கர் அவளை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். வேணியின் செய்கை அவன் ஆண்மையை அவமதித்தது போல் அவன் மனதை வாட்டத் தொடங்கியது. இப்ப என்ன ஆயிடுச்சு இவளுக்கு? இந்த முறுக்கு முறுக்கிக்கறா? அப்படி நான் என்ன சொல்லிட்டேன்? இவ அண்ணிக்கு எல்லாமே கொஞ்சம் பெரிசுன்னுத்தானே வெளையாட்டா சொன்னேன். அவ அண்ணியை ஒரு நாளைக்கு என் கூட படுக்க சொல்லுடின்னா சொன்னேன்? "ச்சை", நானும் இவ வீட்டுக்கு வந்ததுலேருந்தே பாக்கிறேன்; இன்னைக்கு ரொம்பத்தான் ஆடி நிக்கிறா? நான் இவளுக்கு ரொம்பத்தான் இடம் குடுத்துட்டேனா? என் தலையில ஏறி உக்காந்துகிட்டு என்னை ரொம்பத்தான் ரப்சர் பண்றா? பொம்பளையை வெக்கிற எடத்துல வெக்கணும்ன்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ்ங்க சொல்றானுங்களே அது சரிதானா? இவளுக்கு மோகனை ஏன் பிடிக்கலை; அவன் கொஞ்சம் வெளிப்படையா பேசறவன்; அவன் எதாவது எக்குத்தப்பா இவகிட்ட பேசிட்டானா? ச்சீ ... ச்சீ ... என் மனசு ஏன் இப்படியெல்லாம் நினைக்குது. வேணி நல்லவதான்; நம்ம பொண்டாட்டியை நாமே தப்பா நினைக்கலாமா? இன்னைக்கு வரைக்கும் எப்பவும் எங்கிட்ட யாரைப்பத்தியும் இகழ்ச்சியா பேசினது கிடையாது. என் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டவும் மரியாதையில்லாம நடந்துகிட்டது கிடையாது. ஆனா இன்னைக்கு ஏன் கொஞ்சம் வித்தியாசமா பேசறா? நடந்துக்கறா? சங்கரின் மனசு சலிக்கத்தொடங்கி அவன் உடல் சூடு குறையத் தொடங்கியதால், தடித்திருந்த அவன் தம்பியும் வலுவிழந்து மெதுவாக தரையைப் பார்க்க ஆரம்பித்தான். லுங்கியை ஒரு முறை உதறி சரியாக கட்டிக்கொண்டவன், என் மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசினதால என்னை என்னா இவ பொம்பளை பொறுக்கின்னு நெனைச்சுக்கிட்டாளா? கட்டில்ல ஏறிப்படுத்துகிட்டு எனக்கு அவ பின்பக்கத்தை வேற திருப்பி காட்டறா? நான் இவளை திரும்பவும் கொஞ்சுவேன்னு நினைக்கிறாளா? இல்லை இவ முகவாயை புடிச்சுக்கிட்டு கெஞ்சுவேன்னு நினைக்கிறாளா? அஞ்சு நிமிஷம் முன்னாடி வரை ஜீன்சுக்குள் மிக அழகாகத் தோன்றிய வேணியின் இடுப்பும் பிருஷ்டமும் இப்போது அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் மனதுக்குள் சிந்தித்தான். ஒரே விஷயம் ஆசையையும், ஆத்திரத்தையும் கிளப்புகிறேதே; அழகுன்னு நினைச்ச விஷயம் என்னுள் ஆத்திரத்தையும் கிளப்ப முடியுமா? அப்ப அதனுடைய உண்மையான குணம்தான் என்ன? அப்ப அழகு அவள் உடம்புல இல்லயா? அப்ப அழகும், ஆத்திரமும் என் மனசுக்குள்ளத்தான் இருக்கா? அவனுக்கு ஏதோ புரிந்தது போலும் இருந்தது; அதே சமயத்தில் புரியாமல் சற்று குழப்பமாகவும் இருந்தது. வேணி, இந்த சங்கரைப் பத்தி உனக்குத் தெரியாதுடி. உன் ஆசைப் புருஷனாத்தான் இதுவரைக்கும் என்னை நீ பாத்திருக்கே; ஒரு சாதாரண, ஒரு சராசரி ஆம்பிளையா இன்னும் என்னை நீ பாக்கலே; ஒரு சராசரி ஆண் இந்த மாதிரி நேரத்துல, தன் பொண்டாட்டி இந்த மாதிரி படுக்கையறையில நடந்துக்கிட்டா, புருஷனை உசுப்பேத்திட்டு திரும்பி படுத்துக்கிட்டா, அவன் என்ன மாதிரி பதிலுக்கு ரியாக்ட் பண்ணுவான்னு உனக்கு தெரியாதுடி. இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலை. இன்னைக்கு வரைக்கும் பெட் ரூம்ல நீ என்னச் சொன்னியோ அப்படித்தான் நான் நடந்துகிட்டு இருந்தேன். இதுவரைக்கும் நீ போட்ட கோட்டுக்குள்ளத்தான், உன் விதிகளுக்குட்பட்டுத்தான், நான் விளையாடிக்கிட்டிருந்தேன். இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு நீ பார். அப்பத்தான் ஒரு ஆம்பிளையோட மனசும், அவன் செயலும் உனக்குப் புரியும். மாட்டேண்டி; வேணி, நிச்சயமா நான் உன் கிட்ட வந்து, நான் உங்க அண்ணியைப் பத்தி சொன்னது தப்புடியம்மா; அவ தங்கச்சியைப் பத்தி பேசினது தப்புத்தான்; இப்ப நீ கிட்ட வாடின்னு உன் காலை புடிச்சு கெஞ்சமாட்டேன். சத்தியமா இன்னைக்கு உன்னை நான் தொடமாட்டேன். நீயா வந்து சாரிடா சங்குன்னு சொன்னாலும் எனக்கு நீ இன்னைக்கு வேண்டாம். உன் அழகை காமிச்சு என்ன நீ மயக்கலாம்ன்னு மட்டும் நெனக்காதே. இந்த நிமிஷம் எனக்கு உன்னை பார்க்கவோ, பேசவோ சுத்தமா பிடிக்கலை. நீ நினைக்கற மாதிரி தலையை ஆட்டற தஞ்சாவூர் பொம்மை நான் இல்லை; இதை நீ நல்லாப் புரிஞ்சுக்கணும் .. இன்னைக்கு நான் இவளைத் தொடப்போறதில்லை. நானும் ரோஷமுள்ள ஆம்பிளைதான்னு நான் இவளுக்கு காட்டறேன். முதலில் அவள் பக்கத்தில் கட்டிலில் படுத்தவன் மனதில் என்னத் தோன்றியதோ, ஒரு வீராப்புடன் மனதில் புழுங்கிக்கொண்டே, விருட்டென எழுந்து ஒரு தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டு, படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தவன் நடு ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்துக்கொண்டான். கல்யாணமான இந்த ஒன்றரை வருஷத்தில் சங்கருக்கும், வேணிக்கும் நடுவில் படுக்கையறையில் ஏற்பட்ட முதல் சச்சரவு இது. ஆசையுடன் கட்டிப்பிடித்த தன்னை, கன்னத்துல முத்தம் குடுத்து, முதுகால உரசி, இடுப்பால என் இடுப்பை தேச்சி, என் கழுத்துல கையை போட்டுகிட்டு என் மாரைத் தடவுடான்னு சொல்லாம சொல்லி, என் உடம்பை சிலுக்க வெச்சி, என் உடம்பையும், மனசையும் சீண்டி சீண்டி கிளர்ச்சியை உண்டு பண்ணிட்டு, மனசுல ஆசை வெறியை ஏத்திட்டு, இப்ப உப்பு சப்பில்லாத ஒரு காரணத்துக்காக, பாதியில் சட்டென தன்னை உதறிவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்துக்கொண்ட வேணியின்பால் அவன் மனதில் எரிச்சல் எழுந்தது. அறையைவிட்டு வெளியில் வந்து ஹாலில் படுத்துக்கொண்ட சங்கர், சற்று முன் நடந்ததை மீண்டும் நிதானமாக சிந்தித்து அசை போட, முதலில் அவன் மனதில் தோன்றிய அந்த எரிச்சல் மெல்ல மெல்ல கோபமாக உருவெடுத்தது. எழுந்து போய் அவளை பளாரென ஒரு அறை விட்டுவிட்டு வரலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது. ஓ மை காட்!, நான் என்ன சதை வெறியில பைத்தியமாயிட்டேனா? ஒரு பெண்ணை அடிக்கணும்ங்கற என்ற எண்ணம் என் மனதில் எப்படி வந்தது? அதுவும் என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் வேணியை அறைய வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் எப்படி வந்தது? சங்கருக்கு தான் தன் மனைவியின் மீது இந்த அளவிற்கு கோபப்படுவது உண்மையிலேயே நியாயம் தானா, என்ற எண்ணமும் ஒரு வினாடி எழுந்தது. அவ சொன்ன மாதிரி அவளோட அண்ணியைப் பத்தி, அதிகப்படியான மனவெறியில, உணர்ச்சிகளின் விறுவிறுப்புனால அப்படி பேசி இருக்கக்கூடாதோ? நான் தான் அவளுக்கு வேண்டியவர்களை, நெருக்கமான உறவு பெண்களைப் கிள்ளு கீரையா நினைச்சு பேசி, அவ மூடைக் கெடுத்துட்டனா? யோசிக்க யோசிக்க அவன் தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தான். அவனுக்கு இலேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. சங்கருக்கு நிதானமாக, தன் மனைவியுடன் ஆசையாக பேசி, அவள் மனதை கிளுகிளுக்க வைத்து, அவளை கைகளாலும், காலாலும் மென்மையாக வருடி, பரபரப்பின்றி தொட்டுத் தழுவி, நிதானமாக நாக்கால் அவள் மேனியை சுவைத்து, அப்படி சுவைப்பதால் தன் துணையின் உடல் சூடேறி, உடல் நெகிழ்ந்து, அந்தரங்கம் முழுவதும் ஈரத்தால் நனைந்து, விருப்பத்துடன் அவளுடல் நரம்புகள் துடித்து, அவள் தன் ஆசையை அடக்கமுடியாமல், வெறியுடன் தன்னைத் தழுவ, அவள் காலை மெதுவாக விரித்து, அவள் தேன் கூட்டை வலிக்காமல் தடவி, அவளைக் கூடும் போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால் மட்டுமே அவன் மனம் முழு மகிழ்ச்சியடைந்ததாக நினைத்தான். இது போன்ற கூடலில்தான் எப்போதும் அவனுக்கு விருப்பம். கூடல் என்பது அவனுக்கு ராகம், தானம், பல்லவி என ஒரு முழு நேரக் கச்சேரியாக இருக்கவேண்டும். வாஸ்தவத்தில் நீண்ட பஸ் பயணத்தால், வேணியின், உடல் மிகவும் களைத்திருந்தது. அவள் உடலும், மனமும் ஓய்வு ஓய்வு எனக் கூவிக்கொண்டு கண்களை தூக்கம் அழுத்திய போதும், வேணி தன் கணவனின் உடல் வேட்கை புரிந்து, அவனுக்கு தன் அணைப்பால் சுகமளிக்கத் தன்னை மெதுவாக தயாராக்கிக்கொண்டிருந்தாள். தன் கணவன் ஏமாற்றம் அடையக்கூடாதே என அவள் தன்னை உடல் உறவுக்குத் தயாராகிக்கொண்டிருந்த போது, அவள் அண்ணி, மற்றும் அவள் தங்கை விமலி, என இருவரின் உடலழகை பற்றிய சங்கரின் அளவுக்கு மீறிய உளறலால் அவள் மனதில் சட்டெனப் பொங்கிய எரிச்சலை அவளால் அடக்கப்பார்த்தும் முடியமால் போகவே, அவள் தன் கணவனை உதறிவிட்டு கட்டிலில் தன் முதுகைக் காட்டிக்கொண்டு படுத்துவிட்டாள். பொதுவாக சராசரி பெண்கள், தன்னை கட்டிக்கொண்டவன் தங்களின் நெருங்கிய உறவினர்களை, காமக்கண்ணோட்டத்தில் பார்க்கிறான் என்று அறியும் போது, அதை அவர்களால் முழுவதுமாக ஜீரணிக்க முடிவதில்லை. சங்கர், தனது ஆசை மோகத்தில், வேணியின் மன நிலைமையும், அவள் எரிச்சலையும் அன்று உணரமால் போனது துரதிருஷ்டம்தான். இதுக்குத்தான் அனுபவப்பட்டவன் சொன்னான், "சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கக்கூடாதுன்னு!"கோபத்துடன் தன் பக்கத்தில், தன்னைப் போல் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்ட சங்கரை விடியலில் சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்தாள் வேணி. சீக்கிரமா தூங்கி, விடியலில் வயித்தை காலியாக்கிக்கிட்டு, வாயை நல்லா கொப்புளிச்சிட்டு புருஷன் கூட சந்தோஷமா கூடிப் பாருடி; ஆஹா! அந்த சுகமே சுகம்தாண்டி; வேணிக்கு இது அவள் தாய் சொல்லிக்கொடுத்த படுக்கையறை பாடங்களில் ஒன்று. சங்கருக்கும் இந்தப் பாடம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது புலருமுன், சங்கருக்குஆபிசுக்கு போக வேண்டுமென்ற டென்ஷனில்லாமல், நிதானமாக காமப் பாடத்தை படிப்பதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
உடல் களைப்பால், படுத்த இரண்டு நிமிடங்களில் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் வேணி. சற்று நேரத்தில், சங்கர் ஹாலில் சென்று படுத்து விட்டதை அறியாத அவள் அரைத் தூக்கத்தில் திரும்பி படுத்தவள், வழக்கம் போல் தன் கையை கணவன் மார்பு மீது போட நினைத்து, தூக்கத்தில் புரண்டு அவனைத் இயல்பாக தேடியவள், அவன் அருகில் இல்லாததை உணர்ந்ததும் , அவள் நெஞ்சு துணுக்குற்றது. எங்கே போயிட்டான் இவன்? திடுக்கிட்டவள் துள்ளி எழுந்தாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தாள். மணி பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது. அறையின் உள்ளிருந்த அட்டாச்ட் பாத்ரூமுக்குள் சென்று வந்தவள், லைட்டைப் போட்டாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு ஹாலில் நுழைய, அங்கு விளக்கெரிந்து கொண்டிருக்க, சங்கர் சோஃபாவில் மல்லாந்து படுத்து லுங்கி விலகியிருந்தது கூட உணராமல் தூங்கிக்கொண்டிருந்தான். ஒரு வினாடி அவளுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. இவன் என்ன நினைச்சிக்கிட்டு இங்க வந்து படுத்து இருக்கான். என் மாமனாரோ, என் மாமியாரோ இவன் இங்க கிடக்கறதை பாத்தா என்னப் பத்தி என்ன நெனைப்பாங்க? அத்தை மனசார பாலை ஊத்திக்குடுத்து, போய் ரெண்டு பேருமா சந்தோஷமா இருங்கடின்னு என்னை அனுப்பிச்சி வெச்சாங்க; இவன் எதையோ உளற, அதனால எனக்கு ஆத்திரம் வர, இவனுக்கு ஒரு சின்ன ஷாக் டிரீட்மெண்ட் குடுத்தா, இவன் என் தலை மேல நெருப்பை அள்ளிக் கொட்டறானே பாவி? என்னச் செய்யறோம்ன்னு புரிஞ்சித்தான் இங்க வந்து படுத்து இருக்கானா? பொண்டாட்டி உள்ள ஏ.சி.யில தூங்க இவன் ரூமுக்கு வெளியில படுத்து கிடந்தா அதுக்கு என்ன அர்த்தம்ன்னு இவனுக்கு புரியலையா? "சங்கூ ... எழுந்திருங்க ..." அவள் அவன் லுங்கியை சரி செய்தவள், அவன் மார்பில் கையை வைத்து உலுக்கினாள். சங்கர் கண்ணைத்திறந்து அவளைப் பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பி படுத்தான். "நான் சொல்றதை கேளுங்க; இப்ப நீங்க பண்ற வேலை சரியில்லை; இது தப்பான வேலை. உள்ள வந்து படுங்க; நீங்க இங்க படுத்துக்கிட்டு இருக்கறதை உங்கம்மா பாத்தாங்க ... அப்புறம் வேற வினையே வேணாம் ... என் மானம் போயிடும்; எழுந்திருங்க; உள்ள வந்து படுங்க; அவள் அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள். அவள் கண்கள் மருள அவனைப் பார்த்தாள். ஓ ... ஓஹோ ... ஓ ... கதை அப்படி போவுதா; இவ தன் மாமியாரைப் பாத்து பயப்படறாளா? அப்ப என் கிட்ட சாரி சொல்ல வரலியா இவ? எப்படி இருந்தா என்னா? இவளை நான் வெறுப்பேத்திட்டேன்; இவளை நான் எரிச்சலடைய வெச்சிட்டேன்; என் பின்னாடி ஓடி வர வெச்சுட்டேன்; நான் ஒரு ஆம்பிளைங்கறதை இவளுக்கு நான் காமிச்சிட்டேன்; எனக்கு சூத்தை காமிச்சிக்கிட்டா திமிரா திரும்பி படுத்துக்கிட்டே? இப்ப என்னாச்சு? உன் வீறாப்பு எங்கடி போச்சு? ஒரு பொறுப்பில்லாத விடலைப் பையனைப் போல் மனதுக்குள் ஒரு வினாடி குதுகலம் அடைந்தான் அவன். "நான் இங்கதான் படுக்கப் போறேன் இன்னைக்கு; நீ போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு" அவளைப் பார்க்காமல் மனதில் கொஞ்சம் திமிருடன் முனகினான் அவன். "சங்கூ ... நான் சொல்றதை கேளு ... இப்ப நீ ரெண்டு நிமிஷத்துக்குள்ள உள்ள எழுந்து வரலே; நாளைக்கு காலையில நான் பொட்டி படுக்கையை சுத்திக்கிட்டு என் ஊரைப் பாக்கப் போயிடுவேன்; அப்புறம் நீ எங்க வேணா படுத்து பொரளு; உன்னை கேக்கறதுக்கு நான் திரும்பி வரமாட்டேன்; ஆமாம்" அவள் அடிக்குரலில் உறுமினாள். இவளுக்கு இவ்வளவு கோவம் வருமா? என்ன சொல்றா இவ? என்னை மிரட்டிப் பாக்கிறாளா? சங்கர் தன் மனதுக்குள் குமைந்தான். "என்னாடி என்னை என்னா மிரட்டிப் பாக்கிறீயா?" "அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் இல்லே; நீங்க நான் மிரட்டறேன்னு நினைச்சா, அது தப்பு; ... இப்ப மரியாதையா எழுந்து உள்ள வாங்க நீங்க ..." அவள் குரலிலும், கண்களிலும் கெஞ்சலிருந்தது. இலேசாக அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது. "நான் மரியாதையா வரல்லேன்னா" அவன் ஆண்மை அவன் குரலில் முழுவதுமாக தெறித்து எழுந்தது. "இப்பவே போய் தூங்கற உங்க அப்பாவை எழுப்பி கூப்பிட்டுக்கிட்டு வந்து பஞ்சாயத்து வெப்பேன் ... நீ பேசினதையெல்லாம் அப்படியே சொல்லுவேன்; நான் பண்ணதையும் மறைக்காம சொல்லுவேன் ... என்னை உங்க பொண்ணா வெச்சுப்பேன்னு சொல்லி கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க; உங்க புள்ளை ஆடற ஆட்டத்தை நீங்களே பாருங்கன்னு ஒப்பாரி வெப்பேன்; சங்கு ... உன் மேல உசுரையே வெச்சிக்கிட்டு இருக்கற என்னை நீ அவமானப்படுத்த மட்டும் நினைக்காதே? எதை வேணா நான் பொறுத்துக்குவேன்; இதை மட்டும் என்னால பொறுத்துக்க முடியாது". சொல்லியவள் அவன் பதிலுக்கு காத்திராமல் விறு விறுவென தங்கள் படுக்கையறையை நோக்கிச் சென்றாள். அவள் பேசியதைக் கேட்ட சங்கர் ஒரு வினாடி வெலவெலத்துப் போனான். அவள் பேசியதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது. தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டவன், ஹால் விளக்கை அணைத்துவிட்டு, தன் அறையை நோக்கி நடந்தான். வேணி கட்டிலில் அவன் வரவை எதிர்பார்த்து உட்க்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் உள்ளே வந்ததும் எழுந்து முற்றிலும் ஆறிவிட்டிருந்த பாலை டம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அவன் மவுனமாக பாலைக்குடித்தான். அதே டம்ளரில் மீதியிருந்த பாலை ஊற்றி மடக் மடக்கென கண்ணை மூடிக்கொண்டு குடித்தாள். எனக்குத் தெரியும் நீ உள்ளே வந்துடுவேன்னு ... கட்டிலை விட்டு எழுந்த வேணி சங்கரை இழுத்து தன் மார்புடன் சேர்த்து அணைத்தாள். அவன் வெற்று மார்பில் தன் இதழ்களை ஒரு முறை ஒற்றினாள். தேங்க் யூ ... டியர் ... ஐ லவ்வ்வ் யூ சோ மச் ... என அவன் காதில் முனகியவள், மீண்டும் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள். மூன்று நிமிடங்களில் சன்னமான குறட்டை ஒலியுடன் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். தூக்கம் கலைந்து கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர், அமைதியாக தூங்கும் தன் மனைவியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆபீசிலிருந்து திரும்பி, முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு, ஹாலுக்கு வந்த சங்கரிடம், வழக்கம் போல் காபியை நீட்டிய வேணி, கண்களைச் சிமிட்டி, குறும்பாக தன் உதடுகளை குவித்து காற்றில் அவனை முத்தமிட்டாள். அதைக்கண்ட சங்கருக்கு, ரத்தம் குப்பென தலைக்கேறியது. முகம் சிவக்க, என்னமா என்னை சீண்டறா? இவளை இந்த வீட்டுல கேக்கறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு. எல்லாம் எங்கப்பனும், ஆத்தாளும் இவளுக்கு குடுக்கற எடம். ரெண்டு பேரையும் நல்லா கையில வளைச்சுப் போட்டுக்கிட்டிருக்கா. நேத்து ராத்திரி என்னை என்னாமா மிரட்டினா? உன்னை அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போயிடுவேன்னு பூச்சி காமிச்சாளே? உன் அப்பனை கூப்பிட்டு பஞ்சாயத்து வெப்பேன்னு சொல்லி என் ஃப்யூசைப் புடுங்கி வுட்டுட்டா? நானும் பொட்டைப் பய, அந்த வாத்தியை நெனைச்சுக்கிட்டு பயந்துகிட்டு, இவ பின்னாடியே உள்ளே போயிட்டேன். இவ போனா வேற எவளும் கிடைக்க மாட்டாளா? கிடைப்பாளுங்கா ... ஆனா இவளை மாதிரி ஒருத்தியை எங்கே போய் தேடறது. இவ உடம்பு மட்டுமா தங்கம்; இவ மனசும் தங்கமாச்சே? "இங்க நான் வெச்ச நாவல் எங்கப் போய் தொலைஞ்சுது?..." அவன் தனக்குள் முனகியவாறு, நேற்று படித்து, பாதியில் விட்டு வைத்திருந்த புத்தகத்தை இங்குமங்கும், தேடத் தொடங்கினான். "அதுக்கு பேரு நாவலா?"... அந்த குப்பையை செண்டர் டேபிள் மேல வெச்சிட்டு போயிடீங்க; மதியானம் உங்க அப்பா ஒரு நிமிஷம் அதை எடுத்து பெரட்டிட்டு, இது என்ன குப்பை; அவனை எதாவது சொல்லிட்டா இந்த வீட்டுல இருக்கற ரெண்டு பொம்பளைங்களுக்கும் பொத்துக்கிட்டு வருது; கல்யாணம் ஆனதுக்கப்புறமும் இந்த கன்றாவியை யெல்லாம் ஏன் இவன் படிக்கிறான்; அப்படி படிக்கறவன் இதை நடுக்கூடத்துல வெச்சிட்டு போயிருக்கானேன்னு கூவிக்கிட்டு இருந்தாரு." "உங்களுக்குன்னு தனியா மேஜை மேல தேவாரம், திருவாசகம்ன்னு குவிச்சு வெச்சிருக்கீங்கள்ளா, அதையெல்லாம் விட்டுட்டு, அவன் படிக்கிற சனியனை எல்லாம் நீங்க ஏன் எடுத்தீங்கன்னு உங்கம்மா அவருகிட்ட திரும்பி கூவினாங்க; அப்புறம் நான் தான் நம்ம பெட் ரூமுல கொண்டு போய் வெச்சிருக்கேன்; அவரு சொல்ற மாதிரி செக்ஸ் புக்கெல்லாம் நடு ஹால்லே ஏங்க வெக்கிறீங்க; அது போனா போகட்டும்; இப்ப முதல்ல காபியை குடிங்க" என்று அவனை கொஞ்சியவாறே புன்னகைத்தாள். வேணி, சொன்னதைக் கேட்டதும் சங்கருக்கு ஒரு வினாடி தூக்கி வாரிப் போட்டது; ராத்திரி ரூமை விட்டுட்டு ஹாலுக்கு வந்தப்ப அதை எடுத்துகிட்டு வந்தேன். சோஃபா பக்கத்துல டீப்பாய் மேல வெச்சேன். இவ போட்ட கூப்பாட்டுல வேகமா ரூமுக்குப் போயிட்டேன்; காலையில எடுத்து வெக்க மறந்துட்டேன். எல்லாம் நம்ம நேரம்; அந்த வாத்திக்கிட்ட பேச்சு வாங்க வேண்டியிருக்கு; அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அவள் கையிலிருந்த காஃபியை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, அவள் முகத்தைப் பார்க்காமல், சோஃபாவில் உட்க்கார்ந்துக் கொண்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தான். ம்ம்ம் ... ஆளு ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறாரு; இன்னும் சூடு குறையல போல இருக்கு; சின்னக்குழந்தை மாதிரி பண்ணிக்கிறான். எவ்வளவு நேரம் தான் இப்படி இருப்பான்? அதையும் தான் நான் பாக்கிறேன்? டேய்! உனக்கு இப்ப நான் சூடு ஏத்தறேன்; வேணி, உதட்டில் மெல்லிய சிரிப்புடன், கண்களில் விஷமத்தனத்துடன், தன் நாக்கை துருத்திக் கொண்டு அவன் எதிரில் நாலு முறை வேலை எதுவுமில்லாமல் மேலும் கீழுமாக வளையவந்தாள். கையை உதறி தங்க வளையல்களை கிணுங்கவிட்டாள். "என்னங்க; எங்கம்மா உங்களுக்கு புடிக்குமேன்னு அதிரசம் பண்ணிக் குடுத்தாங்க; ஒரு டப்பா நெறைய கொண்டாந்து இருக்கேன்; தரட்டுமா இப்ப சாப்பிடறீங்களா?" "...." "ம்ம்ம்... எங்கிட்ட பேசமாட்டீங்களா? இன்னும் குழந்தைக்கு கோவமா" அவள் அவனை நெருங்க, அவன் சட்டென எழுந்து அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்தான். சரி ... சரி ... இவனை இன்னும் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். நேத்து ராத்திரி நான் போட்ட சீன்ல தெகைச்சுப் போயிருக்கான் போல இருக்கு; அப்படியே அதை மெய்ண்டெய்ன் பண்ணணும்" அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். மாணிக்கமும், வசந்தியும் வழக்கம் போல் கோவிலுக்குப் போயிருந்தனர். வேணி, ஒரு சினிமாப் பாடலை முனகிக்கொண்டு, ஹாலில் இருந்த புத்தக அலமாரி, டீப்பாய், மாணிக்கம் உட்க்கார்ந்து படிக்கும் மேஜை என எல்லாவற்றையும், ஒரு துண்டால் தட்டி, துடைத்து ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தாள். பத்து நாட்களாக அவள் வீட்டில் இல்லாததால் எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி இங்குமங்கும் ஒழுங்கில்லாமல் கிடந்தன. அந்த நாவலை எடுத்துக்கொண்டு வந்த சங்கர் மீண்டும் சோஃபாவில் உட்க்கார்ந்து கொண்டான். புத்தகத்தை பிரித்த சங்கர் வேணியைத் தன் ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தான். எப்படி இவளால் இவ்வளவு சுறுசுறுப்பாக, முழு விருப்பத்துடன் இந்த காரியங்களை எல்லாம் செய்யமுடிகிறது. அவன் ஆச்சரியமடைந்தான். நான் தான் ராத்திரி நடந்ததை நெனைச்சு வெந்துகிட்டு இருக்கேன்; இவ எவ்வளவு சீக்கிரம் தன் இயல்புக்கு வந்துட்டா? நடிக்கிறாளா? அந்த மாதிரி தெரியலையே? அவ தான் ராத்திரியே என்னைக் கட்டிப்புடிச்சி எவ்வள பெருந்தன்மையா முத்தம் குடுத்து "ஐ ல்வ் யூ" சொன்னா; நான் தான் பொணம் மாதிரி மூஞ்சை வெச்சிக்கிட்டு இருக்கேன்? வேணியின் மேலிருந்த கோபம் அவனுக்கு பெருமளவில் குறைந்துவிட்டிருந்த போதிலும், அவளிடம் காலையிலிருந்து நேரிடையாக பேசாமல் வேண்டுமென்றே மௌனமாக இருந்தான். அவள்தானே எங்கிட்ட கோபப்பட்டுக்கிட்டு போனா? என்னை கட்டிப்புடிச்சா சரி; முத்தம் குடுத்தா சரி; ஆனா ஒரு சாரி சொன்னாளா? அவளே என் கிட்ட வந்து "சாரி" ன்னு சொல்லட்டுமே; அதுக்கப்பறம் தான் நான் இவகிட்ட பேசுவேனென்று முரண்டு கொண்டிருந்தான் அவன். அவள் பார்வையை சந்திக்க நேர்ந்த போதெல்லாம், அவள் முகத்தைப் நேராக பார்க்கமல் தலையை திருப்பிக்கொண்டான். தீடீரென்று ஒரே நாளில் அவளை நேர் கொள்ள முடியாத அளவிற்கு, இந்த தயக்கம் தனக்கு எங்கிருந்து வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியால் தான் பாதிக்கப்படமால் இருப்பதாக அவளிடம் காட்டிக்கொள்ள அவன் வெகுவாக முயன்ற போதிலும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அவனுடைய இந்த இயலாமையை நினைக்கும் போது அவனுக்கே அவன் மேல் எரிச்சல் வந்தது. சங்கருக்கு, தன் கையிலிருந்த புத்தகத்தில் மனம் லயிக்கவில்லை. நேத்து நடந்த எல்லாத்தையும் சட்டுன்னு மறந்துட்டு, இவ மட்டும் இப்படி சிரிச்சுக்கிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி சாதாரணமாக இருக்காளே? இவளால மட்டும் எப்படி இந்த மாதிரி இருக்க முடியுது? அவனுக்குத் தன்னை நினைத்த போது வெட்கமாக இருந்தது. தான் ஏன் இவ்வள்வு சீரியஸா இருக்கோம்? தூசித் தட்டிக்கொண்டிருந்த வேணியின் புடவை தலைப்பு அவ்வப்போது விலகி, அவளின் செழித்த மார்புகளை மின்னலாக காட்டி மூடியது. வெள்ளை வெளேரென்றிருக்கும் அவள் தேகத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் கருப்பு நிற ரவிக்கையை அவள் அணிந்திருந்தாள். அவள் கை அசைவிற்கேற்ப அவள் தங்கத் தாலிக்கொடி ஆடிக்கொண்டிருக்க, அவளுடை செழிப்பான உடல், வளமான மேடு பள்ளங்கள், இலேசாக சதைப் போட்டிருந்த இடுப்பின் வளைவுகளும், நெளிவுகளும், குழைவான வயிறும், இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து அவனை பயித்தியமாக அடித்துக்கொண்டிருந்தன. இவள் ஒரு அழகான பெண். இவ அழகானவளென்று சந்தேகமில்லாமல் பாக்கிற எந்த வயசுக்காரனும் சொல்லுவான். இவ என் ஆசை மனைவி. என் மேல் தன் உசிரையே வெச்சிருக்கா; இவ்வளவு அழகும் எனக்குத்தான் சொந்தம். நேத்து ராத்திரி இவ என்ன சொன்னா? அது உண்மையா இருக்குமா? அந்த கம்மினாட்டி மோகன், இங்க வரும் போதெல்லாம் இவ மாரை வெறிச்சுப் பாக்கிறானா? நல்ல நண்பன்னு வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தேனே; சகஜமா பேசறான்னு நெனைச்சேனே; இவ சொன்னது நிஜமாத்தான் இருக்கணும். இவ அழகை பாக்கற எவனுக்கும் இன்னொரு முறை திரும்பி திருட்டுத்தனமா பாக்கத்தான் சொல்லும். அதுக்காக அவன் ஃப்ரெண்டு பொண்டாட்டியை சைட் அடிக்கலாமா? அதுவும் அவளுக்குத் தெரியற மாதிரி சைட் அடிக்கலாமா? நான் மட்டும் என்ன வாழ்ந்தேன்? வேணி சொன்ன மாதிரி அவ அண்ணி உடம்பைத் திருட்டுத்தனமா ரசிச்சேனே? அது மட்டும் சரியா? மோகன் பண்றது தப்புண்ணா, நான் பண்ணதும் தப்புத்தானே? அப்பா சொல்ற மாதிரி கண்ட குப்பையை படிக்கறதுனாலதான் இப்படி என் மனசு புழுத்துப் போயிருக்கா? நாளைக்கு அந்த நாவலை கொண்டு போய் மோகன் மூஞ்சியில விட்டெறியணும். எப்பா உன் சினேகிதம் போதும்ன்னு அவனை மெதுவா தலை முழுகிடணும். வேணி, இப்போது தன் புடவையை இழுத்து தன் இடுப்பில் செருகிக்கொண்டு, கையிலிருந்த துடைப்பத்தால், தரையில் கிடந்த தூசிகளை அள்ளிக்கொண்டிருந்தாள். அவள் பின் எழில்கள் அவனை நிலை குலைய வைத்துக்கொண்டிருந்தன. அவள் அவன் புறம் திரும்ப, அவளுடைய பருத்த வெளுப்பான இடது தொடை பளிச்சிட, ஒரு வினாடி அவள் கருப்பு நிற பெண் மேடு பளிச்சிட்டு மறைய, மின்சாரம் பாய்ந்தது போல், ஒரு இன்ப அதிர்ச்சி, குப்பென சங்கரின் உடலெங்கும் எழுந்து பரவியது. அவன் தண்டு இரும்புத் தடியாக மாறி அவனைப் படாத பாடு படுத்தத் தொடங்கிவிட்டது. இன்னைக்கு வேணி என்ன என்னை கொல்றதுன்னு முடிவு பண்ணி திட்டம் போட்டு, உள்ள ஒண்ணும் போடாம என் எதிர்ல உக்காந்துகிட்டு இருக்காளா? அவ "சாரி" யும் சொல்ல வேணாம்; ஒரு மண்ணும் சொல்ல வேணாம்; என் ஆசைப் பொண்டாட்டித்தானே அவ; நான் சாரிடி செல்லம்ன்னு சொல்லிட்டு, அவளை கட்டிக்கிட்டா அவ என்னா வேணாம்னா சொல்லப் போறா; நேத்து ஏதோ வெறுப்புல என்னை உதறிட்டு போனா; வெட்கத்தை விட்டு எழுந்து போய் வேணியின் மேல் விழுந்து, இறுகத் தழுவி, கட்டி அணைத்து, அவளை கசக்கி பிசைய வேண்டும் போலிருந்தது சங்கருக்கு. தன் கணவன் தன் உடலை ஆசை வெறியுடன் பார்ப்பதை அவள் உணராமலில்லை. வேணி, அவன் வெறியை மேலும் அதிகரிக்க செய்ய விரும்பியதைப் போல், தன் நாக்கால், தன் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டு, ஒரு கையால் தன் ரவிக்கையை தன் அடிவயிற்றின் புறமாக இழுத்துவிட்டாள். ரவிக்கை விளிம்பின் உள்ளே ரெண்டு விரல்களை செலுத்தி சொரிந்து கொண்டாள். அவள் ரவிக்கையை மீண்டும் ஒரு முறை இழுத்துவிட்டப் போதிலும் இறுக்கமான அந்த ரவிக்கை கீழே இறங்காமல், ரவிக்கைக்குள் அடைப் பட்டிருந்த மார்புகளை ஒரு முறை அழகாக ஏற்றி இறக்கியது; தன் அடிவயிற்று சதை வெளியில் தெரியுமாறு, முந்தானை விலகியிருக்க, மெதுவாக தன் கையை வீசி வீசி குப்பையே இல்லாத இடத்தையும் நிதானமாக பெருக்கி வாரிக்கொண்டிருந்தாள் அந்த திருடி. தன் பார்வையை சட்டென அவன் புறம் திருப்பினாள் வேணி. அவன் தன் பார்வையை அவளிடமிருந்து வேகமாக விலக்கிக்கொண்டான், அதை கண்ட அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவள் கையால் வருடிய அடி வயிற்றையும், பளிச்சென மின்னலடித்த வெளுப்பான தொடையையும், சட்டென பளிச்சிட்டு மறைந்த அவள் தொடை இடுக்கின் முடிக்காட்டையும், ரவிக்கை விளிம்பை மீறி வெளியே வரத்துடித்துக்கொண்டிருந்த அவள் குலுங்கும் முலைகளையும், கவர்ச்சியாக அசையும் அவள் திடமான பின்னெழில்களையும், பெருமூச்சுடன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த சங்கர் அங்கிருந்து எழுந்து படுக்கையறைக்கு சென்று ஒரு முறை கையடித்து விடலாமா என ஒரு கணம் யோசித்தான். அப்படிச் செய்தால், தன் இயலாமையை, தன் தோல்வியை அவளுக்கு உணர்த்தியது போலாகிவிடுமென நினைத்தவன், அவள் தன்னை கவரும் முயற்சிகளால் பாதிக்கப்படாதவனாக அவளை உணரச் செய்ய நினைத்த சங்கர், அங்கேயே உட்க்கார்ந்திருப்பது என்ற முடிவுக்கு வந்தவனாக தன் பார்வையை சட்டென திருப்பி நாவலில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான். ம்ம்ம்... புடவையை மாதிரி ஒரு கவர்ச்சியான ஒரு ட்ரெஸ் இந்த உலகத்துல கிடையாது. என் விலாவையும், ரவிக்கை மறைக்காத முதுகையும், புடைவை முந்தானை மூடாம விட்ட வெத்து இடுப்பு சதையையும் பாத்து ஆளு ஆடிப் போய் உக்காந்து இருக்கான். மூஞ்சைப் பாத்தாலே தெரியுது, ரத்தம் ஏறி செவ செவன்னு உடம்பு சூடாயிருக்கான். இப்போதைக்கு இந்த சின்ன டோஸ் போதும் இவுனுக்கு. இந்த குப்பையை கொட்டிட்டு திரும்பி வந்து அவன் கோட்டையை ஒடைக்கிறேன்; இவனுக்கு என்னா தெரியும்; ஒரு பொம்பளை கிட்ட எத்தனை ஆயுதம் இருக்குன்னு; ஒண்ணு ஒண்ணா விடறேண்டா; மூஞ்சை கழுவிக்கிட்டு, வாசனையா பவுடரை அடிச்சி, அத்தை வாங்கி வெச்சிருக்கிற மல்லி சரத்தை தலையில செருகிகிட்டு, உன் மடியில ஏறி உக்காந்து புடவை முந்தானையை உதறி எடுத்து, என் முகத்தையும் கழுத்தையும் துடைக்கிற மாதிரி, என் மடியில முந்தியை நழுவவிட்டு, உன்னை கண்ணடிச்சி,உன் உதட்டைக் கவ்வி, உன்னை நான் அஞ்சு நிமிசத்துல அம்பேலாக்கலன்னா என் பேரு வேணியில்லடா. என்னை திருட்டுப் பார்வை பாத்துட்டு பாத்துட்டு, உன் முகத்தைத் திருப்பிக்கிறியா? நீ ஆம்பிளையா இருந்தா என்னை நேராப் பாத்து சிரி; நான் ராத்திரி உன் கிட்ட உரிமையை காமிச்ச மாதிரி, உரிமையா வந்து சண்டைப் போடு; கட்டின பொண்டாட்டிக்கிட்ட திருட்டுத்தனம் என்ன வேண்டி கிடக்கு; என் கிட்ட உன் விடலைப் பையன் புத்தியைக் காட்டறீயா? மவனே வரேண்டா; நான் ஆரம்பிச்சா உன்னாலத் தாங்க முடியாது சொல்லிட்டேன்; வேணி தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.வேணி தன் முகத்தைக் கழுவி பொட்டிட்டு, பூஜை அறையில் விளக்கை ஏற்றினாள். சுவாமியை கும்பிட்டு வெளியே வந்தாள். முடியை அவிழ்த்து உதறி, தலையை தளர தளர வாரியவள், கூந்தலை பின்னலிட்டுக் முடிந்து கொண்டாள். தன் மாமியார் வாங்கி வைத்திருந்த மல்லிகை பூவை தலையில் வைத்துக்கொண்டு, தன் புடவையை உதறி சரி செய்தவள், தன் தொப்புளுக்கு கீழ் இறக்கி விட்டுக்கொண்டாள். உடலைத் திருப்பி முன்னும் பின்னுமாக அழகு பார்த்துக்கொண்டாள். இரண்டு அதிரசங்களை எடுத்து தட்டில் வைத்துக்கொண்டாள். உதடுகளில் உல்லாசம் பொங்க புன்னகையுடன் ஹாலுக்கு வந்தாள். "சங்கு ... இந்தா இதை சாப்பிடுங்க" அவன் பக்கத்தில் சோஃபாவில் தன் உடல் அவன் மேல் உரச நெருங்கி உட்க்கார்ந்தாள். மனதுக்குள் ஆசையுடன், ஆனால் முகத்தில் உற்சாமில்லாதவன் போல், ஒரு அதிரசத்தை எடுத்து கடித்தான் அவன். நாக்கு அனுபவித்த ருசியை எவ்வளவுதான் முயன்றும் அவனால் மறைக்க முடியவில்லை. அவன் முகம் திருப்தியால் மலர்ந்தது. "நல்லயிருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?" "உங்கிட்ட எதுக்கு சொல்லணும் ... ஆசையா செய்து குடுத்து அனுப்பிச்சவங்க கிட்ட நான் சொல்லிக்கிறேன்" அவன் தன் மாப்பிள்ளை முறுக்கிலிருந்தான். அதற்கு மேல் அவளால் அவன் கொடுத்துக்கொண்டிருந்த டென்ஷனை பொறுக்க முடியாமல், எழுந்து அவன் கையிலிருந்து புத்தகத்தை பிடுங்கி பக்கத்திலிருந்த டீப்பாயின் மேல் எறிந்தாள். புத்தகத்தை பிடுங்கிய வேகத்தில் அவள் சேலை ஒதுங்க, அவள் வயிறும், தொப்புளும் அவன் கண்களில் பளீரென அடிக்க, அவள் கூந்தலிலிருந்த மல்லிகை வாசம் மூக்கைத் தாக்க அவன் உடலில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. "நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ... ரொம்பத்தான் அல்ட்டிகிறே நீ" சட்டென அவன் மடியில் உட்க்கார்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டவள் அவன் உதடுகளில் "ஃப்ச்ச்" என ஓசையுடன் முத்தமிட்டாள். "முதல்ல என் மடியை விட்டு எழுந்திருடி நீ" "நான் ஏன் எழுந்துக்கணும் ... நான் உக்காந்து இருக்கறது புடிக்கலைன்னா என்னை கீழே தள்ளிவிட்டுத்தான் பாரேன் நீ?" "இப்ப எதுக்குடி நீ என் மடி மேல உக்கார்ந்துகிட்டு, நான் பாட்டுக்கு புஸ்தம் படிச்சிக்கிட்டு இருக்கறவனை தொந்தரவு பண்றே?" வேணி எப்போது தன்னை நெருங்கி உரசுவாள் என்ற எதிர்ப்பார்ப்புடன், இதுவரை படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த சங்கர் அவளை பொய்யாக அதட்டினான். "என் புருஷன் மேல நான் உக்காருவேன்; ஏறிப் படுத்துக்குவேன்; அது என் இஷ்டம் ... நீ புஸ்தகம் படிச்ச லட்சணம் எனக்கு தெரியாதாக்கும்" அவள் அவனை வம்புக்கிழுத்தாள். மனம் பொய்யாக ஒதுங்க முயற்சித்த போதிலும், சங்கரின் உடல் ஒத்துழைக்காமல், அவன் கை அவள் இடுப்பில் சென்றமர்ந்தது. சங்கர் போலியாக அவளை கோபிக்க முயன்று அவளிடம் தோற்றுக் கொண்டிருந்தான். "நீ மடியில உக்காந்துகிட்டு இருந்தா நான் எப்படி படிக்கறது; நாளைக்கு நான் அந்த புஸ்தகத்தை திருப்பி குடுக்கணும். உனக்கு என்ன வேணும் இப்ப" அவள் முகத்தை பார்க்காமல் பேசியவன், எப்பவும் இவ தான் எல்லா விஷயத்திலும் என்னை ஜெயிச்சுடறா; அவன் தன் மனதுக்குள் பொருமினான். "அதைப் பத்தி எனக்கு கவலையில்லை; எனக்கு நீதான் வேணும் இப்ப" வேணி வெட்க்கத்துடன் அவன் காதில் முனகினாள். "எனக்கு இப்ப வேணாம்" "எனக்கு இப்பத்தான் வேணும்" அவள் அடம் பிடித்தாள். "அப்ப நேத்து ராத்திரி நான் ஆசையா உன் கிட்ட வந்தா, பாதியிலே நீ ஏண்டி முறைச்சுக்கிட்டு ஓடினே? அவன் கை இப்போது அவள் முதுகை வருடத் தொடங்கியது. வருடும் அவன் விரல்கள் அவன் உள்ளத்திலிருந்த ஆசையை, அவளுக்குத் தந்தியடித்தன. "நீ எங்க அண்ணியை பத்தி அசிங்கமா பேசினே ... அதான் உன்னை விட்டுட்டு ஓடினேன்" "நீ மட்டும் எங்க பரம்பரையைப் பத்தி "அலையறோம்ன்னு" தப்பா பேசலயா?" "தப்பு யாரு பக்கம்ன்னு பேசறதால எதாவது பலன் இப்ப இருக்கா?" சிரித்தவாறு அவன் மடியில் உட்க்கார்ந்திருந்த வேணி அவன் தோள்களை கட்டிக்கொண்டு, மெதுவாக தன் புட்டங்களை அசைத்து ஆடிக்கொண்டு, அவனைக் கொஞ்சிக்கொண்டிருந்ததால், அவள் புட்ட சூட்டைத் தாங்கமுடியாமல், அவன் தண்டு மெதுவாக விரைத்து எழ ஆரம்பித்தது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்திலிருந்து ஒன்றிரண்டு மொட்டுகள் கீழே விழுந்தன. "நீ சொன்னாத் தப்பு இல்லே? நான் ஏதாவது சொல்லிட்டா அது தப்பா?" சங்கரால் நேற்றிரவு அவர்களுக்குள் நடந்த நிகழ்ச்சியை இன்னும் முழுதுமாக மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கை அவள் இடுப்பில் பதிந்து, அவள் அடிவயிற்றை தடவி, அவன் விரல்கள் அவள் தொப்புளை சுற்றி கோலம் போடத் தொடங்கின. "பொண்டாட்டி பஸ்ல எட்டு மணி நேரம் டிராவல் பண்ணி களைச்சுப் போய் வந்தாளே; உடம்பு வலிக்குதுன்னு சொன்னாளே; அவ கையைக் காலை பிடிச்சுவிடுவோமுன்னு நினைச்சியா நீ; உள்ள நுழைஞ்சவுடனே அப்படியே பாஞ்சு, என் எலும்பு நொறுங்கற மாதிரி கட்டிப்புடிச்சியே; அதை என்னான்னு சொல்றது; ஆசைன்னு சொல்றதா; இல்லை அலைச்சல்ன்னு சொல்றதா?" அவள் அவனுக்கு நேற்றிருந்த தன் உடல் நிலைமை புரியட்டும் என நிதானமாகபேசினாள். தன் முகத்தை அவன் முகத்துடன் உரசினாள். "ம்ம்ம் ..." சங்கர் அர்த்தமில்லாமல் முனகினான். "உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? என் செல்லத்துக்கு எப்பவும் அலைச்சல்தான்; இன்னைக்கு இல்லன்னா என்னா; இவ நம்ம பொண்டாட்டித்தானே; நாளைக்கு அவளை அவுத்து பாத்தா போச்சுன்னு ஒரு நாள் பொறுமையாத்தான் இருக்கறது; ஆம்பிளைங்களுக்கு தங்களுடைய ஆசையை அடக்கிக்கத் தெரிஞ்சா ஊர்ல ஏன் இந்த கற்பழிப்பெல்லாம் நடக்குது? அதனாலத்தான் நேத்து நீ அலையறேன்னு சொன்னேன்." "நீ அலையறதே இல்ல; அதான் இப்ப தொப்புளுக்கு கீழே புடவையை இழுத்து விட்டுக்கிட்டு வந்தியா?" "....." அவள் பதில் சொல்லாமல் களுக்கென சிரித்தாள். வேணி தன் உதடுகளைச் சுழித்து சுழித்து பேசி அவனை கிறங்க அடித்துக்கொண்டிருந்தாள். ஆசையுடன் தன் விரல்களை அவன் தலை முடிக்குள் நுழைத்து விளையாடத் துவங்கியவளின் முந்தானை அவன் மடியில் நெகிழ்ந்து சரிய, ரவிக்கைக்குள்ளிருந்த அவள் மார்புகள் அவன் முகத்தில் பட்டு உரசின. "ஏண்டி நல்லயிருக்குதுடி உன் ஞாயம்? புருஷன் பொண்டாட்டியை ஆசையா கட்டிப்புடிச்சா அதுக்கு பேரு கற்பழிப்பா?" அவன் அலையும் உதடுகள், ரவிக்கையில் சிறைப்பட்டிருந்த முலைகளை அவசர அவசரமாக முத்தமிட்டன. "பொண்டாட்டி மனசையும், உடம்பு நிலைமையையும் புரிஞ்சுக்காம அவளைப் பொண்டாள நினைச்சா, அது கற்பழிப்புத்தான்." "உனக்கு உடம்பு முடியலேன்னா என் கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானேடி கண்ணு? என்னைக்காவது நான் உன்னை வற்புறுத்தியிருக்கேனா? மனம் இலேசாகிய சங்கர் அவளை முழுதுமாக தன் புறம் திருப்பி, இறுகத் தழுவி தன் மார்புடன் அவளைச் சேர்த்துக் கொண்டான். வேணியை அணைத்தவன் அவள் பின்னலை ஒரு கையால் முன் புறம் இழுந்து, பின்னலில் இருந்த மல்லிகையுடன் அவள் முடியை முகர, வேணியின் உடல் சிலிர்க்க ஆரம்பித்து அவன் பிடிக்குள் நெளிய, அவள் அவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஈர முத்தம், இலேசாக வியர்த்திருந்த அவள் முதுகின் மேற்பகுதியில், பின் கழுத்தில் சூடாக கிடைக்க, அவள் தன் உடல் நடுங்க அவனை மேலும் இறுக்கிக்கொண்டாள். தழுவிய வேணியின் முலைகள் அவன் மார்பை குத்தி கிழித்துக்கொண்டிருந்தன. "நான் வீட்டுல இல்லாதப்ப வேற எவகிட்டயும் போகாம, உனக்கு மட்டும் தாண்டி நான் தாலிகட்டியிருக்கேன்னு ஏக்கத்தோட எனக்காக காத்துக்கிட்டிருந்து, என்னை மட்டும் கட்டிப்பிடிக்கற நல்ல புருஷனா நீ இருக்கவேதான், என் உடம்பு வலியையும் பொறுத்துக்கிட்டு, உன் இஷ்ட்டப்படி என்னை கட்டிக்கடா, தடவிக்கடான்னு நேத்து நின்னேன் ... இப்போதாவது நீ என்னை புரிஞ்சிக்கிட்டா சரி" வேணி தன் மூக்கை அவன் மூக்குடன் உரசிச் சிரித்தாள். அவன் கன்னங்களை வலிக்க வலிக்க கிள்ளினாள். சங்கருக்கிருந்த அளவில்லாத பெண் வேட்க்கையையும், உடல் சுகத்தின் மேலிருந்த பிடிப்பும், அவளை அனுபவிக்கத் துடிக்கும் ஆர்வமும், அவள் கல்யானமாகி அந்த வீட்டுக்குள் நுழைந்த பத்து நாட்களுக்குள்ளேயே அவளுக்கு புரிந்து விட்டது. வேணிக்கும் அவன் அண்மையும், நெருக்கமும் தினமும் வேண்டியிருந்தது. அவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் நாட்களில் அவள் தூக்கம் வராமல் படுக்கையில் புரளுவது அவனுக்கும் தெரியும். வேணியின் மாமியார் வசந்தி தன் தாம்பத்திய வாழ்க்கையின் அந்தரங்கங்களை அவர்களிருவரும் தனியாக இருக்கும் போது அவளிடம் மனம் விட்டு பறிமாறிக்கொள்ளுவது வழக்கம். தன் கணவனின் ஆரம்ப கால தாம்பத்ய வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளை அவளிடம் வெகுவாக பகிர்ந்து கொண்டிருந்தாள். வேணியும் கெட்டிக்காரத்தனம் நிறைந்தவள். மாமியார் சொன்னதில் இருந்த குறிப்புகளை மனதில் கவனமாக வாங்கிக்கொண்டு தன் கணவனை நிதானமாக கையாள தெரிந்து கொண்டுவிட்டாள். இன்னும் இஞ்சி தின்னக் குரங்கைப் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்த சங்கரைப் பார்க்க பார்க்க அவளுக்கு சிரிப்பு பொங்கியது. தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, அவன் மடியிலிருந்து சரிந்து அவன் பக்கத்தில் உட்க்கார்ந்தவள், தன் கைகளால் அவன் கழுத்தை வளைத்து தன் புறம் இழுத்து தன் முகத்தோடு அவன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள். வினாடிக்கு மூன்று முத்தங்களாக அவன் கன்னத்தில் தன் உதடுகளை ஒத்தி எடுத்தாள். தொடர்ந்து அவன் இரு கன்னங்களிலும் வெறியுடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், தன் கண்ணை சிமிட்டியவாறு, அவன் கீழ் உதட்டை தன் மருதாணி வாயால் கவ்வி, தன் வெண்மையான பற்களால் மென்மையாக கடித்தாள். அவள் கண்களில் தவழ்ந்த குறும்பை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல், சங்கர் அவள் வாயிலிருந்து தன் இதழ்களை பிடுங்க முயற்சித்தான். அவள் உதடுகளின் அழுத்தம் தந்த சுகத்தை விட்டு விடவும் மனமில்லாமல் தன் நாக்கை அவள் வாய்க்குள் திணிக்க முயன்றான். அவளை ஆசையுடன் முத்தமிடத் தொடங்கியவன், அவள் முந்தானையை ஒதுக்கி, தன் உள்ளங்கையை விரித்து அவள் இடது மார்பை ரவிக்கையுடன் சேர்த்து அழுத்தி பொத்தினான். பாதி மார்பு அவன் கையில் மறைய - என் கை பட்டு பட்டு உன் முலை பெரிசாயி .... சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்தினான். "சங்கு ... ஏண்டா நிறுத்திட்டே?..." "சொல்றதுக்கு பயமாயிருக்குடி ... நாயே" அவள் மேலிருந்த கோபம் இப்போது முற்றிலும் விலகியவனாக, அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டு அவள் ரவிக்கையை சற்று விலக்கி தோளைக்கடித்தான். தோளைக் கடித்தவனின் கைகள் அவள் ஜாக்கெட்டில் பிதுங்கிக் கிடந்த வெல்லக்கட்டிகளை மென்மையாக பிசைந்தன. "ஏண்டா கடிக்கறது நீ ... என்னை நாய்ங்கறீயே; பாவி ... உனக்கு இது அடுக்குமாடா?" வேணி தன்இடது கையை அவன் லுங்கிக்குள் நுழைத்துக்கொண்டே கேட்டாள். "என் கிட்ட சொல்றதுக்கு என்னடா பயம் உனக்கு", அவள் கை அவன் தண்டை அவன் லுங்கிக்குள் தேடிப் பிடித்தது. "நேத்து பெருசா இருக்குன்னு சொல்லிட்டு நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும்" அவள் தோள்பட்டையை கடித்தவன் முனகினான் ... அவன் கோலாயுதம் அவள் கையில் புடைத்துக்கொண்டு கோலாட்டம் போட தயாராக நின்றிருந்தது. "போடா புண்ணாக்கு ... உன் பொண்டாட்டிக்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு; என்னைப் பத்தி ... நீ என்ன வேணா பேசலாம் ... அவள் தன் கையில் பருத்து எழுந்து கொண்டிருந்த அவன் வேலாயுதத்தை மெதுவாக குலுக்க ஆரம்பித்தாள். "மெதுவாடி ... நேத்துலேருந்து அவனைப் படாதபாடு பட்டு அடக்கி வெச்சிருக்கேன்; ரொம்ப ஆட்டினே உன் கையை நனைச்சுடுவான்" அவன் அவள் காதில் கிசுகிசுத்தான். அவள் தலையில் சூட்டியிருந்த மல்லிகையின் வாசம் அவன் மூக்கிலேறி அவனை பித்தனாக்கிக்கொண்டிருந்தது. சங்கர் அவள் கன்னங்களை தொட்டு வருடினான். அவள் நெற்றியில் மென்மையாக தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டான். அவன் விரல்களும், அவன் இதழ்களும் தந்த மென்மையான ஸ்பரிசத்தால் வேணியின் உடல் உணர்ச்சிகள் கிளறப்பட, அவள் அவனை வைத்த கண் வாங்காமல் தன் பார்வையால் அவனை விழுங்கிக்கொண்டிருந்தாள். "சங்கு ஏண்டா இப்படி ஒரு ஹிம்சை பண்றே நீ ?’ "நான் என்னடி பண்ணேன் உன்னை?" அவன் அவள் ரவிக்கை ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழற்றிக்கொண்டிருந்தான். "ஆமாம் நீ ஒண்ணுமே பண்ணலை ... நீ ஒண்ணும் பண்ணாமத்தான் எனக்கு ... " வார்த்தையை முடிக்காமல் வெட்கத்துடன் சிரித்தவள், அவன் ஆண்மை மொட்டை வருடத் தொடங்கினாள். "சொல்லுடித் தங்கம்" சங்கரின் கை அவள் பிராவிலிருந்து அவளுடைய வலது மார்பை வெளியில் இழுத்து கசக்கிக் கொண்டிருந்தது. "ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல்லா" அவன் மொட்டை வேணி தன் விரல்களால் இதமாக அழுத்த அழுத்த அவன் மொட்டின் நுனியில் ஒரு சொட்டு நிறமற்ற பனித்துளி தோன்றியது. "உண்மையை சொல்லுடி" வேணி அணிந்திருந்த பிரா இறுக்கமாக இருந்ததால் அவன் விரல்கள் அவள் காம்பை தடவமுடியாமல் தவித்தன. "என்னத்தை சொல்ல நான் ... சும்மா தொணக்கற .... ஒரு செகண்ட் இரு ... பிரா ஹூக்கை அவுத்துடறேன் ... தடவறதுக்கு சவுகரியமா இருக்கும்" அவள் அவன் காதில் கிசுகிசுத்தாள். "கீழே ஈரமாயிடுச்சா உனக்கு?" "சனியன் புடிச்சவனே இதெல்லாம் ஒரு கேள்வியாடா உனக்கு" "சொல்லுடி ... வேணி ... உன் வாயால கேக்க ஆசையாயிருக்குடி" "நான் சொல்ல மாட்டேன் ... எனக்கு வெக்கமாயிருக்க்கு" "வேணி ... சொல்லுடி ... பீளீஸ்" "அது ஈரமாகி ரொம்ப நேரமாச்சு" "அதான் எப்பன்னு கேக்கிறேன்" ஒரு நிமிஷம் உன் கையை எடுடி ... மெதுவா அமுக்குன்னுத்தானே சொல்றேன்; எனக்கு வந்துடும் போல இருக்குடி" அவள் தன் கையை அவன் மொட்டிலிருந்து சட்டென விலக்கிக்கொண்டாள். அவன் மூச்சு வேகமாக வந்து கொண்டிருந்தது. "வெக்கம் கெட்ட நாயே ... நீ முதல்லே என் மாரைப் புடிச்சி அமுக்கினியே அப்பவே நான் நனைஞ்சு போயிட்டேண்டா!." "ம்ம்ம் ... ஸ்ஸ்ஸ்ஸ் .... வேணி, என்னால முடியலடி, வந்துடும் போல இருக்குடி; அப்படியே என்னை சும்மா கட்டிப்புடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்து இருடி; என் மடியில வந்து உக்காந்துக்கடி; வேற எதுவும் பண்ணாதே; அவள் தலையைக் கோதியபடி, அவள் நெற்றியில் மீண்டும் மென்மையாக முத்தமிட்டு மெல்ல அவள் காதில் முணுமுணுத்தான். வேணியின் உடம்பு அவன் பேச்சாலும், அவன் தடவலாலும், அவள் உடல் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. வேணி சோஃபாவில் உட்க்கார முடியாமல், தன் கால்களில் வலுவின்றி அவன் மேல் முழுதுமாக சரிந்தாள். சரிந்தவள் தன் இரு கைகளையும் விரித்து மனதார தன் கணவனை தழுவினாள். அவன் காது மடலைக் கடித்தாள். அவன் இதழ்களை கவ்வி ஆவேசத்துடன் உறிஞ்சினாள். அவன் கைகள் அவள் இடுப்பிலிருந்து மெதுவாக கீழிறங்கி அவள் பிருஷ்டங்களை அமுக்கத்தொடங்கியதும், அவள் தொடை நடுவில் ஈரமாயிருந்தவள் இப்போது வெள்ளமானாள். வேணி தன் நிலையிழந்து, மனதுக்குள் உண்டான ஆசை வெறியினால், அவனை அப்போதே மொத்தமாக மகிழ்விக்கத் தயாரானாள். "சங்கு ... இங்க வேண்டாம்; உள்ளே போயிடலாண்டா ... " அவன் காதுகளில் அவள் முணுமுணுத்தாள். "நிஜமாவாடி சொல்றே" சங்கர் தன் குரலில் காமம் ததும்ப கேட்டான். அவன் கைகள் வெறியுடன் அவள் புட்டத்தை பிசைந்துக்கொண்டிருந்தன. "என் உடம்பு பத்திக்கிச்சிடா பாவி ... இனிமே என்னாலேயும் பொறுக்க முடியாது" அவள் குரலில் விரகம் வழிந்தோடியது. "கோவிலுக்கு போனவங்க வர நேரமாயிடுச்சே? சங்கர் அவள் மனம் புரியாமல் அர்த்தமில்லாமல் ஒரு கேள்வியெழுப்பினான். "வந்தா வரட்டும் ... இப்ப எனக்கு நீ வேணும் .... அவ்வளவுதான் ... நீ என்னை அலேக்கா தூக்கி எத்தனை நாளாச்சு; இப்ப என்னை நம்ம ரூமுக்கு தூக்கிட்டு போறியாடா செல்லம்" அவள் குரலில் இப்போது அவளுக்கே உரித்தான வெட்கமில்லை; ஆண்மையை அனுபவிக்கும் ஆசை மட்டுமே இருந்தது நேரத்தைப் பற்றிய அச்சமில்லை; உடல் சுகத்தை அனுபவிக்கத் துடிக்கும் ஆர்வமும், தாபமும் மட்டுமே மிஞ்சி இருந்தன. வேணி வாய்விட்டுத் தன் ஆசையை சொன்னதும், அதை கேட்ட சங்கரின் சுண்ணி மேலும் பருத்து ஆட, தன் மனம் பூரிக்க, அவளைத் தன் இரண்டு கைகளாலும் வாரித் தூக்கி, அவள் இதழ்களை கவ்விக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான். வேணியை தன் கைகளிலிருந்து கட்டிலில் உருட்டி, அவள் பக்கத்தில் படுத்தவன், அவளுடைய ரவிக்கையையும், பிராவையும் விறு விறுவென உறுவினான். "ரொம்ப அவசரம் ... என் ராஜாவுக்கு" அவள் தன் கண்களைச் சிமிட்டினாள். "நேத்துலேருந்து நான் படற பாடு உனக்கு புரியலயாடிச் செல்லம் ..." "சாரிடா ... நேத்து எனக்கு உண்மையிலேயே உடம்பு முடியலைத் தெரியுமா ... " அவள் கண்களில் இருந்த கெஞ்சலும், குரலில் வெளிப்பட்ட கொஞ்சலும் அவன் இதயத்தை தொட்டது. "பீளீஸ் ... வேணி ... ரொம்ப ஃபீல் பண்ணாதடி ... நேத்து ... நான் தான் உன்னை மூடு அவுட் ஆக்கிட்டேன் ... நான் தான் உங்கிட்ட சாரி கேக்கணும் ... "சாரி" செல்லம் ..." வேணியை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமிட்டான். ஆசையுடன் அவள் இரு மார்புகளையும் தடவி, இதமாக கசக்கினான். "என்னடி இது! உன் குட்டிங்க ரெண்டும் கொஞ்சம் பெரிசான மாதிரி இருக்குது?" தன் இரு கைகளாலும் ஆசையுடன் அவள் மார்பெங்கும் தடவிக்கொடுத்தான். வேணியின் உதடுகள் அவன் கைகளின் தடவல் அளித்த இன்ப சுகத்தை சுவைத்தபடி முனகின. "சே ... பத்து நாள்ல பெரிசாயிடுச்சா ... சும்மா கதை வுடாதீங்க" அவன் தடவலில் தன் உடல் சிலிர்க்க வேணி அவனைத் தன் மார்பின் மேல் அவனை வேகமாக இழுத்து படர விட்டுக் கொண்டாள். தன் இருகைகளாலும் அவன் முதுகை மென்மையாக தடவிக்கொடுத்தாள். சங்கர் அவள் கழுத்து வளைவில் தன் முகம் புதைத்து, ம்ம்ம்ம்மா ... நீண்ட பெருமூச்சு விட அது வெப்பமாக அவள் கழுந்தில் தகித்தது. "நிஜமாத்தாண்டி சொல்றேன்" சங்கரின் கரங்கள் வேணியின் வனப்பான முலைகளை அழுத்தமாக வருட , அவள் மன உணர்வுகள் அவள் கட்டுக்குள் அடங்காமல் பெருகி, அவள் உடல் இன்ப வேதனையில் நடுங்கி, சிறு அலைகளாக அவள் உடல் துடிப்பை நரம்புகள் அவள் அந்தரங்கத்துக்கு எடுத்துச் செல்ல, வேணி தன் அந்தரங்கத்தில், வெள்ளமாக நீர் பெருக்கினாள். "இருக்கும்; எங்க வீட்டுல சாப்பிட்டு சாப்பிட்டு படுத்துக்கிட்டுத்தானே இருந்தேன் ... நானும் இப்ப பின்னாடி, இடுப்புக்கு கீழ பெருத்துக்கிட்டுத்தான் போறேன் ... என் பாண்டீஸ்ல்லாம் இறுக்கமாயிட்ட மாதிரி ஃபீல் பண்றேன் ... வெயிட்டைக் கொறைக்கணும். " அவள் முகத்தில் வெட்கம் அலை அலையாக புரண்டது. "இலவம் பஞ்சு மெத்தை மேல படுத்துக்கிட்டு இருக்கற மாதிரி இருக்குடி ... ஆனா இதுக்கு மேல பெருத்துடாதேடி ... இப்பவே உன்னை கஷ்டப்பட்டுத்தான் தூக்கிக்கிட்டு வந்தேன்" அவன் கிண்டலுடன் சிரித்தான். "சுகன்யா கூட ரெகுலரா வாக்கிங் போய்கிட்டு இருந்தியே இப்ப ஏன் நிறுத்திட்டேம்மா?" அவன் அவள் கனத்து விம்மி விம்மி தணிந்து கொண்டிருந்த மார்புச் சதையை வெறியுடன் கடித்தான். " மெதுவாடா பாவி ... வாய் மேலயே போடுவேன் .... நாயே ... வெறி நாயே ... திருப்பி கடிச்சேன் தாங்க மாட்டே சொல்லிட்டேன்." "அதையும் தான் நான் பாக்கிறேன் ... என்னை எங்க கடிப்பே ... நாயே ... என் குண்டு நாயே?" அவன் சொல்லி முடிக்கும் முன் வேணி அவன் தோளை வெடுக்கென கடித்துச் சிரித்தாள். "நிஜமாவே கடிக்கிறீயேடி நாயே? அவன் அவள் உதடுகளை பற்றி திருகினான். "ஹூக்கும் ... சுகன்யாதான் அவளுக்குன்னு ஒருத்தனை புடிச்சுக்கிட்டு, சனி, ஞாயிறுல அவன் பின்னால் சுத்திக்கிட்டு இருக்கா ... பாவம் அவன் பின்னால சுத்தவே அவளுக்கு நேரம் பத்தலை" முணுமுணுத்துக் கொண்டே படுத்தவாறே தன் மார்பை தூக்கி அவன் வாய்க்குள் அழுத்தமாகத் திணித்தாள் வேணி. "குட்டிங்களுக்கு ஒரே நமைச்சல்; கொஞ்ச நேரம் நல்லா சப்ப்ப்ப்பி விடுடா சங்கு ..." அவன் கையை எடுத்து அடுத்த முலையில் வைத்து அழுத்தியவள், இதையும் கொஞ்சம் கவனிம்மா" முனகல் அவள் வாயிலிருந்து வந்தது. பத்து நாள் பிரிவை தாங்க முடியாமல் அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் வெறியோடு தழுவிக்கொண்டார்கள். வேணியும், தன் கணவனுடன் கூடி அவனை மகிழ்விக்க, முழு மனதுடன் தன்னை மெல்ல மெல்ல ஆயத்தமாக்கிக்கொண்டிருந்தாள். வேணியின் உடலும் மனமும் அவனுடன் ஒன்றாக கலக்க துடித்துக்கொண்டிருந்தன. சங்கரின் வலுவான சுண்ணி தன்னுள் நுழையும் தருணத்துக்காக ஆவலுடன் படுக்கையில் உருண்டாள். அவனை புரட்டி அவன் மார்பில் தன் மார்புகள் அழுந்த படுத்து அவன் இதழ்களை கவ்வி முத்தமிட்டாள். சங்கரின் கைகள் அவள் சூத்துச் சதைகளை இறுகப் பற்றி பிசைய அவள் உதடுகளின் அழுத்தம் அதிகமாக, அவன் தன் நிலை குலைந்து, வேகமாக அவளை புரட்டி அவள் மேலேறி படுத்து மெல்ல வேணியின் கழுத்தைக் கடித்தான்; அவளை அங்கு கடித்தால் அவள் துள்ளியணைப்பாள் என அவனுக்குத் தெரியும். காதுகளை தன் உதடுகளால் மெல்ல கவ்வினான். அவள் அவன் பிடியில் கூச்சத்தால் திமிறினாள். அவள் திமிற திமிற, அவன் உடம்பில் மேலும் வெறியேறி, அவள் திமிற முடியாதபடி இறுக்கி அவள் பின் கழுத்து வளைவில் முத்தமிட்டான். அவள் இடுப்பில், அவர்களின் புரளலால் நெகிழ்ந்திருந்த புடவையை அவிழ்த்து ஒதுக்கினான். வேணி தன் இரு தொடைகளையும் விரித்து, அவன் உடலை தன் தொடைகளுக்கு நடுவில் இழுத்தாள். அவள் பாவடை அவள் இடுப்பில் நழுவி விழுந்தது. சங்கரின் தண்டு வேணியின் தொடைகளில் உரசி, அவள் ஈரக் கிணற்றைத் தேடியது. "செல்லம் ... ஒரு கையால என் பூளைக் கொஞ்சம் புடிச்சி ஆட்டுடி" சங்கர் அவள் காதில் முனகினான். "சங்ங்கு ... நீ என்னா இவ்வளவு பச்சையா பேச ஆரம்பிச்சிட்டே ... வெக்கமே இல்லயாடா உனக்கு?" வேணி ஒரு கணம் திடுக்கிட்டாள். "நீ தானே சொன்னே ... உங்கிட்டா நான் என்ன வேணா பேசலாம்ன்னு ... அப்புறம் நான் எதுக்கு உங்கிட்ட வெக்கப்படணும்?" சொல்லியவன் தன் லுங்கியை காலால் உதறி அவள் கையில் தன் வீங்கிக்கிடக்கும் சுண்ணி மொட்டை அழுத்த, வேணி தன் உள்ளங்கையை குவித்து அவனை வருட ஆரம்பித்தாள். "நீ இந்த கண்ட புஸ்தகதையெல்லாம் படிச்சு உண்மையிலேயே வெறி புடிச்சு போயிருக்கேடா ... " அவள் அவன் மார்பை கடித்தாள். சங்கர், வேணியின் முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தில் முத்தமிட்டுக்கொண்டே, தன் வலக்காலால் அவளின் இரு கால்களையும் வருடினான். தன் பெரு விரலால் அவள் கால்களின் கெண்டை சதையை அழுத்தி தடவ, வேணியின் கைகள் அவன் இடுப்பை வளைத்து தன் இடுப்புடன் சேர்த்து தேய்த்தது. தன் இடுப்பை அவன் விடுவிக்க முயல்கையில், அவள் மேலும் தன் கால்களால் இடுப்பை இறுக்கி, அவன் இடுப்பில் தன் உடல் வலுவைக் குவித்தாள். "டேய் முடிஞ்சா உன்னை நீ என் பிடியிலேருந்து விலக்கிக் காட்டேன்?" என்கிற சவால் அவள் உதடுகளில் விஷம புன்னகையாக மலர்ந்திருந்தது. சங்கர் அவள் முகத்திலும் உதட்டிலும் தெரிந்த குறும்பையும், முக மலர்ச்சியையும் கண்டவன், ஒரு வினாடி யோசித்தான் - தன் உடல் வலுவை அவளுக்கு காட்டலாமா? அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே யோசித்தான். கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டினா நான் அவளை ஜெயிச்சிடலாம். ஆனா அதனால எனக்கு என்ன கிடைக்கப் போகுது? முடியாத மாதிரி நடிக்கிறேனே? அவ தான் ஜெயிச்சதா இருக்கட்டுமே? அவ ஜெயிச்சா, நான் கேக்கறதும் எனக்கு இப்ப கிடைக்கும்; நான் கேக்காததையும் அவ மனசாற அள்ளி அள்ளி குடுப்பா. "ஏண்டி வேணி, உன் கையில இவ்வளவு வலுவா? ம்ம்ம் ... இப்படி இறுக்கிப்புடிக்கிறீயேடி ... என்னால என் இடுப்பை அசைக்க முடியலடிச் செல்லம் ... ஒரு குழந்தையை போல பேசினான். பேசியபடியே அவன் அவள் இதழ்களில் சூடான தன் முகத்தை உரசி முத்தமிட்டான். அவளுக்கும் தெரிந்தது. என்னால இதுக்கு மேல இவனை இறுக்கமுடியாது. எங்கிட்ட இவன் தோத்துட்ட மாதிரி நடிக்கிறான். மனதுக்குள் சிரித்தாள். அவர்கள் இருவருமே, ஒருவர் மற்றவரிடம் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்; பிறந்த மேனியில் சிறு குழந்தைகளைப் போல் எந்த கவலையும் இல்லாமல் கட்டிலில் உருண்டு புரண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவரிடம் ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த நொடி இருவருமே மனம் விட்டு சிரித்தார்கள். ஒரு நடிகனை ஒரு நடிகையால்தானே சரியாக இனம் கண்டு கொள்ளமுடியும்! "வேணி ... உனக்கு வேணுமாடிச் செல்லம் ... உன் தேன் அதிரசத்துக்கு முத்தம் குடுக்கட்டுமா?" மாமியார் கொடுத்தனுப்பிய அதிரசம் தின்ற நினைவில் உளறி கொட்டினான் அவன். "என்ன என்ன பேரு வெப்படா அதுக்கு" கூச்சத்துடன் சிரித்தாள் அவள் "சொல்ல்லுடி ... வெக்கப்படாம சொல்லுடி ... ராஜாத்தி ... உன் புண்டையை நான் நக்கிவிடவா ... " அவன் அவள் முகவாவையை நக்கிக்கொண்டிருந்தான்.
"நான் ரெடியா இருக்கேன்பா ... இன்னைக்கு வேணாம் எனக்கு; உனக்கு வேணும்ன்னா சொல்லு ... நான் உன் பூளைச் சப்பி விடறேன்" அவள் அவன் காதில் கிசுகிசுத்தாள். கிசுகிசுத்தவள் முகம் சிவக்க சிரித்தாள் ... உன் கூட சேர்ந்து நானும் கெட்டு குட்டிச்சுவரா போறேன்..." "ம்ம்ம்ம் .... ரெண்டு நிமிஷம் அவனை சப்பி ஈரமாக்கிட்டினா ... உன் புண்டையில அவன் ஈஸியா ட்ராவல் பண்ணுவான்... ரெண்டு பேருக்குமே மஜாவா இருக்கும் ... " சங்கர் அவள் மேலிருந்து சரிந்து அவள் பக்கத்தில் படுத்தவன், மெல்ல பின்னுக்கு நகர்ந்து சுவரில் சாய்ந்து உட்க்கார்ந்து அவள் முகத்தை தன் புறம் திருப்பி, அவள் உதடுகளில் தன் தண்டையெடுத்து அழுத்தி உரசினான். வேணி தன் உதடுகளை குவித்து அவன் உறுப்பினை 'ப்ச்ச்ச்' என அழுத்தமாக முத்தமிட்டாள். அவள் உதடுகள் அவன் சூடான தடியில் பட்டதும், மின்சாரம் பாய்ந்தது போலாகி, சங்கர் தன் இடுப்பை அசைக்க, வேணி அதே நேரத்தில் தன் வாயைத்திறக்க அவன் தண்டு, அவள் வாய்க்குள் மிக வேகமாக நுழைந்து, தொண்டைக்குழி வரை பாய்ந்து, அவள் வாய்க்குள் தறி கெட்டு துள்ளி குதித்து தன்னை முழுவதுமாக எச்சிலாக்கிகொண்டது. வேணி தன் வாயை இறுக மூடி தன் நாக்கை சுழற்றி சுழற்றி அவன் தண்டின் மேல் அடிக்க, சங்கர் தன் நிலைகுலைந்து, தான் அவள் வாயிலேயே வெடித்து சிதறி விடுவோமென பயந்து அவள் தலையை பின்னுக்குத் தள்ளி தன் தன்னுறுப்பை வேகமாக வெளியில் இழுத்தான். அவன் உடல் துடிக்க ஆரம்பித்தது. "ஏன் எடுத்துட்டீங்க ... " "நீ நாக்கால வேகமா அழுத்துனதும் எனக்கு வந்துடும் போல ஆயிடுச்சிடி" "அப்போ உள்ள வுடறீங்களா ... அவள் முகத்தில் அவசரம் தெரிந்தது" "ம்ம்ம் ... நீ படுத்துக்க ..." அவள் தோளை பிடித்து மெதுவாக அவளைப் படுக்கையில் சாய்த்தான். "அப்ப்ப மெள்ள வுடுங்க அவனை ... வந்துடப் போறான் ... எனக்கு அவனை உள்ள விட்டுக்கணும் இன்னைக்கு ..." "சரிடித் தங்கம் ... அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்." சங்கர் தன் தண்டின் அடிப்புறத்தை இரு விரல்களால் பிடித்து ஆடாமல் அழுத்திக் கொண்டிருந்தான். அவன் உடல் துடிப்பு மெதுவாக குறைந்தது. அவன் உறுப்பு இலேசாக விரைப்பை இழக்க, சங்கர் தன் ஆண்மை மொட்டை வேணியின் காம வாசலில் வைத்து மெதுவாக மேலும் கீழுமாக நான்கு ஐந்து முறை உரசினான். "போதும் ... விடுங்க்கன்னா" அவள் பொறுமையிழந்து தன் தொடையை விரித்தவள், அவன் உறுப்பை தன் கையால் பிடித்து, தன் பெண்மையின் வாயிலில் பொருத்தி மெல்ல தன் இடுப்பை உயர்த்தினாள். சங்கர் தன் இடுப்பை மெதுவாக அசைத்தவுடன், "ம்ம்ம்.. தள்ளுங்க்க அவனை" களிப்புடன் கூவினாள் வேணி. சங்கர் தனது இடுப்பை வேகமாக ஆட்ட அவன் தடி அவளது அந்தரங்கத்தில் ஓசையின்றி புதைந்தது. வேணியின் வாயிலிருந்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற நீண்ட சத்தம் பெருமூச்சுடன் வந்தது. "எம்ம்மா ... வெளிய இழுத்துடாதீங்க ... சும்ம்மா எதமா இருக்குங்க்க கொஞ்ச நேரம் அப்படியே உள்ளவே இருக்கட்டும் அவன் .... என் மேல படுத்து, ஒரு முத்தா குடுங்க" வேணி கதறினாள். சங்கர் அவள் வாயைக் கவ்வி தன் உதட்டை அவள் உதட்டுடன் உறவாடவிட்டான். "ம்ம்ம் ... ம்ம்ம்ம்... வேணி முனகிக்கொண்டிருந்தாள். "ம்ம்ம் ... இப்ப ஆட்டுங்க உங்க இடுப்பை ... மெதுவா ... மெதுவா ஆட்டுங்க ... நிதானமா" வேணீயின் முகம் தாமரையாக சிவந்திருந்தது. "சரிடிக்கண்ணு" சங்கர் தனது தண்டை இதமாக, பதமாக அவள் முகபாவத்துக்கேற்ப, நிதானமாக இயக்க ஆரம்பித்தான். ஈரம் சுரந்து கதகதப்பாகயிருந்த அவள் யோனியின் சுவர்கள் அவன் அசைவிற்கேற்ப விரிந்து சுருங்க, சங்கர் தன் மனைவியை இடிக்கும்வேகத்தை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கினான். வேணி தன் இமைகளை மூடி, அவனளித்த ராஜ சுகத்தை மெய் மறந்து சுவைத்துக் கொண்டிருந்தாள். தன் கணவணின் முதுகை தன் கைகளால் இறுக்கி தழுவி ஹாங்.. ஹாங் .. ஹாங்.. என்று சங்கரின் ஒவ்வொரு குத்துக்கும், அந்த குத்துகள் அவள் உடலில் உண்டாக்கிய இன்ப வேதனையில் முனகினாள். தன் பெண்மையை இதமாக சுருக்கியும் விரித்தும், அவன் ஆண்மையை கவ்வினாள். சங்கர் வேணியின் புண்டையை தன் ஆயுதத்தால் இடிக்கும் வேகத்தை மெதுவாக கூட்டத்தொடங்கியதும், வேணி தன் உதடுகளை கடித்தவாறு தன் உணர்ச்சிகளை தன் கட்டுக்குள் வைக்க முயன்று தோற்றவளாய், ம்ம்ம்ம் ... ஆஆஆ ... வேகமா குத்துப்பா ... ச்ச்ஸ்ஸ்ஸ்ங்கர் ... அப்படித்தான் ... நல்லாருக்குடா ... மஜாவா இருக்க்குடா .... இன்னும் கொஞ்சம் வேகமா குத்த்தேன்ம்ம்பா .... தன் அடிக்குரலில் முனகினாள். தன் வெக்கத்தை விட்டு முனகிக் கொண்டிருந்த வேணி தன் தொடைகளை அகலமாக விரித்தது மட்டுமல்லாமல், அவன் குத்துவதற்கு தோதாக, அவன் குத்தும் வேகத்திற்கேற்றவாறு தன் இடுப்பை வேக வேகமாக உயர்த்தி தன் பெண்மையை அவனுக்கு பரிசளித்துக்கொண்டிருந்தாள். சங்கரின் உடலில் பத்து நாட்களாக தேங்கியிருந்த அவன் அதீத சக்தி, வாய் வழியே முனகலாக மாறியது; மூக்கின் வழியே வெப்பமாக மாறி வேணியின் உடலை சுட்டது; வாயில் எச்சிலாக மாறி அவள் உதடுகளை நனைத்தது; முத்து முத்தாக வியர்வை பூக்களாக மலர்ந்து அவள் உடலை நனைத்தது. அவன் தடியின் வழியே மின்சாரமாக அவள் யோனிச்சுவர்களில் பாய்ந்தது. அவன் விரைப் பைகளில் சேர்ந்திருந்த விந்து, வெள்ளமாகப் பெருகி வெண் முத்துகளாக வேணியின் அந்தரங்கத்தில் சிதறி அவளுக்கு உச்சத்தை வாரி வழங்கியது. தன் ஆசை மனைவிக்கு உச்சத்தை தந்து, தானும் உச்சத்தையடைந்த, சங்கரின் முறுக்கேறிய நரம்புகள் மெதுவாக தளரத்தொடங்க, அவன் நெற்றியிலும், முதுகிலும் வியர்வை முத்து முத்தாய் அரும்பத் தொடங்கியதை தன் ஓரவிழியால் தன் கணவன் திருப்தியுடன் இருப்பதைப் பார்த்த வேணி தன் புடவையை எடுத்து மெதுவாக அவனை துடைத்தாள். கவிழ்ந்து கிடந்த அவன் முதுகின் மேல் தன் மார்பழுந்த படர்ந்தாள். "தேங்க்ஸ் டா செல்ல்லம்" மெதுவாக அவன் காதில் முனகினாள்.செல்வாவை பார்ப்பதற்காக அலுவலகத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு சுகன்யா கிளம்பிக் கொண்டிருந்தாள். "மீனா, நான் சுகன்யா பேசறேன், ஆஸ்பத்திரிக்கு வந்துகிட்டிருக்கேன். வழியில ஏதாவது வாங்கிட்டு வரணும்ன்னா சொல்லு." "எல்லாம் இருக்கு; ஓண்ணும் வேண்டாம்; நீங்க வந்தா போதும்; உங்காள் உங்களைப் பாக்கறதுக்குன்னு தவியா தவிச்சுக்கிட்டு இருக்கார்; நீங்க வந்தாத்தான் காஃபியே குடிப்பேன்னு அடம் பிடிச்சுக்கிட்டிருக்கார்." அவள் கிண்டலாகச் சிரித்தாள். "மீனா நீ ரொம்பத்தான் சீன் காட்டாதே; வந்து பேசிக்கிறேன் உன்னை; அம்மா இல்லையா பக்கத்துல?" "மத்தியானம் செல்வாவை நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க, அவனுக்கு பயப்படறதுக்கு ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்க; அதனால அம்மா வீட்டுக்கு போயாச்சு; ஃபர்ஸ்ட் ஃப்ளோர் ரூம் நம்பர் பதினாலுக்கு வந்துடுங்க; கட்டுக்காவல் எல்லாம் ஒண்ணுமில்லே இங்கே; அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு செல்வாவுக்கு நீங்கதான் ஃபுல் இன்சார்ஜ். சீக்கிரமா வந்துடுங்க, வீட்டுக்கு நான் கிளம்பணும்" மீனா சிரித்தவாறு செல்வாவை நோக்கி தன் கண்ணை சிமிட்டினாள். செல்வாவின் முகம் சுகன்யாவை கண்டதும் சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்தது. "எப்படி இருக்கே செல்வா? இன்னும் நீ காஃபி குடிக்கலையா? எனக்காகவா வெய்ட் பண்றே? நீ பாட்டுல குடிக்க வேண்டியதுதானேப்பா? ரொம்ப தேங்க்ஸ். நீ எனக்காக வெய்ட் பண்றேன்னு கேக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு; ப்ளாஸ்கில் இருந்த சூடான காபியை கப்பில் ஊற்றி அவனிடம் நீட்டினாள். "இங்க வந்து ஏசியில படுத்துக்கிட்டு, அண்ணி கையால காபி குடிக்கத்தான், வீட்டுல நான் குடுத்த காஃபியை குடிக்காம நேத்து காலையில வேக வேகமா வந்தியா?" மீனா சிரித்தவாறு செல்வாவை பார்த்து கண்ணடித்தாள். "இல்லடி மீனா, கொஞ்ச நாளா ஞாயித்துக்கிழமைன்னா, மாப்பிள்ளை, நம்ம பேட்டை கையேந்தி பவனுக்கு வர்றதில்லே; அம்மன் தரிசனத்துக்காக காலங்காத்தால சைதாப்பேட்டை பக்கம் போயிடறாரு. நேத்தைக்கு கிளம்பற நேரத்துக்கு பூனை எதாவது குறுக்க வந்திருக்கும்; நேரா இங்க வந்து படுத்துட்டார். சரியான நேரத்துல அம்மன் ஆஸ்பத்திரிக்கு வந்து இவரை காப்பாத்திடிச்சி..." சீனு கிண்டலடித்தான். "மாப்ளே ... நீ உன் ஆளை எனக்கு ஆஸ்பத்திரியிலத்தான் காட்டணுமா? நல்ல எடம் செலக்ட் பண்ணியிருக்கேடா நீ. ஆனா நீ புடிச்சாலும் புடிச்சே, நல்ல பசையுள்ள ஆளாத்தான் பாத்து புடிச்சிருக்கே ... எனக்கு யாரும் இந்த மாதிரி சிக்க மாட்டேங்கிறாளுங்க." சீனு தன் பங்குக்கு செல்வாவை கலாய்த்துக்கொண்டே சுகன்யாவை பார்த்து சிரித்தான். "சும்மா இருடா, நேரம் காலம் தெரியாம வெறுப்பேத்தற ... என்னா பசையுள்ள இடம் ... யார் பணத்துக்கும் அலையறவன் நான் இல்ல; கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா?" படுத்திருந்த செல்வா மெதுவாக எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து காஃபியை தன் கையில் வாங்கிக்கொண்டான். "இந்த காலத்துல நான் பாத்த வரைக்கும் பொண்ணுங்க, தன் கூட சுத்தற பசங்க பாக்கெட்டைத்தான் காலி பண்றாளுங்க; அவங்க ஹேண்ட் பாக்கை தொறக்க மாட்டாளுங்க; இங்க என்னடான்னா, உன் ஆளு நேத்து பட்டுன்னு உனக்காக 50, 000 ரூபாயை எடுத்து அட்வான்ஸா கவுண்டர்ல கட்டினா; பையில இருந்தா மட்டும் போதுமா; அதை எடுத்து குடுக்கற மனசு வேணுண்டா; அது மட்டுமா ... நாங்க இங்க வரதுக்குள்ள ஒரு தயக்கமும் இல்லாமல், சுகன்யா உனக்காக ரத்தம் குடுத்தாடா; சுகன்யாவை பத்தி நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு; இந்த மாதிரி ஒரு நல்ல பொண்ணு உனக்கு கிடைக்க நீ நிஜமாவே குடுத்து வெச்சிருக்கணும் மச்சான்." "சீனு ... போதும் நிறுத்துங்க ... இப்ப எதுக்கு இதையெல்லாம் நீங்க இவருகிட்ட சொல்லிக்கிட்டிருக்கீங்க ... என் மனசுல அந்த நேரத்துக்கு இவருக்கு எது முக்கியம்ன்னு பட்டதோ அதை நான் செய்தேன் ... யாருக்காக நான் பண்ணேன்? நான் யாரை நேசிக்கிறேனோ அவருக்காத்தானே பண்ணேன் .... இதுல முழுசா என் சுய நலமிருக்கு சீனு; அவரு நல்ல படியா எழுந்து வரணும்ன்னு நினைச்சேன்; பிளீஸ் சீனு ... இதை நீங்க பெரிசு பண்ண வேண்டாம். இதுக்கு மேல நேத்து இங்கு நடந்ததையெல்லாம் நீங்க எதுவும் இன்னொரு தரம் பேசவும் வேண்டாம்" சுகன்யா அவனை மேலே பேசவிடாமல் தடுத்தாள். "மச்சான்", ... கேட்டுக்கிட்டியா; சிரிடா; எப்பவும் மூஞ்சை ஏண்டா உம்முன்னு வெச்சிக்கிட்டு இருக்கே; எப்படிப்பட்ட பொண்ணு இவ; எதுக்கும் கவலைப் படாதேடா; உங்க கல்யாணத்தை நான் நடத்தி வெக்கிறேண்டா; இப்ப நானும் மீனாவும் கிளம்பறோம். நாங்க எதுக்கு பூஜை வேளையில கரடி மாதிரி உங்க ரெண்டு பேருக்கு நடுவுல? டேய் செல்வா, நான் ராத்திரி எட்டு மணிக்கு உனக்கு டிஃபன் எடுத்துகிட்டு வருவேன். அது வரைக்கும் உன் ஆள் கூட நீ ஜாலியா இருக்கலாம். நான் வந்ததும் சுகன்யா வீட்டுக்கு போகட்டும்; நான் வேணா உங்களை உங்க வீட்டுல ட்ராப் பண்ணிடறேன்?" சீனு சுகன்யாவிடம் உண்மையான அக்கறையுடன் பேசினான். "தேங்க்ஸ் ... சீனு ... நான் ஒரு ஆட்டோ வெச்சுக்கிட்டு போயிடுவேன்; இருபது நிமிஷத்துல போயிடற தூரம் தானே? நீங்க வந்து இவரைப் பாத்துக்கோங்க; அது போதும்." சுகன்யா அவனை நோக்கி இனிமையாக முறுவலித்தாள். மீனாவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டு அவர்களுடன் வெளியில் வந்தவள், மெல்லிய குரலில், "மீனா அம்மா ஏன் வீட்டுக்குப் போயிட்டாங்க? நான் இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கலையா?" "காலையிலேருந்து இங்கேதான் இருந்தாங்க; செல்வாவை ஜெனரல் ரூமுக்கு அனுப்பிச்சதும், நான் அண்ணனை பாத்துக்கிறேன், நீ வீட்டுக்கு போம்மான்னு நான் தான் நாலு மணிக்கு அவங்களை வீட்டுக்கு அனுப்பி வெச்சேன்; ராத்திரிக்கு வீட்டுல எல்லோருக்கும் சமையல் பண்ணனும் இல்லையா?" அப்பா ஆஃபீசுல, குமாரசுவாமின்னு, புதுசா ப்ராஞ்ச் மேனேஜர் ஜாயின் பண்ணியிருக்காராம். அப்பா அவரை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு டின்னருக்கு கூப்பிட்டு இருக்காராம். அம்மாவுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்ன்னு நானும் கிளம்பறேன். "சுகன்யா, நீங்க அம்மாவைப் பத்தி கவலைப்படாம இருங்க; அவங்க உங்களை வெறுக்கலை; இது நிச்சயமா எனக்குத் தெரியும். உங்க மேலே ஏதோ இனம் புரியாத கோபம்; அது என்னன்னு தெளிவா சொல்ல மாட்டேங்கிறாங்க; செல்வா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப செல்லப்பிள்ளை; சின்னச் சின்ன விஷயங்களைக் கூட எங்கம்மாவை கேட்டு கேட்டு பண்ற என் அண்ணன், தன் கல்யாண விஷயத்தில, அவங்களை கேக்காம, அவனே தன் இஷ்டப்படி ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்து, இவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தீர்மானமா சொல்றதை, அவங்க கனவுலேயும் நினைச்சு பாத்து இருக்க மாட்டாங்க; அண்ணனோட இந்த முடிவு அவங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சிதான். இந்த பிரச்சனையைத்தான் இப்ப நாங்க எங்க வீட்டுல ஃபேஸ் பண்றோம்." "நீங்க செல்வாவை எங்க அம்மா கிட்டேயிருந்து மொத்தமா பிடுங்கிகிட்டு போயிடுவீங்கன்னு பயப்படறாங்க; இது என்னோட அனுமானம்; அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ் டைப்; அவங்களோடது ஸ்லைட்லி ட்ரெடிஷனல் அவுட்லுக்; கல்யாணத்துக்கு முன்னாடி ஃப்ரீயா ஆணும் பெண்ணும் பழகறது; ஓண்ணா சுத்தறது, டேட்டிங் இதெல்லாம் அவங்களால ஒத்துக்க முடியாத விஷயங்களா இருக்கு. இன்னைக்கு சாதாரணமாக சொசைட்டியில நடக்கற இந்த விஷயங்களை எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. மேரேஜ்க்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா இருந்தீங்கன்னு செல்வா சொன்னதை எங்கம்மாவால ஜீரணிக்க முடியலை; அவங்க கோபத்துக்கு இது ஒரு காரணமா இருக்கலாம். இதுவும் என் அனுமானம்தான்." "ஆனா ஒண்ணு சொல்றேன் சுகன்யா; எங்கம்மா நல்லவங்க; உங்க கிட்ட பழகிட்டா உங்களுக்காக உயிரையே குடுப்பாங்க; அப்பப்ப கொஞ்சம் யோசிக்காம வெடுக்குன்னு பேசிடுவாங்க; நேத்துத்தான் நீங்களே பாத்தீங்களே; அப்புறம் அதை நினைச்சு நினைச்சு மனசுக்குள்ளேயே வருத்தப்படுவாங்க; தன்னையே திட்டிக்குவாங்க; என்னமோ ஒரு தயக்கம் உங்க கிட்ட; அது என்னன்னு புரியலை." "அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சு ... அண்ணன் வீட்டுக்கு வந்ததும் நிதானமா, அம்மா கிட்ட உங்க கல்யாணத்தைப் பத்தி பேசனும்ன்னு காலையில எங்கிட்ட அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு. செல்வாதான் கொஞ்சம் டல்லா இருக்கான். அது இங்க நோயாளிகள் நடுவுல படுத்துக்கிட்டே இருக்கறதால இருக்கலாம். நீங்க அவன் கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா அவன் நார்மல் மூடுக்கு வந்துடுவான்னு நெனைக்கிறேன். " தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசிய மீனா, சுகன்யாவின் கையை மென்மையாக அழுத்தி புன்னகைத்தாள். "தேங்க்ஸ் மீனா! உங்கிட்ட பேசினதுல என் மனசுல இருந்து ஒரு பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு. உன்னை என்னோட ஒரு நல்ல சினேகிதியா, என் மனசுல இருக்கற பிரச்சனைகளை உங்கிட்ட சொல்லாம்ன்னு நினைக்கறேன். " சுகன்யாவின் குரலிலும், மனதிலும் ஒரு நிம்மதி வெளிப்படையாகத் தெரிந்தது. இவ என்னை விட மூணு நாலு வருஷம் வயசுல சின்னவளா இருப்பாளா? செல்வாவுக்கு நேர் மாறா இப்போதைய எங்கப் பிராப்ளத்தை என்னமா ஆராய்ஞ்சு தெளிவா பேசறா? அவள் தன் மனதுக்குள் வியந்தாள்.""செல்வா ... சீனு சொல்ற மாதிரி நீ ஏன் உம்முன்னு இருக்கே?" செல்வா படுத்துக் கொண்டிருக்க அவனருகில் ஒரு ஸ்டூலில் சுகன்யா அமர்ந்து அவன் வலது கையை தன் கையால் வருடிக் கொண்டிருந்தாள். அறைக்கதவு தாளிடப்படாமல் அழுத்தமாக மூடி வைக்கப்பட்டிருந்தது. "தெரியலைடி" "உனக்குத்தான் சீரியஸா ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்களே; அப்புறம் நீ எதை நினைச்சு பயப்படறே?" அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள். "ரொம்ப தேங்ஸ்டி செல்லம்." அவன் குரல் தழுதழுப்பாக வந்தது. "எதுக்கு நீ இப்ப எமோஷனல் ஆவறே?" "சீனு சொன்னதை கேட்டதும் என் மனசு நெறைஞ்சுப் போச்சு. நான் உனக்கு ரொம்ப கடன் பட்டிருக்கேன்டி செல்லம்; அவ்வளவு பணம் நீ கையில வெச்சிக்கிட்டிருந்தியா?" அவன் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தான். "ஆஃப்டர் ஆல் இந்த பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை?" யாருக்குத் தெரியும், நான் எப்பவோ உனக்கு பட்ட கடனை இப்ப திருப்பி குடுக்கறேனோ என்னவோ? உங்கம்மா என்னை ஒதுக்கப் பார்த்தாலும் உன்னை விடாம உன் பின்னாடி சுத்தி சுத்தி வரேன். . நான் பணம் கட்டணும் சொன்னதும், என் மாமாதான் அவரோட டெபிட் கார்டு மூலமா உடனடியா பணம் கட்டினார். " "எனக்கு உன் ரத்தத்தை குடுத்தியாமேடி? நான் வீட்டுக்கு போன உடனே அந்தப் பணத்தை உங்க மாமாவுக்கு திருப்பி குடுத்துடறேன்." "சொன்னா கேளு செல்வா. சும்மா பொலம்பாதே. நான் என் உயிரையே உனக்கு குடுக்கத் தயாரா இருக்கேண்டா. இந்த மாதிரி எனக்கு ஆயிருந்தா, நீ இதெல்லாம் எனக்கு பண்ணியிருக்க மாட்டியா? என்னை எதுக்கு நீ பிரிச்சுப் பார்க்கிறே?" "பண்ணியிருப்பேன் சுகன்யா. ஆனா, நீ சொன்ன மாதிரி நான் வழ வழா கொழ கொழான்னு கொஞ்ச நேரம் திகைச்சு நின்னுட்டு, அப்புறமா பண்ணியிருப்பேன்; உன்னை மாதிரி டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்து இருக்கமாட்டேன்." சுகன்யாவின் கன்னத்தில் படிந்திருந்த தன் கை விரலால் அவள் உதட்டை வருடத் தொடங்கினான் அவன். "சாரிடா செல்வா; அன்றைக்கு உன்ன நான் இந்த மாதிரி அவசரப்பட்டு பேசியிருக்கக்கூடாது; நான் பேசினதையெல்லாம் உன் மனசுல வெச்சுக்காதப்பா. அவள் தன் கண்களில் கெஞ்சலுடன் பேசியவள் அவன் ஆள் காட்டி விரலை மென்மையாக கடித்தாள். "நீ அப்படி பேசினதுக்கு இப்ப பெனல்டி குடுத்துத்தான் ஆகணும்" அவன் புன்னகையுடன் பேசினான். "அப்ப்ப்பாடா ... கடைசியா சிரிச்சிட்டியா?" இப்படி நீ சிரிச்சுக்கிட்டே இருந்தா, நீ கேக்கற பெனல்டியை நான் குடுக்கத் தயார்" அவள் தன் கண்ணை சிமிட்டினாள். "அப்ப சீக்கிரமா குடு." அவன் கண்களில் விஷமம் தவழ்ந்தது. "எனக்கென்னத் தெரியும் ... பெனல்டி என்னான்னு?" "நான் என்ன கேப்பேன்னு நிஜம்மா உனக்குத் தெரியாதா?" அவன் கண்கள் அவள் மார்பின் மேல் நிதானமாக சென்று படிந்தது. "செல்வா, நீ இப்ப எங்கிட்ட ஒதை வாங்கப்போறே? கண்ட எடத்துல, கண்ணா பின்னான்னு உன் கண்ணு மேயுது," அவள் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டாள். "சுகு" பெக்கர்ஸ் ஆர் நாட் சூசர்ஸ்" நீ கேள்வி பட்டதில்லையா?" "ஏய் ... என்னப் பேசறப்பா நீ" அவள் தான் உட்க்கார்ந்திருந்த ஸ்டூலை கட்டிலின் புறம் நகர்த்திக்கொண்டாள். "அன்னைக்கு கூட உன் ரூமுல நீயாதான் என்னைக் கூப்பிட்டு குடுத்தே. அது மாதிரி இப்ப என்னக் குடுக்கணும்ன்னு தோணுதோ அதை குடு. நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன்." செல்வா அவளை ஆசையுடன் தன் கண்களால் விழுங்கிவிடுவது போலப் பார்த்தான். "கொஞ்சம் கிட்ட வாயேன்" தன் இடது கையால் அவன் முகத்தை தன் புறம் திருப்பிய சுகன்யா, ரெண்டு நாள் தாடியுடன் இருந்த அவன் கன்னத்தில், தன் கன்னத்தைத் தேய்த்தாள். அவன் இரு கன்னங்களிலும் தன் உதடுகளை அவசர அவசரமாக ஒற்றியெடுத்தாள். அவள் உடலின் பிரத்யேக வாசம் அவன் உணர்வுகளை சுண்டி எழுப்ப, செல்வா தன் உடல் சிலிர்க்க, அவனுடைய வலது கையை அவள் இடுப்பில் செலுத்தி அவளை தன்புறம் இழுத்து அவள் இதழ்களை, முரட்டுத்தனமாக கவ்வி உறிஞ்சினான். அவள் இடுப்பிலிருந்த அவன் கை சட்டென கீழிறங்கி அவள் பின்னெழில்களில் படர்ந்து நின்றது. அவன் கை அவளை ஆசையுடன் தொட்டதும் சுகன்யாவின் புட்ட சதைகள் சட்டென இறுகியதை செல்வாவின் கை உணர்ந்தது. நிமிடத்திற்குப் பின் சுகன்யா, தன் மூச்சிறைக்க, அவனை விலக்கினாள். அவள் அழகிய வடிவான மார்புகள் மேலும் கீழுமாக விம்மித் தனிந்தன. சுகன்யா தன் துப்பட்டாவை சரி செய்தது கொண்டாள். தன் உதடுகளைத் தன் புறங்க்கையால் துடைத்துக்கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. அவனை விழுங்கிவிடுவது போல பார்த்தாள். விருட்டென எழுந்து அறைக் கதவை திறந்து, உள்ளிருந்தபடியே தன் தலையை வெளியில் நீட்டி வலதும் இடமுமாகப் பார்த்தாள். கதவை மூடிக்கொண்டு, தன் உதடுகளை, தன் நாவால் தடவிக்கொண்டாள். கதவருகிலேயே நின்று கொண்டிருந்தாள். "பொறுக்கி ... ராஸ்கல், உடம்பு வலிக்குதுன்னு பொய் சொல்றே? உடம்பு வலிக்கறவன் என்னை இப்படி வலுவா கட்டிப்புடிச்சு வெறியா முத்தம் குடுக்கிறே? எனக்கு மூச்சுத் திணறிப்போச்சு; இப்ப திருப்தி தானே உனக்கு?" "சுகு, இன்னும் ஒரே ஒரு முத்தா குடுடி; இந்த முத்தம் நான் தானே குடுத்தேன் உனக்கு. பெனல்டி நீதானே குடுக்கறதா பேச்சு?" "அதெல்லாம் கிடையாது ... நீ தப்பாட்டாம் ஆடறே ... முத்தம் முத்தம் தான். நீ குடுத்தா என்ன? நான் குடுத்தா என்ன? நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்" "பீளீஸ் டீ சுகு." "வேண்டாம்டா செல்வா ... சொன்னா கேளுப்பா ... யாராவது வந்துடப் போறாங்க ... சீனு வர நேரமாச்சு; எனக்கு பயமா இருக்குப்பா" மனது அவனை மீண்டும் மீண்டும் முத்தமிட துடித்தப் போதிலும், சுகன்யா தன் தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள். "இப்ப நீ வந்து குடுக்கிறியா? இல்ல நான் கட்டிலை விட்டு இறங்கி வரவா? அவன் எழுவது போல் பாசாங்கு செய்தான்.
"ப்ளீஸ் வேணாம்பா ... உன் கால் வீக்கமா இருக்கு ... வேண்டாம் நீ இறங்காதே?" அவள் அவன் கட்டிலை நோக்கி வேகமாக நடந்தாள். "என் மேல உனக்கு இவ்வளவு அக்கறைன்னா ... நீயே ஒண்ணு குடுத்துடு" "ஒண்ணு தான் குடுப்பேன். திருப்பி திருப்பி நீ கேக்கக் கூடாது. பிராமிஸ்? "ஓ.கே. ஓ.கே இந்த டீலிங் எனக்கு ஓ.கே" அவன் தன் உதடுகளை எச்சில் படுத்திக்கொண்டான். சுகன்யா அவனை மெதுவாக நெருங்கினாள். நின்றவாறே, அவன் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள். அவன் முடியை கோதினாள். "ஐ ல்வ் யூ செல்வா" அவள் கிசுகிசுக்க, செல்வாவின் கை அவள் இடுப்பில் படர்ந்தது. தன் உதடுகளால் அவள் குர்த்தாவில் அடைபட்டிருந்த செழிப்பான இரு முலைகளிலும் மாறி மாறி மென்மையாக முத்தமிட்ட செல்வா, தன் முகத்தை அவள் மார்பில் சாய்த்துக்கொண்டான். நீண்ட பெரு மூச்சுவிட்டான். "தேங்க்ஸ்டி செல்லம், ஐ ல்வ் யூ சுகன்யா" அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவாறு முணுமுணுத்தான். "செல்வா ... உன் தலை வலி இப்ப எப்படிடா இருக்கு" "நேத்தைக்கு இப்ப குறைஞ்சிருக்கு சுகு ..." சுகன்யா, தன் உள்ளத்தில் பொங்கும் பாசத்துடன் அவன் முகத்தை நிமிர்த்தினாள்; அவன் தலையை வருடினாள். தன் தலையைத் தாழ்த்தி, அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் விழிகள் மூடிக்கொள்ள, அவன் கண்களில் முத்தமிட்டாள். அவன் துடிக்கும் உதடுகளில் தன் ஈர உதடுகளைப் பொருத்தி அழுத்தமாக ஓசையில்லாமல் முத்தமிட்டாள். இருவரும் தங்கள் உதடுகளை சற்று நேரம் அசைக்காமல், பரஸ்பரம் உதடுகள் தரும் சூட்டை அனுபவித்துக் கொண்டிருக்க, சுகன்யா முதலில் தன் உணர்வுக்கு திரும்பியவள், விருட்டென அவனிடமிருந்து நகர்ந்து தன் உடையை சரி செய்து கொண்டு ஸ்டுலை கட்டிலை விட்டு நகர்த்தி போட்டு அமர்ந்து கொண்டாள். "போதுமா .." "நீ இந்த கேள்வியை கேக்காம இருந்தா நல்லாயிருக்கும் ... நீ இப்படி கேட்டு கேட்டு என்னை ஏன் உசுப்பேத்தற" அவன் முகம் மலர்ந்து சிரித்தான். "சரி ... சரி ... ரொம்ப வழியாதே; உன் உடம்புக்கு டென்ஷன் குடுக்காதே; என் கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான். உன் உடம்பு தேறட்டும். அப்புறம் உன் ஆசைத் தீர எடுத்துக்கோ; இப்ப கொஞ்சம் பொறுமையா இரேன். ஏன் இப்படி ஆலாப் பறக்கறே?" "மனசுல என்னமோ கலக்கமா இருக்குடி. எங்கம்மாவை நினைச்சா எனக்கு இன்னும் கூட பயமா இருக்கு. நேத்து கூட உன்னை அவங்க இங்கேயிருந்து போயிடுன்னு சொன்னாங்களாமே. நீ ஒண்ணும் சொல்லாம விருட்டுன்னு கிளம்பி போயிட்டியாம்; அதுக்கு அப்புறமும் உங்க மாமாவும், அம்மாவும் ரொம்ப டீசண்டா எங்கம்மா கிட்ட பேசினாங்களாம். என் அப்பா அவங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணாராம். இதையெல்லாம் நினைச்சுத்தான் நான் மனசுக்குள்ள குழம்பிக்கிட்டு இருக்கேன்" அவன் குரல் மெலிதாக வந்தது. "சுகு, நீ ரோஷக்காரின்னு எனக்குத் தெரியும்; எங்கம்மா இப்படி உன் கிட்ட தப்பா நடந்துகிட்டதனால, உங்கம்மா கிட்ட சரியா முகம் கொடுத்து பேசாததனால, என் உடம்பு சரியான உடனே, திரும்பவும் நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டியே? நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி." அவன் குரல் தழுதழுப்பாக வந்தது. "செல்வா சீரியஸா நான் கேக்கிறேன். நீ ஏண்டா அப்பப்ப இப்படி ஒரு மொக்கை மாதிரி பேசறே? என்னை நீ இன்னும் புரிஞ்சுக்கலயா? என் மனசு உனக்கு புரியலையா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உன்னை விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா வேற ஒருத்தன் பின்னாடி போவ முடியும்? "சுகன்யா, கோச்சிக்காதேடி; நான் ஏன் இப்படி ஒரு மொக்கையா இருக்கேன்னு எனக்கேப் புரியலை? கண்ணெதிரில நடக்கறது எல்லாம் புரிஞ்சும் இப்படி ஒரு கேள்வி கேக்கிறேன்?" அவன் தன் முகம் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. "நீ இப்படி ஒரு "ஐயோ பாவம் கேரக்டரா" இருக்கறதாலத்தான் எனக்கு உன்னை ரொம்ப புடிக்குது" அவள் கை அவன் தலையை வருடிக்கொண்டிருந்தது. விருட்டென எழுந்தவள், அவன் தலையை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டாள். மீண்டும் ஒரு முறை அவன் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். அது போவட்டும், இந்த கதையெல்லாம் உனக்கு யார் சொன்னது?" "யாரோ சொன்னாங்க" "சீனு சொன்னாரா? எனக்கு தெரிஞ்சாகணும் இப்ப. செல்வா இனிமே நீ எங்கிட்ட தயவு செய்து எதையும் மறைக்கற வேலை வெச்சுக்காதே." அவள் தன் குரலை உயர்த்தினாள். "அவன் சொல்லலை; மீனா சொன்னா." "என் ரூம்ல நாம நெருக்கமா இருந்ததை உங்கம்மாகிட்ட நீ ஏன் சொன்னே? உனக்கு கொஞ்சம் கூட சுயபுத்தியே இல்லையா? உங்கம்மாகிட்ட எதை பேசறது; எதை சொல்லக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? நீ ஆம்பிளை, எங்கூட சேர்ந்து அடிச்ச கூத்தெல்லாம் உங்கம்மாவுக்கு புரியலை; நான் பொம்பளை, அதனால என்னை அவங்க கொழுத்துப் போனவ, உடம்பு அரிப்பெடுத்தவன்னு நெனைக்கிறாங்க? நான் அப்படிப்பட்டவ இல்லைன்னு உங்கம்மாவுக்கு எப்படி புரிய வெப்பேன்? "இந்த மேட்டர் உனக்கெப்படித் தெரியும்" "ம்ம்ம் ... மீனாதான் சொன்னா" சுகன்யா தொடர்ந்து பேசினாள். நேத்து அப்படி மயக்கமா கிடந்தே. அரை மயக்கத்துல கிடந்தாலும் உதட்டை குவிச்சு காமிச்சு முத்தம் கேக்கற ... நானும் எதையும் அந்த நேரத்துல யோசனை பண்ணாம உனக்கு முத்தம் குடுத்து தொலைச்சேன். நம்ம கெட்ட நேரம், அதை உங்கம்மா பாத்து தொலைச்சுட்டாங்க. அவங்களுக்கு நம்ம இரண்டு பேருக்கு நடுவுல இருக்கற உண்மையான காதலை, ஆசையை, பாசத்தைப் புரிய வெக்கிறதுன்னு எனக்குப் தெரியலை. "சாரிம்ம்மா; நான் அந்த மேட்டரை சொல்லியிருக்க கூடாதுதான். உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு, ஜானகியை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கறதுக்கு அதை ஒரு முக்கியமான காரணமா என் அம்மாகிட்ட சொன்னேன். ஆனா அது இப்படி ஏடாகூடத்துல போய் முடியும்ன்னு நான் அப்ப எதிர்பார்க்கலை." "உங்கம்மாவும், அப்பாவும், நாம முத்தம் குடுத்துக்கிட்டதைப் பாத்துட்டதும், நேத்து ஆகறது ஆவுதுன்னு, உங்கப்பாவை நான் மாமான்னு கூப்பிட்டு ஒரு செண்டிமெண்ட் பிட்டைப் போட்டேன்; அது ஃப்ர்ஸ்ட் கிளாஸா வொர்க் அவுட் ஆயிடுச்சு; அப்புறமா உங்கம்மாவை, உன் எதிர்லேயே அத்தேன்னு கூப்பிட்டு அதே பிட்டைப் போட்டுப் பாத்தேன்; அவங்க ஓண்ணும் மசியற மாதிரி தெரியலை; உங்கப்பாவையும், மீனாவையும் நான் நம்ப வழிக்கு கொண்டாந்துட்டேன்; உங்கம்மாவை சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு; சொல்லிவிட்டு சுகன்யா தமாஷாக சிரித்தாள். செல்வாவும் மனம் இலேசாகி வாய் விட்டு சிரித்தான். "சுகன்யா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே?" "திருப்பியும் முதல்லேருந்தா; எம்ம்மா ... என்னால இப்ப முத்தமெல்லாம் உனக்கு குடுக்க முடியாது." "பாத்தியா நீ தான் என்னை விட அதிகமா பறக்கிறே? "சரி சொல்லு ... என்ன சொல்லப் போறே?" அவள் வெட்கத்துடன் முகம் சிவந்து அவனைப் பார்த்தாள். "எங்கம்மா, உன்னைப் பாத்துட்டாங்க; எனக்காக நீ ஓடி ஓடி செய்றதெல்லாம் நேரா பாக்கறாங்க, இதுக்கப்புறமும், நம்ம கல்யாணத்துக்கு அவங்க ஒத்து வரேல்லேன்னா, நாம என்னடி செய்யறது?" "சுகன்யா அவனை ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கினாள். நாமன்னு என்னை ஏன் உன் கூட சேத்துக்கறே? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீ தான் உங்கம்மாவை சமாளிக்கணும். அப்புறம் அவங்களை நான் கவனிச்சிக்கிறேன். இப்ப இதுக்கு நீ என்னப் பண்ணப் போறேன்னு யோசி" அவள் அவனை வேண்டுமென்றே சீண்டினாள். "இப்பத்தானே என்னை நீ கேட்டே? என்னை ஏன் பிரிச்சுப் பேசறேன்னு? இப்ப நீ மட்டும் என்னைப் உங்கிட்டேயிருந்து பிரிச்சுப் பேசறீயே? அவன் சிணுங்கினான். "ம்ம்ம்ம் ... நீ ஓரே ஒரு காரியம் மட்டும் பண்ணு; மீதியை நான் பாத்துக்கறேன்." சுகன்யா தன் கண்ணை சிமிட்டி அவனை காதலுடன் பார்த்தாள். "நான் என்ன பண்ணணும்." அவன் ஆவலுடன் கேட்டான். "கட்டின லுங்கியும், போட்ட சட்டையுமா நீ என் வீட்டுக்கு வந்துடு. கடைசி வரைக்கும் நான் உன்னை ராஜாவாட்டம் வெச்சுக்கிறேன். வந்துட்டு எங்கம்மா எங்கம்மான்னு பொலம்பினயோ, மவனே, அன்னைக்கே உன்னை உன் வீட்டுக்கு திரும்பி போடான்னு தொரத்திடுவேன்." சுகன்யா தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். செல்வா தலைக்குனிந்து மவுனமாக இருந்தான். "என்னை என் வீட்டை விட்டு ஓடி வந்து உங்க "வீட்டு மாப்பிள்ளையா" இருக்கச் சொல்றியா?" "ஆண்டவா!, உன் கால் இருக்கிற நிலமைக்கு நீ ஓண்ணும் ஓடி வரவேண்டாம்; ஒரு ஆட்டோ பிடிச்சு மெதுவா வந்து சேரு" அவள் கல கலவென சிரித்தாள். அவன் வெகுளித்தனத்தை பார்த்தவளுக்கு அவனை மீண்டும் ஒரு முறை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவன் முகமெங்கும் முத்தமிட வேண்டுமென அவள் மனதில் சட்டென ஒரு வெறி கிளம்பியது. அறைக் கதவு "டொக் ... டொக் எனத் தட்டப்பட்டது ... சுகன்யா எழுவதற்கு முன், கதவைத் திறந்து கொண்டு, சாவித்திரி உள்ளே நுழைந்தாள்."வாங்க மேடம்" சுகன்யா தன்னைச் சுதாரித்துக்கொண்டு விருட்டென எழுந்தாள். இந்த நேரத்துலதானா இவ வரணும்? இவ இப்பவே போய் ஊருக்கெல்லாம் தண்டோரா போடுவாளே, நான் செல்வா கூட தனியா ராத்திரி நேரத்துல, ஆஸ்பத்திரியில அடிபட்டு இருக்கறவன் கூட ஜல்சா பண்ணிகிட்டு இருக்கேறன்னு? இவ என் காலை சுத்திக்கிட்டு இருக்கற பாம்பு; என்னை இவ கொத்தாம விடமாட்டா போல இருக்கே? சுகன்யாவின் மனதில் எரிச்சல் எழுந்தது. "என்ன செல்வா, எப்படி ஃபீல் பண்றே? உடம்பு வலியெல்லாம் கொஞ்சமாவது குறைஞ்சுதா? நீ எழுந்துக்க வேண்டாம். நீ அப்படியே படுத்துக்கிட்டு இரு." இரவு எட்டு மணிக்கு, செல்வாவின் அருகில் சுகன்யா தனியாக இருப்பாள் என்பதை சாவித்திரி எதிர்பார்க்கவில்லை. இது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது. "இன்னைக்கு பரவாயில்லே மேடம்; இடுப்புல உள் காயம் பட்டதனாலே வலியிருக்கு; இடது கால் வீக்கம் சுத்தமா குறையல; அதனால எழுந்து நடக்க முடியலை; காதுக்குப் பின்னாடி ஸ்டிச்சஸ் போட்டு இருக்காங்க; தையல் போட்ட இடத்துல விட்டு விட்டு வலிச்சுக்கிட்டு இருக்கு; இடது கையில பிளாஸ்டர் இருக்கறது அசௌகரியமா இருக்கு; இன்னும் நாலஞ்சு நாள் இங்க இருக்கணும் போல இருக்கு; வீட்டுக்கு போனதக்கு அப்புறமும் குறைஞ்சது ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்றார்." "அவா டாக்டர்ஸ் சொல்றதை மட்டும் நீ கேளு; அவசரப்பட்டு பாண்டிச்சேரிக்கு நீ ஓட வேண்டாம். புதுசா நேத்து அந்த ஆஃபிசுல உன் கிரேட்ல ரெண்டு பேரு டில்லியிலேருந்து வந்து ஜாய்ன் பண்ணியிருக்காங்க; அதனால உன்னை திரும்பவும் சென்னையிலேயே போஸ்ட் பண்றதுக்கு கோபாலன், சீஃபுக்கு ஃபைல்ல எழுதி அனுப்பியிருக்கார். ஒரு வாரத்துலே உனக்கு திருப்பியும் சென்னையிலேயே போஸ்டிங் வரலாம். நான் இருக்கும் போது நீ லீவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே. அந்த விஷயத்தை நான் பாத்துக்கறேன். நீ பொறுமையா ஜாயின் பண்ணிக்கலாம்." அவள் மூச்சு விடாமல் பேசினாள். "ரொம்ப தேங்க்ஸ் ... மேடம்" "ஏன்டியம்மா சுகன்யா, இவன் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து ரெண்டு நாளாச்சு; ம்ம்ம் ... நீ ரெண்டு நாளா இங்கேதான் இருக்கறேன்னு மல்லிகா சொல்லிண்டு இருந்தா; நீயாவது எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லக்கூடாதோ? உன்னை என் பொண்ணு மாதிரி நினைச்சிண்டிருக்கேன் நான். நோக்கு என் மேல அப்படியென்னடியம்மா கோபம்? சேதியை கேட்டதும் என் மனசு பதை பதைச்சு போயி இவனை பாக்கணுமின்னு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்." சாவித்திரி வழக்கம் போல் நீட்டி முழக்கினாள். "உங்க மேல எனக்கு ஒரு கோபமுமில்லே. நீங்க உக்காருங்க முதல்ல. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? ஒரு வாய் தண்ணியை குடிங்க; உங்களுக்கு மூச்சு வாங்குது பாருங்க." வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் மரியாதை நிமித்தம் நீட்டினாள். "தலைக்கு வந்த அம்பு தள்ளிப் போய் விழுந்ததுன்னு நினைச்சுக்கோடாப்பா; உங்கம்மா கிட்ட சாயங்காலம் ஒரு நிமிடம் பேசினேன். அப்பத்தான் எனக்கு நீ ஆஸ்பத்திரியில இருக்கற விஷயம் தெரிய வந்தது. அந்த பொம்மனாட்டி தவிச்சிப் போயிருக்கா. இருக்காதா பின்னே; பெத்து வளத்தவளாச்சே? கருவேப்பிலை கொத்தாட்டாம ஒரு பிள்ளையை பெத்து வெச்சிருக்கா. கெட்ட நேரம் சொல்லிட்டா வருது? நீ என்னடியம்மா ஆபிசுக்கு லீவு போட்டிருக்கியா? நீ டில்லிக்கு போறதா கேள்விப்பட்டேனே? டிக்கெட்டெல்லாம் புக் பண்ணிட்டியா? "இல்லை மேடம்; இவர் பக்கதுல நான் இருக்கறதுதான் இப்போதைக்கு முக்கியம்ன்னு என் மனசுல பட்டுது; புக் பண்ண டிக்கட்டை கேன்சல் பண்ணிட்டேன்; கோபாலன் சார் கிட்ட அடுத்த பேட்ச்ல டில்லி போறேன்னு ரெக்வெஸ்ட் எழுதி கொடுத்து இருக்கேன். அவரும் சரின்னு சொல்லிட்டார்" இதைப் பத்தி இப்ப இவ பேசலேன்னு யார் அழுதாங்க? அவள் வேண்டா வெறுப்பாக புன்னகைத்தாள். "நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; இவாத்துல இவனுக்கு நாலு மனுஷா இருக்கா; அவா இவனை கண்ணுல வெச்சு பாத்துக்க மாட்டாளோ? நீ ஏன் இப்படி தனியா கஷ்டப்பட்டுண்டிருக்காய்; இந்த மாதிரி ஆபீஸ்ல நல்ல வாய்ப்பு உனக்கு அடிக்கடி வராது; வந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டு பின்னாடி வருத்தப் படக்கூடாது. என் மனசுல பட்டதை, அதுவும் உன் நல்லதுக்குத்தான் இதை நான் சொல்றேன். " அவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்பது செல்வாவுக்கு புரியாததால் தன் கண்களில் கேள்வி குறியுடன் சுகன்யாவை பார்த்தான். சுகன்யா அவன் பார்வையைத் அந்த நேரத்தில் தவிர்த்தாள். "சாயந்திரம் கோவிலுக்குப் போயிருந்தேன். நேரா அங்கேருந்துதான் வர்றேன். உனக்காக விபூதி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். மேல இருக்கறவனை நெனைச்சு நெத்தியில இட்டுக்கோடாப்பா. எல்லாம் சரியாயிடும். நல்லபடியா இருப்பே நீ." சாவித்திரி எழுந்து அவனருகில் செல்ல முயற்சித்தாள். "எங்கிட்டே கொடுங்க மேடம்; அவருக்கு நான் வெச்சு விடறேன்." சாவித்திரி தன் பர்ஸிலிருந்து எடுத்த பிரசாத பொட்டலத்தை அவள் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிய சுகன்யா, அவள் பார்த்துக்கொண்டிருக்க, தன் கையால் உரிமையுடன் செல்வாவின் நெற்றியில் புருவங்களுக்கிடையில் தீட்டினாள். இவ கண்ணுதான் இங்க வந்து படுத்துக்கிட்டான்; இன்னும் இவ அவனை தொட்டு விபூதி குங்குமம் வேற வெக்கணுமா? சாவித்திரி அவனை தொடுவதை அவள் மனம் விரும்பவில்லை. செல்வாவுக்கு நெற்றியில் விபூதியை இடும் போது, அவன் தலையைத் ஆடியதால் அவன் கண்ணில் சிதறி விழுந்த துகள்களை, வேண்டுமென்றே தன் மார்பை அவன் முகத்தில் உரசியவாறு, அவன் மேல் குனிந்து தன் வாய் எச்சில் அவன் முகத்தில் தெறிக்க சுகன்யா அவன் கண்ணை ஊதினாள். தன் துப்பட்டாவால் அவன் முகத்தை துடைத்து விட்டாள். அவனை விட்டு விலகாமல் அவன் பக்கத்தில் நின்று அவன் தலையையும் நெற்றியையும் வருடிக்கொண்டிருந்தாள். இந்த கல்லு மனசுகாரிக்கு இப்போதாவது புரியட்டும், எங்களுக்கு நடுவுல இருக்கற உறவு என்னான்னு? என் அப்பனை பத்தி சொல்லி இவன் அம்மா மனசை குழப்பி வெச்சிருக்காளே? நேரா போய் இவன் ஆத்தா மல்லிகா கிட்ட இங்க நடக்கறதை சொல்லி பொலம்பி சாவட்டும். என்னை ஒதுக்கணும்ன்னு நினைக்கறவங்களுக்கு, நான் எப்படி அவங்க புள்ளையை என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்னு? அப்பத்தான் என் அருமை அவங்களுக்குப் புரியும். ஆண்டவா, இங்க நடக்கறதை பாத்ததுக்கு அப்புறமாவது இந்த சாவித்திரி இனிமேல் எங்க ஆசைக்கு குறுக்க வந்து எந்த சதியும் பண்ணாம இருந்தா சரி? சுகன்யா தன் மனதுக்குள் ஆத்திரத்துடன் பொருமிக்கொண்டாள். சாவித்திரியும் அவள் செய்வதையெல்லாம் பிரமிப்புடன் வைத்த கண் வாங்கமால் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னா இந்த பொண்ணு செல்வாவை கட்டின புருஷன் மாதிரி "இவருங்கறா; அவருங்கறா?" ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸாத்தான் இன்னும் இருக்கறாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்; இவ என்னடான்னா இங்கேயே இவன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காளே? இவன் கையால தாலி கட்டிக்கிட்ட மாதிரியில்ல நடந்துக்கறா; பிரசாதத்தை எங்கிட்டேருந்து வெடுக்குன்னு புடுங்கி அவன் நெத்தியில வெக்கறா; என் புள்ளை மாதிரி இவன்; இவனை நான் தொடக்கூடாதா? மார்த் துணி விலகறது கூட தெரியாம அவனைத் தொட்டுத் தூக்கறா; அவனை உரசி உரசிகிட்டு எல்லாத்தையும் செய்யறா? இவன் ஜாதி என்னா? இவ ஜாதி என்னா? இவளுக்கு அம்மா ஒரு ஜாதி; அப்பன் ஒரு ஜாதி; அப்பனும் இவங்களை விட்டுட்டு ஓடிட்டான். இப்ப எங்க இருக்கான்னு தெரியாது. விவரம் பத்தாத இந்த மல்லிகாவும் எதுக்காக ஒரு கன்னிப் பொண்ணை ராத்திரி நேரத்துல தன் புள்ளை கூட தனியா விட்டு வெச்சிருக்கா? நடராஜன் இவளை இவனுக்கே கட்டி வெச்சிடாலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரா? ஒண்ணும் புரியலேயே? நான் என்னடான்னா இவன் கிட்ட நேரடியா கடைசியா ஒரு தரம் என் பொண்ணைப் பத்தி பேசலாம்ன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன். அன்னைக்கு ஜானகி இவன் கிட்ட துப்பு கெட்டத்தனமா நடந்துகிட்டதுக்கு இவன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கலாம்ன்னு யோசனைப் பண்ணிகிட்டு இருக்கேன். சுகன்யா டெல்லியில இருக்கற நேரத்துல இவனை என் பக்கம் திருப்பணும்ன்னு காத்துக்கிட்டிருக்கேன். சுகன்யா என்னடான்னா டில்லிக்கு போகலேங்கறா? இப்ப என்ன பண்றது? நேரா மல்லிகாகிட்டத்தான் போகணும். சாயந்தரம் எங்கிட்ட மல்லிகா பேசினப்பவும் என்னமோ கடனேன்னு பேசறது போலத்தான் பேசினா? செல்வாவையும், சுகன்யாவையும் அவ்வளவு நெருக்கமாக, அன்னியோன்யமாக பார்த்த சாவித்திரியின் மனதில், சட்டென பொறாமைத் தீ எழுந்தது. தன் பொண்ணுக்கு இந்த குடுப்பனை இல்லேயே? அவள் மனதில் வெவ்வேறு விதமான எண்ணங்கள் எழுந்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. "ரொம்ப தேங்க்ஸ் மேடம்." "எதுக்குடியம்மா?" "இவருக்காக அக்கறையா விபூதி பிரசாதம் கொண்டு வந்தீங்களே, அதுக்குத்தான் மேடம்; இந்த காலத்துலே உங்களுக்கு இருக்கற மாதிரி நல்ல மனசு எத்தனைப் பேருக்கு இருக்கு? என்னையும் உங்க பொண்ணு மாதிரின்னு வாய்க்கு வாய் சொல்றீங்க; இப்ப உங்க வாயால என்னையும் நல்லா இருன்னு சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் மேடம்?" சுகன்யா போலியாக சிரித்தாள். "என்னை நீ சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கேடியம்மா. உனக்கென்னடி குறைச்சல்? கோவில் செலை மாதிரி இருக்கே; கை நெறய சம்பாதிக்கறே; நீயும் நல்லபடியா இருப்பேம்மா; உன் மனம் போல உனக்கு சீக்கிரமே மாங்கல்யம் அமையட்டும்." "செல்வா, நான் கிளம்பறேன் இப்ப; உன் கிட்ட கொஞ்சம் தனியா மனம் விட்டு பேசணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருக்கேன். நீ சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வா. அப்புறம் பேசிக்கலாம்." தன் பையை எடுத்துக்கொண்டவள், அவர்களை திரும்பி பார்க்காமல் விடு விடு வென்று கதவை திறந்து கொண்டு வெளியேறினாள். சாவித்திரி கிளம்பிய ரெண்டு நிமிடங்களில் டிபனுடன் வந்த சீனு, சுகன்யா வேண்டாம் வேண்டாமென வெகுவாக மறுத்தப்போதிலும், அவளைத் தன் பைக்கில் அவள் வீட்டு வாசல் வரை அழைத்து வந்து விட்டுவிட்டு திரும்பிப்போனான். "என்னம்மா செல்வாவுக்கு எப்படியிருக்கு உடம்பு," அவர்களிருவரும் சாப்பிடுவதற்காக தட்டுகளை எடுத்து வைத்தவாறு கேட்டாள் சுந்தரி. "கால் வீக்கம்தான் சுத்தமா குறையல; மத்தப்படிக்கு இப்ப பெட்டரா அவர் ஃபீல் பண்றார்; ஒன்றிரண்டு நாள்ல வீக்கம் குறைய ஆரம்பிக்குமின்னு டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார்; சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு தோணுது; உனக்கு வீட்டுல தனியா இருக்கறது போரடிக்குதாம்மா?" சுகன்யா தன் தாயின் கழுத்தை ஒரு சிறு குழந்தையைப் போல் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடினாள். "சுகா ... எனக்கு கழுத்து வலிக்குதுடி; நீ என்னடான்னா சின்ன குழந்தையாட்டாம் விளையாடறே?" "வலிச்சா வலிக்கட்டும்; எனக்கு உன் மேல ஆசை ஆசையா வருது; நான் அப்படித்தான் கட்டிக்கிட்டுத் தொங்குவேன்" தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள். ம்ம்ம்ம் ... ராஜாத்தியாட்டம் ஒரு பொண்ணு எனக்கு பொறந்திருக்கா? இந்த வயசுல தன்னைப்பத்தி மட்டும் கவலைப்படாம, தன் அம்மாவோட மன உணர்ச்சிகளைப் பத்தியும், அவ உடல் உணர்ச்சிகளையும் பத்தியும் கவலைப்படற பொண்ணு. சுந்தரியின் மனதில் மகிழ்ச்சி பீறிக்கொண்டு வந்தது. மறுபுறம் அவள் மனம் வெதும்பியது; இவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணைப் பெத்துட்டு, பக்கத்துல இருந்து புத்திர சுகத்தை அனுபவிக்க குடுப்பனை இல்லாம, அந்த குடிகாரப் பாவி எங்களையும் தவிக்கவிட்டு, அவனும் எங்க கிடந்து தவிக்கிறானோ தெரியலையே? காலையிலேருந்து பாழாப் போற மனசுல அவனைப் பத்திய நெனப்பு ஏன் வந்து வந்து போகுது? "நான் உனக்கு குழந்தையில்லையா?" சுகன்யா சிணுங்கினாள்; ஆசையுடன் கொஞ்சினாள். "நீ என் குழந்தைதான்; யார் இல்லேன்னது; ஆன இப்ப நீ வளர்ந்த குழந்தை ... அதுக்கு ஏத்த மாதிரி நீ பிஹேவ் பண்ணணும் ... பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க; அவள் பெத்த மனம் அவளைப் பார்க்க பார்க்கப் பூரித்தது. ... சரி சரி ... கொஞ்சினது போதும் என்னை; வந்து சாப்பிடு, அப்புறம் நேரத்துக்கு படுத்து தூங்கு ... திருப்பியும் போனை எடுத்து வெச்சுக்கிட்டு அவன் கிட்ட ராத்திரி பூரா பேச ஆரம்பிச்சிடாதே." சொன்னவள் சிரித்தவாறு சுகன்யாவின் கையை ஆசையாகப் பற்றிக்கொண்டாள். "என்னப் பண்ணேம்மா நாள் பூரா?" நொய் உப்புமா ... சூப்பரா இருக்கு ... தேங்காய் சட்டினியுடன் சேர்த்து உப்புமாவை மென்றுவாறே கேட்டாள் சுகன்யா. "காலையில வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வேணி வந்திருந்தா; அவ கூட பேசிகிட்டிருந்தேன்; உன்னைத் தங்கமான பொண்ணுன்னு கொண்டாடினா; பெத்தவளுக்கு வேற என்னடி வேணும்? எனக்கு மனசு நெறைஞ்சு போச்சுடி; செத்த நேரம் தூங்கினேன்; ரொம்ப நாளாச்சு இப்படி மதியானத்துல நிம்மதியா படுத்து; அப்புறம் டிஃபன் பண்ணி வெச்சுட்டு மாணிக்கம் அண்ணாச்சி கூட கோவிலுக்கு போய்ட்டு வந்தேன். "அம்மா, நாளைக்கு நைட் நான் தான் உனக்கு சமையல் பண்ணி போடப்போறேன்." "ஆகட்டும் ... நாளைக்கு அந்த பிள்ளையை பாக்க போவலையா நீ?" "இல்லம்மா ... இப்பதான் உடம்பு அவனுக்கு தேவலயா ஆயிடுச்சே? தினம் தினம் நான் அங்க போய் நின்னாலும் அவன் அம்மா என்னை சீப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு இருக்கு." "சரியா சொன்னே; நானே உங்கிட்ட இதுபத்தி பேசணும்ன்னு நினைச்ச்சேன்." "எனக்கு உன் கூட இருக்கணும்ன்னு இருக்குதுமா? உன்னை எங்கயாவது வெளியில கூப்பிட்டுக்கிட்டு போய் உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா? நாளைன்னைக்கு எங்களுக்கெல்லாம் ஆபீஸ் லீவு; பக்கத்துலதான் காஞ்சீபுரம் ... மாபலிபுரம்ன்னு ... காஞ்சீபுரத்துல நெறைய கோவில் குளம்முன்னு இருக்கு; நீ போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தியே? போய் வரலாமா; காலங்காத்தால எழுந்து குளிச்சுட்டு ஏஸி பஸ்ல போனா, ரெண்டு ரெண்டரை மணி நேரம் தான் ட்ராவல் ... வரதராஜர் கோவில், அப்புறம் காமாட்சியம்மன்னை தரிசனம் பண்ணிட்டு, அந்த ஊர்லேயே மதியம் சாப்பிட்டுக்கலாம். சாயந்திரத்துக்குள்ள திரும்பி வந்துடலாம்?" "ம்ம்ம் ... போய் வரலாம்" கையை கழுவிவிட்டு வந்த சுந்தரி தான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த தோல் பையைத் திறந்து, ஒரு புது தங்கச்சங்கிலியை எடுத்தாள், "சுகா ... கண்ணு! இங்கப் பாரு, உனக்காக நான் என்ன வெச்சிருக்கேன்னு; வந்ததுலேருந்து இதை எடுத்து உன் கழுத்துல போட்டு பாக்கணும்ன்னு நினைக்கிறேன்; முடியலை; நீ ஒரே அலைச்சலா ஓடிக்கிட்டு இருக்கே; இன்னைக்கு நாள் நல்லா இருக்கு; இதை கழுத்துல போட்டுக்கடி." "இப்ப எதுக்கும்ம்மா இதை வாங்கினே? ... எனக்கு வேணும்னா நான் கேக்க மாட்டேனா? எத்தனை பவுன்மா ... நல்லா வெயிட்டா இருக்கு; நீ போட்டுக்கம்மா முதல்ல ... எங்கிட்ட இருக்கற செயினையே நான் போட்டுக்கறதுல்ல" சுந்தரியின் கையில் பளபளத்தை தங்கச் செயினை கையில் வாங்கிய சுகன்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. நகையை விரும்பாதவள் ஒரு பெண்ணாகவே இருக்கமுடியாது! "சுகா, நான் உனக்குன்னுத்தான் வாங்கினேன்ம்மா ... உன் கல்யாணத்துக்கு ஒன்னு ரெண்டு உருப்படி தேவைதானே? நாலு பவுனு; இப்ப சின்னதா லட்சுமி டாலர் கோத்திருக்கு இதுல; வேணும்னா டாலரை கழட்டிட்டு, உன் கல்யாணத்துக்கு அப்புறமா நீ தாலியை கூட இதுலயே கோத்துக்கலாம் ... வெளியே போய் வர பொண்ணு நீ; அது பாட்டுக்கு கழுத்துல கிடக்கும். எனக்கு புரமோஷன் கிடைச்சதுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கான அரியர்ஸ் வந்தது ... அதை ஒரு நகையா மாத்திட்டேண்டி செல்லம்." "அம்மா நீயே போட்டுவிடும்ம்மா" சுகன்யாவின் கழுத்தில் செயினை மாட்டிய சுந்தரி தன் பெண்ணின் அழகை கண்ணும் மனமும் நிரம்ப பார்த்தாள். அந்த குடிகாரனுக்கு கூட இருந்து இதெல்லாம் பாத்து அனுபவிக்க குடுத்து வெக்கலை. சட்டென தன் கணவனின் நினைவு மீண்டும் வர அவள் திடுக்கிட்டாள். எனக்கென்ன ஆச்சு? இத்தனை வருஷமா அவன் நெனப்பு இல்லாம நிம்மதியா வாழ்ந்துட்டேன். நேத்து இவ என் அப்பா எங்கேன்னு கேட்டா, அதுலேருந்து திரும்ப திரும்ப இவன் நெனப்பு என்னை அலைக்கழிக்குது. அவள் மனம் சலித்துக்கொண்டது. "தேங்க்ஸ்ம்ம்மா" சுகன்யா தன் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். "பத்திரமா வெச்சுக்கடி சுகா ... " "சரிம்ம்மா ... நான் என்னா சின்னக்குழந்தையாம்ம்மா ... இதெல்லாம் எனக்கு தெரியாதா? ம்ம்ம்... வேற என்னல்லாம் என் கல்யாணத்துக்குன்னு நீ வாங்கி வெச்சிருக்கே?" "முதல்ல அந்த மல்லிகா "சரி" ன்னு தலையாட்டட்டும்; உன் கல்யாணத்தை நல்ல படியா உன் மனசுக்கு திருப்தியா ஜாம் ஜாம்ன்னு நான் செய்து வெக்கிறேண்டி; எனக்கு உன் மனசு திருப்திதாண்டி முக்கியம். ரெண்டு ஜோடி வளையல் செய்து வெச்சிருக்கேன், ரெண்டு மோதிரம் உனக்குன்னு இருக்கு; ஒரு தாம்பு கயிறு செயின் பண்ணி வெச்சிருக்கேன். என் தம்பியும் கொஞ்சம் காசா உனக்குன்னு வாங்கி வெச்சிருக்கான். உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேற எது வேணுமோ செய்துக்கலாம்.. காதுக்கு உனக்கு புடிச்ச மாடலா நீயா பாத்து எதாவது வாங்கிக்கோ; இதுக்கெல்லாம் நான் பணம் குடுக்கறேன். நான் சொன்ன அயிட்டமெல்லாம் பத்திரமா பேங்க் லாக்கர்ல இருக்கு." "என் அப்பன் ஆத்தா போய் சேர்ந்தப்ப, அவங்க விட்டுட்டு போன வீட்டை ரிப்பேர் பண்ணி வாடகைக்கு விட்டு இருக்கு; உன் மாமன் அதுல வர வாடகையையும் உன் பேர்லதான் பேங்க்ல போட்டுக்கிட்டு இருக்கான். உன் பாட்டியோட பழைய நகையை எனக்கு குடுத்தான். உங்கப்பனை காதலிச்சுக் கட்டிக்கிட்டேன்னு என் மேல அவ்வளவு கோவமா இருந்து செத்தா என் ஆத்தாக்காரி. இப்பவாது வந்து என் கூட இருன்னு எங்கப்பனை கூப்பிட்டேன். அவன் என் பொண்டாட்டி இருந்த வீட்டை விட்டுட்டு வரமாட்டேன்னு புடிவாதன் புடிச்சான். அவன் அவளையே நெனைச்சுக்கிட்டு, அவ துக்கத்துலேயே இருந்து ஆறுமாசத்துல அவனும் போய் சேர்ந்தான். "நான் உன்னை குழந்தையா வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டப்ப என்னை ஒரு தரம் வந்து பாத்தாளா அவ? கல்லு மனசு அவளுக்கு. அவளுக்கு இருந்த ரோஷம் எனக்கில்லையா? அவ பெத்த பொண்ணுதானே நான்? அவ நகையை நான் எதுக்கு போட்டுக்கிட்டு மினுக்கணும்?" சுந்தரியின் குரல் கரகரப்பாக வந்தது. "யம்மா ... ஆயாவை ஏம்மா திட்டறே ... அவங்க ரெண்டு பேரும் என் கிட்ட எப்பவும் ஆசையாத்தான் இருந்தாங்க ... வீட்டுக்கு வாம்மான்னு ஆசையா கூப்பிடுவாங்க." "நீ ஸ்கூலுக்கு போவும் போது ஒளிஞ்சுகிட்டு நின்னு உன்னையே பாத்துகிட்டு நின்ன கதையெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? நீயும் அவங்க வாங்கிக் குடுக்கற சாக்லெட்டை மொத்தமா திண்ணுட்டு வீட்டுக்கு வந்து திருட்டுத்தனம் பண்ணதெல்லாம் எனக்கும் தெரியும்." சுந்தரி மூக்கை உறிஞ்சினாள்; தன் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். "அம்மா அழுவாதேம்ம்மா ... எனக்கும் அவங்களை நினைச்சா அழுகை வருதும்மா" சுகன்யா அவள் தலையைத் தடவினாள். "நான் சம்பாதிக்கிறேன். வேலையை விட்டாலும் எனக்கு பென்ஷன் வரும். அவங்க சொத்தே எனக்கு எதுவும் வேணாம்ன்னு உன் மாமன் கிட்ட தீத்து சொல்லிட்டேன். அந்த வீட்டை என் தம்பி உனக்குதான்னு இப்பவே எழுதி வெச்சிட்டான். நீ எப்ப வேணா பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டு வா; உன் பேர்ல அந்த வீட்டை மாத்திக்கோ; அவனுக்கும் உன்னை விட்டா வேற யாரு இருக்காங்க? புத்தி கெட்டவன் எனக்காக வாழறானாம்; இப்படி வாழ்க்கையில ஒத்தையாவே இருந்துட்டான்." "இத்தனை நாளா இல்லாம இப்ப எதுக்கு நீ எங்கிட்ட என் குடும்ப கணக்கை கேக்கிற?" "அம்மா ... ஏம்மா நீ என்னை தப்பா நினைக்கிறே? நான் கண்க்கு கேக்கலைம்ம்மா ... மாமா என்னை கேட்டார் ... உனக்கு என்ன மாதிரி நகை வேணும்ன்னு நான் போன தரம் ஊருக்கு வந்தப்ப கேட்டாரு ... நான் உன்னை கேளுன்னு சொல்லிட்டு வந்தேன்? "சரிடி ... உண்மையைச் சொல்லு; அந்த பையன் செல்வா உன்னை எதாவது கேட்டானா? இல்லை அவன் தங்கச்சி மீனா கேட்டாளா? என் புருஷன் என் கூட இல்லேன்னு தெரிஞ்சதும், அந்த மல்லிகா உன்னை ஒண்ணுமில்லாத ஓட்டாண்டின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கா போல இருக்கு; நீ சொல்ற அந்த சாவித்திரி பேச்சைக் கேட்டுக்கிட்டு குதிக்கிறான்னு நினைக்கிறேன். அந்த மல்லிகா கிட்ட ஜாடை மாடையா சொல்லி வை; நான் ஒண்ணும் பஞ்சையோ பராரியோ இல்லை. எங்க குடும்பமும் மரியாதையுள்ள குடும்பம்தான். என் கிட்டயும் சொத்து சுகம் எல்லாம் இருக்குன்னு தலையை நிமிர்த்தி சொல்லு! நீ யாருக்கும் குறைஞ்சு போயிடலடி இங்க." "சுகா, உன் அப்பன் உன் கூட இல்லாத குறையைத் தவிர வேற எந்த குறையும் உனக்கு இல்லடி ... என் கூட வேலை செய்யற ரெண்டு பேரு எப்ப எப்பன்னு காத்துகிட்டு இருக்காளுங்க; என்னை தினமும் நச்சரிக்கறாளுங்க; உன்னை அவங்க புள்ளைக்கு கட்டிக்கறோம்ன்னு. உன் பொண்ணுகிட்ட பேசிட்டியா; பேசிட்டியான்னு? நீ இவனை ஆசை பட்டுட்டியே ... சரி அவ மனசுக்கு புடிச்சவனையே கட்டிக்கட்டுமேன்னு உன் மாமன் உன் பக்கம் சேந்துகிட்டு குதிக்கறான். அதனால ஆசை பட்டவனையே நீ கட்டிக்கோன்னு நான் சும்மா இருக்கேன். இல்லேன்னா உனக்கு பசங்களை லைன்ல கொண்டாந்து நிறுத்துவேன்." "எம்மா ... எனக்கு இவன் ஒருத்தனே போதும் ... நீ புதுசா எவனையும் கூப்பிட்டுக்கிட்டு வரவேணாம்; மீனா சொல்லிக்கிட்டிருந்தா; செல்வா, குணமாகி வீட்டுக்குப் போனதும் எங்க கல்யாணத்தைப் பத்தி அவங்க அம்மா கிட்ட பேசி முடிவு எடுக்கறேன்னு நடராஜன் சொன்னாராம்." "செல்வா, ஒரு பயந்தாங்கொள்ளி, எங்கம்மா நம்ம மேரேஜ்க்கு சம்மதம் குடுப்பாங்களான்னு எனக்கு சந்தேகமாயிருக்கு; அவங்க மாட்டேன்னுடா என்னப் பண்றதுன்னு என்னை இன்னைக்கு கலக்கமா கேட்டான்; நான் சொன்னேன் உங்கம்மாவை நீ தான் சரிகட்டணும் ... இல்லன்னா நீ என் வீட்டுக்கு வந்திடு, மத்ததை நான் பாத்துக்கறேன்னு ஜம்பமா சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பயமா இருக்கும்மா. இப்படியே நாளைத் தள்ளறதுக்கு எனக்கு இஷ்டமில்லேம்மா. நான் அவன் கிட்ட சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையேம்ம்மா? அவன் நம்ம வீட்டுக்கு வந்துட்டா; மாமவும் நீயும் ஒண்ணும் சொல்ல மாட்டீங்களே? சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள். "அந்த சாவித்திரி இன்னைக்கு செல்வாவை பார்க்க வந்தா; அவ போறப்பா சொல்றா - "செல்வா உன் கிட்ட நான் தனியா பேசணும்ன்னுட்டு" - அவ வேற எதைப் பத்தி பேசுவா? எனக்குத் தெரியாதா? திருப்பி திருப்பி அவ பொண்ணைப் பத்தி அவன் கிட்ட பேசி எங்க நடுவுல குழப்பத்தை உண்டு பண்ணப் பாக்கிறான்னு நினைக்கிறேன்?" "சுகா நீ கொஞ்சம் பொறுமையா இரு; உன் எதிர்லதானே எங்ககிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அன்னிக்கு ஆஸ்பத்திரியிலே செல்வா சொன்னான் இல்லியா?" "ஆமாம்" "நடராஜனும், உன் மாமா கிட்ட ரெண்டு வாரம் கழிச்சு பேசறேன்னு சொன்னாரா இல்லையா? தன் பொண்டாட்டிகிட்டவும் பேசறேன்னு இப்ப சொல்றாரா இல்லையா? "ம்ம்ம்ம்" "பின்னே நீ ஏன் இப்ப நடுவுல குழம்பறே ... ? நாங்க சீன்ல வந்தாச்சு இல்லயா? பெரியவங்க நாங்க பேசி ஒரு முடிவுக்கு வர வரைக்கும் சும்மாயில்லாம நீ ஏன் நடுவுல எல்லாத்தையும் தூக்கி உன் தலையில போட்டுக்கிட்டு குதிக்கறே?" "......." "நான் சொல்றதை ஒழுங்கா கேளு ... உன் மாமாகிட்ட சொன்ன மாதிரி பத்து நாள் நீ லீவு போட்டுட்டு என் கூட ஊருக்கு வா ... அங்க வந்து நிம்மதியா இரு; உன் மனசு அலைபாயறதும் குறையும். இப்ப அவனுக்கு சீரியஸா ஒண்ணுமில்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க; சும்மா சும்மா தினம் அவனைப் பாக்கறதுக்கு போவாதே. அவன் கிட்ட போன்ல தேவைக்கு மேல தொணதொணன்னு பேசிக்கிட்டு இருக்காதே. பழகப் பழகப் பாலும் புளிக்கும்டி கண்ணு; நான் சொல்றதை புரிஞ்சுக்கோ; அவனை பாத்துக்கறதுக்கு அவனைப் பெத்தவங்க இருக்காங்க." "ம்ம்ம் ..." "தினம் தினம் நீ அங்க போய் அவன் எதிர்ல எதுக்கு நிக்கணும்? அந்த சாவித்திரி மாதிரி நாலு பேரு அவன் உறவு காரங்க ஆஸ்பத்திரிக்கு அவனைப் பாக்க வருவாங்க; உன் கூட வேலை செய்யறவங்க வரலாம்; உன்னைப் பத்தி நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. நீ இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது? அப்புறம் உன் மேல, எங்க மேலே அந்த நடராஜனுக்கு இருக்கிற மரியாதைதான் கெட்டுப்போகும். கல்யாணத்துக்கு முன்னாடி கையளவு தூரத்துல நீ தள்ளி நிக்கணும்." "செல்வா கிட்ட சும்மா மூச்சுக்கு முன்னூறு தரம் பேசி பேசி அவனையும் குழப்பாதே, நீயும் குழம்பாதே; அவன் அவ அம்மாளை விட்டுக்கொடுக்கிறானா? உண்மையிலேயே உனக்கு அவன் மேல ஆசை இருக்கற மாதிரி, அவனுக்கு உன் மேல ஆசை இருந்தா, ஆத்தாளை விட்டுட்டு அவன் உன்னைத் தேடிக்கிட்டு நம்ம ஊருக்கு வரட்டும். அப்ப பாத்துக்கலாம் அந்த கதையை." "உண்மையா என்னை கட்டிக்கணுங்கற ஆசை இருக்கவே தானே உன் அப்பன் என் பின்னால வந்தான். சொல்லுடி ... வந்தானா இல்லையா?" "ம்ம்ம்" "நான் அவனுக்கு எந்த குறையும் வெக்கல. வந்ததுக்கு அப்புறம் அவன் குடிக்க கத்துக்கிட்டு கெட்டு குட்டி சுவரா போனான். அது வேற விஷயம். திருத்தப் பாத்தேன். முடியலை. அடிச்சி வெரட்டினேன். அதுக்கு மேல நான் என்னப் பண்ணமுடியும்? இவன் எங்கப் போயிடப் போறான்? இன்னைக்கு நான் சொல்றேன். இதை நீ எழுதி வெச்சுக்கோ - இவன் உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டான்; அவனுக்கு அவன் அப்பா அம்மா இருக்கற மாதிரி, உனக்கு நாங்க இருக்கோம் இல்லையா? எங்கக்கிட்ட நீ சொல்லிட்டேல்ல; இனிமே நாங்க பாத்து எல்லாத்தையும் நல்லபடியா செய்து முடிக்கிறவரைக்கும் பொத்திக்கிட்டு இரு. நீயா உள்ள பூந்து எதாவது குட்டையை குழப்பினே எனக்கு கெட்ட கோவம் வரும் புரியுதா?" குரலில் கோபத்தை காட்டுவது போல பேசினாலும் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள். "சரிம்மா ... என்னை எதுக்கு இப்ப கோச்சிக்கறே ... நான் அப்படி என்னா பண்ணிட்டேன்?"அவள் சிணுங்கினாள். அம்மாவை விட்டு தள்ளிப் படுத்துக்கொண்டாள். தன் கையைத் தள்ளிவிட்டு தன்னை விட்டு நகர்ந்து படுத்துக்கொண்ட தன் பெண்ணை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் சுந்தரி. "உன் மேல எனக்கு என்னடா கோபம் ... நீ நல்லா இருக்கணும்ன்னு தான் சொல்றேண்டா; பேசாம இப்ப தூங்கு" பக்கத்தில் படுத்திருந்த சுகன்யாவின் முதுகை சுந்தரி ஆதரவாக தடவிக் கொடுத்தாள். "மல்லிகா மேடம், சாப்பாடு பிரமாதம். மரியாதை நிமித்தமா நான் சொல்லலை. நிஜமா சொல்றேன், நான் இந்த மாதிரி வாய்க்கு ருசியா நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப காலமாச்சு." மிளகு ரசத்தை மீண்டும் ஒரு முறை கப்பில் வாங்கிக் குடித்தவர், "நடராஜன் ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்; நான் பொறாமைபடறேன்னு நீங்க நினைக்கக்கூடாது. இப்படி ஒரு அன்பான மனைவி கையால ருசியா தினம் தினம் அருமையான சாப்பாடு சாப்பிடறதுக்கு நீங்க குடுத்து வெச்சிருக்கனும்." குமாரசுவாமி, மல்லிகா பரிமாறிய இரவு உணவை மிகவும் நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்டவர் முழு மனநிறைவுடன் மீண்டும் மல்லிகாவை பாராட்டினார். "என்ன சார் இப்படி சொல்றீங்க, என் மனைவியை பாராட்டனுங்கறதுக்காக உங்க மனைவியை நீங்க சும்மா குறைச்சு சொல்லக்கூடாது. நீங்க நார்த்ல ரொம்ப நாளா இருந்துட்டு வந்திருக்கீங்க; அது உண்மைதான்; ஆனா உங்க மனைவியும் சவுத் இண்டியன்தானே? அவங்களும் நல்லா சமைக்கறவங்களாத்தானே இருப்பாங்க?" நடராஜன் பதிலுக்கு பேசினார். "சார், இவர் திடீர்ன்னு போன் பண்ணி நீங்க சாப்பிட வர்றதாச் சொன்னார்; நானும் ஏதோ அவசர அவசரமா அரக்க பரக்க பண்ணியிருக்கேன். என் பொண்ணு இன்னைக்கு மனசு வந்து ஏதோ தன் கையை காலை கொஞ்சம் ஆட்டிட்டா; நானும் அவளை கூட வெச்சிக்கிட்டு ஏதோ கொதிக்க வெச்சு இறக்கிட்டேன் ... நீங்க என்னை ரொம்ப புகழறீங்க ... உங்க வீட்டுல உங்க மனைவி இத்தனை காலத்துல நார்த் இண்டியன் டிஷஸஸ் நல்லா பண்ணக் கத்துகிட்டு இருப்பாங்களே? இப்ப நீங்க தனியா இங்க வந்திருக்கறாதா இவர் சொன்னார்; அவங்க ஊர்லேருந்து வந்ததும் அவங்களையும் நீங்க நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரணும். இன்னொரு நாள் பகல்ல ரெண்டு பேருமா வந்து ஆற அமர உக்கார்ந்து சாப்பிடணும்." மல்லிகா அவரை உபசாரம் செய்தாள். "மேடம் முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு உங்க பிள்ளை அடிபட்டு ஹாஸ்பெட்டல்ல இருக்கறது தெரியாது. நடராஜன் சார் இதை எங்கிட்ட சொல்லவே இல்லை. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்." அவர் கெஞ்சலாக பேசிக்கொண்டு, மீனா எடுத்து கொடுத்த டவலால் தன் வாயையும் கையையும் துடைத்துக்கொண்டார். "சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இப்ப என் பிள்ளைக்கு உடம்பு பரவாயில்லை. என் பொண்ணும், வைப்ஃபும் இன்னைக்கு முழு நாள் அங்கதான் இருந்தாங்க. அவன் ஜெனரல் வார்டுல தனி ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டான். அவன் தனியா இல்லை. இப்ப என் பையனோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன் கூட இருக்கான். ரெண்டு நாளா ராத்திரி நாங்க வீட்டுலத்தான் சாப்பிடறோம். மூன்று பேருக்கு இவங்க எப்படியிருந்தாலும் சமைக்கத்தான் போறாங்க, அதுல உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒண்ணும் பண்ணிடலை." என்றார் நடராஜன். "நான் உண்மையாத்தான் சொல்றேன் மேடம் ... இந்த மாதிரி ஒரு ருசியான சாப்பாடு, பாத்து பாத்து கேட்டு கேட்டு எடுத்துப் பரிமாறின உங்க பொண்னோட அன்பான உபசரிப்பு ; இதையெல்லாம் நான் அனுபவிச்சு ரொம்ப நாளாயிடுச்சி; நீங்க சொல்ற மாதிரி என் மனைவியும் மிக மிக அருமையா சமைப்பாங்க; ஆனா அன்பார்ச்சுனேட்லி, அவங்களும் நானும் நீண்ட காலம் ஒண்ணா சேர்ந்து வாழல; அவங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு பிரிஞ்சு ரொம்ப நாளாயிடுச்சு." அவர் சில வினாடிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்த சீலிங் பேனை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். பழைய நினைவுகளில் அவர் மனது ஆழ்ந்திருக்கவேண்டாம். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவர் முகத்தில் விரக்தியோடியிருந்தது. திடிரென அங்கு அவர்களுக்கிடையில் ஒரு இறுக்கமான மவுனம் நிலவியது. "ஐயாம் சாரி சார்" ... உங்க மனசை நான் புண்படுத்திட்டேனா எதையாவது சொல்லி ... அயாம் வெரி வெரி சாரி, மல்லிகா பதறியவாறு அவரிடம் மன்னிப்பு கோரும் தொனியில் பேசியவள் தன் கைகளை பிசைந்து கொண்டாள். "நோ ... நோ ... மிஸஸ் நடராஜன் ... இது ரொம்ப நாளுக்கு முன்னாடி என் வாழ்க்கையில நடந்து முடிஞ்ச விஷயம் ... இதுக்காக நீங்க வருத்தப்படவேண்டிய அவசியமேயில்லை." அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டார். "அச்சா, மிஸ்டர் நடராஜன், நாளைக்கு மாலையும் நீங்க உங்க நேரத்தை எனக்காக கொஞ்சம் ஒதுக்கணும்; நான் உங்க பையனை பாக்க விரும்பறேன். உங்களுக்குத் தேவைன்னா நீங்க தாராளாம இந்த வாரம் லீவ் எடுத்துக்கலாம். நீங்க எல்லோரும் உங்க மாலை நேரத்தை எனக்காக ஒதுக்கினதுக்காக ரொம்ப நன்றி ... நடராஜன் நான் கிளம்பறேன். ப்ராஞ்ச்லேருந்து கிளம்பறதுக்கு முன்னாடி நாளை நான் உங்களுக்கு போன் பண்றேன்; சென்னை எனக்கு புதிது அல்ல. நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு நான் தனியா போயிடுவேன் - நீங்க என்னை டிராப் பண்ண இப்ப என் கூட வரணும்ன்னு அவசியமில்லே; நீங்க ரெஸ்ட் எடுங்க." "மிஸ் மீனா, ரொம்ப தேங்க்ஸ்ம்மா ... இட் இஸ் இண்டீட் எ வெரி வெரி நைஸ் ஈவீனிங்க்; மீனா மாட்டேன்னு சொல்லாமா நான் கொடுக்கறதை நீ வாங்கிக்கணும் ... டீக் ஹை பேட்டா?" தன் கைப்பையிலிருந்து விலையுயர்ந்த ஒரு பார்க்கர் பென் செட்டை எடுத்து அவளிடம் பாசத்துடன் கொடுத்தார். அவள் முதுகில் தட்டிக்கொடுத்தார். மல்லிகாவையும், நடராஜனையும் நோக்கித் தன் கையை மரியாதையுடன் கூப்பினார் குமாரசுவாமி. பின் விறு விறுவென்று வாயிலை நோக்கி நடந்தார். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தார் குமாரசுவாமி. வானம் மூடிக்கொண்டு மெலிதாக குளிர்ச்சியான காற்று வீசிக்கொண்டிருந்தது. மழை வருமா? கொஞ்ச நேரம் நடந்தால் என்ன? ஒரு முறை திரும்பி நடராஜன் வீட்டின் பக்கமாகப் பார்த்தார். நடராஜன் தன் வீட்டு காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டிருந்தார். தன் தலையை தடவிக்கொண்டே நிதானமாக நடக்க ஆரம்பித்தார். நல்ல மனைவி; நல்ல பிள்ளை; நல்ல குடும்பம்; தெய்வீகம்; தெய்வீகம் அது தெய்வீகம்; அவர் மனது வேதனையுடன் முனகியது."தேங்க்ஸ்டி மல்லிகா" நடராஜன் தன் பக்கத்தில் கவிழ்ந்து படுத்திருந்தவளை நெருங்கிப்படுத்து அவள் முதுகில் தன் கையைப்போட்டு அணைத்து அவளை தன் புறம் இழுத்தார். "எதுக்கு இப்ப தேங்க்ஸ்ல்லாம்" முணுமுணுப்பாக வந்த அவள் குரல் தலையணையில் அழுந்தி சிதறியது. "காலையிலேருந்து செல்வாவோட ஆஸ்பத்திரியில நின்னுகிட்டு இருந்தே; ஈவினிங் இங்க வீட்டுக்கு வந்து, அவியல், பொரியல், மிளகுரசம், மெது பக்கோடா, பாயசம்ன்னு பறந்து பறந்து அசத்திட்டே; மிளகு ரசமும், அவியலும் "கிளாஸா" இருந்ததும்மா! நான் ஒரு வெட்டு வெட்டிட்டேன் இன்னைக்கு; என் மேனேஜர், நாக்கை சப்புக்கொட்டிகிட்டு திருப்தியா வாங்கி வாங்கி சாப்பிட்டாரே?" அவன் கைகள் நைட்டியில் அடைபட்டுக்கிடந்த அவள் முதுகை தடவிவிட்டது. "ம்ம்ம்ம் ..." "என்னடா கண்ணு" "கால் வலிக்குதுங்க ... ரெண்டு நாளா நின்னு நின்னு அசந்து போவுது." நடராஜன் விருட்டென எழுந்து, மல்லிகாவை மல்லாக்காக புரட்டி அவள் கால்களை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு, அவள் அணிந்திருந்த நைட்டியை முட்டி வரை நகர்த்தி, வெண்ணையாக வழவழவென்றிருந்த வெளுப்பான அவள் பாதத்திலிருந்து முழங்கால் வரை இலேசாக பிடித்துவிட்டார். அவள் தன் கண்களை மூடிக்கொண்டு அவர் கைகளின் அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். "ம்ம்ம் ... போதுங்க..."அவள் கிசுகிசுப்பாக பேசினாள். அந்தக் குரலின் கிசுகிசுப்பே போதுமானதாயிருந்தது நடராஜனின் மனதில் ஆசைத் தீயை பத்த வைப்பதற்கு; பட்டென அவரின் உடல் விழித்துக்கொண்டது. இப்ப இவ உடல் வலியில முணுமுணுக்கிறாளா? இல்லே ஆசையில முனகறாளா? அவர் மனம் இதற்கான விடை தேடுவதில் முனைந்தது. நடராஜன் கைகள் அவள் நைட்டியில் நுழைந்து அவள் தொடைகளையும் இதமாக பிடித்துவிடத் தொடங்கியது. அவள் தொடைகளை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தவர், தன் கையால் எதேச்சையாக தொடுவது போல், அவளின் உள் தொடையை அழுத்திப்பிடித்தபோது, அவர் கை அவள் அந்தரங்கத்தில் பட்டும் படாமல் உரச ... விரல்களில் அவள் உள்தொடைகளின் கதகதப்பு ஏற, நடராஜன் அடிவயிற்றில் பட்டாம் பூச்சியொன்று சிறகடித்தது. "ச்சும்ம்மா இருக்க மாட்டீங்களே?" மெதுவாக அவள் அந்தரங்கத்தை நோக்கி ஊர்ந்த அவர் கையை சட்டென மல்லிகா தன் கையால் அழுத்தமாக மேலே நகரவிடாமல் பிடித்துக்கொண்டாள். மல்லிகாவின் உள் தொடைகளில் ஓடிக்கொண்டிருந்த அவள் நரம்புகள் மெல்ல சிலிர்த்து முறுக்கேறி ஆசை என்னும் மணியை தொடர்ந்து அடிக்க, மணியோசையின் அதிர்வுகள் அவள் அந்தரங்கத்தில் சென்று முடிந்து சுகம் சுகம் என எதிரொலிக்கத் தொடங்கியது. அவள் உதடுகளிலிருந்து "க்ஹூம்ம்ம்" என முனகல் அவசரமாக கிளம்பியது. நடராஜன் தன் மறுகையால் அவள் நைட்டியை மேலும் உயர்த்த முனைய, மல்லிகா களுக்கென சிரித்தாள். "மல்லி ... ஏன் சிரிக்கறே?" நடராஜன் குரல் இப்போது கிசுகிசுப்பாக வந்தது. "சிரிக்காம என்ன பண்ண?" சாப்பிட்டுப் போன குமாரசுவாமியின் மனமார்ந்த பாராட்டாலும், தன் கணவனின் ஆமோதிப்பாலும் அவள் மனம் மகிழ்ச்சியுற்றிருந்தது. அந்த மகிழ்ச்சி அவள் குரலில் வழிந்தோடியது. ஆனால் அதே சமயம் முகம் தெரியாத ஒரு மனிதனின் வெளிப்படையான பாராட்டால் தன் மனம் இந்த அளவுக்கு துள்ளுவதும், அதன் விளைவாக, கணவனின் தொடல் உடலுக்கு மிகுந்த இதத்தை கொடுப்பதையும் உணர்ந்த மல்லிகா, சே ... என் புள்ளை அங்க ஆஸ்பத்திரியில படுத்துக்கிடக்கறான், என் மனசு தவிக்குது; என் புருஷனோட தொடலை சரின்னு சொல்லுது; அவன் நெருக்கத்தை உடம்பு தேடுது ... ம்ம்ம்ம் என்ன ஆச்சு எனக்கு? தன் தவிக்கும் உடலுக்கு முன்னால், தன் மனதைக் கட்டுபடுத்திக் கொள்ளமுடியாமல், "சிரிக்காம என்ன பண்ண" என முணுமுணுத்துக்கொண்டே, மல்லிகா தன் இடுப்பை இலேசாக உயர்த்த, நடராஜனின் கை அவள் நைட்டியை சுலபமாக அவள் இடுப்புக்கு மேல் உயர்த்தியது. "சொல்லேன் ஏன் சிரிக்கிறே?" ஒருக்களித்து படுத்திருந்த நடராஜன் தன் உடலை அவள் உடலுடன் நெருக்கி அழுத்தினார். நெருங்கியவரின் கைவிரல்கள் அவள் அடிவயிற்றில் ஊர்ந்து அவள் அந்தரங்க மேட்டில் முளைத்திருந்த முடிக்கற்றைகளின் உள் புகுந்து விளையாடின. அவர் தன் குறுகுறுக்கும் பார்வையால் அவள் தொடையிடுக்கை நோட்டமிட்டுக்கொண்டு, இவ தாமரையில இன்னைக்கு ஈரத்தை சுத்தமா கானோம் ... இன்னைக்கு என் காட்டில போற மேகம் கொஞ்சம் பேஞ்சுட்டு போவுமா? இல்லை சும்மா வேடிக்கை காட்டிட்டு கலைஞ்சு போயிடுமா? குமாரசுவாமி நீ வாழ்க என அவர் மனம் பரபரக்க, அவர் தன் தொடை நடுவில் சூடு ஏறுவதை உணர்ந்தார். தன் கணவன் தொடைகளில் ஏறிய சூட்டைத் தன் உடலில் இலேசாக உணர ஆரம்பித்த மல்லிகாவின் உடல் நாடிகளும், நரம்புகளும் மெல்ல மெல்ல அவள் தொடையில் ஆரம்பித்த சிலிர்ப்பை முழு உடம்புக்குள்ளும் எடுத்து செல்லத் தொடங்கின. அவள் உடல் களைத்திருந்தது. மார்க் காம்புகளைச் சுற்றி இலேசாக வலியிருந்தது. ஆனால் அவள் மனம் "எனக்கு வேணும்" " எனக்கு வேணும்" கட்டிக்கடி உன் புருஷனை; அவன் ஆசை உனக்குப் புரியலையா; கட்டிப்புடிச்சி அவனை சந்தோஷப்படுத்துடி; நீயும் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருடி; நேரத்தை வீணாக்காதே என கூச்சலிட்டது. அவள் சொப்பு போன்ற வாயிதழ்கள் புன்னகையில் விரிந்தன. "உங்க பிள்ளை அங்க ஆஸ்பத்திரி கட்டில்ல உடம்பு வலியோட படுத்துக்கிட்டிருக்கான் ... நீங்க என்னடான்னா புள்ளைக்கு பொண்ணை நிச்சயம் பண்ணணும்ன்னு சொல்லிட்டு, இங்க கட்டில்ல உங்க பொண்டாட்டி தொடையை தடவிக்கிட்டிருக்கீங்க ... உங்களுக்கு வெக்கமா இல்லை?" அவள் புன்னகையுடன் பேசினாள். "ம்ம்ம் ... இல்லடி ... உன்னை தடவறதுக்கு நான் எதுக்கு வெக்கப்படணும்?" "நிஜம்ம்மாவா சொல்றீங்க ... கொஞ்சம் கூட வெக்கமாயில்லே?" அவள் குரலில் வியப்பிருந்தது. மல்லிகாவின் இமைகள் மூடிக்கிடந்தன. "செல்வாவுக்கு மயக்கம் தெளிஞ்ச அடுத்த நிமிஷம், அவ்வளவு உடம்பு வலியில கிடந்தானே; அப்ப நம்ம புள்ளை மனசுல என்னத் தோணுச்சுன்னு நேத்து நீ பாக்கலயா?" அவர் வலது கை அவள் கழுத்துக்கு கீழ் நுழைந்தது. அவள் முகத்துடன் தன் முகத்தை சேர்த்துக்கொண்டவர், தன் உடலைத் திருப்பி, அடுத்த கையை அவள் நைட்டிக்குள் செலுத்தி அவளுடைய வலது முலையை கொத்தாக பற்றி தன் உள்ளங்கையால் இதமாக அமுக்கினார். "வேண்டாங்க மாரைச்சுத்தி வலிக்குதுங்க ... நாள் வரும்ன்னு நினைக்கிறேன் ... அதான் காலும் விட்டு விட்டு வலிக்குது ... வேணும்ன்னா சும்மா கட்டிப்புடிச்சிக்கோங்க ... " "சாரிடா ... நான் அழுத்தமாட்டேன். அவர் சட்டெனத் தன் கையை பின்னுக்கு எடுத்தார்." இன்னைக்கு சத்தியமா மழை பேயாது ... காத்துல மேகம் கலைஞ்சுடும் ... நடராஜன் மனம் கணக்குப் போட்டது. சாப்பிட்டு முடித்தப்பின் அவள், வெற்றிலை போட்டுக்கொண்டிருக்க, அவள் பேசியபோது அவள் சிவந்த உதடுகள் நடராஜனின் கன்னங்களில் உரசி, அவர் உடல் சூட்டை மேலும் அதிகமாக்கியது. மல்லிகா வலது காலை அவர் இடுப்பில் போட்டு அவரைத் தன் புறம் இழுக்க, பரஸ்பரம் ஒருக்களித்து படுத்திருந்த நிலையில் ஒருவர் விழிகள் அடுத்தவர் விழிகளில் நிலைத்திருக்க, அவள் வாய் அவர் மூக்கின் அருகில் உரசிக்கொண்டிருக்க, அவள் வாயிலிருந்து வெற்றிலையின் வாசமும், ஏலக்காய் வாசனையும் சேர்ந்து அவர் முகத்தில் அடிக்க, நடராஜனின் தம்பி கிடு கிடுவென விரைக்கத் தொடங்கினான். ஏண்டா கிடந்து துடிக்கிறே? இன்னைக்கு நீ பட்டினியாத்தான் படுக்கணும். நடராஜன் அவனை தன் லுங்கியுடன் சேர்த்து ஒரு முறைத் தன் கையால் அழுத்தி உறுவினார். "நம்மப் பையன் சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகலேன்னு சொன்னான். அவன் பொய் சொல்லலைடி; அந்த பொண்ணு அழகாயிருக்கா; நான் இல்லேன்னு சொல்லலை; நம்ம பையனுக்கு மட்டும் என்ன கொறைச்சல்; அவனும் ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்; ஆனா இதுக்கு மேலே அவங்க ரெண்டு பேரும் உண்மையா ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறாங்க; அதை அவங்க மூஞ்சி சொல்லுதுடி; செல்வா மனசு பூரா அந்த பொண்ணு இருக்கவேதான், கண்ணு முழிச்சவுடனே, வெக்கப்படாமா அவ பேரை சொல்லி முனகினான்." "ம்ம்ம் ... " மல்லிகா அவர் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் என்ன சொல்ல வரார் எனக்குப் புரியலையே? "நீங்க என்ன சொல்றீங்க இப்ப? நீங்க வெக்கப்படறதுக்கும் அவங்க காதலிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" அவள் அவன் கன்னத்தில் தன் உதடுகளை தீற்றினாள். "கேளுடி நான் சொல்றதை" அவர் கை அவள் அடிவயிற்றை வருடிக்கொண்டிருந்தது. அந்த பொண்ணு முகத்தைப் பாத்தியா? என்ன வேதனையோட அவனை நெனைச்சு உட்க்காந்துகிட்டு இருந்தா? செல்வா அவ பேரை சொல்லி கூப்பிட்டான்னு தெரிஞ்சு அவனைப் பாக்கறதுக்கு உள்ளே ஓட்டமா ஓடினாளே, அப்பவும் அவ முகத்தை நான் பாத்தேன்; என் ஆள் பொழைச்சுட்டான்ங்கற நிம்மதி அவ முகத்துல இருந்தது; நாம உள்ளப் போனப்ப யாரைப் பத்தியும் கவலைப் படாம அவன் உதட்டுல முத்தம் குடுத்துக்கிட்டு நின்னாளே ... அப்பவும் அவ மூஞ்சை நான் பாத்தேண்டி; அவ முகத்துல என்னை இவன் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டான்ற மகிழ்ச்சி; அந்த திருப்தியில, சந்தோஷத்துல அப்ப அவ முகத்துல இருந்த சின்ன வெக்கத்தையும், ஆசையும், தவிப்பையும் நான் பாத்தேன். இவ செல்வாவை உண்மையா காதலிக்கிறா; என் புள்ளையை இவ கடைசி வரைக்கும் நல்லபடியா பாத்துக்குவான்னு அப்பவே தோணிடிச்சி." "ம்ம்ம் ... என் மனசை எப்படியாவது மாத்தி சுகன்யாவை என் புள்ளைக்கு கட்டி வெக்கணும்ன்னு நீங்க தீர்மானிச்சிட்டீங்க ... அது எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு ... சும்மா எங்கிட்ட நீளமா கதை சொல்லாதீங்க ... நீங்க வேலையை விட்டுட்டு ... மெகா சீரியலுக்கு கதை எழுதப்போகலாம்." அவள் உதட்டில் கேலிப்புன்னகை மின்னியது. "மல்லி ... பீ சிரியஸ் ... நான் இப்ப மனசு விட்டுப் பேசறேன் ... நீ என்னை அப்புறமா கிண்டல் பண்ணலாம்" "ம்ம்ம்ம் ... சொல்லுங்க ... நானும் சீரியஸாத்தான் பேசறேன்" "யாருக்காகடி அந்த அளவுக்கு தவிப்பும் வேதனையும் அந்த பொண்ணுக்கு? அதெல்லாம் நம்ம புள்ளைக்காகத்தானே? உண்மையான ஆறு மாச காதல் அவங்க நடுவுல இருக்க வேண்டிய வெட்க்கத்தையும், தயக்கத்தையும், பெத்தவங்கன்னு நம்ம கிட்ட இருக்க வேண்டிய மரியாதையையும் தூக்கி எறிஞ்சிட்டப்ப, உன்னை நான் இருபத்தஞ்சு வருஷமா, என் மனசுக்குள்ள வெச்சி உண்மையா; உனக்காக மட்டும்; உன்ன நான் நேசிச்சுக்கிட்டு இருக்கேனே; நான் எதுக்குடி வெக்கப்படணும் உன்னைத் தொடறதுக்கு, தடவறதுக்கு; அதுவும் நம்ம பெட் ரூம்ல? யாருக்காக வெக்கப்படணும்?" நடராஜன் பேசிவிட்டு அவள் முகத்தை ஆசையுடன் பார்க்க, மல்லிகா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் புல்லரித்தது. என் மேல இவனுக்கு இவ்வளவு ஆசையா? நான் சரியான மக்கு மாதிரி அவனை கிண்டல் பண்ணிட்டேனே? எழுந்து உட்க்கார்ந்தவள், தன் உடலில் இருந்த நைட்டியை உறுவி கட்டிலின் அடுத்த முனையில் வீசினாள். அடுத்த நொடி தன் கணவனின் முகத்தை இழுந்து வெறியுடன் தன் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவர் உதடுகள் தன் மார்பில் உரசியதால் உண்டான இன்ப வேதனையுடன், அவர் முகத்தை நிமிர்த்தினாள். அவர் முகத்தில் ஆவேசமாக முத்தமிட்டவள், அவர் உதடுகளை மிருதுவாக கடித்தாள். அவன் மார்பையும் முதுகையும் தடவி விட்டாள். சட்டென அவரின் நெகிழ்ந்திருந்த இடுப்பு துணிக்குள் தன் கையை செலுத்தி அவருடைய தடித்திருந்த தண்டைப் பற்றி அழுத்தி வருடினாள். "ஐ லவ் யூ ... நானும் உங்களை என் மனசுக்குள்ளத்தான் பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி எனக்கு பேசத் தெரியாதுங்க; என் மனசுல இருக்கறதை சொல்லத் தெரியாதுங்க; என்னங்க ... நீங்க என்னை அப்படியே கட்டிப்புடிச்சுகிட்டு இருங்க; உங்களுக்கு முத்தம் குடுத்துக்கிட்டே, என் மூத்தப் பையனை நான் ஆட்டிவிட்டுடறேன் ... உங்க சந்தோசம்தான் எனக்கு முக்கியம்" அவள் அவர் இதழ்களை வெறியுடன் கவ்விக்கொண்டாள். "ஏம்மா உனக்கு உள்ள விட்டுக்க வேணாமா?" நடராஜனின் கைகள் அவள் அந்தரங்க மொட்டை தடவத்தொடங்கியது. "ம்ம்ம்ஹூம் ... என் மனசு நெறைஞ்சு போச்சுங்க; உடம்பும் டயர்டா இருக்கு; கால் வலிக்குதுன்னு சொன்னேன்லா; நாளைக்குள்ள எனக்கு பீரியட்ஸ் வந்துடும்ன்னு தோணுது; மார்லாம் வலிக்குது; உங்களுக்கு வேணும்ன்னா சொல்லுங்க, முயற்சி பண்றேன்; நான் தயாராக இன்னைக்கு கொஞ்ச நேரம் ஆகலாம். என்னமோ தெரியலை ... ஈரத்தையே காணோம் அங்க ...." அவள் அவருடைய முகத்தில் முத்தமிட்டாள். "வேண்டாம் எனக்கும் வேணாம்; உனக்கு முடியலைன்னா எனக்கு வேண்டாம்; நீ அவனை உருவிவிட்டலே போதும்; உன் கை குடுக்கற சுகம் இருக்கே அதுவே இன்னைக்கு எனக்கு போதும்; நானும் டயர்டாத்தான் இருக்கேன்; உடம்பு முடியலைன்னாலும் வேணும் வேணும்ன்னு, இந்த மனசு கிடந்து தவிக்குது; அவர் விரல் அவளுடைய அந்தரங்கத்தில் ஒரு முறை நுழைந்து, வெளிவந்தது. அவள் அந்தரங்கம் வானம் பார்த்த பூமியாக இருந்தது. அவர் ஒற்றை விரல் அவள் பெண்மை மொட்டை வருடிக்கொண்டிருக்க, அவள் அவருடைய தண்டை நிதானமாக, கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஒரே சீராக உருவிகொண்டிருந்தாள். மல்லிகாவின் கையும், அவர் விரலும், இருவரின் உதடுகளும், இப்போது தாங்கள் இயங்கும் வேகத்தை கூட்டிக் கொண்டேப் போக, மல்லிகா அவர் தண்டிலிருந்து தன் கையை எடுத்துவிட்டு அவரை இறுக்கியணைத்து ஹ்ஹீய்ம்ம் ... ஹீங்க்ம்ம் ஹீவ்வ்ம் என நீளமாக மூச்சிறைக்க அவர் உதடுகளை ஆவேசமாக உறிஞ்சியவாறே தன் உச்சத்தையடைந்தாள். அவன் மார்பில் துவண்டு சரிந்தாள். நடராஜன் தன் மார்பில் கிடந்தவளை, கட்டிலில் சரியவிட்டார். அவள் பக்கத்தில் படுத்து அவள் மார்பை நிதானமாக தன் நாக்கால் நக்கத் தொடங்கினார்.
"போதுங்க ... எனக்கு கிடைச்சிடுச்சி ... நீங்க சவுகரியமா படுத்துக்கோங்க ... உங்களை நான் ஆட்டிவிட்டுடறேன். " மல்லாந்து கிடந்தவர் மேல் மல்லிகா சரிந்து படுத்து அவன் உதடுகளை தன் வாயால் கவ்வி முத்தமிட்டவாறு, அவர் சுண்ணி மொட்டைத் தன் இருவிரல்கலால் பற்றி அழுத்தினாள். தன் கையை விரித்து அவன் நீளத்தையும், பருமனையையும் வருடினாள். பதட்டமில்லாமல் அவரை குலுக்க ஆரம்பித்தாள். குலுக்கும் வேகத்தையும், கை அழுத்தத்தையும் சீராக அதிகமாக்க நடராஜனின் முழு உடலும் இறுகி, அவளை இறுக்கி அணைத்து அவள் உதடுகளை உறிஞ்சும் அழுத்தத்தை அதிகரித்த போது, மல்லிகா தாம்பூலம் தரித்ததால் சிவந்திருந்த தன் நாக்கை அவன் வாய்க்குள் நுழைத்து அவர் நாவைத் தீண்டியதும், நடராஜன் அவர் மார்புகள் ஆட நடுங்கி தன் உடல் சிலிர்க்கத் தெறித்தார். பத்து வினாடிகள் வரை தன் விந்தை சொட்டு சொட்டாக அவள் கையிலேயே சிந்தி சிதறினார். தன் ஆசை மனைவியை தழுவியவாறு கட்டிலில் மூச்சிறைத்துக் கொண்டிருந்தார். மெல்ல நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டார். வேர்த்திருந்த அவள் அடிவயிற்றை ஆசையுடன் முத்தமிட்டார். அவர் முகம் பொலிவுடன் மலர்ந்திருந்தது. "ஐ லவ் யூடா செல்லம், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறேங்க; என் மேல நீங்க வெச்சிருக்கற ஆசை குறைஞ்சு போச்சோன்னு நான் அப்பப்ப நினைச்சுப்பேன். நான் ஒரு மண்டூகம்; உங்களைப் போய் சந்தேகபடறேனே? அப்பப்ப புத்தியில்லாம உங்களை நான் கத்திடறேன்; நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க ப்ளீஸ் ... உங்க மேல நான் உயிரையே வெச்சிருக்கேங்க" ... அவள் குரல் தழுதழுக்க, நடராஜன் தன் ஆசை மனைவியை தன் மார்புடன் அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடத் தொடங்கினார்.