Friday 13 March 2015

சுகன்யா... 50

இரவு வீடு திரும்பிய சுவாமிநாதன் - ராணியை பெற்றவன் - வீட்டில் நடந்த அமர்களத்தைத் தெரிந்து கொண்டு, தங்கையின் வீட்டுக்கு கோபத்துடன் பெண்ணை ஒரு கை பார்த்துவிடுவது என பாதி சோற்றில் எழுந்து ஓடினான்.

"மச்சான்... பொறுமையா இருங்க.. ராணி பாக்கியம் கூடத்தான் உள்ளப் படுத்திருக்கா. உங்க தங்கச்சிகிட்ட பக்குவமா நடந்ததை கேக்கச் சொல்லியிருக்கேன்."

"என்னை விடுங்க மாப்பிள்ளே... அவளை கொன்னு கூறுபோட்டாத்தான் என் மனசு ஆறும். விசாரணை என்னா பெரிய விசாரணை அவகிட்ட? வெளியில தலைகாட்ட முடியாதபடி பண்ணிட்டாளே? அப்பன் கோபத்துடன் குமைந்தான்.

"மச்சான் நான் சொல்றதை கேளுங்க... தப்பா ஒண்ணும் நடந்திருக்காது. நாம வளத்தப் பொண்ணு. சின்னப்பொண்ணுதானே அவ.. கூடப் படிக்கறவன் பாக்கறதுக்கு வாட்ட சாட்டமா நல்லா இருக்கானேன்னு ஆசைப்பட்டிருக்கலாம். இந்த விஷயத்தை இன்னும் நாலு பேருக்கு தெரியற மாதிரி பெரிசு பண்ணிடாதீங்க..."



"இப்ப மட்டும் என்னா... ஊருக்கு தெரியாமலா இருந்திருக்கு..?"

"மச்சான்... ஆறுமாசம் ஆனா எல்லாம் சரியா போயிடும். ஊர் நாட்டுல இதை விட என்னன்னமோ நடக்குது... வீட்டுக்கு வீடு வாசப்படி; பின்னாடி நம்ம பொண்ணுக்கு, நம்ம ஜாதியில நல்ல மாப்பிளை கிடைக்கறதுல பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாது. இதை மனசுல வெச்சுக்குங்க..."

"என்னா மாப்பிளை நீங்க புரியாம பேசறீங்க... வேத்தூர் காரன் நம்ம பொண்ணை சினிமாக் கொட்டாயுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்கான்... நம்ம வீட்டு குழந்தை தோள்ல கையைப் போட்டவனை சும்மா விடறதா?

"மச்சான்... ரெண்டு நாள் பொறுங்க... நம்ம பொண்ணும் குழந்தையில்லே! வேண்டி விரும்பி அவன் கூட சினிமாவுக்கு போயிருக்கா... இதை மறந்துடாதீங்க... அவன் "அந்த ஜாதியை" சேந்தவன்னு தெரியுது...வீனா விவகாரத்துல மாட்டிக்கவேண்டாம்..."

"மாப்பிள்ளை... நீங்க என்னா அவனுங்களுக்கு பயப்படறீங்களா?"

"நான் நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்ன்னு நெனைக்கிறேன். சுத்துபட்டுல நாலு ஊருக்கு இந்த கதை தெரிஞ்சா... நம்ம ஜாதிக்காரன் யாரும் உங்க வீட்டுக்கு பொண்ணெடுக்க வரமாட்டான்னு சொல்றேன்.."

"ம்ம்ம்..."

"அவனை அடிக்கறேன்... புடிக்கறேன்னு அவனைத் தேடிக்கிட்டு போய் உங்கப் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.. இதனால கண்டிப்பா நம்ம பொண்ணுக்கு எந்த பிரயோசனமும் இல்லே...! நான் சொல்றதை சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்.."

"நீங்க சொல்றீங்களேன்னு இப்ப போறேன்.. இன்னொரு தரம் இவ அவனைப் பாக்கப்போனான்னு தெரிஞ்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உங்க மருமவளுக்கு புத்தி சொல்லி காலையில வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க.."

***

"கண்ணு ராணி.. எழுந்துரும்மா... கொஞ்சம் சாப்பிடும்மா" அத்தை மருமகளிடம் பக்குவமாக பேசினாள்.

"அத்தை நான் செத்துப்போயிடறேன்.. எனக்கு சோறும் வேணாம்... ஒரு மண்ணும் வேணாம்.. எனக்கு ஒரு துளி விஷம் குடுங்க... என் அம்மாகிட்ட அடிப்பட்ட அவமானத்தை என்னால தாங்கமுடியலே.." அழுது புலம்பினாள் ராணி.

"ஆமாண்டி... அறிவு கெட்டவளே... உனக்கு வெஷம் குடுக்கறதுக்குத்தான்... உன்னை இப்படி வளத்து விட்டு இருக்கோமா?

"அத்தே..."

"நீ நல்லா வாழவேண்டியப் பொண்ணு... பொன்னாட்டம் இருக்கற உன் உடம்பை ஏன் இப்படி புண்ணாக்கிக்கிட்டே?"

"அம்மாதானே வீண் பேச்சு பேசினாங்க. என்னையே ஏன் குத்தம் சொல்றீங்க?"

"உன் அம்மாதானேடீ.. உன் மேல அவளுக்கு இல்லாத அக்கறையா? படிச்சப் பொண்ணு நீ ... அம்மாவை வாடீ...போடீன்னு பேசலாமா? இது தப்புல்லையா?"

"அத்தே... நான் எந்தத் தப்பும் பண்ணிடலே அத்தே.. ஒரே ஒரு தரம் அவன் கூட சினிமாவுக்கு போனேன். அவ்வளவுதான்.. அம்மா என்னை அசிங்க அசிங்கமா, சொல்லவே வாய் கூசுற கேள்வியைக் கேட்டாங்க தெரியுமா?" பரிவுடன் பேசிய பாக்கியத்திடம் தன் மனதைத் திறக்க ஆரம்பித்தாள் ராணி.

"பெத்தவ மனசு பித்தும்ம்மா.. நீ நல்லா வாழணுங்கற ஆசை உன் அம்மாவுக்கு இருக்காதா?"

"அதுக்காக... "நீ அவனுக்கு அவுத்து காமிச்சியான்னு என்னை கேக்கலாமா?" அதான் எனக்கு கோவம் வந்திடிச்சி.. ராணி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முனகினாள்.

"கண்ணு... டூர் போன எடத்துல நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்தீங்கன்னு எவளோ ஒருத்தி அம்மா கிட்ட சொல்லிச் சிரிச்சா அவங்க மனசு நோகாதாம்ம்மா.. என் அண்ணி எவ்வள ஆசையா, எப்படீல்லாம் உன்னை, தூங்காம கொள்ளாம, தோள்லேயும், மார்லேயும் போட்டு வளத்தான்னு எனக்குத்தானே தெரியும்..?

"அத்தே... சத்தியமா சொல்றேன்... நானும் அவரும் அன்னைக்கு தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோமே தவிர வேற எந்த தப்பும் பண்ணிடலை அத்தே..."

பாக்கியம் தன் மருமகளின் தலை முடியை பாசத்துடன் கோதிக்கொண்டிருக்க, ராணி தன் காதல் கதையை, அத்தை மடி மெத்தையடி என அவள் மடியில் படுத்துக்கொண்டு, மொத்தமாக புட்டுபுட்டு வைத்துவிட்டாள். ம்ம்ம்... தப்பா ஓண்ணும் நடந்துடலே.. மனதில் திருப்தியடைந்தாள் பாக்கியம்.

"சரிடா கண்ணு... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல... அந்த பையன் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்... என் அண்ணன் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கவே மாட்டான். உன் அப்பன் ஒரு மொரட்டு மடையன். அந்தப் பையனை நீ மறந்துடறதுதான் உனக்கும் நல்லது.. அவனுக்கும் நல்லது..."

"என்னால அது மட்டும் முடியாது அத்தே..."முரண்டினாள் ராணி.

"சரிம்ம்மா... நீ நிம்மதியா தூங்கு...அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.." பாக்கியம் கொட்டாவி விட ஆரம்பித்தாள்.

ராணி வீட்டை விட்டு எங்கும் தனியாகப் போக அனுமதி மறுக்கப்பட்டது. அவள் அவசியமாக போக வேண்டி இடங்களுக்கு மட்டும், அவள் தம்பியும் உடன் அனுப்பப்பட்டான்.

காவலுக்கு கட்டுப்படுமா காதல்? காவலை உடைக்க காதல் வசப்பட்ட ஒரு பெண்ணுக்கு யாராவது சொல்லித் தரவேண்டுமா? கல்லூரியில் பரிட்சை எழுதிய கடைசீ நாளன்று ராணியும் தன் காவலை சாதுரியமாக உடைத்தாள். ரயில்வே ஸ்டேஷன் மதகுக்கீழ் ஞானசம்பந்தன் தோளில் சாய்ந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் பதிலேதும் பேசாமல், முகத்தில் சலனமில்லாமல் கல்லாக நின்றிருந்தான்.

"ஐ லவ் யூ ஞானம்... உன்னை விட்டுட்டு என்னால இருக்கமுடியாதுடா" ராணி புலம்பினாள்.

"என்னால மட்டும் முடியும்ன்னு நீ நெனக்கிறியா? ஆனா..!!" துணிந்து முடிவெடுக்கவேண்டியவன் தன் குரலை இழுத்தான்.

"ஞானம்...ஆனா... ஆவன்னா நீ எனக்குச் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லே?"

"ராணீ... கிண்டல் பண்ற நேரமா இது? என் நிலைமையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா...!!"

"ஞானம் ... நான் உங்கூட வந்துடறேன்.. உங்கம்மா சொல் பேச்சு கேட்டு நடந்துக்கறேன். உன் நிலையை புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் இதைச் சொல்றேன். உன்னால எங்க வீட்டுக்குள்ள மொறையா பொண்ணு கேட்டு வரமுடியாது..." ராணி அவனிடம் வாதாடினாள். அவன் மவுனமாய் நின்றான்.

அவன் எதிர்பார்க்காத நேரத்தில் ராணி, அவனைத் தன் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் வலுவான பரந்த மார்பில் தன் மென்மையை புதைத்தாள். உரசினாள். இழைத்தாள். அவனை துடிக்கவைத்தாள். இவனை என் கட்டுக்குள்ள இன்னைக்கு எப்படியாவது கொண்டு வந்தே தீரணும். இந்த வாய்ப்பை விட்டுட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்கறது கஷ்டம்... பேதையின் மனம் பித்தாகியது. பெண்மை செய்வதறியாமல் திகைத்து தன் இயற்கை அழகால் ஆண்மையை கட்டிப் போட நினைத்தது.

"எங்க போறது நான் உன்னை கூட்டிக்கிட்டு?" அவள் குலுங்கும் மென்மையில் நொடி நேரம் மனதை இழந்தவனின் கேள்வி அவளுக்கு வினோதமாகப் பட்டது.

"ஞானம்... நான் சொல்றதை கேளு... கண்ணு மறைவா.. எங்கயாவது போய் கூலி வேலை செய்து பொழைக்கலாம். என் அப்பன் ஆத்தா வரமுடியாத எடத்துக்கு, இப்பவே, இங்கேருந்தே, என்னை அழைச்சிக்கிட்டு போடா" ராணி அவன் தாடையில் முத்தமிட்டு மன்றாடினாள்.

"சொல்றது சுலபம் .. எங்கப் போறது? ராணீ... நீ ராணி மாதிரி இது வரைக்கும் வாழ்ந்துருக்கே! உன்னால கல்லு...மண்ணு சொமக்க முடியுமா? முள்ளு வெறகுதான் வெட்ட முடியுமா? ரெண்டு பேரும் எம்.ஏ. படிச்சிருக்கலாம்... எவன் நமக்கு உடனே வேலை குடுக்கத் தயாரா இருக்கான்..?" யதார்த்தத்தை அவன் பேசினான்.

"ஞானம் ஒருத்தருக்கு வேலை கெடைச்சாலும் போதுமேடா?" கெஞ்சினாள் அவள்.

"ராணி... அடுத்த வேளை சோத்துக்கு வழி என்னா... அதை யோசனைப் பண்ணு மொதல்ல நீ?

"என் நகை, பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்டா.. ஞானம்?"

"எத்தனை நாளைக்கு அது வரும்? என்னை திருடன்னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்து கம்பி எண்ண வெப்பான் உன் அப்பன்" உணர்ச்சிவசப்படாமல் பேசினான் அவன்.

"ஞானம் என்னப்பா இப்படீ பேசறே?" அவளுக்கு எரிச்சல் வந்தது

"ராணீ... என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் வயசாயிப் போச்சு... அவங்க ஒடம்பு ஒடுங்கிப்போச்சு; அவங்களால இதுக்கு மேல அடி ஒதைப் படமுடியாது..!"

"என்ன சொல்றே நீ...?" அவள் துடித்தாள்.

"உன் அப்பா அனுப்பிச்ச அடியாளுங்க... என் வீடு பூந்து என்னை மட்டும் அடிக்கலை... என்னைப் பெத்தவங்களையும் அடிச்சானுங்க.. விஷயமே தெரியாம... ராத்திரி நேரத்துல எதுக்காக தங்களை அடிக்கறாங்கங்கற காரணமே புரியாம அவங்க வாங்கின அடியில துடிச்சாங்க.. இன்னொரு தரம் என்னால அவங்க அடிபடறதை பாக்கமுடியாது.."

"அய்யோ... இது எனக்கு சத்தியமா தெரியாது ஞானம்..." ராணி அவன் கையிலடித்தாள்.

"ராணீ... நான் உன்னை குத்தம் சொல்லலை.. நான் உன் மேல வெச்ச ஆசைக்காக... உன்னை நான் உயிருக்கு உயிரா நேசிச்சதால... உன்னை இன்னும் மனசார காதலிக்கறதால... என்னை பெத்தவங்க கிட்டவும், என் ஒறவு மொறை... ஜாதி ஜனத்துக்கிட்டவும்... ஏன் இந்த அடிதடி... வந்தது யார்... அனுப்பினது யார்... அதுக்கு என்ன காரணங்கறதை இதுவரைக்கும் நான் சொல்லலை."

"ஞானம் ஐ லவ் யூ வெரி மச்... உங்களை அடிச்சதெல்லாம் எனக்கு சத்தியமா தெரியாதுப்பா..." அவன் தலையிலடித்து மீண்டும் சத்தியம் செய்தாள் ராணி.

"எனக்கு இருக்கறது ஒரே ஒரு வழிதான்.. அதுக்கு நீ ஒத்துக்கணும்?"

"சொல்லு ஞானம்... என்னது அது?" ராணியின் கண்களில் ஐயமெழுந்தது.

"என்னால உன் உறவோட போட்டிப் போட்டுக்கிட்டு போராட முடியாது... நான் ஒரு மொரடன் இல்லே! நம்ம காதலை உங்க வீட்டுல ஏத்துக்கலை.. என்னை உன் அப்பா அடிச்ச விஷயத்தை ஒரு ஜாதி சண்டையா நான் மாத்த விரும்பலை... என் காதல் என் மனசோட கடைசி வரைக்கும் இருந்துட்டுப் போகட்டும்.. என் மனசுல நீதான் எப்பவும் ராணியா இருப்பே..!"

"இப்படிப் பேசினா இதுக்கு என்ன அர்த்தம் ஞானம்..?"

"நாம பிரியறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது." அவன் குரலில் உறுதியுடன் அழுத்தம் திருத்தமாகப் பேசினான்.

"நீ ஒரு ஆம்பிளையாடா...? நான் உன் கூட வீட்டை விட்டு ஓடி வர்றதுக்கு தயாரா வந்து இருக்கேன்.. நீ பொட்டைச்சி மாதிரி எங்கப்பனுக்குப் பயப்படறியே...? உன் கையில என்னா வளையலா போட்டிருக்கே?"

"ராணீ... நான் உனக்காக அடிவாங்க பயப்படலே..?"

"பின்னே வேற எதுக்குப் பயப்படறே..." கோபத்துடன் ராணி அவன் மார்பில் தன் இரண்டு கைகளாலும் குத்தினாள்.

"ம்ம்ம்...ராணீ என் மேல கோபப்பட உனக்கு உரிமையிருக்கு.. என்னை அடிக்கறதுக்கு உனக்கு உரிமையிருக்கு..." ராணியின் பூங்கரங்களை தன் வலுவான கைகளால் பற்றி அந்த கைகளை முத்தமிட்டான் ஞானம்.

"என் ஆத்தா என்னை வெளக்குமாத்தால மூஞ்சி மொகம் பாக்காம, வெரட்டி வெரட்டி அடிச்சாடா.. என் வாழ்க்கையில மொதல் மொறையா உனக்காக நான் அடி வாங்கினேன்... ஒரு வாரம் அந்த ஊமை வலியை மூச்சு விடாம நம்ம காதலுக்காக நான் தாங்கிக்கிட்டேன்...!! நான் உன் மேல இருக்கற அன்புக்காக எவ்வளவு அடி வாங்கியிருக்கேன்ன்னு உனக்குத் தெரியுமா? ஒரு கோழையாட்டம் பேசறீயே? உனக்கு வெக்கமாயில்லே?"

"நான் என் உயிருக்குப் பயப்படலே... நான் ஆசையா காதலிச்ச, என் காதலியோட உயிருக்குப் பயப்படறேன்..!"

"ஞானம்... புரியறமாதிரிப் பேசுடா.."

"தங்கம்... எனக்காக என் காதலுக்காக நீ உன் அம்மாகிட்ட அடிவாங்கினே... இதுல அர்த்தமிருக்கு... உன் மேல வெச்ச ஆசைக்காக நான் உன் அப்பா அனுப்ச்ச கூலிகார நாய்ங்க கிட்ட அடிவாங்கினேன்... இதுல அர்த்தமிருக்கு... என் அப்பா எதுக்காக அடிபடணும்? நம்ம ரெண்டு பேரு காதலுக்காக... சம்பந்தமேயில்லாத நாலு பேரு என் பக்கத்துல... உன் பக்கத்துல நாலு பேரு ஏன் அடிச்சிக்கிட்டு சாகணும்?

"ஞானம்... என்னைக் கொழப்பாதடா... நான் உன்னைக் காதலிக்கறேன்.. உன் கூட வாழ ஆசைப்படறேன்.. இவ்வளவுதான் எனக்கு வேணும்... இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது...?

"எனக்குத் தெரியாதா நீ என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு?"

"டேய் ஞானம்.. நான் ஒரு கன்னிப்பொண்ணு... வெக்கத்தைவிட்டு என் ஆத்தாக்கிட்ட நானும் நீயும் அவுத்துபோட்டுட்டு ஒண்ணா இருந்தோம்ன்னு பொய் சொன்னேண்டா... அதுக்கப்பறதான் என் அம்மா என்னை அடிச்சு நொறுக்கினா...!? ஏன் அப்படி சொன்னேன்? இதை கேட்டதுக்கு அப்புறம் நம்பளை அவங்க ஒண்ணு சேத்து வெச்சுடுவாங்கன்னு நான் நம்பினேன்..."

"நீயும் நானும் ஒண்ணு சேரலைன்னா... என் ஆத்தா மூஞ்சை நான் எப்படிடா பாப்பேன்..? அன்னையிலேருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு மாசமாச்சு... என் அம்மாகிட்ட நான் ஒரு வார்த்தைப் பேசல. என் அப்பன் மூஞ்சை நான் நிமிர்ந்து கூடப் பாக்கலை. எல்லாம் உனக்காகத்தான் நான் பண்ணேன். இதுக்கு மட்டும் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.' அவன் சட்டையைப் பிடித்து ஆவேசமாக உலுக்கினாள் ராணி.

"நான் உன்னைப் பாத்தா... உன் கூட இன்னொரு முறை பேசினா... உன்னை அன்னைக்கே வெட்டி குழித்தோண்டிப் புதைக்கப் போறதா உன் அப்பா என் கிட்ட சபதம் பண்ணியிருக்காரு.. ராணீ நீ நல்லாயிருக்கணும்... ராணீ.. நீ "ராணி" மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்... எனக்காக, எந்த சந்தர்ப்பத்திலும் உன் உயிரை நீ விட்டுடக்கூடாது. இதுதான் எனக்கு முக்கியம்.."

"இதெல்லாம் எப்ப நடந்தது ஞானம்?" அவள் கேவினாள்.

"இப்பவும் ஸ்டேஷன் வாசல்லே உன் மாமாவும் உன் தம்பியும் உனக்கு காவலா நிக்கறாங்க... அவங்க பின்னாடி நாலு பேரு கம்பும் கத்தியுமா நிக்கலாம்... நாம எங்கேயும் ஓடமுடியாது... இவ்வளவும் தெரிஞ்சும் தனியா உன்னை கடைசியா ஒரே ஒரு தரம் பாக்கணும்ன்னு நான் இங்கே வந்திருக்கேன்..." மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினான்.

"எதுவே சொல்லாமா ஓடிப்போன கோழைன்னு, உன் வாழ் நாள் பூராவும் என்னை நீ கரிச்சுக் கொட்டக்கூடாது பாரு... அதுக்காகத்தான் என் உயிரையும் துச்சமா நெனைச்சு இன்னைக்கு உன்னை தனியாப் பாக்க இங்க வந்திருக்கேன்.. ஆனா உன் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா ராணீ... ஐ லவ் யூ ராணி.. ஐ லவ் யூ வெரி மச்..." அவன் இப்போது பொறுமையாக பேசினான்.

"ஞானம்... நீ சொல்றது சரிடா.. இன்னைக்கு நாம எங்கேயும் ஓட வேணாம்... பத்து நாள் போவட்டும்.. ஒரு மாசம் போவட்டும்.. ஏன் ஒரு வருஷம் போகட்டும்... உனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும்... அது வரைக்கும் நான் உனக்காக வெய்ட் பண்றேன்... என்னை மறந்துடுன்னு மட்டும் சொல்லாதேடா..."ராணி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

"அழாதே ராணி.. நீ அழறதை என்னால பாக்க முடியலை... சகிச்சுக்க முடியலை.. என் மனசு வெடிச்சுடும் போல இருக்கு.. நான் உன்னை மறக்க மாட்டேன்... நீயும் என்னை மறக்க வேண்டாம்.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசுக்குள்ள காதலிக்கறதை யாராலும் தடுக்க முடியாதே?" ஞானம் அவளை தன் புறம் இழுத்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவள் முதுகை மெல்ல வருடிவிட்டான். அவள் நெற்றியில் பாசத்துடன் காதல் பொங்க முத்தமிட்டான்.

"சரி... முடிவா நீ என்னதான் சொல்றே? கண்களைத் துடைத்துக்கொண்ட ராணி அவன் கையை இறுகப் பற்றினாள்.

"ராணீ ... நான் என் வாழ்க்கையிலத் தொட்ட மொதப் பொண்ணு நீ... கடைசிப் பொண்ணும் நீதான்..." இதுவரை உறுதியாக பதட்டமில்லாமல் பேசிக்கொண்டிருந்தவனின் குரல் தழுதழுத்து வந்தது. அவன் கண்கள் குளமாகியிருந்தது. மூக்கு விடைத்து, கன்னங்கள் கோணிக்கொண்டன. தன் கையிலிருந்த அவன் விரல்கள் நடுங்குவதை ராணி தெளிவாக உணர்ந்தாள்.

உணர்ச்சிவசப்பட்டிருந்ததால் ஞானம் பேசமுடியாமல் தவித்தான். ராணியின் முகத்தை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான். ராணி தன் காதலனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். தன் இரு கைகளாலும் காதலுடன் அவன் முகத்தை இழுத்து தன் மார்பில் பதித்துக்கொண்டாள். அவனை தன் மார்புடன் இறுக்கித் தழுவிக்கொண்டாள்.

ராணியின் உடல் வலுவும், மன உறுதியும் ஞானத்துக்கு அவள் அணைப்பில், அந்த அணைப்பின் இறுக்கத்தில், இறுக்கம் தந்த ஆதரவில், தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண்ணைத் தான் இழக்கிறோம் என்ற உண்மை அவனுக்குப் புரிய, அவன் உடல் பதறி வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

அவன் அழ ஆரம்பித்ததும், ஞானம் தன்னைத் தன்னுடன் இன்று அழைத்துப் போகப் போவதில்லை என்பது ராணிக்கு அக்கணம் ஐயத்துக்கிடமில்லாமல் புரிந்துவிட்டது. இனிமே இவனை இன்னைக்கு நம்பறதுல பலனில்லை. கொஞ்ச நாள் கழிச்சி அவன் வீட்டுக்கு நானே கட்டினப் புடவையோட போயிடவேண்டியதுதான். ராணி மனதுக்குள் உறுதியாக முடிவெடுத்தாள்.

இப்ப இந்த நிமிஷம், என்னை நேசிச்சவனோட இருக்கற இந்த தருணத்தை, வாய்ப்பை, நான் இழக்க மாட்டேன். இந்த நொடியை நான் சந்தோஷமா அனுபவிச்சே ஆவணும். அவனும் சந்தோஷமா இருக்கணும்... மனதில் தீர்க்கமாக யோசித்தாள் ராணி.

ராணி, ஞானத்தின் கைகளை தன் இடுப்பில் இழுத்து தவழ விட்டாள். தன் மார்பில் அவன் முகத்தை மீண்டும் அழுத்தமாக பதித்துக்கொண்டாள். அவன் முகத்தை நிமிர்த்தி அவன் முகமெங்கும் ஆசை பொங்க முத்தமிட்டாள். தன் காதலனின் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டாள்.

ஞானத்தின் மார்பு அவள் மார்பின் மென்மையையும், திண்மையையும் ஒருங்கே உணர்ந்தது. அவன் கைகள் அவள் பின்னெழில்களில் அழுந்தி அதன் செழிப்பை தடவி தடவி மகிழ்ந்து கொண்டிருந்தன. நான்கு இதழ்கள், பரஸ்பரம் தங்கள் ஈரத்தையும், வெப்பத்தையும், இனிப்பையும், உப்பையும் கலந்து பரிமாறி, சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தன.

ரயில், ஸ்டேஷனை வேகமாக நெருங்கி வரும் ஓசை கேட்டது. ஞானசம்பந்தன், தன்னை ராணியின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டான். அவள் தலையை ஒரு முறை ஆசையுடன் வருடினான். அவள் முகத்தை நேசத்துடன் தன் கைகளில் எடுத்துக்கொண்டான். கண்களால் தன் மனதைக் கவர்ந்தவளின் அழகைப் ஒரு நொடிப் பருகினான். ஐ லவ் யூ ராணீ... ஐ ஷல் பி லவ்விங் யூ ஃபார் எவர் டியர்...! அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

ராணியின் வலதுகையை ஆதுரமாக பற்றித் திருப்பினான் ஞானம். அவள் புறங்கையில் மென்மையாக தன் இதழ்களை ஒருமுறை பதித்தான். "ஆல் த வெரி பெஸ்ட் டு யூ மை டியர்" அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்கி மெல்ல முனகியவன், அதன்பின் அவளைத் திரும்பிப் பார்க்காமல், மதகின் மேல் ஏறி, எப்போதுமே இணைய முடியாத இரு தண்டவாளங்களின் நடுவில், ஸ்டேஷனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

"நீ என்னை கடைசீல இப்படித் தனியா தவிக்க விட்டுட்டுப் போறீயேடா பாவீ? இதுக்குத்தான் நீ என்னை காதலிச்சியா? சத்தியமா சொல்றேன் நீ நல்லா இருக்கமாட்டேடா... "

தன் உடலும், உள்ளமும் பதற கூவிய ராணி, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்க முயற்சிக்காமல், மதகின் சுவரில் சாய்ந்து நின்றாள். நிற்க முடியாமல் சரிந்து அங்கயே தரையில் உட்கார்ந்து கொண்டாள். தன் காதலன் ஆசையுடன் கடைசியாக முத்தமிட்ட தன் புறங்கையையே வெறித்துக்கொண்டிருந்தாள். நேரம் நழுவிக்கொண்டிருந்தது. ராணியின் கண்களுக்கு அவள் கையே புலனாகவில்லை. எது மதகு, எது சாலை, எது தண்டவாளம், எது ஸ்டேஷனுக்கு செல்லும் வழி எதுவும் புரியாமல், புலன்கள் மழுங்கி, தனியாக பைத்தியம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள்.

"அக்கா... இருட்டிப் போச்சுக்கா... எழுந்துருக்கா... வீட்டுக்குப் போய்த்தான் ஆவணும்... வேற வழியில்லே!!" ஆதரவாகப் பேசிய தம்பி பழனி அவள் கையை பிடித்து எழுப்பினான். 




நல்லசிவம் தெருமுனையில் திரும்பியதும், வேகமாக படபடவென்று ஓசையுடன் மழை பெய்யத் தொடங்கியது. நாலெட்டில் தன் வீட்டை அவர் அடைந்துவிட முடியுமென்ற போதிலும், நடையின் வேகத்தை அதிகரிக்காமல், பதட்டமில்லாமல் நிதானமாக, தன் உடல் மீது வேகமாக வந்து மோதும் மழை நீர் தன் மனதையும் உடலையும் ஒருங்கே குளிர்விப்பதை, ரசித்து அனுபவித்தவாறு தெப்பலாக நனைந்துபடி வீட்டுக்கு நடந்து வந்தார். 

வெராண்டாவில் அமர்ந்திருந்த ராணி, கணவர் உள்ளே வருவதற்காக கதவைத் திறந்தவள், வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். ஓடியவளின் பிருஷ்டங்கள் அசைந்தாடிய அழகை, கதவருகில் நின்றவாறு பார்த்த நல்லசிவத்தின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஒரு பெருமூச்சுடன் நல்லசிவம் ஈஸிச்சேரில் ஈர வேஷ்டியுடன் உட்க்கார்ந்தார். 

ராணி உலர்ந்த துண்டுடன் வந்தவள், துண்டை அவரிடம் கொடுக்காமல், அவர் முகத்தைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவர் தலையைத் துவட்ட ஆரம்பித்தாள். அவள் கை அசைவிற்கேற்ப வளையல்கள் குலுங்க, புடவை முந்தானை அவர் முகத்தில் உரச, அவர் கண்டத்திலிந்து நீளமானப் பெருமூச்சு ஒன்று மீண்டும் எழுந்தடங்கியது. 

மழை இப்போது வலுவாக காற்றுடன் சேர்ந்து சுழன்று சுழன்று அடித்து கிரில் கம்பிகளின் வழியே வெராண்டாத் தரையை, தன் சாரலால் நனைக்க ஆரம்பித்தது. வெளியில் பெய்து கொண்டிருந்த மழையினால் வீட்டுக்குள் வந்த ஈரமான குளிர்ந்த காற்று அவர்கள் உடலை இதமாக தழுவியது. 

கணவனின் நீளமான மூச்சு தன் மார்பைத் தாக்கியதும், ராணி அவரை மேலும் நெருங்க, அவள் கனத்த தொடைகள் அவர் முழங்கால்களை தொட்டன. ராணி துண்டால் அவர் முதுகைத் துடைக்க, அவள் குலுங்கும் மார்புகள் நல்லசிவத்தின் முகத்தில் மலர்களாக உரசின. அவள் தேகத்துக்கே உண்டான மகிழம்பூ வாசம், ராணியின் கழுத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசம், காற்றில் வந்த குளிர்ச்சி, ரகுவைப் பார்த்து பேசியதால் உள்ளத்தில் ஏற்பட்ட நிம்மதி, இதெல்லாம் ஒன்று சேர நல்லசிவத்தின் மனது மெல்ல மெல்ல இலகுவாகத் தொடங்கியது. 

சமையலை முடித்துவிட்டு, ராணி முகம் கழுவி அடர்ந்த மஞ்சள் நிறத்தில், அரக்குப் பூக்கள் பூத்திருந்த புடவையிலிருக்க, நெற்றியில் குங்குமம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. அவர் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார். ராணியின் ஜாக்கெட்டில் அடைப்பட்டிருந்த மார்பு அவரது இடது கன்னத்தில் இன்னமும் அழுந்தியிருந்தது. 

பொன்நிறமான அவள் வயிற்று சதை மடிப்புகளும், அடிவயிற்றின் தொப்புள் குழைவும் கண்களை இறுக்கிக் கட்ட, நல்லசிவத்தின் மனம் ஊசலாடத் தொடங்கியது. ராணியின் அண்மையால், மனைவியின் நெருக்கத்தால், அவள் மார்பின் இதமான வெப்பத்தால், அவர் ரத்தம் சூடேறியது. ரத்தத்தில் ஏறிய சூட்டால் அவருடைய தண்டிலும் சிறிது சூடு ஏறி அது மெல்ல தன் இருப்பை அவருக்கு அறிவித்தது. நல்லசிவம்...! காத்தடிக்கும் போது தூத்திக்கணும்பா... உள்மனசு கூவியது. 

இவளைவிட்டு ஒதுங்கியிருக்கணுங்கற முடிவை நான் எடுத்து முழுசா ரெண்டு மணி நேரமாவலை. அதுக்குள்ள என் மனசு இவ பக்கம் தறிகெட்டு ஓட ஆரம்பிக்குது. மனசோட ஓட்டத்துக்கேத்த மாதிரி இந்தப் பாழாப்போன மழையில நனைஞ்ச உடம்புக்கு இதமான சூடும் தேவைப்படுது. எங்க ரெண்டுபேருடைய உடல்களும் ஒன்னா சேரலைன்னா, மனசுல இருக்கற என் மோகம் எப்படி தீரும்? உடம்பு அலுத்துப் போனாலும் என் மனசோட தேடல்கள் சாகறவரைக்கு இருந்துகிட்டேதான் இருக்குமா? 

கணவனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நொடியில் உணர்ந்துகொண்ட ராணியின் உதடுகளில் புன்னகைப் பூவொன்று மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தபோது கன்னத்தில் குழிவிழுந்து முகம் அழகாய் மலர்ந்தபோதிலும் கருமையான அவள் விழிகளில் சோகம் நடனமாடிக்கொண்டிருந்தது. 

"ம்ம்ம்... கோவமா என் மேல?" ராணி கொஞ்சலாக கேட்டாள். 

ராணி, தான் நின்றிருந்த நிலையிலேயே அவர் முகத்தை நிமிர்த்தி, கணவரின் கண்களுடன் தன் கண்களை கலந்தவளின் மூச்சு அவர் நெற்றியைச் சுட்டது. அவள் அவரை வதைப்பதற்காகவே மேலும் நெருங்கி தன் மார்பை அவர் முகத்தில் அழுத்தி தன் முகவாயை அவர் தலை உச்சியில் அழுத்திப் பதித்தாள். 

இன்னைக்கு இவளுக்கும் என் நெருக்கமும், அண்மையும் தேவைப்படுதா? கிட்ட வரும்போதே ராணியோட மூச்சு காத்துல அணல் அடிக்குதே.. இவ என்னைச் சீண்ட ஆரம்பிச்சிட்டா..! என் ஒடம்புல தீயை மூட்டத் தொடங்கிட்டா..! இன்னைக்கு இவ வேகத்தை என் ஆண்மையால எதிர்கொண்டே ஆகணும். இல்லேன்னா ரெண்டு பேரோட உடம்பு சூடும் எப்படி குறையும். நல்லசிவத்தின் உடல் நினைவுகளால் சிலிர்க்க ஆரம்பித்தது. 

மழை நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் விளக்கில்லாமல், ஆள் நடமாட்டமற்று வெறிச்சோடி, இருள் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது. நல்லசிவம், தன் தலைக்குப் பக்கத்திலிருந்த சுவிட்சை அழுத்தி வெராண்டா விளக்கை அணைத்தார். 

"ப்ச்ச்ச்...எனக்கென்ன கோவம் உன் மேல.." 

நல்லசிவத்தின் கைகள் அவர் கட்டுப்பாட்டுக்குள் நிற்காமல் மனைவியின் இடுப்பை வளைத்து தன் பக்கம் இழுத்தன. ராணி, ஈஸிச்சேரில், ஈர வேட்டியுடன் உட்க்கார்ந்திருந்தவரின் மார்பில் சரிந்தாள். சரிந்தவளின் இடுப்பில் நல்லசிவத்தின் விரல்கள் மெல்ல ஊர்ந்து அவள் தொப்புள் குழியின் ஆழத்தை அன்றுதான் புதிதாக அளப்பதைப் போல், குழியிலேயே அசையாது சில வினாடிகள் நின்றன. உதடுகள் ராணியின் கழுத்தில் பதிந்தது. மெல்ல கழுத்திலிருந்து கன்னத்தை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. ராணி தன் மெய் சிலிர்த்தாள். நேரத்தை மறந்தாள். இருக்கும் இடம் மறந்தாள். பெண்மையின் இயல்பான நாணத்திற்கு விடை கொடுத்தாள்.

"இப்ப எதுக்கு வெளக்கை அணைச்சீங்க?"

"உன்னை வாரி அணைக்கத்தான்.."

"ம்ம்ம்... வளர்ந்தப்புள்ளை உள்ளே இருக்கான்ங்கறது நெனப்புல இருக்கட்டும்"..

ராணியின் இதழ்கள் கணவனின் கீழுதட்டைக்கவ்வி மெல்ல அழுத்தின. முன் பற்களால் இதமாக அவர் உதட்டை மெல்ல ஆரம்பித்தவளின் நாக்கு, மெல்ல மெல்ல அசைந்து தன் வேலையைத் தொடங்கியது. நல்லசிவம் தன் நாவில் கல்கண்டின் இனிப்பை உணர்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை காலம் செயலற்று சற்று நேரம் நகர்வதை நிறுத்தியிருந்தது. தன் உடலின் உயிரோட்டம் நின்றுவிட்டதா என அவருக்கு சந்தேகம் வந்தது. 

"ப்ச்ச்" நல்லசிவத்தின் உதடுகள் வெறியோடு தன் மனைவியின் வாயில் முத்தமிட்டு அவள் இதழ்களை கவ்வ, அவருடைய முழங்கை, ராணியின் மார்பில் அழுந்தி அதன் மென்மையை அனுபவித்தது. இவர் பாட்டுக்கு என்னை தடவ ஆரம்பிச்சிட்டார்.. சம்பத் சட்டுன்னு வெளியில வந்துட்டான்னா, அவன் எதிர்ல இந்த வயசுல கூனி குறுகி நிக்கணுமே, சம்பத்தின் நினைவு அவள் மனதிலாட, தன்னை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போது அவள் பெண்மை தடுமாறியது. 

"ராணீ... மதியம் பைத்தியமா ஏதோதோ உளறிட்டேன்.. மனசுல எதையும் வெச்சுக்காதேடீ...!" நல்லசிவத்தின் கைகள் அவள் புட்டங்களில் அழுந்தி பிளவிலும், மேட்டிலுமாக மாறி மாறி பயணித்தன. 

ஹாலில் சத்தம் கேட்க, ராணி சட்டென கணவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்து விளக்கை மீண்டும் எரியச் செய்தாள். அவரிடமிருந்து தள்ளி நின்றவள், அவர் குரலில் தொனித்த அனுதாபத்தையும், ஆதுரத்தையும், உணர்ந்து சற்றே விரக்தியுடன் சிரித்தவாறே முந்தானையால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். 

"இப்ப எதுக்கு அழறே நீ?"நல்லசிவத்தின் குரல் பிசிறடித்தது. 

"நீங்க மொதல்ல எழுந்து போய் ஈரத்துணியை மாத்துங்க.." உதடுகளில் நமட்டு சிரிப்புடன், ராணி தன் முந்தானையால் அவர் முகத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தி, அவர் நெற்றி, கன்னங்களில் ஒட்டியிருந்த தன் நெற்றி குங்குமக் கீற்றுகளைத் துடைத்தாள். இறுக்கமான வெண்மை நிற ரவிக்கையில், அவளின் தடித்த கருப்பு நிற காம்புகள் அழுந்தி கிடந்த கோலம், நொடிப்பொழுது கண்ணில் மின்னலடிக்க, நல்லசிவம் தன் அடி மடியை எழும்பியிருந்த தன் ஆயுதத்தோடு ஒரு முறை சேர்த்து அழுத்திவிட்டுக்கொண்டார். 

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" வாய்க்குள் முணுமுணுத்தவாறு முகம் கழுவி, வேட்டியை மாற்றி நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டவர், சமையலறைக்குள் நுழைந்தார். ராணி ரசத்துக்கு தாளித்துக் கொட்டிக்கொண்டிருந்தாள். 

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ?" 

"என்னத்தை சொல்ல... பொம்பளையா பொறந்தவ அழறதுங்கறது புது விஷயமா?" 

"நான்தான் சாரி சொல்லிட்டேன்ல்லா..அப்புறம் ஏன் புலம்பறே?" ஹாலின் ஓரம் அவர் பார்வை தாவியது. சம்பத் டீ.வியின் முன் உட்க்கார்ந்திருந்தான். நல்லசிவம் ராணியின் பின் ஓசைஎழுப்பாமல் நின்று, அவள் முதுகோடு அட்டையாக ஒட்டி அவள் புறங்கழுத்தில் தன் உதடுகளை ஒற்றினார். அவர் கைகள் அவள் பருத்த முலைகளை பற்றிக்கொண்டிருக்க, அவளுடைய கருத்த கூந்தலில் தன் முகத்தைப் புதைத்து நீளமாக தன் மூச்சை இழுத்தார். மனைவியின் கழுத்து வாசத்தை தனக்குள் மெல்ல இழுத்து நெஞ்சினை நிரப்பிக்கொண்டார். 

"உங்களை சொல்லால அடிச்சேன். என் புள்ளையை அவன் கன்னத்துல தழும்பேற மாதிரி அறைஞ்சுட்டேன்" தன் மார்பிலிருந்த அவர் கையை மெல்ல விலக்கியவள், அவரை நோக்கித் திரும்ப, அவள் கண்கள் கலங்கியிருந்தது. 

"என்னம்மா ஆச்சு..?" அவர் குரலில் பதட்டம் கூடியது. 

"நானும் ஒரு பொம்பளை... சுகன்யாவும் ஒரு பொம்பளை... நீங்க கோபமா தெருவுல இறங்கி நடந்ததும், உக்காந்து யோசனைப் பண்ணேன்... நீங்க சொன்னதுல இருந்த ஞாயம் புரிஞ்சுது... பேச்சோட பேச்சா உங்களை ரொம்ப கிண்டலா தாறுமாறா நம்மப் பையன் பேசினான். என்னாலப் பொறுத்துக்க முடியலை...சொல்லிப் பாத்தேன்... அவன் கேக்கலை... ஓங்கி அறைஞ்சிட்டேன்..."அவள் விசும்பினாள்.

"அழாதே...இதுக்கு மேலயாவது அவன் தப்பு அவனுக்கு புரிஞ்சா சரி.." நல்லசிவம், சமயலறை சுவரில் சாய்ந்து, ராணியைத் தன் மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டார். தலையை வருடினார். அவள் கண்களைத் துடைத்தார். எல்லாம் சரியாயிடும், கண்களால் ஆதரவு சொன்னார். அவளை இழுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார்.

"சம்பத் எழுந்து வாப்பா...சாப்பிடலாம்.." தன் மகனின் தோளில் அன்புடன் தன் கையை வைத்தார். சம்பத்தின் உடல் மெல்ல அதிர்ந்தது. 

"அயாம் சாரிப்பா... இன்னைக்கு என் மனசு சரியில்லாம இருந்தேன்... உங்ககிட்ட நான் ரொம்பவே தப்பா பேசிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்கப்பா..." 

சம்பத் ஒரு கணம் அவர் கண்களில் தன் பார்வையை சேர்த்தான். அடுத்த கணம், அவருடைய அன்பான கனிந்த பார்வையை சந்திக்கமுடியாமல், தன் தலையை குனிந்துகொண்டான். ராணி தன் மகனின் வார்த்தைகளைக் கேட்டதும், அவனருகில் வேகமாக ஓடினாள்.



"என் ராஜாடா நீ... என்னை நீ ஏமாத்திடலடா..." அவன் முகத்தை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். சம்பத்தின் உடல் மெல்ல குலுங்கியது. அவன் தன் தலை தன் தாயின் மார்பில் அழுந்தியிருக்க, ஏதோ சொன்னான். சொன்னது என்னவென்று அவர்கள் இருவருக்கும் புரியவில்லை. கல் கரைய ஆரம்பிக்க, ராணியின் மனதிலிருந்த பாரம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. நல்லசிவம் தாயையும், மகனையும் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார். 



சுகன்யா... 49

ராணி மனதில் எரிச்சலுடன் ஹாலுக்கு வந்து, கணவனின் செல் நம்பரை அழுத்தினாள். நல்லசிவத்தின் செல், ஹாலில் இருந்த மேஜை மீதே ஒலிக்க, மனதுக்குள் வெறுப்புடன், தன் கையிலிருந்த போனை விட்டெறிந்துவிட்டு வேகமாக திரும்பியவளின் கோபம் அன்றைய அவளுடைய மனக்குழப்பத்துக்கெல்லாம் காரணமான, சோஃபாவின் மீது அரை நிர்வாணமாகப் படுத்திருந்த தன் பிள்ளை மீது திரும்பியது. 

சம்பத், இன்னமும் வெறும் உடம்பில் ஜட்டியுடன், ஒரு கையில் ரிமோட்டுடன், எஃப் டீவி, எம் டீவி, வீ டீவி என மாறி மாறி பயணித்துக்கொண்டிருந்தான். அவனுடைய மறு கை தொடை நடுவில் கிடந்தது. 

"டேய்... இது என்னடா புது பழக்கம்...? நட்ட நடு ஹால்ல, ஜட்டியை மட்டும் போட்டுக்கிட்டு நெடுக நீட்டிக்கிட்டு கிடக்கிறே.. உள்ளப் போய் உன் ரூமுல படுடா..." என ராணி இறைந்தாள். அவன் படுத்திருந்தவிதம் பிள்ளையைப் பெற்றவளுக்கே பார்க்க கூச்சமாக இருந்தது.

 


"சரி... சரி... இப்ப ஏன்... என் மேல எரிஞ்சு விழறே?" சம்பத் தன் தாயின் "மூடை" புரிந்துகொள்ளாமல் வழக்கம் போல் தெனாவட்டாக பேசினான். 

சம்பத்திடமிருந்து வந்த எகத்தாளமான பதிலைக் கேட்டதும், அவரு சொல்ற மாதிரி இவன் ஒழுங்கா வளராததுக்கு காரணம் நான்தான். இவன் அப்பா இவனை கண்டிக்கும் போதெல்லாம், குறுக்கே போய் போய் நின்னது நான்தான். அதுக்குப் பலனை நான் இப்ப அனுபவிக்கறேன். வர வர எங்கிட்டக்கூட சுத்தமா மரியாதையில்லையே? 

சுகன்யா இவனை தன் உறவுக்காரன்னு மதிக்கலைங்கறான். என் படிப்பை மதிக்கலங்கறான். என் ட்ரஸ்ஸை பாத்து மயங்கலன்னு புலம்பறான். இவன் அவளைத் தன் உறவுன்னு மதிச்சானா? இவன் ஒரு படிச்சவன் மாதிரியா தன் சொந்த வீட்டுல நடந்துக்கறான்? அவகிட்ட நடந்துகிட்டான். இவன் போனப்ப அந்த பொண்ணு எந்த மனநிலையில இருந்தாளோ? அவ காதலிக்கற பையன் கூட அவளுக்கு என்னப் பிரச்சனையோ? இவன் போய் தன் கையை நீட்டினா, இவனைத் தூக்கி அவ இடுப்புலய வெச்சிக்க முடியும்? 

இவன் ஒரு பொண்ணை மதிக்கத் தெரியாம, அடுத்தவங்களை கொறை சொல்லிக்கிட்டு, அவங்களை பழிவாங்றேன்னு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, போன எடத்துல மொக்கை போட்டுட்டு, இன்னொருத்தர் கஷ்ட்டப்படறதை பாத்து சந்தோஷப்படற அளவுக்கு போயிருக்கான்னா அதுக்கு காரணம் நான்தானே? 

இவனுக்கு அளவுக்கு மேல செல்லம் குடுத்து தலைக்கு மேல தூக்கி வெச்சிக்கிட்டு ஆடினது என் தப்புத்தானே? ராணியின் அடி மனதிலிருந்து முதல் முறையாக, தன் மகனுக்கு எதிராக, ஒரு இனம் தெரியாத எரிச்சல் சட்டென கிளம்பியது. 

"மொதல்லே நீ வளந்தப்புள்ளையா, படிச்சவனா, ஒழுங்கா ட்ரஸ் பண்ணக் கத்துக்கடா.." அவள் குரலில் மெலிதாக கோபம் எட்டிப்பார்த்தது. 

"ரெண்டு நிமிஷம் மனுஷனை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே? இப்பத்தான் நச்சுப்புடிச்ச அந்தாளு வெளியில போனாரு..."

"என்னடா உளர்றே?" ராணியின் குரலில் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது. 

"சும்மா தொணதொணக்காம, நீயும் கொஞ்ச நேரம் எங்கயாவது போய் தொலைங்கறேன். என் வீட்டுல என் இஷ்டப்படி கிடக்கிறேன்; நீங்க ஏன் சும்மா அல்ட்டிக்கிறீங்க?"

"என்னடாப் பேசறே ..."அந்தாளு" "இந்தாளு"ன்னு... படிச்சவனா நீ? பெத்த அப்பன் கிட்ட பேசற மொறையைக் மொதல்ல நீ கத்துக்கணும்..." ராணி தன் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள். 

எல்லாவற்றையும் நொடியில் உதறி எறிந்துவிட்டு, வீட்டை விட்டே கிளம்பத் தயாராகிவிட்ட தன் கணவனின் கலங்கிய முகம், ராணியின் மனதுக்குள் வந்து நிற்க, அவள் முகம் கோபத்தில் சிவந்து, மூக்கு நுனி துடித்து, கன்னங்களில் சூடு ஏற ஆரம்பித்தது. 

தன் மகன், முகம் தெரியாத ஒரு செல்வாவை ரிவிட் அடித்தது, அவனுக்கும், சுகன்யாவுக்கும் நடுவில் தேவையற்றப் பிரச்சனையை உண்டு பண்ணிவிட்டு வந்திருப்பது, அவர்களைப் பிரித்து, அதனால் சுகன்யாவை அழவிட்டு வேடிக்கை பார்க்கத்தானே தவிர, அவளைத் திருமணம் செய்து கொள்ளுவதில் தன் மகனுக்கு விருப்பமில்லை என்று தெரிந்தவுடன், தன் தாயின் மதிப்பிலிருந்து சம்பத் விழுந்துவிட்டான். 

தன் தாயும் ஒரு பெண்தான். ஒரு இளம் பெண்ணை தான் அவமானப்படுத்தியதில் தன் தாய்க்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்பதையும் அவன் புரிந்து கொள்ளவில்லை. தனக்காக, சிவதாணுவின் வீட்டில் நடந்த விஷயம் முழுதும் புரியாமல், ராணி தன் தந்தையிடம் இன்று எதிர்த்து சண்டையிட்டிருக்கிறாள். இந்த சண்டை அவர்களுக்குள் சாம்பல் பூத்திருக்கும், ஒரு சின்ன நெருப்புக் கீற்றை கிளறி விட்டுவிட்டது என்ற உண்மையையும் அவன் உணரவில்லை. 

தன் தாய், தான் எந்த தவறு செய்தாலும், தனக்காக யாரிடமும் அது சரியே என வாதாடுவாள் என்ற எண்ணத்திலேயே இருக்கும் சம்பத், தன் தாய் இவ்வளவு நேரமாக, தனிமையில் தன் உள்ளத்தை ஆழந்து நோக்கி, தன்னை சத்தியசோதனை செய்துவிட்டு வந்திருக்கிறாள் என்ற உண்மையை சம்பத் முழுவதுமாக உணராத நிலையில் தன் தந்தையை கிண்டலடித்தான். 

"டேய்... சொல்றதை கேளுடா... என் கோபத்தை கிளறாதே?" ராணி வெடித்தாள். தன் மகனின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வெரண்டாவை நோக்கி வீசி எறிந்தாள். அவள் மூச்சிறைக்க அவன் எதிரில் துர்க்கையாக நின்றாள். 

"உன் புருஷன், உன் கொறை காலத்துக்கு சோறு போடமாட்டான்னு பயந்திட்டியா... நீ பெத்த புள்ளை.. .நான் இருக்கேம்மா... கவலைப்படாதே" சம்பத் அர்த்தமில்லமால் உளறிக்கொண்டே எழுந்து நின்றான். 

"யாரடா வாடா போடாங்கறே...என் புருஷனையா சொல்றே? அந்த மனுஷனைப் பத்தி உனக்கென்னடா தெரியும்?" ராணி பளீரென சம்பத்தின் வலது கன்னத்தில் மூர்க்கமாக அறைந்தாள். 

விழுந்த அறையின் வேகத்தில் சம்பத் அதிர்ந்தான். தன் தாய் தன்னை அடித்தாள் என்பதையே அவனால் ஒரு நொடி நம்பவே முடியவில்லை. கன்னத்தில் சுரீர்ரென நெருப்பை கொட்டினமாதிரி எரியுதே? காது ங்கொய்ங்குது... கண்ணு விண்ணு விண்ணு தெறிச்சுப்போச்சே? அப்படீன்னா, அம்மா அடிச்சது உண்மைதானா? சம்பத் தன் தாயின் முகத்தை இதுவரை இல்லாத ஒரு அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தான். 

ஹாலில் சுவரில் சாய்ந்து, இரு தொடைகளும் மார்புடன் அழுந்தியிருக்க, கைகளால் தன் முழங்கால்களை கட்டிக்கொண்டு, விழிகள் மூடி, முகத்தில் சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள் ராணி. மூடியிருந்த இமைகளுக்குப் பின் கண்கள் வலித்தன. ராணியின் இமையோரத்திலும், கன்னங்களிலும், கண்ணீர் வழிந்தோடி காய்ந்த கோடுகள் கோலமிட்டிருந்தன.

ராணி இப்போது மவுனமாக மனதுக்குள் அழுதுகொண்டிருந்தாள். நெற்றியும், தலையும் விண் விண்ணென்று வலித்துக்கொண்டிருந்தது. விளக்கு வைக்கற நேரத்துல வீட்டுல பொம்பளை அழுதா குடித்தனம் உருப்படுமா? தன் தலையை இட வலமாக உதறினாள். மெல்ல எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சம்பத்தின் அறைப் பக்கம் நடந்தாள். மூடியிருந்த கதவைத் தள்ளினாள். உட்புறம் தாள் போடப்பட்டிருந்தது.

"சம்பத்து... கண்ணு... கதவைத் தொறடா.." மனதின் சூட்டில் தாய்மை பாலாக பொங்கி மேலேழுந்து வழிந்தது.

"....."

"தட்....தட்ட். தட்ட்" கதவைத் தட்டி தட்டி கை ஓய்ந்து போனதுதான் மிச்சம். அறையின் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு... சும்மாவா சொன்னாங்க..!

மெல்ல நடந்து வெராந்தாவில் கிடந்த சேரில் உட்க்கார்ந்தாள். வீட்டுல இருக்கற ரெண்டு ஆம்பளையில ஒருத்தன் கோவத்தோட வீதியில அலையறான். அடுத்தவன் வீட்டுக்குள்ளவே மூடின கதவுக்குப் பின்னால இருந்துக்கிட்டு கூப்பிட்டக் குரலுக்கு பதில் குடுக்காம என்னைக் கொல்றான்.

தோளுக்கு மேல வளந்த புள்ளயை நானே அடிச்சுட்டேனே? என் நாலு விரலும் அவன் கன்னத்துல பதிஞ்சு, வரி வரியாக பூத்திருந்ததை இப்ப நெனச்சாலும் என் அடிவயிறு பத்தி எரியுதே? இன்னைக்கு வரைக்கும், என் புருஷனை கூட அவன் மேல கை ஓங்க விட்டதில்லே. கண்ணுல பயத்தோட அப்படியே மலைச்சுப் போய் நின்னானே என் புள்ளே..! அலமந்து போன ராணியின் மனசின் அலையும் வேகம் இன்னும் மட்டுப்பட்டப்பாடில்லை.

உலகத்துல நீதான் புள்ளையை அடிச்ச மொதத் தாயா? உன் அப்பன் என்னைக்காவது உன் மேல கையை ஓங்கியிருப்பானா? உன் ஆத்தா உன்னை வெறும் தரையில போட்டதில்லையேடி..! ஒண்ணுக்கு ரெண்டா பட்டுப்புடவையை விரிச்சி தேக்குமரத் தொட்டில்லத்தானே கிடத்தினாங்க.

அப்படிப்பட்டவளே, உன் ஆத்தாளே, உன்னை ஒரு நாள் வீடு பெருக்கற விளக்குமாத்தால, வெளுத்துக் கட்டினா. அன்னைக்குத்தான் உன் திமிரும், நெஞ்சுல இருந்த அகந்தையையும் கொஞ்சம் அடங்கிச்சி. ஆகாசத்துல பறந்துக்கிட்டிருந்த நீ தரைக்கு மெல்ல மெல்ல வந்து சேர்ந்தே. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பியும் ஒதவ மாட்டான்னு சொல்றாங்களே... இதுவும் உண்மைதானா?

ராணியின் மனசு நொடியில் பின்னோக்கி ஓடி, முப்பத்து மூன்று வருடங்களை கடந்து, முதல் முறையாக அவள் அடி வாங்கிய தினத்தில் சென்று நின்றது. 

ராணி தன் பதின்மூன்றாவது வயதில் மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தாள். அதுவரை அவள், சாதாரணமாக, அவள் வயதையொத்த சிறுமிகளைப் போல், ஒல்லிப் பிச்சானாக, பார்ப்பதற்கு கொத்தவரங்காய் போல்தான் இருந்தாள். பருவமெய்தியபின், இயற்கை மிகவிரைவாக அவள் உடலில் ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை?

தலை முடியின் மினுமினுப்பும்; முகத்தின் செழுமையும் சட்டென ஏறியது. பளிங்கு கன்னங்களின் வழவழப்பும், கண்களில் பளிச்சிட்ட இனம் தெரியாத அறியாமையும், மெல்லிய இதழ்களில் கூடிய மாதுளையின் செம்மையும்; மாறிய குரலின் இனிமையும், சருமத்தின் மழமழப்பும், மென்மையும், பளபளப்பும், வயது வித்தியாசமில்லாமல் அவளைப் பார்த்தவர்களின் மனதை அலைகழித்தன.

இவளை ஒரு தரமாவது அமுக்கிப் பாக்கணும் வேய்... இந்த வயசுலேயே இப்படி கிண்ணுன்னு இருக்காளே.. குட்டி... இன்னும் போவ போவ எப்படியிருப்பா? நடு வயது சோக்காளிகளும் ஒரு நொடி மனதுக்குள் சலனப்பட்டார்கள். கட்டியவளை கட்டிலில் அணைத்தப்போது ராணியை மனதில் நினைத்துக்கொண்டார்கள்.

ராணியின் உடல் வளர்ச்சிக்கேற்ப, மாறிய அவள் மேனியின் மெருகும், பூரிக்க வேண்டிய இடத்தில் ஆரம்பித்த அளவான பூரிப்பும், இடை கொடியாக குறுகி, அவள் பின்புறம் உருண்டு திரண்டு அகன்றதால் நடையில் உண்டான நளினமும் என அவள் அழகை கண்டு ஜொள்ளுவிட, தெருவில் இளைஞர் படை ஒன்று திடீரெனத் தயாரானது. ராணி நம்பாளுமா... லைன்ல க்ராஸ் பண்ணாதே; ஒருத்தன் தவறாமல் இந்த வசனத்தை தன் கூட்டத்துக்குச் சொன்னான்.

ராணி ரசிகர் மன்றம் ஒன்று நாயரின் டீக்கடைக்குப் பின்னாலிருந்த காலியிடத்தில் திறக்கப்பட்டது. ராணி போட்டியில்லாமல், பீ.யூ.ஸி. மற்றும் டிகிரியில் கோட் அடித்துவிட்டு, மார்ச், செப்டம்பர் என அரியரை எழுதிவிட்டு, பெல்பாட்டம் போட்டுக்கொண்டு, ஊர் ஊராக பேப்பரைத் துரத்திக்கொண்டிருந்த கல்லூரிக் காளைகளின், கனவுக்கன்னியானாள் அவள்.

தெருமுனை நாயர் கடையில் ஓசியில் தினத்தந்தி படித்துக்கொண்டு, கடன் சொல்லி டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் "வேய் இவ என் ஆள்டா," என்பான் ஒருவன். "நிறுத்துடா வெண்ணை.. அவ என் தூரத்து சொந்தம்...மொத பாத்தியதை எனக்குத்தான் மச்சான்" ஒருத்தன் உரிமைக்குரல் எழுப்பினான். கருப்பாக, உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லாத கிறுக்கர்களின் நடுவில் காதல் சண்டைக்கு அவள் வித்திட்டுக்கொண்டிருந்தாள்.

தன் உடல் அழகால் ஆண்களின் கவனத்தை தான் சுலபமாக ஈர்க்கிறோம் என்ற உண்மை மெல்ல மெல்ல ராணிக்குப் புரிய ஆரம்பிக்க, அவளுக்குப் பாதங்கள் தரையில் பாவவில்லை. அவள் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தாள். பகலிலேயே அவள் கண்களில், வண்ணமயமான கனவின் சாயை படர ஆரம்பித்தது. ராணி முன்னெப்போதையும் விட கண்ணாடியின் முன் அதிக நேரத்தை செலவழித்து தன்னை சிரத்தையுடன் அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கினாள்.

இளம் வாலிபர்கள், அவள் தெருவில் வேலையே இல்லாமல், நேரம் கெட்ட நேரத்தில் "தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா" என சைக்கிளில் சுற்ற ஆரம்பித்தார்கள். ராணியின் மனமும், கண்களும், தன் மனதிற்கேற்ற இளவரசனைத் தேட ஆரம்பித்தது.

கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும், பள்ளி யூனிபார்முக்கு விடை கொடுத்து, தினம் ஒரு புடவையில் அவள் அழகு ரதமாக வலம் வர, ஆணினம் அவள் பின்னால், அவள் கடைக்கண் பார்வைக்காக, ஏங்கி அணி வகுத்து தவம் செய்ய ஆரம்பித்தது. விடலைப் பையன்களின் விழிகளிலிருந்த ஏக்கம் தந்த போதையில், அவள் மனம் ஆகாயத்தில் பறந்தாலும், வாரத்தில் இரண்டு "ஐ லவ் யூ ராணி" என கடிதம் கிடைக்கப் பெற்றாலும், படிப்பை மட்டும் அவள் எந்தவிதத்திலும் கோட்டை விட்டுவிடவில்லை.

தன்னம்பிக்கையையும், திமிரையும், மயிரிழையை ஒத்த ஒரு மெல்லியக் கோடே பிரிக்கிறது என்ற உண்மையை இருபத்தோரு வயதில் ராணி புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. இருபது வயதில் இது யாருக்குத்தான் புரிகிறது?

ராணிக்கென்னடி; பேருக்கேத்த மாதிரி ராணி மாதிரி அழகாயிருக்கா; ராஜா மாதிரி ஒருத்தன் அவளை கொத்திக்கிட்டு போவப்போறான். இப்படி அவள் காது பட, சொல்லி சொல்லியே அவளை அவள் தோழிகளும், உறவும் ஏற்றிவிட்டுவிட்டார்கள். உடலும் மனமும் தரையில் நிற்கவில்லை.

படிப்பு, அழகு, கேட்டபோது மறுப்பில்லமல் செலவுக்கு கிடைத்த பணம், பெற்றோரின் அன்பு, தம்பியின் பாசம், உறவினர்களின் அக்கறை, அந்தஸ்து என எல்லாமே குறைவில்லாமல் வாழ்க்கையில் கிடைத்தவுடன், ராணிக்கு அளவிட முடியாத ஒரு தன்னம்பிக்கை மனதில் வளர்ந்தது. தான் செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அவளுள் மெல்ல மெல்ல வேர்விட்டு தலை கனக்க ஆரம்பித்தது. ஒரே பெண். வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டமென ஆகியது. விவரம் புரியாத வயதில் மற்றவர்களை சற்றே எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தாள். 

ஞானசம்பந்தன் எம்.ஏ.யில் ராணியின் வகுப்பில் வந்து சேர்ந்தான். சுருட்டை முடியும், களையான முகமும், கவர்ச்சியான உதடுகளும், சிரித்து சிரித்து இனிமையாக பேசும் அவன் போக்கும், ராணியின் மனதைக் கவர்ந்துவிட, அவள் தன் மனதை வகுப்புத் தோழனிடம் சுலபமாக பறிகொடுத்தாள். வகுப்பில் வாய்மொழியைப் புறக்கணித்து, விழிகளால் பேசிக்கொண்டார்கள். ஞானம் அழகாக சிரித்து அவளை நோக்கி கண்ணடிக்க, ராணியின் மனதில் எரிமலை வெடித்து சிதறியது. ராணிக்கு பகல் சோறு கசந்தது. இரவில் படுக்கை நொந்தது.

தன் மனதுக்குள் குடியேறியவனுடன், வீட்டிலிருந்து அவனுக்கும் சேர்த்து கொண்டு போன டிஃபனை சாப்பிட்டவாறு, கல்லூரி கேண்டீனில் பேசி சிரிப்பதில் ஆரம்பித்த ராணியின் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல வேகம் பிடித்தது. ஒரே மாதத்தில் அவர்கள் சந்திக்குமிடம் தனிமையில் மரத்தடியாக மாறியது. வகுப்புக்கு மட்டமடித்துவிட்டு, பஸ்ஸில் நெருக்கமாக உட்க்கார்ந்து, ராணிய் பயணம் போக ஆரம்பித்தாள். வாலிப வயதில், ஆணின் அண்மையால், அவன் உடல் உரசல் கொடுத்த கிளுகிளுப்பில் அவள் மனம் பரவசம் அடைந்தது.

சில நேரங்களில் திட்டமிடாமல் யதேச்சையாகவும், பல சமயங்களில் திட்டமிட்டும், ஞானசம்பந்தனின் விரல்கள் ராணியின் இடுப்பிலும், வயிற்றிலும் செய்த சில்மிஷங்களை, ராணியின் மனம் தினம் தினம் எதிர்பார்த்து ஏங்க ஆரம்பித்தது. காதலனின் வருடலால், இளம் உடலில் நரம்புகளில் ஓடிய மெல்லிய சுகம், அவள் மனதை தித்திக்கச் செய்தது.

ராணியின் மனதில் குடி புகுந்தவனோ, அவளை விட வசதியில் குறைந்தவன். அவள் பிறந்த இனத்தைச் சேராதவன். ராணியை அடையும் ஓட்டத்தில், தோற்று வெறும் வாயை அசை போட்டவர்களுக்கு அவள் காதல் நாடகம் மெல்லுவதற்கு வெல்ல அவலாக இனித்தது.

மச்சான்.. வெளீயூர்காரன் நம்ம ஊரு பொண்ணத் தொடறான்.. தடவறான்.. போற போக்கைப் பாத்தா ராணியை சீக்கிரமே போட்டு கழட்டிடுவான் போல இருக்கு... ங்க்ஹோத்தா.. நாம கையில புடிச்சிக்கிட்டு அவங்களை வேடிக்கைப் பாக்கறோம். ஞானசம்பந்தனை, வலுச்சண்டைக்கு இழுத்தார்கள். சிரித்துக்கொண்டே ஒதுங்கியவனை விடாமல் மல்லுக்கு இழுத்தார்கள். ஒத்தையில் சட்டை கையை மடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தவனை, நாலு பேராக கூடி, சேர்ந்து அடித்தார்கள்.

ஞானசம்பந்தன் அடிபட்டது தெரிந்ததும், ராணியின் மனதில் வைராக்கியம் எழுந்தது. டேய் இவன்தாண்டா என் ஆம்பிளை. "நல்லா பாத்து வயிறெரிஞ்சு சாவுங்கடா" - வீதிகளில் வெளிப்படையாக அவன் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ராணி.

அரையிருட்டில் சினிமாக் கொட்டகையில், வெக்கையில் போட்டிருந்த காட்டன் ரவிக்கை முதுகில் நனைந்திருக்க, அவன் மூச்சுக்காற்றின் வெப்பம் கழுத்தைச்சுட, முதல் முறையாக ராணியின் தோளில் அவள் காதலன் கையைப் போட்டு அணைத்து, ஈரஉதட்டால் அவள் காது மடலை வருடியபோது தன் கண்களின் இமைகளை மூடி மயங்கினாள்.

"என்னாச்சு ராணி..." அவன் அவள் பின் கழுத்தில் முத்தமிட்டபோது, ராணி தன் அங்கங்கள் சிலிர்த்து, பிராவின் நடுவில் அமுங்கி கிடந்த மார்புகளில் வியர்த்து, தன் முலைக்காம்புகள் வீங்கி அளவில் நீள, அடிவயிறு குழைந்து நெகிழ, தொடையிரண்டும் நடுங்கி, உடலும் மனமும் காற்றில் பறக்க, காதலன் தோளில் தன் தலை பதித்து, ஒரு ஆணின் அந்தரங்கமான முதல் தொடுகையில், தன் பெண்மை கசிய, சினிமாத் தியேட்டர் இருளில் விழிகள் கிறங்கினாள்.

தன் எதிர் வீட்டுக்காரி இரண்டு வரிசை தள்ளி தன் கணவனுடன் உட்க்கார்ந்திருந்தது அவள் கண்களுக்கோ, புத்திக்கோ எட்டவில்லை. எவன் பாத்தா எனக்கென்னா? மனதில் ஒரு அகங்காரம் வந்துவிட்டிருந்தது. உடலில் பயம் விட்டுப்போயிருந்தது. இவர்கள் இருவரின் அண்மையைப் பார்க்கும் அவள் தோழிகளின் ஏக்கம் கலந்த பொறமைப் பார்வை, காதலனின் நெருக்கத்தைவிட, அவன் தொடுகையை விட அவளுக்கு அதிகமான இன்பத்தை அளித்தது.

ராணியின் காதல் வாழ்க்கை இனிமையாக அசைந்து, கண் சிமிட்டி, கைகளை ஆட்டி, சிரித்து, அழுது, குப்புறக் கவிழ்ந்து, தவழ்ந்து, முட்டி போட்டு, மெல்ல எழுந்து உட்க்கார்ந்து, தட்டு தடுமாறி சுவர் பிடித்து ஊர்ந்து, பிறகு நிமிர்ந்து நடந்து, ஓடத்தொடங்கும் குழந்தையைப் போல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.

கல்லூரி படிப்பு முடியும் நேரத்தில், அவள் காதல் விஷயம் ஊரில், ஆற்றோரத்தில், கோவில் பிரகாரத்தில், தெருமுனை குழாயடியில், டீக்கடை பெஞ்சில் அலசப்பட்டது. அரசல் புரசலாக, காற்றில் கலந்து வீட்டுக்கும் எட்டியது. 



"ராணீ என்னடி விஷயம்...? ஏன் வீட்டுக்கு தெனம் தெனம் லேட்டா வர்றே?

ராணி, மாலையில் கல்லூரியிலிருந்து, வீட்டுக்கு வருவது கொஞ்சம் கொஞ்சமாக தாமதமாக, ஒரு நாள் மாலையும் இரவும் சேரும் வேளையில், சமையலறையில் சோத்தைப் தட்டில் போட்டு மகளிடம் நீட்டிய தாய் ராஜாத்தி தன் அடிக்குரலில் சீறினாள்.

"எம்ம்மா, கிளாஸ் முடிஞ்சதும், நேத்து நான் லைப்ரரிக்கு போய்ட்டு நோட்ஸ் எடுத்துக்கிட்டு வந்தேம்மா... இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்திச்சிம்மா; நாளைக்கு கல்சுரல்ஸ் இருக்குமா... ஒத்திகைப் பாக்கணும்... ஒரு பஸ் போயிட்டா, அடுத்த பஸ் புடிச்சி வர வேணாமா?", தாயின் முகம் பார்க்காமல், சுவற்றைப் பார்த்து பொய் பேசினாள் ராணி.

"என் மூஞ்சைப் பாத்து பேசுடீ.." தாய் அறியாத சூலும் உண்டா? தன் மகளின் கண்களில் இருந்த பொய்யை அவளால் மோப்பம் பிடிக்க முடிந்தது.

"யாரோ ஒரு பையன் கூட அரசமரத்தடியில நின்னு மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கியாமே? காலேஜ் முடிஞ்சுதா... வீட்டுக்கு ஒழுங்கு மொறையா வந்தமான்னு இரு... நம்ம வூட்டுல, ஜாதியிலே இதெல்லாம் வழக்கமில்லே... தப்புத்தண்டாவா எதாவது ஆச்சின்னா... முதல்ல உன் கையை காலை ஒடைக்கப் போறது நான்தான்..!" பெற்றவள் தன் கண்களை உருட்டி விழித்து, பெண்ணின் முகத்தை நோட்டம் விட்டாள்.

"அம்மா, யாரும்மா சொன்னது இல்லாததையும் பொல்லாததையும் உனக்கு? நான் யார் கூடவும் பேசவும் இல்லே! புளி... மாங்காத் தின்னவும் இல்லே. தன் உதடுகளைச் சுழித்து, மார்பைப் குலுக்கி, புருவத்தை உயர்த்தி துடுக்காகப் பேசினாள்.

"பொய் சொன்னே... தோலை உரிச்சிடுவேன்.. மனசுக்குள்ள புளியும் மாங்காயும் தின்ற ஆசை உனக்கு அதுக்குள்ள வந்திடிச்சா?

"...."

"உன் வாயில என்னாடிக் கொழுக்கட்டையா... பெத்தவக்கிட்டவே கிண்டலா?"

"இப்ப நான் என்னா சொல்லிட்டேன்னு நீ என் உயிரை வாங்கறே?"

"சினிமாக் கொட்டையில, மேட்னி ஷோவுல உன்னை எவன் கூடவோ எதிர் வீட்டு சாந்தா பாத்தாளாமே?"

"நான் எந்தக் கொட்டாயுக்கும் போவலை... பொறாமை புடிச்சதுங்க புழுங்கி சாவுதுங்க.."

"கோயில் கொளத்தங்கரை மண்டபத்தாண்டை உன்னையும், அவனையும் ஜோடியா பாத்ததா உன் சித்தி புஷ்பா சொல்றாளே? அவளுக்கு உன் மேல என்னாடீ பொறாமை?" தாய் பெண்ணை நெருங்கி அவள் குமட்டில் குத்தினாள்.

"வலிக்குதுடீ... ஏண்டி இப்ப குத்தினே நீ" ரத்தத்தின் துடிப்பில் திமிராக எகிறியது குட்டி. தலையில் ஓங்கிக் குட்ட வந்த தாயின் கையை, எச்சில் கையால் வலுவாக தடுத்துப் பிடித்து, வகை தொகையில்லாமல் "வாடீ போடீ" என்று பெற்றவளை மரியாதையில்லாமல் எகத்தாளமாகப் பேசிப் பார்த்தது.

"அந்த பையன் நம்ம ஜாதியில்லையாமே? உன் அப்பனுக்கு தெரிஞ்சா அவனையும் வெட்டுவான்... உன்னையும் என்னையும் சேர்த்து, நடுக்கூடத்துல கம்பத்துல கட்டி, மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்திடுவான். உன் கட்டைத் துளுத்துப் போச்ச்சா? படிக்கற வயசுல படுக்கை கேக்குதா உனக்கு... தொடைக்கு நடுவுல அரிப்பெடுக்குதா?"

"இதப்பாரு... எங்கிட்ட அசிங்கமா பேசாதே..நீ ... என் அம்மாவாச்சேன்னு பாக்கறேன்.?" பதிலுக்கு சீறினாள் பெண்.

"இருட்டுல உன் தோள்ல கையை போட்டானாமே அந்த நாயி... அவன் கையை வெட்டாம விடப்போறதில்லே.. பட்டப்பகல்லே, சினிமாக் கொட்டாயில, நீ பண்ண அசிங்கத்துக்கு உன்னை என்னா பண்றதுடீ?" பெத்தவள் பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து ஆட்டி அவள் தலையை சுவற்றில் வேகமாக மோதினாள்.

"அம்மா ... என்ன அடிக்கற வேலை வெச்சுக்காதே..அப்பறம் நடக்கறதே வேற..!!" ராணி கடைசி ஆயுதமாக தாயை மிரட்டிப் பார்த்தாள்.

"இந்த வயசுல உடம்புல, அப்பப்ப கொஞ்சம் மார்ல நமநமன்னு இருக்கும், காம்புல குறுகுறுன்னு தெனவு எடுக்கத்தான் செய்யும்.. வலுவான ஆம்பளையைப் பாத்தா அடி வயித்துல பூச்சி பறக்கும்... பொட்டச்சி பொறுமையா இருக்கணும்... மனசுக்குள்ள பொங்கற ஆசையை அடக்கி வெச்சுக்கணுண்டி.. இல்லன்னா நாறிப் போயிடுவே!!"

"சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ அசிங்கமா பேசிகிட்டே போறே நீ" சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு ராணி பொய்யாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.

"ராணீ, என் கண்ணு.. நான் சொல்றதைக் கேளும்மா... அந்த பையனை மறந்துடு... நம்ம வூட்டு மானத்தை வாங்கிடாதே? ஜாதி ஜனத்துக்கு முன்னாடி எங்களை தலை குனிய வெச்சிடாதே! நல்லவனா, நம்ம ஜாதிக்காரனா, வாட்டம் சாட்டமா, உனக்கேத்தவனா, நான் பாத்து கட்டி வெக்கறேன்.. அதுவரைக்கும் பொறுமையா இரு.." தாய், தன் பெண் மிஞ்சுவது தெரிந்து கொஞ்சினாள். கொஞ்சலாக பேசிக்கொண்டே அவள் தொடையை பாவாடையோடு சேர்த்து அழுத்தி கிள்ளினாள்.

"அம்மா... எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கும்மா.. அவன் நம்ம ஜாதியில்லன்னா என்னம்மா..? நான் அவனை ஆசைப்பட்டுட்டேம்மா" தாய் கொஞ்சியதும், பெண் மனதிலிருந்த ஆசையை மெல்ல கக்கியது.

"ஆசைப்பட்டவ என் கிட்டல்லா சொல்லியிருக்கணும்... ஊரு என்னா? ஜாதி என்னா? அவங்க பெருமை என்னா? சிறுமை என்னான்னு விசாரிச்சிருப்பேன்ல்லா... அதை விட்டுட்டு அசிங்கம் பண்ணலாமா?"

"அப்படி என்ன அசிங்கம் பண்ணிட்டேன் நான்.. திருப்பி திருப்பி நீ ஏன் என்னை அசிங்கமா பேசறே?"

"அசிங்கமா நான் பேசறனா...! ஏண்டீ... நீ காலேஜ் டூர் போன எடத்துல, ராத்திரி பண்ணண்டு மணி வரைக்கும் நீயும், அவனும் ரெண்டுபேருமா எங்கடீ இருந்தீங்க? உன் கூட வந்தவளுங்க சொல்லி சொல்லி சிரிக்கறாளுங்களே? கோவிலுக்குப் போன எடத்துல தலை குனிஞ்சு நின்னேண்டீ நான் இன்னைக்கு? உன்னைப் பெத்த வயித்தில பெரண்டையைத்தான் வெச்சி கட்டிக்கணும் நான்..!!?

"எந்த பொறுக்கி முண்டை சொன்னா... உங்கிட்ட?" தாய்க்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, இனி பொய்யாக நடிப்பதில் பலனில்லை என்று புரிந்ததும், ராணி வேர்த்து விறுவிறுத்துப் பேசினாள்.

"ஏண்டி...ராணீ.. நீ அவனுக்கு மொத்தமா உன்னை அவுத்துக் காட்டிடலையே?" கேட்ட ராஜாத்தி, பெண்ணின் வாய் ஓங்குவது கண்டு, பொறுக்கமுடியாமல் பளீரென பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். ராணியின் கன்னம் சிவந்து, நாலு விரல்களின் பதிவு பளிச்செனத் தெரிந்தது.

"என்னை நீ அடிச்சுக் கொல்லுடீ... எனக்கு கவலையில்லே... ஆனா உன் காது குளிர நல்லாக் கேட்டுக்க... டூர் போன அன்னைக்கு நானும் அவனும் அவுத்துப் போட்டுட்டு ஒண்ணாப் படுத்துக்கிட்டோம். என்னான்னா பண்ணோம்ன்னு கேக்க ஆசையா உனக்கு? உனக்கு தெரியாத ஒண்ணையும் நாங்க புதுசாப் பண்ணிடலே..." தாயின் ஆதங்கம் பெண்ணுக்குப் புரியவில்லை. இளம் ரத்தம், என்னப் பேசுகிறோம் என்ற அர்த்தம் புரியாமல் பதிலுக்கு கூவியது.

"மானம் கெட்டவளே... உனக்கு என்னாத் திமிர் இருந்தா, பெத்தவ கிட்டவே நீ இப்படி பேசிப்பாப்பே? உன் வாயைக் கிழிக்கறேன்... புலியாக உறுமியவள் பாய்ந்து பெண்ணின் கன்னங்களை பிடித்து திருகி கிள்ளிய ராஜாத்தி, தரையில் மல்லாந்து கிடந்த ராணியை இடுப்பில் எட்டி எட்டி உதைத்தாள்.

"அடிடீ நீ... ஒதைடீ நீ என்னை... உன்னால ஆனதை நீ பாத்துக்கோ... நான் அவனைத்தான் கட்டிக்குவேன்...இல்லேன்னா வெஷத்த குடிச்சிட்டு சாவுவேன்..." வெறியுடன் எழுந்து கத்திக்கொண்டே சோற்றுத் தட்டை எடுத்து தாயின் மேல் வீசி அடித்தாள் ராணி.

"சோத்தையாடி வீசி எறியறே.. அதுவும் பெத்தவ மூஞ்சியில அடிக்கிறியா? இதுக்கா உன்னைப் பெத்து வளத்தேன்... இந்த சோத்துக்காவத்தான் என் புருஷன் ராத்திரி பகலா ஒழைச்சிட்டு வர்றான்... உனக்கு அவ்வள கொழுப்பாடீ... ஆணவமாடீ... சிறுக்கி நாயே.."

தாய் மூலையில் கிடந்த, சாக்கடை கழுவும் தென்னம் தொடப்பத்தை எடுத்து, கழுத்து, முதுகு, முகமென்று பார்க்காமல், ராணி எழுந்து ஓட ஓட, சமையலறைக்குள்ளேயே, அவளைத் துரத்தி துரத்தி அடித்தாள்.

"நான் இப்பவே அவன் கிட்டப் போறேன்... உங்களால என்னப் பண்ண முடியுமே பண்ணிக்கடீ நீ.."

ராணி தன் புடவை நழுவ, உதட்டில் ரத்தத்துடன் எழுந்து புறக்கடை வழியாக வீட்டுக்கு வெளியில் ஓடினாள். அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த ராணியின் தம்பி பழனி, நடப்பது என்னவென்று புரியாமல், அவிழ்ந்த புடவையோடு ஓடும் தன் அக்காவை கட்டிப்பிடித்து, தரதரவென வீட்டுக்குள் இழுத்து வந்தான்.

"பழனீ அவளை வெட்டுடா... உன் அக்கா மானம் கெட்டுப்போயிட்டா, அந்த சிறுக்கி இனிமே உசுரோட இருக்கக்கூடாது. அந்தப் பொட்டை நாயை அடிச்சேக் கொல்லுடா..." ராஜாத்தி குரலெடுத்து கூவீனாள்.


"அண்ணீ... உங்களுக்கு என்னா பைத்தியமா புடிச்சுப் போச்சு...வயசுக்கு வந்த பொண்ணைப் போட்டு இப்படி அடிக்கிறீங்களே...! அறியாத வயசு.. ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிடாப் போறா அவ...! அவ எது பண்ணாலும் நஷ்டம் நமக்குத்தான். நம்ம வூட்டு மானம்தான் காத்துல பறக்கும்..!"

பக்கத்து வீட்டிலிருந்து ராஜாத்தியின் நாத்தனார் பாக்கியம், தன் அண்ணன் வீட்டிலிருந்து திடீரென எழுந்தக் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தவள், சாமியாடிக்கொண்டிருந்த தன் அண்ணி ராஜாத்தியை வளைத்துப் பிடித்துக்கொண்டாள். துடைப்பத்தை அவள் கையிலிருந்து பிடுங்கிப் போட்டாள்.

உடலெங்கும் எழுந்த வலியை விட, தன் தாய் தன்னை இப்படி ஓட ஓட தொடப்பத்தால் அடித்தாளே, அதை தன் அத்தை பார்த்துவிட்டாளே என்ற அவமானம் பொறுக்காமல், ஓவென்று கூடத்தில் படுத்து புரண்டு அழுதுக்கொண்டிருந்த ராணியை எழுப்பி, ஆதுரத்துடன் அணைத்து தன் வீட்டுக்குள் இழுத்துச் சென்றாள் பாக்கியம்.


சுகன்யா... 48

கதிரவன் சிவந்து பழுத்த ஆரஞ்சாக மாறிவிட்டிருந்தான். மாலை வெயில், செவ்வரளியை அரைத்து வானவீதியில் தெளித்தது போல் ஆகாயம் செப்புத் தகடாக தகதகத்துக் கொண்டிருந்தது. மேகப்புள்ளிகள் நீல வானத்தில் கோலமாக மாறியிருந்தன. மூர்க்கனும் இப்படிப்பட்ட இயற்கையழகில் ஒரு நொடி தன் மனதைப் பறிகொடுத்து நிற்பான்.

மனைவி, மகனுடன் ஏற்பட்ட விவாதத்தால், அவர்களிடம் கொண்ட கோபத்தால், மனதில் விளைந்த விரக்தியால், நல்லசிவத்தின் களைத்த மனமும், உடலும், வீசிய மேலைக் காற்றின் மெல்லிய குளுமையை உணரமுடியமால், தெருவில் இலக்கில்லாமல், இடிந்த மனதுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

எனக்கு வாய்ச்சவளும் சரி; பொறந்ததும் சரி; ரெண்டுமே ஏறுமாறா இருக்கே! என்னப் புண்ணியம் பண்ணியிருந்தா இப்படி ஒரு புள்ளையை நான் பெத்து இருப்பேன்? பெத்தவளாவது, தான் பெத்தது கழுதையா இருக்கேன்னு, புத்தி சொல்லி திருத்தியிருக்கணும்! எல்லாம் என் தலையெழுத்து!


ம்ம்ம்... புள்ளை பாடற பாட்டுக்கு, என் பொண்டாட்டியும் எதையும் யோசிக்காம ஏன் கும்மி அடிக்கறா? பாசங்கற பேர்ல, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு, எதுக்கெடுத்தாலும் செல்லம் குடுத்து, தன் புள்ளையைத் தீவெட்டித் தடியனா வளத்து, கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்கா!

என் புள்ளை நல்லா படிச்சிருக்கான்... ஏட்டு சுரைக்கா கூட்டுக்கு உதவாதே? நல்ல வேலையில இருக்கான்... கை நெறைய சம்பாதிக்கறான்... ஆனா இதெல்லாம் மட்டும், முழுமையான வாழ்க்கைக்கு போதுமா? சம்பத் யாருக்கும் மரியாதை குடுக்கத் தெரியாம, டிஸிப்ளீனே இல்லாம, வளந்து இருக்கானே? பெரியவங்கக்கிட்ட பணிவுங்கறது இல்லையே? பெண்ணை மதிக்கத் தெரியாதவன் குடும்ப வாழ்க்கையில நிம்மதியா எப்படி இருக்கமுடியும்?

சொந்தம், பந்தம், ஒறவு மொறைகளை மதிச்சு, அவங்களோட ஒத்து வாழணும்ங்கறது இல்லாம, என்னை மதிக்கற ஒரு எடத்துலயும், குட்டி நாய் கொலைச்சு பெரிய நாய் தலையில வந்து விடிஞ்ச கதையா, துக்கத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்கறதுக்கு எனக்குன்னு இருக்கற ஒண்ணு, ரெண்டு சொந்தக்காரங்க வீட்டுக்குள்ளவும் நுழைய முடியாதபடி, இப்படி ஒரு தப்பான காரியம் பண்ணிட்டு வந்திருக்கானே? இதை நான் எப்படி சரி பண்ணப் போறேன்?

ஒரு அப்பனா, ஒரு புருஷனா, இவங்க ரெண்டு பேரும் நான் சொல்றதுல இருக்கற நியாயத்தை புரிஞ்சுக்கலை. என்னை எதுக்கும் உதவாதவனா நெனக்கறாங்க; செல்லாத, கிழிஞ்சிப் போன, கரன்சி நோட்டா நடத்தறாங்க,! இந்த வீட்டுல நான் ஏன் இருக்கேன்?

என் புள்ளை எனக்கு இன்னைக்கு சட்டம் சொல்லிக்கொடுக்கறான்... என் கையால தாலி கட்டிக்கிட்டவளுக்கு என் பேச்சு புரியலை. புள்ளை பக்கம் சாய்ஞ்சு நிக்கறா... எனக்கு என் புள்ளை மேல ஆசையில்லே; பாசமில்லேன்னு நெனக்கிறாங்க... என் புள்ளையை நாலு பேரு நல்லவன்னு சொல்லணும்... அதுதானே ஒரு அப்பனுக்கு பெருமை... இந்தச் சின்னவிஷயம் இவங்க ரெண்டு பேருக்கும் புரியலையே?

ராணி சொன்ன மாதிரி இவன் கல்யாணத்தை சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு, மனசுக்கு திருப்தியில்லாத ஒரு வாழ்க்கையை இந்த வீட்டுல வாழறதை விட, எங்கேயாவது கண்ணு மறைவா, ஹரித்துவார்... ரிஷிகேஷ்ன்னு நடையைக் கட்டிடவேண்டியதுதான். ஆண்டவா... மனுசன் நெனக்கறது எல்லாம் நடந்துட்டா, நீ ஒருத்தன் மேல எதுக்கு? நல்லசிவத்தின் எண்ணங்கள் முடிவற்று விரிந்து கொண்டிருந்தன. 

நல்லசிவம், தன் நினைவுகளில் மூழ்கியபடி, அன்று தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தமுடியாமல், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து கொண்டிருந்தவர், காபி குடிக்கவேண்டும் என்ற நினைப்பில், கண்ணில் தென்பட்ட ஹோட்டலில் நுழைந்து மூலையிலிருந்த ஒரு டேபிளில் தலைகுனிந்து அமர்ந்தார். 

"மாமா... எப்படி இருக்கீங்க?"

உற்சாகமாக வந்த குரலைக் கேட்டு சட்டென நிமிர்ந்தார் நல்லசிவம். ரகுராமன் எதிரில் உட்க்கார்ந்திருந்தான். ராணியின் தம்பியும், ரகுவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். உறவுக்கு உறவு. நட்புக்கு நட்பு. வேலையிலிருந்து ஓய்வு பெற்று வந்ததிலிருந்து, வயது வித்தியாசம் பார்க்காத நண்பர்களாக அவர்கள் மாறி, ரகு ஊரிலிருக்கும் போதெல்லாம், இருவரும் மாலையில் ஆற்றோரமாக காலார நடப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

"ம்ம்ம்... இருக்க்க்க்கேன்..." இழுத்தார்.

"எதிரில்ல உக்காந்து இருக்கறது யாருன்னு அடையாளம் தெரியாத அளவுக்கு அப்படி என்ன பலமான யோசனை?" 

"சாரிப்பா... கும்பிடப் போன தெய்வம் நீ குறுக்க வந்துட்டே.." விரக்தியாக புன்னகைத்தார். 

"மாமா என்ன சாப்படறீங்க நீங்க... உங்கக்கிட்ட சந்தோஷமான சேதி ஒண்ணு சொல்லணும்..." புன்னகையுடன் பேசினான் ரகு. 

"காஃபியைச் சொல்லு...தலை விண் விண்ணுன்னு தெறிக்குது.." குரலில் சலிப்பிருந்தது. 

"தம்பி... இன்னைக்கு என்ன... கோதுமை ஹல்வா ஸ்பெஷலா? ரெண்டு ப்ளேட் போண்டா, அதை நாங்க சாப்பிட்டதுகப்புறமா, சக்கரை கம்மியா ரெண்டு காபி குடுத்துடுப்பா... ஓ.கே" சர்வரிடம் தங்கள் ஆர்டரை கடகடவென சொன்னான். 

"மாமா... சாயந்திரம் நானே உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்... நீங்க முந்திக்கிட்டீங்க..." 

சர்வர் ஸ்வீட்டை கொண்டு வந்து இருவர் எதிரிலும் வைத்தான். இனிப்பை ரசித்து, சுவைத்து சாப்பிடும் மனநிலையில் நல்லசிவம் இல்லை. தன் வீட்டில் சொந்த மகனிடம் குற்றமிருந்ததால், அவர் உள்ளம் குறுகுறுவென்றிருந்தது. நடந்த விஷயம் இவனுக்கு தெரிந்து விட்டாதா? மனதுக்குள் நிம்மதியில்லாமல் தவித்தார். 

"மாமா... நம்ம சுகன்யாவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை, அவகூட வேலை செய்யற பையன், தமிழ்செல்வன்னு பேரு... நல்ல குடும்பம் அவனோடது, கண்ணுக்கு நெறைவா இருக்கான்; பெத்தவங்களும் தங்கமானவங்க; பசங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பங்கறாங்க; சுகன்யாவும் அவனையே பண்ணிக்கறேங்கறா; சட்டு புட்டுன்னு நிச்சயம் பண்ணிடலாம்ன்னு நெனைக்கறோம்... பெரியவங்க நீங்களும், ராணி அக்காவும், சம்பத்தோட, விசேஷத்துக்கு அவசியமா வரணும்." ரகு நிதானமாக பேசினான். 

"ம்ம்ம்...." நல்லசிவம் வாயில் வார்த்தை முழுசா வரவில்லை. 

"எங்க வீட்டு மாப்பிள்ளை குமாரும், என் அக்காவும் நாளைக்கு உங்க வீட்டுக்கே நேரா வந்து அழைப்பாங்க... தாய் மாமன் நான், உங்களுக்குத் தித்திப்பு கொடுத்து விஷயத்தைச் சொல்லிட்டேன்... என்னடா நம்ப ஃப்ரெண்டு இப்படி ரோட்டுல வெச்சு அழைக்கறானே நீங்க நெனைக்கக்கூடாது..." ரகுவின் முகத்தில் ஒரு திருப்தி இழையோடிக் கொண்டிருந்தது. 

"ரொம்ப சந்தோஷம் ரகு... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா... நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்..."

"மாமா... நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க .. நான் குறுக்குல பேசிக்கிட்டேப் போறேன்.. நீங்க கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி தெரியுது... உடம்புக்கு ஒண்ணுமில்லயே?" கரிசனத்துடன் பேசிய ரகு போண்டாவை தேங்காய் சட்டினியில் அழுத்தி மென்று தின்றுக்கொண்டிருந்தான். 

"ரகு ஒரு முக்கியமான விஷயம்... உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்." நல்லசிவம் தணிந்த குரலில் இழுத்தார். 

"சொல்லுங்க...நாமத் தனியாத்தானே இருக்கோம்..."அவன் புன்னகைத்தான்.

"என் புள்ளை சம்பத் புத்திக்கெட்டுப் போய் ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டான் ரகு... அவன் தரப்புல நான் உன் கிட்ட மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்..." நல்லசிவத்தின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்க ஆரம்பித்தது. 

"மாமா... என்னப் பேசறீங்க... என் கிட்ட நீங்க மன்னிப்பு கேக்கறதா?" ரகு சட்டென எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான். 

"ஆமாம்பா ரகு... நான் சொல்ற விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோ.. உன் குடும்பத்துல வேற யாருக்கும், எப்பவும் இது தெரியவேணாம்... ப்ளீஸ்... இது என் ரெக்வெஸ்ட்... உன் உறவா நான் இதைக் கேக்கலை. நண்பனா கேக்கிறேன். இந்த விஷயம் உன் மாப்பிளை குமாருக்கோ அல்லது சுந்தரிக்கோ தெரிஞ்சா.. நம்ம உறவுகாரங்க யார் மூஞ்சிலேயும் என்னால இனிமே முழிக்கவே முடியாது..." சொல்லிக் கொண்டே அவன் முகத்தை அதைரியமாக நிமிர்ந்து பார்த்தார். 

"மாமா ... ஏன் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க... நான் இருக்கேன்ல்லா... முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க.." ரகுவின் முகத்தில் குழப்பம் திரையிட்டிருந்தது. 

சம்பத், சுகன்யாவை காலையில் சந்திக்க சென்றதிலிருந்து, தன் வீட்டில் அதனால் நடந்த பெரிய சண்டையையும், ரகளையையும், சுகன்யாவை தன் மருகளாக்கி கொள்ளவேண்டும் என்ற தன் மனைவியின் ஆசையையும், கோபத்தில் தான் தன் மகனையும், மனைவியையும், வீட்டை விட்டே வெளியேற சொன்ன விஷயம் வரை, அவனிடம் விவரமாக சொன்னார். 

"ப்ச்ச்ச்... ம்ம்ம்ம்... நம்ம சம்பத்தா இப்படி பண்ணிட்டான்... என்னால நம்ப முடியலியே?" 

ரகு தன் தாடையை சொறிந்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் அவனுக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் பொறுமை... பொறுமை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். இந்த பக்கம் பழைய உறவு; அந்தப் பக்கம் புது உறவு... எதை விடுவது? ... எதை சேர்த்துக்கொள்வது...? 

"ரகு, இந்த பிரச்சனையை நீதான் காதும் காதும் வெச்ச மாதிரி ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... என் பிள்ளையால, அவன் பண்ண முட்டாள்தனமான காரியத்தால, வெள்ளிக்கிழமை நடக்க இருக்கற நிச்சயத்தார்த்தமோ, சுகன்யா கல்யாணமோ எந்தவிதத்திலேயும் பாதிக்கப்படக்கூடாது..." 

நல்லசிவம் உண்மையான மனவருத்தமும், குற்ற உணர்வுடனும் பேசி முடித்தவர், சட்டென எழுந்து நின்று, ரகுவின் கைகளை, மன்னிப்பு கேட்க்கும் பாவனையில் மீண்டும் ஒரு முறை பிடித்துக்கொண்டார். 

"மாமா... ஒண்ணு மட்டு நிச்சயம். சம்பத் இப்போதைக்கு வேற யார்கிட்டவும் தான் செய்ததை பேசமாட்டான்... நீங்க மொதல்ல நேரா வீட்டுக்குப் போய், ராணி அக்கா, இந்த விஷயத்தை வேற யார்கிட்டவும் பேசாம பாத்துக்குங்க. மீதியை நான் டீல் பண்ணிக்கறேன்." ரகு விறு விறுவென தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 

ஆண்டவா.. நான் யாருக்கும் இது வரைக்கும் தீங்கு நெனைச்சதில்லே... என் புள்ளையால அந்த பொண்ணோட பேருக்கு எந்த கெட்ட பேரும் வந்துடக்கூடாது... நல்லசிவம்... சுவாமிநாதனை வேண்டிக்கொண்டார். கோவில் இருக்கும் திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டவர், மெதுவாக வீடு திரும்ப ஆரம்பித்தார். 

நல்லசிவம், தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும், அவர் போவதையே சில வினாடிகள் மவுனமாக பார்த்தவாறு நின்றிருந்தாள் ராணி. மனம் ஒரு வினாடி துணுக்குற்றது. சட்டைக்கூட போட்டுக்காம வெறும் துண்டைப் போத்திக்கிட்டு கோபமா போறாரே? எங்கப் போறீங்கன்னு எப்படி கேக்கறது?

எங்கப் போயிடப் போறார்? ரயில்வே ஸ்டேஷன் வரைக்கு நடந்து போவார். மனசுல இருக்கற கோவம் தீர்ற வரைக்கும், கோவில்ல உக்காந்து இருப்பாரு... தேர் எங்க ஓடினாலும் கடைசீல தன் நிலைக்கு திரும்பி வந்துதானே ஆவணும்...! தன் மனதுக்குள் ஒரு குருட்டுத் தைரியத்துடன் தெருக்கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ராணி.

தலையை சீராக வாரி, முகத்தைக்கழுவி, நெற்றிக்கிட்டுக்கொண்டு, மாடிக்குச் சென்று வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தாள். தன் மகனுக்குப் பரிந்து கொண்டு, தன் மேல் உயிரையே வைத்திருக்கும், தன் கணவனிடம், அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், தேவையில்லாத வன்மத்துடன், குரலை உயர்த்தி, அவருடன் அன்று கூட கூடக் அனல் கக்கும் வார்த்தைகளைப் பேசியதால், அவள் மனதில் உண்டான கழிவிரக்கம் அவளை வாட்டி, வதைக்க ஆரம்பித்தது.

மாடி கட்டை சுவரில் சற்று நேரம் சாய்ந்து உட்க்கார்ந்தாள். ராணி தனக்குள் தனித்திருக்க விரும்பும் நேரத்தில் வழக்கமாக இங்குதான் உட்காருவாள். மாடி கட்டைச் சுவர்தான் அவளுடைய போதிமரம்.

ராணி, தன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதிலோ, ருசியாக சமைத்து, சரியான நேரத்தில் தன் குடும்பத்தினருக்குப் பரிமாறுவதிலோ, வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரிப்பதிலோ, எந்தக் காரியத்தையும் நறுவிசாக திட்டமிட்டு செய்து முடிப்பதிலோ, அவளிடம் ஒரு குறையையோ, குற்றத்தையோ, யாரும் கண்டுவிடமுடியாது.

இருபத்து இரண்டு வயதில் நல்லசிவத்தின் மனைவியாகி, தன் கணவனுடன் பம்பாய்க்கு சென்று, தனிக்குடித்தனம் தொடங்கிய நாள் முதல், கணவன் கொண்டு வந்த சம்பளப்பணத்தில், குடும்பத்தை சிக்கனமாக, கச்சிதமாக நடத்தி வந்திருக்கிறாள். கடன் என்று யாரிடமும், எப்போதும் தன் கணவனை அவள் கை நீட்ட வைத்ததில்லை. முன் பின் தெரியாதவர்களுக்கும், தேவைப்படும் நேரத்தில், தன்னால் முடிந்த வரை ஓடி உதவுவதில் அவள் என்றுமே பின் வாங்கியதில்லை.

தனது ஐம்பது நாலு வயதில் இன்றும் ஆரோக்கியமாக, அழகான பெண்மணியாக, பார்ப்பவர்கள் வியக்கும் வகையில், உடல் கட்டு குலையாமல் வலுவாக இருக்கிறாள். தன் கணவனுடன் தினமும், நடப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாள். நல்லசிவத்தின் தீராத உடல்ஆசைக்கும், மனவேட்க்கைக்கும், அவரின் இரவு நேர மோக விளையாட்டுகளுக்கும் இன்னும் விருப்பத்தோடு முடிந்தவரையில், குறைவில்லாமல் ஈடு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

ராணியின் ஒரே பலவீனம் அவள் பெற்றெடுத்தப் பிள்ளை. அவள் மகனை யாரும் எதற்காகவும் குற்றம் சொல்லிவிடக் கூடாது. எந்த காரணத்திற்காகவும் குறைத்து பேசிவிடக்கூடாது. அது தன் கணவனே ஆனாலும், என்னப் பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்றில்லாமல், தலைவிரி கோலமாக ஒரு ஆட்டம் ஆடிவிடுவாள். ஆடி முடித்தப்பின், தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என தனக்குள்ளாகவே வருந்துவாள். மீண்டும் ஒரு முறை இந்த தவறை செய்யக்கூடாது என அவள் எடுக்கும் முடிவு, பெண்களின் பிரசவ வைராக்கியத்தைப் போன்றதுதான்.

சாதாரண மனிதன் தன்னைத் சுற்றியிருப்பவர்களிடமிருந்து, சற்றே விலகி, அவனைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் போது, அவன் மனதின் அலையும் வேகம் மட்டுப்படுகிறது. அவன் எண்ணங்களும், சிந்தனைகளும் ஓரளவிற்கு சீராகி, பதட்டமில்லாமல் யோசிக்கத்தொடங்குகிறான். ராணியும் இந்த பொது விதிக்கு விலக்கானவள் இல்லை.

ராணி அவளுடைய போதிமரத்தடியில் உட்க்கார்ந்தவுடன், தன் கணவன் மதியம் சாப்பிடக்கூட இல்லை என்ற நினைப்பு சட்டென அவள் மனதில் எழுந்தது. "ச்சை... என்னப் பொம்பளை நான்... சமைச்சு முடிச்சதும், சூடா நான் மொதல்ல என் வயித்த ரொப்பிக்கிட்டேன். அவர் பொறுமையா சம்பத் வரட்டும்; அவன் கூட சாப்பிடறேன்னு காத்திருந்தாரு. புள்ளை வந்ததும் அவனுக்குத் தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்தவ, புள்ளைப் பேச்சைக் கேக்கற ஆர்வத்துல புருஷனுக்கு சோறு போடக் கூட மறந்துட்டேனே," அவள் செய்ய மறந்த அந்தக் காரியம் அவள் மனதின் ஓரத்தில் முள்ளாகக் குத்தி சுருக் சுருக்கென வலித்தது.

என்னைக்குமில்லாம, இன்னைக்கு எதுக்காக என் ஆம்பிளைக்கு இந்த அளவுக்கு என் மேல கோவம்? இப்படி ஒரு எரிச்சல்? என் மனசை புண்படுத்தற மாதிரி ஒரு விஷமான பேச்சை ஏன் பேசினார்? ஏன் என் பழைய கதையை ஆரம்பிச்சாரு? என் கதை தெரிஞ்ச அன்னைக்கே என்னை வீட்டை விட்டே அடிச்சு வெரட்டியிருக்கணும்ன்னு வெறுப்பா பேசினாரே? அவரு மட்டும் அப்படி பேசியிருக்கலாமா? அவரு அப்படி பேசினதுதான் என் கோபத்தை கிளப்பிடிச்சி... நானும் என் நிலை தடுமாறி, என் புள்ளை எதிர்ல தலை குனிஞ்சுடுவோமோங்கற பயத்துல அவரைத் தாறுமாறாப் பேசிட்டேன்.

மனுஷனோட முதல் எதிரி அவனுடைய பயம். எப்பவும் அவன் ஏன் இன்செக்யூர்டா ஃபீல் பண்றான்? அவனால் உண்மையை ஏன் எதிர்கொள்ள முடிவதில்லை. அவன் ஏன் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்கிறான். ராணிக்கு மூச்சு அடைப்பது போலிருந்தது. அவள் தன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக்கொண்டாள். இறுக்கமாக அவள் அணிந்திருந்த தன் ரவிக்கையை தளர்த்திக்கொண்டாள்.

ராணி, உன் புருஷன் க்ளியரா சொன்னான்ல்ல... பொம்பளை சாபம் சும்மா விடாதுன்னு...! அது சரியானப் பேச்சுத்தானே? உன் புள்ளைப் பண்ணத் தப்பு உனக்குப் புரியலியா? உன் புள்ளை கூட நீ ஆமாம்... ஆமாம் போட்டுக்கிட்டு இருந்தே; அது அவருக்குப் பிடிக்கலை. அதனால அவருக்கு கோபம் வந்துடுச்சி.... என்னைக்காவது, எதுக்காவது இப்படி கோவபட்டிருக்கானா உன் புருஷன்.

உன்னை மாதிரி ஒரு பொண்ணு நல்லா இருக்கணும்ன்னுதானே இன்னைக்கு அவன் கோவப்பட்டான். உன் புள்ளையால ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில பிரச்சனை எதுவும் வந்துடக்கூடாதுன்னுதானே கோவப்பட்டான். உன் தப்பை நீ ஒத்துக்கடி. பொய் இருக்கற எடத்துலதானே பயம் இருக்கும்.

சுகன்யாவும், அவன் காதலனும் க்ளோஸா இருக்கறதை, கண்ணால உன் புள்ளை பாத்தது இல்லே; காதால கேட்டதுதான். அவங்களோட நெருக்கம் எந்த அளவுக்குன்னு உன் புள்ளைக்குத் தெரியாது. ஆனாலும் அவன் சுகன்யாவை எச்சை எலைன்னு திட்டினான். அப்படி சுகன்யாவை அவன் அவதூறாக பேசினதை உன் புருஷனால பொறுத்துக்க முடியலே. நீயும் ஒரு பொம்பளைதானே, உன்னைக் குத்தம் சொன்னா உன்னால பொறுக்க முடியுமான்னு உன்னை டெஸ்ட் பண்றதுக்கு உன் பழையக் கதையை அவர் கிளறிட்டாரு.

உனக்கும் உன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதலன் இருந்திருக்கான். இதை நீ எப்படி மறந்தே? நீயும் அவனோட நெருங்கி பழகியிருக்கே! உங்க நெருக்கம் உன் வீட்டுக்குத் தெரியும். ஆனாலும் உன் காதல் விஷயத்தை மறைச்சு உன் அப்பனும் ஆத்தாளும், தங்க குடும்ப கவுரவுத்துக்காக, உன் ஜாதியைச் சேர்ந்த நல்லசிவத்துக்கு உன் விருப்பத்துக்கு மாறா, உன்னைக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க... இதெல்லாம் பொய்யா? இல்லாத எதையும் உன் புருஷன் புதுசா சொல்லிடலையே?

சுகன்யாவை எச்சை எலைன்னு, அவளுக்கு எந்தவிதத்துலேயும் சம்பந்தமேயில்லாத உன் பையன் சொல்றானே? நீ மட்டும் என்னடி? உன் கதை அவனுக்கு தெரிஞ்சா அவன் உன்னை என்னன்னு சொல்லுவான்? இதை வாயை விட்டு வெளிய சொல்லாம உன் புருஷன், உனக்கு மட்டும் புரியற மாதிரி சிரிச்சிட்டு வெளியில எழுந்து போயிட்டாரு.

உன் புள்ளை உன் லைப்ல ஓடற "தனி ட்ராக்கை" பத்தி கேட்டானே அவனுக்கு என்னப் பதில் சொல்லப்போறே? அவள் மனம் அவளைப் பார்த்து நகைத்தது. 



ராணியின் மனம் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தது. உன் புள்ளைக்கு, அவன் வீட்டுக்கு வந்தவுடனே அவன் மூஞ்சி பாத்து சோறு போட்டியே? உன் புருஷனுக்கு இன்னைக்கு சோறு போட்டியா? உன் புருஷன்தானேடி உன் புள்ளையை உனக்கு கொடுத்தான். விதையை வெதைச்சவன் அவன். அவனோட வீரியமான விதையை மறந்துட்டே நீ. அந்த விதையிலேருந்து வந்த செடியைப் புடிச்சிக்கிட்டு ஏன் தொங்கறே?

செடி வலுவான மரமானதுக்கப்புறம்தான் அதுல தொட்டில் கட்டி நீ ஊஞ்சல் ஆடலாம். அந்த மரத்து நிழல்ல நின்னு நீ இளைப்பாறலாம். ஆனா, இப்ப அந்த சின்னச் செடியைச் சுத்தி ஏகத்துக்கு களை மொளைச்சுக்கிடக்கு. செடியோட இலைகளைப் பூச்சி அரிச்சிருக்கு; களையை பிடுங்கிப்போடு. செடியைச் சுத்தி அகலமா பாத்தியை வெட்டி விடு. தயங்கமா பூச்சி அரிச்ச எலையைக் கிள்ளிப்போடு. உன் புருஷன், நல்ல பூச்சி மருந்தா வாங்கி தெளிக்கச் சொல்றான். அவனைப் புரிஞ்சுக்கோ.

உன் புருஷன் வெதைச்ச விதையில மொளைச்ச செடி மேல அவனுக்கு அக்கறை இல்லையா? உன் புருஷன் சொல்றதை கேளு. அவன் ஒரு நல்லத் தோட்டக்காரன். தோட்டக்காரன் சொல்றதை நீ இப்ப கேக்கலன்னா, உன் செடி அழுகிப் போயிடும்.
மரத்து நிழல்லே நிக்கணும்ன்னு நீ ஆசைப்படறியே, ஆனா உன் செடியே அழுகிட்டா, நீ மரத்துக்கு எங்கப் போவே? இந்த வயசுல உன்னால ஒரு புது வெதையை உன் நிலத்துக்குள்ள வாங்கி ஒரு செடியா மாத்த முடியுமா?

ராணீ... உன் புத்திரப் பாசத்தை மனசுக்குள்ள பொதைச்சு வெச்சுக்கோ. உன் மனசை கல்லாக்கிக்கிட்டு, உன் புள்ளைக்கு உருப்படற வழியைச் சொல்லிக்கொடு. அவன் மனசுல இருக்கற தாழ்வு மனப்பாண்மையை வேரோட புடுங்கிப் போடு. உன் தாயும் ஒரு பெண்தான்னு சொல்லு. அவளுக்கும் ஒரு காதல் கதை இருக்கு. காதலிச்சவங்க எல்லாம் எச்சை எலைன்னா, இந்த உலகத்துல சுத்தமான இலையே இல்லேன்னு சொல்லு. பெண்மையை மதிக்க சொல்லிக்கொடு. அவள் மனசை புரிந்து கொள்ள கத்துக்கொடு.

ஒரு பொண்ணு இல்லன்னா என்னா? ஊரு ஒலகத்துல வேற பொண்ணே இல்லையா? உன் புள்ளைக்கும் நல்லா பொண்ணு கிடைப்பா. உன் புருஷன் உன் விஷயம் தெரிந்த பின்னும் உன்னை மதிச்சான். உன் கூட முப்பத்து ரெண்டு வருஷமா வாழறான். உன் புள்ளை உன் புருஷனைப் போல பெண்மையை மதிக்கத் தெரிந்த மனுஷனா முதல்ல மாறணும். அதுக்கு நீதான் பொறுப்பேத்துக்கணும்.

ராணி தெளிவுடன் யோசிக்க ஆரம்பித்தாள். சரி.. சரி... என் புள்ளையை விடு... என் புருஷன் இன்னைக்கு பேசின பேச்சு அவரோட மனசுலேருந்துதான் வந்திருக்குமா? கண்டிப்பா இருக்காது! என் புருஷனைப்பத்தி எனக்குத் தெரியாதா? அவன் மனசு பத்தரை மாத்து தங்கமாச்சே! அவனைத் தனியா விட்டா, தாகத்துக்கு குடிக்கறதுக்கு ஒரு சொம்பு வென்னீர் வெச்சுக்கத் தெரியாது. அவனை நான் விட்டுட்டு போறதா? அது இந்த ஜென்மத்துல இல்லே.

என் புருஷன் ஒரு கொழந்தை. இன்னைக்குத்தான் ஊரெல்லாம் கேட்டரிங்க் சர்வீஸ் வந்துடுச்சி. சோத்துக்கு பஞ்சமில்லே. போன்ல சொன்னா மூணு வேளையும் வீட்டுக்கு கொண்டாந்து குடுத்துட்டுப் போயிடுவான். அவனுக்கு வயித்துப்பசி அடங்கிடும். அதுக்காக என்னை வீட்டை விட்டுப் போன்னு அவன் சொல்றதா? பொண்டாட்டிங்கறவ சோறு பொங்கிப் போடத்தானா?

அடியே ராணி... உன் புருஷனைப் பத்தி உனக்குத் தெரியாதாடி? நீதான் வேணும்ன்னு உன்னைக் கட்டிக்கிட்டானே? அவன் உன் மேல வெச்சிருக்கற ஆசையைப் பத்தி உனக்கு வேற யாராவது சொல்லணுமா? ஒரு செகண்ட் உன் மூஞ்சி சோர்ந்துப் போனா, அவன் துடிக்கற துடிப்பு உனக்குத் தெரியாதா? நீ சோறு தின்னாம அவன் என்னைக்காவது தின்னு இருக்கானா?

ராத்திரிக்கு என்ன பண்ணுவான் அவன்? உன் புருஷனால உன் ஒடம்பு சூடு இல்லாம ஒரு ராத்திரி தனியா தூங்க முடியுமா? அவனுக்கு உடம்பு இன்னும் தளரல! இன்னைக்கும் அவன் ஆடற ஆட்டத்துல நீ அசந்து போய் கிடக்கறே? அவன் போடற ஆட்டத்துக்கு நீ மனசுக்குள்ள இன்னும் ஏங்கிப் போறே? மனசுல உன் மேல இருக்கற ஆசை அவனுக்கு அடங்கலை. அவன் ஒடம்பு பசியைத் தீத்துக்க இந்த வயசுல எங்க போவான்? பொண்ணு ஒடம்புக்கு அவன் எந்தக் கடையில ஆர்டர் குடுப்பான்?

பழசெல்லாம் மொத்தமா மறந்துட்டியா நீ? உனக்கு கல்யாணமாயி, உங்க சாந்தி முகூர்த்தத்தன்னைக்கு, உன்னை ஆசையா கட்டிப்புடிச்சவனை, என்னைத் தொடாதேன்னு சொன்னியே, அவன் உன்னை உன் விருப்பமில்லாம திரும்பவும் தொட்டானா? ரெண்டு வாரம் கழிச்சி, புடவையை அவுத்துட்டு, பாவாடையும், ரவிக்கையுமா, சுவத்தைப் பாத்து தூங்கினவன் முதுகோட, நீ ஒட்டிக்கிட்டப்பத்தானே அவன் உன் மேல கை வெச்சான்? இவனை மாதிரி ஒரு நல்ல புருஷன்கிட்ட கோபப்படறீயே? உனக்கு இது அடுக்குமா?

அது போவட்டும்... சம்பத்துக்கு எட்டுவயசாகும் போது, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த உன் பழைய கதை தெரிஞ்சன்னைக்கு, தன் மனசு நொந்து போய், இனி உன்னை நான் தொடமாட்டேன்னு ஆறுமாசம், முழுசா ஆறு மாசம், ஒரே ரூம்ல நீ கட்டில் மேல படுத்து கெடக்க, அவன் தரையில பாய்ல கிடந்து உருண்டானே தவிர, ஒரு நாளாவது அவனா வந்து உன்னைத் தொட்டு இருப்பானா? நீயா போய் அவன் மேல விழுந்து, நீ இல்லாம என்னால உயிரோட இருக்க முடியாதுன்னு அழுததுக்கு அப்புறம்தானேடி உன்கூட அவன் திரும்பவும் படுக்க ஆரம்பிச்சான்! அப்படிப்பட்டவன் உன்னை வீட்டை விட்டு தொரத்திடுவானா?

இத்தனை வயசுல எவளையாவது கண்ணெடுத்துப் பாத்துருப்பானா அவன்? நீயே வேணுமின்னே அப்பப்ப அவனை வம்பு பண்ணாலும், ஆசையா அவனை உனக்காக, உன் நெருக்கத்துக்காக தெரிஞ்சே துடிக்க வெச்சாலும், எத்தனை நாள் ஆனாலும், ஏக்கத்தோட உன் முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தானே நின்னான்? எவ பின்னாலயாவது போனானா? இன்னைக்கும் உன் பின்னாலத்தானே நிக்கறான்?

உன்னை விட்டுட்டு, ஒரு நாள் தனியா இருந்துட முடியுமா உன் புருஷனால? ஒரே ஒரு நாள்; தன் காலைத் தூக்கி உன் மேல போட்டுக்க நீ பக்கத்துல இல்லன்னா, ராத்திரி பூரா விட்டத்தைப் பாத்துக்கிட்டு தூங்கமா இருக்கற ஆளு உன் புருஷன்... உன்னை வீட்டை விட்டு தொரத்திடுவானா அவன்...? ஏதோ கோபத்துல அவன் பேசினப் பேச்சைக்கேட்டு, பொறுமையா இல்லாமே, அப்ப நீயும் குணம் கெட்டுப் போய் குதிச்சே? இப்ப குழம்பிக்கிட்டு நிக்கறே! நீதான் அவனை விட்டுட்டு போகமுடியுமா? அவனாலத்தான் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா?

"சரி.. இப்ப நான் என்னப் பண்ண... அதைச் சொல்லு நீ" ராணி தன் மனதிடம் கேட்டாள்.

"காலையில பிஞ்சி கத்திரிக்கா வாங்கினீயா?"

"ஆமாம்...."

"கத்திரிக்காயை நீள நீளமா வெட்டி, அவனுக்கு புடிச்ச மாதிரி தண்ணியே விடாம பக்குவமா எண்ணையை விட்டு வதக்கிடு..."

"ம்ம்ம்..."

"கூடவே, உப்பு ஒரைப்பா, தக்காளியை வதக்கி, கொத்துமல்லித்தழையை தூவி, புளியைக் கம்மியா கரைச்சு விட்டு, மிளகு ரசம் பண்ணிடு..."

"பண்ணிடறேன்... அப்புறம்.."

"ராத்திரிக்கு வாய்க்கு ருசியா அவனுக்கு சோத்தை ஆக்கிப் போடு... பக்கத்துல உக்காந்து அவன் வயிறுப் பாத்து பாத்து பரிமாறுடீ. அப்புறம் பாரு கதையை..!!

"அப்புறம் என்ன்னா கதை?

"ஆமாம்... நீ ஒண்ணும் தெரியாத பாப்பா... மூடுடீ உன் பெட் ரூம் கதவை டைட்டா... உனக்கு அதுக்கு மேல என்னப் பண்ணணும்ன்னு நான் சொல்லித்தரணுமா?"

ராணியின் மனசு அவளை கிண்டலடித்து உரக்க சிரித்தது. எழுந்துப் போய் வேலையைப் பாருடி.. முதலில் அவளை எள்ளி நகையாடிய அவள் உள்ளமே, நல்லசிவத்தைச் சமாதானப்படுத்த வழியும் சொல்லியது.

என் புருஷனுக்கு பணத்து மேல ஆசையில்லே. இருக்கற எடத்துல, வந்த ரிடையர்மெண்ட் பெனிஃபிட்ஸை போட்டு, கீழ ஒரு போர்ஷன், மேல ஒரு மாடி போர்ஷன்னு, அழகா ஃப்ளாட் கட்டுங்கன்னு சொல்றேன். அதுபாட்டுக்கு வாடகை வந்துகிட்டு இருக்கும். அதுல அவருக்கு ஆசையில்லே. மனை வாங்கிப்போடுங்க மாமாங்கறான் என் தம்பி. அதுல இன்ட்ரெஸ்ட் இல்லே. கோல்ட்ல இன்வெஸ்ட் பண்ணலாங்கறான் என் புள்ளை. புள்ளை சொல்றதை என்னைக்காவது கேட்டாத்தானே? அதுலயும் ஆசையில்லே.

ஆனா மனுஷனுக்கு இந்த சதை ஆசை மட்டும் போவலையே? என் மாரைப்பாத்துத்தான் மயங்கி நின்னேன்னு இன்னும் சொல்றானே? அப்படி என்னா இருக்கு இந்த சதையில?இந்த ஒரு ஆசைதான் என் புருஷனை இந்த பூமியில கட்டி போட்டு வெச்சிருக்காப்ல இருக்கு. இதுவும் இல்லைன்னா வாழறதுதான் எதுக்கு? ஆசையில்லாதவன் யாரு? ஒவ்வொருத்தனுக்கு ஒரு ஆசை.

என் புருஷனுக்கு என் ஒடம்பு மேல தீராத ஆசை. என் அருகாமை அவனுக்கு சொர்க்கம். என் நெருக்கம் அவனுக்கு அமிர்தம். இந்த ஒரு ஆசை இருந்துட்டு போவட்டுமே. கையில பணம் இருக்கு. உடம்புல தெம்பு இருக்குன்னு... ஊர் மேயப் போவாம... என் புருஷன் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட என் காலைத்தானே சுத்தி சுத்தி வர்றான். என் கிட்டத்தானே தன் ஆசையை தீத்துக்க வர்றான். என் ஒடம்பும், மனசும் ஒத்துழைக்கறவரைக்கும் அவன் ஆசையை நான் சந்தோஷமாத் தீத்துட்டுப் போறேன்.

எனக்கு மட்டும் ஆசை விட்டாப் போச்சு? பின்னாடி நின்னு என் இடுப்பை வளைச்சு, என்னை அவன் இறுக்கிக் கட்டும் போது என் மூச்சே நின்னு போவுது. அப்படி ஒரு இறுக்கு இறுக்கறான். தன் மார் மேல என்னை அள்ளிப்போட்டு, ஆசையா என் கன்னத்தைக் கடிச்சா, என் ஒடம்புலயும் போதை ஏறி, துடிச்சுத்தானே போறேன். அதுக்கப்பறம் முழுசா ஒரு ஆட்டம் போட்டாத்தானே எனக்கும் தூக்கமே வருது!



ஹாங்... ஆமாம்... என் புருஷன் கோவத்துக்கு காரணம் என்னான்னு இப்பத்தான் புரியுது! நான் ஒரு புத்தி கெட்டவ... இதை மறந்தே போயிட்டேன். சம்பத் லீவுல வந்திருக்கானேன்னு, அவனைப் பாக்க வந்த என் தம்பி குடும்பம் நேத்துதானே ஊருக்கு திரும்பி போனாங்க. நாங்க ஒண்ணாப் படுத்து தூங்கி ஒரு வாரம் ஆச்சு.

என் புருஷன் செகண்ட் ஷோ பாத்து முழுசா ஒரு வாரம் ஆகிப்போச்சுல்லே. அதான் என் கொழந்தைக்கு கோவமா? குருட்டுப் பூனை விட்டத்துல தாவிப் பாக்குது.. வரட்டும் ராத்திரிக்கு வட்டியும் மொதலுமா குடுத்துடறேன். நாளை காத்தாலைக்கு எல்லாம் சரியாப் போயிடும். ஒரு நமுட்டு சிரிப்பு ராணியின் இதழ்கடையில் பூத்தது. இந்த நினைப்பிலேயே அவள் பெண்மை நசநசத்தது.

ஆனாலும் தன் கணவன் பட்டினியாக இருக்கிறான் என்பதால், அவள் மனதில் தோன்றிய அதீதவலி, ராணியை விடாமல் இம்சிக்க, மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி கிச்சனுக்குள் ஓடினாள். கிச்சனில் நல்லசிவத்துக்கென மதியம் அவள் தட்டில் எடுத்து வைத்திருந்த சோற்றில் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவளையும் அறியாமல், அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ச்சே... என்ன இருந்து என்ன புண்ணியம்? பொறுமையில்லேன்னா வாழ்க்கையே நரகம்தான். இவ்வளவுக்கும் காரணம் என் அளவுக்கு அதிகமான புள்ளைப் பாசம்தானா? அவன் கையில தட்டைக் கொடுத்துட்டு, என் புருஷன் கையில இந்த தட்டைக் கொடுக்காம விட்டுட்டேனே? பாத்து பாத்து தோள்ல, மார்லேன்னு போட்டு வளத்தப் புள்ளை, கடைசீல சுகன்யாவை அவமானப்படுத்தறேன்னு, என்னையே அவமானப்படுத்திட்டானே? அவள் உள்ளம் வெம்பியது.