Monday 16 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 38

"ஸ்ஹா.." மெளனமாக ஒரு பெருமூச்சு விட்டாள் சங்கீதா.. சில வினாடிகளுக்கு பிறகு பேச தொடங்கினாள்.. "ஐ லவ் ராகவ் லைக் எனி திங்.... அவன் என் வாழ்க்கைல கிடைச்சா அவனை விட நான்தான் பாக்யசாலி, ஏன்னா அவன் என்னை அவளோ லவ் பண்ணுறான், நானும் என் வாழ்க்கைல நிறைய ஆம்பளைங்கள பார்த்திருக்கேன், ஆனா ராகவ் மாதிரி என்னை லவ் பண்ணுற ஒருத்தனை நான் பார்த்ததில்ல, இனிமேலையும் பார்க்கபோரதில்ல.. நிச்சயம் அவனை கல்யாணம் பண்ணிப்பேன் பட் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு நினைக்கிறேன்.."

"ஏன்?.. குமார் விஷயத்தை நினைச்சி சொல்லுறீங்களா?" என்று சஞ்சனா கேட்டதுக்கு மெதுவாக தலை ஆட்டினாள் சங்கீதா..

"எல்லாம் சரி ஆகிடும்கா..." - சங்கீதாவின் தோள்களில் சாய்ந்தவாறு கூறினாள் சஞ்சனா.

கார் ராகவின் இடத்தை வந்தடைந்தது.. இருவரும் உள்ளே சென்றார்கள்... தினமும் நாம் வெளியில் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், அதில் பார்த்தவுடனேயே பளிச் என்று இருக்கும் ஒரு கலையான முகம், சராசரி உயரம், ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் விதமாக சிகப்பு சட்டையும் அதற்கு கொஞ்சம்கூட (கொஞ்சமாக) மேட்ச்சிங் இல்லாத பச்சை நிற பேன்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்தான் ரகாவின் நண்பன் கார்த்திக். இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான், ஏன் எதற்கு என்று தெரியவில்லை ஆனால் சஞ்சனாவுக்கு அவனைப் பார்த்ததும் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.. கிட்டத்தட்ட சென்னை28 படத்தில் வரும் சிவா போல இருந்தான் கார்த்திக். சங்கீதா சஞ்சனாவின் அருகில் சென்று அவள் காதில் "இதுக்குதான் காலைல ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி சுத்தி சுத்தி பார்த்து டிரஸ் பண்ணியோ?.." என்று கேட்க.. பரிதாபமாய் ஒரு பார்வையைக் குடுத்தாள் சஞ்சனா..

"ஹாய்.. நீங்கதான் சங்கீதா அண்ட் சஞ்சனாவா? என் எனிமி.. அதாங்க ராகவ் நீங்க வருவீங்கன்னு சொன்னான்.." - பற்கள் தெரிய சிரித்து வரவேற்றான் கார்த்திக்.

"யேஸ்... நீங்க கார்த்திக்கா?" - என்று சங்கீதா சொல்ல "வாவ்... எப்படிங்க கண்டுபுடிச்சீங்க..." என்று மீண்டும் வசீகரமாக (பற்கள் தெரிய) சிரித்தான். "ஆமா ரொம்ப கஷ்டமான காரியம்பா..." என்று மனதுக்குள் மெளனமாக முனு முணுத்துக் கொண்டாள் சஞ்சனா..

"இதுல யாரு சஞ்சனா, யாரு சங்கீதா?" என்று காலர் ஃபிலாப் சரி செய்து கொண்டே கேட்டான்..

"ஹா ஹா.. நீங்களே சொல்லுங்களேன்..." - மென்மையாக சிரித்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா..

"நீங்கதான் சஞ்சனாவா இருக்கணும்.. கரெக்ட்?" - என்று கேள்வி கேட்டவளிடம் உடனே முகம் பார்த்து சொல்ல "எப்படி கண்டு புடுச்சீங்க?" என்று சங்கீதா ஆச்சர்யமாக கேட்டாள்..

"யு சீ... சங்கீதா இஸ் பேங்க் மேனேஜர்னு ராகவ் சொல்லி இருக்கான்... பட் உங்க முகத்தைப் பார்க்கும்போது மேனேஜரா இருப்பீங்கன்னு தோணல அதான் ஈசியா சொல்லிட்டேன்.. ஹா ஹா...." - என்று சொஃபா இருக்கையின் நுனியில் வந்து அகண்ட சிரிப்புடன் கூறினான்.. இந்த கமெண்டுக்கு சங்கீதா சஞ்சனாவைப் பார்த்து சிரித்தாள்.. சஞ்சனாவுக்கு லேசாக முகம் கடுப்பாகியது..

சற்று நேரத்துக்கெல்லாம் ராகவ் இறங்கி வந்தான்.. ஒரு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து முதல் இரண்டு பட்டன்கள் போடாமல் கார்கோஸ் பேன்ட்டுடன் தலை முடியை வாராமல் அப்படியே கலைத்தவாறு மிகவும் காஷ்வலாக வந்தான். சங்கீதாவுக்கு உண்மையில் அவனது தோற்றம் ஈர்த்தது ஆனாலும் அவன் பார்க்கும்போது வேறெங்கோ பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள். சங்கீதாவின் ஆடையைப் பார்த்து ராகவ் ஒரு நிமிடம் அப்படியே அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்று எண்ணினான், ஆனால் அருகே சஞ்சனாவும் கார்த்திக்கும் இருப்பதால் கொஞ்சம் தவிர்த்தான்.


"ஓகே ஃபிரண்ட்ஸ் லெட்ஸ் ஸ்டார்ட்.... என்று சொல்லிக்கொண்டே முந்தைய இரவு கண்ணாடி உடைந்த காரை விட்டுவிட்டு வேறொரு BMW காரை எடுத்தான்.... அதில் நால்வரும் அமர்ந்தார்கள். யாருக்கும் எங்கே செல்கிறோம் என்று சொல்லாமல் வண்டியை ஓட்டினான் ராகவ்.. ஒரு எக்ஸ்ஹிபிஷன் உள்ளே நுழைந்தது வண்டி.

வண்டியை ஓட்டும்போது ரியர் வியூ மிரர் மூலமாக சங்கீதாவின் முகத்தை அடிக்கடி பார்த்தான் ராகவ்.. அந்த கண்ணாடியிலேயே "நேரா பார்த்து வண்டிய ஓட்டு" என்று விரலை நீட்டி சொல்லாமல் சொல்லி செல்லமாய் எச்சரித்தாள் அவனுடைய சரா..

வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவு கட்டணம் கட்டி டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள் நால்வரும்.

அமைதியாய் அனைவரும் நடக்க சஞ்சனா பேச்சை ஆரம்பித்தாள். "கார்த்திக்.. எனக்கு ஒரு கேள்வி..."

"சொல்லுங்க சஞ்சனா.."

"எதுக்கு ராகவை எனிமின்னு கூப்பிடுற?"

"ஒண்ணா ரெண்டா எத்தினி விஷயத்துக்கு என்னை பகொடாவா யூஸ் பண்ணி இருக்கான் தெரியுமா?.."

பேசிக்கொண்டே ஒரு ஃபாஸ்ட் புட் சென்டர் அருகே அமர்ந்தார்கள்..

"ஒரு நாள் குவிஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனான் பாருங்க.." - அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ராகவ் சிரித்தான்.. "சிரிக்காதடா எனிமி... வலி எனக்குதான் தெரியும்..." என்றான் கார்த்திக்..

"ஹா ஹா.. அப்படி என்ன ஆச்சு... சொல்லுங்க கேட்கலாம்.." - ஸ்வாராஸ்யமாக கேட்டாள் சங்கீதா..

"டி.என்.சேஷன் சீஃப் கெஸ்டா வந்தாருங்க.. நேர்ல பார்க்கும்போது இன்னும் உர்ருன்னு இருந்தாரு. அவருக்கு பக்கத்துலதான் எங்க பெஞ்ச்... அந்த ஆளு கூட ஒரு பொன்னும் வந்துச்சி. அவருக்கு கொஸ்டீன்ஸ் எடுத்துக் குடுக்க!.. முதல் ரவுண்டு முழுக்க சைன்ஸ் பத்தி இருந்துச்சி.. ஒரு கேள்விக்கு எங்க ரெண்டு பேருக்கும் பதில் தெரியும்.. ஆனா உஷாரா உடனே என்கிட்டே இருந்து மைக் வாங்கி ரொம்ப ஸ்டைலா ஆன்சர் பண்ணிட்டான். கீழ கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் ஆடியன்ஸ் இருந்தாங்க.. எல்லாரும் ரொம்ப பலமா கைத் தட்டினாங்க.. அப்போ நான் இவனை கூப்டு அடுத்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா நான்தான் சொல்லுவேன்னு சொன்னேன்.. இவனும் சரின்னு சொன்னான்.. அதுக்கப்புறம் ரெண்டாவது ரவுண்டு.. மூணாவது ரவுண்டுன்னு கிட்டத்தட்ட இருவது கேள்வி இருக்கும்... எல்லாத்துக்கும் மைக்ல நானேதான் சொனேன்..

"வாவ்.. எல்லாத்துக்கும் நீங்களேதான் பதில் சொன்னீங்களா?" - சங்கீதா சாப்பிடுவதை நிறுத்தி ஆச்சர்யமாக கேட்டாள்..

"அந்த கன்றாவிய ஏங்க கேட்க்குறீங்க? எல்லா கேள்விக்கும் நான் ஒருத்தனே "பாஸ்" ன்னு சொன்னேங்க.. பாவிப்பய அதுக்கு மட்டும் என் கிட்ட மைக் குடுத்துட்டு அவன் கால் மேல கால் போட்டு ஸ்டைலா கூட்டத்துக்கு போஸ் குடுத்துக்குட்டு இருந்தான்."

சஞ்சனாவும் சங்கீதாவும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்....


"இதை விட மோசமா இன்னொரு விஷயம் அன்னிக்கி மேடைல நடந்துச்சிங்க.."

"ஹா ஹா... என்ன அது?.." - சங்கீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்..

"நாலாவது ரவுண்டுல முதல் கேள்வி கேட்டாங்க.. அப்போ இவங்கிட்ட காதுல மெதுவா ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேங்க.. நான் என்னமோ பதில் சொல்ல வரேன்னு நினைச்சி இவனும் சுறுசுறுப்பா என் கைல இருந்த மைக் புடிச்சிகிட்டான். அப்போ...." -சொல்ல வந்து நிறுத்தினான்...

"அப்போ... என்ன ஆச்சு சொல்லு..சொல்லு.." - சஞ்சனா மிகவும் ஆர்வமாக கேட்டாள்.

"லாஸ்ட் மூணு ரவுண்டுக்கும் நாந்தான் 'பாஸ்' சொன்னேன்... இந்த ரவுண்டு ஃபுல்லா நீதான் பாஸ் சொல்லணும்னு மெதுவா அவன் காதுல சொன்னேங்க... இந்த பாவிப் பய என் வாய் கிட்ட மைக் வெச்சி இருக்கான்னு எனக்கு தெரியல.. நான் சொன்னது ஸ்பீக்கர்ல கேட்டுடுச்சி... கீழ இருந்த ரெண்டாயிரம் பேரும் எழுந்து நின்னு கை தட்டி எங்களை அசிங்கப் படுத்திட்டாங்க..." - சொல்லி முடித்தவுடன் அவன் முகத்தில் ஒரு விதமான சோகமும் மென்மையான சிரிப்பும் கலந்து சொன்னதில் சஞ்சனவுக்கும் சங்கீதாவுக்கும் குபீரென்று சிரிப்பு வந்து விட்டது...

"அந்த ரவுண்டுலேயே அடுத்து ஒரு கேள்விய கேட்டாங்க.. கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.. அதுக்கு எல்லா டீமும் பாஸ் சொல்லிட்டாங்க... எங்க மேஜைக்கு மைக் வரும்போது நாங்கதான் நியாயமா பாஸ் சொல்லணும்... அதுக்கு பதிலா வந்த கூட்டமே கோரஸ்ஸா சேர்ந்து சத்தமா 'பாஸ்' னு கத்தி க்லாப் பண்ணாங்க...."

"ஹைய்யோ.. முடியல கா" என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து சிரித்தாள் சஞ்சனா..

"சேஷன் கூட உங்கள மாதிரிதான் சிரிச்சிட்டாருங்க... அப்புறம் அவர் கூட இருந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட்டத்தை அமைதி படுத்தி.. எங்களை மதிச்சி "உங்களுக்கு ஏதாவது பதில் சொல்லன்னுமா"ன்னு கேட்டுச்சி, கூட்டமும் கொஞ்சம் நாங்க ஏதோ சொல்ல போறோம்ன்னு நினைச்சி அமைதியாச்சு....

"க்லெடியேட்டர் நடு க்ரவுண்ட்ல நின்னுகுட்டு க்லைமாக்ஸ்ல கூட்டத்தை ஒரு நிமிஷம் பார்ப்பான்.. அந்த மாதிரி ஒரு நிமிஷம் அமைதியான அந்த கூட்டத்தை பார்த்துட்டு.... மனசுல வீரத்தை வர வெச்சிகுட்டு லேசா கண்ணுல தண்ணியோட இந்த துரோகி ராகவை சைடுல பார்த்தேன்.... திரும்பவும் நானே .... நானே..... கட்டபொம்மன் கைல வாள் எடுக்குறா மாதிரி அந்த மைக் எடுத்து...."

"ஹா ஹா.. 'பாஸ்'னு சொன்னீங்களா? ....ஹம்மா..."- சிரிப்புக்கு நடுவே சஞ்சனா பேச முயற்சித்தாள்..

'ஆமாம்...." - தலையை தொங்க வைத்து பெரும் தியாகம் செய்தது போல சொல்லி முடித்தான் கார்த்திக்..

"ஹா ஹா... கா..கார்த்திக்.. ப்ளீஸ்... கொஞ்சம் பிரேக் குடுங்க ப்ளீஸ்.. ஹம்மா.." - சங்கீதாவால் முடியவில்லை...

"இதெல்லாம் கூட பரவாயில்லங்க.... அந்த கூடத்துல என்னை லவ் பண்ண பொன்னும் வந்திருந்தா... அவ எதிர்க்க என் இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆயிடுச்சிங்க.. அவ என் கிட்ட ஒரு நாலு நாள் பேசவே இல்ல..." - மிகவும் நொந்து சொன்னான் கார்த்திக்..

"ஒஹ் னோ....சோ சேட்.." - என்றாள் சஞ்சனா..

"அப்போ இவன் எனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட ராத்திரி ஒரு நாலு மணி நேரம் ஃபோன் பண்ணி என்னவோ பேசி இருக்கான்.... காதல்னா என்ன, எப்படிப் பட்டவனை காதலிக்கணும், எப்படி எல்லாம் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கனும்னு ரொம்ப நேரமா அவ கிட்ட பேசி இருக்கான்... அடுத்த நாள் அவ என் கிட்ட வந்து... "வந்து..." - அவன் சொல்வதற்கு முன்பே சிரிக்க தொடங்கி விட்டாள் சஞ்சனா..


"சொல்ல போனா இன்னிக்கி காலைல நானே உன் கிட்ட வந்து ஃபீல் பண்ணாத, 'நடந்ததை மறந்துடு நான் உனக்கு இருக்கேன்'னு சொல்லலாம்னு நினைச்சேன்டா.... பட் நேத்து ராத்திரி ராகவ் என் கிட்ட பேசினதுல இருந்து எனக்கு உன் மேல இருக்கிறது லவ் இல்ல, வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான்னு தோணுச்சி... சாரி டா உன் மனசுல தேவை இல்லாம ஆசையா வளர்துட்டேன்... மன்னிச்சிடுடானு சொல்லிட்டா.... அது கூட பரவாயில்ல.. அதுக்கப்புறம் என் கிட்ட ஒரு லெட்டர் குடுத்து அதை இந்த துரோகி கிட்ட குடுக்க சொன்னா... நான் அவ அனுமதி இல்லாமலேயே அதை பிரிச்சி பார்த்தேன்... அதுல அந்த க்ராதாகி இவனை லவ் பண்ணுறேன்னு எழுதி இருந்தா... அதைப் பார்த்து என் பிஞ்சு மணசு எவ்வளோ கஷ்டப் பட்டிருக்கும்? - கவுண்டமணி போல அழுது புலம்பினான் கார்த்திக்..

"ஆக மொத்தத்துல பப்ளிக்கா குவிஸ் ப்ரோக்ராம்ல மானம் போக வெச்சி... காதலியை சேர்த்து வேக்குறேன்னு சொல்லி அவளை கழட்டிவிட்டுடன் இந்த எனிமி..."

"ஹா ஹா... ரொம்பவே பாவம்ங்க உங்க நிலைமை.. ஹா ஹா.." - பரிதாபப்பட்டாலும் சிரித்துக்கொண்டே இருந்தாள் சங்கீதா..

"இதெல்லாம் கூட பரவாயில்ல.. ஒரு முக்கியமான எக்ஸாம்.. எப்படியோ கஷ்டப் பட்டு பிட் அடிச்சி பாஸ் பண்ணிடலாம்னு இருந்தேன்... வெற்றிகரமா காப்பி அடிச்சி எழுதியும் முடிச்சிட்டேன்.. ஆனால் நடந்த இந்த ரெண்டு சம்பவத்தையும் நினைச்சி நினைச்சி...".. நிறுத்தினான்..

"என்ன ஆச்சு சொல்லுங்க..." என்றாள் சங்கீதா..

"வீட்டுக்கு வந்தேங்க... இந்த எனிமி ஃபோன் பன்னான்... 'எப்படி மச்சி எழுதினன்னு கேட்டான்..' இருடா கேள்வி எதுவும் நியாபகம் இல்ல.. கொஸ்டீன் பேப்பர் பார்த்து சொல்லுறேன்னு சொல்லி என் பையை திறந்தேன்.. அப்படியே அதிர்ச்சி ஆயிடுச்சிங்க...

"ஏன்?.." - என்றாள் சஞ்சனா..

"எக்ஸாம் ஹால்ல இந்த எனிமி பண்ண துரோகத்தை நினைச்சி நினைச்சி டீச்சர் கிட்ட ஏதோ நினைப்புல கொஸ்டீன் பேப்பரை குடுத்துட்டு ஆன்சர் பேப்பரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்... அந்த முக்கியமான எக்ஸாம்ல கஷ்டப்பட்டு பிட் அடிச்சும் கோட் அடிச்சிட்டேன்..." - கவலையாக இன்னமும் வலி குறையாதவிதம் பேசினான் கார்த்திக்..

"ஹாஹ்.. ஹம்மா ஹா..ஹா.." - சில நொடிகள் தொடர்ந்து சிரித்து முடித்துவிட்டு சஞ்சனா மெதுவாக அமைதியானாள்.

"எப்படி இப்படிப் பட்ட ஒரு ஆசாமிய நண்பனா வெச்சிக்குட்டு இருக்கீங்க? எனக்கென்னமோ அவன் ஆபீஸ்ல கூட இப்படி பலரை முட்டாளாக்கிதான் CEO ஆகி இருப்பான்னு தோணுது..." என்றாள் சங்கீதா..

"ஆஹா.. கரெக்டா சொன்னீங்க சங்கீதா.. கரெக்டா சொன்னீங்க..."

"அப்படியா?.... சரி நான் ஏன் இவனை வாத்துன்னு கூப்பிடுறேன்னு உங்களுக்கு கேட்கவே தோணலையா? என்று ராகவ் சிரித்துக் கொண்டே சொல்ல.. "ஆஹா.... ஆரம்ச்சிட்டியாடா" என்று முணுமுணுத்துக்கொண்டே நொந்துகொண்டான் கார்த்திக்..

சஞ்சனா "ஏண்டா அவனை வாத்துன்னு கூப்பிடுற.." என்று உற்சாகமாய் கேட்க..

"அட அதை ஏங்க கேட்க்குறீங்க?... வேணாங்க... ஃப்ரீயா விடுங்க." - நெத்தியில் முடி ஆட சீரியஸான பார்வையில் முகத்தை ஆட்டி ஆட்டி சொன்னான் கார்த்திக்..


"இன்னுமா நீ அதை கண்டு புடிக்கல" என்று ராகவ் கேட்டதுக்கு சஞ்சனா குழம்பினாள்.

"ஹா ஹா.. அவன் காலைப் பாரு.." என்று காமித்தான்.. காலின் ஹீல் பகுதியில் அவனுடைய ஷூ ஒரு அறை இன்ச்க்கு லூசாக இருந்தது. அதைப்பார்த்த உடனே வாயில் கை வைத்து மெதுவாக சிரித்தாள் சஞ்சனா..

"சின்ன வயசுல இருந்தே அவன் அம்மா அவனை அப்படி பழக்க படுத்திட்டாங்க.. எதுவுமே டைட்டா இல்லாம கொஞ்சம் லூசா இருக்கணும்னு சொல்லி சொல்லி ஷூ கூட லூசா தான் போடுவான்." பேன்ட் ஷர்ட் கூட லூசா போடலாம்.. ஆனால் ஷூவ லூசா போடுற ஒரே ஆளு இவன்தான்.. இப்படி போட்டுட்டு நடக்கும்போது அவன் காலுக்கு கீழ வர சத்தமே செம காமெடியா இருக்கும்.... அதுலயும் இந்த ஷூ போட்டு அவன் மார்ச் பாஸ்ட் பண்னான் பாரு.. ஹா ஹா.. ஒரு இண்டிபெண்டன்ஸ் டே அன்னிக்கி இவனை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க... ஹா ஹா.." - ராகவ் சொன்ன உடனே சங்கீதா "ஷூவுக்காக சஸ்பென்டா?...." என்றாள்..

"ஷூக்காக சஸ்பென்ட் பண்ணல, அந்த ஷூ போட்டு அவன் செஞ்ச ஒரு காரியத்துக்குதான் சஸ்பென்ட் பண்ணாங்க..".. அதற்க்கு சங்கீதா சிரித்துக்கொண்டே "ஹா ஹா...அப்படி என்ன செஞ்சிட்டான்.." - என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

"மச்சி.. அதை சொல்லியே ஆகணுமா?... மொத்தமா டாமேஜ் ஆயிடும்டா...வேணாண்டா..." என்று கொஞ்சலாக கெஞ்சினான்..

"ஏய்.. நீ இரு...இரு... ஹ்ம்ம் சொல்லு ராகவ்.. இட்ஸ் இன்ட்ரஸ்டிங்...." என்று சஞ்சனா கார்த்திக்கை வாயடைத்து ராகவை பேசச்சொல்ல.. ராகவ் "சொல்லிடவா மச்சீ....." என்று நக்கலாய் மெதுவாக இழுத்து சொன்னான்..

"அதான் பத்த வெச்சிட்டியே.. சொல்லித் தொல...." - என்று நெற்றியில் கை வைத்து ஒரு பக்கமாக திரும்பிக் கொண்டான் கார்த்திக்..

"ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு.. அதான் அவனே பர்மிஷன் குடுத்துட்டானே...." - என்று சங்கீதா வெளிப்படையாக கேட்க.. டக்கென கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்த்து "வாட் அன் அட்ராசிட்டி....ச்ச...." என்று சீரியஸாக(!!) ஒரு லுக்கு விட்டான்.... அதற்கும் மூவரிடமும் சிரிப்புதான் வந்தது....

"இண்டிபெண்டன்ஸ் டேக்கு எங்க ஸ்கூலுக்கு வந்திருந்த வி.ஐ.பி ஒரு பஞ்சாப் சிங்க், எங்க ஸ்கூலோட அசோசியேஷன் தலைவர்.. அவர் முன்னாடி ஒரு ஒரு ஸ்டூடன்டும் நின்னு எங்க பி.டி மாஸ்டர் 'ஆன் யுவர் மார்க்'னு சொல்லும்போது காஷ்வலா நிக்கணும்.. அப்புறம் அட்டேன்ஷன்னு சொல்லும்போது மரியாதை செலுத்தணும்.. அப்போ தலைவர் டர்ன் வந்துது.... ஹா..ஹாப்போ..ஹா ஹா... அட்டேன்ஷன்னு எங்க மாஸ்டர் சொன்னப்போ காலை வேகமா மேல துக்கி கீழ டப்புன்னு வெக்கும்போது அவன் கால்ல சாக்ஸ் இருந்துச்சே தவிர ஷூ இல்ல... எங்கடான்னு பார்த்தா சிங்கோட பெரிய தொந்தி மேல அந்தர் பல்டி அடிச்சி எகிறி போய் விழுந்திருந்துச்சி.. ஹா ஹா ஹா.." - என்று ராகவ் சொல்லி முடிக்க சஞ்சனாவும் சங்கீதாவும் சில நொடிகள் ஒன்றும் பேச முடியாமல் குனிந்து சிரித்தார்கள்....
சஞ்சனா காஷ்வலாக "you poor guy..." என்று சிரித்துக்கொண்டே சொல்ல... "அய்யய்யோ புவர் எல்லாம் இல்லீங்க.. ஊருல நிறைய சொத்து இருக்கு.." என்று சீரியசாக..அதே சமயம் வெகுளியாக சொன்ன விதத்தைப் பார்த்து சஞ்சனா "ஹாஹ் ஹா ஹா... ஹையோ... முடியலடா ராகவ்.. எங்கிருந்துடா புடிச்ச இவன...ஹம்மா.." என்று சிரித்துக்கொண்டே கார்த்திக்கின் வெகுளித்தனத்தை ரசித்தாள் சஞ்சனா..
அப்போது "சார்....", என்று ஒரு முதியவர் வந்து ராகவை அழைக்க..


அவரிடம் "எல்லாம் ரெடியா?" என்றான் ராகவ்..

சங்கீதா ஒன்றும் புரியாமல் "என்ன ரெடியா? யார் அவரு? தலை முடியை சுருட்டிக்கொண்டே மென்மையாய் சிரித்துக் கேட்டாள் சங்கீதா....

"ஏ ஸ்மால் சர்ப்ரைஸ்.. என் கூட வா.." கண் அடித்து சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. அதற்கு "சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் குடுக்குறடா நீ.." என்று புன்னகைத்துக்கொண்டே சங்கீதா ராகவுடன் சென்றாள்..

"நாங்கெல்லாம் வரக்கூடாதா?" என்று கார்த்திக் கேட்க.... "தனியா வெத்தல பாக்கு வெச்சி கூப்பிடனுமா.... எந்திரிச்சி வாடா வாத்து..." என்று சொல்லி விறு விறுவென நடந்தான் ராகவ்..

அந்த முதியவர், எக்ஸ்ஹிபிஷனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேடை இருக்குமிடத்துக்கு கூட்டிசென்றார். திடீரென ஒரு குழந்தை ஒரு கையால் ஊனி வேகமாக வந்து சங்கீதாவின் கால்களை பிடித்து தேங்க்ஸ் என்று சொல்ல அதிர்ந்து போய் என்ன இது.. எழுந்திரி.. எழுந்திரி... யார் குழந்தை இது..." என்று ராகவை ஆச்சர்யமாக பதட்டத்துடன் பார்த்தாள், இன்னொரு குழந்தை பின்னடியிருந்து அவளது மிடியைப் பிடித்து ஆட்டியது.. திரும்பிப் பார்த்தால் "இந்தாங்க ஷா.. ஸா.. சாக்குலேட்டு.." என்று கஷ்டப்பட்டு தொண்டையில் இருந்து குரலை வரவழைத்து பேசியது.. சங்கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை... "ராகவ் என்......ன நட..க்குது..." என்று ராகவிடம் கேள்வி எழுப்பும்போது அவளை சுத்தி இன்னும் பெரிய கூட்டமாக சின்ன சின்ன ஊனமுற்ற குழந்தைகள் ஓடி வந்தது.. சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை... "ராகவ் என்ன நடக்குது இங்க?..." என்று குழப்பமாய்ப் பார்க்க "ஷ்ஷ்ஷ்... பேசாம என்ன நடக்குதுன்னு பாரு...." சஞ்சனாவுன், கார்த்திக்கும் கூட ராகவ் என்ன செய்கிறான் என்று எண்ணி குழம்பி இருந்தார்கள்...

அந்த பெரியவர் சங்கீதாவின் அருகில் வந்து ஒரு பெரிய சைஸ் புகைப்படம் ஒன்றைக் குடுத்தார். அதில் கிட்டத்தட்ட பதினைந்து குழந்தைகளுக்கு ஒரு வருஷத்துக்கான சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணி போன்ற விஷயங்களுக்கு உதவியதுக்கு நன்றி என்றும், பார்வையற்ற இரண்டு பெண்களுக்கு கண் ஆப்பரேஷனுக்கு சிகிச்சை செலவும், விபத்தில் கணவனை இழந்த ஐந்து பெண்களை மறுமணம் செய்து கொள்ள தயாராய் இருக்கும் ஐந்து வாலிபர்களுக்கும் திருமண செலவுக்கு காசு குடுத்து உதவியமைக்கு நன்றி தெரிவிக்க எங்களால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு என்று சொல்லி "ராஜா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல..." என்ற பாடலுக்கு கை இல்லாத சில சின்ன குழந்தைகள் அவர்கள் கால்களால் சிறப்பாக நடனம் ஆடி சல்யூட் செய்து சங்கீதாவுக்கு நன்றியை தெரிவித்தனர். இவற்றை பார்க்க பார்க்க சங்கீதாவின் கண்கள் லேசாக பனிக்க ஆரம்பித்தன..

ஒரு பெரிய வட்டமாக அனைத்து குழந்தைகளும், பார்வயற்றவர்களும், மருமனமாகப் போகும் பெண்களும் சேர்ந்து மதிய உணவுக்கு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு "கடவுள் நேரில் அவதரிப்பதில்லை... அவர் எங்களுக்கு இந்த இனிய நாளில் அண்ணதானம் செய்ய சங்கீதா என்ற தேவதையை அனுப்பி எங்களுக்கு ஓராண்டுக்கு படிப்பும், உணவும், குடுத்து மகிழ்ச்சி அளித்தமைக்கு அவரை என்றும் எங்கள் மனதில் எண்ணி நன்றியை சொல்லுவோம்.." என்று சொல்லி முடித்ததும்.. "எப்படா பேசி முடிப்பாங்க.." என்று பார்க்க கலையாக சற்று கருப்பு நிறத்தில், தேங்காய் எண்ணை பூசி சிறிய ரெட்டை ஜடை போட்டு சிகப்பு ரிப்பன் கட்டி சாப்பாடிலேயே கண்களை குறியாக வைத்திருந்தது ஒரு இரண்டடி வளர்ந்த குழந்தை.... அது அனைவரும் சாப்பிட உட்காரும்போது சந்கீதாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தி அந்த ஒரு கனம் அந்தஅ சாப்பாடுதான் அதன் சந்தோஷ உலகம் என்பது போல் சோற்றில் கை வைத்தபோது சங்கீதாவின் கண்கள் அவளையும் அறியாமல் அழுதது..


குளமான கண்களுடன் ராகவை திரும்பிப் பார்த்தாள்... "நீ குடுத்ததா உன் பேரை எழுதி குடுத்து நான்தான் இதுக்கெல்லாம் செலவு பண்ணேன்.... நான் குடுத்தா என்ன.. நீ குடுத்தா என்ன?... ரெண்டும் ஒன்னுதானே?" - அவன் சாராவின் கண்களை துடைத்தபடி சொன்னான் ராகவ்.... எங்கே நிற்கிறோம், யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவன் தோள்களில் சாய்ந்து அனைத்துக் கொண்டாள் சங்கீதா..

மறுமணம் செய்துகொள்ளும் பெண் ஒருவள் சங்கீதாவின் அருகினில் வந்தாள்... எதற்கு வருகிறாள் என்று தெரியாமல் சங்கீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.. திடீரென அவள் கையில் ஒரு சின்ன வெள்ளை அட்டையில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் ஸ்கெட்ச் பேனா வைத்து டிசைன் வரைந்து அதற்குள் ஒரு வாக்கியத்தை எழுதி இருந்தாள். அதை சங்கீதா பார்பதற்குள் ராகவ் வாங்கி பார்த்தான். என்ன எழுதி இருக்கிறதென்று படித்த பிறகு "கொஞ்சம் பொறு.. நான் ஒன்னு தரனும்.. அதை பார்த்துட்டு இதை படி... ரொம்ப பொருத்தமா உனக்காகவே எழுதி இருக்காங்க.." என்றான்...

"நீ என்ன தரப்போற?...." - பணித்த கண்களில் மென்மையாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா..

"இதுதான்...." என்று ஒரு சிறிய சில்கி ஷைநிங் துணியால் கிஃப்ட் ராப் செய்யப்பட்டு இருந்த ஒரு சின்ன டப்பாவைக் குடுத்தான்.

சங்கீதா அதைப் பிரித்தாள்.... பிரித்தவுடன் அந்த டப்பாவில் "இது நான் என் வாழ்கையில் உனக்கு குடுக்கும் உயர்மிகுந்த பரிசு... இதை எடுத்துகுட்டா நீ எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் பெருசா குடுத்துட முடியாது"ன்னு எழுதி இருந்தது.. உள்ளே பார்த்தாள்.. அதில் குங்கும போட்டு வைத்து மஞ்சள் கட்டியில் கட்டிய தாலி கயிறு இருந்தது. அதைப் பார்த்ததும் உதடுகள் விம்மியது, அவள் ஆழ் மனதில் இருந்து சந்தோஷ கண்ணீர் அடங்காமல் வந்தது.., அழுவதற்கு முன்பே கண்னங்கள் சிவந்தது.. மனதில் ஏகத்துக்கும் எகுறிய சந்தோஷத்தில் மூச்சு வாங்கியது... உடனே ராகவின் நெஞ்சில் சாய்ந்து இன்னும் அழுத்தமாக கட்டிக் கொண்டாள். பின்னாடி இருந்து கார்த்திக்கும் "சூப்பர் மச்சி" என்று கைத் தட்டினான்... சஞ்சனாவுக்கும் இந்த இனிமையான தருணம் சந்தோஷத்தைக் குடுத்தது.., சங்கீதாவின் அருகே வந்து சந்தோஷத்தின் மிகுதியில் அழுது கொண்டிருந்தவளின் தோளில் தடவி நிமிர்த்தி பார்த்து "என் வாழ்க்கைல நான் இன்னொரு பொன்னைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுறேன்னா அது இந்த நாள்தான்கா.... நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.. ராகவ் மனசுல பொண்டாடீங்ற இடம் பிடிச்சிடீங்க... சத்தியமா உங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்...." என்று சொல்லி விட்டு அனைவரையும் சங்கீதாவின் அருகே வரும்படி செய்து "எல்லாரும் ஜோரா நம்ம சங்கீ அக்காவுக்கு சத்தமா ஒரு ஓ போடுங்க பார்க்கலாம்..." என்று சஞ்சனா சொன்னவுடன் குழந்தைகள், பெண்கள், கார்திக், சஞ்சனா, ராகவ் மற்றும் ஸ்நேஹா ரஞ்சித் உட்பட.. ராகவின் சராவுக்காக அவள் காது "ஓய்ங்" என்று சத்தம் வரும் அளவுக்கு "ஓ" என்று கத்தினார்கள்.

கூட்டம் ஒரு புறம் கத்திக்கொண்டிருக்க ராகவ் அவனது சாராவை அவளது ஒப்புதலுடன் முறைப்படி உரிமையுடன் அவளது தோளில் கைப் போட்டு தனியாக ஒரு பக்கம் நகர்ந்து மெதுவாக அவளுடன் ஜோடியாக நடந்து சென்றான்....

"ஏய்ய்.... சரா..." - தோளில் அழுத்தி தன் நெஞ்சுடன் அனைத்து அவள் கன்னத்தின் அருகில் முகம் வைத்து கூர்ந்து பார்த்தான்..

"என்னடா.... பொருக்கி புருஷா.." - அவள் கண்களில் ஈரம் மெதுவாக காய ஆரம்பித்து வெட்கம் துளிர் விட ஆரம்பித்தது....

"பொருக்கி புருஷனா?.. ஹா ஹா.. இது கூட நல்ல இருக்கே..! ஏண்டி அப்படி சொல்லுற?"


"பின்ன என்ன, சொல்லாம கொள்ளாம சைலண்டா இத்தினி வேலை பண்ணி இருக்கே, இதுக்கெல்லாம் உன்னை கொஞ்சுவாங்களாக்கும்... போ.. தள்ளிப் போ..?" - வெட்கமும் புன்னகையும் சேர்ந்து வந்ததில் இன்னும் அழகாக தெரிந்தாள் அவனது சரா....

ராகவ் "ஏய்... தீடீர்னு ரொம்ப அழகா தெரியுறடி...." என்றான் மெதுவாக அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன்..

"ஓஹ்ஹோ.. உனக்கு இப்போதான் கண்ணு நல்லா தெரியுதுன்னு சொல்லு...."

"ஹா ஹா..ஒரு உம்மா குடேன்...." - சொல்லிக்கொண்டே ராகவ் அவனது சாராவின் கண்ணத்தில் ஒரு முத்தம் குடுத்தான்.

"மாட்டேன் போ.." - பொய் கோவத்தில் முறைத்தாள் சங்கீதா....

"சரி போ.." அவளே திரும்புவாள் என்று எண்ணி ராகவும் திரும்பினான்..

"ஒரு தடவ மாட்டேன்னு சொல்லிட்டா இன்னொரு தடவ கேட்கக் கூடாதா?" - மென்மையாக முறைத்தாள்..

இதை எதிர்பார்க்கவில்லை ராகவ் "ஹிஹி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா.... நீ என் சரா.... எனக்கு குடுக்காம விட்டுடுவியா?...." என்று சற்று அசடு வழிந்து முத்தத்தை இழந்துவிடுவோமோ என்று ராகவ் ஏங்க "நான் சொன்னதுக்கப்புறம் நீ கேட்டா நான் தர மாட்டேன்.. நீயா இன்னொரு வாட்டி கேட்டிருக்கணும்..அது உன் தப்பு.." என்று மீண்டும் முறைத்தாள்..

"நீ.. கொஞ்சம் அதிகம் பேசுறடி.... இனிமே என் ஸ்டைல் தான் சரி வரும்...." என்று சொல்லி அவளின் முகத்தை திருப்பி அவள் தோள்களை தன் பக்கம் இழுத்து இருக்கி கட்டி அனைத்து அவளுடைய மென்மையான இதழ்களில் அழுத்தி ஒருவருக்கொருவர் தங்களின் ஈர நாவினை சுவைத்து மூச்சிரைக்க இச் இச் என்று முத்தமழை பொழிந்துகொண்டனர்..

"எக்ஸ்ஹிபிஷனில் அவர்கள் அமர்ந்திருக்கும் புல்வெளியில் அமைந்த ஸ்பீக்கர்களில் அவர்களுக்கு பின்னாடி ஒரு அழகிய பாடலின் நடுவில் வரும் வரிகள் ஓடியது..."நீ இல்லாமல் எது நிம்மதி... நீதான் என்றும் என் சந்நிதி..." - ராகவை எண்ணி அந்த வரிகளை மனதார உணர்ந்தாள் சரா.. அப்போது தானாகவே அவளையும் அறியாமல் அவள் ஆழ் மனதில் இருந்து இந்த வார்த்தைகள் வந்தது.."ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா...." என்று சொல்லி.. அவன் தலைக்கு பின்னால் இருக்கும் முடியை வசதியாக பிடித்து தன் உதடருகே இழுத்து அவன் உதட்டை கடித்து உறிந்திழுத்து கண்களை மூடி அவன் கரங்கள் அவளது இடுப்பை அழுத்தி லாவகமாக இருக்கி பிடித்திருப்பதை உணர்ந்து அதை ரசித்தபடி தலை முதல் கால் வரை உஷ்ண அதிர்வுகளை அனுபவித்தபடி அவன் உதடுகளை கவ்வி சாப்பிட ஆரம்பித்தாள் அவன் சரா..

"சப்" என்ற சத்தத்துடன் அவனது உதடை விடுவித்தபோது ஸ்ஸ்ஹா.. என்று மூச்சு வாங்கியது ராகவ்கு.. குழந்தைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் குடித்தபின்பு எப்படி வாயை சுத்தி நுரை இருக்குமோ அப்படி அவனது உதடுகள் சுத்தி அவனது சாராவின் நாவின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது.. அதை மெதுவாக அவள் சிரிக்கும் கண்களைப் பார்த்துக்கொண்டே "ஐ லவ் மை ஒன் அண்ட் ஒன்லி சங்கீதாராகவ் சரா.... திஸ் ஹாட் கிஸ் இஸ் பஃர் ஹர்.." என்று சொல்லி தன் பங்குக்கு மீண்டும் அவளின் உதடுகளை தன் இதழ்களால் பற்றி இழுத்தான்.

இப்போது அந்த மறுமணம் செய்து கொள்ளும் பெண் குடுத்த சிறிய அட்டையை படிக்க குடுத்தான் ராகவ்... அதில் "Live with no excuses, love with no limits, when life gives you hundered reasons to cry, show life that you have thousand reasons to smile...." - இதைப் படித்துவிட்டு ராகவைப் பார்த்து மெதுவாக "நான் சிரிக்குறதுக்கு thousand ரீசன்ஸ் வேணாம் டா.... ஒரு ரீசனே போதும்...."


என்னது?.. - அவள் நெத்தியுடன் தன் நெத்தியை வைத்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து கேட்டான்...

"ஹ்ம்ம்.. புரியாத மாதிரி கேட்குறான் பாரு...

'இட் இஸ் ராகவ்....' மை ஒன் அண்ட் ஒன்லி ஸ்வீட் பொருக்கி புருஷா.... நீதாண்டா அந்த ரீசன்..." என்று சங்கீதா சொல்ல அவளை அப்படியே தன்னுடன் அனைத்து மீண்டும் அவளது உதடுகளை உரிய ஆரம்பித்தான்...

சட்டென "ஜேம்ஸ் பாண்ட்" ட்யூனில் செல் ஃபோன் சத்தம் ஒலிக்க, "ஏண்டி நாம ரொமான்ஸ் பண்ணும்போது மட்டும் ஏதாவது ஃபோன் கால் வருது.... ச்ச" என்று அலுத்துக்கொண்டு அதை எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ்..

"ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்.." - சீரியஸாக கவனித்தான்..

"சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்..."

"சொல்லுங்க...."

"அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்ல பொருந்துது சார்.."

"ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்.... அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்...அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?.."

"ஆமா சார்..."

கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்.."ஹ்ம்ம்... எனக்கும் அந்த உருவம் பொருந்துது.."

"நீங்க எதை சொல்லுறீங்க.."

"ஒன்னும் இல்ல நேருல வந்து சொல்லுறேன்..."

"சரா... சீக்கிரம் வா... ஒரு முக்கியமான முதல சிக்கி இருக்கு... போய் பிடிக்கணும்.." என்று சொல்லி சஞ்சனாவையும் கார்திக்கையும் அழைத்து அவர்களுடன் காரில் வேகமாக கிளம்பினான்..

காரில் சஞ்சனா, கார்திக் மற்றும் சங்கீதாவிடம் தன்னை முந்தைய இரவு ஒருத்தன் தாக்கினான் என்றும் அப்போதுதான் போலீசிடம் தான் சந்தேகப்பட்ட விஷயங்களை கூறியதாகவும் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான் ராகவ்..

"டேய் மச்சி நீ சொல்லுறதெல்லாம் நிஜமாடா?.... தனியா ராத்திரி இருட்டுல ஒருத்தன் கூட ரோட்டுல சண்டை போட்டியா?.. நீ அவளோ பெரிய அப்பாடக்கரா டா.." கார்த்திக் நம்ப முடியாமல் புலம்பினான்..

"யாருடா அவன்?... யார சந்தேகப்பட்ட?... இப்போ ஸ்டேஷன்ல இருக்கிறது யாரு...." - பதட்டத்துடன் கேட்டாள் சங்கீதா..

"இதைப்பாறு.." என்று தன் செல் ஃபோனில் அந்த ஆசாமியின் ஃபோட்டோவை காமித்தான்.. சங்கீதா அதிர்ச்சியாக பார்த்தாள்.. அது வேறு யாருமில்லை, ஒரு காலத்தில் அவளிடம் பப்ளிக்காக அறை வாங்கிய சூப்பர்வைசர் சம்பத் தான்..



"ஹேய்... இந்த ராஸ்கல் எதுக்குடா சம்மந்தபட்டிருக்கன்.." என்று சங்கீதா கேட்க.. "தெரியலையே.. எது எது எதுக்கு நடக்குது, யாரெல்லாம் சம்மந்த பட்டிருக்காங்கன்னு ஒரு ஒரு முதலையா பிடிக்க பிடிக்கத்தான் தெரியவரும்...." என்றான் ராகவ்..

அனைவரும் ஒரு விதமான சீரியஸ்னஸுடன் காரின் உள்ளே அமர்ந்திருக்க.. கார்திக் மெதுவாக "ஹாஹ்... ஹா" என்று சிரித்தான்..

"எதுக்கு சிரிக்கிற?.." - சஞ்சனா உரிமையாக முறைத்து கேட்டாள்..

"இல்ல... நம்ம பய ஏதோ யோசனையில வேகமே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கான்.. அப்போ ஒன்னு நியாபகம் வந்துச்சி.. சிரிச்சேன்.." என்று சொல்லி சிரித்தான் ராகவ்..

"என்ன யோசிச்ச?.." - ஸ்டீரிங் பிடித்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் கேட்டான் ராகவ்....

ப்ச்.... அது ஒன்னும் இல்லடா.. எக்ஸ்பில யாரோ மாதவன்னு ஒருத்தன் கதை எழுதுறன்.... அவன் கூட அப்டேட் போட்டுட்டான்.. ஆனா நீ ஆக்ஸலரேட்டர் அழுத்தி வேகம் குடுக்குறதுக்குள்ள நீ புடிக்க வேண்டியவன் லேட் ட்ரெயின் பிடிச்சி கூட போய்டுவான் போல இருக்கு... நீயாடா மச்சி வண்டிய ஓட்டுற... சும்மா மிதிடா நல்லா.. ரைட் ரைட்... என்று விசில் குடுத்து நண்பனை உற்சாகப்படுதினான் கார்த்திக்....

"என்னது அது எக்ஸ்பி?.... எந்த மாதவன்?... என்ன ஒலர்ரான் இவன்..?" - என்று சஞ்சனாவும் சங்கீதாவும் ஒன்னும் புரியாமல் குழம்பினார்கள்..!

"அதெல்லாம் உங்களுக்கு புரியாது.... அது எங்களுக்கு ஒரு தனி உலகம்.. ஹா ஹா.." என்று கார்த்திக் சிரிக்க.... பலவிதமான சிந்தனைகளுக்கும் டெண்ஷனுக்கும் மத்தியில் கார்த்திக் அடித்த கமெண்ட்டையும், அதை கேட்டு சஞ்சனாவும் சங்கீதாவும் குழம்புவதைப் பார்த்து கூலாக சிரித்துக் கொண்டே டாப் கியரில் ஆக்ஸலரேட்டரை மொத்தமாய் அழுத்தினான் ராகவ்.. அசுரத்தனமான வேகத்தில் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று எதிர் திசை காற்றை கிழித்துக் கொண்டு சிறுத்தையை போல் பாய்ந்தது ராகவின் BMW கார்.... 



சங்கீதா மேடம் - இடை அழகி 37

"ஹ்ம்ம்.. என்னடி செஞ்ச? யாரு அவன்?" - மென்மையாக சிரித்துக்கொண்டே சமையலறையில் டீ தூள் தேடினாள் சங்கீதா..

"சொல்லுறேன் அதுக்குத்தானே வந்திருக்கேன், அவன் கிட்ட வாங்கின சில முக்கியமான டீடேய்ல்ஸ் பத்தி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் சொல்லணும்.... இதுக்கு முன்னாடியே சொல்லி இருப்பேன், ஆனா அதுக்கான நேரம் இப்போதான் வந்திருக்கு."....சஞ்சனா பேசிக்கொண்டிருக்க வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது..

ராகவ் அலுவலகத்தில் இருந்து கழுத்தில் கட்டின டை கூட கழட்டாமல் அப்படியே அங்கே வந்தடைந்தான். சஞ்சனாவையும் ராகவையும் பார்த்ததில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. மாடியில் மஞ்சள் வெயிலில் குழந்தைகள் விளையாட மூவரும் சூடாக டீ அருந்தி கொண்டே ஜில்லென்ற காற்றில் பேச தொடங்கினார்கள். சஞ்சனா மித்துனிடம் கறந்த விஷயங்களை ராகவிடமும் சந்கீதாவிடமும் பகிர்ந்து கொண்டாள். அதாவது.. அலுவலகத்துக்குள்ளேயே, குமார் ஃபாக்ட்ரி கழிவுகளில் இருந்து சில வஸ்துக்களை மூட்டை கட்டி ஒரு லாரியில் தினமும் இரவு துரையோட லெபாரேட்ரிக்கு அனுப்பி வைப்பதும், அதற்கு அடுத்த நாள் காலை அங்கிருந்து IOFI வளாகத்துக்குள் அதே லாரியில் ஃபாக்ட்ரிக்கு தேவையான சாமானுடன் லெபாரேட்ரியில் ப்ராசஸ் செய்யப்பட்ட சில பொருட்கள் வருவதற்கு க்லியரன்ஸ் வாங்கித் தருவது மித்துனின் வேலை என்று ஒவ்வொன்றும் விலாவரியாக எடுத்து சொன்னாள்.

சற்று கண்களை மூடி ஆழமாக யோசித்து "எப்படி அவன் துரைக்கு வேலை செய்ய ஆரம்பிச்சான்? எப்படி அவனுக்கு துரை கான்டாக்ட் கிடைச்சிது? என்றான் ராகவ்..

"அதை... நா.... வந்து... அது..." - சஞ்சனா தயங்கினாள்..

"என்ன வந்து போயி.. சொல்லு.." - கேட்க்கும்போதே ராகவின் முகம் கொஞ்சம் சிவந்தது. அது சஞ்சனாவுக்கு லேசான பயத்தை உண்டாக்கியது.

"நான் சொல்லுவேண்டா, ஆனா நீ கோவப்படக் கூடாது.. பொறுமையா கேட்கனும். சரியா? இந்த நிமிஷம் உனக்கு பொறுமை ரொம்ப முக்கியமா தேவைப் படும்... அப்போதான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். புரிஞ்சிக்கோடா.. நீ பார்க்குற பார்வைய பார்த்தா எனக்கு சொல்ல பயமா இருக்கு..... அக்கா.." - என்று சொல்லி சந்கீதாவைப் பார்த்தாள் சஞ்சனா..

"நான் கோவப்படுற அளவுக்கு அப்படி என்ன இருக்குது?" - கண்களை இருக்கியவாறு கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ். அப்போது சங்கீதா குறுக்கிட்டாள்.

"நீ சொல்லுமா, யாரும் ஒன்னும் கோவப்பட மாட்டாங்க...." - சற்று அழுத்தமாக சொல்லி, ராகவை நோக்கி ஓரக்கண்ணால் லேசாக முறைத்து "பேசாமல் இரு" என்று சொல்லாமல் சொன்னாள் சங்கீதா. அந்த பார்வைக்கு உண்மையில் கொஞ்சம் அடங்கினான் ராகவ்.

"அவனுக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து நிறைய மிரட்டல் கடிதாசி வரும்னு சொல்லி இருக்கான். ஒரு நாள் அவன் ஒரு நைட் க்லப்பில் நல்ல போதையில் சீட்டு விளையாடிட்டு இருக்கும்போது யாரோ உன்னை சம்மந்த படுத்தி அவன் கிட்ட பேசும்போது அவன் உன்னுடைய லாப கணக்குல வர பணம் அப்போ அப்போ உனக்கே தெரியாம திருடுறதும்.. அது உனக்கு தெரியாதுன்னும் சொல்லி இருக்கான்.. அப்புறம்... - மேலே சொல்ல தயங்கினாள் சஞ்சனா..

"அப்புறம்?...." - மீண்டும் ராகவின் முகம் அவளின் பதிலை கூர்ந்து கவனித்தது....


சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.. "உன்னை பத்தியும் அக்காவைப் பத்தியும் தப்பா பேசி இருக்கான். அதை எப்படியோ துரை அவன் செல் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி அவனுக்கு அனுப்பி வெச்சி உன் கிட்ட அவனை போட்டு குடுத்துடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான், அந்த கோழையும் உனக்கு பயந்துதான் இந்த காரியத்துல இறங்கி இருக்கான்." - என்று மூச்சு விடாமல் சீக்கிரமாக சொல்லி முடித்தாள் சஞ்சனா..

"என்ன தப்பா பேசினான்?" - ராகவின் முகம் உண்மையில் நன்றாகவே சிவந்தது.

"அது.. வந்து.. இதை பாரு.." - என்று தனது செல் ஃபோனில் அன்று இரவு அவனுடய ஃபோனில் இருந்து காப்பி செய்த வீடியோவை காமித்தாள் சஞ்சனா... சங்கீதாவும் அதை ராகவுடன் சேர்ந்து பார்த்தாள்.

வீடியோவில் மித்துன் காமிக்கும் முகபாவனைகளும், பேச்சும் கேட்கும்போது ராகவ் அவனது இருக்கையின் கைப்பிடியை இறுகி பிடித்தான். தனது அக்கவுன்டில் இருந்து காசு திருடுவதற்கு கூட அவன் அதிகம் கோவப் படவில்லை... அதன் பிறகு அவன் சந்கீதாவைப் பற்றியும் சஞ்சனாவைப் பற்றியும் பேசிய வார்த்தைகளை கேட்க கேட்க உண்மையில் ரகாவ்கு பொருக்க முடியவில்லை.. உடனடியாக கை சட்டையை மடக்கிக் கொண்டு ஆவேசமாக எழுந்தான்.. அப்போது உடனடியாக சங்கீதா ராகவின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள்.

அவன் வாயலதானே என்னை மானபங்கம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கான்.. நிஜத்துல செய்துட்டானா? அப்படி ஒரு எண்ணத்தோட வந்தா அவனை நானே ரெண்டா வெட்டிடுவேன்.. யாருடைய உதவியும் எனக்கு தேவை படாது.. இப்போ நீ என்ன பண்ண போற? அவன கொல்ல போறியா?... அப்படியெல்லாம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் உட்காராத.... அப்புறம் என்னால உன்னை அங்க வந்து பார்க்க முடியாது." - கோவத்தில் சீறினாள் சங்கீதா.

"அக்கா.. அவன் அன்னிக்கி பேசின பேச்சுக்கு நான் ஏற்கனவே நிறைய குடுத்துட்டேன்கா" - மெதுவாக சஞ்சனா சங்கீதாவிடம் பேசியதைக் கேட்டுவிட்டு "என்ன குடுத்த?... எண்ணத்த குடுத்துட்ட?... சும்மா நாலு வார்த்தை திட்டிட்டு வந்திருப்ப.. அவளோதானே?.. அவனுக்கு அதெல்லாம் பத்தாது.." என்று ராகவ் கத்த.. அதற்கு மேல் வாய் மூடி இருந்த சஞ்சனா பொங்க ஆரம்பித்தாள்.

"போதும் நிறுத்துடா.. சும்மா பெரிய இவனாட்டம் கத்துற.. நான் ஒன்னும் அவளோ சொரணை கேட்ட ஜென்மன் இல்ல, உன்னால அவனுக்கு வெளி காயம் மட்டும்தான் குடுக்க முடியும், ஆனா நான் அன்னிக்கி அவனுக்கு வெளிக்காயம் மட்டும் இல்ல, உள்காயமும் குடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு ஆம்பளையா உன்னால குடுக்க முடியாத அளவுக்கு அன்னிக்கி நான் அவனுக்கு திருப்பி குடுத்து இருக்கேன். கிட்டத்தட்ட உரிச்ச கோழியாக்கி வேக வெச்சி அனுப்பி இருக்கேன். அவன் குணமாகி எழுந்திருக்கவே கொஞ்ச மாசமாகும்." - சொல்லும்போது அன்று மெளனமாக உள்ளுக்குள் அனுபவித்த வேதனைகளை எண்ணி லேசாக கொஞ்சம் அழ ஆரம்பித்தாள் சஞ்சனா.

"சங்கீதா மெதுவாக சஞ்சனாவின் கைகளை பிடித்து, "நிஜமாவா?" என்று பாவனை செய்வது போல கேட்க "ஆமாம் கா...." என்று மெதுவாக சொல்ல "நீதாண்டி என் தங்கச்சி" என்று சொல்லி அவளை தன் தோளில் சாய்த்தாள் சங்கீதா.

"நீ அழாதடா, எவளோ பெரிய காரியம் பண்ணி இருக்கே!.. நிஜமாவே சில நேரத்துல எப்படிதான் இந்த முட்டாள் CEO ஆனான்னு எனக்கு சந்தேகம் வரும். பொறுமையே இல்லாத ஜென்மம்.... ச்ச...." - சஞ்சனாவை தோளில் சாய்த்து ராகவை பொய்க் கோவத்துடன் முறைத்தாள் அவனது சரா..


"கரெக்டா சொன்னீங்கக்கா.. எனக்கு கூட அப்போ அப்போ அது தோணும்...." - கண்களைத் துடைத்துக் கொண்டு ராகவை முறைத்தாள் சஞ்சனா....

"ஆமா, பொறுமையா இருக்குறதைப் பத்தி பேங்க் மேனேஜர் பேசுறாங்க.." என்று மெதுவாக உள்ளுக்குள் முனு முணுத்துக் கொண்டான் ராகவ்....

"என்ன சொன்ன?" - சொடக்கு போட்டு கேட்டாள் சரா..

"ஒன்னும் இல்ல.... எனக்கு பொறுமை கம்மின்னு நானே சொல்லிக்கிட்டேன்...." - சங்கீதாவின் கேள்விக்கு, ராகவ் அசடு வழிந்து அடிபணிந்து பதில் சொன்னதைப் பார்த்து "ஹா ஹா.. உனக்கு சங்கீ அக்காதான் டா கரெக்ட்...." என்று ஈர விழிகளுடன் இருக்கும்போதே குபுக்கென சிரித்தாள் சஞ்சனா..

மூவரும் பேசி முடித்து சற்று அமைதியாய் இருக்கும்போது ராகவ் செல் ஃபோனில் "வேக்.. வேக்..." என்று சத்தம் வந்தது... - வேறு யாரும் அல்ல, அவனது நண்பன் Mr.வாத்து தான்!.. அமைதியாக இருக்கும்போது அந்த வித்யாசமான சத்தம் கேட்டு சங்கீதாவும், சஞ்சனாவும் புருவம் உயர்த்தி சிரித்தார்கள்..

அவனது நண்பனின் ஃபோன் கால் எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ், அப்போது கார்த்திக் நாளை விடிகாலை வருவதாக சொல்லிவிட்டு ஃபோன் கட் செய்தான். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து "ஹ்ம்ம்... நாளைக்கு ஒரு கிறுக்கன் வரான், நாம நாலு பேரும் எங்கயாவது ஒரு ஒளடிங் போய்டு வரலாம்." என்று உற்சாகமாய் சொன்னான் ராகவ்.

"கிறுக்கனா? யாரு?" - என்றாள் சஞ்சனா ஸ்வாராஸ்யமாக, அந்த ஸ்வாராஸ்யத்தை கவனிக்க தவறவில்லை சங்கீதா....

"என்னோட ஸ்கூல் ஃபிரண்ட் கார்த்திக்...." - என்று ராகவ் சொன்னதும்.... "கார்த்திக்... ஹ்ம்ம்..." - என்று புருவத்தை உயர்த்தி லேசாக சிரித்து சஞ்சனாவைப் பார்த்து கண் அடித்தாள் சங்கீதா. அதற்கு சஞ்சனாவிடம் இருந்து லேசான புன்னகை மட்டுமே வந்தது..

"சரி நான் இப்போ கிளம்புறேன்...." - என்று எழுந்த ராகவ் சஞ்சனாவைப் பார்த்தான்... அவள் மனதளவில் நிறையவே தன்னை வருத்தி பல காரியங்களை செய்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு....

அங்கிருந்து கிளம்பும்போது சஞ்சனாவிடம் "ஐ ம் சாரி சஞ்சனா... எனக்காக நீ நிறைய சிரமப்பட்டிருக்கே.. நீ சொன்ன விஷயம் ரொம்ப முக்கியமானது, அதை வெச்சி நம்ம காளிதாஸ் கிட்ட ஒரு ரிப்போர்ட் எடுத்து பார்த்தால் அதுல ஓவர் டைம் யார் இருந்திருக்காங்களோ கண்டிப்பா அவங்க இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருப்பங்கனு கொஞ்சமாவது உறுதியா சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்லுற?" - என்றான் ராகவ்.. காளிதாஸ் என்பவர் பல ஆண்டுகளாக IOFIல் விசுவாசியாக வேலை பார்த்து வரும் நம்பிக்கையான மூத்த ஊழியர்.

"சாரி எல்லாம் சொல்ல வேணாம்டா.... போயி உன் மைன்டுக்கு என்ன அடுத்து செய்யனும்னு தோணுதோ அதை செய்..." என்று கூலாக சொன்னாள் சஞ்சனா..

"ராகவ்... அப்படியே காளிதாஸ் குடுக்குற அந்த ரிப்போர்ட்ல யாரோட பேரு அடி படுதோ அவங்க பேரை போலீஸ் கிட்ட இம்மீடியேட்டா சொல்லி என்ன பன்றாங்கன்னு கவனிக்க சொல்லுறதுதான் இன்னும் பெஸ்ட்..." - என்றாள் சங்கீதா. "யேஸ்.... அக்கா சொல்லுறது கரெக்ட்" என்று சஞ்சனாவும் அதை ஆமோதித்தாள்.

"ஹ்ம்ம்... இன்னிக்கே நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன்.." என்று சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அவனைப் பொருத்தவரை இவர்கள் மூவரையும் சுத்தி சீக்கிரமே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று ஒரு இன்ட்யூஷன் இருந்தது. அப்போது "சஞ்சனா.. இஃப் யூ டோன்ட் மைன்ட்.. இன்னைக்கி நீ சங்கீதா கூட இருந்துடேன், நாளைக்கு காலைல நான் கார் அனுப்புறேன். ரெண்டு பேரும் என் இடத்துக்கு வந்துட்டா என் ஃபிரண்ட் கூட சேர்ந்து எங்கயாவது போகலாம்... சீரியஸ்லி வீ ஆல் நீட் ஏ ப்ரேக்" - என்று ராகவ் சொல்ல "ஹ்ம்ம் சவுண்ட்ஸ் குட்.." என்றாள் சஞ்சனா.. 


ராகவ் IOFI வளாகத்துக்கு கிளம்பினான். இரவு நேரம் நெருங்கி இருந்தது. போகும் வழி யாவும் சஞ்சனா மித்துனிடம் இருந்து கறந்த விஷயங்களை மனதில் எண்ணிக்கொண்டே சென்றான். ஃபாக்டரி கழிவுகள்.. லாரி க்லியரன்ஸ்.... மரத்துண்டுகள்.... அனஸ்தீஷ்யாவால் குமாரைக் கொன்ற விதம்.... என்று பல விஷயங்களையும் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தான். சிந்தித்து சிந்தித்து மிகவும் அசதியானது ராகவ்கு.. அடர்த்தியான வீதியில் கொஞ்சம் வேகமாக ஓட்டி சென்றான். வீதியில் விளக்குகள் கூட இல்லை.. ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று ரேடியோ ஆன் செய்தான்.. "எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா" என்ற பாடல் வர, அதை ஹம் செய்து கொண்டே மனதில் அவனது சாராவை கற்பனை செய்து சீட்டை கொஞ்சமாக பின் பக்கம் சாய்த்தான்.... திடீரென சற்றும் எதிர்பாராதவிதம் காரின் பின் பக்க கண்ணாடியை டமால் என்று உடைத்துக் கொண்டு ஒரு கைப்புடி அளவு கருங்கல் கார் உள்ளே விழுந்தது. தெருவில் கிறீச் என்று காதைக் கிழிக்கும் சத்தத்துடன் டயரில் புகை வரும்விதம் பிரேக் போட்டான் ராகவ். ரியர் வியூ கண்ணாடி மூலம் ஏதோ ஒரு உருவம் ஓடுவது தெரிந்தது ராகவ்கு... உடனே கார் விட்டு இறங்கி பின் பக்கம் அந்த உருவத்தை நோக்கி மிக வேகமாக ஓடினான், ஒரு கட்டத்தில் அந்த உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. அவனை சுத்தி முழுவதும் இருட்டும் நிசப்தமும் நிறைந்திருந்தது. சற்று நேரம் இரவு நேர பூச்சிகளின் "க்ரீச்.. க்ரீச் .." என்ற சத்தம் மட்டும்தான் கேட்டது.... தீடீரென அந்த உருவம் ராகவின் முதுகுக்குப் பின்னால் வந்து அவனை இருக்கி பிடிக்க, அந்த ஒரு கண நொடி எதற்கும் பயப்படாமல் சற்றும் அசராமல் தன் வலது காலால் அந்த உருவத்தின் காலை ஓங்கி மிதித்து தன் தலையால் பின் பக்கம் வேகமாய் அடிக்க, அந்த அடியின் வலியை தாங்கி மீண்டும் ராகவை தாக்க முற்பட்டது அந்த உருவம்.... ஒரு கையைத் தூக்கி அவனை அடிக்க முற்படும்போது அதை கச்சிதமாக இடது கையால் பிடித்து நெஞ்ஜாங்க்கூடுக்கு நடுவில் தோள்களின் தசைகளை இருக்கி ஒட்டுமொத்த பலத்தையும் குடுத்து ஓங்கி தன் முஷ்டியை மடக்கி அடித்த அடியில் உண்மையில் மோசமான உள்காயம் ஏற்பட்டிருக்க வேண்டும்..அதற்க்கு ஆதாரமாக வலி பொருக்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டில் மீண்டும் அந்த உருவம் எங்கோ சென்று மறைந்தது. மீண்டும் அவன் கண்ணுக்கு அது தென்படவில்லை.. "எவனா இருந்தாலும் வாடா.... நான் மட்டும் தான் நிக்குறேன் வா.. எங்கே ஓடுன... வா" என்று மீண்டும் அந்த இருட்டினில் உரக்க கத்தினான் ராகவ்... சில நிமிடங்கள் சுற்றும் முற்றும் பார்த்தான்.. யாரும் தென்படவில்லை.. காரின் லைட் வெளிச்சம் தான் அவன் தெருவில் நடப்பதற்கு உதவியது. காரில் எரி அமர்ந்த பிறகு பின் சீட்டில் உள்ள அந்த கல்லை எடுத்துப் பார்த்தான், அதில் ஒரு சிறிய காகிதம் சுருட்டி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பிரித்து படித்தான்.... அதில்.. "எங்களுடைய டார்கெட் நீ மட்டும்தான் ஆனா பாவம் உன் கூட ஒரு சின்ன கூட்டணியும் சேருது, அது அவங்களுக்கு நல்லதில்ல.... நான் வாங்கின வடு சாதாரனமானது இல்ல.... நிச்சயம் திருப்பி குடுப்பேன்.." - கஷ்ட்டப்பட்டு புரிந்து கொள்ளும் கையெழுத்துதான், இருப்பினும் ஒரு வழியாக எழுதியது என்னவென்று புரிந்துகொண்டான் ராகவ்.

வண்டியை மெதுவாக தனது பர்சனல் வி.ஐ.பி லாஞ்ச் முன்னே நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.. இருட்டாக நிசப்தம் நிறைந்த அறையில் மிதமான மஞ்சள் வெளிச்சம் தரும் விளக்கை ஆன் செய்தான். மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தான். யார் யாரோ மனதுக்குள் நினைவில் வந்தார்கள், "இருக்காது.... அவங்களா இருக்காது" என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.... பிறகு காளிதாசுக்கு ஃபோன் செய்தான்..


"ஹலோ நான் ராகவ் பேசுறேன்.." - ஷர்ட் டை அவிழுத்துக்கொண்டே கண்ணாடியில் தன் முகம் பார்த்து பேசினான்....

"சொல்லுங்க தம்பி.."

"சார் எனக்கு நம்ம கம்பெனியோட டைம் இன் டைம் அவுட் டிஜிட்டல் மெஷீன் ரிப்போர்ட் வேணும்... அதுவும் கடந்த ஒரு மாசத்துக்கு இருக்குற ரிப்போர்ட் வேணும்.." - சொல்லிக்கொண்டே ஏதோ சிந்தித்தான்..

"என் கிட்ட ஏற்கனவே இருக்கு சார், ஆடிட் பன்றதுக்கு ஏற்கனவே எடுத்து வெச்சி இருக்கேன்." - என்றார் தூக்கக் கலக்கத்தில் பொறுமையாக..

"நல்லதாப் போச்சு.., யாராவது ஓவர் டைம் இருந்து இருக்காங்களான்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?" - பரபரப்புடன் கேட்டான் ராகவ்..

"இருங்க பார்குறேன்.. ஹச்.." - சற்று இரும்பியவாறு தேடினார் பெரியவர்....

மறு முனையில் அவர் பார்க்கும்போது ராகவ்கு சற்றுமுன் நடந்த தாக்குதலின் காரணமாக சிலர் மேல் சந்தேகம் இருந்தது.. ஆனால் உறுதியான காரணம் எதுவும் மனதில் தோன்றாததால் அமைதியாக மீண்டும் சிந்தித்தான்..

"சார்.. சொல்லுறேன் கேட்டுகோங்க.." - என்று ஓரிரு பெயர்களை சொன்னார் காளிதாஸ். அவர் சொன்ன பெயர்களை கேட்டபோது ராகவ்கு ஜிவ்வென்று இருந்தது. காரணம் அதில் ஒரு பெயர் அவன் சந்தேகம் கொண்ட பெயர். மற்ற பெயர்கள் பல மணி நேரம் அலுவலகத்தில் இருந்ததாய் காமிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பெயருக்கு அவ்வளவு அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

"சார்... ஹச்.. இருக்கீங்களா?" - சத்தம் எதுவும் கேட்காததால் உரக்க பேசினார் பெரியவர்..

"ஆங்.. இருக்கேன் சார்.. தேங்க்ஸ்.. உங்களை நான் இந்த நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணதுக்கு மன்னிக்கணும்.. நீங்க படுத்துக்கோங்க...." - ஏதோ சிந்தித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. "ஹச்.. இருக்கட்டும் பரவயில்ல.." என்று மீண்டும் முடியாமல் இரும்பிக்கொண்டே கட் செய்தார் பெரியவர்.

உடனே சங்கீதாவுக்கு ஃபோன் செய்தான் ராகவ்....

"ஹலோ..." - குழந்தைகள் கூச்சல் போட்டு விளையாடும் சத்தமும் சங்கீதாவும் சஞ்சனாவும் சிரித்துக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது..

"ஹேய் சரா...." - கொஞ்சம் பதத்தட்டுடன் அவசரமாய் கூப்பிட்டான் ராகவ்.

"ஹ்ம்ம்... இருங்க சார் நான் உங்க சரா இல்ல, சஞ்சனா... ஹா ஹா.." - கிண்டலாய் சிரித்தாள் சஞ்சனா..

"ஹேய் சஞ்சனா... இட்ஸ் ஓகே நான் யாராவது ஒருத்தர் கிட்ட பேசினா கூட போதும்... உங்களுக்கு ஒன்னும் இல்லையே?.. நல்லாதானே இருக்கீங்க?" - பயத்தில் கேட்டான் ராகவ்..

"என்னடா ஆச்சு திடீர்னு ஒன்னும் இல்லையான்னு கேட்குற?" - குழம்பினாள் சஞ்சனா..

"ஐ மீன்.... அதாவது... யாரும் ஒன்னும் வீட்டுக்கு வரலையே? எவ்ரிதிங் ஆல் ரைட்?" - அவசரத்தில் வார்த்தைகளை சரிவர வரிசை படுத்திகூட பேச முடியவில்லை ராகவ்கு..

"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, உனக்கென்ன ஆச்சு ஏன் இப்படி பேசுற?.. ஆர் யூ ஆல் ரைட்?"


"நத்திங்... நத்திங்... ஐயம் ஆல் ரைட்.. நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கீங்களே அதான்..." - நடந்ததென்ன என்று கூற விரும்பவில்லை, சமாளிக்க சற்று இழுத்தான் ராகவ்...

"நாங்க ரெண்டு பேரும் இருந்தா எப்பேர்பட்ட ஆளும் சட்னி ஆயிடுவான்.... நீ ஏண்டா கவல படுற..." - என்றாள் சஞ்சனா.. அவள் பேசும்போது ஸ்நேஹா அவளது டாக்கிங் பார்பி பொம்மையை வைத்து சஞ்சனாவிடம் பேச சொல்லி அடம் பிடிப்பது கேட்டது. பின் பக்கம் ரஞ்சித் அவனது கார் பொம்மையை போட்டு தட்டி தட்டி விளையாடுவதும் கேட்டது. சங்கீதா சஞ்சனாவுக்கு தோசை சுட்டு குடுப்பதும், கூடவே "யாரு அந்த மக்கு CEO வா?.." என்று அவள் சஞ்சனாவிடம் குறும்பாக கேட்பதும்... டி.வி யில் சுட்டி டிவி சத்தமும் கேட்டது... இதெல்லாம் கேட்க அங்கே ஒரு சகஜ நிலை நிலவுகிறதென்று மனதில் அமைதி அடைந்தான் ராகவ்.

"அதென்னவோ கரெக்ட் தான்... அதுலயும் அவ கிட்ட மாட்டினா தக்காளி சட்னிதான்.. ஹா ஹா.. என்ன பேசிட்டு இருக்கீங்க?..." சாதாரணமாக பயமின்றி பேசினான்..

"ஹ்ம்ம்.. எங்க வாழ்க்கைல வந்த காதல் கதைகள் பத்தி பேசினோம்.. அக்கா அவங்க காதல் கதையை பத்தி சொல்லிட்டு இருக்காங்க.. ஹா ஹா.." - பின்னாடி இருந்து சங்கீதா "ஒதை வாங்குவ" என்று சிரித்துக் கொண்டே கத்தும் சத்தம் கேட்டது ராகவ்க்கு..

"ஒஹ்.. அந்த பழைய லவ்வர் ரமேஷ் பத்தி சொன்னாளா?" - எங்கே தன்னை பத்தி சொல்லி விட்டாலோ என்று எண்ணி அசடு வழிந்தான்...

"டேய் ஃபிராடு... அதெல்லாம் ப்ளாக் & ஒயிட் படம் டா.... அவங்க
சொல்லிட்டு இருக்கிறது லேட்டஸ்ட் டிஜிட்டல் கலர் படம் பத்தி.. எவனோ ஒரு லூசு நெஞ்சுல பச்ச குத்தி வெச்சி இருக்கானாம்மே.. சொல்லவே இல்ல...." - பின்னாடியில் இருந்து சங்கீதாவும் சஞ்சனாவும் சேர்ந்து சத்தமாக சிரிக்கும் ஒலி கேட்டது ராகவ்கு.. கண்ணாடியின் முன்பு பல்பு வாங்கி விட்டோமே என்று எண்ணி அவன் முகம் வெட்கத்தில் சிவப்பது அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது.

"ஹ்ம்ம் சரி சரி... சீக்கிரம் படுத்து தூங்குங்க நாளைக்கு காலைல வண்டி வரும் அப்புறம்.." - ராகவ் முடிப்பதற்குள் சஞ்சனா பேசினாள்.. "உன்னோட வாத்து வருவான்.. அப்புறம் நாம நாலு பேரும் எங்கயாவது வெளியே போவோம்.. அதானே?...ஹா ஹா.." - என்று சிரித்தாள்... "சரி சரி... பேச்சை குறைடி வாயாடி....ஹா ஹா.. சீக்கிரம் படுத்து தூங்குங்க.." என்று சொல்லிவிட்டு கட்டிலில் அப்படியே அசதியில் சாய்ந்தான் ராகவ்....

"ஏய் கொஞ்சம் தள்ளுடி... நான் குளிக்க போகுறதுக்கு முன்னாடி கண்ணாடி முன்ன வந்து நின்னவ.. இன்னும் மூஞ்சிய அப்படியும் இப்படியும் திருப்பிகிட்டு இருக்கா.." - காலை வண்டி வருவதற்கு முன் இரு மங்கைகளும் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் செய்யும் கூத்து இயல்பாய் நடந்தது..

"சும்மா இருங்கக்கா.. யாரா இருந்தாலும் ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் தான் பெஸ்ட் இம்ப்ரஷன் குடுக்கும்...." என்றாள் சஞ்சனா..

"நீ ஏன் இப்படி எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ட்ரெஸ்ஸிங் பண்ணுறேன்னு எனக்கு தெரியும்.. ஹா ஹா.." - சங்கீதா குறும்பாக சிரித்தாள்..

"ஏனாம்?.... சொல்லுங்கோ.. கேட்கலாம்..." - வாயில் லிப் க்லாஸ் தடவி இரு உதடுகளையும் உள்ளுக்கு இழுத்து உரசி வெளிச்சத்தில் பலபலக்கிறதா என்று பார்த்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா..


"ஹ்ம்ம்.. எல்லாம் கார்த்திக் எஃபக்ட் தானே ஹா ஹா..?" - என்று சங்கீதா சிரிக்க... "ச்சே... ச்சே..." அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா... போற இடத்துல நாலு பேர் நம்மள பார்பாங்களே.. நல்லா இருக்கணுமேன்னு தான்.... யு னோ சம் திங்.... லுக்கிங் குட் இஸ் ஃபீலிங்க் க்ரேட்...." - என்று சமாளித்தாள் சஞ்சனா..

"சப்... ஒஹ்ஹ்.. ஹ்ம்ம்.. நடத்து நடத்து..." - என்று சங்கீதா சொல்லும்போது என்னதான் வாய் பொய் பேசினாலும் சஞ்சனாவின் சிரிப்பு சங்கீதா சொன்னதுதான் உண்மை என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டது.. பொதுவாக யாராவது ஒரு புதுப் பெண் வருகிறாள் என்றால் ஆண்கள் செய்யாத ஸ்டைலா!!?.... அந்த விஷயத்தில் பெண்களும் அப்படியே... அவர்கள் மட்டும் விதி விளக்கா என்ன!!...

"வாவ்... என்னதுக்கா இது...? திஸ் இஸ் லுக்கிங் கூல்...."- சங்கீதா ஒரு டார்க் பிரவுன் நிறத்தில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இடுப்பில் இருந்து கால் வரை வரக்கூடிய லாங் மிடி ஒன்றை காமித்தாள், அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் முட்டி அருகே சில பட்டன்கள் இருந்தது, அவற்றை எடுத்து விட்டால் அது ஸ்கர்ட் போல மாறிவிடும். இதைப் பார்த்து வியந்தாள் சஞ்சனா..

மேலே ஒரு ஒயிட் டாப்ஸ் அணிந்து அதற்கு மேட்சிங்காக வளையல், கம்மல், நெயில் பாலிஷ், மற்றும் ஒரு சிம்பிள் செயின் அணிந்து தலை முடியை கர்லி ஹேர் ஸ்டைல் செய்திருந்தாள். வெளியில் சென்றால் நிச்சயம் ஒவ்வொருவரும் அவளை ஒருமுறையாவது திரும்பி பார்ப்பார்கள் என்பது போல் பளிச்சென்று இருந்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் வெளியில் கார் ஹாரன் சத்தம் கேட்டது. இருவரும் உற்சாகமாய் கிளம்பினார்கள். சஞ்சனா டிரைவர் தாத்தாவை நோக்கி வம்பிழுக்கும் விதமாக "தாத்தா எங்க ரெண்டு பேருல யார் பார்க்க ரொம்ப நல்லா இருக்கோம்னு சொல்லுங்க பார்க்கலாம்?" என்று குறும்பாக கேட்டாள்.

"வம்பே வேணாம்மா.... ஒன்னும் பேசாதப்பவே என்னை அந்த ஓட்டு ஓட்டுற, இப்படி கேள்விய கேட்டு வலய விரிச்சி ஏதாவது சொல்ல வெச்சி அப்புறம் அதை சொல்லி சொல்லியே என்னை படுத்திடுவ தாயி...." என்று தாத்தா சொல்ல "ஹா ஹா.. ரொம்பவே பயப்படுத்தி வெச்சிருக்கடி" என்று சங்கீதா புன்னகைத்தாள்.

கார் கிளம்பியதும் பின் இருக்கையில் பகல் வெளிச்சத்தில் சங்கீதாவின் முகத்தைப் பார்த்தாள் சஞ்சனா.. ஒரு வித்யாசமான பொலிவும் பிரகாசமும் தெரிவதை கவனித்தாள். "அக்கா.." என்றாள் சஞ்சனா..

"என்னடா..?" - சஞ்சனாவின் தலையில் அவளது முடியை சரி செய்து கேட்டாள் சங்கீதா..

"யு ஆர் மை இன்ஸ்பிரேஷன்கா.. உங்களை ஒரு ஒரு தடவையும் பார்க்கும்போது மனசுல தைரியத்துக்கு வெத போடுறா மாதிரி இருக்குது. அன்னிக்கி ராத்திரி நான்தான் மித்துன் கிட்ட அவ்வளோ தைரியமா நடந்துகுட்டேனானு யோசிச்சி பார்த்தா நம்பவே முடியலகா.... you are the fuel for my guts" - சஞ்சனாவின் பேச்சுக்கு சங்கீதாவின் முகத்தினில் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது.. சரியா?..."

"ஹ்ம்ம்... சொல்லு..."

"அதான் ரெண்டு பேரும் லவ் பன்றீங்களே, ஏன் கல்யாணம் பன்னிக்க கூடாது?"