Saturday 31 August 2013

"மேட்ச் பாய்ன்ட்..!!"




"மேட்ச் பாய்ன்ட்..!!" சொல்லிவிட்டு அம்பயர் என்னைப் பார்த்து மெலிதாக புன்முறுவல் செய்தார். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு, இப்போது என் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் படுவேகத்தில் பரவ ஆரம்பித்தது. விரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. தலைக்குள் யாரோ அமர்ந்து தபேலா வாசிப்பது மாதிரி இருந்தது. நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் நிதானமாக வெளியே விட்டேன். பதறும் இதயத்தின் படபடப்பை குறைக்க முயன்றேன். இந்த மேட்ச் பாய்ன்ட் எனக்கு மிகவும் முக்கியம். நான் நினைத்தததை சாதிக்க.. என் முயற்சியில் வெற்றி பெற.. இந்த மேட்ச் பாய்ன்ட் மிக மிக முக்கியம்..!!! வென்றே ஆகவேண்டும்..!!! இந்தப் பாய்ண்டில் நான் வென்று விட்டால்.. இந்த மேட்சிலும் வென்று விடுவேன். என்னுடைய திட்டத்தில் நான் வெற்றி பெறுவதும் மிக எளிதாகிவிடும். தோற்றுப் போனால்.. இத்தனை நாள் நான் திட்டமிட்டு செய்த எல்லா செயல்களுமே வீணாய் போகும்.

ஒரு நான்கைந்து வினாடிகள் அந்த மாதிரி நான் மனதை ஆசுவாசப் படுத்தினேன். அப்புறம் படக்கென கண்களை திறந்தேன். சர்வீஸ் போட தயாரானேன். லேசாக குனிந்து, இரண்டு மூன்று முறை அந்த ஆப்டிக் யெல்லோ நிற டென்னிஸ் பந்தை கீழே போட்டு, உயர எழும்ப செய்து பிடித்தேன். பின்பு என் தலைக்கு மேலே உயரமாய் தூக்கிப் போட்டேன். அந்த பந்து கீழே வர வர, நான் தரையில் இருந்து லேசாக ஜம்ப் செய்து, என் கையில் வைத்திருந்த டென்னிஸ் ராக்கெட்டை சரக்கென ஓங்கினேன். இந்த மேட்ச் பாய்ண்ட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள, என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சற்றே நீளமான கதை..!! சொல்கிறேன்..!! பொறுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!! என் பெயர் அசோக். எம்.பி.ஏ படித்திருக்கிறேன். பிறந்தது காஞ்சிபுரத்துக்கு அருகே மாமண்டூர். படித்ததெல்லாம் சென்னையில்தான். எனக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறான். பெயர் அபிஷேக். இப்போது சென்னையில் அவனுடன்தான் தங்கியிருக்கிறேன். அப்பா அம்மா இன்னும் காஞ்சிபுரத்தில்தான் இருக்கிறார்கள். ஸ்கூல் படிக்கும்போது எதேச்சையாக ஆரம்பித்ததுதான் இந்த டென்னிஸ் விளையாடும் பழக்கம். ஒருநாள் PET மாஸ்டர் நான் விளையாடுவதை கவனித்து, எனக்கு இயல்பாகவே அந்த திறமை இருப்பதாக சொன்னார். டென்னிஸ் விளையாட்டின் நுணுக்கங்களை நிறைய கற்றுக் கொடுத்தார். என் வாழ்க்கையில் விழுந்த முதல் டென்னிஸ் வித்து அதுதான்..!! பின்பு காலேஜிலும் டென்னிஸை கண்டின்யூ செய்தேன். ஒருமுறை இன்டர் காலேஜ் டோர்னமண்டில் சாம்பியன் பட்டம் வென்றேன். என்னையும் அறியாமல் டென்னிஸ் என்னுடன் கலந்தது. டென்னிஸை காதலித்தேன். எம்.பி.ஏ முடித்தபோது என் மனதில் இருந்த ஒரே லட்சியம், டென்னிஸ் பந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிப்பதுதான்..!! அம்பத்தூரில் இருக்கும், அந்த மாதிரி ஒரு கம்பெனியில் குறைந்த ஊதியத்திற்கே வேலைக்கு சேர்ந்தேன். ஐந்தே வருடங்கள்..!! அந்த பிசினஸ் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். நிறைய காண்டாக்ட்ஸ் கிடைத்தது. அவர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப் வளர்த்துக் கொண்டேன். நான் தனியாக பிசினஸ் ஆரம்பித்தால், பிரகாசிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தது. கொரட்டூரில் ஒரு சின்ன யூனிட் ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தேன். ஊரில் உள்ள நிலம், அம்மாவின் நகைகள் கொஞ்சம், எல்லாம் சேர்த்து முதலீடு தயார் செய்தேன். பந்து தயாரிக்க தேவையான எந்திரங்கள் எல்லாம் கூட ஆர்டர் செய்துவிட்டேன். அப்போதுதான் வந்தது சிக்கல்.. கம்பெனிக்கு லைசன்ஸ் பெறும் வடிவில்..!! சிக்கலை தீர்க்க தொழிற்துறை மந்திரியின் உதவியை நாட சொன்னார்கள் தெரிந்தவர்கள்..!! மந்திரியிடம் உதவி கேட்க, நான் சுந்தரமூர்த்தியை அணுகினேன். சுந்தரமூர்த்தி எங்கள் ஊர்க்காரர்தான். இப்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். பெரிய பிசினஸ்மேன். கோடீஸ்வரர். மினிஸ்டருக்கு மிக நெருக்கமானவர். என்னுடைய பிரச்னையை அவரிடம் சொன்னபோது, வேலையை முடித்து தர பத்து லட்சம் பணம் கேட்டார். வேறு வழி தெரியாமல் நானும் பல கஷ்டங்களுக்கு இடையில் அந்த பணத்தை புரட்டிக் கொடுத்தேன். அப்புறமும் இரண்டு மாதங்கள் அவருடைய ஆபீசுக்கு என்னை அலையவிட்டார். இரண்டு மாத இறுதியில் ஒருநாள் என் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது மாதிரி அதை சொன்னார். "இன்னும் ஒரு பத்து இருந்தாதான் வேலை ஆகும் தம்பி..!!" அவர் கூலாக சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன். "ஸார்... என்ன ஸார் சொல்றீங்க..? பத்து லட்சத்துல முடிச்சு தர்றேன்னுதான சொல்லீருந்தீங்க..?" "வாஸ்தவந்தான்..!! ஆனா.. நெனச்சதை விட வேலை சிக்கலா இருக்கு தம்பி.. நெறைய பேரை கரக்ட் பண்ண வேண்டி இருக்கு.. மினிஸ்டர் கூடுதலா எதிர்பார்க்குறாரு.. அதனால இன்னும் ஒரு பத்து ரெடி பண்ணிடுங்க..!!" "இன்னும் பத்தா..? ஸார்... நான் ஏற்கனவே கொடுத்த பத்து லட்சத்தை ரெடி பண்ணுறதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. இன்னும் பத்துலாம் சான்சே இல்லை..!!" "அப்போ வேலை முடியாது..!!" அந்த ஆள் சொல்லிவிட்டு குச்சியால் பல் நோண்ட, நான் கடுப்பானேன். அவனவன் வெயிலிலும், மழையிலும் அயராது உழைத்தாலும், ஆயிரம் ரூபாய் பார்ப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாதிரி ஆட்கள் உட்கார்ந்த இடத்தில், பல் நோண்டிக்கொண்டே பல லட்சங்கள் பார்த்துவிடுகிறார்களே என எரிச்சலாக வந்தது. அவர் மீது லேசான ஒரு சந்தேகம் வேறு மனதுக்குள் முளைவிட்டது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு முடிவுடன் சாந்தமான குரலில் சொன்னேன். "சரி ஸார்.. நீங்க வேலையை முடிச்சு தர வேணாம்..!! நான் வேற ரூட் மூலமா மினிஸ்டரை புடிக்கிறேன்..!! நான் குடுத்த பணத்தை மட்டும் திரும்ப கொடுத்திருங்க.." நான் சொல்லி முடிக்கும் முன்பே, அந்த ஆள் "ஹஹா ஹாஹ்ஹா ஹ்ஹ்ஹ்ஹஹா..." என்று எதோ பெரிய ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். "ஏ..ஏன் சிரிக்கிறீங்க..?" "என்ன தம்பி புரியாத ஆளா இருக்குறீங்க..? லஞ்சமா கொடுத்த பணம் திரும்பி வந்ததா எங்கயாவது சரித்திரம் உண்டா..? அதுலாம் அவ்ளோதான் தம்பி..!!" அவர் கிண்டலாக சொன்ன விதம் எனக்கு ஆத்திரத்தை கிளப்பியது. "ஸார்.. வெளையாடாதீங்க.. அந்த பத்து லட்சத்தை புரட்டுறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன்னு உங்களுக்கு தெரியாது..!! தயவு செஞ்சு திரும்ப கொடுத்திடுங்க.. இல்லன்னா.." நான் சற்றே கோபத்துடன் சொல்ல, "இல்லன்னா..? சொல்லு.. இல்லன்னா..? என்ன மெறட்டுறியா..? என்ன பண்ணிடுவ..?" பட்டென்று அந்த ஆள் ஒருமைக்கு தாவினார். என்னை முறைத்தார். "நீங்க இப்டி பேசுறது சரியில்லை ஸார்.. அந்தப் பணத்தை நீங்களே அமுக்கிட்டீங்களோன்னு.." "ஆமாம்.. அப்டியே வச்சுக்கோ..!! என்ன இப்போ..? வேலை ஆகணும்னா.. இன்னும் பத்து லட்சத்தோட வா.. இல்லன்னா அப்டியே வெளில ஓடிப் போயிடு..!! அதுக்கும் மேல என்கூட மோதிப் பாக்கனும்னா.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. நானும் ரெடி..!! என்னை மீறி அந்த லைசன்ஸை.. நீ எப்டி வாங்குறேன்னு நானும் பாக்குறேன்..!!" சந்தேகமே இல்லை..!! இந்த ஆள்தான் நடுவில் புகுந்து எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விட்டிருக்கிறான்..!! ச்சே.. எவ்வளவு ஒரு மோசமான முட்டாளாய் நான் இருந்திருக்கிறேன்..? இப்படி ஏமாந்து போய் நிற்கிறேனே..? இவனிடம் பணம் தந்ததற்கு கூட எந்த வித ஆதாரமும் என்னிடம் இல்லையே..? ச்சே..!!!!!!!! கோட் சூட் மாட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு, எவ்வளவு நல்ல பிள்ளையாய் நடித்து என்னை ஏமாற்றி விட்டான்..? இப்படி ஏமாற்றி சேர்த்ததுதான் இந்த கார், பங்களா, கம்பெனி என்று இவ்வளவு சொத்துக்களா..? நான் நொந்து போனேன். நான் கட்டிய லட்சியக் கோட்டை என் கண்முன்னே சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சிதறி விழுவது போல இருந்தது. என்ன செய்வது..???? இந்த பணம் படைத்த திமிங்கிலத்துடன் மோதி.. நான் எப்படி ஜெயிப்பது..??? ஒன்றும் புரியவில்லை. இனி இந்த ஆளிடம் பேசியும் பிரயோஜனம் இல்லை. அமைதியாக எழுந்தேன். சோர்ந்து போனவனாய் திரும்பி நடந்தேன். அறைக்கதவை திறக்க போனபோதுதான்.. பட்டென்று அந்த கதவை திறந்து கொண்டு, புயல் மாதிரி அந்தப்பெண் உள்ளே நுழைந்தாள். மிக மிக அழகாய் இருந்தாள். "டாடி............................!!!!!!!!!!!!!!" என்று கத்திக்கொண்டே, ஓடிப்போய் அந்த சுந்தரமூர்த்தியின் கழுத்தை கட்டிக் கொண்டாள்."அடடே.. ப்ரியா குட்டி.... என்னடா செல்லம்... டாடியை பாக்க ஆபீசுக்கே வந்துட்ட..?" அவரும் அவளை அணைத்துக் கொண்டார். "ஏன்.. வரக்கூடாதா..? என் செல்ல டாடியை பாக்க.. நான் வருவேன்.." அந்த ப்ரியா கொஞ்சலாக சொல்லிக்கொண்டே, அவருடைய கன்னத்தில் மாறி மாறி 'இச்ச்..!!' வைத்தாள். அவரும் முகமெல்லாம் பூரிப்பாக, மகளுக்கு தன் கன்னத்தை மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தார். நான் ஓரிரு வினாடிகள் அவர்கள் இருவரையும் வெறுப்பாக பார்த்தேன். அப்புறம் பட்டென்று கதவை திறந்து வெளியேறினேன். ஏமாந்து போன விஷயத்தை அண்ணனிடம் சொன்னபோது அதிர்ந்து போனான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொன்னான். 'போனா போதுடா.. விடு.. நாம வேற வழில ட்ரை பண்ணலாம்..' என்று இரண்டு க்ளாசிலும் ஊற்றியிருந்த விஸ்கியின் அளவை சரிபார்த்துக் கொண்டே சொன்னான். அப்புறம் அடிக்கடி அண்ணனுடன் தண்ணியடிக்க வேண்டி இருந்தது. சுந்தரமூர்த்தி எனக்கு ஏற்படுத்திய நஷ்டம் எங்கெங்கேயோ இடித்தது. கடன் கொடுத்தவர்களுக்கு, லைசன்ஸ் கிடைக்காத விஷயம் தெரிய வர, என்னை நெருக்க ஆரம்பித்தார்கள். ஆர்டர் செய்த எந்திரங்களை கேன்சல் செய்து.. பணத்தை திரும்ப கட்டி சரி செய்ய வேண்டி இருந்தது. சுந்தரமூர்த்தி ஏற்படுத்தியதை போல இன்னொரு மடங்கு நஷ்டம்..!! எனக்கு பணம் போனது கூட கவலை இல்லை. என் லட்சியம் சிதைந்து போனதில் மிகவும் இடிந்து போனேன். அண்ணன் இன்னும் நம்பிக்கை இழக்காமல், வேறு வழியில் பணம் புரட்ட.. ப்ளான்ட்டுக்கு அப்ரூவல் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால்.. நான் சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்டேன். எல்லாம் அந்த சுந்தரமூர்த்தி என்ற ஏமாற்று ஆசாமியால் வந்தது. நான் அந்த ஆள் மீது உச்சபட்ச வெறுப்பில் இருந்தேன். அப்போதுதான் ஒருநாள் அந்த ப்ரியாவை ஐநாக்ஸில் வைத்து பார்க்க நேர்ந்தது. நண்பிகள் புடை சூழ.. கார் பானட்டில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு.. கோக் உறிஞ்சிக்கொண்டு.. சிவந்த இதழ்களை விரித்து, பளீரென்ற வெண்பற்களை காட்டி இளித்துக் கொண்டு..!!! என்னவென்றே தெரியவில்லை.. அவளை பார்க்க பார்க்க.. எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது..!! பற்களை கடித்துக் கொண்டு நகர முற்பட்டவனின் மனதில்.. திடீரென அந்த எண்ணம் விழுந்தது..!! நான் அந்த ப்ரியாவை ஃபால்லோ செய்தேன். ஒரு இரண்டு மூன்று நாட்களிலேயே அவளை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சுந்தரமூர்த்திக்கு ப்ரியா என்றால் உயிர்..!! அவளுக்காக அப்படி உருகுகிறார்..!! அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்து போகிறார்..!! ப்ரியாவை அடித்தால் அவருக்கு வலிக்கும் என்று எனக்கு தெளிவாக புரிந்து போனது. சுந்தரமூர்த்தியை பழிவாங்க ப்ரியாவை கேடயமாக ஆக்கிக்கொண்டால் என்ன என்று, என் மனம் விகாரமாக யோசித்தது. அவளது தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொண்டேன். தினமும் காலையில் ஏரோபிக்ஸ் க்ளாஸ்.. அப்புறம் காலேஜ்..!! ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறாள். முன்னிரவில் இருந்து நள்ளிரவு வரை நண்பிகளோடு காரில் ஊர் சுற்றுகிறாள். மாலையில்தான் எனக்கே ஆச்சரியமான அந்த வேலையை செய்கிறாள். ஒரு க்ளப் சென்று ரெண்டு மணி நேரம் டென்னிஸ் ஆடுகிறாள்..!!அந்த டென்னிஸ் க்ளப், நான் முன்பு வேலை பார்த்த கம்பெனி மூலமாக எனக்கு கிடைத்த காண்டாக்ட்களில் ஒன்றுதான். எளிதாக என்னால் மெம்பர்ஷிப் வாங்க முடிந்தது. ப்ரியா வரும் டைமிங்கிலேயே எனக்கும் ஸ்லாட் வாங்கிக் கொண்டேன். எனக்கு ப்ரியாவை என்ன செய்வதென்றெல்லாம் அப்போது பெரிதாக ப்ளான் இல்லை. அவளை என்னை நம்ப வைக்க வேண்டும். முடிந்தால் காதலிக்க வைக்க வேண்டும். நான் சொல்வதை அவள் கேட்கும் அளவிற்கு மாற்ற வேண்டும். அவள் மூலமாக அவளுடைய அப்பனின் கண்ணில் விரல் விட்டு ஆட்ட வேண்டும்..!! க்ளப்பில் சேர்ந்து ஒரு இரண்டு வாரங்களிலேயே, நான் ப்ரியாவுக்கு மிகவும் தெரிந்தவனாகிப் போனேன். ஒரு சில சந்திப்புகளிலேயே என் மீது உச்சபட்ச வெறுப்புக்கு ஆளாகினாள். காரணம் இருக்கிறது..!! அவளுடன் மோதலில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். வேண்டும் என்றே அவளை தேடிச்சென்று சீண்டினேன். போன முதல் நாளே, அவள் கார் நிறுத்தும் இடத்தில் என் பைக்கை நிறுத்தி பிரச்னை செய்தேன். அவள் என்னை கடக்கும்போதெல்லாம் ஏதாவது கமென்ட் வாய்க்குள் முனுமுனுப்பேன். சில தடவைகள் இன்ட்டென்ஷனோடு பந்தை அவளுடைய பட்டெக்ஸில் அடித்து வெறுப்பேற்றினேன். நான் எதிர்பார்த்த மாதிரியே ப்ரியா என் மீது படு எரிச்சலுக்கு உள்ளானாள். என்னை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். போனவாரம் திடீரென என்னிடம் தேடிவந்து இளித்தாள். என்னை காபி சாப்பிட அழைத்தாள். நண்பிகளின் உதவியுடன் என்னை கலாய்த்து நோகடிப்பதுதான் அவளுடைய நோக்கம். ஆனால் அந்த கலாய்த்தல் திட்டம் அவளே எதிர்பாராமல் வேறு திசையில் திரும்பியது. "ஏண்டி ப்ரியா.. நேத்து சேந்த கத்துக்குட்டி பசங்கல்லாம்.. உன்கிட்ட மொறைச்சுக்கிறாங்க போல..!! மொதல்ல அவனுகளை டென்னிஸ் ராக்கெட்டை ஒழுங்கா புடிக்க சொல்லு..!!" மறைமுகமாக என்னை தாக்கினாள் ப்ரியாவின் அல்லக்கை ஒருத்தி. டென்னிஸே தெரியாத கத்துக்குட்டி மாதிரிதான், நான் ப்ரியாவிடம் அத்தனை நாளாய் காட்டிக் கொண்டிருந்தேன். இப்போது ப்ரியா பல்லை கடித்தவாறு, ஓரக்கண்ணால் என்னை முறைத்தபடியே சொன்னாள். "ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஒருநாள் வச்சுக்குறேன் அந்த 'L' போர்ட் பையனை..!! அப்புறம் நான் இருக்குற பக்கமே தலை வச்சுப்படுக்க மாட்டான் பாரு..!!" அவர்கள் என்னைத்தான் மறைமுகமாக சொல்கிறார்கள் என்று எனக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் சொன்னேன். "ஹலோ.. ஏன் 'L' போர்ட் பையன், கத்துக்குட்டின்லாம் சொல்லி அவரை கேலி பண்றீங்க..? நீங்களும் ஒருநாள் கத்துக்குட்டியா இருந்தவங்கதான..? ஒரு ஒருவாரம் ப்ராக்டீஸ் பண்ணினா.. அவரும் உங்களை மாதிரி வெளையாடிட்டு போறாரு..!!" "ஓஹோ..? ஒருவாரம் ப்ராக்டீஸ் பண்ணினா.. நீங்க எங்க ப்ரியா மாதிரி வெளையாடிடுவீங்களா..?" இது இன்னொரு அல்லக்கை. "ஓ.. அப்போ இவ்ளோ நேரம் என்னைப் பத்தித்தான் சொல்லிட்டு இருந்தீங்களா..?" "அப்டித்தான் வச்சுக்கோங்களேன்..!!" "அப்போ.. நீங்களும் அப்டியே வச்சுக்கோங்க..!!" "எப்படி..?" "ஒருவாரம் ப்ராக்டீஸ் பண்ணினா.. நானும் உங்க ப்ரியாவை பீட் பண்ண முடியும்..!!" "சான்ஸே இல்லை.. எங்க ப்ரியா டென்னிஸ் ஆடி.. நீங்க பாத்தது இல்லை..!!" "ஹாஹா.. நான் டென்னிஸ் ஆடியும் நீங்க பாத்தது இல்லை..!!" "ஓஹோ..? அப்போ நெக்ஸ்ட் வீக் மேட்ச் வச்சுக்கலாமா..?" "தாராளமா வச்சுக்கலாம்..!!" "என்ன பெட்..?" "பெட்டா..? பெட்லாம் எதுக்கு..? சும்மா ஜாலியா வெளையாடலாம்..!! யாரு நல்லா வெளையாடுறாங்கன்னு பாக்கணும்.. அவ்ளோதான..?" "ஹ்ஹ்ஹா.. பயந்துட்டீங்க பாத்தீங்களா..?" "பயமா..? சரி.. பெட் என்னன்னு சொல்லுங்க..!!" நான் புன்னகையுடன் கேட்க, அவ்வளவு நேரம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா, இப்போது வாய் திறந்தாள். என் முகத்தை ஒருமாதிரி வெறுப்பாக பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னாள். "நான் ஜெயிச்சிட்டா.. நீ தலையை மொட்டை அடிச்சுக்கணும்.. மீசையை ஷேவ் பண்ணிக்கணும்.. மெம்பர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டு.. இந்த க்ளப் பக்கமே தலை வச்சு படுக்க கூடாது..!!" நான் நிஜமாகவே மிகவும் அதிர்ந்து போனேன். அவளுக்கு என் மீது வெறுப்பு இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னேன். "ஓகே.. சப்போஸ் நான் ஜெயிச்சிட்டா..?" "ஹாஹா.. அப்டிலாம் வேற நப்பாசை இருக்கா உனக்கு..?" ப்ரியா கேலியாக சொன்னாள். "நப்பாசைன்னே வச்சுக்கோ..!! என்ன பெட்..?" "நீயே சொல்லு..!!" அவள் சொல்லிவிட்டு என்னை அலட்சியமாக பார்த்தாள். உடனிருந்த அவளது தோழிகள் நான் என்ன கேட்கப்போகிறேன் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களாய் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ப்ரியாவின் முகத்தை கூர்மையாக பார்த்து, தெளிவாக அந்த வார்த்தைகளை உச்சரித்தேன். "என்னை நீ கிஸ் பண்ணனும்..!! உதட்டுல..!!" இப்போது ப்ரியா என்னைப் போல இரு மடங்கு அதிர்ந்து போனாள். ஒரு மாதிரி மிரட்சியாக பார்த்தாள். 'மு..முத்தமா...?' என தடுமாறினாள். அருகிலிருந்த அவளது அல்லக்கைகள் அவளை தனியாக கூட்டி சென்று குசுகுசுவென எதோ பேசினார்கள். நான் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவர்களை புன்னகையுடன் வேடிக்கை பார்த்தேன். 'ப்ரியா இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டாள்.. போட்டியை வாபஸ் வாங்கிக் கொள்வாள்..' என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளுடைய தோழிகள் அவளை விடவில்லை. 'இவன்லாம் ஜெயிக்க சான்சே இல்லடி.. இவனை பழிவாங்க இதை விட்டா.. வேற நல்ல சான்சே கெடைக்காது..' என்று அவள் காதில் மந்திரம் ஓதி அவளை 'டீல்...!!' சொல்ல வைத்தார்கள். எனக்கும் வேறு வழியில்லை. ஒத்துக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலையில் மேட்ச் என்று பிக்ஸ் செய்து கொண்டோம். அந்த ஒரு வாரம் நான் கடுமையாக ப்ராக்டீஸ் செய்தேன். போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று வெறியாக இருந்தேன். தோற்றுப் போனால், என் பழிவாங்கல் திட்டம் பாழாய் போவதோடு, நான் வேறு மொட்டை அடித்துக் கொண்டு அவமானப்பட வேண்டியதாகிவிடும்.

இன்றுதான் அந்த போட்டி நாள். ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்ததை விட ப்ரியா நன்றாக ஆடினாள். அவள் எதிர்பார்த்ததை விட நான் மிக நன்றாக ஆடினேன். ஆளுக்கொரு செட் ஜெயித்தோம். மூன்றாவது செட் இழுபறியாகி.. டை பிரேக்கர் வந்து.. இதோ.. மேட்ச் பாய்ன்ட்..!! ப்ரியாவின் இதழ்கள் என் இதழ்களோடு இணைய.. நான் ஜெயிக்க வேண்டிய இறுதி பாய்ன்ட்..!! கதையின் ஆரம்பத்தில் அம்பயர் சொன்ன அதே மேட்ச் பாய்ன்ட்..!!வலுவெல்லாம் வலது கையில் கொண்டு சென்று சரக்கென சர்வ செய்தேன். ப்ரியா மிக எளிதாக எடுத்தாள். என் பக்கம் அடித்து விட்டாள். ஒரு நான்கைந்து முறை பந்தை டவுன் தி லைனிலேயே அடித்து ஆடிக்கொண்டிருந்தோம். பின்பு நான் திடீரென குறுக்காக சென்று, ராலியில் வந்த பந்தை க்ராஸ் கோர்ட்டில் அடிக்க, ப்ரியா ஓடிச்சென்று பந்தை எடுத்து, திரும்ப என்பக்கம் அனுப்ப சற்றே சிரமப்பட்டுப் போனாள். எனக்கு அது நல்ல வாய்ப்பாக தோன்றியது. அவள் எல்லைகோட்டுக்கு அருகே நின்று கொண்டிருக்க, நான் ராக்கெட்டின் வேகத்தை திடீரென குறைத்து, பந்தை டிராப் செய்தேன். ஸ்லோமோஷனில் பறந்து சென்ற பந்து, நெட்டில் பட்டு அதன் மீதே தயங்கி நின்றது. ப்ரியா சற்றே லேட்டாக சுதாரித்துக் கொண்டு, நெட் நோக்கி ஓடி வந்தாள். அதற்குள் தயங்கி நின்ற பந்து அவளுடைய எல்லைக்குள் மெதுவாக விழுந்தது. பின் எழும்பி மீண்டும்..!!!!! தான் தோற்றுப் போனதை நம்ப முடியாமல், ப்ரியா உறைந்து போய் நின்றிருந்தாள். நான் ஜெயித்த நிம்மதியில் கண்களை ஒருமுறை மூடித் திறந்தேன். தாராளமாக மூச்சு விட்டேன். ப்ரியா சோர்ந்து போனவளாய் சென்று சேரில் அமர்ந்து கொண்டாள். இரண்டு கைகளாலும் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். நானும் அமைதியாக சென்று அருகில் அமர்ந்தேன். அவ்வளவு நேரம் ஆர்வமாய் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அவளது அல்லக்கைகள், இப்போது போன இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தனர். நான் ஓரக்கண்ணால் ப்ரியாவை பார்க்க, அவள் என் பக்கம் திரும்பவே இல்லை. நடந்ததை நம்பமுடியாதவளாய் காட்சியளித்தாள். கொஞ்ச நேரம்..!! பின்பு பட்டென எழுந்தாள். உள்ளே நடந்து சென்றாள். வாஷ்ரூம் செல்கிறாள் என்று தோன்றியது. நான் ஓரிரு வினாடிகள்தான் யோசித்தேன். பின்பு நானும் எழுந்து அவள் பின்னால் நடந்தேன். ஆளில்லாத அந்த குறுகலான வராண்டாவை அடைந்ததும், பின்னாலிருந்து அவளை அழைத்தேன். "ஹலோ மிஸ் ப்ரியா.. என்ன... நீங்க பாட்டுக்கு எந்திரிச்சு போனா என்ன அர்த்தம்..? எனக்கு தரவேண்டியதை தந்துட்டு போங்க..!!" நான் கேலியான குரலில் சொன்னதும், ப்ரியா வெலவெலத்துப் போய் திரும்பினாள். மிரண்டு போனவளாய் அப்படியே சுவற்றில் சாய்ந்து பம்மினாள். அவள் முகமெல்லாம் பயம் அப்பியிருந்தது. கண்களில் ஒரு அதீத மிரட்சி தெரிந்தது. உடல் வெடவெடத்தது. கை விரல்கள் காற்றில் டைப் அடித்தன. நான் அவளை நெருங்கினேன். எனது இரண்டு கைகளையும் அவளுக்கு இரண்டு புறமும், சுவற்றில் ஊன்றி அவளை நகர விடாமல் செய்தேன். எனது முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகே கொண்டு சென்றேன். ப்ரியா என் முகத்தையே கிலியாக பார்த்துக் கொண்டிருக்க, நான் அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்தபடி மெல்லிய குரலில் சொன்னேன். "கொடு ப்ரியா.." "எ...என்ன..?" ப்ரியா உதடுகள் துடிதுடிக்க கேட்டாள். "கிஸ்..!! நான் ஜெயிச்சா.. தர்றேன்னு சொன்னியே..??" நான் என் நாவால் உதட்டை ஈரமாக்கிக் கொண்டே கேட்க, ப்ரியா பதறினாள். "அ..அசோக்.. ப்ளீஸ்.. வேணாம்.." "என்னது.. வேணாமா..? வேணுமா வேணாமான்னு நான்தான் முடிவு பண்ணனும்..!! எனக்கு வேணும்ப்பா..!!" நான் குறும்பான குரலில் சொல்லிவிட்டு கண்ணடித்தேன். "ப்..ப்ளீஸ் அசோக்.. நா..நான்.. நான் தெரியாம அப்டி சொல்லிட்டேன்..!! ஐ'ம் ரியல்லி வெரி ஸாரி.. வழியை விடு அசோக்.. ப்ளீஸ்..!!" கெஞ்சினாள். "எனக்கு வர வேண்டியது வந்தா.. வழியை விடப் போறேன்.. எவ்ளோ கஷ்டப்பட்டு வெளையாண்டிருக்கேன்.." "இ..இங்க பாரு.. நீ.. நெஜமாவே ரொம்ப நல்லா வெளையாண்ட.. ஐ'ம் ரியல்லி இம்ப்ரெஸ்ட்..!! ஆ..ஆனா.. அதுக்கு நீ வேற ஏதாவது கேளு.. நான் தர்றேன்..!! பட்.. என்னால இந்த கிஸ் மட்டும்.. சத்தியமா முடியாது.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!!" ப்ரியாவின் ஈரமான செவ்விதழ்கள் பயத்தில் படபடத்தன. "ஓ..!! அப்போ நீ தரமாட்ட..? பரவால்ல.. யார் கொடுத்தா என்ன..? கிஸ் ஒன்னுதான..? நானே கொடுத்துக்குறேன்..!!" சொல்லிவிட்டு நான் அவள் முகத்தை நோக்கி குனிந்தேன். என் உதட்டை நாவால் ஈரமாக்கிக்கொண்டே, அவளது உதட்டை நெருங்க, ப்ரியா முகத்தை சுருக்கி, கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். 'ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..' என கெஞ்சும் குரலில் முனுமுனுத்தாள். பின்பு என் உதடுகள் அவளது உதடுகளை உரசும் அளவுக்கு மிக அருகாமையில் சென்றதும், அவளுடைய முனுமுனுப்பு நின்றது. எனது சூடான மூச்சுக்காற்று சுள்ளென்று அவளது முகத்தில் அறைந்ததும், அவளது உதடுகள் பட்டென பிளந்து கொண்டன. ப்ரியா உறைந்து போனவளாய் அப்படியே நின்றிருந்தாள். எந்த நேரமும் என் உதடுகள் அவளது உதடுகளை கவ்வும் என்று, மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, கண்மூடி காத்திருந்தாள். அவளது முகமெல்லாம் முத்துமுத்தாய் வியர்த்துப் போயிருந்தது. விளையாடி களைத்த வியர்வையையும் மீறி, அவளது உடலில் இருந்து வீசிய இனிய நறுமணம், என் நாசிக்குள் புகுந்து என்னை கிறங்கடித்தன. ஆரஞ்சு சுளைகள் மாதிரியான அவளது உதடுகள், படபடவென அதிர்ந்தன. நான் விழிகளை விரித்து, அவள் முகத்தை வன்மமாக முறைத்தேன். 'இவள் அப்பன்தானே என் கனவுக்கோட்டையை தகர்த்தவன்..? என் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு, படு எகத்தாளமாக பேசியவன்..? இவளுக்காகத்தானே அவன் அப்படி அடுத்தவரை ஏமாற்றி பணம் சேர்க்கிறான்..? இவளோ இப்போது என் முத்தத்திற்காக உதடுகள் விரிய காத்திருக்கிறாள்..!! என்ன செய்யலாம்..? முத்தமிட்டு விடலாமா..?? எனது முத்தம் இவளுக்கு கஷ்டத்தை கொடுக்கும்.. ஆனால் இவளுக்கு இது பத்தாது.. இதைவிட பெரிய கஷ்டம் கொடுக்க வேண்டும்..!!' நான் பட்டென ப்ரியாவிடமிருந்து விலகிக் கொண்டேன். அவள் அப்புறமும் கொஞ்ச நேரம் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..' என நான் பெரிய குரலில் வாய் விட்டு சிரிக்கவும், மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். முத்தமிடுவான் என நினைத்தவன் முத்தமிடாமல் சிரிக்கவும், என் முகத்தையே குழப்பமாய் நோக்கினாள். "என்ன ப்ரியா.. பயந்துட்டியா..? நான் சும்மா விளையாண்டேன்.. எனக்கு கிஸ்லாம் ஒன்னும் வேணாம்.. நீ போ..!!" நான் முகமெல்லாம் சிரிப்பாக சொல்லவும், அவள் என்னை நம்ப முடியாமல் பார்த்தாள். ஒருமுறை நிம்மதியாக கண்களை மூடி திறந்தாள். என்னை பார்த்து அழகாக புன்னகைத்தாள். அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை இப்போது தாராளமாக விட்டாள். அவளது மார்புப்பந்துகள் 'குபுக்.. குபுக்..' என மேலும் கீழும் ஏறி இறங்கியது கவர்ச்சியாக இருந்தது. புறங்கையால் நெற்றியின் வியர்வையை ஒருமுறை துடைத்துக் கொண்டாள். கீழுதட்டை மடித்து, பற்களுக்குள் வைத்து கடித்து, என்னை பார்த்து நன்றியுணர்ச்சியுடன் புன்னகைத்தாள். "தேங்க்ஸ் அசோக்..!!" "ஹஹா.. தேங்க்ஸ்லாம் எதுக்கு..?" "நான் அவ்ளோ தூரம் கெஞ்சுனதை.. புரிஞ்சுக்கிட்டதுக்கு..!!" "நீ கெஞ்சுனதுக்காகலாம் ஒன்னும்.. நான் கிஸ் வேணான்னு சொல்லலம்மா.." "பி..பின்ன..?" ப்ரியா புரியாமல் கேட்க, நான் அமைதியான குரலில் சொன்னேன். "நாம பெட் கட்டுனப்போவே.. எனக்கு உன்னை கிஸ் பண்ற ஆசைலாம் இல்லை.. அந்த மாதிரி ஐடியாவே எனக்கு சுத்தமா இல்லை..!!" "அப்புறம் ஏன் கிஸ் வேணுன்னு பெட் கட்டின..?" "சும்மா கேட்டுப் பாக்கலாம்.. நீ என்ன சொல்றேன்னு பாக்கலாம்னு தோணுச்சு..!!" "சும்மா கேட்டியா..? பின்ன ஏன் அப்டி வெறித்தனமா வெளையாண்டு ஜெயிச்ச..?" "அ..அது.. என் தலைமுடியை காப்பாத்திக்கிறதுக்கு..!!" நான் பட்டென அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அப்படி சொல்லவும், ப்ரியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல், வாயைப் பொத்திக் கொண்டு, அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தாள். நான் புன்னகையுடன் அவள் சிரித்து அடங்கும்வரை காத்திருந்தேன். முழுதாக அரை நிமிடம் எடுத்துக் கொண்டாள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் சிரிப்பை குறைத்து, என் முகத்தை புன்னகையுடன் அவள் ஏறிட்டு பார்க்க, நான் அமைதியான குரலில் ஆரம்பித்தேன். "நான் ஒன்னு சொன்னா.. தப்பா எடுத்துக்க மாட்டியே..?" "ம்ஹூம்.. சொல்லு.." "முத்தத்தை பந்தயமா வைக்க.. நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க கூடாது ப்ரியா..!!" "அ..அசோக்.." அதுவரை புன்னகை தவழ்ந்த ப்ரியாவின் முகம் பட்டென மாறியது. ஒருவித சீரியஸ்னசுடன் என்னை பார்த்தாள். நான் தொடர்ந்தேன். "முத்தம்ன்றது ரொம்ப புனிதமான விஷயம் ப்ரியா.. ஆதி காலத்துல.. அம்மா தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்போது.. அது நல்லா டைஜஸ்ட் ஆகணும்ன்றதுக்காக.. சாப்பாட்டை நல்லா மென்னு கூழாக்கி.. வாய் வழியா குழந்தைக்கு ஊட்டுவாங்களாம்..!! முத்தம்ன்ற விஷயம் அப்டித்தான் ஆரம்பிச்சதா சொல்றாங்க..!! முத்தம்ன்றது ரெண்டு பேரு அன்பை பரிமாறிக்கிற விஷயம்.. கஷ்டத்துல இருக்குறப்போ.. உனக்கு நான் இருக்கேன்னு ஆறுதல் சொல்ற விஷயம்.. கண்டிப்பா இந்த மாதிரி பந்தயத்துல வைக்கிற விஷயம் இல்லை..!!" நான் சொல்ல சொல்ல, ப்ரியா விழிகளை அகலமாய் விரித்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்க்கும்போது, அவளுடைய முகத்தில் எப்போதுமே இருக்கும் ஒரு ஏளனம் இப்போது சுத்தமாக காணாமல் போயிருந்தது. எக்கச்சக்க மரியாதை வந்து குடிகொண்டிருந்தது. "எனக்கு முடி போயிருந்தா.. நாளைக்கே வளர ஆரம்பிச்சுடும்...!! நான் உனக்கு முத்தம் கொடுத்திருந்தா...?? நெனச்சு பாரு...!!" "ம்ம்ம்.. புரியுது அசோக்.. ஸாரி..!!" ப்ரியா நிஜமான வருத்தத்துடன் சொன்னாள். "ச்சே.. ஸாரிலாம் எதுக்கு ப்ரியா.. ஏதோ.. எனக்கு சொல்லனுன்னு தோனுச்சு.. சொன்னேன்.. அவ்ளோதான்..!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சரி ப்ரியா.. எனக்கு டைம் ஆச்சு.. கெளம்புறேன்.. நாளைக்கு பாக்கலாம்..!!" சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க, "அ..அசோக்.. ஒரு நிமிஷம்..!!" ப்ரியா அழைத்தாள். "என்ன..?" "நா..நாம.. நாம எங்கயாவது வெளில போகலாமா..? நான் உனக்கு ட்ரீட் தர்றேன்.. நீ ஜெயிச்சதுக்கு..!!" "ஐயோ.. ட்ரீட்லாம் எதுக்கு ப்ரியா.. அதுலாம் ஒன்னும் வேணாம்..!!" "நோநோ.. இன்னைக்கு உன்னோட ஆட்டம்.. இட்ஸ் ரியல்லி அமேஸிங்..!! அதுக்கு நான் ஏதாவது பண்ணியே ஆகணும்.. நீ கேட்டதைத்தான் என்னால தரமுடியலை.. அட்லீஸ்ட் நானா விரும்பி தர்றதையாவது நீ ஏத்துக்கணும்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" அவள் குழந்தை மாதிரி கெஞ்ச ஆரம்பிக்க, நான் புன்னகையுடன் சம்மதித்தேன். "ஓகே ஓகே ஓகே.. போலாம்..!!" "தேங்க்யூ..!! ஜஸ்ட் டூ மினிட்ஸ்.. ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வந்துர்றேன்..!!" ப்ரியா சொல்லிவிட்டு உற்சாகமாக துள்ளி குதித்து உள்ளே ஓடினாள். நான் புன்னகையுடன் வெளியே காத்திருந்தேன். ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்து ப்ரியாவின் காரில் கிளம்பினோம். ப்ரியாதான் கார் ஓட்டினாள். வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து வெளிப்பட்டு, அடையாறு சாலையில் திரும்பியதும் காரின் வேகத்தை சற்று கூட்டினாள். கிளம்பிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என்னால் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. முத்தத்தை பற்றி நான் பேசிய சென்டிமன்ட் பேச்சில், ப்ரியா டோட்டலாக ஃப்ளாட் ஆகிவிட்டாள்...!!! நான் சொன்ன வார்த்தைகளையே மனதுக்குள் திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருமாதிரி சிந்தனை வயப்பட்டவளாகவே காட்சியளித்தாள். கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே, அடிக்கடி பக்கவாட்டில் திரும்பி என் முகத்தை ஒருமாதிரி வித்தியாசமாக பார்ப்பாள். நான் 'என்ன..?' என்று புன்னகைத்தால், 'ஒண்ணுல்ல..' என்று அசடு மாதிரி இளித்துவிட்டு மீண்டும் சாலையை பார்ப்பாள். அடையாறில் இருக்கும் ஒரு உயர்தர உணவகத்தில் எனக்கு ட்ரீட் கொடுத்தாள். ஓவர் கவனிப்பாக இருந்தது. 'இது நல்லாருக்கும்.. இது போட்டுக்கோ..!! எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ட்ரை பண்ணி பாக்குறியா..? நல்லா வச்சு சாப்பிடு.. இரு நானே போடுறேன்..!!' எனக்கு சிரிப்பாக வந்தது..!! என்னைப் பற்றி அவளுக்கு தெரியாத நிறைய விஷயங்களை, ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டாள். அவள் பற்றி நான் ஏற்கனவே அறிந்த விஷயங்களை (‘என் டாடி பேரு சுந்தரமூர்த்தி..!!’) அவள் சொல்ல, நான் அசுவாரசியமாக கேட்டுக் கொண்டேன். ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பும்போது, 'நாளைக்கு எப்போ வருவ..?' என்று கண்களில் பல்பு எரிய கேட்டாள். மறக்காமல் என் மொபைல் நம்பர் கேட்டு வாங்கிக் கொண்டாள். அப்புறம் வந்த இரண்டு மாதங்களில் நானும் ப்ரியாவும் மிகவும் நெருங்கிப் போனோம். அதிகாலையில் எழுந்ததுமே எனக்கு கால் பண்ணி பேசிவிடுவாள். மாலையில் நான் வரும் வரை க்ளப்பில் எனக்காக காத்திருப்பாள். இருவரும் டென்னிஸ் ஆடுவோம். தினமும் என்னுடன் டென்னிஸ் ஆடுகிறாளோ இல்லையோ.. பேசுவாள் பேசுவாள்.. அவ்வளவு பேசுவாள்..!! இப்போதெல்லாம் இரவில் அவளது தோழிகளுடன் ஊர் சுற்றுவதில்லை. எல்லோரையும் கழற்றி விட்டுவிட்டு, என்னுடன்தான் சுற்றுகிறாள். ப்ரியா என்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய கண்களே காட்டிக் கொடுத்துவிடும். அவளது கண்களில் காதல் பட்டாம்பூச்சிகள் பறந்ததை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. 'ஐ லவ் யூ..!!' என்று என்னிடம் இதுவரை வாய் விட்டு சொல்லாவிட்டாலும், அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அவளுடைய காதலை எனக்கு சூசகமாக சொல்ல முற்படுவாள்.ப்ரியா என்னிடம் எளிதில் வீழ்ந்துவிட்டாள் என்பது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் நாளாக நாளாக.. அவளுடன் பழக பழக.. அந்த சந்தோஷம் காணாமல் போனது. ஒருவித குற்ற உணர்ச்சி மனதை அரிக்க ஆரம்பித்தது. ப்ரியா நான் நினைத்தமாதிரி திமிர் பிடித்தவள் அல்ல..!! மலர் மாதிரி மென்மையானவளாக இருந்தாள்..!! என்னுடைய உண்மையான நோக்கம் தெரியாமல், வெகுளித்தனமாய் என் மீது அன்பு செலுத்த ஆரம்பித்திருந்தாள். குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, அவள் என்னை கூர்மையாக பார்க்கும் போது, எனக்கு உள்ளுக்குள் என்னவோ செய்யும். 'அப்பன் செய்த தவறுக்கு இவள் என்ன செய்வாள் பாவம்..?' என என் மனசாட்சி அடிக்கடி அலற ஆரம்பித்திருந்தது. இந்த மாதிரியான ஒரு குழப்பத்தில் நான் இருக்கும்போதுதான், ஒருநாள் ப்ரியா என்னை முழுமையாக அடித்து வீழ்த்தினாள். ஆப்பிள் நறுக்கும்போது, தெரியாமல் கத்தி என் கையில் பட்டுவிட்டது. அடுத்தநாளே ப்ரியா வேண்டும் என்றே அவளுடைய கையை நறுக்கிக்கொண்டு வந்து நின்றபோது, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். ஆத்திரத்தில் அவளை பார்த்து கத்தினேன். "நீ என்ன லூசா..? நான் தெரியாம கட் பண்ணிக்கிட்டதுக்கு.. நீ எதுக்கு வேணுன்னே கட் பண்ணிக்கிட்ட..?" "ச்…ச்சும்மா.. கட் பண்ணிக்கிட்டா எப்டி இருக்குன்னு பாக்கலாம்னு.." அவள் குழைந்து கொண்டே குறும்பான குரலில் சொன்னாள். "கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு..?" "எதுக்கு இப்போ கத்துற..? மருந்து போட்டா ரெண்டு நாள்ல சரியாயிடும்.." எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..!! சோர்ந்து போனேன்..!! என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் இவள்..? நான் என்ன நினைத்து இவள் பின்னால் சுற்ற ஆரம்பித்தேன்.. இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..? தலையை பிடித்துக் கொண்டேன்..!! "எ..எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு ப்ரியா.. நா..நாளைக்கு பாக்கலாம்..!!" சொல்லிவிட்டு நான் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல், திரும்பி நடந்தேன். ஹெல்மட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக்கொண்டு, ஆக்சிலரேட்டரை ஆத்திரமாக முறுக்கினேன். என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்க ஆரம்பித்திருந்தன. சாலையை பார்த்து வண்டியை செலுத்துவது மிக கடினமாக இருந்தது. எனது மனம் இப்போது எக்கச்சக்க குழப்பத்தில் மூழ்கியிருந்தது. நான் பழிவாங்குவதற்காக வந்த ப்ரியாவுக்காக, என் இதயம் பதறுவது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ச்சே...!! எவ்வளவு நல்ல பெண் இவள்..? இவளுடைய அப்பா அயோக்கியன் என்பதற்காக இவளுடைய வாழ்க்கையில் விளையாடுகிறேனே..? எவ்வளவு கண்மூடித்தனமான அன்பு வைத்திருக்கிறாள் என் மீது..? நான் நடத்தியது எல்லாம் நாடகம் என்று தெரிந்தால், எப்படி துடித்துப் போவாள்..? நான் செய்வது தவறு என்று என் புத்திக்கு பளிச்சென உறைத்தது. நொந்துபோனவனாய் வீட்டுக்குள் நுழைந்தவனை, அண்ணன் உற்சாகமாய் ஓடி வந்து கட்டிக் கொண்டான். அவன் முகம் எல்லாம் அப்படி ஒரு சந்தோஷம்..!! 'என்னடா..?' என்று நான் புரியாமல் விழிக்க, அவன் அந்த கவரை என் கையில் திணித்தான். பிரித்து பார்க்க சொன்னான். நான் பிரித்தேன். "நீ ப்ளான்ட் ஆரம்பிக்க அப்ரூவல் கெடைச்சிடுச்சுடா அசோக்.. நீ ஆசைப்பட்ட மாதிரி.. உன்னோட ட்ரீம் கம்பெனி..!! என்ன.. முன்னமாதிரி பெரிய லெவல்ல பண்ணமுடியாது.. பரவால்ல.. சின்னதா ஆரம்பி.. கூடிய சீக்கிரம் பெரிய ஆளா ஆகப் போற..!!" அவ்வளவுதான்..!!! அண்ணனின் உற்சாகம் இப்போது பலமடங்கு என்னை வந்து தொற்றிக் கொண்டது. ப்ரியாவை சுத்தமாக மறந்து போனேன். 'ஹேய்...!!!!!!!!!!!!!!!!' என்று சந்தோஷமாக கத்தியவாறு அண்ணனை அணைத்துக் கொண்டேன். அவன் உடனே அதை செலிபரேட் செய்தாக வேண்டும் என்றான். அப்புறம் என்ன..? அடுத்த அரை மணி நேரத்தில் நாங்கள் அந்த பாரில் இருந்தோம். அன்று கொஞ்சம் உயர்தர மதுவகைகளை ஆர்டர் செய்தோம். அடுத்து என்ன செய்வது.. எப்படி எல்லாம் தொழில் எல்லையை விரிவாக்குவது.. எந்தமாதிரி அணுகுமுறைகளை கடைபிடிப்பது.. என்று விவாதித்தவாறே, ஆர்டர் செய்த ஆல்கஹாலை உள்ளே தள்ளினோம். மூன்றாவது ரவுண்டு முடிந்த வேளையில்தான் அண்ணன் திடீரென கேட்டான். "அ..அந்த சுந்தரமூர்த்தி பொண்ணு என்னடா ஆனா..?" அவன் குழறலான குரலில் அலட்சியமாய் கேட்க, எனக்கு ஏறிய போதை எல்லாம் குப்பென்று இறங்கிப் போனது மாதிரி இருந்தது. மனதுக்குள் கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்த ப்ரியா, இப்போது நெஞ்செல்லாம் நிரம்பி அடைத்துக் கொண்டாள். சிரித்தாள்..!! எனக்கு வலித்தது..!! நான் சற்றே சோகமான குரலில் அண்ணனிடம் சொன்னேன். "அவ.. என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு நெனைக்கிறேண்டா..!!" "வாவ்...!!!!!!!!! என்னடா இவ்ளோ சா..சாதாரணமா சொல்ற..?" "இன்னைக்குத்தான் கன்ஃபார்ம் ஆச்சு..!!" "அப்போ... இ..இன்னைக்கு உனக்கு 'லக்கி டே'ன்னு சொல்லு.." உற்சாகமாக சொன்னவன், என் முகம் களையிழந்து போயிருப்பதை பார்த்ததும், "எ..என்னடா.. என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட..?" என்றான். "அவ ரொம்ப பாவம்டா..!! நாம நெனச்ச மாதிரி இல்லை.. ரொம்ப நல்ல பொண்ணா இருக்குறா..!!" "ஓஹோ..??" "ப்ச்..!! தப்பு பண்ணிட்டேன்டா.. அவ அப்பன் பண்ணுன தப்புக்கு.. இவகூட நான் விளையாண்டிருக்க கூடாது.. ச்சே..!!!!!" "ஹேய்.. என்னடா.. இப்டி ஃபீல் பண்ற..?" "பின்ன..? நேத்து நான் தெரியாம கையை கட் பண்ணிக்கிட்டேன்ல..? இன்னைக்கு அவ வேணும்னே கையை கட் பண்ணிட்டு வந்து நிக்கிறாடா..!!" நான் சொல்ல, இப்போது அண்ணனும் பலமாக அதிர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. நான் மீதமிருந்த விஸ்கியை அள்ளி தொண்டைக்குள் ஊற்ற, அவன் அமைதியாக புகைவிட்டபடி அமர்ந்திருந்தான். எதையோ தீவிரமாக யோசித்தான். பின்பு தொண்டையை கனைத்தவாறு மெல்லிய குரலில் சொன்னான். "அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..?" "என்ன..?" "இந்த பழிவாங்குற வெளையாட்டுலாம் போதும்.. நான் ஆரம்பத்துலையே சொன்னேன்.. நீதான் கேக்கலை..!! பரவால்ல.. இது இன்னும் சீரியஸ் ஆறதுக்கு முன்னாடி.. எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடு..!!" "ம்ம்ம்.." "நீ நெனச்ச மாதிரி.. பிசினஸ் ஆரம்பிக்கப் போற.. உன்னோட ட்ரீம் இப்போ உன் உள்ளங்கைல..!! இன்னும் எதுக்கு அந்த சுந்தர மூர்த்தி, அவன் பொண்ணுலாம்.. எல்லாத்தையும் விட்டுருடா..!! பிசினஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு..!! சரியா..?" "ம்ம்ம்.. சரிடா.. எனக்கும் அதுதான் சரின்னு படுது..!!" அடுத்த நாள் காலையிலேயே நான் க்ளப் சென்றேன். மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்தேன். என்னுடைய காண்டாக்ட் டீடெயில்ஸ், வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். க்ளப்பில் இருந்து கிளம்பியபோது ப்ரியாவிடம் இருந்து கால் வந்தது. பிஸி டோன் அனுப்பினேன். வேறு சிம்கார்ட் வாங்கி செல்போனில் திணித்துவிட்டு, பழைய சிம்மை தூக்கி தூர எறிந்தேன். அவ்வளவுதான்..!! இனி பிரியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை..!! மனம் இப்போது சற்று நிம்மதியாக இருந்தது. அப்புறம் வந்த ஒருவாரம் பரபரவென பறந்தது. டென்னிஸ் பால் ப்ரொடக்ஷனுக்கு தேவையான எல்லா வேலைகளையும் துரிதகதியில் பார்க்க ஆரம்பித்தேன். ப்ளான்ட்டை சுத்தம் செய்வது.. புதிய எந்திரங்களை எரக்ட் செய்வது.. லேபர்கள் தேர்ந்தெடுப்பது.. கஸ்டமர்களாக வரவிருப்பவர்களுக்கு கால் செய்து பேசுவது.. கம்பெனிக்கு லெட்டர்பேட் அடிப்பது முதற்கொண்டு.. எல்லா வேலைகளையும் நானே கீழ்மட்டத்திற்கு இறங்கி செய்தேன். அண்ணன் அவ்வப்போது வந்து உதவி செய்தாலும், நான் தினமும் தூங்க இரவு இரண்டு மணிக்கு மேல் ஆனது. அவ்வளவு வேலையிலும் அவ்வப்போது ப்ரியாவின் நினைவு என்னை வாட்டாமலில்லை. அவளுடைய வெண்ணிற சிரிப்பு.. செந்நிற வெட்கம்.. செல்லமான கோபம்.. மின்னலான பார்வை.. கருங்கூந்தல் வாசம்.. கைவிரல் மென்மை.. துப்பட்டாவின் தீண்டல்.. எல்லாம் வந்து என் மனதை அவ்வப்போது சுருக் சுருக்கென குத்தி சென்றன. ப்ரியாவை மறப்பது அவ்வளவு எளிதாக இருக்காது போல தோன்றியது. இனி அவளை பார்க்கவே போவதில்லை என எண்ணும்போது, இதயத்தின் ஓரமாக லேசாக வலித்தது. பரபரப்பான அந்த ஒருவாரம் முடிந்தபோது ஒருநாள்....!!!! நான் அன்று காலையில் கொஞ்சம் லேட்டாகவே எழுந்தேன். அண்ணன் அதிகாலையிலேயே எழுந்து ஆபீஸ் சென்றிருந்தான். நான் எழுந்து குளித்துவிட்டு, காபி போட்டு எடுத்துக் கொண்டு, பால்கனிக்கு வந்தேன். காபியை உறிஞ்சிக்கொண்டே எதேச்சையாக பார்வையை கீழே வீசியவன், அதிர்ந்து போனேன். ப்ரியா அங்கே நின்றுகொண்டிருந்தாள். மேலிருந்து பார்த்ததில் அவளுடைய தலை மட்டுந்தான் தெரிந்தது. முகம் கூட சரியாக தெரியவில்லை. அவளும் என்னை கவனிக்கவில்லை. கீழ் ஃப்ளாட் பெண்மணியிடம் எதோ கேட்டுக் கொண்டிருந்தாள். "இங்க அசோக்குனு.." "ஃப்ளாட் நம்பர்..?" "ஃப்ளாட் நம்பர் தெரியாது.. இந்தப்பக்கந்தான் ஒரு அப்பார்ட்மண்ட்ஸ்ல இருக்குறதா சொன்னாரு.." "இந்தப்பக்கம் நெறைய அப்பார்ட்மண்ட்ஸ் இருக்குதேம்மா.. இந்த அப்பார்ட்மண்ட்ஸ்தான்னு நல்லா தெரியுமா..?" "ம்ஹூம்.." "என்ன பொண்ணும்மா நீ..? இப்டி அட்ரஸ் தெரியாம.. அப்பார்ட்மண்ட்ஸ் அப்பார்ட்மண்ட்ஸா அலையுறியே.. ஆள் எப்டி இருப்பாரு..?" "ஹைட்டா இருப்பாரு.. மாநிறம்.." "ம்க்கும்.. இங்க எல்லா பசங்களும் அப்டித்தான் இருக்கானுக.." "யமஹா பைக் வச்சிருப்பாரு..." "பார்க்கிங் கீழே இருக்குது.. அங்க போய் பாரு.. அந்த வண்டி நிக்குதான்னு.." "ஓகேங்க.. தேங்க்ஸ்.." மேலே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. எனக்காக ஒருவாரம் தெருத்தெருவாக அலைந்திருக்கிறாள் என்று நினைக்கையில் இதயத்தை யாரோ பிசைவது மாதிரி வலித்தது. இதோ.. இப்போது கூட அவளது புன்னகை முகம் கொஞ்சமும் மாறாமல்.. சந்தோஷமும், நம்பிக்கையுமாக பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள். இன்னும் அவளை அலைந்து திரிய விடவேண்டுமா..? "ப்ரியா.." நான் அடக்கமுடியாமல் அழைத்துவிட்டேன். ப்ரியா பட்டென திரும்பி மேலே பார்த்தாள். என்னை பார்த்ததும் திகைத்துப் போனவளாய், ஒருகணம் அப்படியே உறைந்து போய் நின்றாள். அவளுடைய முகத்தில் தெரிந்தது சந்தோஷமா.. நிம்மதியா.. கோபமா.. ஆச்சரியமா.. அழுகையா.. அல்லது எல்லாம் கலந்த கலவையா..? எனக்கு தெரியவில்லை. செயலற்றுப் போனவளாய் நின்றிருந்தவளிடம், "மேல வா..!!" என்றேன் மெல்லிய குரலில்.அவள் படிக்கட்டு நோக்கி கீழே நடக்க, நான் பால்கனியில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தேன். கதவை திறந்து வைத்து அவளுக்காக காத்திருந்தேன். அவள் படியேறி மேலே வந்து, வீட்டுக்குள் புகுந்ததும் கதவை சாத்தினேன். கொஞ்ச நேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவள் என் முகத்தையே ஒரு மாதிரி ஆசையாக, ஏக்கமாக, சற்றே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, நான் குற்ற உணர்வோடு அவளுடைய பார்வையை சந்திக்க முடியாமல் தவித்தேன். பின்பு அவளே அந்த மவுனத்தை கலைத்தாள். "எப்படி இருக்குற அசோக்..?" ஒருமாதிரி உலர்ந்து போன குரலில் கேட்டாள். "ம்ம்.. நல்லாருக்கேன்..!! நீ..?" "இருக்கேன்.." "ம்ம்.. அப்புறம்..? என்ன இந்தப் பக்கம்..?" "சும்மா..!! ம்ம்ம்ம்.... ஏன் ஒருவாரமா க்ளப் பக்கம் வரலை..?" "மெம்பர்ஷிப் கேன்சல் பண்ணிட்டேன்.." "ஏன்..?" "ப்ளான்ட் ஆரம்பிக்கணும்னு சொல்லிருந்தேன்ல..? அதுக்கு அப்ரூவல் கெடைச்சிடுச்சு.. அதுல கொஞ்சம் பிஸி.." "ஓ.. அப்போ இனிமே டென்னிஸ் ஆட வர மாட்ட..?" "ஆ..ஆமாம்..!!" "நம்பர் மாத்திட்ட போல..?" டேபிள் மீதிருந்த என் செல்போனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள். "அ..அது.. அது.. ஆ..ஆமாம்..!!" நான் திணறினேன். "நம்பர் மாத்திருக்க.. மெம்பர்ஷிப் கேன்சல் பண்ணிருக்க.. ப்ளான்ட் அப்ரூவல் கெடைச்சிருக்கு..!! ஆனா.. இதுல எதையுமே எங்கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணலைல அசோக்..?? ம்ம்ம்...????" அவள் அழுதுவிடும் குரலில் பரிதாபமாக கேட்க, எனக்கு இப்போது கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. "ப்..ப்ரியா.." "ஏன்னா.. நான் உனக்கு அவ்வளவு முக்கியம் இல்லை.. அப்டித்தான..?" அவள் குரல் இப்போது தழதழத்தது. "சேச்சே.. அப்டிலாம்.." "ஆ..ஆனா.. ஆனா நீ எனக்கு அப்டி இல்லை அசோக்.. நீ எனக்கு ரொம்ப முக்கியம்..!! என் லைஃப்லையே நீதான் ரொம்ப ரொம்ப முக்கியமானவன்..!! நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா..?" உள்ளம் நிறைய காதலோடும், கண்கள் நிறைய கண்ணீரோடும் அவள் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அந்த காதலுக்கு நான்தான் தகுதியானவன் இல்லை என்று தோன்றியது. பழிவாங்கும் எண்ணத்துடன்தானே இவளுடன் பழக ஆரம்பித்தேன்..? நோ...!!! இனிமேலும் உண்மையை மறைக்க வேண்டாம்..!! சொல்லிவிடவேண்டியதுதான்..!! "ப்ரியா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.." "ப்ளீஸ் அசோக்.. என்னை பேச விடு.." "ப்ரியா ப்ளீஸ்... மொதல்ல என்னை பத்தி நீ நல்லா தெரிஞ்சுக்கணும்.." நான் பதட்டமாக சொல்ல, ப்ரியா பெருங்குரலில் கத்தினாள். "என்ன தெரிஞ்சுக்கணும்..? இன்னும் உன்னைப் பத்தி என்னடா தெரிஞ்சுக்கணும்..? ஒருவாரமா உன்னை பாக்காம.. உன் கூட பேசாம.. பைத்தியம் புடிச்சவ மாதிரி ஆயிட்டேன்..!! எப்படி துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா..? செத்துப் போயிடலாம் போல இருந்துச்சு..!! இதைவிட இன்னும் என்ன தெரிஞ்சுக்கணும்..? நீ... நீ என் உசுருடா..!!!" அழுகையுடன் சொன்னவள், பாய்ந்துவந்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். நான் பதறிப் போனேன். 'ப்ரியா.. என்ன இது..???' என்றவாறு நான் அவளுடைய பிடியில் இருந்து விலக முயல, அவள் விலக விருப்பம் இல்லாதவளாய் அந்த பிடியை இன்னும் இறுக்கமாக்கினாள். அவளுடைய மென்மையான மார்புப்பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி நசுங்கின. அவள் மேனியில் இருந்து வந்த இனிய வாசனை என் நாசியின் வழியாக பாய்ந்து, மூளையை தாக்கி மயக்கம் கொள்ள வைத்தன. என் மார்பில் புதைந்திருந்த அவளது முகத்தை நான் இரு கைகளாலும் நிமிர்த்தினேன். உண்மையை சொல்லிவிட இறுதியாக ஒரு முயற்சி செய்தேன். "ப்ரியாம்மா.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.. நீ நெனைக்கிற மாதிரி..." அவ்வளவுதான்..!! நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ப்ரியா என் உதடுகளை பாய்ந்துவந்து கவ்விக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு, ஆசையாக, ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். நான் அதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போனேன். ஆனால் அவளுடைய உதட்டுச்சுவை என்னை கட்டிப்போட்டது. அசையக்கூட தோன்றவில்லை. அவளுடைய அதரங்களில் அமிர்தம் பருகியபடி அப்படியே நின்றிருந்தேன். நீண்ட.. நெடிய.. காதலும் ஏக்கமும் கலந்த முத்தம்..!! பின்பு மெல்ல என் உதடுகளை விடுவித்த ப்ரியா, என் கண்களை காதலாக பார்த்தபடி சொன்னாள். "அன்னைக்கு.. முத்தம்ன்றது அன்பை பரிமாறிக்கிற விஷயம்னு சொன்னேல..? நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு.. என் முத்தத்துல உனக்கு தெரிஞ்சதா அசோக்..?? ம்ம்ம்..??" "ம்ம்..!!" "இனிமே.. நீ இல்லாம நான் இல்லேன்னு.. புரிஞ்சதா..?" "ம்ம்..!!" "இப்போ சொல்லு.. நீ என்னவோ சொல்லனும்னு சொன்னியே..? இப்போ சொல்லு..!!" இனி என்னத்த சொல்வது..?? அதுதான் ஒரேடியாக அடித்து சாய்த்து விட்டாளே..?? முத்தம் என்னும் அமிர்தம் புகட்டி, காதல் கடலில் படு ஆழமாய் என்னை மூழ்கடித்து விட்டாளே..?? பாவி..!!!! அவளுடைய முகத்தை ஆசையாக பார்த்தபடி, உதட்டில் மெல்லிய புன்னகையுடன், "ஐ லவ் யூ..!!!!" என்றுதான் என்னால் சொல்லமுடிந்தது.அப்புறம் வந்த ஒரு நான்கைந்து மாதங்கள் மிகவும் சந்தோஷமாக பறந்தன. நானும் ப்ரியாவும் காதல் பள்ளியில் புதிய மாணவர்களாய், தினமும் அலுக்காமல் காதல் பாடம் கற்றுக் கொண்டோம். ஃபேக்டரி வேலை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ப்ரியாவுடனான காதல் வேலை இன்னொருபுறம். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமான வேலைகள். ஃபேக்டரியில் ஒரே மாதத்தில் புரடக்ஷன் ஆரம்பமானது. நிறைய அலைந்து திரிந்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டி இருந்தது. ப்ரியா வார நாட்களில் கல்லூரி முடிந்ததுமே, ஃபேக்டரிக்கு ஓடி வந்துவிடுவாள். எஜமானி மாதிரி அங்கிருப்பவர்களை அவள் வேலை வாங்குவதை ரசிப்பது, எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். சண்டே பகல் முழுக்க இருவரும் ஒன்றாக சென்னை சுற்றுவோம். எங்கள் விஷயம் அண்ணனுக்கு கூடிய சீக்கிரமே தெரிந்து போனது. அவனுக்கும் சந்தோஷந்தான். ஆனால் ப்ரியாவின் அப்பாவிடம் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருக்க சொன்னான். பழிவாங்கும் எண்ணத்துடன்தான் ப்ரியாவிடம் பழக ஆரம்பித்தேன் என்ற உண்மையை மட்டும் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று அட்வைஸ் செய்தான். ப்ரியாவுடனான காதல் எனக்கு கொள்ளை கொள்ளையாய் சந்தோஷத்தை கொட்டிக் கொடுத்திருந்தாலும், மனதின் ஓரமாய் ஒரு உறுத்தல் ஒட்டிக் கொண்டே வந்தது. 'ஆரம்பத்தில் அவளை பழி வாங்கும் நோக்கத்தில்தான் பழக ஆரம்பித்தேன் என்று உண்மை அவளுக்கு தெரிந்துவிடுமோ..? தெரிந்தால் எப்படி துடித்துப் போவாளோ..?' என்ற உறுத்தல்தான் அது..!! எப்படியும் ஒருநாள் அவளுடைய அப்பாவுக்கு எங்கள் காதல் விஷயம் தெரிய வரும்போது, அந்த விவகாரம் வெடிக்கும். அதை எப்படி சமாளிப்பது என்ற கவலை ஒவ்வொரு வினாடியும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனாலும், அவளுடைய அப்பாவை சமாளிக்க நான் நம்பிய ஒரே ஆயுதம் என்ன தெரியுமா..? ப்ரியாவுக்கு என் மீதான காதல்..!! அவள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை..!! அவளுடைய அப்பாவே என்னைப் பற்றி தப்பாக சொன்னாலும், அவள் அதை அவ்வளவு எளிதாக நம்பி விட மாட்டாள் என்று தோன்றியது. அந்த அளவுக்கு என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுடைய நம்பிக்கை எந்த மாதிரியானது என்று தெரிந்து கொள்ள, அந்த சம்பவத்தை நான் உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும். அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் நான் என் அப்பார்ட்மென்ட்சை அடைந்தேன். வெளியிலேயே ப்ரியாவின் கார் நின்றுகொண்டிருந்தது. நான் பைக்கை பார்க் செய்துவிட்டு, படியேறி மேலே சென்றேன். லாக் செய்யப்பட்டிருந்த எங்கள் ஃப்ளாட்டுக்கு வெளியே ப்ரியா காத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து போய், அழகாக புன்னகைத்தாள்."என்னாச்சு அசோக்..? கால் பண்ணினேன்.. ஸ்விட்ச்ட் ஆஃப்ன்னு வந்தது.." "சார்ஜ் இல்ல ப்ரியா..!!" "ஓ..!! ஃபேக்டரிக்கு போயிருந்தேன்.. லாக் ஆகி இருந்தது.. எனக்கு ஒரே கன்ஃப்யூஷன்..!! என்னாச்சு..?" "உள்ள வா சொல்றேன்..!!" நான் கதவை திறந்து உள்ளே செல்ல, ப்ரியா கதவை லாக் செய்துவிட்டு என்னை பின் தொடர்ந்தாள். நான் களைத்துப் போனவனாய் சென்று சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன். தலை வலிப்பது மாதிரி இருக்க, இரண்டு கையாளும் தலையை பிடித்துக் கொண்டேன். ப்ரியா எனக்கு அருகில் வந்து மெல்ல அமர்ந்தாள். என் தலை முடியை இதமாக கோதிவிட்டவள், குழப்பம் குறையாத குரலில் கேட்டாள். "என்னப்பா ஆச்சு.. ஏன் ஒருமாதிரி இருக்குற..?" "தலை வலிக்குது ப்ரியா..!!" "ஏன்..? என்னாச்சு..!!" "இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சனை..!!" "என்ன..?" "நம்ம ஆபீஸ்ல ஒரு பொண்ணு தண்ணியெடுத்து வைப்பாளே.. லக்ஷ்மின்னு..!! ஞாபகம் இருக்கா..?" "ம்ம்.. ஆமாம்..!! ஏன் கேக்குற..?" "நேத்து நைட்டு அவ சூசயிட் பண்ணிக்கிட்டா..!!" நான் சொல்ல, ப்ரியா பலமாக அதிர்ந்தாள். "ஓ காட்..!!!!!!!" "காலைல இருந்து அவ வீட்டுலதான் இருந்துட்டு வர்றேன்.. ப்ச்..!! ரொம்ப ஃபுவர் பேமிலி..!! காரியம்லாம் நல்லபடியா முடியுறவரை.. இருந்து ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன்..!!" "ம்ம்ம்ம்..!! என்னாச்சு.. ஏன் சூசயிட் பண்ணிக்கிட்டா..??" "யாரோ ஒருத்தனை லவ் பண்ணிருக்கா.. அவன் இவ உடம்பை அனுபவிச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டான்..!! இவ கர்ப்பம்..!! வீட்டுல அடிச்சிருக்காங்க.. நைட்டு தொங்கிட்டா..!!" "ம்ம்ம்ம்.. பாவம்..!!" "அவளா..?" "ஆமாம்.." "ப்ச்..!! அறிவில்லாம தப்பு பண்ணிட்டு.. இப்ப உசுரை வேற விட்டுட்டா.. அவளை போய் பாவம்னு சொல்ற..?" "அவ என்ன தப்பு பண்ணினா..?" "பின்ன..? கற்பு போச்சுனா உசுரு போச்சுன்னு சூசயிட் பண்ணிக்க தெரியுதுல.. காதலிக்கிறப்போ கொஞ்சம் கண்ட்ரோலா இருக்க தெரியாதா..? கல்யாணத்துக்கு முன்னாடியே அப்படி என்ன அவசரம்..?" "ஹாஹ்ஹஹா..." "ஏன் ப்ரியா சிரிக்கிற..?" "ம்ம்ம்ம்... நீ நெனைக்கிற மாதிரி அது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்லைடா..!!" "எது..? கண்ட்ரோலா இருக்குறதா..?" "ஆமாம்..!!" "ஏன்..?" "ஏன்னா..?? மனசுக்கு புடிச்சவன் வந்து.. உன் உடம்பை பாக்கனும்னு கேக்குறப்போ.. முடியாதுன்னு சொல்றது எந்த பொண்ணுக்குமே ரொம்ப கஷ்டம்..!!" "ஓஹோ..? கஷ்டமா..? அப்புறம் இப்படி நடுராத்திரில தனியா தொங்க வேண்டியதுதான்..!!" நான் சற்று கிண்டலாகவே சொன்னேன். அவள் சிரித்தாள். "ஹ்ஹ்ஹ்ஹா... உனக்கு புரியலை..!!" "என்ன புரியலை..?"

"அந்த லக்ஷ்மி பொண்ணு அவன்கூட செக்ஸ் வச்சுக்கிட்டதுல எந்த தப்பும் இல்லை.. ஆனா.. அந்த மாதிரி ஒரு ஆளை லவ்வரா ச்சூஸ் பண்ணினதுதான் அவ பண்ணுன தப்பு..!! இப்போ புரியுதா..?" ப்ரியா சொல்லிவிட்டு கூர்மையாக என்னையே பார்த்தாள். எனக்கு புரிவது மாதிரியும் இருந்தது. ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது. குழப்பமாகவே கேட்டேன். "ம்ம்.. புரியிற மாதிரி இருக்கு.. ஆனா நான் சொன்னதுக்கும் நீ சொன்னதுக்கும் என்ன வித்தியாசம்..??" "நெறைய வித்தியாசம் இருக்கு..!! கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிக்கிறவனுக்கு உடம்பை கொடுத்ததுதான் அவ தப்புன்னு நீ சொன்ன.. உடம்பை கொடுக்குற அளவுக்கு உத்தமனான ஆளை காதலிக்காததுதான் அவ தப்புன்னு நான் சொல்றேன்..!! உடம்பை கொடுக்குறது ஒன்னும் பிரச்னை இல்லை.. யார்கிட்ட கொடுக்குறோம்ன்றதுதான் பிரச்னை..!!" "ம்ம்ம்ம்.. இப்போ புரியுது..!! நம்பிக்கையான ஆளா பாத்து லவ் பண்ணிருக்கனும்னு சொல்ற..?" "எஸ்..!!!!!!!" அவள் கண்களை லேசாக மூடி திறந்தபடி சொல்லிவிட்டு, தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மேலும் கீழும் அசைத்தாள். "ஹஹ்ஹ்ஹாஹ்ஹா... ம்ம்ம்..!!! அது சரி.. என்மேல ப்ரியா மேடத்துக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு..??" நான் சிரித்துக்கொண்டே சாதாரணமாக கேட்க, அவள் பட்டென்று சொன்னாள். "நீ கேட்டா.. இந்த செகண்டே என் உடம்பை உன்கிட்ட கொடுக்குற அளவுக்கு..!!" சொல்லிவிட்டு என் முகத்தை மிக சீரியசாக பார்த்தாள். அவள் அந்த மாதிரி பட்டென பதில் சொன்னதில் நான் சற்று திகைத்துப் போனேன். என் முகத்தில் இருந்த சிரிப்பு படாரென்று காணாமல் போனது. பேச்சே வரவில்லை. இதயம் இப்போது சற்றே வேகமாக தடதடத்தது. என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக அவளுடைய முகத்தை ஏறிட்டேன். அவள் வெண்ணிற பற்கள் தெரிய அழகாக புன்னகைத்தாள். "என்ன அசோக்.. பேச்சையே காணோம்..?" "ஒ..ஒண்ணுல்ல ப்ரியா.." "சும்மா சொல்றேன்னு நெனைக்கிறியா..? சீரியசாத்தான் சொல்றேன்..!! உனக்கு என் உடம்பு வேணுன்னு தோணுச்சுனா.. மேரேஜ் வரைக்குலாம் வெயிட் பண்ண தேவையில்லை..!! புரியுதா..?" "ம்.." "உனக்கு எப்போ வேணுமோ.. எடுத்துக்கோ..!! நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.. சரியா..?" "ம்.." "இப்போ வேணுமா..???" அவள் திடீரென போதையான குரலில் கிண்டலாய் கேட்க, "என்னது..?????" நான் பயங்கர ஷாக்கானேன். "ஹாஹ்ஹாஹ்ஹா.. ஏன் இப்டி மிரள்ற..? சும்மா.. வேணுமான்னுதான கேட்டேன்..? வேணுன்னா சொல்லு.. எனக்கு ஓகே..!!" சொல்லிவிட்டு அவள் என் முகத்தை கூர்மையாக பார்க்க, நான் தடுமாறினேன். "வே..வேணாம் ப்ரியா..!!" "சீரியாசா வேணாம்..???" அவள் இன்னும் கூர்மையாக பார்த்தாள். நான் இன்னும் தடுமாறினேன். "ம்..ம்ஹூம்..!! வேணாம்..!!" நான் மறுத்த பிறகும், ப்ரியா கொஞ்ச நேரம் என் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஒரு பெரு மூச்சை விட்டெறிந்தபடி சொன்னாள். "ம்ம்ம்ம்..!!!! ஓகே..!!! தலை வலிக்குதுன்னு சொன்னேல..? டீ போட்டு எடுத்துட்டு வரவா..?" "ம்ம்.." ப்ரியா புன்னகையுடன் எழுந்தாள். கை வைத்து என் தலை முடியை லேசாக கலைத்து விட்டவள், திரும்பி நடந்தாள். கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். நான் மனக்குட்டை குழம்பிப் போனவனாய், சோபாவில் குவித்து வைத்த மண்ணு மாதிரி அமர்ந்திருந்தேன். இருவிதமான எண்ணங்கள் என் மனதை அவ்வாறு குழம்ப செய்திருந்தன. 'எப்போவேணா எடுத்துக்கோ..!!' என்று ப்ரியா சொன்ன வார்த்தைகள் எனக்குள் சூட்டை கிளப்பி விட்டிருந்தன. எடுத்துக்கொள்ளலாமா என என் உள்மனம் கிடந்தது துடித்தது. 'நீ ஏன் இவ்வளவு கேவலமா இருக்குற..?' என்று என்னை கேட்காதீர்கள். ரதி மாதிரி ஒரு பெண் உங்களை காதலித்து, இந்த மாதிரி ஒரு தனிமையில் 'வேணுன்னா எடுத்துக்கோ..' என்று சொன்னால், என் வேதனை உங்களுக்கு புரியும்..!! இன்னொரு பக்கம் இயல்பாகவே எனக்குள் இருக்கும் அந்த மன உறுத்தல். அவளிடம் பொய் சொல்லியிருக்கிறோம் என்ற மன உறுத்தல். அதையும் மீறி அளவு கடந்த நம்பிக்கை என் மீது வைத்திருக்கிறாளே என்ற மன உறுத்தல். அவள் சொன்ன மாதிரி அவளை எடுத்துக் கொண்டால், அந்த மன உறுத்தல் அதிகமாகி விடுமோ என்ற மன உறுத்தல்..!! ஒரு அரை நிமிடம்தான் அந்த மாதிரி குழம்பினேன். அப்புறம் மனம் தெளிவானது. அவளை எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் அந்த தெளிவு (ஹி ஹி..!!!!). பட்டென எழுந்தேன். விறுவிறுவென நடந்து, கிச்சனுக்குள் நுழைந்தேன். புன்னகையுடன் என்னை ஏறிட்ட ப்ரியா, "என்ன அசோக்.." என்று கேட்டு முடிப்பதற்கு முன்பே, எனது வலது கையால் அவளுடைய இடுப்பை வளைத்து, ஆவேசமாக என்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளது மார்புக் கலசங்கள் 'நச்ச்..!!' என்று நெஞ்சை முட்டின. அதே நேரம் தவளை கொத்தும் பாம்பு போல, எனது உதடுகள் அவளது உதடுகளை கவ்வியிருந்தன. இனிப்பான, ஈரமான அவளது இதழ்களை 'சர்ர்ர்ர்ர்...' என உறிஞ்சின. நான் அப்படி செய்வேன் என்று ப்ரியா எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வேகத்தில் சற்று அதிர்ந்து போனாள். மிரண்டாள். ஆனால்.. ஆனந்த மிரட்சி அது..!! விரைவிலேயே அந்த அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு என்னுடன் ஒத்துழைத்தாள். அவளுடைய கைகள் ரெண்டையும் மாலையாக்கி, என் கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டாள். 'ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்...' என்று முனகிக்கொண்டே, நான் முத்தமிட வாகாக, அவளது உதடுகளை பிளந்து காட்டி உதவினாள். நான் அவளுடைய மேலுதட்டை சுவைக்க, அவள் எனது கீழுதட்டை உறிஞ்சினாள். எங்கள் உதடுகளை போலவே, எங்கள் மார்புகளும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன. என்னுடைய மூச்சுக்காற்றும், அவள் விட்ட அனல் மூச்சும் நேருக்கு நேராய் மோதிக் கொண்டன. அவளது பவழ இதழ்கள் எனது பழுப்பு இதழ்களுக்குள் சிக்கி வதங்கின. அவளது நாக்கும் எனது நாக்கும் ஒன்றை ஒன்று தடவிப் பார்த்தன. எங்கள் எச்சில்கள் இடம் மாறின. உதடுகளை பிரிக்கும் எண்ணமே ஏற்படாதவாறு, காதலும் காமமும் சரிவிகிதத்தில் கலந்திருந்த முத்தம்..!!எனக்கு வேணும் ப்ரியா.. எல்லாமே வேணும்.. இப்போவே வேணும்..!!" நான் ஏக்கமாக சொல்ல அவள் புன்னகைத்தாள். "அவ்வளவு அவசரமா வேணுமா..?" "ஆமாம்..!!" "ம்ம்.. எங்கே வச்சு வேணும்..?" "எங்கேனா..? புரியலை..!!" "பெட்ரூம் போயிடலாமா..? இல்ல.. இங்கேயேவா..?" சொல்லிவிட்டு அவள் கண்ணடித்தாள். "ஹ்ஹ்ஹா.. பெட்ரூம்..!!" நான் சிரிப்புடன் சொன்னேன். "பெட்ரூம் போற வரை பொறுமை இருக்கா உனக்கு..?" குழைவான குரலில் குறும்பாக கேட்டாள். "ம்ம்.. இருக்கு..!!" "நெஜமா..??? பாத்தா அப்படி தெரியலையே..?" "வேற எப்படி தெரியுது..?" "வெறில இருக்குற மாதிரி தெரியுது.." "ஹ்ஹ்ஹா.. அப்டிலாம் ஒன்னும் இல்லை.." "ஓஹோ..? அதையுந்தான் பாக்கலாம்..!!" "உனக்கு ஓகேவா..?" "டபுள் ஓகே.. தூக்கிட்டு போ.. பெட்ரூமுக்கு..!!" அவள் குழந்தை மாதிரி கைகள் ரெண்டையும் என்னை நோக்கி நீட்டி அழைத்தாள். நான் அப்படியே அவளை அள்ளிக்கொண்டேன். கரங்களால் என் கழுத்தை கட்டிக்கொண்டு, காதலாக அவள் என் முகத்தை பார்க்க, நானும் அனுபவிக்க இருக்கும் அழகை ஆசையாக பார்த்தபடி, படுக்கையறை தூக்கி சென்றேன். இறங்கியதுமே என் இதழ்களை மீண்டும் கவ்விக் கொண்டாள் ப்ரியா. சுவைத்தாள்..!! முன்பை விட வேகமாக.. முன்பை விட காமமாக.. முன்பை விட தித்திப்பாக..!! எனது உதடுகள் ப்ரியாவின் வாய்க்குள் சிக்கி வதங்கிக் கொண்டிருக்க, எனது கைகள் அவளுடைய பின்புறம் ஊர்ந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அவளுடைய தலைமுடியை தடவிய விரல்கள், பின்பு அவளது தண்டுவடத்தில் ஊர்ந்தன. இடுப்பை நோக்கி இறங்கின. இரண்டு புறமும் பற்றி பிசைந்தன. அப்புறம் அவளது பின்புற புடைப்பை அழுத்தி ஒரு பிடி பிடிக்க, அவள் 'ஆஆவ்..' என்றவாறு என் வாயில் இருந்து அவள் வாயை எடுத்தாள். உதட்டை மடக்கி கடித்துக் கொண்டு, குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் என்னை பார்த்தாள். "பொய் சொல்லிருக்குற.. பொறுக்கி..!!" "என்ன பொய்..?" "வெறில இல்லைன்னு சொன்ன.. இப்போ இந்த புடி புடிக்கிற..?" "நீயுந்தான் என் லிப்சை போட்டு அந்த கடி கடிக்கிற..?" "எனக்கு வெறி இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே.. இன்னும் என்னென்ன எங்கிட்ட கடிபடப் போகுது பாரு..!!" சொன்னவள் அப்படியே என் மீது பாய்ந்தாள். நான் மெத்தையில் பொத்தென்று மல்லாக்க விழ, அவள் என் மீது மலர்க்கொத்து மாதிரி சரிந்தாள். பொறுமையற்றவள் மாதிரி என் சட்டை பட்டன்களை படபடவென கழற்றினாள். என் வெற்று மார்பில் தன் பட்டு உதடுகளை ஒற்றி எடுக்க ஆரம்பித்தாள். மோகத்தில் என் மார்பு வெடித்து விடுவது மாதிரி விரிய, அந்த திரட்சியின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஈரமாய் அவளுடைய செவ்விதழ்கள் பதிந்து கொண்டிருந்தன. மென்மையாக முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், திடீரென என் மார்புக்காம்பை கவ்வ, "ஹ்ஹஹ்ஹாஹாஹாஹா...!!!!!!!!!!!!" நான் சுகத்தில் முனகினேன். என் முகம் கொட்டிய உணர்சிகளை ப்ரியா மிகவும் ரசித்தாள். எனது கருத்த மார்புக்காம்புகளை மாறி மாறி சுவைத்தாள். அவளது வலது கையால் என் வயிறை இதமாக தடவிக் கொடுத்தாள். பின்பு அந்த கையை தொப்புளுக்கு கீழே நகர்த்தி, என் அடி வயிறுக்கு அடியில் ஆணுறுப்பு ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து தேய்த்தாள். கீழே அவளது கை தடவ, மேலே அவளது நாக்கு என் காம்பு வட்டத்தை தடவியது. என் மார்பில் வளர்ந்திருந்த மயிர்களை பற்களால் கவ்வி இழுத்தவாறே, என் ஆண்மையில் வளர்ந்திருந்த ரோமங்களை விரல்களால் பிடித்து இழுத்தாள். "ஷ்ஷ்ஷ்ஷ்... ஆஆஆஆஆ.." நான் கத்தினேன். "ஏண்டா கத்துற..?" "அதை ஏன் புடிச்சு இழுக்குற..? வலிக்குது..!!" "புடிச்சு இழுக்குற அளவுக்கு இவ்ளோவா வளர்த்து வச்சிருப்ப..? கொஞ்சம் ட்ரிம் பண்ணி விட கூடாது..?" "ச்சீய்...!!!" "ச்சீயா..? என்ன ச்சீய்..??" "அசிங்க அசிங்கமா பேசுற.." "அசிங்க அசிங்கமாவும் பண்ணுவேன்.." சொல்லிக்கொண்டே அவள் என் மார்பை கடிக்க நான் மறுபடியும் கத்தினேன். "ஆஆஆஆ...!!!! கடிக்காதடி..!!!" "அப்படித்தான் கடிப்பேன்..!!" "உன்னை... என்ன பண்றேன் பாரு.." சொல்லிக்கொண்டே நான் ப்ரியாவை புரட்டி மெத்தையில் போட்டேன். முரட்டுத்தனமாய் அவள் மீது படர்ந்தேன். 'ஏய்.. ச்சீய்.. எருமை..' என்று அவள் என்னை திட்டிக்கொண்டு இருக்கும்போதே, அவளுடைய மார்புக்குவியலுக்குள் என் முகம் புதைத்தேன். அவளுடைய கைகள் ரெண்டையும் விரித்து பிடித்துக் கொண்டு, மெத்தென்ற அந்த பந்துகள் மீது என் முகத்தை வைத்து தேய்த்தேன். பின்பு நறுக்கென்று ஒருபக்க மார்பை கடிக்க, இப்போது ப்ரியா கத்தினாள். "ஆஆஆஆஆ...""வலிக்குதுல..? எனக்கும் அப்டித்தான வலிக்கும்..?" "ச்சீய்.. கடிநாய்..!!" "ஹ்ஹ்ஹா.. ரொம்ப வலிக்குதா..?" "ம்ம்ம்ம்.. ஆமாம்.." "ஓகே.. கிஸ் பண்ணா வலி சரியா போயிடும்.." சொல்லிக்கொண்டே நான் ப்ரியாவுடைய மார்பு வீக்கத்தில் இதமாக என் இதழ்களை பதித்தேன். இரண்டு பக்க உருண்டைகளுக்கும் மாறி மாறி மென்மையாக முத்தமிட்டேன். கடிக்கும்போது கத்திய ப்ரியா, இப்போது முத்தமிடும்போது முனகினாள். 'ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஹ்ஹ்ஹ்ஹாஆ...' என் கண்கள் செருக, வெக்கமில்லாமல் சத்தம் எழுப்பினாள். மார்பில் நான் தந்த முத்தத்தின் மயக்கத்தில் ப்ரியா இருக்கும்போதே, நான் அவளுடைய உடலிலிருந்து டாப்ஸை அகற்றினேன். அகற்றியதும் அவள் வெட்கத்தில் மார்புகளை கைகளால் மறைத்துக் கொண்டாள். நான் புன்னகையுடன் அவளுடைய கைகளை விலக்கி, அவளது கலசங்களின் அழகை கண்களால் பருகினேன். தங்கத்தை தட்டி தட்டி செய்து வைத்த சொம்புகள் மாதிரி, கழுத்துக்கு கீழே இரண்டு புறமும், குபுக்கென்று குவிந்திருந்தன. உருண்டு திரண்டு போய்.. காம்புகள் விறைத்துப் போய்.. கைக்கடக்கமான அளவுடன்.. கடிக்கத்தூண்டும் அழகுடன்..!! முதலில் நான் மென்மையாக அவளது இடது மார்புக்காம்பில் ஒரு முத்தம் பதித்தேன். உடனே 'ஷ்ஷ்ஷ்ஷஷ்...' என்று சிலிர்த்துக் கொண்ட ப்ரியா, என் தலையை அந்த மார்பில் வைத்து அழுத்தினாள். நான் வாய் திறந்து அந்த அழகு கலசத்தை அப்படியே கவ்விக் கொண்டேன். நான் ப்ரியாவின் மார்புகளை மாறி மாறி சுவைத்தேன். அவளது சிவந்த மார்புக்காம்புகளை என் நாவால் இதமாக தடவினேன். ப்ரியா 'ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..' என்று சுகமாக முனகியவாறு, என் தலையை தடவிக் கொடுத்தாள். அவ்வப்போது உணர்ச்சி மிகுதியில், அந்த மார்பு உருண்டைகளாலேயே என் முகத்தை இடித்தாள். எனது வாய் ப்ரியாவின் இளமை கனிகளில் சாறு குடிக்க, எனது கை அவளது இடுப்பை பிசைந்து கொண்டிருந்தது. அவளது குட்டித்தொப்புளில் விரல் சுழற்றி விளையாடியது. பின்பு மெல்ல கீழே இறங்கியது. நான் ப்ரியாவின் ஸ்கர்ட்டை மெல்ல மெல்ல மேலே உயர்த்தினேன். அவளது மார்பை சுவைத்துக் கொண்டே, அவளது வழு வழு தொடைகளை தடவிக் கொடுத்தேன். அழுத்தி பிசைந்து கொடுத்தேன். ப்ரியா மேலும் உணர்சிக் கொந்தளிப்பில் துடித்தாள். மேலும் சுகமாய் முனகினாள். தொடைகளை தடவிய எனது கை, இப்போது இன்னும் மேலே முன்னேறியது. அவளது தொடையிடுக்கை அடைந்தது. அங்கே புஷ்டியாக புடைத்துக் கொண்டிருந்த அவளது பெண்ணுறுப்பை தடவியது. "ம்ம்ம்ம்... வேணாம் அசோக்.." சொல்லிக்கொண்டே ப்ரியா என் கையை தள்ளிவிட்டாள். நான் புன்னகையுடன் மீண்டும் கையை நகர்த்தி அதே இடத்தில் வைத்தேன். இந்த முறை சற்றே அழுத்தமாக தடவிக் கொடுத்தேன். ப்ரியா இப்போது 'ஹ்ஹ்ஹ்ஹா...!!' என்று முனகினாளே ஒழிய, என் கையை தட்டி விடவில்லை. அது எனக்கு வசதியாக போனது. அவளுடைய பேண்டீசுக்குள் கைவிட்டு, அவளது பெண்மை புடைப்பில் என் விரல்களால் விளையாட ஆரம்பித்தேன். என்னை மாதிரி இல்லாமல், ப்ரியா தன் ரகசிய உறுப்பை முடி அகற்றி, மொழுமொழுவென்று வைத்திருந்தாள். கையால் தடவிப் பார்க்க, பட்டு போல மென்மையாக இருந்தது அவளது மன்மத வீக்கம். எனது எல்லா விரல்களும் அந்த வீக்கத்தில் அழுத்தமாக பதிந்திருக்க, நடுவிரல் மட்டும் அவளது இளமை வெடிப்பில்.. நெட்டு வாக்கில்.. பொதிந்திருந்தது..!! ப்ரியா வலுவிழந்து போன கையோடு, தன் பெண்மையை தேய்த்த என் கையை விலக்கிவிட முயன்றாள். ஆனால் எனது கை வலுவாக, பிடிவாதமாக இருந்தது. தொடர்ந்து அந்த அழகு வெடிப்பை தொல்லை செய்துகொண்டே இருந்தது. "ஷ்ஷ்ஷ்ஷஷ்... அசோக்... ஹ்ஹ்ஹா...!!!!!!!" ப்ரியா கண்கள் செருக.. உதடுகளை பற்களால் கடித்து.. உணர்ச்சியில் பிதற்றினாள். அவளுடைய விறைத்துப் போன காம்பை நான் நாவால் தடவினேன். அதே நேரம்.. கீழே புடைத்துக் கொண்டிருந்த அவளது கிளிட்டோரிசை விரலால் வருடினேன். அவளுடைய நெஞ்சுக்கனியை வாயில் கவ்வி சுவைத்துக் கொண்டே, அவளது தொடையிடுக்கு மலரை கையால் கசக்கினேன். கசக்க கசக்க.. வழவழவென்று ஒருவித தேனை கசிந்தது அந்த மலர்..!! அந்த தேனோடு சேர்த்து அவளது வெடிப்பை நான் நடுவிரலால் தேய்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ப்ரியாவும் 'ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்..' என்று மென்மையாக முனகிக் கொண்டிருந்தாள். பின்பு.. தேய்த்துக்கொண்டிருந்த அந்த விரலை சரக்கென்று அவளது துவாரத்துக்குள் சொருகியபோதுதான் கத்திவிட்டாள். "ஆஆஆஆஆஆ...!!!" கத்திக்கொண்டே என் கையை பட்டென்று தட்டிவிட்டாள். "ஏய்.. என்னாச்சு.." "போடா பொறுக்கி..!!" திட்டிக்கொண்டே என் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை போட்டாள். "ப்ச்.. ஏண்டி அடிக்கிற..?" "பின்ன.. அதுக்குள்ளே போய் விரல்லாம் விடுற..?" "ஏன் விட கூடாதா..?" "ம்ஹூம்..!! புடிக்கலை..!!" "தேய்க்கிறப்போ மட்டும் கொடுத்திட்டு இருந்த.. அது மட்டும் புடிச்சிருந்துச்சா..?" "ஆமாம்..!!" "அப்போ சரி.. இன்னும் கொஞ்ச நேரம் தேய்க்கிறேன் வா..!!" சொல்லிக்கொண்டே நான் மீண்டும் அவளது பெண்மையில் கைவைக்க, அவள் தட்டிவிட்டாள். "வேணாம் போ.. நீ வெரலை விடுவ..!!" "வெரல் வேணாமா..? அப்போ வேற எதையாவது விடவா..?" சொல்லிவிட்டு நான் கண்ணடிக்க, அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள். "போடா பொறுக்கி.. ஒன்னும் வேணாம்.. போ..!!" "நெஜமா வேணாம்..?" "வேணாம்..!!" "சீரியஸா..?" என்று சிரித்தபடி கேட்டுக்கொண்டே, நான் பேன்ட் பட்டனை கழட்டி, அதை கீழே தள்ள.. இப்போது ப்ரியா பட்டென பேச்சிழந்து போனாள். 'வேணாம்..' என்று சொல்ல தயங்கினாள். வெட்கப்பட்டு வேறுபக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள முயற்சித்தாள். ஆனால் அவளுடைய கண்கள் அவளுக்கு கட்டுப் படாமல், மீண்டும் என் இடுப்புக்கு கீழேயே பார்வையை வீசின. ஜட்டிக்குள் புடைப்பாய் நின்றிருந்த என் ஆண்மையை பார்த்ததும், திகைப்பாய் ஒரு உணர்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தினாள். மார்புக்கோளங்கள் ஏறி இறங்க, இழுத்து பிடித்து ஒரு மூச்சு விட்டாள். நான் ப்ரியாவின் அருகில் படுத்து, அவளுடைய காது மடலில் முத்தமிட்டவாறே, கிறக்கமான குரலில் கேட்டேன். "வெரல் வேணான்னு சொன்னியே.. இது ஓகே வா..?" "ம்ம்..!!" "விடவா..?" "ம்ம்..!!" நான் என் ஜட்டியை கழட்டி வீசினேன். ப்ரியாவின் பேன்ட்டியை கீழே இழுத்து ரிமூவ் செய்தேன். அவள் மீது படர்ந்தேன். எனது ஆணாயுதம் அவளது பெண்மை மத்தளத்தில் உராய்ந்தது. உரச உரச.. 'ஜிலீர்..!!!!!!' என்று ஒரு சிலிர்ப்பான சுகம் எங்கள் உடல் முழுதும் பரவியது. 'ஹ்ஹ்ஹ்ஹா....!!!!!!' என்று காமமாக முனகியபடி, ப்ரியா அவளுடைய கால்களால் என் இடுப்பை வளைத்தாள். நான் சற்றே கிண்டலான குரலில் கேட்டேன். "ரொம்ப மூடாகிட்ட போல..?" கேட்டதும் அவள் சற்று கடுப்பானாள். "ச்சீய்.. பொறுக்கி..!! ஆமாம்.. மூடாயிட்டேன்.. நீ மட்டும் என்னவாம்..?" "ஏன்.. எனக்கு என்ன..?" "ம்ம்ம்.. இத்தனை நாளா ஒன்னும் தெரியாத பச்சைப்புள்ளை மாதிரி நடிச்சிருக்குற எங்கிட்ட..!! கிஸ் கூட இவரா கொடுக்க மாட்டாரு.. நாங்க கேட்டு கேட்டு கொடுக்க வைக்கணும்..!! இன்னிக்குத்தான தெரியுது.. உன்னை பத்தி..!!" "என்ன தெரியுது..??" "நீ சரியான மேட்டர் மன்னன்னு..!!" "ஹஹாஹஹா..!!!!" நான் எனது ஆண்மை வாளை, ப்ரியாவின் பெண்மை உறைக்குள் சொருகினேன். முழுவதும் உள்வாங்கிக் கொள்ள அவள் சற்றே சிரமப் பட்டுப் போனாள். ஓரிரு இறுதி இன்ச்சுகள் உள்ளே இறங்கும் வேளையில், கண்கள் மூடி.. பற்களால் உதடுகள் படித்து.. வலி பொறுத்துக் கொண்டாள். இத்தனைக்கும் அவள் உறுப்பு ஏற்கனவே நன்றாக நீர் விட்டு இளகிப் போயிருந்தது. இல்லாவிட்டால் இன்னும் சிரமமாகத்தான் இருந்திருக்கும். "ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ்... ப்பாஆஆ..." "என்னாச்சு ப்ரியா..?" "ரொம்ப டைட்டா இருக்கு.." "ம்ம்ம்... ஆனா நல்லா இருக்கு.. இப்டியே வச்சிருக்கலாம் போல.." "ச்சீய்..!!!" ப்ரியா அழகாக வெட்கப் பட்டுக்கொண்டு இருக்கும்போதே, நான் என் இடுப்பை அசைக்க ஆரம்பித்திருந்தேன். செல்லும் பாதை இறுக்கமாக இருக்க, இயங்குவது சற்று கடினமாகவே இருந்தது. ஆனால் ப்ரியாவின் உட்புற சுவர்களை உரசி உரசி உள்ளே செல்லுவது சுகமாகவே இருந்தது. ப்ரியாவுக்கு சற்று வலித்திருக்க வேண்டும். கீழுதட்டை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். 'ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...' என்று திணறலும், சுகமுமாக முனகினாள். "ஆஆஆ.. மெதுவாடா..." "வலிக்குதா..?" "ம்ம்ம்.. கொஞ்சம் பொறுமையா.." "சின்னதா வச்சிருந்தா.. அப்டி வலிக்கத்தான் செய்யும்.." "எனக்கு சின்னதா..? உனக்குத்தான் ரொம்ப பெருசு.. பொறுக்கி..!!" நான் ப்ரியாவின் பெண்மை கலசங்களை கைக்கொன்றாய் பற்றி இருந்தேன். அந்த பட்டு உருண்டைகளை கசக்கி விட்டபடியே நான் அவளுடைய அடியில் இடித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது கையில் சிக்கியிருந்த அந்த கனிகளை வாயில் வைத்து சுவைத்தேன். காம்புகளை உறிஞ்சினேன். மேலேயிருந்த ப்ரியாவின் பெண்மை வீக்கங்கள் இரண்டுடனும் விளையாடிக் கொண்டே, கீழே இருந்த அவளது பெண்மைப் புடைப்புக்குள் எனது ஆனாயுதத்தை சொருகி சொருகி உருவினேன். ப்ரியா சுகத்தில் திக்குமுக்காடிப் போனவளாய் காட்சியளித்தாள். அவளுடைய கண்கள் ஒருமாதிரி போதையாய் சொருகிப் போயிருந்தன. அவ்வப்போது உதடுகளை பற்களால் கடித்து 'ஷ்ஷ்ஷ்ஷஷ்...' என காமமாக முனகினாள். அவளுடைய கால்களால் என் இடுப்பை இறுக்கி வளைத்துக் கொண்டாள். கைகள் ரெண்டையும் எனக்கு பின்னால் விட்டு, என் முதுகை பிடித்து பிசைந்தாள். நகத்தால் கீறினாள். ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் இயங்கிய நான், நேரம் செல்ல செல்ல வேகமெடுத்தேன். ப்ரியாவின் உறுப்புக்குள் இருந்து கசிந்த நீரும் வேகம் கூட்ட வெகுவாக உதவியது. வேகம் அதிகரிக்க எங்கள் உடலெங்கும் சுகமும் பலமடங்கு அதிகரித்தது. வெட்கமில்லாமல் சத்தமிட்டு பிதற்றினோம். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. உச்சபட்ச சுகத்தில் துடித்துக் கொண்டிருந்த இருவரும், எனது உச்சநீர் வெளிப்பட்டதும் அடங்கினோம். உடலெல்லாம் பூத்த வியர்வையோடு ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்துக்கொண்டு நெடுநேரம் அப்படியே கிடந்தோம். ஒரு அரைமணி நேரம் கழித்து ப்ரியா எங்கள் வீட்டில் இருந்து கிளம்பினாள். கிளம்புகையில் திடீரென கேட்டாள். "உன் அண்ணன் எப்போ வருவாரு..?" "இப்போ வர்ற நேரந்தான்.. ஏன் கேக்குற..?" "இருந்து ஒரு ஹாய் சொல்லிட்டு போலாமான்னு பாத்தேன்.." "அதுலாம் ஒன்னும் வேணாம்.. நீ கெளம்பு..!!" "ஏன்..?" "அவன் ஏற்கனவே நொய்நொய்னு ஏதாவது சொல்லுவான்.. இப்போ உன்னை பாத்தான்.. 'என்னடா ரூமுக்குலாம் கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டியா'ன்னு.. டென்ஷன் ஆயிடுவான்..!!" "ஹாஹா... ஏன் இப்படி பயப்படுற..? என்னை மாதிரி தைரியசாலியா இரு..!!"

"ஆமாம்.. ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாங்க..!!" "பின்ன என்ன..? நம்ம மேட்டரை தைரியமா என் டாடிகிட்ட சொல்லிட்டேன் தெரியுமா..?" அவள் கூலாக சொல்ல, நான் பலமாக அதிர்ந்தேன். "எ..என்ன ப்ரியா சொல்ற..?" "நெஜமாத்தான்..!! காலைல நாம எடுத்த போட்டோலாம் உக்காந்து பாத்துட்டு இருந்தேனா.. திடீர்னு டாடி வந்துட்டாரு..!! 'பையன் யாரும்மா'ன்னு கேட்டாரு..? எனக்கு வேற வழியில்லை.. தைரியமா நம்ம மேட்டரை சொல்லிட்டேன்..!!" அவள் புன்னகையுடன் சொல்ல சொல்ல, எனக்கு உதறலாக இருந்தது. "ஓ.. என் போட்டோ வேற பாத்துட்டாரா..?" "ஆமாம்.. ஏன்..??" "ஒண்ணுல்ல.. ம்ம்ம்ம்... பாத்துட்டு என்ன சொன்னாரு..?" "ஒன்னும் சொல்லலை.. 'ஒருநாள் கூட்டிட்டு வாம்மா.. பேசணும்'னு சொன்னாரு.. நாளைக்கு வர்றியா.. என் டாடியை பாத்து பேச..?" அவள் கேட்டதும் நான் பட்டென மறுத்தேன். "இ..இல்ல ப்ரியா.. நாளைக்கு வேணாம்.. நாளான்னிக்கு வர்றேன்..!!" "ஏன்.. நாளைக்கு என்ன..?" "நான் கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணனும்..!!" "ஹாஹா.. இன்டர்வ்யூவுக்கா போற.. ப்ரிப்பேர் பண்றதுக்கு..? பயப்படாத.. என் டாடி ரொம்பலாம் கொஸ்டின் கேக்க மாட்டாரு..!!" "அதுக்கில்ல.. பர்ஸ்ட் டைம் மீட் பண்ண போறோம்ல..? அவருக்கு என்னை புடிக்கனும்ல..? அவர்கிட்ட எப்படி பேசணும்னு.. நான் கொஞ்சம் யோசிக்கணும்..!!" "அதெல்லாம் அவருக்கு உன்னை புடிக்கும்..!! என் டாடி இதுவரை என் ஆசைக்கு குறுக்க நின்னதே இல்லை தெரியுமா..? உன்னை ஜஸ்ட் பாத்து பேசிட்டு.. நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லிடுவாரு..!!" "ம்ம்.. பாக்கலாம்..!!" நான் மூளைக்குள் ஏகப்பட்ட சிந்தனைகளுடன் அமைதியாக சொன்னேன். அடுத்த நாளுக்கு அடுத்த நாள்..!! நான் சுந்தர மூர்த்தியின் ஆபீசில்.. அவருடைய ரூமில்.. அவருக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவர் வழக்கம் போல பல் நொண்டிக் கொண்டிருந்தார். ப்ரியா ரூமுக்கு வெளிய காத்துக் கொண்டிருந்தாள். நானும் அவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்பு அவர் பேச ஆரம்பித்தார். எடுத்ததுமே.. "பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு தம்பி..?" என்றார். "பரவால்ல.. நல்லா போகுது.." "லைசன்ஸ் எப்படி வாங்குனீங்க..?" "அது எதுக்கு உங்களுக்கு..?" நான் பட்டென்று சொல்ல, அவர் சிரித்தார். "ஹாஹா.. இன்னும் என்மேல கோவம் போகலை போல இருக்கு..? ம்ம்ம்ம்... அந்த கோவத்துலதான் என் பொண்ணை லவ் பண்றீங்களோ..? அவளை வச்சு என்னை பழி வாங்குற மாதிரி ஐடியாவா..?" "உண்மையை சொன்னா.. அந்த ஐடியாவோடதான் ப்ரியாவோட பழக ஆரம்பிச்சேன்.. ஆனா.. இப்போ என் மனசு பூரா அவதான் இருக்குறா..!! வேற எதுவுமே இல்லை.. உங்க மேல எனக்கிருந்த கோவம் உட்பட..!!" "ஹ்ஹ்ஹஹா.. அப்போ உங்க மனசுல.. என் பொண்ணை தவிர வேற எதுவுமே இல்லை..?" "ஆமாம்..!!" "என் பொண்ணோட சேர்ந்து வர்ற என் சொத்து..??" "உங்ககிட்ட இருக்குற உண்மையான சொத்தா நான் நெனைக்கிறது உங்க பொண்ணு மட்டுந்தான்.. அவ மட்டும் போதும் எனக்கு..!!" நான் உறுதியாகவும், சீரியசாகவும் சொல்ல, அவர் புன்னகைத்தார். அப்புறம் டேபிளில் இருந்த பேனாவை எடுத்து, தலையை குனிந்து.. எதிலோ.. என்னவோ.. எழுதினார். எழுதிக்கொண்டே என்னிடம் கேட்டார். "என்மேல இருக்குற கோவத்தை என் பொண்ணு மேல காட்டாம.. அவளை சந்தோஷமா வச்சுக்குவீங்கனு நம்பலாமா..?" "தாராளமா நம்பலாம்..!!" அவர் இப்போது தலையை நிமிர்த்தினார். கையில் வைத்திருந்ததை என்னிடம் நீட்டினார். "என்னது இது..??" நான் கேட்டேன். "உங்களுக்குத்தான்.. வாங்கிக்குங்க..!!" நான் அதை வாங்கிப் பார்த்தேன். இருபது லட்ச ரூபாய்க்கான செக் அது..!! நான் புரியாமல் அவர் முகத்தை ஏறிட்டு கேட்டேன். "எதுக்கு இந்த செக்..?" "உங்க பணந்தான்.. நான் உங்களை ஏமாத்தி புடுங்குன பணம்..!!" "அது பத்து லட்சந்தான..?" "ஆமாம்..!! ஆனா.. நான் ஏமாத்துனதால.. உங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம்லாம் ஆயிருக்குமே..? அதான் நஷ்ட ஈடு சேர்த்து எழுதிருக்கேன்..!! பழசு எதையும் மனசுல வச்சுக்காதீங்க.. என் பொண்ணை நல்லா வச்சுக்கோங்க..!! அம்மா இல்லாத பொண்ணு.. ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன்.. அவளுக்கு ஏதாவது ஒன்னுனா.. என்னால தாங்கிக்க முடியாது..!!" அவர் மிகவும் சாந்தமான குரலில் சொல்ல சொல்ல, நான் இப்போது அவரை ஆச்சரியமாக பார்த்தேன். 'என்னடா இது.. நான் ஒன்று நினைத்து வந்தால்.. இங்கு வேறொன்று நடக்கிறது..?' உண்மையிலேயே நான் நினைத்த அளவிற்கு இவர் மோசமானவர் இல்லையோ...? அல்லது.. நான் நினைத்தைவிட ப்ரியா மீது அதிகமாக பாசம் வைத்திருக்கிறாரோ..? நான் திகைத்துப் போய் அப்படியே அமர்ந்திருக்க, அவர்தான் புன்னகையுடன் சொன்னார். "என்ன தம்பி.. கைலையே வச்சு பாத்துக்கிட்டு இருக்கீங்க.. பாக்கெட்ல வைங்க..!! அது உங்க பணம்..!!" நான் அந்த செக்கை என் பாக்கெட்டில் வைத்தேன். புன்னகையுடன், "தேங்க்ஸ் ஸார்..!!" என்றேன். "இன்னும் எதுக்கு ஸார்ன்லாம் சொல்றீங்க..? மாமான்னே கூப்பிடுங்க மாப்ளை..!!" "ம்ம்.. ஓகே.." "இருங்க.. ப்ரியாவை வர சொல்றேன்.. அவ வேற டென்ஷன்ல உக்காந்திருப்பா..!!" சொல்லிக்கொண்டே அவர் இன்டர்காம் எடுத்து பட்டன் அழுத்தினார். அடுத்த முனையில் ரிசீவரை எடுக்கும் முன்பே என்னிடம், "உங்க வீட்டுல பேசிட்டு சொல்லுங்க மாப்ளை.. எல்லாருமா பேசி.. கூடிய சீக்கிரமே நல்லா நாள் குறிச்சிடலாம்..!!" என்றவர் இன்டர்காமில், "ஏய்.. ப்ரியாவை உள்ள அனுப்பு..!!" என உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்ட சில வினாடிகளிலேயே கதவை திறந்து கொண்டு ப்ரியா உள்ளே நுழைந்தாள். நான் திரும்பி அவளை பார்த்து புன்னகைத்தேன். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் உள்ளே நுழைந்த மகளிடம் சுந்தரமூர்த்தி சொன்னார். "வாம்மா ப்ரியா.. வந்து.. நீ லவ் பண்ற ஆளோட லட்சணத்தை பாரு..!!" அவருடைய வார்த்தைகள் கர்ண கொடூரமாய் என் காதில் வந்து விழ, நான் பக்கென்று அதிர்ந்து போய் திரும்பினேன். அவர் முகத்தில் ஒருவித குரூர புன்னகையுடன் என்னை முறைக்க, நான் அவரை நம்ப முடியாமல் பார்த்தேன். "ஸா..ஸார்.. எ..என்ன சொல்றீங்க நீங்க..?" என்றபடி சேரில் இருந்து எழுந்தேன். "என்னடா நடிக்கிற..? நீ எப்டிப்பட்ட ஆளுன்னு என் பொண்ணுக்கு ப்ரூவ் பண்ணத்தான்.. இந்த நாடகமே..!!" என்றவர் தன் மகளிடம் திரும்பி, "ப்ரியா.. நீ நெனைக்கிற மாதிரி இவன் ஒன்னும் உன்னை உண்மையா லவ் பண்ணலை..!! உன்கிட்ட இருக்குற பணம் மேலதான் இவனுக்கு ஆசை..!!" "என்ன டாடி சொல்றீங்க..?" "அவன் பாக்கெட்டை செக் பண்ணும்மா..!! உனக்கு எல்லாம் புரியும்..!!" சுந்தரமூர்த்தியின் தந்திரத்தில் நான் திகைத்துப் போய் அசையாமல் நிற்க, ப்ரியா என் பாக்கெட்டில் கைவிட்டு அந்த செக்கை எடுத்தாள். பிரித்துப் பார்த்தாள். "உன்னை மறக்குறதுக்கு.. எங்கிட்ட பேரம் பேசுறான்மா..!! அம்பது லட்சம் கேட்டான்.. கடைசில இருபது லட்சத்துக்கு ஒத்துக்கிட்டான்..!! எந்த மாதிரி ஆளை நீ லவ் பண்ணிருக்குற பாரு..!! சரி விடு.. அந்த செக்கை அவன் மூஞ்சில விட்டெறி.. அவன் கூட கொஞ்ச நாள் நீ பழகுன பாவத்துக்கு.. அந்தப் பணத்தோட அவன் போய் தொலையட்டும்..!!" அவர் நல்லபிள்ளை மாதிரி சொல்லிமுடிக்க, ப்ரியா தலையை குனிந்தவாறு, அந்த செக்கையே சிலவினாடிகள் அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் பட்டென ஆத்திரம் வந்தவளாக, அந்த செக்கை 'சரக்.. சரக்.. சரக்..' என கிழித்தாள். இரண்டாக.. நான்காக.. எட்டாக..!!!! கிழித்த காகித துகள்களை, படக்கென்று தன் அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். அவர் அதிர்ந்து போனார். "ப்ரியா..!!" என்று கத்தினார். "உங்களை போய்.. இத்தனை நாளா நல்லவர்னு நெனச்சுட்டனே டாடி.. ச்சீய்..!! இவ்வளவு கேவலமானவரா நீங்க..??" "ப்ரியா.. எ..என்னம்மா சொல்ற நீ..?" "நேத்து அசோக் உங்களைப் பத்தி சொன்னப்போ கூட நான் நம்பலை டாடி.. ஆனா.. இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசுனதை கேட்டப்புறந்தான்.. உங்க சுயரூபம் தெரியுது..!!" "நா..நாங்க பேசுனதை கேட்டியா..?" சுந்தரமூர்த்தி இப்போது நிஜமாகவே மிரண்டார். "ஆமாம்.. உள்ள நீங்க பேசுனதுலாம்.. வெளியே நான் உக்காந்து கேட்டுத்தான் இருந்தேன்..!! ஆரம்பத்துல உங்கமேல கோவம் வந்தாலும்.. அப்புறம் நீங்க அசோக்கை மாப்ளைன்னு சொன்னப்போ.. அட்லீஸ்ட் என் மேலயாவது உங்களுக்கு ப்ரியம் இருக்கேன்னு நெனச்சு சந்தோஷப் பட்டேன்..!! ஆனா.. அசோக்கை என்கிட்டே இருந்து பிரிக்கணும்னு.. இப்டி ஒரு கேவலமான ப்ளான் பண்ணுனீங்க பாத்தீங்களா.. நீங்க என்மேல வச்சிருக்குற பிரியமும் உண்மை இல்லைன்னு ஆயிடுச்சு டாடி..!! நம்ம அப்பா-மக உறவு.. இந்த செகண்டே செத்துப் போச்சு..!! வா அசோக்.. போலாம்..!!" ப்ரியா ஆத்திரத்துடன் தீர்க்கமாக சொன்னாள்.

நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல், அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் சுந்தரமூர்த்தி பார்த்துக் கொண்டிருக்க, நான் புன்னகையுடன் டேபிள் மீதிருந்த என் செல்போனை எடுத்தேன். சற்று முன் ப்ரியாவுக்கு செய்த காலை.. இப்போது அவரிடம் ஒருமுறை காட்டிவிட்டு கட் செய்தேன். உள்ளே பேசியதை வெளியே ப்ரியா எப்படி கேட்டாள் என்பது புரிந்து போனதும், அவர் சோர்ந்து போய் பொத்தென்று சேரில் அமர்ந்தார். ஆட்டத்தில் என்னிடம் தோற்றுப் போய் பரிதாபமாக பார்த்த அவரிடம், நான் அமைதியான குரலில் சொன்னேன். "உங்ககிட்ட இருந்த ஒரே உண்மையான சொத்தையும்.. என்கிட்டே நீங்க இழந்துட்டீங்க மிஸ்டர் சுந்தரமூர்த்தி..!!" சொல்லிவிட்டு நான் ப்ரியாவின் தோளில் கை போட்டேன். உரிமையாக அவளை என்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டேன். இருவரும் திரும்பி நடந்தோம். முன்பு ஒருமுறை வாழ்க்கையை தொலைத்தவனாய்.. நொந்து போய்.. எந்தக்கதவை திறந்து கொண்டு வெளியேறினேனோ.. எந்தக்கதவை திறந்து கொண்டு என் தேவதை முதன் முறையாய் என் வாழ்க்கையில் நுழைந்தாளோ.. அந்த தேவதையுடன் அதே கதவை திறந்து கொண்டு.. ஒரு இனிய, புதிய வாழ்க்கையை நோக்கி நான் வெளியேறினேன்.

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?


நான் வாழ்க்கையில சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பும், அந்த சந்திப்பு எங்கள் இருவரையும் கட்டிலில் சேர்த்த விதமும், கட்டிலில் நாங்கள் படித்த காமப்பாடமும்தான் இந்த கதை. காதல் உணர்வு மிகுதியாக வெளிப்படும்படி எழுதியுள்ளேன். அதிகப்படியான விரசத்தை தவிர்த்துள்ளேன். வித்தியாசமான கதை. படித்து பாருங்கள். மூன்று வருடங்களுக்கு பிறகு, வேணியை அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தொழில் சம்பந்தமான வேலையாக நேற்று காலைதான் சென்னை வந்தேன். நண்பனின் அறையில் தங்கி இருக்கிறேன். இரண்டு நாளில் வந்த வேலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நாளை ஒரு சிறிய வேலை. அதை முடித்து விட்டு, நாளை இரவு மீண்டும் திருச்சிக்கு ரயில்.

இன்று வேலை சற்று சீக்கிரமே முடிந்து விட, மாலை நேரத்தில், அம்மாவுக்கும், அக்காவின் பிள்ளைக்கும் உடை எடுக்கலாம் என்று இந்த ஜவுளிக் கடைக்கு வந்தேன். உடை வாங்கி, பணம் செலுத்திவிட்டு திரும்பிய போதுதான், எதிரே வந்த பெண்ணை கவனியாமல் அவள் நெற்றியில் மோதிக்கொண்டேன். "ஸாரி" சொல்ல தலையை நிமிர்த்தியவன், அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். நான் நெற்றியால் இடிதுக்கொண்ட அந்த பெண் வேணி. அவளும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினாள். "ஹே அசோக், நீயா? நீ எப்படி இங்க?" "நான்......" அதற்குள் பில் போடுபவர் "வாங்க மேடம்" என்று அழைக்க, "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுறியா? பில் போட்டுட்டு வந்துர்றேன்" என்றுவிட்டு பில் கவுண்டரை நோக்கி சென்றாள். நான் அவளுக்காக காத்திருந்தேன். என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மனதில் என்னென்னவோ உணர்ச்சி அலைகள் மோதி, கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. யாரை என் வாழ் நாள் முழுவதும் சந்திக்க கூடாது என்று நினைத்தேனோ, அவள் நெற்றியை மோதிக் கொண்டு எதிரில் வந்து நிற்க, நான் செய்வது அறியாது திகைத்தேன். எப்படி இவளிடம் இருந்து நழுவிக் கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டே நிமிடத்தில் வந்து விட்டாள். "எப்படிடா இருக்கிற?" "ம். நல்லா இருக்கிறேன் வேணி. நீ எப்படி இருக்கிற?" "இருக்கேன். என்ன பண்ணிட்டு இருக்கிற?" "மாமாவோட பிரிண்டிங் பிரஸ்ஸை இப்போ நான்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்" " ஓஹோ. பிசினஸ்மேனா ஆயிட்ட? எப்படி போகுது?" "ம். பிரச்னை இல்லாம போகுது. உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாரு வேணி?" "அவரும் பிசினஸ்தான். ரியல் எஸ்டேட்" சிறிது இடை வெளி விட்டு அவளே தொடர்ந்தாள். "உனக்கு........ கல்யாணம்.......?" இழுத்தாள். "இன்னும் ஆகலை" நான் லேசாக புன்னகைத்தேன். சிறிது நேரம் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தோம். வேணி இந்த மூன்று வருடத்தில் லேசாக களை இழந்தது போல் தோன்றினாலும், அவள் அழகும் கவர்ச்சியும் அப்படியே இருந்தது. கொஞ்சமாய் சதை போட்டு இருந்தாள். சிறிது நேரம் குறு குறுவென்று பார்த்தவள், "என் மேல, உனக்கு கோவந்தானே?" என்றாள். எனக்கு அவள் மேல் கொள்ளை கொள்ளையாய் ஆத்திரம் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு, லேசாக புன்னகைத்து, "ச்சே ச்சே. அதெல்லாம் ஒண்ணும் இல்லை வேணி. உன் மேல எனக்கு என்ன கோபம்?" என்றேன். அவள் முகம் மலர்ந்தாள். "சரி வா. என் வீட்டுக்கு போகலாம்" என்றாள். நான் அவசரமாக மறுத்தேன். "இல்லை வேணி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் இன்னொரு நாள் வர்றேன்" "எப்போ? இன்னொரு நாள் இதே மாதிரி ஏதாவது ஒரு ஜவுளிக்கடையில ரெண்டு பேரும் முட்டிக்கிறப்பயா? வாடா. வீடு பக்கத்திலதான். இவ்வளவு தூரம் வந்துட்டு நீ வீட்டுக்கு வரலைனா, என் மனசு ரொம்ப கஷ்டப்படும். ப்ளீஸ்" அவள் மிகவும் வற்புறுத்தவே, அவஸ்தையில் நெளிந்து கொண்டே, அவளுடன் சென்றேன். "ஆட்டோவில் போயிடலாம்" என்று ஒரு ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, காற்றில் பறந்த அவள் கூந்தல், என் முகத்தில் வந்து மோதியது. நான் கண்களை சிறிது மூட, என் நினைவுகள் பின்னோக்கி சென்றன. வேணி என்ற இந்த நீலவேணி எங்கள் கல்லூரியின் அழகு ராணி. அவளுக்கென்று தனி ரசிகர் மன்றமே எங்கள் கல்லூரியில் இருந்தது. குழந்தை போன்ற முகம், கோதுமை நிற உடல். பெரிய, குறும்பு கொப்பளிக்கும் விழிகள். கூர்மையான நாசி. சிவந்த, ஈரமான உதடுகள். அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல், கச்சிதமான பெண்மை அங்கங்கள். லேசாக மேக்கப் போட்டுவிட்டால் தேவதையேதான். எங்கள் கல்லூரியில் எத்தனையோ பேர் அவளை பார்க்க, அவள் பார்வை என் மேல் விழுந்தது. எங்கள் பார்வைகள் உரசிக்கொள்ள, காதல் பொறி பறந்தது. இருவரும் காதலுக்குள் தொலைந்து போனோம். திருச்சியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. ஒரு நாள் கூட இருவரும் பார்க்காமல் இருந்தது இல்லை. நான் வேணி மேல் உயிரையே வைத்து இருந்தேன். இவளே எனக்கு ஏழேழு ஜென்மத்திற்கும், காதலியாக, மனைவியாக வர வேண்டும் என்று, கடவுளை நான் வேண்டாத நாள் இல்லை. நாங்கள் காதலித்த அந்த இரண்டு வருடங்களில், என் விரல் நுனி கூட வேணியை தீண்டியது இல்லை. எனக்கு வேணியின் அழகின் மேல் அப்படி ஒரு கிறக்கம். அவள் அருகில் அமர்ந்து இருக்கும்போது, என் ஆண்மை முறுக்கேறும். அவளை தீண்டி அவள் உடல் மென்மையை உணர்ந்து கொள்ள முயலுவேன். வேணி எதையும் அனுமதித்தது இல்லை. தியேட்டர் இருளில் தோளில் கை போட்டால், "என்ன பழக்கம் இது? உன் சேட்டை எல்லாம் கல்யாணம் ஆனப்புறம்" என்று கையை தட்டி விடுவாள். "ஒரே ஒரு முத்தம் தரக் கூடாதா?" என்று தினசரி கெஞ்சுவேன். "கொஞ்சம் பொறுத்துக்கடா, செல்லம்" என்று மறுப்பாள். இறுதி வரை அந்த முத்தம் எனக்கு கிடைக்கவே இல்லை. வாழ்க்கையே சொர்க்கமாக தோன்றிய காலம் அது. கல்லூரி இறுதியாண்டும் முடிந்தது. அபோதுதான் ஒரு நாள் திடீரென்று வேணி வந்து என் இதயத்தை உடைத்து சென்றாள். 'எனக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்க' என்றாள். 'அவரை கல்யாணம் பண்ணிக்கலைனா, அப்பாவும் அம்மாவும் செத்துருவேன்னு மிரட்றாங்க' என்று அழுதாள். 'நான் என்னடா பண்றது' என்று என்னையே கேட்டாள். கடைசியாக 'ப்ளீஸ் அசோக், எல்லாத்தையும் மறந்துரு' என்று கூறிவிட்டு அவள் எழுந்து சென்றபோது, எனக்கு இதயம் வெடித்து விடும் போல் இருந்தது. அவள் போன பிறகு நெடு நேரம் அங்கேயே அமர்ந்து அழுது கொண்டு இருந்தேன். வேணி இல்லை என்று தெரிந்ததும், எனக்கு வாழ்வில் பிடித்தம் போய் விட்டது. குடிக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடித்து போல், எங்கேயோ வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நண்பர்கள் மூலம் வீட்டிலும் விஷயம் தெரிந்து விட்டது. அம்மாவும் அக்காவும் சமாதானம் சொன்னார்கள். பலனில்லை. ஒரு நாள் மூச்சு முட்ட குடித்து விட்டு, பாரில் படுத்துக் கிடந்தவனை, நாலு பேர் வீட்டில் வந்து அள்ளிப் போட்டதும், அம்மா ஆடிப்போய் விட்டாள். மாமாவை வரவழைத்தாள். மாமா மிகவும் நல்லவர். அம்மாவின் அண்ணன். நான் மிகவும் மதிப்பவர். எனக்கு புத்திமதி சொன்னார். "நீங்க காதலிச்சது தப்பு இல்ல மாப்ளே. ஆனா உங்கள மறந்துட்டு போனவள நெனச்சு உங்க வாழ்க்கைய கெடுத்துக்கரிங்களே, அதுதான் தப்பு. உங்க கவனத்தை வேற பக்கம் திருப்புங்க. கொஞ்ச நாள் பிரஸ்ஸ நீங்க பாத்துக்கங்க. நாளைக்கு ஆபீசுக்கு வாங்க" என்றுவிட்டு சென்றார். எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. சென்றேன். மாமா மிக அழகாக என் கவனத்தை திசை திருப்பினார். எனக்கு பணம் சம்பாதிக்க கற்று தந்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக வேணியை மறந்து, பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தினேன். மாமாவும் முழுமையாக பிரஸ்ஸை என் பொறுப்பில் விட்டு விட்டு, ஓய்வெடுக்கிறார். மாமாவுக்கு, அவர் பெண் செல்வியை எனக்கு மணமுடிக்க ஆசை. அம்மா, அக்காவுக்கும்தான். எல்லோரும் என் ஒற்றை தலையாட்டலுக்காக காத்து இருக்கிறார்கள். எனக்குதான் இந்த பாவி ஏற்படுத்திய காயம் ஆறாமல், என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை. "என்னடா யோசிக்கிற?" வேணி என் கவனத்தை கலைத்தாள். "ஒண்ணுமில்லை" என்று நான் தலையை ஆட்டினேன். வேணி கூறியது போல் அவள் வீடு ஒன்றும் அருகில் இல்லை. ஆட்டோவிலேயே அரை மணி நேரம் ஆனது. வீடு மிகப் பெரியதாய் இருந்தது. "சொந்த வீடு" என்றாள். வசதியான வாழ்க்கைதான் என்று நினைத்துக் கொண்டேன். ஹாலில் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சென்றவள், சிறிது நேரத்தில், கையில் ஒரு தட்டோடு வந்தாள். தட்டில் டீயும், பிஸ்கட்டும் இருந்த ன. "வா. அப்படி போயிறலாம்" என்று பால்கனிக்கு கூட்டி சென்றாள். இருவரும் எதிரெதிரே சேர் போட்டு அமர்ந்து கொண்டோம். நான் பிஸ்கட்டை கடித்துக் கொண்டே டீயை உறிஞ்ச ஆரம்பித்தேன். "ஏன்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? இன்னும் பழசையே நெனச்சுக்கிட்டு இருக்கியா?" அவள் கேட்டதில் பாதி உண்மை இருந்தும், அதை மறுத்தேன். "ச்சே ச்சே அதெல்லாம் இல்லை" "அப்புறம்?" "யாரும் பொண்ணு தர மாட்டேன்னு சொல்றாங்க?" குறும்புடன் சொன்னேன். "உனக்கு என்னடா குறைச்சல்? உன்னைய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏதாவது பைத்தியக்காரிதான் சொல்லுவா?" சொல்லிவிட்டு என்னையே கூர்ந்து பார்த்தாள். அவள் கூறிய விதத்தில் ஒரு வித ஏக்கம் இருப்பதாக எனக்கு பட்டது. ஒருவேளை என்னை இழந்ததற்காக வருத்தப் படுகிறாளோ? அவளே தொடர்ந்தாள். "அதான் மாமா பொண்ணு இருக்கிறால்ல? அவ பேரு என்ன? செல்விதானே?" "ம். மாமாவுக்கும் இஷ்டந்தான்" "அப்புறம் என்ன?" நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அவளுக்கு என் பார்வையின் அர்த்தம் புரிந்தது. தலையை குனிந்து கொண்டாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேச்சை மாற்ற எண்ணினேன். "உன் ஹஸ்பன்ட் எப்ப வருவாரு?" "ஏன் கேட்கிற?" "இல்லை. அவர் வந்தா ஒரு ஹாய் சொல்லிட்டு, அப்படியே கிளம்பலாம்னு பார்த்தேன்" "ஏன்டா ஓடுறதிலையே குறியா இருக்கிற?" அவள் சற்று கோபமானாள். "இல்லை வேணி. பிரண்ட் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான்" "பிரண்ட்தான? ஏதோ பொண்டாட்டி வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி இப்படி பறக்கிற?" நான் மவுனமானேன். மவுனத்தை கலைக்க விரும்பி, "சரி விடு. உன் ஹஸ்பன்ட் எப்ப வருவாருன்னு சொல்லு" அவள் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவள் முகம் சுருங்கி விட்டது. பின் எங்கேயோ பார்த்துக் கொண்டு, "அவர் வர மாட்டார்" என்றாள். "ஏன். எங்கேயாவது வெளியூர் போயிருக்காரா?" அவளிடம் இருந்து பதில் இல்லை. நான் திரும்ப கேட்டேன். "சொல்லு வேணி.வெளியூர் போயிருக்காரா?" "வேசி வீட்டுக்கு போயிருக்காரு" சொல்லிவிட்டு அவள் உதடுகளை, பற்களால் இறுக்கி கடித்துக் கொண்டாள். அவள் முகம் துடித்தது. மூக்கு விம்மியது. கண்களில் ஒரு துளி நீர் வந்து முட்டிக் கொண்டு நின்றது. அழுகையை அடக்க ரொம்ப முயற்சி செய்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. "எ..எ..என்ன சொல்ற நீ?" அவ்வளவுதான் அவள் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இரண்டு கையாளும் முகத்தை மறைத்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. சிறிது நேரம் அப்படியே அழுதவள், பின்பு கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். "நான் சந்தோஷமா இல்லைடா. சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். அண்ணா நகர்ல இருக்கிறா அந்த தேவடியா. கல்யாணத்துக்கு முன்னேயே, அவ கூட இவருக்கு தொடர்பு. அவ வீடே கதின்னு கிடக்கிறார்" "இங்க வர்றதே இல்லையா?" "ம். வருவாரு. என்னைய அடிக்கணும் இல்லை உதைக்கணும்னு தோணுச்சுனா வருவாரு" விரக்தியாய் சொன்னாள். "உன் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம்?" "ம். தெரியும், நீதாம்மா கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகணும்னு, சொல்லிட்டாங்க" எனக்கு வேணி மேல் இருந்த ஆத்திரமும், கோபமும் போன இடம் தெரியவில்லை. மனசுக்குள் அவள் மேல் ஒரு பரிதாபம் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த பரிதாபம், என் பழைய காதலை எனக்குள் தோண்டி எடுக்க ஆரம்பித்தது. இவளை எப்படி எல்லாம் மகாராணி போல் வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படி ஆகி விட்டாளே என்று தோன்றியது. "ஸாரி வேணி. உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை" அவள் ஒரு பெரு மூச்சு விட்டாள். "எல்லாம் நான் செஞ்ச பாவம். அனுபவிக்கிறேன்"

"அப்படியெல்லாம் இல்லை. நீ என்ன பாவம் செஞ்ச?" "உனக்கும், நம்ம காதலுக்கும் துரோகம் பண்ணினேனே. அது போதாதா?" "அது உன் அப்பாவும் அம்மாவும் மிரட்னாங்க. அதுக்கு நீ என்ன செய்வ?" "இல்லை அசோக், நான் இவரை கட்டிக்க சம்மதிச்துக்கு, என் அப்பா, அம்மா மிரட்னது மட்டும் காரணம் இல்லை. வசதியானவர், கட்டிக்கிட்டா லைப் சந்தோஷமா இருக்கும்னு, எனக்கே மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு. உனக்கு பண்ணின துரோகத்தை நினச்சு நான் அழுகாத நாளே இல்லை" எனக்கு என்னை அவள் ஏமாற்றி இருக்கிறாள் என்று கோபம் வரவில்லை. மாறாக, அவசரப்பட்டு முடிவெடுத்து, கஷ்டப் படுகிறாளே என்று இரக்கம்தான் வந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், "என்னால உனக்கு ரொம்ப கஷ்டம். இல்லைடா?" என்றாள். "அதெல்லாம் இல்லை வேணி" "லவ் பண்றப்போ கூட நான் உனக்கு எந்த சந்தோஷமும் தந்ததில்ல. என் கைய கூட உன்னை பிடிக்க விட்டதில்ல" தழு தழுத்த குரலில் சொன்னாள். "இப்போ எதுக்கு வேணி அதெல்லாம்?" எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. சேரை இழுத்து அவள் அருகில் போட்டு அமர்ந்து கொண்டேன். அவள் ஆதரவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் தடுக்கவில்லை. சிறிது நேரம் கண்கள் மூடி அப்படியே என் தோளில் சாய்ந்து இருந்தாள். பின்பு தன் தலையை உயர்த்தி என் முகத்தையே பார்த்தாள். அவள் அழகு முகம், என் முகத்திற்கு எதிரே, வெகு அருகில் இருந்தது. "உனக்கு ஞாபகம் இருக்கா? நாம லவ் பண்றப்போ, அடிக்கடி 'முத்தம் வேணும்' 'முத்தம் வேணும்' ன்னு என்கிட்டே கெஞ்சிக்கிட்டே இருப்பியே?" "ம்" "எனக்கு....... இப்போ தரணும் போல இருக்கு. தரவா?" அவள் ஏக்கத்துடன் கேட்டாள். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்த வார்த்தைகளுக்காக எவ்வளவு நாட்கள் ஏங்கி இருக்கிறேன். ஒரு நாளாவது இவள் சம்மதித்து விட மாட்டாளா? இவள் ஈர இதழ்களை கவ்வி, இதழ் தேன் குடித்துவிட மாட்டோமா? என்று எப்படி தவித்து இருக்கிறேன். இப்போது எனக்கு அவள் வார்த்தைகள் சந்தோசத்தை தரவில்லை. நான் முகத்தை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன். "வேண்டாம் வேணி. இது தப்பு" "என்ன தப்பு?" "நீ இப்போ வேறொருத்தனோட வொய்ப்" "அதனால? என்ன கட்டிக்கிட்டவனே அங்க வேறோருத்தியோட படுத்திருக்கான்" "உன் புருஷன் தப்பு பண்ணினா, அதே மாதிரி எல்லா ஆம்பளைங்களும் தப்பு பண்ணுவாங்கன்னு நினைச்சியா?" கோபத்துடன் நான் கக்கிய வார்த்தைகள் வேணியை காயப்படுத்தின. அது சுருங்கிப் போன அவள் முகத்திலேயே தெரிந்தது. தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்கு இனிமேலும் அங்கு நெடு நேரம் நிற்பது நல்லதில்லை என்று தோன்றியது. எழுந்து கொண்டேன். "நான் கிளம்பறேன். வேணி" என்றேன். அவளும் எழுந்து கொண்டாள். அழுதிருந்தாள். கண்ணின் நீர்த்துளி அவள் பட்டுக் கன்னத்தை நனைத்து ஓடியது. எனக்கு மனம் இளகியது. "நான் உன்னை காயப் படுத்தி இருந்தா, ஸாரி வேணி" என்றேன். "நீ எதுக்கு ஸாரி கேக்கிற? நீ என்ன தப்பு பண்ணின? நான்தான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, முத்தம் தரவான்னு பல்லை இளிச்சுக்கிட்டு கேட்டுட்டேன்" மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. எனக்கு அவளை பார்க்க பாவமாய் இருந்தது. "ப்ளீஸ் வேணி. அழாத. ப்ளீஸ்" நான் அவள் கண்ணீரை துடைக்க முயன்றேன். "நீ கூட என்னை புரிஞ்சுக்கலைல" என்று மீண்டும் அழுதாள். நான் தடுமாறிப் போனேன். எவ்வளவு நல்லவள் இவள். அன்புக்காக எப்படி ஏங்குகிறாள். "இல்லை வேணி. அப்படி எல்லாம் இல்......." நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, வேணியின் பட்டு இதழ்கள் என் உதடுகளை கவ்வி இருந்தன. விலகிக் கொள்ள நான் எடுத்த முயற்சி வீணானது. அவளது ஒரு கை என் இடுப்பை இறுக்கி வளைத்து இருந்தது. மறு கை என் தலையின் பின்புறம் அழுத்தி பிடித்து, நான் நகர விடாமல் செய்தது. அவளது பெண்மை கலசங்கள் என் நெஞ்சில் மோதி, அழுத்தின. வேணியின் உதடுகள் வெறித்தனமாய் என் உதடுகளை சுவைத்துக் கொண்டு இருந்தன. வேணியின் மென்மையான பெண்மை என்னை கிறங்கடிக்க, நானும் காம தேவனின் கையில் அகப்பட்ட சாதாரண மனிதன் ஆனேன். எனது கட்டுப்பாடுகள் கட்டறுந்து போயின. தயக்கம் விலகி, நானும் வேணியை இறுக்கி அணைத்தேன். அவள் உதடுகள் பேசிய பாஷைக்கு என் உதடுகளால் பதில் சொன்னேன். வேணியின் எச்சில் அமிர்தம் என் வாய் வழியே உள்ளிறங்க, அதன் சுவை என்னை போதை கொள்ளச் செய்தது. வேணி நெடுநேரம் கவ்வியிருந்த என் உதடுகளை, விடுவிக்க மனம் இல்லாமல், மெல்ல மெல்ல விடுவித்தாள். பின் என் தோளில் சாய்ந்து கொண்டு, மார்பை தடவிக் கொடுத்தாள். நான் இன்னும் அவளை இறுக்கிப் பிடித்த வண்ணம் இருந்தேன். வேணி மூடிய கண்களை திறக்காமலே சொன்னாள். "அசோக்" "ம்" "என்னைய எடுத்துக்கோடா. ப்ளீஸ். உனக்கு நான் ஏதாவது செய்யணும்" நான் அவள் தலையை நிமிர்த்தினேன். நெற்றியிலும், பின் உதட்டிலும் லேசாக முத்தமிட்டேன். ஒரு கையை அவள் முதுகுக்கும், அடுத்த கையை அவள் காலுக்கும் கொடுத்து, அவளை அலாக்காக தூக்கினேன். நான் தூக்கியதில் அவள் மாராப்பு சரிந்து கொள்ள, அவள் முலைகள் ரெண்டும் ரவிக்கைக்குள் விம்மிக் கொண்டு தெரிந்தன. நான் அவளை தூக்கியபடியே ஹாலுக்குள் நுழைந்தேன். "பெட்ரூம் அங்க" என்று வேணி கை காட்டிய திசையில் நடந்து, பெட்ரூமை அடைந்தேன். அவளை இறக்கிவிடவும், அவள் மீண்டும் என் இதழ்களை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தாள். அவள் கட்டியிருந்த புடவை தானாக அவிழ்ந்து கொள்ள, வேணி ரவிக்கை, பெட்டிக்கொட்டோடு நின்றாள். நான் அவளின் பின்பக்கமாக சென்று அவள் இடுப்பை வளைத்து அணைத்தேன். அவளது விரிந்த புட்டங்கள், என் ஆண்மையில் வந்து மோதின. எனது கைகள் அவள் குறுகிய இடுப்பை பிடித்து பிசைந்து கொண்டு இருந்தன. எனது முகம் வேணியின் கழுத்தில் புதைந்து இருந்தது. நான் விட்ட அனல் மூச்சு, வேணியின் கன்னத்தில் மோதி திரும்பி வந்து, மீண்டும் என் முகத்தை சுட்டது. வேணி என் வலது கையை எடுத்து தன் இடது முலையில் வைத்துக் கொண்டாள். "இதை பிசஞ்சு விடுடா அசோக்" நான் பிசைய ஆரம்பித்தேன். வேணியின் முலை, பஞ்சில் செய்து வைத்த பந்து போல மிகவும் மென்மையாக இருந்தது. முழுவதும் என் கைக்குள் அடங்காத வண்ணம் கொஞ்சம் பெரிதாக இருந்தது. நான் அவள் கழுத்து, கன்னம், காது என்று மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே, அவள் பெண்மை கனியை கசக்கி விட்டேன். வேணி என் தோளில் தலை சாய்த்து, கண்கள் மூடி இன்ப சுகத்தில் நீந்திக் கொண்டு இருந்தாள். எனது ஆணுறுப்பு, பேண்டுக்குள் துடிக்க ஆரம்பித்து இருந்தது. வெளியே வர எத்தனித்தது. நான் எனது கையை அவள் இடது முலையில் இருந்து வலது முலைக்கு மாற்றினேன். இப்போது அவளது வலது முலையும், இடது முலை அடைந்த சுகத்தை அடைந்தது. எனக்கு ஆர்வ மிகுதியில் சற்று அழுத்தி பிசைய, அவள் "ஆவ்" துள்ளிக் கொண்டு திரும்பினாள். என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். மீண்டும் இதழ்களால் என்னை மோத, இருவரும் கட்டில் மேல் பொத்தென்று விழுந்தோம். அவளது முழு உடலும் என் மேல் படர்ந்து இருந்தது. நான் அவளை அப்படியே புரட்டி, அவள் மார்பில் முகம் புதைத்தேன். முகத்தை இடத்தும் வலதுமாக அசைத்து, பஞ்சு தலையணை போல் இருந்த அவள் முலைகளில் வைத்து தேய்த்தேன். ரவிக்கையோடு சேர்த்து அவைகளுக்கு முத்தம் கொடுத்தேன். "ஜாக்கெட்ட கழட்டிறவா?" நான் கேட்க, "ம்" என்று அவள் சம்மதித்தாள். ஒவ்வொரு பட்டனாக கழற்றி, அந்த இடத்தில முத்தமிட்டுக் கொண்டே, அவள் ரவிக்கையை கழட்டினேன். அவள் பின்னால் கை விட்டு, ப்ராவின் ஸ்ட்ராப்பை எடுத்து விட்டாள். இப்போது அவளது வெண்ணிற முயல் குட்டிகள், வெளியே எட்டிப் பார்த்தன. நான் அவள் மார்புகளுக்கு நடுவே முகம் பதித்தேன். அவள் பஞ்சு முலைகள் ரெண்டும் என் கன்னத்தை உரசித் தடவ, எனக்கு சுகமாயிருந்தது. "இதை வாயில வச்சுக்கோடா" என்று ஒரு முலையை என் வாயில் திணித்தாள். நான் அடுத்த முலையை பிசைந்து கொண்டே, வாயில் தள்ளிய முலையை சப்ப ஆரம்பித்தேன். முலைக்காம்பை நுனி நாக்கால் மெல்ல மெல்ல தீண்டி விட "நல்லாருக்குடா" என்று வேணி நெளிந்தாள். சிறிது நேரம் நுனி நாக்கால் அவள் காம்போடு விளையாடிவிட்டு, பின்பு உதடுகளால் கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தேன். வேணி உணர்ச்சியில் தனது நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காட்டினாள். நான் நெடு நேரம் அவள் இரண்டு முலைகளையும் மாறி மாறி சுவைத்தேன். வேணி என் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள். நான் மல்லாக்க விழுந்தேன். அவள் புரண்டு என் மேல் படர்ந்தாள். எனது கழுத்தில் முகம் பதித்து முத்தமிட்டுக் கொண்டே, எனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்டினாள். என் வெற்று மார்பை கை வைத்து ஆசையாய் தடவி விட்டாள். "இச் இச்" என்று அங்குலம் அங்குலமாக முத்தம் பதித்தாள். பின்பு மாறி மாறி என் மார்புக் காம்புகளில் இதழ் பதித்து உறிஞ்ச ஆரம்பித்தாள். வேணியின் பஞ்சு முலைகள் ரெண்டும் என் வயிற்றில் படர்ந்து உரசிக் கொண்டு இருந்தன. அவள் பட்டு உதடுகள், என் சிறிய மார்புக் காம்பினை கவ்வி உறிஞ்சியது, எனக்கு புது வித சுகமாய் இருந்தது. நாக்கை வெளியே நீட்டி, என் மார்புக்காம்பை சுழற்றி சுழற்றி நக்கி என்னை துடிக்க வைத்தாள். வேணி என் வெற்றுடலில் முத்தமிட்டுக் கொண்டே கீழிறங்கினாள். இடுப்புக்கு கீழே இறங்கியவள், என் ஆணுறுப்பு வந்ததும், அதில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். பொறுமையாக என் பேன்ட்டை கழட்டினாள். நான் என் இடுப்பை அசைத்து அவள் பேன்ட்டை கழட்ட உதவி செய்தேன். வேணி என் ஜட்டியை கீழே இறக்கிவிட, விரைத்திருந்த என் ஆண்மை ஆயுதம் வெளியே வந்தது. வேணி சிறிது நேரம் அதையே ஆசையாக பார்த்தாள். எனக்கே கூச்சமாக இருந்தது. "என்ன வேணி அப்படி பாக்கிற?" "உன்னோடது நல்லா தடியா, உருண்டையா, அழகா இருக்குடா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" சொல்லிவிட்டு, தன் வலது கையால் என் ஆணுறுப்பை பிடித்து தடவிக் கொடுத்தாள். தோலை மேலும் கீழும் தள்ளி விளையாடினாள். என் நுனி மொட்டை கட்டை விரலால் தேய்த்துக் கொடுத்தாள். சிறிது நேரம் அப்படியே வருடிக் கொடுத்தவள், பின்பு தன் வாயை "ஆ" வென்று திறந்து கொண்டு, என் ஆயுதத்தை நோக்கி குனிந்தாள். நான் அவள் தலையை பிடித்து தடுத்தேன். "வேணாம். வேணி" "ப்ளீஸ் அசோக். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் எது பண்ணினாலும் தடுக்காத. ப்ளீஸ்" நான் அவள் தலையை விட, அவள் என் ஆணுறுப்பில் இதழ் பதித்தாள். எனக்கு ஆயரம் வாட் மின்சாரம் என் உடலுக்குள் புகுந்தது போல இருந்தது. லேசாக நாக்கை நீட்டி, என் ஆணுறுப்பின் துளையை நக்கி விட்டு, பின்பு நுனி மொட்டை இதழ்களால் கவ்விக் கொண்டாள். இறுக்கிக் கவ்விக் கொண்டு, நாக்கால் மொட்டை வருடிக் கொடுக்க, நான் அடைந்த இன்பம் கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. சிறிது நேரம் என் சிவந்த மொட்டொடு, தன் நாக்காலும், உதடுகளாலும் விளையாடிய வேணி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக, எனது முழு உறுப்பையும் தன் வாய்க்குள் தள்ளிக் கொண்டாள். வேணி தலையை மேலும் கீழும் அசைத்து என் உறுப்பை சூப்ப ஆரம்பித்தாள். நான் சொர்க்கத்தை எட்டி இருந்தேன். என் வாழ் நாளில் அது போல் ஒரு இன்பத்தை நான் அனுபவித்ததே இல்லை. வேணியின் மித வெப்பமான வாய் சுவர்கள் எனது தண்டுக்கு, இதமாக இருந்தது. நான் அவள் தலை முடியை பிடித்து கோதி விட்டேன். நான் அவள் தலையை கீழ் நோக்கி அழுத்தி, லேசாக இடுப்பை எக்கி என் ஆயுதத்தை அவள் வாய்க்குள் செலுத்த முயன்றேன். சிறிது நேரம் வேணியின் வாய் என் ஆணுறுப்பில் அசைந்து அசைந்து ஆடியதில், அது தடித்து புடைத்து இருந்தது. எனக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. "போதும் வேணி. என்னால தாங்க முடியலை" "நல்லா இருந்துச்சாடா?" "ம். நல்லா சுகமா இருந்துச்சு வேணி. இது மாதிரி சுகத்த நான் அனுபவிச்சதே இல்ல" வேணி சிரித்தாள். "சரி. நீ எழுந்திரு. நான் கீழே படுத்துக்கறேன்" என்றாள். நான் எழுந்து கொண்டு வேணியின் மேல் படர்ந்தேன். அவள் வயிற்றில் முகம் பதித்து தேய்த்தேன். அவள் தொப்புள் குழி சிறியதாய், அழகாய் ஜொலிக்க அதில் இதழ் பதித்து உறிஞ்சினேன். நாக்கை மெல்ல நீட்டி, குழிக்குள் விட்டு தடவ, வேணி துள்ளினாள். "என்னடா பண்ற? சீ" என்று வெட்கப்பட்டாள். நான் அவள் பெட்டிக்கோட்டை கீழ் நோக்கி இழுத்து கழட்டி விட, வேணி பிறந்த மேனியானாள். வேணியின் உடல் செதுக்கி வைத்த சிற்பம் போல கட்டுக் குழையாமல் இருந்தது. இடுப்புக்கு கீழே அவள் தொடைகள் வெள்ளை வெளேரென ஜொலித்தன. தொடைகள் இடுப்பில் சேரும் இடத்தி ல், அவள் பெண்மை உறுப்பு, உப்பலாய், புடைத்துக் கொண்டு இருந்தது. முடிகள் எதுவும் இல்லாமல், சுத்தமாய், பளிச்சென்று இருந்தது. சிவந்த இதழ்களை விரித்துக் கொண்டு, காலையில் பூத்திருக்கும் புது மலரை போல பூத்திருந்தது. அவள் பெண்ணுறுப்புக்கு கீழே, இடது தொடையின் உட்புறமாக, வட்டமாய் ஒரு தழும்பு இருந்தது. நான் அதை தடவிப் பார்த்தேன். "என்ன வேணி இது தழும்பு?" "அதுவா? என் புருஷன் எனக்கு ஆசையா வச்ச சிகரட் சூடு" நான் பதறிப்போய் அவளை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் புன்னகையோடு இருந்தாள். எனக்கு கண்கள் கலங்கியது. என் தேவதை எப்படி எல்லாம் துன்பம் அனுபவித்து இருக்கிறாள். நான் குனிந்து அந்த சிகரட் தழும்பில், எச்சில் பட ஒரு முத்தம் பதித்தேன். வேணி "ஷ்ஷ்ஹாஹா" என்று சத்தம் எழுப்பினாள். "இன்னொரு தடவை பண்ணுடா. ப்ளீஸ்" என்றாள். நான் மீண்டும் ஒரு ஈர முத்தம் பதித்தேன். எனது வலது கையை அவள் பெண்ணுறுப்பில் படர விட்டேன். வழு வழுவென்று இருந்தது. அவள் மனமதப் பிளவில் விரல் வைத்து தேய்த்தேன். "வாய வச்சு பண்ணனும் போல இருக்கு வேணி. பண்ணவா?" "அது உன்னோடது. உனக்கு என்ன தோணுதோ பண்ணு"

நான் என் முகத்தை அவள் தொடை இடுக்கில் புதைத்தேன். அவள் மர்ம உறுப்பில் இருந்து ஒரு மன்மத வாசணை வந்தது. அது இதுவரை நான் அறியாத வாசணை. நான் என் நாசியை, அவள் சொர்க்க துவாரத்தின் அருகில் வைத்து, அந்த வாசணையை உள் வரை முகர்ந்தேன். அந்த வாசணை எனக்கு ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. நான் நாக்கை வெளியே நீட்டி வேணியின் மர்ம பாகத்தை நக்கி சுவைக்க ஆரம்பித்தேன். முதலில் அவள் பெண்மை பிளவு நெடுக நாக்கை ஓடவிட்ட நான், பின் ஓரமாய் இருந்த இதழ்களை நக்கினேன். உதடுகளால் அந்த தடித்த இதழ்களை சுவைத்தேன். பின்பு, அந்த ஓர இதழ்களை விரித்து வைத்துக் கொண்டு, நாக்கை மடித்து அவள் துவாரத்துக்குள், சரக்கென்று செருகினேன். நாக்கை வேகமாக அசைத்து, அவள் பெண்மை ஓட்டைக்குள் சுழற்ற ஆரம்பித்தேன். வேணி துடித்துப் போனாள். "நல்லா இருக்குடா. அசோக். அப்படியே பண்ணுடா. நாக்க எடுத்துராத" நான் நக்க நக்க, வேணியின் பெண்ணுறுப்பு நீர் விட ஆரம்பித்தது, உள்ளிருந்து ஊற்று போல் கசிந்து வந்த திரவம் என் நாக்கை நனைத்தது. அதன் சுவை எனக்கு பிடித்து இருந்தது. நாக்கின் வேகத்தை கூட்ட, உள்ளிருந்து வந்த நீரின் அளவும் அதிகரித்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சிறிது நேரம் இடை விடாமல், வேணியின் அடியில் என் நாக்கு வே லையை தொடர்ந்தேன். வேணி உணர்ச்சி பிழம்பாய் எரிந்தாள். "ஆ ஊ" என்று முனகிக் கொண்டு தன் மன்மத மேடையை தூக்கி தூக்கி காட்டிக் கொண்டு இருந்தாள். என் தலையை தொடைகளுக்கு இடையில் வைத்து அழுத்தினாள். சிறிது நேரத்தில் வேணி காம நோயின் உச்சத்தில் இருந்தாள். "போதுண்டா அசோக். உள்ள விட்டு பண்ண ஆரம்பி" நானும் அவள் பெண்ணுறுப்புக்குள் நுழைந்து உச்ச பட்ச இனபத்தை அனுபவித்து விட துடித்தேன். எனது ஆணுறுப்பு, விரைத்து ஈட்டி போல் கூர்மையாக நீட்டிக் கொண்டு இருந்தது. நான் என் உறுப்பை பிடித்து, நுனி மொட்டினை அவள் மன்மத வாசலில் வைத்தேன். உணர்ச்சி வேகத்தில் இருந்த நான், முரட்டு வேகத்தில் ஒரு இடி இடித்து அதை உள்ளே தள்ள, வேணியின் உட்சுவர்களில் இடித்துக்கொண்டு முரட்டு தனமாய் உள்ளே பாய்ந்தது. அவள் பெண்ணுறுப்பு அதை முழுவதுமாக கவ்விக் கொண்டது. வேணி "ஆவ்" என்று அலறி விட்டாள். "என்னாச்சு வேணி?" "வலிச்சதுடா. உன்னோடது ரொம்ப பெருசா இருக்குல்ல" "ஸாரிடா. ரொம்ப வலிக்குதா?" அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள். "உன் இஷ்டம் போல பண்ணு. இனிமே நான் கத்தலை" என்றாள். நான் நிதானமாகவே ஆரம்பித்தேன். என் இடுப்பை அசைத்து அசைத்து என் தடித்த ஆண்மையை, அவள் குறுகிய பெண்மைக்குள் செலுத்தினேன். எனது ஆயுதம் வேணியின் பெண்ணுறைக்குள் சற்று சிரமப்பட்டே சென்று வந்தது. அவள் பெண்மை துளை சற்று சிறிதாக, இறுக்கமாக இருந்ததை, என்னால் உணர முடிந்தது. "வலிச்சா சொல்லு வேணி. நான் நிறுத்திர்றேன்" "வலிக்கலைடா. நீ நிறுத்திராத. அப்படியே பண்ணு. டைட்டா இருந்தாதான் சுகமா இருக்கும். லேசா வலிச்சாதான் நல்லா இருக்கும்" உண்மைதான். அவள் உறுப்பு என்னுறுப்பை இறுக்கிப் பிடித்து இருந்ததில்தான் எத்தனை சுகம். அந்த இறுக்கம் ஏற்படுத்தி இருந்த வலியில்தான் எவ்வளவு ஆனந்தம். வேணியின் மன்மத உறுப்பு என்னை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றது. வேணி ஒரு ஆனந்த புதையலாய் எனக்கு தோன்றினாள். அடியில் விட்டு தோண்ட, தோண்ட இன்பத்தை வாரி வாரி இறைத்தாள். இப்படிப்பட்ட இன்ப தேவதையை தவிக்க விட்டு, பரத்தை பின்னால் சென்ற அவள் கணவனை பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் நிதானமாக இடித்ததில், வேணியின் உறுப்பு பதப் பட்டிருந்தது. எனக்கும் இடுப்பை வளைத்து சரியாக இயங்குவதின் நெளிவு சுளிவு தெரிந்தது. என் ஆயுதம் இப்போது கொஞ்சம் எளிதாக உள்ளே சென்று வந்தது. என் இன்ப தாகமும் அதிகரித்து இருந்தது. வேகத்தை கூட்டி இயங்க வேண்டும் போல் இருந்தது. "கொஞ்சம் ஸ்பீட கூட்டி பண்ணவா வேணி?" "கொஞ்சம் இரு" என்று விட்டு அவள் தன் கால்களை இன்னும் அகலமாக விரித்துக் கொண்டாள். "ம். இப்போ பண்ணு. உன் இஷ்டம் போல நல்லா ஸ்பீடா பண்ணு. எப்போ தோணுதோ அப்ப நிறுத்துனா போதும். நான் கத்துனா கண்டுக்காத. அதெல்லாம் சுகத்தில என்னை மறந்து கத்துறது" வேணி எனது இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல், கால்களை நன்கு விரித்துக் கொள்ள, என்னால் எளிதாக வேகம் எடுக்க முடிந்தது. மின்னல் வேகத்தில் இடுப்பை அசைத்து, என் உறுப்பை அவள் துவாரத்துக்குள் அனுப்பினேன். சர சர வென்று சத்தம் எழுப்பிய படியே உள்ளே சென்று வந்த என்னுறுப்பு, அவள் மன்மத குகைக்குள் இருந்த ரகசிய சுகங்களை தேடி தேடி எனக்கு அளித்துக் கொண்டு இருந்தது. என் வெறித்தனமான இயக்கத்தில், வேணியின் பட்டுடல் அதிர்ந்து ஆட ஆரம்பித்தது. அவள் நெஞ்சு கனிகள் அந்த அதிர்வு தாளாமல் குலுங்கி நடனமாடின. வாணி கண்களை மூடிக்கொண்டும், உதட்டை இறுக்கி கடித்துக் கொண்டும், "ஹா ஹா" என்று முனகிக் கொண்டும், என் இயக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள். நான் அவள் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டு, அசுர வேகத்தில் இயங்க ஆரம்பித்தேன். வேணியின் நெஞ்சு சதைகள், என் மார்பு அழுத்தி பிதுங்கின. அவள் கைகள் என் முதுகை தடவிக் கொடுத்தன. சிறிது நேரம் போட்ட வெறியாட்டத்தில் நான் களைத்துப் போனேன். ஆட்டத்தை நிறுத்தி விட்டு, அவள் மேல் அப்படியே படுத்துக் கொண்டேன். "நல்லா இருந்துச்சாடா?" "ம். நல்லா இருந்துச்சு வேணி. உன்னோடது நல்லா டைட்டா கவ்விப் பிடிச்சு இருந்தது, நல்லா சுகமா இருந்துச்சு" "சரியான முரடன்டா நீ" "நானா?" "ஆமாம். இப்படியா முரட்டு தனமா பண்ணுவ? எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?" "வலிச்சதுன்னா சொல்லிருக்க வேண்டியதுதான வேணி. நான் நிறுத்திருப்பேனே" "நீ நிறுத்திருவேன்னுதான் சொல்லலை" "ரொம்ப வலிச்சுதாடி செல்லம்" "அதனாலென்ன? பரவாயில்லை. உனக்கு சுகமா இருந்துச்சுல்ல?" "ம்" "அது போதும். என் செல்ல கண்ணனோட சந்தோஷந்தான் முக்கியம்" எனக்கு அவள் மேல் காதல் பெருகியது. என் சுகத்துக்காக அவள் வலியை தாங்கி இருக்கிறாளே. நான் அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டேன். "அப்படி வேகமா பண்ணினியே? அவ்வளவு ஆசையா என்மேல?" என்றாள். "ம்" சொன்னதும் வேணி எனை இறுக்கிக் கொண்டாள். அவள் மார்பு சதைகள் என் மேல் சுகமாய் அழுந்தின. நெற்றியில் முத்தமிட்டாள். "என் செல்லக்குட்டி" என்று கொஞ்சினாள். "நீ உன் ஆசைய காட்டிட்ட. நானும் என் ஆசைய காட்டவா?" என்றாள். "காட்டு. எப்படி காட்டப் போற?" வேணி புன்னகைத்தாள். அவள் விரலால் என் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டே சொன்னாள். "நீ கீழே படுத்துக்க. நான் மேலே ஏறி பண்றேன்" எனக்கு அவள் என் மேல் எவ்வளவு ஆசை வைத்து இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. நான் அவள் மேல் இருந்து சரிந்து பக்கவாட்டில் படுத்துக் கொள்ள, அவள் என் மேல் ஏறிப் படுத்தாள். என் இதழ், நெற்றி, கன்னம், மார்பு என்று எல்லா இடமும் முத்தமிட்டாள். பின்பு வலது கையை மட்டும் கீழே இறக்கி, கெட்டியாய் இருந்த என் தண்டை பிடித்தாள். தன் இளமை துவாரத்தின் வாசலில் வைத்து, லேசாக இடுப்பை அசைத்து, லாவகமாக எனது தண்டை அவள் உறுப்புக்குள் நுழைத்துக் கொண்டாள். "உன்னோடது எனக்குன்னு அளவெடுத்து செஞ்ச மாதிரி கரெக்டா இருக்குடா. நல்லா வெது வெதுப்பா இருக்கு" நான் சிரித்துக் கொண்டே, வேணியின் புட்ட சதைகளை தடவினேன். அவள் முலைகள் போலவே, புட்ட சதைகளும் மிகவும் மென்மையாக இருந்தன. வேணி மெல்ல இடுப்பை வளைத்து இயங்க ஆரம்பித்தாள். அவள் புட்ட சதைகள் என் தொடை மேல் "தங் தங்" என்று மோதி காம நாதம் எழுப்பிக் கொண்டு இருந்தன. நான் அவள் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவள் மேலும் கீழும் ஏறி இறங்க உதவிக் கொண்டு இருந்தேன். வேணி கண்களை மூடி காம சுகத்தை ரசித்துக் கொண்டே, என் தண்டை தன் மர்ம உறுப்பால், விழுங்கி விழுங்கி, வெளியே துப்பினாள். வேணியின் கூந்தல் அவள் அசைவிற்கு ஏற்ப, அலை பாய்ந்து கொண்டு இருந்தது. வேணியின் உருண்டை முலைகள் ரெண்டும் மேலும் கீழும் அசைந்து ஆடிக் கொண்டு இருந்தன. நான் கைகளை அவள் இடுப்பில் இருந்து நகர்த்தி, வேணியின் முலைக் கலசங்களை பற்றிக் கொண்டேன். அவை ஊசலாடுவதை, கைகளால் இறுகப் பிடித்து நிறுத்தினேன். வேணி பொறுமையாக இயங்கிக் கொண்டு இருந்தாள். "இவ்வளவுதான் உன் ஆசையா?" நான் வேணியை சூடேற்றி விட்டேன். "ஆசைய காட்டவா?" அவள் கேட்டாள். "ம். காட்டு" வேணி வெறித்தனமாக இயங்க ஆரம்பித்தாள். புட்டத்தை சர சர வென்று அசைத்து என்னை துடிக்க வைத்தாள். "ஆ ஆ " என்று கத்திக் கொண்டே, எனது தண்டை மின்னல் வேகத்தில் மோதினாள். அவள் நெஞ்சு கனிகள் ரெண்டும் அதிர்ந்து சுழன்றன. எனது ஆணுறுப்பு, அவள் வேகத்தை தாள மாட்டாமல் ஆட்டம் கண்டது. என் ஆண்மையில் தீ பிடித்துக் கொண்டது போல் எரிந்தது. வலிக்க ஆரம்பித்தது. நான் வலியை பொறுத்துக் கொண்டேன். தன்னை மறந்து இன்பம் அனுபவிப்பவள், முழுமையாக அதை அனுபவிக்கட்டும் என்று என் வலியை தாங்கிக் கொண்டேன். வேணி என் மவுனத்தை பயன் படுத்திக் கொண்டாள். தன் நெடு நாள் ஏக்கத்தை என் ஆணுறுப்பிடம் காட்டினாள். அவள் அசுர வேகத்தில், என் உணர்ச்சி கரை கடந்து, "வேணி, தண்ணி வரும் போல இருக்கு" "பரவால்ல, உள்ளேயே விட்ரு" அவள் இயங்குவதை நிறுத்தாமலே சொன்னாள்.

என் விந்து வெள்ளம், மேல் நோக்கி பீய்ச்சியடித்து, வேணியின், பெண்மை துவாரத்தை நிறைத்தது. வேணி இயங்குவதை நிறுத்தி விட்டு, கீழிறங்கி, என் பக்கவாட்டில் வந்து படுத்துக் கொண்டாள். என் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். நான் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். இருவரும் நெடுநேரம், அந்த காம அதிர்வில் இருந்து மீளவில்லை. பின்பு, "செல்விய கல்யாணம் பண்ணிக்கடா அசோக். எல்லாம் நல்ல படியா நடக்கும். சரியா?" என்றாள். நான் "ம்" என்று தலையாட்டினேன். சிறிது அமைதிக்கு பின், "உனக்கு பிடிச்சு இருந்ததா வேணி?" என்றேன். "ம்" என்றவள், "நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சுடா அசோக். இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்" என்று விட்டு, என் நெஞ்சில் தலை சாய்ந்து, கண்மூடி உறங்கலானாள்.