Saturday 7 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 33

"அவனுக்கு, உள்ளே மெதுவான சத்தம் கேட்டது.."

"நானும் விடிய விடிய யோசிச்சிட்டேண்டா, என் மனசுக்கு ஒரு விதத்துல நிம்மதி கிடைக்க போகுது.. ஆமாம் உறுதியா கிடைக்க போகுது...."

"அப்போ டாக்டர் கிட்ட சிகிச்சை எடுத்துக்க போறியா?"

"இல்ல வேற வழியில எனக்கு நிம்மதி கிடைக்க போகுது டா.."

"என்ன சொல்லுற?"

"ஆமாம்... உன்னை கொள்ளுறதுதான் டா எனக்கு ஒரே வழி you blody bastard."

"டேய் குமார் என்ன பேசுற?. எனக்கு பயமா இருக்குடா, இந்த மாதிரி எல்லாம் பேசாத.." - நவீன் உடனே வாசல் கதவை நோக்கி விரைந்தான் அப்போது தான் தெரிந்தது கதவு உள் பக்கம் பூட்டி இருக்கிறதென்று...


"ஹா ஹாஹ்.. ஓடாதடா நாயே, இன்னைக்கி உன் உயிர் உன்னை விட்டு பிரிய போகுது உன் இஷ்ட தெய்வம் ஏதாவது இருந்தா உன் கடைசி பிரார்த்தனையை பண்ணிக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கணும் னு வேண்டிக்கோ."

குமார் நவீனை இறுக பிடித்துக் கொண்டான், "டேய் விடு டா என்னால முடியல டா நான் உன் friend டா, நான் வேணும்னா உன்னை பத்தியும் துறையைப் பத்தியும் வெளியே சொல்லாம இருக்கேண்டா. கொஞ்சம் யோசி டா பொறுமையா இருடா கொலை கார பாவி."

"ஆங்... நான் கொலை கார பாவி தான் ஆனா இன்னைக்கி ஒரு நாள் மட்டும்தான் என் வாழ்க்கைல கொலை செய்ய போறேன். நாளைல இருந்து நான் ரொம்பவும் சுத்தமான ஆளா இருப்பேன்." சொல்லிக் கொண்டே கையில் ஒரு கத்தியை எடுத்தான் குமார்.

"வேணாம்டா வேணாம்டா,,ப்ளீஸ் டா என்னால உன் பிடியில இருந்து விலக முடியல டா பாவி... என்னை கோ கோ.... கொல்லாத டா நான் புள்ளகுட்டி காரண்டா... படு பாவி வேணாம்டா டேய் வேணாம் டா.... எனக்கு பயமா இருக்கு டா வேண்டாம் டா ப்ளீஸ் டா வேண்டாம் டா." - நவீன் கெஞ்சினான், கதறினான், குமாரின் கையில் இருந்து விலக முயற்சி செய்யும்போது கத்தி தவறி கீழே விழ, ஈவு இறக்கம் இன்றி நவீனின் கழுத்தை பிடித்து அருகில் உள்ள சுவரில் மிகவும் பலமாக ஒரே இடி இடிக்க நெத்தியில் இருந்து ரத்தம் வழிந்தது..

"அடப்பாவி என்னையும் சேர்த்து இடிச்சிட்டியே டா... பரவாயில்ல என் உயிர் போனாலும் சரி, உன் உயிர் போகணும் டா bastard... உன் ....உன் உயி.....போ...bas..d...." மயக்கத்தில் ரத்தத்துடன் கீழே விழுந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போலீஸ் siren சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் எழுந்து சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இஸ்திரி போடும் பையன் பத்து நிமிடத்துக்கு முன்பாக புகார் கொடுத்ததின் பெயரில் போலீஸ் விரைந்தது. அதற்க்கு முன் கூட்டம் கூடி இருந்தது. நிர்மலா சங்கீதாவின் பசங்களை கூட்டிக் கொண்டு ஓடி வந்தாள்.

தள்ளுங்கயா... தள்ளுங்க... - head constable உள்ளே வந்தார்.

யாருக்காவது ஏதாவது தெரியுமா? இவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா?


கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்த நிர்மலா பதறி அடித்து உடனே சங்கீதாவின் நம்பரை க் குடுத்து அழைத்து விஷயத்தை சொல்ல சொன்னாள்..

"ஹலோ.." - constable அழைத்தார்.

"எம்மா, யாரும்மா சந்கீதாவா?"

"ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?"

"நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்.

"ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது... சொல்லுங்க ப்ளீஸ்.... - பதறினாள் சங்கீதா."

"கி... கி... கி... கி........." - constable phone கட் செய்து விட்டார்.

சற்று நேரத்தில் ராகவின் BMW வந்து நின்றது. சங்கீதா என்னமோ ஏதோ என்று பதறி அடித்து ஓடினாள். "அய்யோ அம்மா.." என்று. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அதில் குமார் எற்றப்பட்டான்..

"என்ன ஆச்சு என்ன ஆச்சு இவருக்கு..."

"ஒன்னும் இல்ல பதறாதீங்க. காப்பதிடலாம்.. " - ambulance டிரைவர் கூறினார்.

ராகவ் சங்கீதாவின் தோளுக்கு பக்கத்தில் உறுதுணையாய் நின்றான். inspector ஜீப்பில் விறைப்பாய் வந்து இறங்கினார்.

"ஒத்து ஒத்து.. ஹ்ம்ம் ஒத்து" - குரல் பலமாக லட்டியுடன் ஒலித்துக் கொண்டே வருவது தெரிந்து கூட்டம் வழி விட்டது.

"you are sangeetha right?" - சத்தமாக கேட்டார் inspector.

"ஆமாம் சார்.." - இன்னும் அழுகை நிற்க வில்லை.

"அவர் யாருமா?"

"என் கணவர்.."

"யோவ் constable, எண்ணத்த புடிங்கிக்குட்டு இருக்க?... வந்து சொல்லுற பதிலை நோட் பன்னுயா.. constable பதறி அடித்து ஓடி வந்தார். "சார் வீட்டுக்குள்ள ஒருத்தர் தான் இருந்திருக்காரு"

"கணவர் பெரு என்னமா?"

"குமார்.."

"முழு பெரு என்னமா?"

நவீன்குமார்! 


Inspector அனைவரையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கூடி இருந்த கூட்டங்கள் மெதுவாக கலைய ஆரம்பித்தன. கூட்டம் கலையும் தருணத்தில் பல விதமான குரல்கள் எழுந்தன.. "என்ன மனுஷனோயா...... சரியான ஆளு..... எப்போவுமே ஒரு மார்கமாதான்யா திரிவான்..... வெட்டி பய...." என்று கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுத்துக் கொண்டே கூட்டம் கலைய, இஸ்திரி பையன் ராமு அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

"ஏய்.. என்னடா பார்க்குற?" - Inspector விறைப்பாக கேட்டார்.

"அவன்தான் சார் கம்ப்ளைன்ட் குடுத்தான்" - constable பவ்யமாக பேசினார்.

"என்னடா பார்த்த.." - Inspector முறைத்துக் கேட்டார்.

"வெளியிலதான் சார் நின்னுகிட்டு இருந்தேன், உள்ளே போய் எதுவும் பார்கல. நிறைய சத்தம் கேட்டுது." - பயந்து பேசினான்.

"என்னென்ன கேட்ட?" - கையில் லட்டி சுழன்று கொண்டே இருந்தது.

"ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கத்தினாங்க சார், ஒருத்தன் இன்னொருத்தனை கொல்ல போறேன்னு கத்தினான், ஒருத்தன் உயிர் பயத்துல விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான்.. சாமானை தூக்கி எறிஞ்ஜாங்க, கத்தி எடுத்து வீசுன சத்தம் கூட கேட்டுது சார்."

"சப்.... ரெண்டுமே ஒருத்தந்தாண்டா.. வேற ஏதாவது கேட்டுச்சா?" - inspector சலித்துக் கொண்டே கூறினார்.

"அதுக்கப்புறம் ஏதோ துரைன்னு சொன்னான் சார்.."

இன்ஸ்பெக்டர் இப்போது கொஞ்சம் உஷாராகி அவனை கூர்ந்து கவனித்தார். "என்ன துரை?"

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், வீட்டினுள் மற்ற constables குமாருக்கு சம்மந்தமான பொருட்களை எடுக்கும்போது அவனது ஆபீஸ் id card எடுத்தார்கள். அதைக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ராகவ் கவனிக்க தவறவில்லை. சற்று வீட்டினுள் சென்று நெருங்கி எட்டிப் பார்த்தான். IOFI employee id card தான் அது.

"நீயும் துறையும் சேர்ந்து செய்யுற தப்பை நான் வேணும்னா வெளியே சொல்லாம இருக்கேன்டா என்னை விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான் சார்." - ராமு போலீசிடம் பயந்து கூரிக் கொண்டிருந்தான்.

"ராகவ் இந்த வார்த்தைகளை கேட்டு இஸ்திரி பையன் ராமுவிடம் நெருங்கி வந்தான்."

"நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?" - ராகவைப் பார்த்து inspector பேசினார்.

"நான் ராகவ், IOFI CEO" - தனது visitiing card குடுத்து, இன்ஸ்பெக்டரிடம் கண்ணியமாக கை குலுக்கினான். கூடவே தனது சித்தப்பா IG யாக இருப்பதையும் விளக்கினான். இன்ஸ்பெக்டர் இப்போது ராகவிடம் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்.

"சொல்லுங்க சார் உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?" - மென்மையாக சிரித்து தன்மையாக பேசினார்.

"சம்மந்தம் இல்லை, ஆனா என் கம்பெனி IOFI சம்மந்தம் ஆகி இருக்கு. இந்த குமார் என் கம்பனியில் வேலை செய்றவன். இந்த பையன் ராமு சொல்லுறதை வெச்சி பார்க்கும்போது யாரோ துரைன்னு ஒருத்தன் இவன் கூட சேர்ந்து, ஏதோ என் கம்பெனில தப்பு பண்ணி இருக்கான். (சில நொடி மௌனத்துக்கு பிறகு ராகவ் inspector தோளில் கை போட்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்) இந்த விஷயம் வெளியில மீடியா க்கு தெரியக் கூடாது. இது என்னுடைய personal request. ஆனா அதே சமயம் நீங்க உங்க விசாரணைய சத்தம் இல்லாம மெதுவா செய்யுங்க, ஏதாவது துரை பத்தின விஷயம் தெரிய வந்தா உடனடியா சொல்லுங்க. I hope you understand my position in this issue" - என்று சொல்லி inspectorஐ கூர்ந்து பார்த்தான்.



"எனக்கு புரியுது சார், நான் பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க. ( சில நொடி மௌனத்துக்கு பிறகு) சார் இது என்னோட கார்டு.. உங்க சித்தப்பா கிட்ட குடுத்து வையுங்க.. ஹா ஹா.." - என்று கழுத்தில் செயின் மினுக்க கொஞ்சம் போலியாக சிரித்தார்.

ராகவ், ஒன்றுமே புரியாமல் நிற்கும் சங்கீதாவை, குமார் அட்மிட் ஆகி இருக்கும் hospital லில் இறக்கி விட அழைத்து செல்லும்போது நிர்மலா அவளது பசங்களை தன் வீட்டினில் தங்க வைத்துக் கொண்டாள்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் யாவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். ராகவ் inspector ரிடம் எடுத்து கூறி சங்கீதாவின் வீட்டிற்கு ஒரு constable ஐ காவலாக போடுமாறு தெரிவித்திருந்தான். hospital வராந்தாவில் emergency unit முன்பாக சங்கீதா ஈர விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். ராகவ் அவள் அருகினில் சென்றான்.

"ராகவ்... ஸ்ஹாஆ" - என்று வாயில் கை வைத்து அழுது கொண்டே ராகவின் தோள்களில் ஆறுதலைத் தேடி சாய்ந்தாள் சங்கீதா.

"சரி.... சரி.... come on, என்னது இது, சின்ன குழந்தை மாதிரி.. ஒன்னும் ஆகல, எல்லாம் சரி ஆகிடும், கவலைப் படாத சரா." - என்று ராகவின் குரலில் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவளுக்கு உண்மையில் மனதுக்கு பலம் தென்பட்டது.

"உன்னைப் பார்க்க பார்க்க தான் எனக்குள்ள கொஞ்சம் தெம்பு வருது ராகவ்." - இன்னும் அழுத குரலில் பேசினாள்.

"patient க்கு நீங்க என்ன வேணும்?" - டாக்டர் வெளியே வந்து கேட்டார்.

"நான் அவரோட மனைவிங்க, My name is Sangeetha."

"தலைல பலமா அடி, உள்காயம் கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கு, operation பண்ண வேண்டிய நிர்பந்தம் இருக்கு, கொஞ்சம் நிறைய செலவு ஆகும்." - என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு இயந்திரமாக பேசினார் டாக்டர்.

"எவ்வளவு ஆனாலும் சரி, குணப் படுத்த முடிஞ்சா போதும், காசைப் பத்தி கவல படாதீங்க" - என்று சற்றும் யோசிக்காமல் கூறினான் ராகவ்.

"Alright, அப்போ நான் நாளைக்கே அவருக்கு treatment ஆரம்பிச்சிடுறேன் & அடுத்த 48 மணி நேரம் நீங்க மட்டும் வேணும்னா அவர் கூட இருக்கலாம். மத்தவங்க allowed கிடையாது." - என்று டாக்டர் சந்கீதாவைப் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து விலகினார்.

"நீ ஏன் இந்த காசு விஷயத்துல commit ஆகுற? நான் கேட்டேனா?"

"நீ ஏன் இவ்வளோ நாளா என் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்ச?"

"எது டா?"

"குமார் IOFI ல வேலை பார்க்குறார்னு சொல்லி இருக்கலாம் இல்ல?"

சங்கீதாவிடம் இருந்து மௌனம்....

"நிஜத்தை சொல்லனும்னா எனக்கு இப்போதான் உன் மேல அவ்வளோ மரியாதையும் அதிகமான காதலும் வருது. நீ நினைச்சி இருந்தா என் கிட்ட இருக்குற நெருக்கத்தை பயன் படுத்தி, குமாருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய பதவி குடுக்க சொல்லி சம்பளத்தை ஏத்த சொல்லி, இன்னும் என்னென்னவோ கேட்டிருக்கலாம். ஆனா அதெல்லாம் ஒண்ணுமே செய்யல, you are a highly self esteemed women, உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு" - அவளின் கரங்களைப் பிடித்து சொன்னான் ராகவ்.


என்ன பேசுவதென்று தெரியாமல் ஈர விழிகளுடன் குனிந்து மௌனமாய் தன் மருதாணி கரங்களில் ராகவின் பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.

"எவ்வளோ professional அ நடந்துகிட்ட. உன்னை காதலிக்குறதை நினைச்சி பெருமை படுகிறேன் சரா." - ராகவ் இதைக் கூறியதும் ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள் சங்கீதா.

"I am sorry, எந்த இடத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன். I am sorry sangeetha...."

"its okay da...."

"டாக்டர் கிட்ட காசு விஷயத்துல நீ கேட்டுதான் நான் பதில் சொல்லனுமா? உன் கஷ்டம் என்னன்னு தெரிஞ்சி நானே முன் வந்து உதவ எனக்கு உரிமை இல்லையா?" - சங்கீதாவிடம் உரிமையுடன் கேட்டான் ராகவ்.

என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகளுக்கு பிறகு "ஏன்டா இப்படி இருக்கே?" - என்று அவனை திட்டவும் முடியாமல் திட்டாமல் இருக்கவும் முடியாமல் தவித்து பேசினாள்.

"சரா, நான் இப்போ உன்னை இந்த நிலைமைல இங்கே தனியா விட்டுட்டு போக விரும்பல, நான் வேணும்னா...." - ராகவ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சங்கீதா.

"நீ ஏற்கனவே நிறைய சிரமப்பட்டுட்ட ராகவ், வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடு. நான் பார்த்துக்குறேன். இங்கே ஒரு நாள் குமார் கூட இருக்க போறேன், அவ்வளோதான் டா. நடுவுல என்னை வந்து பாரு. இப்போதிக்கு எனக்கு மனசளவுல ஒன்னும் பயம் இல்லை. அப்படியே இருந்தாலும் என் கை உடனே உனக்கு phone செய்யும். கவல படாத. நான் தான் எப்போவும் உன் நெஞ்சுல இருக்கேனே.." - அழுகையுடன் ராகவின் நெஞ்சில் அவன் சரா என்று பச்சை குத்தி இருக்கும் இடத்தை காமித்து கூறினாள்.

சற்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ராகவ் கண்ணியமாக அவன் சாராவின் கரங்களில் ஒரு மென்மையான முத்தம் ஒன்றை குடுத்துவிட்டு, கைகளைப் பிடித்து "take care sara, நான் எப்போவுமே என்னோட phone கைல வெச்சிகிட்டு இருப்பேன், எது தேவைனாலும் உடனே phone பண்ணு, அடுத்த நிமிஷம் இங்கே இருப்பேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு செல்ல மனம் இன்றி ராகவ் அன்று மதியம் சங்கீதாவுடன் இருந்த தனது personal VIP Lounge உள்ளே நுழைந்தான். கொஞ்சம் relax செய்துகொள்ள melodious western music on செய்து அங்கே உள்ள ஃசோபா மீது சாய்ந்தான். சங்கீதாவின் காதல் நினைவு ஒரு புறம், கூடவே தனது கம்பெனியில் நிகழும் மர்மம் ஒரு புறம், குமாருக்கு உடந்தையாக இருக்கும் துரை யாரென்று அது ஒரு புறம், இப்படி சிந்தனைகள் நாலா பக்கமும் வந்து தாக்கியது. தனிமையை இந்த ஒரு கனம் அவன் சுத்தமாக விரும்பவில்லை, யாராவது துணை கிடைப்பார்களா என்று அவன் மனம் ஏங்கியது. எழுந்து சென்று குளிக்கலாம் என்று என்னும்போது ராகவ் ஃபோன் சினுங்கியது.


"ஹலோ.."

"ஹேய்.. சஞ்சனா டா..."

"சொல்லு சஞ்சனா.."

"ஏதோ சங்கீதா அக்கா வீட்டுல பிரச்சினை னு கேள்வி பட்டேன். என்ன ஆச்சு டா?"

"இஸ்ஹா.." ( லேசான பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தான்) "சஞ்சனா, if you dont mind கொஞ்சம் நான் இருக்குற இடத்துக்கு வர முடியுமா? நான் கொஞ்சம் நேருல பேசுறேன்.. ப்ளீஸ்.. I need some company here" என்றான்.

"ஏண்டா?.. என்ன ஆச்சு?... சரி இரு... I will be there in another 5 mins da.." - அருகினில் உள்ள IOFI கெஸ்ட் ஹவுஸில் இருந்து ராகவ் இருக்கும் இடத்துக்கு வர அதிக நேரம் ஆகாது.

சஞ்சனா ராகவ் இருக்கும் இடத்துக்கு வந்தாள். "ராகவ்...." என்று அவள் அழைக்க வராந்தாவில் இருந்து "இங்கே இருக்கேன் சஞ்சு ...." என்று குரல் குடுத்தான் ராகவ்.

என்னதான் seceratory யாக இருந்தாலும் அவளது மனதில் அவன் மீதிருக்கும் பழைய காதல் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.

ஒரு தோழியாக அவளது கைகளைப் பிடித்து "மனசுல நிறைய விஷயங்க இருக்கு சஞ்சனா... கொஞ்சம் கொட்டணும் போல இருக்கு, உன் கிட்ட நான் பேசியே ரொம்ப நாள் ஆகது"

"என்னடா இப்படி சொல்லுற, பேசு டா, எல்லாத்தையும் சொல்லு."

ஆபீசில் மரத்துண்டு விவகாரம் பற்றியும், சங்கீதா அதைப் பற்றி ஆரம்பத்தில் கண்டு பிடித்தது பற்றியும், அதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வந்த ஆபத்தைப் பற்றியும், IOFI function முடியும் தருவாயில் சங்கீதா bank ல் பணி புரியும் பியூன் கோபியை காப்பாற்றி விட்டதையும், அதன் பிறகு சங்கீதா வீட்டில் துரை என்கிற யாரோ ஒருவன் குமாருடன் இணைந்து இந்த செயலில் ஈடு பட்டிருக்க முடியும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக் கொண்டிருந்தான்.

"நான் சொன்னதெல்லாம் வெச்சி பார்க்கும்போது உனக்கு யார் மேலயாவது சந்தேகம் வருதா?" - என்று சஞ்சனாவைப் பார்த்து கேட்டான் ராகவ்.

மனதில் நிறைய எண்ணங்கள் ஓடின, ஆனால் ராகவிடம் எதுவும் காமித்துக் கொள்ளவில்லை சஞ்சனா.

"இப்போதிக்கு தோணல ராகவ், எனக்கு கொஞ்சம் டைம் குடு, யோசிக்குறேன்..... நீ சாப்டியா?" - என்றாள் அக்கறையாக.

"உம்.. நீ?"

"எனக்கு முடிஞ்சிது.... நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன். இப்போ நான் கிளம்புறேன்." என்றாள்.

அலை போன்ற களைந்த முடியுடன் ராகவ் தனது இரு கைகளிலும் casual ஆக shirt துணியை மடித்து விட்டு தசை முறுக்கு தெரியும்விதம் வசீகரமாக மெல்லிய வெளிச்சத்தில் வராந்தாவில் நின்று கொண்டிருந்தான்.

கிளம்பும்போது கதவருகே நின்றுகொண்டு ராகவை ஒரு பார்வை ஏறிட்டு பார்த்தாள் சஞ்சனா.

"என்ன ஆச்சு சஞ்சு? ஏன் அப்படி பார்க்குற?" - மென்மையாய் சிரித்து கேட்டான் ராகவ்.


சஞ்சனா மென்மையாக புன்னகைத்து ஒரு நொடி ராகவைப் பார்த்து மெதுவாக அவன் அருகே வந்து அவன் கன்னங்களில் அவள் கரங்களால் ஒரு நொடி தடவினாள்.

"என் கண்ணுக்கு இப்போ CEO ராகவ் தெரியல, என் ஆழ் மனசுல இருந்த அந்த cute ராகவ் ஒரு நிமிஷம் நியாபகத்துக்கு வந்தான். அதான் அவனை ஒரு நிமிஷம் நின்னு தரிசிச்சிட்டு போகலாம் னு நின்னேன்." - அவளையும் அறியாது அவள் விழிகளின் ஓரம் நீர்த்துளிகள் வந்தது.

"sorry டா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். I..I am..sorry.... நான் வரேன் டா." ராகவ் அவளின் கைகளை ஒரு நிமிடம் பிடித்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர். பின்பு ராகவ் அவளது கைகளை மெதுவாக விடுவித்து ஒன்றும் பேச முடியாமல் சற்று சங்கடத்தில் திரும்பிக் கொண்டான்..

ராகவ் அவனுக்குப் பின் புறம் அவள் வேகமாக இறங்கி செல்கிறாள் என்பதை டோக் டோக் என்று சஞ்சனாவின் ஹீல் ஸ்லிப்பெர்ஸ் குடுக்கும் சத்தத்தில் தெரிந்து கொண்டான்.

இரவு 10 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. சஞ்சனா அவளது வீட்டினுள் வந்தவள், நேராக கட்டிலில் தொப்பென விழுந்தாள். நீண்ட நேரம் படுக்கையில் படுத்தவாறு பலரையும் அலசி ஆராய்ந்தாள். IOFI function நடந்த போது மிதுன் பார்வையில் பொங்கிய பொறாமையும், பொதுவாக அவன் ராகவ் மீது கொண்டிருக்கும் வெறுப்பும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்த சம்பவத்தில் கண்டிப்பாக அவனுக்கும் ஏதாவது ஒரு பங்கு இருக்கலாம் என்று அவளது ஆழ் மனது சொல்லியது. கூடவே துரை, அந்த துரைப் பற்றியும் அவனுக்கு ஏதேனும் தெரிய வாய்ப்பு உள்ளது. அவனிடம் மீண்டும் பேச வேண்டும். ஆனால் IOFI function நடந்த போது கூட அவன் நம்மிடம் ஏதோ பேச வந்து நாம் கதவை செருப்பால் அடிப்பது போல டமால் என்று சாத்தி விட்டதை எண்ணி "கொஞ்சம் சொதப்பிடோமே" என்று வருந்தினாள். மீண்டும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாள். "அவனுடன் பேசி பழக வேண்டும், அது மட்டும் இல்லாமல் எனக்கு அவன் குடுத்த வலிக்கு நான் இன்று வரை அவனுக்கு திருப்பி குடுக்கவில்லை. இப்போ ராகவ் கிட்டயும் அவன் ஏதோ ஒரு விஷயத்துல விளயாடுறான்னா நிச்சயம் சும்மா விடக் கூடாது. let me think...." என்று சிந்தித்தாள்.

ஒரு பத்து நிமிடம் கழித்து, நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முகத்தை கழுவினாள். வெகு நாட்களுக்கு பிறகு தனது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து மெல்லிய வெளிச்சம் தரும் மஞ்சள் விளக்கை போட்டு கண்ணாடியில் தன் அழகை தலை முதல் கால் வரை கண்களால் அளந்தாள்.


மெது மெதுவாய் தனது மேல் சட்டை பட்டன்களை கழட்டினாள். முகத்தினை கூர்மையான பார்வைகளால் கண்ணாடியில் பார்த்தவாறு அவளது கைகள் பின்புறம் முதுகுக்குக் கீழ் சென்று முட்டி வரை அணிந்திருந்த pencil skirt zipஐ பின் புறம் மெதுவாக கழட்டினாள். ஒரு கட்டத்தில் இறுக்கம் தளர்ந்து அவளது இடுப்பில் இருந்து விலகி தொப்பென்று கீழே விழுந்தது அவளது skirt. வெறும் உள்ளாடைகளுடன் கண்ணாடியின் முன் நின்றிருந்தவள் கண்களில் தீப்பொறிக்கும் எண்ணங்கள் ஓடின, மூச்சு வாங்கியது அவளுக்கு, தன் கரங்களால் அவளது மார்பு, இடுப்பு கால் என அனைத்தையும் தடவி பார்த்து "இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டுமா?" என்று உள்ளுக்குள் கேள்வி எழுப்பினாள்.... "ஆமாம், செய்யனும், முன்பு மித்துனுடன் நடந்த சம்பவம் ஒன்றும் அறியாத சஞ்சனாவுடன், இன்று நடக்க போவது அவனுக்கு நான் பழி தீர்க்கும் நாள், எனக்குள் இருக்கும் இன்னொரு சஞ்சனாவைக் காமிக்க ஒரு சந்தர்ப்பம். கூடவே என் அக்கா சங்கீதாவுக்கும், ராகவ்கும் சேர்த்துதான் இது...." என்று மனதில் எண்ணினாள்.



சங்கீதா மேடம் - இடை அழகி 32

நேரம் காலை 10 மணி

சங்கீதா டிங்....டிங்.... என்று சத்தம் கேட்டு வந்தது யாரென்று பார்க்க குமார் உள்ளே வந்தான். சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் கதவை அழுத்தமாக சாத்திக்கொண்டான் குமார். பிறகு சங்கீதா IOFI Benz ல் கிளம்பினாள்.

வெளியில் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டில் நிசப்தம். வெளியே வந்தான், வீட்டுக்கு பின் பக்க கதவு, படுக்கை அறை கதவு அனைத்தையும் சாத்தினான். வாசல் கதவை அழுத்தமாக சாத்தி தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்தான். ஒரு காரணத்திற்காகத் தான் அதை செய்தான். ஆடைகளை அகற்றி, குளியல் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையில் ஊத்திக் கொண்டு துடைத்த ஈரத் துண்டுடன் பூஜை அறைக்கு முன் சென்று அமர்ந்தான்.
ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்ததால் வீட்டினுள் வெளிச்சம் மிகவும் கம்மியாக இருந்தது, கிட்டத்தட்ட இருட்டுதான். ஓடி க் கொண்டிருந்த fanஐ நிறுத்தினான். காரணம் சில்லென்று உடல் மீது காற்று படுவதை விரும்பவில்லை. அடி வயிற்றினில் இருந்து ஒரு விதமான பயம். உடல் முழுதும் ஒரு விதமான கிறக்கம், உஷ்ணம், வெறி பரவி இருந்தது. பூஜை அறையின் முன் குமார் பேச ஆரம்பித்தான்.

"என்ன பார்க்குறீங்க? எல்லாரும் காலைல என் பொண்டாட்டி வெச்ச பூவுல ரொம்ப அழகாத்தான் இருக்கீங்க... ஆனா நான் மனசளவுல ரொம்ப நொந்திருக்கேன். ஆனா எனக்கு இன்னைக்கி நிம்மதி கிடைக்க ஒரு வழி கிடைச்சி இருக்கு. ஆமா... காரணம்.. இன்னைக்கி வரைக்கும் என் வாழ்க்கைல நான் செய்ய பயந்த ஒரு விஷயத்தை இன்னைக்கி நான் செய்ய துனிஞ்சிட்டேன். Yes, நான் நவீனை இன்னைக்கி சாயும்காலம் கொலை பண்ண போறேன். அவன் செத்தாதான் எனக்கு நிம்மதி. அவன் இருக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி கிடையாது. இது நான் ஏதோ திடீர்னு எடுத்த முடிவு கிடையாது, கடந்த ஒரு வாரமா தினமும் 20 ல் இருந்து 30 பாக்கெட் சிகரட் பிடிச்சி பிடிச்சி ஆழ்ந்து சிந்திச்சி உறுதியா எடுத்த முடிவு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க சந்தோஷமா?" ஆனா நான் செய்யத்தான் போறேன். அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தரப் போகுது. ஏன் எதுக்குன்னு என்னை கேள்வி கேட்க்குறீங்களா? சொல்லுறேன்.. ஆனா என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்.

குமார் பேசிக் கொண்டிருக்க, மேலே ஒரு பள்ளி சாமிப் படத்தின் பின்னால் நகர, படத்தின் மீதிருக்கும் பூ ஒன்று தரையில் விழுந்தது.

"ஆஹா, நீயே சம்மதிச்சிட்ட இனி எனக்கு தடை இல்ல.. ஆனா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சிக்க ஆசை படல? எனக்கு தெரியும் நீ தெரிஞ்சிக்க ஆசை படுறன்னு, சொல்லுறேன் கேளு, இந்த உலகத்துல நீ மட்டும்தான் இப்போதிக்கு நான் எது சொன்னாலும் பதில் பேசாம கேட்கக்கூடிய ஜீவன்."

"நான் பேசுறதை வெச்சி என்னை நீ பயித்தியம் னு சொல்லாத. நான் நவீனை கொலை செய்யுற காரியத்துக்கு நீதான் எனக்கு உதவ போற. அதுல உனக்கும் பங்கு உண்டு. அதனால நான் பேசும்போது எதுவும் பேசாம நான் சொல்லுறதை கேளு. அதுக்கப்புறம் நான் தீர்மாநிச்சது சரியா தப்பா னு மட்டும் சொல்லு. எனக்கு நாலு வயசு இருக்கும், நான் ஒரு விதத்துல பூச்சியை ப் போல, யாராவது என்னை ஒரு தடவ என்னை உத்துப் பார்த்தால் அப்படியே என்னோட அனைத்து சகல உணர்ச்சிகளையும் உள்ளே இழுத்துக்குட்டு ஒன்னும் பேசாம உள்ளுக்குள்ள கொஞ்சம் அதிகமாவே தனிமைய விரும்பி தனியா எங்கயாவது ஓடிடுவேன். என் வாழ்க்கைல நான் இன்னிக்கி வரைக்கும் அதி பயங்கர ரோஷம் உள்ள ஆளா இருந்ததில்லை, அதே சமயம் மத்தவங்களுக்கு உபத்திரம் தரா மாதிரியும் இருந்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருக்கிறேன். அவ்வளோதான்."


நேரம் காலை 10 மணி

சங்கீதா டிங்....டிங்.... என்று சத்தம் கேட்டு வந்தது யாரென்று பார்க்க குமார் உள்ளே வந்தான். சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் கதவை அழுத்தமாக சாத்திக்கொண்டான் குமார். பிறகு சங்கீதா IOFI Benz ல் கிளம்பினாள்.

வெளியில் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டில் நிசப்தம். வெளியே வந்தான், வீட்டுக்கு பின் பக்க கதவு, படுக்கை அறை கதவு அனைத்தையும் சாத்தினான். வாசல் கதவை அழுத்தமாக சாத்தி தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்தான். ஒரு காரணத்திற்காகத் தான் அதை செய்தான். ஆடைகளை அகற்றி, குளியல் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையில் ஊத்திக் கொண்டு துடைத்த ஈரத் துண்டுடன் பூஜை அறைக்கு முன் சென்று அமர்ந்தான். ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்ததால் வீட்டினுள் வெளிச்சம் மிகவும் கம்மியாக இருந்தது, கிட்டத்தட்ட இருட்டுதான். ஓடி க் கொண்டிருந்த fanஐ நிறுத்தினான். காரணம் சில்லென்று உடல் மீது காற்று படுவதை விரும்பவில்லை. அடி வயிற்றினில் இருந்து ஒரு விதமான பயம். உடல் முழுதும் ஒரு விதமான கிறக்கம், உஷ்ணம், வெறி பரவி இருந்தது. பூஜை அறையின் முன் குமார் பேச ஆரம்பித்தான்.

"என்ன பார்க்குறீங்க? எல்லாரும் காலைல என் பொண்டாட்டி வெச்ச பூவுல ரொம்ப அழகாத்தான் இருக்கீங்க... ஆனா நான் மனசளவுல ரொம்ப நொந்திருக்கேன். ஆனா எனக்கு இன்னைக்கி நிம்மதி கிடைக்க ஒரு வழி கிடைச்சி இருக்கு. ஆமா... காரணம்.. இன்னைக்கி வரைக்கும் என் வாழ்க்கைல நான் செய்ய பயந்த ஒரு விஷயத்தை இன்னைக்கி நான் செய்ய துனிஞ்சிட்டேன். Yes, நான் நவீனை இன்னைக்கி சாயும்காலம் கொலை பண்ண போறேன். அவன் செத்தாதான் எனக்கு நிம்மதி. அவன் இருக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி கிடையாது. இது நான் ஏதோ திடீர்னு எடுத்த முடிவு கிடையாது, கடந்த ஒரு வாரமா தினமும் 20 ல் இருந்து 30 பாக்கெட் சிகரட் பிடிச்சி பிடிச்சி ஆழ்ந்து சிந்திச்சி உறுதியா எடுத்த முடிவு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க சந்தோஷமா?" ஆனா நான் செய்யத்தான் போறேன். அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தரப் போகுது. ஏன் எதுக்குன்னு என்னை கேள்வி கேட்க்குறீங்களா? சொல்லுறேன்.. ஆனா என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்.

குமார் பேசிக் கொண்டிருக்க, மேலே ஒரு பள்ளி சாமிப் படத்தின் பின்னால் நகர, படத்தின் மீதிருக்கும் பூ ஒன்று தரையில் விழுந்தது.

"ஆஹா, நீயே சம்மதிச்சிட்ட இனி எனக்கு தடை இல்ல.. ஆனா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சிக்க ஆசை படல? எனக்கு தெரியும் நீ தெரிஞ்சிக்க ஆசை படுறன்னு, சொல்லுறேன் கேளு, இந்த உலகத்துல நீ மட்டும்தான் இப்போதிக்கு நான் எது சொன்னாலும் பதில் பேசாம கேட்கக்கூடிய ஜீவன்."

"நான் பேசுறதை வெச்சி என்னை நீ பயித்தியம் னு சொல்லாத. நான் நவீனை கொலை செய்யுற காரியத்துக்கு நீதான் எனக்கு உதவ போற. அதுல உனக்கும் பங்கு உண்டு. அதனால நான் பேசும்போது எதுவும் பேசாம நான் சொல்லுறதை கேளு. அதுக்கப்புறம் நான் தீர்மாநிச்சது சரியா தப்பா னு மட்டும் சொல்லு. எனக்கு நாலு வயசு இருக்கும், நான் ஒரு விதத்துல பூச்சியை ப் போல, யாராவது என்னை ஒரு தடவ என்னை உத்துப் பார்த்தால் அப்படியே என்னோட அனைத்து சகல உணர்ச்சிகளையும் உள்ளே இழுத்துக்குட்டு ஒன்னும் பேசாம உள்ளுக்குள்ள கொஞ்சம் அதிகமாவே தனிமைய விரும்பி தனியா எங்கயாவது ஓடிடுவேன். என் வாழ்க்கைல நான் இன்னிக்கி வரைக்கும் அதி பயங்கர ரோஷம் உள்ள ஆளா இருந்ததில்லை, அதே சமயம் மத்தவங்களுக்கு உபத்திரம் தரா மாதிரியும் இருந்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருக்கிறேன். அவ்வளோதான்."



"சரி என்னென்ன எண்ணங்கள் னு சொல்லு.."

"அவனிடம் சொன்னேன், எல்லா எண்ணங்களையும் சொன்னேன். பிறந்தது, வளர்ந்தது, சிறு வயதில் இருந்தே பயத்துடன் வாழ்ந்தது, சிறு வயதில் செய்யாத தவறுகளுக்கு சில நேரங்களில் வீட்டில் திட்டு வாங்கி அசிங்க பட்டது. எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் முடிவு அதிகம் பேசப்படும் ஆனால் என்னுடைய முடிவு நிராகரிக்கப் படுவது, கிட்டத்தட்ட என்னை ஒரு பூச்சி போல மற்றவர்கள் பார்ப்பது. கல்யாணத்துக்கு பிறகு அழகான மனைவி ஒருவள் வருகிறாள்.. அவள் எதிரிலும் என்னை என் பெற்றோர்கள் என்னை அசிங்கப் படுத்துவது. மேலும் வேலை செய்யும் இடங்களில் என் சிந்தனைக்கு மாறாக எது நடந்தாலும் உடனடியாக நான் அங்கே உணர்ச்சி வசப் பட்டு அவர்களின் சட்டையைப் பிடித்து சண்டை போடுவது என்று சகலத்தையும் சொன்னேன். ஒவ்வொரு இரவும் அன்று நாள் முடிவதை தூங்குவதற்கு முன்பு எண்ணிப் பார்க்கையில் என் மனதுக்கு சிறிதளவு கூட நிம்மதி கிடைத்ததில்லை என்று மனதில் உள்ள கொந்தளிக்கும் உணர்வுகள் அனைத்தையும் கொட்டி தீர்த்தேன்."

"நிச்சயம் நீ ஒரு மனோதத்துவ நிபுனரை சந்திக்க வேண்டும். நான் சொல்லுறது உன் நல்லதுக்கு தான், புரிஞ்சிக்கோ ப்ளீஸ்." என்று வலியுறுத்தினான் நவீன்.

"டேய், எனக்கு எந்த மனோதத்துவ நிபுணரும் தேவை இல்லை டா. நான் கடவுள் கிட்டே நேரடியா பேசி இருக்கேன் தெரியுமா? எனக்கு இந்த உலகில் கடவுள் ஒருவர் மீது மட்டும்தான் நம்பிக்கை உள்ளது. அதுக்கு ஆதாரமும் இருக்குது."

"இதோ பார் நான் கடவுளுக்கு எழுதின கடிதம்"

பெயர்: கடவுள்.
விலாசம்: எங்கும்.

"கடவுளே, எந்த ஒரு விஷயத்துலயும் சந்தேகம், நாட்டம் இல்லாமல் இருப்பது, எதிலும் விரக்தி, பயம் உள்ள கனவுகள், மனதை பிசையும் எண்ணங்கள் என்று பல ரூபத்தில் வந்து தாக்குகிறது. நீங்கள் இருப்பது நிஜம்தானே? உண்மை என்றால் எனக்கு பதில் கடிதம் போடுங்கள் ப்ளீஸ்."

விலாசம்: குமார். ஜே.ந.
4வது பிரதான சாலை,
சாஹிப் காலனி, வெஸ்ட் ஸ்ட்ரீட், சென்னை..

இப்படி நான் எழுதியதுக்கு எனக்கு கடவுளிடம் இருந்து பதிலும் வந்தது, அதைத் தான் இன்று வரை ஆதாரமாக வைத்திருக்கிறேன். என்னை யாரும் நிஜமாக பைத்தியம் என்று சொல்லி விடக் கூடாது இல்லையா?

"இஸ்ஹ்ம்ம்...." ஒன்றும் பேசாமல் பெரு மூச்சு விட்டான் நவீன்.

"பார்.... இந்த கடிதத்தைப் பார். எவ்வளவு அழகான கையெழுத்தில் வந்திருக்கிறதென்று பார்."

அன்புள்ள குமார். ஜே.ந,

உன் கடிதம் கிடைக்கப் பெற்றது, உன் மனக் குழப்பங்களுக்கும் எண்ணங்களுக்கும் காரணம் அனைத்தையும் படைத்த நான்தான். அவை அனைத்துக்கும் நானே ஒரு தகுந்த நேரம் பார்த்து முற்றுப் புள்ளி வைக்கிறேன். நான் இருக்கிறேன் என்பதை நீ நம்புவாய் என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே போதும் அல்லவா?

"இப்போ இதுக்கு என்ன சொல்லுற?"

"சரி சரி.. நானும் நம்புறேன், கடவுள் உனக்கு கடிதாசி போட்டு இருக்காரு. ஓகே, பட் நீ ஒரு தடவ எனக்காக மனோதத்துவ நிபுணர் ஒருத்தரைப் பாரத்துடன்டா ப்ளீஸ். எனக்காக ஒரு தடவ கேளு டா? ப்ளீஸ். அதனால ஒன்னும் தப்பில்ல. உனக்கு ஒன்னும் இல்லடா, இருந்தாலும் அதை அந்த நிபுணரும் சொல்லிட்டா நல்லதுதானே? கொஞ்சம் யோசிடா..


சரி யாரைப் போய் பார்க்கணும்?

"Dr.Padmanaaban famous psychiatrist, நான் சொன்னேன்னு சொல்லி ஒரு தடவ அவரைப் போய் பாருடா. என்னோட கார்டு காமிடா அவர் கிட்ட."

"அன்று சாயும்காலம் நவீன் சொன்ன காரணத்துக்காக என் மனைவி கிட்ட கூட சொல்லாம வந்திருக்கேன். அவளுக்கு இது தெரிந்தால் எனக்கு மானக்கேடான விஷயமாக இருக்குமே? சரி ஒரு நாள்தானே, பார்த்துவிட்டு செல்வோம் என்று எண்ணினேன்.
மருத்துவமனையில்..

attender: சார் யாரு?

குமார்..

டாக்டரை எப்படி தெரியும்?

நவீன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன். என் நண்பர். - என்று சொல்லி நவீனின் விசிடிங் கார்டை நீட்டினான்.

"attender ஒரு முறை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, ஒரு நிமிஷம் பொறுங்க, டாக்டர் கிட்ட சொல்லிட்டு வரேன்." என்றான்.

"சரி.."

"உள்ள போங்க டாக்டர் கூப்பிடுறார்..."

"good evening, please take your seat.." - என்றார் பத்மநாபன்.

"டாக்டர், என்னுடைய பிரச்சினையே என்னோட எண்ணங்கள்தான், இரவு தூங்கும்போது பயப்படுத்தும் கனவுகள், தூக்கம் களைந்து எழுந்து வேலைக்கு கிளம்பினாலும் அன்று வீட்டுக்கு வந்து இரவு தூங்கும்போது மனதில் விரக்தி, எதிலும் ஈடு பாடில்லை. நடுவில் சந்தேகம் வந்து கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்து பார்க்க கடவுளுக்கு லெட்டர் போட்டேன் டாக்டர்..

"interesting" - டாக்டர் இப்போது தான் நிமிர்ந்து குமாரைப் பார்த்தார்.

"ஆமாம், இதோ பாருங்க கடவுளுடைய பதில் கூட இருக்கு." என்று குமார் சொல்ல டாக்டர் அதை வாங்கி பார்த்தார்.

எப்படி இங்கே வந்தீங்க? என்னை எப்படி தெரியும்?

இவர்தான் என்னை உங்க கிட்ட போக சொல்லி சொன்னார், என்னுடைய friend நவீன். - டாக்டரிடமும் நவீன் கார்டு காமித்தான் குமார்.

ஒஹ் ஐ சி.... - என்று சொல்லிவிட்டு டாக்டர் சற்று நேரம் மெளனமாக இருந்தார்.

என்ன டாக்டர்? எனக்கு ஏதாவது பிரச்சினையா? - சற்று பயமும் தயக்கமும் கலந்து கேட்டான் குமார்.

நோ நோ... நீங்க.... (சில நொடிகளுக்கு பிறகு கீழே டேபிள் பார்த்து தன் மூக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டே சொன்னார்) you are alright - என்றார் டாக்டர்.

alright னா? - குமார் சந்தேகத்தில் பயத்துடன் மீண்டும் கேள்வி எழுப்பினான்..

alright means alright, what else?

அப்படின்னா நார்மல் னு சொல்லுங்க டாக்டர், எதுக்கு alright னு சொல்லுறீங்க? - பதட்டத்துடன் கேட்டான் குமார்.


ஓகே ஓகே, நீங்க நார்மல் தான். ஆனா ஒரு சின்ன request..

என்ன டாக்டர்?

ஒரு.. ("க்ஹரம்" என்று தொண்டையை கரகரத்துக் கொண்டு) ஒரு வாரம் இங்கே in patient அ அட்மிட் ஆக முடியுமா? - என்றார் டாக்டர்.

எதுக்கு டாக்டர்? நான்தான் நார்மல் னு சொன்னீங்களே?

ஆமாம் நீங்க நார்மல்தான், இருந்தாலும் தினசரி நான் உங்களுக்கு சில injection குடுக்கணும் னு விரும்புறேன்.. அது உங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் தரும் அதுக்கு தான் சொல்லுறேன்.

நார்மல் னு சொல்லும்போது எதுக்கு injection எடுக்கணும்?... அப்படியே இருந்தாலும் அதுக்கு நான் இங்கே ஒரு வாரம் in patient அ அட்மிட் ஆகணும்?

இஸ்ஸ்ஹா (சத்தம் இல்லாத பெருமூச்சு....) ஒகே, உங்க இஷ்டம்.. - என்றார் டாக்டர்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றேன், அங்கே நவீன் இருந்தான்..

என்னடா? பார்த்தியா?

பார்த்தேன், நார்மல் னு சொல்லிட்டார்..

ஒஹ்ஹ்... வெரி குட் டா.. I am happy..

"ஆனா ஒரு வாரத்துக்கு in patient அ இருக்க சொல்லி சொன்னாரு அதுக்கு நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த ஒரு நாளே என் பொண்டாட்டிக்கு தெரியாம போயிட்டு வந்தேன், இன்னும் ஒரு வாரம் போய் தங்கிட்டு வந்திருந்தால் என்னை அவ மதிக்கவே மாட்டா."

"டேய் நீ மத்தவங்கள விட்டு தள்ளு, உன் பொண்டாட்டிய உட்பட, உன் உடம்பையும் ஆரோக்கியத்தையும் கவனிடா.. டாக்டர்ஸ் எதையும் நம்ம முகத்துக்கு நேரா சொல்ல மாட்டாங்க டா, அவர் உன்னை சமாதான படுத்துரதுக்கு நீ நார்மல் னு சொல்லி இருப்பாரு. அதை நீ சீரியஸா எடுத்துக்காதடா.."

"நானே சந்தோஷமா இருக்கேன். நீ ஏன் இவ்வளோ கஷ்ட படுற?"

இஸ்ஹா.. (விரக்தியில் பெரு மூச்சு விட்டான் நவீன்) சரிடா.... இன்னைக்கு உனக்கு ஒரு உண்மைய சொல்லுறேன், உனக்கு கடவுளிடம் இருந்து வந்த பதில் கடிதாசி நான்தான் போட்டேன். உன் மணசு நோகக் கூடாதுன்னு நானே உனக்கு தெரியாம செஞ்ச காரியம் அது. ஒரு தடவ நீ கடவுளுக்கு கடுதாசி போட்டு இருக்கேன்னு சொல்லிட்டு பதில் வரல பதில் வரலன்னு போலம்பின, அதுக்கு நானே எழுதி உன் வீட்டுக்கு போஸ்ட் பண்ணேன்.

"you blody bastard, ஏன் என் கிட்ட பொய் சொன்ன, எனக்கு பொய் சொன்னா பிடிக்காது டா துரோகி, அது உனக்கு தெரியும் இல்ல இதுக்கே உன்னை நான் கொல்லனும் டா. என்னோட சிந்தனைகளோடு விளையாடி இருக்கே ராஸ்கல்."

"டேய் குமார் நீ என் friend என்கிற ஒரே காரணத்துக்காக நானும் இன்னும் இதெல்லாம் பொறுமையா கேட்டுகுட்டு இருக்கேண்டா.. வேற யாராவதா இருந்தா நடக்குறதே வேற. இவ்வளோ பேசுறியே, பல நேரத்துல நீயே என் கிட்ட நிறைய விஷயங்கள சொல்லி இருக்கே, அதெல்லம் உனக்கு மறந்து கூட போகும் தெரியுமா?"

"என்ன சொல்லி இருக்கேன் அப்படி?"


"உன்னை துரை நல்லா use பன்னுராண்டா. அவன் பிடியில இருந்து உன்னால வெளியில வர முடியல, அப்போ அப்போ அதை என் கிட்ட சொல்லி கஷ்ட பட்டு இருக்கடா நீ."

"துறையைப் பத்தி தப்பா பேசாத டா. எனக்கு கெட்ட கோவம் வரும். அவர் எனக்கு கடவுள் மாதிரி. எனக்கு சம்பளம் வரும் அதே மாசம் ஒன்னாம் தேதி கூடுதலா நிறைய காசை போடுவாரு."

போடலங்கா... உன் குணத்தை நல்லா use பண்ண தெரிஞ்ச முதல டா அவன். அவன் சொல்லிதானே நீ நம்ம IOFI வளாகத்துள இருக்குற கழிவு நீர் பொருட்கள மூட்டை கட்டி துறையோட laboratory ல குடுத்து அந்த மரத்த துண்டுகள செய்ய உதவுற? அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குரறியா? என்னிக்கி இருந்தாலும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பிரச்சினை பெருசானா விசாரணை கமிஷன் வெச்சி கண்டு புடிக்கும்போது நீ கண்டிப்பா மாட்டுவ டா.

"இதெல்லாம் கூட உன் கிட்ட சொல்லிட்டேனா?"

"டேய் பயப்படாத டா, நான் உன் friend டா, காட்டி குடுக்க மாட்டேன். ஆனா நீ மனசளவுல ரொம்ப குழம்பி உன் ஆரோக்கியத்தை கெடுத்துகுட்டு இருக்கே டா.. அதுக்காகவாவது உன்னை ஒரு டாக்டர் கிட்ட காமிச்சி சிகிச்சை எடுத்து வாழ்க்கைல நிம்மதியா தேடுடா.. உன்னை நம்பி உன் பொண்டாட்டி மட்டும் இல்ல உனக்கு ரெண்டு பசங்களும் இருக்காங்கடா. கொஞ்சம் யோசி டா...

குமார் கொஞ்சம் மௌனமாக யோசித்தான்.

"இன்னொரு விஷயம் சொன்னா தப்பா நினைக்காத டா."

"சொல்லு.."

"சங்கீதா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீ ரொம்பவும் குடுத்து வெச்சி இருக்கணும் டா. சில சமயத்துல நீ அவ கிட்ட எப்படி எல்லாம் கோவப்படுறன்னு சொல்லுரதைக் கேட்க்கும்போது எனக்கு ஒண்ணுதான் தோணும்."

"என்ன தோணும்?"

"அவளை மாதிரி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்த வக்கிலாதவன்னு தோணும்... நான் சொல்லுறதை தப்பா எடுத்துக்காத டா. நீ உண்மையாவே அவ மேல பாசம் வெக்கணும் னு நினைச்சா வெக்கலாம். இன்னும் நல்லாவே குடும்பம் நடத்தி சந்தோஷமாக வாழலாம். நான் சொல்லுறது எல்லாமே உன் நல்லதுக்கு தாண்டா.."

"குமார் அன்றைய தினத்தின் கடைசி சிகிரெட் எடுத்து பற்ற வைத்து நவீனைப் ப் பார்த்து புகை இழுத்துக் கொண்டே சற்று நேரம் ஏதோ யோசித்தான்..

"என்னடா யோசிக்குற?"

"ஒன்னும் இல்ல டா... நான் இன்னைக்கு உன் கூட கொஞ்சம் தங்கலாம் னு நினைக்குறேன்.. உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?"

"என்னடா fool, இந்த அலுவலகத்துலையே என் ஒருத்தன் கிட்ட தான் நீ நல்லா பழகுற, அதுலயும் நான் உன்னோட நல்ல நண்பன் னு நிரூபிக்க எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் குடுக்குற, வாடா போலாம்." - என்று பேசி விட்டு IOFI staff dormentary ல் அன்று இருவரும் தூங்கும்வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

"குமார் தனது மொபைல் எடுத்து சங்கீதாவுக்கு "I wont come home today also, I will stay with my friend tonight" என்று sms அனுப்பினான்.


sms அனுப்பிவிட்டு, குமார் மனதுக்குள் மெதுவாக எண்ணினான் "என்னுடைய ரகசியங்களை தெரிந்திருக்கிறாய், கூடவே கடவுள் பதில் போட்டதாக சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாய், கூடவே என் மனைவியுடன் வாழ வக்கில்லாதவன் என்றும் சொல்லி இருக்கிறாய்... உன்னை சத்தியமாக கொள்வதில் தப்பில்லை டா.. ஆனா எங்க வெச்சி கொள்ளுறது?.... office... ச்ச.. ச்ச... பிரச்சினை ஆயிடும். ஏதாவது வெளியூர்? அப்புறம் நான் உன் கூட பிரயாணம் வேற செய்யணும், அதுவும் ரிஸ்க்...." நீண்ட சிந்தனைக்கு பிறகு..." என் வீடுதான் கரெக்ட், yes உன்னை நான் அங்கேதான் கொல்ல போறேன்."

"நவீன்..."

"என்னடா.."

நாளைக்கு சாயும்காலம் ஒரு 5 மணிக்கு என் வீட்டுக்கு வாயேன். நீ என் வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது.

"கண்டிப்பா வரேண்டா.... நீ என்கூட இப்போ சகஜமா பேசுறதே மனசுக்கு சந்தோஷமா இருக்குடா"

"ஹ்ம்ம் thanks டா.." - சற்று மென்மையாக முறைத்துக் கொண்டு மனதில் எண்ணினான் "உனக்கு என் கையாலதான் சாவுடா.." என்று மனதில் எண்ணிக்கொண்டு படுத்துவிட்டான்.

"என்னைப் பற்றி இப்படி எல்லா உண்மைகளையும் தெரிஞ்ச ஒருத்தனை இன்னைக்கி நான் perfect plan போட்டு கொல்ல போறேன். அதுக்கப்புறம் யாராவது என்னை பிடிச்சா கூட சாட்சி இருக்காது."

"இப்போ சொல்லுங்க.. என் பொண்டாட்டி வெச்ச பூவுல அழகா தெரியுற கடவுள்களே நான் எடுத்த முடிவுல என்ன தப்பு? இன்னைக்கி நவீன் வருவான், அவனை நான் கண்டிப்பா போட்டு தள்ளுவேன். அதுக்கு அப்புறம் என்னை பற்றியும் என் ரகசியங்கள் பற்றியும் தெரிந்த அந்த ஒரு bastard இன்னியோட போய் சேர்ந்துடுவான். அதுக்கப்புறம் நான் என் குடும்பத்தோட "happily lived ever after னு கதை புத்தகத்துல வரா மாதிரி board மாட்டிக்குவேன்... ஹா ஹா ஹாஹ் ஹா.." சத்தமாக சிரித்தான் குமார்.

"டேய் குமார்...." - நவீன் அழைத்தான்.

கடவுளைப் பார்த்து "வந்துட்டான், நான் அவனை கொல்ல போகுறதுக்கு நீங்க மட்டும்தான் இந்த உலகத்துல சாட்சி.. ஹா ஹா.. " என்று குரூரமாக சிரித்தான் குமார்.


"வாடா நவீன்.."

"என்னடா வீடு முழுக்க இருட்டா இருக்கு, மணி சாயந்தரம் 5, door எல்லாம் துறந்து கொஞ்சம் லைட் போடலாம் இல்ல..

"correct போடணும் டா. அதுக்கு முன்னாடி கொஞ்சம் கதவை சாத்திட்டு வரேன் இரு.." - கதவை இப்போது சாத்தி தாழ்பாள் போட்டான் குமார். வீட்டில் அனைத்து கதவுகளும் சாத்தி இருந்தது. அதை மறு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் குமார்.

குழந்தைகள் பள்ளியில் வந்த பிறகு வீடு பூட்டி தான் இருக்கிறதென்று எண்ணி நிர்மலாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே நிர்மலா குடுத்த பாலை க் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியில் சங்கீதாவின் வீட்டு முனையில் ராமு என்று ஒரு இஸ்திரி பையன் இருப்பான். ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு "தத்தி சோம்பேறி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்க அந்த இஸ்திரி போடும் பையனைத் தான் கூறுவார்கள். அவ்வளவு சோம்பேறி. ஆனால் அன்று அவன் காலை முதல் மாலை வரை தூங்கி விட்டு சங்கீதாவின் வீட்டின் முன் துணி கேட்பதற்காக மாலை 5 மணிக்கு வந்திருக்கிறான்.



சங்கீதா மேடம் - இடை அழகி 31

"actually உனக்கு நான் ஒரு surprise தரத்தான் போறேன்.."

"அதான் ரொம்ப நேரமா சொல்லுறியே... அது என்னன்னு சொல்லேன்?"

"Wait till tomorrow my sweet heart. சரி நான் இப்போ phone வைக்குறேன். நாளைக்கு காலைல sharp அ 10 மணிக்கு எனக்கு வண்டி அனுப்பிடு..சரியா?"

"நான் வேணும்னா 9 மணிக்கு அனுப்பவா?"

"ஹேய்... எனக்கு வீட்டுலயும் வேலை இருக்குடா.. சில விஷயங்கள முடிசிட்டுதான் உன் IOFI consultation வேலைய பார்க்க முடியும்."

"consultationக்கு மட்டுமே full டைம் ஒதுக்கிடாதே, கொஞ்சம் இந்த மக்கு ராகவ்க்கும் டைம் ஒதுக்கு."


"உனக்காக டைம் ஒதுக்குன்னு சொல்லு ஒத்துக்குறேன், ஆனா உன்னை மக்குன்னு சொல்லாத, உன் மூலைய வெச்சி உலகத்துல முடியாதது எதெல்லாம் இருக்குன்னு லிஸ்ட் போட்டு குடுத்தா ஒன்னு ஒன்னுத்தயும் என்னால மட்டும்தான் முடியும்னு சாதிச்சி காட்டிடுவடா மை ஸ்வீட் ராஸ்கல்."

"ஹா ஹா... board meetting ல என்னை மத்தவங்க புகழுறதை விடவும் நீ குடுத்த இந்த பாராட்டு செம நச்சுன்னு இருக்கு சரா..
இதுக்காகவே நான் அந்த surprise என்னன்னு உனக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்...." - உணர்ச்சி வசப் பட்டு வாய் வரை வார்த்தைகள் வந்தது ராகவ்க்கு..

"ஹ்ம்ம்.... சொல்லு சொல்லு சொல்லு...." - சங்கீதா அடக்க முடியாத ஆர்வத்தில் கேட்டாள்....

"ஹ்ம்ம்.. அது வந்து... வேணாம், நேர்லயே வந்து பார்த்துக்கோ... சொல்ல மாட்டேன்."

"சப்.. போடா.."

"ஹா ஹா... சரி நான் இப்போ வைக்குறேன், ரெஸ்ட் எடுத்துட்டு காலைல 10 மணிக்கு வண்டி வரும், கிளம்பி வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்... good night honey."

"good night sweet heart, I love you so much. ummaahh..."

"my god....நம்ப முடியல... இன்னொரு தடவ அந்த ummaahh கிடைக்குமா? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்...."

"ஹா ஹா.... ச்சீ போடா.... நாளைக்கு பார்க்கலாம். வைக்குறேன்."

சுத்தமாக மணம் இன்றி இருவருடைய விரல்களும் அவரவர் phone ல் உள்ள cancel பட்டனை அழுத்தியது.

ராகவ் குடுத்த புடவையை அடுத்த நாள் காலை IOFI க்கு கிளம்பும்போது கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதற்கு பொருத்தமான blouse அணிந்து வழக்கம் போல இல்லாமல் தலை முடியை freeயாக விட்டு நடுவில் வகிடு எடுப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் வகிடு எடுத்து கொஞ்சம் hair dryer உதவியால் முடியின் நுனியில் curly ஸ்டைல் செய்து கொஞ்சம் வித்யாசமான designer வகை வளையல்களை அணிந்திருந்தாள்.

தன் காதலனுக்கு காண்பிக்கப் போகும் surprise எண்ணி மகிழ்ந்தாள்.

நேரம்: காலை 10:00 மணி.

டிங் டிங்.... - calling bell சத்தம் கேட்டு விரைந்தாள். வெளியே நின்றது டிரைவர் தாத்தா அல்ல, குமார்.


வாங்க.. ராத்திரி எங்கே தங்கி" - சங்கீதா பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.

"எங்கயோ தங்கினேன், தயவு செய்து என்னை எதுவும் கேட்க்காத. நீ உன் வேலைய பாரு" - சங்கீதா அவன் முகம் கொஞ்சம் அதிகம் வேர்த்திருப்பதை கவனித்தாள்.

குமாரிடம் மீண்டும் ஏதோ கேட்க முனையும்போது மீண்டும் "டிங் டிங்" சத்தம்... "என்ன மேடம்.. ரெடியா?" - என்று டிரைவர் தாத்தா வாசலில் நின்று கேட்க..

"இருங்க வந்துடுறேன்." - என்று சொல்லிவிட்டு குமாரை ஒருமுறைப் பார்த்தாள். அவன் தன் அறைக்கு சென்று கதவை "டமால்" என்று பலமாக சத்தம் வரும்விதம் சாத்திக் கொண்டான்.

"எதுவும் சொல்லாமல் சங்கீதாவும் அங்கிருந்து கிளம்பினாள்."

IOFI Benz கார் ராகவ் cabin அருகே சென்று நின்றது. சந்கீதாவைப் பார்த்ததும் sheila ki jawani பாடலுக்கு மேடையில் சங்கீதா ஆடியதைப் போல குறும்பாக இடுப்பை ஆட்டி பாவனை செய்து "ஹாய் சங்கீ" என்று முக மலர்ச்சியுடன் சிரித்து வரவேற்றாள் சஞ்சனா.

"ஹா ஹா... போதும் நிறுத்துடி, எங்கே ராகவ்?"

"வர வர IOFI உள்ள வந்தாலே எடுத்தவுடன் ராகவ் ராகவ் ராகவ், ஏன் எங்க முகம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?"

"ஹேய்.... அப்படி இல்லடி இன்னைக்கி consultation இருக்கு, அதான்.."

"சரி சரி புரியுது, அய்யா மீட்டிங் ல இருக்காரு, கொஞ்சம் இருங்க...." - மீண்டும் குறும்பாக சிரித்து சொல்லிவிட்டு சென்றாள்.

சஞ்சனா ராகவின் meeting அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவை உள்ளே அழைத்தாள்.

"நல்ல ஜில்லென்று AC காற்றும், மேல்தரத்து மஞ்சள் விளக்கு வெளிச்சம் கொண்ட அதி நவீன மர வேலை பாடுகள் கொண்ட மேஜைகளும், நாற்காலிகளும் இருந்த அந்த அறைக்குள் சங்கீதா நடந்து வருகையில் ராகவின் கண்களுக்கு உண்மையில் ஒரு தேவதை நடந்து வருவது போல தான் உணர்ந்தான். சங்கீதா உள்ளே சென்றதும் கோட் சூட் உடையில் அமர்ந்திருக்கும் மரியாதை நிமித்தமான மனிதர்கள் அனைவரும் ஒரு முறை தங்களது கழுத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி ஒரு முறைப் பார்த்தால் பத்தாது என்று அவர்களின் கண்கள் கெஞ்சும் விதம் மீண்டும் சிறிது சங்கோஜத்துடன் குனிந்து ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் சரா தேவதையை அவ்வப்பொழுது நோட்டம் விட்டார்கள்.

ராகவ் ஒரு நொடி எழுந்து நின்று அனைவரையும் பார்த்து "Gentlemen I am glad to introduce sangeethaa to you all, a true banking expert, since this is our finance related meeting, I requested her to join with us all" என்று சொல்ல ஹலோ, வெல்கம், ஹாய் என்று பலதரப்பட்ட வார்த்தைகள் கதம்பமாக வந்து விழுந்தது சங்கீதாவின் காதில். ராகவ் தன் இருக்கைக்கு அருகே வந்து அமருமாறு முக பாவனை செய்ய, அடக்கமாக சென்று ராகவின் பக்கத்தில் அமர்ந்தாள் சங்கீதா. மீண்டும் பேச்சுகள் தொடர்ந்தன. பேச்சுகளுக்கு இடையே ராகவ் ஒரு நொடி ஏதோ காகிதத்தில் பேனாவால் எழுதி கசக்கி சங்கீதாவின் காலருகே போட, அதை அவள் எடுத்து பிரித்து பார்த்தாள். அதில் "Sara, you are so gorgeous" என்று எழுதியதைப் பார்த்து சிரிக்காமல் மிக அழகாக வெறும் கண்களால் கூட வெட்கப் பட முடியும் என்று ராகவ்க்கு காண்பித்தாள் சரா. 


மீட்டிங் முடியும் நேரம் நெருங்கியது, அனைவருக்கும் கை குலுக்கிவிட்டு ராகவ் சங்கீதாவை தனது BMW காரில் அமரவைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கத்தில் உள்ள coffee day கடைக்கு கூட்டி சென்று இரு cold coffee ஆர்டர் செய்தான். ராகவின் கண்கள் சங்கீதாவின் கண்களை ஊடுருவியது. இருவரும் இதற்கு முன்பு முதல் முதலாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது இந்த இடத்தில் அமர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள்.

"ஏய்.... என்ன அப்படி பார்க்குற?"

'என் தேவதைய நான் பார்க்குறேன்."

"தொடர்ந்து அப்படி உத்து பார்க்காத ராகவ், ஒரு மாதிரி இருக்கு."

"சார், ரென்டு cold coffee" - ஆர்டர் செய்த ஐடம் வந்தது.

ராகவ் அவனது coffeeயை குனிந்து குடிக்கும்போது சங்கீதா ராகவைப் பார்ப்பதும், அவள் coffeeயைக் குடிக்கும்போது ராகவ் விடாமல் அவளுடைய தலை முடி, வளையல், புடவை ஆகியவற்றை கவனிப்பதும் தொடர்ந்து இருவருடைய coffee முடியும்வரை நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணும் கண்ணும் வைத்து பார்க்க, அப்படியே சில நொடிகள் திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் சந்கீதாவால் முடியாமல் குனிந்துவிட்டாள்.

"நீ ரொம்ப மோசம் ராகவ்."

"நான் என்ன செஞ்சேன்?"

"உக்கும்.... ஒன்னும் செய்யல.. என்னதான் இவ்வளோ நாள் உன்னைப் பார்த்தாலும் இப்போ உன்னை நேருக்கு நேர் இப்படி பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி, அதான் சொன்னேன்." - லேசாக வெட்கத்தில் சிரித்தாள் சங்கீதா.

"மீண்டும் ஒன்றும் பேசாமல் அப்படியே சங்கீதா பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் ராகவ்."

"சரி, இப்படி உத்து பார்க்குற அளவுக்கு என்னதான் காணாதத கண்டுட்ட இன்னைக்கி என் கிட்ட?"

"ஒன்னும் இல்ல உன் முடியைப் பார்த்தேன் அதுல கொஞ்சம் மயங்கிட்டேன், அப்போ ஒரு சின்ன காதல் கதை நியாபகம் வந்துச்சி."

"என்ன காதல் கதை?.." - கைகளை கோத்து தனது வாயின் கீழ் வைத்து மேஜையின் முன் வந்து புருவங்களை உயர்த்தி உற்சாகமாய் க் கேட்டாள் சங்கீதா.

"ஒரு சின்ன ஏழ்மையான குடும்பம். காதலனுக்கு கையில் ஒரு கை கடிகாரம் இருக்கும் ஆனால் அதில் ஒரு மணி வாங்கி கோக்கணும் னு ஆசை படுவான், ஆனால் காசு இருக்காது. அவனுடைய காதலிக்கு உன்னை போல ரொம்ப அழகான முடி இருக்கும். ஆனால் வாருவதர்க்கு நல்ல சீப்பு இருக்காது. ஒரு நாள் காதலர் தினம் வரும். அப்போ ரெண்டு பேரும் அவங்கவங்க ஆசை பட்ட பொருளை பரிசா குடுக்கலாம் னு எண்ணி குடுப்பாங்க. காதலன் அவனுடைய கை கடிகாரத்தை வித்து அவளுடைய தலை முடி வாருவதர்க்கு உயர் ரக சீப்பு வாங்கி இருப்பன். காதலியோ, தனது முடிகளை வெட்டி அதை விற்று தன் காதலனுக்கு அவனுடைய கை கடிகாரத்தில் கோக்கும் மணியை வாங்கி இருப்பாள். "

"ஹேய்... so sweet da...." - பலருக்கு இந்த கதை தெரிந்திருந்தாலும் சங்கீதாவுக்கு இந்த கதை தெரியாது. அதுவும் தன் காதலன் சொல்லி இதை அவள் கேட்க்கும்போது மிகவும் ரசித்தாள்.



"இருவரும் ஒருவருக்கொருவர் குடுத்த பரிசுகளை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் தன்னை காதலிக்கும் ஜீவன் நமக்காக எவ்வளவு தூரம் சென்றிருக்கிறதென்று உணரும்போது இருவரும் கட்டி அனைத்து அவர்களுடைய காதலை உணர்வார்கள். என் மனசுக்கு அந்த விஷயம் நியாபகம் வந்துச்சி உன் தலை முடியைப் பார்த்தப்போ." - என்று ராகவ் சொல்ல..

"சும்மா இரு நீ இன்னும் உன் surprise என்னன்னு எனக்கு காமிக்கவே இல்ல. I am excited to see what that is" - அழகான புன்னகை சிரிப்புடன் கூறினாள் சங்கீதா.

"ஹா ஹா பார்க்கத் தானே போற.... lets go.."

ராகவ் தனது வண்டியை அவனது personal vip visitor room முன்பு நிறுத்தினான்.

சங்கீதாவை உள்ளே அழைத்து சென்றதும் அவள் அந்த இடத்தின் ரம்யமான தோற்றத்தில் கொஞ்சம் அசந்தாள். முழுக்க முழுக்க நாளா புறமும் வெள்ளை நிற சுவர்கள், நடுவினில் கண்ணாடியில் செய்த மேஜையும், இரு நாற்காலியும் மட்டும் இருந்தது. சுவர் அருகே ஒரு படம் silk துணியால் போர்த்தி மூடி வைக்கப் பட்டு இருந்தது. ரூமின் மூலையில் கண்ணைப் பறிக்கும் விதம் artificial fountain வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்து கொட்டும் செயற்கை நீர் வீழ்ச்சியின் சத்தம் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. chair இருந்தும் இருவரும் அமரவில்லை. மேஜையின் இரு பக்கம் நின்று ஒருவருக்கொருவர் மீண்டும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

"ஏய்.."

"சொல்லுடா.."

"ரொம்ப அழகா இருக்கே டி.."

"இஸ்ஹ்ம்ம்.." ( தலையை குனிந்து மென்மையான சிரிப்புடன் பெரு மூச்சு விட்டாள் சரா.... நேராக பார்க்க முடியாமல்.)

"உன்னோட surprise பத்தி சொல்ல மாட்டியா?"

"சொல்லாம எப்படி இருக்க முடியும் சரா, I am excited to say, அதனாலதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்."

"உன்னோடய surprise பத்தி சொல்லேன்" - ராகவ் சற்று நெருங்கி வந்து கேட்டான்.

"நான்தானே முதல்ல கேட்டேன்?"

"சரி சரி, ladies first ஒகவா? ப்ளீஸ்...."

"நீ கண்ணை மூடு.."

"எதுக்கு?"

"சப்.. மூடுன்னா மூடு..."

"சரி சரி.. மூடிட்டேன்... "

ராகவின் காதுகளில் சரா தனது கைகளை லேசாக உயர்த்துகிறாள் என்பதை அவளின் வளையல் ஓசை தெரிவித்தது.

"கண்ணைத் திற.. என்றாள் அவனின் தேவதை."

திறந்தான், பார்த்து வியந்தான். "wow..so beautiful. எப்படி சரா?" - அவளது இரு கைகளின் உள்ளங்கையில் ராகவ் என்று பெயரை எழுதி அதை சுத்தி பூக்கள் போன்ற designs வரைந்து அந்த பெயரே தெரியாத வண்ணம் மருதாணி வைத்திருந்தாள். இருந்தும் ராகவ் அதை கண்டு பிடித்துவிட்டான்.


"பிடிச்சி இருக்கா?" - ராகவின் முகத்தை நேராக பார்த்து கேட்காமல் தனது கரங்களை மட்டுமே வெட்கத்துடன் பார்த்து கேட்டாள் சங்கீதா.

ராகவின் கண்ணில் அவள் மீதிருக்கும் காதல் அப்பட்டமாக தெரிந்தது. பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அவன் வாயில் இருந்து. நேராக அவளது உள்ளங்கையில் அவனது பெயரின் மீது மென்மையாக ஒரு முத்தம் குடுத்தான். அவனது மீசை அவளது உள்ளங்கையில் உரச, டக்கென முகத்தை வேறு பக்கம் திருப்பி உததுகளை உள்ளே இழுத்து பற்களால் கடித்து கண்களை மூடி வெட்கத்தில் மிக அழகாக மென்மையாக சிரித்தாள் ராகவின் தேவதை சரா.

"north ல பொம்பளைங்க அவங்க மணசு விரும்பின ஆம்பளைங்களோட பெயரை இப்படிதான்.." - சங்கீதா முடிப்பதற்குள் ராகவ் குறுக்கிட்டு "தெரியும் சரா.... நான் அவ்வளோ மக்கு இல்ல.." - என்று சொல்ல இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தார்கள் - அவர்களின் சிரிப்பு சத்தம் இருவருடைய காதுகளுக்கும் இனிமையான சங்கீதமாக இருந்தது.

"என்னோட surprise என்ன தெரியுமா?" என்றான் ராகவ்

"waiting to listen... சீக்கிரம் சொல்லுடா ப்ளீஸ்."

ராகவ் அருகினில் வந்தான். அவனுடைய ஒரு ஒரு அடியும் முன்னுக்கு வர சாராவின் பாதங்கள் ஒவ்வொரு அடியாக பின் நோக்கி நகர்ந்தது. கடைசியாய் ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்தாள். ராகவ் அவளுக்கு முன்பாக நெருங்கி நின்று அவளது கண்களைப் பார்த்தான். சந்கீதாவே நல்ல உயரம், ஆனால் அவளே நிமிர்ந்து பார்க்கும் விதம் ஆண்மையுடன் கம்பீரமாக அவள் முன் நின்றான். மனதில் சற்று தைரியம் வர வைத்து சங்கீதாவும் ராகவின் பார்வையைப் பார்க்க முயன்றாள். ஆனால் ஏனோ தெரியவில்லை சில நொடிகளுக்கு மேல் அவனுடைய ஊடுருவும் அந்த பார்வையை அவளாள் பார்க்க முடியவில்லை. என்னதான் அவன் கண்கள் இவளது கண்களை மட்டுமே பார்த்தாலும் தலை முதல் பாதம் வரை கிறங்க வைக்கும் powerful மன்மதனின் பார்வை அது.

"ஹாஹ் ஹா." - என்று கண்களை மூடி வெட்கத்தில் சிரித்து வாயில் கை வைத்து மூடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"என்னோட surprise ல நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன்." - என்று கேசாக குனிந்து சங்கீதாவின் காதருகே சொன்னான் ராகவ்.

"என்ன?" - காற்று கலந்த குரலில் அழகாக கேட்டாள் சரா.

"எனக்கு வாழ்க்கைல இனிமே என்ன காயம் ஏற்பட்டாலும் அதோட வலி எனக்கு தெரியாது."

"ஏன்?" - தலை திரும்பி இருந்தாலும் ஓரக்கண்ணால் ராகவை பார்த்து சிரித்து கேட்டாள் சரா.

ராகவ் தனது சட்டை மேல் button ஒன்றை கழட்ட

"ராகவ் ப்ளீஸ், என்ன பண்ணுற?" - சந்கோஜத்தில் நெளிந்தாள் சரா.

"ஒரு நிமிஷம் இரு... ஹ்ம்ம் இப்போ என் சட்டையை நெஞ்சின் பக்கம் லேசா தள்ளிட்டு பாரு" என்றான்.

"தனது மென்மையான கரங்களால் அவனது சட்டையை நெஞ்சின் ஓரம் லேசாக விளக்கி பார்த்தாள் சங்கீதா.. சாவியால் கீறி ஏற்பட்ட தழும்பின் மீது "சரா" என்று பச்சை குத்தி இருந்தான் ராகவ்."


பார்த்த அடுத்த கணமே சங்கீதாவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

"இதுக்குதான் நேத்து நீ உன் நெஞ்சுல பிளாஸ்டர் போட்டு இருந்தியா?"

"இல்ல.. இல்ல, என் நெஞ்சுல உன் பேருக்கு ஏற்கனவே கார் சாவியால underline போட்டுட்டேன், சோ அந்த லைன் மேல உன் பேரை பச்சை குத்திகுட்டேன். ஏன்னா என்னதான் வலிகள் என் வாழ்க்கைல வந்து என்னை கீறினாலும் அதுக்கு மேல என் சரா இருக்கா னு நான் ஒரு ஒரு தடவையும் கண்ணாடியில பார்த்துப்பேன். அது எனக்கு எந்த காயத்தையும் மனசளவுல நெருங்க விடாது.." - என்று ராகவ் சொல்லும்போது எந்த தயக்கமும் இல்லாமல் எதையும் யோசிக்காமல் ஒரு நொடி கூட காத்திராமல் அப்படியே ராகவை தன் நெஞ்சோடு இறுக்கி கட்டி அணைத்தாள் அவனுடைய சரா.

சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது இதய துடிப்பை உணர்ந்தார்கள். அந்த நிசப்தமான மௌன சந்தோஷத்தை அழகு படுத்தும் விதம் சுவரில் உள்ள கடிகாரம் மாலை 5 மணியை நெருங்க கடிகாரத்தின் உள்ளே இரண்டு ஹார்ட்டின் வடிவம் கொண்ட பொம்மைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. அப்போது கடிகாரத்தின் ஓசை இவர்களின் மனதை வருடியது. சரா அதை ரசித்துப் பார்த்தாள். ராகவ் சாராவின் காதில் "மனசும் மனசும் எவ்வளவு அழகா உரசுது பார்த்தியா?" என்று காற்று கலந்த husky குரலில் காதலுடன் கூறினான். சங்கீதா அதைக் கேட்டபோது அவளின் கரங்கள் ராகவின் தோள்களை இன்னும் சற்று இறுகி பிடித்தது.

மீண்டும் சங்கீதாவின் காதோரம் ராகவின் காற்று கலந்த குரலின் சங்கீதம் தொடர்ந்தது.. " நீ மருதாநியால என் பேரை எழுதி இருக்கே நான் மெடிசின் மூலமா எழுதி இருக்கேன் அவ்லோதான் வித்யாசம். நம்முடைய காதலை தெரிவிச்சதுக்கு அப்புறம் நாம சந்திக்குற முதல் சந்திப்பு இது. எவ்வளவு இனிமையா கவிதையா அமைஞ்சி இருக்கு பார்த்தியா?"

"I love you my one and only sara, I love you..... I love you so much." - சங்கீதாவின் கண்களை உத்து பார்த்து கூறினான். அவனது பார்வையை நேருக்கு நேர் பார்க்க தயங்கி நின்ற சரா இப்போது அவனது அந்த காந்த பார்வையின் ஆழத்தில் விழுந்து கிடக்க ஏங்கி, வைத்த கண் வாங்காமல் ராகவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எ....என் மொத்த வாழ்க்கைலையே இந்த ஒரு நிமிஷம், இந்த ஒரு நொடியை நான் அனுபவிக்குறதுக்காகவே பிறந்திருக்கேன் னு தோணுது டா." - அளவு மிகுதியான சந்தோஷத்தில் கண்களில் பொங்கும் கண்ணீரை க் கட்டுப் படுத்த முடியாமல் அழுது கொண்டே பேசினாள் சரா.

சங்கீதாவின் தலையை தன் பரந்த நெஞ்சோடு அனைத்து அவளது தலையில் முத்தம் குடுத்து, "நான் உனக்கு ஒன்னு தரப் போறேன், சாதாரணமான பொருள் தான் ஆனால் அதுல உனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம் கிடைக்கும்." என்று சொல்லி ஒரு கவரைக் குடுத்தான் ராகவ். சரா அதைப் பிரித்துப் பார்த்தாள், அதில் IOFI function நடக்கும்போது மேடையில் சங்கீதா award வாங்கியபோது ராகவின் அருகில் நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை பெரியதாய் develop செய்து அதில் கீழே "for my one and only sweet heart" என்று எழுதி கை எழுத்து போட்டிருந்தான். உண்மையில் அதை பார்த்த ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலிக்கு இணையாக மதிப்பு குடுத்து அதை பதிரமாக தன் handbag உள்ளே மடியாமல் கசங்காமல் வைத்துக் கொண்டாள். "உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப பெரிய பொக்கிஷம் டா" என்று ராகவின் முகம் பார்த்து சிரித்து சொல்லிக்கொண்டே உள்ளே வைத்தாள்.


"நான் உனக்கு குடுக்க ஒண்ணுமே செய்யலடா... சாரி" - என்று ஏக்கத்தில் சங்கீதா பேசும்போது குறுக்கிட்டு "நீ ஏற்கனவே எனக்கு குடுத்துட்ட சரா...." என்று சொல்லி சுவரின் மேல போர்த்தப் பட்டிருக்கும் silk துணியை சடாரென உருவினான் ராகவ், அதில் சங்கீதா ராகவ்க்கு தன் காதலை எழுதி தெரிவித்த கடிதத்தை மிக பிரம்மாண்டமாக பெரிய frame போட்டு நடுவினில் சிறியதாக இருக்கும் அவன் தேவதையின் கடிதத்தை க் காட்டினான். " எப்போவுமே காலைல எழுந்த உடனே என் வீட்டுல சாமி படத்தைப் பார்க்க சொல்லுவாங்க, ஆனான் நான் கண் விழிச்ச்சதும் பார்க்குற படம் இதுதான். இதைப் பார்த்துட்டு அந்த நாளை தொடங்கினா எனக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படியே வந்தாலும் என் நெஞ்சுல இருக்குற சாராவை ஒரு தடவ தடவி பார்த்துக்குவேன், அதுக்கு அப்புறம் ரொம்ப சுலபமா எந்த காரியத்தையும் சாதிச்சிடுவேன்."

சங்கீதாவிடம் பேச வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக நிற்க ராகவ் அவளது மணசு சந்தோஷத்தில் கனத்து இருப்பதை உணர்ந்தான். அப்போது அவனுடைய சாராவும் அவனும் ஒருவருக்கொருவர் லேசாக நெருங்கினார்கள். இன்னும் நெருங்கினார்கள். ஒருவருக்கொருவர் உச்சகட்ட அன்பின் அடையாளமாக தங்களின் காதல் முத்தத்தை ஒருவர் மற்றொருவருடைய இதழ்களில் பதிக்க இருவருமே ஒரு நிமிடம் இவ்வுலகில் தங்களின் சகலத்தையும் மறந்தார்கள். ராகவின் கரங்கள் சங்கீதாவின் கரங்களைப் பற்றியது. மென்மையான இருவருடைய உதடுகளும் ஒன்றோடொன்று உரசி அறிமுகப் படுத்திக் கொண்டது. அழகாக முத்தத்துடன் நிறுத்தி இணைந்த இதழ்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் தங்களின் முகத்தைப் பார்த்து மென்மையாக சிரிக்கும்போது அலறியது சங்கீதாவின் மொபைல்..

"டிரிங்...டிரிங்..."

ஹலோ..

எம்மா, யாரும்மா சந்கீதாவா? - பேசும் குரலுக்கு அருகே நிறைய கூட்டம் சத்தம் போடுவது கேட்டது. police siren சத்தம் கேட்டது.

"ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?" - பதறி பேசினாள் சங்கீதா.

"நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்."

"ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது... சொல்லுங்க ப்ளீஸ்...." - பதறினாள் சங்கீதா.
"கி... கி... கி... கி........." - constable phone கட் செய்யப் பட்டது.


"சங்கீதா என்ன ஆச்சு?"

"உடனே என் வீட்டுக்கு போகணும் ராகவ்" - பயத்தில் அழுதாள் சங்கீதா.. மனதில் பல கலவரம், பசங்களுக்கு என்ன ஆச்சோ? குமார் ஏதாவது ஆத்திரத்துல வீட்டுக்கு வந்த பசங்கள ஏதாவது செஞ்சிடானா?.. ஒன்றும் விளங்க வில்லை சங்கீதாவுக்கு. அவளுக்கு இப்போதிக்கு பலமாய் இருந்தது ராகவின் தோள்கள் மட்டுமே.

"dont worry, இப்போவே போகலாம் சரா, கவல படாத.. - என்று சொல்லி ராகவ் தனது BMW காரை அசுர வேகத்தில் start செய்தான். கார் வேகம் என்று வந்தால் அதில் ராகவை முந்துவதற்கு ஒருவன் பிறந்து வர வேண்டும். அப்படி ஒரு வேகத்தில் ராகவ் சங்கீதாவின் வீட்டை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தான்.

இதே நாள், காலை நேரம் 10:00 மணி அளவில் சங்கீதா வீட்டை விட்டு கிளம்பியதும் குமார் வீட்டின் உள்ளே நுழைந்தான். எப்படி ஒரு புறம் தனது மணம் விரும்பிய காதலனின் காதலை உணர்ந்து அவளது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிமையான நினைவு ஏற்பட்டதோ அதற்கு இணையாக மற்றொரு அதிர்ச்சி அவளுக்கு அன்று மாலை நடக்க போகிறதென்று எண்ணி இருக்க மாட்டாள். நடந்தது என்ன என்று சற்று நேரத்தைப் பின் நோக்கி அன்று காலை அவளது வீட்டில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.


சங்கீதா மேடம் - இடை அழகி 30

மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா?

bank க்கு போங்க தாத்தா.

தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு. மனதுக்குள் காதல் உருவெடுத்து இருக்கும் தாக்கம்!!

சங்கீதா இறங்குகையில் டிரைவர் தாத்தா சங்கீதாவை அழைத்தார். "மேடம்.."

"என்ன தாத்தா?"

"இந்தாங்கம்மா.."


"என்னது இது?"

"காலைல வண்டி எடுக்கும்போதே நீங்க திரும்பி போகும்போது குடுக்க சொல்லி உத்தரவு. என்னன்னு எனக்கு தெரியாது மா.."

ஒரு brown sealed கவரில் IOFI என்று அச்சிடப்பட்டு இருந்தது. கீழே ஏதோ எழுதி ராகவ் என்று கையெழுத்து இருந்தது. அதை தனிமையில் சென்று படிப்போம் என்று எண்ணி தாத்தாவை அனுப்பி வைத்துவிட்டாள் சங்கீதா.

"மன்னவன் பெயரை சொல்லி மந்திரம் பாடி வந்தேன்...." - வண்டியில் கேட்ட பாடலை முனு முணுத்துக் கொண்டே முகத்தினில் அதே சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் உள்ளே சென்றாள். உள்ளே வந்தவள் ரம்யாவின் இருக்கையில் அவளுடைய handbag இருப்பதைப் பார்த்தாள். சாப்பாடு நேரம் நெருங்கி இருந்தது. இருப்பினும் ஒரு மணி நேரம் அவளது மேஜையில் அவளுக்கென இருக்கும் வேலைகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு ரம்யாவுக்கு phone செய்தாள். ரம்யாவின் phone ரிங்டோன் அருகில் கேட்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தபோது "ஹாய் மேடம்...." என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

ஏய் லூசு, எங்கடி போய் தொலைஞ்ச? last one hour நான் உனக்காக waiting.

ஹா ஹா.... சரி சரி வாங்க போகலாம்.

இருவரும் கான்டீன் சென்று அவர்களுடைய வழக்கமான ஜன்னல் ஓர இருக்கையில் சாப்பிட அமர்ந்தார்கள்.

சரி சொல்லுங்க, காலைல எங்கே போய் இருந்தீங்க மேடம்.

ராகவ் பார்க்க போய் இருந்தேன்.. - வியர்வைப் பனித் துளிகளை தனது கைக்குட்டையால் நெற்றியில் துடைத்துக் கொண்டே பேசினாள் இந்த தேவதை.

"ஒஹ்ஹ்...." - கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து கிண்டலாய் சிரித்தாள் ரம்யா..

"சப்"... இதோ பார்.. நீ இப்படி எல்லாம் சிரிச்சா நான் அப்புறம் பேசவே மாட்டேன் போ..

"ஹா ஹா.. சரி சரி சொல்லுங்க.."

"கொஞ்சம் ஆழமா கீறல் ஏற்பட்டிருக்கு, அவன் நெஞ்சுல மருந்து வெச்சி பிளாஸ்டர் போட்டு இருகாங்காடி. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி."

"ஹ்ம்ம்.. ஆமாமாம் உங்களாலதானே ஆச்சு...." - ரம்யாவுக்கு ஏதோ சங்கீதாவை வெருப்பேத்துவதில் சின்ன சுகம்..

இதைக் கேட்டவுடன் கோவத்தில் சங்கீதா அப்படியே சாப்பிட்ட கையுடன் எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு நடக்க....

"அய்யோ ஒரு நிமிஷம் இருங்க, ஐஅம் சாரி, ஐஅம் சாரி...." - சற்று பாடுபட்டு சங்கீதாவின் கையைப் பிடித்து மீண்டும் அமரவைத்தாள் ரம்யா. கண்னங்கள் சிவந்திருந்தது, நெற்றி இன்னும் வேர்த்து இருந்தது இந்த தேவதைக்கு.


"நானா போய் அவன சாவி எடுத்து நெஞ்சுல குத்திக்க சொல்லி சொன்னேன். கொஞ்சமாவது அறிவு இருக்கணும், அந்த கோபிய சும்மா ஓட சொல்லி இருந்தா கூட போதும், பெரிய இவனாட்டம் சாவிய எடுத்து குத்திக்குட்டான் ராஸ்கல்." - ராகவ் மீது இருக்கும் காதல் காரணமாக கொண்ட கோவத்தில் சகஜமாக பேசிவிட்டாள் சங்கீதா. சில நொடிகளுக்கு பிறகு ஏன் இப்படி பேசினோம் என்றெண்ணி ரம்யாவின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

உள்ளே வரும்போது இருந்த முகத்தின் பிரகாசத்தையும், ராகவ் பத்தி பேசும்போது சங்கீதாவின் முகத்தில் மாறுபடும் உணர்வுகளையும் ரம்யா கவனிக்க தவறவில்லை.

பட படவென ராகவ் பத்தி பேசிய பின்பு ரம்யா ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு சற்று சங்கோஜமானது சங்கீதாவுக்கு..

என்னடி? பேசு ஏதாவது, நான் ஏதாவது தேவை இல்லாம கோவப் பட்டிருந்தா சாரி - என்றாள் சங்கீதா..

ச்ச.... ச்ச.... என்ன மேடம் என் கிட்ட போய் formal அ பேசுறீங்க. free யா விடுங்க. உங்களுக்கு மனசளவுல கொஞ்சம் relaxation வேணும். நான் சொன்னா மாதிரி வேணும்னா 2 நாள் லீவ் எடுங்க - ரம்யா பேசும்போது சங்கீதா குறுக்கிட்டாள்.

எனக்கு relaxation வேலையிலையும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட பேசுறதுலையும்தான். வீட்டுல இல்ல. அப்படியே இருந்தாலும் அது என் பசங்களோட மட்டும்தான். actually நான் இன்னைக்கி காலைல அவனை பார்க்குற idea ல இல்ல, ஆனா...

ஆனா..? என்ன சொல்லுங்க மேடம்..

காலைல கொஞ்சம் மணசு சரி இல்ல. அதான் நேரா வேலைக்கு வர்ரத விட கொஞ்சம் ராகவ் கிட்ட பேசிட்டு வரலாம் னு தோணுச்சி.

ஒஹ், ஏன் எங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதா?

இதற்கு சங்கீதாவிடம் இருந்து மௌனம்..

மீண்டும் ஏதோ கொஞ்சம் தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி ரம்யா பேச்சை மாற்றினாள். "சரி சரி விடுங்க மேடம்.. இப்போ கொஞ்சம் relaxed இருக்கீங்களா?"

"ஹ்ம்ம்.." - சாப்டுக்கொண்டே தலையை மெதுவாக ஆட்டினாள். இப்போது ஏனோ திடீரென மனதில் ராகவிடம் கூறிய காதலை எண்ணினாள் சங்கீதா, அப்போது....

"என்னைப் பத்தி நீ என்ன நினைக்குற ரம்யா?"

ஹா ஹா என்ன இது திடீர்னு புது கேள்வி?

சப்.. சொல்லுடி.. - சத்தமே இல்லாமல் ஒரு பெருமூச்சு அவளிடம்.

"ஹ்ம்ம்... எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிப்பீங்க. எதையும் டக்குன்னு செய்ய மாட்டீங்க? நல்லா ஆழ்ந்து சிந்திச்சி முடிவு எடுப்பீங்க. ஆனா அதையும் சீக்கிரமாவே எடுப்பீங்க. கடைசியில எடுக்குற முடிவு உங்க மனசாட்சிக்கு விரோதமா இருக்காது. முக்கியமா இன்னொன்னு சொல்லணும்.

என்னது? - பார்வையில் ஆச்சர்யகுரியுடன் கேட்டாள் சங்கீதா.

உங்க முடிவு முழுக்க முழுக்க உங்க மனசளவுல யோசிச்சி எடுக்குற முடிவா அமையும். யாருடைய தேவை இல்லாத advice ம் காதுல வாங்கிக்காம எப்போவும் சொந்தமாதான் முடிவு எடுப்பீங்க. அதே சமயம் அது தப்பான முடிவாவும் இருந்ததில்லை. ஹ்ம்ம்... வேறென்ன விட்டுட்டேன்.. (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தாள்).. ஆங்.. முடிவு எடுத்த பிறகு வீணா மனசை போட்டு குழப்பிக்க மாட்டீங்க. எதையும் தைரியமா ஒரு கை பார்ப்பீங்க. you will take the perfect decision at the end." - என்று ரம்யா கூறியதும் சங்கீதாவின் முகத்தில் ஒரு மௌனமான புன்னகை தோன்றியது.



"சரி ஏன் இதை கேட்டீங்கன்னு சொல்ல முடியுமா? - என்றாள் ரம்யா.."

"ஒன்னும் இல்ல, சும்மா திடீர்னு கேட்கணும்னு தோணுச்சி. என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு சொல்லி கேட்கனும் போல இருந்துச்சி. அதான்."

"ஹலோ.... நான் உங்க friend, என்னை ஏன் மதவங்கன்னு சொல்லி ஒதுக்குறீங்க?"

"தெரியும் டி, அதான் உன் கிட்ட மட்டும் வெளிப்படையா நானே கேட்டு தெரிஞ்சிகுட்டேன். இல்லைனா இப்படி வாய் பேசுற ஜென்மமா நான். ஹா ஹா - தன்னைத் தானே கிண்டல் அடித்துக் கொண்டாள் சங்கீதா."

ரம்யா பேசியது அனைத்தையும் கேட்டு முடித்தவுடன் சாப்பாடு தட்டை wash areaவில் போட்டுவிட்டு தன் இருக்கைக்கு செல்வதற்கு முன் ரம்யாவிடம் இருந்து தனியே விலகி வந்து ராகவ்க்கு தன் mobile எடுத்து "I Love You so much sweetheart" என்று sms அனுப்பினாள் ராகவின் தேவதை.

(beep beep) message from SH (sweet heart) - "SH" என்று சங்கீதா, ராகவின் பெயரை மொபைலில் store செய்திருந்தாள். அதில் இருந்த message: "I born in this world only for you sara" என்றிருந்ததைப் பார்த்து ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சத்தில் லேசாக கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் போங்க அதை யாருக்கும் தெரியாமல் முந்தானை நுனியால் லேசாக துடைத்துக் கொண்டு மனதில் சொல்லிக் கொண்டாள் "you are crazy about me da.... my sweet rascal".

மீண்டும் பீப் பீப் என்று சத்தம் கேட்க phone எடுத்து ப் பார்த்தாள். "No reply honey?" என்று இருந்தது.. அதற்கு சங்கீதா "little busy da kanna, I will call you after going home" என்று message அனுப்பினாள்.

சற்று நிமிடம் கழித்து "என் மேல் விழுந்த மழைத் துளியே" என்று மெதுவான சத்தத்தில் சங்கீதாவின் phone சிணுங்க உடனே அதை எடுத்து attend செய்தாள். காரில் டிரைவர் தாத்தா ஓட்டி வரும்போது ராகவ் நம்பருக்கு மட்டும் அவள் வைத்த ரிங்டோன் அது. உற்சாகமாய் எடுத்து அட்டென்ட் செய்தாள்..

"ஹலோ.." - இருக்குமிடம் bank என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அடக்க முடியாத சந்தோஷமாகவே இருந்தாலும் கொஞ்சம் அடக்கமாக சிரித்தாள் சங்கீதா.

"ஹ்ம்ம்.. பேசுறது என்னோட சரா வா?" - கட்டிலில் ஆயாசமாக சாய்ந்து பேசினான் ராகவ்.

"ஹ்ம்ம்.... ஆமாம்..." - சங்கீதாவின் வாய் அருகில் mike வைத்தால் கூட கேட்காது. அவ்வளவு மெலிதான குரலில் பேசினாள் தனது தேவனுடன்.

"இப்போ என்ன பண்ணுற சரா?" - காதலில் விழும் அனைவரும் கேட்க்கும் அழகான முட்டாள்தனமான கேள்வி இது. ராகவ் மட்டும் விதிவிளக்கா என்ன?

"ஹ்ம்ம்.... வேலை பார்க்குறேண்டா கண்ணா...." - வேறு யாராவது (நண்பர்கள் உட்பட) இதைக் கேட்டால் "எனக்கு தெரிஞ்சி இப்போதிக்கு உங்கள போல வெட்டியா இல்லைன்னு நினைக்குறேன்.. do you have anything important to say" என்று கூறும் தேவதை தன் தேவனுக்கு கண்ணும் கருத்துமாக கொஞ்சி அக்கறையாக பதில் கூறினாள். - உலகில் காதலுக்கே உரிய தனி power அது.


சரி, நாளைக்கு உன்னோட scehdule IOFI ல இருக்கு தெரியும் இல்ல?"

"ஒஹ்ஹ்... ஆமா நியாபகம் இருக்கு" - சொல்லும்போது தனது dairy எடுத்து check பண்ணி பார்த்தாள். full day IOFI schedule என்று இருந்தது. அதைப் பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள்.

"நாளைக்கு உனக்கு நான் ஒரு surprise வெச்சி இருக்கேன்" என்றான் ராகவ்.

"என்னது?"

"வந்து பாரு சொல்ல மாட்டேன்."

"ஏன்டா இப்படி கொல்ற, சொல்லேண்டா?"

"ஹா ஹா...."

"சிரிக்காத டா சொல்லு...."

"ராகவிடம் இருந்து மௌனம்...."

"நானும் உனக்கு ஒரு surprise வெச்சி இருக்கேன், சொல்லவா?" என்றாள் சங்கீதா.

"ஹா ஹா.. இப்படி சொல்லி பழி வாங்கலாம் னு நினைக்காத, கண்டிப்பா நான் என்ன surprise னு கேட்க மாட்டேன், அதுக்காக காத்து இருக்குறதுல கிடைக்குற சந்தோஷம் ரொம்ப ரொம்ப சுகம்.. அதை அனுபவி சரா, நாளைக்கே ரெண்டு பேரும் நம்ம surprise என்னன்னு தெரிஞ்சிக்கலாம். ஒகவா?...."

(உண்மையில் சங்கீதாவிடம் ராகவ் க்கு surprise தர ஒன்னும் இல்லை, அவனுடைய வாயில் இருந்து பதில் வாங்கவே வெறுமென போட்டு வாங்க பார்த்தாள் ஆனால் ராகவ் கவிழவில்லை. "சப்" என்று உச்சுக் கொட்டிக் கொண்டாள் சரா..)

மெளனமாக இருக்கவே "என்ன ஒகவா?" என்று மீண்டும் கேட்டான் ராகவ்..

"ஹ்ம்ம்.." - சற்று சந்தோஷமும், ஏமாற்றமும் கலந்து பேசினாள் சங்கீதா....

"சரி அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம டிரைவர் கிட்ட உனக்கு ஒரு கவர் குடுக்கணும் னு சொல்லி இருந்தேனே, கொடுத்தாரா?"

"ஆமா குடுத்தார்."

"சரி சரி வீட்டுக்கு போய் பொறுமையா பாரு. carry on with your work. I Love You honey."

"Love you too da sweet heart." - இருவரும் மணம் இல்லாமல் phone கட் செய்தார்கள்.

கையில் ஒரு sweet box உடன் சங்கீதாவின் இருக்கைக்கு வந்தார் Mr.Vasanthan.

"ஹலோ Sir" - என்றாள் சங்கீதா....

(அகண்ட சிரிப்புடன்....) ஹலோ.. seriously நீங்க தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறீங்கன்னு தெரிஞ்சதும் surprising அ இருந்துச்சி. fantastic speech sangeetha. என்னோட wife கூட உங்கள ரொம்ப பாராட்டினாங்க, நேத்து எங்க வீட்டுல அவ தேங்கா பர்பி செஞ்சி இருந்தா, இன்னைக்கி காலைல கண்டிப்பா உனக்கும் நான் ஒரு பாக்ஸ் குடுக்கணும் னு சொல்லி இருந்தா. இந்தாமா வாங்கிக்க." என்றார்.

"மேடம் க்கு நான் மனசார நன்றி சொன்னதா சொல்லுங்க சார்."

"இன்னொரு நல்ல விஷயம் சொல்ல போறேன்."

"நல்ல விஷயம்னா சீக்கிரம் சொல்லுங்க சார், தாமதிகாதீங்க.. ப்ளீஸ்.."

"உங்களுக்கு அடுத்த மாசத்துல இருந்து 40% சம்பளம் அதிகரிக்குறதுக்கு மேலதிகாரிங்க ஒத்துக்கிட்டாங்க. congradulations."

"இதை கேட்டவுடன் மனதுக்குள் சங்கீதாவுக்கு மிதமான சந்தோஷம் தான். காரணம் சம்பளத்தை விடவும் செய்யும் தொழிலில் மண நிம்மதியை தேடுபவள் சங்கீதா."

"உங்க நல்ல மனசுக்கு நன்றி Mr.Vasanthan." - என்று சுருக்கமாக மரியாதையுடன் சொல்லி அமர்ந்தாள் சங்கீதா.

"மாலை நேரம் கிளம்பும் வேலையில் ரம்யா அவளது things அனைத்தும் pack செய்யும் போது அவளது handbag ல் இருந்து ஒரு cone மருதாணியை எடுத்து வந்து சங்கீதாவிடம் குடுத்தாள்."

"இன்னைக்கி காலைல வீட்டுக்கு பக்கத்து கடைல கிளம்பும்போது வாங்கினேன், அப்படியே உங்களுக்கும் சேர்த்து ஒன்னு வாங்கினேன். வச்சிக்கோங்க மேடம். நாளைக்கு பார்க்கலாம் bye."

"thanks டி" - உற்சாகமாய் சொன்னாள் சங்கீதா, மருதாணி என்றால் அவளுக்கு உயிர். அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

"ஏய், கோபியை பார்த்தியா டி?" என்றாள் சங்கீதா

"இல்லை, ஆளே காணும்" என்றாள் ரம்யா.

Mr.unknown number என்று store செய்த நம்பரை டயல் செய்து பார்த்தாள் சங்கீதா. அதற்க்கு "நீங்கள் அழைக்கும் நம்பர் switch off செய்யப் பட்டுள்ளது" என்று மெசேஜ் வர ஒன்றும் புரியாமல் கடவுளிடம் கோபி நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிவிட்டு கிளம்பினாள்.

மாலை traffic ஐ சமாளித்து ஒரு வழியாக வீட்டை சென்றடைந்தாள் சங்கீதா.

ரஞ்சித்தும் ஸ்னேஹாவும் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல சங்கீதா வர தாமதம் ஆகும் தருவாயில் நிர்மலா இவர்களுக்கு வீட்டை திறந்து விட்டு குடிக்க ஒரு டம்ளர் பால் குடுப்பது வழக்கம். இந்த முறையும் அப்படியே செய்திருந்தாள் நிர்மலா.

"ஹலோ அக்கா, நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?"

"நான் எடுக்குறது இருக்கட்டும், நீதான் முக்கியமா எடுக்கணும். நீ எப்போ வருவேன்னு காத்திட்டு இருக்குது இதுங்க ரெண்டும். கொஞ்சம் நேரம் இதுங்களுடன் விளையாடிட்டு படுத்து ரெஸ்ட் எடும்மா. உனக்கும் உள்ள சூடா காபி போட்டு வெச்சி இருக்கேன்."

"thanks அக்கா, இன்னைக்கி வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. நீங்க ஏதாவது சாப்டீங்களா?"

"இப்போ எதுவும் வேணாம்டா, நீ பார்த்துக்கோ, நான் இப்போ கிளம்புறேன். கொஞ்சம் வீட்டுலயும் வேலை இருக்கு." - என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிர்மலா.

"என்னங்கடா பண்ணீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி?" - என்று பேசிக் கொண்டே சங்கீதா சமையல் அறைக்கு செல்ல பின்னாடியே ஸ்நேஹா மெதுவாக வந்தாள்.


"என்னடா கண்ணா?" - என்றாள் சங்கீதா..

"அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?"

"ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?" - ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம்.

"ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?"

"எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா.."

"அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்." - பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா.

"எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்". - தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு.

பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் "I wont come home today also, I will stay with my friend tonight" என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் "ஹ்ம்ம்.... இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்" என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா.

டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள்.

இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் "newly designed saree for working women" என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா - என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

அப்போது பீப் பீப் என்று sms வர எடுத்துப் பார்த்தாள் "message from SH" என்று இருந்தது.. அதில்..

"Is it right time to talk honey?" என்று இருந்தது..

"நீ எதையும் permission கேட்டு செய்யுற ஆளோ?" - என்று reply செய்தாள்.

சில நொடிகளுக்கு பிறகு "என் மேல் விழுந்த மழைத் துளியே" என்று சங்கீதாவின் மொபைல் சிணுங்க கண்ணாடியின் முன் வேகமாக ஒரு சுத்து சுத்தி கூந்தல் காற்றில் ஆட தன் தேவனின் குரல் கேட்க ஆவலுடன் phone attend செய்தாள்.


"ஹலோ ஸ்வீட் ஹார்ட்" - தனக்கே உரிய அந்த வசீகர குரலில் பேசினான்.

"ஹலோ ஹணி"

"என்ன செய்யுற இப்போ?"

"நீ குடுத்த புடவைய பார்த்துட்டு இருக்கேன்."

"சும்மா பார்த்துட்டு மட்டும்தான் இருக்கியா?"

"கட்டி பார்த்துக்குட்டு இருக்கேன் டா..."

"ஒஹ்ஹ் சாரி அப்போ நான் ரூம் விட்டு வெளியே போயிடுறேன்...."

"ஏய் naughty... நீ phone ல தான் இருக்கே, ரூம்குள்ள கிடையாது. இங்கே மட்டும் இருந்திருந்தால் நானே புடிச்சி வெளியே தள்ளி இருப்பேன். ஹா ஹா.."

"ஹா ஹா.. சரி சரி கட்டி பார்த்தாச்சா?"

"ஹ்ம்ம்.. பார்துக்குட்டே இருக்கேன்...." - இந்த புடவையை அணிந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சற்று அவசரமாகவே கட்டினாள். இன்றுவரை எத்தினையோ புடவைகள் கட்டினாலும் இப்போது கட்டிப் பார்க்கும் போது கண்ணாடியில் சாராவின் முகத்தினில் ஒரு விதமான அழகிய வெட்கம் தெரிந்தது. காரணம் ஒரு புறம் தன் மணம் விரும்பும் காதலன் பேசிக்கொண்டிருக்க அதே சமயம் மற்றொரு புறம் புடவையைக் கட்டிகொண்டிருப்பது இந்த தேவதைக்கு சற்று கூச்சத்தை ஏற்படுத்தியது. டக்கென ஒரு நிமிடம் "ஹாஹ்" என்று குறைவான சத்தத்தில் கூச்ச சிரிப்பைக் குடுத்தாள்.

"என்ன ஆச்சு? எதுக்கு சிரிப்பு?. புடவை சரியா இல்லையா?"

"No no, I just love the saree, நான் வேற எதுக்கோ சிரிச்சேன் டா.."

"ஹா ஹா.. கவல படாத சரா, நான்தான் சொன்னேனே ரூம் விட்டு வெளியே போயிடுறேன்னு. அதையே நினைச்சிட்டு இருந்தா உனக்கு சிரிப்புதான் வரும்."


"ஹையோ...., ஐயாவுக்கு மனசுல ரொம்பதான் நினைப்பு. நான் ஒன்னும் அதெல்லாம் நினைக்கல." - இப்படி பேசிவிட்டு வாயை மூடி ராகவின் reaction எப்படி இருக்கும் என்று எண்ணி சத்தம் இல்லாமல் வயிறு குலுங்க சிரித்தாள் சரா.

"சரி சரி... என்னை ஒட்டினது போதும், நாளைக்கு எனக்கு ஏதோ surprise தரேன்னு சொன்னியே? என்னது அது?"

"ஹலோ Mr.Sweet CEO. பொம்பளைங்க வாய் பொதுவா ஒட்ட வாய்தான் ஆன நான் அப்படி இல்ல, நீ எப்படி உன் surprise சொல்ல மாட்டியோ அதே மாதிரி நானும் சொல்ல மாட்டேன்." - ( surprise எல்லாம் குடுக்க நிஜம்மா என் கிட்ட ஒன்னும் இல்லடா.. என்னை இன்னும் நம்பிக்குட்டு இருக்கியேடா லூசு?" என்று கண்ணாடியின் முன் மனதுக்குள் எண்ணி வாயில் விரலைக் கடித்து சிரித்துக் கொண்டாள்.)

"நீ கொஞ்சம் அடம் பிடிக்குற டைப் டி ச்ச..?"

"ஹா ஹா.... ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பேன்...."

"cool.... எனக்கு அடங்காத குதிரைதான் ரொம்ப பிடிக்கும்."

"ஹா ஹா..... ஹேய், dont get naughty...." - பேசிக் கொண்டிருக்கும்போது மதியம் ரம்யா குடுத்த மருதாணி சங்கீதாவின் handbag ல் இருந்து வெளியே தன் தலையை நீட்டி அவள் கண்ணில் பட, சட்டென ஒரு நொடி தீப்பொறி போல் மனதில் ராகவ்க்கு ஒரு புது surprise குடுக்கும் எண்ணம் தோன்றியது சங்கீதாவுக்கு.