Wednesday 25 March 2015

சுகன்யா... 74

திருமணம் முடிந்ததும், காலை சிற்றுண்டிக்குப்பின், வேலூரிலிருந்து திருத்தணிக்கு சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் சென்னைக்கு திரும்பிய போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. மல்லிகாவுக்கு பஸ் பிரயாணம் சிறுவயதிலிருந்தே ஒத்துக்கொள்வதில்லை. அவள் உடலும் உள்ளமும் களைத்து மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

செல்வா வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து, நாவல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தான். ஹாலில் சோஃபாவில் படுத்துக்கொண்டு கனமான பாடப் புத்தகமொன்றில் மூழ்கியிருந்தாள் மீனா. பிள்ளைகளிடம் கூட எதுவும் பேசாமல், கட்டியிருந்த பட்டுப்புடவையைக் கூட களையாமல், அப்படியே கட்டிலில் நீளமாக சாய்ந்துவிட்டாள் மல்லிகா.

***

"அம்மா... எழுந்திரிச்சி சாப்பிடும்மா... சூடா ரெண்டு தோசை ஊத்தியாந்து இருக்கேன்..." மீனா, கட்டிலருகில் ஸ்டூலை இழுத்து தட்டையும், குளிர்ந்த தண்ணீரையும் வைத்தாள்.

"ம்ம்ம்ம்..." நீளமான கொட்டாவியுடன், கைகளை உயரமாகத் தூக்கி சோம்பல் முறித்த மல்லிகாவின் தோளிலிருந்த புடவை நழுவி அவள் மடியில் விழுந்தது.



"என்னம்மா... உடம்பு முடியலியா..?" பெண் சட்டென தன் தாயின் புடவையை சரி செய்தது. கரும் பச்சை நிற பட்டுப்புடவை, மார்பில் வெள்ளை நிற ரவிக்கை. பளபளக்கும் மல்லிகாவின் வெள்ளை நிற உடம்பின் அழகை தூக்கிக்காட்டியது. அம்மாதான் இந்த புடவையில எவ்வளவு அழகா இருக்கா.. மனதில் இந்த எண்ணம் எழுந்தவுடன், வயதுக்கு வந்த பெண் தாயை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டது.

"டயர்டா இருக்குடா கண்ணு..." பாசம் கண்ணில் பொங்க, பெண்ணை இழுத்து தன் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டாள், மல்லிகா. பெண் தன்னிடம் காட்டிய பரிவில் பெற்றவளின் மனம் பாதாம்கீரானாது.

"அப்பா சாப்பிட்டாராம்மா...மீனா..?"

"ஆச்சும்மா... நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு... அப்பா வெராண்டவுல பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்கார். உன்னை நான் நாலு தரம் எழுப்பிட்டேன்... நீ எழுந்துக்கற பாட்டையேக் காணோம்.. நேத்து ராத்திரி கல்யாண வீட்டுல நீ தூங்கவே இல்லையா?"

"எதிர் வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க... நேரம் போனதே தெரியலை... புது இடம் வேறவா.. எப்ப தூங்கினோம்ன்னே தெரியலைடீ"

என்னடீ மீனா நான் கேள்விபட்டதெல்லம் உண்மைதானா? மீனாவை ஒரு உலுக்கு உலுக்கிவிடலாமா? மல்லிகாவின் பெத்த மனசு அடித்துக்கொண்டது. கள்ளமில்லாமல் தன் தோளில் கையை ஆசையுடன் போட்டுக்கொண்டிருக்கும் பெண்ணின் முகத்தை மல்லிகாவின் கண்கள் கூர்ந்து நோக்கியது. இந்த குழந்தை மனசுக்குள்ளத்தான் எத்தனை கனவுகளோ?

எனக்கு இவ என்னைக்கும் குழந்தைதான்... ஆனா இந்த குழந்தைக்கும் அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குமே.. அந்த மனசுக்குள்ள ஆயிரம் கற்பனைகள்... ஆசைகள் இருக்கும்... என்னைக்கு இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு போகப்போறவ... இவகிட்ட நான் எதுக்கு ஆத்திரப்படணும்? என்னன்னு கோச்சிக்கறது...? தன் ஆசைப் பிள்ளை செல்வாவின் கல்யாண விவகாரத்தில் வீடு ரணகளப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது.

ஆயிரம்தான் இருந்தாலும் இவ என் பொண்ணு... என் சதை... என் ரத்தம்... போற எடத்துல என்ன மாதிரி வாழ்க்கை அமையுமோ என் குழந்தைக்கு? எனக்கு அமைஞ்ச மாதிரி இவளுக்கும் நல்லபடியா ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா பரவாயில்லே...

எதிர் வீட்டு மாமி சொன்ன மாதிரி, கழுத்து தாலியில புருஷனையும், மனசுக்குள்ள பெத்தவங்களையும் வெச்சுக்கிட்டு அலையறது பொம்பளை ஜென்மம்தானே... படற கஷ்டத்தை சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம கஷ்டப்படறதுதானே பெண் ஜென்மம்... இவளை அதட்டறதுனால எனக்கு என்ன கிடைக்கப் போவுது...

நேத்துதான் இவ வயசுக்கு வந்த மாதிரி இருக்குது... இருபது வயசுதான் ஆயிருக்கு... இன்னும் முழுசா இடுப்பு கூட அகலலே.. அதுக்குள்ள இவ மனசு ஆம்பளை துணைக்கு பறக்குது... உடம்பு அலைய ஆரம்பிச்சிடிச்சி.. கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சா... வீட்டை விட்டு பறக்க துடிக்குதே?

எப்பத்துலேருந்து இவங்களுக்குள்ள இந்த காதல் நாடகம் ஆரம்பிச்சிருக்கும்.. இவங்க நெருக்கம் எதுவரைக்கும் போயிருக்கும்... சீனுதான் என் புருஷன்னு எப்படி இவாளால சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது? பாத்தா இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி என் பக்கத்துல உக்காந்து இருக்காளே...?

இவங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் வரும்ன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா.. சீனுவை கொஞ்சம் தூரமாவே நிறுத்தி இருப்பேனா?எனக்கு ஏன் இது கொஞ்சம் கூட தோணவே இல்லை...? எப்பவுமே சீனுவும் மீனாவும் யாருக்குமே எந்த சந்தேகமும் வர்ற மாதிரி வீட்டுக்குள்ள நடந்துகிட்டதே இல்லையே? செல்வாவுக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரிஞ்சா எங்கிட்ட சொல்லியிருப்பானே?

என் புருஷன் இவ மேல உயிரையே வெச்சிருக்கான். பொண்ணு கண்ணு கொஞ்சம் கலங்கினாலும்... மல்லிகா.. என் பொண்ணை மிரட்டற வேலை வேணாம்.. உன் கோவம் எதுவா இருந்தாலும் என் கிட்ட காட்டு.. அவ கிட்ட காட்டாதே... என்னால இதை மட்டும் பொறுத்துக்க முடியாது... வெளியல சத்தம் வரமா, தனியா இருக்கும் போது, அடித்தொண்டையிலேயே உறுமுவான் என் புருஷன்...

பெத்த பொண்ணை, ஆத்தாக்காரி கண்டிக்காம, வெளியிலேருந்தா ஆள் வருவாங்கங்கறது மட்டும் ஆம்பிளை புத்தியில எட்டறதுல்லே... இவளை ஒரு வார்த்தை நான் எப்பவாது சொல்லிட்டா, நாலு நாளைக்கு என் கிட்ட முரண்டிக்கிட்டு சுவத்தைப் பாத்து படுத்துக்க வேண்டியது.. நல்லப் புருஷன் வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு... மனசுக்குள்ள இருக்கற ஆசையை பெத்த பொண்ணுகிட்ட எப்படி காட்டணும்ன்னு, எப்ப காட்டணும்ன்னு கூட தெரியாத பாசக்கார அப்பன்... அந்த மனுஷன் மனசுக்குள்ள இருக்கறது எனக்குத்தானே தெரியும்...

பொண்ணை மேல மேல படிக்க வெச்சு, பெரிய விஞ்ஞானி ஆக்கணும்.. தங்கச்சி புள்ளைக்கு கட்டி வெக்கணும்... அஞ்சு கண்டம் தாண்டி பொண்ணை அவங்க இருக்கற அமெரிக்காவுக்கு அனுப்பணும்ன்னு மனசு கொள்ளாத ஆசையை அடக்கி அடக்கி வெச்சிகிட்டிருக்காரு... அவனுக்கு இந்த பொண்ணோட ஆசையை நான் எப்படி புரிய வெப்பேன்...

இந்த பொண்ணு என்னடான்னா அப்பன் மனசு புரியாம, வீட்டுக்கு அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கற உள்ளூர் மாப்பிள்ளையை, சீனுவை, தன் புருஷனா தேடிகிட்டா... ம்ம்ம்.. மல்லிகா நீளமாக தன் நெஞ்சுக்குள் மூச்சை இழுத்தாள். 

"என்னம்மா.. உத்து உத்துப் பாக்கறே..?"

பெண் வெட்கத்துடன் தன்னை கூர்ந்து பார்க்கும் தாயின் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல், மனதுக்குள் இனம் புரியாத கலக்கத்துடன் தலை குனிந்தது. மனதுக்குள் குழம்பியது. எப்பவுமே எதாவது விஷயம் இல்லாம அம்மா இந்த மாதிரி என்னைப் பாக்கமாட்டாளே? ஆசையா பாக்கற மாதிரியும் இருக்கு... கூடவே பாக்கற பார்வையில ஒரு சந்தேகமும் இருக்கே?

கல்யாணத்துக்குப் போன எடத்துல, எதிர்வீட்டு ராமசாமி அங்கிள், நானும் சீனுவும் முத்தம் குடுத்துக்கிட்ட கதையை அம்மாகிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? எதிர்வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு வேற அம்மா சொன்னாளே? அது என்னவா இருக்கும்? குற்றமுள்ள மனம் குறுகுறுத்தது. அம்மா கேக்கறதுக்கு முன்னாடி, விஷயத்தை நாமே சொல்லிடலாமா... மீனா மனதுக்குள் மருகினாள்.

"மீனுக்குட்டீ.. கொத்தமல்லி சட்னீ நல்லாருக்குடி கண்ணு... கொஞ்சம் காரத்தை மட்டும் கொறைச்சுப் போடுடீ.. உன் அப்பாவுக்கு அசிடிட்டி பிராப்ளம் இருக்குல்லே.." மல்லிகா நாக்கை சப்புக் கொட்டினாள். பக்கத்திலிருந்த தண்ணீரை நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள்.

"சரிம்மா..."

அம்மா இவ்வளவு ஆசையா பேசறாளே? புயல் கியல் அடிக்கப் போவுதா..? அதுவும் பத்து மணி ராத்திரியிலா அடிக்கணும்...? அம்மா ஆரம்பிச்சா சட்டுன்னு அடங்கமாட்டாளே? நாளைக்கு எனக்கு காலேஜ்ல டெஸ்ட் வேற இருக்கு... அம்மா என்ன பேசினாலும் நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்துடணும்.. மல்லிகா கோபத்துடன் பேசும் போது அவளுக்கு பதில் சொன்னால் அவள் எரிச்சலடைந்து மேலும் மேலும் கூச்சலிடுவாள். மீனாவுக்கு தன் தாயின் குணம் நன்றாகத் தெரியும்.

என் ஸ்வீட் செல்வா...!! எங்க விஷயத்துல அவனைத்தான் நான் மலை மாதிரி நம்பியிருக்கேன்... என் நேரம்... செல்வா இன்னைக்கு நல்ல மூடுல இருக்கான். அவன் அம்மாபுள்ளையா இருந்தாலும் இன்னைக்கு எதாவது பிரச்சனைன்னா அவன் என்னைத்தான் சப்போர்ட் பண்ணுவான்...

காலையில கூட பெரியமனுஷன் மாதிரி 'பொறுமையா இருங்கன்னு' அட்வைஸ் பண்ணி, சீனு கூட என்னை அனுப்பி வெச்சானே? எவளுக்கு இந்த மாதிரி நல்ல மனசுள்ள, கூடப் பிறந்த தங்கச்சியோட மனசை புரிஞ்சிக்கிட்டு, ஆசையா நடந்துக்கற அண்ணன் கிடைப்பான்... மனம் போல மாங்கல்யம்ன்னு அம்மா எத்தனை தரம் சொல்லியிருக்கா... அவன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரிதான்.. அவனுக்கு சுகன்யா கிடைச்சிருக்கா...

ச்சை.. என் மனசு ஏன் இப்படி இங்கயும் அங்கயும் அலையுது.. அம்மா கேக்கறதுக்கு முன்னாடியே நான் ஏன் இப்படி பயந்து சாகறேன்...? காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. நீதான் என் பொண்டாட்டின்னு, என் அண்ணன் எதிர்லயே சீனு என் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கான்...

அப்பா, அம்மா ஊர்ல இல்லாதப்ப, திருட்டுதனம் எதுவும் பண்ணாம, தைரியமா ஒரு ஆம்பிளையா, செல்வாகிட்ட வந்து, முறையா அவன் கிட்ட பர்மிஷன் கேட்டு என்னை கவுரவமா வெளியில அழைச்சிக்கிட்டு போனான். சொன்ன மாதிரி என்னை வீட்டுல திருப்பிக்கொண்டாந்து விட்டுட்டுப் போயிருக்கான்... அவன்ல்ல ஆம்பிளை.

நானும், சீனு பின்னால பைக்ல உக்காந்து, ஜாலியா இருக்குடான்னு அவனை இறுக்கிக் கட்டிப் புடிச்சிக்கிட்டு, பீச்சுக்கும் போய் வந்தாச்சு... அதோட நின்னுதா.. அவன் வீட்டு மாடியிலே அவன் என்னை இடுப்பு, வயிறு, முதுகு, மாருன்னு மொத்தமா தொட்டப்ப... ஒடம்பு உதற உதற, வெக்கத்தை விட்டுட்டு அவன் மார்ல சாய்ஞ்சுகிட்டு நின்னாச்சு..

ஒரு ஆம்பளையோட மனசுக்குள்ள என்ன மாதிரி ஆசை இருக்குன்னும், கொஞ்சம் கொஞ்சம் இன்னைக்கு எனக்கு புரிஞ்சு போச்சு.. சீனுவோட தொடல்... ஒரு ஆம்பிளையோட ஸ்பரிசம், தனிமையில ஒரு பொண்னோட இருக்கும் போது எப்படி இருக்கும்ன்னும் இன்னைக்கு சேம்பிள் பாத்தாச்சு.. சும்மா சொல்லக்கூடாது... அப்ப்ப்பா.. சும்மாவே சொல்லக்கூடாது.. அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்தப்ப சொகமாத்தான் இருந்தது.

அம்மா அப்பாவுக்கு தெரியாம, கட்டிக்கப் போறவன் கூப்பிட்டான்னு அவன் வீட்டு மனுஷா அத்தனை பேர்கிட்டவும் உரிமையோட அரட்டை அடிச்சிட்டு வந்தாச்சு.. நான் எப்ப அவங்க வீட்டுக்கு மருமவளா வரப்போறேன்னு எல்லோரும் வாயைவிட்டு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க தரப்புல எங்க காதலுக்கு எந்தப் பிராப்ளமும் இல்லே...

அப்பா என்ன சொல்லுவார்.. அவர் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார்... அப்பாவுக்கு என் மேல ரொம்ப ஆசை.. நான் சீனுவை ஆசைப்படறேன்னு சொன்னா, முடியாதுன்னா சொல்லுவார்? முதல்லே நான் அம்மாவைத்தான் சரிகட்டணும்...

எனக்கு வரப்போற மாமனார் என்னடான்னா, நீ படிக்கறதுல தப்புல்லே.. நல்லாப் படி ஆனா வேலைக்குப் போய் என்ன பண்ணப் போறே... நீ சம்பாதிச்சுக்கிட்டு வரணுங்கற நிலைமை இந்த வீட்டுல இல்லே.. நிம்மதியா என் பொண்ணா வீட்டுல சுகமா இருங்கறார்...

சீனுவை வளத்த அத்தை, வீட்டுக்குள்ள நுழையும் போதே ஆசையா என் வாயில ஸ்வீட்டை திணிச்சி, தலையில நாலு மொழம் மல்லிப் பூவை சுத்தி நீதான்டீ இந்த வீட்டு மருமவன்னு, சீனுகூவே அவன் ரூமுக்கே என்னை தனியா அனுப்பி வெச்சிட்டாங்க..

சீனுவைப் பெத்தவளுக்கு வாயில வார்த்தையே வரலை.. என் புள்ளை நீ சொல்லி குடிக்கறதை விட்டுட்டேங்கறான்... சிகரெட்டை விட்டுடறேங்கறான்.. மீசை, தாடி எல்லாத்ததையும் வழிச்சிப் போட்டுட்டான்.. அவன் உன்னை வாசனைப்புடிக்க கிட்ட வந்தான்னா உன் மூஞ்சில முள்ளு குத்தாது... நீ சந்தோஷமா இருடீன்னு மனசார என்னை ஆசிர்வாதம் பண்றாங்க...

இந்த வீட்டுல பொறந்து வளந்து, இருபத்து ரெண்டு வருஷமா இங்க இருக்கேன்... என்னைப் பெத்தவங்க என்னை தரையில போட்டு வளக்கலை.. அவங்க தோள்லேயும், மார்லேயும்தான் போட்டு வளக்கறாங்க..

ஆனா நான் இப்ப ஒடம்பாலத்தான் இந்த வீட்டுல இருக்கேன்... என் மனசு இப்ப சீனு வீட்டுலதான் இருக்கு.. எப்ப அங்க போவேன்... போவேன்னு என் மனசு ஆலாப் பறக்குது... இது ஒருவிதத்துல ஞாயம் இல்லதான்.. ஆனா நான் என்னப் பண்ணுவேன்.. என் மனசும், உடம்பும், சீனு... சீனுன்னு அலையுதே..!

அம்மாவுக்கு எங்க விஷயம் தெரிஞ்சிட்டிருந்தா அதுவும் நல்லதுதானே? நாளைக்கு காலைல மொதல் வேலயா சியாமளா ஆண்டிக்கு ரெண்டு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி குடுத்து மனசார தேங்க்ஸ் சொல்லணும்..

எங்க காதலை, நானா எப்படி வீட்டுல சொல்றதுன்னு மனசுக்குள்ளவே மாய்ஞ்சு மாய்ஞ்சு போனேன்... அம்மா இப்ப இதைப் பத்தி பேசினால்... ஆமாம்ம்மா... நான் சீனுவைத்தான் ஆசைப்படறேன்.. நீ அவனையே எனக்கு கட்டி வைக்கணும்ன்னு, பட்டுன்னு மூஞ்சுக்கு நேரா சொல்லிட வேண்டியதுதான்.

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்...? என் மனசுக்கு பிடிச்சவனை, என்னை விரும்பறவனை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்... அவ்வளவுதானே.. என் அம்மாகிட்ட இதுக்கு நான் ஏன் பயப்படணும்? என் வீட்டிலேயே நான் பயந்து பயந்து சாகறதுல அர்த்தமேயில்லை... மீனா மனதுக்குள் தெளிவாக யோசித்தாள். 




"மீனா... நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட்டுன்னு சொன்னியேம்மா.. பரிட்சைக்கு முதல் நாள், நேரத்துல தூங்கி நிம்மதியா, மனசுல டென்ஷன் இல்லாம காலையில ஃப்ரெஷ்ஷா எழுந்துக்கணும்..." நடராஜன், பாசத்துடன் பெண்ணின் தலையை வருடினார்.

"அம்மா சாப்பிட்டதும் தட்டை எடுத்துட்டுப் போவலாம்ன்னு உக்காந்து இருக்கேன்ம்பா.. அரை கப் பால் குடுக்கட்டுமா உங்களுக்கு..."

"வேணாம்மா இன்னைக்கு.. ரெண்டு நாளா கல்யாண வீட்டுல சாப்பாடு.. என்னமோ வயிறு கனமா இருக்கு..." சொல்லிக்கொண்டே பெண்ணின் பதிலை எதிர்பார்க்காமல், கட்டிலில் அவர் படுத்தார்.. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக்கொண்டார்.

***

"என்னங்க.. தூங்கிட்டீங்களா..." கவிழ்ந்து படுத்திருந்த தன் கணவனின் முதுகில் தன்னை சாய்த்துக்கொண்ட மல்லிகா அவர் தலைமுடிக்குள் தன் விரல்களை நுழைத்து விளையாடினாள். தலையை குனிந்து அவர் தோளில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

"இது என்னடீ கேள்வி.. தூங்கறவனை எழுப்பறே.. எழுப்பிட்டு தூங்கிட்டியாங்கறே... காலையில ஆஃபீசுக்கு போவணும்டீ.."

"மணி என்ன ஆச்சு.. பதினொன்னு கூட ஆவலை.. இன்னைக்கு என்னமோ அதுக்குள்ள இழுத்துப் போத்திக்கிட்டீங்க.." மல்லிகாவின் குரலில் தன் கணவனின் மேலிருக்கும் ஆசை பேச்சில் தெறித்துக்கொண்டு வந்தது. மல்லிகா தன் கணவனை இறுக்கிய வேகத்தில் அவளுடைய அடிவயிற்றின் சூடும், அவள் அந்தரங்கத்திலிருந்து எழுந்த வெப்பமும் நடராஜனின் அடிமுதுகில் பரவியது.

நேத்து ராத்திரிதான் சியாமா மாமிக்கிட்டே என் மனசு திருப்தியாயிடிச்சின்னு பெரிசா பீத்திக்கிட்டேன்.. ஒரு நாள் முழுசா ஆவலே... என் புருஷன் என்னைத் தொடணும்ன்னு ஒடம்புல ஒண்ணுமில்லாம, எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, தூங்கறவனை எழுப்பறேன்.. மல்லிகா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

என்னாச்சு என் தங்கத்துக்கு... அவளாவே மொத்தமா அவுத்துப்போட்டுட்டு, தூங்கறவனை தட்டி எழுப்பறா? மல்லிகாவின் வெற்றுடம்பும், அவள் தாலிக்கொடியும் தன் முதுகில் அழுந்தி உறுத்துவதை உணர்ந்ததும் அவர் தூக்கம் சட்டென பறந்து போனது.

அன்று விடியலில், கல்யாண சத்திரத்து தனியறையில், தூங்கி எழுந்த மல்லிகா அவர் தோளில் சரிந்து விழுந்தததுமே, அவர் மனதில் அவளுக்குள் முழுவதுமாக முயங்கும் ஆசை காட்டு வெள்ளமாக எழுந்தது. ரெண்டு நாளா ஊர்சுத்திட்டு, களைச்சுப் போய் வீட்டுக்கு வந்திருக்கா.. சோர்ந்து போய் படுத்து இருக்கறவளை தொட்டுட்டு, சும்மா இருக்கற சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியோட நிலைமை தனக்கு வந்துவிடக்கூடாதே என நடராஜன் பயந்து கொண்டுதான் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

அட்றா சக்கை... என் மல்லிக்கே இன்னைக்கு மூடு வந்திடிச்சா...? நடராஜா.. ஒரு வாரத்துக்கும் மேல இந்த விஷயத்துல எப்பவும் கேப் குடுக்கக்கூடாது.. பொம்பளை உடம்பு சூடு ஆறிபோறதுக்கு முன்னாடி, சட்டுன்னு ரன் அவுட் ஆகாம.. ஒரு 'ரெண்டு' ஒரு 'நாலு' ஒரு 'ஆறு' ன்னு அடிச்சி ஆடுடா..

எதிர்பாராமல் கிடைத்த மல்லிகாவின் அணைப்பு, மனதுக்கு இதத்தையும், உடலுக்கு கதகதப்பையும் கொடுப்பதை உணர்ந்த நடராஜனின் மனதுக்குள், தன் மனைவியை உடலால் புணர்ந்து அவளை அனுபவிக்கும் ஆசை, தீயாக பற்றிக்கொண்டது. நடராஜன் நேரத்தை வீணாக்காமல் விரைவாக காரியத்தில் இறங்கினார். தன் முதுகில் கவிழ்ந்து கிடந்தவளை புரட்டி தன் பக்கத்தில் மல்லாக்காக தள்ளிக்கொண்டு, அவள் இதழ்களை, தன் வாயால் வேகமாக கவ்வியவரின் இடது கை, அவள் மார்பை இதமாக பற்றி கசக்கத் தொடங்கியது.

தன் அடிவயிற்று சூட்டை முதுகில் உணர்ந்ததால், சட்டென நீண்டு, பருத்து சூடாக இருந்த தன் கணவனின் உறுப்பை மல்லிகா மெல்ல உருவ ஆரம்பித்தாள். கணவனின் தடிப்பையும், திண்மையையும் தன் கையால் உணரத் தொடங்கிய மல்லிகா, மனதில் பொங்கிய ஆசையுடன், பதிலுக்கு வெறியுடன், தன் நாக்கை அவர் வாய்க்குள் விட்டு துழாவத் தொடங்கினாள்.
***
என் மனசை புரிஞ்சுக்கிட்டு, சட்டுன்னு தூக்கத்தை தியாகம் பண்ணிட்டு, என்னை சேத்துக் கட்டிக்கிட்டானே.. என் மேலதான் இவனுக்கு எவ்வளவு ஆசை... பாசம்...?

சத்திரத்துலேயே என்னை தடவி தடவிப்பாத்தான்.. ம்ம்ம்ன்னு ஒரு பார்வை பாத்துருந்தா.. அங்கேயே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டு இருப்பான்.. மல்லிகாவுக்கு தன் கணவனை நினைத்தப்போது பெருமிதமாக இருந்தது.. உள்ளத்தின் நிறைவு உடலின் செயலில் உடனடியாக வெளிப்பட்டது.

மல்லிகா தன் இருகைகளாலும் நடராஜனை இறுக்கி அணைத்து அவனுக்கு மூச்சு முட்டச்செய்தாள். அவளுடைய மார்க்காம்புகள், அவர் மார்பில் கூராகி குத்தியது. தன் மார்பில் கிடந்தவனின் இடுப்பை தனது இரு கால்களையும் கிடுக்கியாக மாற்றி தன் உடலின் மொத்த வலுவையும் காட்டி இறுக்கினாள்.

உன் மார் சதை இன்னும் சரியலேடீ.. இடுப்பு இன்னும் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.. இன்னும் அஞ்சாறு வருஷம் நல்லா அனுபவிடீன்னு சியாமளா மாமி சொன்னது அவள் நினைவுக்கு வந்தது. இதைச் சொல்லும் போது இந்த வயசுலேயும் அவ மூஞ்சே பளபளன்னு ஆச்சே... கெழவி மூஞ்சிலே வந்த வெக்கம் இருக்கே... அதைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருந்ததே? மல்லிகா வெறியுடன் நடராஜனை இறுக்கினாள்.

"செல்லம்.. என்னடீ ஆச்சு உனக்கு.. என்னை இந்தப் பாடு படுத்தறே .." மல்லிகாவின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கிடந்தவர் முனகினார்.

"என் ராஜா.. தூங்கற மாதிரிதானே நீ நடிச்சே?"

"சீச்சீ.. நிஜமாவே... கண்ணு அசந்துப் போச்சுடீ.." நடராஜனின் நாக்கு மல்லிகாவின் கழுத்தில் ஈரத் தூரிகையாக படம் வரைந்து கொண்டிருந்தது.

"வீட்டுக்கு வந்து முகத்தைக்கூட கழுவலே நான். ஒரே வேர்வை நாத்தம்... இப்பப் போய் கழுத்தை நக்கறீங்களே.." அவள் அவருடைய முகத்தை தன் கழுத்திலிருந்து அகற்றி அவர் உதடுகளை கவ்விக்கொண்டாள்."

"பொண்டாட்டி வேர்வை நாத்தம் புருஷனுக்கு சந்தனமா மணக்குதுடி.." பிதற்றினார் நடராஜன்.

"ஹூக்க்கும்ம்ம்.." நீளமாக முனகினாள் மல்லிகா. நடராஜனின் பருத்த தடி எந்த வழியாக அவளுக்குள் நுழையலாம் என அவள் அடிவயிற்றின் கீழ் அலைந்து கொண்டிருந்தான்.

"என்னம்மா...?"

"ப்ச்ச்ச்ச்.. சும்மா பேசாம... சட்டுன்னு உங்கப் பையனை உள்ளத்தள்ளுங்க... கிடந்து தவிக்கறான் அவன்..." நடராஜனின் தண்டைப் பற்றி தன் அந்தரங்கத் துவாரத்தில் பொருத்தினாள் மல்லிகா.

"ப்ஸ்ஸ்ஸ்..." மனைவியின் உதடுகளை கவ்வியவாறு தன் இடுப்பை நடராஜன் வேகமாக ஆட்டியதும், அவருடைய கூரான 'வேலாயுதம்', வளைந்து நெளிந்து, மல்லிகாவுக்குள் நுழைந்து, மேலும் நீண்டது... 'வேலாயுதம்' நுழைந்த வேகத்துக்கு ஈடு கொடுத்த மல்லிகாவின் உறுப்பின் பக்கச்சுவர்கள், உள்ளே நுழைந்தவனை இறுக்கிப் பிழிய ஆரம்பித்தன.

"எம்ம்மா... சூடா இருக்கேடீ..." முனகிய நடராஜன் தன் இடுப்பை இயக்க ஆரம்பித்தார்.

"மெதுவாங்க.. ஏன் இப்படீ அவசரப்படறீங்க.. மெள்ளப்ப்பா.." பதிலுக்கு தன் இடுப்பை அசைத்த மல்லிகா முனகினாள். அவள் விரல்களின் நகம், நடராஜனின் புட்டசதைக்குள் புதைந்தன.

"நகத்தை வெட்டக்கூடாதடீ..."

"பேசாதீங்கன்னா... நகம்ன்னு இருந்தா அது குத்தத்தான் செய்யும்.. அது பாட்டுல அது குத்தட்டும்... நீங்க பாட்டுல நீங்க குத்துங்களேன்.. அம்ம்ம்ம்மா.." நீளமாக மூச்சுவிட ஆரம்பித்தாள் அவள்.

"குத்திக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீ ரொம்ப ஆட்டாதேடீ.. ஒழுவிடப்போறான் அவன்..." நடராஜனின் அடிவயிறு குழைய ஆரம்பித்து.. மூச்சு வேகமாகியது.

"ஒரு நிமிஷம் பொறுங்களேன்.. அவசரமா கக்கியே ஆவணுமா..."

"ஆசையாத்தான் இருக்கு.. உன்னை குத்தியே கிழிக்கணும்ன்னு... இன்னும் நான் என்ன சின்னப்பையனா.. அலையறியேடீ நாயே..." நடராஜன் மல்லிகாவின் மார்பை கடித்தார்...

"என்னை நாய்ன்னுட்டு நீ கடிக்கிறியே நாயே... நாயே.." மல்லிகா, நடராஜனின் புட்டத்தில் ஓங்கி அடித்தாள்.

"ஏன்டீ கத்தறே... மல்லீ.. நீ கோவம் வந்தாலும் கத்தறே.. ஆசை வந்தாலும் கத்தறேடீ...வெளியில பசங்க முழிச்சுக்கிட்டு இருக்கப் போறாங்கம்மா..."

"நீ வாயை மூடிக்கிட்டு பண்ணுப்பா... தவிச்சுக்கிட்டு இருக்கேன் நான்..."

மல்லிகாவின் பிடி இறுகத்தொடங்கியது. அவள் இடுப்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது. விழியோரம் கண்ணீர் தோன்ற ஆரம்பித்தது. நெற்றியும், மார்பும் வியர்க்கத் தொடங்கின. அவள் தொடைகள் லேசாக நடுங்கத் தொடங்கியது.

"ச்சப்.. ச்சப்.. ச்சப்.. ச்சப்..ச்சப்.. ச்சப்.. நடரஜானின் விதைகளிரண்டும் அவள் புட்ட சதைகளில் வேக வேகமாக மோதி எழுப்பிய ஒலி அவள் காதுகளில் இனிமையாக பாய்ந்தது.

"ம்ம்ம்ம்..ம்ம்மா... இன்னும் கொஞ்ஞ்ஞ்ச்சம் வேகமா பண்ண்ண்ண்ணுங்களேன்.." உடலில் எழுந்த இன்பஅதிர்வில், அதிர்வினால் உண்டான சுகத்தில், வெட்கத்தைவிட்டு, பிதற்ற ஆரம்பித்தாள், மல்லிகா.



"என் செல்ல்ல்ம்டீ நீ.. என் ராஜாத்திடீ நீ.. ஒரு முத்தாகுடுடீடீய்..." முனகியவாறு, அவளை இடிக்கும் தன் வேகத்தை கூட்டினார்.. நடராஜன். நடராஜனின் உதடுகள், மல்லிகாவின் இதழ்களை கவ்விக்கொண்டு அவள் நாக்கை ஸ்பரிசித்த நொடியில், மல்லிகா தன் உச்சத்தை தொட்டு, உடல் உதற உதற, கணவனின் இடுப்போடு தன் இடுப்பை அழுத்தி சேர்த்தாள்.

"எம்ம்மா.." மனைவியின் வெப்பமான அந்தரங்கத்தின் உரசலில், அவள் இடுப்பின் அழுத்தத்தில், கதிகலங்கிய நடராஜன் எரிமலையாக வெடித்து, சீறும் நெருப்புக் குழம்பாக, தன் விந்தை அவளுள் பாய்ச்சினார். மூச்சிறைக்க மனைவியின் மேல் சரிந்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தார்.

விந்தை வெளியேற்றிக்கொண்டிருந்த நடராஜனின் உறுப்பு, மல்லிகாவுக்குள் சிலிர்த்தது. துடித்தது. நடுங்கியது. மெல்ல மெல்ல அளவில் சுருங்கியது. நடராஜனின் சுவாசம் சீராகியதும், தன் ஆசை மனைவியின் உடலின் மேலிருந்து உருண்டு கட்டிலில் அவளருகில் விழுந்தார்.

விழிமூடி, தானடைந்த உச்சத்தின் போதையை சுகித்துக்கொண்டு, அமைதியாக கிடந்தவளின் நெற்றியில், புருவங்களில், கன்னத்தில், தன் உதடுகளை நன்றியுடன் புதைக்கத் தொடங்கினார் நடராஜன்.



சுகன்யா... 73

நடராஜனும், ராமசாமியும் தத்தம் மனைவிமாருடன், அவர்களுடைய தெருவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்தார்கள். எட்டுமணியளவில் பிள்ளையழைப்பு முடிந்து, சுவையான இரவு விருந்து உண்டவுடன், மல்லிகாவும், சியாமளாவும் சாவகாசமாக வெற்றிலையை மென்றுகொண்டே, ஆர அமர அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் உட்க்கார்ந்து, பேசிக்கொண்டிருந்தனர்.

மாலையிலிருந்தே மல்லிகா கல்யாண வீட்டில் நடந்து கொண்டிருந்த சடங்குகளை ஆர்வத்துடன் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது, சியாமளாவிடம் சில சடங்குகளின் அர்த்தங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.

"அடுத்த கல்யாண விருந்து நீதானேடீ எங்களுக்கு போடப்போறே.. அடுத்தது நம்ம தெருவுல செல்வா கல்யாணம்தான்.. இங்க இவா என்ன என்னப் செய்யறான்னு நல்லாப் பாத்துக்கோடீ மல்லிகா.. உங்காத்து பழக்கம் எங்களவா கடைபிடிக்கறதுலேருந்து, கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.. ஆனா பேசிக்கலா எல்லார் ஆத்துலேயும் சடங்குகள் ஒண்ணுதான்டீ.."



"முன்னேப் பின்னே தெரியாத ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கையில திருமணம்ங்கற சடங்கால ஒண்ணு சேர்றாங்க... ரெண்டு தேகங்கள் ஒண்ணு கூடுது... மனுஷா நாம, நம்ம மனசுல இருக்கற ஆசைகளையெல்லாம், ஒருத்தர் மத்தவாளோட தேகத்தின் துணையோட தீத்துக்க முயற்சி பண்ணிண்டுருக்கோம்... நாளடைவில ரெண்டு ஆத்மாக்களும் ஒண்ணை ஒண்ணு நன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கறது... நேசிக்க ஆரம்பிக்கறது.."

"இந்த அறுபது வயசுல, எங்களைப் பாக்கும் போது, எங்க ரெண்டு பேரோட தேகங்கள் ரெண்டாத்தான், பாக்கறவாளுக்கு வேறு வேறாகத்தான் தெரியும்... ஆனா எங்க ஆத்மாக்கள் ரெண்டும் ஒண்ணாயிடுச்சிடீ... அவருக்கு ஒரு தலைவலின்னா... எனக்கு நெஞ்சுல வலிக்குது..."

"நல்லாச் சொன்னீங்க... பொம்பளை ஜென்மம் எடுத்துட்டோம்... புருஷனை நம்ம கழுத்துல தொங்கற தாலியிலே இருபத்து நாலு மணி நேரம் சொமந்துகிட்டு இருக்கோம்."

"ஆமாம்டீ... அவா கட்டினத் தாலியைத்தான் கழுத்துல தொங்கவிட்டுண்டுருக்கோம்... நிஜத்திலே புருஷனை மார்லே சொமந்திண்டு இருக்கோம்; பின்னாடீ அவா கொடுக்கற புள்ளையை வயித்துல சொமக்கறோம்... சதா ஸாஸ்வதமா, குடும்பத்தோட நெனைப்பை மனசுல சொமக்கறோம்.. இப்படீ வாழ்கை பூரா பெண்டுகள் நாம சொமைதாங்கியாத்தான் இருந்துண்டு இருக்கோம்..."

"தொஸ்ஸோ....தொஸ்ஸோ..." கெழவியோட அனுபவம் பேசறது.. அவளிடம் பேசிக்கொண்டிருப்பதில் மனம் நிறைவது போலிருந்தது. சூள் கொட்டினாள் மல்லிகா.

"என் ஆம்படையான் என் கால் வெடிப்பை பாத்துட்டு அன்னைக்கு 'ஓ'ன்னு குழந்தையாட்டம் அழறார்... ஏன் அழறேள்ன்னேன்... எனக்காக கொல்லைக்கும் வாசலுக்கும் நூறு நடை நடக்கறாய்... நடக்கச்சே நோக்கு கால் வலிக்குமேங்கறார்... என் மேல அந்த அளவுக்கு பாசத்தை வெச்சுண்டு.. பாக்கறவங்களுக்கு அவர் பேசறது என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழற மாதிரி இருக்கும்... எனக்குத்தெரியும் அதெல்லாம் உதட்டுலேருந்து வர்றது... நெஞ்சுலேருந்து வரலேன்னு..."

"பாக்கறவங்களுக்கு அவர் வீட்டுல கால் தரிக்கமா இங்கேயும் அங்கேயுமா ஓடீண்டுருக்கறதா தோணும்.. ஊரெல்லம் அலைஞ்சு திரிஞ்சு கால் கிலோ முள்ளு கத்திரிக்காய் வாங்கிண்டு வருவார்... கேட்டா நோக்குப் பிடிக்கறதேன்னுதான் ஆவடி வரைக்கும் போய் வந்தேம்பார்... நாலு ரூவா காய்க்கு... நாப்பது ரூவா போக வர கூலி கொடுத்திருப்பார்.. இதாண்டீ ஆம்பளை..."

"வாய்லேதான் வார்த்தை பாவக்காயா வர்ரும்.. அவரோட மனசென்னமோ கல்கண்டு மாதிரி தேங்காய்தண்ணிடீ... நாப்பத்தஞ்சு வருஷமா அவர்கூட குப்பை கொட்டிண்டு இருக்கேனே? நான் சொல்றதெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்ட புருஷன் பொண்டாட்டியோட கதையாக்கும்... மனுஷ வாழ்க்கைங்கறது இவ்வளவுதான்டீம்மா."

"மாமீ... நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு... என்னவரும் இப்படித்தான் அப்பப்ப நாங்க தனியா இருக்கும் போது, மனசை தொறந்து காட்டுவார்.. அவர் பேசறதை கேக்கும் போது எனக்கும் மனசே 'கொல்லு'ன்னு போயிடும். அப்படியே அவரை கட்டிக்கிட்டு வாய்ல வார்த்தையே வராம அவர் நெஞ்சுல தலை வெச்சு கிடப்பேன்."

"மனசு நிறைஞ்சிருக்கும்போது பேசறதுல அர்த்தமில்லேடீ.. மல்லிகா.."

"உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்துல, ஏதோ ஒரு வழியா எங்க செல்வா கல்யாணம் செட்டில் ஆயிடுச்சி... சுகன்யாவைத்தான் நிச்சயதார்த்ததுலே நீங்க பாத்தீங்களே... பொறுப்பான பொண்ணுன்னுதான் தோணுது... அவ மேல செல்வா தன் உயிரை வெச்சிக்கிட்டு இருக்கான்."

"அந்த பொண்ணும் செல்வாவை தன் கண்ணுக்குள்ளே வெச்சிக்கிட்டிருக்கா... அந்தப் பொண்ணுக்காக, ஒரு நாள் செல்வா, இத்தனை வருஷமா பெத்து வளத்த என்னையே தூக்கி எறிஞ்சி பேசிட்டான்னா... பாத்துக்கோங்களேன் மாமீ... எப்படியோ அவங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தா சரி..."

"அப்படித்தான் இருக்கணும்.."

"வீட்டுக்கு சுகன்யா வந்துட்டாள்ன்னா... 'இந்தாடியம்மா புடிச்சுக்கோடீ'ன்னு என் கிட்ட இருக்கற சாவிக்கொத்தை அவ கையில குடுத்துட்டு, நானும் இந்த மாதிரி, 'ஹாயா' நாலு எடத்துக்கு உங்க கூட வர ஆரம்பிச்சுடுவேன்..."

"பாருங்கோ மாமீ... வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க வேண்டிய காலமா இருக்கு.. வீட்டுல ஒரு வயசு பொண்ணை வெச்சிக்கிட்டு, அவளை தனியா விட்டுட்டு, மனசுல எவ்வளவுதான் ஆசையிருந்தாலும், வெளியில எங்கேயும் போகமுடியலே..."

"ம்ம்ம்...நீ சொல்றதும் உண்மைதான்... லோகம் கெட்டுக்கிடக்கறது..."

"உங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன... குடும்பத்தை வீட்டுக்கு வர்ற மருமவ பாத்துக்கட்டும்... எனக்கு மனசு நெறைஞ்சு போச்சு மாமீ... ஊர் ஊரா போய், முருகனை தரிசனம் பண்ணணுங்கற ஆசை மனசுல முட்டிக்கிட்டு நிக்குது... ஆனாலும் ஒரே நாள்லே சட்டுன்னு ஓடம்பை இழுத்து மூடிக்கவா முடியும்.. அப்பப்ப... தாலிகட்டின ஆம்பளை முந்தானையை புடிச்சி இழுக்கும் போது... அவன் கிட்ட எனக்கு வேணாம்ன்னு எப்படி சொல்றது...? சித்த நேரம் இடுப்புத் துணியை வெலக்கிக்கிட்டு செவனேன்னு மல்லாந்து கிடக்கிறேன்.."

"மல்லிகா.. நோக்கு அப்படி என்னடீ வயசாயிடுத்து...? இப்படி அலுத்துக்கறயே... இன்னும் உனக்கு இடுப்பு நெக்குவிட்டுப் போகமாத்தான் இருக்கு... மாரெல்லாம் சரியாம செலை மாதிரிதான் இருக்கே... இன்னும் நீ கொறஞ்சது ஆறேழு வருஷம் உங்காத்துக்காரனை ராவு பகல்ன்னு இல்லாம தாக்குப்பிடிக்கலாம்டீ.. புருஷா எல்லாரும் இந்த விஷயத்துல ஒரே மாதிரிதான்.. ஒரு தவிட்டுக் கூடையை தூக்கற அளவுக்கு அவா ஒடம்புல வலு இருந்தாப் போதும்ன்னு என் மாமியார் சொல்லுவார்..." சொல்லிவிட்டு சிரித்தாள், சியாமளா.

"வர்ற பங்குனிக்கு நாப்பதெட்டு முடிஞ்சுடும்... மருமவ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்... ராவுலே தனியா கூடத்துலயோ, பின் கட்டு வெராண்டாவுலேயோ, மொடங்கிக்கறதுதான் மரியாதைன்னு எனக்குத் தோணுது.. ஆனா மாமீ.. நெஜம்மா மனசு தொறந்து சொல்றேன்... இன்னைக்கு காலையிலேருந்து பெரியவங்க உங்க கூட இருக்கேன்... உங்கக்கூட பேசிக்கிட்டு இருக்கறதுலே, என் மனசே நெறைஞ்சு போயிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." மல்லிகா தன் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தாள்.


"கவலையே படாதேடீ மல்லிகா... நம்ம மீனாட்சி கல்யாணமும் ஏறக்குறைய முடிஞ்ச மாதிரின்னுதான் நினைச்சுக்கோடீ... எல்லாத்தையும் நீ கும்பிடற அந்த திருத்தணி முருகன் நல்லபடியா நடத்தி முடிச்சிப்பிடுவான்... அவன் மேல பாரத்தைப் போட்டுட்டு சித்தம் போக்கு சிவம் போக்குன்னு இருடீ..."

"என்ன சொல்றீங்க மாமீ... நீங்க பேசறது எனக்கு சட்டுன்னு பிடிபடலையே.." மல்லிகா தன் கண்களை மலர்த்தி சியாமளாவைப் பார்த்தாள்.

"நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாம கேளுடீ.. ஒரு வாரமாவே உங்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசனை பண்ணிண்டே
இருந்தேன். இப்ப என்னால சொல்லாம இருக்கவும் முடியலே.. ஆனா இப்போதைக்கு நான் சொல்ற இந்த விஷயத்தை உன் மனசுக்குள்ளே வெச்சுக்கோ..."

"ஆகட்டும் மாமீ.."

"உன் பொண்ணு மீனாவை தன் படிப்புல கவனமா இருக்கச்சொல்லு.. நல்லா, கருத்தா படிக்கற கொழந்தை அது... கடைசீ செமஸ்டர் இல்லியா இது அவளுக்கு.. "

"ஆமாம் மாமீ.."

"மீனாவோட படிப்பு முடிஞ்சுடட்டும்... நடக்கறதெல்லாம் நல்லதுக்குதான்னு இருந்தோம்னா, வாழ்க்கையில டென்ஷனே இல்லே..." சியாமளாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மிளிர்ந்தது.

"சீக்கிரம் சொல்லுங்க மாமீ... என்ன விஷயம்...? எனக்கு படபடன்னு வருது..."

"நம்ப மீனாட்சீ கல்யாணத்தைப் பத்தித்தான் சொல்றேன்..!" முகத்தில் புன்னகையுடன் பேசினாள் சியாமளா.

மாமீ என்ன சொல்றா... வெளங்கற மாதிரியும் பேசமாட்டேங்கறா... சுத்தி வளைச்சுப் பேசறாளே? மீனாட்சி கல்யாணமே இவ கையில இருக்கற மாதிரியில்லா பேசறா? மீனாவோட படிப்பு முடியட்டும்ங்கறா... சியாமளாவின் நீளமான பீடிகையை கண்ட மல்லிகாவின் மனதுக்குள் ஒரு சிறிய கலவரம் எழுந்தது.

மல்லிகாவின் முகத்தில் இலேசாக மிரட்சியின் இழையொன்று ஓட ஆரம்பித்தது. மல்லிகா தன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். அறைக்கு வெளியிலிருந்த காலி இடத்தில், ஒரு பாயை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராமசுவாமி, வந்த இடத்திலும் தன் வழக்கமான பாணியில், நடராஜனிடம் எதைப்பற்றியோ தீவிரமாக விவாதம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது. நடராஜன் அவர் பேசுவதை, மவுனமாக முகத்தில் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

"என்ன சொல்றீங்க மாமீ.. சொல்றதை சட்டுன்னு நேராச் சொல்லுங்களேன்..?" மல்லிகா அவசரப்பட்டாள்.

"செல்வாவோட ஃப்ரெண்ட் சீனு இருக்கானோல்லியோ... அவன் மேல நம்ம மீனாட்ச்சிக்கு ஒரு லயிப்பு இருக்கும்ன்னு நேக்கு தோணறதுடீ..." சியாமளா பட்டும் படாமல் பேசினாள்.

"மாமீ.. மீனா இன்னும் ஒரு சின்னக்குழந்தை... உங்களுக்கு தெரியாததா? சீனு இன்னைக்கு நேத்தா எங்க வீட்டுக்கு வர்றான்... போறான்.. மீனாவும் அவனும் அப்பப்ப அவங்களுக்குள்ள சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை புடிச்சுக்குவாங்க.. ஒருத்தரை ஒருத்தர் கை நீட்டி அடிச்சிப்பாங்க.. கொஞ்ச நேரம் மூஞ்சை தூக்கி வெச்சுக்குவாங்க.. அப்புறம் அஞ்சே நிமிஷத்துல ஒண்ணா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இழைஞ்சுக்குவாங்க.. இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லே மாமி..."

"மல்லிகா நீ ஒரு அசடுடீ... மீனா நீ பெத்த பொண்ணு... நீ அவளை ஒரு தாயா பாக்கறே... வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கே... என்ன இருந்தாலும் நான் வேத்து மனுஷி இல்லயா? நீ பாக்கற அதே விஷயங்களை என் கண்ணும், மனசும் வேற விதமா பாக்கலாமில்லியா?"

"மாமீ... நீங்க சொல்றதும் சரிதான்.. அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா பழகறது தப்புன்னு சொல்றீங்களா? இல்லே அவங்க பண்ணது எதுவும் உங்க கண்ணுல தப்பா பட்டிருக்கா?"

"மல்லிகா... மீனா கெவுன் போட்டுண்டு இருந்த காலத்துலேருந்து அவளை நான் பாத்துண்டு இருக்கேன்... நேக்கு அவாளைப் பத்தி நன்னாத் தெரியும்... அந்த ரெண்டு குழந்தைகளையும் உண்மையை இல்லாத எதையும் சொல்லி, எக்குத் தப்பா பேசினா என் நாக்கு அழுகிப் போயிடும்.." சியாமளா தன் கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

"நீங்க என்னதான் சொல்றீங்க...?"

"மல்லிகா, இன்னும் அவா ரெண்டு பேரும் நீ நெனைச்சுண்டு இருக்கற மாதிரி, சொப்பு வெச்சுண்டு, மணல் வீடு கட்டி விளையாடற கொழந்தைகளும் இல்லேங்கறதை நன்னாப் புரிஞ்சுக்கோ.. நல்லாப் படிச்சு, வயசும் மனசும் முதிர்ந்த வாலிபக் குழந்தைகள்... குழந்தைகள் ரெண்டும் பாக்கறதுக்கு கண்ணுக்கு நெறைஞ்சு இருக்காங்க... இந்த வயசோட, அவாளாடோ இளமையின் விளையாட்டு இருக்கே அதை சாதாரணமா நீ எடுத்துக்காதேடீ... அவா மனசையும், ஒரு தாயோட ஸ்தானத்துலேருந்து வெளியில நின்னு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடீ..." 

"நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க..." மல்லிகா, சியாமளாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

"பத்து பதினைஞ்சு நாள் மின்னாடீ, உங்காத்துல, அவா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா நிண்ணுண்டு, தங்களையே மறந்து, இந்த உலகத்தையே மறந்து, பேசிண்டு இருந்தாளாம்... அவங்க இருந்த நிலைமை பாக்கறவங்களுக்கு சாதாரண நட்பா, தோழமையா தெரியாதாம்..."

"நீங்க பாத்தீங்களா மாமி..."

"இல்லேடியம்மா... அவாளை எங்காத்துக்காரர்தான் பாத்ததா சொன்னார்."

"மாமா ஏன் அவங்களைப் பத்தி தப்பா சொல்லப் போறார்..?"

"உனக்குத்தான் மாமாவைப்பத்தி நன்னாத் தெரியுமே... அந்த காலத்து மனுஷன்... இன்னைய உலகத்தை புரிஞ்சுக்கற பக்குவமில்லாதவர்... தன் பிள்ளைகள் வீட்டை விட்டுட்டு போய், தாங்களா தங்க கல்யாணத்தை முடிச்சிக்கிட்டதிலேருந்து, இந்த காலத்து சின்னஞ்சிறுசுகள் யாரையாவது நெருக்கமாப் பாத்தா வெல வெலத்து போயிடறார்...:"

"வாஸ்தவம்தானே மாமீ..." மரியாதைக்கு நிதானமாக பேசிக்கொண்டிருந்தாளே தவிர, மல்லிகாவும் வெலவெலத்துத்தான் போயிருந்தாள்.

"அவா ரெண்டு பேரையும் நெருக்கமாப் பாத்ததும், அரக்கப் பரக்க போட்டது போட்டபடி, உங்காத்துக்கு ஓட்டமா ஓடி வந்திருக்கார்... உங்காத்து வாசல்லே எப்பவும் தூங்கிண்டிருக்கற நொண்டிக் கருப்பன், அன்னைக்குன்னு சனியன் முழிச்சிண்டு இருந்ததாம், அது இவரைப் பாத்து கொலைச்சதாம்.. அப்படியே யூ டர்ன் அடிச்சி எங்காத்துக்கே ஓரே ஓட்டமா ஓடிவந்திட்டார்..."

"அவாத்துல, செல்வா கல்யாண விஷயத்துல, அவாளே டென்ஷனா இருக்கா..! செல்வா விஷயம் நல்லபடியா நடந்து முடியட்டும்..!! அதுக்கப்புறம் இந்த விஷயத்தைப் உன் காதுல பக்குவமா போடறேன்னு... நான்தான் எங்களவரை அன்னைக்கு இழுத்துப் பிடிச்சி நிறுத்தினேன்.."

இது என்ன வம்பா போச்சே? இது வம்பு பேச்சாயிருந்தால் கூட பரவாயில்லையே? மல்லிகாவுக்கு தன் தலை சுற்றுவது போலிருந்தது.

"மாமீ.. என் மனசு பதைச்சு போவுது... அவங்களுக்குள்ள தப்பா எதுவும் நடந்துடலையே?" குரலை தழைத்து கொண்டு கேட்டாள், மல்லிகா.



"என்னடீ... பைத்தியமாட்டம் உளர்றே நீ... சீனுவாசன் நம்ம ராகவனோட பிள்ளை... எப்பவும் தப்பு தண்டாவுக்கு போகாத குடும்பம்.. அந்த குடும்பத்துல பொறந்த சீனு மட்டும் தப்பு தண்டாவா எதுவும் பண்ணிடுவானோ? இல்லே... நம்ம கொழந்தை மீனாதான் தப்பு பண்ணிடுவாளோ? நம்ம கொழந்தைகளை நாம நம்பலன்னா வேற யார்டீ நம்புவா?"

"அவா ரெண்டு பேரும், மாடி கைப்பிடி பக்கத்துல ஒருத்தர் தோள்ல ஒருத்தர் கையை போட்டபடி நின்னுன்டு இருந்தாளாம்.. அங்க அவா அதுக்கு மேல என்ன தப்பு பண்ண முடியும்...? நாளைக்கு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம், நிதானமா மீனாவோட மனசுல என்ன இருக்குன்னு கேளுடீ..."

"ம்ம்ம்.." சுரத்தில்லாமல் முனகினாள், மல்லிகா.

"நன்னாப் படிக்கற கொழந்தைடீ அது... முதல்ல அவ காலேஜ் பரீட்சை முடியட்டும்.. கன்னா பின்னான்னு நீ பாட்டுக்கு எதையாவது பேசி, அவ மனசை கொழப்பி விட்டுடாதே, இப்பத்திலுருந்தே நீயும் உன்னைப் போட்டு குழப்பிக்காதே.. உன் ஆம்படையானையும் கொழப்பிடாதே!"

"மாமீ... அவரோட தங்கை நளினி அமெரிக்காவுலேருந்து அடுத்த மாசம் வர்றா... அவ புள்ளை இந்தியாவுலதான் செட்டில் ஆவேன்னு தலை கீழா நிக்கறானாம்.. இங்கே ஒரு வீடு வாங்கணுங்கற ப்ளான்ல இருக்கா.. மீனாவை அவ தன் புள்ளைக்கு பண்ணிக்கணும்ன்னு ஒரு நெனைப்பு இருக்குமோன்னு இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்..."

"இந்த சமயத்துல நீங்க இப்படி ஒரு கல்லைத் தூக்கி என் தலையில போடறீங்க.. செல்வாதான் அவனுக்கு புடிச்சவளை இவளைத்தான் கட்டிப்பேன்னு, இழுத்துக்கிட்டு வந்துட்டான்.. மீனாவுக்காவது எங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தோம்..." மல்லிகாவின் குரல் பிசிறடித்தது.

"மல்லிகா... எங்காத்துல நடந்த கூத்தையெல்லாம் நீ பாத்தேயில்லையா... ரெண்டைப் பெத்தோம்.. ஆசையா வளத்தோம்... அதுகளுக்கு என்னக் குறை வெச்சோம்.. கல்யாணம்ன்னு வந்தப்ப, ரெண்டும் அதது வழியை அதுகளா பாத்துக்கிட்டு போயிட்டதுகள்... எவ்வளவு நாளைக்கு அதையே நெனைச்சு பொலம்பறது..? பொலம்பறதால ஏதாவது பலன் உண்டோ? கெழங்கள் நாங்க எங்க மனசை திடப்படுத்திக்கலையா..."

"நீ திருத்தணி முருகனை கும்பிடறே.. அவா காஞ்சி வரதனை சேவிச்சிக்கிறா.. எல்லா சாமியும், எல்லா பூதமும் ஒண்ணுதான்டீ... குழந்தைகளோட ஆசைக்கு குறுக்கே நிக்காதீங்கோ.. ரெண்டுமே நல்ல குழந்தைகள்... அவா ஜோடிப்பொருத்தமும் நன்னாத்தானிருக்கு.. யாருக்கு எங்கேன்னு முடிச்சு போட்டு இருக்கோ அதை நாம வெட்ட முடியாதுடீ... இதை நீ நன்னாப் புரிஞ்சுக்கோ... வீணா மனசை கெட்டுப் போக்கிக்காதே.."

"சரி மாமீ.. உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி..."

"மல்லிகா... நான் அட்வைஸ் பண்ணலேடீ... யதார்த்தத்தைச் சொல்லறேன்.. நீ சொன்ன மாதிரி மீனா ஒரு தங்கமான குழந்தைதான்.. கறிவேப்பிலை கொத்து மாதிரி இருக்கா... ரொம்ப மிரட்டிடாதே... மின்னாடி செல்வாவோட கூச்சல் போட்ட மாதிரி இவகிட்டவும் கூவாதே..."

"சரி மாமீ..."

"எதுவாயிருந்தாலும் நிதானமா பக்குவமா கேளு... இந்த காலத்து குழந்தைகளை பெத்துட்டோங்கற உரிமையில, பெத்தவா யாரும் கோச்சிக்கவும் முடியலை... அதுவும் பொம்பளை கொழந்தைகளை ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே... எல்லாம் தெரிஞ்ச மாதிரி தஸ்சு புஸ்ன்னு இங்லீஷ்ல பேசறதுகள்... அப்புறமா முன்னுக்குப் பின்னா, ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா... 'நீ என்னைப் பெத்தவதானே? நீ ஏன்டீ எனக்கு புத்தி சொல்லலேன்னு', மனசு ஒடைஞ்சு கண்ணை கசக்கிண்டு நிக்கறதுகள்... "

"நல்லாச் சொன்னீங்க..." மல்லிகா தன் புடவை முந்தானையால் தன்னைப் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டாள். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு தீடிரென குளிர்வது போலிருந்தது.

"மல்லிகா நேக்கும் தூக்கம் கண்ணைச் சுத்தறது.. அவா புருஷாள் வந்து படுக்கறப்ப படுக்கட்டும்... நான் இப்படியே என் கட்டையை சாய்ச்சுக்கறேன்..." உட்க்கார்ந்திருந்த பாயிலேயே தன் உடலை சுருக்கிக்கொண்டாள், சியாமளா.

மல்லிகாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை என்ற போதிலும், சியாமளாவின் பக்கத்திலேயே அவளும் படுத்தாள். மனம் வெகு நேரம் இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. 

சீனு தங்கமான பையன்தான்... கெட்டப்பழக்கம்ன்னு சொன்னா இந்த தெரு முனையில நின்னுக்கிட்டு, சிகரெட்டை ஊதி ஊதி தள்ளி ஒடம்பை கெடுத்துக்கறானே... இதைத்தான் சொல்லணும்... மல்லிகாவின் மனம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது.

'அம்மா... இப்பல்லாம் சீனு வாரத்துக்கு ஒரு தரம் 'கட்டிங்' வுடறான்.. இவன் கூட சேர்ந்து உன் புள்ளை செல்வாவும் குட்டிசுவரா ஆயிடப் போறான்... இந்த சீனுவுக்கு நீ ரொம்ப செல்லம் குடுக்கறே... சனிக்கிழமை வந்தாப் போதும், வாரத்துக்கு ஒரு தரம் குடிச்சுட்டு வந்து நம்ம வீட்டு மாடியில உருள்றான். அவனை கண்டிச்சி வை. நீ சொன்னா அவன் கொஞ்சமாவது அடங்குவான். என்னைக்காவது ஒரு நாள் அவங்க அத்தை உஷா உன் கிட்ட சண்டை பிடிக்கப் போறாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ...'

மீனாதான் அன்னைக்கு நாள் பூரா புலம்பி புலம்பி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தா.. அந்த புலம்பலும் கூச்சலும் தன் மனசுக்கு புடிச்சவன் கெட்டு சீரழியறானேங்கற ஆதங்கத்துல வந்ததுதானா.. இது இந்த மூளை கெட்ட முண்டத்துக்கு புரியலியே.. என் பொண்ணு மனசுல இருக்கறதை என்னால புரிஞ்சுக்க முடியலை... எதிர் வீட்டுக்காரி எனக்கு எடுத்து சொல்ல வேண்டியதா இருக்குது...

இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு.. டேய் சீனு.. இது என்னடா வேலை.. குடிச்சுட்டு இந்த வீட்டுக்குள்ளே நுழையாதேன்னு ஒரு அதட்டு அதட்டினா என் பேச்சைக் கேக்காமலா போயிடுவான் அவன்...? மனதுக்குள் குமைந்தாள் மல்லிகா.

அம்மா.. இவன் என் கூட படிக்கற பையன்ம்மா.. என் கிளாஸ்ல என் பக்கதுலதான் எப்பவும் உக்காருவான்... இன்னைக்கு ஸ்கூல்லேருந்து வரும் போது மழையில நல்லா நனைஞ்சுட்டோம்.. இவனுக்கு ரொம்ப குளுருதாம்... என்கிட்ட இருக்கற காய்ஞ்ச சொக்கா ஒண்ணு இவனுக்கு குடுக்கறேம்மா...

செல்வாதான் சீனுவை கொட்டற மழையில ஒரு நாள் வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு வந்தான். அப்ப செல்வாவுக்கு பத்து வயசு இருக்குமா. இன்னைய தேதிக்கு அண்ணன் தம்பியாத்தான் பழகிக்கிட்டு இருக்கானுங்க ரெண்டு பேரும்.

சீனு தயங்கி தயங்கி வீட்டுக்குள்ள நுழைஞ்சது இன்னும் என் கண்ணுலேயே நிக்குது... உன் பேரு என்னடா கண்ணுன்னேன்.. பசிக்குதுன்னு பதில் சொன்னான்... வீட்டுல இருந்த ஒரு அடையை ரெண்டா புட்டு ஆளுக்கு ஒரு துண்டா கையில குடுத்தேன்.. அந்த குழந்தை அவசர அவசரமா அடையை பிச்சித் திண்ண அழகைப் பாத்துட்டு நெஞ்சு நிறைஞ்சு போய் நின்னேன்..

அப்புறம்...? அப்புறம் என்னா..?? அம்மா... அம்மான்னு என் முந்தானையை புடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுக்குள்ள அலையறான்.. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னே வந்து நிக்கறான். என் வீட்டு சாக்கடை முதல் கொண்டு குத்தி விடறான்.. என்னைக்காவது அவனை விட்டுட்டு சாப்பிட மனசு போவுதா?

வீட்டுல எது செய்தாலும் அவனுக்கு முதல்ல ஒரு பங்கு எடுத்து வெச்சுட்டுத்தான் நான் என் வாய்ல போடறேன்.. அந்த அளவுக்கு இந்த வீட்டோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் போயிட்டான். ரெண்டு நாள் அவன் மூஞ்சியைப் பாக்கலன்னா... அவனுக்கு என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோன்னு மனசு பதறிப் போவுது.

எம்மா... என்னை விட உனக்கு சீனுதான் எப்பவும் ஓஸ்தின்னு.. அப்பப்ப நான் பெத்த என் புள்ளை செல்வாவே மூஞ்சை தூக்கி வெச்சிக்கற அளவுக்கு என் கிட்ட செல்லம் கொண்டாடறான்... எந்த ஜென்மத்து குடுக்கல் வாங்கல் பாக்கி இருக்கோ.. இது அந்த திருத்தணி முருகனுக்குத்தான் வெளிச்சம்...

பதினைஞ்சு வருஷமா இந்த வீட்டுக்குள்ள இன்னொரு புள்ளையா வலம் வர்றவன், இப்ப என் வீட்டு மாப்பிள்ளையா வர்றேங்கறான்.. அம்மான்னு கூப்பிடற வாயால அத்தேன்னு கூப்பிடுவானா..? இல்லே மாமீன்னு கூப்பிடுவானா..?. இந்த ஒறவு மொறை சரிப்பட்டு வருமா?

செல்வா என் இனத்தை விட்டுட்டு, வேற இனத்துலேருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வர்றேன்னப்ப, வந்த கோபம் இவன் விஷயத்துல ஏன் எனக்கு வரலே..? என் புருஷனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர் என்ன சொல்லுவாரு?

"மல்லிகா உன் புருஷன் சொல்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்டீ.. நீ என்னடீ சொல்றே?" அவள் மனம் அவளிடம் எள்ளியது.

"விஷயத்தை கேட்டதுலேருந்து எனக்குத்தான் ஒண்ணும் புரியலியே? காலும் ஓடலை.. கையும் ஓடலே... மனசு நிலை கொள்ளலை..." நகைக்கும் மனசுக்கு பதில் கூறினாள், மல்லிகா.

"நிதானமா யோசனை பண்ணுடீ... பத்மாவுக்கு ஓரே புள்ளடீ இவன்... பிக்கல் பிடுங்கல் ஒண்ணும் கிடையாது..."

"உண்மைதான்.. கல்யாணம் முடிஞ்ச மூணு வருஷத்துல நாத்தானார் புருஷன் ஆகாசத்துல எரிஞ்சு போயிட்டான்.. வீட்டுக்கு வெத்து நெத்தியா திரும்பி வந்தவளை, தன் வீட்டுல, தன் கூடவே வெச்சுக்கிட்டு, அவ சொல்றபடி குடும்பம் பண்ற, நல்ல மனசுக்கு யாருக்கு வரும்.?

பத்மாவுக்கு தங்கமான குணம்... என் பொண்ணு மீனாவை பெத்த பொண்ணா நடத்துவாளுங்க ரெண்டு பேரும்.. இதுல எனக்கு ஒண்ணும் சந்தேகமேயில்லை.."

"அப்புறம் என்னடீ தயக்கம்...?"

"கல்யாணம்ன்னு வந்தா நாலு விஷயத்தையும் யோசிக்கணுமில்லையா?"

"நல்ல ஆஸ்தீக குடும்பம்.. கடலாட்டம் சொந்த வீடு.. சீனுவோட அப்பாவும் வாயில்லாப் பூச்சி.. வாயைத் தொறந்தா 'வரதா.. வரதா'ன்னு பெருமாளோட பேருதான் வரும்..."

"ஆனா என் நாத்தானாருக்கு என்ன பதில் சொல்றது..." மல்லிகாவின் மனதில் இந்த கேள்வி வந்தது.

"அது உன் புருஷன் நடராஜன் பாடுன்னு விட்டுட்டு நீ ஒதுங்கிக்கோடீ..."

"நல்லாருக்கே.. என் புருஷன் என் மேல உயிரையே வெச்சிருக்கான்... பிரச்சனைன்னு வரும் போது அவனை நான் எப்படி தனியா விடறது...?" மல்லிகாவின் மனது தட்டமாலை சுற்றிக்கொண்டிருந்தது. தன் விழிகள் சொக்கி எப்போது அவள் அயர்ந்து தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

***

"முகூர்த்த நேரம் நெருங்குதுடீ.. என்ன இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கறே..." விடியற்காலை அஞ்சரை மணிக்கு நடராஜன் அவள் தொடையை தொட்டு உலுக்கியபோதுதான் அவள் தூக்கம் கலைந்தது.

"என்னங்க... பொழுது விடிஞ்சிடிச்சா? சியாமா மாமீ எங்கே.." விருட்டென எழுந்து உட்கார்ந்தாள் மல்லிகா.

"மாமாவும் மாமியும் ரெண்டாவது டோஸ் காபி குடிக்க டைனிங் ஹால்லே எப்பவோ ஆஜராயிட்டா.. நீதான் காலை விரிச்சு போட்டுக்கிட்டு, நம்ம பெட்ரூம்ல தூங்கற மாதிரி இடுப்பு புடவை நழுவினது கூட தெரியாம மல்லாந்து கிடக்கறே..!" நடராஜன் வாய்விட்டு சிரித்தார்.

"ம்ம்ம்... என்னை எழுப்ப வேண்டியதுதானே நீங்க.." சிணுங்கியவாறே நடராஜன் தோளில் சுருண்டாள் மல்லிகா.

"ராமசுவாமி... கீழே கிச்சன்லேருந்து ப்ளாஸ்க்ல காபி கொண்டந்து வெச்சிருக்கார்.. சட்டுன்னு ஒரு வாய் குடிச்சுட்டு... ரெண்டு சொம்பு தண்ணியை ஒடம்புல ஊத்திக்கிட்டு கெளம்புடீ..." மல்லிகாவின் முதுகை மெல்ல வருடிய நடராஜனின் கை அவள் இடுப்பில் தவழ்ந்தது. மனைவியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவரின், அவர் அணிந்திருந்த புது சட்டை வேட்டியின் வாசம், அவள் மூக்கில் கும்மென ஏறியது.

"ம்ம்ம்.... நகருங்க... தள்ளி உக்காருங்க... கொஞ்சம் கிட்ட வந்தா போதும்... கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களே... நேரம் காலம் ஓண்ணும் இல்லாம உங்க வேலையை ஆரம்பிச்சுடுவீங்களே.. வெக்கம் கெட்ட மனுஷன்..." மீனா சூடான பில்டர் காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தாள்.



"புது எடத்துக்கு வந்திருக்கோம்.. மனுசன் ரூட்டீன் வேலைகள்லேருந்து நகர்ந்தாலே... அவன் மனசுக்குள்ள உற்சாகம் பொங்கி பொங்கி வருதுடீ... பத்தாக்குறைக்கு தனி ரூம்ல, நீயும் நானும் ரெண்டு பேரு மட்டும் இருக்கோம்.. நீ நிம்மதியா தூங்கி எழுந்ததும் உன் முகமே களையா இருக்குடீ.." நடராஜன் குழைந்து கொண்டிருந்தார்.

"ரொம்ப வழியாதீங்க..."

"அய்யரு, மாமியோட வெளியில போயிட்டாரு... இப்படி அதுவா கிடைக்கற சான்சை விடறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... இப்பதான்டீ... நீ என் கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகாத் தெரியறே... லைஃபோட அர்த்தமே இந்த வயசுலதான் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு..." நடராஜன் இதமாக சிரித்தார். சட்டென மல்லிகாவை தன் புறம் வளைத்து இழுத்தார். அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார்.

"போதும்... விடுங்க... உங்க சட்டைல்லாம் கசங்குதுங்க... நான் இன்னும் பல்லுகூட துலக்கலை.. வாய்ல முத்தம் குடுக்கறீங்க?" சிணுங்கினாள், மல்லிகா.

கணவனின் இதமான வார்த்தைகளிலும், சூடான முத்தத்திலும் அவள் மனம் நிறைந்திருந்தது. நடராஜனின் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாக ஒரு முறை பதித்தவள், விருட்டென எழுந்து பாத்ரூமுக்குள் ஒரு சிறு பெண்ணைப் போல ஓடினாள். 



சுகன்யா... 72

"மீனா.. என்னடி இது...? நீ படிச்சவதானே... நீ பண்ணது உனக்கே நல்லாயிருக்காடீ...?" சீனுவின் முகம் எக்கச்சக்கத்திற்கு கோபத்தில் சிவந்து போயிருந்தது. தன் தலையை அவன் அழுந்த தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான். தாறுமாறாக அவனுக்கு வந்த கோபத்தில் அவன் இடது கை விரல்கள் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.

"ஏன்.. கையில வந்த கட்டிங்க் சான்ஸ்.. என்னால பாதி வழியில பாழாப் போயிடிச்சேன்னு... உனக்கு வெறுப்பா இருக்கா..." மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

"ப்ளீஸ் மீனா.. என் மேல உனக்கு என்னதான் அக்கறை இருந்தாலும், என்னதான் நீ என் காதலியா இருந்தாலும், நீ பண்ணது மட்டும் சரியா.. வேலாயுதத்துக்கு மேனர்ஸ் இருக்கான்னு கேட்டியே... உனக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்காடீ.. சொல்லுடீ.. மீனாவின் தோளைப் பிடித்து உலுக்கினான் சீனு.."

"சீனு.. நீ கோவத்துல இருக்கே.. என் மேலேருந்தே உன் கையை எடு மொதல்லே.. கோவப்படாதே.. கூல் டவுன்.. நல்லா யோசனைப் பண்ணி பாரு.. நான் மட்டும் இப்ப இங்க இல்லேன்னா.. நீ குதிச்சிக்கிட்டு அந்த வேலாயுதம் வாலை புடிச்சிக்கிட்டு போயிருப்பேல்லா..."



"போதும்டீ... காலையிலேருந்து உன் லெக்சரை கேட்டு கேட்டு என் காது புளிச்சுப் போச்சு..." சீனு திரும்பவும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மீனா அறை சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள்.

"இவனை மாதிரி ஆளையெல்லாம் இப்படித்தான் டீரீட் பண்ணணும்... அப்பத்தான் அவனுங்களுக்கு புத்தி வரும்..." அவள் குரல் வெடித்துக்கொண்டு வந்தது.

"மீனா.. நீ பேசறது ட்டூ மச்... ஆஃப்டர் ஆல் வேலாயுதம் என் ஃப்ரெண்ட்... அவனுக்கு புத்தி சொல்றதுக்கு நீ யாருடீ?"

"அக்ரீட்... நான் உனக்கு புத்தி சொல்லலாம்லே.. பொறுக்கி ராஸ்கல் அவன்.. அவனுக்கு என்ன தைரியம் இருந்தா உன்னை 'நாட்டுக் கோழி அமுக்க' கூப்புடுவான்.."

"மீனா.. பிளீஸ்.. போதும்டீ..."

வேலாயுதத்தின் ஒரு சிறு வார்த்தை மீனாவை எந்த அளவுக்கு உசுப்பேத்தியிருக்கிறது என்பது சீனுவுக்கு மெல்ல மெல்ல புரிந்தது. அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு, கோபத்தில் பொங்கி எழும் தன் காதலியை பரிதாபமாகப் பார்த்தான். மீனாவுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது.

"கோழி அமுக்கறதுன்னா என்னடா அர்த்தம்..? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா..? நான் ஒண்ணும் கோணம்பட்டி கிராமத்துலேருந்து இன்னைக்கு காலையிலதான் கோயம்பேடு பஸ் ஸ்டேண்டல, நாலு முழம் கனகாம்பரம் பூவை தலையில சொருகிக்கிட்டு வந்து கருப்பு பொட்டியோட வந்து இறங்கலே...

"இந்த ஊர்லேயே பொறந்து இந்த ஊர்லேயேத்தான் வளந்து... நாலுவருஷமா இந்த சென்னையிலேயே அடவாடித்தனத்துக்கு பேர் போன இஞ்சினீயரிங் காலேஜ்லதான் நானும் படிக்கிறேன்..

"அய்யோ.. அய்யோ.. என்னடீ சொல்றே நீ?" சீனு கூவ ஆரம்பித்தான்.

"உன் வேலாயுதத்துக்கு அப்பன்ல்லாம் என் கூட என் க்ளாஸ்ல படிக்கறானுங்க.. கொழுத்துப் போய் பொதி காளை மாதிரி அலையற நீங்கள்லாம்... உங்களுக்குள்ள பேசிக்கற ஸ்லாங்க் லேங்க்வேஜ் எனக்குத் தெரியாதா? எனக்கும் நல்லாத் தெரியும்.. நான் பேச ஆரம்பிச்சேன் மவனே நீ செத்துடுவே... சொல்லிட்டேன்.."

"அய்யோ.. அய்யோ.. கொஞ்சம் நிறுத்துடீ கண்ணூ" சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

"அடிச்சுக்கடா.. நல்லா அடிச்சிக்கோ.. கோழி அமுக்கறதுன்னா.. துட்டுக்கு காலை விரிக்கறவ கூட படுத்து எழுந்துக்கறதுன்னுதானே அர்த்தம்.. ஆட்டைக் கடிச்சி.. மாட்டைக் கடிச்சி.. கடைசியா நீ இப்ப இந்த வேலையையும் செய்ய ஆரம்பிச்சிட்டியா... ஏன்டா இப்படீ உருப்படாம போறே? கீழே போனதும் உங்க அத்தைக்கிட்ட சொல்லவா இந்த கர்மத்தையெல்லாம்.."

"எம்மாத் தாயே.. உன் கால்லே விழறேன்டீ.. உனக்கு புண்ணியமா போவட்டும்.. ரெண்டு வருஷம் கழிச்சி இன்னைக்குத்தான் என்னைப் பெத்தவர் என் கிட்ட வாய்விட்டு பேச ஆரம்பிச்சிருக்காரு.. அந்த வேதாளத்தை திருப்பியும் மரம் ஏற வெச்சுடாதே..."

"அப்ப நான் பொலம்பறை செத்த நேரம் பொத்திக்கிட்டு கேளு..."

"எல்லாம் என் தலையெழுத்துடி மீனா... என் தலையெழுத்து... நீ வேலாயுதம் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டேடீ... அந்த நாய்க்கு சுத்தாம அறிவுங்கறேதே கிடையாது... செல்வாவை வேணா நீ கேட்டுப் பாருடீ.. செல்வாவுக்கு வேலாயுதத்தைப் பத்தி நல்லாத் தெரியும்..."

"ஆமாம்... அது ஒண்ணுதான் பாக்கி.. இந்த அசிங்கத்தை... நீங்க கட்டிங் வுட்டுட்டு, கோழி மிதிக்கற கூத்தை ... நான் என் அண்ணங்கிட்ட வேற டிஸ்கஸ் பண்ணணுமா.. ஒழுங்கா இருக்கற அவனும் கெட்டு குட்டிசுவரா போவணுமா.. இன்னொரு தரம் நீ என்னை வெளியில அழைச்சிக்கிட்டு போறேன்னா.. அவன் என்னை காறித் துப்பணுமா?"

"அடியே மீனா.. திங்கற சிக்கனை சொன்னான்டீ.. வேலாயுதம், ரெண்டு கால் கோழியைச் சொன்னான்.. ஹென்... ஹெச். ஈ. என். ஹென்.. அதைச் சொன்னான்டீ... நீ நினைக்கற மாதிரி அவன் சொன்னது எந்த பொம்பளையைப் பத்தியும் இல்லடீ.."

"பொய் சொல்லாதே.. பொம்பளைக்கு எத்தனை காலுடா... பொட்டைச்சிக்கு நாலு காலா.. கதை சொல்றியா நீ என் கிட்ட... சீனு.. நீ பொய் மட்டும் சொல்லதே.. பொய் சொல்றவங்களை பாத்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது..." மீனா பாய்ந்து சீனுவின் அருகில் வந்தாள். அவன் தலைமுடியை பிடித்து வேகமாக உலுக்க ஆரம்பித்தாள்.

"போச்சுடா.. ஆண்டவா.. பெருமாளே.. என்னைக் காப்பாத்துடா.. இவகிட்டேருந்து என்னைக் காப்பாத்துடா.." சீனு தன் கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான்.

"பெருமாள் பேரை நீ எடுத்துட்டேல்ல.. நான் நம்பறேன்.. என் தலையெழுத்து நீ சொல்ற எல்லாத்தையும் நான் நம்பித்தான் ஆவணும்... உன்னை நம்பி உன் பின்னாடி நான் வந்தேன் பாரு.. என் புத்தியை நானே என் செருப்பாலத்தான் அடிச்சிக்கணும்.." மீனாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எந்த நேரத்திலும் கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்துவிடும் போல், கண்ணுக்குள் தளும்பின.

"மீனா.. ப்ளீஸ்.. எதுக்குடி கண்ணூ.. இப்ப அழுவறே.. எதுக்கு எடுத்தாலும் ஏன்டீ கண்ணைக் கசக்கறே? எல்லாப் பொம்பளையும் இதைத்தான்டீ பன்றீங்க.. சாரிடீ எம்மா.. சாரீ.. நான் பாக்கற மொதல் பொண்ணே நீதான்.. திரும்பியும் நீ ஆரம்பிச்சுடாதே..."

"ரொம்பத்தான் நடிக்கிறே நீ..."

"மீனா.. மெதுவா பேசுடீ கண்ணு.. மேல யாராவது வந்துட்டா தப்பா நெனைப்பாங்கடீ.. ப்ளீஸ்.. என் கன்னுக்குட்டீ இல்லே நீ... வாடீச் செல்லம்.. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் டு யூ"

தன்னருகில் கோபத்துடன் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மீனாவின் இடுப்பில் தன் கையை தைரியமாகப் போட்டு கட்டிலில் உட்க்கார வைத்தான், சீனு. மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைத் துடைத்தான்.

"சீனு இப்ப நீ என்கிட்ட எதுவும் பேசாதே.. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேணாம்.. கீழே போலாம் வா... என்னை என் வீட்டுல கொண்டு போய் விட்டுடு.." மீனா முரண்டினாள்.

"கண்ணு.. இந்த மூஞ்சோட நீ கீழே போனா நான் ஒழிஞ்சேன்டீ... இப்ப நீ அழுதிருக்கேன்னு தெரிஞ்சா... என் அத்தை என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாங்கடீ ... உன் கிட்ட நான் படற பாடு போதாதா.. " சீனு கடைசியாகத் தன் துருப்பு சீட்டை எடுத்து வீசினான்.

"சீனு ப்ளீஸ்... நிறுத்துடா.. நான் உன்னை என்ன படுத்திட்டேன் இப்ப..?" மீனா
தன் கண்களை துடைத்துக்கொண்டாள். டேபிளின் மேலிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள்.

"தங்கம்...எனக்கும் ஒரு முழுங்கு தண்ணி உன் கையால குடுடீ.. என் வாயெல்லாம் உலர்ந்து போயிருக்கு.." எந்தப் பிட்டை போட்டு இவளை இப்ப கூலாக்கறது... மனதுக்குள் யோசித்துக்கொண்டே மீனாவின் முதுகை மெல்ல வருடினான், சீனு. 

"மீனா.."

"ம்ம்ம்.."

"பட்டூ.. நான் சொல்றதை கேளும்மா.. உன் மேல நான் எவ்வளவு ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா..."

"தெரியாது..."

"இப்படி ஒரே வழியா மூஞ்சை முறிச்சிக்கிட்டு பேசினா எப்டீம்மா.. ஐ லவ் யூ சோ மச்டீ செல்லம்.. " சீனுவின் விரல்கள் மீனாவின் பின் கழுத்தில் ஊர்ந்தன. அவள் கூச்சத்தில் நெளிந்தாள். சீனுவின் விரல்கள் அளித்த சுகத்தில், மெல்ல நெளிந்தவளின் உடலும், உள்ளமும் சிலிர்த்தது.

"நிஜமாவே அந்த வேலாயுதம்.. திங்கற சிக்கனைப்பத்தித்தான் சொன்னானா?"

"சத்தியமாடி... செல்லம்... என்னைப் பெத்த என் ஆத்தா பத்மாவதி மேல ஆணையாச் சொல்றேன்.. அவன் பொம்பளையைப் பத்தி பேசலடீ... அந்த நாய்க்கு பொம்பளையை நிமிந்து பாக்கவே தைரியம் கிடையாதுடீ..."

"ம்ம்ம்... உனக்குத் தைரியம் இருக்கா? நீ எவளையாவது நிமிந்து பாப்பியா?"

மீனா சீனுவின் பக்கத்தில் கட்டிலில் தயங்கி தயங்கி உட்கார்ந்தாள். சீனு அவளை நெருங்கினான். தன் வலது கையை அவள் தோளில் செலுத்தினான். தோளில் விழுந்த கை வெகு வேகமாக கழுத்திலிருந்து அவள் மார்பின் மேல் படிய, அவன் கையை அவள் விருட்டென பற்றிக்கொண்டாள்.

"என் வாழ்க்கையில ஒரு வயசுக்கு வந்த பொண்ணைத் தொட்டேன்னா.. அது நீதான்டீ.." சீனு அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

"சத்தியமா.. என் மேல ஆணையா?"

"சும்மா சும்மா சத்தியம் பண்ணா சொல்லாதடீ.. அப்புறம் அந்த சத்தியத்துக்கே மதிப்பு இல்லடீ செல்லம்.."

"சரி.. சரி.. இப்ப உன் கையை வெச்சிக்கிட்டு சும்மா இருக்கிறியா நீ?" மீனா முனகினாள். சீனுவின் விரல்கள் அவள் வலது மார்பை புடைவைக்கு மேலாக ஒரு முறை வருடியது. தயங்கி தயங்கி அங்கேயே நின்றன.

"மீனா... வேலாயுதமாவது.. அவன் ரூமுக்குள்ள ஒரு பிகரை செட் பண்றதாவது.. அதுவும் பட்டப்பகல்லே மூணு மணிக்கு... அவன் ஒரு பிசினாறிப் பயடீ.. அவன் வீட்டுக்காரனுக்குத் தெரிஞ்சுது.. அவன் இவனை செருப்பால அடிச்சி பொட்டி படுக்கையைத் தூக்கி ரோட்டுல கடாசிடுவான்.." மீனா தன் மூக்கை மெல்ல உறிஞ்சினாள்.. கண்களைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

"போதும்... போதும் நீ அவனைப் பத்தி பேசினது.." மீனா தன் தலையை சீனுவின் தோளில் சாய்த்துக்கொண்டாள். சீனுவின் கரத்தை இழுத்து தன் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

"தேங்க்ஸ்டீ.. மீனு..." சீனுவின் உதடுகள் மீனாவின் கன்னத்தை உரச, அவன் நாசி அவள் வாசனையை முகர்ந்து உள்ளுக்குள் இழுத்தன. சீனு, மீனாவின் நாபிக்குழிக்குள் தன் விரலை செலுத்த முயன்று கொண்டிருந்தான்

"ம்ம்ம். என்னடா பண்றே? எனக்கு கூசுதுடா சனியனே.." .

"பேசமா இருடீ சித்த நேரம்.... இந்த நேரத்துல சனியனை எதுக்கு கூப்பிடறே... " சீனு அவள் முகத்தைத் திருப்பி அவள் விழிகளில் தன் பார்வையை நேராக செலுத்தினான். கண்களால் தன்னை கட்டிக்கொள்ளுமாறு அவளை அழைத்தான்.

"சொன்னாக் கேளுப்பா.. நீ சொன்ன மாதிரி, உஷா அத்தை ரொம்ப ஷார்ப்... ரொம்பவே ஷ்ரூட்.. அவங்க முகத்தை பாத்து பேசவே எனக்கு பயமா இருக்கு.. நாம மேல வந்து ரொம்ப நேரமாவுது.. அவங்க நம்பளைத் தேடிக்கிட்டு மாடிக்கு வந்துடப் போறாங்க..." தன் இடது தோளை அவன் தோளோடு உரசி அழுத்தினாள், மீனா.

"அவங்க ரொம்ப டீசன்ட்ம்மா... அப்படீல்லாம் என் ரூமுக்குள்ள சட்டுன்னு வரமாட்டாங்க.. பத்தாக்குறைக்கு நீ வேற என் கூட இருக்கே... அவங்க கூட ரெண்டு நாள் இருந்து பாரு... அவங்களை உனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடும்."

"அவங்க என் கிட்ட என்னக் கேட்டாங்க தெரியுமா?" மீனாவின் உதடுகள் சீனுவின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன. அவள் கைகள் அவன் தோளை தழுவிக்கொண்டிருந்தன.

"நீ சொன்னாத்தானே தெரியும்..." சீனுவின் கை அவள் வயிற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"பீச்சுக்கு போய் வர்றீங்களான்னு என்னை கேட்டாங்க.." மீனா அவன் காதைக் கடித்தாள்.

"மெதுவாடீ.. நீ என்ன சொன்னே..?"

"ஆமாம்ன்னு சொல்லிட்டேன்.."

"அடிப் பாவீ... நீ போனதுக்கு அப்புறம் என் தலையை உருட்டுவாங்க..." சீனுவின் கை சட்டென, அவள் பூரிப்பை ஒரு முறை தொட்டுவிட்டு சட்டென வயிற்றுக்கு இறங்கியது.

"உன்னைக் கேட்டா நீ எதையாவது உளறி வெக்காதே.." மீனா அவனை எச்சரித்தாள்.

"எப்பக் கேட்டாங்க..?"

"அவங்க ரூம்ல நாங்க பேசிக்கிட்டு இருந்தோம்லியா.. அப்பத்தான்.." மீனா அவன் அலையும் கரத்தை இறுக்கினாள். மெல்ல அவன் கரத்தை தன் இடது மார்பில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

"ம்ம்ம்.." சீனு பரிதவித்தான். அந்த மெண்மையில் அவன் கை சூடேறியது.

"மீனு... உனக்கு சின்னதா இருக்குடீ..."

"பொறுக்கி ராஸ்கல்.. உன் லட்சணத்துக்கு இதுவே போதும்.."

"எல்லாம் என் தலையெழுத்து... சின்னதே போதும்ன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.."

"ஏண்டா இப்படி அலையறே?"

"வெளையாட்டுக்குச் சொன்னேன்டீ.."

"போதும் கையை எடு..."

"அதையும் ஒரு தரம் சைஸ் பாத்துடறேனே.."

"தொட்டே கையை வெட்டிடுவேன்..." சொல்லியது வாய். அவள் கை அவன் கையை இழுத்து வலது பக்க ஆரஞ்சின் மேல் வைத்தது.

"எம்ம்மா... நிஜமாவே போதும்டீ செல்லம்..." சீனு தன் தொடை நடுவில் பருக்க ஆரம்பித்தான். சீனுவின் புடைப்பை மீனாவின் இடுப்பு உணர்ந்து கொண்டது. இதுக்கு மேல இவனை விட்டா, இவன் இந்த கேப்ல குடும்பமே நடத்திடுவான். அவள், அவன் கவனத்தை வேறு புறம் திருப்ப முடிவு செய்தாள்

"சீனு... உங்க வீட்டுல உஷா அத்தை வெச்சதுதான் சட்டமா? உங்கப்பா கூட அவங்க பேசுன்னா பேசறாரு.. இல்லன்னா.. விட்டத்தைப் பாத்துக்கிட்டு அசட்டு சிரிப்பு சிரிக்கிறாரு..?

"மீனா... ஏன்டீ நீ இப்ப எங்க அப்பாவை இழுக்கறே... அவர் யார் பேச்சுக்கும் போவ மாட்டாரு... அம்மாவுக்க்கு நீ டி.வியை ஆன் பண்ணி வுட்டுட்டினா போதும்... அவங்க பாட்டுல ஸ்கிரீனுக்கு முன்னாடீ உக்காந்துக்கிட்டு தூங்கி வழிவாங்க..."

"எல்லாக் கேரக்டரும் இன்ட்ரஸ்டிங்கா இருக்காங்க.. உங்க வீட்டுல.."

"உஷா அத்தைக்கூட நீ அனுசரிச்சிப் போயிட்டா, நீதான்டீ இந்த வீட்டுக்கே ராணி.. இப்பத்துலேருந்தே நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா.. அவங்களை உன் கையில போட்டுக்கோ..." சீனுவின் கண்களில் ஏக்கமும், வேட்க்கையும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன.

"சரிப்பா... நீ எதுக்காக இப்ப என்னை மொறைச்சு மொறைச்சு பாக்கறே?" மீனாவின் கரம் தன் முந்தானையை சரி செய்து கொண்டது. வயிற்றிலிருந்து தன்னுடைய மார்பை நோக்கி மேலேறிய அவன் கையை வலுவாக இழுத்து தள்ளியது.

"உன்னை கடிச்சி திங்கணும் போல இருக்குடி எனக்கு..!!"

மீனாவை மேலும் நெருங்கிய சீனு அவளை வேகமாக தன்னை நோக்கி இழுத்தான். அவள் நாசியிலிருந்து கிளம்பிய மெல்லிய சுவாசத்தின் வாசம், சீனுவை பைத்தியமாக அடித்தது. சீனு நீளமாக மூச்சுக் காற்றை இழுத்து தன் மார்பை நிரப்பி, தன் உடல் நடுக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து தோற்றுப் போனான்.

மீனாவின் கொடி போன்ற தளிர்மேனி காற்றில் ஆடுவதைப் போல், சீனுவின் கைகளில் மெல்ல நடுங்கியது. மழைச் சாரலில் நனைந்ததைப் போல் நடுங்கிக்கொண்டிருந்தவளின் தோளில் சீனு தன் கையை தென்றல் காற்றைப் போல் மென்மையாக செலுத்தி, அவளைத் தன் அகலமான மார்பில் சாய்த்துக்கொண்டான். அவன் உடல் சூட்டால், மீனாவின் உடல் நடுக்கம் மெல்ல மெல்ல குறைய, சற்றே தைரியத்துடன் மீனா அவன் முகத்தை நிமிர்ந்து, தன் ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் மீன் போன்ற கண்கள் ஆயிரம் கதைகளை அவனிடம் சொல்லத் துடித்தன. 

"சீனு... காதல்ன்னா.. அது இதுதானாடா ?" மெல்ல முனகிய மீனாவின் கைகள் சீனுவின் கழுத்தை மீண்டும் வளைத்து தன்னை நோக்கி இழுத்தன.

"என்னைப் பொருத்த வரைக்கும், எனக்குப் பிடிக்கறது உனக்குப் பிடிக்கணும்... உனக்குப் பிடிக்கறது எனக்குப் பிடிக்கணும். அதான்டீ காதல், சீனு தனிமை தந்த போதையில் உளறினான்.

"ம்ம்ம்... சினிமா பட ஹீரோ மாதிரி பேசறே..."

மெல்லிய குரலில் முனகிய மீனாவின் காதோரங்களில் சீனுவின் இதழ்கள் மெல்ல கோலம் போட்டன. அவள் காதுமடல்களில் தன் இதழ்களை மெல்ல மெல்ல உரசி இன்பக் கதையொன்றை அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்லிய கதையை அவள் கேட்பது இதுவே முதல் தடவை. சொல்லுபவனுக்கும் இதுவே முதல் தடவை. இருவரின் தேகமும் மன்மதனின் தீயில் உருக ஆரம்பித்தன.

சீனுவின் அணைப்பில் மீனா என்னும் உயிர் பூ மெல்ல மெல்ல சத்தமில்லாமல் மலர ஆரம்பித்தது. அந்த பூ மலர்ந்த சத்தம் சீனுவுக்கு மட்டுமே கேட்டது. அந்த மெல்லிய சத்தம், அழகான ராகமாக அவர்கள் இருவர் மனதையும் தொட்டு தழுவ ஆரம்பித்தது. மீனா என்னும் பூங்குயில் முனகியது. அந்த பெண்மையின் முனகல், இனிமையான பாடலாக ஒலித்து சீனு என்னும் முரடனை குழந்தையாக மாற்றிக்கொண்டிருந்தது.

"மீனா, நீ சொல்லேன்டீ... காதல்ன்னா என்னடீ" முரட்டுக்காளை சீனு, கன்றுகுட்டியாக மாறி விருட்டென மீனாவின் மார்பில் தன் முகத்தைப் பதித்து அங்குமிங்கும் எதையோ அவசரமாகத் தேடியது.

"சீனு.. எனக்குப் பயமா இருக்குடா.. யாராவது வந்துடப் போறாங்க... அங்க என்னடா தேடறே?"

மீனாவின் விழிகள் மூடியிருந்தன. அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவள் மார்பில் அணலாக உணர்ந்தாள். அவள் சிறிய முலைகளும், தேன் நிற முலைக் காம்புகளும் ஜாக்கெட்டுக்குள் மெல்ல பருக்கத் தொடங்கின.

"சொல்லுடீ.. நான் கேட்டேன்ல்லா... காதல்ன்னா என்ன?" சீனு தன் முகத்தை நிமிர்த்தி அவளை காதலுடன் நோக்கினான். அவன் கைகள் அவள் இடுப்பின் கீழ் நகர ஆரம்பித்தது.

"நீ இப்ப சந்தோஷமா இருக்கேல்லா?"

"ம்ம்ம்...ஆமாம்..." சீனு மகிழ்ச்சியாக முனகினான். அவன் கைகள் மீனாவின் பின் எழில்களை முதல் முறையாக தொட்டன. மெல்ல வருடின. அவன் பெண்மையின் மென்மையை தன் கண்கள் கிறங்க உணரத் தொடங்கினான்.

"சீனு.. என்னடா பண்றே... கூச்சமா இருக்குடா?"

இது வரை கைபடாத தன் தேகத்தில், அடுத்தவர் கைபடாத இடங்களில், அந்த தேகத்தின் மென்மையில், ஒரு வயது வந்த ஒரு ஆணின் கைபட்டதும், மீனா நெளிந்தாள். திமிறினாள். ஆண்மையின் ஆவேசமான ஆளுமையில் அவள் புடவை கசங்கியது.

"சொல்லும்ம்மா நான் சந்தோஷமா இருக்கேன்.. மேல சொல்லுடீன்னா.." சீனு குஷியாக இருந்தான்.

"நீ சந்தோஷமா இருக்கறதைப் பாத்து நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்... இது தான் காதல்... சீனு எனக்குத் தெரிஞ்சு இதான்டா காதல்..." மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய காதுமடல்கள் இரண்டும் சிவந்தன.

மீனா தன் மார்பில் பதிந்திருந்த சீனுவின் முகத்தை வலுவாகப் பற்றி உயர்த்தினாள். அவன் வலது கன்னத்தில் தன் முகத்தை ஒரு முறை மென்மையாக பதித்து அழுத்தினாள். அவன் இதழ்களை தன் விரல்களால் பற்றித் திருகினாள். அடுத்த நொடி அவன் இரு கன்னங்களிலும், மாறி மாறி ஆசை வெறியுடன் முத்தமிட்டாள். 




"ம்ம்ம்.. தேங்க்யூடி மீனுக் குட்டி.." 

"சீனு..."

"சொல்லும்ம்மா..."

"வாங்கிக்கத்தான் உனக்குத் தெரியுமா?"

"ஆரம்பிச்சா எனக்கு நிறுத்தத் தெரியாது..."

"பரவாயில்லே.."

மீனாவை உடல் எலும்புகள் நொறுங்கிவிடுமளவிற்கு, சீனு அவளை இறுக்கினான்.. அவன் அவள் நெற்றியில் ஆரம்பித்து, முகம் முழுவதும் தன் ஆசை தீர, கொழுத்த உதடுகளால் ஒத்தடம் கொடுத்தான். 

"சீனு... ஒரு எடத்தை மட்டும் விட்டுட்டியேப்பா.." மீனா சினுங்கினாள்.

"எந்த இடம்..." சீனு தெரிந்தும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் கைகள் அவள் மார்பில் படிந்தன. 

"எனக்கு லிப் கிஸ் வேணும்.. பீச்சிலேயே கேட்டேனே?"

"நிஜம்மாவா..."

"மனசு சந்தோஷத்துல பட்டமா பறக்குதுடா... பட்டத்தை உயர உயர பறக்கவிடற கயிறு உன் கையிலத்தான் இருக்கு. அந்தக் கயிறு அறுந்து போகாம பாத்துக்கறது நம்ம ரெண்டு பேரோட கடமை... இதான்டா காதல்.." 

மீனாட்சி கவிதையாக தன் மனதில் இருப்பதை சொன்னாள். அவள் கண்கள் சீனுவின் சதைப்பிடிப்பான உதடுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவளுடைய மெல்லிய இதழ்கள், சற்றே பிரிந்து சீனிவாசனை 'வா வா' வென அழைத்தன. 

"மீனுக்குட்டி... உன் மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கு நல்லாப் புரியுதுடீ... உன் மனசை, உன்னுடைய தேவையை புரிஞ்சுக்கிட்டேன் பாரு... இதான் உண்மையான காதல்.." 

சீனுவின் கைகளில் மீனாவின் பின்னெழில்கள் கசங்கிக்கொண்டிருந்தன.
அவள் நாசியிலிருந்து கிளம்பிய வெப்பக்காற்றும், உதடுகளிலிருந்து வந்த ஈர முனகலும் அவன் கன்னத்தை சுட்டன. 

மீனாவின் இமைகள் வேகமாக துடித்தன. அவள் உதடுகள் அவள் பற்களின் நடுவில் சிக்கித் தவித்தன. சீனுவின் முறுக்கேறிய நரம்புகளுக்குள் இரத்தம் ஓட்டம் துரிதமாகியது. அவன் உதடுகள் அவனுடைய நாக்கு என எல்லா அங்கங்களும் வெப்பத்தில் உலர்ந்து வெண்மையாகின.

"என் மனசுல இருக்கறது புரிஞ்சும்... சும்மா கதைப் பேசிக்கிட்டு இருக்கே..." மீனா போதையாக தன்னுடைய ஹஸ்கி வாய்ஸில் முனகினாள். 

மீனாவின் இதழ்கள் சீனுவின் இதழ்களை நோக்கி குவிந்தன. அவள் வாயிலிருந்து வந்த இனிமையான சுவாசத்தின் வாசம், சீனுவின் தலைக்கேற, தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடியாமல், அவள் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டான், சீனு.

நான்கு உதடுகள் ஓசையில்லாமல் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் ஈரமாகிக் கொண்டிருந்தன. இரண்டு ஜோடி உதடுகள் ஒன்றுக்கொன்று மவுனமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தன. சப்தமில்லாம்ல் சிறு துளிகளாக ஆரம்பித்த முத்தங்கள், தூறலாக தொடர்ந்தன, ஓசையுடன் பெரு மழையாக மாறின. ஆசையுடன் காதலனை முத்தமிட்டு, வெப்பமான, வெறியான அவன் முத்தத்தை பெற்றுக்கொண்ட மீனாவின் சூடாகியிருந்த சிறிய முலைகள், சீனுவின் மார்பில் அழுத்தமாக புதைந்திருந்தன. 

அப்படி என்னதான் இவ வெச்சிருக்கா... இவ ரவிக்கையை தொறந்து பாத்துடலாமா? தன் மார்பில் அனலாக பதிந்திருந்த மீனாவின் ஆரஞ்சுகளை தன் கையால் தொட்டுப் பார்க்க சீனுவின் மனம் அலைந்தது. மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியாமல், செல்வாவின் சிரித்த முகம் கண் முன் சட்டென வந்து நின்றது. பொறுமை, பொறுமை, சீனுவின் மனசாட்சி குரலெழுப்பிக் கொண்டிருந்தது. அவன் நீளமாக தன் மூச்சை இழுத்து விட்டான். 

"சீனு... சாப்பிடலாம் வாடா..." உஷாவின் குரல் மாடிப்படிக்கட்டினருகிலிருந்து உரக்க ஒலித்தது. 

சீனுவின் பின்னால் பதவிசாக, மாடியிலிருந்து இறங்கி வந்த மீனாவின் சிவந்திருந்த முகத்தை உஷாவின் கண்கள் ஆராய்ந்தன. மீனாவின் இடது கன்னத்தில், காதுமடலின் அருகில், பற்களின் தழும்பை, அவள் கண்கள் இனம் கண்டன. அவன் தன் தலையை குனிந்தவாறே, அத்தையின் முகத்தை நேராக நோக்கத் திராணியில்லாமல், ஹாலுக்குள் நுழைந்தான். 

மாடியில், தனிமையில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை உஷா மிகச்சரியாக யூகித்துக்கொண்டாள். உஷாவின் கை அவளையும் அறியாமல், அவள் கன்னத்துக்கு சென்றது. உஷா தன் கன்னத்தை அழுந்த தடவிக்கொண்டாள். 

முகத்தில் வெட்கத்துடன், தன் உதடுகளை குவித்து, தன்னை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டு, வகுப்பில் குறும்பு செய்து கையும் களவுமாக பிடிபட்டு, டீச்சரின் எதிரில் நிற்கும் மாணவியைப் போல், தலை குனிந்து நிற்கும் மீனாவின் முகத்திலிருக்கும் சிகப்பை, உதடுகளின் வெளுப்பை, பார்த்த உஷாவின் மனசு, தன் கணவனுடன், தான் தனியாக இருந்த முதல் சந்திப்பை நினைத்து சிலிர்த்தது. 

வெகுநாட்களாக மனதின் ஒரு மூலையில் புதைந்து கிடந்த தன் ஆசை கணவன், கண்ணனின், சிரித்த முகம் சட்டென அவள் கண்களுக்கு முன் வர 'சே..ச்சை.. என்ன பண்ணாலும் இந்த மனசை கட்டி நிறுத்த முடியலியயே..' திங்கற சோத்துல போடற உப்பைக் குறைக்கணும், அலைபாயும் தன் மனதுக்கு ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். 

"யூ ஸீம் டு பீ வெரி வெரி ஹேப்பி!!... மே காட் பிளஸ் யூ" தன் கையிலிருந்த இரண்டு முழத்துக்கும் அதிகமான மல்லிப்பூ சரத்தை மீனாவின் கூந்தலில் சூட்டினாள், உஷா.

"யூ ஆர் சர்ட்டென்லி ரைட்... அயாம் வெரி வெரி ஹேப்பி...டுடே" மீனா வெட்கத்துடன் தன் தலையை உஷாவின் தோளில் சாய்த்துக் கொண்டாள். 

"எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருடீ."

"தேங்க் யூ அத்தே..."

"இப்ப எதுக்கு தேங்ஸ்"



"வீட்டைச் சுத்திக்காட்டச் சொன்னீங்களே... அதுக்கு.."

"உனக்கு வீட்டைத்தான் சுத்திக்காட்டச் சொன்னேன்.. அவன் உன்னை கடிச்சதுக்கு நான் பொறுப்பில்லே..."

"போங்கத்தே..." 

கன்னிக்கழியாத இளம் குமரியும், பொங்கி வழியும் இளமையை உடலில் நிறைத்துக்கொண்டு, மனதுக்குள் எழும் மோகத்தை தக்கத் துணையின்றி தனிமையில், கொன்றுகொண்டிருக்கும் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு நின்றன.



சுகன்யா... 71

அங்கிள், இது என்னோட கடைசி செமஸ்டர். புல்லா கான்ஸ்ன்ட்ரேஷனோட படிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு வேலைக்குப் போகணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு அங்கிள். மீனா தன் மனதிலிருக்கும் ஆசையை ராகவனிடன் தெளிவாக சொன்னாள். வேலைக்கு போகவேண்டும் என்ற மீனாட்சியின் தவிப்பை, விருப்பத்தைக் கேட்ட ராகவன், சில வினாடிகள் மேற்கொண்டு எதுவும் பேசாமல், மவுனமாக இருந்தார்.

"என்ன அங்கிள்... பெண்கள் வேலைக்கு போறதுல உங்களுக்கு எதாவது ரிசர்வேஷன் இருக்கா?"

"மீனா... என் அப்பா வீட்டுக்குள்ளவே இருக்கற ஒரு சாமியார்... அவருக்கு ஒரு கப் சாதமும் ரசமும் இருந்தா... அதுவே போதும்ன்னு மகிழ்ச்சியா இருக்கறவர்... அவருக்கு வேற எதுவுமே வேணாம்..." சீனு சிரித்தான்.


"ம்ம்ம்.. ரிசர்வேஷன்... அப்படீன்னுல்லாம் எதுவும் இல்லம்மா... பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கணுங்கறதும் என் எண்ணமில்லே... நாம படிக்கறது நம்ம அறிவை வளத்துக்கத்தான்... படிச்சப் படிப்பு என்னைக்கும் வீண் போகாது... அன்பார்ட்சுனேட்லி, பொதுவா நாம படிக்கற படிப்புக்கும் செய்யற வேலைக்கும் என்னைக்குமே சம்பந்தம் இருக்கறது இல்லே..."

"இந்த வீட்டுல சீனு கை நெறைய சம்பாதிக்கறான்.. என்னைவிடவே அதிகமான சேலரி வருது அவனுக்கு.. உங்க ரெண்டுபேரோட அடிப்படையான தேவைகளுக்கும் மேலாகவே அவன் சம்பாதிக்கறான்.. நாம எவ்வளவு சம்பாத்திக்கறோமோ, அந்த அளவுக்கு நிச்சயமாக செலவும் உண்டு. கையில காசு இருந்தா, தேவையே இல்லாத பொருட்களையும் வாங்கனும்ன்னு மனசுக்குள்ள ஆசைகள் வரும்..."

"ஆமாம்.. உங்கத் தத்துவத்தையெல்லாம் நீங்களே வெச்சுக்குங்க... வாழ்க்கையை நம்பிக்கையோட, தொடங்கப் போற கொழந்தைகிட்ட சொல்லாதீங்க..." பத்மா அவர் பேச்சினிடையில் குறுக்கிட்டாள்.

"நான் தப்பா எதுவும் சொல்லலை... மீனா... நாம வாழறதுக்காகத்தான் வேலையை தேடணுமே தவிர, வேலை கிடைக்குதுங்கறதுக்காக, நம்ம அமைதியான வாழ்க்கையை இழக்கறதுல அர்த்தமில்லே. வீட்டு வேலைகளையும் செய்துட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் பொறக்கப் போற குழந்தைகளையும் வீட்டுல சரியா கவனிக்க முடியாம, தேவையில்லாம பெண்கள் வெளியிடத்திலும் போய் எதுக்காக கஷ்டப்படணம்ங்கறதுதான் என் கேள்வி.."

"அங்கிள் நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன், எங்க 'பேட்ச்'ல இப்ப நான்தான் முதல் ஸ்டூடன்டா இருக்கேன். கண்டிப்பா கேம்பஸ் இன்டர்வியூல, எனக்கு முதல் சிட்டிங்லேயே, எந்த சிபாரிசும் இல்லாம வேலை கிடைச்சுடும்ன்னு, என்னோட டீச்சர்ஸ் சொல்லிக்கிட்டு இருக்காங்க..."

"வெரிகுட்... நல்லாப் படிக்கிற கொழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்மா.. உண்மையிலேயே, பெண் சம்பாதித்தே ஆகணுங்கற நிர்பந்தம் உள்ள ஒரு குடும்பத்துல, பெண்கள் வேலைக்கு போகலாம்... அதுல தப்பேயில்லை.."

"தேவையே இல்லாம, நான் படிச்சுட்டேன்... என் படிச்சப் படிப்பு வீணா போகக்கூடாது, எனக்கு வீட்டுல பொழுது போகலேன்னு... பெத்த குழந்தைகளை கவனிக்கக்கூட நேரம் ஒதுக்க முடியாம, மூணு மாசம் கூட ஆகாத, பால் குடி மறக்காத குழந்தகளை 'கிரஷ்ச்சில' கொண்டு போய் விட்டுட்டு, வேலைக்கு வந்ததும், ஆஃபீசுல உக்காந்துகிட்டு, அந்த பிஞ்சுக் கொழந்தைகளைப் பத்தி ஏன் கவலைபட்டுகிட்டு இருக்கணும்? இதையெல்லாம் பாக்கும் போது ஏன் இப்படி பெண்கள் தன்னை வருத்திக்கறாங்கன்னு ஒரு சின்ன நெருடல் என் மனசுல இருக்கும்மா... அவ்வளவுதான்."

"நான் எடுத்துக்கிட்ட எந்த வேலையும் நான் சின்சியரா பண்றவ அங்கிள் ..." மீனா மெல்லிய குரலில் பேசினாள்.

"மீனா.. என்னை நீ தப்பா எடுத்துக்காதே... இதுவே வேற ஒரு பொண்ணா இருந்தா... இவ்வளவு தூரம் நான் பேசியே இருக்க மாட்டேன்... நீ என் வீட்டுக்கு வரப்போற மருமகளா இருக்கப் போய்த்தான் என் மனசுல இருக்கறதை கொஞ்சம் ஃப்ரீயா பேசினேன், மெல்லியக் குரலில் பேசியவாறு ராகவன் எழுந்தார்.

"அண்ணா... வீட்டுக்கு வந்த கொழந்தையை மொதல் நாளே, ஏன் டார்ச்சர் பண்றீங்க...? அவளுக்கு வேலைக்கு போகனும்ன்னு ஆசையிருந்தா அவ போகட்டும்... நான் எதுக்கு தடிமாடாட்டம் இந்த வீட்டுல இருக்கேன்...? அவளுக்குப் பொறக்கற குழந்தையை நான் பொறுப்பா பாத்துக்கறேன்.. போதுமா"

"ஹூம்...ம்ம்ம்க்க்கும்.. சரிடியம்மா... " முனகினார் ராகவன். தன் தங்கை உஷா வாயைத் திறந்தால், அடுத்த நொடி ராகவன் அமைதியாகிவிடுவார்.

"நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருங்க... சீனுவையே வளத்தா உஷா... அவனுக்கு பொறக்கறதை தெருவிலயா விட்டுடுவா... மீனா இஷ்டம்.. அவளைக் கட்டிக்கற உங்க புள்ளை இஷ்டம்... இதுல நீங்க ஏன் உங்க தலையை போட்டு ஒடைச்சிக்கிறீங்க.." பத்மாவுக்கு தன் கணவரின் பேச்சு எரிச்சலைத் தந்தது.

"சரிடீ... சரிடீ... உன் பாடு.. உன் மருமவளா வரப்போறவ பாடு... எதையாவது நீங்க பண்ணிக்குங்க..."

"டேய் சீனு... மீனாவுக்கு நம்ம வீட்டை சுத்திக்காட்டுடா.. மத்தியான பாட்டுக்கு சாதம் மட்டும்தான் ஏத்தணும்..." உஷா எழுந்து கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"அத்தே... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா..?" மீனாவும் அவள் முந்தானையை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

"வெறும் சாதம்தான் வெக்கணும்ம்மா.. சுண்டைக்காய் வத்தக்குழம்பும், உருளைக்கிழங்கு பொறியலும் ஏற்கனவே பண்ணியாச்சு... ரெண்டு அப்பளத்தை நெருப்புல வாட்டி எடுக்கணும்... உன் மாமாவுக்கு சுண்டைக்காய் வத்தல்னா ரொம்பப் பிரியம்... இனிமே இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்.."

"உங்களுக்கு என்ன பிடிக்கும் அத்தே?" மீனா தேனொழுகும் குரலில் பேசினாள்.

"ம்ம்ம்.. எனக்கு இப்ப உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு..."

"போங்கத்தே.. நான் சீரியஸா கேக்கறேன்... நீங்க என்னடான்ன கிண்டல் பண்றீங்க என்னை.." ரோஜாவாக அவள் முகம் மலர்ந்தது.

"ஒரே நாள்ல்ல எல்லாத்தையும் படிச்சுக்க முடியாதுடீ.. எல்லாத்தையும் சொல்லியும் கொடுக்க முடியாது... பாத்து பாத்து... அனுபவிச்சி அனுபவிச்சித்தான் சில காரியங்களைத் தெரிஞ்சுக்கணும்..."

"சரிங்க அத்தே..."

"இன்னைக்கு நீ பரிமாறும் போது என் கூட அமைதியா நின்னுப் பாரு... உனக்கே எல்லாம் தன்னாலப் புரிய வரும்.." உஷா சுருக்கமாக முடித்தாள். 

மீனாவோட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்ன்னு மனசு துடிக்குது. அப்பா என்னடான்னா இப்பத்தான் அவளை நகரவிடாம, தன் பக்கத்துல உக்கார வெச்சுக்கிட்டு பிளேடு போடறார். இவரை எப்படி கட் பண்ணிவிடறது...

காதலிக்க ஆரம்பிச்சு, மொதல் தடவையா இன்னைக்குத்தான் மீனாவை வெளியில இழுத்துக்கிட்டு வந்திருக்கேன். இவளை இப்ப எப்படி மாடிக்கு தள்ளிட்டுப் போறது? மனதுக்குள் திட்டம் போட்டுக்கொண்டிருந்த சீனுவுக்கு தன் அத்தை உஷாவின் வார்த்தைகளை கேட்டதும், பசிச்சவனுக்கு பாயசம் கிடைத்தது போலிருந்தது.

வா... மீனா உனக்கு நான் எங்க வீட்டை சுத்திக் காட்டுகிறேன், பூஜை ரூமைக் காட்டுகிறேன்... தோட்டத்தை காட்டுகிறேன்... என ஒரு ஐந்து நிமிடங்கள் எல்லோர் முன்னாலும் பாவ்லா பண்ணிகொண்டிருந்த சீனு, தோட்டத்திலிருந்து வெராந்தாவுக்குள் நுழைந்ததும், மீனாவை அங்கிருந்தே, மாடியிலிருந்த தன் அறைக்குள் இழுத்துக்கொண்டு நுழைந்தான்.

"சீனு.. இட் இஸ் கொய்ட் சர்ப்ரைசிங்.. என்னால நம்பவே முடியலை... உன் ரூமை நீ இவ்வளவு நீட் அண்ட் க்ளீனா வெச்சிருக்கே... மீனாவின் முகத்தில் ஆச்சரியம் வெளிப்படையாகத் தெரிந்தது.

"டார்லிங்... இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலைடி செல்லம்... போவ போவ பாரு...!!" சீனுவின் முகத்தில் உற்சாகம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.

"ஆமாம்.. இந்த சனியன் புடிச்ச ஆஷ்ட்ரேயை மட்டும் படுக்கற கட்டில்ல தலைமாட்டிலே வெச்சிருக்கே... என்ன மனுஷனோ நீ... இதை தூக்கி முதல்ல குப்பையில வீசி அடிப்பா.." பளிங்கு கண்ணாடியில், மீன் வடிவத்தில் அழகாக செதுக்கப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை தன் கையில் எடுத்தாள், மீனா.

"போடீ.. இவ ஒருத்தி... நீ சொன்னதைத்தான் நான் ஒத்துக்கிட்டேன்ல்லா.. இப்ப எதுக்கு நீ திருப்பியும் திருப்பியும் இந்த சிகரெட் டாபிக்கை எடுக்கறே...? சீனு சலிப்புடன் முணகினான்.

"தேங்க் யூ டா சீனு.."

"மீனு.. உன் தேங்க் யூல்லாம் எனக்கு வேணாம்.."

"வேற என்ன வேணும்?"

"நீ என் பக்கத்துல வாடீ.."

"ஹூகூம்.. சான்சே இல்ல.."

"ப்ளீஸ் கிட்ட வாடீன்னா.. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே?"

"எதுக்க்க்கு..." கண்களில் திருட்டுத்தனத்துடன் மீனா தன் குரலை கிசுகிசுப்பாக்கி, நீளமாக இழுத்தாள்.

"வான்னா வரணும் நீ..."

"நீ எதுக்குன்னு சொல்லு.." மீனாவும் கொஞ்சினாள். அவள் இதயம் தடக் தடக்கென அடிக்க ஆரம்பித்தது.

"செல்லம்.. ஒரே ஒரு கிஸ் குடுடீ.." சீனு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

மீனா திறந்திருந்த அறைக்கதவை தயக்கத்துடன் பார்த்தாள். திரும்பி சீனுவின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்திலிருந்த தவிப்பை, கண்களில் முளைவிட்டிருந்த ஆசையின் வேட்க்கையைப் பார்த்தாள். அவனைப் பார்ப்பதற்கு அவள் மனதுக்குள் என்னவோ போலிருந்தது.

என் சீனுக்குட்டிதானே.. தொலைஞ்சுப் போறான்... கிட்டப் போய்த்தான் பாப்போமே... என்னப் பண்றான்னு... மிஞ்சி மிஞ்சிப் போனா கட்டிப்புடிச்சி அவனே என்னை கிஸ் அடிப்பான்.. அவ்வளவுதானே... அதுக்குமேல எதாவது ஆரம்பிச்சான்ன... பட்டுன்னு கட் பண்ணிடணும்... சீராக சிந்தித்த மீனாவின் மனதிலும் சீனுவை கட்டிபிடிக்கும் ஆசை ஆவேசமாக எழுந்தது.

மீனா சீனுவை நோக்கி நகர்ந்தாள். அவனருகில் நின்று அவன் தலையைக் கலைத்தாள். சீனு அவள் தோளில் தன் கையைப் போட யத்தனித்தபோது அவன் மொபைல் அலறியது.

"கம்மினாட்டிங்க... பூஜை வேளையில கரடி மாதிரி வந்துடறானுங்க..." எரிச்சலுடன் முனகிக்கொண்டே, சீனு செல்லை ஆன் செய்தான். சீனுவின் முகத்தில் தோன்றிய எரிச்சலைக் கண்ட மீனா குஷியாகச் சிரித்தாள். சிரித்தவள் மெல்ல கதவை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

"எங்கடீப் போறே?"

"நீ பேசி முடி.." விஷமத்துடன் கண்ணடித்தாள், மீனா.

சீனு அவளை கண்ணாலேயே தன் அருகில் அழைத்தான். மீனாவும் தயங்கி தயங்கி அவன் அருகில் வந்து நின்றாள். 

மாப்ளே... எங்கடாப் போயிட்டே... இந்த ஊர்லத்தான் இருக்கியா? உன்னை ஆளைப்பாத்து பத்து நாளாச்சுடா..." மறுமுனையில் வேலாயுதம் உற்சாகமாக கூவினான்.

வெல்லாயுதத்தின் உற்சாகத்துக்கு காரணம், காலையிலேயே அவனுக்கு அவன் சிஷ்யன் ஒருவன் ஒரு குவார்டரோட வந்து கதவை தட்டி, ரெண்டு மூடி சோடாவில் கலந்து ஊத்திவிட்டு போயிருந்தான். அவன் கூவியது சீனுவின் பக்கத்தில் வெகு நெருக்கமாக நின்ற மீனாவுக்கு மிக மிக தெளிவாகக் கேட்டது.

மீனா, சீனுவின் நெற்றியில் வந்து விழும் அவன் தலை முடியை கலைத்து விளையாட ஆரம்பித்தாள். சீனு அதுதான் சாக்கு என அவளை சட்டென இழுத்து தன் மடியில் உட்காரவைத்துக் கொண்டான். அவன் வலது கரம் அவள் இடுப்பில் தவழ்ந்தது.

"சரி.. சரி.. வெல்லாயுதம்... அடங்குடா... மச்சான்.. உன் குரலே ஒரு மாதிரி இருக்குது... உடம்பு கிடம்பு சரியில்லையா... எதாவது மருந்து கிருந்து சாப்பிட்டியா? என்னா விஷயம்.. நான் இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன்டா.. ஐ வில் கேச் யூ லேட்டர்..."

சீனுவுக்கு புரிந்து விட்டது. எவனோ ஒரு தறுதலை இவனுக்கு மூடி நிறைய ஊத்திக்குடுத்து இருப்பான். இந்த கேனப் பயலுக்கு நேரம் காலமே கிடையாது என மனதுக்குள் சலித்துக்கொண்ட சீனு, சற்றே மிரட்சியுடன் அவனுக்குப் பதில் கொடுத்தவன், மீனாவின் கன்னத்தில் தன் கன்னத்தை உரசினான்.

"என்னாத் தலை.. உன் ஜிகிரி தோஸ்தை ச்சட்டுன்னு கட் பண்றியே... ஞாயமா இது.. மாப்ளே எங்கடா இருக்கே இப்ப நீ.. வீட்டுக்கு வரட்டா..."

"டேய்.. சும்மா இருடா நீ.. என் கோவத்தை கிளறாதே... சாயந்திரம் நானே வந்து பாக்கறேன் உன்னை..."

"என்னாத் தலை.. ஆஃபீஸ்ல இருக்கியா என்னா...? இல்லே... பக்கத்துல பிகர் எதாவது நிக்குதா... மச்ச்சீ..." வேலாயுதம் சீனு சொல்வதை புரிந்து கொள்ளாமல் அசட்டுதனமாக சிரிக்கிறேன் என்ற பெயரில் கழுதையைப் போல் கனைத்தான்.

மீனா சற்று முன் பீச்சில், அவன் கையில் சிகரெட்டைப் பார்த்துவிட்டு, அவனை உப்புத் தண்ணீ ஊத்தி கஞ்சி காய்ச்சியது, சீனுவின் மனதில் சட்டென வந்தது. எனக்கு நேரமே சரியில்லை. என்னடா இது என்னைப் புடிச்ச சனியனை பீச்சுல வுட்டுட்டு வந்தோமே... இன்னும் அவன் வரக் காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.



இப்ப அந்த சனியன் வேலாயுதம் ரூபத்துல செல்லு வழியா வந்துட்டான். மீனா இவன் பேச்சைக் கேட்டுட்டு இப்ப என்னக் கூத்தடிக்கப் போறாளோ.. சீனுவின் மனதுக்குள் ஒரு சிறிய கலக்கம் உடனடியாக எழுந்தது.

சீனு தயக்கத்துடன் தலையை திருப்பி தன் மடியில் உட்கார்ந்திருந்த மீனாவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் மாலை நேரத்து கீழ் வானமாக சிவக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அவள் பார்வையில் அவள் மனதில் கிளம்பும் எரிச்சல் தெளிவாகத் தெரிந்தது. சீனுவின் மடியிலிருந்து விருட்டென எழுந்திருக்க முயன்றவளை.. சீனு இறுக்கமாக கட்டி அவள் பின் கழுத்தில் தன் உதடுகளை உரசினான்.

"டேய்.. வெல்லாயுதம்.. காலைக் கட் பண்றா.. நான் உன்னை கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடறேன்..." சீனு இறைந்தான் தன் தோழனிடம்.

"சரி மாப்ளே.. ஒரே ஒரு செகண்ட்.. நான் சொல்ல வந்ததை மட்டும் ஜல்தியா.. சுகுரா சொல்லிடறேன்.. மத்தியானம் மூணு மணி வாக்குல என் ரூமுக்கு பக்காவா வந்துடு மாப்ளே... வயித்தை காலியா வெச்சுக்கோ..."

"சீக்கிரமா சொல்லித் தொலைடா.... மேட்டர் என்னடா... உன் கூட பெரியத் தொல்லையாப் போச்சு.." சனியன் புடிச்சவனுக்கு நான் இருக்கற நிலைமை புரிஞ்சாத்தானே.. மேல மேல பேசிக்கிட்டேப் போறான். மீனா அவன் பிடியில் திமிறிக்கொண்டிருந்தாள். அவன் அவளை எழவிடாமல், அவள் இடுப்பை அழுத்தமாக வளைத்துக்கொண்டிருந்தான்.

"தலே.. முழுசா ஒரு ஸ்காட்ச் பாட்டிலோட நம்ம மச்சான் ஒருத்தன்... என் ரூம்ல உக்காந்துகினு கீறான்... கையோட நாட்டு கோழி ஒண்ணும் புட்சாந்து இருக்கான்.. சும்மா கொழுக்கு மொழுக்குன்னு இருக்குது மாப்ளே... நம்ம பசங்களுக்கு நீயூஸ் குடுத்துட்டேன்.."

"டேய்... டேய்.. என்னடா சொல்றே?"

"மாப்ளே சுத்தமான அரேஞ்ச்மென்ட்.. வரும் போது நீ ஒரு ரெண்டு லிட்டர் கோக் பாட்டில் ஒண்ணு புட்சாந்துடு.. நாம நாலே பேருதான்... மத்தபடிக்கு ஒரு டஜன் முட்டை.. ரெண்டு முழு ப்ளேட் பிரியாணி... ரூம்லேயே ஆம்லேட் போடறதுக்கு.. பச்சமொளகா.. வெங்காயம்.. மல்லித்தழைன்னு சப்ஜாடா எல்லா அரேஞ்ச்மென்ட்டும் ஒ.கே ஆயிடிச்சி.. நீ வந்தா ஒரே அமுக்கா அமிக்கிடலாம்.. இல்லேன்ன மெறிச்சிடலாம்... என்னா சொல்றே தலே... ரொம்ப லேட் பண்ணிடாதே.. ஆமாம்.." 

சீனு எங்கிருக்கிறான்... அவன் பக்கத்தில் இருப்பது யார்.. அவனுடைய மனநிலைமை என்ன, எதையுமே அறியாத வேலாயுதம் கண்மூடித்தனமாக வாயில் வந்ததை உளறிக்கொண்டிருந்தான். பாட்டிலைப் பார்த்ததுமே அவனுக்கு போதை ஏறிவிடும்.. ஆனால் மூடியைத் திறந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவான். இது அவனது விசேஷம்.

வேலாயுதம் குஷியாக கொக்கரிப்பதை தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்த மீனாவுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. என் லைஃப்யே ஸ்டேக்ல வெச்சு, இவ்வளவு கஷ்டப்பட்டு, சீனுவை அவனோட குடிக்கற பழக்கத்தை விடச் சொல்லி சத்தியம் வாங்கியிருக்கேன்... இது தெரிஞ்சு இவன் வீட்டுல இருக்கறவங்கல்லாம், எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க.. என்னைத் தலையில தூக்கி வெச்சிக்காத குறையா கொண்டாடறாங்க...

நடுவுல எதுவோ தெருவுல போற நாய் ஒண்ணு.. என் சீனுவை குடிக்க கூப்பிடுது.. இதை மீனாவால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், சீனுவின் கையை உதறிவிட்டு அவன் மடியிலிருந்து எழந்தாள்... சட்டென சீனுவின் கையிலிருந்த செல்லைப் பிடுங்கினாள். தொண்டையைக் கணைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"மிஸ்டர்... ஊர்ல இருக்கறவனை கெடுக்கறதுக்குன்னே கங்கணம் கட்டிக்கிட்டு, ஓசியில எவன் தண்ணி வாங்கிக் குடுப்பான்.. குடுக்கறதை வாங்கிக் குடிச்சுட்டு, வாந்தி எடுக்கணும்ன்னு உடம்பை வளத்துக்கிட்டு அலையறீங்களே... உங்களுக்கெல்லாம் வெக்கமாயில்லே.."

"மீனா.. ப்ளீஸ்... வேணாம்மா.. போனைக்குடுத்துடு.. நான் போக மாட்டேண்டீ.. பிளீஸ் சொல்றதைக் கேளு.." பதறிப்போன சீனு, ஒரு முறை அவள் பேர் சொல்லி அலறியவன்.. அதன் பின் அவளிடம் கண்களாலும், சைகையாலும் கெஞ்ச ஆரம்பித்தான்.

"மேடம்.. மேடம்.. நீங்க யாரு பே..பேஸ்ஸ்றீங்க.." வேலாயுதத்துக்கு ஒன்றும் புரியவில்லை.. பதட்டத்தில் பேசியவனுக்கு வார்த்தைகள் முழுதுமாக வாயிலிருந்து வரமால் திணறினான்.

"ஹேங்... உன் பாட்டீ பேசறேன்டா... சித்த முன்னாடீ கேட்டீல்லா... பிகர் பக்கத்துல நிக்குதான்னு... உனக்கெல்லாம் மேனர்சே கிடையாதா.. ஹேங்.. க்க்க்ம்ம்ம்" மீனா சீறினாள்.

"சாரி மேடம்.. பிளீஸ்.. பிளீஸ்ஸ்.. நாங்க அண்ணன் தம்பியா ரொம்ப நாளா பழகறோம்.. ப்ரெண்ட்ஸ்ங்களுக்குள்ள ஜாலியா கலாய்ச்சுக்கிட்ட்டோம்.. நீங்க தப்பா நினைக்காதீங்கோ... மேடம்.."

"உன் குடும்பத்துல அண்ணன்.. தம்பி ரெண்டுபேரும் ஒரு மரியாதைப்பட்ட பொண்ணை.. பிகரு கிகருன்னுதான் பேசீப்பீங்களா..?"

"மேடம்... என்னன்னமோ தப்புத் தண்டாவா பேசறீங்களே.. எங்க தலை கிட்ட கொஞ்சம் செல்லைக் குடுங்க.. நான் என் தோஸ்தாண்டா பேசிக்கிறேன்..."

"இந்த கலாய்க்கற வேலையெல்லாத்தையும் வேற எங்கயாவது வெச்சுக்க்க்க" இனிமே 'என் சீனு' கிட்ட எந்தக் காரணத்தைக் கொண்டும் தோஸ்தி வெச்சிக்காதே.. மீனாவின் குரலில் சூடு ஏறிக்கொண்டே போனது. அவள் குரலில் சீனுவின் மேல் அவளுக்கு இருக்கும் உரிமையை, துப்பாக்கியிலிருந்து சீறி வரும் குண்டாக வெளிப்படுத்தினாள்.

"சாரிங்க மேடம்... நீங்க யார் பேசறீங்கன்னு எனக்குத் தெரியலை.. நான் கேக்கறனேன்னு கோச்சீக்காதீங்க.. நீங்க எங்கிட்ட தமாசுக்காக, காமெடி கீமடி எதுவும் பண்ணலயே?

"அது ஒண்ணுதான் கொறைச்சல் இப்ப...?"

பேசறக் குரலைக் கேட்டா ஷார்ப்பா ஒரு சின்ன பொண்ணு குரல் மாதிரி இருக்கு.. சீனுவோட அம்மா குரலா.. இல்லையே.. நிச்சயமா இல்லே... நான் வேலாயுதம் பேசறேன்னு தெரிஞ்சா, எப்பவுமே அவங்க ரொம்ப ரொம்ப அன்பா என் கிட்ட பேசுவாங்களே..

நம்ம 'தலை' கையிலேருந்து செல்லைப் புடுங்கி பேசற அளவுக்கு அவங்க வீட்டுல யாருக்கு தைரியம் இருக்கு..? பேசறது சீனுவோட அத்தையா இருக்குமா..?. வேலாயுதத்துக்கு குழப்பமாக இருந்தது. தன் தலையை சொறிந்து கொண்டான்.

"மேடம்... நீங்க யாருன்னு சொல்லவே மாட்டீங்களா? உங்க வாய்ஸ்ல ரொம்பவே தீ பொறி பறக்குது மேடம்..."

"மிஸ்டர் வெல்லாயுதம்.. நான் யாருன்னா கேக்கறே? நான்தான் உன் 'தலை' கையால சீக்கிரமே தாலி கட்டிக்கப் போறவ... நான் சொல்றதை கொஞ்சம் நல்லாக் கவனமா... காதைத் தொறந்து கேளு..."

"வணக்கம் மேடம்..." வேலாயுதம் மிகுந்த பணிவுடன் பேசினான்.

"நக்கலா... ஹூம்... வேலாயுதம்.. இன்னொரு தரம், நீ சீனுவுக்கு போன் பண்ணி... கட்டிங் வுடலாம்.. ஆம்லெட் போடலாம்.. கூடவே கோழி அமுக்கலாம்... வயித்தைக் காயப் போட்டுக்கிட்டு வந்துடு... பார்ட்டீ... கீர்ட்டீன்னு.. எதுக்காவது கூப்ட்டேன்னு எனக்குத் தெரிஞ்சுது... உனக்கு இருக்கற மரியாதை சுத்தமா கெட்டுப் போயிடும் சொல்லிட்டேன்.."

"மீனா.. நிறுத்துடீ ப்ளீஸ்..." அவளைக் கையெடுத்து கும்பிட்ட சீனு தன் கைகளை தன் தலையில் வைத்துக்கொண்டான்.

மீனா கோபத்தில் தான் என்னப் பேசுகிறோம் எனப் புரியாமல் வேக வேகமாகப் வேலாயுதத்தின் முதுகில் 'டின்' கட்டிக்கொண்டிருந்தாள். மறு முனையில் அவள் பேசியதைக் கேட்டு வேலாயுதம் திடுக்கிட்டுப் போனான். தலையைக் கட்டிக்கப் போறவளாமே...

நடுவுல மீனா நிறுத்துடீன்னு சொன்ன மாதிரி கொரல் கேட்டுதே.. அந்தக் கொரலு தலையோட கொரல் மாதிரிதானே இருந்திச்சி.... என்னப்படம் இது.. யாரு டைரக்ஷன்... திரைக்கதை வசனம் யாருது.. ஒண்ணுமே புரியலியே...

மீனாங்கறது நம்ம மாப்ளை செல்வாவோட தங்கச்சி பேராச்சே.. ஓஹோ.. ஹோ... ஹோ... ஓஹோ... கதை அப்டீ போவுதா... அதானேப் பாத்தேன்.. நம்ம 'தலையா கொக்கா..?' கட்ச்சீல மீனாவை கரெக்ட் பண்ணிட்டாரா நம்ம தலை சீனு..? வேலாயுதத்துக்கு குஷி பிய்த்துக்கொண்டு கிளம்பியது.

மீனாவுக்கு ரோடு போட்டு.. அவளுக்கு ரூட்டு காமிக்கற இந்த மேட்டரைப் பத்தி தலை எப்பவும் நம்மக்கிட்ட சொன்னதே இல்லயே... கட்சீல நம்ம 'தலைக்கும்' ஒரு ஷோக்கு பிகர் செட் ஆயிடிச்சா..? இன்னைய டேட்ல சிட்டியில இதான் ஹாட் நீயூஸ் மாமே... பசங்களா கேட்டுக்கினீங்களாடா மேட்டரை...

தலை காதும் காதும் வெச்ச மாதிரி செல்வா தங்கச்சியை கணக்கு பண்ணி கரெக்ட் பண்ணி இருக்காரு... சும்மா வுட்டுடக்கூடாது தலையை... என்னம்மா உரிமை கொண்டாடறா மீனா...? என் சீனுங்கறா... இந்த ஒரு வார்த்தைக்கே மட்டுமே தலை நமக்கு ஒரு செமை ட்ரீட் குடுக்கணுமே...
]
என் மரியாதை கெட்டுப்பூடுங்கறா... இந்த டயலாக்தான் கேக்கறதுக்கு கொஞ்சம் பேஜாரா இருக்குது... போனாப் போவுது.. யாரு அது நம்ப அண்ணிதானே திட்டினது... கோபம் இருக்கற எடத்துலதான் கொணம் இருக்கும்... இதெல்லாம் கண்டுகினா வேலைக்கு ஆவுமா...

மீனா ரொம்பவே 'உஷார்' பார்ட்டி ஆச்சே.. ஒரு தரம் வெயில் நேரத்துல செல்வா வீட்டுக்கு போயிருந்தப்ப, ஒரு கிளாஸ் தண்ணி குடும்மான்னேன்.. நான் என்னா உனக்கு அம்மாவான்னு சுள்ளுன்னு எரிஞ்சு விழுந்தாளே.. கல்யாணத்துக்கு முன்னாடீயே 'தலயோட' வீட்டுக்கு வந்து 'தலைக்கே' நல்லெண்ணைய் தேச்சு சுளுக்கு எடுக்கறாளா அவ..? மேட்டரு இன்ட்ரஸ்டிங்கா போவுதே... வேலாயுதத்துக்கு தலை சுற்றியது.

"சாரி.. மீனா.. மீனா மேடம்... அயாம் சாரி... எக்ஸ்க்யூஸ் மீ... இனிமே இப்டீல்லாம் நடக்காது.. "

"வேலாயுதம்.. நல்லாக் கேட்டுக்குங்க.. இப்ப இங்க நடந்த விஷயத்தை, நான் உங்க கிட்ட பேசின விஷயத்தை, நான் சீனு கூட இருக்கறதை, ஊரு ஒலகத்துக்கெல்லாம்.. உடனே ப்ராட்காஸ்ட் பண்ணிடாதீங்க...ஆமாம்." மீனா வேலாயுதத்தை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு, காலை கட் பண்ணினாள். செல்லை விசிறி கட்டிலின் மேல் எறிந்தாள்.

வேலாயுதம் அசந்து போய் நின்றான். காலங்காத்தால மீனா மாதிரி சின்னப் பொண்ணு கிட்ட தேவையே இல்லாம ஓத்தாமட்டை வாங்க வேண்டியதா போச்சே.. செல்வா மாதிரியே அவன் தங்கச்சி மீனாவும் பொம்பளை புத்தரா பொறந்து இருக்கா.. 'தலை' நான் கால் பண்றேன்னு சொன்னப்பவே... அதை புரிஞ்சுக்கிட்டு வாயை பொத்திக்கிட்டு இருந்து இருக்கணும்.. நான் ஒரு கூறுகெட்டவன்... மொக்கையாட்டம் மேல மேல உளறிட்டேன்...



வேட்டிக்குள்ள ஓணானை எடுத்து வுட்டுகிட்டாச்சு... இப்ப கொடையுதே.. குத்துதேன்னு நொந்துக்கிட்டு என்னாப் பண்றது... ம்ம்ம்.. நம்ம 'தலை சீனுவே' அடிக்கற காத்துல அம்மிக்கல்லா பறக்கறாரு.. என்னடா இது பேஜாரு.. ம்ம்ம். கட்டிங் வுட்டுக்கற மூடே கெட்டுப்போச்சே..

கிணறு வெட்டப் போனா பூதம் கெளம்புற கதையா போச்சே... அட்லீஸ்ட் கடைசீல நமக்கு ஆப்பு வெச்சது யாருன்னு தெரிஞ்சுப் போச்ச்ச்சு... சீனுவோட அத்தையா இருக்குமோன்னு ரொம்பவே பயந்து போயிட்டேன்.. ஏற்கனவே என்னை அவங்க வீட்டுக்குள்ளவே விடமாட்டேங்கறாங்க.. காலிங் பெல் அடிச்சா.. அவங்க வீட்டு வரண்டாக் கதவையே தொறக்க மாட்டாங்க..

தலை சொல்ற மாதிரி நம்ம நேரம் சரியில்லே... இனிமே கொஞ்ச நாளைக்கு நம்ம 'தலை' வீட்டுப் பக்கமே நாம தலைவெச்சு படுக்கக்கூடாது... மனதுக்குள் முனகிக்கொண்டான் வேலாயுதம்.