Monday 9 March 2015

சுகன்யா... 38


செல்வாவையும், சீனுவையும், மீனா, தனியாக விட்டு சென்றதிலிருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சற்று நேரம் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவரின் மனதிலும் இனம் தெரியாத உணர்ச்சிகள் எழுந்து பின் மெதுவாக அடங்கின. மீண்டும் வேகமாக எழுந்தன. மெல்ல மெல்ல அடங்கின.

ஒருவரிடம் ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நண்பர்கள் இருவருமே மனதுக்குள் தவித்துக்கொண்டிருந்தார்கள். நேருக்கு நேர், தங்கள் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதை அவர்கள் கவனமாக தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்வா இந்த விளையாட்டில் முதலில் களைத்துப்போனான்.



"உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..."

மீனாவின் இந்த ஒரே ஒரு வார்த்தை, அந்த வார்த்தையில் இருந்த அப்பட்டமான உண்மை, செல்வாவை ஒரு நொடி நிலை குலைய வைத்தது. மீனா தன் ஆடைகளை உருவி நிர்வாணமாக நடுத்தெருவில் நிற்க வைத்ததைப் போல் அவன் உணர்ந்தான். மீனா உண்மையைத்தானே சொல்றா? அவளுக்கு என்னை விட சீனு மேல ஒரு படி அக்கறை அதிகமாவே இருக்கு; நிஜமாவே சீனு மேல எனக்கு அக்கறை இருந்திருந்தால் அவன் குடியை நிறுத்தறதுக்கு இத்தனை நாள் உருப்படியா எதையாவது ஒரு வழியைத் தேடியிருப்பேனே?

அண்ணன் செல்வாவும், அவனுடைய இளவயது தோழன் சீனுவும், மீனாவை மிகவும் நன்றாக அறிந்தவர்கள். மீனா எந்த ஒரு விஷயத்திலும் தான் எடுத்த ஒரு முடிவை மாத்திக்கிட்டதேயில்லை. இனி அந்த ஆண்டவனே வந்தாலும், சீனுவுக்காக அவள் எடுத்துள்ள முடிவையோ, அவள் மனதை மாற்றுவதென்பதோ முடியாத காரியம், என்பது அந்த இருவருக்குமே தெரிந்திருந்தது.

இருபது வருட நட்பில், இது போன்ற ஒரு தருணத்தை, நண்பர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. தங்களுக்கிடையில் இருந்த பரிசுத்தமான, களங்கமற்ற, தூய்மையான நட்பு, இப்போது வேறு ஒரு பரிமாணத்துடன், இதுவரை அவர்கள் நினைத்தே பார்த்திராத, வேறு ஒரு திசையில் பயணிக்கப் போவதை, அவர்கள் இருவரும் அந்த கணங்களில் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

இந்தப் பாவி இனிமே தண்ணி கிளாசை, தன் கையில எடுக்காம இருந்தான்னா, என்னால முடியாத காரியத்தை என் தங்கச்சி சாதிச்சுட்டான்னு, நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா இதுக்கான வெலை என் தங்கச்சியோட வாழ்க்கைன்னு நினைக்கும் போது, எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

"ம்ம்ம்ம்" ... என் சீனு ஆயிரத்துல ஒருத்தன். அவனைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவனை கொறை சொல்லணும்ன்னு யாராவது நெனைச்சா, இந்த ஒரு விஷயத்தை தவிர வேற எதை அவன் கிட்ட காட்டமுடியும்? சீனு மீனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பானா? சீனு என் தங்கச்சி மீனாவை சந்தோஷமா வெச்சுப்பானா? சீனுவை இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு என் வாயைவிட்டு இதைப் பத்தி கேட்டுத்தான் ஆகணும்...

"மாப்ளே!, மாப்ளே"ன்னு சீனுவை நான் எவ்வளவு நாளா அர்த்தமேயில்லாம கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்? மீனா அந்த சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை, இவனை ஒரே செகண்ட்ல இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்கி, எனக்கு சொல்லி கொடுத்துட்டா! செல்வா, முகம் தெரியாத ஒருத்தனை நீ ஏண்டா மாப்ளேன்னு கூப்பிடப் போறே; இருபது வருஷமா நீ தினம் பாத்துக்கிட்டு இருக்கற இவனையே நீ மாப்ளேன்னு கூப்பிடுடான்னு, மீனா அடிச்சு சொல்லிட்டா! இனிமே நான் இவனை என்னன்னு கூப்பிடறது? வீட்டு மாப்பிள்ளையை "டேய் சீனுன்னு" கூப்பிடமுடியுமா?

மீனா சீக்கிரமா வந்து தொலைச்சா பரவாயில்லே; உள்ளே போனவ அப்படி என்னதான் பண்ணிகிட்டு இருக்கா? இந்த கொடுமையான மவுனத்தை என்னால தாங்கமுடியலியே? தொண தொணன்னு பேசற இந்த சீனுவும் இன்னைக்கு வாயில கொழுக்கட்டையை அடைச்சிக்கிட்டு இருக்கான்? பாவி அவன் மட்டும் என்னப் பண்ணுவான்? எல்லாமே இந்த மீனாவால வந்த வெனை! அவதான் இன்னைக்கு சீனுவோட வாயை கட்டிப்போட்டுட்டாளே!

சீனுவும், மீனாவின் அந்த வார்த்தையை தன் மீது வீசப்பட்ட ஒரு சவுக்கடியாகத்தான் உணர்ந்தான். எங்க ரெண்டு பேருடைய ஃப்ரெண்ட்ஷிப்பையே, ஒரு வினாடியிலே ஒண்னுமில்லாம ஆக்கிட்டாளே? செல்வாவும் நான் குடிக்கறதை சீரியஸா எடுத்துக்கலே! சீனு... நீயும் செல்வாவை, அவன் சொல்றதை சீரியஸா எடுத்துக்கலே? நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு வாயாலத்தானே சொல்லிக்கிட்டிருந்தீங்கடான்னு, ரெண்டுபேரையும் ஜோட்டால அடிச்சுட்டாளே?

என்னாலத்தானே செல்வாவுக்கு இந்த நிலைமை? செல்வா எத்தனையோ முறை சீரியஸா, நான் கட்டிங்க் வுடற விஷயத்தைப் பத்தி, என் கிட்ட இது நல்லதுக்கு இல்லேடான்னு தன் மனம் வெதும்பி பேசியிருக்கான். நான் தான் அவன் சொன்ன எதுக்கும் காது குடுக்காம என் போக்குல போய்கிட்டு இருந்தேன்; என்னால இன்னைக்கு அவன் அவமானப்பட்டு வாயைத் தொறக்க முடியாம உக்காந்திருக்கான்.

செல்வா, மவுனமாக உட்க்கார்ந்து தன் விரல் நகங்களை ஒவ்வொன்றாக கடித்து துப்பிக்கொண்டிருந்தான். மீனா பேசிவிட்ட அந்த ஒரு வார்த்தையால் செல்வாவும், சீனுவும், எப்போதும் தங்களுக்குள் தாங்கள் உணரும் சகஜமான நிலைமை, ஒரே நொடியில் சுக்கு நூறாக்கிவிட்டதை, நினைத்து திரும்ப திரும்ப வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். சீனு, தன் தலையை குனிந்து தன் கன்னத்தை சீரியஸாக சொறிந்துகொண்டிருந்தான். 

"அண்ணா! சாப்பிட வர்றீங்களா?"

வெங்காயத்தின் விலை மடமடவென ஒரே நாளில் ஏறியது போல், மீனாவின் குரலில் திடீரென மரியாதை ஏகத்துக்கு ஏறியிருந்தது. செல்வாவுக்கு தன் தங்கை தனக்கு திடீரென கொடுக்கும் மரியாதைக்கான காரணம், தெளிவாக புரிந்தாலும், இவ எப்ப நம்பளை தலைமேல தூக்கி வெச்சுக்குவா; எப்ப கால்லே போட்டு மெதிப்பான்னு ஒண்ணும் புரியலையே, ஏகத்துக்கு அப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து வெச்சிருக்காரு. வயசுக்கு வந்த பொண்ணை ஒண்ணும் வாய்விட்டு அதட்டி சொல்லவும் முடியலை. இவ மனசுக்குள்ள இந்த நிமிஷம் என்ன இருக்கு? புதுசா வேற ஒரு சீனுக்கு அடி போடறாளா? அவன் மனதில் சிறிதே வியப்பும், அச்சமும் ஒரு சேர எழுந்தன.

சீனு, தன் தலையை நிமிர்த்தாமல், தன் உள்ளங்கைகளை விரித்து, அதில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும், அட்சரேகைகளையும், தீர்க்க ரேகைகளையும், அன்றுதான் புதிதாக பார்ப்பவன் போல் மவுனமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான். செல்வா, தன் தங்கையின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன், வாய் பேசாமல், சீனுவின் பக்கம் நோக்கி, அவனையும் நீயே ஒரு தரம் சாப்பிட கூப்பிடேண்டி, என்ற பொருள் தன் பார்வையில் தொக்கி நிற்க, மீனாவிடம் கண்களால் கெஞ்சியவன், தன் தலையைத் சட்டென தாழ்த்திக்கொண்டான்.

"மணி பதினொன்னு ஆவப்போவுது, அர்த்த ராத்திரியில, ஒவ்வொருத்தரையும் நான் தனித்தனியா, வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளையை, விருந்துக்கு அழைக்கற மாதிரி வெத்தலைப் பாக்கு வெக்கணுமா?" மீனா தன் குரலில் போலியாக சிறிது சீற்றத்தை கொண்டுவந்தாள்.

மீனாவின் குரலில் இருந்த சீற்றத்தைக்கண்டதும், "இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி, காத்துல எனக்கு முத்தம் கொடுத்துட்டு போனா; அதுக்குள்ள இப்ப எதுக்காக என் மேல இந்த கோபம் இவளுக்கு?" ம்ம்ம்.. நடத்தற டிராமாவை, சொந்த அண்ணனை பக்கத்துல சாட்சிக்கு வெச்சிக்கிட்டே நடத்தணுதுமில்லாமே, கடைசீல என்னை இந்த வீட்டு மாப்பிள்ளைன்னும் சீலைக் குத்திப்பிட்டா..! இனிமே இவகிட்டேயிருந்து தப்பிச்சு ஓடமுடியாதபடி கட்டிப்போட்டுட்டா!.

சீனு தன் மனதில் ஓடும் கட்டுக்கடங்காத எண்ணங்களுடன், விளக்கெண்ணைய் குடிச்சது போலிருந்த தன் முகத்தை ஒரு முறை, தன் வலதுகையால், அழுந்த துடைத்துக்கொண்டு, தன் தலையை நிமிர்த்தி வாசல் படியில் நின்றிருந்தவளை நோக்க, "பசிக்குதுன்னு சொன்னியேடா ... சட்டுன்னு எழுந்து வாயேன்" என்கிற கனிவான அழைப்பை அவள் கடைக்கண்ணில் கண்டதும், சரியான ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் இவ; இவளுக்கு வாயில ஒரு பேச்சு; கண்ணுல ஒரு பேச்சு; இவ கிட்ட இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே; சீனு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான்.

***

மீனா, அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டாங்களா?" சீனு அங்கு எதுவுமே நடக்காதது போல், தன்னை வெகு சகஜமாக காட்டிக்கொள்ள முயன்றான்.

"கையை கழுவிக்கிட்டு வந்து சாப்பிடறதுங்கற பழக்கம் கூட போயாச்சு இந்த வீட்டுலே? தட்டின் எதிரில் உட்க்கார்ந்த செல்வாவிடம் மீனா எரிந்து விழுந்தாள்.

"மீனா ... போதும்டா கண்ணு, சாப்பிட வுடுடி..." செல்வா எரிச்சலுடன் பேசியபோதிலும், முழுவதுமாக வீக்கம் குறையாத தன் காலுடன் வாஷ் பேசினுக்கு நொண்டியபடி நடந்தான். சீனு அவளை பார்க்காமலே செல்வாவின் பின்னால் வாயைத் திறக்காமல் எழுந்து ஓடினான்.

"போதும்...மீனா ... போதும் ... செல்வாவுக்கு வெய்யேன் ... அம்மா மாதிரி பொண்ணுக்கும் மனசும், கையும் தாராளம், தட்டில் எடுத்து எடுத்து ஊத்தப்பத்தையும், பஜ்ஜியையும் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தவளை மனதில் நன்றியுடன் பதறித் தடுத்தான் சீனு.

"இங்க சாப்பிடறதுக்கு பில்லு யாரும் போடப்போறதில்லே ...சீன் காட்டாம ஒழுங்கா சாப்பிடுங்க..."மீனாவின் குரலில் இப்போது கொஞ்சம் மென்மை வந்திருந்தது.

"மீனா ... ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருந்தது ... தேங்க்ஸ்ம்ம்மா ..." அண்ணனுக்குத்தான் மரியாதை கூடியிருக்குன்னுப் பாத்தா, எனக்கும் கொஞ்சம் மரியாதை அதிகரிச்சித்தான் இருக்கு. மனதுக்குள் சற்றே வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்த சீனு மெல்லிய குரலில் சொன்னான்

"சரி ... சரி ... மாடிக்கு போகும் போது கையோட குடிக்கறதுக்கு தண்ணியை எடுத்துகிட்டு போய் சேருங்க; போனமா, படுத்தமான்னு ரெண்டு பேரும் நேரத்துக்கு தூங்கற வேலையைப் பாருங்க; அப்புறமா என்னை ஒரு டம்ளர் தண்ணி குடுடி ... ஒரு கப்பு டீ போட்டு குடுடீன்னு தூங்கறவளை எழுப்பினா எனக்கு கெட்ட கோவம் வரும் ... இப்பவே சொல்லிட்டேன் ..." வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

"உன்னை யாரும் இதுக்கு மேல எதுவும் கேக்கமாட்டோம் ... நீ நிம்மதியா தூங்குடியம்மா..." செல்வா கை கழுவ வாஷ்பேசின் பக்கம் நகர்ந்தான். தன் கையை கழுவி, வாய் கொப்பளித்த செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்தான்.

"சீனு, ஐயாம் சாரி ... உங்களை நான் கன்னா பின்னான்னு பேசிட்டேன் ... என்னை மன்னிச்சுடுங்க; உங்க மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க பிளீஸ்.." மீனா வேகமாக சீனுவை நெருங்கி மெதுவாக தன் அடிக்குரலில் பேசினாள்.

சீனு, மீனாவை ஒருமுறை நிமிர்ந்து நோக்கினான். அவன் கண்கள் இலேசாக கலங்கியிருந்தது. நிமிர்ந்தவன் தன் தலையை வேகமாக குனிந்து கொண்டான். இதுவரை அவன் மனதுக்குள் அடைபட்டிருந்த இனம் தெரியாத துக்கம் மெதுவாக பீறிட்டுக்கொண்டு கேவலுடன் வெளியில் வந்தது. அவன் உடல் வேகமாக குலுங்கியது. சீனு சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தான்.

கல்லுளிமங்கன் சீனுவா அழறான்? எப்பவும் அடுத்தவங்களை அழவெச்சுப் வேடிக்கைப் பாத்துத்தானே இவனுக்குப் பழக்கம்! மீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவன் அழுவதைப் பார்த்த மீனாவின் மனம் பதைத்து, மேனி நடுங்கியது. என் சீனு அழறான். என் சீனு அழறதை என்னால பொறுத்துக்க முடியாது. அவன் அழுகையை நிறுத்தணும். என்ன செய்யறது? செல்வா இன்னும் டாய்லெட்டிருந்து வரும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. மீனா நின்ற இடத்திலிருந்தே தன் பெற்றோர்களின் அறையை ஒரு முறை எட்டிப்பார்த்தாள். அவர்களின் அறைக்கதவு முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.

மீனா, சீனுவை நெருங்கினாள். தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்த சீனுவின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி நிமிர்த்தினாள். கண்களால் பேசினாள். தன் தலையை ஆட்டி அழாதே சீனு ... சீனுவின் கண்களை தன் வலது கையால் துடைத்தாள். சீனுவின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தன. மீனா அவன் வாயை தன் சிவந்த உள்ளங்ககையால் பொத்தினாள்.

"அழாதே சீனு! ... நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்.. உன் மனசு எனக்கு புரியுதுப்பா! உனக்குத்தான் நான் இருக்கேன்ல்லா? ... ஏன் அழறேப்பா? அவள் குரல் தழுதழுத்தது.

"மீனா .... சத்தியமா நான் இனிம குடிக்கமாட்டேன்... என்னை நீ நம்பு மீனா..." சீனு கேவலுடன் குளறினான்.

"சரி ... நான் உங்களை நம்பறேன்... நீங்க இப்ப அழாதீங்க ... நீங்க அழறதை என்னால தாங்கமுடியலை." மீனா மீண்டும் அவன் கண்களைத் துடைத்தாள்.

சீனுவின் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த மீனா, அவன் முகத்தை திருப்பி தன் வயிற்றில் அழுத்திக் கொண்டாள். மீனாவின் வலுவான பருத்த இடது தொடை அவன் தோளை உரசிக்கொண்டிருந்தது. இத்தனை நெருக்கத்தில், ஒரு இளம் பருவப்பெண்ணின் உடலை, அந்த உடல் தரும் இதமான வெப்பத்தை சீனு இதுவரை உணர்ந்ததில்லை. மீனாவின் உடல் வாசம் அவன் நாசியில் வேகமாக ஏறியது. சீனுவின் உடல் சிலிர்த்தது. அவன் தேகம் காற்றில் பறந்துகொண்டிருந்தது.

மீனா தன் இடது கையால் சீனுவின் முதுகை மென்மையாக வருடிகொண்டிருந்தாள். அவளின் வலது கை விரல்கள் அவனின் அடர்த்தியான கேசத்துக்குள் நுழைந்திருந்தன. சீனுவின் உதடுகள் அவள் அணிந்திருந்த குர்த்தாவின் மேல் பதிந்து மெல்ல அசைந்து கொண்டிருந்தது. மீனாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை முழுமையாக மறப்பதற்குள், டாய்லெட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீனா சீனுவின் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட்டு, அவனிடமிருந்து விலகி வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள்.

சீனு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, நிதானமாக தன் தட்டிலிருந்த கடைசி விள்ளல் ஊத்தப்பத்தை சாம்பாரில் அமிழ்த்தி, தன் வாயில் போட்டு மென்றவன், கிச்சனுக்குள் தன் பார்வையை மெல்ல செலுத்தினான். மீனாவிடமிருந்து சீனுவுக்கு இரண்டாவது முத்தம் காற்றின் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த வினாடியில், சீனுவுக்கும் சற்றே தைரியம் வந்து, பதிலுக்கு தன் உதட்டை குவித்து மீனாவின் பக்கம் காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட்டான்.

இன்னொரு ஆண். இன்னொரு பெண். சீனு ... மீனா...! சீனுவாசன்... மீனாட்சி!. காதலர்களின் பெயர்கள் புதிதாக இருக்கலாம். காதல் புதிது அல்ல. சீனுவாசன், மீனாட்சி துவங்கியிருக்கும் இந்த காதல் நாடகம், அவர்கள் இருவருக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். காலம் எத்தனை சீனுக்களையும், மீனாக்களையும், எத்தனை காதல் நாடகங்களையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் பெண் மோதல். அந்த மோதலின் பின் காதல். காலத்திற்கு இந்த காதல் நாடகம் புதிதல்லவே...

இந்த காலம்தானே ஓய்வில்லாமல், சுயம் எண்ணற்ற காதல் நாடகங்களை, களைப்பில்லாமல் கல்ப காலமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தனிமனிதர்கள் தாங்கள் காதலிப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இதில் காலத்துக்கு கிடைக்கும் லாபம் என்ன? காலம் அந்த புதிய காதலர்களை நோக்கி மென்மையாக சிரித்துக்கொண்டிருந்தது. 



"செல்வா ... ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னே? என்ன விஷயம்?" சீனு, சுவரில் வசதியாக சாய்ந்து தன் இருகால்களையும் நீட்டி, ஒரு சிகரெட்டை கொளுத்தி புகையை நெஞ்சு நிறைய இழுத்தான். மாடிக்கு வந்ததும், இப்போது செல்வாவுக்கு எதிரில், தனிமையில், அவன் தன்னை மிகவும் சகஜமாக உணர ஆரம்பித்திருந்தான்.

"பேசணும்டா.. ஆனா மீனா என்னை முந்திக்கிட்டா; யாருமே எதிர்பாக்காத விதத்துல அவ இந்த வீட்டுல உன்னை ஒரு முக்கியமான நபரா ஆக்கிட்டா..."

"ம்ம்ம் ... இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையில வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே.." சீனுவின் குரல் கம்மியிருந்தது.

"மாப்ளே, வெரி சாரிடா, மீனா இந்த அளவுக்கு உன்கிட்ட எடக்கு மடக்கா பேசியிருக்கக் கூடாது..." செல்வா லுங்கிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

"நம்ம மீனாதானேடா ... என் கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா? நான் திருந்தணும்ன்னுதானே அவ பேசினா... எனக்கு அதுல மனவருத்தம் ஒண்ணுமில்லே; ஒருவிதத்துல அவ இப்படி பேசினதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் ... நிஜமாவே நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. யாருக்குடா இந்த மாதிரி ஒரு லட்சுமி சுலபமா கிடைப்பா? என்னால இதை நம்பவே முடியலை." சீனு பேசமுடியாமல் தடுமாறினான்.

"ஏண்டா நீ பாட்டுக்கு யோசிக்காமே ... குடிக்கமாட்டேன்னு அவகிட்ட சட்டுன்னு சத்தியம் பண்ணிட்டே?" செல்வா சீனுவுக்கு எதிர் சுவரில் சாய்ந்து உட்க்கார்ந்தான்.

"மச்சான் ... மீனா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருந்தா ... அந்த நேரத்துல அவளை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்கு புரியலை... அவ கையை புடிச்சு சத்தியம் பண்றதை தவிர எனக்கும் வேற வழி தெரியலை..."

"எல்லாமே நல்லதுக்குத்தாண்டா ... நீ உருப்பட்டா சரிதான்; ஆனா உன்னால இந்த குடிக்கற பழக்கத்தை சட்டுன்னு விட்டுட முடியுமா?"

"ஒரு கெட்டப் பழக்கத்தை இப்படித்தாண்டா விடமுடியும் ..."

"மாப்ளே ... உனக்கு நல்லாப் புரிஞ்சிருக்கும்; மீனா தன் லைப்பையே உனக்காக பணயம் வெச்சிருக்கா; இதை மட்டும் நீ மறந்துடாதே! அவ உன்னை கொஞ்ச நாளாவே தன் மனசுக்குள்ளவே நேசிச்சுக்கிட்டு இருந்திருக்கான்னு எனக்குத் தோணுது ..."

"புரியுது செல்வா ... அவ நம்பிக்கையை என்னைக்கும் நான் வீணாக்கிட மாட்டேன்! ஆனா அவ அன்புக்கு நான் லாயக்கானவனா? யோக்கியதை உள்ளவன் தானா? அதுதான் எனக்குப் புரியலை.."

"சீனு... உனக்கென்னடா குறைச்சல்? எனக்கு என் தங்கையைப் பத்தி நல்லாவேத் தெரியும்; மீனா உன்னைத் தனக்குன்னு தேர்ந்தெடுத்துட்டா; இனிமே எங்க வீட்டுல, யார் என்ன சொன்னாலும் அவ கேக்கப் போறது இல்லே. யாருக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை...இதுல எந்த மாத்தமும் கிடையாது..."

"செல்வா... உங்க வீட்டுல உங்க அம்மா கையால சாப்பிட்டு வளந்தவண்டா நான்...என்னால உங்க வீட்டுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது.." சீனு தன் சிகரெட்டை அழுத்தி தேய்த்து அணைத்தான். அவன் முகத்தில் இலேசாக பயமும், மிரட்சியும் இருந்தது.

"என்னைப் பொறுத்த வரைக்கும் ... மீனா உன்னை நேசிக்கறதுலயோ ... அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுலேயோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே..உன்னை எனக்கு இருபது வருஷமா பாக்கறேண்டா; உன் மனசைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. மீனாவுக்கு ஏத்தவன்தான் நீ..." செல்வாவின் குரல் தெளிவாக வந்தது.

"செல்வா ... மீனா எனக்கு கிடைக்கறதுக்கு நான் உண்மையிலேயே குடுத்து வெச்சிருக்கணும்; ஒண்ணு மட்டும் சொல்றேன்; ஆனா எப்பவுமே நான் அவளை இந்த மாதிரி எண்ணத்துல பாத்ததே கிடையாதுடா; என் மனசுக்குள்ளே அவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற எண்ணம் எப்பவுமே வந்தது கிடையாது."

சீனுவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. சில வினாடிகள் தன் தலையை குனிந்து அவன் மவுனமாக உட்க்கார்ந்திருந்தவன், மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து தன் நடுங்கும் விரல்களால் உதடுகளில் பொருத்தி பற்றவைத்துக்கொண்டான்.

"மாப்ளே ... உன்னைப் பத்தி எனக்கு தெரியாதாடா ... There is no need to vindicate yourself... உன்னைப் பொறுத்த வரைக்கும் நீ இந்த முடிவை ஒரே ஒரு நொடியில எடுத்திருக்கேன்னு எனக்கு நல்லாத் புரியுது..." செல்வா ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி, பேசினான்.

"தேங்க் யூ டா ... உன் அப்பாவை நெனைச்சாத்தான் எனக்கு பயமா இருக்கு... இதை அவர் எப்படி எடுத்துப்பார்ன்னு தெரியலை?"

"இனிமே இதையெல்லாம் யோசிச்சு எந்த பிரயோசனமுமில்லே; மீனா என் ஒரே தங்கைடா! சீனு... நாங்க எல்லாம் அவ மேல எங்க உயிரையே வெச்சிருக்கோம்... இது உனக்கு நல்லாத் தெரியும்... அவ சந்தோஷமா இருக்கணும்... அதுக்கு நீதான் உறுதியா நிக்கணும்;" செல்வாவின் குரல் இலேசாக தழுதழுத்து வந்தது.

"செல்வா ... மீனாவை நான் என் உயிருக்கு மேலா பாத்துப்பேன் ...அவளை மாதிரி ஒருத்தி என் வாழ்க்கைத் துணையா, எனக்கு கிடைக்க நான் ரொம்ப ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்" சீனு, செல்வாவின் முகத்தை நேராகப் பார்த்து உறுதியுடன் பேசினான்.

"மச்சான் ... ஏண்டா பேசாம உம்முன்னு இருக்கே?" சீனு தன் வழக்கமான உற்சாகத்துடன் ஆரம்பித்தான்.

"அம்மா இன்னைக்கு காலைல சுகன்யாவை தன்னோட மருமகளா ஏத்துக்கறேன்னு சொல்லிட்டாங்கடா.."

"இவ்வளவு நேரம் கழிச்சு இந்த குட் நியூஸை எனக்கு நீ சொல்றே ..ம்ம்ம்" சீனு செல்வாவின் கையை மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

"நீ வந்ததுலேருந்து மீனா என்னை எங்கடா பேசவிட்டா?"

"இதுக்கு ஏண்டா நீ இப்ப ஒப்பாரி வெக்கிறே?"

"சம்பத்துன்னு ஒரு கம்மினாட்டி என்னை இன்னைக்கு ரொம்பவே கலாய்ச்சுட்டாண்டா"

"ம்ம்ம்... யார்ரா அவன்? பேரை கேட்ட மாதிரி இல்லையே?"

"அம்மா விருப்பத்தையும் நான் சுகன்யாவோட மாமா ரகுகிட்ட மதியம் சொல்லிட்டேன்..."

"விஷயத்துக்கு வாடா..."

"இந்த சம்பத்து சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறானாம்..."

"சரி ... அவன் என்னா சுகன்யாவை உங்கிட்ட தானமா கேட்டானா? நீ என்னா கொடை வள்ளல் கர்ணன் மாதிரி வாடா வந்து வாங்கிக்கோடான்னு சொல்லிட்டியா?"

"சுகன்யாவுக்கு நான் அத்தைப் பையன் ... அவளுக்கு நான்தான் முறை மாப்பிள்ளைன்னான்"

"எங்கடா இருக்கான் அவன்? பொழுது விடிஞ்சதும் போய் என்னா ஏதுன்னு சரியா விசாரிச்சிட்டு வரலாம்..."

"நேத்து வந்த நீ சுகன்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே, சாமான் போடுவே! நான் என்னா உனக்கு விளக்கு புடிக்காவான்னு கேட்டாண்டா.."

"அவன் கதை சொல்ல சொல்ல, அவனுக்கு மூஞ்சியில ரெண்டு பல்பு குடுக்காம, நீ இன்னா உன்னுதை உன் கைல புடிச்சுக்கிட்டு கேட்டுகிட்டு இருந்தியா?"

"மாப்ளே ... சுகன்யா இப்ப கும்பகோணத்துல அவ தாத்தா வீட்டுல இருக்காடா! அவ கிட்ட அம்மா சம்மதம் சொன்னதை சொல்லலாம்னு போன் போட்டப்ப அவன் லைன்ல வந்தாண்டா..."

"இப்ப என்னா நாம ரெண்டு பேரும் கும்பகோணம் போவணுமா அவனை மீட் பண்றதுக்கு? அவன் நம்பரை குட்றா நான் என்னாடா விசயம்ன்னு கேக்கறேன்.."

"அதெல்லாம் வேணாம்..."

"அப்டீன்னா இதுல உனக்கு என்னடா பிராப்ளம்? நீ சுகன்யாவுக்கு தாலியை கட்டிட்டு, ஜாலியா அவளை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போக வேண்டியதுதானேடா?" சீனு விஷயம் புரியாமல் குதித்தான்.

"எட்டு வருஷமா காதலிக்கறேன்னு அவன் சொல்றான்; சுகன்யா இதைப்பத்தி எங்கிட்ட எப்பவும் சொன்னதேயில்லே; அவங்களுக்குள்ள எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்? வெறுமனே அவங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்களா? எதுவரைக்கும் அவங்களுக்குள்ள உறவு இருந்திருக்கும்ன்னு என் மனசு திண்டாடுதுடா?" செல்வா மெதுவாக இழுத்து இழுத்து பேசினான்.

"ஒஹோ ... மை டியர் சார் ... இப்ப புரியுது எனக்கு ... நீங்க எங்க வர்றீங்கன்னு? நீங்க சுகன்யாவை சந்தேகப்படறீங்களா?" சீனுவின் குரலில் நையாண்டி ஒலித்தது.

"மாப்ளே ... என்னடா நீ .. சேம் சைட் கோல் போடறியேடா? அவ நடத்தையை நான் சந்தேகப்படலடா ... ஆனா இவனைப்பத்தி என் கிட்ட சுகன்யா ஏன் சொல்லலைன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன முள்ளு மாதிரி உறுத்திக்கிட்டே இருக்குடா.."

"ம்ம்ம்..."

"இதைப்பத்தி அவகிட்ட நான் கேக்கலாமா...? கூடாதா...?அப்படி கேட்டா சுகன்யா என்ன பண்ணுவா? செல்வா இழுத்தான்..

"சுகன்யா, கும்பகோணத்துலேருந்து ஒரு தரம் மெனக்கெட்டு உன் வீட்டுக்கு வந்து உன்னை செருப்பால அடிச்சுட்டு திரும்பி போவா.." சீனுவின் முகம் கோபத்தில் சற்றே சிவந்திருந்தது.

"மாப்ளே..."

"அந்தாள் பேரு என்னா? சுகன்யாவோட மாமன் ... ரகுராமன் தானே? அவன் வீச்சு அருவாளோட வந்து உன்னை வெட்டினாலும் வெட்டுவான்...என் மருமவளை நீ சந்தேகப்பட்டியான்னு?"

"என்னடா நீ அவங்க பக்கமே பேசறே?" செல்வா சீறினான்.

"சுகன்யாவைப் போய் சந்தேகப்படறியேடா...நாயே? அவளை மாதிரி ஒரு பொண்ணை நீ ஒரு தரம் கை நழுவ விட்டே ... கடைசி வரைக்கும் கையில புடிச்சிக்கிட்டுத்தான் நீ அலையணும் சொல்லிட்டேன்..." சீனு ஒரு சிகரெட்டை எடுத்து கொளுத்திக்கொண்டான்.

"மாப்ளே... என்னை திட்டறதுக்காடா நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்?" செல்வாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த போதிலும், பரிதாபமாக சீனுவைப் பார்த்தான்.



"மச்சான் ... ஆளுங்களோட தராதரம் உனக்குத் தெரியலைடா..."

"என்னடா சொல்றே ..."

"சுகன்யாவோட அம்மாவை பாத்தல்லே?

"ம்ம்ம்.."

"அந்தம்மா பெத்த பொண்ணுடா சுகன்யா ... எவனோ ஒரு கேனப்புண்டை என்னமோ சொன்னான்னு அவளை போய் சந்தேகப்படறியே நீ?"

"ம்ங்க் .. ம்ம் ...ஹீம்ம்..ப்ஸ்ஸ்"

செல்வாவின் வாயிலிருந்து இனம் புரியாத ஓசைகள் வெளிப்பட்டன. இவன்ல்லாம் ஒரு ஃப்ரெண்டு... குடிகார நாய் இவன்; குடிக்கமாட்டேன்னு சொல்லி முழுசா ஒரு மணி நேரம் ஆவலை. அதுக்குள்ள பெரிய மகாத்மா மாதிரில்லா எங்கிட்ட பேசறான்..?

என்னமோ இருபது வருஷமா, ஒண்ணுக்கு ஓண்ணா பழகி, ஒரு தட்டுல சாப்பிட்டோமே, இவன் எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுவான்னு கூப்பிட்டேன். என்னை நாய்ங்கறான்; அதுக்கு அப்புறம் என் இடுப்புக்கு கீழ போர் போட்டு, அது உள்ள ராடு வுட்டு லெஃப்ட்டு ரைட்டுன்னு என்னை நெம்பி நெம்பி எடுக்கறான். செல்வாவுக்கு ச்ச்சீய் என்று ஆகிவிட்டது.

"இப்ப என்னை நீ என்னா பண்ணச் சொல்றே?" செல்வா முனகினான். சீனு சீறினால் அவன் எப்போதும் அடங்கிவிடுவான்.

"என் வாயை நீ நாத்தம் அடிக்குதுன்னு சொன்னேல்ல! இப்ப நீ உன் நாத்த வாயைப் பொத்திக்கிட்டு இருன்னு சொல்றேன். ."

"ம்ம்ம்..." நான் இவனை நாய்ன்னேன்; அதை சொல்லி என்னை திட்டினான். இப்ப பதிலுக்கு பதில் என் வாயை நாத்தங்கறான். நல்லா வேணும்டா எனக்கு! என் புத்தியை என் செருப்பாலேயே அடிச்சுக்கணும் ... இன்னைக்கு ஒவ்வொருத்தன் கிட்டவும் செருப்படி வாங்கறதுன்னு ராசி பலன்ல எழுதியிருக்கா எனக்கு?

"டேய் செல்வா, முதல்ல நீ உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன பேச்சு நடந்ததுன்னு வில்லாவரியா ஒரு எழுத்து விடாம முதல்லேருந்து சொல்லுடா..." சீனு புகையை நன்றாக இழுத்து அனுபவித்து வெளியில் விட்டான்.

ஆமாம் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லே; திருவிளையாடல் சிவாஜிகணேசன் மாதிரி பேசறான். நான் என்னா தருமியா? உரலுக்குள்ள தலையை விட்டாச்சு; இனிமே இவன் உலக்கையடிக்கு பயந்து என்னா பண்றது? செல்வா, ரகுவிடம் பேசி, சுகன்யாவின் தாத்தா சிவதாணு பிள்ளையின் செல் நெம்பர் வாங்கியதிலிருந்து, அவனுக்கும் சம்பத்துக்குமிடையில் நடந்த உரையாடலை முழுவதுமாக சொல்லி முடித்தவன் சீனுவிடம் வேகமாக எகிறினான்.

"இப்ப சொல்லுடா ... இந்த நாய் என்ன பண்ணணும்? என் நாத்த வாயை பொத்திக்கிட்டு இருக்கணுமா?" செல்வாவின் குரலில் சுயபரிதாபமும், கோபமும் வெகுவாக ஒலித்தது.

"நீ என்னடா பண்ணுவே; அவன் நம்பரும் உன் கிட்ட இல்லே? கொஞ்ச நேரம் என்னை யோசிக்க வுடுடா; மச்சான் ஒரு கப் டீ போட்டுகினு வர்றியா? கீழ தூங்கற யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடாதே; ஜாக்கிரதை, மெயினா அந்த பிசாசு மீனா எழுந்துடப்போறா; எழுந்துட்டா ராத்திரி நேரத்துல உனக்கு ஓத்தாமட்டை வுடுவா; சொல்லிட்டேன்." சீனு தன் கண்களை மூடிக்கொண்டு, சிகரெட்டு ஒன்றை கொளுத்திக்கொண்டான்.

"டேய் ... நீ இதுவும் பேசுவே; இதுக்கு மேலயும் பேசுவடா; அண்ணணும், தங்கச்சியும், உனக்கு சூடா ஊத்தப்பம் ஊத்திகுடுத்து, பஜ்ஜியை பக்கத்துல வெச்சி சேவை பண்ணோமில்லே... ஏன் பேசமாட்டே நீ..." அவன் எரிச்சலுடன் டீ போடுவதற்காக எழுந்து கீழே இறங்கினான். 





சுகன்யா... 37


கோபத்தில் எரிச்சலுடன் தன் வாயில் வந்ததை, கன்னாபின்னாவென யோசிக்காமல் வார்த்தைகளாக வீசிய மீனா, சட்டென தான் பேசுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள். எனக்கு சீனு மேல அவன் குடிச்சிட்டு வந்திருக்கானேன்னு கோபம்; அது வாஸ்தவம்தான்; அவன் அம்மா எப்படி பயந்து போய் போன் பண்ணாங்க? அவங்க ஏன் இப்படி கஷ்டப்படணுங்கற ஆதங்கம் எனக்கு இருக்கு? அதுவம் வாஸ்தவம்தான். ஆனா "நான் என்ன இவனுக்கு பெண்டாட்டியா, இவன் என்னா எனக்கு தாலி கட்டியிருக்கானான்னு" ஒரு வார்த்தையை ஏன் நடுவுலே பேசினேன்?

என் வாய்லேருந்து எதனால இந்த வார்த்தை இப்ப வந்தது? என் மனசுக்குள்ள என்ன இருக்கு?மீனா தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். அவளுக்கு தன் மனசு சற்றே இறுகி, நெகிழ்ந்து, மீண்டும் இறுகுவதைப் போலிருந்தது. எனக்கேத் தெரியாம, என்கிட்ட சொல்லாம, என் மனசுக்குள்ள இந்த பாவிப்பய சீனு நுழைஞ்சுட்டானா? எப்ப இவன் நுழைஞ்சான்? என் கனவுல கொஞ்ச நாளா ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வந்து, மீனு, மீனுன்னு சுத்தி சுத்தி வர்றானே; அவன் இவன் தானா? பேதை மீனா தன் மனசுக்குள் விடையைத் தேடினாள்.



மீனாவின் கொதிப்பான வார்த்தைகளைக் கேட்டதும், செல்வாவும், சீனுவும் ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக்கொண்டார்கள். இருவருக்குமே, இன்று மீனாவின் பேச்சில் இருக்கும் ஒரு வித்தியாசமான தொனி, அவள் பேச்சில் இதுவரை இல்லாத ஒரு உருமாறிய உணர்ச்சி, நெருப்பான வார்த்தைகளாக வெளிப்படுவதை, திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மீனாவிடம் இதுவரைக்கும் கண்டிராத ஒரு தனித்துவம் இன்னைக்குத் தெரியுதே? அவள் இயல்புக்கு மாறான, ஏதோ ஒரு உரிமையை, அவள் சீனுவின் மீது நிலை நாட்ட விரும்புகிறாள் என்பது இலேசாக புரிய வர, அது என்னவென்று புரியாமல் அவர்கள் மனதுக்குள் ஆச்சரியப்பட்டார்கள். உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்காக மீனா, சீனுவிடம் வலுவில் சென்று அவனை சண்டைக்கு இழுப்பது சகஜம் தான் என்றாலும், இன்னைக்கு அவள் பேசற தோரனையே புதுசா இருக்கே? மீனாவை இன்னைக்கு புரிஞ்சுக்கவே முடியலியே? அவ என்ன சொல்ல விரும்பறா?

சீனு அவ்வப்போது தண்ணி அடிப்பது மீனாவுக்கு தெரிந்த விஷயம் தானே? தண்ணி அடிச்சா சத்தம் போடாம, சீனு இங்க மாடி ரூம்ல வந்து படுத்துக்கறது ஒரு புது விஷயம் இல்லையே? ஆனா இந்த காரணத்துக்காக இன்னைக்கு சீனுவை மீனா என் இந்த காய்ச்சு காய்ச்சறா? அவர்கள் இருவருமே சற்றே அதிர்ந்துதான் போயிருந்தார்கள்.

செல்வா யோசிக்க ஆரம்பித்தான். மீனாவுக்கு என்ன பிரச்சனை? யார் மேல இருக்கற கோவத்தை மீனா இவன் மேல காட்டறா? அடிக்கடி, மீனாவும், சீனுவும் தேவையில்லாம ஏதோ ஒரு காரணத்தை வெச்சுக்கிட்டு தங்களுக்குள்ள சண்டை போட்டுக்குவாங்க; இது இந்த வீட்டுல ஒரு சாதாரண விஷயமா ஆகிப் போச்சு; வீட்டுல இருக்கற யாரும் இதை சீரியஸா எடுத்துக்கறது இல்லே?

விளையாட்டா பேச்சை ஆரம்பிப்பாங்க; அது எப்பவும் வெனையிலத்தான் போய் முடியும்; மீனா வழக்கமா சண்டை முடிஞ்சதும், மனசுல கோபத்தோட முறுக்கிட்டு இருப்பா; ஒரு வாரம் சீனுவைப் பாத்தாலும், பாக்காத மாதிரி மூஞ்சை திருப்பிக்குவா. இந்த வெக்கம் கெட்ட சீனுதான், ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி, கொழையடிச்சி, மீனாக்கிட்ட ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டுப் போய், தன் நட்ப்பை, சினேகிதத்தை ரீஜார்ஜ் பண்ணிக்குவான்.

ஆனா இன்னைக்கு இவங்களுக்குள்ள நடக்கறது வழக்கமான சண்டை மாதிரி தெரியலையே? மீனா என்னைக்குமே இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு, கண்ணு கலங்கி, சீனுகிட்ட இந்த மாதிரி ஒரு சீன் காமிச்சதில்லையே? சீனுவும், இன்று ஏதும் பேசாமல் மீனாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவன் மனதிலும் எழுந்து கொண்டிருந்தது.

"மச்சான், நான் கிளம்பறேன்; மதிக்காதவங்க வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாதுன்னு, எங்க அம்மா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க. மதிப்பில்லாத வீட்டுக்குள்ள கால் வெக்கறது தப்புன்னு இப்ப எனக்கு ஃபீல் ஆவுது. இதுக்கு மேல, இங்க யாருக்கும், நான் எந்த விதத்துலயும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சீன் இங்கே நடக்கறதுக்கு, ஒரு விதத்துல நான் காரணங்கறது உண்மைதான். அதுக்காக நான் நிஜமா வருத்தப்படறேன்." சீனு செல்வாவைப் பார்த்து மெல்ல முனகினான்.

"மிஸ் மீனா, அயாம் சாரி பார் தட், அண்ட் ஐ அன்கண்டீஷனலி அப்பாலஜைஸ் ஃபார் மை இம்பெர்டினன்ஸ்..." சொல்லிக்கொண்டே சீனு தான் உட்க்கார்ந்திருந்த வரந்தா படிக்கட்டிலிருந்து எழுந்தான்.

"டேய் மாப்ளே ... என்னடா பேசறே நீ? மீனாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்; நீ இன்னைக்கு நேத்தா அவளைப் பார்க்கிறே? மீனா அவ வழக்கம் போல எதையோ சொன்னாடா; அம்மா அவளை எதாவது சொல்லியிருப்பாங்க; அதனால அவ இன்னைக்கு ஏதோ அப்செட்டா இருக்கான்னு நினைக்கிறேன். அம்மா மேல இருக்கற கோவத்தை அவ உன் மேல காமிக்கறா; நீயும் அவ பேசினதை, ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்டு பதிலுக்கு என்னன்னமோ பேசறே? என் மனசு ரொம்ப கஷ்டப்படுதுடா.." செல்வா சீனுவின் கையைப் பிடித்தான்.

"உன் ஃப்ரெண்ட்க்கு குடுக்க வேண்டிய மதிப்பை, மரியாதையை நான் எப்பவும் போல, இந்த நிமிஷமும் நான் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்; உன் ஃப்ரெண்டை நான் ஒரு அன்னியனை நினைச்சிருந்தா, வெளியே போடான்னு ஒரே வார்த்தையில சொல்லியிருப்பேன்; இந்த வீட்டுக்குள்ள இனிமே நுழையாதேன்னு ஸ்ட்ரெய்ட்டா சொல்லியிருப்பேன்." அவளுக்கு இலேசாக மூச்சிறைத்தது."

"யாரையும் நான் இந்த வீட்டை விட்டு இப்ப போகச் சொல்லலை; ஏன் குடிச்சுட்டு இங்கே வராங்கன்னுத்தான் நான் கேக்கிறேன்? ஏன் குடிச்சுட்டு, தானும் அழிஞ்சு, மத்தவங்க மனசையும் புண்ணாக்கணும்ன்னுதான் கேக்கறேன்? ஏன் இப்படி நேரத்துக்கு சோறு தண்ணியில்லாம அழிஞ்சு போகணும்ன்னுதான் கேக்கிறேன்?”

செல்வா பதிலேதும் சொல்லாமல் மீனாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செல்வா... உன் ஃப்ரெண்டுகிட்ட, நான் சொல்றதை ஒழுங்கா புரிஞ்சுக்க சொல்லுடா; குடிச்சுட்டு போதையில இருக்கறவங்களுக்கு அடுத்தவங்க சொல்றது எப்படி புரியும்? மீனாவும் தன் அடித்தொண்டையில் பேசினாள்.

“ப்ளீஸ் மீனா; நான் சொல்றதை கேளு; ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான்தான் சீனுவை, இப்பவே வந்து ஆகணும்ன்னு கூப்பிட்டேன். அவன் மேல எந்த தப்பும் இல்லே...”

“உன் ஃப்ரெண்ட் வந்ததுல எந்த தப்பும் இல்லே; எப்ப வேணா வரட்டும்; எப்ப வேணா போகட்டும்; நீங்க என்ன வேணா டிஸ்கஸ் பண்ணிக்குங்க; அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே; அவரு குடிச்சுட்டு வந்திருக்காரே; அது சரியா? அவரு குடிச்சிருக்காருன்னு தெரிஞ்சும், நீ அவரை இந்த ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு கூப்பிட்டது சரியா?”

“மீனா அவன் தான் இனிமே பார்ட்டிக்கு போக மாட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டானே? அப்புறம் எதுக்கு நீ இன்னைக்கு விடாம அவனை வம்புக்கு இழுக்கறே?”

சீனு எதுவும் பேசாமல் கேட்டுக்கு வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். தன் நண்பன் இப்படி பேசமுடியாமல் தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டதும், செல்வாவுக்கு மனதில் கோபமும், ஆங்காரமும் பொங்க, மீனாவை ஒரு அறை விடலாம், ஆனா வயசுக்கு வந்த பொண்ணை, நான் அடிச்சா, என் அம்மா என்னை வீட்டை விட்டே தொரத்திடுவா; மீனா இன்னைக்கு ஏன் இப்படி அழும்பு பண்றா? தன் தங்கை மீனாவின் மீது அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்த போதிலும், செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

"மீனா நீ இப்ப என்னை என்னதான் பண்ணச்சொல்றே? செல்வா எரிச்சலுடன் தன் தங்கையை நோக்கினான்.

"உன் பிரண்டை இனிமே 'நான் குடிக்கமாட்டேன்னு' என் கையில அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்லு..." மீனாவின் கண்கள் கலங்கியது போல் இருந்தது. அவள் தன் மனதுக்குள் எதையோ முழுமையாக தீர்மானித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல், மிக மிக மிருதுவாக ஆனால் உறுதியான குரலில் பேசினாள்.

மீனா சொன்னதைக் கேட்டதும், சீனு விருட்டென அவள் பக்கம் திரும்பினான். தன் எதிரில் பளபளக்கும் தங்க நிலவொளியில், மெல்லிய தேகத்துடன், ரோம நாட்டு பளிங்கு சிலை போல், கண்ணீருடன் கண்கள் இலேசாக மின்ன, தன் கையை நீட்டியவாறு நின்று கொண்டிருந்த மீனாவை அவன் உற்று நோக்கினான். எனக்காக ஒரு பொண்ணு அழறளா? அப்படி அழற பொண்ணு, வேற யாருமில்லே? இருபது வருஷமா, என் நண்பனோட தங்கைன்னு நான் அன்பு காட்டற மீனாவை நான் அழ வெச்சுட்டேனா? சீனுவின் உடலும் மனமும் பதை பதைத்து நடுங்கியது.

மீனா என்கிட்ட என்ன சொல்ல விரும்புறா? அவள் பேசுவது அவனுக்கு புரிந்தும் புரியாத ஒரு புதிராக இருந்தது. சீனுவின் மனதுக்குள் இறுகிக் கிடக்கும் ஏதோ ஒரு வஸ்து மெதுவாக உருகுவது போல் அவன் உணர ஆரம்பித்தான். அவனால் நிற்க முடியவில்லை. அவன் கால்கள் காரணம் தெரியாமல் தொய்ந்து போனது. 

மீனா தன் கூந்தலை பின்னி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாக கட்டிருந்தாள். இறுக்கமான ரப்பர் பிடியிலிருந்து, வெளிவந்திருந்த ஓரிரு மெல்லிய மயிரிழைகள், நெற்றியின் இருஓரத்திலும், காற்றில் பறக்க ஆரம்பித்தன.
இது வரை கம்பி கதவை பிடித்துக்கொண்டு, வெரண்டாவின் கடைசி படியில் நின்றிருந்த மீனா, இப்போது கீழே தரையில் இறங்கி, தன் மெல்லிய, மூங்கிலைப் போன்று அழகாக நீண்டு வளைந்திருந்த, வலது கையை சீனுவின் பக்கம் நீட்டினாள்.

மீனா அன்று, கண்ணுக்கு இதமான வெளிர் பச்சை நிற சுடிதாரும், மேலே அதற்கு இணையாக, சிறு சிறு சிவப்பு பூக்கள் மலர்ந்திருந்த, வெள்ளை நிற குர்தாவும் அணிந்திருந்தாள். கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்க சங்கிலியும் அதன் முனையில் அவள் கோத்திருந்த சிறிய நட்சத்திர டாலரும், மார்பின் மேல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் தோளில் துப்பட்டா இல்லாமல் நின்றிருந்ததால், அவளின் சிறிய அளவான இளம் மார்புகள், அவள் சுவாசத்துக்கேற்ப, மெல்ல மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன.

மீனாவின் நீட்டிய கரத்தில், அவள் அணிந்திருந்த மெல்லிய பொன் வளையல்கள், அடித்த குளிர்ந்த காற்றில், மிக மிக இலேசாக ஆடி, ஒன்றையொன்று உராய்ந்து "கிணுங்க் ... கிணுங்க்" என்று இனிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. நிலா வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சிட்டுக்கொண்டிருக்க, அவளுடைய மின்னும் சிறிய கருப்பு நிற கண்கள், கண்களின் மேல் சீராக செதுக்கப்பட்டிருந்து கரிய புருவங்கள், அழகிய துடிக்கும் இமைகளால், பாதி விழிகள் மூடியிருக்க, மெல்லிய உதடுகள் மிகமிக இலேசாக பிளந்திருக்க, பிறை போல் பிளந்திருந்த உதடுகளின் நடுவில் பளிச்சிடும் சிறிய முத்தை ஒத்த பற்கள், மீனா வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு குட்டித் தேவதையைப் போல் சீனுவின் கண்களுக்கு தெரிந்தாள்.



சீனுவின் பார்வை, மீனாவின் முகத்திலிருந்து கீழிறங்க ஆரம்பித்தது. அவளுடைய சட்டைக்குள் அழகாக மேடிட்டிருந்த இளம் மார்புகளில், ஒரு வினாடி தயங்கி தயங்கி நின்றது. பின் மெல்ல மெல்ல கீழிறங்கியது. காற்றில் அவள் அணிந்திருந்த சுடிதார், அவள் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஒட்டிக்கொள்ள, அவளுடைய திடமான முன் தொடைகள், சீனுவின் கண்களில் மின்னலடிக்க, அவன் தேகம் புயல் காற்றில், தண்ணீரின் மேல் ஆடும் படகைப் போலானது.

மீனாவின் உடலழகை கண்ட சீனுவின் மன நிலைமை அத்தருணத்தில் ஒரு பைத்தியக்காரனின் மன நிலையை ஒத்திருந்தது. அவனுக்கு எல்லாம் புரிந்தது போலிருந்தது. அடுத்த வினாடியில் நடப்பது எதுவும் புரியாதது போலுமிருந்தது. சீனுவின் மனதில் எழுந்த உணர்ச்சிகளை, தன்னால் சொற்களால் விவரிக்கமுடியாது என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்ன்னு" இந்த நிலைமையைத்தான் சொன்னாங்களா? சீனு குளிர்ந்திருந்த வெளிக்காற்றை நீளமாக இழுந்து மூச்சாக மாற்றி, மார்பில் சில நொடிகள் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெதுவாக தன் நாசிகளின் வழியாக வெளியில் விட்டான்.பக்கத்தில் பிளாஸ்டிக்சேரில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த செல்வாவின் மேல் ஒரு வினாடி அவன் பார்வை சென்று மீண்டது. அவன் உடம்பில் மாலை அருந்தியிருந்த மதுவின் போதை முழுவதுமாக இப்போது காணாமல் போயிருந்தது.

மீனா இவ்வளவு அழகா! இத்தனை நாளா இவளை, வயசுக்கு வந்த ஒரு அழகான பெண், நாகரீகமான இளம் யுவதிங்கற கோணத்துலே இருந்து நான் இவளைப் பார்த்ததேயில்லையே? மீனா செல்வாவோட தங்கச்சி, என் உயிர் நண்பனோட ஆசைத் தங்கச்சி; ஒன்னும் தெரியாத சின்னப் பொண்ணு, இவளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு? சின்ன வயசுலேருந்து நான் பாத்து வளர்ந்த பொண்ணுன்னு, அவ மன உணர்ச்சிகளுக்கு, மதிப்பு குடுக்காமா, அவகிட்ட எப்பவும் எடக்கு மடக்கா பேசி, விளையாட்டுக்குத்தான்னாலும், எப்பவும் சண்டைக்குத்தானே அவளை இழுத்துக்கிட்டு இருந்தேன்? நான் எப்பேர்பட்ட மடையன்?

மீனாவின் இந்த மெல்லிய தேகத்துக்குள் இத்தனை உறுதியான மனம் ஒளிந்து கொண்டிருக்கிறதா? அந்த மென்மையான மனதில், என்னைப்போல ஒரு ஆண் மகன் மேல, என்னுடைய பொறுப்பில்லாத நடத்தையை, அதனால் அவளுக்குள் ஏற்படும் கோபத்தை, எரிச்சலை, இவளால இத்தனை உரிமையோட காட்ட முடியுமா? மீனா என் மேல ஏதோ ஒரு முழு சொந்தமும், உரிமையும் இருக்கற மாதிரி என்னை இன்னைக்கு தாளிச்சு கொட்டறாளே?

என் மேல் அவளுக்கு இருப்பதாக நினைக்கும் அந்த உரிமை எது? அந்த உரிமைக்கு என்னப் பேரு? என் மேல் இவளுக்கு இத்தனை அக்கறையா? எதனால இந்த அக்கறை? இந்த அக்கறைக்கு என்ன அர்த்தம்? இவள் காட்டும் இந்த அக்கறைக்கு நான் தகுதியுள்ளவன்தானா? சீனுவின் மனதில் கடலலைகளைப் போல் பலவித எண்ணங்கள் எழுந்து அவன் மனதின் மேல் தட்டுக்கு வந்து மோதின. அவன் பேசமுடியாமல் மரம் போல் நின்றான்.

சீனுவின் கண்கள் மீண்டும் சுழன்று சுழன்று மீனாவின் முகத்தில் சென்று படிந்தன. தன் பார்வையை அவள் விழிகளில் நிலைக்க விட்டான். மீனாவின் விழிகள் இலேசாக நனைந்திருந்தன. இரு ஜோடி கண்கள் ஒன்றைஒன்று கூர்ந்து நோக்கின. சீனுவின் கூர்மையான பார்வையை சந்திக்கமுடியாமல், மீனா தன் விழிகளை ஒரு கணம் மூடித்திறந்தாள். மீனாவின் மனம், சீனுவின் முகத்தை பார் பார் என தூண்ட, அவள் மூடிய தன் விழிகளை மெல்ல திறந்தாள்.

தங்கள் இதயங்களில் ஏதோ ஒன்று மெல்ல மெல்ல இளகுவதை அத்தருணத்தில், இருவருமே பரஸ்பரம் உணர்ந்தார்கள். இருவரின் உதடுகளும், தத்தம் உதடுகளின் மேல் படிந்திருந்தன. இருவரின் உதடுகளுக்கு உள்ளிருந்த நாக்கு உலரத்தொடங்கியது.

மீனாவை இழுத்து தழுவி, தன் பரந்த மார்பில் புதைத்துக்கொள்ள சீனுவின் மனம் விழைந்தது. அவன் கரங்கள் அவளை உடனே இறுக்கி அணைத்துக்கொள்ள துடித்தன. சீனுவின் கள்ளமில்லாத மனதில் நிறைந்திருந்த கண்ணியம் அவனைத் தடுக்க அவன் செயலிழந்து நின்றான். 

சீனுவின் மனசு, அவன் அனுமதியின்றி அவன் ரசித்து கேட்கும் பாடல் ஒன்றை அதுவாகவே இசைக்க ஆரம்பித்தது. செல்வா சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்ச காலத்தில் இந்தப் பாடலை அடிக்கடி பாடுவான். அவன் பாடறதை கேட்டு கேட்டு, சீனுவும் அந்த பாட்டை வெகுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். 

பார்வை ஒன்றே போதுமே! 
பல்லாயிரம் சொல் வேண்டுமா? 
பேசாத கண்ணும் பேசுமா?
பெண் வேண்டுமா? பார்வை போதுமா? 
பார்வை ஒன்றே போதுமே! 

செல்வா இந்தப் பாட்டை பாடினதுல அர்த்தமிருக்கு. ஆனா இந்தப்பாட்டு என் மனசுல இப்ப ஏன் ஒலிக்குது? சீனு திகைத்தான்.

சே.. சே... இது என்ன அபத்தமான எண்ணம்? மீனாவைப் பாத்து என் மனசுல இந்த மாதிரி எண்ணமா? இந்த எண்ணம் என் மனசுக்குள்ள வரது சரிதானா? இந்த எண்ணம் எனக்கு வந்ததே தப்பு? நான் குடிச்சிருக்கறதுனால இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இன்னைக்கு வந்திருக்கா? இல்லையே? என் போதை தெளிஞ்சு நான் சுய நினைவோடத்தானே இருக்கேன்? சுய நினைவோட இருக்கற என் மனசுக்குள்ள இந்த எண்ணம் வந்திருக்குன்னா, இந்த எண்ணத்துக்கு பேரு என்ன? காதல்? இதுக்குப்பேருதான் காதலா? சீனு தன் தலையை வேகமாக இடதும் வலதுமாக ஆட்டி தன் மனதில் எழுந்த அந்த எண்ணத்தை அதே நொடியில் வேரோடு கிள்ளி எறிய முயற்சி செய்தான். தோற்று நின்றான். 

என் மனசுக்குள்ள வந்திருக்கற இந்த உணர்வு, மீனாவின் மனதுக்குள்ளும் எழுந்திருப்பது போல தெரியுதே? அவ கண்கள்ல்ல இந்த காதல் உணர்வு தீர்க்கமா இருக்கே? இன்னும் நான் போதையில இருக்கேன்; அதனால என் மனசுக்குள்ள ஒரு தப்பு எண்ணம் எழுந்திருக்குன்னு சொல்லலாம். ஆனா மீனா தன் முழு உணர்வுகளுடன் தானே இருக்கா? 

"ஓ மை காட் ... இது என்ன ட்ராமா மீனா? இட் ஈஸ் ஹைலி ரிடிக்குலஸ்... சீனு குடிக்கமாட்டேன்னு, எதுக்காக உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணணும்?" செல்வா தன் பொறுமையை முற்றிலும் இழந்து தன் அடிக்குரலில் சீறினான். 

"நீதானே கேட்டே .. 'நான் என்ன பண்றதுன்னு?'... உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..." 

மீனாவின் வாய் தன் அண்ணனுக்கு இயந்திரமாக பதில் சொல்லியது. மீனாவின் முகம் உணர்ச்சிகளின்றி இறுகிய கல்லைப் போலிருந்தது. அந்த இடத்தில், அந்த கணத்தில், தன் அண்ணன் செல்வாவின் இருப்பை, அருகாமையை அவள் பொருட்படுத்தவேயில்லை. அவள் மனம் முற்றிலும் சீனுவையே நினைத்திருக்க, அவள் பார்வை சீனுவின் முகத்தில் குடிகொண்டிருந்தது. 

அமைதியாக நின்றிருந்த சீனு, தன் மூன்று நாள் தாடியுடன் கருத்திருந்த தன் முகத்தை, ஒரு முறை தன் வலது கையால் மெதுவாக தடவிக்கொண்டான். தன் வலப்புறத்தில் சேரில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சீனு, நிதானமாக மீனாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான். 

தன் வலது கையை நீட்டி, "சீனு" குடிக்கமாட்டேன் என்று நிச்சயமாக தனக்கு சத்தியம் செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கை கண்களில் நிறைந்திருக்க, தன் கால்களை மிக உறுதியுடன் மண் தரையில் ஊன்றி நின்றிருந்த மீனாவின் வெண்மையான செருப்பில்லாத அழகான பாதங்களையும், சிறிய விரல்களையும் பார்த்த சீனு, தன் பார்வையை நிமிர்த்தி, இப்போது பதட்டமில்லாமல், மனதில் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தன் மனதில் பொங்கும் காதலுடன், மீனாவின் முகத்தை சில வினாடிகள் கூர்ந்து நோக்கினான். 

மீனாவின் கண்களிலிருந்து, அவள் உள்ளத்தில் தன்பால் பொங்கி வரும் காதலை, பாசத்தை, நேசத்தை, அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையை, சீனுவால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னைத் திருத்துவதற்காக, இவள் தன் வாழ்க்கையை, பணயம் வைக்க முடிவு செய்துவிட்டாள். நான் அதிர்ஷ்டசாலி. 

சீனு, தன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டதை மீனாவும் உணர்ந்து கொண்டாள். அவள் மெல்லிய உதடுகள் மெதுவாக அசைந்து, ஒரு சிறிய புன்னகை பூவை மலரச்செய்தன. சீனுவும் தன் மனதில் ஒரு தீர்க்கமான முடிவுடன், தனக்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்துக்கொண்டிருக்கும், அந்த அழகான இளம் பெண்னை நெருங்கினான். தன் வலது கையை உயர்த்தி அவள் உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக அழுத்தினான். பின் மெல்ல முனகினான்... "ஆமென்... ஆமென்...ஆமென்.." 

சீனுவின் கரம் தன் கையில் அழுத்தமாக படர்ந்ததும் மீனாவின் முழு உடலும் மெல்ல சிலிர்த்தது. ஒரு ஆண் மகன், தன் மனதில் காதல் உணர்ச்சியுடன், மீனாவை தொட்டது இதுவே முதல் முறை. மீனாவுக்குள்ளும் ஒரு ஆணின் பால் காதல் உணர்வு எழுவது இதுவே முதல் தடவை. அந்த முதல் காதலால், அவள் மனம் விரும்பும் ஆணின் அன்பான முதல் தொடுகையால், இதுவரை அறியாத புதிய சுகமொன்று தன் உடல் முழுவதும் பரவுவதை அவள் உணர்ந்தாள். அந்த சுகத்தை முழுவதுமாக ரசித்து அனுபவித்தாள். மீனா நீளமாக காற்றை தன் மார்புக்குள் இழுத்து வெளியேற்றினாள். 

மீனா தன் எண்ணங்களில் தொலைந்து போனாள். ஒரு ஆண் மகனின் கையில் இத்தனை சக்தி இருக்கிறதா? இதே சீனு, என்னை எத்தனையோ தரம் தொட்டிருக்கான். என் அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லோர் எதிரிலேயும் என் கையை பிடிச்சி இழுத்து இருக்கான்; கையைகுலுக்கறேன்னு என் கையை பிடிச்சி அழுத்தி அழுத்தி, வேணுமின்னே, தன் உடல் வலுவைக்காட்டி, என்னை வலியால அழ வெச்சிருக்கான். என் இரு கைகளையும் முறுக்கி முதுகுக்கு பின்னாடி வெச்சு அடிச்சிருக்கான். அப்போதெல்லாம் அவன் தொடல், இந்த சுகத்தை என் தேகத்துக்குள் எழுப்பியதில்லையே? 

சீனு என் கன்னத்தை கிள்ளியிருக்கான். தலையில குட்டியிருக்கான். ஆனா அப்பல்லாம் எனக்கு கிடைக்காத இந்த சுகம், இப்ப மட்டும் எங்கேயிருந்து வந்தது? சீனு இன்னைக்கு என்னை மிக மிக மென்மையா தொட்டப்ப வந்த சுகம், என் மேனியை சிலிர்க்க வெச்சு, எங்கேயோ கொண்டு போகுதே? 

எங்கள் இருவரின் இந்த தொடுகை எங்கே போய் முடியப்போகுது? தொடுதல் முக்கியமில்லை. தொடுபவர்கள் முக்கியமாகிறார்கள். தொடுபவர்களின் உள்ள உணர்ச்சிகள் முக்கியமாகிறது. தொடுதலின் ரகசியம் புரிந்த மீனா நீண்டப் பெருமூச்செறிந்தாள். 

மீனா, தன் கையில் அழுந்தியிருந்த சீனுவின் கையை, தன் மென்மையான பூ போன்ற கரத்தால் ஒரு முறை வலுவாக அழுத்தியவள், மெல்லிய குரலில் முனகினாள் "தேங்க்யூ சீனு"... அடுத்த நொடி சீனுவின் கையை உதறிவிட்டு, திரும்பி மீண்டும் வெரண்டாவில் ஏற ஆரம்பித்தாள். 

"மீனா ... எனக்கு ரொம்ப பசிக்குது மீனா ... சாப்பிட எதாவது குடேன்..." சீனுவின் கரகரத்த குரல் அவள் காதில் வேகமாக வந்து மோதியது. செல்வா சீனுவை வைத்த கண் வாங்கமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

சீனு, வீட்டினுள் நுழையும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மீனா, ஒரு வினாடி நின்றாள். நின்றவள் மெல்ல திரும்பி, தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில், கண்களில் பாசம் பொங்க சீனுவை பார்த்தாள். அவள் கண்களில் இன்றுவரை இல்லாத ஒரு திருட்டுத்தனம் இப்போது குடியேறியிருந்தது. 

முதலில் ஓரக்கண்ணால் செல்வாவைப்பார்த்தாள். அவன் தலை குனிந்து உட்க்கார்ந்திருக்க, மீனா, ஆசுவாசத்துடன், தன் மெல்லிய செவ்விதழ்களை குவித்து முத்தமிட்டு, சீனுவின் புறம் அந்த முத்தத்தை காற்றில் தள்ளிவிட்டாள். சீனு செய்வதறியாது, மனம் சிலிர்த்து, மீனா தனக்களித்த முதல் முத்தத்தை தன் இதயத்தில் சேகரித்துக்கொண்டு, செல்வாவின் எதிரில் படிக்கட்டில் மெல்ல உட்க்கார்ந்தான். 

தன் தங்கை நடத்திய நாடகத்தின் அர்த்தம் மெல்ல மெல்ல செல்வாவுக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்த மீனாவையும், தன் எதிரில் படிக்கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த சீனுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். 

சீனுவுக்கு, மீனா காதலுடன் முத்தமொன்றை காற்றின் வழியே அனுப்பிவிட்டு, மனதில் கிளுகிளுப்புடன், கிச்சனுக்குள் நுழைந்தாள். வெங்காய சாம்பார் சூடாக ஆரம்பிக்க, கிளம்பிய வாசம், வெராண்டாவில் தனித்துவிடப்பட்டிருந்த செல்வா, சீனுவின் மூக்கைத் துளைத்தது.

சீனு நான் சொன்னதை கேட்டுட்டான். நான் சொன்னதும், கொஞ்சம் கூடத் தயங்காம என் கையைப் புடிச்சு சத்தியம் பண்ணானே? ஆம்பிளைன்னா இவன் தான் ஆம்பிளை. பொம்பளை மனசை, என் பெண்மையை மதிக்க தெரிஞ்ச இவன்தானே உண்மையான ஆம்பிளை! சீனு என் ஆம்பிளை!. மீனாவின் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தது.

என் சீனு பசியோட இருக்கான். அவனுக்கு வெங்காய ஊத்தப்பம்ன்னா ரொம்ப பிடிக்கும்! ரெண்டு நிமிஷ வேலை; மீனா தன் மனதில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உவகையால், காதலால், உடலும் மனமும் "என் சீனு, என் சீனு," எனக்கூவ, கைகள் அவள் மனதின் கிளுகிளுப்பில் பங்கெடுக்க, அவள் வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி என எல்லாவற்றையும் மெலிதாக அரிந்து, அதனுடன் கொத்து கறிவேப்பிலையை உறுவி போட்டாள். தோசை மாவில் எல்லாவற்றையும் கொட்டி கலந்து ஊத்தப்பமாக வார்த்துக் ஹாட் கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

இவ கைகளுக்கு நாங்க எந்த விதத்துல குறைஞ்சுப் போயிட்டோம்? மீனாவின் உதடுகளும், அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்று, காதல் வயப்பட்டிருந்த அந்தப் பருவப்பெண்ணின் உள்ள உணர்வுகளுக்கு ஏற்றவாறு பாடல் ஒன்றை முணுமுணுத்தன.

"காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்; காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்;
சிரித்தாய் இசை அறிந்தேன்; நடந்தாய் திசை அறிந்தேன்;
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்; கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்; ஆழகாய் அய்யோ தொலைந்தேன்;"

மனிதனுக்கு எஜமானன் அவன் மனம்தானே? மனதின் உள்ளுணர்வுதானே மனிதனை இயக்குகிறது. பண்பட்ட மணம், சீரான பாதையை மனிதனுக்கு காண்பிக்கிறது. மனதின் குரலை கேட்பதும், ஒதுக்குவதும் தனிமனிதனின் கைகளில்தான் இருக்கிறது. பாட்டை இசைத்த மீனாவின் மனமே, அவளை எள்ளிநகையாடி வேடிக்கைப் பார்த்தது. எள்ளிய மனம் அவளை மெல்ல மெல்ல கூறு போடவும் ஆரம்பித்தது.

"என்னடி! பாட்டெல்லாம் பலமா இருக்கு?

"நான் சந்தோஷமா இருக்கேன்; பாடறேன்"

"நீ செய்தது சரியாடி?"

"ஊர்ல; உலகத்துல, யாரும் செய்யாததையா நான் செய்துட்டேன்?"

"காலையில எழுந்ததும், உன் சீனு, சீனுங்கறியே, அவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உன் அம்மா மூஞ்சை உன்னால நேராப் பாக்கமுடியுமா?"

"பாத்துத்தானே ஆகணும்"

"நீ செய்தது அப்ப சரிங்கறே?"

"ஒரு வயசு பொண்ணு, தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு காத்துல முத்தம் கொடுக்கறது தப்பா?"

"இப்ப உன் அண்ணன் பக்கத்துல இருந்தான்... காத்துல முத்தம் குடுத்தே?"

"ஆமாம் ..."

"நீ தனியா இருந்து உன் சீனு, என் ஒதட்டுல ஒண்ணு குடுடின்னு கேட்டா?"



"இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் ... ஒத்துக்கறேன்.."

"பதில் சொல்லுடி?"

"ஒதட்டுல முத்தம் குடுத்தா தப்பா?"

"அதை நீதான் சொல்லணும்... தப்பா ... சரியான்னு? நீதானே அந்த வயசு பொண்ணு!"

"தப்பு; சரிங்கறது எல்லாம், அவரவர்களுடைய மனசாட்சியைப் பொறுத்து இருக்கு"

"உன் மனசாட்சி என்ன சொல்லுது?"

"நான் படிச்சு முடிச்சு, சுகன்யா மாதிரி ஒரு நல்லவேலைக்குப் போய், என் சொந்த கால்லே திடமா நிக்கற வரைக்கும், சீனுவை கொஞ்ச தூரமா வெக்கறதுதான் சரின்னு தோணுது.."

"வெரி குட் ... மீனா ..."

"போதுமே ... இன்னும் வேற ஏதாவது கேள்வி பாக்கியிருக்கா?"

"அப்போ, கடைசிவரைக்கும் அவன் கூட நிக்கப்போறே?"

"அதிலென்ன சந்தேகம் ... அவன் கையை நான் புடிச்சாச்சு; இனிமே விடறங்கறதுக்கு பேச்சுக்கே எடமில்லே.. அவனும் "அப்படியே ஆகட்டும்" ன்னு சத்தியம் பண்ணிட்டான்... அவன் எனக்குத்தான்; நான் அவனுக்குத்தான்..."

"சீனு, ஒரு வேகத்துல உன் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கலாம்; ரெண்டு வாரம் கழிச்சு திருப்பியும் பாட்டிலைத் தொறந்து தண்ணி பூஜைக்கு உக்காந்தான்னா என்னடி பண்ணுவே?"

"செருப்படி வாங்குவான் என் கிட்ட..?"

"ம்ம்ம்... அவ்வளவு நம்பிக்கையா அவன் மேல உனக்கு?"

"வாழ்க்கையே நம்பிக்கைங்கற அஸ்திவாரத்துக்கு மேலேதானே நிக்குது?"

"சரிடி... இன்னைக்கு நீ யார் எது சொன்னாலும் கேக்கப்போறது இல்லே?"

"இன்னைக்கு இல்லே! இனிமே என்னைக்குமே யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்; அவன்தான் என் படுக்கைக்கு வரப்போற ஆம்பிளை; நான்தான் அவன் கூட படுக்கப்போறவ; இதுல எந்த மாத்தமும் கிடையாது"

"இதை அவனும்தானே சொல்லணும்?"

"அவன் என் கிட்ட சொல்லிட்டான்"

"எப்போ சொன்னான்?"

"நல்லா கேட்டுக்க; என் கையை புடிச்சு, கூட பொறந்த, என் ஆசை அண்ணன் எதிர்ல "ஆமென்" ன்னு சொன்னானே; அப்போத்தான்..."

"அப்படியா ...?"

"ஆமாம் ... அப்படித்தான் ...!"


சுகன்யா... 36

"குமார் ... நான் ரகு பேசறேன் ... ஃப்ரியா இருக்கீங்களா?"

"இப்பத்தான் சாப்ட்டு முடிச்சேன்.... படுக்க வேண்டியதுதான் ... சொல்லுங்க..."

"மாப்ளே! மத்தியானம் ... நம்ம செல்வா என் கிட்ட பேசினாரு! அவரோட அம்மா மல்லிகாவும், கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னாரு.."

"நல்லதுங்க! ரொம்ப சந்தோஷம்! ... நடராஜன் எதுவும் சொல்லலையா?"

"மாப்ளே! நான் சொல்றதை கேளுங்க; என்னதான் இருந்தாலும் .. நாம பொண்ணு வீட்டுக்காரங்க; பையனே போன் பண்ணி சொல்லிட்டான்; அந்தம்மா மல்லிகாவைப் பத்தி நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல்லா; கொஞ்சம் சிணுங்கற டைப்; அந்த அம்மாவே சரின்னு சொல்லும் போது, நாமதான் சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சுக்கணும்.."

"ம்ம்ம் ..அதுவும் சரிதான்..."

"வர்ற வெள்ளிக்கிழமை காலையில நாள் நல்லாருக்குன்னு நம்ம குடும்பத்துக்கு, நல்லது கெட்டது செய்து வெக்கிற அய்யரு சொல்றார்; ராகு காலத்துக்கு முன்னாடி ... வெத்திலை பாக்கு மாத்திக்கலாம்; என்ன சொல்றீங்க?"

"அதுக்குள்ள ஃபங்ஷனை அரேஞ்ச் பண்ண முடியுமா?"


"என்ன மாப்ளே? ... இன்னைக்குத் திங்கள் ... இன்னியிலேருந்து நாலாவது நாள் ... நடுவுல இன்னும் மூணு நாள் நம்ம கையில இருக்கு; மூணு நாள்ல ஒரு கல்யாணத்தையே இந்த காலத்துல முடிச்சிடலாம்?

"சுந்தரி கிட்ட பேசிட்டீங்களா?"

"ம்ம்ம் ... ஆச்சு; சுந்தரியும் சரின்ன்னுட்டா ... இப்பவே நடராஜன் கிட்ட நான் பேசிடறேன்... அன்னைக்கு அவங்களை வரச்சொல்லட்டுமா?"

"சென்னையிலேருந்து வரணுமே? அவ்வளவு சீக்கிரம் காலங்காத்தாலே ...அவங்களாலே வரமுடியுமா?"

"முதல் நாள் சாயந்திரமே வந்துடட்டும் ... நம்ம வீடு ஒண்ணு காலியாதானே இருக்கு! விருந்தாளிங்க ராத்திரி மாடியில தங்கிக்கட்டும்; கீழே விசேஷத்தை வெச்சுக்கலாம். காலையில இந்த வேலை முடிஞ்சா ... மதியானம் சாப்பிட்டுட்டு அவங்க சவுகரியம் படி கிளம்பட்டும் ... "

"புரியுது ... உங்க வீட்டை வாடகைக்கு விட்டுருக்கறதா சுந்தரி சொன்னாளே?"

"பேங்க் மேனேஜர் ஒருத்தர் இருந்தார்; தீடீர்ன்னு ட்ரான்ஸ்ஃபர்ல போயிட்டார். போனவாரம்தான், கீழே மேலேன்னு வெள்ளையடிச்சு, க்ளீன் பண்ணி, இப்ப வீடு சுத்தமா இருக்கு.

"அப்ப ரெண்டு வேளை டிஃபன் ... ஒரு வேளை சாப்பாடு அரேஞ்ச் பண்ணணுமே?"

"அதெல்லாம் ஒரு மணி நேர வேலை; மாப்ளே ... நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான்; கைராசிக்காரன்; அருமையா சமைக்கிறான்; தேவையானதை ஆர்டர் கொடுத்தா போதும்; சுத்தமா செய்து நம்ம வீட்டுக்கே கொண்டாந்து அழகா பறிமாறிட்டு போயிடுவான்!"

"ரகு ... எத்தனை பேரு வருவாங்கன்னு ஒரு ஐடியா நடராஜனை கேட்டுக்கோ..."

"கேட்டுக்கறேன் ... நீங்க எப்ப வர்றீங்க?"

"நாளைக்கு செவ்வாய் இல்லயா? நாளைக்கு ராத்திரி டின்னருக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்... என் கார்லேயே வந்துடலாம்ன்னு இருக்கேன் .."

"சரி ... நீங்க நடராஜனுக்கு, சுகன்யா உங்க பொண்ணுதான்னு சொல்லிட்டீங்களா? என்னமோ இந்த விஷயத்தை சஸ்பென்சா வெச்சிருக்கீங்க?" ரகு சிரித்தான்.

"ரகு சஸ்பென்ஸ்ல்லாம் ஒண்ணுமில்லேப்பா! நடராஜன் நாளைவரை ரெண்டு நாள் லீவு எடுத்திருந்தார். இன்னைக்கு ஒரு வாரம் லீவு எக்ஸ்டண்ட் பண்ணப்போறேன்னு சாயங்காலம் போன்லே சொன்னார். என்னன்னு கேட்டேன்? பையனுக்கு நிச்சயம் பண்ண கும்பகோணம் போக வேண்டியிருக்கும்ன்னார். அப்பவே விஷயத்தை புரிஞ்சுகிட்டு நானும் லீவுக்கு அப்ளை பண்ணிட்டேன்.."

"ம்ம்ம் ...அப்படீன்னா அவரு நம்ப போனை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார்ன்னு சொல்லுங்க;"

"இருக்கலாம்; ஆபீசுக்கு நாளைக்கு ஒரு மணி நேரம் வர்றேன்னிருக்கார்..."

"ம்ம்ம்..."

"நாளைக்கு அவர் ஆஃபீசுக்கு வரும் போது, சுகன்யா என் பொண்ணுதான்னு சொல்லிட்டு, ஃபார்மலா வியாழக்கிழமையே வீட்டுக்கு வாங்கன்னு நானும் பெண்ணை பெத்தவனா அழைச்சிடறேன்..."

"சரி ... அப்புறம் ... நீங்க உங்க வீட்டுலயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க ..."

"ஆகட்டும் ... இப்பவே பேசிடறேன் நான் ..."

"மாப்ளே, நானும் நாளை நைட் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரேன்னு சுந்தரிகிட்ட சொல்லியிருக்கேன். மீதியை நேர்ல பேசிக்கலாம்.'

"நல்லது .. அப்படியே செய்யலாம்... வாங்க..."

செல்வா காம்பவுண்ட் கதவினருகில், சீனுவின் வரவுக்காக நின்றவன், ஆகாயத்தை தன் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தான். ஓ மை காட்! நிலா இன்னைக்கு எவ்வளவு பளிச்சுன்னு இருக்கு? இன்னும் ரெண்டு மூணு நாள்லே முழுசா பெரிசாயிடும். இன்னைக்கு நிலா என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுது. நிலவைப் பாத்துக்கிட்டு இருந்தா மனசு இறுக்கம் குறையத்தான் செய்யுது?

எதுவும் பேசாமல் நிலவை பாத்துக்கிட்டு நிக்கறது சுகன்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தடவை பீச்சுல, பவுர்ணமி நாள்லே, என் கூட நெருங்கி உக்காந்து, என் தோள்ல தன் தலையை சாய்ச்சிக்கிட்டு, மவுனமா நிலவைப் பாத்துக்கிட்டு இருந்திருக்கா?

சுகு, நிலவுல என்னடீ இருக்குன்னு கேட்டா, செல்வா உனக்கு ரசனையே இல்லையேன்னு சிரிப்பா? செல்வா நீ ஒரு மடையன்னு கொஞ்சலா முனகுவா. முனகிக்கிட்டே என் தோள்ல சரிஞ்சு கன்னத்தை கடிச்சு முத்தம் குடுப்பா! அவ உடம்புக்குன்னு ஒரு தனிவாசனைதான்; சுகன்யாவின் உடல் வாசம் அவன் மனதுக்குள் எழுந்ததும், செல்வாவின் உடலில் சூடு ஏறி, அவன் தம்பி லுங்கிக்குள் தடிக்க ஆரம்பித்தான்.

சே...நான் எவ்வளவு வீக்காயிட்டேன்? மனசுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சே? ரோடுல நிக்கறேன்; அவ உடம்பு வாசனை நினைவுக்கு வந்ததும், என் பையன் திமிறி எழுந்துக்கறான். அவன் என்ன பண்ணுவான்? பத்து நாளாச்சு; ஆஸ்பத்திரிக்கு போனதுலேருந்து சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து கெடந்தேன். அவன் கொழுத்துப் போயிருக்கான். அவனை கொஞ்சம் தடவி கிடவி தாஜா பண்ணாத்தான் ஒரு ரெண்டு நாளைக்கு அடங்கி கிடப்பான்...!

சட்டுபுட்டுன்னு கல்யாணம் முடிஞ்சு சுகன்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்ன்னா, இந்த கை வேலைக்கு ஓய்வு குடுக்கலாம். நம்ம சுப்பையா கல்யாணம் ஆனவன்; கல்யாணம் ஆகியும் தன் கையை யூஸ் பண்ணிகிட்டுத்தான் இருக்கேங்கறானே? கட்டின பொண்டாட்டி அவன் கூட ஒத்துப்போவலையா?

அடச்சை...என் புத்தி எங்க போவுது? அடியேங்கறதுக்கு பொண்டாட்டியைக் காணோம்...அதுக்குள்ள புள்ளை எத்தனை பெத்துக்கலாம்ன்னு யோசனை பண்றேன்.. செல்வா தன்னை நொந்து கொண்டான்.

சுகன்யாவும் இப்ப என்னை மாதிரி நிலாவை பாத்துக்கிட்டு இருப்பாளா? உண்மையிலேயே எனக்கு ரசனை கம்மிதான்னு ஒத்துக்கணும். அவளை மாதிரி சும்மா நிலாவையே பாத்துக்கிட்டு இருக்குறது சுத்த போர் ... ஆனா இன்னைக்கு என்னமோ நிலா அழகா இருக்கற மாதிரி தோணுது!

"ச்சை..." எனக்கு திரும்ப திரும்ப சுகன்யா நெனைப்பே ஏன் வந்து தொலைக்குது? அவளுக்கும் என்னைப் பத்திய நினைவுகள் வருமா? ச்சே...ச்சே.. ஒரு பொண்ணை காதலிச்சாலும் காதலிச்சேன்... காதலிக்க ஆரம்பிச்ச நாள்லேருந்து என் வாழ்க்கையே நாறிப் போச்சு; இந்த காதல்ங்கறது ஒரே நாய் பொழைப்பா இருக்கே?

சீனுவைத்தான் கேக்கணும்? தனிமையை நீ எப்படிடா சமாளிக்கறேன்னு? அவனும்தான் கொஞ்ச நாள் அந்த ஜானகியோட தங்கச்சி, ஜெயந்தி - கும்முன்னு இருக்கா மச்சான்னு, நூல் வுட்டுப்பார்த்தான். ஜெயந்தி யாரு ஆளு? கழுவற மீன்ல நழுவற மீனாச்சே அவ? சாவித்திரி பெத்த பொண்ணாச்சே! சும்மாவா? இவனுக்கு அவ்வளவு சுலபமா உஷாராவாளா?

சீனுதான் கையில வர்ற பைசாவை, அது எவ்வளவாயிருந்தாலும் அன்னைக்கே பீரா குடிச்சு, மூத்திரமா பேஞ்சிடறான். பைசாவை சிகரெட்டா கொளுத்தி ஊதி புகையாக்கிடறான். ஒரு நல்ல பொண்ணு, வேலாயுதத்துக்கு ஆப்ட்ட மாதிரி சீனுக்கும் கெடைச்சா இவனும் உருப்படுவான்! இல்லேன்னா கோயிந்தா .. கோயிந்தான்னு கடைசி வரைக்கும் அல்லாட வேண்டியதுதான்?

ஜெயந்தி ஒரு தரம் இவனை மூஞ்சால அடிச்சதும் "மச்சான், அவ கார் வெச்சிருக்கறவன் கிட்டத்தான் உஷாராவாளாம். இவள்ளாம் நம்ம ரேஞ்சுக்கு ஒத்துவரமாட்டா"ன்னான். என் பாட்டனுக்கு அறுபது ஏக்கர் மண்ணு இருந்திச்சி... அவரு எல்லாத்தையும் காஞ்சிபுரம் மொட்டைகோபுரத்துல, பொட்டைச்சியோட புட்டத்துலத்தான் தொலைச்சிட்டாரு.. இதெல்லாம் இந்த சிறுக்கிக்கு தெரியுமா? ஹாய் சொல்லும் போதே நான் எப்ப காரு வாங்குவேன்னு இவ என்னை கேக்கறா... இவ சகவாசம் எனக்கு சரிபடாதுன்னு பேசாம திரும்பிட்டேன்னான்...

அதுக்கப்புறமா, சீனு, எந்த பொண்ணையும் திரும்பியே பாத்தது கிடையாது. மச்சான் ... பொம்பளைங்களே மாயப் பிசாசுங்க! நீயும் ஜாக்கிரதையா இரு; எவ கிட்டேயும் சிக்கிடாதே? தூக்கிக் கட்டி, உள்ளே ஸ்பான்ச்சை ஃபிட் பண்ணிக்கிட்டு, அசைஞ்சு அசைஞ்சு நடப்பாளுங்க; உண்மையில உள்ள ஒண்ணும் கிடையாது; இருக்கற மாதிரி சீன் காட்டுவாளுங்க; பையில காசு இல்லாம கிட்டப் போனே ... கொட்டை மேல எட்டி உதைப்பாளுங்கன்னு, எனக்கு புத்தி சொன்னான்.

கொஞ்ச நாள் தாடி வெச்சுக்கிட்டு, சித்தர்கள் ரேஞ்சுல தேங்காய் பாலு, மாங்காய் பாலுன்னு அவனுக்கும் புரியாம, கேக்கறவனுக்கும் விளங்காம எதையோ பேசிக்கிட்டு திரிஞ்சான். பொண்ணுங்களை கணக்கு பண்ற நம்ம பசங்களைப் பாத்து "எருக்குழியை நோக்கி ஏண்டா ஓடறீங்க?" எல்லாரையும் பாத்து நக்கலா சிரிச்சிக்கிட்டு இருக்கான். "ஆனந்த ஜோதியில என் கூட வந்து ஐக்கியமாகுங்கடான்னு" குறைஞ்சது வாரத்துல ரெண்டு நாள் பசங்களை உக்கார வெச்சு பாடம் நடத்திக்கிட்டு இருக்கான்.

சீனு நிஜமாவே நீ ஒரு ஜெம்முடா! உன் குணத்தை, உன் அருமையான நட்ப்பை, வெள்ளை மனசை புரிஞ்சிக்கற பொண்ணு இனிமேதானா உனக்காக பொறக்கப் போறா? கண்டிப்பா அவ எங்கேயோ பொறந்துதான் இருப்பா! கவலைப்படாதே மாப்ளே... சரியான நேரத்துல அவ உன் வாழ்க்கையில வந்து சேருவா... செல்வாவின் மனதில் சீனுவுக்காக அன்பும் பாசமும் ஒருங்கே சுரந்தது.

தெரு முனையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சீனுவாக இருக்குமோ? ஆட்டோவின் வேகம் குறைய ஆரம்பித்தது. வேகம் குறைந்த அந்த ஆட்டோ, அவன் வீட்டின் முன் தத்தி தத்தி வந்து நின்றது. அவனே தான்; சொன்ன மாதிரி வந்துட்டான். ஆட்டோவிலிருந்து இறங்கிய சீனு, தன் கையிலிருந்த சிகரெட்டை வாயில் வைத்து ஒரு முறை நீளமாக இழுத்தவன், கையிலிருந்த துணுக்கை வீசி எறிந்துவிட்டு, செல்வாவை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினான்.

ஹாலில் உட்க்கார்ந்து படித்துக்கொண்டிருந்த மீனா ஆட்டோ சத்தம் கேட்டு, வரண்டாவிற்கு வந்தாள். வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த சீனுவின் நடையைக் கண்டதும், அவன் அன்று ஜலகீரிடை நடத்திவிட்டு வருகிறானென்று அவளுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. அவள் மனதில் சுரீரென்று வலித்தது. ஏன் இவன் இப்படி கெட்டுக் குட்டிசுவராப் போய்கிட்டு இருக்கான்?

இவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் எதுக்கு இவனைப்பத்தி கவலைப்படணும்? இவன் செல்வாவோட ஃப்ரெண்ட்; ரெண்டு பேரும் காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சாங்க; என்னோட அஞ்சு வயசுலேருந்து இவனை எனக்குத் தெரியும்; என் வீட்டுக்கு நினைச்சப்ப வர்றான்; இந்த வீட்டுல உரிமையா சாப்பிடறான்; தூங்கறான்; நினைச்சப்ப எழுந்து போறான்.

அதே உரிமையோட இந்த வீட்டுல எந்த வேலையா இருந்தாலும், யாரும் சொல்றதுக்கு முன்னே தானே தலை மேல இழுத்து போட்டுக்கிட்டு செய்யறான். இந்த வீட்டுக்குள்ள செல்வா மாதிரி இன்னொரு ஆம்பிளையா இருக்கான். நம்ம அப்பாவைப் பாத்தா மட்டும் இவனுக்கு கொஞ்சம் மரியாதை; பயம் உண்டு; அதனால அவரை மட்டும் எதுவும் கலாய்க்காம ஒதுங்கி நிக்கறான். மத்தப்படி இந்த வீட்டுல யார்கிட்டவும் இவனுக்கு சுத்தமா பயங்கறதே கிடையாது.

அம்மாவுக்கு இவன் மேல அப்படி என்னத்தான் பிரியமோ? எது செய்தாலும் சீனுவுக்கு ரெண்டு எடுத்து வைடி ... போன் பண்ணி வரச்சொல்லுடி; ஆறிப்போனாலும் பரவாயில்லே; அவன் வந்தான்னா குடுக்கலாம். அம்மாவுக்கு அவன் மேல பாசம் பொங்கி வழியும். இன்னைக்கு கூட சாயந்திரம் டிபனுக்கு செய்த வாழைக்காய் பஜ்ஜி, எடுத்து வெச்சு ஆறி அவலாப் போயிருக்கு. ரெண்டு தரம் போன் பண்ணேன்; வந்து தின்னுட்டுப் போடான்னு; அய்யா, சாவகாசமா கட்டிங் வுட்டுட்டு பத்து மணிக்கு மெதுவா நகர் ஊர்வலம் வர்றாரு?

திடீர்ன்னு கொஞ்ச நாளா இவனைப்பாத்தா, என் மனசுக்குள்ள ஒரு இனம் தெரியாத இரக்கம், ஒரு பரிவு தன்னாலே வருதே அது ஏன்? அதுவும் செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்ததுலேருந்து, நானும் பாக்கறேன், இந்த இரக்கம், பரிவு, ஒரு பாசம், ஒரு பிரமிப்புன்னு இவனை பாக்கும் போது, என் மனசுக்குள்ள வெள்ளமா ஏன் பொங்குது? என் அண்ணன் கூடவே இருந்து அவனுக்கு எல்லா உதவியும் பண்ணாங்கறதுனலயா? நிச்சயமா இல்லே? எத்தனையோ தரம் இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள்ள நம்ம வீட்டுக்கு அவன் உதவி பண்ணியிருக்கான்.

சீனு நல்லா சம்பாதிக்கறான். இவனுக்கு, எல்லோருக்கும் உதவணுங்கற எண்ணம் இருக்கு. கூப்பிட்ட குரலுக்கு, என்ன வேணும்.. வந்துட்டேன்னு எந்த நேரத்துலயும் குரல் குடுக்கறவன். ஒருத்தன் கிட்ட பழகிட்டா அவனுக்காக தன் உயிரையே குடுக்க ரெடிங்கறான். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், ஒரே பிள்ளை. அப்படி இருக்கும் போது இவனுக்கு என்ன கவலை? எதுக்கு இப்படி பார்ட்டி பார்ட்டின்னு ஒரு சாக்கை சொல்லிக்கிட்டு, இந்த குடியை பழக்கிக்கிட்டு, ஏன் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போறான்?

எவன் அழிஞ்சா எனக்கென்னன்னு என்னால இருக்க முடியலியே? இதுக்கு காரணம் என்ன? சின்ன வயசுலேருந்து இவனை பார்க்கறதுனால இருக்குமா? அறியாத வயசுலேருந்தே இவன் கூட பழகறதுனால இருக்குமா? என் அண்ணனுக்கு உயிர் சினேகிதன்ங்கறதுனால இருக்குமா? தெரியலை... எனக்கு தெரியலை. ஆனா இவன் மேல ஒரு தனிப்பட்ட அன்பு எனக்குள்ள இருக்குங்கறது மட்டும் உண்மை..

பார்ட்டின்னு சொல்றது எல்லாம் பொய், புளுகு. இப்பல்லாம் வாயைத் தொறந்தா அதிகமா பொய் பேசறான். அவன் பொய் பேசினா எனக்கு என்ன? பேசிட்டு போகட்டும். எனக்கென்ன நஷ்டம்?இவனே எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கிட்டு நாலு பேருக்கு பார்ட்டி குடுக்க வேண்டியது. எவன் கிட்டவாவது திரும்ப பார்ட்டி கொடுடான்னு அவனுங்க கொடலை அறுக்கவேண்டியது; குடிச்சுட்டு இங்க மாடியில வந்து யாருக்கும் தெரியாம சுருண்டுக்க வேண்டியது. இதே வழக்கமா போச்சு. இன்னைக்கு இது ஒரு முடிவு கட்டறேன்.

எதுக்காக இப்படி குடிச்சு தன் உடம்பை கெடுத்துக்கறான்? இதுக்கு பதில் எனக்கு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன். கேட்டா, யாருக்குமே நேரா பதில் சொல்றது கிடையாது. எப்பவும் உதட்டுல ஒரு கள்ளத்தனத்தோட சிரிச்சுக்கிட்டே போயிடறான். வாரத்துல ரெண்டு நாள் குடிக்கறதுங்கறது இவனோட தொழிலாப்போச்சு... குடிக்கற நாயி ... குடிச்சுட்டு கண்ணு மறவா கெடக்க வேண்டியதுதானே? என் எதிர்ல ஏன் வர்றான்?

இவன் அப்பா அம்மா இவனுக்கு எவ்வளவோ சொல்லி சொல்லிப் பாத்து, இவன் தலையில தண்ணித் தெளிச்சுவிட்டுட்டாங்க; என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தூரம் புத்தி சொன்னாங்க; எதுக்காவது அசைஞ்சு குடுக்கறானா? இல்லே; இதெல்லாம் திருந்தற ஜென்மம் இல்லன்னு இவங்களும் விட்டுட்டாங்க; செல்வா மட்டும் என்னப் பண்ணுவான்? செல்வா பேச்சை இவன் ஏன் கேக்கப் போறான்? ஒரு நாள் ரெண்டு நாள் பழக்கமா இவங்க ரெண்டு பேருக்குள்ள; இருபது வருஷப் பழக்கம். அந்த உரிமையில செல்வா குடிக்காதேடான்னு சொன்னா அவனை மதிக்கறதேயில்லை.



இந்த சீனு யார் பேச்சையும் கேக்கறது இல்லே? இவனை அதட்டி கேக்கறதுக்கு யாருமே இல்லையா? நான் கேக்கறேன் இன்னைக்கு! ம்ம்ம். மீனா, நீ எந்த உரிமையில அவனை கேக்கப்போறே? இந்த கேள்விக்கு இப்ப இந்த நிமிஷம் என் கிட்ட பதில் இல்லே; ஆனா இவனை இந்த குடிப்பழக்கத்துலேருந்து விடுவிக்கணும்ன்னு எனக்கு தோணுது! இவன் குடிச்சா எனக்கென்னன்னு என்னால பேசாம இருக்கமுடியலை. இவனை ஒரு நல்ல மனுஷனா பாக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.

ஊர்ல எவ்வளவோ பேர் குடிக்கறாங்க, குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறாங்க; அவங்களை எல்லாம் பாத்தா எனக்கு ஒரு அருவருப்புத்தான் வருது. சாதாரணமாக குடிச்சுட்டு விழுந்து கிடக்கறவனை பாத்தா நான் ஒதுங்கி போய்க்கிட்டே இருக்கேன்.
இவன் குடிச்சுட்டு உளர்றதைப் பாத்தா மட்டும், என் மனசுக்குள்ள ஏன் இவ்வளவு கோபம் வருது? இவன் யாரு? நான் யாரு? இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? எதுக்காக நான் அனாவசியமா கோபப்படறேன்? இவனோட குடிப் பழக்கத்தைப் பாத்து, இவன் கிட்டவும் அருவருப்புத்தானே வரணும்? அருவருப்புக்கு பதிலா இவனைத் திருத்தணுங்கற எண்ணம் எனக்கு ஏன் வருது?

"ஹாய் மீனா டார்லிங், இன்னும் நீ தூங்கலையா? சீனு அவளைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து, தன் வாயை நீளமாக திறந்து முதலையைப் போல் இளித்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் தன் கடுகடுக்கும் முகத்தால், அவனை முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பிகொண்டதும், போச்சுடா, இன்னைக்கு இவ தன் கையால எனக்கு சோறு போடமாட்டா; அதுமட்டுமில்லே; மீனா நிச்சயமா இன்னைக்கு எனக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணப் போகிறாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. 

மீனா கண்ணு; ஒரு கிளாஸ் தண்ணி கிண்ணி குடுடி; ரொம்பத் தாகமா இருக்கு" சீனு அவளிடம் குழைந்தான்.

"அடிச்சுட்டு வந்து இருக்கற தண்ணி போதாதா?" இந்த வீட்டுல உனக்கு இனிமே தண்ணியும் இல்லே; கிண்ணியும் இல்லே...வேற எதாவது மடத்தை பாரு" மீனா வெடிக்க ஆரம்பித்தாள்.

"மீனா.." செல்வா ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

"சீனு ... வாழ்க்கையில உருப்படணுங்கற எண்ணம் உனக்கு சுத்தமா இல்லையா?" மீனா எடுக்கும் போதே ராஜதானியின் வேகத்தில் சினத்துடன் பேச ஆரம்பித்தாள். கோபத்தின் காரணமாக அவள் உதடுகள் இலேசாக துடித்து, வாயிலிருந்து சிறு எச்சில் துளிகள் சிதறின.

ம்ம்ம்... எனக்கு இது ஒரு தலைவேதனை ... இவங்க ரெண்டுபேருக்குள்ள வர்ற வழக்கமான போராட்டம் ஆரம்பிச்சிடிச்சி. சீனு குடிச்சா இவளுக்கு என்னா? குடிக்கலைன்னா இவளுக்கு என்னா? என் பேச்சையே இந்த நாய் கேக்க மாட்டேங்கறான். நான் ஒரு முக்கியமான வேலையா இவனை வரச்சொன்னேன். இவ நடுவுல பூந்து, இவன் கிட்ட நாட்டாமை பண்ண ஆரம்பிச்சிட்டா;

இன்னைக்கு என் வேலை முடிஞ்ச மாதிரிதான். இதான் என் போதாத காலங்கறது? எங்கப் போனாலும், எந்த வேலைக்குப் போனாலும், எனக்கு முன்னாடி சனியன் போய் நிக்கறான்? சனிக்கு கால் ஊனம்ன்னு சொல்றாங்களே? அவன் எப்படி என் லைப்ல மட்டும் வேக வேகமா ஓடறான்?

சீனு இன்னைக்கு குடிச்சிட்டு வந்து இருக்கறது மீனாவுக்கு கிளியரா தெரிஞ்சு போச்சு; இவன் வாரத்துல ரெண்டு நாள் குடிச்சுட்டு வந்து, மாடியில என் கூட மல்லாந்து கிடக்கறது மீனாவுக்கு சுத்தமா புடிக்கலை. இன்னைக்கு இவன் ஒழிஞ்ச்சான். செல்வா மனதுக்குள் புழுங்கிக்கொண்டே தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

"மீனா .. மெதுவா பேசுடி... அப்பா முழிச்சுக்கிட்டு இருக்கப் போறார்?" செல்வா நடுவில் நுழைந்தான்.

"சாரி மேடம்... கோச்சிக்காதீங்க! ஃப்ரெண்ட் ஒருத்தன் பார்ட்டி குடுத்தான்; வேணாம்பான்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்; ரொம்ப வற்புறுத்துனானுங்க; அதுக்கப்புறம் தட்ட முடியலை; நம்ம வேலாயுதத்துக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு; நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; நீயும் என் கூட அந்த சந்தோஷத்துல கலந்துக்கன்னு சொன்னான்."

"செல்வாவுக்கும் அவனை நல்லாத் தெரியும். எங்களுக்கெல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட்; நீ வேணா இவனைக் கேட்டுப் பாரேன்; இதெல்லாம் இன்னைக்கு ஒரு சோஷியல் நீட் ஆயிடிச்சி மீனா! புரிஞ்சுக்கம்மா!" சீனு தன் தரப்பு நியாயத்தை மெதுவாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.

"நீ தம் அடிக்கறது; ஒரு சோஷியல் நீட்; நான் புரிஞ்சிக்கறேன்; நீ தண்ணி அடிக்கறது ஒரு சோஷியல் நீட்; அதையும் நான் புரிஞ்சிக்கறேன். ராத்திரியில வேளா வேளைக்கு வீட்டுக்குப் போய் தூங்காம ஊர் சுத்தறயே, அதுவும் ஒரு சோஷியல் நீட்; எனக்கு நல்லாப் புரியுது; ஆனா உனக்கு கேன்சர் வந்து சீக்கிரமே சாகப் போறதும் ஒரு சோஷியல் நீடா? சொல்லுடா நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு... இதை நீ என்னைக்கு புரிஞ்சுக்குவே?" அவள் முரட்டுத்தனமாக சீறினாள்.

"ஒரே புள்ளை; மணி பத்தாச்சு; பெத்த புள்ளை இன்னும் வீட்டுக்கு வரலையே, அவனுக்கு என்ன ஆச்சோ; ஏது ஆச்சோன்னு; வயிறு கலங்கி போய் உன் ஆத்தாக்காரி, 'மீனா ... என் புள்ளை சீனு உங்க வீட்டுல இருக்கானான்னு' இப்பத்தான் எனக்கு போன் பண்ணா. இந்த வயசுல, ரெண்டு நாளைக்கு ஒருதரம் இப்படி பதறிப் போறாங்களே, அந்த வயசான கெழத்துக்கு இது மாதிரியான தேவையில்லாத மன உளைச்சல், நிச்சயமா ஒரு சோஷியல் நீட்; எனக்கு இதுவும் நல்லாப் புரியுது.

"மீனா ... ப்ளீஸ் ... ப்ளீஸ்... உனக்கே நல்லாத் தெரியும்! நான் என்ன குடிகாரனா? தெனம் தெனமா குடிக்கறேன்? ஏதோ அப்பப்ப மாசத்துல, ஒரு ரெண்டு தரம் இப்படி பார்ட்டியில கலந்துக்கறேன். கட்டாயப்படுத்தறாங்களேன்னு ஒரு பெக் இல்லன்னா ரெண்டு பெக் அவ்வளதான். நீ எப்பவும் என்னை இந்த விஷயத்துல தப்பாவே பாக்கறே!"

"ஊர்ல இருக்கறவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது? உனக்கு என்னைக்கு கல்யாணம் ஆவப்போவுது? உனக்குன்னு ஒரு குடும்பம் என்னைக்கு வரப்போவுது? நீ செய்யற வேலையைப் பாத்தா, ஒழுங்கா வாழ்க்கையில செட்டில் ஆகணும்ன்னு நினைக்கற எவளும், உன்னைத் திரும்பி கூட பாக்க மாட்டா...அப்படியே எவளையாவது உன் அம்மா உனக்கு கட்டி வெச்சாலும், அவ மூணு மாசத்துல உன்னை விட்டுட்டு ஓடிப்போயிடுவா" மீனாவுக்கு மூச்சிறைத்தது.

"மீனா ... போதும்டீ ... அவனை வாசல்லேயே நிக்க வெச்சு நீ கோர்ட் விசாரனையை ஆரம்பிக்காதடி... சத்தம் கேட்டு அப்பா வந்துடப் போறார்." இந்த நேரத்துல அவரு இங்க வந்தா, கதையே கந்தலாயிடும்; செல்வா தன் நண்பனுக்காக வாதாட ஆரம்பித்தான்.

"வரட்டுமே; உங்க ரெண்டு பேருக்கும் அவருகிட்ட மட்டும் பயம் இருக்குல்லே? இவன் குடிச்சுட்டு சத்தம் போடாம இங்க வந்து படுத்திருந்துட்டு, காலையில நல்லப் புள்ளையா காப்பி வாங்கி குடிச்சுட்டு, தன் வூட்டுக்கு எழுந்து போவான். கண்டவனுங்க இங்க குடிச்சிட்டு வந்து படுத்து தூங்கறதுக்கு, எங்கப்பன் என்னா லாட்ஜா கட்டி வுட்டு இருக்கான். இல்ல இது முனிசிபாலிட்டிகாரன் கட்டி வெச்சிருக்கற தர்ம சத்திரமா? குடிக்காதடான்னு யார் சொன்னாலும் இவன் ஏன் கேக்க மாட்டேங்கறான்?"

"மீனா ... சீனு என் ஃப்ரெண்ட்.. அவன் கண்டவன் இல்லே; இதை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கிட்டு பேசு.. அவனை நான் தான் வரச்சொன்னேன்; நீ எதுக்கு இப்ப தேவையில்லாம அவனை ரப்சர் பண்றே?

"மீனா குட்டி... ப்ளீஸ் .. இன்னைக்கு ஒரு நாளைக்கு கண்டுக்காதே; தப்பு நடந்து போச்சு; இனிமே இந்த பார்ட்டிக்கெல்லாம் சத்தியமா போக மாட்டேன்; மெதுவா பேசும்மா... நான் என்னா இந்த வீட்டுல கண்டவனா...?" சீனு குழைந்து கொண்டே அவளை நோக்கித் தன் கைகளை விளையாட்டாகக் கூப்பினான்.

"டேய் நீ என்னை குட்டி கிட்டின்னுல்லாம் கூப்பிட வேண்டிய அவசியமில்லே? குடிகாரன் பேச்சு; விடிஞ்சாப் போச்சு; உன் பேச்சைத் தண்ணி மேலத்தான் எழுதி வெக்கணும்.." மீனா மீண்டும் வெடித்தாள்.

"சாரி மீனா நீ கோபமாயிருக்கே ... நான் உன்னை இனிமே குட்டின்னு கூப்பிடமாட்டேன் ... பெரிசுன்னு கூப்பிடட்டா? சீனு தன் சென்ஸ் ஆஃப் ஹுயூமரை துணைக்கு அழைத்தான்.

"நீ என் கிட்ட பேசாம இருந்தினாலே அதுவே ஒரு பெரிய புண்ணியம் ... உன்னைப் பாத்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது!"

"மீனா .. விடுடி... அவன் கிட்ட சும்மா விளையாடதடி; சீனு பசியோட வந்திருக்கான் ... நானும் இன்னும் சாப்பிடலை ... ஆளுக்கு ரெண்டு தோசை சூடா ஊத்திக்குடேன்... சாயங்காலம் செஞ்ச பஜ்ஜி இருந்தா அதையும் கொண்டாடி; தொட்டுக்க சின்ன வெங்காயம் போட்டு, தேங்காய் அரைச்சு ஊத்தி, ஹோட்டல் சாம்பார் வெச்சிருக்கேன்னு அம்மா சொன்னாங்க" செல்வா தன் டிமாண்டை நேரம் பார்த்து அவள் முன்னால் வைத்தான்.

"நான் என்னா இவன் பொண்டாட்டியா? இவன் என்னா என் கழுத்துல தாலியா கட்டியிருக்கான்? இவன் குடிச்சுட்டு நேரம் கெட்ட நேரத்துல நம்ம வீட்டுக்கு வருவான்; இவனுக்கு நான் சுட சுட தோசை வாத்துப் போடறதுக்கு? பார்ட்டி குடுத்தவன் தோசை வாங்கிக் குடுக்கலையா? நீ ஒரு குடிகாரன் கூட சேர்ந்துக்கிட்டு அவனுக்கு வக்காலத்து வாங்கறே? மீனா படபடவென் வேகமாக பொரிந்துவிட்டு, தன் பின்னலின் முனையை திருகிக்கொண்டு நின்றாள். அவள் கைகள் இலேசாக நடுங்கி, அவள் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.



"மீனா ... போதும் நிறுத்துடி ... சீனு என் ஃப்ரெண்டு; அவன் எப்ப வேணா என் வீட்டுக்குள்ள வருவான். போவான்; நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; நீ இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசறே; எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்கு; சொல்லிட்டேன் நான்; அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் ..." செல்வாவுக்கு தன் தங்கை மீது எரிச்சலுடன் கோபமும் பொங்கியது.

"உன் ஃப்ரெண்டுன்னு நீ தானே சொல்றே? நீதானே வரச்சொன்னே? அப்ப நீ தோசையாவது சுட்டு குடு; சோறாவது ஆக்கிப் போடு; என்னை ஏன் உன் ஆசை பிரண்டுக்கு தோசை சுட்டு குடுக்க சொல்றே?" அவள் தன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள்.