Friday 13 September 2013

கொஞ்சும் அழகு.... கொஞ்சம் திமிர்... 1


காலை மணி 9.00... அவசர அவசரமாய் ஆபீஸ்க்குள் நுழந்தான் மோகன்....கம்யூட்டர் ஆன் பண்ணி... விட்டு ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தான்... அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்.... மோகனை பற்றி..... 27 வயது... அழகன் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு அந்த வயதுக்கே உரிய துடிப்பு... சுறு சுறுப்பு..இந்த பன்னாட்டு கம்பனிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது....அதற்கு முன் வேறு கம்பனியில் ஒரு 5 வருட அனுப்வம்...அதனால் கிடைத்த வாய்பு இந்த கம்பனியில் மானேஜர்.... கமர்சியல்... ம்ம்ம் பேரு தான் மேனஜர்... ஆனா எல்லா உதவியாளர் வேலயும் பார்க்க வெண்டும் இன்னும் ஒரு ஆறு மாதம்.... இது ப்ரொபெசன்... பீரியட்... அப்புரம் அப்ப்ரைசல்... அப்புரம் சம்பள உயர்வு.. பதவி உயர்வு. etc...etc....

இப்போதைக்கு இது போதும்..... மோகன் திரும்பி வந்தான் கம்ப்யூட்டர்.. ஆன் ஆகி இருந்தது....சட சட வென்று... MESSENGER.. LOG IN பண்ணினான், அவன் பொழுது போக்கு சாட் நிறைய ரெக்வெஸ்ட் கொடுப்பான் எதிர் பார்ப்பான் சில வரும் சில வராது அப்படித்தான் இன்றும்.... டிங்.. சத்தம், அட யாரோ அவனது ரrequest accept & add பண்ணி பெயர் மின்னியது மஞ்சளாய் ஹர்சினி பெண்.... முதல் வாசகம் hi..... ( எவன் கண்டு பிடிச்சான் ) அவனும் hi.... அறிமுக படலம்.... தெரிந்தது இவ்வளவு தான்... அவள் பெயர் ஹர்சினி....( புனைப் பெயராக கூட இருக்கலாம் ) வயது 29..( ம்ம் இப்ப் எல்லாம் 40 கூட 20 ந்னு சொல்லுது இதுக்கு கொஞ்சம் உண்மையாக கூட இருக்கலாம் ) கல்யாணம் ஆகி விட்டது.... ஒரு குழந்தை... இருப்பது ( இது கூட உண்மை தானோ ) இருப்பது ...... புனே... ( அட இங்க அமிஞ்ச்கரையில் இருந்துக்கிட்டு அட்லாண்டா வில் இருக்கிறேன் என்று புருடா விடுபர்கள் மத்தியில் நான் இந்தியாவில் இருக்கிறென் என்று பாதி உண்மை சொல்லி இருக்கிறாள் ) அவளை நான் பெயர் சொல்லி கூப்பிடலாம் என் சொல்லி விட்டு bye ..... off line... மோகனுக்கு... காலையில் வந்ததும் இது தான் வேலை...யாரிடமாவது கடலை போட வேண்டும், கொஞ்ச நேரம் தான், அப்புறம் 9.30 ஆபிஸ் களை கட்ட ஆரம்பித்து விடும், வேலைப்பளு கண்னைக் கட்டும்..... 9.30.....எல்லோரும் வந்தாகி விட்டது முன் காபினைப் பார்த்தான் அவள் அவன் சீனியர் இன்னும் வரவில்லை.... மல்லிகையின் மனம் குப் பென்று வீச வருகிறாள் அவள் ... அவன் சீனியர்... அகிலா. திரும்பிப் பார்த்தான் குமார், அப்சரஸ் பாத்திருக்கீங்களா... அது மாதிரிஎவண்டா இவளை பெத்தான் பெத்தான்... என்று பாட வைக்கும் அழகு பதுமை எல்லாம் அளவாய் அழகாய், அவ அப்பன் கிட்ட போய் கேக்கனும் இவளை பெத்தீங்களா இல்லை உக்காந்து செய்ஜீங்களான்னு...... மோகன் அவளைப் பார்த்து குட் மார்னிங்க் சொல்ல ஒரு புன் முருவலை தெளித்து விட்டு அவள் காபினில் நுழைந்தாள் அகிலா... காபின் என்றால் அறை எல்லாம் கிடையாது அவர் அவருக்கு ஒரு Bay... பஸ் நிக்கிற மாதிரி.. கொஞ்சம் உறக்க பேசினால் நாலவது சீட்ல இருக்குறவன் முறைப்பான். எவண்டா இவன் பட்டிகாட்டான்னு. சீனியர் என்றால் ஆபிஸில் மட்டும் தான்.. வயது என்னமோ 24 இருக்கும்... இந்த ஆபிஸில் என்னைப் பொறுத்தவரை அவள் சீனியர்,வந்த அன்றே சொல்லி விட்டாள்நீங்க என்ன விட வயது அதிகம் தயங்காம என்ன பெயர் சொல்லி கூப்பிடலாம் அனுமதி கொடுத்து விட்டாள் காபினில் இருந்து எட்டி பார்த்து.. மோகன்.. அந்த புது கம்பனி quote check பன்னி இன்னிக்கு அவங்களுக்கு... பேமண்ட் அக்கவுண்ட்ஸ்ல சொல்லி அரேஞ் பண்னிடுங்க சொல்லி விட்டு அவள் வேலைய கவனிக்க ஆரம்பித்தாள்.... கொஞ்ச நேரத்தில் அவனது பெர்சனல் மொபைல் போன் டிங்க் என்று சொல்ல msg படித்தான் " i am on line - easwari" மின்னியதுஆகா.. இது ஒரு பெண் இப்பத்தான் கொஞ்ச நாளா..... அவள் ஆன் லன் ல வந்ததும் ஒரு வெப்...ல் இருந்து ஒரு SMS வரும் பெயர் இருக்கும் ஆனால் மொபைல் நம்பர் இருக்காதுமோகன் சாட்ல அவன் நம்பைரைக் கொடுத்து வைத்திருந்தான்..... messenger ஒபென் பண்ண.. மஞ்சள் கலரில் மின்னினாள் eas.... ( இவன் வைத்துக் கொண்டது ) வழக்கமாய் பேச ஆரம்பிக்க... கொஞ்ச நேரத்தில் MD அழக்க.. sign out ஆகி... அவரை பார்க்க....போய் விட்டான்..... ஒரு மணி நேரம் கழித்து... வந்து வேலையில் மூழ்கியவன் ஈஸ்வரியை சாட்டில் இருந்ததை மறந்து போனான்..... மதியம் சாப்பாட்டு நேரம்... பொதுவா...பியூன் வாங்கி வரும் சாம்பார் சாதம் தான் அதை சாப்பிட்டு கொண்டே.. மெசஞ்சரை ஓபன் பண்ண... ஆப் லன் மெஸ்ஜ்... மின்னியது... ஈஸ்வரி தான்... திட்டி இருந்தாள்... உனக்கு அறிவே இல்லை... முட்டாள்... என்ன இன்சல்ட் பண்னுற... நான் என்ன வேலை இல்லாமல் உன்னை கூப்பிடுறேனா... அது இது என்று ஏகத்துக்கும்... அட இது என்னடா வம்புநினைத்த மோகன் மெல்ல நிலையை விளக்கிஅதற்கு பதில் ஆப் ல்ன் நில் கொடுத்த படிசாப்பிட்டான். கை கழுவி வந்தவன் அகிலா சொன்ன வேலைய முடிக்கஅவள் காபினில் நுழைந்துபைல் எடுத்தவன் அவள் கம்யூட்டர் மானிடரை பார்த்தவன் திகைத்தான்.... மெசஞ்சர் ஓபென் ஆகி இருந்தது கீழு டேப் பாரில்... PKM என மின்னஆவலில் அதை கிளிக் செய்ய விரிந்தது மெசஜ் மோகன் சற்று முன் கொடுத்த அத்தனை மெசஸ்ஜ்.....அதில்...அப்படியே..... அதிர்ந்தான் குமார்.... அகிலா... இவளா ஈஸ்வரி.... சிங்கப்பூரில் இருப்பதாக சொன்னாளே... புருடாவா.... தில்லாங்கடி வேலையா...?????????பதை பதைப்புடன்.. வந்து அமர்ந்தான் குமார்... இங்கு வருவதற்கு முன்போ ஈஸ்வரியை சாட்ல தெரியும்.... பழைய போன் நம்பர்.. இங்கு வரும் போது புது நம்பர் கொடுத்திருந்தான், அவன் மொபைல் டுயல் சிம், அதுனால அவளுக்கு அவனைத் தெரியலை. சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி.. ... "நீ ரெம்ப அழகுன்னு " ஒரு மெஸ்சஜ் கொடுத்தான்..... பின்னர் ஆப் பன்னிட்டான்.... மாலை 5.30க் கெல்லாம் டான்னு கிளம்பிடுவா.. அகிலா... அது போல் கிளம்பியவள். இன்னும் இருநத மோகனைப்பாத்து... " என்ன மோகன் கிளம்பலை " "இல்லை.. கொஞ்சம் வேலை அந்த QUOTE accounts ல இன்னும் பணம் ரிலீஸ் பண்ணல.. அது தான் கொஞ்சம் வெயிட் பண்ணிஅனுபிட்டு கிளம்பலாமுன்னு." சரி வரென்... அவள் நடையில் என்றும் இல்லாமல் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான்..... மெசஜ் பார்திருப்பாளோ அது தானோகுளம்பினான் மோகன்..... மீண்டும் அக்கவுண்ட்ஸ் போய் ஆன் லன்ல பணத்த கட்ட வைச்சு.. திரும்ப மணி 7.00 ஆகி இருந்தது வழக்கம் போல்... சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி... பார்த்தவன் துள்ளினான்..... பதில் வந்திருந்தது..... ". போடா.... சீசீ.. நீ ரெம்ப மொசம்......" பதில் போட்டான். . " உண்மையிலேயே நீ அழகு தான் டி " கம்யூட்டரை ஆப் பன்னிட்டு கிளம்பினான்... சந்தோசத் துள்ளலுடன்.. வீடு ...மேடவாக்கம்... நண்பர்களுடன் தங்கிருந்தான்.. பிளாட் தான்..ஆனாலும் வசதியாக இருந்தது.. இறங்கிவுடன் பார்த்தான் ஒரு மெசஜ்.... மொபைலில்.. அவள் தான்.. " பொறுக்கி..." கொஞ்சம் முகம் வாடியது மோகனுக்கு... இன்னொறு மெசஜ்... "ஆன் லன் ல இருக்கேன் " லிப்டுக்கு காத்திராமல் நாலு படியாய் தாவி ஏறி.. ரூமைத்திறந்து கம்யூட்டர் ஆன் பண்ண.... மெஸஞ்சரில் ... " பொறுக்கி....": " நான் அழகில்லை...." " நான் சுமாரா பல்லு எத்தி போய் இருப்பேன்...." " என்னப் போய் அழகுன்னு சொல்லுற நீ குருடன் தான்..." ஆப் லைன்லில் வந்த மெஸஜ்.... மெசஞ்சர பாத்தா அவ ஆப் லன்ல இருக்கானு காட்டுது... அடச்சே... பாத்ரூம் போய்டு வந்தான்.... வரதுக்குள்ள ஆப் லன்ல போய்டா..... திருப்பி மெசஜ் அடித்தான்..... " நீங்கள் அழகு தான்....." " நீங்கள் சொன்னது போல் நீங்கள் ஹதிராபாத்தில் இல்லை... நீங்கள் சென்னை தான்..." " இன்று நீங்கள் அந்த நீல நிறச் சேலையில்...தலையில் பூவாடு... சூப்பர்..." "உங்க ஸ்கூட்டி கலர் சிவப்பு... இது போதுமா இன்னும் வேண்டுமா..." கொஞ்ச நெரம் பொறுத்திருந்து பார்த்தான்.. அவள் வரவில்லை... ஆப் பன்னிட்டு... சாப்பிட கிளம்பினான்.... மறு நாள் ஆபிஸ்ல் நடக்கப் போவது தெரியாமல்.... காலைல வழக்கம் போல் ஆபிஸ் வந்ததும்.. சாட் ஓபென் பண்ணி பார்த்தான்.. ம்ம் ம்ம்ம்ம் ஒன்னும் மெஸ்ஜ் இல்லை... என்ன ஆனாள் இவள் இன்னும் வரவில்லை..கொஞ்ச நேரத்தில் மிகவும் பதட்டமாக வந்தாள் அகிலா.. "மோகன்.. நேத்து கொடுத்த Quote that foreighn company is the money paid yesterday " பதட்டமாய் கேட்டாள்.... " ம்ம்ம் நேத்து முடிச்சிட்டு தான் போனேன்.. ஏன்... 5.00 மனிக்கு ப்ரொசஸ் ஆகி...அவங்க கன்ஃபிர்ம் பன்னிடாங்க ஏன் அகிலா... எதாவது ப்ரொப்ஸ் " " Oh thank god.. நான் முடிச்சிட்டு போயிருக்கனும்... ஏதோ ஒரு ஞாபத்துல போய்டேன்..போகலன்னா என் வேலை காலிடா " " என்ன சொல்லுர..." " ஆமா மோகன் இன்னிக்கு டாலர் ரேட் 5 ரூபா ஏறிடுச்சு... கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் போயிருக்கும்... நல்ல வேளை நீ முடிச்சிட்டஇல்லைன்னா நான் காலிடா" " நான் தான பண்னனும்... உன்ன எதுக்கு ...." " இல்லை மோகன் நீ தப்பு பண்ணினாலும் நான் தான் அதுக்கு பலி ஆகனும்.. தாங்க்ஸ் மோகன்.." இடையில் M.D. வந்தார்.. " GOOD JOB.. AKILA... 2 CR... IN KITTY.. GOOD JOB KEEP IT UP... " மோகனுக்கு விளங்கவில்லை..... அவர் போனவுடன் கேட்டான்.. "என்ன அகிலா உன்னை குட்டின்னுட்டு போறார்...." "ஹைய் அவனை பார்த்து முறைத்தவள்.. "அது குட்டி இல்லை.. கிட்டி... அப்படீன்னா.. சேவிங்க்ஸ் ந்னு அர்த்தம், இன்னிக்கு சாயுங்காலம் உனக்கு A 2 B ல ட்ரீட் உனக்கு....." " அது என்ன A 2 B.... " " நீ அம்மாஞ்சியா... ஒன்னும் தெரியலை... அடையார் ஆனந்த பவன்..ல டிரீட் உனக்கு.. நான் தரென்.." அவள் குரலில் மகிழ்ச்சி... பொங்கியபடி.... மோகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது...மோகனுக்கு மனசு பறந்தது.. இன்னிக்கு சொல்லிடலாமா... அது நான் தான் என்று... சொல்லிட வேண்டியது தான்... மாலை வழக்கம் போல் 5.30 க்கு கிளம்பினாள் அகிலா, "என்ன மோகன் கிளம்பலாமா..." "ம்ம் இதோ வந்திட்டேன்....." அன்று இருந்த வேலை பழுவில் அவன் மெசஜ்ஸ்ர் ஓபன் பண்ணவே இல்லை.. அவன் எண்ணம் முழுவதும், மாலை 5.30 ல் இருந்தது... இப்ப ஓபன் பண்ணிலால் இவளுக்கு தெரிந்து விடும்.. அப்படியே விட்டு விட்டான்...இரவு பாத்துக்கலாம்னு... .... அங்க போனா.. ஏதோ திருவிழா கூட்டம் மாதிரி பாவிகளா திங்கறதுக்கு இப்படியா விழுவாங்க என்னமோ ஓசில கொடுக்கற மாதிரி, அடிச்சு பிடிச்சு இடத்த எப்ப பிடிக்க இந்த கூட்டத்தில எப்படி அவ கிட்ட பேச . மனசு அலை பாய்ந்தது மோகனுக்கு. "என்ன மோகன் வந்ததில் இருந்து பாக்குரேன் அப்படி என்ன யோசனை, காசு நான் கொடுக்கிறென் M.D. 1000/- ரூபாய் கொடுத்திருக்கார்" "என்னது.." "ஆமாம்டா.. நான் எம்.டி கிட்ட சொல்லிட்டேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான்னு..." "ஏன் சொன்ன.." "இல்லை நான் அத செய்யலை நீதான் அத செஞ்ச... so the credit is yours...." "so what you only instructed me ya..." "no no implemetation, matters...நீயும் போயிருக்கலாம்ல... இருந்து முடிச்சிட்டு போனதனால் தான இந்த லாபம் கம்பனிக்கு..." "சரி அப்ப நான் ஒன்னு சொல்லவா..." "என்ன " "இங்க வேண்டாம் வா காபி ஷாப்க்கு போயிடலாம்.. ஒரு பர்ஜர் ஐஸ் கிரீம்... காபி கலக்கிடுவோம்..." "என்ன விளையாடுரியா... 1000 தான் இருக்கு.. அங்க போனா பழுத்திரும்.." "எனக்கு தான ட்ரீட் " "ஆமா "அப்ப வா என் கூட... "உன் கிட்ட பேச முடியாதுப்பா.. வா போகலாம்..." அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்... அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு. ஓரமாக இடம் பிடித்து அமர்ந்தாள்.. அவன் சென்று ஆர்டர் செய்து விட்டு.. அவள் எதிரே அமர்ந்தான். "இன்னிக்கு என்ன ஒரே சந்தோசமா இருக்கறா மாதிரி இருக்கு..." "ஆமா.. இருக்கு சந்தோசமா.." இதுக்கா இவ்வளவு சந்தோசம்.... "இல்லை மோகன்.. அது வேற.." "ம்ம்ம்ம் இன்னிக்கு நீ ரெம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது." " என்ன உளர்ற... நான் ட்ரீட் கொடுக்கிறது காபி மட்டும் தான்... நீ என்னமோ ட்ரிங்கஸ் அடிச்சமாதிரி உளர்ற" " இல்லை அகிலா.. இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா" " என்ன வித்தியாசம்... சொல்லு.." சொல்லிடுவேன்... சொல்லு மோகன்... "உன் ட்ரெஸ்... எப்பவுமே..நீ டார்க் கலர்ல சேலை மேட்சிங்கா அதே டார்க் கலர்ல பிளவுஸ் போடுவ.." "ம்ம்ம்ம்.." "இன்னிக்கு அப்படி இல்லை... லைட் கலர் சேலை காண்டிராஸ்ட்டா... பிளவுஸ்..." "இல்லையே நான் எப்பவாவது இப்படி போடுவது உண்டு...." "அப்புறம்.... ம்ம்ம்... இல்லை வேன்டாம்.... என்ன வேன்டாம்.. சொல்லு... இல்லை வேனாம்.. இரு நான் போய் நம்ம அயிட்டங்களை எடுத்திட்டு வந்திடுறேன்.... மோகன் போய் ரெடியான அனைத்தையும் எடுத்து வந்தான்..ஒரு ப்ர்ஜர்.. ஒரு கேக் இரண்டு காபி... "என்ன மோகன் எல்லாம் ஒன்னு ஒன்னு வாங்கீருக்க... "இல்லை எப்பவுமே வரைட்டி வரட்டியா சாப்பிடனும் அது தான் எனக்கு பிடிக்கும்... இப்ப ரெண்டு பர்ஜர் வாங்கினேன்னா ரெண்டு பேருமே அத தான் சாப்பிடனும்.. இப்ப இதுல ஒன்னு அதுல ஒன்னுன்ன்னா ரெண்டு அயிட்டம் ஒரே நெரத்துல சாப்பிட்ட மாத்ரி எப்படி...." "உனக்கு தான்பா இப்படி எல்லாம் யோசனை வருது.. வடிவேலு சொன்ன மாதிரி உக்காந்து யோசிப்பையா இதெல்லாம்... சொல்லி சிரித்தாள் ஆனா இந்த கான்சப்ட் எனக்கு பிடிச்சிருக்கு... வரைட்டி.. ம்ம்ம் குட்.. உன் கிட்ட சரக்கு இருக்கு...." "சொல்லு மோகன் ஏதோ அப்ப சொன்ன நிறுத்திட்ட..." " ம்ம்ம் கோவிக்காம கேட்டா சொல்லுவேன்..." "சொல்லு அத அப்புறமா யோசிக்கலாம்..." வெட்டிய பர்ஜரை ஒரு பகுதிய எடுத்து கடித்தபடி... " DID ANY BODY PROPOSED YOU......" " WHAT... no nope....." மெசஞ்சர்ல சாட்ல சொல்லுற மாதிரி... தத்தி தத்தி விழுந்தன வார்த்தைகள்.. ஆனால் தடுமாறியது உதடு... "என்ன ஏதோ மெசஞ்சர்ல மெசஜ் வந்த மாதிரி சொல்லுரீங்க." அவள் முகம் சிவந்தது.. குங்குமமாய்... "இல்லையே.. இது வரை இல்லை.....ஆமா நீ ஏன் அத கேட்கிற...." "இல்லை சும்மா கேட்டேன்'" ( மனசை அடக்கிக் கொண்டான் ) மடையா இது சொல்லும் நேரம் இது இல்லை,விதைய இப்பதானடா போட்ட, அதுக்கு முன்ன அருவடைக்கு அருவாளோட போனா எப்படிடா மனசு இடித்தது...மனதை அடக்கி கொண்டான் மோகன்.. இப்ப வேணாம்.. அப்புறம்.. இன்னொறு நாள்.... மாலை மணி 6.30 ஆகி விட்டது.. "மோகன் நான் கிளம்பபுரேன்.. இந்தா பில்லுக்கு உள்ள காசு.." அவனிடம் அவள் 1000 ரூபாய் நோட்டை நீட்ட... மோகன் மறுத்தான்... " அகிலா என்னங்க இது நமக்குள்ள பார்மாலிட்டீஸ் வேனாம்.. இன்னொறு நாள் நீங்க பே பன்னுங்க..." அவளை இன்னொறு நாள் வரவழைக்க வைத்த தந்திரம் அது... எலி பொறில மாட்டுமா இல்லையா இப்ப தெரிஞ்ச்டும்.... அவள் மோகனை உற்றுப் பார்த்தாள்.. "என்ன இன்னொறு நாளா...சான்ஸே இல்லை... ஆனா " "என்ன ஆனா.." ":உனக்குத் தெரியுமா... நம்ம கம்பனில இருந்து மதுரைக்கு போறாங்க...'ALL INDIA DEALERS MEET...new product introduce.. பன்னுராங்கஇந்த தடவை HR பாதி பொறுப்ப நம்ம தலைல கட்டிட்டான்... நீயும் வர... 15 நாள் இருக்கு இன்னும் " "மதுரைல எங்க..." " THE GATE WAY HOTEL, PASUMALAI, TAJ GROUP.... நல்ல இடம்... சின்ன மலை மேல 5 star ஹோட்டாள்.... மதுரை முழுவதும் மண்டை காயிர மாதிரி வெயில் அடிச்சாலும் அங்க குளு குளுன்னு இருக்கும்... அப்படி ஒரு இடம்அங்க இருந்து பார்த்தா மதுரை முழுவதும் தெரியும்." ( தெரியாத நண்பர்கள் கூகுள் ல போட்டு பாருங்க.. சும்மா அப்படி ஒரு இடம்...) "நீங்க போயிருக்கீங்களா...." "ம்ம் ஒரு தடவை போயிருக்கேன்.. ஒரு மூனு வருசம் முன்னால.... இப்ப இந்த வருசம்....அப்படியே குற்றாலம் போனாலுன் போவாங்க என்ன அங்கிருந்து ஒரு 150 கி.மீ தான் இப்ப சீசன் வேற..Schedule இன்னும் வரலை.. வந்ததும் சொல்லுறேன்.". மோகன் திகைத்தான்.. ஆகா..என்ன ஒரு அருமையான சான்ஸ்.. நல்ல வேளை இப்ப சொல்லடா சாமி....சொல்லி எதிர் மறையாக போயி..அப்புரம் இந்த பொன்னான சான்ஸ் .. கிடைக்காதே.. 'ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்கனும் நண்பா '... மனசு இடித்து சொல்லியது... 'பொறு பொறு பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறாதார் பொண்டாட்டி ஆழ்வார்..'. கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சொல்லக் கேட்டது அவனுக்கு நினவு வந்தது... மோகன் பொறுக்க முடிவு செய்தான். அகிலா புறப்பட்டு விட்டாள்.. மோகன் அவள் போனதும் தன் பல்சரில் பறந்தான் வீட்டுக்கு.... அடித்து பிடித்து வந்து மெசஞ்ச்ர் ஓபன் பன்னினான்.. ஈஸ்வரி ... ஆப் லன் மெஸ்ஜ் கொடுத்திருந்தாள்... 'ஆமா நான் ஹதிராபாத்தில் இல்லை....' 'அப்ப இல்லை இப்ப சென்னையில் தான் இருக்கேன்...' 'வேற எவளயோ பாத்திட்டு நான்னு நினக்கிறே...' ' பொறுக்கி அவ கிட்ட போய் அடி வாங்காத...' ' எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது ஸ்கூட்டி எப்படி ...' ' காமாலை கன்னுக்கு பாக்கிறது எல்லாம் மஞ்சளாத் தான் தெரியும்... பாத்து போ....' ' tks for the compliments..... நான் சுமாரா இருப்பேன் bye...' குதித்தான் மோகன்.. ஆக அவ சென்னையில் இருப்பதை ஒத்துக் கொள்கிறாள்.. மோகன் பதில் அடித்தான் ' நீங்க அழகாவே இருக்கீங்க.... "அது யாரு உங்ககூடவே ஒரு தடியன்...உங்க கூட ஒட்டிக்கிட்டு வந்தான் AB ல....' 'உங்க லவ்வரா... ம்ம்ம்ம் ஆள் சுமார்ட்டா தான் இருக்கான்(ர்)..' 'எனக்கு பொறாமையா இருக்கு...அவன பாத்தா' 'ஏங்க ஆன் லன்லயே வர மாட்டீங்களா..' அனுப்பிவிட்டு அதை ஆன் லன்லயே வச்சிட்டான் மோகன்.... அவள் வரவில்லை... ஆப் லைன் தான் காட்டியது... கொஞ்ச நேரத்தில் ஹர்சினி ஆன் லன் ல வரவும்.. இவளை ஆப் லைன்ல போட்டுட்டு ஹர்சினியிடம் சாட் பண்ண தொடங்கினான்.... ஒரு 1/2 மணி நேரம் ஓடியது... திடீரென்று.. ஈஸ்வரி...யிடம் இருந்து மெசஸ்ஜ்.... ஆனால் அவள் பெயரில் ஆப் லன் தான் காட்டியது.. கள்ளி என்ன ஆப் லன்ல போட்டுட்டு அங்க யாரிடமோ கதை பேசுகிறாள்.. மெசஸ்ஜ் பாத்து பதில் போடுறாள்... 'நான் ஆன் லன்ல இருந்தா என்ன ஆப் லன்ல இருந்தா என்ன...' 'உனக்கு மெஸஜ் வருதா அத மட்டும் பாரு...' 'நான் எங்கயும் போகலை வீட்ல தான் இருந்தேன் ' 'நீ யாரிகிட்டயோ நல்லா அடி வாங்க போறப்பா பாத்து உடம்பு ஜாக்கிறதை..' அடிப்பாவி இப்படியா புழுகுவீங்க .. ம்ம்ம் ... எல்லாரும் இப்படித்தானோ.... மோகன் அதற்கு பதில் போடவில்லை... போட்டால் அவள் புரிந்து கொள்வாள்... நீயும் அப்படித்தானே என்று திருப்பிக் கேட்டால்..... அனைத்துவிட்டு தூங்க சென்றான்....நாட்கள் பறந்தன... ஒரு மீட்டிங்க அதுவும் ஆல் இந்தியா ல்வெல்ல பன்னுரது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் மோகனுக்கு புரிந்தது.... ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவங்க கம்பனியுடன் வைத்த turnover.. மற்றும் கொள்முதல்.. அதை சரி செய்து லிஸ்ட் கொடுத்து அதுல மாற்றம், அப்புரன் செக்;லிஸ்ட்... அப்புறம் அது முடிவடைந்து இறுதி வடிவம் கொடுக்க... இன்விடேசன் அடிக்க... யார் யார் வராங்க அவங்களுக்கு மெயில் அனுப்பி கன்ப்ர்ம் பண்ணி, ரூம் புக் பண்ணி... மெனு செக் பண்ணி என்ன என்ன புராடக்ட் கொண்டு போகனும் லிஸ்ட்.... அதுக்கு தேவையான மற்ற உப கரணங்கள்... ete..etc... ஒரு வாரம் பெண்டு நிமித்தி விட்டது மோகனுக்கு.. இதற்கிடையில் சாட்டாவது ஒன்னாவது.. எல்லாம் பரன்ல தூக்கி போட்டாச்சு... அந்த நாளும் வந்தது.....அது ஒரு வியாழக்கிழமை.... இரவு 9.30 பாண்டியன் எக்ஸ்பிரஸ்... எல்லாருக்கு 3 டயர் ஏ சி.. கோச்...எல்லாம் கிட்டத்தட்ட 60 பேர்... மீதம் உள்ள சிலர் நேரடியாக மதுரை வருவதாக சொல்லி இருந்தனர்...சிலர் மறு நாள் மாலை நேரடியாக ஹோட்டலுக்கு வருவதாக சொல்லி விட்டனர்.. அகிலா தன் பேக்கை தூக்கி கொண்டு வர பின்னால் பியூன் ஒரு பெரிய ட்ராலி பேக்க இழுத்து கொண்டு வந்தான்... அகிலா அந்த டிராலி பேக்கை கொடுத்து இது உன் பொறுப்பு என்றாள்.. இழுத்து பார்த்தான் செம கனம்... என்ன அகிலா இது பொனம் மாதிரி கனக்குது... ஆமா அத ரெம்ப அடிச்சாலும் பொனம் தான்... என்னது... ஆமாடா... ஃபுல்லா பாட்டில் எல்லாம் ஃபாரின் அயிட்டம்...எம் டி கொடுத்து வுட்டார்... பொறுப்பா அங்க கொண்டு வந்துடு.. மவனே இடைலை யாராவது கைய வச்சா.. அவ்வளவு தான்.. நீ குடிப்பியா.. மோகன்.. மண்டைய ஆட்டினான்.. என்ன ஒன்னு ஆமான்னு ஆட்டு இல்லை இல்லைன்னு ஆட்டு பொத்தம் பொதுவா ஆட்டினா என்ன அர்த்தம்... இல்லை எப்பவவாவது.... சரி தான் பாலுக்கு பூனை காவல்... சிரித்தாள்...

எல்லாரும் வந்தாச்சான்னு பாரு... டிக்கெட் இந்தா... சொல்லி விட்டு அவளுக்கு என்று இருந்த பெர்த்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்... அவளுடன் இன்னொருத்தி சேல்ஸ் ல உள்ளவ.. அவளுடன் இணைந்து கொண்டாள்... வண்டி கிளம்பியது... ம்ம்ம் செக்கிங்க் முடிந்து... பாண்டியன் செங்கல் பட்டு தாண்டியது.....இரவை கிழித்துக் கொண்டு... வந்தார் G.M. Sales... என்ன மோகன் சரக்கு எங்க என்றார்.. சார் அந்த டிராலில இருக்கு சார்.. போ மோகன் போய் ஒரு பாட்டில் எடுத்துட்டு வா.. மெல்ல கொண்டு வா சத்தம் போடாம ..ம்ம்ம் நான் வாசல் கிட்ட் இருக்கேன்... கதவை திறந்து வாஷ் பேசின் பக்கம் போய் நின்று கொண்டார்.... போனான் எடுத்தான் வந்தான்.. கையில் ஒரு BECCADY.... WHITE RUM... அவ்ர் கையில் கொடுத்தான்.. இரு மோகன் இதோ வந்துடுறென்.. மீண்டும் உள்ளே போனார்...மமோகன் வாஷ் பேசன் கிட்ட நிற்க... இப்பத்தான் சனி விளையாடியது.... ஏ சி கதவு திறந்தது.. வந்தவள்.. அகிலா... பாத்ரூம் போக வந்தவள் .. மாட்டிக் கொன்டான்... கையில் பாட்டில் ... முழித்தான்... நான்.. இல்ல.. ஜிம் ஜிம் உளரினான்... அவர் தான் .. உள்ள போயிருக்கார்..வர்ரார்... யாரு அவன் அந்த சொட்டை தலையனா... அடிக்கட்டும்... நீ மட்டும் அடிச்சே... அப்புறம் அவனை முறைத்த படி டாய்லெட் போக....மோகன் அவஸ்தையாய் நெழிந்தான். இது என்ன டா வம்பு... அவ அடிக்காதாங்க்றா...இவர் அடிங்கிறார்... என்ன பன்ன... ஏசி கதவு திறந்தது.. GM, AGM SALES, AGM A/C... மூனு பேர் வந்தனர்.... சூப்பர் சரக்கு மச்சி... எப்படிடா இது...அவர்களுக்குள்.. எல்லாம் நம்ம பையன் இருக்க நாம் ஏன் கவலைப்படனும்.. என்னக் காட்டி கண்னடிக்க அட பாவிகளா.. ஆபீச பொருத்த மட்டில் சேல்ஸ்... அக்கவுண்ட்ஸ்.. அடிச்சுகுவானுக.. இங்க வந்தா.. இப்படி குடிக்கரதுக்கு கூடி கும்மியடிக்கிறாங்க.... டாய்லட் கதவு திறந்தது.. அகிலா வெளிய வந்தாள்.. அவர்களைப் பார்த்தாள் என்ன சார் இன்னும் தூங்கலையா... இல்லம்மா கொஞ்சம் பேச வேண்டி இருக்குது.. அங்க எல்லாம் தூங்குறாங்க.. நீ போய் படு... நாங்க பேசிட்டு வறோம்.. அகிலா மோகனை முறைத்தவாறு அவனுக்கு கண்னால் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றாள்.... சரி class இல்லை.. எப்படி அடிக்க போறங்க பார்போம்.. கொஞ்சம் நின்றான் மோகன்.... AGM oru வாட்டர் பாட்லை கொண்டு வந்திருந்தார்... அதில் முழுசும் தன்னீர்.. ஜி எம்... ரம் பாட்டிலை திறக்க.. மெல்ல்லிய வாசனை மூக்கைத்துளைத்தது.. அப்படியே கொஞ்சம் வார்யில் கவிழ்த்தார்... வாட்டர் பாட்டிலை திறந்து அதையும் தன் வார்யில் விட்டு வாயிலேயே கலந்து முழுங்கிட்டாட்.. எமகாதகன்.... இவனுக நம்ம குடி மகன் களையும் மிஞ்சிடுவாங்க போல.... நினத்துக் கொண்டான்.... அப்புறம் தண்ணி பாட்டில்ல கொஞ்சம் நல்ல ஊத்தி கலக்கினானுக ரெண்டு பாட்டிலைய்ம் மாத்தி மாத்தி கலந்தானுக தன்னனி ரெடி பண்ணி ..அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வண்டி மேல் மருவத்தூர் தாண்டியது.... இரண்டு பாட்டிலும் மாறி மாறி கைமாற.. கொறிக்க ஒரு சிப்ஸ் பாக்கட் அத வச்சே ....வடிவேல் மாதிரி கைய நக்கல அவ்வளவு தான்...மற்றபடி அவனை விட மோசம்... வண்டி விழுப்புரம் நெருங்கியது மணி கிட்டத்தட்ட 12.45... ஸ்டேசன் வந்ததும் ஏ ஜீ எம் உடனே ஓடி போய் ஒரு 7 அப் 1.5 லிட் வாங்கி ஏறிக்கொள்ள..அதற்குள் ஒரு புல் பாட்டில் காலி... ஜி .ஏம் நாலைந்து கார வகை பாக்கட்டுகள்.... கையில் அடப் பாவிகளா... மேல் மருவத்தூரில் ஆரம்பித்து விழுப்புரம் வரதுக்குள்ள ஒரு பாட்டிலா.. பிரியா கொடுத்தால் பினாயிலயே குடிப்பானுக போலிருக்கே...... மோகன் இன்னோறு பாட்டில் எடுத்திட்டு வாப்பா..... பாண்டியன் மீண்டும் நகர ஆரம்பிக்க..... முழித்தான் மோகன்... எப்படி எடுக்க....மறுபடியும் உள்ள போய் மெல்ல டிராலி திறந்து எடுத்து மூடி.. சத்தம் இல்லாமல் வர.. அட இது வோட்கா பாட்டில்.... ஸ்ம்ரனாஃப் ( SMIRANOFF) 1 Lr... சார் இருட்ல தெரியல சார் இது வோட்கா சார்.... பரவால்லைப்பா.. கொண்டா.. ரெண்டும் ஒன்னு தான்.... அதையும் கலந்தார்கள் 7 அப் உடன்... இப்ப தான் ரெண்டு பாட்டில் இருக்கே.... மோகன் அவர்களுடன் நின்றான்.... என்னே மோகன் நீ அடிக்க வே இல்லையே.... இல்ல சார் பழக்கம் இல்லை.. நீங்க கேட்டீங்கன்னு தான் எடுத்து வந்தேன்.... இல்லை மோகன்.. இது சும்மா நல்லா இருக்கும் அடித்து பார்.. சொல்லி விட்டு... 7 அப் பாட்டில மோகனிடம் கொடுக்க.. அவன் தயங்கிய படி வாங்க... ம்ம்ம் ஷியர் அப் மேன்... ஜி ம் அக்கவுன்ட்ஸ் சொல்ல வேத வாக்காய் எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு போக.... ஏ சி கதவு திறந்தது.... வந்தவள் .. சாட்சாத் அகிலா தான்.... மோகனை பார்தவள்.. ஜி எம் பார்த்தாள் ஓன்றும் சொல்லாமல் டாய்லெட் போனாள்.. அவள் போகும் வரை அமைதியாய் இருந்தவர்கள்... அவள் திரும்பி போன வுடன்.... ஜி எம் சேல்ஸ் சொன்னார்.. இவளுக்கு என்ன சுகர் இருக்கா... இப்படி அடிக்கடி பாத்ரூம் போறா..... சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.. கொல்லென்று.... மோகனுகு வலித்தது.... ம்ம்ம் அவள் நான் குடிகிறேனான்னு செக் பண்ண வரா.. அத போய் இந்த கிழடுகள்... அவ மக வயசு இருக்கும் இப்படி சொல்லுதுகளே.. நினைததவன்... சார் இத் புடிங்க.. நான் ட்ராலி லாக் பண்னாம வந்திட்டேன்... வேற எவனாவது எடுத்து வச்சிக்கிட்டான்ன நாளைக்கு என் தலை தான் உருளும் சொல்லி விட்டு ஏ சி திறந்து உள்ளே போனான்... அவன் எதிர் பார்த்த மாதிரியே.. அகிலா அங்க அவன் பெர்தில் உட்கார்ந்திருக்க..... அவள் அருகில் போய் என்ன அகிலா தூங்கலையா... இல்லடா தூக்கம வரலை... ஏன்.. அதுக்கு என் பெர்த்ல வந்து உக்காந்து இருக்கீங்க... உன்னது தான் சைடு லோயர்.. போதுமா... குடிச்சியா.... அவங்க கூடா... அவள் குரலில் கலக்கம்... இல்லை அகி நான் குடிக்கலை.... அவன் அவளை அகி என்று சுருக்கி கூப்பிட்டது அவளுக்கு தெரிந்தும் அவன் அப்படி சொன்னதை அவள் பெரிசா எடுத்துக்கலை... நம்ம ஸ்டாப் நாளக்கு எதுன்னாலும் நாம தான் பதில் சொல்லனும்... அது தான் அவங்க கூட இருக்கேன்... நீ சொன்ன பிறகு நான் குடிப்பேனா... குடிக்க மாட்டேன் அகிலா... இல்லை நாளைக்கு நிறைய வேலை இருக்குடா.. நீ இப்படி அவங்க கூட இருந்தா.. எப்படி நாளைக்கு வேலை செய்வ.... அவள் கேட்டதும் அவனுக்கு அவள் தன் மேல் கொண்டிருந்த அக்கரை வெளிப்பட்டது.... இல்லை அகி நான் மேனஜ் பன்னிகிறேன்... நீ இனிமே இந்த பக்கம் வராதே.. அந்த பக்கம் போ...... சொல்லிட்டு விடு விடுவென்று கதவை நோக்கி நடந்தான்... மோகன்.... அகிலாக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது... தன்னை ஏதோ கிண்டல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.. அது தாங்காமல் அவன் உள்ள வந்து தன்னை சமாதானம் பண்ணி... திரும்ப போய்.... இரண்டு நாள் முன்னாள் .. அவள் பின்னோக்கி போனாள்... ஆபிஸ்... மோகன் சீட்டில் இல்லை.. ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்... பாக்கனும் அது மோகன் கம்பூட்டர் ல இருக்கு.. பார்தாள்.. அவன் கம்புய்ட்டர ஓப்பன் பன்னியவள்.. அதிர்ந்தாள்.. மெஸஞ்சர் ஓபன் ஆகி அவள் ஐடி காட்டியது... அவள் அனுப்பிய மெஸஜ் எல்லாம்... அவன் ஐடி ல..... அதிர்ந்தவள்.. சுதாரித்தாள்... ஆக.. இவன் தான் அவன்... அவள் முகத்தில் மெல்லிய புன் முறுவல்.. படவா என் கிட்டயே வாஅ... உனக்கு மட்டும் தான் தெரியுமா.. அப்படி ஆக்ட் பண்ண.... நான் சாவித்திரி டா.. அத விட நல்லா ஆக்ட் கொடுப்பேன் பாக்குரியா... ம்ம்ம்ம் யோசித்தபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.... ம்ம்ம்ம்ம்.... அது தான் இப்ப மனசில் ஓடியது.....மனசு அவளை கேள்வி கேட்டது.... அவன் குடிக்க கூடாது .. ஏன் இப்படி அவனை நீ காதலிக்கிறாயா.. மனசு இடித்தது...... இல்லை அவன் என் அசிஸ்டண்ட்.... so what அடிமை இல்லையே..... ஆனா அவன் குடிக்க கூடாது.... அப்ப அவனை நீ காதலிக்கிற அப்படித்தானே..... இல்லை அவனை புடிச்சிருக்கா..... ம்ம்ம்ம்ம் ஆமா.... இப்பவா இல்லை முன்னாடியேவா... இல்லை இப்பத்தான் கொஞ்ச நாளா...அவனை புடிக்க ஆரம்பிதிருக்கு.... ஏன்... தெரியலை.. ஆனா அவன் கூட பேச புடிக்குது... அவன் கூட சுத்த பிடிக்குது.... அப்ப அவனை நீ காதலிக்கிற... இல்லை..... இன்னும் இல்லை....அவனை புடிச்சிருக்கு.... என்ன இது அவனை புடிச்சிருக்கு ஆனா அவனை காதலிக்கலை.... என்ன இது.... அது தான் எனக்கும் தெரியலை..... அவனை புடிச்சிருக்க அவ்வளவு தான்... மனசு அவளிடம் சண்டை போட்டது........ அப்படியே அவன் பெர்த்தில் தூங்க ஆரம்பிததாள் அகிலா.....மோகன் திரும்பி வந்தான்.. அதற்குள் 1/4 பாட்டில் காலி... ம்ம்ம் அவர்கள் பேச தொடங்கினார்கள்... A/C GM பேச்சு வாக்கில் GM sales கிட்ட அவர் என்ன பண்னுரார்னு போட்டு வாங்க பாக்கிறார்..... சேல்ஸ் ஜி ம் அக்கவுண்ட்ஸ் ஜி எம் கிட்ட் வாய கிழருறாறு... இப்ப மோகனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது... ஒருத்தன் வாய ஒருத்தன் கிளரி.. அவனுக ப்ண்னுர கோல் மால் எல்லாம் அவனவன் வாயில வரவைக்க தான் இந்த் உத்தி.. இந்த கூட்டு குடி எல்லாம்... அடப்பாவிகளா.. இப்ப மட்டும் ஒரு கத்திய அவனவன் கையில கொடுத்து விட்டா தெரியும் சேதிஒருத்தன ஒருத்தன் குத்திகுவாங்க போல ஆனா வாய் மட்டும் அழகா பேசி சிரிச்சு.. உலக மகா நடிப்புடா.. சாமி... திடீர்னு ஜிம் அக்கவுண்ட்ஸ்... நம்ம மோகன் இருக்கான்ல பா.. ஒரு நாள் என்ன நச்சு நச்சுன்னு படுத்தி எடுத்தான் அந்த இம்போர்ட்ர்க்கு எக்ஸேஜ் கட்ட சொல்லி நான் கூட அவன தப்ப நினைச்சேன் பையன் ஏதோ கட்டிங்க் வாங்கி நம்மள படுத்திறானேன்னு ஆனா பாருய்யா ஒரே நாள்ல 5 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுத்திட்டான் ஒரு நயா பைசா செலவு இல்லாமல்..... மோகனுக்கு திக்கென்றதுஅவர் நம்மை பாராட்டுகிறாரா.. இல்லை சேல்ஸ் ஜி எம் ம கிண்டல் பன்னுரார... நீயும் இருக்கியீனுகுத்தி காட்டுராறா.. புரியலை அவனுக்கு... சேல்ஸ்... ஏ ஜி எம்... இல்லை அக்கவுண்ட்ஸ்... அது அவனுக்கு ஒரு லக்... நாங்க லக் நம்பி போறது இல்லை... 1 ம் தேதில விதை போட்டாத்தான் 30ம் தேதி ஆர்டர் கிடைக்கும்... அப்புறம் தான் உங்களுக்கு டப்பு.. இல்லேன்னா நீங்க எப்படி அந்த பணத்த இம்போர்டருக்கு கொடுத்திருப்பீங்க...ம்ம்ம்.. பையன் மச்சக்காரன் தான்... சீனியர் வேற அவனை மிரட்டுரத பாத்தீங்கல்ல.... என்ன் சார்.. சொல்லுரீங்க சும்மா இருப்பா மோகன் அவ வந்தாவந்து உன்ன க்ண்னை காட்டி குடிக்காத ந்னு சொன்னத எல்லாம் நான் கவனிச்சேன்என்ன உன் கிட்ட கவுந்திட்டாளா... இப்படி பச்சையா கேட்டவுடன் ஆடி போய்டான் மோகன்.... சார்அவங்க என் கிட்ட ஆபிஸ்ல வச்சே சொல்லிட்டாங்க... நீ குடிக்கனும்னு தோனுச்சின்னா.. திரும்பி இங்க வந்து குடி நான் வாங்கித்தறென்... ஆனா டூர்ல குடிக்காத... ஏன்னா நாம தான் எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணனும் சொன்னாங்க சார்.. அது தான் பார்த்திட்டு போறாங்க.. தப்பா நினைகாதீங்க சார்... இன்னும் இரண்டு மாசத்தில அப்ப்ரைஸல் இருக்கு..அதுக்கு வேட்டு வச்சிடுவீங்க போல இருக்கு சார்.. நீங்க சொல்லுரது.... உடனே அக்கவுன்ட்ஸ்... மோகன் உனக்கு இங்கிரிமேண்ட் கன்ஃப்ர்ம்டா...... அடுத்த மாசமே.. வருது பார்....எம் டி சொல்லிட்டார்... உன் மெயில ஊருக்கு போன உடனே செக் பன்னு.... அவனை பார்த்து கண்ணடித்தார்.... பேசிக் கொன்டே பாட்டில வாயில் கவுத்திக் கொண்டார்... மணி 3.00 நெருங்கியது... தட தட வென்று சத்தம்.... காவேரி.. பாலத்தை கடக்கிறது பாண்டியன்.... அட திருச்சி வருது... சார் திருச்சி வந்திருச்சு நான் போய் படுக்க போறென் சார்.... போப்பா.. போய் உன் சீனியர் மானத்த காப்பாத்து யாரோ கமண்ட் அடிக்க.. அவன் , அடப்பாவிகளா..ஏ ஸி டிக்கட் எடுத்துட்டு கக்கூஸ் பக்கம் நின்னு கிட்டு திருச்சி வரை.... தண்ணி....காசுடா.. காசு .. உங்க காசாயிருந்தால் செய்வீங்களா... அதுவும் தண்ணி அடிக்க... மனசுக்குள் இவனுகளை எஞ்சின் பக்கம் ஜெனரல் கம்பார்ட்மெடண்ட்ல போட்டு கூட்டிக்கிட்டு வந்திருக்கனும்.. கருவினான் மோகன்... அவன் படுக்கும் போது.. பாண்டியன் திருச்சியவிட்டு மெதுவா கிளம்பியது......பாண்டியன் எக்ஸ்பிரஸ் களைப்புடன் மதுரை வந்து சேர்ந்தது.... யாரோ.. மெல்ல தலை தடவி தன்னை எழுப்புவதாக உணர்ந்தான் மோகன்... முழித்தான்... கண் எரிந்தது... கண்ணை கசக்கி.. முழிக்க தேவதையாய்... அகிலா.. ம்ம் என்ன விடிய விடிய குடியா... இப்படி தூங்கினால்..எழுந்திருப்பா.... இல்லை அகிலா... நான் திருச்சி வந்ததும் படுத்திட்டேன்... தெரியும்......நான் கவனித்தேன்... சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டு திரும்பிக்கொண்டாள்.... மோகனின் மனசில் பட்டாசு வெடித்தது... என்னை கவனிக்கிறாள்... நான் என்ன செய்கிறென் என்று கவனிக்கிறாள்.. இதற்கு பெயர் தான் காதலா... பட்டென்று எழுந்தவன்... என்ன செய்யனும் சொல்லு.... முதல்ல இறங்கனும்...லக்கேஜ் செக் பன்னனனும்... ஹோட்டல் காரன் பஸ் அனுப்பி இருப்பான்...எல்லாரையும் ஏத்தனும் கொண்டு போய் அங்க சேக்கனும்... வா சீக்கிரம்.... வெளியே வந்தனர்.. எல்லா லக்கேஜ் செக் பன்னி... இரண்டு கோட் சூட் போட்ட ஆசாமிகள் வந்தனர்...அகிலாவிடம் பேசினர்....அகிலா மோகனை காட்டி ஏதோ சொல்ல...அவர்கள் அவனிடம் வந்தனர்... வணக்கம், எங்கள் ஹோட்டல் சார்பா உங்களை எல்லாம் வரவேற்கிறோம்.. வெளிய பஸ் இருக்குது....எல்லாரையும் நீங்க தான் ஏத்தனும்... உங்களுக்கு தான் உங்க ஆளுங்க தெரியும்....நாங்க பஸ் கிட்ட நிற்கிறோம்... சொல்லிவிட்டு நகர்ந்தனர்.... எல்லாரையும் நான் வண்டில ஏத்தனுமா... தேர இழுக்குற மாதிரி தான்... போ... குழு குழுவாய் நின்றவர்களிடம் போய் சொல்லி ஏற்றி.. அனுப்பும் முன் உன் பாடு என் பாடு ஆகி விட்டது மோகனுக்கு....எல்லாரும் ஏறியவுடன் அவன் மட்டும் பஸ்ஸில் ஏறாமல் அகிலாவைத் தேட.. அவள் அந்த கோட் ஆசாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனைப்பார்த்து கைஅசைத்து அழைத்தாள்.. இரண்டு பஸ் கிளம்ப... விசில் சத்தம் பறந்தது.. ப்ஸ்ல் இருந்து... கொண்டாட்டம் ஆரம்பம்...அப்போதே... பஸ் போகுது அகிலா... நீ வரல... வா நாம இவங்க கூட கார்ல முன்னாடி போயிடலாம்... ப்ரொகிராம் என்னன்னு இவங்களுக்குஸ் சொல்லனும் அவங்களுக்கு வேலை இப்ப இல்லை.. நமக்கு இப்ப இருந்து ஆரம்பம்.. திரும்ப போகிற வரை... காரில் அவளுடன் பின் சீட்டில் ஏற.. கோட் ஆசாமி ஒருத்தன் மட்டும் முன் சீட்டில் அமர.. இன்னோருத்தன் அங்கயே நின்று கொண்டான்... இருவரும் பின் சீட்டில் அமர்ந்தவுடன்... அகிலா மோகனப் பார்த்து... தாங்க்ஸ்.. என்றாள் எதற்கு... ம்ம்ம்...குடிக்காம இருந்தற்கு... நான் குடிக்கலைன்னு எப்படி தெரியும்... தெரியும்பா.. நீ குடிக்கலை... எப்படி.... அவள் கண்களைப் பார்த்தான்.... அதில் இரவு முழுவதும் தூங்காத அறிகுறியாய்... கண்ணில் ஒரு சோர்வு..சிவந்து... ஹேய் அகி.. நீ தூங்கலையா.... ஏன்பா... நான் தான் சொன்னேன்ல... நம்பலை என்ன... அப்படித்தானே.... இல்லை அதுக்கு இல்லை தடுமாரினாள்... இதற்குள் முன் சீட் ஆசாமி... சார் உங்கள் புரோகிராம் என்னன்னு சொன்னீங்கன்னா.. அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன்... எங்க புரோகிராம் 11.30 ஸ்டர்ட் ஆகும்... இனிடியல் மீட்டிங்க்.. அப்புறம் லஞ்ச்ஸ் அப்புறம் 3.00 மணிக்கு டீலர்ஸ் மீட்... 5.00 மனி வரை.. மருபடி 6.00 மனிக்கு ஆரம்பித்து 7.30 வரை அப்புரம் டின்னர் காக்டெயில்.. இது இன்னிக்கு ப்ரொகிராம்... நாளைக்கு உள்ளத அப்புரம் சொல்லுறென்.... உங்க ஃபார்மாலிட்டீஸ் என்ன.. மோகன் கேட்க... சார் வெல்கம் ட்ரிங்க்ஸ் போன வுடன்... breakfast ... non payable... then puffat lunch.... cultural programme 7.00 to 9.00.... we will be ready 7.30 for dinner & cocktile..... in between tea and snacks as you require..... இதற்குள்.. கார் ஹோட்டல் வந்து விட்டது... பஸ் இன்னும் வரலை... காரை விட்டு இறங்கியதும் இரண்டு பெண்கள் வந்து பூச்செண்டு ஒரு ஒற்றை ரோஜா.. கொடுத்து வரவேற்றனர்.... ரிசப்சன்.. அருகே இருவரும் போய்... ரூம் அலாட்மண்ட்.. லிஸ்ட் எடுத்து கொடுக்க...பஸ் வந்து நின்றது.... எல்லரையும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து சாவி கொடுத்து.. .....ப்ரெக்ஃபாஸ்ட்.. ஃப்ரிப்பா... அங்க போய் சாப்பிடுங்க..ரூம்ல சாப்பிட்டா.. உங்க கணக்கு.. சொல்லி சாவி கொடுத்தான் மோகன்..... என்ன மோகன் அவனுக ரூம்ல சாப்பிட்டா என்ன... அகி.. அங்க ரெஸ்டாரண்டுல சாப்பிட்டா.. அது ஃப்ரி.. ரூம்ல ஆர்டர் பண்ணினா... தாளிச்சிடுவான்.. மெனு பாத்தேன்... பொங்கல் 250/- ரூபாய் பார்த்தேன்... நான் நினக்கிறேன் 50 ரூபா.. பொங்கல்...200 ரூபா சர்வீஸ் சார்ஜ்... பாரேன் ஒவ்வொறு ரூமும் எவ்வளவு தூரத்தில இருக்குன்னு.....அது ரூம் இல்லை வீடு... வீடு மாதிரில்ல கட்டி விட்டிருகான்..... ரூமுக்கும் இங்க ரெஸ்டாரண்டுக்கும் 1/2 கிமீ இருக்கும் போல.. ...சொன்னால் அகிலா... ஆமா மலை மீது.. இருக்குற இடத்துல எல்லாம் கட்டி இருக்கிறான்... ஒன்னு கூட மாடி இல்லை எல்லாம் தனித் தனி வீடு மாதிரி.. நல்லா இருக்குல்ல... நல்ல செலக்ட் பண்ணிருக்க அகிலா... என்ன மோகன் என்ன நினக்கிற... நீ இல்லை என் ஹனி மூன இங்க கொண்டாலாமான்னு நினக்கிறேன்.... பட்டென்று சொன்னான் மோகன்...அகிலாவை பார்த்தவாரு.... சிறு புன்னகையுடன்... அகிலா முகம் சிவந்தாள்... மனசுக்குள் பொறுக்கி அத ஏண்டா என்ன பார்த்து சொல்லுற...ராஸ்கல்... நான் என்ன சொன்னாலும் கேப்பியாடா.. குடிக்கலை நீ சந்தோசமா இருக்குடா... கேப்பியா நான் என்ன சொன்னாலும்... ம்ம்ம்..ம்ம்ம். சொல்லு.... மனதிற்குள் சொல்லி கொண்டவள்.. அந்த கடைசி வார்த்தை அவளை அறியாமல் வெளியே விழுந்தது..... "ம்ம்.. சொல்லு ..."மோகன்.. முகத்தில் புன்னகையுடன்... ம்ம்ம் என் காதலியுடன் இங்க ஹனி மூன கொண்டாலாம்னு நினைகிறேன்.... திருப்பி அழுத்தாமாய் சொன்னதும் தான் அகிலா இந்த உலகுக்கு வந்தாள்.... என்ன சொன்ன..... நீ என்ன செவுடா.... எத்தனை தடவை சொல்லுறது...... அகிலாவுக்கு அவன் சொன்னது இனித்தது... ம்ம்ம்ம்ம் படவா நீ அப்படி நினச்சி தான் இங்க வந்தியா.... நான் யார்னு தெரிஞ்சும் இன்னும் ஏண்டா சொல்லாம இருக்குற....சொல்லுவானா.... ம்ம்ம் இல்லை நான் சொல்லனுமா... நான் எப்படி அவன் கிட்ட நானா சொல்லுறது... அவன் சொல்லட்டும்... தெரியாத மாதிரி இன்னும் நடிப்போம்.. எப்ப சொல்லுரான்னு பாப்போம்.....பட்டிகாட்டுல இருந்து வந்த உனக்கு இவ்வளவுன்னா.. நான் இங்கயே பட்டனத்தில் குட்டி கரனம் போட்டவள்... ம்ம்ம் என் கிட்டயா....உனக்கு தண்ணி காட்டுறென் பார்.. அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.... மோகன்... என்ன யோசனை.. நீயும் அப்படித்தான் நினக்கிறாயா.. அகிலா..... சேச்சே இந்த இடத்திலயா... போடாங்க்......நான்... நான்.... அவள் சொல்லி முடிக்குமுன் செல் போன் அலறியது... எம்.டி.... செல்போனை காதில் வைத்தபடி அவனைப் பார்த்து சீக்கிரம் குளித்து சாப்பிட வா.. என்பது போல் சைகை செய்து விட்டு... அவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்..... ஒரே வீடு மாதிரி ஆனால் நாலு வாசல்கள்... ஒவொவ்ன்றும் ஒரு திசை பார்த்து.. ஒவ்வோறு அறையும் ஒரு பெட் ரூம் ஒரு ஹால்....மற்றும் குளியல் அறை... பாத் டப்புடன்.... முன்புரம் பூச்செடிகள்.. அப்புரம் ஒரு புல் வெளி அதில் ஊஞ்ச்ல்.. மற்றும் டேபிள் மாதிரி மற்றும் நாற்காலி... ஒரு பார்ட்டி கொண்டாடும் அளவிற்கு....அந்த வீட்டில் தங்கும் அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக... இப்படியே ஒவ்வோறு வீடும்.... கொஞ்சம் தள்ளி நீச்சல் குளம்.... சில வெளி நாட்டினர்.. குளித்துக் கொண்டும் சன் பாத் எடுத்துக் கொண்டும் இருந்தனர்..... அகிலாவின் அடுத்த அறையே அவனுக்கும்... அவனுடன் சின்ன லெவலில் மார்கட்டிங்கில் உள்ள ஒரு அச்சிஸ்டட் சேல்ஸ் மேனஜர்... தன் டிராலி ரூமுக்கு வந்ததும் பாட்டில்களை பத்திரமாக செக் பன்னி அங்கிருந்த அலமாறியில் வைத்து பூட்டினான்.....மோகன்.. மடமடவென்று குளித்து கிளம்பி... நேராக... அகிலா தங்கியிருந்த அறைக் கதவை தட்டினான்.... அந்த குண்டு பெண் அகிலாவுடன் வந்தவள் தான் கதவை திறந்தாள்.. தலைய நீட்டி என்ன.. என்றாள்.... அகிலா இல்லையா..... ம்ம்ம் இரு வராங்க.... சொன்னவள் கதவை மெள்ள மூட எத்தனிக்க... மூடும் முன் கவனித்தான்... ம்ம்ம்ம்ம்ம் அற்புதமான அருமையான காட்சி.......ம்ம்ம் அகிலா பெட்டிகோட்டுடன்.... பிரா மட்டும் போட்டு... எல்லாம் அளவாய்.. ஓன்றும் மித மிஞ்சி இல்லாமல்....அழகு பதுமையாய்... 32 28 32 ..... ம்ம்ம் மயக்கும் அழகு அதுவும் பிரா பெட்டிக் கோட்டில்... ஒரு வினாடி தரிசனம் .. கதவு மூடியது.... இந்த காமிரா.... இருக்குள்ள... அதனுடைய ஷ்ட்டர் திறந்து மூடுமுன்.. காட்சிகளை பதிவு செய்யுமே அது மாதிரி அந்த கோலம் அந்த நிலை... அவன் இதயத்திற்குள் அப்படியே கண் என்கிற காமிரா... மூலம்.. என்ன இமை என்ற அந்த ஷ்ட்டர் மூட மறந்தது நிஜம்....பதிவு பண்ணி உள்ளே நிரந்தரமாக பிரிண்ட் போட்டு.. படமாய்....வைத்துக் கொண்டது.... ரூமுக்குள்... அகிலா.. அவளை கேட்டாள்.. யார்பா.... உன் மோகன் தான்..... அந்த உன் அதை கொஞ்சம் அழுத்திச் சொன்னாள் அவள்..... அகிலா... ஏண்டி அறிவு இருக்கா.. நான் கண்னாடி முன்னால இப்படி நிக்கிறேன்.. கதவ திறக்க போறியே... இல்லைடி அவன் பார்க்க வாய்ப்பில்லை... அகிலா.. மனசுக்குள்... பார்த்திருப்பானோ... எனது இந்த கோலத்தை பார்திருப்பானோ.... மடச்சி நான் இப்படியா அவுத்து போட்டுக்கிட்டு மீண்டும் அங்கிருந்து அவள் வாசல் கதவைப் பார்த்தாள்.. அவள் நின்றிருந்தது அறையின் இடபுறம்... arai கதவு இரண்டு கதவுகள் கொண்டது..முதலில் திறப்பது இடது புற கதவு தான்.... ச்ச்ச்ச்ச்சீ... அங்கிருந்து பார்த்தால்.... கதவைப் பார்த்தாள்... உடல் ஒரு கணம் ஆடியது கதவைத் திறக்கும் போது என்ன தான் மறைத்து நின்றாலும் அவன் உயரத்திற்கு வெகு சுலப்மாக அவளை பார்த்திருப்பான்... உடல் ஒரு கணம் கூசியது... மறுகணம்... உச்சங்காலில் இருந்து ஒரு பரவச உணர்வு மெள்ள ஏறி... அவள் உச்சந்தலையில் அறைந்தது...பார்த்திருப்பான்... பார்த்திருக்கிறான்... ம்ம்ம்ம்.. பார்த்திருக்கனும்... பாக்கனும்... இதய துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அவளுக்கே கேட்டது... என்னடி அப்படியே நிக்கிற.. ம்ம் கிளம்பு அவன் வேற வெளிய நிக்கிறான்.... மோகன் வெளியே நிற்கிறான்.. பார்த்தும் பார்காதது மாதிரி... அவன் வெளியே நிற்பதே ... அவளுக்கு உடல் முழுவதும் கூசியது...சுவற்றை கிழித்து அவன் கண்கள் அவளை பார்பது மாதிரி.....மள மளவென்று புடவை கட்டினாள்... தலையை வாரி பொட்டு வைத்து... 5 நிமிட்ங்களில் ரெடியாகி... கொஞ்சம் அக்கரையாய் கண்ணாடியில் சரி பர்ர்த்து.... வெளியே வந்தவளை... கண் விழுங்க பார்த்தான்... மோகன்..... 5 நிமிடம் முன் பார்த்த அந்த அரைகுறை கோலம் அவன் கண்களில்..வந்து இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தது... மனது..... ஒரு உஷ்ண மூச்சு விட்டான்.. மோகன்..... வா மோகன்.. அவனை பார்த்தாள்.. அவன் விழுங்கும் பார்வையை பார்த்தாள்... புரிந்து விட்டது அவளுக்கு.. மனசு சிலிர்த்தது...உடல் ப்றப்பது போல்... பார்த்திருக்கிறான்.. திருடன்.. முழிக்கும் முழிய் பாத்தாலே நல்லா தெரியுது....படவா.. ரசிக்கிறாயா...ம்ம்ம்ம்ம்ம்ம்... என்னை அப்படி பார்த்தாயா... மனசு அவன் மனசுடன் பேசியது... நான் நல்லா இருக்கேனா.. ம்ம்ம்ம் .. சொல்லுடாஆஆ..... மனம் ஆர்பரித்தது... வாவ்.. அகி... ம்ம்ம்ம்ம் சான்ஸே இல்லை... என்ன இப்படி... ம்ம்ம் போங்க....நீங்க தான் இன்னிக்கு ஹால் ஆப் ஃபேம் ஆக போறீங்க.... அவன் பாராட்டு சொற்கள் அவள் மனதில் புகுந்து.. வெளியே வந்தது... புன்னகையாக.... ஈஸ்.. இட்... தாங்க்ஸ்.. மோகன்... அவள் கண்களாலும் நன்றி சொல்ல... ரெஸ்டாரண்ட் நோக்கி இருவரும் இணையாக நடந்தனர்....அப்சரஸ் மாதிரி அகிலா நடந்து வர அவள் அருகில் மோகன் இணையாக..... ரெஸ்டாரண்டில் நுழைந்தவுடன்... அங்கிருந்த கூட்டம் எல்லாம் அவங்க ஸ்டாஃப் தான்... ஒரு முறை அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்து விலகியது.... சில ம்ம்ம்ம் பெருமூச்சு... சில பொறாமை... சில பையன் மடக்கிட்டான்... சில... இவளை இப்படியே சுவத்துல சாத்தி.....ம்ம்ம்ம்.. பார்வைகளின் கூர்மையை தாங்க முடியாமல் ... அகிலா.. கொஞ்சம் சங்கடமாய் நெளிய.. மோகன்.. உடனே ஒரு சீட்ட புடிச்சு அவளை உட்கார வைத்தான்.. இரண்டு பேர் எதிர் எதிரே அமரக்கூடிய அதில் ஒரு வெளி நாட்டு காரன் உட்கார்ந்திருந்தான்.. ஒரு சீட் காலி... அதில் அவளை உட்கார வைத்தான்.. மற்றவர்கள் பார்வையில் அவள் படாதவாறு அவளை மறைத்து நின்று கொண்டான்.... அங்க எக்ஸ்டிரா சீட் போடுற வழக்கம் இல்லை போல.. இது என்ன சரவண பவனா... உடனே ஒரு சேரை கொண்டு வந்து போட....இருவருக்கும் சேர்த்து ஆர்டர் பன்னிட்டு சும்மா அப்படியே நின்றான்.... அகிலாக்கு அவன் செய்கை ஒவ்வொன்றும் பிடித்திருந்தது... ம்ம்ம்ம் என்னடா... என் அழக யாரும் பார்க்க கூடாதா... அவ்வளவு..பொஸசசிவ் ஆ நீ.. ம்ம்ம்... சாரி... நான் உனக்காத்தான் இந்த மாதிரி டிரஸ் போட்டேன்.... இப்படி இவனுக கார்த்திகை மாத நாய் மாதிரி பார்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா... கண்டிப்பா இப்படி டிரஸ் பன்னி இருக்க மாட்டேன்... சாரி டா, மனம் அவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது.... எதிர் சீட்டு வெளி நாட்டுக்காரன் அப்பத்தான் இட்லி சாம்பார ருசிச்சு சாப்பிட்டு கொண்டு இருந்தான்... அதற்குள் அவன் ஆர்டன் பண்னியது வரவும்.. அகிலாவிடம் அகிலா நீ சாப்பிடு.. நான் அப்புரம் சாப்பிடுரென்.... வாடா நீயும் அப்படியே ... என்ன கையேந்தி பவன்ன்னு நினைச்சியா... இங்க ஒரு மரியாத இருக்கு... காப்பாத்திக்கனும்...நீ சாப்பிடு.. நான் வெயிட் பன்னுரெண்.... அவள் அருகில் நின்று கொண்டான்... அவள் கொஞ்சம் இட்லி எடுத்து சாப்பிட... அவன் அவளையே பார்த்துக் கொண்டு..... இருந்தான்..... அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை சாப்பிட.. அதுவும் மோகனை விட்டு விட்டு... எனக்காக எப்படி நிக்கிறான்.. என்னை பாதுகாக்க வந்த காவலன் மாதிரி.. ம்ம்ம்ம்...அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு... ம்ம்ம்ம்.. மனசு அலை பாய.. விரல்கள் இட்லி சாம்பாரில் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தன.... என்ன அகிலா சாப்பிடு.. சீக்கிரம் இன்னும் 10 நிமிசத்துல நாம அங்க இருக்கனும்... இவனுகளுக்கு முன்ன நாம அங்க இருக்கனும்..சாப்பிடு.. அவன் வற்புருத்தலில் ஒரு இட்லியை எடுத்து சாப்பிட்டவள்.....அப்படியே வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.... எனக்கு பிடிக்கலை மோகன்.... என்ன பிடிக்கலை இட்லி யா அப்ப பொங்கல் சாப்பிடு.. இல்ல தோசை ஆர்டர் பன்னுரென்.... எதிர் சீட்டு வெள்ளைக்காரன் இப்பத்தான் இட்லி சாம்பாரை முடித்து காபி ருசிச்சு சாப்பிட்டான்... அவன் சாப்பிடும் விதத்தை பார்த்தால்....மோகனுக்கு நெட் ல் படித்த ஓன்று ஞாபகம் வந்தது... இரண்டு பிசினஸ் மேன் இருவரும் சைனாகாரகள்... ஆளுக்கு ஒரு டீ ஆர்டர் பன்ணி விட்டு... 1மணி நேரம் பேசி முடித்து..அந்த பிசினஸ் டீல் முடியும் மட்டும் சிப் சிப்பா அந்த ஒரு டீ ய குடிச்சு.... டீல் முடிஞ்சு கிளம்பும் போது டீ கப்பை காலி செய்வார்களாம்... அதாவது ஒரு டீ ல ஒரு பிசினஸ் பேச்சு... (நம்ம ஆளு அதுக்குள்ள ஒரு புல் பாட்டில முடிச்சுட்டுவான்.....) ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ.. டீ ஒன்று தான்.... அது மாதிரி அந்த வெள்ளைக்காரன் தனது காபிய ரசிச்சு ரசிச்சு குடித்தான்....அவனுக்கு வேற வேலை இல்லை ஆனா மோகனுக்கு...

அதற்குள் போன் அடிக்க.. அகிலா எடுத்தாள் எம். டி தான்.. அரெஞ்மெண்ட் ப்ற்றி விசாரித்தார்.... பட்டென்று எழுந்தவள் கை கழுவி விட்டு.. நீ சாப்பிட்டு வா மோகன் நான் மீட்டிங்க் ஹாலுக்கு போறென்... கிளம்ப... அவளுடன் அவனும் நடந்தான்... என்னடா சாப்பிடலையா.... இல்லை வா நான் அப்புரம் சாப்பிடுறென்... வா போலாம்..... சாப்பிடுடா.. பிளீஸ்...... வா அகி..நேரமானா... எம் டி உன்னைத்தான் திட்டுவார்.. வா.. நான் இல்லாமல் அங்க ஒரு வேலையும் ஆகாது.. வா.... மோகன் முன்னால் நடந்தான்... அவள் தயங்கி தயங்கி சங்கடமாய் அவனை பின் தொடர்ந்தாள்..... மனசு சங்கடமாய்.. நான் கொஞ்சம் முன்னால் கிளம்பிருந்தால் சாப்பிட்டிருப்பேல்ல....உனக்கு சாப்பிட நேரம் கிடைச்சிருக்கும்ல்ல.... மனசு அவளை குத்தியது.. இந்த அலங்காரம்... அவனுக்காகதான்.. ஆனால் அது அவனை பட்டினி போட்டது தான் அவளுக்கு.. கசந்தது.... எம் டி என்னத்தானாடா திட்டுவார்...உனக்கு என்ன... அவர் என்ன திட்டினா நீ தாங்க மாட்டியாடா... ம்ம்ம் சொல்லு....மனம் அவனுக்காக கசிந்தது... அவள் அவனை பின் தொடர்ந்து நடந்தது அனைவரின் கண்களையும் உருத்தியது... .சில இளவட்டங்கல் மட்டும் அதை ரசித்தது... ம்ம்ம் நல்ல ஜோடி மச்சி.... பாரேன் அவன் பொண்டாட்டி மாதிரி அவன் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடுறா.... ம்ம்ம்ம்ம் நடத்து மாப்பிள்ளே நடத்து.. நாங்க இருக்கோம்....உனக்கு..வாழ்த்தியது.....அவர்கள் மனம்....அது தான் வாலிபம்.....மீட்டிங்க ஹால்... இருவரும் நுழைந்தனர்.... மோகன்... உடனே தன் வேலய ஆரம்பித்தான்.....சீட் அரஞ்ச்மெண்ட்.... மைக் அரேஞ்ச்மெண்ட்... அப்புரம் ஸ்டேஜ்.... ப்ரொஜெக்டடர்....அதனுடன் லாப் டாப்.... இணைப்பு... டெஸ்டிங்.... மணி... 9.45... ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்..... 9.50.. எம் . டி வந்துட்டார்.. அவர் எப்பவுமே ஷார்ப்... டைம்.... 10.00 மணிக்கு மீட்டிங்க் தொடங்கியது...... இனி கொஞ்சம் ரிலாக்ஸ்... இன்னும் 1 மணி நேரம்.. பேச்சு நடக்கும்.. அப்புரம் .. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சொல்ல ஒரு நேரம்.. அப்புறம் டீ... அப்புரம் மறுபடியும்.... அப்புறம் 1.15 லன்ச்... பிரேக்... மறுபடியும் 2.30க்கு அரம்பம்.... 5.30க்க் முடியும்.... 4.30 க்கு அகிலா ஒரு ப்ரசண்டேசன் பண்ணனும்.... ஹாலில் ஹோட்டல் சூப்பர் வைசர் மோகனை அழைத்தார்... சார் கொஞ்சம் வரீங்களா..... என்ன.... வாங்க ஒரு முக்கியமான விசயம்... அகிலாவைப் பார்த்தான்.... போ.. என்பது மாதிரி கண்ணக் காட்ட... அவர் பின்னால் போனான்.... பக்கத்தில் இருந்த ஒரு ரூமை திறந்தார் ... உள்ளே அழைத்துச் சென்றார்....அது ஒரு வாடிக்கையாளர்கள் தங்கும் அறை தான்.. ஆனா இப்ப யாரும் இல்லை.. காலியாக இருந்தது... அங்கிருந்த டீப்பாயில்... இட்லி பொங்கல்.. தோசை..வடை....காபி... என்ன சார் இது.... நீங்க காலைல சாப்பிடலைன்னு மேடம் சொன்னாங்க.. அது தான் இங்க எடுத்திட்டு வந்திட்டோம்...அங்க சாப்பிடறத் இங்க சாப்பிடுங்க... என்ன சார்.... நார்மலா இப்படி பண்ண மாட்டோம் சார்... ஆனா மேடம் எங்களுக்கு ஸ்பெசல்...... அவங்க தான் சார் கடைசில பில் செட்டில் பண்ணனும்... அது தான் அவங்க சொன்னா எதுவும் செய்ய எங்களுக்கு ஆர்டர்.... அவங்களும் தான் சரியா சாப்பிடலை.. நேரம் ஆச்சுன்னு.. பாதிலயே கிளம்பிட்டாங்க.... சார்.. நீங்க சாப்பிடுங்க... முதல்ல.... சரி எனக்கு இட்லி தோசை போதும்... பொங்கல் தனியா எடுத்து வச்சிடுங்க... மேடம் வரச் சொல்லுறென்.... சாப்பிட ஆரம்பித்தான்.. மனதில்....அகி... என்ன விரும்புராயாடி...எதுக்குடி இந்த கவனிப்பு.. நான் சாப்பிடாமல் இருந்தால் உனக்கு வலிக்குதா... அடிப் பாவி...மாசத்துல பாதி நாள் இப்படித்தானடி பேச்சுலர் லைஃப் ஓடுது... அது தெரிஞ்சா.. என்ன பண்னுவ பா... ம்ம்ம்ம் அவசரமா எந்திருச்சு.. குளிச்சு... சாப்பிட நேரம் இருந்தா டிபன்.. இல்லை மதியம் சேர்த்து வைத்து கட்டிறது.. இது தான எங்க வழக்கம்... இது என்னம்மா புதுசா..... புருசனை சாப்பிட வைக்கிற மாதிரி..... நான் அந்த அளவுக்கு கொடுத்து வைத்தவனா அகி... உன் அன்பைப் பெற......ம்ம்ம்ம்ம்ம்.... 10 நிமிடத்தில் சாப்பிட்டவன்.. காபி குடித்து எழுந்தான்.... சார் வெயிட் பன்ணுங்க... அவங்களை அனுப்புறென்..... மீட்டிங்க் ஹால் போனான்....அகிலாவை சைகை காட்டி அவன் அருகில் அழைத்தான்... வந்தவளிடம்..... என்ன நான் சாப்பிட்டா மட்டும் போதுமா.... அகிலா.... போங்க.. உங்களுக்கு பொங்கல் வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிட்ட லட்சனம் தெரியும்... போ போய் சாப்பிட்டு வா.. நான் பாத்துக்குறென்..... மரியாதை ஆரம்பித்து அப்புரம் உரிமையில் குறைந்ததை அகிலா கவனித்தாள் அகிலா எதுவும் பேசாமல் அந்த ரூமில் நுழைந்தாள்.... டீப்பாயில் இருந்த பொங்கலை மெல்ல எடுத்து... சாப்பிட ஆரம்பித்தாள்.... பக்கத்தில் மோகன் சாப்பிட்டு மிச்சம் வைத்த கொஞ்சம் தோசை இருந்தது... மெள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள்... சூப்பர் வைசர்...டிவி பார்த்துக் கொண்டிருந்தான்... மோகன் எச்சில் தட்டில் இருந்த அந்த தோசைய மெள்ள எடுத்து சாப்பிட்டாள் அகிலா...மனம் சிலிர்த்தது... எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறோம்... இது மட்டும்... இவ்வளவு சுவையாய்.... ஏன் அவன் எச்சில் இதில் இருப்பதாலா..இல்லை இங்க தோசை நல்லா இருக்குமா... மனம் விழித்தது.... அதே நேரம் ஏதோ கேட்க மெதுவாய் கதவு திறந்து வந்த.. மோகன்....அகி அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதை...பார்த்ததும் அவன் மனம் ஆனந்த கூத்தாடியது.... அடி என் காதலியே அகி.... நீ நீ... என்னை என்னை.. விரும்புகிறாயா.... ம்ம்ம் நிசமா.. நான் பார்பது... இல்லை தோசை நல்லா இருக்குன்னு ச்ச்ச்சீ மடையா.. அவள் ஆர்டர் பன்ணினா... ரெஸ்டாரண்டே இங்க வரும்.... அவ அவ... என் காதலி... என் காதலி..என் மனைவி....மனசு ஆர்பரித்த்து......உடல் நடுங்க ஆரம்பித்தது... மெள்ள கதவைசாத்தியவன்... அப்படியே திரும்பினான்... மோகன்....அகிலா சாப்பிட்டுவிட்டு... சூப்பர்வைசரை அழைத்தாள்..... வந்தவன்... மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா.... என்ன பரவாயில்ல சொல்லுங்க..... எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க.... சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.... நீங்க இரண்டு பேரும் made for each other mam..... என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா... ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை... நல்ல ஜோடி நீங்க இருவரும்.... ம்ம்ம் இல்லை நான்.... ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க... வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க... எப்படி .. நீங்க.... மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது... நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்... இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா... என்ன சொன்னார்..... நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்....அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க... ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை..என் தங்கையா பாக்குறென்.... சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்... தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க... பிளீஸ்...அப்புரம் தோசை நல்லா இருந்துதா... அவன் கேட்க.... அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது... எப்படி என்பது போல் அவனை பார்க்க.... மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்.... நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்... my adavance congratulations..... சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.... அகிலா...சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்.... மொபைல் அடிக்க.. எம் டி தான் அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW.... COME FAST...... அதிர்ந்தாள்...அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்..... அங்கே...போடியம் ல் நின்று G. M Sales...பேசிக் கொண்டிருந்தார்.. முன்னால் இருந்த டேபிளில் புரஜக்டர்.. வேலை செய்யாமல்.. ஸ்கிரீன் ஒயிட் ஆக ... மோகன் அங்க வயர செக் பண்ணிக்கொண்டுருந்தான்... ஒரு நிமிடம் இரண்டு நிமிடம்.. இரண்டு வயர்களை புடுங்கினான்.. தன் கயில் கொண்டு வந்திருந்த தோள் பைய எடுத்தான்.. அதிலிருந்து புதுசா ஒரு power cableஎடுத்தான்.... பவர் கேபிளை மாத்தினான்.. மறு நிமிடம் சர்ர்ர்ர்ர் என்ற சத்ததுடன் இயங்க தொடங்கியது..... ம்ம்ம் லூஸ்ஸ் காண்டாக்ட்... சாரி சார் இப்ப சரி யாயிடுச்சு... அவள் உள்ளே நுழையவும்.. ப்ரொஜக்டர் ப்ளீரென ஸ்க்ரீனில் படம் விழவும் சரியாக இருந்தது.. எம்..டி... அவளைப் பார்த்தார்.... தாங்க்ஸ் அகிலா... நான் என்னமோன்னு நினச்சேன்.. நீ மோகனும் வரனும் சொன்னப்ப... கரெட் சாய்ஸ்... உஷார் பேர் வழி போல...அவனுக்கு தேவை இல்லாதது இது ஆனாலும் முன் ஜாக்கிறத்தையா.. ஆர்டினரி பவர் கேபிள் இதுக்கு செட் ஆகாது.. இது வேற மாதிரி இருக்கும்.. 1% இந்த மாதிரி fault ஆகலாம்... அத கூட expect panniஎடுத்திட்டு வந்திருக்கான்... நைஸ் கைய்.. சொல்லி விட்டு நகர்ந்தாள்... அங்கிருந்த வாரு மோகன் அவளைப்பார்க்க.. அவள் கண்களால் நன்றி சொன்னாள்...அவன் அங்கிருந்து ஹேய் சும்மா இருடின்னு இதுக்குப் போய் ஏன் பதட்டப்படுற..... சொல்லுரமாதிரி மெல்ல கையசைத்தான்.....அப்படித்தான் சொல்லி இருப்பானோ...மனசு தவித்தது.... அதன் பிறகு ஏதும் நடக்காமல்.. லஞ்ச்பிரேக்...எல்லோரும் ஒரே கூட்டமாக... மொய்க்க... மோகன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொண்டிருந்தான்... அகிலா பதறி விட்டாள்.. பாவி கெடுத்தானே... அவனுக்காக எடுத்தாலும் சரி.. இல்லை தனக்காக எடுத்தாலும் சரி யாராவது பார்த்தால் என்ன நினைபார்கள்... எப்பவும் அவர்கள் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் ..ஆர்கனைசர்கள்... அவர்கள் வேலை மற்றவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக கிடைக்கிறதா.... அதாவது கொடுக்குற காசுக்கு ஹோட்டல் காரன் ஒழுங்கா சப்ளை பண்ணுரானா..எல்லோரும் சாப்பிடுராங்களா... இதையும் கவனிக்கனும்.. இப்ப இவன் சாப்பிட்டான்.. நான் செத்தேன்... பாவி.. சத்தம் போட்டு சொல்ல கூட முடியாது இவ்வள்வு சத்ததில கேக்கவும் செய்யாது... என்ன பண்ண.... மொபைல எடுத்தாள் அவன் நம்பர் டயல் செய்தாள்.... பெல் அடித்தது அவன் எடுக்கவில்லை.. கூட்டத்தில் அவனை தேடினாள் அகிலா...அதோ பார்த்து விட்டாள் அவனை.. இரண்டு கைகளில் இரண்டு தட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் .. முகத்தில் ஒரு புன்னகையுடன்....அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்... அவள் அருகில் வந்தவன்... ம்ம்ம்ம் கூப்பிட்டாயா அகி... இரு இதை எம் டி கிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்... சொன்னவன் மெல்ல அவளைக்கடந்து சென்றவன்... அவள் பின்னால் கொஞ்சம் தள்ளி ஓரமாய் ஒரு டேபிளில் எம் டி மற்றும் ஜி எம் இருவரும் அமர்திருந்த டேபிளில் போய் வைத்தான் மோகன்... எம். டி அவனைப் பார்த்தார்.. தட்டை பார்த்தார்... ம்ம்ம்ம்ம் குட்....எனக்குப் பிடித்த அயிட்டங்கள் எடுத்து வந்திருக்க... ஆமா மோகன் நீ எப்பப்பா இந்த் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்த.... சொல்லி விட்டு சிரித்தார்.... இல்லை சார் அங்க நிறைய கூட்டமா இருக்கு இப்ப... நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு அகிலா சொன்னாங்க... அது தான்.....சார்... நானே....... சொல்லிவிட்டு எம் டி கிட்ட ஒரு தட்டையும்... ஜி எம் கிட்ட ஒரு தட்டையும் நீட்டினான்... மோகன்.... ம்ம் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி அப்படியே எல்லாரும் நல்லா சாப்பிடுராங்களான்னு பாருப்பா... ஆமா நீ சாப்பிடலையா... இல்லை சார் நாங்க அப்புறம் கடைசில சாப்பிட்டுகிடுறோம்.... அகிலா சொல்லி இருக்காங்க..... சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க தொடங்கினான்.... கவனித்திக் கொண்டிருந்த அகிலா அப்படியே உறைந்து நின்றாள்.. ஒரு பொம்பளை தனக்கு கூட தோனாதது... அவனுக்கு தோணியிருக்கு.. மெல்ல ஒரு புன் சிரிப்பு வெட்கம் கலந்த புன் சிரிப்பு நின்றது அவல் இதழ்களில்.. எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்.... அகிலா அவர் அருகில் வந்தாள் சார்... சொல்லுங்க சார்.... அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க..... என்ன சார் சொல்லுரீங்க..... இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்... ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா.... நல்லா வருவான்...one of the assest of the company...keep him with you..... நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்.... சொல்லி சிரித்தார்..... ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்..... தாங்க்ஸ் சார்.. மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்... எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது... இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்... என்னப் படுத்திருயே படுவா....இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா.... என்ன சொல்ல...பிடிச்சிருக்குன்னா... ச்ச்சி... நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யசொன்னேன்னு... மனசு வேனும்டா.. செல்லம்...அது உன் கிட்ட நிறைய இருக்குடா...இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா... நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே... இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்..... மனசு அலறியது.. அவளுக்கு கேட்டது....லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது... கடைசியில்... தான் அகிலாவும்...மோகனும் சாப்பிட்டனர்.... அப்புரம்... டீ பிரேக்... அது முடிந்ததும்... அகிலா மோகனிடம்... மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்... நீ பாத்துக்கடா.... சொல்லி விட்டு நகர்ந்தாள்.... அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது..... எம். டி... போடியத்தில் இருந்து மைக்ல NOW THE COMMERCIAL WILL GIVE A PRESENTATION AKILAA... சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்... so what.. you give the presentation... are you prepared .... மோகன் தடுமாறிய படி... ஒகே சார்.... பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்....... மைக் அருகில் வந்தான்.... அவன் பேசியதின் சமாசாரம் இது தான்..... நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து... விற்வனை செய்து.. அத காசாக்கி... கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்...அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு... இத்துடன் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்... அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான ப்டிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை.... அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்... இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் penaty , fine, என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்....எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்... இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்.....உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்.. அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான்...... எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்.... a perfect point.. even..I .. my self not thought of this... good show... சொன்னவர் உடனே மைக் பிடித்தார்... guys now on with in a month I request all the sales team to collect the saleble forms and hand over to commercial the dead line is 45 days from now... அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்..... ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை... அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்.....இனி சேல்ஸ் எங்க.... பாக்க...இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்... அவனவன் மனசுக்குள்ள ஓடியது அப்போது தான் நுழைதாள் அகிலா...எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்... அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்.... நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்... ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது... அகிலா அவன் அருகில் சென்றாள்...மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்..... என்னடா என்ன ஆச்சு... என்ன பேசினா... இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க.... இல்ல கை.. அந்த டாக்ஸ் மேட்டர்...forms கலைட் பன்னனும்ல... நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை... போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி.... impact... எம். டி யே அரண்டு போயிட்டார்....முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்... அது தான் அவனவன்.. அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க....கமிசன் வராது அது கொடுக்காம......ஆப்பு வச்சாச்சு... நல்லா..... சொல்லி சிரித்தான்.... அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட.... ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க.... அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்... எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க போற.....இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... மனசில் சொல்லிக் கொண்டவள்... அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்..... என்ன பிடிச்சிருக்கு அகிலா.... மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள்.... இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி... நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க.... அது தான்.... சமாளித்தாள்... மனசு இடித்தது... ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு... குறைந்தா போய் விடுவாய்.... சொல்லிடு... சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப.....சொல்லிடலாமா.... சொல்ல வாயெடுத்தவள்..... மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்... ஹால் சூப்பர் வைசர் தான்... தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி ....... அடக்கிக் கொண்டாள்... நைட் காக்டெயில் இருக்கு... என்ன பண்ணனும்.. we supply both hot and beer..... ம்ம்ம் இல்லை நீங்க பீர் மட்டும் பாத்துக்கங்க.... ஹாட் நாங்க கொண்டு வந்திருக்கோம்.. மோகன் கிட்ட இருக்கு....ஆள் அனுப்பி எடுத்துக்கங்க.... சொல்லி விட்டு திரும்பினாள்.. மோகன் அங்கு இல்லை.. ஹாலுக்குள் சென்றிருந்தான்...இரவு மணி 7.00 ஆபிஸ் ஸ்டாஃப் மற்றும் அழைக்கப்பட்டிருந்த டிஸ்டிரிபுயுட்டர்ஸ் அனைவரும் ஹாலில் குவிந்து.. ஒரே அட்டகாசம் பன்னிக் கொண்டிருந்தார்கள்.... காக்டெயில் ஆரம்பித்து விட்டது... அனைவரும் கையில் கோப்பையுடன்.. வலம் வர.. மோகன். எல்லாரையும் கவனித்து கொண்டிருந்தான்... மாலை அகிலா சொன்னது அவன் நினைவிற்கு வந்தது..... "மோகன்... நான் ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டியே..." "சொல்லுங்க நீங்க சொல்லுரத பொற்த்து அது இருக்கு..." "இல்லை காக்டெயில் இருக்கு ராத்திரி.. ம்ம்ம் குடிக்கனும்னு நினைத்தால் அளவா குடிடா.....ஒரு பெக் இல்லை ரெண்டு பெக்..பிரியா கிடைக்குதுன்னு சும்மா குடிச்சு தொலைக்காதே... சரியா.." "ம்ம்ம் பார்ப்போம்..." .சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். அந்த நேரம் பார்த்து வந்தாள் அவளுடன் வந்த குண்டு பெண்... "என்ன அகிலா... ஊருக்கு போய் வாங்கித் தரென்னு சொல்லுரியா மோகன் கிட்ட... " சிரித்த படி கேட்டாள்..... "என்னது ஊருக்கு போய்...." "இல்லைப்பா அது தான் உன் அசிஸ்டண்ட் கிட்ட சொல்லி இருக்கியாமே ஜி. எம் சொன்னார்..." "என்ன சொன்னார்...." "இங்க எதுவும் அடிக்காதடா.... நான் சென்னைக்கு வந்து உனக்கு ஃபுல் பாட்டில் வாங்கித்தரென்னு சொன்னியாமே.. அது தான் அவன் ட்ரைன் ல கூட அடிக்காம வந்தானாம்.." தூக்கி வாரி போட்டது அகிலாக்கு... நாம எப்ப சொன்னோம் அவனிடம்...நினைத்தாள், ஏதோ சொல்லிருப்பானுக அந்த கிழடுகள் அத சமாளிக்க இவன் ஏதாவது சொல்லி இருப்பான். ம்ம்ம் சும்மா தலைய ஆட்டி வைத்தாள். "நல்ல ஆட்டி வச்சிருக்கிற அவனை ம்ம் பாத்தும்மா கவுந்துரப் போற," "என்னடி சொல்லுற அவனைப்பத்தி என்ன தெரியும் உனக்கு சுமார்ட் பாய் சுறு சுறுப்பா இருக்கான்" "ம்ம்ம் இப்படித்தான் முதல்ல சொல்லுவீங்க அப்புறம்.." "உனக்கு வேலையில்லை ஆனா எனக்கு நிறைய இருக்கு நான் வரேன்...டிரஸ் வேற மாத்தனும்.." ஆனால் மனசு கும்மாளமிட்டது. "ஏம்மா இந்த சேலைக்கு என்ன அம்சமா அழகா தானே இருக்கு" "இல்லைப்ப எனக்கு பிடிக்கலை இது ஹோட்டல்ல இருக்கிற சீயர்ஸ் கேர்ள் மாதிரி இருக்கு அவனவன் பாக்குற பார்வையே சரி யில்லை. நான் இத மாத்தி சுடிதார் போடப் போறென் பா..." அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்... "என்னடா எங்க என் பின்னால்யே வார " "ம்ம் உன் பின்னாலயா, பாட்டில் யார் எடுப்பா வரச் சொல்லி இருக்கேன் ரூம்ல தான இருக்கு அது தான் ...." பின்னால் திரும்பி பேசியபடி வந்தவள் முன்னால் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்க எத்தனிக்க ..... அவள் அந்தரத்தில் மெல்ல தூக்கப்பட்டு தரையை விட்டு ஒரு அடி உயர... அவள் இடுப்பில் மோகன் இரும்புக் கரம்.. இரும்புப் பிடியாக அவளை பின்னால் இருந்து கெத்தாக தூக்கியபடி... "ஏய் .. என்னன்ன்ன்ன்ன்ண்டாஆஆஅ.. ப்ண்ணுர.... " அதிர்ச்சியில் வாய் குழற அலறினாள்... "ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அங்க பார்... " அவன் பாதைய காட்ட... புல் தரையில் இருந்து ஒரு பாம்பு மெல்ல நெளிந்து அந்த வழிப் பாதைய கடந்து கொண்டிருந்தது... ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அதன் மீது மிதித்திருப்பாள்... கடித்திருக்கும் அந்த பாம்புவிஷ்ம் உள்ளதோ இல்லாததோ ஆனா பாம்பு பாம்பு தானே... அதை ப் பார்த்ததும் அப்படியே திரும்பி அவனை இருக கட்டிக் கொண்டாள் அகிலா.. அவள் உடல் மெல்ல நடுங்கியது பயத்தால் ஒரு 1/2 நிமிடம் அசையாமல் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவள் முகம் அவன் மார்பில் பதிந்து அவள் இடுப்பில் அவன் கை பதிந்து. பயம் கொஞ்ம் விலக தன் நிலை அவனடன் இணைந்து நின்ற நிலை வெக்கம் வந்து உடல் முழுவதும் ஒருவித நடுக்கம்..பட்டென்று அவனிடம் இருந்து விலகி..

"சாரி கத்திட்டேன்ன்ல..." "பரவாயில்ல பயத்தில் தான் கத்தினீங்க..." "ம்ம்ம் பயந்து போய்டேன்... அது கடிக்குமா.. " "ம்ம் மிதிச்சா கண்டிப்பா கடிக்கும்..." ஒரு நிமிடம் மவுனமாக கழிய... " போங்க போய் இந்த சேலைய மாத்துங்க சுடி போடுங்க...." சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு போனான் மோகன்..... அவன் போனத பாத்துக்கிட்டே ரூம் வாசல் வரை வந்தவள்.. என்ன சொன்னான் சேலைய மாத்த சொன்னான்... அவனுக்கு தோணியிருக்கு எல்லாரும் பாக்கிறத அவனும் விரும்பலை.. அப்ப அவ்வளவு செக்ஸியா இருந்திருக்கிறேமா... அவள் உடல் மெல்ல கூசியது..பின் கனிந்தது... அந்த ஒரு நிமிட அனுபவம்.... எப்படி தூக்கினான்...உடம்பு வெக்கத்தால் சிலிர்த்தது....ரூமுக்குள் போய் சேலய அவிழ்த்து போட்டு பாவாடை நாடாவை அவிழ்க்கும் போது.. அவன் கை பட்ட இடம் இடுப்பில் அவன் கை பட்ட இடம்... வயிற்றில் கை வைத்து தொப்பிள்ல தொட்டு... இடுப்பு அவன் கைகளில் நசுங்கி... வயிற்றை அவன் இறுக பிடித்த இடம் மெல்ல வலித்தது... ம்ம்ம் தன் கைய வைத்து அங்கு மெள்ள தடவினாள்.. இடுப்பு... வயிறு தொப்புள்... வலி குறைய அந்த சுகம் மெல்ல மனதில் நின்று... கண்ணாடி முன் நின்று பார்த்தாள் சிலிர்த்தது அகிலாவுக்கு... இப்ப இப்படி பாத்தா என்ன பண்ணுவான்... நினப்பே அவளுக்கும் அமிலமாய்.. உடல் எங்கும் எரிந்தது.. ம்ம்ம் காலைல தான் பார்த்தான், இப்ப தொட்டுட்டான் இன்னும் என்னடா பண்ணப்போற திரும்பி போறதுக்கு முன்ன என்னை என்ன பாடு படுத்தபோறடா... இதுவே தாங்கலைப்பா.. இன்னும்னா...உடல் கொதிநிலை ஏரியது.. பாத்ரூம் நுழைந்தாள் குளித்தாள்.. வேகம் அடங்கியது மாதிரி இருந்தது... மனம் சமம் ஆனது.. சவரின் குளிர்ந்த நீர் அவள் மேனியில் பட்டு தெரித்து உடல் சூட்டையும் மன சூட்டையும் மெதுவாக தணித்தது...குளித்து முடித்தவள் ஒரு காட்டன் சுடிதார் எடுத்தாள்... சிவப்பு நிறத்தில் தங்க சரிகை போட்டு அதே கலரில்.. ஒரு பாட்டம்பிராவை சரி செய்து .. கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.. கதவு தட்டப்படும் சத்தம்.... யார்.... "நான் தான் " மோகன் குரல்.... கனிவாய்.... "எதுக்கு வந்த.. நானே வருவேன்ல "கதவை திறந்த படி..... " மறுபடியும் பாம்பு மிதிக்கிறீங்களான்னு பாக்க வந்தேன்....." சிரிப்புடன் அதில் சற்று கின்டல் கலந்து..... அப்படி வந்தால் தான் என்ன அது தான் நீ இருக்கியே..தூக்கி தட்டாமாலை சுத்த.... அவனைப் பார்த்து மெல்லிய குரலில்..அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை.... "என்ன சொன்னீங்க...." "இல்லை அதுக்கு தான் வந்தியான்னு கேட்டேன்..." "ஆமா.. அந்த ஹால் சூப்பர் வைசர் உன்னை தேடுறான் வாங்க.. உடனே....." ஹால் நோக்கி நடந்து கொண்டே பேசினர்....... இருவரும்..... "ம்ம் மோகன்.. குடிச்சியா நீ......" "ம்ம் இல்லை " "அவனுக கிட்ட என்ன சொன்ன..." "யாரு கிட்ட " "அது தான் அந்த் மொட்டை தலையன் அப்புறம் அந்த சொட்டைத்தலையனுக கிட்ட.. டிரெயின்ல வச்சு அவனுக தன்னி அடிச்சப்ப...". "ஓ அதா நீங்க எனக்கு ஃபுல்லா வாங்கிதறேன்னு சொன்னேன்.. ஏன்...." "நான் சொன்னேனா அப்படி..." "இல்லை சும்மா கொடைன்சாங்க அதுனால அப்படி சொன்னேன்..ஏன் தப்பா வாங்கி தரமாட்டீங்களா......... "இல்லை ஏன் உனக்கு வேனுமா என்ன....." "வேனும் தான்.... பார்ப்போம்...." "அத விட பெருசா..தந்தா " ."ஃபுல்லை விட பெருசா என்ன 1 லிட்டர் வாங்கி தரப்போறீங்களா என்ன...".சிரித்தான்.... போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான் அத விட பெருசான்னாஅத விட நல்லதா..உனக்கு பிடிச்சதா.. தந்தா என்ன பன்னுவனு அர்த்தம்.... மனதிற்குள் சொல்லிக் கொன்டாள்... "சரி ஹால் வந்திட்டுது... எல்லாரையும் நல்லா கவனி.. என்ன மோகன்... அப்புறம் பார்கலாம்...." கூட்டத்தில் கலந்து விட்டான் மோகன்.. ஒரே புகை மண்டலம்.. அவனவன் ஊதிக் கொண்டு இருந்தான்.. கையில் வித விதமாய்வோட்கா, சிம்ரன்ஃப்... பெக்காடி... டீச்சர்ஸ் ஸ்பெசல்... இன்னும் வித விதமாய்.. அப்புறம் லெகர் பீர்... அது தனி செக்சன்..... சாப்படும் பிரமாதமாக.. வெளியே உள்ள சிட்டவுட்டில்.... பெரிய தோசைக்கல்லை போட்டு மதுரை பரோட்டா..முட்டை பரோட்டா, கொத்துன்னு ஒரு பக்கம் சுட சுட இட்லி மட்டன் குழம்புடன்.....எல்லா வித்திலும் அசத்தி.. ஒருபக்கம் மதுரைஅயிர மீன் குழம்பு... விரால் மீன் வருவல் என்று மதுரை அயிட்ட்ம் போட்டு தாக்கி இருந்தனர்... பாதி பேர் வட இந்தியா என்றாலும் மிகவும் ருசித்து சாப்பிட்டனர்...வித்தியாசமான் சுவையில்... அங்கிருந்து அந்த இருட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் விளக்கொளியில் மின்ன ஆங்காங்கே மின்மினியாய் விளக்குக்ள் தெரிய மதுரை ஜொலித்தது.... எம் . டி வந்தார் நேராக அகிலாவை கூப்பிட்டார்..". ம்ம்ம் சூப்பர்ரான சாப்பாடு வித விதமா... அப்படியே மதுரை ட்ரட்டீனல்நான் கூட இப்படி சாப்பிட்டது இல்லை... நல்லா அரேஞ்ச் பண்ணிருக்கம்மா.... என்னமோ நினச்சேன் பாத்தவுடன் , ஆனா சூப்பர் டேஸ்ட்..." "இல்லை சார் மோகன் தான் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஐட்யா கொடுத்தான் நான் ஜஸ்ட் இம்பிளிமெண்டேசன்அவ்வளவு தான் சார்...." "என்னம்மா இது உன்ன ஏதும் சொன்னால் அவனை சொல்லுற அவனை ஏதும் சொன்னால் உன்ன சொல்லுறான்.. ம்ம்ம்ம் குட் அண்டர்ஸ்டாண்டிங்க்.... குட் கீப் இட் அப்... சொல்லிட்டு " போயிட்டார்.... அகிலாக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது....மோதிரகையால் குட்டு...ம்ம்ம் எம் டி வாயில் இருந்து வார்த்தைபிடுங்குவது க்டினம் அதுவும் அவரா வந்து.... சொன்னது.. மோகன் என்னடா இது இதுக்கு நான் என்ன பண்ண போகிறேன் உனக்கு...சொல்லுடா..உனக்கு என்ன வேனும்...நீயா கேட்க மாட்டாயா.. ம்ம்ம் நானா எப்படி சொல்லுறது உன் கிட்ட.. ம்ம்ம்ம்ம் நான் பெண் எனக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை உடைக்க சொல்லுறாயாடா.... மண்டு... சொல்லு... மனது அடம் பிடித்தது.. பார்டி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவளும் கொஞ்சம் கொறித்து விட்டு ஒரு 8.30 மணிக்கெல்லாம் கிளம்பினாள்... மோகனைப் பார்த்தாள் அவன் பிசி.. சரி .. எல்லாரும் நல்ல போதையில்.. ம்ம்ம் பார்த்தாள் கிளம்பிவிட்டாள் ....அவள் போவதை மோகன் அறிந்து சைகை செய்தான் .. பார்த்துப் போ.. என்பது மாதிரி.. ம்ம்ம் தலைய மெல்ல அவனுக்கு மட்டும் புரியுமாறு முகத்தில் விழுந்த முடியை சரி செய்வது போல சரி செய்து.. அவனுக்கு டாட்டா காட்டி கை அசைத்தாள் அகிலா.... எல்லாவற்றையும் சரி செய்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு மோகன் ரூமுக்கு வரும் போது மணி 10.00... வாசலில் அகிலா.. நின்று கொண்டிருந்தாள்... ஒரு துண்டை தன் நைட்டியின் மீது போட்டபடி.... "என்ன இன்னும் தூங்கலையாங்க.... " மோகன் கேட்டான்..... "ம்ம் இல்லை "( வரலடா பாவி மனசை கெடுத்தவனே )...... "அப்பவே வந்திட்டீங்க......" "ஆமா ( அது என்ன மரியாதை விடு அதை ) "சாப்பிட்டீங்களா.... " "ம்ம்ம் நீங்க " ( இது என்ன மரியாதை அதா வருது ) "இல்லை இனிதான் .... நான் குளிக்க போறேன்... ஸ்விம்மிங்க் போறேன் " "இந்த நேரத்திலா...".( வேனாம்டா குளிரும் ) "ஏன் நல்லா இருக்கும் குளிராது வெது வெதுன்னு இருக்கும்....நீங்களும் வரீங்களா...". "ம்ம்ம்ம் இல்லை " ( ஆசை தான் உனக்கு ) "ஏன் சுவிம் தெரியாதா...." ம்ம்ம் தலையை ஆட்டினாள் ( ஏன் கத்து தர போறியா ம்ம்ம் அப்ப என் இடுப்ப தொடுவியா அப்ப தொட்ட மாதிரி ம்ம்ம்ம் சொல்லுடா) "சரி துண்டு கொடுங்களேன்.. இதுக்காக ரூம தொறக்கனும்..." அவள் அவளிடம் இருந்த துண்டை அவனிடம் கொடுக்க. துண்டு இல்லாமல் அவளின் மார்பக குவியல் அவனது கண்னைக் கட்டியது..ம்ம் நான் பிடித்தேனா.. அப்போது.. இந்த இடத்தில்... அவன் பார்வை போகும் இடத்தை பார்ததவள் கைகளால்.. தன் மார்பின் மீது கட்டியபடி அவனை முறைத்தாள்..... தோள்களை குலுக்கியபடி துண்டை தோளில் போட்டு கொண்டு போனான்... துண்டில் இருந்த அவள் மணம் வீசியது... குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்...சுகந்தமாய்...மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்... அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்... அவன் துண்டை மோந்து பார்த்ட்து அவளை யே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே... அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது... என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது...ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்....இது தான் காதலா....என் காதலா...நினைவுகளின் இனிமை அவளை மெல்ல தளர வைத்தது... என்னடா உன்னை நினைத்தாலே இப்படி தடுமாறுகிறேன்... ம்ம்ம் அவளுக்கு உடல் முழுவதும் ஒரு மாதிரி மயில் இறகால் வருடியது போல.. ஒரு உணர்வு... சிலிர்த்தது உடம்பு.. மெல்ல... போறான் பார் மோந்து பாத்துக்கிட்டு.. வேனும்னு தான என் கிட்ட வந்து கேட்ட... நானும் பார் வேற துண்டு கொடுக்காம.. நான் துவட்டிய துண்டை கொடுத்து அதையும் அசிங்கம் புடிச்சவன் மோந்து பார்கிறான்...அப்படி அவன் மோந்து பார்த்தது அவளுக்கு அவன் அவளை தன் முகத்தால் வருடி, கன்னத்தை கழத்தில் பதித்து அவன் ரசிப்பது போல... கிளர்ந்தாள்.. என் வாசனை உணர்ந்தானா... இல்லையா..மனது தன்னையும் மீறி அவனை ரசிப்பதை உணர்ந்தாள் அகிலா.... மெல்ல அறைக்குள் நுழைந்து.. தாளிட்டு.. நைட்டிய கழட்டினாள்..பிராவை கழட்டினாள்.. ஒரு நைட் ஸ்ர்ட் எடுத்தாள் பாட்டம் எடுத்தாள்...சுத்தமான் காட்டன் உடைகள்.. மார்பில் ஒரு ஷால் எடுத்து போட்டாள்.. மெல்ல வெளியே வந்து நீச்சல் குளம் நோக்கி தன்னால் நடந்தாள்.. அங்கு அவன் மோகன்.. டைவரில் ஏறி அங்கிருந்து தலைகீழாய் தண்ணீரை நோக்கி... அம்ம்மாடி.. வாய் திறந்து கத்தி விட்டாள் அகிலா...தண்ணீருக்குள் போனவன் இன்னும் வரவில்லை... குளம் முழுவதும் கண்கள் அவனை தேட... பாதி குளம் தாண்டி டால்பின் மாதிரி தண்ணீரில் இருந்து எழுந்தவன் கையை மாற்றி போட்டு எதிர் புரம் நீந்த தொடங்கினான்....அவன் மாறி மாறி தண்ணீரில் பாய்ச்சும் அவன் புஜ பலத்தை முறுக்கேறிய அந்த முதுகும்.. அவளை என்னவோ செய்தன... ம்ம்ம் வந்திருக்க கூடாது.. ஏன் வந்தோம்... ம்ம்ம் ....புரியவில்லை.. போயிடலாமா ..திரும்ப எத்தனித்தாள்... அதற்குள் மோகன் கவனித்து விட்டான் ...அகிலா வந்ததை. திரும்ப எத்தனித்தை.. குரல் கொடுத்தான்.... "என்னங்க... இந்த டிரஸ் போட்டு குளிக்க கூடாது.. ஒன்லி சுவிம் சூட்.. அது போட்டு தான் குளிக்க வேண்டும்.. " கிண்டலாய்....சொன்னான்... "நான் குளிக்க வரலை.. நாளை 8 மணிக்கு இருக்கனும் இப்ப 10.30 இனி எப்ப சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க போறீங்க...அது தான் சொல்ல வந்தேன்...." "ம்ம்ம் இருங்க இன்னும் ஒரு சுவிம் போய்டு வரன்.." மறுபடி எதிர் புறம் போய் தொட்டு திரும்பினான்.. மூச்சு வாங்க.. அவன் மார்பு ஏறி இறங்கியது அவள் அவனையே பார்த்தபடி....கண்ணில்..ஒரு சின்ன தயக்கம்... பார்பதா இல்லை வேண்டாமா நினத்து முடிக்கு முன் குபீரென தண்ணீரில் இருந்து எழுந்தவன்.. தரையில் உன்னி எழுந்து உக்கார்ந்தான்.... தொடை இறுகப் பிடித்த சார்ட்ஸ்... புடத்த பின்புறம்.. இறுகியகால்கள்...ஜிம் போவானோ மார்பில் சுருள் சுருளாய் முடி... சுத்தமான் ஆண்பிள்ளைத்தனமாய்.. கால்களிலும் முடி சுருள் சுருளாய்.. ஈரத்தால் படிந்து... கண்களை அவளால் விலக்க முடியவில்லை...அவன் மார்முடியில் கைவைத்து துளாவ ஆசை எழுந்தது.... இருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து சமாளித்த படி அவனிடம் பேசினாள்.. அகிலா.. எழுந்தவன் துண்டால் தலை துவட்டிக் கொன்டே நடந்தான் சார்ட்ஸுடன்.... அங்கு ஓரமாய் இருந்த பாண்ட் சர்ட் பனியனை அவளிடம் கொடுத்தான் நடக்க ஆரம்பித்தான்... அவன் பின்னால் மெல்ல நடந்தவள் கையில் இருந்த அவன் சர்ட்டை உரிமையுடன் தன் தோளில் போட.. அதிலிருந்து வந்த அந்த.. ஆண் வாசனை.. வியர்வை வாசனை அவளை மயக்கியது. தன்னை மறந்து ஒரு முறை தன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு அதை முகர்ந்து வாசனைய அனுபவித்தாள் அகிலா...... நான் ஏன் இவன் பின்னால் இப்படி ஆட்டுகுட்டி மாதிரி போகிறேன்.. அவன் ஆண்மையா... இல்லை..மனசா... ஆனால் இப்படி போவது அவளுக்கு பிடித்திருந்தது....அவன் பின்னால் வேகமாக நடந்தாள்.... சாப்பிட வரீங்களா... மோகன் கேட்க.... அவள் மவுனமாக... அவன் நினப்பில் இருக்க.... மீண்டும் ஒரு முறை அகி சாப்பிட வரீங்களான்னு கேட்டேன்..... ஒரு முறை விழித்துக் கொண்டவள் அவன் சொன்னதை திரும்ப திரும்ப நினவில் கொண்டாள் என்ன சொன்னான் அகி....என்றா..அவன் அவளை அகி என்று செல்லமாய் கூப்பிட்டது... இனித்தது....அவளுக்குள் கொஞ்சம் ஜிவ்வென்று மெல்ல உடல் நடுங்க..கைகள் பதறின....முனகலாய்... ம்ம் வரன்... இப்படியேவா.... ஏன் நல்லா தான் இருக்குது....இந்த டிரஸ்க்கு என்ன... சங்கடமானாள்... ம்ம் மடையா அவசரத்தில் பிரா கூட போடலை....உன்னுடன் வரும் போது நல்லா இருக்கு அங்க எப்படி வரது..... ம்ம் இல்லை வரேன்.. நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க... என்ன சொன்னீங்க.. பட்டென்று நின்றான்.. பின்னால் வந்தவள் அதை கவனிக்காமல்.. அவன் மீது அவன் முதுகில் போத.... வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு சால் போட்டிருந்தவளின் சால் கீழே விழ அப்படியே அவன் மார்பில் தன் மார்பகங்கள் பதிய அவன் முதுகில் விழுந்தாள் அகிலா....முதுகின் ஈரம் அவள் சர்டில் படிய...அவன் உடலின் குழுமை அப்படியே அவள் மார்பில் தாக்க.. ஒரு வினாடி அதிர்ந்தாள்... பூக்குவியல்களின் தாக்குதலால் மேலும் அதிர்ந்தவன் மோகன் தான்...மோதிய வேகத்தில் அவன் தோள் ப்ட்டைய அவள் பிடிக்க அவள் கையின் இளம் சூடு அவன் உடலெங்கும் பரவி...உணர்வுகள் தூண்டப்பட அப்படியே அதை அனுபவித்து நின்றான் மோகன் அசையாமல்.. அசைந்தால் பூக்குவியல் விலகி விடும் என்ற ஒரு காரணமும் இருக்கலாம்... மெல்ல திரும்பினான்.... அவளின் மார்பழகு அப்படியே பனியனுடன் ஒட்டி.. தெள்ளத்தெளிவாக அவனுக்கு விருந்தாய் இரண்டு மாங்கனிகள்... ஒன்றுடன் ஒன்று இணையாமல்.. மெல்லிய மொட்டாய்.. பளிச்சென்று அவன் கண்களில் தாக்க.... தன்னை மறந்தான் மோகன்....தாமரை மொட்டாய் இருந்த அவள் மார்பகங்களின் அழகில் மயங்கியவன்.. அப்படியே அதை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான்..அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்து பட்டென்று ஒரு கையால் மறைத்தவள் குனிந்து கீழே விழுந்த சாலை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டாள் அகிலா... மோகன் பட்டென்று தன் பார்வையை விலக்கியவன்... சாரி .. அகிலா... என்றான்.... எதுக்கு.... குரல் மெல்ல அவளுக்கே கேட்டதா தெரியவில்லை... "இல்லை நான் அப்படி நின்றிருக்க கூடாது....." "ம்ம்ம்...பரவாயில்லை.. நான் பார்த்து வந்திருக்கனும்.... " ( உன்னப் பார்த்து வந்ததால் தானேடா உன் மீது மோதினேன்... பாவி....அதிருது கூசுது... சுகமா இருக்கு.. என்னன்னு சொல்ல...பர பரன்னு உடல் முழுசும் உஷ்ணமாய் இருக்கு.. என்ன வச்சிருக்க அப்படி, .உடல் நடுங்குது விலகிட்டியா.. இப்ப ஏங்குது.. ஏன் ஏன் ஏண்டா.. என்ன கொல்லுர ) தலை குனிந்த படி நின்றவனை பார்க்க பார்க்க அவளூக்கு பெருமையாக இருந்தது.. தப்பு அவனிது இல்லை.. ஆனால் வருத்தப்படுறான்..அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருந்தது.. அவள் மனசு இன்னும் அவனை நோக்கி முன்னேற தொடங்கியது, அவளை அறியாமல்.. இருவரும் பேசாமல் இணையாக நடந்தனர்...ரூமை நோக்கி.. ........... ரெஸ்டாரண்ட்...இட்லி மட்டன் குருமா ஆர்டர் பன்னிட்டு காத்திருந்தனர் இருவரும்...மோகன் மெளனமாக அவளையே பார்த்தபடி.. அதே இரவு உடை ஆனால் டீ ஷர்ட் போட்டு அதற்குள் பிரா போட்டிருந்தாள் அகிலா... பிரா பட்டை டீஷர்ட்ல் பட்டு பளிச்சென்று தெரிய அவளின் அங்க வளைவுகள் இன்னும் கூர்மையாய் தெரிய நெளிந்தாள் அகிலா அவன் பார்வையை உணர்ந்து. ( இதுக்கு பிரா போடாமலே வந்து இருக்கலாம். ) டேபிளில் வைத்த இட்லி குருமாவை அவன் வாயில் போட்டான் "நல்லா இருக்கா "அகிலா கேட்டாள் "ம்ம் நல்லாத்தான் இருக்கு" அவளை பார்த்துக் கொன்டே.. "ம்ம் நான் இட்லிய கேட்டேன்" "நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச" பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்.. "இல்லை ஒன்னும் இல்லை "தடுமாறியது வார்த்தைகள்

"என்ன ஒன்னும் இல்லை" "ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான் " சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாய்யில் இருந்து) "இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு " வாயில் இட்லிய தினித்துக் கொண்டு மோகன். "இல்லைடா ஒன்னும் இல்லை" இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க...ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க....எல்லாம் உள்ளுக்குள் தான்.. இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவனை காய்ச்சி எடுத்திடுவாங்க... நடக்கிறது.. இன்னும்.. இப்படி.. அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா?