Thursday 5 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 26

மெதுவாக mike பிடித்து பேசினார் விஜய்.

இந்த... award குடுத்ததுக்கு IOFI க்கு எனது நன்றிகள்... (கரகோஷம் பலமாக ஒலித்தன) உழைப்பால் உயர முடியும் னு எடுத்து சொல்லுறதுக்கு தன் வாழ்க்கையையே உதாரணமா காமிச்சி இருக்கார் Mr.Mahesh Yadhav. அதே வழியில் அவர் மகனும் சிறந்து விலங்கிட்டு வரார். நான் ராகவுடன் இது வரை பணி புரிந்ததில்லை, ஆனால் அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. All the best Raghav. இன்னும் நிறைய வெற்றிகள் IOFI அடைய வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். - என்று பேசி விட்டு நடிகர் விஜய் இறங்கும்போதும் விசில்கள் சத்தம் குறையவில்லை.

இவர்களை அடுத்து சிறந்த charming face மற்றும் வித்யாச நாயகன் விருதுகளை சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் குடுத்தார்கள். அதை அடுத்து flawless acting performance விருதை நடிகர் தனுஷுக்கு கொடுத்தார்கள். அப்போது மேடை எரிய தனுஷ் "why this kolaveri kolaveri kolaveri di" என்ற பாடலைப் பாடி அரங்கத்தில் உள்ள அனைவரது pulse எகிறும் விதம் பாடிவிட்டு அவர் அமைதியாய் மேடை இறங்கி வந்து அமர்ந்தார்.

இப்பொழுது நாம் கௌரவிக்க இருப்பது சிறந்த மேற்கிந்திய சிந்தனையாளர் மற்றும் படைப்பாளி. அவரைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.


IOFI - Legends of Indian Cinema....(Click to watch)

அரங்கம் முழுதும் இவருடைய அறிவாற்றளுக்கும் சிந்தனைக்கும் நல்ல மரியாதை இருக்கிறது என்பது இவர் தன் இருக்கைலிருந்து எழுந்து மேடைக்கு வரும் வரை மிகுந்த சத்தத்துடன் நீண்ட கைத் தட்டல்களில் நன்கு தெரிந்தது.

மேடையில் தற்போது நடித்து வரும் Talaash படத்தின் மீசையுடன் மேடை ஏறினார் Aamir Khan.

அவருக்கு Dr.கமல்ஹாசன் IOFI Cine Legend Award விருதைக் குடுத்து கௌரவித்தார். அதை சந்தோஷத்துடன் பெற்றார் ஆமிர்.

மேடையில் மெதுவாக பேச ஆரம்பித்தார் Aamir - "Good evening chennai friends.." (என்று ஆரம்பிக்கும்போது பலமான கைத் தட்டல்கள் எழுந்தன.) I love the creativity of south India. Let it be cinema, art or fashion, everything has its own beauty. (சங்கீதாவை நோக்கி பார்த்து) This lady sangeetha (or) sheila?..(கூட்டம் சங்கீதா என்று கத்த) oh I am sorry sangeetha, what a dance?, mast dance yaar.. see that is what I say creativity. we have seen heroines dancing on stage, but I have never seen a comperer compering the programs and also dancing on the stage so confidently. Also she is a manager in a bank. This is amazing.. (என்று aamir புகழ "Thanks aamir" - என்று மென்மையாக பதில் கூறினாள் சங்கீதா.) & I appreciate the guy behind the organisor of all this.. & he is a naughty friend of mine, ஹாஹா (சிரித்து பேசினார்) yes I & Raghav are good friends and we worked together for 3 idiots & I still remember how we played pranks on eachother. Once we all put ice inside his underwear when he is pulling his pants down (என்று aamir ஒரு நிமிடம் குறும்பாக இதை சொல்லி கண் அடித்து சிரிக்க.... அதைக் கேட்டு கூட்டத்தில் கரகோஷம் அதிர்ந்தது. கீழே சூர்யாவும் விக்ரமும் அருரகே மாதவனிடம் "அப்படியா?" என்று கேட்டு aamir khanனின் பேச்சை மிகவும் ரசித்து சிரித்தார்கள்.)

ஹாஹா good.. (மென்மையாக சிரித்து தலையை சாய்த்து வைத்து கைத் தட்டல்களுக்கு இடம் குடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார் Aamir) let me come to the main point, Always how our work should be?..(சில வினாடிகள் மௌனம்...அதன் பிறகு தொடர்ந்தார்..) it should be in such a way that even our enemy should feel like standing & praising us. Thats the kind of work what Raghav is doing in IOFI I believe. (இந்த வரிகளுக்கு கூட்டம் மட்டும் அல்ல சங்கீதாவும் சேர்ந்து மிகவும் ரசித்து aamir ன் கருத்தை ஆமோதித்து க் கை தட்டினாள்.)
All the best to Raghav & his family & may god shower even more success on him. Thank you. & I would like to convey my regards to the legends BigB Rajini Sir & Kamal Ji. (என்று அடக்கமாக பேசி முடித்துக்கொண்டு இறங்கினார் aamir khan) - (கை தட்டல்கள் மிகவும் பலமாக இருந்தது இப்போது.)


Thank you Aamir sir - என்றாள் சங்கீதா.

அடுத்து நாம் கௌரவிக்க இருப்பது இந்திய சினிமாவின் மூத்த திருமகன். அனைவராலும் BigB என்று செல்லமாக அழைக்கப் படும் மாமனிதர். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "The real wealth is not what you have earned till now, but how much worth you are when you loose everything what you have now" இந்த வரிகளைக் கேட்ட உடன் கீழே அமர்ந்து இருக்கும் தலைவர் ரஜினி BigB யை ப் பார்த்து எழுந்து நின்று கை த் தட்டினார். - இதைக் கண்டு அனைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டு விசில் அடித்து காதுகள் கிழிய அன்புடன் BigB என்று கூச்சலிட்டு அன்பை வெளிப்படுத்தினர்.

சங்கீதா மேலும் தொடர்ந்தாள் - இந்தத் திருமகனின் biography யை ஒரு பார்வை பார்ப்போம்.... ( Click here to view....) - இது மேடையில் திரையிடப்பட்டது.

இப்போது மேடை ஏரிய BigB Aamir Khan னிடம் இருந்து IOFI Cine Legend விருதைப் பெற்றார். Aamir Khan னை தன்னுடன் தோள்களில் அனைத்து கட்டித் தழுவினார் BigB.

இப்போது BigB அவருடைய கணீர் குரலில் பேசினார்: Thanks to IOFI for honouring me with this award & I cheer the friendship I had with Mr.Mahesh Yadhav. I must say that in south india there are a lot of value for creativity & discipline. I have been observing this for past two decades and I am a fan of Late Mr.Shivaji Ganesan & my friends Rajini & Kamal haasan. (பலத்த கரகோஷம் ஒலித்தது....) (என்னதான் VVIP's மேடையில் பேசினாலும், அவர்கள் அருகில் நின்றுகொண்டிருக்கும் அழகி சங்கீதாவை யாரும் கவனிக்க தவறவில்லை. BigB உட்பட.) I also wanted to appreciate the comperer who showed various artistic talents like compering, dancing and receiving award for designing. Also I heard she is a working women. Thats great to hear & I appreciate your effor in this program & I admire the way you young ladies manage their career and work. (இதைக் கேட்க்கும்போது சங்கீதா தன் கையை தானே கிள்ளிப் பார்த்தாள், காண்பது நிஜமா என்று.) I pray god that Mr. Yadhav family & his great son Raghav have a successful life and wishing them many more success ahead in future endeavours with IOFI. - என்று சிக்கனமாக பேசி முடித்து மேடையை விட்டு கம்பீரமாக இறங்கினார் BigB.

Much Thanks Big B, you are an inspiration for many.. - என்றாள் சங்கீதா.

ரசிகர்களே, இப்போது நாம் கௌரவிக்க இருக்கும் மனிதரை எப்படி பாராட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் பாராட்டும் வார்த்தைகள் பத்தாது. பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு தன்னை தாரை வார்த்து குடுத்த ஞானி இவர். என்று சொன்னவுடன் கூட்டத்தில் யாரென்று யூகிக்க முடிந்து அரங்கம் அதிரும் வண்ணம் கை தட்டினார்கள். இது வரை இருந்தவர்களுக்கு எழுப்பிய சத்தம் பத்து மடங்காக திமிறிக்கொண்டு அரங்கம் முழுதும் கை தட்டல்கள் ஒலித்தன. -சந்கீதாவால் பேச முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் பொருத்து மீண்டும் ஆரம்பித்தாள். இவருடைய தைரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த காட்சி. ( Click to view) இன்றைக்கு இருக்கும் commercial நாயகர்கள் யாருக்கும் இந்த காட்சியில் நடிக்க துணிச்சல் வேண்டும். இப்படிப்பட்ட காட்சியில் நடித்துவிட்டு அதுத்த படத்திலேயே commercial hit குடுக்கும் mass நாயகன்தான் நம்முடைய பொக்கிஷமான உலக நாயகன்.... (மீண்டும் சந்கீதாவால் பேச முடியாத வண்ணம் கைத் தட்டல்கள் ஒலித்தன இருப்பினும் அந்த சத்தத்துடன் சேர்த்து mike ல் கத்தி ஒரு முறை அந்த கலைத் தாயின் தவப் புதல்வனின் பெயரை சொல்லி விட்டாள்).. Padmashree Dr. கமல்ஹாசன் அவர்கள். (கமல் அருகே அமர்ந்திருந்த நண்பர் Super Star ரஜினி, கமலைக் கட்டி அணைத்து நட்பை பகிர்ந்து கொண்டார்.)


(அரங்கம் அதிர்ந்து முடிய சற்று அவகாசம் குடுத்து விட்டு மீண்டும் பேசினாள் சங்கீதா.)

நாடே போற்றும் இந்த மாமனிதனின் சிறிய குறும்படம் ஒன்றை பார்ப்போம். (click to view - Must watch clip)

திரையில் biography வீடியோ முடிந்ததும், பல நிழல் நாயகர்களுக்கு மத்தியில் இருக்கும் நமது நிஜ நாயகன் எழுந்து மேடைக்கு வந்தார். மீசை இல்லாத மொழு மொழு முகத்துடன் அதே pushpak படத்தில் பார்த்த smart டான தோற்றத்துடன். தனது IOFI cine Legend award டினை BigB யிடம் இருந்து பெற்றார் கலைஞானி.


மெதுவாக பேச ஆரம்பித்தார் Dr.கலைஞானி: விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். (கரகோஷம் ஆடிட்டோரியம் கூரையை பிளந்தது.) அவை அடக்கம் காத்து விழாவை நன்கு இயங்க செய்து கொண்டிருக்கும் சகோதரி சங்கீதாவுக்கு எனது பாராட்டுகள். (சங்கீதாவின் சந்தோஷம் உச்சத்துக்கு போனது). என்னைப் பொருத்த வரையில் இது எனக்கு ஒரு குடும்ப விழா. நானும் Mahesh Yadhav வும் நீண்ட நாள் நண்பர்கள். யாரிடமும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர் அவர். ஒரு முறை எனது heyram படத்தைப் பார்த்து விட்டு என்னிடம் "sir, என்னை தப்பா நினைச்சிகாதீங்க, இந்த படத்தோட costumes விடவும் நாயகன் படத்துல உங்க costume ரொம்ப நல்லா இருந்துச்சி.. அது என்னமோ தெரியலை sir மனசுல பட்டுச்சி, பட்டுன்னு சொல்லிட்டேன்" னு சொன்னார். நல்ல வெகுளி மனிதர். ( சில நொடிகள் தாமதித்து மீண்டும் விழாவைப் பற்றி பேச தொடங்கினார் கமல்.) இந்த விழாவில் ஆரம்பமாக ஒரு தாயின் பாடலைப் பாடினார் பாடகர் உண்ணி கிருஷ்ணன். அது எனது நெஞ்சைத் தொட்டது. அது மட்டும் இல்லாமல் நண்பர் Aamir சொன்னது போல மிக வித்யாசமாக compere பண்ணிய புது முக பெண்ணை வைத்து நடனத்தையும் இயக்கி காமித்து விழாவுக்கு ஒரு புது இலக்கணம் படைத்து விட்டார் இளைஞர் ராகவ். IOFI நிறுவனம் சினிமாவில்தான் எங்களுக்கு உடை அலங்காரம் எல்லாம் செய்ய உதவி வருகிறார்கள். நிஜத்தில் அவர்கள் focus செய்வது பெண்களுக்குத் தான். அதில் எனக்கு மகிழ்ச்சியும் உண்டு. பெண்ணின் இனம் உலகில் முதலில் தோன்றியவை. அதைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வது ஆண்களின் அறிவுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ( இதற்கும் கரகோஷம் ஒலித்தது..) உலகில் முதலில் தோன்றியது ஆதாம் அல்ல ஏவாள், அதுவும் வெண்மையான தோள் கொண்ட அழகிய பெண் அல்ல, ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றிய கருப்பு மிருகம் தான். "ஹோமொசேபியன்" என்ற வகையை சார்ந்த நாம் அனைவரும் முதலில் தோன்றியது ஆப்பிரிக்க நாட்டின் நடுப்பகுதியில்தான். இன்றைக்கும் கோடிக்கணக்கில் இருக்கும் மனித உயிரினங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட இடம் ஆப்பிரிக்கா!!!... எந்த ஜாதி மதமும் இல்லாமல் சடை முடியுடன் உடல் முழுதும் கரடியைப் போல முடிகளை வளர்த்து வளாத்திக் கொண்டிருந்த அந்த மிருகம் தான் முதல் ஆதி மனிதன், அதுவும் அது ஒரு பெண்!! அதற்க்கு வரலாற்றில் சான்றுகள் இருக்கிறது. சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் ஆப்பிரிக்க தென் பகுதியில் ஒரு மலைச் சரிவில் நடந்து இருப்பாள் போல தெரிகிறது, கடலோரமாக ஏதோ இறந்த மாமிசம் உண்பதற்காக சென்றிருக்கலாம், அப்போது அற்புதமான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது, அந்தப் பெண் அவளுடைய காலடிச் சுவடுகளை மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிசுவடுகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட சந்திரனில் neil armstrong வைத்த காலடி சுவடுகளுக்கு இணையானது அல்லவா இது?!!! அப்போதுதான் நம்மைப் போலவே கைகளை வீசி சாவகாசமாக நடந்து சென்ற அந்த பெண்ணிடம் ஒரு விசேஷ ஜீன் இருப்பது தெரிய வந்துள்ளது, அது "மீட்டோ கான்ட்ரியல்" DNA என்கிற ஜீன். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் உருவாக அடிப்படைக் காரணமாக ஆதார சக்தி அந்த ஜீன் தான் என்று விஞ்ஞானிகள் பிற்பாடு தெரிவித்தார்கள். ஆகவே scientific ரீதியில் பார்த்தாலும் முதலில் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. (உலகநாயகனின் வாயால் இதைக் கேட்டதில் பெண்களின் கரகோஷம் சற்று பலமாக உயர்ந்தது.. சங்கீதாவையும் உட்பட.) "Ships are made to sail in the sea not to rest in harbour" என்கிற பழ மொழிக்கு இணையாக IOFI நிறுவனம் ஏற்கனவே பல கண்டங்களில் பயணித்தாலும், இன்னும் ஊடுருவி பல இடங்களுக்கு சென்று பல வெற்றிகள் அடைய வேண்டுமென்று வாழுத்துகிறேன்.. (பேசி முடித்து மேடையை விட்டு இறங்குவதற்குள் சத்தமின்றி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ராகவ் மேடையின் மீது ஏறி கலைஞானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.) புல்லரித்து நெகிழ்ந்து நின்றார் Dr.கமல். அப்போது mike பிடித்து மீண்டும் ஒரு விஷயத்தை சொன்னார். "கீழ உட்கார்ந்து இருக்கும்போது இந்த வாலிபர் ஒரு கவிதையை என்னிடம் சொன்னார், அதில் ஒரு தேவதை அடிக்கடி வந்தாள், யாரது என்று கேட்டேன், என் காதலி என்று சொன்னாரே தவிர பெயரை சொல்ல வில்லை. ஆனால் நான் அந்த கவிதையை ரசித்தேன். அதை இங்கே உங்களின் அனைவரின் முன்பாக ராகவ் படிக்க வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்... இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இளைஞர்களுக்கும் தமிழ் ஆர்வம் இருக்கிறது என்று காமிக்க இது ஒரு ஆதாரம்." (ராகவை நோக்கி படியுங்கள் என்று கலைஞானி mike ல் சொல்ல ராகவ் தொடர்ந்தான்...)


ராகவ் கடிதம்....( இது ஒரு காதல் கடிதம்..)

"மனதில் பல விதமான உணர்வுகளின் தாளம், கண்களை மூடி நானும் அப்படியே அந்த தாளங்களை ரசித்தேன், எனது மனதுக்குள் உலகில் பிரம்மன் படைத்த ஏராள இயற்கை அழகுகளுடன் சுவையாகவும் அமைதியாகவும் வாக்கு வாதம் நடந்துகொண்டிருந்தது., அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

எனது மண ஓட்டத்தில் நான் பேசத் தொடங்கியது முதலில் இமய மலைகள் கூடத்தான்: சத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும் அவை அனைத்தும் இமய மலையை புகழும் வார்த்தைகளாக வந்து கொண்டிருந்தது. அந்த புகழ்ச்சி சத்தங்களுக்கு மத்தியில் நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இமய மலைக்கு ஆச்சர்யம், காரணம் நான் அதன் அழகையும் பிரமிப்பையும் பார்த்து பாவப்பட்டு "நல்ல வேலை அவள் இங்கே வரவில்லை, இல்லையென்றால் நீதான் இந்த உலகில் கம்பீரதுக்கு அடையாளம் என்று எண்ணும் பலகோடி மக்கள் அவர்களுடைய முடிவை மாற்றி இருப்பார்கள்" என்று நான் சொன்னதைக் கேட்டு சற்று முகம் தொங்கியது..... ( அரங்கம் முழுதும் எதிரொலிக்கும் விழா ரசிகர்களின் கரகோஷ சத்தத்துக்கு சில நொடிகள் குடுத்து பிறகு கூட்டத்தை ப் பார்த்து அழுத்தமாக சொன்னான் ராகவ்) ..அந்த இமயத்துக்கு.

அடுத்ததாக நான் கண்டது அழகிய இலைகளையும் கனிகளையும் தாங்கி பகல் வெளிச்சத்தில் காட்சி அளிக்கும் மரங்களையும், பூக்களையும் தான், அவைகளை மிகவும் ரசித்து பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான இயற்கை ரசிகர்களுக்கு "தானே இவ்வுலகின் அழகு எண்ணும் எண்ணத்தில் pose குடுத்துக் கொண்டிருக்கும் வானுயர்ந்த மரங்களுக்கும் பூத்து குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கும் பூக்களுக்கும்" நான் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யப் படுத்தின: அவை :- ங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும் கண்களுக்கு பார்த்தவுடன் மனதை கவரும் விஷயமாக எது பட்டாலும் அதை உடனடியாக மனமுவந்து பாராட்டுவது வழக்கம். நானும் அவர்களில் ஒருவன்தான், ஏனென்றால் அதிகாலையில், எழுந்தவுடன் எங்கள் கண்களுக்கு பச்சைபசெலென்று காட்சி அளித்து, கண்களுக்கு இதமாக குளிர்ச்சி அளிக்கும் உங்களை தான் நானும் இன்றளவு விழிகளுக்கு உற்சாகம் தரும் அழகு என்று நினைத்திருந்தேன். ஆனால் சமீபமாக அது பொய் என்று ஒரு தேவதையின் சிரிப்பை பார்த்தபோது உணர்ந்தேன். கண்களுக்குள் ஊடுருவி மனதுக்குள் சென்று மயக்கும் சக்தி அந்த சிரிப்பில் தெரிந்தது எனக்கு. அதை மனதில் புகைப்படம் எடுத்து வைத்து தினமும் அதிகாலை எழுந்தவுடன் ஒரு நொடி மனதில் ஓட்டி பார்ப்பேன். அப்பொழுது எனக்குள் கிடைக்கும் அந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. மன்னிக்கவும், பிரம்மனின் படைப்பில் நீங்கள் இயற்கை அழகுதான் ஆனால் இயற்கை அழகான நீங்களே அவளின் சிரிப்பைப் பார்த்தால் உங்களின் அழகை அவளுக்கு தாரை வார்த்து கொடுப்பீர்கள். - என்று நான் சொன்னதைக் கேட்டு அந்த மர செடி கோடிகளுக்கும் கூட கொஞ்சம் முகம் தொங்கியது.

மலைகளும், மரம் செடி கொடிகளும் மற்ற இயற்கை நண்பர்களுடன் கலந்தாலோசித்து யாரைப் பற்றி நான் இவ்வளவு புகழ்கிறேன் என்று நொந்து கொண்டிருந்தன, அப்போது குயில்கள் குறுக்கிட்டு நீங்கள் தோற்றத்தில் தோத்து இருக்கலாம், விடியற்காலையில் நான் குடுக்கும் இயற்கை இசைக்கு இணை உண்டா என்று சவால் விட்டு வருகிறேன் என்று சொல்லி என்னை நோக்கி வந்து, யார் அந்த தேவதை? இயற்கை மிகுதியான அழகு கொண்ட எங்களைக் காட்டிலும் அவ்வளவு அழகா? இருக்கட்டும், தோற்றத்தில் நான் தோற்றுத்தான் போவேன் (தனக்குத் தானே மணம் வருந்தியது) ஆனால் குரலில்? ( என்று சற்றே தன் நெஞ்சை நிமிர்த்தியது). அப்போது மென்மையாக சிரித்துக் கொண்டு அதற்க்கு நான் அளித்த விளக்கம் அந்த குயிலுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அவை : - கீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில் பாடி வரும் உங்களை கவிஞர்கள் முதல் காதலர்கள் வரை பலரும் புகழ்ந்து இருக்கிறார்கள். நானும் அதற்க்கு விதி விலக்கல்ல. ஒரு முறை என் தேவதைக்கு அவளுடைய குரல் குயில் போல் உள்ளதென்று சொல்லும்போது "அப்படியா" என்று சொல்லிவிட்டு மிக அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு சத்தத்தை க் கேட்க்கும் போது என்னையும் அறியாது என் நாடி நரம்பு உடல் உயிர் அனைத்தும் ஒரு நிமிடம் சிலிர்த்தது. ஒரு நிமிடம் அவளின் சிரிப்பைக் கேட்டு உறைந்து நின்றேன். அப்போதுதான் தெரிந்தது அவள் சிரிப்பைக் காட்டிலும் இவ்வுலகில் சிறந்த இசை எதுவும் இல்லை என்று. - குயில் மெளனமாக அங்கிருந்து விடைபெற்று சென்றது.


இயற்கை அனைத்தும் ஒன்று கூடி ஆலோசித்தன, எப்படியாவது நமக்குள் ஒருவர் அவனது தேவதையை விட உயர்ந்தவள் என்று நிரூபிக்க வேண்டுமென்று, அதன் அடிப்படையில், உலக மாதாவின் உடலுக்குள் பொதிந்திருக்கும் தங்கத்தை நோக்கி விரைந்து சென்று விஷயங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி என்னிடம் விவாதிக்க அனுப்பியது மற்ற இயற்கை அழகிகள் (!!). தங்கம் என்னை நோக்கி வந்து "என்னதான் மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் என்று இவ்வுலகில் நிறைந்து இருந்தாலும் எனது அழகுக்கு இணை ஆகாது, அப்படி இருக்க உனது தேவதை எந்த அடிப்படையில் என்னை விட உயர்ந்தவள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டதற்கு நான் கூறிய பதில் தங்கத்தையும் ஆச்சர்யதுக்குள்ளாக்கியது, அவை :- தாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி அதிகம் உள்ளவர்களும் அடித்துக் கொண்டு உலகில் நீ இருக்கும் இடம் தேடி உன்னை அடைகிறார்கள். வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நானும் அப்படி உன் பின்னால் அலைந்தவன் தான். ஆனால் ஒருமுறை காலை வெளிச்சத்தில், முதல் முதலில் என் கண் முன்னே வந்து நின்ற என் தேவதையின் தோள்கள் சூரிய வெளிச்சத்தில் மின்னியதை பார்த்தபோது, என் மனதில் நீ எந்த இடத்தில் இருந்தாயோ அந்த இடத்துக்கு நான் யோசிக்கக்கூட சில நொடிகள் குடுக்காமல் என் மனதில் இடம் பிடித்தாள் அந்த தேவதை. உன்னை க் காட்டிலும் தங்கத்தைவிட உயர்வான அவளது தோள்களில் எப்போதும் சாய்ந்து இருக்கவே துடிக்கிறேன். நீ அவளைப் பார்த்து விடாதே, மணம் நொந்துவிடுவாய். என்று நான் சொன்ன வரிகளைக் கேட்டு உண்மையில் தங்கதுக்கே கொஞ்சம் தடுக்கியது மனது.

இனியும் பொருக்க முடியாது, வாருங்கள் அனைவரும் பிரம்மனிடமே செல்லுவோம் என்று சொல்லி என்னைப் பற்றியும் என்னுடன் நடந்த விவாதங்கள் அனைத்தையும் கூறி புலம்பி இருக்கிறார்கள் அவன் படைத்த இயற்கை அழகிகள்.

அப்போது பிரம்மனே என் முன் வந்து பேசத்தொடங்கினான்.

மானிடா, ஒரு நிமிடம் பொறு, ஏன் நான் படைத்த இயற்கை குழந்தைகளின் மணம் வருந்தும் வண்ணம் உனது தேவதையை ஒப்பிட்டு பேசி இருக்கிறாய்? அவ்வளவு உன்னதமானவளோ உன் தேவதை?

ஆமாம்..

இவர்களிடம் இல்லாததென்ன அப்படி அவளிடத்தில் இருக்கிறது? என்று கேட்க

அனைத்து இயற்கை அழகுகளையும் படைத்த நீதானே அவளையும் படைத்து இருக்க முடியும்?

ஆமாம் - என்றான் பிரம்மன்.

மேலும் அவளிடத்தில் நான் பார்ப்பது உன்னைத்தான்.

என்ன சொல்கிறாய், என்னைப் பார்க்கிறாயா? - குழம்பினான் பிரம்மன்.

இறைவனே, கடவுளுக்கு மறு பெயர் அண்பு. சரிதானே? அன்பே சிவம் அல்லவா?

ஆமாம். - ஆமாம், (பிரம்மனையும் மயக்கினான் ராகவ்!!!!....)

அப்படிப்பட்ட அன்பின் உச்சகட்டம் காதல். சரியா?

ஆமாம்...

அப்படியானால் ஒரு விதத்தில் நான் உன்னைத் தானே அதிகம் ஆராதிக்கிறேன். அதுவும் நீ படைத்த அந்த தேவதையின் மூலம்....

பிரம்மன் சற்று குழம்பினான்... எல்லாம் சரி ஆனால் யார் அந்த தேவதை என்று பிரம்மன் கேட்க

நான் அவனது காதில் அந்த தேவதையின் பெயரை ரகசியமாக சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு அவனும் ஒரு முறை அவளைப் பார்த்தான். நான் கூறியது அனைத்தும் சரியே என்று அவனும் என் வழிக்கு வந்தான். என் காதலை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தான்.. ( கடைசி வரை பிரம்மனின் காதில் சொன்னா ரகசியத்தை சொல்லவே இல்லை ராகவ்.) - படித்து முடித்த பின் அனைவரும் ( கலைஞானி உட்பட) பலத்த சத்தத்தில் கை தட்டினார்கள்... ( சங்கீதாவுக்கு மனதுக்குள் ஒரு லேசான பொறாமை எட்டியது, யார் அவள் என்று தெரிந்துகொள்ள, இருப்பினும் அவன் கவிதையை பாராட்ட மணம் துடித்தது அவளுக்கு, இருப்பினும் சற்று அடக்கம் காத்தாள்..). இப்போது இருவரும் மேடையை விட்டு மெதுவாக இறங்கி அவரவர் இருக்கையில் சென்று அமர்ந்த வுடன் சங்கீதா மீண்டும் தொடர்ந்தாள்..

Thanks Dr.Kamal & Mr.Raghav - என்றாள் சங்கீதா.


இப்போது நாம் கௌரவிக்கும் அந்த மனிதர் இந்திய திரை உலகம் மட்டும் அல்ல, ஆசிய கண்டமே அண்ணார்ந்து பார்க்கும் BOSS - என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் யாரென்று கூட்டத்துக்கு தெரிந்ததால் மீண்டும் அதிர்வுகள் காற்றில் பாயும் வண்ணம் கைகள் வலிக்க வலிக்க கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூச்சலும் விசிலும் தரும் சத்தம் ஆடிட்டோரியம் கதவுகளை உடைத்து விடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருந்தது ரசிகர்களின் அதிர்வுகள்.. "None other than the one and only Super star RAJINIKANTH" என்று சங்கீதா சொன்னவுடன் glitters காற்றில் பறந்தது. கலர் paperகள் தூவப்பட்டன.. "தலைவா...." என்று ஒவ்வொரு ரசிகனும் தன் ஆழ் மனதிலிருந்து அன்பை வெறித்தனமாக வெளிப்படுத்தினார்கள், நண்பர் கமல் ரஜினியை கீழே கட்டி அனைத்துவிட்டு மேடைக்கு அனுப்பி வைத்தார்!!..
திரையில் இந்த மஹானைப் பற்றி ஒரு சிறிய biography யைப் பார்ப்போம். - (click to view PART 1- Must watch clip)
திரையில் இந்த மஹானைப் பற்றி ஒரு சிறிய biography யைப் பார்ப்போம். - (click to view PART 2- Must watch clip)

IOFI cine Legend award டினை நண்பர் BigB யிடம் இருந்து பெற்றார் ரஜினி.

மெதுவாக பேச ஆரம்பித்தார் ரஜினி: விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்களே, பத்திரிகை நண்பர்களே, ... (இன்னும் பலர்...), கடைசியாய் "என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே" என்ற வார்த்தையை சொல்லும்போது உண்மையாகவே கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

அதிகம் பேச நேரம் இல்லை, எனவே சொல்ல வேண்டிய கருத்தை சீக்கிரம் சொல்லிடுறேன். Mr.Mahesh Yadhav is a good man. kind hearted man.. எப்டி எப்டி இவளோ பெரிய success அவருக்கு கிடைசுதுன்னு பார்த்தா... அதுக்கு காரணம் அவருடைய தன்னடக்கம். சாதாரண தையல் காரனா இருந்தவரு இன்னைக்கி ஒரு மிகப்பெரிய லக்ஷ்மிகரமான IOFI நிறுவனத்தை உருவாக்கி இருகாருன்னா அது சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே.. மிகுந்த தன்னடக்கம் வேண்டும். அதைப்பற்றி ஒரு சின்ன குட்டி கதை ஒன்றை இன்றைய தலைமுறைக்கு சொல்லிக்குறேன் சொல்லிகுறேன்:

ஒரு நாள் midnight ஒரு இளைஞன் நல்லா தண்ணி அடிச்சிட்டு மொட்டை மாடியில் போய் உட்காருறான். அப்போ மேல அண்ணார்ந்து பார்க்கும்போது அவனுக்கு நிலா தெரியுது. அதுவும் நல்ல வெளிச்சமா தெரியுது. அவன் மனசுக்குள்ள சில விரக்தி. திறமை அதிகம் இருந்தும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி அவனுக்கு. அவன் மேலதிகாரிங்க கிட்ட ஒத்து போக மணசு இல்லாம வீராப்பு தான் பெருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்து நிலாவ பார்த்து சொல்லுறான் .... "ஏய்ய் எதுக்கு இப்போ உன் மிதமான வெளிச்சத்தை காமிச்சி நீ ரொம்ப அழகுன்னு தெரியப் படுத்திக்குற? வேற வேலை இல்ல உனக்கு? அதான் கவிஞன் முதல் காதலர்கள் வரை உன்னை புகழ்ந்து தள்ளுரான்களே, என்னை மாதிரியா உன் நிலைமை.? வேற எங்கயாவது போ என் முன்னாடி வராத போ போ" னு அவன் ரொம்ப feel பண்ணி நிலாவிடம் பேசுறான்.... அப்போது நிலா அவனுக்கு அழகாக பதில் சொன்னது.. "அடேய் அற்ப மானிடா, நீ இருக்குற பூமியில பகல் நேரத்துல சுட்டு எரிக்குற சூரியனைத்தான் டா நானும் தினமும் வணங்குறேன். என் கிட்ட ஒரு மிதமான வெளிச்சம் வருதுன்னு சொல்லி அதை வர்னிச்சி இன்றைக்கு கவினர்களும் காதலர்களும் என்னை பாரட்டுராங்கன்ன நான் அந்த சூரியனை வணங்கி அவன் குடுக்குற வெளிச்சத்தை உள் வாங்கித்தான் உனக்கு இந்த மிதமான வெளிச்சத்தை குடுக்குறேன். அந்த தன்னடக்கம் எனக்கு சூரியன் கிட்ட இருக்கு, அது போல உன் கிட்ட நிறைய திறமை இருக்கு, ஆனா தன்னடக்கம் இல்ல, நான் தான் எல்லாரையும் விட பெரியவன் ன்னு நினைச்சி அகந்தையில உன்னை நீயே தொலைச்சிக்குற. தன்னடக்கதுடன் உன் வேலையை நாளை காலை தொடங்கு, அப்புறம் பார் உன்னை மற்றவர்கள் எப்படி தலையில் தூக்கி வைப்பார்கள்" என்று நிலா அன்று இரவு பேசியதில் இருந்து அந்த மனிதனுக்கு ஒரு ஞானோதயம் வந்தது, மிகுந்த தன்னடக்கத்துடன் வேளைகளில் ஈடுபட்டார், பல வெற்றிகளைக் கண்டார்.
என் நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பர் இப்படி நான் வளர்ந்து வருவதைப் பார்த்து இருக்கிறேன் நண்பர்களே. (சில நொடிகள் மௌனம்...பிறகு கண்களை மூடி தொடர்ந்தார்...) Yes... yes.... அந்த குணாதிசயத்தை நன் அவருடைய மகன் Raghav கிட்டயும் எந்திரன் படத்துல பணி புரியும்போது பார்த்திருக்கிறேன். definately... definately IOFI இன்னும் மேல போகும் னு சொல்லி இறைவனை பிரார்த்தனைப் பண்ணிகுறேன். நன்றி வணக்கம். - என்று பேசி முடித்து தனக்கே உரிய மின்னல் வேக நடையில் மேடையை விட்டு கீழே இறங்கினார் தலைவர் ரஜினி. - அப்போது ரஜினியின் தீவிர ரசிகயான சங்கீதா மேடையிலேயே ரஜினியிடம் autograph வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

அப்போது ரஜினி சங்கீதாவிடம் கூறிய வார்த்தைகள்.. "you did a fantastic job.. ஆ...ஹா ஹா ஹா.." என்று தனக்கே உரிய அந்த மந்திர சிரிப்பைக் குடுத்துவிட்டு மேடையில் இருந்து நொடிகளில் மறைந்தார் ரஜினி.

Thank you Dear Super Star ரஜினி. 



சங்கீதா மேடம் - இடை அழகி 25



பொதுவாகவே பலருடைய மனதில் இருக்கும் Paradox psychological thinking இது, அதாவது சில விஷயங்களை ப் பொருத்தவரை நாம் அதில் இறங்கினால் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது என்று ஒரு சுய விமர்சனத்தை ஏற்கனவே நமது மணம் முடிவு செய்து வைத்திருக்கும். அப்படி இருக்க, அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்தும் நாம் அதை inhibition (காரணமில்லா புறக்கணிப்பு (அல்லது) தடைக் கட்டு) காரணமாக பயன் படுத்திக்கொள்ள மறுத்து விட்டோம் என்றால் மனதில் "Regrets" என்கிற வில்லன் வீடு கட்டி தங்கி permanent ஆக இருந்து விடுவான். "சின்ன விஷயத்துக்கு தானே regrets" என்று ஒரு புறம் மனதை நாம் என்னதான் தடவிக்குடுத்து பொய் சொல்லி சமாலித்தாலும், அது அவ்வபோழுது எட்டி பார்த்து நம்மை மிருகம் போல கவ்வும். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்கு regrets இருக்ககூடாது என்று நம் மணம் அழுத்தமாக சிந்திக்கிறதோ அவ்வளவு அழுத்தமாக அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று நம்முடைய மனது வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது சங்கீதாவின் மனது. இது போன்ற மண ஓட்டங்களை கண்களாலேயே பார்த்து படித்து விடுவதில் ராகவ் கில்லாடி.
சங்கீதா சில உணர்வுகளை மனதுக்குள் என்னதான் அழுத்தமாக மூடி மறைத்து வைத்தாலும் ராகவ் மட்டும் எப்படித்தான் அவைகளை சாவி போட்டு திறந்து பார்க்கிறானோ என்று மனதில் அவளுக்கு ஒரு ரகசிய ஆச்சர்யம். கூடவே அவன் பேசும் வார்த்தைகளும் அந்த குரலுக்கும் அந்த (power of convincing) சக்தி உண்டு என்பதும் அவளுக்கு நன்றாக தெரியும்.

சங்கீதா, you are the best, I am confident you can do this very well. இருக்குற மொத்த function time ல stage time occupay பண்ணுறது highly demanding stuff. மத்த performers எல்லாம் அடிச்சிக்குறாங்க. இப்போ கூட நான் எனக்கு தெரிஞ்சவங்க என்கிற முறைல உங்க கிட்ட வந்து இதை கேட்கல. உங்க கிட்ட உண்மையாவே திறமை இருக்கும் னு எனக்குள்ள ஒரு confidence இருந்துச்சி. கூடவே dance is something which should be pleasure for others to watch. actually இன்னைக்கி kala மாஸ்டர் book பண்ணி இருந்த dancer னால வர முடியல. அப்போதான் அவங்க அந்த 10 minutes slot ல வேற ஏதாவது program list ல exculde பண்ணி இருந்தா include பண்ணிக்கோங்க னு சொன்னாங்க. அப்போதான் நான் உங்களை மனசுல வெச்சி பார்த்தேன். உங்களை காமிக்குறேன்னு சொல்லி இவங்களை கூட்டிக்குட்டு வந்தேன் & you know she was pleased to see you. யாரையும் இவங்க சுலபத்துல ok னு சொல்லிட மாட்டாங்க. இப்போ கூட உங்களை கட்டாய படுத்தல. அந்த dancer க்கு பதிலா வேற யாரவது இருக்காங்களா னு ஒரு தடவ யோசிக்கிறோம், அப்படி இல்லேன்னா last option உங்க கிட்ட வந்து request பண்ணுறோம். - என்று ராகவ் சொல்லும்போது "last option" என்ற வார்த்தையை சங்கீதா விரும்பவில்லை, கூடவே அவள் மனது கிட்டத்தட்ட 80% இதை செய்ய வேண்டுமென்றும் உள்ளுக்குள் மெளனமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தது.

ராகவ் ஒரு புறம் யாருக்கோ phone செய்துகொண்டிருக்க "Raghav one minute.." - என்றாள் சங்கீதா.

சொல்லுங்க சங்கீதா....

.....இஸ்ஹ்ம்ம்.....(சத்தமின்றி மூச்சு விட்டு கொஞ்சம் மெளனமாக தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் )

என்ன ஆச்சு சங்கீதா? சொல்லுங்க....

I am fine Raghav.... - ரகாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து அழுத்தமாக சொன்னாள் சங்கீதா (மனதுக்குள் "what may come, let it come but I will not have anymore regrets என்று தனது சிந்தனையில் தெளிவானாள் சங்கீதா)

சங்கீதா.. I admire your courage, this is what real sangeetha is.... - என்று ராகவ் சிலிர்த்தான்.


நான் பேசி இருந்தாள் கூட உங்களை convince பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல, but Mr.Raghav did it seemlessly (பக்காவாக) - என்றாள் நடன இயக்குனர் கலா.

This is dressing room right, நான் கொஞ்சம் உள்ளே வரலாம் இல்ல? - என்று கலா தயங்கி க் கேட்க, ராகவ் அங்கிருந்து நாகரீகம் காக்க மெதுவாக நகர்ந்து சென்றான். ராகவ் அங்கிருந்து நடந்து செல்கையில் ஒரு நொடி சங்கீதாவை திரும்பி ப் பார்த்தான், சங்கீதாவின் கண்கள் அவளின் அனுமதி இன்றி ரகாவின் கண்களையே நோக்கியது. அப்படிப்பட்ட ஒரு hypnotic eyes ராகவ்னுடயது.

dressing room உள்ளே வந்த கலாவைப் பார்த்து நிர்மலா, ரம்யா, ஆகியோருக்கு ஆச்சர்யம். சஞ்சனாவுக்கு IOFI award விழாவுக்கு celebreties வருவதில் ஆச்சர்யம் இல்லை, ஏன் என்றாள் ஏற்கனவே நிறைய ப் பேரைப் பார்த்து இருக்கிறாள்.

கலா சங்கீதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "Its going to be very simple and நீங்க மட்டும் solo dance performance பண்ண போறீங்க. உங்க கூட வேற எந்த model ம் ஆடப் போறதில்ல" - என்றாள் கலா..

இதைக் கேட்டு ரம்யாவும், நிர்மலாவும் ஒரு நொடி ஆச்சர்யமானார்கள், சஞ்சனா excitement உச்சத்துக்கு போய் "Is our Sangee going to do dance on stage... woooowwwww" - என்று அதிக சத்தத்தில் அடித்தொண்டையில் இருந்து சத்தம் வரும் விதம் கத்தினாள். ரம்யா சங்கீதாவின் அருகில் வந்து "இன்னைக்கி வரைக்கும் நல்ல படியா பொழப்பை ஒட்டிக்குட்டு இருக்கும் பல heroines இந்த நடனத்தைப் பார்த்தால் மடியில நெருப்பை கட்டிக்குவாங்க." என்று பெருமிதம் கொண்டு புகழ்ந்தாள். அப்போது கலா குறுக்கிட்டு ஒரு ஆச்சர்யமான விஷயத்தை சொன்னாள் "இன்னைக்கி உண்மையிலேயே சினிமா உலக ஜாம்பவான்கள் வருவார்கள்.... only selected few heros & 4 legends are coming" என்றாள் கால.. இதைக் கேட்டு shock ஆனால் சங்கீதா... ரம்யவும்தான்... ஏதோ விளையாட்டுக்கு சொன்னது நிஜமாக நடக்கப் போகிறதே என்று எண்ணி அவளும் shock ஆனாள்.

சஞ்சனாவுக்கு யார் யார் வரப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் சங்கீதாவிடம் கூறவில்லை, ஏன் என்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முதலாய் ஒரு மிகப்பெரிய stage மீது ஏறும்போது இது போன்ற விஷயங்களை சொல்லாமல் மேடை மீது தள்ளிவிட்டு பின்பு மெதுவாக கூறுவதுதான் சரி என்று அவள் மனதில் பட்டதால் எதுவும் பேசாமல் இருந்தாள். இப்போது சஞ்சனா சங்கீதாவிடம் வந்து "Yes dear, few important celebreties are going to come for this function, I hided it from you.... sorry" என்று கொஞ்சும் விதத்தில் சொன்னாள். சங்கீதாவுக்கு படபடப்பு எகுரியது. இருந்தும் நிர்மலா, ரம்யா, சஞ்சனா ஆகியோர் தொடர்ந்து குடுக்கும் தைரியத்தில் சற்று மணதிடம் அடைந்தாள் சஞ்சனா.



if you are ready, we shall practice the moves now, time அதிகம் இல்லை நமக்கு. - என்று கலா விளக்க மற்றவர்கள் dressing ரூமுக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு குளிக்க சென்றார்கள். வேறு ஒரு set of dress போட்டுக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு சங்கீதாவுக்கு mental support குடுக்க உடன் இருந்தார்கள்.

"உங்க கிட்ட appealing feature உங்க இடுப்புதான், very curvy - என்று கலா சொல்ல, ரம்யா "உய்ய்...." என்று விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்தாள். அறையில் உள்ள அனைவரும் (beauticians உட்பட சங்கீதாவின் நடன rehersal பார்த்து கை தட்டினார்கள்.) பாடலின் நடுவே இடுப்பை மெதுவாக ஆட்டி ஆட்டி ஒரு கட்டத்தில் வேகமாக குலுக்கி belly dancers போல ஒரு step போட வேண்டும். அதற்க்கு கொஞ்சம் சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் செய்து பார்க்க கிட்டத்தட்ட ஒரு 40 நிமிடத்திற்கும் மேல் practice செய்து ஒரு வழியாக கலாவே ஒரு கட்டத்தில் "superrrr" என்று மணம் திருப்தி அடைந்து கத்தினாள்.


நேரம் ஓடிக்கொண்டே இருக்க, மணி ஐந்தை த் தொட்டது. இப்போது. beauticians சுனாமியை மிஞ்சும் வேகத்தில் சங்கீதாவுக்கு hair style செய்தார்கள். ஒருவள் முகத்துக்கு என்னென்ன cream apply செய்ய வேண்டுமோ அதை செய்தாள், மற்றொருவள் தலைமுடிக்கு curly hair style செய்து கொண்டிருந்தாள். கைகளுக்கு wrist முதல் பாதி முழம் கை வரை pearls and stone designed வளையல்கள் மாட்டி விட்டு. கிட்டத்தட்ட மாலை 6:00 மணி அளவில் சங்கீதா என்கிற அழகு ப் பெண்ணை உண்மையாகவே ஒரு தேவதையாக உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் அழகு சாதனங்களுக்கு இவளின் முகத்தால் அழகு சேர்ந்தது என்று சொன்னாள் அது மிகையாகாது.

ராகவ் சில நேரத்திற்கு பிறகு வந்து கதவை த் தட்ட கதவைத் திறந்தாள் சஞ்சனா.. சஞ்சனாவும் நிர்மலாவும், ரம்யாவும் என்னதான் attractive ஆக dressing செய்திருந்தாலும் சங்கீதா உண்மையில் ராகவின் கண்களுக்கு இன்று வரை நான் பார்த்த சந்கீதவா இது என்று பிரமிப்பு அடையும் விதம் பார்த்தவுடன் ஒன்றும் பேச தோணாமல் அப்படியே நின்றான்.

"ராகவ்...." - என்று மெதுவாய் அடக்கமாக மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அழைத்து "எப்படி?" என்று வார்த்தையால் கேள்வி எழுப்பாமல் கண்களால் தன் உடையை மெதுவாய் அசைத்து கேட்டாள்.

ராகவும் அடக்கத்துடன், சத்தமின்றி புருவங்களை உயர்த்தி "beautiful" என்று காற்று கலந்த குரலில் மெதுவாய் சொன்னான்.

okay shall we proceeeeed.....? - என்று program organiser சஞ்சனா சத்தமாக சொல்ல, சங்கீதாவுக்கு மணம் படபடத்தது.

மேடைக்கு செல்லும் முன்பு ராகவ் சங்கீதாவிடம் "You are the best, believe in that, you are the best. No need to get nervous, we all will be there with you to cheer you up" - என்று ராகவ் பேசிய நம்பிக்கை தரும் வார்த்தைகள் சங்கீதாவுக்கு அந்த நேரம் முக்கியமாக த் தேவைப் படும் மருந்தாக இருந்தது.

இப்போது ஆடிட்டோரியம் dressing room வழியாக behind the stage மேடைக்கு வருவதற்கு ஒரு வழி இருந்தது. அந்த வழியின் கூரையில்(roof) மின்னும் சிறிய மஞ்சள் விளக்குகள் மிதமான வெளிச்சத்தில் மின்னியது. கையில் "Addressing the crowd" என்று சஞ்சனா எழுதி கொடுத்திருக்கும் காகிதம் தான் programன் முதல் பேச்சு, அதை அவள் கையில் பத்திரமாக வைத்திருந்தாள். ஒரு முப்பது அடி நீளத்துக்கு அந்த பாதை இருந்தது. இன்னும் சில நொடிகளில் சங்கீதாவின் image ஐ ஆயிரக்கணக்கானவர்களின் மனதில் புரட்டிப் போடும் நேரத்தை தொடுவதற்கு பாதை குறைந்து கொண்டே வந்தன. சஞ்சனா, ரம்யா, நிர்மலா, ஆகிய அனைவரும் சங்கீதாவின் கண்ணத்தில் முத்தம் குடுத்து, "All the best dear, you are going to rock, just perform well dont think about anything.... we will be standing just behind you only.... go go go.... its time.." என்று தோழிகள் சொல்லி முடிக்க அடுத்த பாதத்தை எடுத்து வைத்தாள் சங்கீதா. இப்போது அங்குள்ள ஒரு பணிப்பெண் curtains எடுத்து விட மேடையின் மீது காலடி எடுத்து வைத்தாள் அந்த தேவதை.

ஆடிட்டோரியம் அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். காரணம் இந்த awards வழங்கும் விழா வெறும் IOFI பணியாளர்களுக்கு மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக ராகவின் தந்தை Mr.Mahesh Yadhav பலதரப்பட்ட VIP களுடன் வைத்திருந்த நட்பை பாராட்டி அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அதில் சில முக்கிய திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் விதம் சில விருதுகளும் வழங்கும் திட்டம் இருந்தது அந்த விழாவில்.

சங்கீதா mike பிடித்து மெதுவாக பேச ஆரம்பித்தாள். அப்போது stage மேலே ஒரு focus light ஒன்று வெறும் சங்கீதா நிற்கும் இடத்தை மட்டும் குறி வைத்து வட்டமாக வெளிச்சம் அடிக்க அவள் மாட்டி இருக்கும் அந்த தக தகவென மின்னும் gagra choli பார்பவர்களின் கண்களுக்கு மின்னியது. இப்போது அவள் பேச ஆரம்பிக்கும் தருவாயில் பல நூறு கணக்கில் flash lights camera மூலம் அவளின் முகம் மீது விழுந்தது. ஒரு நொடி முகத்தை நிமிர்த்தி கூட்டத்தை ப் பார்த்தாள் சங்கீதா. பெரும்பாலும் இருட்டாக இருந்தது ஆடிட்டோரியம், மிதமான சிறு வெளிச்சத்தில் அலை கடல் போல அமர்ந்திருக்கும் கூட்டாம் கண்ணுக்கு தெரிந்தது அவளுக்கு. ஒரு நொடி இதயத் துடிப்பு அதிகரித்தது. நிமிர்ந்து பார்தவளின் முகத்துக்கு மேலே இன்னும் இரு மடங்காக paparazzi ( சரமாரியான camera clicking தொல்லை என்று பொருள்) போல camera flash lights விழ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சில நொடிகள் மெளனமாக நிற்க, பின்னாடி இருந்து சஞ்சனா குரல் குடுத்தாள் "start sangeetha start... dont wait... start start.." என்று கத்த அடித் தொண்டையில் எச்சிலை முழுங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.



Dear Ladies & Gentlemen,

(சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதியானது. அதில் வெறும் camera கிளிக் ஆகிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.)

இந்த ஆண்டு IOFI Annual awards function க்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கங்கள். என் பெயர் சங்கீதா. (புதியவள் என்பதால் கரகோஷம் சற்று மெதுவான சத்தத்தில் கேட்டன. கடந்த ஆண்டு compere செய்த நடிகை ஷோபனா, கீழே அமர்ந்திருந்தாள்) சென்ற ஆண்டு விழாக்களைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானவை. காரணம் IOFI fashion நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. (கரகோஷம் பலமாக ஒலித்தன..) இன்னும் வெற்றிகரமாக இதன் வேர்களை உலகின் பல இடங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவியும் வருகின்றன. இந்த நேரத்தில் IOFI நிறுவனம் உருவான கதையை சற்று பின் நோக்கி ப் பார்ப்போம். (சஞ்சனா பின்னாடி இருந்து மெதுவாக அழைத்து, "smile the crowd and continue, dont continuously bend down your head...") என்று tips சொல்ல.. சுதாரித்துக் கொண்டு அவள் சொன்னது போலவே செய்தாள் சங்கீதா..

(கூட்டத்தைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்...)

எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..)

Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த நிறுவனத்தை தலைமை தாங்குவது Mr.Raghav, அவருடைய தவப் புதல்வன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல தன் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானத்தை சேகரித்ததைக் காட்டிலும் அதைவிட 80% நிறுவனத்தின் லாபத்தை இவர் அதிகரித்துள்ளார். (கரகோஷம் பலமாக ஒலித்தன. அப்போது சங்கீதா மென்மையாக கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை தட்டல்கள் அடங்க சில நொடிகள் குடுத்து மீண்டும் ஆரம்பித்தாள்.) "பல முறை என்னையே முந்திவிட்டான் எனது தவப்புதல்வன்" என்று பெருமைப் பட்டு மார்தட்டிக் கொள்ளும் தந்தையை நாம் இங்கே நம் கண் முன் காணலாம். - என்று சங்கீதா பேசி முடிக்க camera Mr.Mahesh Yadhav மீது பாய, stage ல் உள்ள ஒரு பெரிய screen மீது projector உதவியால் அவருடைய முகம் திரையில் தெரிய அனைவரும் அதிக சத்தம் கேட்கும் வண்ணம் பலமாக கை தட்டினார்கள்.

இப்போது அவர் மேடையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வர் என்று அழைப்பு விடுத்ததும்... (கை தட்டல்கள்.)

Mr.Mahesh Yadhav பேசத் தொடங்கினார்....

விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரே ஒரு வரியை சொல்லிக்கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் IOFI, Mahesh என்கிற ஒரு ஏழையை மட்டும் கொண்டு வாழ்ந்தது, இப்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கும் மேல் France, Germany, London, USA, Italy, India, Australia ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நான் அதிகம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மற்றவர்களின் programs நடக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த IOFI சிகரத்தை எட்டுவதற்கு உலகம் முழுதும் இருந்து எனக்கு உதவி வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் பல ஜாம்பவான் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் ஹிந்தி கலை உலகை சேர்ந்த BibB அவர்களுக்கும் அசாத்திய சிந்தனை வாய்ந்த படைப்பாளி Aamir Khan அவர்களுக்கும், மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த கலை உலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் எனது ஆழ் மனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.... - என்று அவர் சொல்லும்போது கூட்டத்தில் கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போதுதான் சங்கீதாவுக்கு அவர்களும் கூட விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து ஒரு நொடி மனதுக்குள் திடுக்கிட்டாள். (பின்னாடி திரும்பி சஞ்சனாவைப் பார்த்து "அப்படியா?" என்று சங்கீதா கண்களால் கேள்வி எழுப்ப, சஞ்சனா குறும்பாக சிரித்துக் கொண்டே "ஆமாம்" என்பது போல முகபாவனை செய்தாள்)..


இப்போது அவர் கீழே இறங்கியதும். சங்கீதா பேசத் தொடங்கினாள் "நன்றிகள் திரு Mahesh Yadhav அவர்களே. விழா என்றாள் அதற்க்கு பல விஷயங்கள் உயிர் சேர்க்கும், அவைகள், பாடல்கள், இசைகள், நடனங்கள். அந்த வகையில் நமக்கெல்லாம் காதுகளில் மிகவும் இதமாக ஒலிக்க ஒரு பாடலை தரவிருக்கிறார் பாடகர் திரு உண்ணி கிருஷ்ணன் அவர்கள். (மேடையில் விளக்குகள் அனைய பாடகர் உன்னி கிருஷ்ணன் தோன்றும்போது மீண்டும் விளக்குகள் எரிந்தன.... கரகோஷம் மிதமாக எழுந்தன. - அவர் பாடிய பாடல் (click here to listen) ..... - இந்த உன்னதமான பாடலில் "சாமி தவித்தான், தாயையை ப் படைத்தான்" என்ற வரி வரும்போது கேட்கும் அனைவரது கண்களிலும் சற்று நீர்த்துளிகள் லேசாக பணித்தன. - (வாசகர்களும் இதைக் கேட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.)

இந்த பாடல் பாடும் தருவாயில் கிடைத்த சிறிய gap ல் சங்கீதா சஞ்சனாவை அருகே அழைத்து காதைத் திருகி "ஏண்டி இவ்வளோ பேர் வரப் போறாங்கன்னு "எனக்கு முன்னாடியே சொல்லல?" என்று செல்லமாக கோவித்துக் கொண்டாள். ஆஹ்ஹ்ஹ் வலிக்குது வலிக்குது.... சொல்லி இருந்தா நீங்க மேடை ஏறி இருப்பீங்களா? இப்போ பாருங்க ரெண்டு வார்த்தை பேசினதுக்கு அப்புறம் மணசு கொஞ்சம் relaxed ஆக இருக்குமே?....- என்று சொல்லிவிட்டு dressing room ல் மறந்து வைத்த mobile phone ஐ சங்கீதாவிடம் குடுத்தாள் சஞ்சனா.

உண்ணி கிருஷ்ணன் பாடல் முடிந்ததும், மீண்டும் மேடைக்கு சென்று பேசத் தொடங்கினாள் சங்கீதா..

"IOFI இன்று வரை வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஆடை அலங்காரம்தான் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் சமீபமாக design செய்த ஓரிரு ஆடைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை மனதில் வைத்து இந்த நபருக்கு நாம் பரிசளிக்க போகிறோம்." என்று ஒரு envelope பிரித்து படித்தாள். "இந்த விருதை வழங்க Mr.Mahesh Yadhav மற்றும் CEO Mr.Raghav அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். (கரகோஷம் ஒலித்தன..) இருவரும் மேடைக்கு வந்தார்கள். ராகவ் கண்களில் ஒரு பெரிய excitement கலந்த சிரிப்பு தெரிந்தது. அதற்க்கு காரணம் இப்போது தெரியும்..

And the winner is (சந்கீதவால் நம்ப முடியவில்லை. அவளுக்கு மூச்சு பேச்சில்லை ஒரு நொடி.) "come on sangeetha... read.. dont delay.... start saying the name..." - என்று பின்னாடி இருந்து சஞ்சனா மெதுவாக கத்த பெயரைப் படித்தாள் " And the winner is சங்கீதா குமார்".. (பேப்பரை அப்படியே mike அருகே போட்டுவிட்டு கண்களில் லேசான நீர்துளிகளோடு கரகோஷம் எழும்பும் சத்தத்துடன் கேட்டு அதிர்ச்சியும் சந்தோஷமும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றாள்.) ராகவ் "Come on sangeetha" என்று கூலாக சங்கீதாவை கை பிடித்து மேடையின் நடுவில் கூட்டி நிற்க வைத்தான். இப்போது உரிமையுடன் தானே மைக் எடுத்து பேச ஆரம்பித்தான் ராகவ்.

"Everybody must be thinking why this compere women is getting the award, ஹா ஹா, let me explain. She is a young energetic manager in a reputed Bank & (அமைதியில் echo ஒலித்தது) recently when sangeetha came to my office for an official purpose, she was making some designs in her dairy & when she left for the day she left her dairy too. At that time when I come to see that, I was viewing those designs with focused interest & thought to bring my visualization to reality by making these designs in cloths & it shooked the sales in certain northern parts of india. I have basically chosen her name for this award because she is the initiator of such designs & she deserves it. even though she is not an employee of our organization. Also I would like to take this moment to encourage the working come family womens to indulge in such activities like what sangeetha did and who knows........ even your design might get selected in IOFI" - என்று ஆங்கிலத்தில் stylish ஆக பேசி முடித்து தன் தந்தையிடம் மேடையிலேயே சங்கீதாவுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்தான் ராகவ். அவனது தந்தை Mahesh Yadhav awardஐ க் குடுக்கும்போது சங்கீதாவின் கண்களில் நீர்த்துளிகள் தேங்கி இருந்தவை லேசாக கண்ணத்தில் வழிந்தது. காரணம் இத்தனை கணக்கான மக்களுக்கு மத்தியில், அவளுக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதை உணர்ந்து அதை அங்கீகரித்து அவளுக்கு மேடையில் பரிசு குடுக்கும்போது இன்று வரை இப்படி ஒரு உணர்வை அவள் உணர்ந்ததில்லை, அவளுடைய மனதில் ராகவை ஒரு நொடி மகானாக கருதினாள். 


எ.. என.... இஸ்ஸ்ஹ்ஹ்..( கண்களில் நீர் வர லேசாக விசும்பி வார்த்தைகள் வர கஷ்ட்டப்பட்டது அவள் வாயிலிருந்து.) என்ன சொல்லுரதுன்னு தெரியல... Thanks.. Thank you so much.. Thanks a lot - என்று பேசுகையில் Taare Zameen Par படத்தில் தனக்கு கடைசியாக ஓவியம் வரைந்ததற்கு முதல் பரிசு தரும்போது அந்த குழந்தை எப்படி உணர்ச்சி வசப்பட்டு ஓடி வந்து aamir khan ஐக் கட்டிக்கொள்ளுமோ அதைப்போலவே மேடையிலேயே சங்கீதா அதீத சந்தோஷத்தில் ஒரு நொடி ராகவை க் கட்டி அனைத்து நன்றிகள் தெரிவித்தாள். இதையும் camera க்கள் க்ளிக்கிக்கொண்டன.


கொஞ்சம் கரகோஷத்துக்கு இடம் குடுத்து, தன்னையும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் mike ல் பேச தொடங்கினாள் சங்கீதா..

இப்போது IOFI நிர்வாகத்துக்கான ஓரிரு சொற்ப விருதுகளையும் சந்கீதவைத் தொடர்ந்து சிலருக்கு வழங்கிய பிறகு மேடைக்கு சென்று மீண்டும் அடுத்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசத்தொடங்கினாள் சங்கீதா..

கலையை ரசிக்காத மானிடர் உண்டோ இவ்வுலகில்? அப்படி இருக்க அந்த கலையுலகில் நமது உதவியுடன் கலக்கிய சில சினிமா நட்சத்திரங்களுக்கு நாம் விருதுகள் வழங்க மாபெரும் ஆட்களாக இல்லாதவர்களாக இருக்கலாம், இருப்பினும் நட்பின் அடிப்படையில் அவர்களுக்கு சில விருதுகள் குடுத்து கௌரவிக்க IOFI award jury members தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கான விருதுகளைப் பார்ப்போம்.

முதலாவது: IOFI - Best manly appearance award. இந்த விருதை வாங்கப்போகும் நபர் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

Best Manly appearance award.. (Click to view)

இந்த விருதுக்கு உரியவர் நடிகர் திரு ஆர்யா.. (கரகோஷம் ஒலித்தது.) மேடை எரிய ஆர்யா இதற்கான விருதை நண்பர் ராகவிடம் வாங்கிக்கொண்டார்.

மேடையில் விருதை வாங்கிய பின் ஓரிரு வார்த்தைகளை பேசினார் ஆர்யா. "IOFI க்கு எனது நன்றிகள். தவிர ராகவை எனக்கு நன்றாக தெரியும், அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு, மதராசபட்டினம் shooting போது emy jackson க்கு அவர்தான் உடைகள் suggest பண்ணார், அதுக்கு அப்புறம் என்னோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும், வேட்டை படத்துக்கும் பாடல்களில் வரும் உடைகளை அவர்தான் எனக்கு வடிவமைச்சார், நண்பர் ராகவ் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழுத்துக்கள். நன்றி" - என்று பேசி முடித்து விடை பெரும்போது அரங்கத்தில் "yo macho man" என்கிற சத்தத்துடன் கரகோஷம் ஒலித்தன.

நன்றி திரு ஆர்யா.. இப்போது நாம் காண இருப்பது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது.

IOFI - Best performance by female lead artist. இந்த விருதை வாங்கப்போகும் பெண் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

Best performance by female lead artist (Click to view)

மேடை எரிய நடிகை ரிச்சா, விருதை நடிகர் ஆர்யாவிடம் பெற்றுக் கொண்டார். (கரகோஷம் எழும்பி அடங்கியது.)

இந்த விருதை எனக்கு பரிந்துரைச்சதுக்கு IOFI க்கு முதல்ல எனது நன்றிகளை த் தெரிவிச்சிக்குறேன். மற்றபடி இந்த விருதுக்கு காரணமானவர் director செல்வ ரகாவந்தான். creativity is by him, I just simply executed that, thats all. other than that I love all my fans in chennai, this is all because of youuuuu... ummaahhh.... (என்று சத்தமாக mike ல் richa கத்தி பேசி ரசிகர்களை நோக்கி காற்றில் flying kiss குடுக்க, அனைத்து இளசுகளும் சத்தமாக விசில் அடித்தார்கள்) & I love chennai chennai chennai.... ( என்று தமிழ் நடிகைகளுக்கே உரிய தீர்க்க தரிசனமான வார்த்தைகளை formality க்கு சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள் நடிகை richa)

Thank you Richa.. - என்றாள் சங்கீதா..

இப்போது நாம் அனைவரும் ஒரு சிறிய நடனத்தைப் பார்க்கப் போகிறோம் அதற்க்கு அடுத்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் surprise என்று சொல்லியவுடன் பெரிய விளக்குகள் மட்டும் அணைக்கப் பட்டது. stage ல் மட்டும் இப்போது விளக்கு பளிச்சென எரிய stage ன் கூரையில் இருந்து ஒரு opening தரப்பட்டு அதில் இருந்து ஒரு இயந்திரம் stylish சங்கீதாவை இறக்கி விட, அதைப் பார்த்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், இவ்வளோ நேரம் gagra choli ல இருந்தவளா இவ? - என்று அனைவரும் மூக்கின் மீது விரல் வைத்தனர்.


இப்போது கலா மாஸ்டர் கற்றுக் குடுத்த இடுப்பு நடனத்தை அவர் சொல்லித்தந்த விதம் ஆடுகையில், முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம் சங்கீதாவுக்கு, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளது வாழ்கையில் அவள் கணவு கூட கண்டதில்லை, இந்த நடனத்தை க் கீழே ராகவ் (கீழே குறிப்பிட்டுள்ள videoவில் salman னை கற்பனை செய்துகொள்ளவும்....) ரசித்து பார்த்து கைதட்டி குதூகலப்படுத்தினான். அதை சங்கீதாவும் ரசித்தாள், அப்போது பின்னாடி சஞ்சனவுடன் அவளது மகள் ஸ்நேஹாவும் பார்த்து கைத் தட்டுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். பாராட்டுக்கும், கரகோஷத்துக்கும், ஏங்கும் மானிடர்களுக்கு மத்தியில் சங்கீதா விதிவிலக்கல்ல....

(சங்கீதாவின் அரங்கம் அதிரும் நடனம் - please watch and proceed further)

(இந்த நடனத்தில் sheila என்கிற பெயருக்கு பதில் சங்கீதா என்று நீங்களே மனதில் எண்ணிக்கொள்ளுங்கள் - இது அனைத்து வாசகர்களும் முழுமையாக பார்க்க வேண்டிய நடனம்.)

இப்போது நடனம் முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு நடனம் ஆடிய அதே costume ல் mike பிடித்து பேச வந்தாள் சங்கீதா..

அடுத்ததாக நாம பார்க்க இருக்கிறது சிறந்த வில்லனாக நடித்த கதாப்பாத்திரத்துக்கு குடுக்கப்போகும் விருது.

IOFI award - Best villain performance by a Hero. இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

Best villan performance by a Hero.. (Click to view)

வீடியோ முடிந்ததும், மூளை முடுக்குகளில் இருந்தும் தல தல என்று கூச்சலும், விண்ணைத் தொடும் விதம் விசில்களும் பறந்தன. அனைத்தையும் அன்புடன் பெற்று அமைதியாய் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் மேடை ஏறினார் ultimate star அஜித்.

தனது விருதை ஹிந்தி நடிகர் Aamir khan னிடம் இருந்து பெற்றார் அஜித்.

மெதுவாக பேச ஆரம்பித்தார் - "இந்த விழாவுக்கு நான் வந்ததுக்கு காரணம் Mr.Mahesh Yadhav மேல எனக்கு இருக்குற மரியாதையும் , ராகவ் கிட்ட எனக்கு இருக்குற நட்பும் அவர் நான் நடிச்ச பில்லா படத்துல costume designer ஆக வேலைப் பார்த்த போது அவர் கிட்ட நான் பார்த்த தொழில் அற்பனிப்பும்தான். அதற்க்கு எனது பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழுத்துகிறேன். நன்றி." - என்று சிறிதளவில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போதும் அதே சத்தமான கரகோஷம்.


நன்றிகள் திரு அஜித் அவர்களே - என்றாள் சங்கீதா.

அடுத்ததாக சிறந்த cool action performance வரிசையில், இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

IOFI - Best cool action performance award.... (Click to view)

திரையில் வீடியோ கிளிப்பிங் முடிந்ததும், விசில்கள் மூளை முடுக்குக்கும் பறந்தது. "தளபதிதிதி" என்று உற்சாக குரல்கள் ஆடிட்டோரியம் முழுவதும் அனைவரது காதுகளையும் துழாவி எடுத்தது. கை தட்டி ஆரவாரித்து ரசிகர்கள் தங்களது பாசத்தை இளையதளபதி மேடைக்கு வருகையில் கொட்டினார்கள்.

மேடையில் தனக்கான விருதை நண்பர் அஜித்திடம் மகிழ்ச்சியாய் ப் பெற்றார் விஜய்.