Tuesday 31 March 2015

சுகன்யா... 85

"சுகு... நான் செல்வா.." அவன் குரலில் எல்லையற்ற பரிவும், கனிவும் வழிந்தோடியது.

சுகன்யாவின் வீட்டு ஹாலில் நடராஜனும், மல்லிகாவும், தங்களுடைய வருங்கால சம்பந்தியிடம் மனம் விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். சுகன்யா மல்லிகாவின் பக்கத்தில் உட்க்கார்ந்திருந்தாள்.

"அத்தே.. ஒரு செகண்ட்.. இப்ப வர்றேன்..." மல்லிகாவிடம் சொல்லிக்கொண்ட சுகன்யா, செல்வாவின் நம்பரை தன் செல்லில் பார்த்ததும் எழுந்து மாடிக்கு வேகமாக ஓடினாள்.

"தேங்க் யூ... தேங்க் யூ... செல்வா" படிகளில் தாவிக்கொண்டே பேசினாள். மூச்சிறைக்க கட்டிலில் படுத்துக்கொண்டாள். செல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

ஒரு வாரமா இவனை என் வழிக்கு கொண்டு வரணும்ன்னு தவிச்சிக்கிட்டு இருக்கேன். இந்த மீனா நிஜமாவே கில்லாடியா இருக்கணும். ஒரு மணி நேரத்துல இவனை எனக்குப் போன் பண்ண வெச்சுட்டாளே? சுகன்யாவின் மனது துள்ளியது.



"சாரிம்மா சுகு... அயாம் ரியலி சாரி.." செல்வாவின் குரல் கரகரத்தது.

"பரவாயில்லேப்பா. நீ சாரில்லாம் சொல்ல வேண்டாம். நீ எங்கிட்ட பேசிட்டியே அதுவே போதும் எனக்கு." சுகன்யாவின் குரல் கம்மியது

"ஹேய்... அழறியாம்மா...? சுகா ப்ளீஸ்... என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதே. என்னை மன்னிச்சிட்டேன்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு."

"எனக்கு இப்பவே உன்னைப்பாக்கணும்.. அர்ஜெண்டா ஒரு விஷயம் இன்னைக்கு நான் உங்கிட்ட பேசியே ஆகணும்பா.." சுகன்யாவுக்கு மூச்சு சீராகிக்கொண்டிருந்தது.

"நாளைக்கு எங்க வீட்டுக்கு வரத்தானே போறே நீ?"

"ஆமாம் வரத்தான் போறேன்..."

"பின்னே?"

"செல்வா பிளீஸ்.. நான் சொல்றதைக் கேளு. திஸ் மேட்டர் இஸ் அல்ரேடி டிலேய்ட் பை எ வீக் நவ்."

"இப்ப என் அப்பா... அம்மா அங்கே இருக்காங்களா?"

"ம்ம்ம்.. கீழே ஹால்லே பேசிக்கிட்டு இருக்காங்க."

"சுகு... நான் பத்து நிமிஷத்துல உன் வீட்டுக்கு வர்றேன்.. நீ ரெடியா இரு..."

"தேங்க் யூ செல்வா."

***

செல்லை அணைத்து விட்டு, கட்டியிருந்த புடவை, பாவாடையை உருவி எறிந்தாள். பிரா, பேண்டீஸுடன் பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டாள். புதிதாக வாங்கியிருந்த, நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற டாப்ஸையும் எடுத்து போட்டுக்கொண்டாள். முகத்தில் இலேசாக பவுடரை அடித்துக்கொண்டாள். அவளுடைய இளமைகள் ஊஞ்சலாடாத் தொடங்கின.

"தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லே" வாய்விட்டு பாட ஆரம்பித்தாள்.

"ஒரு வாரமா ஒழுங்கா சோறுகூடத் தின்னாமா பொலம்பிக்கிட்டு இருந்தியே... அதுக்கு என்ன பேரு?"

"நீ சும்மா இரு... இப்ப என்னைக் கண்டுக்காதே" எதிர் கேள்வி கேட்ட மனசுக்கு கடுமையான உத்திரவிட்டாள்.

கூந்தலை வேகவேகமாக வாரி ரப்பர் பேண்ட்டுக்குள் இறுக்கிக்கொண்டு, தன் தோள் பையிலிருந்து, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு, ஹாலுக்கு வந்தாள். முகத்தில் ஒரு பிரகாசம் வந்திருந்தது.

"யாரும்மா சுகா போன்ல? உன் அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க... இப்ப வெளியே போறியா என்ன?"

சுந்தரி தன் முகத்தை நிமிர்த்தினாள். தன் பெண் மட்டுமே புரிந்துக்கொள்ளக்கூடிய அளவில் முகத்தில் தன் எரிச்சலைக் காட்டினாள். இப்ப எதுக்குடீ ஒழுங்கா கட்டிக்கிட்டு இருந்த புடவையை அவுத்துப் போட்டுட்டு இந்த ஜீன்ஸ் சனியனைப் போட்டுக்கிட்டு வந்து நிக்கறே? வீட்டுக்கு வந்திருக்கறவங்க என்ன நினைப்பாங்கங்கற புத்தி கொஞ்சமாவது வேண்டாம்? தாயின் மனதில் ஓடும் எண்ணம் சுகன்யாவுக்கும் புரிந்தது.

"அவருதாம்மா..." முகத்தில் கெஞ்சலுடன் தாயை நோக்கினாள்.

"யாரு... நம்ம மாப்பிள்ளையா?" குமாரசுவாமி முகத்தில் புன்னகையுடன் வினவினார்.

"ஆமாம்பா..." முகத்தில் வெட்கம். சட்டெனச் சிவந்தாள் சுகன்யா.

"மாப்பிள்ளை என்ன சொல்றார்..?" அவர் முகத்தில் சிரிப்பு மேலும் விரிந்தது.

"மீனாவுக்கு பர்த் டே கிஃப்ட் வாங்கணும், இந்த ஏரியாவுல நல்ல கடை எங்கேருக்குன்னு கேட்டேன்... நான் வர்றேன்னார்.." கோச்சிக்காதேம்மா... அவருக்கு புது டிரஸ் போட்டுக்காட்டணும்ன்னு ஆசையா இருக்கும்மா... போய்ட்டு சீக்கிரம் வந்துடறேம்மா... தன் மனதிலிருப்பதை தன் கண்களால் அம்மாவிடம் சொன்னாள்.

"குட் ஈவீனிங் அங்கிள்... தாத்தா நல்லா இருக்கீங்களா? எப்ப வந்தீங்க ஊர்லேருந்து?" உதட்டில் புன்னகையுடன், செல்வா கையில் பைக் கீயை விரலில் சுழற்றிக்கொண்டே உள்ளே நுழைந்தான். சிவதாணுவின் காலைத் தொட்டு வணங்கினான்.

"சிவ.. சிவா... நல்லாயிருக்கணும்."

"நீங்க எல்லோரும் வீட்டுக்கு வந்து மீனாவை ஆசிர்வாதம் பண்ணணும்" பொதுவாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டான், செல்வா.

பாத்தீங்களா என் புள்ளை எவ்வளவு புத்திசாலி... மனதுக்குள் மெச்சிக்கொண்ட மல்லிகா, தன் மனதில் எழுந்த எண்ணத்தை முகத்தில் கொண்டு வந்து, தன் கணவர் இடுப்பில் தன் முழங்கையால் உரசி அவரைப்பார்த்து புன்னகைத்தாள் மல்லிகா.

"இருட்டறதுக்குள்ளே வந்துடுங்கோ..." குமாரசுவாமி உத்தரவு கொடுத்தார்.

"அத்தே... போய்ட்டு வந்திடறேன்..."

"சரிம்மா... சந்தோஷமா போய்ட்டு வாம்மா..."

இந்த ஜீன்ஸ்லேயும் டீசண்டா, அம்சமாத்தான் இருக்கா என் மருமவ.. மனசுக்குள் ஒரு சந்தோஷம் கிளம்பியது மல்லிகாவுக்கு.

"சுகா... காசு எடுத்துக்கிட்டியாம்மா..." அப்பா ஃபர்ஸைத் திறந்தார்.

"இருக்குப்பா..."

சுகன்யா பைக்கில் ஏறி உட்கார்ந்ததும், சீறிக்கொண்டு பறந்தான் செல்வா. மெயின் ரோடுக்கு வந்ததும், சுகன்யா தன் மார்புகளிரண்டும் அவன் முதுகில் அழுந்த சாய்ந்துகொண்டாள். தன் இரு கைகளையும் அவன் வயிற்றில் கோத்துக்கொண்டள். அவளுடைய பருத்த தொடைகள் அவன் தொடைகளை உரசிக்கொண்டிருந்தன. செல்வா சூடாக ஆரம்பித்தான்.

"மெதுவா போப்பா..." சுகன்யா அவன் காதைக் கடித்தாள்.

"ப்ஸ்ஸ்ஸ்... சும்மா இருடீ..."

"நான் உன்னை கடிப்பேன்.. ஒதைப்பேன்... என் இஷ்டம்.. என்ன வேணாப் பண்ணுவேன்... ஒரு வாரமா என்னை அழுவ வெச்சியே நாயே.." அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

"உனக்குத்தான் வலிக்கும்.. சொல்லிட்டேன்..." சுகன்யாவின் துள்ளும் முலைகள் அவன் மார்பில் படிந்ததுமே, செல்வா தன் இயல்பான நிலைக்கு வந்துவிட்டான்.

"டார்லிங்... ஜீன்ஸ்ல செமையா இருக்கேடீ..."

"ச்சீ... என்ன செமையா இருக்கு...?"

"உன் பின்னாடி அசையுதே அந்த ரெண்டு புட்பாலையும் தான் சொல்றேன்..." தன் முதுகை அவள் மார்பில் அழுந்த உரசினான் செல்வா. சுகன்யாவின் காம்புகள் விறைக்க ஆரம்பித்தன. வலுவாக இறுக்கிக்கொண்டாள் அவள்.

"சனியனே... அசிங்கமா பேசாதடா... இப்பவே எனக்கு மார்லே கனக்க ஆரம்பிச்சிடிச்சி..."

"வேணாம்டீ... வேணாம்... இப்படி பேசியே நீ சூட்டைக் கிளப்புவே.. அப்புறம் நடு ரோடுல அம்போன்னு விட்டுட்டு போயிடுவே.. ராத்திரிக்கு நான்தான் கையில புடிச்சிக்கிட்டு ஆட்டிக்கணும்..."

"சாரிப்பா... திருப்பியும் பழசை கிளறாதே செல்வா.." மீண்டும் அவன் காது கடிபட்டது.

"மீனாவுக்கு என்ன வாங்கப்போறே நீ?"

"அவகிட்ட புது மாடல்லே ரிஸ்ட் வாட்ச் இல்லேன்னு நினைக்கிறேன்.."

"யெஸ்..."

"அப்ப நல்ல ப்ராண்டட் வாட்ச் கடைக்கு போ... "

"உன் பட்ஜெட் என்னம்மா சுகா...?"

"டென் டு ட்வெல்வ் தவுசண்ட்"

"எதுக்கும்மா இவ்வளவு காஸ்ட்லியா வாங்கறே?"

"என் ஃப்ரெண்ட் அவ... தட்ஸ் ஆல்..."

"ஓ.கே. மேடம்.."

மீனாவின் மெல்லிய மூங்கில் போன்ற கைக்கு ஏற்ற மாதிரி அழகான வாட்ச் ஒன்றை வாங்கிக்கொண்டார்கள். காலியாக இருந்த பேமிலி ரூமில் உட்க்கார்ந்து காஃபி குடித்தார்கள். பேரர் வருவதற்குள் ஒருவரை ஒருவர் வெறியுடன் முத்தமிட்டுக்கொண்டார்கள்.

ஒரு வாரத்திய மனஇறுக்கம் குறைந்தவர்களாக எதிரில் வருபவர்கள் முகம் தெரியாத இருட்டில் சுகன்யாவைத் தழுவியபடி கடற்கரை மணலில், கால்கள் பதிய பதிய நடந்தான் செல்வா.

***

"சுகு... சொல்லும்மா... என்ன பேசணும் உனக்கு..?"

சுகன்யா பதில் பேசாமல் அவனை இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டாள். அவன் கழுத்துக்கு கீழ் தன் கையை கொடுத்து தன் மார்பில் அவன் முகத்தை புதைத்துக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள். செல்வா விக்கித்துப்போனான்.

"என்னம்மா சுகு... எதுக்கு இப்ப அழுவறே நீ?"

"எப்ப என் கழுத்துல தாலிக்கட்டப்போறே நீ?" சுகன்யாவின் சூடான கண்ணீர் அவன் கன்னத்தில் விழுந்தது.

செல்வா விருட்டென சுகன்யாவின் மடியிலிருந்து எழுந்தான். அவளைத் தன் மடியில் கிடத்தி அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான். அவள் உதடுகள் அவன் வாய்க்குள் மெல்லத் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய இதழ்களின் துடிப்பு அடங்கும் வரை அவன் தன் உதடுகளின் அழுத்தத்தை குறைக்காமலிருந்தான்.

"சுகா.. என்னம்மா இது குழந்தை மாதிரி பிஹேவ் பண்றே?"

"என்னால முழுசா ஒரு வாரம் உன்கிட்ட பேசாம இருக்க முடியலே. நீ சீட்லே இருந்துகிட்டே இல்லேன்னு சொல்லி என்னை சாவடிச்சு சுண்ணாம்பா ஆக்கறே."

"முடிஞ்சக்கதையை திரும்பவும் பேசாதேன்னு நான் சொல்றேன்.."

"சரி... நடக்க வேண்டியக் கதையை நான் சொல்றேன். இன்னும் இருபது நாள்லே உன்னை விட்டுட்டு நான் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் போயே ஆகணும். இந்த நெனைப்பையே என்னாலத் தாங்கிக்க முடியலேடா." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினாள்.

"எங்கே போகப்போறே நீ...?"

செல்வாவின் குரலில் அவன் திடுக்கிட்டது தெளிவாகத் தெரிந்தது. தன்னை விட்டு அவள் தூரமாகப் போகவேண்டும் என்று சொன்னதுமே அவன் கரங்களின் இறுக்கம் சுகன்யாவின் முதுகில் அதிகமாகியது. அவளுக்கு மூச்சுத் திணறியது. 




"இப்டியே என்னை இறுக்கி கட்டி, என் கழுத்தை அழுத்தி ஒரே தரமா கொன்னு அந்தக் கடல்லே தூக்கிப் போட்டுட்டு, ஒரு தரம் என் பேரைச்சொல்லி, உன் தலையை முழுகிடு... எனக்கு நிம்மதியாப் போயிடும்..." சுகன்யா முனகினாள்.

"ஏய்.. வாயை மூடுடி சனியனே... இந்த மாதிரி எதாவது இன்னொரு தரம் பேசினே... உன் பல்லுமேலேயே ஓங்கிப் போடுவேன்.. மேட்டரைச் சொல்லுடின்னா... இப்பல்லாம் பேசி பேசியே என்னைக் கொல்றே நீ.." செல்வா தன் பற்களை கடித்தான்.

"நான் டில்லிக்கு போயே ஆகணும்.. ஒரு மாசம் ட்ரெய்னிங் ப்ரீயட் இப்ப மூணு மாசமா ஆயிடிச்சி..." சுகன்யாவின் குரல் நடுக்கத்துடன் வந்தது.

"ஓ மை காட்..." செல்வா முணுமுணுத்தான்.

"மே மாசம் ஃப்ர்ஸ்ட் வீக்ல நான் அங்கே இருந்தாகணும்.. இன்னும் இருபது நாள்தான் பாக்கி இருக்கு... அதுக்குள்ள என் கழுத்துல நீ தாலியைக் கட்டிடு... எனக்கு அது போதும்... அந்த தாலியைப் பாத்துக்கிட்டேன் நான் பொழுதை ஓட்டிடுவேன்." சுகன்யா அவன் கன்னத்தில் வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தாள்.

"என்னடி பண்றது இப்ப?"

"ஆம்பிளைதானே தாலி கட்டணும்... என்னை ஏன் கேக்கறே..?"

"பின்னே.. யாரைடீ கேக்கறது நான்? குசும்பு ஜாஸ்தியாயிடிச்சிடி உனக்கு.."

"அப்ப நான் சொல்றதை நீ செய்"

"சொல்லு..."

"எழுந்திருச்சி, நேரா என் வீட்டுக்கு போவலாம்.. என் அம்மா ஒரு பிளாஸ்டிக் டப்பா நிறைய தாலிக்கயிறு வெச்சிருக்காங்க... அதுல ஒரு கவுத்தை எடுத்து என் கழுத்துல கட்டிடு.. அப்படியே உன் நேரா உன் வீட்டுக்குப்போய் என் மாமானார், மாமியார் கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்."

"நடக்கற கதையைப் பேசுடீ செல்லம்..." செல்வா அவள் முகத்தில் அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தான்.

"உன் வீட்டு மாடிலே... ரூம் நல்ல வசதியாத்தானே இருக்கு... இன்னைக்கு ராத்திரியே ஜாலியா நம்ம ஃப்ர்ஸ்ட் நைட்டை அங்கே கொண்டாடிடலாம். இது உன்னால முடியாதா?" சுகன்யா அவன் வலது கரத்தை எடுத்து தன் இடது மார்பில் அழுத்திக்கொண்டாள்.

"ம்ம்ம்... என்னடீ ரொம்ப சாஃப்டா இருக்கு இன்னைக்கு... உள்ளே ஒண்ணும் போடலியா?" செல்வா முனகிக்கொண்டே அவள் டாப்ஸுக்குள் தன் கையை நுழைத்தான்.

"ப்ளீஸ்... கொஞ்சம் தடவி விடுடா... என்னால பொறுத்துக்க முடியலே... வெட்கத்துடன் சுகன்யா அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். இருட்டு அவர்களுக்கு சாதகமாக இருந்தது. செல்வாவின் வலது கை அவள் முலையை இதமாக தடவிக் கொண்டிருந்தது.

"ம்ம்ம்ம்." முனகினாள் சுகன்யா.

"உங்க வீட்டுல இதைப்பத்தி சொல்லிட்டியா?"

"எதைப்பத்தி.. ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாடறதைப் பத்தியா?"

"ஏண்டீ... ஒரு முடிவோடத்தான் நீ வந்திருக்கியா இன்னைக்கு? செல்வாவின் கை அவள் மார்பை அழுத்தமாக நசுக்கியது.

"எம்ம்மா.. மெதுவாடா... உங்கிட்டத்தானே மொதல்லே சொல்லணும்... ஒரு வாரமா கால் மேல கால் பண்றேன்.. நீ என்னைக் கொல்லாம கொண்ணுக்கிட்டு இருந்தே..."

சுகன்யா அவன் கன்னத்தை ஆசையுடன் கடித்தாள். அவன் கரத்தை தனது அடுத்த மார்புக்கு மாற்றிக்கொண்டாள். செல்வாவின் கை அசையாமலிருந்தது.

"என்னப்பா யோசனை"

"இன்னைக்கு ராத்திரி என் அப்பாக்கிட்டே பேசறேன்... நாளைக்கு நீங்க என் வீட்டுக்கு வரும்போது ஒரு முடிவு எடுத்துடலாம்." சுகன்யாவின் சூடான உதட்டில் அழுத்தமாக ஒரு முறை முத்தமிட்டான் செல்வா.

"தேங்க் யூ செல்வா..." சுகன்யாவின் வலது கரம் செல்வாவின் இடுப்பில் கிடந்தது. செல்வாவின் இடது கை அவள் கழுத்தில் கிடந்தது. இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

"சுகா..."

"ம்ம்ம்ம்..."

"உன் வீட்டிலேயும் இதைப்பத்தி இன்னைக்கு நைட்டே நீயும் இன்ஃபார்ம் பண்ணிடு..."

"சரி..."

தீடிரென கடற்கரை சாலையிலிருந்து விளக்குகள் அணைந்தன. பவர்கட் சனியன்... செல்வா முனகினான். சுகன்யாவுக்கு தீடிரென இனம் தெரியாத ஒரு பயம் அவள் உடலைத் தழுவியது.

"செல்வா... பிளீஸ்... கிஸ் மீ..." சுகன்யா சட்டென நின்று அவனை இறுகத் தழுவிக்கொண்டாள்.

அவர்கள் உதடுகளுக்கு இருட்டு சாதகமாகத்தான் இருந்தது. உதடுகளுக்கு இருட்டைப்பற்றியோ, வெளிச்சத்தைப்பற்றிய கவலையே இல்லை. நான்கு உதடுகள் ஒன்றை ஒன்று ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன.



சுகன்யாவின் மனதில் எழுந்த பயம் மட்டும் முழுமையாக விலகவில்லை. செல்வா அவளை வீட்டில் ட்ராப் செய்தபின்னும் அவள் மனதில் அந்த பயம் அவளைத் தொடர்ந்தது.

ஹாலில் உட்க்கார்ந்து கொண்டு, தன் வீட்டில் தான் டெல்லிக்குப் போகவேண்டிய விஷயத்தை சொன்னபோதும், உடலில் சிறிய நடுக்கத்துடனேயே அவள் பேசினாள்.

பேத்தி பேசிக்கொண்டிருந்தது அனைத்தும், பக்கத்து ரூமில் படுத்திருந்த சிவதாணுவின் காதில் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது.

"சிவ... சிவா..." சிவதாணு மனதுக்குள் முனகிக்கொண்டார். பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி கனகாவின் மெலிந்த கரத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். அன்புடன் அவள் கரத்தை மெல்ல வருடினார்.

சுகன்யாவின் கட்டங்களும், கட்டங்களில் கிடந்த கிரகங்களும், அவர் மனதில் ஒருவர் பின்னால் ஒருவராக வந்து போனார்கள். கடைசியாக வந்த ராகு அவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான். 



சுகன்யா... 84

திருவான்மியூரில், குமாரசுவாமியின் குடும்பத்தினருக்காக, சீனு பார்த்திருந்த வீடு, தனிக்காம்பவுண்டில், வராந்தாவும், அதைக்கடந்ததும், ஒரு பெரிய ஹாலும், ஹாலுக்கு இடது வலது புறங்களில் மூன்று ரூம்களும், இரண்டு பால்கனிகளும், பூஜைக்கென கதவுடன் கூடிய ஒரு தனியிடமும், கிச்சன், பாத்ரூம் என கீழ்ப்போர்ஷனில், புழங்குவதற்கு வசதியாக இருந்தது.

மாடியிலும், இரண்டு பேர் தங்குமளவுக்கு ஒரு அறை இருந்தது. அறைக்குப் பின் மொட்டை மாடியாக இருந்தது. 'மாடியில ஒரு ரூம் இருக்கற வீடாப் பாருங்கப்பா...' அப்பாவிடம் தன் விருப்பமாக சுகன்யா சொல்லியிருந்தது இந்த ஒரு கண்டீஷன்தான். மாடி அறைக்கு வெளியில் பாத்ரூமும், டாய்லெட்டும் இருந்தன. அங்கிள், சுகன்யா வில் செர்டன்லி லைக் திஸ் அக்காமடேஷன் என சீனு சிரித்துக்கொண்டே சொன்னான்.



வீட்டு காம்பவுண்டுக்குள் இரண்டு கார்களை நிறுத்திக் கொள்ளுமளவுக்கு தாராளமாக காலி இடமும் இருந்தது. சிறிய லானில் புற்கள் பச்சைபசேலென கட்டுக்கு அடங்காமல் வளர்ந்திருந்தன. ஒரு முறை ஒழுங்காக வெட்டி சுத்தம் செய்துவிட்டால், பின் மாலையில் அங்கு சவுகரியமாக உட்க்கார ஒரு சிமெண்ட் பெஞ்சும் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டைக்கட்டியவன் வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் கட்டியிருக்கவேண்டும் என குமாரசுவாமி நினைத்தார்.

வீட்டுக்குப் பின்னால் நான்கைந்து தென்னை மரங்களும், வேப்ப மரமொன்றும், நாரத்தை மரம் ஒன்றும் காற்றில் தலையாட்டிக் கொண்டிருக்க, வீடே குளுகுளுவென இருந்தது. சுந்தரிக்கு இந்த வீடு நிச்சயமாகப் பிடித்துவிடுமென குமாரசுவாமியின் மனதுக்குப்பட்டது.

வீட்டுக்கு அவ்வப்போது வரும் தன் மச்சினர் ரகுவோ, அல்லது வேறு யாராவது விருந்தினர்களாக வந்தாலும், அவர்களைத் தங்கவைத்து உபசரிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில், வாடகை சிறிது அதிகமாக இருந்தபோதிலும், மொத்தத்தில் வீடு குமாரசுவாமிக்கு வெகுவாகப் பிடித்துப்போக, தங்களது உபயோகத்துக்காக முழு வீட்டையும் அவர் வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.

நடராஜன் வீட்டிலிருந்து, அவர் பார்த்த வீடு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், சுகன்யாவின் திருமணத்துக்குப் பின்னும், நினைத்த போது, வீட்டுப்பெண்கள் அவளைப் பார்த்துவிட்டு வர வசதியாக இருக்கும் என அவர் நினைத்தார். மறு யோசனை செய்யாமல், உடனே வீட்டுக்காரனிடம் அட்வான்ஸும் கொடுத்துவிட்டு, சீனுவுக்கு நாலு முறை நன்றி சொன்னார்.

சுந்தரியும், அவருடைய பெற்றோர்களும் சென்னைக்கு அந்த வார இறுதியிலேயே வந்துவிட்டார்கள். சுகன்யாவும், மாணிக்கத்தின் வீட்டையும், வேணியையும் கொஞ்சமும் பிரிய மனமில்லாமல், மனதில் சிறிது வருத்தத்துடனேயே, தன் சாமான்களை எடுத்துக்கொண்டு புது வீட்டிற்கு வந்து சேர்ந்து ஒரு வாரமாகியிருந்தது.

சனிக்கிழமையன்று லஞ்சுக்குப்பின்னர் பாட்டியுடன் பேசிக்கொண்டே, சுகன்யா தன் சாமான்களை மாடியறையில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, அவளுடைய செல் சிணுங்க, அதில் செல்வாவின் நம்பர் மின்ன, மனதுக்குள் சட்டென பொங்கிய சந்தோஷத்துடன், பால்கனியில் வந்து நின்றுகொண்டு, மெல்லியக்குரலில் பேச ஆரம்பித்தாள் அவள்.


"செல்வா, என் மேல உனக்கிருக்கற கோபம் ஒரு வழியாத் தீந்துதா...?

"..."

"இல்லே இவ உயிரோடத்தான் இருக்கறளா இல்லையா... இதைத் தெரிஞ்சுக்கலாம்னு போன் பண்ணியா? இப்படி என்னை அழ வைக்கறதுல உனக்கு என்னப்பா சந்தோஷம்?"

செல்வா ஒருவாரமாக அவளுடன் பிடிவாதமாக பேசாமல் இருந்ததால், மனதில் உண்டாகியிருந்த ஏக்கமும், ஆற்றாமையும் ஒரு புறம் அவளை தீவிரமாக அழுத்த, மறுபுறத்தில் கடைசியில் தன்னை செல்லில் அவன் கூப்பிட்டுவிட்டான் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் சிணுங்கினாள் சுகன்யா.

"..."

"பேசுடா.. செல்வா... உன் மேல எந்தத் தப்பும் இல்லேன்னு நீ நினைக்கறே. நான் அதையும் சரின்னு ஒத்துக்கறேன். அன்னைக்கு என் ரூம்ல நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீ நினைச்சா, அதுக்கு நான் திரும்பவும் ஒரு தரம் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்... செல்வா ரியலி அயாம் சாரி..."

"..."

"எத்தனைத்தரம் நான் உனக்கு சாரி சொல்லணும்? நீ இப்படி பிஹேவ் பண்றது நிச்சயமா சரியில்லே... எங்கிட்ட பேசறதுக்கு உனக்கு இவ்வளவு தயக்கமா?

"..."

சுகன்யாவுக்கு திடுமென சந்தேகம் வந்தது அடுத்தமுனையில் இருப்பது செல்வாதானா? இல்லே வேறு யாராவது செல்வாவின் செல்லில் தன்னிடம் பேசவிரும்புகிறார்களா? யாருன்னு கேக்காமலே நான் பாட்டுக்கு அறிவில்லாம பேசிக்கிட்டேப் போறேன்?

"செல்வா.. நீதானே போன் பண்ணது?"

"சுகன்யா... நான் மீனா பேசறேன்... அயாம் சாரி... நான் நெனைச்சது சரியாத்தான் இருக்கு.."

"நீயாடீ மீனா..? நல்லதாப் போச்சு.. உங்கிட்டத்தானே நான் உளறியிருக்கேன்... இதுவே உன் பேரண்ட்ஸா இருந்திருந்தா நான் செத்தேன்..."

"ஏண்டீ இப்படீல்லாம் டிஜக்டடா பேசறே நீ?"

"நீ ஏண்டி செல்வா செல்லுலேருந்து என்னைக் கூப்பிடறே... உன் செல்லு என்னாச்சு... சரிடீ.. இப்ப என்ன சரியா இருக்குன்னு நீ சொல்றே?"

சுகன்யா பேசியது அவளுக்கே கேட்கவில்லை. ப்ச்ச்ச்.. எங்களுக்குள்ள இருக்கற சச்சரவு, மூணாவது ஆளா, இப்ப இவளுக்கும் தெரிஞ்சுப் போச்சு. தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் சுகன்யா.

"உனக்கும், செல்வாவுக்கும் நடுவுல திருப்பியும் எதாவது சண்டையா? உங்க பர்சனல் விஷயத்துல நான் தலையிடறேன்னு நினைச்சுக்காதே... எனக்கென்னமோ ஒரு வாரமாவே ஒரு சின்னச் சந்தேகம் இருந்தது. அதனாலத்தான் செல்வா போன்லே உன்னைக் கூப்பிட்டேன்..."

"நீ நினைக்கற மாதிரில்லாம் ஒண்ணுமில்லேடீ.."

"சுகா... நீ பொய் சொல்லாதே... உன் குரலே சொல்லுது... சம்திங்க் ஈஸ் ராங்... இந்த வாரத்துல மட்டும் நீ செல்வாவுக்கு இருபத்தெட்டு கால் பண்ணியிருக்கே. ஒரு நாளைக்கு உனக்கு பத்து கால் பண்ற செல்வா, ஒரு கால் கூட அவன் உனக்கு பண்ணவே இல்லே. உன் கால் வந்தா சட்டுன்னு கட் பண்றான் அவன். ஒரு வாரமா அவனும் மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டு வீட்டுல உர் உர்னு இருக்கான். நான் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். உண்மையைச் சொல்லு. என்ன நடக்குது உங்களுக்குள்ளே?"

"உன் சந்தேகம் சரிதான்டீ... செல்வா எங்கிட்ட கோவமா இருக்கார்..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.

"என்னப்பா சுகா... என்ன விஷயம்...? எங்கிட்ட சொல்லக்கூடாதா? நான் என்னன்னு கேட்டிருப்பேன்ல்லா அவனை." மீனா உரிமையும், ஆதரவுமாக பேசினாள்.

"மீனா.. ப்ளீஸ்... நீ ஒண்ணும் அவரைக் கேட்டுடாதே? உன் கிட்ட சொல்ல எனக்கு மனசு துடிக்குதுடீ... ஆனா நீ செல்வாவோட தங்கை... என் வருங்கால நாத்தானார்... அதனால உன் கிட்ட எங்கப் பிரச்சனையைச் சொல்லவும் கொஞ்சம் தயக்கமா இருக்குடி..."

"சுகன்யா... நீ ஒரு மேட்டரை நல்லாப் புரிஞ்சுக்கோ. உன் கல்யாணத்தால, நமக்குள்ள ஏற்படப்போற சொந்தத்தை விட, நம்மோட ஃப்ரெண்ட்ஷிப்பைத்தான் நான் அதிகமாக மதிக்கிறேன். உன்னை என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டா நான் நினைக்கிறேன்... நான் உன் ஃப்ரெண்டுடீ... இதை எப்படி நீ மறக்கலாம். நீ அழறதை என்னாலப் பொறுத்துக்க முடியாது... மொதல்லே நீ விஷயத்தைச் சொல்லு..."

"நான் இதைப் போன்ல பேசவேணாம்ன்னு பாக்கறேன்... மீனா... நாளைக்கு நாம எங்கேயாவது தனியா மீட் பண்ணலாமா? இல்லேன்னா என் வீட்டுக்கு வாயேன் நீ.."

"நான் உன் வீட்டுக்கு நாளைக்கு வரமுடியாது... நீ தான் என் வீட்டுக்கு வரணும்.." மீனா குறும்பாகச்சிரித்தாள்.

"ஏண்டீ இப்படி மொக்கைப் போடறே நீ?"

"சுகா.. நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பண்ணத்தான் போறோம்... இன் ஃபேக்ட்.. உன்னை எங்க வீட்டுக்கு இன்வைட் பண்றதுக்குத்தான் நான் இப்ப போன் பண்ணேன். அப்பாவும் ஈவினிங் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்கார். நீங்க எல்லாரும் நாளைக்கு எங்க வீட்டுக்கு வரணும்..."

"என்ன விஷயம்டீ?"

"ஒரு குட் நீயூஸ்... எனக்கு வேலை கிடைச்சுடிச்சு சுகா... அதுவும் சென்னையிலேயே போஸ்டிங் குடுத்திருக்காங்க. காலையிலத்தான் எனக்கு மெயில் வந்தது... எனக்கு எக்ஸாம் முடிஞ்ச மறுநாளே நான் வேலையில ஜாய்ன் பண்ணணும்..."

"கங்கிராட்ஸ்டீ மீனா..."

"தேங்க் யூ... தென்... எனக்கு நாளைக்கு பர்த் டே..."


"அட்வான்ஸ்ல உனக்கு "ஹேப்பி பர்த் டே டு யூ" மீனா.. அயாம் வெரி வெரி ஹாப்பிடீ..."

"தேங்க் யூ சுகா.."

"அப்புறம்... சீனு வீட்டுலேருந்து நாளைக்கு என்னைப் ஃபார்மலா பொண்ணு பார்க்க வர்றாங்க..."

"வெரி வெரி நைஸ்... கண்டிப்பா இதெல்லாத்துக்குமா சேர்த்து நீ ஒரு க்ரேண்ட் பார்ட்டி குடுத்தே ஆகணும்.."

"யெஸ்... யெஸ்... கண்டிப்பா நான் முதல் சேலரி வாங்கினதும் உனக்கு மட்டும் ஒரு தனியா பார்ட்டி குடுப்பேன். நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு எங்க வீட்டுல ஒரு சின்னப் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கோம். நம்ம மூணு குடும்பமும் ஒண்ணா உக்காந்து டிஃபன் சாப்பிடலாம்ன்னு என் பேரண்ட்ஸ் நினைக்கிறாங்க. இது என் தரப்புலேருந்து என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு ஸ்பெஷல் இன்விடேஷன்." மீனா கலகலவென சிரித்தாள்.

"மீனு... நீ சொன்ன எல்லாமே சந்தோஷமான விஷயம்டீ... நிச்சயமா அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியோட நான் வந்துடறேன்..."

"மீனு"னு மட்டும் நீ கூட என்னைக் கூப்பிடக்கூடாது..! திஸ் ஈஸ் மை ரிக்வெஸ்ட்.."

"ஏண்டீ..?"

"சீனு மட்டும்தான் என்னை அப்படி கூப்பிடாலம்.. தட் ஈஸ் ஒன்லி ஃபார் மை சீனு.." மீனா வெட்கத்துடன் முனகினாள்.

"சாரிடிம்மா... இனிமே அப்படி கூப்பிடமாட்டேன்... இந்த மேட்டருக்குன்னே சீனு கிட்ட ஒரு பார்ட்டி வாங்கிடறேன்.." சுகன்யாவும் குஷியாக சிரித்தாள்.

"அவனாவது... பார்ட்டி குடுக்கறதாவது... அவன் பார்ட்டி அட்டண்ட் பண்ற ஆளுடீ... நீ இன்னும் அவனை சரியா புரிஞ்சுக்கலே... நாளைக்கு வரேல்லா... எல்லாத்தையும் நான் உனக்கு வில்லாவரியா சொல்றேன்.."

"ம்ம்ம்.."

"ஒரு பத்து நாளைக்கு முன்னாடீ, சீனுவை, சீனுவோட குடிகார ஃப்ரெண்ட் ஒருத்தன் - கோழி மிதிக்கலாம் வான்னு கூப்பிட்டான்.. இரண்டு பேருக்கும் சேர்த்து, சரியான ஆப்பு ஒண்ணு வெச்சேன்... சீனுவுக்கு இப்ப என்னைப் பாத்தாலே செமை மெர்சல்தான்..." மீனா ஹோவென இரைந்து சிரித்தாள்.

"நல்ல மனுஷன்டீ அவரு... அவரைப் போய் இப்டீல்லாம் கலாய்க்கறே நீ?" சுகன்யாவும் தன் வாய்விட்டு சிரித்தாள். மனம் இலேசாகிக்கொண்டிருந்தது அவளுக்கு.

"சுகா... நவ் லெட் அஸ் டாக் சீரியஸ்லி... சீனு வீட்டுலேருந்து அவனோட பேரண்ட்ஸ், அவனோட அத்தை, இன்னும் ரெண்டு பேரு, நாலு மணிக்கு எங்க வீட்டுக்கு வர்றாங்க... உங்க வீட்டுலேருந்தும் பெரியவங்க அவங்க சவுகரியப்படி எப்ப வேணா வரட்டும்... சுகன்யா ப்ளீஸ்... நீ மார்னிங்கே வந்துடுடீ... த ஹோல் டே... நீதான்டீ என் கூடவே இருக்கணும்...

"ஓ.கே... ஓ.கே... அக்ரீட்..." சுகன்யா ஒத்துக்கொண்டாள்.

"நீ எதுக்கும் கவலைப்படாதே.. என் ஃபிரதரைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. இப்பவே அவன் காதைத் திருகி, அவனை உன் கிட்ட பேச வைக்கலே என் பேரு "மீனுக்குட்டி" இல்லே... இப்படித்தாண்டீ சீனு என்னை ஆசையா கூப்பிடறாரு..." மீனா களிப்புடன் முனகினாள்.

"பிளீஸ்... மீனா... இப்ப நீ எதுவும் செல்வா கிட்டே கேக்காதே... எல்லாத்தையும் நான் நேர்ல உன் கிட்ட சொல்லிடறேன்... மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்." சுகன்யா கெஞ்சினாள்.

"ஓ.கே.. அக்ரீட் மை டியர் அண்ணீ... அக்ரீட்... பை..." மீனா செல்லை அணைத்தாள்.

"மீனுக்குட்டி..." சீனு உனக்கு வெச்சிருக்கற செல்லப்பேரு ரொம்ப ஸ்வீட்டா இருக்குடி... நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டைப் போட்டுக்காம, சந்தோஷமா இருக்கணும்... சுகன்யா நீளமான பெருமூச்சொன்றை விட்டாள்.


"ஏய் மீனா.. உனக்கு எத்தனை தரம் சொல்லியாச்சு... என் செல்லை ஏண்டி நீ நோண்டறே...?" செல்வா எரிச்சலுடன் வெராண்டாவிற்கு வந்தான்.

"இப்ப எதுக்கு டென்ஷனாவறே நீ... நான் என்ன கொழந்தையா... உன் செல்லை நான் கெடுத்துடுவேனா... ரொம்பத்தான் அல்டிக்காதே..."

"சில விஷயங்கள் ஃப்யூர்லி பர்சனல்; சொன்னப் புரிஞ்சுக்கடீ... ப்ளீஸ் என் செல்லை நீ எடுக்காதே... அவ்வளவுதான்... திஸ் இஸ் ஃபைனல். தட்ஸ் ஆல்" செல்வா வெடித்தான்.

"நீ அடிக்கற கூத்து எனக்குத் தெரிஞ்சு போச்சேன்னு எரிச்சலா?" உதடுகளை சுழித்தாள் மீனா.

"என்னடிப் பேசறே?"

"சுகன்யாவை நீ எப்படி வேணா மெரட்டிக்கிட்டு இரு... என்னை நீ மிரட்ட முடியாது... நீயும் இதை ஞாபகத்துல வெச்சுக்கோ?

"என்னடி உளர்றே?"

"எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு" சொல்லிக்கொண்டே அவள் ஹாலில் நுழைந்தாள். ஹாலில் நடராஜனும், மல்லிகாவும் சுகன்யா வீட்டிற்கு கிளம்புவதற்காக தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

"ஹேய் நில்லுடீ... உனக்கு என்னடி தெரியும்" சுகன்யா எல்லாத்தையும் இவ கிட்ட சொல்லிட்டாளா? செல்வா உள்ளுக்குள் இலேசாகப் பதறிப்போனான்.

சுகன்யா என்கிட்ட எதையும் சொல்லலே. எனக்கு என்னத் தெரியும்ன்னு குதிக்கற செல்வாவை இப்ப எப்படி மடக்கறது? மீனாவின் முளை படு வேகமாக வேலைசெய்தது.

செல்வா போன மண்டே சாயந்திரம், வேணிக்கு அதிரசம் குடுக்கறேன்னு, சுகன்யா கூட, அவ வீட்டுக்குப் போனான். அவ்வளவு தூரம் போனவன், அம்மா சொன்ன வேலையை மட்டுமா செய்திருப்பான்?

செல்வா சந்தேகமேயில்லாம, சுகன்யா கூட அவ ரூமுக்கும் போயிருப்பான். அப்பதான் இவங்க ரெண்டு பேருக்குள்ள எதாவது டென்ஷன் ஆகியிருக்கணும். சுகன்யா வீட்டுலேருந்து செல்வா திரும்பி வரும் போதே எரிச்சலோடத்தான் வந்தான்.

அம்மா கேட்ட எந்தக் கேள்விக்கும் இவன் ஒழுங்கா பதில் சொல்லலை. நானும் பாக்கறேன் அன்னையிலேருந்துதான் அய்யாவோட மூடும் சரியில்லை. ஒண்ணும் ஓண்ணும் ரெண்டு.

சுகன்யா போன் பண்ணாலும் அவகிட்டவும் இவன் பேசறது இல்லே. அவ காலை பட்டு பட்டுன்னு கட் பண்றான். சுகன்யா என்னடான்னா, என்னை ஏண்டா இப்படி அழவெக்கறேன்னு ரொம்பவே எமோஷனலா பேசறா..!! தூண்டித் துருவிக்கேட்டா அழுதுடுவா போல இருக்கு. ரெண்டும் ரெண்டும் நாலு.

செல்வாதான் எதாவது சுகன்யாகிட்ட தேவையே இல்லாம, கூத்தடிச்சிருப்பான்... ஸோ... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ பிரச்சனை இருக்குங்கறது நிச்சயமாகிப் போச்சு. இவனை கொஞ்சம் எடக்கு மடக்கா இப்படி டீல் பண்ணாத்தான், இவன் அவகிட்ட பேசுவான். இவன் அவ கிட்ட சிரிச்சிப் பேசினாத்தான், நாளைக்கு சுகன்யா சிரிச்ச முகத்தோட இங்க வருவா.

இவனை இப்ப கொஞ்சம் நோண்டித்தான் பாக்கிறேனே? சுகன்யா இவனுக்கு பொண்டாட்டின்னா, எனக்கு அண்ணி. என் அண்ணியை இவன் எதுக்கு அழவெக்கணும். ஏற்கனவே ஒரு வாரம் ஆகிப் போச்சு. இதுக்கும் மேலே என்னாலப் பொறுத்திருக்க முடியாது. நாளைக்கு சுகன்யா இங்க வந்து, அவ விஷயத்தைச் சொல்றதுக்குள்ள, எனக்குத் தலை வெடிச்சிப் போயிடும். எதாவது ஒரு பிட்டைப் போட்டு பாக்கலாமே...? செல்வா மாட்டாமலா போயிடுவான். மீனா தன் மனதுக்குள் முடிவெடுத்தாள்.

"உன் கதை எல்லாம் எனக்குத் தெரியும்... சுகன்யா எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா" தனக்கு விஷயமே தெரியாமல் இருந்த போதிலும் மீனா சகட்டுமேனிக்கு செல்வாவைப் போட்டுத் தள்ள ஆரம்பித்தாள்.

"திரும்ப திரும்ப பேசற நீ..? உனக்கு என்னத் தெரியும்ன்னுதான் நானும் கேக்கிறேன்." செல்வாவுக்கு நிஜமாகவே எரிச்சல் கிளம்பியது. அவன் மனதும் வேகமாக வேலை செய்தது.

ஒரு வாரமா நானும் பெரிய புடுங்கல் மாதிரி சுகன்யா கிட்ட முறுக்கிக்கிட்டு இருந்துட்டேன். என்னமோ அவளை அழவெச்சுப் பாக்கணும்ன்னு என் மனசுக்குள்ள ஒரு ஆசை அன்னைக்கு வந்திடிச்சி. பாவம் நிஜமாவே அவளுக்கு நல்ல மனசு இருக்கவேதானே, என் நெத்தியில அவ்வளவு அக்கறையா விபூதியைக் கொண்டாந்து பூசினா..! என்னை அவ வெறுப்பேத்தினாங்கறதுக்காக பதிலுக்கு அவளை நான் பேசாமலே இருந்து வெறுப்பேத்தணும்ன்னு இருந்துட்டேன்.

அஞ்சு நாளாப் தொடர்ந்து அவளும் விடாம எனக்கு கால் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தா. ஒழுங்கு முறையா சாரிடீச் செல்லம்ன்னு சொல்லிட்டு, பீச்சுல விக்கற, அவளுக்குப் புடிச்ச வாழைக்கா பஜ்ஜியை ரெண்டு வாங்கி கையில குடுத்துட்டு, அவ திண்ணுக்கிட்டு இருக்கும் போதே, அவ எச்சை ஒதட்டுல, ரெண்டு கிஸ்ஸாவது அடிச்சிருக்கலாம். கொஞ்ச நேரம் கிக்காவது இருந்திருக்கும். நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற கதைதான் என் கதை.

நேத்து நைட்டே பேசிடலாம்ன்னு பாத்தேன். அதுக்குள்ள அவ பண்ண கால் கட்டாயிடுச்சி. சத்தியக்கட்டுக்கு இன்னைக்கு காலையிலேருந்து சுகன்யா என்னைக் கூப்பிடவேயில்லை. இவ்வளவையும் இந்த கொரங்கு மீனா என்னை விடாம கீனா வாச் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா..! என் போன்லேருந்து அவகிட்ட பேசி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு இப்ப நடுவுல பூந்து குட்டையைக் குழப்பறா?

அம்மாவும், அப்பாவும், நாளையப் பார்ட்டிக்கு எங்க சம்பந்தியை நேராப் போய் கூப்பிடப் போறேன்னு துள்ளி குதிச்சிக்கிட்டு திருவான்மியூருக்கு கிளம்புறாங்க. போற எடத்துல, என் அம்மா ரொம்ப பாசம் பொங்கிப்போய், வீட்டுக்கு வரப்போற மருமவளை, கண்ணு... எப்படி இருக்கேடீன்னு கேட்டு, பதிலுக்கு சுகன்யாவும், அத்தே, அத்தேன்னு, கொழையடிச்சி, எந்த சங்கையாவது எடுத்து ஏடாகூடாம, ஊதிட்டாள்ன்னா, மல்லிகா அம்மையார், வீட்டுக்கு வந்து என் கழுத்துல நிச்சயமா துண்டைப் போட்டு இறுக்கிடுவாங்க.

நிச்சயத்தார்த்ததுக்கு போனப்பவே நான் நோட் பண்ணேன். சுகன்யாவோட அம்மாவும் ரொம்ப ஷார்ப்பாத்தான் இருக்காங்க. அவங்க கண்ணுலேருந்து எதுவுமே தப்பலை. நாளைக்குப் பார்ட்டிக்கு சுகன்யா கண்டிப்பா வருவா. அவளும் ரோஷக்காரி. என் கிட்ட பேசாமத்தான் இருப்பா. அப்ப அவகிட்ட நான் மூஞ்சி குடுத்து பேசலன்னா, அவங்க அம்மாவும் சுகன்யாவை என்ன ஏதுன்னு, எதாவது கொடைச்சல் பண்ணிட்டாலும், நாலு பேரு நடுவுலேயே திருவாளர் நடராஜ முதலியார் என் மென்னியை முறுக்கிடுவார்.

எனக்கு இப்ப என்னப்பண்றதுன்னேப் புரியலை. கொரங்கு ஆப்பை அசைச்ச கதையா ஆயிடுச்சி என் கதை. பத்தாக்குறைக்கு இந்த மீனா வேற இப்ப எதுக்கு நடுவுல துள்ளி தொப்புன்னு குதிக்கறா? 




"ஹேய்.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ பாட்டுல உள்ளேப் போய்கிட்டே இருக்கே?" தனக்கு பதில் எதுவும் சொல்லாமல் ஹாலுக்குள் நுழைய ஆரம்பித்த மீனாவின், பின்னலைப் பிடித்து இழுத்தான் செல்வா.

"எம்மா... என் பின்னலைப் புடிச்சி இழுக்கறாம்மா இவன்?" கூவினாள் மீனா.

"புள்ளைங்களா இதுங்க ரெண்டும்... ரெண்டுத்துக்கும் கல்யாணம் எதிர்ல நிக்குது... இன்னும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சி புடிச்சிக்கிட்டு மல்லடிக்குதுங்க.. நீ ஏண்டீ அவன் செல்லை எடுக்கறே?" மல்லிகா பதிலுக்கு தன் பெண்ணை நோக்கிக் கூவினாள்.

"உனக்கு ஃபுல் விஷயம் தெரியாதும்மா... இங்க வா நான் சொல்றேன்..." செல்வாவை நோக்கி கண்ணடித்தாள் அவள்.

"ப்ளீஸ்... பேசாம இருடீ.." செல்வா சட்டென அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டான்.

"அது.." சிரித்தாள் மீனா.

"என்னடி உன் நாட்டாமை தாங்கலே இங்கே?"

"ஒண்ணுமில்லம்மா... நீங்க ரெண்டு பேரும் போய்வாங்க... அண்ணணுக்கு காஃபி நான் போட்டுக்குடுக்கறேன்..." மீனா பவ்யமாக சிரித்தாள்.

"பாத்துகிட்டேல்லா... எதுக்குடீ நீ அவங்க பஞ்சாயத்துல மூக்கை நுழைக்கறே? அண்ணணும் தங்கச்சியும் அடிச்சிப்பாங்க கூடிப்பாங்க... கிளம்புடீ நீ..." மல்லிகா பின் தொடர நடராஜன் வேகமாக தெருவுக்கு நடந்து தன் கார் கதவைத் திறந்தார்.

***

"செல்வா... நீ சுகன்யா கிட்ட ஒழுங்கு முறையா சாரின்னு சொல்லிட்டு அவகிட்ட பேசிடு... எதுக்கு அவளை தேவையில்லாம அழுவ வெக்கறே நீ?" தன் அண்ணணிடம் காஃபி டம்ளரை நீட்டினாள் மீனா.

"அதெல்லாம் இருக்கட்டும்டீ... உன் கிட்ட அவ என்ன சொன்னா, அதை மொதல்லே ஒழுங்கா நீ சொல்லிடு..." மீனாவின் முகத்தை நேராகப்பார்த்தான் செல்வா.

"டேய் அண்ணா... வெக்கமாயில்லே உனக்கு... நான் உன் தங்கச்சிடா... என் கிட்ட கேக்கற கேள்வியா இது? திடிர் திடீர்ன்னு உன் புத்தி குருட்டுப்பூனை விட்டத்துல தாவுன கதையா பாயுது?

மூடின ரூமுக்குள்ள உனக்கும் உன் லவ்வருக்கும் நடுவுல நடந்த கூத்தை நான் உனக்கு ரிவைண்ட் பண்ணி ஓட்டிக்காட்டணுமா? உனக்கே இது ஓவராத் தெரியலே?"

மீனா அடித்த இந்த அடியில் செல்வா சுத்தமாக சுருண்டுவிட்டான். சுகன்யா மொத்தமாக போட்டுக்குடுத்துவிட்டாள் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான். மீனாவுக்கு என்னப் பதில் சொல்லுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே மேல் என அவன் நினைத்தான். தன் கையிலிருந்த காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தான்.

மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் வீட்டு மாடிக்கு என்னை தனியாக் கூப்பிட்டுக்கிட்டு போன சீனு அன்னைக்கு என்னப் பண்ணான்? மொதல்லே கிட்ட வந்து என் தோள்லே கைப்போட்டான். அப்புறம் கன்னத்துல கிஸ் அடிச்சான். நமக்கும் சொகமா இருக்கே, போனாப்போவுதுன்னுப் பாத்தா, அந்தத் திருட்டுக்கழுதை என் மாரைத் தொட்டுபாத்துட்டு, 'மீனா உனக்கு சின்னதா இருக்கேடீன்னு உளறினான்.."

செல்வா மட்டும் யோக்கியனா? இவன் அவன் ஃப்ரெண்டுதானே; இவன் மட்டும் சுகன்யா கூட தனியா இருக்கும் போது தேவாரம், திருவாசகமா படிச்சிருக்கப்போறான்? இவனும் ஒரு ஆம்பிளைதானே? ஆம்பிளைப் புத்தியை அவசரமா அவகிட்ட காமிச்சிருப்பான்.

எல்லத்துக்கும் மேலே இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயத்தார்த்தம் வேற முடிஞ்சிப்போச்சி... இதை ஒரு சாக்கா வெச்சிக்கிட்டு இவன் சுகன்யா உடம்புல கண்ட எடத்துல கைபோட்டு இருப்பான்.

மே பீ... இவன் கிஸ் அடிச்சிருந்தா, சுகன்யாவுக்கு, கிக்கேறிப்போய் இவனைக் கட்டி புடிச்சிக்கிட்டு நின்னுருந்திருக்கலாம்; இவன் இதாண்டா சான்ஸ்ன்னு சுகன்யாவை தாறுமாறாத் தடவி இருப்பான். அவ வேணாம்டான்னு திமிறியிருப்பா; இவன் ஆம்பிளை ஈகோவுல அடிப்பட்டுக்கிட்டு, மூஞ்சை முறுக்கிக்கிட்டு வந்து இருப்பான். இதுக்கு மேல அங்க என்ன நடந்து இருக்கப்போவுது?

இது சாதாரணமா நடக்கறதுதானே? எங்கக்காலேஜ்ல நடக்காத கூத்தா? பொழுது விடிஞ்சா பொழுது போனா இதேக் கதைதானே? ஒவ்வொருத்தி மடியிலேயே புள்ளையே வாங்கிக்கிறாளுங்க. சுகன்யா நல்லப்பொண்ணு. திட்டி அனுப்பியிருப்பா..!

ஆரம்பத்திலேயே, செல்வாதான் லைன்ல இருக்கான்னு நெனைச்சுக்கிட்டு, "அன்னைக்கு என் ரூம்ல நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீ நினைச்சா, அதுக்கு நான் திரும்பவும் ஒரு தரம் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்..." ன்னு என்கிட்டப் பேசினாளே? ஏதோ தான் நடந்த விஷயத்தை நேரில் பார்த்தது போல், மீனா தைரியமாக மனதில் தோன்றியதை குருட்டாம் போக்கில் அடித்துவிட்டாள்.



செல்வா பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டதும், தான் விட்ட அம்பு சரியான இலக்கில் சரியானபடி தைத்துவிட்டது என்பது மீனாவுக்குப் புரிந்துவிட்டது. தன் அண்ணனைப் பார்த்தபோது அவளுக்கு பரிதாபமாகவும் இருந்தது.

"செல்வா..."

"ம்ம்ம்.."

"சாரிப்பா.. நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடு. இது உங்களோடப் பர்சனல் விஷயம். நான் தலையிடக்கூடாதுதான். ஆனா சுகன்யா நல்லப்பொண்ணுடா... என்னோட ஃப்ரெண்டுப்பா அவ; அவ கிட்ட ஒரு போன் பண்ணி சாரி சொல்லுடா. ரொம்பவே வாடிப்போயிருக்கா அவ.." செல்வாவின் தோளைத் தடவிக்கொடுத்தாள் மீனா.

"சரிடீ.. செல்லைக் குடுடீ எங்கிட்ட நீ" முகத்தை திருப்பிக்கொண்டான் செல்வா.

"தேங்க்யூடா செல்வா"

அண்ணன் செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் நெற்றியில் பாசமுடன் முத்தமிட்டாள் மீனா. 



சுகன்யா... 83

“என் மனசுல இருக்கற இந்த பயத்தை உன்னாலப் புரிஞ்சிக்க முடியலே... இதை புரிஞ்சுக்காம, என் தலையை புடிச்சி சுவத்துல இடிக்கறே நீ? இது உனக்கு சரின்னு தோணிச்சின்னா இன்னும் நாலு தரம் என் தலயைச் சுவத்துல மோதுடா.. ”

"வீணா நீ என் மேல பழி போடாதேடி... நான் உன்னை என் மேலேருந்து நகத்தினேன்... நீயா தடுமாறி சுவத்துல போய் முட்டிக்கிட்டே... அவ்வளவுதான்.. "

“டேய்... புளுவாதே நீ... என் கழுத்துல தாலி கட்டறதுக்கு முன்னாடியே, நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா ஆகறதுக்கு முன்னாடியே, நான் உன் காதலியா இருக்கும்போதே எங்கிட்ட இவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்கிறியே? இது உனக்கு அடுக்குமாடா?”

"சுகன்யா... போதும்.. நிறுத்துடீ.."

“என் அப்பா, என் அம்மாவை, தன்னோட பொண்டாட்டிங்கற ஒரே காரணத்துக்காக, குடிச்சுட்டு வந்து, தான் செய்யறதை தப்புன்னு உணராம, அவங்களை அடிச்சதை, ஒதைச்சதை, அவங்ககிட்ட முரட்டுத்தனமா நடந்துகிட்டதை, சின்னவயசுல பாத்து பாத்து என் மனசுக்குள்ள, ஆம்பிளைகளேயே வெறுத்தவடா நான்...”


"இப்ப எதுக்கும் எதுக்கும் முடிச்சிப்போடறடீ நீ... ப்ளீஸ் சுகன்யா.. போதும்மா.. நீ பேசறதை நிறுத்துடி..." செல்வா கெஞ்ச ஆரம்பித்தான். அவளை நோக்கி தன் கைகளை கூப்பினான்.

“என் அப்பாவாவது குடிச்சுட்டு, தன் புத்தியை இழந்ததுக்கு அப்புறமாத்தான் என் அம்மாகிட்ட தப்பா நடந்துகிட்டாரு... ஆனா நீ... நீ இன்னைக்கு உன் சுயநினைவோடத்தான் இருக்கே? அதுக்கு அப்புறமும் என் தலையைப்புடிச்சி சுவத்துலே இடிக்கறே.."

"நாளைக்கு முழுசா ஒரு உரிமை, ஒரு சொந்தம் என் மேல உனக்கு கிடைச்சிட்டா, உன் குடும்பத்துல ஒருத்தியான நான், என்னைக்காவது, எந்த விஷயத்திலாவது உன் அம்மாவைப் பத்தி என் கருத்தைச் சொன்னா, உனக்கு அது சரின்னு தோணலன்னா, என் நிலைமை என்ன ஆகும்ன்னு நான் இப்பவே பயப்படறேன்...” சுகன்யா மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

செல்வாவின் முகம் முற்றிலுமாக வெளிறிப்போனது. மேற்கொண்டு அந்த நேரத்தில் சுகன்யாவிடம் ஏதும் பேசாமல் வீட்டுக்குப்போய்விடலாமென டேபிளின் மேல் கிடந்த தன் தோள்பையை எடுத்தவன், ஏதோ நினைத்துக்கொண்டவனாக, கையில் எடுத்தப் பையை மீண்டும் டேபிளின் மேலேயே வீசிவிட்டு, பால்கனிக்கு சென்று, அறையின் வாசலுக்கு நேராக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தெருவை நோக்கத் தொடங்கினான்

பால்கனி வழியாக அரை நிமிடத்திற்கு ஒருமுறை, வீட்டுக்கு எதிரிலிருந்து, பார்க்கில் வானுயர நின்று கொண்டிருந்த வேப்பமரமொன்று அவ்வப்போது தன் சோம்பலை முறித்ததால் உண்டான குளிர்ந்த காற்று, அவன் உடலை மெல்லத் தழுவிக்கொண்டிருந்தது.

தன்னை கபடதாரி, வேஷதாரி, பொய்யன், முரடன் என சுகன்யா அடுக்கடுக்காக தன் மேல் குற்றம் சாட்டியதாலும், அந்த குற்றச்சாட்டில் பொதிந்திருந்த, தன்னால் மறுக்க முடியாத ஒரு சிறிய உண்மை, அவன் மனதை குத்திக்கிளறியதாலும், உண்டான வெட்க்கத்தில் அவன் தலை குனிந்திருந்தது.

ரெண்டு நிமிடங்களுக்குப்பிறகு மனதின் கனத்தை, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை சகித்துக்கொள்ள முடியாமல், செல்வா தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தன் தலையை உயர்த்தி, கட்டிலின் மீது அமர்ந்திருந்த சுகன்யா இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாளா, என்ற ஐயத்தில் தன் பார்வையை அறைக்குள் தயக்கமாக வீசினான்.

என்னதான் ஏமாத்தம் என் மனசுக்குள்ள இருந்தாலும், தன் மீது உயிரையே வைத்திருக்கும் சுகன்யாவிடம், தன் ஆசை நிறைவேறாத வெறுப்பில், அவள் பேசிய பேச்சில் இருந்த நியாயத்தை பொறுத்துக்கொள்ளமுடியாமல், ஆணுக்கே உரிய தன் முரட்டுத்தனத்தை, அவளிடம் காட்டிவிட்டதற்காக அவன் உள்ளூர வருந்தினான்.

தப்பு என்னுது... என்னமோ தகராறு நடந்து போச்சு... எழுந்து போய் சாரி’ன்னு அவகிட்ட ஒரு வார்த்தை சொன்னா நான் என்னக் கொறைஞ்சா போயிடுவேன்..? இந்த எண்ணம் அவன் மனதின் ஒரு மூலையில் கிளம்பியதும், அவன் சேரிலிருந்து மெல்ல எழுந்தான்.

சுகன்யா, விரிந்து கிடந்த தன் கூந்தலை சீராக்கிக்கொண்டு, கட்டிலின் மீது கிடந்த தன் அழுக்கு நைட்டியை உதறி, அறையின் மூலையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையில் எடுத்து வீசினாள்.

படுக்கையின் மேல் தாறுமாறாகக் கிடந்த பெட்ஷீட்டை உதறி சரியாக விரித்தாள். தரையில் சிதறிக்கிடந்த தலையணைகளை தட்டி சரியாக அதனிடத்தில் வைத்தாள்.

தன் வாய்க்குள்ளேயே எதையோ அவள் முணுமுணுத்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைவது செல்வாவின் பார்வையில் பட்டது. ரெண்டே நிமிடங்களில் சுகன்யா தன் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

செல்வா, சற்று நேரத்துக்கு முன், தன் முகத்தை துடைத்துவிட்டு, சோஃபாவின் மேல் வீசியிருந்த அதே துண்டால், தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு, சாமி மாடத்தின் முன் இருந்த விளக்கை ஏற்றினாள். கண் மூடி, தன் கைகளை கூப்பி, ஒரு நிமிடம் சாமிப்படங்களின் முன் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

குங்கும சிமிழியிலிருந்து ஒரு விரலால், சிவப்பு நிற குங்குமத்தை, தன் புருவ நெற்றியில் அழுத்திக்கொண்டாள். தன் பார்வையை, தலை குனிந்து நாற்காலியில் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி வீசினாள்.

சம்புடத்திலிருந்து ஒரு சிட்டிகை விபூதியை எடுத்துவந்து, அவன் முகத்தை தன் கையால் உயர்த்தி, அவன் நெற்றியில் தீட்டினாள். விழிகளில் கனிவுடன், உதட்டில் சிறிய புன்னகையுடன், செல்வாவின் முகத்தை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள்.

சுகன்யாவின் அந்த ஒரு செயலில், அவள் தன் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை உணர்ந்ததும், செல்வா உள்ளுக்குள் முழுவதுமாக உடைந்தான். அதற்கு மேல் அவள் எதிரில் இருந்தால், தான் அழுதுவிடுவோமோ என்னும் அச்சத்தில், அவள் மார்பிலிருந்து தன் முகத்தை சட்டென விலக்கிக்கொண்டான். நாற்காலியைவிட்டு சடாரென எழுந்தான்.

'நான் போறேன்..' மேஜை மேல் கிடந்த தன் பையை விருட்டென எடுத்துக்கொண்டவன், அவள் முகத்தைப் பார்க்காமல் முனகினான். அவள் பதிலுக்கு காத்திராமல் வேகமாக அறையை விட்டு நடக்க ஆரம்பித்தான்.

"செல்வா.. ப்ளீஸ்.. எப்பவும் போறேன்னு எங்கிட்ட மொட்டையா சொல்லாதப்பா... இப்படி சொல்லி என் மனசை கஷ்டப்படுத்தாதே... போய்வரேன்னு சொல்லுப்பா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. அவள் தலை குனிந்திருந்தது.

சுகன்யா தன் தலையை நிமிர்ந்தபோது செல்வா மாடியிலிருந்து இறங்கி தெருவுக்குப் போய்விட்டிருந்தான்... சுகன்யா பால்கனிக்கு வந்தாள். செல்வா தன் பைக்கை வலுவாக உதைத்துக்கிளப்பிக்கொண்டிருந்தான்.

செல்வா, பால்கனியில் நிற்கும் தன்னை நிச்சயமாக ஒருதரம் திரும்பிப்பார்ப்பான் என சுகன்யா நினைத்தாள். அப்படி அவன் அவளைப் பார்க்கவேண்டும் என தன் மனதில் எப்போதும் இருக்கும், அம்பாளை மனமார வேண்டினாள்.

செல்வா, அவள் எதிர்பார்த்தபடி, மாடி பால்கனியின் பக்கம் திரும்பிப்பார்க்கவில்லை. அவனுடைய பைக் பார்க்கை கடந்து, தெரு கோடி முனையை அடைந்ததும், வலது புறம் திரும்பி கண்பார்வையிலிருந்து மறைந்தது.

சுகன்யா விசும்பிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள். 

அடியே சுகன்யா... எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்து இருக்கப்போறே? பேச்சைக் குறைடீன்னு உன் அம்மா உன் கிட்ட எத்தனைத் தடவை சொல்லியிருக்கா? ஏன் இப்படி பேசியே தீருவேன்னு பிடிவாதம் பிடிக்கறே?

"நான் பேசலைன்னா என் மனசுல இருக்கறது அவனுக்கு எப்படித் தெரியும்...?"

"பேசலாம்... நீ பேசலாம்.. எல்லாத்துக்கும் ஒரு நேரம்.. காலம் இருக்கு.. பெரியவங்க கொஞ்சம் பொறுமையா இருன்னுதானே சொல்றாங்க... நீ சொல்ல நினைக்கறதை சரியான நேரத்துல சொல்லு..."

"சரியான நேரங்கறது என்ன?"

"அதை நீங்க ரெண்டுபேரும்தான் டிசைட் பண்ணணும்... அவன் கூட பழக பழகத்தான் கொஞ்சம் கொஞ்சமா அவன் குணம் உனக்குப் புரியவரும்... இன்னைக்கு வரைக்கும் அவன் இப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணுவான்னு எதிர்பார்த்திருக்கியா? ஒரே நாள்லே ரோம் உண்டாயிடலடீ.. உன் ஆம்பளையை நீ கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுக்க முடியும்.

"வேணி சொன்னமாதிரி.. நான்தானே என்னை பாதுகாத்துக்கணும்..?"

"சந்தேகமேயில்லை... உன்னை நீதான் பாதுகாத்துக்கணும்... நீ சொல்ல நினைச்சதை அவன் கிட்ட நீ சொல்லிட்டேல்லா... அப்புறம் ஏன் விசும்பிக்கிட்டு இருக்கே... அவனைப்பத்திதான் உனக்கு தெரியுமில்லே... அதிகபட்சம்... ரெண்டு நாள் இல்லேன்னா... மூணு நாள்... தன்னோட மூஞ்சைத் தூக்கி வெச்சுக்குவான்..."

"அதுக்கப்புறம் உங்கிட்டத்தான் வருவான்.. அவன் உன்னை விட்டுட்டு எங்கப் போயிடப்போறான்... ராத்திரி பத்து மணிக்கு மேலே ஒரு தரம் அவனுக்கு போன் பண்ணி "சாரி" செல்வான்னு சொல்லிடு.. சட்டுன்னு எல்லாம் சரியாயிடும்..."

"நான் என்னத் தப்பு பண்ணேன்..? நான் எதுக்கு சாரி சொல்லணும்..? இன்னைக்கு நடந்த கூத்துக்கு அவன்தான் என்கிட்ட சாரி சொல்லணும்...?"

"ஏன்டீ... ஆம்பளை எப்பவும் தொட்டுப்பாக்க அவரசப்படுவான்... அடுப்புல கொதிக்கும் போதே அள்ளிக் திங்கணும்ன்னு துடிப்பான்... ஆக்கப் பொறுக்கறவன் ஆறப்பொறுக்க மாட்டான்.. பொம்பளைதான் கொஞ்சம் நீக்கு போக்கா இருக்கணும்ன்னு உனக்கு உன் பாட்டி கனகா சொன்னாளா... இல்லையா?"

"ஆமாம்... தானா பழுக்கற காயைக் கூட தடியால அடிச்சு பழுக்க வெக்கலாம்ன்னும், ஆம்பிளை அலைவான்னும் சொன்னாங்க..."

"உனக்கு எல்லாம் புரியுது இல்லே; அப்புறம் அவனை ஏன் உன் கூட இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்தே?"

"அது என் தப்புதான்..."

"புரிஞ்சிக்கிட்டேல்லா... இனிமே அந்த தப்பை பண்ணாதே.."

"தேங்க்யூ....இனிமே பண்ணமாட்டேன்.."

"உன்கூடவே இருக்கற எனக்கெதுக்கு இந்த தேங்க்யூல்லாம்... நடந்தது நடந்து போச்சு... உன் அப்பா வர்ற நேரமாச்சு... இப்ப எழுந்து போய் சமையல் வேலையைப் பாருடி..." இடது வலது என பட்சபாதமில்லாமல், தனக்குள்ளாகவே வாதம் பண்ணியதும் சுகன்யாவின் மனது சிறிது தெளிவாகிவிட்டது.




இரவு சாப்பிட்டு முடித்ததும், இரண்டு மூன்று முறை, சுகன்யா செல்வாவை தொடர்பு கொள்ள முயற்சித்தாள். செல்வாவின் செல்லில் ரிங் போனது... போய்க்கொண்டே இருந்தது. வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்ற தகவலே அவளுக்கு தொடர்ந்து கிடைத்தது.

ரொம்பவே கோவமா இருக்கான் போல இருக்கு... தொரைக்கு என்கிட்ட பேசக்கூட இஷ்டமில்லையோ? இருக்கட்டும்.. எத்தனை நாளைக்கு இப்படி முறுக்கிக்கிட்டு இருக்கான்னு... நானும் பாக்கறேன்... தன் உதட்டை ஒருமுறை சுழித்துக் கொண்டவள் ஹாலில் இருந்த கட்டிலில் படுத்ததும் உடல் அசதியில் உடனே தூங்கிவிட்டாள் சுகன்யா.

பதினொரு மணிவாக்கில் குமாரசுவாமி உள் அறையிலிருந்து எழுந்து வந்து, தான் போட்டிருக்கும் நைட்டி விலகிய உணர்வு கூட இல்லாமல், அசந்து தூங்கும் தன் மகளின் மேல் ஒரு போர்வையைப் போத்தியவர், அறை விளக்கை விளக்கை அணைத்துவிட்டு படுத்தார்.

மறுநாள் சுனில் ஆஃபீசுக்கு வரவில்லை. தினசரி வேலையுடன், பைல் லிஸ்ட் தயார் செய்யும் வேலையும், அவள் தலைமேல் அன்று மொத்தமாக விழுந்தது. நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் சுகன்யா வேலை செய்து கொண்டிருந்ததால், செல்வாவுக்கு அவள் போன் செய்யவில்லை. அவனும சுகன்யாவுக்கு போன் செய்யாதது மட்டுமல்லாமல், அன்று முழுவதும் அவன் இவள் கண்ணிலேயே தென்படாமல் உலவிக்கொண்டிருந்தான்.

***

மறுநாள் செல்வாவின் ஃப்ளோருக்கு, ஏதோ வேலையாக சென்றிருந்தபோது, அவன் அவள் எதிரில் வருவதைப் பார்த்தவுடன், முகத்தில் புன்னகையுடன் அவனுக்காக லிஃப்டின் அருகில் நின்றாள். செல்வா இவளைக் கண்டதும் இவளைப் பார்க்காததுபோல் சட்டெனத் திரும்பி எதிர்ப்புறமாக படிக்கட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

குழந்தைக்கு இன்னும் என் மேல இருக்கறக் கோபம் தீரலைப் போலருக்கு... சுகன்யா மனதுக்குள் எழுந்த சிரிப்புடன் தன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டாள். இப்படி என்னைப் பாத்தும் பார்க்காத மாதிரி போற அளவுக்கு நான் என்னத் தப்பு பண்ணிவிட்டேன் என்ற தவிப்பும் மனதில் எழ, அந்த தவிப்பு ஒரு சிறு முடிச்சாக அவள் மனதின் ஒரு மூலையில் விழுந்தது. கூடவே அவள் உள்ளத்துக்குள் ஒரு சின்ன வருத்தமும் எழுந்தது. 


"சுனீல்.. நீங்க எங்கே சுத்திகிட்டு இருக்கீங்க..? 'இவன் எங்கேப் போனான்... எங்கேப் போனான்னு' சாவித்திரி கொஞ்ச நேரமா... என்னை உண்டு இல்லேன்னு வறுத்து எடுக்கறாங்க.." சுனிலின் செல்லில் சுகன்யா அவனைக் கூப்பிட்டாள்.

"சாரி மேம்... நேத்து நீங்க பிரிப்பேர் பண்ணி அனுப்பிச்ச டேட்டாவுல ஏதோ சின்னப் பிராப்ளம் இருக்குன்னு செல்வா சார் பாய்ண்ட் அவுட் பண்ணாராம்... ஐ.டி. பீப்பிள்ஸ் கிட்டேருந்து தகவல் கிடைச்சுது. இப்ப அவங்க டிவிஷன்ல உக்காந்து, டேரக்டா சர்வர்லேயே நம்ம செக்ஷ்ன் டேட்டாவை வெரிபை பண்ணிக்கிட்டு இருக்கோம்... ரொம்ப அவசரம்ன்னா உடனே கீழே இறங்கி வர்றேன்..."

"யூ கேரி ஆன்... சுனில்.. நான் சாவித்திரி மேடம் கிட்ட இதைப்பத்தி சொல்லிடறேன்.. மிஸ்டர் சுனீல் ஒரு சின்ன விஷயம்... செல்வா அங்கே தன் சீட்டுல இருக்காரா..?. யெஸ்... ஆர் ... நோன்னு மட்டும் பதில் சொல்லுங்களேன்..."

"யெஸ் மேம்..."

"தேங்க் யூ..."

இது நான் பண்ண வேலைன்னு செல்வாவுக்கு நல்லாவே தெரியும்... என் வேலையிலத் தப்பு இருந்தா, அதைப்பத்தி செல்வா என்னைக் கூப்பிட்டு நேரடியா சொல்லியிருக்கலாமே?

அஃபீஷியலாவும் இதைத்தானே அவன் செய்யணும்... அதைவிட்டுட்டு அவனோட ஆளுங்ககிட்ட, டாட்டவை வெரிபை பண்ண சுனிலை கூப்பிட சொல்றான்னா.. செல்வா என்கிட்ட பேசறதையே, என் முகத்தைப் பார்க்கறதையே, தவிர்க்க நினைக்கிறானா?

அவள் மனதில் ஒரு சிறிய ஐயம் எழுந்தது. சட்டென அவள் மனம் துணுக்குற்றது.

ரெண்டு நாட்களாகவே செல்வாவிடம் பேச சுகன்யாவின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. சரி.. அப்படியே இருக்கட்டும்.. அவனே பெரிய மனுஷனா இருந்துட்டு போவட்டும்... ஆஃப்டர் ஆல் அவன் யாரு? அவன் என் ஆள். எனக்கு புருஷனா ஆகப்போறவன்.. என்னைக் கோச்சிக்கறதுக்கு அவனுக்கு உரிமையில்லையா?

நான்தானே அவனை முதல்லே காதலிக்க ஆரம்பிச்சேன்.. கோவிலுக்கு அழைச்சிட்டுப் போன்னு நான்தானே அவனை என் பக்கம் இழுத்தேன். இந்த உறவுக்கே முதல் காரணம் நான்தானே?

பாண்டிச்சேரிக்கு போனான். அஞ்சு நாள் வரைக்கும் எங்கிட்ட பேசலே.. நான் நான் என் வெக்கத்தை விட்டுட்டு போன் பண்ணேன்.. இந்த தடவையும் நானே திரும்பவும் ஒருதரம் அவன் கிட்டே பேசிட்டுப்போறேன்.. இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், வினாடியும் தாமதிக்காமல் செல்வாவின் நம்பரை இண்டர்காமில் அழுத்தினாள்.

"யெஸ்... தமிழ்செல்வன் ஹியர்..." செல்வாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

"செல்வா.. எனக்குத் தலைவலிக்கற மாதிரி இருக்குப்பா... கேன்டீன் வரைக்கும் போகலாமா..? ஒரு கஃப் காஃபி வாங்கிக் குடேன்..."

"ம்ம்ம்... நீங்க யார் பேசறீங்க மேடம்...? நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்.."

"என்னடா கண்ணூ... மேடம்... கீடம்ன்னு யாருகிட்ட ஃபிலிம் காட்டறே... நான் யாருன்னு நிஜமாவே உனக்குத் தெரியலையா?" காமெடி டிராக்குக்கு சுகன்யா மாறினாள்.

"பிலிம்.. கேமரா இதெல்லாம் எதுவும் எங்கிட்ட இல்லே.. நான் விக்கறதும் இல்லே... வாங்கறதும் இல்லே... இது ஐடி டிவிஷன்.. என் பேரு தமிழ்செல்வன், இங்கே ஸிஸ்டம் அனலிஸ்டா இருக்கேன்.."

"ஐ சீ..."

"நான் யாரையும் பாக்க விரும்பலே... யார்கிட்ட பேசணூம்? உங்களுக்கு ராங் நம்பர் கிடைச்சிட்டுதுன்னு நினைக்கிறேன்..."

"பிளீஸ்... செல்வா... நான் சுகன்யா பேசறேன்.. நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளு... அயாம் சாரிடாச் செல்லம்.. உங்கிட்ட அன்னைக்கு நான் கொஞ்சம் கோவமா பேசியிருக்கலாம்... ரெண்டு நாளா அதுக்காக நான் ரொம்பவே ஃபீல் பண்றேன்பா.." சுகன்யா தன் குரலைத் தழைத்துக்கொண்டு பேசினாள்.

"ம்ம்ம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நீங்க சொல்ல நினைக்கறதை சட்டுன்னு.. சுருக்கமா சொல்லிட்டா நல்லாயிருக்கும்..."

"அப்டி என்ன பெரிய பிஸி நீ... ஹும்ம்.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா? எதாவது நெட்ல இங்கிலீஷ் படம் பாத்துக்கிட்டு இருப்பே... இன்னொரு டேப்ல ஆஃபீஸ் வேலையைத் தொறந்து வெச்சிக்கிட்டு இருப்பே... ஒரு ரெண்டு நிமிஷம் எழுந்து வந்தா கொறைஞ்சிப் போயிடுவியா... கேண்டீனுக்கு வா.. மொத்தமா அங்கே வெச்சிக்கறேன் உனக்கு..." சுகன்யா குரலைத் தாழ்த்திக்கொண்டு கொஞ்சினாள்.

"யூ ஆர் ரைட் மேடம்.. என்னை யாரும் வெச்சிக்கல்லாம் வேண்டாம்... உங்களுக்கு என்னைப்பத்தி முழுசா தெரியாது... நீங்க இன்னும் என்னைச் சரியாப் புரிஞ்சிக்கல... அயாம் சாரி டு சே திஸ்... நான் இப்ப கொஞ்சம் பிஸி... டிரை டு அண்டர்ஸ்டேண்ட் திஸ்.." செல்வா நறுக்கென பேசிவிட்டு லைனை கட் பண்ணிணான்.

சுகன்யாவின் மனதில் மெல்ல மெல்ல அவளுடைய பிடிவாதம் என்னும் குட்டி பூதம் தூக்கத்திலிருந்து எழுந்தது. தன் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தது. 

சுகன்யா செல்வாவின் இண்டர்காம் நம்பரை மீண்டும் ஒரு முறை அழுத்தினாள். இம்முறை அவள் காலை செல்வா எடுக்கவில்லை. அவனுடைய அஸிஸ்டண்ட் ராஜாராமன் எடுத்தான்.. 

"ராஜூ... நான் சுகன்யா பேசறேன்.. ஒரு செகண்ட் செல்வா கிட்ட ரிஸிவரை குடுங்களேன்..."

"சார்.. உங்களுக்கு போன்." ராஜாராம் ரிஸீவரை செல்வாவின் டேபிள் மீது வைத்துவிட்டு இருக்கவேண்டும்.. அவன் பேசுவது சுகன்யாவுக்கு தெளிவாககேட்டது. 

ரெண்டு பேரும் ஒரே வயதுதான். நண்பர்கள்தான். ஆனால் செல்வா தன் சீட்டில் உட்கார்ந்திருந்தால், ராஜூ அவனை 'சார்' என்றுதான் விளிப்பது வழக்கம். ஆஃபிசுக்கு வெளியில் போடா வாடா என்று அடித்து பிடித்துக்கொள்வார்கள்.

"யாருடா லைன்ல" செல்வாவின் குரலில் சிறிது ஏளனம் ஒலித்ததாக சுகன்யாவுக்குப் பட்டது.

"உன் ஆளுதாண்டா..." செல்வா 'டா' போட்டதும் ராஜாராம் பதிலுக்கு அவனை 'டா' போட்டான். 

"நான் சீட்லே இல்லேன்னு சொல்லுடா..." 

"செல்வா... என்னடா சொல்றே..?"

"சொன்னதை செய்டா.."

"டேய் எந்த உலகத்துல இருக்கேடா நீ? சுகன்யா லைன்ல இருக்காங்கடா...? சொல்றது உன் காதுல விழலேயா?" இப்போது ராஜாராமின் குரலில் உண்மையான வியப்பிருந்தது. 

"டேய்... நான் சொன்னதை உன்னால செய்ய முடியலேன்னா... இனிமே என் டேபிள்லே இருக்கற போன் அடிச்சா தயவு செய்து நீ அதை எடுக்காதே... அது பாட்டுல அது அடிச்சுட்டு போகட்டும்ன்னு நீ உன் வேலையைப் பாரு..." 



"ஹோ... உடம்பு கிடம்பு சரியில்லையா பாஸ்...?" 


"மிஸ்டர்... ஐ கேன் வெரிவெல் அட்டண்ட் மை கால்ஸ்... ஐ டோண்ட் நீட் எனிபடீஸ் அஸிஸ்டன்ஸ் ஹியர்... அண்ட் டூ வாட் ஐ சே.." செல்வா பேசிக்கொண்டிருந்தது அடுத்த முனையிலிருந்த சுகன்யாவுக்கு வெகு வெகு தெளிவாகக் கேட்டது. ரீசிவரை பிடித்திருந்த தன் கை நடுங்க அதை அதனுடைய இடத்தில் வைத்தாள் அவள். 

சுகன்யாவின் அடிவயிற்றிலிருந்து மெல்லிய உணர்ச்சிப் பந்தொன்று வேகமாக எழுந்தது. அது எரிச்சலா.. அது கோபமா... அது ஆதங்கமா... அது ஆற்றாமையா... அது சினமா... இல்லை அது வருத்தமா... அது அவளுடைய இயலமையா? 

இதில் எதுவுமே அது இல்லையென்றால் என்னதான் அது? அதை என்னவென்று சொல்வது? அவளால் இனம் கண்டு கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி, விருட்டென எழுந்து, அவளுடைய தொண்டை வரை வந்து, தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டு நின்றது. 

அந்த உணர்ச்சி முதலில் சிறிய கேவலாக கிளம்பியது, கேவல் அழுகையாக மாறியது... சத்தம் உதட்டிலிருந்து வெளியில் வராதபடி தன் வாயை, கைக்குட்டையால் பொத்திக்கொண்டாள் சுகன்யா. வாயிலிருந்து சத்தம் வராவிட்டாலும், அவள் விழிகள் கண்ணீரால் நிரம்பியது.



சுகன்யா... 82

சூரியன் மேற்கில் துயில் கொள்ள சென்றுவிட்டான். வெளியில் இருட்டத் தொடங்கியிருந்தது. மொட்டை மாடி வழியாக தென்னங்காற்று குளிர்ச்சியாக அறைக்குள் வந்து கொண்டிருந்தது. செல்வா அறைக்கதவை முழுவதுமாக திறந்தான். மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நாலு முறை நடந்தான்.

மெள்ள மெள்ள மனதிலிருக்கும் எரிச்சல் குறைவதை அவன் உணர்ந்தான். நெற்றியில் வந்து விழும் தன் தலைமுடியை விரல்களால் கோதி, பின்னால் தள்ளிக்கொண்டான். முழுக்கைச்சட்டை பொத்தானை விடுவித்து, சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டான்.



மாடியின் கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு கீழே பார்த்தபோது, செம்பருத்தியும், நந்தியாவட்டையும், செவ்வரளியும், காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

கொல்லையில், கிணற்று மேடையில் வேணி குத்துக்காலிட்டு உட்க்கார்ந்திருந்தாள். வேணியின் புடவை அவள் கணுக்காலுக்கு மேலேறியிருக்க, மொழுமொழுவென சதைப்பிடிப்பான கெண்டைக்காலும், வெள்ளை நிற பாதமும், பளிச்சிட்டன.

என்ன அழகு இது... இப்படி ஒரு அழகா..? முகம்தான் அழகா இருக்குன்னு நினைச்சேன்.. கழுத்துக்கு கீழவும் அழகா இருக்கான்னு நினைச்சேன்.. மொத்த உடலும் இவளுக்கு அழகா இருக்கே... கண்கள் கூசியது. செல்வா அதிர்ந்து போனான்.

சங்கர் இடுப்பில் மடித்துக்கட்டிய லுங்கியும், மார்பில் பனியனுமாக தன் முகத்தைக் கழுவிக்கொண்டு இருந்தான். வலுவான தோள்கள். கரணை கரணையான கால்கள். தொப்பை விழலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அவன் ஆஃபீஸிலிருந்து அப்போதுதான் வந்திருக்கவேண்டுமென நினைத்தான் செல்வா.

மாணிக்கத்தின் வீட்டு பின் கட்டில் கோடையிலும் கிணற்றில் தண்ணீர் பஞ்சமில்லாமல் சுரந்து கொண்டு இருந்தது. தனது அறுபத்து மூன்று வயதிலும், தினமும் தவறாமல், காலையில் வெயில் வருவதற்கு முன் இருபது முப்பது பக்கெட் தண்ணீரை இறைத்து பூச்செடிகளுக்கு ஊற்றுவதை அவர் தன்னுடைய வழக்கமாக வைத்திருந்தார்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த சங்கர், வேணியின் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டான். தன்னுடைய ஈரமுகத்தை அவள் முந்தானையால் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தான். வேணியின் கொழுத்த குலுங்கும் மார்புகளை கண்டதும்.. செல்வா மீண்டும் ஒருமுறை அதிர்ந்தான். அவன் சுவாசம் ஒரு வினாடி நின்றது. கண் இமைக்காமல் அவர்களை ஒரு நொடி பார்த்தான்.

சங்கர் சட்டென வேணியின் முகத்தை நிமிர்த்தி அவள் தோளில் கையைப்போட்டு தன்னருகில் வேகமாக இழுத்தான். அவர்களின் அந்த அன்பான, அந்தரங்கமான நெருக்கத்தை அதற்குமேல் பார்க்கமுடியாமல், சட்டென செல்வா பின்னால் நகர்ந்து கொண்டான்.

"போதும்.. போதும்.. விடுங்க.. இந்த அழுத்து அழுத்தறீங்க... மூச்சு முட்டுது எனக்கு... நேரம் காலம்.. இருக்கற எடம்ன்னு எதுவும் கிடையாது உங்களுக்கு. மேலே... சுகன்யா ரூமுக்கு செல்வா வந்திருக்கான்..." வேணி சிணுங்கியது மொட்டை மாடியில், கட்டைச் சுவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த செல்வாவுக்கு மிகவும் தெளிவாக கேட்டது.

"எதுக்கு...?"

"ம்ம்ம்.. வேணும்னா ஒரு நடை மேலப் போய் அவனையே கேட்டுட்டு வாங்களேன்...?"

"குடுத்து வெச்சவன்டீ செல்வா...?" ப்ச்ச்ச்... என சத்தம் கேட்டது. வேணியை சங்கர் கிஸ் அடிக்கிறானா? நினைத்ததும் செல்வாவுக்கு உடல் பற்றிக்கொண்டது. ஜிவ்வென ரத்தம் தலைக்கேறியது.

"இப்ப எதுக்கு செல்வா மேல இவ்ளோ காண்டு உங்களுக்கு?" வேணி சிரித்தாள்.

"ச்சீ.. பொறாமைல்லாம் இல்லடி... அவங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு... உடனே ரெண்டுபேரும் எவ்வளவு ஜாலியா கல்யாணத்துக்கு முன்னாடியே தங்களுக்குள்ள எஞ்சாய் பண்ணிக்கறாங்கன்னு சொல்றேன்.. அவ்வளவுதான்..."

"சின்னப்பசங்க ஜாலியா இருந்துட்டுப் போகட்டுமே...? செல்வா எனக்காக அவங்க அம்மா சுட்ட அதிரசம் கொண்டாந்து குடுத்தான் தெரியுமா?"

"ஆமாம்டீ... அவங்கமட்டும் சின்னப்பசங்க... நீயும் நானும் பேரன் பேத்தி எடுத்துட்ட கிழங்களா?... போதும்டீ.. ரொம்பத்தான் ஆக்டிங் குடுக்காதே நீ?"

"அதான்.. வயித்துல ஒண்ணைக் குடுத்திட்டீங்களே.. பாடா படுத்தி எடுக்குது... வாந்தி எடுக்கறவளுக்குத்தானே தெரியும்... தொண்டை எரிச்சல்..."

"என்னம்மா செல்லம்.. இன்னைக்கும் சாப்பிட்டதும் வாந்தி எடுத்தியா...?"

"ஒரே ஒருதரம் காலையில எடுத்தேன்.. மத்தியானம் சாப்பிட்டுட்டு சட்டுன்னு தூங்கிட்டேன்.. எது சாப்பிட்டாலும் குமட்டிக்கிட்டு வருதுப்பா..."

"என்னாலத்தானே உனக்கு இந்த கஷ்ட்டம்.. சாரிடா கண்ணூ..."சங்கர் கொஞ்சிக்கொண்டிருந்தான் தன் ஆசை மனைவியை...

"சே..சே.. அயாம் வெரி வெரி ஹேப்பிம்மா.. இன்னும் ஓண்ணு ரெண்டு நாள்லே இதெல்லாம் சரியாயிடும்ன்னு அத்தை சொன்னாங்க.."

ப்ச்ச்ச்... ப்ச்ச்ச்... கீழிருந்து முத்த சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. செல்வா மிகுந்த சிரமத்துடன் கீழே நடப்பதை எட்டிப்பார்க்க விழைந்த தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு கல்லா சமைந்து போயிருந்தான்.

"ம்ம்ம்...போதும்ம்ம்..." வேணி முனகுவது செல்வாவுக்கு நன்றாகவே கேட்டது.

"முழுசா ஒரு மாசம் ஆயிடிச்சிடீ... ராத்திரிக்கு வெச்சிக்கலாமா...?உன் லேடி டாக்டர் என்ன சொல்லி அனுப்பிச்சா.. நான் கேக்க சொன்னதை கேட்டியா இல்லையா?" சங்கரின் குரலில் தாபம் புரண்டு ஓடியது.

"ம்ம்ம்... ஒண்ணும் பிரச்சனையில்லே.. எஞ்சாய்ன்னு சொல்லி அனுப்பினாங்க.."

"குட்.. வெரி குட் நீயுஸ்டீச்செல்லம்..."

"எனக்கும்தான்..." வேணி நீளமாக சிரித்தாள்.

"அப்ப ராத்திரிக்கு நாதஸ்வர கச்சேரியை வெச்சிக்கலாம்தானே?"

"சரியான அலைச்சல் உனக்கு..."

"உனக்கு இல்லையாக்கும்...?"

"வெச்ச்ச்சுக்கலாம்... இப்ப விடுடா என்னை... கிள்ளாதே அங்கேல்ல்லாம்..." வேணி செல்லமாக தன் அடிக்குரலில் முனகியதும் செல்வா தன் உடல் நடுங்கி ஆடிப்போனான். வேணியை, சங்கர் எங்கே கிள்ளியிருப்பான் என கற்பனையை ஓடவிட்டதும், தன் பனியனுக்குள் வியர்த்தான். கீழிருந்து கொலுசு சத்தம் கேட்டது. வேணி எழுந்து வீட்டுக்குள்ளப் போறா போல இருக்கு...

தன் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு, மீண்டும் கொல்லையை எட்டிப்பார்த்தான் செல்வா. சங்கர் மட்டும் தன் கைகளை மேலும் கீழுமாக உயர்த்தி உடலை ஸ்ட்ரெச் செய்து கொண்டிருந்தான். வேணி தன் கைகளில் இரு கோப்பைகளில், காஃபியோ.. டீயோ, எதையோ எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினாள். 


செல்வாவல் நிற்கமுடியாமல் அவன் கால்கள் துவண்டன. சங்கரும் வேணியும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க... மேட் ஃபார் ஈச் அதர்ங்கறது இவங்களுக்குன்னே உண்டாக்கின வார்த்தை போல இருக்கு... என்னப் பொருத்தம்.. இவங்களுக்குள்ள இருக்கற பொருத்தம்...

ரொம்ப பொருத்தமான ஜோடி.. வாழ்க்கையை இப்படி அனுபவிக்க கொடுத்து வெச்சிருக்கணும்... புள்ளைத்தாச்சியா இருந்துக்கிட்டு புருஷனை சந்தோஷப்படுத்த நினைக்கறா ஒருத்தி...

எனக்குன்னு ஒருத்தி வந்து வாய்ச்சிருக்காளே... சரியான மண்ணாங்கட்டி.. ஜடம்... தமிழ்நாட்டின் மாதர்குலத் திலகம், மிடில் கிளாஸ் மங்கையர்க்கரசி, உலக மகா கற்புக்கரசி... அவளுதை தொட்டுப்பாக்கக்கூட விடமாட்டேங்கறா...

கிணத்தடியில ஒருத்தன் பொண்டாட்டியைக் கட்டிக்கிட்டு, ராத்திரிக்கு நாதஸ்வர கச்சேரி வெச்சுக்கலாமான்னு அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணி, மேல மொட்டை மாடியில நிக்கற என்னை கண்ட மேனிக்கு, வெறுப்பேத்தறான்.. என் நிலமை அவனுக்குப் புரியுதா? சத்தியமா புரிஞ்சிருக்காது...

ஒலகத்துல உன்னை மாதிரியும், வேணி மாதிரியும் ஒரு ஜோடியாவது நல்லாயிருக்கணும்டா... நாங்க ஜாலியா இருக்கணும்ன்னு நினைக்கற பொம்பளை உனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்கா...

சாமி... இங்க என்னடான்னா, எனக்கு வந்து வாய்ச்சவ, தன்னுதை பூட்டுப் போட்டு பூட்டிவெச்சிக்கிறா.. சாவு விழுந்த வீடு மாதிரி ஒரே ஒப்பாரி வெக்கிறா... எல்லாம் என் தலையெழுத்து...

சுகன்யா ஒரே ஒரு தரம்தான் என் பின்னால வந்தா.. அதுக்கப்பறம் இன்னைக்கு வரைக்கும் நான்தான் இவ பின்னால நாய் மாதிரி சுத்தி சுத்தி வர்றேன்.. கிணத்தடியில கட்டிக்கறாங்க.. கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்துக்கறவங்க... அவங்களுக்குள்ள பேசிக்கறாங்க.... மேல நாங்க ஜாலியா இருக்கோமாம்...

சீனு அப்பப்ப சொல்லுவான்.... சொல்லிட்டு சிரிப்பான்.. கிழிஞ்சிது கிருஷ்ணகிரி வரைக்கும்ன்னு... அந்தமாதிரிதான் நாங்க ஜாலியா இருக்கற லட்சணமும்... என் மனசுல இந்த நிமிஷம் இருக்கற வெறுப்பு... இங்கே மேல கையில கிளம்பினக் குஞ்சைப் புடிச்சிக்கிட்டு நிக்கற எனக்குத்தானே தெரியும்... கீழே கிணத்தடியில கிஸ் அடிக்கறவனுக்கு எப்படித் தெரியும்...

இவ பின்னாலே... ஆசையா வந்தேன்... மொதல்லேயே கிளம்பும் போதே முனகினா... அப்பவே அங்கேயே போடீ மசுருன்னு வுட்டுட்டுப் போயிருக்கணும்... முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி கடைசீ வரைக்கும்... இன்னைக்கு மொனகலாவே பொழுது போயிடிச்சி...

திமிர் புடிச்சவ.. இந்த சுகன்யா... அவளுக்கு வேணும்ன்னா என்னை கட்டிப்புடிப்பாளாம்.... அவளுக்கு வேணாம்னா நான் சட்டுன்னு ஒதுங்கிடணுமாம்... அதுக்கு மேல நான் ஆசையா அவளை உரசினா... கற்புக்கரசியா மாறி, தலையை விரிச்சிப்போட்டுக்கிட்டு, கையில செலம்பை எடுத்துக்குவாளாம்..

என்னாடி இதுன்னு கேட்டா மிடில் கிளாஸ் வேல்யூன்னு லெக்சர் அடிக்கிறா... உங்கம்மாவைப்பாத்து பயப்படறேன்னு செண்டிமெண்ட் வுடறா? சரியான ராங்கிக்காரி... என் மூடையே கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டா...

என்னடா ஞாயம் இது... சாமீ... இந்த ஞாயம் மட்டும் நமக்கு புரியவேமாட்டேங்குது... மனதுக்குள் புழுங்கிக்கொண்டே அறையை நோக்கி மெல்ல நடந்தான் செல்வா. 




சுகன்யா சோஃபாவில் அசையாமல் கண்ணை மூடிக்கொண்டு உட்க்கார்ந்திருந்தாள். கைகள் இரண்டும் அவள் பின் தலையில் குடியேறியிருந்தன.

இவளைப் பாத்தாப் பாவமா இருக்கு.. நான் என்னா வேணும்னா இவளைப் புடிச்சி தள்ளினேன்... ஏதோ எரிச்சல்ல நவுருடீன்னு தள்ளிவுட்டேன்.. சாமி சத்தியமா வேணும்ன்னு தள்ளவே இல்லே...

என்னமோ என் சனியன் புடிச்ச நேரம்.. சுவத்துல போய் இவ தலை இடிச்சிக்கிச்சி.. டங்குன்னு சத்தம் கேட்டுதே... தள்ளினதுல, நிஜமாவே இவளுக்கு தலையில அதிகமா அடிபட்டு இருக்குமா.. ரத்தம் கித்தம் கட்டிக்கிட்டு வீங்கிடிச்சா என்ன?"

இன்னும் தலையில கையை வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்காளே?
மனதுக்குள் சுகன்யாவின் மேல் பொங்கிய உண்மையான பாசத்துடன், கூடவே லேசான பயத்துடன், அவள் தலையை தடவிக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் சுகன்யாவை மெதுவாக நெருங்கினான் செல்வா. அவள் தோளில் தன் கையை மெதுவாக வைத்தான்.

செல்வாவின் மனதில் தன் மேல் இருக்கும் அக்கறையை, அவன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், தலையில் ஏற்பட்ட சிறிய வீக்கத்தால், வீக்கத்தினால் உண்டான வலியால், சுகன்யா அவன் கையை வேகமாக உதறி தள்ளிவிட்டு சடாரென எழுந்து அறைக் கதவை நோக்கி நகர்ந்தாள்.

சுகன்யா தன்னை உதறியதும், உதறியது மட்டுமல்லாமல் அறைக்கதவை நோக்கி நடந்ததைக் கண்டதும், செல்வாவின் ஆண்மை, தன்னை அவள் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் சீண்டுகிறாள், அவள் தன் ஆண்மையை அவமதிக்கிறாள் என செல்வா தவறாக நினைத்துவிட்டான்.

இதுதான் நேரம் என்பது...!! இதுதான் வாலில்லா ராகுவின் விளையாட்டு என்பது...!! எங்கிருந்து ஒருவன் விலக விரும்புகிறானோ அங்கேயே அவனை இழுத்துக்கொண்டு செல்லுவது!! ஒருவரைப்பற்றி, ஒருவரின் செயலைப்பற்றி தவறான தர்க்கத்தை கோபப்பட்டவனின் மனதில் விதைப்பதுதான் ராகுவின் முதல் வேலை..!!

"என்னாடீ நான் என்னா... உன்னை ரேப்பா பண்ணிட்டேன் இப்ப? வுட்டா நீ என்னமோ மேலே மேலே சீன் காட்டறே?" கொதித்துப்போனான் அவன்.

"டேய்... செல்வா.. உனக்கு என்னை ரேப் பண்ணணுங்கற அந்த ஆசை வேற உன் மனசுக்குள்ள இருக்கா... வாடா வா... " சுகன்யாவும் கொதித்தாள்.

"வாடா... வா... வந்து என்னை ரேப் பண்ணு... என் தலையெழுத்து உன்னை மாதிரி ஆள் மேல ஆசை வெச்சேன் பாரு... எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்.." தன் தலையில் அடித்துக்கொண்டாள் சுகன்யா.

இப்போது அவள் ஹாலின் குறுக்கே வேகமாக நடந்து கட்டிலின் அருகில் வந்தாள் சுகன்யா. கோபத்தில், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதனை உணராமல், கட்டிலின் மேல் கிடந்த தலையணைகளை, ஒன்றன் பின்னாக ஒன்றாக எடுத்து செல்வாவின் மேல் வீசி அடித்தாள். தலையனை ஒன்று செல்வாவின் முகத்திலும், மற்றொன்று அவன் மார்பிலும் மோதி பால்கனி கதவின் ஓரம் சிதறி விழுந்தன.

"சுகன்யா.. ப்ளீஸ்.. பிஹேவ் யுர்செல்ஃப்.." செல்வா தன் அடிக்குரலில் கூவினான்.

"உன் மனசுல இருக்கறது எனக்குத் தெரிஞ்சுப் போச்சுடா... இதுக்கு மேல நீ என்னை ரேப் பண்ணி, உன் கயவாளித்தனத்தை மொத்தமா எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்போறியா?"

"ஆண்டவா.. முருகா... இவகிட்டேருந்து என்னை நீ காப்பாத்தேன்.. முண்டமாட்டாம் பேசறாளே?" அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

"இப்ப ஏண்டா நீ ரெண்டு பொண்டாட்டிக்காரனை கூப்பிடறே? உன் நெஞ்சுல சுத்தமா ஈரமே இல்லயாடா..." சுகன்யா மேலும் அவனை வெறுப்பேற்றினாள்.

"ஏன்டீ இப்படி என்னைப் படுத்தி எடுக்கறே... அவுக்கத்தான் வுடலே.. ஆண்டவன் பேரை சொல்லக்கூட ஏண்டி தடைப் போடறே... நான் சும்மா சாதாரணமா சொன்னேன்டீ.." செல்வா நிஜமாகவே புலம்பினான்.

"ஏன்டா இப்படி அலையறீங்க...?"

"நான் எதுக்கடி அலையணும்.. நான் என்னத் தெருவுல போற பொறுக்கியா.. என்னைப்பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே நீ?" செல்வா அவள் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.

"வேணாம்... நீ எதுக்காக என்னைக் கட்டிப்புடிச்சி, இழுக்க வேண்டாம்..!? நான் இந்த ரூமுக்குள்ளவே இங்கேயும் அங்கேயும் ஓடீ, உன் மேலே கீழே விழுந்து என் மண்டையை திருப்பியும் உடைச்சிக்கணுமா?

"யாருடீ உன்னை கட்டிப்புடிக்க வந்தது.. உன் தலையை தடவிக்குடுக்க வந்தேன்டி.." அவன் பரிதாபமாக பேசினான்.

"நீ என் தலையையும் தடவ வேணாம்.. என் மாரையும் தடவ வேணாம்... என் இடுப்புத் துணியை அவுக்கவும் வேணாம்... நீ இங்கேருந்து மரியாதையா போயிடு.." சுகன்யா பைத்தியம் பிடித்தவள் போல் கூவ ஆரம்பித்தாள்.

"சுகன்யா... வேணாம்டீ.. சும்மா வீணாக் கத்தாதே... யார் காதுலேயாவது விழுந்தா என் மானம் போயிடும்டீ..."

"உன் மானம் ஏன் போவனும்.. மொதல்லே என் மானம் போவட்டும்.. உனக்கு எந்த கஷ்டமும் வேணாம்... நானே என் துணியை அவுத்துடறேன்.. நீ வந்து உன் ஆசையைத் தீத்துக்க.. உன்னை நான் என் வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தேன் பாரு.. என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சிக்கணும்?

சுகன்யா தன் உதடுகள் துடிக்க, கண்களில் குரோதத்துடன் கத்திக்கொண்டிருந்தவள், விருட்டென தன் ஸல்வாரை அவிழ்க்க ஆரம்பித்தாள். ஸ்ல்வார் முடிச்சை அவிழ்த்ததும், சுகன்யா தன் மேல்சட்டையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

"என்னாடீ பண்றே நீ.. உனக்கு என்னப் பைத்தியம் கியித்தியம் புடிச்சுப்போச்சா... நிறுத்துடி... உன் டிராமாவை... சட்டென செல்வா, அவளுக்கு எதிர்புறம் திரும்பி சுவத்தைப்பார்க்க ஆரம்பித்தான்.

சுகன்யா மெல்லியக் குரலில் அழ ஆரம்பித்தாள்.


இப்ப எதுக்குடி நீ கண்ணைக் கசக்கறே? அவளிடம் வேகமாக வந்த செல்வா சுகன்யாவின் தோள்பட்டையை பிடித்து வலுவாக உலுக்கினான். அவன் குரல் லேசாக குளறாலாக வந்தது. கைவிரல்கள் இலேசாக நடுங்கின.

"செல்வா என் மேலேருந்து கையை எடு.. என்கிட்ட வராதே நீ... உன்னைப் பாத்தாலே எனக்கு பயமாருக்கு.." அவள் கண்கள் சிவந்து குளமாயிருந்தன.

"நான் உன்னை என்னடீ சொல்லிட்டேன்...? இப்ப எதுக்குடீ நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்றே?"

"..."

"சுகு... கேக்கறேன்ல்லா"

"..."

சுகன்யா தன் புறங்கையால் இருவிழிகளையும் துடைத்துக்கொண்டு, தன் மூக்கை உறிஞ்சினாள்.

"எதையும் வாயை விட்டு சொல்லித் தொலைக்காம ஏன்டீ இப்படி என்னை வதைக்கறே?"

என் கெட்ட நேரம் இவ அப்பன் குமாரசாமி இப்ப வந்துட்டான்னா நான் மொத்தமா ஒழிஞ்சேன்.. சனியன் புடிச்சவ என் கேள்விக்கு பதில் சொல்லாம எதுக்காக இப்படி நாடகம் ஆடிகிட்டு இருக்கா... சுகன்யா குலுங்கி குலுங்கி அழுவதைக் கண்டதும், அவள் அழுகை செல்வாவின் பயத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

"எதுக்குடா நீ மொரட்டுத்தனமா என் தலையை சொவத்துல முட்டினே?"

“நம்ம ரெண்டு பேரு பிரச்சனையில நீ எதுக்காக என் அம்மாவை இழுக்கறே?"

"நான் வாயை மூடிக்கிட்டு சும்மாத்தானே இருந்தேன்.. நீ தானே கிண்டிக் கிண்டிக்கேட்டே.. யாருக்கு பயப்படறே... யாருக்குப் பயப்படறேன்னு... இப்ப உண்மையைச் சொன்னா உனக்கு அடியில எரியுதா?" சுகன்யாவின் குரலிலும் சூடு ஏற ஆரம்பித்தது.

“தயவுசெய்து... நீ என் அம்மாவைப் பத்தி மட்டும் எதுவும் பேசாதே?”

“ஸோ... நான் உன் அம்மாவைப் பத்தி, எதிர்காலத்துல எது சொன்னாலும், எதைப்பேசினாலும், நான் உங்கிட்ட இப்படித்தான் அடிபடணுமா?”

“சுகன்யா... இன்னைக்கு நீ நிஜமாவே என் கிட்ட சண்டை போடணுங்கற மூடுல இருக்கேன்னு நினைக்கிறேன்... இங்கே நடந்ததை விட்டுட்டு, அதுக்கு மாத்தி மாத்தி வேற கலர் குடுக்கறே?”

“நீ கேட்டக் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்... நான் உன் கிட்ட சண்டை போட நினைக்கலே... என் மனசுல இருக்கறதை தெளிவா சொல்ல விரும்பறேன்... என் கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியலேன்னா பேசாம இரு... ஆனா தயவு செய்து நீயும் பேச்சைத் திசை திருப்பாதே..”

“மேடம்... நான் என் வாயைப் பொத்திக்கறேன் மேடம்... நீங்க உங்க மனசுல இருக்கறதை மொத்தமா சொல்லி முடிக்கற வரைக்கும் நான் குறுக்கே பேசமாட்டேன் மேடம்..” செல்வா குதர்க்கமாக பேச ஆரம்பித்தான்.

"செல்வா.. நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்க... உன் அம்மாவை நான் என் சொந்த அம்மாவாத்தான் பாக்கறேன்... அவங்களை நான் வேத்து மனுஷியா எப்பவுமே நினைக்கலை... அவங்களை நான் என் குடும்பத்துல ஒரு அங்கமா பாக்கறேன்... அவங்க எனக்கு நல்லதைத்தான் சொல்றாங்கன்னு நான் நினைக்கறேன்.”

"..."

“மல்லிகா அத்தை என்னை ஒரு தரம் குறைச்சு பேசினாங்கன்னு... அதுக்காக நான் எப்பவுமே வருத்தப்படலே... அப்ப நமக்கு நிச்சயதார்த்தம் கூட ஆகலே... நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நாம ரெண்டுபேரும், நெருக்கமா, கொஞ்சம் அந்தரங்கமா, ஒரு நாள் இதே ரூம்ல இருந்ததை, அவங்க தப்புன்னு நினைக்கறாங்க...”



"திருப்பியும் நீ மொதல்லேருந்து ஆரம்பிக்கறியா?"

“சொல்றதை கேளு.. குறுக்கே பேசாதே... உன் அம்மா தன்னோட மனசுல, தனக்கு மருமகளா வரப்போறவ இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு தனிப்பட்ட கருத்தை, ஒரு மதிப்பீட்டை வெச்சிருக்காங்க... அது தப்புண்ணும் நான் சொல்லலை. அது அவங்களோட உரிமை...”

"ம்ம்ம்... அப்புறம்.."

“உன் குடும்பத்துல நுழையப்போற நான், அவங்களோட மதிப்பீட்டுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க முடியலியேன்னு நான் வருத்தப்படறேன்... அவங்க மனசு புண்படற மாதிரி நான் ஒரு தரம் நடந்துட்டேனேன்னு நான் என் மனசுக்குள்ள கூனிக் குறுகிப் போறேன்.”

அவள் பேசுவதில் இருக்கும் அர்த்தம் மனசுக்குள் ஏற ஏற செல்வா தன் வாயைமூடிக்கொண்டான்.

“இப்ப உனக்கும் எனக்கும் நிச்சயம் ஆயிடிச்சி... அதனால தனிமையில, கொஞ்சம் ஃபீரியா உன் கூட இருக்கறதுல எந்த தவறு இல்லேன்னு நான் நெனைச்சேன் பாரு... அதுக்கு என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்..”

"அடிச்சுக்கடி.. நல்லா அடிச்சுக்க... சும்மா சீன் காட்டறே நீ" செல்வா குமுறினான்.

"என் தலையெழுத்து உன்னை காதலிச்சி கட்டிக்கணும்ன்னு நெனைச்சேன் பாரு... இனிமே, இதுக்கு மேல நான் அதைத்தான் தினம் பண்ணிக்கணும்.."

"...."

“என் மனசுக்குள்ள இருக்கற ஆசைகளை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்க முடியாம, எங்கே இன்னொரு தரம் என் அத்தைக்கு பிடிக்காத மாதிரி, நீ சொல்ற அந்த ‘மேட்டர்’ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நடந்துடவேணாமேன்னு நான் பயப்படறேன்..”



Monday 30 March 2015

சுகன்யா... 81

மீனாவுக்குப் பிடித்த அடர்த்தியான நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற காட்டன் சட்டையையும், அணிந்து கொண்டான் சீனு. போட்டிருந்த பனியனும், அதன் மேல் தொங்கும் மெல்லிய செயினும் சட்டை வழியாக வெளியில் தெரிந்தன.

கைகளை முறுக்கி, 'மீனா உன்கிட்ட விழுந்ததுலே என்னடா ஆச்சரியம்... கட்டாத்தான்டா வெச்சிருக்கே நீ உன் பாடியை' கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்த சீனு தன் உடலழகை ஒரு வினாடி மெய் மறந்து ரசித்தான். மனசுக்குள் சிறிய கர்வம் சட்டென எழுந்தது.

வெளியில் அடித்துக்கொண்டிருந்த புழுதிக்காற்றையும், மூடிக்கொண்டிருக்கும் வானத்தையும் நோக்கிய சீனுவின் மனதில் 'மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே' மனசுக்குள் பாட்டு ஒலிக்கத் தொடங்க பாடி ஸ்ப்ரேயை அடித்துக்கொண்டான்.



பைக்ல போனா மூஞ்சி பூரா மண்ணு அடிக்கும்... வண்டி ஓட்டற மூடே கெட்டுப் போயிடும்... ம்ம்ம்.. கார்லே போயிடலாமா... ஒரு வினாடி யோசனைக்குப் பின் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற ஐ-டென்னை கிளப்பி தெருவில் நிறுத்தியவன், வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டு, பூட்டை ஒரு முறை இழுத்துப்பார்த்தான்.

காரை வேகமாகக் கிளப்பி பறந்தவன் சுந்தரம் அய்யர் மெஸ்ஸுக்கு முன்னாடி நின்றான். அரை டஜன் மெது வடை சட்னி, சாம்பர் பேக் பண்ணிக்கொண்டான். மீனா... டார்லிங்க்... உனக்குப் பிடிச்ச மெதுவடையோட உன் மாமன் வந்துட்டேன்டீச் செல்லம்... மீண்டும் காரில் உட்கார்ந்து சீறிப்பறந்தான் சீனு.

அவனுடைய வருகைக்காகவே காத்திருப்பதுபோல் மல்லிகா, நடராஜன், செல்வா, அனைவரும் ஹாலில் உட்க்கார்ந்திருந்தனர். 'வெளியிலே கிளம்பற மாதிரி தெரியுது?' கையிலிருந்த வடைப்பார்சலை டீபாயின் மேல் வைத்தான். நடராஜனையும், மல்லிகாவையும் ஒரு முறைப்பார்த்தான்.

'அம்மா... என் மேல கோவமாம்மா... நீங்களே என் மேல கோச்சிக்கிட்டா நான் எங்கம்மா போவேன்...?"

தன்னுடைய முதல் பிட்டைப் போட்டுக்கொண்டே, மல்லிகாவின் காலடியில் தரையில் உட்க்கார்ந்துகொண்டு அவள் மடியில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான். அவள் தாய்மை அந்தத் தருணத்தில் விழித்தது. தன் வலது கையால், சீனுவின் தலையை வருடிக்கொண்டே, வலது கையால் அவன் முதுகில் பொய்யாக அடித்தாள்.

"இந்த சினிமா டயலாக்கெல்லாம் என் கிட்ட வேணாம்... உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்..." மல்லிகா தன் முகத்தில் கோபத்தை கொண்டு வர முயற்சி செய்து முற்றிலுமாக சீனு தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் முன் தோற்றுப்போனாள்.

"என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியும்ன்னா... அப்புறம் எதுக்கு..." வார்த்தையை முடிக்காமல், தன் தலையை நிமிர்த்தி மல்லிகாவின் முகத்தைப் பார்த்தான். நடராஜன் முகத்தில் சிறிய புன்முறுவலுடன் அங்கு நடக்கும் டிராமாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"எழுந்திருடா..."

"என்னம்மா..?"

“எழுந்திருடான்னா...”

“ம்ம்ம்...” முனகிக்கொண்டே எழுந்தான் சீனு.

"இப்படி சோஃபாவுல உக்காரு..." தன்னருகில் உக்கார்ந்த சீனுவின் தோளில் ஆசையுடன் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.. அவன் முகத்தைப் பாசம் பொங்கப் பார்த்தாள்.

"அம்மா... மீனா மாதிரி ஒரு நல்லப் பொண்ணை, அதுவும் என்னை ஆசைப்படற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாம்ன்னு நினைச்சேம்ம்மா... அது தப்பாம்ம்மா.."

சீனு தன்னுடைய அடுத்தப் பிட்டை எடுத்து அழகாக வீசினான். அவன் எதிர்பார்த்தபடியே அந்த பிட்டும் தன் வேலையைச் சரியாக செய்தது. மல்லிகா உதடுகளால் எதுவும் பேசமுடியாமல் அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நடராஜனும் வாயைத் திறக்காமல் மனதுக்குள் நெகிழ்ந்து கொண்டிருந்தார். மீனா தன் அறையிலிருந்து வெளியில் வந்து தன் தந்தையின் பக்கத்தில் நின்றாள்.

"மீனா இப்படி வாயேன்.. அம்மா, அப்பா, நீங்க ரெண்டு பேரும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களேன்.." சீனு சட்டென எழுந்து, மீனாவின் வலது கையைப்பிடித்தான். மீனாவும் அவனும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்று அவர்கள் முன் குனிந்தார்கள்.

"முருகா.. சந்தோஷமா இருங்க..." நடராஜனின் குரல் தழுதழுத்தது. மல்லிகா அவர்கள் இருவரையும் ஒரு சேர தன்னுடன் சேர்த்துக்கொண்டாள்.

"சீனு உங்க வீட்டுல நீங்க ரெண்டு பேரும் லவ்வற விஷயத்தை சொல்லிட்டியா..? மல்லிகா மெல்ல கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

"ம்ம்ம்.... சொல்லிட்டேம்மா... மீனாவையும் போனவாரம் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் எல்லாருக்கும் இன்ட்ரொட்யூஸ் பண்ணிட்டேன்... மீனாவுக்கு பரிட்சை முடிஞ்சதும் உங்ககிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு... அத்தையும், அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்கப்பா.."

“இவ்வளவு தூரம் எல்லாத்தையும் பண்ணிட்டு எங்கக்கிட்ட எதையும் சொல்லாமா இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருக்கேடீ நீ...” மல்லிகா தன் பெண்ணை முறைத்தாள்.

"அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா... மீனா தன் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அடுத்த நொடி... கோச்சிக்காதேம்மா... நீ என்ன சொல்லுவியோன்னு பயந்தேம்மா.. அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். செல்வாவின் கையைப் எடுத்து அவன் புறங்கையில் முத்தமிட்டாள்.

"எல்லாருக்கும் குடுத்துட்டே... எனக்கு குடுக்க மாட்டியா?" சீனு மீனாவை நோக்கி தன் கன்னத்தைக் காண்பித்து கண்ணடித்தான்.

"சனியனே... என் மானத்தை வாங்காதே... உனக்கு ஒதைதான் குடுப்பேன்..." மீனா அவன் முதுகில் செல்லமாக அடித்தாள்.

"பாருங்கப்பா... இப்பவே என்னை இப்படி அடிக்கறாளே... போவப் போவ இவகிட்ட நான் என்னப் பாடு படணுமோ?" சீனுவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

"சீனு... நானும் இவரை அப்பாங்கறேன்.. என்னை கட்டிக்கப்போற நீயும் அப்பாங்கறே... லாஜிக் கொஞ்சம் இடிக்கலே..." மீனாவின் முகம் மாலை வானமாக சிவந்திருந்தது. அவள் கண்ணும், வாயும், உதடும், ஏன் அவளுடைய முழு முகமும் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தன.

"மீனாட்சீ.. சீனுவை நீ இந்த வீட்டு மாப்பிள்ளையாக்கிட்டே... இருந்தாலும், அவனை நாங்க என்னைக்கும் எங்க பிள்ளையாத்தான் கொண்டாடுவோம்..." நடராஜன், சீனுவை இழுத்து அணைத்துக்கொண்டார். செல்வா சீனுவின் கையைப்பிடித்து குலுக்கியபடியே, அவனைத் தன் தோளோடு நெருக்கிக்கொண்டான். மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது அந்த வீடு. 

"மல்லிகா சீக்கிரமா டிஃபனை எடுத்து வைம்மா... ஒரு வாய் சாப்பிட்டுட்டு கிளம்பணும்... நேரமாவுதுல்லே"

"என்னம்மா.. அவசரமா வான்னு என்னைக் கூப்ட்டீங்க..?" சீனு வடையை மென்று தின்றுக்கொண்டிருந்தான்.

"இன்னைக்கு மீனாவுக்கு கேம்பஸ் இண்டர்வியூ இருக்குடா... சாரிப்பா.. சீனு... நீங்க இந்த வீட்டு மாப்பிளையா ஆகப்போறவர்.. உங்களை நான் இனிமே பழைய மாதிரி வாடா போடான்னுல்லாம் சொல்லக்கூடாது.." மல்லிகாவின் முகத்தில் புன்சிரிப்பு எழுந்தது.

“அம்மா நான் என்ன செய்யணும்ன்னு நீங்க ஆர்டர் போடுங்கம்மா... என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு... இந்த வாங்க போங்க மரியாதையெல்லாம் எனக்கு வேண்டாம்.. அப்பா சொன்ன மாதிரி நான் என்னைக்கும் உங்க புள்ளைம்மா.. வாடா போடான்னு நீங்க என்னை எப்பவும் போல ஆசையா கூப்பிடுங்கம்மா..." சீனு உணர்ச்சி வசப்பட்டதால் அவன் குரல் கரகரப்பாக வந்தது.

"இந்த இண்டர்வீயுவை செகண்ட் ஸ்டேஜை காலேஜ்ல வெக்காம அவன் கம்பெனில வெச்சிருக்கானாம்.. மீனா கூட நான் போறதா இருந்தேன்... ஆனா எனக்கு மாமா மொறையில ஒருத்தர் இன்னைக்கு விடியற்காலம் தீடீர்ன்னு காலமாயிட்டார்... துக்கம் விசாரிக்க நாங்க திருக்கழுக்குன்றம் வரைக்கும் போயே ஆகணும்... செல்வா எங்கக்கூட வர்றான்... கார்லேயே போய்ட்டு வந்திடலாம்ன்னு பாக்கறோம்... நீங்க பைக்லதானே வந்திருக்கீங்க... துணைக்கு நீங்க மீனாகூடப் போயிட்டு வர்றீங்களா?”

"நீங்க கவலைப்படாமே போய் வாங்கம்மா... மழை வர்ற மாதிரி இருக்கேன்னு அப்பாவோட காரை நான் எடுத்துட்டு வந்திருக்கேன்...மீனாக்கூட நான் போய்ட்டு வர்றேம்மா...”

சீனு இதாண்டா நேரங்கறது... நடக்கற நேரத்துல எல்லாமே அது அதுவா கரெக்டா நடக்குது பாரு... ‘நீங்க சொர்க்கத்துல நல்லாயிருக்கணும் அய்யா...’ செத்துப்போன மல்லிகாவின் மாமவுக்கு தன் மனசுக்குள் ஆயிரம் முறை நன்றி சொன்னான் சீனு.



***


மீனா எப்போதுமே ஒரு சிறிய துள்ளலுடன்தான் நடப்பாள். இதற்கு அவளுடைய மெல்லிய உடல் வாகும், ஐந்தாறு வருடங்களாக அவள் அணியும் மிதமான ஹைஹீல்களுமே காரணம். அவள் ஹைஹீல்ஸ் அணிந்து நடக்க ஆரம்பித்ததிலிருந்து, அவளுடைய இடுப்பு குறுகியிருந்த போதிலும், இடுப்பின் கீழ்புறம் சிறிதே அகன்று அவளுடைய பின் மேடுகள் சதைப்பிடிப்புடன், செழிப்பாக மாறிக்கொண்டிருந்தன.

அவளுடைய பின் மேடுகளின் புஷ்டி அவளுக்கு கவர்ச்சியைத் தந்தது மட்டுமன்றி, அவள் புடவையணியும் போது அவளை கோவில் சிலையாக மாற்றிக் காட்டியது. பார்க்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல், ஒரு வினாடி நின்று திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு அவள் அழகு கவர்ச்சியாகவும், அவளுடையது.

மீனாவுடன் படிக்கும் அவள் கல்லூரித் தோழிகளில் சிலரே அவளுடைய இந்த கொழுத்த வனப்பைப்பார்த்து 'மீனா... உனக்கு முன்னாடி கொஞ்சம் சின்னதுனாலும், பின்னாடி வடிவா, அழகா, சூப்பரா இருக்குடீ... இப்ப உன் ஒடம்புக்கு ஏத்த அளவுல இருக்குதுங்க... நீ நடக்கும் போது அழகா அசையுதுங்க... ஆனா இதுக்கு மேல பெருக்க விட்டுடாதே... பொறாமையில் தங்கள் கண்கள் சிறுத்து பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

மீனு... இவளுங்க பேசறதெல்லாத்தையும் கண்டுக்காதேடீ.. டேட் இட் ஈஸீ... உனக்கு வர்றவன் கையைப் போட்டு மாரை அழுத்திப் புடிச்சான்னா பத்து நாள்லே உனக்கு முன்னாடியும் பெருத்துடும்.. அவள் நெருங்கியத்தோழி செல்வி அவள் காதில் அவ்வப்போது முனகும் அந்த நேரங்களில், தன் அழகை நினைத்து, மார்பு துடிக்க, தன் முலைக்காம்புகள் தடிக்க, முகத்தில் சிவக்கும் மீனா மனதுக்குள் பெருமிதத்துடன் ஆகாயத்தில் பறப்பாள்.

நேர்முகத் தேர்வுக்காக மீனா கருநிற ஃபார்மல் பேண்ட்டும், ப்யூர் வெள்ளை நிறத்தில் முழுக்கைச் சட்டையை 'இன்' செய்து, லைட் க்ரே நிறத்தில் பெல்ட்டை இடுப்பில் இறுக்கி, காலில் கருநிற கட் ஷூவும், கழுத்தில் மெல்லிய நீல வண்ண 'டையும்' அணிந்து கொண்டிருந்தாள்.

முதல்கட்ட நேர்முகத்தேர்வை இரண்டு நாட்களுக்கு முன் அவள் சரியாக அணுகியிருந்தாள். தேர்வு பட்டியலில் அவள் பெயர் முதன்மையாக இருந்தது. அதனால் இன்றையத் இரண்டாவது கட்டத் தேர்வையும் தன்னால் சிறப்பாக எதிர்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை தந்த கர்வத்தில், அவள் நடையில் இருந்த துள்ளலுடன், மனம் முழுவதும் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து கொண்டது.

வீட்டிலிருந்து, தெருவில் நின்றிருந்த காரை நோக்கி நடந்தபோது மீனாவின் இளமைகளும் சந்தோஷத்தில் பூரித்து திமிறிக்கொண்டிருந்தன. அவள் நடந்து வந்த ஸ்டைலையும், அவள் மார்புகள் அசைந்த விதத்தையும், அவள் முகத்திலிருந்த தன்னம்பிக்கையையும் கண்ட சீனு நிலைகுலைந்து போய் ஸ்டீயரிங் வீலின் முன் உட்க்கார்ந்திருந்தான்.

மீனா முன் சீட்டில் அவனருகில் உட்கார்ந்ததும், கையிலிருந்த கோட்டை பின் சீட்டில் ஏறிந்தாள். கதவை மூடிக்கொண்டாள். 'மை காட்... சத்தியமா சொல்றேன்டீ... இந்த மாதிரி நீ டிரஸ் பண்ணே... இண்டர்வியூல உன்னைப் பாக்கற அந்தக் கிழப்பசங்க அங்கேயே செத்தானுங்க... ஒண்ணுமே பேசாம வேலையைத் தூக்கி உன் கையில கண்டிப்பா குடுத்துடுவானுங்கடீ செல்லம்...' அவள் மார்பின் மேல் வைத்த தன் கண்களை திருப்ப முடியாமல் திணறினான் சீனு.

"என்னப்பா.. நீயே கண்ணு போட்டா எப்படீ..." மீனா சிணுங்கினாள்.

"கோழி மெதிச்சி குஞ்சு சாகுமா...?"

"எந்த குஞ்சைச் சொல்றே நீ? மீனா தன் உதட்டைக் குவித்து குறும்பாகக் கண்ணடித்தாள்.

"அடிப்பாவீ... அம்மாத் தாயே... மீனாட்சீ... நீ ரொம்பவே முத்திட்டே... கெட்டு குட்டி சுவராப் போயிருக்கேடீ..!! இப்படீல்லாம் கூட உனக்கு பேசத் தெரியுமாடீ.." சீனு அவள் இடுப்பில் கிள்ளினான்.

"உன் கூட சேந்தேன்ல்லா அதான்... கையை எடுடா சனியனே... கதவாண்டை அப்பா நின்னுக்கிட்டு இருக்கார்.."

கார் ஈ.ஸீ.ஆர் ரோடில் வெண்ணையாக வழுக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய சீனு, 'மீனு... கிட்டவாடிச்செல்லம்.." குழைந்தான்.

"இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தினே நீ"

"ஒரு வாரம் ஆச்சுல்லே.. ஒண்ணே ஒண்ணு குடுடீ கண்ணு.... பெட்ரோல் போட்டாத்தான் வண்டி ஓடும்.." வெட்கமில்லாமல் சிரித்தான் சீனு.

"வேணம்பா... ரோட்ல வண்டிங்கள்ளால்லாம் நிறையப் போவுதுல்லே.."

"ப்ளீஸ்... போறவன் போறான்.. வர்றவன் வர்றான்... நீ ஒண்ணே ஒண்ணுடீ...."

"நான் உன் கிட்ட வந்தா... என்னை நீ கட்டிப்புடிப்பே.. அப்புறம் என் சட்டையெல்லாம் கசங்கிப்போயிடும்.. இண்டர்வியூவுக்கு போகணுமில்லே..."

மீனா சிணுங்கியபோதிலும், சீனுவின் கண்களில் இருந்த உல்லாசம் அவளையும் பட்டெனத் தொற்றிக்கொண்டது. சீனுவின் உதடுகள் தரும் இதமான சூட்டுக்கு அவள் பெண்மை அலைந்தது. மீனா காரின் கண்ணாடியின் வழியாக முன்னும் பின்னும் ஒருமுறைப்பார்த்தாள்.



சீனுவின் கழுத்தை தன் இடது கையால் மனதில் பொங்கும் ஆசையுடன் வளைத்தாள். சீனுவைத் தன் புறம் இழுத்து அவன் நெற்றியில் ஆவலுடன் முத்தமிட்டாள். புருவங்களில் முத்தமிட்டாள். அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். தன் இதழ்களில் வழியும் ஈரத்தை, தன் இதழ்களை கவ்வி உறிஞ்சிய சீனுவின் இதழ்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினாள். அவன் உதடுகள் தந்த அழுத்தத்தை மனம் சிலிர்க்க, உடல் சிலிர்க்க விழி மூடி அனுபவித்தாள்.

"தேங்க்யூடீச் செல்லம்.." சீனுவும் சிலிர்த்தான்.

சீனு தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். கார் ஓட ஓட, மீனா அவன் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அரை நிமிடத்திற்கு ஒருதரம் தன் முகத்தைத் திருப்பி திருப்பி, அவன் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள். 



சுகன்யா... 80

செல்வாவும் ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்ந்துதான் போயிருந்தான். சே.. நான் இன்னைக்கு அறிவுகெட்டத்தனமா பைத்தியக்காரத்தனமால்ல நடந்துகிட்டேன்? அப்படி சுகன்யா என்ன சொல்லிட்டா..? நடந்ததைத்தானே அவ சொன்னா? ஆனா அதை அவ என் கிட்ட சொன்ன நேரம் சரியில்லே. சொன்னவிதம் சரியில்லே.

ம்ம்ம்.. நடந்தது நடந்து போச்சு. இப்ப எதுக்கு பழசை சுகன்யா ஞாபகப்படுத்தினா? என் அம்மாவும்தான் நாலு பேரு எதிர்லே நான் கோவத்துல உன்னை எதாவது தப்பா சொல்லியிருக்கலாம்... அதைக் கேட்டு உன் மனசு புண்பட்டு இருக்கலாம்... அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதேன்னு சொன்னாளே... அதை மட்டும் சுகன்யா ஏன் மறந்துட்டா?



ஆயிரம்தான் இருந்தாலும் நான் இவளை முரட்டுத்தனமா தள்ளினது தப்புத்தானே? இப்ப இவ மூஞ்சை நான் எப்படி நிமிர்ந்து பாக்கறது? என்னை ரவுடிங்கறாளே? செல்வா தன்னுள் மருக ஆரம்பித்தான்.

ஒலகத்துல பொம்பளை தன் ஒடம்பால கொடுக்கற சுகம்தான் பெரிய சுகம்ன்னு சொல்றானுங்க.. என் கேஸ்ல என்னடான்னா... ஒரு பொம்பளை குடுக்கற சொகத்துக்கு நடுவுல இன்னொரு பொம்பளை இன்னைக்கு குறுக்கே வந்துட்டா...

இவளுக்கு நான் இன்னும் தாலி கூட கட்டலை. அதுக்குள்ள மாமியார், மருமவ சண்டை ஆரம்பிச்சிடிச்சி... உன் அம்மா இதைச்சொன்னா.. உன் தங்கச்சி அதைச் சொன்னா.. சை... கொடுமைடாப்ப்பா..

செல்வா, தன் முகத்தை, கழுத்தை, மார்பை, கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு ஈரத் துண்டை பால்கனி கொடியில் உதறிப் போட்டான்.

“அயாம் சாரி.. சுகன்யா,” அறையின் நடுவில் நின்றவாறு, தன் தலையை தடவிக்கொண்டிருந்த சுகன்யாவின் கையை, மீண்டும் பற்ற முயன்றான் செல்வா.

“என்னைத் தொடாதே நீ...” சுகன்யா வெடித்தாள். அவனிடமிருந்து பின்னுக்கு நகர்ந்தாள் அவள்.

அய்யோன்னு நெனைச்சா, ஆறுமாசப் பாவம் சுத்திக்கும்ன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. மனதுக்குள் எரிச்சல் அடைந்துகொண்டிருந்தான் செல்வா. பாக்கறதுக்கு கொஞ்சம் மூக்கும் முழியுமா, செவப்புத் தோலோட, கூடவே மாரும் சூத்தும் தெறிப்பா இருந்துட்டா பெரிய மசுருன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறாளுங்க... அவன் மனது தறிகெட்டு ஓட ஆரம்பித்தது. உள்ளத்துக்குள் கொதிக்க ஆரம்பித்தான்.

போச்சு போச்சு... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்பவே ஈகோ பிராப்ளம் ஆரம்பிச்சிடுச்சா.. எல்லாம் இவ சூத்தை தொறந்து பாக்கணுங்கற ஆசையில வந்த வெனை... செல்வா தன் மனதுக்குள் மேலும் மேலும் குமைந்து கொண்டிருந்தான்.

செல்வா... கன்ட்ரோல் யுவர் செல்ஃப்... சுகன்யா நீ காதலிக்கறப் பொண்ணுடா... உன் மனைவியாக ஆகப்போறவ... அவளைப் போய் இவ்வளவு மட்டமா நினைக்கறே... அவ உன் குணத்தைத்தானே சொன்னா... அதுவும் நீ வற்புறுத்தி விடாம கேக்கவேதானே சொன்னா... அவ சரியா... நீ சரியா? நிதானமா வீட்டுக்குப் போய் நடந்து என்னன்னு யோசனைப் பண்ணுடா? 


சனிக்கிழமை காலை. சீனு இன்னும் படுக்கையிலிருந்து எழுந்தபாடில்லை. சுகமாக போர்வையை கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

"ஒரு நிமிஷம் எழுந்து வந்து தெருக் கதவை தாப்பா போட்டுக்கடா... நாங்க கிளம்பணும்.. எங்களுக்கு நேரமாச்சு."

உஷா சீனுவை முதுகில் தட்டி எழுப்பினாள். ராகவன், பத்மா, உஷா மூவரும், ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்ய, காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்ரீபெரும்புதூருக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

"இன்னைக்கு லீவு தானே.. கொஞ்சம் நேரம் தூங்கவிடுங்கத்தே.." முனகினான் சீனு.

"ஒரு நிமிஷம் எழுந்து வாடா...கண்ணு..." அவள் தன் பட்டுப்புடவை மடிப்புகளை சரிசெய்து கொண்டே, சீனுவிடம் கெஞ்சினாள்.

"வெளியிலேருந்து பூட்டிக்கிட்டு போங்களேன்.." சீனு சோம்பல் முறித்தவாறு கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

"அவன் ஒரு கும்பகர்ணன்.. அவ பின்னால நீ ஏம்மா நிக்கறே? உஷா... சட்டுன்னு வாம்மா... பஸ் கிளம்பிடும்." ராகவன் வெரண்டாவிலிருந்து சலிப்புடன் குரல் கொடுத்தார்.

பத்து, பனிரெண்டு குடும்பங்கள், அவர் வயதையொத்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சிறிய டெம்போ ட்ராவலரை ஏற்பாடு செய்து கொண்டு, மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று சென்னையைச் சுற்றியிருக்கும் வைஷ்ணவ தலங்களுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

"வந்துட்டேன்ண்ணா.. டேய் சீனூ... பிளாஸ்க்ல காஃபி போட்டு வெச்சிருக்கேன்... தோசை மாவு இருக்கு... மொளகா பொடி இருக்கு... டிஃபனுக்கு ரெண்டு தோசையை ஊத்திக்கடா..." உஷா வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தாள்.

சீனு, மீனாவின் இடுப்பில் தன் கையைப் போட்டவாறு, கொடைக்கானலில் உல்லாசமாக சுற்றியலையும்போது, அவனைத் தட்டி எழுப்பி, அவனுடைய இனிமையான விடியல் நேரத்து இன்பக்கனவை கலைத்துவிட்ட அத்தையின் மேல் அவனுக்கு தாங்க முடியாத எரிச்சல் கிளம்பியது.

"ஒரு செட் சாவியை எடுத்துக்கிட்டீங்கள்லா...?" தெருவில் இறங்கி நடந்தவர்களிடம் கூவினான், சீனு.

"இருக்குடா..." ராகவன் தலையை ஆட்டிக்கொண்டே நடந்தார். தெரு முனையில் அவர்களுக்காக டிராவலர் காத்துக்கொண்டிருந்தது. 


தெருக்கதவை தாழிட்டுக்கொண்டு வந்த சீனு மீண்டும் ஹாலில் சோஃபாவில் நீளமாகப் படுத்துக்கொண்டான். உஷா அவனை முதுகில் ஓங்கி அறைந்து எழுப்பிய போது, சீனு தன் இளம் மனைவி மீனாவுடன் தேன்நிலவிற்காக, ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தான். ஊட்டியில் ரெண்டு நாட்களை கழித்தப்பின் அங்கிருந்தே மைசூர் போகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

சோஃபாவில் படுத்துக்கொண்டு, பாதியில் விட்ட இடத்திலிருந்து தன் கனவைத் தொடங்க நினைத்த சீனுவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் கனவு வருவேனா என முரண்டு பிடித்தது. கனவுதான் வரலே. தூக்கமாவது வந்து தொலைக்கக்கூடாதா? அவன் தன் கண்ணை இறுக மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தான். தூக்கமும் வந்தபாடில்லை.

விடியற்காலையில கண்ட கனவு பலிக்கும்ன்னு சொல்லுவாங்களே. கனவுல, மீனாவும் நானும் ஹனிமூனுக்கு போயிருந்தோம்ன்னா, மீனா வீட்டுல எந்தப் பிரச்சனையும் எழாம, எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுப் போச்சுன்னுதானே அர்த்தம். இதை நினைக்கும் போதே அவனுக்கு மனசெல்லாம் இனித்தது. இன்னைக்கு மீனாவைப் போய் பாத்துட்டு வரலாமா?

சீனுவுக்கு எழுந்திருக்கவும் மனம் வரவில்லை. சோஃபாவில் படுத்தபடியே ரிமோட்டை எடுத்து டீ.வி.யை ஆன் செய்தான். ஒரு சேனல் பாக்கியில்லாமல், எல்லாச் சேனல்களிலும், கழுத்தில் கொட்டையைக் கட்டிகொண்டு, பட்டையடித்து இருந்தவர்கள், நெற்றியில் நாமத்தை சூட்டியிருந்தவர்கள், பச்சை, ஆரஞ்சு, கருப்பு, நீலம் என வித விதமான வண்ணங்களில், இடுப்பில் வேட்டி அணிந்தவர்கள், வெள்ளை, கருப்பு, ஸ்படிகம், என கழுத்தில் மணிமாலைகளை அணிந்து கொண்டு, தங்கள் ஞானப்பழங்களிலிருந்து, பக்தி ரசத்தை பிழிந்து எடுத்து, பக்தகோடிகளின் இக பர நல்வாழ்க்கைக்காக, ஆறாக வெள்ளமாக, ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள். கேள்விகளை அவர்களே கேட்டு, பதிலையும் அவர்களே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சில சேனல்களில் வயதானவர்கள், ஆண் பெண் என்ற வித்தியாசமே இல்லாமல், ஒரு பெரிய பந்தலின் கீழ், தனித் தனியாக பிளாஸ்டிக் பாய், அதன் மேல் பெட்ஷீட் விரித்துக்கொண்டு, பெரிய பெரிய தொப்பைகளுடன் ஆண்களும், நடப்பதற்கே சிரமப்படும் பிருஷ்டம் பெருத்த பெண்களும், கும்பலாக நின்றும், கிடந்தும், ஓடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், யோகா என்ற பெயரில் தங்கள் உடம்பை வருத்திக்கொண்டிருந்தார்கள்.

சை.. என்னக் வேடிக்கைடா இது...? நொந்துகொண்டான் சீனு. இந்த சேனல்களை பாக்கற கோமாளிங்ககூட நாட்டுல இருக்கானுங்களா..? சீனு வியப்படைந்தான். கையிலிருந்த ரிமோட்டை எதிரிலிருந்த டீபாயின் மேல் வீசியெறிந்தான். வெறுப்புடன் எழுந்து டீ.வியை அணைத்தான். 


வாயைக்கொப்பளித்துக் கொண்டு, டைனிங் டேபிளின் ஓரத்தில், பளபளக்கும் பிளாஸ்கில் நிறைக்கப் பட்டிருந்த ஆவி பறக்கும், பில்டர் காஃபியை, ஒரு சில்வர் டம்ளர் நிறைய ஊற்றிக்கொண்டு, வெராண்டாவிற்கு வந்தான். குளிர்ந்த காற்று முகத்தில் வேகமாக வந்து அடிக்க மனசுக்குள் ஒரு நிம்மதி படருவதை உணர்ந்தான். நீளமாக காற்றை நெஞ்சுக்குள் இழுத்து வெளியேற்றினான்.

மீனாவின் சிரித்த முகம் அவன் கண்ணில் வந்து நின்றது. மீனா தூங்கி எழுந்துட்டு இருப்பாளா... ஒரு வாரமாச்சு அவளைப் பாத்து... வெளியில வர்றியாடீன்னு கூப்பிட்டுப் பாக்கலாமா? இனிமே பீச்சுக்கு வரமாட்டேன்னு தீத்து சொல்லிட்டா.. சினிமாவுக்கு வருவாளா? அங்கே இருட்டாத்தானே இருக்கும்...? சீனு.. உனக்கு மண்டையில களிமண்ணுடா.. பரிட்சைக்கு படிச்சுக்கிட்டு இருக்கறவ வெளியில உன் கூட வருவாளா?

போன வாரம் எவ்வளவு ஜாலியா இருந்திச்சி.. அவ வீட்டுக்குப் போய் மீனாவை கூப்பிட்டதும், ஒரு கேள்வி கேக்காம செல்வா அவளை என் கூட அனுப்பி வெச்சான். அதே மாதிரி அவளோட அம்மா அனுப்பி வெப்பாங்களா?
ஆயிரம்தான் இருந்தாலும் என் நண்பன் செல்வா.. செல்வாதான்.. செல்வா ஜிந்தாபாத்.. செல்வா ஜிந்தாபாத்.. சீனுவின் மனம் அவனுக்கு நன்றி சொல்லியது.

சே.. பாவம் படிக்கறவளை எதுக்காக தொந்தரவு பண்ணணும்..? மீனாவை பார்க்க அவன் மனம் துடித்தது. செல்வாவை போய் பாக்கற சாக்குல, தோட்டத்துல, கூடத்துல, இல்லே மாடியிலேன்னு மீனாவை எங்கேயாவது அவ வீட்டுலேயே மடக்கி, சட்டுன்னு கட்டிப்புடிச்சி, சின்னதா ஒரு கிஸ் அடிச்சுட்டு, அவகிட்டேருந்து ஒரு கிஸ் வாங்கிட்டு வந்துடலாமா?

மீனாவின் வலுவான தேகமும், அவள் அங்கங்களின் மென்மையும், குழந்தைத்தனமான அவள் விழிகளின் வெளுப்பும், கருமையும், கூந்தல் வாசனையும், அவளுடைய உடலின் மென்மையான சந்தன வாசனையும் அவனை அமைதியாக இருக்கவிடவில்லை.

சுகன்யா ஊர்லேருந்து வந்துட்டா.. கம்மினாட்டி செல்வா அவளை தள்ளிக்கிட்டு அவ பின்னால எங்கேயாவது சுத்தப் போயிடுவான்.. இன்னைக்கு எப்படி பொழுதை ஓட்டறது... சீனு தன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தான். வீட்டுலதான் யாரும் இல்லே... சரி.. வேலாயுதத்தை கூப்பிடலாமா? சீனுவுக்கு சட்டென அவன் ஞாபகம் வந்தது.

வேலாயுதத்தை நினைத்தவுடன் அவன் கை அரித்தது. மனதுக்குள் ஒரு ஏக்கம் வேகமாக எழுந்து உடலெங்கும் ஒரு நமைச்சல் எடுத்தது.. ஒரு மாசமாச்சு.. கட்டிங் வுட்டு.. இந்த எண்ணம் மனதில் வந்த அடுத்த நொடி கடந்த சண்டே அன்று மீனா தன் வீட்டிலிருந்தே, தன் செல்லில், வேலாயுதத்துக்கு லாடம் கட்டிய சீன் அவன் ஞாபகத்துக்கு வந்தது...

எப்பா.. வேண்டவே வேண்டாம்.. வேலாயுதம்கூட சகவாசம் வெச்சிக்கிட்டேன்னு மீனாவுக்கு தெரிஞ்சா... என்னை பீஸ் பீஸா கிழிச்சுடுவா... இப்பல்லாம் மீனாவோட அராஜாகம் அதிகமாயிட்டே போவுது.. காதலி வேணும்ன்னா கொஞ்ச நாளைக்கு நண்பனைத் தியாகம் பண்ணித்தான் ஆகணுமா?

வாலு போனாத்தான் கத்தி வருமா? ஒரு நஷ்டத்துலதான் ஒரு லாபத்தைப் பாக்கமுடியுமா? ஒண்ணைக் குடுத்தாத்தான் ஒண்ணு கிடைக்குமா? டேய்... சீனு... நீ ஒரு ஞானிடா... சட்டுன்னு வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டியேடா? அவன் மனசு 'ஓ' வென கூச்சலிட்டது.

வாசல் படியில் உட்கார்ந்திருந்த சீனு மெல்ல எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். ஹாலுக்குள் நுழைந்தபோது அவன் செல் ஒலித்தது... ஸ்கீரீனில் மீனாவின் புகைப்படம் பளிச்சிட்டது. 




வாவ்... வாடீச் செல்லம்... பழம் தானா நழுவி பால்லே அதுவா விழுதே... சீனு... நீ இனிமே இன்னைக்கு கனவு காண அவசியமில்லேடா... உன் மீனா டார்லிங் போன்ல வந்துட்டா.. ஏதாவது பிட்டைப் போட்டு, அவளைப் பிக்கப் பண்ணி உன் வீட்டுக்கு தள்ளிட்டு வந்துடு..

சாயந்திரம் நாலு மணி வரைக்கும் இன்னைக்கு உன் வீடு காலிதான்.. மூணு பெட் ரூம் இருக்கு... எதுலே இஷ்டமோ அதுல அனுபவி ராஜா அனுபவின்னு ஜாலியா இரு.. கோடையில் குற்றால அருவியில் குளிப்பது போலிருந்தது அவனுக்கு..

"சொல்லுடீ மீனா டார்லிங்... எப்படியிருக்கேடீ செல்லம் நீ... ஒரு வாரமாச்சும்மா உன் குரலைக்கேட்டு?” சீனு உற்சாகமான் குரலில் கொஞ்ச ஆரம்பித்தான்.

"டாய்... சீனு.. முண்டம்.. நான் உன் டார்லிங்கை பெத்தவடா… உன் ஒடம்பு எப்படி இருக்குது, ராத்திரி எங்கேயாவது பார்ட்டீ கீர்ட்டீனு போய் வந்தியா... குடிச்சுட்டு வந்த போதை இன்னும் தெளியலையா உனக்கு...

"அம்ம்ம்மமா.. சாரீம்ம்ம்மா..."

"நான் கேட்ட கேள்விக்கு பதிலைச்சொல்லுடா.. அதுக்கப்புறம் என் பொண்ணு மீனா... உனக்கு டார்லிங் ஆயிட்டாளா... கட்டை உனக்கு ரொம்பத்தான் துளுத்துப் போயிருக்குது... ? வீட்டுக்கு வருவேல்லா.. வா வாடா வா.. அவ எப்படியிருக்கான்னு உனக்கு நான் சொல்றேன்..."

மறுபுறத்திலிருந்து மல்லிகாவின் குரல் கணீரென வந்தது. பேசிக்கொண்டே மல்லிகா தான் பேசிக்கொண்டிருந்த செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். அவளுடன் நடராஜனும், செல்வாவும் உட்கார்ந்து இருந்தார்கள். மீனா குளித்துக்கொண்டிருந்தாள்.

"அம்ம்மா... மீனா நம்பர்லேருந்து கால் வரவே.. அவளை கலாய்க்கலாம்ன்னு... காமெடி பண்ணிட்டேம்மா... சாரிம்ம்மா... தப்பா நெனைச்சுக்காதீங்கம்மா" சீனு உண்மையிலேயே உள்ளூரப் பயத்துடன் உடல் நடுங்க உளறினான்.

நானே என் வாயைக்குடுத்து காரியத்தைக் கெடுத்துட்டேனே... எல்லாம் என் தலையெழுத்து... 'சனி பகவான்' இன்னைக்கு என்னைக் காலங்காத்தாலேயே புடிச்சிக்க ஆசைபடறானே? கொஞ்சம் கூட அவனுக்கு என் மேல இரக்கமே இல்லையே? சீனுவுக்கு நொடியில் தேகமெங்கும் வியர்த்தது.

கடைசீல... எதிர்வீட்டு ராமசாமி அய்யரு... நாங்க கிஸ்ஸடிச்ச மேட்டரை அம்மாக்கிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? மீனாவோட அம்மாவுக்கு நாங்க லவ்வற விஷயம் தெரிஞ்சிப் போச்சா? அம்மாவுக்கு தெரிஞ்சிருந்தா.. அவ அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்குமே?

“என்னடா... சத்தத்தையே காணோம்...” மல்லிகா குரலை உயர்த்திப் பேசினாள்.

“அம்மா... எல்லாரும் கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் வரைக்கும் போயிருக்காங்க... நான் மட்டும்தான் வீட்டுல இருக்கேன்...?”

“நான் அதைக் கேக்கலடா... உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா... அதைப் பத்திக் கேட்டேன்...”

“சாரீம்ம்மா... பிளீஸ்...”

"உன்னைப் பெத்தவங்க நல்லவங்க... கோயிலுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா.. கோவில் மாடு மாதிரி சுத்திக்கிட்டு... ஃப்ரெண்டு தங்கச்சியை டார்லிங்ன்னு சொல்லிகிட்டு, அவன் அம்மாகிட்டவே அவ நல்லாயிருக்காளான்னு கேள்வி வேறே கேக்கறே..

"பிளீஸ்ம்ம்மா.. தப்புத்தம்ம்மா... " .

“டேய்... நீ உடனே புறப்பட்டு இங்க வாடா... உனக்கு கச்சேரியை நான் நேர்ல வெச்சுக்கறேன்?”

மல்லிகாவின் உதடுகளில் மெல்லிய புன்முறுவல் எட்டிப்பார்த்தது. முகத்தில் அலாதியான ஒரு சந்தோஷம் நிரம்பியிருந்தது. பக்கத்திலிருந்த நடராஜன், அவளை நிமிர்ந்து பார்த்து ஓசையில்லாமல் சிரித்தார்.

“அம்மா... என்ன சொல்றீங்கம்மா..?” சீனுவுக்கு என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தான்.

"நீ பண்ணியிருக்கற வேலைக்கு..."

"அம்மா... நான் பண்ணது தப்புதான்னு ஒத்துக்கறேம்மா.. பிளீஸ்... கோச்சிக்காதீங்கம்மா.."

சீனு கெஞ்ச ஆரம்பித்தான். மல்லிகா அவனுக்கு எதற்காக போன் செய்தாள் என்பதை கேட்காமல் தன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியில் சீனு தொடர்ந்து உளற ஆரம்பித்தான்.

"நீ பண்ணது தப்புன்னு உனக்கேத் தெரியுதுல்ல.. அதுக்கு நான் உன்னை கோச்சிக்கக்கூடாதா? உன்னை கட்டி வெச்சி ஒதைக்கணும்டா..?!"

"அம்மா.. நீங்க என்னை கோச்சிக்கலாம்.. தாராளமா என்னை அடிக்கறதுக்கே உங்களுக்கு உரிமையிருக்கும்மா... உங்க வீட்டுல உங்க கையால சாப்பிட்டு வளந்தவன்ம்மா நான்.."

"அப்புறம்... ரொம்ப ஓட்டாதேடா நீ.. உன்ன நான் இன்னைக்கு நேத்தாப் பாக்கிறேன்.."

"அம்மா... என்னை ஆசைப்படறேன்னு மீனாதான் மொதல்ல சொன்னாம்மா... அதுக்கப்புறம்தான் நான் சரின்னேம்மா?" இன்னைக்கு என் தலை தப்பிக்கனும்ன்னா இதுதான் சரியான வழியென நினைத்து மீனாவை போட்டுக்குடுத்தான் சீனு..

"அவளுக்குத்தான் புத்தியில்லே.. சின்னப்பொண்ணு... உங்கிட்ட எதையாவது அர்த்தமில்லாத உளறினான்னா... நீ என்னடாப் பண்ணியிருக்கணும்? எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல்லியா? அவளை கண்டிச்சு இருப்பேன்ல்லா... உனக்கு எங்கடாப் போச்சு புத்தி...?"

"அம்ம்மா… மீனாவைத் திட்டாதீங்கம்மா... அவ பாவம்ம்மா...”

"என் பொண்ணை திட்டு... திட்டாதேன்னு சொல்றதுக்கு நீ யாருடா?"

"என் மனசுக்குள்ள எனக்கேத் தெரியாம அவ மேல ஒரு ஆசையிருந்திருக்கும்மா... அதான் நானும் சரீன்னு சொல்லிட்டேன்..."

"ஆசை... தோசை.. நீ இங்க வாடா மொதல்லே.. உன் தோலை உரிக்கணும்ண்டா?"

"அம்மா.. நான் நேர்லேயே வந்து உங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேம்ம்மா... இப்போதைக்கு அப்பாகிட்ட மட்டும் இந்த விஷயத்தைப் போட்டுக் குடுத்திடாதீங்கம்மா" சீனு குரலில் நடுக்கத்துடன் பேசினான்.

"எந்த அப்பாகிட்ட சொல்ல வேணாம்...?" போலியான கோபத்தைக்காட்டினாள், மல்லிகா.

"நீங்க என் அம்மான்னா.. மிஸ்டர் நடராஜன் என் அப்பாதானேம்மா?" தூண்டிலில் கொழுத்தப் புழுவை குத்தி, அதை வளைத்துப் போட்டான் சீனு...

"ஏன்டா... எப்போதுலேந்துடா நீ என் புருஷனுக்கு மிஸ்டர் போட ஆரம்பிச்சிருக்கே?" தன் புருஷனை சீனு அப்பாவென அழைத்ததும், மல்லிகாவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

"அம்ம்மா... எது சொன்னாலும் இப்படீ நீங்க என்னை கேட்டு போட்டு மடக்கினா நான் என்னாப் பண்ணுவேம்மா... நீங்களே சொல்லுங்கம்மா?" சீனுவின் குரல் கரகரப்பாக வந்தது.

"ஏன்டீ அவனை சும்மா கலாய்க்கறே... நீ? சட்டுன்னு அவனை கிளம்பி வரச்சொல்லுடி... எனக்கு நேரமாவுது... நான் கிளம்பணும்..."

நடராஜன் மல்லிகாவின் பக்கத்திலிருந்து பேசியது, சீனுவுக்கு தெளிவாகக் கேட்டதும்... அவனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்து. மல்லிகா தன்னை கலாய்த்துக்கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்ததும், அவனுக்கு போன மூச்சு திரும்பி வந்தது.

மல்லிகாம்மா பேசறதைக் கேட்டு நான் ரொம்பவே பயந்து போயிட்டேனே? செல்வாவோட அப்பா நார்மலாத்தானே பேசறார்! அப்படீன்னா என் காதலுக்கு அங்கேயும் கீரின் சிக்னல்தானா? தன் உதட்டை மடித்து நீளமாக தன் மனசுக்குள் "விஷ்" ஷென நீளமாக ஒரு விசில் அடித்தான், சீனு. 


மீனாதான் லவ்வை மொதல்லே சொன்னான்னு அனாவசியமா அம்மாக்கிட்ட அவளைப் போட்டுக்குடுத்துட்டேனே... என்னை நம்பி என் கையைப் புடிச்சவளை அவசரப்பட்டு மாட்டிவுட்டுட்டேனா? இந்த மேட்டர் அந்த குட்டி பிசாசுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாளே... சை.. என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. பக்கத்துல இப்ப அவளும்தானே இருப்பா..?

அம்மா பவுலிங்கை முடிச்சதும்.. பொண்ணு ஆரம்பிப்பாளா...? சரி நடக்கறதெல்லாம்... நல்லதுக்குத்தான் நடக்குது... தலைக்கு வருதுன்னு நினைச்சேன்.. ஆனா தலைப்பாவோட போயிடிச்சி... மீனாகிட்டவும் ஒரு கும்பிடு போட்டுட வேண்டியதுதான்...

'சனி பகவான்' ஆரம்பத்துல தொந்தரவு பண்ணுவான்... ரொம்பவே சோதிப்பான்... ஆனா கடைசீல எப்பவும் நல்லதைத்தான் பண்ணுவான்னு பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்... என் விஷயத்துல இது கரெக்டா இருக்குதே...

இப்பவே நேரா போய் ஆசீர்வாதம் பண்ணுங்கம்மான்னு மல்லிகாம்மா கால்லே விழுந்துட வேண்டியதுதான்... இதைவிட்டா எனக்கு ஒரு நல்ல சான்ஸேக் கிடைக்காது...

டேய் சீனு... பைத்தியக்காரா.. இன்னும் அம்மா என்னடா அம்மா... 'அத்தே'ன்னு உறவைச் சொல்லி கூப்புடுடா... அவங்க வீட்டுல நுழையும் போதே அத்தேன்னு கூப்பிட்டுக்கிட்டே மாப்பிள்ள மாதிரி உரிமையா நுழைடா... சீனு குதூகலமானான்.

"அம்மா.. டிஃபன் கிஃபன் பண்ணீட்டிங்களா? இல்லே வர்ற வழியிலே எதாவது புடிச்சிக்கிட்டு வரவா? சீனு தன் வழக்கமான பாணியில் மல்லிகாவிடம் குழையடிக்க ஆரம்பித்தான்.

"டேய்... என்னடா சொல்றே?"

"லீவு நாள்லே.. நீங்க காலையில கிச்சனை ஒட்டடை அடிச்சி... நல்லாத் தொட்சி... தரையெல்லாம் க்ளீன் பண்ணுவீங்க... டிஃபன் வெளியிலேருந்துதானே வாங்கிட்டு வருவான் செல்வா.. அதான் கேட்டேன்.." அந்த வீட்டின் நடைமுறையெல்லாம் தெரிந்த அவன் மனதுக்குள் மகிழ்ச்சியுடன் குழைந்தான்.



"டேய் சீனு.. நான் உங்கிட்ட சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்.. உன் கொழையடிக்கற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே... அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்..." மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.. அவளால் அதற்கு மேல் சீனுவின் மேல் கோபமாக இருப்பதைப் போல் நடிக்க முடியவில்லை.

"பசிக்குதும்மா..." சீனு தன் ட்ராக்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

"சீனூ... உனக்கு இன்னைக்கு ஆஃபீஸ் லீவுதானே... உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா... உனக்கு இல்லாத டிஃபனா? டிஃபன்ல்லாம் நான் பண்ணித்தர்றேன்.. சீக்கிரம் வாடா.." மல்லிகாவின் குரலில் மிதமிஞ்சியப் பாசம் எட்டிப்பார்த்தது.

"எம்மா... ஒண்ணு ரெண்டுன்னு எண்ணிகிட்டே இருங்க... தோம்ம்மா... குளிச்சிட்டு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..." சீனு பாத்ரூமை நோக்கி தன் கால்கள் தரையில் பாவாமல் ஓடினான்.