Tuesday 31 March 2015

சுகன்யா... 82

சூரியன் மேற்கில் துயில் கொள்ள சென்றுவிட்டான். வெளியில் இருட்டத் தொடங்கியிருந்தது. மொட்டை மாடி வழியாக தென்னங்காற்று குளிர்ச்சியாக அறைக்குள் வந்து கொண்டிருந்தது. செல்வா அறைக்கதவை முழுவதுமாக திறந்தான். மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நாலு முறை நடந்தான்.

மெள்ள மெள்ள மனதிலிருக்கும் எரிச்சல் குறைவதை அவன் உணர்ந்தான். நெற்றியில் வந்து விழும் தன் தலைமுடியை விரல்களால் கோதி, பின்னால் தள்ளிக்கொண்டான். முழுக்கைச்சட்டை பொத்தானை விடுவித்து, சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டான்.



மாடியின் கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு கீழே பார்த்தபோது, செம்பருத்தியும், நந்தியாவட்டையும், செவ்வரளியும், காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

கொல்லையில், கிணற்று மேடையில் வேணி குத்துக்காலிட்டு உட்க்கார்ந்திருந்தாள். வேணியின் புடவை அவள் கணுக்காலுக்கு மேலேறியிருக்க, மொழுமொழுவென சதைப்பிடிப்பான கெண்டைக்காலும், வெள்ளை நிற பாதமும், பளிச்சிட்டன.

என்ன அழகு இது... இப்படி ஒரு அழகா..? முகம்தான் அழகா இருக்குன்னு நினைச்சேன்.. கழுத்துக்கு கீழவும் அழகா இருக்கான்னு நினைச்சேன்.. மொத்த உடலும் இவளுக்கு அழகா இருக்கே... கண்கள் கூசியது. செல்வா அதிர்ந்து போனான்.

சங்கர் இடுப்பில் மடித்துக்கட்டிய லுங்கியும், மார்பில் பனியனுமாக தன் முகத்தைக் கழுவிக்கொண்டு இருந்தான். வலுவான தோள்கள். கரணை கரணையான கால்கள். தொப்பை விழலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அவன் ஆஃபீஸிலிருந்து அப்போதுதான் வந்திருக்கவேண்டுமென நினைத்தான் செல்வா.

மாணிக்கத்தின் வீட்டு பின் கட்டில் கோடையிலும் கிணற்றில் தண்ணீர் பஞ்சமில்லாமல் சுரந்து கொண்டு இருந்தது. தனது அறுபத்து மூன்று வயதிலும், தினமும் தவறாமல், காலையில் வெயில் வருவதற்கு முன் இருபது முப்பது பக்கெட் தண்ணீரை இறைத்து பூச்செடிகளுக்கு ஊற்றுவதை அவர் தன்னுடைய வழக்கமாக வைத்திருந்தார்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த சங்கர், வேணியின் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டான். தன்னுடைய ஈரமுகத்தை அவள் முந்தானையால் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தான். வேணியின் கொழுத்த குலுங்கும் மார்புகளை கண்டதும்.. செல்வா மீண்டும் ஒருமுறை அதிர்ந்தான். அவன் சுவாசம் ஒரு வினாடி நின்றது. கண் இமைக்காமல் அவர்களை ஒரு நொடி பார்த்தான்.

சங்கர் சட்டென வேணியின் முகத்தை நிமிர்த்தி அவள் தோளில் கையைப்போட்டு தன்னருகில் வேகமாக இழுத்தான். அவர்களின் அந்த அன்பான, அந்தரங்கமான நெருக்கத்தை அதற்குமேல் பார்க்கமுடியாமல், சட்டென செல்வா பின்னால் நகர்ந்து கொண்டான்.

"போதும்.. போதும்.. விடுங்க.. இந்த அழுத்து அழுத்தறீங்க... மூச்சு முட்டுது எனக்கு... நேரம் காலம்.. இருக்கற எடம்ன்னு எதுவும் கிடையாது உங்களுக்கு. மேலே... சுகன்யா ரூமுக்கு செல்வா வந்திருக்கான்..." வேணி சிணுங்கியது மொட்டை மாடியில், கட்டைச் சுவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த செல்வாவுக்கு மிகவும் தெளிவாக கேட்டது.

"எதுக்கு...?"

"ம்ம்ம்.. வேணும்னா ஒரு நடை மேலப் போய் அவனையே கேட்டுட்டு வாங்களேன்...?"

"குடுத்து வெச்சவன்டீ செல்வா...?" ப்ச்ச்ச்... என சத்தம் கேட்டது. வேணியை சங்கர் கிஸ் அடிக்கிறானா? நினைத்ததும் செல்வாவுக்கு உடல் பற்றிக்கொண்டது. ஜிவ்வென ரத்தம் தலைக்கேறியது.

"இப்ப எதுக்கு செல்வா மேல இவ்ளோ காண்டு உங்களுக்கு?" வேணி சிரித்தாள்.

"ச்சீ.. பொறாமைல்லாம் இல்லடி... அவங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு... உடனே ரெண்டுபேரும் எவ்வளவு ஜாலியா கல்யாணத்துக்கு முன்னாடியே தங்களுக்குள்ள எஞ்சாய் பண்ணிக்கறாங்கன்னு சொல்றேன்.. அவ்வளவுதான்..."

"சின்னப்பசங்க ஜாலியா இருந்துட்டுப் போகட்டுமே...? செல்வா எனக்காக அவங்க அம்மா சுட்ட அதிரசம் கொண்டாந்து குடுத்தான் தெரியுமா?"

"ஆமாம்டீ... அவங்கமட்டும் சின்னப்பசங்க... நீயும் நானும் பேரன் பேத்தி எடுத்துட்ட கிழங்களா?... போதும்டீ.. ரொம்பத்தான் ஆக்டிங் குடுக்காதே நீ?"

"அதான்.. வயித்துல ஒண்ணைக் குடுத்திட்டீங்களே.. பாடா படுத்தி எடுக்குது... வாந்தி எடுக்கறவளுக்குத்தானே தெரியும்... தொண்டை எரிச்சல்..."

"என்னம்மா செல்லம்.. இன்னைக்கும் சாப்பிட்டதும் வாந்தி எடுத்தியா...?"

"ஒரே ஒருதரம் காலையில எடுத்தேன்.. மத்தியானம் சாப்பிட்டுட்டு சட்டுன்னு தூங்கிட்டேன்.. எது சாப்பிட்டாலும் குமட்டிக்கிட்டு வருதுப்பா..."

"என்னாலத்தானே உனக்கு இந்த கஷ்ட்டம்.. சாரிடா கண்ணூ..."சங்கர் கொஞ்சிக்கொண்டிருந்தான் தன் ஆசை மனைவியை...

"சே..சே.. அயாம் வெரி வெரி ஹேப்பிம்மா.. இன்னும் ஓண்ணு ரெண்டு நாள்லே இதெல்லாம் சரியாயிடும்ன்னு அத்தை சொன்னாங்க.."

ப்ச்ச்ச்... ப்ச்ச்ச்... கீழிருந்து முத்த சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. செல்வா மிகுந்த சிரமத்துடன் கீழே நடப்பதை எட்டிப்பார்க்க விழைந்த தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு கல்லா சமைந்து போயிருந்தான்.

"ம்ம்ம்...போதும்ம்ம்..." வேணி முனகுவது செல்வாவுக்கு நன்றாகவே கேட்டது.

"முழுசா ஒரு மாசம் ஆயிடிச்சிடீ... ராத்திரிக்கு வெச்சிக்கலாமா...?உன் லேடி டாக்டர் என்ன சொல்லி அனுப்பிச்சா.. நான் கேக்க சொன்னதை கேட்டியா இல்லையா?" சங்கரின் குரலில் தாபம் புரண்டு ஓடியது.

"ம்ம்ம்... ஒண்ணும் பிரச்சனையில்லே.. எஞ்சாய்ன்னு சொல்லி அனுப்பினாங்க.."

"குட்.. வெரி குட் நீயுஸ்டீச்செல்லம்..."

"எனக்கும்தான்..." வேணி நீளமாக சிரித்தாள்.

"அப்ப ராத்திரிக்கு நாதஸ்வர கச்சேரியை வெச்சிக்கலாம்தானே?"

"சரியான அலைச்சல் உனக்கு..."

"உனக்கு இல்லையாக்கும்...?"

"வெச்ச்ச்சுக்கலாம்... இப்ப விடுடா என்னை... கிள்ளாதே அங்கேல்ல்லாம்..." வேணி செல்லமாக தன் அடிக்குரலில் முனகியதும் செல்வா தன் உடல் நடுங்கி ஆடிப்போனான். வேணியை, சங்கர் எங்கே கிள்ளியிருப்பான் என கற்பனையை ஓடவிட்டதும், தன் பனியனுக்குள் வியர்த்தான். கீழிருந்து கொலுசு சத்தம் கேட்டது. வேணி எழுந்து வீட்டுக்குள்ளப் போறா போல இருக்கு...

தன் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு, மீண்டும் கொல்லையை எட்டிப்பார்த்தான் செல்வா. சங்கர் மட்டும் தன் கைகளை மேலும் கீழுமாக உயர்த்தி உடலை ஸ்ட்ரெச் செய்து கொண்டிருந்தான். வேணி தன் கைகளில் இரு கோப்பைகளில், காஃபியோ.. டீயோ, எதையோ எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினாள். 


செல்வாவல் நிற்கமுடியாமல் அவன் கால்கள் துவண்டன. சங்கரும் வேணியும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க... மேட் ஃபார் ஈச் அதர்ங்கறது இவங்களுக்குன்னே உண்டாக்கின வார்த்தை போல இருக்கு... என்னப் பொருத்தம்.. இவங்களுக்குள்ள இருக்கற பொருத்தம்...

ரொம்ப பொருத்தமான ஜோடி.. வாழ்க்கையை இப்படி அனுபவிக்க கொடுத்து வெச்சிருக்கணும்... புள்ளைத்தாச்சியா இருந்துக்கிட்டு புருஷனை சந்தோஷப்படுத்த நினைக்கறா ஒருத்தி...

எனக்குன்னு ஒருத்தி வந்து வாய்ச்சிருக்காளே... சரியான மண்ணாங்கட்டி.. ஜடம்... தமிழ்நாட்டின் மாதர்குலத் திலகம், மிடில் கிளாஸ் மங்கையர்க்கரசி, உலக மகா கற்புக்கரசி... அவளுதை தொட்டுப்பாக்கக்கூட விடமாட்டேங்கறா...

கிணத்தடியில ஒருத்தன் பொண்டாட்டியைக் கட்டிக்கிட்டு, ராத்திரிக்கு நாதஸ்வர கச்சேரி வெச்சுக்கலாமான்னு அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணி, மேல மொட்டை மாடியில நிக்கற என்னை கண்ட மேனிக்கு, வெறுப்பேத்தறான்.. என் நிலமை அவனுக்குப் புரியுதா? சத்தியமா புரிஞ்சிருக்காது...

ஒலகத்துல உன்னை மாதிரியும், வேணி மாதிரியும் ஒரு ஜோடியாவது நல்லாயிருக்கணும்டா... நாங்க ஜாலியா இருக்கணும்ன்னு நினைக்கற பொம்பளை உனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்கா...

சாமி... இங்க என்னடான்னா, எனக்கு வந்து வாய்ச்சவ, தன்னுதை பூட்டுப் போட்டு பூட்டிவெச்சிக்கிறா.. சாவு விழுந்த வீடு மாதிரி ஒரே ஒப்பாரி வெக்கிறா... எல்லாம் என் தலையெழுத்து...

சுகன்யா ஒரே ஒரு தரம்தான் என் பின்னால வந்தா.. அதுக்கப்பறம் இன்னைக்கு வரைக்கும் நான்தான் இவ பின்னால நாய் மாதிரி சுத்தி சுத்தி வர்றேன்.. கிணத்தடியில கட்டிக்கறாங்க.. கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்துக்கறவங்க... அவங்களுக்குள்ள பேசிக்கறாங்க.... மேல நாங்க ஜாலியா இருக்கோமாம்...

சீனு அப்பப்ப சொல்லுவான்.... சொல்லிட்டு சிரிப்பான்.. கிழிஞ்சிது கிருஷ்ணகிரி வரைக்கும்ன்னு... அந்தமாதிரிதான் நாங்க ஜாலியா இருக்கற லட்சணமும்... என் மனசுல இந்த நிமிஷம் இருக்கற வெறுப்பு... இங்கே மேல கையில கிளம்பினக் குஞ்சைப் புடிச்சிக்கிட்டு நிக்கற எனக்குத்தானே தெரியும்... கீழே கிணத்தடியில கிஸ் அடிக்கறவனுக்கு எப்படித் தெரியும்...

இவ பின்னாலே... ஆசையா வந்தேன்... மொதல்லேயே கிளம்பும் போதே முனகினா... அப்பவே அங்கேயே போடீ மசுருன்னு வுட்டுட்டுப் போயிருக்கணும்... முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி கடைசீ வரைக்கும்... இன்னைக்கு மொனகலாவே பொழுது போயிடிச்சி...

திமிர் புடிச்சவ.. இந்த சுகன்யா... அவளுக்கு வேணும்ன்னா என்னை கட்டிப்புடிப்பாளாம்.... அவளுக்கு வேணாம்னா நான் சட்டுன்னு ஒதுங்கிடணுமாம்... அதுக்கு மேல நான் ஆசையா அவளை உரசினா... கற்புக்கரசியா மாறி, தலையை விரிச்சிப்போட்டுக்கிட்டு, கையில செலம்பை எடுத்துக்குவாளாம்..

என்னாடி இதுன்னு கேட்டா மிடில் கிளாஸ் வேல்யூன்னு லெக்சர் அடிக்கிறா... உங்கம்மாவைப்பாத்து பயப்படறேன்னு செண்டிமெண்ட் வுடறா? சரியான ராங்கிக்காரி... என் மூடையே கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டா...

என்னடா ஞாயம் இது... சாமீ... இந்த ஞாயம் மட்டும் நமக்கு புரியவேமாட்டேங்குது... மனதுக்குள் புழுங்கிக்கொண்டே அறையை நோக்கி மெல்ல நடந்தான் செல்வா. 




சுகன்யா சோஃபாவில் அசையாமல் கண்ணை மூடிக்கொண்டு உட்க்கார்ந்திருந்தாள். கைகள் இரண்டும் அவள் பின் தலையில் குடியேறியிருந்தன.

இவளைப் பாத்தாப் பாவமா இருக்கு.. நான் என்னா வேணும்னா இவளைப் புடிச்சி தள்ளினேன்... ஏதோ எரிச்சல்ல நவுருடீன்னு தள்ளிவுட்டேன்.. சாமி சத்தியமா வேணும்ன்னு தள்ளவே இல்லே...

என்னமோ என் சனியன் புடிச்ச நேரம்.. சுவத்துல போய் இவ தலை இடிச்சிக்கிச்சி.. டங்குன்னு சத்தம் கேட்டுதே... தள்ளினதுல, நிஜமாவே இவளுக்கு தலையில அதிகமா அடிபட்டு இருக்குமா.. ரத்தம் கித்தம் கட்டிக்கிட்டு வீங்கிடிச்சா என்ன?"

இன்னும் தலையில கையை வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்காளே?
மனதுக்குள் சுகன்யாவின் மேல் பொங்கிய உண்மையான பாசத்துடன், கூடவே லேசான பயத்துடன், அவள் தலையை தடவிக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் சுகன்யாவை மெதுவாக நெருங்கினான் செல்வா. அவள் தோளில் தன் கையை மெதுவாக வைத்தான்.

செல்வாவின் மனதில் தன் மேல் இருக்கும் அக்கறையை, அவன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், தலையில் ஏற்பட்ட சிறிய வீக்கத்தால், வீக்கத்தினால் உண்டான வலியால், சுகன்யா அவன் கையை வேகமாக உதறி தள்ளிவிட்டு சடாரென எழுந்து அறைக் கதவை நோக்கி நகர்ந்தாள்.

சுகன்யா தன்னை உதறியதும், உதறியது மட்டுமல்லாமல் அறைக்கதவை நோக்கி நடந்ததைக் கண்டதும், செல்வாவின் ஆண்மை, தன்னை அவள் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் சீண்டுகிறாள், அவள் தன் ஆண்மையை அவமதிக்கிறாள் என செல்வா தவறாக நினைத்துவிட்டான்.

இதுதான் நேரம் என்பது...!! இதுதான் வாலில்லா ராகுவின் விளையாட்டு என்பது...!! எங்கிருந்து ஒருவன் விலக விரும்புகிறானோ அங்கேயே அவனை இழுத்துக்கொண்டு செல்லுவது!! ஒருவரைப்பற்றி, ஒருவரின் செயலைப்பற்றி தவறான தர்க்கத்தை கோபப்பட்டவனின் மனதில் விதைப்பதுதான் ராகுவின் முதல் வேலை..!!

"என்னாடீ நான் என்னா... உன்னை ரேப்பா பண்ணிட்டேன் இப்ப? வுட்டா நீ என்னமோ மேலே மேலே சீன் காட்டறே?" கொதித்துப்போனான் அவன்.

"டேய்... செல்வா.. உனக்கு என்னை ரேப் பண்ணணுங்கற அந்த ஆசை வேற உன் மனசுக்குள்ள இருக்கா... வாடா வா... " சுகன்யாவும் கொதித்தாள்.

"வாடா... வா... வந்து என்னை ரேப் பண்ணு... என் தலையெழுத்து உன்னை மாதிரி ஆள் மேல ஆசை வெச்சேன் பாரு... எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்.." தன் தலையில் அடித்துக்கொண்டாள் சுகன்யா.

இப்போது அவள் ஹாலின் குறுக்கே வேகமாக நடந்து கட்டிலின் அருகில் வந்தாள் சுகன்யா. கோபத்தில், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதனை உணராமல், கட்டிலின் மேல் கிடந்த தலையணைகளை, ஒன்றன் பின்னாக ஒன்றாக எடுத்து செல்வாவின் மேல் வீசி அடித்தாள். தலையனை ஒன்று செல்வாவின் முகத்திலும், மற்றொன்று அவன் மார்பிலும் மோதி பால்கனி கதவின் ஓரம் சிதறி விழுந்தன.

"சுகன்யா.. ப்ளீஸ்.. பிஹேவ் யுர்செல்ஃப்.." செல்வா தன் அடிக்குரலில் கூவினான்.

"உன் மனசுல இருக்கறது எனக்குத் தெரிஞ்சுப் போச்சுடா... இதுக்கு மேல நீ என்னை ரேப் பண்ணி, உன் கயவாளித்தனத்தை மொத்தமா எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்போறியா?"

"ஆண்டவா.. முருகா... இவகிட்டேருந்து என்னை நீ காப்பாத்தேன்.. முண்டமாட்டாம் பேசறாளே?" அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

"இப்ப ஏண்டா நீ ரெண்டு பொண்டாட்டிக்காரனை கூப்பிடறே? உன் நெஞ்சுல சுத்தமா ஈரமே இல்லயாடா..." சுகன்யா மேலும் அவனை வெறுப்பேற்றினாள்.

"ஏன்டீ இப்படி என்னைப் படுத்தி எடுக்கறே... அவுக்கத்தான் வுடலே.. ஆண்டவன் பேரை சொல்லக்கூட ஏண்டி தடைப் போடறே... நான் சும்மா சாதாரணமா சொன்னேன்டீ.." செல்வா நிஜமாகவே புலம்பினான்.

"ஏன்டா இப்படி அலையறீங்க...?"

"நான் எதுக்கடி அலையணும்.. நான் என்னத் தெருவுல போற பொறுக்கியா.. என்னைப்பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே நீ?" செல்வா அவள் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.

"வேணாம்... நீ எதுக்காக என்னைக் கட்டிப்புடிச்சி, இழுக்க வேண்டாம்..!? நான் இந்த ரூமுக்குள்ளவே இங்கேயும் அங்கேயும் ஓடீ, உன் மேலே கீழே விழுந்து என் மண்டையை திருப்பியும் உடைச்சிக்கணுமா?

"யாருடீ உன்னை கட்டிப்புடிக்க வந்தது.. உன் தலையை தடவிக்குடுக்க வந்தேன்டி.." அவன் பரிதாபமாக பேசினான்.

"நீ என் தலையையும் தடவ வேணாம்.. என் மாரையும் தடவ வேணாம்... என் இடுப்புத் துணியை அவுக்கவும் வேணாம்... நீ இங்கேருந்து மரியாதையா போயிடு.." சுகன்யா பைத்தியம் பிடித்தவள் போல் கூவ ஆரம்பித்தாள்.

"சுகன்யா... வேணாம்டீ.. சும்மா வீணாக் கத்தாதே... யார் காதுலேயாவது விழுந்தா என் மானம் போயிடும்டீ..."

"உன் மானம் ஏன் போவனும்.. மொதல்லே என் மானம் போவட்டும்.. உனக்கு எந்த கஷ்டமும் வேணாம்... நானே என் துணியை அவுத்துடறேன்.. நீ வந்து உன் ஆசையைத் தீத்துக்க.. உன்னை நான் என் வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தேன் பாரு.. என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சிக்கணும்?

சுகன்யா தன் உதடுகள் துடிக்க, கண்களில் குரோதத்துடன் கத்திக்கொண்டிருந்தவள், விருட்டென தன் ஸல்வாரை அவிழ்க்க ஆரம்பித்தாள். ஸ்ல்வார் முடிச்சை அவிழ்த்ததும், சுகன்யா தன் மேல்சட்டையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

"என்னாடீ பண்றே நீ.. உனக்கு என்னப் பைத்தியம் கியித்தியம் புடிச்சுப்போச்சா... நிறுத்துடி... உன் டிராமாவை... சட்டென செல்வா, அவளுக்கு எதிர்புறம் திரும்பி சுவத்தைப்பார்க்க ஆரம்பித்தான்.

சுகன்யா மெல்லியக் குரலில் அழ ஆரம்பித்தாள்.


இப்ப எதுக்குடி நீ கண்ணைக் கசக்கறே? அவளிடம் வேகமாக வந்த செல்வா சுகன்யாவின் தோள்பட்டையை பிடித்து வலுவாக உலுக்கினான். அவன் குரல் லேசாக குளறாலாக வந்தது. கைவிரல்கள் இலேசாக நடுங்கின.

"செல்வா என் மேலேருந்து கையை எடு.. என்கிட்ட வராதே நீ... உன்னைப் பாத்தாலே எனக்கு பயமாருக்கு.." அவள் கண்கள் சிவந்து குளமாயிருந்தன.

"நான் உன்னை என்னடீ சொல்லிட்டேன்...? இப்ப எதுக்குடீ நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்றே?"

"..."

"சுகு... கேக்கறேன்ல்லா"

"..."

சுகன்யா தன் புறங்கையால் இருவிழிகளையும் துடைத்துக்கொண்டு, தன் மூக்கை உறிஞ்சினாள்.

"எதையும் வாயை விட்டு சொல்லித் தொலைக்காம ஏன்டீ இப்படி என்னை வதைக்கறே?"

என் கெட்ட நேரம் இவ அப்பன் குமாரசாமி இப்ப வந்துட்டான்னா நான் மொத்தமா ஒழிஞ்சேன்.. சனியன் புடிச்சவ என் கேள்விக்கு பதில் சொல்லாம எதுக்காக இப்படி நாடகம் ஆடிகிட்டு இருக்கா... சுகன்யா குலுங்கி குலுங்கி அழுவதைக் கண்டதும், அவள் அழுகை செல்வாவின் பயத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

"எதுக்குடா நீ மொரட்டுத்தனமா என் தலையை சொவத்துல முட்டினே?"

“நம்ம ரெண்டு பேரு பிரச்சனையில நீ எதுக்காக என் அம்மாவை இழுக்கறே?"

"நான் வாயை மூடிக்கிட்டு சும்மாத்தானே இருந்தேன்.. நீ தானே கிண்டிக் கிண்டிக்கேட்டே.. யாருக்கு பயப்படறே... யாருக்குப் பயப்படறேன்னு... இப்ப உண்மையைச் சொன்னா உனக்கு அடியில எரியுதா?" சுகன்யாவின் குரலிலும் சூடு ஏற ஆரம்பித்தது.

“தயவுசெய்து... நீ என் அம்மாவைப் பத்தி மட்டும் எதுவும் பேசாதே?”

“ஸோ... நான் உன் அம்மாவைப் பத்தி, எதிர்காலத்துல எது சொன்னாலும், எதைப்பேசினாலும், நான் உங்கிட்ட இப்படித்தான் அடிபடணுமா?”

“சுகன்யா... இன்னைக்கு நீ நிஜமாவே என் கிட்ட சண்டை போடணுங்கற மூடுல இருக்கேன்னு நினைக்கிறேன்... இங்கே நடந்ததை விட்டுட்டு, அதுக்கு மாத்தி மாத்தி வேற கலர் குடுக்கறே?”

“நீ கேட்டக் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்... நான் உன் கிட்ட சண்டை போட நினைக்கலே... என் மனசுல இருக்கறதை தெளிவா சொல்ல விரும்பறேன்... என் கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியலேன்னா பேசாம இரு... ஆனா தயவு செய்து நீயும் பேச்சைத் திசை திருப்பாதே..”

“மேடம்... நான் என் வாயைப் பொத்திக்கறேன் மேடம்... நீங்க உங்க மனசுல இருக்கறதை மொத்தமா சொல்லி முடிக்கற வரைக்கும் நான் குறுக்கே பேசமாட்டேன் மேடம்..” செல்வா குதர்க்கமாக பேச ஆரம்பித்தான்.

"செல்வா.. நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்க... உன் அம்மாவை நான் என் சொந்த அம்மாவாத்தான் பாக்கறேன்... அவங்களை நான் வேத்து மனுஷியா எப்பவுமே நினைக்கலை... அவங்களை நான் என் குடும்பத்துல ஒரு அங்கமா பாக்கறேன்... அவங்க எனக்கு நல்லதைத்தான் சொல்றாங்கன்னு நான் நினைக்கறேன்.”

"..."

“மல்லிகா அத்தை என்னை ஒரு தரம் குறைச்சு பேசினாங்கன்னு... அதுக்காக நான் எப்பவுமே வருத்தப்படலே... அப்ப நமக்கு நிச்சயதார்த்தம் கூட ஆகலே... நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நாம ரெண்டுபேரும், நெருக்கமா, கொஞ்சம் அந்தரங்கமா, ஒரு நாள் இதே ரூம்ல இருந்ததை, அவங்க தப்புன்னு நினைக்கறாங்க...”



"திருப்பியும் நீ மொதல்லேருந்து ஆரம்பிக்கறியா?"

“சொல்றதை கேளு.. குறுக்கே பேசாதே... உன் அம்மா தன்னோட மனசுல, தனக்கு மருமகளா வரப்போறவ இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு தனிப்பட்ட கருத்தை, ஒரு மதிப்பீட்டை வெச்சிருக்காங்க... அது தப்புண்ணும் நான் சொல்லலை. அது அவங்களோட உரிமை...”

"ம்ம்ம்... அப்புறம்.."

“உன் குடும்பத்துல நுழையப்போற நான், அவங்களோட மதிப்பீட்டுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க முடியலியேன்னு நான் வருத்தப்படறேன்... அவங்க மனசு புண்படற மாதிரி நான் ஒரு தரம் நடந்துட்டேனேன்னு நான் என் மனசுக்குள்ள கூனிக் குறுகிப் போறேன்.”

அவள் பேசுவதில் இருக்கும் அர்த்தம் மனசுக்குள் ஏற ஏற செல்வா தன் வாயைமூடிக்கொண்டான்.

“இப்ப உனக்கும் எனக்கும் நிச்சயம் ஆயிடிச்சி... அதனால தனிமையில, கொஞ்சம் ஃபீரியா உன் கூட இருக்கறதுல எந்த தவறு இல்லேன்னு நான் நெனைச்சேன் பாரு... அதுக்கு என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்..”

"அடிச்சுக்கடி.. நல்லா அடிச்சுக்க... சும்மா சீன் காட்டறே நீ" செல்வா குமுறினான்.

"என் தலையெழுத்து உன்னை காதலிச்சி கட்டிக்கணும்ன்னு நெனைச்சேன் பாரு... இனிமே, இதுக்கு மேல நான் அதைத்தான் தினம் பண்ணிக்கணும்.."

"...."

“என் மனசுக்குள்ள இருக்கற ஆசைகளை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்க முடியாம, எங்கே இன்னொரு தரம் என் அத்தைக்கு பிடிக்காத மாதிரி, நீ சொல்ற அந்த ‘மேட்டர்’ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நடந்துடவேணாமேன்னு நான் பயப்படறேன்..”



No comments:

Post a Comment