Tuesday 10 March 2015

சுகன்யா... 41


"சங்கு உள்ளே போவலாம்பா ... எனக்கு நீ இப்பவே வேணுண்டா .." வேணி, சட்டென எழுந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் காதோரத்தில் முணுமுணுத்தாள்.

தன் ஆசைப் பூர்த்தியினால், வேணியின் ஈரநாக்கு தந்த சுகத்தால், மனதில் திருப்தியுடன், சங்கர் அவளை தன் இருகரங்களிலும் வாரிக்கொண்டு, அறைக்குள் நுழைந்து, அவளை கட்டிலில் கிடத்தி, அவள் மேல் கொடி போல் படர்ந்தான். ஆசையுடன் அவள் கண்களில் தன் பார்வையை உலாவவிட்டான். அவள் முகமெங்கும், நெஞ்சில் பாசத்துடன், இதமாக முத்தமிட்டான்.

சங்கரின் ஆண்மையை வேணி தன் வாயால் சுவைத்து சுகத்தை கொடுத்தது, சங்கருக்கோ அல்லது வேணிக்கோ, புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நான் கேட்டேன். என் விருப்பத்தை, என் துணை மறுக்காமல் நிறைவேற்றினாள். சங்கர் தன் உடலாலும், மனதாலும் திருப்தியடைந்துவிட்டான். அவன் மனம் அவளுக்கு நன்றி சொல்லத் துடித்தது.

என் புருஷனின் நியாயமான ஆசையை நான் நிறைவேத்தினேன். அவன் ஆசையை நிறைவேத்தறது எனக்கும் புடிச்சிருக்கு. எனக்குத் தாலி கட்டினவன், என் ஆள், என் ஆம்பிளை மகிழ்ச்சியாக இருக்கிறான். அதுதான் எனக்கு முக்கியம். வேணி தன் மனதுக்குள் திருப்தியானாள்.



வேணி என்ற பெண் செய்த காரியம் இங்கு பெரிதல்ல. இங்கு முதலிடம் வகிப்பது, ஒருவரின் ஆசையை அடுத்தவர் மதித்ததுதான். இல்லறம் நல்லறம் ஆக இதுவே வழி.

"தேங்க்ஸ்டா செல்லம்... பிண்ணிட்டே போ..." சங்கர் அவள் காது மடலை தன் நாக்கால் வருடி, அவள் காதில் முணுமுணுத்தான்.

"ம்ம்ம்... சங்கூ .... நீ சீக்கிரமா என் உள்ள வாடா கண்ண்ணூ..." வேணி தன் உதட்டை சுழற்றி, கண்களால் சிரித்தாள்.

வேணி தன் தொடைகளை விரித்து தன் மலர்ந்த, நீர்த்திருந்த, வாசலைக் திறந்து காட்டி அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு விடுத்தவளின் கரங்கள் அவன் இடுப்பில் புரண்டு விளையாடின. அவளுடைய பத்து விரல்களும் அவன் முதுகில் மேலும் கீழுமாக அழுத்தமாக கோடு போட்டன. அவள் விழிகள் தன்னாலே மூடிக்கொண்டன. சங்கர் லேசாக சரிந்து, அவள் விரித்த தொடைகளுக்கு நடுவில் தன் முகத்தைப்பதித்து அவள் "நுழை வாசலை" "ப்ப்ப்ஸ்ச்ச்" என ஓசை எழுப்பி முத்தமிட்டான்.

"எப்ப்பாடா ...ஹகூம் ...ம்ம்ம்ம்....ம்மா"

காதல் கொண்ட பேடை, காம வேதனையில் தவித்ததால், அந்த காதல் பறவை மெல்ல அடிக்குரலில் கூவியது. சங்கரின் காதில் பறவையின் கூவல் தேனருவியாக பாய்ந்தது. சங்கர் உற்சாகத்துடன், தன் நாவால் வேணியின் "அந்தரங்க வாசலின்" கதவுகளை மெல்ல மெல்லத் திறந்தான். வேணியின் அடிவயிற்றில் நெருப்பு பூ ஒன்று மொட்டுவிட்டது. சங்கர் அவளின் "நடுவாசலை" ஈரமாக்கி தன் நாவால் மெல்ல கோலமிட்டான். கதவுகளின் ஓரமாகவே நாவினை உயர்த்தி வேணியின் உணர்வுகள் சங்கமிக்கும் "பொன் முடிப்பை" தொட்டு மெல்ல வருடினான்.

சங்கர் இருகரங்களையும் உயர்த்தி, தன் துணையின் தாமரை மொட்டை ஒத்த செழித்த மார்புகளை தன் உள்ளங்கைகளால் பிடித்து இதமாக அழுத்திவிட்டான். தாமரை மொட்டுகளும் மெல்ல மெல்ல மலர ஆரம்பித்தன. மொட்டுகளின் முனை தடிக்க ஆரம்பித்தன. வேணியின் அந்தரங்க மேட்டில் அரும்பு விட்ட நெருப்பு மொட்டு, மெல்ல இதழ் விரித்து பூவாக பூத்தது.

வேணியின் மார்புத் தாமரைகள் மலர்ந்த போது, அவள் உடல் சிலிர்த்து, செவ்விதழ்களை அவள் முத்துப்பற்கள் கடித்து, நாசியில் சுவாசம் வேகமாகியது. அவள் வாயிலிருந்து நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.

"அம்ம்ம்ம்மா! மெதுவாடிச் செல்லம்!! என்னை சாவடிக்காதேடா பட்டு!! மெதுவா பண்ணுடா சங்கூ..." வேணி தன் நிலையிழந்து உரக்க முணக ஆரம்பித்தாள்.

வேணியின் உடல் கட்டிலைவிட்டு அரையடி எழுந்து காற்றில் ஆடி மெல்ல கீழிறங்கியது. தன் இருகைகளாலும், தன் கணவனின் தலையை தன் தொடைகளுக்கு நடுவில் வலுவுடன் அழுத்தினாள். அவள் மார்பு தாமரைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, முகம் செந்தாமரையானது. நாவு உலர்ந்தது. பற்கள் உதடுகளை கடித்தன. மெல்லிடையாள் மெல்ல மெல்ல வேங்கையாக உருவெடுத்தாள். உடல் புல்லரித்தது. அவள் கரங்களின் பூனைமுடிகள் சிலிர்தெழுந்தன.

சங்கர் தன் நாவால் மிதமான வேகத்தில் "பொற்கிழியை" சுற்றி சுற்றி வலம் வந்தான். "பொன்முடிச்சை" தன் நாவால் ஈரமாக்கி சுழற்றினான். ஒரு வினாடி நாவின் அசைவை நிறுத்தி தன் அன்புத் துணையை துடிக்க விட்டான். துடித்தவள் மெல்ல தணிந்தாள். மீண்டும் மெல்ல வருடினான்.

துடித்தவளின் "பொன் முடிப்பை" தன் உதடுகளால் அவிழ்க்க முயன்றான். முடியாமல் போகவே வேணியின் "அரும்பு மொட்டை" தன் இதழ்களால் அழுத்தமாக கவ்வினான். உறிஞ்சினான். மெல்லக்கடித்தான். தன் ஆசைத் துணையை ஆசையில் தவிக்க விட்டான். அவள் சற்றுமுன் தன்னைச் சுவைத்து அள்ளித்தந்த அதே சுகத்தை அவளுக்கு இப்போது அவன் திருப்பித்தந்து கொண்டிருந்தான்.

"ம்ம்ம்ம்... என்னை கொல்லறதுன்னு முடிவு பண்ணிட்டீயாடா..!!!." வேணியின் குரல் பிசிறு தட்டியது.

வேணியின் அடிவயிற்றில் பூத்த அக்னி புஷ்பம் தன் இதழ்களை முழுவதுமாக விரித்தது. காற்றில் மெல்ல ஆடியது. மெல்ல மெல்ல அவள் உடலெங்கும் தன் வாசத்தை பரப்பியது. வேணியின் உடல் நரம்புகள், அவள் பூவின் வாசத்தை, மெல்லிய அதிர்வுகளாக மாற்றி, தொப்புளில் குவித்து மெல்ல மெல்ல மார்புகளைத் தொடவிட்டு, கழுத்து வழியாக அவள் தலை உச்சியை அடைந்து, வேகமாக கீழ் நோக்கிப் உடலெங்கும் பாய்ந்து அவள் கால் நகங்கள் வரை பயணித்தன.

வேணியின் முறுக்கேறிய உடல் நரம்புகள் பட்டென ஒரு நொடியில் தளர்ந்தன. வேணி தன் உடல் துடிக்க இடம் வலமாக புரண்டாள். அவளின் பொன்னெழில் பூத்து, அவள் தன் உச்சத்தை தொட்டாள். கிடைத்த உச்சம்... ஆனந்தம்... கண்ணீராக மாறி, அவள் கண் இமைகளை இலேசாக நனைத்தன. வேணி சில வினாடிகள் அசைவில்லாமல் கிடந்தாள். சங்கர் தன் துணையை மகிழ்வித்த மகிழ்ச்சியுடன் தன் ஆசை மனைவியின் அருகில் படுத்து, அவள் முகத்தை திருப்பி, வெளுத்திருந்த அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். 

சங்கர் தன் அந்தரங்க மொட்டினை நாக்கால் வருடியதால் கிட்டிய உச்ச சுகத்தை, தன் விழிகள் மூடி அனுபவித்த வேணி, மெல்ல கண்விழித்து, தன் அருகில் கிடந்த சங்கரின் மார்பில் தன் தலையை சாய்த்து, அவனை ஆசையுடன் இறுக்கி அணைத்தாள்.

"தேங்க்யூடிச் செல்லம்...அயாம் வெரி வெரி ஹாப்பிடி...பட்டு.." அவள் கண்களும் இதழ்களும் நன்றியில் மலர்ந்திருந்தன.

"வேணி.. எனக்கு எதுக்குடித் தேங்க்ஸ்ல்லாம்? நீ எனக்கு குடுத்ததை உனக்கு நான் திருப்பிக்கொடுத்தேண்டி செல்லம்..." சங்கர் அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டு அவள் பாசத்துடன் தலை முடியை கோதினான். அவன் மறு கை வேணியின் பின்மேடுகளில் அலைந்தது.

தன் கணவனின் வார்த்தைகளை கேட்ட வேணியின் மனம் நிறைந்து வழிந்தது. என் புருஷன் எவ்வள நல்லவன். சொக்கத்தங்கம். இவன் ஓடைத்தண்ணி... எப்பவும் உப்புகரிக்க மாட்டான்!. கட்டினப் பொண்டாட்டி ...வாட்ட சாட்டமா தின்னுட்டு இங்க கிடக்கறேன்... என்னை விட்டுட்டு மாசத்துல பத்து நாள் தனியா தூங்கறான்?!.

பை நெறைய பணம் என் புருஷன் கிட்ட. கண்ணுக்கு அழகா, வாட்டசாட்டமா வளந்து நிக்கறான். ஊர்ல எடுபட்டவளுக்கு கொறைச்சலா என்னா? டீக்கா ட்ரஸ் பண்ணிக்கிட்டு நின்னான்னா, என் புருஷனை பாத்து எவ வேணாலும் கண்ணடிப்பா? போன எடத்துல இவன் எந்த சிறுக்கியையும் கூப்பிட்டு, எப்படி வேணா கூத்தடிக்கலாம். பணத்தை காட்டினா, படுக்கையை சூடாக்கறதுக்கு எத்தனைப் பேரு ரெடியா இருக்காளுங்க?

கேள்வியே இல்லாம இவன் உடல் சுகத்தை எவ்வளவு வேணா அனுபவிக்கலாம். கேக்கறதுக்கு யாரும் ஆள் கிடையாது. ஆனா வெளியில போனா, இடுப்புல ஈரத்துணியை இறுக்கி கட்டிகிட்டு இருக்கான். கடைசியில என் மடியிலதானே வந்து விழறான். அவனுக்கு வேணுங்கறதை நான் தானே குடுக்கணும்? அவள் மனதில் தன் கணவன் மேல் கருணை பொங்கியது. அவன் காம நோய்க்கு சரியான மருந்து கொடுக்க முடிவெடுத்தாள். தன் புருஷனுக்கு அவன் கேட்ட சுகத்தையும், கூடவே கேட்காத சுகத்தையும் அள்ளி அள்ளி கொடுக்க தீர்மானித்தாள்.

சங்கரின் மார்பில் கிடந்த வேணி, அவன் முகத்தில் மெல்ல மெல்ல முத்தமிட ஆரம்பித்து அவன் இதழ்களில் "ப்ச்.. ப்ச்.. ப்ச்.." முத்தங்களை பரவசத்துடன் வர்ஷிக்க, அவன் மூச்சிறைக்கத் தொடங்கினான். முத்தமிட்டுக்கொண்டே, கீழே நழுவி அவன் மார்பில் முத்தமிட்டவள், அவன் மார்க்காம்புகளை தன் நாவால் வருடி, ஓரக்கண்ணால் தன் கணவன் முகத்தை ஆசையுடன் நோக்கினாள்.

சங்கர் தன் விழிகளை மூடி, அவள் நாக்கு தரும் சுகத்தை பதட்டமில்லாமல் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் ஓசை எழுப்பாமல் ஏதோ ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தன. வேணி மேலும் கீழே நழுவி, ஆடிக்கொண்டிருந்த அவன் ஆண்மையை இறுக்கிப் பிடித்தாள். ஆண்மையின் தோலை உரித்து, அதன் நுனியை தனது உதடுகளால் கவ்வி, தன் கணவனை கிறங்க அடித்தாள்.

"வேணீ ... அப்படீத்தான் ... மெதுவாடி!! நீ மெதுவா பண்ணா .... எனக்கு ரொம்ப நல்லா மஜாவா இருக்குடி...!!!"

வேணி, தன் உதடுகளை பிரித்து, அவன் ஆண்மையை முழுமையாக தன் வாய்க்குள் இழுத்து தன் நாவால் இறுக்கினாள். தனது எச்சிலால் அவனை குழைய குழைய நனைத்தாள். மனதில் முழு விருப்பத்துடன் ஆசையாக அவனை சுவைத்தாள். உதடுகளை இறுக்கி, அவன் முழு நீளத்தையும், தன் நாக்கால் வருடினாள்.

"ஹாவ்...ஹாங் ...ம்ம்ம்ம்ம்... வேணீ ஒரு செகண்ட் நிறுத்தும்ம்மா..." சங்கர் கதறினான்.

"என்னாச்சுப்ப்பா..." வேணிக்கு புரிந்தது.

"வர்றமாதிரி இருக்குடி..."

"வந்துடேன்...அவனை குலுக்கிடவா?"

"கொஞ்ச நேரம் பொறும்ம்மா... இன்னைக்கு உனக்குள்ள வரணும்டி எனக்கு!"

"சங்கூ ... இதைத்தானே நீ கேட்டே?"

"ஆமாண்டிச் செல்லா!"

"பண்ணது போதுமா?"

"இன்னைக்கு இது போதுண்டீ.."

வேணி, தன் கணவனின் ஆண்மையை, தன் கையில் பிடித்துக்கொண்டு, எதிரில் எழுந்து உட்க்கார்ந்து மூச்சிறைத்துக் கொண்டிருந்தவனின், முகத்தை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். சங்கர் அவள் கையில் துடித்துக்கொண்டிருந்தான்.

"சங்கூ ... நீ படுத்துக்கோயேன் ... நான் வேணா இன்னைக்கு உன் மேல ஏறிப் பண்ணட்டா?"

"ம்ம்ம்...உனக்கு ஆசையா இருக்கா?"

"ஆமாம் ... ரொம்ப நாளாச்சுல்லே! நான் உன் மேல ஏறி ஏறங்கி...?"

"என்னாடி இது! ... நீயா கேட்டு கேட்டு குடுக்கறே இன்னைக்கு?"

"மை நேம் ஈஸ் வேணி! கிருஷ்ணவேணி...டியர்! போவ போவ நீ என்னைப் புரிஞ்சுக்குவே!" அவள் நாடக ஹீரோயின் போல் பேசி தன் கண்களை சிமிட்டினாள்.

"சரிடிச் செல்லா .... என்ன வேணாப் பண்ணுடி நீ!" சங்கர் படுக்கையில் மல்லாந்து கொண்டான். வேணியின் கள் வெறி ஏற்றும் குரலும், அவள் செக்ஸியாக கண்சிமிட்டி பேசியதும், சங்கரை சூடாக்கியது. சற்றே தளர்ந்திருந்தவன் ஆண்மை மீண்டும் எகிற ஆரம்பித்தது. 

வேணி, கண்களில் குறும்புடன் அவன் அடி வயிற்றில் ஏறி உட்க்கார்ந்தவள், அவன் ஆண்மையை லேசாக உருவி, தன் பெண்மை வாசலில் மேலும் கீழுமாக தேய்த்து அவன் முனையை நன்கு ஈரமாக்கினாள். தன் மூச்சை இழுத்து பிடித்து, அவன் ஆண்மையை தன் பெண்மைக்குள் செருகியதும், சங்கர் தன் இடுப்பை மேலுக்குத் தூக்கவும், அதே வினாடியில் வேணி தன் இடுப்பை அசைக்க, சங்கரின் ஆண்மை, நொடியில் அவள் பென்மைக்குள் காணாமல் போனது. 

"எம்ம்மா..." சங்கர் அலறினான். 

"என்னப்பா..."

"ம்ம்ம்.. ஒண்ணுமில்லே! மை டியர் கிருஷ்ணவேணீ ... நீ ஆரம்பிடி உன் வேலையை.."

வேணி தன் இடுப்பை மெல்ல மெல்ல அசைக்க ஆரம்பித்தாள். தன் கைகளால் சங்கரின் பரந்த மார்பை தடவினாள். அவன் உறுப்பு, தன் கொழகொழத்திருந்த அந்தரங்கத்தில் புதைந்து கிடக்க, வேணி தன் புட்டங்களை தூக்கி, அவன் மீது எம்ப ஆரம்பித்தாள். 

"ஆ..ஆ...ஹா..ஹாங்க்க்க்..."சங்கர் உளற ஆரம்பித்தான். 

"சங்கூ ... இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணட்டா?"

"வேணாண்டா செல்லம்... இப்படியே மெதுவா பண்ணும்ம்ம்மா... அதான் எனக்குப் பிடிக்க்க்குது..." சங்கர் தன் முதுகை நிமிர்த்தி, குலுங்கும் அவள் தாமரைகளைத் தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டான். 

"ம்ம்ம்...சும்ம்மா இருங்க ... இப்ப என் மூடை திருப்பியும் கிளப்பிடாதீங்க நீங்க.. அவன் கையை அவள் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள்." ... ட்ப் ட்ப் ட்ப்ப் ட்ப் ட்ப் ட்ப்ப்" வேணியின் இடுப்பு அசையும் வேகமும், அசையும் ரிதமும், இருவரின் தேகங்கள் ஒன்றாகும் போது உண்டான சத்தமும் இலேசாக அதிகரித்தது. வேணி தன் பெண்மையை இறுக்கி, அதனுள் இருந்த சங்கரின் ஆண்மையை மேலும் கீழுமாக உருவி உருவி, சாறு எடுத்துக்கொண்டிருந்தாள். 

"ப்ப்ப்ப்பா... வ்வ்வ்வூவ்வூவ்வூ...." சங்கரின் மூச்சு வேகமாகவும், வெப்பமாகவும் வரத்தொடங்கியது. 

"என்னம்ம்மா கண்ணு? உள்ளே சௌக்கியமாத்தானே இருக்கே?" வேணி கொஞ்சி கொஞ்சி பேசி தன் கணவன் சங்கருக்கு வெறியை ஏற்றினாள்.."

"வேணாம்...என்னை மொரடனாக்காதே!" சங்கரின் கண்களில், வேணி சீரான கதியில் அவன் உறுப்பை கசக்கி பிழிந்து கொண்டிருப்பதால், அசையும் முலைகளை கடிக்க வேண்டும், என்ற வெறி அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது..

"மொரடனா ஆனா என்னப் பண்ணுவே நீ?" வேணி தன் நுனி நாக்கை சுழற்றி சவால் விடுவதைப் போல் சிரித்தாள். சங்கரின் நெற்றியில் இலேசாக வியர்க்க ஆரம்பித்தது. வேணி தன் இடுப்பை அசைக்கும் வேகத்தை அதிகமாக்கினாள்.



"அம்ம்ம்மா....மெதுவாடீ" 

சங்கர் உரக்க கூவினான். வேணி விருட்டென அவன் மார்பில் படுத்து, அவன் வாயை இறுக்கி மூடினாள். ஆனால் தன் புட்டத்தை வேகமாக பின்னோக்கி அசைத்தாள். சங்கர் அவளுள் வேகமாக வந்து போய்க்கொண்டிருந்தான். 

"இப்ப ஏண்டா இப்படி கத்தி என் மானத்தை வாங்கறே? வெளியில உங்கப்பா பேப்பரை வெச்சிக்கிட்டு உக்காந்து இருப்பாரு!" வேணி தன் கையை விலக்கி அவன் இதழ்களை கவ்விக்கொண்டாள். சங்கர் தன் இடக்கையால் அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தான்.

"அடிக்காதே... சொன்னாக்கேளு...அப்புறம் திருப்பி அடிப்பேன்..." 

வேணி அவன் கன்னத்தை ஆசைப் பொங்க அழுத்தமாக கடித்தாள். சங்கர் அவள் தலைமுடியை கொத்தாகப்பிடித்து, அவள் முகத்தை தன் கன்னத்திலிருந்து விலக்கினான். மெல்ல எழுந்து உட்க்கார்ந்தவன் தன் இருகைகளாலும் வேணியை தன் மடியில் உக்காரவைத்து இறுக்கிக்கொண்டான். கீழிருந்து மேலாக தன் தண்டை, வேணியின் பெண்மைக்குள், உயர்த்தி வேகமாக இடிக்க ஆரம்பித்தான். 

"ம்ம்ம்மம்ம்மா.." வேணி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் முகத்தை தன் மார்புகளில் அழுத்திக்கொண்டாள். 

"வேணீ... ஒரு செகண்ட் அப்படியே இருடீ... அசையாதேடீ ...." 

சங்கர் மீண்டும் கூவினான். தன் மடியில் உட்க்கார்ந்திருவள் இதழ்களை தன் வாயால் கவ்வி அவள் நாக்கை தன் நாக்கால் தேடினான். சங்கரின் ஆண்மை, நின்ற வாக்கில், அவள் பெண்மைக்குள், துடித்துக்கொண்டிருந்தது. அதன் பருமனை, சூட்டை, அவள் கண்மூடி, ரசித்துக்கொண்டிருக்க, அவள் பெண்மையின் சுவர்கள் இயல்பாக, சங்கரின் ஆண்மையை கவ்விப் பிடித்தன.

"ச்ச்சும்ம்ம்மா இரேண்டி! ஏண்டி அவனை இறுக்கறே? ... பட்டுன்னு வந்துடப்போறாம்மா...!"

"வரட்டுமே! என்னால முடியலைடா.. உன் கூட படறதுக்கு... அவன் வந்துடட்டும்ம்ம்... ம்ம்ம்." வேணி தன் புழையால் இறுக்கி அழுத்தினாள் அவனை. 

வேணி, மீண்டும் மீண்டும், சங்கரை தன் மொத்த வலுவையும் காட்டி இறுக்கிக்கொண்டாள். இறுக்கியவளின் உடல் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தது. இறுகியது. கணவனை அவள் இறுகத் தழுவிக்கொண்டாள். தன் கணவனின் மடியில் மீண்டும் ஒரு முறை அவள் தன் உச்சத்தை வெகு சுலபமாகத் தொட்டாள். அவள் விரல் நகங்கள் சங்கரின் முதுகில் அழுத்தமாக பதிந்து கிடந்தன.

சங்கரால் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், வேணியை அப்படியே மல்லாக்காக கட்டிலில் தள்ளி, தன் இடுப்பை வெறியுடன் ஆட்டி அவள் பெண்மையை வேகமாக குத்தினான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான். 

"ஓண்ணு.." சங்கரின் முதல் குத்தில் வேணி தடுமாறிப்போனாள்... ம்ம்ம்ம்.. வேணி முனகினாள். அவள் தன் கணவனிடம் இத்தனை வேகத்தையும், வலுவையும் எதிர்பார்க்கவில்லை. 

"ரெ..ண்டு...மெதுவாடா ...சங்கு...ம்ம்ம்ம்" வேணி இப்போது தன்னை சுதாரித்துக்கொண்டாள். 

"மூணு..." சங்கர் தன் உறுப்பை வேகமாக வெளியில் இழுத்து மீண்டும், வேணியின் பெண்மையில் செருகினான். என்னாச்சு இவனுக்கு? இப்படி ஒரு ஆட்டம் போடறான்? ஒழுவிடுவான்னு நெனைச்சேன்? வேணி சற்றே அதிர்ந்தாள்.

"நாலூ...அஞ்சு...ம்ம்ம்ம்...ஹா ஹூ .. ஹா ஹூ .." அவன் இடுப்பை வெறியோடு ஆட்டினான். குத்துகள் விழுந்த வேகம் அதிகமாயிருந்தது..." வேணியின் உடல் காற்றில் பறக்க ஆரம்பித்தது. 

"ஆ...று...." சங்கரால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தடுமாறி வேணியின் அந்தரத்துக்குள் தவித்தான். படவா, ராஸ்கல் இவ்வளவுதானா உன் வேகமும், வலுவும்? வேணி மனதுக்குள் சிரித்தாள். 

"ஏழு....சங்கர் சற்றே சமாளித்து, தன் உறுப்பை வெளியே இழுத்து வெறியுடன் மீண்டும் வேணிக்குள் இறங்கினான். ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் தெம்பு பாக்கி இருக்கு இவன் கிட்ட! வேணி தன் இடுப்பை வேகமாக மேற்புறம் தூக்கினாள். 

"சங்கு ... வந்துடேன்.....ப்ளீஸ்... இடுப்ப்ப்ப்ப்ஃபூ வலிக்க்ஹ்குது..." வேணி கதறினாள். அவள் தன் இருகைகளாலும் அவன் இடுப்பை தன் வயிற்றின் மேல் இழுத்து மோதினாள்.... 

"எட்ட்டு ..." வேகமாக அவள் பெண்மைக்குள் அவன் இறங்கி வெளியேறினான். 'ஹா.. ஹா.. ஹா..' சங்கரின் மூச்சுக்காற்று வெகு உஷ்ணமாக வந்தது. அவன் மார்பில் வியர்வை கொட்ட ஆரம்பித்தது. இருவரும் வெறியுடன் இயங்கினார்கள். வேணி தன் கால்களால் அவன் இடுப்பை வளைத்துக் கொண்டிருக்க, சங்கர் மீண்டும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணறினான். 

"செல்ல்லம்...இன்னும் ரெண்டே ரெண்டுக்க் குத்து பாக்கிடீ... "ஓம்போது" சங்கர் வேணியின் குழிக்குள் இறங்கிவிட்டான். அவள் குழியிலிருந்து எழமுடியாமல் அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான். முடிஞ்சுது இவன் ஆட்டம்! வேணி தன் மனதுக்குள் மகிழ்ந்தாள். 

"எம்ம்ம்மா..போதும்ம்பா" வேணி அவன் தலைமுடியை இறுக்கி பற்றி, அவன் முகத்தை தூக்கி, அவன் இதழ்களை கவ்வி உறிஞ்சினாள். இப்பவாவது தெறிக்கறானா பாக்கிறேன்! 

"ப்ப்பத்து... " 

சங்கர், தன் உடலின் மொத்த பலத்தையும் திரட்டி இடுப்பில் ஒருமுனைப்படுத்தினான். தன் இடுப்பை தூக்கி வேகமாக அவள் பெண்மையை, தன் தண்டால் தாக்கினான்... 

"பத்த்த்து" ....அவன் வாய் முனகியது... ஒரே நேரத்தில் இரு உடல்களும் தீயாக பற்றிக்கொண்டன. சங்கர் அசைவில்லாமல் வேணியின் மேல் கிடந்தான். அவன் ஆண்மை, வேணியின் அந்தரங்கத்தில் துடித்தது. வேகமாக வெடித்தது. வெடித்ததால் பொங்கியது. சங்கர் வேணியினுள் பொங்கி பொங்கி வழியத் தொடங்கினான். 

"ம்ம்ம்ம் ...ஹப்ப்பா" இருவரும் ஒருங்கே முனகிக்கொண்டிருந்தார்கள்.

வேணியின் கைகள் தன் மேல் கிடந்தவனின் முதுகை இதமாக தடவிகொடுத்தன. சங்கர் அசைய முடியாமல், தன் முகத்தை வேணியின் கழுத்து வளைவில் புதைத்துக்கிடந்தான். அவள் மீதே மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தான். வேணி தன் விழிகள் மூடியிருக்க, சங்கரை மெதுவாக தன் மேலிருந்து சரிய விட்டாள். 

நிமிடங்கள் மௌனமாக, அமைதியாக, கடந்தன.

முதலில் கண்விழித்த கிருஷ்ணவேணி, கண்மூடி, களைத்துக் கிடந்த தன் கணவனின் மார்பை மெல்லிய துண்டால் துடைத்தாள். அதே துண்டால் தன் பெண்மையையும் சுத்தமாக துடைத்து எறிந்தாள். அலாதியான திருப்தியுடன் அவன் முகத்தை நோக்கி ஆசையுடன் குனிந்தாள். 


"தேங்க்யூ டா ராஜா ..." குனிந்து அவன் காதோரம் கிசுகிசுத்தாள். பின் ஆசையுடன் தன் கணவனின் உதடுகளுடன் அவளது இதழ்களை பொருத்தி மென்மையாக முத்தமிட்டாள். 


சுகன்யா... 40


கம்பெனி இன்ஸ்பெக்ஷனுக்கு போன சமயத்தில், ஒரு மாலையில், தங்கியிருந்த இடத்துக்குப் அருகாமையிலிருந்த, தியான மையத்துக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சங்கர் போயிருந்தான். சுத்தமான வெள்ளையுடை அணிந்திருந்த பெரியவர் ஒருவர், சப்பனமிட்டு தரையில் உட்க்கார்ந்து, முகத்தில் மாறாத புன்னகையுடன், சரளமான ஆங்கிலத்தில், மென்மையான குரலில், பேசிக் கொண்டிருந்தார்.

நண்பர்களே, இருபத்து நான்கு மணி நேரத்தில், ஒரு இருபது நிமிஷம், எளிதான உடல்பயிற்சிகளுக்குன்னு சமயத்தை ஒதுக்குங்க. அதோடு ஒரு இருபது நிமிஷம் தியானத்துக்குன்னு ஒதுக்குங்க. தியானங்கறது, மனசுக்கான பயிற்சி. உங்க உடலை அதிகமாக வருத்தாதீங்க. முறையில்லாத விருப்பங்களை மனசுக்குள்ள குவிச்சுக்கிட்டு, மனசோட சண்டைப் போடாதீங்க. மனசுக்கும் வலிக்கும். நாளடைவில மனசு வருந்தி, இறுகிவிடும். இதைத்தான் நீங்க மன உளைச்சல்ன்னு சொல்றீங்க. அதிகமாக இறுகிய மனம், நீங்கள் தினசரி வேலைகளை செய்யக்கூட முடியாத நிலைமையில் உங்களைத் தள்ளிவிடும்.

தொடர்ந்து தியானத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்துல பழுகுங்க. முறையான எளிய பயிற்சிகளால், உங்கள் மனதை இலகுவாக்க முடியும். ஒரு மாசத்துல உங்க உடம்பும், மனசும் எப்படி தளருதுன்னு வந்து சொல்லுங்க. மனம் இலகுவாக இருந்தால், நீங்கள் செய்யற எந்த காரியத்தையும் சுலபமாக செய்ய முடியும். ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், யார் வேண்டுமானாலும் தியானத்தைப் பழகலாம்.



ஆரம்பத்துல தியானத்தை, உங்கள் மதத்தோடு, உங்கள் மதக்கொள்கைகளோடு, உங்களின் இறை நம்பிக்கையோடு, உலகத்தை நீங்க புரிஞ்சிக்கிட்டிருக்கற தனிப்பட்ட உணர்வுகளோடு, சிறிதும் சம்பந்தப்படுத்தாதீங்க. வெறுமனே கண்ணை மூடி, அலையற மனசை அதும் போக்குல விடுங்க. நிச்சயமாக உங்கள் உடல் தளரும். மன இறுக்கம் குறையும். மனசுல "நிஜமான ஓய்வு" என்பது என்னன்னு உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். அதற்குப்பிறகு தியானம் உங்களை விட்டாலும், நீங்கள் அதை விடமாட்டீர்கள்.

'ம்ம்ம்' எத்தனை நாளாச்சு காலையில வீபூதியை நெத்தியில பூசி, வேணியின் ட்ரஸ்ஸிங் இழுப்பை இழுத்து திறந்து, அவள் வைத்திருக்கும், விபூதியை நெற்றியில் எடுத்து தீற்றிக்கொண்டான். வேஷ்டியை இடுப்பில் அழுத்தமாக சுற்றிக்கொண்டவன், முகத்தை துடைத்த துண்டையே உதறி தோளில் போர்த்திக்கொண்டான். கட்டிலில் சப்பணமிட்டு உட்க்கார்ந்து மனதை புருவங்களுக்கு இடையில் நிற்க வைக்க முயன்றான்.

அப்பா மாணிக்கம், சங்கரின் பதினாறாவது வயசுல "இப்படி உக்காருடா என் பக்கத்துலே" ன்னு சொல்லி, ஆசனத்தை கத்துக்குடுத்தார்; கொஞ்ச நாள் விடாம ஆர்வமா காலையில் எழுந்து கண்ணை மூடி அப்பாவிடம் இருந்த பயத்துக்காக அவர் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டிருந்தான். அப்புறம் ஜிம்முக்கு போறேம்பான்னு ஒத்தைக்கால்லே நின்றான். ஜிம்முக்கு போனதும், உடன் ஹாக்கி மட்டையை கையில் எடுத்தான். மாணிக்கமும் சங்கரை அவன் போக்கில் விட்டு விட்டார். தியானத்தில் உட்க்காருவது என்பது தன்னால் நின்று போனது. இதெல்லாம் நடந்து, பனிரெண்டு வருஷம் இருக்குமா? சங்கரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

தீடிர்ன்னு உக்காந்து கண்ணை மூடிக்கிட்டா மனசு உன் பேச்சை கேப்பேனா, ஒரு இடத்துலே நிப்பேனா என்று சவால் விட்டது. மனம் நிற்காமல் குதித்தது. ஆடியது. ஓடியது. தட்டு நிறைய சூடான பொங்கலும், வடையும், மென்மையான ஆவி பறக்கும் இட்லியும், சுவையான குருமாவும் மூடிய கண்ணுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

வேணி தலை வாரிக்கொண்டே அலைபேசியில் தன் அண்ணியுடன் சிரித்து சிரித்துப் பேசுகிறாள். அப்பா, தோட்டத்துல, சதைகள் புடைக்க, உடம்பில் வியர்வை வழிய, மண் வெட்டியால கொத்திக்கொண்டு நின்றார். அம்மா கையில் துடப்பத்துடன் ஹாலைப் பெருக்கிக்கொண்டு நின்றாள். சங்கர் தன் கையில் ஒரு காமக்கதைப் புத்தகத்துடன், லுங்கியில் கையை நுழைத்து தன் தண்டை வருடிக்கொண்டிருக்கிறான். என்ன சனியன் இது? இந்த எண்ணங்கள்ல்லாம் மனசுக்குள்ள இப்ப ஏன் வருது? சங்கர் வியந்து தனனைச் சலித்துக்கொண்டான்.

மீண்டும் கண்களை மூடினான். நிமிர்ந்து உட்க்கார்ந்தான். கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மடியில் வைத்தான். "ஓம்" "ஓம்" என மனதுக்குள் முனகினான். மெல்லிய வெள்ளை வெளிச்சம் கண்ணுக்கு பின் சட்டென மின்னலடித்தது. அவனுக்கு கண் சுழன்று தூக்கம் வருவது போலிருந்தது. படுத்துக்கலாமா?

முகம் தெரியாத நான்கு இளம் பெண்கள், பருத்த குலை தள்ளிய மார்புகளுடன், சிறுத்த இடை, மடிப்பு விழுந்த வயிறு, வயிற்றில் காலணா அளவுக்கு தொப்புள், அகன்ற பிருஷ்டங்கள், வலுவான தொடைகள், உறுதியான கால்கள், ஒருவர் பின் ஒருவராக அவனிடம் வந்து, "சங்கு ... எழுந்து வாடா; எவ்வள நேரமா வெய்ட் பண்ணறது?" மென்மையாக அழைத்தார்கள். ஒவ்வொருத்தியும் கிண்ணுன்னு இருக்காளுங்க; யாரோட போறது?அவன் திகைத்து நிற்க, அவர்கள் உரக்க சிரித்துக்கொண்டே திரும்பி போனார்கள்.

ரெண்டு நிமிஷத்தில், உடம்பில் பொட்டுத்துணியில்லாமல், உயரமாக, ஒல்லியான, உடம்பில் சதைப்பற்று அதிகமில்லாத பெண்கள், காலில் ஹைஹீல்ஸ் அணிந்து, சிறிய முலைகளுடன், இடுப்பை வளைத்து வளைத்து நடந்து, பேஷன் பரேட் நடத்தினார்கள். சுற்றி உட்க்கார்ந்திருந்தவர்கள், கண்களில் காமத்துடன், சோகையாக தங்கள் கையைத் தட்டினார்கள். உட்கார இடமில்லாமல் மூலையில் நின்று கொண்டிருந்த சங்கரை, இருவர் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினார்கள்.

ச்சே...ச்சே.. ஃப்ஸ்ஸ்ஸ்ஸ் ... கண்களை திறந்து, நீளமாக வாயால் மூச்சை வெளியில் விட்டான். சனியன் புடிச்ச மனசு. நிக்க மாட்டேங்குது. மனசை தன் போக்குல அலைய விடு, வெண்ணிற உடை அணிந்தவர் சிரித்தார். மீண்டும் கண்ணை மூடினான். நீல வானத்தை, ஆகாச வெளியை, ஓடும் ஆற்றை, தாமரை நிறைந்த குளத்தை, மனதுக்குள் வரைந்து பார்த்தான்.

வேணி மார்பில் கச்சும், இடுப்பில் ஜட்டியும் அணிந்து "வாங்கோன்னா... அட வாங்கோன்னா" என கட்டிலின் மேல் ஏறி நின்று, மெதுவாக தன் இடையை சுழற்றி சுழற்றி ஆட ஆரம்பித்தாள். இவ எப்ப பெல்லி டேன்ஸ் கத்துக்கிட்டா? சங்கர் தலையை இட வலமாக ஆட்டி "ம்ம்ம்ம்". ஒண்ணும் பிரயோசனமில்லே. குப்பையா போயிருக்குது மனசு. முனகினான்.

அப்பா சின்ன வயசுல என்ன சொல்லிக் குடுத்தார்? சங்கர்; ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி பகவானை செத்த நேரம் நினைச்சுக்கடா; காலையில முழிப்பு வரும் போது அதே பகவானோட நெனைப்பு உனக்கு வரும்ன்னு. நான் என்ன பண்ணேன்? நேத்து ராத்திரி, பொண்டாட்டி தூங்கிட்டாளேன்னு, நான் என் தண்டை கையில புடிச்சுக்கிட்டு புளு பிலிம் பாத்தேன். காலையில சிதம்பரம் நடராஜன் நெனைப்பா எனக்கு வரும்? என் "தண்டுராஜன்"எழுந்து ஆடறான். சங்கர் தலையில் அடித்துக்கொண்டான்.

கட்டிலில் உடலை குறுக்கிப் படுத்திருந்த வேணி தன் கால்களை நீட்டி புரள, அவள் கால்மாட்டில் உட்க்கார்ந்திருந்த சங்கரின் தொடையில், அவள் கால்கள் இடித்தன. தூக்கம் கலைந்த வேணி, என்னப் பண்றீங்க? ராத்திரியிலேயும் தூங்க விடல நீங்க.. கையில லேப்டாப்பை வெச்சுக்கிட்டு கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு இருந்தீங்க! இப்ப என் காலுங்கீழே உக்காந்துகிட்டு என்ன பண்றீங்க?

வேணி முழிச்சிட்டாளா! தொட்டுப்பாக்கலாமா? மனம் தியானத்தை மறந்தது. "நீ தூங்குடா செல்லம். என்னமோ தெரியலை ... தூக்கம் கெட்டுப்போச்சு ... மணி நாலரைதான் ஆவுது" ... சங்கர் அவள் கால்களை தன் மடியில் இழுத்துக்கொண்டு இதமாக பிடித்துவிட்டான்.

வேணி மீண்டும் புரண்டாள். போர்வை முற்றிலும் விலகியது. அவளின் பருத்த தொடைகள் சங்கரின் கண்களில் அடித்தது. சங்கரின் சித்தம் கலங்கியது. தன் கால்களை பிடித்துக்கொண்டிருந்த கணவனின் கையை பற்றி தன் புறம் இழுத்தாள் வேணி.

"வந்து படுங்களேன்!" வேணி தன் அடித்தொண்டையில் முனகினாள்.

காத்தடிக்கும் போதுதான் தூத்திக்கணும்; சங்கர், மனதில் கிளுகிளுப்புடன், தோளிலிருந்த துண்டை உதறினான். கட்டியிருந்த வேஷ்ட்டியை அவிழ்த்துவிட்டு, வேணியின் போர்வைக்குள் சட்டெனப் புகுந்து கொண்டான். போர்வைக்குள் புகுந்தவன், குண்டுகட்டாக அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டான். வேணியின் முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் ஆசையுடன் அழுத்தமாக முத்தமிட்டான். 

"சங்கு ... எனக்கு குளுருதுப்பா"

வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டிருக்கவேண்டும். சங்கரின் மார்பிலிருந்து சரிந்து, போர்வைக்குள் ஒருக்களித்து படுத்த வேணி, சங்கரின் இடுப்பில் தன் காலைப் போட்டுக்கொண்டு, தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள்.

அவள் விழிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்தவன், தன் மார்பில் தவழ்ந்தவளை, தன்னுடன் இறுக்கி அணைத்து அவள் தோளில் முத்தமிட்டான். தோளிலிருந்து, அவள் கன்னத்தை நோக்கி அவன் இதழ்கள் நகர்ந்தன. சங்கரின் இதமான உடல் வெப்பத்தால், அவளுக்கு சற்றே உடல் நடுக்கம் குறைந்தது போலிருந்தது. இலேசான குளிரை கூட வேணியால் எப்போதும் தாங்க முடிவதில்லை.

"ம்ம்ம்ம்... சங்கு... நேத்து ரொம்ப டயர்டா இருந்தேன்; நீ எப்ப வந்தேன்னு கூட உன்னை நான் கேக்கலை? சாரிம்ம்மா ..."

வேணியிடமிருந்து செல்லமாக முனகல்கள் எழுந்தன. தன் தோளில் முத்தமிட்ட சங்கரின் கழுத்தை வளைத்து தன் முகத்துடன், அவன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள். சங்கரின் கை விரல்கள் மனைவியின் இடுப்பில் மெதுவாக ஊர்ந்து அவள் நைட்டியை மார்பு வரை உயர்த்தி, அவள் புட்டங்களை அழுத்தமாக வருடின. வேணியின் உதடுகள் சங்கரின் கன்னத்தில் பதிந்து மென்மையாக முத்தங்களை பொழிந்தன.

"ம்ம்ம்ம்... என்ன பண்றீங்க ... செத்த நேரம் என்னை அப்படியே கட்டிப்புடிச்சுக்குங்க" வேணி கிசுகிசுத்தாள்.

"ம்ம்ம் .. வேணி, என்னமோ தெரியலைடி... எனக்கும் குளுருது... இந்த நைட்டியை கழட்டிடேன்.."

"ம்ம்ம் வேண்டாம்ம்... எனக்கு குளுருதுங்கறேன் ... நைட்டியை கழட்ட சொல்றீயே?... அப்படியே உள்ள விட்டுக்கயேன்!"

"இல்லம்மா ... நைட்டியை நீ கழட்டிட்டா; என் உடம்பு சூடு உனக்கு முழுசா கிடைக்கும்ல்ல்லா...?"சங்கர் உதடுகள் அவள் கழுத்திலும், கன்னத்திலும் மாறி மாறி முத்த முத்திரையை பதித்துக்கொண்டிருந்தன. அவன் அவள் நைட்டியை வேகமாக கழற்ற முயற்சித்தான். வேணியின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி, அவள் உதடுகளை கவ்வ முயற்சித்தான்.

"ஒரு நிமிஷம் என்னை விடேன்...." வேணி திமிற ஆரம்பித்தாள்.

வேணி அவன் பிடியிலிருந்து திமிறி எழுந்தாள்.. நாலு நாள் வெளியில போய் வந்தான்னா; படுத்தி எடுக்கிறான்! என்ன சொன்னாலும் இவன் கேக்கப் போறது இல்லே! இன்னைக்கு என்னை மொத்தமா அவுக்காம விடப்போறதில்லை!! என்னை அவுக்கறதுக்கு ஆயிரம் சாக்கு சொல்லுவான்! சட்டுன்னு சூடா ஒரு சொம்பு தண்ணியை உடம்புல ஊத்திக்கிட்டா, சுத்தமா குளிர் போயிடும்... என் உடம்பும் சுத்தமாயிடும்; அதுக்கப்புறம் இவன் இஷ்டப்படி என்னை என்ன வேணா பண்ணிக்கட்டும்!

"பண்ணலாம்ன்னு சொன்னே! அப்புறம் எங்கடி போறே இப்போ?"

"ஒரு செகண்டுடிச் செல்லம்... பாத்ரூம் போய் வந்துடறேன் ... அடி வயிறு வலிக்குதும்ம்மா ..." அவன் தவிப்பு அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. வேணி போர்வையிலிருந்து வெளியே வந்தாள். சங்கரின் தம்பி கிளம்பி, செங்குத்தாக விட்டத்தை நோக்கிக் கொண்டிருந்தான்.

"சங்கு ... என்னப்பா இது? இப்படி நெட்டுக்கிட்டு நிக்கறான் இவன்? குட்டி ஒரு நிமிஷண்டி செல்லம் ... அப்படியே நில்லு; படுத்துடாதே! இதோ வந்துடறேன்..." வேணி சங்கரின் தண்டை அழுத்தமாகப் பற்றி அதன் முனையில் சட்டென ஒரு முத்தம் கொடுத்தாள். சங்கருக்கு ஏகத்துக்கு வெறியேறியது.

பரம்பரை தேவடியா கூட இவகிட்ட போட்டி போட முடியாது போல இருக்கே? என்னமா தளுக்கறா இவ? இவ தளுக்கும் குலுக்கும்தான் என்னை இவகிட்ட கட்டிபோட்டு வெச்சிருக்கு. சங்கர் அந்த நேரத்தில் அவளை எதுவும் சொல்லி அவள் மூடு அவுட் ஆயிடக்கூடாதே என்று மனதுக்குள் பயந்தான்.

"சீக்கிரம் வாடி.." சங்கர் முனகினான்.

"வந்துட்டேன்..." வேணி தன் பற்களைத் தேய்க்கும் சத்தம் படுக்கையறையில் தெளிவாக கேட்டது.

"சங்கு ... கீசரை நீ ஆன் பண்ணியா? வென்னீர் குளிக்கற சூட்டுல ரெடியா இருக்கு! தண்ணீர் வாளியில் விழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

"ஏண்டி இப்ப என்னா ... குளிக்க ஆரம்பிச்சிட்டியா நீ..." அவன் வெறுப்பின் உச்சத்துக்கு போனான்.

சங்கர் வெறுப்புடன் தன் தண்டை லேசாக தடவிக்கொள்ள ஆரம்பித்தான். அவன் உடல் முறுக்கேறியிருந்தது. நம்மப் புள்ளாண்டான் இன்னைக்கு ஸ்ட்ராங்கா இருக்கான். வுட்டா ரெண்டு முழு ரவுண்டு அடிச்சுட்டுத்தான் வாந்தி எடுப்பான். இந்த நேரத்துல இவ பாத்ரூமுல பூந்துக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாளே? வேணியின் வரவுக்காக அவன் தவிக்க ஆரம்பித்தான்.

"இதோ வந்துட்டேண்டி கண்ணா .... இரண்டு நிமிஷம் ... இங்கேருந்த வெள்ளைத் துண்டு எங்கே?"

"ஏண்டி வெறுப்பத்தறே? ... சீக்கிரம் வெளியே வாடீன்னா!? ... இப்பத்தான் ஆயிரம் கேள்வி கேப்பா?" சங்கர் எரிச்சலடைய ஆரம்பித்தான்.

"வந்துட்டேன் ..." வேணி திரும்ப கூவினாள்.

"நீ வராதடி ... நானே வரேன்..."

சங்கர் கட்டிலிலிருந்து பிறந்த மேனியுடன் எழுந்து, பாத்ரூமுக்குள் வேகமாக நுழைந்தான். வேணி தன் உடலில் தேங்காய் பூ டவலை சுற்றிக்கொண்டு தலையை வாரி ரப்பர் பேண்டுக்குள் இறுக்கிக் கொண்டிருந்தாள். டவல் அவள் முழு உடலையும் மூட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. பாதி பின் தொடைகள் புட்டத்துக்கு கீழ் வெண்மையாக பளிச்சிட்டுக்கொண்டிருந்தது ...

வேணியின் கழுத்தோரம், தூக்கிக்கட்டிய பின் முடிகளிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் வென்னிற கால்களில் தண்ணீர் துளிகள் முத்து முத்தாக, பளிச்சென்ற வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தன. அவள் தன்னை மொத்தமாக இன்னும் துடைத்திருக்கவில்லை.

எதிரிலிருந்த கண்ணாடியில், வேணி தன் முகத்தைப் கூர்ந்து பார்த்து உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டிருந்தாள். எதிரில் கண்ணாடியில் இன்னொரு வேணி தலையை முடிந்து கொண்டிருந்தாள். அவளுடைய கொழுத்த மார்புகள் டவலைக் கிழித்துக்கொண்டு வரத்துடித்துக் கொண்டிருந்தன.

உள்ளே நுழைந்த சங்கர், டவலில் புடைத்துக்கொண்டிருந்த வேணியின் பின்னழகில் ஒரு வினாடி மயங்கி நின்றான். தன் இரு கைகளாலும், அவள் இடுப்பை வளைத்து, அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து, கழுத்திலிருந்து வந்த சோப்பின் வாசத்தை நீளமாக நெஞ்சு நிறைய இழுத்தான்.

"டார்லிங் ... இந்த கோலத்துல நீ செம செக்ஸியா இருக்கேடிச் செல்லம். உன்னுது எல்லாமே ஷேப்பா இருக்கேடி?" அவள் பின் கழுத்திலிருந்த தண்ணீர் முத்துகளை ஒவ்வொன்றாகத் தன் நாவால் நக்கினான்.

"ம்ம்ம்ம்... இப்பத்தான் குளிச்சேன்.. கழுத்தை நக்கி நக்கி என்னை எச்சிலாக்கறீங்க!!!."

"வேணி, அப்ப ஏண்டி நீ இப்ப குளிச்சே? எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் குளிச்சிருக்கலாம்ல்லே?

"ச்ச்செ... அழுக்கா வேர்வை நாத்தத்தோட இருக்கற என் உடம்பை, நீங்க நக்க வேணாம்ன்னுதான் இப்ப அவசர அவசரமா குளிச்சேன்.."

"என்னால பொறுக்க முடியலைடி ... வாடீ ரூமுக்குப் போவலாம்.."

"அப்படி என்னா அவசரம் ...? வேணி தன் இடது கையை பின்புறம் செலுத்தி சங்கரின் ஆண்மையை இறுகப்பற்றினாள்.

"ம்ம்ம்ம்.... முடியலைடி ...ஒரு வாரம் ஆச்சுல்லே?"

"இங்கேயாவா ...ஆரம்பிக்கறது ... ?" வேணியின் குரல் சங்கருக்கு போதை ஏற்றியது.

"எங்க பண்ணா என்னாடி? கிடைக்கற சுகம் தானே முக்கியம்..!!" சங்கர் வழிந்தான்.

"ஆசை... தோசை ...!!" வேணி தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். அவள் கைகளில் சங்கரின் ஆண்மை திண்மையாகிக் கொண்டிருந்தது. 

வேணியின் உதடுகளில் இப்போது கள்ளப்புன்னகையொன்று மலர்ந்திருந்தது. வேணி வேண்டுமென்றே அவனை தவிக்க விட்டுக்கொண்டிருந்தாள். தன் கணவனின் தவிப்பை பார்த்து அவள் உள்ளம் கள்வெறி கொண்டது. இன்னும்தான் கொஞ்சம் தவிக்கட்டுமே இவன்!.

புருஷனுக்கு பொண்டாட்டி அருமை, அவன் தவிச்சாத்தான் தெரியும்ன்னு என் அண்ணி சொல்றது சரியாத்தான் இருக்கு. "சங்கருக்கு நல்லாப் பசி எடுத்தப்பறம் சோறு போடுடி வேணீன்னு" அவங்க சொன்னதும் சரியாத்தான் இருக்கு!! பசி எடுத்து சாப்பிட்டாத்தான் யாருக்குமே ருசி தெரியும்!

இவன் தவிச்சதுக்கு அப்புறம் இன்னைக்கு இவனுக்கு வட்டியும் முதலுமா அள்ளி அள்ளிக்குடுக்கறேன்!. இவன் சந்தோஷமா இருக்கணும்! அப்பத்தான் எனக்கு சந்தோஷம் ரெட்டிப்பா திரும்ப கிடைக்கும். வேணியின் நெஞ்சுக்குள் இன்ப தூறல் தூற ஆரம்பித்தது. அவள் உள்ளமும், உடலும் சங்கு... சங்கு... எனத்துடித்த போதிலும், தன் உணர்ச்சிகளை தன் முகத்தில் காட்டாமல் வேணி தன் புருஷனை வதைத்தாள்.

"ஒரு முத்தா குடுடி ..." சங்கரின் கரங்கள் டவலோடு சேர்த்து வேணியின் மார்புகளை வேகமாக கசக்க ஆரம்பித்தன. முகத்தில் ஏக்கம் ததும்பியது.

வேணி சங்கரின் கரங்களுக்குள் நின்றவாறே திரும்பினாள். திரும்பிய வேகத்தில் அவள் உடலில் சுற்றியிருந்த டவல் நழுவி தரையில் விழுந்தது. வாளிப்பான அவள் முலைகள் அவன் மார்பில் சென்று அழுந்த, தன் கைகளை அவன் கழுத்தில் மாலையிட்டு அவன் உதடுகளை தன் ஈர உதடுகளால் ஆசையுடன் கவ்வி, நிதானமாக முத்தமிட ஆரம்பித்தாள். சங்கரின் கொழுத்த உதடுகள், வேணியின் மெல்லிய சிவந்த உதடுகளுக்கிடையில் சிக்கித் தவித்தன.

"ம்ம்ம்ம்... வேணீக்குட்டீ" சங்கர் அவளை தன் முழுபலத்துடன் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான்.

ஆசையுடன் தன் கணவனை முத்தமிட்ட வேணி, காதல் நிரம்பியிருந்த தன் விழிகளால் அவன் முகத்தை பார்த்தாள். சங்கரின் கைகள், அவள் இடுப்பிலிருந்து கீழிறங்கி, அவன் விரல்கள் அவள் பின்னழகின் மென்மையை உணரத் தொடங்கின. வேணியின் பின் மேடுகள், சற்று முன் அவள் வென்னீரில் குளித்ததில், இன்னும் இதமான சூட்டுடன் இருந்தன.

"வேணீம்ம்மா ..." சங்கர் முனகியவாறு அவள் கழுத்தைக் கடித்தான்.

"ம்ம்ம்ம்.. நாயே ஏண்டா கடிக்கறே?" வேணி அவன் தலை முடியை கொத்தாக பிடித்து உலுக்கினாள்.

"நீ ஏன் இவ்வள அழகா இருக்கேடிச் செல்ல்லம்.."

"எங்கம்மாவைத்தான் கேக்கணும்!!" வேணி பதிலுக்கு முனகினாள்.

சங்கரின் விரல்கள் தன் பின் மேடுகளில் ஊர்ந்து, உண்டாக்கிய சுகத்தை சுகித்துக்கொண்டிருந்த வேணி களிப்புடன் பிதற்றினாள். அவள் விழிகள் இரண்டும் மூடிக்கிடந்தன. மூடிக்கிடந்த அவள் விழிகளோ, வாடாச் என் செல்லம் ... வந்து என்னை எடுத்துக்கோ... என்று சங்கருக்கு அழைப்பு விட்டுக் கொண்டிருந்தன.

"ஒரு முத்தா உன் பையனுக்கு குடேண்டீ..." சங்கரின் கை தன் மனைவியின் இடதுமார்பின் காம்பை திருகிக்கொண்டிருந்தது.

"ச்சீய்.. போவுது பாரு உன் புத்தி! போயும் போயும் பாத்ரூமுல? ... நான் மாட்டேன்..." வேணியின் முகம் வெட்கத்தால் சிவந்து தாமரையானது.



"கொஞ்ச நேரம் முன்னாடி கட்டில்ல படுத்துருந்தப்ப கொடுத்தியேடி?" சங்கரின் ஆள் காட்டி விரல் அவள் பிளவுக்குள் நுழைந்து அவள் குழைவை சோதித்தது.

"நான் தயார்டி செல்லம் ... ரூமுக்கு போவலாம் வாப்பா" வேணி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினாள்.

"ஹூகூம் ... முதல்ல ... இங்கேயே உன் பையனுக்கு நீ ஒரு முத்தா குடுத்துடுடீ... ப்ளீஸ்..."

சங்கர், இரவில் பார்த்த நீலப்படத்தில் வந்த கதையின் நாயகி தரையில் மண்டியிட்டு, குளியலறையில் தன் கணவனின் ஆண்மையை சுவைத்து அவனை மகிழ்வித்த காட்சி, அவன் மனதில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

"சங்கு... இது என்ன புது பிடிவாதம்..." வேணி வெட்கத்தில் சிணுங்கினாள்.

சிணுங்கியவாறே சங்கரின் கழுத்தை மென்மையாக கடித்தாள் வேணி. அவள் வலது கை அவன் ஆண்மை மொட்டை இறுகப் பற்றிக்கொண்டிருக்க, அவன் ஆண்மை அவள் உள்ளங்கையில் துடித்துக் கொண்டிருந்தது. சங்கர் வேணியை ஆசையும், காதலும் பொங்க பார்த்தவன், அவளை தன் மார்புடன் இழுத்து தழுவினான்.

"நேத்து ராத்திரி நான் பாத்த படத்துல வந்தவ, அவ ஹஸ்பெண்டை பாத்ரூமுல சப்பிவிட்டா... ரொம்ப ஆசையா இருக்குடி ... நீ ஒரு தரம் அந்த மாதிரி என்னை சப்பிவிடேண்டி.. கண்ணுல்லே!! நீதான் ராத்திரி அசந்து தூங்கிட்டியே? இல்லேன்னா உனக்கும் அந்த படத்தை காட்டியிருப்பேன்.."

சங்கர், அவளுடைய காதில் மெல்லிய குரலில் தன் ஆசையை முனகினான். சங்கர் சொன்னதை கேட்டதும், அவனுடைய இறுக்கமான அணைப்பிலிருந்த வேணியின் வீங்கிய மார்க்காம்புகள் மேலும் அளவில் பருத்து அவன் மார்பை குத்திப் புண்ணாக்கின. சரியானவன்! இவன் மட்டும் தனியாப் படத்தைப் பாத்துட்டு, அந்த கதையை சொல்லி, என் மூடை கிளப்பி விடறான்.

"சே ...சே! சங்கு ...இதெல்லாம் நல்லதுக்கு இல்லே! நீ வர வர கண்ட படத்தையும் பாத்து கெட்டு குட்டிசுவரா போவறே!!"

"வேணீ ... ப்ளீஸ்ம்ம்மா ... ஒரே ஒரு தரம் ... " இவள் மறுக்க மறுக்க அவன் பிடிவாதம் அதிகரித்தது. அவள் தோளில் இரு கைகளையும் வைத்து அழுத்தி அவளை உட்காரவைக்க முயன்றான்.

"ஒரு தரம்தான் குடுப்பேன் ... சரியா?" வேணிக்கும் இது ஒரு புது அனுபவம். இவன் சொல்றதை ஒரு தரம் பண்ணித்தான் பார்ப்போமே? அவள் மனது சரியென்றது.

"ம்ம்ம்..." கடைசீல எனக்கு புடிக்குதுன்னா... இவ என்ன வேணா செய்வா.. சங்கரின் மனது குஷியானது.

வேணி அவன் பருத்திருந்த உறுப்பை மெல்ல வருடிக்கொண்டே, மெல்ல தன் முழங்காலில் நின்றாள். தன் ஓரக்கண்ணால் தன் கணவன் முகத்தைப் பார்த்தாள். சங்கரின் முகத்தில் அவன் ஆசையும் ஏக்கமும் தெளிவாக எழுதி ஒட்டியிருந்தது.

ஒழிஞ்சுப் போறான்! என் புருஷன் தானே? இனிமேலும் இவனை காக்க வெக்க முடியாது. கட்டில்ல பண்ணப்போறதை இன்னைக்கு இங்கேயே பண்ணிடறேன்! மனதுக்குள் முடிவெடுத்தவள், அவன் தண்டின் முனையை தன் உதடுகளில், இடம் வலமாக தேய்த்தாள்.

"வ்வ்வ்வூவூவூ..." சங்கர் முனகினான்.

சரி, ஆரம்பிச்சாச்சு... ஒரு வழியா இந்த முத்தப் படலத்தை இங்கேயே மொத்தமா முடிச்சிடலாம். மனதில் புன்னகையுடன் வேணி மெல்ல தன் நுனி நாக்கால் அவன் மொட்டை வருடினாள். வருடிக்கொண்டே சட்டென அவன் பாதி ஆண்மையை தன் உதடுகளால் உறிஞ்சி தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டாள். தன் நாவால் அவனை சுழற்றி சுழற்றி அழுத்தினாள்.

ம்ம்ம்.. இதுவும் வசதியாத்தான் இருக்கு! நின்னுக்கிட்டு இருக்கறவன் முன்னாடி, உக்கார்ந்து அவனை வாய்க்குள்ள வெச்சு சுவைக்கறது சுலபமா இருக்கே? புது அனுபவம் தந்த சுகத்தில் சங்கரும், வேணியும் மனதுக்குள் ஒருங்கே சிலிர்த்தார்கள்.

"ஹாங் ...ம்ம்மெம்மா..."

ஆரம்பத்துல மாட்டேன் மாட்டேன்னு சொன்னாலும்... என் பொண்டாட்டி, எதையும் தன் மனசார செய்யறா... நான் குடுத்து வெச்சவன் ... நான் அதிர்ஷ்டசாலி... என் தங்கம் இவ..! கடைசி வரைக்கும் இவ மனசு கோணமா நான் நடந்துக்கணும்... சங்கரின் மனம் தன் மனைவியை மெச்சியது.

வேணி, அவன் உறுப்பை அழுத்தமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். சங்கரின் உடல் சட்டென துடித்தது. அவன் கைகள் வேணியின் தலையை இருபுறமும் அழுத்திப்பிடித்தன. வேணி தன் வாயை புழையாக மாற்றி, அவன் உறுப்பை கவ்வி பிடித்து, தன் இரு உதடுகளையும் குவித்து, முன்னும் பின்னுமாக தன் தலையை மெதுவாக அசைத்தாள். அவன் உறுப்பு அவள் நாக்கு தந்த குளிர்ச்சியிலும், வாய் தந்த வெப்பத்திலும், உருவில் பெருக்க ஆரம்பித்தது.

"செல்லம்... சூப்பரா பண்றேடி... எங்கடி கத்துக்கிட்ட இந்த வேலையை நீ" அவன் மெல்ல கூவினான்.

"ச்ச்சீ... இப்படி இன்னோரு தரம் பேசினே ... நான் பண்ணமாட்டேன் ...போடா..." வேணி, தன் வாயிலிருந்து அவன் உறுப்பை உருவி தன் கையால் குலுக்கிக்கொண்டே அவனை தன் ஓரக்கண்ணால் பார்த்து ஒய்யாரமாக சிரித்தாள்.

"நல்லாருக்குன்னு சொன்னாத் தப்பாடீ பட்டு?"



"நல்லாருக்குன்னு சொல்லு; எங்கே கத்துக்கிட்டேன்னு கேட்டா என்ன அர்த்தம்"

தன் வார்த்தையை முடிக்காமல், முழுவதும் நிமிர்ந்து வளர்ந்து விட்ட சங்கரின் ஆண்மையத் தன் வாயால் கவ்வி மொத்தமாக ஈரமாக்கினாள் வேணி. இரும்பு பழுத்துவிட்டது. இப்ப இதை அடிச்சாத்தான், நினைக்கறபடி வளையும். வேனியின் மனதுக்குள் தூறிக்கொண்டிருந்த சாரல், வலுத்து மழையாக மாறி பெய்ய ஆரம்பிக்க, அவள் அந்தரங்கம் முற்றிலும் குழைந்து, அவள் தொடையோரம் கசிந்த நீரால், அவள் மனது சங்கரின் ஆண்மையின் வலுவை, உடனடியாக சுவைக்கத்துடித்தது.

"போதும்பா ... என் கால் வலிக்குது; சங்கு உள்ளே போவலாம்பா ... எனக்கு நீ இப்பவே வேணுண்டா .." வேணியின் கண்களில் காமம் பெருக்கெடுத்திருந்தது. 


சுகன்யா... 39


செல்வா, தேனீருடன் மேலே ஏறிவந்தான். சீனுவிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு, தானும் மெல்ல தேனீரை உறிஞ்ச ஆரம்பித்தான். அன்று நிஜமாகவே அவன் போட்ட டீ நன்றாக சுவையாக வந்திருந்தது. சீனு டீயை "ஸ்ர்ர் ஸ்ர்ர்" என ஓசை எழுப்பி உறிஞ்சி உறிஞ்சி நிதானமாக குடித்தான். செல்வாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

"மாப்ளே! ஏண்டா இப்படி சத்தம் போட்டு உறிஞ்சறே? எத்தனை வாட்டிடா உனக்கு சொல்றது இது மேனர்ஸ் இல்லேன்னு?

"ஆமாண்டா ... நீங்க காதலிக்கற பொண்ணு மேல நம்பிக்கையில்லாம சந்தேகப் படுவீங்க; அதெல்லாம் மேனர்ஸ்; நாங்க டீ நல்லா இருக்கேன்னு கொஞ்சம் சத்தமா உறிஞ்சி குடிச்சா பேடு மேனர்ஸ் ... நல்லா வருதுடா வாயில..." சீனு பதிலுக்கு முறைத்தான்.

"சரிடா ... நீ எப்படி வேணா குடிடா... இப்ப விஷயத்துக்க்க்கு வாடா.."

"மச்சான்.. உன்னைப் பாத்தா எனக்கு அழுவறதா சிரிக்கறதான்னு புரியலடா" சீனு மெதுவாக ஆரம்பித்தான்.

"டேய் சீனு, சிரிக்காதடா... எனக்கு மனசுல வலிக்குதுடா ... அந்த சம்பத்து சுகன்யாவை ஃபார்மலா பொண்ணு பாக்க போறதா கூட, எனக்கு நீயூஸ் வந்திருக்குடா. அதையும் சுகன்யா எங்கிட்ட சொல்லலைடா..."

"இதையும் அந்த சம்பத்துத்தான் சொன்னானா?"

"இல்லே ... சுகன்யாவோட ஃப்ரெண்டு வித்யா சொன்னாடா? அவதான் சுகன்யா ஊருக்குப் போயிருக்கற விஷயத்தையே சொன்னா"

"ஏண்டா நீ சுகன்யாவை டாவு அடிச்சிக்கிட்டே, ஜானகியை பொண்ணு பாக்க போனியே... அப்ப அது சுகன்யாவுக்கு வலிச்சிருக்காதா?"

"அம்மா சொல்லும்போது நான் எப்படிடா மாட்டேன்னு சொல்லுவேன்?"


"சுகன்யா மட்டும் உனக்காக அவங்க அம்மாவை எதுத்துக்கணுமா?"

செல்வா சீனுவுக்கு பதில் சொல்லாமல், தன் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகளும் கன்னங்களும் கோணிக்கொண்டு, விட்டால், அவன் எந்த நேரத்திலும் அழுதுவிடுவான் என சீனுக்குத் தோன்றியது.

"செல்வா ... நீ என் பால்ய சினேகிதன்... ஆனா நான் சொல்றனேன்னு என் மேல கோவப்படாதே; கேனப்புண்டை அந்த சம்பத்து இல்லடா ..."

"ம்ம்ம் ..."

"என்னைக் கேட்டா அது நீதாண்டா ..."

"இன்னைக்கு நீ என்னை ரொம்பவே வெறுப்பேத்தறடா ...உன்னை நான் தெரியாத்தனமா நாய்ன்னு சொல்லிட்டேண்டா... அதுக்காக என்னை ஏண்டா இப்படி வறுத்து எடுக்கறே?" செல்வா குமைந்தான்.

"பின்னே என்னடா ... அந்த சம்பத்துக்கு உன் சுகன்யா மேல ஏதோ வெறுப்பு; சமயம் பாத்து அவன் உன்னை உசுப்பேத்தி; நீ சுகன்யா கிட்ட அதை ஒளறி; அது மூலமா உங்க கல்யாணத்துல குழப்பம் பண்ண அவன் முயற்சி பண்ணியிருக்கான்; இத்தை நீ புரிஞ்சுக்காம என் மேல கோவப்படறே.."

"ம்ம்ம்"

"நீ கருப்பா ... சிவப்பாடா ...?"

"என்னடா சொல்றே"

"கேட்டதுக்கு பதில் சொல்லுடா"

"நான் மா நிறம் தான்..."

"சுகன்யா, செவப்பு தோலோட என்னை மாதிரி இருக்கறவன் பின்னாடி போகாம, உன்னை ஏண்டா செலக்ட் பண்ணா?"

"ம்ம்ம்.. இந்த ஆங்கிள்ல்ல நான் எப்பவும் யோசிக்கலடா.."

"அந்த சம்பத்துக்கு தான் கருப்பா இருக்கோம்ன்னு ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கலாம். நாலு நிமிஷம் பேசினவன் ... நாலு தரம் தன் உடம்பு நிறத்தைப்பத்தி உங்கிட்ட பேசியிருக்கான்... சுகன்யா அவனை தொட்டு கை குலுக்கலை... அவன் கிட்ட சரியா பேசலைன்னு அவன் காண்டா இருக்கும் போது நீ போன் பண்ணே? சரியா?"

"ஆமாம்.."

"எட்டு வருஷமா சுகன்யாவும், அந்த சம்பத்துங்கற சொறி நாயை காதலிச்சிருந்தா... அவன் கையை குலுக்கறதுக்கு அவ தயங்குவாளா? ... அதுவும் அவன் அவளுக்கு அத்தைப் பிள்ளை.. உன் மண்டையில நான் சொல்றது ஏறுதா?"

"பாயிண்ட்டு மாப்ளே!" செல்வாவுக்கு சிறிது மனதில் தெம்பு வந்தது.

"எட்டு வருஷமா சுகன்யாவை காதலிக்கறவன், அவளைக் காலையிலப் பாத்தப்ப "க்ளாட் டு மீட் யூ"ன்னு சொல்லுவானா? செல்வா நல்லா யோசனைப் பண்ணி பாருடா.."

"ம்ம்ம்"

"என் யூகம் என்னன்னா அவன் சுகன்யாவை ரொம்ப நாள் கழிச்சி பாக்கறான்... இல்லே முதல் தரமா பாக்கறான். இல்லேன்னா சுகன்யாவுக்கு அவனுக்கும் பழக்கமேயில்லை.."

"It is quite possible..." செல்வாவுக்கு உற்சாகம் அதிகமாகியது. அவன் சீனுவை நெருங்கி உட்க்கார்ந்து கொண்டான். என்னா இருந்தாலும் நம்ம மாப்பிள்ளை கிட்ட போனா பிரச்சனையை எப்படியாவது சிக்கு எடுத்துடுவான். செல்வா உற்சாகமானான்.

"அதுக்கப்புறம் சம்பத் என்னா சொன்னான் உன் கிட்ட? 'கடைசியா ஒரே ஒரு வார்த்தை ... உன் தோலு என்னா செவப்பா? இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா?' --- உன்னைக் கேட்டானா இல்லையா?

"ஆமாண்டா ..."

"அப்படின்னா என்னடா அர்த்தம்? ஏற்கனவே சம்பத்துக்கு சுகன்யாவை கட்டிக்கொடுக்க அவங்க வீட்டுல இஷ்டமில்லே? சம்பத்து வீட்டு ப்ரப்போசலை சுந்தரி மறுத்திருக்காங்க; அதுதானேடா இதுக்கு அர்த்தம்?

"சீனு ... நீ கில்லாடிடா மாப்ளே.."

"அப்புறம் சம்பத்து அவளை திருப்பியும் திருப்பியும் என்னடா பொண்ணு பாக்கறது?"

"நீ சொல்றது சரிதாண்டா மாப்ளே"

"சுகன்யாவை சம்பத் இங்க அங்க பாத்து இருக்கலாம். சம்பத் வீட்டுலேருந்து சுகன்யாவை அவனுக்கு பெண்ணும் கேட்டிருக்கலாம். Even ... சுகன்யா லீவுல இப்ப கிராமத்துல இருக்கறதுனால, சம்பத்தும் ஒரு தரம் நேரா சுகன்யாவைப் பாத்து இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணியிருக்கலாம்.

"மாப்ளே .. நீ இப்ப பாக்கற வேலையை வுட்டுட்டு, ரியலி டிடெக்டிவா போகலாண்டா..."

"குறுக்கப் பேசாதே! காலையில அவன் சுகன்யாவை பாக்கப் போனப்ப, உன் ஆளு அவன் கிட்ட சுமுகமா பழகல.. நீ நடுவுல பூந்து... வெறுத்துப் போய் இருக்கறவன் கிட்ட, நான் சுகன்யாவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு; அவளை கட்டிக்கப்போறேன்னு கதை சொன்னா; முறை மாப்பிள்ளை சம்பத்து, உன் கிட்ட முறைச்சுக்கிட்டான். உனக்கு புரியுதா? மொத்தத்துல இவ்வளவுதாண்டா விஷியம்..."

"மாப்ளே .. ரொம்ப தேங்க்ஸ்டா ... நான் இப்ப ரொம்ப ரிலீஃப் ஆ ஃபீல் பண்றேண்டா.." செல்வா சீனுவை கட்டிக்கொண்டான்.

"சை ... விடுடா என்னை.."

"மாப்ளே .. கோச்சிக்காதடா... இன்னொரு டீ போட்டுத் தரேண்டா..."

"கடைசி வரைக்கும் சம்பத்து சுகன்யாவை லைன்ல கூப்பிடலை இல்லையா?"

"யெஸ்...யெஸ் ... யூ ஆர் ரைட்ரா மாப்பிளே"

"சம்பத் உன் கிட்ட பேசினது, சுகன்யாவுக்கு தெரியக்கூடாதுன்னு அவன் நெனைக்கறது சகஜம்டா... அந்த நிமிஷமே அவ லைன்ல வந்திருந்தா ... அவனோட கேம் முடிஞ்சுப் போயிருக்கும்... அப்பவே சுகன்யா அவனை நார் நாரா கிழிச்சிடுவா .. அதனால அவன் லைனை கட் பண்ணச் சொல்லி, தனக்கு டயம் கெய்ன் பண்ணிக்கிட்டான்.."

"உண்மைதான் மாப்ளே.."

"இங்க ஒரு விஷயம் மட்டும் ஒதைக்குது நைனா.."

"என்னடா ..."

"டேய் என்னடான்னு என்னை கேளுடா நீ ...?"

"சொல்லுடா மாப்பிளே ... நான் குழம்பி போய் இருக்கவேதானே ... என் மாப்பிள்ளயை இங்க கூப்பிட்டேன் .. செல்வா சீனுவின் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டான்.

"சுகன்யாவோட அப்பா ... அவங்க குடும்பத்தோட இல்லே! ஆனா சம்பத்து ""சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே?"" ன்னு உன் கிட்ட பொலம்பறான். சுகன்யாவோட அப்பா எப்ப சீன்ல வந்தார்?

"மாப்பிளே ... நீ போன பிறவியில ஷெர்லாக் ஹோம்ஸ்ஸா இருந்திருக்கணும்டா ...எனக்கு மண்டையில இது உதிக்கவேயில்லடா.."

"மவனே ... செல்வா ... சுகன்யாவை நீ சந்தேகப்பட்ட விஷயத்தை என்னைத் தவிர வேற யாருகிட்டவாவது சொன்னியா?" சீனு தன் நார்மல் மூடுக்கு வந்துவிட்டான்.

"இல்லடா மாப்ளே! நீ தானேடா என் நண்பேன் ... என் அட்வைசர் ... என் பிலாசஃபர், என் கைட் எல்லாமே நீதானேடா ... சாயந்திரம் மீனா கிட்ட சொல்லலாமான்னு நினைச்சேன்.. ஆனா சுகன்யா இப்ப மீனாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட், அவ கிட்ட சொல்லியிருந்தா நீ சொன்ன மாதிரி மீனாவே என்னை செருப்பால அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பா..."

"டேய் உன் வாழ்கையிலேயே நீ இதுவரைக்கும் ரெண்டு காரியம்தான் உருப்படியா பண்ணியிருக்கே!" சீனு சிரித்தான்.

"என்னடா மாப்ளே?"

"ஒண்ணு சுகன்யாவை நீ தைரியமா டாவு அடிச்சது; ரெண்டாவது நீ இன்னைக்கு அவளை சந்தேகப்பட்ட விஷயத்தை அவகிட்டவே சொல்லாம பொத்திக்கிட்டு இருந்தது ..." சீனு இப்போது ஹா ...ஹோ... வென உரக்க சிரித்தான்.

"டேய் .. டேய் ...அடங்குடா கொஞ்சம் .. கொஞ்சம் கேப் கிடைச்சா ... நீ உள்ளே நுழைஞ்சிடுவியே?"

"செல்வா ... நீ சுகன்யாவை நிஜமாவே காதலிக்கறீயா?"

"என்னடா மாப்பிளே அப்படி கேட்டுட்டே?" செல்வா தன் முகம் சுருங்கி சிணுங்கினான்.

"உன் ஆபீசுல எத்தனை நாய் அவ பின்னால மூச்சு எறைக்க எறைக்க சுத்துச்சுங்க...அவ எவனையாவது திரும்பிப் பாத்தாளா?"

"இல்லே ..."

"அவ உன் பின்னாலதானே வந்தா?"

"ம்ம்ம்.."

" நீ நெனவு இல்லாமே கிடந்தே ஹாஸ்பெட்டல்ல; அன்னைக்கு சுகன்யா உனக்காக பட்ட பாட்டை நீ பாத்து இருக்கணும்டா; அம்மா அவசரப்பட்டு என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துட்டு நீ போயிடுன்னாங்க; அவ உங்க அம்மா சந்தோஷமா இருக்கணும்ன்னு, டக்குன்னு ஒரு வார்த்தை சொல்லாம எழுந்து போய் மரத்தடியில உக்காந்துக்கிட்டு மூஞ்சை மூடிக்கிட்டு அழுதாடா; அதைப் பாத்த என் கண்ணுல தண்ணி வந்திடுச்சிடா அன்னைக்கு; உன் அப்பா அன்னைக்கே சொன்னாரு; இவதான் என் மருமவன்னு; மச்சான் காதல்லே நம்பிக்கை ரொம்ப முக்கியம்டா.. அவ உன் மேல தன் உயிரையே வெச்சிருக்காடா... அவளைப் போய் நீ சந்தேகப்பட்டுட்டியே?"

"மாப்ளே ... தப்புத்தாண்டா ... அதுக்காக என்னை நீ குத்திக்கிழிக்காதேடா... ஃப்ளீஸ்.." செல்வா சீனுவின் கையை பிடித்துக்கொண்டான்.

"ஆனா நான் சம்பத்தை ஒரு நாள் இல்ல ஒரு நாள் தேடிப்புடிச்சி நன்றி சொல்லத்தான் போறேண்டா?"

"ஏண்டா..."

"இன்னைக்கு அவன் உனக்கு சூடா அடியில ராடு வுட்டான்; அதனாலத்தான் நீ பொலம்பிக்கிட்டே என்னை உன் வூட்டுக்கு கூப்பிட்டே.."

"ம்ம்ம் .. " அவன் என்ன சொல்ல வருகிறான் என்று செல்வாவுக்கு நன்றாக புரிந்தது ஆனால் அதை அவன் சீனுவின் வாயால் கேட்க்க விரும்பினான்.

"நானும் உன் வூட்டுக்கு என் கட்டிங்கை பாதியில நிறுத்திட்டு வந்தேன்; ஆனா இங்கே அந்த எழுமலையான் புண்ணியத்துல எனக்கு தங்கமா ஒரு வாழ்க்கைத் துணை கிடைச்சிருக்கு; அந்த துணையால என் கட்டிங் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துடுத்து..." சீனு நன்றியுடன் செல்வாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

"சீனு ..., ஆரம்பத்துலேருந்தே என் கல்யாண மேட்டர்ல ஒரு பிரச்சனைக்கு பின்னாடி இன்னொன்னுன்னு வர்றதை நெனைச்சா, "ச்சீ" ன்னு ஆகிப் போயிடுச்சிடா" செல்வா சலித்துக்கொண்டவன் தன் இடது கையிலிருந்த பிளாஸ்டரினுள் ஆள்காட்டி விரலை நுழைத்து சொறிந்து கொண்டான்.

"நீ பிரச்சனையை எப்படி பாக்கறே? அதுதான் ரொம்ப முக்கியம். பிரச்சனையை நீ பாக்கற கோணத்துலதான் அது சுலபமாவோ, இல்லே கஷ்டமாவோ மாறுது."

"என்னடா சொல்றே?"

"செல்வா ... சரியான பொண்ணு கிடைச்சு, ஸ்மூத்தா கல்யாணம் நடக்கறதுங்கறது ஒரு பிரச்சனைதான்... நான் இல்லேன்னு சொல்லலை..." சீனு, சிகரெட்டை தன் உதட்டில் பொருத்தி ஒரு முறை நீளமாக இழுத்தான். பின் நிதானமாக புகையை வெளியில் ஊதினான். சமயம் நள்ளிரவைத் தாண்டிவிட்டிருந்தது. அவன் பின்மாலையில் குடித்திருந்த மதுவின் ஆதிக்கம் அவனை விட்டு முழுதுமாக நீங்கிவிட்டிருந்தது. நண்பர்கள் இருவரும் எப்போதும் போல் வெகு சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

சீனுவுக்கு குண்டு குண்டான கருப்பான கண்கள். அவனுடைய பார்வை எப்போதும் ஒரு இலக்கில் நிற்காமல் எட்டு திசையிலும் சுழன்று, சுழன்று வந்தாலும், எதிரில் இருப்பவன் கண்களைப் பார்த்தே, அவன் மனதில் ஓடும் எண்ணங்களை படித்துவிடும் ஆற்றல் இயற்கையாகவே அவனுக்கு இருந்தது. பெரும்பாலான சமயங்களில் அவனுடைய அபிப்பிராயமும் ஏறக்குறைய சரியானதாகவே இருந்திருக்கிறது. இந்த சீனுவிடம் மட்டும், பிரச்சனை எதுவானாலும், அதுக்கு ஒரு ரெடிமேட் தீர்வு இருக்கே, இதை நினைத்து செல்வா எப்போதும் தன்னுள் வியந்து போவதுண்டு.

"ம்ம்ம் ...அதனாலத்தான் நீ கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தியா?" செல்வா சீனுவின் வாயிலிருந்து வெளிவந்த புகை வளையங்களை வெறித்துக்கொண்டிருந்தான்.

"நம்ம வேலாயுதத்தையே எடுத்துக்கோ.. கோமதி நல்லப் பொண்ணு! ... முகத்தை பாரு ... அமைதியா, களையா ஏத்தி வெச்ச குத்து விளக்கு மாதிரி இருக்கா! ... என்ன கொஞ்சம் ஒல்லியா ஒடிசலா இருக்கா... ஒரு குழந்தை பொறந்தா அவளும் எல்லோரையும் மாதிரி ஊதி போயிடுவா; ஆனா அவன் எவளுக்கு மாரு பெரிசா இருக்கோ அவளைத்தான் கட்டிக்குவேன்னு, ஊரெல்லாம் ஃபிகர் உஷார் பண்றேன்னு திரிஞ்சிக்கிட்டு கிடந்தான்..."

"இது எல்லா ஆம்பளை பசங்களுக்கும் இருக்கற ஒரு ஞாயமான ஆசைதானேடா ..?" செல்வாவின் உதடுகளில் புன்னகை எட்டிப்பார்த்தது.



"மனசுக்கு எப்பவும் திருப்தியே கிடையாதுடா ...?"

"ம்ம்ம் ..."

"நீ ஆஸ்பத்திரியில கெடந்தே பாரு ... இன்சிடெண்டலி, அப்ப அவனும் நாலு நாள் ஜூரத்துல சோறு தண்ணியில்லாம அவன் ரூம்ல கெடந்திருக்கான் ... நானும் உன் கூட ஸ்லைட்லி பிஸியா? அவனுக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ண முடியலை; அவன் வீட்டுக்காரனும் தன் பொண்ணைப் பாக்க ஊருக்குப் போயிருந்திருக்கான் ... ஊர்ல அண்ணன் அண்ணியோட சண்டை - தனியா கிடந்து முதல் ரெண்டு நாள் அல்லாடியிருக்கான்..."

"ம்ம்ம்.."

"விஷயம் தெரிஞ்சு கோமதி அவன் ரூமுக்கு ஓடி ... வாந்தி எடுத்துட்டு விழுந்து கெடந்தவனை டாக்டர் கிட்ட காட்டி, மருந்து வாங்கி குடுத்து ... ரூமெல்லாம் சுத்தமா கழுவி ... அவன் லுங்கியை தோச்சிப்போட்டு, ஆத்தாளுக்கு தெரியாம, தன் வூட்டுலேருந்து, வாய்க்கு ருசியா மொளகு ரசம் வெச்சி, சோறு ஆக்கியாந்து போட்டிருக்கா ..."

"ரியலி ... வெரி நைஸ் ... அவ்வள நல்லப் பொண்ணா அவ...?"

"வாழ்க்கையில தன் பொண்டாட்டியா வரப் போறவளுக்கு, கிண்ணுன்னு உடம்பு முக்கியமா? இல்லே குணம் முக்கியாமான்னு இப்ப நம்ம வேலுக்கு புரிஞ்சு போச்சு...."

"உண்மைதாண்டா நீ சொல்றது! ..."

"இப்ப அவன் என்ன சொல்றான் தெரியுமா? எனக்கு சின்னச் சின்ன ஆரஞ்சுங்களே போதும்! ... சைஸ் டஸ் நாட் மேட்டர்ன்னு டீ ஷர்ட் போட்டுக்கிட்டு, கோமதியை பைக்ல, பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு மேலும் கீழுமா அலையறான்..." சீனு ஹோவென பெருங்குரலில் சிரித்தான்.

"என்னடா மாப்ளே, வேலாயுதம் அதுக்குள்ளே கோமதி சைஸையும் பாத்துட்டானாமா?" செல்வாவும் அவனுடன் சேர்ந்து உற்சாகமாக சிரித்தான்.

"வேலாயுதத்தோட வீட்டுக்காரன்தான் இல்லயே! ஞாயித்து கிழமை மதியானம் சோறு எடுத்துக்கிட்டு வந்தவளை, "நீ ரொம்ப ரொம்ப நல்லவ ... உன்னை நான் புரிஞ்சிக்கவேயில்லே! ... நீ என் கிட்ட நெருங்கி நெருங்கி வந்தப்ப ... நான் ஒரு மடையன் விலகி விலகி போனேன்! என்னை ஏன்னு கேக்க யாருமே இல்லேன்னு மூக்கை உறிஞ்சினானாம்..."

"ம்ம்ம்"

"என்னை மன்னிச்சுடு கோமதீ" ன்னு அவளை கட்டிபுடிச்சிக்கிட்டு ஓன்னு ஒப்பாரி வெச்சானாம். அவளும் அவன் போட்ட சீன்ல மொத்தமா கவுந்துட்டா ... அழாதேடா என் ராஜான்னு ... அவனை கட்டிப்புடிச்சி கன்னத்துல கிஸ் அடிச்சாளாம்..."

"உன் கிட்ட எப்படிடா எல்லாக் கதையையும் ஓப்பனா சொல்லிடறானுங்க?"

"நான்தான் பழகிட்டா உசுரையே குடுப்பேன்ல்லா .. அதான் .." சீனு தன் கண்ணை சிமிட்டினான்.

"அப்புறம்"

"அப்புறம் என்னா ... எல்லாம் வழக்கமான கதைதான் ... சந்தடி சாக்குல, கோமதி போட்டுக்கிட்டிருந்த ரவிக்கையோட அவளைத் தடவிப் பாத்து இருக்கான் நம்ப வெல்லாயுதம்... நான் நெனைச்ச மாதிரி இல்லேடா ... ஆரஞ்சு சைஸ்ல அவளுக்கு இருக்குதுடான்னு ... இப்ப நம்ப பையன் சந்தோஷமா சிரிக்கிறான்.."

"ஹூக்கும் ஹா ... ஹா ...ஹா " என செல்வா சிரித்தான்.

"மொதல்லே கோமதியை, வேலு பாத்த கோணமே வேற ... தேவைப்பட்ட நேரத்துல அந்த பொண்ணு இவன் மேல காமிச்ச பாசத்தைப் பாத்ததும் ... நம்ம வேலாயுதம் அவளை வேற கோணத்துலேருந்து பாக்க ஆரம்பிச்சுட்டான் ...”

“புரியுதுடா ....”

“இப்ப நம்ம வேலு என்ன சொல்றான் தெரியுமா? கோமு; நீ கட்டின புடவையோட வாடி; .. எனக்கு நீ மட்டும்தான் வேணும்... நான் உனக்கு தாலிகட்டறேண்டி செல்லம்... நீ என் கூட இருந்தா அதுவே போதும்ன்னு உருகறான்.."

"மாப்ளே... நிஜமாவே மனுஷங்களைப் புரிஞ்சுக்கறது சுலபமில்லே.. அவங்க எப்ப எந்த மாதிரி பிஹேவ் பண்ணுவாங்கன்னு ப்ரிடிக்ட் பண்றதே கஷ்டம்தாண்டா..!

"உண்மைதான் ... அதான் கோம்ஸ்தான் செட் ஆயிட்டாளே! எதுக்குடா காத்தாலையும், சாயங்காலமும், அவ ஆஃபீஸ் வாசல்லே போய் தேவுடு காக்கறேன்னு நம்ம பசங்க கேட்டானுங்க.."

"ம்ம்ம் .."

"என்னை ரிஜக்ட் பண்ணாளுங்களே, அவளுங்களுக்கு தெரியணுமில்லே, நமக்கு ஃபிகர் செட் ஆயிடுச்சின்னு, அதான் நம்ம பிகரை ஊருக்கெல்லாம் சுத்திக்காட்டறேங்கறான்.." சீனு வெண்மையாக சிரித்தான்.

"சீனு ... உன் கிட்டேயிருந்து கத்துக்க வேண்டியது நெறய இருக்குடா மாப்பிளே ..." செல்வா நெகிழ்ந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டான். 

சங்கர் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். கெட்டுப்போன தூக்கம், வருவேனா என்று சிறு குழந்தையைப் போல் முரண்டியது. பக்கத்தில் வேணி, தொடைகளுக்குள் தன் இரு கைகளையும் புதைத்துக்கொண்டு, உடலை ஒரு குழந்தையைப் போல் குறுக்கி, நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். அணிந்திருந்த நைட்டி முழங்கால் வரை ஏறி பருத்த தொடைகளை வெளிச்சம் போட்டது. சங்கர் தன் தொடைகளுக்கிடையில் புடைத்தான். குளுருதா இவளுக்கு? போர்வையால் மனைவியின் உடலைப் போர்த்தினான்.

டூரிலிருந்து நேற்று இரவு பத்து மணிக்கு சங்கர் திரும்பி வந்தபோதும் வேணி அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். பக்கத்தில் படுத்தவன், மனைவியின் இடுப்பில் ஆசையுடன் கையைப் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்ததும், அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். புருஷனைப் பார்த்ததும், கண்கள் மின்ன, அவனை இறுகக் கட்டி தழுவி, உதட்டில் முத்தமிட்டவள், அடுத்த நிமிடம் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

சங்கருக்கு வயிற்றில் தன் குழந்தையை சுமப்பவளை, தூக்கத்தில் எழுப்பித் தொந்தரவு செய்ய மனசு வரவில்லை. தன் வாரிசு அவள் வயிற்றில் வளர்கிறது என்ற எண்ணத்தால், மகிழ்ச்சி மனதில் திகட்டியது.

லேடி டாக்டர் ஒரு வாரத்துக்கு முன் டெஸ்ட் எடுத்து கண்ஃபார்ம் செய்துவிட்டாள். வேணி குஷியில் சிட்டுக்குருவியாக ஆகாயத்தில் உயர உயரப் பறந்தாள். குட்டி சங்கர் வரப்போறானா, இல்லே குட்டி வேணியா? முதல் இரண்டு நாட்கள் மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது.

விஷயம் தெரிந்தவுடன், மாணிக்கம் தன் மகனின் தோளை தன் கையால் வளைத்து அன்புடன் அணைத்துக்கொண்டார். கண்களால் தன் மன மகிழ்ச்சியை அவனுக்கு உணர்த்தினார். மருமகளின் தலையை பாசத்துடன் வருடி, "நல்லாயிரும்மா.." ஒரே சொல்லில் தன் மனசை அவளுக்கு புரிய வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

மருமகள் கர்ப்பவதி என்று தெரிந்ததும், மாமியார் வசந்தியின் கால் தரையில் நிற்கவில்லை. டேய், சங்கர், வீட்டுல அடுக்கி வெச்சதை எடுத்து கலைச்சுப்போட ஒரு குழந்தை நேரத்துல வரணும். காதுல நல்ல சேதி எப்ப விழும்ன்னு இருந்தேன். குழந்தைங்கறது மேல இருக்கறவனாப் பாத்து குடுக்கறது. அது ஆணாயிருந்தா என்ன; பெண்ணாயிருந்தா என்ன? இனிமே வேணிகிட்ட கூச்சல் போடறது, அவகிட்ட முரட்டுத்தனமா உன் இஷ்டத்துக்கு ஆடற ஆட்டத்தையெல்லாம் வுட்டுடு. வசந்தி அவனுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டாள். வேணி, மாமியாருக்குத் தெரியாமல், தன் கணவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

வேணீ; மனசுல எந்த விஷயமா இருந்தாலும், கோவம், தாபம், அதீதமா விருப்பு வெறுப்புன்னு இல்லாம சந்தோஷமா இரும்மா. இப்போதைக்கு அதுதான் முக்கியம். காலையில எழுந்து உன் மாமானார் கூட தவறாம வாக்கிங் போய் வா. சுறுசுறுப்பா இரு. குனிஞ்சு நிமிர்ந்து எப்பவும் போல வீட்டு வேலைங்களைப் பாரு. ஒழுங்கா வலியெடுத்து சுகப்பிரசவம் ஆவும்.

அழுதாலும், புருஷன் கூட படுத்தவதான், புள்ளையை பெத்துக்கணும்...! எல்லாரையும் மாதிரி வயத்துல கத்தி வெச்சுக்காதே. சுகப்பிரசவம்ன்னா; உன் உடம்பும் பத்து நாள்ல சுத்தமா தெளிஞ்சு போவும். அடுத்ததுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். மாமியார் அடுத்த குழந்தைக்கு இப்போதே வழி சொன்னாள்.

காலையில ஆஃபிசுக்கு போய் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் கொடுத்துட்டு வந்தாச்சுன்னா, முழுசா இந்த வார கடைசி வரைக்கும், நிம்மதியா வீட்டுல இருக்கலாம். இன்னைக்கு பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் ஒரு சின்ன தூக்கம் போட்டுட்டு, வேணி கூட கட்டில்ல கபடி ஆடலாம். சாயந்திரமா வேணியை எங்கேயாவது வெளியில கூட்டிக்கிட்டு போவணும். அப்புறம் அவளுக்கு புடிச்ச ஆனியன் ரவா தோசை வாங்கிக் கொடுக்கணும். அவ கை நெறய மல்லிபப் பூ வாங்கிக் குடுக்கணும். சங்கர் மனதுக்குள் அன்றைய காரியங்களைப் பட்டியலிட்டான்.

பக்கத்திலிருந்த செல்லை எடுத்து சங்கர் மணியைப் பார்த்தான். டிஜிட்டல் 04:07:13 என மின்னியது. இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் உடம்புக்கு விழிப்பு வந்துட்டுதே? ஒரு வாரமாச்சு. உடம்பும், மனசும் வேணி... வேணின்னு... கட்டுக்கு அடங்காமா பேயா அலையுதுங்க; வேணியை எழுப்பலாமா? மனசிருந்தா கட்டிக்கிட்டு கொஞ்சுவா ... சமயத்துல மிரளுவா ... அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவுல வீண் எரிச்சல்தான் மிச்சம். அசந்து தூங்கும் தன் கண்மணியாளை எழுப்ப அவன் மனம் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை.



வெளியில ஹால்லே அப்பா தூங்கிகிட்டு இருக்கார். இவரு தன் ரூமுல படுக்காம இங்க ஏன் சோஃபாவுல முடங்கி கெடக்கறாரு? இந்த நேரத்துல எழுந்து காமன் டாய்லெட்டுக்கு போனா, அவரோட தூக்கமும் கெட்டு போகும். அட்டாச்டு பாத்ரூமை அவன் பொதுவாக உபயோகிப்பதில்லை. வேணியின் ஏக போக ஆளுகையில் அது இருந்தது.

வெஸ்டர்ன் டாய்லெட் அவனுக்கு ஏனோ சுத்தமாக ஒத்து வருவதில்லே. அதை உபயோகிப்பதில் அவனுக்கு ஏதோ ஒரு தயக்கம். டூர்ல போனாலும், இண்டியன் டாய்லெட்டைத்தான் அவன் தேடுவான். கூட வர ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட அவனைச் சிரிச்சு சிரிச்சு கேலி பண்ணுவானுங்க. நான் என்ன பண்ண? மனசுக்கு ஒவ்வலேன்னா, வயிறு கூட சீக்கிரத்துல தளர மாட்டேங்குது. இதைத்தான் பதிலாக அவன் சொல்லுவான்.

ஆபத்துக்கு பாவமில்லே!. ஓசை எழுப்பாமல் அட்டாச்டு பாத்ரூமுக்குள் சென்றவன் கீசரை ஆன் செய்தான். நிதானமாக தன் வயிற்றை தளர்த்திக்கொண்டான். பல்லைத் துலக்கி, சுடு நீரீல் வாயை நன்கு கொப்புளித்து, சோப்பு போட்டு முகம் கழுவி வெளியே வந்தான். அவன் உடலும் மனமும் தந்த புத்துணர்ச்சியுடன் மெல்ல விசிலடித்தவாறு படுக்கையறைக்குள் நுழைந்தான். குப்புறப் படுத்திருந்த திரட்சியான வேணியின் பின்புறம் அவனை வா வா என அழைத்தன.