Thursday 9 May 2013

செல்வா 05


அவனை பார்த்து ஏன்டா? பொண்ணுங்கன்னா கிள்ளு கீரையா, உனக்கு இன்னைக்கு நல்ல பாடம் புகட்டுறேன்னு நினைத்து கொண்டே, அங்கே இசைக்கப்பட்ட பாடலுக்கு நடனம் ஆட தொடங்க, உசித்துக்கு நம்ப முடியவில்லை. ஒரு அழகான பெண் அதுவும் இந்த கல்லூரியின் கனவு கன்னி தன்னுடன் ஆடுகிறாள் என்று. எல்லா இளைஞர்களும் அவனையே பொறாமையாக பார்ப்பது போல் நினைத்தான்.

நடனம் உச்ச கட்டத்தை அடைய, ஏற்கனவே மது அருந்தியதால் இருந்த போதையை விட காயத்ரியின் அருகாமை அதிக போதையை தர, தடுமாற ஆரம்பித்தான். அவள் இடுப்பில் கைவைத்து ஆட இழுக்க காயத்ரிக்கு கோபம் தலைக்கு ஏறியது, அரங்கமே அதிர பளார் என்று அறைந்து, "பொறுக்கி ராஸ்கல், கண்ட எடத்தில கை வைக்கிற" என்று கத்த, அவளது கிளாஸ் நண்பர்களும் , உச்சித் மேல் பொறாமையில் வெந்த அவன் கிளாஸ் நண்பர்களும் அவனை புரட்டி எடுத்தனர். அவமானத்தில் வெந்த உச்சித் அவளை முறைச்சு பார்க்க "போடா" என்று கை அசைத்து அவனை வெளியேற சொன்னாள். அந்த சம்பவத்திற்கு பிறகு உச்சித் கல்லூரிக்கு வருவது குறைந்தது. கடைசி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் எழுத வந்து விட்டு ஊட்டி திரும்பினான். இருந்தாலும் அவன் மனதில் அந்த அவமானம் அழியாத தழும்பாக பதிந்தது. அதற்கு பிறகு காயத்ரியை பற்றி தினமலர் நாளிதழை பார்த்த போது திரும்ப அவன் பட்ட அவமானம் நினைவுக்கு வந்தது. "இதுதான் சரியான சந்தர்ப்பம், விட கூடாது". அவள் அனுப்பிய I miss you என்ற SMS ஐ அவன் save செய்து வைத்திருந்தான். அதை இப்போது காயத்ரி புருஷன் கிட்ட காண்பித்து அவளோட வாழ்கையை பாழ்படுத்தலாம். அந்த நினைப்பே அவனுக்கு இனிமையாக இருந்தது. தினமலர் நாளிதழை படித்து மேலும் விபரங்கள் அறிந்து கொண்டு, தனது காரில் தாஜ் ஹோட்டலை நோக்கி விரைந்தான். காலை உணவை முடித்து விட்டு 10 மணி அளவில் தங்கள் ரூம் திரும்பிய செல்வா, காயத்ரி இருவரும் இன்று எங்கே போகலாம் என்று பிளான் செய்ய, அதற்குள் அவன் ஆபிசில் இருந்து அவன் செகரட்டரி ரமா போன் செய்து "சார் ஒரு வெளிநாட்டு buyer கிட்ட VC இருக்கு, MD அட்டென்ட் பண்ணனும் டைம் ஆயிடிச்சு, அவர் நம்பர் நாட் ரீச்சபிள்ல இருக்கு. நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் manage பண்ணுங்க , அதுக்குள்ள நான் MDயை கனக்ட் பண்ணிடுவேன், உங்கள ஹனிமூன்ல தொந்தரவு செய்ய கஷ்டமா இருக்கு" என்று சொல்ல. "இட்ஸ் ஓகே. VC எப்போ நான் எங்க அட்டென்ட் பண்ணனும்" என்று கேட்க. "சார் நான் ஏற்கனவே ஹோட்டல் ரிசப்சன்ல பேசிட்டேன் அங்கே VC வசதி இருக்கு, நீங்க உடனே போனா நல்லா இருக்கும்" என்று சொல்ல, "சரி நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லி, "காயத்ரி ஒரு அஞ்சுநிமிஷம் வெயிட் பண்ணு ரிசப்சன் கிட்ட ஒரு VC அட்டென்ட் பண்ணிட்டு வந்துடுறேன்", என்று சொல்ல அவன் போனில் பேசியதை வைத்து அவனது அவசரம் புரிய "நோ problem போயிட்டு வாங்க, நான் காத்துரிக்கேன்" என்று சொன்னாள்.கீழே ரிசப்சன் நெருங்கி VC இருக்கும் அறை எங்கே இருக்கிறது? என்று செல்வா விசாரிக்க, அதற்குள் ரிசப்சனில் ஒரு சிவப்பான உயரமான வட இந்திய இளைஞன் "காயத்ரி எங்க stay பண்ணி இருக்காங்க" என்று விசாரிக்க, ரூம் நம்பர் சொல்லப்பட்டவுடன் லிப்டுக்கு விரைந்தான். இவன் ஏன் காயத்ரியை விசாரிக்கிறான் என்று அவனை உற்று கவனித்து, பிறகு VC ரூமிற்குள் நுழைய அதற்குள், அவனுடைய அப்பா போனில் கூப்பிட்டார், "செல்வா நான் VC log in பண்ணிட்டேன். நீ VC அட்டென்ட் பண்ண வேண்டாம்" என்று சொல்லி கட் செய்தார். சரி அப்பா வந்துட்டார், இனி கவலை இல்லை ஆனாலும் சரியாய் பேசமாட்டேன்கிறாரே, " என்று நினைத்தவாறே தனது ரூமிற்கு திரும்பி, கதவை தட்ட போனபோது உள்ளே இருந்து காயத்ரியின் கோப குரல் கேட்டது. "ஏன்டா உனக்கு அறிவு இல்லையா? அப்போதானே நீ அறை வாங்கின, இன்னுமா உனக்கு புத்தி வரல" என்று ஆவேச குரல் எழுப்பினாள். இதற்கு அந்த வட இந்திய இளைஞன் "ஏண்டி நீ எனக்கு அனுப்பின SMS இருக்கு அது போதும், உன் கல்யாண வாழ்க்கைய நாசம் பண்ணுறதுக்கு. நீ எனக்கு வேணும், அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்" என்று எச்சரித்து "உன்ன போன்ல கூப்பிடறேன், இடத்த நான் முடிவு பண்ணுறேன் , அங்கே நம்மளோட முதல் இரவை வச்சிக்கிடலாம்" என்று சொல்லி விட்டு அவன் வரும் ஓசை கேட்டு செல்வா அருகில் இருந்த ஹாலுக்கு விரைந்து செல்ல, அந்த இளைஞன் லிப்டுக்கு அருகில் வந்து காத்திருந்த நேரத்தில், அவனுக்கு தெரியாமல் அவனை செல்போனில் போட்டோ எடுத்தான் செல்வா. உடனே அதை MMS மூலம் செந்தமிழுக்கு அனுப்பி விட்டு அவனை போனில் கூப்பிட்டான் . செந்தமிழ் இரண்டாவது ரிங்கில் போனை எடுக்க, செல்வா அவனிடம், "செந்தமிழ் நான் ஒருத்தனோட போட்டோவை அனுப்பிச்சி இருக்கேன். நீ உடனே பூஜாவை காண்டாக்ட் பண்ணி டீடைல்ஸ் வாங்கு, ரகு கிட்ட பேசி அவனோட ஸ்கூல் மேட் யாரோ ஊட்டில DSP இருக்கார். அவரோட உதவியோட இவனை பத்திய முழு தகவல் வேணும் அப்பிடின்னு சொல்லு" என்று உத்தரவு பிறப்பிக்க. "என்ன மச்சான் என்ன problem? "என்று கேட்டபோது," காயத்ரியோட காலேஜ்ல படிச்சவன் மாதிரி இருக்கான். அவள ப்ளாக் மெயில் பண்ணுறான். அவனை வாழ்நாள் முழுக்க காயத்ரியை நினைக்காத அளவுக்கு எதாவது பண்ணனும், அதால சீக்கிரம் details கண்டு பிடிச்சு என்னை கூப்பிடு" என்று சொல்லு போனை கட் செய்தான். பிறகு அவன் ரூமிற்குள் நுழைய காயத்ரி கண் கலங்கி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை கதவை வெறித்து பார்த்து கொண்டிருந்தது. அவள் நிலை அறிந்த செல்வா, மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க "என்ன காயத்ரி ஒரு மாதிரியா இருக்க. உடம்பு சரியில்லையா" என்று நெற்றியை தொட்டு பார்த்து, "உன்னால முடியலேன்னா நாம நாளைக்கு ஊட்டி போகலாம், எனக்கு ஆட்சேபனை இல்லை" என்று சொல்ல, காயத்ரிக்கு அப்போது இருக்கும் நிலைமையில் வெளியே செல்ல பிடிக்கவில்லை.நடந்ததை செல்வாவிடம் சொல்லி விடலாமா என்று நினைக்க, அவளது மனமோ வேணாம் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். செல்வா கிட்ட உச்சித் பத்தி சொன்னா தன்னை பற்றி சந்தேகபடுவான் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினாள். செல்வாவை பார்க்கும் போது அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோணும், அவள் மனமோ வேண்டாம் என்று சொல்லும். அவள் தவிப்பை உணர்ந்த செல்வா அவளை கட்டி அணைத்து "என் கண்ணு குட்டிக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்க அவள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். செல்வா பதறி தவித்து "என்ன பிரச்சனை?" என்று திரும்ப கேட்க, "இல்லை எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு" என்று சொல்ல, "நீ மொதல்ல அம்மாகிட்ட பேசு, பிறகு அவங்கள மீட் பண்ணுறத பத்தி யோசிக்கலாம்" என்று செல்வா காஞ்சனா நம்பர் டயல் செய்து காயத்ரியிடம் கொடுத்து விட்டு, அவள் தனியாக பேசட்டும் என்று எண்ணி ரூமை விட்டு வெளிய வந்தான். காயத்ரி அம்மாவிடம் உச்சித் வந்து தன்னை மிரட்டி விட்டு போனது, சொல்ல, காஞ்சனாவோ அவளை "நீ யாருக்கும் கவலைபடாதே. நீ செல்வா கிட்ட நேரடியாக பேசு. எந்த பிரச்சனையா இருந்தாலும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம். மாப்பிள்ளையும் நல்ல மாதிரி. அவர் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டார்" என்று சொன்னாள். காயத்ரிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, பிரச்னையை சமாளிக்கலாம் என்று தைர்யம் வந்தது. போன் காலை முடித்து விட்டு செல்வாவை தேட, கதவை திறந்து கொண்டு வெளியில் இருந்து வந்தான். "என்ன இப்போ ஓகே வா. சரியான அம்மா கோண்டுவா இருக்கியே", என்று அவளை சீண்டினான். "இப்போ நான் ஓகே. எங்க வேணா போகலாம்" என்று காயத்ரி சொல்ல, "இப்போ ஊட்டிக்கு கிளம்பலாம் நேரம் ஆகுது" என்று அவளை அவசரமாக கிளப்பினான். சரி செல்வாவிடம் பிறகு தனிமையில் பேசலாம் என்று விட்டு விட்டாள். அன்றைய பொழுது எப்படி கழிந்தது என்றே தெரியவில்லை. இதற்கு இடையில் செல்வாவுக்கு செந்தமிழ் மற்றும் ரகுவிடம் இருந்து call வந்தது. இடை இடையே அட்டென்ட் செய்து காயத்ரியிடம் இருந்து விலகி பேசி வந்தான். காயத்ரி என்னவென்று கேட்க, "ஒண்ணுமில்லை செந்தமிழ் ஒரு போலீஸ் பிரச்சனைல மாட்டிகிட்டான், அதுக்குத் தான் நான் ரகுகிட்ட பேசிகிட்டு இருக்கேன்" என்று சொன்னான். உண்மையில் உச்சித்குமார் விஷயத்தை செந்தமிழ் மற்றும் ரகுவுடன் பேசி கொண்டு இருக்கிறோம் என்பதை அவளுக்கு இப்போ சொல்ல வேண்டாம், பிரச்சனையை முடிச்சிட்டு சொல்லலாம் என்று நினைத்தான்.

அன்று போடனிகல் கார்டன், படகுதுறை, தொட்டபெட்டா சென்று ஹோட்டல் திரும்பினர். மறுநாள் முதுமலை மற்றும் கோத்தகிரி சென்று தாஜ்ஹோட்டல் திரும்பினர். செல்வாவிடம் உச்சித்குமார் பற்றி பேச வேண்டும் என்பதையே மறந்து விட்டாள் காயத்ரி. ஹனிமூன் தொடங்கி ஆறாவது நாள் அன்று மதியம் குன்னூரில் இருந்து கிளம்பி, இரவு கிளம்பிய மேட்டுபாளையம் எக்ஸ்ப்ரஸில் சென்னை திரும்பினர்.வீட்டுக்கு திரும்பிய புது மண தம்பதியினருக்கு செல்வா வீட்டில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. காயத்ரி தன் மாமியார், மாமனார் மற்றும் செல்வா மனம் கோணாமல் நடந்து கொண்டாள். தலைதீபாவளிமூர்த்திகாஞ்சனாவீட்டில்சிறப்பாககொண்டாடினர்செல்வாகாயத்ரிதம்பதியினர்காயத​்ரிதங்கைதிவ்யாஅப்படியேகாயத்ரியின்சிறியவயதுசெராக்ஸ்போலஇருந்தாள். 10 வது பப்ளிக் எக்ஸாம் ஆனதால் அவளுக்கு மாத்ஸ் எக்ஸாம் சம்மந்தபட்ட சந்தேகம் எல்லாம் செல்வாவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். செல்வா 10 வது மற்றும் 12 வது கணக்கு பாடத்தில் 100 மற்றும் 200 மதிப்பெண்கள் எடுத்தவன். அவனை கணக்கு புலி என்று அவன் ஆசிரியர்கள் அளிப்பது வழக்கம். திவ்யா சில சமயம் செல்வா வீட்டுக்கு வந்து சந்தேகம் கேட்பதும், சில நேரம் செல்வா காயத்ரி வீட்டுக்கு வரும்போது திவ்யா சந்தேகம் கேட்டு தீர்ப்பதும் வழக்கம். ஒரு ஞாயிறு அன்று திவ்யா அல்ஜிப்ராவில் சந்தேகம் கேட்க போனில் விளக்கி புரியாததால், செல்வா நேரடியாக செல்ல முடிவு செய்தான், காயத்ரி பார்வதி உடன் கோவிலுக்கு போய்விட்டதால் அவன் தனது பைக்கில் செல்ல வீட்டில் திவ்யா மட்டும் தனியாக இருந்தாள். "திவ்யா அம்மா எங்கே" என்று கேட்க "இன்னும் அரைமணி நேரத்தில கிளினிக்ல இருந்து வருவாங்க" என்று சொல்லி, "மாமா நீங்க சொல்லி குடுங்க" என்றாள். Algebra விளக்கி முடித்தவுடன், "மாமா நாளைக்கு நாங்க எல்லாம் மகாபலிபுரம் பிக்னிக் போறோம்". "எப்படி போறீங்க" என்று கேட்க "பைக்ல தான்". " யாரு பைக்ல". "என்னோட கிளாஸ் பசங்களோட தான்". "சரி எப்போ போயிட்டு திரும்ப வரிங்க" என்று கேட்க, "மாலைல போயிட்டு காலைல வர போறம்", என்று சொல்ல, "என்ன புரியாம பேசிறியா? வீட்டுக்கு தெரியுமா" என்று கேட்க, "நானும் என்னோட சேர்த்து எட்டு பொண்ணுங்க, பசங்க சேர்ந்து போறோம், வீட்டில யாருக்கும் தெரியாது, இது ஒரு த்ரில் தான் இல்ல" என்று கேட்க, செல்வாவுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறியது." திவ்யா என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறியா? நீ ஒரு பொண்ணு, ரிஸ்க் எடுத்தா பாதிக்கபட போறது நீ மட்டும் இல்ல, நம்ப குடும்பமும் தான். நீ போக கூடாது. நான் உன்னோட அம்மாகிட்ட இதை பத்தி சொல்ல போறேன்", "நீங்க என்ன சொல்றது, நான் உங்கள பத்தி, நீங்க என்ன மகாபலிபுரம் கூப்பிட்டதா சொல்லுவேன்".இதை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்த காஞ்சனா "என்னடி, மாப்பிள்ளை கிட்ட மரியாதை இல்லாம பேசுற. உன் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க" என்று சொல்லி பளார் என்று அறைந்தார். "அத்தை வளர்ந்த பெண்ணை அடிக்காதிங்க. அவள் புரிஞ்சு பேசுற மாதிரி தெரியல. நீங்க கொஞ்சம் அவளோட உக்கார்ந்து பேசுங்க. என்னை பொறுத்த வரையில் அவளோட சேர்க்கை சரியில்லை. அவளோட நண்பர்கள் கூட்டத்தை கவனிங்க. முடிஞ்சா ஸ்கூல் மாத்துங்க இப்போதைக்கு இதுதான் solution, சாரி திவ்யா" என்று சொல்லி விட்டு, கிளம்பினான். வரும் வழியில் அவனுக்கு பலத்த சிந்தனை "இந்த மீடியாவின் தாக்கத்தினால் எல்லாரும் பாதிக்கபட்டு இருக்காங்க. சிலர் அதை தவறான பாதைக்கு போக ஒரு கருவியா உபயோகிக்கிறாங்க. நல்ல வேளை திவ்யாவை மகாபலிபுரம் போகாம காப்பாத்தியாச்சு" என்ற நிம்மதியுடன் வீட்டுக்கு திரும்பினான். செல்வா காயத்ரியின் தாம்பத்ய வாழ்வு தடை இல்லாமல் சென்றது. செல்வா வின் மற்றவர்களை புண் படுத்தாத நல்ல எண்ணம், அவள் மனதை புரிந்த தன்மை, இவை அவர்கள் இருவரையும் மனம் ஒத்த தம்பதியினர் என்று சுற்றமும் நட்பும் வாழ்த்தியது. காயத்ரிக்கு செல்வா ஆபீஸ் ல இருந்து வர சிறிது நேரம் தாமதம் ஆனாலும் மனம் பர பரக்க ஆரம்பித்து விடும். இருவருக்கும் இடையில் என்ன ஊடல் வந்தாலும் கடைசியில் செல்வா தான் விட்டு கொடுப்பான். கேட்டால் ஒருவர் பொறை, இருவர் நட்பு என்று சொல்லி சிரிப்பான். காயத்ரிக்கு அவனை பார்த்தால் பெருமையாக இருக்கும், சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். ஜம்புலிங்கமும் அவர் மனைவி பார்வதியும் சிங்கப்பூர் மலேசியா டூர் நவம்பர் கடைசி வாரத்தில் சென்றனர். வரும் டிசம்பர் 6 காயத்ரி பிறந்த நாள். என்ன பரிசு கொடுக்கலாம் என்று சிந்தனை செய்தான். அவளுக்கு பிடித்த 1000 பாடல்களை புதிய ஆப்பிள் ஐ போடில் ஏற்றி, பிறகு அவளுக்கு பிடித்த புத்தகங்களையும் பரிசாக கொடுக்க முடிவு செய்தான். இதை அவளுக்கு சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்தால் அவள் எப்படி சந்தோஷபடுவாள் என்று நினைத்து பூரிப்படைந்தான். அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 7 தனது பிறந்த நாள் வருவதும் அவனுக்கு மிக சந்தோசமாக இருந்தது. காயத்ரி பிறந்த நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர் 5 மாலை முதல் செல்வா-க்கு ஆபீசில் இருப்பு கொள்ளவில்லை. எப்போது ஆறு மணி ஆகும் என்று காத்து கொண்டிருந்தான். அதே நேரத்தில் வீட்டில் காயத்ரியின் செல்போனுக்கு அந்த கால் வந்தது. இதென்ன தெரியாத நம்பரா இருக்கே, என்று தயக்கத்தோட தனது செல்போனை எடுத்தாள். அழைத்தது உச்சித்குமார், "என்னடி, என்ன முடிவு பண்ணி இருக்க, நான் இப்போ சென்னைல தான் இருக்கேன், நாளைக்கு உன் பிறந்த நாள் அப்பிடின்னு எனக்கு முன்னாலேயே தெரியும். அதே நாள்தான் நீ எனக்கு விருந்தாகுற நாள். சீக்கிரம் முடிவு பண்ணு. என்ன தான் நல்ல புருஷனா இருந்தாலும் தன் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னால இன்னொருத்தனோட பழகுனவ-ன்னு தெரிஞ்சா சந்தேகபடாம இருக்க மாட்டான். அதுனால நம்ம விஷயத்த உன் புருஷன் கிட்டே நான் சொல்றதா இல்ல வேணாமாங்கிறது உன் சம்மதத்தை பொறுத்துதான் இருக்கு. நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு போன் பண்ணி எங்க வரணும்னு சொல்லுறேன் ரெடியா இரு" என்று சொல்லி போனை கட் செய்தான். கலங்கி போன காயத்ரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, குழப்பம் மனதை சூழ செல்வா-க்கு போன் செய்வதா இல்லை வேண்டாமா என்று யோசித்தாள்.செல்வா ஆபீசில் ஆறுமணி ஆனவுடன், உடனே கிளம்பி வடபழனியில் உள்ள ஆடியோ கடையில் ஐ போடில் பாடல்களை அப்டேட் செய்து, தி நகர் வந்து 22 புத்தகங்களை பல பதிப்பகங்களில் விசாரித்து வாங்கி விட்டு வந்தான். அனைத்து புத்தகங்களும் காயத்ரிக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதியது. வீட்டில் நுழைந்த போது இரவு எட்டுமணி. அவன் செல்போனை எடுத்து பார்க்க காயத்ரியிடம் இருந்து இரண்டு missed கால் வந்து இருந்தது. சாரி கவனிக்காம விட்டோமே என்று நினைத்தான். சரி இப்போ வீட்டுக்கு வந்தாச்சு, காயத்ரியை நேரடியாக பார்த்து பேசி கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவன் வீட்டுக்கு திரும்பும் போதெல்லாம் அவனுக்காக புதிய உடை, மல்லிகை பூ மற்றும் அலங்காரத்துடன் காத்திருக்கும் அவள், அன்று ஏனோ கவலையாக தெரிந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு காயத்ரியை நெருங்கி அழைக்க, அவளிடம் இருந்து பதில் இல்லை. தீவிர சிந்தனை வசப்பட்ட நிலையில் இருந்தாள். அவள் தோளை தட்டி "ஹாய்" என்றான். சிந்தனையில் இருந்து விடுபட்ட காயத்ரி "உங்கள தான் தேடிகிட்டு இருக்கேன், உங்க போன்ல நான் ட்ரை செய்து பதில் எதுவும் வராததால என்ன ஆச்சோன்னு கவலைபட்டு இருந்தேன்" என்றாள். "சொல்லுடா என்ன பிரச்சனை?" என்றான். அவளுக்கு உச்சித்குமார் விஷயத்தை அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை சரியாக புரிந்து கொள்ளாமல் என்னை பத்தி சந்தேகபட்டால் என்ன செய்வது. சரி முதல்ல இத வேற மாதிரி ஆரம்பிக்கலாம் என்று, "ஒண்ணுமில்லை செல்வா என்னோட friend பாரதி அவளுக்கு கல்யாணம் ஆகி கொஞ்சம் நாள் தான் ஆகுது", என்று ஆரம்பித்து உச்சித் குமார் பற்றிய விபரங்களை அப்படியே பெயர் மாத்தி செல்வாவிடம் சொல்லி, "இப்போ அவள ப்ளாக்மெயில் பண்ணுறான். என்ன பண்ணுறதுன்னு கேக்குறா". செல்வாவுக்கு எல்லாம் புரிந்தது. ஏற்கனவே செந்தமிழ் இந்த விபரங்களை பூஜாவிடம் இருந்து அவனுக்கு தெரிவித்து இருந்தான். கொஞ்சம் விளையாடலாம் என்று எண்ணி, "இது அவள் பண்ணுன தப்பு, நம்பிக்கை துரோகம். அதுக்கு ஏத்த தண்டனைய அவ அனுபவிக்கணும். அவ புருஷன் அவள முதல்ல டைவர்ஸ் பண்ணிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும். அவ செஞ்ச தவற உணர்ந்து அவதிபடனும்" என்று சொல்ல, காயத்ரிக்கு முகம் மாறியது. "அய்யோ இப்போ சொன்னால் நம்மளை பத்தியும் இப்படித் தானே சொல்லுவார்", என்று மனம் நொந்து போனாள். செல்வாவுக்கு ஞாபகம் வந்தது. என்ன இது ஒரு மாதம் ஆகியும் அந்த உச்சித்குமார் பற்றி தகவல் இல்லையே என்று நினைத்து விட்டு, சரி காலைல கூப்பிட்டு கேக்கலாம் என்று முடிவு செய்து காயத்ரியை பின் தொடர்ந்தான். இரவு உணவை முடித்து விட்டு இருவரும் படுக்கை அறை திரும்பினர், காயத்ரிக்கு கடந்த இரண்டு நாளாக உடல்வலி. இன்று இந்த பிரச்னையும் சேர ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். "என்ன மேடம் என்ன தீவிர யோசனை" என்று கிண்டல் செய்தான். அவள் பிறந்த நாள் காலை 8 மணி அதனால் அவளுக்கு கிப்ட் கொடுக்க வேண்டியதை காரில் ஒளித்து வைத்து விட்டு வந்து இருந்தான். இருவரும் படுக்கையில் படுத்தபின் கொஞ்சநேரம் பேசிவிட்டு அவன் உறங்கிவிட, காயத்ரிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து கடைசியில் உறங்கிய போது காலை 2 மணி.6 மணிக்கு எழுந்த செல்வா செய்த முதல் காரியம் புத்தகங்களையும் ஐ போடையும் கட்டிலுக்கு அடியில் வைத்தது தான். பிறகு ஹாலை பலூன் மற்றும் கலர் காகிதங்களால் அலங்கரித்தான். 7 மணிக்கு அவன் முதல் நாள் பேக்கரியில் ஆர்டர் செய்து இருந்த பிறந்த நாள் கேக் வந்தது. அதை அப்படியே fridge ல் வைத்தான். எல்லாம் முடித்து விட்டு அவள் அருகில் உக்கார்ந்து 8 மணி எப்போது ஆகும் என்று வெயிட் செய்தான். சரியாக எட்டு மணி ஆக, அவள் காதுக்கு அருகில் சென்று my sweety , my beloved wife என்று கொஞ்சி எழுப்ப கண் திறந்த காயத்ரியை ஹாப்பி பர்த்டே சொல்லி வாழ்த்து சொன்னான். காயத்ரிக்கு அவள் பிறந்த நாளே மறந்து போனது. வாழ்த்து சொன்ன செல்வாவை கட்டி அணைத்து நன்றி சொன்னாள், குளித்து விட்டு வந்தவுடன், முதல் வேலையாக கேக் வெட்டி, பலூன் உடைத்து, காயத்ரி செல்வாவுடன் கொண்டாடினாள். "உனக்கு ரெண்டு கிப்ட் இருக்கு" என்று சொன்ன உடன்"எங்கே" என்று அவள் ஆவலுடன் கேட்க "வெயிட் பண்ணு கட்டிலுக்கு அடியில இருக்கு. நான் எடுத்து வந்து தரேன்" என்று சொன்னான். அதற்குள் அவள் செல்போன் அலற யாராக இருக்கும், ஒரு வேளை அவனாக இருக்குமோ என்று நடுங்கியபடி எடுத்தாள். நல்ல வேளை அது அவளோட வீட்டு தொலைபேசி எண். போனை எடுத்தவுடன் அவள் அம்மா "ஹாப்பி பர்த்டே" சொல்லி விட்டு "நான் அங்க வரேன்" என்று சொல்லி, "உன் தங்கை வாழ்த்து சொல்லணுமாம்" என்று சொல்லி விட்டு காஞ்சனா மூர்த்தியை அழைக்க விரைந்தாள். அக்காவிடம் வாழ்த்து சொல்லிய திவ்யாவிடம்," எப்போ நீ வீட்டுக்கு வர" என்று கேட்க, "இல்லக்கா, நான் உன்ன பார்க்க அங்க வர முடியாது. மாமா எங்கிட்ட ஒரு மாதிரி பேசுறாரு" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை "என்னடி விபரமாக சொல்லு" என்று கேட்க, "இல்லக்கா அவர் என்னை மகாபலிபுரம் போகலாம், ஜாலியா திரில்லா இருக்கும், உன் அக்காவுக்கு தெரிய வேணாம். ஏன் மாமா இப்படி தப்பா பேசுறிங்க நான் அக்கா கிட்ட சொல்லுருவேன்னு சொன்னப்போ, நீ சொன்னியினா அவ உன்னை நம்ப மாட்டா. அப்படி நம்பினாலும் எனக்கு கவலை இல்லை, மிஞ்சி போனா அவ என்ன பண்ணுவா, டைவர்ஸ் தான, எனக்கு கவலை இல்லை அப்பிடின்னு சொல்லிட்டாரு".

"ஏண்டி அம்மா கிட்ட சொல்லலையா?" என்று கோபமாக கேட்க, "உனக்கு தான் அம்மாவை பத்தி தெரியுமே, மாப்பிளை சொன்னதுதான் வேதம், அதுனால சொல்லலை" "சரி அழாத. நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னாள்.அதற்குள் படுக்கை அறையில் இருந்து சந்தோசமாக வந்த செல்வா, "நீ அங்க வந்தா நான் ரெண்டு கிப்டையும் காண்பிப்பேன். உனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று சொல்ல, "அது மொதல்ல இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. இந்த வாரம் நீங்க திவ்யாவுக்கு ஏன் கணக்கு பாடம் சொல்லி தர போகலை?" " இல்ல அவளே படிச்சுக்கிறேன் அப்படின்னு சொன்னா" "சரி போன வாரம் சண்டே அன்னிக்கு போனிங்களே என்ன நடந்துச்சு?" எரிச்சல் ஆனான் செல்வா, "ஒண்ணும் நடக்கலை. அல்ஜிப்ரா சொல்லி தந்திட்டு வந்தேன்." "அப்புறம் அங்கே என்ன நடந்தது?" " ஒன்னும் நடக்கல". "பொய் சொல்லாதிங்க. கணக்கு சொல்றேன் சொல்லிட்டு என் தங்கையை கணக்கு பண்ண பாத்திங்களா?" " ஏய் என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத. அப்புறம் பின்னால வருத்தபடுவ". "எனக்கு அதை பத்தி கவலை இல்லை. செல்வா, அவளோ 10 வது படிக்கிற சின்ன பொண்ணு, இவ்வளவு கேவலமா நடந்துகிரிங்களே வெக்கமா இல்லையா? அவ உங்கள மாமா அன்போட கூப்பிட நீங்க மாமா வேலைய காமிச்சிங்களா?" ஆவேசத்துடன் கத்தினாள். ஒரு புறம் உச்சித் குமாரின் torture இன்னொரு புறம் நல்லவன் போல் நடிக்கும் கணவன். யாரை நம்புவது? செல்வாக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளின் தோளை உலுக்கினான். "காயத்ரி நான் அப்படிபட்ட ஆள் இல்ல. அதுவும் திவ்யா மாதிரி சின்ன பொண்ணுங்க கிட்ட இப்படி நடக்கும் அளவுக்கு கேவலமானவன் இல்லை". "அப்படின்னா அவள் பொய் சொல் சொல்றான்னு சொல்லுறிங்களா? அவள் என் தங்கை பொய் சொல்ல மாட்டா? அதுனால அவளுக்கு என்ன லாபம்?" என்று சீறல் உடன் எதிர் கேள்வி எழுப்பினாள். "உங்களுக்கு என்ன செக்ஸ் மட்டும் வேணும்னா எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க? ஏன் நான் அழகா இல்லையா? இன்னும் உயிரோட தான இருக்கேன்? ஏன் இப்படி அலையிறிங்க" என்று கதற, பொறுமை இழந்த செல்வா தன் வாழ்கையில் இரண்டாவது முறையாக அவளை கைநீட்டி அறைந்தான். "ச்சே, என்ன பத்தி கேவலமா பேசிட்ட. இப்போ உனக்கு புரியாது. ஆனா நீ உண்மையை உணர்ந்து தேடும்போது நான் அங்க இருக்க மாட்டேன்" திரும்பி வேக வேகமாக வெளிய வந்து தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பியவனுக்கு தன்னை அறியாமல் கண்களில் இருந்து நீர் கொட்டியது. "எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் எதுவும் தப்பா நடந்துக்கலையே? என்னை ஒரு பொறுக்கியா, காமந்தககாரனா நினைசுட்டாள். . ஆனா அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போய்டுச்சு. அவளை என்னால மறக்க முடியுமான்னு தெரியலை. இனிமே மனசு ஒட்டுமான்னு தெரியலை"முதல்ல அத்தை கிட்ட பேசலாம் என்று எண்ணி செல்போனை தேட, அப்போது தான் காயத்ரியுடன் கோபப்பட்டு cell phone ஐ வீட்டிலே விட்டு விட்டு வந்தது ஞாபகம் வந்தது. சரி இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்து அருகில் உள்ள PCO சென்று காஞ்சனாவின் செல்போனுக்கு டயல் செய்தான். போனை எடுத்த காஞ்சனா "யாரது" என்று கேட்க, கொஞ்சம் இடைவெளி விட்டு "அத்தை நாந்தான்" " என்ன மாப்பிளை உங்க செல்போன் என்ன ஆச்சு". "கொஞ்சம் வெளியில அவசர வேலையா வந்ததனால வீட்டில மறந்து வச்சிட்டேன்". "என்ன? சொல்லுங்க மாப்பிளை .நான் அங்கதான் வந்திகிட்டு இருக்கேன்" என்று சொல்ல "ஒண்ணுமில்ல, நீங்க வரும் போது நான் கல்யாணத்துக்கு முன்னால காயத்ரிக்குன்னு கிப்ட் ஒன்னு கொடுதுரிந்தேன். அத காயத்ரி கிட்ட இப்போ கொடுத்துருங்க" என்று சொல்ல, "ஏன் மாப்பிள்ளை உங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, இப்போ நீங்க எங்க இருக்கீங்க" என்று கேட்க, "ஒன்னும் இல்லை, அத்தை மழைல ( www.tamilsexstoriespdf.com ) நனைஞ்சுட்டேன். வேற ஒண்ணும் இல்லை. urgent வேலையா வெளியில இருக்கேன். நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை வைத்தான். "என்ன ஆச்சு மாப்பிளைக்கு. ஒரு மாதிரியா பேசுறாரு" என்று நினைத்து கொண்டே, திவ்யாவை கூட வர சொல்லி அழைத்தாள். "இல்ல அம்மா நான் வரலை என்று சொன்னவளை, ஏண்டி அக்காவை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லையா. ரொம்ப பிகு பண்ணிக்கிற," என்று கேக்க, இனியும் மறுத்தால் சந்தேகம் வரும் என்று திவ்யா காஞ்சனாவுடன் கிளம்பினாள். வீட்டில் இருந்த காயத்ரிக்கு உலகமே ஸ்தம்பித்த மாதிரி இருந்தது. தான் செல்வாவை சொன்னது சரியா தவறா என்று தெரியவில்லை. செல்வா அறைந்தது கன்னத்தில் எரிந்தது. எங்கே போக போகிறான். இங்கே திரும்ப வர தானே வேண்டும் என்று இறுமாப்புடன் நினைத்தாள். அதற்குள் செல்வாவின் செல்போன் அலற தொடங்கியது. அதை கையில் எடுத்து, ஓ சார் மறந்து வச்சு போய்ட்டார் போல இருக்கு என்று கிண்டலுடன் நினைத்தபடி அழைப்பது யார் என்று கவனித்தாள். அதில் செந்தமிழ் போட்டோ வர "ஹாய் செந்தமிழ் அண்ணா கூப்பிடுறார். என்ன விஷயம்னு கேட்கலாம்?" என்று முடிவு செய்து போனை எடுத்தாள். "டேய் செல்வா உச்சித்குமாரை போலிஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்க, அவன் சீக்கிரத்தில வெளிய வர முடியாது. நான் இங்க போலீஸ் கமிசனர் ஆபீஸ் வெளியில இருந்து பேசுறேன், பூஜாவும் என் கூட இருக்கா" என்று சொல்ல, அந்த செய்தியை கேட்டு சிலை போல் நின்றாள் காயத்ரி.அண்ணன் நாந்தான் காயத்ரி. நீங்க சொன்ன விஷயம்... "என்று ஆரம்பிக்க "யாரு காயத்ரியா, நாங்க இப்பவே வீட்டுக்கு வந்திகிட்டு இருக்கோம். உன் பிறந்த நாள் வர்றதுக்குள்ள இத முடிக்கணும்னு நானும் செல்வாவும் முயற்சி பண்ணி இப்போ தான் ஒரு வழியா முடிஞ்சது. மத்தத நேர்ல சொல்றோம்" என்று போனை வைத்தான். காயத்ரிக்கு தலை சுற்றியது. "எப்படி இந்த விஷயம் செல்வாவுக்கு தெரிந்தது. நான் ஒன்னும் சொல்லாம எப்படி? என்னென்னமோ நடந்து இருக்கு. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே. அதுவும் பூஜாவும் ஒன்னும் சொல்லவில்லையே. ஆமா நாம்தான் அவகிட்ட பேசி ரெண்டு மாசம் இருக்குமே" என்று பதட்டத்துடன் காத்திருந்தாள். அதற்குள் காஞ்சனா திவ்யா இருவரும் வீட்டுக்குள் நுழைய. காஞ்சனா "மாப்பிளை எங்கடி" என்று கேட்க. "ஒன்னும் இல்லம்மா ஒரு சண்டை அதுதான். என்ன சண்டை. உன் பிறந்தநாள் அதுவுமா? அவர் சண்ட போடுற ஆள் இல்லையே?" என்று விசாரிக்க, "அதும்மா வந்து" என்று திவ்யாவை பார்த்தபடி தயங்க திவ்யா அவளிடம் சைகையில் ஏதோ சொல்ல , "என்ன சொல்லுடி, என்ன, திவ்யா மாப்பிள்ளையை பத்தி எதாவது சொன்னாளா?" என்று கேட்க "ஆமாம்மா, ஏதோ அவர் தப்பா" என்று ஆரம்பிக்க. "ஏண்டி அவ சொன்னா உனக்கு புத்தி எங்க போச்சு. உன் புருசன நீ புரிஞ்சுகிட்டு தான குடும்பம் நடத்துற? இல்ல நீங்க ரெண்டு பேரும் ராத்திரி படுக்க மட்டும் பெட் ரூம் வரிங்களா" என்று கத்த ஆரம்பிக்க, காயத்ரி "என்னம்மா இது அருவெறுப்பான கேள்வி கேக்குற?" "அவ என்ன சொன்னா அத சொல்லு", "செல்வா மகாபலிபுரம் கூப்பிட்டார்னு" " ஓஹோ, மாப்பிள்ளை ஒன்னும் சொல்லலையா" "இல்லம்மா நாந்தான் திவ்யா பொய் சொல்ல மாட்டான்னு சண்டை போட்டேன், அவரு கோவிச்சுகிட்டு போயிட்டாரு". "போடி கூ முட்டை. அறிவு இல்ல உனக்கு. என்ன நடந்தது, எனக்கு தெரியும். இவதான் அப்பிடி கேட்டுருக்கா, மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லி அட்வைஸ் பண்ணுனார். நல்ல வேளை நான் அங்க வந்ததால எனக்கு எல்லாம் தெரிஞ்சுது".

செல்வா 04


செல்வாவுக்கு திடீர் என்று விழிப்பு வந்தது. பாத்ரூம் போக வேண்டும் போல இருந்ததால் எழுந்தான். மெல்லிய இரவு விளக்கு வெளிச்சத்தில் பாத்ரூம் போய் விட்டு திரும்ப வந்து படுக்கலாம் என்று நினைத்து, அதற்கு முன்னால் காயத்ரி எப்படி தூங்குகிறாள் என்று அறிய ஆவல் கொண்டான். கட்டிலில் அவளை காணவில்லை, சுற்றுமுற்றும் தேடிய அவன் கண்கள் தரையில் நிலைத்து நின்றது. செல்வாவின் தலையணைக்கு அருகில் தரையில் ஒருகளித்து உறங்கி கொண்டிருந்தாள் காயத்ரி. போர்வை எதுவும் இல்லாததால் அவள் உடல் குளிரில் நடுங்கி கொண்டிருந்தது. தலையில் கைவைத்து கொண்டு " என்ன பெண் இவள் என் அருகில் உட்கார்ந்தவாரே தூங்கிவிட்டால் போல, சரி முதலில் கட்டிலில் உள்ள தலையணை மற்றும் போர்வையை எடுத்து போர்த்தி விடலாம் என்று எண்ணி அவளை முழுக்க போர்வை கொண்டு போத்தி விட்டு, அருகிலே அவனும் படுத்தான். அவள் முகம் வட்டமான நிலவு போல் இரவுவிளக்கில் பளபளக்க, அவளை பார்த்து கொண்டே மனநிம்மதியுடன் உறங்கினான்.

காலை 5 . 30 மணி அளவில் எழுந்து தனது வழக்கமான யோகா, மற்றும் உடற் பயிற்சிகளை முடித்தான். மணி இப்போது 6 . 30 . கதவை தட்டும் ஓசை. அவனுக்கு புரிந்தது. காயத்ரியை எழுப்பினான். அரக்கபரக்க எழுந்தவளிடம், "இந்த பாரு உங்க அம்மா தான் கதவை தட்டுறாங்க, கொஞ்சம் உன்னோட புடவையை கலைத்து, மற்ற உடைகளையும் கலைத்து நமக்கு முதல் இரவு நடந்த மாதிரி நடந்து கொள். இங்கே நடந்தது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம், வருத்தபடுவார்கள். தயவுசெய்து நான் சொன்னபடி செய்". தலையை அசைத்து அவன் சொன்னது போல், உடைகளில் சில மாற்றங்களை செய்தபின் கதவை திறந்தாள் காயத்ரி. அதற்குள் கட்டிலுக்கு தலையணை மற்றும் போர்வையை மாற்றி, கட்டிலில் படுத்து உறங்குவது போல் நடித்தான் செல்வா. காஞ்சனா வாசலில் நின்று காயத்ரியை வெளியே அழைத்து "என்னடி எல்லாம் ஒழுங்காக நடந்ததா?" என்று கேட்க, ஆமாம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, வெளியில் இருந்த பாத்ரூமில் குளிக்க சென்று விட்டாள். செல்வாவும் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து உள்ளே இருந்த பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வர, அவனுக்கு காபி தயாராக இருந்தது. குடித்து முடித்த போது காயத்ரி ரூமுக்குள் நுழைந்து அவனுக்கு தேவையான உடைகளை வைத்துவிட்டு வெளியேற, புதிய உடைகளை மாற்றி கொண்டு வெளியே வந்தான் செல்வா. வாசலில் அவனுக்காக காத்து கொண்டிருந்த காயத்ரி, "கீழே வாங்க போகலாம், சீக்கிரம் சாப்பிடுங்க, நம்ம (உங்க) வீட்டுக்கு போக வேணும்னு அம்மா சொன்னாங்க". கீழே இறங்கி வந்தபோது அவனுக்கு முன்னே அவன் மாமனார், மாமியார், காயத்ரி தங்கை திவ்யா அனைவரும் காத்து கொண்டிருந்தனர். மூர்த்தி "என்ன மாப்பிளை சீக்கிரம் சாப்பிட்டு காயத்ரியோட நீங்க கிளம்புங்க, நாங்களும் உங்களோட வரலாம்னு பாக்கிறோம். உங்களுக்கு சம்மதம் தானே?" "என்ன மாமா நீங்க இதுக்கெல்லாம் என்கிட்ட எதுக்கு கேக்கணும், வாங்க போகலாம்" என்று சொல்லி விட்டு, குட்மார்னிங் அத்தை, திவ்யா என்று சொல்லிவிட்டு, காயத்ரியுடன் காலை உணவுக்கு என்று உட்கார்ந்தான்.அனைவரும் ஜம்புலிங்கம் வீட்டுக்கு செல்ல, அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. செல்வா காயத்ரியை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். செல்வா, மூர்த்தி, காஞ்சனா சோபாவில் உட்கார, காயத்ரிசெல்வாபக்கத்தில்நின்றுகொண்டிருந்தாள். பார்வதி அவளையும் திவ்யாவையும் உட்கார சொல்ல, பரவா இல்லை, அத்தை என்று சொல்லி நின்று கொண்டிருந்தாள் காயத்ரி. பார்வதி சமையல் அறைக்கு செல்ல காயத்ரியும் அவள் பின்னாலே சென்று காபிபோட உதவி செய்தாள். பார்வதிக்கு தன் மருமகள் ரொம்ப அழகு என்பதில் பெருமை, இப்போதோ தனக்கு உதவி செய்வதில் ரொம்ப சந்தோஷம். கணவனுக்கு அருகில் உட்கார தயங்குகிறாள், என்னதான் படித்து இருந்தாலும், பண்பாடு மறக்காத பெண்ணாக இருக்கிறாள். இப்படி ஒரு மருமகள் கிடைக்க தவம் செய்து இருக்க வேண்டும் என்று ஆச்சர்யபட்டாள் பார்வதி. . காபி tray யை எடுத்து சென்று அனைவருக்கும் காபி கொடுத்தாள் காயத்ரி. பருத்தி புடைவையில் அழகு தேவதையாக மிளிர்ந்த காயத்ரியை காபியுடன் சேர்ந்து, கண்களால் பருகினான் செல்வா. "டேய் செல்வா கவிதா இப்போ தான் போன் பண்ணினா, உன் செல்போன் தொடர்பு கிடைக்காததால என்னை கூப்பிட்டா, உன்னோட தேன்நிலவுக்கு ஊட்டில புக் பண்ணுதன கன்சல் பண்ணி குனூர் தாஜ் ஹோட்டல்ல ஒருவாரம் புக் பண்ணி இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும், சேரன்ல டிக்கெட் புக் பண்ணி உன்னோட மெயில் ஐடிக்கு அனுப்புச்சு இருக்காளாம். காயத்ரியை அவளோட போன்ல கூப்பிட சொன்னா." செல்வா "முதல் இரவே இன்னும் ( www.tamilsexstoriespdf.com ) முடிய காணோம், இந்த நேரத்தில அது ஒன்னுதான் குறைச்சல்," என்று முனகி விட்டு, தனக்காக honey moon trip புக் செய்து கொடுத்திருக்கும் நண்பர்களுக்காக, அவர்களின் அன்புக்காக போகலாம் என்று முடிவு செய்து, காயத்ரியை பார்க்க அவள் சரி என்று கண்களால் சொன்னாள். காயத்ரி கவிதா உடன் பேசி எல்லா விவரங்களையும் வாங்கி கொண்டாள். இன்று இரவே கோவை கிளம்ப வேண்டும் என்றும். நாளை ஒரு surprise கிபிட் காத்திரிப்பதாகவும் கவிதா சொன்னாள். இந்த விஷயம் செல்வாவுக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொள்ள, காயத்ரியும் சரி என்று சொல்லி போனை துண்டித்தாள். இருவரும் ஒரு வாரத்துக்கு தேவையான உடைகளை பேக் செய்து கொண்டு இரவு சேரனில் kovai கிளம்பினர். காலை கோவை ரயில் நிலையத்தில் AC கோச்சை விட்டு இறங்கிய இருவரையும், கவிதா மற்றும் ரேகா பூங்கொத்துடன் வரவேற்க, கோவையின் சில்லென்ற காற்று அனைவரையும் வருடியது. தூக்க கலக்கத்தில் இருந்து அப்போது தான் விடுபட்டு இருந்த காயத்ரி, கவிதாவை, அக்கா என்று தாவி அணைத்து கொண்டாள். "பாசமலர்களே கிளம்புவோமா" என்று இருவரையும் கிண்டல் செய்த செல்வாவை தோளில் கவிதா கிள்ள, "ஐயோ" என்று கத்தி கொண்டு, "சண்ட வேணாம் சமாதானமா போய்டலாம் என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டு அனைவரும் கவிதா கொண்டு வந்திருந்த இன்னோவாவில் ஏறினர். அவர்கள் இருவரையும் ரெசிடென்சி ஹோட்டலில் விட்டுவிட்டு 11 மணிக்கு திரும்ப வருவதாக சொல்லி விட்டு கவிதா மற்றும் ரேகா கிளம்பினர்.11 மணிக்கு இருவரும் தயாராகி காத்துகொண்டிருக்க கவிதா மட்டும் இன்னோவாவில் வந்து இருவரையும் பிக் அப் செய்து, ராஜ வீதியில் இருந்த பதிவாளர் அலுவலகத்தின் வாசலில் இறக்கி விட்டு காரை பார்க் செய்து விட்டு வருதாக கவிதா விடை பெற்றாள். எதற்கு இங்கே இறக்கி விட்டால் என்று சிந்தனை செய்து கொண்டே இருவரும் இறங்கி அலுவலக வளாகத்தில் நுழைய அங்கே செந்தமிழ், ரேகா, ஜீவா, வாசுகி, ரகு, ரமேஷ், ரோஹித், டேவிட், பாஷா எல்லாரும் இருந்ததை பார்த்து ஆச்சர்ய பட்ட செல்வா, செந்தமிழை பார்த்து "நீ இங்க எப்படிடா வந்த? நீதான எங்கள நேத்து சேரன்ல வழி அனுப்பி வச்ச", என்று கேட்க, " டேய் இதல்லாம் கவிதாவோட surprise giftல ஒன்னு. கவிதா டிக்கெட்டுக்கு காசு தந்தா, அதுனால காலை முதல் ப்ளைட்ல வந்துட்டேன்", என்று சொல்ல, கவிதாவும் அந்த நண்பர்கள் கூட்டத்தில் கலந்தாள். "செல்வா நாங்க எல்லோரும் சேர்ந்து சாய்பாபா காலனில ஒரு பிளாட் வாங்கி இருக்கோம், அத உங்களோட திருமண பரிசா குடுக்கலாம்னு இருக்கோம்" என்று சொல்ல. செல்வா உணர்ச்சி வசப்பட்டு "கவிதா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு, நட்புளையும் தான். நண்பர்கள்ன ஏதோ டிவி வாஷிங் மிசின் மாதிரி கிப்ட் வாங்கி தருவாங்க. பிளாட் வாங்கி தருவது எங்கயுமே நடக்காது" என்று சொல்லி அன்புடன் கண்டித்தான்.

"டேய் நாங்க எல்லாரும் சாதாரண நண்பர்கள் இல்லைடா, அதோட நீ MBA படிச்சப்ப எங்க எல்லாருக்கும் Operations Reasearch சொல்லி கொடுத்து 90 மார்க்குக்கு மேல வாங்க வச்ச. ஆனா எந்த கிப்டும் வாங்க மாட்டேன்னு சொன்ன, எங்களுக்கு மனசு கேக்கல. உன்ன மாதிரி நண்பனுக்கு அதுவும் இந்த மாதிரி கல்யாணத்துக்கு கிப்டா கொடுக்கிறதுல பெருமையா இருக்கு. இதை நீ கட்டாயம் எத்துகிடனும் என்று ரகு சொல்ல, எல்லாரும் கோரசாக "செல்வா ப்ளீஸ்டா" என்று கெஞ்ச. "சரி ஆனா ஒரே கண்டிசன் இத காயத்ரி பெயர்ல தான் ரெஜிஸ்டர் பண்ணனும் அப்படின்னா எனக்கு ஓகே," என்று சொன்னான். இவர்களின் நட்பை நினைத்து ஆச்சர்யபட்டு இருந்த காயத்ரிக்கு கடைசியில் செல்வா சொன்னது புரியவில்லை. "என்ன சொன்னிங்க" என்று கேட்ப தற்குள் அவள் பர்சை எடுத்து அவளது பான்கார்டை வெளியே எடுத்து பத்திரம் எழுதுபவரிடம் கொடுத்தாள் கவிதா. போலரிட் கேமராவில் காயத்ரியை போட்டோவும்எடுத்தனர். அடுத்த 1 மணி நேரத்தில் சார்பதிவாளர் உள்ளே அழைக்க, செல்வா காயத்ரியை அழைத்து கையெழுத்திட வைத்தான். கிருஷ்ணா ஸ்வீட்ல இருந்து வாங்கி வந்த மைசூர்பாகை அனைவருக்கும் கொடுத்தான் ரமேஷ்.ரகு தான் கொண்டு வந்திருந்த Xylo காரில் ஆறு பேரை கூட்டி கொண்டு செல்ல, பின்னாலே இன்னோவா காரில் செல்வா காயத்ரி உட்பட ஆறு பேர் பின் தொடர்ந்தனர். இருபது நிமிடத்தில் சாய்பாபா காலனியை அடைந்தவுடன், அனைவரும் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அருகில் இருந்த அந்த புதிய அடுக்கு மாடி குடிஇருப்பில் நுழைந்து முதல் மாடியில் அமைந்து இருந்த 101 என்ற எண்ணிட்ட பிளாட்டின் கதவைதான் கொண்டு வந்திருந்த சாவியை கொண்டு திறந்தான். கவிதா "முதல்ல வீட்டு ஒனற வர சொல்லுங்க" என்று சொல்லி காயத்ரியை வலதுகாலை எடுத்து உள்ளே வர, அதை தொடர்ந்து செல்வா மற்றும் நண்பர்கள் தொடர்ந்தனர். அது 1260 சதுர அடிகள் கொண்ட பிளாட். வரவேற்பறை, கெஸ்ட்ரூம், இரண்டு படுக்கை அறைகள் பாத்ரூமுடன், சமையல் அறை (italian kitchen), பெரியஹால் (with french window) இவற்றுடன், எல்லா வசதிகளுடன், குடியேற தகுந்ததாக இருந்தது. "உங்க ரெண்டு பேருக்கும் இந்த வீடு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறோம், வாழ்த்துக்கள்" என்று சொல்லி பிறகு, "இப்போ எல்லோரும் அன்னபூர்னாவில் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு கிளம்பலாம் என்றாள்" கவிதா. மதிய உணவு முடிந்த உடன் 2 மணி அளவில் ஏற்கனவே வரசொல்லி இருந்த அவள் வீட்டு டிரைவரை கூப்பிட்டு, "இவங்க ரெண்டு பேரையும் குனூர் தாஜ் ஹோட்டல் டிராப் செய்து விட்டு வந்துவிடு" என்று சொல்லி விட்டு "வாழ்த்துக்கள்" சொல்லி விட்டுகிளம்பினாள். அவளை தொடர்ந்து அனைத்து நண்பர்களும் விடை கொடுக்க செல்வா காயத்ரியை சுமந்து கொண்டு இன்னோவா குனூர் விரைந்தது. நட்பு தான் எவ்வளவு வலியது?சுமார் 5 மணிக்கு, தாஜ் ஹோட்டலில் இருவரையும் இறக்கி விட்டு கவிதாவின் டிரைவர் கோவை செல்ல, ரிசெப்சனில் அவர்களுக்கு பூங்கொத்து உடன் சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. இது எல்லாம் தன் நண்பர்களின் வேலை என்று உணர்ந்த செல்வாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன் நண்பர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று வியந்து கொண்டே, காயத்ரியுடன் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட சூட்டில் (suit) நுழைய, அவர்கள் இருவரது சூட்கேஸ்களையும் பின்னாலே ஹோட்டல் ஊழியர் கொண்டு வைத்தனர். முதல் இரவு அறை போல அலங்கரிக்கபட்டு இருந்தது அந்த படுக்கை அறை. அதை பார்த்த செல்வா காயத்ரியை பார்த்து புன்முறுவல் செய்ய, காயத்ரியின் முகம் சிவந்தது. செல்வாவிடம் "உங்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு" என்று ஆரம்பித்தாள், சட்டையை கழட்ட தொடங்கிய செல்வா, "எதுக்கு" என்று கேட்க. "உங்க நண்பர்கள் எல்லாரும் உங்க மேல வச்சிருக்கிற அன்பை பார்த்து தான். எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு பிரெண்ட் தான் - பூஜா அவளும் என்கிட்ட சண்டை போட்டு பிரிஞ்சுட்டாள்", என்று வேதனையுடன் பெரு மூச்சு விட, செல்வாவுக்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் பேசுவதற்கு யாரும் இல்லை. சுகமோ துக்கமோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது போல் எதுவும் இல்லை என்பதை அறிந்த செல்வா, "கவலைபடாதே காயத்ரி, நீ என் கூட எதை வேணாலும் பகிர்ந்துக்கலாம்" என்று சொல்லி விட்டு இரவு உடைக்கு மாறினான். அதற்குள் பாத்ரூம் சென்று காயத்ரியும் நைட்டிக்கு மாறி வந்தாள். இவளுக்கு என்ன டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கு என்று அவளை பார்த்த உடன் நினைத்த செல்வா " உனக்கு டயர்டா இருந்தா பெட்ல படுத்துக்கோ" என்று சொல்லி அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்து தனது ஆப்பிள் ஐபோடை எடுத்து பாட்டு கேக்க ஆரம்பித்தான். காயத்ரிக்கு தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம் என்று ரிமோட்டை எடுத்து எல்லா சானலையும் மாற்றி கொண்டு இருந்தாள். "என்ன கண்ணா போர் அடிக்குதா?" என்று கேட்டவாறு தன் ஐபோடை அணைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தான். காயத்ரிக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது, ஆனாலும் செல்வா தனக்கு அருகில் அமர்ந்திருப்பது அவள் மனதுக்கு பிடித்திருந்தது.காயத்ரியின் கையை தன் கைகளுக்கு நடுவில் வைத்து, அவள் முகத்தை பார்த்து "என்னவேணும்?" என்று கேட்க, அவளுக்கு ஒரு கணம் மூச்சே நின்றது போல் உணர்வு. ஒரு மனது அவனிடம் இருந்து கையை எடுத்து கொள்ள சொன்னது, இன்னொரு மனமோ வேண்டாம் அவன் முதல் தடவையா உன் கையை பிடிக்கிறான், அவன் மனசு கோண நடந்து கொள்ளாதே என்றது. "செல்வா நான் ஒன்னு கேப்பேன் நீங்க தப்பா நினைக்காம பதில் சொல்லணும்". கையை எடுக்காமலே "என்ன" என்று செல்வா கேட்க, "நீங்க கோவை வீட்டை என் பேர்ல ஏன் எழுதி வச்சிங்க?" என்றுகேட்க, "நீ கேக்குறது ஒரு விதத்தில நியாயம் தான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேற நான் வேறன்னு எனக்கு தோணல. அதனால தான் நான் கொஞ்சம் அவசரபட்டு இப்படி செஞ்சேன். ஒருவேளை உனக்கு நான் அதிகமான உரிமை எடுத்துகிட்டேன் அப்பிடின்னு தோணுச்சின்னா, அயம் ரியலி சாரி" என்று அவள் கையை கன்னத்துக்கு அருகில், கொண்டு வர அவள் கூச்சத்துடன் "இல்ல இல்ல" என்று அவசரத்துடன் மறுத்தாள். அவள் குனிந்த தலையை நிமிர வைக்க செல்வா அவனது கைகளால் அவள் முகத்தை ஏந்தினான். அவள் கண்களை மூடி இருக்க, அந்த பளிங்கு முகத்தில் முத்தமிட நெருங்கினான். காயத்ரி கண்ணை மூடி இருந்தாலும் உணர்வுகள் மூடப்படவில்லை. அவளது சிவந்த இதழ்களில் மென்மையான அச்சாரம் பதிக்க, அங்கே ஒரு புதிய காதல் பாடம் அரங்கேற தொடங்கியது. அவளின் மூடி இருந்த கண்களில் தனது முத்தபயணத்தை தொடர்ந்தான். அவனது உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் போக, அவளை அள்ளி அணைத்து கொண்டான். காயத்ரி அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் விட்டு கொடுக்க, செல்வா காயத்ரியிடம் "கண்ணா என்ன ஒன்னும் பேச மாட்டேங்கிற, என் மேல கோபம் ஒன்னும் இல்லையே" என்று கேட்க, காயத்ரிக்கு என்ன இவர் இப்பிடி இருக்கார். கேள்வி கேக்க வேண்டிய நேரமா இது, ஆனா பதில் பேசாம இருந்தா விடமாட்டார் போல இருக்கே. கண்களை திறந்து அவனை பார்த்து, "இல்லை" என்று தலை அசைத்தாள். அவளை இறுக்க அணைத்து தன் கேள்வி கணைகளை தொடர்ந்தான். "உங்கள நான் பஸ்ல தப்பா நெனைச்சுட்டேன், பின்னால யோசிச்சு பாத்தப்ப நீங்க என்மேல கை வச்சுரிக்க வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சுது, பூஜா சொன்னத நான் யோசிச்சு பார்த்து இதை புரிஞ்சுகிட்டேன். எனக்கு ஆண்கள்னா ஒரு வெறுப்பு, அதுனாலதான் உங்கள பத்தி தவறா நினைச்சேன். என்னை மன்னிச்சுடுங்க. ஊருக்கு போன உடனே முதல் வேலையா உங்க அப்பா அம்மா கிட்ட நான் உங்க மேல சொன்னது தவறான குற்றசாட்டுன்னு சொல்லி மன்னிப்பு கேட்கணும்" என்று சொல்லி அவன் கையை எடுத்து முத்தமிட்டு, "என் மேல கோபம் இல்லையே என்று கேட்க, "என் மகாராணி மேல எனக்கு கோபம் வராது. உன்ன பத்தி எல்லாம் என் மாமியாரை கேட்டு தெரிஞ்சுகிட்டேன். சரி, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும். சரியா?" என்று கேட்டு, "உன்ன பத்தி சொல்லு" என்றான்.அதிக கேள்வி கேட்டது செல்வா தான். அவள் விருப்பங்கள், ஆசைகள், சிறு வயதில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள், நண்பர்கள், பிடித்த திரைபடங்கள், பாடல்கள், என்று அவர்கள் பேச்சு ஓடி கொண்டிருந்தது. இரவு மணி ஒன்பதை தொட, செல்வா காயத்ரி இருவரும் ரெஸ்டாரண்டில் சென்று இரவு உணவை முடித்து ரூமிற்கு திரும்பினர். படுக்கைஅறை ஏற்கனவே தயாராக இருக்க, இருவரும் அமர்ந்து பேச தொடங்கினர். "ஒரு முக்கியமான விஷயம், என்னோட அப்பா அம்மாகிட்ட இப்போதைக்கு பஸ்ல நடந்ததை பற்றி சொல்ல வேண்டாம். உன் மேல கோபம் வர வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் பொறு சந்தர்ப்பம் வரட்டும் நானே சொல்லுறேன்" என்று சொல்ல, "இல்லைங்க செல்வா, உங்க அப்பா உங்க மேல ரொம்ப கோபமா இருக்கார், என்னால தான் இதல்லாம்" என்று மறுக்க, "எனக்கு புரியுது, கொஞ்சம் வெயிட் பண்ணு, அப்பாவுக்கு என்மேல அன்பு இருக்கு, அதுதான் கோபமா வெளிப்பட்டு இருக்கு. நாம யார் மேல அதிகமா அன்பு வச்சு இருக்கோமோ அவங்க மேலதான் நாம அதிகமா கோபபட முடியும். அது மாதிரி தான், என் அப்பாவும்", என்று சொல்லி அவள் வாயை அடைத்தான். தொடர்ந்து பேசிவிட்டு இருவரும் உறங்கும்போது இரவு மணி ஒன்று. காலை ஏழுமணி அளவில் செல்வா விழித்து பார்க்க, காயத்ரி அவன் மார்பில் தலையை வைத்து உறங்கி கொண்டிருந்தாள். அவளை பார்த்த செல்வாவுக்கு அவள் உடல் முழுக்க முத்த மழை வேண்டும் என்ற ஆசை வந்தது.சரி இன்று இரவை முதல் இரவாக்கி விடலாம் என்று தீர்மானித்தான். லேசாக அசைந்து படுக்கையை விட்டு நகர்ந்து பாத்ரூம் சென்று பல் விளக்கி, காலை கடன்களை முடித்து விட்டு திரும்பினான். அப்போது தான் கண்விழித்த காயத்ரி செல்வாவை பார்த்த உடன் வெட்கபட்டு படுக்கையை விட்டு இறங்கி, பாத்ரூம் செல்ல, செல்வா "காயத்ரி உனக்கு காபி சொல்லட்டுமா?" என்று கேட்க, "நீங்க என்ன சொல்றிங்களோ அதுதான் எனக்கும்" என்று சொல்லி விட்டு விரைந்தாள். காலை உணவுக்கு பின், இன்று நாம் சிம்ஸ்பார்க் போகலாம் என்று இருவரும் முடிவு செய்து, ஏற்கனவே ஹோட்டல்லில் வண்டி ஏற்பாடு செய்து இருக்க, அதில் ஏறி காலை 11 மணி அளவில் சுற்றி பார்க்க தொடங்கினர். அக்டோபர் மாதமாக இருந்ததால் ஓரளவு கூட்டம் இருந்தது. இருவரும் நடந்து படகுதுறைக்கு வந்து அருகில் இருந்த சேரில் அமர்ந்து பேசிகொண்டு இருந்தனர். இருவரையும் பார்த்து அந்த வழியாக வந்த இரண்டுபேர், சிறிது தூரம் சென்ற பின்பு திரும்பி வந்து செல்வாவிடம், "சார் நீங்கதான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதிபோட்டிக்கு தேர்வான ரெண்டுபேர்ல ஒருத்தர்" என்று கேட்க, "ஆமா" என்று சொன்ன செல்வாவிடம், "சார் சார் ஒரு பாட்டு பாடுங்க சார்" என்று கெஞ்ச, என்ன இது ஹனிமூன் வந்த இடத்துல இப்படி ஒரு அன்பு தொல்லை என்று யோசிக்க, காயத்ரி "பரவாயில்லை ஒரு பாட்டு பாடுங்க, அவங்க சந்தோசப்படுவாங்க" என்றுசொல்ல, அதற்குள் 10 -15 பேர் மேலும் சேர, செல்வாவுக்கு இனி தப்ப முடியாது என்று புரிந்து போனது.

என்ன பாட்டு பாடலாம் என்று யோசிக்க, சுற்றி இருந்த கூட்டத்தில் ஒருவர், "சார் நீங்க செமி பைனல்ல பாடுன பாட்டு பாடுங்க. அது ரொம்ப நல்லா இருந்தது " என்று சொல்ல, செல்வாவுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. "சங்கீத ஜாதி முல்லை காணவில்லை" என்று பாட தொடங்க, மொத்த கூட்டமும் ஆடாமல் அசையாமல் பாடல் கேட்க, எட்டு நிமிஷம் தொடர்ந்தது அந்த பாடல். அதற்குள் பார்க்கின் மற்ற பகுதியில் இருந்து அனைவரும் வர, கிட்டதட்ட 50 பேர் கொண்ட கூட்டம் கூடி இருந்து பாடலை கேட்டது. பாடல் முடிந்ததும் கரகொலி ஒலித்தது. "தம்பி , இன்னும் ஒரே ஒரு பாட்டு பாடுங்க" என்று ஒரு வயதான அம்மா கேட்க, "சரி இதுதான் கடைசி பாட்டு" என்று சொல்லி விட்டு, "ஆயர் பாடி மாளிகையில்" பாட அனைவரும் மகுடிக்கு மயங்கிய நாகம் போல தலை அசைத்து ரசித்து கேட்டனர். பாடல் முடிந்தவுடன் செல்வாவை சுற்றி கூட்டம். எல்லோருக்கும் கை கொடுக்கவும், ஆட்டோ கிராப் வாங்கவும் ஆசை, ஒரு வழியாக சமாளித்து காயத்ரி இருக்கும் இடத்துக்கு வந்து "போகலாமா" என்று கேட்க, தலை அசைத்து கிளம்பினாள் காயத்ரி. பார்க்கில் மேல ஏற அவள் கஷ்டபடுவதை அறிந்த செல்வா அவளை கையில் தூக்கி கொள்ள, "விடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் காயத்ரி. அவளை அப்படியே படுக்கை வசத்தில் தூக்கி கொண்டு படி ஏறினான். கூடி இருந்த அனைவரும் அவனை கைதட்டி உற்சாகபடுத்த, சில பேர் போட்டோவும் எடுத்தனர். பார்க் வாசலுக்கு வந்து அவளை இறக்கிவிட, காயத்ரிக்கு சொல்ல முடியாத அளவுக்கு வெட்கமும், அதேசமயத்தில் பெருமையும் வழிந்தது. "என்ன இவன் இந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறானே, இவனுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்" என்று வியந்தாள். டால்பின் நோஸ் மற்றும் சில இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் ஹோட்டல் திரும்ப இரவு மணி 8 , வழக்கம் போல் இரவு உணவை முடித்து விட்டு தங்கள் ரூமுக்கு திரும்பினர். காயத்ரி ஒன்று மட்டும் புரிந்தது, இன்று இரவு தன் வாழ்நாளில் மறக்க முடியாத இரவாக இருக்கும் என்று. கொஞ்சம் டென்சன், கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் ஆசை கலந்த கலவையாக அவளை தாக்க, என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கை அறையில் அமர்ந்தாள். அதற்குள் உடை மாற்றி கொண்டு செல்வா அவள் அருகில் வர, நானும் உடைமாற்றி கொண்டு வருகிறேன் என்று சொல்லி பாத்ரூமுக்குள் புகுந்து விட்டாள். காயத்ரி புதிய பருத்தி புடவையில் தேவதை போல் வந்து அவன் அருகில் அமர்ந்தாள். விளக்கை அணைத்து விட்டு, இரவு விளக்கு வெளிச்சத்தில் அவளை பார்த்தான். அவள் அவன் கண்களுக்கு ரதியாக தோன்ற, அவன் மன்மதனாக காட்சி அளித்தான். காதல் காமம் இரண்டும் இல்லை என்றால் இந்த உலகில் மனித இனம் ஏது?அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து தேன் எடுக்க முயற்சி செய்தான். எடுக்க எடுக்க குறையாத தேன்கூடு போல், அவள் இதழில் இருந்து அவனுக்கு அளவில்லாத இன்பம் கிடைத்தது. காயத்ரியின் நிலைமையோ அதைவிட மோசம், கொடுப்பது எடுப்பது இதில் இரண்டில் எதில் அதிக இன்பம் நினைத்தாள், எதுவாக இருந்தாலும் இரண்டுமே கடைசியில் இணைவது இன்பத்தில் தான் என்று உணர்ந்து மயங்கினாள். அந்த இரவு அவர்கள் இருவருக்கும் விடியா இரவானது. காலை 7 மணிக்கு முதலில் கண் விழித்தாள் காயத்ரி. உடல் வலி இருந்தது, ஆனால் மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிந்தது. "நான்தான் இந்த உலகத்திலே சந்தோசமான பெண்". எழுந்து அங்கங்கே சிதறி கிடந்த தனது உடைகளை அள்ளி கொண்டு, குளியல் அறைக்குள் புகுந்தாள். நிர்வாணமான தன் உடலை தானே ரசித்தாள். அவளுடைய உதடுகள் இரவு முழுக்க செல்வாவுடன் நடத்திய காதல் யுத்தத்தால் கன்னி போயிருந்தன. தனது தனங்களை தடவி பார்த்தாள். அவை இரண்டும் செல்வாவின் வாய்ஜாலத்தால் சிவந்து போய் இருந்தன. பல் தடங்கள் பதிந்து அவளுடைய மார்பகங்களுக்கு அழகு ஊட்டின. வாழை தண்டு போல் இருந்த அவள் காலுக்கு நடுவில் இருந்த அவளது பெண்மை நேற்று இரவு செல்வாவின் ஆண்மையுடன் இட்ட போரில் வெற்றி பெற்றதால் பூரிப்பு அடைந்து பெரிதாகி இருந்தது. முதல் இரவில் அனைத்து பெண்களும் கற்பழிக்கபடுகிறார்கள் என்று பிரபல பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. தன் கணவன் அவனை அவமானபடுத்தி இருந்தும் முதல் இரவில் கண்ணியமாக நடந்து கொண்டதை பெருமை உடன் நினைத்து பார்த்தாள். இனி எக்காரணத்தையும் முன்னிட்டு நான் விட்டு கொடுக்க போவதில்லை என்று சபதம் செய்தாள். உடல் முழுக்க நன்றாக தேய்த்து குளித்து விட்டு வெளியே வந்தாள். செல்வா இன்னும் உறங்கி கொண்டு இருக்க, பச்சை நிற சுடிதார் அணிந்து கொண்டு, அருகில் அமர்ந்து அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள். நேரம் போனதே தெரியவில்லை. செல்வாக்கு தூக்கம் களைந்து விழிக்க "ஹாய் குட்மார்னிங்" என்றாள் அந்த பச்சை நிறதேவதை. அழகு பெட்டகமாக தெரிந்த அவளை கண்டவுடன் செல்வாவுக்கு காமம் தலைக்கு ஏறியது. அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தான். மூச்சு திணறிய காயத்ரி "செல்வா ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள். கொஞ்சம் நிறுத்திய செல்வாவை பார்த்து காயத்ரி, அவன் கழுத்தை கட்டி அணைத்து வலது கன்னத்தில் கடித்தாள். "ஐயோ" என்று கத்திய செல்வாவை "சாரி" என்று கண்களில் குறும்பு தாண்டவம் ஆட மன்னிப்பு கேட்டாள். இருவரும் குளித்து விட்டு வர மணி 9 ஆனது. அன்றைய தினமலர் பேப்பரை புரட்டிய காயத்ரி, என்னங்க இந்த செய்தியை பாருங்கள் என்று மூன்றாவது பக்கத்தில் இருந்த செய்தியை வாசித்தாள்." புது மனைவி கால் வலி, தூக்கி நடந்த கணவன் - இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடம்". இந்த தலைப்புடன் பக்கத்தில் செல்வா காயத்ரியை தூக்கி கொண்டு நடந்த படம் போடப்பட்டு இருந்தது. "ஆமா இத பாத்தா யாராவது கண்போட போறாங்க" என்று உரக்க சிரித்தான் செல்வா. அதே நேரத்தில் ஊட்டியில் இருந்த போகடியா தேயிலை தோட்டத்தில் தினமலர் படித்து கொண்டு, "ஏண்டி நீ இங்கயா இருக்க, என் வாழ்க்கைய பாழாக்கிட்டு நீ மட்டும் உன் புருஷனோட சந்தோசமா இருக்கியா? இனிமே எப்படி இருக்கன்னு நான் பாக்கிறேன்னு?" செல்வா காயத்ரி படத்தை பார்த்து உறுமி கொண்டிருந்தான் உச்சித்குமார். காதலில் காதலிப்பதும் காதலிக்கபடுவதும் சுகமேஉச்சித் குமார் பற்றி தெரிய நாம் இரண்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது சென்னையின் நந்தனத்தில் உள்ள புகழ் பெற்ற இருபாலர் பயிலும் கலை கல்லூரியில் B .Com இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தாள் காயத்ரி. எல்லோரையும் தனது அழகால் கவர்ந்த காயத்ரியை சுற்றி எந்நேரமும் வாலிபர்கள் கூட்டம், அங்கு அவள் ஒரு கனவு கன்னியாக ஆராதிக்கபட்டாள். உச்சித் குமார் ஒரு வட இந்திய இளைஞன், கல்லூரியில் M .Com படித்துகொண்டிருந்தான். பிறந்து வளர்ந்தது ஊட்டியில். அவன் அப்பா ஊட்டி மற்றும் குன்னூரில் டீஎஸ்டேட் ஓனர். அவனுக்கு பல பெண் நண்பர்கள் உண்டு. அழகான பெண்களை மயக்கி சீரழிப்பதே அவன் பொழுது போக்கு. காயத்ரிக்கு சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவத்தால் ஆண்களிடம் இருந்து தள்ளி இருப்பாள். அவளின் நெருங்கிய பிரெண்ட் பூஜா மட்டுமே, மற்ற பெண்களுடன் அவள் ஹாய் சொல்லும் அளவுக்கு பழக்கம். மற்ற பெண்களுக்கு காயத்ரி அழகை பார்த்து பொறாமை அதிகம் என்பதால், காயத்ரியுடன் அதிகம் பேசுவதில்லை. ஒருநாள் சீனியர் farewell பார்ட்டி அருகில் இருந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லாரும் கட்டாயம் போக வேண்டியிருந்ததால் காயத்ரியாலும் தவிர்க்க முடியவில்லை, அம்மாவிடம் போன் செய்து லேட் ஆகும் என்று தெரிவித்தாள். மாலை ஏழு மணிக்கு, ஆரம்பித்த பார்ட்டியில் இருந்த நண்பர்கள் உச்சித்தை கிண்டல் செய்து விளையாடி கொண்டு இருந்தனர். உச்சித் பாத்ரூம் சென்று திரும்பி வரும் வழியில் காயத்ரியை கண்டான். அவனுக்குள் வியப்பு இந்த அழகி எப்படி இத்தனை நாள் நம்ம கண்படாமல் இருந்தாள்? சரி நாம போய் பேச வேண்டியது தான் என்று முடிவு செய்து, காயத்ரி அருகில் வர, பூஜா அவனை கண்டு "ஹாய் உச்சித், எப்படி இருக்கீங்க" என்று நலம் விசாரித்து, காயத்ரியிடம் "இது நம்ம சீனியர் உச்சித் குமார், MCOM பைனல் இயர், நல்ல டான்ஸ் ஆடுவார், இவருக்கு நிறைய நண்பர்கள்" என்று அறிமுகபடுத்தி வைத்தாள். உதடு பிரியாமல் சிரித்தவளை கண்டு தேன் குடித்த வண்டு போல ஆனான் உச்சித். "ஓகே பை பை" சொல்லி விட்டு தனது நண்பர்களுடன் சேர, அங்கே டான்ஸ் பார்ட்டி ஆரம்பமானது. ஹிந்தி பாட்டுக்கு சிறப்பாக நடனம் ஆடிய உச்சித்தை பார்த்து அனைவரும் கைதட்டி உற்சாகபடுத்தினர். காயத்ரியும் அந்த பாராட்டில் கலந்து கொண்டாள். உச்சித் தன்னை அடிக்கடி திரும்பி பார்ப்பதை அறிந்த காயத்ரி அவனிடம் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்று நினைத்து அவனுக்கு ஹாய் என்று SMS அனுப்பினாள். திரும்ப ஹாய் என்று பதில் அளித்த உச்சித், யாரது என்று கேட்க, காயத்ரி என்ற பதில் வந்ததும் உற்சாகமானான். பக்கத்தில் இருந்த பூஜாவிடம் அவன் பதிலை காண்பிக்கஅவளோ "வேணாண்டி பிரச்னை ஆயிடும். அவன் பொம்பளபொறுக்கி, பணக்காரன் வேற" என்று சொல்ல, "சரிதான் போடி பெரிய பயந்தான்கொள்ளி, இப்ப பாரு வேடிக்கைய" என்று சொல்லி, I miss you என்று SMS செய்ய, I too என்ற பதில் வந்தது. திரும்ப பதில் அனுப்பாமல் தனது செல்போனை ஆப் செய்து வைத்தாள். உச்சித்க்கு பதில் வராமல் போக, காயத்ரியை தேடி அவள் இடம் வந்து சேர்ந்தான். "ஹாய்" என்று சொல்லி விட்டு, "Can you join with me for a dance? (நாம கொஞ்சம் டான்ஸ் ஆடலாமா)" என்று கேட்க "ஓகே" என்று பதில் சொல்லி அவனுடன் ஆட போனாள்.

செல்வா 03


செல்வா ஹோட்டல் பார்க்ஷெரட்டன் அடைந்தபோது , 5 நிமிடம் லேட் ஆகி விட்டது, வருங்கால மாமியாருக்கு லேட்டாக வந்ததுக்கு சாரி சொல்லி விட்டு எதிர் சீட்டில் அமர்ந்தான். காஞ்சனா தன் வருங்கால மருமகனை ஒரு தடவை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். என் பொண்ணுக்கேத்த ஜோடிதான். நான் செலக்ட் பண்ணிருந்தா கூட இந்த அளவுக்கு நல்ல மாப்பிள்ளை அமஞ்சுருக்குமா? தெரியல என்று நினைத்தாள்.

செல்வா சிரித்தான். "என்னமேடம்இப்படிபாக்கிறிங்க". காஞ்சனாவுக்கும் சிரிப்பு வந்தது. "இல்ல வருங்கால மாமியார மேடம்னு கூபிட்ற முதல் மருமகன் நீங்கதான்னு நினைக்கிறேன்." "இன்னும் நடந்த சம்பவங்கள்ள இருந்து என் மனசு விடுபடல. என்ன செல்வானே கூப்பிடுங்க ப்ளீஸ" "ஓகே செல்வா ஆனா உங்க கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நா உங்கள மாப்ளன்னுதான் கூப்பிடுவேன், நீங்களும் என்னை அத்தைன்னு கூப்பிடனும்" என்று அன்புடன் நிபந்தனை போட்டாள். சிரித்தபடி ஓகே சொன்னான் செல்வா. "சொல்லுங்க என்ன விஷயம்" "அது சரியாய் தவறா இல்லை உண்மையா பொய்யா அப்பிடிங்கரத பத்தி நான் பேச வரலை. உங்கள பத்தி நாலு இடங்கள்ள விசாரிச்சேன். அதுனால உங்க மேல எனக்கு நம்பிக்கை வந்துருக்கு. உங்க கிட்ட காயதிரிய பத்தி சில விஷயங்கள் நான் பேச வேண்டி இருக்கு" அவள பத்தி என்ன பேச வேண்டி இருக்கு, என்று எரிச்சல் ஆனான் செல்வா. சரி நம்மள நம்பி, மதிச்சு ஏதோ சொல்ல போறாங்க என்னன்னுதான் கேக்கலாம் என்று உன்னிப்பாக கவனித்தான். "நானும் என் husband மூர்த்தியும் 25 வருஷத்துக்கு முன்னால love marriage பண்ணிகிட்டோம். ரெண்டு பேரும் வேற ஜாதி மற்றும் மொழியே வேற. ஒரு பொதுநண்பர்கள் மூலம் பழக்கம். அவர் சென்னைல இருந்து வந்து பெங்களூர்ல (அடுத்தநாள் ஸ்கூல்ல இருந்து எனக்கு போன் வந்தது. காயத்ரியோட கிளாஸ் மிஸ் பேசுனாங்க. காயத்ரி அழுது கிட்டே இருக்கா. புதுசா யார பாத்தாலும் பயப்புடுரா. உடனே கிளம்பி வாங்க. நானும் உடனே அலறி அடிச்சுகிட்டு போனேன். அங்கே ஸ்கூலில் அழுதுகொண்டே இருந்த காயத்ரியிடம் என்னம்மா என்ன பிரச்னை அப்படின்னு கேக்க அவள் அழுது கொண்டே எனக்கு பயமா இருக்கும்மா, உவ்வா (vomit) வருது, என்னம்மா என்ன பிரச்னை என்று கேட்டதற்கு சரியான பதில் இல்ல. நான் டாக்டர் என்கிறதால எனக்கு சந்தேகம் வந்தது. எதுக்கும் காயத்ரிய குழந்தை நல மருத்துவர் கிட்ட காண்பிக்க்கலாம்னு முடிவு பண்ணினேன். டாக்டரும், முழுக்க செக் பண்ணிட்டு, குழந்தை ஏதோ பாத்து பயந்திருக்கு, எதுக்கும் மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னார். இது பெண் குழந்த சம்பந்தப்பட்ட விஷயம் அப்படிங்கரதல நானும் என்னோட டாக்டர் நண்பர்கள் மூலமாக புகழ்பெற்ற மனநல மருத்துவ நிபுணர் பர்வதம்மாகிட்ட appointment வாங்கினேன். மனநல மருத்துவர் பர்வதம்மா அவளை செக் பண்ணிட்டு, ஹிப்னோடிசம் உதவியோட என்ன நடந்து நடந்ததுன்னு கண்டு புடுச்சாங்க". அந்த இடத்தில் நிறுத்திய காஞ்சனா தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தார். "வேலைக்காரிக்கு எங்க வீட்டு மேல ரொம்ப நாளா ஒரு கண். நாங்க ரெண்டு பேரும் லேட்டா வர்றது அதுக்கு வசதியா போச்சு. அவள் எங்க வீட்டில் திருட திட்டம்போட்டாள். அவள் புருஷன் ஒரு கைதேர்ந்த திருடன். பொண்டாட்டியும் புருஷனும் சேர்ந்து திட்டம் போட்டு பலவீடுகள்ல திருடி இருக்காங்கன்னு எங்களுக்கு பின்னால தெரிய வந்தது. அன்றைய தினம் அவன் வந்து வீட்ல பீரோவ ஒடச்சு திருடும் போது காயத்ரி பாத்துட்டா. என்ன பண்றிங்க uncle, என்று கேட்டவளை அந்த திருடன் கண்ட எடத்துல கை வச்சுருக்கான். சின்ன பொண்ணு விபரம் தெரியாதவ, அதுனால காயத்ரிக்கு என்ன நடக்குதுன்னு தெரியல. வலிக்குது அங்கிள் விடுங்க அங்கிள் என்று அவ அழ ஆரம்பிக்க," இந்த இடத்தில காஞ்சனா அழ ஆரம்பித்தாள். செல்வாக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, கண் கலங்கினான். அதற்குள் கண்களை துடைத்து மேலும் தொடர்ந்தாள். "அப்போது மற்ற ரூமில் இருந்து வந்த வேலைக்காரி என்னையா குழந்தைகிட்ட என்ன அசிங்கம் பண்ணுற என்று சண்டை போட்டு அவனை விரட்டி அடித்திருக்கிறாள. அந்த அதிர்ச்சியில் இருந்து காயத்ரி விடுபட 3 மாதம் treatment கொடுத்தோம். அவள் முழுக்க குணம் அடைந்தாலும், இந்த கொடூர அனுபவத்தால காயத்ரிக்கு புதிய ஆட்கள, அதிலும் குறிப்பா ஆண்களை கண்டால் பயம். ஆண்களில் குறிப்பாக அப்பா, மற்றும் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் பேசுவாள். ") காலேஜ்ல படிக்கும்போது அவர சந்திச்சேன். அவரோட நல்லமனசு, என் சித்தியோட கொடுமை, அவர் ஆறுதலாக பேசியது, என் கிட்ட உண்மையா நடந்துக்கிட்டது, எல்லாம் எனக்கு புடிச்சிருந்தது. ரெண்டு பேரும் நண்பர்கள் உதவியோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்கள பார்த்து கிண்டல் பண்ணுன சொந்தகாரங்க பாத்து பொறாமபடனும்னு நாங்க ரெண்டு பெரும் கடுமையா உழைச்சோம். நாங்க உடனே குழந்த வேணாம்னு தள்ளி போட்டோம். நாலு வருஷம் கடுமையா உழைச்சு பெங்களூர்ல வீடு வாங்கினோம் அப்பதான் முதல் குழந்தை காயத்ரி பொறந்தா. சின்ன வயசுலிருந்து அவள் நல்ல சூடிகையாக இருந்தாள். என் இறந்து போன அம்மா மாதிரி ஜாடை, புத்திசாலிதனம் எல்லாம் இருந்தது. அவர் பிசினஸ்ல கால் ஊன நிறையநாள் எடுத்தது, எனக்கும் ஒரு ஹாஸ்பிடல வேலை. வேலை அதிகம் இருந்ததால அவளோட நிறைய நேரம் செலவழிக்க முடியலை. அதுனால ஒரு வேலைக்காரிய வேலைக்கு வச்சோம். தினமும் எங்க ஒருத்தர்ல யாராவது வீட்டு வந்த பின்னால வேலைக்காரி அவ வீட்டுக்கு கிளம்புவா. பொதுவா இரவு 8 இல்ல 9 மணி ஆயிடும். காயத்ரி அப்போ ஒன்னாவது (5 years) படிச்சுக்கிட்டு இருந்த சமயம், ஒருநாள் வழக்கம் போல நான் 8 மணிக்கு வீட்டு வந்தேன. வீட்ல காயத்ரி அழுது கொண்டிருந்தா? வீடு தொறந்து கிடந்தது. வீட்டில பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. வேலைக்காரியை வேற காணவில்லை. என்னம்மா என்ன ஆச்சு? வேலைக்காரி எங்க போனா? என்ன கண்ணா ? என்று என் பொண்ணுகிட்ட கேட்ட போது, என் husband வந்துட்டார். அழுதுகிட்டு இருந்த குழந்தைய தூக்கிகிட்டு, போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் குடுத்தோம். எங்களுக்கு நகைகள் திரும்ப கெடைக்கும்னு நம்பிக்கை இல்லை. காலேஜ் படித்த போது நிறைய ஆண்களை தனக்கு பின்னால் அலைய வைத்தது இதுக்கெல்லாம் காரணம், அந்த சம்பவம் அவ மனதுள ஆழமான காயமா பதிஞ்சதுதான். இப்போ கூட நீங்க தப்பு பண்ணிருக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு காரணம் அவள் சொன்ன statements முன்னுக்கு பின் முரண்பாடாக இருந்தது. ஒரு அம்மாவா அவள நான் நம்பலாம், ஆனா ஒரு டாக்டரா அவள நான் நம்ப மாட்டேன். ஆனா என்ன, உங்க அப்பா பொண்ணுங்க 'அந்த விஷயத்துல' பொய் சொல்ல மாட்டாங்கன்னு, கொஞ்சம் செண்டிமெண்டா நம்பி உங்களைய நம்பாம போய்ட்டார். இப்போ கூட கல்யாணத்த என்னால நிறுத்த முடியும். ஆனா என் பொண்ண பத்தி புரிஞ்சவங்க அவள கல்யாணம் பண்ணிக்க யோசிப்பாங்க. நீங்க என்ன சொல்றிங்க." செல்வாவுக்கு மனது கனத்தது, இப்படி ஒரு காயம் காயத்ரிக்கு இருக்கும் என்று அவன் நினைத்து பார்கவில்லை. இப்போது கல்யாணத்தை நிறுத்தினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். காயத்ரிக்கு எதிர்காலத்தில் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகிவிடும். இந்த திருமணம் என்பது இரண்டு குடும்பங்களின் சேர்க்கை. இப்போ நடக்கிற இந்த கல்யாணத்தால் பாதிக்கபட போறது நான் மட்டும்தான். கல்யாணம் நடக்கட்டும், காயத்ரி மனதை மாற்ற நான் முயற்சி செய்கிறேன். ஒரு வேளை, முடியவில்லை என்றால் இருவரும் பிரிந்துவிட வேண்டியதுதான். இப்போதைக்கு இதுதான் சிறந்த முடிவு என்று நினைத்த செல்வா காஞ்சனாவை பார்த்து " இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க அத்தை" என்றான்.

முகத்தில் சிரிப்பு மலர "நன்றி மாப்பிள்ளை. முதல்ல என்ன அத்தைன்னு கூப்பிட்டதுக்கு, ரெண்டாவது அப்பிடி சொன்னதன் மூலம் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு. என் ஒரேஆசை என்னன்னா உங்க மனசு புரிஞ்சு உங்களோட அவ குடும்பம் நடத்தணும், எனக்கு பேரனோ பேத்தியோ நீங்க ரெண்டு பேரும், சீக்கிரத்தில் ரெடி பண்ணி கொடுக்கணும்" அவன் வெக்கபடுவதை பார்த்து சிரித்தாள் காஞ்சனா. "அத்தை உங்ககிட்ட இன்னும் கொஞ்சம் விஷயங்கள கேக்கணும்". "என்ன தெரிஞ்சுக்கணும் மாப்பிள கேளுங்க." "காயத்ரியோட விருப்பு வெறுப்பு, புடிச்ச மற்றும் புடிக்காத விஷயங்கள் எல்லாம் எனக்கு சொல்லணும். இப்போ முடிஞ்சா சொல்லுங்க இல்ல போன்ல சொன்னாலும் ஓகே தான்." "இப்போ ஓகே மாப்பள, ஆனா நாளைக்கு டைம் இருக்காது, கல்யாணத்துக்கு அப்புறம் அவள பத்தி நிறைய சொல்றேன்" அவர்கள் இருவரும் ஒரு மணி நேரம் பேசிய பிறகு, காஞ்சனா எழுந்திரிக்க முயல, செல்வா "அத்தை ஒரே ஒரு விஷயம். இந்த கவர்ல முக்கியமான டாகுமென்ட் வச்சிருக்கேன். நான் என்னைக்கு இத காயத்ரிகிட்ட கொடுக்கணும்னு சொல்றிங்களோ அன்னைக்கு, அவ கிட்ட நீங்க கட்டாயம் குடுக்கணும். இது என் விருப்பம். " "அவளுக்கு எதாவது கிப்டா? " "ஆமா அது மாதிரி தான்" என்று சொல்லி, சிரித்து கொண்டே கிளம்பினான் செல்வா. திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருப்பதால் மூர்த்தி காஞ்சனா தம்பதியினர் திருவேற்காடு கோவிலுக்கு சென்று திருமண ஏற்பாடு செய்தனர். திருமணத்துக்கு வேண்டிய பூ, பழம், மற்றும் கோவில் பூஜைக்கு தேவியான பொருட்களையும் கோவிலுக்கு அருகில் உள்ள கடையில் வாங்க ஏற்பாடு செய்தனர். இடையில் இன்னும் ஒருநாள் மட்டும் இருக்க மூர்த்தி காஞ்சனா தம்பதியினர், ஜம்புலிங்கம் பார்வதி தம்பதியினரை சந்திக்க காலை 9 மணிக்கு செல்வா வீட்டுக்கு வந்தனர். கல்யாண வேலைகளை பெண் வீட்டார்கள் பார்ப்பதால் மாப்பிள்ளை வீட்டுக்கு வேலை இல்லை. மொத்தம் 30 -35 பேர் கல்யாணத்துக்கு வருவார்கள் என்று இருதரப்பினரும் ஒரு லிஸ்ட் ரெடிசெய்து இரண்டு கார்களில் பத்திரிகை வைக்க தனி தனியாக சென்றனர். செல்வாவுக்கு வீட்டில் தனியாக இருக்க போரடித்தது. அவன் உயிர்நண்பன் செந்தமிழ் செல்வன் அவனை பார்க்க வந்திருந்தான். செந்தமிழ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அவன், நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவன். அவன் அருகில் இருந்தால் செல்வாவுக்கு பொழுது போவதே தெரியாது. அவனுக்கு காலையில் தான் தன் திடீர் திருமணத்தை தெரிவித்தான் செல்வா. " ஏன்டா எனக்கு தெரியாம எப்பிடிடா புடிச்ச? காலேஜ்ல பொண்ண கண்ட ஒடுவ? அப்பா அம்மா பாத்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு படம் காம்பிச்ச? இப்ப என்னடா ஆச்சு?". செல்வாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சமாளிக்க முடிவு செய்தான். "ஆபீஸ்ல தான் அவள பார்த்தேன். எனக்கு புடிச்சதால, அம்மா அப்பா கிட்ட சொல்லி சீக்கிரமே முடிச்சுட்டோம். எனக்கு 28 வயசு அடுத்த மாசம் ஆரம்பிக்கிறதால ஜோசியர் ஆலோசனைப்படி இந்த அவசர ஏற்பாடு" என்று சொன்னான். "சரி பொண்ணு பேரன்ன? என்ன படிக்கிறா? அப்பா அம்மா என்ன பண்றாங்க? கூட பிறந்தவர்கள் விபரம் சொல்லு" என்று கேள்விகளை அடுக்கினான். செல்வா தனக்கு தெரிந்த விபரங்களை வைத்து சமாளித்தான். "டேய் நாளைக்கு காலைல 6 .30 - 7 .30 முகூர்த்தம், நீ இன்னைக்கு நைட்டே வந்திடு". செல்வா எல்லார் கூடவும் நன்றாக பழக கூடியவனாக இருந்தாலும் அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் ஒருசிலரே. செந்தமிழ் உள்ளூர் என்பதால் அடிக்கடி பார்க்க வந்து விடுவான். "சரிடா நான் இரவு வருகிறேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினான் செந்தமிழ்.இதுக்கு இடையில் செல்வாவின் அலைபேசியில் அழைப்பு வர, யார் அழைப்பது என்று யோசித்து கொண்டே போனை எடுக்க, காஞ்சனா " என்ன மாப்பிளை போர் அடிக்குதா" என்று சிரித்தபடி விசாரிக்க, "இன்னும் ஒரு நாள்தான் கவலைபடாதிங்க, அப்புறம் 24 மணி நேரமும் உங்களுக்கு பத்தாது," என்று கிண்டல் செய்தாள். "போங்க அத்தை நீங்க வேற? என்ன விஷயமா கூப்பிடிங்க?" "மாப்பிள்ளை உங்க அம்மா அப்பா கிட்ட நாளைய ப்ரோக்ராம் பத்தி சொல்லிட்டேன். உங்ககிட்ட அதை பத்தி சொல்லலாம்னுதான் கூப்பிட்டேன். நீங்க 3.30-4 மணிக்கு எழுந்து குளித்து 5 மணிக்கு கிளம்பி கோவிலுக்கு 6 மணிக்குள்ள வந்துடனும். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. உங்களுக்கு, அப்பாவுக்கு பட்டு வேஷ்டி சட்டை. அம்மாவுக்கு பட்டுபுடவை. உங்களுக்கு தங்க சங்கிலி மோதிரம் எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்தில உங்ககிட்ட வந்து சேரும். " "எதுக்கு அத்த செயின் மோதிரம் எல்லாம். எனக்கு போட்டு பழக்கம் இல்ல" என்று மறுத்த செல்வாவிடம், " இல்ல மாப்ள இது சம்ப்ரதாயம் நீங்க மறக்காம ஏத்துக்கணும் ப்ளீஸ் என்றாள் காஞ்சனா." சொன்னது போல் அனைத்தும் வந்து சேர்ந்தன. இதற்கிடையில் செல்வாவுக்கு காயத்ரியை பத்தி நினைக்கையில் டென்ஷன். அவ இதை பத்தி நினைப்பாளோ? ஒரு வேலை எனக்கு மட்டும்தான் டென்சனா இருக்கா? அவகிட்ட இருந்து ஒரு போன்கால் கூட வரலையே என்று யோசித்தான். ஆம்பள பையன் நாமளே இன்னும் அவள கூப்பிடல, அவமட்டும் எப்படி கூப்பிடுவன்னு எதிர்பார்க்கலாம் என்று தன்னைதானே சமாதானபடுத்தி கொண்டான். திரும்ப யோசித்து பார்த்ததில் அவளை பொறுத்த வரையில் இது கட்டாய கல்யாணம். அதனால நாம ஒன்னும் எதிர்பார்க்க முடியாது. சீக்கிரமா அவ மாறுவா-ன்னு எதிர்பார்ப்பது தவறு. சரி, சில விஷயங்களை அதிரடியாக செய்வோம் என்று மனதுக்குள் முடிவெடுத்தான். காலை 7 மணி அளவில் திருமணம் திருவேற்காடில் எளிய முறையில் முடிய. புதுமண தம்பதியினர் இருவரையும் கடவுள் முன்னிலையில் நண்பர் மற்றும் உறவினர் வாழ்த்தினர். ஜோடி பொருத்தம் ஜோர் என்று செந்தமிழ் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர். தாலி கட்டும்போது தான் செல்வா காயத்ரியை கூர்ந்து கவனித்தான். அகலமான கண்கள், மைதீட்டியதால் இன்னும் அழகானது. நீண்டநாசி. சிறிய இதழ்கள்லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்திருந்தது. மெல்லியஉடல். மெலிந்த இடை. அளவான அழகியமார்பு. மொத்தத்தில் அவள் ரதி போல அவன் கண்ணுக்கு தெரிந்தாள். காயத்ரி ஓர கண்ணால் செல்வாவை பார்த்தாள். செல்வா எப்போதுமே பெண்கள் ஒருமுறை பார்த்தால் மற்றொரு முறை பார்க்க வைக்கும் வசீகரமான தோற்றம். காலேஜில் அனைவரும் அவனை Mr பெர்பெக்ட் என்று அழைப்பது வழக்கம். கூட இருந்த செந்தமிழ் கலாட்டா செய்து எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தான்.ஜம்புலிங்கதுக்கு சொந்தமான நீலாங்கரையில் உள்ள பங்களா மற்றும் பார்ம்ஹவுஸ் இடத்தில மாலை 5 மணிக்கு reception ஏற்பாடு செய்து இருந்தார். மாப்பிள்ளை வீடு செலவு என்பதால் ரிசப்சனுக்கு பணத்தை தண்ணீர செலவழித்தார் ஜம்புலிங்கம். இரு தரப்பில் இருந்தும் 1000 பேர் எதிர் பார்க்கப்பட்டனர். 4 மணியில் இருந்தே கூட்டம் கலை கட்டியது. லக்ஷ்மன்ஸ்ருதி musical nights ஏற்பாடு செய்து இருந்தார். சரியாக 5 மணிக்கு கோட்சூட்அணிந்து செல்வாவும், பளபளக்கும் பட்டுபுடவையுடன் காயத்ரியும் ரிசப்சன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தனர். செந்தமிழ் எல்லாரையும் கலாய்க்க, செல்வாக்கு சிரிப்பு தாங்கவில்லை. மனம் விட்டு சிரிக்கும் செல்வாவை புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தாள் காயத்ரி. 6 மணிக்கு ஆரம்பித்த பாட்டு கச்சேரி சுவையாக களைகட்ட, 8 மணி அளவில், செந்தமிழ் மேடை மீது ஏறினான். " அன்பு நண்பர்களே ஒரு முக்கிய அறிவிப்பு. இப்போ நான் ஒருத்தர பாட வைக்க போறேன். அவருக்கு சின்ன வயசிலே இருந்து கர்நாடிக் சங்கீதம்னா உயிர். அவர் காலேஜ்ல கொஞ்சம் ஹிந்துஸ்தானி மியூசிக் கத்துகிட்டார். இப்போ சூப்பர் சிங்கர் போட்டியில, அடுத்த மாதம் நடக்க போற இறுதி போட்டிக்கு ஏற்கனவே தேர்வானவர். அவர் இந்த மேடைல பாடணும்னு இங்க கூடி இருக்கிற 1000 க்கும் மேலான ரசிகர் சார்பாக கேட்டுக்கிறேன். He is none other than செல்வா." கூட்டத்தில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்ப "செல்வா செல்வா செல்வா" என்று கூட்டம் மந்திரம் இசைத்தது. செல்வாவுக்கு பாட தெரியுமா? காயத்ரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கு ஓரளவு சங்கீத ஞானம் உண்டு. அம்மா கட்டாயபடுத்தி கர்நாடிக் மியூசிக் கத்துக்க சொன்னதால் சிலவருடங்கள் கத்து கொண்டாள். தொடர முடியாமல்விட்டுவிட்டாள். செல்வா மேடையில் இருந்து இறங்கி தன்னிடம் வந்த செந்தமிழை பார்த்து "ஏன்டா உனக்கு அறிவில்லையா? ஏன் இப்படி பண்ணுற" என்று திட்ட ஆரம்பிக்க. காயத்ரியை பார்த்து "தங்கச்சி நீதாம்மா என்ன காப்பாத்தனும். கொஞ்சம் இவன் கிட்டசொல்லு please." "சாரிடா, நீ என் நண்பன்கிரதால உரிமை எடுத்து சொல்லிட்டேன். அட்லீஸ்ட் ஜனகனமன பாடி என் மானத்தை காப்பாத்து". என்று கெஞ்சினான். காயத்ரியை பார்க்க அவள் please என்று கண்ணால் கெஞ்ச, சரி புது பொண்டாட்டிக்காக ஒரு பாட்டு பாடலாம் என்று மேடைக்கு ஏறினான. "நண்பர்களே இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. இதை என் மனைவி காயத்ரிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்," என்று சொல்ல, கூட்டத்தின் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. " சம்சாரம் என்பது வீணை, சந்தோஷம் என்பது ராகம், சலனங்கள் அதில் இல்லை, மனம் குணம் ஒன்றான முல்லை." என்று பாட ஆரம்பிக்க, குண்டூசி போட்டால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம். அந்த பாடல் அனைவறைவும் கட்டி போட்டது. தேனினும் இனிய செல்வாவின் குரலில், கூட்டம் மதி மயங்கி நின்றது. காயத்ரி தன் கண்களை தன்னாலே நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். பாடல் முடிந்த போது எல்லோரும் எழுந்து நின்று கை தட்ட, காயத்ரி சுயநினைவுக்கு வந்து கைதட்ட ஆரம்பித்தாள். தன் இருக்கைக்கு திரும்பிய செல்வாவுக்கு கை கொடுத்தாள். unbelievable , superb . இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே அவள் வாயில் இருந்து வந்தது.காயத்ரிக்கு காலையில் திருமணம் முடிந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. "கனவா இல்லை நிஜமா? விளையாட்டாக நினைத்தது வினை ஆகி விட்டதா?" அவளுக்கு புரியவில்லை. "இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்வா தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வானோ? " என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. மாலையில் ரிசப்சன் என்று சொன்ன போது "என்ன இது என்னை கொஞ்சம்கூட ஓய்வு எடுக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது" என்று மனம் நொந்தாள். மாலை நீலாங்கரையை அடைந்தபோது கொஞ்சம் டென்சன் ஆக இருந்தது. செல்வாவை பார்த்தால், கொஞ்சம் கூட கவலைப்படுபவன் மாதிரி தெரியவில்லை. அவள் தன்னை தானே கடிந்து கொண்டாள். "என்ன இது செல்வாவை அவன் இவன் என்று பேசுவது தவறு. என்னதான் இருந்தாலும் தாலி கட்டிய கணவன் அல்லவா யாராவது பார்த்தால்கூட தப்பாக கதை பரப்பி விடுவார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது" என்று தீர்மானித்தாள். இனி மேலாவது மரியாதையாக கூப்பிடனும் என்று முடிவு செய்தாள். 6 மணிக்கு மேல் ரிசப்சன் களை கட்டியது. இதற்கு இடையில் பாட்டு கச்சேரி நடக்க, அனைவரும் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். 8 மணி அளவில் செல்வா நண்பர் செந்தமிழ் கலாட்டா செய்து செல்வாவை பாட வைக்க, காயத்ரிக்கோ நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யம். "செல்வாக்கு இந்த அளவுக்கு சங்கீதஞானம் உண்டா ? அவர் பாடிய பாடல் எனக்கு சமர்ப்பணம் என்று சொன்னது எனக்கு நம்ப முடியவில்லை. " மேடைக்கு திரும்பிய செல்வாவை பார்த்து என்ன சொல்வதென்று காயத்ரிக்கு புரியவில்லை. unbelievable, superb என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே அவள் வாயிலிருந்து வந்தது.

அதற்குள் கோவையில் இருந்து வந்த செல்வாவின் நண்பர்கள் செல்வா-காயத்ரியை சூழ்ந்து விட அவர்களோடு செந்தமிழ் சேர்ந்துவிட அப்புறம் நடந்த கலாட்டாவை பற்றி சொல்லவும் வேண்டுமா? செல்வாக்கு நண்பர்கள் அனைவரும் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் செந்தமிழ் மட்டுமே சென்னைவாசி மற்றும் நடுத்தர குடும்பம். செல்வா திருமணத்திற்கு வந்த அவனது௦ 10 நண்பர்களில் நான்கு பெண்களும் அடக்கம். பெண்கள் அனைவரும் செல்வாவை பார்த்து கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதிலும் ரேகா செல்வாவை பார்த்து "நீ என்னமோ லவ் பண்ண மாட்டேன், அம்மா அப்பா பாத்த பொண்ணதான் கட்டிக்குவேன்னு சொன்ன. இப்ப என்னடான்னா காதல் பண்ணிக்கிட்டு நிக்கிற?" செல்வா அசடு வழிய நின்றான். அவனை பார்த்து பரிதாபபட்ட காயத்ரி அவனை காப்பாற்ற எண்ணி, "இது லவ் கம் அரேஞ்ச்டு மேரஜ். எங்க ரெண்டு பேரோட அப்பாவும் நண்பர்கள். அதுனால இந்த கல்யாண ஏற்பாடு சீக்கிரம் முடிஞ்சுது." பக்கத்தில் இருந்த கவிதா, "என்னடா நான் லவ் பண்ணுறேன்னு சொன்னப்ப உங்க அம்மாகிட்ட கேக்கனும்னு சொன்ன, எனக்கு advice பண்ணுன, என்ன காயத்ரி இவன் என்ன பத்தி சொன்னானா?" என்று கேட்க, செல்வா "ஏண்டி கலாட்டா பண்ணுற? காயத்ரி சாரி இவ கிண்டல் பண்ணுறா. இவள் சொல்லுறது உண்மை இல்லை" என்று படபடப்பாக சொல்ல, கவிதா "இங்க பாருடா இபபவே பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆயிட்டான் " என்று கிண்டல் செய்ய, அந்த இடமே கலகலப்பாக ஆனது. "செல்வா நாங்க நாலு பேரும் உன் பொண்டாட்டி கூட தனியா பேச போறோம், உன்ன பத்தி நெறைய சொல்ல வேண்டி இருக்கு", என்று சொல்லி விட்டு கவிதா, ரேகா மற்றும் மற்ற தோழிகளான வாசுகி, ஜீவாவுடன் கொஞ்சம் தள்ளி சென்று காயத்ரி உடன் பேச ஆரம்பித்தனர்.கவிதா காயத்ரியிடம், "நாங்க சொன்னதெல்லாம் பொய். செல்வா எங்க நண்பன். நாங்க எல்லாரும் PSG ல ஒன்னா படிச்சோம். என்னைக்குமே அவன் பொண்ணுங்கள்கிட்ட தப்பா நடந்துகிட்டது கிடையாது. என் கிளாஸ்ல இருக்குற இருபது பொண்ணுங்களும் ஒற்றுமையா இருக்கிற ஒரே விஷயம் அவனோட நட்பு தான். நான் கூட அவன லவ் பண்ணுறதா சொன்னபோது, அவன் சொன்னது இப்பவும் என்காதுல கேட்டுகிட்டே இருக்கு. "கவிதா, எனக்கு காதலை விட நட்பு பெருசு. இப்பகூட நான் சொன்னா என்னோட அம்மாவும் அப்பாவும் காதல் கல்யாணத்துக்கு ஒதுக்குவாங்க. ஏன்னா நான் வீட்டுக்கு ஒரே பையன். ஆனா என்னோட கல்யாணத்த பத்தி அவங்களுக்கு பல கனவு இருக்கு. அத நான் கலைக்க விரும்பல. அதோட படிக்கிற வயசுல வர்ற காதல் சரியானது கிடையாது. இப்போ நான் என்னோட அப்பா காசுல படிக்கிறேன். எப்போ என் சொந்த கால்ல நிக்கிறேனோ அப்பதான் எனக்கு காதல் பண்ணுற தகுதி வந்து விட்டதா நினைக்கிறேன். எனக்கு இப்போ அந்த தகுதி இல்லை. என்னை தப்பா நினைக்காதே. நீ எப்போவும் என் தோழியா இருக்கணும்." அப்போ செல்வா சொன்னப்ப எனக்கு புரியல. அவன் கூட கோபபட்டு நான் ரெண்டு மாசம் பேசல. பிறகு அவனோட அந்த நல்ல குணம், நான் பேசாட்டினாலும் வலிய வந்து பேசும் தன்மை, எனக்கு புடிச்சு போச்சு. திரும்ப நாங்க நண்பர்கள் ஆயிட்டோம். நீங்க ரெண்டு பேரும் காதல் கல்யாணம் பண்ணிகிட்டதா எனக்கு செந்தமிழ் சொன்னான். அதுனால எனக்கு சந்தேகம் வந்தது, ஒரு வேளை அவனை பத்தி முழுக்க தெரிஞ்சுதான் நீ ஒத்துகிட்டியான்னு. . எதுவாக இருந்தாலும் சரி, அவன் ரொம்ப நல்லவன். அவனை புரிஞ்சிக்க. இதுதான் எங்க வேண்டுகோள். மத்தபடி உனக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம். எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு. எங்க எல்லாரோட வாழ்த்துக்களும் எப்போவும் உங்களுக்கு உண்டு. " காயத்ரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி அக்கா என்று தலை அசைக்க, கவிதாவுக்கு தன்னை அக்கா என்று அழைத்த காயத்ரியை புடித்து போனது. காயத்ரிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. செல்வாவை பற்றி தான் நினைத்து எல்லாம் தவறாக ஆகி விட்டதே. அவனை பற்றி அவன் அப்பா அம்மா தவறாக நினைத்து விட்டார்களே. செல்வா மனது என்ன பாடுபடும். என்னை கட்டாயம் அவன் வெறுப்பான் என்று எண்ணி கண் கலங்கினாள். அனைவரும் செல்வா இருக்கும் இடம் வந்தபோது மற்ற நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த செல்வா, "என்ன கவிதா வத்தி வச்சிட்டியா?. இப்ப ரொம்ப சந்தோசமா? " என்று கிண்டலடித்தான் செல்வா. "டேய் செல்வா, உங்க ஹனிமூனுக்கு ஊட்டில காடேஜ் புக் பண்ணி இருக்கோம். அடுத்த வாரம் முழுக்க. என்ன ஓகே வா"என்று கண் சிமிட்டினான், நண்பன் குரு. மற்ற நண்பர்களும், "செல்வா நாங்க அவசரமா விமானத்ல வந்தோம் இப்போநைட் சேரன் - ல கிளம்பனும், நாங்க புறப்படுறோம்"என்றுவிடைபெற, கவிதா மட்டும் காயத்ரியிடம் வந்து காதோரமாக, "நீங்க ரெண்டு பேரும் ஊட்டி கிளம்பும்போது எனக்கு போன் பண்ணு, ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.உன் போன் நம்பர் சொல்லு என்று குறித்து கொண்டு, இந்தா என் போன் நம்பர்" என்று கொடுத்து விட்டு கிளம்பினாள். நடந்ததை அறியாத செல்வா, மனம் கலங்கி நின்ற காயத்ரியை பார்த்து, தன்னுடன் நடந்த கல்யாணத்தை பற்றி காயத்ரி கலங்குவதாக எண்ணிவிட்டான். இந்த இரு மனங்களும் நேர் கோடில் இணைவது எப்போது? செல்வாவும் காயத்ரியும் ரிசப்சன் முடிந்து மூர்த்தி காஞ்சனா தம்பதியினர் வீட்டுக்கு கிளம்பினர். பார்வதி செல்வாவுடன் "இன்று இரவே முதல் இரவு ஏற்பாடு செய்திருப்பதாக" சொல்ல, "ஏன் அம்மா இன்று முழுக்க அலைச்சல் அதிகம் ஆயிற்றே, வேறொரு நாளில் வைத்து கொள்ளலாமே என்று கேட்க, இவர்கள் பேச்சை கேட்ட காஞ்சனா சிரிப்புடன் "இல்ல மாப்பிள்ளை இன்னைக்கு நல்ல நாள். இத விட்டா இன்னும் ஒரு வாரம் ஆகும். நல்லநேரம் 11 மணிக்கு தொடங்குது. இப்போ மணி 9 .30 வீட்டுக்கு போய், நீங்க குளிச்சுட்டு ரெடி ஆனா சரியாய் இருக்கும்" என்று சொல்லி விட்டு, "அவனவன் முதல் இரவுக்கு அவசரப்படுவாங்க நம்ம மாப்பிள்ளை என்ன்னன்னா பயப்புடுறார்", என்று மனதுக்குள் சிரித்தாள். செல்வா காயத்ரி முதல் இரவுக்கு, இரண்டாவது மாடியில் இருந்த புதிய கெஸ்ட் ரூம் தயாராக இருந்தது. செல்வா படுக்கையில் உக்கார்ந்து காயத்ரிக்காக காத்து கொண்டு இருந்தான். அந்த ஏசி யிலும் அவனுக்கு வேர்த்தது. "இதை தள்ளி போடலாம் என்று நினைத்தால், முடியவில்லையே. சரி காயத்ரி வரட்டும் பேசி கொள்ளலாம்" என்று விட்டு விட்டான். சரியாக 11 மணிக்கு அழகு தேவதையாக அறைக்குள் நுழைந்தாள். நிறைய விஷயம் பேச வேண்டும் என்று நினைத்த செல்வா அவளை கண்டவுடன் அனைத்தையும் மறந்து இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான். குறைவான அலங்காரம், தலையில் மல்லிகை பூவுடன், பட்டு புடைவையில் இருந்து பருத்தி புடவைக்கு மாறியிரிந்த அழகு பாவையை மேலிருந்து கீழாக பார்த்து பரவசம் அடைந்தான். கையில் பால் சொம்புடன் இருந்த காயத்ரி, "என்ன செல்வா எவ்வளவு நேரம்தான் என்னை இப்படியே பாப்பிங்க. கால் வலிக்குது please" என்று சிணுங்கினாள். செல்வாவுக்கு சுயநினைவு வந்தது. "சாரி" என்று மன்னிப்பு கேட்டு, அவளை கட்டிலில் உட்கார சொல்ல, அவன் பால்சொம்பை தன்னிடம் இருந்து வாங்குவான் என்று எதிர்பார்த்து ஓரகண்ணால் செல்வாவை பார்த்தாள் . செல்வா என்ன பேசவேண்டும் என்பதை மனதுக்குள் முடிவு செய்து விட்டு பேச ஆரம்பித்தான். "காயத்ரி நமக்கு காலத்தின் கட்டாயத்தினால் கல்யாணம் ஆகி விட்டது. உன்னோட நெலமை எனக்கு புரியிது. நம்ம ரெண்டு பேரோட பெற்றோர்களுக்காக நாம கணவன் மனைவிய நடிச்சுதான் ஆகணும். நாலு சுவத்துக்குள்ள நாம ரெண்டு பேரும் நண்பர்கள், ஆனா வெளியில் கணவன் மனைவி. இதை தொடருவோம்." ஒரு வேளை நமக்குள்ள ஒத்து போகலைனா, நாம கணவன் மனைவியாக தொடர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நாம பிரிஞ்சுடலாம். நான் உன்னை கட்டாயபடுத்த விரும்பலை. ஆனால் இப்போவும் எப்போவும் நாம நண்பர்களா இருக்கணும். இது உனக்கு புடிச்சுரிக்கா?" என்று கேட்க, "என்ன இந்த மனுஷன் இப்படி இருக்கார், முதல் இரவு அன்னைக்கு பேசுற பேச்சா இது. பெரிய கண்டிசன் போடுறாரு. சரி, நாம இத சீக்கிரம் உடைக்கணும்" என்று முடிவு செய்து, "நீங்க சொல்லுறது சரி, நான் இப்போ என்ன பண்ணுறது? என்று பாவமாக கேட்க, பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாத செல்வா, சிரித்தபடி "நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். இப்போதைக்கு நீ இந்த கட்டில்ல படுத்துக்கோ, நான் கீழ படுத்துக்கிறேன்" என்று சொல்ல," இல்ல நீங்க மேல, நான் கீழ படுத்துக்கிறேன் please" என்று கொஞ்சலாக சொல்ல. "நோ, எனக்கு ஸ்கூல்ல படிக்கிறப்பவே தரையில் படுத்துத் தான் பழக்கம். அதுனால எனக்கு கஷ்டம் இல்ல", என்று சொல்லியபடி, ஒரு தலையணை மற்றும் போர்வையை எடுத்து தரையில் விரித்து படுத்தான். தூங்காமல் விழித்து கொண்டிருந்த காயத்ரியை பார்த்து தூங்கவில்லையா, என்று கேட்டதற்கு, பாவி இப்பிடி என் வயிதேரிச்சல கொட்டிக்கிரியே, என்று முனகி கொண்டு, "ஒன்னுமுள்ள தூக்கம் வர மாட்டேங்குது. எப்போவும் நான் என் அம்மா கையை பிடிச்சு தான் தூங்குவேன், இன்னைக்கு எப்படி தூங்க போறேன்னு தெரியல. நீங்க எனக்காக ஒரு பாட்டு பாடுவிங்களா" என்று கெஞ்சி கேட்க, செல்வா சரி ஒரு பாட்டு பாடுவேன், ஆனா கட்டாயம் தூங்கணும் என்று சொல்லி விட்டு பாட ஆரம்பித்தான். "மனைவி அமைவதல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று பாட, கன்னத்தில் கைவைத்து கொண்டு ரசித்து கேட்டாள் காயத்ரி. என்ன ஒரு இனிமையான குரல் என் கணவனுக்கு. நான் அதிஷ்டசாலி தான், என்று நினைத்து கொண்டே கேட்டாள். பாட்டு முடிய செல்வாவும் உறங்கி விட்டான். நெற்றியில் கையை மடக்கி வைத்து கொண்டு அவன் தூங்கிய காட்சி காயத்ரிக்கு பிடித்து இருந்தது. சத்தம் போடாமல் மெல்ல நடந்து வந்து அவன் அருகில் உட்கார்ந்து அவனை உற்று பார்த்து கொண்டு இருந்தாள்.

செல்வா 02


நேரம் 8 . 45 , ஆபீஸ் ஆரம்பிக்க இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு. அதுக்குள்ள காயத்ரி உடன் பேச அவள் உட்கார்ந்திருந்த cubicle அருகே சென்று, "Hello காயத்ரி எப்படி இருக்கீங்க ? உங்களோட கொஞ்சம் பேசணும், என் காபினுக்கு வரமுடியுமா? " "எதுக்கு சார், ஏற்கனவேநேத்துபேசியாச்சு. " "இல்ல ஒரு 10 நிமிஷம் தான், வந்துட்டு போறிங்களா ப்ளீஸ்." "இவனோட பெரிய இம்சையா போச்சு. சரி கம்பெனில பெரிய பொறுப்புள இருக்கான் என்ன சொல்றான்னு தான் பாக்கலாம்". காயத்ரி காபினுக்குள் நுழைந்தாள். கதவு மூடப்பட்டது நேரம் ஓடியது 10 நிமிடம், 15 ஆகியது. ஆபீஸ்ல எல்லாரும் வந்து விட்டார்கள். இன்னும் 5 நிமிஷம் grace டைம் இருக்கு. அந்த 5 நிமிஷத்துக்குள்ள ஒரு 4 பேரு வந்தாங்க. அதைதொடர்ந்து செக்யூரிட்டி கம்பெனி கதவை மூடிய போது மணி 9 .05 . அப்போது, அய்யோ காப்பாத்துங்க என்று ஒரு குரல், அதை தொடர்ந்து என்னை விடுடா என்று மெல்லிய அலறல் சத்தம் கேட்டது செல்வா காபின்ல இருந்து.

PA ரமா மற்றும் பெண் ஊழியர்கள் அவசரமாக ஓடிசென்று கதவை தட்ட போனபோது, அதற்கு சற்றே முன்பு கதவு திறந்தது. உள்ளே......ரூமில என்ன நடந்தது என்று அறிய ஒரு 20 நிமிஷம் முன்னால போகலாம். நேரம் 8 45 am செல்வா ரூமுக்குள் நுழைந்து அவன் சீட்டில் அமர, உள்ளே வந்த காயத்ரியை எதிரில் இருந்த சீட்டில் அமர சொன்னான். காயத்ரி அலட்சியமாக கால் மேல கால் போட்டு அமர, செல்வா-க்கு கோபம் வந்தது. தவறு செய்யாத நான் டென்சன்ல இருக்கேன். அவ என்னடான்னா கால் மேல கால் போட்டு உக்கார்றா. "காயத்ரி உங்க பிரெண்ட் பூஜாகிட்ட பேசி இருப்பிங்கன்னு நெனைக்கிறேன். உண்மை தெரிஞ்சுருக்கும். என் மேல தப்பு இல்லன்னு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன் " "ஆள் ஸ்மார்டா தான் இருக்கீங்க. காசு குடுத்து போலிச விலைக்கி வாங்கிட்டிங்க. என் பிரென்டையும் மயக்கிடிங்க போலிருக்கு" அதற்கு மேல் அவள் நக்கலாக பேசியதை பொறுக்க முடியாத செல்வா சீட்டிலிருந்து கோபமாக எழுந்தான். "இங்க பாரும்மா, என்னோட பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு. ஆபீஸ் ஆரம்பிக்கிற நேரம். சீக்கிரம் என்கிட்டே மன்னிப்பு கேட்டா, இந்த விஷயத்த இதோட மறந்திறலாம் "காயத்ரிக்கு முகம் சிவந்தது. "என்னையா பெரிய மயிறு மாதிரி பேசிற. பண்றதையும் பண்ணிட்டு என்ன பெரிய மகாத்மான்னு நினைப்பு. இப்போ நெனைச்சென்ன கூட உன் பேர ரிப்பேர் செய்ய முடியும். உன் அப்பா வந்த உடனே உன்னை பத்தி சொல்ல போறேன். ஆபீஸ் staff எல்லார் கிட்டயும் உன்ன பத்தி சொல்ல போறேன். உனக்கு எல்லார் கிட்டயும் நல்ல பேர் இருக்கு அதையும் கெடுக்க போறேன். உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ" செல்வா கோபத்த அடக்க முடியாமல் ரூம விட்டு வெளியே போக இருந்தவளை, இழுத்து கன்னத்தில் அறைந்தான். காயத்ரி அவ காலேஜ்ல படிக்கிறப்ப பலபசங்கல தன் அழகால அலைய விட்ருக்கா. வீட்டிலையும் யாரையும் விட்டு வக்கிரதில்ல. தான் சொன்ன பேச்சை கேக்கணும், தனக்கு முக்கியத்துவம் குடுக்கணும் அப்புடின்னு எப்பவும் நினைப்பா. ஒரே தங்கை இருந்தாலும் அவ அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் காயத்ரிய புடிக்கும். யாரும் அவளை திட்டினதோ / அடிச்சதோ இல்ல. அதனால செல்வா அடிச்சது அவளுக்கு கடும் கோவத்தை வரவழைத்தது. கோபம் புத்தியை மறைக்க அவனை பார்த்து கத்தினாள். "என்னடா என்னைய அடிச்சில்ல. இதை நெனைச்சு நீ வாழ்நாள் முழுக்க அழணும். உன்ன விட மாட்டேன். இப்போ பாரு உன் நெலமையை " தனது சேலையை, ஜாக்கெட் மற்றும் பாவாடையை கிழித்து, "ஐயோ காப்பாத்துங்க" என்று உரக்க கத்தி விட்டு, அவனை பார்த்து முறைத்து கொண்டே, "என்னை விடுடா" என்று சொல்லியபடி அவள் கதவை திறக்க, ரமாவும் சில பெண் ஊழியர்களும் உள்ளே வந்தனர். தன் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்திருந்தான் செல்வா. "என்ன பிரச்சனை? ஏன் கூட்டமா இருக்கு? என்று கேட்டு கொண்டே ஆபீஸ் உள்ளே நுழைந்தார் ஜம்புலிங்கம்.ஜம்புலிங்கதுக்கு ஆபீஸ் உள்ளே வரவர செல்வா காபின் வாசல்ல ஒரு பெண் அழுது கொண்டு இருந்ததை பார்த்தார். ஜம்புலிங்கதுக்கு ஏற்கனவே, அந்த பெண்ணை பார்த்த ஞாபகம் வந்தது. இந்த பொண்ணு எனக்கு secretary ஆக ஜாயின் பண்ண வேண்டிய பொண்ணு ஆச்சே. ஏன் அழுதுகிட்டு இருக்கா, ஏதோ பெரிய அளவுல பிரச்சனை இருக்கு, விசாரிக்கணும்னு முடிவு செஞ்சிட்டு, "உன் பேரு என்னம்மா" என்று கேட்டார். சார் என் பேரு காயத்ரி என்று அழுது கொண்டே சொல்ல, அவளை அழைத்து கொண்டு, அவர் காபினுக்கு விரைந்தார். உள்ளே நுழைந்து, அவளை சீட்ல உக்கார சொல்லிட்டு, calling bell லை அழுத்தி, ஆபீஸ்பாய் வந்தவுடன், சூடா காபி கொண்டு வர சொல்லி விட்டு, "காயத்ரி சொல்லும்மா என்ன நடந்துச்சு?" என்று விசாரித்தார். அவர் கேட்டவுடன் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். அவள் அழுது முடியட்டும் என்று வெயிட் செய்ய அதற்குள் காபி வந்தது, "முதல்ல காபி குடிம்மா" என்று காயத்ரியை குடிக்க சொன்னார் "இப்போ சொல்லுமா என்ன நடந்துச்சு? " என்று கேக்க. "சார் நான் சொன்னா நம்புவிங்களா? உங்க பையன் என்கிட்டே தப்பா நடந்துகிட்டார்". ஜம்புலிங்கதுக்கு தன் காதில் விழுந்ததை நம்ப முடியவில்லை. செல்வாவை பற்றி இது வரை ஒருவரும் தப்பா சொன்னதில்ல. அதோட அவன் ஸ்கூல் படிச்சது திருப்பராய்துறை ராமகிருஷ்ணமிசன் ஸ்கூல்ல. அதுனால அவன் தப்பு பண்ணி இருப்பான் அப்பிடின்னு அவரால நம்ப முடியலை. ஒரு முறை யோசித்து விட்டு, இது பொண்ணு சம்பந்தபட்ட விஷயம், பாத்து கையாளனும் என்று நினைத்து கொண்டே "அம்மா காயத்ரி உன் அப்பா நம்பர கொடு". cell நம்பர வாங்கி காயத்ரி அப்பா மூர்த்திடம் பேசி, அவரை அவர் மனைவியுடன் ஆபீசுக்கு உடனே வர சொன்னார். என்ன விஷயம் அப்டின்னு கேட்க. "ப்ளீஸ் வாங்க நேரடியா பேசலாம்னு" சொன்னார் ஜம்புலிங்கம். இந்த பக்கம் அவர் மனைவி பார்வதியை உடனே கிளம்பி வர சொன்னார். நடப்பதை எல்லாம் கவனித்த காயத்ரிக்கு கட்டாயம் ஒரு பிரளயம் ஏற்பட போகுதுன்னு புரிந்தது. மனதுக்குள் சந்தோஷம் இருந்தாலும், வெளியே காண்பிக்காமல் முகத்தை சோகமாக வைத்து கொண்டு இருந்தாள்.செய்தி கேள்விப்பட்ட அரை மணி நேரத்தில், காயத்ரி அப்பா முர்த்தி தன் மனைவி காஞ்சனா உடன் காரில் SISIL ஆபீசுக்கு வந்து இறங்கினார். சரியாக அதே நேரத்தில் பார்வதியும் காரில் வந்தார். அனைவரும் ஜம்புலிங்கம் காபினுக்கு வர அங்கே உக்கார்ந்திருந்த காயத்ரியை பார்த்த வுடன் மூர்த்தி தம்பதிக்கு நிம்மதி வந்தது. அவர்களை கண்ட ஜம்புலிங்கம் ஒரு சிறிய அறிமுகம் செய்துவிட்டு " நீங்க உங்க பொண்ணு கிட்ட பேசுங்க. நான் 5 நிமிஷத்ல வரேன்" என்று சொல்லி விட்டு, தன் மனைவி பார்வதியை அழைத்து கொண்டு செல்வா ரூமுக்குள் நுழைந்தார். செல்வா இன்னும் நடந்ததை நம்ப முடியாமல் தன் சேரில் தலை குனிந்து உட்கார்ந்து இருக்க, அவன் அப்பாவும் அம்மாவும் அவனருகே வந்தனர். "என்னடா நடந்துச்சு" என்று ஜம்புலிங்கம் விசாரிக்க, அவன் நடந்தது எல்லாத்தையும் விபரமாக கூறினான். "அய்யோ ஜோசியக்காரன் சொன்ன மாதிரி ஆயுடுச்சே, உனக்கு 28 வயசுல பொன்னால கண்டம் வரும்னு சொன்னாரே, உண்மை ஆயிடுச்சே" என்று புலம்ப ஆரம்பித்தாள் பார்வதி. "ஏய் கொஞ்சம் வாய மூடுறியா, சரியான ஜோஷிய பைத்தியம்", என்று கோபப்பட்ட ஜம்புலிங்கம், மகனிடம் "நீ சொல்றது உண்மையா இருந்தா சரி, நான் அந்த பொண்ணுகிட்டயும் பேசுவேன். நீ தப்பு பண்ணி இருந்தா அதுக்கப்புறம் விளைவுகள் கடுமையா இருக்கும்", என்று எச்சரித்து விட்டு தனது காபினுக்கு திரும்பினார்அதே நேரத்தில் அங்கே காயத்ரிஇடம் அம்மா கேள்விகளை எழுப்பினாள். ஏண்டி நீ சொல்றத நம்ப முடியலை. என்னடி நடந்தது.

காயத்ரி சில விஷயங்களை மறைத்து செல்வா பற்றி மட்டமாக சொன்னாள். காஞ்சனா மூர்த்தியை கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க சொல்லிட்டு, "என்னடி உன்னைய என்ன பண்ணுனான்". "என்னைய அவன் rape பண்ணிட்டான்அம்மா"ன்னு சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள். "இன்னைக்கு காலைல நான் தனியா இருக்கிறதா பாத்து, முக்கியமான விஷயம் பேசணும்னு அவன் ரூமுக்கு கூட்டி போயி என்ன நாசம் பண்ணிட்டான் அம்மா. நான் எப்படி உங்க மொகத்தில முழிப்பேன்" திரும்பவும் அழ ஆரம்பித்தாள். "ஏண்டி நீ சொல்றது உண்மையா". "அம்மா நான் சொல்றதுல்ல நம்பிக்கை இல்லையா". "இல்லடி நான் ஒரு சைடை மட்டும் முடிவு பண்ண முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணு" என்று சொல்லி விட்டு வெளிய வந்த போது, அங்கே மூர்த்தி, ஜம்புலிங்கம், பார்வதி நிற்க, அவர்களுடன் நடந்த விஷயம் பற்றி விளக்கினாள். பார்வதியும் செல்வா சொன்னதை பகிர்ந்து கொள்ள அங்கே குழப்பம் நிலவியது. ஜம்புலிங்கம் ஒரு யோசனை சொன்னார், "அவங்க ரெண்டு பேரையும் தனியா confererence ரூமில பேச விடுவோம். உள்ளே ஸ்பீக்கர் போன on பண்ணிட்டா, உள்ள பேசுறது என் ரூம்ல கேக்கும். அவங்க ரெண்டு பேரும் யாரும் இல்லாதனால உண்மையா பேசுவாங்க. நம்ம எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சுடும்". "நல்ல யோசனை" என்று ஆமோதித்தார் மூர்த்தி. இதை காயத்ரி மறைந்து நின்று கேட்டது அவர்கள் நால்வருக்கும் தெரியாது மூர்த்தி காயத்ரியை சந்தித்து, "இந்தா பாரும்மா நீங்க ரெண்டு பேரும் சொல்றது வேற வேற மாதிரி இருக்கு, அதுனால நீங்க ரெண்டு பேரும் தனியா பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்று சொல்லி, "அந்த conference ரூம் போங்க" என்று அனுப்பி வைத்தார். அதற்குள் செல்வாவிடம் ஜம்புலிங்கம் பேசி conference ரூமுக்குள் அனுப்ப, மற்ற நால்வரும் ஜம்புலிங்கம் ரூமுக்கு போய் ஸ்பீக்கர்போன் on செய்து கேட்க ஆரம்பித்தனர்.செல்வாவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. மூளை செயல்படும் தன்மையை மறந்து விட்டது. conference ரூமுக்குள் நுழைந்த காயத்ரியை பார்த்த உடன் மீண்டும் கோபம் வந்தது. கத்த ஆரம்பித்தான் "உனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படி நடந்துக்கிற? நான் அறைஞ்சது ஒரு சில்லிமேட்டர். அதுக்கு உன் கற்பை பணயம் வைப்பியா? " காயத்ரிக்கு அவன் சொன்னது புரிந்தாலும், எக்காரணத்தை முன்னிட்டும் பின்வாங்கக் கூடாது என்று முடிவெடுத்து, "இப்ப தப்பு பண்ணினது யாரு, நானா இல்லை நீயா?எப்படியும் ஒன்னபத்தி போலீஸ்ல புகார் கொடுக்க போறேன். அப்ப யார் சொல்றது உண்மைன்னு புரியும் " "இங்க பாரு. நான் ஆம்பளை, எனக்கு என்ன ப்ரச்னைனாலும் மத்தவங்க மறந்துடுவாங்க. ஆனா உன் நெலமை வேற. புரிஞ்சிக்க. முட்டாள்தனமா முடிவு எடுக்காத. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல. உன்னை அடிச்சதை நெனைச்சு நான் வருத்தபடறேன். (www.tamilsexstoriespdf.com ) மன்னிப்பு கேட்டுக்கிறேன். ப்ளீஸ் இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம்" கைகூப்பி கேட்ட செல்வாவை பார்த்து காயத்ரி யோசித்தாள், நான்தான் ரொம்ப டூ மச்சா போறேனோ? அவளது மூளையோ "அதல்லாம் இருக்கட்டும், இவன் உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். இவனை விட்டா நம்ம பத்தி எல்லார் கிட்டயும் தப்பா சொல்லுவான். சேத்துல கால வச்சாச்சு , இனிமே பொரண்டு தான் ஆகணும். "செல்வா நீ சொல்றது புரியலை, என்னை நாசம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா எல்லாம் தீந்துடுமா? என் அம்மா அப்பாகிட்ட நடந்ததை சொல்லிட்டேன், இனிமே அவங்க சொல்றது தான் என் முடிவு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நான் கெளம்புறேன்" ரூம விட்டு வெளிய வந்த காயத்ரிக்கு பதட்டமா இருந்தது, ஒரு வேள இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா என்ன பண்றது. பெரிய பருப்பு மாதிரி எல்லாரும் (speaker ல) கேக்குறப்ப எங்க அம்மா அப்பா சொல்றதுக்கு கட்டுபடுறேன்கிற மாதிரி கமிட் பண்ணிட்டேன். இப்போ வசமா மாட்டிக்கிட்டேன் அவள் conference room ல இருந்து வெளியே வருவதை அறிந்த ஜம்புலிங்கம் ஸ்பீக்கர் போன அணைத்தார். வேகமாக அவர் ரூமிற்குள் நுழைந்து, "அம்மா அப்பா எனக்கு செல்வாகிட்ட பேசுறதுக்கு ஒன்னும் இல்ல, திரும்ப கட்டாயபடுத்தாதிங்க", கண்களை துடைத்து விட்டு, ஒரு மூலையில் இருந்த சோபாவில் உக்கார்ந்தாள். அவளை தொடர்ந்து வந்த செல்வாவும் என்ன பேசுவது, என்று தெரியாமல் கண்கள் கலங்கி நின்றான். "செல்வா காயத்ரி சொல்றது உண்மையா? ஏன் பொய் சொன்ன? உன்ன நாங்க எவ்வளவு நம்பினோம்? என் நம்பிக்கைய பொய்யாக்கிட்டியே படுபாவி உன்னை என் பையன்னு சொல்றதுக்கு எனக்கு வெக்கமா இருக்கு " "இல்லப்பா நான் தப்பு பண்ணலப்பா ஆனா சந்தர்பங்களும், சாட்சிகளும் எனக்கு எதிரா இருக்கு" தொண்டை தழுதழுக்க சொன்ன செல்வாவை பார்த்து "ஏன்டா திரும்ப பொய் சொல்ற" என்று கோபத்துடன் அடிக்க வர, மூர்த்தி "என்ன சார் வளந்த பையன அடிக்கிரிங்க"ன்னு ஜம்புலிங்கதை தடுத்தார்.அதுவரை பேசாமல் இருந்த Dr காஞ்சனா பேச ஆரம்பித்தாள். "நாம என்னோவோ ஒரு தலைபட்சமா யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கு செல்வாவை பாத்தா பொய் சொல்ற மாதிரி தெரியலை. கொஞ்சம் நம்ம வேற கோணத்துல விசாரணை பண்ணனும" காயத்ரிக்கு அவள் அம்மா மீது கோவம் வந்தது. அம்மா காரியத்த கெடுத்துடுவா போலன்னு, "அம்மா அப்ப நான் சொல்றது பொய்னு சொல்றிய, நான் செத்தா தான் நம்புவியா" என்று சொல்ல, "இரும்மா நான் உன்னை நம்புறேன், ஒரு பொண்ணு எக்காரணத்த முன்னிட்டும் கற்பு விஷயத்துல விளையாட மாட்டா. அதனால செல்வா சொல்றது எதையும் நம்ப வேண்டாம். செல்வா நீ உன் ரூமுக்கு போ. காயத்ரி நீ இங்கயே இரு. வாங்க நாம நாலு பேரும் conference ஹால் போய் பேசி முடிவுக்கு வரலாம்" என்று சொன்னார் ஜம்புலிங்கம். கிட்டத் தட்ட அரை மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடந்தது. இதற்குள் ஆபீஸ் முழுக்க விஷயம் பரவி விட்டது. பாதிக்கு மேல் பெண்கள் வேலை செய்யும் ஆபீஸ் அது. எல்லாருக்கும் செல்வா மேல் மதிப்பும் மரியாதையும் உண்டு. சேர்மன் மகனாக இருந்தாலும் எல்லாருடனும் சிரித்து பேசி பழக கூடியவன் செல்வா. அதனால் அவர்களால் இதை நம்ப முடியவில்லை. பார்வதி செல்வாவையும், Dr காஞ்சனா காயத்ரியையும் அழைத்து conference ஹால் வர, ஜம்புலிங்கம் ஆரம்பித் தார். "இந்த பாருமா, நாங்க எல்லாரும் நடந்த விஷயபத்தி discuss பண்ணினோம். நடந்தது மன்னிக்க முடியாத குற்றம், எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இப்பிடிப்பட்ட பிள்ளைய பெத்ததுக்கு நாங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டுக்குறோம்". 2 செகண்ட் இடைவெளி விட்டு "மன்னிப்பு கேட்டா மட்டும் தீர்ற விஷயம் இல்ல இது ,அதனால நாங்க ரொம்ப நேரம் யோசிச்சதுல்ல எங்களுக்கு ரெண்டு options கெடைச்சது. ஒன்னு போலீஸ்ல செல்வா மேல கம்ப்ளைன்ட் குடுக்குறது, அதுக்கு முன்னால உங்க அம்மா மெடிக்கல் டெஸ்ட் பண்ணிருவாங்க. அத base பண்ணி போலீஸ் கம்ப்ளைன்ட் பத்தி முடிவெடுக்கலாம். ரெண்டாவது நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறது, உனக்கு தங்கை இருக்கிறதால அவளோட வாழ்க்கையும் நாம நினைச்சு பார்க்க வேண்டியதா இருக்கு செல்வாவும் திரும்ப தப்பு பண்ணாம நாங்க பாத்துகிறோம். இதை தவிர வேற idea எதாவது உன் மனசில இருந்தா சொல்லு" செல்வா உடனே "அப்பா முதல் option சரியானது. அப்ப தான் என்ன பத்தி தெரிய வரும்"னுசொல்ல. "டேய் நீ வாயமூடு உனக்கு பேசுற தகுதி இல்ல. அம்மா காயத்ரி நீ யோசிச்சு சொல்லு." என்றார் ஜம்புலிங்கம்காயத்ரி யோசித்தாள் ரெண்டு option மே அவளை பொறுத்த வரை தூக்கு கயிறு தான். முதல் option செல்வாவை நல்லவனாக காட்டி வாழ்நாள் முழுக்க தனக்கு அவமானத்தை தேடி தரும். அதில் செல்வாவிடம் நான் தலைகுனிய நேரிடும். மேலும் நாளைக்கு எல்லா இடங்களிலும் தன்னை பற்றி மோசமான அபிப்ராயம் பரவி விடும். அதுனால முதல் option வேணாம். ரெண்டாவது option செல்வாவுக்கு டெய்லி torture. அவனை டெய்லி படாத பாடுபடுத்தி, அவன ஓடவச்சுரலாம் எப்படியும் என் அம்மா அப்பா மற்றும் செல்வா அம்மா அப்பா அவன இனிமே நம்பமாட்டாங்க. கொஞ்சநாள்ல diverce வாங்கிட்டு திரும்ப வாழ்கையை ஆரம்பிக்கலாம். இந்த காலத்துல diverce ரொம்ப easy ஆயிடுச்சு, அதோட இது ரொம்ப safe ஆன option. இப்படி காயத்ரி யோசிக்க செல்வாவுக்கு என்ன நடக்குதுன்னு புரியல. ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுடுச்சு. இனிமே வாழ்நாள் முழுக்க torture தான். காயத்ரி தொண்டையை சரி செய்து கொண்டு, "அங்கிள், ஆன்டி எனக்கென்னவோ கல்யாண option தான் சரின்னு தோணுது. என் தங்கை வாழ்க்கை, மற்றும் உங்க ரெண்டு பேரும் கேட்ட மன்னிப்பு உங்க நல்ல மனசு எனக்கு புடிச்சுருக்கு. செல்வாவை என் அன்பால திருத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு நீங்க ரெண்டு பேரும் ஆதரவு குடுக்கணும்."

"இத பாருடா எவ்வளவு தெளிவா பேசுற இவதான் என் மருமக. மூர்த்தி சார், டாக்டர் மேடம் நாம சம்பந்தி ஆயிட்டோம். எனக்கெனவோ வர்ற முஹுர்ததில கல்யாணத்த முடிச்சிரலாம் அப்படின்னு தோணுது. நீங்க என்ன சொல்றிங்க" . டென்ஷன் சூழ்நிலை விலகி சந்தோஷமான சூழ்நிலை உருவானது. Dr காஞ்சனா, "இங்கே நடந்தது யாருக்கும் தெரிய வேணாம். திருவேற்காடு கோவில்ல கல்யாணத்த முடிச்சிரலாம். யாராவது கேட்டா, லவ் marrige அப்பிடின்னு சொல்லிரலாம்". இதுவே நல்ல யோசனையாக பட, அனைவரும் கிளம்பினர். ஜம்புலிங்கம் செல்வாவிடம் "ஏன்டா எங்கள வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அவமானத்த உண்டாக்கிட்ட. உன்ன என் மகன்னே சொல்ல எனக்கு வெக்கமா இருக்கு. இனிமே உன்ன பாக்கவோ பேசவோ எனக்கு விருப்பம் இல்ல. பார்வதி, இனி அவன் என் கூட பேசனும்னா நீதான் அவன் சார்பில பேசணும். நான் அவன் கூட பேச மாட்டேன். புரிஞ்சுதா". தலை ஆட்டினாள் பார்வதி.கல்யாணம் இன்னும் ஒரு வாரத்தில் என்று குறிக்கபட, திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு பூஜா காயத்ரியை அவள் வீட்டில் சந்தித்தாள். "என்னடி உனக்கு கல்யாணம்னு கேள்விபட்டேன். யாரு மாப்பிள்ளை? " "எல்லாம்உன்பாய் friend செல்வா தான்" என்று கிண்டலாக பதில் சொன்னாள் காயத்ரி. பூஜாவால் நம்ப முடியவில்லை "என்னடி சொல்ற. நீங்க ரெண்டு நாய் மாதிரி அடுச்சுகிட்டிங்க" "இப்போ அதல்லாம் தாண்டி போச்சு" "ஏண்டி நீ அவன லவ் பண்ணுறியா?" . "இல்லை" "அவன் உன்ன லவ் பண்ணுரானா?." "இல்லை" "என்னடி இதுகூத்து. அப்பறம் எப்படி கல்யாணம்" கண் சிமிட்டி கிட்டே "அது என் பிளான் தாண்டி. அவனை எனக்கு அடிமை ஆக்க போறேன்.நான் பண்ற கொடுமைல அவன் சொல்லாம கொள்ளாம சன்யாசம் வாங்கிட்டு போய்டுவான்" "ஏண்டி இது பாவம் இல்லையா. நான் இப்பவே செல்வா வீட்டுல பேச போறேன்னு" சொல்ல. மூர்க்கமானாள் காயத்ரி. "இங்க பாரு நீ அங்க போயி சொன்ன நம்ம பிரெண்ட் ஷிப் கட் ஆயிடும். ஜாக்கிரதை "இல்லைடி நீ பண்றது தப்பு. உன் கூட பேசவே எனக்கு அவமானமா இருக்கு. செல்வாவ அவமானபடுதுறேன்னு சொல்லிட்டு நீ உன்னை அசிங்கபடித்திக்கிற. நீ என்ன frindship-ப கட் பண்றது நானே கட் பண்றேன். அம்மா தாயே உனக்கும், உன் பிரெண்ட்ஷிப்க்கும் ஒரு good bye" . சொல்லி விட்டு கோபமாக வெளியேறினாள் பூஜா . செல்வா சம்பவம் நடந்த தினத்திலிருந்து யார் கூடவும் பேசவில்லை. ஆபீஸ் போகவும் இல்லை. அப்பா ஜம்புலிங்கம் அவனை பார்ப்பதை தவிர்த்தார். அம்மா மட்டும் அவனுக்கு ஆறுதல். அவள் மட்டும் "என்னடா ஜோசியக்காரன் சொன்னமாதிரி உனக்கு கெட்ட பெயர் வந்துருச்சே" என்று புலம்பி கொண்டு இருந்தார். திருமணத்திற்கு 2 நாள் முன்பு அவனுக்கு Dr காஞ்சனாவிடம் இருந்து கால் வந்தது. "மாப்ளை உங்கள நான் மீட் பண்ணனும். வெளியில மீட் பண்ணினா நல்லது." "முதல்ல என்ன மாப்ள அப்பிடுன்னு கூப்பிடாதிங்க, செல்வானு பெயர் சொல்லி கூப்பிட்டா போதும். இப்போ எங்க வரணும்." "சரி செல்வா, நீங்க பார்க்ஷெரட்டன் வாங்க." "எப்போ வரணும்". "ஒரு அரைமணி நேரத்ல வர முடியுமா?" ஒரு செகண்ட் யோசித்த செல்வா "சரி வரேன்" என்று சொன்னான்.

செல்வா 01


அக்டோபர் மாதம் முதல் வாரம். கடுமையான மழை. சென்னை நகரமே முழுக்க நனைந்து விட்டது. மழையை பொருட்படுத்தாமல், செல்வா தனது பல்சர் பைக்கில் விரைந்து கொண்டு இருந்தான். அவன் போகும் இடம் வருவதற்குள் அவனை அவசரமாக வர்ணிப்போம் செல்வா என்ற செல்வகுமார். வயது 28 . MBA பட்டதாரி. படித்தது கோவை PSG . உயரம் 5 ' 10 ". மாநிறம். நடிகர் விக்ரம் சாயலை கொண்டு இருந்தான். அப்பாவோட நிறுவனத்தில, மார்க்கெட்டிங் டைரக்டர்.

அப்பா ஜம்புலிங்கம், சென்னைஇன் பிரபல தொழில் அதிபர்களில் ஒருத்தர். Selvaa Informatics Services India Ltd (SISIL) என்ற BPO வின் Chairman. அது கடந்த வருஷம் 100 கோடி வருமானம் எட்டிய நிறுவனம். அம்மா பார்வதி, ஒரு இல்லத்தரசி. செல்வா வீட்டுக்கு ஒரேபிள்ளை. அவன் அப்பாவுக்கு ஆடம்பரம் பிடிக்காது. மகனும் அப்பாவைப் போல. அவன் உபயோகத்திற்கு வீட்டில் Santro கார் இருக்கிறது. பல்சர் (Pulsar) அவசரத்திற்கு இருக்கிறது. இன்று கார் ரிப்பேர் ஆனதால் வீட்டில் சொல்லி விட்டு, பல்சரில் ஆபீஸ் வந்து கொண்டு இருந்த நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.என்ன இது இந்த மழையோட ஒரே தொல்லையா போச்சு. ஒன்பது மணிக்குள்ள office போகணுமே. நானே லேட்டா போனா எப்படி? சரியாய்வருமா? எப்படி மத்தவங்கள கேள்வி கேக்க முடியும். சரி பல்சர பக்கத்தில நிப்பாடிகிட்டு ஆட்டோ இல்ல பஸ்ல போக வேண்டியதுதான்" பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஆட்டோ அல்லது பஸ் வருமா என்று நகத்தை கடித்து கொண்டு இருந்தான். "அப்பா பஸ் வந்துரிச்சு". "கண்டக்டர் தரமணி ஒரு டிக்கெட் கொடுங்க." டிக்கெட் வாங்கி விட்டு , கூட்டம் அதிகமா இருந்ததால் முன்னோக்கி சென்றால் கொஞ்சம் நிற்க இடம் கிடக்கும் என்று பஸ்சுக்குள் முன்னேறினான். முன்னால்நின்ற 20 -21 வயது மதிக்க இளம்பெண்ணை நெருங்கி நின்றான். "என்னது இது இவன் பார்வை சரி இல்லையே". பக்கத்தில் இருந்த ஒரு 45 வயது மதிக்கதக்க ஆளை பார்த்து யோசித்தான் செல்வா. டிரைவர் போட்ட சடன் ப்ரேக்கில், கீழவிழாம இருக்க பஸ்ல இருந்த கைபிடிய பிடிக்க முயற்சி செய்தான் செல்வா. அப்படியும் அவன் கை தவறாகபட, அந்த பெண் அவன் கைபட்ட உடன் முறைத்து பார்த்தாள். "என்னடா இது வம்பா போச்சு, வேற பக்கம் போகலாம்னு பாத்தா பஸ்ல வேற இடம் இல்ல." திரும்ப பஸ் சடன் ப்ரேக் போட, படார் என்று அவன் கன்னத்தில் அறை விழ, அதிர்ச்சியில் சிலையாக நின்றான்செல்வா. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை செல்வா. அவனை கன்னத்தில் அறைந்த பெண் செல்வாவை பார்த்து "ஏன்டா என் இடுப்புல கையவச்ச" " நானா இல்லையே?" கண்கள் கலங்க பதில் சொன்னான் "பொய் சொல்லாத. ஏற்கனவே என் மேல கைய வச்சவன்தான." "இல்லம்மா அது தெரியாம பட்டுரிச்சு" அவள் பக்கத்தில் இருந்த நண்பி " என்னடி பிரச்சனை காயத்ரி?" "பூஜா இவனுங்கள சும்மா விடக்கூடாது. முதல்ல வண்டிய போலீஸ் ஸ்டேஷன் விடணும், அப்பதான் உண்மை தெரியும்" அதற்குள் 45 வயதுக்காரன் அவசரமாக வண்டியில் இருந்து இறங்க பார்க்க, பூஜாவுக்கு சந்தேகம் வந்தது. அவ கண்டக்டரிடம் கண்ணை காட்ட, அவனும் புரிந்து கொண்டு "வண்டியில் இருந்து யாரும் இறங்க வேண்டாம், டிரைவர் அண்ணன் வண்டிய ஸ்டேஷன் விடுங்க" என்றான்.செல்வாவுக்கு கண் கலங்கியது. அவன் அம்மாவோ, அப்பாவோ அல்லது ஸ்கூல் வாத்தியார்கள், யாரும் அவனை அடித்ததில்லை. ஸ்கூல் பசங்களில் இவன் நல்ல பையன், எல்லோருக்கும் இவனை புடிக்கும். அவன் வளர்ப்பு அப்படி. யாரிடமும் சண்டைக்கு போக மாட்டான். முக்கியமாக பெண்களிடம் தள்ளியே இருப்பான். அப்படிபட்டவனுக்கு இந்த அவமானம் தாங்க முடியவில்லை. அவன் மூளை செயல் புரியும் தன்மையை தற்காலிகமாக இழந்தது பஸ் நந்தனம் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கியது. " எல்லாரும்முதல்லஎறங்குங்க" கண்டக்டர் சொல்ல முதலில் காயத்ரி, தொடர்ந்து பூஜா, 45 வயதுக்காரன், செல்வா இறங்கினர் நடந்த விபரங்களை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி காயத்ரி கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க. அதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பூஜா எதையோ பேசி கொண்டிருந்தாள். பிறகு காயத்ரியிடம் "எனக்கென்னமோ 45 வயசான ஆளுமேல doubt ஆ இருக்கு,அதைத்தான் இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னேன்" " போடி பைத்தியக்காரி, எனக்கு இவன் மேல (செல்வா) தான் சந்தேகம்" என்றாள் காயத்ரி. "இன்ஸ்பெக்டர் சார், எனக்கு ஆபீஸ் போகணும். இன்னைக்குத் தான் முதல் நாள். கொஞ்சம் சீக்கிரம் விட்டிங்கன்னா நான் கிளம்புவேன் " பூஜா காயத்ரியிடம் "நான் பேசிக்கிறேன் நீ கெலம்புடி" என்றாள். இன்ஸ்பெக்டரும் ஓகே சொல்ல, காயத்ரி அவசரமாக ஆட்டோ பிடிக்க கிளம்பினாள்.இன்ஸ்பெக்டர் செல்வா மற்றும் 45 வயதுக்காரன் இருவரையும் தனி அறைக்கு விசாரணைக்காக அழைத்து சென்றார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த இன்ஸ்பெக்டர் குழப்பமாக இருந்தார். "அந்த பொண்ணு கொடுத்த கம்ப்ளைன்ட்படி, இந்த பையன் செல்வாதான் குற்றவாளி. ஆனா அவன் இல்லைன்னு சொல்றான். அவன் கண்களும் பொய் சொல்லலை. 45 வயசுக்காரன் (தண்டபாணி) பார்த்த சந்தேகமா இருக்கு, ஆனா அவன் ஒத்துக்க மாட்டேங்கிறான். சரி இந்த பூஜா பொண்ண விசாரிப்போம்"

பூஜாவிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு "சார் எனக்கு தண்டபாணி மேல சந்தேகம். ஏன்னா காயத்ரி அறஞ்சபோது செல்வா கை மேல பஸ் கைபுடில தான் இருந்தது, அதனால அவ இடுப்புல கை வைக்க சான்ஸ் இல்ல". இன்ஸ்பெக்டருக்கு இப்போ புரிந்தது. திரும்ப தண்டபாணிய உள்ள கூட்டி போயி ஸ்பெஷல் treatment குடுக்க, அவன் உண்மைய ஒத்துகிட்டான். பூஜாவுக்கு நன்றி சொன்னான் செல்வா. "உங்க பிரெண்ட் கிட்ட நடந்த விஷயத்தை சொல்லுங்க" "புரியுது Mr செல்வா. நான் சொல்றேன். ஆனா அவ ஒரு விஷயத்த நம்பிட்டா, சீக்கிரத்தில அபிப்ராயத்த மாத்திக்க மாட்டா." "இவளை இனிமே எங்க சந்திக்க போறோம்" என்று நினைத்த செல்வா பூஜா மற்றும் இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லி விட்டு உடனே ஆபீஸ் கிளம்பினான். ஆட்டோ பிடித்து இறங்கிய போது மணி 10 ஆகிவிட்டது. மழை குறைந்து தூரலாகி விட்டது. தன் chair ல உக்கார்ந்து இன்றைய தின வேலைகளை அவனது organizer லில் பார்த்து விட்டு, தன் secretary யை கூப்பிட calling பெல் அழுத்தினான். கதவை திறந்து கொண்டு ரூமுக்குள் நுழைந்தாள் காயத்ரி. உள்ளே நுழைந்த காயத்ரியும், செல்வாவும் கொஞ்சம் அதிர்ச்சியில் நிற்க, இப்போ கெடைச்ச இடைவெளில நாம் காயத்ரி பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் காயத்ரி பெங்களூரில் பிறந்து, சென்னையில் வளர்ந்த பெண். அப்பா தமிழ், அம்மா கன்னடா. அப்பா பிசினஸ்மேன், அம்மா ஒரு டாக்டர். B Com முடித்து விட்டு, வேலைக்கு அப்ளை செய்து இன்றுதான் SISIL நிறுவனத்தில் சேர்மன்க்கு PA ஆக வேலைக்கு சேர்த்திருக்கிறாள். ஒரு தடவை பார்ப்பவர்களை திரும்ப பார்க்க வைக்கும் அழகு. சுருக்கமாக சொன்னால் நடிகை ப்ரனிதா போல இருக்கிறாள் என்பது அவள் பிரெண்ட்ஸ் அடிக்கும் கமெண்ட்ஸ். காயத்ரி தான் முதலில் சுதாரித்து பேச ஆரம்பித்தாள். "சார், நான் இன்னைக்குத் தான் சேர்மன்சார் PA வா சேந்துரிக்கேன். சேர்மன் ஊர்ல இல்லாததால உங்களை பார்க்க சொன்னாங்க " "முதல்ல உக்காருங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பஸ்ல நடந்தது என்னன்னா?" என்று செல்வா ஆரம்பிக்க. "சார் முதல்ல ஆபீஸ் வேலை பத்தி பேசலாம், பஸ்ல நடந்ததை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல " செல்வா முகம் சுருங்கியது, "ஓகே நீங்க என்னோட PA ரமாகிட்ட போய் வேலை கத்துக்கங்க. நான் இண்டர்காம்ல சொல்றேன்" வெளியே வந்த காயத்ரி " பெரிய இவன் மாதிரி நடிக்கிறான், மொதல்ல வேலைய resign பண்ணனும். இவன் மூஞ்சிய பாத்துக்கிட்டு இருக்க முடியாது. எரிச்சலா வருது "அதற்குள் பூஜா போன் வந்தது, "ஏண்டி பஸ்ல உன் இடுப்புல கைவச்சது அந்த தண்டபாணிதான். இன்ஸ்பெக்டர் அவனை அடிச்சு ஒதைச்சு உள்ள தள்ளிட்டார். " "இல்லடி என்னால நம்ப முடியலை. இவன்தான் முதல்ல என் மேல கை வச்சான். இவன்தான் பண்ணி இருப்பான். எனக்கு சந்தேகம் இல்ல. நான் சேந்த ஆபீஸ்ல தான் மார்க்கெட்டிங் டைரக்டர் ஆக இருக்கான். எனக்கென்னமோகாசுகொடுத்துஇன்ஸ்பெக்டரைவளச்சுபோட்டுருப்பான்னுதோணுது. நாளைக்கு சேர்மன் வர்றார். அவர் கிட்ட இவன பத்தி புகார் சொல்லிட்டு வேலைல நிக்கலாம்னு இருக்கேன். எதிர்காலத்தில எந்த பொண்ண இவன் பாத்தும் தப்பா நெனைக்ககூடாது. ஏண்டி எனக்கு ஒரு சந்தேகம், அவன் ஸ்மார்ட்ட இருக்கிறதுனால அவனை பாத்து ஜொள்ளு விட்டியா? " பூஜாவுக்கு புரிந்தது. என்ன சொன்னாலும் இவள மாத்த முடியாதுன்னு. "சரிடி உன் இஷ்டம்" என்று சொல்லி போனை வைத்து விட்டாள். 6 மணிக்கு ஆபீஸ் முடிந்த உடன் காயத்ரி வீட்டுக்கு கிளம்ப, செல்வாவுக்கு 8 மணி ஆகி விட்டது. மதியம் ஆபீஸ் டிரைவர் சென்று பல்சரை எடுத்து கொண்டு வந்தான். 9 மணிக்கு வீட்டுக்கு வந்த செல்வாவை அவன் அம்மா பார்வதி "என்னடா இட்லி சாப்புடுரியா இல்லை தோசை ஊத்த சொல்லட்டுமா? " "எது வேணாலும் சரி அம்மா." சாப்பிட்டு விட்டு படுக்க சென்றான் செல்வா அவனுக்கு தூக்கம் வரவில்லை. நடந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லலாமா, இல்லை நாளைக்கு அந்த பெண்ணிடம் திரும்ப பேசலாமா? என்று யோசித்து கொண்டே உறங்கி விட்டான்.காலை 8 . 30 க்கு ஆபீஸ் வந்தான் செல்வா. ஆபீஸ் நேரம் 9 மணி அதனால யாரும் இன்னும் வரலை. சரி நம்ம வேலைய ஆரம்பிக்கலாம்னு காபினுக்குள் நுழைய இருந்தவன், காயத்ரி அங்கே PA ரமா சீட்ல உக்காந்து இருக்க, good சின்சியர்ஆன பொண்ணா இருக்கா என்று ஆச்சர்யத்துடன் காபினில் சென்று அமர்ந்தான். அவன் மனசில நேற்று அறை வாங்கியது ஞாபகத்தில் வந்தது. சட்டென்று கோபம் எட்டி பார்த்தது. மொதல்ல காயத்ரி செய்தது தப்பு, பலருக்கும் முன்னால தன்ன அவமானபடுத்தியது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. சரி, அவ தனியா வேற இருக்கா, முதல்ல பேசிடலாம் என்று முடிவு செய்தான். அந்த முடிவு எவ்வளவு பெரிய சங்கடத்தில் விடும் என்பது அப்போது அவனுக்கு தெரியவில்லை