Thursday 9 May 2013

செல்வா 04


செல்வாவுக்கு திடீர் என்று விழிப்பு வந்தது. பாத்ரூம் போக வேண்டும் போல இருந்ததால் எழுந்தான். மெல்லிய இரவு விளக்கு வெளிச்சத்தில் பாத்ரூம் போய் விட்டு திரும்ப வந்து படுக்கலாம் என்று நினைத்து, அதற்கு முன்னால் காயத்ரி எப்படி தூங்குகிறாள் என்று அறிய ஆவல் கொண்டான். கட்டிலில் அவளை காணவில்லை, சுற்றுமுற்றும் தேடிய அவன் கண்கள் தரையில் நிலைத்து நின்றது. செல்வாவின் தலையணைக்கு அருகில் தரையில் ஒருகளித்து உறங்கி கொண்டிருந்தாள் காயத்ரி. போர்வை எதுவும் இல்லாததால் அவள் உடல் குளிரில் நடுங்கி கொண்டிருந்தது. தலையில் கைவைத்து கொண்டு " என்ன பெண் இவள் என் அருகில் உட்கார்ந்தவாரே தூங்கிவிட்டால் போல, சரி முதலில் கட்டிலில் உள்ள தலையணை மற்றும் போர்வையை எடுத்து போர்த்தி விடலாம் என்று எண்ணி அவளை முழுக்க போர்வை கொண்டு போத்தி விட்டு, அருகிலே அவனும் படுத்தான். அவள் முகம் வட்டமான நிலவு போல் இரவுவிளக்கில் பளபளக்க, அவளை பார்த்து கொண்டே மனநிம்மதியுடன் உறங்கினான்.

காலை 5 . 30 மணி அளவில் எழுந்து தனது வழக்கமான யோகா, மற்றும் உடற் பயிற்சிகளை முடித்தான். மணி இப்போது 6 . 30 . கதவை தட்டும் ஓசை. அவனுக்கு புரிந்தது. காயத்ரியை எழுப்பினான். அரக்கபரக்க எழுந்தவளிடம், "இந்த பாரு உங்க அம்மா தான் கதவை தட்டுறாங்க, கொஞ்சம் உன்னோட புடவையை கலைத்து, மற்ற உடைகளையும் கலைத்து நமக்கு முதல் இரவு நடந்த மாதிரி நடந்து கொள். இங்கே நடந்தது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம், வருத்தபடுவார்கள். தயவுசெய்து நான் சொன்னபடி செய்". தலையை அசைத்து அவன் சொன்னது போல், உடைகளில் சில மாற்றங்களை செய்தபின் கதவை திறந்தாள் காயத்ரி. அதற்குள் கட்டிலுக்கு தலையணை மற்றும் போர்வையை மாற்றி, கட்டிலில் படுத்து உறங்குவது போல் நடித்தான் செல்வா. காஞ்சனா வாசலில் நின்று காயத்ரியை வெளியே அழைத்து "என்னடி எல்லாம் ஒழுங்காக நடந்ததா?" என்று கேட்க, ஆமாம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, வெளியில் இருந்த பாத்ரூமில் குளிக்க சென்று விட்டாள். செல்வாவும் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து உள்ளே இருந்த பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வர, அவனுக்கு காபி தயாராக இருந்தது. குடித்து முடித்த போது காயத்ரி ரூமுக்குள் நுழைந்து அவனுக்கு தேவையான உடைகளை வைத்துவிட்டு வெளியேற, புதிய உடைகளை மாற்றி கொண்டு வெளியே வந்தான் செல்வா. வாசலில் அவனுக்காக காத்து கொண்டிருந்த காயத்ரி, "கீழே வாங்க போகலாம், சீக்கிரம் சாப்பிடுங்க, நம்ம (உங்க) வீட்டுக்கு போக வேணும்னு அம்மா சொன்னாங்க". கீழே இறங்கி வந்தபோது அவனுக்கு முன்னே அவன் மாமனார், மாமியார், காயத்ரி தங்கை திவ்யா அனைவரும் காத்து கொண்டிருந்தனர். மூர்த்தி "என்ன மாப்பிளை சீக்கிரம் சாப்பிட்டு காயத்ரியோட நீங்க கிளம்புங்க, நாங்களும் உங்களோட வரலாம்னு பாக்கிறோம். உங்களுக்கு சம்மதம் தானே?" "என்ன மாமா நீங்க இதுக்கெல்லாம் என்கிட்ட எதுக்கு கேக்கணும், வாங்க போகலாம்" என்று சொல்லி விட்டு, குட்மார்னிங் அத்தை, திவ்யா என்று சொல்லிவிட்டு, காயத்ரியுடன் காலை உணவுக்கு என்று உட்கார்ந்தான்.அனைவரும் ஜம்புலிங்கம் வீட்டுக்கு செல்ல, அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. செல்வா காயத்ரியை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். செல்வா, மூர்த்தி, காஞ்சனா சோபாவில் உட்கார, காயத்ரிசெல்வாபக்கத்தில்நின்றுகொண்டிருந்தாள். பார்வதி அவளையும் திவ்யாவையும் உட்கார சொல்ல, பரவா இல்லை, அத்தை என்று சொல்லி நின்று கொண்டிருந்தாள் காயத்ரி. பார்வதி சமையல் அறைக்கு செல்ல காயத்ரியும் அவள் பின்னாலே சென்று காபிபோட உதவி செய்தாள். பார்வதிக்கு தன் மருமகள் ரொம்ப அழகு என்பதில் பெருமை, இப்போதோ தனக்கு உதவி செய்வதில் ரொம்ப சந்தோஷம். கணவனுக்கு அருகில் உட்கார தயங்குகிறாள், என்னதான் படித்து இருந்தாலும், பண்பாடு மறக்காத பெண்ணாக இருக்கிறாள். இப்படி ஒரு மருமகள் கிடைக்க தவம் செய்து இருக்க வேண்டும் என்று ஆச்சர்யபட்டாள் பார்வதி. . காபி tray யை எடுத்து சென்று அனைவருக்கும் காபி கொடுத்தாள் காயத்ரி. பருத்தி புடைவையில் அழகு தேவதையாக மிளிர்ந்த காயத்ரியை காபியுடன் சேர்ந்து, கண்களால் பருகினான் செல்வா. "டேய் செல்வா கவிதா இப்போ தான் போன் பண்ணினா, உன் செல்போன் தொடர்பு கிடைக்காததால என்னை கூப்பிட்டா, உன்னோட தேன்நிலவுக்கு ஊட்டில புக் பண்ணுதன கன்சல் பண்ணி குனூர் தாஜ் ஹோட்டல்ல ஒருவாரம் புக் பண்ணி இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும், சேரன்ல டிக்கெட் புக் பண்ணி உன்னோட மெயில் ஐடிக்கு அனுப்புச்சு இருக்காளாம். காயத்ரியை அவளோட போன்ல கூப்பிட சொன்னா." செல்வா "முதல் இரவே இன்னும் ( www.tamilsexstoriespdf.com ) முடிய காணோம், இந்த நேரத்தில அது ஒன்னுதான் குறைச்சல்," என்று முனகி விட்டு, தனக்காக honey moon trip புக் செய்து கொடுத்திருக்கும் நண்பர்களுக்காக, அவர்களின் அன்புக்காக போகலாம் என்று முடிவு செய்து, காயத்ரியை பார்க்க அவள் சரி என்று கண்களால் சொன்னாள். காயத்ரி கவிதா உடன் பேசி எல்லா விவரங்களையும் வாங்கி கொண்டாள். இன்று இரவே கோவை கிளம்ப வேண்டும் என்றும். நாளை ஒரு surprise கிபிட் காத்திரிப்பதாகவும் கவிதா சொன்னாள். இந்த விஷயம் செல்வாவுக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொள்ள, காயத்ரியும் சரி என்று சொல்லி போனை துண்டித்தாள். இருவரும் ஒரு வாரத்துக்கு தேவையான உடைகளை பேக் செய்து கொண்டு இரவு சேரனில் kovai கிளம்பினர். காலை கோவை ரயில் நிலையத்தில் AC கோச்சை விட்டு இறங்கிய இருவரையும், கவிதா மற்றும் ரேகா பூங்கொத்துடன் வரவேற்க, கோவையின் சில்லென்ற காற்று அனைவரையும் வருடியது. தூக்க கலக்கத்தில் இருந்து அப்போது தான் விடுபட்டு இருந்த காயத்ரி, கவிதாவை, அக்கா என்று தாவி அணைத்து கொண்டாள். "பாசமலர்களே கிளம்புவோமா" என்று இருவரையும் கிண்டல் செய்த செல்வாவை தோளில் கவிதா கிள்ள, "ஐயோ" என்று கத்தி கொண்டு, "சண்ட வேணாம் சமாதானமா போய்டலாம் என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டு அனைவரும் கவிதா கொண்டு வந்திருந்த இன்னோவாவில் ஏறினர். அவர்கள் இருவரையும் ரெசிடென்சி ஹோட்டலில் விட்டுவிட்டு 11 மணிக்கு திரும்ப வருவதாக சொல்லி விட்டு கவிதா மற்றும் ரேகா கிளம்பினர்.11 மணிக்கு இருவரும் தயாராகி காத்துகொண்டிருக்க கவிதா மட்டும் இன்னோவாவில் வந்து இருவரையும் பிக் அப் செய்து, ராஜ வீதியில் இருந்த பதிவாளர் அலுவலகத்தின் வாசலில் இறக்கி விட்டு காரை பார்க் செய்து விட்டு வருதாக கவிதா விடை பெற்றாள். எதற்கு இங்கே இறக்கி விட்டால் என்று சிந்தனை செய்து கொண்டே இருவரும் இறங்கி அலுவலக வளாகத்தில் நுழைய அங்கே செந்தமிழ், ரேகா, ஜீவா, வாசுகி, ரகு, ரமேஷ், ரோஹித், டேவிட், பாஷா எல்லாரும் இருந்ததை பார்த்து ஆச்சர்ய பட்ட செல்வா, செந்தமிழை பார்த்து "நீ இங்க எப்படிடா வந்த? நீதான எங்கள நேத்து சேரன்ல வழி அனுப்பி வச்ச", என்று கேட்க, " டேய் இதல்லாம் கவிதாவோட surprise giftல ஒன்னு. கவிதா டிக்கெட்டுக்கு காசு தந்தா, அதுனால காலை முதல் ப்ளைட்ல வந்துட்டேன்", என்று சொல்ல, கவிதாவும் அந்த நண்பர்கள் கூட்டத்தில் கலந்தாள். "செல்வா நாங்க எல்லோரும் சேர்ந்து சாய்பாபா காலனில ஒரு பிளாட் வாங்கி இருக்கோம், அத உங்களோட திருமண பரிசா குடுக்கலாம்னு இருக்கோம்" என்று சொல்ல. செல்வா உணர்ச்சி வசப்பட்டு "கவிதா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு, நட்புளையும் தான். நண்பர்கள்ன ஏதோ டிவி வாஷிங் மிசின் மாதிரி கிப்ட் வாங்கி தருவாங்க. பிளாட் வாங்கி தருவது எங்கயுமே நடக்காது" என்று சொல்லி அன்புடன் கண்டித்தான்.

"டேய் நாங்க எல்லாரும் சாதாரண நண்பர்கள் இல்லைடா, அதோட நீ MBA படிச்சப்ப எங்க எல்லாருக்கும் Operations Reasearch சொல்லி கொடுத்து 90 மார்க்குக்கு மேல வாங்க வச்ச. ஆனா எந்த கிப்டும் வாங்க மாட்டேன்னு சொன்ன, எங்களுக்கு மனசு கேக்கல. உன்ன மாதிரி நண்பனுக்கு அதுவும் இந்த மாதிரி கல்யாணத்துக்கு கிப்டா கொடுக்கிறதுல பெருமையா இருக்கு. இதை நீ கட்டாயம் எத்துகிடனும் என்று ரகு சொல்ல, எல்லாரும் கோரசாக "செல்வா ப்ளீஸ்டா" என்று கெஞ்ச. "சரி ஆனா ஒரே கண்டிசன் இத காயத்ரி பெயர்ல தான் ரெஜிஸ்டர் பண்ணனும் அப்படின்னா எனக்கு ஓகே," என்று சொன்னான். இவர்களின் நட்பை நினைத்து ஆச்சர்யபட்டு இருந்த காயத்ரிக்கு கடைசியில் செல்வா சொன்னது புரியவில்லை. "என்ன சொன்னிங்க" என்று கேட்ப தற்குள் அவள் பர்சை எடுத்து அவளது பான்கார்டை வெளியே எடுத்து பத்திரம் எழுதுபவரிடம் கொடுத்தாள் கவிதா. போலரிட் கேமராவில் காயத்ரியை போட்டோவும்எடுத்தனர். அடுத்த 1 மணி நேரத்தில் சார்பதிவாளர் உள்ளே அழைக்க, செல்வா காயத்ரியை அழைத்து கையெழுத்திட வைத்தான். கிருஷ்ணா ஸ்வீட்ல இருந்து வாங்கி வந்த மைசூர்பாகை அனைவருக்கும் கொடுத்தான் ரமேஷ்.ரகு தான் கொண்டு வந்திருந்த Xylo காரில் ஆறு பேரை கூட்டி கொண்டு செல்ல, பின்னாலே இன்னோவா காரில் செல்வா காயத்ரி உட்பட ஆறு பேர் பின் தொடர்ந்தனர். இருபது நிமிடத்தில் சாய்பாபா காலனியை அடைந்தவுடன், அனைவரும் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அருகில் இருந்த அந்த புதிய அடுக்கு மாடி குடிஇருப்பில் நுழைந்து முதல் மாடியில் அமைந்து இருந்த 101 என்ற எண்ணிட்ட பிளாட்டின் கதவைதான் கொண்டு வந்திருந்த சாவியை கொண்டு திறந்தான். கவிதா "முதல்ல வீட்டு ஒனற வர சொல்லுங்க" என்று சொல்லி காயத்ரியை வலதுகாலை எடுத்து உள்ளே வர, அதை தொடர்ந்து செல்வா மற்றும் நண்பர்கள் தொடர்ந்தனர். அது 1260 சதுர அடிகள் கொண்ட பிளாட். வரவேற்பறை, கெஸ்ட்ரூம், இரண்டு படுக்கை அறைகள் பாத்ரூமுடன், சமையல் அறை (italian kitchen), பெரியஹால் (with french window) இவற்றுடன், எல்லா வசதிகளுடன், குடியேற தகுந்ததாக இருந்தது. "உங்க ரெண்டு பேருக்கும் இந்த வீடு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறோம், வாழ்த்துக்கள்" என்று சொல்லி பிறகு, "இப்போ எல்லோரும் அன்னபூர்னாவில் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு கிளம்பலாம் என்றாள்" கவிதா. மதிய உணவு முடிந்த உடன் 2 மணி அளவில் ஏற்கனவே வரசொல்லி இருந்த அவள் வீட்டு டிரைவரை கூப்பிட்டு, "இவங்க ரெண்டு பேரையும் குனூர் தாஜ் ஹோட்டல் டிராப் செய்து விட்டு வந்துவிடு" என்று சொல்லி விட்டு "வாழ்த்துக்கள்" சொல்லி விட்டுகிளம்பினாள். அவளை தொடர்ந்து அனைத்து நண்பர்களும் விடை கொடுக்க செல்வா காயத்ரியை சுமந்து கொண்டு இன்னோவா குனூர் விரைந்தது. நட்பு தான் எவ்வளவு வலியது?சுமார் 5 மணிக்கு, தாஜ் ஹோட்டலில் இருவரையும் இறக்கி விட்டு கவிதாவின் டிரைவர் கோவை செல்ல, ரிசெப்சனில் அவர்களுக்கு பூங்கொத்து உடன் சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. இது எல்லாம் தன் நண்பர்களின் வேலை என்று உணர்ந்த செல்வாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன் நண்பர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று வியந்து கொண்டே, காயத்ரியுடன் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட சூட்டில் (suit) நுழைய, அவர்கள் இருவரது சூட்கேஸ்களையும் பின்னாலே ஹோட்டல் ஊழியர் கொண்டு வைத்தனர். முதல் இரவு அறை போல அலங்கரிக்கபட்டு இருந்தது அந்த படுக்கை அறை. அதை பார்த்த செல்வா காயத்ரியை பார்த்து புன்முறுவல் செய்ய, காயத்ரியின் முகம் சிவந்தது. செல்வாவிடம் "உங்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு" என்று ஆரம்பித்தாள், சட்டையை கழட்ட தொடங்கிய செல்வா, "எதுக்கு" என்று கேட்க. "உங்க நண்பர்கள் எல்லாரும் உங்க மேல வச்சிருக்கிற அன்பை பார்த்து தான். எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு பிரெண்ட் தான் - பூஜா அவளும் என்கிட்ட சண்டை போட்டு பிரிஞ்சுட்டாள்", என்று வேதனையுடன் பெரு மூச்சு விட, செல்வாவுக்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் பேசுவதற்கு யாரும் இல்லை. சுகமோ துக்கமோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது போல் எதுவும் இல்லை என்பதை அறிந்த செல்வா, "கவலைபடாதே காயத்ரி, நீ என் கூட எதை வேணாலும் பகிர்ந்துக்கலாம்" என்று சொல்லி விட்டு இரவு உடைக்கு மாறினான். அதற்குள் பாத்ரூம் சென்று காயத்ரியும் நைட்டிக்கு மாறி வந்தாள். இவளுக்கு என்ன டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கு என்று அவளை பார்த்த உடன் நினைத்த செல்வா " உனக்கு டயர்டா இருந்தா பெட்ல படுத்துக்கோ" என்று சொல்லி அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்து தனது ஆப்பிள் ஐபோடை எடுத்து பாட்டு கேக்க ஆரம்பித்தான். காயத்ரிக்கு தூக்கம் வரவில்லை. கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம் என்று ரிமோட்டை எடுத்து எல்லா சானலையும் மாற்றி கொண்டு இருந்தாள். "என்ன கண்ணா போர் அடிக்குதா?" என்று கேட்டவாறு தன் ஐபோடை அணைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தான். காயத்ரிக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது, ஆனாலும் செல்வா தனக்கு அருகில் அமர்ந்திருப்பது அவள் மனதுக்கு பிடித்திருந்தது.காயத்ரியின் கையை தன் கைகளுக்கு நடுவில் வைத்து, அவள் முகத்தை பார்த்து "என்னவேணும்?" என்று கேட்க, அவளுக்கு ஒரு கணம் மூச்சே நின்றது போல் உணர்வு. ஒரு மனது அவனிடம் இருந்து கையை எடுத்து கொள்ள சொன்னது, இன்னொரு மனமோ வேண்டாம் அவன் முதல் தடவையா உன் கையை பிடிக்கிறான், அவன் மனசு கோண நடந்து கொள்ளாதே என்றது. "செல்வா நான் ஒன்னு கேப்பேன் நீங்க தப்பா நினைக்காம பதில் சொல்லணும்". கையை எடுக்காமலே "என்ன" என்று செல்வா கேட்க, "நீங்க கோவை வீட்டை என் பேர்ல ஏன் எழுதி வச்சிங்க?" என்றுகேட்க, "நீ கேக்குறது ஒரு விதத்தில நியாயம் தான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேற நான் வேறன்னு எனக்கு தோணல. அதனால தான் நான் கொஞ்சம் அவசரபட்டு இப்படி செஞ்சேன். ஒருவேளை உனக்கு நான் அதிகமான உரிமை எடுத்துகிட்டேன் அப்பிடின்னு தோணுச்சின்னா, அயம் ரியலி சாரி" என்று அவள் கையை கன்னத்துக்கு அருகில், கொண்டு வர அவள் கூச்சத்துடன் "இல்ல இல்ல" என்று அவசரத்துடன் மறுத்தாள். அவள் குனிந்த தலையை நிமிர வைக்க செல்வா அவனது கைகளால் அவள் முகத்தை ஏந்தினான். அவள் கண்களை மூடி இருக்க, அந்த பளிங்கு முகத்தில் முத்தமிட நெருங்கினான். காயத்ரி கண்ணை மூடி இருந்தாலும் உணர்வுகள் மூடப்படவில்லை. அவளது சிவந்த இதழ்களில் மென்மையான அச்சாரம் பதிக்க, அங்கே ஒரு புதிய காதல் பாடம் அரங்கேற தொடங்கியது. அவளின் மூடி இருந்த கண்களில் தனது முத்தபயணத்தை தொடர்ந்தான். அவனது உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் போக, அவளை அள்ளி அணைத்து கொண்டான். காயத்ரி அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் விட்டு கொடுக்க, செல்வா காயத்ரியிடம் "கண்ணா என்ன ஒன்னும் பேச மாட்டேங்கிற, என் மேல கோபம் ஒன்னும் இல்லையே" என்று கேட்க, காயத்ரிக்கு என்ன இவர் இப்பிடி இருக்கார். கேள்வி கேக்க வேண்டிய நேரமா இது, ஆனா பதில் பேசாம இருந்தா விடமாட்டார் போல இருக்கே. கண்களை திறந்து அவனை பார்த்து, "இல்லை" என்று தலை அசைத்தாள். அவளை இறுக்க அணைத்து தன் கேள்வி கணைகளை தொடர்ந்தான். "உங்கள நான் பஸ்ல தப்பா நெனைச்சுட்டேன், பின்னால யோசிச்சு பாத்தப்ப நீங்க என்மேல கை வச்சுரிக்க வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சுது, பூஜா சொன்னத நான் யோசிச்சு பார்த்து இதை புரிஞ்சுகிட்டேன். எனக்கு ஆண்கள்னா ஒரு வெறுப்பு, அதுனாலதான் உங்கள பத்தி தவறா நினைச்சேன். என்னை மன்னிச்சுடுங்க. ஊருக்கு போன உடனே முதல் வேலையா உங்க அப்பா அம்மா கிட்ட நான் உங்க மேல சொன்னது தவறான குற்றசாட்டுன்னு சொல்லி மன்னிப்பு கேட்கணும்" என்று சொல்லி அவன் கையை எடுத்து முத்தமிட்டு, "என் மேல கோபம் இல்லையே என்று கேட்க, "என் மகாராணி மேல எனக்கு கோபம் வராது. உன்ன பத்தி எல்லாம் என் மாமியாரை கேட்டு தெரிஞ்சுகிட்டேன். சரி, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும். சரியா?" என்று கேட்டு, "உன்ன பத்தி சொல்லு" என்றான்.அதிக கேள்வி கேட்டது செல்வா தான். அவள் விருப்பங்கள், ஆசைகள், சிறு வயதில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள், நண்பர்கள், பிடித்த திரைபடங்கள், பாடல்கள், என்று அவர்கள் பேச்சு ஓடி கொண்டிருந்தது. இரவு மணி ஒன்பதை தொட, செல்வா காயத்ரி இருவரும் ரெஸ்டாரண்டில் சென்று இரவு உணவை முடித்து ரூமிற்கு திரும்பினர். படுக்கைஅறை ஏற்கனவே தயாராக இருக்க, இருவரும் அமர்ந்து பேச தொடங்கினர். "ஒரு முக்கியமான விஷயம், என்னோட அப்பா அம்மாகிட்ட இப்போதைக்கு பஸ்ல நடந்ததை பற்றி சொல்ல வேண்டாம். உன் மேல கோபம் வர வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் பொறு சந்தர்ப்பம் வரட்டும் நானே சொல்லுறேன்" என்று சொல்ல, "இல்லைங்க செல்வா, உங்க அப்பா உங்க மேல ரொம்ப கோபமா இருக்கார், என்னால தான் இதல்லாம்" என்று மறுக்க, "எனக்கு புரியுது, கொஞ்சம் வெயிட் பண்ணு, அப்பாவுக்கு என்மேல அன்பு இருக்கு, அதுதான் கோபமா வெளிப்பட்டு இருக்கு. நாம யார் மேல அதிகமா அன்பு வச்சு இருக்கோமோ அவங்க மேலதான் நாம அதிகமா கோபபட முடியும். அது மாதிரி தான், என் அப்பாவும்", என்று சொல்லி அவள் வாயை அடைத்தான். தொடர்ந்து பேசிவிட்டு இருவரும் உறங்கும்போது இரவு மணி ஒன்று. காலை ஏழுமணி அளவில் செல்வா விழித்து பார்க்க, காயத்ரி அவன் மார்பில் தலையை வைத்து உறங்கி கொண்டிருந்தாள். அவளை பார்த்த செல்வாவுக்கு அவள் உடல் முழுக்க முத்த மழை வேண்டும் என்ற ஆசை வந்தது.சரி இன்று இரவை முதல் இரவாக்கி விடலாம் என்று தீர்மானித்தான். லேசாக அசைந்து படுக்கையை விட்டு நகர்ந்து பாத்ரூம் சென்று பல் விளக்கி, காலை கடன்களை முடித்து விட்டு திரும்பினான். அப்போது தான் கண்விழித்த காயத்ரி செல்வாவை பார்த்த உடன் வெட்கபட்டு படுக்கையை விட்டு இறங்கி, பாத்ரூம் செல்ல, செல்வா "காயத்ரி உனக்கு காபி சொல்லட்டுமா?" என்று கேட்க, "நீங்க என்ன சொல்றிங்களோ அதுதான் எனக்கும்" என்று சொல்லி விட்டு விரைந்தாள். காலை உணவுக்கு பின், இன்று நாம் சிம்ஸ்பார்க் போகலாம் என்று இருவரும் முடிவு செய்து, ஏற்கனவே ஹோட்டல்லில் வண்டி ஏற்பாடு செய்து இருக்க, அதில் ஏறி காலை 11 மணி அளவில் சுற்றி பார்க்க தொடங்கினர். அக்டோபர் மாதமாக இருந்ததால் ஓரளவு கூட்டம் இருந்தது. இருவரும் நடந்து படகுதுறைக்கு வந்து அருகில் இருந்த சேரில் அமர்ந்து பேசிகொண்டு இருந்தனர். இருவரையும் பார்த்து அந்த வழியாக வந்த இரண்டுபேர், சிறிது தூரம் சென்ற பின்பு திரும்பி வந்து செல்வாவிடம், "சார் நீங்கதான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதிபோட்டிக்கு தேர்வான ரெண்டுபேர்ல ஒருத்தர்" என்று கேட்க, "ஆமா" என்று சொன்ன செல்வாவிடம், "சார் சார் ஒரு பாட்டு பாடுங்க சார்" என்று கெஞ்ச, என்ன இது ஹனிமூன் வந்த இடத்துல இப்படி ஒரு அன்பு தொல்லை என்று யோசிக்க, காயத்ரி "பரவாயில்லை ஒரு பாட்டு பாடுங்க, அவங்க சந்தோசப்படுவாங்க" என்றுசொல்ல, அதற்குள் 10 -15 பேர் மேலும் சேர, செல்வாவுக்கு இனி தப்ப முடியாது என்று புரிந்து போனது.

என்ன பாட்டு பாடலாம் என்று யோசிக்க, சுற்றி இருந்த கூட்டத்தில் ஒருவர், "சார் நீங்க செமி பைனல்ல பாடுன பாட்டு பாடுங்க. அது ரொம்ப நல்லா இருந்தது " என்று சொல்ல, செல்வாவுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. "சங்கீத ஜாதி முல்லை காணவில்லை" என்று பாட தொடங்க, மொத்த கூட்டமும் ஆடாமல் அசையாமல் பாடல் கேட்க, எட்டு நிமிஷம் தொடர்ந்தது அந்த பாடல். அதற்குள் பார்க்கின் மற்ற பகுதியில் இருந்து அனைவரும் வர, கிட்டதட்ட 50 பேர் கொண்ட கூட்டம் கூடி இருந்து பாடலை கேட்டது. பாடல் முடிந்ததும் கரகொலி ஒலித்தது. "தம்பி , இன்னும் ஒரே ஒரு பாட்டு பாடுங்க" என்று ஒரு வயதான அம்மா கேட்க, "சரி இதுதான் கடைசி பாட்டு" என்று சொல்லி விட்டு, "ஆயர் பாடி மாளிகையில்" பாட அனைவரும் மகுடிக்கு மயங்கிய நாகம் போல தலை அசைத்து ரசித்து கேட்டனர். பாடல் முடிந்தவுடன் செல்வாவை சுற்றி கூட்டம். எல்லோருக்கும் கை கொடுக்கவும், ஆட்டோ கிராப் வாங்கவும் ஆசை, ஒரு வழியாக சமாளித்து காயத்ரி இருக்கும் இடத்துக்கு வந்து "போகலாமா" என்று கேட்க, தலை அசைத்து கிளம்பினாள் காயத்ரி. பார்க்கில் மேல ஏற அவள் கஷ்டபடுவதை அறிந்த செல்வா அவளை கையில் தூக்கி கொள்ள, "விடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் காயத்ரி. அவளை அப்படியே படுக்கை வசத்தில் தூக்கி கொண்டு படி ஏறினான். கூடி இருந்த அனைவரும் அவனை கைதட்டி உற்சாகபடுத்த, சில பேர் போட்டோவும் எடுத்தனர். பார்க் வாசலுக்கு வந்து அவளை இறக்கிவிட, காயத்ரிக்கு சொல்ல முடியாத அளவுக்கு வெட்கமும், அதேசமயத்தில் பெருமையும் வழிந்தது. "என்ன இவன் இந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறானே, இவனுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்" என்று வியந்தாள். டால்பின் நோஸ் மற்றும் சில இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் ஹோட்டல் திரும்ப இரவு மணி 8 , வழக்கம் போல் இரவு உணவை முடித்து விட்டு தங்கள் ரூமுக்கு திரும்பினர். காயத்ரி ஒன்று மட்டும் புரிந்தது, இன்று இரவு தன் வாழ்நாளில் மறக்க முடியாத இரவாக இருக்கும் என்று. கொஞ்சம் டென்சன், கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் ஆசை கலந்த கலவையாக அவளை தாக்க, என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கை அறையில் அமர்ந்தாள். அதற்குள் உடை மாற்றி கொண்டு செல்வா அவள் அருகில் வர, நானும் உடைமாற்றி கொண்டு வருகிறேன் என்று சொல்லி பாத்ரூமுக்குள் புகுந்து விட்டாள். காயத்ரி புதிய பருத்தி புடவையில் தேவதை போல் வந்து அவன் அருகில் அமர்ந்தாள். விளக்கை அணைத்து விட்டு, இரவு விளக்கு வெளிச்சத்தில் அவளை பார்த்தான். அவள் அவன் கண்களுக்கு ரதியாக தோன்ற, அவன் மன்மதனாக காட்சி அளித்தான். காதல் காமம் இரண்டும் இல்லை என்றால் இந்த உலகில் மனித இனம் ஏது?அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து தேன் எடுக்க முயற்சி செய்தான். எடுக்க எடுக்க குறையாத தேன்கூடு போல், அவள் இதழில் இருந்து அவனுக்கு அளவில்லாத இன்பம் கிடைத்தது. காயத்ரியின் நிலைமையோ அதைவிட மோசம், கொடுப்பது எடுப்பது இதில் இரண்டில் எதில் அதிக இன்பம் நினைத்தாள், எதுவாக இருந்தாலும் இரண்டுமே கடைசியில் இணைவது இன்பத்தில் தான் என்று உணர்ந்து மயங்கினாள். அந்த இரவு அவர்கள் இருவருக்கும் விடியா இரவானது. காலை 7 மணிக்கு முதலில் கண் விழித்தாள் காயத்ரி. உடல் வலி இருந்தது, ஆனால் மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிந்தது. "நான்தான் இந்த உலகத்திலே சந்தோசமான பெண்". எழுந்து அங்கங்கே சிதறி கிடந்த தனது உடைகளை அள்ளி கொண்டு, குளியல் அறைக்குள் புகுந்தாள். நிர்வாணமான தன் உடலை தானே ரசித்தாள். அவளுடைய உதடுகள் இரவு முழுக்க செல்வாவுடன் நடத்திய காதல் யுத்தத்தால் கன்னி போயிருந்தன. தனது தனங்களை தடவி பார்த்தாள். அவை இரண்டும் செல்வாவின் வாய்ஜாலத்தால் சிவந்து போய் இருந்தன. பல் தடங்கள் பதிந்து அவளுடைய மார்பகங்களுக்கு அழகு ஊட்டின. வாழை தண்டு போல் இருந்த அவள் காலுக்கு நடுவில் இருந்த அவளது பெண்மை நேற்று இரவு செல்வாவின் ஆண்மையுடன் இட்ட போரில் வெற்றி பெற்றதால் பூரிப்பு அடைந்து பெரிதாகி இருந்தது. முதல் இரவில் அனைத்து பெண்களும் கற்பழிக்கபடுகிறார்கள் என்று பிரபல பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. தன் கணவன் அவனை அவமானபடுத்தி இருந்தும் முதல் இரவில் கண்ணியமாக நடந்து கொண்டதை பெருமை உடன் நினைத்து பார்த்தாள். இனி எக்காரணத்தையும் முன்னிட்டு நான் விட்டு கொடுக்க போவதில்லை என்று சபதம் செய்தாள். உடல் முழுக்க நன்றாக தேய்த்து குளித்து விட்டு வெளியே வந்தாள். செல்வா இன்னும் உறங்கி கொண்டு இருக்க, பச்சை நிற சுடிதார் அணிந்து கொண்டு, அருகில் அமர்ந்து அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள். நேரம் போனதே தெரியவில்லை. செல்வாக்கு தூக்கம் களைந்து விழிக்க "ஹாய் குட்மார்னிங்" என்றாள் அந்த பச்சை நிறதேவதை. அழகு பெட்டகமாக தெரிந்த அவளை கண்டவுடன் செல்வாவுக்கு காமம் தலைக்கு ஏறியது. அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தான். மூச்சு திணறிய காயத்ரி "செல்வா ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள். கொஞ்சம் நிறுத்திய செல்வாவை பார்த்து காயத்ரி, அவன் கழுத்தை கட்டி அணைத்து வலது கன்னத்தில் கடித்தாள். "ஐயோ" என்று கத்திய செல்வாவை "சாரி" என்று கண்களில் குறும்பு தாண்டவம் ஆட மன்னிப்பு கேட்டாள். இருவரும் குளித்து விட்டு வர மணி 9 ஆனது. அன்றைய தினமலர் பேப்பரை புரட்டிய காயத்ரி, என்னங்க இந்த செய்தியை பாருங்கள் என்று மூன்றாவது பக்கத்தில் இருந்த செய்தியை வாசித்தாள்." புது மனைவி கால் வலி, தூக்கி நடந்த கணவன் - இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடம்". இந்த தலைப்புடன் பக்கத்தில் செல்வா காயத்ரியை தூக்கி கொண்டு நடந்த படம் போடப்பட்டு இருந்தது. "ஆமா இத பாத்தா யாராவது கண்போட போறாங்க" என்று உரக்க சிரித்தான் செல்வா. அதே நேரத்தில் ஊட்டியில் இருந்த போகடியா தேயிலை தோட்டத்தில் தினமலர் படித்து கொண்டு, "ஏண்டி நீ இங்கயா இருக்க, என் வாழ்க்கைய பாழாக்கிட்டு நீ மட்டும் உன் புருஷனோட சந்தோசமா இருக்கியா? இனிமே எப்படி இருக்கன்னு நான் பாக்கிறேன்னு?" செல்வா காயத்ரி படத்தை பார்த்து உறுமி கொண்டிருந்தான் உச்சித்குமார். காதலில் காதலிப்பதும் காதலிக்கபடுவதும் சுகமேஉச்சித் குமார் பற்றி தெரிய நாம் இரண்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது சென்னையின் நந்தனத்தில் உள்ள புகழ் பெற்ற இருபாலர் பயிலும் கலை கல்லூரியில் B .Com இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தாள் காயத்ரி. எல்லோரையும் தனது அழகால் கவர்ந்த காயத்ரியை சுற்றி எந்நேரமும் வாலிபர்கள் கூட்டம், அங்கு அவள் ஒரு கனவு கன்னியாக ஆராதிக்கபட்டாள். உச்சித் குமார் ஒரு வட இந்திய இளைஞன், கல்லூரியில் M .Com படித்துகொண்டிருந்தான். பிறந்து வளர்ந்தது ஊட்டியில். அவன் அப்பா ஊட்டி மற்றும் குன்னூரில் டீஎஸ்டேட் ஓனர். அவனுக்கு பல பெண் நண்பர்கள் உண்டு. அழகான பெண்களை மயக்கி சீரழிப்பதே அவன் பொழுது போக்கு. காயத்ரிக்கு சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவத்தால் ஆண்களிடம் இருந்து தள்ளி இருப்பாள். அவளின் நெருங்கிய பிரெண்ட் பூஜா மட்டுமே, மற்ற பெண்களுடன் அவள் ஹாய் சொல்லும் அளவுக்கு பழக்கம். மற்ற பெண்களுக்கு காயத்ரி அழகை பார்த்து பொறாமை அதிகம் என்பதால், காயத்ரியுடன் அதிகம் பேசுவதில்லை. ஒருநாள் சீனியர் farewell பார்ட்டி அருகில் இருந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லாரும் கட்டாயம் போக வேண்டியிருந்ததால் காயத்ரியாலும் தவிர்க்க முடியவில்லை, அம்மாவிடம் போன் செய்து லேட் ஆகும் என்று தெரிவித்தாள். மாலை ஏழு மணிக்கு, ஆரம்பித்த பார்ட்டியில் இருந்த நண்பர்கள் உச்சித்தை கிண்டல் செய்து விளையாடி கொண்டு இருந்தனர். உச்சித் பாத்ரூம் சென்று திரும்பி வரும் வழியில் காயத்ரியை கண்டான். அவனுக்குள் வியப்பு இந்த அழகி எப்படி இத்தனை நாள் நம்ம கண்படாமல் இருந்தாள்? சரி நாம போய் பேச வேண்டியது தான் என்று முடிவு செய்து, காயத்ரி அருகில் வர, பூஜா அவனை கண்டு "ஹாய் உச்சித், எப்படி இருக்கீங்க" என்று நலம் விசாரித்து, காயத்ரியிடம் "இது நம்ம சீனியர் உச்சித் குமார், MCOM பைனல் இயர், நல்ல டான்ஸ் ஆடுவார், இவருக்கு நிறைய நண்பர்கள்" என்று அறிமுகபடுத்தி வைத்தாள். உதடு பிரியாமல் சிரித்தவளை கண்டு தேன் குடித்த வண்டு போல ஆனான் உச்சித். "ஓகே பை பை" சொல்லி விட்டு தனது நண்பர்களுடன் சேர, அங்கே டான்ஸ் பார்ட்டி ஆரம்பமானது. ஹிந்தி பாட்டுக்கு சிறப்பாக நடனம் ஆடிய உச்சித்தை பார்த்து அனைவரும் கைதட்டி உற்சாகபடுத்தினர். காயத்ரியும் அந்த பாராட்டில் கலந்து கொண்டாள். உச்சித் தன்னை அடிக்கடி திரும்பி பார்ப்பதை அறிந்த காயத்ரி அவனிடம் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்று நினைத்து அவனுக்கு ஹாய் என்று SMS அனுப்பினாள். திரும்ப ஹாய் என்று பதில் அளித்த உச்சித், யாரது என்று கேட்க, காயத்ரி என்ற பதில் வந்ததும் உற்சாகமானான். பக்கத்தில் இருந்த பூஜாவிடம் அவன் பதிலை காண்பிக்கஅவளோ "வேணாண்டி பிரச்னை ஆயிடும். அவன் பொம்பளபொறுக்கி, பணக்காரன் வேற" என்று சொல்ல, "சரிதான் போடி பெரிய பயந்தான்கொள்ளி, இப்ப பாரு வேடிக்கைய" என்று சொல்லி, I miss you என்று SMS செய்ய, I too என்ற பதில் வந்தது. திரும்ப பதில் அனுப்பாமல் தனது செல்போனை ஆப் செய்து வைத்தாள். உச்சித்க்கு பதில் வராமல் போக, காயத்ரியை தேடி அவள் இடம் வந்து சேர்ந்தான். "ஹாய்" என்று சொல்லி விட்டு, "Can you join with me for a dance? (நாம கொஞ்சம் டான்ஸ் ஆடலாமா)" என்று கேட்க "ஓகே" என்று பதில் சொல்லி அவனுடன் ஆட போனாள்.

No comments:

Post a Comment