Thursday 9 May 2013

செல்வா 05


அவனை பார்த்து ஏன்டா? பொண்ணுங்கன்னா கிள்ளு கீரையா, உனக்கு இன்னைக்கு நல்ல பாடம் புகட்டுறேன்னு நினைத்து கொண்டே, அங்கே இசைக்கப்பட்ட பாடலுக்கு நடனம் ஆட தொடங்க, உசித்துக்கு நம்ப முடியவில்லை. ஒரு அழகான பெண் அதுவும் இந்த கல்லூரியின் கனவு கன்னி தன்னுடன் ஆடுகிறாள் என்று. எல்லா இளைஞர்களும் அவனையே பொறாமையாக பார்ப்பது போல் நினைத்தான்.

நடனம் உச்ச கட்டத்தை அடைய, ஏற்கனவே மது அருந்தியதால் இருந்த போதையை விட காயத்ரியின் அருகாமை அதிக போதையை தர, தடுமாற ஆரம்பித்தான். அவள் இடுப்பில் கைவைத்து ஆட இழுக்க காயத்ரிக்கு கோபம் தலைக்கு ஏறியது, அரங்கமே அதிர பளார் என்று அறைந்து, "பொறுக்கி ராஸ்கல், கண்ட எடத்தில கை வைக்கிற" என்று கத்த, அவளது கிளாஸ் நண்பர்களும் , உச்சித் மேல் பொறாமையில் வெந்த அவன் கிளாஸ் நண்பர்களும் அவனை புரட்டி எடுத்தனர். அவமானத்தில் வெந்த உச்சித் அவளை முறைச்சு பார்க்க "போடா" என்று கை அசைத்து அவனை வெளியேற சொன்னாள். அந்த சம்பவத்திற்கு பிறகு உச்சித் கல்லூரிக்கு வருவது குறைந்தது. கடைசி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் எழுத வந்து விட்டு ஊட்டி திரும்பினான். இருந்தாலும் அவன் மனதில் அந்த அவமானம் அழியாத தழும்பாக பதிந்தது. அதற்கு பிறகு காயத்ரியை பற்றி தினமலர் நாளிதழை பார்த்த போது திரும்ப அவன் பட்ட அவமானம் நினைவுக்கு வந்தது. "இதுதான் சரியான சந்தர்ப்பம், விட கூடாது". அவள் அனுப்பிய I miss you என்ற SMS ஐ அவன் save செய்து வைத்திருந்தான். அதை இப்போது காயத்ரி புருஷன் கிட்ட காண்பித்து அவளோட வாழ்கையை பாழ்படுத்தலாம். அந்த நினைப்பே அவனுக்கு இனிமையாக இருந்தது. தினமலர் நாளிதழை படித்து மேலும் விபரங்கள் அறிந்து கொண்டு, தனது காரில் தாஜ் ஹோட்டலை நோக்கி விரைந்தான். காலை உணவை முடித்து விட்டு 10 மணி அளவில் தங்கள் ரூம் திரும்பிய செல்வா, காயத்ரி இருவரும் இன்று எங்கே போகலாம் என்று பிளான் செய்ய, அதற்குள் அவன் ஆபிசில் இருந்து அவன் செகரட்டரி ரமா போன் செய்து "சார் ஒரு வெளிநாட்டு buyer கிட்ட VC இருக்கு, MD அட்டென்ட் பண்ணனும் டைம் ஆயிடிச்சு, அவர் நம்பர் நாட் ரீச்சபிள்ல இருக்கு. நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் manage பண்ணுங்க , அதுக்குள்ள நான் MDயை கனக்ட் பண்ணிடுவேன், உங்கள ஹனிமூன்ல தொந்தரவு செய்ய கஷ்டமா இருக்கு" என்று சொல்ல. "இட்ஸ் ஓகே. VC எப்போ நான் எங்க அட்டென்ட் பண்ணனும்" என்று கேட்க. "சார் நான் ஏற்கனவே ஹோட்டல் ரிசப்சன்ல பேசிட்டேன் அங்கே VC வசதி இருக்கு, நீங்க உடனே போனா நல்லா இருக்கும்" என்று சொல்ல, "சரி நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லி, "காயத்ரி ஒரு அஞ்சுநிமிஷம் வெயிட் பண்ணு ரிசப்சன் கிட்ட ஒரு VC அட்டென்ட் பண்ணிட்டு வந்துடுறேன்", என்று சொல்ல அவன் போனில் பேசியதை வைத்து அவனது அவசரம் புரிய "நோ problem போயிட்டு வாங்க, நான் காத்துரிக்கேன்" என்று சொன்னாள்.கீழே ரிசப்சன் நெருங்கி VC இருக்கும் அறை எங்கே இருக்கிறது? என்று செல்வா விசாரிக்க, அதற்குள் ரிசப்சனில் ஒரு சிவப்பான உயரமான வட இந்திய இளைஞன் "காயத்ரி எங்க stay பண்ணி இருக்காங்க" என்று விசாரிக்க, ரூம் நம்பர் சொல்லப்பட்டவுடன் லிப்டுக்கு விரைந்தான். இவன் ஏன் காயத்ரியை விசாரிக்கிறான் என்று அவனை உற்று கவனித்து, பிறகு VC ரூமிற்குள் நுழைய அதற்குள், அவனுடைய அப்பா போனில் கூப்பிட்டார், "செல்வா நான் VC log in பண்ணிட்டேன். நீ VC அட்டென்ட் பண்ண வேண்டாம்" என்று சொல்லி கட் செய்தார். சரி அப்பா வந்துட்டார், இனி கவலை இல்லை ஆனாலும் சரியாய் பேசமாட்டேன்கிறாரே, " என்று நினைத்தவாறே தனது ரூமிற்கு திரும்பி, கதவை தட்ட போனபோது உள்ளே இருந்து காயத்ரியின் கோப குரல் கேட்டது. "ஏன்டா உனக்கு அறிவு இல்லையா? அப்போதானே நீ அறை வாங்கின, இன்னுமா உனக்கு புத்தி வரல" என்று ஆவேச குரல் எழுப்பினாள். இதற்கு அந்த வட இந்திய இளைஞன் "ஏண்டி நீ எனக்கு அனுப்பின SMS இருக்கு அது போதும், உன் கல்யாண வாழ்க்கைய நாசம் பண்ணுறதுக்கு. நீ எனக்கு வேணும், அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்" என்று எச்சரித்து "உன்ன போன்ல கூப்பிடறேன், இடத்த நான் முடிவு பண்ணுறேன் , அங்கே நம்மளோட முதல் இரவை வச்சிக்கிடலாம்" என்று சொல்லி விட்டு அவன் வரும் ஓசை கேட்டு செல்வா அருகில் இருந்த ஹாலுக்கு விரைந்து செல்ல, அந்த இளைஞன் லிப்டுக்கு அருகில் வந்து காத்திருந்த நேரத்தில், அவனுக்கு தெரியாமல் அவனை செல்போனில் போட்டோ எடுத்தான் செல்வா. உடனே அதை MMS மூலம் செந்தமிழுக்கு அனுப்பி விட்டு அவனை போனில் கூப்பிட்டான் . செந்தமிழ் இரண்டாவது ரிங்கில் போனை எடுக்க, செல்வா அவனிடம், "செந்தமிழ் நான் ஒருத்தனோட போட்டோவை அனுப்பிச்சி இருக்கேன். நீ உடனே பூஜாவை காண்டாக்ட் பண்ணி டீடைல்ஸ் வாங்கு, ரகு கிட்ட பேசி அவனோட ஸ்கூல் மேட் யாரோ ஊட்டில DSP இருக்கார். அவரோட உதவியோட இவனை பத்திய முழு தகவல் வேணும் அப்பிடின்னு சொல்லு" என்று உத்தரவு பிறப்பிக்க. "என்ன மச்சான் என்ன problem? "என்று கேட்டபோது," காயத்ரியோட காலேஜ்ல படிச்சவன் மாதிரி இருக்கான். அவள ப்ளாக் மெயில் பண்ணுறான். அவனை வாழ்நாள் முழுக்க காயத்ரியை நினைக்காத அளவுக்கு எதாவது பண்ணனும், அதால சீக்கிரம் details கண்டு பிடிச்சு என்னை கூப்பிடு" என்று சொல்லு போனை கட் செய்தான். பிறகு அவன் ரூமிற்குள் நுழைய காயத்ரி கண் கலங்கி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை கதவை வெறித்து பார்த்து கொண்டிருந்தது. அவள் நிலை அறிந்த செல்வா, மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க "என்ன காயத்ரி ஒரு மாதிரியா இருக்க. உடம்பு சரியில்லையா" என்று நெற்றியை தொட்டு பார்த்து, "உன்னால முடியலேன்னா நாம நாளைக்கு ஊட்டி போகலாம், எனக்கு ஆட்சேபனை இல்லை" என்று சொல்ல, காயத்ரிக்கு அப்போது இருக்கும் நிலைமையில் வெளியே செல்ல பிடிக்கவில்லை.நடந்ததை செல்வாவிடம் சொல்லி விடலாமா என்று நினைக்க, அவளது மனமோ வேணாம் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். செல்வா கிட்ட உச்சித் பத்தி சொன்னா தன்னை பற்றி சந்தேகபடுவான் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினாள். செல்வாவை பார்க்கும் போது அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோணும், அவள் மனமோ வேண்டாம் என்று சொல்லும். அவள் தவிப்பை உணர்ந்த செல்வா அவளை கட்டி அணைத்து "என் கண்ணு குட்டிக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்க அவள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். செல்வா பதறி தவித்து "என்ன பிரச்சனை?" என்று திரும்ப கேட்க, "இல்லை எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு" என்று சொல்ல, "நீ மொதல்ல அம்மாகிட்ட பேசு, பிறகு அவங்கள மீட் பண்ணுறத பத்தி யோசிக்கலாம்" என்று செல்வா காஞ்சனா நம்பர் டயல் செய்து காயத்ரியிடம் கொடுத்து விட்டு, அவள் தனியாக பேசட்டும் என்று எண்ணி ரூமை விட்டு வெளிய வந்தான். காயத்ரி அம்மாவிடம் உச்சித் வந்து தன்னை மிரட்டி விட்டு போனது, சொல்ல, காஞ்சனாவோ அவளை "நீ யாருக்கும் கவலைபடாதே. நீ செல்வா கிட்ட நேரடியாக பேசு. எந்த பிரச்சனையா இருந்தாலும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம். மாப்பிள்ளையும் நல்ல மாதிரி. அவர் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டார்" என்று சொன்னாள். காயத்ரிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, பிரச்னையை சமாளிக்கலாம் என்று தைர்யம் வந்தது. போன் காலை முடித்து விட்டு செல்வாவை தேட, கதவை திறந்து கொண்டு வெளியில் இருந்து வந்தான். "என்ன இப்போ ஓகே வா. சரியான அம்மா கோண்டுவா இருக்கியே", என்று அவளை சீண்டினான். "இப்போ நான் ஓகே. எங்க வேணா போகலாம்" என்று காயத்ரி சொல்ல, "இப்போ ஊட்டிக்கு கிளம்பலாம் நேரம் ஆகுது" என்று அவளை அவசரமாக கிளப்பினான். சரி செல்வாவிடம் பிறகு தனிமையில் பேசலாம் என்று விட்டு விட்டாள். அன்றைய பொழுது எப்படி கழிந்தது என்றே தெரியவில்லை. இதற்கு இடையில் செல்வாவுக்கு செந்தமிழ் மற்றும் ரகுவிடம் இருந்து call வந்தது. இடை இடையே அட்டென்ட் செய்து காயத்ரியிடம் இருந்து விலகி பேசி வந்தான். காயத்ரி என்னவென்று கேட்க, "ஒண்ணுமில்லை செந்தமிழ் ஒரு போலீஸ் பிரச்சனைல மாட்டிகிட்டான், அதுக்குத் தான் நான் ரகுகிட்ட பேசிகிட்டு இருக்கேன்" என்று சொன்னான். உண்மையில் உச்சித்குமார் விஷயத்தை செந்தமிழ் மற்றும் ரகுவுடன் பேசி கொண்டு இருக்கிறோம் என்பதை அவளுக்கு இப்போ சொல்ல வேண்டாம், பிரச்சனையை முடிச்சிட்டு சொல்லலாம் என்று நினைத்தான்.

அன்று போடனிகல் கார்டன், படகுதுறை, தொட்டபெட்டா சென்று ஹோட்டல் திரும்பினர். மறுநாள் முதுமலை மற்றும் கோத்தகிரி சென்று தாஜ்ஹோட்டல் திரும்பினர். செல்வாவிடம் உச்சித்குமார் பற்றி பேச வேண்டும் என்பதையே மறந்து விட்டாள் காயத்ரி. ஹனிமூன் தொடங்கி ஆறாவது நாள் அன்று மதியம் குன்னூரில் இருந்து கிளம்பி, இரவு கிளம்பிய மேட்டுபாளையம் எக்ஸ்ப்ரஸில் சென்னை திரும்பினர்.வீட்டுக்கு திரும்பிய புது மண தம்பதியினருக்கு செல்வா வீட்டில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. காயத்ரி தன் மாமியார், மாமனார் மற்றும் செல்வா மனம் கோணாமல் நடந்து கொண்டாள். தலைதீபாவளிமூர்த்திகாஞ்சனாவீட்டில்சிறப்பாககொண்டாடினர்செல்வாகாயத்ரிதம்பதியினர்காயத​்ரிதங்கைதிவ்யாஅப்படியேகாயத்ரியின்சிறியவயதுசெராக்ஸ்போலஇருந்தாள். 10 வது பப்ளிக் எக்ஸாம் ஆனதால் அவளுக்கு மாத்ஸ் எக்ஸாம் சம்மந்தபட்ட சந்தேகம் எல்லாம் செல்வாவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். செல்வா 10 வது மற்றும் 12 வது கணக்கு பாடத்தில் 100 மற்றும் 200 மதிப்பெண்கள் எடுத்தவன். அவனை கணக்கு புலி என்று அவன் ஆசிரியர்கள் அளிப்பது வழக்கம். திவ்யா சில சமயம் செல்வா வீட்டுக்கு வந்து சந்தேகம் கேட்பதும், சில நேரம் செல்வா காயத்ரி வீட்டுக்கு வரும்போது திவ்யா சந்தேகம் கேட்டு தீர்ப்பதும் வழக்கம். ஒரு ஞாயிறு அன்று திவ்யா அல்ஜிப்ராவில் சந்தேகம் கேட்க போனில் விளக்கி புரியாததால், செல்வா நேரடியாக செல்ல முடிவு செய்தான், காயத்ரி பார்வதி உடன் கோவிலுக்கு போய்விட்டதால் அவன் தனது பைக்கில் செல்ல வீட்டில் திவ்யா மட்டும் தனியாக இருந்தாள். "திவ்யா அம்மா எங்கே" என்று கேட்க "இன்னும் அரைமணி நேரத்தில கிளினிக்ல இருந்து வருவாங்க" என்று சொல்லி, "மாமா நீங்க சொல்லி குடுங்க" என்றாள். Algebra விளக்கி முடித்தவுடன், "மாமா நாளைக்கு நாங்க எல்லாம் மகாபலிபுரம் பிக்னிக் போறோம்". "எப்படி போறீங்க" என்று கேட்க "பைக்ல தான்". " யாரு பைக்ல". "என்னோட கிளாஸ் பசங்களோட தான்". "சரி எப்போ போயிட்டு திரும்ப வரிங்க" என்று கேட்க, "மாலைல போயிட்டு காலைல வர போறம்", என்று சொல்ல, "என்ன புரியாம பேசிறியா? வீட்டுக்கு தெரியுமா" என்று கேட்க, "நானும் என்னோட சேர்த்து எட்டு பொண்ணுங்க, பசங்க சேர்ந்து போறோம், வீட்டில யாருக்கும் தெரியாது, இது ஒரு த்ரில் தான் இல்ல" என்று கேட்க, செல்வாவுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறியது." திவ்யா என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறியா? நீ ஒரு பொண்ணு, ரிஸ்க் எடுத்தா பாதிக்கபட போறது நீ மட்டும் இல்ல, நம்ப குடும்பமும் தான். நீ போக கூடாது. நான் உன்னோட அம்மாகிட்ட இதை பத்தி சொல்ல போறேன்", "நீங்க என்ன சொல்றது, நான் உங்கள பத்தி, நீங்க என்ன மகாபலிபுரம் கூப்பிட்டதா சொல்லுவேன்".இதை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்த காஞ்சனா "என்னடி, மாப்பிள்ளை கிட்ட மரியாதை இல்லாம பேசுற. உன் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க" என்று சொல்லி பளார் என்று அறைந்தார். "அத்தை வளர்ந்த பெண்ணை அடிக்காதிங்க. அவள் புரிஞ்சு பேசுற மாதிரி தெரியல. நீங்க கொஞ்சம் அவளோட உக்கார்ந்து பேசுங்க. என்னை பொறுத்த வரையில் அவளோட சேர்க்கை சரியில்லை. அவளோட நண்பர்கள் கூட்டத்தை கவனிங்க. முடிஞ்சா ஸ்கூல் மாத்துங்க இப்போதைக்கு இதுதான் solution, சாரி திவ்யா" என்று சொல்லி விட்டு, கிளம்பினான். வரும் வழியில் அவனுக்கு பலத்த சிந்தனை "இந்த மீடியாவின் தாக்கத்தினால் எல்லாரும் பாதிக்கபட்டு இருக்காங்க. சிலர் அதை தவறான பாதைக்கு போக ஒரு கருவியா உபயோகிக்கிறாங்க. நல்ல வேளை திவ்யாவை மகாபலிபுரம் போகாம காப்பாத்தியாச்சு" என்ற நிம்மதியுடன் வீட்டுக்கு திரும்பினான். செல்வா காயத்ரியின் தாம்பத்ய வாழ்வு தடை இல்லாமல் சென்றது. செல்வா வின் மற்றவர்களை புண் படுத்தாத நல்ல எண்ணம், அவள் மனதை புரிந்த தன்மை, இவை அவர்கள் இருவரையும் மனம் ஒத்த தம்பதியினர் என்று சுற்றமும் நட்பும் வாழ்த்தியது. காயத்ரிக்கு செல்வா ஆபீஸ் ல இருந்து வர சிறிது நேரம் தாமதம் ஆனாலும் மனம் பர பரக்க ஆரம்பித்து விடும். இருவருக்கும் இடையில் என்ன ஊடல் வந்தாலும் கடைசியில் செல்வா தான் விட்டு கொடுப்பான். கேட்டால் ஒருவர் பொறை, இருவர் நட்பு என்று சொல்லி சிரிப்பான். காயத்ரிக்கு அவனை பார்த்தால் பெருமையாக இருக்கும், சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். ஜம்புலிங்கமும் அவர் மனைவி பார்வதியும் சிங்கப்பூர் மலேசியா டூர் நவம்பர் கடைசி வாரத்தில் சென்றனர். வரும் டிசம்பர் 6 காயத்ரி பிறந்த நாள். என்ன பரிசு கொடுக்கலாம் என்று சிந்தனை செய்தான். அவளுக்கு பிடித்த 1000 பாடல்களை புதிய ஆப்பிள் ஐ போடில் ஏற்றி, பிறகு அவளுக்கு பிடித்த புத்தகங்களையும் பரிசாக கொடுக்க முடிவு செய்தான். இதை அவளுக்கு சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்தால் அவள் எப்படி சந்தோஷபடுவாள் என்று நினைத்து பூரிப்படைந்தான். அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 7 தனது பிறந்த நாள் வருவதும் அவனுக்கு மிக சந்தோசமாக இருந்தது. காயத்ரி பிறந்த நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர் 5 மாலை முதல் செல்வா-க்கு ஆபீசில் இருப்பு கொள்ளவில்லை. எப்போது ஆறு மணி ஆகும் என்று காத்து கொண்டிருந்தான். அதே நேரத்தில் வீட்டில் காயத்ரியின் செல்போனுக்கு அந்த கால் வந்தது. இதென்ன தெரியாத நம்பரா இருக்கே, என்று தயக்கத்தோட தனது செல்போனை எடுத்தாள். அழைத்தது உச்சித்குமார், "என்னடி, என்ன முடிவு பண்ணி இருக்க, நான் இப்போ சென்னைல தான் இருக்கேன், நாளைக்கு உன் பிறந்த நாள் அப்பிடின்னு எனக்கு முன்னாலேயே தெரியும். அதே நாள்தான் நீ எனக்கு விருந்தாகுற நாள். சீக்கிரம் முடிவு பண்ணு. என்ன தான் நல்ல புருஷனா இருந்தாலும் தன் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னால இன்னொருத்தனோட பழகுனவ-ன்னு தெரிஞ்சா சந்தேகபடாம இருக்க மாட்டான். அதுனால நம்ம விஷயத்த உன் புருஷன் கிட்டே நான் சொல்றதா இல்ல வேணாமாங்கிறது உன் சம்மதத்தை பொறுத்துதான் இருக்கு. நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு போன் பண்ணி எங்க வரணும்னு சொல்லுறேன் ரெடியா இரு" என்று சொல்லி போனை கட் செய்தான். கலங்கி போன காயத்ரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, குழப்பம் மனதை சூழ செல்வா-க்கு போன் செய்வதா இல்லை வேண்டாமா என்று யோசித்தாள்.செல்வா ஆபீசில் ஆறுமணி ஆனவுடன், உடனே கிளம்பி வடபழனியில் உள்ள ஆடியோ கடையில் ஐ போடில் பாடல்களை அப்டேட் செய்து, தி நகர் வந்து 22 புத்தகங்களை பல பதிப்பகங்களில் விசாரித்து வாங்கி விட்டு வந்தான். அனைத்து புத்தகங்களும் காயத்ரிக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதியது. வீட்டில் நுழைந்த போது இரவு எட்டுமணி. அவன் செல்போனை எடுத்து பார்க்க காயத்ரியிடம் இருந்து இரண்டு missed கால் வந்து இருந்தது. சாரி கவனிக்காம விட்டோமே என்று நினைத்தான். சரி இப்போ வீட்டுக்கு வந்தாச்சு, காயத்ரியை நேரடியாக பார்த்து பேசி கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவன் வீட்டுக்கு திரும்பும் போதெல்லாம் அவனுக்காக புதிய உடை, மல்லிகை பூ மற்றும் அலங்காரத்துடன் காத்திருக்கும் அவள், அன்று ஏனோ கவலையாக தெரிந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு காயத்ரியை நெருங்கி அழைக்க, அவளிடம் இருந்து பதில் இல்லை. தீவிர சிந்தனை வசப்பட்ட நிலையில் இருந்தாள். அவள் தோளை தட்டி "ஹாய்" என்றான். சிந்தனையில் இருந்து விடுபட்ட காயத்ரி "உங்கள தான் தேடிகிட்டு இருக்கேன், உங்க போன்ல நான் ட்ரை செய்து பதில் எதுவும் வராததால என்ன ஆச்சோன்னு கவலைபட்டு இருந்தேன்" என்றாள். "சொல்லுடா என்ன பிரச்சனை?" என்றான். அவளுக்கு உச்சித்குமார் விஷயத்தை அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை சரியாக புரிந்து கொள்ளாமல் என்னை பத்தி சந்தேகபட்டால் என்ன செய்வது. சரி முதல்ல இத வேற மாதிரி ஆரம்பிக்கலாம் என்று, "ஒண்ணுமில்லை செல்வா என்னோட friend பாரதி அவளுக்கு கல்யாணம் ஆகி கொஞ்சம் நாள் தான் ஆகுது", என்று ஆரம்பித்து உச்சித் குமார் பற்றிய விபரங்களை அப்படியே பெயர் மாத்தி செல்வாவிடம் சொல்லி, "இப்போ அவள ப்ளாக்மெயில் பண்ணுறான். என்ன பண்ணுறதுன்னு கேக்குறா". செல்வாவுக்கு எல்லாம் புரிந்தது. ஏற்கனவே செந்தமிழ் இந்த விபரங்களை பூஜாவிடம் இருந்து அவனுக்கு தெரிவித்து இருந்தான். கொஞ்சம் விளையாடலாம் என்று எண்ணி, "இது அவள் பண்ணுன தப்பு, நம்பிக்கை துரோகம். அதுக்கு ஏத்த தண்டனைய அவ அனுபவிக்கணும். அவ புருஷன் அவள முதல்ல டைவர்ஸ் பண்ணிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும். அவ செஞ்ச தவற உணர்ந்து அவதிபடனும்" என்று சொல்ல, காயத்ரிக்கு முகம் மாறியது. "அய்யோ இப்போ சொன்னால் நம்மளை பத்தியும் இப்படித் தானே சொல்லுவார்", என்று மனம் நொந்து போனாள். செல்வாவுக்கு ஞாபகம் வந்தது. என்ன இது ஒரு மாதம் ஆகியும் அந்த உச்சித்குமார் பற்றி தகவல் இல்லையே என்று நினைத்து விட்டு, சரி காலைல கூப்பிட்டு கேக்கலாம் என்று முடிவு செய்து காயத்ரியை பின் தொடர்ந்தான். இரவு உணவை முடித்து விட்டு இருவரும் படுக்கை அறை திரும்பினர், காயத்ரிக்கு கடந்த இரண்டு நாளாக உடல்வலி. இன்று இந்த பிரச்னையும் சேர ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். "என்ன மேடம் என்ன தீவிர யோசனை" என்று கிண்டல் செய்தான். அவள் பிறந்த நாள் காலை 8 மணி அதனால் அவளுக்கு கிப்ட் கொடுக்க வேண்டியதை காரில் ஒளித்து வைத்து விட்டு வந்து இருந்தான். இருவரும் படுக்கையில் படுத்தபின் கொஞ்சநேரம் பேசிவிட்டு அவன் உறங்கிவிட, காயத்ரிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து கடைசியில் உறங்கிய போது காலை 2 மணி.6 மணிக்கு எழுந்த செல்வா செய்த முதல் காரியம் புத்தகங்களையும் ஐ போடையும் கட்டிலுக்கு அடியில் வைத்தது தான். பிறகு ஹாலை பலூன் மற்றும் கலர் காகிதங்களால் அலங்கரித்தான். 7 மணிக்கு அவன் முதல் நாள் பேக்கரியில் ஆர்டர் செய்து இருந்த பிறந்த நாள் கேக் வந்தது. அதை அப்படியே fridge ல் வைத்தான். எல்லாம் முடித்து விட்டு அவள் அருகில் உக்கார்ந்து 8 மணி எப்போது ஆகும் என்று வெயிட் செய்தான். சரியாக எட்டு மணி ஆக, அவள் காதுக்கு அருகில் சென்று my sweety , my beloved wife என்று கொஞ்சி எழுப்ப கண் திறந்த காயத்ரியை ஹாப்பி பர்த்டே சொல்லி வாழ்த்து சொன்னான். காயத்ரிக்கு அவள் பிறந்த நாளே மறந்து போனது. வாழ்த்து சொன்ன செல்வாவை கட்டி அணைத்து நன்றி சொன்னாள், குளித்து விட்டு வந்தவுடன், முதல் வேலையாக கேக் வெட்டி, பலூன் உடைத்து, காயத்ரி செல்வாவுடன் கொண்டாடினாள். "உனக்கு ரெண்டு கிப்ட் இருக்கு" என்று சொன்ன உடன்"எங்கே" என்று அவள் ஆவலுடன் கேட்க "வெயிட் பண்ணு கட்டிலுக்கு அடியில இருக்கு. நான் எடுத்து வந்து தரேன்" என்று சொன்னான். அதற்குள் அவள் செல்போன் அலற யாராக இருக்கும், ஒரு வேளை அவனாக இருக்குமோ என்று நடுங்கியபடி எடுத்தாள். நல்ல வேளை அது அவளோட வீட்டு தொலைபேசி எண். போனை எடுத்தவுடன் அவள் அம்மா "ஹாப்பி பர்த்டே" சொல்லி விட்டு "நான் அங்க வரேன்" என்று சொல்லி, "உன் தங்கை வாழ்த்து சொல்லணுமாம்" என்று சொல்லி விட்டு காஞ்சனா மூர்த்தியை அழைக்க விரைந்தாள். அக்காவிடம் வாழ்த்து சொல்லிய திவ்யாவிடம்," எப்போ நீ வீட்டுக்கு வர" என்று கேட்க, "இல்லக்கா, நான் உன்ன பார்க்க அங்க வர முடியாது. மாமா எங்கிட்ட ஒரு மாதிரி பேசுறாரு" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை "என்னடி விபரமாக சொல்லு" என்று கேட்க, "இல்லக்கா அவர் என்னை மகாபலிபுரம் போகலாம், ஜாலியா திரில்லா இருக்கும், உன் அக்காவுக்கு தெரிய வேணாம். ஏன் மாமா இப்படி தப்பா பேசுறிங்க நான் அக்கா கிட்ட சொல்லுருவேன்னு சொன்னப்போ, நீ சொன்னியினா அவ உன்னை நம்ப மாட்டா. அப்படி நம்பினாலும் எனக்கு கவலை இல்லை, மிஞ்சி போனா அவ என்ன பண்ணுவா, டைவர்ஸ் தான, எனக்கு கவலை இல்லை அப்பிடின்னு சொல்லிட்டாரு".

"ஏண்டி அம்மா கிட்ட சொல்லலையா?" என்று கோபமாக கேட்க, "உனக்கு தான் அம்மாவை பத்தி தெரியுமே, மாப்பிளை சொன்னதுதான் வேதம், அதுனால சொல்லலை" "சரி அழாத. நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னாள்.அதற்குள் படுக்கை அறையில் இருந்து சந்தோசமாக வந்த செல்வா, "நீ அங்க வந்தா நான் ரெண்டு கிப்டையும் காண்பிப்பேன். உனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று சொல்ல, "அது மொதல்ல இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. இந்த வாரம் நீங்க திவ்யாவுக்கு ஏன் கணக்கு பாடம் சொல்லி தர போகலை?" " இல்ல அவளே படிச்சுக்கிறேன் அப்படின்னு சொன்னா" "சரி போன வாரம் சண்டே அன்னிக்கு போனிங்களே என்ன நடந்துச்சு?" எரிச்சல் ஆனான் செல்வா, "ஒண்ணும் நடக்கலை. அல்ஜிப்ரா சொல்லி தந்திட்டு வந்தேன்." "அப்புறம் அங்கே என்ன நடந்தது?" " ஒன்னும் நடக்கல". "பொய் சொல்லாதிங்க. கணக்கு சொல்றேன் சொல்லிட்டு என் தங்கையை கணக்கு பண்ண பாத்திங்களா?" " ஏய் என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத. அப்புறம் பின்னால வருத்தபடுவ". "எனக்கு அதை பத்தி கவலை இல்லை. செல்வா, அவளோ 10 வது படிக்கிற சின்ன பொண்ணு, இவ்வளவு கேவலமா நடந்துகிரிங்களே வெக்கமா இல்லையா? அவ உங்கள மாமா அன்போட கூப்பிட நீங்க மாமா வேலைய காமிச்சிங்களா?" ஆவேசத்துடன் கத்தினாள். ஒரு புறம் உச்சித் குமாரின் torture இன்னொரு புறம் நல்லவன் போல் நடிக்கும் கணவன். யாரை நம்புவது? செல்வாக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளின் தோளை உலுக்கினான். "காயத்ரி நான் அப்படிபட்ட ஆள் இல்ல. அதுவும் திவ்யா மாதிரி சின்ன பொண்ணுங்க கிட்ட இப்படி நடக்கும் அளவுக்கு கேவலமானவன் இல்லை". "அப்படின்னா அவள் பொய் சொல் சொல்றான்னு சொல்லுறிங்களா? அவள் என் தங்கை பொய் சொல்ல மாட்டா? அதுனால அவளுக்கு என்ன லாபம்?" என்று சீறல் உடன் எதிர் கேள்வி எழுப்பினாள். "உங்களுக்கு என்ன செக்ஸ் மட்டும் வேணும்னா எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க? ஏன் நான் அழகா இல்லையா? இன்னும் உயிரோட தான இருக்கேன்? ஏன் இப்படி அலையிறிங்க" என்று கதற, பொறுமை இழந்த செல்வா தன் வாழ்கையில் இரண்டாவது முறையாக அவளை கைநீட்டி அறைந்தான். "ச்சே, என்ன பத்தி கேவலமா பேசிட்ட. இப்போ உனக்கு புரியாது. ஆனா நீ உண்மையை உணர்ந்து தேடும்போது நான் அங்க இருக்க மாட்டேன்" திரும்பி வேக வேகமாக வெளிய வந்து தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பியவனுக்கு தன்னை அறியாமல் கண்களில் இருந்து நீர் கொட்டியது. "எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் எதுவும் தப்பா நடந்துக்கலையே? என்னை ஒரு பொறுக்கியா, காமந்தககாரனா நினைசுட்டாள். . ஆனா அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போய்டுச்சு. அவளை என்னால மறக்க முடியுமான்னு தெரியலை. இனிமே மனசு ஒட்டுமான்னு தெரியலை"முதல்ல அத்தை கிட்ட பேசலாம் என்று எண்ணி செல்போனை தேட, அப்போது தான் காயத்ரியுடன் கோபப்பட்டு cell phone ஐ வீட்டிலே விட்டு விட்டு வந்தது ஞாபகம் வந்தது. சரி இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்து அருகில் உள்ள PCO சென்று காஞ்சனாவின் செல்போனுக்கு டயல் செய்தான். போனை எடுத்த காஞ்சனா "யாரது" என்று கேட்க, கொஞ்சம் இடைவெளி விட்டு "அத்தை நாந்தான்" " என்ன மாப்பிளை உங்க செல்போன் என்ன ஆச்சு". "கொஞ்சம் வெளியில அவசர வேலையா வந்ததனால வீட்டில மறந்து வச்சிட்டேன்". "என்ன? சொல்லுங்க மாப்பிளை .நான் அங்கதான் வந்திகிட்டு இருக்கேன்" என்று சொல்ல "ஒண்ணுமில்ல, நீங்க வரும் போது நான் கல்யாணத்துக்கு முன்னால காயத்ரிக்குன்னு கிப்ட் ஒன்னு கொடுதுரிந்தேன். அத காயத்ரி கிட்ட இப்போ கொடுத்துருங்க" என்று சொல்ல, "ஏன் மாப்பிள்ளை உங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, இப்போ நீங்க எங்க இருக்கீங்க" என்று கேட்க, "ஒன்னும் இல்லை, அத்தை மழைல ( www.tamilsexstoriespdf.com ) நனைஞ்சுட்டேன். வேற ஒண்ணும் இல்லை. urgent வேலையா வெளியில இருக்கேன். நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை வைத்தான். "என்ன ஆச்சு மாப்பிளைக்கு. ஒரு மாதிரியா பேசுறாரு" என்று நினைத்து கொண்டே, திவ்யாவை கூட வர சொல்லி அழைத்தாள். "இல்ல அம்மா நான் வரலை என்று சொன்னவளை, ஏண்டி அக்காவை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லையா. ரொம்ப பிகு பண்ணிக்கிற," என்று கேக்க, இனியும் மறுத்தால் சந்தேகம் வரும் என்று திவ்யா காஞ்சனாவுடன் கிளம்பினாள். வீட்டில் இருந்த காயத்ரிக்கு உலகமே ஸ்தம்பித்த மாதிரி இருந்தது. தான் செல்வாவை சொன்னது சரியா தவறா என்று தெரியவில்லை. செல்வா அறைந்தது கன்னத்தில் எரிந்தது. எங்கே போக போகிறான். இங்கே திரும்ப வர தானே வேண்டும் என்று இறுமாப்புடன் நினைத்தாள். அதற்குள் செல்வாவின் செல்போன் அலற தொடங்கியது. அதை கையில் எடுத்து, ஓ சார் மறந்து வச்சு போய்ட்டார் போல இருக்கு என்று கிண்டலுடன் நினைத்தபடி அழைப்பது யார் என்று கவனித்தாள். அதில் செந்தமிழ் போட்டோ வர "ஹாய் செந்தமிழ் அண்ணா கூப்பிடுறார். என்ன விஷயம்னு கேட்கலாம்?" என்று முடிவு செய்து போனை எடுத்தாள். "டேய் செல்வா உச்சித்குமாரை போலிஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்க, அவன் சீக்கிரத்தில வெளிய வர முடியாது. நான் இங்க போலீஸ் கமிசனர் ஆபீஸ் வெளியில இருந்து பேசுறேன், பூஜாவும் என் கூட இருக்கா" என்று சொல்ல, அந்த செய்தியை கேட்டு சிலை போல் நின்றாள் காயத்ரி.அண்ணன் நாந்தான் காயத்ரி. நீங்க சொன்ன விஷயம்... "என்று ஆரம்பிக்க "யாரு காயத்ரியா, நாங்க இப்பவே வீட்டுக்கு வந்திகிட்டு இருக்கோம். உன் பிறந்த நாள் வர்றதுக்குள்ள இத முடிக்கணும்னு நானும் செல்வாவும் முயற்சி பண்ணி இப்போ தான் ஒரு வழியா முடிஞ்சது. மத்தத நேர்ல சொல்றோம்" என்று போனை வைத்தான். காயத்ரிக்கு தலை சுற்றியது. "எப்படி இந்த விஷயம் செல்வாவுக்கு தெரிந்தது. நான் ஒன்னும் சொல்லாம எப்படி? என்னென்னமோ நடந்து இருக்கு. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே. அதுவும் பூஜாவும் ஒன்னும் சொல்லவில்லையே. ஆமா நாம்தான் அவகிட்ட பேசி ரெண்டு மாசம் இருக்குமே" என்று பதட்டத்துடன் காத்திருந்தாள். அதற்குள் காஞ்சனா திவ்யா இருவரும் வீட்டுக்குள் நுழைய. காஞ்சனா "மாப்பிளை எங்கடி" என்று கேட்க. "ஒன்னும் இல்லம்மா ஒரு சண்டை அதுதான். என்ன சண்டை. உன் பிறந்தநாள் அதுவுமா? அவர் சண்ட போடுற ஆள் இல்லையே?" என்று விசாரிக்க, "அதும்மா வந்து" என்று திவ்யாவை பார்த்தபடி தயங்க திவ்யா அவளிடம் சைகையில் ஏதோ சொல்ல , "என்ன சொல்லுடி, என்ன, திவ்யா மாப்பிள்ளையை பத்தி எதாவது சொன்னாளா?" என்று கேட்க "ஆமாம்மா, ஏதோ அவர் தப்பா" என்று ஆரம்பிக்க. "ஏண்டி அவ சொன்னா உனக்கு புத்தி எங்க போச்சு. உன் புருசன நீ புரிஞ்சுகிட்டு தான குடும்பம் நடத்துற? இல்ல நீங்க ரெண்டு பேரும் ராத்திரி படுக்க மட்டும் பெட் ரூம் வரிங்களா" என்று கத்த ஆரம்பிக்க, காயத்ரி "என்னம்மா இது அருவெறுப்பான கேள்வி கேக்குற?" "அவ என்ன சொன்னா அத சொல்லு", "செல்வா மகாபலிபுரம் கூப்பிட்டார்னு" " ஓஹோ, மாப்பிள்ளை ஒன்னும் சொல்லலையா" "இல்லம்மா நாந்தான் திவ்யா பொய் சொல்ல மாட்டான்னு சண்டை போட்டேன், அவரு கோவிச்சுகிட்டு போயிட்டாரு". "போடி கூ முட்டை. அறிவு இல்ல உனக்கு. என்ன நடந்தது, எனக்கு தெரியும். இவதான் அப்பிடி கேட்டுருக்கா, மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லி அட்வைஸ் பண்ணுனார். நல்ல வேளை நான் அங்க வந்ததால எனக்கு எல்லாம் தெரிஞ்சுது".

No comments:

Post a Comment