Tuesday 3 March 2015

சுகன்யா... 24


குமாரசுவாமி ஒரு வினாடி அவள் பேசியதை கேட்டதும் வாய்விட்டு சிரித்தார். பின் கேட்டார். "உன் சொல்வாவோட முழு பேரு என்னம்மா?"

"தமிழ்செல்வன்..ம்பா ... நீங்க எதுக்குப்பா நான் சொன்னதெல்லாத்தையும் கேட்டுட்டு சிரிக்கறீங்க"

"நானும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்கம்மாவும் நீ சொன்ன அத்தனை குறையும் என் மேல சொல்லியிருக்கா; உங்கம்மாவை கேட்டுப்பாரு; உண்டா - இல்லையான்னு; அதான் எனக்கு சிரிப்பு வருது?"

"ஆமா ... என் குழந்தையை ஏன் இப்ப அழுவ வெக்கறீங்க? உங்க கதையை இப்ப எவன் கேட்டான்?" சுந்தரி அவரை தன் கண்ணை உருட்டி பார்த்து முறைத்தாள். முறைத்துக் கொண்டே அவரிடம் சாய் கோப்பையை நீட்டினாள்.

"உன் ஆளோட அப்பா பேரு என்னடா செல்லம்? அவர் என்ன பண்றார்? சுந்தரி கொடுத்த டீயை வாங்கி அவர் ருசித்து உறிஞ்ச ஆரம்பித்தார்.



"சுந்தரி ... சாய் நல்லா இருக்குடி ... ஏலக்காய் நசுக்கிப் போட்டியா?" சொன்னவர் தன் பெண்ணின் காதில் மெதுவாக கிசுகிசுத்தார். இப்ப இந்த டீயைப் பத்தி நான் எதுவும் சொல்லலேன்னா, உங்கம்மா என் கிட்ட முறுக்கிக்குவா ... என் வயசு அம்பது ... உன் செல்வா வயசு இருபத்தஞ்சு..." குமார் மீண்டும் சிரித்தார்.

"கட்டிக்கிட்ட பொம்பளைகிட்ட எப்படி பேசணும்; அதுவும் எந்த நேரத்துல பேசணும்; எப்படி பேசக்கூடாது; என் மனைவியோட விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புகள்; என்னன்னு மெதுவாத்தான் எனக்கு புரிஞ்சுது; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, மே பீ ருட்டீன் இஷ்யூஸ், ஒரு தலையாட்டல், அவளை அப்ரிஷியேட் பண்ற மாதிரி; ஒரு சின்ன புன்முறுவல்; இந்த யுக்திகள், தந்திரங்கள், இதெல்லாம் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சுத்தாம்மா எனக்கும் புரிஞ்சுது; உன் செல்வாவும் இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்குவாம்மா."

"மே பீ அவன் செல் - சிம் கெட்டுப் போய் இருக்கலாம்; ஆஸ்பத்திரியில இருக்கான்; ரீ சார்ஜ் பண்ண வேண்டி இருக்கலாம். ஏன் ... இன்ஸ்ட்ருமெண்ட் கூட திருடு போயிருக்கலாம்; உங்கிட்ட பேச நினைக்கும் போது வேற யாராவது கூட இருந்திருக்கலாம்... வெய்ட் ... பொறுத்துப் பாரு; நேத்துத்தான் அவனைப் பாத்து பேசியிருக்கே; கூட இருந்து இருக்கே; முழுசா ஒரு நாள் ஆகலே; அதுக்குள்ள அவன் உன் கிட்ட பேசலேன்னு கோபப்பட்டா எப்படி? ம்ம்ம்... டோண்ட் வொர்ரி! இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கவலைப்பட்டு, உன் வாழ்க்கையின் இனிமையான நேரத்தை வீணாக்கிடாதே."

"சரிப்ப்பா"

"அம்மா சொல்ற மாதிரி, நீ மட்டுமே நெருங்கி நெருங்கி போனாலும் அவனுக்கு உன் மேல ஒரு சலிப்பு வந்துடும்; நம்ம சுகன்யாதானே ... இட்ஸ் ஓ.கே அப்படின்னு எடுத்துக்குவான்; பழக பழக பாலும் புளிக்கும்ன்னு ஏன் சொல்றாங்க? நம்ம உடம்புக்கு வெய்யிலோட சூடு தேவை; அதுக்காக வெயில்ல நின்னு உடம்பை சுட்டுக்கறதா?கூடாது; வாழ்க்கையில புத்தர் சொன்ன மிடில் ஆஃப் த ரோட் ஆட்டிட்யூட் வெச்சுக்கணும்"

"இப்ப நீங்க அவ காதுல என்னைப் பாத்து பாதது என்ன முணுமுணுக்கிறீங்க?" சுந்தரி போலியான கோபத்துடன் அவர்களை நெருங்கினாள்.

"உன்னைப் பத்தி பேசிட்டு, திரும்பவும் நான் எங்கே போறது?

"சரிப்பா ... நீங்க சொல்றது எனக்கு புரியுது."

"குட் கேர்ள் ... அவன் அப்பாவைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தே நீ"

செல்வாவோட அப்பா பேரு நடராஜன்; அவரு சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபிசரா, கங்கூலி அண்ட் கங்கூலிங்கற, ஒரு ஃப்ரைவேட் கம்பெனியில வொர்க் பண்றார். அவரோட அம்மா பேரு மல்லிகா, ஹவுஸ் மேக்கரா இருக்காங்க; செல்வா தங்கை பேரு மீனாட்சி; செல்லமா அவளை மீனான்னு கூப்பிடுவாங்கப்பா."

"ஒரு தரம் நான் அவகிட்ட அவசரப்பட்டு சண்டை போட்டுட்டேன். ஆனா அவ இப்ப எனக்கு நல்ல ஃப்ரெண்டுப்பா; ரொம்ப ரொம்ப ஸ்வீட் கேர்ள்ப்பா; அவங்க இந்திரா நகர்ல, சொந்த வீட்டுல இருக்காங்க. எனக்காக அவங்க வீட்டுல அவங்க அம்மாகிட்ட சண்டை போட்டு இருக்கா. அவங்க கார் வெச்சிருக்காங்க." சுகன்யாவும் தன் டீயை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

சுகன்யா, நடராஜன் பேரையும், அவர் குடும்பத்தினர் ஒவ்வொருத்தரின் பேரையும் சொன்னபோது, குமாரசுவாமி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனார். ஆண்டவா, நீ எப்படியெல்லாம் என் வாழ்க்கையில விளையாடறே? இதுக்கு என்ன அர்த்தம்? சில வினாடிகள் அவர் மவுனமாக இருந்தார்.

"என்னங்க, ஒரு விஷயம் நான் சொல்ல மறந்துட்டேங்க. ஹாஸ்பெட்டல்ல செல்வாவுக்கு நினைவு வந்தவுடனே முதல்ல அவன் வாயில வந்த வார்த்தையே "சுகன்யா". "சுகன்யாவை நான் பார்க்கணும்." நம்ம சுகன்யாவைத்தான் முதல்ல பாக்கணும்ன்னு அவன் சொன்னதா டாக்டர் சொன்னார்."

"கடைசியா நானும் ரகுவும் ஐ.சீ.யூவுல அவனைப் பார்க்க போனோம். எங்க எதிர்லேயே, நம்ம சுகா கையை எடுத்து தன் மார்ல வெச்சிக்கிட்டாங்க. அவனால அப்ப பேசவே முடியலை. வலியில துடிச்சிக்கிட்டிருந்தான். அவன் கண்களை பாத்தேன். அதுல பொய், பாசாங்கு எதுவும் இல்லைங்க. அப்ப அந்த நேரத்துல, நம்ம பொண்ணு அவன் பக்கத்துல இருக்கறதைத்தான், அவன் விரும்பறான்னு அவன் மூஞ்சியில எழுதி ஒட்டியிருந்துதுங்க. அந்தப் பையன் நம்ம பொண்ணை நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். சும்மா டயம் பாஸ்க்காக நம்ம பொண்ணு பின்னால சுத்தலீங்க. இது என்னோட ரீடிங். "

"உன் பொண்ணு அவனை ஆசைபட்டுடாளேன்னு சொல்லாதே. அவனை உனக்கு நிஜமா பிடிச்சிருக்கா?"

"ஆமாங்க ... எனக்கு அவனை பிடிச்சிருக்குங்க."

"ரகு என்ன சொல்றான்"

"அவனுக்கும் செல்வாவை பிடிச்சிருக்குங்க."

"அப்ப நடராஜனைப் பாத்து முடிவா என்ன சொல்றீங்கன்னு கேட்டுடட்டுமா?"

"நீங்க இப்படி ஒரே வழியா அவசரப் பட்டா எப்படீங்க? நீங்க இன்னும் அவனை பாக்கலையே?"

"சுந்து ... சுகன்யாவுக்கு செல்வாவைப் பிடிச்சிருக்கு; இப்பத்தான் உன் பொண்ணு தெளிவா சொன்னா நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு; அந்த பையனுக்கும் நம்ம சுகாவை பிடிச்சிருக்கு; செல்வாவோட அப்பாவுக்கும் நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு நீ சொல்றே; அவனோட அம்மாவை அவன் தான் கன்வின்ஸ் பண்ணணும். "

"உங்க எல்லோருக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. அதனால செல்வாவை எனக்கு பிடிச்சவனா நானும் ஏத்துக்கறேன்; அவ்வளவு தானே? யாருகிட்ட தான் குறையில்லை? சுகன்யா அவன் கிட்ட இருக்கற குறைகள்ன்னு சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்கள்; வாழ்க்கையில அடிபட்டா, அவன் போக்கும் கொஞ்சம் கொஞ்சமா மாறிடும்."

"அப்பா நீங்களும் அவரை ஒரு தரம் பாத்துட்டு உங்க விருப்பத்தைச் சொல்லுங்கப்பா; அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கும்.." சுகன்யா அவர் கையை பிடித்துக்கொண்டாள்.

"சுகா, இன்னும் கொஞ்ச நேரத்துல அவனைத்தான் நான் பார்க்கப்போறேன்."

"அப்பா நீங்க என்ன சொல்றீங்கப்பா?"

சுகன்யாவும், சுந்தரியும் அவர் சொன்னதைக் கேட்டு ஒரு வினாடி திகைத்தார்கள். சுகன்யாவுக்கு தன் தகப்பன் என்ன சொல்கிறார் என சுத்தமாகப் புரியவில்லை.

"சுகா! இன்னைக்கு நடக்கறதெல்லாம், சினிமாவுல; சீரியல்ல; நான் படிக்கற கதைகள்ல்ல வர்ற மாதிரி விசித்திரமா இருக்குன்னு, நீ காலையில சொன்னே; இப்ப நான் சொல்றேன், உண்மையிலேயே நேத்துலேருந்து என் வாழ்க்கையில, ஒண்ணு பின்னால ஒண்ணா நடக்கற நிகழ்ச்சிகளை பாக்கறப்போ, எனக்கும் நீ சொன்ன அந்த எண்ணம்தான் வருது."

"புரியற மாதிரி சொல்லுங்க" சுகன்யாவும், சுந்தரியும் ஒரே குரலில் பேசினார்கள்.

"சுகா, கங்கூலி அண்ட் கங்கூலிங்கற கம்பெனியிலத்தான் நான் ப்ராஞ்ச் மேனேஜரா இருக்கேன். அந்த நடராஜன் என் கீழத்தான், என் கம்பெனியிலத்தான், சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசரா வொர்க் பண்றார். ரொம்ப நேர்மையான மனுஷன். கை ரொம்ப ரொம்ப சுத்தம். கம்பெனி பணத்துல, ஒரு பைசா வீணா செலவு பண்ண விட மாட்டார். அவர் கையெழுத்து இருக்கற பேப்பர் எங்கிட்ட வந்தா, நான் படிக்காமலே கையெழுத்துப் போடுவேன் ... அப்படி ஒரு சுத்தமான மனுஷன். நேத்து ராத்திரி நான் அவர் வீட்டுலத்தான் டின்னர் சாப்பிட்டேன். "

"மல்லிகா என்னை அவங்க புருஷனுக்கு ஆபீசரா பார்க்கலை. தன் கணவரோட ஒரு நல்ல நண்பராகத்தான் என்னை நடத்தினாங்க. மல்லிகாவும், அவங்க பொண்ணு மீனாவும் மனசார நேத்து ஓடி ஓடி என்னை உபசரிச்சாங்க. அந்தம்மாவுக்கு கை மட்டும் தாராளமில்லே, அவங்க மனசும் தாராளமானதுன்னுத்தான் நான் நினைக்கிறேன்."

"நிஜமாவே நீங்க சொல்ற இந்த விஷயம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரேஞ்சாத்தான் இருக்குப்பா ..."

"அவங்க பையன் தமிழ்செல்வன், ஒரு ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கறதா அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியவந்தது. இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில அவங்க வீட்டுக்கு போனதுக்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். மீனாவும், மல்லிகாவும் பகலெல்லாம், உன் செல்வா கூட இருந்துட்டு, நான் சாப்பிட வரேன்னு நடராஜன் சொன்னதும், அவனை தனியா விட்டுட்டு, எனக்காக வீட்டுக்கு வந்து விருந்து தயார் பண்ணியிருக்காங்க."

"ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுதான் பதம் பாக்கணும்மா. நான் நடராஜனை பர்ஸனலாவும், அவருக்கு நான் ஆஃபீசருங்கற ஹோதாவிலேயும் அஞ்சு வருஷமா பதம் பாத்துக்கிட்டு இருக்கேம்மா. அவர் மகன் செல்வாவை நான் பதம் பார்க்க வேண்டாம்மா .. அவனும் உன்னை மாதிரி சின்னப் பையன் தானேம்மா... அனுபவமில்லாதவன்தானே ... நாளடைவில அவனுக்கும் பக்குவம் வந்துடும்; எல்லாம் சரியா போயிடும். கவலைப் படாதே."

"யாரோ உள்நோக்கத்தோட உன்னைப் பத்தி சொன்னதை வெச்சி மல்லிகா உன்னைத் தவறா மதிப்பிட்டிருக்கலாம். அவங்க வீட்டுல போய் நீ வாழணும். உனக்காக நான் அவங்க கிட்ட, உன் தந்தையா போய் ஒரு தரம் பேசிப் பார்க்கிறேன். அவங்க மனசுல உன்னைப் பத்தி இருக்கற தப்பான அபிப்பிராயத்தை மாத்த நான் முயற்சி பண்றேன். நீ நல்லா இருக்கணும்ன்னு உங்கம்மா நினைக்கிற மாதிரி அவங்க தன் பிள்ளைக்கு ஒரு நல்ல பெண் மனைவியா வரணும்ன்னு நெனைக்கறதுல தப்பே இல்லை. "

"அப்பா ... ரொம்ப தேங்க்ஸ்ப்பா ..."

"எதுக்கும்மா ... தேங்க்ஸ் ...?

"நீங்க செல்வாவை பார்க்காமலே அவரை உங்க மாப்பிளையா ஏத்துக்கறேன்னு அப்ரூவ் பண்ணதுக்குதாம்பா ... இந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேம்பா. நீங்க அவரைப் பாத்துட்டு சொல்லுங்கப்பா - என் செலக்ஷன் எப்படீன்னு"

"சுந்தரி ... நீ சிம்பிளா ஒரு சமையல் பண்ணி வைம்மா; நான் அந்தப் பையனை பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன். எனக்காக நடராஜன் அங்க ஆஸ்பத்திரியில காத்துக்கிட்டு இருப்பார். திரும்பி வந்து நான் இன்னைக்கு உன் கையாலத்தான் சாப்பிடப் போறேன்; சாப்பிட்டுட்டு இங்கேயே தங்கிட்டு, நாளைக்கு காலையில அம்பாளை கட்டாயம் தரிசனம் பண்ணியே ஆகணும்..."

"சரிங்க ..."

"சுகா, நீயும் என் கூட வர்றயாமா?"

"எதுக்குங்க ... தினம் தினம் இவ அங்க ஏன் போகணுங்க; நீங்க மட்டும் போய்ட்டு வாங்களேன் ..." சுந்தரி குறுக்கிட்டாள்.

"அப்பா .. நிஜம்மாத்தான் கூப்பிடறீங்களா? ... இல்ல கிண்டல் பண்றீங்களா?"

"அயாம் சீரியஸ்; நாட் ஜோக்கிங்..."

"எனக்கும் அவரைப் பார்க்கணும் போல இருக்குப்பா; நேத்துலேருந்து அவர் என் கிட்ட போன் பண்ணி பேசவே இல்லே; அம்மா வேண்டாம்ன்னு சொன்னதால நானும் பேசலை; நான் அவருகிட்ட பேசவே கூடாதுன்னு மதியானத்துலேருந்து நினைச்சிக்கிட்டு இருந்தேன்; இப்ப நேராப் பாத்து சண்டை பிடிக்கணும்ன்னு ஆசையா இருக்குப்பா?" அவள் சிரித்தாள்.

"சுகா ... என்னடிப் பேசறே நீ; நீ அடிக்கற கூத்து கொஞ்சம் கூட நல்லாயில்லே; எனக்கு கோபம் வர மாதிரி நடந்துக்காதே; உன் அப்பா பக்கத்துல இருக்காருன்னு ரொம்ப துள்ளாதே; கொஞ்சம் அடங்குடி; சும்மா அந்த பையன் கிட்ட தொட்டதுக் கெல்லாம் சண்டை போட வேணாம்ன்னு நான் சொல்றேன்; அவனை நீ ஏதாவது சொல்லுவே; அவன் உன்னை ஏதாவது கேப்பான்; அப்புறம் நீ முஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு அழுது புலம்ப வேணாம். நீ இப்ப அங்க போக வேண்டாம். உன் நல்லதுக்குத்தான் நான் சொல்றேன். பெரியவங்க சொல்றதை நீ கேளு. இந்த ஸ்வீட், காரம், மல்லிப்பூவை எடுத்துகிட்டு போய் வேணி கிட்ட குடுத்துட்டு வா. அவ பால்கோவான்னா, உயிரை விடறா ... " சுந்தரி குரலை உயர்த்தி தன் பெண்ணை முறைத்தாள்.

"சரி ... சரி ... நீ பாட்டுக்கு கத்தாதே ... நீயும் தான் உன் வீட்டுக்காரர் பக்கத்துல இருக்காருன்னு ரொம்பத்தான் துள்ளி தொப்புன்னு குதிக்கறே" ஸ்வீட் வைத்திருந்த தட்டை எடுத்துக் கொண்ட சுகன்யா கோபத்துடன் முனகிக்கொண்டே தட தடவென கீழ் போர்ஷனுக்கு ஓடினாள்.

"மெதுவா போடி ... விழுந்து கிழுந்து வெக்காதே .." சுந்தரியின் குரல் அவள் காதில் விழவேயில்லை.... 

"சுந்து ... குழந்தையை ஏண்டி இப்படி வெரட்டறே?"

"நீங்க சும்மா இருங்க; இப்படி கண்ணுல எண்ணையை ஊத்திகிட்டு நான் அவ பின்னாடி நிக்கும் போதே, அவ என்ன வேலை பண்ணி வெச்சிருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?"

"அப்படி என்னடி பண்ணிட்டா? அவளுக்கு புடிச்ச பையனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றா ... அவ்வளவுதானே?"

"அது வரைக்கும் தான் உங்களுக்குத் தெரியும்" சுந்தரி தன் முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டாள்.

"சுந்து, நீ ஏன் சுகன்யாவை என் கூட வர வேணாங்கறே?" தன் அருகில் உட்க்கார்ந்திருந்த சுந்தரியின் தோளில் தன் கையைப் போட்டுத் தன்னருகில் இழுத்தார்.

"சும்மா என்னை ஏன் ஏன்னு கேக்காதீங்க ..." சுந்தரி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இவங்க ஒருத்தரை ஒருத்தர் தொட்டு பழகிட்டாங்கன்னு சொன்னே ..." அவர் அவள் முகத்தை தன் புறம் திருப்பி கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டார்.

"அதனாலத்தான்... மேல மேல இவங்க தப்பு பண்ண வேணாம்ன்னு சொல்றேங்க ..."

"ம்ம்ம் ... இவங்க நெருக்கம் எது வரைக்கும் போயிருக்கு? உனக்கு எதாவது தெரியுமா?"

"நாமும் தான் காதலிச்சோம் ... ஆன கல்யாணம் ஆகற வரைக்கும் நாம ரெண்டு பேரும் உதட்டுல கூட முத்தம் கொடுத்துக்கிட்டது கிடையாது ... ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு நடப்போம் ... அதுவே நம்ம காலேஜ்லே பெரிய விஷயமா நம்ம ஃபெரெண்ட்ஸ்ங்க பேசினாங்க; கிராமத்துல குசுகுசுன்னு பேசிகிட்டாங்க; ஒரு தரம் கோவில் மதிலுக்குப் பின்னால முத்தம் குடுக்கறேன்னுட்டு என் கன்னத்தை கடிச்சீங்க. எனக்கு வலி உசுரு போச்சு; உங்களுக்கு அப்ப ஒழுங்கா முத்தம் குடுக்கக் கூட தெரியாது. நம்ம நெருக்கம் இவ்வளவுதான். " அவள் உரக்க சிரித்தாள்.

"ம்ம்ம் .... கிட்ட வாயேண்டி ... முத்தம்ன்னா எப்படி குடுக்கணும்ன்னு இப்ப காட்டறேன் ... பழசெல்லாம் சொல்லி உன் பையனை கிளப்பறயேடி?" உற்சாகமான குமார் தன் கையை அவள் இடையில் தவழ விட்டார்.

"ஆமாம் .... நான் தான் கிளப்பறேன் அவனை" அவள் கை அவருடைய லுங்கியை சிறிதே விலக்கி அவரின் உறுப்பைத் தேடியது.

"இப்பவும் நீ கிட்ட வந்ததும் அவன் கிளம்பறானேன்னு சந்தோஷப் படு. உனக்கு வேணுமாடி?"

"ஹூகூம்ம்ம் .... இப்ப வேணாம்"

"அப்புறம் கையை ஏன் உள்ளே விடறே?"

"ச்சும்ம்மாத்தான் ....எப்படீருக்கான்னு பாக்கறேன்."

"எல்லாம் தயாராத்தான் இருக்கான்"

"ச்ச்சை ... பேசற பேச்சைப் பாரு ...ஒரு வயசுக்கு வந்த பொண்ணுக்கு அப்பனாவா பேசறீங்க.."

"நீ மட்டும் என்ன ... ஆம்பளை லுங்கிக்குள்ள கையை வுட்டுட்டு பேச்சா பேசறே? சுந்து ... நான் தயார்டி ... நீ தயாரா அதை சொல்லுடி?"

"இப்ப வேண்டாங்க ... ராத்திரிக்கு வெச்சிக்கலாமே எல்லாத்தையும்" அவள் சட்டென நீண்டப் பெருமூச்சுடன் அவர் உதடுகளில் முத்தமிட்டாவாறே அவர் தடியை மெதுவாக தடவி விட ஆரம்பித்தாள்.

" சுந்து ... நீ சுகாவைப் பத்தி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தே?"

"அந்த பையன் டிரான்ஸ்ஃபர் ஆனதும், பாண்டிசேரிக்கு போறதுக்கு முன்னே வந்து இருக்கிறான். அவனும் சுகன்யாவும் இங்க தனியா இருந்திருக்காங்க ..." சுந்தரி கணவனை நெருங்கி அவர் தொடையில் தன் தொடை உரச உட்க்கார்ந்தாள்.

"ம்ம்ம் ... இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? வேணி வீட்டுல யாரும் இல்லையா அப்போ? சுந்தரியின் இடையில் விளையாடிக்கொண்டிருந்த குமாரின் கை மெதுவாக அவளின் மார்பை நோக்கி நகர்ந்தது.

"நீங்க உங்க கையை வெச்சிக்கிட்டு சும்மா இருங்க ... நீங்க கிளம்பினது போதும் ... என்னையும் கிளப்பி விட்டுடாதீங்க .... அப்புறம் என்னால பொறுக்கமுடியாது ... நடுவுல கீழே போனவ திரும்பி வந்து தொலைச்சிடப் போறா.."

"சரி... சரி ... நீ அவனை ரொம்ப குலுக்காதே ... வந்துடப் போறான் ... சுந்தரியின் கைக்குள் அடங்காமல் அவன் திமிறிக் கொண்டிருந்தான். ம்ம்ம் .... நல்ல்லா இருக்குடி .. மஜாவா இருக்க்குடி ... மெதுவா தடவி குடும்ம்மா"

"இப்ப வரவேணாமா உங்களுக்கு?"

"இல்லே ... எனக்கு உனக்குள்ளத்தான் வரணும் ..."

"சர்ர்ரிங்க ... ஆனா இப்ப அது முடியாது ... அவள் தன் கையை அவர் தடியை விட்டு அவசரமாக விலக்கினாள் .."

சுகன்யா, வேணியைப் பார்க்கப் போனால், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு அவர்கள் அரட்டை கச்சேரி நீடிக்குமென, சுந்தரிக்குத் நன்றாகத் தெரியும். சுந்தரி அவர் பிடியிலிருந்து விலகி எழுந்து, வெளிக்கதவை இலேசாக ஒருக்களித்து மூடினாள். திரும்பி வந்தவள் சோஃபாவில் உட்க்கார்ந்து கொண்டு, தன் கணவனை சோஃபாவுக்கு வருமாறு தன் கண்களால் அழைத்தாள். அருகில் வந்து அமர்ந்தவரை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவர் தலை முடியை தன் வலது கையால் கலைத்து விளையாடத் தொடங்கினாள்.

"அப்புறம்?" குமார் சிறிதே கலக்கமான முகத்துடன் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அப்புறம் என்னா ... அப்புறம்?" சுந்தரி குறும்பாக சிரித்தாள்.

"இல்லடி ... எது வரைக்கும் இவங்க நெருக்கம் போயிருக்குன்னு கேக்கிறேன்."

"ம்ம்ம் ... அதுவா ... அவளை ஏன் வெரட்டறேன்னு கேக்கறீங்களே .. அவதான் ... உங்க ஆசைப் பொண்ணு, தன் ரவிக்கையை அவுத்துட்டு, இடுப்புத் துணியோட அவன் மடியில உருண்டு இருக்கா.."

"ம்ம்ம் ... வேற எதுவும் தப்பா நடந்துடலேயே?" அவர் தொடை நடுவில் எழுந்து ஆடிக் கொண்டிருந்தவன் அவள் சொன்னதைக் கேட்டதும் இலேசாக தளர ஆரம்பித்தான்.

"யாருக்குத் தெரியும்? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ... உங்களை மாதிரித்தான் நானும் என் மனசு பதை பதைச்சு போய் இவளைக் கேட்டேன்; எல்லாம் முடிஞ்சு போச்சா உங்களுக்குள்ளேன்னு?"

"அம்மா என்னை நம்பும்மா ... சாமி மேல சத்தியமா, முத்தம் மட்டும்தான் கொடுத்துக்கிட்டோம். நான் பண்ணது தப்புதாம்மா ... இதுக்கு மேல எங்களுக்குள்ள ஒண்ணும் நடக்கலேன்னு என் மடியில படுத்துக்கிட்டு ஓன்னு அழுதா."

"வயசுக்கு வந்த பொண்ணு. பாத்து பாத்து மார்ல போட்டு வளர்த்தேன். அவளை நான் அடிக்கவா முடியும். அந்த பையன் நல்ல குடும்பத்துல பொறந்தவனா இருக்கப் போய், என்ன நெனைச்சானோ ... அந்த பையனே சட்டுன்னு நெகிழ்ந்து கிடந்த புடவையை எடுத்து இவ மேல போத்திட்டு, இது போதும் "சுகு" ன்னுட்டு நகர்ந்து உட்க்கார்ந்துகிட்டானாம்."

"சுகு"வா ..."

"எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்லணுமா? உங்க பொண்ணை அவன் "சுகு" ன்னு செல்லமா கூப்புடுவானாம்."

"யார் சொன்னது இதெல்லாம் உனக்கு?"

"உங்க பொண்ணேதான் சொன்னா ..."

"எல்லாத்துக்கும் மேல அந்தப் பையன் செல்வாவும், சுகன்யாவை நான் கை விட மாட்டேன். அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா; அவளை நான் தொட்டு பழகிட்டேன்னு, இவ கூட தனியா இருந்ததை தன் அம்மா கிட்ட சொல்லி அழுதானாம்."

"அடப் பாவி மவனே... இவன் என்ன லூசாடி?"

"ம்ம்ம் ... இப்ப பாக்கப் போறீங்களே ... அப்ப கேளுங்க அவனை ... இதையெல்லாம் உன் ஆத்தாக்கிட்ட சொல்லலாமாடான்னு?" அவள் சிரித்தாள்.

"உன் பொண்ணு அவனுக்கு மேல ... லூசுடி ... அவனை ஏன் இங்க கூப்பிட்டா?"

"மல்லிகா ரொம்பவே ட்ரெடிஷனல் லேடியாம் ... கல்யாணத்துக்கு முன்னேயே சுகன்யா இப்படி உன் கூட தனியா இருந்து இருக்கான்னா, அந்த பொண்ணுக்கு உடம்புல எவ்வளவு அரிப்பும், கொழுப்பும் இருக்கும்ன்னு நம்ம பொண்ணை ஏசினாங்களாம். "

"நீங்க சொல்ற மாதிரி அந்த மல்லிகாவும் நல்லவங்களாத்தான் இருக்கணுங்க; ஏண்டா அந்த சுகன்யாதான் புத்தியில்லாம, அவ ரூமுக்கு உன்னைக் கூப்பிட்டா, நீ ஏண்டா போனே? போனதுமில்லாம, அவ துணியை வேற அவுத்து இருக்கே; அந்த கூறு கெட்டவளும் அந்த நேரத்துல உன்னைத்தடுக்கல; உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கான்னு ஒரு நிமிஷம் யோசனைப் பண்ணியா? நம்மப் பொண்ணுகிட்ட எவனாவது இப்படி நடந்தா நாம சும்மா இருப்போமான்னு புள்ளை முடியை புடிச்சு உலுக்கினாளாம்? நான் வளர்த்தப் புள்ளையாடா நீன்னு கூவினாளாம்."

"நான் சொன்னேன்லா? அந்த மல்லிகாவுக்கு நல்ல மனசுன்னு?" குமார் முகத்தில் திருப்தியுடன் பேசினார்.

"சுகன்யா மாதிரி எடுபட்டவ ஒருத்தி, என் மருமவளா என் வீட்டுக்குள்ள வரக்கூடாது. உன் பொண்டாட்டியைப் பாத்து, என் பொண்ணு எந்த தப்பும் பண்ணிடக்கூடாது; எனக்கு அந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்கலை; ஆனா அவளை இந்த அளவுக்கு அவுத்துப் பாத்துட்டே, நீ அவளை கட்டிக்கறதுதான் நியாயம். நீ அவளை தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா அதுக்கப்புறம் என்னை மறந்துடு. அவளை கூப்பிட்டுக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்து உறவு கொண்டாடற வேலையெல்லாம் வேண்டாம்ன்னு கூச்சல் போட்டாங்களாம்."



" டேய் செல்வா, நீ பண்ணிட்டு வந்து இருக்கற வேலைக்கு, அந்த பொண்ணு வீட்டுலேருந்து, எவனும் என் வீட்டு வாசல்ல வந்து கூவக்கூடாது. நான் ஒரு பொண்ணைப் பெத்து வெச்சிருக்கேனன்னு நடராஜன் சொன்னாராம்; என் பொண்ணு கழுத்துல ஒழுங்கா தாலி ஏறணும். ஒழுங்கு முறையா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டற வழியைப் பாரு; இது தான் எனக்கு தெரிஞ்ச ஞாயம்ன்னு சொல்லிட்டு அந்த எடத்தை விட்டே எழுந்து போயிட்டாராம்."

"இந்த கதையெல்லாம் அந்த பையன் தங்கச்சி மீனாதான் அழுதுகிட்டே ஆஸ்பத்திரியில எங்கிட்டே சொன்னா. செல்வா, ஏதோ அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்து, தனியா இருந்த சுகன்யாகிட்ட தப்பு பண்ணிட்டான். ஆனாஅவன் நல்லவன்; நீங்க அவனை பொம்பளை பொறுக்கின்னு தப்பா நினைச்சுடாதீங்கன்னு என் கையை பிடிச்சிக்கிட்டா .. நல்லப் பொண்ணு அவ!"

"ம்ம்ம் ... வயசு பசங்கடி ... நம்மப் பொண்ணு வேற தனியா இருந்து இருக்கா. கீழேயும் யாரும் அன்னைக்கு இல்லேங்கற..."

"நான் சொல்றது என்னன்னா ... நம்ம பொண்ணுகிட்ட எல்லா நல்ல குணங்கள் இருந்தும், அந்த மல்லிகா இவளை கொஞ்சம் துச்சமா நினைக்கறதுக்கு இது ஒரு காரணமின்னு சொல்றேங்க; நடராஜன்கிட்ட பேசும் போது இதை உங்க மனசுல வெச்சுக்கிட்டு பக்குவமா பேசுங்க; அந்தம்மா, ஜாதிப் பிரச்சனையை கிளப்பலாம்ன்னும் நெனைக்கிறேன். இந்த ரெண்டைத் தவிர வேற எந்தப் பிரச்சனையும் இவ கல்யாணத்துல இருக்க வாய்ப்பு இல்லேங்க."

"என் பொண்ணு கல்யாணம் யார் மனசும் நோகாம நடக்கணுங்க ... அந்த மல்லிகா சந்தோஷமா, தன் பிள்ளை கல்யாணத்துல கூட இருக்கணுங்க ... இதுதான் என் ஆசைங்க." அவள் கை தன் மடியில் கிடந்த கணவனின் தோள்களையும், மார்பையும் மென்மையாக வருடிக் கொண்டிருக்க, சுந்தரி அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து தன் பற்களால் கடித்தாள்.

"இப்ப என்னப் பண்றதுடி?"

குமார் தன் இடது கையை தன் மனைவியின் இடுப்பில் நுழைத்து அவளை தன் முகத்தின் மேல் குனிய வைத்து அவள் உதட்டில் இதமாக முத்தமிட்டார்.

"என்னப் பண்றதா?அந்த பையன் உங்களை மாதிரி உயரமா, வாட்ட சாட்டமா, கண்ணுக்கு அழகா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா சூப்பரா இருக்குங்க. பெத்தவங்க ரெண்டு பேருக்கும் நல்ல குணங்க. செல்வா நல்ல குடும்பத்துப் பையங்க. நம்ம பொண்ணு மேல உயிரா இருக்கான். எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடிச்சிடணுங்க."

சுந்தரி அவரை ஒரு குழந்தையைப் போல் வாரி அவர் முகத்தை தன் மார்புடன் அழுத்திக்கொண்டாள். குமார், அவள் முந்தானையை லேசாக ஒதுக்கி அவள் ரவிக்கைக்குள் புடைத்துக்கொண்டிருந்த முலையில் தன் உதடுகளைத் தேய்த்தார். சுந்தரி எந்த பதட்டமும் இல்லாமல், வெகு இயல்பாக, குமாரின் உதடுகள் தன் மார்பில் உரசுவதால் உண்டான சுகத்தை மனமார ரசித்து சுகித்துக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம் ... ஒரு கெட்ட பழக்கம் இல்லையாம் அவன் கிட்ட ... ஆஃபீசுல கூட பொம்பளைங்க கிட்ட தேவையில்லாம பேசமாட்டானாம். லஞ்ச் டயம்ல கூட லைப்ரரில உட்க்கார்ந்து எதாவது படிச்சிக்கிட்டு இருப்பானாம். என் மனசு அவன் பக்கம் போனதுக்கு இதெல்லாம்தான் காரணம்ன்னு உங்க பொண்ணு சொல்றா."

சுந்தரி தன் இடது கையால் அவர் அடி வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். குமாரின் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, தன் உதடுகளை நாக்கால் வருடி ஈரமாக்கிக்கொண்டு அவர் உதடுகளை கவ்வி நீளமாக முத்தமிட ஆரம்பித்தாள். குமாரின் கைகள் அவள் முதுகை வருடிகொண்டிருந்தது.

"நான் வளர்த்த பொண்ணுங்க அவ; என் பொண்ணு என் கிட்ட பொய் சொல்ல மாட்டாங்க; அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க; ஆனா அவங்க இளமை மேல எனக்கு நம்பிக்கை இல்லைங்க; அதனாலத்தான் சொல்றேன், அவங்க ரெண்டு பேரும், அட் லீஸ்ட், நாம பெரியவங்க பேசி ஒரு முடிவு பண்ற வரைக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும்ன்னு சொல்றேன்ங்க."

"சுகன்யா அவன் கூட ஆஸ்பத்திரியில சிரிச்சு பேசறதை மல்லிகா பாத்துட்டு, மேல மேல அவங்க மனசுல, நம்ம சுகா மேல ஒரு காழ்ப்புணர்ச்சி வரவேணாம்ன்னு நான் நெனைக்கிறேங்க; பத்தாக்குறைக்கு அந்த சாவித்த்ரி இவலை நேத்து ராத்திரி எட்டு, ஒன்பது மணிக்கு தனியா அவன் கூட பாத்துட்டுப் போய் இருக்கா. அவ ஒரு கலகக்காரி, அவ போய், சும்மா இருக்கற சங்கை ஊதினா, நமக்குத்தானேங்க மனக் கஷ்டம் ; இது நம்ம சுகாவுக்கு புரியலேங்க; அவ சின்னப் பொண்ணுதானே?"

குமார் அவள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். எழுந்து நின்றவர் தன் லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டார்.

"சுந்தரி, நீ சொல்றது சரிதாம்மா; குழந்தையை என் கூட வெளியில கூப்பிட்டுக்கிட்டு போயி அவளுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்குதும்மா; அதனாலதான் என் கூட வர்றியான்னு கூப்பிட்டேன்; வேற ஒண்ணுமில்லே."

"நீங்க உங்க பொண்ணுக்கு வாங்கிக்குடுக்கறதை யார் வேணாங்கறது; நாளைக்குப் பூரா அவ உங்க கூடத்தானே இருக்கப் போறா. அப்ப நீங்க ஆசைப்பட்டதை செய்யுங்களேன்..."

சுந்தரியும் சோஃபாவிலிருந்து எழுந்து தன் ரவிக்கை கொக்கியை போட்டுக்கொண்டாள். புடவை முந்தானையை உதறி தோளில் சரியாக போட்டுக்கொண்டவள், அவர் பின்புறம் நின்று தன் மார்புகள் அவர் முதுகிலழுந்த இறுக கட்டிக்கொண்டு அவர் முதுகில் முத்தமிட்டாள். குமார் நின்றபடியே அவளை முன்புறமாக இழுத்துத் தழுவி, அவள் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட்டார்.

"சுந்தரி ... தேங்க்யூடி செல்லம்; இந்த நிமிஷம் நான் உன்னால ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் பொண்ணை நீ தங்கம்ன்னா தங்கம்ம்மா வளர்த்து வெச்சிருக்கே; அறியாத வயசு அவங்களுக்கு; இளமைத் துடிப்புல எதைப்பத்தியும் யோசிக்காம, ரெண்டு பேருமா சேர்ந்து, ஒரு சின்னத்தப்பை பண்ணிட்டாங்க; நீ சொல்றதைப் எல்லாம் கூட்டி கழிச்சிப் பார்த்தா அவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்து வந்துடுவாங்கன்னுதான் தோணுது."

"நீங்கதான் அவனைப் பார்க்கப் போறீங்களே. உங்களுக்கு அவனை கண்டிப்பா புடிச்சுடுங்க. அஞ்சு வருஷமா உங்களை அந்த நடராஜனுக்குத் தெரியும்ன்னு சொல்றீங்க; அவருகிட்ட சொல்லுங்க - சுகன்யா என் பொண்ணுதான். எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு கேளுங்க? இன்னும் ரெண்டு நாள் நான் இங்கேதானே இருக்கப் போறேன். நீங்க அவசியம்ன்னு நினைச்சா, ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேருமா அவங்க வீட்டுக்கே போய் அவர் ஒய்ஃப் மல்லிகா கிட்டவும் ஒரு தரம் பேசிட்டு வருவோம்."



"அவங்களும் நாலு நாள், ஒரு வாரம் டயம் எடுத்துக்கட்டும்; அதுக்கு அடுத்த வாரம் நீங்க லீவு போட்டுட்டு கிராமத்துக்கு வாங்க; அவங்களுக்கு வேண்டியவங்க ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா நம்ப வீட்டுக்கு வரட்டும்; அத்தையையும், மாமாவும் இப்ப கிராமத்துலத்தான் இருக்காங்க; நம்ம பக்கத்துல கூட ரெண்டு பேரை வெச்சிக்கிட்டு கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக்குவோம். "

சுந்தரி இயந்திரமாக பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் மனமோ காமாட்சியை நினைத்துக் கொண்டிருந்தது. அம்மா! ... தாயே! ... உன் கருணையாலத்தான் என் குழந்தை கல்யாணம் நல்லபடியா நடந்து முடியணும்! அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு காமாட்சின்னு பேரு வெச்சு, நான் வாய் நெறைய கூப்பிடணும். அவள் தாய் மனம் காமாட்சியிடம் தன் பெண்ணுக்காக இறைந்து கொண்டிருந்தது. 


சுகன்யா... 23


"அப்பா ... நீங்க எங்க வொர்க் பண்றீங்கப்பா?" சுகன்யா தன் தந்தையிடம் கேட்டாள்.

"எங்க கம்பெனி கல்கத்தாவுலேருந்து ஆபரேட் ஆகுதும்மா; டெக்ஸ்டைல் கூட்ஸ், லெதர் அயிட்டம்ஸ் எக்ஸ்போர்ட் பண்றோம்; எலக்ரானிக்ஸ் அயிட்டங்கள் இம்போர்ட் பண்றோம். இந்த கம்பெனியோட சதர்ன் ரீஜன் ப்ராஞ்ச் சென்னையில இருக்கு. நான்தான் இந்த பிராஞ்ச்க்கு இப்ப மேனேஜர். என் கீழ நாற்பது பேர் வேலை செய்யறாங்க. தமிழ் நாட்டிலே ஃபீல்ட் ஆஃபீஸ் ஒரு நாலு இருக்கு. நான் இங்க மாத்தலாகி வந்து மூணு வாரமாகுது. கம்பெனி, எனக்குன்னு தனியா டிரைவரோட என் ஆபீஸ் கார் குடுத்திருக்கும்மா. உன் தாத்தாவையும் பாட்டியையும் கிராமத்துல நம்ம வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன். இப்போதைக்கு நான் கம்பெனி கெஸ்ட் ஹவுசுல தங்கி இருக்கேன்."



"அப்பா நீங்க காமர்ஸ் தானே படிச்சீங்க"

"ஆமாம். மொதல்ல நான் எம். காம். படிச்சேன். அப்புறம் நம்ம வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் எம்.பீ. ஏ. படிச்சேன். லா டிகிரியும் வாங்கினேன். எல்லாத்துக்கும் உங்கம்மா கொடுத்த ஒரே ஒரு நாள் ஒதைதான் மோட்டிவேஷன். நான் இன்னைக்கு இருக்கற நல்ல நிலைமைக்கு உங்கம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்." அவர் உரக்க சிரித்தவாறு சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார்.

"போங்க ... பழசெல்லாம் இப்ப எதுக்குங்க இவ கிட்ட சொல்லிகிட்டிருக்கீங்க; எனக்கு கஷ்டமாயிருக்குங்க." சுந்தரி ஒரு குற்ற உணர்வுடன் சிரிக்க, அவள் கண்களில் தெரிந்த, காதலின் தாபத்தையும், ஏக்கத்தையும் பார்த்த குமாருக்கு உள்ளுக்குள் போதை ஏறியது.

"சுகா, என்னைப் பத்தி வேற என்னத் தெரியணும் உனக்கு?"

"நான் சொல்றேங்க ... அவ எதுக்கு இதெல்லாம் உங்க கிட்ட கேக்கிறான்னு?"

"அம்மா ... அப்பா இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்திருக்கார்; என் கதையை சொல்லி, அவரை ஏம்மா நீ டிஸ்டர்ப் பண்றே?"

"நீ சும்ம்மா இருடி; அவருக்கு இதெல்லாம் என்னைக்கு இருந்தாலும் தெரிஞ்சுதான் ஆவணும். நான் பட்ட கஷ்டத்தை அவரும் கொஞ்சம் படட்டுமே. பொண்ணை பெத்துட்டா மட்டும் போதுமா?"

"சுந்தரி நீ சொல்லும்மா. நீ எதுவாயிருந்தாலும் என் கிட்ட சொல்லு. "

"யாரோ ஒரு எடுபட்டவ, சுகன்யாவுக்கு சொத்து பத்து ஒண்ணும் கிடையாது ... ஏன்னு கேக்க, சொந்த பந்தம் ஒன்னும் கிடையாது, இவ உன் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்னு சொல்லிட்டா ... அது இவளுக்கு தெரிய வந்ததுலேருந்து மனசுக்குள்ளவே மருகிக்கிட்டு கிடக்கிறா." சுந்தரி கோபமாக பேசினாள்.

"சுகா என்னம்மா இது? யார் அப்படி சொன்னது? உனக்கு எந்த குறையும் இல்லேம்மா ... நீயா உன்னை எந்த விதத்துலேயும் தாழ்வா நெனைச்சுக்க வேண்டாம்"

"என் ஆஃபீசர்ப்பா ... சாவித்திரின்னு பேரு ..."

"அந்த அம்மா எதுக்கு உன்னை அப்படி சொல்லணும்"

"பொறாமை தாங்க ... வேறேன்னா .." சுந்தரி குறுக்கில் பேசினாள்.

"புரியற மாதிரி சொல்லேன் ... சுந்து ..."

"நம்ம சுகா, ஒரு பையனை லவ் பண்றாங்க. அந்த பையனும் இவ கூடத்தான் வேலை செய்துகிட்டு இருந்தான். அவனும் நம்ம பொண்ணை ரொம்பவே ஆசை படறான். ஆனா அவன் அம்மா, புள்ளையை தன் முந்தானையில முடிஞ்சு வெச்சிருக்கா. அவன் அந்தம்மா உக்காருன்னு உக்காருவான்; எழுந்துருன்னா எழுந்துப்பான். இவ ஆபீஸ்ல, இவளோட இம்மீடியட் பாஸ் சாவித்திரின்னு ஒருத்தி, அவ தன் பொண்ணுக்கு, அந்த பையனை முடிக்கணும்ன்னு, இவங்க ரெண்டு பேர் நடுவுல குழப்பம் பண்ணிகிட்டு இருக்கா. இவளையும் ஆபீசுல இண்டேரக்டா தொந்தரவு பண்றாளாம். இவங்களை சந்திக்க விடாம பண்ணணும்ன்னு நெனைச்சு, தன் அதிகாரத்தை யூஸ் பண்ணி, அந்த பையனை வெளியூருக்கு மாத்திட்டா. அந்த பையனோட அம்மாவும் இந்த சாவித்திரியும் ஃப்ரெண்ட்ஸ். "

"ம்ம்ம் ... இன்ட்ரஸ்டிங் ..."

"போங்கப்பா ... அந்த சாவித்திரி கிட்ட நான் படற அவஸ்தை எனக்குத்தான் தெரியும்" சுகன்யா அவரை முதுகில் மெதுவாக செல்லமாக அடித்தாள்.

"நம்ம சுகா, ஒரு வாழாவெட்டி வளர்த்த பொண்ணு; அப்பனும் ஆத்தாளும் வேற வேற ஜாதி. இப்ப அப்பா எங்கே இருக்காருன்னுகூட சுகன்யாவுக்கு தெரியாது. சுகா எதுவுமில்லாத அன்னாடங்காய்ச்சி குடும்பத்துலேருந்து வந்தவ. உறவுகாரங்கன்னு யாருமில்லாத அனாதை குடும்பம். பாக்கறதுக்கு செவப்பா, உடம்பு எடுப்பா, மூக்கும் முழியுமா இருந்தா போதுமா? வீட்டுக்கு வர மருமவளுக்கு, ஒரு வீடு, சொத்து சுகம், அப்படின்னு எதுவும் வேணாமா? இவ பின்னால உன் பையன் சுத்தலாமா? அந்த சாவித்திரி நம்ம குழந்தையைப் பத்தி இல்லாதையும் பொல்லாததையும், இவ லவ்வரோட அம்மா கிட்ட பேசி அவ மனசை குழப்பி வெச்சிருக்கா."

"ட்ரான்ஸ்பர் ஆகி போன அந்த பையன் லீவுல சென்னைக்கு வந்தப்ப சுகா கிட்ட கேட்டிருக்கான் போல, உங்கப்பா எங்க இருக்கார்? அந்த சாவித்திரி சொல்றதுல எந்த அளவுக்கு உண்மைன்னு? இவ பதிலுக்கு அவனை, நீ என்னை கட்டிக்குவியா மாட்டியா? உனக்கு நான் வேணுமா இல்லை உன் அம்மா வேணுமா? இப்பவே சொல்லுன்னு கேட்டு இருக்கா."

"அவன் தன் அம்மாவுக்கு பயந்துகிட்டு, சாவித்திரியோட பொண்ணை ஒப்புக்கு பாக்கறேன்னு சொல்லிட்டு அவ வீட்டுக்குப் போயிருக்கான். அங்க என்ன நடந்ததுன்னு இவளுக்கும் தெரியாது. அந்தப் பையன் வீட்டுக்கு திரும்பி வந்து, நீ சொன்னேன்னு அந்த பொண்ணைப் பாத்துட்டு வந்துட்டேன்; ஆனா நான் சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு, அம்மா கிட்ட பெரிய சண்டை போட்டானாம்."

"ஏம்மா சுகா ... நீயே உன் லவ்வர் கிட்ட சாவித்திரி வீட்டுல என்ன நடந்ததுன்னு கேட்டுட வேண்டியதுதானே?"

"ஏங்க முதல்ல நான் பேசி முடிச்சிடறேன்; அப்புறமா நீங்க அவளை கேளுங்க."

"சரி ... சரி ... நீயே சொல்லு"

"உங்களுக்கு ஞாபகமிருக்கா, நம்ம காலேஜ்ல நம்ம கூட வேலுன்னு படிச்சாரே ... அவர் ஆர்ட்ஸ் படிச்சார்; எல்லாம் அவங்களும் உங்க குடும்பத்துக்கு தூரத்து ஒறவு தான். மாயவரத்துல பொண்ணு எடுத்தாருங்களே அவருங்க. அவர் பொண்டாட்டி கீதா என் கூடத்தான் இப்ப பி.ஜி. டீச்சரா வேலை செய்யறா. நம்ம பொண்ணை அவங்க புள்ளைக்கு கட்டிக்கணும்ன்னு தினம் அவ என்னை நச்சரிக்கறா."

"உங்க ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு, சுகாவை தன் புள்ளை சம்பத்துக்கு கேக்கறாங்க..."

"யாரு லட்சுமி அத்தை பொண்ணு ராணியா? அவ நார்த்ல பாம்பேயிலத்தானே இருந்தா?"

"அவளேதான்; ராணி தீடிர்ன்னு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு, சுந்தரி, உன் மேல எனக்கு எப்பவுமே கோபம் இல்லடி. நாங்கதான் இந்த ஊர்லேயே இல்லயே? நான் இருந்தா இப்படியெல்லாம் ஆக விட்டிருப்பேனான்னு பிட்டு போட்டாங்க. இப்ப அவங்க பையன் பெங்களூர்ல மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கறானாம். ஐ.டி.யில இருக்கானாம். ஊருக்கு வந்தப்ப எப்பவோ நம்ம பொண்ணை பாத்திருக்கான். அம்மா கிட்ட சொன்னானாம்; சுகாவை எனக்கு பிடிச்சிருக்கு; கேட்டுப் பாருங்கன்னு சொல்லியிருக்கான்."

" நம்ம பொண்ணு சுகா இப்ப கை நிறைய சம்பாதிக்கறா. பாக்கறவங்க கண்ணுக்கு நெறைவா இருக்கா. நான் கஷ்டப்பட்டப்ப யாரும் என்னான்னு ஒரு வார்த்தை என்னை கேக்கலைங்க. ஆனா இப்ப என் பொண்ணு அழகா வளர்ந்து நிக்கறாளே ... நாலு பேரு என் கிட்ட வரத்தானேச் செய்வாங்க?"

"ம்ம்ம் .... அதெல்லாம் இருக்கட்டும்; நீ என்ன பதில் சொன்னே அவங்களுக்கு?"

"நமக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும், பொண்ணை பெத்தவரு நீங்க; உங்களை ஒரு வார்த்தை கேக்காமா, அதுவும் உங்க நெருங்கின உறவுகாரங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? பொறுமையா அவங்க சொல்றதையெல்லாம் காது குடுத்து கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்வேன் நான்?

"ராணியோட வீட்டுக்காரர் இப்ப ரிடையர் ஆகி கிராமத்துல தான் இருக்காரு. உங்க மச்சான் ரகுவை மடக்கி மடக்கி, எப்பப் பாத்தாலும் ஒரே கட்ட பஞ்சாயத்து வெக்கிறாரு. உன் அக்கா கல்யாணத்தை நான் எதுக்கவே இல்லைப்பா. எதுத்தவன்ல்லாம் போய் சேர்ந்துட்டாங்க. ஜாதின்னு சும்மா வெட்டியா பேசறவனைப் பாத்தாலே எனக்கு புடிக்காது. உன் அக்கா சுந்தரி கிட்ட எடுத்து சொல்லு. நம்ம குழந்தை தனியா மெட்ராஸ்ல ஏன் கஷ்டப்படணும்; என் பையனுக்கு நான் கட்டிக்கறேங்கறாரு; உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு ரகு பதில் சொல்லியிருக்கான்."

"சுந்தரி, உன் பொண்ணை அவ கட்டின புடவையோட என் வீட்டுக்கு அனுப்பி வைடி; நான் வேற என்ன உன்னை கேக்கப் போறேன். குமாருக்குன்னு இருக்கறதெல்லாம் இவளுக்குத்தானே அப்படிங்கறா உங்க அத்தைப் பொண்ணு."

"ம்ம்ம் ... இவங்களுக்கு சரியான பதில் சொல்லித்தான் ஆகணும். நமக்கு நெருக்கமா இருக்கற உறவாச்சே இவங்க." 

"உங்க பொண்ணு என் பேச்சை இந்த விஷயத்துல கேக்கறதே கிடையாது."

"அம்மா சும்மா சொல்லாதேம்ம்மா ... நான் உன் பேச்சை எப்பம்மா கேக்கலை? செல்வா கிட்ட சும்மா சும்மா பேசாதேன்னு நீ சொன்னே. ரெண்டு நாளாச்சு அவன் கிட்ட நான் இன்னும் பேசவே இல்லை தெரியுமா உனக்கு?" சுகன்யா வெடிக்க ஆரம்பித்தாள்.

"சுகா ... நீ சும்மா இரும்மா. இப்ப நானும் அம்மாவும் தானே பேசிக்கிட்டிருக்கோம்."

"சுகா, நான் என்ன சொல்றேன்னா, நம்ம உறவு காரங்க நம்ம வீட்டுக்கு வந்தா, முகம் கொடுத்து பேசுன்னு சொல்றேன் ... வேற என்ன சொல்றேன்? எப்பவாது நீ ராணி அத்தை கிட்ட சிரிச்சு பேசி இருக்கியா? பாக்கறவங்க உன்னைப்பத்தி என்ன நெனப்பாங்க? உன்னை திமிர் பிடிச்சவன்னு நெனைச்சுடக்கூடாதும்மா."

"என்னங்க, உங்க பொண்ணு, அம்மா, நீ கல்யாணப் பேச்சை எடுத்தா இந்த ஊருக்கே வரமாட்டேன்னு அடம் புடிச்சா. என்னா இப்படி பேசறாளேன்னு இவ மாமன் கேட்டதுக்கு, என் கூட வேலை செய்யறவனை ஆசைப்படறேன். நான் அவனைத்தான் கட்டிப்பேன்னு போன மாசம் என் கிட்ட அப்படி ஒரு சண்டை போட்டுட்டு இங்க வந்தா."

"இவ மாமனும் இவ கூட சேர்ந்துகிட்டு, அக்கா நீ சும்மாயிரு, நான் அவளுக்கு புரிய மாதிரி சொல்றேன்னு சொல்லிட்டு, இப்ப இவ இஷ்டப்படியே இவ ஆசைப்படற பையனையே பண்ணி வெச்சுடலாம்ன்னு கூத்தடிக்கிறான்."

"நான் ஆசைப்பட்ட பையனைத்தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டு வந்தவ, போன வாரம் அந்த பையனை சரியான சண்டைக்கு இழுத்து இருக்கா. என்னை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி என் அப்பனைப் பத்தி நீ கவலைப் பட்டியா? என் கையை புடிக்கறதுக்கு முன்னாடி என் அப்பன் யாருன்னு நீ கேட்டியா? இப்ப உங்க அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு என் அப்பா யாரு? என் சொத்து சுகம் என்னான்னு ஏன் கேக்கறே?இவங்களுக்குள்ள இப்ப ஒரே வாக்கு வாதம், சண்டை. எனக்கு இதையெல்லாம் கேட்டா உடம்பு நடுங்கி போவுது."

"ஏண்டி, நீ உன் வயசுல உங்கப்பா அம்மாவை என்னமா சண்டைக்கு இழுத்தே? உன் பொண்ணு இப்ப உன்னை இழுக்கறா; ஹிஸ்டரி ரிபீட்ஸ் அவ்வளதானே?" குமார் சிரித்துக்கொண்டே சுந்தரியை சீண்டினார்.

"அப்பா .. அம்மாகிட்ட நான் வேணும்ன்னு சண்டைப் போட்டதே இல்லப்பா"

"நீ சும்மா இருடி; ஒரு வாரம் முன்னாடி, நானும் ரகுவும் இவளைப் பாக்கறதுக்கு இங்க வந்தோம். அன்னைக்குத்தான் இவங்களுக்குள்ள சண்டை நடந்திருக்கு; என்னை மறந்துடு; உனக்கும் எனக்கும் ஒத்து வராது; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உங்கம்மா கூடவே போய் நீ இருடான்னு, அவன் கிட்ட வீராப்பா சொல்லிட்டு வந்துட்டா; அந்த பையன் தங்கச்சி இவளுக்கு போன் பண்ணா, நீ யாருடி நடுவுல நாட்டாமை; உங்க அண்ணனை எனக்கு யாருன்னே தெரியாதுன்னு அவளை வேற போட்டு வாங்கியிருக்கா உங்கப் பொண்ணு."

"ம்ம்ம் ... தமிழ் சினிமா கதை மாதிரி இல்ல போகுது நம்ம சுகா கதை"

"இவளால தொட்டு பழகனவனை எப்படிங்க அவ்வள சீக்கிரம் மறந்துட முடியும்? நாள் பூரா அழுது அழுது இவ மூஞ்சி வீங்கி போய் கிடக்குது. வீட்டுக்கு வந்த இவளைப் பாத்ததும் என் வயிறு அப்படியே பத்தி எரிஞ்சுது. என்னாடின்னு கேட்டா மெதுவா ஒண்ணு ஓண்ணா சொல்றா."

"நம்ம ரகு, அந்த பையன் கிட்ட பேசி பாக்கறேன்னுட்டு, அவனை நம்ம வீட்டுக்கு இங்க வாப்பான்னு கூப்பிட்டான். நம்ம போறாத காலம், பாவம் அவன் இங்க வர்ற நேரம் பாத்து, வழியில ஒரு ட்ரக்ல அடிபட்டு, ரோடுல கிடந்து இருக்கான். போலீஸ் அவனை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நம்ம சுகன்யாவுக்கு தகவல் சொன்னாங்க. அவங்க அப்பன் ஆத்தா ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள, இவ தட தடன்னு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவனுக்கு இவ ரத்தத்தை குடுத்து பொழைக்க வெச்சி, அம்பதாயிரம் பணத்தையும், ஆஸ்பத்திரியில அட்வான்ஸ்ஸா கட்டியிருக்கா.."

"இவளைத் தனியா அனுப்ப முடியுமா? நாங்க ரெண்டு பேரும் இவ கூடவே ஆஸ்பத்திரிக்கு போனோம். அவன் கண்ணை தொறந்து பாத்ததும், அவன் அம்மா இவளை பாத்து என் புள்ளையை நீ பொழைக்க வெச்சிட்டே! உனக்கு ரொம்ப நன்றி; ஆனா இங்கேயிருந்து நீ போயிடு. என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துடுன்னு,, எங்க எதிர்லேயே கை எடுத்து இவளை கும்பிட்டு டயலாக் பேசினா. உங்கப் பொண்ணாச்சே? இவளும் ரோஷமா உன் புள்ளைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லே. நான் அவனை உனக்கே தாரை வாத்து கொடுக்கறேன்னு உளறி கொட்டிட்டு வெளியில வந்துட்டா."

"சும்மா இருடி நீ; அந்த காலத்துல நீ என்னை காதலிக்கறேன்னு காலையில சொல்லுவே; மதியானம் இல்லேன்னு சொல்லுவே; எத்தனை வாட்டி இந்த மாதிரி நீ பேசி பேசி, என்னை தாளிச்சு எடுத்து இருப்பே? எத்தனை வாட்டி திரும்பி வந்து ஐ லவ் யூன்னு சொல்லியிருப்பே? எல்லாம் உனக்கு மறந்து போச்சா? ரெண்டு நாளு, நான் உன் கிட்ட பேசாமா இருந்தா, எத்தனை பேரு மூலமா நீ தூது விட்டேங்கற கதையெல்லாம், நான் என் பொண்ணுகிட்ட சொல்லவா இப்ப? என் பொண்ணை நீ ஒண்ணும் கொறை சொல்ல வேணாம், சொல்லிட்டேன் ... ஆமாம்."

"ரெண்டு நாள் கூட இருந்து பாருங்க, அப்புறம் தெரியும் உங்க பொண்ணு லட்சணம்."

"யம்மா ... நீ சும்மா பேசாதே! ... நானும் சொல்லிட்டேன்," மீண்டும் சுகன்யா அவர்கள் பேச்சில் குறுக்கில் புகுந்தாள்.

"சுந்து ... அந்த பையனோட அப்பா என்ன சொல்றார் ..."

"அந்த மனுஷன் சாதுவா, நல்ல மனுஷனாத்தான் தெரியறார். ரகுவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்துச்சு. நான் தான் சும்மா இருடான்னு அன்னைக்கு அடக்கி வெச்சேன். நம்ம பொண்ணு அவன் கூட பழகிட்டாளேன்னு பாக்க வேண்டியதா போச்சு; அப்புறம் அந்த மனுஷன் எல்லார் எதிர்லேயும் எங்க ரெண்டு பேரையும் கையெடுத்து கும்பிட்டு, என் பொண்டாட்டி சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அவ இப்படி பேசி இருக்கக் கூடாது. அவ நல்லவதான். கொஞ்சம் முன் கோபி. நீங்க தப்பா நினைக்காதீங்கன்னார்."

"அதெல்லாம் சரிம்ம்மா; அவரு இவங்க காதலுக்கு ஒத்து வராறா இல்லையா?

"ம்ம்ம். அவரு ஒத்து வர்ற மாதிரிதான் எனக்கு படுது. என் பையன் கொஞ்சம் உடம்பு தேறி வீட்டுக்கு வரட்டும். உங்க கிட்ட நான் நிதானமா பேசறேன்னு சொன்னார். நாங்களும் நீங்க சொல்றது சரி .. எங்க வீட்டுக்கு நீங்க ஒரு தரம் முறைப்படி வாங்க அப்படின்னு சொன்னோம். சரின்னாவர், எங்க ரெண்டு பேரையும் தன் கார்ல வீட்டுக்கு அனுப்பி வெச்சார். அன்னைக்குத்தான் ரகு ஊருக்கு போனான்.

"இன்னைக்கு புதன், இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வெள்ளிக்கிழமை, இவளை கூப்பிட்டுக்கிட்டு நான் நம்ம ஊருக்கு போவலாம்ன்னு இருக்கேன். ரகுவும் ஊருக்கு வர்ரேன்னு சொல்லியிருக்கான். இவ கிராமத்துக்கு வந்து ஒரு பத்து நாளு இருந்தா, இவ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ன்னு பாக்கிறேன். அங்க இவ ஊருல இருக்கும் போது, அந்த பையனோட அப்பாவுக்கு போன் பண்ணலாம்னு ரகு சொல்லியிருக்கான்."

"ஆனா அங்க போனா உங்க அத்தை பொண்ணுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இந்த கதையெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. இப்பத்தான் நம்ம உறவு காரங்க கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்டுக்கு வந்து போறாங்கா; இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க என்ன டென்ஷன் கொடுப்பாங்களோன்னு நெனைச்சா எனக்கு பயமா இருக்கு?"

"ஏண்டி சுந்து நீ என்ன பேசற? சுகன்யாவுக்கு ஒருத்தனை புடிச்சு போச்சு. அவங்க தொட்டு பழகினாங்கன்னு வேற சொல்றே. அப்புறம் சம்பத்துக்கு எப்படி இவளை கட்டி வெக்கறது? எங்க அத்தை பொண்ணை நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். இன்னொரு தரம் அவங்க உன் கிட்ட வந்தா என் நெம்பரை குடுத்து என் கிட்ட பேச சொல்லு."

"சரிங்க ... அதைத்தான் நானும் சொல்றேன்; நம்ம குடும்பத்து ஆம்பிளை நீங்க வந்துட்டீங்க. இனிமே உங்க பாடு; உங்க பொண்ணு பாடு; நீங்க உங்க பொண்ணை யாருக்கு கட்டி வெக்கறீங்களோ, கட்டி வெய்யுங்க. அவ சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான் எனக்கு வேணும். இவ்வளவு நாள் தனியா உங்க பொண்ணை வெச்சுக்கிட்டு சமாளிச்சுட்டேன். இப்ப என்னால முடியல. இதுக்கு மேல என்னை விட்டுடுங்க."

சுந்தரி நீளமாக மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள். சுகன்யா ஏதும் பேசாமல் தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சை மேலும் கீழுமாக தள்ளி குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தாள்.



"அப்பா ... அந்த சம்பத்து ... மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கட்டும் ... இல்ல ரெண்டு லட்சம் சம்பாதிக்கட்டும்; உங்க சொந்தமா இருக்கட்டும்; இல்ல அம்மா சொந்தமாவே இருக்கட்டும்; நம்ம சொந்தத்துல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ... இப்பவே, இங்கேயே உங்க கிட்ட நான் சொல்லிடறேன்... ஊர்ல வந்து அவன் உன்னை பாக்க வரான், சும்மா பேருக்கு உக்காந்து அவங்க கிட்டு பேசும்மான்னு ... என்னை யாரும் டென்ஷன் பண்ணக்கூடாது ... "சுகன்யா தீர்மானமாக பேசினாள்.

"சுந்து ... எனக்கு ஒரு கப் சாயா குடிக்கணும் போல இருக்கு, நார்த்லயே கொஞ்ச நாளா இருந்ததாலே இந்த டீ குடிக்கற பழக்கம் என்னை தொத்திக்கிச்சு ... ஒரு கப் போட்டுத் தரயாம்மா...?"

"சுகா உனக்கும் வேணுமாடி?

"ம்ம்ம் ... குடும்மா"

"உன் லவ்வர் பேரு என்னம்மா?"

"செல்வா...ப்பா"

"சுகா ..." நீ இந்த செல்வாவை உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறியா?" இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்? சுகன்யா மட்டுமல்லாமல், சுந்தரியும் தன் கணவனை ஒரு வினாடி வியப்புடன் பார்த்தாள்.

"என்னப்பா ... இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க; அவரை நான் மனசார நேசிக்கிறேன்ம்பா!"

"சாரிம்மா ... உனக்கு என் கேள்வி பைத்தியகாரத்தனமாப் பட்டிருக்கலாம். நீ அவனுக்கு உன் ரத்தத்தை குடுத்தேன்னு அம்மா சொன்னாங்க; அவன் இடத்துல நீ இருந்திருந்தா, அவனும் உனக்கு தன்னோட ரத்தத்தை கொடுத்து உன்னை காப்பாத்தனும்னு துடிச்சிருக்கலாம். அவன் மேல உனக்கு இருக்கற நேசம், பாசம், காதல், எல்லாம் சரி; நீ படிச்ச பொண்ணு. நீ பேப்பர்ல, ஏதாவது மெகசீன்ல படிச்சிருக்கலாம் ... இல்லன்னா யார் மூலமாவது உனக்குத் தெரிஞ்சிருக்கலாம்."

"இப்பல்லாம் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே வீட்டுல சேர்ந்து இருக்கறாங்க; எல்லாத் தேவைகளையும் பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பூர்த்தி பண்ணிக்கறாங்க; தங்களுடைய ஆசைகளை ஒருத்தர் கிட்ட ஒருத்தர் ஷேர் செய்துக்கறாங்க. கல்யாணமான தம்பதிகளைப் போல படுக்கையையும் பகிர்ந்துக்கறாங்க; ஆகற செலவையும் தங்களுக்குள்ள டிவைட் பண்ணிக்கறாங்க."

"கொஞ்ச நாள் கழிச்சு, ஒருத்தரோட எதிர் பார்ப்புகளை அடுத்தவரால பூர்த்தி செய்ய முடியலேன்னா, அவர்களுக்கு நடுவுல முரண்பாடுகள் அதிகமாக இருந்தால், சத்தமில்லாமா ரெண்டு பேரும் வேற வேற திசையை பாத்துக்கிட்டு போறதுங்கற கான்செப்ட் இப்ப நம்ம ஊர்லேயேயும் வளர ஆரம்பிச்சு இருக்கு."

"இவர்கள் நடுவிலும் காதல், பாசம், நேசம், பற்று, பிடிப்பு, காமம் எல்லாம் இருக்கு ... என்ன இந்த ஏற்பாட்டுல எமோஷனல் "பாண்டிங்" கொஞ்சம் குறைவா இருக்கலாம். இது நம்ம சமூகத்தால இன்னும் முழுமையா அங்கீகரிக்கப்படாத ஒரு விஷயமா இருக்கு. இவங்கள்லேயே, சில ஜோடிகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாகவும் வாழறாங்க."

"காதலிக்கும் போது ஒருத்தருக்கு அடுத்தவரோட குறைகள் சட்டுன்னு தெரியறது இல்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழறப்ப, உடம்பு மேல இருக்கற கவர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கறப்ப, கணவனுக்கு தன் மனைவிகிட்ட இருக்கற குறைகளும், மனைவிக்கு தன் புருஷனோட குறைகளும் புரியும் போது, தினசரி வாழ்க்கையில உரசல்கள் ஆரம்பிக்கும்."

"இந்த காலத்துல ரெண்டுபேரும் வேலைக்கு போறாங்க; அதனால ஒவ்வொரு காரியத்துலேயும் ரெண்டு பேரும் பங்கெடுத்தே ஆகணுங்கற நிர்பந்தம் இருக்கு. அதனால வீட்டுல எல்லா காரியங்களையும் ஆரம்பத்துல நீயே செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்."

"அப்பா ... எது எப்படியிருந்தாலும் செல்வா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனைச்சுக் கூட பாக்க முடியலைப்பா. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, முறையான, அண்டர்லைன் பண்ணிக்குங்க, முறையான ஒரு வாழ்க்கையை வாழணும்ன்னுதான் நான் அவர் கூட பழகறேன்."

"அவரும் அந்த எண்ணத்துலத்தான் என் கூட பழகிக்கிட்டு இருக்கார். ஆனா சில நேரங்கள்ல, இப்பவே அவர் மேல எனக்கு சட்டுன்னு கோபம் வருது. அவருடைய சில குணங்கள் எனக்கு சுத்தமா பிடிக்கலைப்பா. இதை சொல்லிக்காட்டி நான் அவர்கிட்ட சண்டை போட்டிருக்கேன்."

"ம்ம்ம் ...."

"அவரால எந்த விஷயத்துலேயும், சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியலைப்பா. எல்லாத்துக்கும் பயப்படறார்ப்பா. இப்படி பண்ணா அவங்க என்ன நினைப்பாங்க ... அப்படி பண்ணா இப்படி ஆயிடுமோ? எப்பவும் குழம்பிக்கிட்டேதான் இருப்பார்."

"அவரோட அம்மாவை கேக்காம எந்த காரியத்தையும் அவரால செய்ய முடியாதுப்பா. அவருக்கு அவர் அம்மா மேல கண்டிப்பா ஆசையிருக்கும். இதை நான் தப்புன்னு சொல்லலை. எனக்கும்தான் என் அம்மா மேல அளவில்லாத பிரியம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் எனக்கு பிடிக்கலைன்னா, அம்மாகிட்ட நான் பட்டுன்னு சொல்லிடுவேன். தன் மனசுல இருக்கறதை தன் அம்மாகிட்ட சொல்லக்கூட பயப்பட்டா எப்படிப்பா? எல்லாத்துக்கும் மேல, அவரா எதையும் இனிஷியேடிவ் எடுத்து செய்யறது இல்லேப்பா.

"ம்ம்ம் ... எனி எக்ஸாம்பிள்"

"என் அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் குடுக்கலைன்னா, நாம என்ன பண்றதுன்னு அப்பப்ப கேக்கிறார். இந்த கேள்வியை அவர் இது வரைக்கும் நூறு தரம் என் கிட்ட கேட்டாச்சு. நானும் அத்தனை தரம் பதில் சொல்லியாச்சு."

"நீ என்ன பதில் சொன்னே?"

"நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்; உங்கம்மா கிட்ட பேசி அவங்களை நம்ம பக்கம் திருப்ப முயற்சி செய்யுங்க; அவங்க ஒத்து வரவேயில்லன்னா என்ன செய்யமுடியும்? அப்ப, நீங்க போட்டிருக்கற பேண்ட், சட்டையோட என் வீட்டுக்கு வந்துடுங்க; மீதியை நான் பாத்துக்கறேன்னேன். அதுக்கு, நான் எப்படி உங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்க முடியும்ன்னு கேக்கறாரு? இதைக் கேட்டா எனக்கு எரிச்சல்தான் வருது?"

"சரி நான் உங்க வீட்டுக்கு வந்துடறேங்கறேன் ... அதுக்கும் கொஞ்சம் பொறும்மா. எங்க அப்பாவுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு; எங்க அம்மா மனசும் மாறிடும். அவங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதத்தோடத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னும் சொல்றார். எது வந்தாலும் நான் பாத்துக்கறேன். நீ தைரியமா இருன்னு சொல்ற துணிவு அவருக்கு வரலை. அவருக்கு என் மேல ஆசையும் இருக்கு. கூடவே அவங்க அம்மா கிட்ட பயமும் இருக்கு. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை; என்னப் பண்றதுன்னு எனக்குப் புரியலை. "

"நேத்து ராத்திரி எட்டு மணி வாக்குல ஆஸ்பத்திரியில நான் அவரோட ரூம்ல தனியா இருந்தேன். அப்ப என் பாஸ் சாவித்திரி அவரை பாக்கறதுக்கு வந்தா. என்னை அங்க அந்த நேரத்துல செல்வா பக்கத்துல அவங்க எதிர்பார்க்கல. போகும் போது சொன்னாங்க, "செல்வா நான் உங்கிட்ட சில விஷயம் தனியா பேசணும்."

"வீ ஆர் இன் லவ்; அந்த லேடிக்கு இது நல்லாத் தெரியும். நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கோம்ன்னும் தெரியும். இவர் என்ன சொல்லணும்பா? எதுவாயிருந்தாலும் நீங்க சுகன்யா முன்னாடி பேசலாம்; இங்கேயே பேசுங்கன்னு சொல்லாம, அவ எதிர்ல பொத்திக்கிட்டு இருந்தவரு, அவ போனதுக்கு அப்புறம் என்னைக் கொடையறாரு."

"இவங்க எதுக்கு என் கிட்ட தனியா பேசணும்? இவங்க பொண்ணுதான் என்னை அவங்க வீட்டுக்கு போனப்ப ஹுமிலியேட் பண்ணி அனுப்பிச்சாளே? இப்ப இந்தம்மா என் கிட்ட என்ன பேசணும்ன்னு நினைக்கிறாங்க? என்னைத் திருப்பியும் அவ பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்களா? இதை எங்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? சாவித்திரியை நான் ஒரு புடி புடிக்கிறேன்னு சொல்றேன்; அதுக்கும் வேணாங்கறாரு. ஏண்டா காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு இருக்குப்பா."



"இதுதாம்பா எனக்கு செல்வாகிட்ட சுத்தமா புடிக்கலை. வழ வழா கொழ கொழன்னு, சரியான வெண்டைக்காய்ப்பா அவரு ... அதுவும் மோர்க்குழம்புல போட்ட வெண்டைக்காய்ப்பா அவரு."

"வேற எதாவது, உனக்கு அவன் கிட்ட பிடிக்காம இருக்கலாம் ..." அவர் இழுத்தார்.

"அப்பா முதல் நாள் நானும், அவரும் தனியா மீட் பண்ண அன்னைக்கு முதல்ல கோயிலுக்குத்தான் போனோம்; அப்புறம் பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம்; நேரமாச்சு ... நான் போயிட்டு வர்றேன்னு சொன்னேன். என்னடா, இவ எப்படி தனியா போவா, நான் கொண்டு விடட்டும்மான்னு கூட கேக்கலே. சரி போயிட்டு வான்னு சொல்லிட்டார். "

"அப்புறம், அவர் ஃப்ரெண்ட் சீனுன்னு இருக்கான், அவன் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? இருட்டாயிடுச்சே; நீ அந்த பொண்ணை லவ் பண்றன்னு சொல்றே; அட்லீஸ்ட் வீட்டுக்கு பக்கத்துலயாவது கொண்டு போய் விட வேணாமான்னு திட்டினதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி, நான் பன்னது தப்பும்மா .. சாரிம்மாங்கறாரு."

"இவருக்காக தினம் ஆஃபீசுலேருந்து, ஈவினிங் ஆஸ்பத்திரிக்கு ஒடறேன். ஏன் ஓடறேன்; இப்படி இருக்கற ஒருத்தனுக்காக நான் ஓடறேன்; அதான் ஏன்னு எனக்கும் புரியலை. நீ எப்படிம்மா இருக்கேன்னு ஒரு வார்த்தை கேக்கலை; நேத்துலேருந்து ஒரு போன் பண்ணலப்பா எனக்கு; அவருக்கு என் மேல ரொம்ப ஆசைப்பா; ஆனா அதை வெளியில சொல்லலைன்னா; அவரோட பிரியம் எனக்கு எப்படிப்பா தெரியும்?" சுகன்யாவின் குரல் கம்ம ஆரம்பித்தது. 


சுகன்யா... 22


அறையில் தனியாக விடப்பட்ட சுந்தரியும், குமாரும் ஒரு நிமிடம் வரை மவுனமாக இருந்தார்கள். நின்ற இடத்திலிருந்தே குமார் சுந்தரியைப் பார்க்க, தன் கணவனின் ஆழ்ந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல், சுந்தரி தன் முகத்தை தரையை நோக்கித் தாழ்த்திக் கொண்டாள். அவரும் தன் பார்வையை தரையை நோக்கித் தாழ்த்த, பளீரிடும் தன் மனைவியின் வெண்மையான காலும், பாதங்களும் அவர் கண்களில் பட, அவர் மனது பரபரக்கத் தொடங்கியது.

பரபரக்கும் மனதுடன் தன் பார்வையை குமார் இலேசாக உயர்த்த, சுந்தரியின் இடுப்பில், அவள் புடவை செருகியிருந்த இடத்துக்கும், அணிந்திருந்த ரவிக்கை விளிம்புக்கும் இடையில் பிதுங்கிக் கொண்டிருந்த வெண்மையான அவள் இடுப்பு சதை கண்களில் மின்னலாக அடிக்க, அவர் உடல் சிலிர்க்கத் தொடங்க, தன் பார்வையை தாழ்த்திக்கொண்டார்.

சுந்தரி, புடவையை இடுப்பில் செருகிக்கொண்டிருந்ததால், மருந்துக்கு கூட முடியில்லாமல் வழ வழவென்று, பளிச்சிடும், தன் முழங்காலை கணவன் ஆசையுடன் கூர்ந்து பார்ப்பதை அவளால் உணர முடிந்தது. அவர் பார்வையின் கூர்மையினால் அவள் உடல் சிலிர்த்து, இடுப்பில் செருகியிருந்த புடவையை வேகமாக உருவி சரி செய்து, தன் காலை மறைத்தாள்.



என்னடி பண்றே சுந்தரி? அவள் மனது அவளைப் பார்த்து நகைத்தது. நேத்து மழையில நின்னு, "வந்துடுடா குமருன்னு கதறிகிட்டு இருந்தே" இப்ப வந்தவன் ஆசையா உன் காலைப் பாத்தா, இழுத்து மூடிக்கிறே? சுந்தரியின் மனம் அவளை வம்புக்கிழுத்தது.

சுந்தரி ... நீ சுந்தரிதாண்டி; அன்னைக்குப் பாத்த மாதிரியே இன்னைக்கும் உருக்குலையாம மத மதன்னு இருக்கே; கண்ணுக்கு கீழே மெல்லிசா கரு
வளையங்கள் தெரியுது. உடம்பு தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்கு; அந்த ஈர உதட்டைப் பார்த்தா என் உடம்புல சுருசுருன்னு வெறி ஏறுதே? குமாரின் மனம் மட்டும் சும்மா இருக்குமா?

தனியா பொண்ணை வளர்க்கறதுன்னா சும்மாவா? எல்லா விஷயத்துலயும் என் பொண்ணை அம்சமா வளர்த்து வெச்சிருக்கா. கல்யாணமான பொம்பளை கூட, புருஷன் இல்லன்னா, ஊர்ல இருக்கறவன் சும்மா இருப்பானுங்களா? அவனுங்க பார்வையை அலட்சியப் படுத்தறது சுலபமா? வம்பு பேசறவங்க வாயில விழுந்து எழாம தப்பிக்கறது இலேசான காரியமா? நான் ஒரு முட்டாப்பய அவ கூட இருக்க வேண்டிய நேரத்தில அவளைத் தனியா விட்டுட்டு ஓடிட்டேன்.

என் தங்கத்துக்கு மனசுக்குள்ள என்னன்ன கவலை இருந்ததோ? இன்னும் இருக்குதோ? எப்படியெல்லாம் தவிச்சாளோ? இனிமே நம்ம குடும்ப பொறுப்பு எல்லாத்தையும் நான் சுமக்கறேண்டிச் செல்லம்; நீ சுகாவை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டே; அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு என்னுதும்மா; நீ கவலைப் படாதே? அவர் மனதில் எண்ணங்கள் வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக எழ, அவரிடமிருந்து ஒரு நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது.

சுந்தரி தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னங்க! இப்ப ஏன் நீங்க பெருமூச்சு விடறீங்க."

சுந்தரியின் உள்ளம் துணுக்குற்றது. என் புருஷன் எதை நெனைச்சு கவலைப் படறான். கண்ணு மறைவா இருந்தான். அவனைப் பத்தி நான் அதிகமா கவலைப்படலை. வீட்டுக்கு வந்தவன் என் எதிர்ல உக்காந்துகிட்டு பெருமூச்சு விட்டா, என் மனசுல சுருக்குன்னு வந்து குத்துதே!

என் குமருக்கு, வாலிபம் முடிஞ்சு போச்சா? இலேசா காதுக்கு பக்கத்துல முடி நரைச்சிடுச்சு. மீசையிலயும் ஒண்ணு ரெண்டு வெளுப்பு தெரியுது. தலையில அடர்த்தியா இருந்த முடி கொட்டிப் போயிருக்கே? முகம் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும், கம்பீரம் குறையலை. குரல் அப்படியே இருக்கு. நிக்கறது; உக்கார்றது; எல்லாத்துலயும் ஒரு நிதானம் வந்திடுச்சி.

என் தோள்ல கையை போட்டு இறுக்கமா அணைச்சானே! அந்த இறுக்கத்துல, அழுத்தத்துல, அவன் என் மேல வெச்சிருக்கற ஆசை தெரிஞ்சுதே! கையெல்லாம் தளர்ந்து போவாம கல்லு மாதிரிதான் இருந்தது. கர்லா கட்டை தூக்கி சுத்தின உடம்பாச்சே? நானாவது என் பொண்ணு மூஞ்சை பாத்துக்கிட்டு உசுரு வாழ்ந்தேன். பாவி இவன் தனியா இருந்து அலைகழிஞ்சானே; நாலு நாளைக்கு நம்ம வீட்டுல உக்கார வெச்சி நேரத்துக்கு அவனுக்கு புடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும். சுந்தரியின் மனதும் ஓரிடத்தில் நிக்கவில்லை.

"ஒன்னுமில்லேடா கண்ணு .." சுந்தரி தன்னையே பார்ப்பதை கண்டவன் கிசுகிசுவென பேசினான்.

"பின்னே ... "

"சுந்து ..." குமார் சோஃபாவில் உட்க்காந்தவாறே மெல்லிய குரலில் தன் மனைவியை ஆசை பொங்க அழைத்தார்.

"ம்ம்ம் ..."

"இங்கே கிட்ட வாயேன் ..."

"எதுக்கு," சுந்தரியும் தன் கள்ளக்குரலில் பேசியது சமீபத்தில் கல்யாணமான பெண், நேரம் கெட்ட நேரத்துல உடலுறவுக்கு அழைக்கும் தன் கணவனிடம் சிணுங்குவது போலிருந்தது குமாருக்கு.

கிட்டப் போனா கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானா? ஏண்டி சுந்தரி; அவன் வந்து பத்து நிமிஷம் ஆவலை. எப்படி இருந்தான் ... எங்க இருந்தான்; என்ன பண்றான்; இப்படி எதைப் பத்தியும் நீ அவன் கிட்ட கேக்கலை; அதுக்குள்ள உனக்கு உடம்பு கிடந்து அலையுது; அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானான்னு? . .

"சுந்தரி, என்னம்மா கேள்வி இது? ..."

குமார் மனதுக்குள் தவித்தார். பால் வாங்கப் போன சுகா வரதுக்குள்ள ஒரு தரம் ஆசையா இவளைச் சேத்து அணைச்சிக்கணும்ன்னு உடம்பு பரக்குது ... ஒன்னுமே புரியாதவ மாதிரி இப்பத்தான் இவ எதுக்குன்னு கேக்கறா? நாமே போய் கட்டிக்கிட்டா போச்சு. ஆனா அவ கதவுக்கு நேரால்லா நிக்கறா?

"கடை கிட்டத்துலதாங்க இருக்கு ..."

"இருக்கட்டும் ... சுந்து ..."

"என்ன குமரு ... இருக்கட்டுங்கறே ... உனக்கு புரியலியா ... சுகன்யா வந்துடுவான்னு சொல்றேன் ..."

"அப்படின்னா நீ சீக்கிரம் வாயேன் ... ப்ளீஸ் .. "

அவன் குரலில் இருந்த காமத்தை உணர்ந்ததும் சுந்தரியின் முகம் வெட்க்கத்தால் சிவந்தது. என் புருஷன் கிட்ட எனக்கு ஏன் இத்தனை வெட்கம்? ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன் என்னைத் தொடப்போறானே அதனாலயா? அவளுக்கு புரியவில்லை.

சுந்தரி ஒரு முறை தன் கணவனை தீர்க்கமாக பார்த்தவள், மெல்ல நடந்து வாயில் கதவை படிய மூடினாள். தன் கணவனை நோக்கி மெதுவாக நடந்தாள். கதவு மூடப்பட்டதும், விருட்டென எழுந்த குமார், சுந்தரியை நோக்கி நடந்தார். அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுந்து தன் மார்புடன் இறுகத் தழுவினார். தழுவியவர் அவள் கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டார், குரலில் அன்பு பொங்க அவள் காதில் முனகினார் "சுந்து ... ஐ லவ் யூ ..."

மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆசையும், அந்த ஆசையால் ஏற்பட்ட பரவசமும், தன் கணவனின் முரட்டுத்தனமான தழுவலால் கிடைத்த உடனடியான ஆனந்தமும் என பல விதமான மன உணர்ச்சிகள் சுந்தரியின் முகத்தில் தெரிய, அவளுடைய உதடுகள் துடிக்க, அவள் தன் கீழுதட்டை மெதுவாக கடித்து தன் உடல் பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள்.

அப்ப்பா ... எத்தனை நாளாச்சு ... என் பொண்டாட்டி உடம்பைத் தொட்டு ... சுந்தரியின் உடல் வாசனை பட்டென மூக்கில் ஏற, அவள் உடலின் மென்மையை தன் மார்பில் உணர, அவர் உடல் உதறியது. உடல் ரோமங்கள் குத்திட்டுக்கொண்டது. சுவாசம் துரிதமானது. உடலில் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை எட்டிப்பார்த்தது. தன் ஆசையை, தன் மனதின் ஏக்கத்தை, தாகங்களை, தன் உடல் வலுவை மொத்தமாக தன் வலுவான கரங்களின் மூலமாக அவள் உடம்பில் காட்டினார்.

"அய்யோ...! விடுங்க... என்னங்க இது ... சின்னப்பையன் மாதிரி ... வெறி புடிச்சிக்கிச்சா உங்களுக்கு ... இப்படி இறுக்கறீங்களே ... விட்டுடுங்க ... மூச்சு விட முடியலீங்க... மூ ...ச்ச் ....சு முட்ட்ட்டுதுங்க .." சுந்தரி திமிறினாள். அவள் மார்பு ரவிக்கைக்குள் மெல்ல மெல்ல ஏறி இறங்கின.

சரியாக பேச முடியாமல், தன் கணவனின் தழுவலில் தவித்தாள் சுந்தரி. குமாரின் அனலான மூச்சு அவளது சிவந்த முகத்தில் வீச, அவள் தன் மூச்சை இழுத்து பிடித்து அவர் பிடியில் நெளிந்தாள். கண்களின் ஆசையும், மிரட்சியுமாக குமாரைப் பார்த்தாள். உடலின் இயல்பான உந்துதலால், மனதில் ஏற்பட்ட இயற்கையான ஆசை வேட்க்கையால், அவள் கைகள் வேகமாக பழக்க தோஷத்தில் அவர் முதுகில் படர்ந்து அவரை பதிலுக்கு இறுக்கியது.

சுந்தரியின் வீங்கும் மார்புகள் குமாரின் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தன. கணவனின் வலுவான கைகள் உடலில் இறுகிக் கிடக்க, அவன் பரந்த மார்பில் தன் மார்புகள் உரசியதும், சுந்தரியின் உடல், ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. மனது ஆனந்த கூத்தாடியது. சேலைக்குள் சிறைப் பட்டிருந்த சுந்தரியின் கைக்கடக்கமான சிறிய முலைகள் மெல்ல மெல்ல அளவில் பெரிதாகத் தொடங்கின. முலைகளின் நுனியில் துருத்திக்கொண்டிருக்கும் தேன் நிற காம்புகளில் தினவெடுக்க ஆரம்பித்தது. 


எம்ம்ம்மா ... எவ்வள காலமாச்சு ... என் புருஷன் கை என் உடம்புல பட்டு ... என் உடம்பு பூமியில இருக்கா; இல்லையான்னு தெரியலியே; காத்துல பறக்கற மாதிரி இருக்கே; குமரு ...! நானும் தாண்டா உன் மேல உயிரை வெச்சுக்கிட்டு இருக்கேன்; எங்க உன்னைப் திரும்பவும் பாக்காமே போயிடுவோமோன்னு நினைச்சேண்டா பாவி; என்னை வதைச்சிட்டியேடா பாவி; அவள் மனம் ஆனந்தத்தில் கூவியது.

"சுகா இப்ப வரமாட்டா, என் பொண்ணு புத்திசாலி ... நாம தனியா பத்து நிமிஷம் இருக்கணும்ன்னுதான் அவ பால் வாங்கவே போனா ... " குமார் முனகினார். முனகிக்கொண்டே, குமார், அவள் கழுத்து வளைவை தன் நாக்கு நுனியால் மெதுவாக வருடினார். இப்போது கழுத்தில் அழுந்தியிருந்த குமாரின் உதடுகள், திசை மாறி ஊர்ந்து சுந்தரியின் இடது கன்னத்தில் வந்து நின்றது ... "ப்ச்ச்க்" என ஓசையுடன் அவர் அவள் கன்னதில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் கன்னத்தை தன் முன் பற்களால் கடித்தார். கடித்தவரின் சித்தம் நொடியில் பனியாக குளிர்ந்து உறைந்தது.

"அசிங்கமாப் போயிடுங்க ... கடிக்கறீங்களே"

"என்னடி அசிங்கம் இதுல"

"பகல்லே கடிக்கறீங்களே?"

"ஆசைக்கு என்னடி தெரியும் ... பகல் என்னன்னு ... ராத்திரி என்னன்னு?"

"உங்க பொண்ணுக்கு என் கன்னத்துல இருக்கற பல்லு அடையாளம் தெரிஞ்சா, அவ என்னைப் பாத்து சிரிக்க மாட்டாளா?"

சுந்தரி தன் குரல் குழற வெட்க்கத்துடன் பேசினாளே தவிர, தன் கணவனின் இரு கன்னங்களிலும் ஆசையுடன் மாறி மாறி மூச்சிறைக்க முத்தமிட்டாள். அவளுடைய சுவாசத்தின் வேகத்தில் அவளுடைய கனக்கும் மார்புகள், ரவிக்கைக்குள் ஏறி இறங்கி குமாரை வெறி கொள்ள செய்தன. அவள் முகத்தை வெறித்துப் பார்த்த குமார், அவள் உதடுகளை கவ்வும் நோக்கத்துடன், அவள் முகத்தின் மீது குனிந்தார்.

"ஒரு செகண்ட் என்னை விடுங்க" அவர் உதட்டில் தன் உதடுகளை அவசரமாக ஒத்திய சுந்தரி, குமாரை உதறிவிட்டு, வேகமாக பால்கனியை நோக்கி ஓடி இடது புறம் பார்த்தாள். கண்ணுக் கெட்டிய தூரம் வரை, சுகன்யா தென்படவில்லை. வேகமாக உள்ளே திரும்பி வந்தவள், இப்போது சோஃபாவில் உட்கார்ந்திருந்த குமாரின் முகத்தை தன் மார்புடன் சேர்த்து வெறியுடன் அழுத்திக்கொண்டாள்.



குமாரின் கைகள் சுந்தரியின் இடுப்பில் புடவையின் இறுக்கத்தால் பிதுங்கிக் கிடந்த வெளுப்பான சதையை வருடிக் கொண்டே, தன் முகத்தை நீண்டப் பெருமூச்சுடன், அவள் மார்பில் புரட்டிக்கொண்டிருந்தார். புடவை முந்தானைக்குள், ரவிக்கைக்குள் ஒளிந்திருந்த அவள் முலைகளையும் நடு நடுவில் முத்தமிட்டார்.

"குமரு ... ம்ம்ம் ... என்னை இப்படியே உன் கையால இறுக்கி கட்டி ஒரே வழியா கொண்ணுடுடா ... ராஜா! எங்கடா இருந்தே இவ்வளவு காலமா? நீயும் தனியா தவிச்சுக்கிட்டு, என்னையும் தவிக்க வெச்சிக்கிட்டு?" அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. குமாரசுவாமி தன் இதயம் வலிக்க, உள்ளம் பதறி, சுந்தரி ... ப்ளீஸ் அழாதம்மா ... ப்ளீஸ் ..." புலம்பினார்.

புலம்பியவர், சுந்தரியை இழுந்து தன் மடியில் கிடத்தி, அவளை மேலே பேசவிடாமல், அவள் வாயை தன் வாயால் கவ்விக் கொண்டார். அவள் உதடுகளை மனதில் வெறியுடன், ஆனால் அவளுக்கு வலிக்காமல், இதமாக கடித்து முத்தமிட்டார். சுந்தரியின் உதடுகள் வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஈரமுத்தத்தால் திணறின. அவள் மூச்சு விட முடியாமல், அவர் பிடியில் திமிறினாள். அவர் மடியிலிருந்து எழ முயற்சித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்துக்கொண்டாள்.

"குமரு ... போதுண்டா ... என்னை விட்டுடா செல்லம் இப்ப; குழந்தை வந்துடுவா; இப்ப அவ சின்ன பொண்ணு இல்லே! மனுஷ உடம்புன்னா என்னான்னு அவளுக்கு தெரியும் .. ஒரு ஆம்பிளையோட தொடல் எப்படி இருக்கும்ன்னு அவளுக்கு புரிஞ்சிருக்கு. சொன்னாக் கேளுப்பா.."

சுந்தரியின் தலை களைந்து, சுருண்ட முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் பறந்தன. ஒரிரு முடிகள் அவள் நெற்றியில் தோன்றிய வியர்வை முத்துகளில் ஒட்டிக்கிடந்தன. சுந்தரியின் மூச்சு வேகமாக வந்ததால், கச்சிதமான அவள் மார்புகள், சேலைக்குள் விம்மிக் கொண்டிருந்ததைப் பார்த்த, குமாரின் தண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியின் உடல் வாசனையால் தூண்டப்பட்டு, மெல்ல மெல்ல புடைக்கத் தொடங்கியது. குமாரின் கை விரல்கள் சுந்தரியின் அடிவயிற்றில் வட்டமிட்டு அவளது தொப்புள் குழியில் நுழையத் துடித்தன.

குமாரின் புடைப்பை, அவருடைய மடியில் கிடந்த சுந்தரி தனது செழிப்பான புட்டச் சதைகளில் உணர்ந்ததும், அவள் உடல் நடுங்க "குமரு, இப்ப நீ என்னை விட்டுடா கண்ணு; இப்ப வேணாம்பா; சுகா சட்டுன்னு உள்ளே வந்துட்டா, என் மானம் போயிடும்பா; எனக்கு மட்டும் ஆசையில்லயா? நானும் உனக்காக தவிச்சிப் போய் இருக்கம்பா; இத்தன நாள் பொறுத்தோம்; இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கப்பா," தன் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு அவனை கெஞ்சினாள்.

"சரி ... சரி ... அப்படின்ன்னா நீ ஒரே ஒரு முத்தம் எனக்கு குடுப்பியாம்; நீ வெத்திலைப் போட்டுக்கிட்டு அப்பல்லாம் குடுப்பியே, அந்த மாதிரி ஒரு முத்தம் குடுத்துடு; உன்னை நான் விட்டுடறேன்." அவர் கண்களில் தாபம் தங்கியிருக்க மன்றாடினார். அவர் கைகள் தன் மடியில் கிடந்தவளை மீண்டும் அழுத்தமாக இறுக்கின. தன் உதடுகளை அவள் வியர்த்திருந்த முகமுழுவதிலும் ஓசையில்லாமல் ஒற்றி ஓற்றி எடுத்தார்.

"வேணாம்ன்னு சொன்னா கேக்க மாட்டீங்கறீங்க..." சொல்லிக்கொண்டே, குமாரின் மடியில் கிடந்தவள், அவர் முகத்தை நிமிர்த்தி, அவள் மனதுக்குள்ளிருந்த பதினைந்து வருட பிரிவின் ஏக்கத்தை, குமாரின் உதடுகளுக்கு, தன் உதடுகளின் மூலம் தெரிவித்தாள்.

அவர் உதட்டில் தன் மெல்லிய சிவந்த உதடுகளை பதித்தாள். தன் நாக்கால் அவர் உதடுகளை வருடினாள். மீண்டும் அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி, அவர் உதடுகளை தன் நாக்கால் பிரித்தாள். பிரிந்த உதடுகளுக்குள் தன் நாக்கை நுழைத்து, அவர் நாக்கை துழாவினாள். பின் தன் நாக்கை தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு, தன் மெல்லிய உதடுகளால் அவர் நாக்கை இழுத்து உறிஞ்சினாள்.

தன் மனைவியின் ஈர நாக்கின் கொழகொழப்பும், அவள் எச்சிலில் இருந்த லேசான குளிர்ச்சியும், அவள் உதடுகளின் மெல்லிய வெப்பம் என, கலவையான சுவை அவர் உதடுகளைத் தாக்க, அவர் உடல் முழுவதுமாக விழித்துக்கொண்டு, குமாரின் கை சுந்தரியின் இடது மார்பினை கொத்தாக முந்தானையுடன் சேர்த்து பிடித்தது.

தன் கணவனின் கை, தன் ரவிக்கைக்குள் வீங்கிக்கொண்டிருந்த மார்பை அழுந்த பிடித்ததும், இனி ஒரு வினாடி தாமதித்தாலும் நிலைமை மோசமாகிவிடும் என உணர்ந்த சுந்தரி, விருட்டென தன் முகத்தை அவர் முகத்திலிருந்து விலக்கிக் கொண்டு, அவர் மடியிலிருந்து துள்ளி எழுந்தாள். எழுந்தவள், தன் முந்தானையை சரி செய்து கொண்டு, மீண்டும் பால்கனியை நோக்கி ஓடினாள். சுகன்யா குனிந்த தலையுடன், ஒரு கையில் பாலும், இன்னொரு கையில் காய் கறிகளுடன், வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஓடிய வேகத்தில் திரும்பி உள்ளே வந்த சுந்தரி, குமாரின் கன்னத்தை அழுத்தி திருகியவள், அவர் கன்னத்தில் தன் சிறிய பற்கள் பட கடித்தாள். கடித்த இடத்தில் தன் உதடுகளை பொருத்தி ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் முகத்தை ஆசைத் தீர பார்த்தவள், அவரை இழுத்து தன்னுடன் ஒரு முறை இறுக்கிக்கொண்டாள். பின் அவனை விலக்கிவிட்டு தன் புடவையை உதறி சரி செய்து கொண்டாள்.

"என்னங்க ... சுகா வந்துகிட்டிருக்கா, உள்ளப் போய் அந்த லுங்கியை எடுத்து கட்டிக்கிட்டு வாங்க; கர்மம் ... அதுக்குள்ள "அது" உங்க பேண்டுக்குள்ள புடைச்சிக்கிட்டு, நிக்குது; சீக்கிரமா எழுந்து உள்ள போங்க ..." சொல்லியவள் கண்களில் விஷமத்துடன், தன் விரல்களால், அவர் புடைப்பை ஒரு முறை, அழுத்தி வருடினாள். மேலும் கீழுமாக நீவினாள். அவரை மீண்டும் ஒரு முறை ஆசையுடன் தழுவிக்கொண்டு தன் அடிவயிற்றை அவன் புடைப்பில் தேய்த்து, அவரை நகரவிடாமல் முரண்டு பண்ணினாள்.

"சுகா வந்துட்டாங்கற; அப்பறம் இவனைப் புடிச்சி இப்ப அமுக்கறியேடி; அவன் முழுசா எழுந்துட்டான்னா அடங்க மாட்டான்; விடுடி என்னை," குமார் அவளை வேகமாக உதறி சோஃபாவில் தள்ளிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். சுந்தரி, பேண்டில் எழுந்த புடைப்பை அழுத்திக்கொண்டு வேகமாக ஓடுகிறவரைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றாள்.

சுகன்யா வீட்டுக்குள் நுழைந்த போது சுந்தரி, தன் தலை முடியைப் பிரித்து உதறி சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு, தன் கணவனிடமிருந்து பெற்ற முத்தத்தால், தழுவலால், அதனால் உண்டான உடல் சுகத்தால், மனதில் மகிழ்ச்சி பீறிட, பொங்கிய சந்தோஷத்தை அடக்க முடியாமல், சுந்தரி அவளையும் அறியாமல், அவளுக்குப்பிடித்த சினிமா பாடலை, வாய் விட்டு பாட ஆரம்பித்தாள்.

"காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது ...
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

தேர் கொண்டு வா தென்றலே ... இன்று நான் என்னைக் கண்டேன்..
சீர் கொண்டு வா சொந்தமே ... இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் ... பேசி பேசி கிள்ளை ஆனேன்..
கோவில் விட்டு கோவில் போவேன் ... குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

வீட்டினுள் நுழைந்த சுகன்யா, வாய் விட்டு பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். தன் தாயின் இடது கையை பிடித்து அவளை தன் புறம் திருப்பினாள். அவள் கன்னத்தில், குமார் சற்று முன் கடித்ததால் ஏற்பட்ட, பளிச்சிடும் சிவந்த பற்களின் அடையாளத்தைக் கண்டவுடன், தன் உதடுகளில் எழுந்த புன்னகையை, மிக சிரமத்துடன், உதடுகளை கடித்து அடக்கிக்கொண்டாள்.

"அம்மா ... அப்பா மேல இருக்கற கோபமெல்லாம் போயிடிச்சாம்மா" சுந்தரியின் சந்தோஷம் அவளையும் தொற்றிக்கொள்ள, தாயின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். 


"அம்மா ... நீ இப்ப ரொம்ப அழகா இருக்கேம்மா"

"ஏய் ... சும்மா இருடி .." தன் பெண் சொன்னதைக் கேட்டு சுந்தரி வெட்க்கப்பட்டாள்.

"நிஜம்மா சொல்றேம்மா ... இனிமே நீ இப்படியே எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்மா."

"சரிம்ம்மா ... தேங்ஸ்டி கண்ணு ..."

சுகன்யா, தன் தாய் சுந்தரி, வாய் விட்டு பாடி எப்போதும் பார்த்ததேயில்லை. வெகு நாட்களாக வீட்டில் இல்லாதிருந்த அப்பா வீட்டுக்கு திரும்பி அரை மணி நேரம் முழுசா ஆகலே; அவர் கூட தனியா ஒரு ராத்திரியை கழிக்கல; அவ்வள தூரம் ஏன்? கூட உக்கார்ந்து மனம் விட்டு பத்து நிமிஷம் நிம்மதியா பேசலை. அதுக்குள்ள அம்மா எவ்வள சந்தோஷமா ஆயிட்டாங்க! தன் தாயின் மகிழ்ச்சியை கண்ட சுகன்யாவின் மனசும் மயிலிறாக மாறியது.

"அம்மா ... நீ பாடற இந்த பாட்டு, இப்ப நம்ம வீட்டுல இருக்கற சிச்சுவேஷனுக்கு பர்பெக்ட்டா சூட் ஆவுதும்மா ... " சுகன்யா ஸ்டவை ஆன் செய்து பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.

சுந்தரி தன் மகளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். சுகன்யாவைப் பார்த்து ஆதுரமாக புன்னகைத்தாள். அந்த கணத்தில் தன் பெண்ணுடன் சுந்தரி தன்னை மிகவும் சகஜமாக உணர்ந்தாள். அவள் கண்ணுக்கு, சுகன்யா தன் சொந்த மகளாகத் தெரியாமல், தன் வயதையொத்த, தன் மனதை மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஒரு சினேகிதியாக, கேட்க்காமலேயே தன் நட்புக்கரம் நீட்டுபவளாக அவள் தெரிந்தாள். அவள் மீது அவள் மனதில் எல்லையில்லா நட்பும், நேசமும் ஒருங்கே பொங்கியது. டக்குன்னு என் மன நிலையை புரிஞ்சுக்கிட்டாளே? முத்தம் குடுக்கறேன்னு குமரு பாட்டுல என்னை கடிச்சி வெச்சிட்டான். நான் சொன்னா கேட்டாத்தானே? இவ என் புருஷன் கன்னத்துல பண்ண காயத்தை பாத்துட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சாளே?

"எதுக்கும்மா ... தேங்க்ஸ் சொல்றே எனக்கு?"

இடுப்பில் லுங்கியும், மார்பில் பனியனுமாக, கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலியுமாக, உள்ளறையிலிருந்து, தாயும் பெண்ணும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே, வெளியில் வந்த குமார், ஹாலில் வசதியாக தரையில் உட்க்காந்து, சுவரில் சாய்ந்து கொண்டார்.

"எங்க மனசு புரிஞ்சி, சமயோசிதமா எங்களைத் தனியா விட்டுட்டு, சட்டுன்னு தூக்கை எடுத்துக்கிட்டு தெருவைப் பார்க்க நடந்தியே; அந்த தாராள மனசுக்குத்தாம்மா" சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

"சும்மா எமோஷனல் ஆவாதேம்மா, உன் சந்தோஷம்; என் சந்தோஷம்ம்மா; நீ எனக்கு செய்றதுக்கு முன்னாடி நான் பண்ணது ஒண்ணுமேயில்லம்மா" சுகன்யா காபியை, சுந்தரியிடமும், தன் தந்தையிடமும் கொடுத்தாள். சுகன்யாவும் ஒரு கோப்பையில் காபியுடன் தன் தகப்பன் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டாள்.

"சுந்து, கோவில் விட்டு கோவில் போவேன்னு நீ பாடிக்கிட்டு இருந்தே? நான் இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழையறேன். நீ என்னடான்னா, என்னை விட்டுட்டு கோவிலுக்கு போறேங்கறே; நியாயமாடி இது?"

"சே... சே... குமரு, எப்பவும் கோவில், சாமி விஷயத்தை கிண்டல் பண்ணாதீங்க; நாளைக்கு லீவுதானே; நீங்களும் எங்க கூட வாங்களேன், காஞ்சிபுரம் பக்கத்துலதானே இருக்கு; எனக்கு காமாட்சியை கண்டிப்பா தரிசனம் பண்ணனுங்க; சுகா, நாளைக்கு போறதுக்கு நீ டிக்கட் புக் பண்ணிட்டியாம்மா?"

"சாரிம்மா ... அப்பா காலையில போன் பண்ணதும், எனக்கு என் தலை எது கால் எதுன்னு புரியலை; இதுல நாம போட்ட புரோகிராம் எனக்கு மறந்து போச்சும்மா."

"போடி இவளே ... உன்னைப் போய் நம்பினேன் பாரு; என்னங்க ... நீங்க வீட்டுக்கு வரணும்; என் பொண்ணு கல்யாணம் நல்ல படியா நடக்கணும்; அம்பாளைப் பாத்து வேண்டிக்கணும்ன்னு நேத்து நினைச்சேன்; இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க; அவ கருணையை நினைச்சா என் உடம்பு சிலுத்து போவுதுங்க; நான் நாளைக்கு என்ன ஆனாலும் சரி, அம்பாளை போய் பாக்கத்தான் போறேன்."

தன் கணவனைப் பார்த்துக் கொண்டே பேசியவள், அவர் வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை கிள்ளி ஒரு துண்டை தன் தலையில் வைத்துக் கொண்டவள், இன்னொரு துண்டை, சுகன்யாவின் தலையில் செருகினாள். ஒரு துண்டு பால்கோவாவையும், சிறிது மிக்சரையும், ஒரு தட்டில் வைத்து குமாரிடம் கொடுத்தாள்.

"சுந்து ... இதுக்குப் போய் குழந்தையை ஏன் சலிச்சுக்கறே? நாளைக்கு உனக்கு அம்பாளை பாக்கணும்; அவ்வளவுதானே? நான் ஒரு ஏற்பாடு பண்றேன். நாம எல்லோருமே ஒண்னா போய் வருவோம்."

"எப்படிப்பா ... இதுக்கு மேல நாம மாம்பலம் போய் டிக்கட் புக் பண்ணி; நீங்க வேற ஈவீனிங் யாரையோ பார்க்க போகணும்னு சொல்றீங்க; கஷ்டம்பா." சுகன்யா முனகினாள்.

குமாரசுவாமி, தன் செல்லை எடுத்து பேச ஆரம்பித்தார். "மிஸஸ் மாலதி, எனக்கு ஒரு நல்ல அனுபவம் உள்ள டிரைவர் நாளைக்கு ஒரு நாள் பூரா வேணும்; நோ ... நோ ... நம்ம கம்பெனி டிரைவர்கள் யாரும் வேண்டாம்; தட்ஸ் ஓ.கே. ... நாளைக்கு லீவு; ஐ அண்டர்ஸ்டேண்ட்; நம்ம எம்ப்ளாயீஸ் யாரும் லீவு நாளைன்னக்கு எனக்காக டிஸ்டர்ப் ஆகக்கூடாது."

"திஸ் ஈஸ் ப்யூர்லி மை பர்சனல் டிரிப்; நம்ம காண்ட்ராக்டர்ஸ் யாருகிட்டவாவது கேளுங்க; ஐ வில் பே ஹிஸ் சார்ஜ்ஜஸ்; நான் என் சொந்த கார்ல, காஞ்சிபுரம் போகணும்; நாளைக்கு எர்லி மார்னிங் ஷார்ப் அட் ஃபைவ் தர்டி கிளம்பணும்; என் வண்டி நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல்ல தான் இருக்கு; ட்ரைவர் ஃபிக்ஸ் ஆன உடனே கெஸ்ட் ஹவுஸ் மேனேஜரை என் கிட்ட பேச சொல்லுங்க; எஸ் ... எஸ் ... மை வெஹிகல் இஸ் இன் பர்பெக்ட் கண்டீஷன்; காலைல நான் ஓட்டிப் பாத்துட்டேன்... "

"பை த பை ... ஹெட் ஆபீசுலேருந்து கால்ஸ் எதுவும் வந்தா என் மொபைல்ல காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க ... ஓ.கே ... நான் இன்னைக்கு ஆபீசுக்கு இதுக்கு மேல வர்றது கஷ்டம்; என் பீரிஃப் கேஸை மட்டும் உங்க கஸ்டடியிலே வெச்சுக்குங்க; அதுல கொஞ்சம் முக்கியமான பேப்பர்ஸ் இருக்கு; யூ மே லீவ் அட் யூர் கன்வீனியன்ஸ்; பை ... பை ..."

"நாளைக்கு காலையில ஆறு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் தயாரா ஆகிடுவீங்க இல்லயா? நாம காஞ்சிபுரம் போகலாம்; சுந்து இப்ப உனக்கு திருப்திதானே? டன் ..." தன் மனைவியைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தார் குமார்.



"அப்பா நீங்க சொந்தமா கார் வெச்சிருக்கீங்களாப்பா? சுகன்யா ஆவலுடன் கேட்டாள்."

"ராஜா ... நான் தான் காலையிலேயே சொன்னேனே? எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான்னு; இந்த காரும் உன்னுதுதாண்டா செல்லம்." அவர் தன் மகளின் தலையை அன்புடன் வருடினார்.

"நான் கூட சுமாரா கார் ஓட்டுவேம்பா,"

"சுகா ... உனக்கு கார் ஓட்ட ஆசையா இருக்கா ... ஆமாம் அது என்னா சுமாரா ஓட்டுவே?"

"என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கும் போது எனக்கு கார் ஓட்ட கத்துக்குடுத்தாப்பா ... ஆனா அம்மா பயப்படறாங்கப்பா."

"அம்மா பயந்துகிட்டே இருக்கட்டும் ... இந்த வண்டியை நீயே வெச்சுக்கோ. தாராளமா நீ ஓட்டி பழகு. நான் பெர்மிஷன் குடுக்கறேன். "

"என்னங்க; ராத்திரிக்கு உங்களுக்கு டிஃபன் பண்ணட்டுமா இல்லை, சமையல் பண்ணட்டுமா? ராத்திரிக்கு இங்கேயே எங்க கூட இருங்க. உங்க கிட்ட முக்கியாமான விஷயம் கொஞ்சம் பேசணுங்க." சுந்தரி அவர் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

"நீ எது பண்ணாலும் நான் சாப்பிடறேம்மா. டிரைவர் யாராவது கிடைச்சா, காஞ்சிபுரம் போகும் போது, நான் உன் கூட ஜாலியா பேசிக்கிட்டு வராலாம்னு பாக்கிறேன்; இல்லன்னா, நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போய், வண்டியை எடுத்துக்கிட்டு, அப்படியே என் ட்ரெஸ்ல ஒரு செட் எடுத்துக்கிட்டு வந்துடறேன்; காலையிலே இங்கேயிருந்தே போயிடலாம். நீ பேசறதையெல்லாம் ராத்திரி பூரா நான் கேக்கிறேன். " 



சுகன்யா... 21

"என்னப்பா சாப்படறீங்க"

"எனக்கு ஒரு புல் மீல்ஸ் சவுத் இண்டியன் தாலி ஆர்டர் பண்ணும்மா." தன் செல்லில் வந்திருந்த செய்திகளை அவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

"நான் தவா ரொட்டியும், ஒரு ப்ளேட் ஷாஹீ பனீர் அண்ட் சுட்ட அப்பளம் வாங்கிக்கப் போறேன்; இங்க இந்த அயிட்டம் நல்லா இருக்கும்பா."

"வெரி குட்; நார்த் இண்டியன் டிஷஸஸ் உனக்கு பிடிக்குமா? அச்சி லட்கி ஹோ தும்" அவர் புன்னகைத்தார்.

"ம்ம்ம் ... பாபூஜி, முஜே ஷாஹீ பனீர் கீ சப்ஜி பகுத் அச்சி லக்தி ஹை; க்யா ஆப் பசந்த் நஹீ கர்தே?" மகள் சரளமாக இந்தியில் பேசியதும் குமராசாமி அவளை வியப்புடன் பார்த்தார்.

"சுகா, உனக்கு இந்தி தெரியுமா?"

"தோடி தோடி ஆத்தி ஹை; மறந்துட்டீங்களாப்பா? ... அம்மா ஹிந்தியிலே கோல்ட் மெடல் வாங்கினவங்கன்னு?" அவள் தன் குரலில் இலேசாக வருத்தம் தொனிக்க கேட்டாள்.

"நோ ... நோ ... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்மா ... அம்மா சொல்லிக் கொடுத்தாளா உனக்கு, கேட்டுத் தெரிஞ்சுக்கறேம்மா .. "



"ஆமாப்பா ... அப்பா! உங்களாலே நான் அம்மாகிட்ட இன்னைக்கு சரியா திட்டு வாங்கப் போறேன்" சுகன்யா தன் கருவிழிகளை அகலமாக விரித்து சிரித்தாள்.

"ஏம்மா ... நான் என்ன பண்ணேன்?

"அம்மா மதியத்துக்குன்னு தயிர் சாதமும், தக்காளி சட்னியும் பேக் பண்ணி குடுத்தாங்க; உங்க கூட நான் ஹோட்டல்ல உக்காந்து நல்லா மூக்கு பிடிக்கத் தின்னுட்டு, அதை வீட்டுக்குத் திருப்பி எடுத்துக்கிட்டு போனா, முத்தமா குடுப்பாங்க; தொடையை திருவி எடுத்துடுவாங்க;"

"ம்ம்ம் ... என் பொண்ணை திட்டவோ, கிள்ளவோ நீ யாருடின்னு நான் கேக்கறேன்?" சிரித்தார் குமாரசுவாமி.

"சரிப்பா ... நீங்க என் கூட இருக்கும் போது எனக்கென்ன பயம்? ஆனா அவங்க கிட்ட நீங்க திட்டு வாங்காம இருந்தா சரி! அம்மா நடுவுல ரொம்ப மாறிட்டாங்கப்பா ... "

"ஏம்மா ... அப்படி சொல்றே? அவ எனக்கு முதல்ல பொண்டாட்டி; அப்புறம்தான் உனக்கு அம்மாவா ஆனா; சும்மா என்னை நீ பயமுறுத்தாதே? என் சுந்தரியைப் பத்தி எனக்குத் தெரியாதா? தங்கமாச்சே அவ?" சிறிது நேரம் டல்லாக இருந்த தன் பெண் மீண்டும் முகம் மலர்ந்து சிரிப்பதை கண்ட மகிழ்ச்சியில் அவரும் சிரித்தார்.

"நீங்களே நேரா வந்து உங்க தங்கத்தைப் எடை போட்டு பாருங்க; இப்ப உங்க பத்தரை மாத்து தங்கத்தை பாக்கறதுக்கு கிளம்புங்க .." தன் தந்தையுடன் சேர்ந்து அவளும் சிரித்தாள்.

"ம்ம்ம் ... ஆனா ஆறு மணிக்கு எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு. என் கீழ வொர்க் பண்றவரோட மகன் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல அட்மிட் ஆயிருக்கான். ஈவினிங் அவனை நான் பாக்கப் போகணும் ... அப்புறமா அங்கேயிருந்து நான் எங்க ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடலாம்ன்னு இருக்கேன். "

"இப்ப மணி ரெண்டுதானே ஆகுது ... நீங்க தாராளமா உங்க வேலையை முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து ராத்திரி சாப்பிடணும்; உங்க பொண்டாட்டி, பொண்ணு நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லாட்டாம் சென்னையில இருக்கறப்ப, எங்கேயோ கெஸ்ட் ஹவுஸ்ல்ல நீங்க ஏன் தங்கணும், அங்க கண்டதை ஏன் சாப்பிடணும்?"

"சரிடா ராஜா! இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம் ... உனக்கு ஐஸ் கிரீம் அயிட்டம் எதாவது வேணுமா? இல்லன்னா - பேரரை பில்லை கொண்டு வரச்சொல்லு."

"அப்பா நாம வீட்டுக்கு ஆட்டோவில போகலாம்பா."

"சரிடா கண்ணு; நீ ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, உன் அம்மாவுக்கு பன்னீர் திராட்சைன்னா ரொம்ப பிடிக்கும்; எதிர்ல ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கான்; நான் வாங்கிட்டு வந்துடறேன்."

சுகன்யாவின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. அம்மாவுக்கு என்ன பிடிக்கும்ன்னு அப்பா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சிருக்கார்; உடலால அவர் இப்ப என் கூட இருக்கார், ஆனா அவரு மனசு அம்மாவைப் பத்தித்தான் நெனைச்சிக்கிட்டிருக்கு. அவங்களை பாக்கணும்னு கிடந்து தவிக்குது. அம்மா மேல இவ்வளவு ஆசையும், பாசமும் வெச்சிருக்கிறவர், இவ்வளவு நாளா பிடிவாதமா, தயங்கி தயங்கி அவங்களை பாக்க வராம இருந்திருக்கார். ஏன் ரெண்டு பேரும் இப்படி வீம்பா ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு தங்களுடைய இளமையை வீணாக்கிக்கிட்டாங்க? இதை தலை எழுத்துங்கறதா? இல்லை, அப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட ரெண்டு பேரோட ஈகோவில் பட்ட காயத்தின் விளைவாலா?

தனிப்பட்ட மனுஷங்க மனசை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. அவள் மனம் தன் தந்தைதையும், தாயையும் நினைத்து பரிதவித்தது. என் பெத்தவங்களை மாதிரித்தான் நானும் செல்வாவை காதலிக்கிறேன். அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். எங்க மத்தியிலேயும், இது போன்ற ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமா?

சுகன்யா, குமாருக்காக காத்திருந்த போது, பைக்கில் ஒரு இளம் ஜோடி அவளை மெதுவாக கடந்து சென்றார்கள். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தவன் தேவையில்லாமல் ப்ரேக் போட அவன் பின்னால் உட்க்கார்ந்திருந்தவள், விருட்டென அவன் முதுகில் தன் விம்மிய மார்புகள் உரச அழுத்தமாக அவனைக் கட்டிப்பிடித்தாள்.

"மெத்துன்னு இருக்குடி" அவன் சிரித்துக்கொண்டே சொன்னது சுகன்யாவுக்கு தெளிவாக கேட்டது. அந்த பெண் முகத்தில், இந்த சந்தர்ப்பத்தை, சடன் ப்ரேக்கை, எதிர்பார்த்து காத்திருந்தது தெளிவாக தெரிந்தது. அவர்கள் இருவரும் சாலையில் நடத்திய காதல் நாடகத்தை கண்ட சுகன்யா, தன் முகம் சிவந்து அவளைப் பார்த்து முறுவலித்தாள். அவளும் கல கலவென சிரித்துக்கொண்டே, சுகன்யாவை நோக்கி தன் கையை அசைத்தாள். லெட் தெம் பி ஹாப்பி; சுகன்யாவின் மனம் அவர்களை வாழ்த்தியது.

சட்டென சுகன்யாவுக்கு செல்வாவின் நினைவு மனசிலாடியது. "அவன் பின்னாடி பைக்ல எத்தனை தரம் நான் உக்காந்து போயிருக்கேன்? ஒரு தரமாவது இந்த மாதிரி ப்ரேக் போட்டிருப்பானா? சரியான பொட்டை பயந்தாங்கொள்ளி. தன் வெக்கம் கெட்ட மனதில் எழுந்த ஆசையை எண்ணி, தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இன்னேரம் செல்வா சாப்பிட்டிருப்பானா?இன்னைக்கு சாப்பாடு யார் கொண்டு போய் குடுத்து இருப்பாங்க?

" நேத்து அம்மா, சும்மா சும்மா அவன் கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னாங்க. நானும் அவன் கிட்ட பேசலை. அவன் தன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுக் கிட்டிருக்கான்? எட்டு மணி நேரம் ஒடம்பு நோவ உழைச்சுட்டு, ரெண்டு நாளா அவனைப் பாக்கறதுக்காக ஆஃபீசுலேருந்து நேரா ஹாஸ்பெட்டலுக்கு ஓடினேன். அப்படி ஓடறதுக்கு நான் என்னப் பைத்தியக்காரியா?"

"இப்ப அவனுக்கு உடம்பு தேறிடுச்சி; தனி ரூமுக்கு வந்தாச்சு; அப்படியும் அவன் எனக்கு ஒரு கால் கூட பண்ணல. என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை ஆசையா எப்படி இருக்கேன்னு கேட்டா, கெட்டாப் போயிடுவான்? நான் அவனுக்கு கால் பண்ணலன்னா அவன் என்னைக் கூப்பிட்டு பேசக்கூடாதா? "

"அம்மா சொல்றதும் சரிதான். என் மேல அவனுக்கு உண்மையிலேயே ஆசையிருந்தா என்னை ஒரு தரமாவது கூப்பிட்டு பேசியிருக்கணுமே? நேராப் பாக்கும் போது, "சுகும்மா ஐ லவ் யூ வெரி மச்சுன்னு" பிட்டு போட வேண்டியது. எப்பவும் நான்தான் அவனுக்கு போன் பண்ணணுமா?

"ட்ரான்ஸ்பர் ஆகி பாண்டிச்சேரி போன செல்வா ஏற்கனவே இது மாதிரி நாலு நாள் வரைக்கும் என் கிட்ட பேசாம கல்லுளி மங்கனாத்தானே இருந்தான்? கடைசியா வெக்கம் கெட்டவ நான்தானே அவனைக் கூப்பிட்டு பேசினேன். எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தானா? காதலிச்சவதான் உருகி உருகி சாகணுமா?

"நான் சத்தியமா அவனை கூப்பிட்டு பேசப் போறது இல்லே. என் கிட்ட எப்ப பேசறானோ அப்ப அவனா பேசட்டும். அப்ப ஊதறேன் நான் அவனுக்கு சங்கு." அவளுக்குள் ஒரு தேவையில்லாத பிடிவாதம் சட்டென எழுந்தது.

சுகன்யாவுக்குள் எழுந்த இந்த எண்ணம், அவள் பெண் ஈகோவுக்கு பட்டதாக நினைக்கும் அடியா? இல்லை பெண்களுக்கே உரித்தான தன் காதலன் மேல் இருக்கும் அளவுக்கு மேலான உரிமைப் பிரச்சனையா, இல்லை சாதாரணமான விளையாட்டுப் பிடிவாதமா, இல்லை அவள் அவனுடன் ஒரு ஊடல் நாடகம் நடத்த நினைக்கிறாளா? சுகன்யாவும் ஒரு பெண்தானே? இவ மனசை புரிஞ்சுக்கறது மட்டுமென்ன அவ்வளவு சுலபமா?

இப்படி எதுவுமேயில்லை எனில் இது தான், அவள் பெற்றோர் அனுபவித்த தனிமைதான் அவளுக்கும் விதிக்கப்பட்டிருக்கிறதா?

குமாரசுவாமி ஒரு பை நிறைய பழங்களும், சுந்தரிக்கு பிடித்த பால்கோவாவும், கூடவே அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப் பூவையும் ஒரு நாலு முழம் வாங்கிக்கொண்டு வந்தார். அவர் கையிலிருந்த பூவைப் பார்த்ததும் சுகன்யாவுக்கு தன் தந்தையை கிண்டலடிக்கத் தோன்றியது.

"என்னப்பா ... ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு" சுகன்யா நாக்கை நீட்டி தன் தந்தையை நோக்கி கண்ணடித்தாள்.

" நீ ... என்னடா சொல்றே செல்லம் ..." தன் மகளின் கிண்டல் இலேசாக புரிந்தும் புரியாதவர் போல் குமாரசுவாமி தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். சுகன்யாவின் குறும்புத்தனம் அவரை விடுவதாக இல்லை.

"ம்ம்ம் ... சின்னப் பாப்பா நீங்க ... புரியாத மாதிரி நடிக்கிறீங்களே? பதினைஞ்சு வருஷம் கழிச்சு பொண்டாட்டியை பாக்கப் போறீங்க; கையில பழம், ஸ்வீட்டு, அதுக்கு மேல மல்லிகைப் பூ, எல்லாம் ஒரு செட்டப்பாத்தான் கிளம்பறீங்க" முகத்தில் கள்ளத்தனத்துடன் சிரித்த சுகன்யாவிற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.

ஆட்டோ நகர ஆரம்பித்ததும் சுகன்யா மீண்டும் ஆரம்பித்தாள். "அப்பா, அம்மாவுக்கு நான் போன் பண்ணட்டுமா? வீட்டுல பால் இருக்குமான்னு தெரியலை; அது மட்டும் தான் இப்ப குறைச்சலா இருக்கு உங்க கைல; வீட்டுல பால் இல்லன்னா வழியிலேயே அதையும் வாங்கிட்டு போயிடலாம்." தன் நாக்கை குவித்து நீட்டி உரக்க சிரித்தாள்.

"கண்ணு, அப்பாவை ரொம்ப கிண்டல் பண்ணாதேடா; எனக்கு கூச்சமா இருக்கு. நான் உங்க அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிட்டுப் போறேம்மா; உனக்கும் சேத்துத்தான் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்கேன். வீட்டுக்கு போய் முகம் கழுவி நீயும் உன் தலையில பூ வெச்சுக்கம்மா. மனசுல வேற எந்த எண்ணத்தோடும் நான் இதெல்லாம் வாங்கலடாச் செல்லம். அதுக்கெல்லாம், அப்பாவுக்கு வயசாகிப் போச்சும்மா." குமாரசுவாமி நெளிந்த படியே சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.

"அப்படி என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு? கிழவன்ல்லாம் டை அடிச்சி, செண்ட் அடிச்சிக்கிட்டு டீன் ஏஜ் பொண்ணுங்க பின்னாடி திரியறானுங்க?

"எனக்கு ஐம்பது முடிஞ்சிடுச்சும்மா"அவர் வெகுளியாக பேசினார்.

"அப்பா ... ஐம்பது வயசுல ஆசை வரக்கூடாதா ... அதுவும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட? சுகன்யா முகத்தில் நமட்டு சிரிப்புடன் முணுமுணுத்தாள்.

" நீ ... அப்பாக்கிட்ட செம அடி வாங்கப் போறே ? என் சுகா இன்னும் சின்னப் பொண்ணுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சப் பெரிய பாட்டி மாதிரி பேசறே? அவர் விளையாட்டாக அவள் முதுகில் அடித்தார்.

"அ ... அப்பா ... உங்களுக்கு நான் இப்படி பேசினது பிடிக்கலன்ன ... வெரி வெரி சாரிப்பா ..." அவள் முகம் சற்றே தொங்கிப் போனது.

"சீ..சீ... அப்படியெல்லாம் இல்லடா கண்ணு ... இன் ஃபேக்ட், ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹூயுமர்,"

"அப்பா, அப்படின்னா, ஒரு சின்ன சஸ்பென்ஸ்; நீங்க என் கூட வரதை நான் அம்மா கிட்ட சொல்லப் போறதில்லை."

சுகன்யா குழந்தைதனமாக மீண்டும் ஒரு முறை தன் நாக்கை நீட்டி குமாரசுவாமியை நோக்கி கண்ணடித்தாள். சுகன்யா ஹோட்டலில் சாப்பிட்டதும் ஒரு "ஸ்வீட் பான்" வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். நாக்கும் உதடுகளும் நன்றாக சிவந்திருந்தன.

"நீ நிஜமாவே அம்மாவுக்கு போன் பண்ணப் போறியா?"

"ஏன் வேண்டாமாப்பா"

"சுகா ... நான் வீட்டுக்கு வர்றது சஸ்பென்ஸாவே இருக்கட்டும் . என் மனைவியை நான் எந்த விதத்திலேயும் ஒரு இக்கட்டான சூழ் நிலையில் அல்லது தர்மசங்கடமான நிலையிலே வெக்க விரும்பலை. நானே விருப்பத்தோட அவளைப் பார்க்க வந்ததா இருக்கட்டும்." மகளிடம் தன் விருப்பத்தை சொல்லியவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் மவுனமாகிவிட்டார்.

ஒரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்த சுகன்யா, அவர் தோளில் தன் தலையை சாய்த்துக் கொள்ள, குமாரசுவாமி, தன் இடதுகையால், தன் மகளை ஆசையுடன் அணைத்துக்கொண்டார். இருவரும் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை.

நேத்து ரகுவோடு பேசிய போது, அவன் சுகாவைப் பத்தி கூட்டி கொறைச்சு எதுவும் சொல்லிடலை. உள்ளதை உள்ள மாதிரிதான் சொல்லியிருக்கான். சுகன்யாவுக்கும் என் பொண்டாட்டி சுந்தரிக்கும் உருவ ஒற்றுமை நெறய இருக்கு. உருவம்தான் ஒத்து போகுதுன்னு பாத்தா, அவ எப்படி நாக்கை நீட்டுவாளோ அதே மாதிரி இவளும் தன் நாக்கை சுழிச்சு நீட்டறா. அவளோட நிறைய பழக்கங்கள் இவளை அப்படியே தொத்திக்கிட்டு இருக்கு.



சுந்தரி மாதிரியே இவளும் பிடிவாதக்காரியா இருப்பாளோ? இவளுக்கும் அவளை மாதிரியே எப்பவாது தீவிர கோபமும் வருமா? சுந்தரி எப்படி பாசத்தை கொட்டுவாளோ அப்படித்தான் இவளும் அப்பா, அப்பான்னு உருகறா? ஆனா சுந்தரிக்கு கோபம் வந்தா பத்து நாளானாலும் பேசமா மவுனமா இருந்தே ஆளைக் கொண்ணுடுவா? இந்த விஷயத்துல சுகன்யா எப்படியோ? இனிமே பாக்கத்தானே போறேன்.

என்னால சின்னப் பிரச்சனைன்னு சொன்னாளே .. ?? அந்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அந்த பிரச்சனையாலத்தான் அம்மாவும், மாமாவும் சென்னைக்கு வந்திருக்காங்கன்னு சொன்னாளே? சுகா வயசுக்கு வந்த பொண்ணு; பெத்தவன் என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நல்லா சிவப்பா மூக்கும் முழியுமா அழகா இருக்கா. நல்லாப் படிச்சி, தனக்குன்னு வேலையைத் தேடிக்கிட்டு சம்பாதிக்கறா; மாடர்னா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. நேர் பார்வை பார்த்து தன்னம்பிக்கையோடு வெளிப்படையா, மனசுல இருக்கறதை தெளிவா பேசறா.

பாக்கற வயசு பசங்களுக்கு இவ மேல ஆசை வர்றது ரொம்ப சகஜம். ஒரு வேளை எங்களை மாதிரி என் பொண்ணும் எந்த பையனாயாவது மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்காளா? அதுல ஓண்ணும் தப்பு இல்லே. இவளையும் காதல் விட்டு வெக்கலையா? எங்களுக்கிருந்த மாதிரி இவங்க நடுவிலேயும் ஜாதி பிரச்சனை குறுக்க வந்திடுச்சா? வரதட்சினை பிரச்சனையா ... பணம் ஒரு பிரச்சனையே இல்லே ... நான் தான் வந்துட்டேனே; பையன் நல்லவனா இருந்தா போதும்; ... கேக்கறதுக்கு மேல நான் அள்ளிக் குடுத்துடறேன் ... என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். இல்லே, வேற எதாவது பிரச்சனையா?

குமாரின் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யா, திடிரென தன் நாக்கை வெளியில் நீட்டி "அப்பா என் நாக்கு சிவந்திருக்காப்பா" என வினவினாள்.

"ஆமாண்டா கண்ணு" ... குமார் அவளை நோக்கி மென்மையாக சிரித்தார்.

சுகன்யாவின் சிவந்திருந்த நாக்கைப் பார்த்ததும், குமாரின் மனதில் இளம் வயது சுந்தரியின் முகம் தோன்றி கிளுகிளுப்பை கொடுத்தது. கல்யாணமான புதிதில் சுந்தரியும், குமாரசுவாமியும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமை மாலை கோவிலுக்கு போய்விட்டு, இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்புவதை தங்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

வெளியில் சாப்பிட்டப்பின், சுந்தரி தவறாமல் "ஸ்வீட் பான்" போட்டுக்கொள்வது வழக்கம். "பானை" மென்றுக்கொண்டே, "குமரு, பாத்து சொல்லுங்க என் நாக்கு சிவந்திடுச்சா என்று நாக்கை நீட்டி நீட்டி அவனிடம் நூறு தரம் கேட்ப்பாள். அவள் வாயிலிருந்து வரும் இனிமையான ஏலத்துடன் சேர்ந்த வெற்றிலை வாசனயை நுகரும் குமாருக்கு வழியிலேயே கிக் தலைக்கு ஏறிவிடும்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் குமார் சுந்தரியைக் கட்டியனைத்து அவள் சிவந்த உதடுகளை, அவள் கதற கதற, கவ்வி குதறி எடுத்து விடுவான். அவள் கன்னக் கதுப்புகளை கடித்து புண்ணாக்கிவிடுவான். சுந்தரியும் பதிலுக்கு குமார் தன்னை முத்தமிடும்போது தன் சிவந்த நாக்கை வெறியுடன் அவன் வாய்க்குள் நுழைத்து, அவன் நாக்கை தேடித் துழாவி, நக்கி, தன் வாயால் உறிஞ்சி அவனை மூச்சுத் திணற அடித்து விடுவாள்.

ஆட்டோ ஒரு முறை வேகமாக குலுங்கி நின்றது. "அப்பா ... நாம வீட்டுக்கு வந்தாச்சு," சுகன்யாவின் குரல் கேட்டு, குமாரசுவாமி தன் சுயநினைவுக்கு வந்தார். மெதுவாக ஆட்டோவை விட்டு இறங்கினார். 

சுந்தரி சாப்பிட உட்க்கார்ந்தாள். முதல் பிடி தயிர்சாதத்தை வாயில் வைத்ததும் அவள் மனம் துணுக்குற்றது. சுத்தமா உப்பே இல்லே; பாவம்! குழந்தை ஆபிசுல இதை எப்படி சாப்பிடுவா? சோத்துல உப்பு இல்லையேன்னு, அவ கூட உக்காந்து சாப்பிடறவங்க சிரிச்சா, சாயந்திரம் வந்ததும் சண்டைக்கு இழுப்பா.

சாதத்துல உப்பு கலந்துக்கடின்னு, சுகன்யாவுக்கு நானே போன் பண்ணி சொல்லிடறேன். நல்ல வேளை, சுகன்யா, இப்பத்தான் சாப்பிட போறேங்கறா. என்னமோ தெரியலை? கூட யாராவது இருந்திருக்கணும், அதான் இன்னைக்கு எரிச்சல் படாமா சரிம்மான்னுட்டா. நல்லப் பொண்ணு பெத்து வெச்சிருக்கிறேன் நான். அவளுக்கு மூக்குக்கு மேல நிக்குது கோபம். இவ அந்த மல்லிகா கிட்ட எப்படி குப்பை கொட்டப் போறாளோ? அவளும் கொஞ்சம் முன் கோபியாத்தான் தெரியறா ... ?

"உனக்கு, உன் புருஷன் நெனைப்பு வந்திடுச்சி ... பொய் சொல்லாதே எங்கிட்டன்னு" நேத்து, ராத்திரி நேரத்துல கத்தறா. உண்மையைத்தானே சொன்னான்னு, நானும் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன். வேற என்னப் பண்றது? கூச்சப் போட்டாலும், கூடவே குணமும் இருக்கவேதான், ராத்திரி ரெண்டு மணிக்கு, நிமிஷத்துல சூடா காஃபியைப் போட்டு கையில குடுத்தா.

சுந்தரி தன் தட்டிலிருந்த சாதத்தில் உப்பை போட்டு, சிறிது தண்ணீரையும் விட்டு பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள். தட்டை கழுவி வைத்துவிட்டு, ஒரு புத்தகத்துடன் பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். ராத்திரி மழையால, காத்து சிலு சிலுன்னு வருது. இல்லன்னா இங்க இப்படி நிம்மதியா உக்கார முடியுமா?

சுந்தரியின் மனம் புத்தகத்தில் ஒன்றவில்லை. காத்தாலேந்து நாலு தரம் ரகுவுக்கு போன் பண்ணிட்டேன். எங்கப் போனான்னு தெரியலை. போன் அடிச்சு அடிச்சு ஓஞ்சு போவுது. ரூம்லேயே செல்லை விட்டுட்டுப் போயிட்டானா? இவ அப்பனைப் பத்தி கேக்கணும்ன்னு நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் பெத்த பொண்ணு கல்யாணத்துக்கு, அவன் வந்து நின்னா அது ஒரு மரியாதைதான்.

சுகன்யா, நாளைக்கு காஞ்சிபுரம் போவலாம்ன்னு சொன்னாளே? டூரிசம் பஸ் போவுதே ... அதுல போனா, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் எல்லா எடத்தையும் பாத்துட்டு, ராத்திரி எட்டு மணிக்குள்ள திரும்பி வந்துடலாமேன்னு வேணி சொல்றா ... இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா அட்வான்ஸ் புக்கிங் பண்ணணுமாம் ... சுகன்யா வீட்டுக்கு வந்தாத்தான் கேக்கணும் ... அவ என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கான்னு?

வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, கீரீச்சென சத்தம் எழுப்பி வீட்டிற்கு கீழ் நிற்க, உட்க்கார்ந்தவாறே தெருவை எட்டிப் பார்த்தாள் சுந்தரி. ஆட்டோலேருந்து எறங்கறது சுகா மாதிரி இருக்கே? கையில ஒரு பையோட நிக்கறா? சீக்கிரம் வந்துட்டாளே? மணி இன்னும் மூனு கூட ஆவலை ... என்னாச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையா அவளுக்கு? பின்னாடியே யாரோ ஒரு ஆம்பிளை இறங்கறாங்களே? யாரு? அசப்புல குமார் மாதிரி இருக்கு ... என் புருஷன் குமாரா? வேகமாக எழுந்து பால்கனி சுவரின் அருகில் ஓடியவள் உடல் அதிர்ந்து நின்றாள். அவள் மனம் பரபரத்து, நெஞ்சு ஏறி இறங்கியது.

"பரவாயில்லே மீதி சில்லறையை நீங்க வெச்சுக்கோங்க." டீக்காக உடையணிந்த உயரமான ஒருவர் குனிந்து ஆட்டோ டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சுந்தரிக்கு அவருடைய பாதி முகமும், பக்கவாட்டில் பாதி உருவமும் மட்டுமே தெரிந்தது. உயரமான ஆகிருதியும், பரந்த முதுகும், சிவந்த கைகளும், அந்த கூரான மூக்கும், தலையின் பின்புறம் அவள் பார்வையில் பட்டதே போதுமானதாக இருந்தது. அந்த கம்பீரமான குரலை எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், அவளால் எப்படி மறக்க முடியும்? வந்திருப்பது யார் என்பது சந்தேகமில்லாமல் அவளுக்கு புரிந்து விட்டது.

சுந்தரியின் இரத்த அழுத்தம் இப்போது, சரசரவென உயர்ந்தது. அவள் சுவாசம் ஒரு முறை நின்று மீண்டும் ஓட ஆரம்பித்தது. அவள் இதயம் வெகு வேகமாக அடிக்கத் தொடங்கியது. என் குமார் தானே அது? ... என் புருஷன் கடைசியா என்னைப் பார்க்க வந்துட்டானா? குமரு, என் மனசோட கூவல் உனக்கு கேட்டுச்சாப்பா? நீ வந்துட்டியாடா ... சட்டென மனசு ஒரு புறம் மகிழ்ச்சியில் குதி போட ஆரம்பித்தது.

அம்மா! ... தாயே காமாட்சி! உன்னை கையெடுத்து கும்பிட்டு ... உங்கிட்ட என் கொறயை சொல்லணும்ன்னு நெனைச்சேன். நான் கேக்கறதுக்கு முன்னாடியே என் ஆசையை நீ நிறைவேத்திட்டியே? அடுத்த நொடி அவள் மனசு இறைக்கு நன்றி சொல்லியது.

சுந்தரியின் கால்கள் இலேசாக நடுங்க ஆரம்பித்தது. அவள் கால்கள் துவண்டன. பால்கனியில் நிற்க முடியாமல், மெதுவாக அறைக்குள் சென்று ஹாலில் இருந்த நாற்காலியின் நுனியில் உட்க்கார்ந்தாள். கீழ போய் வான்னு சொல்றதா, இல்லை அவனே மேலே வர்ற வரைக்கும் பொறுத்திருப்பதா? ஒரு நொடி புரியாமல் சுந்தரி மனதுக்குள் மருகினாள். விருட்டென திரும்பி இரும்பு அலமாரியில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். நேற்றிரவு சரியாக தூங்காமல், காலையிலிருந்து தலையை சிக்கெடுத்து வாராமல் முகம் சற்றே வீங்கி, வெளுத்திருந்தது.

அடியே சுந்தரி, நல்லா இருக்குடி நீ போடற நாடகம் ... வீட்டுக்கு வந்தவனை வாங்கன்னு வாய் நிறைய கூப்பிடறதை விட்டுட்டு, ஏதோ தப்புப் பண்ணவ மாதிரி உள்ள வந்து உட்காந்துகிட்டு, கண்ணாடியில புதுப்பொண்ணு மாதிரி மூஞ்சைப் பாத்துக்கறே? மனது அவளைத் துளைத்தது. அதே மனது, தெரு வரைக்கும் வந்தவனுக்கு வீட்டு உள்ள வரத் தெரியாதா? புது மாப்பிளையா வீட்டுக்கு வரான் ... ஆரத்தி எடுத்து கொட்டறதுக்கு? அடியே ! பட்டதுக்கு அப்புறமும் உனக்கு புத்தி வரலயே, நீ செய்யறது, சரியா.. தப்பான்னு நீயே யோசனைப் பண்ணிக்க நீ அடிச்சித் தொரத்தினவன் ஆசையா உன்னைப் பாக்க வர்றான் ... உன் குறுக்குப் புத்தியை வுட்டுட்டு, ஒழுங்கா நடந்துக்க ... அவள் எண்ணங்கள் அவளை புரட்டி எடுத்தன.

சுகன்யா, வெறுமனே மூடியிருந்த வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த போது, சுந்தரி தலையை குனிந்தபடி தன் இரு கைகளையும் கோத்து மடியின் மேல் வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா ..."

"ஆட்டோ சத்தம் கேட்டுது ... எட்டிப்பாத்தேன் ... எங்கடி உன் அப்பா? ... உன் கூட வந்தவரை வெளியிலேயே நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ள வந்துட்டியே? குரல் முணுமுணுப்பாக வந்தது சுந்தரியிடமிருந்து.

"எம்மா ... உன் டீச்சர் அதிகாரத்தை என் கிட்ட காட்டதே? இது உன் பள்ளிக்கூடம் இல்லே ... என் அப்பாவை நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன் ... உன் புருஷனை நீதான் எழுந்து போய் உள்ள வாங்கன்னு கூப்பிடணும் ..." சுகன்யா தீர்மானமாக பேசினாள்.

சுகன்யாவின் பேச்சிலிருந்த கசப்பான உண்மை சுந்தரியைச் சுட, முளைச்சு மூணு எலை விடல; ஆத்தாளுக்கு புத்தி சொல்றா ... சட்டென வந்த கோபத்தில், கை விரல்கள் நடுங்கின; அவள் கால்களும் நடுங்கி வலுவிழந்தன. பெண்ணின் பேச்சால், மீண்டும் தலைக்கு வேகமாக ஏறிய ரத்தத்தால் அவள் முகம் சூடாகி, சற்றே நிறம் மாறியது. மனதில் எழுந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பால், அவளது விழிகள் கலங்கி நீரைப் பெருக்க, மூக்கு நுனிகள் விடைக்க, கீழ் உதட்டை பற்களால் அழுத்தி கடித்து அதன் துடிப்பை அடக்க முயன்றவள், தன் முயற்சியில் வெற்றியடையாமல், வேகமாக எழுந்து அறைக்கு வெளியில் ஓடினாள்.

"வாங்க! ... ஏன் இங்கேயே நிக்கறீங்க ... உள்ளே வாங்க! ... குமரு ... என் மேல இருக்கற கோவம் இன்னும் தீரலயா? நான் வான்னு சொன்னாதான் ... வீட்டுக்குள்ள வருவியா? இது என் வீடு இல்லங்க ... இது உங்க பொண்ணோட வீடு ... உனக்கு இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? ... ம்ம்ம் ... இவ்வள நாளா என்னை அழ வெச்சு பாத்ததுலே ... உனக்கு சந்தோஷம்தானே? " சுந்தரி விம்ம ஆரம்பித்தவள், அடுத்த நொடி தன் வாய் விட்டு ஓவென கதற ஆரம்பித்தாள்.

சுகன்யா வேகமாக மாடியேறி வந்துவிட, அவள் பின்னால் ஆட்டோவை அனுப்பிவிட்டு, நிதானமாக ஒவ்வொரு படியாக மேலே ஏறி வந்து, மாடிக்குள் நுழைந்து, மாடி வெராண்டாவில், ஷூவை கழற்றிக்கொண்டிருந்த குமாரசுவாமி, அழுதபடி தன்னை வரவேற்ற சுந்தரியை, எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார். ஒரு நொடிக்குப் பின் அவளை வேகமாக நெருங்கி, தன் இடது கையை அவள் தோளில் போட்டு தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். இடது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, "அழாதே ... சுந்தரி ... ப்ளீஸ் அழாதே" சொல்லிக்கொண்டே, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

தன் தாயின் பின்னால் வெளியில் வந்த சுகன்யாவும், வாங்கப்பா, வீட்டுக்குள்ள வாங்கப்பா என வாய் நிறைய தன் தந்தையை வரவேற்றவள், "அப்பா ... அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்கப்பா ... அம்ம்மா, எதுவாயிருந்தாலும் உள்ளே வந்து பேசும்மா" சொல்லிக் கொண்டே திரும்ப அறைக்குள் ஓடி, ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த நீரை, கண்ணாடி கிளாஸில் ஊற்ற ஆரம்பித்தாள்.

உள்ளே நுழைந்த தகப்பனிடம், தண்ணீரை கொடுத்து உபசரித்தாள். குமாரசுவாமி ஹாலிலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்து, சுந்தரியை தன் அருகில் உட்க்கார வைத்தான். சுந்தரி தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல், குமாரின் தோளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டு மீண்டும் ஓசையின்றி அழ ஆரம்பித்தாள். குமார் எதுவும் பேசாமல், தன் மனைவியின் தலையை மவுனமாக, மனதில் பொங்கும் ஆசையுடன் வருடிக் கொண்டிருக்க, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழது கொண்டிருந்த தாயைப் பார்க்க முடியாமல், மனம் கலங்கி, சுகன்யாவும் தன் மூக்கை உறிஞ்சி விசும்ப ஆரம்பித்தாள். விசும்பிக் கொண்டே, தன் தாயின் முதுகை மெதுவாக தடவிக்கொடுத்தாள். அழாதேம்மா ... நீ அழுததெல்லாம் போதாதா? இன்னும் ஏன் அழுவறே? அதான் வந்துட்டாருல்ல ... அப்பாகிட்ட சந்தோஷமா பேசும்மா?

"நீ சும்மா இருடி ... பெருசா பேச வந்துட்டே ... நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு ... இவரு கொடுத்த தண்டனை கொஞ்சமா ... நஞ்சமா ... ? அவள் குரல் விம்ம, குமாரின் மடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள்.

"சுந்து ... பீளீஸ் ... தப்பு எல்லாம் என்னுதுதான். நான் ஒத்துக்கறேன் ... என்னை மன்னிச்சிடும்மா... இப்ப நீ அழாதே ... அழறத நிறுத்து ... என்னால நீ அழறதை தாங்க முடியலைம்ம்மா ..." சொல்லியவர் குரல் தழுதழுத்து, குரல் குளறப் குமாரசுவாமி பேசினார்.

சட்டென சுந்தரி தன் அழுகையை நிறுத்தியவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள். கலங்கியிருந்த தன் கணவனின் கண்களையும், முகத்தையும், தன் புடவை முந்தானையால் துடைத்தாள். பத்து நொடிகள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள், வயது வந்த தன் பெண் அருகில் நிற்பதையும் பொருட்படுத்தாமல், அவன் கழுத்தில் தன் கைகளைப் போட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். " குமரு ... எழுந்து போய் உங்க முகத்தை கழுவிக்கிட்டு வாங்க ... சுகா ... பால்கனியில துண்டு காயுது ... அப்பாக்கிட்ட கொண்டாந்து குடும்மா ..." அவள் குரலில் தெளிவு பிறந்துவிட்டது. மனதில் மீண்டும் மெல்ல மெல்ல தன் கணவனைப் பார்த்த மகிழ்ச்சி எழ ஆரம்பித்தது.

சுந்தரி புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டவள், ஃபிரிஜ்ஜைத் திறந்து பார்த்துவிட்டு, சுகா ... இன்னைக்கு வீட்டுல சுத்தமா பால் இல்லடா கண்ணு ... நீ ஆஃபீஸ்லேருந்து வரும் போது வாங்கிட்டு வர சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப போனா ... அந்த தெரு கோடி கடையில பால் கிடைக்குமா? நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்.

பாத்ரூமுக்குள்ளிருந்து முகத்தை துடைத்துக்கொண்டே வந்த குமார் ... சுந்து ... குழந்தையை ஏன் போவ சொல்றே ... பக்கத்துலதானே கடையிருக்கு ... நான் போய் வாங்கிட்டு வர்றேன், ..."



அப் ... அப்ப்பா ... நான் அப்பவே சொன்னேன் ... எல்லாம் வாங்கினீங்க ... பாலை விட்டுட்டீங்கன்னு, கேட்டீங்களா? ... அவள் விஷமத்துடன் தன் தந்தையை நோக்கி கண்ணடித்து சிரித்தாள். மனம் இலேசாகி இயல்பு நிலைக்கு வந்திருந்த குமாரும் ... ஆமாண்டா கண்ணு ... நீ சொன்னே ... நான் தான் கேக்கலை ... அதனால நான் போய் பாலை வாங்கிட்டு வர்றதுதான் சரி ... கடை எங்கேயிருக்கு சொல்லு ... அவரும் தன் மகளைப் பார்த்து உரக்க சிரித்தார். பால் என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுத்தனமாக சிரிப்பது எதற்கு என்று புரியாமல் சுந்தரி விழித்தாள்.

"ஏன் இப்ப ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க ... சொன்னா நானும் சிரிப்பேன்ல்லா" சுந்தரி தன் பெண்ணையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

"அப்பா, நீங்க ட்ரஸ் மாத்திக்கோங்க ... மாமா இங்க வாங்கி வெச்சிருக்கற புது லுங்கி ஒண்ணு உள்ள ரூம்ல கட்டில் மேல எடுத்து வெச்சிருக்கேன் ... அம்மா, நீ உன் வீட்டுக்காரரை கேளு ... அவர் சொல்லுவாரு நாங்க ஏன் சிரிச்சோம்ன்னு ... அதை தெரிஞ்சுக்கலைன்னா, உனக்கு இன்னைக்கு சத்தியமா ராத்திரிக்கு தூக்கம் வராது ... அப்புறம் என்னையும் தூங்க விடமாட்டே நீ ... நீ அழுததைப் பாத்து, நானும் அழுது இப்ப எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு ... எனக்கும் சூடா ஒரு காஃபி குடிக்கணும் போல இருக்கு ... " அவர்கள் பதிலுக்கு காத்திராமல், பால் தூக்கையும், தன் பர்ஸையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் நடந்தாள் சுகன்யா.