Thursday 9 April 2015

சுகன்யா... 111

வைகரை நேரத்து மெல்லிய குளிர் காற்று இலேசாக திறந்திருந்த சன்னலின் வழியே திருடனாக படுக்கையறைக்குள் நுழைந்தது. இரு கைகளையும் கோர்த்து தன் தொடைகளுக்கு இடையில் செருகிக்கொண்டு, உடலை சுருக்கியவாறு, போர்வைக்குள் முடங்கிக்கிடந்த சம்பத்திற்கு தன் ஆசை மனைவியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனசுக்குள் எழ, படுக்கையில் புரண்டு கைகளால் துழாவினான்.

அனு அவன் கரங்களில் சிக்காமல் போகவே கண்களை விழித்துப்பார்த்தான். படுக்கை காலியாக இருந்தது. அனு எப்ப எழுந்து போனா? செல்லை எடுத்தான். மணி காலை ஐந்து ஐம்பது ஆகிக்கொண்டிருந்தது. இரவு டின்னருக்கு வந்தவர்களை முறையாக உபசரித்து அனுப்பிவிட்டு, அவர்கள் வீட்டுக்கு வந்து படுத்தபோது மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

சம்பத் அனுவை நெருக்கி அணைத்தபோதும்... "ம்ம்ம்ம்... ரொம்ப ட்யர்டா இருக்குங்க... ப்ளீஸ்.." முனகியவள் அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு அவன் இடுப்பில் ஒரு காலை போட்டுக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் உதடுகள் பிரிந்திருக்க... இரண்டே நிமிடங்களில் தூங்கிவிட்டாள்.



தூக்கத்தில் கட்டிலில் புரண்டதில், இடுப்பிலிருந்து நெகிழ்ந்து, முழங்காலில் துவண்டிருந்த லுங்கியை இழுத்து, இறுக்கிக் கொண்ட சம்பத், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தான். சன்னலுக்கு வெளியிலிருந்த மாமரத்து கிளையில் ஜோடியாக உட்க்கார்ந்திருந்த சிட்டுக்குருவிகளை வைத்த கண் வாங்காமல் அவன் பார்க்கத் தொடங்கினான்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்களாக அனுவுடன் இரவில் ஓயாமல் விளையாடிய இன்ப விளையாட்டால் தன் உடலால் களைத்துப்போயிருந்த போதிலும், மனதால் கொஞ்சமும் அலுத்துப்போகாமலிருந்தான் சம்பத்.

படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் வராமல் சோம்பலுடன் உட்கார்ந்திருவன் மனதில், அனுவின் சதா புன்னைக தவழும் முகமும், கைக்கடக்கமான அழகான மார்புகளும், திமிறும் மார்பின் கருத்த காம்புகளும், அகலமான இடுப்பும், கொழுத்த புட்டங்களும், பருத்த தொடைகளும், தொடை நடுவில் விரிந்து பரந்திருக்கும் அழகு மலரும் நினைவில் வந்தாட சட்டென்று அவன் உஷ்ணமாகிப்போனான்.

அனு... அனு.. அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக துடிக்க ஆரம்பித்தது. மூச்சை அவன் உள்ளிழுத்தபோது அனுராதா அவன் மனதுக்குள் வந்தாள். மூச்சு வெளியேறிய பின்னும் அவள் தன்னுள் பரவி இருப்பதை அவன் உணர்ந்தான்.
அனுவின் உடலழகில் அவன் வெகுவாக கிறங்கிப்போயிருந்தான்.
அந்தக்கணம் அவளுடைய அன்பான நெருக்கம் அவனுக்குத் மிகவும் தேவைப்பட்டது. தன்னுடைய முதலிரவு அவன் ஞாபகத்திற்கு வந்தது.

முதலிரவன்று சம்பத், உரிமையுடன் அவள் ஆடைகளை களையத் தொடங்கியபோது, தேவையில்லாத வெட்கத்தை சிறிதும் காட்டாமல், அனு வெகு இயல்பாக தன் கணவனின் ஆசைக்கு இணங்க ஆரம்பித்தாள்.

“அன்னூ...” சம்பத் தன் மனைவியின் அழகான முலைகளை வெறியுடன் கசக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன்ன்னங்ங்ஙககக” விழிகளை மூடி கணவனின் கைகள் தன் உடலில் உண்டாக்கிய சுகத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.

“பஸ்ட் நைட்ல பொண்ணுங்க ரொம்ப வெக்கப்படுவாங்கன்னு படிச்சிருக்கேன்...” அனுவின் முகவாய் கடிபட்டது.

“போலியா வெக்கப்படறதுல் அர்த்தமென்ன இருக்கு...?"மெல்ல புன்னகைத்துக்கொண்டே, கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

“அப்டீன்னா...” சம்பத் அவள் இதழ்களை கவ்வி அவள் நாக்கை தன் நாக்கால் வருட ஆரம்பித்தான்.

"நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்கோம்... ஏற்கனவே நிறைய தரம் ஆசையோட கட்டிப்பிடிச்சி முத்தம் குடுத்துக்கிட்டு இருக்கோம்?”

"ம்ம்ம்..." அனு பிறந்த மேனியில் அவன் கைகளில் கிடந்தாள்.

“நான் நானா இருக்க விருப்பப்படறேன்...” அனு சம்பத்தை வெறியுடன் தழுவிக்கொண்டாள்.

“தேங்க்யூ அனுக்குட்டீ... அன்னூம்ம்மா... அனு டார்லிங்... மை டியர் அன்ன்ன்னூ” சம்பத் மோகத்தின் வேகத்தில் உளற ஆரம்பித்தான்.

“சும்மா பேசிகிட்டு இருக்காதீங்க...” அனு அவன் தோளை மெல்லக் கடித்தாள்.

“உனக்கு என்ன வேணும் சொல்லு...” சம்பத்தின் கை அவள் இடது மார்க்காம்பை திருகிக்கொண்டிருந்தது.

“ச்ச்ச்ச்சீசீய்ய்... பொம்பளை எல்லாத்தையும் வாயை விட்டு சொல்லுவாளா? புருஷன்தான் புரிஞ்சுக்கணும்...!!” சம்பத்தின் முதுகை அளவெடுத்துக்கொண்டிருந்தன அனுவின் கரங்கள்.

“சொன்னத்தானேடீ தெரியும்...” சம்பத் அவள் உடலின் மேல் கொடியைப்போல் பரவியிருந்தான். ஆண்மையின் உஷ்ணமான மூச்சு அவள் கழுத்தை நெருப்பாக சுட்டது. அவன் அனுவை இறுக்கியணைத்ததில் அவளுக்கு இலேசாக மூச்சிறைக்க ஆரம்பித்தது.

"எனக்கு என்னப் பிடிக்குதுன்னு உனக்குத் தெரியலையாடா பட்டூ...?” அனுராதா எனும் அழகிய கிளி தன் உதடுகள் மலர கொஞ்சியது.

“எப்ப நான் உன்னை உதட்டுல கிஸ் பண்ணாலும்... என்னை நீ இறுக்கிக் கட்டிக்கறே?” சம்பத் அவள் உதடுகளை கடித்து புண்ணாக்கிக் கொண்டிருந்தான்.

“ம்ம்ம்..”

“இப்ப என்ன வேணும்ம்... என் தங்கத்துக்கு...?” காளை கன்னியின் மனம் புரியாமல் திகைத்தது. தன் அன்புக்குரியவளின் கண், மூக்கு, உதடு, முகவாயென முத்தங்களை மழையாக பொழிந்தது.

“என் நிப்பிளை கொஞ்சம் சப்பி விடுங்க...” சொன்னவளின் முகம் இயல்பான வெட்கத்தில் சிவந்து போனது. தன் ஆசையை வாய்விட்டு சொல்லியவள் முகத்தை தலையணையில் புதைத்துக்கொண்டாள்.

“அனூ... இப்ப நீ ரொம்ப அழகா இருக்கேடீ...” சம்பத் அவள் இரு முலைகளையும் மாறி மாறி சப்ப ஆரம்பித்தான்.

“யப்ப்பப்ப்ப்பா...” உடல் சிலிர்த்து, மூச்சுக்காற்று வெப்பமாக, சம்பத்தின் கழுத்தை இறுக்கிக் கொண்டாள் அனு...”


“குட் மார்னிங்... டியர்...” அனுவின் குரல் கேட்டதும் முதலிரவு அனுபவத்தை தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்த சம்பத் நனவுலகத்திற்கு வந்தான்.

"குட் மார்னிங்டீச் செல்லம்..." சம்பத்தின் விழிகள் நீளமாக விரிந்தன. அனுவின் உடலை அவன் பார்வை மேய ஆரம்பித்தது.

தழைய தழைய அனு கட்டியிருந்த இளம் சிவப்பு நிற பாலியெஸ்டர் சில்க் புடவையின் கருப்பு நிற பார்டரில் வெள்ளைப்பூக்கள் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன. கருப்பு நிற ப்ளவுஸில், தேவதையாக, முகத்தில் புன்னகையுடன், கையில் காஃபியுடன் படுக்கையறைக்குள், மெல்ல மெல்ல தன் உடலை அசைத்து அசைத்து, குதி நடையுடன் வந்தாள் அனு. தெளிந்த நீரோடையைப் போலிருந்த அவள் முகத்தைக் கண்டதும், மனதிலிருக்கும் சந்தோஷம் தன் உடலெங்கும் பரவ, அவளின் தேக அழகில் மயங்கி சம்பத் லுங்கிக்குள் பருத்தான்.

அனுவை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டான் சம்பத். தன் வலுகொண்ட மட்டும் அவளை இறுக்கித்தழுவினான். புது புடவை கசங்கியது. புது ரவிக்கையும் அவன் அணைப்பில் கசங்கியது. ரவிக்கைக்குள் இருந்த வலுவான சாத்துக்கொடிகளும் கசங்கின.

"விடுங்கன்னா..." ஒய்யாரமாக நெளிந்தாள் அனு. அவன் கழுத்தை வளைத்து முகவாயை கடித்தாள்.

"மாட்டேன்..." அனுவின் கன்னங்களை ஈரமாக்கினான் சம்பத்.

"இப்பத்தான் குளிச்சிட்டு வர்றேன்... அநியாயம் பண்ணறீங்க..." அனு தன் கன்னங்களை முந்தானையால் துடைக்க, அவள் மார்பு விம்மியதை அவனால் தெளிவாக உணரமுடிந்தது. தன் கணவனின் ஆண்மை இரும்புத் தடியாக மாறி தன் புட்டங்களை சுட்டதை அனுவால் உணரமுடிந்தது.

"அனு.. அந்த குருவிகங்களைப் பாரேன்..." சம்பத் அன்று குழந்தையாக மாறியிருந்தான்.

சிட்டுக்குருவிகள், மேலும் கீழுமாக கிளைகளில், நொடிக்கு ஒருமுறை, தாவி தாவி உட்கார்ந்ததும், 'கீச்' 'கீச்' சென வேக வேகமாக தங்களுக்குள் பேசிக்கொள்வதையும், நடு நடுவில் தங்களின் மஞ்சள் நிற அலகை ஒன்றோடு ஒன்று சேர்த்து, ஒன்று மற்றதை தொட்டுக்கொள்வதையும் பார்த்த அவர்கள் இருவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தது.

"ஏங்க... இந்த குருவிங்க ரெண்டும் தங்களுக்குள்ள முத்தம் குடுத்துக்குதுங்களா? இல்லே ஒண்ணை ஒண்ணு குத்திக்கிட்டு சண்டை போடுதுங்களா?" அனு சம்பத்தின் உதட்டில் தன் உதட்டை ஒற்றினாள்.

"சேச்சே... காலங்காத்தால ஏன்டீ அதுங்க சண்டை போடணும்?" சம்பத் தன் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தினான்.

"இதுங்களுக்கு பேர் இருக்குமாங்க?"

"நாமே பேர் வெச்சுட்டாப் போச்சு.." சம்பத் அவளை சுழற்றி அவள் இதழ்களை வெறியுடன் கவ்விக்கொண்டான்.

"இந்த ரெண்டுல ஆம்பிளை எது..? பொம்பளை எது?" அனுவின் பார்வை அந்த குருவிகளின் மீதே இருந்தது. சம்பத்தின் கரம் தன் மனைவியின் மார்பின் மென்மையை உணர்ந்து கொண்டிருந்தது.

"ஒண்ணு சம்பத்... இன்னொன்னு அனுராதா" சம்பத் உரக்கச் சிரித்தான்.

சம்பத் அனுவை படுக்கையில் வெறியோடு வீழ்த்தினான். அனுவின் புடவை கட்டிலுக்கு கீழ் கசங்கி கிடந்தது.
அனுவின் உச்சி முதல் பாதங்களின் விரல் நுனி வரை மெல்ல முத்தமிட்டான் சம்பத். முத்தமிட்டவன் வேகமாக அவள் அழகு மலரில் நுழைந்தான்.

"யம்ம்ம்மா.." அனு அடித்தொண்டையில் முனகிக்கொண்டே அவன் இடுப்பில் தன் கால்களை சுற்றிக்கொண்டு இடுப்பை உயர்த்தினாள்.

அனு கொண்டுவந்த காஃபி டீப்பாயின் மேல் குடிப்பாரில்லாமல், ஆறிக்கொண்டிருந்தது. "கீச்..கீச்...கீச்ச்ச்ச்.. கீச்.." சன்னலுக்கு வெளியிலிருந்து குருவிகள் பேசிக்கொள்ளும் சத்தம் வேகமாக அறைக்குள் வந்தது. சம்பத்தின் இரும்பாக மாறியிருந்த ஆண்மை அனுவின் ஈரப்பெண்மைக்குள் வேக வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. தன் மனைவியின் பெண்மையின் முழுமையான ஆழத்தை தொட்டு தொட்டுத் திரும்பிய சம்பத் தன் இடுப்பில் ஏகத்துக்கு வேர்த்துக் கொண்டிருந்தான்.

அனுவின் பார்வை சன்னலுக்கு வெளியே மாமரத்திற்கு உயர்ந்தது. சிட்டுக்குருவிகள் வேகவேகமாக ஒன்றை ஒன்று ஓய்வே இல்லாம்ல் முத்தமிட்டுக்கொண்டிருந்தன. அனுவுக்கு மேனி சிலிர்த்தது. சம்பத்தின் இதழ்களை கவ்விக்கொண்டாள் அவள். மென்மையாக மெல்ல ஆரம்பித்தாள்.

"குட்டீ... நான் வந்துட்டேன்டா... தேங்க்யூ டீ பட்டு.. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்..." அனு முணகினாள். கணவனின் முதுகை தன் நகங்களால் பிறாண்டினாள். களைத்துப்போன சம்பத் அனுவின் மார்பில் விழுந்தான். விழுந்தவன் தன் துணையின் மார்பை மெல்ல சப்ப ஆரம்பித்தான்.

"ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..." இப்போது அனுராதா முனகும் சத்தம் மட்டுமே அந்த அறைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

"ஏங்க... அந்த குருவிங்க நாம பண்ணதையெல்லாம் பாத்து இருக்குமாங்க...?"

அனு தன் மார்பில் கிடந்த சம்பத்தை புரட்டித்தள்ளினாள்.
அவன் அனுவுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் மாமரத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். மாமரத்தின் அந்த நீண்ட கிளை காலியாக இருந்தது. சிட்டுக்குருவிகள் பறந்து போய்விட்டிருந்தன.

"இல்லடிச்செல்லம்... அதுங்க வெக்கப்பட்டுக்கிட்டு பறந்துடுத்துங்க..."

"சம்பத்... டார்லிங்... அதுங்க புத்திசாலி குருவிங்க..." அனு புரண்டு கணவனின் முகத்தைப்பார்த்தாள். அனுவின் பெண்மை தந்த சுகத்தில், அந்த சுகத்தால் வந்த சந்தோஷத்தில் அவன் முகம் மலர்ந்திருந்தது. அனு தன் கணவன் வெகு அழகாக இருப்பதாக நினைத்தாள்.

தன் கணவனின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவள், அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். 

சுகன்யா, செல்வாவின் வீட்டிலிருந்து, தன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவளுக்கு மிகவும் பிடித்த பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் தயாராக இருந்தது. குமாரும், கனகாவும் சாப்பிட்டுவிட்டனர். சிவதாணு தன் பேத்தியுடன் சாப்பிடுகிறேன் என அவளுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

"எங்கே போய் சுத்திட்டு வர்றேடீ நீ? சட்டுன்னு வந்து சாப்பிடற வழியைபாருடீ... நீ வருவேன்னு தாத்தா டிஃபன் சாப்பிடாம உனக்காக காத்துக்கிட்டு இருக்காரு..."

"தாத்த்தா... உங்களால பசி தாங்கமுடியாது... அப்றம் எனக்காக எதுக்கு நீங்க வெய்ட் பண்றீங்க? சுகன்யா விருட்டென தானே ஒரு தட்டில் இரண்டு பூரியையும் கிழங்கு மசாலாவையும் அள்ளி வைத்தாள். அதே தட்டில் மல்லிகா கொடுத்தணுப்பியிருந்த வடைகறியில் இரண்டு ஸ்பூன் எடுத்து பறிமாறி சிவதாணுவிடம் நீட்டினாள்.

"இன்னைக்கு நீ ஊருக்குப்போறே... உன்கூட உக்காந்து சாப்பிடலாம்ன்னு இந்த கிழவனுக்கு ஒரு ஆசைம்மா..." சிவதாணு அன்புடன் பேத்தியை நோக்கிப்புன்னகைத்தார்.

"இது ஏதுடீ வடைகறி?"

"மல்லிகா அத்தே குடுத்தணுப்பினாங்கம்மா.."

"அவங்க வீட்டுக்கு எதுக்கு போனே நீ? இங்க டிஃபனை பண்ணி வெச்சுட்டு நானும் சாப்பிடாம உனக்காக தேவுடு காத்துகிட்டிருக்கேன்...?"

"சுந்தரீ... கொழந்தை எங்கயோ ஒரு எடத்துல சாப்ட்டுட்டா... நீயும் உக்காந்து சாப்பிடறதை விட்டுட்டு, ஏன் இந்த விஷயத்தை நீ ஒரு பிரச்சனையாக்கறே?"

"நீங்க கொஞ்சம் சும்மாருங்க... உண்மையைச் சொல்லுடி... இப்ப ஏன் அங்கே போனே நீ?"

"அம்ம்மா... அத்தைக்கு உடம்பு சரியில்லேன்னு கேள்விபட்டேன்.. அதான் விசாரிக்கறதுக்குப் போனேன்?"

"பொய் சொல்லாதேடீ... மல்லிகாவுக்கு போன மாசம் உடம்பு சரியில்லே... அதைப்பத்தி விசாரிக்கறதுக்கு இன்னைக்கு நீ ஏன் பொழுது விடிஞ்சும் விடியாத நேரத்துல, அரக்க பரக்க ஓடணும்? உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... நீ உண்மையைச் சொல்லலேன்னு உன் மொகத்தைப் பாத்தாலே தெரியுது...?"

"சுந்து... கோர்ட்ல நிக்கவெச்சு கேள்வி கேக்கற மாதிரி ஏன்டீ கொழந்தையை மடக்கறே?" குமார் சற்றே எரிச்சலானார்.

"பாருங்க அப்பா... நானும் சென்னைக்கு வந்ததுலேருந்து பாக்கறேன்... இவங்க என்னை எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா திட்டிக்கிட்டே இருக்காங்க..." சுகன்யா குமாரின் பக்கத்தில் போய் உக்கார்ந்துகொண்டாள்.

"நான் எங்கடீ உன்னைத் திட்டினேன்...? கேட்டக்கேள்விக்கு நேரா பதில் சொல்லாம... என்னமோ புதுசா பிலிம் காட்டறே?" தன் தலைமுடியை உதறி கொண்டையாக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரி.

"நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு இப்ப நான் எல்லார்கிட்டவும் நல்லா அனுபவிக்கறேன்.." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. தந்தையின் தோளில் சாய்ந்திருந்தவளின் விழிகள் கலங்கியது.

"என்னம்மா ஆச்சு.. ஏன் இப்ப நீ அழறே?" குமார் பதறிப்போனார்.

"பின்னே... தெரியாத்தனமா புத்திகெட்டுப்போய் ஒருத்தனை என் மனசுக்குள்ள ஆசைப்பட்டாலும் பட்டுட்டேன்; முன்னேயும் போக முடியலே... பின்னாலயும் போகமுடியலே... இனி நான் காலம் பூரா இப்படியே அழுதுதான் தீரணும்..."

"சுகா... என்னடீ ஆச்சு..." சுந்தரி விருட்டென எழுந்து அவள் பக்கத்தில் வந்து மகளின் தலையை வருட ஆரம்பித்தவள், தன் மனதில் எழுந்த பதைப்பை முகத்தில் காட்டவில்லையே தவிர, உள்ளுக்குள் இலேசாக அதிர்ந்துதான் போனாள் அவள்.

"நீ செல்வாவைப் பாக்காதேங்கறே... அவன்கிட்ட பேசாதேங்கறே... அவன் என்னடான்னா... காலங்காத்தால போன் பண்ணி, பத்து நிமிஷத்துலே, என்னை நீ பாக்க வரலேன்னா கடல்லே விழுந்து செத்துடுவேன்னு என் உயிரை எடுக்கறான்.."

"கண்ணு.. என்னம்மா பேசறே நீ? நீ எதுக்காக யாருக்காக காலம் பூரா அழுவணும்?" சுந்தரி புருவத்தை உயர்த்தி தன் கீழ் உதட்டைக் கடித்தாள்.

"நான் யார் பேச்சைக் கேக்கறது...? உன் பேச்சை கேக்கவா? இல்லே அவன் பேச்சைக் கேக்கவா? எல்லாம் என் தலையெழுத்து..." தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்ட சுகன்யாவின் உடல் குலுங்கியது.

"சிவ.. சிவா.. என்னது அவன் சாகறேன்னு சொன்னானா?" சிவதாணு மெல்ல முணுமுணுத்தார்.

"ஆமாம் தாத்தா... நேத்து ராத்திரி பூரா செல்வா அவன் வீட்டுக்கே போவலே... டின்னருக்கு வந்தவன் அங்கேயும் சாப்பிடலை... கொலைப்பட்டினியா பீச்சுல கிடந்திருக்கான்..."

"ப்ச்ச்... அப்றம்..." குமார் தன் பெண்ணின் முதுகை வருடினார்.

"செல்வா ஒரு லூசுப்பா... வாயால உளறுவானே தவிர அவன் ஒரு கோழைப்பா... மனசு நொந்து போய் அவனுக்கு இருக்கற வெறுப்புல, எக்குத்தப்பா அவன் எதாவது பண்ணித் தொலைச்சுடப் போறானேன்னு ஓட்டமா ஓடி, பீச்சுலேருந்து அவனை இழுத்துக்கிட்டுப்போய், அவன் வீட்டுல விட்டதும்தான் எனக்கு நிம்மதி ஆச்சு.”

“சிவ சிவா...” சிவதாணு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

“எங்ககூட சாப்பிடும்மான்னாரு நடராஜன் மாமா.. மீனாவும் ஓரே பிடிவாதம் பிடிச்சா.. மாட்டேன்னா சொல்லமுடியும் நான்.. சரின்னு அங்கேயே சாப்பிட்டுட்டேன்..."

"ம்ம்ம்.."

"உங்கப்பாவுக்கு வடைகறின்னா ரொம்ப புடிக்கும்... கொஞ்சம் எடுத்துட்டுப்போடீன்னு மல்லிகா அத்தை ஆசையா குடுத்ததை எங்கேயாவது விசிறியடிச்சுட்டா வரமுடியும்...?" சுகன்யா தன் வழக்கப்படி கண்ணைக் கசக்கிக்கொண்டே தன் தாயிடம் கூவ ஆரம்பித்தாள்.

"செல்வா வேற என்னடீ சொன்னான்.." இப்போது பெற்றவள் பெண்னை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு பெண்ணின் கூந்தலைப் பிரித்து கோத ஆரம்பித்தாள்.

"என்னை விடு நீ... எங்கிட்டே பேசாதே நீ?" தாயின் மடியில் கிடந்த பெண் கோபத்தில் முரண்டியது.

"சரிடீ... உன் அழுகையை கொஞ்சம் நிறுத்து..."

"நீ சும்மா சும்மா என்னைத் திட்டறதை நிறுத்து... நானும் நிறுத்திக்கிறேன்.."

"சாரிடாச் செல்லம்... நீயே என் கிட்டே கோச்சிக்கிட்டா நான் எங்கடீ போவேன்? உன் தலை ஈரமா இருக்கு... தலை முழுகினா ஒழுங்கா உலர வெச்சுக்க வேணாமா?" பெண் மிஞ்சியதும், தான் பெற்றதை தாய் கொஞ்ச ஆரம்பித்தாள்.

"சுகன்யா... உங்கம்மாகிட்ட என்னை அழைச்சுட்டு போடீ... அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாரு செல்வா..."

"ம்ம்ம்... அவன் பண்ண வேலைக்கு தனியா வந்து என் மூஞ்சைப்பாக்க வெக்கப்படறான் போல இருக்கு? செத்து போயிடுவேன்னு வேற உன்னை மிரட்டினானா? வரட்டும்; அவன் இந்த வீட்டுக்குள்ள வரட்டும்... அன்னைக்கு வெச்சுக்கறேன் மொத்தமா அவனுக்கு?"

"நீ என்னப் பண்ணிவியோ... ஏது பண்ணுவியோ? அதெல்லாம் எனக்குத்தெரியாது. இந்த வீட்டு வர்ற வழி அவருக்கு மறந்து போச்சாம். அதனாலே நம்ம வீட்டு அட்ரசை அவரு கிட்ட குடுத்துட்டு வந்திருக்கேன்." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சுந்தரியைப் பார்த்துச் சிரித்தாள்.

"கண்ணு... ஆம்பளை தப்புப்பண்ணிட்டா... பொட்டைச்சி சமாதானம் ஆகற வரைக்கும், தனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கற பொம்பளைகிட்ட அப்பப்ப இப்படீல்லாம் அவன் நடிக்கத்தான் செய்வான். அதைப்பாத்துட்டு நீ ரொம்பவும் பயப்படாதே. நீ பயந்தீன்னா, அவனுக்கு சுத்தமா பயம் வுட்டுப்போயிடும்." சுந்தரி மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்..."

"வெளியில கிளம்பும் போது எப்பவும், அரைகுறையா டிரஸ் பண்ணிக்கிட்டு இன்னைக்கு அவசர அவசரமா ஓடின மாதிரி என்னைக்கும் ஓடாதே... எதுக்கெடுத்தாலும் கண்ணைக் கசக்கற வேலையையும் விட்டுட்டு கொஞ்சம் தைரியமா இருடீ..." பெண்ணின் தலையை பாசத்துடன் வருடிக்கொண்டிருந்தாள் சுந்தரி.

"சரிம்மா... அப்புறம்... செல்வா சொன்னாரு..."

"சொல்லுடி உன் செல்வா சொன்னதை..."

"சுகன்யா.. உங்கம்மாவை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடீன்னு சொன்னாரு.."

"நான் என்ன சிங்கமா புலியா...? அன்னைக்கு ஆஸ்பத்திரியில அடிபட்டு கிடந்தப்ப என்னடீ சொன்னான்...? உங்க பொண்ணுதான் எனக்கு உசுரு குடுத்தான்னு சொல்லிட்டு.... இன்னைக்கு அவ மூஞ்சைப்பாக்க புடிக்கலேன்னு சொன்னா என்னடி அர்த்தம்?"

"அம்மா.. நடுவுல நடந்ததையெல்லாம் நீயும் மறந்துடும்மா...'

"ஆமாம்டீ... என் பொண்ணைப் பத்தி அவன் வாய்க்கு வந்ததை உளறுவான். நீ வந்து எங்கிட்ட ஒப்பாரி வெப்பே; பத்து நாளைக்கு அப்புறம் மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டு சாரிடீன்னு உன் கையை அவன் புடிச்சிக்குவான்... ஆனா நான் எல்லாத்தையும் உடனே மறந்துடணும்... நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்..."

"அம்மா.. நீ என்னை எப்படி வேணா திட்டு... நான் பொறுத்துக்கறேன்.. ஆனா அவரு உன்னைப்பாக்க வரும் போது மட்டும் என்னைத் திட்டறமாதிரியே அவரையும் திட்டிடாதேம்மா..." சுகன்யா தன் தாயின் மடியிலிருந்து எழுந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தன் உதட்டை அவள் கன்னத்தில் ஒற்றினாள்.

"நடராஜன் என்ன சொன்னாரு?" பெண்ணின் உதடுகள் தன் கன்னத்தில் உரசியதும், சுந்தரிக்கு மனசு மொத்தமாக நெகிழ்ந்து போனது.

"அவரு ஒண்ணும் சொல்லலே... நான்தான் உங்க இஷ்டப்படியே கல்யாண டேட்டை பிக்ஸ் பண்ணுங்கன்னு சொன்னேன்.."

"என் பொண்ணை கோர்ட்ல நிக்க வெச்சு பேசற மாதிரி பேசறேன்னு சொன்னீங்களே..? உங்க ஆசைப்பொண்ணு சம்பந்தி வீட்டுல என்ன சொல்லிட்டு வந்திருக்கான்னு கேட்டீங்களா? இதுக்குத்தான் இவளை என்ன... ஏதுன்னு நோண்டி நோண்டி கேட்டேன். இப்படி இவ இஷ்டத்துக்கு நம்பளை எதுவும் கேக்காம, இவ பேசிட்டு வந்தா; அந்த செல்வாவுக்கு நம்ம கிட்ட எதாவது பயம் இருக்குமா?" சுந்தரி தன் முகத்தை நொடித்தாள்.

"சுந்தரீ..." சிவதாணு குரல்கொடுத்தார்.

"சொல்லுங்க மாமா..."

"நம்ம கொழந்தையோட சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்.. டம்ளர்லே இருக்கற பால்லே சக்கரையை போட்டா என்ன? காலியா இருக்கற டம்ளர்லே மொதல்லே சக்கரையை போட்டுட்டு அதுக்கப்புறம் பாலை ஊத்தி கலக்கினா என்ன?" சிவதாணு தன் பக்கதிலிருந்த பஞ்சாங்கத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்.

"என்னப்பா பாக்கறீங்க..." குமார் எழுந்தார்.

"அடுத்த வாரம் புதன்கிழமையன்னைக்கு நாள் நல்லா இருக்குடா... அன்னைக்கு உன் ஃப்ரெண்டு நடராஜனை நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரச்சொல்லேன்...

"சரிப்பா..."



"செல்வா..."

“சொல்லுங்கம்மா...”

“சுகன்யா உன்கிட்ட ஆசையா பேசினாளா?”

"பேசினாம்மா... கொஞ்சம் மெதுவா பேசும்ம்மா. அப்புறம் அப்பா என்னா.. ஏதுன்னு கேள்வி மேல கேள்வி கேப்பாரு..."

"உன் மேல அப்பாவுக்கு அக்கறை இல்லையாடா..?

முற்றத்தில் நிழலாடியது. நடராஜன் அவர்கள் இருவரின் முதுகுக்குப் பின்னால் சத்தமெழுப்பாமல் வந்து நின்றார். மனைவியும், பிள்ளையும் பேசுவதிலேயே அவர் கவனமிருந்தது. ஹாலுக்கும், பின் கட்டுமாக நடக்க ஆரம்பித்தார்.

"ம்ம்ம்.. யார் இல்லேன்னது?"

“சுகன்யா வீட்டுக்கு எப்படா போகப்போறே?”

“ம்ம்ம்.. போகணும்...”

“என்னை ஸ்டேஷனுக்கு நீதான் அழைச்சிட்டுப் போகணும்ன்னு சொல்லிட்டுப்போனாளே?

"ஆமாம்மா... நேரா ஸ்டேஷனுக்கு போயிடலாம்ன்னு பாக்கறேன்.."

"ஏன்டா?"

சுந்தரி அத்தைக்கு ரொம்பவே பிடிவாத குணம்... தன்னோட சுயகவுரவம், சுயமரியாதை இதுக்கெல்லாம் ரொம்பவே இம்பார்ட்டன்ஸ் கொடுப்பாங்கன்னு சுகன்யா சொல்லியிருக்கா... நேத்து டின்னர்ல பாத்தப்ப அவங்களை பாத்து சிரிச்சேன்.. பாக்காத மாதிரி போயிடாங்க... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு..."

"உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியுண்டா... தப்பு பண்ணவன் நீ... உன் சுயகவுரத்தைப் பாக்கிறியே, அடுத்தவங்களும்தானே தங்க கவுரவத்தை பாப்பாங்க... நேத்தே நல்லாயிருக்கீங்களா அத்தேன்னு... நீதான் ஒரு வார்த்தை அவங்க கிட்டே கேட்டிருந்தா, தேய்ஞ்சா போயிருப்பே...."

"எப்படியிருக்கீங்கன்னு நான் கேட்டு.. அவங்க பதில் சொல்லாம போயிட்டிருந்தா, அதை என்னாலத் தாங்கிக்கிட்டு இருக்க முடியாதும்மா..."

"அதுக்காக...இப்படியே... நீ தயங்கிக்கிட்டு இருந்தா எப்படீடா.. நீ சாரின்னு ஒரு வார்த்தை சொன்னதும்.. சுகன்யா கவுரவம் பாக்காம நம்ம வீட்டுக்கு வந்தாளா இல்லையா?"

"ம்ம்ம்ம்.... ஆமாம்மா.."

நடராஜன், பின் கட்டுக்கு வேகமாக வந்தார்.

"செல்வா..."

"சொல்லுங்கப்பா.."

"நான் ஒரு விஷயம் சொன்னா... நீ கேப்பியா?

"ம்ம்ம்..."

"உன் ஈகோவை.. உன் அங்கங்காரத்தை ஒரு பக்கம் மூட்டையா கட்டி வெச்சுட்டு... நான் சொல்றதை அப்படியே செய்வியா?"

"செய்யறேன்... சொல்லுங்க.. நான் என்ன செய்யணும்?" செல்வாவின் குரல் தளர்ந்து வந்தது. குரலில் சிறிது விரக்தியும், சோர்வும் ஒன்று கலந்திருந்தன.

"நேரா சுகன்யாவோட வீட்டுக்குப்போ... அவ அப்பா குமாரசுவாமியும், சுந்தரியும் வீட்டுலதான் இருக்காங்க..."

"அப்பா..."

"குறுக்கே பேசாதேடா.. ப்ளீஸ்.." நடராஜன், தன் மகனின் தோளை மெல்ல தடவினார். தந்தையின் கரம் தன்னுடம்பில் ஆதரவாக பட்டதும், செல்வா மனம் இளகினான்.

"அவங்க கையைப் புடி.. கால்லே ஒரு தரம் விழு... உன்னை விட வயசுல பெரியவங்க.. நீ கொறைஞ்சு போயிட மாட்டே... நீ குனியறேன்னு உன்னை அவங்க குட்ட மாட்டாங்க.. நீ நல்லா இருன்னு மனசார ஆசீர்வாதம் பண்ணுவாங்க..."

"அவங்க பொண்ணோட நடத்தையை நீ சந்தேகப்பட்டேன்னு உன்னை அவங்க வெறுத்துடலேடா... கண்டிப்பா உன் மேல அவங்களுக்கு கோபம் இருக்கும்... இருக்கணும்... அவங்களும் மனுஷங்கதானே... ஆனா உன் மனசு மாறும்... உன் தப்பை நீ உணருவே... தவிச்சுப் போய்... நீயே சுகன்யாகிட்ட திரும்ப வருவேங்கற நம்பிக்கையில பொறுமையா உனக்காக காத்துகிட்டு இருக்காங்கடா..."

"சரிப்பா..."

"செல்வா.. நானும் ஒரு பிடிவாதக்கார பெண்ணை பெத்து வளத்தவன்தான்.. மீனா பிடிக்காத பிடிவாதமா? இன்னமும், ஒரு பிடிவாதக்கார பெண்ணோட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன். உங்கம்மாவுக்கு இல்லாத பிடிவாதமா?"

"அப்பா...?"

"நான் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். புரிஞ்சுகிட்டேன்... என் ஈகோவை கொஞ்சம் கொஞ்சமா விட்டுட முயற்சி பண்ணேன். சந்தோஷமா, திருப்தியா அவங்கக்கூட வாழ்ந்துகிட்டு இருக்கறேன்..!!

"ம்ம்ம்..."

"நம்ம நிச்சயதார்த்தம் கேன்சலுன்னு நீ சுகன்யாகிட்ட உளறினே... அவளும் அதை அவங்க வீட்டுலே சொன்னா; ஆனா நாலு ஊர்காரங்க நடுவுல, உன்னை உக்காரவெச்சு, உன் கழுத்துல அவங்க போட்டாங்களே அந்த தங்கச்சங்கிலியை நம்ம கிட்டேயிருந்து, அவங்க எப்பவாவது திருப்பிக் கேட்டாங்களா?"

"எனக்குத் தெரியாதுப்பா.."

"உன் நிச்சயதார்த்தத்தையே, ஒரு கல்யாணம் பண்ற மாதிரி பணத்தை தண்ணியா செலவு பண்ணி, அந்த பங்ஷனை தடபுடலா நடத்தி, நம்ம மனசு குளிர குளிர, நமக்கு மரியாதை பண்ணாங்களே... அந்த பொண்ணு வேணாம்ன்னு, நீ முகத்தை முறிச்சிக்கிட்டு போனியே, உன்னை என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கடிஞ்சி பேசினாங்களா? இல்லே நாங்க செலவு பண்ண பணத்தை திருப்பிக் குடுங்கண்ணு எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாங்களா?"

"இல்லேப்பா..."

"உங்கம்மா அரை நாள் செலவழிச்சு, நாலு கடை ஏறி இறங்கி, ஆசையா ஆசையா செலக்ட் பன்ணி, சுகன்யாவுக்கு குடுத்த பரிசப் புடவையும், நகையும், நம்ம வீட்டுக்கு திரும்பி வந்திடிச்சா..."

"அப்பா..."

"இன்னும் வரலேடா... அது வரவும் வராது... இது எனக்கு நல்லாத் தெரியும்..."

"இதுலேருந்து உனக்கு என்னடா புரியுது..."

"அயாம் சாரிப்பா... நிஜமாவே நான் ஒரு முட்டாள்தான்... உங்க எல்லரையுமே நான்தான் தேவையே இல்லாம அழவெச்சிக்கிட்டு இருக்கேன்."

"மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாத்தான்டா தெரியும்.."

"ம்ம்ம்.."

"இந்த சின்ன விஷயத்தை உன்னால இன்னும் புரிஞ்சுக்க முடியலேன்னா.. சுகன்யாவையோ, அவ குடும்பத்தையோ, எப்பவுமே நீ புரிஞ்சுக்க போறதில்லேடா..." நடராஜன் தன் மகனின் தோளை பாசத்துடன் தட்டிக்கொடுத்தார்.

"நீ சொல்ல விரும்பற 'சாரி'ங்கற ஒரு வார்த்தையை, அவ வீட்டு பெரியவங்க கிட்ட இன்னைக்கே சொல்லுடா... இன்னைக்கு நீ உண்மையாகவே வருத்தபடற விஷயம், உன்னை நம்பி தங்களுடைய பொண்ணை உனக்கு நிச்சயம் பண்ணிக் குடுத்தாங்களே... அவங்களுக்கும் இன்னைக்கேத் தெரியட்டும்.." நிதானமாக பேசிய நடராஜன் எழுந்து ஹாலுக்குள் நுழைந்தார். 


வேக வேகமாக எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினான் செல்வா. ஐந்தே நிமிடங்களில், முகத்தில் படர்ந்திருந்த கருமையை, சரசரவென வழித்து எறிந்தான். தட தடவென தலையில் குளிர்ந்த நீரை பக்கெட் பக்கெட்டாக ஊற்றிக்கொண்டான். உடல் சூடும், மனசின் சூடும் அடங்க நிதானமாக குளித்தவன், கமகமவென சோப்பு வாசத்துடன் வெளியில் வந்தான்.

தீர்த்த கரையினிலே
தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே... பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப்போலவே பாவை தெரியுதடி...
ஆஆ*...பாவை தெரியுதடி.."


"செல்வா நாலு மாசத்துக்கு அப்புறமா பாடறம்மா... அவன் தன்னோட பழைய மூடுக்கு வந்துட்டாம்மா..." மீனா கலகலவென நகைத்தாள். சந்தோஷத்துடன் தன் அண்ணனின் முதுகில் உப்பு மூட்டையாகி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கினாள். தங்கையின் பாசத்தில் சிலிர்த்தான் செல்வா. ஹாலில் உட்கார்ந்திருந்த நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக்கொண்டனர்.

எப்போதோ ஆறு மாதங்களுக்கு முன் சுகன்யாவுக்கு பிடித்த கருப்புக்கலரில் வாங்கி, இதுவரை பிரிக்கப்படாமலேயே, அலமாரிக்குள் கிடந்த புத்தம் புதிய 'கார்ட்ராய் ஜீன்ஸ்'ஐயும், அதற்கு மேச்சிங்காக வாங்கி வைத்திருந்த, வெளிர் நீல நிற டீ ஷர்ட்டையும் தேடி எடுத்து, அணிந்துகொண்டான். சட்டை காலரின் பின்னால், மெல்லிய மல்லிகை மணம் கமழும் செண்டை தெளித்துக்கொண்டான் செல்வா.

"அம்மா.."

"சொல்லுடா.."

"அந்த செயினை எங்க வெச்சிருக்கம்மா..?'

"எந்த செயினை கேக்கறே? மீனா கல்யாணத்து வாங்கி வெச்சிருக்கறதையா?" மல்லிகா ஒன்றும் தெரியாதது போல் பாசங்கு செய்தாள்.

"ம்மா, அதைக் கேக்கலேம்ம்ம்மா..."

"பின்னே...?

"கிண்டல்தானே வேணாங்கறேன்..." சுகன்யா வீட்டுல எனக்கு போட்டாங்களே.."

"என் பீரோவுல லாக்கர்லே வெச்சிருக்கேன்.. எடுத்து போட்டுக்கடா.." வெகு நாட்களுக்குப்பிறகு பிள்ளையின் சிரிப்பு பொங்கும் முகத்தைப் பார்த்த மல்லிகாவின் மனசு குளிர்ந்தது.

"அப்பா... நான் இன்னைக்கே குமாரசுவாமி அங்கிளை விஷ் பண்ணிட்டு, சுந்தரி அத்தைகிட்டவும் பேசிட்டு நேரா சுகன்யா கூட ஸ்டேஷனுக்கு போயிட்டு வர்றேம்பா..." செல்வாவின் கழுத்தில் தங்கசங்கிலி மின்னிக்கொண்டிருந்தது.

"குமார் ஒரு ஃபர்ஃபெக்ட் ஜென்டில்மேன்; அப்படியே அவரோ, அவர் வைப் சுந்தரியோ, எதாவது சொன்னாலும், உன் வாயைத் தொறந்து எதுவும் பதிலுக்குப் பதில் பேசாம கேட்டுக்கோ..."

"சரிப்பா..."

* * * * *

"தாத்தா எப்டீ இருக்கீங்க...?"

வெராண்டாவில் உட்கார்ந்து தேவாரத்தைப் படித்துக்கொண்டிருந்த சிவதாணு நிமிர்ந்தார். வந்துட்டான். பிரிஞ்சு போனவன் தன்னால வீடு தேடி வருவான்னு நான் நெனைச்சது சரியாப்போச்சு...
கட்டங்கள் பொய் சொல்றது இல்லே.

சிவ சிவா... கட்டங்கள் சொல்றதை நம்மளாலே புரிஞ்சுக்க முடியலேங்கறதுதான் உண்மை. சுகன்யாவின் கட்டத்திலிருக்கும் ராகுவின் நினைப்பு அவர் மனதில் சட்டென எழுந்தது.

"வாப்பா... வா... நீ எப்படியிருக்கே?" தடுமாறி எழுந்தார்.

"நீங்க உக்காருங்க தாத்தா..." எழுந்தவர் கையை மரியாதையுடன் பற்றிக்கொண்டான் செல்வா.

"சுந்தரீ... மாப்பிள்ளை வந்திருக்காரும்ம்மா..." குரல் கொடுத்தவர் அவன் கையைப்பற்றிக்கொண்டு ஹாலை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

தாத்தா என்னை மாப்ளேன்னு சொன்னாரே? அப்பா சொன்ன மாதிரி இந்த வீட்டுல யாருமே என்னை வெறுத்துடலே; இன்னைக்கும் என்னை மாப்பிள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்காங்க... நான்தான் பைத்தியக்காரத்தனம் பண்ணியிருக்கேன். மனதுக்குள் அதிர்ந்த செல்வா தன் முகம் சிவந்தான்.

ஹாலில் சோஃபாவில் அமர்ந்தவாறு சுகன்யாவின் ஜீன்ஸ் ஒன்றில் விட்டுப்போயிருந்த பட்டனைத் தைத்துக்கொண்டிருந்த சுந்தரி தலையை நிமிர்த்தினாள். சட்டென எழுந்து மாமனாரை சோஃபாவில் உட்கார வைத்தாள். செல்வாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். புன்னகைத்தாள்.

"வாப்பா... செல்வா... இப்படி உக்காரு... ஏன் நிக்கறே?" அவன் தோளை ஆதரவாக தட்டிக்கொடுத்தார் குமாரசுவாமி.

"தேங்க்யூ அங்கிள்..." செல்வாவின் தலை இன்னும் நிமிரவில்லை.

"வாங்க சார்... அவர்தான் சொல்றாருல்லே... ஏன் தயங்கி தயங்கி நிக்கறீங்க... உக்காருங்க... எப்டி இருக்கீங்க..?" முகத்திலிருந்த புன்னகை சற்றும் மாறாமல் பேசினாள் சுந்தரி.

"அத்தே.. என்னை சார்ன்னு ஏன் கூப்பிடறீங்க... செல்வான்னு கூப்பிடுங்களேன்..."

"நான் உன்னை என் பிள்ளையா நெனைச்சேன்... ஆனா உன் மேல நான் வெச்ச நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நீ நடந்துக்கலயே; அதான்.. உன்னை சார்ன்னு கூப்பிடறேன்.." சுந்தரி தன் உதட்டை சுழித்தாள்.

கோவம் வந்தா அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரியே உதட்டை சுழிக்கறாங்களே? செல்வா மனதுக்குள் வியந்தான். வியந்தவன் தன் மார்பில் வியர்த்தான். 

"சுந்து... என்னம்மா இது? வீட்டுக்கு வந்த பிள்ளைகிட்ட கிட்ட பேசற பேச்ச இது?" செல்வாவின் கரத்தை பற்றி இழுத்து சோஃபாவில் உட்காரவைக்க முயன்றாள் கனகா.

"அயாம் சாரி.. அத்தே..." செல்வா சட்டென சுந்தரியின் காலடியில், தரையில், உட்கார்ந்தான். சோஃபாவில் உட்கார்ந்திருந்த சுந்தரியின் முழங்காலில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

"அத்தே... நான் தப்பு பண்ணிட்டேன்... மடத்தனமா, சுகன்யாவை கன்னா பின்னான்னு, சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லி, அவ மனசை புண்படுத்திட்டேன்." சுந்தரி செல்வாவின் தலையைத் ஆதுரமாக வருடினாள்.

"சுகன்யா என் மேல வெச்சிருந்த நிஜமான அன்பை, நிராகரிச்சேன். அத்தே நான் மட்டும் கஷ்டப்படலே. என் மேல அன்பும், அக்கறையும் வெச்சிருந்த உங்க எல்லோருடைய மனசையும் ஒடைச்சிட்டேன். என் தப்பை நினைச்சு இப்ப நான் வெக்கப்படறேன். வருத்தப்படறேன். அத்தே... என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்..."

"எழுந்திருப்பா..." அவனை எழுப்பி தன் பக்கத்தில் உட்க்கார வைத்துக்கொண்டாள் சுந்தரி.

"அத்தே.. அயாம் ரியலி சாரி.." செல்வாவின் கண்கள் கலங்கத்தொடங்கின. பேசமுடியாமல் தவித்தான் அவன்.

தன் தந்தையின் அறையிலிருந்து செல்வா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சுகன்யாவால் பொறுக்கமுடியாமல், ஹாலுக்குள் வந்து தன் தாயின் பக்கத்தில் நின்றாள். அழுகையுடன் பேசிக்கொண்டிருந்தவனை தன்னுடன் சேர்த்தணைத்துக்கொள்ள அவள் உள்ளம் துடித்தாள்.

"செல்வா... சுகன்யா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நிஜமாவேத் தெரியலைப்பா..." சுந்தரி மெதுவாக இழுத்தாள்.

"அத்தே... ப்ளீஸ்... சுகன்யா இல்லாம என்னால வாழ முடியாது அத்தே..." சுந்தரியின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சலாகப் பார்த்தான். தன் பெண் இல்லாமல் தன்னால் வாழமுடியாதென அவன் சொன்னதைக் கேட்டதும், சுந்தரியின் நெஞ்சு நெகிழத்தொடங்கியது.

"செல்வா... நீ திரும்பி வருவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா." தன் மனசு நிறைந்ததால், சுந்தரியும் தன் விழிகள் கலங்க, தன்னருகில் தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் உச்சியில் மென்மையாக முத்தமிட்டாள்.

"தேங்க் யூ அத்தே..." செல்வா தன் விழிகளைத் துடைத்துக் கொண்டான்.

"தாத்தா.. இப்ப நேரம் நல்லாருக்கா தாத்தா?"

"ஏன்டா கண்ணு?"

"நிச்சயதார்த்தத்துலே மாப்பிள்ளைக்கு மோதிரம் போடறது நம்ப வீட்டுலே வழக்கம் இல்லேன்னு அம்மா சொன்னாங்க. நான் பிடிவாதமா இவருக்கு போட்டேன். அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் தாத்தா.." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.

"புரியுதும்மா... இப்ப செல்வாவுக்கு அந்த மோதிரத்தை திரும்பவும் பரிசா குடுக்க விரும்பறியா நீ?"

"ஆமாம் தாத்தா..."

"சிவ சிவா... தாராளமா செய்ம்மா... உனக்கு நல்ல நேரம் வந்தாச்சு..." சிவதாணு மனதுக்குள் இறைவனை நமஸ்கரித்தார்.

"செல்வா.. என்ன சொல்றே நீ?" சுந்தரி புன்னகைத்தாள்.

"அத்தே... அயாம் ஹானர்ட்... இதுக்கு மேல வேற எதையும் சொல்ல நான் விரும்பலே..." சுகன்யாவை நோக்கி தன் விரலை நீட்டினான் செல்வா.



சுற்றியிருந்தவர்கள் கைதட்ட, சுகன்யா, செல்வாவின் விரலில், மீண்டும் அதே ஆசையுடன், அதே காதலுடன், அதே நேசத்துடன், நான்கு மாதங்களுக்கு முன், தன் காதலன் தூக்கியெறிந்த அதே மோதிரத்தை, மீண்டும் அணிவித்தாள்.

"தேங்க் யூ... சுகன்யா.. ஐ லவ் யூ வெரி மச்..." சுகன்யாவின் வலது கையை அழுத்திப்பிடித்தான். தான் அழுத்திப்பிடித்த கையை திருப்பி மென்மையாக முத்தமிட்டான்.

"செல்வா... அயாம் ரியலி ஹேப்பி டுடே... என் தாத்தா... பாட்டி... அப்பா... அம்மா கிட்ட நாம ரெண்டுபேரும் ஆசீர்வாதம் வாங்கிக்கலாமா?"

"நிச்சயமா..." எல்லையில்லாத அன்புடன் சுகன்யாவை நோக்கினான் செல்வா.

செல்வாவும், சுகன்யாவும், பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர்களின் மனமார்ந்த ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள். குமாரசுவாமி சுந்தரி தம்பதியினரின் வீட்டில் மீண்டும் சந்தோஷம் வெள்ளமாக பொங்கியோடிக் கொண்டிருந்தது. 


முற்றும். 

சுகன்யா... 110

"செல்வா... எங்கே இருக்கீங்க நீங்க?" பதைப்புடன் கேட்டாள் சுகன்யா.

"உன் மோதிரத்தை கழட்டிக்குடுத்தேனே அங்கதான் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.."

"இவ்வளவு காலங்காத்தால பீச்சுல என்னப்பண்றீங்க?"

"சுகன்யா... இன்னைக்கு என்ன மீட் பண்ணறேன்னு நீ தானே சொன்னே?"

"சொன்னேன்... அதுக்காக... இப்பத்தானே பொழுதே விடியுது?"

"நேத்து ஈவினிங் ஏழு மணியிலேருந்தே நான் இங்கேத்தான் கிடக்கிறேன்'

"கிடக்கறீங்களா?”

“ஆமாம்டீ... இங்கதான் படுத்துக்கிடக்கிறேன்..” அவன் குரல் சூடாக வந்தது.

“சரி நேத்து நீங்க சாப்பிட்டீங்களா?"

"இல்லே..."

"ஏன்...?"

"நான் உன்கூட சாப்பிடலாம்ன்னு இருந்தேன்... டின்னருக்கு நீ ஏன் வரலே?" அவனிடமிருந்து எரிச்சலுடன் கேள்வி எழுந்தது.

"செல்வா நான் ஒரு முக்கியமான வேலையா போயிருந்தேம்பா.."



"பொய் சொல்றேடீ நீ... உன்னை நான் அழவெச்சதுக்கு பதிலுக்குப் பதில் என்னை அழவெக்கணுங்கறதுதான் உன் எண்ணம்..." செல்வா பசியில் வாயில் வந்ததை உளறினான். உளறியவன் தன் அடிவயிற்றைத் தடவிக்கொண்டான்.

"சத்தியமா இல்லடா செல்வா.."

இன்னைக்கு நான் அவன்கிட்டா தப்பா எதுவும் பேசிடக்கூடாது. தன் இடதுகைவிரல்களை கெட்டியாக மூடிக்கொண்டாள். மறு நொடி தன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் சுகன்யா.

"நான் உன்னைப்பாக்கறதுக்காக துடியா துடிச்சிக்கிட்டு அங்கே டின்னர் ஹால்லே உக்காந்து இருந்தேன்; என்னை விட அப்படி என்னடீ உனக்கு முக்கியமான வேலை?"

"அய்யோ... ஏன் இப்படி விஷயம் தெரியாம பைத்தியம் மாதிரி என் மனசை நோகடிக்கிறியேடா?" அவசரமாக பேசிவிட்டு தன் நாக்கை அழுத்திக் கடித்துக்கொண்டாள் அவள்.

"ஆமாம்டீ... நான் இப்ப அரைப்பைத்தியம்தான்... நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க.. நான் முழுப்பைத்தியம் ஆயிட்டா அதுக்கு காரணம் நீயும் உன் ஆசை அம்மாவும்தான்..." செல்வா அடிக்குரலில் கூவத்தொடங்கினான்.

"என்னங்க இது? ராத்திரி பூரா... யார்கிட்டவும் சொல்லாம கொள்ளாம, பீச்சுல, பட்டினியா, கடல் காத்துல இருந்திருக்கீங்க? உங்க உடம்பு என்னத்துக்கு ஆகறது? ஏன் இப்படி எல்லாரையும் தவிக்க விடறீங்கன்னு கேட்டா என்னன்னமோ பேசறீங்களே?"

"நான் படற தவிப்பை நீங்க யாரவது ஒருத்தர் புரிஞ்சுக்கிறீங்களா? இல்லே; நீதான் புரிஞ்சுக்கிட்டியாடீ? நான் தப்பு பண்ணேன்... தப்பு பண்ணேன்னு எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்களே?"

"செல்வா.. ஏன்டா நீ என்னை இப்படில்லாம் வதைக்கறே?"

“நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோம்.... தப்பு என் பேர்லதான்... அதை நான் ஒத்துக்கறேன்... ஆனா நீ என்னை வதைக்கறது போதாதுன்னு... இப்ப உன் அம்மாவும் உன்கூட சேர்ந்துகிட்டு என்னை கொல்றாங்களே? இந்தக்கொடுமையை யார்கிட்ட போய் சொல்லி அழறதுடீ நான்?”

“செல்வா... அவங்க ஏன் உன்னை கொல்லணும்? உன் மனசுல இருக்கறதை நீ என்கிட்ட சொல்லு... பொறுமையா நான் கேட்டுக்கறேன்.”

"ஏன்னா கேக்கறே? நீ சேலைடீ... உங்கம்மா நூலு... இந்த டயலாக்கை சொல்லி உன் அம்மா என்னை வதைக்கறாங்க... இப்ப அந்தக்கதையைப் பத்தியெல்லாம் பேச எனக்கு நேரமில்லே... உங்கம்மாவை கேட்டுக்கிட்டாடீ நீ என்னை காதலிச்சே? இப்ப ஏன்டீ அவங்க சொல்றதை நீ கேக்கறே?”

“செல்வா... நீ பேசறது கொஞ்சம்கூட சரியில்லே...?”

"சரி என் மனசுல இருக்கறதை கேட்டுக்கறேன்னு சொல்றேல்லா... அப்படின்னா நான் கூப்பிட்டா உடனே ஏன்டீ வரமாட்டேங்கறே?"

"..."

“நேத்து ராத்திரியிலேருந்து உனக்காக இங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன்... அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள இங்கே நீ வரணும்... இல்லே... இந்த கடல்லேயே குதிச்சுடுவேன்..."

"டேய் படுபாவீ.. நீ பீச்சுல உக்காந்துருக்கேன்னு எனக்கு எப்படீடா தெரியும்? ஏண்டா இப்டீல்லாம் உன் வாய்க்கு வந்ததை உளர்றே?" சுகன்யாவும் அவன் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பதிலுக்கு கூவ ஆரம்பித்தாள்.

"இப்ப நீ வரப்போறியா இல்லையா?"

“சரி நான் வர்றேன்... எங்கே வரணும்?”

“கடைசியா நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோமே அங்க வா... வரும் போது கையோட அந்த மோதிரத்தையும் எடுத்துக்கிட்டு வா?”

“எந்த மோதிரம்?”

“நான் கழட்டிக்குடுத்தனே அந்த மோதிரம்; அது எனக்கு இப்ப வேணும்... திரும்பவும் நீ அதை என் விரல்லே போட்டு விடணும்...” செல்வா ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்தான்.

“நீ கழட்டியாடா குடுத்தே? என் மூஞ்சியிலே விசிறியடிச்சேடா... அது எங்கேயோ மண்ணுல போய் விழுந்திச்சி.. அன்னைக்கு நான் இருந்த நிலைமையிலே அதையா நான் தேடிக்கிட்டு இருந்தேன்?”

“சரி... நீ மொதல்லே கிளம்பி வா... ரெண்டு பேருமா அதை சேர்ந்து தேடலாம்.... இப்ப நான் கரையில நிக்கணுமா? இல்லே கடல்லே இறங்கணுமா? செல்வா சுகன்யாவை மிரட்ட ஆரம்பித்தான்.

"சனியனே அது மாதிரி எதையும் பண்ணித் தொலைச்சுடாதே... அப்புறம் உன் ஆத்தாகாரி மூஞ்சியிலே இந்த ஜென்மத்துலே என்னால முழிக்க முடியாது... நீ எங்கே இருக்கியோ அங்கேயே இரு.. இப்பவே நான் வந்து தொலைக்கறேன்..."

"வாடீ.. என் நாட்டுக்கட்டை.. சீக்கிரமா வாடீ.." செல்வா மகிழ்ச்சியுடன் பாட ஆரம்பித்தான்.

"என்னாது... நாட்டுக்கட்டையா?"

"ஒண்ணுமில்லேடீ தங்கம்... நீ நேல வாடீச்செல்லம்.. விலாவரியா சொல்றேன்." செல்வாவுக்கு பித்தம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது.

"டேய் செல்வா உனக்கு பித்து பிடிச்சு போயிருக்குடா"

"ஆமாம்... உன் மேலதான் நான் பித்தனா இருக்கேன்.."

பாவி... எந்தக்காலத்து கடனோ... இவன்கூட இப்படியெல்லாம் நான் கிடந்து அவஸ்தை படவேண்டியதா இருக்கு... சுகன்யா தன் தலையில் அடித்துக்கொண்டாள். செல்லை அணைத்து இடுப்பில் இருந்த பாக்கெட்டில் செருகிக்கொண்டாள். தடதடவென ஓடி மாடிப்படிகளை இரண்டிரண்டாக தாவி தாவி குதித்திறங்கி ஹாலுக்குள் வந்தாள்.

“குடியா முழுகிப்போச்சு... கொஞ்சம்கூட அடக்கம்ங்கறதே இல்லை உனக்கு... ஏன்டீ இப்படி குதிச்சிக்கிட்டு வர்றே?” சோஃபாவில் தன் கணவன் எதிரில் அமர்ந்திருந்த சுந்தரி திடுக்கிட்டு எழுந்தாள்.

“எல்லாம் என் தலையெழுத்து... நீ கொஞ்சம் நேரம் சும்மா இரும்மா...” ஹால் சுவரில் டீவிக்கு பக்கத்தில், ஆணியில் மாட்டியிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு தெருவை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடினாள் சுகன்யா.

"இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சா... அதுக்குள்ள கார் சாவியை எடுத்துக்கிட்டு எங்கேயோ போறாளே?" சுந்தரி குழம்ப ஆரம்பித்தாள்.

"என்னங்க... நான் சொல்றது உங்க காதுலேயே விழலையா?" அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்த குமாரசுவாமி தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். வேகமாக ஓடும் தன் பெண்ணின் பின்னால் அவரும் எழுந்து ஓட ஆரம்பித்தார். அவர் தோட்டத்தில் இறங்கியபோது, கார் தெருக்கோடியில் திரும்பி கண் பார்வையில் இருந்து மறைந்தது.

மேல் மூச்சு வாங்க கார் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தவர், தன் தலையை ஒரு முறை திருப்தியுடன் ஆட்டிக்கொண்டார். பின் நிதானமாக காம்பவுண்ட் கேட்டை மூடிக்கொண்டு, நீளமான ஒரு பெருமூச்சுடன் வீட்டுக்குள் திரும்பவும் வந்தார் குமாரசுவாமி.


"என்னங்க... நான் பதறிப்போய் நிக்கறேன்... நீங்க என்னமோ பெருமாள் கோவில் மாடு மாதிரி சாவகாசமா தலையை ஆட்டிக்கிட்டு வர்றீங்க?" போர்வைகளை உதறி மடித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, கட்டிலில் வந்து உட்கார்ந்த தன் கணவரின் தோளை உலுக்கினாள் சுந்தரி.

"ஏன்டீ... என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீ? இந்த வயசுல வேகமா போற கார் பின்னால என்னால ஓடவா முடியும்?" தன் தோளை உலுக்கியவள் இடுப்பில் இரு கரங்களையும் தவழவிட்டு சுந்தரியைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் குமார். 

"எல்லாம் நீங்க அவளுக்குக்குடுக்கற செல்லம்.... அவ யாரையும் மதிக்கறதே இல்லே.. அதுவும் நான் கேக்கற கேள்விக்கு ஒழுங்கா எப்பவுமே பதில் சொல்றதே இல்லை; பத்தாக்குறைக்கு தாத்தா செல்லம் வேற அவளுக்கு நாளுக்கு நாள் அதிகமாயிகிட்டே போவுது.... காலங்காத்தால வயித்துக்கு எதுவும் திங்கமாக்கூட எங்கப்போறான்னு தெரியலையே?" தன் இடுப்பிலிருக்கும் அவர் கைகளை விலக்க முயற்சித்தாள் சுந்தரி. அவள் திமிற திமிற குமாரின் பிடியும், விரல்களின் அழுத்தமும் அவள் இடுப்புச்சதையில் அதிகமானது. 

"விடுங்களேன்... விடிஞ்சதும் விடியாததுமா இது என்ன அழிச்சாட்டியம்?"

"என் பொண்டாட்டி இடுப்புல நான் கையைப்போட்டா அதுக்கு பேரு அழிச்சாட்டியமாடீ?" சட்டென அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி தன்னுடன் இறுக்கிக்கொண்டார் குமார்.

"வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கா.. நம்பளைப் பெத்தவங்க நம்மகூட வீட்டுல இருக்காங்க... உங்களுக்கு நேரம் காலம் எதுவுமே கிடையாதா...?" உதட்டில் வார்த்தைகள் சூடாக வந்தாலும், புருஷனின் மார்பை தன் மார்பால் மென்மையாக உரசிக்கொண்டே, தன் உதடுகளின் ஈரத்தை அவர் கன்னத்தில் இழைத்தாள் சுந்தரி. 

"குழந்தை இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாளேங்கற ஏக்கத்துலத்தான்டீ உன்னை நான் உரசறேன்..." குமாரின் குரல் தழைந்தது. சுந்தரியின் இடுப்பில் இருந்த அவருடைய கரம் மெல்ல மெல்ல அவள் இடது மார்பை நோக்கி மேலேறத் தொடங்கியது. 

"ராத்திரில்லாம் நான் கிட்ட வந்து கட்டிப்புடிச்சதுகூட தெரியாமா, காலை கெளப்பிக்கிட்டு தூங்கினீங்க..? கொழந்தை மேல இருக்கற பாசத்தை விடிஞ்சதும்தான் பொண்டாட்டி மேல காட்டுவீங்களா?" சுந்தரி குமாரை நெருங்கினாள். தன் இடதுமார்பின் காம்பை ரவிக்கையோடு சேர்த்து வருடிய அவர் கரத்தை தன் இடது கரத்தால் அங்கேயே அசையவிடாமல் நிறுத்தி இறுக்கமாக அழுத்தினாள். 

'ஏன்டீ நீயும் அவ வயசுல என்னைக் காதலிச்சவதானே? உன் பொண்ணோட மனசு உனக்குப் புரியலியா? என்னைப் பாக்கப்போனா, உன் காலை வெட்டுவேன்னு உன் அம்மா சொன்னதை நீ கேட்டியா?"

"ஆமாம்.. அதுக்கென்ன இப்ப...? நான் என் ஆத்தா சொன்னதை சொன்னதை கேக்கலேன்னா... நான் சொல்றதை அவளும் கேக்கக்கூடாதா?" கண்களில் மிதமிஞ்சிய ஆசையுடன் தன் கணவனை நோக்கினாள் சுந்தரி. கணவனின் தடித்த கீழுதட்டை மெல்லக்கடித்தாள்.



"உன் பொண்ணு வேற எங்கடீ போயிடுவா... மிஞ்சி மிஞ்சிப் போனா, நமக்கு வரப்போற அந்த அரை லூசு மருமவனைப் பாக்கத்தான் அவ ஓடிகிட்டு இருப்பா...."

"அந்தக்கூறு கெட்டவனைப்பத்தி எங்கிட்ட எதுவும் நீங்க பேசாதீங்க்க்.." சுந்தரி தன் வார்த்தையை முடிக்குமுன் அவள் இதழ்கள், குமாரின் உதடுகளுக்குள் முழுமையாக சிறைப்பட்டுவிட்டன. அவளுடைய இடது மார்பு கசங்கிக்கொண்டிருக்க, கண்களுக்குப் பின்னால் அவளுக்கு இருட்டிக்கொண்டு வந்தது. 

"அந்த பையனை எதுக்குடீ மல்லு குடுக்கறே? நேத்து அய்யோன்னு டின்னர் ஹால்லே தனியா உக்காந்து இருந்தவனை பாக்கறதுக்கே எனக்கு பாவமா இருந்திச்சிடீ... காதலிக்கற பொம்பளையோ, கட்டிக்கிட்ட பொண்டாட்டியோ கொஞ்சம் பாக்கறமாதிரி கண்ணுக்கு நிறைவா இருந்துட்டா... பசங்களுக்கே மனசுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான்டீ செய்யும்..." குமார் அவளைத் தன் மடியில் தள்ளிக்கொண்டார். 

"நீங்க இப்ப அவனுக்கு எந்த வக்காலத்தும் வாங்க வேணாம்..." சுந்தரி தன் கரங்களால் அவர் கழுத்தை வளைத்து அவர் முகத்தை தன் உதடுகளை நோக்கி இழுத்தாள். தன் உதடுகளில் வந்து மோதிய அவர் கன்னத்தை மென்மையாக கடித்தாள். 

"என்னமோ தெரியாம பேசிட்டான்... ஒழிஞ்சிப்போறான்... பிடிவாதம் பிடிக்காம விட்டுத்தொலைடி" விருட்டென தன் மடியில் கிடந்தவளை வாரி தன் மார்போடு இறுக்கி அணைத்து அவள் மூச்சு திணற திணற வெறியுடன் முத்தமிட்டார்.

"சரிங்க... செல்வா இன்னொரு தரம் நம்ம பொண்ணுகிட்ட கோவமா, எக்குத்தப்பா எதுவும் பேசறதுக்கு முன்னாடி, அவன் ஒண்ணுக்கு ரெண்டு தரம் யோசனை பண்ணணுங்க; யாராவது ஒருத்தர் நம்ம வீட்டுலே முறுக்கா இருந்தாத்தான், அவன் மனசுலேயும் ஒரு பயம் இருக்கும்..." அவர் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் சுந்தரி. 

"எழுந்து போய் கதவை கொஞ்சம் ஒருகளிச்சுட்டு வாயேன்.." குமாரின் பிடி தன் மனைவியின் உடலில் அதிகமானது.

"வேணாம் குமரு... சொன்னாக் கேளு... நம்ம வீட்டுலேருந்து அவங்க வீடு எவ்வளவு தூரம்? காரை எடுத்துக்கிட்டு போனவ, சட்டுன்னு அவனை கையோட இழுத்துக்கிட்டு இங்க வந்துட்டா அசிங்கமா போயிடும்... எதுவாயிருந்தாலும் ராத்திரிக்கு வெச்சுக்கலாம்... இப்ப என்னை விட்டுடுங்க.." 

சுந்தரி அவர் பிடியிலிருந்து துள்ளி எழுந்தாள். தன் ரவிக்கையை இழுத்துவிட்டுக்கொண்டாள். கணவன் விலக்கிய கொக்கியை பொருத்திக்கொண்டாள். முந்தானையை நீவி தோளில் போட்டுக்கொண்டாள். குமாரசுவாமி அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னப்பா... என்ன வேணும்?" கணவனின் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை உதாசீனப்படுத்த முடியாமல், சுந்தரி அவரை நெருங்கினாள்.

"ஒரு முத்தமாவது குடேன்டி.. சின்னப்பொண்ணு மாதிரி ரொம்பத்தான் அல்டிக்கிறே நீ"

கதவை ஓசையெழுப்பாமல் மூடியவள், தன் கணவரின் மடியில் உட்கார்ந்தாள் சுந்தரி. தோளை சுற்றியிருந்த முந்தானையை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். குமாரின் முகத்தை தன் மார்பில் புதைத்துக்கொண்டு அவர் உச்சியில் முத்தமிட்டாள். தன் முலைகளை இதமாக ரவிக்கையுடன் சேர்த்து கடித்த கணவனின் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்தி, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, குமாரின் தடித்த இதழ்களை கவ்வி நீளமாக முத்தமிடத்தொடங்கினாள்.

கடற்கரை சாலையில், நடைபாதையில், அலையடிக்கும் மணல் பரப்பில், ஊதிப்போயிருக்கும் தங்கள் உடலை குறைக்கும் முயற்சியில் மக்கள் நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள். யோகாசனம் என்ற பெயரில் பலர் உடலை வளைத்து நெளித்து தங்களையும் வருத்திக்கொண்டு, பார்ப்பவர்களையும் வருத்திக்கொண்டிருந்தார்கள்.

அருகம்புல் ஜூசை குடித்துக்கொண்டிருந்தவர்களின் எதிரில், வாழ்க்கையில் மனதிலிருந்து எப்போதும் சிரித்தே அறியாதவர்கள் வாயால் மட்டுமே சிரிக்க முயன்று தங்கள் முகத்தைக் கோணலாக்கிக்கொண்டிருந்தார்கள்.

தன்னைச்சுற்றி நடக்கும் இந்தக்கூத்துகளை, அழுக்குச் சட்டையுடன், சோர்ந்த முகத்துடன், சிவந்த கண்களும், வீங்கிய இமைகளுமாக, பசியால் களைத்து உடல் துவண்டு போனவனாய், மூடிக்கிடந்த சிறியக்கடையொன்றின் மரபெஞ்சில் உட்கார்ந்தவாறு வெறித்துக்கொண்டிருந்தான், செல்வா. மாலையில் அலுவலகம் முடிந்ததும், வழக்கமாக அந்தக் கடையில் சூடாக கிடைக்கும் வாழைக்காய் பஜ்ஜியை வாங்கித்தின்றவாறு, சுகன்யாவும் செல்வாவும், அரட்டையடித்துக் கொண்டிருப்பது வழக்கம்.

கடற்கரையின் மணல் பரப்பையொட்டியிருந்த கிளைச்சாலையில் கார் திரும்பியதுமே, சுகன்யாவின் கண்களில் செல்வா தென்பட்டுவிட்டான். தன்னைப்பார்க்க சுகன்யா காரில் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திராததால், தனக்குப்பின்னால் வந்து நின்ற வண்டியின் மேல் அவன் கவனம் உடனடியாகச் செல்லவில்லை.

"செல்வா..." சுகன்யா அவன் தோளை மென்மையாக அழுத்தினாள்.

தன் மனதுக்குள்ளிருந்த இனம் புரியாத இயலாமையின், ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த செல்வாவுக்கு, சுகன்யாவைக் கண்டதும் பேசமுடியாமல், தொலைந்து போன தன் பொம்மை திடிரென கிடைத்த சந்தோஷத்தில் விசும்பும் சிறு குழந்தையைப் போல், விசித்து விசித்து அழ ஆரம்பித்தான்.

"நான்தான் வந்துட்டேன்ல்லா... இப்ப எதுக்கு நீ அழறே?

விசித்துக்கொண்டிருந்த செல்வாவை, விருட்டென இழுத்து தன் காரின் பின் சீட்டில் தள்ளி கதவை மூடினாள். விம்மிக் கொண்டிருந்தவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு அவன் முதுகை மென்மையாக வருடத்தொடங்கினாள். செல்வாவின் விம்மலும், கேவலும் மெல்ல மெல்ல அடங்க, அவன் முகத்தைத் திருப்பி சினேகமாக சிரித்தாள் சுகன்யா.

சுகன்யாவின் மென்மையான சிரிப்பை எதிர்கொள்ளமுடியாமல் மீண்டும் தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, கண்களை மூடிக் கொண்டான் செல்வா. விழிமூடி தன் மடியில் கிடந்தவனின் முகத்தை நோக்கி குனிந்த சுகன்யா அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள் அவள். அவள் இதழ்கள் தன் முகத்தில் பட்டதும் உடைந்தான் செல்வா.

“சாரிம்மா சுகன்யா... உன்னை நான் ரொம்பவே படுத்திட்டேன்... செல்லம்... என்னை மன்னிச்சுடும்மா... செல்வாவின் உதடுகள், சுகன்யாவின் மெலிதாக வேர்வையில் நனைந்திருந்த மேல்சட்டையில், அவளுடைய வயிற்றருகில் புதைந்து அசைந்தன. அவன் கரங்கள் அவள் இடுப்பில் இயல்பாக ஊர்ந்து கொண்டிருந்தன.

மெல்ல நிமிர்ந்த செல்வாவை தன் மார்புடன் சேர்த்தணைத்துக் கொண்டு தன் கண்கள் கலங்க அவனை முத்தமிட்டாள் சுகன்யா. முத்தமிட்டவள் அவன் தலைமுடியில் தன் விரல்களை நுழைத்து இறுக்கினாள். சுகன்யாவின் தீண்டலின் சுகத்திலும், எச்சிலில் மினுமினுக்கும் அவள் உதடுகளின் மென்மையிலும் மயங்கிக் கிடந்தான் செல்வா.

"செல்வா... எங்கிட்ட மன்னிப்பெல்லாம் நீ கேக்கவேணாம்பா... பழசெல்லாத்தையும் மறந்துடு... அதுவே போதும் எனக்கு..." சுகன்யா செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.

"திரும்பவும் கேக்கறேன் என்னை நீ அழவிடமாட்டியே?" சுகன்யா அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

"...."

"ஏம்பா திரும்பவும் டல்லாயிட்டே...?" சுகன்யா அவன் கண்களைத் துடைத்தாள்.

"இப்பதானே சொன்னே எல்லாத்தையும் மறந்துடுன்னு..?"

"சரி.. சரி... இனிமே இப்படி பேசமாட்டேன்..." சுகன்யா சிரித்தாள். செல்வா அவள் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டான்.

"தேங்க் யூ சுகும்ம்மா..."

"ஏன்டா இப்படி ராத்திரி பூரா கொலைப்பட்டினி கிடந்தே... எதுக்கு உன் வீட்டுக்கும் போகாமே டிராமா பண்ணே?" வாடிய முகத்துடன் தன்னருகில் அமர்ந்திருந்த செல்வாவை வேகமாக இழுத்து மீண்டும் தன்னோடு அனைத்துக்கொண்டாள் சுகன்யா. செல்வா அசையாமல் அவள் அணைப்பில் மவுனமாகக் கிடந்தான்.

"இல்லேன்னா நீ என்னைப் பாக்கறதுக்கு இப்படி அடிச்சி பிடிச்சிக்கிட்டு ஓடி வந்திருப்பியா?" வெகு நாட்களுக்குப்பிறகு மனம்விட்டு சிரித்த செல்வா தன் முகத்தை அவள் கழுத்தில் புதைத்தான்.

"தண்ணீல குதிச்சு சாகறேன்னு மிரட்டினியே நாயே... ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன்." சுகன்யா அவன் முதுகில் பளீரென ஓங்கி அறைந்தாள்.

"சுகு... இப்ப மட்டும் நீ வந்திருக்கலே... கண்டிப்பா நான் இன்னைக்கு எக்குத்தப்பா ஏதாவது பண்ணித்தான் இருப்பேன்..." அவன் அவளை வெறியுடன் இறுக்கினான். சுகன்யாவின் முலைகள் அவன் மார்பில் அழுந்தி நசுங்கின. செல்வாவின் கரங்கள் அவள் முதுகில் தவழ்ந்தன.

"பிரா போடலியாடீச் செல்லம்.." செல்வா முணக, மீண்டும் முதுகில் அடிவாங்கினான் அவன்.

"சனியன் புடிச்சவனே கையை வெச்சுக்கிட்டு சும்மா இரேன்... அப்பத்தான் குளிச்சுட்டு வந்தேன்.. நீ சாகப்போறேன்னதும்... அப்படியே பதறிப்போய் ஓடியாந்தேன்.." சுகன்யா தன் வலுகொண்டமட்டும் அவனை இறுக்க, அவளுக்கும் அவனுக்குமிடையில் காற்று புகமுடியமால் தவித்தது.

“சுகு... திரும்பவும் உன்னை நான் தொலைக்க விரும்பலேடீ... உங்க அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போறியா?" சுகன்யாவின் காது மடலை அவன் கடித்தான்.

"ஏன் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு வழி தெரியாதா?"

"எனக்கு பயமா இருக்குடீ..."

“நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்ப உங்கம்மா என் மேல கோவமா இருந்தாங்க. இப்ப என் அம்மா உன் மேல கோவமா இருக்காங்க.”

“உங்கம்மாவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு சொல்லும்மா...” செல்வா சிணுங்கினான்.

“சாகறேன்னு சொல்லி சுகன்யாவை மிரட்டுடான்னு ஒருத்தன் சொன்னானே அவன் எங்க அம்மாவை டீல் பண்றது எப்படீன்னு சொல்லிக்குடுக்கலியா?” சுகன்யா களுக்கென சிரித்தவள், செல்வாவை உதறிவிட்டு காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தாள்.”

“சுகு நான் சீரியஸா பேசறேம்மா...” செல்வா அவளை கொஞ்சினான்.

“யோசிக்கலாம்... இப்ப வந்து சட்டுன்னு வண்டியை எடு... உன்னை உன் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு நான் கிளம்பியாகணும்...?

“சுகு... அந்த மோதிரம் எங்கேடி செல்லம்?” கார் அவன் வீட்டை நெருங்கியதும் செல்வா அவளை நோக்கி கெஞ்சலாக கேட்டான்...

“நீங்க எங்க வீசி அடிச்சீங்களோ அங்கேயேப் போய் தேடுங்கன்னு சொன்னேன்... இப்ப காரை ஒழுங்கா, ஜல்தியாப் பார்க் பண்ணிட்டு உள்ளே வந்து சேருங்க...” சுகன்யாவின் அதட்டலைக்கண்ட செல்வா ஒரு நொடி திகைத்தான்.

“என்னப் பாக்கறீங்க...?” காரிலிருந்து மறுபுறம் இறங்குபவனை நோக்கி வலது கண்ணை குறும்பாக சிமிட்டினாள் சுகன்யா. கண்ணைச்சிமிட்டியவள், தன் உடலை மிடுக்குடன் நிமிர்த்தி, துருத்திக் கொண்டிருக்கும் மார்புகள் அழகாக இட வலமாட, உதடுகளில் தவழும் இனிமையான புன்னகையுடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள். 


"அம்மா... சுகன்யா வந்திருக்காம்ம்ம்மா..." வெராண்டாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த மீனா ஹாலை நோக்கி கூச்சலிட்டவள், விருட்டென எழுந்து வந்து சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"வாம்மா... வா..." நடராஜனின் கண்கள் வெகு இயல்பாக வாசலைத் துழாவ, செல்வா சுகன்யாவின் பின்னால் தயக்கமாக தன் தலையை குனிந்து கொண்டு வந்ததைக் கண்டதும் மனதுக்குள் நிம்மதியானார்.

"வாடியம்மா... இப்பத்தான் உனக்கு இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா...?" மல்லிகா முகம் மலர்ந்தாள். விறுவிறுவென சுகன்யாவின் பக்கம் நடந்தாள். அவள் கையை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டாள்.

"அத்தே இப்ப உங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லையே?"

"இல்லடீம்மா... இப்ப எனக்குத் தேவலை... நீதான் கொஞ்சம் இளைச்சிட்டே... உன் ஃப்ரெண்டு எப்படியிருக்கா?"

"வேணிக்கு பையன் பொறந்திருக்கான்... ராத்திரி பூரா ஹாஸ்பெட்டல்லேதான் இருந்தேன். காலையில அஞ்சரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்..." சொல்லிக்கொண்டே செல்வாவைப் பார்த்தாள்.

"ஏம்ம்மா... இது என்னம்மா சுகன்யா...? சட்டைக்குள்ளே ஒண்ணும் போடலியா?" காதில் கிசுகிசுத்தாள்.

"சாரி அத்தே... அப்பத்தான் குளிச்சிட்டு வந்தேன்... உங்க பிள்ளை போன் பண்ணி... பத்து நிமிஷத்துல நீ வரலேன்னா கடல்லே குதிச்சிடுவேன்னு மிரட்டல் விடவே... கதிகலங்கி ஓடினேன்... தப்புதான் அத்தே... இனிமே இப்படி நடக்காது..." அவளும் மல்லிகாவின் காதில் குசுகுசுவென்றாள்.

"என்னம்மா ரகசியம்... கொஞ்சம் சத்தமாத்தான் பேசுங்களேன்?" நடராஜன் முகத்தில் குழப்பத்துடன் வினவினார்.

"பொட்டைச்சிங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்... எல்லாத்துக்கும் உங்களுக்கு விளக்கம் குடுத்தே ஆகணுமா இப்ப... பெத்தப்புள்ளையை கட்டுல வைக்க முடியலே!!?"

"மாமா... நீ எப்ப என் வீட்டுக்கு வர்றேன்னு கேட்டீங்க... நான் வந்துட்டேன்... இதுக்கு மேல உங்க விருப்பம் எதுவானாலும் அதுல எனக்கு பூரண சம்மதம்..." சுகன்யாவின் முகம் செந்தாமரையானது.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா... உன்னோட இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்...."

"மல்லிகா... சட்டுன்னு டிஃபனை எடுத்து வைம்மா... வீட்டுக்கு வந்த குழந்தை நம்ம கூட உக்காந்து சாப்பிடட்டும்..."

"ராத்திரி பூரா எங்கடா சுத்திக்கிட்டு இருந்தே? புள்ளையாடா நீ... உன்னால வீட்டுல இருக்கறவங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்குது? பத்தாக்குறைக்கு இவளை வேற மிரட்டியிருக்கே?" இதுவரை பொறுமையாக இருந்த மல்லிகா சீறினாள்.



"போய் சட்டுன்னு குளிச்சுட்டு வாங்களேன்... எல்லாருமா ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்... எனக்கு நிறைய வேலை இருக்கு... இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு போறேன்... இப்பவே சொல்றேன்... நல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க... நீங்கதான் என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப்போகணும்..."

சுகன்யா திரும்பி செல்வாவை அதட்டினாள். என்னாச்சு இவளுக்கு... வீட்டுக்குள்ள வந்ததுலேருந்து விரட்டு விரட்டுன்னு என்னை விரட்டறா? சட்டுன்னு அம்மா இவகூட சேர்ந்துக்கிட்டாங்க?செல்வா திகைத்தான்...

"அத்தே... ப்ளீஸ்... என் எதிர்ல அவரை நீங்க எதுவும் சொல்லாதீங்க.. இனிமே எப்பவும் இப்படி நடக்காது... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்." சுகன்யா மல்லிகாவை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கிச்சனுக்குள் நுழையும் முன் திரும்பினாள். ஹாலில் விக்கித்துப்போய் நின்றவனை நோக்கி தன் உதட்டை சுழற்றி "வெவ்வே.." என்றாள். 



சுகன்யா... 109

சம்பத்துடன் சுகன்யா விருந்தளிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலுக்குள் நுழையும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. அத்தான்... நீங்க அனுவை அழைச்சிக்கிட்டு உள்ளே போங்க... பின்னாடியே நான் வர்றேன்.

"ஹலோ... சுகன்யாவா...?"

"யெஸ்... யெஸ்... சொல்லுங்க சங்கர்... ஹவ் ஆர் யூ?"


"நல்லாருக்கேன்... சுகா; உன் அத்தானோட மேரேஜ்ல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சா..." சங்கரின் குரலில் உற்சாகமில்லை.

"எந்த கொறையும் இல்லாம கல்யணம் முடிஞ்சுது... நீங்க இன்னைக்கு டின்னருக்கு வர்றீங்தானே?"

"இப்ப நீ எங்கேருக்கே சுகன்யா?"

"மாம்பலத்துலே, ஃபங்கஷன் நடக்கற இடத்துலேதான் இருக்கேன். நாளைக்கு நைட் டெல்லிக்குப் போறேன். காலையில உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்."

"ம்ம்ம்.. சாரி சுகன்யா... இன்னைக்கு டின்னருக்கு எங்களால வரமுடியாது.... " சங்கரின் குரலில் சிறிது கலக்கமும், பதட்டமும் இருப்பது போல் அவளுக்குப்பட்டது.

"என்னாச்சு.. ஏன்...? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க... சங்கர்..." சுகன்யா பரபரப்படைந்தாள்.

"வேணிக்கு உடம்பு சரியில்லே... இடுப்பு வலி ஸ்டார்ட் ஆயிடுச்சி... இது அந்த பெயின்தான்னு சொன்னா; இப்பத்தான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணேன்... நார்மல் டெலிவரி ஆகுமான்னு தெரியலே... சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்னு டாக்டர் சொல்றாங்க;"

"இதுக்கு ஏன் பயப்படணும்...?"

"சுகன்யா... எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு..."

"இந்த நேரத்துல நீங்கதானே அவளுக்குத் தைரியம் சொல்லணும்... அதை விட்டுட்டு கொழந்தை மாதிரி கலங்கறீங்க..!"

"அப்பாவும் அம்மாவும் பெங்களூர் போயிருக்காங்க... நாளைக்கு காலையில வர்றாங்க..."

"இப்ப அவ கூட லேடீஸ் யார் இருக்கறது?"

"நம்ம பக்கத்து வீட்டம்மா இருக்காங்க... ராத்திரிக்கு அவங்க திரும்பி போகணுமில்லே..."

"சரி..."

"ஆஸ்பத்திரியிலே எல்லாத்தையும் நாங்க கவனிச்சுக்கறோம் அப்படீங்கறாங்க... ஆனாலும் வேணி... உன்னை கொஞ்சம் கூப்பிடுங்கறா... உங்க வீட்டு பங்கஷனை விட்டுட்டு உன்னால எப்படி வரமுடியும்ன்னேன்?"

"சங்கர்.. என்ன பேசறீங்க நீங்க...? டின்னரை விடுங்க... நான் இல்லேன்னா அது நடக்காதா? அது பாட்டுல அது நடக்கும்... எந்த ஹாஸ்பிட்டலே வேணி இருக்கா? மொதல்லே அதைச் சொல்லுங்க..."

"என் வீட்டுக்கு பக்கத்துலேதான்.. உனக்கு ஞாபகம் இருக்கா... செல்வாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனப்ப அவர் இருந்தாரே அதே ஹாஸ்பெட்டல்தான்..." 

"டோண்ட் வொர்ரீ... ட்வ்வென்டி மினிட்ஸ்லே நான் வந்துடறேன்.. வேற ஏதாவது வேணுமா... சொல்லுங்க... வர்ற வழியிலே வாங்கிட்டு வந்துடறேன்..."

"ஓண்ணும் வேண்டாம்... வேணியோட அம்மாவும் சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க... விடியறதுக்குள்ள வந்து சேர்ந்துடுவாங்க.. இப்போதைக்கு அவளுக்கு தெரிஞ்ச ஒருத்தர்... ஒரு மாரல் சப்போர்ட் எனக்கு வேணுங்கறா... அவ்வளவுதான்...."

"ராத்திரி பூரா வேணியோட நான் இருக்கேன்... நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க..." சுகன்யா எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். போகவேண்டிய இடத்தைச்சொல்லி சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். 

* * * * *

"வந்துட்டியாடீ சுகா.. ரொம்ப தேங்ஸ்டீ... உன்னைப் பாத்ததும் எனக்கு நிம்மதியா இருக்குடீ" சுகன்யாவின் கைகளை பற்றி இறுக்கினாள் வேணி. 

"வேணி.. உரல்லே தலையை விட்டுட்டே.. உலக்கைக்கு பயந்தா முடியுமாடீ?" வேணியின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

"வலி உயிர் போவுதுடி ... உனக்கு கிண்டலா இருக்கா?" சுகன்யாவின் இடுப்பைக் கிள்ளினாள் வேணி.

"சாரி டியர்.. தமாஷுக்கு சொன்னேன்.."

"நான் பயப்படலேடி.. அதுதான் ரொம்ப பயப்படுது... உன்னை கூப்பிடறேன்னு சொன்னதே அதுதான்... அதும் மூஞ்சைப்பாத்தேல்ல... 'வேணீ ரொம்ப வலிக்குதாம்மா..?' இனிமே உன்னை நான் தொடவே மாட்டேன்னு அழுவுது... சிஸ்டருங்க வாயைப் பொத்திக்கிட்டு சிரிக்கறாங்க.. என் மானத்தை வாங்காதே... வெளியிலே போன்னு அதுங்கிட்ட கத்திட்டேன்..." அத்தனை வேதனையிலும் தன் கணவனை நினைத்து பெருமையுடன் சிரித்தாள் வேணி.

"பிரசவ வைராக்கியம் பொம்பளைக்குத்தான்னு என் பாட்டி சொன்னாங்க.. இங்கே கதை தலை கீழா இருக்கு.." வேணியின் பறக்கும் தலைமுடியை அவள் காதுக்குப்பின்னால் தள்ளினாள்.

"எனக்கு வைராக்கியம்ல்லாம் இல்லடீ.. எத்தனை வலிச்சாலும் பொறுத்துக்குவேன்.. எனக்கு ஒண்ணு இல்லே; நாலு குழந்தை வேணும்டீ..." வேணி தன் இடது கண்ணை சிமிட்டினாள்.

"ஒண்ணைப் பெத்தேன்.. அதுக்கு ஒரு கல்யாணத்தை ஒழுங்காப்பண்ண முடியலேன்னு... என் அம்மா சலிச்சிக்கிறாங்க..!" சுகன்யாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

"உங்க ரெண்டு பேரோட லடாய் இன்னும் முடியலியாடீ... யம்மா..." வேணி தன் கேள்வியை முடிக்க முடியாமல் முனகினாள்.

"என்னடீ வேணி..?"

"சுகா... என்னமோ நழுவுற மாதிரி இருக்குடி... சீக்கிரமா டாக்டரை கூப்புடுடீ...யம்ம்ம்மா..." வேணி கூவினாள். 

சங்கர் கையை பிசைந்து கொண்டு அறையின் உள் ஓடிவந்தான். மிஸ்டர்... நீங்க கொஞ்சம் வெளியிலே ஹால்லே உக்காருங்க... முழுசாக இருபது கூட முடியாத ஒரு வெள்ளை கவுன் அணிந்திருந்த இளசு சங்கரை வெளியில் துரத்தியது. வேணி லேபர் ரூமுக்கு உடனடியாக மாற்றப்பட்டாள். லாபியில் இரும்பு சேர்கள் காலியாக கிடக்க சங்கர் தன் கண்களை மூடிக்கொண்டு ஒற்றைக்காலில் சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தான். 

ஏன் இவன் இப்படி பரிதவிச்சிப்போறான்...? அழுதாலும் பிள்ளையை அவதானே பெத்து எடுக்கணும்? பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசையா இவனுக்கு? சங்கரின் அருகில் சென்று நின்றாள் சுகன்யா... ஏனோ தெரியவில்லை அவளுக்கு அடக்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. 

"என்ன சுகன்யா... என்னைப்பாத்தா உனக்கு சிரிப்பு வருதா?"

"ரொம்பவே பயப்படறீங்களே...?" சுகன்யா ஆதரவாக அவன் கையைப் பற்றி இழுத்து சேரில் உட்கார வைத்தாள். தானும் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள். 

"சுகன்யா... ஐ லவ் வேணி வெரி மச்... யூ நோ... அவ வலியிலே துடிக்கிறாளே...?" சங்கரின் குரல் தழுதழுத்தது. 

"ஐ நோ..." தன் விழிகளால் பதிலளித்தவள் சங்கரின் இடது கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

"இந்தாங்க... இந்த காஃபியை சாப்பிடுங்க... யூ சீம் டு பி வெரி டயர்ட்..." சுகன்யா அவனை நோக்கி புன்னகைத்தாள்.

"சாரி சுகன்யா... நீ எப்படி இருக்கேன்னுகூட உன்னை ஒரு வார்த்தை கேக்கலே நான்... அயாம் ஸோ செல்ஃபிஷ்... "வெட்கத்துடன் சிரித்தான் அவன்.

"வேணியை நினைச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு? சுகன்யா இனிமையாக புன்னகைத்தாள். காஃபியை நீளமாக உறிஞ்சி, ரசித்து குடித்தாள். 

"ஏன்...?" 



"உங்களை மாதிரி ஒரு கேரிங் ஹஸ்பெண்டு எத்தனை பேருக்கு கிடைப்பாங்க?"

"இல்லை சுகன்யா... வேணி மாதிரி ஒரு பொம்பளை கிடைக்க நான்தான் குடுத்து வெச்சிருக்கணும்..." சுகன்யா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். செல்வாவின் முகம் அவள் மனதில் வந்தாடியது..

"உங்களை எங்கெல்லாம் தேடறேன் நான்?" வெள்ளை கவுன் ஒன்று அவர்களை நோக்கி வந்தது. சங்கர் வேகமாக அவளை நோக்கி ஓடினான். 

"கங்கிராட்ஸ்... உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கான்... உங்க வைப் ரொம்ப கோஆப்ரேட் பண்ணாங்க... நார்மல் டெலிவரிதான்..." சிரித்தாள் அந்த இளம் பெண்.

"என்னோட வாழ்த்துக்கள்" சங்கரின் கையை இறுகப்பற்றி குலுக்கினாள் சுகன்யா. 

"தேங்க் யூ சுகா..." சுகன்யாவின் வலது கையை உயர்த்தி, கண்களில் நட்புணர்ச்சி ததும்பி வழிய, மென்மையாக அவள் புறங்கையில் முத்தமிட்டான் சங்கர்.

மெல்லிய வாடைக்காற்று உடலுக்கு இதமாக வீசிக்கொண்டிருந்த விடிந்தும் விடியாத நேரத்தில் சுகன்யா தன் வீட்டையடைந்தாள். வீட்டின் முன்புறத்திலிருந்த சிறிய தோட்டத்தில் நீலமும், வெண்மையுமாக, பூத்திருந்த சங்குப்பூக்களை, சுந்தரி பறித்துக்கொண்டிருக்க, புல் தரையில் விழுந்திருந்த பவழமல்லிகளை திரட்டி மாலையாக கோத்துக்கொண்டிருந்தாள் பாட்டி கனகா. தான் வந்த ஆட்டோவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவள் பூத்தொடுத்துக்கொண்டிருந்த பாட்டியை இறுக கட்டிக்கொண்டாள்.

"குளிச்சிட்டு சுத்தபத்தமா பூஜைக்காக பூ கட்டறவங்களை ஆஸ்பத்திரியிலே வந்ததும், வராததுமா கட்டிப்புடிக்கறியே?ஏன்டீ... கொஞ்சமாவது புத்தி இருக்கா உனக்கு?" சுந்தரி தன் விழிகளை உருட்டி, புருவத்தை நெறித்தாள். னாள்.

"சுந்து... கொழந்தையை விரட்டாதேடீ... எனக்கு தெய்வமெல்லாம் இந்தக்கொழந்தைக்கு அப்புறம்தான்..."

"அப்படி சொல்லுங்கப்பாட்டீ..." சுகன்யா தன் தாயை நோக்கி வாயைக்கோணி பழிப்புக்காட்டினாள்.

"வேணி எப்படி இருக்காடீ?"

"நல்லா இருக்காம்மா... இப்போதைக்கு ஒண்ணும் பிரச்சனையில்லே... வசந்தி அத்தை வந்தாச்சு... அவளோட பேரண்ட்ஸும் அரைமணி நேரத்துக்கு முன்னாடீ வந்து சேர்ந்துட்டாங்க.. அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.."

"கண்ணு.. இந்தக் காப்பியை குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கும்மா... சாயந்திரம் நீ ஊருக்கு கிளம்பணும்மா..." சிவதாணு அவளிடம் ஒரு கப்பை நீட்டினார்.

"தேங்க்ஸ் தாத்தா..." காஃபியை வாங்கிக்கொண்டவளின் கண்கள் இலேசாகக் கலங்கியது.

"ஏம்மா?"

"உங்களைல்லாம் விட்டுட்டு போகணுமே... அதை நெனைச்சேன்.. கண்ணுல தன்னால தண்ணி வருது தாத்தா..." சுகன்யா கண்களைத் துடைத்துக்கொண்டவள் தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. தோட்டத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த சொர்ணபட்டி பூக்கள் தங்கமாக மின்ன ஆரம்பித்தன.

"அப்புறம் எப்பம்மா வருவே..?"

"அடுத்த மாசம் மீனா கல்யாணத்துக்கு வரலாம்ன்னு இருக்கேன் தாத்தா..." அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. எழுந்து மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

* * * * *

"சுகன்யா... குட் மார்னிங்..." சீனுதான் லைனில் வந்திருந்தான்.

"வெரி குட்மார்னிங்... ஹவ் ஆர் யூ சீனு?"

"சுகா... இப்ப நீ எங்கேருக்கே?"

"வீட்டுலேதான் இருக்கேன்.."

"லாஸ்ட் நைட் செல்வா உங்கிட்ட பேசினானா?"

"இல்லையே சீனு..."

"நேத்து ராத்திரி அவன் வீட்டுக்கே வரலையாம்.... இப்பத்தான் மீனா போன் பண்ணா..."

"ஓ மை காட்..."

"டின்னர்ல உன்னைக் காணோம்ன்னு ரொம்பவே எரிச்சலோட இருந்தான். "எழுந்து வாடா சாப்பிடலாம்னு' எட்டுமணிக்கு கூப்பிட்டப்ப, 'ப்ச்ச்ச்க்குன்னான்..." நானும் மீனாவும் சாப்பிட்டு திரும்பி வந்தப்ப ஹால்லே அவனைக் காணோம். வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சோம்...."

"அவரைக் கொஞ்சம் பாத்துக்குங்கோன்னு உங்ககிட்ட சொன்னேன்ல்லா...??"

"அயாம் சாரி சுகன்யா... ஆனா அவன் என்னக் கொழந்தையா...? இருபத்து நாலு மணி நேரம் அவன் பின்னாடியா ஒருத்தன் நிக்கமுடியும்...? அவன் செல் அடிக்குது... யார் காலையும் எடுக்காம அடம் பிடிக்கிறான்...!?"

"என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க...?" சுகன்யாவுக்கு இலேசாக கால்கள் நடுங்கின. நிற்கமுடியாமல் தன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

"சுகன்யா... யூ ஆர் ஆல்சோ நாட் எ சைல்ட்.... நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது? மீனா சொன்னதை உனக்குச் சொல்லிட்டேன்..."

"கோச்சிக்காதீங்க...சீனு "

"ப்ளீஸ்... சுகன்யா... திரும்பவும் சொல்றேன்... இன்னைக்கு நீ தில்லிக்கு கிளம்பறதுக்குள்ள, ஒரு ரெண்டு நிமிஷம் அவனை தனியா சந்திச்சி, அவன் என்னதான் சொல்றாங்கறதை கேளு..."

"ம்ம்ம்..."

"இதுக்கு மேல உன் பாடு... அவன் பாடு..." சீனுவின் கால் சட்டென அணைந்தது. 


சுகன்யா மணியைப் பார்த்தாள். நேரம் ஆறு நாற்பதாகியிருந்தது. சட்டென பாத்ரூமை நோக்கி விரைந்தாள். இருபதே நிமிடங்களில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, ஷவரைத் திறந்து கொண்டு நின்றாள். முன்னிரவு சரியாக உறங்காததால் கண்களில் மிச்சமிருந்த எரிச்சல் இலேசாக விலக, முதுகில் கோடாக வ்ழியும் தண்ணீர் வரிகளுடன் அறைக்குள் நுழைந்தாள்.

"எங்கேப் போயிருப்பான் செல்வா? சீனு சொன்ன மாதிரி அவன் என்ன கொழந்தையா..?. எதுக்காக இப்படி சில்லியா பிஹேவ் பண்றான்?"

ஈரம் சொட்டும் தலையில் மெல்லிய பருத்தித் துணியை சுற்றியிருந்தாள் சுகன்யா. விம்மித் ததும்பும் மார்புகளை இளம் ரோஜா நிற தேங்காய்ப்பூ துவாலையில் மூடி மறைத்திருந்தாள். நடந்த வேகத்தில் அவள் முன்னழகும், பின்னழகும், சீரான கதியில் அசைய, ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தன் உடலழகை ஒரு கணம் நோட்டம் விட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுகன்யா தன் புருவங்களை கவனத்துடன் ஒதுக்கியிருந்தாள். வலுவான முழங்காலுக்கு கீழ் ஆடுசதையில் மெலிதாக ஓடும் பூனை முடிகளையும் வழித்து எடுத்து இருந்தாள். அக்குள்களையும் கவனமாக சுத்தமாக்கியிருந்தாள். தன் தலைமுடியின் முனைகளை சீராக வெட்டியிருந்தாள். நகங்களில் வெளிர் நிற ரோஜா வண்ணத்தைப் பூசியிருந்தாள்.

பாட்டி தனக்கு கொடுத்திருந்த தங்க வளையல்களை இரு கைகளிலும், எடுத்து மாட்டிக்கொண்டிருந்தாள். கழுத்தில் மின்னும் மெல்லிய தங்கச்சங்கிலி, குலுங்கும் மார்புகளின் பிளவுகளுக்கு நடுவில் சென்று நாபிக்குழிக்கு மேல் தஞ்சமடைந்திருந்தது. இந்திரலோகத்துல ரம்பை, ஊர்வசின்னு இருந்தாங்களாமே.. அவங்கள்ளாம், இந்தக்காலத்து பொண்ணுங்க மாதிரி தங்களோட உடம்புல இருக்கற முடியையெல்லாம் எடுத்திருப்பாங்களா?இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், சுகன்யாவின் உதடுகள் இலேசாக விரிந்தன.

அலமாரியைத்திறந்து மேலும் கீழும் துழாவி கருப்பு நிற பிராவை தேடினாள். அம்மாவைக் கேக்கலாமா? உன் பிராவை நான் ஏன்டீ எடுக்கறேன்... அம்மாவின் முகம் போகும் போக்கை அந்த நேரத்தில் பார்க்க விரும்பாமல், சோம்பேறித்தனத்துடன், மார்புக்கச்சையைத் தேடுவதை நிறுத்திவிட்டு, வெற்று மார்பில் வெள்ளை நிற காட்டன் சட்டையைப் போட்டுக்கொண்டாள். இடுப்பில் காக்கி நிற ஜீன்சை ஏற்றிக்கொண்டாள்.

சுகன்யாவின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப, அவள் தோளில் கிடந்த மெல்லிய வெள்ளை நிற பருத்தி சட்டையின் பின்னால், அவள் நெஞ்சுக்கனிகள் ஊசலாடிகொண்டிருந்தன. சிறிதே உற்றுக் கவனித்தால் அவளுடைய செழித்த முலைகளின் கருத்த காம்புகளின் அழகையும் அந்த சட்டை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும், இயற்கையாகவே கொழுத்து குலுங்கும் தன் முன் அழகையும், இடுப்புக்கு கீழ் அணிந்திருந்த டைட்டான் ஜூன்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருக்கும் பின்னழகுகளையும் தொட்டுப் பார்த்துக்கொண்ட சுகன்யாவின் மனதில் லேசாக ஒரு கர்வம் சட்டென எழுந்தது. அழகாத்தான் இருக்கேன் நான். பின்னாடியும் நான் கொஞ்சம் பெரிசாத்தான் ஆயிருக்கேன்.

நாலு மாசமா அரிசியை கொறைச்சு, சப்பாத்தியும், தாலும், வெஜீடபிள்ஸ், பால், தயிர்ன்னு, ருசியா சாப்பிட்டது செரிக்கறதுக்கு, தினமும் விடாம காலையில, மாலையிலேன்னு பத்து கிலோ மீட்டர் நடந்த நடை, அதோட வேலையை நல்லாத்தான் காமிச்சி இருக்கு. தேவையில்லாத சதையெல்லாம் கொறைஞ்சு, உடம்பே ஒரு மாதிரி சிக்குன்னு புடிச்சு விட்டமாதிரி ஆயிடிச்சே.. சுகன்யாவின் உதடுகளில் குறுநகையொன்று எழுந்தது.

"ரொம்பத்தான் அல்டிக்காதேடீ?" மனதில் எழுந்த குதூகலம் சட்டென வடிந்தது.

"என்ன சொல்றே நீ... சும்மா என்னை ஊசியா குத்தறேதே உன் தொழிலாப் போச்சு..." மனதிடம் அன்று சண்டையிட முடிவு செய்தாள் சுகன்யா.

"யாருக்குடீ பிரயோசனம்?"

"புரியலே.."

"உன் அழகால யாருக்குப் பிரயோசனம்ன்னு கேக்கிறேன்...? அழகை ஆராதிக்கறதுக்கு ஒரு ஆள் வேணாமா? காட்டுல பூவா பூத்து குலுங்குது... ஆளில்லாத காட்டுல பூத்துக்குலுங்கறது செடிக்கு பலனா? இல்லே காட்டுக்குத்தான் பலனா? எதுக்கு பலன்..? யாருக்குப் பலன் அதனால...?"

"ம்ம்ம்... நீ சொல்றது சரிதான்..." தலையில் சுற்றியிருந்த துணியை உதறி, நீளமான தன் முடியை தட்டி உலர வைத்தாள்.

"தோட்டத்துல பூக்கற பூவை உன் அம்மாவும் பாட்டியும் மெனக்கெட்டு ஏன் கிள்ளித் தொடுத்து தெருக்கோடி பிள்ளையாருக்கு போடறாங்க; மிஞ்சிப் போனதையும், உன் அம்மாத் தலையில சூட்டி அழகு பாக்கறாங்க உன் பாட்டி... இதெல்லாம் ஏன்? அந்த பூக்கள் மலர்ந்ததுக்கு ஒரு அர்த்தம் வேணுமில்லையா? அதுக்காகத்தான்..."

"அதுக்காக என் ஒடம்பு அழகை, பாருங்க... பாருங்கன்னு யாருக்காவது அவுத்தா காமிக்க முடியும்..?" சர் சர்ரென தன் இரு அக்குள்களிலும் சந்தன வாசனையை பீய்ச்சிக்கொண்டாள்.

"அவுத்து காட்டவேண்டாம்... நீ பொத்தி பொத்தி வெச்சிருக்கற அழகையும் ஒருத்தன் ரசிச்சாத்தான் அந்த அழகுக்கும் கவுரம்டீ... பாத்து ரசிச்சு... நீ அழகா இருக்கேன்னு ஒருத்தன் உன்னைப் பாராட்டினாத்தான் உனக்கும், உன் அழகுக்கும் மதிப்புடீ.."

"புரியுது... நீ சொல்றதும் உண்மைதான்.."காலில் கேன்வாஸ் ஷுவை எடுத்து மாட்ட ஆரம்பித்தாள்.

"என்னப் புரிஞ்சுது...?"

"சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு... என் அழகுக்கு சொந்தக்காரனை நான் இன்னும் பாக்கவேயில்லே. எப்பவும் டிப் டாப்பா டிரஸ் பண்றவன் , தெனமும் பள பளன்னு ஷேவ் பண்ணிக்கறவன், பத்து நாள் தாடியோட, பரதேசி மாதிரி ஒரு அழுக்குப் பேண்ட்டையும், அக்குள்ல்ல தையல் பிரிஞ்ச சட்டையும், போட்டுக்கிட்டு ஆஃபிக்கு வர்றானாம்."

"அப்டியா?"

"அவன் ஷூவை தொடைச்சு பாலீஷ் போட்டு... எத்தனை நாள் ஆச்சோ? பாக்கறதுக்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்கான்னு என் ஃப்ரெண்டு வித்யா சொன்னா..."

"யாரைப் பத்திடீ சொல்றே..?" மனசு எக்காளமாக கூவியது.

"நிஜமாவே தெரியலியா நான் யாரை சொல்றேன்னு..?" காய்ந்த தலை முடியை வகிடெடுக்காமல் நெற்றிக்குப் பின்னால் தள்ளி ரப்பர் பேண்டால் இறுக்கினாள் சுகன்யா.

"எங்கிட்ட கொஞ்சாதடீ... உன் மனசுல யார் இருக்கறதுன்னு எனக்கெப்படித் தெரியும்...?"

"அதான்.. என் செல்வா...?"

"என்னது... உன் செல்வாவா?"

"பின்னே.. எங்களுக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும் அவன் என் செல்வாதான்.."

"அட்ரா சக்கை... உன் கையைப் பிடிச்சு நெறிச்சவன்... தனியா வாடீன்னு கூப்டானே... அன்னைக்கு ஏன்டீ நீ அவன் பின்னால போவலே?"

"அதான் இன்னைக்கு அவனை மீட் பண்றேன்னு சொல்லியிருக்கேனே?"

"நல்லா இருக்குதுடீ உன் கூத்து... நீ டெல்லியில இருக்கும் போது... நாலு தரம் உனக்கு போன் பண்ணான். நீ தானேடீ திமிர் பிடிச்சிப் போய் செல்லை ஆஃப் பண்ணே..?

"அப்ப எனக்கு அவன் மேல இருந்த கோவம் முழுசா தீரலை.."

"இப்பத் தீந்து போச்சா..?"

"கோவமா... அவனைப் பாத்தா என் வயிறு எரியுது..? முகத்தில் இலேசாக ரோஸ் பவுடரை அள்ளி அப்பிக்கொண்டாள்.

"எதுக்குடீ..?"

"என் செல்வா யாருமேயில்லாத அனாதை மாதிரியில்லா ராத்திரி பூரா எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கானாம்?" கன்னங்களில் படிந்திருந்த பவுடரை மெல்ல உள்ளங்கைகளால் அழுத்தி தேய்த்தாள்.

"அவன் மேல இவ்வளவு அக்கறை இருக்குல்ல உனக்கு?"

"ம்ம்ம்..."

"என்னடீ முனகறே..? வாயைத் தொறந்து சொல்லேன்..?"

"ஆமாம்.. ஐ லவ் ஹிம் சோ மச்... எப்பவும் என் மனசுக்குள்ளவேதான் அவன் இருக்கான்... அவன் எனக்கு பிரசண்ட் பண்ண மோதிரத்தை இன்னைக்கு வரைக்கும் நான் என் விரல்லேருந்து கழட்டவேயில்லே..." சுகன்யாவின் மனதில் பனியாக உறைந்திருந்த காதல் மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தது.

"சரி.. இப்ப அவன்... அதான்டீ உன் செல்வா... உன் வீட்டுக்கு வந்தா.. அவனை வான்னு கூப்பிட்டு பேசுவியா?"

"ம்ம்ம்.. என் அம்மா பெர்மிஷன் குடுத்தா... அவங்க பேசவிட்டா பேசுவேன்..?'

"அப்புறம்...?"

"அவனைக் என் ரூமுக்கு இழுத்துக்கிட்டு வந்து அப்படியே கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பேன்.. அவன் கிட்ட முத்தம் வாங்கிப்பேன்..?"

"அம்மா என்னடீ அம்மா நடுவுலே? ரொம்பத்தான் நல்லப்பொண்ணு மாதிரி ஆக்டிங் குடுக்கறே?"

"எனக்கு என் அம்மாவும்தான் ரொம்ப முக்கியம்... என்னை வளத்த அவங்களும்தான் எனக்கு முக்கியம். மொதல்லே அவங்க; அப்புறம்தான் செல்வா; நான் டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ எங்கம்மாதானே எனக்கு புத்தி சொல்லி அனுப்சாங்க?"

"என்ன சொன்னாங்க...?"

"நீங்களா அடிச்சிக்கிறீங்க... நீங்களா கூடிக்கிறீங்க.. திரும்பவும் அடிச்சிக்கிறீங்க.. அடிச்சிக்கிட்டு என் நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணுன்னு இங்க வந்து எங்கிட்ட ஏன்டீ குதிக்கறே... கல்யாணங்கறது குழந்தைங்க விளையாடற சொப்பு விளையாட்டான்னு திட்டினாங்க?"

"ம்ம்ம்..."

"செல்வாவே திரும்பி வந்து... சுகன்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு என்னைக்கேக்கற வரைக்கும்... நீ பொத்திகிட்டு இருக்கணும்டீன்னு சொன்னாங்க..."

"அப்புறம்...?"

"என் புருஷனுக்காக முழுசா பதினைஞ்சு வருஷம் நான் பொறுமையா காத்து இருந்தேன்டீ... கடைசியா என் புருஷன்தான் என்னைத் தேடிகிட்டு வந்தான்; அதே மாதிரி அவன்தான் உன்னைத் தேடி வரணும்; திரும்பவும் நீயா போய் அவங்கிட்ட ஜொள்ளு விடற வேலை வெச்சுக்கிட்டேன்னு எனக்குத் தெரிஞ்சுது... உன்னை வெட்டிப்போட்டுடுவேன்னு தீத்து சொன்னாங்க..."

"ஸோ... அவன் கிட்ட நீ பேசாததுக்கு இதுதான் காரணமா.."

"இதுவும் ஒரு காரணம்..."

"அவன் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டான்னு நீ சொன்னது; உன் நடத்தையை அவன் சந்தேகப்பட்டான்னு குதிச்சது; இதெல்லாம் இப்ப என்ன ஆச்சு...?"

"அதையெல்லாம் நான் மறந்துட்டேன்..."

"நாளைக்கு அவன் திரும்பவும் உன்னை இவன் கிட்ட பேசாதே... அவன் கிட்டே சிரிக்காதேன்னு சொன்னா என்னடீ பண்ணுவே?"

"தெரியலை..."

"திரும்பவும் அவனை விட்டு பிரிவியா?"

"அதை அப்ப பாத்துக்கலாம்...?"

"அப்டீன்னா இன்னைக்கு நீ உன் அம்மாவை மீறி, அவங்க சொன்னதையெல்லாம் காத்துல பறக்கவிட்டுட்டு, அவனைப் போய் பாக்கப்போறே...??"

"இவ்வளவு நேரமா என் கூட பேசற நீ யாரு? நீ என் மனசுதானே...? நீ என் மனசாட்சிதானே? என் மனசுல இருக்கறது உனக்குத் தெரியலையா?"

"தெரியும்டீ.. உன் திருட்டுத்தனமெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்..."

"நான் என்ன திருட்டுத்தனம் பண்றேன்...?"

"அடங்குடீ... சும்மா எகிறாதே... உன் ரெண்டு மாருக்கும் நடுவுல ஆடிகிட்டு இருக்கே அந்த டாலருக்குள்ள, யார் கண்ணுக்கும் தெரியாம, குட்டியா, வெட்டி ஒட்டி பதுக்கி வெச்சிருக்கியே அந்த போட்டோ யாருதுடீ?"

"அது என் ஆளோட போட்டோ... என் செல்வாவோட போட்டோ.."

"அப்ப இத்தனை நாளா உன்னை நீயேத்தானே ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கே..?"

"இன் எ வே.. யெஸ்..." சுகன்யா சிறிய சிவப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டிக்கொண்டாள்.

"நிஜம்மா...?"

"நிஜம்மாத்தான்.. அவனும் என்னை விட்டு பிரிஞ்சு இருந்ததுலே சுத்தமா எரிஞ்சுதான் போயிருக்கான்... அவன் மூஞ்சைப் பாத்தாலே தெரியலையா?"

"ம்ம்ம்..."



"ராத்திரி பூரா வீட்டுக்கேப் போகலையாமே? அவனுக்கு வேண்டியவங்கள்ளாம், தவிச்சுப் போறாங்களே? எங்கே இருக்கான்னு அவனுக்கு நான் வேணா போன் பண்ணட்டுமா?" சுகன்யா இரும்பு அலமாரியைத் திறந்து கையில் கிடைத்த கரன்சி நோட்டை தன் ஜீன்ஸின் பேக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டாள்.

"சும்மா இருடீ... இவ்வளவு நாளா உன் அம்மா சொன்னதை கேட்டுக்கிட்டு பொறுமையா இருந்தே இல்லே... இன்னும் கொஞ்சம் பொறுடீ..."

"என்னால முடியலியே... நானும் தான் தவிச்சுப்போறேன்!?"

சுகன்யாவின் செல் சிணுங்கியது... ஓ.. மை காட்... செல்வாவா இருக்குமா? கட்டிலின் மேல் கிடந்த தன் செல்லை பாய்ந்து எடுத்தாள் சுகன்யா.