Thursday 9 April 2015

சுகன்யா... 110

"செல்வா... எங்கே இருக்கீங்க நீங்க?" பதைப்புடன் கேட்டாள் சுகன்யா.

"உன் மோதிரத்தை கழட்டிக்குடுத்தேனே அங்கதான் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.."

"இவ்வளவு காலங்காத்தால பீச்சுல என்னப்பண்றீங்க?"

"சுகன்யா... இன்னைக்கு என்ன மீட் பண்ணறேன்னு நீ தானே சொன்னே?"

"சொன்னேன்... அதுக்காக... இப்பத்தானே பொழுதே விடியுது?"

"நேத்து ஈவினிங் ஏழு மணியிலேருந்தே நான் இங்கேத்தான் கிடக்கிறேன்'

"கிடக்கறீங்களா?”

“ஆமாம்டீ... இங்கதான் படுத்துக்கிடக்கிறேன்..” அவன் குரல் சூடாக வந்தது.

“சரி நேத்து நீங்க சாப்பிட்டீங்களா?"

"இல்லே..."

"ஏன்...?"

"நான் உன்கூட சாப்பிடலாம்ன்னு இருந்தேன்... டின்னருக்கு நீ ஏன் வரலே?" அவனிடமிருந்து எரிச்சலுடன் கேள்வி எழுந்தது.

"செல்வா நான் ஒரு முக்கியமான வேலையா போயிருந்தேம்பா.."



"பொய் சொல்றேடீ நீ... உன்னை நான் அழவெச்சதுக்கு பதிலுக்குப் பதில் என்னை அழவெக்கணுங்கறதுதான் உன் எண்ணம்..." செல்வா பசியில் வாயில் வந்ததை உளறினான். உளறியவன் தன் அடிவயிற்றைத் தடவிக்கொண்டான்.

"சத்தியமா இல்லடா செல்வா.."

இன்னைக்கு நான் அவன்கிட்டா தப்பா எதுவும் பேசிடக்கூடாது. தன் இடதுகைவிரல்களை கெட்டியாக மூடிக்கொண்டாள். மறு நொடி தன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் சுகன்யா.

"நான் உன்னைப்பாக்கறதுக்காக துடியா துடிச்சிக்கிட்டு அங்கே டின்னர் ஹால்லே உக்காந்து இருந்தேன்; என்னை விட அப்படி என்னடீ உனக்கு முக்கியமான வேலை?"

"அய்யோ... ஏன் இப்படி விஷயம் தெரியாம பைத்தியம் மாதிரி என் மனசை நோகடிக்கிறியேடா?" அவசரமாக பேசிவிட்டு தன் நாக்கை அழுத்திக் கடித்துக்கொண்டாள் அவள்.

"ஆமாம்டீ... நான் இப்ப அரைப்பைத்தியம்தான்... நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க.. நான் முழுப்பைத்தியம் ஆயிட்டா அதுக்கு காரணம் நீயும் உன் ஆசை அம்மாவும்தான்..." செல்வா அடிக்குரலில் கூவத்தொடங்கினான்.

"என்னங்க இது? ராத்திரி பூரா... யார்கிட்டவும் சொல்லாம கொள்ளாம, பீச்சுல, பட்டினியா, கடல் காத்துல இருந்திருக்கீங்க? உங்க உடம்பு என்னத்துக்கு ஆகறது? ஏன் இப்படி எல்லாரையும் தவிக்க விடறீங்கன்னு கேட்டா என்னன்னமோ பேசறீங்களே?"

"நான் படற தவிப்பை நீங்க யாரவது ஒருத்தர் புரிஞ்சுக்கிறீங்களா? இல்லே; நீதான் புரிஞ்சுக்கிட்டியாடீ? நான் தப்பு பண்ணேன்... தப்பு பண்ணேன்னு எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்களே?"

"செல்வா.. ஏன்டா நீ என்னை இப்படில்லாம் வதைக்கறே?"

“நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோம்.... தப்பு என் பேர்லதான்... அதை நான் ஒத்துக்கறேன்... ஆனா நீ என்னை வதைக்கறது போதாதுன்னு... இப்ப உன் அம்மாவும் உன்கூட சேர்ந்துகிட்டு என்னை கொல்றாங்களே? இந்தக்கொடுமையை யார்கிட்ட போய் சொல்லி அழறதுடீ நான்?”

“செல்வா... அவங்க ஏன் உன்னை கொல்லணும்? உன் மனசுல இருக்கறதை நீ என்கிட்ட சொல்லு... பொறுமையா நான் கேட்டுக்கறேன்.”

"ஏன்னா கேக்கறே? நீ சேலைடீ... உங்கம்மா நூலு... இந்த டயலாக்கை சொல்லி உன் அம்மா என்னை வதைக்கறாங்க... இப்ப அந்தக்கதையைப் பத்தியெல்லாம் பேச எனக்கு நேரமில்லே... உங்கம்மாவை கேட்டுக்கிட்டாடீ நீ என்னை காதலிச்சே? இப்ப ஏன்டீ அவங்க சொல்றதை நீ கேக்கறே?”

“செல்வா... நீ பேசறது கொஞ்சம்கூட சரியில்லே...?”

"சரி என் மனசுல இருக்கறதை கேட்டுக்கறேன்னு சொல்றேல்லா... அப்படின்னா நான் கூப்பிட்டா உடனே ஏன்டீ வரமாட்டேங்கறே?"

"..."

“நேத்து ராத்திரியிலேருந்து உனக்காக இங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன்... அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள இங்கே நீ வரணும்... இல்லே... இந்த கடல்லேயே குதிச்சுடுவேன்..."

"டேய் படுபாவீ.. நீ பீச்சுல உக்காந்துருக்கேன்னு எனக்கு எப்படீடா தெரியும்? ஏண்டா இப்டீல்லாம் உன் வாய்க்கு வந்ததை உளர்றே?" சுகன்யாவும் அவன் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பதிலுக்கு கூவ ஆரம்பித்தாள்.

"இப்ப நீ வரப்போறியா இல்லையா?"

“சரி நான் வர்றேன்... எங்கே வரணும்?”

“கடைசியா நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோமே அங்க வா... வரும் போது கையோட அந்த மோதிரத்தையும் எடுத்துக்கிட்டு வா?”

“எந்த மோதிரம்?”

“நான் கழட்டிக்குடுத்தனே அந்த மோதிரம்; அது எனக்கு இப்ப வேணும்... திரும்பவும் நீ அதை என் விரல்லே போட்டு விடணும்...” செல்வா ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்தான்.

“நீ கழட்டியாடா குடுத்தே? என் மூஞ்சியிலே விசிறியடிச்சேடா... அது எங்கேயோ மண்ணுல போய் விழுந்திச்சி.. அன்னைக்கு நான் இருந்த நிலைமையிலே அதையா நான் தேடிக்கிட்டு இருந்தேன்?”

“சரி... நீ மொதல்லே கிளம்பி வா... ரெண்டு பேருமா அதை சேர்ந்து தேடலாம்.... இப்ப நான் கரையில நிக்கணுமா? இல்லே கடல்லே இறங்கணுமா? செல்வா சுகன்யாவை மிரட்ட ஆரம்பித்தான்.

"சனியனே அது மாதிரி எதையும் பண்ணித் தொலைச்சுடாதே... அப்புறம் உன் ஆத்தாகாரி மூஞ்சியிலே இந்த ஜென்மத்துலே என்னால முழிக்க முடியாது... நீ எங்கே இருக்கியோ அங்கேயே இரு.. இப்பவே நான் வந்து தொலைக்கறேன்..."

"வாடீ.. என் நாட்டுக்கட்டை.. சீக்கிரமா வாடீ.." செல்வா மகிழ்ச்சியுடன் பாட ஆரம்பித்தான்.

"என்னாது... நாட்டுக்கட்டையா?"

"ஒண்ணுமில்லேடீ தங்கம்... நீ நேல வாடீச்செல்லம்.. விலாவரியா சொல்றேன்." செல்வாவுக்கு பித்தம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது.

"டேய் செல்வா உனக்கு பித்து பிடிச்சு போயிருக்குடா"

"ஆமாம்... உன் மேலதான் நான் பித்தனா இருக்கேன்.."

பாவி... எந்தக்காலத்து கடனோ... இவன்கூட இப்படியெல்லாம் நான் கிடந்து அவஸ்தை படவேண்டியதா இருக்கு... சுகன்யா தன் தலையில் அடித்துக்கொண்டாள். செல்லை அணைத்து இடுப்பில் இருந்த பாக்கெட்டில் செருகிக்கொண்டாள். தடதடவென ஓடி மாடிப்படிகளை இரண்டிரண்டாக தாவி தாவி குதித்திறங்கி ஹாலுக்குள் வந்தாள்.

“குடியா முழுகிப்போச்சு... கொஞ்சம்கூட அடக்கம்ங்கறதே இல்லை உனக்கு... ஏன்டீ இப்படி குதிச்சிக்கிட்டு வர்றே?” சோஃபாவில் தன் கணவன் எதிரில் அமர்ந்திருந்த சுந்தரி திடுக்கிட்டு எழுந்தாள்.

“எல்லாம் என் தலையெழுத்து... நீ கொஞ்சம் நேரம் சும்மா இரும்மா...” ஹால் சுவரில் டீவிக்கு பக்கத்தில், ஆணியில் மாட்டியிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு தெருவை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடினாள் சுகன்யா.

"இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சா... அதுக்குள்ள கார் சாவியை எடுத்துக்கிட்டு எங்கேயோ போறாளே?" சுந்தரி குழம்ப ஆரம்பித்தாள்.

"என்னங்க... நான் சொல்றது உங்க காதுலேயே விழலையா?" அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்த குமாரசுவாமி தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். வேகமாக ஓடும் தன் பெண்ணின் பின்னால் அவரும் எழுந்து ஓட ஆரம்பித்தார். அவர் தோட்டத்தில் இறங்கியபோது, கார் தெருக்கோடியில் திரும்பி கண் பார்வையில் இருந்து மறைந்தது.

மேல் மூச்சு வாங்க கார் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தவர், தன் தலையை ஒரு முறை திருப்தியுடன் ஆட்டிக்கொண்டார். பின் நிதானமாக காம்பவுண்ட் கேட்டை மூடிக்கொண்டு, நீளமான ஒரு பெருமூச்சுடன் வீட்டுக்குள் திரும்பவும் வந்தார் குமாரசுவாமி.


"என்னங்க... நான் பதறிப்போய் நிக்கறேன்... நீங்க என்னமோ பெருமாள் கோவில் மாடு மாதிரி சாவகாசமா தலையை ஆட்டிக்கிட்டு வர்றீங்க?" போர்வைகளை உதறி மடித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, கட்டிலில் வந்து உட்கார்ந்த தன் கணவரின் தோளை உலுக்கினாள் சுந்தரி.

"ஏன்டீ... என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீ? இந்த வயசுல வேகமா போற கார் பின்னால என்னால ஓடவா முடியும்?" தன் தோளை உலுக்கியவள் இடுப்பில் இரு கரங்களையும் தவழவிட்டு சுந்தரியைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் குமார். 

"எல்லாம் நீங்க அவளுக்குக்குடுக்கற செல்லம்.... அவ யாரையும் மதிக்கறதே இல்லே.. அதுவும் நான் கேக்கற கேள்விக்கு ஒழுங்கா எப்பவுமே பதில் சொல்றதே இல்லை; பத்தாக்குறைக்கு தாத்தா செல்லம் வேற அவளுக்கு நாளுக்கு நாள் அதிகமாயிகிட்டே போவுது.... காலங்காத்தால வயித்துக்கு எதுவும் திங்கமாக்கூட எங்கப்போறான்னு தெரியலையே?" தன் இடுப்பிலிருக்கும் அவர் கைகளை விலக்க முயற்சித்தாள் சுந்தரி. அவள் திமிற திமிற குமாரின் பிடியும், விரல்களின் அழுத்தமும் அவள் இடுப்புச்சதையில் அதிகமானது. 

"விடுங்களேன்... விடிஞ்சதும் விடியாததுமா இது என்ன அழிச்சாட்டியம்?"

"என் பொண்டாட்டி இடுப்புல நான் கையைப்போட்டா அதுக்கு பேரு அழிச்சாட்டியமாடீ?" சட்டென அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி தன்னுடன் இறுக்கிக்கொண்டார் குமார்.

"வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கா.. நம்பளைப் பெத்தவங்க நம்மகூட வீட்டுல இருக்காங்க... உங்களுக்கு நேரம் காலம் எதுவுமே கிடையாதா...?" உதட்டில் வார்த்தைகள் சூடாக வந்தாலும், புருஷனின் மார்பை தன் மார்பால் மென்மையாக உரசிக்கொண்டே, தன் உதடுகளின் ஈரத்தை அவர் கன்னத்தில் இழைத்தாள் சுந்தரி. 

"குழந்தை இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாளேங்கற ஏக்கத்துலத்தான்டீ உன்னை நான் உரசறேன்..." குமாரின் குரல் தழைந்தது. சுந்தரியின் இடுப்பில் இருந்த அவருடைய கரம் மெல்ல மெல்ல அவள் இடது மார்பை நோக்கி மேலேறத் தொடங்கியது. 

"ராத்திரில்லாம் நான் கிட்ட வந்து கட்டிப்புடிச்சதுகூட தெரியாமா, காலை கெளப்பிக்கிட்டு தூங்கினீங்க..? கொழந்தை மேல இருக்கற பாசத்தை விடிஞ்சதும்தான் பொண்டாட்டி மேல காட்டுவீங்களா?" சுந்தரி குமாரை நெருங்கினாள். தன் இடதுமார்பின் காம்பை ரவிக்கையோடு சேர்த்து வருடிய அவர் கரத்தை தன் இடது கரத்தால் அங்கேயே அசையவிடாமல் நிறுத்தி இறுக்கமாக அழுத்தினாள். 

'ஏன்டீ நீயும் அவ வயசுல என்னைக் காதலிச்சவதானே? உன் பொண்ணோட மனசு உனக்குப் புரியலியா? என்னைப் பாக்கப்போனா, உன் காலை வெட்டுவேன்னு உன் அம்மா சொன்னதை நீ கேட்டியா?"

"ஆமாம்.. அதுக்கென்ன இப்ப...? நான் என் ஆத்தா சொன்னதை சொன்னதை கேக்கலேன்னா... நான் சொல்றதை அவளும் கேக்கக்கூடாதா?" கண்களில் மிதமிஞ்சிய ஆசையுடன் தன் கணவனை நோக்கினாள் சுந்தரி. கணவனின் தடித்த கீழுதட்டை மெல்லக்கடித்தாள்.



"உன் பொண்ணு வேற எங்கடீ போயிடுவா... மிஞ்சி மிஞ்சிப் போனா, நமக்கு வரப்போற அந்த அரை லூசு மருமவனைப் பாக்கத்தான் அவ ஓடிகிட்டு இருப்பா...."

"அந்தக்கூறு கெட்டவனைப்பத்தி எங்கிட்ட எதுவும் நீங்க பேசாதீங்க்க்.." சுந்தரி தன் வார்த்தையை முடிக்குமுன் அவள் இதழ்கள், குமாரின் உதடுகளுக்குள் முழுமையாக சிறைப்பட்டுவிட்டன. அவளுடைய இடது மார்பு கசங்கிக்கொண்டிருக்க, கண்களுக்குப் பின்னால் அவளுக்கு இருட்டிக்கொண்டு வந்தது. 

"அந்த பையனை எதுக்குடீ மல்லு குடுக்கறே? நேத்து அய்யோன்னு டின்னர் ஹால்லே தனியா உக்காந்து இருந்தவனை பாக்கறதுக்கே எனக்கு பாவமா இருந்திச்சிடீ... காதலிக்கற பொம்பளையோ, கட்டிக்கிட்ட பொண்டாட்டியோ கொஞ்சம் பாக்கறமாதிரி கண்ணுக்கு நிறைவா இருந்துட்டா... பசங்களுக்கே மனசுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான்டீ செய்யும்..." குமார் அவளைத் தன் மடியில் தள்ளிக்கொண்டார். 

"நீங்க இப்ப அவனுக்கு எந்த வக்காலத்தும் வாங்க வேணாம்..." சுந்தரி தன் கரங்களால் அவர் கழுத்தை வளைத்து அவர் முகத்தை தன் உதடுகளை நோக்கி இழுத்தாள். தன் உதடுகளில் வந்து மோதிய அவர் கன்னத்தை மென்மையாக கடித்தாள். 

"என்னமோ தெரியாம பேசிட்டான்... ஒழிஞ்சிப்போறான்... பிடிவாதம் பிடிக்காம விட்டுத்தொலைடி" விருட்டென தன் மடியில் கிடந்தவளை வாரி தன் மார்போடு இறுக்கி அணைத்து அவள் மூச்சு திணற திணற வெறியுடன் முத்தமிட்டார்.

"சரிங்க... செல்வா இன்னொரு தரம் நம்ம பொண்ணுகிட்ட கோவமா, எக்குத்தப்பா எதுவும் பேசறதுக்கு முன்னாடி, அவன் ஒண்ணுக்கு ரெண்டு தரம் யோசனை பண்ணணுங்க; யாராவது ஒருத்தர் நம்ம வீட்டுலே முறுக்கா இருந்தாத்தான், அவன் மனசுலேயும் ஒரு பயம் இருக்கும்..." அவர் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் சுந்தரி. 

"எழுந்து போய் கதவை கொஞ்சம் ஒருகளிச்சுட்டு வாயேன்.." குமாரின் பிடி தன் மனைவியின் உடலில் அதிகமானது.

"வேணாம் குமரு... சொன்னாக் கேளு... நம்ம வீட்டுலேருந்து அவங்க வீடு எவ்வளவு தூரம்? காரை எடுத்துக்கிட்டு போனவ, சட்டுன்னு அவனை கையோட இழுத்துக்கிட்டு இங்க வந்துட்டா அசிங்கமா போயிடும்... எதுவாயிருந்தாலும் ராத்திரிக்கு வெச்சுக்கலாம்... இப்ப என்னை விட்டுடுங்க.." 

சுந்தரி அவர் பிடியிலிருந்து துள்ளி எழுந்தாள். தன் ரவிக்கையை இழுத்துவிட்டுக்கொண்டாள். கணவன் விலக்கிய கொக்கியை பொருத்திக்கொண்டாள். முந்தானையை நீவி தோளில் போட்டுக்கொண்டாள். குமாரசுவாமி அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னப்பா... என்ன வேணும்?" கணவனின் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை உதாசீனப்படுத்த முடியாமல், சுந்தரி அவரை நெருங்கினாள்.

"ஒரு முத்தமாவது குடேன்டி.. சின்னப்பொண்ணு மாதிரி ரொம்பத்தான் அல்டிக்கிறே நீ"

கதவை ஓசையெழுப்பாமல் மூடியவள், தன் கணவரின் மடியில் உட்கார்ந்தாள் சுந்தரி. தோளை சுற்றியிருந்த முந்தானையை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். குமாரின் முகத்தை தன் மார்பில் புதைத்துக்கொண்டு அவர் உச்சியில் முத்தமிட்டாள். தன் முலைகளை இதமாக ரவிக்கையுடன் சேர்த்து கடித்த கணவனின் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்தி, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, குமாரின் தடித்த இதழ்களை கவ்வி நீளமாக முத்தமிடத்தொடங்கினாள்.

கடற்கரை சாலையில், நடைபாதையில், அலையடிக்கும் மணல் பரப்பில், ஊதிப்போயிருக்கும் தங்கள் உடலை குறைக்கும் முயற்சியில் மக்கள் நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள். யோகாசனம் என்ற பெயரில் பலர் உடலை வளைத்து நெளித்து தங்களையும் வருத்திக்கொண்டு, பார்ப்பவர்களையும் வருத்திக்கொண்டிருந்தார்கள்.

அருகம்புல் ஜூசை குடித்துக்கொண்டிருந்தவர்களின் எதிரில், வாழ்க்கையில் மனதிலிருந்து எப்போதும் சிரித்தே அறியாதவர்கள் வாயால் மட்டுமே சிரிக்க முயன்று தங்கள் முகத்தைக் கோணலாக்கிக்கொண்டிருந்தார்கள்.

தன்னைச்சுற்றி நடக்கும் இந்தக்கூத்துகளை, அழுக்குச் சட்டையுடன், சோர்ந்த முகத்துடன், சிவந்த கண்களும், வீங்கிய இமைகளுமாக, பசியால் களைத்து உடல் துவண்டு போனவனாய், மூடிக்கிடந்த சிறியக்கடையொன்றின் மரபெஞ்சில் உட்கார்ந்தவாறு வெறித்துக்கொண்டிருந்தான், செல்வா. மாலையில் அலுவலகம் முடிந்ததும், வழக்கமாக அந்தக் கடையில் சூடாக கிடைக்கும் வாழைக்காய் பஜ்ஜியை வாங்கித்தின்றவாறு, சுகன்யாவும் செல்வாவும், அரட்டையடித்துக் கொண்டிருப்பது வழக்கம்.

கடற்கரையின் மணல் பரப்பையொட்டியிருந்த கிளைச்சாலையில் கார் திரும்பியதுமே, சுகன்யாவின் கண்களில் செல்வா தென்பட்டுவிட்டான். தன்னைப்பார்க்க சுகன்யா காரில் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திராததால், தனக்குப்பின்னால் வந்து நின்ற வண்டியின் மேல் அவன் கவனம் உடனடியாகச் செல்லவில்லை.

"செல்வா..." சுகன்யா அவன் தோளை மென்மையாக அழுத்தினாள்.

தன் மனதுக்குள்ளிருந்த இனம் புரியாத இயலாமையின், ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த செல்வாவுக்கு, சுகன்யாவைக் கண்டதும் பேசமுடியாமல், தொலைந்து போன தன் பொம்மை திடிரென கிடைத்த சந்தோஷத்தில் விசும்பும் சிறு குழந்தையைப் போல், விசித்து விசித்து அழ ஆரம்பித்தான்.

"நான்தான் வந்துட்டேன்ல்லா... இப்ப எதுக்கு நீ அழறே?

விசித்துக்கொண்டிருந்த செல்வாவை, விருட்டென இழுத்து தன் காரின் பின் சீட்டில் தள்ளி கதவை மூடினாள். விம்மிக் கொண்டிருந்தவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு அவன் முதுகை மென்மையாக வருடத்தொடங்கினாள். செல்வாவின் விம்மலும், கேவலும் மெல்ல மெல்ல அடங்க, அவன் முகத்தைத் திருப்பி சினேகமாக சிரித்தாள் சுகன்யா.

சுகன்யாவின் மென்மையான சிரிப்பை எதிர்கொள்ளமுடியாமல் மீண்டும் தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, கண்களை மூடிக் கொண்டான் செல்வா. விழிமூடி தன் மடியில் கிடந்தவனின் முகத்தை நோக்கி குனிந்த சுகன்யா அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள் அவள். அவள் இதழ்கள் தன் முகத்தில் பட்டதும் உடைந்தான் செல்வா.

“சாரிம்மா சுகன்யா... உன்னை நான் ரொம்பவே படுத்திட்டேன்... செல்லம்... என்னை மன்னிச்சுடும்மா... செல்வாவின் உதடுகள், சுகன்யாவின் மெலிதாக வேர்வையில் நனைந்திருந்த மேல்சட்டையில், அவளுடைய வயிற்றருகில் புதைந்து அசைந்தன. அவன் கரங்கள் அவள் இடுப்பில் இயல்பாக ஊர்ந்து கொண்டிருந்தன.

மெல்ல நிமிர்ந்த செல்வாவை தன் மார்புடன் சேர்த்தணைத்துக் கொண்டு தன் கண்கள் கலங்க அவனை முத்தமிட்டாள் சுகன்யா. முத்தமிட்டவள் அவன் தலைமுடியில் தன் விரல்களை நுழைத்து இறுக்கினாள். சுகன்யாவின் தீண்டலின் சுகத்திலும், எச்சிலில் மினுமினுக்கும் அவள் உதடுகளின் மென்மையிலும் மயங்கிக் கிடந்தான் செல்வா.

"செல்வா... எங்கிட்ட மன்னிப்பெல்லாம் நீ கேக்கவேணாம்பா... பழசெல்லாத்தையும் மறந்துடு... அதுவே போதும் எனக்கு..." சுகன்யா செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.

"திரும்பவும் கேக்கறேன் என்னை நீ அழவிடமாட்டியே?" சுகன்யா அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

"...."

"ஏம்பா திரும்பவும் டல்லாயிட்டே...?" சுகன்யா அவன் கண்களைத் துடைத்தாள்.

"இப்பதானே சொன்னே எல்லாத்தையும் மறந்துடுன்னு..?"

"சரி.. சரி... இனிமே இப்படி பேசமாட்டேன்..." சுகன்யா சிரித்தாள். செல்வா அவள் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டான்.

"தேங்க் யூ சுகும்ம்மா..."

"ஏன்டா இப்படி ராத்திரி பூரா கொலைப்பட்டினி கிடந்தே... எதுக்கு உன் வீட்டுக்கும் போகாமே டிராமா பண்ணே?" வாடிய முகத்துடன் தன்னருகில் அமர்ந்திருந்த செல்வாவை வேகமாக இழுத்து மீண்டும் தன்னோடு அனைத்துக்கொண்டாள் சுகன்யா. செல்வா அசையாமல் அவள் அணைப்பில் மவுனமாகக் கிடந்தான்.

"இல்லேன்னா நீ என்னைப் பாக்கறதுக்கு இப்படி அடிச்சி பிடிச்சிக்கிட்டு ஓடி வந்திருப்பியா?" வெகு நாட்களுக்குப்பிறகு மனம்விட்டு சிரித்த செல்வா தன் முகத்தை அவள் கழுத்தில் புதைத்தான்.

"தண்ணீல குதிச்சு சாகறேன்னு மிரட்டினியே நாயே... ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன்." சுகன்யா அவன் முதுகில் பளீரென ஓங்கி அறைந்தாள்.

"சுகு... இப்ப மட்டும் நீ வந்திருக்கலே... கண்டிப்பா நான் இன்னைக்கு எக்குத்தப்பா ஏதாவது பண்ணித்தான் இருப்பேன்..." அவன் அவளை வெறியுடன் இறுக்கினான். சுகன்யாவின் முலைகள் அவன் மார்பில் அழுந்தி நசுங்கின. செல்வாவின் கரங்கள் அவள் முதுகில் தவழ்ந்தன.

"பிரா போடலியாடீச் செல்லம்.." செல்வா முணக, மீண்டும் முதுகில் அடிவாங்கினான் அவன்.

"சனியன் புடிச்சவனே கையை வெச்சுக்கிட்டு சும்மா இரேன்... அப்பத்தான் குளிச்சுட்டு வந்தேன்.. நீ சாகப்போறேன்னதும்... அப்படியே பதறிப்போய் ஓடியாந்தேன்.." சுகன்யா தன் வலுகொண்டமட்டும் அவனை இறுக்க, அவளுக்கும் அவனுக்குமிடையில் காற்று புகமுடியமால் தவித்தது.

“சுகு... திரும்பவும் உன்னை நான் தொலைக்க விரும்பலேடீ... உங்க அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போறியா?" சுகன்யாவின் காது மடலை அவன் கடித்தான்.

"ஏன் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு வழி தெரியாதா?"

"எனக்கு பயமா இருக்குடீ..."

“நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்ப உங்கம்மா என் மேல கோவமா இருந்தாங்க. இப்ப என் அம்மா உன் மேல கோவமா இருக்காங்க.”

“உங்கம்மாவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு சொல்லும்மா...” செல்வா சிணுங்கினான்.

“சாகறேன்னு சொல்லி சுகன்யாவை மிரட்டுடான்னு ஒருத்தன் சொன்னானே அவன் எங்க அம்மாவை டீல் பண்றது எப்படீன்னு சொல்லிக்குடுக்கலியா?” சுகன்யா களுக்கென சிரித்தவள், செல்வாவை உதறிவிட்டு காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தாள்.”

“சுகு நான் சீரியஸா பேசறேம்மா...” செல்வா அவளை கொஞ்சினான்.

“யோசிக்கலாம்... இப்ப வந்து சட்டுன்னு வண்டியை எடு... உன்னை உன் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு நான் கிளம்பியாகணும்...?

“சுகு... அந்த மோதிரம் எங்கேடி செல்லம்?” கார் அவன் வீட்டை நெருங்கியதும் செல்வா அவளை நோக்கி கெஞ்சலாக கேட்டான்...

“நீங்க எங்க வீசி அடிச்சீங்களோ அங்கேயேப் போய் தேடுங்கன்னு சொன்னேன்... இப்ப காரை ஒழுங்கா, ஜல்தியாப் பார்க் பண்ணிட்டு உள்ளே வந்து சேருங்க...” சுகன்யாவின் அதட்டலைக்கண்ட செல்வா ஒரு நொடி திகைத்தான்.

“என்னப் பாக்கறீங்க...?” காரிலிருந்து மறுபுறம் இறங்குபவனை நோக்கி வலது கண்ணை குறும்பாக சிமிட்டினாள் சுகன்யா. கண்ணைச்சிமிட்டியவள், தன் உடலை மிடுக்குடன் நிமிர்த்தி, துருத்திக் கொண்டிருக்கும் மார்புகள் அழகாக இட வலமாட, உதடுகளில் தவழும் இனிமையான புன்னகையுடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள். 


"அம்மா... சுகன்யா வந்திருக்காம்ம்ம்மா..." வெராண்டாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த மீனா ஹாலை நோக்கி கூச்சலிட்டவள், விருட்டென எழுந்து வந்து சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"வாம்மா... வா..." நடராஜனின் கண்கள் வெகு இயல்பாக வாசலைத் துழாவ, செல்வா சுகன்யாவின் பின்னால் தயக்கமாக தன் தலையை குனிந்து கொண்டு வந்ததைக் கண்டதும் மனதுக்குள் நிம்மதியானார்.

"வாடியம்மா... இப்பத்தான் உனக்கு இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா...?" மல்லிகா முகம் மலர்ந்தாள். விறுவிறுவென சுகன்யாவின் பக்கம் நடந்தாள். அவள் கையை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டாள்.

"அத்தே இப்ப உங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லையே?"

"இல்லடீம்மா... இப்ப எனக்குத் தேவலை... நீதான் கொஞ்சம் இளைச்சிட்டே... உன் ஃப்ரெண்டு எப்படியிருக்கா?"

"வேணிக்கு பையன் பொறந்திருக்கான்... ராத்திரி பூரா ஹாஸ்பெட்டல்லேதான் இருந்தேன். காலையில அஞ்சரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்..." சொல்லிக்கொண்டே செல்வாவைப் பார்த்தாள்.

"ஏம்ம்மா... இது என்னம்மா சுகன்யா...? சட்டைக்குள்ளே ஒண்ணும் போடலியா?" காதில் கிசுகிசுத்தாள்.

"சாரி அத்தே... அப்பத்தான் குளிச்சிட்டு வந்தேன்... உங்க பிள்ளை போன் பண்ணி... பத்து நிமிஷத்துல நீ வரலேன்னா கடல்லே குதிச்சிடுவேன்னு மிரட்டல் விடவே... கதிகலங்கி ஓடினேன்... தப்புதான் அத்தே... இனிமே இப்படி நடக்காது..." அவளும் மல்லிகாவின் காதில் குசுகுசுவென்றாள்.

"என்னம்மா ரகசியம்... கொஞ்சம் சத்தமாத்தான் பேசுங்களேன்?" நடராஜன் முகத்தில் குழப்பத்துடன் வினவினார்.

"பொட்டைச்சிங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்... எல்லாத்துக்கும் உங்களுக்கு விளக்கம் குடுத்தே ஆகணுமா இப்ப... பெத்தப்புள்ளையை கட்டுல வைக்க முடியலே!!?"

"மாமா... நீ எப்ப என் வீட்டுக்கு வர்றேன்னு கேட்டீங்க... நான் வந்துட்டேன்... இதுக்கு மேல உங்க விருப்பம் எதுவானாலும் அதுல எனக்கு பூரண சம்மதம்..." சுகன்யாவின் முகம் செந்தாமரையானது.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா... உன்னோட இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்...."

"மல்லிகா... சட்டுன்னு டிஃபனை எடுத்து வைம்மா... வீட்டுக்கு வந்த குழந்தை நம்ம கூட உக்காந்து சாப்பிடட்டும்..."

"ராத்திரி பூரா எங்கடா சுத்திக்கிட்டு இருந்தே? புள்ளையாடா நீ... உன்னால வீட்டுல இருக்கறவங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்குது? பத்தாக்குறைக்கு இவளை வேற மிரட்டியிருக்கே?" இதுவரை பொறுமையாக இருந்த மல்லிகா சீறினாள்.



"போய் சட்டுன்னு குளிச்சுட்டு வாங்களேன்... எல்லாருமா ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்... எனக்கு நிறைய வேலை இருக்கு... இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு போறேன்... இப்பவே சொல்றேன்... நல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க... நீங்கதான் என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப்போகணும்..."

சுகன்யா திரும்பி செல்வாவை அதட்டினாள். என்னாச்சு இவளுக்கு... வீட்டுக்குள்ள வந்ததுலேருந்து விரட்டு விரட்டுன்னு என்னை விரட்டறா? சட்டுன்னு அம்மா இவகூட சேர்ந்துக்கிட்டாங்க?செல்வா திகைத்தான்...

"அத்தே... ப்ளீஸ்... என் எதிர்ல அவரை நீங்க எதுவும் சொல்லாதீங்க.. இனிமே எப்பவும் இப்படி நடக்காது... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்." சுகன்யா மல்லிகாவை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கிச்சனுக்குள் நுழையும் முன் திரும்பினாள். ஹாலில் விக்கித்துப்போய் நின்றவனை நோக்கி தன் உதட்டை சுழற்றி "வெவ்வே.." என்றாள். 



No comments:

Post a Comment