Thursday 9 April 2015

சுகன்யா... 109

சம்பத்துடன் சுகன்யா விருந்தளிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலுக்குள் நுழையும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. அத்தான்... நீங்க அனுவை அழைச்சிக்கிட்டு உள்ளே போங்க... பின்னாடியே நான் வர்றேன்.

"ஹலோ... சுகன்யாவா...?"

"யெஸ்... யெஸ்... சொல்லுங்க சங்கர்... ஹவ் ஆர் யூ?"


"நல்லாருக்கேன்... சுகா; உன் அத்தானோட மேரேஜ்ல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சா..." சங்கரின் குரலில் உற்சாகமில்லை.

"எந்த கொறையும் இல்லாம கல்யணம் முடிஞ்சுது... நீங்க இன்னைக்கு டின்னருக்கு வர்றீங்தானே?"

"இப்ப நீ எங்கேருக்கே சுகன்யா?"

"மாம்பலத்துலே, ஃபங்கஷன் நடக்கற இடத்துலேதான் இருக்கேன். நாளைக்கு நைட் டெல்லிக்குப் போறேன். காலையில உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்."

"ம்ம்ம்.. சாரி சுகன்யா... இன்னைக்கு டின்னருக்கு எங்களால வரமுடியாது.... " சங்கரின் குரலில் சிறிது கலக்கமும், பதட்டமும் இருப்பது போல் அவளுக்குப்பட்டது.

"என்னாச்சு.. ஏன்...? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க... சங்கர்..." சுகன்யா பரபரப்படைந்தாள்.

"வேணிக்கு உடம்பு சரியில்லே... இடுப்பு வலி ஸ்டார்ட் ஆயிடுச்சி... இது அந்த பெயின்தான்னு சொன்னா; இப்பத்தான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணேன்... நார்மல் டெலிவரி ஆகுமான்னு தெரியலே... சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்னு டாக்டர் சொல்றாங்க;"

"இதுக்கு ஏன் பயப்படணும்...?"

"சுகன்யா... எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு..."

"இந்த நேரத்துல நீங்கதானே அவளுக்குத் தைரியம் சொல்லணும்... அதை விட்டுட்டு கொழந்தை மாதிரி கலங்கறீங்க..!"

"அப்பாவும் அம்மாவும் பெங்களூர் போயிருக்காங்க... நாளைக்கு காலையில வர்றாங்க..."

"இப்ப அவ கூட லேடீஸ் யார் இருக்கறது?"

"நம்ம பக்கத்து வீட்டம்மா இருக்காங்க... ராத்திரிக்கு அவங்க திரும்பி போகணுமில்லே..."

"சரி..."

"ஆஸ்பத்திரியிலே எல்லாத்தையும் நாங்க கவனிச்சுக்கறோம் அப்படீங்கறாங்க... ஆனாலும் வேணி... உன்னை கொஞ்சம் கூப்பிடுங்கறா... உங்க வீட்டு பங்கஷனை விட்டுட்டு உன்னால எப்படி வரமுடியும்ன்னேன்?"

"சங்கர்.. என்ன பேசறீங்க நீங்க...? டின்னரை விடுங்க... நான் இல்லேன்னா அது நடக்காதா? அது பாட்டுல அது நடக்கும்... எந்த ஹாஸ்பிட்டலே வேணி இருக்கா? மொதல்லே அதைச் சொல்லுங்க..."

"என் வீட்டுக்கு பக்கத்துலேதான்.. உனக்கு ஞாபகம் இருக்கா... செல்வாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனப்ப அவர் இருந்தாரே அதே ஹாஸ்பெட்டல்தான்..." 

"டோண்ட் வொர்ரீ... ட்வ்வென்டி மினிட்ஸ்லே நான் வந்துடறேன்.. வேற ஏதாவது வேணுமா... சொல்லுங்க... வர்ற வழியிலே வாங்கிட்டு வந்துடறேன்..."

"ஓண்ணும் வேண்டாம்... வேணியோட அம்மாவும் சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க... விடியறதுக்குள்ள வந்து சேர்ந்துடுவாங்க.. இப்போதைக்கு அவளுக்கு தெரிஞ்ச ஒருத்தர்... ஒரு மாரல் சப்போர்ட் எனக்கு வேணுங்கறா... அவ்வளவுதான்...."

"ராத்திரி பூரா வேணியோட நான் இருக்கேன்... நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க..." சுகன்யா எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். போகவேண்டிய இடத்தைச்சொல்லி சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். 

* * * * *

"வந்துட்டியாடீ சுகா.. ரொம்ப தேங்ஸ்டீ... உன்னைப் பாத்ததும் எனக்கு நிம்மதியா இருக்குடீ" சுகன்யாவின் கைகளை பற்றி இறுக்கினாள் வேணி. 

"வேணி.. உரல்லே தலையை விட்டுட்டே.. உலக்கைக்கு பயந்தா முடியுமாடீ?" வேணியின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

"வலி உயிர் போவுதுடி ... உனக்கு கிண்டலா இருக்கா?" சுகன்யாவின் இடுப்பைக் கிள்ளினாள் வேணி.

"சாரி டியர்.. தமாஷுக்கு சொன்னேன்.."

"நான் பயப்படலேடி.. அதுதான் ரொம்ப பயப்படுது... உன்னை கூப்பிடறேன்னு சொன்னதே அதுதான்... அதும் மூஞ்சைப்பாத்தேல்ல... 'வேணீ ரொம்ப வலிக்குதாம்மா..?' இனிமே உன்னை நான் தொடவே மாட்டேன்னு அழுவுது... சிஸ்டருங்க வாயைப் பொத்திக்கிட்டு சிரிக்கறாங்க.. என் மானத்தை வாங்காதே... வெளியிலே போன்னு அதுங்கிட்ட கத்திட்டேன்..." அத்தனை வேதனையிலும் தன் கணவனை நினைத்து பெருமையுடன் சிரித்தாள் வேணி.

"பிரசவ வைராக்கியம் பொம்பளைக்குத்தான்னு என் பாட்டி சொன்னாங்க.. இங்கே கதை தலை கீழா இருக்கு.." வேணியின் பறக்கும் தலைமுடியை அவள் காதுக்குப்பின்னால் தள்ளினாள்.

"எனக்கு வைராக்கியம்ல்லாம் இல்லடீ.. எத்தனை வலிச்சாலும் பொறுத்துக்குவேன்.. எனக்கு ஒண்ணு இல்லே; நாலு குழந்தை வேணும்டீ..." வேணி தன் இடது கண்ணை சிமிட்டினாள்.

"ஒண்ணைப் பெத்தேன்.. அதுக்கு ஒரு கல்யாணத்தை ஒழுங்காப்பண்ண முடியலேன்னு... என் அம்மா சலிச்சிக்கிறாங்க..!" சுகன்யாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

"உங்க ரெண்டு பேரோட லடாய் இன்னும் முடியலியாடீ... யம்மா..." வேணி தன் கேள்வியை முடிக்க முடியாமல் முனகினாள்.

"என்னடீ வேணி..?"

"சுகா... என்னமோ நழுவுற மாதிரி இருக்குடி... சீக்கிரமா டாக்டரை கூப்புடுடீ...யம்ம்ம்மா..." வேணி கூவினாள். 

சங்கர் கையை பிசைந்து கொண்டு அறையின் உள் ஓடிவந்தான். மிஸ்டர்... நீங்க கொஞ்சம் வெளியிலே ஹால்லே உக்காருங்க... முழுசாக இருபது கூட முடியாத ஒரு வெள்ளை கவுன் அணிந்திருந்த இளசு சங்கரை வெளியில் துரத்தியது. வேணி லேபர் ரூமுக்கு உடனடியாக மாற்றப்பட்டாள். லாபியில் இரும்பு சேர்கள் காலியாக கிடக்க சங்கர் தன் கண்களை மூடிக்கொண்டு ஒற்றைக்காலில் சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தான். 

ஏன் இவன் இப்படி பரிதவிச்சிப்போறான்...? அழுதாலும் பிள்ளையை அவதானே பெத்து எடுக்கணும்? பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசையா இவனுக்கு? சங்கரின் அருகில் சென்று நின்றாள் சுகன்யா... ஏனோ தெரியவில்லை அவளுக்கு அடக்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. 

"என்ன சுகன்யா... என்னைப்பாத்தா உனக்கு சிரிப்பு வருதா?"

"ரொம்பவே பயப்படறீங்களே...?" சுகன்யா ஆதரவாக அவன் கையைப் பற்றி இழுத்து சேரில் உட்கார வைத்தாள். தானும் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள். 

"சுகன்யா... ஐ லவ் வேணி வெரி மச்... யூ நோ... அவ வலியிலே துடிக்கிறாளே...?" சங்கரின் குரல் தழுதழுத்தது. 

"ஐ நோ..." தன் விழிகளால் பதிலளித்தவள் சங்கரின் இடது கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

"இந்தாங்க... இந்த காஃபியை சாப்பிடுங்க... யூ சீம் டு பி வெரி டயர்ட்..." சுகன்யா அவனை நோக்கி புன்னகைத்தாள்.

"சாரி சுகன்யா... நீ எப்படி இருக்கேன்னுகூட உன்னை ஒரு வார்த்தை கேக்கலே நான்... அயாம் ஸோ செல்ஃபிஷ்... "வெட்கத்துடன் சிரித்தான் அவன்.

"வேணியை நினைச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு? சுகன்யா இனிமையாக புன்னகைத்தாள். காஃபியை நீளமாக உறிஞ்சி, ரசித்து குடித்தாள். 

"ஏன்...?" 



"உங்களை மாதிரி ஒரு கேரிங் ஹஸ்பெண்டு எத்தனை பேருக்கு கிடைப்பாங்க?"

"இல்லை சுகன்யா... வேணி மாதிரி ஒரு பொம்பளை கிடைக்க நான்தான் குடுத்து வெச்சிருக்கணும்..." சுகன்யா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். செல்வாவின் முகம் அவள் மனதில் வந்தாடியது..

"உங்களை எங்கெல்லாம் தேடறேன் நான்?" வெள்ளை கவுன் ஒன்று அவர்களை நோக்கி வந்தது. சங்கர் வேகமாக அவளை நோக்கி ஓடினான். 

"கங்கிராட்ஸ்... உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கான்... உங்க வைப் ரொம்ப கோஆப்ரேட் பண்ணாங்க... நார்மல் டெலிவரிதான்..." சிரித்தாள் அந்த இளம் பெண்.

"என்னோட வாழ்த்துக்கள்" சங்கரின் கையை இறுகப்பற்றி குலுக்கினாள் சுகன்யா. 

"தேங்க் யூ சுகா..." சுகன்யாவின் வலது கையை உயர்த்தி, கண்களில் நட்புணர்ச்சி ததும்பி வழிய, மென்மையாக அவள் புறங்கையில் முத்தமிட்டான் சங்கர்.

மெல்லிய வாடைக்காற்று உடலுக்கு இதமாக வீசிக்கொண்டிருந்த விடிந்தும் விடியாத நேரத்தில் சுகன்யா தன் வீட்டையடைந்தாள். வீட்டின் முன்புறத்திலிருந்த சிறிய தோட்டத்தில் நீலமும், வெண்மையுமாக, பூத்திருந்த சங்குப்பூக்களை, சுந்தரி பறித்துக்கொண்டிருக்க, புல் தரையில் விழுந்திருந்த பவழமல்லிகளை திரட்டி மாலையாக கோத்துக்கொண்டிருந்தாள் பாட்டி கனகா. தான் வந்த ஆட்டோவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவள் பூத்தொடுத்துக்கொண்டிருந்த பாட்டியை இறுக கட்டிக்கொண்டாள்.

"குளிச்சிட்டு சுத்தபத்தமா பூஜைக்காக பூ கட்டறவங்களை ஆஸ்பத்திரியிலே வந்ததும், வராததுமா கட்டிப்புடிக்கறியே?ஏன்டீ... கொஞ்சமாவது புத்தி இருக்கா உனக்கு?" சுந்தரி தன் விழிகளை உருட்டி, புருவத்தை நெறித்தாள். னாள்.

"சுந்து... கொழந்தையை விரட்டாதேடீ... எனக்கு தெய்வமெல்லாம் இந்தக்கொழந்தைக்கு அப்புறம்தான்..."

"அப்படி சொல்லுங்கப்பாட்டீ..." சுகன்யா தன் தாயை நோக்கி வாயைக்கோணி பழிப்புக்காட்டினாள்.

"வேணி எப்படி இருக்காடீ?"

"நல்லா இருக்காம்மா... இப்போதைக்கு ஒண்ணும் பிரச்சனையில்லே... வசந்தி அத்தை வந்தாச்சு... அவளோட பேரண்ட்ஸும் அரைமணி நேரத்துக்கு முன்னாடீ வந்து சேர்ந்துட்டாங்க.. அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.."

"கண்ணு.. இந்தக் காப்பியை குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கும்மா... சாயந்திரம் நீ ஊருக்கு கிளம்பணும்மா..." சிவதாணு அவளிடம் ஒரு கப்பை நீட்டினார்.

"தேங்க்ஸ் தாத்தா..." காஃபியை வாங்கிக்கொண்டவளின் கண்கள் இலேசாகக் கலங்கியது.

"ஏம்மா?"

"உங்களைல்லாம் விட்டுட்டு போகணுமே... அதை நெனைச்சேன்.. கண்ணுல தன்னால தண்ணி வருது தாத்தா..." சுகன்யா கண்களைத் துடைத்துக்கொண்டவள் தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. தோட்டத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த சொர்ணபட்டி பூக்கள் தங்கமாக மின்ன ஆரம்பித்தன.

"அப்புறம் எப்பம்மா வருவே..?"

"அடுத்த மாசம் மீனா கல்யாணத்துக்கு வரலாம்ன்னு இருக்கேன் தாத்தா..." அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. எழுந்து மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

* * * * *

"சுகன்யா... குட் மார்னிங்..." சீனுதான் லைனில் வந்திருந்தான்.

"வெரி குட்மார்னிங்... ஹவ் ஆர் யூ சீனு?"

"சுகா... இப்ப நீ எங்கேருக்கே?"

"வீட்டுலேதான் இருக்கேன்.."

"லாஸ்ட் நைட் செல்வா உங்கிட்ட பேசினானா?"

"இல்லையே சீனு..."

"நேத்து ராத்திரி அவன் வீட்டுக்கே வரலையாம்.... இப்பத்தான் மீனா போன் பண்ணா..."

"ஓ மை காட்..."

"டின்னர்ல உன்னைக் காணோம்ன்னு ரொம்பவே எரிச்சலோட இருந்தான். "எழுந்து வாடா சாப்பிடலாம்னு' எட்டுமணிக்கு கூப்பிட்டப்ப, 'ப்ச்ச்ச்க்குன்னான்..." நானும் மீனாவும் சாப்பிட்டு திரும்பி வந்தப்ப ஹால்லே அவனைக் காணோம். வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சோம்...."

"அவரைக் கொஞ்சம் பாத்துக்குங்கோன்னு உங்ககிட்ட சொன்னேன்ல்லா...??"

"அயாம் சாரி சுகன்யா... ஆனா அவன் என்னக் கொழந்தையா...? இருபத்து நாலு மணி நேரம் அவன் பின்னாடியா ஒருத்தன் நிக்கமுடியும்...? அவன் செல் அடிக்குது... யார் காலையும் எடுக்காம அடம் பிடிக்கிறான்...!?"

"என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க...?" சுகன்யாவுக்கு இலேசாக கால்கள் நடுங்கின. நிற்கமுடியாமல் தன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

"சுகன்யா... யூ ஆர் ஆல்சோ நாட் எ சைல்ட்.... நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது? மீனா சொன்னதை உனக்குச் சொல்லிட்டேன்..."

"கோச்சிக்காதீங்க...சீனு "

"ப்ளீஸ்... சுகன்யா... திரும்பவும் சொல்றேன்... இன்னைக்கு நீ தில்லிக்கு கிளம்பறதுக்குள்ள, ஒரு ரெண்டு நிமிஷம் அவனை தனியா சந்திச்சி, அவன் என்னதான் சொல்றாங்கறதை கேளு..."

"ம்ம்ம்..."

"இதுக்கு மேல உன் பாடு... அவன் பாடு..." சீனுவின் கால் சட்டென அணைந்தது. 


சுகன்யா மணியைப் பார்த்தாள். நேரம் ஆறு நாற்பதாகியிருந்தது. சட்டென பாத்ரூமை நோக்கி விரைந்தாள். இருபதே நிமிடங்களில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, ஷவரைத் திறந்து கொண்டு நின்றாள். முன்னிரவு சரியாக உறங்காததால் கண்களில் மிச்சமிருந்த எரிச்சல் இலேசாக விலக, முதுகில் கோடாக வ்ழியும் தண்ணீர் வரிகளுடன் அறைக்குள் நுழைந்தாள்.

"எங்கேப் போயிருப்பான் செல்வா? சீனு சொன்ன மாதிரி அவன் என்ன கொழந்தையா..?. எதுக்காக இப்படி சில்லியா பிஹேவ் பண்றான்?"

ஈரம் சொட்டும் தலையில் மெல்லிய பருத்தித் துணியை சுற்றியிருந்தாள் சுகன்யா. விம்மித் ததும்பும் மார்புகளை இளம் ரோஜா நிற தேங்காய்ப்பூ துவாலையில் மூடி மறைத்திருந்தாள். நடந்த வேகத்தில் அவள் முன்னழகும், பின்னழகும், சீரான கதியில் அசைய, ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தன் உடலழகை ஒரு கணம் நோட்டம் விட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுகன்யா தன் புருவங்களை கவனத்துடன் ஒதுக்கியிருந்தாள். வலுவான முழங்காலுக்கு கீழ் ஆடுசதையில் மெலிதாக ஓடும் பூனை முடிகளையும் வழித்து எடுத்து இருந்தாள். அக்குள்களையும் கவனமாக சுத்தமாக்கியிருந்தாள். தன் தலைமுடியின் முனைகளை சீராக வெட்டியிருந்தாள். நகங்களில் வெளிர் நிற ரோஜா வண்ணத்தைப் பூசியிருந்தாள்.

பாட்டி தனக்கு கொடுத்திருந்த தங்க வளையல்களை இரு கைகளிலும், எடுத்து மாட்டிக்கொண்டிருந்தாள். கழுத்தில் மின்னும் மெல்லிய தங்கச்சங்கிலி, குலுங்கும் மார்புகளின் பிளவுகளுக்கு நடுவில் சென்று நாபிக்குழிக்கு மேல் தஞ்சமடைந்திருந்தது. இந்திரலோகத்துல ரம்பை, ஊர்வசின்னு இருந்தாங்களாமே.. அவங்கள்ளாம், இந்தக்காலத்து பொண்ணுங்க மாதிரி தங்களோட உடம்புல இருக்கற முடியையெல்லாம் எடுத்திருப்பாங்களா?இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், சுகன்யாவின் உதடுகள் இலேசாக விரிந்தன.

அலமாரியைத்திறந்து மேலும் கீழும் துழாவி கருப்பு நிற பிராவை தேடினாள். அம்மாவைக் கேக்கலாமா? உன் பிராவை நான் ஏன்டீ எடுக்கறேன்... அம்மாவின் முகம் போகும் போக்கை அந்த நேரத்தில் பார்க்க விரும்பாமல், சோம்பேறித்தனத்துடன், மார்புக்கச்சையைத் தேடுவதை நிறுத்திவிட்டு, வெற்று மார்பில் வெள்ளை நிற காட்டன் சட்டையைப் போட்டுக்கொண்டாள். இடுப்பில் காக்கி நிற ஜீன்சை ஏற்றிக்கொண்டாள்.

சுகன்யாவின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப, அவள் தோளில் கிடந்த மெல்லிய வெள்ளை நிற பருத்தி சட்டையின் பின்னால், அவள் நெஞ்சுக்கனிகள் ஊசலாடிகொண்டிருந்தன. சிறிதே உற்றுக் கவனித்தால் அவளுடைய செழித்த முலைகளின் கருத்த காம்புகளின் அழகையும் அந்த சட்டை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும், இயற்கையாகவே கொழுத்து குலுங்கும் தன் முன் அழகையும், இடுப்புக்கு கீழ் அணிந்திருந்த டைட்டான் ஜூன்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருக்கும் பின்னழகுகளையும் தொட்டுப் பார்த்துக்கொண்ட சுகன்யாவின் மனதில் லேசாக ஒரு கர்வம் சட்டென எழுந்தது. அழகாத்தான் இருக்கேன் நான். பின்னாடியும் நான் கொஞ்சம் பெரிசாத்தான் ஆயிருக்கேன்.

நாலு மாசமா அரிசியை கொறைச்சு, சப்பாத்தியும், தாலும், வெஜீடபிள்ஸ், பால், தயிர்ன்னு, ருசியா சாப்பிட்டது செரிக்கறதுக்கு, தினமும் விடாம காலையில, மாலையிலேன்னு பத்து கிலோ மீட்டர் நடந்த நடை, அதோட வேலையை நல்லாத்தான் காமிச்சி இருக்கு. தேவையில்லாத சதையெல்லாம் கொறைஞ்சு, உடம்பே ஒரு மாதிரி சிக்குன்னு புடிச்சு விட்டமாதிரி ஆயிடிச்சே.. சுகன்யாவின் உதடுகளில் குறுநகையொன்று எழுந்தது.

"ரொம்பத்தான் அல்டிக்காதேடீ?" மனதில் எழுந்த குதூகலம் சட்டென வடிந்தது.

"என்ன சொல்றே நீ... சும்மா என்னை ஊசியா குத்தறேதே உன் தொழிலாப் போச்சு..." மனதிடம் அன்று சண்டையிட முடிவு செய்தாள் சுகன்யா.

"யாருக்குடீ பிரயோசனம்?"

"புரியலே.."

"உன் அழகால யாருக்குப் பிரயோசனம்ன்னு கேக்கிறேன்...? அழகை ஆராதிக்கறதுக்கு ஒரு ஆள் வேணாமா? காட்டுல பூவா பூத்து குலுங்குது... ஆளில்லாத காட்டுல பூத்துக்குலுங்கறது செடிக்கு பலனா? இல்லே காட்டுக்குத்தான் பலனா? எதுக்கு பலன்..? யாருக்குப் பலன் அதனால...?"

"ம்ம்ம்... நீ சொல்றது சரிதான்..." தலையில் சுற்றியிருந்த துணியை உதறி, நீளமான தன் முடியை தட்டி உலர வைத்தாள்.

"தோட்டத்துல பூக்கற பூவை உன் அம்மாவும் பாட்டியும் மெனக்கெட்டு ஏன் கிள்ளித் தொடுத்து தெருக்கோடி பிள்ளையாருக்கு போடறாங்க; மிஞ்சிப் போனதையும், உன் அம்மாத் தலையில சூட்டி அழகு பாக்கறாங்க உன் பாட்டி... இதெல்லாம் ஏன்? அந்த பூக்கள் மலர்ந்ததுக்கு ஒரு அர்த்தம் வேணுமில்லையா? அதுக்காகத்தான்..."

"அதுக்காக என் ஒடம்பு அழகை, பாருங்க... பாருங்கன்னு யாருக்காவது அவுத்தா காமிக்க முடியும்..?" சர் சர்ரென தன் இரு அக்குள்களிலும் சந்தன வாசனையை பீய்ச்சிக்கொண்டாள்.

"அவுத்து காட்டவேண்டாம்... நீ பொத்தி பொத்தி வெச்சிருக்கற அழகையும் ஒருத்தன் ரசிச்சாத்தான் அந்த அழகுக்கும் கவுரம்டீ... பாத்து ரசிச்சு... நீ அழகா இருக்கேன்னு ஒருத்தன் உன்னைப் பாராட்டினாத்தான் உனக்கும், உன் அழகுக்கும் மதிப்புடீ.."

"புரியுது... நீ சொல்றதும் உண்மைதான்.."காலில் கேன்வாஸ் ஷுவை எடுத்து மாட்ட ஆரம்பித்தாள்.

"என்னப் புரிஞ்சுது...?"

"சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு... என் அழகுக்கு சொந்தக்காரனை நான் இன்னும் பாக்கவேயில்லே. எப்பவும் டிப் டாப்பா டிரஸ் பண்றவன் , தெனமும் பள பளன்னு ஷேவ் பண்ணிக்கறவன், பத்து நாள் தாடியோட, பரதேசி மாதிரி ஒரு அழுக்குப் பேண்ட்டையும், அக்குள்ல்ல தையல் பிரிஞ்ச சட்டையும், போட்டுக்கிட்டு ஆஃபிக்கு வர்றானாம்."

"அப்டியா?"

"அவன் ஷூவை தொடைச்சு பாலீஷ் போட்டு... எத்தனை நாள் ஆச்சோ? பாக்கறதுக்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்கான்னு என் ஃப்ரெண்டு வித்யா சொன்னா..."

"யாரைப் பத்திடீ சொல்றே..?" மனசு எக்காளமாக கூவியது.

"நிஜமாவே தெரியலியா நான் யாரை சொல்றேன்னு..?" காய்ந்த தலை முடியை வகிடெடுக்காமல் நெற்றிக்குப் பின்னால் தள்ளி ரப்பர் பேண்டால் இறுக்கினாள் சுகன்யா.

"எங்கிட்ட கொஞ்சாதடீ... உன் மனசுல யார் இருக்கறதுன்னு எனக்கெப்படித் தெரியும்...?"

"அதான்.. என் செல்வா...?"

"என்னது... உன் செல்வாவா?"

"பின்னே.. எங்களுக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும் அவன் என் செல்வாதான்.."

"அட்ரா சக்கை... உன் கையைப் பிடிச்சு நெறிச்சவன்... தனியா வாடீன்னு கூப்டானே... அன்னைக்கு ஏன்டீ நீ அவன் பின்னால போவலே?"

"அதான் இன்னைக்கு அவனை மீட் பண்றேன்னு சொல்லியிருக்கேனே?"

"நல்லா இருக்குதுடீ உன் கூத்து... நீ டெல்லியில இருக்கும் போது... நாலு தரம் உனக்கு போன் பண்ணான். நீ தானேடீ திமிர் பிடிச்சிப் போய் செல்லை ஆஃப் பண்ணே..?

"அப்ப எனக்கு அவன் மேல இருந்த கோவம் முழுசா தீரலை.."

"இப்பத் தீந்து போச்சா..?"

"கோவமா... அவனைப் பாத்தா என் வயிறு எரியுது..? முகத்தில் இலேசாக ரோஸ் பவுடரை அள்ளி அப்பிக்கொண்டாள்.

"எதுக்குடீ..?"

"என் செல்வா யாருமேயில்லாத அனாதை மாதிரியில்லா ராத்திரி பூரா எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கானாம்?" கன்னங்களில் படிந்திருந்த பவுடரை மெல்ல உள்ளங்கைகளால் அழுத்தி தேய்த்தாள்.

"அவன் மேல இவ்வளவு அக்கறை இருக்குல்ல உனக்கு?"

"ம்ம்ம்..."

"என்னடீ முனகறே..? வாயைத் தொறந்து சொல்லேன்..?"

"ஆமாம்.. ஐ லவ் ஹிம் சோ மச்... எப்பவும் என் மனசுக்குள்ளவேதான் அவன் இருக்கான்... அவன் எனக்கு பிரசண்ட் பண்ண மோதிரத்தை இன்னைக்கு வரைக்கும் நான் என் விரல்லேருந்து கழட்டவேயில்லே..." சுகன்யாவின் மனதில் பனியாக உறைந்திருந்த காதல் மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தது.

"சரி.. இப்ப அவன்... அதான்டீ உன் செல்வா... உன் வீட்டுக்கு வந்தா.. அவனை வான்னு கூப்பிட்டு பேசுவியா?"

"ம்ம்ம்.. என் அம்மா பெர்மிஷன் குடுத்தா... அவங்க பேசவிட்டா பேசுவேன்..?'

"அப்புறம்...?"

"அவனைக் என் ரூமுக்கு இழுத்துக்கிட்டு வந்து அப்படியே கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பேன்.. அவன் கிட்ட முத்தம் வாங்கிப்பேன்..?"

"அம்மா என்னடீ அம்மா நடுவுலே? ரொம்பத்தான் நல்லப்பொண்ணு மாதிரி ஆக்டிங் குடுக்கறே?"

"எனக்கு என் அம்மாவும்தான் ரொம்ப முக்கியம்... என்னை வளத்த அவங்களும்தான் எனக்கு முக்கியம். மொதல்லே அவங்க; அப்புறம்தான் செல்வா; நான் டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ எங்கம்மாதானே எனக்கு புத்தி சொல்லி அனுப்சாங்க?"

"என்ன சொன்னாங்க...?"

"நீங்களா அடிச்சிக்கிறீங்க... நீங்களா கூடிக்கிறீங்க.. திரும்பவும் அடிச்சிக்கிறீங்க.. அடிச்சிக்கிட்டு என் நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணுன்னு இங்க வந்து எங்கிட்ட ஏன்டீ குதிக்கறே... கல்யாணங்கறது குழந்தைங்க விளையாடற சொப்பு விளையாட்டான்னு திட்டினாங்க?"

"ம்ம்ம்..."

"செல்வாவே திரும்பி வந்து... சுகன்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு என்னைக்கேக்கற வரைக்கும்... நீ பொத்திகிட்டு இருக்கணும்டீன்னு சொன்னாங்க..."

"அப்புறம்...?"

"என் புருஷனுக்காக முழுசா பதினைஞ்சு வருஷம் நான் பொறுமையா காத்து இருந்தேன்டீ... கடைசியா என் புருஷன்தான் என்னைத் தேடிகிட்டு வந்தான்; அதே மாதிரி அவன்தான் உன்னைத் தேடி வரணும்; திரும்பவும் நீயா போய் அவங்கிட்ட ஜொள்ளு விடற வேலை வெச்சுக்கிட்டேன்னு எனக்குத் தெரிஞ்சுது... உன்னை வெட்டிப்போட்டுடுவேன்னு தீத்து சொன்னாங்க..."

"ஸோ... அவன் கிட்ட நீ பேசாததுக்கு இதுதான் காரணமா.."

"இதுவும் ஒரு காரணம்..."

"அவன் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டான்னு நீ சொன்னது; உன் நடத்தையை அவன் சந்தேகப்பட்டான்னு குதிச்சது; இதெல்லாம் இப்ப என்ன ஆச்சு...?"

"அதையெல்லாம் நான் மறந்துட்டேன்..."

"நாளைக்கு அவன் திரும்பவும் உன்னை இவன் கிட்ட பேசாதே... அவன் கிட்டே சிரிக்காதேன்னு சொன்னா என்னடீ பண்ணுவே?"

"தெரியலை..."

"திரும்பவும் அவனை விட்டு பிரிவியா?"

"அதை அப்ப பாத்துக்கலாம்...?"

"அப்டீன்னா இன்னைக்கு நீ உன் அம்மாவை மீறி, அவங்க சொன்னதையெல்லாம் காத்துல பறக்கவிட்டுட்டு, அவனைப் போய் பாக்கப்போறே...??"

"இவ்வளவு நேரமா என் கூட பேசற நீ யாரு? நீ என் மனசுதானே...? நீ என் மனசாட்சிதானே? என் மனசுல இருக்கறது உனக்குத் தெரியலையா?"

"தெரியும்டீ.. உன் திருட்டுத்தனமெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்..."

"நான் என்ன திருட்டுத்தனம் பண்றேன்...?"

"அடங்குடீ... சும்மா எகிறாதே... உன் ரெண்டு மாருக்கும் நடுவுல ஆடிகிட்டு இருக்கே அந்த டாலருக்குள்ள, யார் கண்ணுக்கும் தெரியாம, குட்டியா, வெட்டி ஒட்டி பதுக்கி வெச்சிருக்கியே அந்த போட்டோ யாருதுடீ?"

"அது என் ஆளோட போட்டோ... என் செல்வாவோட போட்டோ.."

"அப்ப இத்தனை நாளா உன்னை நீயேத்தானே ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கே..?"

"இன் எ வே.. யெஸ்..." சுகன்யா சிறிய சிவப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டிக்கொண்டாள்.

"நிஜம்மா...?"

"நிஜம்மாத்தான்.. அவனும் என்னை விட்டு பிரிஞ்சு இருந்ததுலே சுத்தமா எரிஞ்சுதான் போயிருக்கான்... அவன் மூஞ்சைப் பாத்தாலே தெரியலையா?"

"ம்ம்ம்..."



"ராத்திரி பூரா வீட்டுக்கேப் போகலையாமே? அவனுக்கு வேண்டியவங்கள்ளாம், தவிச்சுப் போறாங்களே? எங்கே இருக்கான்னு அவனுக்கு நான் வேணா போன் பண்ணட்டுமா?" சுகன்யா இரும்பு அலமாரியைத் திறந்து கையில் கிடைத்த கரன்சி நோட்டை தன் ஜீன்ஸின் பேக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டாள்.

"சும்மா இருடீ... இவ்வளவு நாளா உன் அம்மா சொன்னதை கேட்டுக்கிட்டு பொறுமையா இருந்தே இல்லே... இன்னும் கொஞ்சம் பொறுடீ..."

"என்னால முடியலியே... நானும் தான் தவிச்சுப்போறேன்!?"

சுகன்யாவின் செல் சிணுங்கியது... ஓ.. மை காட்... செல்வாவா இருக்குமா? கட்டிலின் மேல் கிடந்த தன் செல்லை பாய்ந்து எடுத்தாள் சுகன்யா.




No comments:

Post a Comment