Monday 30 March 2015

சுகன்யா... 81

மீனாவுக்குப் பிடித்த அடர்த்தியான நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற காட்டன் சட்டையையும், அணிந்து கொண்டான் சீனு. போட்டிருந்த பனியனும், அதன் மேல் தொங்கும் மெல்லிய செயினும் சட்டை வழியாக வெளியில் தெரிந்தன.

கைகளை முறுக்கி, 'மீனா உன்கிட்ட விழுந்ததுலே என்னடா ஆச்சரியம்... கட்டாத்தான்டா வெச்சிருக்கே நீ உன் பாடியை' கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்த சீனு தன் உடலழகை ஒரு வினாடி மெய் மறந்து ரசித்தான். மனசுக்குள் சிறிய கர்வம் சட்டென எழுந்தது.

வெளியில் அடித்துக்கொண்டிருந்த புழுதிக்காற்றையும், மூடிக்கொண்டிருக்கும் வானத்தையும் நோக்கிய சீனுவின் மனதில் 'மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே' மனசுக்குள் பாட்டு ஒலிக்கத் தொடங்க பாடி ஸ்ப்ரேயை அடித்துக்கொண்டான்.



பைக்ல போனா மூஞ்சி பூரா மண்ணு அடிக்கும்... வண்டி ஓட்டற மூடே கெட்டுப் போயிடும்... ம்ம்ம்.. கார்லே போயிடலாமா... ஒரு வினாடி யோசனைக்குப் பின் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற ஐ-டென்னை கிளப்பி தெருவில் நிறுத்தியவன், வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டு, பூட்டை ஒரு முறை இழுத்துப்பார்த்தான்.

காரை வேகமாகக் கிளப்பி பறந்தவன் சுந்தரம் அய்யர் மெஸ்ஸுக்கு முன்னாடி நின்றான். அரை டஜன் மெது வடை சட்னி, சாம்பர் பேக் பண்ணிக்கொண்டான். மீனா... டார்லிங்க்... உனக்குப் பிடிச்ச மெதுவடையோட உன் மாமன் வந்துட்டேன்டீச் செல்லம்... மீண்டும் காரில் உட்கார்ந்து சீறிப்பறந்தான் சீனு.

அவனுடைய வருகைக்காகவே காத்திருப்பதுபோல் மல்லிகா, நடராஜன், செல்வா, அனைவரும் ஹாலில் உட்க்கார்ந்திருந்தனர். 'வெளியிலே கிளம்பற மாதிரி தெரியுது?' கையிலிருந்த வடைப்பார்சலை டீபாயின் மேல் வைத்தான். நடராஜனையும், மல்லிகாவையும் ஒரு முறைப்பார்த்தான்.

'அம்மா... என் மேல கோவமாம்மா... நீங்களே என் மேல கோச்சிக்கிட்டா நான் எங்கம்மா போவேன்...?"

தன்னுடைய முதல் பிட்டைப் போட்டுக்கொண்டே, மல்லிகாவின் காலடியில் தரையில் உட்க்கார்ந்துகொண்டு அவள் மடியில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான். அவள் தாய்மை அந்தத் தருணத்தில் விழித்தது. தன் வலது கையால், சீனுவின் தலையை வருடிக்கொண்டே, வலது கையால் அவன் முதுகில் பொய்யாக அடித்தாள்.

"இந்த சினிமா டயலாக்கெல்லாம் என் கிட்ட வேணாம்... உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்..." மல்லிகா தன் முகத்தில் கோபத்தை கொண்டு வர முயற்சி செய்து முற்றிலுமாக சீனு தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் முன் தோற்றுப்போனாள்.

"என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியும்ன்னா... அப்புறம் எதுக்கு..." வார்த்தையை முடிக்காமல், தன் தலையை நிமிர்த்தி மல்லிகாவின் முகத்தைப் பார்த்தான். நடராஜன் முகத்தில் சிறிய புன்முறுவலுடன் அங்கு நடக்கும் டிராமாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"எழுந்திருடா..."

"என்னம்மா..?"

“எழுந்திருடான்னா...”

“ம்ம்ம்...” முனகிக்கொண்டே எழுந்தான் சீனு.

"இப்படி சோஃபாவுல உக்காரு..." தன்னருகில் உக்கார்ந்த சீனுவின் தோளில் ஆசையுடன் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.. அவன் முகத்தைப் பாசம் பொங்கப் பார்த்தாள்.

"அம்மா... மீனா மாதிரி ஒரு நல்லப் பொண்ணை, அதுவும் என்னை ஆசைப்படற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாம்ன்னு நினைச்சேம்ம்மா... அது தப்பாம்ம்மா.."

சீனு தன்னுடைய அடுத்தப் பிட்டை எடுத்து அழகாக வீசினான். அவன் எதிர்பார்த்தபடியே அந்த பிட்டும் தன் வேலையைச் சரியாக செய்தது. மல்லிகா உதடுகளால் எதுவும் பேசமுடியாமல் அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நடராஜனும் வாயைத் திறக்காமல் மனதுக்குள் நெகிழ்ந்து கொண்டிருந்தார். மீனா தன் அறையிலிருந்து வெளியில் வந்து தன் தந்தையின் பக்கத்தில் நின்றாள்.

"மீனா இப்படி வாயேன்.. அம்மா, அப்பா, நீங்க ரெண்டு பேரும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களேன்.." சீனு சட்டென எழுந்து, மீனாவின் வலது கையைப்பிடித்தான். மீனாவும் அவனும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்று அவர்கள் முன் குனிந்தார்கள்.

"முருகா.. சந்தோஷமா இருங்க..." நடராஜனின் குரல் தழுதழுத்தது. மல்லிகா அவர்கள் இருவரையும் ஒரு சேர தன்னுடன் சேர்த்துக்கொண்டாள்.

"சீனு உங்க வீட்டுல நீங்க ரெண்டு பேரும் லவ்வற விஷயத்தை சொல்லிட்டியா..? மல்லிகா மெல்ல கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

"ம்ம்ம்.... சொல்லிட்டேம்மா... மீனாவையும் போனவாரம் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் எல்லாருக்கும் இன்ட்ரொட்யூஸ் பண்ணிட்டேன்... மீனாவுக்கு பரிட்சை முடிஞ்சதும் உங்ககிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு... அத்தையும், அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்கப்பா.."

“இவ்வளவு தூரம் எல்லாத்தையும் பண்ணிட்டு எங்கக்கிட்ட எதையும் சொல்லாமா இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருக்கேடீ நீ...” மல்லிகா தன் பெண்ணை முறைத்தாள்.

"அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா... மீனா தன் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அடுத்த நொடி... கோச்சிக்காதேம்மா... நீ என்ன சொல்லுவியோன்னு பயந்தேம்மா.. அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். செல்வாவின் கையைப் எடுத்து அவன் புறங்கையில் முத்தமிட்டாள்.

"எல்லாருக்கும் குடுத்துட்டே... எனக்கு குடுக்க மாட்டியா?" சீனு மீனாவை நோக்கி தன் கன்னத்தைக் காண்பித்து கண்ணடித்தான்.

"சனியனே... என் மானத்தை வாங்காதே... உனக்கு ஒதைதான் குடுப்பேன்..." மீனா அவன் முதுகில் செல்லமாக அடித்தாள்.

"பாருங்கப்பா... இப்பவே என்னை இப்படி அடிக்கறாளே... போவப் போவ இவகிட்ட நான் என்னப் பாடு படணுமோ?" சீனுவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

"சீனு... நானும் இவரை அப்பாங்கறேன்.. என்னை கட்டிக்கப்போற நீயும் அப்பாங்கறே... லாஜிக் கொஞ்சம் இடிக்கலே..." மீனாவின் முகம் மாலை வானமாக சிவந்திருந்தது. அவள் கண்ணும், வாயும், உதடும், ஏன் அவளுடைய முழு முகமும் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தன.

"மீனாட்சீ.. சீனுவை நீ இந்த வீட்டு மாப்பிள்ளையாக்கிட்டே... இருந்தாலும், அவனை நாங்க என்னைக்கும் எங்க பிள்ளையாத்தான் கொண்டாடுவோம்..." நடராஜன், சீனுவை இழுத்து அணைத்துக்கொண்டார். செல்வா சீனுவின் கையைப்பிடித்து குலுக்கியபடியே, அவனைத் தன் தோளோடு நெருக்கிக்கொண்டான். மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது அந்த வீடு. 

"மல்லிகா சீக்கிரமா டிஃபனை எடுத்து வைம்மா... ஒரு வாய் சாப்பிட்டுட்டு கிளம்பணும்... நேரமாவுதுல்லே"

"என்னம்மா.. அவசரமா வான்னு என்னைக் கூப்ட்டீங்க..?" சீனு வடையை மென்று தின்றுக்கொண்டிருந்தான்.

"இன்னைக்கு மீனாவுக்கு கேம்பஸ் இண்டர்வியூ இருக்குடா... சாரிப்பா.. சீனு... நீங்க இந்த வீட்டு மாப்பிளையா ஆகப்போறவர்.. உங்களை நான் இனிமே பழைய மாதிரி வாடா போடான்னுல்லாம் சொல்லக்கூடாது.." மல்லிகாவின் முகத்தில் புன்சிரிப்பு எழுந்தது.

“அம்மா நான் என்ன செய்யணும்ன்னு நீங்க ஆர்டர் போடுங்கம்மா... என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு... இந்த வாங்க போங்க மரியாதையெல்லாம் எனக்கு வேண்டாம்.. அப்பா சொன்ன மாதிரி நான் என்னைக்கும் உங்க புள்ளைம்மா.. வாடா போடான்னு நீங்க என்னை எப்பவும் போல ஆசையா கூப்பிடுங்கம்மா..." சீனு உணர்ச்சி வசப்பட்டதால் அவன் குரல் கரகரப்பாக வந்தது.

"இந்த இண்டர்வீயுவை செகண்ட் ஸ்டேஜை காலேஜ்ல வெக்காம அவன் கம்பெனில வெச்சிருக்கானாம்.. மீனா கூட நான் போறதா இருந்தேன்... ஆனா எனக்கு மாமா மொறையில ஒருத்தர் இன்னைக்கு விடியற்காலம் தீடீர்ன்னு காலமாயிட்டார்... துக்கம் விசாரிக்க நாங்க திருக்கழுக்குன்றம் வரைக்கும் போயே ஆகணும்... செல்வா எங்கக்கூட வர்றான்... கார்லேயே போய்ட்டு வந்திடலாம்ன்னு பாக்கறோம்... நீங்க பைக்லதானே வந்திருக்கீங்க... துணைக்கு நீங்க மீனாகூடப் போயிட்டு வர்றீங்களா?”

"நீங்க கவலைப்படாமே போய் வாங்கம்மா... மழை வர்ற மாதிரி இருக்கேன்னு அப்பாவோட காரை நான் எடுத்துட்டு வந்திருக்கேன்...மீனாக்கூட நான் போய்ட்டு வர்றேம்மா...”

சீனு இதாண்டா நேரங்கறது... நடக்கற நேரத்துல எல்லாமே அது அதுவா கரெக்டா நடக்குது பாரு... ‘நீங்க சொர்க்கத்துல நல்லாயிருக்கணும் அய்யா...’ செத்துப்போன மல்லிகாவின் மாமவுக்கு தன் மனசுக்குள் ஆயிரம் முறை நன்றி சொன்னான் சீனு.



***


மீனா எப்போதுமே ஒரு சிறிய துள்ளலுடன்தான் நடப்பாள். இதற்கு அவளுடைய மெல்லிய உடல் வாகும், ஐந்தாறு வருடங்களாக அவள் அணியும் மிதமான ஹைஹீல்களுமே காரணம். அவள் ஹைஹீல்ஸ் அணிந்து நடக்க ஆரம்பித்ததிலிருந்து, அவளுடைய இடுப்பு குறுகியிருந்த போதிலும், இடுப்பின் கீழ்புறம் சிறிதே அகன்று அவளுடைய பின் மேடுகள் சதைப்பிடிப்புடன், செழிப்பாக மாறிக்கொண்டிருந்தன.

அவளுடைய பின் மேடுகளின் புஷ்டி அவளுக்கு கவர்ச்சியைத் தந்தது மட்டுமன்றி, அவள் புடவையணியும் போது அவளை கோவில் சிலையாக மாற்றிக் காட்டியது. பார்க்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல், ஒரு வினாடி நின்று திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு அவள் அழகு கவர்ச்சியாகவும், அவளுடையது.

மீனாவுடன் படிக்கும் அவள் கல்லூரித் தோழிகளில் சிலரே அவளுடைய இந்த கொழுத்த வனப்பைப்பார்த்து 'மீனா... உனக்கு முன்னாடி கொஞ்சம் சின்னதுனாலும், பின்னாடி வடிவா, அழகா, சூப்பரா இருக்குடீ... இப்ப உன் ஒடம்புக்கு ஏத்த அளவுல இருக்குதுங்க... நீ நடக்கும் போது அழகா அசையுதுங்க... ஆனா இதுக்கு மேல பெருக்க விட்டுடாதே... பொறாமையில் தங்கள் கண்கள் சிறுத்து பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

மீனு... இவளுங்க பேசறதெல்லாத்தையும் கண்டுக்காதேடீ.. டேட் இட் ஈஸீ... உனக்கு வர்றவன் கையைப் போட்டு மாரை அழுத்திப் புடிச்சான்னா பத்து நாள்லே உனக்கு முன்னாடியும் பெருத்துடும்.. அவள் நெருங்கியத்தோழி செல்வி அவள் காதில் அவ்வப்போது முனகும் அந்த நேரங்களில், தன் அழகை நினைத்து, மார்பு துடிக்க, தன் முலைக்காம்புகள் தடிக்க, முகத்தில் சிவக்கும் மீனா மனதுக்குள் பெருமிதத்துடன் ஆகாயத்தில் பறப்பாள்.

நேர்முகத் தேர்வுக்காக மீனா கருநிற ஃபார்மல் பேண்ட்டும், ப்யூர் வெள்ளை நிறத்தில் முழுக்கைச் சட்டையை 'இன்' செய்து, லைட் க்ரே நிறத்தில் பெல்ட்டை இடுப்பில் இறுக்கி, காலில் கருநிற கட் ஷூவும், கழுத்தில் மெல்லிய நீல வண்ண 'டையும்' அணிந்து கொண்டிருந்தாள்.

முதல்கட்ட நேர்முகத்தேர்வை இரண்டு நாட்களுக்கு முன் அவள் சரியாக அணுகியிருந்தாள். தேர்வு பட்டியலில் அவள் பெயர் முதன்மையாக இருந்தது. அதனால் இன்றையத் இரண்டாவது கட்டத் தேர்வையும் தன்னால் சிறப்பாக எதிர்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை தந்த கர்வத்தில், அவள் நடையில் இருந்த துள்ளலுடன், மனம் முழுவதும் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து கொண்டது.

வீட்டிலிருந்து, தெருவில் நின்றிருந்த காரை நோக்கி நடந்தபோது மீனாவின் இளமைகளும் சந்தோஷத்தில் பூரித்து திமிறிக்கொண்டிருந்தன. அவள் நடந்து வந்த ஸ்டைலையும், அவள் மார்புகள் அசைந்த விதத்தையும், அவள் முகத்திலிருந்த தன்னம்பிக்கையையும் கண்ட சீனு நிலைகுலைந்து போய் ஸ்டீயரிங் வீலின் முன் உட்க்கார்ந்திருந்தான்.

மீனா முன் சீட்டில் அவனருகில் உட்கார்ந்ததும், கையிலிருந்த கோட்டை பின் சீட்டில் ஏறிந்தாள். கதவை மூடிக்கொண்டாள். 'மை காட்... சத்தியமா சொல்றேன்டீ... இந்த மாதிரி நீ டிரஸ் பண்ணே... இண்டர்வியூல உன்னைப் பாக்கற அந்தக் கிழப்பசங்க அங்கேயே செத்தானுங்க... ஒண்ணுமே பேசாம வேலையைத் தூக்கி உன் கையில கண்டிப்பா குடுத்துடுவானுங்கடீ செல்லம்...' அவள் மார்பின் மேல் வைத்த தன் கண்களை திருப்ப முடியாமல் திணறினான் சீனு.

"என்னப்பா.. நீயே கண்ணு போட்டா எப்படீ..." மீனா சிணுங்கினாள்.

"கோழி மெதிச்சி குஞ்சு சாகுமா...?"

"எந்த குஞ்சைச் சொல்றே நீ? மீனா தன் உதட்டைக் குவித்து குறும்பாகக் கண்ணடித்தாள்.

"அடிப்பாவீ... அம்மாத் தாயே... மீனாட்சீ... நீ ரொம்பவே முத்திட்டே... கெட்டு குட்டி சுவராப் போயிருக்கேடீ..!! இப்படீல்லாம் கூட உனக்கு பேசத் தெரியுமாடீ.." சீனு அவள் இடுப்பில் கிள்ளினான்.

"உன் கூட சேந்தேன்ல்லா அதான்... கையை எடுடா சனியனே... கதவாண்டை அப்பா நின்னுக்கிட்டு இருக்கார்.."

கார் ஈ.ஸீ.ஆர் ரோடில் வெண்ணையாக வழுக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய சீனு, 'மீனு... கிட்டவாடிச்செல்லம்.." குழைந்தான்.

"இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தினே நீ"

"ஒரு வாரம் ஆச்சுல்லே.. ஒண்ணே ஒண்ணு குடுடீ கண்ணு.... பெட்ரோல் போட்டாத்தான் வண்டி ஓடும்.." வெட்கமில்லாமல் சிரித்தான் சீனு.

"வேணம்பா... ரோட்ல வண்டிங்கள்ளால்லாம் நிறையப் போவுதுல்லே.."

"ப்ளீஸ்... போறவன் போறான்.. வர்றவன் வர்றான்... நீ ஒண்ணே ஒண்ணுடீ...."

"நான் உன் கிட்ட வந்தா... என்னை நீ கட்டிப்புடிப்பே.. அப்புறம் என் சட்டையெல்லாம் கசங்கிப்போயிடும்.. இண்டர்வியூவுக்கு போகணுமில்லே..."

மீனா சிணுங்கியபோதிலும், சீனுவின் கண்களில் இருந்த உல்லாசம் அவளையும் பட்டெனத் தொற்றிக்கொண்டது. சீனுவின் உதடுகள் தரும் இதமான சூட்டுக்கு அவள் பெண்மை அலைந்தது. மீனா காரின் கண்ணாடியின் வழியாக முன்னும் பின்னும் ஒருமுறைப்பார்த்தாள்.



சீனுவின் கழுத்தை தன் இடது கையால் மனதில் பொங்கும் ஆசையுடன் வளைத்தாள். சீனுவைத் தன் புறம் இழுத்து அவன் நெற்றியில் ஆவலுடன் முத்தமிட்டாள். புருவங்களில் முத்தமிட்டாள். அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். தன் இதழ்களில் வழியும் ஈரத்தை, தன் இதழ்களை கவ்வி உறிஞ்சிய சீனுவின் இதழ்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினாள். அவன் உதடுகள் தந்த அழுத்தத்தை மனம் சிலிர்க்க, உடல் சிலிர்க்க விழி மூடி அனுபவித்தாள்.

"தேங்க்யூடீச் செல்லம்.." சீனுவும் சிலிர்த்தான்.

சீனு தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். கார் ஓட ஓட, மீனா அவன் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அரை நிமிடத்திற்கு ஒருதரம் தன் முகத்தைத் திருப்பி திருப்பி, அவன் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள். 



சுகன்யா... 80

செல்வாவும் ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்ந்துதான் போயிருந்தான். சே.. நான் இன்னைக்கு அறிவுகெட்டத்தனமா பைத்தியக்காரத்தனமால்ல நடந்துகிட்டேன்? அப்படி சுகன்யா என்ன சொல்லிட்டா..? நடந்ததைத்தானே அவ சொன்னா? ஆனா அதை அவ என் கிட்ட சொன்ன நேரம் சரியில்லே. சொன்னவிதம் சரியில்லே.

ம்ம்ம்.. நடந்தது நடந்து போச்சு. இப்ப எதுக்கு பழசை சுகன்யா ஞாபகப்படுத்தினா? என் அம்மாவும்தான் நாலு பேரு எதிர்லே நான் கோவத்துல உன்னை எதாவது தப்பா சொல்லியிருக்கலாம்... அதைக் கேட்டு உன் மனசு புண்பட்டு இருக்கலாம்... அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதேன்னு சொன்னாளே... அதை மட்டும் சுகன்யா ஏன் மறந்துட்டா?



ஆயிரம்தான் இருந்தாலும் நான் இவளை முரட்டுத்தனமா தள்ளினது தப்புத்தானே? இப்ப இவ மூஞ்சை நான் எப்படி நிமிர்ந்து பாக்கறது? என்னை ரவுடிங்கறாளே? செல்வா தன்னுள் மருக ஆரம்பித்தான்.

ஒலகத்துல பொம்பளை தன் ஒடம்பால கொடுக்கற சுகம்தான் பெரிய சுகம்ன்னு சொல்றானுங்க.. என் கேஸ்ல என்னடான்னா... ஒரு பொம்பளை குடுக்கற சொகத்துக்கு நடுவுல இன்னொரு பொம்பளை இன்னைக்கு குறுக்கே வந்துட்டா...

இவளுக்கு நான் இன்னும் தாலி கூட கட்டலை. அதுக்குள்ள மாமியார், மருமவ சண்டை ஆரம்பிச்சிடிச்சி... உன் அம்மா இதைச்சொன்னா.. உன் தங்கச்சி அதைச் சொன்னா.. சை... கொடுமைடாப்ப்பா..

செல்வா, தன் முகத்தை, கழுத்தை, மார்பை, கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு ஈரத் துண்டை பால்கனி கொடியில் உதறிப் போட்டான்.

“அயாம் சாரி.. சுகன்யா,” அறையின் நடுவில் நின்றவாறு, தன் தலையை தடவிக்கொண்டிருந்த சுகன்யாவின் கையை, மீண்டும் பற்ற முயன்றான் செல்வா.

“என்னைத் தொடாதே நீ...” சுகன்யா வெடித்தாள். அவனிடமிருந்து பின்னுக்கு நகர்ந்தாள் அவள்.

அய்யோன்னு நெனைச்சா, ஆறுமாசப் பாவம் சுத்திக்கும்ன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. மனதுக்குள் எரிச்சல் அடைந்துகொண்டிருந்தான் செல்வா. பாக்கறதுக்கு கொஞ்சம் மூக்கும் முழியுமா, செவப்புத் தோலோட, கூடவே மாரும் சூத்தும் தெறிப்பா இருந்துட்டா பெரிய மசுருன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறாளுங்க... அவன் மனது தறிகெட்டு ஓட ஆரம்பித்தது. உள்ளத்துக்குள் கொதிக்க ஆரம்பித்தான்.

போச்சு போச்சு... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்பவே ஈகோ பிராப்ளம் ஆரம்பிச்சிடுச்சா.. எல்லாம் இவ சூத்தை தொறந்து பாக்கணுங்கற ஆசையில வந்த வெனை... செல்வா தன் மனதுக்குள் மேலும் மேலும் குமைந்து கொண்டிருந்தான்.

செல்வா... கன்ட்ரோல் யுவர் செல்ஃப்... சுகன்யா நீ காதலிக்கறப் பொண்ணுடா... உன் மனைவியாக ஆகப்போறவ... அவளைப் போய் இவ்வளவு மட்டமா நினைக்கறே... அவ உன் குணத்தைத்தானே சொன்னா... அதுவும் நீ வற்புறுத்தி விடாம கேக்கவேதானே சொன்னா... அவ சரியா... நீ சரியா? நிதானமா வீட்டுக்குப் போய் நடந்து என்னன்னு யோசனைப் பண்ணுடா? 


சனிக்கிழமை காலை. சீனு இன்னும் படுக்கையிலிருந்து எழுந்தபாடில்லை. சுகமாக போர்வையை கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

"ஒரு நிமிஷம் எழுந்து வந்து தெருக் கதவை தாப்பா போட்டுக்கடா... நாங்க கிளம்பணும்.. எங்களுக்கு நேரமாச்சு."

உஷா சீனுவை முதுகில் தட்டி எழுப்பினாள். ராகவன், பத்மா, உஷா மூவரும், ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்ய, காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்ரீபெரும்புதூருக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

"இன்னைக்கு லீவு தானே.. கொஞ்சம் நேரம் தூங்கவிடுங்கத்தே.." முனகினான் சீனு.

"ஒரு நிமிஷம் எழுந்து வாடா...கண்ணு..." அவள் தன் பட்டுப்புடவை மடிப்புகளை சரிசெய்து கொண்டே, சீனுவிடம் கெஞ்சினாள்.

"வெளியிலேருந்து பூட்டிக்கிட்டு போங்களேன்.." சீனு சோம்பல் முறித்தவாறு கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

"அவன் ஒரு கும்பகர்ணன்.. அவ பின்னால நீ ஏம்மா நிக்கறே? உஷா... சட்டுன்னு வாம்மா... பஸ் கிளம்பிடும்." ராகவன் வெரண்டாவிலிருந்து சலிப்புடன் குரல் கொடுத்தார்.

பத்து, பனிரெண்டு குடும்பங்கள், அவர் வயதையொத்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சிறிய டெம்போ ட்ராவலரை ஏற்பாடு செய்து கொண்டு, மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று சென்னையைச் சுற்றியிருக்கும் வைஷ்ணவ தலங்களுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

"வந்துட்டேன்ண்ணா.. டேய் சீனூ... பிளாஸ்க்ல காஃபி போட்டு வெச்சிருக்கேன்... தோசை மாவு இருக்கு... மொளகா பொடி இருக்கு... டிஃபனுக்கு ரெண்டு தோசையை ஊத்திக்கடா..." உஷா வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தாள்.

சீனு, மீனாவின் இடுப்பில் தன் கையைப் போட்டவாறு, கொடைக்கானலில் உல்லாசமாக சுற்றியலையும்போது, அவனைத் தட்டி எழுப்பி, அவனுடைய இனிமையான விடியல் நேரத்து இன்பக்கனவை கலைத்துவிட்ட அத்தையின் மேல் அவனுக்கு தாங்க முடியாத எரிச்சல் கிளம்பியது.

"ஒரு செட் சாவியை எடுத்துக்கிட்டீங்கள்லா...?" தெருவில் இறங்கி நடந்தவர்களிடம் கூவினான், சீனு.

"இருக்குடா..." ராகவன் தலையை ஆட்டிக்கொண்டே நடந்தார். தெரு முனையில் அவர்களுக்காக டிராவலர் காத்துக்கொண்டிருந்தது. 


தெருக்கதவை தாழிட்டுக்கொண்டு வந்த சீனு மீண்டும் ஹாலில் சோஃபாவில் நீளமாகப் படுத்துக்கொண்டான். உஷா அவனை முதுகில் ஓங்கி அறைந்து எழுப்பிய போது, சீனு தன் இளம் மனைவி மீனாவுடன் தேன்நிலவிற்காக, ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தான். ஊட்டியில் ரெண்டு நாட்களை கழித்தப்பின் அங்கிருந்தே மைசூர் போகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

சோஃபாவில் படுத்துக்கொண்டு, பாதியில் விட்ட இடத்திலிருந்து தன் கனவைத் தொடங்க நினைத்த சீனுவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் கனவு வருவேனா என முரண்டு பிடித்தது. கனவுதான் வரலே. தூக்கமாவது வந்து தொலைக்கக்கூடாதா? அவன் தன் கண்ணை இறுக மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தான். தூக்கமும் வந்தபாடில்லை.

விடியற்காலையில கண்ட கனவு பலிக்கும்ன்னு சொல்லுவாங்களே. கனவுல, மீனாவும் நானும் ஹனிமூனுக்கு போயிருந்தோம்ன்னா, மீனா வீட்டுல எந்தப் பிரச்சனையும் எழாம, எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுப் போச்சுன்னுதானே அர்த்தம். இதை நினைக்கும் போதே அவனுக்கு மனசெல்லாம் இனித்தது. இன்னைக்கு மீனாவைப் போய் பாத்துட்டு வரலாமா?

சீனுவுக்கு எழுந்திருக்கவும் மனம் வரவில்லை. சோஃபாவில் படுத்தபடியே ரிமோட்டை எடுத்து டீ.வி.யை ஆன் செய்தான். ஒரு சேனல் பாக்கியில்லாமல், எல்லாச் சேனல்களிலும், கழுத்தில் கொட்டையைக் கட்டிகொண்டு, பட்டையடித்து இருந்தவர்கள், நெற்றியில் நாமத்தை சூட்டியிருந்தவர்கள், பச்சை, ஆரஞ்சு, கருப்பு, நீலம் என வித விதமான வண்ணங்களில், இடுப்பில் வேட்டி அணிந்தவர்கள், வெள்ளை, கருப்பு, ஸ்படிகம், என கழுத்தில் மணிமாலைகளை அணிந்து கொண்டு, தங்கள் ஞானப்பழங்களிலிருந்து, பக்தி ரசத்தை பிழிந்து எடுத்து, பக்தகோடிகளின் இக பர நல்வாழ்க்கைக்காக, ஆறாக வெள்ளமாக, ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள். கேள்விகளை அவர்களே கேட்டு, பதிலையும் அவர்களே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சில சேனல்களில் வயதானவர்கள், ஆண் பெண் என்ற வித்தியாசமே இல்லாமல், ஒரு பெரிய பந்தலின் கீழ், தனித் தனியாக பிளாஸ்டிக் பாய், அதன் மேல் பெட்ஷீட் விரித்துக்கொண்டு, பெரிய பெரிய தொப்பைகளுடன் ஆண்களும், நடப்பதற்கே சிரமப்படும் பிருஷ்டம் பெருத்த பெண்களும், கும்பலாக நின்றும், கிடந்தும், ஓடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், யோகா என்ற பெயரில் தங்கள் உடம்பை வருத்திக்கொண்டிருந்தார்கள்.

சை.. என்னக் வேடிக்கைடா இது...? நொந்துகொண்டான் சீனு. இந்த சேனல்களை பாக்கற கோமாளிங்ககூட நாட்டுல இருக்கானுங்களா..? சீனு வியப்படைந்தான். கையிலிருந்த ரிமோட்டை எதிரிலிருந்த டீபாயின் மேல் வீசியெறிந்தான். வெறுப்புடன் எழுந்து டீ.வியை அணைத்தான். 


வாயைக்கொப்பளித்துக் கொண்டு, டைனிங் டேபிளின் ஓரத்தில், பளபளக்கும் பிளாஸ்கில் நிறைக்கப் பட்டிருந்த ஆவி பறக்கும், பில்டர் காஃபியை, ஒரு சில்வர் டம்ளர் நிறைய ஊற்றிக்கொண்டு, வெராண்டாவிற்கு வந்தான். குளிர்ந்த காற்று முகத்தில் வேகமாக வந்து அடிக்க மனசுக்குள் ஒரு நிம்மதி படருவதை உணர்ந்தான். நீளமாக காற்றை நெஞ்சுக்குள் இழுத்து வெளியேற்றினான்.

மீனாவின் சிரித்த முகம் அவன் கண்ணில் வந்து நின்றது. மீனா தூங்கி எழுந்துட்டு இருப்பாளா... ஒரு வாரமாச்சு அவளைப் பாத்து... வெளியில வர்றியாடீன்னு கூப்பிட்டுப் பாக்கலாமா? இனிமே பீச்சுக்கு வரமாட்டேன்னு தீத்து சொல்லிட்டா.. சினிமாவுக்கு வருவாளா? அங்கே இருட்டாத்தானே இருக்கும்...? சீனு.. உனக்கு மண்டையில களிமண்ணுடா.. பரிட்சைக்கு படிச்சுக்கிட்டு இருக்கறவ வெளியில உன் கூட வருவாளா?

போன வாரம் எவ்வளவு ஜாலியா இருந்திச்சி.. அவ வீட்டுக்குப் போய் மீனாவை கூப்பிட்டதும், ஒரு கேள்வி கேக்காம செல்வா அவளை என் கூட அனுப்பி வெச்சான். அதே மாதிரி அவளோட அம்மா அனுப்பி வெப்பாங்களா?
ஆயிரம்தான் இருந்தாலும் என் நண்பன் செல்வா.. செல்வாதான்.. செல்வா ஜிந்தாபாத்.. செல்வா ஜிந்தாபாத்.. சீனுவின் மனம் அவனுக்கு நன்றி சொல்லியது.

சே.. பாவம் படிக்கறவளை எதுக்காக தொந்தரவு பண்ணணும்..? மீனாவை பார்க்க அவன் மனம் துடித்தது. செல்வாவை போய் பாக்கற சாக்குல, தோட்டத்துல, கூடத்துல, இல்லே மாடியிலேன்னு மீனாவை எங்கேயாவது அவ வீட்டுலேயே மடக்கி, சட்டுன்னு கட்டிப்புடிச்சி, சின்னதா ஒரு கிஸ் அடிச்சுட்டு, அவகிட்டேருந்து ஒரு கிஸ் வாங்கிட்டு வந்துடலாமா?

மீனாவின் வலுவான தேகமும், அவள் அங்கங்களின் மென்மையும், குழந்தைத்தனமான அவள் விழிகளின் வெளுப்பும், கருமையும், கூந்தல் வாசனையும், அவளுடைய உடலின் மென்மையான சந்தன வாசனையும் அவனை அமைதியாக இருக்கவிடவில்லை.

சுகன்யா ஊர்லேருந்து வந்துட்டா.. கம்மினாட்டி செல்வா அவளை தள்ளிக்கிட்டு அவ பின்னால எங்கேயாவது சுத்தப் போயிடுவான்.. இன்னைக்கு எப்படி பொழுதை ஓட்டறது... சீனு தன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தான். வீட்டுலதான் யாரும் இல்லே... சரி.. வேலாயுதத்தை கூப்பிடலாமா? சீனுவுக்கு சட்டென அவன் ஞாபகம் வந்தது.

வேலாயுதத்தை நினைத்தவுடன் அவன் கை அரித்தது. மனதுக்குள் ஒரு ஏக்கம் வேகமாக எழுந்து உடலெங்கும் ஒரு நமைச்சல் எடுத்தது.. ஒரு மாசமாச்சு.. கட்டிங் வுட்டு.. இந்த எண்ணம் மனதில் வந்த அடுத்த நொடி கடந்த சண்டே அன்று மீனா தன் வீட்டிலிருந்தே, தன் செல்லில், வேலாயுதத்துக்கு லாடம் கட்டிய சீன் அவன் ஞாபகத்துக்கு வந்தது...

எப்பா.. வேண்டவே வேண்டாம்.. வேலாயுதம்கூட சகவாசம் வெச்சிக்கிட்டேன்னு மீனாவுக்கு தெரிஞ்சா... என்னை பீஸ் பீஸா கிழிச்சுடுவா... இப்பல்லாம் மீனாவோட அராஜாகம் அதிகமாயிட்டே போவுது.. காதலி வேணும்ன்னா கொஞ்ச நாளைக்கு நண்பனைத் தியாகம் பண்ணித்தான் ஆகணுமா?

வாலு போனாத்தான் கத்தி வருமா? ஒரு நஷ்டத்துலதான் ஒரு லாபத்தைப் பாக்கமுடியுமா? ஒண்ணைக் குடுத்தாத்தான் ஒண்ணு கிடைக்குமா? டேய்... சீனு... நீ ஒரு ஞானிடா... சட்டுன்னு வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டியேடா? அவன் மனசு 'ஓ' வென கூச்சலிட்டது.

வாசல் படியில் உட்கார்ந்திருந்த சீனு மெல்ல எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். ஹாலுக்குள் நுழைந்தபோது அவன் செல் ஒலித்தது... ஸ்கீரீனில் மீனாவின் புகைப்படம் பளிச்சிட்டது. 




வாவ்... வாடீச் செல்லம்... பழம் தானா நழுவி பால்லே அதுவா விழுதே... சீனு... நீ இனிமே இன்னைக்கு கனவு காண அவசியமில்லேடா... உன் மீனா டார்லிங் போன்ல வந்துட்டா.. ஏதாவது பிட்டைப் போட்டு, அவளைப் பிக்கப் பண்ணி உன் வீட்டுக்கு தள்ளிட்டு வந்துடு..

சாயந்திரம் நாலு மணி வரைக்கும் இன்னைக்கு உன் வீடு காலிதான்.. மூணு பெட் ரூம் இருக்கு... எதுலே இஷ்டமோ அதுல அனுபவி ராஜா அனுபவின்னு ஜாலியா இரு.. கோடையில் குற்றால அருவியில் குளிப்பது போலிருந்தது அவனுக்கு..

"சொல்லுடீ மீனா டார்லிங்... எப்படியிருக்கேடீ செல்லம் நீ... ஒரு வாரமாச்சும்மா உன் குரலைக்கேட்டு?” சீனு உற்சாகமான் குரலில் கொஞ்ச ஆரம்பித்தான்.

"டாய்... சீனு.. முண்டம்.. நான் உன் டார்லிங்கை பெத்தவடா… உன் ஒடம்பு எப்படி இருக்குது, ராத்திரி எங்கேயாவது பார்ட்டீ கீர்ட்டீனு போய் வந்தியா... குடிச்சுட்டு வந்த போதை இன்னும் தெளியலையா உனக்கு...

"அம்ம்ம்மமா.. சாரீம்ம்ம்மா..."

"நான் கேட்ட கேள்விக்கு பதிலைச்சொல்லுடா.. அதுக்கப்புறம் என் பொண்ணு மீனா... உனக்கு டார்லிங் ஆயிட்டாளா... கட்டை உனக்கு ரொம்பத்தான் துளுத்துப் போயிருக்குது... ? வீட்டுக்கு வருவேல்லா.. வா வாடா வா.. அவ எப்படியிருக்கான்னு உனக்கு நான் சொல்றேன்..."

மறுபுறத்திலிருந்து மல்லிகாவின் குரல் கணீரென வந்தது. பேசிக்கொண்டே மல்லிகா தான் பேசிக்கொண்டிருந்த செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். அவளுடன் நடராஜனும், செல்வாவும் உட்கார்ந்து இருந்தார்கள். மீனா குளித்துக்கொண்டிருந்தாள்.

"அம்ம்மா... மீனா நம்பர்லேருந்து கால் வரவே.. அவளை கலாய்க்கலாம்ன்னு... காமெடி பண்ணிட்டேம்மா... சாரிம்ம்மா... தப்பா நெனைச்சுக்காதீங்கம்மா" சீனு உண்மையிலேயே உள்ளூரப் பயத்துடன் உடல் நடுங்க உளறினான்.

நானே என் வாயைக்குடுத்து காரியத்தைக் கெடுத்துட்டேனே... எல்லாம் என் தலையெழுத்து... 'சனி பகவான்' இன்னைக்கு என்னைக் காலங்காத்தாலேயே புடிச்சிக்க ஆசைபடறானே? கொஞ்சம் கூட அவனுக்கு என் மேல இரக்கமே இல்லையே? சீனுவுக்கு நொடியில் தேகமெங்கும் வியர்த்தது.

கடைசீல... எதிர்வீட்டு ராமசாமி அய்யரு... நாங்க கிஸ்ஸடிச்ச மேட்டரை அம்மாக்கிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? மீனாவோட அம்மாவுக்கு நாங்க லவ்வற விஷயம் தெரிஞ்சிப் போச்சா? அம்மாவுக்கு தெரிஞ்சிருந்தா.. அவ அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்குமே?

“என்னடா... சத்தத்தையே காணோம்...” மல்லிகா குரலை உயர்த்திப் பேசினாள்.

“அம்மா... எல்லாரும் கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் வரைக்கும் போயிருக்காங்க... நான் மட்டும்தான் வீட்டுல இருக்கேன்...?”

“நான் அதைக் கேக்கலடா... உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா... அதைப் பத்திக் கேட்டேன்...”

“சாரீம்ம்மா... பிளீஸ்...”

"உன்னைப் பெத்தவங்க நல்லவங்க... கோயிலுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா.. கோவில் மாடு மாதிரி சுத்திக்கிட்டு... ஃப்ரெண்டு தங்கச்சியை டார்லிங்ன்னு சொல்லிகிட்டு, அவன் அம்மாகிட்டவே அவ நல்லாயிருக்காளான்னு கேள்வி வேறே கேக்கறே..

"பிளீஸ்ம்ம்மா.. தப்புத்தம்ம்மா... " .

“டேய்... நீ உடனே புறப்பட்டு இங்க வாடா... உனக்கு கச்சேரியை நான் நேர்ல வெச்சுக்கறேன்?”

மல்லிகாவின் உதடுகளில் மெல்லிய புன்முறுவல் எட்டிப்பார்த்தது. முகத்தில் அலாதியான ஒரு சந்தோஷம் நிரம்பியிருந்தது. பக்கத்திலிருந்த நடராஜன், அவளை நிமிர்ந்து பார்த்து ஓசையில்லாமல் சிரித்தார்.

“அம்மா... என்ன சொல்றீங்கம்மா..?” சீனுவுக்கு என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தான்.

"நீ பண்ணியிருக்கற வேலைக்கு..."

"அம்மா... நான் பண்ணது தப்புதான்னு ஒத்துக்கறேம்மா.. பிளீஸ்... கோச்சிக்காதீங்கம்மா.."

சீனு கெஞ்ச ஆரம்பித்தான். மல்லிகா அவனுக்கு எதற்காக போன் செய்தாள் என்பதை கேட்காமல் தன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியில் சீனு தொடர்ந்து உளற ஆரம்பித்தான்.

"நீ பண்ணது தப்புன்னு உனக்கேத் தெரியுதுல்ல.. அதுக்கு நான் உன்னை கோச்சிக்கக்கூடாதா? உன்னை கட்டி வெச்சி ஒதைக்கணும்டா..?!"

"அம்மா.. நீங்க என்னை கோச்சிக்கலாம்.. தாராளமா என்னை அடிக்கறதுக்கே உங்களுக்கு உரிமையிருக்கும்மா... உங்க வீட்டுல உங்க கையால சாப்பிட்டு வளந்தவன்ம்மா நான்.."

"அப்புறம்... ரொம்ப ஓட்டாதேடா நீ.. உன்ன நான் இன்னைக்கு நேத்தாப் பாக்கிறேன்.."

"அம்மா... என்னை ஆசைப்படறேன்னு மீனாதான் மொதல்ல சொன்னாம்மா... அதுக்கப்புறம்தான் நான் சரின்னேம்மா?" இன்னைக்கு என் தலை தப்பிக்கனும்ன்னா இதுதான் சரியான வழியென நினைத்து மீனாவை போட்டுக்குடுத்தான் சீனு..

"அவளுக்குத்தான் புத்தியில்லே.. சின்னப்பொண்ணு... உங்கிட்ட எதையாவது அர்த்தமில்லாத உளறினான்னா... நீ என்னடாப் பண்ணியிருக்கணும்? எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல்லியா? அவளை கண்டிச்சு இருப்பேன்ல்லா... உனக்கு எங்கடாப் போச்சு புத்தி...?"

"அம்ம்மா… மீனாவைத் திட்டாதீங்கம்மா... அவ பாவம்ம்மா...”

"என் பொண்ணை திட்டு... திட்டாதேன்னு சொல்றதுக்கு நீ யாருடா?"

"என் மனசுக்குள்ள எனக்கேத் தெரியாம அவ மேல ஒரு ஆசையிருந்திருக்கும்மா... அதான் நானும் சரீன்னு சொல்லிட்டேன்..."

"ஆசை... தோசை.. நீ இங்க வாடா மொதல்லே.. உன் தோலை உரிக்கணும்ண்டா?"

"அம்மா.. நான் நேர்லேயே வந்து உங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேம்ம்மா... இப்போதைக்கு அப்பாகிட்ட மட்டும் இந்த விஷயத்தைப் போட்டுக் குடுத்திடாதீங்கம்மா" சீனு குரலில் நடுக்கத்துடன் பேசினான்.

"எந்த அப்பாகிட்ட சொல்ல வேணாம்...?" போலியான கோபத்தைக்காட்டினாள், மல்லிகா.

"நீங்க என் அம்மான்னா.. மிஸ்டர் நடராஜன் என் அப்பாதானேம்மா?" தூண்டிலில் கொழுத்தப் புழுவை குத்தி, அதை வளைத்துப் போட்டான் சீனு...

"ஏன்டா... எப்போதுலேந்துடா நீ என் புருஷனுக்கு மிஸ்டர் போட ஆரம்பிச்சிருக்கே?" தன் புருஷனை சீனு அப்பாவென அழைத்ததும், மல்லிகாவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

"அம்ம்மா... எது சொன்னாலும் இப்படீ நீங்க என்னை கேட்டு போட்டு மடக்கினா நான் என்னாப் பண்ணுவேம்மா... நீங்களே சொல்லுங்கம்மா?" சீனுவின் குரல் கரகரப்பாக வந்தது.

"ஏன்டீ அவனை சும்மா கலாய்க்கறே... நீ? சட்டுன்னு அவனை கிளம்பி வரச்சொல்லுடி... எனக்கு நேரமாவுது... நான் கிளம்பணும்..."

நடராஜன் மல்லிகாவின் பக்கத்திலிருந்து பேசியது, சீனுவுக்கு தெளிவாகக் கேட்டதும்... அவனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்து. மல்லிகா தன்னை கலாய்த்துக்கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்ததும், அவனுக்கு போன மூச்சு திரும்பி வந்தது.

மல்லிகாம்மா பேசறதைக் கேட்டு நான் ரொம்பவே பயந்து போயிட்டேனே? செல்வாவோட அப்பா நார்மலாத்தானே பேசறார்! அப்படீன்னா என் காதலுக்கு அங்கேயும் கீரின் சிக்னல்தானா? தன் உதட்டை மடித்து நீளமாக தன் மனசுக்குள் "விஷ்" ஷென நீளமாக ஒரு விசில் அடித்தான், சீனு. 


மீனாதான் லவ்வை மொதல்லே சொன்னான்னு அனாவசியமா அம்மாக்கிட்ட அவளைப் போட்டுக்குடுத்துட்டேனே... என்னை நம்பி என் கையைப் புடிச்சவளை அவசரப்பட்டு மாட்டிவுட்டுட்டேனா? இந்த மேட்டர் அந்த குட்டி பிசாசுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாளே... சை.. என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. பக்கத்துல இப்ப அவளும்தானே இருப்பா..?

அம்மா பவுலிங்கை முடிச்சதும்.. பொண்ணு ஆரம்பிப்பாளா...? சரி நடக்கறதெல்லாம்... நல்லதுக்குத்தான் நடக்குது... தலைக்கு வருதுன்னு நினைச்சேன்.. ஆனா தலைப்பாவோட போயிடிச்சி... மீனாகிட்டவும் ஒரு கும்பிடு போட்டுட வேண்டியதுதான்...

'சனி பகவான்' ஆரம்பத்துல தொந்தரவு பண்ணுவான்... ரொம்பவே சோதிப்பான்... ஆனா கடைசீல எப்பவும் நல்லதைத்தான் பண்ணுவான்னு பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்... என் விஷயத்துல இது கரெக்டா இருக்குதே...

இப்பவே நேரா போய் ஆசீர்வாதம் பண்ணுங்கம்மான்னு மல்லிகாம்மா கால்லே விழுந்துட வேண்டியதுதான்... இதைவிட்டா எனக்கு ஒரு நல்ல சான்ஸேக் கிடைக்காது...

டேய் சீனு... பைத்தியக்காரா.. இன்னும் அம்மா என்னடா அம்மா... 'அத்தே'ன்னு உறவைச் சொல்லி கூப்புடுடா... அவங்க வீட்டுல நுழையும் போதே அத்தேன்னு கூப்பிட்டுக்கிட்டே மாப்பிள்ள மாதிரி உரிமையா நுழைடா... சீனு குதூகலமானான்.

"அம்மா.. டிஃபன் கிஃபன் பண்ணீட்டிங்களா? இல்லே வர்ற வழியிலே எதாவது புடிச்சிக்கிட்டு வரவா? சீனு தன் வழக்கமான பாணியில் மல்லிகாவிடம் குழையடிக்க ஆரம்பித்தான்.

"டேய்... என்னடா சொல்றே?"

"லீவு நாள்லே.. நீங்க காலையில கிச்சனை ஒட்டடை அடிச்சி... நல்லாத் தொட்சி... தரையெல்லாம் க்ளீன் பண்ணுவீங்க... டிஃபன் வெளியிலேருந்துதானே வாங்கிட்டு வருவான் செல்வா.. அதான் கேட்டேன்.." அந்த வீட்டின் நடைமுறையெல்லாம் தெரிந்த அவன் மனதுக்குள் மகிழ்ச்சியுடன் குழைந்தான்.



"டேய் சீனு.. நான் உங்கிட்ட சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்.. உன் கொழையடிக்கற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே... அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்..." மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.. அவளால் அதற்கு மேல் சீனுவின் மேல் கோபமாக இருப்பதைப் போல் நடிக்க முடியவில்லை.

"பசிக்குதும்மா..." சீனு தன் ட்ராக்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

"சீனூ... உனக்கு இன்னைக்கு ஆஃபீஸ் லீவுதானே... உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா... உனக்கு இல்லாத டிஃபனா? டிஃபன்ல்லாம் நான் பண்ணித்தர்றேன்.. சீக்கிரம் வாடா.." மல்லிகாவின் குரலில் மிதமிஞ்சியப் பாசம் எட்டிப்பார்த்தது.

"எம்மா... ஒண்ணு ரெண்டுன்னு எண்ணிகிட்டே இருங்க... தோம்ம்மா... குளிச்சிட்டு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..." சீனு பாத்ரூமை நோக்கி தன் கால்கள் தரையில் பாவாமல் ஓடினான். 


சுகன்யா... 79

சுகன்யா தான் அடைந்த உச்சத்தின் பரவசத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தாள். தன் மனதிலிருந்த ஆசை பூர்த்தியடைந்தபின், தன் மார்பிலும், அடிவயிற்றிலும் ஊர்ந்து கொண்டிருந்த செல்வாவின் கைகளை, அவள் விலக்க விரும்பினாள். அந்த தருணத்தில் அவனுடைய தொடுகையை அதற்கு மேல் அவ்வளவாக அவளால் ரசிக்கமுடியவில்லை.

நான் என் உச்சத்தைத் தொட்டுவிட்டேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த என் செல்வா இன்னும் தன் உச்சத்தை தொடவில்லை. இக்கணம் அவன் என்னிடம் சற்று ஊடிக்கொண்டு இருக்கிறான். அவன் என்னுடன் சுமுகமாக இல்லாதிருக்கும்போது என் உடலில் அலையும் அவன் கரங்களை சட்டென நான் விலக்கினால் அவன் மனம் புண்படலாம்.

டயமாகிக்கிட்டே இருக்கு. வெளியில இருட்ட ஆரம்பிச்சிடிச்சி. அப்பா எப்ப வேணாலும் வீட்டுக்கு வந்துடலாம். ஆனாலும் உடனடியாக இவன் பிடியிலிருந்து என்னை நான் விலக்கிக்கொள்வதென்பதும் அத்தனை உசிதமான காரியமில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? சுகன்யா தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள்.


"செல்வா... குட்டீ.. நான் உன்னை ஆட்டிவிடறேங்கறேன்... நீ ஏன் வேணாங்கறே?"

"நான் கேட்ட கேள்விக்கு மொதல்லே நீ பதில் சொல்லு...?"

"செல்வா... நீ எதுக்கு இப்ப வீணா டென்ஷன் ஆவறே..?" சுகன்யா அவன் கேள்வியை முற்றிலுமாகத் தவிர்க்க நினைத்தாள்.

"டென்ஷன்ல்லாம் ஒண்ணுமில்லே.. சொல்லுடி... நீ யாருக்குப் பயப்படறே?"

சுகன்யா தன் உடம்பில் அலையும் அவன் கைகளை மெல்ல விலக்கிவிட்டு அவன் மடியிலிருந்து எழுந்தாள். கட்டிலின் மேல் கிடந்த தன் கமீஜை உதறி அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். செல்வா அவளை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அறைக்கதவின் அருகில் நின்று மொட்டை மாடியைப்பார்த்தாள். அறைக் கதவை மூடிக்கொண்டு செல்வாவை நோக்கி திரும்பி வந்தாள்.

"செல்வா... இன்னைக்கு நீ ரொம்பவே பிடிவாதம் பிடிக்கறேடா நீ..."

கட்டிலில் உட்கார்ந்திருந்த செல்வாவை எழுப்பி நிற்கவைத்து அவன் கன்னத்தைக் கிள்ளி தன் விரல்களை முத்தமிட்டுக்கொண்டாள். பதட்டமில்லாமல் திரும்பவும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். தான் கிள்ளிய இடத்தில் அவனை மென்மையாக முத்தமிட்டாள். பின் அவன் இதழ்களில் மெல்ல முத்தமிட்டாள். செல்வா அவள் கரங்களின் ஆதரவையும், அவள் உடலின் மென்மையான சூட்டையும் தன் விழிகள் மூடி அனுபவித்துக்கொண்டிருந்தான். 

"செல்வா நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கப்பா..."

"சொல்லு... என்னப் புரிஞ்சுக்கணும்..?" அவன் கைகள் சுகன்யாவின் முதுகில் தயங்கி தயங்கி ஊர்ந்து கொண்டிருந்தன.

"நாமல்லாம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்கப்பா. நமக்குன்னு சில விஷயங்கள்லே, சில வேல்யூசை நாம வெச்சிக்கிட்டு இருக்கோம். அந்த வேல்யூசை நாமும் ஒரு அளவுக்கு கடைபிடிக்கணும்ன்னு நம்ம வீட்டுல இருக்கற பெரியவங்களும், நம்ம பெத்தவங்களும் நினைக்கிறாங்க. நாமும் அதைப் ஃபாலோ பண்ணணும்பா." சுகன்யா தன் மார்பை அவன் மார்பில் இழைத்தாள்.

"காலம் மாறுது சுகு. அதுக்கு ஏத்த மாதிரி நாமும் மாறணும்டீ. சும்மா வேல்யூ.. வேல்யூ... வெங்காய வேல்யூ... பழைய வேல்யூசையெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம கொண்டாட முடியும்? வர வர எனக்கு இதையெல்லாம் கேக்கறதுக்கே ரொம்ப எரிச்சலா இருக்கு?

"சும்மா சொல்றே நீ. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா?" சுகன்யா அவன் தலை முடியை கலைத்தாள். சீராக்கினாள். மீண்டும் கலைத்தாள்.

"என்னைப்பத்தி உனக்கு என்னத் தெரியும்? ம்ம்ம்... சொல்லு?" செல்வாவின் கண்கள் மின்னியது.

"நீ என்னச் சொன்னாலும், கடைசீல உங்க அம்மா சொல்றதைத்தான் கேப்பே? நீ ஒரு அம்மா பேபி..!" சுகன்யா உரக்கச் சிரித்தாள்.

"ஹேய்.. சுகு என் வீக் பாய்ண்ட்டை நீ சும்மா சும்மாத் தொட்டு பாக்காதேடீ?" அவன் மெல்ல உறுமினான்.

"செல்வா.. உன் வீக் பாய்ன்ட்டு, உன் பேண்ட்டுக்குள்ள இருக்குன்னுல்லா நான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன்..?" சுகன்யா குலுங்கி குலுங்கிச் சிரித்துக் கொண்டே அவன் புடைப்பை மெல்லத் தடவினாள்.

"அம்மாங்கற வீக்னஸ் என் மனசுல இருக்கு. அடுத்த வீக்னெஸ் இப்ப உன் கையில இருக்கு... ஆனா அவனை நீ வீக்குன்னு நெனைச்சுக்கிட்டு இருக்காதே?" செல்வா தன் வலது கரத்தை சுகன்யாவின் அடிவயிற்றின் கீழ் அனுப்ப முயன்றான்.

'ம்ம்ம்ம்' முனகிய சுகன்யா அவன் கையை இறுகப்பற்றி தன் அடிவயிற்றோடு நிறுத்தினாள்.

"செல்வா... பொம்பளை ஒப்பனா பேசினா எந்த ஆம்பிளையாலும் அதைத் தாங்கிக்கமுடியாது..."

"நானும் அதைத்தான் சொல்றேன்... நீங்க பொட்டைச்சிங்க... மனசுக்குள்ள ஒண்ணை வெச்சிக்கிட்டு, வெளியில வேற மாதிரி சீன் போடறவங்க... பொம்பளை மனசு கடல் மாதிரி ஆழம்ன்னு சும்மாவா சொல்றாங்க... இதுவும் எல்லாருக்கும் தெரியும்..."

"செல்வா... ப்ளீஸ்... லெட் அஸ் ஸ்டாப் தீஸ் ஃப்யூட்டைல் ஆர்க்யுமென்ட்ஸ்.."

"சுகன்யா... நீயும் ஒரு பொம்பளை... படிச்சவ... வேலைசெய்யறவ... உன் மனசுலயும் மிடில் கிளாஸ் வேல்யூஸ் பத்தி ஒரு ஒப்பீனியன் கண்டிப்பா இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி காதல் ஜோடிகள் தங்களுக்குள்ள வெச்சிக்கிடற உடல் உறவைப்பத்தி நீ என்ன நெனைக்கறே?"

"செல்வா என்னை நீ சும்மா வம்புக்கு இழுக்காதே...! கொஞ்ச நேரம் பேசாம இரு ப்ளீஸ்..!”

"நான் ஒரு 'வழவழா கொழா கொழா'ன்னு நீ என்னை அடிக்கடிச் சொல்றே. எனக்குன்னு எந்த ஒப்பீனியனும் இல்லேன்னு கிண்டலடிக்கறே. இப்ப நீ மட்டும் என்ன வாழறே?"

"செல்வா நீ ஒரு வழவழா கொழ கொழா மட்டுமில்லே... அதுக்கும் மேல..."

எதற்காகத் தான் இந்த வார்த்தையைப் பேசினோம் என்று தன் நாக்கை அழுத்திக் கடித்துக் கொண்டாள் சுகன்யா. பேச ஆரம்பித்த வார்த்தையை முழுவதுமாக முடிக்காமல், தன் தலையை குனிந்து கொண்டாள். தன்னை செல்வா இன்று வீணாக தேவையே இல்லாத ஒரு சண்டைக்கு இழுக்க முடிவு செய்துவிட்டான் என்பது அவளுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்ததால், அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவளுக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது.

"அதுக்கும் மேல... நான்... என்னடீ.. ஏன் நடுவுல நிறுத்திட்டே? தைரியமாச் சொல்லு..."

"என் மனசுல இருக்கறதை ஓப்பனா சொல்ல எனக்குத் தைரியமிருக்கு. அதை கேக்கறதுக்கு உனக்குத் தைரியமிருக்கா?" சுகன்யாவின் நாவிலும் சனி குடியேறினான். 


"சொல்லுடீ.. சும்மா நீ மொக்கைப் போடாதே... என்னாலத் தாங்க முடியலே..." செல்வா கிண்டலாகச்சிரித்தான்.

சுகன்யா கடைசியில் அதுவரை தான் கட்டிக்காத்துக் கொண்டிருந்த தன் பொறுமையை இழந்து தன் முகத்தைக் கல்லாக்கிக்கொண்டு நிதானமாகச் சொன்னாள். "நீ ஒரு வடிகட்டின ஹிப்போகிரட்டுங்கறது என் எண்ணம்..."

"சுகன்யா... அப்படி என்னடி... ஹிப்போகிரஸியை நீ என் கிட்ட பாத்துட்டே?"

செல்வா சிரித்துக்கொண்டே கேட்டபோதிலும், சுகன்யாவின் அந்த ஒளிவு மறைவில்லாதப் பேச்சைக் கேட்டதும் செல்வா வெகுவாக தன் மனதில் அடிபட்டான். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சருகாகிக்கொண்டிருந்த கோபம் மீண்டும் அவன் அடி மனதில் எரிச்சல் துளிர்விட்டது. எரிச்சல் கோபமாக மாறி வெகு வேகமாக கிளைவிட்டு வளர ஆரம்பித்தது.

"..."

"சொல்லுடீ..." சீறினான் அவன். சுகன்யாவின் உடலைச் சுற்றியிருந்த அவன் கரங்கள் அவள் உடலிலிருந்து நகர்ந்துவிட்டிருந்தன. தன் தலைமுடியை அவன் கோதிக்கொண்டிருந்தான்.

"செல்வா நீ என்னை சும்மா சும்மா முன்னும் பின்னும் பேசி இன்னைக்கு வம்புக்கு இழுக்கறே? தயவு செய்து இப்ப கொஞ்ச நேரம் பேசாம இரு...!” அவள் அவன் முகத்தை விருட்டெனப் பற்றி இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"நோ.. நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்...?" அவள் முகத்தை அவன் விடாப்பிடியாக விலக்கினான்.

"செல்வா... உனக்குத்தான் மிடில் கிளாஸ் வேல்யூஸ்ல்லாம் ஒரு கண்தொடைப்பா தெரியுதுல்லே?"

"யெஸ்... இப்பல்லாம் எனக்கு அப்டீத்தான் தெரியுது?!'

"உன் தங்கச்சி மீனாவை, போனவாரம், சீனு தன்னோட வெளியில அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னப்ப நீ அவங்ககிட்ட என்ன சொன்னே?" சுகன்யாவின் குரலில் உஷ்ணம் ஏறியது. அவள் அவன் தோலை ஆரஞ்சு பழத்தின் தோலாக எண்ணி உரிக்கத்தொடங்கினாள்.

"எங்க மூணு பேரு நடுவுல நடந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சிருக்குன்னா.. நான் என்ன சொன்னேன்னும் உனக்கும் தெரிஞ்சிருக்கணுமே..." செல்வாவின் குரல் எகத்தாளமாக வந்தது.

"தெரியும் டியர்... அதுவும் தெரியும்.."

"ம்ம்ம்... தெரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷம்..." சற்று முன் அவன் குரலில் இருந்த எகத்தாளம் இப்போது முற்றிலுமாக இல்லை.

"நீ என்னச் சொன்னேங்கறதை உனக்கு நான் ஞாபகப்படுத்தறேன். 'மீனா... உன் படிப்பு முடியற வரைக்கும் நீயும், சீனுவும் கொஞ்சம் பொறுமையா, இருங்கன்னு' நீ புத்தி சொன்னே.. ஈஸ் தட் ரைட்...? இது நடுத்தரக்குடும்பத்துல பொறந்த நீ திருமணங்கற இஸ்யூவுல வெச்சிருக்கற வேல்யூஸ்ன்னு நான் நினைக்கறேன்.... நான் சொல்றது சரிதானே?" சுகன்யா தன் உதடுகளில் பூத்த புன்னகையை சிரமப்பட்டு நிறுத்தினாள்.

சுகன்யா நிஜத்தில் தன்னை கேலி செய்கிறாள் என்பதனை சரியாகப் புரிந்து கொண்ட செல்வா அதுவரை அவளிடம் ஏளனமாக பேசிக்கொண்டிருந்த தன்னால் அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாததை நினைத்து சிறிதே வருத்தத்துடன் தன் தலையை குனிந்து கொண்டான்.

"ஏன் உனக்கு வாய் அடைச்சுப் போச்சு...? உன் தங்கச்சின்னா உனக்கு மிடில் கிளாஸ் வேல்யூஸ் வேணும்... அவளுக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாது... ஆனா சுகன்யாவுக்கு அந்த வேல்யூஸ்ல்லாம் தேவையில்லே... அப்படித்தானே நீ நினைக்கறே?

சுகன்யாவும் அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசி அவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றத்தொடங்கினாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு, அவளுடன் பிறந்த அவள் பிடிவாதம், மூர்க்கம், அன்று வெளியில் தலைக்காட்ட ஆரம்பித்தது.

"..."

மீனா வேற.. சுகன்யா வேறேன்னுதானே நீ நினைக்கிறே? ஒரே இஸ்யூவுல உன்னுடைய அணுகுமுறை வேறு வேறாத்தானே இருக்கு?"

"..."

செல்வா சுகன்யாவை தன் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னு நீ பாக்கிறியா?"

"மீனா என் ஃப்ரெண்ட்.. மீனா என்னைத் தன்னோட வெல்விஷரா நினைக்கறா... அவளும் நானும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம், நாங்க எங்கேயிருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் எங்களுக்குள்ள மனசு விட்டுப் பேசிக்கிறோம்.."

"என் அண்ணன் செல்வா எவ்வளவு நல்லவன் தெரியுமான்னு மீனா உன்னைப் பத்தி அன்னைக்கு மதிப்போட பேசினா... அதைக் கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப பெருமிதமா இருந்தது... என் செல்வா பொறுப்பானவன்... எனக்கு புருஷனா வரப்போறவன் எவ்வளவு நல்லவன்னு நானும் சந்தோஷப்பட்டேன்... இப்பத்தான் புரியுது நான் ஒரு பைத்தியக்காரின்னு..."

"என் ஃப்ரெண்ட் வேணி சரியான நேரத்துல எனக்கு புத்திமதி சொன்னா..." சுகன்யாவுக்கு மூச்சிறைத்தது.

"வேணி என்னச் சொல்லியிருக்கப் போறா? என்னைப் பாத்தா ஒரு அயோக்கியன் மாதிரி இருக்கான்னு சொல்லி அனுப்பினாளா?"

"செல்வா.. அவளைபத்தி உனக்குத் என்னத் தெரியும்... அவ மனசு தங்கம்... உனக்குத் தெரியாத ஒருத்தரைப் பத்தி எப்பவும் நீ தப்பா பேசாதே.. ப்ளீஸ்.." அவள் அவனை நோக்கி தன் கையை அசைத்து அவனைப் பேசவிடாமல் தடுத்தாள்.

"அப்புறம்.. நீ என்ன சொல்ல நினைக்கறியோ அதை முழுசா சொல்லிடு.." செல்வா அவளை நோக்கி தன் கைகளை கூப்பினான்.

இன்னைக்கு சுகன்யாவை நான் வம்புக்கு இழுக்கணும்ன்னு நினைச்சேன்... என் நேரம்... நான் என்னையே கிண்டல் பண்ணிக்கிட்ட மாதிரி ஆயிடிச்சி... செல்வாவின் முகத்தில் ஈயாடவில்லை. அவன் முகம் சிவந்து கொண்டிருந்தது.

"செல்வா.. உன் மனசுக்குள்ள நீ ஒரே விஷயத்துக்கு, வேற வேற, அளவுகோல்களை வெச்சிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு இப்பத்தான் புரியுது... இதை நான் நிச்சயமா உங்கிட்ட எதிர்பார்க்கலே?"

"சுகன்யா... நீ இன்னைக்கு அதிகமா பேசறேன்னு நினைக்கிறேன்?" சுகன்யாவிடமிருந்து அவன் விலகி நின்றான்.

"உண்மைதான்... இன்னைக்கு நான் அதிகமா பேசறேன்... நான் ஒத்துக்கறேன்.. ஏன்னா கல்யாணம் ஆகற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடீன்னு சொல்றதுக்கு என் கூடப் பொறந்த ஒரு அண்ணன் எனக்கு இல்லே... அதனால என்னை நானேதான் பாதுகாத்துக்கணும்?" சுகன்யாவின் முகத்தில் ஒரு இலேசான புன்னகை எழுந்தது. செல்வாவுக்கு அது மிதமிஞ்சிய எரிச்சலைக் கொடுத்தது. 


செல்வா, கட்டிலின் விளிம்பில் மவுனமாக உட்க்கார்ந்திருந்தான். இரண்டு நிமிடங்களாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சுகன்யா தன் கைகளை மடித்து மார்பில் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.

செல்வா பாவம்... இன்னைக்கு மனசு நிறைய ஆசையோட வந்திருக்கான்... என்னை முழுசா துணியில்லாமப் பாக்கணுங்கற ஆசை அவன் மனசுக்குள்ள இருக்கறது தெரிஞ்சிருந்தா அவனை நான் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டே வந்திருக்கமாட்டேன்...

இப்ப அவனை ஏமாத்தணுங்கறது என் எண்ணமில்லே... நான் அவனைத் தடவிவிடத் தயார்ன்னு சொன்னாலும் பிடிவாதமா அவன் வேணாங்கறேன்.. மொத்தமா அவுத்து காட்டுங்கறான்... இதுல எனக்கு இஷ்டமில்லே...

எப்படியாவது இவனை இன்னைக்கு கொஞ்சமாவது சந்தோஷப்படுத்தித்தான் அனுப்பணும்.. இவ்வளவு ஆசைப்படறானே? என்னப் பண்றது? என்னை நீ தொடாம இருக்கறதாயிருந்தா ஓ.கே.ன்னு ஒரு கண்டீஷன் போட்டு அவன் ஆசைக்கு சரின்னு சொல்லிடலாமா? தன் காதலனின் சோர்ந்த முகத்தைக்கண்டு, சுகன்யாவின் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

மொட்டை மாடியில் யாரோ நடக்கும் ஓசை கேட்க தன் தலையை ஒருக்களித்து வெளியில் பார்த்தாள், சுகன்யா. இலேசாக மேடிட்ட தன் வயிறு வெளியில் தெரிய, கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தாள், வேணி.

"செல்வா.. காஃபி போட்டுத்தரவா..?

"வேண்டாம்..."

"ஏன்..."

"என் வயிறும் மனசும் நல்லாக் குளுந்து போய் இருக்கு.." செல்வா விரக்தியாக சிரித்தான். அவன் முகத்தில் சுரத்து என்பது மருந்துக்கும் இல்லை.

"செல்வா.. நாம சாதரணமா ஒரு விஷயத்தை பேசிக்கிட்டு இருந்தோம்பா... உன் கருத்தை நீ சொன்னே.. என் கருத்தை நான் சொன்னேன்.. தி மேட்டர் என்ட்ஸ் தேர்... இப்ப எதுக்கு நீ ரொம்பவே சீரியஸா மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு உக்காந்திருக்கே.."

"..."

"அயாம் சாரிப்பா.. நான் இப்படில்லாம் பேசியிருக்கக்கூடாது இல்லே..? நான் பேசினது உனக்கு பிடிக்கலே அப்படித்தானே?"

"சேச்சே.. நீ உண்மையைத்தானே பேசினே..." செல்வா தன் தலையை அழுத்திவிட்டுக்கொண்டான்.

"செல்வா... ஐ லவ் யூடாச் செல்லம்... எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்குதுடா.. உன்னுடைய குறைகள், நிறைகள் எல்லாமே எனக்குப் பிடிக்குதுப்பா... நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னா.. ஐ லவ் த டோட்டல் சம் ஆஃப் செல்வான்னு அர்த்தம்ப்பா.." சுகன்யா தன் கண்கள் மலர மனதில் கள்ளம் ஏதுமின்றி பேசிக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்ம்.." செல்வா முனகினான். தன் கைகளை நெறித்துக்கொண்டான்.

"சிரிடா... செல்வா ப்ளீஸ்.. கொஞ்சம் சிரியேன்... என் கண்ணுல்ல.. என் ராஜால்ல" சுகன்யா வாய்விட்டு அவனைக் கொஞ்சி கொஞ்சி சிரித்தாள்.

சுகன்யா சிரித்துக்கொண்டே தன் பார்வையை அறைக்கு வெளியில் வீசினாள். வேணி அவள் கண்களுக்குத் தென்படவில்லை. துணி உலரவைக்கும் கொடிகள் காலியாக இருந்தன. விருட்டென காற்றில் திறந்துகொண்ட தன் அறைக்கதவை மீண்டும் ஒரு முறை ஒருக்களித்து சாத்தியவள், கட்டிலை நோக்கி விரைந்தாள். கட்டிலின் முனையில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை மல்லாக்காகத் தள்ளி அவன் மேல் ஒய்யாரமாகப் படர்ந்தாள்.

செல்வாவின் சுண்ணி மீண்டும் புடைக்க ஆரம்பித்தது. இருவரின் உடலும் ஒன்றின் மேல் ஒன்று கச்சிதமாக அமுங்கிக்கொண்டிருந்தன. அவனுடைய புடைப்பு, மிகச்சரியாக அவள் தொடைகளுக்கு நடுவில் பொருந்தியிருந்தது. அவள் அவன் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே, தன் இடுப்பை மெதுவாக அசைத்தாள். ஆடைகளை விலக்காமலே ஒருவரை ஒருவர் புணர்வதாக அவர்கள் நினைத்து மகிழ ஆரம்பித்தார்கள்.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ம்ம்மா.."

செல்வா தன் விழிகளை மூடிக்கொண்டு முனகினான். அவன் கைகளிரண்டும், சுகன்யாவின் ப்ருஷ்டங்களில் படிந்து அவள் இடுப்பை தன் புடைப்பின் மீது அழுத்திக்கொண்டது.

"டூ யூ லைக் திஸ் பேபீ..." சுகன்யா அவனை நோக்கி சிருங்காரமாக சிரித்தாள். இருவரின் இடுப்பும் ஓரே சீராக அசைந்து கொண்டிருந்தன.

"சுகும்ம்மா நீ வேணி சொன்ன மாதிரி கில்லாடிடீ..." செல்வாவின் கண்கள் ஒரு வினாடி மின்னியது. அவன் அவள் கன்னத்தை வெறியுடன் கடித்தான்.

"கீப் கொய்ட் அன்ட் எஞ்சாய் யுவர்செல்ஃப்.." செல்வாவின் கன்னத்தைத் திருகி முத்தமிட்டுக்கொண்டே, சுகன்யா தான் அசையும் வேகத்தைக் கூட்டினாள்.

"சுகு... அயாம் எஞ்சாயிங் இட்... ஆனா என் கேள்விக்கு உன் பதில் என்னன்னு தெரிஞ்சுக்காம நான் இங்கேருந்து போகமாட்டேன்...!" செல்வா நகைத்தான்.

செல்வாவின் நாக்கில் அன்று சனி குடியேறி பேசிக்கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அவன் மனம் ஒரே இடத்தில் பிடிவாதமாக சுற்றி சுற்றி வந்தது. தன் கேள்விகளால் சுகன்யா பாதிக்கப்படாமல் இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

தன்னுடைய அர்த்தமில்லாத ஒரு கேள்வியால், அந்தக் கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால், சுகன்யாவைத் தன்னால் தான் நினைத்தப்படி சீண்ட முடியவில்லை, உசுப்பேற்ற முடியவில்லை, அவளைத் தன் எண்ணப்படி வெறுப்பேற்ற முடியவில்லை என்ற உண்மை அவனுக்குப் புரிந்ததும், தான் அவளிடம் எதிலோ தோற்றுவிட்டதாக எண்ண ஆரம்பித்தான்.

ஒருவிதத்தில் தான் நினைத்தபடி சுகன்யாவை சீண்டி அவளுக்கு கோபமூட்டமுடியாமல் போனதை அவன் தனக்கு கிடைத்த தோல்வியாக நினைத்தான். துரதிருஷ்டவசமாக சுகன்யா போன்ற ஒரு பெண்ணின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்ற உண்மையை அவன் அன்று உணரவேயில்லை. 


“உனக்கு என் பதில் தானே வேணும்... நல்லாக் கேட்டுக்க.. எல்லாம் உன்னால வந்த வினைதான்... உங்கம்மாவை நினைச்சுத்தான் நான் பயப்படறேன்... போதுமா...?” தன் பொறுமையை முற்றிலும் இழந்த சுகன்யா புருவங்களை நெறித்து சீறினாள்.

“என்னடீச் சொல்றே?” செல்வா தன் இடுப்பை அசைப்பதை நிறுத்தினான்.

“ஆமாம்... எல்லாம் உன்னாலதான்... அய்யோப் பாவம்... நீ ஆசைப்படறியேன்னு... அன்னைக்கு ஒரு நாள் இதே ரூம்லதான்... என் வெக்கத்தை விட்டுட்டு ரவிக்கையை அவுத்து என் மாரை உனக்கு காமிச்சேன்... நீ சந்தோஷமா பாண்டிச்சேரிக்குப் போய் வான்னு அனுப்பினேன். அதுக்கு பதிலுக்கு நீ என்ன பண்ணே?”

“நாம தனியா இருந்ததை, அந்தரங்கமா, நெருக்கமா இருந்ததை உன் அம்மாகிட்டே சொன்னே.. உன் அம்மா என்னடான்னா.. சுகன்யா கூறுகெட்டவ, எடுபட்டவன்னு, பட்டத்துக்கு மேல பட்டம் எனக்கு கிடைச்சது. உன்னாலத்தான் சுகன்யா ஒரு 'அரிப்பெடுத்தவன்னு' உன் அம்மாகிட்டேருந்து எனக்கு கோல்ட் மெடல் கெடைச்சுது?’ சுகன்யாவுக்கு மூச்சிறைத்தது.

“நீ விஷயம் புரியாம பேசறடீ”

“ஆமாம் உனக்கும்... உன் அம்மாவுக்கும் மட்டும்தான் எல்லாம் புரியுது... வேற யாருக்கு இங்கே ஒண்ணும் புரியலை...”

“என் கோவத்தை கிளறாதடீ நீ”

“உனக்கு மட்டும்தான் கோபம் வருமா?”

“வாயை மூடுடீ...”

அடிக்குரலில் கூவிய செல்வா, தன் மார்பின் மேல் படுத்திருந்த சுகன்யாவின் தோள்களை இறுகப்பற்றினான். தன் மார்பில் படுத்திருந்த அவளை விருட்டென உதறித் தள்ளினான். இந்த வேகமான, மூர்க்கமான, முரட்டுத்தனமான செல்வாவின் செயலை எதிர்பார்க்காத சுகன்யா கட்டிலின் குறுக்கில் போய் விழுந்தாள். கட்டிலில் விழுந்தவளின் பின்னந்தலை சுவரில் ‘டங்’ என்ற ஓசையுடன் மோதிகொண்டது.

சுகன்யா இதுவரை எப்போதும், ஓரளவிற்கு அமைதியாக, பொறுமையாக இருக்கும் செல்வாவைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அவன் முரட்டுத்தனமாக பேசியோ, யாரிடமாவது சண்டையிட்டோ அவள் பார்த்ததேயில்லை. இன்று முதன் முறையாக அவனுள் ஒளிந்திருக்கும் மிருகத்தை பார்த்த சுகன்யா திடுக்கிட்டுப்போனாள்.

சுகன்யாவுக்குத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழ பத்துவினாடிகள் பிடித்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. சுவரில் மோதிக்கொண்டதால், தன் உடலில் உண்டான வலியில், வாயில் பேச்சு வராது மவுனமாக தன் தலையைத் தடவிக்கொண்டாள் சுகன்யா.

தன் உதறலின் வேகத்தில் சுகன்யாவின் தலை சுவரில் மோதிக்கொண்டதை கண்ட செல்வாவின் தொடைகளின் நடுவில் எழுந்திருந்த புடைப்பு சட்டெனக் காணமால் போய்விட்டிருந்தது.

"வலிக்குதாம்மா.. சுகு..." செல்வா அவளை நெருங்கினான்.



"பிளீஸ்... நீ கிட்டவராதே.. வேணாம்.. கிட்ட வராதே.. கடைசீல நீ ஒரு சராசரி ஆண்தான்னு காமிச்சிட்டேல்லா" சுகன்யா பொறுமினாள்.

ஒரு பொட்டைச்சிக்கு இவ்வளவு திமிரா... செல்வாவின் மனதுக்குள்ளும் சட்டென வன்மம் எழுந்தது. அவன் வேகமாக தன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்துக்கொண்டவன், பாத்ரூமுக்குள் விருட்டென நுழைந்தான். பக்கெட்டில் நிறைந்திருந்த குளிர்ந்த நீரை தன் முகத்தில் வாரி வாரி அடித்துக்கொண்டான்.

அவன் தலைக்கேறியிருந்த கோபம் மெல்ல குறைய ஆரம்பித்தது. பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தபோது சுகன்யா இன்னமும் தன் பின்னந்தலையில் கையை வைத்துக்கொண்டு கட்டிலின் முனையில் உட்க்கார்ந்து கொண்டிருப்பதை கண்டவன், முகத்தை துடைத்துக்கொள்வதற்காக தன் பேண்டீல் கர்சீஃபை தேடினான்.

செல்வா என்னத் தேடுகிறான் என்பது சுகன்யாவுக்கு புரிந்தது. வாய் பேசாமல் யந்திரமாக கட்டிலை விட்டு இறங்கி உள் ரூமிலிருந்து ஒரு காய்ந்த துவாலையைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

“தேங்க் யூ...” சுகன்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தன் உதடுகளுக்குள் முனகினான் செல்வா.