Monday 30 March 2015

சுகன்யா... 79

சுகன்யா தான் அடைந்த உச்சத்தின் பரவசத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தாள். தன் மனதிலிருந்த ஆசை பூர்த்தியடைந்தபின், தன் மார்பிலும், அடிவயிற்றிலும் ஊர்ந்து கொண்டிருந்த செல்வாவின் கைகளை, அவள் விலக்க விரும்பினாள். அந்த தருணத்தில் அவனுடைய தொடுகையை அதற்கு மேல் அவ்வளவாக அவளால் ரசிக்கமுடியவில்லை.

நான் என் உச்சத்தைத் தொட்டுவிட்டேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த என் செல்வா இன்னும் தன் உச்சத்தை தொடவில்லை. இக்கணம் அவன் என்னிடம் சற்று ஊடிக்கொண்டு இருக்கிறான். அவன் என்னுடன் சுமுகமாக இல்லாதிருக்கும்போது என் உடலில் அலையும் அவன் கரங்களை சட்டென நான் விலக்கினால் அவன் மனம் புண்படலாம்.

டயமாகிக்கிட்டே இருக்கு. வெளியில இருட்ட ஆரம்பிச்சிடிச்சி. அப்பா எப்ப வேணாலும் வீட்டுக்கு வந்துடலாம். ஆனாலும் உடனடியாக இவன் பிடியிலிருந்து என்னை நான் விலக்கிக்கொள்வதென்பதும் அத்தனை உசிதமான காரியமில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? சுகன்யா தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள்.


"செல்வா... குட்டீ.. நான் உன்னை ஆட்டிவிடறேங்கறேன்... நீ ஏன் வேணாங்கறே?"

"நான் கேட்ட கேள்விக்கு மொதல்லே நீ பதில் சொல்லு...?"

"செல்வா... நீ எதுக்கு இப்ப வீணா டென்ஷன் ஆவறே..?" சுகன்யா அவன் கேள்வியை முற்றிலுமாகத் தவிர்க்க நினைத்தாள்.

"டென்ஷன்ல்லாம் ஒண்ணுமில்லே.. சொல்லுடி... நீ யாருக்குப் பயப்படறே?"

சுகன்யா தன் உடம்பில் அலையும் அவன் கைகளை மெல்ல விலக்கிவிட்டு அவன் மடியிலிருந்து எழுந்தாள். கட்டிலின் மேல் கிடந்த தன் கமீஜை உதறி அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். செல்வா அவளை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அறைக்கதவின் அருகில் நின்று மொட்டை மாடியைப்பார்த்தாள். அறைக் கதவை மூடிக்கொண்டு செல்வாவை நோக்கி திரும்பி வந்தாள்.

"செல்வா... இன்னைக்கு நீ ரொம்பவே பிடிவாதம் பிடிக்கறேடா நீ..."

கட்டிலில் உட்கார்ந்திருந்த செல்வாவை எழுப்பி நிற்கவைத்து அவன் கன்னத்தைக் கிள்ளி தன் விரல்களை முத்தமிட்டுக்கொண்டாள். பதட்டமில்லாமல் திரும்பவும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். தான் கிள்ளிய இடத்தில் அவனை மென்மையாக முத்தமிட்டாள். பின் அவன் இதழ்களில் மெல்ல முத்தமிட்டாள். செல்வா அவள் கரங்களின் ஆதரவையும், அவள் உடலின் மென்மையான சூட்டையும் தன் விழிகள் மூடி அனுபவித்துக்கொண்டிருந்தான். 

"செல்வா நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கப்பா..."

"சொல்லு... என்னப் புரிஞ்சுக்கணும்..?" அவன் கைகள் சுகன்யாவின் முதுகில் தயங்கி தயங்கி ஊர்ந்து கொண்டிருந்தன.

"நாமல்லாம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்கப்பா. நமக்குன்னு சில விஷயங்கள்லே, சில வேல்யூசை நாம வெச்சிக்கிட்டு இருக்கோம். அந்த வேல்யூசை நாமும் ஒரு அளவுக்கு கடைபிடிக்கணும்ன்னு நம்ம வீட்டுல இருக்கற பெரியவங்களும், நம்ம பெத்தவங்களும் நினைக்கிறாங்க. நாமும் அதைப் ஃபாலோ பண்ணணும்பா." சுகன்யா தன் மார்பை அவன் மார்பில் இழைத்தாள்.

"காலம் மாறுது சுகு. அதுக்கு ஏத்த மாதிரி நாமும் மாறணும்டீ. சும்மா வேல்யூ.. வேல்யூ... வெங்காய வேல்யூ... பழைய வேல்யூசையெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாம கொண்டாட முடியும்? வர வர எனக்கு இதையெல்லாம் கேக்கறதுக்கே ரொம்ப எரிச்சலா இருக்கு?

"சும்மா சொல்றே நீ. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா?" சுகன்யா அவன் தலை முடியை கலைத்தாள். சீராக்கினாள். மீண்டும் கலைத்தாள்.

"என்னைப்பத்தி உனக்கு என்னத் தெரியும்? ம்ம்ம்... சொல்லு?" செல்வாவின் கண்கள் மின்னியது.

"நீ என்னச் சொன்னாலும், கடைசீல உங்க அம்மா சொல்றதைத்தான் கேப்பே? நீ ஒரு அம்மா பேபி..!" சுகன்யா உரக்கச் சிரித்தாள்.

"ஹேய்.. சுகு என் வீக் பாய்ண்ட்டை நீ சும்மா சும்மாத் தொட்டு பாக்காதேடீ?" அவன் மெல்ல உறுமினான்.

"செல்வா.. உன் வீக் பாய்ன்ட்டு, உன் பேண்ட்டுக்குள்ள இருக்குன்னுல்லா நான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன்..?" சுகன்யா குலுங்கி குலுங்கிச் சிரித்துக் கொண்டே அவன் புடைப்பை மெல்லத் தடவினாள்.

"அம்மாங்கற வீக்னஸ் என் மனசுல இருக்கு. அடுத்த வீக்னெஸ் இப்ப உன் கையில இருக்கு... ஆனா அவனை நீ வீக்குன்னு நெனைச்சுக்கிட்டு இருக்காதே?" செல்வா தன் வலது கரத்தை சுகன்யாவின் அடிவயிற்றின் கீழ் அனுப்ப முயன்றான்.

'ம்ம்ம்ம்' முனகிய சுகன்யா அவன் கையை இறுகப்பற்றி தன் அடிவயிற்றோடு நிறுத்தினாள்.

"செல்வா... பொம்பளை ஒப்பனா பேசினா எந்த ஆம்பிளையாலும் அதைத் தாங்கிக்கமுடியாது..."

"நானும் அதைத்தான் சொல்றேன்... நீங்க பொட்டைச்சிங்க... மனசுக்குள்ள ஒண்ணை வெச்சிக்கிட்டு, வெளியில வேற மாதிரி சீன் போடறவங்க... பொம்பளை மனசு கடல் மாதிரி ஆழம்ன்னு சும்மாவா சொல்றாங்க... இதுவும் எல்லாருக்கும் தெரியும்..."

"செல்வா... ப்ளீஸ்... லெட் அஸ் ஸ்டாப் தீஸ் ஃப்யூட்டைல் ஆர்க்யுமென்ட்ஸ்.."

"சுகன்யா... நீயும் ஒரு பொம்பளை... படிச்சவ... வேலைசெய்யறவ... உன் மனசுலயும் மிடில் கிளாஸ் வேல்யூஸ் பத்தி ஒரு ஒப்பீனியன் கண்டிப்பா இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி காதல் ஜோடிகள் தங்களுக்குள்ள வெச்சிக்கிடற உடல் உறவைப்பத்தி நீ என்ன நெனைக்கறே?"

"செல்வா என்னை நீ சும்மா வம்புக்கு இழுக்காதே...! கொஞ்ச நேரம் பேசாம இரு ப்ளீஸ்..!”

"நான் ஒரு 'வழவழா கொழா கொழா'ன்னு நீ என்னை அடிக்கடிச் சொல்றே. எனக்குன்னு எந்த ஒப்பீனியனும் இல்லேன்னு கிண்டலடிக்கறே. இப்ப நீ மட்டும் என்ன வாழறே?"

"செல்வா நீ ஒரு வழவழா கொழ கொழா மட்டுமில்லே... அதுக்கும் மேல..."

எதற்காகத் தான் இந்த வார்த்தையைப் பேசினோம் என்று தன் நாக்கை அழுத்திக் கடித்துக் கொண்டாள் சுகன்யா. பேச ஆரம்பித்த வார்த்தையை முழுவதுமாக முடிக்காமல், தன் தலையை குனிந்து கொண்டாள். தன்னை செல்வா இன்று வீணாக தேவையே இல்லாத ஒரு சண்டைக்கு இழுக்க முடிவு செய்துவிட்டான் என்பது அவளுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்ததால், அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவளுக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது.

"அதுக்கும் மேல... நான்... என்னடீ.. ஏன் நடுவுல நிறுத்திட்டே? தைரியமாச் சொல்லு..."

"என் மனசுல இருக்கறதை ஓப்பனா சொல்ல எனக்குத் தைரியமிருக்கு. அதை கேக்கறதுக்கு உனக்குத் தைரியமிருக்கா?" சுகன்யாவின் நாவிலும் சனி குடியேறினான். 


"சொல்லுடீ.. சும்மா நீ மொக்கைப் போடாதே... என்னாலத் தாங்க முடியலே..." செல்வா கிண்டலாகச்சிரித்தான்.

சுகன்யா கடைசியில் அதுவரை தான் கட்டிக்காத்துக் கொண்டிருந்த தன் பொறுமையை இழந்து தன் முகத்தைக் கல்லாக்கிக்கொண்டு நிதானமாகச் சொன்னாள். "நீ ஒரு வடிகட்டின ஹிப்போகிரட்டுங்கறது என் எண்ணம்..."

"சுகன்யா... அப்படி என்னடி... ஹிப்போகிரஸியை நீ என் கிட்ட பாத்துட்டே?"

செல்வா சிரித்துக்கொண்டே கேட்டபோதிலும், சுகன்யாவின் அந்த ஒளிவு மறைவில்லாதப் பேச்சைக் கேட்டதும் செல்வா வெகுவாக தன் மனதில் அடிபட்டான். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சருகாகிக்கொண்டிருந்த கோபம் மீண்டும் அவன் அடி மனதில் எரிச்சல் துளிர்விட்டது. எரிச்சல் கோபமாக மாறி வெகு வேகமாக கிளைவிட்டு வளர ஆரம்பித்தது.

"..."

"சொல்லுடீ..." சீறினான் அவன். சுகன்யாவின் உடலைச் சுற்றியிருந்த அவன் கரங்கள் அவள் உடலிலிருந்து நகர்ந்துவிட்டிருந்தன. தன் தலைமுடியை அவன் கோதிக்கொண்டிருந்தான்.

"செல்வா நீ என்னை சும்மா சும்மா முன்னும் பின்னும் பேசி இன்னைக்கு வம்புக்கு இழுக்கறே? தயவு செய்து இப்ப கொஞ்ச நேரம் பேசாம இரு...!” அவள் அவன் முகத்தை விருட்டெனப் பற்றி இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"நோ.. நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்...?" அவள் முகத்தை அவன் விடாப்பிடியாக விலக்கினான்.

"செல்வா... உனக்குத்தான் மிடில் கிளாஸ் வேல்யூஸ்ல்லாம் ஒரு கண்தொடைப்பா தெரியுதுல்லே?"

"யெஸ்... இப்பல்லாம் எனக்கு அப்டீத்தான் தெரியுது?!'

"உன் தங்கச்சி மீனாவை, போனவாரம், சீனு தன்னோட வெளியில அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னப்ப நீ அவங்ககிட்ட என்ன சொன்னே?" சுகன்யாவின் குரலில் உஷ்ணம் ஏறியது. அவள் அவன் தோலை ஆரஞ்சு பழத்தின் தோலாக எண்ணி உரிக்கத்தொடங்கினாள்.

"எங்க மூணு பேரு நடுவுல நடந்த விஷயம் உனக்குத் தெரிஞ்சிருக்குன்னா.. நான் என்ன சொன்னேன்னும் உனக்கும் தெரிஞ்சிருக்கணுமே..." செல்வாவின் குரல் எகத்தாளமாக வந்தது.

"தெரியும் டியர்... அதுவும் தெரியும்.."

"ம்ம்ம்... தெரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷம்..." சற்று முன் அவன் குரலில் இருந்த எகத்தாளம் இப்போது முற்றிலுமாக இல்லை.

"நீ என்னச் சொன்னேங்கறதை உனக்கு நான் ஞாபகப்படுத்தறேன். 'மீனா... உன் படிப்பு முடியற வரைக்கும் நீயும், சீனுவும் கொஞ்சம் பொறுமையா, இருங்கன்னு' நீ புத்தி சொன்னே.. ஈஸ் தட் ரைட்...? இது நடுத்தரக்குடும்பத்துல பொறந்த நீ திருமணங்கற இஸ்யூவுல வெச்சிருக்கற வேல்யூஸ்ன்னு நான் நினைக்கறேன்.... நான் சொல்றது சரிதானே?" சுகன்யா தன் உதடுகளில் பூத்த புன்னகையை சிரமப்பட்டு நிறுத்தினாள்.

சுகன்யா நிஜத்தில் தன்னை கேலி செய்கிறாள் என்பதனை சரியாகப் புரிந்து கொண்ட செல்வா அதுவரை அவளிடம் ஏளனமாக பேசிக்கொண்டிருந்த தன்னால் அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாததை நினைத்து சிறிதே வருத்தத்துடன் தன் தலையை குனிந்து கொண்டான்.

"ஏன் உனக்கு வாய் அடைச்சுப் போச்சு...? உன் தங்கச்சின்னா உனக்கு மிடில் கிளாஸ் வேல்யூஸ் வேணும்... அவளுக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாது... ஆனா சுகன்யாவுக்கு அந்த வேல்யூஸ்ல்லாம் தேவையில்லே... அப்படித்தானே நீ நினைக்கறே?

சுகன்யாவும் அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசி அவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றத்தொடங்கினாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு, அவளுடன் பிறந்த அவள் பிடிவாதம், மூர்க்கம், அன்று வெளியில் தலைக்காட்ட ஆரம்பித்தது.

"..."

மீனா வேற.. சுகன்யா வேறேன்னுதானே நீ நினைக்கிறே? ஒரே இஸ்யூவுல உன்னுடைய அணுகுமுறை வேறு வேறாத்தானே இருக்கு?"

"..."

செல்வா சுகன்யாவை தன் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னு நீ பாக்கிறியா?"

"மீனா என் ஃப்ரெண்ட்.. மீனா என்னைத் தன்னோட வெல்விஷரா நினைக்கறா... அவளும் நானும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம், நாங்க எங்கேயிருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் எங்களுக்குள்ள மனசு விட்டுப் பேசிக்கிறோம்.."

"என் அண்ணன் செல்வா எவ்வளவு நல்லவன் தெரியுமான்னு மீனா உன்னைப் பத்தி அன்னைக்கு மதிப்போட பேசினா... அதைக் கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப பெருமிதமா இருந்தது... என் செல்வா பொறுப்பானவன்... எனக்கு புருஷனா வரப்போறவன் எவ்வளவு நல்லவன்னு நானும் சந்தோஷப்பட்டேன்... இப்பத்தான் புரியுது நான் ஒரு பைத்தியக்காரின்னு..."

"என் ஃப்ரெண்ட் வேணி சரியான நேரத்துல எனக்கு புத்திமதி சொன்னா..." சுகன்யாவுக்கு மூச்சிறைத்தது.

"வேணி என்னச் சொல்லியிருக்கப் போறா? என்னைப் பாத்தா ஒரு அயோக்கியன் மாதிரி இருக்கான்னு சொல்லி அனுப்பினாளா?"

"செல்வா.. அவளைபத்தி உனக்குத் என்னத் தெரியும்... அவ மனசு தங்கம்... உனக்குத் தெரியாத ஒருத்தரைப் பத்தி எப்பவும் நீ தப்பா பேசாதே.. ப்ளீஸ்.." அவள் அவனை நோக்கி தன் கையை அசைத்து அவனைப் பேசவிடாமல் தடுத்தாள்.

"அப்புறம்.. நீ என்ன சொல்ல நினைக்கறியோ அதை முழுசா சொல்லிடு.." செல்வா அவளை நோக்கி தன் கைகளை கூப்பினான்.

இன்னைக்கு சுகன்யாவை நான் வம்புக்கு இழுக்கணும்ன்னு நினைச்சேன்... என் நேரம்... நான் என்னையே கிண்டல் பண்ணிக்கிட்ட மாதிரி ஆயிடிச்சி... செல்வாவின் முகத்தில் ஈயாடவில்லை. அவன் முகம் சிவந்து கொண்டிருந்தது.

"செல்வா.. உன் மனசுக்குள்ள நீ ஒரே விஷயத்துக்கு, வேற வேற, அளவுகோல்களை வெச்சிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு இப்பத்தான் புரியுது... இதை நான் நிச்சயமா உங்கிட்ட எதிர்பார்க்கலே?"

"சுகன்யா... நீ இன்னைக்கு அதிகமா பேசறேன்னு நினைக்கிறேன்?" சுகன்யாவிடமிருந்து அவன் விலகி நின்றான்.

"உண்மைதான்... இன்னைக்கு நான் அதிகமா பேசறேன்... நான் ஒத்துக்கறேன்.. ஏன்னா கல்யாணம் ஆகற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடீன்னு சொல்றதுக்கு என் கூடப் பொறந்த ஒரு அண்ணன் எனக்கு இல்லே... அதனால என்னை நானேதான் பாதுகாத்துக்கணும்?" சுகன்யாவின் முகத்தில் ஒரு இலேசான புன்னகை எழுந்தது. செல்வாவுக்கு அது மிதமிஞ்சிய எரிச்சலைக் கொடுத்தது. 


செல்வா, கட்டிலின் விளிம்பில் மவுனமாக உட்க்கார்ந்திருந்தான். இரண்டு நிமிடங்களாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சுகன்யா தன் கைகளை மடித்து மார்பில் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.

செல்வா பாவம்... இன்னைக்கு மனசு நிறைய ஆசையோட வந்திருக்கான்... என்னை முழுசா துணியில்லாமப் பாக்கணுங்கற ஆசை அவன் மனசுக்குள்ள இருக்கறது தெரிஞ்சிருந்தா அவனை நான் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டே வந்திருக்கமாட்டேன்...

இப்ப அவனை ஏமாத்தணுங்கறது என் எண்ணமில்லே... நான் அவனைத் தடவிவிடத் தயார்ன்னு சொன்னாலும் பிடிவாதமா அவன் வேணாங்கறேன்.. மொத்தமா அவுத்து காட்டுங்கறான்... இதுல எனக்கு இஷ்டமில்லே...

எப்படியாவது இவனை இன்னைக்கு கொஞ்சமாவது சந்தோஷப்படுத்தித்தான் அனுப்பணும்.. இவ்வளவு ஆசைப்படறானே? என்னப் பண்றது? என்னை நீ தொடாம இருக்கறதாயிருந்தா ஓ.கே.ன்னு ஒரு கண்டீஷன் போட்டு அவன் ஆசைக்கு சரின்னு சொல்லிடலாமா? தன் காதலனின் சோர்ந்த முகத்தைக்கண்டு, சுகன்யாவின் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

மொட்டை மாடியில் யாரோ நடக்கும் ஓசை கேட்க தன் தலையை ஒருக்களித்து வெளியில் பார்த்தாள், சுகன்யா. இலேசாக மேடிட்ட தன் வயிறு வெளியில் தெரிய, கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தாள், வேணி.

"செல்வா.. காஃபி போட்டுத்தரவா..?

"வேண்டாம்..."

"ஏன்..."

"என் வயிறும் மனசும் நல்லாக் குளுந்து போய் இருக்கு.." செல்வா விரக்தியாக சிரித்தான். அவன் முகத்தில் சுரத்து என்பது மருந்துக்கும் இல்லை.

"செல்வா.. நாம சாதரணமா ஒரு விஷயத்தை பேசிக்கிட்டு இருந்தோம்பா... உன் கருத்தை நீ சொன்னே.. என் கருத்தை நான் சொன்னேன்.. தி மேட்டர் என்ட்ஸ் தேர்... இப்ப எதுக்கு நீ ரொம்பவே சீரியஸா மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு உக்காந்திருக்கே.."

"..."

"அயாம் சாரிப்பா.. நான் இப்படில்லாம் பேசியிருக்கக்கூடாது இல்லே..? நான் பேசினது உனக்கு பிடிக்கலே அப்படித்தானே?"

"சேச்சே.. நீ உண்மையைத்தானே பேசினே..." செல்வா தன் தலையை அழுத்திவிட்டுக்கொண்டான்.

"செல்வா... ஐ லவ் யூடாச் செல்லம்... எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்குதுடா.. உன்னுடைய குறைகள், நிறைகள் எல்லாமே எனக்குப் பிடிக்குதுப்பா... நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னா.. ஐ லவ் த டோட்டல் சம் ஆஃப் செல்வான்னு அர்த்தம்ப்பா.." சுகன்யா தன் கண்கள் மலர மனதில் கள்ளம் ஏதுமின்றி பேசிக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்ம்.." செல்வா முனகினான். தன் கைகளை நெறித்துக்கொண்டான்.

"சிரிடா... செல்வா ப்ளீஸ்.. கொஞ்சம் சிரியேன்... என் கண்ணுல்ல.. என் ராஜால்ல" சுகன்யா வாய்விட்டு அவனைக் கொஞ்சி கொஞ்சி சிரித்தாள்.

சுகன்யா சிரித்துக்கொண்டே தன் பார்வையை அறைக்கு வெளியில் வீசினாள். வேணி அவள் கண்களுக்குத் தென்படவில்லை. துணி உலரவைக்கும் கொடிகள் காலியாக இருந்தன. விருட்டென காற்றில் திறந்துகொண்ட தன் அறைக்கதவை மீண்டும் ஒரு முறை ஒருக்களித்து சாத்தியவள், கட்டிலை நோக்கி விரைந்தாள். கட்டிலின் முனையில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை மல்லாக்காகத் தள்ளி அவன் மேல் ஒய்யாரமாகப் படர்ந்தாள்.

செல்வாவின் சுண்ணி மீண்டும் புடைக்க ஆரம்பித்தது. இருவரின் உடலும் ஒன்றின் மேல் ஒன்று கச்சிதமாக அமுங்கிக்கொண்டிருந்தன. அவனுடைய புடைப்பு, மிகச்சரியாக அவள் தொடைகளுக்கு நடுவில் பொருந்தியிருந்தது. அவள் அவன் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே, தன் இடுப்பை மெதுவாக அசைத்தாள். ஆடைகளை விலக்காமலே ஒருவரை ஒருவர் புணர்வதாக அவர்கள் நினைத்து மகிழ ஆரம்பித்தார்கள்.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ம்ம்மா.."

செல்வா தன் விழிகளை மூடிக்கொண்டு முனகினான். அவன் கைகளிரண்டும், சுகன்யாவின் ப்ருஷ்டங்களில் படிந்து அவள் இடுப்பை தன் புடைப்பின் மீது அழுத்திக்கொண்டது.

"டூ யூ லைக் திஸ் பேபீ..." சுகன்யா அவனை நோக்கி சிருங்காரமாக சிரித்தாள். இருவரின் இடுப்பும் ஓரே சீராக அசைந்து கொண்டிருந்தன.

"சுகும்ம்மா நீ வேணி சொன்ன மாதிரி கில்லாடிடீ..." செல்வாவின் கண்கள் ஒரு வினாடி மின்னியது. அவன் அவள் கன்னத்தை வெறியுடன் கடித்தான்.

"கீப் கொய்ட் அன்ட் எஞ்சாய் யுவர்செல்ஃப்.." செல்வாவின் கன்னத்தைத் திருகி முத்தமிட்டுக்கொண்டே, சுகன்யா தான் அசையும் வேகத்தைக் கூட்டினாள்.

"சுகு... அயாம் எஞ்சாயிங் இட்... ஆனா என் கேள்விக்கு உன் பதில் என்னன்னு தெரிஞ்சுக்காம நான் இங்கேருந்து போகமாட்டேன்...!" செல்வா நகைத்தான்.

செல்வாவின் நாக்கில் அன்று சனி குடியேறி பேசிக்கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அவன் மனம் ஒரே இடத்தில் பிடிவாதமாக சுற்றி சுற்றி வந்தது. தன் கேள்விகளால் சுகன்யா பாதிக்கப்படாமல் இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

தன்னுடைய அர்த்தமில்லாத ஒரு கேள்வியால், அந்தக் கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால், சுகன்யாவைத் தன்னால் தான் நினைத்தப்படி சீண்ட முடியவில்லை, உசுப்பேற்ற முடியவில்லை, அவளைத் தன் எண்ணப்படி வெறுப்பேற்ற முடியவில்லை என்ற உண்மை அவனுக்குப் புரிந்ததும், தான் அவளிடம் எதிலோ தோற்றுவிட்டதாக எண்ண ஆரம்பித்தான்.

ஒருவிதத்தில் தான் நினைத்தபடி சுகன்யாவை சீண்டி அவளுக்கு கோபமூட்டமுடியாமல் போனதை அவன் தனக்கு கிடைத்த தோல்வியாக நினைத்தான். துரதிருஷ்டவசமாக சுகன்யா போன்ற ஒரு பெண்ணின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்ற உண்மையை அவன் அன்று உணரவேயில்லை. 


“உனக்கு என் பதில் தானே வேணும்... நல்லாக் கேட்டுக்க.. எல்லாம் உன்னால வந்த வினைதான்... உங்கம்மாவை நினைச்சுத்தான் நான் பயப்படறேன்... போதுமா...?” தன் பொறுமையை முற்றிலும் இழந்த சுகன்யா புருவங்களை நெறித்து சீறினாள்.

“என்னடீச் சொல்றே?” செல்வா தன் இடுப்பை அசைப்பதை நிறுத்தினான்.

“ஆமாம்... எல்லாம் உன்னாலதான்... அய்யோப் பாவம்... நீ ஆசைப்படறியேன்னு... அன்னைக்கு ஒரு நாள் இதே ரூம்லதான்... என் வெக்கத்தை விட்டுட்டு ரவிக்கையை அவுத்து என் மாரை உனக்கு காமிச்சேன்... நீ சந்தோஷமா பாண்டிச்சேரிக்குப் போய் வான்னு அனுப்பினேன். அதுக்கு பதிலுக்கு நீ என்ன பண்ணே?”

“நாம தனியா இருந்ததை, அந்தரங்கமா, நெருக்கமா இருந்ததை உன் அம்மாகிட்டே சொன்னே.. உன் அம்மா என்னடான்னா.. சுகன்யா கூறுகெட்டவ, எடுபட்டவன்னு, பட்டத்துக்கு மேல பட்டம் எனக்கு கிடைச்சது. உன்னாலத்தான் சுகன்யா ஒரு 'அரிப்பெடுத்தவன்னு' உன் அம்மாகிட்டேருந்து எனக்கு கோல்ட் மெடல் கெடைச்சுது?’ சுகன்யாவுக்கு மூச்சிறைத்தது.

“நீ விஷயம் புரியாம பேசறடீ”

“ஆமாம் உனக்கும்... உன் அம்மாவுக்கும் மட்டும்தான் எல்லாம் புரியுது... வேற யாருக்கு இங்கே ஒண்ணும் புரியலை...”

“என் கோவத்தை கிளறாதடீ நீ”

“உனக்கு மட்டும்தான் கோபம் வருமா?”

“வாயை மூடுடீ...”

அடிக்குரலில் கூவிய செல்வா, தன் மார்பின் மேல் படுத்திருந்த சுகன்யாவின் தோள்களை இறுகப்பற்றினான். தன் மார்பில் படுத்திருந்த அவளை விருட்டென உதறித் தள்ளினான். இந்த வேகமான, மூர்க்கமான, முரட்டுத்தனமான செல்வாவின் செயலை எதிர்பார்க்காத சுகன்யா கட்டிலின் குறுக்கில் போய் விழுந்தாள். கட்டிலில் விழுந்தவளின் பின்னந்தலை சுவரில் ‘டங்’ என்ற ஓசையுடன் மோதிகொண்டது.

சுகன்யா இதுவரை எப்போதும், ஓரளவிற்கு அமைதியாக, பொறுமையாக இருக்கும் செல்வாவைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அவன் முரட்டுத்தனமாக பேசியோ, யாரிடமாவது சண்டையிட்டோ அவள் பார்த்ததேயில்லை. இன்று முதன் முறையாக அவனுள் ஒளிந்திருக்கும் மிருகத்தை பார்த்த சுகன்யா திடுக்கிட்டுப்போனாள்.

சுகன்யாவுக்குத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழ பத்துவினாடிகள் பிடித்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. சுவரில் மோதிக்கொண்டதால், தன் உடலில் உண்டான வலியில், வாயில் பேச்சு வராது மவுனமாக தன் தலையைத் தடவிக்கொண்டாள் சுகன்யா.

தன் உதறலின் வேகத்தில் சுகன்யாவின் தலை சுவரில் மோதிக்கொண்டதை கண்ட செல்வாவின் தொடைகளின் நடுவில் எழுந்திருந்த புடைப்பு சட்டெனக் காணமால் போய்விட்டிருந்தது.

"வலிக்குதாம்மா.. சுகு..." செல்வா அவளை நெருங்கினான்.



"பிளீஸ்... நீ கிட்டவராதே.. வேணாம்.. கிட்ட வராதே.. கடைசீல நீ ஒரு சராசரி ஆண்தான்னு காமிச்சிட்டேல்லா" சுகன்யா பொறுமினாள்.

ஒரு பொட்டைச்சிக்கு இவ்வளவு திமிரா... செல்வாவின் மனதுக்குள்ளும் சட்டென வன்மம் எழுந்தது. அவன் வேகமாக தன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்துக்கொண்டவன், பாத்ரூமுக்குள் விருட்டென நுழைந்தான். பக்கெட்டில் நிறைந்திருந்த குளிர்ந்த நீரை தன் முகத்தில் வாரி வாரி அடித்துக்கொண்டான்.

அவன் தலைக்கேறியிருந்த கோபம் மெல்ல குறைய ஆரம்பித்தது. பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தபோது சுகன்யா இன்னமும் தன் பின்னந்தலையில் கையை வைத்துக்கொண்டு கட்டிலின் முனையில் உட்க்கார்ந்து கொண்டிருப்பதை கண்டவன், முகத்தை துடைத்துக்கொள்வதற்காக தன் பேண்டீல் கர்சீஃபை தேடினான்.

செல்வா என்னத் தேடுகிறான் என்பது சுகன்யாவுக்கு புரிந்தது. வாய் பேசாமல் யந்திரமாக கட்டிலை விட்டு இறங்கி உள் ரூமிலிருந்து ஒரு காய்ந்த துவாலையைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

“தேங்க் யூ...” சுகன்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தன் உதடுகளுக்குள் முனகினான் செல்வா. 


No comments:

Post a Comment