Friday 6 March 2015

சுகன்யா... 30


மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள். முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவியதும் தன் மனம் சிறிதே இலேசானது போல் உணர்ந்தாள். நடராஜன், இரவு சாப்பாட்டுக்குப் பின், கட்டிலில் படுத்தவாறு, தன்னுடைய வழக்கப்படி ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தார்.

தன் கணவன் கையில் ஒரு புத்தகத்துடன் நிம்மதியாக அனந்த சயனத்தில் இருப்பதைக் கண்டதும் அவளுக்கு குபீர் என மனதில் மீண்டும் எரிச்சல் எழுந்தது. இந்த மனுஷனுக்கு எதைப்பத்தியாவது கவலை இருக்கா? கையில புஸ்தகத்தை எடுத்துட்டா, இந்த வீடே பத்தி எரிஞ்சாலும், கவலை கிடையாது. அறைக்கதவை படிய மூடியவள், அறையில் எரிந்துக்கொண்டிருந்த குழல் விளக்கை படக்கென அணைத்தாள். விடிவிளக்கைப் போட்டுக்கொண்டு தான் கட்டியிருந்த புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

"படிச்சுக்கிட்டு இருக்கறேன் ... லைட்டை ஏண்டி அவிச்சிட்டே?" அவள் அறையினுள் நுழைந்ததை அவர் கவனிக்கவேயில்லை. விளக்கணைந்ததும்தான், மல்லிகா அறைக்குள் நிற்பதையே உணர்ந்தார்.

"நான் இந்த ரூமுக்குள்ள எப்ப வந்தேன்னு உங்களுக்குத் தெரியுமா?" இந்த கேள்விக்கு என்னப் பதில் சொல்லுவது என்று நடராஜனுக்குப் புரியவில்லை. அவர் எந்தப் பதிலைச் சொன்னாலும், மல்லிகா தன்னை விடப்போவது இல்லை என்று மட்டும் அவருக்கு தெரிந்தது.

"இப்பதானே வந்தே நீ ... லைட்டைப் போடும்மா ... இன்னும் ஒரு நாலுப்பக்கம் படிச்சிடறேனே ... அதுக்கப்பறம் லைட்டை நானே எழுந்து நிறுத்திடறேன். வா ... வா ... நீ இந்தப்பக்கம் சுவரோரமா படுத்துக்கயேன் ..." அவர் மையமாக ஒரு பதிலைச் சொன்னார்.

"நீங்க படிச்சு கிழிச்சது போதும் ... இதுக்கு மேல நீங்க என்ன ஐ.ஏ.ஏஸ். ஆஃபீசராவா ஆவப் போறீங்க? இல்ல இந்த ஸ்டேட்டுக்கு சீப் மினிஸ்டரா ஆவப் போறீங்களா? ரெண்டும் இல்லே. நான் கொஞ்சநேரம் நிம்மதியா தூங்கணும்."

"நீ தூங்கேம்மா ... யார் வேணாம்ன்னது?"

"நான் எங்கேருந்து தூங்கறது? வெளிச்சம் இருந்தா என்னால தூங்கமுடியலை. ராத்திரிப் பூரா லைட்டை போட்டுக்கிட்டு அப்படி என்னத்தை படிக்கிறீங்களோ? தினம் உங்கக்கூட இது ஒரு உபத்திரவமா போச்சு." அவள் நொடித்தாள்.

கட்டிலில் படுத்திருந்த நடராஜன், விடிவிளக்கில் உடை மாற்றிக்கொண்டிருந்த தன் மனைவியின், பாவாடை இறுக்கத்தில் பாவாடைக்குள் பிதுங்கிக்கொண்டிருக்கும், மல்லிகாவின் பின் இடுப்பைப் பார்த்தவரின் சித்தம் இலேசாக கலங்க ஆரம்பித்தது. காலையிலேருந்து வீட்டுல ஓய்வா இருந்ததுலே என் உடம்பும், மனசும் சுறுசுறுப்பா இருக்கு. உடம்பு களைச்சாத்தான் தூக்கம் சட்டுன்னு வரும். என் மல்லிகையை வாசனைப் புடிச்சு முழுசா ஒரு வாரம் ஆச்சே? இன்னைக்கு மோந்துப் பாக்கலாமா? ஆனா மல்லிகை மென்மையா வாசனை அடிக்கலையே; மல்லிகையிலேருந்து கொஞ்சம் தீயற வாசனையில்லே வருது? கிட்டப் போனா என் மல்லிச்சரம் சுடுமா? நடராஜன் கவிதை நடையில் யோசிக்க ஆரம்பித்தார்.



"உங்க தலைக்கு கீழ இருக்கற என் நைட்டியை எடுங்க. சுத்தமா தொவைச்சு மடிச்சு வெச்சிருக்கேன். அது மேலேயே உங்க தலையை வெச்சு படுத்து பெரள்றீங்க"

காலையில் மீனா, பின்னர் செல்வா என மாறி மாறி, அவள் விருப்பத்துக்கு மாறாக பேசியதை எல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்ததால், மல்லிகாவின் மனதில் கூடிக்கொண்டிருந்த எரிச்சல் இப்போது சீற்றமாக மாறியதால், தன் உள்ளத்தில் பொங்கும் குமுறலை அவள் தன் கணவன் தலையில் கொட்ட ஆரம்பித்தாள். அடுத்த கணம், அவள் மனது அவள் மீதே குற்றம் சாட்டியது. சே... சே... என் புள்ளைங்க மேல இருக்கற எரிச்சலை நான் ஏன் சாதுவான என் புருஷன் மேல காட்டறேன்?

அடியே மல்லிகா, இவன் உன் புருஷன்; நீ காரணமேயில்லாம கோச்சிக்கிட்டாலும் பொறுத்துக்கிட்டு போற நல்ல மனசு இவனுக்கு இருக்கு. நீ பேச ஆரம்பிச்சா, அவன் பொறுமையா கேக்கறவன்; உன் மனசுல இருக்கறதை நீ மட்டும் யாரு கிட்ட கொட்டப் போறே? மனசுல எந்த கோபத்தையும் வெச்சுக்கிட்டு படுக்கைக்கு போகக்கூடாதுன்னு உன் மாமியார் எத்தனை தரம் சொல்லியிருப்பா உங்கிட்ட? சனியன் புடிச்ச கோபத்தையும், எரிச்சலையும் மனசை விட்டு சுத்தமா வழிச்சுப் போட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்குடி.

"மல்லி ... ஏண்டி இப்ப என் கிட்ட கோபப்படறே? எங்கேந்து சந்தன வாசனை ஜோரா வருதேன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்தேன். அது உன் நைட்டியிலேருந்துதான் வருதா? நான் படுக்கற தலயணைக்கு மேல உன் நைட்டியை நீ வெச்சிருக்கே; நான் கவனிக்காம அது மேல என் தலையைத்தானே வெச்சு படுத்துக்கிட்டு இருந்தேன்? நான் வேற எதையும் வெச்சிடலியே? இப்பெல்லாம் நீ என்ன செண்ட் கிண்ட் அடிச்சிக்கிறியா?"

நடராஜன் ஒன்றும் தெரியாதவர் போல் மனைவியிடம் குழைய ஆரம்பித்தார். பிள்ளைகள் மீது காட்டமுடியாத கோபத்தை தன் மனவி தன் மீது திருப்புகிறாளென்று அவருக்குப் புரிந்தது. கடல் கொதித்து சீற ஆரம்பித்தால் அது கரையைத்தானே சுடும். இப்ப அவ கடலா இருக்கும் போது நான் கரையா மாறித்தான் ஆகணும்.

"தலை முடி கொட்டி வழுக்கை பளபளக்குது ... மண்டையில இருக்கறது இன்னும் நாலு மசுரு; இப்ப அந்த நைட்டியை எடுத்து உதறிப் பாருங்க ... எவ்வள முடி அதுல ஒட்டிக்கிடக்குதுன்னு தெரியும் உங்களுக்கு?"

நடராஜன், தலையணை மேல், தன் தலைக்கு கீழிருந்த மல்லிகாவின் நைட்டியை எடுத்து உதறியவாறு, ஒரு கையில் நைட்டியுடன் விருட்டென எழுந்து, பாவாடை, ஜாக்கெட்டுடன் நின்று கொண்டு, புடவையை மடித்துக் கொண்டிருந்தவளை, தன் புறம் இழுத்து தன் பக்கத்தில் கட்டிலில் உட்கார வைத்துக்கொண்டார். தன் வலது கையை அவள் தோளில் போட்டுக்கொண்டவரின் இடது கரம் அவள் இடுப்பில் தவழ்ந்தது.

"உங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாப்பிட வேண்டியது, புஸ்தகத்தை கையில எடுத்துக்கவேண்டியது, அப்படியே கொறட்டை விட்டுக்கிட்டு தூங்கவேண்டியது. கட்டின பொண்டாட்டி மனசுல என்ன இருக்கு ஏது இருக்கு? தாலி கட்டின புருஷனுக்கு ஒரு அக்கறை கிடையாது." மல்லிகா பேச ஆரம்பித்தாள்.

"ம்ம்ம்"

"என்னா ஊம்ம்ம்ம்? இப்படி ஒரு புருஷன் எனக்கு வந்து வாய்ச்சிருக்கீங்க? ஊர்ல இல்லாத ஒருத்தி ஆப்டுட்டா; அவளைத் தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு, அவ பின்னாலயே அலையற புள்ளையை பெத்து வெச்சிருக்கேன். ஒழுவற இடத்துல இன்னும் சரியா பட்டையை வெச்சுக்க தெரியாத பொண்ணு; மாசத்துல நாலு நாள் காலேஜ்க்கு போட்டுக்கிட்டு போற சுடிதாரை நனைச்சுக்கிட்டு வந்து நிக்குது. அது கெட்ட கேட்டுக்கு பெத்தவளுக்கு நீட்டா லெக்சர் குடுக்குது. என்னான்னு ஒரு வார்த்தை அந்த மீனாவை கேக்கறீங்களா?" 


நடராஜன், வாயைத் திறக்கலாமா இல்லை அவள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாமா என மனதுக்குள் பூவாத் தலையா போட்டுக்கொண்டிருந்தார். அவருடைய விரல்கள் மட்டும் மல்லிகாவின் மென்மையான இடுப்புச் சதையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தது.

"என்ன சத்தத்தையே கானோம்? காலையில நீங்க அவ பேசறதை கேட்டுக்கிட்டு உச்சி குளுந்து போய் "ஆ" ன்னு வாயில "ஈ" போறது தெரியாம உக்காந்துகிட்டு இருந்தீங்க. என்ன குடும்பமோ இது? எனக்கு வெறுத்து போச்சு." மல்லிகா புலம்பினாள். தன் இடுப்பில் கிடந்த கணவன் கையை எடுத்து வீசினாள்.

"மல்லி ... உன் புள்ளைங்க மேல இருக்கற கோவத்தை என் மேல ஏண்டி காட்டறே?" அவர் தன் கையை மீண்டும் அவள் இடுப்பில் செலுத்தி அவள் தொப்புளை சுற்றி தன் விரல்களால் வட்டம் வரைய ஆரம்பித்தார். வட்டம் போட்ட விரல்களில் ஒன்று அவள் பாவாடைக்கும், வயிற்று சதைக்கும் நடுவில் நகர்ந்து, அவள் அடிவயிற்றுக்குள் நுழைய முயன்றது. மல்லிகாவின் உடலில் ஜிலீரென்று சிலிர்ப்பு ஏறியது.

"இப்ப எதுக்கு உங்க கையை அங்க விடறீங்க" இப்போது மல்லிகாவின் குரலிலிருந்த காட்டம் சற்றேத் தணிந்திருந்தது. பரவாயில்லே; புயல் வேகம் தணியுது; மகராணியை வழிக்கு கொண்டாந்துடலாம்; நடராஜன் மனதில் தெம்பு கூடியது. அவர் கைக்கும் தைரியம் வர ஆரம்பித்தது. அவர் தன் அடிவயிற்றிலிருந்த கையை சட்டென வேகமாக பக்கவாட்டில் சரித்து, மனைவியின் வலது தொடையை வருடினார்.

"கல்யாணம் ஆயி இத்தனை வருஷம் கழிச்சி நீ இந்த கேள்வியை கேக்கறியே? இது கொஞ்சம் ஒவரா தெரியலை உனக்கு.?" மல்லிகாவின் முகத்துடன் தன் முகத்தை உரசினார்.

"முள்ளு முள்ளா குத்துது ... நவுந்து உக்காருங்க" மல்லிகா அவரை வாயால் அதட்டினாளேத் தவிர தன் முகத்தை அவர் முகத்தில் அழுத்தி உரசினாள்.

நடராஜன் தன் விரல்களை தொடையிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை அவள் தொப்புளை இதமா வருடி, பின் தன் உள்ளங்கையை மேல் நோக்கி அனுப்பி, ரவிக்கைக்குள் கிடக்கும் அவள் மார்பகங்களை தடவிக்கொண்டே, தன் முகத்தைத் திருப்பி அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்து உரசினார். உதடுகளால் அவள் கன்னத்தை உரசியவர் மெதுவாக அவள் காதில் முனகினார், "என் பட்டு செல்லம்டீ நீ."

"போதும் கொஞ்சினது .." சிணுங்கிய மல்லிகாவின் தலை தன் கணவனின் தோளில் சரிந்தது.

"சரிடி ... நான் உன்னை கொஞ்சலை.. வேற என்னடா செய்ய?"

"நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ... என்னை தூங்கவிடுங்க செத்த நேரம் .."

மல்லிகா கணவனின் காதில் கிசுகிசுத்தவள், அவர் இடது கையை தன் வலது கையால் பற்றி தன் இடது மார்பில் வைத்து அழுத்தி, நடராஜனின் கன்னத்தில் முத்தமிட்டாள். தன்னை முத்தமிட்டவளை, மெல்ல கட்டிலில் சாய்த்தவர், அவள் அருகில் தானும் படுத்து அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டார். முத்தமிட்டுக்கொண்டே, அவள் ரவிக்கையை அவிழ்க்க முயன்றார்.

"போதுங்க...டயர்டா இருக்கு.."

"ஒரு அஞ்சு நிமிஷம் ... கட்டிக்கடி என்னை; அப்புறம் தூங்கவேண்டியதுதான் ... செல்வா பிரச்சனையில நாம ஒரு முடிவுக்கு வந்ததும் இன்னைக்கு எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்மா." சொல்லிக்கொண்டே மல்லிகாவின் ரவிக்கை ஹூக்குகளை வேகமாக அவிழ்த்தார்.

"ஆமாம் ... நீங்க எல்லோரும் சந்தோஷமா இருங்க; என்னைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?" மல்லிகா எழுந்து ரவிக்கையைத் தன் உடலிலிருந்து கழற்றிவிட்டு அவர் மார்பில் சரிந்து படுத்துக்கொண்டள்.

"மல்லி இப்படி பேசாதேம்மா ... எனக்கு கஷ்டமா இருக்கு; இதுவரைக்கும் நாங்க யாராவது உன் மனசு நோகறமாதிரி இந்த வீட்டுல நடந்து இருக்கோமா?" மெல்ல அவர் கை அவள் வெற்று மார்புகளை வருடிக்கொண்டிருந்தது.

"இந்த விஷயத்துல மட்டும் ஏன் என் மனசு அலை பாயுதுன்னு எனக்கும் புரியலைங்க." மல்லிகாவின் குரல் கம்மியது. அவள் சரிந்து தன் கணவன் புறம் திரும்பி அவரைத் தன் மார்புடன் இறுக்கிக்கொண்டு அவர் இடது கையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டவள் முகம் அவர் மார்பில் பதிந்து கிடந்தது.

மல்லிகா, நான் சொல்றதை இப்ப கொஞ்சம் பொறுமையா கேளு. தனியா உக்காந்து நிதானமா யோசனை பண்ணிப் பார்த்தீன்னா, நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு புரியும்." நடராஜன் தன் மனைவியின் பாவாடை நாடாவை தளர்த்தி அவிழ்த்தார். தளர்ந்த பாவாடைக்குள் தன் கையை நுழைத்து அவள் பின் மேடுகளை அழுத்திப்பிடித்தார்.

"ம்ம்ம் ... சொல்லுங்க.." மல்லிகாவின் கை நடராஜனின் முதுகை மென்மையாக தடவிக்கொண்டிருந்தது.

"பர்த்ருஹரி ... பர்த்ருஹரின்னு ஒரு மகாகவி இருந்தான்."

"ம்ம்ம்ம் .."மல்லிகாவின் மனசிலிருந்த சீற்றம் குறைந்து தன் கணவனின் விரல்கள் தன் உடலில் அனுப்பும் சிலிர்ப்பை அது அனுபவிக்கத் தொடங்கியிருந்தது.

"மதம் புடிச்ச யானையை கூரா இருக்கற அங்குசத்தால அடக்கிடலாங்கறான் அவன்."

நடராஜன் தன் அருகில் படுத்திருந்தவளின் பாவாடையை தன் காலால் நகர்த்தி கால்களுக்கு கீழே உதறியவர், மல்லிகாவின் பின்னெழில்களிலிலிருந்து தன் கையை விலக்கி, முன்புறம் கொண்டுவந்து, மெல்ல அவள் வயிற்றை வருட ஆரம்பித்தார்.

"ம்ம்ம் ..." இப்ப உங்க கையை சும்மா வெச்சுக்கிட்டு கதை சொல்லப் போறீங்களா? இல்லை நான் எழுந்து போகட்டுமா? போலியாக மல்லிகா தன் கணவனை சினந்தவள், தன் வலது காலை அவர் இடுப்பில் போட்டு அவரை தன் புறம் இழுத்தாள்.

நடராஜனின் மனம் குதுகலித்தது. கடல் காத்து தணுப்பா வீச ஆரம்பிச்சுடுத்து. காத்துல வர்ற மல்லிகை மணம் இப்ப நாசிக்கு இதமா இருக்கு. "பர்த்ருஹரி ... நீ திரிகால ஞானிடா ... நீ என்னைக்கோ எழுதி வெச்சிட்டு போயிருக்கறது எல்லாம் சத்தியமான உண்மைடா; நீ நல்லாயிருக்கணும்டா" நடராஜனின் மனம் ஆனந்த கூச்சலிட்டது.

"அப்புறம் என்னங்க ... சொல்லுங்கன்னா" மல்லிகாவுக்கு இது மாதிரி தன் கணவன் படுக்கையறையில் தனிமையில் சொல்லும் கதைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

"இன்னொரு கவி சொல்றான், காமத்துல பித்துப் புடிச்சிருக்கற ஆண் யானையோட இச்சை உடனடியா பூர்த்தி ஆகணும்; அந்த ஆசை வேகத்துல அது தனக்கு சரியான ஒரு இணையைத் தேடி காட்டுல, மலையில, பள்ளத்தாக்குல, சோலையிலன்னு அலையும்; மதிமயங்கி எதிர்ல தன் பாதையில இருக்கிற வயல்கள், வாழைத் தோப்புன்னு எல்லாத்தையும் சூறையாடும்; அப்படிப்பட்ட அந்த ஆண் யானையோட ஆசையை, மூர்க்கத்தை, கொழுத்த ஒரு பெண் யானையாலத்தான் போக்கமுடியுமுன்னு சொல்றான்.

"நம்ம புள்ளையை மூர்க்கன்னு சொல்றீங்களா?"

"எனக்கே உன் மேல பிடிச்ச மதம் இன்னும் தீரலடி! நானே இந்த விஷயத்துல இன்னும் ஒரு மூர்க்கனாத்தான் இருக்கேன். அப்புறம் ஒண்ணும் அறியாத என் புள்ளை செல்வாவை நீ குறை சொல்றதுல என்னடி நியாயம்?" நடராஜனின் கை தன் மனைவியின் அடிவயிற்றில் ஊர்ந்து மெதுவாக அவள் பெண்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

"உங்களுக்கு வெக்கமா இல்லே இதை சொல்றதுக்கு? நீங்க கேக்கறப்பல்லாம், போட்டுக்கிட்டு இருக்கற டிரெஸ்ஸை மொத்தாமா அவுத்துப் போட்டுட்டு உங்களை கட்டிக்கிட்டு குலாவறேனே? என்னைக்காவது உங்களுக்கு கொறை வெச்சிருக்கேனா? மல்லிகா தன் உடல் சிலிர்த்தாள்.

"சரிடிச் செல்லம் ... நீ கொறையே வெச்சதில்லம்மா."

"ம்ம்ம் ... போங்க... எனக்கு வெக்கமாயிருக்கு"

"எனக்கு இப்ப வேணும் ... நீ வெக்கப்பட்டா அது வேலைக்கு ஆவாது." நடராஜனின் கை மீண்டும் அவள் அடிவயிற்றில் தவழ்ந்து அவள் தொப்புள் மடிப்பில் சென்று நின்றது.

"சரி ... எடுத்துக்குங்க .."

"நீங்க எப்பவும் என் அடிவயித்தை தடவறதையே ஒரு வேலையா வெச்சிருக்கீங்க ..." மல்லிகா தன் உடல் கூச தன் கணவனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"உன் அடிவயித்துல இருக்கற இந்த மூணு மடிப்பு இருக்கே; அதுங்களை எத்தனைத் தரம் பாத்தும், எத்தனைத் தரம் தொட்டு தடவியும், இதுங்க மேல எனக்கு இருக்கற பித்து, இத்தனை வருஷம் கழிச்சும், போகலடி." விருட்டென எழுந்தவர், திரும்பி தன் மனைவியின் வயிற்றில் வெறியுடன் முத்தமிட்டார்.

"ம்ம்ம் ... அப்புறம்" மல்லிகா தன் அடித்தொண்டையில் முனகினாள்.

நடராஜன், தன் மனைவியின் நாபிக்கமலத்தை, வண்டாக மாறித் தன் நாக்கு நுனியால் வருடி, தேனெடுக்க முயற்சித்துக்கொண்டிருக்க, மல்லிகா அவன் தலை முடிக்குள் தன் விரல்களை நுழைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். நடராஜன் அவள் நாபிக்குழியை மென்மையாக நாக்காலும், தன் முகத்தாலும் வருடிக்கொண்டிருக்க அவள் அந்தரங்கம் மெல்ல மெல்ல இளகி, நெகிழ்ந்து ஈரத்தை கசியத் தொடங்கியது.

"உன் புள்ளை, அந்த அறியாத பொண்ணை, அரைகுறையா கொஞ்ச நேரம் பாத்துட்டான்; அதனால அவன் தலையில ஏறியிருக்க பித்தம், அவங்க ரெண்டு பேரும் நம்பளை மாதிரி புருஷன் பொண்டாட்டியா, பதட்டமில்லாமா, ஒண்ணா தூங்காத வரைக்கும் எப்படிடீ எறங்கும்?"

"ம்ம்ம்... இந்த வக்கணையான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. இப்பிடி பேசி பேசியே நீங்க உங்க காரியத்தை முடிச்சுக்குங்க; இதுக்கு சப்போர்ட்டா உங்களுக்குன்னு எவனாவது வேலையத்த மஹா கவி கிடைச்சுடுவான்!" மல்லிகா அவர் லுங்கியை வேகமாக அவிழ்த்து கட்டிலின் மறுபுறம் வீசினாள்.

"செல்லம் ... நான் மட்டும் உனக்கு என்ன கொறைடி வெச்சிருக்கேன்?"

"இல்லீங்க ... சத்தியமா எந்தக் கொறையும் நீங்க வெக்கலீங்க. உங்களை நான் தப்பா சொன்னா என் நாக்கு அழுகிப் போயிடுங்க." மல்லிகா நடராஜனைத் தன் மார்பின் மீது புரட்டிப் போட்டுக்கொண்டு தன் தொடைகளை நன்றாக விரித்துக்கொண்டாள்.

"எப்ப்பா..." நடராஜன் முனகிக்கொண்டே தன் ஆயுதத்தை அவள் பெண்மையின் மீது மெதுவாக உரசினார்.

"ஒரு நிமிஷம் இருங்க ...அந்த தலையனையை எடுத்து என் இடுப்புக்கு கீழ மடிச்சு வெய்யுங்க." மல்லிகா தன் கணவனின் எழுந்து கொண்டிருந்த அவர் ஆண்மையை தன் கையால் பிடித்து லேசாக குலுக்கி தன் அந்தரங்கத்தின் வாயிலில் பொருத்தியவள், தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கியவாறு ... "ம்ம்ம் ... அழுத்துங்க" என முனகினாள்.

"எம்ம்ம்ம்மா,"

நடராஜன் மெல்ல தன் வாயால் ஓசையெழுப்பியபடி தன் இடுப்பை வேகமாக உந்தித் தள்ள, அவருடைய ஆயுதம் மல்லிகாவினுள் நுழைந்து, அவள் அடி ஆழத்தில் சென்று புதைந்து நின்றது. நடராஜன் தன் மனைவியின் மேல் பரந்து படிந்தவர், அவள் இதழ்களில் முத்தமிட்டவாறு, தன் இரு கைகளையும் அவள் புட்டத்தின் கீழ் கொடுத்து, அவள் இடுப்பை மேல் நோக்கி தூக்கிக்கொண்டு, தன் இடுப்பை மெல்ல அசைக்க, அவர் ஆண்மை மெல்ல மெல்ல, மல்லிகாவின் புழைக்குள் நீளமாகியது ... மேலும் பருத்தது ... மேலும் மேலும் திண்மையடைந்தது.

"ஹாங் ...ம்மா...ஹாங்" மெல்லிய முனகல் மல்லிகாவின் உதடுகளிலிருந்து வெளிவர, நடராஜனின் வேகம் கூடியது. சிறிதே குறைந்தது. மீண்டும் மெல்ல கூடியது ... மூச்சிறைக்க அவர் தன் வேகத்தை மேலும் மேலும் அதிகரித்தார். இதற்கு மேல் தன் கணவனால் தன்னுள் தாக்குப்பிடிக்க முடியாதென்று மல்லிகா புரிந்து கொண்டாள்.

"என்னங்க ...வெளியில வந்துடுங்க இன்னைக்கு ... உள்ளே விட்டுராதீங்க..."

"ஏம்ம்மா?"

"இப்பல்லாம் எனக்கு "நாள்" சரியா ஒரு ரிதமா வரல்லேங்க ... நான் இன்னைக்கு சேஃபான்னு எனக்கேத் தெரியல.."

"ம்ம்ம்ம் ... '' நடராஜான் வேகமாக மூச்சிறைக்க தன் இடுப்பை அசைத்துக்கொண்டிருந்தார்.

"ச்ச்ச்சொன்னா கேளுங்க ... இந்த வயசுல ஏதாவது ஏடாகூடமா .... ம்ம்ம். ஹா ஹா ... நின்னுடப் போகுதுப்ப்பா ... ம்ம்ம் .. அப்புறம் அந்த பொண்ணு சுகன்யா என்னைக் கேப்பா ... எனக்கு இன்னும் அரிப்பு அடங்கலையான்னு?" மல்லிகா வேகமாக நடராஜனை தன் மேலிருந்து புரட்டித் தள்ளினாள்.

"சும்ம்மா நீ ஏண்டி சுகன்யாவையே நெனைச்சுக்கிட்டு இருக்கே?"

"என் தலையெழுத்து அவ என் மனசுல உக்காந்துக்கிட்டு ஆட்டம் போடறா."

நடராஜன் மூச்சிரைக்கத் தன் மனைவியின் பெண்மையிலிருந்து தன் ஆயுதத்தை வேகமாக வெளியில் உருவிக்கொண்டு, கட்டிலில் மல்லாக்காக விழுந்தார். விழுந்தவரின் ஆயுதம் நிமிர்ந்து நின்று காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.

"கிட்ட வாடி க்க்கண்ணு" மேலும் கீழுமாக மார்பு ஏறி இறங்க, வேகமான சுவாசத்தினால், மூச்சிறைத்துக் கொண்டிருந்த நடராஜன், தன் அருகில் கிடந்த மல்லிகாவை இழுத்து தன் மார்புடன் இறுகத் தழுவிகொண்டார். தன் கணவனின் இறுக்கமான தழுவலில் கிடந்த மல்லிகா, அவருடைய இதழ்களை தன் மெல்லிய ஈர உதடுகளால் கவ்வி முத்தமிட்டுக்கொண்டே, அவர் தண்டை தன் வலது கையால் இறுகப் பற்றி மெதுவாக, இதமாக குலுக்கத்தொடங்கினாள்.

"ம்ம் ஹூம்ம் ம்ம் ஹூஹூம்" நடராஜன் முனகிக்கொண்டிருந்தார்.



"ஃப்ஃப்ஃப்ஃப்" நடராஜனின் சுவாசம் நீளமாகி, அணல் மூச்சு அவர் நாசியிலிருந்து புறப்பட்டு வெளிவர, தன் இருகால்களாலும், தன் ஆசை மனைவியை இறுக்கிக்கொண்டு, தன் அடிவயிறு மேலும் கீழுமேற, மல்லிகாவின் விரல்களின் இறுக்கத்தை, தன் தண்டின் மொட்டில், இமை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தார்.

"செல்ல்ல்ல்லம் ... ப்ளீஸ்ஸ்... கொஞ்சம் வேகம்ம்மா ஆட்டுடி ... முனக ஆரம்பித்தவர், வினாடிகளில் தன் மனைவியின் இறுகிய விரல்களுக்குள் தளர்ந்து, ஒழுக ஆரம்பித்தார்.

"ம்ம்ம்ம்ம்...ஹூகூக்கூம் ..." என பெருமூச்செறிந்த தன் கணவனின் உதடுகளை மல்லிகா மீண்டும் தன் வாய்க்குள் சிறைப்படுத்திக்கொண்டாள்.

"ச்சை... என் கையெல்லாம் ஈரமாக்கிட்டீங்க ... எடுங்க அந்த லுங்கியை ..." மல்லிகா முனகினாள். நடராஜன் தன் மனைவியின் கை கொழகொழப்பைத் தன் லுங்கியால் துடைத்தவர், தன்னையும் அதிலேயே துடைத்துக்கொண்டு, லுங்கியை கீழே எறிந்தார். நடராஜனின் முகத்தில் பரவசம் நிலவிக்கொண்டிருந்தது. மல்லிகா அமைதியாக அவரருகில் கண்மூடிப் படுத்திருந்தாள். அவள் அமைதியாக இருக்க முயற்சித்தப் போதிலும் சுகன்யா அவள் மனதில் நின்றுகொண்டு சிரித்தாள்.

"மல்லி..."

"...."

"மல்ல்லீ"

"சொல்லுங்க" மல்லிகாவின் முகம் அவர் மார்பில் புதைந்திருந்தது. அவள் வலது கால் தன் கணவனின் அடிவயிற்றின் மீது கிடந்தது.

"உனக்கு வேண்டாமா?"

"ப்ச்ச் .. வேண்டாம் ..."

"ஏண்டி சித்த நேரம் உன் மொட்டைத் தடவி குடுக்கறேனே?" அவர் கை விரல்கள் அவள் புட்டத்தை தடவிக்கொண்டே, புட்டப் பிளவுகளின் வழியாக அவள் அந்தரங்க மேட்டினை அடைந்தது.

"வேண்டாம்ன்னு சொல்றேன்ல்ல்லா"

"எனக்கு கில்ட்டியா இருக்கு"

"ஏன் ..."

"என்னை நீ திருப்தி படுத்திட்டே"

"ச்சீ ச்சீ... அப்படியெல்லாம் ஏன் பேசறீங்க ... எனக்குக் கிடைச்சிடுத்து ..."

"நிஜ்ஜம்மா"

"நிஜமா"

"எப்ப டீ ... இன்னைக்கு என்னால ஃபீல் பண்ணவே முடியலை?"

"மூர்க்கத்துல இருந்தா பொண்டாட்டி எப்ப சுகமா இருந்தான்னு எப்படி புரியும்?"

"என்னாடி என் பிட்டை நீ என் கிட்டவே போடறீயே?"

"இல்லீங்க ... நான் உங்களை மாதிரி நிறைய படிச்சிருக்கேனா என்ன?"

"எப்பக் கிடைச்சுது?" நடராஜன் எப்போதும் தன் மனைவியின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.

"கடைசியா நீங்க மூர்க்கனாட்டாம் என்னைக் குத்து குத்துன்னு குத்தினீங்களே அப்பத்தான் ..."

"இப்பத்தான் என் மனசுக்கு நிம்மதியாச்சு." நடராஜன் பெருமூச்செறிந்தார்.

"நிஜம்மாவே, இன்னும் உங்களுக்கு மூர்க்கத்தனம் கொறையலீங்க; என் இடுப்பு வலிக்குது; அதான் தலைகாணி வெச்சிக்கிறேன்; வயசாவுது உங்களுக்கு ... கொஞ்சம் பக்குவமா இருந்துக்குங்க ... அவ்வளத்தான் சொல்லுவேன்; எவ்வளவு நேரமாச்சு நீங்க ஒழுவி, இன்னும்கூட மூச்சு இறைக்குது பாருங்க உங்களுக்கு."

"செல்ல்லம், நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே?"

"சே.. சே... நீங்கல்லாம் என்னை ஏன் கோபக்காரியாவே பாக்கறீங்க?"

"உன் மனசு தங்கம்டீ; அது எனக்குத் தெரியும்; மத்தவங்களும் அதைக் கொஞ்சம் புரிஞ்சிக்கற மாதிரி நீ நடக்கணும்டி;" அவர் தன் மனைவின் முதுகை ஆசையுடன் தடவிக்கொடுத்தார்.

"ம்ம்ம் .." மல்லிகா தன் கணவனின் மார்புடன் தன்னை அழுத்தமாக ஒட்டிக்கொண்டாள்.

"அந்த பொண்ணு சுகன்யா மேல அப்படி என்ன மனத்தாங்கல் உனக்கு? நல்ல படிச்சிருக்கா; பொறுமையா பேசறா; நீயே ஒரு நாள் ஆஸ்பத்திரியில, நம்ம பையன் பக்கத்துல அவ நிக்கறதை பாத்துக்கிட்டே இருக்கலாம், ஆனா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு; நம்ம பயலுக்கு ரொம்ப பொருத்தமா, அழகா இருக்காண்ணு சொன்னே; இதுக்கு மேல வேறென்னடி வேணும் நமக்கு?"

"சே...சே... எனக்கு என்ன மனத்தாங்கல் அவகிட்டே?"

"உண்மையைச் சொல்லு; அவ உன்னை விட அழகாயிருக்கா, அப்படீன்னு தோணுதா?" அவர் இழுத்தார்.

"ச்சீ.. ச்சீ... என்னங்க? என்னை நல்லாப் புரிஞ்சிக்கிட்டிருக்கற நீங்களே இப்படி பேசறீங்க? எனக்கு என்ன பொறாமைங்க அவ மேல, என் பொண்ணு வயசுங்க அவளுக்கு?" அவள் குரலில் சிறிது பதட்டமிருந்தது.

"அப்படீன்னா என் கிட்ட மனசை விட்டு சொல்லு ... என்ன குறை அவளுக்கு..?

"சுகன்யா, தன் அழகை காட்டி நம்ம பையனை மடக்கிட்டாளோன்னு ஒரு ஆதங்கம். அவ இளமையால, வாளிப்பான உடம்பால, என் பையனை என் கிட்டேருந்து நிரந்தரமா பிரிச்சிடுவாளோன்னு ஒரு சின்ன மனக்கிலேசம். என் புள்ளை என்னோட எந்த பேச்சுக்கும் மதிப்பு குடுக்காம அவ பின்னாடி போயிடுவானோன்னு ஒரு கலக்கம்; அவ்வளவுதான்."

"நான் பருவமடைஞ்சதுலேருந்தே, படிக்கற காலத்துலேருந்தே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில கல்யாணத்துக்கு அப்புறம்தான் உடல் உறவு இருக்கணும்ன்னு ... கேட்டு கேட்டு, கதைகள்ள படிச்சு படிச்சு, சினிமாவுல பாத்து பாத்து நான் வளர்ந்தவங்க. அதனால அவ பாதி உடம்புல துணியில்லாம நம்ம பையன் கூட இருந்தாங்கறதை மட்டும் என்னால சட்டுன்னு ஜீரணிக்கமுடியலீங்க.."

"சரி ... நான் ஒத்துக்கறேன் ... உன் மனசை நான் புரிஞ்சுக்கறேன்... ஆனா இதுக்காக, அவங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் வெக்கணுமா? இதுதான் அவங்க தனியா இருந்ததுக்கான தண்டனையா?" அவர் தன் மல்லிகாவை இறுக்கி ஆதுரத்துடன் அவள் முகத்தில் "இச்" "இச்" என ஓசையெழுப்பி முத்தமிட்டார்.

"ம்ம்ம்ம் ..."

"நீ உன் பாசங்கற கூரான அங்குசத்தால உன் புள்ளையை அடக்கப் பாக்கறே; அவன் மதம் புடிச்ச யானையா இப்ப இருக்கான்;"

"ம்ம்ம்"

"இப்ப அவன் பித்தத்தை தெளிய வெக்கறதுக்கு சுகன்யாங்கற பெண் யானைதான் சரியாயிருக்கும்ன்னு நான் சொல்றேன்...சந்தோஷமா இதை ஒத்துக்கம்மா ..."

"சரிங்க ... நான்தான் சுகன்யாவை பண்ணிக்கடான்னு சொல்லிட்டேனே?"

"அப்புறம் எதுக்கு கடைசியா அவனைத் தனியா போடான்னு காட்டுக்கு அனுப்பறே? வேணம்மா இது ... நாமும் தவிச்சுப் போவோம் ... அவனும் தவிச்சிப்போவான். கடைசியில அந்தப் பொண்ணுக்குத்தானே கெட்டப்பேரு; தாலிக்கட்டிக்கிட்டு வந்தவ நம்ம குடும்பத்தை பிரிச்சிட்டான்னு சொல்லுவாங்க. இதுக்கு கண்டிப்பா அந்த பொண்ணு வீட்டுலேயும் ஒத்துக்க மாட்டாங்க. அவங்க பேச்சுலேயே தெரியுது. அவங்க நல்ல குணம் உள்ளவங்கன்னு?" நடராஜன் இரும்பை மெதுவாக பழுக்க வைத்து தேர்ந்த நுணுக்கத்துடன் அடித்தார்.

"ம்ம்ம் ..."

"மல்லி ... உனக்கு ஞாபகம் இருக்கா..."

"என்னது?"

"நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்கு அப்புறம், உங்க மாமா பையன் நாணுவுக்கு கல்யாணம் ஆச்சு ..."

"ம்ம்ம்..."

"அந்த கல்யாணத்துக்கு வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைன்னு, என்னையும், எங்க குடும்பத்தையும், மத்த உறவினர்களையும் நீங்க அழைச்சு இருந்தீங்க.."

'ம்ம்ம் .."

"ஜானவாசத்தன்னைக்கு மத்தியானமே உன்னைத் தனியா ஒரு தரம் பார்க்கணும்ன்னு, நான் கல்யாண சத்திரத்துக்கு வந்துட்டேன். நீயும் சத்திரத்துல உன் உறவு பொண்ணுங்களோட அங்கே காலையிலேருந்தே லூட்டி அடிச்சுக்கிட்டு இருந்தே; எல்லாரும் உன்னை தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு, அடுத்த ரெண்டு வாரத்துல நீ கல்யாணப் பொண்ணா மனையில உக்கார போறேன்னு உன்னை சுத்தி சுத்தி வந்து கிண்டலடிச்சுக்கிட்டு இருந்தாங்க."

"புரிஞ்சு போச்சு ... புரிஞ்சு போச்சு எனக்கு; இப்ப நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு.." பழைய நினைவில் மல்லிகா தன் உடல் சிலிர்க்கத் தன் கணவனை இறுக்கி அவர் உதடுகளை கடித்தாள். கடித்தவள் வெறியுடன் அவரைத் தழுவிக்கொண்டாள். பின் ஆசையுடன் தன் முகம் சிவக்க, அவர் முதுகில் தன் கைகளால் குத்தினாள்.

"இருடி ... இருடி ... உனக்கு ஒரு ஞாயம் ... உன் வரப்போற மருமவளுக்கு ஒரு ஞாயமா?" நடராஜன் மல்லிகாவை தன் மார்பில் ஏற்றிக்கொண்டார். அவள் முதுகையும், இடுப்பையும், பின் மேடுகளையும் நிதானமாக ஆனால் அழுத்தமாக தடவிக் கொடுத்தார்.

"இத பாருங்க; நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க; நான் உங்களை, என்னைக் கல்யாண சத்திரத்துல வந்து பாருங்கன்னு கூப்பிடலை. அன்னைக்கும் நான் ஒண்ணும் முதல்ல உங்களைத் தொடலை. நீங்கதான் என் பின்னாலேயே சுத்தி சுத்தி வந்தீங்க. எல்லாரும் நம்பளையே பாக்கறாங்கன்னு சொன்னனா இல்லையா? வெக்கமில்லாம கூத்தடிச்சதெல்லாம் நீங்கதான்."

"ஒரு வாண்டுகிட்ட என் பெயரை போடாம, சினிமா ஹீரோ மாதிரி, என் அன்பே ஆருயிரேன்னு ஆரம்பிச்சு, தனியா என்னை கல்யாணச் சத்திரத்து மாடிக்கு வந்து பார்க்கவும் ... உடன் யாரையும் அழைத்து வராதேன்னு அசடு மாதிரி லெட்டர் எழுதி, அந்த லெட்டர்ல உங்க பேரை மட்டும் பெருசா கொட்டை கொட்டையா எழுதி, அதுல போதா குறைக்கு கையெழுத்தோட தேதி, வெக்கக்கேடு, அந்த குட்டி அதை என் அத்தை பொண்ணுக்கிட்ட கொண்டு போய் கொடுத்துட்டுது."

"என் அத்தைப் பொண்ணு, மகா திமிர் புடிச்சவ; உன் ஆளு என்னைத் தனியா மாடிக்கு கூப்பிடறாண்டின்னு என்னை மிரட்டி, அழவெச்சு, நான் அழுததுக்கு அப்புறமா, உனக்குத்தாண்டி அவன் எழுதினான், தப்பா எங்கிட்ட வந்துடுத்துன்னு சொல்லி, அவர் ஆசைபடறார் இல்லையா, என்னான்னு கேட்டுட்டு வாடீன்னு எனக்கு தைரியம் சொல்லி என்னை அனுப்பி வெச்சா; கூடவே வந்து மாடிக்கதவுக்கு பக்கதுல நின்னுகிட்டு காவல் காத்தா. அந்த கடுதாசியை அவகிட்ட இருந்து வாங்கறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத்தானே தெரியும்?"

"அடிச்சக்கை ... நீலா அவ்வள தூரம் அன்னைக்கு உன்னை ஆட்டிவெச்சாளா?"

"எல்லாம் உங்க அலைச்சலால அன்னைக்கு என் மானம் போச்சு. இப்பவும் என் அத்தைப் பொண்ணு நீலா என்னைப் பாக்கும் போதெல்லாம், திருட்டுத்தனமா வரப்போற புருஷனை, தண்ணித் தொட்டிக்கு பின்னாடி, தனியா பாக்கப் போனீயேடீன்னு நமட்டுத்தனமா விஷமச் சிரிப்பு சிரிக்கறா. இவ்வளவுக்கும் காரணம் நீங்கதானே? உங்க ரத்தம் தானே உங்க புள்ளை உடம்புல ஓடும்?"



"நான் தான், மாடிக்கு வாடீன்னு உன்னைக் கூப்பிட்டு, தண்ணி தொட்டிக்குப் பின்னாடி, உன்னைக் கட்டிப்புடிச்சு, முதல் முதலா உனக்கு முத்தம் குடுத்தேன். ஒத்துக்கறேன். நான் வெக்கம் கெட்டவன். அலையறவன். அதுக்கு அப்புறம் நீ என்னப் பண்ணே? அதைச் சொல்லுடி?" நடராஜன் அவள் புட்டங்களில் ஓங்கி அடித்தார்.

"நீங்கதான் பதிலுக்கு முத்தம் குடு குடுன்னு என் கையை பிடிச்சிட்டு கெஞ்சினீங்க. உங்க மூஞ்சைப் பாத்தா அய்யோ பாவமாயிருந்தது. யாராவது வந்து தொலைச்சுடப் போறாங்கன்னு பயம் வேற எனக்கு. போனாப் போவுது ... இவ்வள தூரம் ஏங்கினீங்களேன்னு ஒண்ணே ஒண்ணு உங்க கன்னத்துல குடுத்துட்டு ஓடியே போயிட்டேன். நான் பண்ணதும், சுகன்யா பண்ணதும் ஓண்ணாயிடுமா?"

"அடியே நீ முத்தமா குடுத்தே; என் கன்னத்தை நக்கிட்டு போனேடி.. அதைப் போய் முத்தம்ன்னு சொல்றே?" அவர் சிரித்தார்.

"போங்க ... நான் எவ்வளவு பயந்துகிட்டு இருந்தேன் தெரியுமா அன்னைக்கு" மல்லிகா முனகிக்கொண்டே தன் கணவனின் கழுத்து வளைவில் முத்தமிட்டாள்.

"தாய் நீ எட்டடி பாய்ஞ்சே அன்னைக்கு; குட்டி பதினாறு அடி பாயுது இன்னைக்கு ... வித்தியாசம் அவ்வளவுதான் ."

நடராஜன் தன் மார்பில் கிடந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளை கவ்விக்கொண்டார். மல்லிகா தன் மனதுக்குள் பரவசத்துடன், உடல் தளர்ந்து, அவர் உதட்டின் அழுத்தத்தை, அந்த ஈர உதடுகள், அவள் உடலில் உண்டாக்கிய சுகத்தில், தன் கண் மூடிக்கிடந்தாள்.



சுகன்யா... 29

"மல்லிகா, எல்லோரும் தங்கள் பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும்ன்னுதான் நினைக்கறாங்க. செல்வாவுக்கு சுகன்யாவை திருமணம் பண்ணிக்கறதுலதான் மகிழ்ச்சின்னா, நடக்கறதெல்லாம நல்லதுக்குன்னு நினைச்சு, ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்ப்போம்."

"சரி ... என்னப் பண்ணணுமோ அதை சீக்கிரமா பண்ணுங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்."மல்லிகா ஹாலில் சோஃபாவுக்கு பக்கத்தில் தரையில் படுத்திருந்தாள்.

"ஆரம்பத்துலயிருந்தே செல்வா மேரேஜ் விஷயம் ஒரே டிராமாவாத்தான் இருக்கு. எப்ப எந்த சீன் நடக்கும், அந்த சீன்ல எந்த ஆக்டர் உள்ள வராங்க, அவங்க எப்படி நடப்பாங்கன்னு தெரியலை. இப்ப இந்த நாடகத்துல, இன்னொரு புது சீன், ஒரு புது ஆக்டரோட ஆரம்பிச்சிருக்கு." நடராஜன் மையமாக சொல்லிவிட்டு சிரித்தார்.



"என்னப்பா அது ..." மீனா ஆர்வத்துடன் துள்ளி குதித்தாள்.

"என் மேனஜருக்கு ஒரு பொண்ணு இருக்காளாம். அவளும் கவர்மெண்ட் உத்தியோகத்துல சென்னையிலத்தான் இருக்காளாம். நம்ம பையன் செல்வாவுக்கு பார்க்கலாமான்னார். இப்ப அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குப் புரியலை."

"இது என்னங்க புதுக்கதை - நீங்க என் கிட்ட சொல்லவேயில்லை?" மல்லிகா தன் கணவரை வியப்புடன் பார்த்தாள்.

"ஏண்டா செல்வா உனக்கு சுக்கிர தசை நடக்குதாடா?" மீனா மீண்டும் ஓவென சிரித்தாள்.

"சும்மா இருடி ... எனக்கு சுகன்யா ஒருத்தியே போதும் ...நான் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்." அசட்டு சிரிப்பு சிரித்த செல்வா, தன் தாய், கடைசியில், சுகன்யாவை தன் மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்ததால் அவன் முகம் மகிழ்ச்சியில் ஓளிர்ந்து கொண்டிருந்தது.

"யாருங்க அது உங்க மேனேஜர்ங்கறீங்க ...புதுசா வந்திருக்காரே அவரா ... இல்லே?" மல்லிகாவையும் சற்றே மீனாவின் குதூகலம் தொற்றிக்கொண்டது.

"புதுசா வந்தவர்தாம்மா ... நம்ம வீட்டுல டின்னருக்கு வந்திருந்தாரே - அவர் தான். ரெண்டு நாள் முன்னாடி குமாரசுவாமி இவனை ஆஸ்பத்திரிக்கு பார்க்க வந்திருந்தார் இல்லயா?"

"ஆமாம் ...அப்ப நானும்தானே உங்க கூட இருந்தேன்." மல்லிகாவின் முகத்தில் வியப்பு படர்ந்தது.

"பிரிஞ்சிருக்கற தன் குடும்பத்தோட மீண்டும் சேரணுங்கற ஒரே காரணத்தாலத்தான் அவர், டெல்லி பிராஞ்லேருந்து தமிழ்நாட்டுக்கு மாறுதல் வாங்கிட்டு வந்திருக்கார். செல்வாவை ஆஸ்பத்திரியில நலம் விசாரிக்க வந்த அன்னைக்குத்தான் தன் மனைவியையும், மகளையும் சந்திச்சுட்டு வந்தவர், என் கிட்ட ரொம்ப சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தார்.

"ம்ம்ம் ...அப்புறம்" மல்லிகா ஊம் கொட்டினாள்.

"நடராஜன் ... உங்க குடும்பத்துல இருக்கற எல்லோரையும் நான் பார்த்துட்டேன். உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். புதுசா நான் யார்கிட்டவும் போய் விசாரிக்க வேணாம். உங்க மனைவியையும் சந்திச்சாச்சு. வாரி வாரி சாப்பாட்டை முகம் பார்த்து, இலையில அள்ளிப் போடறவங்க; உங்கப் பையன் செல்வாவை எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க விரும்பினால் என் பெண்ணை உங்க பையனுக்கு பார்க்கலாம்ன்னு சொன்னார். நான் இதை அவர்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை. நீங்க நிதானமா யோசனைப் பண்ணி சொல்லுங்கன்னார்."

"அப்பா ... நீங்க என்ன சொன்னீங்கப்பா ..." செல்வா பரபரப்புடன் வினவினான்.

"நீ ஏற்கனவே ஒருத்தியைப் பிடிச்சி வெச்சிருக்கப்ப நான் என்னடா சொல்றது?"

"அது இருக்கட்டும் ... நீங்க என்னதான் சொன்னீங்கப்பா..." மீனா விஷயத்தை முழுதுமாகத் தெரிந்து கொள்ள துடித்தாள்.

"என் மேனேஜர்; நல்ல மனுஷன்; ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவன்; நேர்மையா வேலை செய்யறவன். அந்த ஆள் கிட்ட நான் எந்த விஷயத்துலயும் விளையாட விரும்பலே; இப்ப நம்ம வீட்டுல இருக்கிற பிரச்சனையை சொல்ல விரும்பினேன். ஆனா அதுக்காக மூஞ்சியில அடிச்ச மாதிரி உடனே மறுத்து சொல்ல முடியுமா? ஒரு ரெண்டு நாள் டயம் குடுங்க; வீட்டுல சொல்றேன்; அப்படீன்னேன்; கூடவே என் பையன் ஒரு பொண்ணை விருப்பப்படறான்னு தெரியுது; அந்த விஷயத்தை என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கும் போது, என் பிள்ளை அடிபட்டு இங்க வந்து படுத்துட்டான்னேன்."

மல்லிகா "ம்ம்ம்ம்" என்றாள்.

"அவசரம் ஒண்ணுமில்லே; உங்க பையன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா உங்க பையன் மனசுல என்ன இருக்குன்னு விசாரிங்க, நிதானமா வீட்டுல வெச்சு கேளுங்க; கூடவே என் ப்ரப்போசலையும் மனசுல வெச்சுக்குங்கன்னு சொன்னார்." நடராஜன் தன் தலையை சொறிந்து கொண்டார்.

"டேய் செல்வா, நீ இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கடா; அப்பாவுக்கு அடுத்த புரமோஷன் சீக்கிரமா கிடைச்சுடும்;" மீனா சிரித்தாள்.

"மீனா! எனக்கு இப்படியெல்லாம் ஒரு பிரமோஷன் தேவையே இல்லடா கண்ணு! என் புரமோஷன் வரும் போது அதுவா தன்னால வரட்டும். இந்த குமாரசுவாமியும் ஆஃபீசுல ஒழுங்கா வேலை செய்யறவன். இங்கேருந்து போனானே அவனை மாதிரி தப்புத் தண்டா பண்ற ஆள் இல்லே."

"குமாரசுவாமி, இந்த வாரக்கடைசியில தன் குடும்பத்தோட காஞ்சிபுரம், மஹாபலிபுரம்ன்னு, தன் சொந்த கார்ல போய் வந்திருக்கார். இதுக்கு முன்ன இருந்தவன்ல்லாம், ஆஃபீஸ் காரையும் டிரைவரையும் லீவு நாள்ல்ல தன் சொந்த வீட்டு வேலைக்கு யூஸ் பண்ணுவானுங்க. இல்லன்னா ப்ரைவேட் வண்டியை எடுத்துக்கிட்டு போய் சுத்திட்டு வந்து பில்லை என் தலையில கட்டி பாஸ் பண்ணுன்னு என் உயிரை எடுப்பாணுங்க."

"இவர் அந்த மாதிரி பிக்கல் பிடுங்கல் வேலையெல்லாம் எனக்கு குடுக்கறது இல்லே; ஆஃபீஸ் வேலை ஆஃபீஸ்க்குள்ள ... நம்ம பர்சனல் ரிலேஷன்ஷிப் வெளியில அப்படின்னு ஒரு வரைமுறையோட எங்கிட்ட பழகறார். இந்த ஆள் இங்கே மேனேஜரா வந்ததுலேருந்து நான் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்றேன். எனக்கு இதுவே போதும்."

"ஏம்பா ... உங்களுக்கு புரமோஷன் வேணாம்; ஒத்துக்கறேன்; உங்க மேனேஜரை, அதான் உங்க சம்பந்தி, உங்க கம்பெனியில எனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுக்க மாட்டாரா?" அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"சும்மா இரேண்டி சித்த நேரம் ..." மல்லிகா அவளை அடக்குவதிலேயே குறியாக இருந்தாள்.

"என்னங்க ... அவரு பொண்ணு போட்டோ எதாவது காட்டினாரா?" மல்லிகா தன் கணவனை வினவினாள்.

"நீ ஒருத்தி ... நீ உன் பொண்ணை குறை சொல்றே ... அப்புறம் நீ ஏன் ஏடாகூடமா பேசறே? உன் புள்ளையும், அந்த பொண்ணு சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கணும்னு முடிவா இருக்கப்ப, இது எதுக்குடி புதுக் குழப்பம். ரெண்டாவது எனக்கும் அந்த சுகன்யாவை பிடிச்சிருக்கு. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, நிச்சயம் நம்ம வீடு கலகலப்பா சந்தோஷமா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்."

"நான் அப்பவே அவருகிட்ட விஷயத்தை உடைச்சு சொல்லியிருப்பேன்; ஆனா ஆஸ்பத்திரியில எதுக்கு நம்ம வீட்டுக்கதையை அவருகிட்ட ஆரம்பிப்பானேன்னு சும்மாயிருந்தேன். இந்த ரெண்டு நாள் லீவு முடிஞ்சதும் ... ஆஃபீசுக்குப் போனதும், அவரு தனியா இருக்கும் போது, நீங்க உங்க பொண்ணுக்கு வேற எடம் பாருங்கன்னு, அவருகிட்ட உண்மையை சொல்லிடலாம்ன்னு இருக்கேன். "

"அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா ..." செல்வா தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான்.

"எனக்கும் உனக்கும் நடுவுல தேங்க்ஸ்ல்லாம் என்னடா? அந்த பொண்ணோட நீ பொறுப்பா குடும்பம் பண்ணிணா அதுவே எனக்குப் போதும்." அவர் தன் மகனின் தலையை பாசத்துடன் வருடினார். 

செல்வா, அரை மணி நேரமாக சுகன்யாவிடம் பேசுவதற்காக செல்லில் முயன்று கொண்டிருந்தான். தன் தாய், தங்கள் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என அவன் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவளுடன் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளை தொடர்பு கொள்ள முயன்ற ஒவ்வொரு முறையும் "அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா" என்ற செய்தி அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

இன்னைக்கு திங்கள் கிழமை. வெள்ளிக்கிழமையே சுகன்யாவோட அம்மா ஊருக்குத் திரும்பி போயிருக்கலாம். அப்ப இன்னைக்கு சுகன்யா ஆஃபீசுலதானே இருக்கணும். அவளை ஏன் காண்டாக்ட் பண்ண முடியலே? ஆஃபீஸ் லேண்ட் லைன்ல பண்ணலாம். ஆனா அந்த சனியன் புடிச்ச சாவித்திரிதான் முதல்ல போனை எடுப்பா. அதுக்கப்புறம் அவ கேள்விக்கு நம்பளால பதில் சொல்லமுடியாது.

நம்ம ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்ல எவனுக்காவது போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடச் சொல்லலாம். எனக்கு திரும்பவும் சென்னைக்கு போஸ்டிங் ஆயிடுச்சின்னு தெரிஞ்சதுலேருந்து "பார்ட்டி குடு ... பார்ட்டி குடுன்னு" ஒரே காண்டா இருக்காணுங்க. குடிகாரப்பசங்க; உன் ஆள் கூட நீ பேசறதுக்கு நாங்க என்னடா நடுவுல மாமாவான்னு கிண்டல் பண்ணிச் சிரிப்பானுங்க. எல்லாத்துக்கும் மேல அவனுங்க மூலமா சுகன்யாவை கூப்பிட்டா, நம்ப வீட்டு சிங்காரி நம்ப மேலேயே எகிறி குதிப்பா. சுகன்யா என்ன மூடுல இருப்பான்னு தெரியாது. அவனுங்க எதிரிலேயே என் மேல எரிஞ்சு விழுந்தாலும் விழுவா.

என்னா மாப்ளே, உனக்கும் உன் ஆளுக்கும் நடுவுல சண்டையா ... புட்டுக்கிச்சா ... அப்படின்னுட்டு உடனே பேஸ்புக்ல, "செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல ரப்சர்ன்னு, இந்த போக்கத்தப் பசங்க ஸ்டேட்டஸ்" போட்டுடுவானுங்க; அப்புறம் ஊரு பூரா கேக்கறவனுக்கு பதில் சொல்லி மாளமுடியாது.

ஒரு பேண்ட் சட்டையோட என் வீட்டுக்கு வந்துடு; மீதியை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டுப் போனவ, அதுக்கப்பறம் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. மீனா கூட கேட்டா? .. "என்னடா உன் ஆளை காணவே காணோம்? எதாவது திருப்பியும் சண்டையா உங்களுக்குள்ளன்னு" கிண்டல் பண்ணிச் சிரிச்சா?

என் வீட்டுக்கு வந்து "வீட்டு மாப்பிள்ளையா" இருன்னு சொன்னாளே? அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு சோறு போட எனக்கு யோக்யதை இல்லயா? அவ எப்படி என்னை அந்த மாதிரி சொல்லலாம்? சுகன்யா சொன்னதைக் கேட்டதும், சொந்தமா நான் என் கால்லே நின்னு சம்பாதிக்கிறேன்; என்னைப் பாத்து இப்படி சொல்லலாமான்னு, எனக்கு எரிச்சல் வந்தது உண்மைதான்.

அந்த எரிச்சல்லே முழுசா ஒரு நாள் அவளுக்கு நான் போன் பண்ணல. அதுவும் வாஸ்தவம்தான். மறு நாள் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். மறுநாள் என்னைப் பாக்கறதுக்கு என் சித்தப்பா, சித்தி, அவங்க பசங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதனால அவகிட்ட பேச முடியாமப் போச்சு. அதுக்காக சுகன்யாவும் பிடிவாதமா இப்படி எனக்கு போன் பண்ணாமலே இருந்தா எப்படி? அவளா போன் பண்ணுவான்னு இருந்தது தப்பா போச்சே? இந்த தடவை சுகன்யாவும் ரொம்ப வீம்பாத்தான் இருக்கா. ஆஸ்பத்திரியிலேருந்து நான் வீட்டுக்கு வந்தாச்சான்னு கூட ஒரு வார்த்தை கேக்கலையே?

நான் பாண்டிச்சேரிக்கு போனப்ப கூட நான் அவளுக்கு போன் பண்ணல. அப்பவே என் மேல அவளுக்கு ரொம்ப கோபம். ரெண்டு நாள் பொறுத்துப் பாத்துட்டு அவதானே எனக்கு போன் பண்ணா? இப்பவும் அப்படியே ஆகிப் போச்சு. அவ என்னை தினம் தினம் ஆஃபீஸ்லேருந்து ஓடி வந்து பாத்தாளே? நான் "ஐ லவ் யூ சுகு"ன்னு ஒரு தரம் போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். "எப்படி இருக்கே சுகுன்னு" ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். நான் ஒரு பைத்தியக்காரன். ஒரு அஞ்சு நிமிஷம் அவகிட்ட ஆசையா பேசக் கூட என்னால முடியலன்னா, தப்பு என்னுதுதானே? தப்பு என் பக்கம் இருக்கும் போது அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்.

நான் என்னப் பண்ணுவேன்? ஆஸ்பத்திரியில இருந்தப்ப அம்மாகிட்ட எங்கக் கல்யாணப் பேச்சை பத்து தரம் எடுத்துத்தான் பார்த்தேன். அம்மா பிடிகொடுத்துப் பேசலை. நம்ம கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு எடுத்தேன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்துட்டேன்.

அப்பா கூட கேட்டார். "செல்வா, எங்கடா சுகன்யாவை காணோம்?" "அவ ஆஸ்பத்திரிக்கு கட்டின அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்கணும்டா; இல்லன்னா அவங்க வீட்டுல நம்பளைப் பத்தி தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு சொன்னாரு".

செல்வாவின் மனது பலவித எண்ணங்களால் தடுமாறிக்கொண்டிருந்தது. சட்டென அவன் மண்டையில் பொறி தட்டியது. சுகன்யாவோட ஃப்ரெண்ட் வித்யாவுக்கு போன் பண்ணா என்ன? வித்யா சுகன்யா ரூம்லதானே உக்காந்து இருக்கா. அவளுக்கு எங்க காதல் விஷயமெல்லாம் நல்லாத் தெரியும்.



"வித்யா மேடம், நான் செல்வா பேசறேன்?

"ஆ ஹாங் ... செல்வா!... எப்படியிருக்கே செல்வா! ... இப்ப உன் உடம்பு பரவாயில்லயா? ஹாஸ்பெட்டலேருந்து வீட்டுக்கு வந்திட்டியா?

"அயாம் ஒ.கே. ... மேடம் ... நான் வீட்டுக்கு வந்துட்டேன். சாரி உங்களை நான் உங்க பர்சனல் மொபைல்ல டிஸ்டர்ப் பண்றேன். சுகன்யா பக்கத்துல இருக்காளா? கொஞ்சம் கூப்பிடுங்களேன்.

"என்ன செல்வா இது? என்ன வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலேயே நீ?

"வித்யா மேடம், உங்க கிட்ட நான் காமெடி பண்ணுவேனா? எனக்கு சுகன்யாகிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும். அவ செல்லுல திரும்ப திரும்ப அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியான்னு மெசேஜ் வருது. அதனாலத்தான் நான் உங்களைத் தொந்தரவு பண்றேன்."

"இதுல தொந்தரவு என்ன இருக்கு? ஆனா சுகன்யா, பத்து நாள் லீவுல, அவங்க அம்மாகூட, அவங்க ஊருக்கு - அதாம்பா - கும்பகோனம் போயிருக்காளே; உனக்குத் தெரியாதா இது?" அவள் குரலில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது.

"ஏன்? இப்ப எதுக்கு கும்பகோணத்துக்கு அவ போயிருக்கா?"

"நல்லாருக்கு செல்வா நீ பேசறது. சுகன்யா உன் ஆளு; உன் ஸ்வீட் ஹார்ட்; நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க; அவ ஊருக்குப் போனது உனக்கேத் தெரியலை; அவ எங்கப்போனா? அவ ஏன் போனான்னு என் கிட்ட கேக்கறே? இது எப்படி இருக்கு?" வித்யா, பதினாறு வயதில் ரஜினி மாதிரி நொடித்துக்கொண்டு சிரித்தாள்.

"ம்ம்ம்.. சுகன்யா ஊருக்குப் போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தா; ஏதாவது அவசர வேலையா சட்டுன்னு போயிருக்கலாம். ஆனா அவ எப்ப கிளம்பிப் போனான்னு எனக்குத் தெரியாது?

செல்வா தன்னிடம் குரல் குழறி அசடு வழிகிறானென்று வித்யாவுக்கு நன்றாகப் புரிந்தது. சுகன்யா தன்னிடம் சொல்லாமல் ஊருக்குப் போனது அவனுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. சுகன்யா எனக்கு போன் பண்ணல; பிடிவாதமா இருக்கான்னு நினைச்சேன்; ஆனா இப்ப ஊருக்குப் போயிருக்கா; அதைக்கூட எங்கிட்ட சொல்லலை. அப்படி என்ன அவளுக்கு என் மேல கோபம்?

"செல்வா, உங்க கல்யாண விஷயம் எவ்வளவு தூரத்துல இருக்கு?" வித்யா கரிசனத்துடன் வினவினாள்.

"உங்களுக்குத்தான் தெரியுமே ... வீட்டுல என் அம்மாவை சரிக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஏறக்குறைய முடிஞ்ச மாதிரிதான்."

"சீக்கிரமா ஒரு முடிவுக்கு வா செல்வா ... எங்களுக்கெல்லாம் நல்ல கல்யாண சாப்பாடு போடு; சுகன்யா ரொம்பவே மனசாலத் தவிச்சுப் போயிருக்கா. எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கறவ ... இப்ப சிடுசிடுன்னு ஆயிட்டா."

"ம்ம்ம்ம் ..."

"சுகன்யாவை யாரோ பொண்ணு பார்க்க வரதா நான் கேள்விப்பட்டேன். பையன் பெங்களூர்ல ஐடியில வேலை செய்யறானாம். அவளுக்கு தூரத்து உறவுன்னு நெனைக்கிறேன். அவனுக்கு வருஷத்துக்கு பத்து லட்சம் பேக்கேஜ் அப்படின்னு, சொன்ன மாதிரியிருந்தது. சுகன்யா, அவங்க அம்மா கூட பத்து நாள் லீவுல நேட்டிவுக்கு போனது இதுக்காகத்தான் இருக்குமோ? என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியலைங்கறே?" வித்யா மெல்லிய குரலில் பேசினாள்.

இது என்ன? வித்யா ஒரு புது விஷயத்தை சொல்றா. இதுல எவ்வளவு உண்மை? ஆனா வித்யா நல்ல மாதிரி. மத்தவங்க மாதிரியெல்லாம் வீணா "குசுகுசு" பேசறவ இல்ல. இவ சொன்னதுலே கொஞ்சமாவது விஷயம் இருக்கும். என் அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட சந்தோஷமான விஷயத்தை சுகன்யாவுக்கு சொல்லணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன்.

அப்பா சொன்ன மாதிரி "என் காதல் நாடகத்துல" வித்யா என்னடான்னா ஒரு புத்தம் புது பிட்டு போடறாளே? ஒரு புது ஆக்டர்; ஒரு புது சீன். செல்வாவின் தலைக்கு ரத்தம் குப்பென ஏறியது. அவன் நாக்கு உலர ஆரம்பித்தது. அவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் சுரீரென இனம் தெரியாத சினம் தலை தூக்கியது.

"வித்யா மேடம் உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது?

"செல்வா, யார் சொன்னாங்கன்னு கேக்காதே; அதுவா உனக்கு முக்கியம்? நான் சொன்ன விஷயம் உண்மையா? இது தானே முக்கியம்." வித்யா சூடிகையாகப் பேசினாள்.

சை.. என்னப் பொம்பளை இவ? எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தான் இருக்காளுங்க; நேரம் காலம் தெரியாமா இவ என் உயிரை எடுக்கிறா? என்னை பேச்சுல மடக்கிட்டதா நெனைச்சு சந்தோஷப்படறா. நான் ஒரு புத்தி கெட்டவன் இவகிட்ட போய் சுகன்யாவைப் பத்தி ஏன் கேட்டேன்?

"அப்புறம் ... செல்வா .."

"வேற ஓண்ணும் இல்லை மேடம் ... நீங்க சொல்ற விஷயம் எனக்கு நிஜமாவே தெரியாது."

"செல்வா, எனக்கும் முழு விவகாரம் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உனக்கு சொல்லிட்டேன். பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவளைப் பாக்கறதுக்கு வரத்தான் செய்வாங்க; அதுல ஒண்ணும் தப்பு இல்லே. சுகன்யா என்னப் பண்ணுவா? வீட்டுல சொல்றதை கொஞ்சமாவது அவ கேட்டுத்தானே ஆகணும். உன்னை மாதிரி ஆம்பளை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாத்தானே?"

"பொம்பளையா பொறந்தவ, வயசு காலத்துல, கல்யாணம் முடியற வரைக்கும், அவளுக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ; இப்படி வர்றவன் போறவன் முன்னாடி உடம்புல பட்டுப்புடவையை சுத்திக்கிட்டு நின்னுதான் ஆகணும்! மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடும்?. கடைசியா அந்த பையனை எனக்குப் பிடிக்கலைன்னு அவ சொல்லப்போறா அவ்வளவுதான். நீ ஒண்ணும் உன் மனசை போட்டு குழப்பிக்காதே? அவ உன்னைத்தான் தன் மனசுல இருபத்து நாலு மணி நேரமும் நினைச்சுக்கிட்டு இருக்கா. இது எனக்கு நல்லாத் தெரியும்."



"ம்ம்ம்ம்" செல்வா சுரத்தில்லாமல் முனகினான்.

"சீக்கிரமா, நீ ஆகவேண்டிய வேலையைப் பாரு. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே; அவ நல்லப்பொண்ணு ... கோட்டை விட்டுடாதே. அவ்வளதான் நான் உனக்கு சொல்லுவேன். சுகன்யா எனக்கு போன் பண்ணால், நான் உன் கிட்ட உடனே அவளைப் பேச சொல்றேன். ஓ.கே. வா? சாவித்திரி என்னைக் கூப்பிடறா." வித்யா வினயமாக பேசி லைனை கட் பண்ணினாள்.

வித்யா சொன்னது உண்மையா இருக்கலாமோ? அதனாலத்தான் சுகன்யா சொல்லாமா கொள்ளாமா ஊருக்குப் போயிட்டாளா? செல்வாவுக்கு ஒரு வினாடி தலை சுற்றுவது போலிருந்தது. இப்ப நான் என்னப் பண்றது? அவ நம்பரும் கிடைச்சுத் தொலைக்கலை. சுகன்யாகிட்ட எப்படிப் பேசறது? பேசினாலும் இந்த விஷயத்தை என்னன்னு கேக்கறது? செல்வாவின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன.

ஒரு வினாடி செல்வா யோசித்தான். சுகன்யாவை எவனோ பொண்ணு பாக்க வர்றான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? என் ஆளை, எவனோ ஒருத்தன், கல்யாணம் பண்ணிக்கணுங்கற நோக்கத்துல, எப்படி பாக்க வரலாம்? அவன் அவளுக்கு சொந்தமாவே இருக்கட்டுமே? அவங்க அம்மாவே சொல்லியிருந்தாலும், சுகன்யா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா?வெறுப்புடன் அவள் நம்பரை மீண்டும் தன் செல்லில் அழுத்தினான்.

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்."

செல்வாவுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. 

சுகன்யா... 28

அன்று, திங்கள் காலை மணி ஏழரை ஆகிக்கொண்டிருந்தது. நடராஜன் ரெண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். தன்னுடைய அலுவலகத்துக்கும், செல்வா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் ஒரு வாரத்துக்கும் மேலாக இங்கும் அங்கும் அலைந்ததில் அவர் உடல் அலுத்துப் போயிருந்தது.

மல்லிகா காலையில் நிதானமாக தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து, வாய் கந்தர் ஷஷ்டி கவசத்தை முனகிக் கொண்டிருக்க, பரபரப்பில்லாமல் அவள் காலை காபியை கலந்து கொண்டிருந்தாள். மீனா இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. நடராஜன் ஹிண்டுவில் மூழ்கியிருந்தார். செல்வா தன் நண்பன் சீனுவிடம் தன் செல்லில் அரட்டையடித்துக் கொண்டிருந்தான்.


செல்வா, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களாகியிருந்தது. அவன் கால் வீக்கம் கணிசமாக குறைந்திருக்க, காலில் வீக்கத்திற்கு "க்ரெப் பேண்டேஜ்" போடச்சொல்லியும், காலை மாலை இரு வேளைகளிலும், வெதுவெதுப்பான நீரீல் பத்து நிமிட நேரம் தன் வீக்கமுள்ள காலை வைத்திருக்க வேண்டும் எனவும், அவனுக்கு மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

அவன் தலையிலிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டுவிட்டது. காதுக்குப் பின்னால் போடப்பட்ட தையல்கள் பிரிக்கப்பட்டு, காயம் ஆறிக்கொண்டிருந்தது. இடது கையில் சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டரை இன்னும் ஒரு வாரத்தில் பிரித்து விடலாம் என டாக்டர் சொல்லியிருந்தார். அடுத்த சில நாட்கள் வரை அதிகமாக நடக்கவேண்டாம் எனவும், மிகவும் அவசியமான நேரங்களில் வாக்கிங் ஸ்டிக் துணையுடன் மெதுவாக வீட்டுக்குள்ளேயே அவன் நடக்க அனுமதிக்கப்பட்டிருந்தான்.

"காபி சூப்பர்ம்மா, டிஃபன் என்னப் பண்ணப்போறேம்மா?"

“டேய் உங்கப்பா இன்னைக்கும், நாளைக்கும் வீட்டுலத்தானே ஓய்வா இருக்கப் போறார்? அவரை அந்த சுந்தரம் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்லு. எனக்கும் உன் பின்னால அலைஞ்சு உடம்பு அலுத்துப் போயிருக்குது. எனக்கு மட்டும் லீவு வேணாமா? சமையலுக்கு இன்னிக்கு நான் லீவு விட்டுட்டேன். நானும் ரெண்டு நாளைக்கு நாள் பூரா நிம்மதியா படுத்து இருக்கப் போறேன்.”

“அம்மா, நான் வேணா சீனுக்கு போன் பண்ணட்டுமா? அவன் வீட்டுக்கு பக்கத்துலத்தானே அந்த மெஸ் இருக்கு? மீனா கேட்டுக்கொண்டே வெரண்டாவிற்கு வந்தாள்.

“மீனு, நீ சும்மா இருடி; இன்னிக்கு வொர்க்கிங்க் டே; அவன் வேலைக்குப் போக வேணாமா? போன வாரம் பூரா ராத்திரியில அவன்தான் இவன் கூட துணைக்கு இருந்தான். ஆஃபீசுக்குப் போறவனை நீங்க யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். இப்பத்தானே காஃபி குடிக்கிறோம். இன்னொரு அரை மணி நேரம் கழிச்சு நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன்.” நடராஜன் குரல் கொடுத்தார்.

"நீங்கதான் ஒரு நாளைக்கு சமையல் பண்ணுங்களேன்? உங்களால முடியாதுன்னா; என்ன வேணா பண்ணுங்க; நான் இன்னைக்கு கிச்சன்ல நுழைய மாட்டேன்." மல்லிகா மீண்டும் தீர்மானமாக தன் முடிவைச் சொன்னாள்.

"எப்பவும் சாப்பாட்டுப் பிரச்சனைதானா இந்த வீட்டுல? நீயும் உன் புள்ளையும் கடைசியா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க அதைச் சொல்லுங்க?" நடராஜன் அலுப்புடன் பேசினார்.

"நீங்க எதைப்பத்தி கேக்கறீங்க?"

"அதாம்மா; அண்ணன் கல்யாண விஷயம்தான்; வேறென்ன?" மீனா சிரித்தாள்.

"ஏண்டி; என் கல்யான விவகாரம் நீ சிரிக்கற அளவுக்கு அவ்வள சீப்பா போச்சா?"செல்வா மீனாவின் முதுகில் செல்லமாக அடித்தான்.

"நீங்க எதுக்கு இந்த விஷயத்தைப் பத்தி பேசும் போதே எப்பவும் அலுத்துக்கிறீங்க?" மீனா நடராஜனை சற்று கோபத்துடன் பார்த்தாள்.

"மல்லிகா, நீ தயவு செய்து உன் குரலை கொஞ்சம் இறக்கிப் பேசு. போன வாரம் நீ ஆடின கூத்துல இந்த தெருவுல நான் இறங்கி நடக்க முடியலை. ராமசுவாமி, என் கூட நடக்க வர்றவர், மணியான பசங்களாச்சே உங்களுக்கு, என்னப் பிரச்சனை, உங்க வீட்டுலேருந்து சத்தம் வந்ததைப் பாத்து ஆச்சரியமாப் போச்சுன்னு சிரிக்கிறார்."

"சரிங்க; அன்னைக்கு நான் பேசினதுதான் உங்களுக்கு பெரிசா தெரியுதா? நான் யாருக்காக பேசினேன்? இவன் நல்லதுக்குத்தான் பேசினேன். இவன் என் புள்ளை மட்டுமில்லே; உங்க புள்ளையும்தான்; நீங்க என்ன முடிவுல இருக்கீங்க? அதை முதல்லச் சொல்லுங்க?"

"என் முடிவு? ... என் முடிவு இதுல என்னாயிருக்கு? அவன் அவன், மனசுக்கு புடிச்சவளை இழுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடற இந்த காலத்துல, வீட்டுக்கு வந்து எனக்கு அவளைப் புடிச்சிருக்கு, பண்ணி வையுங்கன்னு இவன் கேக்கறான்; அவகூட இருந்து வாழப் போறவன் செல்வா; அவன் இஷ்டப்படி, சுகன்யாவை இவனுக்கு கட்டி வெக்க வேண்டியதுதான். அந்த பொண்ணு வீட்டுலயும் சரின்னு சொல்லும் போது எனக்கு என்னப் பிரச்சனை?

"ம்ம்ம் ... நான் தெரியாமத்தான் கேக்கிறேன். உங்களுக்கு, கொஞ்சமாவது நீங்க பெத்து வெச்சிருக்கற பொண்ணைப் பத்திய கவலை இருக்கா?"

"என் கல்யாணத்துக்கும், அண்ணன் கல்யாணத்துக்கும் இப்ப ஏம்மா நீ முடிச்சு போடறே?" மீனா தயங்கி தயங்கி பேசியவள், தன் தந்தையின் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள்.

"நீ செத்த நேரம் சும்மா இருடி? இப்ப உங்கிட்ட யாரும் எந்த அபிப்பிராயமும் கேக்கலை." மல்லிகா தன் பெண்ணின் வாயை அடக்கினாள்.


"மல்லிகா, நீ என்ன சொல்ல வர்றே?"

"மீனாவுக்கு நீங்களா போய் வரன் தேடப்போறீங்களா? இல்லே?... அவளையும் உனக்கு புடிச்சவன் எவனாவது இருந்தா இழுத்துக்கிட்டு வாடீ; உனக்கும் நான் சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடறேன்னு சொல்லப் போறீங்களா?"

"மல்லிகா ... உன் மனசுல இருக்கறதை நீ நேரடியா சொல்லு ... இப்படி சுத்தி வளைச்சுப் பேசாதே.."

"டேய் செல்வா .. சுகன்யா நம்ம ஜாதியை சேர்ந்தவளா?"

"அம்மா ... இது நாள் வரைக்கும் நீ இதைப் பத்தி பேசினதே கிடையாது; இன்னைக்கு ஏம்மா நீ திடீர்ன்னு அவ ஜாதியை இப்ப இழுக்கறே?"

"நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லுடா.."

"சுகன்யாவோட பேரண்ட்ஸ்ங்க ரெண்டு பேருமே வேற வேற ஜாதிதாம்மா .. அவங்க ரெண்டு பேருமே நம்ம ஜாதியில்லேம்மா. இப்ப சுகன்யா ஜாதி என்னான்னு கேட்டா நான் என்ன சொல்றது?"

"செல்வா, உனக்கு கீழே வேற யாரும் இந்த வீட்டுல இல்லாமயிருந்தா, இந்த கேள்வியை நான் எழுப்பியிருக்க மாட்டேன்."

"அம்மா, நீயும் எல்லோரையும் மாதிரி கண்ணுக்குத் தெரியாத விஷயங்களை பெரிசா, கவுரவமா நினைக்க ஆரம்பிச்சிட்டியே? செல்வா அழாத குறையாகப் பேசினான்.

"என்னடா சொல்றே நீ" மல்லிகாவின் விழிகளில் திகைப்பிருந்தது.

"சுகன்யா என் மேல வெச்சிருக்கற அன்பு, நேசம், பாசம், இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையாம்மா? இந்த குணங்களை யாராலும் கண்ணால பார்க்க முடியாதுதான். ஆனா ஒருத்தர் பழகற விதத்துல இதை எல்லாத்தையும் நாம நல்லாப் புரிஞ்சுக்க முடியும்."

"ஜாதியை கண்ணால பார்க்க முடியுமா? இல்லே ... ஒருத்தர் பேசறதை, பழகறதை வெச்சுத்தான் யார் எந்த ஜாதியை சேர்ந்தவங்கன்னு எப்படி சரியா சொல்லமுடியும்? இல்லே ஒருத்தரோட உடல் நிறத்தை வெச்சுத்தான் சாதியை சொல்ல முடியுமா? இல்லே ஒருத்தரோட உணவு பழக்கத்தை வெச்சு யார் எந்த ஜாதின்னு சொல்லமுடியுமா?

நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில என் சுயநினைவு இல்லாம இருந்தப்ப அவ ஓடி வந்து தன் ரத்தத்தை குடுத்தா; அப்ப அவ ஜாதி என்னன்னு நாம யாரும் கேக்கலைம்மா. யார் கண்ணுக்கும் தெரியாத அவ ஜாதி உனக்கு ஏம்ம்மா இப்ப தெரியுது" செல்வா நிதானமாக பேசினான்.

"செல்வா, அதெல்லாம் எனக்கு தெரியாம இல்லடா. போன வாரம் பூரா அந்த பொண்ணு உனக்காக உண்மையா உருகிப் போய் நின்னதை என் கண்ணாலப் பாத்தேண்டா. அதனாலத்தான் நீ செய்ததுக்கு எல்லாம் நன்றின்னு என் கையெடுத்து அவளை கும்பிட்டு நின்னேண்டா. நீயும், உன் அப்பாவும் சேர்ந்துகிட்டு என்னை வேணா, ஜாதி, மதம் இதுக்கெல்லாம் அர்த்தமில்லேன்னு சொல்லி என் வாயை மூடிடலாம். ஆனா இந்த ஊர்ல இருக்கற எத்தனைப் பேர் வாயை உங்களால மூட முடியும்?"

"அ...அம்மா.." செல்வா முனகினான்.

"நாளைக்கு உன் தங்கையைப் பார்க்க வர்றவங்க, நீங்க உங்க புள்ளைக்கு பொண்ணு எடுத்து இருக்கற எடம் எதுன்னு கேட்டா; நான் என்ன பதில் சொல்றது? எந்த ஜாதியில பொண்ணு எடுத்து இருக்கீங்கன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்லணும்? இவனுக்குத்தான் புத்தியில்லே? நீங்க என்னப் பதில் சொல்லப் போறீங்க..?" மல்லிகா தன் கணவனிடம் ஆவேசத்துடன் சீறினாள்.

நடராஜன் தன் மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள், மீனா தன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். நடராஜனின் வலது கையை, அவள் தன் கைக்குள் வைத்து வருடிக்கொண்டிருந்தாள்.

"அம்மா, நீ என்னை வாயை மூடுன்னு சொன்னே; இருந்தாலும் ஒரே ஒரு நிமிஷம் என்னைப் பேசவிடும்மா; நான் இன்னும் படிச்சே முடிக்கலை; சுகன்யா மாதிரி படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போகணும், என் கால்ல நான் நிக்கணும்ன்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். என் கல்யாணம் இப்போதைக்கு இல்லை; எப்பவோ நடக்கப் போற ஒரு விஷயத்துக்கு இப்பவே ஏம்மா மூச்சு பிடிச்சி நீ பேசிக்கிட்டு இருக்கே?"

"சரிடி ... அந்த சுகன்யா மாதிரி நீயும் ஒருத்தன் பின்னால சுத்தணும்ன்னு உனக்கு ஆசையில்லையா? அதை ஏன் சொல்லாம விட்டுட்டே?

"அம்ம்ம்மா .. என்னம்மா பேசறே நீ" மீனாவின் குரல் உயர்ந்தது.

"நிறுத்துடி உன் பேச்சை ... அண்ணணுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டா.. அவனை மாதிரி நீயும் என் பேச்சை கேக்காம அலையப் போறியா?"சுந்தரி தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டு எழுந்தாள்.

"அம்மா ... ஒரு நிமிஷம் உக்காரும்மா ... என்னைக் கட்டிக்க வர்றவன் நான் என்ன ஜாதின்னு கேப்பான்னு நீ சொல்றே. அப்படி அவன் கேட்டா நீ சொல்ற மாதிரி அதுல கொஞ்சம் அர்த்தம் இருக்குன்னு நான் ஒத்துக்கறேன். ஆனா என் அண்ணியோட ஜாதி என்னான்னு எவனாவது கேட்டா அதுல என்ன ஞாயம் இருக்கு? அப்படி கேக்கறவனை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?"

"இப்ப காலமும் மாறிக்கிட்டு இருக்கும்மா; நாமும் கொஞ்சம் கொஞ்சமா மாறித்தாம்மா ஆகணும். அம்மா! செல்வாவை நீ எவ்வள தூரத்துக்கு தடை பண்ணுவே? இதுக்கு மேல அவன் உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டு முடிவா சுகன்யா பின்னால போறதுக்கு முன்னாடி, இந்த கல்யாணத்துக்கு நீ சரின்னு சொல்லும்மா." மீனாவும் விடாமல் பேசினாள்.

"பேசி முடிச்சிட்டியாடி நீ" மல்லிகாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

"அம்மா ... அந்த சாவித்திரி என்ன முயற்சிப் பண்ணாலும், ஜானகி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா; அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ; நீ என்ன சொன்னாலும் செல்வா ஜானகியை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஜானகி ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணிக்கிட்டு இருக்கா. செல்வாவும், சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்கங்கற விஷயம் அவளுக்கு நல்லாத் தெரியும். செல்வா, ஜானகியை பொண்ணு பாக்கப் போறதை அவ அம்மா அவகிட்ட இவன் போறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடித்தான் சொல்லியிருக்கா; அந்த எரிச்சல்லத்தான், கோவத்துலதான் அவ என் அண்ணனை சண்டைப் போட்டு அனுப்பிச்சிட்டா."

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு நீ என்னை கேக்காதே?ரொம்ப சிம்பிள். நானும் ஜானகியோட தங்கை ஜெயந்தியும் ஒண்ணாத்தானேம்மா படிக்கிறோம். அவ என்னோட நல்ல சினேகிதிம்மா. உனக்கு தெரிஞ்சதைவிட அந்த சாவித்திரியைப் பத்தி எனக்கு அதிகமா தெரியும்."

"ம்ம்ம் ... அதனால ..." மல்லிகா தன் பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தாள்.

"என்னைத் தப்பா நினைக்காதேம்மா; சுகன்யாவை வேண்டாம்ன்னு சொல்றதுக்கு இன்னும் ஒரே ஒரு காரணம் தான் உங்க கிட்ட இருக்கு. இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்ச நேரம் தனியா இருந்தாங்கன்னு சொல்லுவே! அவ்வளவுதானே?

"மீனா ... போதும்மா... நீ பேசினது போதும் ... இதுக்கு மேல நீ இந்த விஷயத்தைப் பத்தி பேசாதே." நடராஜன் அவள் பேச்சில் குறுக்கிட்டார்.

"அப்பா ... ப்ளீஸ் ... என்னைப் பேச விடுங்கப்பா ..."

“நீ என்ன சொல்லப் போறேன்னு எங்களுக்குப் புரியுது ...”

“சரிப்பா ... நான் அதைப்பத்தி பேசலை ...”

"அம்மா ... சுகன்யாவோட அம்மாவையும், மாமாவையும் நீ ஆஸ்பத்திரியிலே பாத்தே? நாலு பேரு எதிர்ல நீ கோவப்பட்ட போதும், அவங்க எவ்வளவு இங்கிதமா நடந்துகிட்டாங்க? அவங்களோட குணம்தானேம்மா முக்கியம். இதுக்கும் மேல சுகன்யாவோட ஜாதி எதுவாயிருந்தா நமக்கென்னம்மா?" மல்லிகா தன் மனதுக்குள் பொங்கி எழுந்து வரும் சினத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

"அம்மா ... இவங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கு நீ சந்தோஷமா ஒத்துக்கணும்மா. சுகன்யா நிச்சயமா இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பாங்கங்கறதுல எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏன்னா இந்த ஒரு வாரத்துல உன்னை விட அதிகமா சுகன்யா கூட ஆஸ்பத்திரியில நான் இருந்தேன். செல்வாவோட ஆபீசுலேருந்து இவனைப் பாக்க வந்தவங்க எல்லாம், ஆணாயிருக்கட்டும் இல்லே பெண்ணாயிருக்கட்டும்; சுகன்யாவை பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க. இதுக்கு மேல நீயாச்சு; உன் பிள்ளையாச்சு."

மீனா தன் மனதிலிருந்ததை பேசி முடித்த திருப்தியில் தன் தாயின் முகத்தை அமைதியுடன் பார்த்தாள். நான் தப்பா ஏதும் பேசிடலையேப்பா என்ற பாவனை முகத்தில் தோன்ற தன் தந்தையின் முகத்தையும் ஒரு தரம் கூர்ந்து நோக்கினாள். பின் அமைதியாக தன் தலை முடியைக் கோதிக்கொண்டவள் காலியாக இருந்த காபிக் கோப்பைகளை சேகரித்துக்கொண்டு நிதானமாக கிச்சனை நோக்கி நடந்தாள். மல்லிகா தன் முகத்தில் எந்த வித சலனமுமில்லாமல் தெருவை நோக்கிக்கொண்டிருந்தாள்.

“மல்லிகா, எழுந்து வாம்மா சாப்பிடலாம்."

“இல்லீங்க நீங்க சாப்பிடுங்க; இப்ப எனக்குப் பசியில்லை.” மல்லிகா சிறு குழந்தையாக தன் கணவனிடம் முரண்டினாள்.

"அம்மா என் மேல இருக்கற கோவத்தை நீ அப்பா மேல ஏம்மா காட்டறே? நீ சொன்னியேன்னுதான் அவர் ஓடிப் போய் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கார் .." செல்வா தன் தாயிடம் டிஃபன் தட்டை நீட்டினான்.

"சரிடா ... உன் தங்கச்சிக்கு நல்லாவே சொல்லிகுடுத்து இருக்கே ... இப்ப நீ சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தா அதையும் சொல்லிடு...ஒரு வழியா அதையும் நான் கேட்டுக்கறேன்."

"அம்ம்மா ... நீ என் கல்யாணப் பேச்சை விடும்மா; அது எங்கப் போவுது? எப்ப வேணா பேசிக்கலாம்.. நீ முதல்ல சாப்பிடும்மா.. நீ பசி தாங்க மாட்டே; உனக்கு பசி வந்துட்டா தலைவலி வந்துடும்..." செல்வா தன் தாயிடம் கொஞ்சினான்.

"டேய் .. நீ எனக்காக ரொம்ப உருக வேணாம்... அப்புறம் அந்த சுகன்யா இங்க வந்து என் ஆளு ஏன் இளைச்சுப் போயிட்டான்னு என் கிட்ட மல்லு கட்டப் போறா" மல்லிகா விரக்தியாகப் பேசினாள்.

"ரொம்ப தேங்க்ஸ்ம்ம்மா, கடைசியா இப்பவாவது, நீ அவ என் ஆளுன்னு ஒத்துக்கிட்டயே ... எனக்கு அதுவே போதும்." செல்வாவின் முகம் மலர்ந்தது.

"செல்வா, இந்த கல்யாணம் ஏன் வேண்டாம்ங்கறதுக்கான காரணங்களை நான் சொல்லிட்டேன். பின்னாடி என் கிட்ட வந்து நான் ஏன் இதெல்லாம் முன்னாடியே சொல்லலேன்னு நீங்க யாரும் என்னைக் கேக்கக்கூடாது."

"அம்மா ... என் வாழ்க்கையைத் துணையை நானே தேடிக்கிட்டது ஒரு தப்பாம்மா? இதைத் தவிர நான் வேற எந்த தப்பும் பண்ணி உன் மனசை எப்பவாது நான் நோக அடிச்சிருக்கேனா?

"நிச்சயமா இல்லடா..."

"அம்மா, சுகன்யாவைப்பத்தி நீ தவறா நினைச்சுக்கிட்டு இருக்கற ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி சொல்றேம்மா.."

"சுகன்யா சென்னையில தனியாத்தான் இருக்கா. எனக்கு ஈக்வலா கை நிறைய சம்பாதிக்கறா. அழகா இருக்கா. அவ சரின்னு சொன்னா, அவளைத் தலை மேல தூக்கி வெச்சிக்கறதுக்கு என் ஆபீசுலேயே நாலு பேரு போட்டி போட்டாங்க. தலை கீழா நின்னுப் பாத்தானுங்க; ஒருத்தன் புதுசா காரு கூட வாங்கிட்டு வாங்க ஜாலியா சுத்திட்டு வரலாம்ன்னு அவளைக் கூப்பிட்டான்; அவ யாரையும் திரும்பிக்கூடப் பாக்கலை. எங்க வேணா சுத்தாலாம்; யார் கூட வேணா போவலாம்; அவளைத் தட்டிக்கேக்க இந்த ஊருல யாரும் இல்லே. ஆனா அவ லீவு நாள்ல வீட்டை விட்டு வெளியவே வரமாட்டாம்மா."

"அப்படிப்பட்டவ அவளா வந்து எங்கிட்ட பேசினா. அப்படி பேசினவ என்னை சினிமாவுக்கு போகலாம்ன்னு கூப்பிடலை. ஹோட்டலுக்கு அழைச்சுட்டுப் போய் வாய்க்கு ருசியா வாங்கி குடுன்னு கேக்கலை. பீச்சு, பார்க்குன்னு சுத்தறதுக்கு கூப்பிடலை. நான் இதுவரைக்கும் அஷ்டலட்சுமி கோவில் பாத்தது இல்லே; நீங்க என்னை அந்த கோவிலுக்கு கூப்பிட்டுகிட்டு போக முடியுமான்னு கேட்டாம்மா. நானும் வயசுப்பையன்ம்மா. நான் எப்படிம்மா அவளை ஒதுக்கிட்டு போக முடியும்? "

"நாங்க பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறமும், ஷாப்பிங் போகலாம்ன்னு இழுத்துக்கிட்டுப்போய், பிரா, ஃபாண்டீசுன்னு அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு பில்லை என் தலை மேல கட்டினதில்லை. இன்னைக்கு வரைக்கும் எனக்கு வீடு இருக்கா? என் சொத்து விவரம் என்னா? என் அப்பா என்ன சம்பாதிக்கறார்ன்னு ஒரு கேள்வி கேட்டது கிடையாது. நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தப்ப, அவ ஓடி ஓடி எனக்கு பண்ணதெல்லாம் உனக்கேத் தெரியும்; இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை."

"அம்மா, உடல் கவர்ச்சி மட்டுமே எங்க காதலுக்கு அடிப்படையில்லே. நாங்க ரெண்டு பேரும் படிச்சவங்க; ரெண்டு பேரும் ஒரு குடும்பத்தை நடத்த கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறோம்; எனக்கு இப்ப 26 வயசும்மா. என்னை விட வயசுல அவ மூணு வருஷம் சின்னவ. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்கற வயசும்மா எங்களுக்கு. நானும் அவளும் உடலாலும், மனசாலும் தேவையான அளவுக்கு முதிர்த்தியடைஞ்சதுக்கு அப்பறம் தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிருக்கோம்."



"நிதானமா யோசிச்சு, நான் செய்யற காரியங்களின் பின் விளைவுகள் என்னவாக இருக்கலாம்ன்னு மனசுல ஒரு தெளிவோடத்தான் ஒரே ஒரு தரம் அவ ரூமுக்கு நான் போனேம்மா. எங்க வயசை பாரும்மா; திடீர்ன்னு எனக்கு மாத்தல் வந்ததும், ஒருத்தரை ஒருத்தர் பிரியப்போற ஏக்கத்துல, நானும் அவளும் தொட்டுக்கிட்டோம். அந்த சாவித்திரி மேல எங்களுக்கு இருந்த கோபம், தாபமா அன்னைக்கு மாறிடிச்சி. அவ்வளவுதான். அன்னைக்கு கிடைச்ச தனிமையை நாங்க தப்பா பயன் படுத்தி முழுசா தாம்பத்தியம் நடத்திடலம்மா."

"உன் மனசு எனக்குப் புரியுதுமா. இதை நாங்க தவிர்த்து இருக்கலாம். கல்யாணம் நடக்கிற வரை நாங்க பொறுமையா இருந்திருக்கலாம். இதுல நீ சுகன்யாவை மட்டும் பிரிச்சு வெச்சு தப்பு சொல்றதுல ஞாயமில்லேம்மா. எனக்கும் இந்த தப்புல சரி பாதி பொறுப்பு இருக்கு."

"அன்பார்ச்சுனேட்லி, சுகன்யா நம்ம ஜாதியில்லே. இந்த ஒரு காரணத்துக்காக எங்க கல்யாணத்துக்கு நீ மறுப்பு சொல்லாதேம்மா. அவளும் நம்பளை மாதிரி உணவு பழக்க வழக்கம் உள்ள ஒரு சைவ குடும்பத்துலேருந்து வந்தவம்மா. அவளுக்கு அதிக எதிர்பார்ப்புகளும் கிடையாதும்மா. ஆண்டவன் நினைச்சா எனக்கு எல்லாம் கிடைக்கும்ன்னு நம்பற ரொம்ப சிம்பிளான, உன்னை மாதிரி கடவுள் நம்பிக்கை உள்ள பொண்ணும்மா; சுகன்யாவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவளைத் தவிர வேற ஒருத்தியை என் மனைவியா என்னால நினைச்சுப் பாக்க முடியாது."

"ம்ம்ம் ...செல்வா உன் முடிவை நீ தெளிவா சொல்லிட்டே ... ரொம்ப சந்தோஷம்." மல்லிகாவின் குரல் சற்று கம்மியிருந்தது.

"ஏம்மா ... உனக்கு என் மேல கோபமா?"

"இல்லப்பா ... எனக்கு யார் மேலேயும் கோவமில்லே ..."

"அப்புறம் ஏம்மா உம்ம்ன்னு இருக்கீங்க" செல்வா தன் தாயின் அருகில் நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டான்.

மீனா இந்த அளவிற்கு செல்வாவின் தரப்பில் தெளிவாகப் பேசுவாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் பெண்ணை அவள் இன்னும் சிறு குழந்தையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் யாரும் இதற்கு மேல் செல்வாவின் கல்யாண விஷயத்தில் தன் பேச்சைக் கேட்க்க மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்திருந்த போதிலும், தன் வீட்டில் இதுவரை இல்லாமல் இந்த விஷயத்தில் தான் தனிமைப்படுத்தபட்டதை நினைக்கும் போது அவள் மிகவும் வருத்தமாக உணர்ந்தாள்.

"என் அம்மா .. உங்கப்பா போட்டோவை காமிச்சி இந்தப் பையனைப் உனக்கு பாத்து இருக்கோம்; பாத்துக்கடின்னு சொன்னாங்க; அவ்வளவுதான்; என் விருப்பத்தைப் பத்தி அவங்க கேக்கவேயில்ல. நானும் என் அம்மா அப்பா பாத்து செய்தா சரியா இருக்குங்கற நம்பிக்கையில சரின்னு சொன்னேன். நானும் ஒரு டிகிரி ஹோல்டர்தான். ஆனா என் பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னே எனக்கு குடுத்த லெக்சர் மாதிரி நான் என் அம்மாக்கிட்ட எப்பவும் பேசினது இல்லே. அவங்க எது சொன்னாலும் அது சரின்னு ஒத்துக்கிட்டேன். இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுல நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என் பொண்ணும், என் பையனும் அப்படியில்லையேன்னு நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு."

"அம்மா ... நான் பேசினதை, உனக்கு நான் லெக்சர் குடுத்தேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா ... இந்த வீட்டுல என் அம்மாகிட்ட என் மனசுல இருக்கறதை சொல்ல எனக்கு உரிமையில்லையா? நீயே எங்கிட்ட இது தப்புன்னு நினைச்சு வருத்தப்பட்டா? ... இல்ல ...கோபப்பட்டா? என் மனசுல இருக்கறதை நான் யாருகிட்ட போய் சொல்லுவேம்மா? ஸ்டில் ... நான் பேசினதை நீ தப்புன்னு நெனைச்சா. ஐயாம் சாரிம்மா ... உன் மனசை புண்படுத்தணுங்கறது என் நோக்கம் இல்லம்மா." மீனா மல்லிகாவை நோக்கி சிரிக்க முயற்சி செய்து தோற்றாள்.

"சே.. சே.. மீனா உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லடி கண்ணு ... நான் இன்னும் என் உலகத்துலேயேதான் இருக்கேன். அதுதான் தப்பு. என் கல்யாணத்துக்கு அப்புறம், இந்த முப்பது வருஷ வாழ்க்கையில, இந்த சமூகத்துல வந்திருக்கற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கலையேன்னு, நான் என் மேலத்தான் கோபப்பட்டுக்கிறேன்." மல்லிகா தன் மூக்கை இலேசாக உறிஞ்சினாள். சற்று நேரம் அந்த ஹாலில் இறுக்கமான மவுனம் நிலவியது. அந்த அமைதியை கலைத்துக்கொண்டு, மீண்டும் மல்லிகாவே பேச ஆரம்பித்தாள்.

“என்னங்க ... சுகன்யாவோட மாமா ... ரகுராமன் தானே அவர் பேரு ... அவர்கிட்ட பேசி மேல் கொண்டு என்ன ஏதுன்னு விசாரிங்க. எப்ப இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு அவங்க சவுகரியத்தைக் கேளுங்க. அப்படியே இந்த ஏரியாவிலேயே ஒரு வீடு வாடகைக்கு பாருங்க. கல்யாணம் முடிஞ்ச உடனே இவங்களை அந்த வீட்டுல தனிக்குடித்தனம் வெச்சிடலாம். என் புள்ள அந்த பொண்ணுகூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்.”

“அம்மா ... நான் எதுக்கு இப்ப தனியா போகணும்? என்னை எதுக்கு வீட்டை விட்டு வெளியில போகச் சொல்றே? உன்னைவிட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இங்கத்தான் இருப்பேன். முடிஞ்சா என்னை கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளு." செல்வா அவள் மடியிலிருந்து விருட்டென எழுந்து கோபத்துடன் கூவினான்.

“செல்வா நீ உன் முடிவை சொல்லிட்டே! நான் உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உன் இஷ்டப்படி அவளை நீ கல்யாணம் பண்ணிக்கோ. இதுக்கு மேல உன் இஷ்டம்.” மல்லிகா தீர்மானமாக பேசிவிட்டு எழுந்தாள்.

"அம்மா, என்ன ஆனாலும் சரி ... நான் உங்களையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் குடும்பம் பண்ண மாட்டேன்" அவன் உடல் பதறி, முகம் சிவக்கத் தொடங்கியது.



“டேய் செல்வா! ... இவன் ஒருத்தன் ... அடங்குடா ... என் பொண்டாட்டி எங்கிட்ட எதையோ சொன்னா ... அவ சொன்னதை செய்ய வேண்டியவன் நான். நடுவுல நீ ஏண்டா சும்மா தொணத் தொணன்னு பேசி அவளைக் கடுப்பேத்தறே? நடராஜன் குறுக்கில் புகுந்து செல்வாவை சும்மா இருக்குமாறு தன் கண்களால் சைகை செய்தார்.