Monday 9 March 2015

சுகன்யா... 37


கோபத்தில் எரிச்சலுடன் தன் வாயில் வந்ததை, கன்னாபின்னாவென யோசிக்காமல் வார்த்தைகளாக வீசிய மீனா, சட்டென தான் பேசுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள். எனக்கு சீனு மேல அவன் குடிச்சிட்டு வந்திருக்கானேன்னு கோபம்; அது வாஸ்தவம்தான்; அவன் அம்மா எப்படி பயந்து போய் போன் பண்ணாங்க? அவங்க ஏன் இப்படி கஷ்டப்படணுங்கற ஆதங்கம் எனக்கு இருக்கு? அதுவம் வாஸ்தவம்தான். ஆனா "நான் என்ன இவனுக்கு பெண்டாட்டியா, இவன் என்னா எனக்கு தாலி கட்டியிருக்கானான்னு" ஒரு வார்த்தையை ஏன் நடுவுலே பேசினேன்?

என் வாய்லேருந்து எதனால இந்த வார்த்தை இப்ப வந்தது? என் மனசுக்குள்ள என்ன இருக்கு?மீனா தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். அவளுக்கு தன் மனசு சற்றே இறுகி, நெகிழ்ந்து, மீண்டும் இறுகுவதைப் போலிருந்தது. எனக்கேத் தெரியாம, என்கிட்ட சொல்லாம, என் மனசுக்குள்ள இந்த பாவிப்பய சீனு நுழைஞ்சுட்டானா? எப்ப இவன் நுழைஞ்சான்? என் கனவுல கொஞ்ச நாளா ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வந்து, மீனு, மீனுன்னு சுத்தி சுத்தி வர்றானே; அவன் இவன் தானா? பேதை மீனா தன் மனசுக்குள் விடையைத் தேடினாள்.



மீனாவின் கொதிப்பான வார்த்தைகளைக் கேட்டதும், செல்வாவும், சீனுவும் ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக்கொண்டார்கள். இருவருக்குமே, இன்று மீனாவின் பேச்சில் இருக்கும் ஒரு வித்தியாசமான தொனி, அவள் பேச்சில் இதுவரை இல்லாத ஒரு உருமாறிய உணர்ச்சி, நெருப்பான வார்த்தைகளாக வெளிப்படுவதை, திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மீனாவிடம் இதுவரைக்கும் கண்டிராத ஒரு தனித்துவம் இன்னைக்குத் தெரியுதே? அவள் இயல்புக்கு மாறான, ஏதோ ஒரு உரிமையை, அவள் சீனுவின் மீது நிலை நாட்ட விரும்புகிறாள் என்பது இலேசாக புரிய வர, அது என்னவென்று புரியாமல் அவர்கள் மனதுக்குள் ஆச்சரியப்பட்டார்கள். உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்காக மீனா, சீனுவிடம் வலுவில் சென்று அவனை சண்டைக்கு இழுப்பது சகஜம் தான் என்றாலும், இன்னைக்கு அவள் பேசற தோரனையே புதுசா இருக்கே? மீனாவை இன்னைக்கு புரிஞ்சுக்கவே முடியலியே? அவ என்ன சொல்ல விரும்பறா?

சீனு அவ்வப்போது தண்ணி அடிப்பது மீனாவுக்கு தெரிந்த விஷயம் தானே? தண்ணி அடிச்சா சத்தம் போடாம, சீனு இங்க மாடி ரூம்ல வந்து படுத்துக்கறது ஒரு புது விஷயம் இல்லையே? ஆனா இந்த காரணத்துக்காக இன்னைக்கு சீனுவை மீனா என் இந்த காய்ச்சு காய்ச்சறா? அவர்கள் இருவருமே சற்றே அதிர்ந்துதான் போயிருந்தார்கள்.

செல்வா யோசிக்க ஆரம்பித்தான். மீனாவுக்கு என்ன பிரச்சனை? யார் மேல இருக்கற கோவத்தை மீனா இவன் மேல காட்டறா? அடிக்கடி, மீனாவும், சீனுவும் தேவையில்லாம ஏதோ ஒரு காரணத்தை வெச்சுக்கிட்டு தங்களுக்குள்ள சண்டை போட்டுக்குவாங்க; இது இந்த வீட்டுல ஒரு சாதாரண விஷயமா ஆகிப் போச்சு; வீட்டுல இருக்கற யாரும் இதை சீரியஸா எடுத்துக்கறது இல்லே?

விளையாட்டா பேச்சை ஆரம்பிப்பாங்க; அது எப்பவும் வெனையிலத்தான் போய் முடியும்; மீனா வழக்கமா சண்டை முடிஞ்சதும், மனசுல கோபத்தோட முறுக்கிட்டு இருப்பா; ஒரு வாரம் சீனுவைப் பாத்தாலும், பாக்காத மாதிரி மூஞ்சை திருப்பிக்குவா. இந்த வெக்கம் கெட்ட சீனுதான், ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி, கொழையடிச்சி, மீனாக்கிட்ட ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டுப் போய், தன் நட்ப்பை, சினேகிதத்தை ரீஜார்ஜ் பண்ணிக்குவான்.

ஆனா இன்னைக்கு இவங்களுக்குள்ள நடக்கறது வழக்கமான சண்டை மாதிரி தெரியலையே? மீனா என்னைக்குமே இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு, கண்ணு கலங்கி, சீனுகிட்ட இந்த மாதிரி ஒரு சீன் காமிச்சதில்லையே? சீனுவும், இன்று ஏதும் பேசாமல் மீனாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவன் மனதிலும் எழுந்து கொண்டிருந்தது.

"மச்சான், நான் கிளம்பறேன்; மதிக்காதவங்க வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாதுன்னு, எங்க அம்மா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க. மதிப்பில்லாத வீட்டுக்குள்ள கால் வெக்கறது தப்புன்னு இப்ப எனக்கு ஃபீல் ஆவுது. இதுக்கு மேல, இங்க யாருக்கும், நான் எந்த விதத்துலயும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சீன் இங்கே நடக்கறதுக்கு, ஒரு விதத்துல நான் காரணங்கறது உண்மைதான். அதுக்காக நான் நிஜமா வருத்தப்படறேன்." சீனு செல்வாவைப் பார்த்து மெல்ல முனகினான்.

"மிஸ் மீனா, அயாம் சாரி பார் தட், அண்ட் ஐ அன்கண்டீஷனலி அப்பாலஜைஸ் ஃபார் மை இம்பெர்டினன்ஸ்..." சொல்லிக்கொண்டே சீனு தான் உட்க்கார்ந்திருந்த வரந்தா படிக்கட்டிலிருந்து எழுந்தான்.

"டேய் மாப்ளே ... என்னடா பேசறே நீ? மீனாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்; நீ இன்னைக்கு நேத்தா அவளைப் பார்க்கிறே? மீனா அவ வழக்கம் போல எதையோ சொன்னாடா; அம்மா அவளை எதாவது சொல்லியிருப்பாங்க; அதனால அவ இன்னைக்கு ஏதோ அப்செட்டா இருக்கான்னு நினைக்கிறேன். அம்மா மேல இருக்கற கோவத்தை அவ உன் மேல காமிக்கறா; நீயும் அவ பேசினதை, ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்டு பதிலுக்கு என்னன்னமோ பேசறே? என் மனசு ரொம்ப கஷ்டப்படுதுடா.." செல்வா சீனுவின் கையைப் பிடித்தான்.

"உன் ஃப்ரெண்ட்க்கு குடுக்க வேண்டிய மதிப்பை, மரியாதையை நான் எப்பவும் போல, இந்த நிமிஷமும் நான் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்; உன் ஃப்ரெண்டை நான் ஒரு அன்னியனை நினைச்சிருந்தா, வெளியே போடான்னு ஒரே வார்த்தையில சொல்லியிருப்பேன்; இந்த வீட்டுக்குள்ள இனிமே நுழையாதேன்னு ஸ்ட்ரெய்ட்டா சொல்லியிருப்பேன்." அவளுக்கு இலேசாக மூச்சிறைத்தது."

"யாரையும் நான் இந்த வீட்டை விட்டு இப்ப போகச் சொல்லலை; ஏன் குடிச்சுட்டு இங்கே வராங்கன்னுத்தான் நான் கேக்கிறேன்? ஏன் குடிச்சுட்டு, தானும் அழிஞ்சு, மத்தவங்க மனசையும் புண்ணாக்கணும்ன்னுதான் கேக்கறேன்? ஏன் இப்படி நேரத்துக்கு சோறு தண்ணியில்லாம அழிஞ்சு போகணும்ன்னுதான் கேக்கிறேன்?”

செல்வா பதிலேதும் சொல்லாமல் மீனாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செல்வா... உன் ஃப்ரெண்டுகிட்ட, நான் சொல்றதை ஒழுங்கா புரிஞ்சுக்க சொல்லுடா; குடிச்சுட்டு போதையில இருக்கறவங்களுக்கு அடுத்தவங்க சொல்றது எப்படி புரியும்? மீனாவும் தன் அடித்தொண்டையில் பேசினாள்.

“ப்ளீஸ் மீனா; நான் சொல்றதை கேளு; ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான்தான் சீனுவை, இப்பவே வந்து ஆகணும்ன்னு கூப்பிட்டேன். அவன் மேல எந்த தப்பும் இல்லே...”

“உன் ஃப்ரெண்ட் வந்ததுல எந்த தப்பும் இல்லே; எப்ப வேணா வரட்டும்; எப்ப வேணா போகட்டும்; நீங்க என்ன வேணா டிஸ்கஸ் பண்ணிக்குங்க; அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே; அவரு குடிச்சுட்டு வந்திருக்காரே; அது சரியா? அவரு குடிச்சிருக்காருன்னு தெரிஞ்சும், நீ அவரை இந்த ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு கூப்பிட்டது சரியா?”

“மீனா அவன் தான் இனிமே பார்ட்டிக்கு போக மாட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டானே? அப்புறம் எதுக்கு நீ இன்னைக்கு விடாம அவனை வம்புக்கு இழுக்கறே?”

சீனு எதுவும் பேசாமல் கேட்டுக்கு வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். தன் நண்பன் இப்படி பேசமுடியாமல் தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டதும், செல்வாவுக்கு மனதில் கோபமும், ஆங்காரமும் பொங்க, மீனாவை ஒரு அறை விடலாம், ஆனா வயசுக்கு வந்த பொண்ணை, நான் அடிச்சா, என் அம்மா என்னை வீட்டை விட்டே தொரத்திடுவா; மீனா இன்னைக்கு ஏன் இப்படி அழும்பு பண்றா? தன் தங்கை மீனாவின் மீது அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்த போதிலும், செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

"மீனா நீ இப்ப என்னை என்னதான் பண்ணச்சொல்றே? செல்வா எரிச்சலுடன் தன் தங்கையை நோக்கினான்.

"உன் பிரண்டை இனிமே 'நான் குடிக்கமாட்டேன்னு' என் கையில அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்லு..." மீனாவின் கண்கள் கலங்கியது போல் இருந்தது. அவள் தன் மனதுக்குள் எதையோ முழுமையாக தீர்மானித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல், மிக மிக மிருதுவாக ஆனால் உறுதியான குரலில் பேசினாள்.

மீனா சொன்னதைக் கேட்டதும், சீனு விருட்டென அவள் பக்கம் திரும்பினான். தன் எதிரில் பளபளக்கும் தங்க நிலவொளியில், மெல்லிய தேகத்துடன், ரோம நாட்டு பளிங்கு சிலை போல், கண்ணீருடன் கண்கள் இலேசாக மின்ன, தன் கையை நீட்டியவாறு நின்று கொண்டிருந்த மீனாவை அவன் உற்று நோக்கினான். எனக்காக ஒரு பொண்ணு அழறளா? அப்படி அழற பொண்ணு, வேற யாருமில்லே? இருபது வருஷமா, என் நண்பனோட தங்கைன்னு நான் அன்பு காட்டற மீனாவை நான் அழ வெச்சுட்டேனா? சீனுவின் உடலும் மனமும் பதை பதைத்து நடுங்கியது.

மீனா என்கிட்ட என்ன சொல்ல விரும்புறா? அவள் பேசுவது அவனுக்கு புரிந்தும் புரியாத ஒரு புதிராக இருந்தது. சீனுவின் மனதுக்குள் இறுகிக் கிடக்கும் ஏதோ ஒரு வஸ்து மெதுவாக உருகுவது போல் அவன் உணர ஆரம்பித்தான். அவனால் நிற்க முடியவில்லை. அவன் கால்கள் காரணம் தெரியாமல் தொய்ந்து போனது. 

மீனா தன் கூந்தலை பின்னி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாக கட்டிருந்தாள். இறுக்கமான ரப்பர் பிடியிலிருந்து, வெளிவந்திருந்த ஓரிரு மெல்லிய மயிரிழைகள், நெற்றியின் இருஓரத்திலும், காற்றில் பறக்க ஆரம்பித்தன.
இது வரை கம்பி கதவை பிடித்துக்கொண்டு, வெரண்டாவின் கடைசி படியில் நின்றிருந்த மீனா, இப்போது கீழே தரையில் இறங்கி, தன் மெல்லிய, மூங்கிலைப் போன்று அழகாக நீண்டு வளைந்திருந்த, வலது கையை சீனுவின் பக்கம் நீட்டினாள்.

மீனா அன்று, கண்ணுக்கு இதமான வெளிர் பச்சை நிற சுடிதாரும், மேலே அதற்கு இணையாக, சிறு சிறு சிவப்பு பூக்கள் மலர்ந்திருந்த, வெள்ளை நிற குர்தாவும் அணிந்திருந்தாள். கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்க சங்கிலியும் அதன் முனையில் அவள் கோத்திருந்த சிறிய நட்சத்திர டாலரும், மார்பின் மேல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் தோளில் துப்பட்டா இல்லாமல் நின்றிருந்ததால், அவளின் சிறிய அளவான இளம் மார்புகள், அவள் சுவாசத்துக்கேற்ப, மெல்ல மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன.

மீனாவின் நீட்டிய கரத்தில், அவள் அணிந்திருந்த மெல்லிய பொன் வளையல்கள், அடித்த குளிர்ந்த காற்றில், மிக மிக இலேசாக ஆடி, ஒன்றையொன்று உராய்ந்து "கிணுங்க் ... கிணுங்க்" என்று இனிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. நிலா வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சிட்டுக்கொண்டிருக்க, அவளுடைய மின்னும் சிறிய கருப்பு நிற கண்கள், கண்களின் மேல் சீராக செதுக்கப்பட்டிருந்து கரிய புருவங்கள், அழகிய துடிக்கும் இமைகளால், பாதி விழிகள் மூடியிருக்க, மெல்லிய உதடுகள் மிகமிக இலேசாக பிளந்திருக்க, பிறை போல் பிளந்திருந்த உதடுகளின் நடுவில் பளிச்சிடும் சிறிய முத்தை ஒத்த பற்கள், மீனா வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு குட்டித் தேவதையைப் போல் சீனுவின் கண்களுக்கு தெரிந்தாள்.



சீனுவின் பார்வை, மீனாவின் முகத்திலிருந்து கீழிறங்க ஆரம்பித்தது. அவளுடைய சட்டைக்குள் அழகாக மேடிட்டிருந்த இளம் மார்புகளில், ஒரு வினாடி தயங்கி தயங்கி நின்றது. பின் மெல்ல மெல்ல கீழிறங்கியது. காற்றில் அவள் அணிந்திருந்த சுடிதார், அவள் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஒட்டிக்கொள்ள, அவளுடைய திடமான முன் தொடைகள், சீனுவின் கண்களில் மின்னலடிக்க, அவன் தேகம் புயல் காற்றில், தண்ணீரின் மேல் ஆடும் படகைப் போலானது.

மீனாவின் உடலழகை கண்ட சீனுவின் மன நிலைமை அத்தருணத்தில் ஒரு பைத்தியக்காரனின் மன நிலையை ஒத்திருந்தது. அவனுக்கு எல்லாம் புரிந்தது போலிருந்தது. அடுத்த வினாடியில் நடப்பது எதுவும் புரியாதது போலுமிருந்தது. சீனுவின் மனதில் எழுந்த உணர்ச்சிகளை, தன்னால் சொற்களால் விவரிக்கமுடியாது என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்ன்னு" இந்த நிலைமையைத்தான் சொன்னாங்களா? சீனு குளிர்ந்திருந்த வெளிக்காற்றை நீளமாக இழுந்து மூச்சாக மாற்றி, மார்பில் சில நொடிகள் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெதுவாக தன் நாசிகளின் வழியாக வெளியில் விட்டான்.பக்கத்தில் பிளாஸ்டிக்சேரில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த செல்வாவின் மேல் ஒரு வினாடி அவன் பார்வை சென்று மீண்டது. அவன் உடம்பில் மாலை அருந்தியிருந்த மதுவின் போதை முழுவதுமாக இப்போது காணாமல் போயிருந்தது.

மீனா இவ்வளவு அழகா! இத்தனை நாளா இவளை, வயசுக்கு வந்த ஒரு அழகான பெண், நாகரீகமான இளம் யுவதிங்கற கோணத்துலே இருந்து நான் இவளைப் பார்த்ததேயில்லையே? மீனா செல்வாவோட தங்கச்சி, என் உயிர் நண்பனோட ஆசைத் தங்கச்சி; ஒன்னும் தெரியாத சின்னப் பொண்ணு, இவளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு? சின்ன வயசுலேருந்து நான் பாத்து வளர்ந்த பொண்ணுன்னு, அவ மன உணர்ச்சிகளுக்கு, மதிப்பு குடுக்காமா, அவகிட்ட எப்பவும் எடக்கு மடக்கா பேசி, விளையாட்டுக்குத்தான்னாலும், எப்பவும் சண்டைக்குத்தானே அவளை இழுத்துக்கிட்டு இருந்தேன்? நான் எப்பேர்பட்ட மடையன்?

மீனாவின் இந்த மெல்லிய தேகத்துக்குள் இத்தனை உறுதியான மனம் ஒளிந்து கொண்டிருக்கிறதா? அந்த மென்மையான மனதில், என்னைப்போல ஒரு ஆண் மகன் மேல, என்னுடைய பொறுப்பில்லாத நடத்தையை, அதனால் அவளுக்குள் ஏற்படும் கோபத்தை, எரிச்சலை, இவளால இத்தனை உரிமையோட காட்ட முடியுமா? மீனா என் மேல ஏதோ ஒரு முழு சொந்தமும், உரிமையும் இருக்கற மாதிரி என்னை இன்னைக்கு தாளிச்சு கொட்டறாளே?

என் மேல் அவளுக்கு இருப்பதாக நினைக்கும் அந்த உரிமை எது? அந்த உரிமைக்கு என்னப் பேரு? என் மேல் இவளுக்கு இத்தனை அக்கறையா? எதனால இந்த அக்கறை? இந்த அக்கறைக்கு என்ன அர்த்தம்? இவள் காட்டும் இந்த அக்கறைக்கு நான் தகுதியுள்ளவன்தானா? சீனுவின் மனதில் கடலலைகளைப் போல் பலவித எண்ணங்கள் எழுந்து அவன் மனதின் மேல் தட்டுக்கு வந்து மோதின. அவன் பேசமுடியாமல் மரம் போல் நின்றான்.

சீனுவின் கண்கள் மீண்டும் சுழன்று சுழன்று மீனாவின் முகத்தில் சென்று படிந்தன. தன் பார்வையை அவள் விழிகளில் நிலைக்க விட்டான். மீனாவின் விழிகள் இலேசாக நனைந்திருந்தன. இரு ஜோடி கண்கள் ஒன்றைஒன்று கூர்ந்து நோக்கின. சீனுவின் கூர்மையான பார்வையை சந்திக்கமுடியாமல், மீனா தன் விழிகளை ஒரு கணம் மூடித்திறந்தாள். மீனாவின் மனம், சீனுவின் முகத்தை பார் பார் என தூண்ட, அவள் மூடிய தன் விழிகளை மெல்ல திறந்தாள்.

தங்கள் இதயங்களில் ஏதோ ஒன்று மெல்ல மெல்ல இளகுவதை அத்தருணத்தில், இருவருமே பரஸ்பரம் உணர்ந்தார்கள். இருவரின் உதடுகளும், தத்தம் உதடுகளின் மேல் படிந்திருந்தன. இருவரின் உதடுகளுக்கு உள்ளிருந்த நாக்கு உலரத்தொடங்கியது.

மீனாவை இழுத்து தழுவி, தன் பரந்த மார்பில் புதைத்துக்கொள்ள சீனுவின் மனம் விழைந்தது. அவன் கரங்கள் அவளை உடனே இறுக்கி அணைத்துக்கொள்ள துடித்தன. சீனுவின் கள்ளமில்லாத மனதில் நிறைந்திருந்த கண்ணியம் அவனைத் தடுக்க அவன் செயலிழந்து நின்றான். 

சீனுவின் மனசு, அவன் அனுமதியின்றி அவன் ரசித்து கேட்கும் பாடல் ஒன்றை அதுவாகவே இசைக்க ஆரம்பித்தது. செல்வா சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்ச காலத்தில் இந்தப் பாடலை அடிக்கடி பாடுவான். அவன் பாடறதை கேட்டு கேட்டு, சீனுவும் அந்த பாட்டை வெகுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். 

பார்வை ஒன்றே போதுமே! 
பல்லாயிரம் சொல் வேண்டுமா? 
பேசாத கண்ணும் பேசுமா?
பெண் வேண்டுமா? பார்வை போதுமா? 
பார்வை ஒன்றே போதுமே! 

செல்வா இந்தப் பாட்டை பாடினதுல அர்த்தமிருக்கு. ஆனா இந்தப்பாட்டு என் மனசுல இப்ப ஏன் ஒலிக்குது? சீனு திகைத்தான்.

சே.. சே... இது என்ன அபத்தமான எண்ணம்? மீனாவைப் பாத்து என் மனசுல இந்த மாதிரி எண்ணமா? இந்த எண்ணம் என் மனசுக்குள்ள வரது சரிதானா? இந்த எண்ணம் எனக்கு வந்ததே தப்பு? நான் குடிச்சிருக்கறதுனால இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இன்னைக்கு வந்திருக்கா? இல்லையே? என் போதை தெளிஞ்சு நான் சுய நினைவோடத்தானே இருக்கேன்? சுய நினைவோட இருக்கற என் மனசுக்குள்ள இந்த எண்ணம் வந்திருக்குன்னா, இந்த எண்ணத்துக்கு பேரு என்ன? காதல்? இதுக்குப்பேருதான் காதலா? சீனு தன் தலையை வேகமாக இடதும் வலதுமாக ஆட்டி தன் மனதில் எழுந்த அந்த எண்ணத்தை அதே நொடியில் வேரோடு கிள்ளி எறிய முயற்சி செய்தான். தோற்று நின்றான். 

என் மனசுக்குள்ள வந்திருக்கற இந்த உணர்வு, மீனாவின் மனதுக்குள்ளும் எழுந்திருப்பது போல தெரியுதே? அவ கண்கள்ல்ல இந்த காதல் உணர்வு தீர்க்கமா இருக்கே? இன்னும் நான் போதையில இருக்கேன்; அதனால என் மனசுக்குள்ள ஒரு தப்பு எண்ணம் எழுந்திருக்குன்னு சொல்லலாம். ஆனா மீனா தன் முழு உணர்வுகளுடன் தானே இருக்கா? 

"ஓ மை காட் ... இது என்ன ட்ராமா மீனா? இட் ஈஸ் ஹைலி ரிடிக்குலஸ்... சீனு குடிக்கமாட்டேன்னு, எதுக்காக உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணணும்?" செல்வா தன் பொறுமையை முற்றிலும் இழந்து தன் அடிக்குரலில் சீறினான். 

"நீதானே கேட்டே .. 'நான் என்ன பண்றதுன்னு?'... உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..." 

மீனாவின் வாய் தன் அண்ணனுக்கு இயந்திரமாக பதில் சொல்லியது. மீனாவின் முகம் உணர்ச்சிகளின்றி இறுகிய கல்லைப் போலிருந்தது. அந்த இடத்தில், அந்த கணத்தில், தன் அண்ணன் செல்வாவின் இருப்பை, அருகாமையை அவள் பொருட்படுத்தவேயில்லை. அவள் மனம் முற்றிலும் சீனுவையே நினைத்திருக்க, அவள் பார்வை சீனுவின் முகத்தில் குடிகொண்டிருந்தது. 

அமைதியாக நின்றிருந்த சீனு, தன் மூன்று நாள் தாடியுடன் கருத்திருந்த தன் முகத்தை, ஒரு முறை தன் வலது கையால் மெதுவாக தடவிக்கொண்டான். தன் வலப்புறத்தில் சேரில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சீனு, நிதானமாக மீனாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான். 

தன் வலது கையை நீட்டி, "சீனு" குடிக்கமாட்டேன் என்று நிச்சயமாக தனக்கு சத்தியம் செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கை கண்களில் நிறைந்திருக்க, தன் கால்களை மிக உறுதியுடன் மண் தரையில் ஊன்றி நின்றிருந்த மீனாவின் வெண்மையான செருப்பில்லாத அழகான பாதங்களையும், சிறிய விரல்களையும் பார்த்த சீனு, தன் பார்வையை நிமிர்த்தி, இப்போது பதட்டமில்லாமல், மனதில் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தன் மனதில் பொங்கும் காதலுடன், மீனாவின் முகத்தை சில வினாடிகள் கூர்ந்து நோக்கினான். 

மீனாவின் கண்களிலிருந்து, அவள் உள்ளத்தில் தன்பால் பொங்கி வரும் காதலை, பாசத்தை, நேசத்தை, அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையை, சீனுவால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னைத் திருத்துவதற்காக, இவள் தன் வாழ்க்கையை, பணயம் வைக்க முடிவு செய்துவிட்டாள். நான் அதிர்ஷ்டசாலி. 

சீனு, தன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டதை மீனாவும் உணர்ந்து கொண்டாள். அவள் மெல்லிய உதடுகள் மெதுவாக அசைந்து, ஒரு சிறிய புன்னகை பூவை மலரச்செய்தன. சீனுவும் தன் மனதில் ஒரு தீர்க்கமான முடிவுடன், தனக்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்துக்கொண்டிருக்கும், அந்த அழகான இளம் பெண்னை நெருங்கினான். தன் வலது கையை உயர்த்தி அவள் உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக அழுத்தினான். பின் மெல்ல முனகினான்... "ஆமென்... ஆமென்...ஆமென்.." 

சீனுவின் கரம் தன் கையில் அழுத்தமாக படர்ந்ததும் மீனாவின் முழு உடலும் மெல்ல சிலிர்த்தது. ஒரு ஆண் மகன், தன் மனதில் காதல் உணர்ச்சியுடன், மீனாவை தொட்டது இதுவே முதல் முறை. மீனாவுக்குள்ளும் ஒரு ஆணின் பால் காதல் உணர்வு எழுவது இதுவே முதல் தடவை. அந்த முதல் காதலால், அவள் மனம் விரும்பும் ஆணின் அன்பான முதல் தொடுகையால், இதுவரை அறியாத புதிய சுகமொன்று தன் உடல் முழுவதும் பரவுவதை அவள் உணர்ந்தாள். அந்த சுகத்தை முழுவதுமாக ரசித்து அனுபவித்தாள். மீனா நீளமாக காற்றை தன் மார்புக்குள் இழுத்து வெளியேற்றினாள். 

மீனா தன் எண்ணங்களில் தொலைந்து போனாள். ஒரு ஆண் மகனின் கையில் இத்தனை சக்தி இருக்கிறதா? இதே சீனு, என்னை எத்தனையோ தரம் தொட்டிருக்கான். என் அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லோர் எதிரிலேயும் என் கையை பிடிச்சி இழுத்து இருக்கான்; கையைகுலுக்கறேன்னு என் கையை பிடிச்சி அழுத்தி அழுத்தி, வேணுமின்னே, தன் உடல் வலுவைக்காட்டி, என்னை வலியால அழ வெச்சிருக்கான். என் இரு கைகளையும் முறுக்கி முதுகுக்கு பின்னாடி வெச்சு அடிச்சிருக்கான். அப்போதெல்லாம் அவன் தொடல், இந்த சுகத்தை என் தேகத்துக்குள் எழுப்பியதில்லையே? 

சீனு என் கன்னத்தை கிள்ளியிருக்கான். தலையில குட்டியிருக்கான். ஆனா அப்பல்லாம் எனக்கு கிடைக்காத இந்த சுகம், இப்ப மட்டும் எங்கேயிருந்து வந்தது? சீனு இன்னைக்கு என்னை மிக மிக மென்மையா தொட்டப்ப வந்த சுகம், என் மேனியை சிலிர்க்க வெச்சு, எங்கேயோ கொண்டு போகுதே? 

எங்கள் இருவரின் இந்த தொடுகை எங்கே போய் முடியப்போகுது? தொடுதல் முக்கியமில்லை. தொடுபவர்கள் முக்கியமாகிறார்கள். தொடுபவர்களின் உள்ள உணர்ச்சிகள் முக்கியமாகிறது. தொடுதலின் ரகசியம் புரிந்த மீனா நீண்டப் பெருமூச்செறிந்தாள். 

மீனா, தன் கையில் அழுந்தியிருந்த சீனுவின் கையை, தன் மென்மையான பூ போன்ற கரத்தால் ஒரு முறை வலுவாக அழுத்தியவள், மெல்லிய குரலில் முனகினாள் "தேங்க்யூ சீனு"... அடுத்த நொடி சீனுவின் கையை உதறிவிட்டு, திரும்பி மீண்டும் வெரண்டாவில் ஏற ஆரம்பித்தாள். 

"மீனா ... எனக்கு ரொம்ப பசிக்குது மீனா ... சாப்பிட எதாவது குடேன்..." சீனுவின் கரகரத்த குரல் அவள் காதில் வேகமாக வந்து மோதியது. செல்வா சீனுவை வைத்த கண் வாங்கமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

சீனு, வீட்டினுள் நுழையும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மீனா, ஒரு வினாடி நின்றாள். நின்றவள் மெல்ல திரும்பி, தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில், கண்களில் பாசம் பொங்க சீனுவை பார்த்தாள். அவள் கண்களில் இன்றுவரை இல்லாத ஒரு திருட்டுத்தனம் இப்போது குடியேறியிருந்தது. 

முதலில் ஓரக்கண்ணால் செல்வாவைப்பார்த்தாள். அவன் தலை குனிந்து உட்க்கார்ந்திருக்க, மீனா, ஆசுவாசத்துடன், தன் மெல்லிய செவ்விதழ்களை குவித்து முத்தமிட்டு, சீனுவின் புறம் அந்த முத்தத்தை காற்றில் தள்ளிவிட்டாள். சீனு செய்வதறியாது, மனம் சிலிர்த்து, மீனா தனக்களித்த முதல் முத்தத்தை தன் இதயத்தில் சேகரித்துக்கொண்டு, செல்வாவின் எதிரில் படிக்கட்டில் மெல்ல உட்க்கார்ந்தான். 

தன் தங்கை நடத்திய நாடகத்தின் அர்த்தம் மெல்ல மெல்ல செல்வாவுக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்த மீனாவையும், தன் எதிரில் படிக்கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த சீனுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். 

சீனுவுக்கு, மீனா காதலுடன் முத்தமொன்றை காற்றின் வழியே அனுப்பிவிட்டு, மனதில் கிளுகிளுப்புடன், கிச்சனுக்குள் நுழைந்தாள். வெங்காய சாம்பார் சூடாக ஆரம்பிக்க, கிளம்பிய வாசம், வெராண்டாவில் தனித்துவிடப்பட்டிருந்த செல்வா, சீனுவின் மூக்கைத் துளைத்தது.

சீனு நான் சொன்னதை கேட்டுட்டான். நான் சொன்னதும், கொஞ்சம் கூடத் தயங்காம என் கையைப் புடிச்சு சத்தியம் பண்ணானே? ஆம்பிளைன்னா இவன் தான் ஆம்பிளை. பொம்பளை மனசை, என் பெண்மையை மதிக்க தெரிஞ்ச இவன்தானே உண்மையான ஆம்பிளை! சீனு என் ஆம்பிளை!. மீனாவின் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தது.

என் சீனு பசியோட இருக்கான். அவனுக்கு வெங்காய ஊத்தப்பம்ன்னா ரொம்ப பிடிக்கும்! ரெண்டு நிமிஷ வேலை; மீனா தன் மனதில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உவகையால், காதலால், உடலும் மனமும் "என் சீனு, என் சீனு," எனக்கூவ, கைகள் அவள் மனதின் கிளுகிளுப்பில் பங்கெடுக்க, அவள் வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி என எல்லாவற்றையும் மெலிதாக அரிந்து, அதனுடன் கொத்து கறிவேப்பிலையை உறுவி போட்டாள். தோசை மாவில் எல்லாவற்றையும் கொட்டி கலந்து ஊத்தப்பமாக வார்த்துக் ஹாட் கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

இவ கைகளுக்கு நாங்க எந்த விதத்துல குறைஞ்சுப் போயிட்டோம்? மீனாவின் உதடுகளும், அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்று, காதல் வயப்பட்டிருந்த அந்தப் பருவப்பெண்ணின் உள்ள உணர்வுகளுக்கு ஏற்றவாறு பாடல் ஒன்றை முணுமுணுத்தன.

"காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்; காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்;
சிரித்தாய் இசை அறிந்தேன்; நடந்தாய் திசை அறிந்தேன்;
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்; கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்; ஆழகாய் அய்யோ தொலைந்தேன்;"

மனிதனுக்கு எஜமானன் அவன் மனம்தானே? மனதின் உள்ளுணர்வுதானே மனிதனை இயக்குகிறது. பண்பட்ட மணம், சீரான பாதையை மனிதனுக்கு காண்பிக்கிறது. மனதின் குரலை கேட்பதும், ஒதுக்குவதும் தனிமனிதனின் கைகளில்தான் இருக்கிறது. பாட்டை இசைத்த மீனாவின் மனமே, அவளை எள்ளிநகையாடி வேடிக்கைப் பார்த்தது. எள்ளிய மனம் அவளை மெல்ல மெல்ல கூறு போடவும் ஆரம்பித்தது.

"என்னடி! பாட்டெல்லாம் பலமா இருக்கு?

"நான் சந்தோஷமா இருக்கேன்; பாடறேன்"

"நீ செய்தது சரியாடி?"

"ஊர்ல; உலகத்துல, யாரும் செய்யாததையா நான் செய்துட்டேன்?"

"காலையில எழுந்ததும், உன் சீனு, சீனுங்கறியே, அவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உன் அம்மா மூஞ்சை உன்னால நேராப் பாக்கமுடியுமா?"

"பாத்துத்தானே ஆகணும்"

"நீ செய்தது அப்ப சரிங்கறே?"

"ஒரு வயசு பொண்ணு, தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு காத்துல முத்தம் கொடுக்கறது தப்பா?"

"இப்ப உன் அண்ணன் பக்கத்துல இருந்தான்... காத்துல முத்தம் குடுத்தே?"

"ஆமாம் ..."

"நீ தனியா இருந்து உன் சீனு, என் ஒதட்டுல ஒண்ணு குடுடின்னு கேட்டா?"



"இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் ... ஒத்துக்கறேன்.."

"பதில் சொல்லுடி?"

"ஒதட்டுல முத்தம் குடுத்தா தப்பா?"

"அதை நீதான் சொல்லணும்... தப்பா ... சரியான்னு? நீதானே அந்த வயசு பொண்ணு!"

"தப்பு; சரிங்கறது எல்லாம், அவரவர்களுடைய மனசாட்சியைப் பொறுத்து இருக்கு"

"உன் மனசாட்சி என்ன சொல்லுது?"

"நான் படிச்சு முடிச்சு, சுகன்யா மாதிரி ஒரு நல்லவேலைக்குப் போய், என் சொந்த கால்லே திடமா நிக்கற வரைக்கும், சீனுவை கொஞ்ச தூரமா வெக்கறதுதான் சரின்னு தோணுது.."

"வெரி குட் ... மீனா ..."

"போதுமே ... இன்னும் வேற ஏதாவது கேள்வி பாக்கியிருக்கா?"

"அப்போ, கடைசிவரைக்கும் அவன் கூட நிக்கப்போறே?"

"அதிலென்ன சந்தேகம் ... அவன் கையை நான் புடிச்சாச்சு; இனிமே விடறங்கறதுக்கு பேச்சுக்கே எடமில்லே.. அவனும் "அப்படியே ஆகட்டும்" ன்னு சத்தியம் பண்ணிட்டான்... அவன் எனக்குத்தான்; நான் அவனுக்குத்தான்..."

"சீனு, ஒரு வேகத்துல உன் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கலாம்; ரெண்டு வாரம் கழிச்சு திருப்பியும் பாட்டிலைத் தொறந்து தண்ணி பூஜைக்கு உக்காந்தான்னா என்னடி பண்ணுவே?"

"செருப்படி வாங்குவான் என் கிட்ட..?"

"ம்ம்ம்... அவ்வளவு நம்பிக்கையா அவன் மேல உனக்கு?"

"வாழ்க்கையே நம்பிக்கைங்கற அஸ்திவாரத்துக்கு மேலேதானே நிக்குது?"

"சரிடி... இன்னைக்கு நீ யார் எது சொன்னாலும் கேக்கப்போறது இல்லே?"

"இன்னைக்கு இல்லே! இனிமே என்னைக்குமே யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்; அவன்தான் என் படுக்கைக்கு வரப்போற ஆம்பிளை; நான்தான் அவன் கூட படுக்கப்போறவ; இதுல எந்த மாத்தமும் கிடையாது"

"இதை அவனும்தானே சொல்லணும்?"

"அவன் என் கிட்ட சொல்லிட்டான்"

"எப்போ சொன்னான்?"

"நல்லா கேட்டுக்க; என் கையை புடிச்சு, கூட பொறந்த, என் ஆசை அண்ணன் எதிர்ல "ஆமென்" ன்னு சொன்னானே; அப்போத்தான்..."

"அப்படியா ...?"

"ஆமாம் ... அப்படித்தான் ...!"


No comments:

Post a Comment