Monday 9 March 2015

சுகன்யா... 36

"குமார் ... நான் ரகு பேசறேன் ... ஃப்ரியா இருக்கீங்களா?"

"இப்பத்தான் சாப்ட்டு முடிச்சேன்.... படுக்க வேண்டியதுதான் ... சொல்லுங்க..."

"மாப்ளே! மத்தியானம் ... நம்ம செல்வா என் கிட்ட பேசினாரு! அவரோட அம்மா மல்லிகாவும், கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னாரு.."

"நல்லதுங்க! ரொம்ப சந்தோஷம்! ... நடராஜன் எதுவும் சொல்லலையா?"

"மாப்ளே! நான் சொல்றதை கேளுங்க; என்னதான் இருந்தாலும் .. நாம பொண்ணு வீட்டுக்காரங்க; பையனே போன் பண்ணி சொல்லிட்டான்; அந்தம்மா மல்லிகாவைப் பத்தி நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல்லா; கொஞ்சம் சிணுங்கற டைப்; அந்த அம்மாவே சரின்னு சொல்லும் போது, நாமதான் சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சுக்கணும்.."

"ம்ம்ம் ..அதுவும் சரிதான்..."

"வர்ற வெள்ளிக்கிழமை காலையில நாள் நல்லாருக்குன்னு நம்ம குடும்பத்துக்கு, நல்லது கெட்டது செய்து வெக்கிற அய்யரு சொல்றார்; ராகு காலத்துக்கு முன்னாடி ... வெத்திலை பாக்கு மாத்திக்கலாம்; என்ன சொல்றீங்க?"

"அதுக்குள்ள ஃபங்ஷனை அரேஞ்ச் பண்ண முடியுமா?"


"என்ன மாப்ளே? ... இன்னைக்குத் திங்கள் ... இன்னியிலேருந்து நாலாவது நாள் ... நடுவுல இன்னும் மூணு நாள் நம்ம கையில இருக்கு; மூணு நாள்ல ஒரு கல்யாணத்தையே இந்த காலத்துல முடிச்சிடலாம்?

"சுந்தரி கிட்ட பேசிட்டீங்களா?"

"ம்ம்ம் ... ஆச்சு; சுந்தரியும் சரின்ன்னுட்டா ... இப்பவே நடராஜன் கிட்ட நான் பேசிடறேன்... அன்னைக்கு அவங்களை வரச்சொல்லட்டுமா?"

"சென்னையிலேருந்து வரணுமே? அவ்வளவு சீக்கிரம் காலங்காத்தாலே ...அவங்களாலே வரமுடியுமா?"

"முதல் நாள் சாயந்திரமே வந்துடட்டும் ... நம்ம வீடு ஒண்ணு காலியாதானே இருக்கு! விருந்தாளிங்க ராத்திரி மாடியில தங்கிக்கட்டும்; கீழே விசேஷத்தை வெச்சுக்கலாம். காலையில இந்த வேலை முடிஞ்சா ... மதியானம் சாப்பிட்டுட்டு அவங்க சவுகரியம் படி கிளம்பட்டும் ... "

"புரியுது ... உங்க வீட்டை வாடகைக்கு விட்டுருக்கறதா சுந்தரி சொன்னாளே?"

"பேங்க் மேனேஜர் ஒருத்தர் இருந்தார்; தீடீர்ன்னு ட்ரான்ஸ்ஃபர்ல போயிட்டார். போனவாரம்தான், கீழே மேலேன்னு வெள்ளையடிச்சு, க்ளீன் பண்ணி, இப்ப வீடு சுத்தமா இருக்கு.

"அப்ப ரெண்டு வேளை டிஃபன் ... ஒரு வேளை சாப்பாடு அரேஞ்ச் பண்ணணுமே?"

"அதெல்லாம் ஒரு மணி நேர வேலை; மாப்ளே ... நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான்; கைராசிக்காரன்; அருமையா சமைக்கிறான்; தேவையானதை ஆர்டர் கொடுத்தா போதும்; சுத்தமா செய்து நம்ம வீட்டுக்கே கொண்டாந்து அழகா பறிமாறிட்டு போயிடுவான்!"

"ரகு ... எத்தனை பேரு வருவாங்கன்னு ஒரு ஐடியா நடராஜனை கேட்டுக்கோ..."

"கேட்டுக்கறேன் ... நீங்க எப்ப வர்றீங்க?"

"நாளைக்கு செவ்வாய் இல்லயா? நாளைக்கு ராத்திரி டின்னருக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்... என் கார்லேயே வந்துடலாம்ன்னு இருக்கேன் .."

"சரி ... நீங்க நடராஜனுக்கு, சுகன்யா உங்க பொண்ணுதான்னு சொல்லிட்டீங்களா? என்னமோ இந்த விஷயத்தை சஸ்பென்சா வெச்சிருக்கீங்க?" ரகு சிரித்தான்.

"ரகு சஸ்பென்ஸ்ல்லாம் ஒண்ணுமில்லேப்பா! நடராஜன் நாளைவரை ரெண்டு நாள் லீவு எடுத்திருந்தார். இன்னைக்கு ஒரு வாரம் லீவு எக்ஸ்டண்ட் பண்ணப்போறேன்னு சாயங்காலம் போன்லே சொன்னார். என்னன்னு கேட்டேன்? பையனுக்கு நிச்சயம் பண்ண கும்பகோணம் போக வேண்டியிருக்கும்ன்னார். அப்பவே விஷயத்தை புரிஞ்சுகிட்டு நானும் லீவுக்கு அப்ளை பண்ணிட்டேன்.."

"ம்ம்ம் ...அப்படீன்னா அவரு நம்ப போனை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார்ன்னு சொல்லுங்க;"

"இருக்கலாம்; ஆபீசுக்கு நாளைக்கு ஒரு மணி நேரம் வர்றேன்னிருக்கார்..."

"ம்ம்ம்..."

"நாளைக்கு அவர் ஆஃபீசுக்கு வரும் போது, சுகன்யா என் பொண்ணுதான்னு சொல்லிட்டு, ஃபார்மலா வியாழக்கிழமையே வீட்டுக்கு வாங்கன்னு நானும் பெண்ணை பெத்தவனா அழைச்சிடறேன்..."

"சரி ... அப்புறம் ... நீங்க உங்க வீட்டுலயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க ..."

"ஆகட்டும் ... இப்பவே பேசிடறேன் நான் ..."

"மாப்ளே, நானும் நாளை நைட் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரேன்னு சுந்தரிகிட்ட சொல்லியிருக்கேன். மீதியை நேர்ல பேசிக்கலாம்.'

"நல்லது .. அப்படியே செய்யலாம்... வாங்க..."

செல்வா காம்பவுண்ட் கதவினருகில், சீனுவின் வரவுக்காக நின்றவன், ஆகாயத்தை தன் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தான். ஓ மை காட்! நிலா இன்னைக்கு எவ்வளவு பளிச்சுன்னு இருக்கு? இன்னும் ரெண்டு மூணு நாள்லே முழுசா பெரிசாயிடும். இன்னைக்கு நிலா என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுது. நிலவைப் பாத்துக்கிட்டு இருந்தா மனசு இறுக்கம் குறையத்தான் செய்யுது?

எதுவும் பேசாமல் நிலவை பாத்துக்கிட்டு நிக்கறது சுகன்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தடவை பீச்சுல, பவுர்ணமி நாள்லே, என் கூட நெருங்கி உக்காந்து, என் தோள்ல தன் தலையை சாய்ச்சிக்கிட்டு, மவுனமா நிலவைப் பாத்துக்கிட்டு இருந்திருக்கா?

சுகு, நிலவுல என்னடீ இருக்குன்னு கேட்டா, செல்வா உனக்கு ரசனையே இல்லையேன்னு சிரிப்பா? செல்வா நீ ஒரு மடையன்னு கொஞ்சலா முனகுவா. முனகிக்கிட்டே என் தோள்ல சரிஞ்சு கன்னத்தை கடிச்சு முத்தம் குடுப்பா! அவ உடம்புக்குன்னு ஒரு தனிவாசனைதான்; சுகன்யாவின் உடல் வாசம் அவன் மனதுக்குள் எழுந்ததும், செல்வாவின் உடலில் சூடு ஏறி, அவன் தம்பி லுங்கிக்குள் தடிக்க ஆரம்பித்தான்.

சே...நான் எவ்வளவு வீக்காயிட்டேன்? மனசுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சே? ரோடுல நிக்கறேன்; அவ உடம்பு வாசனை நினைவுக்கு வந்ததும், என் பையன் திமிறி எழுந்துக்கறான். அவன் என்ன பண்ணுவான்? பத்து நாளாச்சு; ஆஸ்பத்திரிக்கு போனதுலேருந்து சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து கெடந்தேன். அவன் கொழுத்துப் போயிருக்கான். அவனை கொஞ்சம் தடவி கிடவி தாஜா பண்ணாத்தான் ஒரு ரெண்டு நாளைக்கு அடங்கி கிடப்பான்...!

சட்டுபுட்டுன்னு கல்யாணம் முடிஞ்சு சுகன்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்ன்னா, இந்த கை வேலைக்கு ஓய்வு குடுக்கலாம். நம்ம சுப்பையா கல்யாணம் ஆனவன்; கல்யாணம் ஆகியும் தன் கையை யூஸ் பண்ணிகிட்டுத்தான் இருக்கேங்கறானே? கட்டின பொண்டாட்டி அவன் கூட ஒத்துப்போவலையா?

அடச்சை...என் புத்தி எங்க போவுது? அடியேங்கறதுக்கு பொண்டாட்டியைக் காணோம்...அதுக்குள்ள புள்ளை எத்தனை பெத்துக்கலாம்ன்னு யோசனை பண்றேன்.. செல்வா தன்னை நொந்து கொண்டான்.

சுகன்யாவும் இப்ப என்னை மாதிரி நிலாவை பாத்துக்கிட்டு இருப்பாளா? உண்மையிலேயே எனக்கு ரசனை கம்மிதான்னு ஒத்துக்கணும். அவளை மாதிரி சும்மா நிலாவையே பாத்துக்கிட்டு இருக்குறது சுத்த போர் ... ஆனா இன்னைக்கு என்னமோ நிலா அழகா இருக்கற மாதிரி தோணுது!

"ச்சை..." எனக்கு திரும்ப திரும்ப சுகன்யா நெனைப்பே ஏன் வந்து தொலைக்குது? அவளுக்கும் என்னைப் பத்திய நினைவுகள் வருமா? ச்சே...ச்சே.. ஒரு பொண்ணை காதலிச்சாலும் காதலிச்சேன்... காதலிக்க ஆரம்பிச்ச நாள்லேருந்து என் வாழ்க்கையே நாறிப் போச்சு; இந்த காதல்ங்கறது ஒரே நாய் பொழைப்பா இருக்கே?

சீனுவைத்தான் கேக்கணும்? தனிமையை நீ எப்படிடா சமாளிக்கறேன்னு? அவனும்தான் கொஞ்ச நாள் அந்த ஜானகியோட தங்கச்சி, ஜெயந்தி - கும்முன்னு இருக்கா மச்சான்னு, நூல் வுட்டுப்பார்த்தான். ஜெயந்தி யாரு ஆளு? கழுவற மீன்ல நழுவற மீனாச்சே அவ? சாவித்திரி பெத்த பொண்ணாச்சே! சும்மாவா? இவனுக்கு அவ்வளவு சுலபமா உஷாராவாளா?

சீனுதான் கையில வர்ற பைசாவை, அது எவ்வளவாயிருந்தாலும் அன்னைக்கே பீரா குடிச்சு, மூத்திரமா பேஞ்சிடறான். பைசாவை சிகரெட்டா கொளுத்தி ஊதி புகையாக்கிடறான். ஒரு நல்ல பொண்ணு, வேலாயுதத்துக்கு ஆப்ட்ட மாதிரி சீனுக்கும் கெடைச்சா இவனும் உருப்படுவான்! இல்லேன்னா கோயிந்தா .. கோயிந்தான்னு கடைசி வரைக்கும் அல்லாட வேண்டியதுதான்?

ஜெயந்தி ஒரு தரம் இவனை மூஞ்சால அடிச்சதும் "மச்சான், அவ கார் வெச்சிருக்கறவன் கிட்டத்தான் உஷாராவாளாம். இவள்ளாம் நம்ம ரேஞ்சுக்கு ஒத்துவரமாட்டா"ன்னான். என் பாட்டனுக்கு அறுபது ஏக்கர் மண்ணு இருந்திச்சி... அவரு எல்லாத்தையும் காஞ்சிபுரம் மொட்டைகோபுரத்துல, பொட்டைச்சியோட புட்டத்துலத்தான் தொலைச்சிட்டாரு.. இதெல்லாம் இந்த சிறுக்கிக்கு தெரியுமா? ஹாய் சொல்லும் போதே நான் எப்ப காரு வாங்குவேன்னு இவ என்னை கேக்கறா... இவ சகவாசம் எனக்கு சரிபடாதுன்னு பேசாம திரும்பிட்டேன்னான்...

அதுக்கப்புறமா, சீனு, எந்த பொண்ணையும் திரும்பியே பாத்தது கிடையாது. மச்சான் ... பொம்பளைங்களே மாயப் பிசாசுங்க! நீயும் ஜாக்கிரதையா இரு; எவ கிட்டேயும் சிக்கிடாதே? தூக்கிக் கட்டி, உள்ளே ஸ்பான்ச்சை ஃபிட் பண்ணிக்கிட்டு, அசைஞ்சு அசைஞ்சு நடப்பாளுங்க; உண்மையில உள்ள ஒண்ணும் கிடையாது; இருக்கற மாதிரி சீன் காட்டுவாளுங்க; பையில காசு இல்லாம கிட்டப் போனே ... கொட்டை மேல எட்டி உதைப்பாளுங்கன்னு, எனக்கு புத்தி சொன்னான்.

கொஞ்ச நாள் தாடி வெச்சுக்கிட்டு, சித்தர்கள் ரேஞ்சுல தேங்காய் பாலு, மாங்காய் பாலுன்னு அவனுக்கும் புரியாம, கேக்கறவனுக்கும் விளங்காம எதையோ பேசிக்கிட்டு திரிஞ்சான். பொண்ணுங்களை கணக்கு பண்ற நம்ம பசங்களைப் பாத்து "எருக்குழியை நோக்கி ஏண்டா ஓடறீங்க?" எல்லாரையும் பாத்து நக்கலா சிரிச்சிக்கிட்டு இருக்கான். "ஆனந்த ஜோதியில என் கூட வந்து ஐக்கியமாகுங்கடான்னு" குறைஞ்சது வாரத்துல ரெண்டு நாள் பசங்களை உக்கார வெச்சு பாடம் நடத்திக்கிட்டு இருக்கான்.

சீனு நிஜமாவே நீ ஒரு ஜெம்முடா! உன் குணத்தை, உன் அருமையான நட்ப்பை, வெள்ளை மனசை புரிஞ்சிக்கற பொண்ணு இனிமேதானா உனக்காக பொறக்கப் போறா? கண்டிப்பா அவ எங்கேயோ பொறந்துதான் இருப்பா! கவலைப்படாதே மாப்ளே... சரியான நேரத்துல அவ உன் வாழ்க்கையில வந்து சேருவா... செல்வாவின் மனதில் சீனுவுக்காக அன்பும் பாசமும் ஒருங்கே சுரந்தது.

தெரு முனையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சீனுவாக இருக்குமோ? ஆட்டோவின் வேகம் குறைய ஆரம்பித்தது. வேகம் குறைந்த அந்த ஆட்டோ, அவன் வீட்டின் முன் தத்தி தத்தி வந்து நின்றது. அவனே தான்; சொன்ன மாதிரி வந்துட்டான். ஆட்டோவிலிருந்து இறங்கிய சீனு, தன் கையிலிருந்த சிகரெட்டை வாயில் வைத்து ஒரு முறை நீளமாக இழுத்தவன், கையிலிருந்த துணுக்கை வீசி எறிந்துவிட்டு, செல்வாவை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினான்.

ஹாலில் உட்க்கார்ந்து படித்துக்கொண்டிருந்த மீனா ஆட்டோ சத்தம் கேட்டு, வரண்டாவிற்கு வந்தாள். வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த சீனுவின் நடையைக் கண்டதும், அவன் அன்று ஜலகீரிடை நடத்திவிட்டு வருகிறானென்று அவளுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. அவள் மனதில் சுரீரென்று வலித்தது. ஏன் இவன் இப்படி கெட்டுக் குட்டிசுவராப் போய்கிட்டு இருக்கான்?

இவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் எதுக்கு இவனைப்பத்தி கவலைப்படணும்? இவன் செல்வாவோட ஃப்ரெண்ட்; ரெண்டு பேரும் காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சாங்க; என்னோட அஞ்சு வயசுலேருந்து இவனை எனக்குத் தெரியும்; என் வீட்டுக்கு நினைச்சப்ப வர்றான்; இந்த வீட்டுல உரிமையா சாப்பிடறான்; தூங்கறான்; நினைச்சப்ப எழுந்து போறான்.

அதே உரிமையோட இந்த வீட்டுல எந்த வேலையா இருந்தாலும், யாரும் சொல்றதுக்கு முன்னே தானே தலை மேல இழுத்து போட்டுக்கிட்டு செய்யறான். இந்த வீட்டுக்குள்ள செல்வா மாதிரி இன்னொரு ஆம்பிளையா இருக்கான். நம்ம அப்பாவைப் பாத்தா மட்டும் இவனுக்கு கொஞ்சம் மரியாதை; பயம் உண்டு; அதனால அவரை மட்டும் எதுவும் கலாய்க்காம ஒதுங்கி நிக்கறான். மத்தப்படி இந்த வீட்டுல யார்கிட்டவும் இவனுக்கு சுத்தமா பயங்கறதே கிடையாது.

அம்மாவுக்கு இவன் மேல அப்படி என்னத்தான் பிரியமோ? எது செய்தாலும் சீனுவுக்கு ரெண்டு எடுத்து வைடி ... போன் பண்ணி வரச்சொல்லுடி; ஆறிப்போனாலும் பரவாயில்லே; அவன் வந்தான்னா குடுக்கலாம். அம்மாவுக்கு அவன் மேல பாசம் பொங்கி வழியும். இன்னைக்கு கூட சாயந்திரம் டிபனுக்கு செய்த வாழைக்காய் பஜ்ஜி, எடுத்து வெச்சு ஆறி அவலாப் போயிருக்கு. ரெண்டு தரம் போன் பண்ணேன்; வந்து தின்னுட்டுப் போடான்னு; அய்யா, சாவகாசமா கட்டிங் வுட்டுட்டு பத்து மணிக்கு மெதுவா நகர் ஊர்வலம் வர்றாரு?

திடீர்ன்னு கொஞ்ச நாளா இவனைப்பாத்தா, என் மனசுக்குள்ள ஒரு இனம் தெரியாத இரக்கம், ஒரு பரிவு தன்னாலே வருதே அது ஏன்? அதுவும் செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்ததுலேருந்து, நானும் பாக்கறேன், இந்த இரக்கம், பரிவு, ஒரு பாசம், ஒரு பிரமிப்புன்னு இவனை பாக்கும் போது, என் மனசுக்குள்ள வெள்ளமா ஏன் பொங்குது? என் அண்ணன் கூடவே இருந்து அவனுக்கு எல்லா உதவியும் பண்ணாங்கறதுனலயா? நிச்சயமா இல்லே? எத்தனையோ தரம் இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள்ள நம்ம வீட்டுக்கு அவன் உதவி பண்ணியிருக்கான்.

சீனு நல்லா சம்பாதிக்கறான். இவனுக்கு, எல்லோருக்கும் உதவணுங்கற எண்ணம் இருக்கு. கூப்பிட்ட குரலுக்கு, என்ன வேணும்.. வந்துட்டேன்னு எந்த நேரத்துலயும் குரல் குடுக்கறவன். ஒருத்தன் கிட்ட பழகிட்டா அவனுக்காக தன் உயிரையே குடுக்க ரெடிங்கறான். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், ஒரே பிள்ளை. அப்படி இருக்கும் போது இவனுக்கு என்ன கவலை? எதுக்கு இப்படி பார்ட்டி பார்ட்டின்னு ஒரு சாக்கை சொல்லிக்கிட்டு, இந்த குடியை பழக்கிக்கிட்டு, ஏன் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போறான்?

எவன் அழிஞ்சா எனக்கென்னன்னு என்னால இருக்க முடியலியே? இதுக்கு காரணம் என்ன? சின்ன வயசுலேருந்து இவனை பார்க்கறதுனால இருக்குமா? அறியாத வயசுலேருந்தே இவன் கூட பழகறதுனால இருக்குமா? என் அண்ணனுக்கு உயிர் சினேகிதன்ங்கறதுனால இருக்குமா? தெரியலை... எனக்கு தெரியலை. ஆனா இவன் மேல ஒரு தனிப்பட்ட அன்பு எனக்குள்ள இருக்குங்கறது மட்டும் உண்மை..

பார்ட்டின்னு சொல்றது எல்லாம் பொய், புளுகு. இப்பல்லாம் வாயைத் தொறந்தா அதிகமா பொய் பேசறான். அவன் பொய் பேசினா எனக்கு என்ன? பேசிட்டு போகட்டும். எனக்கென்ன நஷ்டம்?இவனே எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கிட்டு நாலு பேருக்கு பார்ட்டி குடுக்க வேண்டியது. எவன் கிட்டவாவது திரும்ப பார்ட்டி கொடுடான்னு அவனுங்க கொடலை அறுக்கவேண்டியது; குடிச்சுட்டு இங்க மாடியில வந்து யாருக்கும் தெரியாம சுருண்டுக்க வேண்டியது. இதே வழக்கமா போச்சு. இன்னைக்கு இது ஒரு முடிவு கட்டறேன்.

எதுக்காக இப்படி குடிச்சு தன் உடம்பை கெடுத்துக்கறான்? இதுக்கு பதில் எனக்கு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன். கேட்டா, யாருக்குமே நேரா பதில் சொல்றது கிடையாது. எப்பவும் உதட்டுல ஒரு கள்ளத்தனத்தோட சிரிச்சுக்கிட்டே போயிடறான். வாரத்துல ரெண்டு நாள் குடிக்கறதுங்கறது இவனோட தொழிலாப்போச்சு... குடிக்கற நாயி ... குடிச்சுட்டு கண்ணு மறவா கெடக்க வேண்டியதுதானே? என் எதிர்ல ஏன் வர்றான்?

இவன் அப்பா அம்மா இவனுக்கு எவ்வளவோ சொல்லி சொல்லிப் பாத்து, இவன் தலையில தண்ணித் தெளிச்சுவிட்டுட்டாங்க; என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தூரம் புத்தி சொன்னாங்க; எதுக்காவது அசைஞ்சு குடுக்கறானா? இல்லே; இதெல்லாம் திருந்தற ஜென்மம் இல்லன்னு இவங்களும் விட்டுட்டாங்க; செல்வா மட்டும் என்னப் பண்ணுவான்? செல்வா பேச்சை இவன் ஏன் கேக்கப் போறான்? ஒரு நாள் ரெண்டு நாள் பழக்கமா இவங்க ரெண்டு பேருக்குள்ள; இருபது வருஷப் பழக்கம். அந்த உரிமையில செல்வா குடிக்காதேடான்னு சொன்னா அவனை மதிக்கறதேயில்லை.



இந்த சீனு யார் பேச்சையும் கேக்கறது இல்லே? இவனை அதட்டி கேக்கறதுக்கு யாருமே இல்லையா? நான் கேக்கறேன் இன்னைக்கு! ம்ம்ம். மீனா, நீ எந்த உரிமையில அவனை கேக்கப்போறே? இந்த கேள்விக்கு இப்ப இந்த நிமிஷம் என் கிட்ட பதில் இல்லே; ஆனா இவனை இந்த குடிப்பழக்கத்துலேருந்து விடுவிக்கணும்ன்னு எனக்கு தோணுது! இவன் குடிச்சா எனக்கென்னன்னு என்னால பேசாம இருக்கமுடியலை. இவனை ஒரு நல்ல மனுஷனா பாக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.

ஊர்ல எவ்வளவோ பேர் குடிக்கறாங்க, குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறாங்க; அவங்களை எல்லாம் பாத்தா எனக்கு ஒரு அருவருப்புத்தான் வருது. சாதாரணமாக குடிச்சுட்டு விழுந்து கிடக்கறவனை பாத்தா நான் ஒதுங்கி போய்க்கிட்டே இருக்கேன்.
இவன் குடிச்சுட்டு உளர்றதைப் பாத்தா மட்டும், என் மனசுக்குள்ள ஏன் இவ்வளவு கோபம் வருது? இவன் யாரு? நான் யாரு? இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? எதுக்காக நான் அனாவசியமா கோபப்படறேன்? இவனோட குடிப் பழக்கத்தைப் பாத்து, இவன் கிட்டவும் அருவருப்புத்தானே வரணும்? அருவருப்புக்கு பதிலா இவனைத் திருத்தணுங்கற எண்ணம் எனக்கு ஏன் வருது?

"ஹாய் மீனா டார்லிங், இன்னும் நீ தூங்கலையா? சீனு அவளைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து, தன் வாயை நீளமாக திறந்து முதலையைப் போல் இளித்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் தன் கடுகடுக்கும் முகத்தால், அவனை முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பிகொண்டதும், போச்சுடா, இன்னைக்கு இவ தன் கையால எனக்கு சோறு போடமாட்டா; அதுமட்டுமில்லே; மீனா நிச்சயமா இன்னைக்கு எனக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணப் போகிறாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. 

மீனா கண்ணு; ஒரு கிளாஸ் தண்ணி கிண்ணி குடுடி; ரொம்பத் தாகமா இருக்கு" சீனு அவளிடம் குழைந்தான்.

"அடிச்சுட்டு வந்து இருக்கற தண்ணி போதாதா?" இந்த வீட்டுல உனக்கு இனிமே தண்ணியும் இல்லே; கிண்ணியும் இல்லே...வேற எதாவது மடத்தை பாரு" மீனா வெடிக்க ஆரம்பித்தாள்.

"மீனா.." செல்வா ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

"சீனு ... வாழ்க்கையில உருப்படணுங்கற எண்ணம் உனக்கு சுத்தமா இல்லையா?" மீனா எடுக்கும் போதே ராஜதானியின் வேகத்தில் சினத்துடன் பேச ஆரம்பித்தாள். கோபத்தின் காரணமாக அவள் உதடுகள் இலேசாக துடித்து, வாயிலிருந்து சிறு எச்சில் துளிகள் சிதறின.

ம்ம்ம்... எனக்கு இது ஒரு தலைவேதனை ... இவங்க ரெண்டுபேருக்குள்ள வர்ற வழக்கமான போராட்டம் ஆரம்பிச்சிடிச்சி. சீனு குடிச்சா இவளுக்கு என்னா? குடிக்கலைன்னா இவளுக்கு என்னா? என் பேச்சையே இந்த நாய் கேக்க மாட்டேங்கறான். நான் ஒரு முக்கியமான வேலையா இவனை வரச்சொன்னேன். இவ நடுவுல பூந்து, இவன் கிட்ட நாட்டாமை பண்ண ஆரம்பிச்சிட்டா;

இன்னைக்கு என் வேலை முடிஞ்ச மாதிரிதான். இதான் என் போதாத காலங்கறது? எங்கப் போனாலும், எந்த வேலைக்குப் போனாலும், எனக்கு முன்னாடி சனியன் போய் நிக்கறான்? சனிக்கு கால் ஊனம்ன்னு சொல்றாங்களே? அவன் எப்படி என் லைப்ல மட்டும் வேக வேகமா ஓடறான்?

சீனு இன்னைக்கு குடிச்சிட்டு வந்து இருக்கறது மீனாவுக்கு கிளியரா தெரிஞ்சு போச்சு; இவன் வாரத்துல ரெண்டு நாள் குடிச்சுட்டு வந்து, மாடியில என் கூட மல்லாந்து கிடக்கறது மீனாவுக்கு சுத்தமா புடிக்கலை. இன்னைக்கு இவன் ஒழிஞ்ச்சான். செல்வா மனதுக்குள் புழுங்கிக்கொண்டே தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

"மீனா .. மெதுவா பேசுடி... அப்பா முழிச்சுக்கிட்டு இருக்கப் போறார்?" செல்வா நடுவில் நுழைந்தான்.

"சாரி மேடம்... கோச்சிக்காதீங்க! ஃப்ரெண்ட் ஒருத்தன் பார்ட்டி குடுத்தான்; வேணாம்பான்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்; ரொம்ப வற்புறுத்துனானுங்க; அதுக்கப்புறம் தட்ட முடியலை; நம்ம வேலாயுதத்துக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு; நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; நீயும் என் கூட அந்த சந்தோஷத்துல கலந்துக்கன்னு சொன்னான்."

"செல்வாவுக்கும் அவனை நல்லாத் தெரியும். எங்களுக்கெல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட்; நீ வேணா இவனைக் கேட்டுப் பாரேன்; இதெல்லாம் இன்னைக்கு ஒரு சோஷியல் நீட் ஆயிடிச்சி மீனா! புரிஞ்சுக்கம்மா!" சீனு தன் தரப்பு நியாயத்தை மெதுவாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.

"நீ தம் அடிக்கறது; ஒரு சோஷியல் நீட்; நான் புரிஞ்சிக்கறேன்; நீ தண்ணி அடிக்கறது ஒரு சோஷியல் நீட்; அதையும் நான் புரிஞ்சிக்கறேன். ராத்திரியில வேளா வேளைக்கு வீட்டுக்குப் போய் தூங்காம ஊர் சுத்தறயே, அதுவும் ஒரு சோஷியல் நீட்; எனக்கு நல்லாப் புரியுது; ஆனா உனக்கு கேன்சர் வந்து சீக்கிரமே சாகப் போறதும் ஒரு சோஷியல் நீடா? சொல்லுடா நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு... இதை நீ என்னைக்கு புரிஞ்சுக்குவே?" அவள் முரட்டுத்தனமாக சீறினாள்.

"ஒரே புள்ளை; மணி பத்தாச்சு; பெத்த புள்ளை இன்னும் வீட்டுக்கு வரலையே, அவனுக்கு என்ன ஆச்சோ; ஏது ஆச்சோன்னு; வயிறு கலங்கி போய் உன் ஆத்தாக்காரி, 'மீனா ... என் புள்ளை சீனு உங்க வீட்டுல இருக்கானான்னு' இப்பத்தான் எனக்கு போன் பண்ணா. இந்த வயசுல, ரெண்டு நாளைக்கு ஒருதரம் இப்படி பதறிப் போறாங்களே, அந்த வயசான கெழத்துக்கு இது மாதிரியான தேவையில்லாத மன உளைச்சல், நிச்சயமா ஒரு சோஷியல் நீட்; எனக்கு இதுவும் நல்லாப் புரியுது.

"மீனா ... ப்ளீஸ் ... ப்ளீஸ்... உனக்கே நல்லாத் தெரியும்! நான் என்ன குடிகாரனா? தெனம் தெனமா குடிக்கறேன்? ஏதோ அப்பப்ப மாசத்துல, ஒரு ரெண்டு தரம் இப்படி பார்ட்டியில கலந்துக்கறேன். கட்டாயப்படுத்தறாங்களேன்னு ஒரு பெக் இல்லன்னா ரெண்டு பெக் அவ்வளதான். நீ எப்பவும் என்னை இந்த விஷயத்துல தப்பாவே பாக்கறே!"

"ஊர்ல இருக்கறவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது? உனக்கு என்னைக்கு கல்யாணம் ஆவப்போவுது? உனக்குன்னு ஒரு குடும்பம் என்னைக்கு வரப்போவுது? நீ செய்யற வேலையைப் பாத்தா, ஒழுங்கா வாழ்க்கையில செட்டில் ஆகணும்ன்னு நினைக்கற எவளும், உன்னைத் திரும்பி கூட பாக்க மாட்டா...அப்படியே எவளையாவது உன் அம்மா உனக்கு கட்டி வெச்சாலும், அவ மூணு மாசத்துல உன்னை விட்டுட்டு ஓடிப்போயிடுவா" மீனாவுக்கு மூச்சிறைத்தது.

"மீனா ... போதும்டீ ... அவனை வாசல்லேயே நிக்க வெச்சு நீ கோர்ட் விசாரனையை ஆரம்பிக்காதடி... சத்தம் கேட்டு அப்பா வந்துடப் போறார்." இந்த நேரத்துல அவரு இங்க வந்தா, கதையே கந்தலாயிடும்; செல்வா தன் நண்பனுக்காக வாதாட ஆரம்பித்தான்.

"வரட்டுமே; உங்க ரெண்டு பேருக்கும் அவருகிட்ட மட்டும் பயம் இருக்குல்லே? இவன் குடிச்சுட்டு சத்தம் போடாம இங்க வந்து படுத்திருந்துட்டு, காலையில நல்லப் புள்ளையா காப்பி வாங்கி குடிச்சுட்டு, தன் வூட்டுக்கு எழுந்து போவான். கண்டவனுங்க இங்க குடிச்சிட்டு வந்து படுத்து தூங்கறதுக்கு, எங்கப்பன் என்னா லாட்ஜா கட்டி வுட்டு இருக்கான். இல்ல இது முனிசிபாலிட்டிகாரன் கட்டி வெச்சிருக்கற தர்ம சத்திரமா? குடிக்காதடான்னு யார் சொன்னாலும் இவன் ஏன் கேக்க மாட்டேங்கறான்?"

"மீனா ... சீனு என் ஃப்ரெண்ட்.. அவன் கண்டவன் இல்லே; இதை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கிட்டு பேசு.. அவனை நான் தான் வரச்சொன்னேன்; நீ எதுக்கு இப்ப தேவையில்லாம அவனை ரப்சர் பண்றே?

"மீனா குட்டி... ப்ளீஸ் .. இன்னைக்கு ஒரு நாளைக்கு கண்டுக்காதே; தப்பு நடந்து போச்சு; இனிமே இந்த பார்ட்டிக்கெல்லாம் சத்தியமா போக மாட்டேன்; மெதுவா பேசும்மா... நான் என்னா இந்த வீட்டுல கண்டவனா...?" சீனு குழைந்து கொண்டே அவளை நோக்கித் தன் கைகளை விளையாட்டாகக் கூப்பினான்.

"டேய் நீ என்னை குட்டி கிட்டின்னுல்லாம் கூப்பிட வேண்டிய அவசியமில்லே? குடிகாரன் பேச்சு; விடிஞ்சாப் போச்சு; உன் பேச்சைத் தண்ணி மேலத்தான் எழுதி வெக்கணும்.." மீனா மீண்டும் வெடித்தாள்.

"சாரி மீனா நீ கோபமாயிருக்கே ... நான் உன்னை இனிமே குட்டின்னு கூப்பிடமாட்டேன் ... பெரிசுன்னு கூப்பிடட்டா? சீனு தன் சென்ஸ் ஆஃப் ஹுயூமரை துணைக்கு அழைத்தான்.

"நீ என் கிட்ட பேசாம இருந்தினாலே அதுவே ஒரு பெரிய புண்ணியம் ... உன்னைப் பாத்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது!"

"மீனா .. விடுடி... அவன் கிட்ட சும்மா விளையாடதடி; சீனு பசியோட வந்திருக்கான் ... நானும் இன்னும் சாப்பிடலை ... ஆளுக்கு ரெண்டு தோசை சூடா ஊத்திக்குடேன்... சாயங்காலம் செஞ்ச பஜ்ஜி இருந்தா அதையும் கொண்டாடி; தொட்டுக்க சின்ன வெங்காயம் போட்டு, தேங்காய் அரைச்சு ஊத்தி, ஹோட்டல் சாம்பார் வெச்சிருக்கேன்னு அம்மா சொன்னாங்க" செல்வா தன் டிமாண்டை நேரம் பார்த்து அவள் முன்னால் வைத்தான்.

"நான் என்னா இவன் பொண்டாட்டியா? இவன் என்னா என் கழுத்துல தாலியா கட்டியிருக்கான்? இவன் குடிச்சுட்டு நேரம் கெட்ட நேரத்துல நம்ம வீட்டுக்கு வருவான்; இவனுக்கு நான் சுட சுட தோசை வாத்துப் போடறதுக்கு? பார்ட்டி குடுத்தவன் தோசை வாங்கிக் குடுக்கலையா? நீ ஒரு குடிகாரன் கூட சேர்ந்துக்கிட்டு அவனுக்கு வக்காலத்து வாங்கறே? மீனா படபடவென் வேகமாக பொரிந்துவிட்டு, தன் பின்னலின் முனையை திருகிக்கொண்டு நின்றாள். அவள் கைகள் இலேசாக நடுங்கி, அவள் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.



"மீனா ... போதும் நிறுத்துடி ... சீனு என் ஃப்ரெண்டு; அவன் எப்ப வேணா என் வீட்டுக்குள்ள வருவான். போவான்; நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; நீ இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசறே; எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்கு; சொல்லிட்டேன் நான்; அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் ..." செல்வாவுக்கு தன் தங்கை மீது எரிச்சலுடன் கோபமும் பொங்கியது.

"உன் ஃப்ரெண்டுன்னு நீ தானே சொல்றே? நீதானே வரச்சொன்னே? அப்ப நீ தோசையாவது சுட்டு குடு; சோறாவது ஆக்கிப் போடு; என்னை ஏன் உன் ஆசை பிரண்டுக்கு தோசை சுட்டு குடுக்க சொல்றே?" அவள் தன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள்.


No comments:

Post a Comment