Saturday 31 August 2013

எமி


ஊர்: ந்யூ யார்க், யூ.எஸ் இடம்: என் ஆபீஸ் தேதி: செப்டம்பர் 6, 2001 நான் என்னுடைய மேனேஜருக்கு மெயில் டைப் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பின்னால் நிழலாடுவதை உணர்ந்தேன். அது எமிதான் என்பதை பட்டென்று என் மூளை எனக்கு உணர்த்தியது. அவளிடம் இருந்துதான் இப்படி ஒரு இனிய வாசனை கிளம்பும். நான் அவள் வந்ததை கவனியாதது போல, படபடவென்று கீ-போர்டில் எதையோ தட்டினேன். ஒரு ஐந்தாறு வினாடிகள் காத்திருந்த எமி அப்புறம், "ம்க்கும்.." என்றாள். நான் திரும்பி பார்த்தேன். அப்போதுதான் அவளை கவனிப்பது போல நடித்தேன். முகத்தில் ஒரு போலி மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு, "ஹாய் எமி.. குட் மார்னிங்..!!" என்றேன். "குட் மார்னிங் அசோக்.. காஃபி சாப்பிட போலாமா..?" என்று அவளும் அழகாக புன்னகைத்தாள். "சாரி எமி.. யூ கேரி ஆன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..!!" "என்ன வேலை..?"

"ஒரு மெயில் டைப் பண்ணிட்டு இருக்கேன்..!!" "எவ்வளவு டைம் ஆகும்..?" "டென், பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்..!!" "ஓகே.. வெயிட் பண்ணுறேன்..!!" சொன்ன எமி, அருகில் கிடந்த சேரை எடுத்துப் போட்டு, அங்கேயே அமர்ந்து கொண்டாள். நேரம் ஆகும் என்று சொன்னால், அவள் சென்று விடுவாள் என்று எதிர்பார்த்த எனக்கு பலத்த ஏமாற்றம். என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் மானிட்டர் மீது பார்வையை வீசினேன். உண்மையில் அந்த மெயிலை டைப் பண்ணி முடித்துவிட்டேன். 'send' பட்டனை தட்ட வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவளிடம் டைமாகும் என்று சொன்ன காரணத்தால், எதையோ டைப் செய்து, பின்பு டைப் செய்ததை டெலீட் செய்து கொண்டிருந்தேன்.என் பெயர் அசோக். தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், எதற்கெடுத்தாலும் அரிவாளை தூக்கும் ஒரு வம்சத்தில் பிறந்தவன். காதுகுத்து பத்திரிகையில் பெயர் போடவில்லை என்பதற்காக, பல கொலைகள் செய்த கதை எல்லாம் என் வம்சத்தில் நிறைய உண்டு. சாதிப்பிரச்சனை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆயுத பூஜை பூசணிக்காய் மாதிரி தலைகள் உருளும். எங்கள் ஊரில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை கூட தாண்டாது. என்னுடைய வம்சம்தான் அப்படியே ஒழிய, நான் ரொம்ப சாது. பயந்தாங்கொள்ளி என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த அரிவாள், வெட்டு, ரத்தம் எல்லாம் அலர்ஜியான விஷயங்கள். என் ஊரையே எனக்கு பிடிக்காமல் போனது. நன்றாக படிக்க வேண்டும் என்பது மட்டும் மனதில் இருந்தது. அப்பாவிடம் அடம் பிடித்து, சிறு வயதில் இருந்தே வெளியூரில் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன். ஊருக்கே எப்போதாவதுதான் செல்லுவது. ஐ.டி எஞ்சினீரிங் முடித்தேன். கேம்பசிலேயே நல்ல வேலை கிடைத்தது. சென்னையில் பிரபலமான ஐ.டி நிறுவனம். வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. ஆறு மாதங்கள் முன்புதான், யூ.எஸ்-சுக்கு ஆன்சைட் வந்தேன். ஆக்சுவலாக எனக்கு ஆன்சைட் வர விருப்பமே இல்லை. ஆங்கிலம் தத்தி தத்தித்தான் பேசுவேன். ஆனால் என்னுடைய திறமையை பார்த்து, நான்தான் அந்த வேலைக்கு சரியாக இருப்பேன் என்று சொல்லி என் மேனேஜர் என்னை அனுப்பி வைத்தார். புது நாடு.. புது இடம்.. புது மக்கள்.. புது பழக்க வழக்கங்கள்..!! நான் அமெரிக்காவை பார்த்து சற்றே மிரண்டு போயிருந்தேன். என்னைத்தவிர என்னுடைய டீமில் எல்லோருமே அமெரிக்கர்கள். 'தஸ்.. புஸ்..' என்று பேசிக்கொண்டு..!! யாரை பார்த்தாலுமே ஒருவித பயம். பட்டென்று ஒரு தாழ்வு மனப்பான்மை மனதுக்குள் புகுந்து கொள்ளும். இது பத்தாதென்று, நான் வந்த அடுத்த நாளே என் ஆபீசில் ஒரு பார்ட்டி. எனக்கும் மெயில் வந்திருந்தது. நானும் மடத்தனமாக சென்று விட்டேன். அந்த பெரிய ஹாலில், சுற்றிலும் வெள்ளைக்காரர்கள். எல்லோருமே ஜோடியாகவோ, க்ரூப்பாகவோ நின்று, புரியாத ஸ்லாங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். கையில் வைத்திருந்த தட்டில் 'பஃபே' ஐட்டங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு, அதை கடித்தவாறே, ஸ்டைலாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. அந்தக்கூட்டத்தில் நான் தனித்து விடப்பட்டதை தெளிவாக உணர்ந்தேன். 'உணவை எடுத்து சாப்பிடலாமா.. சாப்பிட்டால் யாராவது திட்டுவார்களோ..' என நான் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்த போதுதான், தட்டு நிறைய உணவுப் பண்டங்களோடு அந்தக்கை என் முன் நீண்டது. என் எமியின் கை..!! திரும்பினால் முகம் நிறைய புன்னகையோடு, கவுன் அணிந்த தேவதையாக இவள் நின்றிருந்தாள். "ஹேவ் ஸம் புட்..!!" என்று கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நான் தயங்கி தயங்கி அந்த பிளேட்டை வாங்கிக் கொண்டேன். உடனே அவள் கொஞ்சமும் புன்னகை குறையாமல், தன் கையை நீட்டினாள். "ஐ ஆம் எமி..!! நீதான இன்டியால இருந்து.. புதுசா டீம்ல ஜாயின் பண்ணிருக்கிற அசோக்..?" "எ..எஸ்..!!" என்றவாறு நானும் கை நீட்டி குலுக்கினேன். "நானும் உன் டீம்தான்.. நைஸ் டூ ஹேவ் யூ ஹியர்..!! வெல்கம் டூ யூ.எஸ்...!!" "தே..தேங்க்ஸ்..!!" "ரொம்ப நேரமா தனியா நின்னுட்டு இருந்த.. யூ வான்ட் எ கம்பெனி..?" "யா..!!" "ஓகே.. நான் கம்பெனி தர்றேன்.. சொல்லு..!! இன்டியால எந்த பார்ட் நீ..?" "ஐ.. ஐ ஆம் ஃப்ரம் சென்னை..!!" "ஓ..!! தி பாப்புலர் ரஜினிக்காந்த்.. அவர் ஊரா..?" என மிகவும் சகஜமாக கேட்டாள். அப்படித்தான் எமி எனக்கு அறிமுகம் ஆனாள். யாராவது 'சாப்பிடுகிறாயா..?' என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டார்களா என நான் தவித்துக் கொண்டிருந்தபோதுதான், சாப்பாடும் தந்து, பார்ட்டி முடியும் வரை, புன்னகை முகம் சிறிதும் மாறாமல், என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் லஞ்ச் டைமில், என் இருக்கைக்கே வந்து, 'யூ வான்ட் கம்பெனி..?' என்று கன்னத்தில் குழி விழ கேட்டாள்.எனக்கு பார்த்த மாத்திரத்திலேயே எமியை பிடித்து விட்டது. எந்த நேரமும் முகத்தில் சிரிப்போடு திரியும் அவளை, யாருக்குத்தான் பிடிக்காது..? பெண் என்றால் பெண்.. அவள் மாதிரி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை..!! அவளெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்திருக்க வேண்டியவள். தாவணி அணிந்துகொண்டு, தலை குனிய நடந்து கொண்டு, கோவில், குளம் என்று திரிய வேண்டியவள். தவறிப்போய் அமெரிக்காவில் பிறந்து விட்டாள். என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு வெகுளித்தனம்.. என்ன ஒரு நல்ல உள்ளம்..? அமேசிங் கேரக்டர்..!! எமி இன்னும் எனக்கருகே காத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் ரொம்ப நேரம் மெயில் டைப் செய்வது மாதிரி நடிக்க முடியவில்லை. மெயிலை அனுப்பிவிட்டு, ஐந்து நிமிடத்திலேயே எழுந்து கொண்டேன். எமியிடம் திரும்பி கேட்டேன். "போலாமா எமி..?" "ஓகே..!!" அவளும் எழுந்துகொள்ள, இருவரும் எங்கள் கேபினை விட்டு வெளியே வந்தோம். ஆபீசின் ஒரு மூலையில் இருந்த லிஃப்ட்டை நோக்கி நடந்தோம். லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு, அது வருவதற்காக காத்திருந்தோம். நான் ஓரக்கண்ணால் எமியை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், லிஃப்ட் இன்டிகேட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி இருக்கிறாள்..!! என்னைப் போய் காதலிக்கிறாளே..? அப்படி என்ன இருக்கிறது என்னிடம்..? என் மூளை தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது..!! அந்த முதல் அறிமுகத்துக்கு பிறகு, பார்க்கும்போதெல்லாம் எமி 'ஹாய்..!!' சொல்லி அழகாக சிரிப்பாள். காலை, மாலை எனஇருமுறை காஃபி.. மதியம் லஞ்ச்.. இருவரும் ஒன்றாகத்தான் செல்வோம். இந்தியாவை பற்றி, நம் பழக்க வழக்கங்கள் பற்றி மிக ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வாள். என்னைப் பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் வாஞ்சையாக விசாரிப்பாள். நான் அடிக்கும் சின்ன ஜோக்குக்கு கூட, எளிறுகள் தெரிய, கலகலவென சிரிப்பாள். எமியை பற்றியும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. எமிக்கு அம்மா மட்டும்தான். அப்பா டைவர்ஸ் வாங்கி பிரிந்து சென்று விட்டார். அம்மாவும் இப்போது அவளுடன் இல்லை. அவளுடைய அம்மா பாஸ்டனில் ஒரு லா ஃபர்மில் வேலை செய்கிறாள். இவள் இங்கே ந்யூயார்க்கில் சுயமாக சம்பாதிக்கிறாள். தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறாள். அவளுடைய அங்கிள் ஒருத்தர் இதே ந்யூயார்க்கில் இருப்பதாக சொன்னாள். அவரை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருவாள். மற்றபடி யாருடனும் நெருக்கம் கிடையாது. எனக்கும், எமிக்கும் ஒரு இனிய நட்பு மலர ஆரம்பித்து ஒரு மாதம் ஆன சமயத்தில்தான், அந்த சம்பவம் நடந்தது. எங்கள் நட்பு தடம் மாற ஆரம்பித்த சம்பவம். இன்று நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த சம்பவம். வழக்கமாக பதினோரு மணிக்கெல்லாம் நானும் எமியும் காஃபி சாப்பிட செல்வோம். அவளே என்னுடைய இருப்பிடத்துக்கு வந்து விடுவாள். அன்று அவள் வரவில்லை. மெசெஞ்சரில் பிங் செய்தபோது ரிப்ளை இல்லை. எனக்கு குழப்பமாக இருந்தது. நானே எழுந்து அவளுடைய கேபினுக்கு சென்றேன். உள்ளே எமி, தன் கம்ப்யூட்டர் டேபிளில் தலை கவிழ்த்து படுத்திருந்தாள். நான் பதறிப் போனேன். "எமி..!! வாட் ஹேப்பன்ட்...?" நான் கேட்டதும் எமி பட்டென்று எழுந்து கொண்டாள். அவளுடைய கூந்தல் ஒருமாதிரி கலைந்திருந்தது. கண்களில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று உடனே எனக்கு புரிந்து போனது. அவளோ சமாளிக்க முயன்றாள். "நத்திங் அசோக்.. ஐ ஆம் ஆல்ரைட்..!!" "இல்லை எமி.. பார்த்தாலே தெரியுது.. உடம்பு சரியில்லையா..?" எமி அப்புறமும் தயங்கினாள். என்னை ஒரு மாதிரி பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் தலையை குனிந்து கொண்டு சொன்னாள். "லைட்டா ஃபீவர்..!! தலை வேற வலிக்குது..!!" நான் தயங்கி தயங்கி என் கைகளை நீட்டி அவளுடைய நெற்றியை தொட்டுப் பார்த்தேன். லைட்டாக எல்லாம் இல்லை. அனலாக கொதித்துக் கொண்டிருந்தது.என்ன எமி இது.. இவ்வளவு ஃபீவர் இருக்கு.. லீவ் போடிருக்கலாம்ல..?" நான் அவள் மேல் இருக்கும் அன்பினால், சற்றே கோபமாக கேட்டேன். "இட்ஸ் ஓகே அசோக்.. ஐ கேன் மேனேஜ்..!!" என்று அவள் புன்னகைத்தாள். "நோ எமி..!! கமான்.. கெளம்பு.. லீவு போட்டுட்டு.. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு..!!" "நோ அசோக்.. ஐ ஹவ் ஸம் இஷ்யூஸ் டூ பிக்ஸ்..!!" "அதெல்லாம் நாளைக்கு பாக்கலாம்.. ஹெல்த் இஸ் இம்பார்ட்டன்ட்.. கெட் அப்..!!" நான் அவளை வற்புறுத்தினேன். "ஐ கான்'ட் கோ நவ் அசோக்.. இதெல்லாம் இன்னைக்கு முடிக்கணும்..!!" "பைத்தியம் மாதிரி பேசாத எமி.. வா.. ஸ்டீவ்ட்ட சொல்லிட்டு கிளம்பு..!!" ஸ்டீவ் என்பது எங்கள் ஆன்சைட் மேனேஜர். "ஸ்டீவ் ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங்ல இருக்கான் அசோக்.. அவன்ட்ட இப்போ பேச முடியாது.." "ஓகே.. நான் அங்கேயே போய் பேசுறேன்.." சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க, "அசோக்.. ப்ளீஸ்.. வெயிட்.. அவன் திட்டுவான்...!!" என்று எமி பின்னால் இருந்து கத்தினாள். நான் கண்டுகொள்ளாமல் நடந்தேன். அவள் இப்படி கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கையில், யாரிடமும் எப்படியும் திட்டு வாங்கலாம்.. பரவாயில்லை.. என்று தோன்றியது. மீட்டிங் ரூம் எது என்று ரிசப்ஷனில் விசாரித்தேன். அங்கேயே சென்று கதவை தட்டினேன். திறந்த ஸ்டீவ் என்னை பார்த்ததும், கடித்து குதறுவது மாதிரி முறைத்தான். திட்டுவதற்காக வாயை திறந்தவன், நான் எமியை பற்றி சொன்னதும் சமாதானம் ஆனான். 'அவளை வீட்டுக்கு போக சொல்லு..'என்றுவிட்டு கதவை திரும்ப சாத்திக் கொண்டான். நான் எமியை அழைத்துக் கொண்டு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். 'டாக்டரை பார்க்கலாம்..'என்று சொன்னபோது, 'வேண்டாம்..' என்று மறுத்தவளை, சம்மதிக்க வைத்தேன். ஒரு டாக்சி பிடித்துக் கொண்டு டாக்டரை சென்று பார்த்தோம். அப்புறம் இன்னொரு டாக்சியில் அவள் வீட்டிற்கு சென்றோம். மிகவும் களைப்பாக இருந்த அவளை, கைத்தாங்கலாக அழைத்து சென்று பெட்டில்படுக்க வைத்தேன். கிச்சன் சென்று ப்ரெட் டோஸ்ட் செய்து, சான்ட்விச் தயாரித்து, அவளை சாப்பிட வைத்தேன். மாத்திரைகளை விழுங்க வைத்தேன். அப்புறம் அவள் மெத்தையில் படுத்துக் கொள்ள, பிளாங்கெட்டை இழுத்து போர்த்தி விட்டேன். எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டு, அவளுடைய அழகு முகத்தையே பார்த்தேன். எமி அந்த நிலையிலும், கன்னத்தில் குழி விழ, அவளுடைய ட்ரேட் மார்க் புன்னகையை வீசினாள். மெல்லிய குரலில் சொன்னாள். "நீ வேணா கெளம்பு அசோக்.. இனிமே நான் மேனேஜ் பண்ணிப்பேன்..!!" "பரவால்லை எமி.. நீ தூங்குறவரை இங்கேயே உக்காந்திருக்கேன்.. அப்புறம் ஆபீஸ் போறேன்..!!" எமி ஒருமாதிரி நன்றியுணர்ச்சியுடன், நட்பாக புன்னகைத்தாள். அவளுடைய கண்கள் பணித்தன. என் முகத்தை ஆசையாக பார்த்துக்கொண்டே, ஒரு குழந்தை மாதிரி தூங்கிப் போனாள் எமி. அந்த சம்பவம்தான், என்னை காதலிக்க சொல்லி, எமியை தூண்டி விட்டிருக்க வேண்டும். அன்புக்காக ஏங்கியவளுக்கு, நான் உரிமை எடுத்துக் கொண்டு, சற்றே கோபத்துடன் காட்டிய அன்பு, மிகவும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதற்கப்புறந்தான் எமியிடம் நிறைய மாற்றங்கள் என்று, இப்போது யோசித்துப் பார்த்தால், புரிந்து கொள்ள முடிகிறது. எமி அதற்கப்புறம் ரொம்பவே மாறிப்போனாள். லீவு நாட்களில் கூட எனக்கு கால் செய்து, எங்கேயாவது வர செய்து, நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாள். ஆபீஸ் நேரங்களிலும் மெசஞ்சரில் கதையடித்துக் கொண்டிருப்பாள். வெட்டி மெயில்கள் எல்லாம் பார்வர்ட் செய்வாள். என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் துருவித்துருவி விசாரிப்பாள். எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அக்கறையுடன் விசாரித்து தெரிந்து கொண்டாள். அவளுக்கு போர்க் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும். எனக்கு அது பிடிக்காது என்று தெரிந்தபின், அதை அவள் ஆர்டர் செய்வதே இல்லை. ஒருநாள் அதை கவனித்து கேட்டபோது, 'சாப்பிட்டு.. சாப்பிட்டு.. வெறுத்துப் போச்சு..' என்று எதோ சொல்லி சமாளித்தாள்.காஃபி, லஞ்ச் சாப்பிட செல்லும்போது நிறைய பேசுவோம். அந்த சம்பவத்திருக்கு பிறகு, நான்தான் அதிகம் பேசினேன். அவள் என்னை பேச வைத்து கேட்டுக் கொண்டிருப்பாள். குழந்தை மாதிரி உற்சாகத்துடன், என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். சில நேரம், நான்பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க, அவள் என் முகத்தை பார்த்தவாறு அப்படியே உறைந்து போவாள். நான் அவளுடைய முகத்துக்கு முன் கையை ஆட்டி, அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வரவேண்டும். எமி என் மீது காதலில் விழுந்துவிட்டாள் என்று அப்போது எனக்கு புரியவில்லை. பின் எப்போது.. என்று கேட்கிறீர்களா..? பொறுங்கள்.. லிஃப்ட் வந்துவிட்டது.. அப்புறம் சொல்கிறேன். நானும், எமியும் லிஃப்டுக்குள் நுழைந்தோம். க்ரவுண்ட் ஃப்ளோர் பட்டனை தட்டிவிட்டு, நான் சாய்ந்து கொண்டேன். எமியை பார்த்தேன். அவள் வழக்கமான அந்த புன்னகையை சிந்தினாள். வேறெதுவும் பேசவில்லை. வளர்ந்த குழந்தை மாதிரி என்ன ஒரு வெகுளித்தனமான பார்வை..? இவளுடைய காதல் கிடைப்பதற்கு நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் அந்த சந்தோஷம் இல்லையே..? ஏன்..? நான் ஏன் இப்படி இருக்கிறேன்..? என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருந்தது. எமிக்கும், எனக்குமான இந்த விஷயம் ஒரே ஒரு ஆளுக்கு மட்டும்தான் தெரியும். அது வேறு யாரும் இல்லை. என்னுடைய ரூம் மேட் மூர்த்திதான். அவனும் என்னை மாதிரி ஆன்சைட் வந்தவன்தான். ஆனால் வேறொரு கம்பெனி மூலமாக. நான் யூ.எஸ் வந்த ஒரு மாதத்தில், என்னுடைய ரூமை வேறு யாருடனாவது ஷேர் செய்து கொண்டால், கொஞ்சம் பணம் மிச்சம் செய்யலாம் என்று தோன்றியது. பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன். மூர்த்தி வந்து சேர்ந்தான். நல்ல பையன் என்று தோன்ற, என்னுடன் சேர்த்துக் கொண்டேன். அவனிடம் எமியைப் பற்றி எல்லா விஷயமும் சொல்லியிருக்கிறேன். நானே சொல்லாவிட்டாலும், அவனாக கேட்டு தெரிந்து கொள்வான். "பாஸ்.. சூப்பரா ஒரு யூ.எஸ் ஃபிகரை புடிச்சுட்டீங்க..!! அப்டியே இங்கேயே செட்டில் ஆயிடுங்க..!!" என்று கிண்டலடிப்பான்.

"ஐயோ பாஸ்.. நீங்க வேற.. இது ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப்..!!" என்று பதறுவேன் நான். "அதெல்லாம் கிடையாது.. இது லவ்வுதான்... நான் அடிச்சு சொல்றேன்..!!" என்பான் அவன். அவன் அப்படி சொன்னது உண்மைதான் என்று எனக்கு போனவாரம்தான் புரிந்தது. அன்று எமி அந்த மாதிரி நடந்துகொண்ட பின்தான், இது காதல் என்பது எனக்கே பளிச்சென்று உறைத்தது. அன்று வழக்கம்போல மதியம் லஞ்ச் சாப்பிடுவதற்காக சென்றோம். எங்கள் ஆபீசில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால், ஒரு ஃபுட் கோர்ட் வரும். வழக்கமாக அங்குதான் சென்று சாப்பிடுவோம். ரோட்டை க்ராஸ் செய்வதற்காக, சாலையோரமாக சிக்னல் விழுவதற்காக காத்திருந்தோம். எமி என் முகத்தை பார்த்தவாறு, எதை பற்றியோ ஆர்வமாக பேசிக்கொண்டு இருந்தாள். சிக்னல் விழுந்ததும், சாலையை கவனிக்காமல், என் முகத்தை பார்த்தவாறே க்ராஸ் செய்ய முற்பட்டாள். அப்போதுதான் நான் அதை கவனித்தேன். சிக்னலை மதியாமல் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. விட்டிருந்தால் எமி மீதே மோதியிருப்பான். நான் பட்டென்று எமியின் இடுப்பை பிடித்து, என்பக்கமாக இழுத்தேன். பதட்டத்தில் சற்று அழுத்தமாகவே பிடித்து, வேகமாக இழுத்துவிட்டேன். அவள் 'ஆஆவ்..' என்று சத்தம் எழுப்பியவாறு, என் மீது வந்து மோதினாள். அவளுடைய பட்டு மார்புகள், நச்ச்.. என்று என் மீது இடிக்க, அவளது அழகு முகமோ, எனது முகத்துக்கு மிக நெருக்கமாக வந்தது. அவள் விட்ட மூச்சுக்காற்று என் முகத்தில் மோதுவதை கூட என்னால் உணர முடிந்தது. அந்த கார் எங்களை கடந்து போனது. எமி ஒருமாதிரி அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் எனக்கு நெருக்கமாக இருக்கும் அவளையே பார்த்தேன். ஒரு இரண்டு, மூன்று விநாடிகள்தான். அப்புறம் எமி தன் தலையை திருப்பி தன் இடுப்பை பார்த்தாள். அப்போதுதான் என் கை இன்னும் அவளுடைய இடுப்பிலேயே இருப்பதை நான் உணர்ந்தேன். பதறிப்போய் அந்தக்கையை எடுத்துக் கொண்டேன். எமி உடனே ஒரு ஸ்டெப் பின்னால் நகர்ந்து கொண்டாள். நானோ பதட்டத்தில் உளறினேன். "ஸா..ஸாரி எமி..!! அ..அது.. அந்த கார்..!! அ..அதான்...!! ஸாரி எமி..!!"நான் கெஞ்சலான குரலில் சொல்ல, எமி எதுவும் பேசவில்லை. என் முகத்தையே ஆசையாக, காதலாக பார்த்தாள். என்னை அப்படியே விழுங்கி விடுபவள் மாதிரி பார்த்தாள். ஒரு நான்கைந்து வினாடிகள். அப்புறம்.. பின்னால் வைத்த அந்த ஸ்டெப்பை, மீண்டும் முன்னால் வைத்து, என்னுடன் நெருங்கி நின்று கொண்டாள். என்னுடைய கையை எடுத்து, அவளுடைய இடுப்பை சுற்றி வளைத்து, அது முன்பிருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டாள். அவளுடைய கையால் அழுத்தி பிடித்துக் கொண்டாள். என் முகத்துக்கு மிக நெருக்கமாக அவளுடைய முகத்தை கொண்டு வந்து, காதலுடன் மெல்லிய குரலில் சொன்னாள். "இட்ஸ் ஓகே அசோக்..!!" அதற்கப்புறமும் அது காதலில்லை என்று என்னை நானே எப்படி ஏமாற்றிக் கொள்ள முடியும்..? நீங்களே சொல்லுங்கள்..!! எனக்கு மனசுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது மாதிரி படபடவென இருந்தது. உண்மைதானா..? உண்மையிலேயே என்னை காதலிக்கிறாளா..? ஆனால் எனக்கு சந்தோஷத்தை விட, வேறு மாதிரியான சிந்தனைகள்தான் அதிகமாக இருந்தன. அந்த காதலுக்கு நான் தகுதியானவன்தானா என்ற கவலை ஒருபுறம் இருக்க, இந்த காதலினால் எமி எப்படி கஷ்டப்படுவாளோ என்ற வேதனைதான் அதிகமாக இருந்தது. என்ன கஷ்டப்படுவாள் என்று கேட்கிறீர்களா..? இன்று காஃபி ஷாப்பில் அதைப்பற்றித்தான் பேசப் போகிறோம்..!! வாருங்கள்..!! எங்கள் ஆபீஸ் இருக்கும் பில்டிங்கின் கீழ்த்தளத்திலேயே ஒரு ஸ்டார்பக்ஸ் காஃபி ஹவுஸ் இருக்கிறது. வழக்கமாக அங்குதான் செல்லுவோம். இன்றும் அங்கேதான். ஆளுக்கொரு காஃபி வாங்கிகொண்டோம். அங்கே கிடந்த டேபிள் ஒன்றில் அமரப் போனோம். 'அவள் எனக்கு அருகே உட்காரக்கூடாது.. எதிரே உட்காரட்டும்..' என்பதற்காகவே, இரண்டு பேர் அமரும் அந்த சீட்டில் சென்டராக, நான் சென்று அமர்ந்தேன். ஆனால் எமி என் எதிரே காலியாக கிடந்த சீட்டில் அமராமல், என்னை இடித்து நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். வேறு வழியில்லாமல் நான் சுவரோரமாக நகர்ந்துகொள்ள, அவளும் வசதியாக உட்கார்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் எமிதான் மெல்ல ஆரம்பித்தாள். "ஸோ.. நெக்ஸ்ட் வீக் இண்டியா போற..?" "யா..!!" "சந்தோஷமா இருக்கா..?" "இல்லாம இருக்குமா..?" நான் சொன்னதும் எமி பேசுவதை சற்று நிறுத்தினாள். முகத்தை திருப்பி, என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டாள். "நான் எப்போ இண்டியா வரட்டும் அசோக்..?" "நீ எப்போவேனா வரலாம் எமி.. அப்படி வந்தா.. கண்டிப்பா நீ என் வீட்லதான் தங்கணும்..!! நான் உனக்கு இந்தியாவை சுத்திக் காட்டுறேன்..!! ஓகேவா..?" நான் அப்படி கேஷுவலாக சொன்னதும் எமி எரிச்சலானாள். "வெளையாடாத அசோக், ப்ளீஸ்..!! நான் எந்த அர்த்தத்துல கேக்குறேன்னு உனக்கு புரியலையா..?" "எ..எந்த அர்த்தத்துல..?" அர்த்தம் புரிந்தே நான் நடித்தேன். "நடிக்காத..!! ஓகே.. நீ இன்னும் எதுக்கு தயங்குறேன்னு எனக்கு புரியலை.. பட்.. எனக்கு எந்த தயக்கமும் இல்லை.. இதை சொல்றதுக்கு வெக்கமும் இல்லை..!! நானே சொல்றேன்.." என்றவள், அவள் சொல்லிவிடக்கூடாது என்று நான் பதறிக்கொண்டு இருக்கும்போதே, என் கண்களை காதலாக பார்த்தபடி சொன்னாள். "ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!! ஐ வான்ட் டு பி வித் யூ..!! ஆல்வேஸ்..!!”சொல்லியே விட்டாள்..!! அவள் சொன்னபோது எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். இது நேரக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவாரமாக அவளை அவாய்ட் செய்துகொண்டே இருந்தேன். இன்று வசமாக சிக்கிக் கொண்டேன். "என்ன அசோக்.. எதுவுமே சொல்ல மாட்டேன்ற..?" எமி பொறுமை இல்லாமல் கேட்டாள். "எ..எனக்கு என்ன சொல்றதுன்னே தெ..தெரியலை எமி.." "ஏதாவது சொல்லு.. என்னை புடிச்சிருக்கான்னு சொல்லு.." "உன்னை புடிக்கலைன்னு ஏதாவது பைத்தியக்காரன்தான் சொல்லுவான்..!!" நான் அப்படி சொன்னதும், இத்தனை நேரம் குழப்பமாய் இருந்த எமியின் முகம் பட்டென்று பிரகாசமானது. அவளுடைய வலது கையை நகர்த்தி, என் இடதுகை மீது வைத்துக் கொண்டாள். விரல்களை கோர்த்துக் கொண்டாள். லேசாக நெரித்தாள். "அப்புறம் என்ன அசோக்.. எனக்கு உன்னை புடிச்சிருக்கு.. உனக்கு என்னை புடிச்சிருக்கு.. அப்புறம் ஏன் தயங்குற..?" அவள் ஆசையாக கேட்க, நான் என் கையை அவளுடைய கைக்குள் இருந்து உருவிக்கொண்டேன். மெல்லிய குரலில் சொன்னேன். "சொன்னா உனக்கு புரியாது எமி.." "சொல்லு அசோக்.. புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறேன்..!!" "எனக்கு வள்ளினு ஒரு முறைப்பொண்ணு இருக்குறா.. ஐ மீன்.. மாமா பொண்ணு..!! இண்டியால இந்தமாதிரி.. முறைப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிறது சகஜம்..!! எனக்கும் அவளுக்கும் போன வருஷமே என்கேஜ்மென்ட் முடிஞ்சது.. இன்னும் ரெண்டு மாசத்துல.. மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க..!!" "என்கேஜ்மென்ட்தான முடிஞ்சிருக்கு.. மேரேஜ் ஆனாத்தான ப்ராப்ளம்..? உங்க ஊர் பொண்ணுங்க.. தாலி, அது இதுன்னு.. செண்டிமெண்ட்..!!" "உனக்கு எங்க கேஸ்ட் பத்தி தெரியாது எமி..!!" "சொல்லிருக்க..!! என்ன பண்ணுவாங்க..?" "நாம ரெண்டுபேரும் இப்போ அங்க போய்.. அந்த கல்யாணத்தை நிறுத்துங்க.. நாங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னா.. என் மாமா நம்மை அரிவாளை தூக்கிட்டு.. வெட்ட வருவாரு..!!" "அரிவாள்..? வாட் இஸ் அரிவாள்..?" "யூ டோன்ட் க்னோ.. இட்ஸ்.. இட்ஸ் எ டெட்லி வெப்பன்..!! நம்மை.. கொன்னாலும் கொன்னுருவாங்க எமி..!!" "அசோக்.. அங்கே போகாமலேயே.. எதுவும் பேசாமாலேயே.. நீயா ஏன் எல்லாத்தையும் கற்பனை பண்ற..? நாம போய்த்தான் பார்ப்போமே.. போய் அவங்க முன்னாடி நின்னு.. கெஞ்சிப் பார்ப்போம்..!! நீ எவ்வளவு நல்லவனா இருக்குற..? அவங்க உன்னை பெத்தவங்க.. உன் ரிலேட்டிவ்ஸ்..!! அவங்களுக்கு அந்த நல்ல உள்ளம் இல்லாமா போகுமா..? போய் பாக்கலாம் அசோக்..!!" உண்மையை சொல்லப்போனால் அவர்கள் இந்த விஷயத்திற்கு எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. எமி சொன்னமாதிரி எல்லோருமே நல்லவர்கள்தான். அன்பானவர்கள்தான். இதுவரை என்னிடம் கோபமாக ஒருவார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனால் எல்லோருமே முரடர்கள். படிக்காதவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எந்தநேரத்தில் எந்தமாதிரி பிஹேவ் பண்ணுவார்கள் என்பதே தெரியாது. இதில்.. எந்த பாவமும் அறியாத எமியை அவர்கள் முன்னால் கொண்டு சென்று நிறுத்தி.. "நோ எமி.. ஐ டோன்ட் வான்ட் டு புட் யுவர் லைஃப் இன் ரிஸ்க்..!!" நான் சொன்னதும் எமி அமைதியானாள். கொஞ்ச நேரம் எதையோ தீவிரமாக யோசித்தாள். அப்புறம் என் பக்கமாக திரும்பி, அந்த கன்னத்தில் குழிவிழும் புன்னகையுடன் சொன்னாள். "ஸீ அசோக்.. நீ என் கூட இருக்குறதா இருந்தா.. எதுக்கு வேணா நான் ரெடி..!! என் உயிர் இண்டியால போனா.. அது எனக்கு சந்தோஷந்தான்..!! என்னை கூட்டிட்டு போ அசோக்..!!" "ஸாரி எமி.. என்னால அது முடியாது..!!" "தென்.. வாட்ஸ் யுவர் டெசிஷன்..?""எமி.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. இந்த லவ்.. இப்போதான் இது பெருசா தோணும்.. உயிரை கூட விடலாம்னு தோணும்..!! ஆனா.. லவ்வை விட லைஃப் ரொம்ப முக்கியம் எமி..!! ஆக்சுவலா எனக்கு பதிலா வேறொருத்தன் ஆன்சைட் வந்திருக்கணும்.. கடைசி நேரத்துல.. அவனுக்கு ஹெல்த் சரியில்லாம போய்.. நான் வர்ற மாதிரி ஆயிடுச்சு..!! நெனச்சு பாரு.. ஒருவேளை நான் யூ.எஸ் வராமலே போயிருந்தா..? நான் யார்னே உனக்கு தெரிஞ்சிருக்காது..!! இப்போவும் அப்படி நெனச்சுக்கோ எமி..!! என்னை மறந்துடு..!! நான் இண்டியா போறேன்..!! உனக்கு ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும்.. அப்புறம் என்னை மறக்க ஆரம்பிச்சுடுவ.. காலம் எல்லாத்தையும் மறக்கடிச்சுடும்.. ஒரு ரெண்டு வருஷத்துல.. அசோக்குனு ஒரு ஆள் இருந்ததையே நீ மறந்துடுவ..!! எவ்ரித்திங் வில் பி ஆல்ரைட்..!!" "அசோக்.." அவள் கெஞ்சும் குரலில் ஆரம்பிக்க, "ப்ளீஸ் எமி.. இதுக்கு மேல இதைப்பத்தி பேசாத..!!" என நான் பட்டென்று சொன்னேன். எமியின் முகம் வாடிப்போனது. எப்போதுமே அந்தமுகத்தில் தவழும், அந்த கள்ளம் கபடமற்ற புன்னகை காணாமல் போனது. கண்களை இடுக்கி, என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்கள் பழகியதில், கோபம் கொப்பளிக்கும் அவளுடைய முகத்தை இப்போதுதான் பார்க்கிறேன். கஷ்டமாக இருந்தது. எமி அந்த கோபம் தெறிக்கும் குரலிலேயே கேட்டாள். "இதுதான் உன் முடிவா..?" "எஸ்..!!" "ஓகே..!! தேங்க்ஸ்..!!" சொன்ன எமி பட்டென்று எழுந்துகொண்டாள். காஃபி கப்பை எடுத்துக் கொண்டு நகரப் போனவள், பின்பு அப்படியே நின்றாள். ஒரு கையை டேபிளில் ஊன்றி.. அவளுடைய முகத்தை எனக்கு அருகே கொண்டுவது.. என் கண்களை கூர்மையாக பார்த்தபடி.. ஆத்திரமாக ஆனால் அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "வாட் யு செட்.. எவ்ரித்திங் வில் பி ஆல்ரைட்..!! ம்ம்ம்...? நவ் லிஸன் டு திஸ்..!! நத்திங் வில் பி ஆல்ரைட் அசோக்..!! நத்திங் வில் பி ஆல்ரைட் ஃபார் மீ, வித்தவுட் யு..!! எத்தனை வருஷம் ஆனாலும் என்னால உன்னை மறக்க முடியாது.. அதே மாதிரி.. நீ இல்லாம இன்னொரு ஆம்பளை என் லைஃப்ல கெடையவே கெடையாது..!!" படபடவென பொரிந்து தள்ளிவிட்டு, எமி விடுவிடுவென நடந்து சென்றாள். நான் திகைத்துப் போய் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நடந்து செல்கையிலேயே, கண்களில் வழிந்த நீரை அவள் துடைத்துக் கொள்வது தெரிந்தது. நான் ஆடிப்போயிருந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து ஆபீஸ் சென்றேன். அன்று முழுவதும் எந்தப்பக்கம் திரும்பினாலும், எமி அங்கே நிற்பது மாதிரியே இருந்தது. அன்று நான் ரூமுக்கு திரும்பியபோது, மூர்த்தி சோபாவில் அமர்ந்து லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தான். நான் மெல்ல அவனுக்கு அருகே சென்று அமர, அவனோ கம்ப்யூட்டரில் இருந்து கவனத்தை விலக்காமலே, 'ஹாய்..!!' என்றான். நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, மெல்லிய குரலில் சொன்னேன். "எமி எங்கிட்ட 'ஐ லவ் யூ..'சொல்லிட்டா மூர்த்தி..!!" நான் சொன்னதும் அவன் ரொம்ப சந்தோஷப் பட்டான். முகமெல்லாம் மலர்ந்து போய், கையை நீட்டினான். "கைய கொடுங்க பாஸ்..!! கலக்கிட்டீங்க..!! ஹையோ...!! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா பாஸ்..? நான்தான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேன்ல..? இது லவ்வுதான்னு.. நீங்கதான் நம்பலை..!! எப்போ ட்ரீட் தர்றீங்க..?" அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே போக, நான் இடைமறித்தேன். "நான் அந்த லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கலை மூர்த்தி.. என்னை மறந்துடுன்னு சொல்லிட்டேன்..!!" மூர்த்தி இப்போது பட்டென்று அதிர்ந்தான். நம்பமுடியாமல் என்னை பார்த்தான். "பாஸ்.. என்ன சொல்றீங்க நீங்க..? ஏன் அப்படி பண்ணுனீங்க..?" "நான்தான் எங்க ஆளுங்களை பத்தி சொல்லிருக்கேன்ல மூர்த்தி..? அவங்க முன்னாடி இவளை கொண்டு போய் நிறுத்த சொல்றியா..?"நான் சொன்னதும் மூர்த்தி என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். சற்றே கேலியான குரலில் கேட்டான். "உயிர் போயிருமேன்னு பயப்படுறீங்களா பாஸ்..?" இப்போது நான் எரிச்சலானேன். "மூர்த்தி.. நான் ஒன்னும் அந்த அளவுக்கு கோழை இல்லை..!! எனக்கு என்ன ஆனாலும் பரவால்லை.. எமிக்கு ஏதாவது ஒன்னுனா.. என்னால தாங்க முடியாது மூர்த்தி..!!" "ஸோ.. என்ன பண்ணப் போறீங்க..?" "இண்டியா போகப் போறேன்.. அடுத்த வாரம் இல்லை.. ரெண்டே நாள்ல..!! என் மேனேஜர்ட்ட பேசப் போறேன்..!!" "அப்போ எமி..?" "அவ கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துடுவா மூர்த்தி.. நிம்மதியா இருப்பா..!!" அப்புறம் மூர்த்தி கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருமாதிரி முறைக்கிறான் என்று தோன்றியது. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு சொன்னான். "பாருங்க பாஸ்.. நான் எமியை ரெண்டு மூணு தடவை பாத்ததை வச்சு சொல்றேன்..!! அவ மாதிரி ஒரு நல்ல பொண்ணு.. உலகத்துல எங்கே தேடுனாலும் கெடைக்க மாட்டா..!! அந்த மாதிரி ஒரு பொண்ணுக்காக என்னவேனா செய்யலாம் பாஸ்..!! உசுரு போனா மசுரே போச்சு..!! நீங்க பெரிய தப்பு பண்றீங்கன்னு தோணுது பாஸ்..!! உங்க எடத்துல நான் இருந்தா.. கண்டிப்பா எமியை கூட்டிட்டு போய்.. அவங்க முன்னாடி நிறுத்துவேன்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!! நான் ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுடுங்க பாஸ்..!!" சொல்லிவிட்டு அவன் லேப்டாப்பை தூக்கிக் கொண்டு, அவனுடைய பெட்ரூமுக்கு நடந்தான். நான் சுத்தமாக குழம்பிப்போய் தலையை பிடித்துக் கொண்டேன். அடுத்த நாள் காலை.. ஆபீஸ் சென்றதுமே, முதல்வேலையாக என்னுடைய ஆஃப்ஷோர் மேனேஜருக்கு போன் செய்தேன். "ஹாய் அசோக்.. எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..?" "ஒன்னும் பிரச்னை இல்லை ஷிவா..!!" "ம்ம்.. நெக்ஸ்ட் வீக் வர்றியா..?" "அதுக்காகத்தான் இப்போ கால் பண்ணினேன் ஷிவா.. நான் உடனே இண்டியா திரும்பனும்..!!" "உடனேவா..? எதுக்கு..?" "ஃபேமிலில ஒரு எமர்ஜென்சி.. நான் உடனே வந்தா.. நல்லாருக்கும்னு ஃபீல் பண்றாங்க..!!" "நீ வந்துட்டா.. அப்போ.. அங்க சப்போர்ட்..?" "அதுதான் எல்லாம் ஸ்மூத்தா.. எந்தப் பிரச்னையும் இல்லாம போயிட்டு இருக்கே ஷிவா..? நான் சப்போர்ட்ன்ற பேர்ல.. தெண்டத்துக்குதான இங்க உக்காந்திருக்கேன்..? பிசினஸ் ஹெட்கிட்ட பேசு ஷிவா.. எமர்ஜென்சி சிச்சுவேஷன்னு சொல்லி.. எப்படியாவது நான் உடனே திரும்ப வர.. ஏற்பாடு பண்ணு..!!" ஷிவா 'ம்ம்ம்... ம்ம்ம்...' என்றவாறு கொஞ்ச நேரம் யோசித்தான். அப்புறம், "ஓகே அசோக்.. நான் பேசுறேன்.. எனக்கு ஒருநாள் டைம் கொடு..!!" "ம்ம்.. தேங்க்ஸ் ஷிவா..!!" காஃபி, லஞ்ச் சாப்பிடுவதற்கு அன்று எமி என்னை அழைக்கவில்லை. நான் தனியாகத்தான் சென்று வந்தேன். மெசஞ்சரில் கூட எதுவும் பிங் செய்யவில்லை. ஒரே ஒருமுறை எதிரே பார்த்தபோது கூட, தலையை குனிந்துகொண்டே கடந்து சென்றுவிட்டாள். என்மீது ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது. நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்து இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு. ஆபீஸ் விடுமுறை. திங்கட்கிழமை அதிகாலை.. ரூமில் இருந்து மெயில் செக் செய்தபோதே, ஷிவாவின் மெயில் வந்திருந்தது. அதற்கு மறுநாளே நான் இண்டியா திரும்ப அனுமதி அளித்திருந்தான். ஓப்பன் டிக்கெட்டை என்டோர்ஸ் செய்துக்கொள்ள சொல்லியிருந்தான். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. தேங்க்ஸ் சொல்லி ரிப்ளை பண்ணினேன். அன்று நான் ஆபீஸ் செல்லவில்லை. ஏர்-இண்டியா ஆபீஸ் சென்று டிக்கெட் என்டோர்ஸ் செய்து கொண்டேன். நாளை இரவு ஃப்ளைட் என்றார்கள். அங்கே சென்று வரவே மதியம் ஆகிவிட்டது. அப்புறம் ஷாப்பிங் சென்றேன். அம்மா, அப்பா, தங்கை எல்லாருக்கும் ஏதாவது வாங்கினேன். திரும்ப ரூமுக்கு வந்தபோது மாலை ஆறுமணி ஆகியிருந்தது. மூர்த்தி எனக்கு முன்பே வந்திருந்தான். நாளையே இண்டியா திரும்பும் விஷயத்தை அவனிடம் சொன்னேன். அவன் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக கேட்டுக் கொண்டான்.அப்புறம் என் பெட்ரூம் சென்று திங்க்ஸ் பேக் பண்ண ஆரம்பித்தேன். ஒரு அரை மணி நேரத்தில் ஓரளவு எல்லா வேலையும் முடிந்தது. சற்றே நிம்மதியாக இருந்தது. அவ்வளவுதான்..!! இனி நாளை காலை ஆபீஸ் சென்று, ஸ்டீவை மட்டும் பார்த்து, ஃபார்மலாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, இண்டியா கிளம்ப வேண்டியதுதான்..!! எமியை இனிமேல் பார்க்கவே போவதில்லை என்ற நினைவு வந்தபோது, இதயம் லேசாக வலித்தது. அப்போதுதான் காலிங் பெல் அடித்தது. மூர்த்தி கதவை திறக்க செல்ல, நான் என் ரூமில் இருந்தபடியே எட்டிப் பார்த்தேன். வெளியே எமி நின்றிருந்தாள். யெல்லோ கலர் டாப்ஸ்.. லைட் ப்ளூ ஜீன்ஸ்.. கையில் ஒரு பாக்ஸ்..!! அவளை பார்த்ததும், நான் பக்கென்று அதிர்ந்து போக, மூர்த்தியோ பற்களை காட்டியவாறு அவளை வரவேற்றான். "ஹாய் எமி.. கம்..!! கம் ஆன் இன்..!!" "அசோக்..?" "இருக்குறார்.. உள்ள வா எமி.. ப்ளீஸ் சிட்..!!" அழைத்து வந்து அவளை சோபாவில் அமரவைத்தான். அணிந்திருந்த பனியன் மீது, ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, என்னிடம் வந்தான். "பாஸ்.. நல்லா ஃப்ரீயா.. மனசு விட்டு பேசுங்க.. நான் போயிட்டு.. கொஞ்ச நேரம்.. இல்லை இல்லை.. ரொம்ப நேரம் கழிச்சு வர்றேன்..!!" சொன்னவன் என் பதிலுக்காக காத்திராமல், வீட்டை விட்டு வெளியேறினான். போகும் வழியில் எமியிடம், "நீங்க பேசிட்டு இருங்க எமி.. நான் இப்போ வந்துர்றேன்..." என்று சிரித்தவாறே சொல்லிவிட்டு சென்றான். நான் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமலே நின்றிருந்தேன். எமியே சோபாவில் இருந்து எழுந்து, மெல்ல நடந்து என்னுடைய அறைக்குள் நுழைந்தாள். என்னை நெருங்கினாள். முகத்தில் அவளுடைய வழக்கமான புன்னகையுடன், "ஹாய் அசோக்.." என்றாள். "ஹாய் எமி.." என்றேன் நானும் வேறு வழியில்லாமல். "ஸோ.. இண்டியா போற..?" "யா.. நெக்ஸ்ட் வீக்..!!" "பொய் சொல்லாத அசோக்.. எனக்கு தெரியும்.. நீ நாளைக்கு போற..!!" "எ..எமி.. அ..அது..?" நான் திகைப்பாய் கேட்க, "இன்னைக்கு நீ ஆபீசுக்கு ஏன் வரலைன்னு ஸ்டீவ்ட்ட கேட்டேன்.. அவன் சொல்லிட்டான்..!!" என்று எமி அமைதியாக சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையை குனிந்து கொண்டேன். எமி பரிதாமான குரலில் கேட்டாள். "ஏன் அசோக் எங்கிட்ட சொல்லலை..?" "ஸாரி எமி..!!" "நான் இப்போ வரலைன்னா.. என்னை பாக்காமலே பறந்திருப்ப.. இல்லை..? என் மேல அப்டி என்ன கோபம் உனக்கு..?" எமியின் குரல் இப்போது உடைந்து போயிருந்தது. "ச்சேச்சே.. அப்டிலாம் இல்லை எமி.."

"அப்புறம் ஏன் சொல்லலை..?" "சரி.. இப்போ சொல்றேன்..!! நாளைக்கு இண்டியா போறேன்..!!" நான் பட்டென்று சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் என் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஓரிரு வினாடிகள். அப்புறம் மூக்கை ஒரு மாதிரி உறிஞ்சிக் கொண்டு, அந்த பாக்சை என்னிடம் நீட்டினாள். "திஸ் இஸ் ஃபார் யு..!!" "என்ன இது..?" "மை கிஃப்ட்..!!" "என்ன இருக்கு இதுக்குள்ள..?" "பிரிச்சு பாரு..!!"நான் அவளுடைய முகத்தை பார்த்தவாறே அந்த பாக்சை பொறுமையாக பிரித்தேன். உள்ளே..!! அந்த சிலை இருந்தது..!! தாஜ்மஹால் சிலை..!! பளிங்கினால் செய்யப்பட்ட, அங்கங்கே கோல்ட் கலரில் பார்டரோடு..!! பளபளப்பாக ஜொலித்தது அந்த காதல் சின்னம்..!! அதை பார்த்ததுமே எனக்கு கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. நீர் வழியும் கண்களோடே, அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் காதலும், ஏக்கமும், பரிதாபமும் கலந்த குரலில் கேட்டாள். "இது இண்டியால இருக்குற ஒரு உலக அதிசயம்.. இல்லை அசோக்..? ஒரு காதலன் தன் காதலிக்கு கட்டுன சமாதி.. இல்லை அசோக்..? அதேமாதிரி.. நீயும் எனக்கு சமாதி கட்டிட்டு போற.. இல்லை அசோக்..?" என்னால் அதற்குமேலும், பொங்கிவந்த என் காதலை கட்டுப்படுத்த முடியவில்லை. எமியை பட்டென்று இழுத்து, என் மார்போடு அணைத்துக் கொண்டேன். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தது போல, எனக்குள் புதைந்து கொண்டாள். எங்களுக்கு இடையில் காற்று கூட புகக்கூடாது, என்று நினைத்தாளோ என்னவோ..? அந்த அளவுக்கு நெருக்கமாக அணைத்துக் கொண்டாள். எமியின் மார்புப்பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி நசுங்கின. அவளுடைய கைகள் என் முதுகை அழுத்தி பிசைந்தன. அவள் விட்ட மூச்சுக்காற்று, என் கழுத்தில் அனலாக மோதியது. அவள் கண்களில் இருந்து வடிந்த நீர், சூடாக என் மார்பை நனைத்தது. எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், எனது கண்களும் கண்ணீரை வடித்தன. ஒரு நிமிடத்துக்கும் மேலாக நாங்கள் எதுவுமே பேசாமல், அப்படியே அணைத்தபடி நின்றிருந்தோம். அப்புறம் நான் அவளுடைய முகத்தை மெல்ல நிமிர்த்தி, அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு சொன்னேன். "என்ன வார்த்தை சொல்லிட்ட எமி..? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு தெரியாது..!!" "இல்லை.. தெரியும்..!!" "எல்லாம்.. நீ கஷ்டப்படக் கூடாதுன்னுதான் எமி..!!" "யா.. ஐ அண்டர்ஸ்டாண்ட்..!!" "எத்தனை வருஷம் ஆனாலும்.. என்னாலயும் உன்னை மறக்க முடியாது எமி..!!" நான் சொன்னதைக் கேட்டு எமியின் முகம் பரவசமானது. அழகாக ஒரு புன்னகை பூத்தாள். அவளுடைய கண்ணில் இருந்து முணுக்கென்று ஒரு துளி நீர் வந்து எட்டிப் பார்த்தது. உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள். மீண்டும் என் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டாள். நானும் அவளை இன்னும் இறுக்கிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டேன். சுகமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, எமி தன் முகத்தை நிமிர்த்தியவாறு என்னை அழைத்தாள். "அசோக்..!!" "ம்ம்.." "நான் ஒன்னு கேக்கலாமா..?" "ம்ம்.." "நான்.. நான் உன்னை கிஸ் பண்ணலாமா..?" "எமி..." நான் சற்றே அதிர்ந்து போய் அவளை பார்க்க, "ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எங்க நாட்டுல கிஸ் எவ்வளவு சீப்புனு.. உனக்கே தெரியும்.. யாரும் யார வேணா கிஸ் பண்ணலாம்..!! எந்த எடமா இருந்தாலும் பரவால்லை.. கிஸ் பண்ணலாம்..!! அடுத்த நாள் அதே காதலோட இருப்பாங்களான்னு தெரியாது.. இப்ப உக்காந்து கிஸ் அடிச்சுட்டு இருப்பாங்க..!! ஆனா.. ஆனா நான் இதுவரை யாரையுமே கிஸ் பண்ணினது இல்லை அசோக்..!! என் லைஃப்ல வர்ற அந்த ஒரே ஒரு ஆளை மட்டும்தான்.. கிஸ் பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. அது நீதான் அசோக்..!! எ..எனக்கு உன்னை கிஸ் பண்ணனும் போல இருக்கு..!! ப்ளீஸ் அசோக்..!!" என்னால் மறுக்க முடியவில்லை. ஓரிரு வினாடிகள் அவளுடைய எழில் கொஞ்சும் முகத்தையே, காதலாய் பார்த்தேன். அப்புறம் ஒரு புன்னகையுடன் அமைதியாக சொன்னேன். "ம்ம்.." எமி தன் முகத்தால் என் முகத்தை நெருங்கினாள். கண்களை மூடிக்கொண்டாள். தனது பவள உதடுகளை லேசாக பிளந்தபடி, என் உதடுகளில் வைத்து பொருத்திக் கொண்டாள். மெல்ல உறிஞ்சினாள். நானும் என் உதடுகளை லேசாக பிளந்து கொடுத்தபடி அவளுக்கு ஒத்துழைத்தேன். எமி இப்போது அவளது உதடுகளை, வசதியாக என் உதடுகளுக்குள் வைத்து லாக் செய்து கொண்டாள். சற்றே வேகம் கூட்டி உறிஞ்சினாள். எமியின் உதடுகள் கோவைப்பழம் மாதிரி சிவந்திருக்கும். மெல்லிய வரிவரியான உதடுகள். அந்த உதடுகளில் ஊறியிருக்கும் ஒரு இனிப்பு திரவம், இப்போது எனக்குள் இறங்கியது. அமிர்தமாய் இருந்தது அந்த திரவம். அருந்த அருந்த திகட்டவில்லை. மேலும் மேலும் அந்த திரவம் வேண்டும் என்று, எனது உதடுகளால் அவளுடைய உதடுகளை கெஞ்ச ஆரம்பித்தேன். அந்த திரவம் என் மூளையில் ஏற்படுத்திய வேகத்தை, நான் அவளுடைய உதடுகளிடமே காட்டினேன்.நேரம் ஆக ஆக, எங்களிடம் வெறித்தனம் கூடிக்கொண்டே போனது. மென்மையாக, இதமாக முத்தமிட ஆரம்பித்தவர்கள், இப்போது ஆவேசமாக அடுத்தவர் உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். உதடுகள் உரசியது போக, வாயை சற்றே திறந்து, ஒருவர் நாக்கை அடுத்தவரின் நாக்கோடு உரசிக் கொண்டோம். அப்படியே அந்த நாக்கை உதடுகள் பதித்து, சர்ர்ர்.. என்று உறிஞ்சினோம். நாவை சுழட்டி சண்டையிட்டுக் கொண்டோம். எவ்வளவு நேரம் அந்த மாதிரி உதடுகள் பிண்ணிக்கொள்ள, நின்றிருந்தோம் என்று நினைவில்லை. விலகிக்கொள்ளவும் தோன்றவில்லை. உலகை மறந்து உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எமி தன் வலது கையை, மெல்ல என் ஷர்ட்டுக்குள் நுழைத்தாள். என்னை முத்தமிட்டுக்கொண்டே என் மார்பை தடவியவள், அப்புறம் தன் ஒற்றை விரலால் என் மார்புக்காம்பை அழுத்தி தேய்த்தாள். எமியின் எண்ணம் திசைமாறுவது எனக்கு பட்டென்று புரிந்துபோனது. உடனே என்னுடைய உதடுகளை அவளுடைய உதடுகளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன். அவளுடைய கையை என் மார்பில் இருந்து தட்டிவிட்டேன். நம்பமுடியாமல் அவளை ஒரு பார்வை பார்த்தேன். "எ..எமி என்ன பண்ற நீ..?" "ஏன்.. உனக்கு வேணாமா..?" அவள் ஒருமாதிரி கிறக்கமாய் சொன்னாள். "வாட்..?" "கமான் அசோக்..!! இ..இட்ஸ் ஓகே ஃபார் மீ..!! கம்.. டேக் மீ..!!" "நோ எமி..!! இ..இட்ஸ்.. இட்ஸ் ராங்...!!" "நத்திங் ராங் அசோக்.. கம்..!! ரெண்டு பேரு மனசு சேர்ந்தப்புறம்.. உடம்பு சேர்றது ஒன்னும் தப்பு இல்லை..!! கமான்..!!" "எ..எமி.. ஆர் யு அவுட் ஆஃப் யுவர் மைன்ட்..? நாளைல இருந்து நீ யாரோ.. நான் யாரோ.. என்கூட செக்ஸ் வச்சிக்க ஆசைப்படுறியே..?" "யெஸ் அசோக்.. அதனாலதான் ஆசைப்படுறேன்..!! யு ஆர் த ஒன் அண்ட் ஒன்லி மேன் இன் மை லைஃப்..!! நாளைக்கு நீ இண்டியா போயிடுவ..!! அப்புறம் நான் உன்னை பாக்குறேனோ.. இல்லையோ..? இன்னைக்கு நைட்டுதான்.. எனக்கு கெடைச்சிருக்குற லாஸ்ட் சான்ஸ்.. ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் திஸ்..!! ஐ வான்ட் டு லிவ் திஸ் மொமென்ட் வித் யூ..!! ப்ளீஸ் அசோக்..!! கம்..!!" "எமி.. நான் சொல்றதை.." "ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு சொல்லாத..!! ஒரு காதலியா.. நான் உன்கிட்ட கேக்குற ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஆசை இது..!! டோன்ட் ஸே நோ..!! கமான்..!! நீ எதுவும் செய்ய வேணாம்.. லெட் மீ டூ இட்..!! ஓகே..? லெட் மீ டூ எவ்ரிதிங்..!!" சொல்லிக்கொண்டே அவள் என் சட்டைப் பட்டன்களை ஒவ்வொன்றாய் கழட்ட, என்னால் அவளை தடுக்க முடியவில்லை. அமைதியாக அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். எமி என் சட்டையை உருவி எடுத்தாள். பனியனை மேலே உயர்த்தினாள். நான் கைகளை மேலே தூக்க, அதையும் கழட்டி எறிந்தாள். கண்களை விரித்து, என் வெற்று மார்பையே ஆசையாக பார்த்தாள். ஒரு கையை மட்டும் மெல்ல நீட்டி என் மார்பை தொட்டாள். லேசாக தடவினாள். முன்பு போல என் மார்புக்காம்பை தேய்த்துக் கொடுத்தாள். அப்புறம் அவள் என் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, நான் அவளை தழுவிக் கொண்டேன். எமி என் மார்பெங்கும் 'இச்.. இச்.. இச்..' என்று முத்தமிட்டாள். பரந்து விரிந்து கிண்ணென்று இருந்த என் மார்பு சதைகள் எங்கும், தன் ஈர உதடுகளை ஒற்றி எடுத்தாள். பின்பு பட்டென்று என் ஒருபக்க மார்புக்காம்பை அந்த உதடுகளால் கவ்விக் கொண்டாள். சர்ர்ர்.. என ஒருஉறிஞ்சு உறிஞ்ச, நான் சுகத்தில் திக்குமுக்காடிப் போனேன். என்னையுமறியாமல் 'ஹ்ஹ்ஹா..!!!' என்று முனகினேன். எமி மிகவும் ஆசையாக, ஆர்வமாக என் மார்புக்கம்புகளை மாறி மாறி சுவைத்தாள். நாக்கை நீட்டி நக்கினாள். உதடுகள் பதித்து உறிஞ்சினாள். அப்படி உறிஞ்சிக்கொண்டே, என் பின்பக்கமாக கைகளை செலுத்தி, என் முதுகை அழுத்தி பிசைந்து கொடுத்தாள். நான் சுகவெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தேன். என் மார்போடு விளையாடும் எமியின் அழகு முகத்தையே ஆசையாக பார்த்தேன். அவளுடைய கூந்தலை மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். "என் உடம்பை பாக்குறியா அசோக்..?" எமி என் கன்னத்தை தடவிக் கொண்டே கேட்டாள்.எமி கன்னத்தில் குழி விழ, அழகாய் சிரித்துக்கொண்டே தன் ஆடைகளை ஒவ்வொன்றாய் களைய ஆரம்பித்தாள். முதலில் அந்த டாப்ஸ்.. அப்புறம் அந்த ஜீன்ஸ்.. ப்ரா, பெண்டீசொடு நின்றாள். நான் அவளுடைய அரைநிர்வாண அழகை, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ முகத்தில் புன்னகை சிறிதும் மாறாமல், பின்னால் கைவிட்டு ப்ரா ஹூக்கை கழட்டினாள். அப்புறம் அந்த பெண்டீயையும் நீக்கினாள். எந்த வித கூச்சமும் இல்லாமல், பிறந்த மேனியாக என் முன்னால் நின்றாள். நான் விழிகளை விரித்து, அவளுடைய முழு அழகையும் பருகினேன். தட்டித்தட்டி செய்த மாதிரி என்ன நேர்த்தியான உடற்கட்டு என் எமிக்கு..? கைக்கடக்கமான சைஸில் மார்புப்பந்துகள். அரைக்கோள வடிவில், உருண்டு திரண்டிருந்தன. சாயாமல், சரியாமல் குத்திட்டு நின்றன. செர்ரிப்பழங்கள் மாதிரி சிவந்துபோய் குட்டியாய் இரண்டு காம்புகள். இடை நூல் மாதிரி மெலிந்திருந்தது. சின்னதாய், அழகாய் தொப்புள் குழி. முடியில்லாமல் பளிச்சென்று ஜொலித்த பெண்ணுறுப்பு. வெடித்த கேக் மாதிரி வெளுப்பாக இருந்தது. தொடைகளில் வெண்ணெய் பூசியது மாதிரி மினுமினுத்தன. உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றும் அழகாய் தோன்றியது. என்னால் நெடுநேரம் அவளுடைய நிர்வாண அழகை ரசிக்க முடியவில்லை. ஒரு மாதிரி வெட்கமாக இருந்தது. தலையை குனிந்து கொண்டேன். எமி என் முகத்தை நிமிர்த்தினாள். நிமிர்ந்து பார்த்தால், அதே ஆளைக்கொல்லும் புன்னகை. "ஏன் வெக்கப் படுற..? ம்ம்ம்..? இது உனக்கு சொந்தமான உடம்பு.. கமான்.. வா..!!" எமி என்னை அழைத்து சென்று மெத்தையில் அமரவைத்தாள். அப்புறம் என் மார்பை பிடித்து தள்ள, நான் அப்படியே சாய்ந்து கொண்டேன். எமியும் மெத்தையில் அமர்ந்தாள். "லெட் மீ ரிமூவ் திஸ்.." என்றவாறு என் பேண்ட்டில் கைவைத்தாள். பட்டனை கழட்டி தனியாக உருவினாள். அப்புறம் அந்த ஜட்டியையும் உருவ, நானும் இப்போது முழு நிர்வாணமானேன். எமி ஓரிரு வினாடிகள் என் ஆண்மையின் எழுச்சியை ஆசையாக பார்த்தாள். அப்புறம் கைவைத்து அதை தடவினாள். என் ஆண்மையின் நுனியில் விரல்வைத்து தேய்த்தாள். பிறகு அப்படியே அவளுடைய தலையை என் இடுப்புக்கு கீழே புதைத்துக் கொண்டாள். முதலில் என்னுடைய தொப்புளுக்கு கீழே 'இச்.. இச்.. இச்..' என்று முத்தம் பதித்தாள். எனக்கு குறுகுறுப்பாக இருந்தது. பின்பு என்ன நினைத்தாளோ..? பட்டென்று என் ஆயுதத்தை ஒரு கையால் பிடித்தாள். 'இச்ச்ச்..'என்று அதன் மீது தன் ஈர உதடுகளை பதித்தாள். எனக்கு சுகத்தில் உடல் ஒருமுறை தூக்கிப் போட்டது. 'ஜிலீர்ர்...' என்று ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. நான் உடனே அவளுடைய கழுத்தை பிடித்து இழுத்து, மேலே வரவைத்தேன். பாய்ந்து சென்று அவளுடைய உதடுகளை கவ்வி சுவைத்தேன். எமி புன்னகைத்தவாறே கேட்டாள். "ஏன் மேல இழுத்துட்ட..? வேணாமா..?" "ம்ஹூம்.. வேணாம்..!!" "பரவால்லை.. பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..!!" சொல்லிக்கொண்டே அவள் மீண்டும் தன் முகத்தை கீழே நகர்த்த முயல, நான் தடுத்தேன். "நோ எமி.. ப்ளீஸ்..!! எனக்கு ஒருமாதிரி இருக்கு..!!" எமி புன்னகைத்தாள். என் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள். "அப்புறம் வேற என்ன பண்ணனும்..?" "நீ பண்ண வேணாம்.. நான் பண்ணுறேன்..!!" சொல்லிக்கொண்டே நான் எமியை புரட்டி, மல்லாக்க போட்டேன். அவள் மீது படர்ந்தேன். அவளது நெஞ்சுக்கனிகளில் ஒன்றை கவ்விக் கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்த கனியை கையில் பிடித்து உருட்டினேன். எமி இப்போது கண்களை செருகிக் கொண்டாள். 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..' என்று சுகமாய் முனகினாள். கொஞ்சமாய் நெஞ்சை நிமிர்த்தி, தன் மார்பு உருண்டைகளை தனியாக உயர்த்தினாள். "ம்ம்.." என்றேன் நான் அமைதியாக.நான் கொஞ்ச நேரம் மாறி மாறி அவளது மார்புப்பழங்களை சுவைத்தேன். காம்புகளை நக்கி ஈரமாக்கினேன். கடித்தேன். உறிஞ்சினேன். மார்பை சுவைத்துக் கொண்டே, அடியில் கைவிட்டு, அவளுடைய தொடைகள் மற்றும், தொடையிடுக்கை, அனல் பறக்க தேய்த்துவிட்டேன். எமியும் அனலில் விழுந்த புழுவாக, நெளிந்துகொண்டே இருந்தாள். அப்படியே ஒரு ஐந்து நிமிடம் நெளிந்த பிறகு சொன்னாள். "ப்ளீஸ் அசோக்.. ஆரம்பி.. ஐ ஆம் நாட் ஏப்ள் டு கண்ட்ரோல் திஸ்.. ஐ ஆம் எக்சைட்டட்.!!" நான் எனது ஆணுறுப்பை எமியின் பெண்மை துவாரத்துக்குள் வைத்து அழுத்தினேன். மிகவும் இறுக்கமாக இருந்தது. நுழைத்து முடிப்பதற்குள் எமி துடித்து முடித்தாள். நான் இயங்க ஆரம்பித்தேன். நிதானமாகவே இயங்கினேன். எமியை ஒரு பூ மாதிரி கையாண்டேன். அந்த மெல்லிய உடலாளை மென்மையாகவே அணுகினேன். எமி தன் கால்களால் என் இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டு இறுக்கிக் கொண்டாள். என் முதுகெங்கும் அவளுடைய விரல்களை ஓட விட்டாள். கீறினாள். தனது மார்புக் கலசங்களால் என் நெஞ்சை முட்டி முட்டி தள்ளினாள். 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..' என முனகியவாறு, அனல் மூச்சு விட்டாள். நான் என் முகத்தை எமியின் கழுத்துக்குள் புதைத்திருந்தேன். நான் விட்ட மூச்சுக்காற்று, அவளுடைய கழுத்தில் மோதி, மீண்டும் என் முகத்திலேயே வந்து முட்டியது. எனது வலுவான மார்புகள், அவளுடைய மென்மையான பந்துகளை அழுத்தி நசுக்கின. எனது காம்பும், அவளுடைய காம்பும் அவ்வப்போது உரசிக்கொண்டன. நான் அவ்வப்போது என் முகத்தை நிமிர்த்தி, அவளுடைய உதடுகளை என் உதடுகளால் கவ்விக்கொண்டே, சீரான வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் அந்த காமசுகத்தில் திளைத்திருந்தோமோ..? இருவரும் பேசவே இல்லை..!! 'ம்ம்ம்...', 'ஹ்ஹ்ஹா..', 'ஷ்ஷ்ஷ்..' என்ற முனகல்கள்தான். அந்த உன்னத சுகத்தின் உச்சி வரை சென்று எட்டிப் பார்த்து திரும்பினோம். இருவருமே உச்சம் அடைந்தோம். நெடுநேரம் அப்படியே அணைத்துக் கொண்டு கிடந்தோம். அப்புறம் சிறிது நேரம் கழித்து… இருவரும் இன்னும் நிர்வாணமாகவே கிடந்தோம். நான் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்க, எமி என் மார்பு மீது தலை சாய்த்திருந்தாள். குழந்தை மாதிரி என் மார்பு மயிர்களோடு விளையாடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முடியாக இழுத்துப் பார்த்து, நீளத்தை கம்பேர் செய்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய குழந்தை முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தேன். ச்சே..!! என்ன பெண் இவள்..? என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்..? நாளை முதல் இவனை பார்க்கப் போவதில்லை என்று தெரிந்தும், அடம்பிடித்து தன் உடலை எனக்கு காணிக்கையாக்கி இருக்கிறாள்..? என்ன செய்திருக்கிறேன் இவளுக்காக..? என்னோடு இருக்கவேண்டும் என்ற அவளுடைய குறைந்தபட்ச ஆசையை கூட, முடியாது என்று மறுத்தேனே..? இப்படிப்பட்ட ஒருத்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமோ..? மூர்த்தி சொன்னானே.. உசுரு போச்சுனா மசுரே போச்சு என்று..!! என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாமா..? "எமி..!!" நான் மெல்லிய குரலில் அழைக்க, "ம்ம்.." அவள் என் மார்பில் இருந்து முகத்தை எடுக்காமலே கேட்டாள். "நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் எமி..!!" "வாட்..?" "யெஸ்.. நான் என் அப்பா அம்மாட்ட உன்னைப்பத்தி சொல்லப் போறேன்.. கட்டிகிட்டா உன்னைத்தான் கட்டிப்பேன்னு சொல்லப் போறேன்..!!" நான் அப்படி சொன்னதும், எமி பட்டென்று தன் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள். அந்த முகத்தில் பிரகாசம், ஆசை, காதல், சந்தோஷம், நன்றியுணர்ச்சி எல்லாம் கலந்து கட்டி பொங்கியது. உதடுகள் சந்தோஷத்தில் தடதடத்தன. நம்பமுடியாமல் கேட்டாள். "அசோக்.. ரியல்லி..?" "யெஸ் எமி..!! ஊருக்கு போனதும் மொத வேலை இதுதான்..!!" "ப்ராமிஸ்..?" அவள் அப்புறமும் நம்பாமல் கேட்க, நான் என் கையை எடுத்து அவள் தலை மீது வைத்தேன். புன்னகைத்தவாறு சொன்னேன். "ப்ராமிஸ்..!!""தேங்க்ஸ் அசோக்.. தேங்க் யு வெரி மச்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ...!!" சொன்ன எமி தன் தலை மீது இருந்த என் கையை எடுத்தாள். 'இச்.. இச்.. இச்..' என்று அந்தக்கைக்கு ஒரு அம்பது முத்தங்கள் கொடுத்திருப்பாள். அப்புறம் திடீரென்று சொன்னாள். "அசோக்.. ப்ளீஸ்.. நானும் உன்கூட இண்டியா வர்றேன்..!!" "நீயா.. ப்ளீஸ் எமி.. இப்போ வேணாம்.. நான் மொதல்ல போய்..!!" "நோ.. நோ.. நோ.. நானும் வருவேன்.. எனக்கு இண்டியாவை பாக்கணும் போல இருக்கு..!! உங்க ஊர்.. உன் ஃபேமிலி.. அந்த நாய்க்குட்டி.. எல்லாரையும் பாக்கணும்.. உங்க ஊர் ஏரில குளிக்கணும்.. ப்ளீஸ் அசோக்.. என்னையும் கூட்டிட்டு போ.. ப்ளீஸ்...!!" அவள் கெஞ்ச, நான் திணறினேன். "உடனே எப்படி எமி..? உனக்கு விசா, ஃப்ளைட் டிக்கெட்..?" "இண்டியன் விசா என்கிட்டே இருக்கு.. இன்னும் எக்ஸ்பயர் ஆகலை.." "ஓகே..!! ஃப்ளைட் டிக்கெட்..? அதுவும் நாளைக்கே..? திடீர்னு அவ்வளவு பணம் எப்படி மேனேஜ் பண்ணுவ..? எல்லாம் எப்படி அரேஞ் பண்ணுவ..?" "அதான் யோசிக்கிறேன்.. ஆங்.. ஒரு ஐடியா..!! என் அங்கிள்ட்ட கேக்கலாம்..!! அவரு ஹெல்ப் பண்ணுவாரு..!!" "கண்டிப்பா பண்ணுவாரா..?" "கண்டிப்பா பண்ணுவாரு..!! ஹீ ஜஸ்ட் லவ்ஸ் மீ..!! ஹையோ.. ஐ கான்'ட் பிலீவ் திஸ்..!! ஐ'ம் கோயிங் டு இண்டியா வித் யூ..!!" அவள் சின்னக்குழந்தை மாதிரி உற்சாகத்தில் துள்ள, நான் ஊரில் என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையில் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். "என்னாச்சு அசோக்..? ஏன் அப்படி பாக்குற..?" "இல்லை எமி.. உன்னை கூட்டிட்டு போனா.. என் அப்பா, அம்மா என்ன சொல்லப் போறாங்களோ..?" "ஒன்னும் சொல்ல மாட்டாங்க..!! நான் ஸாரி கட்டி.. வளையல் போட்டு.. பொட்டு வச்சு.. அப்புறம்.. ஆங்.. தலை நெறைய மல்லிகைப்பூ வச்சுக்கிட்டு.. அவங்க கால்ல விழுவேன்..!! அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க..!! என்னை அவங்களுக்கு புடிக்கும்..!! நீ வேணா பாரேன்..!!" கண்களில் ஆயிரம் கனவுகளும், ஆசைகளுமாய் அவள் சொல்ல, நான் அப்படியே அவளை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன். அடுத்தநாள் காலை. நானும் எமியும் அந்த உயரமான பில்டிங்கில் செக்யூரிட்டி ஏரியாவில் நின்றிருந்தோம். நூறு ஃப்ளோராவது இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப பெரிய, உயரமான கட்டிடம்..!! கொஞ்ச நேரத்தில் அந்த செக்யூரிட்டி வந்தான். எமியுடைய அங்கிள் அவளை மட்டும் மேலே வர சொல்லுவதாகவும், என்னை வெளியில் வெயிட் பண்ணுமாறும் சொன்னான். எமி என்னிடம் திரும்பி, அவளுடைய அந்த கன்னத்தில் குழி விழும், கள்ளம் கபடமற்ற சிரிப்பை உதிர்த்துவிட்டு சொன்னாள். "ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு அசோக்.. ஐ வில் பீ பேக்..!!" "ஓகே எமி.. நீ வர்ற வரை.. நான் அந்த காஃபி ஷாப்ல வெயிட் பண்ணுறேன்..!!" சொல்லிவிட்டு நான் திரும்ப, எமி என்ன நினைத்தாளோ..? பட்டென்று என் தோளை பிடித்து திருப்பி, என் உதட்டில் 'இச்ச்..' என்று முத்தமிட்டாள். மீண்டும் அந்த புன்னகையை உதிர்த்துவிட்டு, லிஃப்ட் நோக்கி நடந்தாள். நான் அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்து, எதிரே இருந்த காஃபி ஷாப்புக்குள் நுழைந்தேன். ஒரு காஃபியும், டோனட்டும் வாங்கிக்கொண்டு வெளியே கிடந்த டேபிளில் வந்து அமர்ந்தேன். அந்த டோனட்டை ஒரு கடி கடித்தபோது, என் செல்போன் சிணுங்கியது. எமிதான் அழைக்கிறாள். எடுத்து பேசினேன். ஒரு மாதிரி உற்சாகமான குரலில் சொன்னாள். "ஐ கேன் ஸீ யூ..!!" "எமி.. எமி.. எங்க இருக்குற..?" "நான் எண்பதாவது ஃப்ளோர்ல இருக்குறேன்..!!" "அங்கே இருந்து எப்படி என்னை பாக்குற..?" "இங்க ஒருத்தர் பைனாகுலர் வச்சிருந்தாரு.. அவர்ட்ட இருந்து வாங்கி பாக்குறேன்..!! யூ லுக் ஆவ்ஸம்..!! டோனட் நல்லாருக்கா..?" "ம்ம்.. நல்லாருக்கு..!! என்னாச்சு..? உன் அங்கிளை பாக்கலையா..?" "அவரு சின்ன டிஸ்கஷன்ல இருக்காரு.. அஞ்சு நிமிஷம் என்னை வெயிட் பண்ண சொன்னாரு..!!" "ஓகே...!!" "ஜஸ்ட் டென் மோர் மினிட்ஸ் பேபி.. ஐ வில் பீ வித் யூ..!!" என்று கொஞ்சினாள். "ஓகே...!! ஓகே...!!" என்று நானும் கொஞ்சிக்கொண்டு இருக்கும்போதே, எமி திடீரென்று, "வாட்ஸ் தேட்..???" என்று ஒரு மாதிரி அதிர்ச்சியாக சொன்னாள். "என்ன எமி..?" "ஒரு ஃப்ளைட்..!!" "ம்ம்.. வானத்துல ஃப்ளைட் பறக்கத்தான செய்யும்..?" "நோ அசோக்..!! இது ரொம்ப லோவா பறக்குது..!! ஐ தின்க்.. இட்ஸ் கம்மிங் டுவார்ட்ஸ் திஸ் பில்டிங்..!!" இப்போது எமியின் குரலில் ஒருவித திகில் தெரிந்தது. "எமி.. என்ன சொல்ற..?" இப்போது பதட்டம் என்னையும் தொற்றிக் கொண்டது. "யெஸ் அசோக்.. இட் லுக்ஸ் டேஞ்சரஸ்..!!" எமியின் குரல் அபாய அவசரத்தில் ஒலித்தது. "எமி.." "அசோக்க்க்க்க்...!!!" எமி என் பேரை சொல்லி அலறும்போதே, எங்கிருந்துதான் வந்ததென்றே தெரியாமல் அந்த விமானம் பறந்து வந்து, படுவேகமாய் அந்த பில்டிங்கை மோதியது. அந்த உயரமான பில்டிங்கின் உச்சியே சுத்தமாய் மறைந்துபோக, ஒரு பெரிய நெருப்புக்கோளம் ஒன்று உருவானது. 'பட.. பட.. பட...' வென எது எதுவோ வெடித்து சிதறியது. குப்பென்ற கரும்புகை அந்த ஏரியா முழுவதும் பரவியது. நான் 'எமி.. எமி.. எமி..' என்று, முட்டாள்தனமாய் அணைந்துபோன செல்போனில் அலறிக் கொண்டிருந்தேன். இன்று... ஊர்: சென்னை, இந்தியா. இடம்: என் வீடு தேதி: செப்டம்பர் 11, 2010

நான் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ஆங்கில ந்யூஸ் சேனலில் அந்த ரெட்டை கட்டிடங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. பின்பு அந்த ந்யூஸ் ரீடர் தோன்றினான். முகத்தில் ஒரு போலி சோகத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். "வேர்ல்ட் ட்ரேட் செண்டர் தகர்க்கப்பட்ட தினம்.. இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில்.. அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்.. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.. இதையொட்டி.. அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா.." என் மனைவி வள்ளி பட்டென்று சேனலை மாற்றினாள். ந்யூஸ் சேனல் மறைந்து சன் டிவி தோன்றியது. எரிச்சலாக முணுமுணுத்துக் கொண்டே எனக்கு அருகில் சோபாவில் வந்து அமர்ந்தாள். "ஐயோ.. திருமதி செல்வம் போட்டிருப்பான்.. நீங்க கண்டதையும் உக்காந்து பாத்துக்கிட்டு இருப்பீங்க...!!" சொல்லிவிட்டு.. அந்த சீரியலில் யாரோ யாருக்காவோ அழுததைப் பார்த்து உருகி, இவளும் அழ ஆரம்பித்தாள். எனக்கும் அழுகை வந்தது. கண்ணில் இருந்து வழிந்த நீரை, என் மனைவிக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment