Friday 13 March 2015

சுகன்யா... 49

ராணி மனதில் எரிச்சலுடன் ஹாலுக்கு வந்து, கணவனின் செல் நம்பரை அழுத்தினாள். நல்லசிவத்தின் செல், ஹாலில் இருந்த மேஜை மீதே ஒலிக்க, மனதுக்குள் வெறுப்புடன், தன் கையிலிருந்த போனை விட்டெறிந்துவிட்டு வேகமாக திரும்பியவளின் கோபம் அன்றைய அவளுடைய மனக்குழப்பத்துக்கெல்லாம் காரணமான, சோஃபாவின் மீது அரை நிர்வாணமாகப் படுத்திருந்த தன் பிள்ளை மீது திரும்பியது. 

சம்பத், இன்னமும் வெறும் உடம்பில் ஜட்டியுடன், ஒரு கையில் ரிமோட்டுடன், எஃப் டீவி, எம் டீவி, வீ டீவி என மாறி மாறி பயணித்துக்கொண்டிருந்தான். அவனுடைய மறு கை தொடை நடுவில் கிடந்தது. 

"டேய்... இது என்னடா புது பழக்கம்...? நட்ட நடு ஹால்ல, ஜட்டியை மட்டும் போட்டுக்கிட்டு நெடுக நீட்டிக்கிட்டு கிடக்கிறே.. உள்ளப் போய் உன் ரூமுல படுடா..." என ராணி இறைந்தாள். அவன் படுத்திருந்தவிதம் பிள்ளையைப் பெற்றவளுக்கே பார்க்க கூச்சமாக இருந்தது.

 


"சரி... சரி... இப்ப ஏன்... என் மேல எரிஞ்சு விழறே?" சம்பத் தன் தாயின் "மூடை" புரிந்துகொள்ளாமல் வழக்கம் போல் தெனாவட்டாக பேசினான். 

சம்பத்திடமிருந்து வந்த எகத்தாளமான பதிலைக் கேட்டதும், அவரு சொல்ற மாதிரி இவன் ஒழுங்கா வளராததுக்கு காரணம் நான்தான். இவன் அப்பா இவனை கண்டிக்கும் போதெல்லாம், குறுக்கே போய் போய் நின்னது நான்தான். அதுக்குப் பலனை நான் இப்ப அனுபவிக்கறேன். வர வர எங்கிட்டக்கூட சுத்தமா மரியாதையில்லையே? 

சுகன்யா இவனை தன் உறவுக்காரன்னு மதிக்கலைங்கறான். என் படிப்பை மதிக்கலங்கறான். என் ட்ரஸ்ஸை பாத்து மயங்கலன்னு புலம்பறான். இவன் அவளைத் தன் உறவுன்னு மதிச்சானா? இவன் ஒரு படிச்சவன் மாதிரியா தன் சொந்த வீட்டுல நடந்துக்கறான்? அவகிட்ட நடந்துகிட்டான். இவன் போனப்ப அந்த பொண்ணு எந்த மனநிலையில இருந்தாளோ? அவ காதலிக்கற பையன் கூட அவளுக்கு என்னப் பிரச்சனையோ? இவன் போய் தன் கையை நீட்டினா, இவனைத் தூக்கி அவ இடுப்புலய வெச்சிக்க முடியும்? 

இவன் ஒரு பொண்ணை மதிக்கத் தெரியாம, அடுத்தவங்களை கொறை சொல்லிக்கிட்டு, அவங்களை பழிவாங்றேன்னு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, போன எடத்துல மொக்கை போட்டுட்டு, இன்னொருத்தர் கஷ்ட்டப்படறதை பாத்து சந்தோஷப்படற அளவுக்கு போயிருக்கான்னா அதுக்கு காரணம் நான்தானே? 

இவனுக்கு அளவுக்கு மேல செல்லம் குடுத்து தலைக்கு மேல தூக்கி வெச்சிக்கிட்டு ஆடினது என் தப்புத்தானே? ராணியின் அடி மனதிலிருந்து முதல் முறையாக, தன் மகனுக்கு எதிராக, ஒரு இனம் தெரியாத எரிச்சல் சட்டென கிளம்பியது. 

"மொதல்லே நீ வளந்தப்புள்ளையா, படிச்சவனா, ஒழுங்கா ட்ரஸ் பண்ணக் கத்துக்கடா.." அவள் குரலில் மெலிதாக கோபம் எட்டிப்பார்த்தது. 

"ரெண்டு நிமிஷம் மனுஷனை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே? இப்பத்தான் நச்சுப்புடிச்ச அந்தாளு வெளியில போனாரு..."

"என்னடா உளர்றே?" ராணியின் குரலில் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது. 

"சும்மா தொணதொணக்காம, நீயும் கொஞ்ச நேரம் எங்கயாவது போய் தொலைங்கறேன். என் வீட்டுல என் இஷ்டப்படி கிடக்கிறேன்; நீங்க ஏன் சும்மா அல்ட்டிக்கிறீங்க?"

"என்னடாப் பேசறே ..."அந்தாளு" "இந்தாளு"ன்னு... படிச்சவனா நீ? பெத்த அப்பன் கிட்ட பேசற மொறையைக் மொதல்ல நீ கத்துக்கணும்..." ராணி தன் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள். 

எல்லாவற்றையும் நொடியில் உதறி எறிந்துவிட்டு, வீட்டை விட்டே கிளம்பத் தயாராகிவிட்ட தன் கணவனின் கலங்கிய முகம், ராணியின் மனதுக்குள் வந்து நிற்க, அவள் முகம் கோபத்தில் சிவந்து, மூக்கு நுனி துடித்து, கன்னங்களில் சூடு ஏற ஆரம்பித்தது. 

தன் மகன், முகம் தெரியாத ஒரு செல்வாவை ரிவிட் அடித்தது, அவனுக்கும், சுகன்யாவுக்கும் நடுவில் தேவையற்றப் பிரச்சனையை உண்டு பண்ணிவிட்டு வந்திருப்பது, அவர்களைப் பிரித்து, அதனால் சுகன்யாவை அழவிட்டு வேடிக்கை பார்க்கத்தானே தவிர, அவளைத் திருமணம் செய்து கொள்ளுவதில் தன் மகனுக்கு விருப்பமில்லை என்று தெரிந்தவுடன், தன் தாயின் மதிப்பிலிருந்து சம்பத் விழுந்துவிட்டான். 

தன் தாயும் ஒரு பெண்தான். ஒரு இளம் பெண்ணை தான் அவமானப்படுத்தியதில் தன் தாய்க்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்பதையும் அவன் புரிந்து கொள்ளவில்லை. தனக்காக, சிவதாணுவின் வீட்டில் நடந்த விஷயம் முழுதும் புரியாமல், ராணி தன் தந்தையிடம் இன்று எதிர்த்து சண்டையிட்டிருக்கிறாள். இந்த சண்டை அவர்களுக்குள் சாம்பல் பூத்திருக்கும், ஒரு சின்ன நெருப்புக் கீற்றை கிளறி விட்டுவிட்டது என்ற உண்மையையும் அவன் உணரவில்லை. 

தன் தாய், தான் எந்த தவறு செய்தாலும், தனக்காக யாரிடமும் அது சரியே என வாதாடுவாள் என்ற எண்ணத்திலேயே இருக்கும் சம்பத், தன் தாய் இவ்வளவு நேரமாக, தனிமையில் தன் உள்ளத்தை ஆழந்து நோக்கி, தன்னை சத்தியசோதனை செய்துவிட்டு வந்திருக்கிறாள் என்ற உண்மையை சம்பத் முழுவதுமாக உணராத நிலையில் தன் தந்தையை கிண்டலடித்தான். 

"டேய்... சொல்றதை கேளுடா... என் கோபத்தை கிளறாதே?" ராணி வெடித்தாள். தன் மகனின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வெரண்டாவை நோக்கி வீசி எறிந்தாள். அவள் மூச்சிறைக்க அவன் எதிரில் துர்க்கையாக நின்றாள். 

"உன் புருஷன், உன் கொறை காலத்துக்கு சோறு போடமாட்டான்னு பயந்திட்டியா... நீ பெத்த புள்ளை.. .நான் இருக்கேம்மா... கவலைப்படாதே" சம்பத் அர்த்தமில்லமால் உளறிக்கொண்டே எழுந்து நின்றான். 

"யாரடா வாடா போடாங்கறே...என் புருஷனையா சொல்றே? அந்த மனுஷனைப் பத்தி உனக்கென்னடா தெரியும்?" ராணி பளீரென சம்பத்தின் வலது கன்னத்தில் மூர்க்கமாக அறைந்தாள். 

விழுந்த அறையின் வேகத்தில் சம்பத் அதிர்ந்தான். தன் தாய் தன்னை அடித்தாள் என்பதையே அவனால் ஒரு நொடி நம்பவே முடியவில்லை. கன்னத்தில் சுரீர்ரென நெருப்பை கொட்டினமாதிரி எரியுதே? காது ங்கொய்ங்குது... கண்ணு விண்ணு விண்ணு தெறிச்சுப்போச்சே? அப்படீன்னா, அம்மா அடிச்சது உண்மைதானா? சம்பத் தன் தாயின் முகத்தை இதுவரை இல்லாத ஒரு அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தான். 

ஹாலில் சுவரில் சாய்ந்து, இரு தொடைகளும் மார்புடன் அழுந்தியிருக்க, கைகளால் தன் முழங்கால்களை கட்டிக்கொண்டு, விழிகள் மூடி, முகத்தில் சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள் ராணி. மூடியிருந்த இமைகளுக்குப் பின் கண்கள் வலித்தன. ராணியின் இமையோரத்திலும், கன்னங்களிலும், கண்ணீர் வழிந்தோடி காய்ந்த கோடுகள் கோலமிட்டிருந்தன.

ராணி இப்போது மவுனமாக மனதுக்குள் அழுதுகொண்டிருந்தாள். நெற்றியும், தலையும் விண் விண்ணென்று வலித்துக்கொண்டிருந்தது. விளக்கு வைக்கற நேரத்துல வீட்டுல பொம்பளை அழுதா குடித்தனம் உருப்படுமா? தன் தலையை இட வலமாக உதறினாள். மெல்ல எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சம்பத்தின் அறைப் பக்கம் நடந்தாள். மூடியிருந்த கதவைத் தள்ளினாள். உட்புறம் தாள் போடப்பட்டிருந்தது.

"சம்பத்து... கண்ணு... கதவைத் தொறடா.." மனதின் சூட்டில் தாய்மை பாலாக பொங்கி மேலேழுந்து வழிந்தது.

"....."

"தட்....தட்ட். தட்ட்" கதவைத் தட்டி தட்டி கை ஓய்ந்து போனதுதான் மிச்சம். அறையின் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு... சும்மாவா சொன்னாங்க..!

மெல்ல நடந்து வெராந்தாவில் கிடந்த சேரில் உட்க்கார்ந்தாள். வீட்டுல இருக்கற ரெண்டு ஆம்பளையில ஒருத்தன் கோவத்தோட வீதியில அலையறான். அடுத்தவன் வீட்டுக்குள்ளவே மூடின கதவுக்குப் பின்னால இருந்துக்கிட்டு கூப்பிட்டக் குரலுக்கு பதில் குடுக்காம என்னைக் கொல்றான்.

தோளுக்கு மேல வளந்த புள்ளயை நானே அடிச்சுட்டேனே? என் நாலு விரலும் அவன் கன்னத்துல பதிஞ்சு, வரி வரியாக பூத்திருந்ததை இப்ப நெனச்சாலும் என் அடிவயிறு பத்தி எரியுதே? இன்னைக்கு வரைக்கும், என் புருஷனை கூட அவன் மேல கை ஓங்க விட்டதில்லே. கண்ணுல பயத்தோட அப்படியே மலைச்சுப் போய் நின்னானே என் புள்ளே..! அலமந்து போன ராணியின் மனசின் அலையும் வேகம் இன்னும் மட்டுப்பட்டப்பாடில்லை.

உலகத்துல நீதான் புள்ளையை அடிச்ச மொதத் தாயா? உன் அப்பன் என்னைக்காவது உன் மேல கையை ஓங்கியிருப்பானா? உன் ஆத்தா உன்னை வெறும் தரையில போட்டதில்லையேடி..! ஒண்ணுக்கு ரெண்டா பட்டுப்புடவையை விரிச்சி தேக்குமரத் தொட்டில்லத்தானே கிடத்தினாங்க.

அப்படிப்பட்டவளே, உன் ஆத்தாளே, உன்னை ஒரு நாள் வீடு பெருக்கற விளக்குமாத்தால, வெளுத்துக் கட்டினா. அன்னைக்குத்தான் உன் திமிரும், நெஞ்சுல இருந்த அகந்தையையும் கொஞ்சம் அடங்கிச்சி. ஆகாசத்துல பறந்துக்கிட்டிருந்த நீ தரைக்கு மெல்ல மெல்ல வந்து சேர்ந்தே. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பியும் ஒதவ மாட்டான்னு சொல்றாங்களே... இதுவும் உண்மைதானா?

ராணியின் மனசு நொடியில் பின்னோக்கி ஓடி, முப்பத்து மூன்று வருடங்களை கடந்து, முதல் முறையாக அவள் அடி வாங்கிய தினத்தில் சென்று நின்றது. 

ராணி தன் பதின்மூன்றாவது வயதில் மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தாள். அதுவரை அவள், சாதாரணமாக, அவள் வயதையொத்த சிறுமிகளைப் போல், ஒல்லிப் பிச்சானாக, பார்ப்பதற்கு கொத்தவரங்காய் போல்தான் இருந்தாள். பருவமெய்தியபின், இயற்கை மிகவிரைவாக அவள் உடலில் ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை?

தலை முடியின் மினுமினுப்பும்; முகத்தின் செழுமையும் சட்டென ஏறியது. பளிங்கு கன்னங்களின் வழவழப்பும், கண்களில் பளிச்சிட்ட இனம் தெரியாத அறியாமையும், மெல்லிய இதழ்களில் கூடிய மாதுளையின் செம்மையும்; மாறிய குரலின் இனிமையும், சருமத்தின் மழமழப்பும், மென்மையும், பளபளப்பும், வயது வித்தியாசமில்லாமல் அவளைப் பார்த்தவர்களின் மனதை அலைகழித்தன.

இவளை ஒரு தரமாவது அமுக்கிப் பாக்கணும் வேய்... இந்த வயசுலேயே இப்படி கிண்ணுன்னு இருக்காளே.. குட்டி... இன்னும் போவ போவ எப்படியிருப்பா? நடு வயது சோக்காளிகளும் ஒரு நொடி மனதுக்குள் சலனப்பட்டார்கள். கட்டியவளை கட்டிலில் அணைத்தப்போது ராணியை மனதில் நினைத்துக்கொண்டார்கள்.

ராணியின் உடல் வளர்ச்சிக்கேற்ப, மாறிய அவள் மேனியின் மெருகும், பூரிக்க வேண்டிய இடத்தில் ஆரம்பித்த அளவான பூரிப்பும், இடை கொடியாக குறுகி, அவள் பின்புறம் உருண்டு திரண்டு அகன்றதால் நடையில் உண்டான நளினமும் என அவள் அழகை கண்டு ஜொள்ளுவிட, தெருவில் இளைஞர் படை ஒன்று திடீரெனத் தயாரானது. ராணி நம்பாளுமா... லைன்ல க்ராஸ் பண்ணாதே; ஒருத்தன் தவறாமல் இந்த வசனத்தை தன் கூட்டத்துக்குச் சொன்னான்.

ராணி ரசிகர் மன்றம் ஒன்று நாயரின் டீக்கடைக்குப் பின்னாலிருந்த காலியிடத்தில் திறக்கப்பட்டது. ராணி போட்டியில்லாமல், பீ.யூ.ஸி. மற்றும் டிகிரியில் கோட் அடித்துவிட்டு, மார்ச், செப்டம்பர் என அரியரை எழுதிவிட்டு, பெல்பாட்டம் போட்டுக்கொண்டு, ஊர் ஊராக பேப்பரைத் துரத்திக்கொண்டிருந்த கல்லூரிக் காளைகளின், கனவுக்கன்னியானாள் அவள்.

தெருமுனை நாயர் கடையில் ஓசியில் தினத்தந்தி படித்துக்கொண்டு, கடன் சொல்லி டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் "வேய் இவ என் ஆள்டா," என்பான் ஒருவன். "நிறுத்துடா வெண்ணை.. அவ என் தூரத்து சொந்தம்...மொத பாத்தியதை எனக்குத்தான் மச்சான்" ஒருத்தன் உரிமைக்குரல் எழுப்பினான். கருப்பாக, உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லாத கிறுக்கர்களின் நடுவில் காதல் சண்டைக்கு அவள் வித்திட்டுக்கொண்டிருந்தாள்.

தன் உடல் அழகால் ஆண்களின் கவனத்தை தான் சுலபமாக ஈர்க்கிறோம் என்ற உண்மை மெல்ல மெல்ல ராணிக்குப் புரிய ஆரம்பிக்க, அவளுக்குப் பாதங்கள் தரையில் பாவவில்லை. அவள் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தாள். பகலிலேயே அவள் கண்களில், வண்ணமயமான கனவின் சாயை படர ஆரம்பித்தது. ராணி முன்னெப்போதையும் விட கண்ணாடியின் முன் அதிக நேரத்தை செலவழித்து தன்னை சிரத்தையுடன் அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கினாள்.

இளம் வாலிபர்கள், அவள் தெருவில் வேலையே இல்லாமல், நேரம் கெட்ட நேரத்தில் "தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா" என சைக்கிளில் சுற்ற ஆரம்பித்தார்கள். ராணியின் மனமும், கண்களும், தன் மனதிற்கேற்ற இளவரசனைத் தேட ஆரம்பித்தது.

கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும், பள்ளி யூனிபார்முக்கு விடை கொடுத்து, தினம் ஒரு புடவையில் அவள் அழகு ரதமாக வலம் வர, ஆணினம் அவள் பின்னால், அவள் கடைக்கண் பார்வைக்காக, ஏங்கி அணி வகுத்து தவம் செய்ய ஆரம்பித்தது. விடலைப் பையன்களின் விழிகளிலிருந்த ஏக்கம் தந்த போதையில், அவள் மனம் ஆகாயத்தில் பறந்தாலும், வாரத்தில் இரண்டு "ஐ லவ் யூ ராணி" என கடிதம் கிடைக்கப் பெற்றாலும், படிப்பை மட்டும் அவள் எந்தவிதத்திலும் கோட்டை விட்டுவிடவில்லை.

தன்னம்பிக்கையையும், திமிரையும், மயிரிழையை ஒத்த ஒரு மெல்லியக் கோடே பிரிக்கிறது என்ற உண்மையை இருபத்தோரு வயதில் ராணி புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. இருபது வயதில் இது யாருக்குத்தான் புரிகிறது?

ராணிக்கென்னடி; பேருக்கேத்த மாதிரி ராணி மாதிரி அழகாயிருக்கா; ராஜா மாதிரி ஒருத்தன் அவளை கொத்திக்கிட்டு போவப்போறான். இப்படி அவள் காது பட, சொல்லி சொல்லியே அவளை அவள் தோழிகளும், உறவும் ஏற்றிவிட்டுவிட்டார்கள். உடலும் மனமும் தரையில் நிற்கவில்லை.

படிப்பு, அழகு, கேட்டபோது மறுப்பில்லமல் செலவுக்கு கிடைத்த பணம், பெற்றோரின் அன்பு, தம்பியின் பாசம், உறவினர்களின் அக்கறை, அந்தஸ்து என எல்லாமே குறைவில்லாமல் வாழ்க்கையில் கிடைத்தவுடன், ராணிக்கு அளவிட முடியாத ஒரு தன்னம்பிக்கை மனதில் வளர்ந்தது. தான் செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அவளுள் மெல்ல மெல்ல வேர்விட்டு தலை கனக்க ஆரம்பித்தது. ஒரே பெண். வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டமென ஆகியது. விவரம் புரியாத வயதில் மற்றவர்களை சற்றே எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தாள். 

ஞானசம்பந்தன் எம்.ஏ.யில் ராணியின் வகுப்பில் வந்து சேர்ந்தான். சுருட்டை முடியும், களையான முகமும், கவர்ச்சியான உதடுகளும், சிரித்து சிரித்து இனிமையாக பேசும் அவன் போக்கும், ராணியின் மனதைக் கவர்ந்துவிட, அவள் தன் மனதை வகுப்புத் தோழனிடம் சுலபமாக பறிகொடுத்தாள். வகுப்பில் வாய்மொழியைப் புறக்கணித்து, விழிகளால் பேசிக்கொண்டார்கள். ஞானம் அழகாக சிரித்து அவளை நோக்கி கண்ணடிக்க, ராணியின் மனதில் எரிமலை வெடித்து சிதறியது. ராணிக்கு பகல் சோறு கசந்தது. இரவில் படுக்கை நொந்தது.

தன் மனதுக்குள் குடியேறியவனுடன், வீட்டிலிருந்து அவனுக்கும் சேர்த்து கொண்டு போன டிஃபனை சாப்பிட்டவாறு, கல்லூரி கேண்டீனில் பேசி சிரிப்பதில் ஆரம்பித்த ராணியின் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல வேகம் பிடித்தது. ஒரே மாதத்தில் அவர்கள் சந்திக்குமிடம் தனிமையில் மரத்தடியாக மாறியது. வகுப்புக்கு மட்டமடித்துவிட்டு, பஸ்ஸில் நெருக்கமாக உட்க்கார்ந்து, ராணிய் பயணம் போக ஆரம்பித்தாள். வாலிப வயதில், ஆணின் அண்மையால், அவன் உடல் உரசல் கொடுத்த கிளுகிளுப்பில் அவள் மனம் பரவசம் அடைந்தது.

சில நேரங்களில் திட்டமிடாமல் யதேச்சையாகவும், பல சமயங்களில் திட்டமிட்டும், ஞானசம்பந்தனின் விரல்கள் ராணியின் இடுப்பிலும், வயிற்றிலும் செய்த சில்மிஷங்களை, ராணியின் மனம் தினம் தினம் எதிர்பார்த்து ஏங்க ஆரம்பித்தது. காதலனின் வருடலால், இளம் உடலில் நரம்புகளில் ஓடிய மெல்லிய சுகம், அவள் மனதை தித்திக்கச் செய்தது.

ராணியின் மனதில் குடி புகுந்தவனோ, அவளை விட வசதியில் குறைந்தவன். அவள் பிறந்த இனத்தைச் சேராதவன். ராணியை அடையும் ஓட்டத்தில், தோற்று வெறும் வாயை அசை போட்டவர்களுக்கு அவள் காதல் நாடகம் மெல்லுவதற்கு வெல்ல அவலாக இனித்தது.

மச்சான்.. வெளீயூர்காரன் நம்ம ஊரு பொண்ணத் தொடறான்.. தடவறான்.. போற போக்கைப் பாத்தா ராணியை சீக்கிரமே போட்டு கழட்டிடுவான் போல இருக்கு... ங்க்ஹோத்தா.. நாம கையில புடிச்சிக்கிட்டு அவங்களை வேடிக்கைப் பாக்கறோம். ஞானசம்பந்தனை, வலுச்சண்டைக்கு இழுத்தார்கள். சிரித்துக்கொண்டே ஒதுங்கியவனை விடாமல் மல்லுக்கு இழுத்தார்கள். ஒத்தையில் சட்டை கையை மடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தவனை, நாலு பேராக கூடி, சேர்ந்து அடித்தார்கள்.

ஞானசம்பந்தன் அடிபட்டது தெரிந்ததும், ராணியின் மனதில் வைராக்கியம் எழுந்தது. டேய் இவன்தாண்டா என் ஆம்பிளை. "நல்லா பாத்து வயிறெரிஞ்சு சாவுங்கடா" - வீதிகளில் வெளிப்படையாக அவன் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ராணி.

அரையிருட்டில் சினிமாக் கொட்டகையில், வெக்கையில் போட்டிருந்த காட்டன் ரவிக்கை முதுகில் நனைந்திருக்க, அவன் மூச்சுக்காற்றின் வெப்பம் கழுத்தைச்சுட, முதல் முறையாக ராணியின் தோளில் அவள் காதலன் கையைப் போட்டு அணைத்து, ஈரஉதட்டால் அவள் காது மடலை வருடியபோது தன் கண்களின் இமைகளை மூடி மயங்கினாள்.

"என்னாச்சு ராணி..." அவன் அவள் பின் கழுத்தில் முத்தமிட்டபோது, ராணி தன் அங்கங்கள் சிலிர்த்து, பிராவின் நடுவில் அமுங்கி கிடந்த மார்புகளில் வியர்த்து, தன் முலைக்காம்புகள் வீங்கி அளவில் நீள, அடிவயிறு குழைந்து நெகிழ, தொடையிரண்டும் நடுங்கி, உடலும் மனமும் காற்றில் பறக்க, காதலன் தோளில் தன் தலை பதித்து, ஒரு ஆணின் அந்தரங்கமான முதல் தொடுகையில், தன் பெண்மை கசிய, சினிமாத் தியேட்டர் இருளில் விழிகள் கிறங்கினாள்.

தன் எதிர் வீட்டுக்காரி இரண்டு வரிசை தள்ளி தன் கணவனுடன் உட்க்கார்ந்திருந்தது அவள் கண்களுக்கோ, புத்திக்கோ எட்டவில்லை. எவன் பாத்தா எனக்கென்னா? மனதில் ஒரு அகங்காரம் வந்துவிட்டிருந்தது. உடலில் பயம் விட்டுப்போயிருந்தது. இவர்கள் இருவரின் அண்மையைப் பார்க்கும் அவள் தோழிகளின் ஏக்கம் கலந்த பொறமைப் பார்வை, காதலனின் நெருக்கத்தைவிட, அவன் தொடுகையை விட அவளுக்கு அதிகமான இன்பத்தை அளித்தது.

ராணியின் காதல் வாழ்க்கை இனிமையாக அசைந்து, கண் சிமிட்டி, கைகளை ஆட்டி, சிரித்து, அழுது, குப்புறக் கவிழ்ந்து, தவழ்ந்து, முட்டி போட்டு, மெல்ல எழுந்து உட்க்கார்ந்து, தட்டு தடுமாறி சுவர் பிடித்து ஊர்ந்து, பிறகு நிமிர்ந்து நடந்து, ஓடத்தொடங்கும் குழந்தையைப் போல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.

கல்லூரி படிப்பு முடியும் நேரத்தில், அவள் காதல் விஷயம் ஊரில், ஆற்றோரத்தில், கோவில் பிரகாரத்தில், தெருமுனை குழாயடியில், டீக்கடை பெஞ்சில் அலசப்பட்டது. அரசல் புரசலாக, காற்றில் கலந்து வீட்டுக்கும் எட்டியது. 



"ராணீ என்னடி விஷயம்...? ஏன் வீட்டுக்கு தெனம் தெனம் லேட்டா வர்றே?

ராணி, மாலையில் கல்லூரியிலிருந்து, வீட்டுக்கு வருவது கொஞ்சம் கொஞ்சமாக தாமதமாக, ஒரு நாள் மாலையும் இரவும் சேரும் வேளையில், சமையலறையில் சோத்தைப் தட்டில் போட்டு மகளிடம் நீட்டிய தாய் ராஜாத்தி தன் அடிக்குரலில் சீறினாள்.

"எம்ம்மா, கிளாஸ் முடிஞ்சதும், நேத்து நான் லைப்ரரிக்கு போய்ட்டு நோட்ஸ் எடுத்துக்கிட்டு வந்தேம்மா... இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்திச்சிம்மா; நாளைக்கு கல்சுரல்ஸ் இருக்குமா... ஒத்திகைப் பாக்கணும்... ஒரு பஸ் போயிட்டா, அடுத்த பஸ் புடிச்சி வர வேணாமா?", தாயின் முகம் பார்க்காமல், சுவற்றைப் பார்த்து பொய் பேசினாள் ராணி.

"என் மூஞ்சைப் பாத்து பேசுடீ.." தாய் அறியாத சூலும் உண்டா? தன் மகளின் கண்களில் இருந்த பொய்யை அவளால் மோப்பம் பிடிக்க முடிந்தது.

"யாரோ ஒரு பையன் கூட அரசமரத்தடியில நின்னு மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கியாமே? காலேஜ் முடிஞ்சுதா... வீட்டுக்கு ஒழுங்கு மொறையா வந்தமான்னு இரு... நம்ம வூட்டுல, ஜாதியிலே இதெல்லாம் வழக்கமில்லே... தப்புத்தண்டாவா எதாவது ஆச்சின்னா... முதல்ல உன் கையை காலை ஒடைக்கப் போறது நான்தான்..!" பெற்றவள் தன் கண்களை உருட்டி விழித்து, பெண்ணின் முகத்தை நோட்டம் விட்டாள்.

"அம்மா, யாரும்மா சொன்னது இல்லாததையும் பொல்லாததையும் உனக்கு? நான் யார் கூடவும் பேசவும் இல்லே! புளி... மாங்காத் தின்னவும் இல்லே. தன் உதடுகளைச் சுழித்து, மார்பைப் குலுக்கி, புருவத்தை உயர்த்தி துடுக்காகப் பேசினாள்.

"பொய் சொன்னே... தோலை உரிச்சிடுவேன்.. மனசுக்குள்ள புளியும் மாங்காயும் தின்ற ஆசை உனக்கு அதுக்குள்ள வந்திடிச்சா?

"...."

"உன் வாயில என்னாடிக் கொழுக்கட்டையா... பெத்தவக்கிட்டவே கிண்டலா?"

"இப்ப நான் என்னா சொல்லிட்டேன்னு நீ என் உயிரை வாங்கறே?"

"சினிமாக் கொட்டையில, மேட்னி ஷோவுல உன்னை எவன் கூடவோ எதிர் வீட்டு சாந்தா பாத்தாளாமே?"

"நான் எந்தக் கொட்டாயுக்கும் போவலை... பொறாமை புடிச்சதுங்க புழுங்கி சாவுதுங்க.."

"கோயில் கொளத்தங்கரை மண்டபத்தாண்டை உன்னையும், அவனையும் ஜோடியா பாத்ததா உன் சித்தி புஷ்பா சொல்றாளே? அவளுக்கு உன் மேல என்னாடீ பொறாமை?" தாய் பெண்ணை நெருங்கி அவள் குமட்டில் குத்தினாள்.

"வலிக்குதுடீ... ஏண்டி இப்ப குத்தினே நீ" ரத்தத்தின் துடிப்பில் திமிராக எகிறியது குட்டி. தலையில் ஓங்கிக் குட்ட வந்த தாயின் கையை, எச்சில் கையால் வலுவாக தடுத்துப் பிடித்து, வகை தொகையில்லாமல் "வாடீ போடீ" என்று பெற்றவளை மரியாதையில்லாமல் எகத்தாளமாகப் பேசிப் பார்த்தது.

"அந்த பையன் நம்ம ஜாதியில்லையாமே? உன் அப்பனுக்கு தெரிஞ்சா அவனையும் வெட்டுவான்... உன்னையும் என்னையும் சேர்த்து, நடுக்கூடத்துல கம்பத்துல கட்டி, மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்திடுவான். உன் கட்டைத் துளுத்துப் போச்ச்சா? படிக்கற வயசுல படுக்கை கேக்குதா உனக்கு... தொடைக்கு நடுவுல அரிப்பெடுக்குதா?"

"இதப்பாரு... எங்கிட்ட அசிங்கமா பேசாதே..நீ ... என் அம்மாவாச்சேன்னு பாக்கறேன்.?" பதிலுக்கு சீறினாள் பெண்.

"இருட்டுல உன் தோள்ல கையை போட்டானாமே அந்த நாயி... அவன் கையை வெட்டாம விடப்போறதில்லே.. பட்டப்பகல்லே, சினிமாக் கொட்டாயில, நீ பண்ண அசிங்கத்துக்கு உன்னை என்னா பண்றதுடீ?" பெத்தவள் பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து ஆட்டி அவள் தலையை சுவற்றில் வேகமாக மோதினாள்.

"அம்மா ... என்ன அடிக்கற வேலை வெச்சுக்காதே..அப்பறம் நடக்கறதே வேற..!!" ராணி கடைசி ஆயுதமாக தாயை மிரட்டிப் பார்த்தாள்.

"இந்த வயசுல உடம்புல, அப்பப்ப கொஞ்சம் மார்ல நமநமன்னு இருக்கும், காம்புல குறுகுறுன்னு தெனவு எடுக்கத்தான் செய்யும்.. வலுவான ஆம்பளையைப் பாத்தா அடி வயித்துல பூச்சி பறக்கும்... பொட்டச்சி பொறுமையா இருக்கணும்... மனசுக்குள்ள பொங்கற ஆசையை அடக்கி வெச்சுக்கணுண்டி.. இல்லன்னா நாறிப் போயிடுவே!!"

"சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ அசிங்கமா பேசிகிட்டே போறே நீ" சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு ராணி பொய்யாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.

"ராணீ, என் கண்ணு.. நான் சொல்றதைக் கேளும்மா... அந்த பையனை மறந்துடு... நம்ம வூட்டு மானத்தை வாங்கிடாதே? ஜாதி ஜனத்துக்கு முன்னாடி எங்களை தலை குனிய வெச்சிடாதே! நல்லவனா, நம்ம ஜாதிக்காரனா, வாட்டம் சாட்டமா, உனக்கேத்தவனா, நான் பாத்து கட்டி வெக்கறேன்.. அதுவரைக்கும் பொறுமையா இரு.." தாய், தன் பெண் மிஞ்சுவது தெரிந்து கொஞ்சினாள். கொஞ்சலாக பேசிக்கொண்டே அவள் தொடையை பாவாடையோடு சேர்த்து அழுத்தி கிள்ளினாள்.

"அம்மா... எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கும்மா.. அவன் நம்ம ஜாதியில்லன்னா என்னம்மா..? நான் அவனை ஆசைப்பட்டுட்டேம்மா" தாய் கொஞ்சியதும், பெண் மனதிலிருந்த ஆசையை மெல்ல கக்கியது.

"ஆசைப்பட்டவ என் கிட்டல்லா சொல்லியிருக்கணும்... ஊரு என்னா? ஜாதி என்னா? அவங்க பெருமை என்னா? சிறுமை என்னான்னு விசாரிச்சிருப்பேன்ல்லா... அதை விட்டுட்டு அசிங்கம் பண்ணலாமா?"

"அப்படி என்ன அசிங்கம் பண்ணிட்டேன் நான்.. திருப்பி திருப்பி நீ ஏன் என்னை அசிங்கமா பேசறே?"

"அசிங்கமா நான் பேசறனா...! ஏண்டீ... நீ காலேஜ் டூர் போன எடத்துல, ராத்திரி பண்ணண்டு மணி வரைக்கும் நீயும், அவனும் ரெண்டுபேருமா எங்கடீ இருந்தீங்க? உன் கூட வந்தவளுங்க சொல்லி சொல்லி சிரிக்கறாளுங்களே? கோவிலுக்குப் போன எடத்துல தலை குனிஞ்சு நின்னேண்டீ நான் இன்னைக்கு? உன்னைப் பெத்த வயித்தில பெரண்டையைத்தான் வெச்சி கட்டிக்கணும் நான்..!!?

"எந்த பொறுக்கி முண்டை சொன்னா... உங்கிட்ட?" தாய்க்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, இனி பொய்யாக நடிப்பதில் பலனில்லை என்று புரிந்ததும், ராணி வேர்த்து விறுவிறுத்துப் பேசினாள்.

"ஏண்டி...ராணீ.. நீ அவனுக்கு மொத்தமா உன்னை அவுத்துக் காட்டிடலையே?" கேட்ட ராஜாத்தி, பெண்ணின் வாய் ஓங்குவது கண்டு, பொறுக்கமுடியாமல் பளீரென பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். ராணியின் கன்னம் சிவந்து, நாலு விரல்களின் பதிவு பளிச்செனத் தெரிந்தது.

"என்னை நீ அடிச்சுக் கொல்லுடீ... எனக்கு கவலையில்லே... ஆனா உன் காது குளிர நல்லாக் கேட்டுக்க... டூர் போன அன்னைக்கு நானும் அவனும் அவுத்துப் போட்டுட்டு ஒண்ணாப் படுத்துக்கிட்டோம். என்னான்னா பண்ணோம்ன்னு கேக்க ஆசையா உனக்கு? உனக்கு தெரியாத ஒண்ணையும் நாங்க புதுசாப் பண்ணிடலே..." தாயின் ஆதங்கம் பெண்ணுக்குப் புரியவில்லை. இளம் ரத்தம், என்னப் பேசுகிறோம் என்ற அர்த்தம் புரியாமல் பதிலுக்கு கூவியது.

"மானம் கெட்டவளே... உனக்கு என்னாத் திமிர் இருந்தா, பெத்தவ கிட்டவே நீ இப்படி பேசிப்பாப்பே? உன் வாயைக் கிழிக்கறேன்... புலியாக உறுமியவள் பாய்ந்து பெண்ணின் கன்னங்களை பிடித்து திருகி கிள்ளிய ராஜாத்தி, தரையில் மல்லாந்து கிடந்த ராணியை இடுப்பில் எட்டி எட்டி உதைத்தாள்.

"அடிடீ நீ... ஒதைடீ நீ என்னை... உன்னால ஆனதை நீ பாத்துக்கோ... நான் அவனைத்தான் கட்டிக்குவேன்...இல்லேன்னா வெஷத்த குடிச்சிட்டு சாவுவேன்..." வெறியுடன் எழுந்து கத்திக்கொண்டே சோற்றுத் தட்டை எடுத்து தாயின் மேல் வீசி அடித்தாள் ராணி.

"சோத்தையாடி வீசி எறியறே.. அதுவும் பெத்தவ மூஞ்சியில அடிக்கிறியா? இதுக்கா உன்னைப் பெத்து வளத்தேன்... இந்த சோத்துக்காவத்தான் என் புருஷன் ராத்திரி பகலா ஒழைச்சிட்டு வர்றான்... உனக்கு அவ்வள கொழுப்பாடீ... ஆணவமாடீ... சிறுக்கி நாயே.."

தாய் மூலையில் கிடந்த, சாக்கடை கழுவும் தென்னம் தொடப்பத்தை எடுத்து, கழுத்து, முதுகு, முகமென்று பார்க்காமல், ராணி எழுந்து ஓட ஓட, சமையலறைக்குள்ளேயே, அவளைத் துரத்தி துரத்தி அடித்தாள்.

"நான் இப்பவே அவன் கிட்டப் போறேன்... உங்களால என்னப் பண்ண முடியுமே பண்ணிக்கடீ நீ.."

ராணி தன் புடவை நழுவ, உதட்டில் ரத்தத்துடன் எழுந்து புறக்கடை வழியாக வீட்டுக்கு வெளியில் ஓடினாள். அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த ராணியின் தம்பி பழனி, நடப்பது என்னவென்று புரியாமல், அவிழ்ந்த புடவையோடு ஓடும் தன் அக்காவை கட்டிப்பிடித்து, தரதரவென வீட்டுக்குள் இழுத்து வந்தான்.

"பழனீ அவளை வெட்டுடா... உன் அக்கா மானம் கெட்டுப்போயிட்டா, அந்த சிறுக்கி இனிமே உசுரோட இருக்கக்கூடாது. அந்தப் பொட்டை நாயை அடிச்சேக் கொல்லுடா..." ராஜாத்தி குரலெடுத்து கூவீனாள்.


"அண்ணீ... உங்களுக்கு என்னா பைத்தியமா புடிச்சுப் போச்சு...வயசுக்கு வந்த பொண்ணைப் போட்டு இப்படி அடிக்கிறீங்களே...! அறியாத வயசு.. ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிடாப் போறா அவ...! அவ எது பண்ணாலும் நஷ்டம் நமக்குத்தான். நம்ம வூட்டு மானம்தான் காத்துல பறக்கும்..!"

பக்கத்து வீட்டிலிருந்து ராஜாத்தியின் நாத்தனார் பாக்கியம், தன் அண்ணன் வீட்டிலிருந்து திடீரென எழுந்தக் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தவள், சாமியாடிக்கொண்டிருந்த தன் அண்ணி ராஜாத்தியை வளைத்துப் பிடித்துக்கொண்டாள். துடைப்பத்தை அவள் கையிலிருந்து பிடுங்கிப் போட்டாள்.

உடலெங்கும் எழுந்த வலியை விட, தன் தாய் தன்னை இப்படி ஓட ஓட தொடப்பத்தால் அடித்தாளே, அதை தன் அத்தை பார்த்துவிட்டாளே என்ற அவமானம் பொறுக்காமல், ஓவென்று கூடத்தில் படுத்து புரண்டு அழுதுக்கொண்டிருந்த ராணியை எழுப்பி, ஆதுரத்துடன் அணைத்து தன் வீட்டுக்குள் இழுத்துச் சென்றாள் பாக்கியம்.


No comments:

Post a Comment