Monday 2 September 2013

மாங்கல்யம் தந்துனானே.. 2


ஒரு நான்கைந்து ஆல்பங்கள்..!! அவருடைய பள்ளிக்காலம் முதல் எடுத்த படங்கள். வொயிட் ஷர்ட், ப்ளூ ட்ராயர் என கைகள் ரெண்டும் தொடைகளுடன் ஒட்டி வைத்துக் கொண்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்த, என் பத்து வயது கணவரை பார்த்தபோது உதட்டில் புன்னகை அரும்புவதை தவிர்க்க முடியவில்லை. கரிச்சான் குருவி கிராப்புடன்.. கட்டுரைப் போட்டி சர்ட்டிபிகேட்டுடன்.. ஹை ஜம்ப்பில் வென்றதுக்கான கோப்பையுடன்.. கவிதை பாடும் பாரதியாக..!! எந்த மனைவியுமே பார்க்க விரும்பும் படங்கள்..!! பள்ளிப்பருவ படங்கள் என்னை பரவசம் கொள்ளச் செய்தது எனில், அவருடைய கல்லூரி கால படங்கள், காதில் புகை வர செய்தன. இப்போது இருப்பதை விட இளமையாக, சற்றே மெல்லிய மீசையுடன், அந்த வயதிற்கே உரிய துடிப்புடன், அழகாய்த்தான் இருந்தார். ஆனால்.. அவர் போட்டோவில் எங்கு நின்றிருந்தாலும், அவரை சுற்றி இரண்டு, மூன்று பெண்டுகள் நின்றிருந்தன. அவருடைய கையை பிடித்துக் கொண்டு.. அவர் தோள் மீது கை போட்டுக் கொண்டு.. அவருக்கு பின்னால் நின்று கொம்பு காட்டிக் கொண்டு.. வெக்கங்கெட்ட தனமாய் இளித்துக் கொண்டு..!!

நான்கு ஆல்பங்கள் முடித்துவிட்டு, ஐந்தாவது ஆல்பத்தை புரட்டியபோதுதான் அந்த ஆட்டம் பாம் வந்து விழுந்தது. அது இரண்டு மூன்று வருடங்கள் முன்பாக எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். அவர் கல்லூரி முடித்த பிறகு. பெரும்பாலும் அந்த மதுரை வீட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான். புன்னகையுடன் புரட்டிக் கொண்டு வந்தவள், அந்த படத்தை பார்த்ததும் சற்றே ஷாக் ஆனேன். க்ளோசப்பில் முகம் மட்டும் தெரியுமாறு எடுக்கப் பட்ட படம். அவரும், அழகாய் இருந்து ஒரு இளம்பெண்ணும், கன்னங்களை ஒட்டி வைத்துக் கொண்டு, எளிறுகள் தெரிய இளித்துக் கொண்டிருந்தார்கள். நான் அந்தப் படத்தை முறைப்பதை பார்த்ததும், வீணா பட்டென்று அடுத்த பக்கத்தை புரட்டினாள். நான் மீண்டும் முந்தய பக்கத்துக்கு தாவி, மீண்டும் அந்த போட்டோவை முறைத்தேன். ஒரு மாதிரி உடைந்து போன குரலில் அவளிடம் கேட்டேன். "இ..இது யாரு வீணா..?" "இ..இது.. எங்க சுஜி அண்ணி..!!" "யார் அது..? நான் பாத்ததே இல்ல..?" "அத்தை பொண்ணு.. அப்பாவோட தங்கச்சி பொண்ணு.. கான்பூர்ல M.Tech படிக்கிறாங்க..!!" "மேரேஜுக்கு இவங்க வரலையா..?" "வரலை.. அவங்களுக்கு எக்ஸாம் டைம்.. அதான்.." "ம்ம்ம்.. நல்லா அழகா இருக்குறாங்க.." நான் உள்ளப் புகைச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன். "ஆக்சுவலா.. சுஜி அண்ணியைத்தான் அண்ணனுக்கு முடிக்கிறதா பேச்சு இருந்தது.." "ம்ம்.. அப்புறம் என்னாச்சு..?" "ஜாதகம் பொருந்தலை.. அம்மா கூட.. 'அதெல்லாம் கண்டுக்க வேணாம்.. முடிச்சுடலாம்னு..' சொன்னாங்க..!! மாமாதான் பிடிவாதமா ஒத்துக்கலை..!! கல்யாணத்துக்கு கூட மாமா வந்திருந்தாரு.. இருங்க காட்டுறேன்.." "பரவால்ல வீணா.. விடு.." அவள் சகஜமானாள். அடுத்த பக்கங்களை புரட்டி, அதில் இருப்பவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள். நான்தான் எதிலும் மனம் ஒன்ற முடியாமல் அல்லாடினேன். மனம் அந்த பல்லிளிப்பு போட்டோவிலேயே இருந்தது. ஆல்பம் எல்லாம் பார்த்து முடிந்த பிறகு,வேறு எதற்கோ வீணா அந்தப் பக்கம் திரும்பியபோது, நான் அந்த போட்டோவை ஆல்பத்தில் இருந்து உருவினேன். என்னுடைய புடவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்புறம் என் அறைக்கு சென்றதும், மீண்டும் அந்த போட்டோவை எடுத்து இன்னொரு முறை பார்த்தேன். மனதில் குபுகுபுவென எரிச்சல் பரவுவதை கட்டுப் படுத்த முடியவில்லை. போட்டோவின் மையத்தில் கை வைத்து, சரக்கென கிழிக்க, இப்போது அவர் என் வலது கையில்.. அவள் என் இடது கையில்..!! இடது கையில் இருந்ததை கசக்கி எறிந்து விட்டு.. வலது கையில் இருந்ததை மார்போடு வைத்து அனைத்துக் கொண்டேன்..!! இப்போது சற்று நிம்மதியாக இருந்தது..!!ஆனால், அந்த நிம்மதியை குலைக்க அடுத்த நாளே அந்த சுஜி வந்து குதிப்பாள்என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. வீட்டுக்குள் நுழையும்போதே, 'ஹாய்ய்ய்ய்...!!!!!!!!!!!' என்று கத்திக்கொண்டு புயல் மாதிரிதான் நுழைந்தாள். அத்தையின் கூந்தலைப் பிடித்து இழுத்தாள். மாமாவின் தொப்பையை கிண்டலடித்தாள். வீணாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். திட்டிய பாட்டியிடம் உதடு நீட்டி பழிப்பு காட்டி, அவளை மேலும் எரிச்சல் மூட்டினாள். என்னிடம்.. "ஹாய்.. எப்டி இருக்கீங்க..?" என்று அக்கறையாக விசாரித்தாள். "எக்ஸாம் இருந்தது.. அதான் மேரேஜுக்கு வர முடியலை.." என்று காரணம் சொன்னாள். "ஏன் அதோட நிறுத்திட்டீங்க..? மேல படிக்கலையா..?" என்று எரிச்சலை கிளப்பினாள். "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.." என்று அசடு வழிந்தாள். அப்புறம் வீணாவின் ரூமுக்குள் சென்று அடைந்து கொண்டாள். நான் என் ரூமுக்கு சென்று மெத்தையில் புரண்டேன். அவள் அங்கு கனைக்கும் சத்தம் இங்கே கேட்டது. வீணாவும், அந்த சுஜியும் உரையாடுவதும் கேட்டது. வீணாவின் சத்தத்தை விட சுஜியின் சத்தம் பெரிதாக இருந்தது. அப்படி என்ன பேசுகிறாள் என்று எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்து. எழுந்து என் ரூமை விட்டு வெளிப்பட்டு, வீணாவின் ரூமை நோக்கி மெல்லநடந்தேன். முதலில் வீணாவின் குரல்தான் காதில் விழுந்தது. "ஏண்டி இப்படி அடங்காப்பிடாரியா இருக்குற..?" "ஏன்.. அதுல உனக்கு ஏதும் கஷ்டமா..?" இது கிண்டலான சுஜியின் குரல். "எனக்கு என்ன கஷ்டம்..? உன்னை கட்டிக்கப் போறவன்தான் கஷ்டப்படப் போறான்..? ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பாவம் அவன்..!! உன்னைக் கட்டிக்கிட்டு என்ன பாடு படப் போறானோ..?" "ஹ்ஹ்ஹா.. அவனை பத்தி உனக்கு என்ன அவ்ளோ அக்கறை..?" "ஏன்.. இருக்க கூடாதா..? எனக்கு... உன்னை கட்டிக்கப்போற.. அந்த அஞ்சா நெஞ்சனை.. தியாகச் செம்மலை.. அந்த மனிதருள் மாணிக்கத்தை.. உடனே பாக்கணும் போல ஆசையாஇருக்குடி.." "ஹ்ஹஹ்ஹ்ஹா.. காட்டுறேன் காட்டுறேன்.. எவனாவது ஒரு இளிச்சவாயன் என் கைல சிக்காமலா போயிடுவான்..? சிக்குனதும் கண்டிப்பா காட்டுறேன்..!!" "ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. எப்டியோ.. எந்த சாமி புண்ணியமோ..? என் அண்ணன் எஸ்கேப் ஆயிட்டான்..!!" "ஒய்.. என்ன.. நக்கலா..? உன் அண்ணன் எஸ்கேப் ஆயிட்டானா..? நான்தான் உன் அண்ணன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்..!!" "ஹ.. இது என்ன புதுக்கதையா இருக்கு..? என் அண்ணனுக்கு என்னடி கொறைச்சலு..?" "யப்பா.. உன் அண்ணன் பெரிய இவன்..? சரியான...!!அவனலாம் கட்டிக்கிட்டு என்னால முடியாதுப்பா..!!அவன் ஒவ்வொரு நாளும்.. எவ.." எதையோ சொல்ல வந்தவள், வாசலில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பியவள், என்னைப் பார்த்ததும், பட்டென நிறுத்தினாள். நாக்கை கடித்துக் கொண்டாள். அமைதியானாள். வீணாவும் சற்று அதிர்ந்து போன நிலையில், எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாத மாதிரி அமர்ந்திருந்தாள். அப்புறம் சமாளித்துக் கொண்டு புன்னகையுடன் என்னைப் பார்த்து கேட்டாள். "எ..என்ன அண்ணி..?" "த..தலை லேசா வலிக்கிற மாதிரி இருக்கு வீணா.. விக்ஸ் இருக்கா..?" "இ..இருக்கு அண்ணி.. இதோ... எடுத்து தர்றேன்.. இருங்க.."கைகள் படபடக்க வீணா விக்ஸ் தேடி என்னிடம் நீட்ட, நான் அந்த சுஜியை ஒருமுறை முறைத்து விட்டு எனது அறைக்கு திரும்பினேன். அங்கு போகும்போது இல்லாத தலைவலி, இப்போது நிஜமாகவே வந்திருந்தது. 'அப்படி என்ன சொல்ல வந்தாள்..?'என்ற எண்ணத்தால் வந்த தலைவலி..!! விக்ஸ் எடுத்து நெற்றியின் எல்லா பக்கமும் பரபரவென தேய்த்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் முன்பு வரை சுஜியின் குரலால் அல்லோகலப்பட்ட வீடு, இப்போது அமைதியாக இருந்தது. மாலையில் சற்று உலாத்தலாமே என்று மொட்டை மாடி சென்றிருந்தேன். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்த சுஜி மேலே வந்தாள். நான் அங்கு இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..!! முகத்தில் ஒரு ஆச்சரியம் தெரிந்தது. ஆனால் நான் அங்கு இருப்பதை பார்த்து விட்ட பிறகு, திரும்பி செல்ல மனமில்லாமல் தயங்கி தயங்கி என்னை நோக்கி வந்தாள். 'ஹாய்..!!' என்று சம்பிரதாயமாக இளித்தாள். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். அவள்தான் அதிகம் பேசினாள். ரோட்டில் போகும் காரைப்பற்றி.. தூரத்து மரத்தின் பசுமையைப் பற்றி.. பக்கத்து வீட்டு மொட்டை மாடியைப் பற்றி..!! நான் மனதுக்குள் அரித்த அந்த கேள்வியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். 'என்ன சொல்ல வந்திருப்பாள்..????' ஒரு சமயத்தில் பொறுமை இல்லாமல் ஆரம்பித்து விட்டேன். "உங்ககிட்ட ஒன்னு கேட்டா.. தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே..?" "என்ன..?" "அப்போ.. நான் வீணா ரூமுக்கு வந்தப்போ.. எதையோ சொல்ல ஆரம்பிச்சுட்டு.. பட்டுன்னு ஸ்டாப் பண்ணிட்டீங்களே..? அது...???" நான் கேட்டதும் அவளுடைய முகத்தில் ஸ்பஷ்டமாய் ஒரு அதிர்ச்சி தென்பட்டது. "அ..அது ஒண்ணுல்ல.. அது சும்மா.." என்று திணறினாள். "சொல்ல புடிக்கலைன்னா.. பரவால்ல.. வேணாம்..!!" "அ..அப்டிலாம் ஒண்ணும் இல்ல..?" "அப்புறம்..???" "அ..அது..." "சும்மா சொல்லுங்க..!!" "நா..நான் சும்மா வெ..வெளையாட்டுக்குத்தான் சொன்னேன்.. அதை நீங்க சீரியஸா.." "வெளையாட்டா.. சீரியசான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன்.. என்ன சொல்ல வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!" நான் ஒருமாதிரி கெஞ்சும் குரலில் கேட்கவும், அவள் சற்று தயங்கினாள். எச்சில் கூட்டி மிடறு விழுங்கினாள். தலையை அப்படியும் இப்படியுமாய் அசைத்தாள்.பின்னர் மெல்லிய குரலில் சொன்னாள். "நா..நான் அதை ஜாலியாத்தான் சொல்ல வந்தேன்.. நீங்க அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு சொன்னா.. நான் சொல்றேன்.." "தப்பா எடுத்துக்க மாட்டேன்.. சொல்லுங்க..!!" அவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு திக்கித் திணறும் குரலில் சொன்னாள். "அ..அத்தானுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ஜாஸ்தி.. அதான்.. அவரை கட்டிக்கிட்டா.. ஒவ்வொரு நாளும் எ..எவகூட சுத்துறாரோன்னு சொல்ல வந்தேன்..!! ஆ..ஆனா... ச..சத்தியமா.. அத்தான் அப்படிப்பட்டவர் இல்ல.. நான் எதோ தெரியாத்தனமா.. வீணாகிட்ட.. ஜாலிக்கு.." அவள் சொல்லி முடித்தும் அவளிடம் படபடப்பு குறையவில்லை. அந்த படபடப்பு.. கைவிரல்களின் நடுக்கம்.. கண்களில் தெரிந்த மருட்சி.. அவள் இன்னும் எதையோ மறைக்கிறாள் என்று எனக்கு தோன்றியது. விடாமல் கேட்டுவிட்டேன். "இல்ல.. நீங்க எதையோ மறைக்கிறீங்க.." "ம..மறைக்கிறனா..? ச்சேச்சே.. அ..அதெல்லாம் ஒண்ணும் இல்லையே.. நா..நான் எதை மறைக்கப்.." அவள் தடுமாறினாள்.இல்ல.. நீங்க மறைக்கிறீங்க.." "ச..சத்தியமா இல்ல.." "நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. சொல்லுங்க ப்ளீஸ்..." "அ..அதான் எதுவும் இல்லன்னு சொல்றேன்ல..?" "இல்ல.. அவரலாம் எவ கட்டிக்குவா.. அப்டி இப்டின்னு.." "அ..அதுலாம் ஒண்ணுல்ல.." "அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க..?" நான் திரும்ப திரும்ப கேட்கவும், துருவித் துருவி துளைக்கவும், மேலும் மேலும் வற்புறுத்தவும், ஒரு கட்டத்தில் அவள் நிலை குலைந்தாள். சற்றே தடித்த குரலில், சற்றே தைரியமான குரலில், சற்றே அழுகை பொங்கும் குரலில் சொன்னாள். "ஆமாம்.. சொன்னேன்..!!! நான் அப்டித்தான் சொல்வேன்..!!" என்று படபடவென சொல்லி நிறுத்தியவள், "நா..நான் அப்டி சொல்லித்தான் என் மனசை தேத்திப்பேன்..!!" என்று பரிதாபமாக சொல்லி முடித்தாள். அவள் சொல்லும்போதே அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. விசும்ப ஆரம்பித்தாள். துக்கத்தில் தொண்டை அடைத்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உதடுகள் கிடந்து படபடவென துடிதுடித்தன. நான் சுத்தமாய் அதிர்ந்து போய் நின்றிருந்தேன். ஒருசில வினாடிகள்..!! பின்பு சுதாரித்துக்கொண்டு, படபடப்பான குரலில் சொன்னேன். "ஐயையோ.. எ..என்ன சுஜி நீங்க.. இ..இதுக்குப் போய்.." அவளும் உடனே சுதாரித்துக் கொண்டாள். உடனே கண்களில் வடிந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், அப்புறம் எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். "எனக்கு எக்ஸாம்லாம் எதுவும் கெடையாது.. சும்மா பொய் சொன்னேன்.. அத்தானை அந்த கோலத்துல என்னால பாக்க முடியாது.. அதனாலதான் உங்க மேரேஜுக்கு நான் வரலை..!! இ..இப்ப கூட.. அத்தான் ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சுதான் வந்தேன்..!!" "ம்ம்ம்.." "சி..சின்ன வயசுல இருந்தே அத்தானை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர்தான் என் புருஷன்னு எவ்வளவோ கற்பனை..!! எ..எல்லாம் போச்சு..!!" "ம்ம்ம்.." "இ..இதுலாம் அத்தானுக்கே தெரியாது.. அத்தானுக்கென்ன.. யாருக்குமே தெரியாது..!! தயவு செஞ்சு.. யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்..!!" "ம்ம்ம்.." "அ..அத்தான் ரொம்ப நல்லவரு.. அவரை நல்லா பாத்துக்குங்க..!!" சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென ஓடினாள். படிக்கட்டில் படபடவென இறங்கினாள். இறங்கும்போது கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே..!! நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன். மனசுக்குள் பலவித உணர்ச்சி அலைகள்..!! 'சம்பந்த சம்பந்தமில்லாமல் இளித்த சுஜிக்குள் இப்படி ஒரு அழு மூஞ்சியா..?' என்ற ஆச்சரியம்..!! 'இவதான் உன் பொண்டாட்டி.. இவன்தான் உன் புருஷன்.. என்று பெரியவர்கள் விளையாட்டாய் சொல்வதினால் இப்படி ஒரு பின்விளைவா..?' என்ற ஆதங்கம்..!!'உள்ளத்தில் இருக்கும் காதலை இப்படி ஒருவரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை.. ஒரு பெண்ணுக்கு ஏற்படுமா..?' என்ற பச்சாதாபம்..!! எல்லாவற்றிகும் மேலாக.. 'சற்றுமுன் வீணாவிடம் இவள் பேசிக்கொண்டு இருந்த போது.. அட்லீஸ்ட் இவள் ஒருத்திக்காவது என் கணவரை பிடிக்காமல் இருக்கிறதே என்ற அந்த சின்ன சந்தோஷம் குலைந்து.. இவளுக்குமா..?????' என்ற அந்த பொசஸிவ்னஸ்..!! நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்..!!!ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே.. அவருடைய வெளிதோற்றத்தை வைத்து.. மேலோட்டமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்து.. அவர் மீது விருப்பு கொள்கிறது அல்லது வெறுப்பு உமிழ்கிறது..!! ஏளனம் புரிகிறது அல்லது பொறாமை வளர்க்கிறது..!! அனுதாபம் காட்டுகிறது அல்லது ஆத்திரம் கொட்டுகிறது..!! பிறகு அவர்களது உண்மை முகம் காண நேரும்போது, நொந்து போகிறது..!! தவறாக எண்ணியதை எண்ணி.. வாடிப் போகிறது..!! சுஜியும் அப்படி ஒரு தாக்கத்தைத்தான் என் மனதில் விட்டு ஓடிச்சென்றாள். இப்படி ஒரு நல்ல பெண்ணை.. எப்பாவமும் அறியா அப்பாவியை.. பெரியவர்கள் ஆடிய விளையாட்டால், தான் தோற்றுப் போய் நிற்பவளை.. எதிரியாக கருதிவிட்டோமே என நினைத்து, என்னை நானே கடிந்து கொண்டேன். அவள் சென்ற பிறகு, நான் என் அறைக்கு சென்று, கசக்கி எறிந்த சுஜியின் படத்தை தேடினேன். கிடைத்ததும், ரொம்ப நேரம் அந்த கசங்கலை நீக்க முயற்சி செய்தேன். என் கணவருடைய படத்துடன் இணைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால், கசக்கி எறியப்படக்கூடியது அல்ல என்று தோன்றியது. பத்திரப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. பத்திரப்படுத்தினேன்.. எனது பெட்டிக்குள்..!! அடுத்த நாளுக்கு அடுத்த நாள் காலை.. என் கணவர் வந்து சேர்ந்தார்..!! என்னை தன்னுடன் சென்னை கூட்டிச் செல்ல..!! நாங்கள் வாழப்போகும் வீட்டிற்கு அள்ளிச் செல்ல..!! அசோக் வருவார் என்று முன்பே எனக்கு தெரியுமாதலால், அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்திருந்தேன். குளித்து முடித்து, அழகு படுத்திக் கொண்டு, அவர் நல்லாயிருக்கிறது என்று சொன்ன ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டேன். கிச்சனில் அத்தைக்கு உதவிக்கொண்டே, அவர் எப்போது வருவார் என அடிக்கடி வாசல் நோக்கினேன். அசோக் வரும்போது நான் ஆனியன் நறுக்கிக் கொண்டிருந்தேன். ஆனியனின் காரமோ.. என் ஆண்மீதான காதலோ.. அவரை பார்த்ததும் என் கண்கள் பனித்தன..!! அவர் உள்ளே வந்தார்.. பாட்டியிடம் அணைப்பும், முத்தமும் வாங்கிக் கொண்டார். அத்தை தந்த காபியை குடித்தார். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமாவிடம், பேச்சு துவங்கினார். நடுவில் அவ்வப்போது, என் கண்களை தன் கண்களால் தேடிப்பிடித்து.. காதல் சொன்னார்..!! ஏக்கம் உணர்த்தினார்..!! பின்னர் மாடியில் உள்ள எங்கள் அறைக்கு சென்றார். அவர் சென்ற நொடியிலிருந்தே எனக்கு இங்கு இருப்பு கொள்ளவில்லை. மனமும், உடலும் அவருடைய நெருக்கத்தை நாடின. அவசர அவசரமாய் ஆனியன் கட் செய்து கடாசினேன். கத்தரிக்காயும், தக்காளியும் கண்மூடித் திறப்பதற்குள்.. கண்டந்துண்டமாய் கிடந்தன..!! அள்ளிக்கொண்டு போய் அத்தையிடம் கொடுத்து விட்டு.. நைஸாய் நழுவ.. "பவித்ரா.." அத்தை அழைத்தார். "எ..என்னத்தை..?" "அப்டியே இந்த சட்னியையும் அரைச்சுடேன்.." "ச..சரித்தை.." ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் முகத்தில் காட்டாமல், தட்டில் இருந்ததை அள்ளிக்கொண்டு போய் மிக்ஸியில் போட்டேன். மிக்ஸியோடு சேர்ந்து என் மனமும் தடதடவென அடித்து சுழன்று கொள்ள, சட்னி அரைத்து முடித்தேன். கிச்சனில் கொண்டு போய் வைத்துவிட்டு, அத்தையிடம் சொல்லிவிட்டு, எங்கள் அறையை நோக்கி நடையை கட்ட, "அண்ணி.. அண்ணி.." என்று வீணா அழைத்தாள். இவளுக்கென்ன..?? என்று நான் இடிந்து போய் பார்த்தேன். "அண்ணி.. கொஞ்சம் இங்க வாங்களேன்.." என்று தன் ரூமுக்குள் கூப்பிட்டாள். "எ..என்ன வீணா..?" "எங்க காலேஜ்ல இன்னைக்கு எல்லாம் எத்னிக் ட்ரஸ் போட்டுட்டு போகணும்.. நான் இந்த ராஜஸ்தானி ட்ரஸ் போட்டுட்டு போகப் போறேன்.. இதை கட்டிக்கிறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணி..!!" "எ..எனக்கு அதுலாம் தெரியாது வீணா.." "இந்த போட்டோல இருக்குற மாதிரி அண்ணி.. நானே கட்டிப்பேன்.. ஆனா.. நீங்க இருந்தா பர்ஃபக்டா கட்டிப்பேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்.." "சரி வா.." அவளிடம் சமாதானமாக சொன்னாலும், உள்ளுக்குள் 'ச்சே..!!' என்று இருந்தது. ஏன் யாருமே என் மனதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? எனக்கு அவரை அணைத்து நொறுக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் சட்னி அரைக்க சொல்கிறார்கள்..!! அவருடைய உதட்டை கவ்வி கடிக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் ஸாரி பிடிக்க சொல்கிறார்கள்..!! ஒரு வழியாய் வீணா அதை அணிந்து முடிந்த பிறகு, நான் அவள் அறையை விட்டு வெளியே வந்தேன். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அத்தை இப்போது அழைத்தாள்.[/size]"பவித்ரா..!!" இந்தமுறை நான் முந்திக் கொள்வது என்று முடிவெடுத்தேன். "இல்லத்தை.. அவர் குளிக்கப் போறார்னு நெனைக்கிறேன்.. நான் போய் ட்ரஸ் எடுத்து வச்சிட்டு வந்திடுறேன்.." நான் படபடப்பாய் சொல்லி முடிக்க, என் மாமியார் கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். அப்புறம் அவருடைய உதடுகளில் லேசாய் ஒரு புன்னகை. இப்போது சற்றே மென்மையான குரலில் சொன்னார். "நானும் அதைத்தான்மா சொல்ல வந்தேன்.. போ.. அவனுக்கு ட்ரஸ் எடுத்து கொடு.." அவர் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் புகுந்து கொள்ள, நான் இந்தப்பக்கமாய் திரும்பி 'லூசு..!!' என்று என் தலையை நானே தட்டிக் கொண்டேன். வேகமாக படியேறி மேலே சென்றேன். பிரிவு ஏற்படுத்திய அவ்வளவு ஏக்கம்.. அந்த ஏக்கத்தை தீர்த்திட அவரை அணைத்து நொறுக்கிட துடிக்கும் மோகம்.. அந்த மோகம் என் கால்களில் ஏற்படுத்தியிருந்த வேகம்..!!

உள்ளே போனதும் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொள்ள வேண்டும்.. எலும்புகள் உடையுமாறு..!! முத்தமிட கவ்விய உதடுகளை விடவே கூடாது.. மூச்சு திணறும்வரை..!! வெக்கங்கெட்டவள் என்று நினைத்துக் கொள்வாரோ..? நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும்.. கவலையில்லை..!! உள்ளம் முழுதும் கொள்ளை ஆசைகளுடன் கதவை உள்ளே தள்ளினேன். தள்ளியதுதான் தாமதம்..!! என் கணவரின் கை ஒன்று வந்து என்னை உள்ளே இழுத்துக் கொண்டது. என் இடுப்பை வளைத்து நொறுக்கியது. அதே நேரம் அவரது உதடுகள் என் முகம் எங்கும் ஆவேசமாய் 'இச்.. இச்.. இச்.. இச்..' என முத்தமிட துவங்க, நான் இன்ப அதிர்ச்சியில் திளைத்தேன். முகத்தில் விழுந்த முத்தமழை தாளாது மூச்சு திணற ஆரம்பித்தது எனக்கு..!! "அ..அய்யோ.. என்னங்க இது.. வ..வந்ததும் வராததுமா..? ஐயோ.. ச்சீய்..!! கதவு தெறந்திருக்கு..!!" நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் லாக் செய்தார். ஒரு கை நீட்டி கதவையும்.. இரு உதடுகளால் என் இதழ்களையும்..!! அடக்கி வைத்திருந்த அசுரத்தனமான ஆசைகளை என் அதரங்களிடம் காட்டினார். சுவைத்தார்.. உறிஞ்சினார்.. தேன் எடுத்தார்.. தேன் கொடுத்தார்..!! காய்ந்து போயிருந்த என் உதடுகளுக்கு அந்த தெவிட்டா முத்தம் தேவையாயிருந்தது. ஏக்கத்தில் மெலிந்திருந்த என் உடலுக்கு அந்த ஆவேச அணைப்பு அவசியமாயிருந்தது. பிரிவில் தவித்திருந்த என் இதயத்துக்கு அந்த நெருக்கம் இதமாயிருந்தது. அந்த நெருக்கத்தின் சுகத்தில் திளைத்தவாறே நான் சொன்னேன். "ஹையோ.. விடுங்கப்பா.. எனக்கு வேலை இருக்கு.." "எனக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கு.." ஆசையாக சொன்னவர் என்னை அப்படியே மெத்தையில் தள்ளினார். தள்ளிய வேகத்தில் என் புடவைத்தலைப்பு எங்கோ பறக்க, எனது ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டிருந்த முயல் குட்டிகள் ரெண்டும் எகிறி, வெளியே வர முயன்றன. துள்ளி குதித்தன..!! அசோக் என் மீது பாய்ந்தார். அவருடைய திண்ணென்ற மார்பு அழுத்தியதில் என் முயல் குட்டிகள் நசுங்க.. நான் 'ஹ்ஹ்ஹக்க்..' என்று தீனமாய் முனகினேன். அவர் என் கழுத்துக்குள் முகம் புதைத்து என் வியர்வை வாசம் பிடித்தார். முத்தமிட்டார்..!! மோவாயில்.. கழுத்தின் அடிப்பகுதியில்.. மார்பின் மேல் பாகத்தில்.. மார்பின் மையத்தில்..!! பின் திடீரென வெறி வந்தவராய், லபக்கென என் ஒரு முலையை ஜாக்கெட்டோடு சேர்த்து கடித்தார். "ஆஆஆஆவ்வ்வ்வ்... கடிநாய்..." நான் கத்தினேன். அப்படி அவரை திட்டியது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. அவர், "நான் நாயா..? இரு.. நாய் என்ன பண்ணும்னு காட்டுறேன்.." சொல்லிக்கொண்டே அவர் அடுத்த முலையையும் அதே மாதிரி கடித்தார். 'ஆஆஆஆஅ...!!' என்று கத்தினேன். ஆனால் சத்தியமாய் எனக்கு வலிக்கவில்லை. ஆசையில் மார்பு வீங்கியிருந்த எனக்கு அந்த கடி அவசியமாகவே இருந்தது. ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தேன். அவருடைய முகத்தை பிடித்து தள்ளிவிட்டேன்."ச்சீய்.. விடுங்கப்பா.. வந்ததும் வராததுமா..!!" "காஞ்சு போய் வந்திருக்கேன் பவி.." அவருடைய குரலில் அதீத ஏக்கம் தெரிந்தது. "ஏன் அப்படி..?" "ஏன் அப்படியா..? ஏன் கேக்க மாட்ட..? பத்து நாள் நல்லா வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டு.. அப்புறம் அடுத்த பத்து நாள் பச்சைத்தண்ணி கூட பல்லுல படாம இருந்தா.. ஒருத்தனுக்கு எப்படி இருக்கும்..? அப்டித்தான் நான் இருக்கேன்..!!" "ஹ்ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்ம்.." "திரும்ப அந்த விருந்து எனக்கு வேணும் பவி.. ப்ளீஸ்..." அவர் வெட்கம் விட்டு கெஞ்ச, நான் அவருடைய மூக்கை செல்லமாக திருகியபடி சொன்னேன். "ம்ம்ம்ம்.. விருந்து வேணுமா என் புருஷனுக்கு..? போட்டுட்டா போச்சு..!!" அவர் உடனே முகம் மலர்ந்தார். "தேங்க்ஸ் பவி.. இரு.. மொதல்ல இது ரெண்டையும் பாக்கணும்..!!" சொல்லிக்கொண்டே அவர் என் ஜாக்கெட் பட்டனில் கைவைக்க, நான் அந்தக் கையை தட்டிவிட்டேன். "ச்சீய்.. இப்போ இல்லை.. அப்புறம்..!! நைட்டு..!!" "நைட்டா..?? நைட்டு வரை தாங்காது பவி..!! இப்போவே வேணும் எனக்கு.." சொல்லிவிட்டு அவர் பிய்த்து எடுப்பது போல ரெண்டிலும் ஹார்ன் அடிக்க, "ஷ்ஷ்ஷ்ஷ்... ஆஆஆஆஆ... கையை வச்சுக்கிட்டு சும்மா இருங்கப்பா.." என்று கையை தட்டிவிட்டேன். "அப்போ இப்போ இல்லையா..?" "ம்ஹூம்.. எனக்கு கீழ வேலை இருக்கு.." "நானும் அந்த கீழ பாக்குற வேலையைத்தான் சொல்றேன்.." அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, என்னால் சகிக்க முடியவில்லை. "ச்சீய்.. கருமம்..!!" "ப்ளீஸ் பவி..!!" "ப்ச்.. கெஞ்சாதிங்கப்பா.. எனக்கு கஷ்டமா இருக்கு.." "கஷ்டமா இருக்குல..? அப்போ என்னை கழட்ட விடு.." "இருங்க.. கீழ கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு.. கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.." "ம்ம்ம்.. சரி ஓகே.. போயிட்டு கண்டிப்பா வரணும்.." "ம்ம்.. குளிக்கப் போறீங்களா..? ட்ரஸ் எடுத்து வைக்கவா..?" "அதுலாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!!" "சரிப்பா.. வர்றேன்.." நான் மாராப்பை அள்ளி மார்பை மூடிக்கொண்டு எழுந்தேன். சற்றே கலைந்திருந்த கூந்தலை சரி செய்துகொண்டேன். அறையை விட்டு வெளியே வந்தேன். ஏக்கத்தில் தவித்திருந்த என் தேகம், என்னை கேவலமாய் திட்டியது. 'என்ன செய்ய வந்தாய்..? இப்போது என்ன செய்திருக்கிறாய்..? ஆசையுடன் வந்துவிட்டு.. இப்படி அவசர அவசரமாய் எங்கே ஓடுகிறாய்..?' என்ன செய்வது..? வெக்கங்கெட்டவளாய் இருந்துவிடலாம் என்று என் மேனி கிடந்து தவித்தாலும், இந்த பெண்ணுள்ளம் நாணப்போர்வை போர்த்திக் கொண்டு.. அறிவு கெட்டதனமாய்த்தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறதே..?அப்புறம் கீழே வந்து, சமையலறையில் அத்தைக்கு கொஞ்ச நேரம் ஒத்தாசையாக இருந்தேன். கல்லூரிக்கு கிளம்பிய வீணாவுக்கு, தோசை ஊத்திக் கொடுத்தேன். அப்புறம் அசோக் குளித்துவிட்டு வந்ததும், மாமாவும் அவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், "ட்ராவல் பண்ணினது ரொம்ப டயர்டா இருக்கும்மா... நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்.." என்று அத்தையிடம் சொன்னவர், யாரும் கவனிக்காதவாறு 'மேலே வா..' என என்னிடம் பார்வையால் சொல்லிவிட்டு கிளம்பினார். அப்புறம் நானும் அத்தையும் சாப்பிட்டோம். பாத்திரம் எல்லாம் கழுவி முடித்தபோது, மாமாவும் வெளியே கிளம்பினார். பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து, 'எவன்டி உன்னை பெத்தான்..?' என்று சிம்பு கேட்ட கேள்விக்கு, தீவிரமாக பதில் யோசித்துக் கொண்டிருந்தாள். "நானும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கிறேன் பவித்ரா.. நீயும் மேல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.." அத்தை ஒருமாதிரி அர்த்தப்புன்னகையுடன் சொல்ல, நான் படியேறி மாடி அறைக்கு வந்தேன். அசோக் அசந்து தூங்கியிருந்தார். வெறும் லுங்கி மட்டும் அணிந்து, வெற்று முதுகை காட்டி குப்புறப்படுத்துக் கொண்டு, குழந்தை போல வாய் திறந்து வைத்துக் கொண்டு..!! நான் சத்தம் போடாமல் அவருடைய அருகில் சென்று படுத்தேன். ஒரு சில வினாடிகள் அவர் தூங்கும் அழகை ரசித்தேன். பின்பு உதட்டில் ஒரு புன்னகையுடன் என் மாராப்பை சரிய விட்டேன். கொழுத்துப் புடைத்திருந்த என் கொங்கைகளின் அழகை சற்றே பெருமையாக பார்த்தேன். பின்பு அப்படியே என் கணவரின் முதுகில் கவிழ்ந்தேன். இரண்டுபக்க பஞ்சுப்பொதிகளும் இப்போது அவர் முதுகில், மெத்தென்று அழுந்தி பிதுங்கின. அவரிடம் எந்த சலனமும் இல்லை. நான் அவர் காதோர தலைமுடியை ஒழுங்கு படுத்தினேன். உதடுகள் குவித்து அவர் காதில் மென்மையாக முத்தமிட்டேன். பின்னர் அவருடைய காதோரமாய் ரகசியமான குரலில் கேட்டேன். "தூங்கிட்டிங்களா..?" அவர் அமைதியாக இருந்தார். ஒரு சில வினாடிகள்..!! பின்பு இமைகளை பிரிக்காமல், உதடுகளை மட்டும் பிரித்து பேசினார். "தூங்கிட்டு இருந்தேன்.. இப்போ முழிப்பு வந்துடுச்சு..!!" "ஹ்ஹ.. இதப்பாருடா.. தூக்கத்துல எழுப்புனா.. ஒரு கோவக்கார சிங்கம்.. உர்ருன்னு முறைக்கும்.. இன்னைக்கு பேசுது..!!" நான் கிண்டலாக கேட்க, அவர் இப்போது பட்டென புரண்டார். புரண்ட வேகத்தில் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். இத்தனை நேரம் அவருடைய முதுகில் அழுந்தியிருந்த எனது பழங்கள், இப்போது அவருடைய மார்பில் தவழ்ந்தன. அவர் ஒரு கையால் என் இடுப்பை வளைத்து, எனது பின்புற சதைகளை இதமாய் தடவிக் கொண்டே கேட்டார். "பொண்டாட்டி இந்த மாதிரி ஜம்முனு ஒத்தடம் கொடுத்து எழுப்பினா.. எந்தப் புருஷனுக்குடி கோவம் வரும்..? ம்ம்ம்..?" "ஓஹோ..? அப்போ இனிமே டெயிலி என் புருஷனை இந்த மாதிரியே எழுப்புறேன்.." "எழுப்பு எழுப்பு..!! ஆனா.. இந்த மாதிரி எழுப்பினா.. நான் மட்டுமில்ல.. இன்னொன்னும் சேர்ந்து எந்திரிச்சுக்கும்..!!" அவர் சொன்னதை நான் சற்று தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். உடனே கன்னம் சிவந்தேன். "ச்சீய்ய்ய்ய்..!!!!" "விருந்து ரெடியா..?" "ம்ஹூம்.." "நடிக்காதடி.. அப்புறம் எதுக்கு இது ரெண்டையும் என் மேல வச்சு தேச்சியாம்..? இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு..!!"சொல்லிக்கொண்டே அவர் என்னை புரட்டி, என் மீது படர்ந்தார். என்னை அழுத்தினார். அவர் அந்த மாதிரி என்னை அழுத்தியது எனக்கு சுகமாகவே இருந்தது. ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தவாறு, 'ஆஆஆஆஆவ்வ்வ்..' என்று சத்தம் எழுப்பினேன். ஆனால் ஒருமுறைதான். அதன் பிறகு அந்த மாதிரி சத்தம் எழுப்ப இயலவில்லை. என்னுடைய உதடுகளை, அவர் தன்னுடைய உதடுகளால் மூடித் தாழிட்டார். அப்புறம் அவ்வுதடுகளை அவரிடம் இருந்து பறிப்பது, எனக்கு பெரும்பாடாக இருந்தது..!! எதற்கு பறிக்க வேண்டும் என்று என் மனதில் எழும்பிய கேள்வி கூட காரணமாய் இருக்கலாம்..!! வேகம்.. வேகம்.. வேகம்.. அத்தனை வேகம்..!! பத்து நாளைய மோகம் அவருடைய படு வேகத்தில் தெரிந்தது. அடக்கி வைத்திருந்த ஆசை, அவருடைய அணைப்பின் ஆவேசத்தில் புரிந்தது. உதடு உறிஞ்சி கிஸ் அடித்தபோது, அதை அவர் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறார் என்று உணர்ந்தேன். முலைகளில் வந்து முட்டியபோது.. அவர் கட்டி வைத்த காமம், இப்போது கட்டவிழ்கிறதென அறிந்தேன். அவருடைய ஆணுறுப்பின் அதிரடியில் என் பெண்ணுறுப்பு அதிர்ந்தபோது, பிரிவின் பின் கூடும் சுகத்தை அணுஅணுவாய் அனுபவித்தேன்..!! ஆட்டம் ஓய்ந்து, அவரது வேகம் தணிந்த போது.. கசக்கிப் பிழிந்து காய போட்டது மாதிரி இருந்தது எனக்கு..!! எது வலி.. எது சுகம்.. என பிரித்து அறிய முடியாத அளவுக்கு.. இரண்டுமே உடலின் ஒவ்வொரு அணுவிலும் பின்னிப் பிணைந்து கிடந்தன. நான் கொஞ்ச நேரம் கண்மூடி களைப்பாறினேன். பின்பு கண் விழித்தபோது, அசோக் எனக்கருகே எழுந்து அமர்ந்திருந்தார். தன் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தார். "என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க..?" "ஹேய்.. எந்திரிச்சுட்டியா..? இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு அசையவே மாட்டேன்னு நெனச்சேன்.." "ச்ச்சீய்..." நான் வெட்கப்பட, அவர் சிரித்தார். "ஹ்ஹ்ஹா.. சரி.. இங்க வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்.." "என்ன..?" நான் கேட்க, அவர் லேப்டாப்பை என் பக்கமாக திருப்பினார். திரையில் சிரித்துக் கொண்டிருந்த காத்ரீனா காய்ஃபை பார்த்ததும் நான் கடுப்பானேன். சலிப்பான குரலில் சொன்னேன். "ப்ச்.. இவளைக் காட்டத்தான் கூப்பிட்டீங்களா..?" "ஏய்.. இவ இல்ல.. இரு.. வரும்..!!" "அது வர்றது இருக்கட்டும்.. மொதல்ல இந்த வால்பேப்பரை மாத்துங்க.." "ஏன்.. நல்லாத்தான இருக்குது..?" "என்னது..??? நல்லாருக்கா..??? கல்யாணத்துக்கு அப்புறம் இதுலாம் நல்லாருக்க கூடாது..!! புரிஞ்சதா..?" "சரி.. சரி.. மாத்திர்றேன்.. விடு..!! ம்ம்ம்ம்.. இதைப் பாரு..!!" நான் மீண்டும் மானிட்டரை பார்த்தேன். அந்தப் படம் இருந்தது..!! குட்டி குட்டியாய், அழகழகான ஓட்டு வீடுகள்.. நெருக்கமாக இல்லாமல்.. சற்றே தள்ளி தள்ளி..!! சுற்றிலும் பச்சைப் பசேலென மரங்கள்..!! பின்புறத்தில் அதே நிறத்தில்.. உயர உயரமாய் மலைக்குன்றுகள்..!! மலைக்குன்றுகளில் படிந்திருக்கும் பனி மூட்டங்கள்..!! வீட்டுக்கு முன்னே மரத்திலான குடை நின்றது.. அதன் கீழே சேர்.. டேபிள்..!! சுகமாய் படுத்துக்கொள்ள வசதியான.. வலை ஊஞ்சல்..!! படத்தை பார்த்ததுமே ஜில்லென்று ஒரு குளுமை உடலுக்குள் பரவியதை உணர முடிந்தது."ரொம்ப அழகா இருக்குங்க இந்த எடம்..!!" நான் முகமெல்லாம் பரவசமாக சொன்னேன். "பிடிச்சிருக்கா..?" "ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.." "நாளைக்கு இங்க போகலாமா..?" அவர் பட்டென கேட்க, எனக்கு எதுவும் புரியவில்லை. "இங்கயா..? இங்க எப்படி..? என்ன இடம் இது..?" "இது ஒரு ரிசார்ட்.. கொடைக்கானல்ல இருக்குது.. ரெண்டு நாளுக்கு புக் பண்ணிருக்குறேன்.. நாளைக்கு இங்க போறோம்.." "எ..என்னங்க சொல்றீங்க..? எ..எனக்கு எதுவும் புரியலை.." "ஹனிமூன் டி..!!" "ஹனிமூனா..??" நான் நிஜமாய் அதிர்ந்தேன். "அதுக்கு ஏண்டி வாயைப் பொளக்குற..?" "அத்தைட்ட கேட்டீங்களா..?" "அவங்களைலாம் கூட்டிட்டு போகலை.. நாம மட்டுந்தான் போறோம்..!!" "ப்ச்.. வெளையாடாதீங்க..!! அவங்க ஏதாவது தப்பா எடுத்துக்க போறாங்க..!!" "ஏண்டி.. என் பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போறதை.. அவங்க என்ன தப்பா எடுத்துக்குறது..?" "எனக்குலாம் தெரியாது..!! அத்தை எங்கிட்ட கேட்டா.. 'எனக்குலாம் ஒன்னும் தெரியாதுத்தை.. எல்லாம் அவர்தான் ப்ளான் பண்ணிருக்காருன்'னு சொல்லிடுவேன்..!!" நான் அப்படி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னதும் அவர் திரும்பி என்னை லேசாக முறைத்தார். "என்ன நீ..??? நீ பேசுறதைப் பாத்தா.. ஹனிமூன் போறதுல உனக்கு இன்ரஸ்டே இல்லை போல இருக்கே..?" இப்போது என் முகம் பட்டென மாறியது. உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை. அவரை நெருங்கி அணைத்துக் கொண்டேன். அவர் மார்பை தடவிக் கொண்டே, "உடனே கோவம் வந்துடும்..??? இன்ரஸ்ட் இல்லாம இருக்குமா..? எனக்கு.. உங்க கூட எங்க போறதா இருந்தாலும் சந்தோஷந்தான்..!!" இப்போது அவரும் என்னை அணைத்துக் கொண்டார். என் நெற்றியில் இதழ் பதித்து இதமாய் முத்தமிட்டார். பின்பு என் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தியபடி சொன்னார்.

"அம்மாட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ அதைலாம் நெனச்சு கவலைப்பட வேணாம்..!! கொடைக்கானல் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு.." "என்ன ரெடி பண்ணனும்..?" "ட்ரஸ்.. பேஸ்ட்.. ப்ரஷ்.. சோப்பு.." "ம்ம்.. அப்புறம்..?" நான் அசுவாரசியமாய் கேட்கவும் அவருடைய குரல் இப்போது கிண்டலுக்கு மாறியது. "ம்ம்ம்ம்.. நீயும் இன்னைக்கு ஒருநாள் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி.. உடம்பை நல்ல கண்டிஷன்ல வச்சுக்கோ..!! ரெண்டு நாள் உனக்கு நெறைய வேலை இருக்கும்..!!" "என்ன வேலை..?" நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்க, "ம்ம்ம்ம்... என் அடில படுத்து அடி வாங்குற வேலை..!!" "ச்ச்சீய்ய்ய்..!!!"நான் வெட்கப் பட்டேன். ஆனால்.. அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.. ஆசையாக..!! இரண்டு நாட்கள் அனுபவிக்கப் போகும் இன்பத்தை, இதயம் இப்போதே இமேஜின் செய்ய ஆரம்பித்திருந்தது. அவருடைய விரல்கள் கீபோர்டில் தடதடத்துக் கொண்டிருக்க, எனது விரல்கள் அவருடைய மார்பை தடவிக்கொண்டிருந்தன. மார்புக்காம்பை தட்டின. நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன். "ரெண்டு நாள் முன்னாடி உங்க அத்தை பொண்ணு வந்திருந்தாங்க.." "எனக்கு நெறைய அத்தைங்க இருக்குறாங்க.. எல்லா அத்தைக்கும் நெறைய பொண்ணுங்க இருக்குறாங்க.. யாரை சொல்ற நீ..?" அவர் என்பக்கம் முகம் திருப்பாமலே கேட்டார். "அவங்கதான்.. சுஜி..!!" "ஓ.. சுஜியா..? வந்திருந்தாளா இங்க..? என்ன சொன்னா..? எக்சாம்லாம் நல்லா எழுதினாளாமா..?" "ம்ம்ம்.." அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை. ஆர்வமாக லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன். "வீணா சொன்னா.. அவங்களைத்தான் ஆரம்பத்துல உங்களுக்கு முடிக்கிற மாதிரி.. வீட்டுல நெனச்சிருந்தாங்களாமே..?" "ஆமாம்.." "அப்புறம் என்னாச்சு..?" "அதை சொல்லலையா அவ..? எங்க ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்தலை..!! மாமா வேணான்னு சொல்லிட்டாரு.." "ம்ம்.." நான் மேலும் சிலவினாடிகள் அமைதியாயிருந்து விட்டு, பின்பு தயங்கி தயங்கி அவரிடம் சொன்னேன். "ஒ..ஒருவேளை ஜாதகம் பொருந்திருந்தா.. இ..இப்போ நான் இருக்குற எடத்துல அவங்க இருந்திருப்பாங்க.. இல்ல..?" இப்போது அசோக் பட்டென திரும்பி என்னை பார்த்தார். புருவங்களை சுருக்கி, என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்டார். "என்ன சொல்ல வர்ற நீ..?" "இல்ல.. உ..உங்களுக்கு அதுல எதுவும் வருத்தமா..?" "எதுல..?" "இந்தமாதிரி.. கல்யாணத்துக்கு ஜாதகம்லாம் பாக்குற மூட நம்பிக்கைல..??" அவ்வளவுதான்..!! அவர் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். என்னை ஊடுருவ முயலுவது மாதிரியான பார்வை. அப்புறம் மெல்ல அவருடைய முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது. சற்றே இதமான குரலில் சொன்னார். "நான் உன்னை என்னவோ நெனச்சேண்டி.. அப்பாவி.. வெகுளி..!! ஆனா.. நீ பயங்கர புத்திசாலி..!! சுஜி மேல எனக்கு ஆசை இருந்ததான்னு.. வேற மாதிரி கேக்குறேல..?" "எதோ ஒன்னு.. சொல்லுங்க ப்ளீஸ்..!!" "இங்க பாரு பவி.. ஜாதகத்தையோ, சுஜியையோ நான் எப்போவும் பெரிய விஷயமா நெனச்சது இல்ல.. அதனால என் மனசுல எந்த வருத்தமும் இல்லை..!! இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஒரே பெரிய விஷயம்.. நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற விஷயம்.. பவித்ரான்ற இந்த தேவதை என் லைஃப்ல வந்ததுதான்..!! புரியுதா..?" அவர் சொல்ல சொல்ல என் கண்களில் முணுக்கென்று ஒற்றை கண்ணீர்த்துளி வந்து முட்டிக்கொண்டு நின்றது. "ம்ம்.. புரியுது.. தேங்க்ஸ்பா..!!" நான் சொல்லிக்கொண்டே அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய மார்பில் 'இச்..' என்று ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த மார்பிலேயே என் முகம் புதைத்துக் கொண்டேன். அவரும் என்னை அணைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்தார். பின்பு குனிந்து நெற்றியில் முத்தமிட்டார்.

No comments:

Post a Comment