Thursday 14 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 11


ஜுரவேகத்தில் கண்களைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ரமணி, சோஃபாவில் நிம்மதியாக உட்கார முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். தன் கைகளையும், கால்களையும், நீளமாக நீட்டி, தாரளமாக படுத்துக்கொள்ள வேண்டுமென அவன் விரும்பினான். பெண்கள் மட்டுமே வசிக்கும் அந்த வீட்டில் தன் மனதில் எழும் இச்சையை சட்டென வாய்விட்டு அவர்களிடம் சொல்லவும் தயங்கிக் கொண்டிருந்தான் அவன். காமாட்சி கொடுத்த ஆரஞ்சு சாறு அவன் தொண்டைக்கு மிகவும் இதமாக இருக்கவே, மடக் மடக்கென அதை வேகமாக விழுங்கினான். ஆரஞ்சுசுளையின் ஒரு துணுக்கு தொண்டைக் குழியில் சிக்கிகொண்டு நெருட பொறை ஏறி இரும ஆரம்பித்தான்.

"மெதுவாப்பா... கொஞ்சம் நிதானமா குடிக்கக்கூடாதா?" காமாட்சி சட்டென ரமணியின் தலையில் தட்டியவள், மறுகையால் அவன் மார்பை அவசரமாக நீவிவிட்டாள். மார்பிலிருந்து எழும் வெப்பத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் உள்ளங்கையை அவன் நெற்றியிலும், மார்பிலும் வைத்து உடல் சூட்டை சோதித்தாள். "என்னடீ... டெம்ப்ரேச்சர் அதிகமா இருக்கா?" செண்பகம் டேபிளின் பக்கத்தில் நின்றிருந்தவள், ரமணியின் நாடியை பரிசோதிக்க ஆரம்பித்தாள். "ஆமாம் சித்தி..." கலக்கத்துடன் அவளைப்பார்த்தாள் காமாட்சி. "நாலு வீடு தள்ளியிருக்காளே அந்த லேடி டாக்டர் கல்யாணி, அவகிட்ட வேணா இவனை அழைச்சிட்டு போடீ.. டெட்டனாஸ் இஞ்சக்ஷ்ன் போட்டுடறது நல்லதுன்னு நேக்குத் தோண்றது. கூடவே அனால்ஜிசிக் கலந்து போட்டாலும் உடம்பு வலி சட்டுன்னு குறைஞ்சா இவன் தூங்கிடுவான்." ரமணிக்கு தன்னைச்சுற்றி எழும் குரல்கள் கிணற்றிலிருந்து வருவது போலிருந்தது. சோபாவில் சரியாக உட்காரமுடியாமல் சரிந்து காமாட்சியின் மேல் தொப்பென விழுந்தான். விழுந்தவனை தன் மார்பில் தாங்கிக்கொண்டாள் அவள். செண்பகம் வேகமாக ஓடிவந்து, ரமணியை ஒரு பக்கம் தாங்கிப்பிடித்தாள். "சித்தி... ரமணியால நடக்க முடியாது போலருக்கே. நான் வேணா போய் டாக்டரை வீட்டுக்கே கூப்பிட்டு பாக்கட்டுமா?" "மணி ஓன்பது ஆவது; காலியா இருந்தாங்கான்னா டாக்டர் வந்தாலும் வருவாங்க... காமூ... மொதல்லே வெளி ரூம் கட்டில்ல போட்டிருக்கற பெட்ஷீட்டை சட்டுன்னு மாத்துடீ. பாவம் இவனால உக்காரக்கூட முடியலே. கொஞ்சநேரம் அக்காடான்னு படுத்துக்கட்டுமே?” காமாட்சி, பெட்ஷீட்டை, தலையணை உறையை மாற்றிவிட்டு, ஓடிய வேகத்தில் ஹாலுக்கு திரும்பி வந்தாள். இருவருமாக ரமணியை எழுப்பி நிறுத்தினார்கள். அவன் வலது கையை தன் தோளில் போட்டுக்கொண்டு இடதுகையால் அவன் இடுப்பை வளைத்துக் கொண்டு நடந்தாள் அவள். "மேடம்.. நீங்க கஷ்டப்படாதீங்க. நானே நடந்து வர்றேன்... ரமணி முனகினான். "காமூ... எழுந்து வந்து ஒரு வாய் சாப்பிடேன்டீ. காலி வயித்தோட எவ்வளவு நேரம் இன்னும் அவன் தலைமாட்டிலேயே உக்காந்திருப்பே? எனக்கும் பசியில உயிர் போவுது?" ஹாலிலிருந்து செண்பகம் குரல் கொடுத்தாள். பார்த்துக்கொண்டிருந்த சீரியல் முடிந்துவிட, டீ.வீயை அணைத்தாள். "பசியோட தூங்கறவனை விட்டுட்டு எப்படி நான் சாப்பிடறது?" "டாக்டர் வந்து அவனுக்கு குடுக்க வேண்டிய மருந்தை கொடுத்தாச்சு; ஊசியும் போட்டாச்சு; அவன் சித்த நேரம் தூங்கி முழிச்சாத்தான் ஒடம்பு வலி குறையும். கொறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்தான் ஜூரமும் விடும். அவன் கண்ணு முழிக்கறப்ப எதையாவது சாப்பிடக் குடுக்கலாம். நீ எழுந்து வாடீ..." செண்பகம் சற்றே அலுத்துக்கொண்டாள். "எனக்கு பசிக்கலே... நீங்க வேணா சாப்பிடுங்க." ரமணி படுத்திருந்த அறையின் மூலையிலிருந்த மரஅலமாரியில் மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள் காமாட்சி. "என்னடீ தேடறே?" "என் அப்பாவோட வேஷ்டி, துண்டு, கதர் சட்டைங்க இரண்டு மூணு செட்டு இங்கேதான் வெச்சிருந்தேன். இறுக்கமான பேண்ட்டோடவே படுத்திருக்கானே, எழுந்தான்னா கட்டிக்க குடுக்கலாமேன்னு பாத்தேன்." "நல்லாருக்குடி. தாலி கட்டின புருஷனுக்குகூட இந்த மாதிரி பணிவிடை பண்ணியிருக்க மாட்டே? என்னமோ மனசுல தோணிச்சுன்னு, இவனுக்கு இன்னைக்கே ஆரம்பிச்சிட்டியா?" செண்பகம் நொடித்தாள். "சித்தி... தாலி கட்டினாத்தான் புருஷனா?" "என்னடீ சொல்றே நீ?" செண்பகத்தின் முகத்தில் சிறிது அதிர்ச்சியிருந்தது. "மனசுக்குள்ள முடிவு பண்ணிட்டேன்." எப்போதோ அவளுடைய அப்பாவின் காலத்துக்கு பின், அவர் கட்டாமல் வைத்திருந்த புது வேஷ்டியை பிரித்து உதறினாள். லேசாக மஞ்சள் காவி ஏறி, பாச்சை நெடி அடித்துக் கொண்டிருந்தது அது. "அவசரத்துக்கு பாவமில்லே... இருக்கறதை குடு. கட்டிக்கட்டும். ஒரு நாள் கூத்துக்கு அர்த்த ராத்திரியிலே புதுசுக்கு எங்கப் போறது?" "சித்தீ... இவன் ஒரு நாள் கூத்துக்கு மீசையை வழிச்சிக்கிட்டவன் இல்லே. எப்ப இவன் என்னை விட்டுட்டுப்போனானோ; இல்லே நான்தான் தொட்டுட்டு பாதியில விட்டுட்டேனோ தெரியலே. இனிமே கொறைகாலம் இவன்கூடத்தான்; இவன் இங்கேயே இருந்துட்டுப்போவட்டும். காமாட்சியின் குரலில் ஒரு தீர்மானம் வந்துவிட்டிருந்தது. "முடிவே பண்ணிட்டியாடீ?" சித்தி காமட்சியை உற்று நோக்கினாள். அவள் மனதிலிருந்ததை, முகத்திலிருந்து உடனடியாக அவளால் எதையும் படிக்க முடியவில்லை. "ஆமாம்ம்.." குரல் உறுதியாக வந்தது. "எந்த ஊருடீ... அப்பன் ஆத்தா யாரு? கொலம் கோத்திரம் என்னா? கூடப்பிறந்தவங்க யாராவது உண்டா இல்லையா?, இப்படி எதாவது தெரியுமா?" "ப்ச்ச்..." "சிகரெட் புடிப்பானா? குடிகாரனா... கூத்திக்கள்ளனா? மே.. மேன்னு கத்துதே... கொக்கரோக்கோன்னு கூவுறது எதையாவது திங்கறவனா?" "இனிமேதான் தெரிஞ்சுக்கணும்?" "நீ முடிவு பண்ணிட்டா மட்டும் போதுமாடீ?' "வேற யார் பண்ணணும்? உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?" "ரொம்ப நாள் கழிச்சு உன் மூஞ்சியில ஒரு தெளிவு தெரியுது... இது இப்படியே இருந்தா, அதுவே எனக்கு போதும்.." "இருக்கணும்... இப்படி நம்பித்தான் ஆகணும்.." "இவன் மனசுல என்ன இருக்கோ?" "எனக்கு தெரியாது சித்தி..." வாய்பாட்டுக்கு வாய் பேசிக்கொண்டிருக்க, சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகம், காமாட்சியிடம் ஒரு தட்டை நீட்டினாள் செண்பகம். மதியம் வடித்த சாதத்தை குக்கரில் வைத்து, ஒரு விசிலடிக்கவிட்டு, இறக்கியிருந்தாள். ஆவி பறந்து கொண்டிருந்த சோற்றின் மேல், சுடவைக்கப்பட்ட சுண்டைக்காய் குழம்பை ஊற்றியிருந்தாள். குழம்பின் வாசனை காமாட்சியின் மூக்கைத் துளைத்து பசியைத் தூண்டியது. அப்பளத் தூக்கை கொண்டுவந்து டங்கென அவள் பக்கத்தில் வைத்தாள். தன் தட்டிலிருந்த சாதத்தை பிசைந்து ஒரு உருண்டையை வாயில் போட்டு நிதானமாக மென்றாள் சித்தி. "அவசரப்படாதேடீ...! முருங்கை மரம் மாதிரி, உயரமா வளந்து நிக்கறான். ஒதடு லேசா கறுத்துப்போயிருக்கு. வீட்டுக்குள்ள புகை போட்டு யாகம் வளத்துவான்னுதான் தோணறது. உனக்கு ஆறேழு வருஷமாவது சின்னவனா இருப்பான். மூஞ்சைப்பாத்தா சட்டுன்னு எதுக்கும் கோபப்படுவானோன்னு பயமாயிருக்கு. பக்குவமில்லாத வயசில்லையா? யாரை விட்டு என்ன ஏதுன்னு இவனைப்பத்தி விசாரிக்க போறேன்?" செண்பகம் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள். "சித்தீ... சுண்டக்கா கொழம்பு சுண்டினதும் சூப்பரா இருக்கு." காமாட்சி நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டாள். தன் சித்தி பேசுவது எதைப்பற்றியும் கவலைப்படாமல், தட்டிலிருந்த சோத்தை வழித்து வழித்து விரல்களை நக்கி நக்கி ருசித்து சாப்பிட்டாள். "சாதம் மிச்சம் இருக்குல்லே இன்னும்?" "காலையிலே பத்து மணிக்கே சமையல் ஆயிடிச்சேடி. நீ கிளம்பிப் போனதும் ரெண்டு வாய் சாப்பிட்டேன். என்னமோ தெரியலே; திரும்பவும் மூணு மணிக்கு நேக்கு பசிக்கற மாதிரி இருந்திச்சி. நாலு கவளம் மோரை ஊத்தி கலக்கி குடிச்சேன். நேத்து அரைச்ச மாவு குண்டான் நிறைய இருக்கு. எழுந்தான்னா சுடச்சுட ரெண்டு தோசையா மெத்து மெத்துன்னு வாத்து போடு. தொட்டுக்கறதுக்கு இந்த குழம்பையே ஊத்து. இல்லேன்னா மிளகாய் பொடியை நல்லெண்ணியில கொழைச்சு வெச்சுடு." "ஆவட்டும் சித்தீ..." "பொம்பளை வாசனை புடிச்சிருக்கமாட்டான்னுதான் தோணுது...." சித்தி விருட்டென சமையல் உள்ளுக்குள் எழுந்து போனாள். காமாட்சி, நிதானமாக எச்சில் கையைக்கழுவிக்கொண்டு, வாயை கொப்புளித்துவிட்டு, முகத்தைத்துடைத்தப்படி செண்பகத்தின் அறைக்குள் நுழைந்தாள். கையில் விரித்துப் பிடித்திருந்த கலைமகளுடன் தன் படுக்கையில் படுத்திருந்தாள் அவள். "கொஞ்ச நேரம் தலையை சாய்க்கறதுதானே?" "பொம்பளை வாசனைன்னு என்னமோ சொன்ன மாதிரி இருந்திச்சி?" டேபிளின் மேல் கிடந்த புத்தகங்களை தட்டி அடுக்க ஆரம்பித்தாள் காமாட்சி. "உன் மேல சரிஞ்சு விழுந்தானேன்னு அவன் இடுப்பை புடிச்சேன். உடம்பு கூனி குறுகிப்போச்சு அவனுக்கு. ஜூர வேகத்துலேயும், பொம்பளைக்கூச்சம் தெரிஞ்சுது. பொட்டைச்சி ஒடம்பு வாசனை தெரிஞ்சவன் எவனும் இந்த அளவுக்கு கூச்சப்பட மாட்டான்." "டாக்டர் ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரில்லா பேசறீங்க?" "பதினைஞ்சு வருஷம் ஆஸ்பத்திரியிலே ஒடம்புகளோடத்தானே அல்லாடியிருக்கேன்... அப்ப படிச்சிக்கிட்டதுதான்" செண்பகம் தன் மூக்குக்கண்ணாடியை கழற்றினாள். "உண்மைதான்." "நீ எப்படிடீ சர்டிஃபிகேட் குடுக்கறே? அவன் எவளையும் மோந்து பாத்து இருக்கமாட்டான்னு அவ்வளவு நிச்சயமா சொல்றே?" செண்பகத்தின் கண்களிலும், உதட்டிலும் குறும்பு புன்னகையின் ரூபத்தில் மிளிர்ந்தது. "ஒரு ஆம்பிளையாட வாழ்ந்தவதானே நானும்... அவன் ஒடம்புல பைசாவுக்கு கூச்சங்கறது இல்லாமப் போய்த்தானே அவனை விட்டுட்டு ஓடி வந்தேன். ஆம்பிளையோட ஒடம்பு அலைச்சலைப்பத்தி நேக்கும் கொஞ்சம் தெரியும். காலையில நான் போன பஸ்ஸுல எனக்கு முன்னாடி நின்னுகிட்டிருந்தான் ரமணி. டிரைவர் சடன் ப்ரேக் போட்டான். நான் இவன் மேல போய் விழுந்தேன். இவன் தன் முழங்கையால என் மாரை தெரிஞ்சே அழுத்தமா உரசினான். " "ப்ச்ச்ச்... இதைத்தான் தொட்டுட்டான்.. தொட்டுட்டான்னு பொலம்பிக்கிட்டு இருந்தியா?" "அந்த உரசல்லே பயம் இருந்தது. கூச்சம் இருந்தது. இது என்னன்னு தெரிஞ்சிக்கற ஆர்வமிருந்தது. எனக்கு எல்லாம் தெரியுங்கற இறுமாப்பு, திமிர் இதெல்லாம் இல்லே..." "விட்டா ஒரு தீஸிஸே எழுதிடுவியோ?" செண்பகம் சிரித்தாள். "என்னமோ தெரியலை. எட்டு வருஷத்து ஏக்கம். வாட்ட சாட்டமான உடம்போட ஒரு ஆம்பிளை வாசம் மூஞ்சியில அடிச்சதும், படாத எடத்துல அவன் கை பட்டதும், மனசு எரிமலையா வெடிச்சி பொங்கிடிச்சி."

"ஓஹோ..." "சித்தி... சொல்றதுக்கே எனக்கு ரொம்ப கூச்சமா, வெக்கமா இருக்கு. என்னால அந்த நேரத்துல என்னை கட்டுப்படுத்திக்கவே முடியலே. அவனை அங்கேயே கட்டிக்கணும் போல மனசு ரெக்கைக்கட்டிக்கிச்சி. 'இவனை விட்டுடாதேடி... கெட்டியா புடிச்சுக்கோடி காமாட்சின்னு' மனசுக்குள்ளே யாரோ சொன்ன மாதிரி இருந்திச்சி. இறங்கற எடம் வந்ததும், ஆகறது ஆகட்டும்ன்னு, நானே என் மாரால ரமணியோட முதுகை உரசிட்டு இறங்கிட்டேன்." காமாட்சியின் முகம் சிவந்து போயிருந்தது. "ஹூம்ம்ம்..." நீளமாக மூச்சை இழுத்தாள் செண்பகம். தன் தலையின் கீழ் தன் இரு கைகளையும் கோத்துக்கொண்டாள். "தேவையேயில்லாம, இவனை எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஒரு அரைமணி இழுத்துக்கிட்டு அலைஞ்சேன். நிறைஞ்ச மனசோட, 'நகுமோமுன்னு' ரொம்பநாள் கழிச்சு மனசுக்குள்ளவே பாடி உருகினேன். "ம்ம்ம்..." முனகினாள் செண்பகம். "தியேட்டர் இருட்டுல நெருங்கி உக்காந்து இருந்தோம். என் இடுப்புல கையை போட்டான். விரலெல்லாம் நடுங்குச்சு அவனுக்கு. எட்டு வருஷம் சித்தி. முழுசா எட்டு வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஆம்பிளை என்னத்தொடறான். படபடன்னு வந்திடிச்சி எனக்கு. இந்த உலகத்தையே மறந்து, என்னை விட வயசுல சின்னப்பையன் தோள்ல என் தலையை சாய்ச்சிகிட்டு வெக்கமில்லாம உக்காந்து இருந்தேன்." "ஆனானப்பட்டவாளே, ஆடிப்போற வயசுடீ உனக்கு. நீ கொழந்தை... என்னடி பண்ணுவே? சித்தியின் குரல் தழுதழுப்பாக வந்ததாக காமாட்சி நினைத்தாள். "சித்தீ.. எனக்கு வயிறு கலங்கி போச்சு; என் உடம்பும், மனசும் சுத்தமா ஆடிப்போச்சு; காத்துல பறக்கற மாதிரி ஆயிட்டேன்; ரமணி என் மாரை தடவி பாக்க ஆசைப்பட்டான். கை மேலயே பட்டுண்ணு ஓங்கி ஒண்ணு போட்டேன். மூஞ்சைப்பாத்தேன். ஆசையும் பயமுமாக நெளிஞ்சிக்கிட்டு இருந்தான். கால் மேல கால் போட்டு உக்காந்து இருந்தேன். ஆடு சதையை தொட்டான். கால் கொலுசை தடவிப்பாத்தான். ஹப்பாடான்னு வேத்துப்போச்சு; உள்ளுக்குள்ளே நெகிழ்ந்து சட்டுன்னு ஈரமாயிட்டேன்.." "அடிப்பாவீ..." "இவன் பொம்பளையை கண்ணால பாத்ததோட சரி... தொட்டது இல்லேன்னு எனக்கு நல்லாப்புரிஞ்சிப்போச்சு." "ம்ம்ம்.." "ஒரு தரம் பால் சுவையறிஞ்ச குட்டிப்பூனை பயப்படாதில்லையா? தயங்காம விட்டத்துல தொங்கற உறியிலே பாயுமில்லையா? ஆனா இவன் தயங்கி தயங்கி, பயந்து பயந்து என் மூஞ்சையே பாத்துகிட்டிருந்தான்." காமாட்சியின் உதடுகளில் குறும்பாக ஒரு சிரிப்பலை எழுந்து கொண்டேயிருந்தது. "உக்காரேன்டீ... ஏன் நிக்கறே?" "நாள் பூரா என்ன பண்றேன்... உக்காந்துகிட்டுத்தானே இருக்கேன். சித்தியின் கால் மாட்டில் அமர்ந்தாள் காமாட்சி. "எவ்வளவு நாளா இவன் கூட பழக்கம்?" "இன்னைக்குத்தான் சித்தி..."காமாட்சி வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். சித்தியின் கால்களையெடுத்து மடியில் போட்டுக்கொண்டு மெல்ல அவள் காலைப் பிடித்துவிட ஆரம்பித்தாள் காமாட்சி. "ம்ம்ம்... மேலச் சொல்லுடி" "ரமணி... சங்கரனோட செக்ஷ்ன்ல்லத்தான் இருக்கான். ஆஃபீசுல நேர்ல பாத்தா வணக்கம் மேடம்பான். என்னைப்பாத்தா தலையை குனிஞ்சி மொகத்துல ஒரு சிரிப்போட நகந்துடுவான். அதிகமா பேசினது இல்லே. அவ்வளவுதான்..." "என்னமோ போடீ..." செண்பகம் கொட்டாவி விட ஆரம்பித்தாள். "ஆஃபீசுல நெறைய தரம் பாத்திருக்கேன். எப்பவும் ஒரு கோபத்தோட எதிர்ல வர்றவனை அடிக்கற மாதிரிதான் மொறைச்சுக்கிட்டுத்தான் போவான். வருவான். இவன் மனசுக்குள்ளே என்னவோ துக்கம் இருக்குன்னு நினைக்கறேன்." "போதும்டீ..." சித்தி தன் கால்களை அவள் மடியிலிருந்து இழுத்துக்கொண்டாள். கையிலிருந்த புத்தகத்தை மடித்து தரையில் வீசி எறிந்தாள். "படம் ஓடிகிட்டு இருந்திச்சி... பாதி சினிமா கொட்டா காலியாத்தான் இருந்திச்சி... பக்கத்துல ரெண்டு சிறுசுங்க... ஓரே அமக்களம் பண்ணிகிட்டு இருந்திச்சிங்க. முத்தம் குடுத்துக்கிட்டு இருந்தாங்க... என் கன்னத்தோட கன்னம் இழைச்சு, ஒரே ஒரு முத்தம் குடுங்களேன்னு கெஞ்சினான்." "எனக்கு வெலவெலன்னு ஆயிப்போச்சு. மாட்டேன்னு சொன்னேன். ஆசைகாட்டி இழுத்துகிட்டு வந்து அலைக்கழிக்கறமோன்னு ஒரு எண்ணம். மனசு ஹோன்னு பறக்குது. சட்டுன்னு கழுத்தை வளைச்சு அவன் கன்னத்துல் ஒண்ணு குடுத்துட்டு... எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டேன். ஆட்டுக்குட்டி மாதிரி என் பின்னாடியே வந்தான்." "வர்றவழியிலே அடிதடி சண்டை; அடிச்சா; அடிவாங்கினன்; நடுகூடத்துல உங்கிட்ட முத்தமும் வாங்கிக்கிட்டான். இப்ப வாசல் ரூம்ல படுத்து கிடக்கறான்..." சித்தி முடித்தாள். "கரெக்டா சொல்லிட்டீங்க" "ஸோ... முடிவு பண்ணிட்டே" "ஆமாம் சித்தி..." "அவன் இனிஷியலை போட்டுக்கற மாதிரியா? இல்லே அலுத்துப்போறவரைக்கும் சேர்ந்து இருக்கறமாதிரியா?" "எனக்கு தாலி வேணும்... தாலியோட ஒரு கொழந்தையும் வேணும்..." "நிதானமா இருடி... சின்னப்பையன்... உனக்கு ஒரு சின்னத்தம்பி இருந்தா எப்படி இருப்பானோ அப்படி இருக்கான்? "சித்தி..." "எடுக்கும் போது அவனை ரொம்ப மிரட்டிடாதே... அவ்வளவுதான் சொல்லுவேன்." சித்தி கொட்டாவிவிட்டாள். கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். "எனக்கு தம்பி மாதிரியா இருக்கான்?" "நான் சொல்லலேடீ... நீங்க வந்தீங்களே... அந்த ஆட்டோக்காரன் சொன்னான்... நாளைக்கு பங்கஜமே சொல்லலாம்... எதிர் வீட்டு நாணாவும் சொல்லலாம்... உன் ஆஃபிசுலேயே நாலு பேரு சொல்லலாம்... நன்னா யோசனை பண்ணிக்கோ..." சித்தி அதற்குமேல் பேசவில்லை. காமாட்சி, செண்பகம் படுத்திருந்த அறைக்கதவை ஒருக்களித்துவிட்டு, வாசல் ரூமை நோக்கி நடந்தாள். அசந்து தூங்கிக்கொண்டிருந்த ரமணியின் நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள். சூடு குறைந்திருந்தது. திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தாள். நைட்டிக்கு மாறினாள். ஒரு பாய், தலையணையுடன் திரும்பி வந்தாள். பாயை உதறி விரித்தாள். பளிச்சென எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைத்துவிட்டு விடிவிளக்கை ஆன்செய்தாள். திரும்பி முடிந்திருந்த தலை முடியை அவிழ்த்து உதறிக்கொண்டு நின்ற போது, தூக்கத்தில் ரமணி சிரித்துக்கொண்டிருந்தான். முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. "ரமணி இப்ப எதுக்காக சிரிக்கிறான்? கனவு காணறானா? கனவுல யார் வந்திருப்பாங்க? நானா இருப்பேனா? சே... எனக்கு பைத்தியம்தான் பிடிச்சி போச்சு... ஒரே நாள்லே முன்னே பின்னே தெரியாத ஒருத்தன் மேலே இப்படி ஒரு பைத்தியம் பிடிக்குமா? வெட்கத்துடன் ஒரு முறை சிரித்துக்கொண்டாள். சட்டென குனிந்து ரமணியின் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள். முத்தமிட்டவள் தரையில் கிடந்த பாயில் மல்லாந்து படுத்தாள். படுத்த மூன்றே நிமிடத்தில் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள். மொட்டை மாடியில் தேன்மொழியுடன் கதையடித்துவிட்டு, அவள் தன்னிடம் விடுத்த கோரிக்கையையும் காதில் வாங்கிக்கொண்டு, தன் உள்ளம் முழுவதிலும் மகிழ்ச்சியின் அலையடிக்க, ஒரு தீர்மானத்துடன் ஹாலுக்குள் நுழைந்தான் கல்யாணம். கவுண்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னரே வரப்போகும் முடிவை தாங்களே நிர்ணயித்துவிட்டவர்களாக, தேன்மொழியின் வீட்டினர் பிள்ளை வீட்டினரையும், வீட்டுக்கு வந்திருந்த மற்ற விருந்தினர்களையும், சுட சுட நெய் கேசரி, வாழைக்காய் பஜ்ஜி, தேங்காய் சட்னியுடன், ஓடி ஓடி உபசரித்துக்கொண்டிருந்தார்கள். மனதில் பொங்கும் உல்லாசம் முகத்தில் தெரிய, கூடத்திற்குள் நுழைந்த கல்யாணத்தின் உள்ளத்திலிருப்பதென்னவென்பதை, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுசுகள் முதல், பார்வை மங்கிபோய் உட்கார்ந்திருந்த பெருசுகள் வரை ஒரே நொடியில் கண்டு கொண்டார்கள். அவனுக்கு தேன்மொழியைப் பாதாதி கேசம் பிடித்துப் போய்விட்டதென்பதையும், அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அவன் பூரித்து கொண்டிருந்தான் என்பதையும், அவன் தங்கை செந்தாமாரை ஒரே நொடியில் உணர்ந்து கொண்டாள். "வடிவு.. அங்க என்ன பண்ணிகிட்டு இருக்கேம்மா? மொதல்லே மாப்பிளைக்கு டிஃபனை கொண்டாந்து குடும்மா? அப்படியே நம்ம தேனையும் கூப்பிடு. அவ ஏன் தனியா ரூமுக்குள்ள உக்காந்திருக்கா. கொழந்தையும் கும்பலோட கும்பலா நம்மகூட உக்காந்து சாப்பிடட்டுமே." மார்பில் சந்தனம் பூசிக்கொண்டிருந்த பெரிசு மீண்டும் ஒருமுறை இறைந்தது. "அவருக்குத்தான் கொண்டாரேன் மாமா..." கல்யாணத்தின் வருங்கால மாமியார், பளபளக்கும் சில்வர் தட்டில் நெய் ஒழுகும் கேசரியையும், இரண்டு பஜ்ஜியையும், எடுத்துக்கொண்டு சிறு ஓட்டமாக, திருவாரூர் தேர் அசைவதைப்போல் வந்தாள். வீட்டு மருமகள் கற்பகம், ஒரு கையில் சட்னியும், மறு கையில் குளிர்ந்த நீருடனும், தன் மாமியாரின் பின்னால் அடக்க ஒடுக்கமாக வந்து கொண்டிருந்தாள். "அம்மா... அத்தே கூடத்துக்கு வரமாட்டாங்களாம்... அவங்களுக்கு தலை வலிக்குதாம்...." அவளுடைய அண்ணன் குழந்தை கூவியது. "எங்க தேனு ரொம்பவே வெக்கப்படற பொண்ணு... தெருல கூட போய் நிக்கமாட்டா... கோயில் குளத்துக்கு கூட தனியா போகமாட்டா..." கிழவி ஒருத்தி அறிவிப்பு செய்து கொண்டிருந்தாள். தமிழ் சினிமாவில், இடுப்பு மடிப்பையும், எடுப்பாக தூக்கிக்கட்டிய மார்புகளையும் குலுக்கி குலுக்கி, ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வருபவளை போன்ற கவர்ச்சிகரமான தோற்றத்திலிருந்தாள் வடிவு. நாற்பத்தைந்து வயதிலும் அவள் மேனியில் இளமை ஊஞ்சாலாடிக்கொண்டிருந்தது. லட்சுமிகரமான முகத்தில், பாந்தமாக சிவப்பு நிற பிந்தியில், சிரித்த முகத்துடன் களையாக, கட்டியிருந்த கெம்பு நிற பட்டுப்புடவையில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தாள் அவள். "இது உங்க வீடு... கூச்சமில்லாம சாப்பிடுங்க மாப்பிள்ளே.." வடிவு குனிந்து டிஃபன் தட்டை கல்யாணத்தின் கையில் கொடுத்தபோது, அவள் கையிலிருந்த பொன் வளையல்கள் கலகலவென ஒலித்தன. அவள் வேகமாக குனிந்ததால், மாராப்பு இலேசாக விலக, கழுத்துக்கு கீழ், வினாடி நேரம் மின்னிய அவள் மார்பின் தங்க வண்ண மேற்புற சதையை கண் கொண்டு பார்க்க முடியாமல் தன் பார்வையை சட்டென தாழ்த்திக்கொண்டான் கல்யாணம். "தேங்ஸ்ங்க..." கல்யாணம் வடிவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல், சொல்ல வந்ததை வாய்க்குள் மென்று விழுங்கினான். தேன்மொழியின் பெற்றவள் போட்டிருந்த ரவிக்கைக்குள் அவள் மார்புகள் அடங்க மறுத்து அடாவடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தன. மிக மிக சிரமத்துடன், தான் அணிந்திருந்த பட்டு ரவிக்கைக்குள், தன் முன்னழகை அவள் கட்டி வைத்திருப்பதாக கல்யாணத்திற்கு தோன்றியது. எதுக்காக இந்த ஆண்டிங்க தேவையே இல்லாம, மூடியிருக்கற மாரை, நொடிக்கு ஒருதரம் தங்களோட முந்தானையால இழுத்து இழுத்து மூடறாங்க? இவங்களை பாக்காதவனையும் பாக்க சொல்லி அழைப்பு குடுக்கறாங்களே? கல்யாணத்திற்கு இந்த விவகாரம் மட்டும் எப்போதுமே புரிந்ததில்லை. தனக்கு வரப்போகும் மாமியார் கும்மென்று, களையான முகத்துடன், வெகு அழகாக இருக்கிறாள் என்ற சந்தோஷமும் கல்யாணத்தின் மனதுக்குள் இப்போது எழ ஆரம்பித்தது. அம்மாவுக்கு இவ்ளோ தெறிப்பா தேங்காய் சைசுல இருக்குது. இவ பெத்த பொண்ணுக்கு மட்டும் எப்படி ஆரஞ்சு சைசுல இருக்குது. இப்போது அவன் மனம் இந்த ஆராய்ச்சியில் இடைவிடாமல் உழல ஆரம்பித்தது. ரமணி மட்டும் இப்ப நம்ம கூட இருந்திருந்தான்னா இந்த மாதிரி கேள்விங்களுக்கெல்லாம் பட்டு பட்டுன்னு சரியான பதிலை குடுத்திருப்பான். கல்யாணத்தின் மனதில் ரமணியின் முகம் வந்தாடியது. டேய்... ரமணியைப்பத்தி உனக்குத் தெரியுமில்லே; நீ கேக்கற கேள்விக்கு சரியான பதிலும் குடுப்பான்; ங்கோத்தா... பொண்ணைப் பாக்க வந்த எடத்துலே, சூத்தை மூடிக்கிட்டு வந்த வேலையைப் பாக்கறதை விட்டுட்டு, பொண்ணோட அம்மாவை நோட்டம் வுடறியே நாயேன்னு கூடவே எனக்கு ஓத்தாமட்டையும் வுடுவான்... பெரிய புத்தருன்னு நினைப்பு அவனுக்கு... சை... எனக்கு ஏன் இப்படி புத்திகெட்டுப் போயிருக்குது? தேன்மொழியோட அம்மா எனக்கும் அம்மா மாதிரிதானே; ஆனா என்னோட இந்த கொரங்கு மனசு திரும்ப திரும்ப அவங்களையே ஏன் பாக்க சொல்லுது?

சென்னைக்கு வேலைக்கு போனதுலேருந்து, டவுன் பஸ்ல ட்ராவல் பண்ணும்போது, ஆண்டிங்களோட மாரை, ஓரக்கண்ணால திருட்டுத்தனமா பாத்து பாத்து, என் பாழாப்போன மனசும் நாத்தம் அடிக்கற கூவம் ஆறா மாறிடிச்சி. இந்த அசிங்கம் புடிச்ச என் மனசோட ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். எனக்கு மேரேஜ் ஆகட்டும். அதுக்கப்புறம் இந்த மாதிரி அலையற வேலையையெல்லாம் ஒரு பக்கமா மூட்டைக்கட்டி வெச்சிடணும். கல்யாணம் தன் மனதுக்குள் உடனடியாக ஒரு சபதமும் எடுத்துக்கொண்டான். கல்யாணம் என்னதான் மனதுக்குள் சபதம் எடுத்தாலும், அவன் கண்கள், தன் வீட்டுக்குத் திரும்பிப் போகும் வரை தேன்மொழியைப் பெற்றவளின் ஜாக்கெட்டையே திருட்டுத்தனமாக மேய்ந்து கொண்டிருந்தது. "நாங்கள்ல்லாம் எங்களுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துட்டோம். ஒருத்தரை ஒருத்தர் நேருக்கு நேர் பாத்துக்கிட்டீங்க. பேசிகிட்டீங்க. தம்பி... நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" தேன்மொழியின் தந்தை கணபதி கல்யாணத்தை கூர்ந்து நோக்கினார். கூடத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். "தேன்மொழியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. உங்க டாட்டர் எனக்கு மனைவியா வர்றதுக்கு நான் குடுத்து வெச்சிருக்கணும்.. ஆனா..." கல்யாணம் இழுத்தாற் போல் பேசி நிறுத்தினான். ஹாலுக்கு பக்கத்து அறையில் உட்கார்ந்திருந்த தேன்மொழி தன் காதை தீட்டிக்கொண்டாள். என்னை இவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். கடைசியா நான் சொன்னதுக்கு நல்லபுள்ளை மாதிரி தலையாட்டினான். இப்ப கூடத்துல வந்து நாலு பஜ்ஜியைத் தின்னதும் காலை வாரிட்டானே? இப்ப நான் என்ன பண்றது? தேன்மொழி தன் தலையிலிருந்த மல்லிப்பூ சரத்தை உருவி வெறுப்புடன் அறை மூலையிலிருந்த குப்பைக் கூடையை நோக்கி வீசி எறிந்தாள். தன் முகத்தை சுளித்துக்கொண்டாள். தேன்மொழீ....தலையிலிருந்த பூவை நீ விசிறி அடிச்சிட்டேடீ? ஆனா நடு வூட்டுல சட்டதிட்டமா கால் மேல காலை மடிச்சு போட்டு, உன்னைப் பெத்தவங்க எதிர்லே உக்காந்து இருக்கற இந்த கல்யாணத்தை எப்படிடீ சமாளிக்கப்போறே? உன் மனசுல பிடிப்பில்லாத ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டப்போறியா? தேன்மொழி தன் தலையை உலுக்கிக்கொண்டாள். "என் தம்பி சொன்னான்... கல்யாணம் ரொம்ப நல்ல புள்ளேன்னு அவன் சொன்ன மாதிரிதான் நீங்க ரொம்ப தண்மையா, பொறுப்பா பேசறீங்க... கேக்கறதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. தம்பீ...'ஆனான்னு' எதுக்காக இழுக்கறீங்க?" கணபதி தன்னுடைய பெப்பர்சால்ட் மீசையை தடவிக்கொண்டு தன் மனைவியை ஒருமுறைப்பார்த்தார். "உங்க எல்லோருக்கும் என்னை பிடிச்சிருந்தா, எனக்கும் இந்த கல்யாணத்துல ஓ.கே.தான். மேரேஜ் டேட்டை மட்டும் ஒரு ஆறு மாசம் கழிச்சு ஃபிக்ஸ் பண்ணிணா தேவலைன்னு நான் நினைக்கறேன்." இப்போது தன் குரலை சற்று உயர்த்தி பேசிய கல்யாணத்தின் விழிகள் தேன்மொழி இருந்த அறையின் பக்கம் சென்றது. "அது என்ன தம்பி ஆறுமாச கணக்கு?" தேன்மொழியின் தாத்தா பொறுமையில்லாமல் குறுக்கில் புகுந்தார். "தாத்தா.. நான் வேலை செய்யற கம்பெனியில ஆன் சைட் ட்ரெயினிங்க்காக என்னை ஒரு மூணு மாசத்துக்கு வெளிநாட்டுக்கு அனுப்புவாங்க போல தெரியுது. பாரீன் போய் திரும்பி வந்ததும் மேரேஜை வெச்சுக்கலாமேன்னு நினைக்கிறேன்.?" கல்யாணம் சிரித்துக்கொண்டே சாமர்த்தியமாக பேசினான். "நல்லக்காரியத்தை தள்ளிபோட வேணாமேன்னு நாங்க நினைக்கிறோம்... நீங்க சொல்றதும் ஒரு விதத்துலே சரிதான்... நாலு நாள் ஒண்ணா இருந்துட்டு... பிரிஞ்சி இருக்கணுமேன்னு தம்பி நினைக்கறாரு... ஆனா ஆடி மாசம் குறுக்கே வந்திடிச்சின்னு நினைச்சிக்க வேண்டியதுதான்..." வடிவு தன் பங்குக்கு எதையோ சொல்லி சிரித்தாள். தனலட்சுமிக்கு அவளுடன் சேர்ந்து சிரிக்கவேண்டியதாயிற்று. "மாமா... பெரியவங்க பேசறப்ப நான் சின்னவ குறுக்கே பேசறேன்னு யாரும் நினைக்கக்கூடாது... நம்ப தேனையும் கூப்பிட்டு அவ மனசுல என்ன இருக்குன்னு ஒரு தரம் கேட்டுடுங்களேன்.." கற்பகம் மெல்ல முனகினாள். "ஆமாப்பா... கற்பகம் சொல்றதும் சரின்னுதான் எனக்கு தோணுது." தேன்மொழியின் அண்ணணும் தன் மனைவியின் பாட்டுக்கு பின் பாட்டு பாடினான். கணபதி தன் வலதுபுறம் திரும்பி வடிவாம்பாளைப் பார்த்தார். வடிவு எழுந்து தேன்மொழியிருந்த அறைக்குள் நுழைந்தாள். டேபிளின் மீது தேன்மொழிக்காக வைக்கப்பட்டிருந்த கேசரியின் மீது நான்கைந்து சிற்றெறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. பஜ்ஜி சூடான பேன் காற்றில் ஆறி விரைத்துப்போய் கிடந்தன. காஃபியும் குளிர்ந்து வெண்மையாக ஆடைகட்டிவிட்டிருந்தது. "என்னடி இது டிராமா? குடுத்தனுப்பின டிஃபனை இன்னும் நீ தொட்டுகூட பாக்கலே? ஆசையா நான் உன் கூந்தல்லே வெச்ச பூ குப்பையில கிடக்குது? நீ பண்றது எந்த ஊர் ஞாயம்டீ? என்னமோ குடியே முழுகிப்போன மாதிரி தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கே?" "தலை வலிக்குதும்மா... அதான் பூவை குப்பையில வீசி எறிஞ்சிட்டேன்." தாயை முறைத்துக்கொண்டு கட்டிலைவிட்டு எழுந்து நின்றாள் அவள். "கூடத்துல பேசறது உன் காதுல விழலயா? பெரியவங்க கேக்கறாங்கல்லே? முடிவா என்னடீ சொல்லறே நீ?" "எனக்கு புடிக்கலேன்னு நான்தான் ஏற்கனவே ஆயிரம் தரம் சொல்லிட்டேன்... சும்மா சும்மா என் உயிரை ஏன் வாங்கறே நீ? "மெதுவா பேசுடி கொரங்கே? ரொம்பத்தான் தலைமேல ஏர்றே நீ? இதுக்கு மேல எதாவது ஏடாகூடமா மரியாதையில்லாம பேசினே பல்லை ஒடைச்சு உன் கையில குடுத்துடுவேன்..." "அதைப்பண்ணு முதல்லே... என் பொக்கை வாயைப் பாத்தாவது வந்திருக்கிற இந்த சனியன் எழுந்து ஓடட்டும்.." "என்னடி வாய் ரொம்பத்தான் நீளுது? அப்புறம்... மாடியிலே போய் அவன் கிட்ட என்னடீ பேசினே நீ?" வடிவு ஒரு நிமிடம் தன் பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள். தோளிலிருந்து நழுவிய முந்தானையை இழுத்து சுருட்டி தன் இடுப்பில் செருகிக்கொண்டாள். "நான் எங்கே பேசினேன் அவன்கிட்டே?" "பின்னே... உன் அண்ணி என்னமோ சொன்னா... நீங்க ரெண்டு பேரும் கூட்டணி வெச்சிக்கிட்டு இப்படீ ஒரு அநியாயம் பண்ணறிங்களேடீ? நீ என்னாடீ சொன்னே அந்தப் பையன்கிட்டே?" "அவன் ஏதோ அவன் இஷ்டத்துக்கு என் கையை புடிச்சிக்கிட்டு உளறிகிட்டு இருந்தான். வேற வழியில்லாம நானும் அவன் உளறலை கேட்டுக்கிட்டு நின்னேன்.." "உன் கையை புடிச்சானா? என்னடீ சொல்றே?" "என்னை புடிக்கலேன்னு... நீயே ஒரு வார்த்தை சொல்லிடுடான்னு மொதல்லே நான்தான் அவன் கையை புடிச்சுகிட்டு கெஞ்சினேன்... நான் சொன்னதை அவன் கேட்டானா? இங்க வந்து அப்பா எதிர்லே ரொம்பவே நல்லப்புள்ளை மாதிரி நடிக்கறான்?"

"மேல சொல்லுடீ" "அவனுக்கு என் மேல காதல் வந்திடிச்சாம்... அவன் பேச்சைக்கேட்டுக்கிட்டு, இதுக்குமேல நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் பொறுப்பு இல்லே. இதான் என் முடிவு." தேன்மொழி தன் உடம்பிலிருந்த புடவையை விறுவிறுவென உருவி பக்கத்திலிருந்த டேபிளின் மேல் வீசீனாள். ஜாக்கெட்டை கழட்டி எறிந்தாள். நைட்டியைத் தேடி எடுத்து போட்டுக்கொண்டவள், கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். இதற்கு மேல் தேன்மொழி தன்னிடம் எதுவும் பேசமாட்டாள் என்பது புரிந்ததும் கூடத்தை நோக்கி வேகமாக நடந்தாள் வடிவு. "தேன்மொழிக்கு பிள்ளையை பிடிச்சிருக்காம்... சரின்னு சொல்லிட்டா.. நீங்க மேலே ஆகவேண்டியக் காரியத்தை பாருங்க.." வடிவு தன் முகத்தில் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை ஓடவிட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பேசினாள். .

No comments:

Post a Comment