Thursday 12 September 2013

ஆண்மை தவறேல் 9


அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து.. அசோக் தனது தலையை சற்றே கவிழ்த்து, கைகள் இரண்டாலும் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டும் எதையோ கூர்மையாக வெறித்துக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்பாக அவனது லேப்டாப் திறந்து வைக்கப் பட்டிருந்தது. லேப்டாப் திரையில், நந்தினி தனது வெண்பற்கள் தெரிய வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் உள்ளமெல்லாம் இப்போது பலவித உணர்ச்சிகள் மொத்தமாய் சேர்ந்து அழுத்திக் கொண்டிருக்க, எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியையே, 'என்ன செய்வது இவளை..??' என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் கணினியில் நிலைத்திருந்தாலும், அவனது மூளை பின்னணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் அறிமுகம் கிட்டியதில் இருந்து.. இன்று வரை நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம்.. அவன் மனக்கண்ணில் வந்து போயின. யோசிக்க யோசிக்க.. அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்தன..!! இந்தனை நாளாய் நந்தினி மீது தனக்கிருந்த உணர்வு, எந்த மாதிரியானது என்பது இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்து போனது. அவளை மனதில் ஏற்றிய பிறகு இன்னொருத்தியை தொட கூசுகிறது என்றால்.. இது காதலை தவிர வேறென்ன..?? "நான் கெளம்புறேன் அசோக்.." சப்தம் கேட்டு அசோக் நிமிர்ந்து பார்த்தான். தோளில் பேகுடன்.. வீட்டுக்கு வருகையில் அணிந்திருந்த அதே உடையுடன்.. மாலினி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. அவளுடைய பார்வை லேப்டாப் திரையில் பதிந்திருந்தது. அசோக்கும் அவளை சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் அருகில் இருந்த லேப்டாப் பேகின் பக்கவாட்டு ஜிப்பை திறந்து, ஏற்கனவே அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அவளிடம் நீட்டினான். "இல்லை அசோக்.. வேணாம்..!!" மாலினி மறுக்க, அசோக் இப்போது திகைப்பாக அவளை ஏறிட்டான். "ஏன் மாலினி.. என்னாச்சு..??" அசோக் அவ்வாறு குழப்பமாக கேட்க, மாலினி இப்போது மெலிதான புன்னகையுடன் சொன்னாள். "நான் உடம்பை வித்து பொழைக்கிறவதான் அசோக்.. ஆனா.. உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுன்னு நெனைக்கிறவ..!!" "ஹேய்.. கமான்..!! இட்ஸ் நாட் யுவர் ஃபால்ட்.. தப்பு என் மேலதான்..!! மனசுக்குள்ள இன்னொருத்தி உக்காந்து குடைஞ்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சும்.. வீம்புக்கு உன்னை கூட்டிட்டு வந்தது.. என் தப்பு..!! அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? கமான்.. வாங்கிக்கோ..!!" அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த செக்கை அவளது கையில் திணிக்க முயன்றான். மாலினி அதை வாங்க மறுத்தாள். "ப்ளீஸ் அசோக்.. புரிஞ்சுக்கோங்க..!! நான் கஸ்டமர்ட்ட கை நீட்டுறப்போ.. பணத்தை பாக்க மாட்டேன்.. அவங்க முகத்தைத்தான் பார்ப்பேன்..!! அந்த முகத்துல திருப்தி இல்லைன்னா.. அந்த பணத்தை வாங்கிக்க எனக்கு கூசும்..!! உங்க முகத்துல திருப்தியும் இல்ல.. நிம்மதியும் இல்ல.. இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு மனசும் இல்ல..!!" "அதுக்கு இல்ல மாலினி.. நீ வேற ஒரு கமிட்மன்ட்டுல இருந்த.. நான் அழைச்சுட்டு வரலைன்னா.. உனக்கு அந்த வருமானமாவது வந்திருக்கும்..!! அந்த நஷ்டத்துக்கு நாந்தான பொறுப்பு ஏத்துக்கணும்..??" "இதுல என்ன இருக்கு..?? உங்க மூலமா நான் எவ்வளவு லாபம் சம்பாதிச்சிருப்பேன்.. இந்த சின்ன நஷ்டம் என்ன பண்ணப் போகுது..?? காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டா.. இந்த பணத்தை எடுத்துடுவேன்.. நீங்க அதெல்லாம் நெனச்சு கவலைப் படாதீங்க..!!" "ப்ளீஸ் மாலினி.. வாங்கிக்கோ..!!" "ப்ளீஸ் அசோக்.. என்னை கம்பெல் பண்ணாதீங்க..!!" மாலினி நிஜமாகவே கெஞ்சலாக சொல்ல, அசோக் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். மாலினியின் உறுதி அவளது கண்களில் தெளிவாக தெரிந்தது. சில வினாடிகள் அவளுடைய முகத்தையே இயலாமையுடன் பார்த்தவன், அப்புறம் தலையை குனிந்து கொண்டு, "ஓகே மாலினி.. தேங்க்ஸ்..!!" என்றான் அமைதியான குரலில். "ஓகே அசோக்.. அப்போ நான் கெளம்புறேன்.." "ட்ராப் பண்ணவா..??" "இல்ல.. நான் போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க..!!" சொன்ன மாலினி வாசலை நோக்கி நடந்தாள். ஒரு நான்கைந்து எட்டுகள்தான் எடுத்து வைத்திருப்பாள். உடனே நின்றாள். திரும்பி அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். ஆஷ்ட்ரேக்கு அருகே படுத்திருந்த அசோக்கின் செல்போனை குனிந்து எடுத்தாள். அசோக் எதுவும் புரியாமல் விழிக்க, மாலினி செல்போனின் பட்டன்களை படபடவென அழுத்தி ஏதோ செய்தாள். மீண்டும் செல்போனை அதனிடத்தில் வைத்தாள். "எ..என்ன பண்ணுன மாலினி..??" அசோக் குழப்பமாய் கேட்க, மாலினி நிமிர்ந்து புன்னகைத்தாள். "என்னோட காண்டாக்ட் நம்பர் டெலீட் பண்ணினேன்..!! நான் மட்டும் இல்ல.. என்னை மாதிரி எந்தப் பொண்ணும்.. இனிமே உங்களுக்கு தேவைப்பட மாட்டா..!!" புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், மாலினி விடுவிடுவென நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள். கண்ணில் இருந்து அவள் மறையும்வரை, அசோக் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அன்று இரவு அசோக் வெகுநேரம் மது அருந்தினான். நந்தினியின் புகைப்படத்தை பார்ப்பதும், அவளை பற்றிய ஏதோ ஒரு நினைவை மனதில் அசை போட்டுக் கொள்வதும், ஆல்கஹாலை தொண்டைக்குள் ஊற்றுவதுமாய் இருந்தான். நந்தினி மீதான காதலை அவன் இப்போது உணர்ந்திருந்தாலும், அவள் மீது கோவமும் அவனுக்கு இருந்தது. அந்த டெய்ஸி விவகாரத்தில் அவள் தன்னை நம்பவில்லை எனும்போது ஆரம்பித்த கோவம் அது. பின்பு அவள் இறங்கி வந்தபோது, அசோக்கின் கோவமும் குறைய ஆரம்பித்திருந்தது. ஆனால்.. நாயரை தனக்கெதிராக திருப்பியிருக்கிறாள் என்பதை நினைக்கையில், அவள் மீது ஒரு எரிச்சலே எழுந்தது. ஒருகணம் தன் மனைவியின் முகத்தை ஆசையாக பார்த்தவன், அடுத்த கணமே முறைத்தான். இந்த மாதிரி இருவித மனநிலையுடனே, அசோக் நள்ளிரவு தாண்டியும் குடித்துக் கொண்டிருந்தான். பின்னர் தலையும், விழிகளும் தானாக சுழல.. சோபாவிலேயே சரிந்தான். உறங்கிப் போனான். மூளைக்குள் பலவித குழப்பப் படங்கள் ஓட, ஒருவித அவஸ்தையுடனே அவனது தூக்கம் நீடித்தது. காலையில் எழுந்தபோது அவனுடைய கண்கள் எரிச்சல் கொடுத்தன. உடல் சோர்ந்து போயிருந்ததை உணர முடிந்தது. முகத்தில் சுள்ளென்று அடித்த காலை வெயில், நீண்ட நேரம் தூங்கிவிட்டாய் என்றது. மணி பார்த்தான். ஒன்பதை தாண்டியிருந்தது. 'ப்ச்..' என்று சலிப்பை உதிர்த்தான். 'ஆபீஸுக்கு செல்ல வேண்டும்.. தாமதமாகிவிட்டது..!!' அசோக்கை உடனடியாய் ஒரு சுறுசுறுப்பு வந்து தொற்றிக் கொண்டது. பாத்ரூம் சென்று அவசர அவசரமாய் குளித்தான். வெளியே வந்தான். வார்ட்ரோப் திறந்து சலவை செய்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வெளியே எடுத்தான். பேன்ட் அணிந்து கொண்டான். உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான். பனியனை தலை வழியாக மாட்டிக் கொள்ளும்போதுதான், எதைச்சையாக வாசல் பக்கம் பார்வையை வீசினான். வீசியவன் லேசாக அதிர்ந்தான்.வாசலில் நந்தினி நின்றிருந்தாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் ஒருபக்கமாய் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவளுடைய உதட்டில் ஒருவித கேலிப்புன்னகை வழிந்தது. கண்கள் அசோக்கின் உடலை மேய்ந்து கொண்டிருந்தன. 'இவள் எப்போது வந்தாள்..?? எப்போதிருந்து இவ்வாறு தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்..??' அசோக் லேசாக துணுக்குற்றான். அப்புறம் உடனடியாய் சுதாரித்துக் கொண்டு, வாசலில் நின்றிருந்தவளை கண்டு கொள்ளாமல், மேல்சட்டையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தான். இப்போது நந்தினி சற்றே கடுகடுப்புடன் ஆரம்பித்தாள். "மொபைலை ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க..??" "பேட்டரி சார்ஜ் போய்டுச்சு..!!" அசோக் விட்டேத்தியாக சொல்ல, நந்தினி மேலும் சில வினாடிகள் அவனையே முறைத்தாள். அப்புறம் மெல்ல நகர்ந்து சென்று, கட்டிலுக்கு அருகே டீப்பாயில் இருந்த அவனது செல்போனை கையில் எடுத்தாள். உயிர்ப்பித்தாள். பேட்டரி இண்டிகேட்டர் பச்சை நிறத்துடன் வளமாக காட்சியளித்தது. உடனே மீண்டும் கணவனை ஏறிட்டு உஷ்ணமாக பார்த்தாள். "பொய்..!!" நந்தினி சீற, "சரி.. பொய்தான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ..??" அசோக்கும் பதிலுக்கு சீறினான். "எங்க இருக்கீங்கன்னு ஒரு ஃபோனாவது பண்ணி சொல்லிருக்கலாம்ல..?? நைட்டு பூரா எத்தனை தடவை உங்க நம்பருக்கு கால் பண்ணிருப்பேன் தெரியுமா..??" "ஏன்.. நான் எங்க போவேன்னு உனக்கு தெரியாதா..?? அதான் காலாங்காத்தாலேயே.. கரெக்டா மோப்பம் புடிச்சு வந்து சேந்துட்டியே..?? ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்..?? புருஷன் என்ன பண்றான்னு வேவு பாக்க வந்தியா..??" அசோக் சட்டை பட்டன்களை மாட்டிக்கொண்டே எள்ளலாக கேட்டான். "ஆமாம்.. வேதாளாம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா இல்லையான்னு.. வேவு பார்க்க வந்தேன்..!!" "பாத்தாச்சா..?? சந்தோஷமா..??" "ம்ம்..!! பாத்தாச்சு.. பாத்தாச்சு..!!" நந்தினி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போன் 'டிங்.. டிங்.. டிங்..' என்று தொடர்ந்து சப்தம் எழுப்பியது. வரிசையாக மெசேஜ்கள் வந்து விழுந்தன. நந்தினி பட்டனை அமுக்கி என்னெவென்று பார்த்தாள். அதில் ஒரு மெசேஜை பார்த்ததும் புருவத்தை சுருக்கியவள், செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே சொன்னாள். "நீங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குறப்போ.. உங்க ஆளு கால் பண்ணிருக்கா..!! கால் பண்ணி என்னன்னு கேளுங்க..!!" "என் ஆளா..?? அது யாரு என் ஆளு..??" "அவதான்.. கற்பகம்..!! நீங்க கூட ஆசையா 'கற்பு.. கற்பு..'ன்னு கூப்பிடுவீங்களே..??" நந்தினி கிண்டலாக சொல்ல, அசோக் சூடானான். "அறைஞ்சு பல்லை உடைக்கப் போறேன் உன்னை..!! அவளை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" "நான் ஒன்னும் நெனைக்கலை சாமீ..!!" "அப்புறம் ஏன் அவளை என் ஆளுன்னு சொல்ற..??" "நானா சொன்னேன்.. எல்லாம் அவதான் சொன்னா..!!" "என்ன சொன்னா..??" "உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு..!!" "இங்க பாரு.. அவ என்ன சொன்னா.. அதை நீ எந்த அர்த்ததுல மாத்தி சொல்றேன்னு எனக்கு தெரியும்..!! ஆமாம்.. எங்களுக்குள்ள ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்தான்..!! ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி தப்பான ரிலேஷன்ஷிப் இல்ல..!! வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.. ட்ரூ ஃப்ரண்ட்ஸ்..!! உன் புத்திக்குலாம் எங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி புரியாது..!!" "சரி சரி..!! இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி டென்ஷன் ஆகுறீங்க..?? எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன டவுட்டு.. தப்பா இருந்தா மாத்திக்கிறேன்.. அவ்ளோதான..?? ம்ம்..??" கூலாக சொன்ன நந்தினியையே அசோக் ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் கற்பகத்தின் நம்பருக்கு கால் செய்தான். ரிங் சென்றது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. மேலும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டு, செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். "என்னாச்சு..??" நந்தினி ஆர்வமாக கேட்டாள். "ரிங் போகுது.. யாரும் பிக்கப் பண்ணலை..!!" "ஒருவேளை குளிக்க போயிருப்பாளா இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு கால் பண்ணிருப்பா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..!!" குறும்பாக சொன்ன நந்தினியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி திடீரென அப்படியே நின்றவாக்கிலேயே சரிந்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மெத்தை மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் 'வாவ்...' என்று ஓசை எழுப்பிக்கொண்டே, இப்படியும் அப்படியுமாய் இரண்டு முறை உருண்டாள். அவள் செய்வதை எல்லாம் அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். உருண்டு முடித்த நந்தினி, இப்போது தனது தலையை கொஞ்சமாய் உயர்த்தி, தனது வலதுகையை மெத்தையில் ஊன்றி, அந்தக்கையால் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி மெத்தையை தடவியவாறே குறும்பான குரலில் கேட்டாள். "இதுதான் அந்த பொன்னான மெத்தையா..?? பல பொண்ணுகளை நீங்க பொரட்டி எடுத்த மெத்தையா..??" அவளுடைய கேலி அசோக்கை எரிச்சலாக்கியது. மனைவியையே முறைப்பாக பார்த்தவன், கடுப்பும் கேலியுமாய் சொன்னான். "ஆமாம்.. நேத்து கூட ஒருத்தி..!! விடிய விடிய நல்லா பொரட்டி எடுத்தேன்..!!" அசோக் அவ்வாறு சொல்ல, நந்தினி இப்போது சிரித்தாள். "ஹாஹா.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா..!!" "ஏன்..??" "நான் விழுறதுக்கு முன்னாடி.. ஒரு கசங்கல் கூட இல்லாம பெட் செம நீட்டா இருந்துச்சு..!! நைட்டெல்லாம் ஒரு பொண்ணை பொரட்டி எடுத்துட்டு.. காலைல உக்காந்து பெட் மடிப்புலாம் சரி பண்ணிட்டு இருந்தாரா என் புருஷன்..??" "ஏன்.. பண்ணிருந்தா என்ன..??" "ம்ம்.. பண்ணிருக்கலாம்..!! ஆனா.. அப்படியே வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்து.. எங்கிட்ட பொய் சொல்ல சொல்லிருக்கலாம்..!! அவனுக்கு நான் பணம் கூட குடுக்கலைப்பா.. பாத்து சிரிச்சேன்.. அவ்வளவுதான்.. எல்லா உண்மையும் கொட்டிட்டான்..!!" நந்தினி கண்சிமிட்ட, "ஓ.. சொல்லிட்டானா..??" அசோக்கின் குரலில் ஒரு சோர்வு தெரிந்தது. "யெஸ்..!! எல்லாம் சொல்லிட்டான்..!!" "அவனுக்கு இன்னைக்கு இருக்குது..!! ராஸ்கல்..!!" "ஐயோ.. பாவங்க அவன்.. நல்ல பையன்.. திட்டாதீங்க..!! அவன் சொன்னதை கேக்குறதுக்கு.. எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருந்தது தெரியுமா..??" "ஓஹோ.. அப்படி என்ன சொன்னான்..??" ஷர்ட்டை டக்கின் செய்து, இடுப்பில் பெல்ட் அணிந்து கொண்டே அசோக் கேட்டான். "நேத்து ஒரு குட்டியை கூட்டிட்டு வந்தீங்களாம்.. ஆனா.. கூட்டிட்டு வந்த வேகத்திலயே பொட்டியை கட்டி திரும்ப அனுப்பிச்சிட்டீங்களாமே..?? இவ்வளவுக்கும் அவ அடிக்கடி இங்க வருவாளாம்.. அவ எப்போ வந்தாலும் வீட்டுல ஆட்டம் தூள் பறக்குமாமே..??"நந்தினி உதட்டில் புன்னகையும், கேலியுமாக கேட்டாள். அசோக் அவளையே உர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தான். நந்தினி இப்போது எழுந்து, கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். தன் கணவனை நெருங்கி அவனுடைய கண்களை குறுகுறுவென பார்த்தவாறு கேட்டாள். "கூட்டிட்டு வந்தவளை ஏன் திரும்ப அனுப்பிச்சிட்டீங்க மிஸ்டர்..?? ம்ம்..??" "அதெதுக்கு உனக்கு..??" "சும்மா.. தெரிஞ்சுக்கணும்னு ஆசை..!! சொல்லுங்களேன்..!!" "எ..எனக்கு புடிக்கலை.. அனுப்பிச்சுட்டேன்..!!" "அதான்.. திடீர்னு ஏன் புடிக்காம போச்சுன்னு கேட்டேன்..??" நந்தினி துளைத்தெடுக்க, அசோக் கடுப்பானான். "ப்ச்.. அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!" அசோக் சீற, "சரி.. சொல்லாட்டா போங்க..!! என்ன காரணம்னு எனக்கு நல்லா தெரியும்..!!" நந்தினி கூலாக சொன்னாள். "என்ன காரணம்..??" "அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!" அசோக் சொன்னதையே அவனுக்கு திருப்பி கொடுத்துவிட்டு, நந்தினி புருவத்தை உயர்த்தி காட்டி புன்னகைத்தாள். அவளுடைய சீண்டலிலும் கிண்டலிலும் அசோக் இப்போது களைத்துப் போனான். இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி நந்தினியையே சில வினாடிகள் சலிப்பாக பார்த்தான். அப்புறம் தலையை அசைத்து ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, "உன்கிட்ட போராட எனக்கு நேரம் இல்ல.. வழியை விடு.. நான் கெளம்புறேன்..!!" என்று வாசலை நோக்கி நகரப் போனான். நந்தினி இப்போது அவசரமாக தன் இடது கையை அவனுக்கு குறுக்காக நீட்டி, சுவற்றில் ஊன்றி, அவன் செல்லும் வழியை மறித்தாள். கணவனை ஏறிட்டு கண்களிலும், உதட்டிலும் ஒரு ஒருவித ஏளனத்தை சிந்தினாள். "என்ன..??" என்றான் அசோக் முறைப்பாக. நந்தினி இப்போது அசோக்கையே விழுங்கி விடுவது போல பார்த்தாள். அவளுடைய முகமெல்லாம் ஒருவித குறும்பு கொப்பளித்துக் கொண்டிருந்தது. சில வினாடிகள் அவ்வாறு பார்த்தவள், அப்புறம் அவளுடைய வலது கையால் அசோக்கின் கன்னத்தை பிடித்து, குழந்தையை கொஞ்சுவது மாதிரி குழைவாக சொன்னாள். "அச்சோ.. பாவம் புள்ளை.. நைட்டு ரொம்ப ஏமாந்து போயிடுச்சா..??" "ப்ச்.." அசோக் சலிப்பாக அவளுடைய கையை தட்டிவிட்டான். "சும்மா இருந்த புள்ளையை நான்தான் கெளப்பி விட்டுட்டேன்.. இல்ல..??" "ம்ம்.." "நானே இப்போ அதை சரி பண்ணிடவா..??" நந்தினி குழைவாக கேட்க, "என்னது..??" அசோக் முகத்தை சுளித்தான். "புரியலையா..?? வாட் அபவுட் ஹேவிங் யுவர் பொண்டாட்டி இன் தேட் பெட்..??" நந்தினி ஓரக்கண்ணால் அந்த படுக்கையை பார்த்தவாறே குறும்பாக கண்சிமிட்ட, அசோக் இப்போது உச்சபட்ச எரிச்சலை எட்டினான். மனைவியை உஷ்ணமாக முறைத்தவன், சுவற்றில் ஊன்றியிருந்த அவளுடைய கையை வலுவாக பற்றி, அப்படியே வளைத்து, ஒரு முறுக்கு முறுக்கினான். "ஆஆஆஆஆஆ...!!!" நந்தினி கத்திக்கொண்டே படக்கென அந்தப்பக்கமாய் சுழன்றாள். அவளுடைய இடது கை, அவளுக்கு பின்பக்கமாக, அசோக்கின் இரும்புப்பிடியில் சிக்கியிருந்தது. கை அதிகம் வலிக்காமல் இருப்பதற்காக அவள் சற்று பின்னோக்கி நகர வேண்டியிருந்தது. நந்தினி அவ்வாறு நகர, அவளது பின்புறம் அசோக்கின் இடுப்புக்கு கீழே வந்து மெத்தென்று அழுந்தியது. அவளுடைய கூந்தல் வாசனை அசோக்கின் நாசிக்குள் புகுந்தது. அவளது காது மடலும், வழவழப்பான பின்கழுத்தும், செழுமையான தோளும்...!! அவளுடைய அழகு அசோக்கின் கண்களை பளிச்சென தாக்கியது. அவளோ வலி தாளாமல் அலறினாள். "ஆஆஆஆ... வலிக்குதுப்பா..!! உங்களுக்கு புடிக்கனும்னா.. வேற எதையாவது புடிச்சு தொலைங்க..!! கையை விடுங்க..!!" அந்த நிலையிலும் அவள் சீண்ட, அசோக் மேலும் டென்ஷனானான். முறுக்கியிருந்த அவளுடைய கைக்கு மேலும் சற்று அழுத்தம் கொடுத்தான். நந்தினி இப்போது வேதனையில் துடித்தாள். "ஆஆஆஆஆஆ...!!!" "கொழுப்புடி உனக்குலாம்..!!" அசோக் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான். "ஆஆ.. எனக்கென்ன கொழுப்பு..??" "அந்த நாயர்ட்ட போய்.. நம்ம மேட்டர்லாம் சொல்லி பொலம்பிருக்குற..?? அவன் கெட்ட கேட்டுக்கு.. ஒரு பேக்கரியை ஆரம்பிச்சுட்டு.. அவன்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்..!!" "அவர்கிட்ட பொலம்பலாம் ஒன்னும் இல்ல..!! மேட்டரை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! அந்த ஆளுக்கு கொஞ்சமாவது புத்தி இருந்தது.. சொன்னதுமே திருந்திட்டாரு..!!" அவளுடைய பதிலில் இருந்த குத்தலை உடனே புரிந்து கொண்ட அசோக், மீண்டும் அவள் கைக்கு ஒரு அழுத்தம் கொடுத்தான். நந்தினி மீண்டும் துடித்தாள். "ஆஆஆஆஆஆ...!!!" "உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா.. இந்த வேலைலாம் பண்ணிருப்ப..??" "இதுல என்ன திமிரு இருக்கு..??" "இத்தனை நாளா நான் சொன்னதை கேட்டுட்டு இருந்தவனை.. எனக்கு எதிரா திருப்பி விட்டுருக்குற..!! அந்த தைரியத்துல எங்கிட்ட வந்து உன் உடம்பை காட்டி சீண்டி விளையாடுற..!! இதுலாம் திமிர் இல்லாம வேற என்ன..??" "நான் ஒன்னும் உங்களை சீண்டி விளையாடலை..!! ப்ச்.. கையை விடுங்கப்பா..!!" நந்தினி தன் உடலை படக்கென ஒரு சிலுப்பு சிலுப்பி, தனது கையை அசோக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள். உடனே திரும்பி அசோக்கின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். வலியெடுத்த கையை இன்னொரு கையால் அழுத்தி தடவிக்கொண்டே சீற்றமாக சொன்னாள். "இப்போ என்னாயிடுச்சுன்னு சும்மா துள்ளுறீங்க..?? அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்..?? என் புருஷன் தப்பான வழிக்கு போறதை தடுக்குறது ஒரு குத்தமா..??" "என் விஷயத்துல தலையிட கூடாதுன்னு சொல்லிட்டுத்தான்.. உன்னை நான் கல்யாணமே செஞ்சுக்கிட்டேன்.. மறந்து போச்சா..??" "ஹ்ஹ.. உங்க கண்டிஷனும், அக்ரீமன்ட்டும்.. மொட்டை மாடில வச்சு நீங்க என்னை கிஸ் அடிச்ச அன்னைக்கே.. காலாவதி ஆகிப் போயிடுச்சு..!! இனிமேயும் அதெல்லாம் கட்டிக்கிட்டு என்னால அழ முடியாது..!!" "ஓ.. அந்த அளவுக்கு ஆயிடுச்சா..??" "ஆமாம்.. அப்படித்தான்.. நான் அப்படித்தான் செய்வேன்.. என்ன இப்போ..?? நல்லா கேட்டுக்கங்க.. நீங்க எனக்கு வேணும்.. எனக்கு மட்டுந்தான் வேணும்.. அப்படி நெனைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..!! உங்க பொண்டாட்டி நான்.. தொட்டு தாலி கட்டிருக்கீங்க எனக்கு..!! உங்களை எனக்கு சொந்தமாக்கிக்க.. என்னென்ன செய்யணுமோ.. எல்லாம் நான் செய்வேன்..!! என்ன பண்ண முடியும் உங்களால..??" நந்தினி ஆவேசமாக கேட்க, அசோக் அவளையே திகைப்பாக பார்த்தான். அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திக்கித்துப் போனான். எரிச்சலும், இயலாமையுமாய் மனைவியையே விழிகள் விரிய பார்த்தான். பார்க்க பார்க்க.. அவனுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. கண்களை இறுக்க மூடி, தலையை சற்றே குனிந்து, இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொண்டான். அதை பார்த்த நந்தினிக்கு, அவ்வளவு நேரம் கணவன் மீது இருந்த ஆவேசம் உடனே வற்றிப் போனது. "என்னாச்சு..??" என்றாள் சற்றே கவலையாக. அவனுடைய கையை தொட்டாள். "ப்ச்.." அசோக் அவளுடைய கையை தட்டி விட்டான். "என்னாச்சுன்னு கேக்குறேன்ல..?" நந்தினியின் குரலில் இப்போது கவலையுடன், கோபமும் கலந்திருந்தது. அசோக் பதில் எதுவும் சொல்லவில்லை. நந்தினி அவனுடைய மூளைக்குள் புகுந்து குடைச்சல் கொடுப்பது மாதிரி வலியெடுத்தது அவனுக்கு. அப்படியே தலையை பிடித்தவாறு கொஞ்ச நேரம் குனிந்திருந்தான். அப்புறம் படக்கென தன் மனைவியின் முகத்தை ஏறிட்டு, குரலை உயர்த்தி கத்தினான். "ஏண்டி இப்படிலாம் பண்ற..?? உன்னால..." என்று அதிக டெசிபலில் ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, நந்தினியின் முகத்தையே ஓரிரு வினாடிகள் பார்த்துவிட்டு, குரலை பட்டென தாழ்த்திக்கொண்டு.. "டார்ச்சரா இருக்குதுடி.. என்னால முடியலை..!!" என்று பரிதாபமாக சொல்லி முடித்தான். சோர்ந்து போனவனாய் அப்படியே பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான். அவனது ஆவேசத்தில் நந்தினி சற்றே மிரண்டு போனாள். நிலைகுலைந்து போய் அமர்ந்திருக்கும் கணவனையே, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய மனநிலையை இப்போது அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 'இப்படித்தான் தன் வாழ்க்கை என்றொரு உறுதியுடன் வாழ்ந்திருந்தான்.. இன்று அந்த வாழ்க்கை தடம் மாற.. இவன் தடுமாறுகிறான்..!! நந்தினி ஏற்படுத்திய காயத்தால்.. இதயத்தில் இனி யாருக்கும் இடமில்லை என்ற முடிவில் இருந்திருந்தான்.. இன்று அவனுடைய மனம் அவனது கட்டுப்பாட்டை மீற.. யாரால் அந்த முடிவு எடுத்தானோ அவள் மீதே சென்று சாய.. இவன் கிடந்து குழம்புகிறான்..!!' கணவனை பார்க்க பார்க்க.. நந்தினியின் மனதுக்குள்.. கனிவும், கருணையும் பொங்க ஆரம்பித்தது..!! தரையில் முழங்கால் இட்டு.. அவன் முன்பாக அமர்ந்தாள்..!! கவிழ்ந்து போயிருந்த அவனுடைய முகத்தை நிமிர்த்தினாள். "இங்க பாருங்க..!!" "...................." "ப்ச்.. பாருங்கன்றேன்ல..?" அசோக் இப்போது நிமிர்ந்து தன் முகத்துக்கு எதிரே இருந்த மனைவியின் முகத்தை பார்த்தான். அசோக்கின் முகம் ஒரு மாதிரி கலங்கி, வாடிப்போயிருக்க, நந்தினியின் முகம் மிக தெளிவாக, மலர்ச்சியாக இருந்தது. நந்தினி அசோக்கின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தாங்கி பிடித்து, தனது மெல்லிய உதடுகளை குவித்து, அவனுடைய நெற்றியில் ஈரமாய் ஒற்றி எடுத்தாள். அசோக் எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தான். நந்தினி இப்போது அவனது வலது கையை பற்றினாள். எடுத்து தன் கன்னத்தோடு வைத்து பிடித்துக் கொண்டாள். அவ்வப்போது அந்தக்கைக்கு 'இச்.. இச்..' என்று இதமாக முத்தம் கொடுத்தவாறே பேசினாள். "இப்போ என்னாச்சுன்னு இப்படி ஃபீல் பண்றீங்க..?? ம்ம்..?? உங்களுக்கு நான் இருக்கேன்ப்பா.. உங்க நந்தினி இருக்கேன்..!! நான் பாத்துக்குறேன்.. என் கண்ணனுக்கு எந்த குறையும் இல்லாம.. கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குறேன்..!!" கனிவாக சொல்லிவிட்டு நந்தினி கணவனின் முகத்தையே காதலும் ஆசையுமாய் பார்த்தாள். அசோக்கும் அவளையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவனுடைய கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. உதடுகள் மெலிதாக ஒரு விரக்தி புன்னகையை சிந்தின. நந்தினி என்னென்று புரியாமல் திகைக்க, அசோக் சற்றே தழதழத்து போன குரலில் சொன்னான். "ஆறு வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நீ சொல்லிருந்தா.. ரொம்ப நல்லா இருந்திருந்திருக்கும் நந்தினி..!!" அவ்வளவுதான்..!! கண்களில் நீர் துளிர்க்க கணவன் சொன்னதை கேட்டு, நந்தினி அப்படியே உருகிப் போனாள்..!! ஆறுவருடங்களுக்கு முன்பாக தான் அள்ளி வீசிய வார்த்தைகள், எந்த அளவுக்கு அவன் மனதை ரணமாக்கியிருக்கின்றன என்பதை, இப்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள்..!! அவனுடைய கலங்கிப்போன முகத்தை காண காண.. நந்தினிக்கு ஒரு வித துக்கம் வந்து தொண்டையை அடைத்தது..!! படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். அசோக்கையே ஒரு இரக்கப் பார்வை பார்த்தவள், அவளுடைய ஒரு கையால் அவனது கன்னத்தை வருடியவாறே, பரிதாபமாக சொன்னாள். "ஸாரிப்பா.. ஸாரி..!!! உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. ஸாரி..!!!" அதன்பிறகும் நந்தினியால் அவளுடைய கண்களுக்கு அணை போட முடியவில்லை. கண்ணீரை கசிய ஆரம்பித்தன அவளது விழிகள்..!! அசோக் ஒரு சில வினாடிகள் அவளுடைய கண்ணீர் வழியும் முகத்தையே அமைதியாக பார்த்தான். அப்புறம் தனது விரல்களால் அவளுடைய விழி நீரை துடைத்தான். கட்டிலில் இருந்து எழுந்து கொண்டான்.

"ஆபீஸுக்கு டைமாச்சு நந்தினி.. நான் கெளம்புறேன்.." என்றவன், அறை வாசலை நோக்கி நடந்தான். நந்தினியோ உறைந்து போன மாதிரி, அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.அன்று காலை 10.30. அடையாறு ஆபீஸ். அசோக் சற்று முன்புதான் ஆபீஸ் வந்து சேர்ந்திருந்தான். இப்போது தனது அறைக்குள் அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுடைய கைகள் இரண்டையும் கோர்த்து, பின்னந்தலைக்கு கொடுத்து, நாற்காலியில் தலை சாய்த்து, சீலிங்கை வெறித்துக் கொண்டிருந்தான். சிணுங்கிய தொலைபேசியை கூட எடுக்க மனமின்றி, சிந்தனை வயப்பட்டவனாய் அமர்ந்திருந்தான். ஆறு வருடங்களில் அவன் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போனது என்று, அதையே எண்ணி மருகிக் கொண்டிருந்தான். ஆறு வருடங்களுக்கு முன்பு, அமைதியாக சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கை, ஒரு பெண் வீசிய வார்த்தைகளால் முற்றிலும் மாறிப்போனது. இன்று அதே பெண் அந்த வாழ்க்கையை வேறு திசைக்கு திருப்பிப்போட கடுமையாக முயலுகிறாள்..!! நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க.. அவனுக்கு மனதுக்குள் போராட்டம்..!! அப்போதுதான் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. தலையை சாய்த்து அறை வாசலுக்கு பார்வையை வீசிய அசோக், இன்ஸ்டண்டாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான். வாசலில் கற்பகம்..!!! அவளுடைய கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல், அலுவலகத்திலும் ஆளைக் காணாமல், விடுப்பு எடுத்துக் கொண்டாள் என்று அசோக் நினைத்திருக்க, அவளோ திடீரென வந்து நிற்கிறாள். அதுவும் அவள் வந்திருந்த கோலம்... "அ..அசோக்.. அ..அசோக்.. " அவனை திணறலாக அழைத்துக்கொண்டே, கற்பகம் அவசரமாய் உள்ளே வந்து கொண்டிருந்தாள். பேயறைந்த மாதிரியாக, அவளுடைய முகத்தில் ஒரு உச்சபட்ச பயம் அப்பியிருந்தது. அவளது கைவிரல்கள் நடுநடுங்கியதில் இருந்தே, மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கலைந்த கூந்தலும், கசங்கிப்போன புடவையும்..!! அவளுடைய கோலத்தை பார்த்ததுமே அசோக்கிடமும் ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. படக்கென சேரை விட்டு எழுந்து, அவளிடம் சென்றான்."ஹேய்.. கற்பு.. என்னாச்சு..??" என்று பதட்டமாக கேட்டான். "அ..அசோக்.. அ..அசோக்.. " கற்பகம் அவனுடைய கைகளை பிடித்துக்கொண்டு, அவனது முகத்தை பரிதாபமாக ஏறிட்டாள். அவளுடைய கண்கள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த மாதிரி காட்சியளித்தன. 'புஸ்.. புஸ்..' என அவளுக்கு மூச்சிரைக்க, மார்புகள் வேகவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கின. "சொ..சொல்லு கற்பு.. என்னாச்சு..??" "ப..பணம்.. பணம்...!! ப..பணம்.. வேணும் அசோக்..!!" "ப..பணமா..??" "ம்ம்.. நெ..நெறைய வேணும்.. நெறைய பணம் வேணும் அசோக்..!!" கற்பகம் பிரம்மை பிடித்தவள் மாதிரி பேசினாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. "எ..எனக்கு புரியலை கற்பு..?? எதுக்கு பணம்..??" "அ..அங்க.. ஹாஸ்பிடல்ல.. அவரு..!! ப..பணம் வேணும் அசோக்... என் புருஷன் அங்க உசுருக்கு போராட்டிட்டு.." கற்பகம் அழுகையும், தவிப்புமாய் சொல்ல, அசோக் அதிர்ந்து போனான். "க..கற்பு..!!!! எ..என்ன சொல்.. எ..என்னாச்சு அவருக்கு..???" அசோக்கிற்கும் வாய் குழறியது. "க..கத்தியால குத்திப் போட்டு போயிட்டாங்க..!!" சொல்லும்போதே அவளுடைய கண்களில் கண்ணீர் பொங்கியது. "யாரு..??" "தெரியலை..!!!!!" கற்பகம் கத்தினாள். "சரி.. எ..எந்த ஹாஸ்பிட்டல்..??" "ம..மலர் ஹாஸ்பிட்டல்..!! உ..உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க.. லட்ச கணக்குல பணம் கேக்குறாங்க..!!" "ஓ..!!" அசோக் லேசாகத்தான் திகைத்தான். அதற்குள்ளாகவே கற்பகம், "ப்ளீஸ் அசோக்.. எ..எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! பதிலுக்கு நான் என்ன வேணாலும் செய்றேன்..!!" என்றாள். "ஹேய்.. என்ன பேசுற நீ.." அசோக் திகைப்பாக சொன்னதை கற்பகம் கவனிக்கவே இல்லை. ஒருமாதிரி புத்தி பேதலித்த நிலையில் இருந்தாள் அவள். தொடர்ந்து திணறலாக சொன்னாள். "உ..உனக்கு.. உனக்கு என்னை புடிக்கும்ல..?? நா..நான் வந்தா எவ்வளவு வேணா தருவேன்னு சொல்வேல..??" அவளுடய வார்த்தைகளை கேட்டு அசோக் மிரண்டு கொண்டிருக்கும்போதே, "எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு அசோக்.. நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்..!!" கற்பகம் சொல்லியே விட்டாள்..!!! ஒரு மாதிரி திக்பிரம்மையிலும், குழப்பத்திலும் இருந்த கற்பகம், சொல்லியே விட்டாள்..!! அதை கேட்ட அசோக் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து போனான்..!! அவள் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் அமிலத்தை ஊற்றிய மாதிரி இருக்க, துடித்துப் போனான். விழிகள் விரிய கற்பகத்தையே ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தான். அடியில் பூமி விரிசல் விட்டாற்போல அவனது கால்கள் தடுமாறின. இரண்டு எட்டுகள் பின்னால் எடுத்து வைத்தவன், கீழே சரிந்து விடாமல் இருக்க, டேபிளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.நிமிர்ந்து கற்பகத்தை பார்த்தான். அவள் இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரியே அசையாமல் நின்றிருந்தாள். அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் ரெண்டும் உடலை விட்டு விரிந்திருக்க, அவளது மாராப்பு இப்போது கீழே நழுவியிருந்தது. மார்பை மூடிக்கொள்ள கூட தோன்றாமல் நின்றிருந்தாள். நாணப்படும் மனநிலையிலும் அவள் இருக்கவில்லை. கற்பகம் அவன் முன் கையேந்தி நிற்கிற கோலமும், அவள் பேசிய வார்த்தைகளும், அசோக்கின் மூளையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க, அவன் தலையை பிடித்துக் கொண்டான். சலனமற்று நின்று கொண்டிருந்த கற்பகம் இப்போது திடீரென கண்களை சுருக்கினாள். அவளுடைய தலை நிலை கொள்ளாமல் லேசாக சுழன்றது. கால்கள் தடுமாறின. அசோக்கை நோக்கி அடியெடுத்து வைத்தவள், அப்படியே மயங்கி சரிந்தாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த அசோக் உடனடியாய் சுதாரித்துக் கொண்டான். அவள் தரையில் வீழ்வதற்கு முன்பாகவே ஓடிச்சென்று அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான். "கற்பு.. கற்பு.." என்று மயக்கமுற்று மடியில் கிடந்த அவளுடைய கன்னத்தில் அறைந்தான். அவளிடம் எந்த அசைவும் இல்லாமலிருக்க, பிறகு அவளது மாராப்பை இழுத்து போர்த்திவிட்டு, "சண்முகம்.. சண்முகம்.." என்று அறைவாசலை நோக்கி கத்தி, ஆபீஸ் பியூனை அழைத்தான். அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து.. அசோக்கின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறிக்கொண்டு இருந்தது. அசோக் ஸ்டியரிங்கை வளைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் கற்பகம் அமர்ந்திருந்தாள். அசோக் காரை செலுத்திக்கொண்டே பக்கவாட்டில் திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவளுடைய பார்வை ஒரு மாதிரி நிலைகுத்திப் போயிருக்க, சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு இருந்ததை போலில்லாமல் அவளுடைய முகம் இப்போது தெளிவாக காட்சியளித்தது. அவளுக்கு மயக்கம் தெளிவித்து, அவள் கணவனின் உயிரை காப்பாற்றுவது தனது பொறுப்பு என்று அசோக் உறுதி அளித்து நம்பிக்கையூட்டிய பிறகே, அவளிடம் ஒரு தெளிவு பிறந்தது. "தெளிவா இருக்கியா கற்பு..?? உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா..??" அசோக் இறுக்கமான குரலில் கேட்டான். "ம்ம்.. சொல்லு..!!" கற்பகத்தின் பதிலிலும் ஒரு இறுக்கம். "ஏ..ஏன் அப்படி பண்ணுன கற்பு..??" "எப்படி பண்ணுனேன்..??" "எ..என்கிட்டயே உன் உடம்பை வெலை பேசுற மாதிரி.. எப்படி உன்னால அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது..??" அசோக் ஆதங்கமாக கேட்க, கற்பகம் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. அருகில் இருப்பவனையும் திரும்பி பார்க்கவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் சொன்னாள். "எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை அசோக்.. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.. எப்படியாவது பணத்தை அரேஞ் பண்ணனும்னு தோணுச்சு.. அதுக்காக என்னவேணா செய்யலாம்னு தோணுச்சு..!! உன்கிட்ட வந்து பேசுறப்போ.. ஒரு கன்ஃப்யூஷன்ல.. கண்ட்ரோல் இல்லாம.. அப்படி சொல்லிட்டேன்..!!" "கன்ஃப்யூஷன்ல சொல்றதா இருந்தாலும்.. என்னை பாத்து.. எப்படி நீ அப்படி சொல்லலாம்..??" அசோக் அந்த மாதிரி கோவமாக கேட்கவும், கற்பகம் இப்போது பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தாள். அவள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்ததில் ஒருவித உஷ்ணம் தெரிந்தது. குரலில் இப்போது கொஞ்சம் கடுமையை கூட்டிக்கொண்டு சொன்னாள். "ஏன்..?? நான் சொன்னதுல என்ன தப்பு..?? நீ அந்த மாதிரி ஆள்தான..?? பொண்ணுக உடம்பை வெலை பேசுறவன்தான..?? இப்படித்தான் இருப்பேன், மாறவே மாட்டேன்னு உன் பொண்டாட்டிட்டயே சவால் விட்டவன்தான..??" கற்பகத்தின் கேள்விகள் அசோக்கை சுருக் சுருக்கென்று தைத்தன. அவளுடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். அவனுடைய குரல் அவனையும் அறியாமல் இப்போது தடுமாற ஆரம்பித்தது. "க..கற்பு ப்ளீஸ்.. எ..எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்கு.. ஆ..ஆனா நான் வெறி புடிச்சவன் இல்ல..!! யார் மேல ஆசைப்படனும்.. யார் மேல ஆசைப்படக் கூடாதுன்னு எனக்கு தெரியும்..!! பாலுக்கும், கள்ளுக்கும் எனக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும் கற்பு..!!" "பனை மரத்துக்கு கீழ நின்னு பாலை குடிச்சாலும்.. பாக்குறவங்க கண்ணுக்கு அது தப்பாத்தான் தெரியும் அசோக்..!!"அசோக்கிற்கு அடுத்த அடி..!! பதில் சொல்ல முடியாமல் திணறினான். ஓரிரு வினாடிகள் கற்பகத்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தவன், அப்புறம் முன்னால் சென்ற காரை ஓவர்டேக் செய்துகொண்டே, சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக சொன்னான். "நா..நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவன் இல்ல கற்பு..!!" "ம்ம்.. தெரியும்..!!" "அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..?? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" சொல்லும்போதே அசோக்கிற்கு தொண்டை அடைத்தது. கண்களில் லேசாக நீர் எட்டிப் பார்த்தது. "நீ பண்றது அந்த மாதிரிதான் இருக்கு அசோக்.. உன்னை நல்லவன்னு சேத்துக்குறதா, இல்ல கெட்டவன்னு ஒதுக்குறதா..?? எனக்கு புரியலை..!!" "நா..நான்.. நான் நல்லவன்தான் கற்பு.. ரொ..ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நான் நெனச்சது இல்ல..!! என்னை நீ புரிஞ்சுக்கவே இல்ல கற்பு..!!" வேகமாக சொன்னவன், கொஞ்ச நேரம் அமைதியானான். சாலையை பார்த்து காரை செலுத்தினான். ஆனால் அவனுடைய மூளை கற்பகம் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது. திடீரென மீண்டும் அவளிடம் திரும்பி, "ச்சே.. ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா..?? எந்த கெட்ட பழக்கமும் இல்லாம.. எவ்வளவு நல்ல பையனா இருந்தேன் தெரியுமா..?? எல்லாம் இவளால வந்தது..!!" என்றான் சலிப்பும், வெறுப்புமாய். "யாரால..??" "நந்தினி..!!" "அவ என்ன செஞ்சா..??" கற்பகம் கேட்க அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஒரு சில வினாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு பிறகு மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "காலேஜ்ல அவளை நான் லவ் பண்ணினேன் கற்பு.. ரொம்ப சின்சியரா லவ் பண்ணுனேன்..!! அவகிட்ட என் லவ்வை சொன்னப்போ.. அவ என்னை ரொம்ப கேவலமா ஹர்ட் பண்ணிட்டா..!!" "ஓ.. அப்படி என்ன சொன்னா..??" "நா..நான்.. நான் ஆம்பளையே இல்லைன்ற மாதிரி சொல்லி.. ஹர்ட் பண்ணிட்டா..!! அந்த வார்த்தையை தாங்க முடியாம.. அந்த கோவத்துலதான்.. நான் இப்படிலாம்..!! ச்சே.. எல்லாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கற்பகம் இடையில் புகுந்து "அப்படினா நீ ஆம்பளையாள மாறிருக்கணும்..??" என்று உலர்ந்து போன குரலில் கேட்டாள். உடனே அசோக்கிற்கு அவன் மூளையில் சுருக்கென எதுவோ தைத்த மாதிரி இருந்தது. திகைத்துப் போய் கற்பகத்தை திரும்பி பார்த்தான். "க..கற்பு.. எ..என்ன சொல்ற நீ..????" "புரியலையா..?? அவ சொன்னதாலதான் மாறிட்டேன்னு சொல்றியே..?? அப்படினா ஆம்பளையால மாறிருக்கணும்.. ஏன் இப்படி மாறுன..??" "க..கற்பு.. நான்.. அப்போ நான்.." அசோக் வார்த்தைகளை சிந்த திணறினான். "ஆம்பளைன்னு நெனச்சுட்டு இருக்கியா..?? ஆம்பளைக்கும் பொம்பளை பொறுக்கிக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு அசோக்..!!" கற்பகம் ஒருமாதிரி அமைதியான குரலில்தான் சொன்னாள். ஆனால் அசோக் அந்த வார்த்தைகளுக்கு அப்படியே ஆடிப்போனான். ஆறு வருடங்களுக்கு முன்பாக நந்தினி உதறித்த வார்த்தைகளைப் போல, இப்போது கற்பகம் வீசிய வார்த்தைகளும் அவனை வலிமையாக தாக்கின. விதிர்விதிர்த்து போய் கற்பகத்தையே பார்த்தான். கற்பகம் தொடர்ந்தாள். "பொண்ணுககிட்ட போறதுலாம் ஒரு ஆம்பளைத்தனமாடா..?? ஆம்பளைன்னா என்ன நெனச்சுட்டு இருக்குற நீ..?? உண்மையான ஆம்பளை யார்னு தெரியுமா உனக்கு..?? " அசோக் பேச்சிழந்து போய், பிரம்மை பிடித்தவன் மாதிரி காரை செலுத்திக் கொண்டிருக்க, அதன்பிறகு கொஞ்ச நேரம் கற்பகம் மட்டுமே பேசினாள். ஆனால் அவள் பேசிய அனைத்தும் அசோக்கின் செவியில் புகுந்து, மூளையை துளைத்தெடுத்தன. "உன் அப்பா ஆம்பளை..!! சின்ன வயசுலேயே பொண்டாட்டியை இழந்துட்டாலும்.. வேற ஒரு பொண்ணுக்கு மனசுல இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டு.. தான் பெத்த பையனுக்காகவே.. இந்த நிமிஷம் வரைக்கும் உழைச்சுக்கிட்டும், கவலைப்பட்டுக்கிட்டும் இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!" ".................""நந்தினியோட அப்பா.. நம்ம சதானந்தம் ஸார்..!! இருநூறு எம்ப்ளாயிஸ் வொர்க் பண்ணுன கம்பெனிக்கு மொதலாளி அவரு.. பாவம், பிசினஸ் நொடிச்சு போச்சு..!! ஆனா.. தான் பொண்டாட்டியும், புள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு.. எந்த ஈகோவும் பார்க்காம.. அந்த வயசுலயும்.. உன்கிட்ட கைகட்டி நின்னு வேலை பாத்தாரே..?? அவர் ஆம்பளை..!!" "................." "ஹ்ஹ.. நீ மட்டும் இல்ல.. இங்க நெறைய பேர் ஆம்பளைன்றதுக்கு அர்த்தத்தை தப்பாத்தான் புரிஞ்சு வச்சிருக்காங்க..!! ஒரு பொண்ணை கட்டில்ல திருப்தி படுத்திட்டா போதும்.. உடனே அவன் ஆம்பளை..!! அவளை கர்ப்பமாக்கிட்டா போதும்.. ஆஹா ஆம்பளை சிங்கம்..!! அடத்தூ..!! ராமண்ணாவுக்கு கொழந்தை இல்ல.. ஆனா, அவர் மாதிரி ஒரு ஆம்பளையை பார்க்க முடியுமா..?? காதலிச்ச பொண்ணுக்காக.. அவரோட சொந்த பந்தம், சொத்து பத்து எல்லாம் விட்டுட்டு வந்து.. இருபது வருஷமா உன் வீட்டுல கார் ஓட்டிட்டு இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!" "................." "ஆங்.. அந்த புருஷோத்தமன்.. அவனை மறந்துட்டனே.. என்ன கேரக்டர்டா அவன்..?? அவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தும்.. அவனை காதலிச்ச ஒரு பொண்ணுக்காக.. அவளோட ஊனத்தை கூட பொருட்படுத்தாம.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டு.. இப்போ அவளுக்காகவே வாழ்றானே..?? அவன் ஆம்பளைடா..!!" அசோக் இப்போது ஒருமுறை திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவனுடைய முகம் இப்போது வெலவெலத்துப் போய் பரிதாபமாக காட்சியளித்தது. கற்பகம் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும், அவனை சுளீர் சுளீர் என சவுக்கால் அடித்தது போல இருக்க, அந்த வார்த்தைகள் அவனது உள்ளத்தில் பொங்க செய்த உணர்ச்சிகளை, உதடுகள் கடித்து கட்டுப் படுத்திக் கொண்டான். கற்பகமும் இப்போது கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளுடைய ஆவேசம் சற்றே வடிந்து போன மாதிரி தெரிந்தது. அவளுக்கு திடீரென எதுவோ ஞாபகம் வந்திருக்க வேண்டும். அவளுடைய விழிகள் விரிந்து கொள்ள, ஒரு மாதிரி மிரட்சியாக, எங்கேயோ வெறித்த பார்வை ஒன்று பார்த்தாள். அவளுடைய கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்க, சற்றே தழதழத்த குரலில் சொன்னாள். "நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை ரோட்டுல போட்டு அடிச்சுட்டா.. உடனே அவனுகளாம் ஆம்பளைகளாம்..?? அதெல்லாம் ஒரு வீரமாம்..?? இன்னைக்கு என் புருஷன் நாலு பேரை எதுத்து அடிக்க துப்பில்லாம ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்காரு அசோக்..!! நாலு பொறுக்கி பசங்ககிட்ட இருந்து ஒரு பொண்ணோட மானத்தை காப்பாத்துறதுக்காக.. அவனுககிட்ட கத்திக்குத்து வாங்கி.. இப்போ உசுரை கைல புடிச்சுட்டு படுத்திருக்காரு..!!" என்று அழுகுரலில் ஆரம்பித்தவள், திடீரென ஆவேசமாகி, "என் புருஷனை விட யார்டா இருக்கா இங்க ஆம்பளை..??" என்று கத்த, அசோக் அவளையே ஸ்தம்பித்துப் போய் பார்த்தான். சுத்தமாய் வாயடைத்துப் போனான். அவனுக்கும் இப்போது கண்கள் கலங்க ஆரம்பித்தன. கற்பகம் மேலும் கொஞ்ச நேரம் அப்படியே ஆவேசத்துடன் இருந்தாள். அப்புறம் மெல்ல தனது உணர்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, கண்களில் வழிந்த நீரையும் துடைத்துக் கொண்டு, இதமான குரலில் பேச ஆரம்பித்தாள். "ஆம்பளைகளும், அவதார புருஷனுகளும்.. கதைலயும் காவியத்துலயும் மட்டும் இல்ல அசோக்.. நம்மள சுத்தி இருக்காங்க.. நம்ம கூடவே இருக்காங்க..!! கட்டுன பொண்டாட்டிக்காகவும், பெத்த புள்ளைக்காகவும், பொறந்த குடும்பத்துக்காகவும் வாழற ஒவ்வொருத்தனும் ஆம்பளைதாண்டா..!!" "................." "நீ அழகனா இருக்கலாம்.. அறிவானவனா இருக்கலாம்.. தெறமைசாலியா, தைரியசாலியா இருக்கலாம்.. வீரமானவனா, விவேகமானவனா இருக்கலாம்..!! ஆனா பெண்மையை மதிக்க தெரியாத உன்னை.. உன் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்க முடியாத உன்னை.. என்னால ஆம்பளையா ஒத்துக்க முடியாது அசோக்..!! நல்லா கண்ணை தொறந்து பாரு.. உன்னை சுத்தியே எத்தனை ஆம்பளைங்க இருக்காங்கன்னு பாரு..!! அந்த மாதிரி ஒரு ஆம்பளையா நீ மாறிக் காட்டிருக்கலாமே..?? இனிமேயும் சும்மா சும்மா.. 'அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்.. அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்..'னு சொல்லிட்டு இருக்காத அசோக்.. தப்பு அவ மேல இல்ல.. உன் மேலதான்..!!"கற்பகம் பேசி ஓய்ந்தாள். இடி, மின்னலுடன் மழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருந்தது அசோக்கிற்கு..!! அவளுடைய பேச்சில் இருந்த நியாயம் எல்லாம் அவனுடைய புத்தியில் உறைக்க, இத்தனை நாளாய் அவன் செய்திருந்த தவறு என்னவென்று தெளிவாக புரிந்தது. ஆனால் கற்பகம் தன்னை பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறாள் என்பதையும் உணர்ந்து கொண்டான். அவளை தெளிவு படுத்தும் விதமாக மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "நீ சொல்றதுலாம் சரிதான் கற்பு.. இத்தனை நாளா என் தப்பு என்னன்னே உணராம இருந்துட்டேன்.. இனி சத்தியமா அந்த தப்பை நான் திரும்ப பண்ண மாட்டேன்.. என்னால பண்ணவும் முடியாது கற்பு..!! நீ சொன்ன மாதிரி.. என் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்காத.. மடையன் இல்ல நான்.. எனக்கு நல்லாவே புரியும்..!!" "அப்புறம் ஏன் அன்னைக்கு ஆபீஸ்ல அப்படி நடந்துக்கிட்ட..??" "அது வேற.. அதை இப்போ சொன்னா உனக்கு புரியாது..!! ஆனா அது கூட.. அவ மேல நான் வச்சிருந்த அன்போட வெளிப்பாடுதான் கற்பு.. அவ என்னை நம்பலையேன்னு வந்த கோவம் அது..!!" "என்னடா சொல்ற நீ..?? உனக்கும் அவ மேல அன்பு இருந்தா.. அப்புறம் அவளை ஏத்துக்குறதுல என்னதான் பிரச்னை உனக்கு..??" "ஏதோ ஒரு குழப்பம்.. ஒரு தயக்கம்.. ஒரு ஈகோ..!!" "ச்சே.. கட்டுன பொண்டாட்டிக்கிட என்னடா ஈகோ வேண்டிக் கெடக்கு..?? அதுவும் உன் மேல உயிரையே வச்சிருக்குற பொண்டாட்டிக்கிட்ட..??" "ம்ம்.. தப்புத்தான்..!!" "நான் சொல்றதை கேளு அசோக்.. நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு.. உன் ஈகோலாம் விட்டுட்டு.. நீதான் இனி எல்லாம்னு அவகிட்ட போய் சொல்லு..!! உனக்காகவே வாழறவ அவ.. அவளுக்காக நீ இனிமே வாழ்ந்து பாரு..!! பண்றியா..??" "ம்ம்..." அசோக் அமைதியாக சொன்னான். அவன் அப்படி சொன்னதற்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் மலர் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தது. அன்று மாலை வரை அசோக் ஹாஸ்பிட்டலில்தான் இருந்தான். கற்பகத்தின் கணவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான். தனது அக்கவுன்ட்டில் இருந்து ஹாஸ்பிட்டலின் அக்கவுன்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்தான். உடனடியாய் சிகிச்சை ஆரம்பித்தார்கள். பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை மூன்று மணிக்கு முடிந்தது. அப்புறம் ஒரு அரை மணிநேரம் கழித்துத்தான் 'இனி பயப்படுவதற்கு எதுவும் இல்லை..' என்று ஆபரேஷன் செய்த டாக்டர்களில் ஒருவர் வந்து சொல்லி சென்றார். அதன் பிறகுதான் அசோக்கும், கற்பகமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அசோக் வீட்டுக்கு திரும்புகையில் மணி மாலை ஐந்தை நெருங்கியிருந்தது. கற்பகம் காருக்குள் வைத்து பேசிய பேச்சின் தாக்கம் இன்னும் குறையாதவனாகவேதான் அவன் காட்சியளித்தான். காரில் இருந்து இறங்கி ஒரு எந்திரம் போலதான் நடந்து சென்று, காலிங் பெல்லை அழுத்தினான். நந்தினி வந்து கதவு திறந்தாள். அசோக் வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே சென்றதுமே அவன் தன் மனைவியை ஆசையும் காதலுமாய் பார்க்க, அவனுடைய மனமாற்றத்தை அறியாத அவளோ அவனை பார்த்து அமைதியாக ஒரு புன்னகையை சிந்தினாள். ஓரிரு விநாடிகள்தான்..!! அதற்குள்ளாகவே நந்தினியின் பார்வையில் அது பட்டு விட்டது.. அசோக்கின் சட்டையில்.. இடது புறத்தில்.. இடுப்புக்கு சற்று மேலே.. உள்ளங்கை அகலத்திற்கு வட்டமாய்.. சிவப்பு கலரில்.. ரத்தம்..!!! அதை பார்த்த மாத்திரத்திலே நந்தினி பக்கென அதிர்ந்து போனாள். "எ..என்னங்க இது..????" என்று பதறினாள்.

"எ..எது..??" "ஐயோ.. ரத்தங்க..!!!!" நந்தினி பயந்து போய் அலறினாள். அசோக்கும் அப்போதுதான் அதை கவனிக்கிறான். காயம்பட்டு சிகிச்சைக்கு வந்த ஒருவர் ஹாஸ்பிட்டலில் அவன் மீது மோதியது, இப்போது அவனுடைய நினைவுக்கு வரவில்லை. "இ..இது எப்படி..??" என்று குழம்பினான். "என்னங்க ஆச்சு.. சொல்லுங்க.. என்னாச்சு..???" நந்தினி தவிப்பும், துடிப்புமாய் கத்தினாள். "ஒ..ஒன்னும் ஆகலை நந்தினி.. இது எப்படி.." அசோக் சொல்லிக்கொண்டிருக்க, அவன் சொல்வதை எல்லாம் கவனிக்கிற மனநிலையில் நந்தினி இல்லை. கணவனின் ஆடையில் உதிரத்தை பார்த்த மாத்திரத்திலேயே, உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளாகியிருந்தாள். அவளுடைய விரல்கள் எல்லாம் நடுநடுங்க, அதே விரல்களாலேயே, டக்-இன் செய்யப்பட்டிருந்த அவனது சட்டையை பற்றி, சரக்கென மேலே இழுத்தாள். பனியனை தூக்கி அவனுடைய உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பதறும் விரல்களால் தடவி தடவி பார்த்தாள். "எனக்கு ஒன்னும் இல்ல நந்தினி.. இது வேற யாரோட ரத்தம்..!!" "திரும்புங்க.. பின்னாடி திரும்புங்க.." "ஐயோ.. எனக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..??" அசோக் சொன்னது அவள் காதில் விழவே இல்லை. விலாப்பக்கம் இருந்து ஒருவேளை ரத்தம் கசிகிறதோ என தவிப்புடன் தடவிப் பார்த்தாள். அவளுடைய பார்வை அங்கும் இங்கும் கிடந்து அல்லாடியது. அவனுடைய உடலில் இருந்து ரத்தம் கசியவில்லை என்பதை இப்போது அவளுடைய புத்தி அறிந்து கொண்டிருந்தாலும், ஒருவேளை இருந்துவிடுமோ என்று அவளுடைய காதல்மனம் பதைபதைத்தது. தனது உடையில் ரத்தத்தை பார்த்ததுமே, புத்தி பேதலித்துப் போனவள் மாதிரி நடந்துகொள்கிற மனைவியையே, அசோக் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய பரிதவிப்பை பார்க்க பார்க்க.. அவனுடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நீரை கசிய ஆரம்பித்தன. 'ஆடையில் ரத்தத்தை பார்த்ததற்கே இப்படி துடித்துப் போகிறாளே..?? என் அங்கத்தில் பார்த்தால் என்ன ஆவாள்..?? என் மீதுதான் எவ்வளவு காதல் இவளுக்கு..?? இவள் கிடைக்க நான் நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..??' "எனக்கு ஒன்னும் இல்ல நந்தினி..!!" அசோக் இப்போது தழதழத்துப் போன குரலில் சொன்னான். நந்தினி இப்போது நிமிர்ந்தாள். அவளுடைய கண்களில் அப்பியிருந்த பயம் இன்னும் குறையவில்லை. தனது இரு கைகளாலும் அசோக்கின் கன்னங்களை தாங்கிப் பிடித்தவாறு, இன்னும் பதற்றம் குறையாதவளாய் கேட்டாள். "ஒன்னும் இல்லைலப்பா.. ஒன்னும் இல்லைல..??" அதற்கு மேலும் அசோக்கால் தாங்க முடியவில்லை. இரண்டு கைகளாலும் நந்தினியின் கன்னத்தைப் பற்றி, அவளுடைய முகத்தை தன்னை நோக்கி சரக்கென இழுத்து, பயத்தில் படபடத்துக் கொண்டிருந்த அவளது உதடுகளை தனது உதடுகளால் அழுத்தமாக அணைத்து மூடினான். நந்தினி அதை எதிர்பார்த்திரவில்லை. கணவனின் இதழ்களுக்குள் அவளது இதழ்கள் அடங்கிப் போயிருக்க.. அவனுடைய முத்தம் உடல் முழுதும் சர்ரென ஒரு மின்சாரத்தை பாய்ச்சியிருக்க.. அவளது கண்கள் ரெண்டும் தானாக, மெல்ல மூடிக் கொண்டன. அசோக் நந்தினியின் உதடுகளை மென்மையாக, ஆசையாக, காதலாக சுவைத்து முத்தமிட்டான். அவளும் அவனது சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டு, இதழ்களை அவன் வசம் இழந்திருந்தாள். அவளுடைய மார்புப்பந்துகள் ரெண்டும் அவனது நெஞ்சில் மெத்தென்று அழுந்தியிருந்தன. அவளது இதயம் அதிகபட்ச வேகத்தில் துடிப்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. அவளது மார்புத் துடிப்பு சீராகும் வரை அவளுடைய உதட்டை கவ்வியிருந்தான். இதழ்களை சுவைத்து சுவைத்தே அவளது இதயத்துடிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தான். பிறகு அந்த மெல்லிய உதடுகளை மெல்ல விடுவித்தான். நந்தினி இப்போது இமைகளை மெல்ல பிரித்து கணவனின் முகத்தை ஏறிட்டாள். நெஞ்சின் படபடப்பு இப்போது குறைந்து போயிருக்க, அவனது முகத்தையே ஒருமாதிரி மலங்க மலங்க பார்த்தாள். அசோக்கும் தன் மனைவியின் எழில் முகத்தை, ஏக்கமும் காதலுமாய் பார்த்தான். பிறகு சற்றே பரிதாபமான குரலில் மீண்டும் சொன்னான். "எனக்கு ஒன்னும் இல்லடி..!!" நந்தினி ஓரிரு விநாடிகள்தான் அசோக்கை அவ்வாறு பார்த்திருந்திருப்பாள். அப்புறம் அவனை ஆவேசமாய் அணைத்துக் கொண்டாள். அசோக்கும் அவளை ஆரத்தழுவிக் கொண்டான். அதன் பிறகு இருவதும் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே, அப்படியே நின்றிருந்தார்கள். அசோக் அவளுடைய நெற்றியில் 'இச்.. இச்.. இச்..' என்று தனது இதழ்களை ஒற்றி எடுத்தான். நந்தினியும் பதிலுக்கு அவனுடைய மார்பில் முத்தமிட்டு கணக்கை சரி செய்து கொண்டிருந்தாள். தன் மார்பில் படர்ந்திருந்த நந்தினியின் முகத்தை அசோக் மெல்ல நிமிர்த்தினான். அவளுடைய கன்னங்களை மெல்ல வருடினான். கட்டை விரலால் அவளுடைய கனியிதழை தடவினான். 'எனக்காகவே வாழ்கிறவள்.. என் மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்திருப்பவள்.. எனக்கொன்றென்றால் துடித்துப் போகிறவள்.. என் அன்புக்காக ஏங்குகிறவள்.. என்னுடன் வாழப்பிறந்தவள்.. என் மனைவி..!!' என்ற நினைப்புடன் நந்தினியை பெருமிதமாக பார்த்தான். பிறகு உள்ளத்தில் பொங்கிய காதலின் உதவியுடன்.. தனது ஈகோவை காலால் எட்டி உதைத்தவாறே.. "ஸாரி நந்தினி.." என்றான் வருத்தமான குரலில். "ஸா..ஸாரியா.. எதுக்கு..??" நந்தினி மெலிதாக பதறினாள். "இத்தனை நாளா உன்னை தவிக்க விட்டதுக்கு.. உண்மையான சந்தோசம் எதுன்னு தெரியாம இருந்ததுக்கு..!!" "ச்சே.. என்னப்பா நீங்க.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!!" "இல்ல நந்தினி.. நான் சரியாத்தான் பேசுறேன்..!! இத்தனை நாளா உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்டா.. இனி அப்படி செய்ய மாட்டேன்..!! இனிமேயும் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வேணாம் நந்தினி.. எனக்கு இனிமே எல்லாம் நீதான்னு வந்து நிக்கிறேன்..!! காலைல நீ சொன்ன மாதிரி என்னை பாத்துப்பியா..?? கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பியா..??" அசோக்கின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஏக்கம். நந்தினி அவனது வார்த்தைகளில் அப்படியே உருகிப் போனாள். "பாத்துக்குறேன் அசோக்..!! நான் சொன்ன மாதிரி இல்ல.. நீங்க கௌரம்மாட்ட சொன்ன மாதிரி..!! ஒரு அம்மா மாதிரி உங்களை பாத்துக்குறேன்.. சரியா..???" கண்களில் நீர் கசிய சொன்ன மனைவியை அசோக் காதலாக பார்த்தான். அவளுடைய நெற்றியுடன் தனது நெற்றியை இடித்து சேர்த்துக் கொண்டான். அவளது அழகு முகத்தை அருகில் இருந்து ஆசையாய் பருகினான். பிறகு அவளுடைய நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்துவிட்டு, மெல்லிய குரலில் அந்த வார்த்தைகளை சொன்னான். "ஐ லவ் யூ நந்தினி..!!" உள்ளமெல்லாம் சந்தோசம் பொங்கிப் பெருக, நந்தினி தன் கணவனை ஏறிட்டாள். ஆறு வருடங்களுக்கு முன்பாக அவனிடம் இருந்து கேட்ட அந்த வார்த்தைகளை.. மீண்டும் அவனுடைய வாயில் இருந்து வரவைக்க.. அவளுக்குத்தான் எத்தனை போராட்டம்.. எத்தனை வலி.. எத்தனை வேதனை..!! ஆனால் அத்தனையும் இப்போது.. அந்த வார்த்தைகள் அவள் காதில் வந்து விழுந்தபோது.. இருந்த இடம் தெரியாமல் பறந்து போயிருந்தன..!! உடலெல்லாம் ஒரு உன்னதமான சிலிர்ப்பு உடைப்பெடுத்து ஓட.. பேசக்கூட வார்த்தையின்றி நின்றிருந்தாள் நந்தினி..!! 'இவன் எனக்கே எனக்கு..!!' என்று வேகம் கொண்டவளாய், ஆவேசமாக அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.அன்று இரவு.. அவர்களது படுக்கையறை..!! நந்தினி வழக்கம் போல தரையில் படுக்கை விரித்து படுத்திருந்தாள். அசோக் கட்டிலின் விளிம்பு வரை வந்து, கவிழ்ந்து படுத்துக்கொண்டு, மலர்க்கொத்து போல மல்லாந்து கிடந்த மனைவியையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். இரவு விளக்கின் இதமான வெளிச்சத்தில்.. மெல்லிய ஆடைக்குள் பளிச்சென தெரியும் நந்தினியின் அழகையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்..!! நெஞ்சில் கவிழ்ந்திருக்கும் இரண்டு கலசங்களும்.. நேரில்லாமல் குறுகியிருக்கும் இடுப்பு பிரதேசமும்.. வட்டமாய் குழிந்திருக்கும் தொப்புளும்.. வாளிப்பாய் நீண்டிருந்த தொடைகளும்.. கண்ணாடி போலான ஆடைக்குள்.. கவர்ச்சியாகவே காட்சியளித்தன..!! அதை காண காண.. அசோக்கின் காதல் உள்ளத்தில்.. காம வெள்ளம் உடைப்பெடுத்து ஓட ஆரம்பித்தது..!! "மேல வர்ற மாதிரி ஐடியா இல்லையா..??" அசோக்கின் குரலில் ஒரு ஏக்கம். "எதுக்கு..??" நந்தினியின் குரலில் ஒரு குறும்பு. "எதுக்குன்னு தெரியாதா உனக்கு..??" "ம்ம்.. தெரியுது..!!" "அப்புறம் என்ன..??" "வெட்கமா இருக்கு..!!" "ஹாஹா.. நான் வெலகி ஓடுறப்போலாம் என்னென்ன வேலை செஞ்ச நீ..?? இப்போ வெக்கமா இருக்கா..??" "ம்ம்ம்ம்.. ஆமாம்..!!" "ம்ம்.. நீ அன்னைக்கு கேட்ட கேள்விக்கு இன்னைக்கு எனக்கு ஆன்சர் தெரிஞ்சு போச்சு..!!" "என்ன கேள்வி..? என்ன ஆன்சர்..?" "நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டா.. ஃபர்ஸ்ட் பகலான்னு கேட்டல..?" "ம்ம்.." "எனக்கு என்னவோ ஃபர்ஸ்ட் நைட்தான்னு தோணுது..!!" கண்சிமிட்டிய கணவனின் குறும்பை உடனடியாய் புரிந்துகொண்ட நந்தினி, "ஓஹோ..?? எனக்கு என்னவோ அந்த நைட்.. இன்னைக்கு நைட்டு இல்லைன்னு தோணுது..!!" தானும் குறும்பாக சொன்னாள். "ஹாஹா.. இப்போ எனக்கு வேற ஒன்னு தோணுது..!!" அசோக்கிடம் மீண்டும் ஒரு குறும்பு புன்னகை. "என்ன..??" நந்தினியிடம் ஆர்வமும், ஆசையும். "இனி பேசி பிரயோஜனம் இல்லைன்னு தோணுது..!!" சொன்ன அசோக் கட்டிலில் இருந்து அவசரமாய் கீழே இறங்கினான். மனைவி சுதாரித்துக்கொள்ள அவகாசமே கொடுக்காமல் அவளை கைகளில் அள்ளிக்கொண்டான். 'ஐயோ.. என்னங்க இது..??' என்று அவள் மிரள மிரள, மெத்தையில் கிடத்தினான். 'ப்ளீஸ்ங்க.. வேணாம்.. ச்ச்சீய்..' என்று அவள் கெஞ்ச கெஞ்ச, மேலே படர்ந்தான். மலரை போன்ற மென்மையான அவளுடைய உடலை, மனதில் காதலும் ஏக்கமுமாய் ஆக்கிரமித்தான். அசோக் முத்தத்தில் இருந்து ஆரம்பித்தான். வெட்கம் அற்றவனாய் ஒவ்வொன்றாக முன்னேறினான். நந்தினி அவனுடைய செய்கைகளில் மயங்கிப்போய் கிடந்தாள். வெட்கம் உற்றவளாய் நடித்துக்கொண்டே, ஒவ்வொன்றுக்கும் ஒத்துழைத்தாள். அசோக்கின் உதடுகள் நந்தினியின் உதடுகளை ஆசையாய், அழுத்தமாய் கவ்வியிருந்தன. இத்தனை நாளாய் கொடுத்ததெல்லாம் அவசர முத்தங்கள்..!! இதுதான் இருவரும் அனுபவித்துக் கொடுத்துக் கொள்கிற உண்மை முத்தம்..!! அடுத்தவர் இதழ்களில் கசிந்த நீரின் சுவைக்கு இருவருமே கட்டுப்பட்டுப்போய் கிடந்தார்கள்..!! இன்னும் இன்னும் வேண்டுமென்று, இதழாலேயே இதழ் திரவம் தேடினார்கள்..!! அசோக்கின் உதடுகள் மனைவியின் உதட்டை சுவைப்பதில் மும்முரமாய் இருக்க, அவனது கைகளோ அவளது கனிகளை பதம் பார்ப்பதில் கவனமாய் இருந்தன. அவளது நைட்டிக்குள் புகுந்திருந்த அவனது கரங்கள், அவளுடைய கெட்டியான மார்புகளை அழுத்தி பிசைந்தன. கணவனின் கைகள் தனது கலசங்களை கசக்கி பிழிய, தனது கை கொண்டு அதை தடுக்க முயன்றாள் நந்தினி. அறிவற்ற காரியம்..!! அவளுடைய அழகை பார்த்த அவனது கைகளின் வலிமைக்கு முன்னால்.. சுகத்தில் திளைத்துக்கொண்டே தடுக்க முயலும் நந்தினியுடைய கையின் மென்மை எவ்வாறு தாக்குப் பிடிக்க முடியும்..?? நந்தினியின் ஈர இதழ்களை ஆசை தீர சுவைத்தவன், இப்போது தனது உதடுகளை அவளுடைய மார்பின் மையத்துக்கு மாற்றினான். அவ்வளவு நேரம் ஓரளவாவது அவனுடன் போராடிய நந்தினியின் கைகள், மார்புக்காம்பில் அவனது உதடுகள் பதிந்ததுமே வலுவிழந்து போயின. அசோக்கின் நாக்கு அவளது பழுப்பு நிற காம்பில் சுழலுகையில், 'ஹா.. ஹா.. ஹா..' என் சுக மூச்சுதான் விட முடிந்தது அவளால்.உதடுகளை இடம் மாற்றியது போல தனது கையையும் இடம் மாற்றினான் அசோக். இப்போது அவனது வலது கை, நந்தினியின் நைட்டிக்குள் புகுந்து.. தொடைகளை தடவி.. அவளது அந்தரங்க உறுப்பை நோக்கி அவசரமாய் முன்னேறியது..!! பிடித்திருந்தாலும்.. அவன் செய்வது சுகமாய் இருந்த போதிலும்.. அவனை தடுக்க முயன்றாள் நந்தினி..!! அவளுடைய மனம் சொன்னவாறே அந்த முயற்சியில் தோற்றும் போனாள்..!! அசோக்கின் விரல் நகங்கள் அவளது அந்தரங்க உறுப்பில்.. ஒரே நேரத்தில் ஐந்து கோடுகள் கிழிக்க.. உடலெல்லாம் சிலிர்த்துப் போனாள்..!! "ட்ரஸோட பாக்குறப்போ குட்டியா தெரிஞ்சது.. இப்போத்தான் ரியல் சைஸ் தெரியுது..!!" தனது கலசங்களை பார்த்து, கணவன் அடித்த கமெண்ட்டுக்கு நந்தினி, "ச்சீய்..!!!" என்று வெட்கி கன்னங்கள் சிவந்தாள். அசோக்கும் இப்போது நிர்வாணமாய் மாறியிருந்தான். அவனது விறைத்த ஆண்மையை, அவளது புடைத்த பெண்மையில் படர விட்டு உரசினான். திறக்க மறுத்த அவளது வாசலை, தனது ஆண்மையால் முட்டி முட்டியே திறந்தான் அசோக். அவனுடைய ஆண்மை அவளுக்குள் சரேலென பாய்ந்த சமயத்தில், "ஆஆஆஆவ்வ்வ்..!!!" என்று சப்தம் எழுப்புவதை நந்தினியால் தவிர்க்க முடியவில்லை. இதயமும், சுவாசமும் ஒருமுறை நின்று பிறகு திரும்ப இயங்க ஆரம்பித்தன. வலியை பொறுத்துக்கொள்ளும் பொருட்டு அவளது உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். கடித்து வைத்திருந்த அந்த உதடுகளை அவள் விடுவிக்க நினைக்கையில், அசோக் இயங்க ஆரம்பித்திருந்தான். வலியும், சுகமும் ஒன்றாய் தாக்க.. மீண்டும் தனது உதடுகளை கடித்துக் கொள்ள வேண்டி இருந்தது நந்தினிக்கு..!! "ஹ்ஹ்ஹாஹா..!!!!" அவளையும் அறியாமல் சுக முனகல் வெளிப்பட்டது அவளிடம் இருந்து..!! அவனது ஆண்மையின் தாக்குதல் அவளது உடலின் அத்தனை நரம்புகளிலும், ஒருவித இன்ப நாதத்தை மீட்டி விட்டிருந்தது..!! அந்த சுகத்தில் திளைத்த நந்தினிக்கு கால்களால் கிடுக்கி பிடி போட்டு அவனை தனக்குள் ஆழமாக இழுத்துக் கொள்ளலாமா என்று தோன்றும்..!! ஆனால் வெட்கமுற்று.. அதை செய்ய மறுத்து.. "மெதுவாப்பா.. ப்ளீஸ்.." என்பாள். அவளுடைய கெஞ்சல் கேட்டு.. அவன் தனது வேகத்தை சற்று குறைத்தாலோ.. தவறு செய்துவிட்டோமோ என்று கவலை கொள்வாள்..!! அவனது வேகத்தை கூட்ட வேறு ஒரு உபாயத்தை கையாள்வாள்..!! கால்களை சற்று அகலமாய் திறந்து கொடுக்க.. அவனது வேகம் தானாக அதிகரிக்கும்..!! 'இனி அந்த மாதிரி கெஞ்சக் கூடாது.. கெஞ்சி அவனது வேகத்துக்கு தடையிடக் கூடாது..' என்று நினைத்துக் கொள்வாள்..!! அசோக் புதுவித இன்பத்தில் திளைத்திருந்தான். எத்தனையோ பெண்களுடன் உறவுற்றிருந்தாலும், இந்த உறவில் இருந்த வித்தியாசத்தை உடனடியாய் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது..!! மனதை கொடுத்தவள், உடலையும் கொடுத்து, மஞ்சத்தில் பூத்திருக்க.. காதல் பொங்கும் நெஞ்சோடு, அவளுடன் காமம் பழகுவது.. அசோக்கிற்கு நிஜமாகவே புதுவித அனுபவமாய் இருந்தது..!! உள்ளத்தில் காதலுடன் உறவுருவதில் கிடைக்கும் உன்னதமான சுகத்தை உணர்ந்து கொண்டிருந்தான் அவன்..!! இருவரும் உச்சபட்ச சுகத்தில் திளைத்திருந்தார்கள்..!! அவர்களது இமைகள் இன்பத்துக்கு கட்டுப்பட்டு மூடி மூடி திறந்து கொண்டிருந்தன..!! அவர்களது சுவாசம் நின்று நின்று திரும்ப வெளிப்பட்டது..!! உடல் துடித்து துடித்து பின்பு அடங்கியது..!! ஆனால் அசோக்கின் இடை மட்டும் இயக்கத்தை நிறுத்தாமல்.. சீராக அசைந்து கொண்டிருந்தது..!! அவனது ஆண்மை நீரை அவளுக்குள் ஊற்றும் வரைக்கும் ஓயவில்லை அந்த இயக்கம்..!! அவர்களது முதல் உறவு.. முற்றுப் பெறாமல் நீடிக்காதா என அவர்களை ஏங்க வைத்த உறவு..!! அடுத்து சில வருடங்கள் அசோக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, அவசரமாக புரட்டிப் பார்க்கலாமா..??அடுத்த நாள் காலை.. அசோக்கும், நந்தினியும் காலை வெயிலை முகத்தில் வாங்கியவாறே.. பால்கனியில் நின்று காபி அருந்திக் கொண்டிருந்தார்கள்...!! "நைட்டு நல்லா என்ஜாய் பண்ணின போல..??" அசோக் குறும்பாக கேட்டான். "அ..அதெல்லாம் ஒன்னுல்லையே..??" நந்தினி வெட்கமாக சொன்னாள். "இல்ல இல்ல.. எனக்கு தெரிஞ்சது..!! ஹா.. ஹா..ன்னு செமையா சவுண்டு விட்ட.. உதட்டை இப்படி இப்படி கடிச்ச.. சரக்கடிச்ச மாதிரி கண்ணுலாம் செருகிக்கிச்சு.. எங்க நான் விலகிடுவேனோன்னு இறுக்கி புடிச்சு வச்சுக்கிட்ட..?? நான் கூட உன்னை என்னவோ நெனச்சேன் நந்தினி.. பயங்கரமான ஆளு நீ..!!" இரவு முழுதும் எல்லா சேட்டைகளும் செய்துவிட்டு, காலையில் தன்னையே கிண்டலடிக்கும் கணவனை நந்தினி கொஞ்ச நேரம் முறைப்பாக பார்த்தாள். அப்புறம், "ஆமாம்.. ஃபர்ஸ்ட் டைம் பண்றவங்களுக்குலாம் அப்படித்தான் இருக்குமாம்..!!" என்று குத்தலாக சொல்ல, அசோக் இப்போது முகம் சுருங்கிப்போய் 'டொய்ங்..' என்று நந்தினியை பார்த்தான். வாயை கப்சிப்பென இறுக்கி பொத்திக் கொண்டான். --------------------------- "இவ மெக்சிகன்காரி.. இவ தாய்லாந்து.. இவ செக்கோஸ்லோவாகியா.. இவ நைஜீரியா.." அசோக் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு போட்டோவாக ஆல்பத்தில் இருந்து உருவி, தீயில் போட்டு எரித்துக் கொண்டிருந்தான். நந்தினி கணவனையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்தாள். சற்றே கடுப்புடன் கேட்டாள். "எந்த நாட்டைத்தான் விட்டு வச்சீங்க..??" "பிரேஸில்..!! பிரேஸில் பொண்ணுக எனக்கு ரொம்ப புடிக்கும் நந்தினி.. யூ.எஸ்ல இருந்தப்போ ரொம்ப ட்ரை பண்ணுனேன்.. கடைசிவரை ஒன்னும் சிக்கலை..!!" அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி அவனுடைய உச்சந்தலையிலே நங் என்று குட்டு வைத்தாள். அவன் "ஆஆஆ..!!" என்று வலியில் கத்தினான். --------------------------- அசோக்கும், நந்தினியும் அந்த டேபிளில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். டேபிளில் பன், கேக், டீ..!! அவர்களுக்கு எதிரே நாயர் அமர்ந்திருந்தார்..!! அசோக் நாயரை கெஞ்சிக் கொண்டிருந்தான்..!! "ப்ளீஸ் நாயர்.. இன்னொரு தடவை சொல்லு நாயர்..!!" "ஐயோ.. எத்தனை தடவை அதையே திரும்ப திரும்ப சொல்றது..??" "பரவால நாயர் சொல்லு.. கேக்குறதுக்கு செம காமடியா இருக்கு..!!" "போப்பா.. எனக்கு வெட்கமா இருக்கு..!!" நாயர் நிஜமாகவே வெட்கப்பட்டார்.

"ப்ளீஸ் நாயர்..!!" "ம்ஹூம்.. நான் மாட்டேன்..!!" அவர் பிடிவாதமாக இருக்க, இப்போது நந்தினி அவரை கெஞ்சினாள். "ப்ளீஸ் அண்ணா.. ஒரே ஒரு தடவை சொல்லுங்க.. ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சிய போது மறுத்த நாயரால், நந்தினி கெஞ்சியதும் மறுக்க முடியவில்லை. 'சரி.. ஒரே ஒரு தடவைதான்..!!' என்றவர், சேரில் இருந்து எழுந்து நின்று கொண்டார். தொண்டையை கனைத்துக் கொண்டு, தான் முதன்முதலில் அசோக்கை சந்தித்தபோது பேசிய வார்த்தைகளை இப்போது சற்றே உல்ட்டா செய்து பேசினார். "ஐ ஆம் சசிதரன் நாயர்.. நம்மகிட்ட எல்லா விதமான பன்னும் இருக்குது மிஸ்டர் அசோக்.. ஸ்வீட் பன்னு, க்ரீம் பன்னு, பட்டர் பன்னு.. எனிடைப் யு வான்ட்..!! நம்ம பேக்கரி எல்லா எடத்துலயும் கிடையாது.. ரொம்ப லிமிட்டட்.. திஸ் இஸ் த ஒன் அண்ட் ஒன்லி பிரான்ச்..!! பன்னு சாம்பிள் தர்றேன்.. டேஸ்ட் பாக்குறீங்களா..?" நாயர் ஒரு பெரிய பிசினஸ்மேன் தோரணையுடன் சீரியசான குரலில் சொல்ல சொல்ல.. நந்தினியும், அசோக்கும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்."இன்னொருவாட்டி..!!" இரண்டு மணியை போல விழித்துக்கொண்ட அசோக், நந்தினியை இம்சை செய்ய ஆரம்பித்தான். "அல்ரெடி டூ டைம்ஸ் ஆச்சு..!! போதும்பா.. உடம்புலாம் வலிக்குது..!!" நந்தினி பாவமாக சொன்னாள். "ப்ளீஸ் நந்தினி.. ப்ளீஸ்..!! இன்னும் ஒரே ஒரு தடவை..!!" அசோக் வெட்கமின்றி கெஞ்சினான். "ஐயோ.. என்னங்க இது.. உங்களோட பெரிய தொல்லையாப் போச்சு..?? பேசாம உங்களை மறுபடியும் எங்கயாவது அனுப்பிடலாமான்னு பாக்குறேன்..!!" "எங்கயாவதுன்னா..??" "அதான்.. அந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட..!! என் உடம்பாவது பஞ்சராகாம இருக்கும்..!!" "அப்டியே அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்..!! பொண்டாட்டி புருஷன்ட்ட பேசுற பேசுறதை பாரு..!!" "ஹாஹாஹாஹா..!! சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா.. கோவிச்சுக்கிட்டியா..?? வா..!! புருஷனுக்கு இதை கூட பண்ணலைன்னா.. அப்புறம் அவள்லாம் என்ன பொண்டாட்டி..?? வா..!!" --------------------------- ".................... எனக்கு ஆரம்பத்துல இருந்தே இந்தப்பய மேலே டவுட்டுதான்.. 'என்னடா இவன் பார்வையே சரியில்லையே..'ன்னு தோணும்..!! சரி என்னதான் பண்றான்னு ஓரக்கண்ணால பாத்துட்டு இருந்தேன்.. அப்படியே ஏக்கமா பாத்துட்டு இருந்தவன்.. பட்டுன்னு மேல கை வச்சுட்டான்..!! அவ்வளவுதான்.. எனக்கு வந்துச்சு பாரு கோவம்.. விட்டேன் ஒன்னு கன்னத்துல பளார்னு..!!" "ம்ம்.. அப்புறம்..??" "அப்புறம் என்ன..?? ஏதோ ஆத்திரத்துல பட்டுன்னு அறைஞ்சுபுட்டேன்.. ஆனா.. அறைஞ்சப்புறந்தான் கொஞ்சம் அவசரப்பட்டுடோமோன்னு தோணுச்சு..!! இப்படி ஒரு ஆம்பளையை கை நீட்டி அடிச்சுப்புட்டமே.. ஆபீஸ்ல வேற யாருமே இல்லையே.. இவன் பாட்டுக்கு கோவத்துல ஏடாகூடமா ஏதாவது பண்ணிப்புட்டான்னா..?? 'ஐயோ.. என்ன பண்ணப் போறானோன்னு.. பயந்துக்கிட்டே இவன் முகத்தை நிமிர்ந்து பாத்தா.." "ம்ம்ம்.." "இந்த வெக்கங்கெட்ட பய.. கொஞ்சம் கூட சொரணையே இல்லாம.. 'ஈஈஈஈஈ..'ன்னு இளிச்சுட்டு நிக்கிறான்..!!" "ஹாஹாஹாஹா..!!" கற்பகம் சொன்னதைக்கேட்டு நந்தினி சிரிக்க.. ஒருகையால் சாதத்தை பிசைந்துகொண்டே, ஓரக்கண்ணால் மனைவியையும் கற்பகத்தையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்த அசோக்.. இப்போது இன்னொரு கையால் நந்தினியின் காதை பிடித்து திருகினான். அவ்வளவு நேரம் எளிறுகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த நந்தினி.. இப்போது வலியில் கத்தினாள்..!! "ஆஆஆஆ...!!" "ஏண்டி.. சாப்பாடு கொண்டு வந்தவளுக்கு.. இப்போ இந்தக்கதையை கேக்கனும்னு ரொம்ப அவசியமோ..??" என்று நந்தினியை திட்டிய அசோக், இப்போது கற்பகத்திடம் திரும்பி.. "ஏய்.. அவதான் ஏதோ அறிவில்லாம கேக்குறான்னா.. நீ வேற..?? வேலை நேரத்துல இங்க என்ன வெட்டிப்பேச்சு.. போ.. வேலைய பாரு போ..!!" என்று எரிந்து விழுந்தான். கற்பகம் சேரில் இருந்து எழுந்தாள். அசோக்கையே கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னாள். "போடா..!! நாய்.. பேய்.. எருமை.. பன்னி..!!!" அவள் திட்டியதில் அசோக் மிரண்டு போனான். "ஏய்.. கற்பு.. என்ன இது.. இப்படி கேப்பில்லாம திட்டுற..??" "உன்னை எப்படி வேணா சொல்லி திட்டிக்கலாம்னு.. உன் பொண்டாட்டி எனக்கு ஃபுல் லைசன்ஸ் கொடுத்துட்டா..!! மவனே செத்த இனிமே நீ..!!"பாஸ்டனில் ஒரு பிஸியான சாலை.. வெளியே நிழற்குடைகளுடன் கூடிய ஒரு ரெஸ்டாரன்ட்.. அசோக் ரோட்டில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.. நந்தினி கைக்கொன்றாக இரண்டு கப்புகளுடன் வந்தாள்..!! "ஹப்பா.. எப்படியோ தேடிப்புடிச்சு குக்கு மில்க்ஷேக் அரேஞ்ச் பண்ணியாச்சு.. இந்தாங்க..!!" ஒரு கப்பை அசோக்கிடம் நீட்டிக்கொண்டே, நந்தினி உற்சாகமாக சொல்ல, "ஏண்டி இப்படிலாம் பண்ற..?? ஹனிமூன் வந்த எடத்துல இப்படி ஒரு ஆசையாடி உனக்கு..??" அசோக் சலிப்பாக கேட்டான். "ப்ச்.. என்னங்க நீங்க..?? இது எனக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா..?? கல்யாணம் ஆறதுக்கு முன்னாடி இருந்தே..!!" "அதுக்காக இப்படியா..?? அங்க பாரு..!!" ரெஸ்டாரன்ட் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை, அசோக் அவளிடம் காட்டினான். அவன் கல்லூரி படிக்கையில் எப்படி இருந்தானோ அதே கெட்டப்பில் இப்போது இருந்தான். மீசை, தாடி மழிக்கப்பட்ட மொழு மொழு முகம்.. நடு வகிடு எடுத்து படிய வாறப்பட்ட எண்ணெய் வழியும் தலை.. சோடாபுட்டி கண்ணாடி மாட்டப்பட்டகண்கள்..நெற்றியில் விபூதி பட்டை.. கழுத்தில் ருத்ராட்ச கொட்டை.. சட்டையின் காலர் பட்டன் போடப்பட்டு கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தது..!! "பாருடி அங்க.. பட்டையும் கொட்டையும்..?? நான் எம்.பி.ஏபடிச்ச ஊர்டி இது.. இதேதெருலபலப்பல பொண்ணுகளோட… பந்தாவான கெட்டப்புல.. ஹீரோ மாதிரி சுத்திருக்கேன்..எவனாவது என்னை இப்போ இந்த கோலத்துலபாத்தா என்ன நெனைப்பான்..??" "ஒன்னும் நெனைக்க மாட்டாங்க.. யாரு இந்த அமுல் பேபின்னு ஆச்சரியமா பாப்பாங்க..!!" "ம்க்கும்..!! ஆமா.. இந்த பட்டை கொட்டைலாம்எப்படி உனக்கு யூ.எஸ்ல கெடைச்சது..??" "இந்தியால இருந்து வர்றப்போவே பேக் பண்ணி கொண்டாந்துட்டேன்..!!" "ம்ம்ம்.. ப்ளான் பண்ணியே வந்திருக்குற நீ..??" "ஹிஹி.. ஆமாம்..!!" சரி.. அப்டியே மில்க்ஷேக் சிப் பண்ணிக்கிட்டே ஸ்டார்ட் பண்ணுங்க..!!" "ஸ்டார்ட் பண்ணவா..?? என்னத்த..??" "ப்ச்.. எனக்கு ப்ரொபோஸ் பண்ணுங்கப்பா..!!" "ஏண்டி.. லூசாடி நீ..?? கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு.. கர்ப்பத்தோட ஹனிமூன் வந்திருகோம்..!! இப்போ போய் காதலிக்கிறியான்னு ப்ரொபோஸ் பண்ணனுமா உனக்கு..??" "ப்ளீஸ் அசோக்.. பண்ணுங்க..!! நான் இதை நெனைச்சு எத்தனை நாள் ஃபீல் பண்ணிருக்கேன் தெரியுமா..?? ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" நந்தினி கெஞ்ச, அசோக் கொஞ்ச நேரம் அவளையே சலிப்பாக பார்த்தான். அப்புறம் வேண்டா வெறுப்பாக அவளிடம் கேட்டான். "நான் உன்னை லவ் பண்றேன் நந்தினி..!! உனக்கு என்னை புடிச்சிருக்கா..?? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..??" அசோக் அவ்வாறு எங்கேயோ பார்த்துக்கொண்டு, ஏனோதானோவென்று சொல்ல.. நந்தினியோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு.. அவளுடைய கண்கள் எல்லாம் கலங்கிப்போய்.. உள்ளமெல்லாம் காதல் ஊற்று பொங்கிப் பெருக.. "யெஸ் அசோக்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ ஸோ மச்..!! இந்த ஜென்மம் மட்டும் இல்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. உங்க கூடத்தான் நான் வாழனும்..!!" என்று சொல்லியவள், அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவனுடைய மார்பில் முகம் புதைத்து அழுதாள். புருஷோத்தமன் வீட்டுக்கு விசிட் விட்டிருந்தார்கள். அசோக், நந்தினி, புனிதா மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க.. புருஷோத்தமன் தான் சமைத்த உணவை.. தானே அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தான். "நல்லா வச்சுக்கோங்க நந்தினி..!!" "ஹையோ.. போதுங்க புருஷோத்தமன்..!!" "என்ன இப்படி சாப்பிடுறீங்க நீங்க..?? நீங்க நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தாத்தான.. இவனை நல்லா கவனிச்சுக்க முடியும்..??" "ம்ம்..!! உங்களை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குதுங்க புருஷோத்தமன்..!! வீட்ல எல்லா வேலையும் நீங்களே செய்றீங்க.. பிரம்மாதமா சமைக்கிறீங்க.. பொண்டாட்டிக்காக ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றீங்க.. இதுக்குலாம் ஒரு பெரிய மனசு வேணும்.. யு ஆர் ரியல்லி கிரேட்..!!" "ஹாஹா.. அதெல்லாம் ஒன்னும் மேட்டரே இல்லைங்க..!! எனக்கு உங்களை நெனச்சாத்தான் ரொம்ப பெருமையா இருக்கு..!! எப்படி இருந்த அசோக்கை.. தனி ஆளா போராடி.. இப்படி பொண்டாட்டிதாசனா மாத்திட்டீங்களே..?? நீங்கதான் உண்மைலேயே கிரேட்..!!" நந்தினியும், புருஷோத்தமனும் ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து கொண்டிருக்க.. புகழும்போதே சைக்கிள் கேப்பில் அசோக்கிற்கு ஊசி ஏற்றிக்கொண்டிருக்க.. அவன் இருவரையும் சில வினாடிகள் மாறி மாறி முறைத்தான்..!! அப்புறம் மனைவியிடம் கேஷுவலான குரலில் சொன்னான். "ஹேய் நந்தினி.. புருஷு உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருக்கான் தெரியுமா..?? உன்னை பத்தி பேசுறப்போலாம்.. அந்த பேரை வச்சுத்தான் உன்னை மென்ஷன் பண்ணுவான்..!!" "அப்படியா.. என்ன அது..??" நந்தினி ஆர்வமாக கேட்க, "டேய்.. அசோக் வேணாண்டா..!!" புருஷோத்தமன் பதறினான். "ஏய்.. இருடா.. அவளும் தெரிஞ்சுக்கட்டும்..!!" "ஐயோ.. சீக்கிரம் சொல்லுங்கப்பா..!!" நந்தினியால் பொறுக்க முடியவில்லை. "சுள்ளான் குஞ்சு..!!!!" அசோக் கூலாக போட்டுக்கொடுக்க, "என்னது..???? சுள்ளான் குஞ்சா..??? ஐயையே..!!" நந்தினி முகத்தை சுளித்தாள். புருஷோத்தமன் இப்போது அவளிடம் கெஞ்சினான். "ஐயோ.. நந்தினி.. ஸாரிங்க நந்தினி.. அது.. அப்போ.. காலேஜுல ஏதோ தெரியாம.." "ஹேய் புருஷு.. நீ என்னடா இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு..?? அவளுந்தான் உனக்கு ஒரு நிக்நேம் வச்சிருக்கா.. அதுக்காகலாம் அவ ஃபீல் பண்ணிட்டா இருக்கா..?? ஃப்ரீயா விடு மச்சி..!!" "எனக்கு நிக்நேமா..?? என்ன அது..??" புருஷோத்தமன் சற்று உதறலாகவே கேட்டான். "என்னங்க.. ப்ளீஸ்ங்க.. வேணாங்க.. ப்ளீஸ்..!!" நந்தினி கெஞ்ச கெஞ்சவே, "கஞ்சா குடிக்கி..!!!" அசோக் கேஷுவலாக சொல்லிவிட்டு, கவலையே இல்லாமல் தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான். புனிதா புரையேறும் என்ற கவலை கூட இல்லாமல், கலகலவென சிரித்தாள். புருஷோத்தமனும், நந்தினியும் விளக்கெண்ணை குடித்தவர்கள் மாதிரி, ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்தார்கள். --------------------------- "டெய்லி ஒண்ணுன்னு இருந்தது.. அப்புறம் வீக்லி ஒண்ணாச்சு.. இப்போ மன்த்லி ஒரே ஒரு லார்ஜ்..!! அதையும் விட சொன்னா எப்படி நந்தினி..??" "உங்களை யாரு விட சொன்னா..?? குடிச்சா என் பக்கத்துல வராதீங்கன்னுதான சொன்னேன்..??" "ம்ஹூம்.. அது மட்டும் முடியாது.. நீ வேணும் எனக்கு.. நீ பக்கத்துல இருந்தாத்தான் எனக்கு தூக்கமே வரும்..!!" "அப்போ குடிக்காதீங்க.. பார்ட்டிக்கு வேணுன்னா சும்மா போயிட்டு வாங்க..!!" "விடு.. நான் பார்ட்டிக்கே போகலை..!!" அசோக் சலிப்பாக சொல்ல, "நெஜமாவா..???" கொள்ளை சந்தோஷமாய் கேட்டாள் நந்தினி. "ஆனா ஒரு கண்டிஷன்..!!" "என்ன..??" "இன்னைக்கு எனக்கு குலோப் ஜாமூன் பண்ணி தரணும்..!!" "ஹாஹா.. அதுக்கென்ன.. பண்ணித்தரேன்.. போதுமா..??" "பண்ணித்தந்தா பத்தாது.. ஊட்டி விடனும்..!!" "சரி.. ஊட்டி விடுறேன்.. போதுமா..??" "கையால இல்ல.. லிப்ஸால..!!" "ஐயோ.. ஊட்டி விடுறேண்டா.. போதுமா..??" வெட்கத்துடன் சொல்லிவிட்டு நந்தினி கணவனையே ஆசையாக பார்த்தாள். அசோக்கும் அவளுடைய முகத்தையே விழுங்கி விடுவது மாதிரி பார்த்தான். அப்புறம் அவளுடைய ஈர உதடுகளை ஒற்றை விரலால் தடவிக்கொண்டே, குறும்பான குரலில் சொன்னான். "இந்த லிப்ஸால இல்ல..!!" "அப்புறம்..???" நந்தினி குழப்பமாய் கேட்க, அசோக் அதற்கு பதில் சொல்லவில்லை. குறும்பாக கண் சிமிட்டினான். அவனுடய மட்டமான ஆசையை லேட்டாகவே புரிந்து கொண்ட நந்தினி, "ச்ச்சீய்...!!!!" என்று வெட்கத்தில் குப்பென சிவந்து போன முகத்தை, இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்."ப்ளீஸ் சிஸ்டர்.. என் வொய்ஃபையும் குழந்தையையும் எப்படியாவது காப்பாத்திடுங்க..!!" ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்றிருந்த அந்த நர்ஸிடம், அசோக் கெஞ்சலாக சொன்னான். இவளிடம் கெஞ்சுவதில் எந்த பலனும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு தெரிந்திருந்தாலும், நிறைமாத கர்ப்பிணியான மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டிருந்த, இப்போது பதைபதைத்துப் போய் இருந்த அவனது மனம், மூளை இட்ட கட்டளைகளை எல்லாம் மதிக்கவில்லை. கண்களும் அவனுடைய கட்டுப்பாடின்றி கண்ணீரை உகுத்தன. "அழாதப்பா.. உன் பொண்டாட்டிக்கும், புள்ளைக்கும் ஒன்னும் ஆவாது.. ரெண்டும் நல்ல படியா பொழைச்சு வருவாங்க..!!" ஆறுதல் சொன்ன, அந்த கரடு முரடான தோற்றம் கொண்ட ஆசாமியை அசோக் ஸ்னேஹமாக பார்த்து புன்னகைத்தான். பயத்திலும், படபடப்பிலும் இருந்தவனுக்கு அவருடைய வார்த்தைகள் மிக இதமாக இருந்தன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஒருவித புது நம்பிக்கை அவனுக்குள் பிறக்க காரணமாய் இருந்தன அந்த வார்த்தைகள். மேலும் ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து.. "என் பேர் அசோக்.. என் வொய்ஃப் பேரு நந்தினி..!!" என்றான் அவரிடம். "அப்படியா..?? என் பொண்ணு பெரும் நந்தினிதான்..!!" அந்த ஆள் ஆச்சரியமாக சொன்னார். "ஓ..!! உங்க பேரு..??" "சூசை..!!" --------------------------- வெள்ளைத்துணி சுற்றப்பட்ட ஆண்குழந்தை கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடக்க.. குழந்தையை சுற்றி அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். அசோக், நந்தினி, மஹாதேவன், கௌரம்மா, ராமண்ணா..!! யாரும் சப்தமே எழுப்பவில்லை. அனைவரும் அமைதியாக தாடையை சொறிந்தவாறு, ஏதோ தீவிர யோசனையில் இருந்தார்கள். அசோக்தான் திடீரென முதலில் கத்தினான்..!!

"ஆங்... நான் ஒரு பேர் சொல்றேன்.. எப்படி இருக்குன்னு எல்லாரும் சொல்லுங்க..!!" "ம்ம்.. சொல்லு தம்பி..!!" - இது ராமண்ணா. "என் பேரையும், நந்தினி பேரையும் மிக்ஸ் பண்ணி ஒரு பேர்..!!" "ஆஹா.. நல்ல ஐடியாவாதான் இருக்கு.. என்னன்னு சொல்லு..!! - இது கௌரம்மா. "ரொம்ப பொருத்தமான பேர் வேற..!!" "ஐயோ.. இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா..??" - இது பொறுமையற்ற நந்தினி. "ஆனந்த்..!!!!!" அசோக் சொல்லிவிட்டு, "எப்படி இருக்கு..??" என்று எல்லோருடைய முகத்தையும் பார்த்தான். "வாவ்...!!! நைஸ் நேம்..!!!" நந்தினி உட்பட அனைவருமே சந்தோஷத்தையும், திருப்தியையும் வெளிப்படுத்தினார்கள். மஹாதேவன் இப்போது பேரனை ஆசையாக அள்ளி எடுத்தார். கண்களில் நீர் பனிக்க, உணர்ச்சிவசப்பட்டுப் போய் குட்டிப்பையனை கொஞ்சினார். "ஆனந்த்..!!!! ஆனந்தத்தை அள்ளி கொண்டுவந்தவனாடா கண்ணா நீ..?? இனி இந்த வீட்டுல ஆனந்தத்தை தவிர வேற எதுவும் இல்லைன்னு சொல்ல வந்தவனாடா ராஜா..???""ஐயோ.. வேணாம்த்தான்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!!!" வந்தனா கெஞ்சினாள். "ஹையோ.. என்ன வந்தனா நீ..?? எல்லாம் உன் நல்லதுக்காகத்தான் பண்றோம்னு கூட.. ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேன்ற..??" அசோக் அவளை கன்வின்ஸ் செய்ய முயன்றான். "இப்போ எனக்கு கல்யாணத்துக்கு என்னத்தான் அவசரம்..?? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே..??" "புரியாம பேசாத..!! இந்த மாதிரி ஒரு நல்ல சம்பந்தம் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. ரொம்ப டீசன்டான ஃபேமிலி.. பையன் ரொம்ப நல்ல மாதிரியா தெரியிறான்.. நல்லா படிச்சிருக்கான்.. கை நெறைய சம்பாதிக்கிறான்..!!" "ம்க்கும்.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அவர் மூஞ்சியை பாத்தாத்தான் ரொம்ப பயமா இருக்கு.. ராஜ்கிரண் மாதிரி இருக்காரு அத்தான்..!!" "ப்ச்..!! மூஞ்சியை பாத்துலாம் லைப் பார்ட்னர் டிஸைட் பண்றது ரொம்ப தப்பு வந்தனா..!! அப்டிலாம் பாத்திருந்தா.. உன் அக்காவுக்குலாம் கல்யாணம் நடந்திருக்குமான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு..!!" மச்சினியை சமாதானம் செய்யும் சாக்கில், மனைவியை நக்கலடித்த அசோக்கை, நந்தினி திரும்பி பார்த்து உஷ்ணமாக முறைத்தாள். வந்தனாவின் கல்யாணம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து ஒருநாள்.. "ரொ..ரொம்ப பயமா இருக்கு சகலை.. இ..இன்னைக்கு ஒருநாள் உங்க வீட்டுல படுத்து தூங்கிட்டு.. காலைல போறேனே..??" வந்தனாவின் கணவன் வாய் குழற கெஞ்சினான். "நோ நோ..!! வந்தனா வீட்டுல தனியா இருப்பா.. நீ வீட்டுக்கு கெளம்பிடு சகலை.. என்னை சிக்கல்ல மாட்டி விட்டுடாத..!!" காலியான விஸ்கி பாட்டிலை தூக்கி எறிந்தவாறே அசோக் சொன்னான். "இரக்கமே இல்லாம இப்படி சொல்றீங்களே.. குடிச்சுட்டு போனேன்னு தெரிஞ்சா.. என்னை வெரட்டி வெரட்டி அடிப்பா சகலை..!!" "யோவ்.. பொலம்பாதையா.. பொண்டாட்டிதான..?? அடிச்சா வாங்கிக்கோ.. போ..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! வாங்கிக்கிறேன்.. வாங்கிக்கிறேன்.. வேற என்ன பண்றது..?? ஆமாம்.. உங்களை ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..!!" "என்ன..??" "தங்கச்சி மட்டுந்தான் இப்படியா.. இல்ல அக்காவுமா..??" அவன் கேட்டு முடித்து வெகுநேரம் ஆகியும், அவனுடைய கேள்வி காதிலேயே விழாத மாதிரி, அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக்கொண்டு அமைதியாக இருக்க.. சிலவினாடிகள் அவனையே கேவலமாக பார்த்துவிட்டு.. 'த்தூ..!!' என்று மனதுக்குள் ரகசியமாய் துப்பிக் கொண்டான் அந்த ராஜ்கிரண்..!! --------------------------- "கேடி சொல்டா கண்ணா..!! கே..டி..!! கே.... டி... கேடி..!! சொல்லு.. கேடி..!!" பையனிடம் மிக சீரியஸாக நந்தினி சொல்லிக்கொண்டிருக்க, அவளையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்த அசோக், இப்போது கையிலிருந்த புத்தகத்தை தூக்கி எடுந்துவிட்டு, மனைவி மீது பாய்ந்தான். "ஆஆஆஆஆஆவ்வ்வ்..!!!" என்று அவள் அலற அலற.. அவளுக்கு மூச்சு திணற திணற.. அவள் மீது படர்ந்து அவளை நசுக்கினான்..!! "ஏண்டி.. கொழந்தைக்கு டாடி சொல்லிக் குடுடின்னா.. கேடின்னா சொல்லி குடுக்குற..??" "ஹஹாஹஹாஹஹா...!! நான் சரியாத்தான் சொல்லிக் குடுக்குறேன்.. டாடியா நீங்க..? சரியான கேடி..!!" அசோக் இப்போது கடுப்பானான். அவளுடைய நைட்டிக்குள் கை விட்டு, அவளுடைய தொடையில் நறுக்கென கிள்ளி வைத்தான். நந்தினி வலியில் துடித்தாள். "ஆஆஆ..!! தொடைல கிள்ளாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது.. வலிக்குது..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ...!!" "ஆமாம் தொடைல கிள்ளுனா வலிக்கத்தான் செய்யும்.. கொஞ்சம் மேல ஏத்தி கிள்ளவா.. சொகமா இருக்கும்..!!" சொல்லிக்கொண்டே அசோக் தனது கையை சற்று மேலே நகர்த்த, நந்தினி.. "ச்ச்சீய்..!!!" என்றவாறு பட்டென அவனுடைய கையை தட்டிவிட்டாள். தன் மீது படர்ந்திருந்த கணவனையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்தாள். அசோக்கும் அவளுடைய முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவளை பார்த்து குறும்பாக கண்சிமிட்ட, "கேடி..!!!" என்றாள் நந்தினி வெட்கமும், சிரிப்புமாய். "கேயீ..!!!" அந்தப்பக்கம் ஆனந்தும் அம்மா சொன்னதை ரிப்பீட் செய்துவிட்டு, எலிப்பற்களை காட்டி கெக்கலித்தான்.

No comments:

Post a Comment