Thursday 17 December 2015

விஜயசுந்தரி 57

நான் அவளை என் அருகே உட்கார சொல்ல அவளும் உட்கார்ந்தாள். வழக்கமாக சினிமாவில் எல்லாம் முதலிரவு அறைக்கு பெண்கள் ஒரு சொம்பில் தான் பால் கொண்டு வருவார்கள் ஆனால் இங்கு ஃப்லாஸ்க்கில் பால் கொண்டு வருகிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். 
ராதா கட்டிலில் உட்கார்ந்தாள் உட்கார்ந்தவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். எனக்கு எதுவும் பேச தைரியம் இல்லை அதே நேரம் அவளும் எதுவும் பேசாமல் இருந்தாள். இருவரும் நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தோம். இறுதியில் நானே மௌனம் கலைத்தேன் 
“ராதா இப்ப சொல்லு, உண்மையிலேயே நீ என் மேல் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா” என்றதும் அவள் என்னை திரும்பி பார்த்தாள்.
அதுவரை சாதாரணமாக இருந்த அவள் முகம் கொஞ்ச்ம கோவமாக தெரிந்த்து. 

“இல்ல், நீ எங்க அக்காவுக்கு செஞ்ச உதவிக்கு கைமாறாதான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்” என்றாள். எனக்கு எந்த வியப்பும் இல்லை ஏனென்றால் இது நான் எதிர்பார்த்த்துதான். 
“ஏன் ராதா என்ன பிடிக்கலையா” என்றதும். 
“புடிச்சிது, காலெஜ் படிக்கும்போது புடிச்சிது, ஆனா எப்ப உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிதோ அப்பவே உன் மேல வெறுப்புதான் வந்துச்சி” என்றாள். அவள் முகம் கோவமாக இருந்த்து. 
“சரி ராதா, என்ன பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நீ என்ன லவ் பண்றதா அன்னைக்கு சொன்னே”
“ஆமா சொன்னேன், ஆனா அதுக்கப்புறம் லதா வந்தா, போனா, என்னைக்கு நீ லதாவ கட்டிக்கனும்னு நானே உங்கிட்ட சொன்னேனேர் அப்பவே என் மனசுல இருந்த காதல் அழிந்து போச்சு” என்றாள். 
“சரி இருக்கட்டும், அப்டியே இருக்கட்டும், ஏதோ ஒரு சூழ்னிலையால நாம் ரெண்டு பேரும் இப்ப கணவன் மனைவியா சேர்ந்துட்டோம், இனிமே நாம் ரெண்டு பேரும்தான் ஒன்னா வாழ்ந்தாகனும், அதனால் பழச எல்லாம் விட்டுட்டு இனி புதுசா வாழ்க்கைய தொடங்கலாமா” என்று நான் கேட்க 
“உன்னால் எல்லாத்தையும் உடனே மறந்துட முடியும், ஆனா என்னால முடியாது, என்ன பொருத்தவரைக்கும் நீ ஒரு மூனாவது மனுஷன் தான், உன் மேல எனக்கு காதலோ நட்போ இல்ல், வெளி உலகத்துக்கு தான் நாம் ரெண்டு பேரும் ஹ்ஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப், உள்ள நாம ரெண்டு பேரும் வேற வேறதான்” என்றாள். 
“சரி ராதா அப்டியே இருக்கலாம், நீ அன்னைக்கு ஆச பட்ட மாதிரியே, நான் இதுவரைக்கும் எப்டி வேணா இருந்திருக்கலாம், ஆனா எப்ப உன் கழுத்துல என் கையால் தாலி கட்டினேனோ இனிமே என் மனசும் உடம்பும் உனக்கு மட்டும்தான்” என்று கூறிவிட்டு நான் தனியாக படுத்துக் கொண்டேன். ராதா அமைதியாக படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலை ராதா முதலில் எழுந்து சென்றுவிட்டிருந்தாள். நான் அதன் பின் தான் எழுந்து கீழெ சென்றேன். சோஃபாவில் உட்கார்ந்த்தும் ராதா காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். அனிதா அங்கு வந்தாள்.
“ராதா முத்து உங்க ரெண்டு பேருக்கும் ஹனிமூன் போக ஸ்விட்சர்லாந்துக்கு ரெண்டு டிக்கெட் போட்டிருக்கேன், ஒன் வீக் ஜாலியா இருந்துட்டு வாங்க” என்றாள். ராதா என்னை பார்த்து ஜாடை செய்ய நான் அனிதாவை பார்த்து 
“அது இல்ல அண்ணி, வேண்டாம், எனக்கு நெறைய வேல பெண்டிங்க இருக்கு, ஒரு வாரம் எல்லாம் முடியாது” என்றதும் 
“ஆமாங்கா எனக்கும் பெண்டிங்க ஒர்க்ஸ் நெறைய இருக்கு, டிக்கெட் போடாத வேண்டாம்” என்றாள். அனிதா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். எங்கள் இருவருக்கும் நடுவே ஒட்டு உறவு இல்லை என்பதை புரிந்து கொண்டாள் போல. 
“முத்து அவ சொல்றா சரி, நீங்க இன்னும் என்ன் பெண்டிங்க் ஒர்க் இருக்கு, இனிமே நீங்க உங்க கம்பனியதான் பார்த்துக்கனும்”என்று தன் கையில் இருந்த ஒரு ஃபைலை கொடுத்தாள். 
“என்ன அண்ணி இது” என்று நான் கேடக் 
“அன்னைக்கு திருவள்ளூர் போய் பார்த்தோமே, அந்த இட்த்துல கட்டியிருக்கிற புது ஹாஸ்பிடல், சாதாரண ஹாஸ்பிடல் இல்ல மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், இன்னையில் இருந்து அந்த ஹாஸ்பிடலுக்கு நீங்களும் ராதாவும் தான் பர்ட்னர்ஸ், இது என்னோட அப்போவொட கல்யாண் பரிசு” என்று ஃபைலை நீட்டினாள்.
“ஏன் அண்னி இதெல்லாம்” என்று நான் கேட்க 
“அதெல்லாம் கேட்க கூடாது, அவரு அப்டித்தான் சொல்வாரு, நீ வாங்கிக்க” என்று ராதாவின் கையில் கொடுத்துவிட்டு 
“இன்னைக்கு ரெண்டு பேரும் அங்க போய் ஹாஸ்பிடல் எப்டி இருக்குனு பார்த்துட்டு வாங்க” என்று கூறிவிட்டு ஆள் கிளம்பிவிட்டாள். நான் குளித்து முடித்து சாப்பிட்டு தயாரானேன். ராதாவும் தயாராக இருந்தாள். இருவரும் எங்களுக்காக கொடுக்கப்பட்ட TOYOTO ETIOS காரில் திருவள்ளூரில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினோம், 
காரை நான் தான் ஓட்டினேன். என்ண்டா டூ வீலரே ஓட்ட தெரியாதுனு சொன்னவன் கார் ஓட்றேன்னு எல்லாருக்கும் தோனும், இப்பவும் எனக்கு டூவீலர் ஓட்ட தெரியாது ஆனா அனிதாவின் தயவால் கார் நன்றாகவே ஓட்டுவேன். காருக்கு பெட்ரோல் போடுவதற்க்காக ஒரு பங்கில் காரை நிறுத்தினேன். நாங்கு சக்கர வாகன்ங்களுக்கு தனியாகவும் இரண்டு சக்கர வாகன்ங்களுக்கு தனியாகவும் வழி இருந்த்து. 
எனக்கு முன்னே சில கார்களுக்கு பெட்ரொல போட்டுக் கொண்டிருக்க அருஇல் இருந்த டூ வீலர் பாகத்தில் ஒரு பெண் ஸ்கூட்டியை கொண்டு வந்து நிறுத்தினார். அங்கு பெட்ரோல் போடும் பையனை பார்த்து சிரித்தாள். இருவருக்கும் ஏற்கனவே நல்ல நெறுக்கும் இருந்திருக்கும் போல், ஸ்கூட்டியை நிறுத்தியதும் அந்தாள்.
“மேடம் கீழ எறங்கி பின்னால் தூக்குங்க உள்ள விடனும்” என்று கையில் இருந்த குழாயை நீட்ட அந்த பெண் வண்டியின் பின் சீட்டை தூக்கி காட்டினாள். அவனும் பெட்ரொல டேங்குக்குள் அந்த குழாயை நுழைத்து மீட்டரை பார்த்தான். உடனே அந்த பெண் 
“என்ன்பா உள்ள விட்ட்துமே இப்டி ஊத்திடுச்சி” என்றாள் நக்கலாக சிரித்துக் கொண்டே இவனும் 
“என்ன் மேடம் பண்றது அவசரமா போடனும்னா இப்டித்தான், சீக்க்ரம் வந்திடும்” என்றான். இவள் 
“சீக்கிரம் வரலாம் ஆனா அதுல கிக்கு இருகாதபா” என்றாள். இவன் இளித்துக் கொண்டே 
“பங்கு காலியா இருக்கும்போது வாங்க நல்ல நிறுத்தி நிதானமா போடுறேன்” என்றான். அவள் காசு கொடுக்காமல் பல்லை காட்டிக் கொண்டே சென்றுவிட்டாள். இவன் கையில் பிடித்தபடி நின்றிருந்தான். இருவரும் பெட்ரோல் போடுவதை பற்றி இப்படி விலாவாரியாக பேசியதை ராதா கவனிக்கவில்லை. ஜன்னல் வழியாக வெளிய பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். 
ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்தோம், நாங்கள் வரும் செய்தி ஏற்கன்வே அங்கு சென்றுவிட்ட்தால் எங்களை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கியதும் ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டர் இருவருக்கும் மலர் கொத்தை கொடுத்து வரவேற்றார். உள்ளே செல்ல செல்ல அலங்காரங்கள் அசத்தலாக இருந்த்து. 
மிகப்பெரிய மருத்துவமனை. என் வாழ்நாளில் நான் சிகிச்சைக்காக கூட இப்படி ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்றதில்லை. இந்த ஹாஸ்பிடலை பார்க்கும்போதுதான் ராதாவின் குடும்ப வசதி எனக்கு முழுதாய் புரிந்தது. மில்லியனர் என்று சொல்வார்களே அது இவர்களுக்குதான் பொருந்தும், இப்ப நானும் ஒரு கோடீஸ்வரன் தான். நான் பணத்துக்காக ராதாவை திருமணம் செய்துகொள்ளவில்லை, 
அப்படி இருந்தால நான் லாவண்யாவையே கட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது சங்கீதாவின் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம், எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ராதாவின் மேல் தான் காதல் அன்பு நட்பு எல்லாமே உள்ளே நுழைந்த்துமே என் காதில் ஒரு பாட்டு ஒலிக்க தொடங்கிவிட்ட்து. “காசு பணம் துட்டு மணி மணி, நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாய தின்னுறான், கணக்கு பண்ண தெரியாதவன் காச வாரி எறைக்கிறான்” இந்த பாடல் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, நானும் ராதாவும் எங்கள் அறைக்கு சென்று உட்கார்ந்தோம். 
மருத்துவமனையின் எல்லா டாக்டர்களும் அங்கு வந்து குவிந்திருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு சென்றார்கள். எல்லோரும் வந்து சென்று அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட இப்போது நானும் ராதாவும் மட்டும் இருந்தோம். அதுவரை என் அருகே அணைத்தபடி உட்கார்ந்திருந்தவள் எல்லோரும் சென்றதும் எழுந்து எனக்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள். 
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத சமயத்தில் பார்த்துக் கொண்டிருக்க நேரம் ஓடியது. மாலை அங்கிருந்து கிளம்பினோம். அருகில் இருந்த ஒரு ஃபைஸ்டார் ஹோட்டலுக்கு சென்று இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப இப்போது நேரம் இரவு 9 மணி கார் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த்து. 
ஏசியை நிறுத்திவிட்டு ஜன்னல்களை திறந்துவிட்டேன், காரின் வேகமும் குறைவாக இருக்கவே ஜில்லென்ற தென்றல் காற்று காரின் உள்ளே நுழைந்து மனதை இதமாக்கியது. திருமழிசை தாண்டி இன்னும் சில கிலோ மீட்டர்களில் பூந்தமல்லியை அடைந்து விடுவோம். ராதா காரின் பின்பக்கம் உட்கார்ந்திருந்தாள். 
சாலையில் போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. கார் 30 கி.மீட்டர் வேகத்தில் சாலையில் மிதந்து கொண்டிருந்த்து. நான் ரியர்வியூ கண்ணாடி வழியாக ராதா தூங்கும் அழகை பார்த்து ரசித்தேன். பளிச்சன்ற புடவையில் அழகியாக தெரிந்தவள். கண்மூடி தூங்கும்ப்போது குழ்ந்தை போல் இருந்தாள். 
அவள் தூங்கும் அழ்கை பார்த்து எனக்கு ரசித்து சிரித்துக் கொண்டே காரை ஓட்டியவன் அதே கண்ணாடியில் பின்னால் ஒரு லாரி வருவதை பார்த்தேன். முதலில் சாதாரணமாக விட்டுவிட்டேன். ஆனால் அந்த லாரி ஹெட்லைட்டை அணைத்து அணைத்து போட்டு வேகமாக் வந்து கொண்டிருக்க நான் காரை சாலையில் ஓரமாக ஓட்டி லாரிக்கு வழி கொடுக்க அவன் காரையே விடாமல் பின் தொடர்ந்து வந்தான். என் மனம் ஏதோ பதற்றமானது.


நான் காரின் வேகத்தை அதிகமாக் அதே வேகத்தில் லாரியும் வந்த்து. கார் இப்போது 70 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க லாரி தறிகெட்டு சாலையை அளந்தபடி காரை நோக்கி பயங்கர வேகத்தில் வந்தது. நான் காரின் வேகத்தை இன்னும் அதிகமாக்க லாரிக்காரன் ஒரு முடிவுடன் தான் பின் தொடர்கிறான் என்று உணர்ந்து கியரை மாற்ற கார் 90 கி.மீ வேகத்தில் பறந்த்து. லாரிக்காரன் கொஞ்ச்மும அசராமல் அதே வேகத்தில் வந்தான். எதிரே வந்த சில
எதிரே வந்த வாகனங்கள் லாரியை முட்டாமல் தப்பித்து தடுமாறி செல்ல லாரிக்காரன் சாலையின் இரண்டு பக்கமும் வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தா. காருக்கும் லாரிக்கும் இடையே சில அடி தூரங்கள் தான் இருந்தன. ஓரு இட்த்தில் லாரி கடுமையான வேகத்துடன் வந்து காரின் பின் பக்கம் முட்டியதும் நான் நிலை தடுமாற கார் சாலையிலிருந்து இறங்கி எதிரே இருந்த மணல் மேட்டில் அதி பயங்கர வேகத்துடன் ஏறி வேகமாக உருண்ட்து,
உள்ளே நானும் ராதாவும் சீட்டுகளில் மோதியும் காரின் மேற்கூறையில் இடித்துக் கொண்டும் காரோடு உருண்டு கொண்டிருக்க, ஒரு மரத்தில் மோதிய கார் சாலையை பார்த்தபடி தலைகீழாக கவிழ்ந்து கிடந்த்து. எனக்கு தலை கிறுகிறுக்க நான் சாலையை பர்த்தேன். அந்த லாரி இன்னும் நின்று கொண்டிருப்பதும் ஜன்னல் வழியே யாரோ பார்ப்பதும் தெரிந்த்து. ஆனால் கார் குட்டிகர்னம் போட்ட்தில் என் தலை சுற்றியது அதில் எதுவும் சரியாக தெரியவில்லை.
தலையை உலுப்பி மீண்டும் பார்த்தேன். ஜன்னல் வழியே தெரிந்த உருவம் ஆந்திரா கொண்டல்ராவின் முகம் என்று தெரிய, அவன் சிரித்துக் கொண்டே லாரியை போக சொல்ல லாரியும் கிளம்பியது. நான் இப்போது தலைகீழாக முகம் தலை மட்டும் மேலாக கிடக்க மெல்ல என் காலை மேலே இருந்து எடுத்து நேராக உட்கார்ந்து காரின் கதவை திறக்க மூயன்றேன். அது ஜாமாகி திறக்கவில்லை.
எரிச்சலில் ஓங்கி ஒரு உதை கொடுக்க திறக்காமல் கழண்டு கொண்டு போய் விழுந்த்து. வெளியே வ்ந்த பின் தான் தெரிந்த்து, காலில் எப்படியும் ஒரு எலும்பு உடைந்திருக்கும் என்று, வலி உயிர் போனது. அய்ய்யோ பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ராதா என்ன ஆனாள். என்று நினைவுக்கு வர உள்ளே பார்த்தேன். அய்யோ என் கண்ணே என் மனைவிக்கு பட்டுவிட்ட்தோ என்னவோ இறைவா, என்று அழ தோன்றியது.
முகம் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட ராதா பின் சீட்டில் கிடந்தாள். என் இதயம் நின்றுவிடும் போல் இருக்க் காலை இழுத்துக் கொண்டு அவள் இருந்த பக்கம் சென்று அந்த கதவை திறக்க முயன்றேன். முடியவில்லை. ஜன்னல் வழியாக கைவிடு திறக்க முயன்றும் முடியவில்லை. முன் போலவே இன்னொரு காலை தூக்கி உதைத்தேன். கதவு திறந்து கொண்டதும் ராதா வெளியே சாய்ந்தாள்.
எனக்கு அடிவயிறு கலகிப் போனது, அய்யயோ ராதாவுக்கு உயிர் இருக்கிறாதா இல்லை இறந்துவிட்டாளா, என்று கைகள் உதறின, அவளை தட்டி எழுப்ப என் வாயில் வார்த்தைகள் இல்லாமல் நாக்கு ஒட்டிக் கொண்டது. என்ன் செய்வது என்று புரியாமல் அவளை காருக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்து போட்டு அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டு கன்னத்தில் மெல்ல் தட்டினேன். அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு மீண்டும் கன்னத்தில் தட்டி
“ராதா ராதா” என்று ஈனஸ்வரத்தில் வந்த குரல் அவள் காதுகளில் கேட்டிருக்காது. என்ன் செய்வது என்று புரியாமல் என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்ய அது நசுங்கிப் போய் இருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. ராதாவின் தோளில் ஒரு கையும் காலுக்கு பின்னால் ஒரு கைய்ம் கொடுத்து அவளை என் பலம் கொண்ட அளவுக்கு முயன்று தூக்கிக் கொண்டு சாலையை நோக்கி நடந்தேன்.
அந்த நேரம் சாலையில் எந்த வண்டியுமே வரவில்லை. நீண்ட நேரம் நின்றிருக்க ஒரே ஒரு பைக் மட்டும் வந்தது. ரத்த வெள்ளத்தில் ராதாவோடு நான் நிற்பதை பார்த்தவன் முதலில் நிற்காமல் சென்றான்.
“சார் ஹெல்ப பண்ணுங்க ப்ளீஸ்” என்று நான் கதறியதில் மனமிறங்கி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிவந்தான்.
“என்ன் சார் என்ன ஆச்சு” என்றான். நான் கவிழந்து கிடந்த காரை காட்டி நடந்தவற்றை சொன்னதும் அவன் தன் செல்போனை எடுத்து 108க்கு டயல் செய்தான். 5 நிமிடங்கள் ந்ரக வேதனையாக ஓடியபின் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. பைக் காரனுக்கு என் வாழ்நாள் முழுவதும் மறக்காத அளவுக்கு நன்றியை சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறினேன்.
இரவு நேரம் என்பதால் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது. ராதாவின் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்களின் புருவத்தில் லேசான அசைவு தெரிந்த்து. ஆம்புலன்சில் இருந்த நர்ஸ் அவள் ராதாவின் முகத்தில் வடிந்து கொண்டிருநத ரத்த்த்தை துடைத்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி என் முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராதாவின் முகத்தில் தெரிந்த அந்த லேசான அசைவுக்கு பின் தான் என் உயிர் திரும்பி வந்த்து. மெல்ல நர்ஸிடமிருந்த செல்போனை வாங்கி அனிதாவின் மொபைலுக்கு போன் செய்து ந்டந்தவற்றை சொன்னேன். சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் ராதா சேர்க்கப்பட்டிருந்தாள். அவள் கட்டிலுக்கு அருகிலேயே இர்வு முழுவதும் உட்கார்ந்திருந்தவன் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை.
அனிதா வந்து எழுப்பினாள். “முத்து, ஒன்னும் பிரச்சினை இல்லனு டாக்டர் சொல்லிட்டாரு” என்றதும் என் மனம் கொஞ்ச்ம அமைதியானது. ராதாவின் தலைக்கருகில அவள் அம்மவும் அப்பவும் நின்றிருக்க நான் எழுந்தேன். அப்போதுதான் என் காலில் இருந்த காயம் பயங்கரமாக வலிக்க என்னால் நிற்க முடியாம்ல கீழெ சாய்ந்தேன். அனிதா டாக்டரிடம் அழைத்து செல்ல டாக்ட்ர் ஸ்கேன் செய்து பார்த்து எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு கொஞ்ச நாள் நடக்க கூடாது என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.
அனிதா என் அறைக்கு வந்தாள். “முத்து என்ன் நடந்த்து, எப்டி ஆச்சு, ஏதாவது ட்ரிங்க் பண்ணிட்டு வண்டி ஓட்னியா”என்று மடக்கி மடக்கி கேட்க என் கண்களி கொண்டல் ராவ் லாரியிலிருந்து சிரித்த அந்த சிரிப்பு வந்து போனது. நான் இறந்து போய்விட்டேன் என்று தான் அவன் நினைத்திருக்க வேண்டும். ஏனென்றால் காரின் ஹெட்லைட்டும் மற்ற விளக்குகளும் அணைந்து போனதால் நான் அவனை பார்த்த்தை அவன் கவனிக்கவில்லை. அவன் முகம் மட்டும் லாரியில் எரிந்து கொண்டிருந்த லைட் வெளிச்சத்தில் நன்றாக் தெரிந்த்து.
“அண்ணி, இது ஆக்ஸிடெண்ட் இல்ல, என்ன கொல்ல நடந்த சதி” என்றேன். அனிதா கொஞ்ச்ம அதிர்ச்சியுடன்
“கொல சதியா, யாரப்படி பண்ணாங்க” என்றாள். நான் கொண்டல் ராவ் பற்றி சொன்னதும்
“சரி முத்து நான் பார்த்துக்கறேன்” என்று கூறி தன் செல்போனை எடுத்து பேசியபடி வெளியே நடந்தாள். ராதாவின் நிலை இப்போது எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வரவே மெல்ல் எழுந்து அவள் அறைக்கு சென்றேன் ராதாவின் அறையில் அப்போது யாரும் இல்லை, நான் உள்ளே நுழைந்த அந்த நொடி ராதாவின் உடல் தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருநத்து, அவளுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கவேண்டும். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அவள் அருகே சென்று
“ராதா ராதா என்று கத்திக் கொண்டிருக்க சட்டென வெளியே ஓடிவந்து உடைந்த காலை வைத்துக் கொண்டு வராண்டாவில் ஓடினேன், டாக்டர் டாகடர் என்று கத்த ஒரு அறைக்குள் இருட்ந ஒரு லேடி டாக்டர் வெளியே வர சட்டென அவர் மேல் இடிக்காமல் இருக்க வேறு பக்கம் திரும்பியவன் டைல்ஸ் தரையில் வழுக்கி கீழெ சரிய நல்லவேலையாக கை ஊன்றி சமாளித்துக் கொண்டு எழுந்து ராதா அறையில் இருக்கும் நிலையை சொல்ல அவர் தன்னுடன் இரண்டு நர்சுகளை அழைத்துக் கொண்டு ராதாவின் அறைக்கு ஓட அங்கு நான் செல்லும் நேரம் ராதாவின் உடல் வளைந்து தூக்கி தூக்கி விழுந்து கொண்டிருக்க டாக்டர் ஒரு ஊசியை போட்டு தேவையான் முதலுதவிகள் செய்து கொண்டிருந்தார்கள்.
என்னால் அவள் படும் இந்த துயரத்தை பார்க்க முடியவில்லை. வாசலியேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். சில் நிமிடங்கள் கழித்து டாக்ட்ர் வெளியே வந்தார்.
“சார்” என்ற் அவர் குரல் கேட்டு எழுந்து நின்றேன். என் காலில் போடப்பட்டிருந்த கட்டிலிடுந்து வழிந்த ரத்தம் உறைந்து போய் இருக்க மெல்ல் எழுந்து நின்றவ்னை டாக்டர் தாங்கி பிடித்துக் கொண்டு
“அவங்களுக்கு ஒன்னுமில்ல், எல்லாம் சரியாகிடுச்சு” என்று ஆறுதலாக கூறிவிட்டு சென்றார். செல்லும் நேரம்
“சார் உங்களையும் கொஞ்ச்ம கவனிச்சிங்க்கங்க” என்று என் காலை காட்டினார், அப்போதுதான் காலில் ரத்தம் கசிந்திருந்த்தை நான் கவனித்தேன். நான் அப்போதிலிருந்து அவள் அருகிலேயே கிட்ந்தேன். நடந்த்தை கேள்விப்பட்டு அனிதா அவ்ள் அம்மா அப்பா மீண்டும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தனர். நான் அவர்களிடம் நடந்த்தை கூறினேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன. ராதாவின் காயங்கள் ஆறின. அவளை டிஸ்சார்ச் செய்திடலாம் என்று சொல்ல நானும் அவளுடன் கிளம்பினேன். எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிந்தன. ராதாவை பரிசோதித்த டாக்ட்ர் வந்தார். அவளுக்கு பல்ஸ் செக்கப் செய்தார். அவளிடம்
“உனக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆகுதும்மா” என்றாள். நான் அருகிலேதான் நின்றிருந்தேன். ராதா என்னை பார்த்த்விட்டு
“ரெண்டு நாள் அகுது மேடம்” என்றாள்.
“என்னம்மா ரெண்டு நாள் தானா” என்றார் வியப்புடன்
“ஏன் மேடம் என்னாச்சு” என்றாள் ராதா நானும் அவர் ஏதாவது குண்டை தூக்கி போடப்போகிறாரோ என்று டாக்டரையே ஆவலுடன் பார்க்க ராதாவும் குழப்பமான் முகத்துடன் என்னையும் டாக்ட்ரையும் மாறி மாறி பார்த்தாள். 


டாக்டர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ராதாவை பார்த்தார்.
“உனக்கு ஒன்னுனதும் உங்க வீட்டுக்கார்ர் தன் கால பத்திகூட கவலபடாம எப்டி பதபதச்சாரு தெரியுமா, கல்யாணம் ஆன புதுசுல எனக்கு ஒரு தடவ அடிபட்டப எங்க வீட்டுக்கார்ரு அந்த காயம் ஆறுற வரைக்கும் என்ன எங்க அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டாரு, இத்தன வருஷத்துக்கு அப்புறமும் எனக்கு ஏதாவது ஒன்னுனா, கண்டுக்கவே பாட்டாரு, ஆனா உங்கவீட்டுக்காரரு அப்டி இல்லமா, நீ ரொம்ப லக்கி, உனக்கு ஃபிட்ஸ் வந்தப்ப அவர் தவிச்ச தவிப்பு இருக்கே, அம்பது அறுவது வருஷமா நெருக்கமா வாழ்ந்தவங்களுக்குள்ள தான் அவ்ளோ பாசம் இருக்க முடியும்”என்று அவள் தோளில் தட்டிவிட்டு சென்றார்.
ராதா என் காலில் போட்டிருந்த கட்டை பார்த்தாள். கண்டுகொள்ளாதவள் போல் திரும்பிக் கொண்டாலும், திரும்பி தன் கண்ணில் வ்ழிந்த கண்ணீரை அவள் துடைப்பதை நான் கவனித்தேன். ஏதோ என் மீது அவளுக்கு இந்த அளவிலாவது அன்பு இருக்கிறதே என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டேன். வீட்டிற்கு சென்றோம்.
அனிதா ராதாவின் பக்கத்திலேய இருந்து பார்த்துக் கொண்டாள். ராதாவுக்கு உடம்பு துடைத்துவிடுவது, ஆடைகள் மாற்றிவிடுவது என்று எல்லாமே அவள் தான் செய்தாள். ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. காலையில் அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு ஆஃபீஸ் சென்றுவிட்டாள். நான் ராதாவின் அறையிலேயே உட்கார்ந்திருந்தேன்.
ராதா டி.வி பார்த்துக் கொண்டிருக்க நான் அவள் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன் எத்தனையோ முறை நான் ராதாவை அருகிலிருந்து பார்த்திருந்தாலும், திருமணத்துக்கு பின் என் மனைவியாக அவளை ராசிக்கும்போது அவள் இன்னும் அழகாக தெரிந்தாள்.
சட்டென அவள் திரும்பி என்னை பார்க்கும்போதெல்லாம் நான் வேறு பக்கமாக திரும்பிக் கொள்ள அவள் எனக்கு தெரியாமல் சிரித்துக் கொளவாள். மதிய நேரம் திடீரென அவள் முகத்தில் ஏதோ ஒரு தவிப்பி தெரிந்த்து. ஏனோ பதற்றமாக தோன்றினாள். எதையோ சொல்ல வநது சொல்லாமல் தவித்தாள்.
“என்ன் ராதா என்ன வேணும்” என்று நான் கேட்டும்
“அம்மா இருந்தா கூப்டுங்க” என்று மட்டும் சொல்ல நான் கீழெ இறங்கி ஓடி தேட என் மாமியாரை கானவில்லை. வேலை செய்பவர்களில் யாராவது பெண்கள் இருக்கிறார்களா என்று தேட இருந்த சமையல்கார பெண் முத்தம்மா மார்க்கெட் போயிருந்தாள். மீண்டும் மாடிக்கு ஓடிவந்து,
“ராதா அத்த இல்ல, முத்தம்மாவும் இல்ல, என்ன வேணும் சொல்லு, நான் கொண்டாரேன்” என்று நான் கேட்க அவள் நீண்ட யோசனைக்குப் பின்
“யூரின் பாஸ் பண்ணனும்” என்றாள். எனக்கு என்ன் செய்வது என்று யோசிக்க் கூட தோனாமல், அவள் கைக்ளை பிடித்து தூக்க முதலில் கை தர மறுத்தவள் பின் கை நீட்டினாள். கையை பிடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து இறக்கினேன். இன்னொரு கால் தரையில் ஊன்ற முடியாமல் போகவே கொஞ்ச்ம தடுமாறி என் மார்பில் சாய்ந்தாள்.
நான் அவள் இடுப்பில் ஒரு கை கொடுத்து தாங்கிக் கொள்ள அவள் கொஞ்ச்ம நொண்டியபடி நடந்து வந்தாள். பாத்ரூம் கதவை திறந்து அவளை உள்ளே கூட்டி சென்றேன். சுவற்றை பிடித்துக் கொண்டவள் என்னை பார்த்தாள். நான் எதுவும் பேசாமல் திரும்பி வந்து கதவை மூடினேன். வெளியே நின்றுகொண்டிருக்க, உள்ளிருந்து ஒரு சத்தம், பதறி அடித்துக் கொண்டு உள்ளே செல்ல ராதா நிற்க முடியாமல் கீழெ கிடந்தாள்.
மீண்டும் அவள் கையை பிடித்து மெல்ல தூக்கி நிற்க வைத்தேன். “என்ன் ஆச்சு ராதா” என்றதும். தன் நைட்டியை காட்டினாள். எனக்கு புரிந்த்து. நான் அவள் முகத்தை பார்க்க அவள் அவசரத்தை அடக்க முடியாம்ல் தவிப்பது தெரிந்த்து. மெல்ல் அவள் தோளில் கைவைத்து பிடித்தபடியே முன்னால் குனிந்து அவள் நைட்டியின் நுனிப்பகுதியை பிடித்து லேசாக தூக்கினேன்.
மேலே வரும் நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நைட்டியின் முனையை அவள் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்றேன். சில நொடிகள் கழித்து
“என்ன்ங்க” என்று உள்ளிருந்து மெல்லிய குரல் கேட்ட்து. இதுவரை முத்து என்று என் பேரை சொல்லி கூப்பிட்டு வந்தவள் இப்போது உரிமையுடன் என்ன்ங்க என்று கூப்பிட்ட்து அவள் மனதுக்குள் நான் நுழைந்திருப்பதை காட்டியது. உள்ளே சென்று அவளை மீண்டும் கட்டிலுக்கு கூட்டி வந்து படுக்க வைத்தேன். மாலை அனிதா வந்த்தும் அவளுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்திருந்தார். இருவரும் உட்கார நான் கீழெ வந்த்தும். இன்ஸ்பெக்டர் என்னை பார்த்தார்.
“முத்து அன்னைக்கு ராத்திரி உங்க கார் மேல மோதின லாரிய பத்தி டீட்டெய்ல்ஸ் கெடச்சிருக்கு” என்றாள் அனிதா இன்ஸ்பெக்டரை பார்த்து
“சார் நீங்களே சொல்லுங்க” என்றதும் இன்ஸ்பெக்டர்
“அந்த லாரி ஆந்திராவுல் இருந்த போரூர்ல இருக்குற ஒரு கிரானைட் கடைக்கு கடப்பா கல்லு ஏத்தி வந்த லாரி, லாரி ஓனர புடிச்சிட்டோம், ஆனா அவன் தான் தண்ணி அடிச்சிட்டு இருந்த்தால் கார் மேல இடிச்சிட்ட்தா சொல்றான்”என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்க
“சார் என்ன கொல்ல நெனச்சிருக்காங்க சார், இடிச்சவன் யாருன்னும் எனக்கு தெரியும்” என்றதும்
“மேடம் சொன்னாங்க சார், நீங்க ஆந்திரா போனப்ப நடநத்தும் எனக்கு தெரியும், அந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட கொண்டல் ராவ் தான் இத பண்ணானு நீங்க சொல்றீங்க, ஆனா அந்தகொண்டல் ராவ் ஜாமின்ல வெளியில வந்திருக்கான், தினமும் காலையில் கடப்பா போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்து போடுறான், அப்டி இருக்கும்போது அவன் இத பண்ணியிருக்க முடியாதுனு அவன் லாயர் சொல்றாரு” என்றார்.
‘இல்ல் சார் கார் மேல மோதினதும், அவன் லாரிய நிறுத்திட்டு என்ன பார்த்து சிரிச்ச் அந்த சிரிப்பு என் கண்லயே இருக்கு சார்” என்று நான் வேதனையுடன் கூற இன்ஸ்பெக்டர்
“எங்களால் முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணியிருக்கோம், மேடம் சொன்னதால் அந்த கொண்டல்ராவ சென்னைக்கு கூட்டி வந்து விசாரிக்க் ஏற்பாடு பண்ணியிருக்கோம்” என்று கூறி அனிதாவை பார்த்தார். “மேடம் நான் அப்ப கெளம்புறேன், அவன் விசாரிச்சதுக்கப்புறம் ஏதாவது தகவல் கெடச்சா உங்களுக்கு சொல்றேன்” என்று கூறி எனக்கும் அவளுக்கு கைகொடுத்து கிளம்பினார்.
என் கோவம் அதிகமானது. அந்த கொண்டல் ராவ் எப்படி சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறான் என்று நினைக்க நினைக்க என் கோவம் அதிகமாகிக் கொண்டே போனது. அடுத்த நாள் காலை, அனிதா பரபரப்புடன் என் அறைக்கதவை தட்டினாள். ராதா தூங்கிக் கொண்டிருக்க நான் கதவை திறந்தேன். அனிதா உள்ளே பார்த்தாள். ராதா ஒரு பெட்டிலும் என் படுக்கை ஒரு பெட்டிலுமாக இருந்த்து. ஆனால் அதை பற்றி எதுவும் பேசாமல்
“முத்து தடா பக்கத்துல் ஒரு டெட்பாடி கெடக்குதாம், அது கொண்டல்ராவோட்துதான்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு, நம்மளையும் வர சொல்றாரு” என்றாள். எனக்கு குழப்பம். உடனே
“சரி அண்ணி வாங்க போய் பார்த்துட்டு வரலாம்” என்று கூறி திரும்பி ராதாவை பார்க்க அவள் அப்போதுதான் எழுந்திருந்தாள். அனிதா அவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருவதற்குள் நான் தயாராகினேன். நானும் அனிதாவும் தடா நோக்கி கிளம்பினோம். கார் செங்குன்றம் தாண்டி சென்று கொண்டிருந்த்து.
அனிதாவை பார்த்து
“நம்மள எதுக்கு வர சொல்லி இருக்காங்க” என்றேன்.
“அவனோட அண்ணன் ஜெயில்ல இருன்னானான், பொண்டாட்டியும் எங்கயோ காணாம போய்ட்டாளாம், அதனால் அவன அடையாளம் காட்ட யாருமே இல்ல, அதான் நீ அவன பார்த்திருக்கல்ல உன்ன அடையாளம் காட்ட கூப்டிருக்காரு” என்றாள். கார் போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் அமைதியாக சென்று கொண்டிருக்க உள்ளே இருவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தோம்.
“முத்து உனக்கும் ராதாவுக்கும் ஏதாவது சண்டையா” என்றாள் அனிதா.
“இல்ல அனி” என்றேன் நான்.
“அப்புறம் ஏன் ரெண்டு பெட்டும் தனித்தனியா இருக்கு” என்று கூறி என் முகத்தை பார்க்க என்னால் அவள் பாவையை எதிர்கொள்ள முடியவில்லை.
“சொல்லனும்னு தோனுச்சினா சொல்லு, இல்லனா வேணாம்” என்று சாலையை கவனிக்க தொடங்கினாள். நான் என்ன சொல்வது எதை சொல்வது என்று யோசிக்க
“அனிதா ராதாவுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்த எல்லாம் தெரியும்” என்றதும் அனிதா அதிர்ச்சியில் காரை அப்படியே பிரேக் அடித்து நிறுத்தினாள். அதிர்ச்சி கலந்த முகத்துடன்

“என்ன முத்து சொல்ற” என்றாள்.
“ஆமா, அதனால் தான் இப்டி” என்றதும்
“இதெல்லாம் ஏன் நீ அவகிட்ட சொன்ன” என்றாள் அனிதா. “நான் சொல்லி தெரியல அனிதா,
எல்லாம் அவளுக்கு ஆரம்பத்துலயே தெரியும்” என்றதும் வருத்தமான முகத்துடன் என் தொடையில் கைவைத்துக் கொண்ட
“சாரி முத்து என்னாலதானே எல்லாம்” என்றாள். நான் அவள் கையை என் தொடையிலிருந்து எடுத்து அவள் தொடையில் வைத்துவிட்டு,
“இதுல எனக்கும் தான் பங்கு இருக்கு, அத்னால் நடக்கிறத அனுபவிச்சிதான ஆகனும்” என்று கூற கார் கிளம்பியது. தடாவில் மெயின் ரோட்டின் ஓரம் ஆம்புலன்சும், போலீஸ் ஜீப்பும் நிற்க, அந்த இட்த்தில் சூழ்ந்திருந்த கூட்ட்த்தையும் போக்குவரத்தையும் போலீஸ்கார்ர்கள் சரி செய்து கொண்டிருக்க எங்கள் கார் அந்த இட்த்தை அடைந்த்தும். முன் வீட்டிற்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் எங்கள் முன் வந்து நின்றார்.
“என்ன் இன்ஸ்பெக்டர், கன்ஃபார்மா, அது அவன் தானா” என்றாள் அனிதா.
“ஆமா மேடம் அவனேதான்” என்று கூற நானும் அனிதாவும் அந்த இடம் நோக்கி நடந்தோம்.
இன்ஸ்பெக்டர் எங்கள் முன்னால் சென்று கொண்டிருக்க எதிரே ஒரு கார் வேகமாக வந்து நின்றது. கதவு திறக்கப்பட்டது. 



No comments:

Post a Comment