Saturday 31 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 18

என்னடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூனை மாதிரி அடங்கி இருந்தவ இப்போ வெடுக்குனு ஓடிப்போய் இடம் பிடிக்குற? எல்லாம் நான் குடுத்ததோட effect அ? - என்று தான் குடுத்த napkin னை குறி வைத்து சங்கீதா கிண்டலாய் சொல்ல..

ச்சி.... போங்க மேடம்... - சிணுங்கினாள் ரம்யா..

சரி எங்கே போய் இருந்தீங்க காலைல? - என்றாள் ரம்யா.

IOFI க்குதாண்டி, ஒரு முக்கியமான விஷயம் பேச போய் இருந்தேன் ராகவ் கிட்ட..

அதான் ராத்திரி டெய்லி phone ல பேசுறீங்களே? அது பத்தாதுன்னு
இப்போ காலைல நேர்ல போய் phone ல விட்டதை பேசிட்டு வரீங்களா? என்று கேட்க..

போதும் அடங்கு... நல்லா வாய் நீளுது பாரு.. - மென்மையாக பொய் க் கோவம் காட்டினாள் சங்கீதா.. அப்போது ஜன்னல் அருகே வந்த காற்றுக்கு நெத்தியில் ஆடிய முடியை தனது விரல் நுனியால் அழகாக தள்ளி விட அதை கவனித்த ரம்யா..


மேடம், உங்க nail polish நல்லா இருக்கு.. - என்று சொல்ல

ஒரு தடவ உன் கூட chennai silks ல புடவை வாங்கிட்டு இருக்கும்போது நேரம் ஆகுது கிளம்பனும் னு குழந்தை மாதிரி அழுதியே!! அப்போ வெளியே வந்து auto பிடிக்கும்போது ஒரு fancy store ல அவசரத்துக்கு வாங்கினதுடி, மறந்துட்டியா? - என்றாள் சங்கீதா சிரித்தபடி. brown colour shiffan saree கட்டி, அதற்கு matching ஆக dark brown color sleeveless ரவிக்கையை அணிந்திருந்தாள் சங்கீதா. வழக்கம் போல fresh ஆன 4 முழம் குண்டு மல்லியும், உதடுகள் மீது மிதமாக apply செய்யப்பட்ட lakme maroon நிற lipstick ம், கூடவே இவைகளுக்கு matching ஆக silver mixed dark brown colour nail polish அவளின் அழகிய விரல் நகங்களில் ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தில் மின்னியது.

ஒஹ்ஹ்.. ஆமாம் இப்போ நியாபகம் வருது. சரி என்ன முக்கியமான விஷயம் மேடம்? எதுக்கு IOFI போய் இருந்தீங்க?

அது ஒரு பெரிய கதைடி

சும்மா சொல்லுங்க மேடம்..

நேத்து ராத்திரி உன் கணவர் phone பண்ணி அந்த wooden பீஸ் பத்தி சொன்னாரு.

ஒஹ்..yes தெரியும். என் கிட்டயும் சொன்னாரு. அதுதான் paper manufacturing பண்ண உதவும்னு அவரு சொன்னப்போ நீங்க அது already paper manufacturing department ல இருந்து எடுத்ததுதான் னு சொன்னிங்கலாமே.

ஆமாம், but சாதாரண பேப்பர் கிடயாதுடி..

வேற?

கள்ள நோட்டு அடிக்குறதுக்கு உதவுற பொருள்.

எம்மாடி?.. அப்போ அந்த பேப்பர் manufacturing department உள்ளேயே போயி கையும் களவுமா பிடிச்சிடீங்களா?

இல்லைடி, இன்னைக்கு Mr.Vasanthan என் கிட்ட IOFI award function பத்தி பேசினார், போன வருஷம் நான் என் கணவர் கூட அந்த functionக்கு போய் இருந்தேன்.


சரி அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

இருக்கு சொல்லுறேன்.

சரி சொல்லுங்க

function ல இருந்தப்போ ரஞ்சித் அழ ஆரம்பிச்சிட்டான். ஸ்நேஹா ஒரு அளவுக்கு குமார் கூட சமத்தா உட்கார்ந்திருந்தா. அப்போ நான் ரஞ்சித் அழுகைய நிறுத்த கொஞ்ச நேரம் வெளியே போய் நின்னேன். உள்ள ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்ததால எதுவும் சாப்பிட முடியல. இவனை தோளுல போட்டுக்கிட்டு இருந்தப்போ லேசா பசிக்கவும் செஞ்சுது. அப்போ உள்ளுக்குள்ளேயே IOFI caterers சில snacks & tiffin items வெச்சி இருந்தாங்க. போய் ஒரு தோசையும், சாம்பார் வடையும் சொன்னேன். சொன்னதெல்லாம் சூடா வந்துச்சி. கடைசியா bill குடுக்கும்போது என் கணவர் கிட்ட இருந்து அன்னிக்கி காலைல change வேணுமே னு சொல்லி மூணு 1000 ரூபா நோட்டை ஆறு 500 ரூபா நோட்டா மாத்திக்கிட்டேன். அப்போ அந்த ரூபா நோட்டுல ஒரு 500 எடுத்து bill counter ல pay பண்ண கொடுத்தேன். அங்கே இருந்தவன் ஒரு நிமிஷம் அந்த நோட்டை பார்த்துட்டு இது சரி இல்லை மேடம் வேற ஏதாவது குடுங்க னு சொன்னான். எனக்கு shocking அ இருந்துச்சி. நானும் ஒரு நிமிஷம் உத்து ப் பார்த்தேன், white space ல காந்தியோட hologram தெரியணும், ஆனால் தெரியல. சரின்னு சொல்லி மத்த எல்லா நோட்டும் ஒன்னு ஒண்ணா குடுக்க எல்லாமே fake னு சொன்னான். நல்ல வேலையா அன்னிக்கி அவங்க card accept பண்ணாங்க, இல்லேன்னா கொஞ்சம் அசிங்கமா இருந்திருக்கும். திரும்பி function hall உள்ள போய் உட்காரும்போது என் கணவர் கிட்ட கேட்டேன் "ஏங்க, எங்கே ஏமாந்தீங்க இப்படி செல்லாத ரூபா நோட்டை வாங்கி" னு. நான் கேட்டதுக்கு அவரும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி எங்க கம்பெனி ATM ல எடுத்த cash தான் அது னு அவர் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. eventhough its possible but very rare.

சரி மேடம், ஒரு கேள்வி, நிறைய fake notes public place ல புழக்கத்துல இருக்கும். அப்படி ஏதாவது சில notes சிலபேர் bank ல cash deposit பண்ணும்போது மிஸ் ஆகி atm machine ல போக வாய்ப்பு இருக்கலாமே? எப்படி confirmed அ IOFI உள்ள இருக்குற paper manufacturing unit ல இருந்துதான் அந்த fake notes atm ல போகுதுன்னு சொல்லுறீங்க?

you are correct, but சந்தேகம் வர்றதுல தப்பில்லையே?

மேடம் நான் ஒன்னு சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க....

நினைக்க மாட்டேன் சொல்லுடி...

ரகாவ்காக நீங்க கொஞ்சம் அதிகமாவே உதவுரா மாதிரி தெரியுது.

சங்கீதாவுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாமல், ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் கிடைக்காததால், ஒன்றும் பேசாமல் மெளனமாக குனிந்து coffee tumbler மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரம்யா தனது கைகளை சங்கீதாவின் கைகள் மீது வைத்து "என்ன ஆச்சு மேடம், ஏதாவது பேசுங்க.." என்றாள்.

"ஆங்.... ஒன்னும் இல்ல ரம்யா.." - ரம்யா இந்த கேள்வியை எழுப்பிய பிறகுதான் சங்கீதாவின் மணதில் ரகாவின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் நாம் ஏன் இவ்வளவு தூரம் இறங்குறோம்... எதுக்காக risk எடுக்குறோம்?.... அவளுக்கே பதில் கிட்டவில்லை.

நாம் என்னதான் பலருடன் பழகினாலும் யாரேனும் ஒருவர் நம்மையும் அறியாது நம் மனதை ஆட்கொள்வார், அப்படி நிகழ்கையில், அதனை நாம் ரசிப்போமே தவிர ஏன் எதற்கு என்று நமக்கு நாமே கேள்விகள் எழுப்பிக்கொள்ள மாட்டோம், காரணம் நம் மனது அப்படிப்பட்ட ஒரு குழந்தை.

சங்கீதாவின் மனதில் ரகாவின் நினைவுகள் முந்தைய நாட்களை விடவும் இப்போது சற்று அதிகம் கவர்ந்திழுக்க ஆரம்பித்தது உண்மை. அந்த உணர்வுக்கு காரணம் காதல் என்று சங்கீதா எண்ணவில்லை. ஆனால் அவளைப்பொருத்த வரையில் ராகவ் அவளின் வாழ்க்கையில் இன்று ஒரு most special person. அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அதனை ரகசியமாக மனதிலேயே வைத்துக்கொள்ள விரும்பினாலே தவிர யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, ராகவ் உட்பட.

என்ன மேடம், யோசிச்சிகுட்டே இருக்கீங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சிடுங்க மேடம். sorry - என்று பாவமாய் பேசினாள் ரம்யா.


ச்ச ச்ச.. அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லாதடி, நீ எனக்கு best friend என் கிட்ட எந்த formality words ம் உபயோகப்படுத்தாத. please - என்று request செய்தாள் சங்கீதா.

ராகவக்காக இல்லாட்டியும் எனக்கே இதுல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு curiosity இருக்குடி அதான் கொஞ்சம் சுவாரஸ்யம் காமிக்குறேன்.

சரி சரி, but ஏதாவது problem னு வந்தா என்னை யாரோன்னு நினைச்சி ஒதுக்கிடாதீங்க. உங்க முயற்சியில நானும் ஏதாவது பங்கு எடுத்துகனும்னா மறைக்காம சொல்லுங்க சங்கீதா. - உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினாள் ரம்யா.

கண்டிப்பாடி, உன்னை விட்டா எனக்கும் வேற யாரிருக்கா?

சரி சரி, topic change.... என்னோட missed calls கூட பார்க்க முடியாத அளவுக்கு அப்படி என்ன பேசினீங்க சஞ்சனா கிட்ட?

ஒன்னும் இல்லைடி, அவ அவளோட கதைய சொன்னா, எனக்கு கொஞ்சம் கேட்க கஷ்டமா இருந்துச்சி, ஆனாலும் அந்தப்பொண்ணு மேலயும் தப்பிருக்கு.

என்ன சொல்லுறீங்க?

சஞ்சனா ரகாவின் காதல் பற்றி, அவளின் பிறந்தநாளுக்கு ராகவ் அழைகாததுக்கு சஞ்சனா அவன் மீதுள்ள கோவத்தில் அனாவசியமாக விட்ட வார்த்தைகள் என்னென்ன!!, அதன் விளைவு எதில் சென்று முடிந்தது என்றும், mithun ராகவ் competition, மற்றும் mithun சந்தர்ப்பத்தை பயன் படுத்தி எப்படி ராகவ் சஞ்சனா காதலில் விளையாடினான் என்றும். கடைசியில் இதெல்லம் தெரிந்திருந்தும் ராகவ் எப்படி சஞ்சனாவிடம் பெரிய மனதுடன் பழகி, அவளின் தந்தைக்கு உதவி செய்து மறு வாழ்க்கை அளித்தான் என்றும், பிறகு எப்படி சஞ்சனாவுக்கு பாதுகாப்பு குடுத்து வருகிறான் என்று அனைத்தையும் வெகு விரைவாக அதே சமயம் தெளிவாக ரம்யாவுக்கு எடுத்துரைத்தாள் சங்கீதா.

அனைத்தையும் கேட்ட பிறகு, ரம்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் "only one word madam" என்றாள்.

என்ன? - மென்மையாக சிரித்து, புருவங்களை உயர்த்தி தலையில் கை வைத்து சாய்ந்தவாறு ரம்யாவைப் பார்த்து கேட்டாள் சங்கீதா.

Raghav... - என்று one word answer சொல்வதுபோல பேசினாள் ரம்யா..

ஹாஹாஹ், என்னடி ரகாவ்க்கு? - மீண்டும் மெலிதாக சிரித்தாள் சங்கீதா.

he is chanceless madam.. very rare personality. உங்க கிட்ட இருக்குற ஒரு விஷயம் அவன் கிட்டயும் இருக்குறா மாதிரி தோணுது.

ஹ்ம்ம் சொல்லு என்னன்னு கேட்ப்போம்? - சுவாரஸ்யமாக கேட்டாள் சங்கீதா..

வெளித்தோற்றதுல மட்டும் personality யான ஆள் னு சொல்ல முடியாது, மனசலவிலும் ஒரு கம்பீரம் இருக்கு.

இதை ரம்யா சொல்லும்போது சங்கீதாவின் முகத்தினில் என்றும் தோன்றாத ஒரு வினோத சந்தோஷம் மலர்ந்தது.. அவள் சிரிக்கவில்லை ஆனால் புன்னகைத்தாள், கண்களும் ரம்யாவை பார்க்கவில்லை, வேறு என்கோதான் பார்த்தது. பொதுவாக தன்னை யாரேனும் ஒரு சின்ன வரியில் புகழ்தால் கூட மனது சத்தம் போடாமல் உள்ளுக்குள் சிறிதாக துள்ளிக்குதித்து ஆடும். அதே சமயம் நம் மனது மிகவும் மதிக்கும் ஒருவரை நம்முடனே ஒப்பிட்டு பாராட்டும்போது மணம் அனுபவிக்கும் அந்த ரகசிய ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் அது நம் முகத்தினில் ஒரு பொலிவை உண்டாக்கும். அந்தப்பொளிவை ரம்யா சங்கீதாவின் முகத்தினில் கண்டாள். ஆனால் சங்கீதாவிடம் அதைப்பற்றி எதுவும் கூரிக்கொள்ளவில்லை, மேலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.



படையப்பா படத்துல வர்ற பாட்டுல ஒரு லைன் வரும் அதுதான் நியாபகம் வருது மேடம்..

ஹ்ம்ம்.. சொல்லு என்ன லைன்?

"ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்.."

ஹாஹாஹ்.. வாலு செம timing sense டி உனக்கு.. - இயற்கையாகவே முகத்தில் இருக்கும் பொலிவுடன் அவள் மென்மையாக சிரிக்கையில் அந்த சிரிப்பு அவளுடைய முகத்துக்கு இன்னும் அழகைக் கூட்டியது. அதை கவனிக்க தவறவில்லை ரம்யா.

இருவரும் இப்போது காலியான coffee கப்பை எடுத்துக்கொண்டு wash area பக்கம் நகர்கையில், சங்கீதா ஏதோ நினைவில் அவளது coffee கப்பை சாப்பாடு தட்டுகள் wash பண்ணும் இடத்திற்க்கு எடுத்து சென்றாள். இதை கவனித்த ரம்யா, "மேடம், எங்க போறீங்க? இங்க வாங்க..." என்று ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்தி சிரித்துக்கொண்டே கேட்க்கையில் சங்கீதாவுக்கு சற்று சந்கோஜமானது (embarassed).

இதை சமாளிக்க "ஒஹ்ஹ்.. sorry, சஞ்சனா பேசினதை யோசிச்சேனா அதான்... - என்று ரம்யாவை ப் பார்க்காமல் மெதுவாக தரையை ப் பார்த்து சிரித்துக்கொண்டு சரியான இடத்தில் coffee கப்பை வைத்து விட்டு எதுவும் பேசாமல் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் சங்கீதா.

என்ன ஆச்சு, ஏன் இப்படி நான் phone மறந்து வெச்சிட்டு வந்தேன்? ஏன் இப்படி நான் coffee கப்பை வேற எங்கேயோ எடுத்துக்குட்டு போறேன்? என்று தன்னை த் தானே லேசாக கடித்துக்கொண்டாள்.

ரம்யா சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கீதாவின் இருக்கைக்கு வந்தாள்.

இந்தாங்க மேடம்..

என்னதுடி? ஒஹ் Femina வா, thanks டி, நானே இந்த மாசத்துக்கான edition வாங்கனும்னு இருந்தேன், but நீயே வாங்கிட்ட.

தெரியும் நீங்க படிப்பீங்க னு, அதான் வர வழியில வாங்கினேன். பொறுமையா படிச்சிட்டு தாங்க மேடம். ஒன்னும் அவசரம் இல்ல. இந்த edition ல soch brand sarees collection superb மேடம்.... செம கலக்கலா இருக்கு, அதான் வாங்கினேன். நடு பக்கதுல இருக்குற சில models பார்க்குரதுக்கும் உங்களை மாதிரியே இருந்தாங்க, I mean முகதளவுல சொல்லல, இடுப்பளவுல... ஹாஹாஹ் - என்று தன் இடுப்பின் இரு ஓரங்களிலும் கைகளை அகலமாக சுத்தி காமித்து சங்கீதாவிடம் கிண்டலாக கூறினால் ரம்யா.

ஏய்ய் வாலு, போதும் அடங்கு, இது bank, யாரவது பார்க்கபோறாங்க.

சரி சரி பொறுமையா பார்த்துட்டு தாங்க.

சரி டா..

புத்தகத்தை வாங்கி தன் மேஜையின் மீது வைத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேலையில் ஆழுந்து இருந்தாள். பிறகு சற்று relax செய்து கொள்ள ரம்யா குடுத்த Femina புத்தகத்தை எடுத்து புரட்டினாள். மேல் அட்டையில் "This is special edition for working women" என்று போட்டிருந்தது. "Interesting..." என்று மனதுக்குள் லேசாக முனுமுனுத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள். ஒரு பக்கத்தில் "All about Relationships, Dating & healthy sex life" - என்று ஒரு topic இருந்ததை ப் பார்த்து ஆவலுடன் படிக்க ஆரம்பித்தாள். அதில் பலர் தங்களது உருவுகள் பற்றிய கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதில் சில கேள்விகளை பார்த்தாள் சங்கீதா..அதில் இரண்டு கேள்விகள் அவளது மனதை லேசாக்கியது.


முதல் கேள்வி: கேட்பவர் மல்லிகா, வயது 37 ஆழ்வார்பேட்டை, சென்னை..

கணவன் மனைவி உறவுக்குள் பல சண்டைகள் வரும் போகும். ஆனால் எப்போதுமே நான் வைத்ததுதான் சட்டம் என்கிற வகையில் எதற்கெடுத்தாலும் சண்டை மட்டுமே போடுவேன் என்பதுபோல் கணவர்கள் நடந்துகொண்டால் ஒரு அளவுக்கு மீறி விட்டுக்குடுத்து போவதற்கு மணம் ஒத்துழைக்க வில்லை. பல முறை யோசித்து விட்டேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு ரெண்டு குழந்தைகளும் உண்டு, வேலைக்கு சென்று குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. என் கணவருடன் நடக்கும் வாக்குவாதத்தில் மணம் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறது, உண்மையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பதில்: இது இந்திய பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு பெண்களுக்கு இன்னும் அதிகமாக வரக்கூடிய ப்பிரச்சினை தான், உங்களின் மணது குடும்பத்தில் அனைத்தையும் கட்டிக்காப்பாத்த வேண்டும், இல்லையென்றால் அனைத்தும் சரி இல்லாமல் போய்விடும் என்று சற்று அளவுக்கு அதிகமாகவே குடும்பம் மீது அக்கறை கொண்ட மணது. அதில் பயபக்தியுடன் செயல் படுவீர்கள். அதே சமயம் இதற்கு நேர்மாறாக வாழ்க்கையில் மிகவும் சௌகரியம் வேண்டும் என்று எண்ணும் மனது ஆணுக்கு. அடிப்படையில் இந்த இரு குணாதிசயம் தான் பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணம். அவ்வப்பொழுது சண்டை போடும் கணவனை குடும்ப பெண்களால் சமாளிக்க முடியும். எப்பொழுதுமே விட்டுக்குடுத்து போகும் மனைவியிடமும் சலிக்காமல் சண்டை போடுகிறார்கள் என்றாள் அதற்க்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்க வாய்பிருக்கிறது. அது வெளியில் மனைவியிடம் கூற விரும்பாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கும் Inferiority complex ஆகவும் இருக்கலாம். தாழ்வு மனப்பான்மைக்கு காரணம் வளர்ப்பு முறை, அதை சீர்திருத்துவது உங்களுக்கு மிகவும் கடினமானது. சில பெண்கள் தங்களிடம் தான் ஏதோ குறை இருக்கிறதோ என்று எண்ணி தங்களை காரணமே இல்லாமல் கணவனுக்கு எப்பொழுதும் அடிமையாக வாழ்வதுதான் correct என்று எண்ணிக்கொள்வார்கள், ஆனால் அது தவறு. எப்போதுமே உங்களின் சுயகௌரவத்தை விட்டுக்குடுக்காமல் உங்களை நம்பி வாழ்வதுதான் நல்ல திடமான வாழ்க்கையை குடுக்கும். இப்படி எப்பொழுதுமே சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் கணவர்களுக்கு மணதினில் நீங்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்கிற பயமும் இருக்கும்!! உங்களை ப் போன்ற பெண்கள் கணவன் கூறும் கடும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மணதை அதிகம் அடக்கி வைக்காமல் மணதில் பட்டதை வார்த்தைகளாக உங்கள் கணவரிடம் வெடித்து விடுவதும் நல்லதே. ஏன் என்றால் அதிகம் அடக்கி வைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும் (Low blood pressure) வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் எந்த நேரத்தில் எந்த இடத்தினில் நீங்கள் மயக்கம் போட்டு விழுவீர்கள் என்று சொல்ல முடியாது. மண அழுத்தம் (Depression) அதிகரிப்பதால் இது போன்ற அபாயங்கள் நிகழும். எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், உள்ளுக்குள் எழும் சிறு சிறு சந்தோஷங்களுக்கு இடம் குடுங்கள். எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லை என்றால் இரு குழந்தைகளுடன் சேர்த்து மூன்றாவதாக மண வளர்ச்சி குன்றிய இன்னொரு குழந்தை உள்ளதென்று நினைத்து வாழ்கையை நடத்துங்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமென்றால், அதற்கு முதலில் அவர்களைப் பார்த்துக்கொள்ள உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதை சரியாக வைத்துக்கொள்ள உங்களின் மனதை நீங்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். All the best... - இந்த பதிலை படித்து முடித்த பிறகு தன் தோளில் லேசாக தட்டிக்கொண்டு "you are leading a correct life sangeetha...." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


கேள்வி இரண்டு: கேட்பவர் சந்தோஷினி, வயது 34, மயிலாப்பூர்: சென்னை..

எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றது. கணவருடன் மனது அதிகம் ஒத்து போகவில்லை, வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடும் அதிகம் ஆகி வருகிறது. நம்முடைய சமூக சூழ்நிலையில் என் கணவரை நான் விவாகரத்து செய்தால் பள்ளிக்கு சென்று படிக்கும் எனது குழந்தையின் எதிர்காலம் அதனால் பாதிக்கும் என்கிற எண்ணத்தில் என்னால் அந்த முடிவுக்கு வர முடியவில்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் உயர் பதவியில் வகிக்கிறேன். எனக்கு வேலையின் காரணமாக சில மேல் அதிகாரிகளுடன் பழகும் தருணம் அதிகம் இருக்கும். அவர்களுடன் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அமையும். அப்போது கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களாக ஒரு நபருடன் என்னையும் அறியாது எனக்கு அவர் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்ப்படுவதை உணர்ந்தேன். மனதுக்குள் எங்கே அது காதலாக மாறிவிடுமோ என்று ஒரு விதமான பயமும் வந்தது. இவரை ப் பார்க்க பார்க்க எனது கல்லூரி காலத்து காதலன் தான் நினைவுக்கு வருகிறான். இதனாலேயே சில நாட்கள் அவருடன் பேசுவதை நான் தவிர்த்து வந்தேன். ஆனால் அது ஒரு விதத்தில் எனது வேலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சமும் எழுகிறது. அதே சமயம் அவர் மீது என் மனதில் எழும் ஈர்ப்பை நான் குறைக்க வேண்டும் என்று அதிகம் எண்ணும் போதுதான் அவருடைய சிந்தனைகள் என் மனதில் இன்னும் ஆழத்துக்கு செல்கிறது. என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்துவிட்டேன், ஒன்றும் பலன் அளிக்கவில்லை, இதற்கு என்னதான் வழி? - ( இந்த கேள்வியை படிக்க படிக்க சங்கீதாவின் மனதில் ரகாவின் முகம் நொடிக்கு ஒரு முறை ஓடிக்கொண்டே இருந்தது. )

பதில்: இந்த விஷயத்துக்கு நீங்கள் ஏன் இப்படி பயப்படனும்னு தெரியல. இது ரொம்ப சாதாரணமான விஷயம். ஒரு விதத்துல உங்களை பாராட்டனும். பத்து வருஷம் ஆகி உங்க மணசு ஒத்து போகாம இருந்தும் விவாகரத்து செய்யாமல் குழந்தைகளுக்காக அவருடன் இணைந்து இருக்கீங்க. இதுக்கு மத்தியில உங்க மனசுக்கு இதமாகவும், ஒத்து போகக்கூடியவராகவும் ஒருவர் உங்கள் வாழ்கையில் வருகிறார் என்றால் அவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை மிகவும் அடக்காதீர்கள். இதைத்தான் நான் உங்களுக்கு முன் கேள்வியை எழுப்பிய மல்லிகாவுக்கும் கூறி உள்ளேன். நீங்கள் சொன்னா நபருடன் பழகுவதால் உங்களுக்கு மண நிம்மதி கிடைக்கும் என்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. உலகளவில் இன்றைக்கு பெண்கள் எவ்வளவோ விஷயங்களை balanced ஆக செய்கிறார்கள். அதில் discreet relation எனப்படும் (ரகசிய உறவு) ம் ஒன்று. அதாவது, குடும்பம், வேலை, கணவன், குழந்தைகள் என்று இருக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷங்கள், விருப்பு வெறுப்புகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது அவசியம், அந்த வகையில் இன்றைக்கு இந்த வகையான Discreet relationship சற்று முதிர்ச்சி அடைந்த பெண்கள், தங்களுடைய இளம் வயதில் இழந்த சில சுகங்களை எண்ணி அதிக Regrets உடன் வாழும் போது மனோ தத்துவ ரீதியாக அது தேவைப்படுகிறது. அதிகமாக உங்கள் மண உணர்வுகளை அடக்கி வைப்பதன் காரணமாக நீங்கள் உங்களின் உண்மையான தனித்தன்மையை இழந்து உங்களையே உதாசீனப்படுத்துகிரீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு உணர்வையும் அதிகம் அடக்குவதால் பிற்காலத்தில் பிரச்சினை தான் மிஞ்சும். எனவே நீங்கள் மனதளவில் ஒரு நபரை விரும்புகிறீர்கள் என்றால் அதை எண்ணி பயம் கொள்ளவேண்டாம். மனது ஈர்க்கப்படுவதும் அல்லது காதல் வயப்படுவதும் எந்த வயதிலும் யார் மீதும் வரலாம். வீட்டிலேயே புழங்கி இருக்கும் பெண்களுக்கு வெளியுலகில் மற்ற நபர்களுடன் பழகும் வாய்ப்புகள் கம்மி. அப்படிப்பட்ட மங்கைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைவதில்லை. ஆனால் நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள், பலரை சந்திக்கிறீர்கள்,
அதில் உங்களின் மணம் ஈர்க்கப்படும் ஒருவரோடு காதல் வயப்பட்டால் அதில் தவறு ஏதும் இல்லை. இந்த உலகத்தில் நம் கண் முன் வாழ்பவர்கள் மட்டும் சந்தோஷமாக வாழ்வதை பார்க்க நாம் பிறக்க வில்லை, நாமும் சந்தோஷமாக வாழத்தான் பிறந்திருக்கிறோம். அதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சந்தோஷம் தரும் எந்த ஒரு விஷயத்தையும் தகுந்த safety measures உடன் செய்து அதே சமயம் அது உங்களுக்கு மண நிம்மதியும் தருமேயாயின் please go ahead. Dont give any second thoughts about it & start enjoying your life.- இது போன்ற கேள்வி பதில்களை இது வரையில் சங்கீதா அவ்வளவு முக்கியத்துவன் குடுத்து கூர்ந்து கவனித்து Femina இதழில் படித்ததில்லை. இன்றைக்கு ஏன் படித்தாள் என்றும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எண்ணம் அவளது மனதில் இந்த க் கேள்விகளை படிக்க தூண்டியுள்ளது. படித்து முடித்த பிறகு சந்தோஷினிக்காக இந்த பதிலை மெளனமாக சங்கீதாவும் மணதில் அமோதித்தாள்.



No comments:

Post a Comment