Saturday 31 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 17

"பார்தியாடா? அவளே சொல்லிட்டா?... அப்படின்னு சொல்லி mithun சிரிக்க அதுல ஏதோ வில்லத்தனம் இருக்குறதா தெரிஞ்சுது.. உடனே நான் mithun னை ப் பார்த்து ஏன் இப்படி பேசுற?.. நேத்து நடந்ததை எல்லாம் நீ ராகவுக்கு சரியா புரிய வெச்சியா? னு கத்தினேன்.. இப்போவும் பதிலுக்கு சிரிச்சான்.. அப்பதான் எனக்கு தெரிஞ்சிது அவன் ரகாவ் மனச நோகடிக்க என் காதலை பலியாக்கி என் வாழ்க்கைல விளையாடி இருக்கன்னு.. மறுபக்கம் ராகவுக்கு முகம் சிவந்து இருந்துச்சி... ஆனாலும் ரொம்ப controlled ஆக இருந்தான்.

டேய் இவளைப்போய் நம்புறியேடா.... இவ ஒரு தெவு... - அப்படின்னு மிதுன் சொல்லி முடிக்குரதுகுள்ள ராகவ் அவன் வாயிலேயே விட்டான் பாருங்க ஒரு குத்து, அந்த bastard வாயில இருந்து அப்படியே ரெண்டு பல்லு கீழ விழுந்துச்சி.
ராகவ் அவன் கைல இருந்த bracelet இழுத்து கை விரல்ல வெச்சி மடக்கி அந்த பொருக்கியோட மூஞ்சில குத்து குத்து குத்து னு விட்ட அந்த நாளுக்கு அப்புறம் ராகவ் என் பக்கம் திரும்பி கூட பார்க்கல. அந்த ராஸ்கல் அன்னிக்கி அடி வாங்கினதுக்கு அப்புறம் எங்கே போனான்னு எனக்கும் தெரியல.

அனைத்தையும் கூறிய பிறகு சஞ்சனாவின் கண்களில் மட்டும் அல்ல, சங்கீதாவின் கண்களிலும் கண்ணீர் லேசாக பணித்தன.. இருவரும் லேசாக விசும்ப, சங்கீதா தனது hand bag ல் இருந்து tissue papers எடுத்து சஞ்சனாவின் கண்களை துடைத்து விட. இது வரையில் வந்த கண்ணீரை விடவும் இப்போது அதிகமாக கண்ணீர் வந்தது சஞ்சனாவுக்கு.. காரணம் வலியுடன் இருக்கும்போது கூட மனதை ஏமாற்றி முட்டாளாக்கி விடலாம் ஆனால் அந்த வலிக்கு யாரவது ஆதரவு தரும்போது அந்த வலி இரு மடங்காகும்.

ஹேய்... its okay டா... என்ன இது.. ஹ்ம்ம் எப்போவும் சிரிச்சிகுட்டே இருப்பியே... சிறி சிறி.. come on ..இல்லைனா நான் அப்புறம் உன் கூட பேசவே மாட்டேன்.. - சொல்லும்போது சந்கீதவுக்கே மணம் கனத்து விட்டது.

சரி இவ்வளவு ஆன பிறகு எப்படி நீ ராகவ் கிட்ட இன்னும் இருக்குற?

He is Gem of a person madam.. - முகத்தில் இப்போது கண்ணீர் நின்று சற்று உற்சாகமாக பேசத்தொடங்கினாள் சஞ்சனா.

ஒஹ் ஏன் அப்படி சொல்லுற?

இவ்வளவு விஷயம் நடந்த ப் பிறகு, அன்னிக்கி சாயந்தரம் என் கிட்ட வந்து "உன் மனசு விரும்புரவங்க யாரா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிக்கலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் ன்னு சொன்னான்" அவனுக்கு நடந்ததை எல்லாம் ஒரு தடவ சொல்லலாம் னு மணசு ஏங்குச்சு, ஆனால் thats too late னு தோணுச்சி. தெரிஞ்சே எல்லாத்தையும் இழந்த பிறகு அவன் கிட்ட என்னை ஏத்துக்கோ னு எந்த முகத்தை வெச்சிக்குட்டு அவன் கிட்ட சொல்ல முடியும், so நானே பேசாம விட்டுட்டேன். அவன் பேசிக்குட்டு இருக்கும்போது தான் என் வீட்டுல இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் போன் ல வந்துச்சி. அது என்னென்னா என் அப்பாவுக்கு இருதயத்துல சிகிச்சை பண்ணனும், அப்படி இல்லைனா உயிருக்கே பிரச்சினை னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் இடி இடிச்சா மாதிரி இருந்துச்சி. அப்போதான் ராகவ் உடனே இங்கே இருந்து வண்டிய அனுப்பி என் தந்தைய கூட்டிட்டு வந்து private hospital ல சேர்த்து கிட்டத்தட்ட 4 lakhs க்கு மேல செலவு செஞ்சு இன்னைக்கு மறு உயிர் குடுத்து இருக்கான் மேடம்.. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட ஒரு காசு கூட கேட்கல.

இன்னொரு பக்கம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வெச்சி அவன் கூட சேரலாம் னு திரும்பவும் நினைச்சேன் ஆனா முழுக்க முழுக்க தப்பு என் மேலதான் இருக்குனு மணசு உறுதியா சொல்லுச்சி. அதே சமயம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் னு அவனுக்கும் கட்டாயம் இல்லையே!! அவனுக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல பொண்ணா பார்த்து தேடிக்கட்டும் னு நானும் நினைச்சி விட்டுட்டேன்.


அது மட்டும் இல்லாம மத்த unit ல எனக்கு வேலைக் குடுக்காம அவனுக்கு secretory யா வேலை பார்க்குரதால மத்த இடத்துல என் காது பட யாரும் தப்பாவும் பேச மாட்டாங்க இல்ல?.. அதான் எனக்கு இந்த designation, personal seceratory of Raghav.

he is the one saving me madam, but I was a cheat... னு அழுதுக்குட்டே சொல்ல - சங்கீதாவின் மனதில் ராகவ் மீது மரியாதையுடன் சற்று அன்பும் கலந்து கூடியது..

சொல்லுறேன்னு தப்பா நினைசிகாத சஞ்சனா.. நீ தப்பு பண்ணது என்னவோ உண்மை தான். ஆன செஞ்ச தப்ப நீ உணர்ந்து இருக்கே... so சீக்கிரமா ஒரு matrimony ல உன் picture போட்டு ஒரு வரன் தேடலாம். okva? .. - என்றாள் சங்கீதா..

அதெல்லாம் வேண்டாம் மேடம்... தானா அமையும்...

பாருங்க.. சில வருஷமா அழுகைனா என்னன்னு தெரியாத என்னை திரும்பி அழ வெச்சிட்டீங்க... நான் எப்போவுமே confused அ இருந்தாதான் சிரிச்சிக்கிட்டே நல்லா இருப்பேன் மேடம்.. ச்சா போங்க... என்று சஞ்சனா சொல்ல சங்கீதா அவளின் தலையை தன் மீது சாய்த்து அவளின் தலையை தடவினாள்.

அப்போது டிரைவர் தாத்தா manners தெரியாமல் ஸ்க்ரீனை அனுமதி இன்றி தள்ளிவிட்டு "Bank வந்துடுச்சி மேடம்" என்று சொல்ல, சங்கீதா அப்போது சஞ்சனாவை அனைத்து இதுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது, சரியா?.. என்று சொல்லி க் கொண்டிருந்தாள்....

யோவ் தாத்தா என்ன, நல்ல chance னு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சைட் அடிக்குரியா?... என்று அதட்ட "அய்யோ.. நான் திரும்பிட்டேன் பா சாமி... " என்று சொல்லி டிரைவர் டக்கென திரும்ப சங்கீதாவும் சஞ்சனாவும் ஒரு முறை சத்தமாக சிரித்துக்கொண்டனர்...

சங்கீதா விடை பெறும்போது யாராவது கூட இருந்தால் ஒகே.. யாருமே இல்லாததால உங்க கிட்ட ஒரு அக்கா மாதிரி எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டேன். உங்களையும் சோகம் அடைய வெச்சிட்டேன்.. I am really sorry sangeetha என்று அவள் சொல்ல...

"its okay, are you relaxed now?" என்று அன்பாய் கேட்டுக்கொண்டே ராகவ் குடுத்த பெரிய envelope கவரை மறக்காமல் எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கினாள் சங்கீதா..

"feeling very much relaxed & better sangeetha.." என்று சொல்லி சிரித்தாள் சஞ்சனா..

"bye sangeetha...." கையை மிகவும் வேகமாக அசைத்து சிரித்து காமித்தாள் சஞ்சனா. கூடவே காற்றில் தனது முத்தத்தை இரு விரல்களால் தூவினாள்

"bye da..." - என்று சங்கீதாவும் புன்னகையுடன் அதை ஏற்று விடைபெற்றாள்.

கார் கிளம்பியதும் அங்கிருந்து திரும்பி bank வாசலை நோக்கி நடந்தாள் சங்கீதா. வாசலில் முறைத்துக்கொண்டு சங்கீதாவின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ரம்யா.


அடிக்கும் மதிய வெய்யிலில் பளிங்கு சிலையால் செய்த தேவதை போல நடந்து வந்தாள் சங்கீதா. "இவ எதுக்கு முறைசிகுட்டு நிக்குறா?" என்று மணதில் நினைத்துக்கொண்டே ரம்யாவை நெருங்கினாள் சங்கீதா.

"என்னடி, நீயும் இப்போ ரெண்டு நாளா late அ வர? என்ன நடக்குது? senior manager இல்லை னு கொஞ்சம் குளிர் விட்டுடுச்சா? - என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடிக்க..

"ஹைய்யோ எனக்கு பயமா இருக்குது மேடம்... என்னை வேலைல இருந்து தூக்கிடாதீங்க ப்ளீஸ்" - என்று மிகவும் பயப்படுவது போல பாவனை செய்து சங்கீதாவை நக்கலடித்தாள் ரம்யா.

ஏய் வாலு... போதும் வா உள்ள போலாம்....

ஒரு மனுஷி break போக எவ்வளவு நேரம் wait பண்ணுறேன்னு தெரியுமா? - செல்லமாக கோவித்துக்கொண்டாள் ரம்யா.

"ஹாஹ்ஹா.. அதுக்குதான் இப்படி ஒரு முறைப்பா?" - குழந்தைகள் மிகுந்த கோவத்துடன் இருந்தால் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக இருந்த ரம்யாவின் முகத்தை ப் பார்த்து தனது வாயில் கைவைத்து சிரித்தாள் சங்கீதா..

"நான் கோவப்படுறது அதுக்கு மட்டும் இல்ல"

வேற எதுக்கு?

"phone பண்ணா எடுக்கணும். எத்தனை missed call குடுக்குறது? ஒரு அவசரம்னா பேசத்தானே phone இருக்கு? உக்கும்.." - அழகாக கோவித்தாள் ரம்யா..

ரம்யா சொன்னதைக் கேட்டு, தனது hand bag திறந்து உடனே phone எடுத்து ப் பார்க்கலாம் என்று பார்த்தால் phone இல்லை. "இஸ்ஸ் .. I am an idiot டி, சஞ்சனாவை இன்னைக்கு ப் பார்த்தேனா, அவளோடையும் பேசிக்கிட்டே இருந்ததுல ராகவ் cabin ல என் phone வெச்சதை மறந்த்ட்டேன். sorry dear.... - இரு கண்களையும் இறுக்கி உதடுகளை க் குவித்து கொஞ்சும் விதத்தில் பேசினாள் சங்கீதா.

முதல்ல ராகவ்க்கு phone போட்டு என் phone ஐ பத்திரமா வெச்சிக்க சொல்லனும். ஒரு நிமிஷம் உன் phone குடுடி - என்று சொல்லி உரிமையுடன் ரம்யாவின் கைகளிலிருந்து வெடுக்கென வாங்கி எப்படியோ ஒரு வழியாக நியாபகம் வைத்த எண்களை அழுத்தி ராகவை phone ல் அடைந்தாள் சங்கீதா.


ஹலோ ராகவ்... Sangeetha here.. - பேசும்போது முகத்தில் பளிச் சிரிப்பு.

ஹ்ம்ம்.. சங்கீதா, சொல்லுங்க, have you reached office safely?

ofcourse yaar, thanks a lot.

pleaseee dont mention it sangeetha - அவனுக்கே உரிய வசீகரத்துடன் பேசினான் ராகவ்.

ஆங்... அப்புறம் இன்னொரு விஷயம்.

என்ன சொல்லுங்க.

என்னோட mobile phone நான் உன்னோட cabin ல மறந்து வச்சிட்டேன், அதை நீ கொஞ்சம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோ please, நான் next time meet பண்ணும்போது வாங்கிக்குறேன். sorry to trouble you raghav..

yeah actually you are troubling me a lott & நிறைய சிரமம் குடுக்குறீங்க... - என்று ராகவ் சற்று கிண்டலான குரலில் பேச..

ஹாஹாஹ் ... ஹேய் ராகவ் .... போதும் அடங்கு.. am i troubling you?

பின்ன நீங்க மட்டும் ரொம்ப formality யா பேசுவீங்க, நாங்க பேசக்கூடாதா?


சரி சரி I am sorry yaar.. just please take care of my phone, I will talk to you later, இங்கே ஒருத்தி என்னை பிச்சி தின்னுரா மாதிரி பார்வைல வருத்துக்குட்டு இருக்கா.. - சங்கீதா இப்படி பேசும்போது ரம்யா தனது இடுப்பினில் இரு கைகளையும் வைத்து அழகாக சிரிப்பு கலந்த முறைப்புடன் பார்த்தாள்.

ஹஹா யாரு உங்க friend ரம்யவா? - என்று சொல்லி ராகவ் phoneன் மறுமுனையில் சிரித்தான்..

exactly.... ஹாஹாஹ்.. (தயவுசெய்து உள்ள வாங்க போகலாம் என்று சத்தம் இல்லாமல் கும்பிடுவது போல் செய்கையால் சங்கீதாவுக்கு காமித்தாள் ரம்யா. அதைப் பார்த்து ஏதோ இவள் சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்டு சில வினாடிகள் பேசாமல் இருந்த சங்கீதா இப்போது பேசினாள்..) ஆங்.... correct அ கண்டுபுடிச்சிட்டியே.. சரி சரி, நான் இப்போதிக்கு cut பண்ணுறேன், we will talk later. bye Raghav. - phoneஐ முழுமணம் இல்லாமல் cut செய்தாள் சங்கீதா.

sorry டியர், wait பண்ண வெச்சிட்டேன்.... - என்று ரம்யாவிடம் சங்கீதா சிணுங்கினாள்.

இங்கே ஒருத்தி நிக்குறதும், பேசுறதும் உங்க கண்ணுக்கு தெரியவே இல்ல, அப்படிதானே? சரி சரி நான் அப்புறம் இதைப்பற்றி விசாரிச்சிக்குறேன். அப்புறம், உங்க sorry ய தூக்கி அடுப்புல போடுங்க. முதல்ல break க்கு வாங்க..

இப்போதான் வந்திருக்கேன்டி, வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்துட்டு அப்புறம் break க்கு வரேண்டி. என்று சொல்ல.

"break க்கு வராட்டியும் பரவாயில்லை, கொஞ்சம் உடனே உள்ள வாங்க. ஒரு விஷயம் சொல்லணும்" என்று ரம்யா கூற, சங்கீதா அவலுடன் bank உள்ளே என்னமோ ஏதோ என்று மனதில் எண்ணி விரைந்தாள்.

சங்கீதாவின் இருக்கைக்கு இருவரும் சென்றனர். அப்போது மெதுவாக சங்கீதாவின் காதுக்கு அருகில் வந்து சொன்னாள் ரம்யா.

"usually எப்போவுமே ஒன்னு அவசரத்துக்கு வெச்சிக்குவேன், ஆனா இன்னிக்கி மறந்துட்டேன். உங்க கிட்ட இருக்கா சங்கீதா?" என்று முகத்தை சங்கடமாக வைத்து கேட்டாள் ரம்யா.

அதுவா?... என்று வாய் திறந்து கேட்காமல் புருவத்தை இறக்கி முகத்தால் கேட்டாள் சங்கீதா.


ஹ்ம்ம்.. என்று சற்று கூச்சமாக தலை அசைத்தால் ரம்யா..

உடனே இருபுறமும் பார்த்து விட்டு தனது hand bag திறந்து ஒரு சிறிய brown colour கவரை hand kerchief வைத்து மூடி குடுக்க அதை ப் பொக்கிஷம் போல பெற்றுக்கொண்டாள் ரம்யா..

லேசாக கவரை பிரித்து desk அடியில் வைத்து பார்த்தாள் ரம்யா, seal பிரிக்காத ஒரு ultra thin napkin இருந்தது அதனுள்.

என்னடி? என் மேல நம்பிக்கை இல்லையா?... checking எல்லாம் பண்ணுற? என்று சங்கீதா சிரித்துக்கொண்டே சொல்ல..

ஹைய்யோ.. அப்படியெல்லாம் இல்ல மேடம், என்னை காத்த சாமி நீங்க.. இருங்க வந்துடுறேன்னு சொல்லிட்டு ladies washroom நோக்கி விரைந்தாள் ரம்யா. ரம்யா ஓடுவதை ப் பார்த்து தலையில் கை வைத்து சிரித்தாள் சங்கீதா.

ரம்யா சென்ற பிறகு, Mr.Vasanthan சங்கீதாவின் இடத்துக்கு வந்தார். "சங்கீதா, நேத்துதான் நீங்க approve பண்ண home loan files எல்லாம் review பண்ணேன். கண்டிப்பா returns வரக்கூடிய files ஆக பார்த்து தான் sanction பண்ணி இருக்கீங்க. உண்மையா சொல்லனும்னா எனக்கு நிறைய பாரத்தை குறைக்குறீங்க. கூடவே உங்க salary increment க்கு இந்த annual year performance report ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் மேலதிகாரிங்க கிட்ட பரிந்துரைச்சி ஒரு நல்ல செய்தியை சொல்லுறேன். very impressive work keep it up. - என்று மனதார பாராட்டி விட்டு சென்றார்.

மீண்டும் சங்கீதாவிடம் திரும்பி "இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு IOFI ல ஏதோ award function இருக்குதாம், Mr.Raghav என்னை special invitee list ல add பண்ணி இருக்காரு, நம்முடைய elite customer ம் கூட, so மறுக்க முடியல, அதனால நாளைக்கு நான் bank ல இருக்க மாட்டேன். - என்று சொல்ல..
one whole day function sir? - என்று சங்கீதா கேட்டாள்....

No..no.. it starts by evening 6:00 pm & also நாளைக்கு saturday, so எல்லாருமே கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க, (ஏதோ யோசித்து சில நொடிகளுக்குப்பிறகு ) உங்களை கண்டிப்பா invite பண்ணி இருக்கணுமே? anyways, நீங்க வேணும்னா கூட leave எடுத்துகோங்க, மத்தபடி பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? என்று அக்கறையாய் கேட்க..

நல்லா இருக்காங்க sir.. - என்று பணிவாக சிரித்து பதில் தந்தாள் சங்கீதா..

சரிம்மா நான் வரேன். take care.. - என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார் Mr.Vasanthan.

அவ்வளோ நேரம் மணிக்கணக்குல பேசிட்டு நம்ம கிட்ட சொல்லவே இல்லையே?.. இருக்கட்டும் அடுத்து ஏதாவது phone வராமலா போயிடப்போகுது? அப்போ மடக்குறேன் அவன..!! - என்று மனதில் லேசாக ராகவை கோவித்துக்கொண்டாள் சங்கீதா.

சுமார் பத்து நிமிடம் கழித்து ரம்யா வந்தாள்..

என்னடி? are you feeling alright? - என்று முகம் அசைத்து கைகளால் சங்கீதா கேள்வி எழுப்ப..

கைகளில் நான்கு விரல்களை மடக்கி, கட்டைவிரலை உயர்த்தி success என்பது போல முகபாவனை காண்பித்து மிகவும் பிரகாசமாக சிரித்தாள் ரம்யா?

அருகில் வந்து "சரி வாங்க coffee சாப்பிடலாம்.." என்று அழைக்க தனது mini purse எடுத்துக்கொண்டு ரம்யவுடன் சென்றாள் சங்கீதா..

கான்டீனில் coffee ஆத்தும் ஊழியர் இவர்கள் இருவரும் நடந்து வருவதை ப் பார்த்து உடனே இரண்டு cup coffee யை ஆத்தி குடுத்தார். இதைப்பார்த்த இருவரும் ஒரு நிமிடம் சிரித்து விட்டார்கள். "என்னப்பா கேட்குறதுக்குள்ள குடுத்துட்ட?" என்று சொல்ல....



எத்தினி தடவ வரீங்க? உங்களுக்கு என்ன தேவைன்னு இன்னும் தெரியலைனா நான் இங்கே காபி ஆத்தி என்ன பிரயோஜனம்? - என்று சொல்லி சிரித்தான். coffee யை குடுத்த பிறகு, வலது புறம் கை நீட்டி "உங்க ஜன்னல் seat காலியா இருக்கு அங்கே ரெண்டு பேரு வராங்க அதுக்குள்ள போய் பிடிங்க" என்று அவன் சொல்ல "Thanks ப்பா" என்று சொல்லி விரைந்து சென்று இடத்தை ப் பிடித்தாள் ரம்யா..


No comments:

Post a Comment