Saturday 21 March 2015

சுகன்யா... 66

"இன்னும் எவ்வள நேரம்தான் லைட்டு எரியணும்? எனக்குத் தூக்கம் வருது.. இப்ப லைட்டை ஆஃப் பண்ணப் போறீங்களா இல்லையா?" சிணுங்கினாள் பத்மா.

அன்று மாலை, ராகவன் வீட்டுக்கு வந்ததிலிருந்தே, யதேச்சையாக படுவது போல், நான்கைந்து முறைக்கும் மேலாக, பத்மா தன் இடது மார்பை அவர் மேல் உரசிவிட்டாள். கணவனை உரசியவள் உடனே விலகி கள்ளத்தனமாக தன் கண்களை அகல விரித்து அவரைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள். பத்மாவுக்கு இன்று 'அது' தேவைப்படுகிறது. 'உரசலின்' அர்த்தம் ராகவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ராகவன் தன் மனதுக்குள் எழும் 'அந்த' வேட்க்கையை, பத்மாவின் இடுப்பை மென்மையாகக் கிள்ளி, அவள் புட்டத்தை உரசி, தன் தேவையை அவளுக்கு உணர்த்துவார். இது அவர்களுக்குள் இருக்கும் முப்பது வருட தாம்பத்ய ரகசியம். இன்னும் வாரத்தில் ஒருமுறை இந்த 'உரசலும்', 'கிள்ளலும்' அவர்களிடையில் தவறாமல் தொடர்ந்து கொண்டிருந்தன.


பத்மா தன் கழுத்தை திருப்பி தலையணைக்குள் பாதி முகத்தைப் புதைத்துக்கொண்டு கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் தன் கணவனுக்கு மட்டும் புரியும் அழைப்பிருந்தது. அழைப்பில் அவள் மனதின் ஏக்கமும் வேட்க்கையும் தெளிவாகத் தெரிந்தது. நீண்ட கருமையான அவள் கூந்தல் தலையணையில் படர்ந்து கட்டிலின் கீழ் நழுவிக்கொண்டிருந்தது.

நெற்றியின் நடுவில் மின்னும் குங்குமம், அவள் சிரிப்பில் பொங்கும் சந்தோஷம், முகத்தில் பளிச்சிட்ட பிரகாசம், அவள் கன்னத்தை மெல்லத் தன் உதடுகளால் தீண்ட ஆசை பிறந்தது ராகவனுக்கு. இது என்ன? இத்தனை நாட்களாக இது என் கண்ணில் படவில்லையே? பத்மாவின் நெற்றிக்கு மேல், வகிட்டோரம், ஓரிரண்டு முடி வெள்ளையடிக்க ஆரம்பித்திருந்தது.

வாழ்க்கையின் ஓடும் ஓட்டங்களின் அடையாளம் தானே, நெற்றியில் விழும் சுருக்கங்கள், வாழ்க்கையின் கோடுகள், அதன் தடங்கள் முகத்திலும் உடலிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கின்றனவே? மனதுக்குள் சிரித்துக்கொண்டார் ராகவன்.

அன்று, சிறிய சிறிய சிவப்பு வண்ணப் பூக்கள் சிதறியிருந்த வெள்ளைநிற சேலை கட்டியிருந்தாள் பத்மா. அதே நிறத்தில் மணியால் ஆன முத்துச்சரம் அவள் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கைகளில் கிடந்த செயற்கை முத்து வளையல்கள் கழுத்து மாலைக்கு மேச்சிங்காக கலகலத்துக் கொண்டிருக்க, அவள் வென்னிற ஆடை தேவதையாக கட்டிலில் புரண்டாள். மொத்தத்தில் ராகவன் கண்களுக்கு தன் மனைவி நாலு ஐந்து வயது குறைந்தவளாகத் தெரிந்தாள்.

பத்மாவின் உடல் மல்லாந்திருந்த நிலையில், மின்விசிறியின் காற்றில் அவள் முந்தானை மார்பிலிருந்து எழுந்து பறந்து கொண்டிருந்தது. ரவிக்கையின் விளிம்புக்கு வெளியில், அவளுடைய பூரிப்பான மார்புகள் வெளியில் வந்துவிடுவது போல் ததும்பிக்கொண்டிருந்தன.

ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த ராகவன், பத்மாவின் சிணுங்கலைக் கேட்டதும், தன் இடது கையை அவள் வயிற்றில் தவழவிட்டவர், தோளும் கழுத்தும் சேருமிடதில் தன் உதடுகளை அழுத்தமாக பதித்தார். அவள் பின் கழுத்தில் மெலிதாக துளிர்த்திருந்த வியர்வையால் உண்டான, வாசத்தை தன் நெஞ்சு நிறைய இழுத்தார். மனைவியின் மார்புச் சேலையை மெல்ல விலக்கினார். தன் முகத்தை அவள் ரவிக்கைக்குள் பதுங்கியிருந்த மார்பில் புதைத்துக்கொண்டார்.

தன் மனைவியின் இன்னும் தளராத, கைக்கடக்கமான வாளிப்பான மார்புகள், ராகவனின் கண்களைக் சேர்த்துக் கட்ட 'அம்மா', நீளமாக முனகினார் அவர். தன் மனைவியின் நெருக்கமே, இந்த அளவு சுகத்தை மனசுக்கு குடுக்குதே?

என்ன சுகம்... அப்பப்பா... ஒரு பொம்பளை உடம்புல எல்லையே இல்லாம இந்த அளவுக்கு சுகத்தை பெருமாள் வெச்சிருக்கானே? பத்மாவும் சளைக்காம இத்தனை வருஷமா எனக்கு அள்ளி அள்ளி குடுக்கிறா.. இருந்தாலும் இவ குடுக்கற சுகமும், இன்பமும் எனக்குத் திகட்டலையே? மனதுக்குள் முணுமுணுத்தார், ராகவன்.

"என்ன முணுமுணுப்பு.." பத்மா கிசுகிசுத்தவாறு தன் கணவரின் உடலுடன் நெருங்கி ஒன்றிக்கொண்டாள். ராகவன் அவள் தலைமுடியை ஆதுரத்துடன் கோதி முத்தமிட்டார்.

"என் செல்லம் இன்னைக்கு ரொம்பவே மூடுல இருக்காப்ல தெரியுது?" அவரும் அவள் காதில் கிசுகிசுத்தார். அவர் உதடுகள் அவள் காது மடல்களில் உரசி, அவள் உடலை சிலிர்க்க வைத்தன.

"பத்து நாளாத் தனியா தூங்கறேன்... இது புரிஞ்சும் இவ்வளவு நேரமா என்னத்தையோ படிச்சுக்கிட்டு இருக்கிறீங்க நீங்க?"

"சேச்சே... அப்படீல்லாம் இல்லே.." ராகவன் வேண்டுமென்றே அவள் வயிற்றின் குறுக்கிலிருந்த தன் கையை உருவிக் கொண்டவர், தன் கை கால்களை நன்றாக விரித்து, மல்லாந்து படுத்து மூச்சை நீளமாக இழுத்து விட்டார். கைகளை மடித்து தன் நெஞ்சில் கோத்துக்கொண்டு உடலின் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டார். ஒரு நிமிடத்துக்குப் பின் மெல்ல சொன்னார்.

'பத்து... 'ஐ லவ் யூ' ம்மா.."

"என்னங்க... தீடீர்ன்னு... இப்படி சின்னப் பசங்க மாதிரிப் பேசி என்னைப் புல்லரிக்கவைக்கறீங்க.." பத்மா மல்லாந்து படுத்திருந்த தன் கணவனின் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"பத்து... மனசு சந்தோஷமா இருக்குடீ... என்னோமோ சொல்லணும்ன்னு தோணுச்சும்மா... மனசுல இருக்கறதுதானே உதட்டுல வரும்..." ராகவனின் கைகள் அவள் முதுகை ஆசையுடன் வருடியது.

"தேங்க்ஸ்ங்க.."

பத்மா தன் முகத்தை நிமிர்த்தி தன் கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். வெளியில் பார்த்ததும் புலப்படும், அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அழகும், குடும்பப்பாங்கான முகமும், கருமையான விழிகளும், சிவந்த மெல்லிய உதடுகளும், மகிழ்ச்சியில் பளபளத்துக் கொண்டிருந்தன. வெளியில் புலனாகாத அவள் அந்தரங்கமும் ஈரத்தில் நனைந்து ராகவனின் ஆளுமைக்குத் தயாரக இருந்தது. 


ராகவன் தன் தலைமாட்டில் கிடந்த டிஜிட்டல் ப்ளேயரை எடுத்து அதில் சினிமாப் பாடலை ஒலிக்கவிட்டார். ஜேசுதாஸ் இனிமையான குரலில் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்' என உருக ஆரம்பித்தார்.

"ம்ம்ம்... கிட்ட வாப்பா..." மெல்ல முனகிய பத்மா, தன் கணவனை இறுக்கிக்கொண்டாள்.

தம்பதியர் இருவரும் ஜேசுதாஸின் குரல் தந்த போதையில் மனது லயிக்க அமைதியாக கிடந்தனர். இந்த இருபத்தெட்டு வருஷ தாம்பத்தியத்துல ஒரு நாள் கூட எங்க நடுவுல பெரிசா எந்த உரசலும் வந்ததில்லை... இது இறைவனோட ஆசீர்வாதம்தானே? பத்மா தன் மனதுக்குள் உவகை கொண்டாள்.

"பத்து... ஒருத்தனுக்கு பொண்டாட்டி அழகா அமைஞ்சு, அவளும் அவனை முழுமையா நேசிக்கறவளா இருந்துட்டா சொல்லவே வேணாம்... அவன் வாழ்க்கை படு ஜாலியா இருக்கும், இந்த ராகவன் குடுத்து வெச்சவன், இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு வாழ்க்கை குஷியாக போவுது..." மனதில் நிறைவுடன் ராகவன் பேசிக்கொண்டிருந்தார்.

"அப்ப நான் அழகுன்னு சொல்றீங்களா...?" பத்மா தன் மார்பை அவருடைய மார்பில் அழுத்தமாக இழைத்தாள். அவள் உடலில் சூடு ஏறிக்கொண்டிருந்தது. அந்தரங்கத்தில் ஈரம் பெருகி தொடையை அடித்தொடை நனையத் தொடங்கியது.

"அழகு என்னம்மா அழகு... அது ஒடம்போட நின்னு போயிடும்... உன் மனசு, உன் அன்பு, உன் பாசம், உன் கனிவானப் பேச்சு இந்த அழகெல்லாம்தான் என்னை உங்கிட்ட கட்டிப் போட்டு இருக்குது.?" ராகவன் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள், பத்மாவின் பின் புறங்களில் ஏறி இறங்கின.

"அப்ப ஒடம்பால நான் உங்களுக்கு பொருத்தமில்லையா?"

"ம்ம்ம்.. புரியலே எனக்கு...?"

"ச்ச்சொல்ல்லுங்கன்னா... 'பொருத்தம் உடலிலும் வேணும்ன்னு' இப்ப ஜேசுதாஸ் பாடீனார் இல்லையா?"

"சொன்னா கோச்சிக்க மாட்டியே..?" ராகவனின் உதடுகள் பத்மாவின் ரவிக்கையில் விம்மிக்கொண்டிருந்த இடது மார்பின் மேல் படர்ந்து அதைக் கவ்வின.

"நான் கோச்சிக்க மாட்டேன்... ஆனா உங்க மனசுல இருக்கறதை நீங்களும் உண்மையாச் சொல்லணும்.." பத்மா தன் மார்பை வெறியுடன் அவர் உதடுகளில் உரசினாள். ராகவனின் வாய் எச்சிலால் அவள் ரவிக்கை இலேசாக ஈரமாக ஆரம்பித்தது.

"கல்யாணம் ஆன புதுசுல, உன் 'முலைங்க' ரெண்டும் பெரிசா இல்லியேன்னு நான் கொஞ்ச நாள் ஃபீல் பண்ணியிருக்கேன்..." அவர் தயக்கத்துடன் சொன்னவர், பத்மாவின் ரவிக்கைக் கொக்கிகளை ஒன்றன் பின்னர் ஒன்றாக வேகமாகக் கழட்ட ஆரம்பித்தார்.

"ம்ம்ம்.. சின்னது போதலன்னா, இப்ப எதுக்கு என் ரவிக்கையை வேக வேகமா அவுக்கறீங்க...? பொய்யாக அவர் பிடியில் முரண்டினாள், பத்மா.

"நீதானே கேட்டே... உண்மையைச் சொன்னா இப்ப ஏன் திமிறிக்கிட்டு போறே?"

ராகவன் சட்டென எழுந்து உட்க்கார்ந்து, பத்மாவை இழுந்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகத்தை நிமிர்த்தி, இதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டார். அவள் முதுகில் தன் மார்பை அழுத்தி ஒட்டிக்கொண்டார். பத்மாவின் இடுப்பில் ராகவனின் ஆயுதம் இடித்துக்கொண்டிருக்க, கைகள் அவள் முலைகளை இதமாக தடவி விட்டுக்கொண்டிருந்தன.

"ஆரம்பத்துல என் மாரு பெரிசா இல்லேன்னு உங்களுக்குத் தோணிச்சு... இப்ப...?"

"பத்மா... அப்ப எனக்கு வயசு முதிர்ச்சி இல்லேடீ; இளமையில கண்ணு ரெண்டும் கொஞ்சம் இங்க அங்கன்னு அலைஞ்சுகிட்டு இருந்தது; எதிர்ல வர்ற பொம்பளை மாரை உத்துப் பாத்து உன் சைசோட ஒப்பிட்டு பாத்ததென்னவோ உண்மைதான்..."

"ம்ம்ம்...அப்ப நீங்களும் திருட்டு மாங்கா அடிச்சிருக்கீங்க.." பத்மா நகைத்தாள்.

"கண்ணாலத்தான் அடிச்சிருக்கேன்... கையால தொட்டது உன் மாங்காய்களை மட்டும்தான்.."

"கொறையா இருக்கா மனசுக்கு...?"

"சத்தியமா இப்ப இல்லே..." அவர் கை அழுத்தமாக அவள் மார்புகளை வருடிக்கொண்டிருந்தது.

"ம்ம்ம்ம்..."

"உன் மாரோட சின்ன சைசு மனசுக்கு ஒரு கொறையாத் தோணுச்சு... மெள்ள மெள்ளப் புரிஞ்சுது; சின்னதோ... பெரிசோ.. அதுங்க நம்ம ரெண்டு பேருக்கும் குடுக்கற சுகம் மட்டும் ஒண்ணுதான்னு... எல்லாத்துக்கும் மேல சுகம் உடம்புல இல்லே; மனசுலதான் இருக்கு..."

"நல்லாப் பேசக் கத்து வெச்சிருக்கீங்க..." பத்மாவின் கை கணவரின் வேட்டிக்குள் நுழைந்தது.

"விஷயம் புரிஞ்சதும் என் மனசு நெறைஞ்சு, உன் கிட்ட நான் சந்தோஷமா இருக்கேன்..."

"ப்ஸ்ஸ்ஸ்ஸ்... மொத்தமா அவுத்துடுங்களேன்...” முனகல் அதிகரிக்க, ராகவன் குசுகுசுவென பேசினார்.

"பத்மா, இப்ப உன் சின்ன சின்ன மொட்டுக்களோட துணையிலத்தான் நான் காமனை ஜெயிச்சுக்கிட்டு இருக்கேன்.." ராகவன், தன் துணையின் பிரா கொக்கிகளை 'பட் பட்' விடுவித்துக் கொண்டிருந்தார்.

"மெதுவாங்கா... ரவிக்கையை கிழிச்சிடுவீங்க போலருக்கே..."

"கொல்றேடீ... நீ இன்னைக்கு,” மனைவியின் கழுத்திலும், தோளிலும் மாறி மாறி முத்தமிட்டார், ராகவன்

"எனக்குத் தூக்கம் வருதுங்க..!" பத்மா பொய்யாக சிணுங்கினாள். சிணுங்கியவள், அவர் மடியிலிருந்தபடியே, முகத்தை திருப்பி அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் முகவாயைக் கடித்தாள்.

"என்னமோ துணையோட ஜெயிக்கறேங்கறீங்க... ஒரே கவிதை நடையில பேசறீங்க இன்னைக்கு..." தன் உதடுகளை கணவரின் இதழ்களோடு பொருத்தி முத்தமிட்டாள்.

"உன் துணையோடத்தானே நான் 'காமனை' வெல்ல முடியும்.. அதுக்காகத்தான்..." அவர் பேச்சை முடிக்காமல் சிரித்தார்.

"அதுக்காகத்தான்...?"

"விளையாடறதுக்கு மைதானத்தை தயார் பண்றேன்... அவள் இடுப்பிலிருந்த புடவையை உருவி அவிழ்த்த ராகவன், கள் வெறி கொண்டவராக சிரித்தார். சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தை நக்கினார்.

"சரியான வெக்கம் கெட்ட நாய்க்குட்டி..." அவள் அவர் கன்னத்தை அழுத்தி கிள்ளினாள்.

"வலிக்குதுடி... எல்லா ஆம்பளை நாய்க்கும் ஒரு பொட்டை நாய்ன்னு பெருமாள் படைச்சுத்தான் அனுப்பியிருக்கார்..."

"சே...சே.. அசிங்கமா பேசாதப்பா... கட்டில்ல இருக்கும் போது பெருமாளை ஏன் இழுக்கறே..." பத்மா திரும்பி வெறியுடன் தன் மார்பை அவர் மார்பில் உரசினாள். ராகவன் அவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

"இன்னைக்கு மன்மதன் கிட்ட நீங்க சண்டை போடறதுக்கு என் பாவாடையை கிழிச்சே ஆகணுமா?"

பத்மா தன் விழிகளை மலர்த்தி ஆசையாக சிரித்தாள். தன் கணவனின் அந்தரங்க அன்பையும், சுகத்தையும் ருசிக்க துடித்தாள். அவள் தன் உடலையும், மனதையும் நன்றாகப் புரிந்து கொண்டவனின் உதடுகளை தன் வாயால் வெறியுடன் கவ்வி முத்தமிட்டாள். தன் பாவாடை முடிச்சைத் தளர்த்தினாள்.

ராகவன் தன் இதழ்களை விருப்பத்துடன் அவளிடம் உறிஞ்ச கொடுத்துவிட்டு, அவள் வெற்று மார்புகளை தன் இடது கையால் அழுத்தி பிசைந்து கொண்டிருந்தார். பத்மாவின் பருத்துக் கொண்டிருந்த அடக்கமான சிறிய முலைகளின் வனப்பையும், மழமழப்பையும், அவர் கைகள் அனுபவித்துக் கொண்டிருந்தன.

"இன்னைக்கு மன்மதன் கிட்ட சண்டையை ஆரம்பிச்சது நீ..! இப்ப எப்படிடீ நான் ஆரம்பிச்ச சண்டையை நடுவுல நிறுத்தறது...? இங்கப் பாரு 'இவனை' ராகவனின் தண்டு அவர் வேட்டிக்குள்ளிருந்து எழுந்து, பத்மாவின் புட்டங்களை குத்திக்கொண்டிருந்தான். அவர் இடுப்பிலிருந்து வேட்டி நழுவியது.

"போதுங்க... என்னால முடியலை... படுத்துக்கலாமா?" கொஞ்சினாள் பத்மா.

பத்மா சன்னமான குரலில், முனகினாள். முனகியவள் தன் இமைகளை முழுவதுமாக மூடாமல், அரைக்கண்ணால், ராகவனை நோக்கினாள். அவள் முகத்திலிருந்தப் புன்னகையில், அன்பு, காதல், காமம் எல்லாம் மொத்தமாகத் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்ட ராகவனின் உள்ளத்தில் உற்சாகம் கிளம்பியது.

"செல்லம்... அவனுக்கு ஒரு முத்தா குடேன்..." மனைவியைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார், ராகவன்.

"ம்ம்ம்ம்..." பத்மாவின் கை அவர் தடியை மென்மையாக முன்னும் பின்னுமாக அசைத்தாள். கையில் எழுந்தவனை சட்டென குனிந்து வெறியுடன் முத்தமிட்டாள். மேலும் எழுந்தவனை வாய்க்குள் நுழைத்து உறிஞ்சி ஈரமாக்கினாள்.

"எம்மாஹ்ஹா..." முனகியவனின் உறுப்பை சுற்றி சுற்றி ஒத்தடம் கொடுத்த பத்மாவின் ஈரமான நாக்கு, வெதுவெதுப்பான உஷ்ணத்தை உண்டாக்கியது. ராகவனின் உடல் மெல்ல நடுங்கியது.

"பத்து..." உடல் மன்மத சுகத்தை அனுபவிக்க, மனதில் உணர்ச்சிகள் சொல்ல முடியாத வேகத்தில் பயணப்பட, ராகவன் தன் தொடைகளை அகலமாக்கி தன் இடுப்பை லேசாக, மனைவியின் வாய்க்குள் அசைக்கத் துவங்கினார்.

"என்னங்க... வரப்போறீங்களா..." பத்மா, விறைத்திருந்த தன் கணவனின் உறுப்பை, வாயிலிருந்து வெளியில் எடுத்து மெல்ல உருவினாள்.

"இல்லே... உன் நாக்கு குடுத்த சொகத்தை தாங்கமுடியலே... தன்னால இடுப்பு அசையுது..." சொல்லிக்கொண்டே, பத்மாவை கட்டிலில் தன்னருகில் தள்ளியவர், அவள் வெற்று மார்பை, உறிஞ்சி சுவைக்கத் தொடங்கினார்.

'ப்ஸ்ஸ்ஸ்ஸ்...' முனகிய பத்மா தன் அந்தரங்கத்தை மெதுவாகத் திறந்தாள்.

'என்னம்மா.. உள்ள இறங்கிடவா..." ராகவனின் ஆள்காட்டி விரல் அவள் இடுக்கைத் தடவிப்பார்த்தது.

"ம்ம்ம்ம்... ரெடியா இருக்கு... வாங்கோன்னா..." பத்மா ராகவனை இழுத்து தன் மேல் கிடத்திக்கொண்டாள்.

"ஹோவ்..." நீளமாக மூச்சுவிட்ட ராகவன், மெல்ல தன் ஆயுதத்தை, அவள் அந்தரங்க வாசலில் நுழைத்து இடுப்பை மெதுவாக ஆட்ட, அவருடைய தம்பி மெள்ள வளைந்து உள்ளே நுழைந்து புதைந்தான். புதைந்தவன் முழுமையாக ஈரமானான். இயல்பாக ராகவனின் இடுப்பு மேலும் கீழுமாக இயங்க ஆரம்பித்தது. பத்மா தன் இரு கைகளையும் கணவரின் தோளில் மாலையாக்கி கட்டிக் கொண்டாள்.

"வ்வ்வ்ம்ம்ம்ம்..." முனகிய பத்மாவின் வெறி கொண்ட அணைப்பில், ராகவனுக்கு இலேசாக மூச்சு முட்ட ஆரம்பித்தது. ராகவன் தன் உடலை உலுக்கி அவள் இறுக்கத்தை தளர்த்தியவர், மனைவியின் உப்பியிருந்த அந்தரங்கத்தில், தன் பருத்த தண்டை அவள் அந்தரங்கத்துக்குள் அமுக்கி அமுக்கி எடுத்தார்.

"மெதுவாங்க... மெதுவாங்க... வந்துடப் போறீங்க..." ராகவனின் முகத்தை வேகமாக இழுத்து, தன் இடது மார்பை அவர் வாயில் திணித்தாள் பத்மா. ராகவன் தன் இடுப்பை சீராக அசைத்தவாறே, அவள் மார்பை இதமாக சுவைக்கவும் செய்தார்.

ராகவனின் அசைவிற்கு ஈடான வேகத்தில் பத்மாவும் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கிக்கொடுக்க, அவருடைய தடி, அவளுடைய ஈரக்கிணற்றில் வழுக்கிக்கொண்டு இறங்கி, மீண்டும் மேலேற, இருவரின் மூச்சிலும் அணல் தெறித்தது.

ராகவனின் உருண்டு திரண்ட புல்லாங்குழல், பத்மாவின் தொடையிடுக்கில் இசைத்த மதுரமான இசை அந்த அறையில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.

பத்மாவும், ராகவனும், தங்கள் உடல்களின் சீரான அசைவில் உண்டாகும் அற்புதமான இசையில் தங்கள் மனதை லயிக்கவிட்டு, காலத்தை மறந்து, தங்களை மறந்து, இமைகள் செருகி, மன்மதனின் கோட்டையை நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..."

தங்கை உஷாவின் கனீரென்ற குரல், லேசாக ஒருக்களித்திருந்த கதவின் வழியாக படுக்கையறைக்குள் மெலிதாக கேட்டது. ராகவனுக்கு தூக்கமென்னவோ முழுவதுமாக கலைந்து அரைமணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.

பத்து நாட்களுக்கும் மேலாக, அலுவலக வேலை நிமித்தம், தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு, உடலும் மனமும் களைத்து, நேற்று மாலைதான் வீட்டுக்குத் திரும்பியிருந்த அவர், சட்டென எழுந்து குளித்து காலை வேலைகளைப் பார்க்க மனம் வராமல், சோம்பலுடன் கட்டிலில் படுத்திருந்தார். கண்மூடியிருந்ததே ஒழிய மனம் குலதெய்வம் காஞ்சி வரதராஜனை தியானித்துக்கொண்டிருந்தது.

ராகவன் தன் அருகில் படுத்திருந்த மனைவியை சிறிய பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். எப்போதும், வெய்யிலோ, குளிரோ, மழையோ, டாணென்று காலை ஐந்தரைக்கு எழுந்து குளித்துவிட்டு, அடுப்பில் குக்கரை ஏற்றும் அவள் இன்று தன் மெல்லிய உதடுகள் பிரிந்திருக்க, பிரிந்த உதடுகளின் நடுவில் வரிசையான முன் பற்களின் வெண்மை தெரிய, இதழின் கடைக் கோடியோரத்தில் மெல்லிய புன்னகையுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் பத்மா.



ஒருக்களித்து படுத்திருந்த பத்மாவின் வலது கரம் ராகவனுடைய வெற்று மார்பில் தவழ்ந்து கிடந்தது. மனைவியின் ஒரு பக்க மார்பு அவர் விலாவில் புதைந்திருந்தது. அவள் அணிந்திருந்த நைட்டி முட்டிக்கு மேல் ஏறி பளிச்சென்ற அவள் தொடையை வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. ராகவனின் மனம் பெருமாளின் நாமத்தில் நிலைத்து நிற்கவில்லை.

பத்மா, ஒட்டடைக் குச்சி மாதிரி வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா... இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஒடம்புல சதை விழுது... இந்த வயசுல கட்டிக்கிட்ட பொம்பளைக்கு ஒடம்பு பூசின மாதிரி இருந்தா, அதுவும் ஓரு அழகாத்தான் இருக்கு... இப்பத்தான் புடவையில இவளைப் பாத்தா பாக்கறதுக்கு பாந்தமா இருக்கா... ராகவன் குனிந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார்.

எப்படி இவளால எப்பவும் நிம்மதியா சிரிச்சிக்கிட்டே இருக்க முடியுது? தூக்கத்திலேயும் சிரிச்சிக்கிட்டு இருக்காளே? சாயந்திரத்துலேருந்து என்னை உரசி உரசி, வலியவந்து என்னைக் கட்டிப்புடிச்சி, இவ நடத்தின மன்மத யுத்தத்தை 'நேத்து ராத்திரி யம்மான்னு' நினைத்து சிரிச்சிக்கிறாளா? முகத்தில் குறுநகையுடன் கட்டிலில் மெல்ல எழுந்து உட்க்கார்ந்தார் ராகவன்.

பத்மாவின் முகத்தில் முகிழ்த்திருந்த மகிழ்ச்சியின் கோடுகளைப் பார்த்த ராகவனுக்கு உள்ளம் தேனாக இனித்தது. இவளை மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்...! என் அம்மா, அப்பா, என் தங்கைன்னு யாருக்கிட்டவும் இன்னைக்கு வரைக்கும் உரத்தக் குரல்லே எப்பவும், எந்த நேரத்திலேயும் இவ பேசினதே இல்லே...!

தனது மாமானார், மாமியாரை ஒரு நொடி நன்றியுடன் நினைத்துக் கொண்டார், ராகவன். பத்மாவுடன் தான் நடத்திய முப்பது வருடத்து தாம்பத்யம் சட்டென நினைவுக்கு வந்து அவர் மனதுக்குள் மகிழ்ச்சி திகட்டியது. படுக்கையை விட்டு எழுந்து வெரண்டாவிற்கு வந்து சில்லென்று வீசும் மெல்லிய குளிர் காற்றின் சுகத்தை அனுபவித்தவாறு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார் ராகவன்.

"அண்ணா... மன்னிக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? எப்பவும் எனக்கு முன்னே எழுந்துக்கறவங்க அவங்க... என்னாச்சு இன்னைக்கு...?" சமையலறையலிருந்து சிரித்த முகத்துடன் வந்த உஷா, சூடான காஃபியை ராகவனிடம் நீட்டினாள்.

"அதெல்லாம் ஓண்ணுமில்லேம்மா... எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கே; இப்படி கொஞ்ச நேரம் உக்காரு என் பக்கத்துல..." ஆசையுடன் தன் தங்கையின் இடது முழங்கையை மெல்ல வருடினார்.

"என்னண்ணா?" அண்ணன் காட்டிய பரிவில் சிலிர்த்துப்போனாள் உஷா.

"உன் அண்ணிக்கு என்ன வேலை...? அவ ஆசையா ஒண்ணே ஓண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்து வெச்சிருக்காளே... அந்த அவதாரத்தைப் பத்தி ராத்திரி ரொம்ப நேரம் புலம்பிக்கிட்டிருந்தா... என்னை லீவு போட்டுட்டு அவனுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெய்யுங்கறா.."

"நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க... என் பேச்சை அவன் என்னைக்கு கேட்டான்; நான் டூர்ல கிளம்பிப் போனப்ப அவன் வீட்டுலே இல்லே... நான் பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு இன்னைக்கு வந்திருக்கேன் இப்பவும் அவன் இல்லே.. பெத்தப் புள்ளையை கண்ணாலப் பாத்து முழுசா இருபது நாளாவுது..."

"அண்ணா... அவன் என்ன வெட்டியாவா ஊரைச் சுத்தறான்.. அவனும் தன் ஆஃபீஸ் வேலையாத்தான் மதுரைக்கு போயிருக்கான்... இன்னைக்கு வந்துடுவான்..." உஷா தன் மருமகனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

"ம்ம்ம்... ராத்திரி பத்மா என்னையும் தூங்க விடலே... அவளும் தூங்கலே... ஏதோ ரெண்டு ஜாதகம் வந்திருக்காமே... அவனை கூப்பிட்டு வெச்சு பேசுங்கோங்ன்னு, உசுரை எடுத்தா... அதுக்கு அப்புறம் என்னமோ அசந்து தூங்கறா... ஞாயித்துக் கிழமைதானேன்னு நானும் எழுப்பலை..." தங்கையை உற்றுப் பார்த்து மென்மையாக சிரித்தார், ராகவன்.

"அண்ணா, அண்ணி சொல்றதைத்தான் நானும் சொல்றேன்... ஒரு மாசம் லீவு போடுங்களேன்.. எப்பப் பாத்தாலும் வேலை வேலைன்னு அலையறேள்.. யாருக்காக நீங்க இப்படி உழைக்கணும்... நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும்... அவனும் தலையெடுத்துட்டான்... கை நெறைய சம்பாதிக்கறான்.. நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ.."

"ஹூம்ம்ம்..."

"அவன் இப்ப எதுவுமே அறியாத பிள்ள இல்லேதான்.. ஊர்ல எல்லாப் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கு... அதுக்கு நம்மப் புள்ளை எவ்வளவோ தேவலை... உங்க மேல அவன் உயிரையே வெச்சிருக்கான்... நம்மப் புள்ளைக்கு என்னக் கொறை; அவன் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கான்...!!

அவனுக்குன்னு ஒருத்தி வந்தா அவ அவனைத் திருத்திட்டு போறா; அவன் எதையோ என்னைக்கோ பைத்தியக்காரத்தனமா உளறினான்னா, நீங்க அதை மனசுல வெச்சுக்கிட்டு, நம்மக் குழந்தையை அவதாரம்ன்னு நீங்களே சொன்னா எப்படீ?" உஷா அண்ணனிடம் சிணுங்கினாள்.

"நீ பாத்தியாம்மா... அந்த பொண்ணுங்க போட்டோவை..."

"பாத்தேன்.. ரெண்டு பேருமே நன்னா இருக்காளுங்க மூக்கும் முழியுமா... அந்த லலிதாங்கற பொண்ணு இவனுக்கு நல்லப் பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோன்றது... அண்ணிக்கும் அந்தப் பொண்ணை புடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க..?"

"அவனுக்கு புடிச்சா சரிதான்... கூட இருந்து குப்பைக் கொட்டப் போறவன் அவன்; எனக்கென்ன இதுல தனியா ஒரு விருப்பம்...! ஜாதகம் பொருந்துதான்னு பாக்க வேண்டாமா..? யார்கிட்டவாவது காட்டீனீங்களோ?"

"ஆமாம்... தாத்தாவும் அப்பாவும் கட்சி கட்டிண்டு, எனக்கும்தான் ஜாதகம்.. பொருத்தம் எல்லாம் பாத்தாங்கா... என்ன ஆச்சு... ரெண்டு வருஷத்துல ஒத்தையா திரும்பி வந்துட்டேன்.. பெருமாளை மனசுல நெனைச்சுக்கிட்டு மேல ஆகவேண்டியதை பாருங்கண்ணா..." உஷாவின் குரல் தழைந்தது. ராகவன் முகத்தை திருப்பி தன் தங்கையைப் பார்த்தார்.

உஷா, சராசரி தமிழ் பெண்களைவிட சற்றே உயரமாக இருந்தாள். அவளுடைய உயரத்தால் தேகம் மெலிந்திருப்பதைப் போல் தோன்றினாலும் வலுவான உடல். நோய் நொடி என்று எப்போதும் படுத்ததில்லை. எட்டு மணி நேரம் தொடர்ந்து அவளால் தன் அலுவலகத்தில் வேலை செய்யமுடிந்தது. ஆஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த பின்னும் சளைக்காமல், அண்ணியுடன் சேர்ந்து கொண்டு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொள்ள முடிந்தது.

அண்ணி... ஆஃபீசுல எனக்கு வேலை செய்யறது 'போர்' அடிக்குது. கண்டவனுக்கும், மரியாதை தெரியாதவனுக்கெல்லாம், 'யெஸ் சார்' சொல்ல வேண்டியதா இருக்கு... எனக்கென்னா புள்ளையா குட்டியா; யாருக்காக மாங்கு மாங்குன்னு நான் சம்பாதிக்கணும்... ஒரு வேளை சோறு என் அண்ணி நீங்க போடமாட்டீங்களா? போன வருடம் தீடிரென ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தாள், உஷா.

சிவந்த நிறம். தீர்க்கமான மூக்கு. வலுவான தாடைகள். சிரித்தால் அழகாக குழி விழும் கன்னங்கள். வெண்மையான சுருக்கமில்லாத கழுத்து. காதில் சின்ன தோடு, கைகளில் ரெண்டு ஜோடி மெல்லிய பொன் வளையல்கள். கழுத்தில் ஆடும் மெல்லிய தங்கச்சங்கிலி. சங்கிலியின் நுனியில் ஒரு சிறிய பெண்டன்டில் கணவன் கிருஷ்ணனின் போட்டோ. சிம்பிளாக இருப்பாள் உஷா.

"என்னாச்சு அண்ணா..." உஷா அண்ணனின் தலையை மெல்ல வருடினாள். ராகவன் சட்டென தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தது.

"அந்தப் பாவியோட நினைப்பு வந்திடிச்சி..." அவர் குரல் கரகரத்தது.

"எனக்கு இப்பல்லாம அவர் நெனைப்பு வரதேயில்லே..." உஷாவின் முகம் கல்லாகியிருந்தது.



"ஹூம்ம்ம்ம்..." ராகவன் ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றினார். தன் தங்கையின் முகத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.

உஷாவின் நெற்றி வெறிச்சோடியிருந்தது. உற்றுப்பார்ப்பவர்களால் மட்டுமே இனம் காணக்கூடிய ஒரு நிரந்தர சோகம் அவள் விழிகளில் குடியேறியிருந்தது. அவளுடைய வெடிச்சிரிப்பும், உற்சாகமான கூச்சலும், அவளை விட்டு தொலைந்து போய் இருபது வருடங்களுக்கும் மேலாகியிருந்தது. இந்த நாட்களில் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் தருவது அவள் குணமாக ஆகிவிட்டிருந்தது.

விடியற்காலையிலேயே எழுந்து குளித்துவிட்டிருந்த உஷாவின் ஈரத் தலையிலிருந்து மெலிதாக வழிந்த ஈரம், அவள் தோள்பட்டையை நனைத்திருந்தது. இன்னும் உடல் கட்டு தளராத, மேனியின் அழகு குறையாத, முகத்தில் பொலிவு மாறாதிருந்த, தன் நாற்பத்தைந்து வயது தங்கையின் காலியான நெற்றியைக் கண்ட ராகவனின் மனசு ஒரு நொடி கனத்துப்போனது. மனம் வேகமாக பின்னோக்கி ஓடியது.


No comments:

Post a Comment