Saturday 7 March 2015

சுகன்யா... 34

நான் பாம்பேயில, பெங்களூர்ல பாக்காத பிகருங்களா? சீரங்கம் ஜிகிடிலேருந்து பாம்பே சேட்டு பொண்ணுங்க வரைக்கும் தொட்டு, தடவியிருக்கேன். எவளாயிருந்தாலும் மொதல்ல கொஞ்சம் பீட்டர் வுட்டு ஜுலும்பு காட்டுவாளுங்கதான்; ஆரம்பத்துல நாமதான் கொஞ்சம் மகுடியை அடக்கி வாசிக்கணும். 

முதல் நாள் எல்லா பொண்ணுங்களும் கண்ணகி, சீதா பிராட்டியார் ரேஞ்சுலத்தான் ஆக்டிங் குடுப்பாளுங்க. ஒரு அம்பது ரூபாவுல, கண்ணாடி பேப்பர்ல சுத்தின ரோஜா கொத்து ஒண்ணு வாங்கி கையில கொடுத்து, யூ ஆர் சோ க்யூட், உங்களை பாத்ததுலேருந்து தூக்கமே வரலைன்னு அடுத்த சந்திப்புல சின்னதா பிட்டை போட்டு கோடு போடணும். 

அப்பவே தெரிஞ்சு போயிடும். இது படியுமா படியாதான்னு? படியற மாதிரி தெரிஞ்சா, அடுத்த மீட்டீங்க்ல, சிஸ்டருக்குன்னு இம்போர்டட் ஜீன்ஸ், நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் கிட்ட சொல்லி கொரியாவுலேருந்து வரவழைச்சேன். அண்ணா, சைஸ் கொஞ்சம் பெரிசா இருக்குதேன்னு என் தங்கச்சி ஃபீல் பண்றா; வேற யாருக்கும் குடுக்க மனசு வரலை. சட்டுன்னு உங்க நினைப்புத்தான் எனக்கு வந்தது. நீங்க வேணா டிரை பண்ணுங்களேன்!. இப்படி போட்ட கோட்டு மேல இன்னொரு கோடு கொஞ்ச்ம் அழுத்தமா போடணும்.

குடும்ப பொண்ணா இருந்தா வேண்டாம்ன்னுதான் சொல்லுவா ... நடு நடுவுல நாம போடற கோடு கொஞ்சம் கோணலா கூட போவும். தளர்ந்து போவக்கூடாது. வேணாம்ன்னு சொன்னா விடக்கூடாது. ரெண்டு மூணு தரம் ஸ்ட்ரெஸ் பண்ணணும். கொஞ்சம் மூஞ்சை தேவதாஸ் கணக்குல சோகமா வெச்சுக்கணும்; அதுல மடிஞ்சா, இவ முடிஞ்சான்னு அர்த்தம். இப்ப நீ ஏற்கனவே போட்ட கோட்டை கொஞ்சம் நீட்டா இழுக்கலாம். ஆனா பொண்ணுக்கு புடிக்கலையா, இஷ்டமில்லையா, சட்டுன்னு சாரின்னு சொல்லிட்டு விட்டுடணும். எப்பவும் ரப்சர் பண்ணக்கூடாது. சுத்தமா ஒதுங்கி நீ வேணாம்ன்னு சொல்றவளை தொடறதுல கண்டிப்பா சுகம் இல்லே.



அஞ்சாயிரத்துல, புஸ்தகம் சைசுல, ஒரு சைனீஸ் மேக் செல்லை, பர்மா பஜார்ல வாங்கி கையில குடுத்துட்டு, இன்னைக்கு எனக்கு பர்த் டே; ஏஸி தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்; நம்ம பசங்க கட்டிங் வுடலாம்ன்னு சொன்னானுங்க; எனக்கு தண்ணியடிக்கறதெல்லாம் புடிக்காதுங்க. நீங்க ஃப்ரியா இருந்தா, சொல்லுங்க ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்ல டிஃபன் சாப்பிட்டு, படத்துக்கு போகலாம்ன்னு அடுத்த பிட்டு போடணும். அவ உடனே ஹேப்பி பர்த் டே டு யூ ன்னு கண்டிப்பா கையை புடிச்சி குலுக்குவா!


புது செல்லுக்கு, அதுவும் ஃப்ரீயா கிடைக்கற போனுக்கு, மயங்காதவ யாரு இருக்கா இன்னைக்கு ஊர்லே? அவ கேக்காமலே அவ சிம்முக்கு ரெண்டு தரம் ரீஜார்ஜ் பண்ணிடணும். தயங்கி தயங்கி பைக்ல ஏறி உக்காருவா. நம்ம முதுகு மேல அவ உடம்பு பட்டாக்கூட, முன்ன தள்ளி ஒக்காந்து ரோடைப் பாத்து வண்டியை ஓட்டணும். தியேட்டர் இருட்டுல தவறிப் பட்டுட்ட மாதிரி கையை கழுத்துல போடு, இடுப்புல போடு இல்லே தொடையிலயே போடு; பரவாயிலலே ஆனா, ரோட்டுல நல்லப்புள்ள மாதிரி ஒரு சீன் போடணும். பொண்ணு பேரு நம்மளால கெட்டுப் போவக்கூடாது. 

இப்ப இன்னா ஆவும்? நீ போட்ட சிம்பிள் கோடு ரோடாயிடும்! எப்பவும் தார் ரோடு, சிமிண்ட் ரோடு போடாதே. மண்ணு ரோடுதான் சவுகரியம். கொஞ்சம் ரப்சர் ஆயிடிச்சின்னா, இந்த கோட்டை அழிச்சிட்டு, அடுத்த கோடு போட்டுக்கலாம். 

அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது, அவளா வண்டியில ஏறி உக்காந்து, ரோடுல மேடு பள்ளம் வர்றதுக்கு முன்னாடியே, அப்ப அப்ப நம்ம முதுகுல தன் உடம்பை அழுத்தி உனக்கு சிக்னல் குடுப்பா. ஒவ்வொருத்திக்கு ஒரு வலை இருக்கு. ஒரு வலையில சிக்கற மீனு அடுத்த வலையில சிக்காது. சின்ன மீனு சிக்கலன்னா, போவட்டும்ன்னு வுட்டுட்டு பெரிய மீனா புடிக்கணும். எத்தனை பேரை இப்படி ப்ளான் பண்ணி கவுத்து இருப்பேன்? ஜாக்கிரதையா இருக்கணும், சட்டுன்னு உன்னையே கவுக்கறவளும் இருக்காளுங்க? 

எனக்கென்னமோ இந்த கல்யாணத்துல எல்லாம் அவ்வளவா நம்பிக்கை இல்லே. மனசுக்கு புடிச்சுதா, பொண்ணை பட்டுன்னு கேட்டமா, அவ ஓ.கே. ன்னா, தொட்டு பாரு; கட்டிபுடிச்சி அனுபவி... வுட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். ரொம்ப கமிட்மெண்ட்ஸ் வெச்சுக்கக்கூடாது. இங்கே என்னடான்னா, பூவை தொடவேயில்லை. அதுக்குள்ள கையில முள்ளு குத்தும் போல இருக்குது. 

அம்மா ரொம்பவே சொன்னாளேன்னு வந்தேன். சுகன்யா நம்ம உறவுகார பொண்ணுடா. சிவதாணு தாத்தாவோட பேத்தி. குமார் மாமாவுக்கு இருக்கற ஒரே பொண்ணு; தாத்தா சொத்து, குமார் சம்பாதிச்சு வெச்சிருக்கறது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு. அதுமட்டுமில்லே; அவளோட அம்மா சுந்தரியும், ஸ்கூல் டீச்சரா கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா. 

சுகன்யாவோட தாய் மாமன் கல்யாணம் பண்ணிக்கலை. அவன் அக்கா வீட்டுலதான் கூடவே இருக்கான். அவனுக்கும் வீடு, நீர், நில புலன்னு எல்லாம் இருக்கு. அவனுக்கு பின்னால அதெல்லாமும் இவளுக்குத்தான். எல்லாத்துக்கும் மேல சுகன்யாவே நிரந்தரமான கவர்ன்மெண்ட் உத்தியோகத்துல, நல்லா கை நெறைய சம்பாதிக்கறா. இவளை கட்டிக்கறவனுக்கு நல்ல தனயோகம்தான். 

நான் உன் அம்மாடா; உன் கிட்ட நான் இப்படி பேசக் கூடாது? ஆனாலும் சொல்றேன். சுகன்யா சும்மா ஜவுளி கடை பொம்மை மாதிரி எடுப்பா இருப்பாடா. சுகன்யாவை உனக்கு குடுக்கறீங்களான்னு கேட்டு இருக்கேன். சுந்தரி பிடி கொடுத்து பேசமாட்டேங்கிறா. அவ புருஷன் குமாரும், என் பொண்ணுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலயே? ஒரு ரெண்டு வருசம் போகட்டும் ... அதுக்கப்புறம் பாக்கலாம்ன்னு நினைக்கிறோம்.... ராணி, நீ வேணா வேற எடம் பாக்கறதுன்னா பாரேன்னு நாசுக்கா ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி தட்டிக் கழிக்கறாரு. 

ஆத்தாளும் அப்பனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு, ஜாதி வுட்டு ஜாதி கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி, சுகன்யாவும் யாரையாவது தன் மனசுல நெனைச்சுக்கிட்டு இருப்பாளோன்னு நான் சந்தேகப்படறேன். இந்த காலத்துல வெளியில படிச்சுட்டு வேலைக்கு போற பொண்ணுங்களுக்கும், ஒண்ணு ரெண்டு பாய் ப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கத்தான் செய்யறாங்க. நீயும் தான் கேர்ள் ப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கே. அவங்களையா கட்டிக்கப் போறே?

எவ்வள நாளைக்குத்தான் இப்படியே இவகூட; அவகூடன்னு சுத்துவே? காலாகாலத்துல கல்யாணம் பண்ணி செட்டில் ஆவணும்டா. கல்யாணம்ன்னு வரும் போது சுகன்யா மாதிரி பொண்ணைத்தான் பாக்கணும். இப்பத்தான் சுகன்யாவை, கனகா பாட்டி வீட்டு வாசல்ல பாத்தேன். ஜீன்ஸ், டாப்ஸ் போட்டுக்கிட்டு செப்பு சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாடா. 

உனக்கு மட்டும் என்னடா குறைச்சல்? ராஜா மாதிரி இருக்கே, ஒரு தரம் நீ அந்த பொண்ணை நேரா பாத்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன். நேருக்கு நேரா பாத்தா, அவ மனசுல ஒரு வேளை, உன்னைப் பத்தி ஒரு இம்ப்ரஷன் வரலாம். அப்புறம் உன் இஷ்டம்... 

காலங்காத்தாலே அம்மா என் கிட்ட ரொம்பவே இவளைப் பத்தி புகழ்ந்து பேசவே, அப்படி என்னாத்தான் இவகிட்ட இருக்கு? ஒரு லுக்கு விட்டுத்தான் பாப்பமேன்னு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது. க்ராஸ் பிரீட் ஆச்சே? சான்ஸே இல்லே ... சுகன்யா நம்பளை பின்னி எடுக்கறாளே? கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருக்கா?

நான் இங்கிலீஷ்ல, நீ அழகாயிருக்கேன்னு போட்ட முதல் பிட்டுக்கு, சுகன்யா ஒ.கே ஆன மாதிரிதான் தெரிஞ்சுது. பொறுமையா இருந்திருக்கணும். கொஞ்சம் கண்ணை இங்க அங்க அவ உடம்புல அவசரபட்டு மேயவிட்டது, தப்பா போயிடுச்சின்னு நினைக்கிறேன். 

நான் என்னப் பண்ணுவேன்? மால் டக்கரா இருக்கே? டக்குன்னு சுகன்யா குட்டி முழிச்சிக்கிட்டா. மாப்ளே! உனக்கு ராஜ களை! ஆனா திருட்டு முழின்னு - நம்ம நண்பணுங்க அடிக்கடி சொல்வாங்களே, என் கண்ணு அலைச்சலால இப்ப காரியம் கெட்டுப் போயிடும் போல இருக்கு? 

அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு ஒரு சான்ஸ் பார்க்கலாமேன்னு வந்தேன். சுகன்யா நிஜமாவே சூப்பரா லட்டு மாதிரி இருக்கா. இவ செட் ஆனா, பைனலா கல்யாணத்தை பண்ணிகிட்டு ஒரு வழியா லைப்ல செட்டில் ஆயிடலாம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி தெருவுல கண்ட லோலாயிங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கறது? 

சுகன்யா ரொம்பத்தான் அல்டிக்கிறா ...? இவளுக்கு எந்த வலையை விரிக்கறது? இன்னும் ஒரு வாரம் நாம இங்கே இருக்கப் போறோம். அதுக்குள்ள ஏதாவது ஒரு வலையை ரெடி பண்ணி விரிச்சுப் பாக்க வேண்டியதுதான்.

சுகன்யாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லன்னா அதுவும் வசதிதான். எனக்கு என்ன நஷ்டமாயிடப் போவுது? பத்தோட பதினொன்னு; அத்தோட இதுவும் ஒண்ணு. சும்மா வண்டியை ஒரு டிரையல் பாத்துட்டு, டாட்டா ... பை பை ... சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். 

சுகன்யா இல்லன்னா, ஒரு சுசீலா. சுசீலாவை விட்டா ஒரு சுபத்ரா! சம்பத் தன் மனதுக்குள் சுகன்யாவுக்கான வலையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ரூமுக்குள்ள போன சுகன்யா என்ன பண்ணுவா? கீ ஹோல் வழியா பாக்கலாமா? டேய் ... உறவு காரன் வீட்டுல உக்காந்து இருக்கே. உடம்பை புண்ணாக்கிக்காதே? ஏதாவது எக்குத்தப்பா ஆச்சு ... உன் அப்பன் ஆத்தா கிராமத்துல வெளியில தலை காட்ட முடியாம போயிடும்! சம்பத்து ... கொஞ்சம் பொறுமையா இருடா. இன்னும் ஒரு வாரம் உங்கிட்ட டயமிருக்கு. கல்லெடுத்து அடி. மாங்கா விழுந்தா சரி ... ஆனா கல்லு உன் தலை மேல விழாம பாத்துக்கோ! சம்பத் தன் கன்னத்தை சொறிந்து கொண்டான். 


அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட சந்தோஷமான சமாசாரத்தை சுகன்யா கிட்ட சொல்லனுமுன்னு நான் துடிக்கிறேன். என்னைத்தான் சனி புடிச்சு ஆட்டறானே? என் சனியன் புடிச்ச நேரம், நான் எங்க போனாலும் எனக்கு முன்னே அது போய் நிக்குது? சுகன்யாவை லைன்ல புடிக்கறதே பெரிய பாடா இருக்கே?

லீவுல இருக்கற அவளை, அவ பாஸ் சாவித்திரி, அஃபிஷியல் வேலை எதுக்காவது தொந்தரவு பண்ணப் போறான்னு, செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்காளா? அவ ஆஃபீஸ் வேலைக்கு எப்பவுமே பயப்பட்டதே கிடையாதே? லீவு நாள்ல கூப்பிட்டா கூட முகம் சுளிக்காம ஆஃபீஸுக்கு போறவளாச்சே? அவ செல்லு கெட்டு கிட்டு போயிடுச்சா? ம்ம்ம்... அப்படித்தான் எதாவது ஆயிருக்கணும். ஆனா எனக்கு இப்ப அவ கிட்ட எப்படியாவது பேசியே ஆகணும்.

எரிச்சலுடன் தன் தலையை சொறிந்து கொண்டிருந்த செல்வாவுக்கு, திடிரென சுகன்யாவின், மாமா ரகுவின் செல் நெம்பர் தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் கையில வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்யுக்கு அலையறேன்; ரகுராமன் கிட்ட பேசினா அவர் கும்பகோணத்து நெம்பர் ஏதாவது கொடுக்க மாட்டாரா? காலையிலேருந்து எனக்கு இது தோணவே இல்லையே? எப்பேர் பட்ட மாங்கா மடையன் நான்?

"சார் ... நான் செல்வா பேசறேன்" தயங்கி தயங்கி ரகுவிடம் பேசினான்.

"சொல்லுங்க தம்பி ... எப்படியிருக்கீங்க... வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு உங்கப்பா சொன்னார் .."

"ஆமாங்க ..."

அப்பாவும் இவரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்களா என்ன? அப்பா என் கல்யாணத்தை கிடப்புல போட்டு வெச்சிருக்காருன்னுல்ல நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்? அவன் மனதுக்குள் மகிழ்ச்சி மத்தாப்பொன்று மின்னியது.

"கேக்கிறனேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி ... சுகன்யா கிட்ட உங்களுக்கு என்ன கோபம்?"

"நோ ... நோ ... எனக்கென்ன கோபம் சார்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே?" அவசரமாக அவரை மறுத்தான்.

"ம்ம்ம் ... வீட்டுக்கு நல்லபடியா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க திரும்பி வந்ததை, சுகன்யா கிட்ட நீங்களே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ... அவளுக்கு இந்த விஷயத்துல உங்க மேல கொஞ்சம் வருத்தம்தான் ..." அவர் குரலில் சிறிது ஏளனமிருப்பதாக செல்வா உணர்ந்தான்.

"சாரி சார் ... நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க ... காலையிலேருந்து நூறு தரம் சுகன்யா செல்லை டிரை பண்ணிட்டேன்.."

"அப்படியா.."

"ஆமாம் சார் ... சுகன்யா நெம்பர் எனக்கு கிடைக்கவே இல்லே.."

"ம்ம்ம்..."

"அதான் இப்ப உங்களைத் சிரமம் கொடுக்கிறேன்.."

"நான் என்ன பண்ணணும் இப்ப?"

"இன் ஃபேக்ட், சுகன்யா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன் .." அவன் தன் நிலையை அவருக்கு புரிய வைக்க முயன்றான்.

"ம்ம்ம் ... அப்படி என்ன ... முக்கியமான ... சாரி தம்பி ... என் கிட்ட நீங்க சொல்லலாம்ன்னு நினைச்சா சொல்லுங்களேன்?"

"கண்டிப்பா ... சார் ... எங்கம்மாவும் எங்க கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க! இது பத்தி எங்கப்பா உங்க கிட்ட மேல் கொண்டு இன்னைக்கு பேசுவார்ன்னு நினைக்கிறேன்."

"அப்படியா ..."

"கல்யாண விஷயம் கொஞ்சம் நேரானதும், சுகன்யா கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளா வெய்ட் பண்ணிகிட்டிருந்தேன் சார்..."

"நல்லது தம்பி ..."

"மத்தபடி என் சுகன்யா மேலே எனக்கென்ன கோபம் ...சார்?"

"ம்ம்ம் ... உன் சுகன்யா ... ம்ம்ம்..."ரகுவின் குரலில் மீண்டும் சிறிய கேலி தொனிப்பதாக செல்வா நினைத்தான்.

"சாரி சார் ... தப்பா எடுத்துக்காதீங்க சார் ... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.."

"செல்வா ... ரொம்ப சந்தோஷமான விஷயத்தை நீ சொல்லியிருக்கேப்பா! சுகா இதை கேக்கணுமின்னுத்தான் காத்துக்கிட்டு இருக்கா!

"சரிங்க சார் ..."

"சுகா இன்னைக்கு அவங்க தாத்தா வீட்டுக்குப் போயிருக்கா; நான் அவ தாத்தா சிவதாணுவோட செல் நெம்பர் தரேன் ..."

"குடுங்க சார் ... ரொம்ப நன்றி சார் .."

"தம்பி ... இன்னும் நீங்க என்னை 'சார்' ... 'சார்' ன்னு வேத்து மனுஷனாத்தான் நெனைக்கிறீங்களா?"

"இல்லே சார் ... சாரி சார் ... இல்லே மாமா ... ரொம்ப தேங்க்ஸ் மாமா ..." செல்வா ஒரு மன நிறைவும், உதட்டில் புன்னகையுமாக பேசினான். 

சினம் கொண்ட மனம், சீக்கிரத்தில் குளிர்ந்து தன் இயல்புக்கு வருவதில்லை. சம்பத்தின் மனம் சினத்துக்கும் அடுத்த கட்டமான வஞ்சினத்தின் வசத்திலிருந்தது. ஏண்டி சுகன்யா, நீ என் கையைத் தொட்டு குலுக்க முடியாத அளவுக்கு எந்த விதத்துல நான் மட்டமா போயிட்டேன்? நான் கொஞ்சம் கருப்பா இருக்கேன். என் கையை நீ தொட்டா என் கருப்பு உன் கையில ஒட்டிக்குமா? என் உடம்பு கருப்பு உன் கண்ணை உறுத்திடிச்சா? அது என் தப்பு இல்லடி.

சுகன்யா ... நீ கொஞ்சம் செவப்புத் தோலோட பொறந்திருக்கே? ஒத்துக்கறேன். அதுல உன் ரோல் என்னா இருக்கு? என்னா ... உனக்கு கொஞ்சம் மார் சதை புடைச்சுக்கிட்டு நிக்குது. உன் வயசுல யாருக்குத்தான் குத்திக்கிட்டு நிக்கல? உனக்கு தூக்கி கட்டாமேயே நிக்குது. நீ கண்ணுக்கு அழகா இருக்கே? சரி .. சந்தோஷம்! அதுக்காக இப்படி ஒரு அல்டாப்பா உனக்கு? எல்லாம் இருந்தும் என்னாடி பிரயோசனம்? உனக்கு மேனர்ஸ் இல்லையே?

உனக்கு இன்னும் புள்ளை பொறக்காததாலே வயிறும், சூத்தும் ஷேப்பா இருக்குது? நீ ஸ்கூட்டர் ஓட்டறே? ஒத்துக்கறேன். உனக்கு படிப்பு இருக்கு? அப்புறம் உன் கிட்ட பணமும் இருக்கு? ஒத்துக்கறேன். நீ உன் சொந்த கால்லே நிக்கறே? உன் கையாலே சம்பாதிக்கறே! ஒத்துக்கறேன். அவ்வளதானேடி?

இது எல்லாத்துலயும் எனக்கு என்னடி கொறைச்சல்? நான் உனக்கு எந்த விதத்துலேயும் தாழ்ந்து போயிடலை! நான் உனக்கு அத்தைப் புள்ளை! நீ எனக்கு மாமன் பொண்ணு! நான் உன் முறை மாப்பிள்ளை. ஒண்ணு விட்ட முறைதான். ஒத்துக்கறேன். உன் கையைப் புடிக்கற முதல் உரிமை எனக்குத்தாண்டி. இதுக்கு மேல என்னாடி வேணும்? இதுக்கு மேல நான் உன்னைத் தொடறதுக்கு எனக்கு என்ன உரிமை வேணும்? ஒரு உறவுக்காரன் முன்னாடி எப்படி நடக்கணும்ன்னு உனக்குத் தெரியலையே?

நீ நெனைக்கறப்ப, கிழிச்சி குப்பை கூடையில தூக்கி போடறதுக்கு நான் என்னா காலண்டர்ல, காத்துல ஆடிகிட்டு இருக்கற தேதி ஷீட்டா? அப்படித்தான் நீ என்னை கிள்ளு கீரையா நெனைச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டியா? இந்த குருட்டு கெழவி என்னடான்னா, உறவுக்காரன் கிட்ட பழகறது எப்படீன்னு உனக்கு சொல்லிக் குடுக்காம, காப்பி குடிக்கிறியாடான்னு எனக்கு உபசாரம் பண்ணி என்னை வெறுப்பேத்தறா? என் ஆத்தாக்காரி திமிர் பிடிச்ச உன்னை தன் மருமகளா கொண்டாரணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கா?

உன் மூஞ்சியில இன்னும் ஒரு இன்னொசென்ஸ் இருக்கு? உன் கிட்ட இருக்கறதுலேயே அதுதாண்டி எனக்கு ரொம்பப் பிடிக்குது! இன்னும் உன் மேல என்னை மாதிரியான சரியான ஆம்பளை கை படலைடி. எவனும் உன்னை அவுத்துப் போட்டு, இழுத்து இழுத்து ரெண்டு இடி சரியா உன்னை இடிக்கலைடி. அந்த திமிர்ல, உன் ஒடம்பு துள்ளுதா? ஆட்டி ஆட்டி நடந்து காட்டறே? ம்ம்ம் ... தேவடியா முண்டை ... அலட்சியமா என்னைப் பாத்து, உன் கயவாளித்தனம் எனக்குப் புரியுதுன்னு சொல்ற மாதிரி ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டு, அகம்பாவமா எழுந்து போய், கதவை மூடிக்கிட்டியே? ஒரு பொட்டை நாய்க்கு இவ்வளவு கொழுப்பா? அந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ள வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இது உனக்கும் பாட்டன் வூடு. எனக்கும் ஒரு விதத்துல பாட்டன் வூடு. கிழப்பய அசந்து போய் சோஃபாவில கிடக்கிறான். குடும்பத்துல மூத்தவனாச்சேன்னு மரியாதை குடுக்கறேன். இல்லேன்னா இப்பவே அவனை எழுப்பி ஒரு பஞ்சாயத்து வெச்சிடுவேன்? ம்ம்ம் ... அவன் கையில என்னா இருக்கு? உன் ஆத்தாளையும், அப்பனையும் வூட்டை வுட்டு தொரத்திட்டமே; கடைசி காலத்துல் எவன் எனக்கு தண்ணி ஊத்துவான்னு கிறங்கி போய் கிடக்கிறான் அவன். செத்த பாம்பை அடிச்சு என்னா பிரயோசனம்?

இதுவரைக்கும் என்னை வேணாங்கற பொண்ணுங்க கிட்ட நான் எந்த அழிச்சாட்டியமும் பண்ணதில்லே. சாரின்னு எவளாவது சொன்னா, நானும் ஜெண்டில் மேனா கூலா போயிகிட்டே இருந்திருக்கேன். ஆனா நீ, கெழவி கூட இருக்காங்கற தைரியத்துல என்னை எட்டி உதைச்சுட்டே இல்லே? இதை என்னால பொறுத்துக்க முடியாதுடி? நான் பொறுத்துக்க மாட்டேன்? என்னை நீ தேவையில்லாம சீண்டிப் பாத்துட்டே? அதுக்குண்டானதை நீ அனுபவிச்சித்தான் ஆகணும்.

நான் துரியோதனன். துரியோதனன் இளவரசன்டி. மகாபாரதம் தெரியுமா உனக்கு? நானும் ஒரு ராஜகுமாரன்தாண்டி. திரௌபதி துரியோதனனை அலட்சியமா பாத்து சிரிச்சா. நீ என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சுட்டுப் போறே? நெறைஞ்ச சபையில அவ துணியை அவன் அவுத்தான். அதுக்கப்புறம் பதினெட்டு நாள்ல ஊரே அழிஞ்சுது. அதெல்லாம் சரிதான்!

நான் ஒரு ரோஷமான ஆம்பிளை. என் ஆம்பிளை ஈகோவை நீ குத்திப் பாத்துட்டே? அந்த குத்தலை என்னால இப்ப தாங்கிக்க முடியலை. என் மனசு தவிக்குது. அந்த மாதிரி நீயும் தவிக்கணும். தவிச்சு தவிச்சு அந்த வலியை நீயும் என்னை மாதிரி அனுபவிக்கனும்.

நான் நினைச்சா ... பத்து நிமிஷத்துல என்னால உன் அழகை அழிச்சு உன் திமிரை அடக்க முடியும். ஆனா ஆயிரம் இருந்தாலும் நானும் படிச்சவன். சமூகத்துல நல்ல அந்தஸ்துல இருக்கற குடும்பத்தை சேர்ந்தவன். உன்னை அவமானப்படுத்தறதுக்காக பயித்தியக்காரன் மாதிரி ஒண்ணு கிடக்க ஒண்ணு புத்திக்கெட்டுப் போய் பண்ணிட மாட்டேன். நான் புத்திசாலி. உன் உடம்புக்கு எந்த தீங்கும் நான் பண்ணப் போறதில்லே. நீ உன் மனசால துக்கப்படணும். நீ உன் மனசுக்குள்ளவே வெளியில சொல்ல முடியாம அழுவணும்.

நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். நான் ஒரு விதத்துல கயவாளிதான். என் கயவாளித்தனத்தை நீயும் பாக்கணும். அடியே சுகன்யா, உன்னை என்னால தொட்டுப்பாக்க முடியலை; பரவாயில்லை. என்ன ஆனாலும் சரி... உன்னை அழவைக்காம நான் விடப்போறதில்லை... என்னாலத்தான் நீ அழறேன்னும் உனக்குப் புரியணும். என்னச் செய்யலாம்? சம்பத்தின் மனம் சக்ர வீயூகம் வகுக்க ஆரம்பித்தது. 




காப்பி கொண்டாறேன்னு உள்ளப் போனக் கிழவியை காணோம்? எவ்வளவு நேரம் இன்னும் நான் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கறது? இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் இரத்தம் அழுத்தம்தான் அதிகமாகுது? ஒரு தம்மாவது அடிச்சுட்டு வரலாமா? சம்பத் யோசித்துக்கொண்டிருந்தான்.

"என்னடா சம்பத்து ... கனகா எங்கடா?" சிவதாணு தன் கோழித் தூக்கத்திலிருந்து விழித்தார்.

"கிச்சன்ல இருக்காங்க; காஃபி போட போயிருக்காங்க தாத்தா.."

"உக்காரு நீ ஏன் எழுந்துட்டே? இதோ நான் ஒரு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்.."

"ம்ம்ம் ..."

சிவதாணு கூடத்திலிருந்து நகர்ந்ததும், செண்டர் டேபிளின் மேலிருந்த கேலக்ஸி மெல்ல சிணுங்கியது. சிணுங்கி அடங்கியது. மீண்டும் சிணுங்கத் தொடங்கியது. கிழவன் - கிழவிக்கும் போன் வருது? லேடஸ்ட் மாடல் வெச்சிருக்கான் ... பணம் கொழுத்துப் போயிருக்குது கிழவன் கிட்ட! பேத்தி துள்ளி விளையாடறா? எடுத்துப் பாக்கலாமா? வந்த எடத்துல நமக்கு எதுக்கு வீண் வம்பு?

வேலிப் பக்கம் ஒண்ணுக்கு அடிக்கப் போய்தான் ஒரு ஓணாணை நம்ம ஜீன்ஸூக்குள்ள வுட்டுக்குட்டு அவஸ்தை படறேன்? இப்ப இந்த செல்லை எடுத்துட்டு இன்னொரு ஓணாணையும் உள்ள் ஏன் வுட்டுக்குவானே? செல் விடாமல் மீண்டும் மீண்டும் சிணுங்கவே ... சம்பத் தயக்கத்துடன் செல்லை எடுத்து பேசினான்.

"ஹெலோ ..."

"மிஸ்டர் சிவதாணு சாரோட நெம்பர் தானே?"

"ஆமாம் நீங்க யாரு? சம்பத் அலட்சியமாகப் பேசினான்.

"ரகு ...சார்கிட்டேயிருந்து இந்த நம்பர் கிடைச்சுது ... "

"அது சரிய்யா ... நம்பர் நீங்க யாருக்கிட்ட வாங்கினீங்கன்னா நான் கேக்கிறேன்? ... உங்களுக்கு என்ன வேணும்?"

"சார் ... நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நெனைக்கிறேன்?"

"யோவ் இங்க யாருக்கும் இன்ஸூரன்ஸ் பாலிஸில்லாம் தேவையில்லை ... ஒருத்தன் மாத்தி ஒருத்தன் சும்மா தொந்தரவு பண்ணாதீங்க .."

"சார் ... நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்களேன் ..."

"சொல்லுயா ... உனக்கு யாருகிட்டே பேசணும்?" சுகன்யா மீது இருந்த எரிச்சலை அவன் இவனிடம் காண்பித்தான்.

"சுகன்யா அங்க வந்திருக்கறாதா ரகு சொன்னார். சுகன்யா இருந்தா அவளை ... இல்லே அவங்களை கூப்பிடுங்களேன்...எனக்கு அவங்க கிட்டத்தான் பேசணும்.."

"சுகன்யா இங்கதான் இருக்கா ... நீங்க...?" சுகன்யாவின் பேரைக் கேட்டதும், சம்பத்தின் காதுகள் சிலிர்த்துக் கொண்டன. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். குரலை தாழ்த்தி பேசினான்.

"நான் செல்வா ... தமிழ் செல்வன் பேசறேன் ... நான் சுகன்யாவோட குளோஸ் ஃப்ரெண்ட் .." செல்வா தயங்கி தயங்கி பேசினான்.

"அப்படியா ... சாரி சார்... இன்னும் கூட அன்சொலிசிட்டட் கால்ஸ் வருது பாருங்க... அதான் நான் உங்களை தப்பா நெனைச்சுட்ட்டேன்" சம்பத் பம்மினான்.

சம்பத்துக்கு சுர்ரென்று ஏறியது ... அடியே சுகன்யா ... என்னமோ ஆம்பிளை காத்தே உன் மேல படாத மாதிரியும், நீ என்னமோ பெரிய பத்தினி மாதிரியும் என் கிட்ட பத்து நிமிஷம் முன்னேதான் ஃபிலிம் காட்டினே? "ங்கோத்தா" உனக்கு குளோஸ் ஃபிரண்டு வேற இருக்கானா? என் அம்மா சொன்னது சரியாதான் இருக்கு? ஜோக்கர் இல்லாம இவ்வள நேரம் உக்காந்து இருந்தேன். இனிமேல எடுக்கற சீட்டெல்லாம் ஜோக்கர் தான்.

நல்லா தெரிஞ்சுக்கோ! சம்பத்துக்கு கொஞ்ச்சம் கேப்பு கிடைச்சா போதும். வெச்சிடுவான் அவன் ஆப்பு... இப்ப வெக்கிறேண்டி உனக்கு நீட்டா ஆப்பு! டீ.ஆர் பாணியில் சிலிர்த்து எழுந்தான் சம்பத்.

"சார் ... " செல்வாவின் குரல் இப்போது சற்றே உயர்ந்தது.

"மிஸ்டர் செல்வா ... சுகன்யா ஈஸ் நாட் ஃபீலிங் வெல் ... ஷீ இஸ் டேக்கிங் ரெஸ்ட் ... அவங்க எழுந்ததும் நான் உங்களை கூப்பிட சொல்லட்டுமா?

"சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லையா? அவளுக்கு என்னாச்சு ... ரகு இதைப் பத்தி என் கிட்ட ஒண்ணும் சொல்லலியே? அவ கிட்ட நான் கொஞ்சம் அர்ஜண்டா பேசியே ஆகணும் ... கொஞ்சம் நீங்க கூப்பிடுங்களேன் அவளை ..."

சம்பத் ஒரு வினாடி திகைத்துத்தான் போனான். சுகன்யாவோட மாமனுக்கு வேண்டியவனா இவன்? சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும், அப்படியே துடிச்சுப் போறான். அதுக்கு மேல சுகன்யாவுக்கு என்னமோ தாலி கட்டிட்டவன் மாதிரி "அவங்கறான் ... இவங்கறான்" நிஜமாவே இந்த செல்வா யாரா இருப்பான்? நிதானமா பேசி விஷயத்தை தெரிஞ்சுக்கணும்.

"மிஸ்டர் செல்வா ...நீங்க ரொம்பவே உரிமையோட சுகன்யாவை "அவ" "இவ"ன்னு பேசறதைப் பாத்தா ... நீங்க அவங்க ப்ரெண்ட் மட்டும் இல்லேன்னு தோணுதே?"

"ஆமாம் சார் ... நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ..." சொன்னபின் செல்வா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான். சுகன்யாகிட்ட பேசணுங்கற அவசரத்துல, என் கூட பேசறது யாருன்னு கேக்காம நான் பாட்டுக்கு பேசிகிட்டே போறேன்? நான் மடையன்னு சுகன்யா சொல்றது சரியாத்தான் இருக்கு ... செல்வா தன் கன்னத்தை சொறிய ஆரம்பித்தான்.

"ம்ம்ம் ..." சம்பத் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தான்.

ஆப்பை வெச்சுட வேண்டியதுதானா? டேய் சம்பத் ஒரு தரம் முடிவெடுத்ததுக்குப் பின்னாடி என்னடா யோசனை? வெக்கறதை வெச்சுட்டு, கிழவி காப்பி குடுத்தா குடிச்சுட்டு சீக்கிரமா எடத்தை காலி பண்ணுடா.. சுகன்யா ... ஆட்டம் முடிஞ்சு போச்சு; ஆப்பை வெச்சுடறேன்; ஆனா நேரடியா உனக்கு இல்லே? உன் தமிழ்செல்வனுக்கு வெக்கிறேன்... அவன் அந்த ஆப்பை உருவி உனக்கு வெப்பான் ... அப்பத் தெரியுண்டி உனக்கு சம்பத்து யாருன்னு? அவன் மனசு அவனை அவசரப்படுத்தியது.

"ஆமாம் நீங்க யாரு? இவ்வளவு தூரம் என்னை கேள்வி மேல கேள்வி கேட்டு ஸ்கிரீனிங்க் பண்றீங்க? செல்வாவின் குரல் சற்றே எரிச்சலுடன் வந்தது.

"நானா?" கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்லமால் வேண்டுமென்றே கிண்டலாக சத்யராஜ் பாணியில் சிரிக்க ஆரம்பித்தான் சம்பத்.

"உங்களைத்தான் கேட்டேன் ... பதில் சொல்லாமா சிரிக்கிறீங்க?" செல்வா தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான்.

"சுகன்யா எத்தனை பேரை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு நெனைச்சேன்! ... சிரிப்பை அடக்க முடியலை! ... அதான் சிரிச்சேன்! ..." சம்பத் தன் ஆப்பை மெதுவாக கூராக்க ஆரம்பித்தான்.

"மிஸ்டர் ... நீங்க என்னப் பேசறீங்க? இது சிவதாணுப்பிள்ளையோட நெம்பர்தானே? ராங்க் நம்பர் ஒண்ணுமில்லேயே? சுகன்யாவோட தாத்தா வீட்டுல யாரு இப்படி சுகன்யாவைப் பத்தி தப்பா பேசுவாங்க? செல்வாவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

"தமிழ் செல்வா ... நீங்க சரியான நெம்பர்லதான் .. அதுவும் சரியான ஆள் கிட்டதான் பேசறீங்க ... என் பேரு சம்பத்குமார் ... என்னை ஆசையா எல்லாரும் சம்பத்துன்னு கூப்பிடுவாங்க; சுகன்யாவோட அத்தைப் பையன் நான் ... சுகன்யாவோட முறை மாப்பிள்ளை கிட்டத்தான் பேசிகிட்டு இருக்கீங்க.." கூராக்கிய ஆப்பில் சிறிது தேங்காய் எண்ணையையும் பூச ஆரம்பித்தான்.

"சார் ... ஆனா நீங்க சுகன்யாவைப் பத்தி தப்பா பேசற மாதிரி எனக்கு தோணுது?"

"என்னா நான் தப்பா பேசிட்டேன் இப்ப? கேக்கற உனக்கே கோவம் வருதுல்லே? சுகன்யாவை அவ ஸ்கூல் டேஸ்லேருந்தே என் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கேனே? அது தப்பாய்யா?"

"ம்ம்ம்..." செல்வா முனகினான்.

"என்னப் பண்றது? நான் கொஞ்சம் கருப்பா பொறந்துட்டேன் ... தமிழ் நாட்டுல கருப்பா இருக்கறவன் தாய்யா பெரிய மனுஷனா, வெள்ளையும் சள்ளையுமா உலாவறான். சுகன்யாகிட்ட செத்த நேரம் முன்னாடிதான் கிளாட் டு மீட் யூன்னு கை நீட்டினேன். சுகன்யாவுக்கு என் கருப்பு கையை புடிச்சு குலுக்கறதுக்கு இஷ்டமில்லே?

"சார் ... நீங்க சுகன்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ் ..."

"கண்டிப்பா கூப்பிடறேன் ... நீங்க தாராளமா உங்க லவ்வர் கிட்ட பேசுங்க ... நான் சொல்றதை கொஞ்சம் ஒரு பத்து செகண்ட் கேளுங்க.."

"ம்ம்ம் .." செல்வா இது என்னடா இது ஒரு பைத்தியக்காரன் கிட்ட மாட்டிக்கிட்டேன் போல இருக்கே ... என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

"நடுவுல என் தங்கம் ... காலேஜ் அது இதுன்னு வெளியூர்லல்லாம் போய் படிச்சாளா? மெட்றாஸ்ல்ல வேலை வேற கிடைச்சிடுத்து ... இப்ப நம்பளைப் பாத்தா பாக்காத மாதிரி ஒதுங்கறா ... சார்... நீங்களே சொல்லுங்க இது ஞாயமா? நான் எதாவது தப்பா சொல்றேனா? எல்லாத்துக்கும் மேல, என் கிட்டயே, நீங்க என் மாமன் பொண்ணை கட்டிக்கப்போறேன்னு நோட்டீஸ் குடுக்கறீங்க ... இது ரைட்டா?

"அயாம் சாரி மிஸ்டர் சம்பத் ... ஆனா இதுல நான் என்னப் பண்றது? ... சுகன்யா விருப்பம் தானே இதுல முக்கியம்? இப்ப உங்க கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை?"

"நான் தெளிவா சொல்றேன் நைனா.. நீ நல்லா கேட்டுக்கோ ... காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் அடிச்சுட்டு போனானாம் ... இந்த கதை உனக்குத் தெரியுமா? எட்டு வருசமா நான் அவளை காதலிக்கறேன்! .. நேத்து வந்த நீ என் சுகன்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சீர் வரிசை வாங்கிக்கிட்டு போவே? நான் என்னா உன் பஸ்ட் நைட்ல பக்கத்துல நின்னு வெளக்கு புடிக்கவா?" சம்பத் தன் ஆப்பை அழுத்தமாக செருகினான்.

"ம்ம்ம் ...."

"என்னம்ம்மா கண்ணு ... சத்தத்தையே காணோம் ...? ஹார்ட் அட்டாக்கா? போய் கீய் தொலைச்சுடாதே? சுகன்யா அப்புறம் ரொம்ப வருத்தப்படப் போறா?"

"மிஸ்டர் சம்பத் ..." செல்வாவின் குரல் நிஜமாகவே அவன் தொண்டையிலிருந்து எழவில்லை..

"கடைசியா ஒரே ஒரு வார்த்தை ... உன் தோலு என்னா செவப்பா? ... இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா?



"பிளீஸ் .. உங்களால சுகன்யாவை கூப்பிட முடியுமா .... முடியாதா?"

"டேய் ... செல்வா ... நான் என்னா மாமா வேலையை பாக்கறேன்? சுகன்யாவை கூப்பிட்டு உன் கையில தாரை வாத்து குடுக்கறதுக்கு? மாசம் முழுசா சொளையா ஒரு லட்சம் சம்பாதிக்கற எஞ்சினீயர்டா! அமெரிக்காவுலேருந்து வாடா வாடான்னு நாலு கம்பெனிக்காரன் கூவுறான்! இப்ப லைனை கட் பண்ணு ... ரெண்டு நிமிஷம் கழிச்சி திருப்பியும் போடு! கிழவன் சிவதாணு கக்கூஸுக்கு போயிருக்கான்! வந்து சுகன்யாவை உனக்கு கூட்டி குடுப்பான் ... வெச்சிட்டா" சம்பத் செல்வாவின் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி ... ஞாபகமாக செல்வாவின் நம்பரை நோட் பண்ணிக்கொண்டு, செல்லை செண்டர் டேபிளின் மேல் வைத்தான்.

ஆப்பு அழகா எறங்கிடுச்சு ... வெச்ச எனக்கும் வலிக்கல ... வெச்சிக்கிட்டவனுக்கும் வலிக்கலை. நேரம் போவ போவ நான் போட்ட பிட்டை திருப்பி திருப்பி அந்த பைத்தியக்கார செல்வா மனசுக்குள்ளவே ரீவைண்ட் பண்ணிப் பாப்பான்... அப்ப வலிக்கும் ... சம்பத் தன் மனசுக்குள் திருப்தியுடன் சிரித்துக்கொண்டான். 



No comments:

Post a Comment