Saturday 28 February 2015

சுகன்யா... 19


கல்யாணமான புதிது. சுந்தரியும், குமாரும் அன்னியோன்யமாக இருந்த நாட்கள் அவை. மழை இலேசாக தூறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம். காற்று குளுகுளுவென வீசியது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சன்னல் வழியே மழைச்சாரல் வீட்டுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. குமார் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். அன்றும், இன்று போல்தான் வானம் பொழிந்து பூமியை நனைக்க துடித்துக் கொண்டிருந்தது. சுந்தரி அறைக்கு வெளியில் மொட்டை மாடியில் மழைத்தடுப்புக்கு கீழ் நின்று கொண்டு மழை பொழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று அந்த மொட்டை மாடியில் எந்த கவலையும் இல்லாமல், தன் ஆசைக் கணவனுடன் மழையில் நனைந்து, குதித்து, சிரித்து விளையாடி, மகிழ்ச்சியாக இருந்ததை நினைக்கையில் இன்று அவள் மனம் புது மணப்பெண்ணைப் போல் குதிபோட்டு கும்மாளமிடுகிறது. மீண்டும் தன் கணவனை, தன் மடியில் கிடத்தி, அவனை மகிழ்வித்து தானும் மகிழ மனம் ஏங்குகிறது. அவள் மனம் அவள் கட்டுக்குள் நிற்காமல், எந்த இலக்குமில்லால் அலைந்து அவளை இம்சை செய்கிறது. அவள் அடி வயிறு குழைந்து நெகிழ்கிறது. ஆண்டுகளாக இறுகிக்கிடக்கும் அவள் அந்தரங்கம் இன்று தீடிரென இளகுவதை கண்டு அவள் மனம் துணுக்குற்றது.

தீடிரென சுந்தரியின் மனம் அவள் கல்லூரியில் படித்தக் காலத்தை நோக்கி தாவியது. தாவல்தானே மனசின் நியதி! அது ஓரிடத்தில் நில்லாமல் தாவிக்கொண்டே இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போதே குமாரும் அவளும் ஒருவரை ஒருவர் முழு மனதுடன் நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் காதல் உறவு என்பதே அந்த காலத்தில் ஒருவரின் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு, அவ்வப்போது இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள, பேசிக்கொண்டே நீண்ட தூரம் நடப்பது தான். மொத்தத்தில் அவர்களின் இரண்டாண்டு காதல் வாழ்க்கையும் ஓரிரு முத்தத்தையே கண்டிருந்தது. "கிஸ் அடித்தல்." என்பதும், கல்லூரியிலிருந்து பஸ்ஸில் ஒன்றாக உட்க்கார்ந்து, கண்களால் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கிக்கொண்டு, தொடைகள் உரச, மனம் கிளுகிளுக்க, உடன் படிப்பவர்கள் பொறாமையில் வெந்துகொண்டிருக்க, ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து, கிராமத்துக்கு திரும்பி வரும் வெள்ளிக்கிழமை மாலையன்று, இருட்டும் நேரத்தில் சாலையோரம், மரத்தின் கீழ் ஒளிந்து நின்று, யாராவது பார்த்துவிட்டால், உடம்பு புண்ணாகிவிடும் என்ற பயத்தில், கன்னத்தில் உதடுகள் பட்டும் படாமல் ஒரு முறை ஒற்றியெடுத்துவிட்டு ஓட்டம் ஓட்டமாக வேறு திசைகளில் ஓடுவதுதான். அடுத்த வாரம், கல்லூரியில் ஹாஸ்டலில், மதிய உணவு சமயத்தில், சுந்தரி பெருமையாக தன் சினேகிதியிடம் பீற்றிக் கொள்வாள், "பேசிக்கிட்டே இருந்தான்; சட்டுன்னு என் ஆளு நேத்து என்னை கன்னத்துல கிஸ் அடிச்சுட்டாண்டி!". "நீ லக்கிடி ... உன் ஆளு நிஜம்மாவே ஹேண்ட்சம்மா இருக்காண்டி, ஆனா ஜாக்கிரதையா இரு," அவள் தோழி உமா, சுந்தரியை தன் கண்களில் பொங்கும் பொறாமையுடன் பார்ப்பாள், பிறகு தாழ்ந்த குரலில் கேட்ப்பாள், "சுந்தரி ... கிஸ் அடிக்கும் போது எப்படி இருந்துதுடி" "சூப்பரா இருந்ததும்ம்மா," சுந்தரி கண்ணடித்து சிரிப்பாள். ஓருமுறை, பிள்ளையார் கோவில் பிரகாரத்தில், முத்தம் என்ற பெயரில் அவசர அவசரமாக குமார் அவள் உதட்டை அழுத்தி கடித்து விட்டதையும், உதடு கிழிந்து ரத்தம் கசிய, அவள் வலி தாங்காமல் அவனைத் தன் கையிலிருந்த பூக்கூடையால் மொத்தி, அந்த கூடையின் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த மூங்கில் குச்சி, அவன் கண்ணுக்கீழ் குத்திக் கிழித்து ரத்தம் பொங்கியதையும், அவள் துடிதுடித்து ஆயிரம் தடவை அவனிடம் மன்னிப்பு கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும், வீங்கிய உதட்டைப் பார்த்து "என்னடி இது ... ஏன் இப்படி உன் உதடு திடீர்ன்னு வீங்கியிருக்கு" அம்மா ஏகத்துக்கு கவலைப்பட்டதையும், "அம்மா குளவி கொட்டிடுத்தும்மா" என அவள் புளுகினதையும், சுந்தரியின் தாய் வேண்டாம் என்றாலும் கேட்காமல் மஞ்சளை அறைத்து உதட்டில் பூசியதையும், இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது சுந்தரிக்கு. அந்த ஒரு ஐந்து வினாடி நெருக்கத்துக்காக எத்தனை தவிப்புடன் வாரம் பூராவும் காத்திருப்பார்கள் இருவரும். வானம் இப்போது பூ வாளியாக மாறி, பூமிச்செடியில் தண்ணீர் விட ஆரம்பித்துவிட்டது. "உடம்பு நனையுதே; உள்ளே எழுந்து போகலாமா?" சுந்தரி ஒரு வினாடி யோசித்தாள். "உள்ளேப் போய் மட்டும் என்னப் பண்ணப் போறேன்? இந்த மனசு என்னை நிம்மதியாவா இருக்கவிடப்போகுது? இன்னைக்கு நான் சத்தியமா தூங்கப்போறது இல்லை; அந்த பாவி மவன் நினைப்பு வந்துடுச்சி; புரண்டு புரண்டு படுத்து உடம்பு வலிதான் மிஞ்சும் ... சுகன்யா முழிச்சிக்குவா; சின்ன சத்தம் கேட்டாக் கூட எழுந்துக்கறாளே? இங்கேயே செத்த நேரம் உக்காந்து இருப்போம் ... அவளாவது நிம்மதியா தூங்கட்டும்!" சுந்தரியின் மனம் மீண்டும் அந்த மழை நாளை நோக்கித் திரும்பியது. கல்யாணம் முடிந்த பின், ஒருத்தரை ஒருத்தர் தொடும் போது, ஒவ்வொரு முறையும் ஒரு புது வித அனுபவத்தை உணர்ந்த காலம். உள்ளமும் உடலும் சளைக்காமல், தினம் தினம், காலையும் மாலையும், பரஸ்பரம் அடுத்தவரின் உடலில் புது புது அர்த்தங்களை விடாமல் தேடிக்கொண்டிருந்த நேரம். மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் முதுகில், குமார் தன்னை பசைபோட்டு ஒட்டியதைப்போல் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த இலேசான வியர்வை வாசமும், காலையில் முகத்தில் தேய்த்து, இன்னும் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் கலந்த ஆண்மை மணமும் வந்துகொண்டிருந்தது. அவன் தொடை நடுவில் மெல்ல மெல்ல எழுந்த புடைப்பு சுந்தரியின் பின்னெழில்களில் உரச, அந்த புடைப்பை தன் கையில் பற்றிக்கொள்ள அவள் மனம் பறக்க, அவன் கைகள் அவள் அடிவயிற்றை தடவ, அவள் இதயம் வேகமாக துடித்து, முகம் நிறம் மாறிக்கொண்டிருந்தது. "வீட்டுக்கு வந்து முகத்தைக் கூட கழுவலியா நீ ... சரியான சோம்பேறி? "ம்ம்ம் .... ஏம்ம்மா" "நீ காலைல மூஞ்சியிலே தேய்ச்சிக்கிட்ட லோஷன் வாசனை உன் கழுத்துலேருந்து இன்னும் குப்புன்னு வருது." "கழுவிட்டேண்டி மூஞ்சை." "பொய் சொல்லாதே ... நீ பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது" அவள் சலித்துக்கொண்டாள். "சுந்து நான் ரூம்ல உனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன் ... நீ இங்க மழையை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கறே" அவன் குரலில் அவள் உடம்பை திறந்து பார்க்கும் ஏக்கம் வழிந்தது. "தெரியும்" "என்னத் தெரியும்" "நீ எதுக்கு காத்துக்கிட்டிருக்கேன்னு"

"எதுக்கு" "துள்ளிக்கிட்டு என் இடுப்புக்கு கனமா கீழே எதுவோ இடிக்குது ... அதைக் கேளு ... அது சொல்லும்" சுந்தரி கலகலவென நகைத்தாள். "எங்கடி ... எதுடி ..." அவன் தன் இடுப்பை அவள் புட்டங்களில் மேலும் அழுத்தினான். "ஹீம்ம்ம்ம் .. .ம்ம்ம்மா" அவள் சுகமாக முனகினாள். "சுந்துக்குட்டி, உனக்கு மழை பெய்யறதை பாக்கப் பிடிக்குமா? அவள் காதருகில் கிசுகிசுத்தவன் தன் இதழ்களால் அவள் காது நுனியை கவ்வி இதமாக கடித்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான். முத்தமிட்டவன் இதழ்கள் அவள் கழுத்துடன் நிற்காமல், ரவிக்கை மறைக்காத அவள் முதுகை பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது. அவன் கைகள் அவள் கைக்கடக்கமான மாங்கனிகளை சேலையுடன் சேர்த்து வெறியுடன் பிசைந்து கொண்டிருந்தது. "ம்ம்ம் ... பிடிக்கும் ... மழையை பாக்கறது, மழையில நனைஞ்சுக்கிட்டு நிக்கறது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்" சுந்தரி முனகினாள். அவள் முனகல் சத்தம் அவன் காதுகளுக்கு இன்பமாக இருந்தது. "சரி வா ... அப்ப மழையில நனையலாம்" குமார் உற்சாகத்துடன் அவளை இழுத்துக்கொண்டு மொட்டை மாடியின் நடுவுக்கு ஓடினான். சுந்தரி குழந்தையைப் போல் மழையில் குதித்தாள். கைகளை விரித்து தன்னைத்தானே தட்டாமாலை சுற்றினாள். குமார் அவளை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டெனத் தாவி அவன் முதுகில் உப்பு மூட்டையாக தன்னைக் கட்டிக்கொண்டாள். தன் அந்தரங்கத்தை அவன் அடி முதுகில் தேய்த்தாள். தன் மனைவிக்கு என்னப் பிடிக்கும் என்னப் பிடிக்காது என்பதே அவனுக்கு இன்னும் பிடிபட்டிருக்கவில்லை. மழை இவளுக்கு இத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? வெற்று மார்புடன், தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு, நனைந்த முடியுடன், உயரமாக, உயரத்துக்கேற்ற பருமனுடன், சிவப்பாக, கருத்த மீசையுடன், ஈர லுங்கியில், முகத்தில் பொலிவுடன், வியப்புடன் தனனைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனை காணக் காண அவள் மனம் வெறி கொண்டு துள்ளியது. மழை நீரால் உடலில் நனைந்து ஒட்டிக்கொண்டிருக்கும் துணியை உறுவி எறிந்து விட்டு, அவனை அங்கேயே கட்டித் தழுவி, அந்த மழையிலேயே அவனைக் கூடும் வெறி அவளுள் எழுந்தது. மழையில் நனைந்த படியே அவனை நெருங்கி அவனை தன் மார்புடன் சேர்த்து தழுவி வெறியுடன் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். மழையில் நனைந்த புடவை அவள் வடிவான உடலுடன் ஒட்டிகொண்டு அவள் வீங்கிய மார்பையும், அவள் பின்னெழில்களையும் தெளிவாக அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மார்புகள் அவள் குதியலுக்கு ஏற்ப குலுங்கி, அவள் கால் கொலுசுகள் மேலும் கீழும் ஏறி ஒலித்தன. அருகில் நெருங்கி அவன் லுங்கியோடு சேர்த்து, அவன் உறுப்பை அழுத்திக் கண்களில் விஷமத்துடன் கிள்ளி விட்டு, தன் புட்டங்கள் அசைந்தாட அவள் மானாக ஓடினாள். அவன் அவளைத் துரத்தி பின்னால் ஓடினான். அவன் அவளை நெருங்கியதும் சுந்தரி தன் கைகளில் மழை நீரைப் பிடித்து அவன் முகத்தில் வீசி அடித்தாள். ஈர உடையில் தன் ஆசை மனைவியைப் பார்த்த குமாரின் தம்பி வேகமாக விறைத்து எழ, குமார் அவளை இறுகத் தழுவி தன் வலுவான கைகளல் தூக்கித், தன் உறுதியான மார்பில் சேர்த்தணைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளிச் சுவரில் அவளைச் சாய்த்து அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டான். புடைத்திருந்த அவன் தண்டு அவள் அடி வயிற்றில் நெளிய, அதன் உரசலால் தன்னுடலில் ஏற்பட்ட கிளுகிளுப்பை அவள் கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். மழைச்சாரல் உண்டாக்கிய இலேசான குளிரில் அவளையுமறியாமல் வெட்க்கத்தை விட்டு அவள் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவன் புடைப்பை மேலும் மேலும் எழுப்பினாள். அவன் உடல் தந்த கதகதப்பு அவளுக்கு அந்த நேரத்தில் இதமாக இருக்க, குமாரின் கைகள் அவள் சேலை முந்தானையின் உள்ளே நுழைந்துவிட்டிருந்தது. "என் சுந்தரி குட்டிக்கு என்னப் பிடிக்கும்" "உனக்குத் தெரியலையா? எனக்கு ... என்னப் பிடிக்குதுன்னு..." " ஒரு தரம் உன் வாயாலத்தான் சொல்லேன் ... அப்புறம் பாரேன் ..." "மக்க்க்கு ... வீரமா இழுத்துக்கிட்டு வந்து தாலி கட்டி ஒரு மாசமாச்சு ... பொண்டாட்டிக்கு என்னப்புடிக்கும்ன்னு இன்னும் புரியலை"? அவள் அவன் கன்னத்தை வருடி கீழுதட்டைத் திருகினாள். "ஓரே ஒரு தரம் சொல்லுன்னுதானே கேக்கிறேன் ... ரொம்ப அல்ட்டிக்கிறியே ... எனக்கு என்னப் புடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமா? குமாரின் கைகள் அவள் புட்டங்களை வருடிக்கொண்டிருந்தன. "க்க்க்கும்ம்ம் ..." அவள் அவன் கையை எடுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள்.. சட்டென திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். " நீ மெதுவா அமுக்கினா எனக்குப் புடிக்கும்; எப்பவும் மொரட்டுத்தனமா கசக்கறே... அதுங்களை ... எனக்குத் தெரியும் உனக்கு என் மாங்காய்களை புடிக்குதுன்னுட்டு ... அதுங்களை அழுத்து ஆனா ரொம்ப கசக்காதே ... எனக்கு வலிக்குதுல்ல..." அவள் குழைந்தாள். "சாரிடாச் செல்லம்...இனிமே நான் அப்படி பண்ணமாட்டேன்; இவ்வள நாளா நீ எங்கிட்ட ஏன் சொல்லலை?" "நீ இன்னைக்குத்தானே கேட்டே ... எனக்கு என்னப் பிடிக்கும்ன்னு?" "உனக்குப் பிடிக்காததை இனிமே நான் செய்ய மாட்டேன் ... உள்ளப் போவலாம் சுந்து" அவன் குரலில் கெஞ்சல் ... "பிராமிஸ் .. " சுந்தரி தன் உள்ளங்கையை நீட்டினாள். "பிராமிஸ் ... அவன் அவள் நீட்டிய கையில் முத்தமிட்டான். "உள்ளப் போலாமாடி ராஜாத்தி" "போய் ...." அவள் சிணுங்கினாள். "நான் அப்ப்பாவாம் ... நீ அம்ம்மாவாம் ... நமக்குன்னு ஒரு குட்டிப் பாப்பா வேணாமா? அவன் விரல்கள் அவள் ரவிக்கையை அவிழ்க்கத் துடித்தது. "முண்டம் ... இங்கேயே அவுக்கறயே ... அறிவு கெட்டவனே? ..." அவள் அவன் கன்னத்தைக் கடித்தாள். "நீதானே அமுக்குன்னு சொன்னே?" "அமுக்குன்னு சொன்னேன் ... இங்கயா அவுக்க சொன்னேன் ... ஹூக்கும்ம்ம்ம் ... மக்கு ... மக்கு ... குமரு உள்ளப் போயிடலாம் ... வாப்பா ... குமரு ... ப்ளீஸ் ... இங்க வேணாம்" அவள் அவனை வலுவாக உந்தித் தள்ளினாள். *** வானத்தில் இடியின் முழக்கம் ... காற்றின் வேகம் வலுத்திருந்தது ... சுழன்று சுழன்று காற்று அடித்தது ... மின்னல் மின்னியது ... அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள். மழை நாட்கள்ல்ல, மனுஷனுடைய உடல் வேட்க்கை அதிகமாயிடுது ... இப்ப என் குமார் என்னப் பண்ணுவான்? அவனும் இப்படித்தான் தூங்காம இருப்பானா? "படார்" ... பால்கனி கதவு மிகுந்த சத்தத்துடன் அடித்துக்கொள்ள, சட்டென சுந்தரி நிகழ்காலத்துக்கு வந்தாள். "சே ... சே .. எனக்கென்ன பித்துப் புடிச்சு போச்சா?" "இன்னைக்கு உப்புமாவுல உப்பு கொஞ்சம் அதிகமாயிருந்தது ... அதான் என் உடம்புக்கு கதகதப்பு கேக்குது." சடசடவென மழை வேகமாகக் கொட்டத் தொடங்கியது. சுந்தரி விருட்டென எழுந்தாள். எழுந்து கூரையில்லாத இடத்தை நோக்கி மெதுவாக நடந்து தலை முடியை அவிழ்த்து உதறிக் கொண்டு, கொட்டும் மழையில் நின்றாள். தலை முடி அவள் இடுப்பை தொட்டு நின்றது. அகன்ற இடுப்பு மத்தாளமாக காட்சியளித்தது. "உடம்பு சூடு கொஞ்சம் கொறையட்டும்." சுந்தரி விருப்பத்துடன் மழையில் நின்று நனைந்தாள். இரு கைகளாலும் மார்பின் மீது விழுந்த நீரை வழித்து எறிந்தாள். அவள் கை பட்டதும் ரவிக்கையில் தூங்கிக்கொண்டிருந்த முலைகளில் தினவேறி மெதுவாக காம்புகள் நிமிரத்தொடங்கின. "எனக்கு பிடிக்காததை செய்யமாட்டேன்னு மழையில நின்னு சத்தியம் பண்ணியே? ... நான் உன்னை வீட்டை விட்டுப் போடான்னு கத்தினேன் ... உண்மைதான்... நான் இல்லேன்னு சொல்லலை...எத்தனை தரம் நீ என்னை உன் குடி வெறியில அடிச்சிருப்பே? என்னை கீழேத் தள்ளி மிதிச்சிருப்பே? நான் ஒண்ணுமே சொன்னதில்லையே? நம்ம குழந்தையை குடி வெறியில கடிச்சியேடா? அதை என்னால பொறுக்க முடியாம போய்த்தானே, நான் உன்னை ஓரே ஒரு தரம், போதையில நீ பண்ணத் தப்புக்கு நான் திருப்பி அடிச்சேன்? அதுக்காக நீ என்னை விட்டுட்டு மொத்தமா போயிட்டியேடா?" "குமரு, இப்ப நீ எங்கடா இருக்கே? நான் இங்கேத் தனியா மழையில பைத்தியக்காரியாட்டம் நிக்கறண்டா; உடம்பு சூடு ஏறிப் போய் நனையறேண்டா ... தவிச்சிப் போயிருக்கேண்டா ... என்னால முடியலடா ... வெக்கத்தை விட்டு கெஞ்சறேன் ... வந்துடுடா ... எனக்காக நீ வரவேண்டாம் ... உன் ஆசைப் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரே ஒரு தரம் வந்துட்டுப் போடா... " அவள் மனம் அழுது கூவியது. வானத்தில் மின்னல் மின்னி, இடி இடித்துக்கொண்டு குமுறியது... இயற்கையின் இந்த கம்பீரமான பிளிறலில், அவள் மனதின் மெல்லிய ஒலம் அவள் ஆசைக் கணவன் குமாருக்கு - குமாரசுவாமிக்கு கேக்குமா? "வீட்டுக்கு மாப்பிள்ளை வரப் போற நேரத்துல, என் மனசு ஏன் இப்படி தறிகெட்டு ஓடி பழசையெல்லாம் நினைக்குது?" அவள் கன்னங்களில் கண்ணீர்ர் வழிந்தோடி அவள் உதடுகளைத் தொட்டது. மழை நீர் சுத்தமானதுன்னு சொல்றாங்களே, எத்தனை தடவை நான் மழையில நின்னு நனைஞ்சிருக்கேன்? இன்னைக்கு ஏன் எனக்கு மழைத் தண்ணி உப்பு கரிக்குது? நான் அழறேனா என்ன? என் மனசு கல்லுன்னு என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் சொல்றாங்களே?" அவள் மனதுக்கு இதற்கான விடை தெரிந்திருந்த போதிலும், அவள் பரிதவித்துக் கொண்டிருந்தாள். சுகன்யா, பால்கனி கதவு ஏற்படுத்திய சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து சட்டென விழித்து எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த தாயைக் காணாமல் ஒரு நொடி பதறிப் போனாள். பால்கனி கதவு காற்றில் மீண்டும் திறந்து கொள்ள, மின்னல் வெளிச்சத்தில் சுந்தரி வெளியில் மழையில் நின்று கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. எழுந்து விளக்கைப் போட்டாள். "இந்த அம்மாவுக்கு மழை மேல அப்படி என்ன அடங்காத ஆசை? எப்ப மழை பேஞ்சாலும் பயித்தியமாட்டம் ஓடிப்போய் அதுல நனையனும்; ராத்திரி பகல் ஒன்னும் கிடையாது. அவள் மனதில் சலித்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த குடையை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினாள். "எம்ம்மா, உள்ளே வாம்மா; யாராவது உன்னைப் பாத்தா பயித்தியம்ன்னு நெனைச்சுக்கப் போறாங்க." சுகன்யா, சுந்தரியின் கையை பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு வந்தாள். தன் மகளின் கரம் அவள் உடம்பில் பட்டதும், சுந்தரியின் உடல் இலேசாக நடுங்கியது. "தலையைத் சீக்கிரமா துவட்டும்மா; ஜொரம் வரப்போவுது உனக்கு; உடம்பு நடுங்கற அளவுக்கு மழையில நனையறே? ... முதல்ல உன் ரவிக்கையை அவுத்துட்டு இதை உடம்புல போடு ", அலமாரியை திறந்து ஒரு புது நைட்டியை எடுத்து தன் தாயிடம் நீட்டினாள் சுகன்யா. ஸ்டவ்வை பற்ற வைத்து பாலைச் சூடாக்கி, காஃபியை கலக்க ஆரம்பித்தாள். "கண்ணு, எனக்கு ஒன்னும் இல்லடா; ஏன் இப்படி பதறிப் போறே நீ?" "ஆமாம் ... பதறிப் போறேன் நான்? ... இடியிடிக்குது, அப்படி ஒரு மின்னல் மின்னுது; மழையில போய் நிக்கறே? உனக்கு என்ன ஆச்சு இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் ... இப்ப உனக்கு உன் புருஷன் நினைப்பு வந்துடுச்சு... அதானே?" "அதெல்லாம் ஒண்ணுமில்லடி" காஃபியை உறிஞ்சிய சுந்தரி போலியாக சிரித்தாள். "நான் இன்னும் சின்னக் குழந்தையில்லம்மா; உண்மையை சொல்லு நீ ... பொய் பேசக்கூடாதுன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் எனக்கு உபதேசம் பண்ற நீ; நான் தெரியாத்தனமா சொல்லிட்டேன்; என் அப்பாவை பாக்கணும்ன்னு; அது உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு நான் நினைக்கலை அப்ப; உனக்கு இஷ்டமில்லேன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன்னும் சொல்லிட்டேன்; அப்புறம் எதுக்கு நீ நேத்து ராத்திரி பூரா அழுதுகிட்டு இருந்தே?" பெண்ணின் பேச்சிலிருந்த உண்மை அவளைச்சுட்டது. "சுகா ... நீ சொல்றது சரிதாம்மா ... நான் யோசனைப் பண்ணிப் பாத்தேன்" "என்னம்மா சொல்றே நீ" "தீராத கோபம் யாருக்கு லாபம்? தங்கமான மனுஷந்தாண்டி உன் அப்பா. அந்த குடிப்பழக்கம்தான் அவரை ஒரு மனுசனா இல்லாம ஆக்கியிருந்தது. நானும் உன் மாமாவும் சேர்ந்து தானே அவரை அடிச்சு விரட்டினோம். என் புருஷன் நல்லவர்தான் ஆன ரொம்ப ரோஷக்காரர். யாருக்குத் தெரியும்? நீ சொல்றது மாதிரி உங்கப்பா ஒருவேளைத் தன் குடிப்பழக்கத்தை விட்டுட்டு திருந்தி வாழ்ந்துகிட்டு இருக்கலாம்? திருந்தியே இருந்தாலும் உங்காப்பாவா எப்படி திரும்பி வருவார்? உன் மாமாவுக்கு அவர் இருக்கற இடம் தெரிஞ்சு இருக்குன்னு நினைக்கிறேன் ... நானே உன் அப்பாகிட்டே பேசறேன் ... திரும்பி வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடறேன் ..." சுந்தரி சுவரைப் பார்த்துக்கொண்டு பேசினாள். "நிஜம்மாவாம்மா சொல்றே?" சுகன்யா தன் தாயின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். "நிஜம்மாத்தாண்டா கண்ணு சொல்றேன்." "தேங்க்ஸ்ம்மா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா ... உனக்கு ... கஷ்டமாயிருந்தா நான் வேணா அப்பாக்கிட்ட பேசறேனேம்மா ... அவருக்கு என் மேல என்ன கோபம் இருக்க முடியும்?" சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள். "சரிடா கண்ணு ... நீ தான் பேசு ... எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லம்மா ... இப்ப லைட்டை நிறுத்து ... செத்த நேரம் தூங்கலாம் ... மணி ரெண்டாவாகப் போகுது ..." தெரு விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தன. பண்புள்ள ஒரு குடும்பத்துடன், மாலை நேரத்தை கழித்ததானல் உள்ளத்தில் பொங்கிய உவகையுடன், அந்த இனிமையான சுவையை அசைபோட்டவாறே, மனம் நிறைய குதூகலத்துடன் குமாரசுவாமி கெஸ்ட் ஹவுசை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். தன் மனசிலிருந்த மகிழ்ச்சியை பதட்டமில்லாமல் அனுபவிக்க விரும்பி ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு, தான் தங்கியிருந்த இடத்திற்கு அவர் நடந்து செல்ல விரும்பினார். நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. கடந்த பதினைந்து வருடங்களாக, தன் ஓய்வு நேரத்தை நடப்பதிலேயே அவர் கழித்துக் கொண்டிருந்தார். குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருந்த காற்றும், வரப்போகும் மழையும், அவருடைய உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. குமாரசுவாமியின் நிழல், அவருடன் சேர்ந்து சென்றது, பின்னாலிருந்து அவரைத் துரத்தியது, வேகமாக முன்னால் சென்று, மீண்டும் பின்னால் வந்து அவரைத் துரத்தியது. முன்னேயும் பின்னேயும் ஓடி ஓடி ... ம்ம்ம் ... களைப்பே இல்லையா இதுக்கு; என் மனசை மாதிரி; அவர் சிரித்துக் கொண்டார். கால்கள் மெதுவாக நடை போட அவர் மனம் வேகமாகப் பறந்தது. "நடராஜன் குடுத்து வெச்ச மனுஷன். அவர் கட்டிக்கிட்ட பொம்பளை, ஒல்லியா வெட வெடன்னு இருந்தாலும்; பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற முகம்; சிம்பிளா ஒரு மூக்குத்தி, தோடு, கழுத்துல மெல்லிசா ஒரு செயின், வாய் நிறைய சிரிப்பு; தீர்மானமாக ஒரு பேச்சு; கொஞ்சம் முன் கோபியா இருப்பாளோ? அந்தம்மா பார்க்கற பார்வையில பொண்ணும், புருஷனும், பணிஞ்சிப் போயிடறாங்க; இருந்துட்டுப் போவட்டுமே; அவங்க குடும்பம்; அவங்க குடும்பத்தோட நல்லதுக்காகத்தானே மல்லிகா ஸ்ட்ரிக்டா இருக்காங்க; அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளைன்னாரு நடராஜன்". "நல்லவங்களுக்கு பொறந்தவன்; அவனும் நல்லவனாத்தான் இருப்பான்; ரெண்டு பேரு மேலயும் பாசத்தைக் அள்ளிக் கொட்டறாளே இந்த அம்மா!என்னமா ஓடி ஓடி, போதும்ன்னாலும் கேக்காம கை நெறய, அள்ளி அள்ளி என் எலையில போட்டா; முகத்தைப் பார்த்து பரிமாறின விதத்துல தெரியுதே அவ மனசு தாராளம்ன்னு; குமாரசுவாமியின் மனசு வஞ்சனையில்லாமல் வாழ்த்தியது மல்லிகாவை!" "எனக்கு வாய்ச்சவ மட்டும் எந்த விதத்துல கொறச்சலா இருந்தா? அழகுல கொறையா? இல்லையே? அம்சாம இருந்தா! சுந்தரிங்கற பேருக்கு ஏத்தப்படி சுந்தரியாத்தான் இருந்தா; படிப்புல கொறையா? நல்லாப் படிச்சுட்டு கை நெறைய சம்பாதிச்சா; நான் உன்னை காதலிக்கறேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக அவ அப்பன் ஆத்தாளை பகைச்சிக்கிட்டு எனக்காக என் பின்னால கூப்பிட்ட உடனே ஓடி வந்தா? என் கூடப்படிச்சவன்ல்லாம் பொறாமையில வயிறெரிஞ்சானுங்க ... "மாப்ளே, லாட்டரி விழுந்துடுச்சுடா உனக்குன்னு!" "சுந்தரிக்கும் தாராள மனசுதான்; என்னக்குறை வெச்சா எனக்கு? கேட்டப்பல்லாம், வாரி வாரி மனசார அவளையும், அவ சம்பாதிச்ச பணத்தையும் எனக்கு அள்ளி அள்ளிக் குடுத்தா; நேரத்துல அழகா தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பொண்ணையும் பெத்து என் கையிலக் கொடுத்து என்னைப் அப்பனாக்கினா; என் நேரம் சரியில்லாம போனா, நேரம் என்னா நேரம்? நான் புத்திக்கெட்டுப் போய், சேரக்கூடாதவன் கூட சேர்ந்து, குடிக்கக் கத்துக்கிட்டு, என் குடியை நான் அழிச்சிக்கிட்டா அதுக்கு யார் பொறுப்பு? கொடுத்தவன் நல்லாத்தான் குடுத்தான்; நான் அவளை வெச்சி வாழல; அதுக்கு யாரைக் குத்தம் சொல்றது?" "வேணாம் குமாரு, நாம அழிஞ்சிப் போயிடுவோம்டா; தலைத் தலையா அடிச்சுக்கிட்டா; நம்பளைப் பாத்து ஊர்ல இருக்கற ஜாதி ஜனங்கல்லாம் சிரிப்பாங்கடா? நாம காதல் காதல்ன்னு ஊரு, உறவு மொறைங்களை பகைச்சுக்கிட்டு வந்துட்டோமே? அத்தனை பேருக்கும் நாம இளக்காராமா போயிடுவோம்; இந்த குடிப்பழக்கத்தை விட்டுடான்னு அன்பா சொல்லிப் பாத்தா; கெஞ்சினா; மிரட்டிப்பாத்தா; ரெண்டு வருஷம் நான் அடிச்சக் கூத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தா." "கடைசியா என் குடி வெறியில என் பொண்ணையே நான் கடிச்சுப் புண்ணாக்கினா; எந்தப் பொம்பளைத்தான் சும்மா இருப்பா; அப்புறம்தான் தொடப்பத்தை எடுத்து அடிச்சிப்பிட்டா; என் வீட்டை விட்டு வெளியில போன்னா; அவ தம்பி அரிவாளைத் தூக்கிக்கிட்டு வெட்ட வந்தான். அவனுக்கு மட்டும் உரிமையில்லயா; குடிச்சுப்புட்டு அங்கங்க நான் வாங்கி வெச்ச கடனையெல்லாம் அவன் தானே தீர்த்தான். அவன் வீட்டுலதானே நாங்களே இருந்தோம். சுந்தரி மேல என்னத் தப்பு இருக்கு? ரோஷமா, வீட்டை விட்டு போடான்னு அடிச்சு விரட்டினாளேன்னு நானும் மறு பேச்சு பேசாம போயிட்டேன். பொண்டாட்டி புள்ளையில்லாம தனியா பிச்சைக்காரன் மாதிரி ஊர் ஊராக அலைஞ்சதுக்கு அப்பறம் தான் புத்தி வந்தது; பதினைஞ்சு வருஷமா தனியா வீம்பா, கோபமா வாழ்ந்து என்னத்தைக் கண்டேன்?" "அப்பா அம்மா என் கூட வந்து இருக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் , வாழ்க்கையில இப்ப ஒரு பிடிப்பு வந்திருக்கு. டேய் எங்க உசுரு போறதுக்கு முன்னே எங்க பேத்தியைப் பாக்கணும்ன்னு அவங்க துடிக்கிறாங்க. போடா, அந்த பொண்ணு கால்லே விழுந்தாவது என் பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு வாடாங்கறாங்க; உடம்புல ரத்தம் குறைய குறைய இப்ப என் மிச்சமிருக்கற காலத்தை கட்டிக்கிட்டவ கூட கழிக்கணும்ன்னு தோணுது. சுந்தரியை பாக்கணும்ன்னு என் மனசு துடிக்குது. நான் அவ வீட்டுக்குப் போனா வான்னு சொல்லுவாளா? என்னை மன்னிச்சு தன் புருஷனா மீண்டும் என்னை ஏத்துப்பாளா? முதல்ல அவ தம்பி ரகுகிட்ட தான் பேசிப்பாக்கணும். எத்தனை அலைஞ்சு, யார் யாரை விசாரிச்சு, அவன் ஆஃபீசை கண்டுபுடிச்சி, அவன் செல் நம்பர் எனக்கு கிடைச்சிருக்கு. இன்னைக்கு கெஸ்ட் ஹவுசுக்கு போனதும் என் மச்சான் கிட்ட பேசி என் குடும்பத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்." "மீனா துறுதுறுன்னு இருக்கா; மணியான பொண்ணு; பெத்தவ பாக்கற பார்வையிலேயே, சொல்றது என்னான்னு புரிஞ்சிக்கிட்டு செய்ய வேண்டிய காரியத்தை கரெக்டா செய்து முடிச்சிடறா! பொண்டாட்டி, புள்ளைங்க, சினேகிதன், வேலைக்காரன் இதெல்லாம் மேல இருக்கறவனா பாத்து கொடுக்கறது. வரம் வாங்கிக்கிட்டு வரணும். " "டேய் மடையா! என்னப் பேசறே நீ; உன் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்; உன் மேல அப்பா அப்பான்னு உசுரை வுட்டாளே; உன் மடியிலதான் உக்காந்து சாப்பிடுவேன்னு தினம் ஒரு அமக்களம் பண்ணுவா! நீ குடிச்சுட்டு வர ஆரம்பிச்சதிலேருந்து எல்லாம் போச்சு; உன்னைப் பாத்தாலே அந்த குழந்தை பயந்து நடுங்க ஆரம்பிச்சிடுச்சி." குமாரசுவாமியின் கண்கள் கலங்கியது. இப்ப அழுது என்ன பிரயோசனம். இன்னும் என் சுந்தரி கும்பகோணத்துலதான் வேலை செய்யறாளா? என் சுகன்யா ... என் குழந்தை சுகா என்னப் பண்ணிக்கிட்டிருப்பா? என்னைப் பாத்தா அவளுக்கு அடையாளம் தெரியுமா? அவளுக்கு இருபத்தி மூணு வயசாயிருக்கும்; என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? அப்படியே ஆகியிருந்தாலும் என்னை என் பொண்ணு கல்யாணத்துக்கு சுந்தரி கூப்பிட்டிருக்கணும்ன்னு என்ன அவசியம்? நான் என் குழந்தைக்கு இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கேன்? அவர் மனம் வெட்கத்தில் துவண்டது. கடவுளே ஒரு சான்ஸ் ... ஒரே ஒரு சான்ஸ் எனக்கு குடு ... என் மனைவியை ... என் குழந்தையை, என் கண்ணுல வெச்சு நான் பாத்துக்குவேன். என்னை நம்பி வந்தவளுக்கு, நான் பண்ண கொடுமைக்கு; அவ மனசு சந்தோஷப் படற மாதிரி நடந்துக்கறதுக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடு; அவர் மனது இறைந்தது. மழை தூறத் தொடங்கியது. என் இறைஞ்சுதல் "அவனுக்கு" கேட்டுவிட்டதா? "ஹலோ! ... மிஸ்டர் ரகுராமன் பேசறீங்களா" "ஆமாம் .. நான் ரகுராமன் தான் பேசறேன் ... நீங்க யாரு?" "சாரி ... நான் ராத்திரி நேரத்துல உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்." "பரவாயில்லை ... சொல்லுங்க" ... பரிச்சயமான குரலாயிருக்கே? இந்த குரலை நான் எங்கே கேட்டிருக்கேன்? ம்ம்ம் ... ரகுராமன் தன் நெற்றியைச் சொறிந்து கொண்டான். "ரகு ... நான் குமார் ... குமாரசுவாமி பேசறேன்" குமாரின் குரலில் நடுக்கமிருந்தது. "குமார் ... எப்படியிருக்கீங்க? ... இன் எ வே ... ஐயாம் ஹாப்பி ... உங்ககிட்ட நானே ஒரு முக்கியமான விஷயமா பேசணும்ன்னு இருந்தேன். ஆனா நீங்க முந்திக்கிட்டீங்க; எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்ன்னு சொல்றாங்களே; அது இதுதான் போல இருக்கு; சொல்லுங்க குமார் ... எத்தனை நாளாச்சு உங்க குரலைக் கேட்டு ... எங்கேருந்து பேசறீங்க ... ம்ம்ம் ... " ரகுராமன் மனதில் மின்னலாக ஒரு மகிழ்ச்சியின் கீற்று உதயமாகியது. "நல்லாயிருக்கேன் ... இப்ப சென்னையிலேருந்துதான் பேசறேன். உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையாயிருக்கு ... நீங்க சரின்னு சொன்னா உங்களை நான் வந்து பாக்க விரும்பறேன். நேரா வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கிருந்த உரிமையை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி இழந்துட்டேன் ... இப்ப சுந்தரியும் நீங்களும் அந்த உரிமையை திரும்பவும் எனக்கு குடுத்தா ... எனக்கு சந்தோஷமா இருக்கும் ... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ... அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேன். " "பழசையெல்லாம் நான் மறந்துட்டேன். குமார் ... நீங்க என்னைப் பாக்க எப்ப வேணா வரலாம். உங்க கல்யாணத்துக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு இருந்தப்பவும், நான் தனியாளா உங்களை சப்போர்ட் பண்ணது உங்களுக்கு ஞாபகமிருக்கும். உங்க கிட்ட இருந்த ஒரு சின்னக் குறையால, நம்ம குடும்பத்துல, நம்பளுக்கு உள்ள இருந்த உறவுல விரிசல் ஏற்பட்டது உண்மைதான். அந்த விரிசலுக்கான குறையும் இப்ப உங்கக்கிட்ட இல்லேன்னு இப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது." "நீங்க பழசெல்லாம் மறந்துட்டு என் கிட்ட அன்பா பேசறதுக்கு ரொம்பத் தேங்க்ஸ் ரகு ... " "குமார் ... போன வாரம் ... பேச்சுவாக்குல வேற ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல சுகன்யாகிட்டச் சொன்னேன் ... "தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு?" "ரகு ... என் குழந்தை சுகன்யா எப்படியிருக்கா? "ரொம்ப நல்லாயிருக்கா ... எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை நல்லபடியா வளர்த்து இருக்கோம். நீங்க அவளைப் பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவீங்க. இப்ப அவளும் சென்னையிலத்தான் வேலை செய்துகிட்டு இருக்கா ... அவளைப் பாத்தா நீங்க உங்க சுந்தரியை பார்க்க வேண்டாம் ... அப்படியே சின்ன வயசு சுந்தரி மாதிரியே இருக்கா." ரகுவின் குரலில் பூரிப்பு வெளிப்பட்டது. "சுகன்யா ... என் சுந்தரி வளர்த்த பொண்ணு ... அவ கண்டிப்பா நல்லபடியாத்தான் வளர்ந்து இருக்கணும்" குமாரின் குரலில் எல்லையற்ற ஏக்கம் வழிந்தோடியது. "குமார் ... நான் அக்காவோட செல் நம்பரும், சுகன்யாவோட நம்பரும் தரேன். நீங்க என் கிட்ட பேசினதையும் அக்காகிட்ட சொல்றேன். முதல்ல நீங்க அக்காகிட்ட ஒரு தரம் பேசுங்க. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சிக்கறது ரொம்பக்கஷ்டம் ... நான் சொல்றது உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன் ... எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நான் நம்பறேன். "ரொம்பத் தேங்க்ஸ் ரகு ... நாளைக்கு காலையில நான் சுந்தரிக்கிட்ட பேசறேன். பை தி பை ... எங்கிட்ட நீங்க பேசணும்ன்னு இருந்ததா சொன்னீங்க ... என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?" "எல்லாம் நல்ல விஷயம் தான் ... பிளீஸ் ... முதல்ல நீங்க சுந்தரியக்கா கிட்ட பேசுங்க ... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். குட் நைட்" "குட் நைட் ... " குமாரசுவாமியிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. காலையில் வழக்கம் போல் படுக்கையை விட்டு எழுந்த சுகன்யா, இரவு மழையில் நனைந்து, விடியற்காலையில் அயர்ந்து உறங்க ஆரம்பித்த சுந்தரியைப் பார்த்தவள், அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்; மனதில் நினைத்துக்கொண்டே, காஸில் பாலை ஏற்றிவிட்டு, இரண்டு தம்ளர் அரிசியை கழுவி, இன்னொரு பக்கம் அடுப்பில் ஏற்றினாள். பல் துலக்கி தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். பிரிஜ்ஜை திறந்து நேற்றைய தோசை மாவு இன்னும் மீதமிருப்பதைப் பார்த்தவள், காலை டிபனுக்கு இந்த மாவு போதும், இதை ஊத்தப்பம்மா ஊத்திக்கலாம். ஆபிசுக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் கொண்டு போய்விடலாம் என மனதுக்குள் திட்டமிட்டாள். மீதி சமையலை அம்மா பாத்துக்குவாங்க. மனதில் திருப்தியுடன், சர்க்கரை குறைவாக தனக்கு மட்டும் காபியை கலந்து கொண்டு, கட்டிலில் உட்க்கார்ந்து நிதானமாக காபியை ருசித்து குடித்தாள். "சுகா, மணி என்னடி ஆச்சு, ஏண்டி நீ எழுப்பலை என்னை? குக்கரின் விசில் சப்தம் கேட்டு, மனதில் குற்ற உணர்வுடன் விருட்டென எழுந்த சுந்தரி தன் தலை கேசத்தை இறுக்கி முடிந்துகொண்டாள். "ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் மழையில நின்னே? அப்புறம் எப்பத் தூங்கினயோ? இப்ப எந்த பட்டினம் எங்க முழுகிப்போச்சுன்னு இப்படி அடிச்சுப் புடிச்சிக்கிட்டு எழுந்திருச்சிட்டே நீ? ... இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க வேண்டியதுதானே?..." ஆசையுடன் தாயின் கழுத்தில் தன் கையைப் போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சுகன்யா. "நாள் பூரா என்ன வேலையிருக்கு எனக்கு இங்க; நீ ஆபிசுக்கு போனதுக்கப்பறம் தூங்கிட்டுப் போறேன் ... எனக்கும் காபியை கலக்குடி சுகா. காபியில ஒரு துளி அதிகமா சக்கரையைப் போடு; ஒரு நிமிஷத்துல வர்றேன் ... " சொல்லியாவாறே அவள் பாத்ரூமில் நுழைந்தாள். "என்னப் பண்ணியிருக்கே இப்ப நீ" சுகன்யா கொடுத்த காஃபியை வாங்கி உறிஞ்சினாள் சுந்தரி. "ரெண்டு டம்ளர் சாதம் ஏத்தியிருக்கேன் ... வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியா அரிஞ்சு நேத்து மிஞ்சின மாவுல கலந்து வெச்சிருக்கேன்; காலை டிபனுக்கு அதை ஊத்திக்கலாம்; தொட்டுக்க தக்காளிச் சட்டினி அரைச்சுக்கலாம். உனக்கு மதியத்துக்கு என்ன வேணுமோ சூடா பண்ணிக்கிறியா?" "தயிர் நெறய இருக்கு. ஒரே வழியா எனக்கும் சேத்து தயிர் சாதமா கிளறிடலாம்; ஒரு நாளைக்கு சிம்பிளா நானும் அதையே சாப்பிட்டுக்கிறேன்," சுந்தரி எழுந்து குளிப்பதற்காக குளியறைக்குள் நுழைந்தாள்.

சுகன்யா பால்கனியில் நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். வீதியில் ஆண் பெண், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல், நடந்தும், சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும், மக்கள் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு காலையில் இவ்வளவு பேர் எங்கே வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது காரணமில்லாமல் இத்தனை பரபரப்புடன் ஓடுவார்களா? இவ்வளவு பேருக்கும் அப்படி என்ன அவசர வேலை இருக்க முடியும். அவள் வியப்புடன் தன் மனதில் சிரித்துக்கொண்டாள். சுகன்யா வீதியை எந்த வித இலக்குமின்றி பார்த்துக்கொண்டிருந்த போதிலும் அவள் மனம் தன் தாயை நினைத்து புழுங்கிக்கொண்டிருந்தது. நேற்றிரவு தான் தூங்கியபின் அவள் வெகு நேரம் தூங்காமல் மன உளைச்சலுடன் இருந்த தன் தாயை நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நான் நல்லா இருக்கணும்; நான் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும்ங்கறதுக்காக, தன் கணவனை விட்டுட்டு, இவ்வளவு நாளா ஒண்டியா எனக்காக வாழ்க்கையில போராடியிருக்காங்க. தனியா நின்னு கஷ்டப்பட்டு என்னை என் கால்ல நிக்கற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க; என் மனசுக்கு புடிச்ச ஒருத்தனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு சுதந்திரமும், தன்னம்பிக்கையையும் எனக்கு கொடுத்திருக்காங்க. நான் அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னதுலேருந்து, அவங்க மனசாழத்துல தூங்கிக்கிட்டிருந்த என் அப்பாவோட நினைவு அவங்களுக்கு வந்துடுத்து. தனிமை அவங்களை கஷ்டப்படுத்துது. இன்னைக்கெல்லாம் பாத்தாலும் அம்மாவுக்கு நாற்பத்தாறு வயசுதான்; அந்த வயசுக்கு இருக்கற உடம்பின் ஏக்கமும், மனசின் தவிப்பும் அவங்களை நிலை குலய வெக்குது; இதுக்கு ஒரே வழி அப்பாவை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு ரெண்டு பேரையும் ஓண்ணா சேர்த்து வைக்கிறதுதான். எனக்காக தன் வாழ்க்கையையும், தன் இளமையையும், ஒரு காலத்துல தூசா நினைச்சவங்களுக்கு நான் செய்ய வேண்டிய முதல் காரியம் அப்பாவைப் பத்தி மாமா கிட்ட விசாரிக்கறதுதான். ராத்திரியெல்லாம் நல்லா மழை பேஞ்சுருக்கு; நல்லாத் தூங்கி எழுந்தா அவங்க உடல் தவிப்பு தற்காலிகமா அடங்கிப் போகாலாம். ஆனா அவங்க மனப்புழுக்கம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிடுமா? இன்னைக்கு வெயிலைக் காணோம்; குறைஞ்ச பட்சம் இன்னைக்கு உடல் புழுக்கம் இல்லாம நானும் ஆபிசுக்கு போகலாம்; அவள் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி பிறந்தது. "சுகா ... கண்ணு ... கொஞ்சம் உள்ளே வர்ரயாமா ... அந்த நீலக் கலர் ஸாரியை என் பெட்டியிலேருந்து எடுடி கண்ணு." தன் தாயின் இடுப்பு வரை புரளும் நீண்ட கருத்த கூந்தலையும், திருத்தமான முகத்தையும், கருத்த கண்களையும், மெல்லிய ரோஜா நிற உதடுகளையும், சீரான வென்னிற பல் வரிசையும், நீண்ட தீர்க்கமான மூக்கையும், வாளிப்பான மார்புகளையும், கட்டியிருந்த பாவாடைக்கும், ரவிக்கைக்கும் நடுவில் வழவழவென சுருக்கமில்லாமல், அதிகமாக மேடிடாமல் பளிச்சிடும் அவள் இடுப்பையும், பாவாடைக்குள் அசையும் பருத்த பிருஷ்டங்களையும், நீளமான செழித்த வலுவான தொடைகளையும், பாவாடைக்கு வெளியில் பளிச்சிட்ட வெள்ளை நிற பாதங்களையும், பாதங்களை அழகு செய்யும், மெல்லிய தங்கக் கொலுசையும் பார்த்த மகளின் வயிற்றில் ஒரு சங்கடமான உணர்வு எழுந்தது. ம்ம்ம் ... கடவுளே ஏன் இப்படி பண்ணிட்டே? என் அம்மா எப்ப பண்ணத் தப்புக்கு இப்படி அவங்களை தவிக்க விட்டுட்டே? பதினைஞ்சு வருஷமா, என் அம்மாவோட அழகெல்லாம் இப்படி விழலுக்கு இறைச்ச நீரா வீணாகிக்கிட்டு இருக்கே? நல்லா சுகமா வாழ வேண்டிய வயசுல என் அப்பாவை அவங்க கிட்டேயிருந்து பிரிச்சிட்டியே? குளித்துவிட்டு சந்தன சோப்பின் மணம் கமழ பாத்ரூமிலிருந்து பாவாடையும், ஜாக்கெட்டுமாக ரூமுக்குள் வந்து நின்றிருந்த சுந்தரியின் குரல் கேட்டு, உள்ளே வந்து தன் தாயை நோக்கிய சுகன்யாவின் முகம் சுருங்கி, அவள் மனம் பதை பதைத்தது. "என்னடி சுகா ... என்னாச்சு உனக்கு; அப்படி ஏன் என்னை உத்துப் பாக்கறே? குறுகுறுன்னு இருக்கு எனக்கு" புடவையை அவள் கையிலிருந்து வாங்கிய சுந்தரியின் குரலிலும் இனம் தெரியாத ஒரு தவிப்பிருந்தது. "ஒண்ணுமில்லேம்மா ..." சுகன்யாவின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. முதல் காரியமா அப்பாவை கொண்டு வந்து அம்மாவின் முன் நிறுத்த வேண்டும் என்று நேற்றிரவு அவள் எடுத்த முடிவு மீண்டும் மனதில் உறுதியாக எழுந்தது.

No comments:

Post a Comment