Saturday 20 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 21



“என்னமோ… பகவான் புண்ணியத்துலே, அதிகமா பிரச்சனை ஒண்ணுமில்லாமே, ரெண்டுபேரும் பத்திரமா வீடுவந்து சேந்தீங்களே... காலையில போலீஸ்காராளை வீட்டுக்குள்ளேப் பாத்ததும் எனக்கு உடம்பே ஆடிப்போச்சு. ஆமைப் பூந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாதுன்னு சொல்லுவா... காக்கிச்சட்டைக்காரன் எதுல கொறைஞ்சவன்.. வயித்துல புளி கரைஞ்சுது... அப்பவே பிள்ளையாருக்கு வேண்டிண்டேன்... விக்கினேஸ்வரான்னு அரை டம்ளர் கடலையை ஊறவெச்சேன்... மஞ்சத்துணியிலே ஒரு ரூபா முடிஞ்சு வெச்சேன்... கொழந்தைகளை நல்லபடியா பாத்துக்கோடாப்பா...” கற்பூரத்தை கொளுத்தினாள். மணியை ஆட்டினாள். பஞ்சபாத்திரத்தில் இருந்த நீரால் பகவானை ஆராதித்தாள். கண்மூடி, கைகூப்பி அசையாமல் நின்றாள். பிள்ளையாருக்கு சுண்டலை நைவேத்தியம் செய்த சித்தி காமுவின் நெற்றியில் விபூதியை தீட்டினாள். “சித்தீ... அப்படியே ரமணிக்கும் வீபூதியை வெச்சுவிடேன்...”

“மொதல்லே மொகத்தை கழுவிண்டு வரச்சொல்லுடீ... இந்தாத்து பழக்கத்தையெல்லாம் நீதான் அவனுக்கு சொல்லிக்குடுக்கணும்... அவன் வீட்டுக்கு நீ போறப்ப... அவாத்து பழக்கத்துக்கு நீ அனுசரிச்சிப் போய்க்கோ...” ரமணியை அன்று விடியலில், காமாட்சி அந்த வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கிவிட்டாள் என்று நன்றாக புரிந்து கொண்டிருந்த செண்பகம், அவர்கள் சிறிது நேரம் தனியாக இருக்கட்டுமென கிச்சனுக்குள் நுழைந்தாள். “ரமணீ... சித்தி சொல்றது உன் காதுலே விழுந்திச்சா... சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், காலைக் கழுவணும்.. மூஞ்சைக்கழுவணும்... சாமியை நமஸ்காரம் பண்ணிக்கணும்... உன் ரூம்லே சுவாமி படம் எதாவது வெச்சிருக்கியா?” சிறுகுரலில் பேசியவளை சட்டென இழுத்து தன் மார்போடு இறுக்கிக்கொண்டான் ரமணி. “விட்றா... சித்தி வந்துடப்போறா...” தன் வயிற்றை தடவிய அவன் இடது கரத்தின் மேல் ஓங்கி பளீரென ஒரு அடிவிட்டாள். அவள் அவனை அடிக்க, ரமணி தன் பிடியை இறுக்கினான். இறுக்கமான அவன் பிடியில் அவள் நெளிந்தாள். அவள் நெளிந்தாள். இவன் அவளை நெளிய அனுமத்தித்தான். நெளிவு அவர்கள் இருவருக்குமே இன்பத்தை வாரி வாரிக்கொடுத்தது. காமாட்சியின் உடலிலிருந்து பழனி சித்தநாதன் விபூதி வாசனை ஏகத்திற்கு அடிக்க ரமணிக்கு மனசில் மகிழ்ச்சி பொங்கி பொங்கி வழிந்தது. ஆண்டவா இந்த சந்தோஷம் எனக்கு என்னைக்கும் இப்படியே நிலைக்கணும். காமாட்சி மனசுக்குள் பிள்ளையாரிடம் எக்ஸ்பிரஸ் விண்ணப்பமொன்றை சமர்ப்பித்தாள். சட்டென ரமணியின் பிடிக்குள் சுழன்று அவன் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டாள். முத்தமிட்டவள் தன் கண்களை சிமிட்டினாள். "ஐ லவ் யூ காமூ" முனகினான் ரமணி. "நானும்தான் உன்னை லவ் பண்றேன்டா... எங்கேடா இருந்தே இவ்வளவு நாள்?." ரமணியின் இடுப்பை கட்டிக்கொண்டு, அகலமான அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள் காமாட்சி. * * * * * “காமூ.... சாப்பாட்டு கடையை ஆரம்பிக்கணும்டீ... ஏன்டா அம்பி... நீ நைட்லே டிஃபனா இல்லே மீல்ஸா...? என்ன சாப்பிடறது?” இருவர் கையிலும் சிறு தட்டுகளில் தேங்காய் தூவப்பட்டிருந்த சுண்டலும், காஃபி டம்ளரும் திணிக்கப்பட்டன. “மாமி... நீங்களா பாத்து எது போட்டாலும் சரி... இங்கே எல்லாம் ஜீரணமாயிடும்... சர்வம் பிரம்மார்ப்பணம்...” ரமணி பவ்வியமாக பேசிக்கொண்டே தன் வயிற்றை தடவினான். காமுவை பார்த்து மீண்டும் கண்ணடித்தான். அவள் தன் நாக்கைக்கடித்து இவனை முறைத்தாள். “நல்லப்பையன்டா நீ... சட்டுன்னு பிடிச்சிண்டியே... ஆமாம்... நீ தீர்த்தம் கீர்த்தம் சாப்பிடுவியோ...? அந்தப்பழக்கமெல்லாம் உனக்கு ஒண்ணும் இல்லையே?" அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சித்தி. "மாமீ... தீர்த்தம்ன்னா...? பிள்ளையாருக்கு முன்னாடி செப்பு சொம்புல வெச்சிருக்கீங்களே அதானே?" ஒன்றுமே புரியாத நல்லப்பிள்ளையாக நடித்தான் ரமணி. "ரொம்ப சீன் போடாதே... நீ சரக்கடிப்பியான்னு சித்தி கேக்கறா?" காமாட்சி மொழிபெயர்த்தாள். "மாமீ... எனக்கு அவ்வளவா வருமானம் பத்தாது... மூணு வேளை சாப்பாட்டுக்கே உன்னைப் பிடி... என்னைப்பிடின்னு ஓடிக்கிட்டு இருக்கேன்... என் சம்பளம் என்னான்னு காமாட்சி மேடத்துக்கு நன்னாத் தெரியும்... ஓசிலே எவனாவது வாங்கிக் குடுத்தா எப்பவாவது ஒரு விரக்கடை விட்டுப்பேன்..." "அடப்பாவீ..." "பயப்படாதீங்கோ... அதுக்காக மட்டையால்லாம் ஆயிடமாட்டேன்..." "பீடி... சிகரெட்... பான் பராக்..." "ஒரு நாளைக்கு மூணு சிகரெட் பிடிப்பேன்... எதுலேயும் நான் லிமிட்டுதான் மாமீ..." "எங்காத்து பொண்ணு கையை தொட்டுட்டே... ஒருதரம் இவ பட்டதெல்லாம் போதும்... இந்த கர்மத்தையெல்லாம் விட்டு ஒழிச்சுட்டு நல்லபுள்ளையா இவகூட இரு..." "சித்தீ... கொழந்தைக்கு எல்லாம் லிமிட்டுலதான்.. ஆனா கோவம் மட்டும் மூக்குக்கு மேல வரும்.. துர்வாச முனிதான்... இடுப்புல கத்தியை சுத்திக்கிட்டு அலையும்... எவனாவது எதையாவது சொல்லிட்டா அவன் மென்னியை அப்படியே புடிச்சிட வேண்டியதுதான்.. நான் சொல்றது சரிதானே?" காமாட்சி அவன் தலையை உலுக்கினாள். "கத்தியா... காமூ என்னடீ சொல்றே...?" சித்தி பதறினாள். "எல்லாம் அப்புறம் வெவரமா சொல்றேன்..." காமாட்சி புன்னகைத்தாள். "ரமணீ... தப்பா நினைச்சுக்காதேடா என்னை... நேக்கு எதையும் மனசுல வெச்சுக்கத் தெரியாது... பட்டுன்னு பட்டுன்னு ப்ளெய்னா பேசிடுவேன்... ” சித்தி தேங்காயை துருவிய வேகத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமணி. “நீங்க நமக்கேத்த ஜோடிங்க....” ரமணி சொல்லிவிட்டு பல்லைக் கடித்துக்கொண்டான். கையிலிருந்த சூடான காஃபியை தன் சட்டையில் வழியவிட்டுக்கொண்டான். அவசர அவசரமாக காஃபி டம்ளரை கீழே வைத்தான். வேட்டியால் உதட்டைத் துடைத்துக்கொண்டான். காமாட்சி குடித்தது போல் சூடான காஃபியை, தன் உதடுகளில் டம்ளர் படாமல் தூக்கிக்குடிக்க அவனால் முடியவில்லை. “என்னது... உனக்கு நான் ஜோடியா... என்னடா உளர்றே?” சித்தி பதறினாள். “தப்பா நினைக்காதீங்க மாமி... நானும் உங்களை மாதிரிதான்; எதையும் மனசுல வெச்சிக்க மாட்டேன்னு சொல்லவந்தேன்...” ரமணி வழிந்தான். உடையை மாற்றிக்கொண்டு மொடமொடக்கும் துவைத்த காட்டன் நைட்டியில் தன் அறையில் இருந்து வந்த காமாட்சி விழுந்து விழுந்து சிரித்தாள். முகம் பளபளக்க, உதடுகளை விரித்து, சிறிய பற்கள் அழகாக டாலடிக்க, கண்களை இடுக்கி, புருவங்களை சுருக்கி, மூக்கு விடைக்க, விடைத்த மூக்கில், வெள்ளை வைரத்துணுக்கொன்று மின்ன, காதில் சிறிய குடை ஜிமிக்கிகள் ஆட, சந்தோஷமாக மனம்விட்டு உரத்த குரலில் சிரிக்கும் தன் தமக்கை பெண்ணின் முகத்தையே, உள்ளம் நிறைய பார்த்துக் கொண்டிருந்தாள் செண்பகம். "காமூ... இப்படி என் பக்கத்துல வந்து சித்த நேரம் உக்காருடீ..." "என்னமோடா ரமணி... எவ கண்ணு பட்டுதோ... இவ இப்படி வாய் விட்டு சிரிச்சிப்பாத்து எட்டு வருஷமாச்சுடா... ஆஃபிசுலேருந்து ஆத்துக்கு வந்ததும், கையில காஃபி டம்மளரை வெச்சுண்டு, செவத்துல சாய்ஞ்சுண்டு, மோட்டு வளையைப் பாத்துண்டு இருப்பா... எதைக்கேட்டாலும் பதில் சொல்லமாட்டா... இன்னைக்கு கலகலன்னு சிரிக்கறா... இனிமே இவ கண்ணு கலங்காம பாத்துக்கோ..." கனீரென ஆரம்பித்த குரல் மெல்ல தேய, சித்தி கண்கலங்கினாள். "மாமீ... நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கோ... உங்க காமூவை நான் சந்தோஷமா ஒரு பூ மாதிரி வெச்சுக்கறேன்..." "நேக்கு இது போதும்டா..." "தேங்க் யூ சித்தி... நீ என்ன சொல்லுவியோன்னு மனசுக்குள்ளே பயந்துண்டேதான் இன்னைக்கு ரமணியை ஆத்துக்கு அழைச்சிண்டு வந்தேன்..." காமாட்சி சித்தியைக் கட்டிக்கொண்டாள். பாசமழையில் நனைந்து கொண்டிருப்பவர்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ரமணிக்கு உடல் புல்லரித்தது. தலையை கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். செண்பகம் எழுந்தாள். தன் அறையை நோக்கி மெல்ல நடந்தாள். வெகுளியாக, மனசில் இருப்பதை பட்டு பட்டென பேசும் செண்பகத்தை பார்த்த ரமணிக்கு, தன் தாய் பரிமளாவின் முகம் சட்டென நெஞ்சில் வந்து நிற்க, கூடத்தில், வெறும் தரையில் சரிந்து படுத்துக்கொண்டான். விழிகள் தன்னால் மூடிக்கொண்டன. தன் தலைக்கு கீழ் தலையணை செருகப்படுவதை உணர்ந்ததும் கண்களைத்திறந்தான். "தூக்கம் வருதாடா செல்லம்...?" காமாட்சி அவன் முகத்தருகில் நெருக்கமாக குனிந்து கிசுகிசுத்தபோது அவள் உதட்டிலிருந்து காற்றில் மெல்லிய எச்சில்துணுக்கு பறந்து அவன் முகத்தில் தெறித்தது. காற்றில் பறந்தான் ரமணி. "மயக்கம் வருதுடீ காமூ..." நீளமாக பெருமூச்சுவிட்டான் ரமணி. "என்னப்பா சொல்றே...?" இலேசாக பதறினாள் காமாட்சி. பதறியவளை இழுத்து தன் மார்பின் மீது கிடத்திக்கொண்டான் ரமணி. கிடந்தவளின் உதடுகள் அவன் உதடுகளில் சிறைப்பட்டன. "என் சொந்த வீட்டுல, என் உறவுகளோட, எனக்கு உரிமையிருக்கற இடத்துல இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். இந்த நிமிஷம் என் மனசெல்லாம் நீதான் இருக்கேன்னு சொல்றேன்டீ... என் இதயம் காமூ.. காமூன்னு துடிக்குது." காமாட்சியின் வலது கையை இழுத்து அவன் தன் இடது நெஞ்சில் வைத்து அழுத்தினான். ரமணியின் பக்கத்தில் அமர்ந்திருந்த காமாட்சி விருட்டென எழுந்தாள். அவன் கையை பிடித்து எழுப்பினாள். தரதரவென அவனை இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள். அமாவாசைக்கு முன் நாள். வானம் இருண்டிருந்தது. ஆங்காங்கு நட்சத்திரங்கள் மட்டும் தங்கள் கண்களை சிமிட்டிக் கொண்டிருந்தன. மொட்டைமாடி இருளடித்திருந்தது. தூரத்தில் தென்னை மரங்கள் ஆடிக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வடக்கிலிருந்து வீசிக்கொண்டிருந்தது. சட்டென மழை வந்தால் ஒதுங்குவதற்காகவும், காயும் துணிகளை, சாமான்களை எடுத்து வைக்கவும் படிக்கட்டின் வலது புறம் சிறிய அறை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அறையில் இரண்டு பேர் வசதியாக இருக்கலாம். போல்டிங் காட் ஒன்றும், டேபிள் சேர் ஒன்றும் போடப்பட்டிருந்தது. டேபிளின் மேல் ஜெயகாந்தனும், ஆதவனும் வீற்றிருந்தார்கள். அறை பளிங்குபோல சுத்தமாக இருந்தது. எதிரும் புதிருமாக இரண்டு சிறிய சன்னல்கள். தெருவைப்பார்த்தபடி ஒன்றும், மற்றது மாடித்தரப்பிலும் இருந்தன. இரண்டும் திறந்திருந்தன. அறைக்குள் காற்று பிய்த்துக்கொண்டு போனது. ரமணி அந்த அறையிலிருந்து புன்னகையுடன் வெளியில் வந்தான். "என்ன இன்ஸ்பெக்ஷ்னெல்லாம் முடிஞ்சுதா...? மொட்டைமாடியின் மூலையில் இருந்த பாத்ரூமிலிருந்து வந்துகொண்டிருந்த காமாட்சியும் புன்னகைத்தாள். "இந்த ரூமுக்கு ஒரு ஆள் குடிவரணும்ன்னா என்ன வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்?" சட்டையை கழற்றிகொடியில் போட்டுவிட்டு, வெற்றுமார்புடன், தரையில் உட்கார்ந்து கைப்பிடி சுவரில் சாய்ந்துகொண்டான் ரமணி. "இந்த ரூமை வாடகைக்கு விட்டுத்தான் வயித்தை கழுவணுங்கற நிலைமையில நாங்க இல்லே...?" காமாட்சி ஹோவென சிரித்தாள். இருட்டில் பற்கள் பளிச்சிட்டன. "நான் அப்படி சொன்னனா?" ரமணியின் முகம் லேசாக சுருங்கியது. ரமணியின் பக்கத்தில் அவன் தோளை உரசிக்கொண்டு அமர்ந்தாள் காமாட்சி. "மூஞ்சை ஏன் இப்ப உம்முன்னு வெச்சிருக்கே...? எப்பவுமே சிரிக்கவே மாட்டியா நீ...? நீ சிரிச்சா அழகா இருக்கேடா..." அவன் தாடையை பிடித்து ஆட்டினாள். காமாட்சியின் மூச்சுக்காற்றில் ஒரு இனிமையான நறுமணம். ஒரு நொடி அவன் இடது கன்னத்தில் அவள் உதடு உரசியது. உடம்பு சிலிர்த்தது. ரமணியின் மிடுக்கு புஸ்ஸென்று இறங்கியது. மவுனமாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனை, விருட்டென இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். மடியில் விழுந்தவனை வாரியணைத்து அவன் கன்னங்களில் தன் கன்னத்தை மெதுவாக இழைத்தாள். "என் செல்லத்துக்கு கோவமா?" கொஞ்சினாள். "நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலே..." "ஏன் நீ வாடகைக்கு வரப்போறியா?" ரமணியின் கரங்களை இழுத்து தன் இடுப்பில் போட்டுக்கொண்டாள். "ம்ம்ம்... அப்டித்தான் வெச்சுக்கோயேன்..." "ரமணீ... இந்த வீட்டுக்கு சொந்தக்காரன்டா நீ... நீ எதுக்கு வாடகையைப்பத்தி பேசறே?" "காமூ.. நான் ஒரு பைத்தியம்டீ... இப்படித்தான் பேசத்தெரியாம பேசி எல்லார்கிட்டவும் மாட்டிக்குவேன்.. சாரிம்மா... அயாம் சாரி..." ரமணி வெள்ளையாக சிரித்தான். "ரமணீ... இப்படி சிரிடா.. வாய் விட்டு சிரிடா.. என்னை கிஸ் பண்ணுடா... ப்ளீஸ்" முனகினாள் அவள். வழவழப்பான மூங்கில் கைகள் இரண்டும் அவன் முதுகில் இறுகின. ரமணியின் முகத்தை, அவள் மென்மைகளை மூடியிருந்த நைட்டியையும் மீறி வந்த சூடு தகித்தது. மனம் சுழன்று கொண்டிருக்க சூன்ய வெளியில் நிலைத்திருந்தன அவன் கண்கள். மகிழ்ச்சியில் பொங்கிக்கொண்டிருந்தாள் அவள். மெளனமான ஒரு பார்வையுடன் தன் மடியில் இன்ப மயக்கத்தில் துவண்டு கிடந்தவனை மிகமிக மென்மையாக அவள் அணைத்துக் கொண்டாள். "காமூ கிஸ் எங்கே வேணும் உனக்கு?" "உனக்கு எங்கே இஷ்டமோ அங்கே குடு..." ரமணியின் விரல்கள் நைட்டியின் ஜிப்பை அவசர அவசரமாக கீழிறக்கின. அவன் விரல்கள் இலேசாக நடுங்கின. "டேய்... முத்தம் குடூன்னு சொன்னேன்... என் நைட்டியோட ஜிப்பை அவுருன்னா சொன்னேன்?" பொய்யாக கோபம் காட்டி ஒய்யாரமாக நகைத்தாள். சிரித்தவளின் வாயை கொழுத்த இரு உதடுகள் கவ்விக்கொண்டன. நீளமாக பெருமூச்சுவிட்டு முனகிய பெண்மை, ஆண்மையை மேலும் மேலும் நெருக்கி உரசியது. ஆண்மையின் வலுவான மார்பில், பெண்மையின் குலுங்கும் மென்மைகள் உரசின. சட்டென அவன் முகத்தை விலக்கினாள். ஜிப்பை மேலிழுத்துக்கொண்டாள். "ஏன்..." குழம்பியது ஆண். "அங்கே ஆரம்பிச்சா... இப்போதைக்கு வேலை முடியாது..." பெண் வம்புக்கு இழுத்தது. "ஒரே ஒரு தரம் காமூ... நான் அதுங்களை இதுவரைக்கும் முழுசாப் பாத்ததே இல்லை..." ஏங்கியது ஆண் மனம் "நிஜம்மா..." கன்னிப்பையன் ஒருத்தன் என் அழகை பாக்கறதுக்கு ஏங்கறான். மனசுக்குள் கர்வம் பொங்கியது. "சத்தியமா சொல்றேன்... காமூ" களுக்கென சிரித்தாள். "ஏன் சிரிக்கறே?" மெல்லச் சிணுங்கியது ஆண்மை. ஆண்மையிலும் பெண்மையின் இயல்பு ஆங்காங்கே இறைந்துதான் கிடக்கிறது. "பொம்பளை ஒடம்பை முழுசா பாத்ததே இல்லையா?" "ஹூகூம்... இதுவரைக்கும் பாத்ததில்லே... தொட்டதில்லே... எல்லாம் ஸ்கீரீன்ல, படத்துல பாத்ததுதான்; பாத்துட்டு பெருமூச்சு விட்டதோட சரி... ப்ச்ச்..." "வருத்தப்படறியா...? இல்லே... என்கிட்ட சொல்ல வேண்டியதா போச்சேன்னு வெக்கப்படறியா?" அவன் முகத்தில் தன் இடது முலையை அழுத்தினாள் காமு. "உண்மையை சொல்றதுக்கு நான் எப்பவுமே வெட்கப்பட்டதில்லே..." "ஒண்ணும் தெரியாம என்னை எப்படி சந்தோஷமா வெச்சுக்குவே?" அவன் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டாள். உதட்டின் ஈரம் ஜில்லென்று இறங்கியது. "நீதான் சொல்லிக்குடுக்கணும்..." காமுவின் விலா எலும்புகள் நொறுங்கிப்போகும் வண்ணம் அவளை இறுக்கினான் ரமணி. "போதும்டா.. இறுக்கியே என்னை கொன்னுடாதே..." அவள் காம்புகள் விறைத்தன. சந்தோஷத்தின் உச்சத்தை ஒருமுறை தொட்டுவிட்டு வந்ததால், தொடைகளின் நடுவில் ஈரமானாள் காமாட்சி. "வலுவா இருக்கேனா நான்?" அவள் கீழ் உதட்டை தன் ஆள்காட்டி விரலால் வருடினான் ரமணி. "நான் சொல்லிக்குடுக்கறதை கத்துக்கறியா?" அவனை இழுத்து அவன் தோளைக் கடித்தாள். "ம்ம்ம்... கத்துக்கறேன்.." "இப்ப டிரையல் காட்டறேன் பாக்கறியா?" "கிண்டலாடீ... கிண்டலாடீ... காலையில நான் சொன்னதை சொல்லி என்னை வெறுப்பேத்தாதே... அப்புறம் ரொம்பக் கஷ்டபடுவே..." அவள் கன்னத்தை அழுத்தமாக திருகினான் அவன். வலி அவளுக்கு இன்பமாக இருந்தது. "இருட்டுல நான் காமிச்சாலும் உனக்கு கண்ணுத் தெரியுமான்னு யோசிக்கிறேன்டா...?" அவள் இடது கரம் அவன் வேஷ்டிக்குள் நுழைய முயன்றது. "வேணாம் காமூ.. இப்ப வேணாம்... சொன்னாக் கேளு.." "ஏன்... உன்னுதை நான் தொட்டுப்பாக்கக்கூடாதா?" "ஆமாம்டீ.. நீ தொடு... அது கிளப்பிக்கும்... சூடாயிடும்... நீ பாதியிலே எழுந்து போவே... அப்புறம் அதை குளுர வெக்க நான் ராத்திரி பூரா ஆட்டிக்கணும்... இந்த விளையாட்டே வேணாம்டியம்மா.." ரமணி தன் முகத்தை சுளித்தான். "அசிங்க அசிங்கமா பேசறே நீ..." காமு அவனைத் தொட்டாள். தொட்டதை வருடி வருடி உசுப்பேத்தினாள். மறுகையால் அவனைத் தன்னோடு தழுவிக்கொண்டு, அடுத்த கையால் அவனுக்கு தினவேற்றினாள். அவனை வருடி, தடவி, அழுத்தி துடிக்கவைத்தாள். "என்னமோ டிரையல் காட்டறேன்னு சொன்னே?" நைட்டியோடு சேர்த்து அவள் மார்பைக் கடித்தான். "இருட்டுல உனக்கு சரியா தெரியாதேன்னு சொன்னேன்..." சிரித்து சிரித்தே அவனை கொன்றாள் அவள். "பார்வையே இல்லாதவனும் தொட்டுப்பாத்து பரவசம் அடையலயா? ரமணி தன் முகத்தை அவள் மார்பிலிருந்து விலக்கினான். சர்ரென அவள் நைட்டியின் ஜிப்பை கீழே இறக்கினான். வலது கையால் ஆடிக்கொண்டிருக்கும் அவள் இடது முலையை தன் வாயால் கவ்வினான். "ஸ்ஸ்ஸ்ஸ்..." இளகியது பெண்மை. "ப்ச்ச்ச்... ப்ச்ச்ச்... ப்ச்ச்ச்..." விறைத்திருந்த மார்புகளை மாறி மாறி முத்தமிட்டது ஆண்மை. காம்புகளை மெல்ல நாவால் வருடியது. இலேசாக வியர்வை உப்புக்கரிக்க உதட்டை சப்புக்கொட்டியது. அக்குளிலிருந்து பச்சைப்பயறு மாவின் வாசனை மூக்கில் ஏறியது. அவள் உடல் வாசத்தை, அக்குள் வாசத்தை, நெஞ்சு நிறைய இழுத்தான் ரமணி. "என்னப்பா...?" "காமூ... இதான்டீ நீ.. இந்த வாசனைதான் நீ... எந்த இருட்டுலேயும் உன்னை நான் இனிமே இனம் கண்டுக்குவேன்.. குருடனாவே நான் ஆயிட்டாலும், நூறு பேருக்கு நடுவுலேயும் உன்னை நான் தெரிஞ்சுக்குவேன்." ஆண்மையின் இரு விரல்களுக்கிடையில், இடது காம்பும், வலது காம்பும் நசுங்கின. நெறித்த விரல்கள், மென்மையான சிறிய காம்புகள் நீளமாக, கல்லாக மாறும் விந்தையை அனுபவித்தன. "கிஸ் மீ..." துடிப்பு எகிறிக்கொண்டிருந்தது. காமாட்சி வெறியுடன் ரமணியின் இதழ்களை தன் இதழ்களால் தேடினாள். ரமணி அவள் ஈர இதழ்களின் தேனை உறிஞ்ச ஆரம்பித்தான். நேரம் நழுவிக்கொண்டிருந்தது. தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மொட்டுகள் மலர ஆரம்பித்த வேளையில் சட்டென விலகியது பெண் எனும் பூ. "என்னாச்சுடீ..." மலரை முகர்ந்து கொண்டிருந்த வண்டு சினத்தில் சீறியது. "சித்தி வர்றாடா?" குரலில் தவிப்பு. "எங்கே...?" குரலில் ஏமாற்ற எரிச்சல். "தெரு வெராண்டாவுக்கு வந்திருக்கா... ஆனா மேலே வரமாட்டா... கீழே இருந்தே குரல் கொடுப்பா பாரு..." "காமூ... அடியே காமூ... எறங்கி வர்றேளா... நொய் உப்புமா ரெடி..." சித்தியின் குரல் காற்றில் தவழ்ந்து மேலே வந்தது. "தட்டை போடு... வந்துக்கிட்டே இருக்கோம்...." "எப்படிடீ இது? அவளை இழுத்து இறுக்கிக்கொண்டவன் அசந்து போனான். "சொல்லிக் குடுக்கறேன். எல்லாத்தையும் உனக்கு சொல்லிக்குடுக்கறேன்... ஆனா நீ அவசரப்படக்கூடாது.." "அப்டீன்னா..." "சட்டுன்னு சாப்பிடு... ஸ்கூட்டரை எடுத்துக்கோ... உன் ரூமுக்கு கிளம்புன்னு சொல்றேன்..." "ஏன் காமூ... ? ராத்திரி இங்கேயே... மாடீலே இந்த ரூம்லேயே தங்கலாம்ன்னு நினைச்சேன்...?" ரமணி மெல்ல இழுத்தான். "இராத்திரிலே மட்டும் ஒரு ஆம்பிளை இந்த வீட்டுல தங்கினா அக்கம் பக்கம் எங்களைப்பத்தி என்ன நினைக்கும்?" "அடுத்தவனைப் பத்தி நாம ஏன் கவலைப்படணும்?" "அவசரப்படாதேன்னு இப்பத்தான் சொன்னேன்..."

"ஆமாம்... எனக்கு அவசரம்தான்..." "ரமணீ... ரெண்டு நாளா ஒரே அழுக்கு சட்டை.. அதே அழுக்கு வேஷ்டியோட சுத்தி வர்றே.. எத்தனை நாளைக்கு இந்த ட்ரஸ்லேயே ஆஃபிசுக்கு வருவே...?" "போடீ... எதை எதையோ சொல்லி என்னை நீ ஏமாத்தறே..." அவன் துவண்டது, அவன் குழந்தையாக சிணுங்கியது, அவளுக்கு இனித்தது. "என் ராஜால்லே.. உன் ட்ரெஸ்ல்லாம் உன் ரூமுலேதானே இருக்கு..." கொஞ்சினாள். அவனை இழுத்து அணைத்து முத்தமிட்டாள். ஸ்ர்ர்ர் என்ற சத்தத்துடன் நைட்டியின் ஜிப்பை கழுத்து வரை ஏற்றிக்கொண்டாள். "எப்பதான்டீ ஒரிஜனல் பாடத்தை நீ ஆரம்பிக்கப்போறே? முணகினான் ரமணி. வேட்டியை உதறி இடுப்பில் கட்டிக்கொண்டான். சட்டையை மாட்டிக்கொண்டான். கூடாரமடித்திருக்கும் தன் சின்னவனை வருடிக்கொண்டான். "உங்கம்மாவைத்தான் கேக்கணும்..." உதட்டில் புன்னகையுடன் தலைமுடியை கோதி முடிந்து கொண்டாள் காமாட்சி "அவங்களை எதுக்குடீ கேக்கணும்..? பாடத்தை நீதானே சொல்லிக் குடுக்கப் போறே?" "நல்ல நாள், நல்ல நேரம் பாத்து என் கழுத்துல நீ தாலி கட்ட வேண்டாமா?" அவனை நெருங்கி நின்றாள் காமு. தன் தோளுக்கு மேல் உயரமாக நின்றவனை மாடியறைச்சுவரில் சாய்த்தாள். அவன் நெஞ்சோடு அழுந்தி நின்றாள். நெருங்கியவளின் அடிவயிற்றில் இன்னும் சூடாக, முறைப்புடன் இருந்த சின்ன ரமணி வேகமாக ஒழுகினான். ஒழுகிக்கொண்டிருந்தவனின் கழுத்து, தோள்கள், மார்பு, என மாறி மாறி முத்தமிட்டாள் காமாட்சி. "நேரம், காலம், எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... ஒரு தரம்... ஒரே ஒரு தரம்... உன்னை எனக்கு முழுசா தொறந்து காட்டுடீ... ரொம்ப ஆசையா இருக்குடீ... உன்னை விட்டுட்டு எங்கேயும் ஓடிடமாட்டேன் நான்..." ரமணி கெஞ்சினான். புலம்பினான். புலம்பலில் சிறிதளவு கோபம் தொனித்தது. "ரமணீ.. நான் உனக்குத்தாண்டா... நீ எப்ப வேணா என்னை எடுத்துக்கோடா... ஆனா சரியான முறையில என்னை எடுத்துக்கோன்னு சொல்றேன்டா... எதுக்கு நீ கோவப்படறே?" அவனை அவள் மீண்டும் கொஞ்ச ஆரம்பித்தாள். "உங்க வீட்டுல எல்லாத்துக்கும் ஒரு முறை வெச்சிக்கிட்டு இருக்கீங்க... காலை கழுவுடா.. மூஞ்சைக் கழுவுடா... பொட்டு வெச்சுக்கோடா.. கொட்டைக் கட்டிக்கோடா... காமூ... ஹிம்சைடீ...?" "என் புள்ளைக்கு உன் இனிஷியல் வேணும்பா... உன் கையால நான் தாலிக்கட்டிக்கிட்டாத்தான் உன் இனிஷியலை அவனுக்கு நான் குடுக்கமுடியும்... நம்மக் குழந்தை உன்னை மாதிரி எங்கேயும் கஷ்டப்படக்கூடாதுப்பா... தன் தலை குனிஞ்சு நிக்கக்கூடாது. நான் சொல்றதை கொஞ்சம் நீ புரிஞ்சுக்கோப்பா.." காமாட்சி நிதானமாக பேசினாள். "அப்பா..." முனகினான் ரமணி. தன் இரு காதுகளையும் சட்டென மூடிக்கொண்டான். அவன் உடல் இறுகியது. துவண்டு போனது அவன் முகம். அவன் முகம் போன போக்கைக் கண்டதும், காமாட்சி லேசாக அதிர்ந்தாள். "சாரிடாச் செல்லம்.. ரியலி ஐ டோண்ட் மீன் இட்..." அவன் தோளைப் பற்றினாள் காமாட்சி. "இட்ஸ் ஆல் ரைட்..." காமாட்சியின் கையை சட்டென உதறிய ரமணி மாடிப் படிக்கட்டில் வேகமாக இறங்க ஆரம்பித்தான். நைட்டியின் ஜிப்பை சரியாக இழுத்துவிட்டுக்கொண்டு, தன் ஈர நைட்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, அவனை பின் தொடர்ந்து ஓடினாள் காமாட்சி. நேத்துவரைக்கும் என் மனசுல எப்பவும் நிரந்தரமா இருக்கற இனம் தெரியாத அந்த எரிச்சலுணர்ச்சி இன்னைக்கு எங்கே போச்சு? என் எதிர்ல வர்றவனை காரணமேயில்லாம ஓங்கி ஒரு அறைஞ்சா என்னாங்கற சாஸ்வதமான ஒரு வெறுப்புணர்வும் என் உள்ளத்துல இருக்கும்... இன்னைக்கு அதையும் காணோம். யாரைப்பாத்தாலும், அழகா தெரியறாங்களே? இந்த ஊரு மாறிடிச்சா... இல்லே நான்தான் மாறிட்டேனா? வெளிச்சமான சாலையில் தன் அறையை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்த ரமணி தன் மனம் வெகு லேசாக இருப்பதாக உணர்ந்தான். அருமையான ருசியான புழுங்கலரிசி உப்புமா... முழு மிளகாய், துவரம் பருப்பு, பச்சைக்கருவேப்பலை, பெருங்காயம் தாளிச்சி கொட்டி.. ஆஹா... என்னா வாசனை..? என்னா வாசனை..?. தொட்டுக்க தேங்காய் சட்னி. சட்னி காரமாவும் இருந்திச்சி... காரம் இல்லாத மாதிரியும் இருந்திச்சி...! இது தான் கை மணம்ங்கறதா...? செண்பகம் மாமி அருமையா சமைக்கறாங்க... சமைக்கறது மட்டுமா... உன் வயிறு நெரம்பலேன்னு கண்ணைப் பாத்தாலே தெரியுதுடா... இந்த வீட்டு ஆம்பிளை நீ... கூச்சப்படாம சாப்பிடு... அள்ளி அள்ளி என் தட்டுல போட்டாளே... ரெண்டே நாள்லே இப்படி ஒரு பாசத்தை என் மேல பொழியறாங்களே... என் மேலே இவங்க வெச்சிருக்கற நம்பிக்கையை மோசம் போகவிடமாட்டேன். தனக்குள் இருக்கும் எதிர்மறையான உணர்வுகள் தீடிரென தன்னைவிட்டு பறந்துவிட்டதைப் போல் அவன் உணரத்தொடங்கினான். இதுவரை தான் அனுபவத்தறியாத நிம்மதி தன் மனதில் குடியேறியிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. இதுக்கெல்லாம் காரணம் என்ன? ரமணி வியந்தபடியே நடந்து கொண்டிருந்தான். காமாட்சி தன் மார்பால் தன்னை பஸ்ஸில் உரசிய தருணத்திலிருந்து, தன் உடலும், மனமும், தன்னால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு அமைதியை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டதாக அவன் நினைத்தான். இது நாள்வரைக்கும் எந்தவித அர்த்தமும், பிடிப்புமும் இல்லாமல், வரட்டுத்தனமாக, இயந்திரத்தனமாக, கழிந்து கொண்டிருந்த தன் வாழ்க்கையிலும் ஒரு பிடிப்பு வந்திருப்பதாக அவன் நினைத்தான். இரண்டே நாளில் காமாட்சி தனக்கு வெகு நெருக்கமாகி விட்டாதாகவும், ஏதோ ஒரு நீண்டகால பரிச்சயம் அவளுக்கும் அவனுக்குமிடையில், இருப்பது போலவும் அவன் உணர ஆரம்பித்தான். எந்தக்காரணத்துக்காகவும் காமாட்சியை தான் இழந்துவிடக் கூடாதென்ற ஒரு உறுதி அவன் உள்ளத்திலெழுந்தது. இன்றுதான், தான் தன்னுடைய, இயல்பான நிலைக்கு திரும்பியது போலவும், வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஒரு ஆசை வந்திருப்பதாகவும் அவன் நினைத்தான். எதிர்பாராமல், வெயில் கொளுத்தும் ஒரு நண்பகலில், தன் வாழ்க்கையில் நுழைந்துவிட்ட காமாட்சி, அவள் உடுத்தியிருந்த மென்மையான பட்டுப் புடவையின் வாசனை, தன் மனதை வெகுவாக கவர்ந்துவிட்ட, தன்னைவிட வயதில் மூத்த அந்த பெண்ணின் அருகாமை, சினிமா கொட்டகை இருளில் சேர்ந்து உட்க்கார்ந்தபோது அனுபவித்த பெண்மையின் வியர்வை கலந்த உடல் வாசம், அவள் கூந்தலிலிருந்து கிளம்பிய மெல்லிய பூவின் வாசம், தன் மனதில் இன்னும் பாக்கியிருப்பதாக அவன் உணர்ந்தான். அவள் கரத்தின் மென்மை, மார்பின் திரட்சி, அவளுடைய இடுப்பில் தயக்கத்துடன் தன் விரல்கள் ஊர்ந்தபோது உணர்ந்த வெதவெதப்பு, இவையணைத்தும், ஒன்றன்பின் ஒன்றாக அவன் மனதில் ஊர்வலமாக வந்து போய்க்கொண்டிருந்தன. தான் புதிதாக பிறந்ததைப் போன்ற மன நிலையில் இருந்தான் ரமணி. அவன் உள்ளம் பூரணமாக நிறைந்திருந்தது. உடலிலும், மனதிலும் இனம் தெரியாத அமைதி நிலவிக்கொண்டிருந்தது. அறைக்கதவைத் திறந்தான். இரண்டு நாட்களாக தொடர்ந்து கட்டியிருந்த வேஷ்டியையும், போட்டிருந்த சட்டையையும் கழற்றி எரிந்தான். முகத்தை கழுவிக்கொண்டு அஜந்தா வண்ண லுங்கியில் புகுந்தவன் கட்டிலில் விழுந்தான். காலியாக இருந்த கல்யாணத்தின் கட்டிலை ஒரு முறைப் பார்த்தான். பொண்ணு பாக்க போன கம்மினாட்டி எப்ப வர்றான்னு தெரியலியே...? போன் பண்ணுவோமா? பகலானாலும் சரி, இரவானாலும் சரி, படுக்கையில் படுத்ததும், சுபாவீகமாக அவனது வலது கை தன் இடுப்பில் சுற்றப்பட்டிருக்கும் லுங்கியை தளர்த்திக்கொண்டு, தன் சுண்ணியை வருடும். அன்று அவனது வலது கை வெகு நேரமாக அவன் மார்பிலேயே அசையாமல் கிடந்தது. ரமணிக்கு அன்று கையடிக்க வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக எழவேயில்லை. பதினைந்து வயதில் ரமணி கையடிக்க கற்றுக்கொண்டான். என் சுண்ணியை நாலு ஆட்டு ஆட்டி, பட்டுன்னு தண்ணியைக் கழட்டிட்டு சட்டுன்னு தூங்கிடணுங்கற உந்துதலே இன்று ஏன் எனக்கு எழவில்லை? என்னாச்சு எனக்கு? அவன் மிகவும் ஆச்சரியமானான். மனதில் நிரந்தரமாக அலைபாய்ந்து கொண்டிருக்கும் பூச்சிகளும் அவன் கண்களில் ஆடவில்லையென்ற போதிலும், அவன் மனதுக்குள் சில கேள்விகள் எழுந்துகொண்டேயிருந்தன. நான் யார்? அவள் யார்? ரமணி யார்? காமாட்சி யார்? யாரை நோக்கி யார் வந்தது? யார் யாரிடம் அடைக்கலம் தேடுவது? அவன் மனம் விடாமல் விடைகளைத் தேட ஆரம்பித்தது. ரமணி விடையைத் தேடத் தேட மனம் களைத்தான். மனம் களைத்ததும் உடல் களைத்தது. அவன் கண்கள் செருக ஆரம்பித்தன. ரமணியின் தலைமாட்டிலிருந்த அவன் செல் அதிர்ந்தது. இந்த நேரத்துல யாரு? காமூவா? ரூமுக்கு வந்துட்டேன்னு போன் பண்ணிட்டேனே? என்ன ஆயிருக்கும்? செல்லை பாய்ந்து எடுத்தான் அவன். "மச்சான்... கல்யாணம் பேசறேன்டா" "பெண் வேட்டைக்கு போனியே... வில்லங்கம் எதுவுமில்லாம முழுசா இருக்கியாடா நீ?" ரமணி அட்டகாசமாக சிரித்தான். "நான் முழுசாத்தான் இருக்கேன்... நீ என்னமோ போலீஸ் ஸ்டேஷனுக்கு விருந்துக்கு போயிருக்கேன்னு தெரிஞ்சுது.. என்னடா ஆச்சு மச்சான்...?" "ஓவரா பிலிம் காமிச்சானுங்க.. ஒருத்தன் கொட்டையை நசுக்கினேன்... ஒருத்தன் மூஞ்சியை டாராக்கிட்டேன்.. இன்னொருத்தன் மூக்கை பேத்துட்டென்.. நேர்ல வாடா.. எல்லாத்தையும் சொல்றேன்.." "இத பாரு நீ ரொம்ப கோவப்படறே... வெளியூர்ல தனியா இருக்கே... இதெல்லாம் வேணாம்..." "பொண்ணைப் பாத்தியா இல்லையா? அதைச்சொல்லுடா..." "பாத்தேன் மச்சான்..." சுரத்தில்லாமல் பேசினான் கல்யாணம். "டேய் அந்தப் பொண்ணோட பேரு என்னாடா? அதைக்கூட எனக்குச் சொல்லலியேடா நீ?" "தேன்மொழி" "ஷோக்கு பேரு மச்சான்... எந்தக்கம்பெனீலே வேலை செய்யறா? கல்யாணசுந்தரம் வெட்ஸ் தேன்மொழி... எப்ப மச்சான் பத்திரிக்கை அடிக்கப்போறே?" சந்தோஷமாக பேசினான் ரமணி. "பேருமட்டும் இல்ல மச்சான். ஆளும் நான் ஆசைப்பட்டபடியே அம்சமா பூந்தோட்டமா இருக்காடா... அவ அசத்தலா சிரிக்கறதை நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் மச்சான். ஆனா..." "ஆனா ஆவான்னா... ன்னாடா? எப்பவும் ஒண்ணாங்கிளாசுலேயே இருக்கே... மேட்டருக்கு வா மச்சான்.. எப்பவும் ஏன்டா ஒப்பாரி வெக்கறே?" "பொண்ணு பாத்துட்டு வந்தேன் பாரு... அன்னைக்கு ராத்திரி அவ எனக்கு போன் பண்ணி, என்னைப் புடிக்கலேன்னு சொல்லிட்டாடா" "ங்ஙொய்யாலா... ஒரு ஆம்பிளை பேசற பேச்சாடா இது? அவதான் சொன்னான்னா நீயும் கேட்டுக்கிட்டு சும்மாவா இருந்தே? போன்லதானேடா சொன்னா? அப்பவே காரணத்தைக் கேக்க வேண்டியதுதானேடா?" "என் மேல அவளுக்கு எந்த பிடிப்பும் வரலையாம்..." இழுத்தான் கல்யாணம். "ப்ச்ச்... ங்கோத்தா... நீ ஷேவ் கீவ் பண்ணிக்கிணு கொஞ்சமாவது டிப் டாப்பா... பாக்கற மாதிரிதானே போனே?" "பின்னே அம்மண குண்டியாவா போனேன்....மூவாயிரம் ரூபா பேண்ட்டு... இரண்டாயிரம் ரூவா ஷர்ட்... போட்டுக்கிட்டுத்தான் போனேன்..." "டேய் காண்டூ... என்னமோ சைஸெல்லாம் பாக்கணும்ன்னு ப்ளான் போட்டுகினு போனியே? எக்குத்தப்பா நோட்டம் கீட்டம் வுட்டியா? அதுல எதாவது மெரண்டு கிரண்டு போயிட்டாளா அவ?" "மச்சான்... வெறுப்பேத்தாதேடா..."

"சொல்லேன்டா நாயே... ரொம்பத்தான் சீன் காட்டறே?" "அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல மச்சான்... அந்த அளவுக்கு அவ அழகா இருக்காடா... பொடவையிலே செதுக்கி வெச்ச மாதிரி இருக்காடா... ஜூன்ஸ் போட்டா... சான்ஸே இல்லே... அவன் அவன் செத்தான்டா... "டேய்ய்ய்ய்... சும்மா பிலிம் சுத்தாதே..." "அவ எதிர்ல நான் அட்டுதாண்டா... ஒத்துக்கறேன் மச்சான்... என் மூஞ்சியிலேதான் எழுதி ஒட்டியிருக்குதே நான் ஒரு இளிச்சவாயன்னு..." புலம்பிக்கொண்டே போனான் கல்யாணம். "மச்சான் ரொம்ப ஃபீல் பண்ணாதே... ன்னா நீ ராத்திரில பொண்ணு பாக்க போனியா? இருட்டுல எம்ஜியார் மாதிரி நீ தகதகன்னு மின்றது அவ கண்ணுக்குத் தெரிஞ்சிருக்காது... அவ நம்பரை குடு... உன்னைப்பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்றேன்..." "வேணாம்டா... நீ வேற ஒருத்தன்... குறுக்கேப் பூந்து அவகிட்ட எதுவும் மொக்கைப்போட்டுடாதே? அவளைப் பாக்க சாயந்திரம் நாலு மணிக்குத்தான் போனேன்.." "நல்ல நேரத்துலதான் போயிருக்கே..." "அவங்க குடுத்த பஜ்ஜி... கேசரில்லாம் சூப்பரா இருந்திச்சி... தேனோட அம்மாவும் ரொம்பவே க்ரேஸ்ஃபுல்லா இருந்தாங்கடா... நல்லக்குடும்பம்டா" "ஓசியிலே கெடைச்சா... ஒரு புடி புடிச்சிருப்பியே..." "நாலு பஜ்ஜிதாண்டா திண்ணேன்... இதுக்கே வீட்டுக்கு வந்ததும் தாமரை என்னை திட்டு திட்டுன்னு திட்டினா.." "மச்சான்... ரொம்ப ஃபீல் பண்ணாதே; தேன்மொழி போனா... இன்னோரு மலர்விழி; நாட்டுல பொண்ணுங்களுக்காப் பஞ்சம்... நீ கிளம்பி வாடா... உனக்கு ஒரு வழி சொல்றேன் நான்... ஆமாம் எப்ப வர்றே?" "மச்சான்.. நீ நெனக்கற மாதிரி இல்லேடா.. நான் அவளை டீப்பா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். குடுத்தனம் பண்றதுன்னா, அது அவகூடத்தான்னு முடிவெடுத்து இருக்கேன்டா..." "சரிடா.. மச்சான்... டயமாச்சு... எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்... நீ வா சொல்றேன்.." முத்தாய்ப்பாக பேசினான் ரமணி. நீளமாக கொட்டாவி விட்டான். தன் கொட்டைகளை சொறிந்துகொண்டான். "டேய் இருடா... என்னமோ கவர்னர் மாதிரி பறக்கறே... படம் எதுனா பாத்துக்கிட்டே கையடிக்கிறியா...? ஒரு அர்ஜன்ட் மேட்டர் பேசணும்டா உன்கிட்ட..." தேன்மொழியின் மேல் தனக்கு வந்துவிட்ட காதல், தான் செல்லில் அவளுக்கு செய்திகள் அனுப்பினாலும், அவள் தனக்கு பதில் எதுவும் சரியாக தராததால் உண்டாகியிருக்கும் ஏமாற்றம், தன் மனதிலிருக்கும் ஆதங்கம், வயித்தெரிச்சல், எல்லாவற்றையும் தன் நண்பனிடம் கொட்ட விரும்பினான் கல்யாணம். "சட்டுன்னு சொல்லித் தொலைடா....எனக்குத் தூக்கம் வருது..." "கொஞ்ச நாளைக்கு ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்ன்னு அவகிட்ட ஒரு அப்ளிகேஷன் போட்டேன்..." "மச்சான்... சூப்பர் ஐடியாடா? அதுக்கு என்னா சொன்னா?" "ஒண்ணும் சொல்லலைடா..." "டேய்ய்ய்ய்... இது ஒரு அர்ஜெண்ட் மேட்டரு...ஹேங்? ங்கொம்மாலா... ராத்திரி நேரத்துல ஏன்டா என் கழுத்தறுக்கற?" "ரெண்டு மூணு மெசேஜ் அனுப்பினேன்டா.." புலம்பினான் கல்யாணம். "அவ பதில் அனுப்பலையா?" "எப்படி மச்சான் இவ்ள கரெக்டா சொல்றே?" கல்யாணம் நண்பனின் கூர்மையான அறிவைக்கண்டு வியந்தான். "நீ ஒரு இளிச்சவாயன்னு நீயேதானேடா சொன்னே?" மீண்டும் ஒரு நீளமான கொட்டவி வந்தது ரமணிக்கு. "பத்தாக்குறைக்கு... என் மூடு அவுட்டாயி போயி, ஏதோ ஒரு வெறுப்புல, நான் பொண்ணு பாக்க வந்ததையே மறந்துடுன்னு ஒரு மெசேஜ் வேற இன்னைக்கு மதியானம் அவளுக்கு அனுப்பிட்டேன்.." "உடம்பூ பூரா எண்ணைய் தடவிகிட்டு, சீக்காயை தேச்சி, அவளை மொத்தமா தலை முழுகிட்டு இப்ப என் உயிரை ஏன்டா எடுக்கறே?" "மச்சான்.. நான் வெந்து போறேன்டா.. ஆறுதலா ஒரு வார்த்தை சொல்லாம எரியற நெருப்புல எண்ணைய் ஊத்தறியேடா? மசுரு... நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடா?" "குடுத்தனம் பண்ண ஆசைப்படற நாயி இப்படி ஆசைப்பட்ட பொண்ணுக்கிட்ட புத்தி இல்லாம கொரைக்கலாமா?" "தப்புதான்டா.. அதான்டா உன்கிட்ட கேக்கறேன் ஒரு வழி சொல்லு மச்சான்...?" "காலையில எழுந்ததும்... கஞ்சத்தனம் பாக்காம, உன் ஆளுக்கு ஒரு கால் பண்ணு... குட்மார்னிங் தேன்மொழி... நான் ஒரு பைத்தியக்காரன்... அப்ப அப்ப இப்படித்தான் ஒளறுவேன்... ஆனா நல்லவன்... என்னை நீங்க மன்னிச்சுடுங்க... உங்க நினைப்புல ராத்திரில்லாம் எனக்குத் தூக்கமே வர்லே... செத்துப் போயிடலாமான்னு கூட நினைச்சேன்... அப்டீன்னு ஒரு சீன் போடுடா..." "நம்புவாளா?" "சில நேரத்துல நாம நெனைக்காததெல்லாம், எதிர்பாக்காததெல்லாம் நடக்குதுடா... என் லைப்லேயும் ஒரு சேஞ்சு வந்துருக்குடா... ட்ரெய்னை புடி... வந்துசேரு... எல்லாத்தையும் சொல்றேன்..." "மச்சான்... உனக்கும் எதாவது பிகர் மடிஞ்சிடிச்சா?" "வாயைக் கழுவுடா... பிகராம் பிகரு... பாக்காமேயே பிகருங்கறியே... என் ஆளு சூப்பர் தேவதைடா... என் கம்பெனிலேதான் வொர்க் பண்றா... அவ என் பொஸிஷனுக்கு ரெண்டு க்ரேடுக்கு மேல இருக்கற ஆஃபிசர்டா.... மாசம் எழுவதாயிரம் சேலரி..." "ஆஃபீசரா... என்னடா சொல்றே மச்சான்...?" "நிஜமாவே எனக்கு ஒரு அழகு தேவதைதான் கிடைச்சிருக்காடா... கிளம்பி வா... ஃபுல் இன்ட்ரோ குடுக்கறேன்... ரொம்பவே ஜாலி டைப்... நிஜமாவே அசந்து பூடுவே..." செல்லை அணைத்தான் ரமணி. கல்யாணம் பேண்ட்டை இடுப்பு வரை இழுத்து பெல்ட்டால் இறுக்கினான். கூடத்து கண்ணாடியின் முன் நின்று தலையை வாரினான். முன் முடியில் விரல்களை நுழைத்து, வாரிய தலையை கவனமாக கலைத்துவிட்டுக்கொண்டான். மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டான். முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டிருந்தான். நல்லாத்தான் ஸ்மார்ட்டா இருக்கேன்... எனக்கென்ன கொறைச்சல்... என்னைப்பாத்தா ஒரு பிடிப்பு வர்லையாம் அவளுக்கு... ரொம்பத்தான் அல்டிக்கறா? கொஞ்சம் அவளைவிட கலர் கம்மியா இருக்கேன் அவ்வளவுதானே? நம்ம தலைவர் சூப்பர் ஸ்டாரே கருப்புதானே? எக்குத்தப்பாக ஏதோ எண்ணங்கள் அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. "ட்ரெய்ன் எத்தனை மணிக்குடா போய் சேரும்?" "ராத்திரி ஒம்போது ஆயிடும்..." "ரூமுக்கு இருட்டுல போகணுமேடா? இதுக்குத்தான் சொல்றது.... விடிகாலம் அஞ்சு மணி வண்டியைப் புடீன்னு..?" "சும்மா கவலைப்படாதேப்பா..." முனகினான் கல்யாணம். "உனக்கு ஒரு புள்ளை பொறந்தாத்தான்... ஒரு அப்பன் மனசு என்னான்னு புரியும்?" கல்யாணத்தின் பேகில் அவன் துணிகளை சீராக அடுக்கிக்கொண்டிருந்தார் வேலுசாமி. "அண்ணா... டிக்கட்டை எடுத்து வெச்சிக்கிட்டியாடா?" "செல்லுல கன்ஃபர்மேஷன் மெசேஜ் இருக்குடி..." "ரூம் கீ..." தாமரை எலுமிச்சம் சாதத்தை வாழையிலையில் வைத்து மடித்து, தினகரன் பேப்பரால் மடித்து கட்டிக்கொண்டிருந்தாள் "சும்மா தொணக்காதேடீ நீ? என்னை என் போக்குல விடுங்க... எல்லாத்தையும் நானே எடுத்து வெச்சிக்கறேன்... இல்லேன்னா... கடைசீ நேரத்துல நான் எதையாவது இங்கேயே விட்டுடுவேன்..." டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது அவனுக்கு. ஊருக்கு கிளம்பும் அன்று கல்யாணம் தேவையே இல்லாமல் எரிச்சல் அடைவான். என் மேல இருக்கற பாசத்தை மனசுல வெச்சிக்கிட்டு கலங்கற அப்பா... அண்ணன்ங்கற சொந்தத்தை தன் விழியிலேயே வெச்சிருக்கற என்னோட தங்கை; கூடத்துல அம்மாவைக் காணோம்... கிச்சன்லே கண்ணைக் கசக்கிக்கிட்டு நிப்பாங்க... இந்த அம்மாவைப்பத்தி சொல்லவே வேணாம். ரெண்டு நாளைக்கு ஒழுங்கா அவங்களுக்கு சோறு தண்ணிகூட இறங்காது. தன் மனதுக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தான் கல்யாணம். அரைமணி நேரத்தில், பஸ்ஸை பிடித்து, பிறகு ட்ரெய்னைப் ப்டித்து வேலைக்கு திரும்பி போய்த்தான் ஆகவேண்டும் என்ற அவசியத்தில், இவர்களையெல்லாம் பிரிந்து சென்னைக்கு கிளம்பவேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தமான அவசரத்தில், அவன் இருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக தேன்மொழியிடம் பேசவேண்டும், அவள் குரலை உடனடியாக கேட்கவேண்டும் என்ற ஆவல், அடக்கமுடியாத அந்த உந்துதல், காலையில் கண் விழித்ததிலிருந்தே அவனை பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. ராத்திரி பூரா தூங்கவிடலேயே... கனவுல வந்து வந்து நின்னாளே...! தலையை ஒரு பக்கமா சாய்ச்சு சாய்ச்சு சிரிச்சாளே? மறந்துடுன்னு அவளுக்கு மெசேஜ் அனுப்ச்சேன்... என்னால அவளை மறக்க முடியலியே... ஓரே நாள்லே அவ மேல இப்படி ஒரு பைத்தியமா ஆயிட்டேனே?அலுத்துக்கொண்டான். காலையில எழுந்ததும் சீன் போடுடான்னு சுலபமா சொல்லிட்டான் ரமணி...? தேனு கிட்ட எப்படி பேச ஆரம்பிக்கறது? என்னப் பேசறது? மனதில் பயம் என்னும் பேய் புகுந்து அவனை ஆட்டிக்கொண்டிருந்தது. அந்த பயம் தந்த எரிச்சலில், சிவப்பு சட்டை போட்டவனை பார்த்த காளையாக மிரண்டு கொண்டிருந்தான் கல்யாணம். எல்லாத்துலேயும் அவசரம் எனக்கு... பொண்ணு பாக்க வந்ததையே மறந்துடுன்னு கேணயன் மாதிரி ஒரு மெசேஜ் அனுப்பிட்டேனே? மேட்டருக்கு மொத்தமா சீல் வெச்சிட்டேனே? இப்ப திரும்பவும் எல்லாத்தையும் மொதல்லேருந்து ஆரம்பிக்கணுமா? கால் பண்ணா தேனு என்கிட்ட பேசுவாளா? அப்படியே பேசினாலும் ஃப்ரெண்ட்லியா பேசுவாளா? இல்லே போடா அறிவு கெட்ட நாயேன்னு கோவமா குமுறுவாளா? தன் முட்டாள்தனத்தை நினைத்து நினைத்து எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தான் கல்யாணம்.. * * * * * "கண்ணு கல்யாணம்..." தன் குரலில் பாசமும், ஆசையும் பொங்கியோட பிள்ளையிடம் வந்தாள் தனலட்சுமி. "சொல்லும்மா..." பிள்ளையும் மனதில் நெகிழ்ந்து வார்த்தையில் குழைந்தான். "இந்த ரெண்டு பொட்டலத்தையும் ஞாபகமா உன் பேக்ல வெச்சுக்கோ..." ஒரு சிறிய மஞ்சள் நிற துணிப்பையை நீட்டினாள். "தாமரை ஏற்கனவே சாதம் பேக் பண்ணி குடுத்துட்டம்மா... தொட்டுக்க உருளைக்கிழங்கு சிப்சும் வெச்சுட்டாளே..." "உனக்கு பிடிக்குமேன்னு ரெண்டு குழல் ஓமப்பொடி நேத்து ராத்திரி புழிஞ்சேன்... இந்த பெரிய பொட்டலத்தை நீயும்... உன் ரூம் மேட்... அவன் பேரு ரமணியா... நீங்க ரெண்டு பேருமா ரெண்டு நாளைக்கு வெச்சிக்கிட்டு திண்ணுங்க..." "ஏம்மா இடுப்பு வலிக்குதுங்கறே...? அப்றம் இப்படி அடுப்புக்கு எதிர்லே நின்னுக்கிட்டு ஏன் கஷ்டப்படறே? சென்னையில கிடைக்காத ஓமப்பொடியா?" கல்யாணம் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டான். "சும்மாருடா... எனக்கென்னடா கஷ்டம் இதுலே...? ஊர்ல பத்துப்பசங்க என்னை பெரிம்மான்னு, சித்தீன்னு, அத்தேன்னு, மாமீன்னு கூப்பிடுதுங்க... இருந்தாலும் அவங்கள்ல்லாம் என் கல்யாணம் ஆயிடுவாங்களா?" "அம்மா... என்னை இப்ப அழ வெக்காதேம்மா..." குரல் தழுதழுத்தது கல்யாணத்துக்கு. சட்டென மூக்குக்கண்ணாடியை கழட்டி புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"கண்ணைத் தொடைடா... அம்மாவும் புள்ளையும் ஆரம்பிச்சிட்டாங்க...." தாமரை அவனிடம் தன் ஹேங்கியை நீட்டினாள். "இந்தப் பார்சலை, அந்த பொண்ணு தேனுகிட்ட குடுத்துடு... சென்னைக்கு போனதும் அவளைப் பாப்பேல்லா?" தனலட்சுமி குறும்பாக சிரித்தாள். "என்னமா சொல்றே நீ...?" உண்மையாகவே அதிர்ச்சியடைந்தான் கல்யாணம். "ஆறுமாசம் ஃப்ரெண்டா இருக்கலாம்ன்னு... பேசிக்கிட்டோம்ன்னு நீதானேடா சொன்னே?" தனலட்சுமியின் உதட்டில் இருந்த புன்னகை இன்னும் மறையவில்லை "ஆமாம். சொன்னேன்.. நீ என்னா சொன்னே..? அவ திமிரு பிடிச்சவளா இருக்கா.. நம்ம குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டா.. இவளை மாதிரி நூறு பேரை கொண்டாந்து நிறுத்தறேன்னு சொன்னியா இல்லையா?" கல்யாணம் எகிறினான். "ஆமாம்... ஏதோ வயித்தெரிச்சல்.. என் புள்ளையை வேணாம்ன்னு சொல்றாளேங்கற ஆதங்கம்.. எதையோ சொன்னேன்... உன்கிட்டத்தானே நான் சொன்னேன்... அவங்க வீட்டுக்கா சொல்லி அனுப்ச்சேன்...?" தனலட்சுமியின் ரிங் டோன் மாறியது. "அடப் போம்மா... நீயும் உன் வயித்தெரிச்சலும்...? ஏன் இப்டீ முன்னுக்கு பின்னா பேசி என் உயிரை வாங்கறே நீ?" "நீ ஏன்டா இப்படி உங்கப்பனை மாதிரியே எப்பவும் அர்த்தமில்லாம கூவறே? என்னமோ அவளை சுத்தமா மறந்துட்ட மாதிரி சீன் காட்டறயே? தனலட்சுமி தன் முகத்தில் திகைப்புடன் அவனைப் பார்த்தாள். "நான் சீன் காட்டறேனா... நீதான் சீன் காட்டறே?" எரிச்சல் ஏறிக்கொண்டு போனது கல்யாணத்துக்கு. "ரெண்டு நாளா மரத்தடில உக்காந்துகிட்டு, மாடியில நின்னுக்கிட்டு, அவ போட்டோவை பாத்து பாத்து, செல்லுக்கு முத்தம் குடுக்கறது நானா... நீயாடா? நீ ஊருக்கு கிளம்பற நேரத்துல அனாவசியமா என் வாயைக் கெளறாதடா?" தனலட்சுமி முந்தானையை இடுப்பில் செருகிக்கொண்டு கல்யாணத்தை முறைத்தாள்.

No comments:

Post a Comment