Thursday 14 November 2013

சுகன்யா 5


மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. சுகன்யா, தன் உதடுகளிரண்டும் இலேசாக பிரிந்திருக்க, அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகில் கட்டிலில் படுத்திருந்த சுந்தரிக்கு உறக்கம் வரவில்லை. மதிய நேரத்தில் தூங்கும் வழக்கம் அவளுக்கு எப்போதுமிருந்ததில்லை. இன்று சிறிது நேரம் சாப்பிட்டவுடன் கண்ணயர்ந்து விட்டிருந்தாள். அதன் பலன் இப்போது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டியதாயிருந்தது. படுத்தபடியே கண்ணை மூடித் தன் அலையும் மனதை புருவ மத்தியில் நிற்க வைக்க முயன்றாள். எவ்வளவு முயன்றும் அவள் மனம், தாயின் இடுப்பில் கையையும் காலையையும் உதைத்துக்கொண்டு துள்ளும் குழந்தையைப் போல், இங்குமங்கும் நழுவி நழுவி அலை பாய்ந்தது. புரண்டு புரண்டு படுத்த போதிலும் உடல் களைத்து தூக்கம் வந்தபாடில்லை.

சுகன்யா விழித்துக்கொள்ளப்போகிறாளே என்று ஒசையெழுப்பாமல் கட்டிலைவிட்டு இறங்கி, பிரிஜ்ஜிலிருந்து ஒரு தம்ளர் குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு பால்கனியில் வந்து நின்று தெருவைப் பார்த்தாள். எதிரிலிருந்து சிறிய பார்க்கின் இரும்பு கதவில் சாய்ந்தவாறு ஒரு கையில் மூங்கில் கழியும் மறு கையில் புகையும் சிகரெட்டுமாக கூர்க்கா வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். தெரு நாயொன்று தன் வாலை ஆட்டியவாறு அவன் காலருகில் நின்று கொண்டிருந்தது. ஒன்றிரண்டு வீடுகளிலிருந்து வரும் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர தெருவே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. நீல வானம் கருத்து தன் நிறமிழந்திருந்தது. தூரத்தில் மின்னல் வெட்டி வெட்டி மின்னிக்கொண்டிருக்க, நல்ல மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இருளில் நின்றுகொண்டிருந்த சுந்தரி, நிதானமாக குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறையும் வரை உள்ளிழுத்து, இழுத்தக் காற்றினை மார்பிலேயே சிறிது நேரம் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெல்ல மெல்ல மூச்சை வெளியேற்ற உடலும் மனசும் சிறிது தளர்ந்தது. சுந்தரி, தீடிரென வலுவான இருகரங்கள், யாரோ அவள் முதுகின் பின் நின்று, அவளை இறுக்கியணைத்து, அவள் மார்புகளை அழுத்தமாக வருடி, அவள் புறங்கழுத்தில் முத்தமிட்டது போல் உணர்ந்தாள். ஒரு நொடியில் ஓர் ஆணின் தொடலை, ஆண் கரங்களின் வலுவை, ஆண் தேகத்துக்கே உரிய பிரத்யேக வாசத்தை, மூர்க்கமான நெடியை, தன் உடல் புல்லரிக்கச் சுகித்தாள். . தலைமுடி முதல், கால் நகம் வரை அவள் மேனி மெல்ல நடுங்கியது. நடுங்கிய ஒரு கையை மறு கையால் அழுத்தமாக பற்றிக்கொண்டாள். ஒரு காலை இன்னொரு காலால் மிதித்தாள். அந்த முடியடர்ந்த கைகளின் தொடல், அந்தக் கைகளின் மெல்லிய உறுதியான விரல்கள் மார்பில் தந்த அழுத்தம், பலம் பொருந்திய அந்த கைகள் தன்னை தழுவிய வேகம், திடமான மேனியின் வேட்கையான உரசல், உரம் வாய்ந்த தேகத்தின் வாசனை, அந்த ஆண்மையின் மிடுக்கு, அவளுக்கு பரிச்சயமான ஒரு ஆண் மகனுடையதாக இருந்ததை அவள் மனம் உணர, அவள் பதறிப்போனாள். "யார் என்னை தழுவியது? இந்த உடல் வாசனை எனக்கு புதிதல்லவே? இந்த வாசனை என் புருஷனுக்கு சொந்தமாச்சே? குமாரா அது .... "குமரு" நான் ஆசையா நேசிச்ச குமரு ... ஓ மை காட் ... அடப் பாவி நீ தானா அது? நீ தான் இப்ப வந்து என்னை அணைச்சியா? ஏண்டா என்னை ரெண்டு நாளா இப்படி ஹிம்சை பண்றே? கொல்லாம கொல்றியேடா பாவி? உன்னை நான் மறந்து எத்தனையோ வருஷமாச்சேடா? நீ எனக்கு பண்ணதெல்லாம் போதாதா? நீ வேண்டாம்ன்னுதானே உன்னை உதறிட்டு நிம்மதியா இருந்தேன்? இப்ப ஏண்டா என் எண்ணங்கள்ல்ல; மனசுல நினைவுகளாக என்னை ஆக்கிரமிச்சி, இரக்கமில்லாம கொல்றே? இப்ப நீ எங்கடா இருக்கே? உன் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரு தரம் வந்துட்டு போடா... " "என்னை விட்டுப் போன என் கணவன் குமார் இப்போது இங்கு எங்கு வந்தான்? ஒரு வினாடி அவன் என் பின்னால் நின்று என்னை கட்டிபுடிச்ச மாதிரி இருந்துதே? அது உண்மையில்லையா? என் மார்புகள்ல்ல அவன் விரல்கள் கொடுத்த அழுத்தம் இன்னும் பாக்கியிருக்குதே? என் கழுத்துல அவன் கொடுத்த முத்தம் இன்னும் என்னை சிலுக்க வெக்குதே? என் நினைவுகள்ல்ல, என் எண்ணங்கள்ல்ல வந்து அவன் என்னை இறுக்கி அணைச்சது, நிஜமாவே இப்ப நனவுல நடந்ததைப் போல இருக்குதே?" சுந்தரி தன் உள்ளம் திடுக்கிட, அவள் உடல் தள்ளாட, அவள் வாயிலிருந்து ஓசையுடன், நீண்டப் பெருமூச்சு ஒன்று வெளி வர, கழிவிரக்கத்துடன் தன் இயலாமையை நினைத்து, கண்கள் கலங்க, நிற்பதற்கு கால்களில் வலுவின்றி, முழுங்காலுக்கு கீழ் துணியாக உடல் தொய்ந்து போக, அப்படியே சுவரில் சாய்ந்து, இரு கால்களையும் தரையில் நீட்டி உட்க்கார்ந்து கொண்டாள். அவள் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. மனசு காட்டிய ஒரு நொடி வேடிக்கையிலிருந்து அவளால் அவ்வளவு சுலபமாக விடுபடமுடியவில்லை. அவள் மனம் பின்னோக்கிப் பறந்தது. கல்யாணமான புதிது. சுந்தரியும், குமாரும் அன்னியோன்யமாக இருந்த நாட்கள் அவை. மழை இலேசாக தூறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம். காற்று குளுகுளுவென வீசியது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சன்னல் வழியே மழைச்சாரல் வீட்டுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. குமார் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். அன்றும், இன்று போல்தான் வானம் பொழிந்து பூமியை நனைக்க துடித்துக் கொண்டிருந்தது. சுந்தரி அறைக்கு வெளியில் மொட்டை மாடியில் மழைத்தடுப்புக்கு கீழ் நின்று கொண்டு மழை பொழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று அந்த மொட்டை மாடியில் எந்த கவலையும் இல்லாமல், தன் ஆசைக் கணவனுடன் மழையில் நனைந்து, குதித்து, சிரித்து விளையாடி, மகிழ்ச்சியாக இருந்ததை நினைக்கையில் இன்று அவள் மனம் புது மணப்பெண்ணைப் போல் குதிபோட்டு கும்மாளமிடுகிறது. மீண்டும் தன் கணவனை, தன் மடியில் கிடத்தி, அவனை மகிழ்வித்து தானும் மகிழ மனம் ஏங்குகிறது. அவள் மனம் அவள் கட்டுக்குள் நிற்காமல், எந்த இலக்குமில்லால் அலைந்து அவளை இம்சை செய்கிறது. அவள் அடி வயிறு குழைந்து நெகிழ்கிறது. ஆண்டுகளாக இறுகிக்கிடக்கும் அவள் அந்தரங்கம் இன்று தீடிரென இளகுவதை கண்டு அவள் மனம் துணுக்குற்றது. தீடிரென சுந்தரியின் மனம் அவள் கல்லூரியில் படித்தக் காலத்தை நோக்கி தாவியது. தாவல்தானே மனசின் நியதி! அது ஓரிடத்தில் நில்லாமல் தாவிக்கொண்டே இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போதே குமாரும் அவளும் ஒருவரை ஒருவர் முழு மனதுடன் நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் காதல் உறவு என்பதே அந்த காலத்தில் ஒருவரின் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு, அவ்வப்போது இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள, பேசிக்கொண்டே நீண்ட தூரம் நடப்பது தான். மொத்தத்தில் அவர்களின் இரண்டாண்டு காதல் வாழ்க்கையும் ஓரிரு முத்தத்தையே கண்டிருந்தது. "கிஸ் அடித்தல்." என்பதும், கல்லூரியிலிருந்து பஸ்ஸில் ஒன்றாக உட்க்கார்ந்து, கண்களால் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கிக்கொண்டு, தொடைகள் உரச, மனம் கிளுகிளுக்க, உடன் படிப்பவர்கள் பொறாமையில் வெந்துகொண்டிருக்க, ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து, கிராமத்துக்கு திரும்பி வரும் வெள்ளிக்கிழமை மாலையன்று, இருட்டும் நேரத்தில் சாலையோரம், மரத்தின் கீழ் ஒளிந்து நின்று, யாராவது பார்த்துவிட்டால், உடம்பு புண்ணாகிவிடும் என்ற பயத்தில், கன்னத்தில் உதடுகள் பட்டும் படாமல் ஒரு முறை ஒற்றியெடுத்துவிட்டு ஓட்டம் ஓட்டமாக வேறு திசைகளில் ஓடுவதுதான். அடுத்த வாரம், கல்லூரியில் ஹாஸ்டலில், மதிய உணவு சமயத்தில், சுந்தரி பெருமையாக தன் சினேகிதியிடம் பீற்றிக் கொள்வாள், "பேசிக்கிட்டே இருந்தான்; சட்டுன்னு என் ஆளு நேத்து என்னை கன்னத்துல கிஸ் அடிச்சுட்டாண்டி!". "நீ லக்கிடி ... உன் ஆளு நிஜம்மாவே ஹேண்ட்சம்மா இருக்காண்டி, ஆனா ஜாக்கிரதையா இரு," அவள் தோழி உமா, சுந்தரியை தன் கண்களில் பொங்கும் பொறாமையுடன் பார்ப்பாள், பிறகு தாழ்ந்த குரலில் கேட்ப்பாள், "சுந்தரி ... கிஸ் அடிக்கும் போது எப்படி இருந்துதுடி" "சூப்பரா இருந்ததும்ம்மா," சுந்தரி கண்ணடித்து சிரிப்பாள். ஓருமுறை, பிள்ளையார் கோவில் பிரகாரத்தில், முத்தம் என்ற பெயரில் அவசர அவசரமாக குமார் அவள் உதட்டை அழுத்தி கடித்து விட்டதையும், உதடு கிழிந்து ரத்தம் கசிய, அவள் வலி தாங்காமல் அவனைத் தன் கையிலிருந்த பூக்கூடையால் மொத்தி, அந்த கூடையின் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த மூங்கில் குச்சி, அவன் கண்ணுக்கீழ் குத்திக் கிழித்து ரத்தம் பொங்கியதையும், அவள் துடிதுடித்து ஆயிரம் தடவை அவனிடம் மன்னிப்பு கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும், வீங்கிய உதட்டைப் பார்த்து "என்னடி இது ... ஏன் இப்படி உன் உதடு திடீர்ன்னு வீங்கியிருக்கு" அம்மா ஏகத்துக்கு கவலைப்பட்டதையும், "அம்மா குளவி கொட்டிடுத்தும்மா" என அவள் புளுகினதையும், சுந்தரியின் தாய் வேண்டாம் என்றாலும் கேட்காமல் மஞ்சளை அறைத்து உதட்டில் பூசியதையும், இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது சுந்தரிக்கு. அந்த ஒரு ஐந்து வினாடி நெருக்கத்துக்காக எத்தனை தவிப்புடன் வாரம் பூராவும் காத்திருப்பார்கள் இருவரும். வானம் இப்போது பூ வாளியாக மாறி, பூமிச்செடியில் தண்ணீர் விட ஆரம்பித்துவிட்டது. "உடம்பு நனையுதே; உள்ளே எழுந்து போகலாமா?" சுந்தரி ஒரு வினாடி யோசித்தாள். "உள்ளேப் போய் மட்டும் என்னப் பண்ணப் போறேன்? இந்த மனசு என்னை நிம்மதியாவா இருக்கவிடப்போகுது? இன்னைக்கு நான் சத்தியமா தூங்கப்போறது இல்லை; அந்த பாவி மவன் நினைப்பு வந்துடுச்சி; புரண்டு புரண்டு படுத்து உடம்பு வலிதான் மிஞ்சும் ... சுகன்யா முழிச்சிக்குவா; சின்ன சத்தம் கேட்டாக் கூட எழுந்துக்கறாளே? இங்கேயே செத்த நேரம் உக்காந்து இருப்போம் ... அவளாவது நிம்மதியா தூங்கட்டும்!" சுந்தரியின் மனம் மீண்டும் அந்த மழை நாளை நோக்கித் திரும்பியது. கல்யாணம் முடிந்த பின், ஒருத்தரை ஒருத்தர் தொடும் போது, ஒவ்வொரு முறையும் ஒரு புது வித அனுபவத்தை உணர்ந்த காலம். உள்ளமும் உடலும் சளைக்காமல், தினம் தினம், காலையும் மாலையும், பரஸ்பரம் அடுத்தவரின் உடலில் புது புது அர்த்தங்களை விடாமல் தேடிக்கொண்டிருந்த நேரம். மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் முதுகில், குமார் தன்னை பசைபோட்டு ஒட்டியதைப்போல் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த இலேசான வியர்வை வாசமும், காலையில் முகத்தில் தேய்த்து, இன்னும் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் கலந்த ஆண்மை மணமும் வந்துகொண்டிருந்தது. அவன் தொடை நடுவில் மெல்ல மெல்ல எழுந்த புடைப்பு சுந்தரியின் பின்னெழில்களில் உரச, அந்த புடைப்பை தன் கையில் பற்றிக்கொள்ள அவள் மனம் பறக்க, அவன் கைகள் அவள் அடிவயிற்றை தடவ, அவள் இதயம் வேகமாக துடித்து, முகம் நிறம் மாறிக்கொண்டிருந்தது. "வீட்டுக்கு வந்து முகத்தைக் கூட கழுவலியா நீ ... சரியான சோம்பேறி? "ம்ம்ம் .... ஏம்ம்மா" "நீ காலைல மூஞ்சியிலே தேய்ச்சிக்கிட்ட லோஷன் வாசனை உன் கழுத்துலேருந்து இன்னும் குப்புன்னு வருது." "கழுவிட்டேண்டி மூஞ்சை." "பொய் சொல்லாதே ... நீ பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது" அவள் சலித்துக்கொண்டாள். "சுந்து நான் ரூம்ல உனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன் ... நீ இங்க மழையை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கறே" அவன் குரலில் அவள் உடம்பை திறந்து பார்க்கும் ஏக்கம் வழிந்தது. "தெரியும்" "என்னத் தெரியும்" "நீ எதுக்கு காத்துக்கிட்டிருக்கேன்னு" "எதுக்கு" "துள்ளிக்கிட்டு என் இடுப்புக்கு கனமா கீழே எதுவோ இடிக்குது ... அதைக் கேளு ... அது சொல்லும்" சுந்தரி கலகலவென நகைத்தாள். "எங்கடி ... எதுடி ..." அவன் தன் இடுப்பை அவள் புட்டங்களில் மேலும் அழுத்தினான். "ஹீம்ம்ம்ம் .. .ம்ம்ம்மா" அவள் சுகமாக முனகினாள். "சுந்துக்குட்டி, உனக்கு மழை பெய்யறதை பாக்கப் பிடிக்குமா? அவள் காதருகில் கிசுகிசுத்தவன் தன் இதழ்களால் அவள் காது நுனியை கவ்வி இதமாக கடித்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான். முத்தமிட்டவன் இதழ்கள் அவள் கழுத்துடன் நிற்காமல், ரவிக்கை மறைக்காத அவள் முதுகை பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது. அவன் கைகள் அவள் கைக்கடக்கமான மாங்கனிகளை சேலையுடன் சேர்த்து வெறியுடன் பிசைந்து கொண்டிருந்தது. "ம்ம்ம் ... பிடிக்கும் ... மழையை பாக்கறது, மழையில நனைஞ்சுக்கிட்டு நிக்கறது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்" சுந்தரி முனகினாள். அவள் முனகல் சத்தம் அவன் காதுகளுக்கு இன்பமாக இருந்தது. "சரி வா ... அப்ப மழையில நனையலாம்" குமார் உற்சாகத்துடன் அவளை இழுத்துக்கொண்டு மொட்டை மாடியின் நடுவுக்கு ஓடினான். சுந்தரி குழந்தையைப் போல் மழையில் குதித்தாள். கைகளை விரித்து தன்னைத்தானே தட்டாமாலை சுற்றினாள். குமார் அவளை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டெனத் தாவி அவன் முதுகில் உப்பு மூட்டையாக தன்னைக் கட்டிக்கொண்டாள். தன் அந்தரங்கத்தை அவன் அடி முதுகில் தேய்த்தாள். தன் மனைவிக்கு என்னப் பிடிக்கும் என்னப் பிடிக்காது என்பதே அவனுக்கு இன்னும் பிடிபட்டிருக்கவில்லை. மழை இவளுக்கு இத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? வெற்று மார்புடன், தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு, நனைந்த முடியுடன், உயரமாக, உயரத்துக்கேற்ற பருமனுடன், சிவப்பாக, கருத்த மீசையுடன், ஈர லுங்கியில், முகத்தில் பொலிவுடன், வியப்புடன் தனனைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனை காணக் காண அவள் மனம் வெறி கொண்டு துள்ளியது. மழை நீரால் உடலில் நனைந்து ஒட்டிக்கொண்டிருக்கும் துணியை உறுவி எறிந்து விட்டு, அவனை அங்கேயே கட்டித் தழுவி, அந்த மழையிலேயே அவனைக் கூடும் வெறி அவளுள் எழுந்தது. மழையில் நனைந்த படியே அவனை நெருங்கி அவனை தன் மார்புடன் சேர்த்து தழுவி வெறியுடன் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். மழையில் நனைந்த புடவை அவள் வடிவான உடலுடன் ஒட்டிகொண்டு அவள் வீங்கிய மார்பையும், அவள் பின்னெழில்களையும் தெளிவாக அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மார்புகள் அவள் குதியலுக்கு ஏற்ப குலுங்கி, அவள் கால் கொலுசுகள் மேலும் கீழும் ஏறி ஒலித்தன. அருகில் நெருங்கி அவன் லுங்கியோடு சேர்த்து, அவன் உறுப்பை அழுத்திக் கண்களில் விஷமத்துடன் கிள்ளி விட்டு, தன் புட்டங்கள் அசைந்தாட அவள் மானாக ஓடினாள். அவன் அவளைத் துரத்தி பின்னால் ஓடினான். அவன் அவளை நெருங்கியதும் சுந்தரி தன் கைகளில் மழை நீரைப் பிடித்து அவன் முகத்தில் வீசி அடித்தாள். ஈர உடையில் தன் ஆசை மனைவியைப் பார்த்த குமாரின் தம்பி வேகமாக விறைத்து எழ, குமார் அவளை இறுகத் தழுவி தன் வலுவான கைகளல் தூக்கித், தன் உறுதியான மார்பில் சேர்த்தணைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளிச் சுவரில் அவளைச் சாய்த்து அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டான். புடைத்திருந்த அவன் தண்டு அவள் அடி வயிற்றில் நெளிய, அதன் உரசலால் தன்னுடலில் ஏற்பட்ட கிளுகிளுப்பை அவள் கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். மழைச்சாரல் உண்டாக்கிய இலேசான குளிரில் அவளையுமறியாமல் வெட்க்கத்தை விட்டு அவள் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவன் புடைப்பை மேலும் மேலும் எழுப்பினாள். அவன் உடல் தந்த கதகதப்பு அவளுக்கு அந்த நேரத்தில் இதமாக இருக்க, குமாரின் கைகள் அவள் சேலை முந்தானையின் உள்ளே நுழைந்துவிட்டிருந்தது. "என் சுந்தரி குட்டிக்கு என்னப் பிடிக்கும்" "உனக்குத் தெரியலையா? எனக்கு ... என்னப் பிடிக்குதுன்னு..." " ஒரு தரம் உன் வாயாலத்தான் சொல்லேன் ... அப்புறம் பாரேன் ..." "மக்க்க்கு ... வீரமா இழுத்துக்கிட்டு வந்து தாலி கட்டி ஒரு மாசமாச்சு ... பொண்டாட்டிக்கு என்னப்புடிக்கும்ன்னு இன்னும் புரியலை"? அவள் அவன் கன்னத்தை வருடி கீழுதட்டைத் திருகினாள். "ஓரே ஒரு தரம் சொல்லுன்னுதானே கேக்கிறேன் ... ரொம்ப அல்ட்டிக்கிறியே ... எனக்கு என்னப் புடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமா? குமாரின் கைகள் அவள் புட்டங்களை வருடிக்கொண்டிருந்தன. "க்க்க்கும்ம்ம் ..." அவள் அவன் கையை எடுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள்.. சட்டென திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். " நீ மெதுவா அமுக்கினா எனக்குப் புடிக்கும்; எப்பவும் மொரட்டுத்தனமா கசக்கறே... அதுங்களை ... எனக்குத் தெரியும் உனக்கு என் மாங்காய்களை புடிக்குதுன்னுட்டு ... அதுங்களை அழுத்து ஆனா ரொம்ப கசக்காதே ... எனக்கு வலிக்குதுல்ல..." அவள் குழைந்தாள். "சாரிடாச் செல்லம்...இனிமே நான் அப்படி பண்ணமாட்டேன்; இவ்வள நாளா நீ எங்கிட்ட ஏன் சொல்லலை?" "நீ இன்னைக்குத்தானே கேட்டே ... எனக்கு என்னப் பிடிக்கும்ன்னு?" "உனக்குப் பிடிக்காததை இனிமே நான் செய்ய மாட்டேன் ... உள்ளப் போவலாம் சுந்து" அவன் குரலில் கெஞ்சல் ... "பிராமிஸ் .. " சுந்தரி தன் உள்ளங்கையை நீட்டினாள். "பிராமிஸ் ... அவன் அவள் நீட்டிய கையில் முத்தமிட்டான். "உள்ளப் போலாமாடி ராஜாத்தி" "போய் ...." அவள் சிணுங்கினாள். "நான் அப்ப்பாவாம் ... நீ அம்ம்மாவாம் ... நமக்குன்னு ஒரு குட்டிப் பாப்பா வேணாமா? அவன் விரல்கள் அவள் ரவிக்கையை அவிழ்க்கத் துடித்தது. "முண்டம் ... இங்கேயே அவுக்கறயே ... அறிவு கெட்டவனே? ..." அவள் அவன் கன்னத்தைக் கடித்தாள். "நீதானே அமுக்குன்னு சொன்னே?" "அமுக்குன்னு சொன்னேன் ... இங்கயா அவுக்க சொன்னேன் ... ஹூக்கும்ம்ம்ம் ... மக்கு ... மக்கு ... குமரு உள்ளப் போயிடலாம் ... வாப்பா ... குமரு ... ப்ளீஸ் ... இங்க வேணாம்" அவள் அவனை வலுவாக உந்தித் தள்ளினாள். *** வானத்தில் இடியின் முழக்கம் ... காற்றின் வேகம் வலுத்திருந்தது ... சுழன்று சுழன்று காற்று அடித்தது ... மின்னல் மின்னியது ... அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள். மழை நாட்கள்ல்ல, மனுஷனுடைய உடல் வேட்க்கை அதிகமாயிடுது ... இப்ப என் குமார் என்னப் பண்ணுவான்? அவனும் இப்படித்தான் தூங்காம இருப்பானா? "படார்" ... பால்கனி கதவு மிகுந்த சத்தத்துடன் அடித்துக்கொள்ள, சட்டென சுந்தரி நிகழ்காலத்துக்கு வந்தாள். "சே ... சே .. எனக்கென்ன பித்துப் புடிச்சு போச்சா?" "இன்னைக்கு உப்புமாவுல உப்பு கொஞ்சம் அதிகமாயிருந்தது ... அதான் என் உடம்புக்கு கதகதப்பு கேக்குது." சடசடவென மழை வேகமாகக் கொட்டத் தொடங்கியது. சுந்தரி விருட்டென எழுந்தாள். எழுந்து கூரையில்லாத இடத்தை நோக்கி மெதுவாக நடந்து தலை முடியை அவிழ்த்து உதறிக் கொண்டு, கொட்டும் மழையில் நின்றாள். தலை முடி அவள் இடுப்பை தொட்டு நின்றது. அகன்ற இடுப்பு மத்தாளமாக காட்சியளித்தது. "உடம்பு சூடு கொஞ்சம் கொறையட்டும்." சுந்தரி விருப்பத்துடன் மழையில் நின்று நனைந்தாள். இரு கைகளாலும் மார்பின் மீது விழுந்த நீரை வழித்து எறிந்தாள். அவள் கை பட்டதும் ரவிக்கையில் தூங்கிக்கொண்டிருந்த முலைகளில் தினவேறி மெதுவாக காம்புகள் நிமிரத்தொடங்கின. "எனக்கு பிடிக்காததை செய்யமாட்டேன்னு மழையில நின்னு சத்தியம் பண்ணியே? ... நான் உன்னை வீட்டை விட்டுப் போடான்னு கத்தினேன் ... உண்மைதான்... நான் இல்லேன்னு சொல்லலை...எத்தனை தரம் நீ என்னை உன் குடி வெறியில அடிச்சிருப்பே? என்னை கீழேத் தள்ளி மிதிச்சிருப்பே? நான் ஒண்ணுமே சொன்னதில்லையே? நம்ம குழந்தையை குடி வெறியில கடிச்சியேடா? அதை என்னால பொறுக்க முடியாம போய்த்தானே, நான் உன்னை ஓரே ஒரு தரம், போதையில நீ பண்ணத் தப்புக்கு நான் திருப்பி அடிச்சேன்? அதுக்காக நீ என்னை விட்டுட்டு மொத்தமா போயிட்டியேடா?" "குமரு, இப்ப நீ எங்கடா இருக்கே? நான் இங்கேத் தனியா மழையில பைத்தியக்காரியாட்டம் நிக்கறண்டா; உடம்பு சூடு ஏறிப் போய் நனையறேண்டா ... தவிச்சிப் போயிருக்கேண்டா ... என்னால முடியலடா ... வெக்கத்தை விட்டு கெஞ்சறேன் ... வந்துடுடா ... எனக்காக நீ வரவேண்டாம் ... உன் ஆசைப் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரே ஒரு தரம் வந்துட்டுப் போடா... " அவள் மனம் அழுது கூவியது. வானத்தில் மின்னல் மின்னி, இடி இடித்துக்கொண்டு குமுறியது... இயற்கையின் இந்த கம்பீரமான பிளிறலில், அவள் மனதின் மெல்லிய ஒலம் அவள் ஆசைக் கணவன் குமாருக்கு - குமாரசுவாமிக்கு கேக்குமா? "வீட்டுக்கு மாப்பிள்ளை வரப் போற நேரத்துல, என் மனசு ஏன் இப்படி தறிகெட்டு ஓடி பழசையெல்லாம் நினைக்குது?" அவள் கன்னங்களில் கண்ணீர்ர் வழிந்தோடி அவள் உதடுகளைத் தொட்டது. மழை நீர் சுத்தமானதுன்னு சொல்றாங்களே, எத்தனை தடவை நான் மழையில நின்னு நனைஞ்சிருக்கேன்? இன்னைக்கு ஏன் எனக்கு மழைத் தண்ணி உப்பு கரிக்குது? நான் அழறேனா என்ன? என் மனசு கல்லுன்னு என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் சொல்றாங்களே?" அவள் மனதுக்கு இதற்கான விடை தெரிந்திருந்த போதிலும், அவள் பரிதவித்துக் கொண்டிருந்தாள். சுகன்யா, பால்கனி கதவு ஏற்படுத்திய சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து சட்டென விழித்து எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த தாயைக் காணாமல் ஒரு நொடி பதறிப் போனாள். பால்கனி கதவு காற்றில் மீண்டும் திறந்து கொள்ள, மின்னல் வெளிச்சத்தில் சுந்தரி வெளியில் மழையில் நின்று கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. எழுந்து விளக்கைப் போட்டாள். "இந்த அம்மாவுக்கு மழை மேல அப்படி என்ன அடங்காத ஆசை? எப்ப மழை பேஞ்சாலும் பயித்தியமாட்டம் ஓடிப்போய் அதுல நனையனும்; ராத்திரி பகல் ஒன்னும் கிடையாது. அவள் மனதில் சலித்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த குடையை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினாள். "எம்ம்மா, உள்ளே வாம்மா; யாராவது உன்னைப் பாத்தா பயித்தியம்ன்னு நெனைச்சுக்கப் போறாங்க." சுகன்யா, சுந்தரியின் கையை பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு வந்தாள். தன் மகளின் கரம் அவள் உடம்பில் பட்டதும், சுந்தரியின் உடல் இலேசாக நடுங்கியது. "தலையைத் சீக்கிரமா துவட்டும்மா; ஜொரம் வரப்போவுது உனக்கு; உடம்பு நடுங்கற அளவுக்கு மழையில நனையறே? ... முதல்ல உன் ரவிக்கையை அவுத்துட்டு இதை உடம்புல போடு ", அலமாரியை திறந்து ஒரு புது நைட்டியை எடுத்து தன் தாயிடம் நீட்டினாள் சுகன்யா. ஸ்டவ்வை பற்ற வைத்து பாலைச் சூடாக்கி, காஃபியை கலக்க ஆரம்பித்தாள். "கண்ணு, எனக்கு ஒன்னும் இல்லடா; ஏன் இப்படி பதறிப் போறே நீ?" "ஆமாம் ... பதறிப் போறேன் நான்? ... இடியிடிக்குது, அப்படி ஒரு மின்னல் மின்னுது; மழையில போய் நிக்கறே? உனக்கு என்ன ஆச்சு இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் ... இப்ப உனக்கு உன் புருஷன் நினைப்பு வந்துடுச்சு... அதானே?" "அதெல்லாம் ஒண்ணுமில்லடி" காஃபியை உறிஞ்சிய சுந்தரி போலியாக சிரித்தாள். "நான் இன்னும் சின்னக் குழந்தையில்லம்மா; உண்மையை சொல்லு நீ ... பொய் பேசக்கூடாதுன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் எனக்கு உபதேசம் பண்ற நீ; நான் தெரியாத்தனமா சொல்லிட்டேன்; என் அப்பாவை பாக்கணும்ன்னு; அது உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு நான் நினைக்கலை அப்ப; உனக்கு இஷ்டமில்லேன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன்னும் சொல்லிட்டேன்; அப்புறம் எதுக்கு நீ நேத்து ராத்திரி பூரா அழுதுகிட்டு இருந்தே?" பெண்ணின் பேச்சிலிருந்த உண்மை அவளைச்சுட்டது. "சுகா ... நீ சொல்றது சரிதாம்மா ... நான் யோசனைப் பண்ணிப் பாத்தேன்" "என்னம்மா சொல்றே நீ" "தீராத கோபம் யாருக்கு லாபம்? தங்கமான மனுஷந்தாண்டி உன் அப்பா. அந்த குடிப்பழக்கம்தான் அவரை ஒரு மனுசனா இல்லாம ஆக்கியிருந்தது. நானும் உன் மாமாவும் சேர்ந்து தானே அவரை அடிச்சு விரட்டினோம். என் புருஷன் நல்லவர்தான் ஆன ரொம்ப ரோஷக்காரர். யாருக்குத் தெரியும்? நீ சொல்றது மாதிரி உங்கப்பா ஒருவேளைத் தன் குடிப்பழக்கத்தை விட்டுட்டு திருந்தி வாழ்ந்துகிட்டு இருக்கலாம்? திருந்தியே இருந்தாலும் உங்காப்பாவா எப்படி திரும்பி வருவார்? உன் மாமாவுக்கு அவர் இருக்கற இடம் தெரிஞ்சு இருக்குன்னு நினைக்கிறேன் ... நானே உன் அப்பாகிட்டே பேசறேன் ... திரும்பி வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடறேன் ..." சுந்தரி சுவரைப் பார்த்துக்கொண்டு பேசினாள். "நிஜம்மாவாம்மா சொல்றே?" சுகன்யா தன் தாயின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். "நிஜம்மாத்தாண்டா கண்ணு சொல்றேன்." "தேங்க்ஸ்ம்மா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா ... உனக்கு ... கஷ்டமாயிருந்தா நான் வேணா அப்பாக்கிட்ட பேசறேனேம்மா ... அவருக்கு என் மேல என்ன கோபம் இருக்க முடியும்?" சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள். "சரிடா கண்ணு ... நீ தான் பேசு ... எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லம்மா ... இப்ப லைட்டை நிறுத்து ... செத்த நேரம் தூங்கலாம் ... மணி ரெண்டாவாகப் போகுது ..."தெரு விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தன. பண்புள்ள ஒரு குடும்பத்துடன், மாலை நேரத்தை கழித்ததானல் உள்ளத்தில் பொங்கிய உவகையுடன், அந்த இனிமையான சுவையை அசைபோட்டவாறே, மனம் நிறைய குதூகலத்துடன் குமாரசுவாமி கெஸ்ட் ஹவுசை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். தன் மனசிலிருந்த மகிழ்ச்சியை பதட்டமில்லாமல் அனுபவிக்க விரும்பி ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு, தான் தங்கியிருந்த இடத்திற்கு அவர் நடந்து செல்ல விரும்பினார். நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. கடந்த பதினைந்து வருடங்களாக, தன் ஓய்வு நேரத்தை நடப்பதிலேயே அவர் கழித்துக் கொண்டிருந்தார். குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருந்த காற்றும், வரப்போகும் மழையும், அவருடைய உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. குமாரசுவாமியின் நிழல், அவருடன் சேர்ந்து சென்றது, பின்னாலிருந்து அவரைத் துரத்தியது, வேகமாக முன்னால் சென்று, மீண்டும் பின்னால் வந்து அவரைத் துரத்தியது. முன்னேயும் பின்னேயும் ஓடி ஓடி ... ம்ம்ம் ... களைப்பே இல்லையா இதுக்கு; என் மனசை மாதிரி; அவர் சிரித்துக் கொண்டார். கால்கள் மெதுவாக நடை போட அவர் மனம் வேகமாகப் பறந்தது. "நடராஜன் குடுத்து வெச்ச மனுஷன். அவர் கட்டிக்கிட்ட பொம்பளை, ஒல்லியா வெட வெடன்னு இருந்தாலும்; பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற முகம்; சிம்பிளா ஒரு மூக்குத்தி, தோடு, கழுத்துல மெல்லிசா ஒரு செயின், வாய் நிறைய சிரிப்பு; தீர்மானமாக ஒரு பேச்சு; கொஞ்சம் முன் கோபியா இருப்பாளோ? அந்தம்மா பார்க்கற பார்வையில பொண்ணும், புருஷனும், பணிஞ்சிப் போயிடறாங்க; இருந்துட்டுப் போவட்டுமே; அவங்க குடும்பம்; அவங்க குடும்பத்தோட நல்லதுக்காகத்தானே மல்லிகா ஸ்ட்ரிக்டா இருக்காங்க; அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளைன்னாரு நடராஜன்". "நல்லவங்களுக்கு பொறந்தவன்; அவனும் நல்லவனாத்தான் இருப்பான்; ரெண்டு பேரு மேலயும் பாசத்தைக் அள்ளிக் கொட்டறாளே இந்த அம்மா!என்னமா ஓடி ஓடி, போதும்ன்னாலும் கேக்காம கை நெறய, அள்ளி அள்ளி என் எலையில போட்டா; முகத்தைப் பார்த்து பரிமாறின விதத்துல தெரியுதே அவ மனசு தாராளம்ன்னு; குமாரசுவாமியின் மனசு வஞ்சனையில்லாமல் வாழ்த்தியது மல்லிகாவை!" "எனக்கு வாய்ச்சவ மட்டும் எந்த விதத்துல கொறச்சலா இருந்தா? அழகுல கொறையா? இல்லையே? அம்சாம இருந்தா! சுந்தரிங்கற பேருக்கு ஏத்தப்படி சுந்தரியாத்தான் இருந்தா; படிப்புல கொறையா? நல்லாப் படிச்சுட்டு கை நெறைய சம்பாதிச்சா; நான் உன்னை காதலிக்கறேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக அவ அப்பன் ஆத்தாளை பகைச்சிக்கிட்டு எனக்காக என் பின்னால கூப்பிட்ட உடனே ஓடி வந்தா? என் கூடப்படிச்சவன்ல்லாம் பொறாமையில வயிறெரிஞ்சானுங்க ... "மாப்ளே, லாட்டரி விழுந்துடுச்சுடா உனக்குன்னு!" "சுந்தரிக்கும் தாராள மனசுதான்; என்னக்குறை வெச்சா எனக்கு? கேட்டப்பல்லாம், வாரி வாரி மனசார அவளையும், அவ சம்பாதிச்ச பணத்தையும் எனக்கு அள்ளி அள்ளிக் குடுத்தா; நேரத்துல அழகா தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பொண்ணையும் பெத்து என் கையிலக் கொடுத்து என்னைப் அப்பனாக்கினா; என் நேரம் சரியில்லாம போனா, நேரம் என்னா நேரம்? நான் புத்திக்கெட்டுப் போய், சேரக்கூடாதவன் கூட சேர்ந்து, குடிக்கக் கத்துக்கிட்டு, என் குடியை நான் அழிச்சிக்கிட்டா அதுக்கு யார் பொறுப்பு? கொடுத்தவன் நல்லாத்தான் குடுத்தான்; நான் அவளை வெச்சி வாழல; அதுக்கு யாரைக் குத்தம் சொல்றது?" "வேணாம் குமாரு, நாம அழிஞ்சிப் போயிடுவோம்டா; தலைத் தலையா அடிச்சுக்கிட்டா; நம்பளைப் பாத்து ஊர்ல இருக்கற ஜாதி ஜனங்கல்லாம் சிரிப்பாங்கடா? நாம காதல் காதல்ன்னு ஊரு, உறவு மொறைங்களை பகைச்சுக்கிட்டு வந்துட்டோமே? அத்தனை பேருக்கும் நாம இளக்காராமா போயிடுவோம்; இந்த குடிப்பழக்கத்தை விட்டுடான்னு அன்பா சொல்லிப் பாத்தா; கெஞ்சினா; மிரட்டிப்பாத்தா; ரெண்டு வருஷம் நான் அடிச்சக் கூத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தா." "கடைசியா என் குடி வெறியில என் பொண்ணையே நான் கடிச்சுப் புண்ணாக்கினா; எந்தப் பொம்பளைத்தான் சும்மா இருப்பா; அப்புறம்தான் தொடப்பத்தை எடுத்து அடிச்சிப்பிட்டா; என் வீட்டை விட்டு வெளியில போன்னா; அவ தம்பி அரிவாளைத் தூக்கிக்கிட்டு வெட்ட வந்தான். அவனுக்கு மட்டும் உரிமையில்லயா; குடிச்சுப்புட்டு அங்கங்க நான் வாங்கி வெச்ச கடனையெல்லாம் அவன் தானே தீர்த்தான். அவன் வீட்டுலதானே நாங்களே இருந்தோம். சுந்தரி மேல என்னத் தப்பு இருக்கு? ரோஷமா, வீட்டை விட்டு போடான்னு அடிச்சு விரட்டினாளேன்னு நானும் மறு பேச்சு பேசாம போயிட்டேன். பொண்டாட்டி புள்ளையில்லாம தனியா பிச்சைக்காரன் மாதிரி ஊர் ஊராக அலைஞ்சதுக்கு அப்பறம் தான் புத்தி வந்தது; பதினைஞ்சு வருஷமா தனியா வீம்பா, கோபமா வாழ்ந்து என்னத்தைக் கண்டேன்?" "அப்பா அம்மா என் கூட வந்து இருக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் , வாழ்க்கையில இப்ப ஒரு பிடிப்பு வந்திருக்கு. டேய் எங்க உசுரு போறதுக்கு முன்னே எங்க பேத்தியைப் பாக்கணும்ன்னு அவங்க துடிக்கிறாங்க. போடா, அந்த பொண்ணு கால்லே விழுந்தாவது என் பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு வாடாங்கறாங்க; உடம்புல ரத்தம் குறைய குறைய இப்ப என் மிச்சமிருக்கற காலத்தை கட்டிக்கிட்டவ கூட கழிக்கணும்ன்னு தோணுது. சுந்தரியை பாக்கணும்ன்னு என் மனசு துடிக்குது. நான் அவ வீட்டுக்குப் போனா வான்னு சொல்லுவாளா? என்னை மன்னிச்சு தன் புருஷனா மீண்டும் என்னை ஏத்துப்பாளா? முதல்ல அவ தம்பி ரகுகிட்ட தான் பேசிப்பாக்கணும். எத்தனை அலைஞ்சு, யார் யாரை விசாரிச்சு, அவன் ஆஃபீசை கண்டுபுடிச்சி, அவன் செல் நம்பர் எனக்கு கிடைச்சிருக்கு. இன்னைக்கு கெஸ்ட் ஹவுசுக்கு போனதும் என் மச்சான் கிட்ட பேசி என் குடும்பத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்." "மீனா துறுதுறுன்னு இருக்கா; மணியான பொண்ணு; பெத்தவ பாக்கற பார்வையிலேயே, சொல்றது என்னான்னு புரிஞ்சிக்கிட்டு செய்ய வேண்டிய காரியத்தை கரெக்டா செய்து முடிச்சிடறா! பொண்டாட்டி, புள்ளைங்க, சினேகிதன், வேலைக்காரன் இதெல்லாம் மேல இருக்கறவனா பாத்து கொடுக்கறது. வரம் வாங்கிக்கிட்டு வரணும். " "டேய் மடையா! என்னப் பேசறே நீ; உன் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்; உன் மேல அப்பா அப்பான்னு உசுரை வுட்டாளே; உன் மடியிலதான் உக்காந்து சாப்பிடுவேன்னு தினம் ஒரு அமக்களம் பண்ணுவா! நீ குடிச்சுட்டு வர ஆரம்பிச்சதிலேருந்து எல்லாம் போச்சு; உன்னைப் பாத்தாலே அந்த குழந்தை பயந்து நடுங்க ஆரம்பிச்சிடுச்சி." குமாரசுவாமியின் கண்கள் கலங்கியது. இப்ப அழுது என்ன பிரயோசனம். இன்னும் என் சுந்தரி கும்பகோணத்துலதான் வேலை செய்யறாளா? என் சுகன்யா ... என் குழந்தை சுகா என்னப் பண்ணிக்கிட்டிருப்பா? என்னைப் பாத்தா அவளுக்கு அடையாளம் தெரியுமா? அவளுக்கு இருபத்தி மூணு வயசாயிருக்கும்; என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? அப்படியே ஆகியிருந்தாலும் என்னை என் பொண்ணு கல்யாணத்துக்கு சுந்தரி கூப்பிட்டிருக்கணும்ன்னு என்ன அவசியம்? நான் என் குழந்தைக்கு இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கேன்? அவர் மனம் வெட்கத்தில் துவண்டது. கடவுளே ஒரு சான்ஸ் ... ஒரே ஒரு சான்ஸ் எனக்கு குடு ... என் மனைவியை ... என் குழந்தையை, என் கண்ணுல வெச்சு நான் பாத்துக்குவேன். என்னை நம்பி வந்தவளுக்கு, நான் பண்ண கொடுமைக்கு; அவ மனசு சந்தோஷப் படற மாதிரி நடந்துக்கறதுக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடு; அவர் மனது இறைந்தது. மழை தூறத் தொடங்கியது. என் இறைஞ்சுதல் "அவனுக்கு" கேட்டுவிட்டதா? "ஹலோ! ... மிஸ்டர் ரகுராமன் பேசறீங்களா" "ஆமாம் .. நான் ரகுராமன் தான் பேசறேன் ... நீங்க யாரு?" "சாரி ... நான் ராத்திரி நேரத்துல உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்." "பரவாயில்லை ... சொல்லுங்க" ... பரிச்சயமான குரலாயிருக்கே? இந்த குரலை நான் எங்கே கேட்டிருக்கேன்? ம்ம்ம் ... ரகுராமன் தன் நெற்றியைச் சொறிந்து கொண்டான். "ரகு ... நான் குமார் ... குமாரசுவாமி பேசறேன்" குமாரின் குரலில் நடுக்கமிருந்தது. "குமார் ... எப்படியிருக்கீங்க? ... இன் எ வே ... ஐயாம் ஹாப்பி ... உங்ககிட்ட நானே ஒரு முக்கியமான விஷயமா பேசணும்ன்னு இருந்தேன். ஆனா நீங்க முந்திக்கிட்டீங்க; எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்ன்னு சொல்றாங்களே; அது இதுதான் போல இருக்கு; சொல்லுங்க குமார் ... எத்தனை நாளாச்சு உங்க குரலைக் கேட்டு ... எங்கேருந்து பேசறீங்க ... ம்ம்ம் ... " ரகுராமன் மனதில் மின்னலாக ஒரு மகிழ்ச்சியின் கீற்று உதயமாகியது. "நல்லாயிருக்கேன் ... இப்ப சென்னையிலேருந்துதான் பேசறேன். உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையாயிருக்கு ... நீங்க சரின்னு சொன்னா உங்களை நான் வந்து பாக்க விரும்பறேன். நேரா வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கிருந்த உரிமையை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி இழந்துட்டேன் ... இப்ப சுந்தரியும் நீங்களும் அந்த உரிமையை திரும்பவும் எனக்கு குடுத்தா ... எனக்கு சந்தோஷமா இருக்கும் ... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ... அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேன். " "பழசையெல்லாம் நான் மறந்துட்டேன். குமார் ... நீங்க என்னைப் பாக்க எப்ப வேணா வரலாம். உங்க கல்யாணத்துக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு இருந்தப்பவும், நான் தனியாளா உங்களை சப்போர்ட் பண்ணது உங்களுக்கு ஞாபகமிருக்கும். உங்க கிட்ட இருந்த ஒரு சின்னக் குறையால, நம்ம குடும்பத்துல, நம்பளுக்கு உள்ள இருந்த உறவுல விரிசல் ஏற்பட்டது உண்மைதான். அந்த விரிசலுக்கான குறையும் இப்ப உங்கக்கிட்ட இல்லேன்னு இப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது." "நீங்க பழசெல்லாம் மறந்துட்டு என் கிட்ட அன்பா பேசறதுக்கு ரொம்பத் தேங்க்ஸ் ரகு ... " "குமார் ... போன வாரம் ... பேச்சுவாக்குல வேற ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல சுகன்யாகிட்டச் சொன்னேன் ... "தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு?" "ரகு ... என் குழந்தை சுகன்யா எப்படியிருக்கா? "ரொம்ப நல்லாயிருக்கா ... எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை நல்லபடியா வளர்த்து இருக்கோம். நீங்க அவளைப் பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவீங்க. இப்ப அவளும் சென்னையிலத்தான் வேலை செய்துகிட்டு இருக்கா ... அவளைப் பாத்தா நீங்க உங்க சுந்தரியை பார்க்க வேண்டாம் ... அப்படியே சின்ன வயசு சுந்தரி மாதிரியே இருக்கா." ரகுவின் குரலில் பூரிப்பு வெளிப்பட்டது. "சுகன்யா ... என் சுந்தரி வளர்த்த பொண்ணு ... அவ கண்டிப்பா நல்லபடியாத்தான் வளர்ந்து இருக்கணும்" குமாரின் குரலில் எல்லையற்ற ஏக்கம் வழிந்தோடியது. "குமார் ... நான் அக்காவோட செல் நம்பரும், சுகன்யாவோட நம்பரும் தரேன். நீங்க என் கிட்ட பேசினதையும் அக்காகிட்ட சொல்றேன். முதல்ல நீங்க அக்காகிட்ட ஒரு தரம் பேசுங்க. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சிக்கறது ரொம்பக்கஷ்டம் ... நான் சொல்றது உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன் ... எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நான் நம்பறேன். "ரொம்பத் தேங்க்ஸ் ரகு ... நாளைக்கு காலையில நான் சுந்தரிக்கிட்ட பேசறேன். பை தி பை ... எங்கிட்ட நீங்க பேசணும்ன்னு இருந்ததா சொன்னீங்க ... என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?" "எல்லாம் நல்ல விஷயம் தான் ... பிளீஸ் ... முதல்ல நீங்க சுந்தரியக்கா கிட்ட பேசுங்க ... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். குட் நைட்" "குட் நைட் ... " குமாரசுவாமியிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. ***காலையில் வழக்கம் போல் படுக்கையை விட்டு எழுந்த சுகன்யா, இரவு மழையில் நனைந்து, விடியற்காலையில் அயர்ந்து உறங்க ஆரம்பித்த சுந்தரியைப் பார்த்தவள், அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்; மனதில் நினைத்துக்கொண்டே, காஸில் பாலை ஏற்றிவிட்டு, இரண்டு தம்ளர் அரிசியை கழுவி, இன்னொரு பக்கம் அடுப்பில் ஏற்றினாள். பல் துலக்கி தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். பிரிஜ்ஜை திறந்து நேற்றைய தோசை மாவு இன்னும் மீதமிருப்பதைப் பார்த்தவள், காலை டிபனுக்கு இந்த மாவு போதும், இதை ஊத்தப்பம்மா ஊத்திக்கலாம். ஆபிசுக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் கொண்டு போய்விடலாம் என மனதுக்குள் திட்டமிட்டாள். மீதி சமையலை அம்மா பாத்துக்குவாங்க. மனதில் திருப்தியுடன், சர்க்கரை குறைவாக தனக்கு மட்டும் காபியை கலந்து கொண்டு, கட்டிலில் உட்க்கார்ந்து நிதானமாக காபியை ருசித்து குடித்தாள். "சுகா, மணி என்னடி ஆச்சு, ஏண்டி நீ எழுப்பலை என்னை? குக்கரின் விசில் சப்தம் கேட்டு, மனதில் குற்ற உணர்வுடன் விருட்டென எழுந்த சுந்தரி தன் தலை கேசத்தை இறுக்கி முடிந்துகொண்டாள். "ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் மழையில நின்னே? அப்புறம் எப்பத் தூங்கினயோ? இப்ப எந்த பட்டினம் எங்க முழுகிப்போச்சுன்னு இப்படி அடிச்சுப் புடிச்சிக்கிட்டு எழுந்திருச்சிட்டே நீ? ... இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க வேண்டியதுதானே?..." ஆசையுடன் தாயின் கழுத்தில் தன் கையைப் போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சுகன்யா. "நாள் பூரா என்ன வேலையிருக்கு எனக்கு இங்க; நீ ஆபிசுக்கு போனதுக்கப்பறம் தூங்கிட்டுப் போறேன் ... எனக்கும் காபியை கலக்குடி சுகா. காபியில ஒரு துளி அதிகமா சக்கரையைப் போடு; ஒரு நிமிஷத்துல வர்றேன் ... " சொல்லியாவாறே அவள் பாத்ரூமில் நுழைந்தாள். "என்னப் பண்ணியிருக்கே இப்ப நீ" சுகன்யா கொடுத்த காஃபியை வாங்கி உறிஞ்சினாள் சுந்தரி. "ரெண்டு டம்ளர் சாதம் ஏத்தியிருக்கேன் ... வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியா அரிஞ்சு நேத்து மிஞ்சின மாவுல கலந்து வெச்சிருக்கேன்; காலை டிபனுக்கு அதை ஊத்திக்கலாம்; தொட்டுக்க தக்காளிச் சட்டினி அரைச்சுக்கலாம். உனக்கு மதியத்துக்கு என்ன வேணுமோ சூடா பண்ணிக்கிறியா?" "தயிர் நெறய இருக்கு. ஒரே வழியா எனக்கும் சேத்து தயிர் சாதமா கிளறிடலாம்; ஒரு நாளைக்கு சிம்பிளா நானும் அதையே சாப்பிட்டுக்கிறேன்," சுந்தரி எழுந்து குளிப்பதற்காக குளியறைக்குள் நுழைந்தாள். சுகன்யா பால்கனியில் நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். வீதியில் ஆண் பெண், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல், நடந்தும், சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும், மக்கள் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு காலையில் இவ்வளவு பேர் எங்கே வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது காரணமில்லாமல் இத்தனை பரபரப்புடன் ஓடுவார்களா? இவ்வளவு பேருக்கும் அப்படி என்ன அவசர வேலை இருக்க முடியும். அவள் வியப்புடன் தன் மனதில் சிரித்துக்கொண்டாள். சுகன்யா வீதியை எந்த வித இலக்குமின்றி பார்த்துக்கொண்டிருந்த போதிலும் அவள் மனம் தன் தாயை நினைத்து புழுங்கிக்கொண்டிருந்தது. நேற்றிரவு தான் தூங்கியபின் அவள் வெகு நேரம் தூங்காமல் மன உளைச்சலுடன் இருந்த தன் தாயை நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நான் நல்லா இருக்கணும்; நான் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும்ங்கறதுக்காக, தன் கணவனை விட்டுட்டு, இவ்வளவு நாளா ஒண்டியா எனக்காக வாழ்க்கையில போராடியிருக்காங்க. தனியா நின்னு கஷ்டப்பட்டு என்னை என் கால்ல நிக்கற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க; என் மனசுக்கு புடிச்ச ஒருத்தனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு சுதந்திரமும், தன்னம்பிக்கையையும் எனக்கு கொடுத்திருக்காங்க. நான் அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னதுலேருந்து, அவங்க மனசாழத்துல தூங்கிக்கிட்டிருந்த என் அப்பாவோட நினைவு அவங்களுக்கு வந்துடுத்து. தனிமை அவங்களை கஷ்டப்படுத்துது. இன்னைக்கெல்லாம் பாத்தாலும் அம்மாவுக்கு நாற்பத்தாறு வயசுதான்; அந்த வயசுக்கு இருக்கற உடம்பின் ஏக்கமும், மனசின் தவிப்பும் அவங்களை நிலை குலய வெக்குது; இதுக்கு ஒரே வழி அப்பாவை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு ரெண்டு பேரையும் ஓண்ணா சேர்த்து வைக்கிறதுதான். எனக்காக தன் வாழ்க்கையையும், தன் இளமையையும், ஒரு காலத்துல தூசா நினைச்சவங்களுக்கு நான் செய்ய வேண்டிய முதல் காரியம் அப்பாவைப் பத்தி மாமா கிட்ட விசாரிக்கறதுதான். ராத்திரியெல்லாம் நல்லா மழை பேஞ்சுருக்கு; நல்லாத் தூங்கி எழுந்தா அவங்க உடல் தவிப்பு தற்காலிகமா அடங்கிப் போகாலாம். ஆனா அவங்க மனப்புழுக்கம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிடுமா? இன்னைக்கு வெயிலைக் காணோம்; குறைஞ்ச பட்சம் இன்னைக்கு உடல் புழுக்கம் இல்லாம நானும் ஆபிசுக்கு போகலாம்; அவள் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி பிறந்தது. "சுகா ... கண்ணு ... கொஞ்சம் உள்ளே வர்ரயாமா ... அந்த நீலக் கலர் ஸாரியை என் பெட்டியிலேருந்து எடுடி கண்ணு." தன் தாயின் இடுப்பு வரை புரளும் நீண்ட கருத்த கூந்தலையும், திருத்தமான முகத்தையும், கருத்த கண்களையும், மெல்லிய ரோஜா நிற உதடுகளையும், சீரான வென்னிற பல் வரிசையும், நீண்ட தீர்க்கமான மூக்கையும், வாளிப்பான மார்புகளையும், கட்டியிருந்த பாவாடைக்கும், ரவிக்கைக்கும் நடுவில் வழவழவென சுருக்கமில்லாமல், அதிகமாக மேடிடாமல் பளிச்சிடும் அவள் இடுப்பையும், பாவாடைக்குள் அசையும் பருத்த பிருஷ்டங்களையும், நீளமான செழித்த வலுவான தொடைகளையும், பாவாடைக்கு வெளியில் பளிச்சிட்ட வெள்ளை நிற பாதங்களையும், பாதங்களை அழகு செய்யும், மெல்லிய தங்கக் கொலுசையும் பார்த்த மகளின் வயிற்றில் ஒரு சங்கடமான உணர்வு எழுந்தது. ம்ம்ம் ... கடவுளே ஏன் இப்படி பண்ணிட்டே? என் அம்மா எப்ப பண்ணத் தப்புக்கு இப்படி அவங்களை தவிக்க விட்டுட்டே? பதினைஞ்சு வருஷமா, என் அம்மாவோட அழகெல்லாம் இப்படி விழலுக்கு இறைச்ச நீரா வீணாகிக்கிட்டு இருக்கே? நல்லா சுகமா வாழ வேண்டிய வயசுல என் அப்பாவை அவங்க கிட்டேயிருந்து பிரிச்சிட்டியே? குளித்துவிட்டு சந்தன சோப்பின் மணம் கமழ பாத்ரூமிலிருந்து பாவாடையும், ஜாக்கெட்டுமாக ரூமுக்குள் வந்து நின்றிருந்த சுந்தரியின் குரல் கேட்டு, உள்ளே வந்து தன் தாயை நோக்கிய சுகன்யாவின் முகம் சுருங்கி, அவள் மனம் பதை பதைத்தது. "என்னடி சுகா ... என்னாச்சு உனக்கு; அப்படி ஏன் என்னை உத்துப் பாக்கறே? குறுகுறுன்னு இருக்கு எனக்கு" புடவையை அவள் கையிலிருந்து வாங்கிய சுந்தரியின் குரலிலும் இனம் தெரியாத ஒரு தவிப்பிருந்தது. "ஒண்ணுமில்லேம்மா ..." சுகன்யாவின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. முதல் காரியமா அப்பாவை கொண்டு வந்து அம்மாவின் முன் நிறுத்த வேண்டும் என்று நேற்றிரவு அவள் எடுத்த முடிவு மீண்டும் மனதில் உறுதியாக எழுந்தது.சுகன்யா தன் அலுவலகத்தில் நுழைந்தவுடன், முதல் வேலையாக, வரும் திங்கள் கிழமையிலிருந்து ரெண்டு வாரத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி, கையெழுத்திட்டு, தானே கையோடு எடுத்து சென்று தன் மேலதிகாரி கோபாலனுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தாள். தன் அறைக்கு திரும்பியவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து அன்று செய்யவேண்டிய வேலைகளை நோட்டமிட்டவள், மின்னஞ்சலில் ஏதும் புதிய வேலை அவளுக்கு வந்திராததால், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுக்கு அன்று அலுவலகத்தில் வேலை செய்யவேப் பிடிக்கவில்லை. தன் மேஜையின் மேல் ரெண்டு நாட்களாக கிடந்த மூன்று கோப்புகளையும் விறு விறுவென படித்து, அந்த பிரிவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான குறிப்புகளையும், அடுத்து உரியவர்களுக்கு அனுப்ப வேண்டிய பதில்களையும் தயாரித்து, கடித நகல்களை அச்செடுத்து, கோப்புகளில் முறையாக சேர்த்து விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. "ஏண்டி சுகன்யா ... வாயேண்டி ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரலாம்" அவள் பின் சீட்டுக்காரி வித்யா தன் வயிற்றை சாய்த்துக்கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்றாள். "ம்ம்ம் ... போகலாம் வா ... உன் உடம்பு எப்படியிருக்கு, பசிக்கலேன்னு சொல்லிக்கிட்டிருந்தியே ... இப்பத் தேவலையா?" "எனக்கென்னடி கேடு ... நான் நல்லாத்தான்யிருக்கேன் ... என் வயித்துல இருக்கறதை, கீழே எறக்கி வெக்கிற வரைக்கும் ... உடம்பு தினம் ஒரு மாதிரிதான் இருக்கும் ... அதை விடு ... உன் ஆளு செல்வா எப்படியிருக்கான் ... இப்ப தேவலையா அவனுக்கு? நீ தான் அவன் கூடவேயிருந்து ராப்பகலா பாத்துக்கிட்டியாமே? வந்து அவனைப் பாக்கணும்ன்னு நினைச்சேன் ... என் வீட்டுக்காரர் வேற ஊருலே இல்லே; தனியா வாயும் வயிறுமா இருக்கற நான் எங்க வந்து பாக்கறது? ... சுகன்யா தப்பா நினைச்சுக்காதடி என்னை; எல்லார்கிட்டவும் மரியாதையா பேசறவம்பா உன் ஆளு; இந்த ஆஃபீசுல யாரை வேணா கேளு; அவனைத் தங்கமான பையன்னுதான் சொல்லுவாங்க." "ச்சே .. சே .. உன் நிலைமை எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்கு நான் தப்பா நெனைக்கப் போறேன்? நான் அவன் கூட இருந்து பாத்துக்கறதை உனக்கு சொன்னவங்க, அவன் எப்படி இருக்காங்கற சேதியை உங்கிட்ட சொல்லலியா?" அவள் குரலில் கேலி தொனித்தது. "என்னடி என் கிட்டவே கிண்டலா?" வித்யா அவள் முதுகில் செல்லமாக அடித்தாள். "யார் சொன்னது உனக்கு ... நான் ராத்திரியும் பகலும் அவன் கூட குடும்பம் நடத்தறேன்னு?" "வேற யாரு ... நம்ம பெண்கள் சங்கத் தலைவி குண்டு சாவித்திரி தான் ... அவ பேங்க் பாஸ் புக்கை எடுக்க நேத்து சாயங்கலாம் இங்க வந்திருந்தா ... மறந்து இங்க வெச்சிட்டு போயிட்டாளாம்; அடியே வித்யா! அந்த செல்வா குடுத்து வெச்சவன்னு நினைக்கிறேன்; தாலி கட்டிக்கிட்டவ கூட தன் புருஷனை இப்படி பாத்துக்க மாட்டா; உன் ஃப்ரெண்ட் சுகன்யா ஆஸ்பத்திரியே கதியா அவன் பக்கத்துலேயேதான் இருக்காளாம்ன்னு சங்கு ஊதினா" வித்யா சிரித்தாள். "வேற என்ன சொன்னா அவ?" "கூடிய சீக்கிரம் நீ கல்யாண சாப்பாடு போடுவேன்னு சொன்னா" "நிஜமா அப்படியா சொன்னா ... இல்லே ... இது நடுவுல நீ போடற பிட்டா?" "நிஜமாத்தாண்டி சொல்றேன் ... அப்படித்தான் சொன்னா அவ." "இல்ல வித்யா ... சாவித்திரி இன்னும் கூட செல்வாவை தன் பொண்ணுக்கு எப்படியாவது முடிக்கணும்ன்னு முயற்சி பண்றா ... செல்வாவோட அம்மாவைப் பத்தி தீர்மானமா ஒண்ணும் சொல்ல முடியலை; அவங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியலை; இன்னும் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறாங்க ... அவங்க அப்பாவுக்கு என்னை பிடிச்சுப் போச்சு; அவர் எங்க பக்கம்ன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு ... இதை நான் உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன் ... இப்போதைக்கு இதை நீ யாருக்கிட்டேயும் சொல்லாதே ... உன் மனசோட வெச்சுக்க ... உனக்கு தெரியாமலா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? " சுகன்யா புன்னகைத்தாள். "சுகன்யா ... எல்லா வீட்டுலயும், கடைசியா ஆம்பிளை சொல்றதுதான் நடக்குது; அவன் அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கற பட்சத்துல, உன் கல்யாணம் எல்லோருடைய ஆசிர்வாதத்துடன் நடக்கும்ன்னு நம்புவோம். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஜாதி பிரச்சனையை செல்வாவோட அம்மா கிளறலாம். உன் ஆளோட அப்பாவும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு சட்டுன்னு வரல்லேன்னா, ஆபிசுல நாலு பேரு நாலு விதமா பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, செல்வா ஆஸ்பத்திரியிலேருந்து வந்தவுடனே, ரெண்டு பேருமா காதும் காதும் வெச்ச மாதிரி அம்பாள் சன்னதியில உன் கல்யாணத்தை முடிச்சுக்கற வழியைப் பாரு; கல்யாணத்தையும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணிகிட்டீங்கன்னா அதுக்கப்புறம் சாவித்திரி மாதிரி எந்த நாயும் உன்னைப் பாத்து குலைக்க முடியாது. என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன்; நாளைத் தள்ளிப் போடாதே" வித்யா தன் வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள்.இரவு எத்தனை மணிக்குத் தூங்கப் போனாலும் விடியற்காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் குமாரசுவாமிக்கு இருந்தது. சென்னைக்கு வந்த பின்னரும், அதே வழக்கத்தின் படி காலையில் எழுந்த குமாரசுவாமி கடற்கரை ஓரமாக சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தார். அரை மணி நேரம் நடந்தவரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து, கரையில் பெரும் ஓசையுடன் வந்து மோதி, பின் மீண்டும் கடலுக்குள் சென்ற அலைகளை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மனம் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான அலுவலக வேலைகளை பனிரெண்டு மணிக்குள், லஞ்சுக்கு முன் முடித்தப்பின், சுந்தரியுடனும், சுகன்யாவிடமும் பேசவேண்டும். ரகு தன்னிடம் நேற்றிரவு சொன்னது போல், தன் தமக்கையிடம் எனக்கு முன் பேசிவிட்டால் என் வேலை கொஞ்சம் சுலபமாகிவிடும். யாரிடம் முதலில் நான் பேசுவது? என் பெண் சுகன்யாவிடமா இல்லை, என் மனைவி சுந்தரியிடமா? ரகுவைப் போல் சுந்தரி என்னிடம் சகஜமாக பேசுவாளா? அவளுக்கு என் மேலிருக்கும் கோபம் இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமாவது தணிந்திருக்காதா? ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், அவளை சந்திக்க விரும்பிய என் பெற்றோர்களை பார்க்க மறுத்தவள் தானே அவள்? என் சொந்த மனைவியிடம் பேசுவதற்கு நான் ஏன் இந்த அளவுக்கு தயங்குகிறேன்? நேற்றிரவு என் மனைவியிடம் பேசி, அவளைச் சந்தித்து பிளவு பட்டிருக்கும் உறவை மீண்டும் சுலபமாக புதுப்பிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. இன்று அவளை உடனடியாகப் பார்க்க வேண்டும் என என் மனம் தவிக்கிற போதிலும், இந்த நிமிடத்தில் என் மனம் அவளுடன் பேசும் முயற்சியை ஏன் இத்தனை கடினமாக நினைக்கிறது? இதை கஷ்டம்ன்னு நினைச்சா, முதல்ல நான் சுகன்யாவிடம் பேசலாம். அவளுக்கு சுந்தரி அளவிற்கு என் மேல் கோபம் இருப்பதற்கு வழியில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயம் தப்பாகவும் இருக்கலாம். ஆனால் அவளுடன் பேசுவது மூலம், சுந்தரியின் இன்றைய மன நிலமை ஓரளவிற்குத் தெரியவரலாம். ம்ம்ம் ... இது சரியான வழியாகத் தோன்றுகிறது. குமாரசுவாமி சுகன்யாவிடம் உடனடியாக பேச நினைத்து அவள் நம்பரை அழுத்தியவர், மனதில் திடீரென ஏதோ தோன்ற, சட்டென தொடர்பைத் துண்டித்தார். உள்ளத்தில் ஒரு தீர்மானத்துடன் கெஸ்ட் ஹவுஸை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினார்.சுகன்யா தன் இருக்கைக்கு வந்தவள், காலையில் அனுப்பியிருந்த கோப்புகள் திரும்பி வராததால், தன் மாமா ரகுவிடம் பேச நினைத்து, தன் செல்லை எடுத்தப் போது, மிஸ்டு கால் லிஸ்டில், ஒரு புதிய எண் மின்னுவைதைப் பார்த்தாள். யாருடைய நம்பர் இது? காலை ஆறு மணி வாக்கிலே யாரோ எனக்கு கால் செய்திருக்கிறார்கள். நான் இதை கவனிக்கவேயில்லையே? எதாவது ராங்க் நம்பராக இருக்குமோ என யோசித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய போன் ஒலிக்க ஆரம்பித்தது. மீண்டும் அந்த நம்பரிலிருந்து தான் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். யார் இது? செல்வா இருக்கற ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறாதா என்ன ... இந்த எண்ணம் வந்ததும் ... மனதில் பதைப்புடன், காலை ஆன் செய்து பேசத் தொடங்கினாள். "மிஸ் சுகன்யாவோட நம்பர் தானே இது" அடுத்த முனையிலிருந்து ஆண் குரலொன்று வெகு மரியாதையுடன் வந்தது. "ம்ம்ம் ... நீங்க யாரு ..." செல்வாவுக்கு எதாவது ஆகியிருக்குமா ... ராத்திரி நல்லத்தானே இருந்தான் ... அலுவலக வேலையில் கவனமாக இருந்ததால், காலையிலிருந்து அவனிடம் பேசாதது அவள் மனதில் சுருக்கென உறைத்தது. அவள் மனதில் அவன் நினைவே மீண்டும் வர சுகன்யா தவிப்புடன் பேசினாள். அவள் "ஆம்" என்றோ "இல்லை" என்றோ சொல்லாததால், ஒரு வினாடி அடுத்த முனையிலிருந்து பேசிக்கொண்டிருந்த குமாரசுவாமியும் தயங்கினார் ... நேற்றிரவு நான் ரகு குடுத்த நம்பரை சரியா நோட் பண்ணினேனா இல்லையா? "ரகு எனக்கு இந்த நம்பரைக் குடுத்தார் ... நீங்க ... நீ ... "சுகா" தானே பேசறேம்ம்மா ...." குமாரின் குரல் தழுதழுப்புடன் வந்தது. என் மாமாவின் பெயரைச் சொல்றாரே இவர் ... என் நம்பரை மாமா குடுத்தாருன்னும் சொல்றார். என் நம்பரை யாருக்கு குடுத்தாலும் உடனடியா மாமா என்னைக் கூப்பிட்டு சொல்லுவாரே? குரல் கொஞ்சம் முத்தின குரலா இருக்கு ... ஆனா குரல்லே ஒரு மிடுக்கும், கம்பீரமும் இருக்கே? யாராக இருக்கும்? ... ஈவன் செல்வாவுக்கு கூட என் செல்லப் பேர் தெரியாதே? "சுகா"ங்கற என் பெயர் இவருக்கு எப்படி தெரிஞ்சுது ... சுகான்னு என்னைச் செல்லமா கூப்பிடறவங்களே ரெண்டு பேருதானே? ... ஒருத்தர் என் மாமா; இன்னொருத்தர் என் அம்மா; மூணாவதா என் செல்லப் பேர்ல என்னை உரிமையோட கூப்பிடறது யாரா இருக்கும்? சுகன்யா திகைத்தாள். சிறிய வயதில் தன்னை இப்படி கூப்பிட்டவரின் நினைவு அந்த நேரத்தில் அவளுக்கு சுத்தமாக உதிக்கவேயில்லை. "ஆமா ... நான் சுகா .. சுகன்யாதான் பேசறேன் ... என்னை நீங்க ... "சுகான்னு" கூப்பிட்டீங்க; இந்த பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் ..." அவள் தன் மேனி சிலிர்க்க, தன் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில், அந்த உணர்ச்சியுடன் சிறிது ஆச்சரியம் தொனிக்கப் பேசினாள். "ம்ம்ம் ... சுகா! என்னை நீ மொத்தமா மறந்துட்டிருக்கேம்மா ... பரவாயில்லே; உன் மேல எந்தத் தப்பும் இல்லேம்மா ... தப்பெல்லாம் என் பேர்லதாம்மா ... நீ பொறந்து, உனக்கு சுகன்யான்னு பேரு வெச்சதும் "சுகா" ன்னு அந்தப் பேரை சுருக்கி , ஆசை ஆசையா இப்படி முதல்ல உன்னை கூப்பிட ஆரம்பிச்சதே நான்தாம்ம்மா ... அதுக்கப்புறம்தான் உங்கம்மாவே உன்னை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா!" அவர் குரலில் துக்கம் பொதிந்திருக்க, குரலில் அப்பட்டமான வருத்தத்துடன் பேசினார் குமாரசுவாமி. தன் தாயை அந்த குரல் ஒருமையில் குறிப்பிட்டு பேசிய கணத்தில் அவளுக்கு விளங்கிவிட்டது ... பேசுபவர் வேறு யாருமில்லை ... யாரைத் தேட வேண்டும் என நினைத்திருந்தாளோ ... அவர்தான் இவர் ... இத்தனை சுலபமா என் வேலை முடிஞ்சு போச்சா? ... அப்பா ... என் அப்பாவா ... பேசறார் ... இவர் நிச்சயமா என் அப்பாதான்; சுகன்யாவின் உடல் புல்லரித்தது. அம்மாவுக்கு உடனடியா போன் பண்ணி சொல்லணும் ... அவள் ஆடவில்லை; அவள் சதை தானாக ஆடியது; அவள் முகம் கோணிக்கொண்டது; உதடுகள் துடித்தன; சுகன்யாவின் கண்கள் சந்தோஷத்தில் கலங்க ஆரம்பித்தது; அவள் முழு உடலும் பரவசமானது; லைப் ஈஸ் ஸ்டேரேஞ்சர் தேன் பிக் ஷன்னு சொல்றாங்களே; இது எவ்வளவு உண்மையான ஒரு வார்த்தை ... ஒரு வினாடி அவளுக்கு பேசுவதற்கு குரல் எழும்பவில்லை. "சுகா ... என்னம்மா பேசமாட்டேங்கற ... உனக்கும் என் மேல கோவம்ன்னு நினைக்கிறேன் ... " அடுத்த முனையிலிருந்து குரல் தயக்கத்துடனும், தழுதழுப்புடனும் வந்தது. "அப் ... அப்பா ... நீங்க ... என் அப்பாதானே பேசறீங்க ... சாரிப்பா ... என்னால சட்டுன்னு புரிஞ்சுக்க முடியலைப்பா .. உங்களை நான் யாருன்னு கேட்டுட்டேன் ... வெரி வெரி சாரிப்பா ... உங்களை பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா; நீங்க எங்கேருந்து பேசறீங்கப்பா?" "நீ இருக்கற சென்னையிலேதான் நானும் இருக்கேன்; நானும் உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு கொஞ்ச நாளா துடிச்சுக்கிட்டிருக்கேண்டா செல்லம்; அதுக்காகத்தான் என் வேலையெல்லாம் மாத்திக்கிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கேன்; எனக்கு மேல உன் தாத்தாவும் பாட்டியும் உன்னைப் பாக்கணும்ன்னு தவிச்சிக்கிட்டிருக்காங்கம்மா; உன் அம்மா நல்லாயிருக்காங்களா? உன் அம்மா இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காளா? "இல்லப்பா ... அப்படியெல்லாம் இல்லைப்ப்பா ... அம்மா ரொம்ப நல்லவங்கப்பா ... உங்க மேல உயிரையே வெச்சிருக்காங்கப்பா ... ஒரு வீம்புல ... ஒரு வைராக்கியத்தோட அவங்க தன் வாழ்க்கையை எனக்காக வாழ்ந்துகிட்டு இருங்காங்கப்பா ... உங்க மேல அவங்களுக்கு கோவம் இல்லப்பா ... நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்னு ... எப்பவும் தன்னையேத்தான் அவங்க நொந்துப்பாங்க ... உங்களை எப்பவும் என் எதிர்ல தப்பாவே பேசினது இல்லப்ப்பா ... என் அம்மாவை சொல்றீங்களே; நீங்க மட்டும் இத்தனை வருஷம் எங்களையெல்லாம் பாக்க வராமத்தானே இருந்தீங்க?" சுகன்யா மேலே பேச முடியாமல் விம்ம ஆரம்பித்தாள். "சாரிடா ராஜா ... உங்களையெல்லாம் நான் ரொம்பப் படுத்தி எடுத்துட்டேன் ... உங்கம்மாவுக்கு நான் ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன். சாரிடா கண்ணு ... நேத்துதான் உன் நம்பரையும், உன் அம்மா நெம்பரையும் உன் மாமாகிட்டேயிருந்து வாங்கினேன். உண்மையை சொல்லணும்ன்னா, நீ என் கிட்ட பேசுவியோ ... மாட்டியோன்னு காலையிலேருந்து பயந்துகிட்டே இருந்தேம்மா." குமாரசுவாமியின் குரல் நொறுங்கியது. "அப்பா ... அழறீங்களாப்பா ... அழாதீங்கப்பா" சுகன்யாவின் குரல் தேய்ந்து உணர்ச்சி மிகுதியில் மெல்லியதாகி விட்டிருந்தது. " ம்ம்ம்ம் ... உன் அம்மாவைப் பத்தி நீ சொன்னதும் ... என்னால என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலடா செல்லம்..." "அப்ப்பா" "சுகா ... நீ இப்ப நல்லா படிச்சு, பெரிய பொண்ணா ஆகி, நீயும் வேலை செய்யறதா உன் மாமா சொன்னாரு; நீ உங்கம்மா மாதிரியே அழகாயிருக்கேன்னு சொன்னாரு; நேத்து ராத்திரி உன் மாமா உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசினாரு; நான் அவரோட பேசினதை அவர் உங்கக்கிட்ட சொல்லலியா? "இல்லேப்பா." "இட்ஸ் ஆல் ரைட் ... நானே உங்ககிட்ட பேசணும்ன்னு அவரு நினைச்சிருக்கலாம். அதுல ஒன்னும் தப்பில்லே; நீ இப்ப எங்க இருக்கே?" "ஆபீசுலதான் இருக்கேம்பா" "உன்னை நான் இப்ப பாக்க வரலாமா? உனக்கு எப்ப லஞ்ச் டயம்? நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஒண்ணா லஞ்ச் சாப்பிடலாமா? நான் இப்ப அங்க வந்தா உனக்கு தொந்தரவா இருக்காதே?" குமாரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க, இன்னமும் குரலில் சிறு நடுக்கத்துடன் பேசிகொண்டிருந்தார். "என்னப்பா இப்படி கேக்கறீங்க? நான் வேலை செய்யற கவர்ன்மெண்ட் ஆபிசு பீச்சு ரோடுல ஆல் இண்டியா ரேடியோ பக்கத்துல இருக்குப்பா. என் ஆபீஸோட பேரு "......" யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க; நான் உங்களுக்காக ஆஃபீஸ் ரிசப்ஷன்ல வந்து நிக்கறேன்; எனக்கு உங்களை இந்த நிமிஷமே பாக்கணும் போல இருக்குப்பா." இப்போது சுகன்யா தெளிவாக பேச ஆரம்பித்திருந்தாள். குரலில் அளவில்லாத மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. "சரிம்ம்மா ... நீ சொல்ற எடம் எனக்குத் தெரியும். நான் இருபது நிமிஷத்துல அங்கே வரேன்."தன் தந்தையிடம் போனில் பேசிமுடித்த சுகன்யாவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மேஜையின் மேலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்தவள், வாட்டர் கூலரை நோக்கி ஓடி பாட்டிலை நிரப்பிக் கொண்டு, தன் ஹாண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு வெளிக்கதவை நோக்கி ஓடினாள். "அடியே சாவித்திரி ... எங்கப்பா என்னை பாக்க வந்துகிட்டு இருக்காருடி; சுகன்யாவுக்கு அப்பன் இல்ல; அவ வாழா வெட்டி வளர்த்த பொண்ணுன்னு, திரும்பியும் நீ போய் என் வருங்கால மாமியார் மல்லிகா கிட்ட தூபம் போட முடியாதுடி ... நான் கும்பிடற அம்பாள் என் பக்கத்துல இருக்கா ... தெரிஞ்சுக்கோ" அப்பாவை சந்திக்க ஓடியவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். லிப்ட்டுக்கு காத்திராமல் வேகமாக படியில் இறங்கத் தொடங்கியவள், கம்ப்யூட்டர் ஆன்ல இருக்கே! அப்படியே ஓடி வந்துட்டோம்; யார்கிட்டவும் சொல்லவும் இல்லே; நாளைக்கு ஆபீஸ் வேற லீவு; போன வேகத்தில் திரும்பி தன் அறைக்குள் ஓடி கணிணியை ஷட் டவுன் செய்தவள், தன் ட்ராயரை மூடிப் பூட்டி சாவியை, கைப்பையில் போட்டுக் கொண்டவள், அதே மூச்சில் தன் மேலதிகாரி கோபலன் ரூமுக்கு ஓடினாள். ஆபீஸ் நேரத்தில் வெளியில் செல்ல அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரும்பவும் தன் அறைக்குள் நுழைந்து, சுந்தரி கொடுத்து அனுப்பியிருந்த மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனை நோக்கி மூச்சிரைக்க ஓடினாள். "செல்வா கிட்ட தனியா பேசணுமா? பேசுடி ... நல்லா பேசு ... இன்னைக்கே என் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லி என் கல்யாணத்தை பத்தி பேச சொல்லி அவரை நான் நடராஜன் கிட்ட அனுப்பறேன். உன்னால முடிஞ்சதை நீ பாரு; என்னால முடிஞ்சதை நான் பாக்கிறேன். அவள் முகத்தில் சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள். எதிரில் வந்து கொண்டிருந்த வித்யாவிடம், கொஞ்சம் அவசரமா வெளியில போறேன்; முக்கியமான ஒருத்தரை பாத்தே ஆகணும். நான் மேல அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல்ஸ் திரும்பி வருது; அதுல கோபலன் சார் கையெழுத்து போட்டு இருக்கற லெட்டர்ஸை மட்டும் டெஸ்பேச்சுக்கு அனுப்பிடும்மா ... ப்ளீஸ் அவள் கன்னத்தைக் மெதுவாகக் கிள்ளினாள். அவள் பதிலுக்கு காத்திராமல் மாடிப்படிகளை ரெண்டு ரெண்டாக தாவி இறங்கினாள். "ம்ம்ம் ... இந்த சுகன்யாவுக்கு என்னாச்சு? ஒழுங்கா இருந்த பொண்ணு; என்னைக்கு செல்வா இவளுக்கு நூல் விட்டானோ அன்னையிலேருந்து இவளுக்கு பித்தம் புடிச்சு போச்சு. நினைச்சா வர்றா; நினச்சா ஒடறா; கேக்க ஆளு இல்லாமப் போச்சு? எல்லாம் கழுத்துல ஒரு தாலி ஏர்ற வரைக்கும்தான், இந்த காதல் கத்தரிக்கா பிஸினஸ் எல்லாம் ... அப்புறம் என்னை மாதிரி வயித்தை ரொப்பிக்கிட்டு, ஒடுங்கிப் போய் ஒக்காந்துக்குவா ..." அவள் தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள். சுகன்யாவின் டேபிளின் மீதிருந்த அவள் மொபைல் ஒலிக்க, "செல்லை விட்டுட்டு போயிட்டாளா? அப்படி என்ன அவசரம் இவளுக்கு? இப்ப நான் வயித்தை சாய்ச்சுக்கிட்டு திருப்பியும் இவ பின்னால நான் எங்கேயிருந்து அலையறது?" வித்யா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் போதே, சுகன்யா மூச்சிறைக்க வந்தவள், அவசரத்தில் விட்டுவிட்டு போன செல்லை எடுத்து ஹெலோ என்றாள். "அம்மா பேசறேண்டா கண்ணு; சாப்பிட்டியா?" "இல்லம்மா ... இனிமேத்தான் ... ஏம்மா?" "தயிர் சாதத்துல உப்பு கம்மியா இருக்கு ... கொஞ்சம் போட்டுக்கோ" சுந்தரி குரலில் கரிசனத்துடன் பேசினாள். "சரிம்மா ... நீ சாப்பிடு ... நான் சாப்பிடத்தான் போயிகிட்டிருக்கேன்." அப்பா என்னைப் பாக்க வந்துகிட்டு இருக்காருன்னு அம்மாவிடம் சொல்லலாமா? சுகன்யாவின் மனம் துடித்தது. வேண்டாம் முதல்ல அப்பாவை பாத்து ஆசை தீர பேசிட்டு, எப்ப வீட்டுக்கு வருவார்ன்னு கேட்டு, நேரா அழைச்சுக்கிட்டு போய் சஸ்பென்ஸா அவங்க முன்னாடி நிறுத்தணும். அதுக்கு முன்னாடி இப்ப அரை குறையா சொல்லிட்டு, அம்மா மனசுல நிம்மதியில்லாம வீட்டுல இருப்பாங்க, இது தான் சரி என மனதில் நினைத்துக்கொண்டு, வித்யாவை நோக்கி மீண்டும் ஒரு முறை கையசைத்துவிட்டு, வாசலை நோக்கி நடந்தாள். மணி பகல் ஒன்றாகியிருந்தது. சுந்தரிக்கு பசி எடுத்தது. சுந்தரி நிதானமாக தயிர்சாதத்தையும், உடன் காலையில் அரைத்த தக்காளிச் சட்டினியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும், சுகன்யா வர இன்னும் அஞ்சு மணி நேரம் ஆகும், என்ன பண்றது வெட்டு வெட்டுன்னு முழிச்சிகிட்டு இருக்கணுமா? அறைக் கதவைக் மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள். அடுத்த நொடி, கண்ணை மூடியவளின் மனது ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. மனதில் குமாரின் முகம் பளிச்சென்று வந்து உட்க்கார்ந்து கொண்டது. "ஏ ... மனமே சும்மா இரேன் ... கொஞ்ச நேரம் ... அவள் தன் மனதை சலித்துக்கொண்டாள். வலுக்கட்டாயமாக மனதில் நின்ற தன் கணவன் முகத்தை அழிக்க முயற்சித்தும் முடியாமல், மெல்ல எழுந்து தன் பெட்டியைத் திறந்து புடவைகளின் அடியில் கிடந்த குடும்ப போட்டோ ஆல்பத்தை பிரித்தாள். குமார் அவள் தோளில் தன் இடது கையை போட்டு, தன் தோளோடு அவளை அணைத்துக்கொண்டிருக்க, சுந்தரியின் இடுப்பு வரை வளர்ந்திருந்த சுகன்யா, ரோஜாப் பூவாக காமிராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். ஆசையுடன் போட்டோவிலிருந்த சிறு வயது சுகன்யாவை ஒரு முறை முத்தமிட்ட சுந்தரி, புகைப்படத்தில் தன்னருகில் நின்றிருந்த தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி பார்க்கறே? உன் பொண்ணுக்கு மட்டும்தான் முத்தமா? எனக்கு கிடையாதா? உன் உதட்டு ஈரத்துக்கு முதல் உரிமைக்காரன் நான்தான்டி ; சிவந்த ரோஜா நிற உதடுகள் ... மேலுதட்டின் மேல் கரிய அடர்த்தியான மீசை, தூக்கி வாரிய கிராப்புடன் அவன் புகைப்படத்தில் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தான். பாவி, இந்த சிரிப்புல தானேடா நான் உங்கிட்ட கவுந்து போனேன் ... சுந்தரியின் மனது மெல்லக் கூவ ஆரம்பித்தது. தான் மனதுக்குள் கட்டிக் காத்து வந்த கற்கோட்டை இரண்டு நாட்களாக மெல்ல மெல்ல மணல் கோட்டையாக மாறி நாலாபுறமும் சரிவதை நினைத்து அவள் மனம் பதறியது. சுந்தரி ... ஏன்டி பதறிப் போறே? அவன் உன் புருஷன்டி ... உனக்கு அவங்கிட்ட எல்லா உரிமையும் இருக்குடி; நீயா உன் மனசுக்கு ஒரு பூட்டு போட்டுக்கிட்டே? ஒரு முத்தம் குடுடி அவனுக்கும்; என்னடித் தப்பு; அவனை மறந்துட்டேன்னு சொல்ற நீ, இந்த ஆல்பத்தை மட்டும் எங்கப் போனாலும் கூடவே ஏன் சொமந்துக்கிட்டுப் போறே? உன் பொண்ணு சென்னைக்கு வேலைக்காக வந்துட்டா? அவ படமும் இதுல தான் இருக்கு; அதனால நான் என் கூடவே இந்த் ஆல்பத்தை வெச்சிருக்கேன்னு மட்டும் பொய் சொல்லாதே? பொய் சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதே? நீ உன் புருஷனை உண்மையாவே மறந்திருந்த காலமெல்லாம் மலையேறிடிச்சு; அவன் திரும்பவும் உன் மனசுக்குள்ள வந்தாச்சு; மனக் கதவை மொத்தமா தொறந்து உள்ள வாங்கன்னு ஆசையா கூப்பிடுடி. போதும்டி உன் தனிமை வாழ்க்கை ... இன்னும் எதுக்கு வீம்பு, எதுக்கு இந்த பிடிவாதம்; அவன் மேல எதுக்கு இந்த தீராத கோபம் ... தன் கணவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென தன் இதழ்களை அவன் உதடுகளில் பதித்தாள். அவள் உடல் நேற்றிரவு சிலிர்த்ததைப் போல், தலை முதல் கால் வரை மீண்டும் இப்போது ஒரு முறை சிலிர்த்தது. நினைவுகளுக்கு இத்தனை பலமா? அவள் அடிவயிறு குழைவதையும், இலேசாக அவள் அந்தரங்கம் நெகிழ்வதையும் உணர்ந்த அவள் உதடுகளிலிருந்து நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள். "அம்மா! என் அப்பா எங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு அவரைப் பாக்கனும் போல இருக்கும்மா? இத்தனை நாள்ல அவரு தான் குடிக்கறதை விட்டுட்டு திருந்தியிருக்கலாமே? என் பொண்ணு கேட்ட ஒரு கேள்வியில, என் வாழ்க்கையில நான் முடிஞ்சுப்போச்சுன்னு நினைச்ச அத்தனைக்கும் திரும்பவும் உசுரு வந்துடுத்தா? சுந்தரி திகைத்துத்தான் போனாள். நேத்தைய அமைதியான இரவின் இருட்டு, எதிர்ல இருக்கற பார்க்குலேந்து காத்துல மெதந்து வந்த மகிழம் பூக்களின் வாசம், மெல்லிசா தூறின மழை, அந்த மழையின் சாரல், அந்த சாரல் என் ஒடம்புல உண்டாக்கின குளிர்ச்சி, அந்த குளிர்ச்சி மனசுல ஏற்படுத்துன வெப்பத்துக்கான தவிப்பு, இருட்டும் தனிமையும் குடுக்கற இனம் தெரியாத ஏக்கம்; இதெல்லாம் ஒரு வினாடியில ஒன்னாகி என் மனசுக்குள்ள, அடியாழத்துல விதையாக உறங்கிக்கிட்டிருந்த ஒரு நிகழ்ச்சியை, என நெனவோட மேல் தளத்துக்கு கொண்டு வந்து, என் புருஷன் என்னை பின்னாலேருந்து கட்டிப்புடிச்சு, என் மாரை தடவுன மாதிரி, என் மனசே நேத்து ஒரு நாடகத்தை, உண்மையாக நடக்கற மாதிரி நடத்திக்காட்டிடுச்சே? அந்த நாடகத்தை என் மனசும், வெக்கமில்லாமே அணுவணுவாக ரசிச்சி, ருசிச்சி; அந்த சுவையை முழுசா என் ஒடம்புலேயும் காட்டிடுச்சே? நான் என் உள்ள ஈரமாயி எவ்வளவு காலமாச்சு? நேத்து ஒரு செகண்ட்ல ஈரமாயி நின்னேனே? ம்ம்ம் ... இவ்வளவுக்கும் காரணமான இந்த மனசுக்கு இத்தனை வலுவா? அனுபவங்கள் அழிவதில்லையா? ஒடம்பு என்னைக்கோ நுகர்ந்த அனுபவங்களுக்கு இத்தனை பலமா? இந்த அனுபவங்கள் என்னை மட்டும் தான் வாட்டுதா? இல்லை அவனும் இப்படித்தான் எங்கேயோ தனியா கிடந்து அலைகழியறனா? என்னை மாதிரி ராத்திரியில தூக்கம் வராம என்னை நெனைச்சுக்கிட்டு தவிப்பானா? நேத்து நான் தூக்கத்துல இருந்திருந்தா கனவுல இதெல்லாம் சாத்தியம்; என் புருஷன் என்னை கட்டியணைக்கறதா நான் கனவு கண்டிருக்கலாம்; ஆனா நான் நேத்து முழிச்சுக்கிட்டு இருந்தேனே? இது எப்படி சாத்தியம்? நேத்து இது எப்படி நடந்தது? மனசுக்கு தூக்கம், விழிப்புன்னு ஒரு வித்தியாசமும் கிடையாதா? ஆண்டவா, என் ஆசைகளையெல்லாம், சுட்டு பொசுக்கிட்டேன்னு, ரெண்டு நாள் முன்னத்தான் என் பொண்ணுக்கிட்ட கர்வமா சொன்னேன்? அதுக்கு என்னை நீ இப்படி அடிக்கிறியா? என் மனசுக்கு என்ன ஆச்சு? என் உடம்புக்கு என்ன ஆச்சு? பதினைஞ்சு வருஷமாயிடுச்சு, ஒரு ஆம்பளை ஒடம்பை ஆசையா, மனசாரத் தொட்டுத் தழுவி; எவனும் என்னை; நான் பூட்டி வெச்சிருக்கிற என் மனக்கோட்டையை உடைக்க முடியாதுன்னு இறுமாந்து இருந்தேனே? எவனுடைய பார்வையும், எவனுடைய அழகும், எவனுடைய பேச்சும், எவனுடைய சிரிப்பும், என்னை பாதிக்கலைன்னு என் பொண்ணுக்கிட்ட நான் சொன்னது எல்லாம் என் ஆணவத்தாலேயா? உண்மையில என் உடம்பு இன்னும் முழுசா மரத்துப் போகலையா? என் உடல் ஆசைகளும், தேவைகளும், விருப்பங்களும், ஏக்கங்களும், இன்னும் உசுரோடத்தான் இருக்கா? எல்லாமே முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சதெல்லாம் பொய்யா? என்னுடைய வைராக்கியம் அத்தனையும் நொடியிலே சுக்கு நூறாப் போயிடுச்சே? உடம்பால அனுபவிக்கனுங்கறதுக்கு என்ன அவசியம்? மனசால அனுபவிச்சா போதாதா? நேத்துத்தான் அனுபவிச்சி முடிச்சாச்சே? நானும் எல்லோரையும் போல ஒரு சாதாரண ஆசாபாசங்களுள்ள பொம்பளைதானா? நேத்து இந்த உடம்பு அனுபவிச்ச சுகம், என் புருஷன் உடம்பு வாசனை கூட அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கே? நான் அனுபவிச்சதெல்லாம் இறுகி இறுகி, விதைகளா மனசுக்குள்ளேயே இருந்திருக்கே? காய்ஞ்சு போன புல்தரையில, ரெண்டு தூறல் பட்டதும், பசுமையை காட்டற அருகம்புல் தானா நானும்? சுந்தரி மீண்டும் நீண்ட பெருமூச்சு விட்டாள். "என் புருஷன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இருக்கு? அவன் அநியாயம் பண்ணா அவனை அடிச்சு விரட்ட எனக்கு உரிமை இருக்கு? வீம்பா நான் எவ்வளவு நாள் வேணா இப்படியே இருக்கலாம்? ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாவை பாக்கணும்ன்னு ஆசை வந்துடுத்தே? அவளுடைய நியாயமான ஆசையை நான் தடுக்க முடியாதே? இப்ப இதுக்கு நான் என்ன பண்ணணும்? நீ உன் அப்பாவை பாக்கறதுல எனக்கு ஆட்சேபனையில்லைன்னு நேத்தே சொல்லிட்டேன். அது பத்தாதுடி சுந்தரி; உருப்படியா நீ இதுக்கு முயற்சி பண்ணணும். சுகன்யா சாயந்திரம் ஆபிசுலேருந்து வந்ததும் முதல் வேலையா ரகு கிட்ட பேச சொல்லணும் ... என் கதையை கேட்டு அவன் சிரிப்பான் ... சிரிச்சுட்டுப் போறான் ... நான் என் புருஷனைத்தானே பாக்கணும்ன்னு சொல்றேன் ... என் தம்பி என்னைப் புரிஞ்சுக்குவான்.... அலைந்த அவள் மனது மெல்ல மெல்ல ஓய, சுந்தரி சன்னமான குறட்டை ஒலியுடன் உறங்க ஆரம்பித்தாள்.சுகன்யா தன் தந்தையின் வரவை நோக்கி ரிசப்ஷனில் மனதில் பரபரப்புடன் உட்க்கார்ந்திருந்தாள். இப்ப அப்பா எப்படி இருப்பார்? அவரால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? கடைசியா நான் அவரை ரெண்டாம் கிளாஸ் படிக்கும் போதுதான் பாத்தேன். இப்ப நான் வளந்து முழு பொம்பளையா ஆயிட்டேன். அவரு முகம் எனக்கு நல்லா நினைவுல இருக்கு. நான் தான் அவரை தினம் தினம் பார்த்துக்கிட்டு இருக்கேனே. சின்ன வயசுலேருந்தே அம்மாவுக்கு தெரியாம, அவரு எங்க கூட நிக்கற போட்டோவை புஸ்தகத்து உள்ளே மறைச்சு வெச்சுக்கிட்டு, அப்பப்ப எடுத்து பாக்கறேனே? என் அப்பா என் மனசுக்குள்ள எப்பவும் இருந்துக்கிட்டேதானே இருக்காரு. என் சின்ன வயசுல அப்பா உயரமா சிவப்பா இருந்தார். தலையை எப்பவும் தூக்கி வாரியிருப்பார். இப்ப அவருக்கு ஐம்பது வயசு இருக்குமா? இந்த ஆபிசுல இருக்கற ஐம்பது வயசுக்கார ஆண்கள், முக்கால் வாசி, தலை நரைச்சுப் போய் டை அடிச்சுக்கிட்டுத்தான் வர்றாங்க. அப்பாவும் டை அடித்துக் கொண்டிருப்பாரா? சுகன்யாவின் நினைவில் இருக்கும் இளமைக்கால அப்பாவுக்கு மீசை திக்கா இருக்கும். அப்பா கிட்ட போனாலே எப்பவும் ஜம்முன்னு சந்தன வாசனை வரும். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பின் குமார் தன் மகளை ஆசையுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போது, சுகன்யா அவன் பிடியிலிருந்து திணறி ஓட முயற்சி செய்வாள். சுகா, அப்பாவுக்கு ஒரு முத்தா குடுடா, கண்ணுல்லே! பட்டுல்லே! குமார் தன் மகளிடம் குழந்தையாக மாறி கெஞ்சுவான். அப்பாவுக்கு முத்தம் குடுக்காமல் சுகன்யா அழுது வீட்டுக்குள் இங்குமங்கும் ஓடி அடம் பிடிப்பாள். அம்மாவிடம் அழுது முறையிடுவாள். அம்மா, அப்பாவை எனக்கு முத்தா குடுக்க வேணாம்ன்னு சொல்லும்மா. ஏண்டா கண்ணு? செல்லம், அவரு நம்ம அப்பாடா. அவருக்கு முத்தா வேணும்ன்னா எங்க போவாரு? யாருகிட்ட கேப்பாரு? நீ தானே அவருக்கு ஆசை பொண்ணு? அப்பாதானே உனக்கு தினம் தினம் தின்றதுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் குடுக்கறாரு? நீ போட்டுக்கறது மயில் பாவாடை, பட்டுப் பாவாடை எல்லாம் வாங்கி குடுக்கறது யாரு? அப்பாதானே? அப்பாக்கு நீ ஒண்ணே ஒன்னு முத்தா குடுத்தா குறைஞ்சா போயிடுவே? அப்ப கன்னதுல நீ ஒரே ஒரு ஆசை முத்தா "உம்மு" குடுத்துடுவியாம்; அப்பத்தான் நீ கேக்கறதெல்லாம் அப்பா உனக்கு வாங்கிக் குடுப்பாரு; சுந்தரி தன் மகளை கொஞ்சுவாள். போம்மா, நான் குடுக்க மாட்டேன். அப்பாக்கு கன்னத்துல முத்தா குடுத்தா உதட்டுல முள்ளு முள்ளாக் குத்துதும்மா. நான் அப்பா பேச்சு காய். அம்மா உன் மூஞ்சு நல்லா மழா மழா இருக்கும்மா; அம்மா மேலதான் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை; அப்பாக்கு மீசை வேணாம் சொல்லும்மா? பாத்தாலே எனக்கு பயமா இருக்கும்மா. குழந்தை சுகன்யா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுது அரற்றுவாள். சுகாவிற்கு தூங்கப் போகும் நேரத்தில் மட்டும் அப்பா கண்டிப்பாக அவள் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பாவிடம் சாயந்திரம் சண்டைப் போட்டவள் இரவில் தானாக சென்று அவனுடன் சமாதானமாகி விடுவாள். குமாரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு தன் காலை தூக்கி அவன் மார்பில் போட்டுக்கொள்வாள். "அப்பா உனக்குத்தான் நெறைய நெறைய, புது புது கதை தெரியுது. அம்மாவுக்கு கதையே தெரியலைப்பா. அம்மா மக்கு அம்மா. அம்மா எப்பப் பார்த்தாலும் ஆயா வடை சுட்ட கதையே சொல்லுது." அந்த நேரத்தில் மட்டும் அப்பாவுக்கு அவன் கேட்காமலேயே முத்தம் கிடைத்துவிடும். அப்பா நான் உன் பேச்சு பழம்பா ... அம்மா பேச்சு காய் ... குழந்தை சுகா சிரித்துக்கொண்டே, குமாரின் மடியில் உட்க்கார்ந்து கொள்வாள். மல்லாந்து படுத்திருக்கும் அவன் மார்பில் ஏறி நின்று குதிப்பாள். காலையில தலை வாரும்மான்னு எங்கிட்ட வருவேல்லா; அப்ப குத்தறேன் வா உன்னை உன் மூஞ்சு மேலேயே; சுந்தரி மனதில் மகிழ்ச்சியுடன், பெண்ணிடம் போலியாக பொருமுவாள். இந்த இனிமையான தருணங்கள் தினம் தினம் புத்தம் புது பூக்களாக அவர்கள் தோட்டத்தில் மலர்ந்து கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. சுந்தரி இப்பவும் அப்படித்தான் வாய்க்கு வாய் சொல்லுவாள். குமார் குடிக்கு மெல்ல மெல்ல அடிமையானான். அவர்களுக்குள் இருந்த இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் நாளடைவில் வெறும் கனவாகிப் போனது. குமார் என்னும் மரத்தின் ஒரு பக்க வேர் இலேசாக அழுக ஆரம்பித்தது. அந்த தோட்டத்தில் பூக்கள் பூப்பது குறைய ஆரம்பித்தது. வெகு நாள் வரை இதெல்லாம் சுகன்யாவுக்கு ஞாபகம் இருந்தது. குழந்தை சுகன்யாவுக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதும் புரிந்ததில்லை. தூங்கறதுக்கு முன்னே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடுவுல நான் படுத்துக்கறேன். காலையில எழுந்துப் பாத்தா, அப்பா பக்கத்துல அம்மாதானே படுத்துக்கிட்டு இருக்காங்க? நான் எப்படி அம்மாவுக்கு இந்த பக்கத்துல வந்துடறேன். இந்த நினைவு இன்று மனதில் வந்தவுடன், வளர்ந்த சுகன்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. குமார் குடி பழக்கத்திற்கு முழுதுமாக அடிமையான பின், அது வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவான பின், சுகன்யா அவன் அருகில் போவதற்கே மிகவும் பயந்தாள். அம்மா, இப்பல்லாம் அப்பா மூஞ்சிலே இருந்து எப்பப் பாத்தாலும் மருந்து வாசனை அடிக்குதும்ம்மா? நான் அப்பாகிட்ட போவ மாட்டேம்மா. ஏம்மா அப்பா உங்கிட்டே தெனம் சண்டை போடறாரு. உன்னைத் அடிச்சு திட்டறாரு? நீ எப்பப் பாத்தாலும் அழுவறே? நீயும் அவரை திருப்பி அடிம்மா. நான் அப்பா பேச்சு காய் ... அம்மா நாம, அப்பாவை போலீஸ்காரங்ககிட்ட பிடிச்சு குடுத்துடலாம்ம்மா? சுகன்யாவின் மனதில் அவள் குழந்தைக் கால எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டன. அதோ உள்ள நுழையறாரே ... கிரீம் கலர் அரைக்கை சட்டை, கருப்பு கலர் பேண்ட், கூலீங் கிளாஸ்ன்னு ... அவர் தானா? ஆமாம் ... ஆமா ... அவரேதான் ... என் அப்பாதான் வந்துட்டார். அவளுக்கு மூச்சு வேகமாக வரத்தொடங்கியது. மார்புகள் விம்மித் ததும்பின. அப்பா கொஞ்சம் கூட மாறவேயில்லையே? அப்பல்லாம் நம்ம அப்பா கொஞ்சம் ஒல்லியா இருப்பார். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி கொஞ்சூண்டு பூசின மாதிரி இருக்கார். காதுக்கு பக்கத்துல லேசாக நரை ஆரம்பிச்சிருக்கு. அப் ... அப்பா நான் இங்கே இருக்கேன் ... சுகன்யா, சட்டென தான் உட்க்கார்ந்திருந்த ரிஸப்ஷன் சோஃபாவிலிருந்து, மற்றவர்கள் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் எழுந்து, மெலிதாக கூவிக்கொண்டே குமாரசுவாமியின் நின்ற பக்கம் ஓடினாள். குமாரசுவாமி தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த யுவதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் உடல் சந்தோஷத்தால் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைதான்!கல்லூரியிலே என் கூட படிச்ச சுந்தரி மாதிரி தான் இருக்கா என் பொண்ணு. அந்த காலத்துல கும்பகோணத்துல இந்த சுடிதாரெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க ... தாவணிதான் கட்டுவாங்க ... இல்லன்னா புடவைதான் ... மகிழ்ச்சியில் அவர் மனம் துள்ள, தன் அருகில் வந்த சுகன்யாவை தன் இடது கையால் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அருகிலிருந்த சோஃபாவில் அவளுடன் உட்க்கார்ந்தவர், உணர்ச்சியின் மிகுதியால் ஏதும் பேசாமல் மவுனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். "எப்படிடா கண்ணு இருக்கே? இந்த புத்தி கெட்ட மடையனை மன்னிச்சுடும்மா ... உன்னை மாதிரி பொண்ணை அம்போன்னு விட்டுட்டு இவ்வளவு நாளா, ஊரெல்லாம் அர்த்தமில்லாம சுத்திக்கிட்டிருந்தேன் ..." அவர் முணுமுணுத்தார். "அப்பா ... இந்த பேச்செல்லாம் இப்ப எதுக்குப்பா? நீங்கதான் வந்துட்டீங்களே! எனக்கு அது போதும்." சுகன்யா, சந்தோஷத்தால் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்த குமாரின் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். அவருடன் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். அதே சந்தன வாசனை தன் தகப்பனின் தேகத்திலிருந்து வந்ததை உணர்ந்தவள், தன் மனம் விகசிக்க ஆசையுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். குமார் தன் அருகில் அமர்ந்திருந்த, அழகாக வளர்ந்து, அப்படியே அச்சாக தன் இளமைக் கால மனைவியைப் போலிருந்த சுகன்யாவைப் பார்க்க பார்க்க, அவருள் சந்தோஷம் திகட்டியது. இவ சுந்தரி எனக்கு கொடுத்த அன்புப் பரிசு. உயிருள்ள பரிசு. எங்க ரெண்டு பேரோட ரத்தத்தாலேயும் சதையாலும் ஆனவ இவ. இவளைப் பாத்ததும், இவ என்னைத் தொட்டதும் ... எனக்குள்ள இத்தனை நாளா இருந்த என் மன அழுத்தம், இனம் தெரியாத என் எரிச்சல், தவிப்பு எல்லாமே சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுச்சே? இந்த உலகமே அழகா தெரியுதே! ஆண்டவா, இந்த கணம் இப்படியே என்னைக்கும் நீடிச்சு இருக்கணும். குமாரசுவாமி, ஏதேதோ பேச விரும்பினார். மனதிலிருந்த எண்ணங்கள் சொற்களாக மாறி உதட்டில் வராமல், அவர் பேச முடியாமல், அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். சுகன்யா அவர் மன நிலைமையை புரிந்து கொண்டவள் போல் "அப்பா ... பிளீஸ் பீ ரிலாக்ஸ்ட் ... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்பா ... நீங்க சொல்ல நினைக்கறதை உங்க விரல்கள் எனக்கு சொல்லிடுச்சிப்பா ... அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள். "தேங்க்ஸ்ம்ம்மா" குமாரசுவாமி ஒரு நீண்டப் பெருமூச்செறிந்தார். அவருடைய சிறு குடலை பெருங்குடல் தின்று கொண்டிருந்தது. அவருக்கு அசுரப் பசியெடுத்தது. காலையிருந்தே அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. "வாங்கப்பா வெளியிலே போகலாம் ... பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு, காலாற நடந்து போய் அங்க நிம்மதியா சாப்பிடலாம்." அவளே தன் தந்தைக்கும் சேர்த்து முடிவெடுத்தாள். குமாரசுவாமி சுகன்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் இன்னும் துள்ளிக் கொண்டிருந்தது. உடலில் ரத்தம் வேகமாக ஓடுவது புரிந்தது. சின்ன சின்ன விஷயங்கள்ல்ல எனக்காக, என்னை கேக்காமா, சட்டுன்னு முடிவெடுக்க என் வாழ்க்கையில ஒருத்தர் இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன்; இனிமே எதுக்கும் நான் கவலைப் படப் போறது இல்ல. என் பொண்ணு ரொம்ப புத்திசாலி; என் தொடலில் இருந்தே, நீங்க சொல்ல வந்தது என்னன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சுங்கறா; இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்? என் மனைவி சுந்தரி இப்ப என்னப் பண்ணிகிட்டிருப்பா? அவ டீச்சரா இருக்கற ஸ்கூல்ல இப்ப மதிய உணவு வேளையா இருக்கலாம்; இப்ப அவகிட்ட பேசலாமா? சுகன்யாவைத்தான் கேக்கணும் ... சுகா என்கிற சுகன்யா அவர் உள்ளத்தில் முழுதுமாக நிறைந்துவிட்டாள். நேற்றிரவு பலத்த மழை பெய்திருந்ததால், சென்னையில் இன்று வெயில் மிதமாக காய்ந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று கடலிலிருந்து கரையை நோக்கி மெலிதாக வீசிக்கொண்டிருக்க, வானில் கரு மேகங்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தன் ஆஃபீசை விட்டு, தன் தந்தையுடன் வெளியில் வந்த சுகன்யாவுக்கு, தூரத்தில் நீல ரிப்பனாகத் தெரிந்த கடலும், மெரினா கடற்கரை சாலையும், அதை சுற்றியிருந்த இடங்களும் மிக மிக ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. சாலை ஓரத்தில், பாதசாரிகள் நடப்பதற்கு இடமில்லாமல், நடைபாதையின் மேல், தள்ளுவண்டியுடன் நின்று பழம் விற்பவன், தண்ணீர் பாக்கெட் வாங்க சொல்லி பின்னாடியே ஓடி வரும் சிறுவன், சோப்பு, சீப்பு, சீட்டுக்கட்டு என சில்லறை சாமான்களை கூவி கூவி தலையில் கட்டுபவர்கள் யாரும் இன்று சுகன்யாவிற்கு எரிச்சலை மூட்டவில்லை; மாறாக அவர்களும், எதிரில் வருபவர்களும், ரோடில் தேவையில்லாமல் ஹாரன் சத்தத்தை எழுப்பிக் கொண்டு வேகமாக பைக்கில் செல்பவர்களும், அவள் கண்ணுக்கு மிகவும் அழகாக காட்சி அளித்தார்கள். பாவம்! ஏழைங்க; வாழ வழியில்லாமத்தானே இப்படி சாலையிலே குடும்பம் நடத்தறாங்க; என்னப் பண்ணுவாங்க அவங்க; அவங்களும் நம்பளை மாதிரி வாழணும் இல்லையா? அவர்கள் பால் அவளுக்கு அன்று எல்லையில்லா இரக்கம் பொங்கி வழிந்தது. மனதில் பெருக்கெடுக்கும் அன்புடன் அவர்களைப் பார்த்தாள். சுகன்யா, குமாரசுவாமியின் கையில் தன் விரல்களை கோர்த்தபடி, நெருக்கமாக அவரை இடித்துக்கொண்டு, அவருடைய உடலின் வலது புறம் தன் தோள் உரச, ஓரக்கண்ணால் பெருமிதத்துடன் அவரைப் பார்த்தவாறு நடந்தாள். எதிரில் வந்தவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என வர்ஜா வர்ஜமில்லாமல் அனைவரையும் நிறுத்தி "இவர்தான் என் அப்பா; நல்லாப் பாத்துக்குங்க" என உரக்க கூவ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அப்பா ஹேண்ட்சமா, எவ்வளவு மேன்லியா இருக்கார்; அப்பா கை இரும்பாட்டம் எவ்வளவு உறுதியா இருக்கு; அம்பது வயசுக்கு தொப்பையே இல்லாம அப்பா தன் பாடியை நல்லா மெய்ண்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கார். சுகன்யா, அன்றைய தினத்தில், பிரிந்து போன தன் தந்தைதை மீண்டும் பார்த்த அந்த மகத்தான நாளில் தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தாள். தன் மகள் வெகு இயல்பாக எந்த தயக்கமும் காட்டாமல் தன்னுடன் பேசியதும், ஆசையுடன் தன் கையை பிடித்தபடி நடக்க தொடங்கியதும், தன் வாழ்க்கையில் இத்தனை நாளாக தான் இழந்திருந்த அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று விட்டதாக நினைத்து பூரிப்படைந்த குமாரசுவாமி, மனதுக்குள்ளாகவே கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்டவனே! எனக்கு இது போதும்; என் மகளோட நான் திரும்பவும் வந்து சேர்ந்துட்டேன்; என் மகளாலே என் வாழ்க்கைக்கு இந்த நொடியிலேருந்து ஒரு புது அர்த்தம் கிடைக்குங்கற நம்பிக்கை எனக்கு வந்துடுத்து. எந்த குறையும் இல்லாம இப்படியே இந்த உறவு கடைசி வரைக்கும் நிலைக்கணும். என் மனைவி சுந்தரியும், பழசெல்லாம் மறந்துட்டு என்னை முழு மனசா ஏத்துக்கிட்டா, நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷடசாலிதான். எனக்கு இந்த உலகத்துல இதுக்கு மேல வேற எதுவும் வேணாம். அவர் மனம் உரக்க அரற்றிக் கொண்டிருந்தது. தன் மகளின் கையை அவர் இறுகப் பற்றிக்கொண்டு நடந்தார். தன் தந்தை தன் கையை இறுகப்பற்றியதும், அவர் முகத்தைப் பார்த்த சுகன்யா, "என்னப்பா ... நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேம்பா; பயப்படாதீங்க; " அவள் அவரை தன் உதடுகளில் புன்முறுவலுடன் பார்த்தாள். "போதுண்டா செல்லம் ... உங்களையெல்லாம் விட்டுட்டு, நான் ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சதெல்லாம் போதும், நீ எதுக்காக எங்கயாவது ஓடணும்? இன்னொரு தரம் விளையாட்டுக்கு கூட நீ இப்படி பேசாதே." சுகன்யாவின் முழங்கையுடன் தன் வலது கையை கோர்த்துக் கொண்டார். "எந்த காரணத்துக்காவும் நானும் உங்களை திரும்ப இழக்கறதுக்கு தயாரா இல்லைப்பா." "சுகா ... உன் அம்மா எப்படி இருக்காங்கம்மா?" "ஏம்பா ... நீங்க திரும்ப திரும்ப என் அம்மா ... என் அம்மாங்கிறீங்க? ஒரே ஒரு தரம் என் வொய்ஃப் சுந்தரி எப்படி இருக்கான்னு உரிமையோட கேளுங்கப்பா? சுகன்யா தன் குரலில் தாபத்துடன் பேசினாள். "சரிம்மா ... என் சுந்தரி எப்படிம்மா இருக்கா?" "அப்பா ... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் ... அந்த பெஞ்சுல கொஞ்ச நேரம் உக்கரலாமா" சுகன்யா நடைபாதையில் ஒரு ஓரமாக நின்றாள். "இனிமே உன் விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பம் ..." "அப்பா ... நீங்க இப்ப இப்படி சொல்லிட்டு ... அப்புறம் திண்டாடப் போறீங்க." "சுகா, நான் எனக்காக முழுசா வாழ்ந்துட்டேன். அந்த வாழ்க்கையில எனக்கு திருப்தியில்லை. இனிமே உனக்காகவும், என் சுந்தரிக்காவும் நான் வாழ விரும்பறேன். அதுக்காக நான் திண்டாடினாலும் பரவயில்லம்மா." அவர் குரல் உறுதியாக வந்தது. சாலையோரமிருந்த சிமிட்டி பெஞ்சில், அவள் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்தவர் அவள் கைகள தன் கையில் எடுத்துக்கொண்டார். "அப்பா ... " சுகன்யா தன் தந்தை பேசட்டும் என அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். "சுகா ... உங்கிட்ட உண்மையை சொல்றேம்மா ... அப்ப எனக்கு மன முதிர்ச்சியில்லை. கெட்ட சகவாசம் ... போங்கடான்னு விலக்க முடியாத ஒரு தவறான நட்பு வட்டம்; மன உறுதி அதிகமா இல்லாத நேரத்துல நான் குடியால சீரழிஞ்சுப் போயிட்டேன். என் சுந்தரி, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் மனைவி என்னை தொடப்பத்தாலே அடிச்சாளேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். எப்படியிருந்தாலும் அவ ஒரு பொம்பளை. ஒரு பொம்பளை கையால அடி வாங்கினது என் ஆண் ஈகோவை, ரொம்பவே காயப்படுத்திடிச்சி. அதுக்கும் மேல எங்க கல்யாணத்துல, எல்லாரும் எங்களை எதிர்த்தப்ப, என் பக்கம் நின்ன என் மச்சான் ரகு என்னை வெட்ட வந்ததை என்னால நம்பவே முடியலை. உலகமே ஒன்று சேர்ந்து என்னை ஒதுக்கிட்டதா நான் நெனைச்சேன். ஊர்ல இருந்தவங்க என் சொந்தக்காரங்க, என் ஜாதிக்காரங்க, என்னைப் பாத்து சிரிச்சாங்க; இனி இவங்க மூஞ்சிலே என்னைக்கும் நான் முழிக்கறதில்லேன்னு ஒரு வீராப்பையும், வீம்பையும் என் மனசுக்குள்ள வளத்துக்கிட்டேன். அந்த ஊரை விட்டு போகணும்ன்னு முடிவெடுத்தேன். அந்த வீராப்புத்தான் என் குடிப்பழக்கத்துக்கான மருந்தா பின்னாடி வேலை செஞ்சது. "ரெண்டு வருஷ குடிப்பழக்கம் இந்த அளவுக்கு என்னை சீரழிச்சதை நெனைச்சு உண்மையா நான் வருத்தப்பட்டேன். தனிமையில நடந்ததை யோசனை பண்ணி அழுது இருக்கேன். கல்கத்தாவுல இருந்த ஒரு நண்பன் கிட்ட போனேன். அங்க ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டேன். உழைப்பு; உழைப்பு; உழைப்பு; அதுல என்னையே மறந்தேன். உண்மையா உழைச்சதனால நிறைய பணம் சம்பாதிச்சேன். பணம் இருந்தது. எங்கிட்ட இளமையும் இருந்தது. பெண்கள் என்னைத் துரத்தவும் செய்தாங்க. இன்னைக்கு சுந்தரி அடிச்சா; நாளைக்கு வேற ஒருத்தி என்னை வேற ஒரு காரணத்துக்காக அடிப்பா; பெண்களை விட்டு விலகிப்போனேன்." "சுகா, என் மனைவியை விட்டு பிரிஞ்சிருந்த இத்தனை நாள்லே, வேற எந்த பொம்பளையையும் நான் தொட்டதில்லை; ஷேர் மார்க்கெட்ல விளையாடினேன். நான் வாங்கின ஷேர் எல்லாம் கோபுரத்து உச்சிக்கு போச்சு; என் நேரம் நல்ல நேரம் அப்படீன்னு சொன்னாங்க; பணம் பேங்க்ல துரு பிடிக்க ஆரம்பிச்சுது; பணத்துல எனக்கு ருசியில்லே; அன்னிய பொம்பளை மேல எனக்கு விருப்பமில்லே; குடும்பம்ன்னு சொல்லிக்க யாருமில்லே; பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது? சுகா, அந்த வாழ்க்கையில, நான் தனிமையைத்தான் அதிகமா அனுபவிச்சேன். என்னை ஏன்னு கேக்க யாரும் இல்லே. ஆனாலும் எந்த தப்பும் நான் பண்ணல. உங்கம்மா குடுத்த தொடப்ப கட்டை அடி - தப்பு பண்ண எனக்கு துணிச்சல் வரலை. " "தனிமை என்னை அணு அணுவா சித்திரவதை பண்ணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி, உன் தாத்தா பாட்டிக்கிட்ட என் கூட வந்து இருங்கன்னேன். நான் சம்பாதிச்ச பணத்தை பத்தி சொன்னேன். அவங்க என்னைப் பாத்து சிரிச்சாங்க; ஏம்பா சிரிக்கறீங்கன்னு எங்கப்பாவைப் பாத்துக் கேட்டேன்; நீ திரும்பி வந்ததுல எங்களுக்கு சந்தோஷம். என் ஜாதிக்காரன் என்னை மதிக்க மாட்டாங்கற எண்ணத்துல, உன் காதல் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கலை. போலி கவுரவத்துக்காக, கிளி மாதிரி இருந்த அந்த பொண்ணை வேணாம்ன்னு சொன்னோம். அவளை இழுத்துக்கிட்டு போய் தாலி கட்டினியே, அவ கூடவாது ஒழுங்கா குடுத்தனம் பண்ணியா? "நீ பண்ண கூத்துக்கு அவ உன்னை வீட்டை விட்டு அடிச்சு துரத்தினா? நீ ஊரை விட்டு ஓடினே? நம்ம எனத்தவன் எல்லாம் எங்களைப் பாத்து வழிச்சுக்கிட்டு சிரிச்சான். அவ அப்பன் ஆத்தாளும் உங்க கொடுமையை பாக்க முடியாம போய் சேர்ந்தாங்க; உன் கூட வந்தவ, நீ பெத்த பொண்ணை, நெருப்பா தனியா நின்னு இன்னைக்கும் வளக்கறா. அவளைப் பாக்க பாக்க எங்களுக்கு பெருமையா இருக்கு. மனசுக்கு உண்மையை புரிஞ்சுக்கற பக்குவம் வந்துடுத்து; உடம்புல தெம்பு குறைஞ்சு போச்சு; இன்னைக்கு நம்ப ஜாதிக்காரன் எவனும் நாங்க எப்படி இருக்கோம்ன்னு ஒரு தடவை கூட எங்களைத் திரும்பிப் பாக்கலை." டேய், நாங்க அவளை கேட்டுப் பாத்துட்டோம். எங்க சொத்தெல்லாம் என் பேத்திக்குத்தான். நீ வந்து எங்க கூட இரும்மான்னு சொல்லிப் பாத்தோம். எங்களைப் பாக்க கூட அவ மறுத்துட்டா. உங்கிட்ட இருக்கற இந்த பணத்தால, எங்க மருமகளையோ, எங்க பேத்தியையோ உன்னால வாங்க முடியாதுன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். உன்னால முடிஞ்சா நீ அவங்க ரெண்டு பேரையும் அன்பா பேசி அவகிட்ட மன்னிப்பு கேட்டு, கூப்பிட்டுக்கிட்டு வான்னு என்னைத் துச்சமா பாத்தாங்க. உன் அம்மா என் பெத்தவங்களையே பாக்க மறுத்துட்டான்னதும், சுந்தரியை பார்க்க எனக்குத் தைரியமில்லே. திரும்பிப் போயிட்டேன். கொஞ்ச நாள்ல உன் தாத்தாவும், பாட்டியும் என் கூட வந்துட்டாங்க; உங்கம்மாவுக்கு நான் குடுத்த கஷ்ட்டத்தினால எனக்குள்ள ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால இப்பவும் நான் அவளைப் நேரா பாக்கறதுக்கு கொஞ்சம் தயங்கறேம்மா .. இப்ப அவ தன் மூஞ்சை திருப்பிக்கிட்டா, என்னால அதை தாங்க முடியாதும்மா." குமாரசுவாமியின் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. "அப்பா ... நீங்க மனசால ரொம்ப அடிபட்டு வந்திருக்கீங்கப்பா ... உங்களுக்கும் அம்மாவோட துணை நிச்சயமா வேணும்பா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. "இப்ப நீ சொல்லும்மா ... என் சுந்தரி நல்லாயிருக்காளா?" குமார சுவாமி உண்மையான கரிசனத்துடன் கேட்டார். "நல்லாயிருக்காங்கப்பா .. கொஞ்ச நாளாவே உங்களைப் பார்க்கணுங்கற ஆசை அம்மா மனசுல இருந்துகிட்டு இருக்கு. ஆனா அதை வெளியே சொல்லாம மனசுக்குள்ளேயே வெச்சு புழுங்கறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை" "எல்லாம் என்னால வந்ததுதாம்மா ... எல்லாத்துக்கும் மேல மனுஷங்களுக்கு இருக்கற ஈகோ இருக்கே அது தான் அவங்களோட முதல் எதிரி. உன் அம்மாவுக்கும் ஈகோ இருக்கறது சகஜம்தானே? குமாரசுவாமி தப்பு பண்ணான். அதனால அவன் தான் திரும்பி எங்கிட்ட வரணும்ன்னு உன் அம்மா நினைக்கிறா; அவ நினைக்கறதுலேயும் தப்பு இல்லே!" அவர் குரலில் வருத்தம் தொனித்தது. "அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா ... அம்மா அப்படியெல்லாம் நினைக்கலப்பா..." "ஒரு குடும்பத்துல இருக்கற ஒரு தனி மனிதனின் தவறான நடத்தை, அந்த குடும்பத்துல இருக்கற மத்த உறுப்பினர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும்ங்கறதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது அப்ப எனக்கு புரியல. அன்னைக்கு குடிக்கறது என் சுதந்திரம்ன்னு நெனச்சேன்; நான் குடிக்கறதுல என் மனைவி ஏன் தலையிடணும்ன்னு யோசிச்சேன். என்னுடைய சுதந்திரம்ன்னு நான் நெனைச்சது, என் மனைவி, மகளோட வாழ்க்கையை கணிசமான அளவுல பாதிச்சு இருக்குன்னு அப்புறமா புரிஞ்சுது. இதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன். ஆனா இப்ப வருத்தப்பட்டு என்னப் பண்றது? "பரவாயில்லேப்பா ... நடந்தது நடந்து போச்சு ... உங்க தவறை நீங்க உணர்ந்து திரும்பி வந்துட்டீங்க ... நீங்க எப்பப்பா வீட்டுக்கு வரப் போறீங்க?" "நீ என்னை சுலபமா ஏத்துக்கிட்டே ... ஆனா உன் அம்மா ... சாரிடா செல்லம் ... என் மனைவியோட மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலையே?" "அப்பா, நேத்து ராத்திரி, தூங்கிக்கிட்டு இருந்த நான், நடுவுல திடீர்ன்னு விழிச்சு எழுந்து பார்க்கிறேன், அம்மா கொட்டற மழையில நனைஞ்சுகிட்டு நின்னாங்க; ராத்திரி ரெண்டு மணி; அவங்க உடம்பு நடுங்கிக்கிட்டு இருக்கு; உள்ளே வான்னு இழுத்துக்கிட்டு வந்து காஃபி போட்டுக்குடுத்தேன். தலையை துவட்டி விட்டேன். புதுசா ஒரு நைட்டியை கொடுத்து போடச் சொன்னேன். ஏம்மா இப்படி பண்றேன்னு கேட்டேன்; என் உடம்புலயும், மனசுலயும் இருக்கற புழுக்கம் குறையட்டும் - அப்படின்னாங்க." "அம்மா, உனக்கு உன் புருஷன் ஞாபகம் வந்திடுச்சி; என் கிட்ட பொய் சொல்லாதேன்னு கத்தினேன். அம்மா ஒண்ணும் பேசலை" "சுகா ... உங்க அம்மாவுக்கு மழைன்னா ரொம்ப பிரியம்ம்மா ... எப்ப மழை பேஞ்சாலும் ... மழையில கொஞ்ச நேரம் போய் நனைஞ்சுக்கிட்டு நிப்பா ... இது அவளுடைய வழக்கம்மா ... ஆனா ராத்திரி ரெண்டு மணிக்கு இப்படி பண்ணான்னா ... அவ மனசு ரொம்ப நொந்து போயிருக்கான்னு நினைக்கிறேன்." "அதுதாம்ப நிஜம் ... அம்மா, என்னை மாமாவோட துணையோட, படிக்க வெச்சு, பரிட்சை எழுத வெச்சு, ஒரு வேலையை வாங்கற அளவுக்கு என்னை எல்லாவிதத்துலயும் மோட்டிவேட் பண்ணி, ஒரு நல்ல பொண்ணா ஆக்கிட்டாங்க; நானும் அவங்களை விட்டுட்டு இப்ப தனியா வந்துட்டேன்; இப்ப அவங்க தனிமை அவங்களை கொல்லுதுப்பா. அதுக்கும் மேல அம்மா மெனோபாஸ் ஸ்டேஜ்க்கு வந்துட்டாங்கப்பா; இப்ப உங்க அருகாமை அவங்களுக்கு அவசியமா தேவைப்பா. நான் சொல்றதை புரிஞ்சுக்கங்கப்பா ... " சுகன்யா விசிக்க ஆரம்பித்தாள். "அழாதடா கண்ணு ... ம்ம்ம்ம் ... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா; உன்னை நிஜமாவே நல்லபடியா, ஒரு நல்ல இதயமுள்ள பொண்ணா வளர்த்திருக்காம்மா என் சுந்தரி ..." "நாலு நாள் முன்ன உங்களைப் பத்திக் கேட்டேன் ... எங்கப்பா எங்க இருக்காரு? உனக்கு எதாவது தெரியுமான்னு? அதுலேருந்து அம்மாவுக்கு தினமும் ராத்திரில உங்களை நினைச்சுக்கிட்டு அழுவறதுதான் வேலையா போச்சு. நேத்து கூட உன் அப்பாவை நீ பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னாங்க. உன் அப்பாவை பாக்கறதுக்கு உனக்கு முழு உரிமையிருக்குன்னு சொன்னாங்க;" "அப்பவே நான் உங்களை உடனடியா நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிச்சு அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்தனும்ன்னு முடிவு எடுத்தேன்; ஆனா கதையில நடக்கற மாதிரி ... சினிமா, சீரியல்ல வர்ற மாதிரி ... நீங்க காலையில எனக்குப் போன் பன்றீங்க ... காலையிலேருந்து நடக்கறது எல்லாத்தையும் என்னால நம்பவே முடியலைப்பா .. ரொம்ப விசித்திரமா இது இருக்கு. ஒருத்தர் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமான்னு இருக்கு." "நேரம் வந்தா எல்லாம் தன்னால கூடி வருண்டா செல்லம். இதுக்கு மேல என்னால உன்னை திருப்தி படுத்தற ஒரு பதிலை என்னால சொல்ல முடியாது." "சரிப்பா ... இப்ப நாம வீட்டுக்கு போகலாம் வாங்க; எனக்கு உங்களோட என் அம்மா திரும்பவும் சந்தோஷமா இருக்கறதைப் பாக்கணும்." "என் ஓய்ஃப் என்னை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுவாளான்னு எனக்குத் தெரியலையேம்ம்மா" "அப்பா ... ஏம்பா பெரியவங்க நீங்கல்லாம் இப்படி பிடிவாதமா இருக்கீங்க; எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு; நீங்க ஏன் குடிக்கறீங்கன்னுதானே அம்மா கேட்டாங்க; அதுக்கு நீங்க அவங்களை அடிச்சீங்க; உதைச்சீங்க; உங்களுக்காக தன்னோட அப்பா, அம்மா, எல்லா சொந்தங்களையும் விட்டுட்டு உங்க கூட வந்தவங்க, திரும்பி அவங்க கிட்டவும் போக முடியாமா, முழுசா ரெண்டு வருஷம் உங்க கிட்ட கஷ்டப்பட்டாங்க; அவங்க சம்பாதிச்ச பணத்தையும் நீங்க குடிக்கறதுக்கு கேட்டப்ப, பதில் சொல்லாம குடுத்தாங்க; ஆனா கடைசியில நீங்க என்னையும் அடிச்சதனால, அதைப் பொறுத்துக்க முடியாம உங்களை திருப்பி அடிச்சிட்டாங்க; என் மாமா உங்களை வீட்டை விட்டு வெரட்டினார். எங்கம்மாவுக்கு இருந்த ஒரே ஆதரவு அவர்தானேப்பா" "அப்பா, அவங்க ரெண்டு பேரும் பண்ணது சரின்னு நான் வாதாடலை. ஆனா நம்ம குடும்பம் உடைஞ்சதுல உங்களுக்கு பங்கு அதிகம்ன்னு நான் ஃபீல் பண்றேன். உங்கக்கிட்ட இருந்த இந்த ஒரு குறையைத் தவிர வேற எந்தக்குறையும் உங்கக்கிட்ட இருந்ததா என்னால சொல்ல முடியாது. நீங்களும் என் அம்மாவுக்காக உங்க அப்பா, அம்மா, உங்க உறவினர்களை விட்டுட்டு வந்தீங்க; அம்மாவையும், என்னையும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா வெச்சிகிட்டு இருந்தீங்க. அம்மாவுக்கு என் மாமா துணையிருந்தார். உங்க கூட யாருமே இல்லை. நீங்க தனி ஆளா அலைஞ்சீங்க; அதை நெனைச்சு நான் எத்தனை தரம் தனியா அழுது இருக்கேன் தெரியுமா? ஆனா உங்க குடிப்பழக்கம் உங்களுடைய மத்த நல்ல குணத்தையெல்லாம் குழி தோண்டிப் புதைச்சிடுச்சிப்பா." சுகன்யா விம்ம ஆரம்பித்தாள். "அழாதேடா கண்ணு ... ப்ளீஸ் ... நீ இப்ப அழறதைப் பாத்தா நான் சுத்தமா உடைஞ்சிடுவேன் ... சுகன்யாவின் கண்களை அவர் துடைத்தார். குமாரசுவாமியின் கண்களும் கலங்கி குளமாகியிருந்தது. "நான் பேசினது உங்க மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடுங்கப்பா ..." தன் தகப்பனின் புறங்கையில் மென்மையாக சுகன்யா முத்தமிட்டாள். பின் அவரைப் பார்த்து கலங்கிய கண்களுடன் சிரித்தாள். "சரிடா சுகா ... நான் உன் கூட வீட்டுக்கு வரேன்." "தேங்க்ஸ்ப்பா ... கண்டிப்பா என் அம்மா உங்களை உள்ள வாங்கன்னுதான் கூப்பிடுவாங்கப்பா ... ஏன் வந்தேன்னு நிச்சயமா கேக்கவே மாட்டாங்க ... என் உள்ளுணர்வு இதை சொல்லுதுப்பா; என் உள்ளுணர்வு கண்டிப்பா தப்பா போகாதுப்பா; எனக்காக, உங்க பொண்ணுக்காக; உங்க ஈகோவை விட்டுக் குடுத்துட்டு, நடந்ததையெல்லாம் சுத்தமா மறந்துட்டு, நீங்கதான் அந்த முதல் அடியை எடுத்து வெச்சு வீட்டுக்கு வாங்களேன். நாம எல்லாம் திரும்பவும் ஒண்ணா சந்தோஷமா இருப்போம் .. என் தாத்தா பாட்டியையும் நான் போய் முதல்ல பார்க்கிறேம்பா." நீளமாக பேசிய சுகன்யா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். குமாரசுவாமியின் கை தன் மகளின் தலையை வருடிக்கொண்டிருந்தது. "வாம்மா ... மணி ரெண்டாக போகுது ... நீயும் பசியோட இருப்பே .. போய் எதாவது சாப்பிடுவோம் ..." இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். "சுகா, நீ அம்மா நேத்து மழையில நனைஞ்சான்னு சொல்றே; நீ காஃபி போட்டு குடுத்தேங்கறே? அப்ப சுந்தரி உன் கூட சென்னையிலா இருக்கா? "ஆமாப்பா; அம்மா இங்க சென்னையிலத்தான் இருக்காங்க ... "

"அம்மா வேலையை சென்னைக்கு மாத்திக்கிட்டாளா? "இல்லப்பா ... அம்மா கும்பகோணத்துலத்தான் வேலை செய்யறங்க; என்னால ஒரு சின்னப் பிரச்சனை நம்ப வீட்டுல; அம்மாவும், மாமாவும் அதனால இங்க வந்தாங்க ... அந்தப் பிரச்சனை இன்னும் முழுசா முடிவுக்கு வரலை. மாமா திரும்பிப் போயிட்டார் ... இன்னும் ரெண்டு நாள் அம்மா இங்க என் கூடத்தான் இருப்பாங்கா; நான் பத்து நாள் லீவு போட்டிருக்கேன்; வெள்ளிக்கிழமை அம்மாவும் நானும் நம்ப ஊருக்கு கிளம்பறோம்." "உனக்கு என்னப் பிரச்சனைடா செல்லம் ... நான் தீத்து வெக்க முயற்சி பண்றேம்மா .." "நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்கப்பா ... வந்து அம்மாவை பாருங்கப்பா; அதுக்கப்புறம் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்." என் சுகாவுக்கு பிரச்சனையாமே? இந்த உலத்திலே பிரச்சனை இல்லாதவங்களே இல்லையா? குமாரசுவாமி மவுனமாக அவளுடன் நடந்தார். "என்னப்பா சாப்படறீங்க" "எனக்கு ஒரு புல் மீல்ஸ் சவுத் இண்டியன் தாலி ஆர்டர் பண்ணும்மா." தன் செல்லில் வந்திருந்த செய்திகளை அவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். "நான் தவா ரொட்டியும், ஒரு ப்ளேட் ஷாஹீ பனீர் அண்ட் சுட்ட அப்பளம் வாங்கிக்கப் போறேன்; இங்க இந்த அயிட்டம் நல்லா இருக்கும்பா." "வெரி குட்; நார்த் இண்டியன் டிஷஸஸ் உனக்கு பிடிக்குமா? அச்சி லட்கி ஹோ தும்" அவர் புன்னகைத்தார். "ம்ம்ம் ... பாபூஜி, முஜே ஷாஹீ பனீர் கீ சப்ஜி பகுத் அச்சி லக்தி ஹை; க்யா ஆப் பசந்த் நஹீ கர்தே?" மகள் சரளமாக இந்தியில் பேசியதும் குமராசாமி அவளை வியப்புடன் பார்த்தார். "சுகா, உனக்கு இந்தி தெரியுமா?" "தோடி தோடி ஆத்தி ஹை; மறந்துட்டீங்களாப்பா? ... அம்மா ஹிந்தியிலே கோல்ட் மெடல் வாங்கினவங்கன்னு?" அவள் தன் குரலில் இலேசாக வருத்தம் தொனிக்க கேட்டாள். "நோ ... நோ ... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்மா ... அம்மா சொல்லிக் கொடுத்தாளா உனக்கு, கேட்டுத் தெரிஞ்சுக்கறேம்மா .. " "ஆமாப்பா ... அப்பா! உங்களாலே நான் அம்மாகிட்ட இன்னைக்கு சரியா திட்டு வாங்கப் போறேன்" சுகன்யா தன் கருவிழிகளை அகலமாக விரித்து சிரித்தாள். "ஏம்மா ... நான் என்ன பண்ணேன்? "அம்மா மதியத்துக்குன்னு தயிர் சாதமும், தக்காளி சட்னியும் பேக் பண்ணி குடுத்தாங்க; உங்க கூட நான் ஹோட்டல்ல உக்காந்து நல்லா மூக்கு பிடிக்கத் தின்னுட்டு, அதை வீட்டுக்குத் திருப்பி எடுத்துக்கிட்டு போனா, முத்தமா குடுப்பாங்க; தொடையை திருவி எடுத்துடுவாங்க;" "ம்ம்ம் ... என் பொண்ணை திட்டவோ, கிள்ளவோ நீ யாருடின்னு நான் கேக்கறேன்?" சிரித்தார் குமாரசுவாமி. "சரிப்பா ... நீங்க என் கூட இருக்கும் போது எனக்கென்ன பயம்? ஆனா அவங்க கிட்ட நீங்க திட்டு வாங்காம இருந்தா சரி! அம்மா நடுவுல ரொம்ப மாறிட்டாங்கப்பா ... " "ஏம்மா ... அப்படி சொல்றே? அவ எனக்கு முதல்ல பொண்டாட்டி; அப்புறம்தான் உனக்கு அம்மாவா ஆனா; சும்மா என்னை நீ பயமுறுத்தாதே? என் சுந்தரியைப் பத்தி எனக்குத் தெரியாதா? தங்கமாச்சே அவ?" சிறிது நேரம் டல்லாக இருந்த தன் பெண் மீண்டும் முகம் மலர்ந்து சிரிப்பதை கண்ட மகிழ்ச்சியில் அவரும் சிரித்தார். "நீங்களே நேரா வந்து உங்க தங்கத்தைப் எடை போட்டு பாருங்க; இப்ப உங்க பத்தரை மாத்து தங்கத்தை பாக்கறதுக்கு கிளம்புங்க .." தன் தந்தையுடன் சேர்ந்து அவளும் சிரித்தாள். "ம்ம்ம் ... ஆனா ஆறு மணிக்கு எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு. என் கீழ வொர்க் பண்றவரோட மகன் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல அட்மிட் ஆயிருக்கான். ஈவினிங் அவனை நான் பாக்கப் போகணும் ... அப்புறமா அங்கேயிருந்து நான் எங்க ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடலாம்ன்னு இருக்கேன். " "இப்ப மணி ரெண்டுதானே ஆகுது ... நீங்க தாராளமா உங்க வேலையை முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து ராத்திரி சாப்பிடணும்; உங்க பொண்டாட்டி, பொண்ணு நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லாட்டாம் சென்னையில இருக்கறப்ப, எங்கேயோ கெஸ்ட் ஹவுஸ்ல்ல நீங்க ஏன் தங்கணும், அங்க கண்டதை ஏன் சாப்பிடணும்?" "சரிடா ராஜா! இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம் ... உனக்கு ஐஸ் கிரீம் அயிட்டம் எதாவது வேணுமா? இல்லன்னா - பேரரை பில்லை கொண்டு வரச்சொல்லு." "அப்பா நாம வீட்டுக்கு ஆட்டோவில போகலாம்பா." "சரிடா கண்ணு; நீ ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, உன் அம்மாவுக்கு பன்னீர் திராட்சைன்னா ரொம்ப பிடிக்கும்; எதிர்ல ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கான்; நான் வாங்கிட்டு வந்துடறேன்." சுகன்யாவின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. அம்மாவுக்கு என்ன பிடிக்கும்ன்னு அப்பா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சிருக்கார்; உடலால அவர் இப்ப என் கூட இருக்கார், ஆனா அவரு மனசு அம்மாவைப் பத்தித்தான் நெனைச்சிக்கிட்டிருக்கு. அவங்களை பாக்கணும்னு கிடந்து தவிக்குது. அம்மா மேல இவ்வளவு ஆசையும், பாசமும் வெச்சிருக்கிறவர், இவ்வளவு நாளா பிடிவாதமா, தயங்கி தயங்கி அவங்களை பாக்க வராம இருந்திருக்கார். ஏன் ரெண்டு பேரும் இப்படி வீம்பா ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு தங்களுடைய இளமையை வீணாக்கிக்கிட்டாங்க? இதை தலை எழுத்துங்கறதா? இல்லை, அப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட ரெண்டு பேரோட ஈகோவில் பட்ட காயத்தின் விளைவாலா? தனிப்பட்ட மனுஷங்க மனசை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. அவள் மனம் தன் தந்தைதையும், தாயையும் நினைத்து பரிதவித்தது. என் பெத்தவங்களை மாதிரித்தான் நானும் செல்வாவை காதலிக்கிறேன். அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். எங்க மத்தியிலேயும், இது போன்ற ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமா? சுகன்யா, குமாருக்காக காத்திருந்த போது, பைக்கில் ஒரு இளம் ஜோடி அவளை மெதுவாக கடந்து சென்றார்கள். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தவன் தேவையில்லாமல் ப்ரேக் போட அவன் பின்னால் உட்க்கார்ந்திருந்தவள், விருட்டென அவன் முதுகில் தன் விம்மிய மார்புகள் உரச அழுத்தமாக அவனைக் கட்டிப்பிடித்தாள். "மெத்துன்னு இருக்குடி" அவன் சிரித்துக்கொண்டே சொன்னது சுகன்யாவுக்கு தெளிவாக கேட்டது. அந்த பெண் முகத்தில், இந்த சந்தர்ப்பத்தை, சடன் ப்ரேக்கை, எதிர்பார்த்து காத்திருந்தது தெளிவாக தெரிந்தது. அவர்கள் இருவரும் சாலையில் நடத்திய காதல் நாடகத்தை கண்ட சுகன்யா, தன் முகம் சிவந்து அவளைப் பார்த்து முறுவலித்தாள். அவளும் கல கலவென சிரித்துக்கொண்டே, சுகன்யாவை நோக்கி தன் கையை அசைத்தாள். லெட் தெம் பி ஹாப்பி; சுகன்யாவின் மனம் அவர்களை வாழ்த்தியது. சட்டென சுகன்யாவுக்கு செல்வாவின் நினைவு மனசிலாடியது. "அவன் பின்னாடி பைக்ல எத்தனை தரம் நான் உக்காந்து போயிருக்கேன்? ஒரு தரமாவது இந்த மாதிரி ப்ரேக் போட்டிருப்பானா? சரியான பொட்டை பயந்தாங்கொள்ளி. தன் வெக்கம் கெட்ட மனதில் எழுந்த ஆசையை எண்ணி, தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இன்னேரம் செல்வா சாப்பிட்டிருப்பானா?இன்னைக்கு சாப்பாடு யார் கொண்டு போய் குடுத்து இருப்பாங்க? " நேத்து அம்மா, சும்மா சும்மா அவன் கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னாங்க. நானும் அவன் கிட்ட பேசலை. அவன் தன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுக் கிட்டிருக்கான்? எட்டு மணி நேரம் ஒடம்பு நோவ உழைச்சுட்டு, ரெண்டு நாளா அவனைப் பாக்கறதுக்காக ஆஃபீசுலேருந்து நேரா ஹாஸ்பெட்டலுக்கு ஓடினேன். அப்படி ஓடறதுக்கு நான் என்னப் பைத்தியக்காரியா?" "இப்ப அவனுக்கு உடம்பு தேறிடுச்சி; தனி ரூமுக்கு வந்தாச்சு; அப்படியும் அவன் எனக்கு ஒரு கால் கூட பண்ணல. என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை ஆசையா எப்படி இருக்கேன்னு கேட்டா, கெட்டாப் போயிடுவான்? நான் அவனுக்கு கால் பண்ணலன்னா அவன் என்னைக் கூப்பிட்டு பேசக்கூடாதா? " "அம்மா சொல்றதும் சரிதான். என் மேல அவனுக்கு உண்மையிலேயே ஆசையிருந்தா என்னை ஒரு தரமாவது கூப்பிட்டு பேசியிருக்கணுமே? நேராப் பாக்கும் போது, "சுகும்மா ஐ லவ் யூ வெரி மச்சுன்னு" பிட்டு போட வேண்டியது. எப்பவும் நான்தான் அவனுக்கு போன் பண்ணணுமா? "ட்ரான்ஸ்பர் ஆகி பாண்டிச்சேரி போன செல்வா ஏற்கனவே இது மாதிரி நாலு நாள் வரைக்கும் என் கிட்ட பேசாம கல்லுளி மங்கனாத்தானே இருந்தான்? கடைசியா வெக்கம் கெட்டவ நான்தானே அவனைக் கூப்பிட்டு பேசினேன். எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தானா? காதலிச்சவதான் உருகி உருகி சாகணுமா? "நான் சத்தியமா அவனை கூப்பிட்டு பேசப் போறது இல்லே. என் கிட்ட எப்ப பேசறானோ அப்ப அவனா பேசட்டும். அப்ப ஊதறேன் நான் அவனுக்கு சங்கு." அவளுக்குள் ஒரு தேவையில்லாத பிடிவாதம் சட்டென எழுந்தது. சுகன்யாவுக்குள் எழுந்த இந்த எண்ணம், அவள் பெண் ஈகோவுக்கு பட்டதாக நினைக்கும் அடியா? இல்லை பெண்களுக்கே உரித்தான தன் காதலன் மேல் இருக்கும் அளவுக்கு மேலான உரிமைப் பிரச்சனையா, இல்லை சாதாரணமான விளையாட்டுப் பிடிவாதமா, இல்லை அவள் அவனுடன் ஒரு ஊடல் நாடகம் நடத்த நினைக்கிறாளா? சுகன்யாவும் ஒரு பெண்தானே? இவ மனசை புரிஞ்சுக்கறது மட்டுமென்ன அவ்வளவு சுலபமா? இப்படி எதுவுமேயில்லை எனில் இது தான், அவள் பெற்றோர் அனுபவித்த தனிமைதான் அவளுக்கும் விதிக்கப்பட்டிருக்கிறதா? குமாரசுவாமி ஒரு பை நிறைய பழங்களும், சுந்தரிக்கு பிடித்த பால்கோவாவும், கூடவே அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப் பூவையும் ஒரு நாலு முழம் வாங்கிக்கொண்டு வந்தார். அவர் கையிலிருந்த பூவைப் பார்த்ததும் சுகன்யாவுக்கு தன் தந்தையை கிண்டலடிக்கத் தோன்றியது. "என்னப்பா ... ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு" சுகன்யா நாக்கை நீட்டி தன் தந்தையை நோக்கி கண்ணடித்தாள். " நீ ... என்னடா சொல்றே செல்லம் ..." தன் மகளின் கிண்டல் இலேசாக புரிந்தும் புரியாதவர் போல் குமாரசுவாமி தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். சுகன்யாவின் குறும்புத்தனம் அவரை விடுவதாக இல்லை. "ம்ம்ம் ... சின்னப் பாப்பா நீங்க ... புரியாத மாதிரி நடிக்கிறீங்களே? பதினைஞ்சு வருஷம் கழிச்சு பொண்டாட்டியை பாக்கப் போறீங்க; கையில பழம், ஸ்வீட்டு, அதுக்கு மேல மல்லிகைப் பூ, எல்லாம் ஒரு செட்டப்பாத்தான் கிளம்பறீங்க" முகத்தில் கள்ளத்தனத்துடன் சிரித்த சுகன்யாவிற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை. ஆட்டோ நகர ஆரம்பித்ததும் சுகன்யா மீண்டும் ஆரம்பித்தாள். "அப்பா, அம்மாவுக்கு நான் போன் பண்ணட்டுமா? வீட்டுல பால் இருக்குமான்னு தெரியலை; அது மட்டும் தான் இப்ப குறைச்சலா இருக்கு உங்க கைல; வீட்டுல பால் இல்லன்னா வழியிலேயே அதையும் வாங்கிட்டு போயிடலாம்." தன் நாக்கை குவித்து நீட்டி உரக்க சிரித்தாள். "கண்ணு, அப்பாவை ரொம்ப கிண்டல் பண்ணாதேடா; எனக்கு கூச்சமா இருக்கு. நான் உங்க அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிட்டுப் போறேம்மா; உனக்கும் சேத்துத்தான் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்கேன். வீட்டுக்கு போய் முகம் கழுவி நீயும் உன் தலையில பூ வெச்சுக்கம்மா. மனசுல வேற எந்த எண்ணத்தோடும் நான் இதெல்லாம் வாங்கலடாச் செல்லம். அதுக்கெல்லாம், அப்பாவுக்கு வயசாகிப் போச்சும்மா." குமாரசுவாமி நெளிந்த படியே சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார். "அப்படி என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு? கிழவன்ல்லாம் டை அடிச்சி, செண்ட் அடிச்சிக்கிட்டு டீன் ஏஜ் பொண்ணுங்க பின்னாடி திரியறானுங்க? "எனக்கு ஐம்பது முடிஞ்சிடுச்சும்மா"அவர் வெகுளியாக பேசினார். "அப்பா ... ஐம்பது வயசுல ஆசை வரக்கூடாதா ... அதுவும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட? சுகன்யா முகத்தில் நமட்டு சிரிப்புடன் முணுமுணுத்தாள். " நீ ... அப்பாக்கிட்ட செம அடி வாங்கப் போறே ? என் சுகா இன்னும் சின்னப் பொண்ணுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சப் பெரிய பாட்டி மாதிரி பேசறே? அவர் விளையாட்டாக அவள் முதுகில் அடித்தார். "அ ... அப்பா ... உங்களுக்கு நான் இப்படி பேசினது பிடிக்கலன்ன ... வெரி வெரி சாரிப்பா ..." அவள் முகம் சற்றே தொங்கிப் போனது. "சீ..சீ... அப்படியெல்லாம் இல்லடா கண்ணு ... இன் ஃபேக்ட், ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹூயுமர்," "அப்பா, அப்படின்னா, ஒரு சின்ன சஸ்பென்ஸ்; நீங்க என் கூட வரதை நான் அம்மா கிட்ட சொல்லப் போறதில்லை." சுகன்யா குழந்தைதனமாக மீண்டும் ஒரு முறை தன் நாக்கை நீட்டி குமாரசுவாமியை நோக்கி கண்ணடித்தாள். சுகன்யா ஹோட்டலில் சாப்பிட்டதும் ஒரு "ஸ்வீட் பான்" வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். நாக்கும் உதடுகளும் நன்றாக சிவந்திருந்தன. "நீ நிஜமாவே அம்மாவுக்கு போன் பண்ணப் போறியா?" "ஏன் வேண்டாமாப்பா" "சுகா ... நான் வீட்டுக்கு வர்றது சஸ்பென்ஸாவே இருக்கட்டும் . என் மனைவியை நான் எந்த விதத்திலேயும் ஒரு இக்கட்டான சூழ் நிலையில் அல்லது தர்மசங்கடமான நிலையிலே வெக்க விரும்பலை. நானே விருப்பத்தோட அவளைப் பார்க்க வந்ததா இருக்கட்டும்." மகளிடம் தன் விருப்பத்தை சொல்லியவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் மவுனமாகிவிட்டார். ஒரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்த சுகன்யா, அவர் தோளில் தன் தலையை சாய்த்துக் கொள்ள, குமாரசுவாமி, தன் இடதுகையால், தன் மகளை ஆசையுடன் அணைத்துக்கொண்டார். இருவரும் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை. நேத்து ரகுவோடு பேசிய போது, அவன் சுகாவைப் பத்தி கூட்டி கொறைச்சு எதுவும் சொல்லிடலை. உள்ளதை உள்ள மாதிரிதான் சொல்லியிருக்கான். சுகன்யாவுக்கும் என் பொண்டாட்டி சுந்தரிக்கும் உருவ ஒற்றுமை நெறய இருக்கு. உருவம்தான் ஒத்து போகுதுன்னு பாத்தா, அவ எப்படி நாக்கை நீட்டுவாளோ அதே மாதிரி இவளும் தன் நாக்கை சுழிச்சு நீட்டறா. அவளோட நிறைய பழக்கங்கள் இவளை அப்படியே தொத்திக்கிட்டு இருக்கு. சுந்தரி மாதிரியே இவளும் பிடிவாதக்காரியா இருப்பாளோ? இவளுக்கும் அவளை மாதிரியே எப்பவாது தீவிர கோபமும் வருமா? சுந்தரி எப்படி பாசத்தை கொட்டுவாளோ அப்படித்தான் இவளும் அப்பா, அப்பான்னு உருகறா? ஆனா சுந்தரிக்கு கோபம் வந்தா பத்து நாளானாலும் பேசமா மவுனமா இருந்தே ஆளைக் கொண்ணுடுவா? இந்த விஷயத்துல சுகன்யா எப்படியோ? இனிமே பாக்கத்தானே போறேன். என்னால சின்னப் பிரச்சனைன்னு சொன்னாளே .. ?? அந்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அந்த பிரச்சனையாலத்தான் அம்மாவும், மாமாவும் சென்னைக்கு வந்திருக்காங்கன்னு சொன்னாளே? சுகா வயசுக்கு வந்த பொண்ணு; பெத்தவன் என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நல்லா சிவப்பா மூக்கும் முழியுமா அழகா இருக்கா. நல்லாப் படிச்சி, தனக்குன்னு வேலையைத் தேடிக்கிட்டு சம்பாதிக்கறா; மாடர்னா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. நேர் பார்வை பார்த்து தன்னம்பிக்கையோடு வெளிப்படையா, மனசுல இருக்கறதை தெளிவா பேசறா. பாக்கற வயசு பசங்களுக்கு இவ மேல ஆசை வர்றது ரொம்ப சகஜம். ஒரு வேளை எங்களை மாதிரி என் பொண்ணும் எந்த பையனாயாவது மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்காளா? அதுல ஓண்ணும் தப்பு இல்லே. இவளையும் காதல் விட்டு வெக்கலையா? எங்களுக்கிருந்த மாதிரி இவங்க நடுவிலேயும் ஜாதி பிரச்சனை குறுக்க வந்திடுச்சா? வரதட்சினை பிரச்சனையா ... பணம் ஒரு பிரச்சனையே இல்லே ... நான் தான் வந்துட்டேனே; பையன் நல்லவனா இருந்தா போதும்; ... கேக்கறதுக்கு மேல நான் அள்ளிக் குடுத்துடறேன் ... என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். இல்லே, வேற எதாவது பிரச்சனையா? குமாரின் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யா, திடிரென தன் நாக்கை வெளியில் நீட்டி "அப்பா என் நாக்கு சிவந்திருக்காப்பா" என வினவினாள். "ஆமாண்டா கண்ணு" ... குமார் அவளை நோக்கி மென்மையாக சிரித்தார். சுகன்யாவின் சிவந்திருந்த நாக்கைப் பார்த்ததும், குமாரின் மனதில் இளம் வயது சுந்தரியின் முகம் தோன்றி கிளுகிளுப்பை கொடுத்தது. கல்யாணமான புதிதில் சுந்தரியும், குமாரசுவாமியும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமை மாலை கோவிலுக்கு போய்விட்டு, இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்புவதை தங்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள். வெளியில் சாப்பிட்டப்பின், சுந்தரி தவறாமல் "ஸ்வீட் பான்" போட்டுக்கொள்வது வழக்கம். "பானை" மென்றுக்கொண்டே, "குமரு, பாத்து சொல்லுங்க என் நாக்கு சிவந்திடுச்சா என்று நாக்கை நீட்டி நீட்டி அவனிடம் நூறு தரம் கேட்ப்பாள். அவள் வாயிலிருந்து வரும் இனிமையான ஏலத்துடன் சேர்ந்த வெற்றிலை வாசனயை நுகரும் குமாருக்கு வழியிலேயே கிக் தலைக்கு ஏறிவிடும். வீட்டுக்குள் நுழைந்தவுடன் குமார் சுந்தரியைக் கட்டியனைத்து அவள் சிவந்த உதடுகளை, அவள் கதற கதற, கவ்வி குதறி எடுத்து விடுவான். அவள் கன்னக் கதுப்புகளை கடித்து புண்ணாக்கிவிடுவான். சுந்தரியும் பதிலுக்கு குமார் தன்னை முத்தமிடும்போது தன் சிவந்த நாக்கை வெறியுடன் அவன் வாய்க்குள் நுழைத்து, அவன் நாக்கை தேடித் துழாவி, நக்கி, தன் வாயால் உறிஞ்சி அவனை மூச்சுத் திணற அடித்து விடுவாள். ஆட்டோ ஒரு முறை வேகமாக குலுங்கி நின்றது. "அப்பா ... நாம வீட்டுக்கு வந்தாச்சு," சுகன்யாவின் குரல் கேட்டு, குமாரசுவாமி தன் சுயநினைவுக்கு வந்தார். மெதுவாக ஆட்டோவை விட்டு இறங்கினார். சுந்தரி சாப்பிட உட்க்கார்ந்தாள். முதல் பிடி தயிர்சாதத்தை வாயில் வைத்ததும் அவள் மனம் துணுக்குற்றது. சுத்தமா உப்பே இல்லே; பாவம்! குழந்தை ஆபிசுல இதை எப்படி சாப்பிடுவா? சோத்துல உப்பு இல்லையேன்னு, அவ கூட உக்காந்து சாப்பிடறவங்க சிரிச்சா, சாயந்திரம் வந்ததும் சண்டைக்கு இழுப்பா. சாதத்துல உப்பு கலந்துக்கடின்னு, சுகன்யாவுக்கு நானே போன் பண்ணி சொல்லிடறேன். நல்ல வேளை, சுகன்யா, இப்பத்தான் சாப்பிட போறேங்கறா. என்னமோ தெரியலை? கூட யாராவது இருந்திருக்கணும், அதான் இன்னைக்கு எரிச்சல் படாமா சரிம்மான்னுட்டா. நல்லப் பொண்ணு பெத்து வெச்சிருக்கிறேன் நான். அவளுக்கு மூக்குக்கு மேல நிக்குது கோபம். இவ அந்த மல்லிகா கிட்ட எப்படி குப்பை கொட்டப் போறாளோ? அவளும் கொஞ்சம் முன் கோபியாத்தான் தெரியறா ... ? "உனக்கு, உன் புருஷன் நெனைப்பு வந்திடுச்சி ... பொய் சொல்லாதே எங்கிட்டன்னு" நேத்து, ராத்திரி நேரத்துல கத்தறா. உண்மையைத்தானே சொன்னான்னு, நானும் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன். வேற என்னப் பண்றது? கூச்சப் போட்டாலும், கூடவே குணமும் இருக்கவேதான், ராத்திரி ரெண்டு மணிக்கு, நிமிஷத்துல சூடா காஃபியைப் போட்டு கையில குடுத்தா. சுந்தரி தன் தட்டிலிருந்த சாதத்தில் உப்பை போட்டு, சிறிது தண்ணீரையும் விட்டு பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள். தட்டை கழுவி வைத்துவிட்டு, ஒரு புத்தகத்துடன் பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். ராத்திரி மழையால, காத்து சிலு சிலுன்னு வருது. இல்லன்னா இங்க இப்படி நிம்மதியா உக்கார முடியுமா? சுந்தரியின் மனம் புத்தகத்தில் ஒன்றவில்லை. காத்தாலேந்து நாலு தரம் ரகுவுக்கு போன் பண்ணிட்டேன். எங்கப் போனான்னு தெரியலை. போன் அடிச்சு அடிச்சு ஓஞ்சு போவுது. ரூம்லேயே செல்லை விட்டுட்டுப் போயிட்டானா? இவ அப்பனைப் பத்தி கேக்கணும்ன்னு நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் பெத்த பொண்ணு கல்யாணத்துக்கு, அவன் வந்து நின்னா அது ஒரு மரியாதைதான். சுகன்யா, நாளைக்கு காஞ்சிபுரம் போவலாம்ன்னு சொன்னாளே? டூரிசம் பஸ் போவுதே ... அதுல போனா, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் எல்லா எடத்தையும் பாத்துட்டு, ராத்திரி எட்டு மணிக்குள்ள திரும்பி வந்துடலாமேன்னு வேணி சொல்றா ... இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா அட்வான்ஸ் புக்கிங் பண்ணணுமாம் ... சுகன்யா வீட்டுக்கு வந்தாத்தான் கேக்கணும் ... அவ என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கான்னு? வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, கீரீச்சென சத்தம் எழுப்பி வீட்டிற்கு கீழ் நிற்க, உட்க்கார்ந்தவாறே தெருவை எட்டிப் பார்த்தாள் சுந்தரி. ஆட்டோலேருந்து எறங்கறது சுகா மாதிரி இருக்கே? கையில ஒரு பையோட நிக்கறா? சீக்கிரம் வந்துட்டாளே? மணி இன்னும் மூனு கூட ஆவலை ... என்னாச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையா அவளுக்கு? பின்னாடியே யாரோ ஒரு ஆம்பிளை இறங்கறாங்களே? யாரு? அசப்புல குமார் மாதிரி இருக்கு ... என் புருஷன் குமாரா? வேகமாக எழுந்து பால்கனி சுவரின் அருகில் ஓடியவள் உடல் அதிர்ந்து நின்றாள். அவள் மனம் பரபரத்து, நெஞ்சு ஏறி இறங்கியது. "பரவாயில்லே மீதி சில்லறையை நீங்க வெச்சுக்கோங்க." டீக்காக உடையணிந்த உயரமான ஒருவர் குனிந்து ஆட்டோ டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சுந்தரிக்கு அவருடைய பாதி முகமும், பக்கவாட்டில் பாதி உருவமும் மட்டுமே தெரிந்தது. உயரமான ஆகிருதியும், பரந்த முதுகும், சிவந்த கைகளும், அந்த கூரான மூக்கும், தலையின் பின்புறம் அவள் பார்வையில் பட்டதே போதுமானதாக இருந்தது. அந்த கம்பீரமான குரலை எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், அவளால் எப்படி மறக்க முடியும்? வந்திருப்பது யார் என்பது சந்தேகமில்லாமல் அவளுக்கு புரிந்து விட்டது. சுந்தரியின் இரத்த அழுத்தம் இப்போது, சரசரவென உயர்ந்தது. அவள் சுவாசம் ஒரு முறை நின்று மீண்டும் ஓட ஆரம்பித்தது. அவள் இதயம் வெகு வேகமாக அடிக்கத் தொடங்கியது. என் குமார் தானே அது? ... என் புருஷன் கடைசியா என்னைப் பார்க்க வந்துட்டானா? குமரு, என் மனசோட கூவல் உனக்கு கேட்டுச்சாப்பா? நீ வந்துட்டியாடா ... சட்டென மனசு ஒரு புறம் மகிழ்ச்சியில் குதி போட ஆரம்பித்தது. அம்மா! ... தாயே காமாட்சி! உன்னை கையெடுத்து கும்பிட்டு ... உங்கிட்ட என் கொறயை சொல்லணும்ன்னு நெனைச்சேன். நான் கேக்கறதுக்கு முன்னாடியே என் ஆசையை நீ நிறைவேத்திட்டியே? அடுத்த நொடி அவள் மனசு இறைக்கு நன்றி சொல்லியது. சுந்தரியின் கால்கள் இலேசாக நடுங்க ஆரம்பித்தது. அவள் கால்கள் துவண்டன. பால்கனியில் நிற்க முடியாமல், மெதுவாக அறைக்குள் சென்று ஹாலில் இருந்த நாற்காலியின் நுனியில் உட்க்கார்ந்தாள். கீழ போய் வான்னு சொல்றதா, இல்லை அவனே மேலே வர்ற வரைக்கும் பொறுத்திருப்பதா? ஒரு நொடி புரியாமல் சுந்தரி மனதுக்குள் மருகினாள். விருட்டென திரும்பி இரும்பு அலமாரியில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். நேற்றிரவு சரியாக தூங்காமல், காலையிலிருந்து தலையை சிக்கெடுத்து வாராமல் முகம் சற்றே வீங்கி, வெளுத்திருந்தது. அடியே சுந்தரி, நல்லா இருக்குடி நீ போடற நாடகம் ... வீட்டுக்கு வந்தவனை வாங்கன்னு வாய் நிறைய கூப்பிடறதை விட்டுட்டு, ஏதோ தப்புப் பண்ணவ மாதிரி உள்ள வந்து உட்காந்துகிட்டு, கண்ணாடியில புதுப்பொண்ணு மாதிரி மூஞ்சைப் பாத்துக்கறே? மனது அவளைத் துளைத்தது. அதே மனது, தெரு வரைக்கும் வந்தவனுக்கு வீட்டு உள்ள வரத் தெரியாதா? புது மாப்பிளையா வீட்டுக்கு வரான் ... ஆரத்தி எடுத்து கொட்டறதுக்கு? அடியே ! பட்டதுக்கு அப்புறமும் உனக்கு புத்தி வரலயே, நீ செய்யறது, சரியா.. தப்பான்னு நீயே யோசனைப் பண்ணிக்க நீ அடிச்சித் தொரத்தினவன் ஆசையா உன்னைப் பாக்க வர்றான் ... உன் குறுக்குப் புத்தியை வுட்டுட்டு, ஒழுங்கா நடந்துக்க ... அவள் எண்ணங்கள் அவளை புரட்டி எடுத்தன. சுகன்யா, வெறுமனே மூடியிருந்த வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த போது, சுந்தரி தலையை குனிந்தபடி தன் இரு கைகளையும் கோத்து மடியின் மேல் வைத்துக் கொண்டிருந்தாள். "அம்மா ..." "ஆட்டோ சத்தம் கேட்டுது ... எட்டிப்பாத்தேன் ... எங்கடி உன் அப்பா? ... உன் கூட வந்தவரை வெளியிலேயே நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ள வந்துட்டியே? குரல் முணுமுணுப்பாக வந்தது சுந்தரியிடமிருந்து.

"எம்மா ... உன் டீச்சர் அதிகாரத்தை என் கிட்ட காட்டதே? இது உன் பள்ளிக்கூடம் இல்லே ... என் அப்பாவை நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன் ... உன் புருஷனை நீதான் எழுந்து போய் உள்ள வாங்கன்னு கூப்பிடணும் ..." சுகன்யா தீர்மானமாக பேசினாள். சுகன்யாவின் பேச்சிலிருந்த கசப்பான உண்மை சுந்தரியைச் சுட, முளைச்சு மூணு எலை விடல; ஆத்தாளுக்கு புத்தி சொல்றா ... சட்டென வந்த கோபத்தில், கை விரல்கள் நடுங்கின; அவள் கால்களும் நடுங்கி வலுவிழந்தன. பெண்ணின் பேச்சால், மீண்டும் தலைக்கு வேகமாக ஏறிய ரத்தத்தால் அவள் முகம் சூடாகி, சற்றே நிறம் மாறியது. மனதில் எழுந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பால், அவளது விழிகள் கலங்கி நீரைப் பெருக்க, மூக்கு நுனிகள் விடைக்க, கீழ் உதட்டை பற்களால் அழுத்தி கடித்து அதன் துடிப்பை அடக்க முயன்றவள், தன் முயற்சியில் வெற்றியடையாமல், வேகமாக எழுந்து அறைக்கு வெளியில் ஓடினாள். "வாங்க! ... ஏன் இங்கேயே நிக்கறீங்க ... உள்ளே வாங்க! ... குமரு ... என் மேல இருக்கற கோவம் இன்னும் தீரலயா? நான் வான்னு சொன்னாதான் ... வீட்டுக்குள்ள வருவியா? இது என் வீடு இல்லங்க ... இது உங்க பொண்ணோட வீடு ... உனக்கு இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? ... ம்ம்ம் ... இவ்வள நாளா என்னை அழ வெச்சு பாத்ததுலே ... உனக்கு சந்தோஷம்தானே? " சுந்தரி விம்ம ஆரம்பித்தவள், அடுத்த நொடி தன் வாய் விட்டு ஓவென கதற ஆரம்பித்தாள். சுகன்யா வேகமாக மாடியேறி வந்துவிட, அவள் பின்னால் ஆட்டோவை அனுப்பிவிட்டு, நிதானமாக ஒவ்வொரு படியாக மேலே ஏறி வந்து, மாடிக்குள் நுழைந்து, மாடி வெராண்டாவில், ஷூவை கழற்றிக்கொண்டிருந்த குமாரசுவாமி, அழுதபடி தன்னை வரவேற்ற சுந்தரியை, எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார். ஒரு நொடிக்குப் பின் அவளை வேகமாக நெருங்கி, தன் இடது கையை அவள் தோளில் போட்டு தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். இடது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, "அழாதே ... சுந்தரி ... ப்ளீஸ் அழாதே" சொல்லிக்கொண்டே, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார். தன் தாயின் பின்னால் வெளியில் வந்த சுகன்யாவும், வாங்கப்பா, வீட்டுக்குள்ள வாங்கப்பா என வாய் நிறைய தன் தந்தையை வரவேற்றவள், "அப்பா ... அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்கப்பா ... அம்ம்மா, எதுவாயிருந்தாலும் உள்ளே வந்து பேசும்மா" சொல்லிக் கொண்டே திரும்ப அறைக்குள் ஓடி, ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த நீரை, கண்ணாடி கிளாஸில் ஊற்ற ஆரம்பித்தாள். உள்ளே நுழைந்த தகப்பனிடம், தண்ணீரை கொடுத்து உபசரித்தாள். குமாரசுவாமி ஹாலிலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்து, சுந்தரியை தன் அருகில் உட்க்கார வைத்தான். சுந்தரி தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல், குமாரின் தோளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டு மீண்டும் ஓசையின்றி அழ ஆரம்பித்தாள். குமார் எதுவும் பேசாமல், தன் மனைவியின் தலையை மவுனமாக, மனதில் பொங்கும் ஆசையுடன் வருடிக் கொண்டிருக்க, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது. தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழது கொண்டிருந்த தாயைப் பார்க்க முடியாமல், மனம் கலங்கி, சுகன்யாவும் தன் மூக்கை உறிஞ்சி விசும்ப ஆரம்பித்தாள். விசும்பிக் கொண்டே, தன் தாயின் முதுகை மெதுவாக தடவிக்கொடுத்தாள். அழாதேம்மா ... நீ அழுததெல்லாம் போதாதா? இன்னும் ஏன் அழுவறே? அதான் வந்துட்டாருல்ல ... அப்பாகிட்ட சந்தோஷமா பேசும்மா? "நீ சும்மா இருடி ... பெருசா பேச வந்துட்டே ... நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு ... இவரு கொடுத்த தண்டனை கொஞ்சமா ... நஞ்சமா ... ? அவள் குரல் விம்ம, குமாரின் மடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள். "சுந்து ... பீளீஸ் ... தப்பு எல்லாம் என்னுதுதான். நான் ஒத்துக்கறேன் ... என்னை மன்னிச்சிடும்மா... இப்ப நீ அழாதே ... அழறத நிறுத்து ... என்னால நீ அழறதை தாங்க முடியலைம்ம்மா ..." சொல்லியவர் குரல் தழுதழுத்து, குரல் குளறப் குமாரசுவாமி பேசினார். சட்டென சுந்தரி தன் அழுகையை நிறுத்தியவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள். கலங்கியிருந்த தன் கணவனின் கண்களையும், முகத்தையும், தன் புடவை முந்தானையால் துடைத்தாள். பத்து நொடிகள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள், வயது வந்த தன் பெண் அருகில் நிற்பதையும் பொருட்படுத்தாமல், அவன் கழுத்தில் தன் கைகளைப் போட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். " குமரு ... எழுந்து போய் உங்க முகத்தை கழுவிக்கிட்டு வாங்க ... சுகா ... பால்கனியில துண்டு காயுது ... அப்பாக்கிட்ட கொண்டாந்து குடும்மா ..." அவள் குரலில் தெளிவு பிறந்துவிட்டது. மனதில் மீண்டும் மெல்ல மெல்ல தன் கணவனைப் பார்த்த மகிழ்ச்சி எழ ஆரம்பித்தது. சுந்தரி புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டவள், ஃபிரிஜ்ஜைத் திறந்து பார்த்துவிட்டு, சுகா ... இன்னைக்கு வீட்டுல சுத்தமா பால் இல்லடா கண்ணு ... நீ ஆஃபீஸ்லேருந்து வரும் போது வாங்கிட்டு வர சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப போனா ... அந்த தெரு கோடி கடையில பால் கிடைக்குமா? நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன். பாத்ரூமுக்குள்ளிருந்து முகத்தை துடைத்துக்கொண்டே வந்த குமார் ... சுந்து ... குழந்தையை ஏன் போவ சொல்றே ... பக்கத்துலதானே கடையிருக்கு ... நான் போய் வாங்கிட்டு வர்றேன், ..." அப் ... அப்ப்பா ... நான் அப்பவே சொன்னேன் ... எல்லாம் வாங்கினீங்க ... பாலை விட்டுட்டீங்கன்னு, கேட்டீங்களா? ... அவள் விஷமத்துடன் தன் தந்தையை நோக்கி கண்ணடித்து சிரித்தாள். மனம் இலேசாகி இயல்பு நிலைக்கு வந்திருந்த குமாரும் ... ஆமாண்டா கண்ணு ... நீ சொன்னே ... நான் தான் கேக்கலை ... அதனால நான் போய் பாலை வாங்கிட்டு வர்றதுதான் சரி ... கடை எங்கேயிருக்கு சொல்லு ... அவரும் தன் மகளைப் பார்த்து உரக்க சிரித்தார். பால் என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுத்தனமாக சிரிப்பது எதற்கு என்று புரியாமல் சுந்தரி விழித்தாள். "ஏன் இப்ப ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க ... சொன்னா நானும் சிரிப்பேன்ல்லா" சுந்தரி தன் பெண்ணையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள். "அப்பா, நீங்க ட்ரஸ் மாத்திக்கோங்க ... மாமா இங்க வாங்கி வெச்சிருக்கற புது லுங்கி ஒண்ணு உள்ள ரூம்ல கட்டில் மேல எடுத்து வெச்சிருக்கேன் ... அம்மா, நீ உன் வீட்டுக்காரரை கேளு ... அவர் சொல்லுவாரு நாங்க ஏன் சிரிச்சோம்ன்னு ... அதை தெரிஞ்சுக்கலைன்னா, உனக்கு இன்னைக்கு சத்தியமா ராத்திரிக்கு தூக்கம் வராது ... அப்புறம் என்னையும் தூங்க விடமாட்டே நீ ... நீ அழுததைப் பாத்து, நானும் அழுது இப்ப எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு ... எனக்கும் சூடா ஒரு காஃபி குடிக்கணும் போல இருக்கு ... " அவர்கள் பதிலுக்கு காத்திராமல், பால் தூக்கையும், தன் பர்ஸையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் நடந்தாள் சுகன்யா.அறையில் தனியாக விடப்பட்ட சுந்தரியும், குமாரும் ஒரு நிமிடம் வரை மவுனமாக இருந்தார்கள். நின்ற இடத்திலிருந்தே குமார் சுந்தரியைப் பார்க்க, தன் கணவனின் ஆழ்ந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல், சுந்தரி தன் முகத்தை தரையை நோக்கித் தாழ்த்திக் கொண்டாள். அவரும் தன் பார்வையை தரையை நோக்கித் தாழ்த்த, பளீரிடும் தன் மனைவியின் வெண்மையான காலும், பாதங்களும் அவர் கண்களில் பட, அவர் மனது பரபரக்கத் தொடங்கியது. பரபரக்கும் மனதுடன் தன் பார்வையை குமார் இலேசாக உயர்த்த, சுந்தரியின் இடுப்பில், அவள் புடவை செருகியிருந்த இடத்துக்கும், அணிந்திருந்த ரவிக்கை விளிம்புக்கும் இடையில் பிதுங்கிக் கொண்டிருந்த வெண்மையான அவள் இடுப்பு சதை கண்களில் மின்னலாக அடிக்க, அவர் உடல் சிலிர்க்கத் தொடங்க, தன் பார்வையை தாழ்த்திக்கொண்டார். சுந்தரி, புடவையை இடுப்பில் செருகிக்கொண்டிருந்ததால், மருந்துக்கு கூட முடியில்லாமல் வழ வழவென்று, பளிச்சிடும், தன் முழங்காலை கணவன் ஆசையுடன் கூர்ந்து பார்ப்பதை அவளால் உணர முடிந்தது. அவர் பார்வையின் கூர்மையினால் அவள் உடல் சிலிர்த்து, இடுப்பில் செருகியிருந்த புடவையை வேகமாக உருவி சரி செய்து, தன் காலை மறைத்தாள். என்னடி பண்றே சுந்தரி? அவள் மனது அவளைப் பார்த்து நகைத்தது. நேத்து மழையில நின்னு, "வந்துடுடா குமருன்னு கதறிகிட்டு இருந்தே" இப்ப வந்தவன் ஆசையா உன் காலைப் பாத்தா, இழுத்து மூடிக்கிறே? சுந்தரியின் மனம் அவளை வம்புக்கிழுத்தது. சுந்தரி ... நீ சுந்தரிதாண்டி; அன்னைக்குப் பாத்த மாதிரியே இன்னைக்கும் உருக்குலையாம மத மதன்னு இருக்கே; கண்ணுக்கு கீழே மெல்லிசா கரு வளையங்கள் தெரியுது. உடம்பு தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்கு; அந்த ஈர உதட்டைப் பார்த்தா என் உடம்புல சுருசுருன்னு வெறி ஏறுதே? குமாரின் மனம் மட்டும் சும்மா இருக்குமா? தனியா பொண்ணை வளர்க்கறதுன்னா சும்மாவா? எல்லா விஷயத்துலயும் என் பொண்ணை அம்சமா வளர்த்து வெச்சிருக்கா. கல்யாணமான பொம்பளை கூட, புருஷன் இல்லன்னா, ஊர்ல இருக்கறவன் சும்மா இருப்பானுங்களா? அவனுங்க பார்வையை அலட்சியப் படுத்தறது சுலபமா? வம்பு பேசறவங்க வாயில விழுந்து எழாம தப்பிக்கறது இலேசான காரியமா? நான் ஒரு முட்டாப்பய அவ கூட இருக்க வேண்டிய நேரத்தில அவளைத் தனியா விட்டுட்டு ஓடிட்டேன். என் தங்கத்துக்கு மனசுக்குள்ள என்னன்ன கவலை இருந்ததோ? இன்னும் இருக்குதோ? எப்படியெல்லாம் தவிச்சாளோ? இனிமே நம்ம குடும்ப பொறுப்பு எல்லாத்தையும் நான் சுமக்கறேண்டிச் செல்லம்; நீ சுகாவை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டே; அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு என்னுதும்மா; நீ கவலைப் படாதே? அவர் மனதில் எண்ணங்கள் வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக எழ, அவரிடமிருந்து ஒரு நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது. சுந்தரி தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னங்க! இப்ப ஏன் நீங்க பெருமூச்சு விடறீங்க." சுந்தரியின் உள்ளம் துணுக்குற்றது. என் புருஷன் எதை நெனைச்சு கவலைப் படறான். கண்ணு மறைவா இருந்தான். அவனைப் பத்தி நான் அதிகமா கவலைப்படலை. வீட்டுக்கு வந்தவன் என் எதிர்ல உக்காந்துகிட்டு பெருமூச்சு விட்டா, என் மனசுல சுருக்குன்னு வந்து குத்துதே! என் குமருக்கு, வாலிபம் முடிஞ்சு போச்சா? இலேசா காதுக்கு பக்கத்துல முடி நரைச்சிடுச்சு. மீசையிலயும் ஒண்ணு ரெண்டு வெளுப்பு தெரியுது. தலையில அடர்த்தியா இருந்த முடி கொட்டிப் போயிருக்கே? முகம் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும், கம்பீரம் குறையலை. குரல் அப்படியே இருக்கு. நிக்கறது; உக்கார்றது; எல்லாத்துலயும் ஒரு நிதானம் வந்திடுச்சி. என் தோள்ல கையை போட்டு இறுக்கமா அணைச்சானே! அந்த இறுக்கத்துல, அழுத்தத்துல, அவன் என் மேல வெச்சிருக்கற ஆசை தெரிஞ்சுதே! கையெல்லாம் தளர்ந்து போவாம கல்லு மாதிரிதான் இருந்தது. கர்லா கட்டை தூக்கி சுத்தின உடம்பாச்சே? நானாவது என் பொண்ணு மூஞ்சை பாத்துக்கிட்டு உசுரு வாழ்ந்தேன். பாவி இவன் தனியா இருந்து அலைகழிஞ்சானே; நாலு நாளைக்கு நம்ம வீட்டுல உக்கார வெச்சி நேரத்துக்கு அவனுக்கு புடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும். சுந்தரியின் மனதும் ஓரிடத்தில் நிக்கவில்லை. "ஒன்னுமில்லேடா கண்ணு .." சுந்தரி தன்னையே பார்ப்பதை கண்டவன் கிசுகிசுவென பேசினான். "பின்னே ... " "சுந்து ..." குமார் சோஃபாவில் உட்க்காந்தவாறே மெல்லிய குரலில் தன் மனைவியை ஆசை பொங்க அழைத்தார். "ம்ம்ம் ..." "இங்கே கிட்ட வாயேன் ..." "எதுக்கு," சுந்தரியும் தன் கள்ளக்குரலில் பேசியது சமீபத்தில் கல்யாணமான பெண், நேரம் கெட்ட நேரத்துல உடலுறவுக்கு அழைக்கும் தன் கணவனிடம் சிணுங்குவது போலிருந்தது குமாருக்கு. கிட்டப் போனா கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானா? ஏண்டி சுந்தரி; அவன் வந்து பத்து நிமிஷம் ஆவலை. எப்படி இருந்தான் ... எங்க இருந்தான்; என்ன பண்றான்; இப்படி எதைப் பத்தியும் நீ அவன் கிட்ட கேக்கலை; அதுக்குள்ள உனக்கு உடம்பு கிடந்து அலையுது; அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானான்னு? . . "சுந்தரி, என்னம்மா கேள்வி இது? ..." குமார் மனதுக்குள் தவித்தார். பால் வாங்கப் போன சுகா வரதுக்குள்ள ஒரு தரம் ஆசையா இவளைச் சேத்து அணைச்சிக்கணும்ன்னு உடம்பு பரக்குது ... ஒன்னுமே புரியாதவ மாதிரி இப்பத்தான் இவ எதுக்குன்னு கேக்கறா? நாமே போய் கட்டிக்கிட்டா போச்சு. ஆனா அவ கதவுக்கு நேரால்லா நிக்கறா? "கடை கிட்டத்துலதாங்க இருக்கு ..." "இருக்கட்டும் ... சுந்து ..." "என்ன குமரு ... இருக்கட்டுங்கறே ... உனக்கு புரியலியா ... சுகன்யா வந்துடுவான்னு சொல்றேன் ..." "அப்படின்னா நீ சீக்கிரம் வாயேன் ... ப்ளீஸ் .. " அவன் குரலில் இருந்த காமத்தை உணர்ந்ததும் சுந்தரியின் முகம் வெட்க்கத்தால் சிவந்தது. என் புருஷன் கிட்ட எனக்கு ஏன் இத்தனை வெட்கம்? ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன் என்னைத் தொடப்போறானே அதனாலயா? அவளுக்கு புரியவில்லை. சுந்தரி ஒரு முறை தன் கணவனை தீர்க்கமாக பார்த்தவள், மெல்ல நடந்து வாயில் கதவை படிய மூடினாள். தன் கணவனை நோக்கி மெதுவாக நடந்தாள். கதவு மூடப்பட்டதும், விருட்டென எழுந்த குமார், சுந்தரியை நோக்கி நடந்தார். அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுந்து தன் மார்புடன் இறுகத் தழுவினார். தழுவியவர் அவள் கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டார், குரலில் அன்பு பொங்க அவள் காதில் முனகினார் "சுந்து ... ஐ லவ் யூ ..." மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆசையும், அந்த ஆசையால் ஏற்பட்ட பரவசமும், தன் கணவனின் முரட்டுத்தனமான தழுவலால் கிடைத்த உடனடியான ஆனந்தமும் என பல விதமான மன உணர்ச்சிகள் சுந்தரியின் முகத்தில் தெரிய, அவளுடைய உதடுகள் துடிக்க, அவள் தன் கீழுதட்டை மெதுவாக கடித்து தன் உடல் பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள். அப்ப்பா ... எத்தனை நாளாச்சு ... என் பொண்டாட்டி உடம்பைத் தொட்டு ... சுந்தரியின் உடல் வாசனை பட்டென மூக்கில் ஏற, அவள் உடலின் மென்மையை தன் மார்பில் உணர, அவர் உடல் உதறியது. உடல் ரோமங்கள் குத்திட்டுக்கொண்டது. சுவாசம் துரிதமானது. உடலில் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை எட்டிப்பார்த்தது. தன் ஆசையை, தன் மனதின் ஏக்கத்தை, தாகங்களை, தன் உடல் வலுவை மொத்தமாக தன் வலுவான கரங்களின் மூலமாக அவள் உடம்பில் காட்டினார். "அய்யோ...! விடுங்க... என்னங்க இது ... சின்னப்பையன் மாதிரி ... வெறி புடிச்சிக்கிச்சா உங்களுக்கு ... இப்படி இறுக்கறீங்களே ... விட்டுடுங்க ... மூச்சு விட முடியலீங்க... மூ ...ச்ச் ....சு முட்ட்ட்டுதுங்க .." சுந்தரி திமிறினாள். அவள் மார்பு ரவிக்கைக்குள் மெல்ல மெல்ல ஏறி இறங்கின. சரியாக பேச முடியாமல், தன் கணவனின் தழுவலில் தவித்தாள் சுந்தரி. குமாரின் அனலான மூச்சு அவளது சிவந்த முகத்தில் வீச, அவள் தன் மூச்சை இழுத்து பிடித்து அவர் பிடியில் நெளிந்தாள். கண்களின் ஆசையும், மிரட்சியுமாக குமாரைப் பார்த்தாள். உடலின் இயல்பான உந்துதலால், மனதில் ஏற்பட்ட இயற்கையான ஆசை வேட்க்கையால், அவள் கைகள் வேகமாக பழக்க தோஷத்தில் அவர் முதுகில் படர்ந்து அவரை பதிலுக்கு இறுக்கியது. சுந்தரியின் வீங்கும் மார்புகள் குமாரின் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தன. கணவனின் வலுவான கைகள் உடலில் இறுகிக் கிடக்க, அவன் பரந்த மார்பில் தன் மார்புகள் உரசியதும், சுந்தரியின் உடல், ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. மனது ஆனந்த கூத்தாடியது. சேலைக்குள் சிறைப் பட்டிருந்த சுந்தரியின் கைக்கடக்கமான சிறிய முலைகள் மெல்ல மெல்ல அளவில் பெரிதாகத் தொடங்கின. முலைகளின் நுனியில் துருத்திக்கொண்டிருக்கும் தேன் நிற காம்புகளில் தினவெடுக்க ஆரம்பித்தது. எம்ம்ம்மா ... எவ்வள காலமாச்சு ... என் புருஷன் கை என் உடம்புல பட்டு ... என் உடம்பு பூமியில இருக்கா; இல்லையான்னு தெரியலியே; காத்துல பறக்கற மாதிரி இருக்கே; குமரு ...! நானும் தாண்டா உன் மேல உயிரை வெச்சுக்கிட்டு இருக்கேன்; எங்க உன்னைப் திரும்பவும் பாக்காமே போயிடுவோமோன்னு நினைச்சேண்டா பாவி; என்னை வதைச்சிட்டியேடா பாவி; அவள் மனம் ஆனந்தத்தில் கூவியது. "சுகா இப்ப வரமாட்டா, என் பொண்ணு புத்திசாலி ... நாம தனியா பத்து நிமிஷம் இருக்கணும்ன்னுதான் அவ பால் வாங்கவே போனா ... " குமார் முனகினார். முனகிக்கொண்டே, குமார், அவள் கழுத்து வளைவை தன் நாக்கு நுனியால் மெதுவாக வருடினார். இப்போது கழுத்தில் அழுந்தியிருந்த குமாரின் உதடுகள், திசை மாறி ஊர்ந்து சுந்தரியின் இடது கன்னத்தில் வந்து நின்றது ... "ப்ச்ச்க்" என ஓசையுடன் அவர் அவள் கன்னதில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் கன்னத்தை தன் முன் பற்களால் கடித்தார். கடித்தவரின் சித்தம் நொடியில் பனியாக குளிர்ந்து உறைந்தது. "அசிங்கமாப் போயிடுங்க ... கடிக்கறீங்களே" "என்னடி அசிங்கம் இதுல" "பகல்லே கடிக்கறீங்களே?" "ஆசைக்கு என்னடி தெரியும் ... பகல் என்னன்னு ... ராத்திரி என்னன்னு?" "உங்க பொண்ணுக்கு என் கன்னத்துல இருக்கற பல்லு அடையாளம் தெரிஞ்சா, அவ என்னைப் பாத்து சிரிக்க மாட்டாளா?" சுந்தரி தன் குரல் குழற வெட்க்கத்துடன் பேசினாளே தவிர, தன் கணவனின் இரு கன்னங்களிலும் ஆசையுடன் மாறி மாறி மூச்சிறைக்க முத்தமிட்டாள். அவளுடைய சுவாசத்தின் வேகத்தில் அவளுடைய கனக்கும் மார்புகள், ரவிக்கைக்குள் ஏறி இறங்கி குமாரை வெறி கொள்ள செய்தன. அவள் முகத்தை வெறித்துப் பார்த்த குமார், அவள் உதடுகளை கவ்வும் நோக்கத்துடன், அவள் முகத்தின் மீது குனிந்தார். "ஒரு செகண்ட் என்னை விடுங்க" அவர் உதட்டில் தன் உதடுகளை அவசரமாக ஒத்திய சுந்தரி, குமாரை உதறிவிட்டு, வேகமாக பால்கனியை நோக்கி ஓடி இடது புறம் பார்த்தாள். கண்ணுக் கெட்டிய தூரம் வரை, சுகன்யா தென்படவில்லை. வேகமாக உள்ளே திரும்பி வந்தவள், இப்போது சோஃபாவில் உட்கார்ந்திருந்த குமாரின் முகத்தை தன் மார்புடன் சேர்த்து வெறியுடன் அழுத்திக்கொண்டாள். குமாரின் கைகள் சுந்தரியின் இடுப்பில் புடவையின் இறுக்கத்தால் பிதுங்கிக் கிடந்த வெளுப்பான சதையை வருடிக் கொண்டே, தன் முகத்தை நீண்டப் பெருமூச்சுடன், அவள் மார்பில் புரட்டிக்கொண்டிருந்தார். புடவை முந்தானைக்குள், ரவிக்கைக்குள் ஒளிந்திருந்த அவள் முலைகளையும் நடு நடுவில் முத்தமிட்டார். "குமரு ... ம்ம்ம் ... என்னை இப்படியே உன் கையால இறுக்கி கட்டி ஒரே வழியா கொண்ணுடுடா ... ராஜா! எங்கடா இருந்தே இவ்வளவு காலமா? நீயும் தனியா தவிச்சுக்கிட்டு, என்னையும் தவிக்க வெச்சிக்கிட்டு?" அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. குமாரசுவாமி தன் இதயம் வலிக்க, உள்ளம் பதறி, சுந்தரி ... ப்ளீஸ் அழாதம்மா ... ப்ளீஸ் ..." புலம்பினார். புலம்பியவர், சுந்தரியை இழுந்து தன் மடியில் கிடத்தி, அவளை மேலே பேசவிடாமல், அவள் வாயை தன் வாயால் கவ்விக் கொண்டார். அவள் உதடுகளை மனதில் வெறியுடன், ஆனால் அவளுக்கு வலிக்காமல், இதமாக கடித்து முத்தமிட்டார். சுந்தரியின் உதடுகள் வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஈரமுத்தத்தால் திணறின. அவள் மூச்சு விட முடியாமல், அவர் பிடியில் திமிறினாள். அவர் மடியிலிருந்து எழ முயற்சித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்துக்கொண்டாள். "குமரு ... போதுண்டா ... என்னை விட்டுடா செல்லம் இப்ப; குழந்தை வந்துடுவா; இப்ப அவ சின்ன பொண்ணு இல்லே! மனுஷ உடம்புன்னா என்னான்னு அவளுக்கு தெரியும் .. ஒரு ஆம்பிளையோட தொடல் எப்படி இருக்கும்ன்னு அவளுக்கு புரிஞ்சிருக்கு. சொன்னாக் கேளுப்பா.." சுந்தரியின் தலை களைந்து, சுருண்ட முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் பறந்தன. ஒரிரு முடிகள் அவள் நெற்றியில் தோன்றிய வியர்வை முத்துகளில் ஒட்டிக்கிடந்தன. சுந்தரியின் மூச்சு வேகமாக வந்ததால், கச்சிதமான அவள் மார்புகள், சேலைக்குள் விம்மிக் கொண்டிருந்ததைப் பார்த்த, குமாரின் தண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியின் உடல் வாசனையால் தூண்டப்பட்டு, மெல்ல மெல்ல புடைக்கத் தொடங்கியது. குமாரின் கை விரல்கள் சுந்தரியின் அடிவயிற்றில் வட்டமிட்டு அவளது தொப்புள் குழியில் நுழையத் துடித்தன. குமாரின் புடைப்பை, அவருடைய மடியில் கிடந்த சுந்தரி தனது செழிப்பான புட்டச் சதைகளில் உணர்ந்ததும், அவள் உடல் நடுங்க "குமரு, இப்ப நீ என்னை விட்டுடா கண்ணு; இப்ப வேணாம்பா; சுகா சட்டுன்னு உள்ளே வந்துட்டா, என் மானம் போயிடும்பா; எனக்கு மட்டும் ஆசையில்லயா? நானும் உனக்காக தவிச்சிப் போய் இருக்கம்பா; இத்தன நாள் பொறுத்தோம்; இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கப்பா," தன் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு அவனை கெஞ்சினாள். "சரி ... சரி ... அப்படின்ன்னா நீ ஒரே ஒரு முத்தம் எனக்கு குடுப்பியாம்; நீ வெத்திலைப் போட்டுக்கிட்டு அப்பல்லாம் குடுப்பியே, அந்த மாதிரி ஒரு முத்தம் குடுத்துடு; உன்னை நான் விட்டுடறேன்." அவர் கண்களில் தாபம் தங்கியிருக்க மன்றாடினார். அவர் கைகள் தன் மடியில் கிடந்தவளை மீண்டும் அழுத்தமாக இறுக்கின. தன் உதடுகளை அவள் வியர்த்திருந்த முகமுழுவதிலும் ஓசையில்லாமல் ஒற்றி ஓற்றி எடுத்தார். "வேணாம்ன்னு சொன்னா கேக்க மாட்டீங்கறீங்க..." சொல்லிக்கொண்டே, குமாரின் மடியில் கிடந்தவள், அவர் முகத்தை நிமிர்த்தி, அவள் மனதுக்குள்ளிருந்த பதினைந்து வருட பிரிவின் ஏக்கத்தை, குமாரின் உதடுகளுக்கு, தன் உதடுகளின் மூலம் தெரிவித்தாள். அவர் உதட்டில் தன் மெல்லிய சிவந்த உதடுகளை பதித்தாள். தன் நாக்கால் அவர் உதடுகளை வருடினாள். மீண்டும் அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி, அவர் உதடுகளை தன் நாக்கால் பிரித்தாள். பிரிந்த உதடுகளுக்குள் தன் நாக்கை நுழைத்து, அவர் நாக்கை துழாவினாள். பின் தன் நாக்கை தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு, தன் மெல்லிய உதடுகளால் அவர் நாக்கை இழுத்து உறிஞ்சினாள். தன் மனைவியின் ஈர நாக்கின் கொழகொழப்பும், அவள் எச்சிலில் இருந்த லேசான குளிர்ச்சியும், அவள் உதடுகளின் மெல்லிய வெப்பம் என, கலவையான சுவை அவர் உதடுகளைத் தாக்க, அவர் உடல் முழுவதுமாக விழித்துக்கொண்டு, குமாரின் கை சுந்தரியின் இடது மார்பினை கொத்தாக முந்தானையுடன் சேர்த்து பிடித்தது. தன் கணவனின் கை, தன் ரவிக்கைக்குள் வீங்கிக்கொண்டிருந்த மார்பை அழுந்த பிடித்ததும், இனி ஒரு வினாடி தாமதித்தாலும் நிலைமை மோசமாகிவிடும் என உணர்ந்த சுந்தரி, விருட்டென தன் முகத்தை அவர் முகத்திலிருந்து விலக்கிக் கொண்டு, அவர் மடியிலிருந்து துள்ளி எழுந்தாள். எழுந்தவள், தன் முந்தானையை சரி செய்து கொண்டு, மீண்டும் பால்கனியை நோக்கி ஓடினாள். சுகன்யா குனிந்த தலையுடன், ஒரு கையில் பாலும், இன்னொரு கையில் காய் கறிகளுடன், வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். ஓடிய வேகத்தில் திரும்பி உள்ளே வந்த சுந்தரி, குமாரின் கன்னத்தை அழுத்தி திருகியவள், அவர் கன்னத்தில் தன் சிறிய பற்கள் பட கடித்தாள். கடித்த இடத்தில் தன் உதடுகளை பொருத்தி ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் முகத்தை ஆசைத் தீர பார்த்தவள், அவரை இழுத்து தன்னுடன் ஒரு முறை இறுக்கிக்கொண்டாள். பின் அவனை விலக்கிவிட்டு தன் புடவையை உதறி சரி செய்து கொண்டாள். "என்னங்க ... சுகா வந்துகிட்டிருக்கா, உள்ளப் போய் அந்த லுங்கியை எடுத்து கட்டிக்கிட்டு வாங்க; கர்மம் ... அதுக்குள்ள "அது" உங்க பேண்டுக்குள்ள புடைச்சிக்கிட்டு, நிக்குது; சீக்கிரமா எழுந்து உள்ள போங்க ..." சொல்லியவள் கண்களில் விஷமத்துடன், தன் விரல்களால், அவர் புடைப்பை ஒரு முறை, அழுத்தி வருடினாள். மேலும் கீழுமாக நீவினாள். அவரை மீண்டும் ஒரு முறை ஆசையுடன் தழுவிக்கொண்டு தன் அடிவயிற்றை அவன் புடைப்பில் தேய்த்து, அவரை நகரவிடாமல் முரண்டு பண்ணினாள். "சுகா வந்துட்டாங்கற; அப்பறம் இவனைப் புடிச்சி இப்ப அமுக்கறியேடி; அவன் முழுசா எழுந்துட்டான்னா அடங்க மாட்டான்; விடுடி என்னை," குமார் அவளை வேகமாக உதறி சோஃபாவில் தள்ளிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். சுந்தரி, பேண்டில் எழுந்த புடைப்பை அழுத்திக்கொண்டு வேகமாக ஓடுகிறவரைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றாள். சுகன்யா வீட்டுக்குள் நுழைந்த போது சுந்தரி, தன் தலை முடியைப் பிரித்து உதறி சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு, தன் கணவனிடமிருந்து பெற்ற முத்தத்தால், தழுவலால், அதனால் உண்டான உடல் சுகத்தால், மனதில் மகிழ்ச்சி பீறிட, பொங்கிய சந்தோஷத்தை அடக்க முடியாமல், சுந்தரி அவளையும் அறியாமல், அவளுக்குப்பிடித்த சினிமா பாடலை, வாய் விட்டு பாட ஆரம்பித்தாள். "காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது ... மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது? கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு? காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு? தேர் கொண்டு வா தென்றலே ... இன்று நான் என்னைக் கண்டேன்.. சீர் கொண்டு வா சொந்தமே ... இன்றுதான் பெண்மை கொண்டேன்.. பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் ... பேசி பேசி கிள்ளை ஆனேன்.. கோவில் விட்டு கோவில் போவேன் ... குற்றம் என்ன ஏற்று கொள்வேன்? வீட்டினுள் நுழைந்த சுகன்யா, வாய் விட்டு பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். தன் தாயின் இடது கையை பிடித்து அவளை தன் புறம் திருப்பினாள். அவள் கன்னத்தில், குமார் சற்று முன் கடித்ததால் ஏற்பட்ட, பளிச்சிடும் சிவந்த பற்களின் அடையாளத்தைக் கண்டவுடன், தன் உதடுகளில் எழுந்த புன்னகையை, மிக சிரமத்துடன், உதடுகளை கடித்து அடக்கிக்கொண்டாள். "அம்மா ... அப்பா மேல இருக்கற கோபமெல்லாம் போயிடிச்சாம்மா" சுந்தரியின் சந்தோஷம் அவளையும் தொற்றிக்கொள்ள, தாயின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். "அம்மா ... நீ இப்ப ரொம்ப அழகா இருக்கேம்மா" "ஏய் ... சும்மா இருடி .." தன் பெண் சொன்னதைக் கேட்டு சுந்தரி வெட்க்கப்பட்டாள். "நிஜம்மா சொல்றேம்மா ... இனிமே நீ இப்படியே எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்மா." "சரிம்ம்மா ... தேங்ஸ்டி கண்ணு ..." சுகன்யா, தன் தாய் சுந்தரி, வாய் விட்டு பாடி எப்போதும் பார்த்ததேயில்லை. வெகு நாட்களாக வீட்டில் இல்லாதிருந்த அப்பா வீட்டுக்கு திரும்பி அரை மணி நேரம் முழுசா ஆகலே; அவர் கூட தனியா ஒரு ராத்திரியை கழிக்கல; அவ்வள தூரம் ஏன்? கூட உக்கார்ந்து மனம் விட்டு பத்து நிமிஷம் நிம்மதியா பேசலை. அதுக்குள்ள அம்மா எவ்வள சந்தோஷமா ஆயிட்டாங்க! தன் தாயின் மகிழ்ச்சியை கண்ட சுகன்யாவின் மனசும் மயிலிறாக மாறியது. "அம்மா ... நீ பாடற இந்த பாட்டு, இப்ப நம்ம வீட்டுல இருக்கற சிச்சுவேஷனுக்கு பர்பெக்ட்டா சூட் ஆவுதும்மா ... " சுகன்யா ஸ்டவை ஆன் செய்து பாலை காய்ச்ச ஆரம்பித்தாள். சுந்தரி தன் மகளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். சுகன்யாவைப் பார்த்து ஆதுரமாக புன்னகைத்தாள். அந்த கணத்தில் தன் பெண்ணுடன் சுந்தரி தன்னை மிகவும் சகஜமாக உணர்ந்தாள். அவள் கண்ணுக்கு, சுகன்யா தன் சொந்த மகளாகத் தெரியாமல், தன் வயதையொத்த, தன் மனதை மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஒரு சினேகிதியாக, கேட்க்காமலேயே தன் நட்புக்கரம் நீட்டுபவளாக அவள் தெரிந்தாள். அவள் மீது அவள் மனதில் எல்லையில்லா நட்பும், நேசமும் ஒருங்கே பொங்கியது. டக்குன்னு என் மன நிலையை புரிஞ்சுக்கிட்டாளே? முத்தம் குடுக்கறேன்னு குமரு பாட்டுல என்னை கடிச்சி வெச்சிட்டான். நான் சொன்னா கேட்டாத்தானே? இவ என் புருஷன் கன்னத்துல பண்ண காயத்தை பாத்துட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சாளே? "எதுக்கும்மா ... தேங்க்ஸ் சொல்றே எனக்கு?" இடுப்பில் லுங்கியும், மார்பில் பனியனுமாக, கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலியுமாக, உள்ளறையிலிருந்து, தாயும் பெண்ணும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே, வெளியில் வந்த குமார், ஹாலில் வசதியாக தரையில் உட்க்காந்து, சுவரில் சாய்ந்து கொண்டார். "எங்க மனசு புரிஞ்சி, சமயோசிதமா எங்களைத் தனியா விட்டுட்டு, சட்டுன்னு தூக்கை எடுத்துக்கிட்டு தெருவைப் பார்க்க நடந்தியே; அந்த தாராள மனசுக்குத்தாம்மா" சுந்தரியின் குரல் தழுதழுத்தது. "சும்மா எமோஷனல் ஆவாதேம்மா, உன் சந்தோஷம்; என் சந்தோஷம்ம்மா; நீ எனக்கு செய்றதுக்கு முன்னாடி நான் பண்ணது ஒண்ணுமேயில்லம்மா" சுகன்யா காபியை, சுந்தரியிடமும், தன் தந்தையிடமும் கொடுத்தாள். சுகன்யாவும் ஒரு கோப்பையில் காபியுடன் தன் தகப்பன் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டாள். "சுந்து, கோவில் விட்டு கோவில் போவேன்னு நீ பாடிக்கிட்டு இருந்தே? நான் இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழையறேன். நீ என்னடான்னா, என்னை விட்டுட்டு கோவிலுக்கு போறேங்கறே; நியாயமாடி இது?" "சே... சே... குமரு, எப்பவும் கோவில், சாமி விஷயத்தை கிண்டல் பண்ணாதீங்க; நாளைக்கு லீவுதானே; நீங்களும் எங்க கூட வாங்களேன், காஞ்சிபுரம் பக்கத்துலதானே இருக்கு; எனக்கு காமாட்சியை கண்டிப்பா தரிசனம் பண்ணனுங்க; சுகா, நாளைக்கு போறதுக்கு நீ டிக்கட் புக் பண்ணிட்டியாம்மா?" "சாரிம்மா ... அப்பா காலையில போன் பண்ணதும், எனக்கு என் தலை எது கால் எதுன்னு புரியலை; இதுல நாம போட்ட புரோகிராம் எனக்கு மறந்து போச்சும்மா." "போடி இவளே ... உன்னைப் போய் நம்பினேன் பாரு; என்னங்க ... நீங்க வீட்டுக்கு வரணும்; என் பொண்ணு கல்யாணம் நல்ல படியா நடக்கணும்; அம்பாளைப் பாத்து வேண்டிக்கணும்ன்னு நேத்து நினைச்சேன்; இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க; அவ கருணையை நினைச்சா என் உடம்பு சிலுத்து போவுதுங்க; நான் நாளைக்கு என்ன ஆனாலும் சரி, அம்பாளை போய் பாக்கத்தான் போறேன்." தன் கணவனைப் பார்த்துக் கொண்டே பேசியவள், அவர் வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை கிள்ளி ஒரு துண்டை தன் தலையில் வைத்துக் கொண்டவள், இன்னொரு துண்டை, சுகன்யாவின் தலையில் செருகினாள். ஒரு துண்டு பால்கோவாவையும், சிறிது மிக்சரையும், ஒரு தட்டில் வைத்து குமாரிடம் கொடுத்தாள். "சுந்து ... இதுக்குப் போய் குழந்தையை ஏன் சலிச்சுக்கறே? நாளைக்கு உனக்கு அம்பாளை பாக்கணும்; அவ்வளவுதானே? நான் ஒரு ஏற்பாடு பண்றேன். நாம எல்லோருமே ஒண்னா போய் வருவோம்." "எப்படிப்பா ... இதுக்கு மேல நாம மாம்பலம் போய் டிக்கட் புக் பண்ணி; நீங்க வேற ஈவீனிங் யாரையோ பார்க்க போகணும்னு சொல்றீங்க; கஷ்டம்பா." சுகன்யா முனகினாள். குமாரசுவாமி, தன் செல்லை எடுத்து பேச ஆரம்பித்தார். "மிஸஸ் மாலதி, எனக்கு ஒரு நல்ல அனுபவம் உள்ள டிரைவர் நாளைக்கு ஒரு நாள் பூரா வேணும்; நோ ... நோ ... நம்ம கம்பெனி டிரைவர்கள் யாரும் வேண்டாம்; தட்ஸ் ஓ.கே. ... நாளைக்கு லீவு; ஐ அண்டர்ஸ்டேண்ட்; நம்ம எம்ப்ளாயீஸ் யாரும் லீவு நாளைன்னக்கு எனக்காக டிஸ்டர்ப் ஆகக்கூடாது." "திஸ் ஈஸ் ப்யூர்லி மை பர்சனல் டிரிப்; நம்ம காண்ட்ராக்டர்ஸ் யாருகிட்டவாவது கேளுங்க; ஐ வில் பே ஹிஸ் சார்ஜ்ஜஸ்; நான் என் சொந்த கார்ல, காஞ்சிபுரம் போகணும்; நாளைக்கு எர்லி மார்னிங் ஷார்ப் அட் ஃபைவ் தர்டி கிளம்பணும்; என் வண்டி நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல்ல தான் இருக்கு; ட்ரைவர் ஃபிக்ஸ் ஆன உடனே கெஸ்ட் ஹவுஸ் மேனேஜரை என் கிட்ட பேச சொல்லுங்க; எஸ் ... எஸ் ... மை வெஹிகல் இஸ் இன் பர்பெக்ட் கண்டீஷன்; காலைல நான் ஓட்டிப் பாத்துட்டேன்... " "பை த பை ... ஹெட் ஆபீசுலேருந்து கால்ஸ் எதுவும் வந்தா என் மொபைல்ல காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க ... ஓ.கே ... நான் இன்னைக்கு ஆபீசுக்கு இதுக்கு மேல வர்றது கஷ்டம்; என் பீரிஃப் கேஸை மட்டும் உங்க கஸ்டடியிலே வெச்சுக்குங்க; அதுல கொஞ்சம் முக்கியமான பேப்பர்ஸ் இருக்கு; யூ மே லீவ் அட் யூர் கன்வீனியன்ஸ்; பை ... பை ..." "நாளைக்கு காலையில ஆறு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் தயாரா ஆகிடுவீங்க இல்லயா? நாம காஞ்சிபுரம் போகலாம்; சுந்து இப்ப உனக்கு திருப்திதானே? டன் ..." தன் மனைவியைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தார் குமார். "அப்பா நீங்க சொந்தமா கார் வெச்சிருக்கீங்களாப்பா? சுகன்யா ஆவலுடன் கேட்டாள்." "ராஜா ... நான் தான் காலையிலேயே சொன்னேனே? எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான்னு; இந்த காரும் உன்னுதுதாண்டா செல்லம்." அவர் தன் மகளின் தலையை அன்புடன் வருடினார். "நான் கூட சுமாரா கார் ஓட்டுவேம்பா," "சுகா ... உனக்கு கார் ஓட்ட ஆசையா இருக்கா ... ஆமாம் அது என்னா சுமாரா ஓட்டுவே?" "என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கும் போது எனக்கு கார் ஓட்ட கத்துக்குடுத்தாப்பா ... ஆனா அம்மா பயப்படறாங்கப்பா." "அம்மா பயந்துகிட்டே இருக்கட்டும் ... இந்த வண்டியை நீயே வெச்சுக்கோ. தாராளமா நீ ஓட்டி பழகு. நான் பெர்மிஷன் குடுக்கறேன். " "என்னங்க; ராத்திரிக்கு உங்களுக்கு டிஃபன் பண்ணட்டுமா இல்லை, சமையல் பண்ணட்டுமா? ராத்திரிக்கு இங்கேயே எங்க கூட இருங்க. உங்க கிட்ட முக்கியாமான விஷயம் கொஞ்சம் பேசணுங்க." சுந்தரி அவர் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள். "நீ எது பண்ணாலும் நான் சாப்பிடறேம்மா. டிரைவர் யாராவது கிடைச்சா, காஞ்சிபுரம் போகும் போது, நான் உன் கூட ஜாலியா பேசிக்கிட்டு வராலாம்னு பாக்கிறேன்; இல்லன்னா, நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போய், வண்டியை எடுத்துக்கிட்டு, அப்படியே என் ட்ரெஸ்ல ஒரு செட் எடுத்துக்கிட்டு வந்துடறேன்; காலையிலே இங்கேயிருந்தே போயிடலாம். நீ பேசறதையெல்லாம் ராத்திரி பூரா நான் கேக்கிறேன். " "அப்பா ... நீங்க எங்க வொர்க் பண்றீங்கப்பா?" சுகன்யா தன் தந்தையிடம் கேட்டாள். "எங்க கம்பெனி கல்கத்தாவுலேருந்து ஆபரேட் ஆகுதும்மா; டெக்ஸ்டைல் கூட்ஸ், லெதர் அயிட்டம்ஸ் எக்ஸ்போர்ட் பண்றோம்; எலக்ரானிக்ஸ் அயிட்டங்கள் இம்போர்ட் பண்றோம். இந்த கம்பெனியோட சதர்ன் ரீஜன் ப்ராஞ்ச் சென்னையில இருக்கு. நான்தான் இந்த பிராஞ்ச்க்கு இப்ப மேனேஜர். என் கீழ நாற்பது பேர் வேலை செய்யறாங்க. தமிழ் நாட்டிலே ஃபீல்ட் ஆஃபீஸ் ஒரு நாலு இருக்கு. நான் இங்க மாத்தலாகி வந்து மூணு வாரமாகுது. கம்பெனி, எனக்குன்னு தனியா டிரைவரோட என் ஆபீஸ் கார் குடுத்திருக்கும்மா. உன் தாத்தாவையும் பாட்டியையும் கிராமத்துல நம்ம வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன். இப்போதைக்கு நான் கம்பெனி கெஸ்ட் ஹவுசுல தங்கி இருக்கேன்." "அப்பா நீங்க காமர்ஸ் தானே படிச்சீங்க" "ஆமாம். மொதல்ல நான் எம். காம். படிச்சேன். அப்புறம் நம்ம வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் எம்.பீ. ஏ. படிச்சேன். லா டிகிரியும் வாங்கினேன். எல்லாத்துக்கும் உங்கம்மா கொடுத்த ஒரே ஒரு நாள் ஒதைதான் மோட்டிவேஷன். நான் இன்னைக்கு இருக்கற நல்ல நிலைமைக்கு உங்கம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்." அவர் உரக்க சிரித்தவாறு சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார். "போங்க ... பழசெல்லாம் இப்ப எதுக்குங்க இவ கிட்ட சொல்லிகிட்டிருக்கீங்க; எனக்கு கஷ்டமாயிருக்குங்க." சுந்தரி ஒரு குற்ற உணர்வுடன் சிரிக்க, அவள் கண்களில் தெரிந்த, காதலின் தாபத்தையும், ஏக்கத்தையும் பார்த்த குமாருக்கு உள்ளுக்குள் போதை ஏறியது. "சுகா, என்னைப் பத்தி வேற என்னத் தெரியணும் உனக்கு?" "நான் சொல்றேங்க ... அவ எதுக்கு இதெல்லாம் உங்க கிட்ட கேக்கிறான்னு?" "அம்மா ... அப்பா இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்திருக்கார்; என் கதையை சொல்லி, அவரை ஏம்மா நீ டிஸ்டர்ப் பண்றே?" "நீ சும்ம்மா இருடி; அவருக்கு இதெல்லாம் என்னைக்கு இருந்தாலும் தெரிஞ்சுதான் ஆவணும். நான் பட்ட கஷ்டத்தை அவரும் கொஞ்சம் படட்டுமே. பொண்ணை பெத்துட்டா மட்டும் போதுமா?" "சுந்தரி நீ சொல்லும்மா. நீ எதுவாயிருந்தாலும் என் கிட்ட சொல்லு. " "யாரோ ஒரு எடுபட்டவ, சுகன்யாவுக்கு சொத்து பத்து ஒண்ணும் கிடையாது ... ஏன்னு கேக்க, சொந்த பந்தம் ஒன்னும் கிடையாது, இவ உன் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்னு சொல்லிட்டா ... அது இவளுக்கு தெரிய வந்ததுலேருந்து மனசுக்குள்ளவே மருகிக்கிட்டு கிடக்கிறா." சுந்தரி கோபமாக பேசினாள். "சுகா என்னம்மா இது? யார் அப்படி சொன்னது? உனக்கு எந்த குறையும் இல்லேம்மா ... நீயா உன்னை எந்த விதத்துலேயும் தாழ்வா நெனைச்சுக்க வேண்டாம்" "என் ஆஃபீசர்ப்பா ... சாவித்திரின்னு பேரு ..." "அந்த அம்மா எதுக்கு உன்னை அப்படி சொல்லணும்" "பொறாமை தாங்க ... வேறேன்னா .." சுந்தரி குறுக்கில் பேசினாள். "புரியற மாதிரி சொல்லேன் ... சுந்து ..." "நம்ம சுகா, ஒரு பையனை லவ் பண்றாங்க. அந்த பையனும் இவ கூடத்தான் வேலை செய்துகிட்டு இருந்தான். அவனும் நம்ம பொண்ணை ரொம்பவே ஆசை படறான். ஆனா அவன் அம்மா, புள்ளையை தன் முந்தானையில முடிஞ்சு வெச்சிருக்கா. அவன் அந்தம்மா உக்காருன்னு உக்காருவான்; எழுந்துருன்னா எழுந்துப்பான். இவ ஆபீஸ்ல, இவளோட இம்மீடியட் பாஸ் சாவித்திரின்னு ஒருத்தி, அவ தன் பொண்ணுக்கு, அந்த பையனை முடிக்கணும்ன்னு, இவங்க ரெண்டு பேர் நடுவுல குழப்பம் பண்ணிகிட்டு இருக்கா. இவளையும் ஆபீசுல இண்டேரக்டா தொந்தரவு பண்றாளாம். இவங்களை சந்திக்க விடாம பண்ணணும்ன்னு நெனைச்சு, தன் அதிகாரத்தை யூஸ் பண்ணி, அந்த பையனை வெளியூருக்கு மாத்திட்டா. அந்த பையனோட அம்மாவும் இந்த சாவித்திரியும் ஃப்ரெண்ட்ஸ். " "ம்ம்ம் ... இன்ட்ரஸ்டிங் ..." "போங்கப்பா ... அந்த சாவித்திரி கிட்ட நான் படற அவஸ்தை எனக்குத்தான் தெரியும்" சுகன்யா அவரை முதுகில் மெதுவாக செல்லமாக அடித்தாள். "நம்ம சுகா, ஒரு வாழாவெட்டி வளர்த்த பொண்ணு; அப்பனும் ஆத்தாளும் வேற வேற ஜாதி. இப்ப அப்பா எங்கே இருக்காருன்னுகூட சுகன்யாவுக்கு தெரியாது. சுகா எதுவுமில்லாத அன்னாடங்காய்ச்சி குடும்பத்துலேருந்து வந்தவ. உறவுகாரங்கன்னு யாருமில்லாத அனாதை குடும்பம். பாக்கறதுக்கு செவப்பா, உடம்பு எடுப்பா, மூக்கும் முழியுமா இருந்தா போதுமா? வீட்டுக்கு வர மருமவளுக்கு, ஒரு வீடு, சொத்து சுகம், அப்படின்னு எதுவும் வேணாமா? இவ பின்னால உன் பையன் சுத்தலாமா? அந்த சாவித்திரி நம்ம குழந்தையைப் பத்தி இல்லாதையும் பொல்லாததையும், இவ லவ்வரோட அம்மா கிட்ட பேசி அவ மனசை குழப்பி வெச்சிருக்கா." "ட்ரான்ஸ்பர் ஆகி போன அந்த பையன் லீவுல சென்னைக்கு வந்தப்ப சுகா கிட்ட கேட்டிருக்கான் போல, உங்கப்பா எங்க இருக்கார்? அந்த சாவித்திரி சொல்றதுல எந்த அளவுக்கு உண்மைன்னு? இவ பதிலுக்கு அவனை, நீ என்னை கட்டிக்குவியா மாட்டியா? உனக்கு நான் வேணுமா இல்லை உன் அம்மா வேணுமா? இப்பவே சொல்லுன்னு கேட்டு இருக்கா." "அவன் தன் அம்மாவுக்கு பயந்துகிட்டு, சாவித்திரியோட பொண்ணை ஒப்புக்கு பாக்கறேன்னு சொல்லிட்டு அவ வீட்டுக்குப் போயிருக்கான். அங்க என்ன நடந்ததுன்னு இவளுக்கும் தெரியாது. அந்தப் பையன் வீட்டுக்கு திரும்பி வந்து, நீ சொன்னேன்னு அந்த பொண்ணைப் பாத்துட்டு வந்துட்டேன்; ஆனா நான் சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு, அம்மா கிட்ட பெரிய சண்டை போட்டானாம்." "ஏம்மா சுகா ... நீயே உன் லவ்வர் கிட்ட சாவித்திரி வீட்டுல என்ன நடந்ததுன்னு கேட்டுட வேண்டியதுதானே?" "ஏங்க முதல்ல நான் பேசி முடிச்சிடறேன்; அப்புறமா நீங்க அவளை கேளுங்க." "சரி ... சரி ... நீயே சொல்லு" "உங்களுக்கு ஞாபகமிருக்கா, நம்ம காலேஜ்ல நம்ம கூட வேலுன்னு படிச்சாரே ... அவர் ஆர்ட்ஸ் படிச்சார்; எல்லாம் அவங்களும் உங்க குடும்பத்துக்கு தூரத்து ஒறவு தான். மாயவரத்துல பொண்ணு எடுத்தாருங்களே அவருங்க. அவர் பொண்டாட்டி கீதா என் கூடத்தான் இப்ப பி.ஜி. டீச்சரா வேலை செய்யறா. நம்ம பொண்ணை அவங்க புள்ளைக்கு கட்டிக்கணும்ன்னு தினம் அவ என்னை நச்சரிக்கறா." "உங்க ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு, சுகாவை தன் புள்ளை சம்பத்துக்கு கேக்கறாங்க..." "யாரு லட்சுமி அத்தை பொண்ணு ராணியா? அவ நார்த்ல பாம்பேயிலத்தானே இருந்தா?" "அவளேதான்; ராணி தீடிர்ன்னு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு, சுந்தரி, உன் மேல எனக்கு எப்பவுமே கோபம் இல்லடி. நாங்கதான் இந்த ஊர்லேயே இல்லயே? நான் இருந்தா இப்படியெல்லாம் ஆக விட்டிருப்பேனான்னு பிட்டு போட்டாங்க. இப்ப அவங்க பையன் பெங்களூர்ல மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கறானாம். ஐ.டி.யில இருக்கானாம். ஊருக்கு வந்தப்ப எப்பவோ நம்ம பொண்ணை பாத்திருக்கான். அம்மா கிட்ட சொன்னானாம்; சுகாவை எனக்கு பிடிச்சிருக்கு; கேட்டுப் பாருங்கன்னு சொல்லியிருக்கான்." " நம்ம பொண்ணு சுகா இப்ப கை நிறைய சம்பாதிக்கறா. பாக்கறவங்க கண்ணுக்கு நெறைவா இருக்கா. நான் கஷ்டப்பட்டப்ப யாரும் என்னான்னு ஒரு வார்த்தை என்னை கேக்கலைங்க. ஆனா இப்ப என் பொண்ணு அழகா வளர்ந்து நிக்கறாளே ... நாலு பேரு என் கிட்ட வரத்தானேச் செய்வாங்க?" "ம்ம்ம் .... அதெல்லாம் இருக்கட்டும்; நீ என்ன பதில் சொன்னே அவங்களுக்கு?" "நமக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும், பொண்ணை பெத்தவரு நீங்க; உங்களை ஒரு வார்த்தை கேக்காமா, அதுவும் உங்க நெருங்கின உறவுகாரங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? பொறுமையா அவங்க சொல்றதையெல்லாம் காது குடுத்து கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்வேன் நான்? "ராணியோட வீட்டுக்காரர் இப்ப ரிடையர் ஆகி கிராமத்துல தான் இருக்காரு. உங்க மச்சான் ரகுவை மடக்கி மடக்கி, எப்பப் பாத்தாலும் ஒரே கட்ட பஞ்சாயத்து வெக்கிறாரு. உன் அக்கா கல்யாணத்தை நான் எதுக்கவே இல்லைப்பா. எதுத்தவன்ல்லாம் போய் சேர்ந்துட்டாங்க. ஜாதின்னு சும்மா வெட்டியா பேசறவனைப் பாத்தாலே எனக்கு புடிக்காது. உன் அக்கா சுந்தரி கிட்ட எடுத்து சொல்லு. நம்ம குழந்தை தனியா மெட்ராஸ்ல ஏன் கஷ்டப்படணும்; என் பையனுக்கு நான் கட்டிக்கறேங்கறாரு; உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு ரகு பதில் சொல்லியிருக்கான்." "சுந்தரி, உன் பொண்ணை அவ கட்டின புடவையோட என் வீட்டுக்கு அனுப்பி வைடி; நான் வேற என்ன உன்னை கேக்கப் போறேன். குமாருக்குன்னு இருக்கறதெல்லாம் இவளுக்குத்தானே அப்படிங்கறா உங்க அத்தைப் பொண்ணு." "ம்ம்ம் ... இவங்களுக்கு சரியான பதில் சொல்லித்தான் ஆகணும். நமக்கு நெருக்கமா இருக்கற உறவாச்சே இவங்க." "உங்க பொண்ணு என் பேச்சை இந்த விஷயத்துல கேக்கறதே கிடையாது." "அம்மா சும்மா சொல்லாதேம்ம்மா ... நான் உன் பேச்சை எப்பம்மா கேக்கலை? செல்வா கிட்ட சும்மா சும்மா பேசாதேன்னு நீ சொன்னே. ரெண்டு நாளாச்சு அவன் கிட்ட நான் இன்னும் பேசவே இல்லை தெரியுமா உனக்கு?" சுகன்யா வெடிக்க ஆரம்பித்தாள். "சுகா ... நீ சும்மா இரும்மா. இப்ப நானும் அம்மாவும் தானே பேசிக்கிட்டிருக்கோம்." "சுகா, நான் என்ன சொல்றேன்னா, நம்ம உறவு காரங்க நம்ம வீட்டுக்கு வந்தா, முகம் கொடுத்து பேசுன்னு சொல்றேன் ... வேற என்ன சொல்றேன்? எப்பவாது நீ ராணி அத்தை கிட்ட சிரிச்சு பேசி இருக்கியா? பாக்கறவங்க உன்னைப்பத்தி என்ன நெனப்பாங்க? உன்னை திமிர் பிடிச்சவன்னு நெனைச்சுடக்கூடாதும்மா." "என்னங்க, உங்க பொண்ணு, அம்மா, நீ கல்யாணப் பேச்சை எடுத்தா இந்த ஊருக்கே வரமாட்டேன்னு அடம் புடிச்சா. என்னா இப்படி பேசறாளேன்னு இவ மாமன் கேட்டதுக்கு, என் கூட வேலை செய்யறவனை ஆசைப்படறேன். நான் அவனைத்தான் கட்டிப்பேன்னு போன மாசம் என் கிட்ட அப்படி ஒரு சண்டை போட்டுட்டு இங்க வந்தா." "இவ மாமனும் இவ கூட சேர்ந்துகிட்டு, அக்கா நீ சும்மாயிரு, நான் அவளுக்கு புரிய மாதிரி சொல்றேன்னு சொல்லிட்டு, இப்ப இவ இஷ்டப்படியே இவ ஆசைப்படற பையனையே பண்ணி வெச்சுடலாம்ன்னு கூத்தடிக்கிறான்." "நான் ஆசைப்பட்ட பையனைத்தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டு வந்தவ, போன வாரம் அந்த பையனை சரியான சண்டைக்கு இழுத்து இருக்கா. என்னை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி என் அப்பனைப் பத்தி நீ கவலைப் பட்டியா? என் கையை புடிக்கறதுக்கு முன்னாடி என் அப்பன் யாருன்னு நீ கேட்டியா? இப்ப உங்க அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு என் அப்பா யாரு? என் சொத்து சுகம் என்னான்னு ஏன் கேக்கறே?இவங்களுக்குள்ள இப்ப ஒரே வாக்கு வாதம், சண்டை. எனக்கு இதையெல்லாம் கேட்டா உடம்பு நடுங்கி போவுது." "ஏண்டி, நீ உன் வயசுல உங்கப்பா அம்மாவை என்னமா சண்டைக்கு இழுத்தே? உன் பொண்ணு இப்ப உன்னை இழுக்கறா; ஹிஸ்டரி ரிபீட்ஸ் அவ்வளதானே?" குமார் சிரித்துக்கொண்டே சுந்தரியை சீண்டினார். "அப்பா .. அம்மாகிட்ட நான் வேணும்ன்னு சண்டைப் போட்டதே இல்லப்பா" "நீ சும்மா இருடி; ஒரு வாரம் முன்னாடி, நானும் ரகுவும் இவளைப் பாக்கறதுக்கு இங்க வந்தோம். அன்னைக்குத்தான் இவங்களுக்குள்ள சண்டை நடந்திருக்கு; என்னை மறந்துடு; உனக்கும் எனக்கும் ஒத்து வராது; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உங்கம்மா கூடவே போய் நீ இருடான்னு, அவன் கிட்ட வீராப்பா சொல்லிட்டு வந்துட்டா; அந்த பையன் தங்கச்சி இவளுக்கு போன் பண்ணா, நீ யாருடி நடுவுல நாட்டாமை; உங்க அண்ணனை எனக்கு யாருன்னே தெரியாதுன்னு அவளை வேற போட்டு வாங்கியிருக்கா உங்கப் பொண்ணு." "ம்ம்ம் ... தமிழ் சினிமா கதை மாதிரி இல்ல போகுது நம்ம சுகா கதை" "இவளால தொட்டு பழகனவனை எப்படிங்க அவ்வள சீக்கிரம் மறந்துட முடியும்? நாள் பூரா அழுது அழுது இவ மூஞ்சி வீங்கி போய் கிடக்குது. வீட்டுக்கு வந்த இவளைப் பாத்ததும் என் வயிறு அப்படியே பத்தி எரிஞ்சுது. என்னாடின்னு கேட்டா மெதுவா ஒண்ணு ஓண்ணா சொல்றா." "நம்ம ரகு, அந்த பையன் கிட்ட பேசி பாக்கறேன்னுட்டு, அவனை நம்ம வீட்டுக்கு இங்க வாப்பான்னு கூப்பிட்டான். நம்ம போறாத காலம், பாவம் அவன் இங்க வர்ற நேரம் பாத்து, வழியில ஒரு ட்ரக்ல அடிபட்டு, ரோடுல கிடந்து இருக்கான். போலீஸ் அவனை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நம்ம சுகன்யாவுக்கு தகவல் சொன்னாங்க. அவங்க அப்பன் ஆத்தா ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள, இவ தட தடன்னு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவனுக்கு இவ ரத்தத்தை குடுத்து பொழைக்க வெச்சி, அம்பதாயிரம் பணத்தையும், ஆஸ்பத்திரியில அட்வான்ஸ்ஸா கட்டியிருக்கா.." "இவளைத் தனியா அனுப்ப முடியுமா? நாங்க ரெண்டு பேரும் இவ கூடவே ஆஸ்பத்திரிக்கு போனோம். அவன் கண்ணை தொறந்து பாத்ததும், அவன் அம்மா இவளை பாத்து என் புள்ளையை நீ பொழைக்க வெச்சிட்டே! உனக்கு ரொம்ப நன்றி; ஆனா இங்கேயிருந்து நீ போயிடு. என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துடுன்னு,, எங்க எதிர்லேயே கை எடுத்து இவளை கும்பிட்டு டயலாக் பேசினா. உங்கப் பொண்ணாச்சே? இவளும் ரோஷமா உன் புள்ளைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லே. நான் அவனை உனக்கே தாரை வாத்து கொடுக்கறேன்னு உளறி கொட்டிட்டு வெளியில வந்துட்டா." "சும்மா இருடி நீ; அந்த காலத்துல நீ என்னை காதலிக்கறேன்னு காலையில சொல்லுவே; மதியானம் இல்லேன்னு சொல்லுவே; எத்தனை வாட்டி இந்த மாதிரி நீ பேசி பேசி, என்னை தாளிச்சு எடுத்து இருப்பே? எத்தனை வாட்டி திரும்பி வந்து ஐ லவ் யூன்னு சொல்லியிருப்பே? எல்லாம் உனக்கு மறந்து போச்சா? ரெண்டு நாளு, நான் உன் கிட்ட பேசாமா இருந்தா, எத்தனை பேரு மூலமா நீ தூது விட்டேங்கற கதையெல்லாம், நான் என் பொண்ணுகிட்ட சொல்லவா இப்ப? என் பொண்ணை நீ ஒண்ணும் கொறை சொல்ல வேணாம், சொல்லிட்டேன் ... ஆமாம்." "ரெண்டு நாள் கூட இருந்து பாருங்க, அப்புறம் தெரியும் உங்க பொண்ணு லட்சணம்." "யம்மா ... நீ சும்மா பேசாதே! ... நானும் சொல்லிட்டேன்," மீண்டும் சுகன்யா அவர்கள் பேச்சில் குறுக்கில் புகுந்தாள். "சுந்து ... அந்த பையனோட அப்பா என்ன சொல்றார் ..." "அந்த மனுஷன் சாதுவா, நல்ல மனுஷனாத்தான் தெரியறார். ரகுவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்துச்சு. நான் தான் சும்மா இருடான்னு அன்னைக்கு அடக்கி வெச்சேன். நம்ம பொண்ணு அவன் கூட பழகிட்டாளேன்னு பாக்க வேண்டியதா போச்சு; அப்புறம் அந்த மனுஷன் எல்லார் எதிர்லேயும் எங்க ரெண்டு பேரையும் கையெடுத்து கும்பிட்டு, என் பொண்டாட்டி சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அவ இப்படி பேசி இருக்கக் கூடாது. அவ நல்லவதான். கொஞ்சம் முன் கோபி. நீங்க தப்பா நினைக்காதீங்கன்னார்." "அதெல்லாம் சரிம்ம்மா; அவரு இவங்க காதலுக்கு ஒத்து வராறா இல்லையா? "ம்ம்ம். அவரு ஒத்து வர்ற மாதிரிதான் எனக்கு படுது. என் பையன் கொஞ்சம் உடம்பு தேறி வீட்டுக்கு வரட்டும். உங்க கிட்ட நான் நிதானமா பேசறேன்னு சொன்னார். நாங்களும் நீங்க சொல்றது சரி .. எங்க வீட்டுக்கு நீங்க ஒரு தரம் முறைப்படி வாங்க அப்படின்னு சொன்னோம். சரின்னாவர், எங்க ரெண்டு பேரையும் தன் கார்ல வீட்டுக்கு அனுப்பி வெச்சார். அன்னைக்குத்தான் ரகு ஊருக்கு போனான். "இன்னைக்கு புதன், இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வெள்ளிக்கிழமை, இவளை கூப்பிட்டுக்கிட்டு நான் நம்ம ஊருக்கு போவலாம்ன்னு இருக்கேன். ரகுவும் ஊருக்கு வர்ரேன்னு சொல்லியிருக்கான். இவ கிராமத்துக்கு வந்து ஒரு பத்து நாளு இருந்தா, இவ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ன்னு பாக்கிறேன். அங்க இவ ஊருல இருக்கும் போது, அந்த பையனோட அப்பாவுக்கு போன் பண்ணலாம்னு ரகு சொல்லியிருக்கான்." "ஆனா அங்க போனா உங்க அத்தை பொண்ணுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இந்த கதையெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. இப்பத்தான் நம்ம உறவு காரங்க கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்டுக்கு வந்து போறாங்கா; இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க என்ன டென்ஷன் கொடுப்பாங்களோன்னு நெனைச்சா எனக்கு பயமா இருக்கு?" "ஏண்டி சுந்து நீ என்ன பேசற? சுகன்யாவுக்கு ஒருத்தனை புடிச்சு போச்சு. அவங்க தொட்டு பழகினாங்கன்னு வேற சொல்றே. அப்புறம் சம்பத்துக்கு எப்படி இவளை கட்டி வெக்கறது? எங்க அத்தை பொண்ணை நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். இன்னொரு தரம் அவங்க உன் கிட்ட வந்தா என் நெம்பரை குடுத்து என் கிட்ட பேச சொல்லு." "சரிங்க ... அதைத்தான் நானும் சொல்றேன்; நம்ம குடும்பத்து ஆம்பிளை நீங்க வந்துட்டீங்க. இனிமே உங்க பாடு; உங்க பொண்ணு பாடு; நீங்க உங்க பொண்ணை யாருக்கு கட்டி வெக்கறீங்களோ, கட்டி வெய்யுங்க. அவ சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான் எனக்கு வேணும். இவ்வளவு நாள் தனியா உங்க பொண்ணை வெச்சுக்கிட்டு சமாளிச்சுட்டேன். இப்ப என்னால முடியல. இதுக்கு மேல என்னை விட்டுடுங்க." சுந்தரி நீளமாக மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள். சுகன்யா ஏதும் பேசாமல் தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சை மேலும் கீழுமாக தள்ளி குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தாள். "அப்பா ... அந்த சம்பத்து ... மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கட்டும் ... இல்ல ரெண்டு லட்சம் சம்பாதிக்கட்டும்; உங்க சொந்தமா இருக்கட்டும்; இல்ல அம்மா சொந்தமாவே இருக்கட்டும்; நம்ம சொந்தத்துல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ... இப்பவே, இங்கேயே உங்க கிட்ட நான் சொல்லிடறேன்... ஊர்ல வந்து அவன் உன்னை பாக்க வரான், சும்மா பேருக்கு உக்காந்து அவங்க கிட்டு பேசும்மான்னு ... என்னை யாரும் டென்ஷன் பண்ணக்கூடாது ... "சுகன்யா தீர்மானமாக பேசினாள்."சுந்து ... எனக்கு ஒரு கப் சாயா குடிக்கணும் போல இருக்கு, நார்த்லயே கொஞ்ச நாளா இருந்ததாலே இந்த டீ குடிக்கற பழக்கம் என்னை தொத்திக்கிச்சு ... ஒரு கப் போட்டுத் தரயாம்மா...?" "சுகா உனக்கும் வேணுமாடி? "ம்ம்ம் ... குடும்மா" "உன் லவ்வர் பேரு என்னம்மா?" "செல்வா...ப்பா" "சுகா ..." நீ இந்த செல்வாவை உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறியா?" இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்? சுகன்யா மட்டுமல்லாமல், சுந்தரியும் தன் கணவனை ஒரு வினாடி வியப்புடன் பார்த்தாள். "என்னப்பா ... இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க; அவரை நான் மனசார நேசிக்கிறேன்ம்பா!" "சாரிம்மா ... உனக்கு என் கேள்வி பைத்தியகாரத்தனமாப் பட்டிருக்கலாம். நீ அவனுக்கு உன் ரத்தத்தை குடுத்தேன்னு அம்மா சொன்னாங்க; அவன் இடத்துல நீ இருந்திருந்தா, அவனும் உனக்கு தன்னோட ரத்தத்தை கொடுத்து உன்னை காப்பாத்தனும்னு துடிச்சிருக்கலாம். அவன் மேல உனக்கு இருக்கற நேசம், பாசம், காதல், எல்லாம் சரி; நீ படிச்ச பொண்ணு. நீ பேப்பர்ல, ஏதாவது மெகசீன்ல படிச்சிருக்கலாம் ... இல்லன்னா யார் மூலமாவது உனக்குத் தெரிஞ்சிருக்கலாம்." "இப்பல்லாம் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே வீட்டுல சேர்ந்து இருக்கறாங்க; எல்லாத் தேவைகளையும் பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பூர்த்தி பண்ணிக்கறாங்க; தங்களுடைய ஆசைகளை ஒருத்தர் கிட்ட ஒருத்தர் ஷேர் செய்துக்கறாங்க. கல்யாணமான தம்பதிகளைப் போல படுக்கையையும் பகிர்ந்துக்கறாங்க; ஆகற செலவையும் தங்களுக்குள்ள டிவைட் பண்ணிக்கறாங்க." "கொஞ்ச நாள் கழிச்சு, ஒருத்தரோட எதிர் பார்ப்புகளை அடுத்தவரால பூர்த்தி செய்ய முடியலேன்னா, அவர்களுக்கு நடுவுல முரண்பாடுகள் அதிகமாக இருந்தால், சத்தமில்லாமா ரெண்டு பேரும் வேற வேற திசையை பாத்துக்கிட்டு போறதுங்கற கான்செப்ட் இப்ப நம்ம ஊர்லேயேயும் வளர ஆரம்பிச்சு இருக்கு." "இவர்கள் நடுவிலும் காதல், பாசம், நேசம், பற்று, பிடிப்பு, காமம் எல்லாம் இருக்கு ... என்ன இந்த ஏற்பாட்டுல எமோஷனல் "பாண்டிங்" கொஞ்சம் குறைவா இருக்கலாம். இது நம்ம சமூகத்தால இன்னும் முழுமையா அங்கீகரிக்கப்படாத ஒரு விஷயமா இருக்கு. இவங்கள்லேயே, சில ஜோடிகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாகவும் வாழறாங்க." "காதலிக்கும் போது ஒருத்தருக்கு அடுத்தவரோட குறைகள் சட்டுன்னு தெரியறது இல்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழறப்ப, உடம்பு மேல இருக்கற கவர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கறப்ப, கணவனுக்கு தன் மனைவிகிட்ட இருக்கற குறைகளும், மனைவிக்கு தன் புருஷனோட குறைகளும் புரியும் போது, தினசரி வாழ்க்கையில உரசல்கள் ஆரம்பிக்கும்." "இந்த காலத்துல ரெண்டுபேரும் வேலைக்கு போறாங்க; அதனால ஒவ்வொரு காரியத்துலேயும் ரெண்டு பேரும் பங்கெடுத்தே ஆகணுங்கற நிர்பந்தம் இருக்கு. அதனால வீட்டுல எல்லா காரியங்களையும் ஆரம்பத்துல நீயே செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்." "அப்பா ... எது எப்படியிருந்தாலும் செல்வா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனைச்சுக் கூட பாக்க முடியலைப்பா. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, முறையான, அண்டர்லைன் பண்ணிக்குங்க, முறையான ஒரு வாழ்க்கையை வாழணும்ன்னுதான் நான் அவர் கூட பழகறேன்." "அவரும் அந்த எண்ணத்துலத்தான் என் கூட பழகிக்கிட்டு இருக்கார். ஆனா சில நேரங்கள்ல, இப்பவே அவர் மேல எனக்கு சட்டுன்னு கோபம் வருது. அவருடைய சில குணங்கள் எனக்கு சுத்தமா பிடிக்கலைப்பா. இதை சொல்லிக்காட்டி நான் அவர்கிட்ட சண்டை போட்டிருக்கேன்." "ம்ம்ம் ...." "அவரால எந்த விஷயத்துலேயும், சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியலைப்பா. எல்லாத்துக்கும் பயப்படறார்ப்பா. இப்படி பண்ணா அவங்க என்ன நினைப்பாங்க ... அப்படி பண்ணா இப்படி ஆயிடுமோ? எப்பவும் குழம்பிக்கிட்டேதான் இருப்பார்." "அவரோட அம்மாவை கேக்காம எந்த காரியத்தையும் அவரால செய்ய முடியாதுப்பா. அவருக்கு அவர் அம்மா மேல கண்டிப்பா ஆசையிருக்கும். இதை நான் தப்புன்னு சொல்லலை. எனக்கும்தான் என் அம்மா மேல அளவில்லாத பிரியம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் எனக்கு பிடிக்கலைன்னா, அம்மாகிட்ட நான் பட்டுன்னு சொல்லிடுவேன். தன் மனசுல இருக்கறதை தன் அம்மாகிட்ட சொல்லக்கூட பயப்பட்டா எப்படிப்பா? எல்லாத்துக்கும் மேல, அவரா எதையும் இனிஷியேடிவ் எடுத்து செய்யறது இல்லேப்பா. "ம்ம்ம் ... எனி எக்ஸாம்பிள்" "என் அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் குடுக்கலைன்னா, நாம என்ன பண்றதுன்னு அப்பப்ப கேக்கிறார். இந்த கேள்வியை அவர் இது வரைக்கும் நூறு தரம் என் கிட்ட கேட்டாச்சு. நானும் அத்தனை தரம் பதில் சொல்லியாச்சு." "நீ என்ன பதில் சொன்னே?" "நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்; உங்கம்மா கிட்ட பேசி அவங்களை நம்ம பக்கம் திருப்ப முயற்சி செய்யுங்க; அவங்க ஒத்து வரவேயில்லன்னா என்ன செய்யமுடியும்? அப்ப, நீங்க போட்டிருக்கற பேண்ட், சட்டையோட என் வீட்டுக்கு வந்துடுங்க; மீதியை நான் பாத்துக்கறேன்னேன். அதுக்கு, நான் எப்படி உங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்க முடியும்ன்னு கேக்கறாரு? இதைக் கேட்டா எனக்கு எரிச்சல்தான் வருது?" "சரி நான் உங்க வீட்டுக்கு வந்துடறேங்கறேன் ... அதுக்கும் கொஞ்சம் பொறும்மா. எங்க அப்பாவுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு; எங்க அம்மா மனசும் மாறிடும். அவங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதத்தோடத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னும் சொல்றார். எது வந்தாலும் நான் பாத்துக்கறேன். நீ தைரியமா இருன்னு சொல்ற துணிவு அவருக்கு வரலை. அவருக்கு என் மேல ஆசையும் இருக்கு. கூடவே அவங்க அம்மா கிட்ட பயமும் இருக்கு. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை; என்னப் பண்றதுன்னு எனக்குப் புரியலை. " "நேத்து ராத்திரி எட்டு மணி வாக்குல ஆஸ்பத்திரியில நான் அவரோட ரூம்ல தனியா இருந்தேன். அப்ப என் பாஸ் சாவித்திரி அவரை பாக்கறதுக்கு வந்தா. என்னை அங்க அந்த நேரத்துல செல்வா பக்கத்துல அவங்க எதிர்பார்க்கல. போகும் போது சொன்னாங்க, "செல்வா நான் உங்கிட்ட சில விஷயம் தனியா பேசணும்." "வீ ஆர் இன் லவ்; அந்த லேடிக்கு இது நல்லாத் தெரியும். நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கோம்ன்னும் தெரியும். இவர் என்ன சொல்லணும்பா? எதுவாயிருந்தாலும் நீங்க சுகன்யா முன்னாடி பேசலாம்; இங்கேயே பேசுங்கன்னு சொல்லாம, அவ எதிர்ல பொத்திக்கிட்டு இருந்தவரு, அவ போனதுக்கு அப்புறம் என்னைக் கொடையறாரு." "இவங்க எதுக்கு என் கிட்ட தனியா பேசணும்? இவங்க பொண்ணுதான் என்னை அவங்க வீட்டுக்கு போனப்ப ஹுமிலியேட் பண்ணி அனுப்பிச்சாளே? இப்ப இந்தம்மா என் கிட்ட என்ன பேசணும்ன்னு நினைக்கிறாங்க? என்னைத் திருப்பியும் அவ பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்களா? இதை எங்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? சாவித்திரியை நான் ஒரு புடி புடிக்கிறேன்னு சொல்றேன்; அதுக்கும் வேணாங்கறாரு. ஏண்டா காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு இருக்குப்பா." "இதுதாம்பா எனக்கு செல்வாகிட்ட சுத்தமா புடிக்கலை. வழ வழா கொழ கொழன்னு, சரியான வெண்டைக்காய்ப்பா அவரு ... அதுவும் மோர்க்குழம்புல போட்ட வெண்டைக்காய்ப்பா அவரு." "வேற எதாவது, உனக்கு அவன் கிட்ட பிடிக்காம இருக்கலாம் ..." அவர் இழுத்தார். "அப்பா முதல் நாள் நானும், அவரும் தனியா மீட் பண்ண அன்னைக்கு முதல்ல கோயிலுக்குத்தான் போனோம்; அப்புறம் பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம்; நேரமாச்சு ... நான் போயிட்டு வர்றேன்னு சொன்னேன். என்னடா, இவ எப்படி தனியா போவா, நான் கொண்டு விடட்டும்மான்னு கூட கேக்கலே. சரி போயிட்டு வான்னு சொல்லிட்டார். " "அப்புறம், அவர் ஃப்ரெண்ட் சீனுன்னு இருக்கான், அவன் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? இருட்டாயிடுச்சே; நீ அந்த பொண்ணை லவ் பண்றன்னு சொல்றே; அட்லீஸ்ட் வீட்டுக்கு பக்கத்துலயாவது கொண்டு போய் விட வேணாமான்னு திட்டினதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி, நான் பன்னது தப்பும்மா .. சாரிம்மாங்கறாரு." "இவருக்காக தினம் ஆஃபீசுலேருந்து, ஈவினிங் ஆஸ்பத்திரிக்கு ஒடறேன். ஏன் ஓடறேன்; இப்படி இருக்கற ஒருத்தனுக்காக நான் ஓடறேன்; அதான் ஏன்னு எனக்கும் புரியலை. நீ எப்படிம்மா இருக்கேன்னு ஒரு வார்த்தை கேக்கலை; நேத்துலேருந்து ஒரு போன் பண்ணலப்பா எனக்கு; அவருக்கு என் மேல ரொம்ப ஆசைப்பா; ஆனா அதை வெளியில சொல்லலைன்னா; அவரோட பிரியம் எனக்கு எப்படிப்பா தெரியும்?" சுகன்யாவின் குரல் கம்ம ஆரம்பித்தது. குமாரசுவாமி ஒரு வினாடி அவள் பேசியதை கேட்டதும் வாய்விட்டு சிரித்தார். பின் கேட்டார். "உன் சொல்வாவோட முழு பேரு என்னம்மா?" "தமிழ்செல்வன்..ம்பா ... நீங்க எதுக்குப்பா நான் சொன்னதெல்லாத்தையும் கேட்டுட்டு சிரிக்கறீங்க" "நானும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்கம்மாவும் நீ சொன்ன அத்தனை குறையும் என் மேல சொல்லியிருக்கா; உங்கம்மாவை கேட்டுப்பாரு; உண்டா - இல்லையான்னு; அதான் எனக்கு சிரிப்பு வருது?" "ஆமா ... என் குழந்தையை ஏன் இப்ப அழுவ வெக்கறீங்க? உங்க கதையை இப்ப எவன் கேட்டான்?" சுந்தரி அவரை தன் கண்ணை உருட்டி பார்த்து முறைத்தாள். முறைத்துக் கொண்டே அவரிடம் சாய் கோப்பையை நீட்டினாள். "உன் ஆளோட அப்பா பேரு என்னடா செல்லம்? அவர் என்ன பண்றார்? சுந்தரி கொடுத்த டீயை வாங்கி அவர் ருசித்து உறிஞ்ச ஆரம்பித்தார். "சுந்தரி ... சாய் நல்லா இருக்குடி ... ஏலக்காய் நசுக்கிப் போட்டியா?" சொன்னவர் தன் பெண்ணின் காதில் மெதுவாக கிசுகிசுத்தார். இப்ப இந்த டீயைப் பத்தி நான் எதுவும் சொல்லலேன்னா, உங்கம்மா என் கிட்ட முறுக்கிக்குவா ... என் வயசு அம்பது ... உன் செல்வா வயசு இருபத்தஞ்சு..." குமார் மீண்டும் சிரித்தார். "கட்டிக்கிட்ட பொம்பளைகிட்ட எப்படி பேசணும்; அதுவும் எந்த நேரத்துல பேசணும்; எப்படி பேசக்கூடாது; என் மனைவியோட விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புகள்; என்னன்னு மெதுவாத்தான் எனக்கு புரிஞ்சுது; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, மே பீ ருட்டீன் இஷ்யூஸ், ஒரு தலையாட்டல், அவளை அப்ரிஷியேட் பண்ற மாதிரி; ஒரு சின்ன புன்முறுவல்; இந்த யுக்திகள், தந்திரங்கள், இதெல்லாம் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சுத்தாம்மா எனக்கும் புரிஞ்சுது; உன் செல்வாவும் இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்குவாம்மா." "மே பீ அவன் செல் - சிம் கெட்டுப் போய் இருக்கலாம்; ஆஸ்பத்திரியில இருக்கான்; ரீ சார்ஜ் பண்ண வேண்டி இருக்கலாம். ஏன் ... இன்ஸ்ட்ருமெண்ட் கூட திருடு போயிருக்கலாம்; உங்கிட்ட பேச நினைக்கும் போது வேற யாராவது கூட இருந்திருக்கலாம்... வெய்ட் ... பொறுத்துப் பாரு; நேத்துத்தான் அவனைப் பாத்து பேசியிருக்கே; கூட இருந்து இருக்கே; முழுசா ஒரு நாள் ஆகலே; அதுக்குள்ள அவன் உன் கிட்ட பேசலேன்னு கோபப்பட்டா எப்படி? ம்ம்ம்... டோண்ட் வொர்ரி! இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கவலைப்பட்டு, உன் வாழ்க்கையின் இனிமையான நேரத்தை வீணாக்கிடாதே." "சரிப்ப்பா" "அம்மா சொல்ற மாதிரி, நீ மட்டுமே நெருங்கி நெருங்கி போனாலும் அவனுக்கு உன் மேல ஒரு சலிப்பு வந்துடும்; நம்ம சுகன்யாதானே ... இட்ஸ் ஓ.கே அப்படின்னு எடுத்துக்குவான்; பழக பழக பாலும் புளிக்கும்ன்னு ஏன் சொல்றாங்க? நம்ம உடம்புக்கு வெய்யிலோட சூடு தேவை; அதுக்காக வெயில்ல நின்னு உடம்பை சுட்டுக்கறதா?கூடாது; வாழ்க்கையில புத்தர் சொன்ன மிடில் ஆஃப் த ரோட் ஆட்டிட்யூட் வெச்சுக்கணும்" "இப்ப நீங்க அவ காதுல என்னைப் பாத்து பாதது என்ன முணுமுணுக்கிறீங்க?" சுந்தரி போலியான கோபத்துடன் அவர்களை நெருங்கினாள். "உன்னைப் பத்தி பேசிட்டு, திரும்பவும் நான் எங்கே போறது? "சரிப்பா ... நீங்க சொல்றது எனக்கு புரியுது." "குட் கேர்ள் ... அவன் அப்பாவைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தே நீ" செல்வாவோட அப்பா பேரு நடராஜன்; அவரு சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபிசரா, கங்கூலி அண்ட் கங்கூலிங்கற, ஒரு ஃப்ரைவேட் கம்பெனியில வொர்க் பண்றார். அவரோட அம்மா பேரு மல்லிகா, ஹவுஸ் மேக்கரா இருக்காங்க; செல்வா தங்கை பேரு மீனாட்சி; செல்லமா அவளை மீனான்னு கூப்பிடுவாங்கப்பா." "ஒரு தரம் நான் அவகிட்ட அவசரப்பட்டு சண்டை போட்டுட்டேன். ஆனா அவ இப்ப எனக்கு நல்ல ஃப்ரெண்டுப்பா; ரொம்ப ரொம்ப ஸ்வீட் கேர்ள்ப்பா; அவங்க இந்திரா நகர்ல, சொந்த வீட்டுல இருக்காங்க. எனக்காக அவங்க வீட்டுல அவங்க அம்மாகிட்ட சண்டை போட்டு இருக்கா. அவங்க கார் வெச்சிருக்காங்க." சுகன்யாவும் தன் டீயை உறிஞ்ச ஆரம்பித்தாள். சுகன்யா, நடராஜன் பேரையும், அவர் குடும்பத்தினர் ஒவ்வொருத்தரின் பேரையும் சொன்னபோது, குமாரசுவாமி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனார். ஆண்டவா, நீ எப்படியெல்லாம் என் வாழ்க்கையில விளையாடறே? இதுக்கு என்ன அர்த்தம்? சில வினாடிகள் அவர் மவுனமாக இருந்தார். "என்னங்க, ஒரு விஷயம் நான் சொல்ல மறந்துட்டேங்க. ஹாஸ்பெட்டல்ல செல்வாவுக்கு நினைவு வந்தவுடனே முதல்ல அவன் வாயில வந்த வார்த்தையே "சுகன்யா". "சுகன்யாவை நான் பார்க்கணும்." நம்ம சுகன்யாவைத்தான் முதல்ல பாக்கணும்ன்னு அவன் சொன்னதா டாக்டர் சொன்னார்." "கடைசியா நானும் ரகுவும் ஐ.சீ.யூவுல அவனைப் பார்க்க போனோம். எங்க எதிர்லேயே, நம்ம சுகா கையை எடுத்து தன் மார்ல வெச்சிக்கிட்டாங்க. அவனால அப்ப பேசவே முடியலை. வலியில துடிச்சிக்கிட்டிருந்தான். அவன் கண்களை பாத்தேன். அதுல பொய், பாசாங்கு எதுவும் இல்லைங்க. அப்ப அந்த நேரத்துல, நம்ம பொண்ணு அவன் பக்கத்துல இருக்கறதைத்தான், அவன் விரும்பறான்னு அவன் மூஞ்சியில எழுதி ஒட்டியிருந்துதுங்க. அந்தப் பையன் நம்ம பொண்ணை நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். சும்மா டயம் பாஸ்க்காக நம்ம பொண்ணு பின்னால சுத்தலீங்க. இது என்னோட ரீடிங். " "உன் பொண்ணு அவனை ஆசைபட்டுடாளேன்னு சொல்லாதே. அவனை உனக்கு நிஜமா பிடிச்சிருக்கா?" "ஆமாங்க ... எனக்கு அவனை பிடிச்சிருக்குங்க." "ரகு என்ன சொல்றான்" "அவனுக்கும் செல்வாவை பிடிச்சிருக்குங்க." "அப்ப நடராஜனைப் பாத்து முடிவா என்ன சொல்றீங்கன்னு கேட்டுடட்டுமா?" "நீங்க இப்படி ஒரே வழியா அவசரப் பட்டா எப்படீங்க? நீங்க இன்னும் அவனை பாக்கலையே?" "சுந்து ... சுகன்யாவுக்கு செல்வாவைப் பிடிச்சிருக்கு; இப்பத்தான் உன் பொண்ணு தெளிவா சொன்னா நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு; அந்த பையனுக்கும் நம்ம சுகாவை பிடிச்சிருக்கு; செல்வாவோட அப்பாவுக்கும் நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு நீ சொல்றே; அவனோட அம்மாவை அவன் தான் கன்வின்ஸ் பண்ணணும். " "உங்க எல்லோருக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. அதனால செல்வாவை எனக்கு பிடிச்சவனா நானும் ஏத்துக்கறேன்; அவ்வளவு தானே? யாருகிட்ட தான் குறையில்லை? சுகன்யா அவன் கிட்ட இருக்கற குறைகள்ன்னு சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்கள்; வாழ்க்கையில அடிபட்டா, அவன் போக்கும் கொஞ்சம் கொஞ்சமா மாறிடும்." "அப்பா நீங்களும் அவரை ஒரு தரம் பாத்துட்டு உங்க விருப்பத்தைச் சொல்லுங்கப்பா; அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கும்.." சுகன்யா அவர் கையை பிடித்துக்கொண்டாள்."சுகா, இன்னும் கொஞ்ச நேரத்துல அவனைத்தான் நான் பார்க்கப்போறேன்." "அப்பா நீங்க என்ன சொல்றீங்கப்பா?" சுகன்யாவும், சுந்தரியும் அவர் சொன்னதைக் கேட்டு ஒரு வினாடி திகைத்தார்கள். சுகன்யாவுக்கு தன் தகப்பன் என்ன சொல்கிறார் என சுத்தமாகப் புரியவில்லை. "சுகா! இன்னைக்கு நடக்கறதெல்லாம், சினிமாவுல; சீரியல்ல; நான் படிக்கற கதைகள்ல்ல வர்ற மாதிரி விசித்திரமா இருக்குன்னு, நீ காலையில சொன்னே; இப்ப நான் சொல்றேன், உண்மையிலேயே நேத்துலேருந்து என் வாழ்க்கையில, ஒண்ணு பின்னால ஒண்ணா நடக்கற நிகழ்ச்சிகளை பாக்கறப்போ, எனக்கும் நீ சொன்ன அந்த எண்ணம்தான் வருது." "புரியற மாதிரி சொல்லுங்க" சுகன்யாவும், சுந்தரியும் ஒரே குரலில் பேசினார்கள். "சுகா, கங்கூலி அண்ட் கங்கூலிங்கற கம்பெனியிலத்தான் நான் ப்ராஞ்ச் மேனேஜரா இருக்கேன். அந்த நடராஜன் என் கீழத்தான், என் கம்பெனியிலத்தான், சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசரா வொர்க் பண்றார். ரொம்ப நேர்மையான மனுஷன். கை ரொம்ப ரொம்ப சுத்தம். கம்பெனி பணத்துல, ஒரு பைசா வீணா செலவு பண்ண விட மாட்டார். அவர் கையெழுத்து இருக்கற பேப்பர் எங்கிட்ட வந்தா, நான் படிக்காமலே கையெழுத்துப் போடுவேன் ... அப்படி ஒரு சுத்தமான மனுஷன். நேத்து ராத்திரி நான் அவர் வீட்டுலத்தான் டின்னர் சாப்பிட்டேன். " "மல்லிகா என்னை அவங்க புருஷனுக்கு ஆபீசரா பார்க்கலை. தன் கணவரோட ஒரு நல்ல நண்பராகத்தான் என்னை நடத்தினாங்க. மல்லிகாவும், அவங்க பொண்ணு மீனாவும் மனசார நேத்து ஓடி ஓடி என்னை உபசரிச்சாங்க. அந்தம்மாவுக்கு கை மட்டும் தாராளமில்லே, அவங்க மனசும் தாராளமானதுன்னுத்தான் நான் நினைக்கிறேன்." "நிஜமாவே நீங்க சொல்ற இந்த விஷயம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரேஞ்சாத்தான் இருக்குப்பா ..." "அவங்க பையன் தமிழ்செல்வன், ஒரு ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கறதா அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியவந்தது. இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில அவங்க வீட்டுக்கு போனதுக்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். மீனாவும், மல்லிகாவும் பகலெல்லாம், உன் செல்வா கூட இருந்துட்டு, நான் சாப்பிட வரேன்னு நடராஜன் சொன்னதும், அவனை தனியா விட்டுட்டு, எனக்காக வீட்டுக்கு வந்து விருந்து தயார் பண்ணியிருக்காங்க." "ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுதான் பதம் பாக்கணும்மா. நான் நடராஜனை பர்ஸனலாவும், அவருக்கு நான் ஆஃபீசருங்கற ஹோதாவிலேயும் அஞ்சு வருஷமா பதம் பாத்துக்கிட்டு இருக்கேம்மா. அவர் மகன் செல்வாவை நான் பதம் பார்க்க வேண்டாம்மா .. அவனும் உன்னை மாதிரி சின்னப் பையன் தானேம்மா... அனுபவமில்லாதவன்தானே ... நாளடைவில அவனுக்கும் பக்குவம் வந்துடும்; எல்லாம் சரியா போயிடும். கவலைப் படாதே." "யாரோ உள்நோக்கத்தோட உன்னைப் பத்தி சொன்னதை வெச்சி மல்லிகா உன்னைத் தவறா மதிப்பிட்டிருக்கலாம். அவங்க வீட்டுல போய் நீ வாழணும். உனக்காக நான் அவங்க கிட்ட, உன் தந்தையா போய் ஒரு தரம் பேசிப் பார்க்கிறேன். அவங்க மனசுல உன்னைப் பத்தி இருக்கற தப்பான அபிப்பிராயத்தை மாத்த நான் முயற்சி பண்றேன். நீ நல்லா இருக்கணும்ன்னு உங்கம்மா நினைக்கிற மாதிரி அவங்க தன் பிள்ளைக்கு ஒரு நல்ல பெண் மனைவியா வரணும்ன்னு நெனைக்கறதுல தப்பே இல்லை. " "அப்பா ... ரொம்ப தேங்க்ஸ்ப்பா ..." "எதுக்கும்மா ... தேங்க்ஸ் ...? "நீங்க செல்வாவை பார்க்காமலே அவரை உங்க மாப்பிளையா ஏத்துக்கறேன்னு அப்ரூவ் பண்ணதுக்குதாம்பா ... இந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேம்பா. நீங்க அவரைப் பாத்துட்டு சொல்லுங்கப்பா - என் செலக்ஷன் எப்படீன்னு" "சுந்தரி ... நீ சிம்பிளா ஒரு சமையல் பண்ணி வைம்மா; நான் அந்தப் பையனை பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன். எனக்காக நடராஜன் அங்க ஆஸ்பத்திரியில காத்துக்கிட்டு இருப்பார். திரும்பி வந்து நான் இன்னைக்கு உன் கையாலத்தான் சாப்பிடப் போறேன்; சாப்பிட்டுட்டு இங்கேயே தங்கிட்டு, நாளைக்கு காலையில அம்பாளை கட்டாயம் தரிசனம் பண்ணியே ஆகணும்..." "சரிங்க ..." "சுகா, நீயும் என் கூட வர்றயாமா?" "எதுக்குங்க ... தினம் தினம் இவ அங்க ஏன் போகணுங்க; நீங்க மட்டும் போய்ட்டு வாங்களேன் ..." சுந்தரி குறுக்கிட்டாள். "அப்பா .. நிஜம்மாத்தான் கூப்பிடறீங்களா? ... இல்ல கிண்டல் பண்றீங்களா?" "அயாம் சீரியஸ்; நாட் ஜோக்கிங்..." "எனக்கும் அவரைப் பார்க்கணும் போல இருக்குப்பா; நேத்துலேருந்து அவர் என் கிட்ட போன் பண்ணி பேசவே இல்லே; அம்மா வேண்டாம்ன்னு சொன்னதால நானும் பேசலை; நான் அவருகிட்ட பேசவே கூடாதுன்னு மதியானத்துலேருந்து நினைச்சிக்கிட்டு இருந்தேன்; இப்ப நேராப் பாத்து சண்டை பிடிக்கணும்ன்னு ஆசையா இருக்குப்பா?" அவள் சிரித்தாள். "சுகா ... என்னடிப் பேசறே நீ; நீ அடிக்கற கூத்து கொஞ்சம் கூட நல்லாயில்லே; எனக்கு கோபம் வர மாதிரி நடந்துக்காதே; உன் அப்பா பக்கத்துல இருக்காருன்னு ரொம்ப துள்ளாதே; கொஞ்சம் அடங்குடி; சும்மா அந்த பையன் கிட்ட தொட்டதுக் கெல்லாம் சண்டை போட வேணாம்ன்னு நான் சொல்றேன்; அவனை நீ ஏதாவது சொல்லுவே; அவன் உன்னை ஏதாவது கேப்பான்; அப்புறம் நீ முஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு அழுது புலம்ப வேணாம். நீ இப்ப அங்க போக வேண்டாம். உன் நல்லதுக்குத்தான் நான் சொல்றேன். பெரியவங்க சொல்றதை நீ கேளு. இந்த ஸ்வீட், காரம், மல்லிப்பூவை எடுத்துகிட்டு போய் வேணி கிட்ட குடுத்துட்டு வா. அவ பால்கோவான்னா, உயிரை விடறா ... " சுந்தரி குரலை உயர்த்தி தன் பெண்ணை முறைத்தாள்.

"சரி ... சரி ... நீ பாட்டுக்கு கத்தாதே ... நீயும் தான் உன் வீட்டுக்காரர் பக்கத்துல இருக்காருன்னு ரொம்பத்தான் துள்ளி தொப்புன்னு குதிக்கறே" ஸ்வீட் வைத்திருந்த தட்டை எடுத்துக் கொண்ட சுகன்யா கோபத்துடன் முனகிக்கொண்டே தட தடவென கீழ் போர்ஷனுக்கு ஓடினாள். "மெதுவா போடி ... விழுந்து கிழுந்து வெக்காதே .." சுந்தரியின் குரல் அவள் காதில் விழவேயில்லை.... சுந்து ... குழந்தையை ஏண்டி இப்படி வெரட்டறே?" "நீங்க சும்மா இருங்க; இப்படி கண்ணுல எண்ணையை ஊத்திகிட்டு நான் அவ பின்னாடி நிக்கும் போதே, அவ என்ன வேலை பண்ணி வெச்சிருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?" "அப்படி என்னடி பண்ணிட்டா? அவளுக்கு புடிச்ச பையனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றா ... அவ்வளவுதானே?" "அது வரைக்கும் தான் உங்களுக்குத் தெரியும்" சுந்தரி தன் முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டாள். "சுந்து, நீ ஏன் சுகன்யாவை என் கூட வர வேணாங்கறே?" தன் அருகில் உட்க்கார்ந்திருந்த சுந்தரியின் தோளில் தன் கையைப் போட்டுத் தன்னருகில் இழுத்தார். "சும்மா என்னை ஏன் ஏன்னு கேக்காதீங்க ..." சுந்தரி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "இவங்க ஒருத்தரை ஒருத்தர் தொட்டு பழகிட்டாங்கன்னு சொன்னே ..." அவர் அவள் முகத்தை தன் புறம் திருப்பி கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டார். "அதனாலத்தான்... மேல மேல இவங்க தப்பு பண்ண வேணாம்ன்னு சொல்றேங்க ..." "ம்ம்ம் ... இவங்க நெருக்கம் எது வரைக்கும் போயிருக்கு? உனக்கு எதாவது தெரியுமா?" "நாமும் தான் காதலிச்சோம் ... ஆன கல்யாணம் ஆகற வரைக்கும் நாம ரெண்டு பேரும் உதட்டுல கூட முத்தம் கொடுத்துக்கிட்டது கிடையாது ... ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு நடப்போம் ... அதுவே நம்ம காலேஜ்லே பெரிய விஷயமா நம்ம ஃபெரெண்ட்ஸ்ங்க பேசினாங்க; கிராமத்துல குசுகுசுன்னு பேசிகிட்டாங்க; ஒரு தரம் கோவில் மதிலுக்குப் பின்னால முத்தம் குடுக்கறேன்னுட்டு என் கன்னத்தை கடிச்சீங்க. எனக்கு வலி உசுரு போச்சு; உங்களுக்கு அப்ப ஒழுங்கா முத்தம் குடுக்கக் கூட தெரியாது. நம்ம நெருக்கம் இவ்வளவுதான். " அவள் உரக்க சிரித்தாள். "ம்ம்ம் .... கிட்ட வாயேண்டி ... முத்தம்ன்னா எப்படி குடுக்கணும்ன்னு இப்ப காட்டறேன் ... பழசெல்லாம் சொல்லி உன் பையனை கிளப்பறயேடி?" உற்சாகமான குமார் தன் கையை அவள் இடையில் தவழ விட்டார். "ஆமாம் .... நான் தான் கிளப்பறேன் அவனை" அவள் கை அவருடைய லுங்கியை சிறிதே விலக்கி அவரின் உறுப்பைத் தேடியது. "இப்பவும் நீ கிட்ட வந்ததும் அவன் கிளம்பறானேன்னு சந்தோஷப் படு. உனக்கு வேணுமாடி?" "ஹூகூம்ம்ம் .... இப்ப வேணாம்" "அப்புறம் கையை ஏன் உள்ளே விடறே?" "ச்சும்ம்மாத்தான் ....எப்படீருக்கான்னு பாக்கறேன்." "எல்லாம் தயாராத்தான் இருக்கான்" "ச்ச்சை ... பேசற பேச்சைப் பாரு ...ஒரு வயசுக்கு வந்த பொண்ணுக்கு அப்பனாவா பேசறீங்க.." "நீ மட்டும் என்ன ... ஆம்பளை லுங்கிக்குள்ள கையை வுட்டுட்டு பேச்சா பேசறே? சுந்து ... நான் தயார்டி ... நீ தயாரா அதை சொல்லுடி?" "இப்ப வேண்டாங்க ... ராத்திரிக்கு வெச்சிக்கலாமே எல்லாத்தையும்" அவள் சட்டென நீண்டப் பெருமூச்சுடன் அவர் உதடுகளில் முத்தமிட்டாவாறே அவர் தடியை மெதுவாக தடவி விட ஆரம்பித்தாள். " சுந்து ... நீ சுகாவைப் பத்தி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தே?" "அந்த பையன் டிரான்ஸ்ஃபர் ஆனதும், பாண்டிசேரிக்கு போறதுக்கு முன்னே வந்து இருக்கிறான். அவனும் சுகன்யாவும் இங்க தனியா இருந்திருக்காங்க ..." சுந்தரி கணவனை நெருங்கி அவர் தொடையில் தன் தொடை உரச உட்க்கார்ந்தாள். "ம்ம்ம் ... இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? வேணி வீட்டுல யாரும் இல்லையா அப்போ? சுந்தரியின் இடையில் விளையாடிக்கொண்டிருந்த குமாரின் கை மெதுவாக அவளின் மார்பை நோக்கி நகர்ந்தது. "நீங்க உங்க கையை வெச்சிக்கிட்டு சும்மா இருங்க ... நீங்க கிளம்பினது போதும் ... என்னையும் கிளப்பி விட்டுடாதீங்க .... அப்புறம் என்னால பொறுக்கமுடியாது ... நடுவுல கீழே போனவ திரும்பி வந்து தொலைச்சிடப் போறா.." "சரி... சரி ... நீ அவனை ரொம்ப குலுக்காதே ... வந்துடப் போறான் ... சுந்தரியின் கைக்குள் அடங்காமல் அவன் திமிறிக் கொண்டிருந்தான். ம்ம்ம் .... நல்ல்லா இருக்குடி .. மஜாவா இருக்க்குடி ... மெதுவா தடவி குடும்ம்மா" "இப்ப வரவேணாமா உங்களுக்கு?" "இல்லே ... எனக்கு உனக்குள்ளத்தான் வரணும் ..." "சர்ர்ரிங்க ... ஆனா இப்ப அது முடியாது ... அவள் தன் கையை அவர் தடியை விட்டு அவசரமாக விலக்கினாள் .."சுகன்யா, வேணியைப் பார்க்கப் போனால், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு அவர்கள் அரட்டை கச்சேரி நீடிக்குமென, சுந்தரிக்குத் நன்றாகத் தெரியும். சுந்தரி அவர் பிடியிலிருந்து விலகி எழுந்து, வெளிக்கதவை இலேசாக ஒருக்களித்து மூடினாள். திரும்பி வந்தவள் சோஃபாவில் உட்க்கார்ந்து கொண்டு, தன் கணவனை சோஃபாவுக்கு வருமாறு தன் கண்களால் அழைத்தாள். அருகில் வந்து அமர்ந்தவரை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவர் தலை முடியை தன் வலது கையால் கலைத்து விளையாடத் தொடங்கினாள். "அப்புறம்?" குமார் சிறிதே கலக்கமான முகத்துடன் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். "அப்புறம் என்னா ... அப்புறம்?" சுந்தரி குறும்பாக சிரித்தாள். "இல்லடி ... எது வரைக்கும் இவங்க நெருக்கம் போயிருக்குன்னு கேக்கிறேன்." "ம்ம்ம் ... அதுவா ... அவளை ஏன் வெரட்டறேன்னு கேக்கறீங்களே .. அவதான் ... உங்க ஆசைப் பொண்ணு, தன் ரவிக்கையை அவுத்துட்டு, இடுப்புத் துணியோட அவன் மடியில உருண்டு இருக்கா.." "ம்ம்ம் ... வேற எதுவும் தப்பா நடந்துடலேயே?" அவர் தொடை நடுவில் எழுந்து ஆடிக் கொண்டிருந்தவன் அவள் சொன்னதைக் கேட்டதும் இலேசாக தளர ஆரம்பித்தான். "யாருக்குத் தெரியும்? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ... உங்களை மாதிரித்தான் நானும் என் மனசு பதை பதைச்சு போய் இவளைக் கேட்டேன்; எல்லாம் முடிஞ்சு போச்சா உங்களுக்குள்ளேன்னு?" "அம்மா என்னை நம்பும்மா ... சாமி மேல சத்தியமா, முத்தம் மட்டும்தான் கொடுத்துக்கிட்டோம். நான் பண்ணது தப்புதாம்மா ... இதுக்கு மேல எங்களுக்குள்ள ஒண்ணும் நடக்கலேன்னு என் மடியில படுத்துக்கிட்டு ஓன்னு அழுதா." "வயசுக்கு வந்த பொண்ணு. பாத்து பாத்து மார்ல போட்டு வளர்த்தேன். அவளை நான் அடிக்கவா முடியும். அந்த பையன் நல்ல குடும்பத்துல பொறந்தவனா இருக்கப் போய், என்ன நெனைச்சானோ ... அந்த பையனே சட்டுன்னு நெகிழ்ந்து கிடந்த புடவையை எடுத்து இவ மேல போத்திட்டு, இது போதும் "சுகு" ன்னுட்டு நகர்ந்து உட்க்கார்ந்துகிட்டானாம்." "சுகு"வா ..." "எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்லணுமா? உங்க பொண்ணை அவன் "சுகு" ன்னு செல்லமா கூப்புடுவானாம்." "யார் சொன்னது இதெல்லாம் உனக்கு?" "உங்க பொண்ணேதான் சொன்னா ..." "எல்லாத்துக்கும் மேல அந்தப் பையன் செல்வாவும், சுகன்யாவை நான் கை விட மாட்டேன். அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா; அவளை நான் தொட்டு பழகிட்டேன்னு, இவ கூட தனியா இருந்ததை தன் அம்மா கிட்ட சொல்லி அழுதானாம்." "அடப் பாவி மவனே... இவன் என்ன லூசாடி?" "ம்ம்ம் ... இப்ப பாக்கப் போறீங்களே ... அப்ப கேளுங்க அவனை ... இதையெல்லாம் உன் ஆத்தாக்கிட்ட சொல்லலாமாடான்னு?" அவள் சிரித்தாள். "உன் பொண்ணு அவனுக்கு மேல ... லூசுடி ... அவனை ஏன் இங்க கூப்பிட்டா?" "மல்லிகா ரொம்பவே ட்ரெடிஷனல் லேடியாம் ... கல்யாணத்துக்கு முன்னேயே சுகன்யா இப்படி உன் கூட தனியா இருந்து இருக்கான்னா, அந்த பொண்ணுக்கு உடம்புல எவ்வளவு அரிப்பும், கொழுப்பும் இருக்கும்ன்னு நம்ம பொண்ணை ஏசினாங்களாம். " "நீங்க சொல்ற மாதிரி அந்த மல்லிகாவும் நல்லவங்களாத்தான் இருக்கணுங்க; ஏண்டா அந்த சுகன்யாதான் புத்தியில்லாம, அவ ரூமுக்கு உன்னைக் கூப்பிட்டா, நீ ஏண்டா போனே? போனதுமில்லாம, அவ துணியை வேற அவுத்து இருக்கே; அந்த கூறு கெட்டவளும் அந்த நேரத்துல உன்னைத்தடுக்கல; உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கான்னு ஒரு நிமிஷம் யோசனைப் பண்ணியா? நம்மப் பொண்ணுகிட்ட எவனாவது இப்படி நடந்தா நாம சும்மா இருப்போமான்னு புள்ளை முடியை புடிச்சு உலுக்கினாளாம்? நான் வளர்த்தப் புள்ளையாடா நீன்னு கூவினாளாம்." "நான் சொன்னேன்லா? அந்த மல்லிகாவுக்கு நல்ல மனசுன்னு?" குமார் முகத்தில் திருப்தியுடன் பேசினார். "சுகன்யா மாதிரி எடுபட்டவ ஒருத்தி, என் மருமவளா என் வீட்டுக்குள்ள வரக்கூடாது. உன் பொண்டாட்டியைப் பாத்து, என் பொண்ணு எந்த தப்பும் பண்ணிடக்கூடாது; எனக்கு அந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்கலை; ஆனா அவளை இந்த அளவுக்கு அவுத்துப் பாத்துட்டே, நீ அவளை கட்டிக்கறதுதான் நியாயம். நீ அவளை தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா அதுக்கப்புறம் என்னை மறந்துடு. அவளை கூப்பிட்டுக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்து உறவு கொண்டாடற வேலையெல்லாம் வேண்டாம்ன்னு கூச்சல் போட்டாங்களாம்." " டேய் செல்வா, நீ பண்ணிட்டு வந்து இருக்கற வேலைக்கு, அந்த பொண்ணு வீட்டுலேருந்து, எவனும் என் வீட்டு வாசல்ல வந்து கூவக்கூடாது. நான் ஒரு பொண்ணைப் பெத்து வெச்சிருக்கேனன்னு நடராஜன் சொன்னாராம்; என் பொண்ணு கழுத்துல ஒழுங்கா தாலி ஏறணும். ஒழுங்கு முறையா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டற வழியைப் பாரு; இது தான் எனக்கு தெரிஞ்ச ஞாயம்ன்னு சொல்லிட்டு அந்த எடத்தை விட்டே எழுந்து போயிட்டாராம்." "இந்த கதையெல்லாம் அந்த பையன் தங்கச்சி மீனாதான் அழுதுகிட்டே ஆஸ்பத்திரியில எங்கிட்டே சொன்னா. செல்வா, ஏதோ அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்து, தனியா இருந்த சுகன்யாகிட்ட தப்பு பண்ணிட்டான். ஆனாஅவன் நல்லவன்; நீங்க அவனை பொம்பளை பொறுக்கின்னு தப்பா நினைச்சுடாதீங்கன்னு என் கையை பிடிச்சிக்கிட்டா .. நல்லப் பொண்ணு அவ!" "ம்ம்ம் ... வயசு பசங்கடி ... நம்மப் பொண்ணு வேற தனியா இருந்து இருக்கா. கீழேயும் யாரும் அன்னைக்கு இல்லேங்கற..." "நான் சொல்றது என்னன்னா ... நம்ம பொண்ணுகிட்ட எல்லா நல்ல குணங்கள் இருந்தும், அந்த மல்லிகா இவளை கொஞ்சம் துச்சமா நினைக்கறதுக்கு இது ஒரு காரணமின்னு சொல்றேங்க; நடராஜன்கிட்ட பேசும் போது இதை உங்க மனசுல வெச்சுக்கிட்டு பக்குவமா பேசுங்க; அந்தம்மா, ஜாதிப் பிரச்சனையை கிளப்பலாம்ன்னும் நெனைக்கிறேன். இந்த ரெண்டைத் தவிர வேற எந்தப் பிரச்சனையும் இவ கல்யாணத்துல இருக்க வாய்ப்பு இல்லேங்க." "என் பொண்ணு கல்யாணம் யார் மனசும் நோகாம நடக்கணுங்க ... அந்த மல்லிகா சந்தோஷமா, தன் பிள்ளை கல்யாணத்துல கூட இருக்கணுங்க ... இதுதான் என் ஆசைங்க." அவள் கை தன் மடியில் கிடந்த கணவனின் தோள்களையும், மார்பையும் மென்மையாக வருடிக் கொண்டிருக்க, சுந்தரி அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து தன் பற்களால் கடித்தாள். "இப்ப என்னப் பண்றதுடி?" குமார் தன் இடது கையை தன் மனைவியின் இடுப்பில் நுழைத்து அவளை தன் முகத்தின் மேல் குனிய வைத்து அவள் உதட்டில் இதமாக முத்தமிட்டார். "என்னப் பண்றதா?அந்த பையன் உங்களை மாதிரி உயரமா, வாட்ட சாட்டமா, கண்ணுக்கு அழகா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா சூப்பரா இருக்குங்க. பெத்தவங்க ரெண்டு பேருக்கும் நல்ல குணங்க. செல்வா நல்ல குடும்பத்துப் பையங்க. நம்ம பொண்ணு மேல உயிரா இருக்கான். எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடிச்சிடணுங்க." சுந்தரி அவரை ஒரு குழந்தையைப் போல் வாரி அவர் முகத்தை தன் மார்புடன் அழுத்திக்கொண்டாள். குமார், அவள் முந்தானையை லேசாக ஒதுக்கி அவள் ரவிக்கைக்குள் புடைத்துக்கொண்டிருந்த முலையில் தன் உதடுகளைத் தேய்த்தார். சுந்தரி எந்த பதட்டமும் இல்லாமல், வெகு இயல்பாக, குமாரின் உதடுகள் தன் மார்பில் உரசுவதால் உண்டான சுகத்தை மனமார ரசித்து சுகித்துக்கொண்டிருந்தாள். "ம்ம்ம் ... ஒரு கெட்ட பழக்கம் இல்லையாம் அவன் கிட்ட ... ஆஃபீசுல கூட பொம்பளைங்க கிட்ட தேவையில்லாம பேசமாட்டானாம். லஞ்ச் டயம்ல கூட லைப்ரரில உட்க்கார்ந்து எதாவது படிச்சிக்கிட்டு இருப்பானாம். என் மனசு அவன் பக்கம் போனதுக்கு இதெல்லாம்தான் காரணம்ன்னு உங்க பொண்ணு சொல்றா." சுந்தரி தன் இடது கையால் அவர் அடி வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். குமாரின் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, தன் உதடுகளை நாக்கால் வருடி ஈரமாக்கிக்கொண்டு அவர் உதடுகளை கவ்வி நீளமாக முத்தமிட ஆரம்பித்தாள். குமாரின் கைகள் அவள் முதுகை வருடிகொண்டிருந்தது. "நான் வளர்த்த பொண்ணுங்க அவ; என் பொண்ணு என் கிட்ட பொய் சொல்ல மாட்டாங்க; அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க; ஆனா அவங்க இளமை மேல எனக்கு நம்பிக்கை இல்லைங்க; அதனாலத்தான் சொல்றேன், அவங்க ரெண்டு பேரும், அட் லீஸ்ட், நாம பெரியவங்க பேசி ஒரு முடிவு பண்ற வரைக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும்ன்னு சொல்றேன்ங்க." "சுகன்யா அவன் கூட ஆஸ்பத்திரியில சிரிச்சு பேசறதை மல்லிகா பாத்துட்டு, மேல மேல அவங்க மனசுல, நம்ம சுகா மேல ஒரு காழ்ப்புணர்ச்சி வரவேணாம்ன்னு நான் நெனைக்கிறேங்க; பத்தாக்குறைக்கு அந்த சாவித்த்ரி இவலை நேத்து ராத்திரி எட்டு, ஒன்பது மணிக்கு தனியா அவன் கூட பாத்துட்டுப் போய் இருக்கா. அவ ஒரு கலகக்காரி, அவ போய், சும்மா இருக்கற சங்கை ஊதினா, நமக்குத்தானேங்க மனக் கஷ்டம் ; இது நம்ம சுகாவுக்கு புரியலேங்க; அவ சின்னப் பொண்ணுதானே?" குமார் அவள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். எழுந்து நின்றவர் தன் லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டார். "சுந்தரி, நீ சொல்றது சரிதாம்மா; குழந்தையை என் கூட வெளியில கூப்பிட்டுக்கிட்டு போயி அவளுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்குதும்மா; அதனாலதான் என் கூட வர்றியான்னு கூப்பிட்டேன்; வேற ஒண்ணுமில்லே." "நீங்க உங்க பொண்ணுக்கு வாங்கிக்குடுக்கறதை யார் வேணாங்கறது; நாளைக்குப் பூரா அவ உங்க கூடத்தானே இருக்கப் போறா. அப்ப நீங்க ஆசைப்பட்டதை செய்யுங்களேன்..." சுந்தரியும் சோஃபாவிலிருந்து எழுந்து தன் ரவிக்கை கொக்கியை போட்டுக்கொண்டாள். புடவை முந்தானையை உதறி தோளில் சரியாக போட்டுக்கொண்டவள், அவர் பின்புறம் நின்று தன் மார்புகள் அவர் முதுகிலழுந்த இறுக கட்டிக்கொண்டு அவர் முதுகில் முத்தமிட்டாள். குமார் நின்றபடியே அவளை முன்புறமாக இழுத்துத் தழுவி, அவள் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட்டார். "சுந்தரி ... தேங்க்யூடி செல்லம்; இந்த நிமிஷம் நான் உன்னால ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் பொண்ணை நீ தங்கம்ன்னா தங்கம்ம்மா வளர்த்து வெச்சிருக்கே; அறியாத வயசு அவங்களுக்கு; இளமைத் துடிப்புல எதைப்பத்தியும் யோசிக்காம, ரெண்டு பேருமா சேர்ந்து, ஒரு சின்னத்தப்பை பண்ணிட்டாங்க; நீ சொல்றதைப் எல்லாம் கூட்டி கழிச்சிப் பார்த்தா அவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்து வந்துடுவாங்கன்னுதான் தோணுது."

"நீங்கதான் அவனைப் பார்க்கப் போறீங்களே. உங்களுக்கு அவனை கண்டிப்பா புடிச்சுடுங்க. அஞ்சு வருஷமா உங்களை அந்த நடராஜனுக்குத் தெரியும்ன்னு சொல்றீங்க; அவருகிட்ட சொல்லுங்க - சுகன்யா என் பொண்ணுதான். எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு கேளுங்க? இன்னும் ரெண்டு நாள் நான் இங்கேதானே இருக்கப் போறேன். நீங்க அவசியம்ன்னு நினைச்சா, ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேருமா அவங்க வீட்டுக்கே போய் அவர் ஒய்ஃப் மல்லிகா கிட்டவும் ஒரு தரம் பேசிட்டு வருவோம்." "அவங்களும் நாலு நாள், ஒரு வாரம் டயம் எடுத்துக்கட்டும்; அதுக்கு அடுத்த வாரம் நீங்க லீவு போட்டுட்டு கிராமத்துக்கு வாங்க; அவங்களுக்கு வேண்டியவங்க ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா நம்ப வீட்டுக்கு வரட்டும்; அத்தையையும், மாமாவும் இப்ப கிராமத்துலத்தான் இருக்காங்க; நம்ம பக்கத்துல கூட ரெண்டு பேரை வெச்சிக்கிட்டு கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக்குவோம். " சுந்தரி இயந்திரமாக பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் மனமோ காமாட்சியை நினைத்துக் கொண்டிருந்தது. அம்மா! ... தாயே! ... உன் கருணையாலத்தான் என் குழந்தை கல்யாணம் நல்லபடியா நடந்து முடியணும்! அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு காமாட்சின்னு பேரு வெச்சு, நான் வாய் நெறைய கூப்பிடணும். அவள் தாய் மனம் காமாட்சியிடம் தன் பெண்ணுக்காக இறைந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment