Monday 28 October 2013

Checkmate ... A cybercrime thriller 3


Thursday, 28 August 2008 வியாழன், ஆகஸ்ட் 28 2008 அன்று வரை தீபாவும் வந்தனாவும் மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டையாட எடுக்க போகும் வெவ்வேறு நடவடிக்கைகளையும் செய்முறைகளையும் ஆராய்ந்தனர். மேலும் சில கண்டு பிடிப்புக்கள் .. மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டையாட மேற்கொள்ளப் போகும் அணுகுமுறை அவர்கள் மனதில் தெள்ளத் தெளிவாக பதிந்து இருந்தது அந்த மூன்று நாட்களும் மாலை ஐந்து மணியில் இருந்து மாலை முழுவதும் தங்கள் காதலர்களுடன் கழித்து இருந்தனர். 'ரொம்ப வேகமா போறோமோ?', 'நாம் சரியான முடிவெடுத்து இருக்கோமா?' என்ற சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தியாகி எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை செதுக்கத் தொடங்கி இருந்தனர். வியாழனன்று தங்களது அணுகுமுறையை துல்லியமாக விவரித்து ஒரு செயற்திட்டத்தை வரைந்து அதை ஷான் மற்றும் சான்ட்ராவிடம் மேலோட்டமாக விளக்கினர். ஷான், "வாவ், நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கம்மியா எடை போட்டுட்டேன். உங்களோட அப்ரோச் மூலம் நிச்சயம் மாங்க்ஸ் பாட் நெட்டை வளைச்சு பிடிச்சுட முடியும். உங்க பாஸ் முரளீதரன் இப்ப வாஷிங்க்டன் டி.ஸியில் இருக்கார். நாளைக்கு அவரையும் என்னோட பாஸையும் இங்கே வர சொல்றேன். உங்க ப்ரெஸெண்டேஷனை நாளைக்கு கொடுங்க. நாம் இன்னும் விவரமா டிஸ்கஸ் பண்ணி முடிவு எடுக்கலாம்". தோழிகள் இருவரும் தத்தம் காதலர்களை காண விரைந்தனர். நித்தின் தீபாவை சென்ட்ரல் பார்க்கிற்கு அழைத்துச் செல்ல அவளது அலுவலகக் கட்டிட வாசலுக்கு வருவதாக சொல்லி இருந்தான். வந்தனாவை ஹோட்டலுக்கு வந்து டின்னருக்கு அழைத்து செல்வதாக சக்தி கூறி இருந்தான்.தீபா, "ஹாய் ..." நித்தின், "ஹாய் .. போலாமா?" தீபா, "ம்ம்ம் .. " மின்சார ரயிலில் போகும் வழிமுழுவதும் அவன் மேல் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள். தீபா, "என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறே?" நித்தின், "எதுவும் பேசத் தோணலை" இருவரிம் மௌனம் தொடர்ந்தது ... தீபா, "என்ன அய்யாவுக்கு அதுக்குள்ளே அலுத்துடுச்சா?" நித்தின், "மண்டு, ஒண்ணுமே பேசாம உன் கூட இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு ... அதனாலதான் ஒண்ணும் பேச தோணலை" மறுபடி அவன் மேல் சாய்ந்தாள். தீபா, "உங்க அப்பாகிட்ட சொல்லிட்டயா?" நித்தின், "இல்லை .. என்ன அவசரம்?" தீபா, "பின்னே? நீ இந்தியா திரும்பின உடனே கல்யாணம் பண்ணிக்கணும். என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது"
நித்தின், "எதுக்கு பொறுக்க முடியாது?" தீபா, "ம்ம்ம் எல்லாத்துக்கும் .. " நித்தின், "அப்படின்னா இப்பவே என் ஃப்ளாட்டுக்கு போலாமா?" தீபா, "போய்?" நித்தின், "இப்பவே ஆரம்பிச்சுடலாம்" தீபா, "எதை?" நித்தின், "நீ எதுக்கு பொறுக்க முடியாதுன்னு சொன்னியோ அதை" தீபா, "நான் நிறைய விஷயங்களை சொன்னேன். நீ அதில் ஒண்ணை மட்டும் ஆரம்பிக்கலாம்ன்னு சொல்றே" நித்தின், "சரி, எப்படியும் மத்தது எல்லாத்துக்கும் பொறுத்துத்தான் ஆகணும். இது ஒண்ணை மட்டும் ஆரம்பிக்கலாம்" தீபா, "நித்தின், நீ வேணும்ன்னு சொன்னா என்னால் மறுக்க முடியாது ... ஆனா ... call me old fashioned ... கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கலாமே ப்ளீஸ்" நித்தின், "Thank God! எதாவுது ஒரு விஷயத்திலாவுது நீ ஓல்ட் ஃபேஷனா இருக்கியே" தீபா, "நான் நிறைய விஷயத்தில் ஓல்ட் ஃபேஷன்தான் ... " பிறகும் மௌனமாக பயணம் தொடர்ந்தது. சென்ட்ரல் பார்க் அருகே இருக்கும் கொலம்பஸ் வீதி ஸ்டேஷனை அடைந்து பார்க்கிற்கு செல்லும் படிகளை நோக்கி நித்தின் நடக்க தீபா, "நித்தின், உங்க ஃபேவரிட் பேக்கரில எதாவுது வாங்கிட்டு போலாமே?" நித்தின், "ஓ, வந்தனா சொன்னாளா? சரி வா"பார்க்கை அடைந்தவர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். மறுபடி அவன் மேல் சாய்ந்தவாறு அவள் அமர்ந்து கையில் இருந்த தின் பண்டத்தை கொறித்தாள். நித்தின், "சரி, நிறைய விஷயம்ன்னு சொன்னியே ... என்ன எல்லாம் அது?" தீபா, "ம்ம்ம் .. காலைல நான் தூங்கிட்டு இருக்கும் போது நீ வந்து என்னை எழுப்பறதில் இருந்து நைட்டு நீ என்னை பெட்டுக்கு தூக்கிட்டு போற வரைக்கும் நிறைய விஷயங்கள்" நித்தின், "ஏன்? பெட் காஃபீயோட எழுப்பறதுன்னு சொல்லாம விட்டுட்டியே?" தீபா, "that is understood .." நித்தின், "நான் பெங்களூர்லயும் நீ டெல்லிலயும் இருந்துட்டு எப்படி அதெல்லாம் செய்யறதா உத்தேசம்?" தீபா, "நான் ஒண்ணும் உன்னை டெல்லிக்கு வான்னு சொல்ல மாட்டேன். எனக்கு பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமான்னு கேப்பேன். இல்லைன்னா ஹைதராபாத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமான்னு கேப்பேன். In which case ... நீ உங்க ஹைதராபாத் செண்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வரணும். அதுவும் முடியாதுன்னா வேலையை நான் ராஜினாமா பண்ணிடுவேன்" நித்தின், "அப்ப உன் மூணு வருஷ தண்டனை?" தீபா, "ஏற்கனவே அவங்க என்னை வேலைக்கு எடுத்துகிட்டதுக்கு நான் நிறைய சாதிச்சு இருக்கேன். இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டையும் நீ இந்தியா வரதுக்குள்ள முடிச்சுடுவோம்ங்கற நம்பிக்கை இருக்கு. சோ, அதை வெச்சு ரிக்வெஸ்ட் பண்ணுவேன். ஒத்துப்பாங்கன்னு நினைக்கறேன்" நித்தின், "இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டை அதுக்குள்ளே முடுச்சுடிவீங்களா?" தீபா, "ம்ம்ம் .. அப்படிதான் தோணுது." நித்தின், "அப்படி முடிச்சா உன் பாஸ் ட்ரான்ஸஃபருக்கு ஒத்துக்குவாரா?" தீபா, "நாங்க என்ன சொன்னாலும் எல்லாரும் கேப்பாங்க" நித்தின், "ஏன் அவ்வளவு கஷ்டமான கேஸா அது?" தீபா தன் காலரை உயர்த்தி விட்டவாறு, "எஃப்.பி.ஐ காரங்களே அவங்களால முடியாதுன்னு கைவிட்ட கேஸ் இது." நித்தின், "Then I wish you good luck ... " தீபா, "You know something? உனக்கு பஸ்ஸில்ஸ், அல்காரிதம் இதிலெல்லாம் இருக்கும் ஆர்வத்துக்கு நீ நான் செய்யற வேலையை செஞ்சா எவ்வளவு என்ஜாய் பண்ணுவே தெரியுமா? நீ என்னடான்னா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதிட்டு இருக்கே" நித்தின், "ஏன்? இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதறதுக்கு என்ன குறைச்சல். அதுவும் என்ஜாய் பண்ணற மாதிரி வேலைதான்" தீபா, "நான் சாலஞ்ச் பண்ணறேன். இதுக்காகவாவுது உன் கிட்ட நான் செய்யும் வேலையை பத்தி டிஸ்கஸ் பண்ணறதுக்கு என் பாஸ்கிட்ட பர்மிஷன் கேக்கப் போறேன்" நித்தின், "அதுக்கு உன் பாஸ் ஒத்துக்குவாரா?" தீபா, "ஏன்? நான் என்ன யாராவுது ஹாக்கர்கிட்டயா டிஸ்கஸ் பண்ணணும்ன்னு கேக்கப் போறேன்? இன்ஸ்யூரன்ஸ் கம்பெனில கோட் எழுதிட்டு இருக்கறவன்கிட்டதானே. உன்னால் எந்த செக்யூரிடி இஸ்யூவும் வராதுன்னு சொல்லப் போறேன்" நித்தின், "அப்ப நான் ஒரு ஹாக்கரா இருந்து இருந்தா?" தீபா, "உன்னை அரெஸ்ட் பண்ணி என்னை மாதிரி என் கூட வொர்க் பண்ண R&AWவில் சேர்க்க என்ன வழின்னு பாப்பேன்" சிரித்தபடி நித்தின், "நீ பண்ணற வேலை ஓ.கே. ஆனா எனக்கு இந்த போலீஸ், கட்டுப் பாடு இதெல்லாம் பிடிக்காதே" தீபா, "அதுவும் எனக்கு தெரியும். ஆனா ஒண்ணு சொல்லட்டுமா? எங்க வேலையிலும் கட்டுப்பாடுன்னு ஒண்ணும் கிடையாது. எங்க பாஸ் நாங்க செய்யும் வேலையில் தலையிடவே மாட்டார். அப்பப்ப என்ன செஞ்சுட்டு இருக்கோம்ன்னு அப்டேட் கொடுத்தா போதும்" நித்தின், "ம்ம்ம் பாக்கலாம்" தீபா, "என்ன பாக்கலாம்?" நித்தின், "கல்யாணத்துக்கு அப்பறம் உங்க R&AWவில் எனக்கு வேலை கிடைக்குதான்னு ..." அளவிலா உற்சாகத்தில் அவன் மடிமேல் ஏறி அமர்ந்து அவன் கழுத்தை கைகளால் வளைத்தவள், "சீரியஸா சொல்றியா? நீ என் பாஸ்கிட்ட பத்து நிமிஷம் பேசினா போதும். என்னைவிட சீனியர் பொஸிஷனில் வேலை கொடுப்பார்" இருட்டும் வரை பார்க்கை சுற்றித் திரிந்தவர்கள் ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தியபின் நித்தின் காரில் ஹோட்டலை நோக்கி பயணித்தனர். தீபா, "நாளைக்கு நீ பிஸின்னு சொன்னே. சரி, சனிக்கிழமை கூட பிஸியா இருப்பியா? நான் புறப்படறதுக்கு முன்னாடி பாக்கணும்" நித்தின், "முடிஞ்சா உன்னை ஏர்ப்போர்ட்டில் வந்து பார்க்கறேன்" ஹோட்டலின் வாசலில் வெகு நேரம் அணைத்த படி பேசிக் கொண்டு இருந்து பல முத்தங்களுக்கு பிறகு பிரியா விடை பெற்றனர்.ஹோட்டல் லாபியில் காத்து இருந்த சக்தியை இன்ப அதிர்ச்சியால் திக்கு முக்காட வைத்தபடி லிஃப்டில் இருந்து வந்தனா வந்தாள். தன்னைப் பார்த்து சக்தியின் கண்கள் விரிவதைக் கண்டது முதல் அவன் அருகே வரும் வரை தலைகுனிந்து நடந்து வந்தாள். அருகில் வந்து அவன் முகத்தைப் பார்த்து வெட்கப் புன்னகை உதிர்த்தவளிடம் இருந்து இரண்டு அடிகள் பின்னால் சென்று அவளை மறுபடி தலையில் இருந்து கால்வரை கண்களால் தழுவினான், வந்தனா, "ஏய், போதும் எல்லாம் பாக்கறாங்க. போலாம் வா" சக்தி, "நத்திங்க் டூயிங்க் அப்படியே நில்லு" என்றபடி ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு கேமராவை எடுத்து அவளை படம் பிடிக்கத் தொடங்கினான். வந்தனா, "என்னது இது புதுசா? என் ஃபோட்டோ உன் கிட்ட இல்லையா?" சக்தி, "நிறைய இருக்கு. ஆனா புடவை கட்டிட்டு எதுவும் இல்லை" என்றவாறு அவளை முன் புறம், பக்கவாட்டிலிருந்தும் சரமாறியாக க்ளிக்கினான். பிறகு கேமராவை பாக்கெட்டில் போட்டபடி அருகே வந்து அவளது இடையை கையால் வளைத்தான். "ஏது புடவை? மேடம் ஊர்ல இருந்து கொண்டு வந்து இருந்தீங்களா?" "ம்ம்ஹூம் ... உனக்கு புடவை கட்டி காண்பிக்கணும்ன்னு நேத்து லஞ்ச் டைமில் தீபாகூட போய் வாங்கினேன். புடிச்சு இருக்கா?" "எனக்கு பிடிச்ச டார்க் ரெட் .. கூட இந்த பீகாக் ப்ளூ பார்டர் அட்டகாசம். அப்படியே மறுபடி உன் ரூமுக்கு தூக்கிட்டு போலாம்ன்னு இருக்கு" "எதுக்கு?" காதலர்களிடையே நடக்கும் இலை மறை காயான பேச்சுக்களுக்குத்தான் எத்தனை சுவை! "ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஒரு சின்ன ரிஹர்ஸல் பார்க்க" லேசாக தலையை உயர்த்தி அருகில் இருந்தவனை மையிட்ட கண்களால் சில கணங்கள் கூர்ந்து நோக்கியவள், "உனக்கு நிஜமா அப்படி தோணுதா?" சக்தி, "சத்தியமா தோணுது. ஆனா, Call me old fashioned .. I rather reserve it for that memorable night" முகம் மலர்ந்த வந்தனா, "எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இது வரைக்கும் நீ எந்த விஷயத்திலும் நான் எதிர்பார்த்ததுக்கு மாறா இல்லை" சக்தி, "ரிஹர்ஸல்தான் வேண்டாம்ன்னு சொன்னேன் .. but not this" என்றவாறு அவள் எதிர்ப்புத் தெரிவிக்கும் முன்னர் அவளை அணைத்து அவள் இதழோடு இதழ் பதித்தான். சுற்றி இருந்த பலரின் தலைகள் இவர்கள் பக்கம் திரும்ப, அவன் அணைப்பில் இருந்து விலகிய வந்தனா, "என்னது இது பப்ளிக் ப்ளேஸில். போலாம் வா" என்றபடி சிவந்து இருந்த முகத்தை சுளிக்க முயன்று தோற்றாள். அருகில் இருந்த மாலில் சற்று நேரம் சுற்றித் திரிந்த பின் காரில் ரெஸ்டாரண்டை நோக்கி பயணித்தனர் ... சக்தி, "ஏன் புடவை கட்டி காண்பிக்கணும்ன்னு இருந்தே?" வந்தனா, "நான் எப்பவும் மாடர்ன் ட்ரெஸ் அப்பறம் சுடிதார்தான் போடுவேன்னு நீ நினைச்சுக்க வேண்டாம்ன்னு" சக்தி, "மாடர்ன் ட்ரெஸ், சுடிதார் எல்லாம் பிடிக்கலைன்னு சொன்னேனா?" வந்தனா, "எப்படியும் நீ உங்க அம்மாகிட்ட பேசும் போது நான் என்ன மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்னு பேச்சு வரும் ..." சக்தி, "ஸோ மேடம் இப்பவே மாமியார்கிட்ட நல்ல பேர் வாங்கலாம்ன்னு பார்க்கறாங்களா?" வந்தனா, "ஆமா ... " என்றவள் சற்று யோசித்து "ஷக்தி, உங்க அம்மா ஒத்துப்பாங்கதானே?" சக்தி, "அப்படித்தான் நினைக்கறேன். நான் சொல்றதை விட உன்னை ஒரு தடவை நேரில் பாத்தாங்கன்னா நிச்சயம் ஒத்துப்பாங்க" வந்தனா, "ஷக்தி, எனக்கும் உங்க அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. முதல்ல அவங்க என்னை பாத்து ஓ.கே சொல்லணும்" சக்தி, "ஏன் அதுக்கு அப்பறம்தான் நீ உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லணும்ன்னு இருக்கியா?" முகம் சுருங்கிய வந்தனா, "அப்படி இல்லை ஷக்தி, அவங்களுக்கு பிடிக்கலைன்னாலும் எங்க அப்பா அம்மா ஒத்துப்பாங்கன்னு நான் நம்பறேன் ஷக்தி. உன் கூட பழகினதுக்கு அப்பறம் அவங்களுக்கும் நிச்சயம் உன்னை பிடிக்கும். ஆனா உங்க அம்மாவுக்கு என்னை முதலில் இருந்து பிடிச்சு இருக்கணும். " சக்தி, "ஏன்?" வந்தனா, "ரிடையர் ஆனதுக்கு அப்பறம் நம்மகூட இருக்கணும்ன்னு நினைச்சுட்டு இருப்பாங்க இல்லையா? என்னை பிடிக்கலைன்னா இப்ப இருந்தே அவங்க ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுவாங்க ஷக்தி. யாரோ ஒரு போலீஸ்காரி என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டான்னு அவங்க நினைச்சா சத்தியமா என்னால சந்தோஷமா இருக்க முடியாது" வாய்விட்டு சிரித்த சக்தி, "உனக்கு இருக்கற அளவுக்கு எனக்கும் உன் வீட்டைப் பத்தி பயம் இருக்கு. என்ன பண்ணலாம் சொல்லு"சென்ற வாரம் லஞ்சுக்கு சென்ற ஸோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலியை அடைந்தனர். ரிஸர்வ் செய்யப் பட்டு இருந்த டேபிளில் அமர்ந்து உரையாடலை தொடர்ந்தனர். வந்தனா, "எப்படியாவுது அவங்க என்னை பார்க்க ஏற்பாடு பண்ணேன்" சக்தி, "நீ ஈரோடுக்கு போறியா?" வந்தனா, "வேணும்ன்னா போவேன். ஆனா ஒரு காரணமும் இல்லாம எப்படி போறது? .. எங்க வீட்டிலும் என்ன சொல்லிட்டு போறது?" சக்தி, "ஆக்சுவலா இந்த அசைன்மெண்ட் முடிஞ்சதும் அம்மாவையும் சாந்தியையும் டெல்லி ஆக்ரா ஜெய்பூரெல்லாம் கூட்டிட்டு போறதா சொல்லி இருக்கேன்." வந்தனா, "உங்க அம்மா இதுவரைக்கும் அங்கே எல்லாம் வந்தது இல்லையா?" சக்தி, "அம்மா பாத்து இருக்காங்க. சாந்திதான் பாவம் சென்னையை தாண்டி ஒரு ஊருக்கும் போனது இல்லை" வந்தனா, "எதுக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்? இந்த டிஸம்பர் சமயத்தில் அவங்களுக்கும் லீவ் இருக்கும். க்ளைமேட்டும் ரொம்ப நல்லா இருக்கும். அவங்க ரெண்டு பேரையும் அப்ப வரச் சொல்லேன். நான் லீவ் போட்டுட்டு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்தி காண்பிச்சுட்டு அப்படியே எங்க உதைப்பூருக்கும், எங்க வீட்டுக்கும் கூட்டிட்டு போறேன்" முகம் மலர்ந்த சக்தி, "அப்ப நான் அந்த இடமெல்லாம் பார்க்கலைன்னா பரவால்லைன்னு சொல்றியா?" வந்தனா, "ஹெல்லோ! கல்யாணத்துக்கு அப்பறம் அது எல்லாம் உன் மாமனார் ஊர்!!" சக்தி, "எது ஆக்ராவா?" வந்தனா, "ஜோக் அடிக்காதே. மத்த மூணு இடத்தையும் சொன்னேன். என்ன சொல்றே உங்க அம்மாவை எப்படியாவுது கன்வின்ஸ் பண்ணி இந்த டிஸம்பர்ல ஒரு ஹாலிடே ப்ரோக்ராமுக்கு ஒத்துக்க வைக்கறயா. I will make sure that it will be a memorable holiday for both of them" சக்தி, "உன் வேலைக்கு நடுவே உன்னால் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா?" வந்தனா, "ஆக்சுவலா, எங்க ப்ளான் படி நாங்க இப்ப எடுத்துக்கப் போற அசைன்மெண்ட்டை டிஸம்பரில் பாதி முடிச்சு இருப்போம். கடைசிலதான் கொஞ்சம் டைட்டா இருக்கும். நடுவில் ரெண்டு வாரம் லீவ் போடறதில் ஒரு பிரச்சனையும் இருக்காது" சக்தி, "ஓ, நீங்க இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டை அடுத்த ஏப்ரலுக்கு முன்னாடி முடிச்சுடுவீங்களா?" வந்தனா, "எங்க ரெண்டு பேரோட கணிப்பு அது. நாளைக்கு எங்க பாஸ் வர்றார். நாளைக்கு சாயங்காலம் ஒரு முடிவுக்கு வருவோம்." சக்தி, "என்ன முடிவுக்கு" என்று கேட்டபின் "சாரி ..நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" எதிரில் அமர்ந்தவனின் கையைப் பற்றியபடி, "ஷக்தி, எனக்கு ஒவ்வொண்ணும் உன் கிட்ட சொல்லணும்ன்னு இருக்கு. ஆனா சொல்ல முடியாம தவிக்கறேன்." சக்தி, "ஹேய், எனக்கு புரியுது ஹனி. இட்ஸ் ஓ.கே" வந்தன, "பட் யூ நோ சம்திங்க்? நீ மட்டும் இதில் முழுசா இன்வால்வ் ஆனா இந்த அசைன்மெண்ட் எல்லாம் ரெண்டே மாசத்தில் முடிக்கலாம்" சக்தி, "கை நிறைய கிடைக்கற சம்பளத்தை விட்டுட்டு கவர்மெண்ட் சம்பளத்துக்கு சேர சொல்றியா?." வந்தனா, "முடிக்கலாம்ன்னுதான் சொன்னேன். ஷாந்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கறவரைக்கும் உனக்கு இருக்கும் பொறுப்புக்கள் எல்லாம் எனக்கு தெரியும். அதனாலதான் வந்து எங்க R&AWவில் சேருன்னு சொல்லலை" சக்தி, "Don't worry. By God's grace .. நான் ஒரு அளவுக்கு சேத்து வச்சு இருக்கேன். நம் கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மாகிட்ட சாந்தியோட கல்யாணத்துக்குன்னு ஒரு FD போட்டு அம்மாகிட்ட கொடுத்துடலாம்" வந்தனா, "இன்னும் வேணும்ன்னா எங்க அப்பாகிட்ட வரதட்சணை டிமாண்ட் பண்ணலாம். நிச்சயம் கொடுப்பார்" சக்தி, "அம்மா தாயே! இந்த பக்கம் கொடுத்துட்டு அந்த பக்கம் உங்க சித்தப்பாவை விட்டு என்னை அரெஸ்ட் பண்ணறதுக்கா?" வாய் விட்டு சிரித்த வந்தனா, "யூ...! இந்த மாதிரி சீரியஸ்ஸா மூஞ்சியை வெச்சுட்டு ஜோக் அடிக்கறது மட்டும் போதும். எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை தலை மேல தூக்கி வெச்சுட்டு ஆடுவாங்க. சரி. அப்ப உங்க அம்மாவையும் ஷாந்தியையும் இந்த டிஸம்பர்ல டெல்லிக்கு வர வைக்கறே. ஓ.கே?" சக்தி, "ஓ.கே. உன்னை பத்தி என்னன்னு எங்க அம்மாகிட்ட சொல்றது?" வந்தனா, "காலேஜ் படிக்கும் போது அறிமுகம் ஆனான்னு சொல்லு. மறுபடி நான் யூ.எஸ் வந்து இருந்தப்ப நல்லா பழக்கமானான்னு சொல்லு" சக்தி, "முதல்ல ஃப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டு உன்னை பாத்ததுக்கு அப்பறம் அவளை உங்களுக்கு பிடிச்சு இருக்கான்னு கேக்கணுமா? எதுக்கு? எனக்கு எங்க அம்மாகிட்ட பொய் சொல்ல பிடிக்காது" வந்தனா, "ப்ளீஸ் ஷக்தி, அவங்களுக்கு என் மேல் ஒரு அன்பயாஸ்ட் ஒபீனியன் வரணும். நீ என்னை காதலிக்கறதா சொன்னதுக்கு அப்பறம் அவங்க என்னை பார்க்கும் விதமே வேற மாதிரி இருக்கும்" சக்தி, "சரி. ஆனா ஒண்ணு சொல்றேன். எங்க அம்மா ரொம்ப ஷார்ப். நான் எதுவும் சொல்லாமலே அவங்க அனேகமா கண்டுபிடிச்சுடுவாங்க" வந்தனா, "கவலைப் படாதே. அப்படி கண்டுபிடிச்சுட்டா உடனே காலில் விழுந்து நான் தான் என்னை பத்தி சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்னு சொல்லி மன்னிப்பு கேக்கறேன்" சக்தி, "Let us hope she believes that .. " வந்தனா, "ரொம்ப பயமுறுத்தாதே. எனக்கு இப்பவே ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு" சக்தி, "ஹூம் .. உங்க அப்பா அம்மாவை என்னை பாத்து ஓ.கே சொல்ல நான் தான் அடுத்த மே மாசம் வரைக்கும் வெய்ட் பண்ணனும்" வந்தனா, "முதல்ல உன் அம்மா என்னை பாத்து ஓ.கே சொல்லட்டும்" மேலும் கனவுகளை பகிர்ந்தவாறு டின்னரை முடித்தனர். வாங்கிய இரண்டு டெஸர்ட்டுகளையும் அவனை சுவைக்க விட்டு வந்தனா அவன் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் இனிப்பில் திளைப்பதை பார்த்து ரசித்தாள். திரும்ப ஹோட்டலுக்கு வந்து காரில் அமர்ந்த படி சிறிது நேரம் பேச்சு தொடர்ந்தது .. வந்தனா, "நாளைக்கு எங்க பாஸ் வரார் நாங்களும் பிஸியாதான் இருப்போம். ஆனா உன்னை மறுபடி பாக்காம நான் ஃப்ளைட் ஏற மாட்டேன். சனிக்கிழமை முழுவதும் பிஸின்னு சொல்லாதே...." சக்தி, "ம்ம்ம் .. ஏர்போர்ட்டுக்கு வரேன். ஓ.கே?" வந்தனா, "ஏர்போர்ட்டில் ப்ரைவஸியே இருக்காது. அதுக்கு முன்னாடி முடியாதா?" சக்தி, "எதுக்கு ப்ரைவஸி?" வந்தனா, "ம்ம்ம் .. இன்னைக்கு சாயங்காலம் மாதிரி ஹோட்டல் லாபின்னா கூட பரவால்லை. அங்கே ஏர்போர்ட்டில் என் பாஸ் கூட இருப்பார்" என்றபிறகு வெட்கத்தை மறைக்க வெளியில் பார்த்தாள். அடுத்த கணம் காரின் இரண்டு இருக்கைகளுக்கு நடுவே இழுக்கப் பட்டு அவனது அணைப்பில் இருந்தாள். பல முத்தங்களுக்கு பிறகு பிரியாவிடை பெற்றனர்.Friday, 29 August 2008 வெள்ளி, ஆகஸ்ட் 29 2008 நியூ யார்க்கை சுற்றி இருந்த பல ஊர்களில் இருந்த கிளைகளில் ஒரு வியாபார நிறுவனத்தின் கணக்கில் கேஷாக டெபாசிட் ஆகப் போகும் இருநூற்று நாற்பது மில்லியன் டாலர்கள் கொலம்பியன் ட்ரக் கார்ட்டலை சேர்ந்த வெனிஸுவேலாவில் இருக்கும் ஒரு பினாமிக் கம்பெனியின் கணக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான வேலைகளில் நண்பர்கள் மூவரும் அன்று லீவ் எடுத்துக் கொண்டு காலையில் இருந்து மூழ்கினர். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Friday, 29 August 2008 9:00 AM FBI New York Field Office, 23rd Floor, Federal Plaza, NY வெள்ளி, ஆகஸ்ட் 29 2008 எஃப்.பி.ஐ நியூ யார்க் அலுவலகம், 23ம் தளம், ஃபெடரல் ப்ளாஸா, நியூ யார்க் காலை எட்டு மணிக்கு முன்பே வந்த வந்தனாவும் தீபாவும் தங்களது செயற்திட்டத்தை மறுபடி ஒரு முறை பரிசீலனை செய்து முடித்தனர். அவர்களது அன்றைய உபயோகத்துக்கு ஒதுக்கப் பட்ட கான்ஃபரன்ஸ் ரூமில் வந்தனா தனது லாப்டாப்பை ப்ரொஜெக்டரில் இணைத்து திரையில் விழும் பிம்பத்தை சரி செய்து முடிக்க, முரளீதரன், எஃப்.பி.ஐ தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து இருந்த க்ரிஸ்டஃபர் மோரிஸ் (Christopher Morris), ஷான் ஹென்ரி, மற்றும் சான்ட்ரா ஆஸ்டின், இந்த நால்வரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். அறிமுகங்களுக்கு பிறகு வந்தனாவும் தீபாவும் தங்களது செயற்திட்டத்தை விளக்கினர். வந்தனாவின் மேலோட்டமான அறிமுகத்துடன் அவர்களது ப்ரஸெண்டேஷன் ஆரம்பித்தது தீபா பிறகு தொடர்ந்தாள் "முதலில் நாங்க இதுவரைக்கும் மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி தெரிஞ்சுகிட்ட விவரங்கள்: மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் புகுந்த கணிணிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும். அதுவும் அதன் உரிமையாளர் செஞ்ச மாதிரியே செய்ய வைக்க முடியும். இது ஷானும் சான்ட்ராவும் ஏற்கனவே கண்டு பிடிச்சது இந்த பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளுக்கு பெரும்பாலான சமயங்கள் நேரடியா சர்வர்கிட்ட இருந்து எந்த தகவலும் (மெஸ்ஸேஜும்) வருவது இல்லை. மத்த கணிணிகளிடம் இருந்துதான் மெஸ்ஸேஜஸ் வருது. சர்வர் ஒரு குறிப்பிட்ட கணிணிக்கு அனுப்பும் நேரடி மெஸ்ஸேஜாக இருந்தால் கூட அது பல கணிணிகள் கை மாறி குறிப்பிட்ட கணிணிக்கு வந்து சேருது. சோ, ஒரு மெஸ்ஸேஜ் எந்த இணைய விலாசத்தில் இருந்து வந்து இருக்குன்னு பாத்து சர்வரை கண்டு பிடிக்க முடியாது. ஒரு கணிணியில் இருந்து வெளியில் போகும் மெஸ்ஸேஜை டாம்பர் (tamper) பண்ணினா அந்த கணிணியில் இருக்கும் வைரஸ்ஸுக்கு தன்னை தானே அழித்துக் கொள்ளும்படியான ஒரு மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து வருது. இதனால் அந்த கணிணி பாட் நெட்டில் இருந்து நீக்கப் படுகிறது. அந்த கணிணிக்குள் மறுபடி வைரஸ்ஸை புகுத்தினாலும் அந்த கணிணி பாட் நெட்டுக்குள் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை. அதன் இணைய விலாசத்தை முற்றிலும், அதாவது அந்த டொமெயினையே (domain), மாற்றினால் மறுபடி ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதாவது சர்வர் வேறு ஒரு கணிணி என்று நினைத்து அதை ஏற்றுக் கொள்ளுது. மாங்க்ஸ் பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றம் (மெஸ்ஸேஜ்) எல்லாம் சங்கேத மொழியில் இருக்கு என்பது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம். மேலும் எந்த விதமான சங்கேத முறை (Encryption algorithm) உபயோகிக்கறாங்க என்பதும் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாம இருக்கு. மாங்க்ஸ் பாட் நெட்டின் சர்வரை நாம் கண்டுபிடிக்கணும்ன்னா அவங்க உபயோகிக்கும் சங்கேத முறையை கண்டு பிடிச்சே ஆகணும். ஏன்னா சர்வரின் இணைய விலாசம் அவங்க அனுப்பும் மெஸ்ஸேஜுக்குள் பொதிந்து இருக்குன்னு நாங்க நம்பறோம். அடுத்தபடியாக அவங்க சங்கேத முறையை கண்டு பிடிக்க பல மெஸ்ஸேஜுகளையும் நாங்க அனலைஸ் பண்ணினோம். மாங்க்ஸ் பாட் நெட்டில் அனுப்பப் படும் தகவல் பரிமாற்றங்களை நாலு விதமா பிரிக்கலாம்: விளம்பர ஈமெயில் அனுப்புவதற்கான சர்வரிடம் இருந்து வரும் ஆணை ... தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணை அதாவது செல்ஃப் டிஸ்ட்ரக்ட் கமாண்ட் (Self Destruct Command).. மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் வைரஸ்கள் ஒழுங்கா வேலை செஞ்சுட்டு இருக்கான்னு சர்வர் கண்டுபிடிக்கறதற்கான தகவல் பரிமாற்றங்கள். (Health Check Messages) கணிணிக்கு அந்த உரிமையாளர் கொடுத்ததுபோல் பிறப்பிக்க படும் ஆணைகள் ... இந்த நான்கு வகை தகவல் பரிமாற்றங்களில் ஈமெயில் அனுப்புவதற்கான மெஸ்ஸேஜ்களை இப்ப எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் இன்னும் அவங்க உபயோகிக்கும் சங்கேத மொழியை புரிஞ்சுக்க முடியலை." என்று தீபா தன் பகுதியின் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் விளக்கம் கொடுத்து முடித்தாள். கிரிஸ்டஃபர் மோரிஸ், "ஷான், அந்த கடைசி பாயிண்டைதான் நீ ஒரு மேஜர் ஃபைண்டிங்க் அப்படின்னு சொன்னியா?" ஷான், "ஆமா. நாம் இதுவரைக்கும் கண்டு பிடிக்காத இன்னொரு விஷயம். தீபா, எப்படி அதை கண்டு பிடிச்சீங்கன்னு கொஞ்சம் விளக்கறயா?" தீபா, "ஷ்யூர் ஷான், . ... ஒரு கணிணியில் இருந்து அனுப்பப் பட்ட விளம்பர ஈமெயிலையும் அந்த கணிணிக்கு வந்த மெஸ்ஸேஜஸ்ஸையும் சேர்த்து வைத்து அனலைஸ் பண்ணினோம். விளம்பரத்தில் இருக்கும் எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களின் நீளம் இதை எல்லாம் வெச்சு பாக்கும் போது ஒவ்வொரு விளம்பர ஈமெயிலுக்கும் ஒரு தனி பாட்டர்ன் (எழுத்துக் கோர்வையின் அமைப்பு) இருப்பதை கவனிச்சோம். இந்த இரண்டு வாரத்தில் இதுவரைக்கும் ஐந்து வெவ்வேறு விளம்பர ஈமெயில்கள் அனுப்பப் பட்டு இருக்கு. இதில் ஒவ்வொண்ணுக்கும் இருக்கும் தனி பாட்டர்னை ஒரு அளவுக்கு எங்களால் ஐடெண்டிஃபை பண்ண முடிஞ்சுது. அந்த பாட்டர்னை வெச்சு எல்லா மெஸ்ஸேஜஸ்ஸையும் ஃபில்டெர் (சல்லடையால் சலிப்பதுபோல்) பண்ணினோம். ஈமெயில் அனுப்புவதற்கான ஆணைகளை எங்களால் தனியா பிரிக்க முடிஞ்சுது. அப்படி ஒரு கணிணிக்கு வந்த ஒரு ஆணையை எடுத்து நாங்களே மறுபடி அந்த கணிணிக்கு அனுப்பினோம். அந்த கணிணி இன்னொரு முறை அதே ஈமெயில் விளம்பரத்தை அனுப்புச்சு. " கிரிஸ்டஃபர், "ஃபெண்டாஸ்டிக் ... முரளீ, your girls are terrific!. ப்ளீஸ் கண்டின்யூ" தீபா, "சோ, ஒரு விளம்பர ஈமெயிலை ஒரு கணிணி அனுப்பினதுக்கு அப்பறம் எந்த ஆணை மூலம் அந்த விளம்பர ஈமெயிலை அந்த கணிணி அனுப்புச்சுன்னு இப்ப கண்டு பிடிக்க முடியும். இதுவரைக்கும் எங்ககிட்ட அந்த மாதிரி அஞ்சு மெஸ்ஸேஜஸ் இருக்கு. ஆனா, அவங்க சங்கேத முறையை கண்டு பிடிக்க எங்களுக்கு அந்த மாதிரி சில நூறு மெஸ்ஸேஜ்கள் தேவை படுது. முடிந்த வரை வெவ்வேறு விளம்பரங்களுக்கு வெவ்வேறு கணிணிகளுக்கு வந்ததா இருக்கணும் அப்படி இருக்கும் போதுதான் சர்வரின் இணைய விலாசத்தை கண்டு பிடிக்க முடியும். அதே மாதிரி சில நூறுகள் இல்லைன்னாலும் நூறு தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஆணைகள் எங்களுக்கு தேவை" கிரிஸ்டஃபர், "சில நூறுன்னா, குறைஞ்சது எத்தனை?" தீபா, "குறைந்தது இருநூறு. முந்நூறு இருந்தா வேலை இன்னும் சுலபமா முடியும். அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்பது சுலபமாகும்" ஷான், "இந்த ரெண்டு வாரத்தில் ஐந்து வெவ்வேறு ஈமெயில் விளம்பரங்கள் போயிருக்கு. உங்க கணக்குப் படி ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ள உங்களுக்கு இருநூறு விளம்பரங்களுக்கான மெஸ்ஸேஜஸ் கிடைக்கும் ... இல்லையா?" வந்தனா, "அவங்களுக்கு அத்தனை ஆர்டர் வந்தாதான் அத்தனை விளம்பர ஈமெயில் அனுப்புவாங்க. அப்படி ஆர்டர் வரலைன்னா?" கிரிஸ்டஃபர், "ஷான், நீ அப்ஸர்வ் பண்ணின இந்த ரெண்டு வருஷத்தில் சுமார் எத்தனை விளம்பரங்கள் போயிருக்கும்? வாரத்துக்கு எத்தனை போகுது?" ஷான், "வந்தனா சொன்ன மாதிரி ரெகுலரா வாரத்துக்கு இத்தனைன்னு சொல்ல முடியாது" கிரிஸ்டஃபர், "ஸோ என்ன பண்ணலாம்? ரெண்டு வருஷம் எல்லாம் பொறுத்துட்டு இருக்க முடியாது" வந்தனா, "அதையே தான் நானும் சொல்றேன். அவங்களுக்கு ஆர்டர் வந்து அவங்க அனுப்பும் வரை நாம் வெயிட் பண்ணாம நாமே ஏன் அவங்களுக்கு ஆர்டர் கொடுக்கக் கூடாது?" அந்த அறையில் சில நிமிடங்கள் அமைதி குடி கொண்டது. கிரிஸ்டஃபர், "எப்படி?" வந்தனா, "எதாவுது ஒரு பொருளுக்கோ அல்லது வலை தளத்துக்கோ நமக்கு தெரிஞ்ச யார் மூலமாவுது அவங்களுக்கு விளம்பர ஈமெயில் அனுப்ப ஆர்டர் கொடுப்போம். நமக்கு வெவ்வேறு மெஸ்ஸேஜஸ் கிடைக்கும். கூடவே அவங்களை அணுக அவங்க உபயோகிக்கும் முறையையும் நாம் இன்வெஸ்டிகேட் பண்ணி அவங்களை பிடிக்க முடியுமான்னு பார்க்கலாம். After all, அந்த சர்வரை எதுக்கு கண்டு பிடிக்கணும்? அதை கன்ட்ரோல் செய்யறவங்களை பிடிக்கத்தானே?" முரளீதரன், "Greate Vanthana! இது தான் போலீஸ் புத்தி!"கிரிஸ்டஃபர், "சுலபமா பண்ணலாம். துப்பறியறதுக்காக எஃப்.பி.ஐ மற்றும் ஸீ.ஐ.ஏவை சேர்ந்த நிறைய பினாமி கம்பெனிகள் இருக்கு. அந்த கம்பெனிகள் கொடுத்தது போல் விளம்பர ஈமெயிலுக்கான ஆர்டர்களை கொடுக்கலாம்" ஷான், "சரி, இந்த மாதிரி முறையில உங்களுக்கு தேவையான அளவுக்கு விளம்பர ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும். தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஆணைகள் அத்தனைக்கு எங்கே போவீங்க?" தீபா, "எங்களுக்கு நூறு கணிணிகள் வேணும். எங்களுக்கு உதவறதுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் வேணும்" முரளீதரன், "ஒவ்வொரு கணிணியிலும் வைரஸ்ஸை புகுத்தி அதன் மெஸ்ஸேஜை டாம்பர் பண்ணப் போறீங்களா?" தீபா, "ஆமா, எங்க கணிப்பில் ஒரே நாளில் நூறு கணிணிகளிலும் மெஸ்ஸேஜ் டேம்பர் செய்யணும். அப்ப அடுத்த நாள் நூறு கணிணிக்கும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரும்" சான்ட்ரா, "ஏன் ஒரே நாளில் அவ்வளவு கணிணிகளில் டேம்பர் பண்ணனும்?" வந்தனா, "சில கணிணிகளை வெச்சு பல நாட்களில் தினம் தினம் அவைகளின் இணைய விலாசங்களை மாற்றி செய்யலாம்ன்னுதான் நாங்க முதலில் நினைச்சோம். ஆனா, இவ்வளவு நூதனமான ஒரு பாட் நெட்டை உருவாக்கினவங்க நிச்சயம் இந்த மாதிரி மெஸ்ஸேஜ் போறதை கண்காணிச்சுட்டு இருப்பாங்கன்னு தோணுது. யாரோ வேணும்ன்னே டாம்பர் பண்ணறாங்கன்னு அவங்களுக்கு தெரியும். ஒண்ணு ரெண்டு நாளில் நாம் என்ன செய்ய முயற்சிக்கறோம்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சுதுன்னா உடனே சுதாரிச்சுட்டு அந்த மாதிரி ஒரு மெஸ்ஸேஜ் போறதை நிறுத்தக் கூடும் இல்லையா? ஒரே நாளில் செய்யும் பொது நூறு மெஸ்ஸேஜும் போனதுக்கு அப்பறம்தான் அவங்களுக்கு தெரியும்" கேட்டுக் கொண்டு இருந்த அனைவரும் சற்று மலைத்து அமர்ந்து இருந்தனர். முரளீதரனின் முகத்தில் அளவிலா பெருமிதம். ஷான், "God, you girls really think big!" கிரிஸ்டஃபர், "சரி, நூறு கணிணிகளையும் நீங்க ஏழு பேர் எப்படி ஆபரேட் பண்ணப் போறீங்க. ?" வந்தனா, "நாங்களே உக்காந்து டாம்பர் பண்ணப் போறது இல்லை. டாம்பர் பண்ணறதுக்கு ஒரு மென் பொருள் எழுதப் போறோம். அந்த மென்பொருளை நூறு கணிணிகளில் புகுத்தப் போறோம். வைரஸ் அனுப்பும் மெஸ்ஸேஜ்களை நாங்க குறிப்பிடும் நாளில் எங்க மென் பொருள் டாம்பர் செய்யும். எங்களுக்கு இந்த வேலையில் உதவறதுக்குத்தான் அந்த டீம்" சான்ட்ரா, "வாவ்!" கிரிஸ்டஃபர், "சர், உங்களுக்கு விளம்பர ஈமெயிலுக்கான சில நூறு மெஸ்ஸேஜ்களும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட்டுக்கான நூறு மெஸ்ஸேஜ்களும் கிடைக்குது. அதுக்கு அப்பறம்?" வந்தனா, "அதுக்கு அப்பறம்தான் ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு எங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த கணிணியும் பாட்டர்ன் மாட்சிங்க் அல்காரிதம் எல்லாம் தெரிஞ்ச சிலரின் உதவியும் வேணும்" ஷான், "எதுக்கு?" வந்தனா, "இந்த மெஸ்ஸேஜ்களை எல்லாம் சேர்த்து வைத்து அவைகளை வெவ்வேறு முறைகளில் ஒரு மென் பொருள் மூலம் அனலைஸ் பண்ணி அவங்களோட சங்கேத முறையை கண்டு பிடிக்க. அப்படிப் பட்ட ஒரு மென்பொருளை எங்களால் எழுத முடியாது" கிரிஸ்டஃபர், "சரி, நான் விசாரிக்கறேன். முரளி, உங்களுக்கு அப்படிப் பட்டவங்க யாராவுது தெரியுமா?" தீபாவும் வந்தனாவும் ஒன்று சேர்ந்து மனதுக்குள், 'அந்த மாதிரி ஆளுங்க ரெண்டு பேரை எனக்கு தெரியும். ஆனா ரெண்டும் இப்ப இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதிட்டு இருக்குங்க' என்று நித்தினையும் சக்தியையும் திட்டினர். முரளீதரன், "நிச்சயம் ஐ.ஐ.டிகளில் யாராவது இருப்பாங்க. பிரச்சணை இல்லை அரேஞ்ச் பண்ணலாம்" கிரிஸ்டஃபர், "Great Team India! முரளி, ஊருக்கு போனதும் எனக்கு ஒரு டீடெயிலான செயல் திட்டம், முடிஞ்ச வரை நாள், தேதியோட தயாரிச்சு எனக்கு அனுப்புங்க. இவங்க கேட்டது எல்லாம் அரேஞ்ச் பண்ண நான் எஃப்.பி.ஐயில் இருந்து பணம் ஒதுக்கறேன். அதுக்கப்பறம் உடனே நீங்க உங்க வேட்டையை தொடங்கலாம். இப்ப என்னோட லஞ்ச் சாப்பிட வாங்க" என்றவாறு முடித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு மதிய உணவுக்கு ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்றார்.சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் வந்தனா, "கிரிஸ், எனக்கு ஒரு சந்தேகம்" கிரிஸ்டஃபர், "ப்ளீஸ் கோ அஹெட் ..." வந்தனா, "நம் நோக்கம் என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை கைபற்றி அதை உருவாக்கினவங்களை கைது செய்வதா?" ஷான், "அவங்களை கைது செய்வது நடக்காத காரியம். ஒரு சட்ட விரோதமான செயலிலும் ஈடு படாதவங்களை என்னன்னு பிடிக்கறது?" கிரிஸ்டஃபர், "இல்லை ஷான், தவறான வழியில் உபயோகிக்க கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் தேச துரோகிகள் கையில் சிக்காமல் அரசாங்கத்தில் மேற்பார்வைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இருக்கு. மாங்க்ஸ் பாட் நெட் கெட்டவங்க கைக்கு போனா இருக்கும் அபாயத்தை கருதி அந்த சட்டத்தை பயன் படுத்தலாம்" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட்டின் சர்வர் அமெரிக்காவுக்கு வெளியில் இருந்தா? அல்லது அதை க்ண்ட்ரோல் பண்ணறவங்க அமெரிக்கர்களா இல்லாமல் இருந்தா?" கிரிஸ்டஃபர், "முரளீ, ஐ.நா சபையின் சைபர் க்ரைம் பிரிவு அமெரிக்காவோட கைப் பொம்மை அப்படிங்கறது உனக்கு தெரிஞ்ச விஷயம்தானே? இன்டர்போல் மூலம் மாங்க்ஸ் பாட் நெட்டை நம் மேற்பார்வைக்கு கொண்டு வரலாம்" தீபா, "அவங்க அதுக்கு ஒத்துக்கலைன்னா? அவங்க லீகலா மூவ் பண்ணினா?" முரளீதரன், "அவளோட அப்பா இந்தியாவில் ஒரு பெரிய லாயர்" என்று கிண்டலடித்தார் ஷான், "காட்! அது வேறயா?" என்க எல்லோரும் சேர்ந்து சிரித்தனர் ... கிரிஸ்டஃபர், "தீபா, நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. ஒரு நல்ல லாயரை பிடிச்சு அரசாங்கத்தின் மீது கேஸ் போட்டா அரசாங்கத்தினால் ஒண்ணும் பண்ண முடியாது. பேச்சு வார்த்தையில் தான் அவங்களை நம் வழிக்கு கொண்டு வரணும். அல்லது அவங்களுக்கு பணம் கொடுத்து இதை விலைக்கு வாங்கணும். ஷான், "சோ, உண்மையில் அவங்க பணம் சம்பாதிக்க நாம் இப்ப உதவிட்டு இருக்கோம்." வந்தனா, "அப்படி மட்டும் ஏன் பார்க்கறீங்க ஷான்? இந்த மாங்க்ஸ் பாட் நெட் அரசாங்கத்தின் கையில் அல்லது மேற்பார்வையில் இருந்தா இதை நிறைய நல்ல விதத்திலும் உபயோகிக்கலாம்" கிரிஸ்டஃபர், "எப்படி?" வந்தனா, "இந்த மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எந்த கணிணியையும் ஒரே இடத்தில் இருந்த படி எந்த வேலை வேணும்னாலும் செய்ய வைக்கலாம். இந்த ஒரு திறமையை மட்டும் வெச்சு யாராலையும் ஊடுருவ முடியாத ஒரு தகவல் பரிமாற்றத்தை உருவாக்கலாம் இல்லையா? ரொம்ப செக்யூரா இருக்கும். தீவிரவாதிகளும் ஒற்றர்களும் கண்டு பிடிக்க முடியாத படி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்" கிரிஸ்டஃபர், "யூ ஆர் ரைட்! கொடுக்கற காசுக்கு நிறையவே சாதிக்கலாம்" தீபா, "அதாவது அவங்க உங்ககிட்ட மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்க ஒத்துகிட்டா!" முரளீதரன், "விட்டா நீயே உன் அப்பாவை அவங்களுக்கு லாயரா இருக்க வைப்பே மாதிரி இருககே" தீபா, "இல்லை சார், எப்ப ஹார்ஷ்7 இதில் இன்வால்வ் ஆகி இருக்கார்ன்னு தெரிஞ்சுதோ அப்ப இருந்தே எனக்கு அவங்க நாம் சொல்றது எதுக்கும் ஒத்துக்க மாட்டாங்கன்னு தோணுது" முரளீதரன், "ஏன் அப்படி சொல்றே?" தீபா, "யாரையும் நம்பாத ஆள் ஹார்ஷ்7. ஒண்ணு சொல்லுங்க சார், அரசாங்கம் அப்படின்னா என்ன? உங்களை போன்ற அதிகாரிகள் சேர்ந்த அமைப்புதானே அது? அதில் எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? ஒப்படைத்த பிறகு அரசாங்கத்தை சேர்ந்த ஒருவரே இதை கெட்ட வழியில் பயன் படுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்?" கிரிஸ்டஃபர், "நீ சொல்வது நூத்துக்கு நூறு உண்மை. அப்ப என்னதான் செய்யணும்?" வந்தனா, "அவங்க எப்படிப் பட்டவங்கன்னு பாத்துட்டு அவங்க கிட்டயே விட்டுடணும். முடிஞ்சா அவங்ககூட இருந்து அந்த மாங்க்ஸ் பாட் நெட்டின் செயல்களை கண்காணிக்க சிலரை நியமிக்கணும்" முரளீதரன், "நீ சொல்றதும் சரிதான்"அடுத்த நாள் காலை அவர்களது அறையின் கதவு தட்டப் பட்டது தூக்கக் கலக்கத்துடன் கதவை திறந்த தீபா, "ஹாய் சஞ்சனா" அறைக்குள் நுழைந்த சஞ்சனா, "தூங்கு மூஞ்சி .. இன்னும் படுக்கையில் இருந்து எந்திரிக்கலையா? வந்தனா எங்கே?" தீபா, "வந்தனா குளிச்சுட்டு இருக்கா" சஞ்சனா, "நீங்க ரெண்டு பேரும் போரடிச்சுட்டு இருப்பீங்கன்னு உங்க கூட இருக்க நான் வந்து இருக்கேன்" தீபா, "ஜாஷ்வா வரலை?" சஞ்சனா, "மூணுக்கும் மந்த் எண்ட் வேலை! எங்க ஆளுக்கு அவன் பேங்கில் உங்க ஆளுங்களுக்கு அவங்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில். நாம் மூணு பேரும் நியூ யார்க்கை ஒரு கலக்கு கலக்கலாம் வாங்க" மாலை வரை தந்தையர் கொடுத்து இருந்த க்ரெடிட் கார்டின் வரம்பு வரை செலவு செய்து குடும்பத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பொருட்கள் வாங்கி குவித்தனர். ஏழு மணிக்கு அவர்களை ஹோட்டலில் விட்டு சஞ்சனா விடைபெற்றாள். மாலை எட்டு மணியளவில் தோழிகள் இருவரும் பல முறை தங்களது காதலர்களை அவர்கள் கைபேசியில் அழைத்தும் பதில் இல்லாமல் போக பெரும் கோபத்தில் இருந்தனர். அந்த ஹோட்டலிலேயே முந்தைய தினம் இரவு அறை எடுத்து இருந்த முரளீதரன் அவர்களை லாபியில் இருந்து அழைக்க வேண்டா வெறுப்புடன் அறையை காலி செய்து முரளீதரனுடன் விமான நிலையத்தை நோக்கி பயணித்தனர். விமான நிலையத்தில் போர்டிங்க் பாஸ் எடுக்கும் க்யூவில் நின்று கொண்டு இருந்த போது நித்தினும் சக்தியும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு அருகே வந்த இருவரும், "ஹாய், சாரி லேட்டாயிடுச்சு" என்று வழிந்தனர். முரளீதரன் தான் இருப்பதால் வந்த சங்கடத்தில் நெளிந்த தோழிகளிடம், "நான் க்யூவில் நின்னுட்டு இருக்கேன். நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டு வாங்க. க்யூ நகர இன்னும் பதினைந்து நிமிஷமாவுது ஆகும்" என்று அவர்களை அனுப்பினார். இரு ஜொடிகளும் இருபுறம் சென்றதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தார். ~~~~~~~~ தீபா, "பேசாதே போ!" நித்தின், "அதான் சாரின்னு சொன்னேன் இல்லை" தீபா, "உனக்கு இப்பத் தான் நேரம் கிடைச்சுதா?" நித்தின், "ஏய், ஐ செட் சாரி..." தீபா, "போய் உன் இன்ஸ்யூரன்ஸையே கட்டிட்டு அழு. உனக்காக காலையில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எத்தனை தடவை உன் செல்லில் கூப்பிட்டேன். ஒரு தடவையாவுது ஆன்ஸர் பண்ணினயா. உனக்கு என் மேல ...." அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அவளை இழுத்து அணைத்த நித்தினின் உதடுகள் அவளது இதழ்களை சிறை பிடித்து இருந்தன. பிறகு அணைத்தபடி அவர்களின் பேச்சு சகஜ நிலையில் தொடர்ந்தது. ~~~~~~~~~~~~~~ வந்தனா, "ஏன் இவ்வளவு லேட்? சீக்கிரம் வந்து இருக்கலாம் இல்லை?" சக்தி, "சாரி டியர். வேலை இருக்கும்ன்னு சொன்னேன் இல்லையா?" வந்தனா, "சொன்னேதான். ஏழு மணிக்காவுது நீ வந்து இருக்கலாம்" சக்தி, "சாரி ... இருக்கும் சில நிமிடங்களை வேஸ்ட் பண்ண வேண்டாம்" அருகில் வந்தவனின் கைகள் அவள் இடையை வளைத்து தூக்க அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் சேர்த்தனர். சில நிமிடப் பேச்சுக்கு பிறகு மறுபடி க்யூவை நோக்கி இருவரும் நடந்தனர். ~~~~~~~~~~~ க்யூவை அடைந்த தன் டீம் மெம்பர்கள் இருவரும் அவர்களுடன் இருந்த ஆடவர்களிடம் கண்களால் பகிர்ந்து கொண்ட அன்னியோன்னியத்தை முரளீதரன் கவனித்தார்.Monday, 1 Sep 2008 9:00 AM A conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள் செப்டம்பர் 1 2008 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி சுற்றி இருந்த நாற்காலிகளில் ஜாயிண்ட் டைரக்டர், வந்தனா, தீபா மற்றும் ஒரு தலை சிறந்த கல்லூரியில் கணிதப் பேராசிரியரான ப்ரொஃபெஸ்ஸர் கே.எஸ்.சாரி அவர்களும் அமர்ந்து இருந்தனர். முரளீதரன் மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி ஒரு ப்ரஸெண்டேஷன் மூலம் விளக்கினார். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முரளி, Let me summarise what you said so far. Correct me where I am wrong, இந்த மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா அதை உருவாக்கினவங்க அப்படி இதுவரை செய்யலைன்னாலும் செய்யக் கூடும் என்ற அபாயம் கருதி அமெரிக்க அரசாங்கம் அதை கைப் பற்றணும்ன்னு முடிவெடுத்து இருக்கு. அதற்கு நாம் உதவப் போறோம். இல்லையா?" முரளீதரன், "எஸ், நீங்க சொல்றது ஓரளவு சரி. இதுவரை எந்த சட்ட விரோத செயலையும் பணத்துக்காக செய்யலைன்னு சொல்லலாம். அதே சமயம் அவங்க இதுவரை நடந்துகிட்ட விதத்தை வெச்சு அவங்க எப்படி பட்டவங்களா இருக்கக்கூடும்ன்னு மனோதத்துவ முறைப் படி ஆராய்ந்ததில் எந்த வெறித்தனமா சட்ட விரோத செயலிலும் ஈடுபட மாட்டாங்கன்னு தோணுது" ஜாயிண்ட் டைரக்டர், "அப்பறம் எதுக்கு அவங்க இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு பாட் நெட்டை உருவாக்கணும்?" முரளீதரன், "எஃப்.பி.ஐயின் யூகம், which I concur, என்னன்னா, அவங்க அதை உருவாக்கும் போது எதுக்கு பயன் படுத்தணுன்னு நினைச்சு உருவாக்கலை. அவங்களோட கண்டுபிடிப்பு ஒரு அளவுக்கு accidentalன்னு (எதேட்சையா நடந்ததுன்னு) சொல்லலாம். கண்டு பிடிச்ச பிறகுதான் அவங்களுக்கே அதன் ஆற்றலைப் பற்றி புரிஞ்சு இருக்கு. ஆனால் அதை சட்ட விரோதச் செயலுக்கு பயன் படுத்த விரும்பலை. இருந்தாலும் தங்களோட கண்டு பிடிப்பை ஹாக்கர்கள் மத்தியில் சொல்லி பெருமை பட்டு இருக்காங்க" ஜாயிண்ட் டைரக்டர், "எப்படி விளம்பர ஈமெயில் அனுப்பறதைத் தவிர பணத்துக்காக எந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபடலைன்னு சொல்றீங்க?" முரளீதரன், "எஃப்.பி.ஐ அவங்களை மறைமுகமா பல முறை அணுகி பாத்து இருக்கு. விளம்பர ஈமெயில் அனுப்புவதை தவிர வேற எதற்க்கும் அவங்க ஒத்துக்கறது இல்லை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, “எப்படி அவங்களை அணுகறது?” முரளீதரன், “monks2006@gmail.com அப்படிங்கற அவர்களின் ஜீமெயில் ஐடி மூலம்” ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ், அவங்களுக்கு மெயில் ஐ.டி இருக்குன்னா, அந்த மெயில் பாக்ஸை எந்த இணைய விலாசத்தில் இருந்து உபயோகிக்கறாங்கன்னும் கூகிள் நிறுவனத்தின் மூலமே தெரிஞ்சுக்கலாமே?" முரளீதரன், "இல்லை ப்ரோஃபெஸ்ஸர், இந்த மெயில் அக்கௌண்டை அவங்க வீட்டில் இருந்தோ அலுவலகத்தில் இருந்தோ ஓபன் பண்ணற அளவுக்கு அவங்க முட்டாள்களா இருக்க மாட்டாங்க. எதாவுது இன்டர்நெட் பார்லரில் இருந்து ஓபன் பண்ணி பாத்து பதில் போடுவாங்க. எந்த ஊர், எந்த நாடு எதுவும் சொல்ல முடியாத நிலையில் அந்த கோணத்தில் ஆராய்ந்தால் ஒரு பயனும் இல்லைன்னு விட்டுட்டாங்க. அது மட்டும் இல்லை மனித உரிமை சட்டம் அமெரிக்காவில் ரொம்ப ஸ்ட்ராங்க். அரசாங்கம் ஒரு மெயில் ஐடியின் போக்குவரத்தை அந்த மெயில் ஐடியின் உரிமையாளருக்கு தெரியாமல் கண்காணிக்கணும்ன்னா அதுக்கு தகுந்த கோர்ட் ஆர்டர் வேணும். அவங்க அரசாங்கத்துக்கு எதிரா செயல் படக்கூடும் அப்படிங்கறதுக்கு தகுந்த ஆதாரங்களோட அணுகினால்தான் கோர்ட்அதற்கான ஆர்டர் கொடுக்கும். இது எல்லாத்துக்கும் மேல், இவ்வளவு திறமையோட செயல்படறவங்க அந்த ஐ.டியை ஒரு நிஜமான நபரின் பெயரில் தொடங்கி இருக்க மாட்டாங்க. இல்லையா“ ப்ரொஃபெஸ்ஸர் சாரி, “இருந்தாலும் கோர்ட் ஆர்டர் வாங்கறது முடியாத ஒரு செயலா என்ன?” முரளீதரன், “முடியும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அது ஒரு பெரிய ப்ராஸஸ். அதனால எஃப்.பி.ஐ இதுவரை அதை செய்யலை. ஆனா, இப்ப மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு கிடைத்து இருக்கும் மோசமான விளம்பரத்தினால் எளிதா கோர்ட் ஆர்டர் வாங்கி கூகிள் நிறுவனத்தை அணுக முடியும்." ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, மேல சொல்லுங்க நீங்க எப்படி கண்டு பிடிக்கப் போறீங்க? எங்கே என் உதவி தேவை?" முரளீதரன், "வந்தனா, You please continue .. ." வந்தனா அவர்கள் இதுவரை கண்டு பிடித்ததையும் அவர்களது செயற்திட்டத்தையும் விளக்கினாள். முடிவில், "Let me summarize. மாங்க்ஸ் பாட் நெட் சர்வரில் இருந்து வரும் ஆணைகளில் அதன் இணைய விலாசம் புதைந்து இருக்கு. சர்வரில் இருந்து வரும் மெஸ்ஸேஜ்களை பிரிச்சு எடுத்து ஆராய்ந்து அந்த இணைய விலாசத்தை கண்டு பிடிக்கணும். கூடவே அவங்களுக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவங்களுக்கு கொடுக்கும் போதும் அவங்களை நேரடியா அணுக முடியுதான்னு பார்க்கணும். எங்க ஆக்க்ஷன் ப்ளானை நான் மூணு மேஜர் ஸ்டெப்ஸா பிரிச்சு இருக்கேன். ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் எவ்வளவு நாள் தேவைன்னுநாங்க கணித்ததையும் கொடுத்து இருக்கேன்" என்ற படி அடுத்த ஸ்லைடைக் காட்டினாள் ஈமெயில் விளம்பரங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து மாங்க்ஸ் சர்வரில் இருந்து வரும் ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை பிரித்து எடுத்து சேமிப்பது. இதே கட்டத்தில் ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவங்களுக்கு கொடுக்கும் போதும் அவங்களை நேரடியா அணுக முடியுதான்னு பார்க்கற வேலையை எஃப்.பி.ஐ செய்ய ஒத்துகிட்டு இருக்காங்க. .... மூன்று மாதங்கள் .... செப்டெம்பர் 1 2008 முதல் நவம்பர் 28 வரை நூறு கணிணிகளில் மாங்க்ஸ் வைரஸை புகுத்தி அவைகளின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை சர்வரில் இருந்து வரவழைத்து அவைகளை பிரித்து எடுப்பது. ..... ஒரு மாதம் ... டிஸம்பர் 2008 முழுவதும் ஈமெயில் விளம்பரம் அனுப்ப வந்த ஆணைகளையும், தன்னை தானே அழித்துக் கொள்ள வந்த ஆணைகளையும் ஒன்றாக சேர்த்து அவைகளில் புதைந்து இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பது .... மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம் ... இதை இப்போதைக்கு சரியாக கணிக்க முடியாது" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வந்தனா நானும் என் டீமும் எந்த ஸ்டெப்பில் முழுசா இன்வால்வ் ஆகணும்?" வந்தனா, "கடைசி ஸ்டெப் முழுக்க முழுக்க உங்களுதுதான் சார். அந்த ஸ்டெப்புக்கு தேவையான அளவுக்கு எங்களுக்கு தெரியாது. பட், மத்த ஸ்டெப்ஸ்லயும் வாரத்துக்கு ஒரு தடவை நீங்களும் முரளி சார்கூட சேர்ந்து ரிவ்யூ பண்ணினா நல்லா இருக்கும்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஓ.கே. டன்! ஆனா முரளி, அவங்களை அணுக இருக்கும் ஒரே வழி அவங்க ஜீமெயில் ஐ.டி. கூகிள் நிறுவனத்தின் உதவியோட அவங்களை கண்டு பிடிக்க முடியுமான்னு இன்னும் தீவிரமா முயற்சி செய்யணும்ன்னு எனக்கு தோணுது. அப்படி முடியும்ன்னா வந்தனா, நீ சொன்ன மத்த எதுவும் தேவை இல்லை. சரியா?" வந்தனா, "எஸ் ப்ரொஃபெஸ்ஸர்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முதலில் ஏன் ஈமெயில் விளம்பரத்துக்கான் ஆர்டர் கொடுத்து சர்வரில் இருந்து வரும் ஆணைகளை பிரித்து எடுக்க மூணு மாசம் தேவைன்னு போட்டு இருக்கே?" வந்தனா, "நமக்கு குறைஞ்சசு முந்நூறு மெஸ்ஸேஜ்களாவுது தேவை. ஒரே நாளில் நிறைய ஆர்டர் கொடுக்க முடியாது. கொடுத்தா சந்தேகப் படுவாங்க. அதனால வாரத்துக்கு ரெண்டு அல்லது மூணு ஆர்டர்ன்னு கணக்கு பண்ணி இருக்கேன். நாம் கொடுப்பதை தவிர அவங்களுக்கு வாரத்துக்கு ஒரு ஆர்டராவுது வருது. அதையும் சேர்த்து முந்நூறுன்னு கணக்கிட்டு இருக்கேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, நீ போட்ட ப்ளானில் இருந்து ரொம்ப விலகாம ஒரு காரியம் செய்யலாம். உன் ப்ளான் படி முதலில் அவங்களுக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை கொடுக்கப் போறோம். அப்படி ஆர்டர் கொடுக்கறதுக்கு முன்னால் கூகிள் நிறுவனத்தை அணுகி அந்த ஐ.டியின் மெயில் போக்குவரத்து அனைத்தையும் நம்மிடம் அவங்க பகிர்ந்து கொள்ளணும்ன்னு அவங்களுக்கு ஒரு கோர்ட் ஆர்டர் கொடுக்க வைக்கணும். அப்படி ஒரு ஆணை தயாராக கொஞ்ச நாள் ஆனாலும் பரவால்லை. முதலில் கூகிள் நிறுவனம் ஒத்துகிட்டத்துக்கு அப்பறம் மாங்க்ஸ் ஜீமெயில் ஐடிக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை கொடுக்க சொல்லலாம். எஃப்.பி.ஐ கொடுக்கும் ஒவ்வொரு ஆர்டர் தொடர்பான மெயில் போக்குவரத்தையும் நாம் கண்காணிக்கலாம். கூடவே அந்த ஆர்டர்களினால் சர்வரிடம் இருந்து வரும் மெஸ்ஸேஜ்களையும் பிரிச்சு எடுத்து சேர்க்கலாம். அவங்க எந்த இணைய விலாசத்தில் இருந்து ஈமெயில்களை படிக்கறாங்கன்னு ஓரளவுக்கு க்ளூ கிடைச்சதும் அவங்க யார்ன்னு எளிதா கண்டு பிடிச்சுடலாம்" முரளீதரன், "வந்தனா, தீபா, ப்ரொஃபெஸ்ஸர் சொல்றது சரி. நான் முதலில் கூகிள் நிறுவனத்திடம் இருந்து ஒப்புதல் வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணறேன். அதுவரைக்கும் நீங்க ஆபரேஷனை ஆரம்பிக்க வேண்டாம்" தீபா, "அதுக்கு எவ்வளவு நாள் ஆகும் சார்?" முரளீதரன், "தெரியலை தீபா. என் கணிப்புப் படி ரெண்டு மூணு வாரம் ஆகலாம்" வந்தனா, "சரி சார்" என்றாலும் டிஸம்பர் இறுதியில் இருந்து ஜனவரி முதல் இரண்டு வாரங்கள் வரை லீவ் எடுக்க வேண்டியதை மனதில் கணக்கிட்டாள். முரளீதரன், "பட், நீங்க கேட்ட மத்ததுக்கு ஏற்பாடு பண்ணறேன். நீங்க இரண்டாவதா செய்யறதா இருந்த அந்த மெஸ்ஸேஜ் டாம்பர் செஞ்சு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை வரவழைக்கறதை முதலில் ஏன் செய்யக் கூடாது?" வந்தனா, "முடியாது சார். ஒரே நாளில் நூறு ஆணைகள் சர்வரில் இருந்து போறதை அவங்க பாத்த உடனே சுதாரிச்சுக்குவாங்க. அதுக்கு அப்பறம் என்ன செய்வாங்கன்னு நம்மால யூகிக்க முடியாது. நிச்சயம் கொஞ்ச நாள் அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை நிறுத்தி வைப்பாங்க. ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை அவங்க எடுத்துப்பாங்களாங்கறது சந்தேகம். ஆனா, நமக்கு அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை மெஸ்ஸேஜ்களுடன் ஈமெயில் விளம்பரத்துக்கான முந்நூறு ஆணைகளுக்கான மெஸ்ஸேஜ்களும் தேவை. அதனால் அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்கறதை ரெண்டாவதாதான் செய்ய முடியும்" தீபா, "இல்லை வந்தனா. ரெண்டாவுது ஸ்டெப்பில் இருக்கும் எல்லா வேலைகளையும் இப்போ செய்ய முடியாது. ஆனா சில வேலைகளை செய்ய முடியும். இப்போ இருந்து ஒரு நாளைக்கு ஒரு டாம்பர் செஞ்சு அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை எப்படி பிரித்து எடுப்பதுன்னு ஆராயலாம். கூடவே இந்த ஸ்டெப்புக்கு தேவையான மென்பொருள்களை எழுதலாம். இந்த ரெண்டு வேலைகளை முடிக்க நமக்கு எப்படியும் ரெண்டு மூணு வாரம் ஆகும். அந்த வேலைகள் எல்லாம் முடிச்சுட்டா நூறு கணிணிகளையும் ஒரே சமயத்தில் டாம்பர் செய்யறது, மாங்க்ஸ் சர்வரில் இருந்து வரும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை பிரிக்கறது இதெல்லாம் ரெண்டு மூணு நாளில் முடிச்சுடலாம். ஏன்னா அதெல்லாம் ஆடோமாட்டிக்கா மென்பொருள் மூலம் செய்யற வேலைகள்வந்தனா, "அப்படின்னா அந்த ரெண்டாவதா ஸ்டெப்பை செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்க தேவையான் ஏற்பாடுகள் செய்வது, செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்கறது அப்படின்னு ரெண்டா பிரிச்சுக்கலாம்" என்ற படி தன் பவர் பாயிண்டில் கீழ்கண்ட் மாற்றங்களை செய்தாள். மனதுக்குள் தனக்கு டிசம்பர் இறுதியில் தேவையான மூன்று வாரங்களை கழித்து கணக்கிட்டு எழுதினாள். தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து வரவழைக்க தேவையான் ஏற்பாடுகள் செய்வது ... மூன்று வாரங்கள் .... செப்டெம்பர் 1 2008 முதல் செப்டெம்பர் 19 2008 வரை ஈமெயில் விளம்பரங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து சர்வரிடம் இருந்து வரும் ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை பிரித்து எடுத்து சேமிப்பது. எஃப்.பி.ஐ மூலம் ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவர்களுக்கு கொடுக்கும் போதும் அவர்களை நேரடியா அணுக முடிகிறதா என்று பார்க்கின்ற வேலை.... மூன்று மாதங்கள் ... செப்டெம்பர் 22 2008 முதல் டிசம்பர் 19 2008 வரை நூறு கணிணிகளில் வைரஸ்ஸை புகுத்தி அவைகளின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை சர்வரில் இருந்து வரவழைத்து அவைகளை பிரித்து எடுப்பது. .... அதிக பட்சம் ஐந்து நாட்கள் ... டிசம்பர் 22 2008 முதல் டிசம்பர் 26 2008 வரை ஈமெயில் விளம்பரம் அனுப்ப வந்த ஆணைகளையும், தன்னை தானே அழித்துக் கொள்ள வந்த ஆணைகளையும் ஒன்றாக சேர்த்து அவைகளில் புதைந்து இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பது .... அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் ... முரளீதரன், "எக்ஸலெண்ட். நீங்க அந்த நூறு கணிணிகளையும் டாம்பர் செய்யறதை டிசம்பர் 24 தேதி அன்னைக்கு பண்ணுங்க. அடுத்த ஒரு வாரம் அமெரிக்காவில் எல்லாரும் லீவில் போவாங்க. ஒரு வேளை நம் மாங்க்ஸ் சூத்திரதாரிகள் அமெரிக்கர்களா இருந்தா ஒரு வாரத்துக்கு சர்வரை கண்காணிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கு" தீபா, "வாவ்! முரளி சார்!! பரவால்லை சார் உங்களுக்கும் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கு" ஜாயிண்ட் டைரக்டர் முறைக்க மற்றவர் அனைவரும் சிரித்தனர். முரளீதரன் ஜாயிண்ட் டைரக்டரிடம், "கண்டுக்காதீங்க சார். என் டீமில் எல்லாரையும் நான் என்னையே கிண்டல அடிக்க விடுவேன். அந்த சலுகையை முழுக்க பயன் படுத்திக்கற ஒரே ஆள் தீபா" அன்றில் இருந்து வந்தனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இணைய விலாசம் கொண்ட ஒன்று இரண்டு கணிணிகளில் மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தி அவற்றின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து அடுத்த நாள் வரும் ஆணைகளை எப்படி பிரித்து எடுப்பது என்று ஆராயத் தொடங்கினாள். தீபா மென்பொருள் எழுதுவதில் மூழ்கினாள்.Sunday, 7 September 2008 11:30 AM Joshua's Flat, New York, USA செப்டெம்பர் 7 2008, காலை 11:30 மணி ஜாஷ்வாவின் இல்லம், நியூ யார்க் ஜாஷ்வா, "என்ன சக்தி, ஒரு வாரமா வந்தனா நினைப்பாவே இருக்கா?" சக்தி, "ம்ம்ம் ... ஆமா. ஆனா கூட கடுப்பாவும் இருக்கு" ஜாஷ்வா, "ஏன்?" நித்தின், "அவங்க ஊருக்கு போன ரெண்டு நாளில் இருந்து தினம் ஒண்ணு ரெண்டு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து போயிட்டு இருக்கு" ஜாஷ்வா, "பொண்ணுங்க அவங்க வேலையை தொடங்கிட்டாங்க! சரி, அவங்க என்ன செய்யறாங்கன்னு கண்டு பிடிச்சீங்களா?" சக்தி, "ம்ம்ம் ... அவங்க கணிணியில் இருந்து போற மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் செய்யறாங்க" ஜாஷ்வா, "சோ, அவங்களால் இப்ப மாங்க்ஸ் வைரஸ்ஸின் மெஸ்ஸேஜ் போக்கு வரத்தை அந்த கணிணியின் மத்த மெஸ்ஸேஜ்களில் இருந்து தனியா பிரிச்சு எடுக்க முடியுது. இல்லையா?" நித்தின், "ஆமா .. " ஜாஷ்வா, "அடுத்ததா என்ன செய்வாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?" சக்தி, "நம்மை, மாங்க்ஸ் சர்வரை அடையாளம் கண்டு பிடிப்பதுதான் அவங்களோட குறிக்கோள் இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" சக்தி, "சோ, மெஸ்ஸேஜஸ்ல இருக்கும் சர்வரோட ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்க என்ன வழின்னு பார்ப்பாங்க" நித்தின், "அதாவது நம் மெஸ்ஸேஜஸுக்குள்ள ஐ.பி அட்ரெஸ் இருக்குன்னு அவங்க நினைச்சா" ஜாஷ்வா எழுந்து கிச்சனுக்கு சென்று அங்கிருந்து, "Beer ... anybody?" என்று கூப்பிட்டான் சக்தியும் நித்தினும் எழுந்து கிச்சனுக்கு சென்றனர். சக்தி ஃப்ரிட்ஜில் இருந்த பியர் கேனை எடுத்து உடைத்தவாறு, "நம் ஆளுங்களை அவ்வளவு கம்மியா எடை போடாதே. நிச்சயம் அப்படி யூகிச்சு இருப்பாங்க. ஆனா நம் மெஸ்ஸேஜகளை அவங்களால டீ-கோட் செய்ய முடியும்ன்னு எனக்கு தோணலை." என்றான். பிறகு நித்தினிடம் தமிழில் "எப்படியும் ஒண்ணு ரெண்டு மெஸ்ஸேஜ்களை வெச்சுகிட்டு ஒரு மயிரையும் புடுங்க முடியாது" என்றான். சஞ்சனா சுவாரஸ்யமாக அந்த உரையாடலை கேட்டவாறு சமைத்துக் கொண்டு இருந்தாள். ஜாஷ்வா சஞ்சனாவின் இடுப்பை வளைத்து அவள் அருகில் நின்றபடி, "ஹனி, சக்தி கடைசியா என்ன சொன்னான்?" விழித்து தலையை சொறிந்த சக்தியையும் ஜாஷ்வாவையும் பார்த்து சஞ்சனா, "ஜாஷ் கண்ணா, முதல்ல நீ சாதாரண பேச்சு எல்லாம் கத்துக்கோ. அண்ணன் சொன்னதை அப்படியே மொழி பெயர்த்தான்னா நீ எக்கச் சக்கமா கேள்வி கேப்பே. உனக்கு பதில் சொல்ல எங்களுக்கு தெரியாது. அதான் தலையை சொறிஞ்சுட்டு நிக்கறான்" சக்தி, "நோ சஞ்சனா, ஐ வில் ட்ரை" என்றபடி ஜாஷ்வாவை அழைத்துக் கொண்டு சென்றான். சஞ்சனா, "சரி, நீயாச்சு உன் மாமனாச்சு .. என்னை மட்டும் உதவிக்கு கூப்பிடாதே" மதிய உணவு தொடங்குகையில் சக்தி இந்திய பண்பாட்டில் ஏன் தலை முடிக்கு மதிப்பு இல்லை என்பதை ஜாஷ்வாவுக்கு விளக்க திணறிக் கொண்டு இருந்தான். Monday, 20 October 2008 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், அக்டோபர் 20 2008 காலை 9:00 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி ஒவ்வொரு திங்களன்றும் அவர்கள் கூடி கடந்த வாரத்தின் செயல்களையும் அந்த வாரத்தில் செய்யப் போவதையும் அலசுவது என்று முடிவெடுத்து இருந்தனர். கடந்த மூன்று வாரமாக ரிவ்யூ மீட்டிங்க்கிற்கு ப்ரொஃபெஸ்ஸர் சாரி வந்து இருக்கவில்லை. ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்கள் கொடுக்கற வேலை ஆரம்பிச்சாச்சா?" வந்தனா, "எஸ் ப்ரொஃபெஸ்ஸர். கூகிள் நிறுவனத்திடம் இருந்து செப்டெம்பர் 25ம் தேதிதான் ஒப்புதல் வந்துது. அதுக்கு அடுத்த ரெண்டு நாளில் ஆரம்பிச்சோம். இப்ப மூணு வாரமா ஏழு ஈமெயில் விளம்பரத்துக்கு ஆர்டர் கொடுத்து இருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவங்க நாம் அனுப்பும் மெயிலை எந்த இணைய விலாசத்தில் இருந்து படிக்கறாங்கன்னு தெரிஞ்சுதா? எதாவுது க்ளூ கிடைச்சுதா?" தீபா (ஏளனம் மிகுந்த குரலில்), "ஓ நிறைய தெரிஞ்சுது. இது வரைக்கும் அனுப்பிய. ஒவ்வொரு மெயிலையும் ரஷ்யா, ஐஸ்லாந்து, ஐயர்லாண்ட், லித்துவேனியா இப்படி வெவ்வேற நாட்டில் இருக்கும் கணிணியில் இருந்து படிச்சு இருக்காங்க. நாங்க சுத்தமா குழம்பிப் போயிருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன சொல்றே நீ." வந்தனா, "நாங்க எப்படி வெவ்வேறு இணைய விலாசத்தை வெச்சுட்டு டாம்பர் பண்ண முயற்சி செய்யறமோ அதுக்கும் ஒரு படி மேல அவங்க இருப்பாங்கன்னு தோணுது. விலாசம் மட்டும் இல்லை அவங்க ஆக்ஸஸ் செய்யும் கணிணியே வேற நாட்டில் இருப்பது போல் இருக்கு" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அப்ப மாங்க்ஸ் பாட் நெட்டை ஒரு கூட்டமே ஒண்ணா சேந்து ஆபரேட் பண்ணுதா?" முரளீதரன், "அப்படி இருக்க முடியாதுன்னு ஷான் ஹென்றி அடிச்சு சொல்றார். ஆனா அவருக்கும் எப்படி அவங்க ஆக்ஸஸ் பண்ணறாங்கன்னு புரியலை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி அதை விடுங்க. விளம்பர ஆர்டருக்கான பணத்தை எப்படி வசூல் செய்யறாங்க?" முரளீதரன், "ஒரு அமெரிக்கன் பாங்கில் அட்லாண்டா நகரத்தில் இருக்கும் கிளையில் ஒரு அக்கௌண்டில் போட சொல்லி மெயில் அனுப்பறாங்க. அந்த அக்கௌண்ட் யாருதுன்னு எஃப்.பி.ஐ விசாரிச்சு பார்த்தது. அஞ்சு மாசத்துக்கு முன்னாடி யாரோ ஒரு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் வந்து அந்த அக்கௌண்டை ஓபன் பண்ணி இருக்கான். அவன் கொடுத்த ஐடி ப்ரூஃப் அட்ரெஸ் ப்ரூஃப் எல்லாம் போலி. அதுக்கு அப்பறம் அவன் பாங்க் பக்கம் வரவே இல்லை. டெபாசிட் ஆகிற பணத்தில் இதுவரைக்கும் மூணு தடவை அவங்க எடுத்து இருக்காங்க. எடுத்து இருக்காங்கன்னா அவங்க எடுத்துக்கலை. ஒரு சர்ச், ஒரு அனாதை இல்லம் அப்பறம் சால்வேஷன் ஆர்மி இந்த மூணுக்கும் அவங்க நெட் பாங்கிங்க் மூலம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி இருக்காங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்னது இது?, வாங்கற காசை எல்லாம் தர்மம் பண்ணறாங்களா?" வந்தனா, "அப்படித்தான் தோணுது. ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கு. அதே சமயம் பணக்காரங்களா இருப்பாங்க மாதிரி இருக்கு" முரளீதரன், "Any how, உங்க திட்டத்தின் படி உங்களுக்கு தேவையான மெஸ்ஸேஜஸ் கிடைக்குது இல்லையா?" தீபா, "கிடைக்குது சார்." வந்தனா, "ப்ரொஃபெஸ்ஸர், இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். அவங்க ஜீமெயில் ஐடிக்கு மெயில் வந்தால் மட்டும் அவங்க மெயில் பாக்ஸை ஓபன் பண்ணறாங்க. மெயில் எதுவும் வராத தினத்தில் மெயில் பாக்ஸ் ஓபன் செய்யப் படுவதே இல்லை. ஆனா, வெவ்வேற கணிணிகளில் இருந்து ஜீடாக் மூலம் மெயில் வந்துதான்னு செக் பண்ணறாங்க. ஜீடாக் மூலம் செக் பண்ணற கணிணியும் மெயில் ஓபன் பண்ணி பாக்கற கணிணியும் வெவ்வேற" ப்ரோஃபெஸ்ஸார் சாரி, "எப்படி இதை செய்யறாங்க. புரிஞ்சுக்கவே முடியலையே" முரளீதரன், "இதுவரைக்கும் அமெரிக்காவிலோ இந்தியாவிலோ இருக்கும் எந்த கணிணியில் இருந்தும் அவங்க மெயில் ஆக்ஸஸ் பண்ணலை. ஒவ்வொரு முறையும் ஆர்டர் கொடுத்ததுக்கு பிறகு எந்த இணைய விலாசத்தில் இருந்து அவங்க ஆக்ஸஸ் செய்யறாங்கன்னு தொடர்ந்து கண்காணிச்சுட்டு வருவோம். நிச்சயம் ஒரு நாள் நாம் எளிதில் கண்டு பிடிக்கக் கூடிய எதாவுது ஒரு நாட்டில் இருக்கும் கணிணியில் இருந்து அவங்க ஆக்ஸஸ் பண்ணுவாங்கன்னு தோணுது. பார்க்கலாம்" தீபா, "ஆனா, எங்களுக்குதான் டிசம்பர்வரை ஒரு வேலையும் இல்லை" முரளீதரன், "இந்திய அரசாங்கத்தில் இருக்கற ஒவ்வொரு ஊழியனும் உன்னை மாதிரி வேலை செய்யணும்ன்னு பார்த்தா பாதி பேருக்கு ஒரு வேலையும் இருக்காது. ஜாலியா இரு." தீபா, "அப்ப நாங்க தீபாவளிக்கு ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு ஊருக்கு போயிட்டு வரலாமா?" முரளீதரன், "என்னைக்கு போறீங்க?" வந்தனா, "வரும் வெள்ளிக் கிழமை, தட் ஈஸ் 24ம் தேதி சாயங்காலம் புறப்படலாம்னு இருக்கோம். அடுத்த வாரம் ஞாயிற்று கிழமை நவம்பர் ஒண்ணாம் தேதி திரும்பி வந்துடுவோம்" முரளீதரன், "நீங்க ஏற்கனவே ப்ளான் பண்ணிட்டு கேட்கற மாதிரி இருக்கு. நீங்க இங்கே இல்லாத சமயத்தில் சர்வரில் இருந்து வரும் ஈமெயில் விளம்பரம் அனுப்பறதுக்கான ஆணைகளை உங்க புது அஸிஸ்டண்ட்ஸ் ஒழுங்கா செய்வாங்களா?" தீபா, "நான் என் லாப் டாப்பை எடுத்துட்டுத்தான் போறேன். அவங்க பிரிச்சு எடுத்த மெஸ்ஸேஜ்களை எனக்கு அனுப்பச் சொல்லப் போறேன். தினமும் நான் செக் பண்ணறேன்" ப்ரோஃபெஸ்ஸர் சாரி, "அந்த மெஸ்ஸேஜ்ஜை எப்படி உனக்கு அனுப்புவாங்க?" தீபா, "பிரிச்சு எடுத்த ஒவ்வொரு மெஸ்ஸேஜையும் ஒரு தனி ஃபைலில் ஸ்டோர் பண்ணி வைக்கறோம். அந்த ஃபைலை எனக்கு ஈமெயிலில் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க" முரளீதரன், "அதனால் உன் லாப்டாப்புக்கு ஒரு தொந்தரவும் வராதா?" தீபா, "ம்ம்ம்ஹும், மைக்ரோஸாஃப்ட் விண்டோஸுக்கு அந்த மெஸ்ஸேஜ் என்னன்னே தெரியாது" ப்ரோஃபெஸ்ஸர் சாரி, "சோ, அடுத்த வாரம் ரிவ்யூ மீட்டிங்க இருக்கப் போறது இல்லையா?" முரளீதரன், "அதுக்கு அடுத்த வாரம் மீட் பண்ணலாம் ப்ரொஃபெஸ்ஸர்" அடுத்த வாரம் தோழிகள் இருவரும் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.
uesday, 28 October 2008 8:30 AM Lawyer Veerabhadra Rao's Residence, Hyderabad செவ்வாய், அக்டோபர் 28 2008, காலை 8:30 மணி வீரபத்ர ராவின் இல்லம், ஹைதராபாத் சுந்தர் தேஷ்பாண்டே மும்பையில் இருந்து வீரபத்ர ராவின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹைதராபாத்தில் அவர்களுடன் தீபாவளி கொண்டாட வந்து இருந்தார். வருங்கால மருமகளை கண்டது முதல் அவர் ஆனந்தத்துக்கு அளவில்லை. அவளது துடிப்பிலும் பேச்சிலும் குறும்பிலும் லயித்துப் போனார். அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றவள் அவர்கள் வீட்டு வாசலை வெடிகள் பரப்பிய காகிதக் குளமாக்கிய பின்னர் காலை உணவுக்கு எல்லோரும் காத்து இருப்பதாக பல முறை அழைத்த பிறகே வீட்டுக்குள் நுழைந்தாள். வாசலில் நின்று தீபாவின் சேஷ்டைகளை கண்டு களித்து இருந்த சுந்தர் அவளுடன் உணவருந்த வந்தார். சாப்பாட்டு மேசையில் அவர் அமர அடுத்து இருந்த நாற்காலியில் சுவாதீனமாக அமர்ந்த மகளின் அருகே சென்ற கோமதி, "ஏய், எழுந்து வந்து அவருக்கு பரிமாறு. மரியாதை இல்லாமல் போய் பக்கத்தில் உக்காந்து இருக்கே" என்று அவள் காதில் கடிந்தாள். தீபா, "அம்மா, நம்ம வீட்டில் வேலைக்காரங்க இல்லையா? நீயும் வா உக்காந்து சாப்பிடு" என்று சர்வ சாதாரணமாக பதில் அளித்தாள். இவர்களது சம்பாஷணையை கேட்டு புன் சிரித்த சுந்தர், "பரவால்லை விடும்மா. நான் அந்த மாதிரி எல்லாம் மரியாதை எதிர்பார்க்கறவன் இல்லை. என்கிட்ட இப்ப இருக்கற மாதிரி அவ ஒரு ஃப்ரெண்டா இருந்தா போதும்" தீபா, "அங்கிள், நீங்க கவலையே படாதீங்க. உங்க பையனை விட நீங்க நிறையவே பேசறீங்க. ஜாலியா இருக்கலாம்" தர்மசங்கடத்துடன் சிரித்த வீரபத்ர ராவ், "அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம்" என்றவாறு நெளிந்தார். கோமதி முறைத்துப் பார்த்து முடியாமல் அவளும் சிரித்தாள். சுந்தர், "ஆனா, தீபா, நீ இத்தனை வெடி வெடிச்சியே? நித்தினுக்கு பிடிக்காது தெரியுமா? நாய்ஸ் பொல்யூஷன் அப்படிம்பான்" தீபா, "அங்கிள், நீங்களே பாத்தீங்க இல்லை? நம்ம வீட்டில் மட்டுமா வெடி வெடிச்சோம்? இந்த வீதியே போட்டி போட்டுட்டு வெடிச்சுது இல்ல? எப்படியும் அடுத்த தீபாவளியும் நான் இங்கே தான் கொண்டாடப் போறேன். நித்தின் ஒண்ணும் சொல்ல முடியாது. சொன்னா எல்லா வீட்டிலையும் போய் நிறுத்த சொல்லும்பேன். அதுக்கு அடுத்த தீபாவளிக்குள்ள உங்க பையனை கொஞ்சம் இந்த மாதிரி விஷயத்தில் வழிக்கு கொண்டு வந்துடுவேன். இல்லைன்னா தீபாவளிக்கு உங்களையும் கூட்டிட்டு இங்கே வந்துடுவேன்" சுந்தர், "என்னம்மா எப்ப கல்யாணம்ன்னு நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ப்ளான் பண்ணியாச்சா?" தீபா, "அதுக்குத்தானே நீங்களும் என் அப்பாவும் இருக்கீங்க? நித்தின் வந்ததுக்கு அப்பறம் கூடிய சீக்கிரம் .. " "அஞ்சு மாசத்துக்கு முன்னாடி இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னே?" என்ற வீரபத்ர ராவை கோமதி ஒரு தாயின் ஆதங்கத்துடன், 'இந்த மனுஷனுக்கு என்ன பேசறதுன்னே தெரியறது இல்லை. அவளே இப்பத்தான் ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கா' என்று மனதுக்குள் திட்டியபடி அவரை முறைத்தாள். வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்த தீபாவின் தோளில் கை போட்டு "இட்ஸ் ஓ.கே டியர்" என்றவாறு அவள் நெற்றியில் முத்தமிட்ட சுந்தர் வீரபத்ர ராவிடம், "நித்தின் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணிப்பானான்னே எனக்கு பயமா இருந்துது" வீரபத்ர ராவ், "அப்ப நித்தின் திரும்பி வரும் டேட் ஃபைனலைஸ் ஆனதும் சொல்லுங்க சுந்தர். நான் மத்த வேலைகளை ஆரம்பிக்கறேன்" என்று அவர் சொல்லி முடிப்பதற்குமுன் தீபா, "மே 2009 கடைசில .. " என்றாள் சுந்தர், "ம்ம்ம் ... இனிமேல் நானே என் பையன் ப்ளான் என்னன்னு இவகிட்டதான் கேட்டு தெரிஞ்சுக்கணும் .. " என்றார். ஆனந்த சிரிப்பு அந்த அறையை நிரப்பியதுTuesday, 28 October 2008 7:30 PM Rathod Mansion, Udaipur செவ்வாய், அக்டோபர் 28 2008, மாலை 7:30 மணி ராத்தோட் மான்ஷன், உதைப்பூர் வீடு முழுவதும் விளக்குகளாலும் வீட்டின் வெளிப்புறத்தில் சீரியல் லாம்ப் செட்டாலும் அலங்கரித்து இருந்த அவர்களது பூர்வீக இல்லம் ஜொலித்தது. அழகான காக்ரா சோளியில் பெரியம்மா, அம்மா, சித்தி, அண்ணி நால்வருக்கும் விளக்கேற்ற உதவிக் கொண்டு இருந்த வந்தனாவை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்த வீரேந்தரிடம் மஞ்சுநாத், "நான் ஃபோனில் சொன்னப்ப நம்ப முடியலைன்னு சொன்னியே? இப்ப பார்த்தாயா?" அருகில் மனீஷிடம் பேசிக் கொண்டு இருந்த யோகேஷ்வர், "என்ன அண்ணா சொன்னீங்க?" மஞ்சுநாத், "இந்த அஞ்சு மாசத்தில் வந்தனா எந்த அளவுக்கு மாறி இருக்கான்னு பார்க்க சொன்னேன்" வீரேந்தர், "நிஜமா யோகி, மனீஷ், உங்க ரெண்டு பேருக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நீங்க ரெண்டு பேரும் அவளை கன்வின்ஸ் பண்ணலைன்னா அவ R&AWவில் சேர்ந்து இருக்க மாட்டா" மஞ்சுநாத், "இன்னும் ஒரு விஷயம் வீரூ, அவ யூ.எஸ் போயிட்டு வந்ததுக்கு அப்பறம் அவ முகத்தில் எப்பவும் சிரிப்பு ... " யோகி, "எஸ், நானும் நோட் பண்ணினேன். நான் மூணு மாசத்துக்கு முன்னாடி டெல்லி வந்து இருந்தப்ப பார்த்ததை விட அதிகம்." திகைப்புடன் வீரேந்தர், "நிஜமாவா சொல்றே யோகி?" யோகி, "ஆமா அண்ணா. இன்னொரு விஷயம். இந்த மூணு வருஷத்தில் எப்பவாவுது அவள் இந்த மாதிரி தன்னை அலங்கரிச்சுட்டதை பார்த்து இருக்கீங்களா?" வீரேந்தர், "ஆமா, நான் அதை அப்பவே கௌரிகிட்ட சொன்னேன். அதுக்கு அவ என்னமோ நடக்குதுன்னு சொன்னா" யோகி, "I wonder if something is cooking?" மனீஷ், "என்னவா இருக்கும்?" மஞ்சுநாத், "பேட்டா, எங்க எல்லாரையும் விட உன் கிட்ட ஓரளவுக்கு மனம் விட்டு பேசுவான்னு நினைக்கறேன். இந்த ரெண்டு மூணு நாளில் என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுட்டு எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணறே. Got it?" மனீஷ், "எஸ் சார்! Loud and clear Sir!" ~~~~~~~~~~~~~~~~~ அடுத்த மூன்று நாட்களும் மனீஷின் பெரு முயற்சிக்கு ஒரு பயனும் இல்லை. தீபாவளி விடுமுறையை முடித்து அடுத்த நாள் புறப்படுவதற்கு முன் ஆடவர் நால்வரும் தொண்டையை நனைத்துக் கொண்டு இருந்த போது மனீஷ், "ம்ம்ஹூம் ... என்னன்னு தெரியலை. ஆனா என் யூகம் அவ யாரையோ லவ் பண்ணறா" யோகேஷ்வர், "ஹேய், தட்ஸ் க்ரேட் நியூஸ் ... " என்றபிறகு சலனமற்று இருந்த இரு அண்ணன்களின் முகத்தைப் பார்த்து தொடர்ந்தார், "என்ன அண்ணா? I see a worried look?" வீரேந்தர், "மனீஷ் சொல்வது உண்மையா இருந்தா ஏன் அவ என்னிடம் மறைக்கணும். She is always forthcoming with me .. " மஞ்சுநாத், "May be she is not sure if we will approve of her choice ... (ஒரு வேளை அவ தேர்ந்து எடுத்தவனை நமக்கு பிடிக்காம போகுமோன்னு கவலைப் படறாளா?) யோகேஷ்வர், "நோ! அப்படி இருந்தா அவ முகத்தில் இந்த சந்தோஷம் இருக்காது. நீங்களோ அண்ணியோ எதாவுது கேட்டீங்களா?" என்று வீரேந்திரிடம் கேட்க வீரேந்தர், "மேலோட்டமா பேசினோம். ரொம்ப ஹாப்பியா இருக்குன்னு சொன்னா. யூ.எஸ் ட்ரிப் ரொம்ப எஞ்சாய் பண்ணினேன்னா" யோகேஷ்வர், "இன்னும் ஒரு விஷயம். ஒரு வேளை இது சம்மந்தப் பட்டதா இருக்கலாம். டிசம்பர் மாசக் கடைசியில் அவள் ஃப்ரெண்டோட அம்மாவும் தங்கையும் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து வராங்களாம். என் கிட்ட அவங்க வரும் போது தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணனும் அப்பறம் அவங்களை கூட்டிட்டு சுத்திக் காண்பிக்க கார் வேணும்ன்னு சொன்னா" வீரேந்தர், "ம்ம்ம் . அதுக்கு அப்பறம் இங்கேயும் கூட்டிட்டு வர்றதா சொல்லி இருக்கா" மனீஷ், "யார் அந்த ஃப்ரெண்ட்?" வீரேந்தர், "காலேஜ் ஃப்ரெண்ட் அப்படின்னு சொன்னா" யோகேஷ்வர், "அண்ணா, அவ காலேஜ் முடிக்கறவரை என் வீட்டில்தான் இருந்தா. எனக்கு தெரிஞ்சு அவளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஃப்ரெண்ட் யாரும் கிடையாது" வீரேந்தர் முகத்தில் கவலை ரேகைகளுடன், "இது வரைக்கும் அவ என் கிட்ட பொய் சொன்னது இல்லைன்னு இருந்தேன்" மனீஷ், "சித்தப்பா, வந்தனா பொய் சொல்லலை. எதோ ஒரு காரணத்துக்காக உண்மையை மறைக்கற மாதிரி இருக்கு. அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க சந்தோஷத்துக்காகவே ஐ.பி.எஸ் சேர்ந்தவ அதை மறந்துடாதீங்க." யோகேஷ்வர், "எஸ், அது மட்டும் நிச்சயம். அவ தர்ட் இயர்ல இருந்து மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லம் ஜாலியா இருக்கும் போது இவ மட்டும் உக்காந்து ஐ.பி.எஸ்ஸுக்கு படிச்சுட்டு இருப்பா. She has sacrificed a lot of her fun Bhaiya" மஞ்சுநாத், "வீரூ, நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்"Tuesday, 28 October 2008 7:30 PM Joshua's Flat, Harlem, New York செவ்வாய், அக்டோபர் 28 2008, மாலை 7:30 மணி ஜாஷ்வாவின் இல்லம், ஹார்லம் பகுதி, நியூ யார்க் வீடு முழுவதும் சீரியல் செட் லாம்ப்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. உள்ளே சக்தியுடன் நுழைந்த நித்தின், “என்ன சஞ்சனா இது? வீட்டுக்கு உள்ளேயாவுது விளக்கு வைக்கலாம் இல்லை?” சஞ்சனா, “வெச்சுப் பாரு. ஸ்மோக் அலார்ம் காய் மூய்ன்னு கத்தும்” சக்தி, “என்னது இது ரொம்ப ஆர்டிஃபிஷியல் தீபாவளியா இருக்கு?” சஞ்சனா, “இந்த ஊர்ல இவ்வளவுதான் முடியும்” நித்தின், “சரி விடு. ஜாஷ் எங்கே?” சஞ்சனா, “மனுஷன் மதியத்தில் இருந்து அவரோட ஆஃபீஸ் ரூமில் உக்காந்துட்டு இருக்கான்” நித்தின் “நான் போய் பார்க்கறேன்” சற்று நேரத்தில் கிச்சனில் சஞ்சனாவுடன் இருந்த சக்தியையும் அழைத்தான் சக்தி, “என்ன ஜாஷ்வா?” ஜாஷ்வா, “கடந்த மூணு வாரமா நமக்கு கொஞ்சம் அதிகமா ஆர்டர்கள் வருதுன்னு சொன்னியே அதை ஆராய்ந்துட்டு இருந்தேன்” சக்தி, “Anything fishy? (சந்தேகப் படும்படி எதாவுது?)” ஜாஷ்வா, “Not on the face of it (மேலோட்டமா பார்த்தா ஒண்ணும் தெரியலை)” சக்தி, “இனிமேல் இதுவரை ஆர்டர் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து மட்டும் ஆர்டர் வாங்கிக்கலாமா?” ஜாஷ்வா, “நீ அப்படி செய்ய முடியாது” சக்தி, “ஏன்?” ஜாஷ்வா, “அலசிப் பாத்துட்டுத்தான் சொல்றேன். பொதுவா எந்த நிறுவனமும் ஒண்ணு ரெண்டு ஆர்டருக்கு மேல் கொடுக்கறது இல்லை. ஏன்னா அத்தனையும் பினாமி நிறுவன்ங்கள். ஒரே நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து ஆர்டர் கொடுத்தா ஆபத்துன்னு அவங்க அப்படி செய்யறாங்க” நித்தின், “இப்ப வரும் அதிகமான ஆர்டர்கள் நம்ம ஆளுங்க வேலையா இருக்குமா?” ஜாஷ்வா, “அதைத் தான் நானும் முதலில் சந்தேகப் பட்டேன். விசாரிச்சு பார்த்ததில் எல்லாம் பினாமி நிறுவனங்களுக்கு பின்னால் நிஜமாவே இயங்கிக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள்” எஃப்.பி.ஐ சில நிஜ நிறுவனங்களை உபயோகித்து இருந்ததால் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!. Monday, 3 November 2008 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், நவம்பர் 3 2008 காலை 9 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி முந்தைய தினம் முழுவதும் தங்களது ஈமெயிலை செக் செய்யாமல் மாலை புது தில்லி திரும்பியவர்களுக்கு சுடச் சுட ஒரு செய்தி காத்து இருந்தது. மாங்க்ஸ் ஜீமெயில் பாக்ஸ் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கணிணி மூலம் ஆக்ஸஸ் செய்யப் பட்டு இருந்தது. அந்த கணிணியின் இணைய விலாசத்தைக் கொண்டு நிஜ விலாசத்தை கண்டு பிடித்து அந்த கணிணியின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு பிடிக்க எஃப்.பி.ஐ முழு வீச்சில் ஈடு பட்டு இருந்தது. அவர்களது ரிவ்யூ மீட்டிங்கின் போது ஷான் ஹென்றியும் சான்ட்ரா ஆஸ்டினும் டெலிகான்ஃபரன்ஸ் மூலம் அவர்களுடன் கலந்து கொண்டு மேற்கொண்டு அப்டேட் கொடுப்பதாக கூறி இருந்தனர். ரிவ்யூ மீட்டிங்க் அறையில் எல்லோரும் வந்து விட்டதை முரளீதரன் கைபேசி மூலம் ஷானுக்கு தெரிவித்தார். சற்று நேரத்தில் மேசையின் மேல் இருந்த பாலிகாம் கான்ஃபரென்ஸர் கருவியில் (Polycom Conferencer - மூன்று அல்லது நாங்கு மைக்குகளும் நடுவே ஒரு ஸ்பீக்கரும் கொண்ட போன்ற ஒரு கருவி. தொலைபேசி இணைப்பில் இதை இணைக்கலாம்) மணி அடித்தது. அறையில் இருந்தவர் அனைவரும் மறுமுனையில் இருந்தவருடன் வணக்கப் பரிமாற்றங்களுக்கு பிறகு உரையாடல் தொடர்ந்தது. ஷான், "ப்ரொஃபெஸ்ஸர், நீங்கதான் இந்த ஐடியாவை கொடுத்தது. உங்களுக்கு நான் முதலில் தாங்க் பண்ணனும்." ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, அவங்களை கண்டு பிடிச்சுட்டீங்களா?" ஷான், "இல்லை ப்ரொஃபெஸ்ஸர். ஆனா அவங்களைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுட்டு இருக்கோம்" தீபா, "For God's Sake Shawn! என்ன ஆச்சுன்னு சீக்கரம் சொல்லுங்க" ஷான், "எஸ், எஸ் சொல்றேன் ... முதலில் அந்த கணிணியின் நிஜ விலாசத்தை கண்டு பிடிச்சோம். நியூ ஹாம்ப்ஷையர் மாநில தலைநகரான கன்கார்ட் நகரத்தில் ஒரு வீட்டில் அந்த கணிணி இருந்தது" தீபா, "யார் வீட்டில்?" ஷான், "ஒரு ஸ்கூல் டீச்சர் அம்மா வீட்டில். வீட்டில் அவங்க மட்டும்தான். அவங்க ஒரு ஹிஸ்டரி டீச்சர். கணிணியை முக்கால் வாசி நேரம் அவங்க ஸ்கூல் பாடங்கள் சம்மந்தப் பட்ட விவரங்கள் சேகரிக்கறதுக்கும் யாஹூ மெயில் மூலம் சொந்த ஈமெயில் அனுப்பவும் பயன் படுத்தறாங்க. அவங்க கிட்ட ஜீமெயில் ஐடி இல்லை" வந்தனா, "அப்பறம் எப்படி?" தீபா, "நான் சொல்றேன். அந்த கணிணியில் மாங்க்ஸ் வைரஸ் இருந்தது. சரியா ஷான்?" தீபா சொன்னது உண்மையானால் அதன் சாத்தியக் கூறுகளில் மலைத்த வந்தனா வாயை கையால் பொத்தி அமர்ந்து இருந்தாள். ஷான், "எஸ் தீபா, உனக்கு முதல்லயே தெரியும்ன்னா எங்களை இப்படி வெறி நாய் வேட்டைக்கு அனுப்பி இருக்க வேண்டாம்" தீபா, "இல்லை ஷான், நீங்க சொல்ல சொல்ல எனக்கு தோணுச்சு. ஆனா ஷான், நினைச்சுப் பார்க்க பிரமிப்பா இருக்கு" ஷான், "எஸ். மாங்க்ஸ் வைரஸ் மூலம் எந்த வேலையும் செய்யலாம்ன்னு நமக்கு தெரியும் ஆனா என்ன முடியும்ன்னு நாம் முழுசா யோசிக்கலைன்னு தோணுது" வந்தனா, "மை காட் ஷான், மெயிலை படிக்கறது நமக்கு ரிப்ளை போடறது எல்லாம் அவங்க பாட் நெட் மூலமே செய்யறாங்க" ஷான், "எஸ்! இதைப் பத்தி தெரிஞ்சதும் க்ரிஸ் பட்ஜெட்டை பத்தி கவலைப் படாதே; தேவையானா உடனே தீபாவையும் வந்தனாவையும் இங்கே வரவழைத்து இங்கே இருந்து ஆபரேஷனை தொடருங்க; இல்லைன்னா நீயும் சாண்ட்ராவும் இந்தியாவுக்கு போங்கன்னும், சீக்கரம் கண்டு பிடிச்சே ஆகணும் அப்படின்னு குதிக்கறார். தீபா, வந்தனா, இந்த கண்டுபிடிப்பினால உங்க ப்ளானில் எதாவுது மாற்றம் இருக்குமா?" சற்று நேர மௌனத்திற்கு பிறகு வந்தனா, "இருக்காது சார். நாங்க முதலில் போட்ட ப்ளான் படி தொடரப் போறோம்" ஷான், "இன்னும் கொஞ்சம் அதிகமா ஈமெயில் விளம்பரங்களுக்கு ஆர்டர் கொடுத்தா சீக்கிரம் நமக்கு தேவையான மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும் இல்லையா?" தீபா, "வேண்டாம் சார், அவங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வரக்கூடாது." சான்ட்ரா, "நம்மை தவிர மத்தவங்களும் ஆர்டர்கள் கொடுக்கறாங்கன்னு தெரியுது. எப்படியும் டிசம்பர் நெருங்கும் போது அமெரிக்காவில் விளம்பரங்கள் அதிகமாகும். நமக்கு நிறைய மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும்" ஷான், "உங்களுக்கு வேறு எந்த உதவியாவுது வேணுமா?" வந்தனா, "இல்லை ஷான். எங்களுக்கு தேவையானது எல்லாம் இருக்கு" ஷான், "சரி, நான் தொலைஞ்சு போன என் வீக் எண்டில் கொஞ்சூண்டையாவுது மீட்கப் பார்க்கறேன். சீ யூ" சான்ட்ரா, "சீ யூ கால்ஸ் அண்ட் கய்ஸ்" அமெரிக்கர்கள் தங்கள் இணைப்பை துண்டித்தனர். ஸ்தம்பித்து அமர்ந்து இருந்த ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சத்தியமா, இபப்டிப் பட்ட ஒரு பாட் நெட்டை உருவாக்க முடியும்ன்னு நான் கனவில் கூட நினைச்சது இல்லை. வந்தனா, தீபா, நீங்க உங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க. நான் உடனே அந்த மெஸ்ஸேஜ்களை டீ-கோட் பண்ண இந்தியாவிலேயே ஒரு பெஸ்ட் டீமை அஸ்ஸெம்பிள் பண்ணறேன்"அவர்கள் செயற்திட்டத்தின் இரண்டாம் படி அவர்கள் கணக்கிட்ட படி டிசம்பர் 19ம் தேதி வரை தொடர்ந்தது. அடுத்த வாரத்தில் முக்கியமான மூன்றாம் படியை தொடங்கினர். தீபா எழுதி இருந்த மென்பொருள் கடந்த இரு மாதங்களில் பல முறை சரிபார்க்கப் பட்டு இருந்தது. அவர்களுக்கு தேவையான் நூறு கணிணிகளும் ஒரு தனிக் கட்டிடத்தில் இணைக்கப் பட்டு தயாராக இருந்தன. அவர்களின் உதவியாளர்களுக்கு தேவைக்கும் அதிகமாக ட்ரெயினிங்க் கொடுக்கப் பட்டு இருந்தது. நூறு கணிணிகளிலும் திங்கள், டிசம்பர் 22ம் தேதியன்று மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தினர் அடுத்த நாள் எல்லாக் கணிணிகளும் மாங்க்ஸ் பாட் நெட்டில் சேர்ந்து இருந்தன. புதன் முழுவதும் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்தவாறு இருந்தனர். வியாழக் கிழமை மாலை வரை அச்செயலை தொடர்ந்தனர். வெள்ளியன்று காலை பத்து மணியில் இருந்து மதியத்துக்குள் நூறு கணிணிகள் இருந்த மாங்க்ஸ் வைரஸ்களுக்கும் தன்னை தானே அழித்துக் கொள்ள ஆணைகள் வந்து இருந்தன. அத்தனை மெஸ்ஸேஜ்களையும் பிரித்து எடுத்து, முதலில் எடுத்து இருந்த ஈமெயில் விளம்பரத்துக்கான ஆணை மெஸ்ஸேஜ்களுடன் சேர்த்து ஒன்றாக ஜிப் செய்து ப்ரொஃபெஸ்ஸர் சாரிக்கு அனுப்பியபின் பின் மாலை வேளையில் தோழியர் இருவரும் வீட்டை நோக்கி பயணித்தனர். வந்தனா அடுத்த நாள் காலை பத்து மணியளவில் புது தில்லி ஏர்போர்ட்டில் நடக்கப் போகும் சந்திப்பை பயம் கலந்த ஆவலுடன் எதிர் நோக்கி காத்து இருந்தாள்Saturday, 27 December 2008 9:30 AM சனி, டிசம்பர் 27 2008 காலை 9:30 வந்தனா புது தில்லி விமான நிலையத்தில் சென்னையில் இருந்து வரும் விமானத்தின் வரவுக்காக காத்து இருந்தாள். அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து சக்திக்கு அனுப்பி இருந்தாள். அவனிடம் இருந்து "ஹா ஹா ஹா" என்று மட்டுமே பதில் வந்து இருந்தது. தொலைபேசியில் பேசுகையில் "ஹெய், What is this? I am taking your mom! அவங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும்ன்னு எதாவுது சஜஷன் கொடேன்?" என்று அவனை அதை மறுபடி ஒரு முறை பரிசீலனை செய்து பார்க்கச் சொன்ன போது "ஹனி!" (அவன் அப்படி அழைப்பது ஜாஷ்வாவிடம் இருந்து தொத்திக் கொண்டது என்றாலும் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது) "நான் அந்த ஊருக்கு எல்லாம் போனது இல்லை. I leave it to you to decide" என்று சொல்லி அவளை மேலும் எரிச்சல் மூட்டி இருந்தான். ~~~~~~~~~~~~ விமானத்தில் கொடுத்த சிற்றுண்டியை முடித்தபின் கையில் இருந்த புத்தகத்தைப் படிக்காமல் தலையை இருக்கையில் சாய்த்தவாறு கடந்த மூன்று மாதங்களாக மகனுடன் நடந்த இரு உரையாடல்களை மனதில் அசைபோட்டாள். வார இறுதியில் தொலைபேசியில் அழைக்கும் சக்தி ஒருமுறை பேசும்போது . சக்தி, "அம்மா, ஒரு ஐடியா ... இல்லை ஒரு சஜஷன் ... இல்லை ஒரு ப்ளான் ..." மனோகரி, "முதல்ல என்னன்னு சொல்றியா?" சக்தி, "வர்ற டிசம்பர்ல நீங்களும் சாந்தியும் ஒரு டூர் போயிட்டு வர்றீங்களா?" மனோகரி, "டூரா? என்னடா சொல்றே?" சக்தி, "ஆமாம்மா, சாந்தி சென்னையை தாண்டி எங்கேயும் போனது இல்லை. அவ பாவம்மா. அவளைக் கூட்டிட்டு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திப் பாத்துட்டு வர்றீங்களா?" மனோகரி, "என்னடா சொல்றே? அதான் நீ உன் அசைன்மென்ட்டில் இருந்து வந்த உடனே கூட்டிட்டு போறேன்னு உன் தங்கச்சிகிட்ட சொல்லி இருக்கேயில்ல? அவளும் எம்.எஸ்ஸி ஃபர்ஸ்ட் இயர் சம்மர் ஹாலிடேயில் ப்ராஜக்ட், இன்டர்ன்ஷிப் ஒண்ணும் பண்ணப் போறது இல்லைன்னு இப்ப இருந்தே என் கிட்ட சொல்லிட்டு இருக்கா" சக்தி, "இல்லைம்மா, மே, ஜூன், சமயத்தில் டெல்லி பக்கம் எல்லாம் வெய்யில் கொளுத்தும். நாள் முழுக்க நாப்பது டிகிரிக்கு மேல தான் இருக்கும். அப்ப போறதுக்கு பதிலா இந்த டிசம்பர்ல போனா க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னேன்" ம்னோகரி, "நாங்க மட்டும் ஒரு ஆம்பள தொணை இல்லாம போறதா? உடனே எந்த செஞ்சுரில இருக்கீங்கம்மான்னு கேக்காதே" சக்தி, "தெரியும். கேக்க மாட்டேன். ஆனா, உங்களை பத்திரமா ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டிட்டு போய் காண்பிக்கறதுக்கு ஏற்பாடு பண்ணாம நானும் அப்படி சொல்ல மாட்டேன்னு கொஞ்சம் நம்புங்க" மனோகரி, "சாரிடா கண்ணா. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. நீ வந்ததுக்கு அப்பறம் கூட்டிட்டு போறதா இருந்தியே. அதுக்குள்ள என்ன அவசரம்?" சக்தி, "அதான் சொன்னேன் இல்ல. டிசம்பர்தான் சரியான சமயம்ன்னு?" மனோகரி, "ஏண்டா? நீயும் தானே அந்த இடமெல்லாம் பாக்கணும்ன்னு இருந்தே?" சக்தி, "ஆமாம்மா. ஆனா நான் திரும்பி வந்ததுக்கு அப்பறம் ஆஃபீஸ் வேலையா எப்படியும் டெல்லி பக்கம் போக வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் போய் பாத்துக்கறேன்" மனோகரி, "அந்த சமயத்தில் எங்களையும் கூட்டிட்டு போயேண்டா?" சக்தி, "நான் ஆஃபீஸ் வேலையா போகும் போது எவ்வளவு நாள் உங்ககூட இருக்க முடியும்ன்னு தெரியலைம்மா. அதுவுமில்லாம நான் டிசம்பர் சமயத்தில் போவேனான்னும் தெரியாது. இந்த டிசம்பர் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வர்றதுக்கு ஐடியலான சமயம்மா." மனோகரி, "புரிஞ்சுக்காம பேசாதே. நீ என்னதான் ட்ராவல் ஏஜன்ஸி மூலமா டூர் அரேஞ்ச் பண்ணினாலும் தெரியாத ஒரு இடத்துக்கு வயசுக்கு வந்த புள்ளைய கூட்டிட்டு முன்ன பின்ன தெரியாதவங்ககூட போறதுக்கு எனக்கு இஷ்டமில்லை" சக்தி, "அம்மா, முன்ன பின்ன தெரியாத ஆள் இல்லைம்மா. என் ஃப்ரெண்ட் வந்தனான்னு. ராஜஸ்தான்காரி. அவ சொந்த ஊர் உதைப்பூர். அவங்க சித்தப்பா ஜெய்ப்பூரில் ஐ.ஜி ஆஃப் பொலீஸ். அவ டெல்லியில் வேலையில் இருக்கா. அவங்க பெரியப்பா ஆர்மில ஜெனரல் அவர்வீட்டில்தான் தங்கி இருக்கா. எல்லோருடைய வீடும் அரண்மனை மாதிரி இருக்கும்ன்னு அவளே சொல்லி இருக்கா. தங்கறதுக்கு பிரச்சனையே இல்லை. இந்த டிசம்பரில் அவளுக்கும் லீவ் எப்படியும் அவ சொந்த ஊருக்கும் சித்தப்பா வீட்டுக்கும் போக வேண்டி இருக்கும்ன்னு சொன்னா. அப்ப உங்களையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னா" மனோகரி, "யாருடா இந்த பொண்ணு? இதுவரைக்கும் அவளைப் பத்தி சொன்னதே இல்லையே?" சக்தி, "காலேஜில் படிக்கும் போது நான் மும்பைக்கு போனேன் இல்லை. நித்தினை முதல் முதல்ல பாத்த டெக் ஃபெஸ்ட் அப்பத்தான் அவளையும் மீட் பண்ணினேன். போன வாரம் அவ யூ.எஸ்ஸுக்கு ரெண்டு வார வேலையா வந்து இருந்தா. அப்ப இன்னும் நல்லா பழக்கம் ஆச்சு" மனோகரி, "ஓ, நித்தினுக்கும் அவளை நல்லா தெரியுமா?" சக்தி, "ஆமாம்மா. என்ன சொல்றீங்க?" மனோகரி, "டேய், உன் ஃப்ரெண்டுங்கற. நீ இல்லாம எங்களை மட்டும் கூட்டிட்டு போகச் சொன்னா நல்லா இருக்குமா சொல்லு. அவளுக்கு சிரமம் தானே?" சக்தி, "அவ கூட பேசும்போது உங்களைப் பத்தியும் சாந்தியைப் பத்தியும் சொல்லி இருக்கேன். பாரவால்லையே, ஒரு நல்ல கம்பெனியா இருப்பாங்க போல இருக்கேன்னு அவளே சொன்னா. அப்பறம்தான் அவளே சஜ்ஜஸ்ட் பண்ணினா. வீட்டில் உக்காந்து போரடிக்கறதுக்கு பதிலா உங்களை கூட்டிட்டு போய் காமிக்கறதுல தனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு சொன்னா." மனோகரி, "ம்ம்ம்ம். .யோசிச்சு அடுத்த வாரம் பேசும்போது சொல்றேன்" மனதுக்குள் மகன் எதையோ மறைக்கிறான் என்று தோன்றியது. அவ்வளவாக பெண்களுடன் பழகாத மகன் ஒருத்தியைப் பற்றி இவ்வளவு சொன்ன பிறகு யார் அவள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அவனது புது நண்பன் ஜாஷ்வாவின் வீட்டில் இருந்து மனோகரியை அழைத்து இருந்தான். முன்பு ஒரு முறை அவன் அங்கு போயிருந்த போது அங்கிருந்து அழைத்துப் பேசி ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் அறிமுகப் படுத்தி இருந்தான். அதன் பிறகு அவன் அங்கு செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசச்சொல்லி மனோகரியே சொல்லி இருந்தாள். சக்தி, "ஹெல்லோ எப்படிம்மா இருக்கீங்க?" மனோகரி, "நாங்க நல்லா இருக்கோண்டா கண்ணா. என்ன? நேத்தைக்கு கூப்படலை?" சக்தி, "இன்னைக்கு எப்படியும் ஜாஷ்வா வீட்டுக்கு லஞ்சுக்கு வரதா இருந்தேன். இங்கிருந்தே கூப்பிட்டுக்கலாம்ன்னு கூப்படலை" மனோகரி, "நினச்சேன். சரி சஞ்சனாகிட்ட கொடு" சஞ்சனா, "ஹெல்லோ சித்தி. எப்படி இருக்கீங்க?" மனோகரி, "நல்லா இருக்கோம் சஞ்சனா. நீ எப்படி இருக்கே? உன் வீட்டுக் காரர் எப்படி இருக்கார்?" சஞ்சனா, "அவருக்கு என்ன? நாளொரு அல்காரிதமும் பொழுதொரு ப்ரோக்ராமுமா ரொம்ப நல்லா இருக்கார். இதை எல்லாம் கூட உக்காந்து மணிக்கணக்கா கதைக்க இந்தியாவில் இருந்து வந்த ரெண்டு கீக்ஸ் கிடைச்சதுக்கு அப்பறம் என்னை கண்டுக்கறதே இல்லை" வாய்விட்டு சிரித்த மனோகரி, "என்ன? நீங்க எல்லாமா நயாகரா போயிட்டு வந்ததுக்கு அப்பறம் சக்தி உன் வீட்டுப் பக்கமே வரலை போல இருக்கு?" சஞ்சனா, "இல்லையே. போன ரெண்டு வாரமாதான் இவங்க மூணு பேரும் பிஸி. அதுக்கு முன்னத்து வாரம் நாங்க எல்லாம் லேக் ஜார்ஜ் ரிஸார்ட்டுக்கு போயிருந்தோம். அதுக்கு முன்னத்து வாரம் இவரோட கசின் ஒருத்தனுக்கு கல்யாணம்ன்னு நாங்க பிஸியா இருந்தோம். அப்ப அண்ணனும் நித்தினும் ஸ்டாச்சு ஆஃப் லிபர்ட்டி போறதுக்கு இவர் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தார். அண்ணன் சொல்லலையா?" மனோகரி, "வேலை பளுவில் சொல்ல மறந்து இருப்பான்" என்று சொன்னாலும் மகன் எதையோ மறைக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்தாள். பின்னணியில் நித்தின் சஞ்சனாவிடம் 'யாரு மனோகரி ஆண்டியா? ஜாஷ் பியர் இருக்கான்னு கேட்டான். நீ ஃபோனைக் கொடு நான் ஆண்டிக்கு ஹல்லோ சொல்லிக்கறேன்' என்று என்பது தெளிவாகக் கேட்டது. தொலைபேசி அவனுக்கு கைமாறியது. நித்தின் "ஹாய் ஆண்டி. ஹவ் ஆர் யூ? ஹவ் ஈஸ் மை லிட்டில் ஸிஸ்டர்?" மனோகரி, "நான் நல்லா இருக்கண்டா நித்தின். அவளும் நல்லாத்தான் இருக்கா" நித்தின், "அப்பறம் என்ன விசேஷம் சொல்லுங்க ஆண்டி. தீபாவளிக்கு துணி எல்லாம் வாங்கி ஆச்சா?" மனோகரி, "ம்ம்ம்.. ஆச்சு. அப்பறம் யாருடா சக்தியோட புது ஃப்ரெண்ட் டெல்லியில் வேலையில் இருக்கறவ? எங்களுக்கு டெல்லி ஆக்ரா ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திக் காமிப்பா. நீங்க போயிட்டு வாங்கன்னு சக்தி சொல்றான்?" நித்தின், "ஆமா ஆண்டி ரெண்டு பேரும் உங்களுக்கு நல்லா கம்பெனி கொடுத்து சுத்தி காமிப்பாங்க" மனோகரி, "என்ன ரெண்டு பேரா?" நித்தின், "ஆமா தீபா, வந்தனா. ரெண்டு பேரும் டெல்லியில்தான் வேலையில் இருக்காங்க" மனோகரி, "டேய், எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு காமிக்க அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?" "தலை எழுத்து தான் சித்தி" என்று சஞ்சனாவின் சிரிப்புடன் கூடிய குரல் இன்னொரு எக்ஸ்டென்ஷனில் இருந்து கேட்டது. அதன் பிறகு அம்முனையில் ஏதோ கிசுகிசுப்பு பிறகு சஞ்சனா, "சித்தி நீங்க எதைக் கேட்டீங்க? கிச்சனுக்கு வந்தவ எக்ஸ்டென்ஷ்னை எடுத்தேன். நீங்க அவளுக்கு தலை எழுத்தான்னு கேட்டதும் என்னைப் பத்தித்தான் எதோ சொல்லறீங்கன்னு அப்படி சொன்னேன்" மனோகரி, "ஒண்ணும் இல்லைம்மா. சக்தி அவன் ஃப்ரெண்ட் டெல்லியில் இருக்கா அவ என்னையும் சாந்தியையும் ஊரெல்லாம் சுத்திக் காமிப்பா. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கன்னு ஒத்தைக் காலில் நிக்கறான். அதான் நித்தின்கிட்ட எங்களை கூட்டிட்டு போறதுக்கு அவங்களுக்கு தலை எழுத்தான்னு கேட்டேன்" என்று விளக்கினாலும் சஞ்சனாவும் சேர்ந்து எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது. சஞ்சனா, "ஓ நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்" நித்தின், "அப்பறம் பேசறேன் ஆண்டி" என்று விடைபெற்றுச் சென்றான். சஞ்சனாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தபிறகு சக்தி மறுபடி லைனுக்கு வந்தான் சக்தி, "என்னம்மா யோசிச்சீங்களா? நான் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணட்டுமா" இப்போது மனோகரிக்கு அந்த வந்தனாவை பார்த்தே ஆக வேண்டும் என்று இருந்தது. மனோகரி, "சரிடா கண்ணா. சாந்திகிட்டயும் கேட்டேன். அவளுக்கு ஒரே குஷி. நீ அரேஞ்ச் பண்ணு போயிட்டு வர்றோம்"சென்னையில் இருந்து வந்த பயணிகள் வெளியில் வரத் தொடங்கினர். சக்தி தன் தாய் மற்றும் தங்கையின் பல புகைப் படங்களை அவளுக்கு காட்டி இருந்தான். அடையாளம் கண்டு கொள்ள அவர்களது முதல் சந்திப்பின் போது எடுத்த வந்தனாவின் புகைப்படம் ஒன்றை தாய்க்கு அனுப்பி இருந்தான். சக்கரம் அமைந்த பெட்டிகளை ஆளுக்கு ஒன்றாக இழுத்தவாறு வந்து கொண்டு இருந்த தாயையும் மகளையும் வந்தனா வாஞ்சையுடன் பார்த்தாள். வெளிர் நிறப் புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக கண்ணாடி அணிந்த மனோகரி; அவளுக்கு அருகே சுடிதாரில் தாயின் நிறம் கொண்ட சாந்தி. 'ஓ! நீ மட்டும்தான் உன் அப்பா கலரா' என்று மனதுக்குள் சக்தியிடம் பேசிக்கொண்டே சுற்றும் முற்றும் பாத்துக் கொண்டு இருந்தவர்களை நெருங்கினாள். சாந்தி வந்தனாவை முதலில் பார்த்தாள். சாந்தி, "அம்மா, அதோ அங்கே .. " அவர்க்ள் அருகே வந்த வந்தனா, "ஹெல்லோ ஆண்டி. ஹெல்லோ ஷாந்தி. ஐ யாம் வந்தனா" என்றவாறு மனோகரியிடம் கை நீட்டினாள் இருவரிடமும் கை குலுக்கியபின் மனோகரி ஏதும் சொல்வதற்கு முன்னால் அவள் இழுத்துக் கொண்டு வந்த பெரிய பெட்டியை வாங்கிக் கொண்டாள். அவளை தலை முதல் கால்வரை ஒரு முறை பார்த்த உடன் மனோகரிக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. சிரித்த முகத்துடனும் அதே சமயம் மிடுக்குடனும், "ஹெல்லோ வந்தனா. சக்தி உன்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்கான். உண்மையை சொல்லு. எங்களை கூட்டிட்டு போய் காண்பிக்க உனக்கு சிரமம் இல்லையா?" வந்தனா, "நாட் அட் ஆல் ஆண்டி. நான் எப்படியும் ஜெய்ப்பூருக்கும் உதைப்பூருக்கும் போறதா இருந்தேன். என் கூட வேலை செய்யற தீபாவும் இந்த இடமெல்லாம் பாத்தது இல்லைன்னு சொன்னா. அவளை எப்படியும் கூட்டிட்டு போறதா இருந்தேன். அதான் சக்தி கிட்ட சொன்னேன்" அந்த விளக்கம் சக்தி முதலில் கொடுத்ததற்கு சற்று மாறுபட்டு இருந்தாலும் முழுமையாக நம்பும்படி இருக்க, மனோகரியின் மனத்தில் ஓரளவு தெளிவு பிறந்தது. சாந்தி, "நான் உங்களை எப்படி கூப்பிடணும்?" வந்தனா, "வந்தனான்னே கூப்பிடு. ஏன்?" சாந்தி, "No, you are my brother's friend. Must be same age. I don't call him by name. Always anna. That's why I asked (இல்லை, நீங்க அண்ணனோட் ஃப்ரெண்ட். அதே வயசா இருக்கும். அண்ணனை நான் பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன். அதான் கேட்டேன்)" வந்தனா, "உன் அண்ணனை விட நான் ஆறு மாசம் சின்னவதான்" என்று மனோகரிக்கும் சேர்த்து அறிவித்தாள். சாந்தி, "ஓ ரியலீ?" வந்தனா, "ஆண்டி, ஃப்ளைட் சௌகரியமா இருந்துதா" மனோகரி, "ரொம்ப சௌகரியமா இருந்தது டியர்" தன்னைப் பற்றிய முதல் அபிப்பிராயம் நல்லதாக இருப்பதை எண்ணி வந்தனாவின் மனம் குதூகலித்தது. வந்தனா, "ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஓவர் நைட் வந்துட்டு காலையில் மறுபடி புறப்பட்டு வந்தது டையரிங்கா இருக்கும். இல்லை?" மனோகரி, "இல்லைம்மா. நேத்து மதியம் ஈரோட்டில் இருந்து புறப்பட்டோம். ரயிலில் சென்னைக்கு போனோம். என் ஃப்ரெண்ட் ஒருத்தி வீட்டில் நைட்டு தங்கிட்டு காலையில் ஃப்ளைட் பிடிச்சோம்" வந்தனா, "ஓ அப்படியா? சக்தி சரியா சொல்லலை. அதனால் உங்களுக்கு டையர்டா இருக்கும்ன்னு இன்னைக்கு மத்தியானம் வரைக்கு ஒரு ப்ரோக்ராமும் போடலையே" மனோகரி, "பரவால்லை வந்தனா. காலையில் சீக்கரமா எழுந்து வந்தது கொஞ்சம் டையர்டாத்தான் இருக்கு. நீ ப்ரோக்ராமை மாத்த வேண்டாம்" ஏர்ப்போர்ட்டில் இருந்து வீடு வரை வந்தனா தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூறினாள். "டெல்லியில் நீ எங்கே வேலை செய்யறே வந்தனா?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு வந்தனா, "ஆண்டி, நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீசர். R&AWவில் சைபர் க்ரைம் பிரிவில் வேலையில் இருக்கேன்" "ஓ, அப்படியா?" முதல் முதலாக தான் ஒரு ஐ.பி.எஸ் என்றபோது சக்தியிடம் கண்ட பாராட்டு மிக்க புன்சிரிப்பு மனோகரியின் முகத்தில் இருந்தது. பிறகு புருவங்கள் முடிச்சிட்ட மனோகரி, "அப்பறம் எப்படி சக்தியை மும்பை டெக் ஃபெஸ்டில் .. " வந்தனா, "ஆண்டி, நான் ஜெய்ப்பூர் என்.ஐ.டியில் பி.டெக் முடிச்சுட்டு ஐ.பி.எஸ் சேர்ந்தேன். ப்ரொபேஷன் முடிச்சு ஆறு மாசம்தான் ஆச்சு" மனோகரி, "உன் அஃபீஷியல் டெசிக்னேஷன் என்ன?" வந்தனா, "ஏ.எஸ்.பி" மனோகரி, "சென்ட்ரல் கவர்மெண்ட் ஏ.எஸ்.பி ஸ்டேட் கவர்மெண்ட் ஏ.எஸ்.பி ராங்கை விட அதிகம் இல்லையா?" வந்தனா, "ஆமா. ஸ்டேட் கவர்மெண்டில் இது எஸ்.பி அல்லது ஏ.சி.பி ராங்க்குக்கு சமம்" சாந்தி, "வாவ். யூ நோ வந்தனா? அண்ணா ஐ.ஐ.டி கிடைக்கலேன்னா ஐ.பி.எஸ் பண்ணனும்ன்னு இருந்தான். ஏம்மா, அண்ணாவும் வந்தனா மாதிரி பி.டெக் முடிச்சதும் ஐ.பி.எஸ் பண்ணி இருக்கலாம் இல்லை" வந்தனா, "பண்ணி இருக்கலாம் ஷாந்தி. ஆனா உன் அண்ணன் பி.டெக் முடிச்ச உடனே வேலைக்கு போகணும்ன்னு மேல எதுவும் படிக்கலை" என்று விளக்கவும் மனோகரி தன் மகனைப் பற்றி சிலர் மட்டும் அறிந்ததை சொன்னதைக் கண்டு அவர்களது இருவரது நட்பின் ஆழத்தை ஆராய்ந்தாள். மனோகரி, "உங்க வீடு முழுக்க ஐ.பி.எஸ், ஆர்மி ஆஃபீஸர்கள், நீயும் ஐ.பி.எஸ். Now I know how you could befriend my son so fast ..." வந்தனா மனதுக்குள் 'ஃப்ரெண்டா? ம்ம்ம்ஹூம் ... இப்ப தெரியுது. இப்படி தள்ளி இருந்து சித்தரவதை பண்ணறதை அவன் யார்கிட்ட கத்துகிட்டான்னு'. இன்னொன்றையும் கவனித்தாள். அவள் ப்ரொபேஷனில் தவுசாவில் இருந்த போது பொதுவாக அவளை முதல் முதலில் சந்திக்கும் குடும்பப் பெண்கள் காட்டும் பயம் கலந்த மரியாதையை மனோகரியின் பேச்சில் துளியும் காண முடியவில்லை. அவள் பேச்சில் இருந்து மனோகரியின் தன்னடக்கம் மிகுந்த தன்னம்பிக்கையையும் அதை அவள் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்து இருந்ததையும் பார்த்த வந்தனாவின் மனதில் மனோகரியின் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கானது. மனோகரி, "சக்திக்கு சைபர் க்ரைமைப் பத்தி எல்லாம் நிறைய தெரியும். எனக்கு மணிக்கணக்கா அதைப் பத்தி விவரிச்சு இருக்கான்" இப்போது வந்தனா துணுக்குற்றாள். 'இரு இரு உன்னை கவனிச்சுக்கறேன்' என்று சக்தியை கடிந்தவாறு மனதில் இருந்ததை அப்படியே மனோகரியிடம், "அப்படியா? என் கிட்ட எதுவும் சொன்னது இல்லை" மனோகரி, "எப்படி பேசுவான் வந்தனா. என் கிட்ட நீ உன் வேலையை பத்தி எதாவுது சொன்னா எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. அதே அவன் கிட்ட நீ பகிர்ந்து கிட்டா உன் வேலையின் விதிமுறைகளை மீறுவது மாதிரி ஆயிடும் இல்லையா? அதான் நாகரீகமா அந்த பேச்சையே எடுத்து இருக்க மாட்டான்" ஒரு கணம் மனோகரியின் அறிவாற்றலில் வியந்த வந்தனா மனதுக்குள் 'ஆமா, நீங்கதான் உங்க மகனின் நாகரீகத்தை மெச்சிக்கணும். என்னால ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு தெரிஞ்சும் வேணும்ன்னே பேச்சை எடுத்து என்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பான்' என்றாலும் கூடவே, 'சக்தி, நீ என் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. என் வேலை அதுக்கு தடையா இருக்கும்ன்னா எனக்கு இந்த வேலையே வேண்டாம்' என்று அவனிடம் மன்றாடினாள்.மஞ்சுநாத் ராத்தோட்டின் மனைவி சுலக்ஷணா ராத்தோட் அவர்களை அன்புடன் வரவேற்றார். முன்னமே ஆடவர் நால்வரும் இவ்வருகையைப் பற்றி பெண்டிருக்கு சொல்லி வந்தனா எதை மறைக்கிறாள் என்று கண்டறியக் கோரியிருந்தனர். வந்தனா, "பெரியம்மா, இது ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி முத்துஸ்வாமி. இது ஷாந்தி. ஆண்டி, என் பெரியம்மா சுலக்ஷணா ராத்தோட்" சுலக்ஷணா, "வெல்கம் டு டெல்லி. ராத்தோட் குடும்பத்தின் சார்பா உங்களை நான் வரவேற்கிறேன்" மனோகரி, "ரொம்ப நன்றி. வரும் வழியில் வந்தனா உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லிட்டு வந்தா. ஒவ்வொருவரையும் பார்க்க ஆவலா இருக்கு" சுலக்ஷணா, "வந்தனா உங்க ப்ரோக்ராம் சொன்னா. எப்படியும் நீங்க திரும்பிப் போறதுக்குள்ள எல்லாரையும் பாத்துடுவீங்க" மனோகரி, "உண்மையில் அது என் ப்ரோக்ராம் இல்லை. என் மகன் சக்தியும் வந்தனாவும் போட்ட ப்ரோக்ராம். உங்களுக்கெல்லாம் சிரமம்" சுலக்ஷணா, "நோ நோ, எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. வந்தனா எங்க மூணு வீட்டுக்கும் ஒரே பொண்ணு. நீங்க அவ ஃப்ரெண்டோட அம்மா தங்கைன்னா எங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான்" சாந்தி, "ரொம்ப தாங்க்ஸ் ஆண்டி" பேசிக்கொண்டு இருக்கையில் தீபா டீ-ஷர்ட் பெர்முடா சகிதம் குளித்து முடித்த ஈரத் தலையை உதறியவாறு வந்தாள். தீபா, "ஹல்லோ ஆண்டி. ஹல்லோ ஷாந்தி. ஐ ஆம் தீபா." மனோகரி, "ஹல்லோ தீபா. நீயும் வந்தனாவோட வொர்க் பண்ணறே இல்லையா? ஆனா உன்னைப் பாத்தா ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் மாதிரி தெரியலையே?" தீபா, "ஐ.பி.எஸ்ஸா? நானா?" என்றபடி வாய்விட்டு சிரித்தாள். சுலக்ஷணா, "இவளா ஐ.பி.எஸ்ஸா. இவளுக்கும் டிசிப்ளினுக்கும் ரொம்ப தூரம்" தீபா, "ஆமா, இவங்க எல்லாம் எனக்கு வெச்சு இருக்கும் பெயர் Anti-establishment Activist!" உடன் சேர்ந்து சிரித்த மனோகரி, "அப்பறம் எப்படி R&AWவில் சேர்ந்தே?" தீபா, "என் தலைவிதி ஆண்டி" என்றவள் வந்தனாவின் முறைப்பைப் பார்த்துக் குறும்பாக சிரித்தாள். பிறகு, "அப்பறம் விவரமா சொல்றேன் ஆண்டி. பை த வே, உங்களைப் பத்தி நித்தின் நிறைய சொல்லி இருக்கான்" சாந்தி, "Oh, you know Nithin Annaa?" தீபா, "Yes. I know your Nithin Anna very much" (I don't know how to express the phrase "smug reply" here!) மனோகரி, 'ம்ம்ம் .. அப்ப சக்தி உனக்கு சொல்லலை. நித்தின் சொல்லி இருக்கான்னா நிச்சயம் எதோ சுவாரஸ்யமான விஷயத்தை என் பையன் என் கிட்ட இருந்து மறைக்கறான்' எண்ணியவாறு வந்தனாவை மறுபடி ஒரு முறை தலைமுதல் கால்வரை எடை போட்டாள். சுலக்ஷணாவும் அதே போல் எண்ணிக் கொண்டு இருந்தாள். மனோகரி, "இன் ஃபாக்ட் நித்தின்தான் உன்னைப் பத்தி முதல்ல என் கிட்ட சொன்னான்" சுலக்ஷணா, "தீபா, யார் இந்த நித்தின்?" தீபா திரு திருவென விழித்து வந்தனாவைப் பார்த்தபடி, "என் ஃப்ரெண்ட் ஆண்டி. அவனும் ஷக்தியும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவனை மும்பை ஐ.ஐ.டி டெக் ஃபெஸ்டில் முதலில் மீட் பண்ணினேன். அப்பறம் நாங்க யூ.எஸ்ல மறுபடி பார்த்தோம். ரெண்டு வாரம் அவங்கதான் எங்களை வெவ்வேற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போய் காண்பிச்சாங்க" என்று வந்தனா சொல்லி வைத்து இருந்த அளவுக்கு அதிகமாகவே உண்மை விளம்பினாள். மனோகரிக்கு சில புதிய ஓட்டைகள் புலப்பட்டன! சுலக்ஷணா, "ஓ, அப்ப நித்தின் உன் ஃப்ரெண்ட். ஷக்தி வந்தனாவின் ஃப்ரெண்டா" என்று உள் அர்த்தம் பொதிந்த கேள்வியை கேட்க மறுபடி தீபாவின் வாயை திறக்க விடாத வந்தனா, "அப்படி இல்ல பெரியம்மா. நாங்க நாலு பேரும் ஃப்ரெண்ட்ஸ்" தீபா, "இன் ஃபாக்ட் அவங்க ரெண்டு பேர் மூலம் ஜாஷ்வா சஞ்சனா அப்படின்னு இன்னும் ரெண்டு பேர்கூட ஃப்ரெட்ண்டானாங்க" மனோகரி, "ஓ, உங்க ரெண்டு பேருக்கும் ஜாஷ்வாவையும், சஞ்சனாவையும் தெரியுமா?" வந்தனா, "ஆமா ஆண்டி. சஞ்சனா உங்களை சித்தின்னு கூப்பிடுவான்னு ஷக்தி சொல்லி இருக்கான்" சுலக்ஷணா, "சரி. ப்ரொஃபெஸ்ஸர், நீங்களும் ஷாந்தியும் பிரயாணக் களைப்பில் இருப்பீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. லஞ்ச் டைமில் மறுபடி பேசலாம். வந்தனா, ஷாந்திக்கு தனி ரூம் வேணும்ன்னா மனீஷ் ரூமை அரேஞ்ச் பண்ணு ஓ.கே?" சாந்தி, "வேண்டாம் ஆண்டி. நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூமில் தங்கிக்கறோம்" வந்தனா அவர்களை மாடிக்கு அழைத்துச் செல்ல. தீபாவின் வாயை மேலும் கிளற சுலக்ஷணா கிச்சனுக்கு அழைத்துச் சென்றார். தோழிகள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டதை இரு தாய்களும் கவனித்தனர்.மதிய நேர சாப்பாட்டு வேளையின் போது மஞ்சுநாத் ராத்தோடும் வந்து இருந்தார். மஞ்சுநாத், "வெல்கம் ப்ரொஃபெஸ்ஸர். வெல்கம் ஷாந்தி" மனோகரி, "தாங்க் யூ ஜெனரல்" மஞ்சுநாத், "இது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். பொதுவா நம் ஃப்ரெண்ட்ஸ் மூலம் நம் குழந்தைகளுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. இப்ப இவங்க ஃப்ரெண்ட்ஸ் மூலம் எங்களுக்கு நீங்க ஃப்ரெண்ட் ஆகி இருக்கீங்க. பை த வே ப்ரொஃபெஸ்ஸர் ஷக்தியைப் பத்தி எங்களுக்கு வந்தனா அவ்வளவா சொல்லலை. நீங்க சொல்லுங்க" வியப்புற்ற மனோகரி வந்தனாவைப் பார்க்க வந்தனா தலை குனிந்தாள். அந்த அழகில் லயித்த மனோகரி, "என் மகன் சக்திவேல் முத்துசாமி ... " என்று தொடங்கி அவனைப் பற்றி ஒரு தாயின் கர்வத்துடன் சொல்லி முடித்தாள். மஞ்சுநாத், "அவனுக்கு அமெரிக்காவிலேயே வேலை கிடைச்சு இருக்குமே. ஏன் போகலை?" மனோகரி, "அதில் அவனுக்கு சுத்தமா இஷ்டம் இல்லை ஜெனரல். இன் ஃபாக்ட் அவன் ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்யும்போதே என்.டி.ஏ (N.D.A - National Defense Academy) பரிட்சையும் எழுதினான். அதுவும் கிடைக்காமல் போனா ஐ.பி.எஸ் முயற்சி செய்யறேன்னு சொல்லிட்டு இருந்தான்" என்று தன் மகனின் தேசப் பற்றை பறைசாற்றினாள். மஞ்சுநாத், "என்.டி.ஏவில் கிடைச்சுதா" மனோகரி, "ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் நல்ல ராங்க் எடுத்து இருந்தான். நாங்க என்.டி.ஏ என்ட்ரன்ஸ் ரிஸல்டை செக் பண்ணவே இல்லை" மஞ்சுநாத், "நிச்சயம் கிடைச்சு இருக்கும். ஷக்தி மாதிரி பையன்கள் என்.டி.ஏவை முதல் ஆப்ஷனா வெச்சுக்கறது இல்லை" மனோகரி, "சக்தி விஷயத்தில் அதுக்கு முக்கிய காரணம் அவனுக்கு கணிதத்திலும் கணிப் பொறியியலிலும் இருந்த ஆர்வம்" மஞ்சுநாத், "இல்லை ப்ரொஃபெஸ்ஸர். இப்ப வந்தனா இல்லையா? அவளுக்கும் தான் ஆர்வம் இருந்தது" அந்த உரையாடலின் போக்கை மாற்ற வந்தனா, "பெரியப்பா, நீங்க என்னை ஷக்திகூட கம்பேர் பண்ணாதீங்க. அவன் தீபா மாதிரி" தீபா, "அங்கிள். என்னை மாதிரி இல்லை என்னை விட நூறு மடங்கு" வந்தனா, "மாதமாடிக்ஸ் ஒலிம்பியாடில் முதல் வந்தவன்" மஞ்சுநாத், "வாவ், கடைசியா ப்ரொஃபெஸ்ஸர் அவன் விளையாட்டில் எல்லாம் சாம்பியன் அப்படின்னு சொன்னதும் அவனை மாதிரி ஃபிஸிகல் ஃபிட்னஸ் இருப்பவர்கள் என்.டி.ஏ மாதிரி கல்லூரிகளில் சேருவதில்லை என்கிற ஆதங்கத்தில் சொன்னேன். சாரி ப்ரொஃபெஸ்ஸர். சோ, சக்தி ஒரு ஜீனியஸ்ன்னு சொல்லுங்க" தீபாவும் வ்ந்தனாவும் ஒன்றாக மனதுக்குள், 'ஆமா ஆனா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதும் ஜீனியஸ்' என்று காதலர்களை கரித்துக் கொட்டினர். மனோகரி, "ஜீனியஸ்ஸான்னு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சவரை கணக்கு அல்காரிதம் இதிலெல்லாம் அவனை மாதிரி ஒருத்தன்னா அது நித்தின் மட்டும்தான்" மஞ்சுநாத், "இதை நீங்க ஒரு ப்ரொஃபெஸ்ஸரா சொல்றீங்கன்னு தோணுது. இல்லைன்னா மகனுக்கு இணையா இன்னொருத்தனை சொல்லி இருக்க மாட்டீங்க" வாய்விட்டு சிரித்த மனோகரி, "நித்தினும் எனக்கு ஒரு மகன் மாதிரி தான்" தீபா மனதுக்குள், 'ஆண்டி, உங்களுக்கு அடுத்த டூர் ஹைதராபாத்துக்கு' என்று நினைத்தாள். மஞ்சுநாத், "Hey, girls! how do these guys look? You have photographs of them?" மனோகரி தன் வாலட்டில் இருந்த சக்தியின் புகைப் படத்தை எடுத்துக் காட்ட. வந்தனா எதுவும் சொல்வதற்கு முன்னர் தீபா தனக்கு நித்தின் புதிதாக வாங்கி கொடுத்து இருந்த ஐ-ஃபோனில் அவனது படத்தைக் காட்டினாள். வாங்கிப் பார்த்த மஞ்சுநாத் வந்தனாவிடம், "உன் ஃபோனில் ஷக்தியின் படம் இருக்கா வந்தனா?" என்று கேட்க கேட்க அவசரமாக கிச்சனுக்குச் சென்றாள். மஞ்சுநாத் மேலும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி மனோகரியிடம் கேட்டவாறு உரையாடலை தொடர்ந்தார். அன்று மாலை வந்தனா அவர்களை புது தில்லியின் சில இடங்களை சுற்றி காண்பித்தாள். வயதில் மூத்தவளானாலும் தீபாவிடம் சாந்திக்கு ஒரு அதீத ஒட்டுதல் இருவரும் எதை எதையோ பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து வந்தனாவே வியந்தாள். அதே சமயம் சாந்தி ஒரு தங்கையைப் போல தன்னிடம் பழகுவதை உணர்ந்தாள். இரவு உணவுக்கு சுலக்ஷணா வீட்டுக்கு அழைத்து இருந்தாலும், மேலும் எந்த விசாரணையிலும் மாட்டாமல் இருக்க வந்தனா அவர்கள் திரும்புவதற்கு வெகு நேரம் ஆகலாம் என்று சாக்கு சொல்லி அதை தவிர்த்து இருந்தாள். இரவு உணவை ஒரு KFC ரெஸ்டாரண்டில் முடித்து சாந்தியின் விருப்பத்துக்கு ஏற்ப அருகில் இருந்த பாஸ்கின் ராபின்ஸுக்கு சென்றனர். முகம் தோய்ந்து இருந்த மனோகரியைப் பார்த்து வந்தனா, "என்ன ஆண்டி டல்லா இருக்கீங்க?" மனோகரி, "எங்க ரெண்டு பேர் மொபைலையும் சார்ஜ் போட மறந்துட்டோம். இப்ப டெட்டா இருக்கு. சக்தி எப்படியும் கூப்பிடுவான். அதான் யோசிச்சுட்டு இருக்கேன்" அப்பொழுதுதான் வந்தனாவும் தன் மொபைலை சார்ஜ் செய்யாமல் விட்டு இருந்ததை எண்ணி அதை எடுத்துப் பார்க்க அதுவும் உயிரிழந்து இருந்தது. மூவர் மொபைலிலும் பதிலில்லாமல் மஞ்சுநாத் ராத்தோடின் வீட்டில் இருக்கும் லான்ட்-லைனில் சக்தி அழைத்தான். எடுத்துப் பேசிய மஞ்சுநாத் ராத்தோட் சக்தி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு சகஜமாக பேசியதில் அவர் மனதுக்குள் அவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்பராயம் உருவானது. அதனுடன், சக்தி வந்தனாவைப் பற்றி பேசுகையில் அவன் பேச்சில் இருந்து அவனுக்கு அவள் மேல் இருப்பது நட்புக்கும் பல படிகள் மேல் என்பதை உணர்ந்தார். இதை ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி நிச்சயம் உணர்ந்து இருக்க வேண்டும். இருப்பினும் தன் முன்னே மனோகரி வந்தனாவை எதுவும் கேட்காமல் இருந்ததை எண்ணி துணுக்குற்றார். ஒரு வேளை நம் குடும்பத்தை எடை போட இந்த சுற்றுலாப் பயணத்தை ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி பயன் படுத்துகிறாரோ என்ற ஒரு ராணுவ உயர் அதிகாரிக்கான சந்தேகமும் அவர் மனதில் வந்தது. எப்படி இருப்பினும் வந்தனாவுக்கு சக்தி ஏற்றவனா என்பதை முதலில் நன்கு கணிக்க வேண்டும் என்று கருதினார். மூன்று குடும்பத்துக்கும் ஒரே மகளை தம்பி வீருவின் ஒரே வாரிசை ஒரு தமிழனுக்கு கொடுப்பதில் பிற்காலத்தில் என்ன பிரச்சனைகள் வரக் கூடும் என்றும் கணக்கிட்டார். ஆனால் அந்த கடைசி விஷயத்தில் தன்னையும் வீருவையும் விட யோகியும் மனீஷும் முற்போக்காக சிந்திப்பவர்கள் என்று அறிந்து யோகேஷ்வரை தொலைபேசியில் அழைத்து தன் மனதுக்குப் பட்டவைகளை பகிர்ந்து கொண்டார். சக்தியைப் பற்றிய முழு விவரமும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். யோகேஷ்வர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சக்தியைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் எல்லா விவரங்களுடன் அழைப்பதாக கூறினார்.Wedneday, 31 December 2008, 7:00 PM I.G.P Yogeshwar Rathod's Residence புதன் டிசம்பர் 31 2008, மாலை 7 மணி ஐ.ஜி.பி யோகேஷ்வர் ராத்தோடின் இல்லம் கடந்த இரண்டு நாட்களும் புது தில்லியில் தொடங்கி, மதுரா, ஆக்ரா மற்றும் ஃபதேபூர் சிக்ரி எல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தனர். யோகேஷ்வர் ராத்தோடின் வீட்டு காம்பௌண்டுக்குள் நுழையும் போதே லானில் இருந்த மின் விளக்கு தோரணங்களும் அங்கு செய்யப் பட்ட விருந்துக்கான ஏற்பாடுகளையும் கண்டனர். வந்தனா, "ஆண்டி. போய் ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு சேஞ்ச் பண்ணிட்டு வரலாம். எங்க சித்தப்பா வீட்டில் நியூ இயர்ஸ் ஈவ் பார்ட்டி எப்பவும் ரொம்ப நல்லா இருக்கும்" என்ற போதே மனோகரிக்கு அங்கு இருந்த ஏற்பாடுகளுக்கான காரணம் புரிந்தது. வாசலில் தன் மனைவி சகிதம் நின்று அவர்களை வரவேற்ற யோகேஷ்வர், "வெல்கம் டு ஜெய்ப்பூர் ப்ரோஃபெஸ்ஸர். வெல்கம் ஷாந்தி. ஹாய் தீபா. ஐ யம் யோகேஷ்வர் திஸ் இஸ் மை வைஃப் பரதீபா" என்று மனோகரிக்கு அறிமுகப் படுத்திக்கொண்டார். மனோகரி, "தாங்க் யூ மிஸஸ் அண்ட் மிஸ்டர் ராத்தோட்" யோகேஷ்வர், "ப்ரொஃபெஸ்ஸர் நான் வயசில் நிச்சயம் உங்களை விட சின்னவன்தான். என்னோட அண்ணிகள் மாதிரி நீங்களும் என்னை யோகின்னு கூப்பிட்டா நான் சந்தோஷப் படுவேன். என் மனைவியும் அதைத்தான் விரும்புவா" அவர் சக்தியின் குடும்பத்தைப் பற்றி சகல விவரமும் இப்போது அறிந்து இருந்தார். வந்தனாவுக்கு அவன் எல்லா விதத்திலும் ஏற்றவனே என்று அவரும் மனீஷும் மஞ்சுநாத், வீரேந்தர் இருவருடனும் பேசி அவர்களையும் அதை ஏற்க வைத்து இருந்தார்கள். அது மட்டும் அல்லாது வந்தனா சக்தியை விரும்புவது வேறு ஒரு வழியில் தெரிய வந்து இருந்தது. அவர் காட்டிய பாசத்தில் முகம் மலர்ந்த மனோகரி, "ஓ.கே யோகி அண்ட் ப்ரதீபா" தீபா, "என்ன அங்கிள்? அவங்களுக்கு வெல்கம் எனக்கு வெறும் ஹாய்யா?" யோகேஷ்வர், "உன்னை அடிக்கடி பார்ப்பதால நீயும் முதல் முதலா இங்க வந்து இருப்பது மறந்துடுச்சு. வார்ம் வெல்கம் டு யூ. ஆனா, உனக்குன்னு நான் ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கேன்" என்றபடி அருகில் இருந்த ஆர்டர்லியின் காதில் கிசுகிசுத்தார். தீபா, "என்ன ஏற்பாடு?" யோகேஷ்வர், "எங்க அண்ணன் வீட்டிலேயே நீ அவ்வளவு கொட்டம் அடிப்பே. உன்னை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணறதுக்காக டெல்லி இருந்து ஒரு ஆளை வர வெச்சு இருக்கேன்" என்று அவர் சொல்லி முடிக்கவும் முரளீதரன் தன் மனைவியுடன் லானில் இருந்து அங்கு வந்தார். தோழிகள் இருவரின் வியப்புக்கும் அளவில்லை. தீபா, "சார்! இட்ஸ் சோ நைஸ் டு ஸீ யூ ஹியர்" வந்தனா, "ஹல்லோ சார். நீங்க எப்படி இங்கே?" யோகேஷ்வர் மனோகரியிடம், "ப்ரொஃபெஸ்ஸர் மீட் ஜே.சி.பி முரளீதரன் என்னோட ஐ.பி.எஸ் பாட்ச்மேட். இவங்க ரெண்டு பேரோட பாஸ். இது அவரோட அன்பு மனைவி பத்மினி முரளீதரன்" முரளீதரன், "ஹல்லோ ப்ரொஃபெஸ்ஸர்" என்றவர் தொடர்ந்து தமிழில் "நான் உங்க பையன் சக்தியை பார்த்து இருக்கேன்" என்றார். சக்தி என்ற பெயரைக் கேட்டதும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த வந்தனாவை மேலும் வெறுப்பேற்ற ஆங்கிலத்தில் மேலும் விவரமாக யோகேஷ்வரிடம், "யூ.எஸ்ஸில் இருந்து திரும்பி வரும்போது ஏர்ப்போர்ட்டில் நாங்க மூணு பேரும் க்யூவில் நின்னுட்டு இருந்தோம். அப்ப செண்ட ஆஃப் கொடுக்க சக்தியும் நித்தினும் வந்து இருந்தாங்க. சரி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என் முன்னால பேச கூச்சப் படுவாங்களேன்னு நீங்க எல்லாம் கொஞ்ச நேரம் போய் பேசிட்டு வாங்க நான நிக்கறேன்னேன். அடுத்த நொடி சக்தியும் வந்தனாவும் ஒரு பக்கம். நித்தினும் தீபாவும் இன்னொரு பக்கமா போனாங்க. ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தாங்க" தீபா, "உங்களுக்கு எப்படி தெரியும் அவங்க சக்தி, நித்தின்னு?" முரளீதரன் யோகேஷவரை பார்த்து அர்த்தமுடன் சிரித்தபடி, "தீபா, இதை வந்தனா கேட்கலை பாத்தியா? நாங்க எல்லாம் போலீஸ்ம்மா" மனோகரியும் சற்று குழம்பியதைப் பார்த்த யோகேஷ்வர், "நீங்க போய் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க ப்ரொஃபெஸ்ஸர் நிதானமா பேசலாம். முரளீதரனும் அவர் வைஃப்ஃபும் அடுத்த மூணு நாள் உங்ககூட ஜெய்ப்பூர் சுத்திப் பாக்க வர்றாங்க. வந்தனா, தீபா, ஷாந்தி நீங்களும் போய் சேஞ்ச் பண்ணிட்டு சீக்கரம் வந்து ஹெல்ப் பண்ணுங்க" என்று உரிமையுடன் மூவரையும் துரத்தினார். பிரயாணக் களைப்பு நீங்க குளித்து உடைமாற்றி தோழிகள் மூவரும் தயரானதும். தீபாவையும் சாந்தியையும் கீழே சென்று உதவச் சொல்லி மனோகரியை அழைத்துச் செல்ல வந்தனா காத்து இருந்தாள். வந்தனாவின் மனதில் தன் சித்தப்பாவுக்கு ஏதோ தெரிந்து இருக்கிறது. 'சே, மனீஷ் அண்ணன் மூலம் நியூஸை ப்ரேக் பண்ணினா நல்லா இருக்கும்ன்னு அவன் கிட்ட முதல்ல சொல்லலாம்ன்னு இருந்தேன்' என்று எண்ணினாள், 'எப்படியோ. முதலில் மனோகரி ஆண்டியிடம் தான் சொல்லப் போகிறேன் அவரது எண்ணத்தை அறிந்து கொண்ட பிறகே என் வீட்டில் சொல்லப் போகிறேன். அதுவரை எப்படியாவுது மழுப்பணும்' என்று முடிவெடுத்தாள். குளித்துத் தயாராகிக் கொண்டு இருந்த மனோகரிக்கு வந்தனா சக்தியை விரும்புகிறாள் என்பதில் எந்த விதமான அய்யமும் இல்லை. கடைசியாக ஃபதேபூர் சிக்ரிக்கு அருகே ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்ற போது மனோகரியை தடுத்து அவள் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க அவளது வாலட்டை திறந்த போது அதில் அவள் கண்ட புகைப் படம் அதை ஊர்ஜிதப் படுத்தி இருந்தது. இருந்தும் தன் மகனும் அவளும் ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினாள். அவளது வீட்டில் இருப்பவர்களும் தன்னைப் போலவே யூகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தாள். 'முரளீதரன் அடுத்த மூணு நாள் நம்ம கூடத்தான் இருக்கப் போறார். ஒரு தமிழ்காரர் என்கிற முறையில் அவரிடம் வந்தனாவைப் பத்தியும் அவங்க குடும்பத்தைப் பத்தியும் இன்னும் விவரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்' என்று எண்ணியபடி வந்தனாவுடன் பார்ட்டி அமைத்து இருந்த லானுக்கு சென்றாள் கீழே லானில் வந்தனாவுக்கும் மனோகரிக்கும் இன்னும் ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது.உதைப்பூரில் இருந்து வந்த விமானம் சற்று தாமதமானதால் அப்போதுதான் வீரேந்தர் ராத்தோடும் கௌரியும் வந்து சேர்ந்தனர். ஓடி வந்து அவர்களை அணைத்த வந்தனா, "டாட், மாம். நீங்க எங்கே இங்கே. நானே இன்னும் நாலு நாளில் அங்கே வர்றதா இருந்தேனே?" வீரேந்தர், "நான் என் தம்பிகூட நியூ இயரைக் கொண்டாட வந்தேன்" என்று கிண்டலடித்தார். பிறகு தொடர்ந்து "யோகிட்ட நேத்து பேசிட்டு இருந்தப்ப அவன் ஒரு நாள் வந்துட்டு போகச் சொன்னான். நாங்க ரெண்டு பேர் மட்டும் அங்கே தனியா இருப்பதற்கு பதிலா இங்கே கொண்டாடிட்டு நாளைக்கு மதியம் திரும்பிப் போறோம். நீ அங்கே வரதுக்குள்ள் எல்லா ஏற்பாடும் சரியா இருக்கும் கவலைப் படாதே" அருகில் வந்த மனோகரியைப் பார்த்தவர், "ஹல்லோ ப்ரோஃபெஸ்ஸர். ஐ யம் வீரேந்தர் ராத்தோட். திஸ் இஸ் மை வைஃப் கௌரி. உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்" மனோகரி, "வணக்கம் மிஸஸ் அண்ட் மிஸ்டர் ராத்தோட். என்னால் உங்க பொண்ணுக்கும் உங்க எல்லோருக்கும் ரொம்ப சிரமம். உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கேன்" வீரேந்தர், "நோ நோ. ஒரு சிரமமும் இல்லை. எப்படியும் தீபாவை கூட்டிட்டு தனியா போறதா இருந்தா. நீங்க பெரியவங்க அவங்க கூட போறதில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்று ஒரு தந்தையின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மனோகரி, "என்ன மிஸ்டர் ராத்தோட். அவ ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் எதோ சின்னப் பொண்ணை தனியா அனுப்பற மாதிரி பேசறீங்க?" கௌரி, "அவ என்னவா இருந்தாலும் எங்களுக்கு சின்னப் பொண்ணுதானே. எவ்வளவு வருஷம் ஆனாலும் உங்களுக்கு சக்தி சின்னப் பையன் தானே. வாங்க டின்னர் சாப்பிட்டுட்டே பேசலாம்" டின்னர் முடித்து எல்லோரும் பாட்டும் கும்மாளமுகாக புது வருடத்தின் வரவை எதிர் நோக்கிக் காத்து இருந்தனர். மணி பனிரெண்டை நெருங்கியதும் "ஹாப்பி நியூ இயர்" என்ற கோஷமும் வாண வேடிக்கைகளும் இரவைப் பகலாக்கின. எழுந்து நின்ற யோகேஷ்வர், "ஃப்ரெண்ட்ஸ் இந்த வருஷம் நாம் எல்லோருக்கும் விசேஷமானதா இருக்கணும்ன்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கறேன்" என்று பொதுவான ஒரு டோஸ்ட் கொடுத்தார் பிறகு வீரேந்தரை அழைத்தார். வீரேந்தர், "நான் என் தம்பி சொன்னதை வழி மொழிகிறேன்" என்று தொடங்கினார். பிறகு தொடர்ந்து "நான் மேற் கொண்டு சொல்வதை சில நாட்கள் கழித்து பேசலாம்ன்னு இருந்தேன். பிறகு இது இந்த புது வருஷத் தொடக்கத்தில் இருக்கட்டும் என்று நாங்க எல்லாம் சேர்ந்து முடிவெடுத்தோம்" என்று பீடிகை போட்டார். "வரும் 2009 ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் குடும்பத்துக்கு விசேஷமானதா இருக்கணும்ன்னு நான் இறைவனை வேண்டிக்கறேன்" என்ற பிறகு அவர் மனோகரியைப் பார்த்து "ப்ரொஃபெஸ்ஸர் என் மகள் உங்க மகனை மனசார விருமபுறா. இதை எங்ககிட்ட கூட இன்னும் சொல்லாமல் முதலில் நீங்க அவளை ஏத்துக்கணும்ன்னு காத்துட்டு இருக்கா. உங்க மகன் என் மகளுக்கு எல்லா விதத்திலும் ஒரு நல்ல கணவனா இருப்பான்னு எங்க எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கு. என் மகளுடன் சேர்ந்து நாங்களும் உங்க விருப்பத்தை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம்" என்று முடித்தார். கண் கலங்கிய வந்தனா எழுந்து ஓடி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள். மனோகரி எழுந்து அவள் அருகே சென்றாள். தந்தையிடம் இருந்து திரும்பிய வந்தனா, "ஆண்டி .. சக்தி உங்க கிட்ட முதல்லயே சொல்றேன்னு சொன்னான். நான்தான் உங்களுக்கு என்னை பிடிக்குதான்னு பாத்த பிறகு சொல்லலாம்ன்னு சொன்னேன்." மனோகரி, "Oh! Not an issue Vanthana" குனிந்து தன் பாதத்தை தொட்ட வந்தனாவின் முகத்தை ஏந்தி (சற்று குனிய செய்து!) நெற்றியில் முத்தமிட்டு அணைத்தாள். பிறகு, "உங்களை மாதிரி என் மகனின் பேச்சில் இருந்தும் வந்தனாவின் ந்டவடிக்கையில் இருந்தும் எனக்கும் ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான். நான் உங்க சம்மதத்தை எப்படி கேட்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்தனா எனக்கு மருமகளா வருவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். பெருமையும் கூட" என்றாள். நட்பு என்ற எல்லையை ஒரு கணத்தில் கடந்து ராத்தோட் குடும்பத்தினர் காட்டிய அன்னியோன்னியத்தில் மனோகரி திக்கு முக்காடினாள். அவர்கள் அத்தனை பேரும் வந்தனா மேல் வைத்து இருக்கும் பாசத்துக்கு தானும் தன் மகனும் ஈடு கொடுக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினாள். யோகேஷ்வா, "சோ, தீபா இப்ப உன்னை மாதிரியே உன் ஃப்ரெண்டுக்கும் லைன் க்ளியர். சந்தோஷம்தானே" தீபா, "என்ன சொல்றீங்க?" முரளீதரன், "ஒண்ணும் இல்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி டெல்லி கால்ஃப் க்ளப்பில் இருக்கும் பாரில் லாயர் சுந்தர் தேஷ்பாண்டேவை உன் அப்பாகூட பாத்தேன். அவங்க ரெண்டு பேரும் சீரியஸா கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க" என்றதும் தீபா முகம் சிவந்தாள். மனோகரி தீபாவின் அருகே வந்து, "அவளைப் பத்தியாவுது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்துது. உன்னை பாத்த அன்னைக்கே எனக்கு தெரியும்" என்றவாறு அவளையும் அணைத்து உச்சி முகர்ந்தாள். பிறகு, "என் மகனுக்கு எப்படி வந்தனா சரியான ஜோடியோ அதே மாதிரி நித்தினுக்கு இவ" என்று அறிவித்தாள். சக்தி தொலைபேசியில் அழைப்பான் என்று நினைத்து இருந்த மனோகரியும் வந்தனாவும் ஏமாற்றம் அடைந்தனர். வந்தனா அவனை கைபேசியில் அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. துணுக்குற்ற தீபா நித்தினை அழைக்க அதுவும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. மனோகரி ஜாஷ்வாவின் இல்லத்தை அழைக்க பதிலளித்த சஞ்சனா, "மூணு பேரும் ரெண்டு நாளா ரொம்ப பிஸியா இருக்காங்க சித்தி. ஏதோ வருட இறுதிக் கணக்கு சம்மந்தப் பட்ட சிக்கல்ன்னு நினைக்கறேன்". ஆனால் முற்றிலும் வேறு பட்ட ஒரு சிக்கலில் அவர்கள் மூழ்கி இருந்தனர்.Wednesday, 31 December 2008 8:00 AM Shakthivel's Flat, New York புதன், டிசம்பர் 31 2008 காலை 8:00 சக்திவேலின் ஃப்ளாட், நியூ யார்க் அன்றும் அதற்கு அடுத்த நாளும் சக்திக்கு விடுமுறை. பழக்க தோஷம், அவனால் வெகு நேரம் தூங்க முடியவில்லை. அதிகாலையில் எழுந்து ஒரு மணி நேரம் ஜாக்கிங்க் செய்து வந்து இருந்தான். குளியலறையில் ஷவரை திறந்தவன் அதில் இருந்து இதமான சூட்டில் ஆனால் அதிவேகமாக குற்றால அருவியில் இருந்து வருவது போல் விழுந்த நீருக்கடியில் நின்றான். 'இந்த மாதிரி ஒரு ஷவர் ஈரோட் வீட்டில் போடணும். இந்த கட்டிடத்தில் பத்து ஃப்ளோருக்கு மேல் இருக்கும் டாங்கில் இருந்து தண்ணி வருது. அதனால நல்ல ஃபோர்ஸா வருது. நம்ம ஊரில் இந்த மாதிரி ஃபோர்ஸ் வராது. ஒரு ப்ரெஷர் பம்ப் ஓவர் ஹெட் டாங்க்குக்கு பக்கத்தில் ஃபிக்ஸ் பண்ணனும். லோகலா கிடைக்கலைன்னா வெளிநாட்டில் இருந்து இம்போர்ட் பண்ணனும். ஈரோடு வீட்டில் இருக்கும் வாட்டர் பைப்பிங்க் எல்லாம் அந்த ப்ரெஷரை தாங்குமான்னு தெரியலை. தாங்கலைன்னா எல்லாத்தையும் மாத்தணும். மாத்தி முடிக்கற வரைக்கும் எதுக்குடா எதுக்குடான்னு அம்மா திட்டுவாங்க. எல்லாம் ஃபிக்ஸ் பண்ணினதுக்கப்பறம் ஷவருக்கு அடியில் ஒரு தடவை நின்னு குளிச்சாங்கன்னா அப்பறம் ஊரெல்லாம் போய் ஆஹா ஓஹோன்னு சொல்லி சந்தோஷப் படுவாங்க' என்று எண்ணிய வாறு குளித்து முடித்தான். நிதானமாக டோஸ்டரில் இரண்டு சீஸ் சாண்ட்விச்கள் செய்து, ஹாட் ப்ளேட்டில் முட்டைகளை உடைத்து இரண்டு புல்ஸ் ஐ போட்டு எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான். நித்தினை அழைத்து சிறிது நேரம் மொக்கை போடலாமா என்று நினைத்தவன், நித்தினின் தூக்கப் பழக்கத்தை நினைத்து சிரித்த படி அந்த எண்ணத்தை கை விட்டான். அவர்கள் ஒன்றாக தங்கி இருந்த போது நித்தினை அதிகாலையில் எழுப்ப வேண்டிய அவசியம் நேர்ந்தால் அவன் கை கால் எட்டும் தூரத்துக்கு தள்ளி நின்று (அவனது உதைகளில் இருந்து நன்றாக பாதுகாத்துக் கொண்டு) அவனது திட்டல்களுக்கு மனதை தயார் செய்து கொண்ட பிறகே எழுப்புவான். முன்பு ஒரு முறை ஜாஷ்வா 'காலையில், அதுவும் விடுமுறை தினங்களில் நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன்' என்று சொன்னபடி சஞ்சனாவைப் பார்த்ததையும், அப்போது வெட்கத்தால் முகம் சிவந்த சஞ்சனா வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்ததையும் மனதில் கொண்டு ஜாஷ்வாவையோ சஞ்சனாவையோ தொலைபேசியில் அழைத்துப் பேசும் எண்ணத்தையும் விடுத்தான். அதன் பிறகே முந்தைய தினம் மாலை அம்மாவுடனும் வந்தனாவுடம் சார்ஜ் தீரும்வரை கை பேசியில் பேசிக் கொண்டு இருந்ததை உணர்ந்தான். மறுபடி பகல் பனிரெண்டு மணி அளவில் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி இருந்ததும் நினைவுக்கு வந்தது. பத்து மணி வரை டீ.வியில் கழித்தான். பிறகு தனது சர்வரின் 25ம் தேதியின் நடவடிக்கைகளை அவன் இன்னும் பரிசீலனை செய்யவில்லை என்று நினைவுக்கு வந்ததும் காலையுணவை முடித்ததும் சர்வர் இணைத்து இருக்கும் அறைக்கு கையில் ஒரு காஃபிக் கோப்பையுடன் சென்று அமர்ந்தான். மாங்க்ஸ் பாட் நெட் ஒரே ஒரு சர்வரால் இயக்கப் படுகிறது என்ற எஃப்.பி.ஐ - R&AW குழுக்களின் யூகத்துக்கு மாறாக மூன்று சர்வர்கள் அமைத்து இருந்தனர். நண்பர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு சர்வர். ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடக்கும் போது மட்டும் ஜாஷ்வாவின் வீட்டில் இருக்கும் சர்வர் இயக்கப் படும். மற்ற நாட்களில் முதல் நாள் இரவு பனிரெண்டிலிருந்து அடுத்த இரவு பனிரெண்டுவரை சக்தியின் ஃப்ளாட்டில் இருக்கும் சர்வர், அதற்கு அடுத்த நாள் அதே போல் நித்தின் ஃப்ளாட்டில் இருக்கும் சர்வர், என அடுத்தடுத்த நாட்களில் மாறி மாறி இயங்கும்படி அமைத்து இருந்தனர். ஈமெயில் விளம்பரங்கள் சம்மந்தப் பட்ட வேலைகளை ஜாஷ்வா கவனித்துக் கொள்வான். சர்வரில் இருந்து போகும் ஆணைகளை பரிசீலனை செய்வதை சரி சமமாக சக்தியும் நித்தினும் பகிர்ந்து கொண்டனர். சக்தியும் நித்தினும் முந்தைய தினம் இறுதி இரண்டு மணி நேரங்களில் போகும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள் உட்பட தங்களது சர்வரில் நடைபெற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் அடுத்த நாள் மாலை பரிசீலனை செய்வதை வழமையாக கொண்டு இருந்தனர். 26ம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களில் ஒரு மிகப் பெரிய ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்து இருந்தனர். அறுபது கிளைகளில் கேஷாக டெப்பாசிட் செய்யப் பட்ட நானூற்று அறுபது மில்லியன் டாலர்களை ஒரு பந்நாட்டு வியாபார நிறுவனத்தின் கணிணிகள் மூலம் சாவ் பாலோ நகரதில் இருந்த ஒரு ப்ரேஸில் நாட்டு வங்கியின் கண்க்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து இருந்தனர். பொதுவாக இரண்டு மூன்று நாட்களில் முடிக்கக் கூடிய வேலை சில சிக்கல்களால் நான்கு நாட்களை விழுங்கிவிட்டது. 25ம் தேதி நள்ளிரவு வரை சக்தியின் வீட்டில் இருந்த சர்வர் இயக்கப் பட்டு இருந்தது. 25ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு 29ம் தேதி நள்ளிரவு வரை ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடத்துவதற்காக ஜாஷ்வாவின் இல்லத்தில் இருந்த சர்வர் இயக்கப் பட்டது. ட்ரான்ஸ்ஃபரை முடித்த பிறகு 29ம் தேதி நள்ளிரவு தொடங்கி பழைய படி நாளுக்கு நாள் மாறி மாறி இயங்கும் படி செய்து இருந்தனர். 26ம் தேதி ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் தொடங்கியதால், முந்தைய நள்ளிரவுவரை தன் சர்வரில் நடந்த நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய சக்திக்கு நேரம் கிடைத்து இருக்கவில்லை.மெலிதாக ஹம்மிக் கொண்டு இருந்த சர்வரின் அருகே அமர்ந்து 25ம் தேதியின் ஒவ்வொரு வகை நடவடிக்கைகளையும் பரிசீலனை செய்தான். ஒவ்வொரு வகை நடவடிக்கையிலும் ஸ்க்ரீனை முழுவதும் நிரப்பாத அளவுக்கே வரிகள் தோன்றின. "செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள்" என்ற வகைக்கு வந்ததும் அதிர்ந்தான். சர்வரில் இருந்து சென்று இருந்த ஆணைகள் ஸ்க்ரீனை நிரப்பி இருந்தது. அடுத்தடுத்த நான்கு ஸ்க்ரீனையும் நிரப்பி அதற்கு அடுத்த ஸ்க்ரீனுக்கும் வரிகள் வழிந்தன ... சில கணங்கள் திகைத்த பின், நிதானமாக அவைகளை பரிசீலனை செய்தான். அனைத்தும் நிஜமாகச் சென்ற செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகளே என்று உறுதி செய்த பிறகு எத்தனை ஆணைகள் என்று கணக்கிட்டான். சரியாக நூறு கணிணிகளுக்கு அத்தகைய ஆணைகள் சென்று இருந்தன! சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்த பின் நேரத்தை பொருட் படுத்தாமல் நித்தினையும் ஜாஷ்வாவையும் அழைக்க கைபேசியை எடுத்தான். இன்னமும் அதனை சார்ஜ் செய்ய மறந்து இருப்பதை கவனித்து வீட்டுத் தொலைபேசியில் அழைத்து கான்ஃப்ரன்ஸ் கால் அமைத்து நடந்ததை சொன்னான். நித்தின், "My God! " ... பிறகு "Damn, damn .. " என்றவாறு அவன் படுக்கையை குத்துவது கேட்டது. சக்தி, "டேய், சும்மா கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. நாம் ரிஸ்க் எடுத்துட்டோம். ஆனா கவனக்குறைவாவும் இருந்துட்டோம்" நித்தின், "நம் மேல தாண்டா எனக்கு எரிச்சலா இருக்கு" பின்னணியில் சஞ்சனாவின் கிசுசிசுப்புக்கு பிறகு ஜாஷ்வா, "சரி, இப்போ நூறு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் போயிருக்கு. இதை வெச்சுட்டு அவங்க என்ன செய்யக் கூடும்?" சக்தி, "டீகோட் பண்ணி, சர்வரோட ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்கப் பார்ப்பாங்க" ஜாஷ்வா, "டீகோட் பண்ண முடியுமா?" நித்தின், "அவ்வளவு சுலபமா முடியாது" சக்தி, "டேய், நாம் ஒண்ணு ரெண்டு பேர் முயற்சி செய்வதைப் பத்தி பேசலை. இரண்டு அரசாங்கங்கள் முயற்சி செய்யறதைப் பத்தி பேசிட்டு இருக்கோம். நிச்சயம் முடியும் ஆனா ரொம்ப விரிவான வேலை அது. நிறைய ஆள்பலமும் கணிணிகளும் இருந்தா நிச்சயம் முடியும்." நித்தின், "அப்படியும் நாள் ஆகும்" சக்தி, "ஜாஷ்வா, நீ அவங்க நிலைமையில் இருந்தா என்ன செய்வே? அதை சொல்லு" ஜஷ்வா, "ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மெத்தட் (Brute Force Method using Pattern Matching Method) உபயோகிப்பேன். நித்தின் சொன்ன மாதிரி நாள் ஆகலாம். ஆனா ஆள்பலமும் சக்தி வாய்ந்த கணிணியும் இருந்தா நிச்சயம் கண்டு பிடிச்சுட முடியும். " நித்தின், "Brute force method will be most effective only if you have a large sample of both plain and encrypted alpha-numeric text" (அந்த முறையை பயன் படுத்த அவங்களுக்கு நிறைய எழுத்துக்கள், வார்த்தைகள் கொண்ட சங்கேத முறைப் படி மாற்றி அமைக்கப் பட்ட வரிகளும். மாற்றுவதற்கு முன்னால் இருந்த வரிகளும் தேவை) ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "ஆனா செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களில் எல்லாம் வெறும் எண்கள் மட்டும் தானே இருக்கும். எழுத்துக்கள் இருக்காதே" ஜாஷ்வா, "விளம்பர் ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ்கள் ... " என அவன் தொடங்கி பாதியில் நிறுத்தினான். பின்னணியில் சஞ்சனா நடந்து வரும் சத்தம். பிறகு "என்ன ஆச்சு?" என்று அவள் ஜாஷ்வாவைக் கேட்பது கேட்டது. சக்தி தலையில் கையை வைத்தான். நித்தின், "மை காட் ஜாஷ் நீ அன்னைக்கு சொன்ன அதிகப் படியான ஆர்டர்கள் ... " சக்தி, "எஸ் ... அவங்ககிட்ட இருந்துதான் வந்து இருக்கு" ஜாஷ்வா, "எஸ்! எஃப்.பி.ஐ நிஜக் கம்பெனிகளை உபயோகிச்சு ஆர்டர் கொடுத்து சர்வரிடம் இருந்து ஆணை வரவழைச்சு இருக்காங்க" நித்தின், "எப்ப இருந்து ஆர்டர்கள் அதிகரிச்சுது?" ஜாஷ்வா, "மூணு மாசத்துக்கு முன்னால் இருந்து. வாரத்துக்கு சராசரி ரெண்டு ஆர்டர்கள் அதிகமா வந்துது. அந்த ரெண்டும் அவங்க கொடுத்ததுன்னு எடுத்துட்டா. அவங்ககிட்ட இப்போ இருநூறு அல்லது முந்நூறு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆணை மெஸ்ஸேஜ்கள் இருக்கும்." மௌனமாக மூவரும் சில நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர். ஜாஷ்வா, "ஐ யம் ரியலி சாரி கய்ஸ். நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்து இருக்கணும்" நித்தின், "கம் ஆன் ஜாஷ். இதில் நாம் மூணு பேரும் இருக்கோம். எங்க கிட்ட சாரி கேட்டு எங்களை பிரிச்சுப் பேசாதே" இன்னும் ஓரிரு நிமிடங்கள் அரவமின்றிக் கடந்தன .. பெரு மூச்சுடன் மௌனத்தைக் கலைத்த சக்தி, "கய்ஸ், நாம் லேக் ஜார்ஜ் ரிஸார்ட்டில் என்ன பேசிகிட்டோம்? ஞாபகம் இருக்கு இல்லை? அவங்க கண்ணில் நாம் எந்த விதமான சட்ட விரோதச் செயலிலும் ஈடு படவில்லை. சோ, பயப் படறதுக்கு ஒண்ணும் இல்லை. எந்த முடிவும் நாம் உடனே எடுக்க வேண்டாம். மெஸ்ஸேஜ்களில் இருந்து சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்க நிச்சயம் பல நாட்கள் ஆகலாம். ஆனா உடனடியா என்ன செய்யப் போறோம் அப்படிங்கறதை நாம் முடிவு செஞ்சாகணும். இப்ப மணி பனிரெண்டாகப் போகுது. நான் லஞ்ச் ஆர்டர் பண்ணறேன். நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துடுங்க. உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி முடிவெடுத்தாகணும்." நித்தின், "சரி. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கே இருப்பேன்" என்றபடி அவன் இணைப்பைத் துண்டித்தான். ஜாஷ்வா, "சரி, நான் புறப்பட்டு வரேன் .. லைன்ல இரு உன் தங்கை பேசணுமாம்" சஞ்சனா, "என்னண்ணா? எதாவுது ப்ராப்ளமா? இந்த ஆள் மூஞ்சி வெளுத்தா அசிங்கமா தெரியுது!" வாய்விட்டு சிரித்த சக்தி, "ஒண்ணுமில்லை உங்க ரெண்டு பேரோட் மச்சினிகள் தொந்தரவுதான்" சஞ்சனா, "என்ன மோப்பம் பிடிச்சுட்டாளுகளா?" சக்தி, "இன்னும் இல்லை. ஆனா அதுக்கு வழிவகுக்க நாங்க மூணு பேரும் அசந்து போற மாதிரி ஒரு பெரிய வேலை செஞ்சு இருக்காளுக" சஞ்சனா, "ப்ரச்சினை ஒண்ணும் இல்லையே?" சக்தி, "கவலைப் படாதே. அப்பறம், நீயும் இங்கே லஞ்சுக்கு வரியா? நான் வெளியில் இருந்து ஆர்டர் பண்ணறேன்" சஞ்சனா, "எனக்கு வேண்டாம். ஜாஷ் ஆஃபீஸ் நியூ இயர் பார்ட்டி இருக்கு. வாங்கி ஒரே தடவை போட்ட ஒரு ட்ரெஸ்ஸை ஜாஷ் போட்டுட்டு வரச் சொல்லி இருக்கார். அந்த ட்ரெஸ் எந்த நிலையில் இருக்குன்னு பாக்கணும். ப்ளஸ், நாளைக்கு புது வருஷம். வீட்டை எல்லாம் இன்னைக்கு சுத்தம் பண்ணனும்ன்னு இருந்தேன். அந்த சோம்பேறிக்கு வசதியா நீ வரச் சொல்லிட்டே" சக்தி, "நான் வேணும்ன்னா அப்பறம் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணறேன்" சஞ்சனா, "நீங்க முதல்ல உங்க வேலைக்கு உலை வராம பாத்துக்குங்க. அப்பறம் நாளைக்கு லஞ்சுக்கு வீட்டுக்கு வா" சக்தி, "ஹேய், பார்ட்டில இருந்து வந்து தூங்க ரொம்ப நேரமாகும். எதுக்கு சிரமம்?" ஜாஷ்வா, "உனக்கு எங்க புத்தாண்டு தின ஸ்கெட்யூல் தெரியாது இல்லை?" சக்தி, "இல்லை. சொல்லு" சஞ்சனா, "நைட்டு எத்தனை மணிக்கு படுத்தாலும் அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு மேல் அவரை தூங்க விட மாட்டேன். காலையிலே சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போயிட்டு வருவோம். இதனாலயே நாங்க நியூ இயர் பார்ட்டியில் இருந்து நைட்டு சீக்கரம் கிளம்பிடுவோம். நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வாங்க. அதுக்கு அப்பறம் வீட்டுக்கு" சக்தி, "ஏன் சர்ச்சுக்கு வரக் கூடாதா" சற்று மௌனத்துக்கு பிறகு, சஞ்சனா, "சாரிண்ணா! சர்ச்சுக்கும் கூட வா" சக்தி, "ஓ.கே. நாளைக்கு பாக்கலாம்" மதிய உணவுக்கு ஆர்டர் செய்தபின் கைபேசியை சார்ஜரில் மாட்டினான்.ஒன்று கூடிய மூவரும் தங்கள் இக்கட்டுநிலையை அலசிப் பார்க்கத் தொடங்கினர். ஜாஷ்வா, "சரி, மேற்கொண்டு என்ன செய்வாங்கன்னு யோசிக்கலாம்" முன்னெச்சரிக்கை: கீழே நிறம் மாற்றி எழுதப் பட்டு இருக்கும் பகுதிகளில் எதிரிகளுக்கு சர்வரின் ஐ.பி. அட்ரெஸ்ஸை கண்டு அறிய எத்தனை நாட்கள் தேவைப் படும் என்பதை விவாதித்து கண்டறிவது விளக்கப் பட்டு இருக்கிறது. கணிணிவியல் நுணுக்கங்கள் நிறைந்து இருக்கும் ... சக்தி, "நீ சொன்ன மாதிரி ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் முறைதான் அவங்களோட ஒரே சாய்ஸ். ரெண்டு வகையான மெஸ்ஸேஜ்கள் இருந்தாலும் மொத்தம் முந்நூறு மெஸ்ஸேஜ்கள் தான் அவங்க கிட்ட இருக்கும். அதை மட்டும் வெச்சுகிட்டு அந்த முறையை உபயோகிக்கணும்ன்னா நம் மெஸ்ஸேஜ்களின் நீளத்தை வெச்சு பாக்கும் போது 128இல் இருந்து 256 (சுற்றுக்கள்) தேவைப் படும்" எப்படி சந்தேக முறைப் படி தகவலை மாற்றி எழுதுவது க்ரிப்டோக்ரஃபி (Cryptography) என அழைக்கப் படும் ஒரு விஞ்ஞானம் ஆகி விட்டதோ அதே போல் குறியீட்டு வடிவங்களில் இருக்கும் தகவல்களை ஆராய்ந்து கண்டறிவதற்கும் டீசைஃபர்மென்ட் (Decipherement) என அழைக்கப் படும் விஞ்ஞானம் இருக்கிறது. இவை இரண்டும் கணிதவியலின் கிளைகளே. குறியீட்டு வடிவத்தில் இருக்கும் ஒரு தகவலை கண்டு பிடிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவைகளில் கணிணிகளை கொண்டு செயல் படுத்தும் வழிமுறைகளில் ஒன்றே ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் (Brute Force Pattern Matching) என்று அழைக்கப் படுவது. ஜாஷ்வா, "ஹேய், இதுவரைக்கும் நீங்க எப்படி என்க்ரிப்ட் (encrypt - குறியிட்டு எழுதுவது) செய்யறீங்கன்னு கேட்டதில்லை. அதை கொஞ்சம் விளக்கி சொல்லு" சக்தி, "ஈமெயிப் அனுப்ப கொடுக்கும் ஆணை மெஸ்ஸேஜ்களுக்குள் இருக்கும் மெயில் சப்ஜெக்ட் (Mail Subject) மற்றும் மெயில் பாடி (Mail body) ஏற்கனவே alpha-numeric string (எண்களும் எழுத்துக்களும் கொண்ட வரி) ஆகத்தான் இருக்கும். மத்த வெறும் எண்கள் கொண்ட பகுதிகளையும் நாங்க முதலில் alpha-numeric string (எண்ணெழுத்து வடிவம்) ஆக மாத்தறோம். சாதாரண ASCII alpha-numeric string இல்லை. யூனிகோட் டெக்ஸ்ட் ஸ்ட்ரிங்க் (Unicode Text String). சோ, மொத்த மெஸ்ஸேஜும் யூனிகோட் எழுத்து வடிவமா இருக்கும். பிறகு அதை எங்க சொந்த சந்தேக முறைப் படி encrypt செய்யறோம்." ஜாஷ்வா, "ஓ! முதல் முதலில் நான் மாங்க்ஸ் பாட் நெட்டை கொஞ்சம் நோண்டிப் பாத்த போது. உங்க மெஸ்ஸேஜ்கள் எல்லாம் இணையத்துக்குள் ஸ்லோவா போறதை கவனிச்சு இருக்கேன். நிறைய சமயம் பாதி மெஸ்ஸேஜ் தொலைந்து போய் தகவல் பறிமாற்றம் தடை பட்டு ரீ-செண்ட் ஆனதையும் பாத்து இருக்கேன். உங்க மாங்க்ஸ் பாட் நெட் ரொம்ப ஸ்லோவோன்னு நான் சந்தேகப் பட்டேன். ஆனா இப்பத்தான் விளங்குது. alpha-numeric string ஆக மாத்தினாலே ஒவ்வொரு மெஸ்ஸேஜில் இருக்கும் எண்கள் கொண்ட பகுதியும் குறைஞ்சது பத்து மடங்கு நீளம் அதிகம் ஆகும். யூனிகோட் ஸ்ட்ரிங்க்குன்னா இன்னும் நாலஞ்சு மடங்கு நீளம் அதிகரிக்கும். பாட்டர்ன் மாட்சிங்க் செஞ்சு கண்டு பிடிக்க நீ சொல்லற அவ்வளவு சுற்றுக்கள் தேவைப் படும். ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக நேரமும் தேவைப் படும். " நித்தின், "இன்னும் ஒரு விஷயம் ஜாஷ்வா, பாட்டர்ன் மாட்சிங்க் கணிணிமூலம்தான் செய்வாங்க. ஆங்கிலத்தில் மட்டும் தான் நாம் ஈமெயில் விளம்பரங்கள் அனுப்பறோம். அதனால் அதன் யூனிகோட் ஸ்ட்ரிங்க் (எழுத்து தொடர்) கூட ஒப்பிட்டுப் பார்க்கணும்ன்னு யோசிக்க மாட்டாங்க. ASCII string அப்படின்னு நினைச்சுகிட்டு முயற்சி செய்வாங்க" மற்ற மொழிகளில் கணிணியில் எழுதுவதற்காகவே யூனிகோட் (Unicode) கண்டு பிடிக்கப் பட்டது. ஆங்கிலம் மட்டும் என்றால் ASCIIஏ போதுமானது. ஜாஷ்வா, "சோ, முதலாவுது எண்களை நீங்க அப்படியே சங்கேத முறைப் படி மாத்தி இருப்பீங்கன்னு நினைப்பாங்க. இரண்டாவது யூனிகோட் உபயோகிச்ச்சு இருக்கீங்கன்னு அவங்க நினைக்க மாட்டாங்க. இந்த ரெண்டு தடுமாற்றங்களினாலும் நிறைய நாட்கள் வீணாகலாம். இருந்தாலும் இருநூற்று ஐம்பத்து ஆறு சுற்றுக்குள்ள கண்டு பிடிச்சுடுவாங்க இல்லையா?" நித்தின், "அப்பவும், சரியான ஃபாண்ட் அவங்க கணிணியில் இருந்து அந்த எழுத்துக்கள் என்னன்னு தெரிஞ்சாதான் உடனே கண்டு பிடிப்பாங்க" ஜாஷ்வா, "என்ன சொல்றே? புரியலை" சக்தி, "எண்களை எல்லாம் எழுத்து வடிவமா மாற்றி எழுதும் போது நாங்க அரபிக் நியூமரல்ஸ் உபயோகிக்கலை. தமிழ் நியூமரலும் மராட்டி மொழியில் எழுத உபயோகிக்கும் தேவணாகிரி நியூமரல்ஸ் உபயோகிச்சு இருக்கோம். உதாரணமா நம்பர் "124" அப்படிங்கறது "௧௨௩" அப்படின்னு வரும்" நித்தின், "சில இடங்களில், அதாவது ஐம்பது சதவிகிதம் தமிழ் நியூமரலில் வரும் மற்ற இடங்களில் மராட்டி நியூமரலில் வரும்" வாய்விட்டு சிரித்த ஜாஷ்வா, "நீங்கதான் பாட் நெட் எழுதினீங்கன்னு தெரிஞ்சுக்க உங்க ஆளுங்க ரெண்டு பேருக்கும் இது ஒண்ணே போதும்"சக்தி, "அதாவது அவங்க அந்த அளவுக்கு வரும்போது .. " ஜாஷ்வா, "சக்தி, நிச்சயம் வருவாங்க. நாம் இப்ப நமக்கு எவ்வளவு நாட்கள் இருக்குன்னு யோசிக்கணும். சரி, ஒரு சுற்று ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் ரன் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?" நித்தின், "நேரம் இல்லை நாள் ஆகும்ன்னு கேளு" ஜாஷ்வா, "ரொம்ப பெருமை அடிச்சுக்காதே. நானும் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் செஞ்சு பாத்து இருக்கேன். என் கிட்ட சக்தி வாய்ந்த கணிணி இல்லை. இருந்து இருந்தா சில மணி நேரத்தில் ஒரு சுற்று முடிக்கலாம்" சக்தி, "அது சிம்பிள் சைஃபர் உபயோகிச்சு இருந்தா ஜாஷ். பாலிமோஹோனின் சைஃபர் (Polyphonic Cipher - இந்த வகை குறியீட்டு முறைகள் கண்டு பிடிப்பதற்கு மிக கடினமானவை) உபயோகிச்சு இருந்தா?" ஜாஷ்வா வியப்புடன், "டேய் மச்சா! You are really something!! ஆனா எனக்கு ஒரு சந்தேகம். பாலிஹோனிக் சைஃபருக்கான கோட் ரொம்ப பெருசா இருக்குமே? ஆனா உங்க வைரஸ் அத்துனூண்டா இருக்கு? எப்படி?" குறியீட்டு முறைப் படி தகவல்களை மாற்றும்/மொழி பெயற்கும் மென்பொருளின் அளவு (file size - விண்டோஸ் ஃபோல்டரில் ஃபைலகளின் அளவு) அந்த குறியீட்டு முறையின் கடினத்தைப் பொறுத்து பெரிதாகும். நித்தின், "வைரஸ்ஸோட அந்த பகுதிக்கான கோட் வைரஸ்ஸுக்கு உள்ளே இருக்காது. கணிணிக்குள்ள புகுந்த உடனே விண்டோஸ் டீஃபால்ட் டெஸ்க்டாப் வால் பேப்பருக்கான JPEG Image ஃபைலிலுக்குள் ஸ்டோர் பண்ணிடறோம். வைரஸ் ரன் ஆகும் போது அந்த கோடை எடுத்து உபயோகிச்சுக்கும்" ஜாஷ்வா, "Wow, you guys used stegenography also? ரியலி அமேஸிங்க்! சரி, இப்ப நான் நம்பறேன். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர் மாட்சிங்க் மெத்தடில் ஒவ்வொரு சுற்றுக்கும் நிறைய நேரம் எடுக்கும். ஆனால், சூப்பர் கம்ப்யூட்டர் இருந்தா ஒரு மணி நேரத்தில் முடிக்கலாம்." நித்தின் "இரு ஜாஷ், அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் சக்தி வீட்டில் இருந்த சர்வரில் இருந்து போயிருக்கு. ஆனா ஈமெயில் விளம்பரத்துக்கான மெஸ்ஸேஜ்கள் எங்க ரெண்டு பேர் வீட்டில் இருந்த ரெண்டு சர்வர்களில் இருந்து போயிருக்கும். அவங்க ஒரே ஒரு சர்வர்ன்னு நினைச்சுட்டு கொஞ்சம் குழம்புவாங்க" ஜாஷ்வா, "நம் எதிரிகளை கம்மியா எடை போடாதே. உங்க ரெண்டு பேர் வீட்டிலும் சர்வர்கள் மாறி மாறி இயங்கி இருக்கு. பாதி ஈமெயில் மெஸ்ஸேஜ்களில் இருக்கும் சர்வர் ஐ.பி.அட்ரெஸ் வேறன்னு புரிஞ்சுக்க ரொம்ப நாள் ஆகாது. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களோடு ஒப்பிடக் கூடிய ஈமெயில் விளம்பர மெஸ்ஸேஜ்களை மட்டும் எடுத்துட்டு கண்டின்யூ பண்ணுவாங்க" சக்தி, "அப்ப அவங்க ஒப்பிட்டுப் பாக்கக் கூடிய மெஸ்ஸேஜ்களின் எண்ணிக்கை குறையும் சுற்றுக்கள் அதிகரிக்கும்" ஜாஷ்வா, "குறைந்த பட்ச சுற்றுக்களான 128 அதிகம் ஆகலாம். ஆனா 256க்கு மேல போகாது" சக்தி, "ஓ.கே. சூப்பர் கம்ப்யூட்டர் எல்லாம் இதுக்கு உபயோகிப்பாங்களான்னு தெரியலை. மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் கோட் மாத்தி டெஸ்ட் பண்ணிப் பார்க்க ஏழு எட்டு மணி நேரம் ஆகலாம். நான் அவங்க இடத்தில் இருந்தா ஒரு நாளைக்கு ஒரு சுற்றுன்னு டார்கெட் செய்வேன்" நித்தின், "ஏன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருக்கு பதில பல சர்வர் மாதிரியான கணிணிகளை உபயோகிக்க கூடாது. ஒரே நாளில் ரெண்டு மூணு சுற்று முடிக்கலாமே. தீபாவும் அப்படித்தான் யோசிப்பான்னு தோணுது." சக்தி, "செய்யலாம். ஆனா கோ-ஆர்டினேட் (நிர்வாகிக்கறது?) பண்ணறது கஷ்டம். நான் பார்த்த வரைக்கு வந்தனா ரொம்ப மெத்தாடிகல் (methodical). எதுவும் அவ கன்ட்ரோலில் இருக்கணும்ன்னு பார்ப்பா. அதனால் அவ ஒத்துக்க மாட்டா. ஒவ்வொரு சுற்றும் கவனமா செய்யணும். தப்பு ஆச்சுன்னா அவங்க தேடல் திசை திரும்பிப் போக வாய்ப்பு இருக்கு" ஜாஷ்வா, "சோ, குறைஞ்ச பட்சம் 128 சுற்றுக்கள் தேவைப் படும் அதிக பட்சம் 256 சுற்றுக்கள். முதலிலும் கடைசியிலும் ஆகக்கூடிய சில தடுமாற்றங்களினால் முப்பது நாட்கள் வீணானாலும். 158 நாட்களில் இருந்து 286 நாட்களுக்குள் அவங்க சர்வர் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சுடுவாங்க" நித்தின், "அதாவது ஜூன் முதல் வார முடிவில் இருந்து செப்டம்பர் கடைசிக்குள் சக்தி வீட்டில் இருக்கும் சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சுடுவாங்க"சக்தி, "அனேகமா அதிக பட்சம் டீகோட் செய்ய 128 நாளுன்னு வெச்சு இருக்காங்க. அதனால தான் வந்தனா நான் திரும்பிப் போகும்போது அவ அசைன்மெண்டும் முடிஞ்சுடும்ன்னு சொன்னா" நித்தின், "தீபாவும் அதே மாதிரித்தான் சொன்னா" இவ்வாறாக தாங்கள் வேடர்களாக இருந்தால் எத்தனை நாளில் அவர்கள் சர்வரின் இணைய விலாசத்தை கண்டு பிடிக்கப் முடியும் என்று கணக்கிட்டனர் ஜாஷவா, "நீங்க திரும்பிப் போகும் சமயத்தில் அவங்க கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு" நித்தின், "ஜாஷ், நாளைக்கே எங்க ரெண்டு பேர் வீட்டிலும் இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை மாத்திடலாமா?" ஜாஷ்வா, "இப்ப மாத்தி ஒரு பிரயோஜனமும் இல்லை. எப்படியும் அவங்க கண்டு பிடிக்கும் இணைய விலாசம் யாருக்கு கொடுக்கப் பட்டு இருக்குன்னு பார்ப்பாங்க. நான் உங்களுக்கு அமைச்சு கொடுத்து இருக்கும் இணைய விலாசம் என் கஸின் பேரில் இருக்கும் ஒரு பினாமி கம்பெனிக்கு வழங்கப் பட்ட விலாசம். அதை கண்டு பிடிக்க ரொம்ப நாள் ஆகாது" சக்தி, "அப்படியும் உன்னை அடையாளம் எப்படி கண்டு பிடிப்பாங்க?" ஜாஷ்வா, "எஃப்.பி.ஐயை அவ்வளவு லேசா எடை போடாதே. தவிர என் கஸின்ஸ் யாருக்கும் என்னால் எந்த துன்பமும் வரக்கூடாதுன்னு பார்க்கறேன். அப்படி அவங்க என் கஸினைக் கேள்வி கேட்டா என் பக்கம் கை காட்ட சொல்லிடுவேன்" நித்தின், "அப்ப எங்களுக்கு பதிலா நீ மாட்டிக்கப் போறயா?" சக்தி, "மாட்டிக்க மாட்டாண்டா! அவங்களை பொறுத்த மட்டில் நாம் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடு படலையே? ஐ.ஆர்.எஸ் ஜாஷ்வாவிடம் மாங்க்ஸ் பாட் நெட் மூலம் எவ்வளவு வருமானம் வந்து இருக்கு. அதுக்கு ஏன் வருமான வட்டி கட்டலைன்னு மட்டும் கேட்க முடியும். அவ்வளவுதான்" ஜாஷ்வா, "நிச்சயம் நான் தான் மாங்க்ஸ் பாட் நெட்டின் சூத்திரதாரின்னு அவங்க நம்ப் மாட்டாங்க. தவிர, வந்தனாவும் தீபாவும் உங்க ரெண்டு பேரையும் சந்தேகப் படவும் வாய்ப்பு இருக்கு. சோ, எஃப்.பி.ஐ என்னை அணுகும் அதே சமயத்தில் R&AW உங்க ரெண்டு பேரையும் அணுகும்." நித்தின், "மே மாசக் கடைசிக்கு முன்னாடி அவங்க கண்டு பிடிக்க எந்த விததிலாவுது வாய்ப்பு இருக்கா?" சக்தி, "எப்ப அவங்க நூறு மெஸ்ஸேஜ் ஒரே நாளில் சேகரிச்சாங்களோ அவங்களோட அணுகு முறை தெரிஞ்சு போச்சு. அந்த அணுகு முறைப்படி அதை விட சீக்கிரம் கண்டு பிடிக்க வாய்ப்பே இல்லை" ஜாஷ்வா, "எதுக்கும் இன்னும் ஒரு மாசம் முன்னாடியே அவங்க கண்டு பிடிக்கக் கூடும்ன்னு நாம் செயல் படுவோம். ஓ.கே?" சக்தி, "அவசியம் இல்லை. பட் ஓ.கே" ஜாஷ்வா, "சோ, ஏப்ரல் கடைசிக்கு அப்பறம் கொஞ்ச நாளைக்கு மனி ட்ரான்ஸ்ஃபர் பண்ண மாட்டோம்ன்னு இப்பவே ஆண்டர்ஸன் கிட்ட சொல்லிடறேன்" நித்தின், "ஏன் கொஞ்ச நாளைக்குன்னு சொல்லப் போறே" ஜாஷ்வா, "அதுக்கு அப்பறம் பண்ணவே போறது இல்லைன்னா அவன் எதாவுது சந்தேகப் படுவான். கார்டல் காரங்களே எதாவுது செய்யறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ, ஒன்ஸ் நாம் மூட்டை கட்டினதுக்கு அப்பறம் சாரி, இனிமேல் எங்களால முடியாதுன்னு சின்னதா ஒரு ஈமெயில் அனுப்புவோம்" சக்தி, "நீ இங்கே தானே இருக்கப் போறே?"
ஜாஷ்வா, "இல்லை சக்தி. இந்த நியூ யார்க் க்ளைமேட் சஞ்சனாவுக்கு ஒத்துக்கறதே இல்லை. தவிர, குடும்பத்தை பெரிசு படுத்தணும்ன்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். நான் பிறந்து வளந்தேன்னு சொல்லிக்கறதை தவிர எனக்கு நியூ யார்க்கில் ஒண்ணும் இல்லை. நேரடியா யாருக்கெல்லாம் உதவணும்ன்னு நினைச்சேனோ அவங்களுக்கு எல்லாம் உதவியும் ஆச்சு. சோ, நாங்க பஹாமாஸ் போய் செட்டில் ஆகலாம்ன்னு இருக்கோம்." நித்தின், "ஹே, தட்ஸ் நைஸ்! பட் நீ அங்கே என்ன பண்ணப் போறே?" ஜாஷ்வா, "அந்த ஊரில் இருக்கும் ஒரு பாங்கில் எல்லாம் என்னை மாதிரி குவாலிஃபைட் ஆளுங்க கம்மி. நிச்சயம் இந்த மாதிரி ஒரு வேலை கிடைக்கும். கூட இருக்கவே இருக்கு நான் முன்னாடி செஞ்சுட்டு இருந்தது! பட், அவளுக்கு அந்த மாதிரி க்ளைமேட் ரொம்ப சூட் ஆகும் அப்படிங்கறதுதான் என் முடிவுக்கு முக்கிய காரணம்" நித்தின், "சோ, இப்போதைக்கு என்ன செய்யலாம்?" மூன்று பேரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பாத்தபடி அமர்ந்து இருந்தனர்.சக்தி, "காலைல நான் கொஞ்சம் பயந்துட்டேன். ஆன இப்ப ஒரு பயமும் இல்லை. ஒண்ணும் செய்ய வேண்டாம்." என்றவன் குறும்புடன் நித்தினைப் பார்த்து சிரித்த படி தொடர்ந்து, "ஆனா இன்னும் கொஞ்சம் விளையாடலாம்ன்னு தோணுது!" ஜாஷ்வா, "என்ன விளையாட்டு?" நித்தின், "என்னடா அந்த சர்வர்லெஸ் பாட் நெட்டா (server-less bot net) மாத்தறதைப் பத்தி சொல்றயா?" சர்வர்லெஸ் பாட் நெட் எனப்படுவது, இன்னும் நுணுக்கமான ஒன்று. அதில் சர்வர் என்ற ஒரு கணிணியே இருக்காது! ஒவ்வொரு வைரஸ் புகுந்த கணிணியும் தன்னை சுற்றி இருக்கும் கணிணிகளில் இருக்கும் வைரஸ்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்று சர்வரைப் போல்கண்காணிக்கும். ஆணைகள் கொடுக்கும் முறையை தெரிந்தவர் எவரும் எந்த கணிணியில் இருந்தும் அதை இயக்கலாம்! மற்றபடி மாங்க்ஸ் பாட் நெட் ஒரு தானியங்கியைப் போல இயங்கிக் கொண்டு இருக்கும். ஜாஷ்வா, "ஹே, நீங்க சர்வர்லெஸ் பாட் நெட் பத்தி யோசிச்சு வெச்சு இருக்கீங்களா?" சக்தி, "ரொம்ப நாளைக்கு முன்னாடியே யோசிச்சோம். ஆனா இம்ப்ளிமெண்ட் பண்ணலை. அப்படி செய்யணும்ன்னா ரொமப நாள் ஆகாது" நித்தின், "ஆனா அவங்க டீகோட் பண்ணினதுக்கு அப்பறம் அந்த மாற்றத்தை கண்டு பிடிக்க ரொம்ப நாள் ஆகாது" சக்தி, "நம் சைஃபரையும் மாத்துவோம். தேவையான கோட் எழுதறதுக்கு ரெண்டு மாசம் ஆகும்" ஜாஷ்வா, "சர்வர்லெஸ்ஸா மாத்தினா எப்படி நீங்க அதுக்கு ஆணைகள் கொடுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணி இருந்தீங்க?" நித்தின், "வைரஸ் இருக்கும் எந்த கணிணியில் இருந்தும் ஆணை கொடுக்கறமாதிரி ஒரு தனி மென்பொருள் எழுதலாம்ன்னு இருக்கோம்" சக்தி, "அந்த ஆணை கொடுக்கும் மென்பொருள் நம் மூணு பேர் லாப்டாப்பில் மட்டும் இருக்கும்" ஜாஷ்வா, "சரி. மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எல்லா கணிணியிலும் அந்த மாற்றத்தை புகுத்த எத்தனை நாள் ஆகும்?" சக்தி, "பத்து நாளில் செஞ்சுட முடியும்" ஜாஷ்வா, "ஓ, வைரஸ் மூலமே அது பரவும் அந்த மாதிரியா?" சக்தி, "ஆமா, நோடல் பாட்ஸ் (நுனிகளில் இருக்கும் கணிணிகள்) மட்டும் நாம் அப்டேட் பண்ணினா போதும். அதுவே பரவிடும்" ஜாஷ்வா, "சரி, அப்ப இன்னும் நாலு மாசத்தில் அந்த மாற்றத்தை தொடங்கலாம். அதாவது மே மாதத் தொடக்கத்தில் இருந்து. நீங்க புறப்பட்டு போனதுக்கு பிறகு சர்வர் அப்படின்னு ஒண்ணு மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்காது!" நித்தின், "அதுக்குள்ள நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனும் முடிஞ்சு இருக்கும். இல்லையா?" ஜாஷ்வா, "எஸ்" நித்தின், "ஜாஷ், சக்தி, அதுக்குள்ள உங்களுக்கு தேவையான பணம் சம்பாதிச்சு இருப்பீங்களா? எனக்கு அந்த பணம் வெறும் ஆடம்பரச் செலவுக்குத்தான். நாம் பங்கு போடற விகிதத்தை மாத்திக்கலாமா. என்னுதை 10% ஆக மாத்திக்கலாம். நீங்க ரெண்டு பேரும் 40% எடுத்துக்குங்க" ஜாஷ்வா, "நீ முன்வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் நித்தின். எனக்கு தேவையான பணம் சம்பாதிச்சுட்டேன். அதுக்கு மேல இந்த ஆபரேஷனில் ஒரு த்ரில். இப்ப இது ரெண்டுக்கும் மேல எனக்கு அருமையான ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்க. I can't ask for more!" சக்தி, "டேய் நித்தின், சும்மா உளறாம இரு"ஜாஷ்வா, "எஃப்.பி.ஐ, R&AW பிடிக்கறது இருக்கட்டும். உங்க ரெண்டு காதலிகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? அட் லீஸ்ட் அஃபீஷியலா அவங்க அணுகறதுக்கு முன்னாடி உங்க காதலிகள்கிட்ட நீங்கதான் மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்கன்னு சொல்லிடுங்க" சக்தி, "கவலையே படாதே. நான் ஒரு ஹாக்கர் அப்படிங்கறதை அவகிட்ட இருந்து மறைச்சு இருக்கேன் உண்மைதான். தீபா அவளுக்கு ஒரு ஹாக்கரோட மெண்டாலிடி எப்படி இருக்கும்ன்னு சொல்லி இருப்பா. தவிர, வந்தனா என் கிட்ட அவ என்ன வேலை செய்யறான்னு சொல்லலை. சோ, அவ கேட்கும் போது நீ சொல்லி இருந்தா ஒரு வேளை நான் சொல்லி இருப்பேன்னு சொல்லுவேன்" நித்தின், "பட் சக்தி, நாம் இங்கே இருந்து புறப்படறதுக்கு முன்னால் எங்க அப்பாகிட்ட சொல்லணும். நம்மை இந்திய வருமான வரித் துறை அணுகறதுக்கு முன்னாடி நம் வருமானத்தை கணக்கிட்டு வரி கட்ட அவர்கிட்ட ஏற்பாடு செய்யச் சொல்லிடலாம்" சக்தி, "ஆமாண்டா. அவங்க வீட்டில் ஒரே போலீஸ் கும்பல். அதுவும் வந்தனா சொல்றதை வெச்சுப் பாத்தா எல்லாம் வால்டர் வெற்றிவேல் மாதிரி நேர்மையான போலீஸ். கருப்புப் பணம் வெச்சுட்டு இருக்கேன்னு பொண்ணு கொடுக்காம இருந்தாலும் இருக்கலாம். அவங்க ஏன், எங்க அம்மாவே எனக்கு டின்னு கட்டிடுவாங்க" ஜாஷ்வா, "கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சீங்கன்னு தெரிஞ்சா?" சக்தி, "அந்த விஷயம் தெரியப் போறது இல்லை" ஜாஷ்வா, "ஹேய், நீ அவளை கல்யணம் பண்ணிட்டு வாழ்நாள் முழுவதும் அவகூட இருக்கப் போறே. உன்னோட லைஃப் பார்ட்னர்கிட்ட மறைக்கக் கூடாது" சக்தி, "நானும் அதை யோசிச்சு இருக்கேன் ஜாஷ். மெதுவா, கொஞ்ச நாள் கழிச்சு சொல்லப் போறேன். நித்தின், நீ என்னடா சொல்றே" நித்தின், "சேம் ஹியர்" ஜாஷ்வா, "அந்த சமயத்தில் என்ன சொல்லி அவளை சமாதானப் படுத்துவே?" சக்தி, "இப்படி யோசிச்சுப் பாரு. நமக்கு வரும் ஈமெயில் விளம்பர ஆர்டர்களில் முக்கால் வாசிக்கு மேல் மருந்துக் கடைகளில் விற்கக் கூடிய ஆனா விளம்பரப் படுத்த முடியாத மருந்துகள். சிகரெட், லிக்கர் மாதிரி. வித்தா தப்பு இல்லை ஆனா விளம்பரம் செய்யக் கூடாது. அப்படிப் பட்ட ஒரு கம்பெனி ஒரு ஆட் ஏஜன்ஸியை அணுகி ஒரு நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்தா அரசாங்கம் யாரை பிடிக்கும்? கம்பெனியை, ஆட் ஏஜன்ஸியை அல்ல. அதனால நாம் ஈமெயில் விளம்பரம் கொடுப்பது சட்ட விரோதச் செயல் இல்லை. சரியா?" ஜாஷ்வா, "சரி ... " சக்தி, "ஆனா என்னைக் கேட்டா அதுவும் சட்ட விரோதச் செயல்ன்னு தான் சொல்லுவேன். ஆக, அது ஒரு விவாதிக்கக் கூடிய விஷயம். என்னைப் பொறுத்த மட்டில் அதே மாதிரி தான் அந்த மனி ட்ரான்ஸ்ஃபரும்" ஜாஷ்வா, "பரவால்லை. நான் உனக்கு முதல் முதலில் சொன்னதை கொஞ்சம் மாத்தி என் கிட்டயே சொல்றே. தேறிட்டே" நித்தினும் கூட சேர்ந்து சிரித்தான். சக்தி, "ஆமாண்டா. உனக்கென்ன? நீ கொலைக் கைதியா இருந்தாகூட தீபா அவளோட அப்பாவை வெச்சு வாதாடி உன்னை வெளியே கொண்டு வந்து கட்டிக்குவா. என் நிலமையில் இந்த மாதிரி எதாவுது லாஜிக் சொன்னாத்தான் தப்பிக்க முடியும்" நித்தின், "கவலையே படாதே எங்க அப்பா என்னை ஜெயிலுக்கு போக விட்டாலும் உன்னை போக விடமாட்டார்" சக்தி, "சரி ஜாஷ், நீ புறப்பட்டு சஞ்சனாவுக்கு போய் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. அப்பறம் பார்ட்டிக்கும் போகணும்" ஜாஷ்வா, "என்னை வேலை வாங்கறதில் உனக்கு என்ன சந்தோஷம்?" சக்தி, "என் சந்தோஷம் உன்னை வேலை வாங்கறதில் இல்லை. என் தங்கையின் வேலையை குறைப்பதில்" ஜாஷ்வா புறப்பட்டுச் சென்றான். உடன் நித்தினும் மாலை சந்திப்பதாக விடைபெற்றான். அவர்களது அலுவலகத்தின் நியூ இயர் பார்ட்டியில் கலந்து கொள்ளத் தயாரானான்.மாலை ஏழரை மணி அளவில் சார்ஜ் தீர்ந்ததால் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்த கைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்து ஆன் செய்யும் போதே அவன் அம்மாவுக்கும் வ்ந்தனாவுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதது மனதை உறுத்தியது. அம்மாவை அழைத்தான் சக்தி, "ஹல்லோ அம்மா. ஹாப்பி நியூ இயர்" மனோகரி, "ஹாப்பி நியூ இயர்டா கண்ணா. இரு ஸ்பீக்கர் ஃபோனில் போடறேன். சாந்தியும் இருக்கா" சாந்தி, "அண்ணா உனக்கு ஹாப்பி நியூ இயர்க்கு இன்னும் அஞ்சு மணி நேரம் இருக்கா?" சக்தி, "ஆமா எங்க ஆஃபீஸ் நியூ இயர் பார்ட்டிக்கு போயிட்டு இருக்கேன்" மனோகரி, "நைட் கூப்பிட்டோம். உன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்துது" சக்தி, "ஆமா சாரிம்மா. ஒரு அவசர ஆஃபீஸ் வேலை வந்துடுச்சு. ஃபோன் டெட்டா இருந்துது சார்ஜ் போட மறந்துட்டேன்" மனோகரி, "இன்னைக்கு உனக்கு லீவுன்னு சொன்னே? ஆஃபீஸுக்கு போனியா?" சக்தி, "இல்லைம்மா ஆஃபீஸுக்கு போகலை இங்கே இருந்தே கனெக்ட் பண்ணி வொர்க் பண்ணினேன்" மனோகரி, "நீ கூப்பிடுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்" சாந்தி, "ஆமாண்ணா. எல்லாரும் எதிர்பார்த்தாங்க" மனோகரி, "எல்லாரையும் விட என் வருங்கால மருமக எதிர்பார்த்தா. நைட்டு ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்து இருப்பா" சக்தி சிறிது நேர மௌனத்துக்கு பிறகு, "நான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு தான் இருந்தேன். அவதான் .. " மனோகரி, "தெரியும்டா. " சக்தி, "அவளை உங்களுக்கு பிடிச்சு இருக்கம்மா? ப்ளீஸ் எனக்காக சொல்லாதீங்க. உண்மையா சொல்லுங்க" மனோகரி, "ரொம்ப பிடிச்சு இருக்குடா. அவ உனக்கு மனைவியா வரதுக்கு நீ கொடுத்து வெச்சு இருக்கணும்" சக்தி, "ஹல்லோ! இதெல்லாம் கொஞ்சம் ஓவரு" வாய்விட்டு சிரித்த மனோகரி, "ஆமாண்டா. முன்னாடியே தெரிஞ்சு இருந்தா டெல்லியில் அவங்க பெரியப்பா வீட்டுக்குள் நுழைஞ்ச அடுத்த நிமிஷம் பொண்ணு கேட்டு இருப்பேன். அவர் பாவம் நானும் சேர்ந்து நாடகம் ஆடறனோன்னு நினைச்சு இருப்பார்" சக்தி, "சாரிம்மா. உங்களை தப்ப நினைச்சு இருந்தார்ன்னா நான் அவர்கிட்ட பேசறேன்" மனோகரி, "சே, சே நல்ல வேளை அவர் அப்படி நினைக்கலை. நீங்க ரெண்டு பேரும் எங்க யார்கிட்டயும் சொல்லாம இருக்கீங்கன்னு தான் அவங்களா கெஸ் பண்ணி வந்தனாவோட் அப்பாவே ப்ரொபோஸ் பண்ணினார்" சக்தி, "வாவ், அவங்க வீட்டில் அவ மேல அவ்வளவு பிரியமா?" சாந்தி, "பின்ன என்ன அண்ணா? அவங்க மூணு பேர் வீட்டுக்கும் சேர்த்து ஒரே பொண்ணு. அண்ணி சொன்னாங்கன்னா அதுக்கு மறு வார்த்தை இல்லை. ஆனா அண்ணியும் அவங்க எல்லார் மேலயும் அவ்வளவு பிரியமா இருக்காங்க" சக்தி, "ஹே, உனக்கு பிடிச்சு இருக்கா" சாந்தி, "நீ எப்பத்தான் உருப்படப்போறயோ? பிடிக்காமயா வாய்க்கு வாய் அண்ணின்னு சொல்லுவேன்" மனோகரி, "சரி, பாவம் உன் ஃபோன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா. அவளை கூப்பிட்டு பேசு. அப்படியே அவளோட அப்பா சித்தப்பா எல்லாருக்கும் விஷ் பண்ணு" சக்தி, "சரிம்மா"வந்தனாவை அழைத்தான். சக்தி, "ஹாய் ஹனீ! ஹாப்பி நியூ இயர்!!" வந்தனா, "ஹாய் மை வுட் பீ! ஹாப்பி நியூ இயர்!!" சக்தி, "என்ன அஃபீஷியலா ஆன மாதிரி சொல்றே. எங்க அம்மா உனக்கு ஓ.கே சொல்லிட்டாங்களா?" வந்தனா, "உங்க அம்மா எனக்கு ஓ.கே சொல்றதுக்கு முன்னாடி எங்க வீட்டில் எல்லாம் உனக்கு ஓ.கே சொல்லி எங்க அப்பாவே ஆண்டிகிட்ட ப்ரொபோஸ் பண்ணினார்" சக்தி, "வாவ்!" வந்தனா, "இதெல்லாம் தெரியாத மாதிரி பேசி நடிக்காதே. என்னை கூப்பிடறதுக்கு முன்னாடி ஆண்டி கிட்ட பேசி இருப்பேன்னு எனக்கு தெரியும்" சக்தி, "ஹேய், அதுக்குள்ள மாமியார் மேல பொறாமையா?" வந்தனா, "சீ! ஏன் இப்படி கேக்கறே? நானும் நீ செஞ்சதைத்தான் செஞ்சு இருப்பேன்னு உனக்கு தெரியாதா?" சக்தி, "தெரியும் ஹனீ. சும்மா சீண்டினேன்" வந்தனா, "பேசாதே போ. நைட்டு எவ்வளவு நேரம் ட்ரை பண்ணினேன் தெரியுமா? பார்ட்டி எல்லாம் முடிஞ்சு ஆண்டியும் சாந்தியும் தூங்கப் போனதுக்கு அப்பறம் நான், அப்பா, சித்தப்பா எல்லாம் பேசிட்டு இருந்தோம் அப்பக் கூட ட்ரை பண்ணினேன். எங்க சித்தப்பாகூட அவர் மொபைலில் இருந்து ட்ரை பண்ணினார்" சக்தி, "ஓ அதுதானா அந்த இன்னொரு மிஸ்ட் கால் நம்பர்?" வந்தனா, "இப்ப எனக்கு உன்னை பாக்கணும்ன்னு இருக்கு" சக்தி, "வெப் கேம் இருக்கா?" வந்தனா, "ஹே, யோசிக்கவே இல்லை பாரு! இரு கனெக்ட் பண்ணறேன். அப்படியே நீ எல்லோரோடையும் பேசிக்கலாம்" சக்தி, "சரி, சரி சீக்கிரம் கனெக்ட் பண்ணு" வந்தனா, "ஏன் அவசரம்?" சக்தி, "எங்க ஆஃபீஸ் பார்ட்டிக்கு போகணும். நித்தின் இன்னும் அரை மணியில் வந்துடுவான்" சற்று நேரத்தில் தனது லாப்டாப்பை இயக்கி ஸ்கைப்மூலம் அழைத்தான். வந்தனாவின் முகம் திரைக்கு வந்தது. ஒருவரை ஒருவர் பாத்தபடி சில கணங்கள் கழிந்தன. சக்தி, "ஐ லவ் யூ ஹனீ" வந்தனா, "ஐ லவ் யூ ஷக்தி. யூ நோ சம்திங்க்? உங்க அம்மா உன்னைப் பத்தி நீ என் கிட்ட சொல்லாதது எல்லாம் சொன்னாங்க" சக்தி, "ஓ மை காட்! " வந்தனா, "கவலைப் படாதே. ஐ ஸ்டில் லவ் யூ. இன் ஃபாக்ட் ஐ லவ் யூ மோர்" சக்தி, "தெரியும் ஹனீ" வந்தனா, "இரு இரு நான் லாப்டாப்பை டைனிங்க் ஹாலுக்கு எடுத்துட்டு போறேன். அங்கே எல்லோரும் இருக்காங்க" சற்று நேரத்தில் வந்தனாவின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக திரைக்கு வந்து அவனை வாழ்த்தினர். ஒவ்வொருவருடனும் சிறிது நேரம் பேசினான்.Monday, 5 January 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், ஜனவரி 5 2009 காலை 9 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி எல்லோரும் அங்கு அமர்ந்து இருந்தனர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஹாப்பி நியூ இயர் எவ்ரிபடி" தீபா, "ஹாப்பி நியூ இயர் சார். வாரா வாரம் எங்களை என்ன ப்ரோக்ரெஸ் என்ன ப்ரோக்ரெஸ்ஸுன்னு துளைச்சு எடுப்பீங்க. இந்த ரெண்டு வாரமா உங்க சைடில் என்ன ப்ரோக்ரெஸ் சார்?" எல்லோரும் சிரித்து முடித்த பின் ப்ரொஃபெஸ்ஸர் சாரி தொடர்ந்தார் , முன் எச்சரிக்கை: அடுத்து நிறம் மாற்றி எழுதப் பட்டு இருக்கும் வரிகள் ... டெக்னிகல் ... "அந்த மெஸ்ஸேஜ்களை டிக்ரிப்ட் (குறியீட்டை மொழி பெயற்பது?) செய்யறதுக்கு நீங்க ரெண்டு பேரும் சஜ்ஜஸ்ட் பண்ணின மாதிரி ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மெத்தட்தான் (Brute Force Pattern Matching Method) உபயோகிக்கணும். ஆனால் நீங்க கவனிக்காத ஒரு விஷயம் இருக்கு. உங்களுக்கு அது தெரிஞ்சு இருக்கணும்ன்னு நான் சொல்லலை" வந்தனா, "என்ன விஷயம் சார் அது?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எந்த வகையான குறியீட்டு முறை உபயோகிக்கப் பட்டு இருக்குன்னு முன்கூட்டியே தெரிஞ்சா இந்த மெத்தட ரொம்ப எஃப்ஃபெக்டிவ். அப்படி தெரியாத பட்சத்தில் தேடல் வழிமுறையை (Search Algorithm) மாத்தி மாத்தி முயற்சி செய்ய வேண்டி இருக்கும். இதனால் நேரம் வீணாகும். சமீப காலத்தில், அதாவது கடந்த ஒண்ணு ரெண்டு வருஷங்களில் சில தோராயமான தேடல் வழிமுறைகள் (Probablistic Decipherement Approach) கண்டு பிடிக்கப் பட்டு இருக்கு. இந்த தோராயமான வழிமுறைகள் மூலம் குறியீட்டை துல்லியமா கண்டு பிடிக்க முடியாது. ஆனால் குறியீட்டின் வெவ்வேறு அம்சங்களை கண்டு பிடிக்க முடியும். ஆக்சுவலா, எனக்கு கீழ இப்போ இருக்கும் ரீஸர்ச் ஸ்டூடண்ட்ஸ் அவ்வளவு ப்ரைட் இல்லை. சோ, இன்னும் சில பேரை சேர்க்க வேண்டியதா இருந்தது. அதுக்கும் நேரம் தேவைப் பட்டது. ஃபுல் டீம் கூடறவரைக்கும் எதுக்கு நாட்களை வீணாக்கறதுன்னு இருக்கற ரீஸர்ச் ஸ்டூடண்ட்ஸை ஒரு தோராயமான வழிமுறையை உபயோகிச்சு ஆராயச் சொன்னேன். பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. மேற்கொண்டு எப்படி ப்ரொஸீட் பண்ணலாம்ன்னும் க்ளூ கிடைச்சு இருக்கு." வந்தனா, "என்ன விஷயங்கள் தெரிய வந்தது ப்ரொஃபெஸ்ஸர்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி "ஒவ்வொண்ணா விவரிக்கறேன். முதலாவதாக, நாம் நினைச்சது போல் மாங்க்ஸ் பாட் நெட் ஒரே ஒரு சர்வர் மூலம் இயங்கல. ரெண்டு சர்வர் இருக்கு" தீபா, "வாட்? ரெண்டு சர்வரா? அது எப்படி சாத்தியம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ரெண்டு சர்வரும் ஒரே சமயத்தில் இயங்கறது இல்லை. அடுத்தடுத்த நாள் மாறி மாறி இயக்கப் படுது" ஜாஷ்வா-சக்தி-நித்தின் டீம் அவர்களது ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் செய்யும் போது. விளம்பர ஈமெயில்களுக்கான ஆணைகளை நிறுத்தி வைத்ததால் ப்ரொஃபெஸ்ஸர் சாரி இரண்டே சர்வர்க்ள் என யூகித்து இருந்தார். வந்தனா, "எப்படி இதை கண்டு பிடிச்சீங்க?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஈமெயில் விளம்பரத்துக்கான மெஸ்ஸேஜ்களில் ஒரு குறிப்பிட்ட அம்சம் சரிபாதி மெஸ்ஸேஜ்களில் மாறி இருந்தது. அந்த அம்சம் ஒரு பாதி மெஸ்ஸேஜ்களில் இருப்பது போலவே செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களிலும் இருந்தது. பாதி ஈமெயில் மெஸ்ஸேஜ்கள் அப்படீங்கறது எப்படின்னா, ஒரு நாளில் வந்த மெஸ்ஸேஜ்களில் அந்த அம்சம் ஒரு மாதிரியும் அடுத்த நாளில் வந்த மெஸ்ஸேஜ்களில் வேறு மாதிரியும் இருந்தது. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் அனைத்தும் ஒரே நாளில் வந்தவை. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள் வந்த மெஸ்ஸேஜக்ளிலும் அதே நாளில் வந்த ஈமெயில் மெஸ்ஸேஜ்களிலும் இந்த அம்சம் ஒரே மாதிரி இருந்தது. இதை வெச்சுத்தான் நான் ரெண்டு சர்வர்களை அடுத்தடுத்த நாட்களில் உபயோகிக்கறாங்கன்னு கணிச்சேன்" தீபா, "சரி, நாம் எப்படி மேற்கொண்டு ப்ரொஸீட் பண்ணப் போறோம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நாம் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களுக்கு பொருந்தும் ஈமெயில் மெஸ்ஸேஜ்களை மட்டும் எடுத்துட்டு மேற்கொண்டு ப்ரொஸீட் பண்ணப் போறோம். இதன் மூலம் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் வந்த அன்னைக்கு இயங்கின சர்வரை கண்டு ப்டிக்க முடியும்" வந்தனா, "இதனால் சாம்பிள் சைஸ் குறைஞ்சுடும். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் சுற்றுக்கள் அதிகமாகுமே?"ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு அளவுக்கு குறையும் தான். ஆனா நீங்க எனக்கு ஐநூறுக்கும் மேல ஈமெயில் விளம்பர ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை கொடுத்து இருக்கீங்க. அதில் பாதின்னாலும் இருநூற்று ஐம்பது ஈமெயில் விளம்பர ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்கள் இருக்கும். அதை வெச்சுட்டு சமாளிச்சுடலாம்?" தீபாவும் வந்தனாவும் தங்களது விளம்பரங்கள் போக மற்ற விளம்பரங்களுக்கான ஈமெயில் ஆணை கொடுக்கும் மெஸ்ஸேஜ்களையும் சேகரித்து இருந்தனர். இதை யூகிக்க தவறிய ஜாஷ்வாவும் சக்தியும் முந்நூறு ஈமெயில் விளம்பர ஆணை மெஸ்ஸேஜ்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து இருக்கும் என்று தவறாக கணித்து இருந்தனர். தோழியர் முகத்தில் தோன்றிய நிம்மதியை பார்த்த ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வெயிட். வெயிட். Sorry to dampen your spirits. வேறு ஒரு காரணத்தினால் நிச்சயம் நமக்கு அதிக சுற்றுக்கள் தேவைப் படப் போகுது" தீபா, "ஏன்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீங்க எல்லாம் நினைச்ச மாதிரி அவங்க சிம்பிள் சைஃபர் உபயோகிச்சு இருக்கலை. பாலிஃபோனிக் காம்ப்ளெக்ஸ் சைஃபர் (Polyphonic Complex Cipher - இந்த வகையான குறியீட்டு முறைகளை முறிப்பது மிகக் கடினம்) உபயோகிச்சு இருக்காங்க" தீபா, "நோ வே. அத்துனூண்டு வைரஸ்ஸுக்குள் பாலிஃபோனிக் சைஃபர் கோட்? சார், மாங்க்ஸ் வைரஸ்ஸின் மொத்த சைஸே இருநூற்று எண்பது கிலோபைட்தான் (280 KB). பாலிஃபோனிக் சைஃபர் உபயோகிச்சு என்க்ரிப்ஷன் (encryption), டிக்ரிப்ஷன் (decryption), இதை ரெண்டும் செய்ய ஒரு கோட் எழுதினா அந்த பகுதி மட்டும் குறைஞ்சது நானூறு கிலோபைட் (400 KB) வரும்சார்." பைட் என்பது கணிணியில் மிகக் குறைந்த இடஅளவை குறிப்பது. ஒரு பைட் என்பதில் பூஜ்ஜியத்தில் இருந்து 255 வரை உள்ள ஒரு எண்ணை ஸ்டோர் செய்யலாம். பைனரி முறையில் எழுதினால் 00000000 இல் இருந்து 11111111 வரை அதாவது 2^0 வில் இருந்து 2^8 வரை. 1024 பைட்டுகளை கொண்ட அளவு ஒரு கிலோபைட்(KB). 1024 கிலோபைட்களை கொண்ட அளவு ஒரு மெகாபைட் (MB). ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அது எப்படின்னு எனக்கு தெரியலை. ஆனா, நிச்சயம் அவங்க பாலிஃபோனிக் சைஃபர்தான் உபயோகிச்சு இருக்காங்க" வந்தனா, "சோ, அதனால் சுற்றுக்கள் ரெண்டு மடங்காகும். இல்லையா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அது மட்டும் இல்லை ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக நேரம் எடுக்கும். நீங்க நினைச்ச மாதிரி ஒரு நாளுக்கு ரெண்டு ரன் முடியாது. கோடை மாத்தி டெஸ்ட் பண்ணி ரன் பண்ணும்போது ஒரு நாளில் ஒரு சுற்றுக்கு மேல் முடியாது" தீபா, "எஃப்.பி.ஐ மூலம் வாங்கின கணிணியிலும் அவ்வளவு நேரம் ஆகுமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அதில்தான் அவ்வளவு நேரம் ஆகும். மத்ததில் இன்னும் நேரம் அதிகம் ஆகும்" தீபா, "அதை விட வேகமா செய்யணும்ன்னா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் செஞ்சாத்தான் அதை விட வேகமா முடியும்." முரளீதரன், "அது முடியுமான்னு தெரியலை. நான் விசாரிச்சு சொல்றேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீங்க விசாரிங்க முரளி, ஆனா, அந்த கணிணியை உபயோகிக்கணும்ன்னா மென்பொருளை ரொம்பவே மாத்தி எழுதணும். சில விஷயத்துக்கு புதுசா மென்பொருள் எழுத வேண்டி இருக்கும். இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் கணிணியை வைத்து ஒரு நாளைக்கு ஒரு ரன் அப்படின்னு வேலையை தொடங்கலாம்" வந்தனா, "அப்படின்னா அதிகபட்சம் 256 நாட்கள், அதாவது செப்டெம்பர் கடைசி வரைக்கும் ஆகுமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "குறைந்த பட்சம் 128 நாட்கள். அதிக பட்சம் 256 நாட்கள். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா மே மாதத்துக்கு நடுவிலேயே முடியலாம். நமக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னா செப்டம்பர் கடைசி வரைக்கும் ஆகலாம். இது ரெண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒரு தேதியை குறிவெச்சுக்கறது நல்லது" தீபா, "அப்படியும் ஜூலை கடைசி வரைக்கும் ஆகும்!" வந்தனா, "வேறு எந்த வழியிலாவுது இன்னும் சீக்கிரம் கண்டு பிடிக்க முடியுமா சார்? இப்பவே அவங்களுக்கு நூறு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் ஒரே நாளில் வெளியே போயிருக்குன்னு தெரிஞ்சு இருக்கும். நாம் கண்டு பிடிக்கும் போது அவங்க சர்வரை மாத்திடாங்கனா?" முரளீதரன், "இல்லை வந்தனா. ஒரு இணைய விலாசம் இருந்தா போதும். அது யாருக்கு வழங்கப் பட்டு இருக்குன்னு கண்டு பிடிச்சுடலாம்"வந்தனா, "சார், இப்ப தொடங்கலாம். இன்னும் சீக்கிரம் கண்டு பிடிக்க வேறு வழி எதாவுது இருக்கானு தொடர்ந்து பார்த்துட்டே இருக்கலாம். ஓ.கேவா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "தொடங்கலாம். ஆனா, இன்னும் ஒரே ஒரு விஷயம் என் மனசை உறுத்திட்டு இருக்கு" வந்தனா, "என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்க்ரிப்ட் செய்து (குறியீட்டு முறையில் மாற்றி அமைத்து) இருக்கும் மெஸ்ஸேஜ்களின் நீளம்" தீபா, "அதுக்கு என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு ஈமெயிலில் மெயில் சப்ஜெக்டும் மெயில் பாடியும் சேர்த்து 400 எழுத்துக்கள் இருக்குன்னா கணிணியில் எவ்வளவு இடம் பிடிக்கும்?" தீபா, "அது டெக்ஸ்ட் மேட்டர், சோ alpha-numeric string, சோ, 400 பைட் இடம் பிடிக்கும்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஈமெயில் விளம்பரம் கொடுப்பதற்கான மெஸ்ஸேஜ்களில் 400 எழுத்துக்கள் கொண்ட ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ் ஏறக்குறைய 900 பைட்கள் இடம் பிடிச்சு இருக்கு. ஒவ்வொரு மெஸ்ஸேஜ்களிலும் ஈமெயில் சப்ஜெக்ட்டையும் மெயில் பாடியையும் தவிர மத்த விவரங்களுக்கு ஒரு நூறு பைட் ஒதுக்கப் பட்டு இருக்குன்னு வெச்சுட்டாலும் 800 பைட் ஈமெயில் மேட்டருக்கு ஒதுக்கப் பட்டு இருக்கு. பொதுவா என்க்ரிப்ட் செய்யும் போது அதே நீளம் இருக்கும் அல்லது நீளம் குறையும். ஆனா இந்த மெஸ்ஸேஜ்களில் Plain or Decrypted Textஐ (குறியிடப்படாத அல்லது குறியீட்டை முறித்து எழுதப் பட்ட வரிகளை) விட Encrypted Text (என்க்ரிப்டட் செய்யப் பட்ட - குறியிடப்பட்ட வரிகள்) ரெண்டு மடங்கு நீளம் அதிகமாகி இருக்கு". தீபா, "எப்படி சாத்தியம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அதைத் தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்" முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், ஒரு அடிப்படையான கேள்வி. எனக்கு தெரியாததால் கேட்கிறேன். ஒரு ஈமெயிலில் 400 எழுத்துக்கள் இருந்தா அது அதே 400 பைட்தான் இடம் பிடிக்கும்ன்னு எப்படி சொல்றீங்க?" தீபா, "ஒவ்வொரு எழுத்தும் ASCII Notationஇல் ஸ்டோர் ஆகி இருக்கும். அதன் படி ஒரு எழுத்துக்கு ஒரு பைட்" முரளீதரன், "ASCII நொடேஷன் அப்படிங்கறது ஒவ்வொரு எழுத்தை குறிப்பிடறதுக்கும் ஒரு எண் இருக்கும் அதுதான் இல்லையா?" தீபா, "ஆமா சார், பூஜ்ஜியத்தில் இருந்து 127 வரைக்கும் இருக்கும் சார்" முரளீதரன், "ஹே, எனக்கு தெரிஞ்சு ஒரு பைட் அப்படிங்கறதில் 255 வரை பிடிக்குமே?" தீபா, "ஆமா, ஆனா ASCII முறையில் ஒரு பிட்டை (Bit - துகள்) விட்டுட்டு மத்ததை மட்டும் எடுத்துக்குவாங்க அதனால் 0 இல் இருந்து 127 வரைக்கும்தான் ஸ்டோர் பண்ண முடியும். அந்த பிட்டை பாரிட்டி பிட் (Parity bit) அப்படிம்பாங்க. அந்த பைட்டில் இருக்கும் எண் இரண்டால வகுபடக்கூடியதா இல்லையா அப்படிங்கறதை அந்த பிட் காமிக்கும். இதன் மூலம் ஒரு வேளை கணிணியில் எதாவது கோளாறு இருந்ததுன்னா கணிணியே அதை கண்டு பிடிக்கறதுக்காக அப்படி அமைச்சு இருக்காங்க" முரளீதரன், "வெறும் 127 எழுத்துக்கள்தானா இருக்கு?" தீபா, "ஆங்கிலத்தில் மட்டும் எழுதினா அதுவே தேவைக்கும் அதிகம். காண்பிக்கறேன் பாருங்க" என்றபடி தன் கணிணியில் இருக்கும் ASCII முறைப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒதுக்கப் பட்டு இருக்கும் எண்கள் கொண்ட பட்டியலை (ASCII Character Set Chart) முரளீதரனுக்கு காட்டினாள். முரளீதரன், "எனக்கு ஒரு சந்தேகம். இதை வெச்சுட்டு ஆங்கிலத்தில் எழுதினதை மட்டும்தானே ஸ்டோர் பண்ண முடியும்? இப்ப உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதினதை ஸ்டோர் செய்யறாங்களே எப்படி?" தீபாவின் முகத்தில் தீடீர் பிரகாசம்! தீபா, "எஸ்!" என்று கத்தியபடி, "ப்ரொஃபெஸ்ஸர், அவங்க யூனிகோடில் ஸ்டோர் செஞ்சு இருக்காங்க. ஒவ்வொரு எழுத்துக்கும் ரெண்டு பைட்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "You mean polysyllabic? நானும் அந்த கோணத்தில் யோசிச்சேன் தீபா. ஈமெயில் மேட்டரைத் தவிர மத்தது எல்லாம் அனேகமா எண்களா தான் இருக்கு. அதெல்லாம் Integerஆகவோ அல்லது Floating Pointஆகவோ பைனரியில் ஸ்டோர் பண்ணி இருப்பாங்க ASCII ஸ்ட்ரிங்க்கையும் பைனரி டேட்டாவையும் ஒண்ணா சேர்த்து ஸ்டோர் பண்ணறது சுலபம். பைனரி டேட்டாவை யூனிகோட் டேட்டாகூட சேர்த்து ஸ்டோர் பண்ணறதில் நிறைய சிக்கல் இருக்கும்!" வந்தனா, "நீங்க சொன்னதுக்கு அப்பறம்தான் நானும் நோட்டீஸ் பண்ணினேன். இந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை பாத்தீங்களா சார்? ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யச் சொல்லும் ஆணை அது. அனேகமா அவங்க ஒவ்வொரு வகையான ஆணைக்கும் ஒரு குறியீட்டு முறை வெச்சு இருப்பாங்க. நிச்சயம் ஆணையை ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமா எழுத மாட்டாங்க. அதுக்கு பதில ஒரு குறிப்பிட்ட எண் இருக்கும் இல்லையா?" தீபா, "ஆமா நீ என்ன சொல்ல வரே?" வந்தனா, "ஒரு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜில் அதிக பட்சம் எத்தனை விவரங்கள் இருக்க முடியும்? சர்வரின் ஐ.பி.அட்ரெஸ் (இணைய விலாசம்), செல்ஃப் டிஸ்ட்ரக்ட் செஞ்சுக்க வேண்டிய கணிணியின் ஐ.பி.அட்ரெஸ், செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைக்கான குறிப்பிட்ட எண் அவ்வளவுதானே?" தீபா, "ஆமா" வந்தனா, "அப்பறம் ஏன் ஒவ்வொரு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்ஜும் இவ்வளவு நீளம் இருக்கு?" தீபா, "எஸ்! சார், நீங்க சொன்னதுக்கு நான் இப்ப விளக்கம் கொடுக்கறேன். அவங்க எண்கள் கொண்ட பகுதியையும் யூனிகோட் ஸ்ட்ரிங்க்காக மாத்தி மெஸ்ஸேஜுக்குள் எழுதறாங்க. அதான் அவங்க மெஸ்ஸேஜ்கள் எல்லாம் இவ்வளவு நீளம் இருக்கு"ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ம்ம்ஹூம் ... என்னால ஜீரணிக்க முடியலை. கம்யூனிகேஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கும். பொதுவா இணையத்தில் எப்படி வேகமா மெஸ்ஸேஜ்களை அனுப்பறதுன்னுதான் பார்ப்பாங்க" தீபா, "சார், எப்படியும் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க்கில் ASCII ஸ்ட்ரிங்க்ஸ் வெச்சு ஒப்பிட்டு பாக்கப் போறோம். அதே சுற்றில் யூனிகோட் ஸ்ட்ரிங்க்கையும் ஒப்பிட்டு பார்த்தா என்ன சார்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "கணிணி ஒவ்வொரு சுற்றும் எடுத்துக்கும் நேரம் இன்னும் அதிகமாகும்" உடனே வந்தனா, "என்ன? எட்டு மணி நேரம் அப்படிங்கறது பத்து மணி நேரம் ஆகப் போகுது. ஆகட்டுமே சார். அப்படியும் ஒரு நாளைக்கு ஒரு சுற்று முடிக்கலாம் இல்லையா? நாம் அவங்க ASCII முறைப்படிதான் ஸ்டோர் பண்ணி இருக்காங்கன்னு சில நாட்களை செலவு செஞ்சதுக்கு அப்பறம் தெரியவந்தா. அவ்வளவு நட்கள் செஞ்ச வேலையும் வேஸ்ட்தானே" தீபா, "ஆமா சார், வந்தனா சொல்றதுதான் சரி" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நீங்க சொல்றபடியே செய்யலாம்" முரளீதரன், "சரி, நாம் முதலில் ப்ளான் பண்ணினதை விட ரெண்ட் மாசம் அதிகமாகும், அதாவது ஜூலை கடைசி வரை. இல்லையா? I don't think Chris is going to like it. க்ரிஸ்கிட்டயும் ஷான்கிட்டயும் பேசறேன். அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம் ப்ரொஃபெஸ்ஸர். நீங்க நாளையில் இருந்து தொடங்குங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, தீபாவுக்கும் வந்தனாவுக்கு ப்ரீஃப் பண்ணறேன். கோட் மாத்தி ரன் பண்ணற வேலையை என் டீமில் இருக்கறவங்க செய்வாங்க. தீபாவும் வந்தனாவும் மானிடர் பண்ணினா போதும்" முரளீதரன், "ஒன் மோர் திங்க் ப்ரொஃபெஸ்ஸர். இப்ப உங்களுக்கு தேவையான ஆட்கள் கிடைச்சாச்சா? அல்லது, க்ரிஸ்கிட்ட பேசி யூ.எஸ்ஸில் இருந்து யாரையாவுது வரவழைக்கலாமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "இல்லை முரளீதரன். தேவை இல்லை. ஆனா. ஒரு ஏமாற்றமான விஷயம் என்னன்னா, ஐடியல் காண்டிடேட்ஸ் சிலர் கிடைக்கல" முரளீதரன், "யார் அந்த ஐடியல் காண்டிடேட்ஸ்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சென்னை ஐ.ஐ.டியில் இருக்கும் ஒரு ப்ரொஃபெஸ்ஸருக்கு மெயில் அனுப்பி விசாரிச்ச போது அவர்கிட்ட படிச்ச பையன் ஒருத்தன் அதுக்கு ஐடியலான ஆள். அந்த மாதிரி ஒருத்தன் இருந்தா நீங்க வேலையை பாதி நாள்ல முடிக்க முடியும்ன்னு எழுதி இருந்தார். ஆனா அந்த பையன் இப்ப யூ.எஸ்ஸில், வேறு ஒரு அசைன்மெண்டில் இருக்கான்." முகம் மலர்ந்த வந்தனா, "அந்த பையன் பேர் என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி தன் கணிணியில் இருந்த ஒரு ஈமெயிலை திறந்து பார்த்து, "சக்திவேல் முத்துசாமி. " முகம் மலர்ந்த முரளீதரன், "வந்தனா, இது அதே சக்தியா?" வந்தனா பெருமிதத்துடன் ஆமென்று தலையசைக்க தீபா, "அந்த மாதிரி ஒரு பேரை வெச்சுட்டு அந்த மாதிரி மூளையோட ரெண்டு பேர் இருக்க முடியாது" முரளீதரன், "வாவ் வந்தனா? ஷக்தியை நமக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி கேக்கலாமா?" வந்தனா, "இல்லை சார். எனக்கு கேட்க விருப்பம் இல்லை" முரளீதரன், "ஏன்?" வந்தனா, "தங்கை கல்யாணத்துக்கு பணம் சேர்க்கறதுக்காகவே இந்த அசைன்மெண்டில் யூ.எஸ் போய் இருக்கான். அதை பாதியில் விட்டா அவன் கம்பெனியில் என்ன பிரச்சனை வரும்ன்னு தெரியலை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "உனக்கு அந்த பையனை தெரியுமா?" முரளீதரன், "He is her fiance. " ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ்" வந்தனாவும் தீபாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வந்தனா, "தீபா, நீ நித்தின் கிட்ட கேக்கறயா?" தீபா, "கேக்கறேன். ஆனா அவன் சக்தியை விட்டுட்டு தனியா வரமாட்டான்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "யார் அந்த நித்தின்?" தீபா, "சக்தியோட ட்வின் ப்ரதர். அவன் மும்பை ஐ.ஐ.டியில் படிச்சான். ஆனா மும்பை ஐ.ஐ.டி ப்ரொஃபெஸ்ஸர் யாரும் அவனை ரெகமெண்ட் செய்ய மாட்டாங்க" முரளீதரன், "தீபா ஏன் அப்படி சொல்றே?" தீபா, "எல்லாரையும் கிண்டல் அடிச்சு இருப்பான். எல்லாரும் அவன் மேல கடுப்பா இருப்பாங்க" ப்ரொஃபெஸ் சாரி, "என்ன சொல்றே. ஒரே குழப்பமா இருக்கே?" தீபாவும் வந்தனாவும் சக்தி-நித்தின் பற்றி விவரித்தனர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நிஜமா ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க். தீபா, எதுக்கும் நீ நித்தின் கிட்ட கேட்டு பாரு. இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் டீமை வெச்சுட்டு ப்ரொஸீட் பண்ணலாம்" முரளீதரன், "பட் தீபா, டீடெயில்ஸ் எதுவும் கொடுக்காதே" தீபா, "தெரியும் சார்" மீட்டிங்க் முடியும்போது மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. நித்தின் நிச்சயம் ஆன்லைனில் இருப்பான் என்று தீபா அவனை ஸ்கைப்பில் அழைத்தாள், அங்கு அமர்ந்து ஆடியோ மற்றும் வெப்கேம் உபயோகிக்க விரும்பாமல் சாட் விண்டோவைம் மட்டும் திறந்தாள். தீபா, "ஹே நித்தின். எங்களோட அசைன்மெண்டில் ஒரு ரொம்ப சாலஞ்சிங்க்கான வேலை இருக்கு. நீ ஒரு மூணு மாசம் வந்து ஹெல்ப் பண்ண முடியுமா? என்னால மேற்கொண்டு விவரம் கொடுக்க முடியாது. ஆனா, நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணவும் மாட்டேன். எதுவும் கேட்கமாட்டேன். Can you? Just give me a short answer" நித்தின், "No" தீபா, "Long answer?" நித்தின், "Noooooooooooooooooooooooooooooooooooo" தீபா, "நாயே, பேயே, பன்னி ... எனக்கென்ன? உன் கல்யாணம்தான் டிலே ஆகப் போகுது" நித்தின், "உன் கல்யாணம் நடக்கறப்ப என் கல்யாணம் நடந்தா போதும்" என்றபடி நித்தின் லாக் ஆஃப் செய்தான்.அடுத்த நாளில் இருந்து அவர்களது மூன்றாவது கட்ட வேலைகளை தொடங்கினர். குழுவில் இருந்தவர் அனைவரையும் ஊக்குவித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு சுற்றை முடித்தே ஆகவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து வந்தனா செயல் பட்டாள். தீபா, ஒன்று இரண்டு மணி நேரம் அவர்களுடன் செலவிட்ட பிறகு மேலும் மாங்க்ஸ் பாட் நெட்டை ஆராயத் தொடங்கினாள். நூறு கணிணிகளில் இருந்த வைரஸ்களும் தங்களை தானே அழித்துக் கொண்டு இருந்தன. அழி படுவதற்கு முன் ஒரு கணிணியில் மொத்த ஹார்ட் டிஸ்க்கையும் ஒரு பிம்பமாக எடுத்து ஸ்டோர் செய்து வைத்து இருந்தாள். வைரஸ் அழிபட்ட பிறகு என்னன்ன மாற்றங்கள் நடந்து இருக்கின்றன என்று ஸ்டோர் செய்து வைத்து இருந்த பிம்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். தீபா, "யூரேகா! வந்தனா, இங்க வா ஒண்ணு காமிக்கறேன்" வந்தனா, "என்ன?" தீபா, "அவங்க வைரஸ்ஸில் ஹோமோஃபோனிக் சைஃபர் உபயோகிச்சு இருக்கறது உறுதியாயிடுச்சு" வந்தனா, "எப்படி?" தீபா, "இங்கே பார் இது வைரஸ் அழிபடறதுக்கு முன் எடுத்த டிஸ்க் இமேஜ். இதில் இந்த ஜெபெக் ஃபைலின் (JPG File)ஐ அளவைப் பார். 436 KB! இப்ப இதைப் பார் வைரஸ் தன்னை தானே அழிச்சதுக்கு அப்பறம். அதோட அளவு வெறும் 56KB. என்னோட லாப்டாப்பில் வைரஸ் இல்லை. அதிலும் 56KB தான்" வந்தனா, "அதனால?" தீபா, "வைரஸ்ஸின் ஒரு பகுதி இந்த ஃபைலுக்குள் ஸ்டோர் ஆகி இருக்கு. வைரஸ் இயங்கும் போது அதை எடுத்துக்குது" வந்தனா, "ஹே அது விண்டோஸ் எக்ஸ் பி (Windows XP) வால் பேப்பர் இல்லையா? ஒழுங்கா டிஸ்ப்ளே ஆகுதா?" தீபா, "அதெல்லாம் பர்ஃபெக்டா டிஸ்ப்ளே ஆகுது. அந்த படத்துக்கு ஒண்ணும் ஆகறது இல்லை. இவங்க அதிகப் படியா ஸ்டோர் செஞ்சு இருப்பதை படத்தில் இருக்கும் வெற்று இடம்ன்னு நினைச்சுட்டு விண்டோஸ் அதை காண்பிக்கறது இல்லை. இந்த முறையில் ஸ்டோர் செய்யறதை Steganography அப்படிம்பாங்க. ஆனா, அதை மங்க்ஸ் வைரஸ்ஸுடன் உபயோகிச்சு இருக்கும் முறை நிஜமா அமேஸிங்க். இது தெரிஞ்சா யாருமே கண்டு பிடிக்க முடியாத மாதிரி தகவல்களை அனுப்பலாம். பார்க்கறவங்களுக்கு ஒரு ஃபோட்டோதான் தெரியும். தகுந்த மென்பொருளை வெச்சு அதில் இருக்கும் தகவலை தெரிஞ்சுக்கலாம்" வந்தனா, "மை காட். இவனுக சரியான கில்லாடிகளா இருப்பாங்க மாதிரி இருக்கு. ஆனா தீபா, இதை யார்கிட்டயும் சொல்லாதே. தெரிஞ்சா, க்ரிஸ் இன்னும் சீக்கரம் மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றணும்ன்னு மேலயும் கீழயும் குதிப்பான். கடைசியில் சொல்லலாம்" " தீபா, "உண்மையில் அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கு" வந்தனா, "யாரு?"
தீபா, "ஹார்ஷ்7, கில்9, மோர்லா அந்த மூணு பேரும்"Friday, 27 March 2009, 8:30 PM வெள்ளி, மார்ச் 27, 2009, மாலை 8:30 கடந்த வாரம் முழுவதும் ஜாஷ்வா விடுமுறை எடுத்து பஹாமாஸ்ஸுக்கு சஞ்சனாவுடன் சென்று இருந்தான். அடுத்த நாளில் இருந்து ஒரு ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடக்கவிருந்தது. நண்பர்கள் மூவரும் சஞ்சனாவுடன் டின்னருக்கு சென்று இருந்தனர். சக்தி, "என்ன சஞ்சனா? எப்படி இருந்துது பஹாமாஸ்?" சஞ்சனா, "அண்ணா, இவர் சொன்னப்ப கூட நான் நினைச்சுப் பாக்கவே இல்லை. ரொம்ப நல்லா இருக்குண்ணா. ஆனா, ஒண்ணு சொல்றேன். இந்த மனுஷனுக்கு எங்கயோ மச்சம்! போன வேலை எல்லாம் நாங்க நினைச்சதை விட நல்லா முடிஞ்சுது" நித்தின், "வாவ் ஜாஷ்வா. All things settled?" ஜாஷ்வா, "ஏறக்குறைய எல்லாம் முடிவாகிடுச்சு. எனக்கு மூணு மாசம் நோட்டீஸ் பீரியட். நான் கூட இந்த ஒண்ணந்தேதி அன்னைக்கு ரெஸிக்னேஷன் கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சேன். ஆனா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு" சக்தி, "Stop talking cryptic! ஒரு ஃபுல் அப்டேட் கொடு" ஜாஷ்வா, "கொடுக்கறேன். ஆனா அதுக்கு முன்னாடி sorry for digressing, since you mentioned cryptic, உங்க சர்வர்லெஸ் பாட் நெட் வேலை அப்பறம் அந்த என்க்ரிப்ஷனை மாத்தறது எல்லாம் முடிஞ்சுதா" நித்தின், "கோடிங்க் டெஸ்டிங்க் எல்லாம் முடிஞ்சுது. ஏப்ரல் ஒண்ணில் இருந்து பரவ விடப் போறோம்" ஜாஷ்வா, "ஹே, அப்ப அடுத்த மாச ட்ரான்ஸ்ஃபரை அது பாதிக்காது இல்ல? நான் ஏற்கனவே ஆண்டர்ஸன் கிட்டயும் ஹாஃப்மன் கிட்டயும் சொல்லி ஆச்சு. அவங்க அடுத்த மாசம் ஒரு பெரிய ட்ரான்ஸ்ஃபர் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க" சக்தி, "கவலையே படாதே. ஒரு பிரச்சனையும் இருக்காது" சஞ்சனா, "எப்படியும் அடுத்த ரெண்டு மூணு நாள் நீங்க மூணு பேரும் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் அப்ப பேசிட்டுத் தானே இருக்கப் போறீங்க. இங்க வந்தும் என்ன?" என்று சிணுங்கினாள் ஜாஷ்வா, "சாரி ஹனி. நீ அவங்களுக்கு நம் ட்ரிப்பைப் பத்தி அப்டேட் கொடு" சஞ்சனா, "இங்கே இருந்து நஸ்ஸௌக்கு (Nassau, Capital of Bahamas - பஹாமாஸ்ஸின் தலை நகரம்) போனோம். அங்கே இவருக்கு அன்னைக்கு முழுவதும் இன்டர்வியூ இருந்துது." சக்தி, "எந்த பாங்க் ஜாஷ்" ஜாஷ்வா தான் நேர்முகத் தேர்வுக்கு சென்ற வங்கிகளின் பெயர்களை சொல்ல, சக்தி, "ஹேய், எல்லாம் கேள்விப் படாத பேர்களா இருக்கு?" ஜாஷ்வா, "ஆமா, ஆனா ஒவ்வொண்ணிலும் எக்கச்சக்க டெபாசிட் பணம் இருக்கு. எல்லாம் ஒரு காலத்தில் பஹாமாஸ் ஒரு டாக்ஸ் ஹேவனா (tax haven) இருந்தப்ப பல நாடுகளிலும் இருந்து வந்த கருப்புப் பணம். இப்ப சர்வதேச சட்டங்கள் வந்ததுக்கு அப்பறம் அந்த பேங்க் எல்லாம் மத்த பாங்க்ஸ் மாதிரி இயங்கணும்ன்னு ரொம்ப வேகமா செயல் பட்டுட்டு இருக்காங்க. நான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணின மூணு வங்கிகளிலும் எனக்கு ஆஃபர் கொடுத்து இருக்காங்க" நித்தின், "நீ எதில் சேரலாம்ன்னு இருக்கே?" ஜாஷ்வா ஒரு வங்கியின் பெயரை சொல்லி, "அதில் நான் இப்ப பாத்துட்டு இருக்கும் டேட்டா பேஸ் அட்மின் வேலை இல்லை. அவங்களோட இணையம் சம்மந்தப் பட்ட புது டெவலப்மென்ட்ஸ் எல்லாத்தையும் பொறுப்பு ஏத்துக்க சொல்லி இருக்காங்க. நானும் இப்ப பண்ணிட்டு இருக்கும் வேலையில் இருந்து ஒரு சேஞ்ச் இருக்கும்ன்னு அதுக்கு ஓ.கே சொல்லிட்டேன். ஆனா, அதுக்கு ஓ.கே சொன்னதுக்கு அது மட்டும் காரணம் இல்லை" சக்தி, "வேறு என்ன காரணம்?" சஞ்சனா, "இப்ப நான் சொல்றேன். அதுக்கு அடுத்த நாள் நாங்க தங்கறதுக்கு அப்பறம் என்னோட ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் வெஞ்சருக்கு இடம் பாக்க சுத்த ஆரம்பிச்சோம். கூட இவரோட கஸினோட கஸினோட கஸினோட ... " ஜாஷ்வாவைப் பார்த்து "அவ்வளவுதானேப்பா?" என்றதும் ஜாஷ்வா முறைத்தான் நித்தின், "சரி விடு ஆஃப்ரிக்காவில் கப்பலில் ஒண்ணா வந்தவரோட வம்சாவழி .. மேல சொல்லு" சஞ்சனா, "இல்லை நித்தின் போற இடத்தில் எல்லாம் என் கஸின் என் கஸின் அப்படின்னு அறிமுகப் படுத்தி வெச்சா கடுப்பா இருக்காதா சொல்லு. அதான் எப்படி கஸின்னு கேட்டேன். ஒரு மைல் நீளத்துக்கு எப்படி உறவுன்னு சொன்னார்" சக்தி, "ஹேய், போதும் மேல சொல்லு" சஞ்சனா, "ஆங்கே, இவரோட கஸின் ஒருத்தர் எங்களை முதலில் ஒண்ணு ரெண்டு இடம் காண்பிச்சார். எங்களுக்கு பிடிக்கலை. அப்பறம் எந்த மாதிரி இடம் வேணும் நீங்க என்ன செய்யறதா இருக்கீங்கன்னு கேட்டார். நாங்க விளக்கினப்பறம் ஒரு இடத்தை காண்பிச்சார். எங்க ரெண்டு பேருக்கும் பாத்த உடனே பிடிச்சுடுச்சு." நித்தின், "எங்கே அந்த இடம். எதாவுது ஒரு சின்ன தீவிலா?" ஜாஷ்வா, "ம்ம்ஹூம் ... .. நியூ ப்ராவிடன்ஸ் தீவிலேயே (New Providence) நாஸ்ஸௌ நகர மையத்தில் இருந்து 20 கிலோமீட்டருக்குள் ... நஸ்ஸௌ இன்டர்நேஷனல் ஏர்போர்டில் இருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரத்தில்" சக்தி, "வாவ், என்ன மாதிரி இடம்?" சஞ்சனா, "முன்னாடி ஏற்கனவே ரெஸ்டாரண்ட் அங்கே ரன்னாகிட்டு இருந்து இருக்கு. அதை ஒட்டினாப்படி ஓரளவுக்கு பெரிய வீடு. கொஞ்சம் பழசு. அதன் ஓனருக்கு அதை ரினவேட் பண்ணி கண்டின்யூ பண்ணப் பிடிக்கலை. அவருக்கு வேறு பிஸினஸ் இருக்கு. அதனால் விக்கறார். அந்த பக்கத்தில் வரிசையா ரெஸ்டாரண்ட்ஸ் ஆனா இன்டியன் ரெஸ்டாரண்ட் ஒண்ணு கூட இல்லை!" நித்தின், "வாவ், சோ சஞ்சனா உன் கனவு நினைவாகப் போகுது" சஞ்சனா, "பின்னே? எத்தனை நாளைக்கு இந்த ஆளுக்கு மட்டும் சமைச்சுப் போடறது? மத்தவங்களுக்கு சேர்த்து சமைச்சா கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்" சக்தி, "ஏன் உன் கிட்ட காசு இல்லையா?" சஞ்சனா, "அப்படி இல்லைண்ணா. எனக்கு ரொம்ப நாள் ஆசை அது" ஜாஷ்வா, "அது அவனுக்கும் தெரியும். சும்மா நோண்டறான்" நித்தின், "சரி ஜாஷ். அதுக்கும் நீ செலக்ட் பண்ணின வேலைக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "வாரத்தில் மூணு அல்லது நாலு நாள் வொர்க் அட் ஹோம் பண்ணிக்கலாம். இவளுக்கும் உதவியா இருக்கும்! அதனால்" சக்தி, "க்ரேட். அப்ப நான் ஹனிமூனுக்கு வந்துடறேன்" சஞ்சனா, "உன் ஹனிமூனுக்குள்ள வீடு ரெஸ்டாரண்ட் எல்லாம் தயாராகுமான்னு தெரியலை. ஆனா நீ ஹனிமூனுக்கு பஹாமாஸ்ஸுக்கு வந்தா உனக்கு எல்லா ஏற்பாடும் நாங்க பண்ணிடுவோம். இல்லை அடுத்த வருஷம் ஒர் செகண்ட் ஹனிமூன் ப்ளான் பண்ணிட்டு வா எங்க வீட்டிலேயே தங்கி எங்க ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம்" சக்தி, "அப்ப கூட ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கும். இல்லையா?" என்றதும் சஞ்சனா முகம் சிவந்து ஜாஷ்வாவைப் பார்த்து, "இவங்க ரெண்டு பேர் பரவால்லை. இன்னும் யாருக்கெல்லாம் சொல்லி வெச்சு இருக்கே?" ஜாஷ்வா, "இவங்க ரெண்டு பேர்கிட்ட மட்டும்தான்" நித்தின், "ஹே, இதுவரைக்கு ப்ரோக்ரேஸ் என்ன?" சஞ்சனா, "ஒண்ணும் இல்லை நித்தின். I am still on pills. அடுத்த வாரத்தில் இருந்துதான் மாத்திரை சாப்பிடறதை நிறுத்தப் போறேன். சரி, நீங்க ரெண்டு பேரும் யார்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்க?" நித்தின், "நோபடி, ஒன்லி தீபா" சக்தி, "சேம் ஹியர். வந்தனா. ... அப்பறம் அம்மாகிட்டயும் சொல்லி இருக்கேன். அம்மாகூட ஏழாம் மாசத்தப்ப எங்கேடா இருப்பான்னு கேட்டாங்க" சஞ்சனாவின் கண்கள் பனித்தன. ஜாஷ்வா, "எதற்கு?" பெருமூச்சுடன் சக்தி வளைகாப்பு சீமந்தத்தைப் பற்றி விளக்கத் தொடங்கினான்.From 1 April 2009 9 PM ஏப்ரல் 1 2009 இரவு 9 மணி ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவில் இருந்து சக்தியும் நித்தினும் மாங்க்ஸ் பாட் நெட்டை சர்வர் இல்லாமல் இயங்கும் ஒரு பாட் நெட்டாக (Server-less bot net) மாற்றும் வேலையில் இறங்கினர். மாங்க்ஸ் பாட் நெட்டின் கணிணிகளில் இருக்கும் வைரஸ்ஸுக்கு பதிலாக புதிதாக எழுதப்பட்டு இருந்த மாங்க்ஸ்-2 வைரஸ்ஸை நூறு கணிணிகளுக்கு புகுத்தினால் மற்ற கணிணிகளுக்கு பரப்பும் வேலையை மாங்க்ஸ்-2 வைரஸ்ஸே செய்து விடும்படி அமைத்து இருந்தனர். இதற்கு முன்னாலும் ஒவ்வொரு முறை தங்களது வைரஸ்ஸில் மாற்றங்களை செய்தபோதும் இவ்வாறே பரப்புவது வழமை. அதனால் அவர்களுக்கு அதிக அளவுக்கு ஆயத்த வேலைகள் இருக்கவில்லை. வரிசை முறையின்றி (random - ராண்டமாக) தேர்ந்து எடுத்து அவைகளில் புதிய வைரஸ்ஸை புகுத்தும் வேலைக்கும் அவர்கள் ஒரு மென்பொருள் எழுதி இருந்தனர். அந்த மென்பொருளை இயக்கியபின் அது நூறு கணிணிகளில் புதிய வைரஸ் வெற்றிகரமாக புகுந்ததை அந்த மென்பொருள் அறிவிக்கும் வரை காத்து இருப்பதே அவர்கள் வேலை. நூறு கணிணிகளை அந்த மென்பொருள் சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கலாம் என்று கணித்து மாலை 9 மணியளவில் அந்த மென்பொருளை இயக்கினர். முன் தினம் மாலை சக்தி தன் லாப்டாப்பில் மாங்க்ஸ்-2 வைரஸ்ஸின் நிரற்தொடரை (code-கோட்ஐ) கடைசியாக ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு இருந்து இருந்தான். பிறகு இரவு அப்படியே சாப்பாட்டு மேசை மேல் விட்டு விட்டு தூங்கச் சென்று இருந்தான். இரவு சுமார் பத்தரை மணியளவில் ஆர்டர் செய்து தரவைத்து இருந்த பீட்ஸாவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் எதிரில் இருந்த லாப்டாப்பை இயக்க திரையில் அவன் சரி பார்த்துக் கொண்டு இருந்த நிரற்தொடர் தோன்றியது. திடீரென பொறி தட்டிய சக்தி, "ஓ மை காட் நித்தின்! இந்த ரிமோட் கமாண்ட் மெஸ்ஸேஜ் ஸ்ட்ரக்சரை பாத்தியா. We have missed out something." நித்தின், "வாட், " என்று அவனும் அதைப் பார்த்தபின் "ஓ காட், ப்ளடி ஷிட் ... இதனால, நம் லாப்டாப்பில் இருந்து அனுப்பும் ஆணையை இது புரிஞ்சுக்காது" அதற்குள் எழுந்து சென்ற சக்தி சர்வரில் இயங்கிக் கொண்டு இருந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தினான். பேயறைந்த முகத்துடன் இருவரும் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தனர். நித்தின், "எத்தனை பாட்ஸ் அப்க்ரேட் ஆகி இருக்கு (எத்தனை கணிணிகளில் புதிய வைரஸ் புகுந்து இருக்கிறது)?" சக்தி, "34 கணிணிகளில்" நித்தின், "இதனால் ப்ராப்ளம் ஒண்னும் இல்லை. வைரஸ் கோட்இல் இருக்கும் தப்பை திருத்திட்டு வேறு ஒரு நூறு கணிணிகளை தேர்ந்து எடுத்து மறுபடி வேலையை தொடங்குவோம்" சக்தி, "செய்யலாம். ஆனா இப்ப இந்த பக் இருக்கும் வைரஸ் புகுந்த கணிணிகள் மத்த கணிணிகளுக்கு அந்த பக் இருக்கும் வைரஸ்ஸை புகுத்திகிட்டே இருக்கும். இதனால் பக் இருக்கும் வைரஸ் பரவும்" நித்தின், "நாளைக்குள்ள எத்தனை கணிணிகளுக்கு பக் இருக்கும் வைரஸ் பரவும்?" சக்தி, "நூறு கணிணிகளில் புகுத்தினால் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் நாலரை லட்சம் கணிணிகளில் பரவ பத்து நாள் ஆகும்ன்னு கண்க்கு பண்ணினோம் இல்லையா?" நித்தின், "ம்ம்ம் நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. முப்பத்து நாலு கணிணிகள் அதே பத்து நாளில் மூணில் ஒரு பங்கு கணிணிகளுக்கு பரப்பும். ஒரு நாளில் பதினைந்து ஆயிரம் கணிணிகளில் பரவும். "அந்த பதினைந்து ஆயிரத்தையும் இப்போதைக்கு மறந்துட வேண்டியதுதான்" சக்தி, "அதாவது இந்த முப்பத்து நாலு கணிணிகளில் இருக்கும் வைரஸ்ஸை நிறுத்தினா" நித்தின், "ஆமா" சக்தி, "எப்படிடா நிறுத்துவே?" நித்தின், "ஓ மை காட்! இந்த பக் இருப்பதனால நாம் லாப்டாப்பில் இருந்து மெஸ்ஸேஜ் மூலம் ஆணை கொடுத்தா அது ஏத்துக்காது! பரப்பறதை நிறுத்த முடியாது" சக்தி, "என்ன பண்ணாலாம்?" நித்தின், "ஹே, IRC சானல் நாம் இன்னும் ஓபனாத்தான் விட்டு இருக்கோம். இந்த பக்கினால் TCP மெஸ்ஸேஜ்கள் மூலம் வரும் ஆணைகள்தான் புறக்கணிக்கப் படும். நேரடியா IRC சானல் மூலம் ஹாக் பண்ணி நிறுத்தலாம்" IRC சானல் என்பது INTERNET RELAY CHAT .. நாம் சாட் செய்வது இதன் மூலமே. இதற்காக கணிணிகளில் ஒரு வாயில் (port) இருக்கும். மாங்க்ஸ் வைரஸ் அந்த வாயிலின் மூலம் வரும் ஆணைகளையும் எதிர் நோக்கியபடி அமைத்து இருந்தனர். அவசரத் தேவைக்கு உதவும் என்று இப்படி அமைத்து இருந்தனர். ஆனால் அந்த வாயிலின் மூலம் கணிணியை அணுகுகையில் அந்த கணிணியின் நடவடிக்கைகளை யாராவது மேற்பார்வை செய்து கொண்டு இருப்பின், எந்த இணைய விலாசத்தில் (ஐ.பி.அட்ரெஸ்ஸில்) இருந்து கணிணி அணுகப் பட்டது என்பதை எளிதில் கண்டு பிடிக்கக் கூடிய அபாயம் இருந்தது. சக்தி, "ஆனா, யாரவுது இந்த முப்பத்து நாலு கணிணிகளில் ஒண்ணையாவுது மானிடர் பண்ணிட்டு இருந்தாங்கன்னா நாம் எங்கே இருந்து அதை அணுகறோம்ன்னு தெரிஞ்சுடும்" நித்தின், "எப்படியாவுது அந்த முப்பத்து மூணு கணிணிகளில் இருக்கும் பக் இருக்கும் வைரஸ்ஸை நிப்பாட்டணும். இல்லைன்னா ஒன்றரை லட்சம் கணிணிகளை மறந்துடனும்."Wednesday, 1, April 2009 11:30 PM Shakthivel's Flat, New York புதன், ஏப்ரல் 1 2009 இரவு 11:30 சக்திவேலின் ஃப்ளாட், நியூ யார்க் இரவென்றும் பார்க்காமல் சக்தி ஜாஷ்வாவை கைபேசியில் அழைத்து நடந்தவற்றைச் சொன்னான். ஜாஷ்வா அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான். ஜாஷ்வா, "மை காட்! முழுசா டெஸ்ட் பண்ணி இருக்குன்னு சொன்னீங்களே?" சக்தி, "சொன்னோம் ஜாஷ்வா, இந்த பகுதியை சரியா டெஸ்ட் பண்ணலைன்னு தோணுது. இப்ப என்ன பண்ணலாம்?" ஜாஷ்வா, "எத்தனை கணிணியில் பக் இருக்கும் வைரஸ் புகுந்து இருக்கு?" சக்தி, "நாங்க புகுத்தி இருப்பது 34 கணிணிகளில். அந்த கணிணிகளில் இருந்து நாளைக்கு ராத்திரிக்குள்ள 15000 கணிணிகளுக்கு அது பரவிடும். நாளைக்கு உள்ள அதை நிறுத்தாமல் விட்டால் ஒன்றரை லட்சம் கணிணிகளுக்கு பரவும்" ஜாஷ்வா, "எப்படி நிறுத்த முடியும்? நீங்க அந்த 34 கணிணிகளில் பக் இல்லாத வைரஸ்ஸை புகுத்தினாலும், அந்த 34 கணிணிகளில் இருக்கும் பக் உள்ள வைரஸ் மத்த கணிணிகளுக்கு மேலும் பரவியபடி இருக்குமே?" சக்தி, "இல்லை. வைரஸ் கணிணியில் புகுந்த உடனே தன் வேலையை தொடங்குவதற்கு முன்னால் சர்வருக்கு தான் இருப்பதை அறிவிக்க ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பும். அதுக்கு சரியான பதில் வரலைன்னா அடுத்த நாளில் இருந்து ஒண்ணும் செய்யாமல் சர்வரிடம் இருந்து பதில் வரும்வரை காத்து இருக்கும். ஒரு நாளில், அதாவது நாளைக்கு ராத்திரிக்குள் இந்த 34 கணிணிகள் சுமார் 250 கணிணிகளுக்கு பரப்பும். அந்த 250 கணிணிகளும் சுமார் 1750 கணிணிகளுக்கு பரப்பும் அந்த 1750 கணிணிகள் இன்னும் 15000 கணிணிகளுக்கு பரப்பும். அடுத்த நாள் சர்வரிடம் இருந்து பதில் வரலைன்னா தொடர்ந்து வேலை செய்யாது" ஜாஷ்வா, "இப்பத்தான் சர்வரே இல்லையே?" நித்தின், "அந்த 15000 கணிணிகளுக்கு அதுக்கு அனுப்பின 1750 கணிணிகள் சர்வர். அதே மாதிரி அந்த 1750க்கும் அதுக்கு அனுப்பிய 250ம் சர்வர். ஆக இந்த 34 கணிணிகள்தான் அதுக்கு கீழ இருக்கும் 15000 கணிணிகளுக்கும் சர்வர். இந்த 34ஐயும் நாம் இப்ப நிறுத்தினால். அந்த 15000 கணிணிகளும் ரெண்டு நாள் வெய்ட்டிங்க்ல இருக்கும். அதுக்குள்ள புது பக் இல்லாத வைரஸ்ஸை இந்த 34 கணிணிகளுக்குள் புகுத்தினால், இந்த 34 கணிணிகளும் மேலும் ஒரு புதிய மாற்றம் வந்து இருக்குன்னு அதை பரப்பத் தொடங்கிடும். நாலஞ்சு நாளில் எல்லாத்திலும் புது வெர்ஷன் புகுந்துடும்" ஜாஷ்வா, "ஓ, Cascading updates and authorization? சரி, இந்த 34ஐயும் நிறுத்த என்ன வழி இருக்கு?" சக்தி, "IRC சானல் ஓபனா இருக்கு. நேரடியா அந்த சானல் மூலம் சஸ்பெண்ட் ஆகி நிக்கறதுக்கு ஒரு ஆணை கொடுக்கலாம். இந்த 34ம் சஸ்பெண்டட் ஸ்டேட்டில் (ஸ்தம்பிச்ச மாதிரி) இருக்கும். அதுக்கு அப்பறம் பழைய படி மென்பொருள் மூலம் புது வெர்ஷனை புகுத்தலாம்" ஜாஷ்வா, "IRC சானல் மூலம் அணுகினா சுலபமா ட்ரேஸ் அவுட் பண்ணிடுவாங்க இல்லையா?" நித்தின், "யாராவுது இந்த 34 கணிணிகளை. இல்லை. இந்த 34 கணிணிகளின் ஒண்ணை மானிட்டர் பண்ணிட்டு இருந்தாலும் நாம் எங்கே இருந்து அணுகறோம்ன்னு தெரிஞ்சுடும்" ஜாஷ்வா, "சக்தி, உன் சஜ்ஜஸ்ஷன் என்ன?" சக்தி, "IRC சானல் மூலம் ஆணை அனுப்பறதைத் தவிர வேறு வழி இல்லை" ஜாஷ்வா, "ஆணை கொடுத்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டதான்னு தெரிஞ்சுக்க ஒரு கணிணிக்கு சுமார் எவ்வளவு நேரம் ஆகும்?" நித்தின், "ரொம்ப நேரம் ஆகாது. Both ways traffic included 3 அல்லது 4 நிமிஷம் ஆகும்"ஜாஷ்வா, "சரி, ஒண்ணு செய்வோம். மூணு பேரும் ஆளுக்கு சுமார் 11 கணிணிகளுக்கு வெவ்வேறு இடத்தில் இருந்து ஆணை கொடுப்போம்" சக்தி, "வெவ்வேறு இடத்தில் இருந்துன்னா?" ஜாஷ்வா, "இலவச வை-ஃபை ஃஜோன் (Wi-fi Zone) இருக்கும் காஃபி ஷாப்புகளும் ரெஸ்டாரண்ட்களும் நிறைய இருக்கு. எல்லாம் நைட்டு ஒன்றரை மணி வரை திறந்து இருக்கும். இப்ப புறப்பட்டு மூணு பேரும் தனித்தனியா அடுத்தடுத்து நாலு காஃபி ஷாப்புக்கு போய் உட்கார்ந்து இந்த வேலையை முடிச்சுடலாம்" நித்தின், "யாராவுது ட்ரேஸ் அவுட் பண்ணினா?" ஜாஷ்வா, "ரியல் டைமில் யாரும் ட்ரேஸ் அவுட் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படியும் நாம் ஆணை கொடுக்கும் போது அவங்களுக்கு தெரிஞ்சாலும். அந்த இடத்தின் இணைய விலாசத்தை வெச்சுட்டு நிஜ விலாசத்தை கண்டு பிடிச்சு வர அவங்களுக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும். நாம் எந்த இடத்திலும் 15 நிமிடத்துக்கு மேல் இருக்கக் கூடாது" சக்தி, "அந்த இடத்தில் அவங்க விசாரிச்சாங்கன்னா?" ஜாஷ்வா, "நம்மை யாருக்கும் அடையாளம் தெரியக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கலாம். வேறு வழி இல்லை." நித்தின், "சரி, நேரத்தை கடத்த வேண்டாம் புறப்படுவோம்" ஜாஷ்வா, "சக்தி உன் கிட்ட ஒரு ஸ்பேர் லாப்டாப் இருக்கு இல்லையா? எனக்கு அதை கொடு. வரும் அவசரத்தில் நான் என் லாப்டாப்பை எடுத்துட்டு வரல" சக்தி, "சரி, முதலில் கொடுக்க வேண்டிய ஆணையையும் கொடுக்கப்பட வேண்டிய கணிணிகளின் ஐ.பி.அட்ரெஸ்ஸையும் மூணு டெக்ஸ்ட் ஃபைலில் எழுதிக்கலாம். ஆளுக்கு ஒரு டெக்ஸ்ட் ஃபைலை லாப்டாப்பில் காப்பி செஞ்சுட்டு புறப்படலாம்" என்ற படி காரியத்தில் இறங்கினான் ஜாஷ்வா, "ஒரு சின்ன மாற்றம். ஆணை கொடுத்து பதில் வந்தப்பறம் எந்த இடத்தில் இருந்து எந்த கணிணிக்கு ஆணை கொடுத்தோம்ன்னு நோட் பண்ணி வெச்சுக்கலாம்" நித்தின், "எதுக்கு?" ஜாஷ்வா, "ஒரு வேளை ட்ரேஸ் அவுட் பண்ணி விசாரிக்க அங்கே யாராவுது வந்தா எந்த கணிணி அவங்க வசம் இருக்குன்னு நமக்கு தெரியும்" சக்தி, "அவங்க விசாரிக்க வந்தாங்கன்னு நமக்கு எப்படி தெரியப் போகுது. யாராவுது ஹாக்கர்ஸ் புல்லட்டின்போர்டில் போடுவாங்கன்னு நம்பறயா?" ஜாஷ்வா, "நல்ல ஹாக்கர்கள் நிச்சயம் போடுவாங்க" மூவரும் சக்தியின் ஃப்ளாட்டை விட்டு நள்ளிரவைத் தாண்டிய சில நிமிடங்களில் வெவ்வேறு திசைகளில் புறப்பட்டனர். வை-ஃபை ஃஜோன் (Wi-fi zone) இருக்கும் காஃபி ஷாப் அல்லது ரெஸ்டாரண்ட் அல்லது மால் என குறிவைத்து சென்றனர். ஜாஷ்வா சொன்னது போல் ஒவ்வொரு இடத்திலும் கணிணிகளுக்கு ஆணை கொடுத்து அவைகளின் பதிலைப் பெற்றபின் அவ்விடத்தை விட்டு அகன்று அடுத்த இடத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர் டைம் ஸ்கொயர் பக்கம் சென்ற சக்திக்கு முதல் இரண்டு இலவச வை-ஃபை ஃஜோன்களை சுலபமாக கண்டு பிடித்து 6 கணிணிகளுக்கு ஆணை பிறப்பிக்கும் வேலையை முடித்தான். பிறகு பல வீதிகளில் சுற்றியும் இலவச வை-ஃபை ஃஜோன்கள் இருக்கும் காஃபி ஷாபோ ரெஸ்டாரண்டோ அவன் கண்ணுக்கு தென்படவில்லை. அவனது அலுவலகத்துக்கு அருகே வந்தவன், அங்கு வை-ஃபை ஃஜோன் இருப்பது நினைவுக்கு வந்தது. இலவசமானது இல்லை என்றாலும், அந்த வை-ஃபை நெட்வொர்க்கை உபயோகிக்க தேவையான பாஸ்வர்ட் அவனுக்கு தெரிந்து இருந்தது. உடனே காரை அலுவலகத்துக்கு எதிரே பார்க் செய்து. அலுவலகத்துள் நுழைந்தான். வாசலில் கேட்ட செக்யூரிட்டியிடம் எதையோ விட்டுச் சென்றதாகவும் அந்த பகுதிக்கு வந்ததால் எடுத்துச் செல்ல வந்ததாகவும் பொய் சொல்லி தனது இருக்கைக்கு சென்றான். அங்கு அமர்ந்தவாறு பதினைந்து நிமிடங்கள் இன்னும் 3 கணிணிகளுக்கு ஆணை பிறப்பித்தான். அதற்கு மேலும் அங்கு இருந்தவாறே செய்யலாம் என்றாலும் ஜாஷ்வா சொன்னதை மனதில் கூர்ந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து காரில் அமர்ந்தான். அப்போதுதான் அவனது அலுவலகத்துக்கு அருகே ப்ராட்வே சாலையில் இருக்கும் ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட் ஞாபகத்துக்கு வந்தது.ப்ளூ ஃபின் ரெஸ்டாரன்டை அடைந்தவன் ஒரு டேபிளில் அமர்ந்து ஒரு காஃபி மட்டும் ஆர்டர் செய்து லாப்டாப்பை திறந்தான். பாக்கி தான் ஆணை கொடுக்க வேண்டி இருந்த 3 கணிணிகளுக்கான ஆணைகளை கொடுத்து முடித்தான். மணி 1:30. அவன் எவ்வளவு முடித்து இருக்கிறான் என்று கேட்க நித்தினை கைபேசியில் அழைத்தான். நித்தின் அப்போதுதான் இறுதியாக ஆணை கொடுக்க வேண்டிய கணிணிகளுக்கு ஆணை கொடுக்கத் தொடங்கப் போவதாக கூறினான். நித்தின் அங்கு இருந்து புறப்பட எப்படியும் இன்னும் பதினைந்து நிமிடங்களாவது ஆகும் என்று நினைத்தவன் வந்தனாவிடம் சிறிது நேரம் பேசலாமென்று அவளை கைபேசியில் அழைத்தான். சக்தி, "ஹாய் ஹனி! சாப்டாச்சா இல்லை சாப்பிடப் போறயா?" வந்தனா, "இனிமேல் தான் போகணும்" சக்தி, "டாண்ணு ஒன்றரை மணிக்கு சாப்பிட உக்காந்துடுவே. இன்னைக்கு என்ன ஆச்சு? ரொம்ப பிஸியா?" வந்தனா, "ஹெல்லோ! லாஸ்ட் மந்த் 8ம் தேதியில் இருந்து உங்க ஊரில் டே லைட் ஸேவிங்க் டைம் (Daylight Saving Time) ஆரம்பிச்சு இருக்குன்னு நீதானே சொன்னே? நீ உன் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னாடி திருப்பி வெச்சுட்டா நான் சீக்கரம் சாப்பிடணுமா?" சக்தி, "ஓ யா, மறந்துடுச்சு" வந்தனா, "சரி நீ என்ன பண்ணிட்டு இருக்கே இந்த நேரத்தில்?" சக்தி ஏதோ நினைவில், "ஒரு ரெஸ்டாரண்டில் தனியா உக்காந்துட்டு இருக்கேன்" வந்தனா, "எதுக்கு?" தன் தவறை உணர்ந்து சட்டென்று என்ன சொல்வது என யோசித்தபின், "இந்த ஏரியாவுக்கு டின்னருக்கு ஃப்ரெண்டோட வந்து இருந்தேன். ஆஃபீஸ்ல சில டாக்யூமெண்ட்ஸ் விட்டுட்டு போயிருந்தேன். ஆஃபீஸுக்கு போய் எடுத்துட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி இங்கே காஃபி சாப்பிட வந்தேன்" என்று தன் அலுவலக செக்யூரிட்டியிடம் சொன்னதை சொன்னான். வந்தனா, "ஏன் தான் இவ்வளவு காஃபி குடிப்பியோ? வீட்டுக்கு போய் தூங்கத்தானே போறே? கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு காஃபி ரேஷன் பண்ணப் போறேன்" சக்தி, "நீ பகல் நேரத்தில் காஃபியை கட் பண்ணினா ஆஃபீஸில் தூங்கி வழிவேன். நைட் சாப்பிட்டதுக்கு அப்பறம் கட் பண்ணினா உனக்குத்தான் நஷ்டம்" வந்தனா, "ஏன்?" சக்தி, "தூங்கி வழிவேன். அப்பறம் சம்திங்க் சம்திங்க் கிடைக்காது" வந்தனா, "சீ .. கிடைக்கலைன்னா பரவால்லை" சக்தி, "ஆர் யூ ஷ்யூர்?" வந்தனா, "போதும் சும்மா பேசி இப்ப என் மூடை கெடுக்காதே" சக்தி, "மூடை கெடுக்கறேனா? என்ன சொல்றே?" வந்தனா, "பின்னே? வேற மாதிரி மூட் வந்தா வொர்க் பண்ணற மூட் கெட்டுப் போகாதா?" சக்தி, "வேற மாதிரி மூடுன்னா?" வந்தனா, "தெரியாத மாதிரி கேக்காதே" சக்தி, "என்னன்னு சொல்லேன் ப்ளீஸ்?" வந்தனா, "ம்ம்ம் ஒண்ணும் இல்லை போ" சக்தி, "ஐ நீட் யூ ரைட் நவ்" வந்தனா, "மீ டூ! ... " என்றவள் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "யூ ராஸ்கல், என்னை எப்படி கர்ரப்ட் பண்ணிட்டே. ஆஃபீஸ்ல உக்காந்துட்டு நான் இந்த மாதிரி எல்லாம் பேசுவேன்னு கனவில் கூட நினைச்சது இல்லை" சக்தி, "ஹா ஹா! சரி போய் சாப்பிடு. நான் நாளைக்கு கூப்பிடறேன்" வந்தனா, "நீயும் போய் தூங்கு" நித்தின் இந்நேரம் முடித்து இருப்பான் என்று அவனும் வீட்டுக்கு புறப்பட்டான். 2 மணியளவில் மூவரும் சக்தியின் ஃப்ளாட்டுக்கு திரும்பினர். ஜாஷ்வா, "எல்லா ஆணைகளும் கொடுத்தாச்சு இல்லையா?" சக்தி, "எஸ்! இப்ப அந்த வைரஸ்ஸை கரெக்ட் செஞ்சு மறுபடி மென்பொருள் மூலம் இந்த 34 உடன் இன்னும் ஒரு நூறு கணிணிகளுக்கு புகுத்தறேன்" ஜாஷ்வா, "ஹே, நாளைக்கு .... சாரி .... இன்னைக்கு உங்களுக்கு ஆஃபீஸ் இல்லையா?" சக்தி, "கொஞ்சம் லேட்டா போயிட்டு சீக்கரம் வந்துடறோம். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க" ஜாஷ்வா, "சரி நான் அப்ப புறப்படறேன்" நித்தின், "ரொம்ப தேங்க்ஸ் ஜாஷ்" ஜாஷ்வா, "ஹேய், இது என்னோட பிரச்சனையும்தான். மறந்துடாதே" என்றவாறு ஜாஷ்வா விடைபெற்றான். சக்தியும் நித்தினும் வைரஸ்ஸில் மாற்றம் செய்த பிறகு அதிகாலை 4 மணியளவில் மென்பொருளை இயக்கிவிட்டு தூங்கச் சென்றனர். அடுத்த நாளில் இருந்து மாங்க்ஸ் பாட் நெட்டில் புதிய வைரஸ்ஸான மாங்க்ஸ்-2 பரவத் தொடங்கியது.Thursday, 9 April 2009 5:00 PM Make-shift Test Lab, R&AW, New Delhi வியாழன், ஏப்ரல் 2 2009 மாலை 5:00 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி வந்தனா மதியம் சக்தியுடன் பேசிய திளைப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்தாள். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் சுற்றுகள் நடந்த வண்ணம் இருந்தது. அவர்கள் அதுவரை 87 சுற்றுக்களை முடித்து இருந்தனர். இரவுகளில் எஃப்.பி.ஐ மூலம் தரவைத்த கணிணியில் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மென்பொருள் இயக்கப் படும். ஒவ்வொரு நாளும் காலையில் முந்தைய இரவின் இயக்கத்தின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து பிறகு அடுத்த சுற்றுக்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதை வழமையாக கொண்டு இருந்தனர். பல வேலைகளையும் வந்தனாவின் மேற்பார்வையில் ப்ரொஃபெஸ்ஸர் சாரியின் குழுவே செய்தது. காலை வேளை ஆய்வுகளில் தீபா பங்கு கொள்வாள். வந்தனாவின் மேற்பார்வை சம்மந்தப் பட்ட வேலைகளில் காலையில் சில மணி நேரங்களும் பிறகு மாலை வீடு திரும்புமுன் அரை மணி நேரமும் செலவழிந்தது. இவைகளை தவிர தோழிகள் இருவரும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களையும் அதில் இணைக்கப பட்ட தங்களது நூறு கணிணிகளின் நடவடிக்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டு இருந்தனர். முதன் முதலில் மாங்க்ஸ் பாட் நெட்டில் எந்த கணிணியையும் சர்வர் நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை என்று கண்டு அறிந்தனர். செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களைப் போல ஒரு குறிப்பிட்ட கணிணிக்கென வரும் மெஸ்ஸேஜ்களும் பல கணிணிகளின் வாயிலாக வருவதால், இணையத்தின் மாங்க்ஸ் பாட் நெட்டின் தகவல் போக்கு வரத்து மூலம் அவர்களது சர்வரை கண்டு அறிய முடியாது என்றும் அறிந்தனர். இருப்பினும், AKBOT வேட்டையின் போது அதிகமாக பயன்பட்டதால், இணைய தகவல் போக்குவரத்தை கண்காணித்து பட்டியலிடும் மென்பொருளை அந்த நூறு கணிணிகளிலும் புகுத்தி இருந்தனர். அந்த நூறு கணிணிகளிலும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களுடன் அந்த கணிணியில் நடைபெறும் எல்லா இணையத் தகவல் போக்குவரத்துகளும் பட்டியலிட்டபடி இருந்தன. ஏதாவது எதிர்பாராத போக்கு வரத்தோ அல்லது அவர்கள் இதுவரை பார்த்திராத வகையான மாங்க்ஸ் மெஸ்ஸேஜ்ஜோ அப்பட்டியலகளில் புதிதாக வந்து இருக்கிறதா என்று பரிசீலனை செய்வதற்காக தோழிகள் ஒரு மென்பொருளை எழுதி இருந்தனர். அந்த மென்பொருளை அந்த நூறு கணிணிகளை தவிர வேறு ஒரு கணிணியில் புகுத்தி இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 4:45க்கு அந்த மென்பொருள் தானாக இயங்கத் தொடங்கும்படி அமைத்து இருந்தனர். அந்த மென்பொருள் மற்ற நூறு கணிணிகளில் இருக்கும் பட்டியல்களை தான் இருக்கும் கணிணிக்குள் ஒன்று சேர்த்து புதிதாக ஏதாவது தென்பட்டால் அறிவிக்கும். அப்படி அறிவிக்க அந்த மென்பொருள் தன் குரலிலேயே "யூரேகா" என்ற வார்த்தையை ஒலி எழுப்புமாறு தீபா அமைத்து இருந்தாள். மேலும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களை தவிர வேறு ஏதாவது இணையத் தகவல் பரிமாற்றம் ஏற்பட்டால் "யாஹூ" என்ற வார்த்தையை ஒலிக்குமாறும் அமைத்து இருந்தாள். அன்று மாலை அடுத்த சுற்றுக்கான ஆயத்தங்களை மேற்பார்வை செய்தபிறகு ப்ரொஃபெஸ்ஸர் சாரியின் குழு அமர்ந்து இருந்த அறையில் இருந்து தங்களது நூறு கணிணிகள் கொண்ட லாப்பிற்குள் வந்தனா வந்தாள். தீபாவின் இருக்கைக்குச் சென்று பார்க்க அவள் சுவாரஸ்ஸியமாக இணையத்தில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள். வந்தனா, "எப்படி போச்சு ப்ரொஃபெஸ்ஸரோட உன் மீட்டிங்க்? எதுக்கு கூப்பிட்டு இருந்தார்? எப்ப திரும்பி வந்தே" என்று கேட்ட வாறு அவள் எதிரே அமர்ந்தாள். தீபா, "போன வாரம் அவர் வெளியூருக்கு போயிருந்தார் இல்லையா? போன வாரம் ரிவ்யூ பண்ணிதை இன்னொரு தடவை ரிவ்யூ செய்யறதுக்கு என்னை கூப்பிட்டு இருந்தார். இட் வாஸ் ரீயலி ரீயலி போரிங்க்!! முடிச்சுட்டு அங்கேயே லஞ்ச் சாப்பிட்டுட்டு வரும் போது மணி ரெண்டரை" வந்தனா, "யூ நோ சம்திங்க்? காலையில் இருந்து எனக்கும் போர் அடிச்சுட்டு இருந்துது. சக்தி ஃபோனில் கூப்பிட்டான்" தீபா, "ஏன் காலையில் கூப்பிடலையா?" வந்தனா, "காலையிலும் கூப்பிட்டு இருந்தான். அவனுக்கு எதோ வேலை இருந்து இருக்கு. நைட் ஒரு மணிக்கு ஆஃபீஸுக்கு வந்துட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி கூப்பிட்டான்" தீபா, "எனிதிங்க் ஸ்பெஷல்" வந்தனா, "நத்திங்க் .. சும்மா" தீபா, "சோ அதுக்கு அப்பறம் தெம்பா வொர்க் பண்ணினேயாக்கும்?" வந்தனா, "ஆமா. இப்ப என் வேலை எல்லாம் முடிஞ்சுது. இன்னைக்கு மனீஷ் அண்ணா வர்றான். சீக்கிரம் வீட்டுக்கு போலாம் புறப்படு" தீபா, "ஹேய், எப்பவும் வெள்ளிக் கிழமை நைட்டுதானே வருவார்?" வந்தனா, "நாளைக்கு எதோ மீட்டிங்க் இருக்காம். அதனால் இன்னைக்கே வர்றான்" தீபா, "ஹப்பா, வா போலாம் அட்லீஸ்ட் வீட்டிலாவது கொஞ்சம் கலகலப்பா இருக்கும். இரு ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன். கிளம்பலாம்" என்றவாறு தன் தோள்பையை வந்தனாவிடம் கொடுத்துச் சென்றாள்.நூறு கணிணிகள் கொண்ட லாப்பின் நடுவே இருக்கும் நடைபாதையில் நின்று கொண்டு தீபாவின் வரவுக்காக காத்து இருக்கும் போது, தீபா சென்ற திசைக்கு எதிர் திசையில் தீபாவின் குரலில், "யூரேகா" என்று மூன்று முறையும் தொடர்ந்து "யாஹூ" என்று மூன்று முறையும் ஒலித்ததைக் கேட்டாள். சில கணங்களில் அந்த குரலின் பின் விளைவுகளை உணர்ந்தவள் பட்டியல்களை ஒன்று சேர்த்து ஆராயும் கணிணிக்கு அருகே செல்ல, அதன் திரையில் கீழ்கண்டவாறு ஒரு அறிவிப்பு விண்டோ தெரிந்தது சில கணங்கள் அதைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்த வந்தனா உடனே தன் கைபேசியில் ஷான் ஹென்றியை அழைத்தாள். ஷான், "Vanthana, you better have some good reason to wake me up" வந்தனா, "ஷான், மாங்க்ஸ் பாட் நெட்டில் ஒரு கணிணிக்கு IRC சேனல் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்து இருக்கு" ஷான், "வாட்? எப்போ?" வந்தனா, "எங்க நேரப்படி இன்னைக்கு ஒரு மணி ரெண்டு நிமிஷத்தில்" அப்போது தீபா அருகே வந்து என்னவென்று ஜாடையில் கேட்க, பேசியவண்ணம் அந்த கணிணியின் திரையை காடினாள். திரையை சில கணங்கள் பார்தத தீபா கணிணி எண் 68க்கு சென்று அமர்ந்தாள். ஷான், "உங்க நேரப் படியா?" வந்தனா, "ஆமா ஷான். தகவல் பரிமாற்றம் நடந்த பாட் எங்க லாப்பில் இருக்கு" ஷான், "மை காட்! எங்கே இருந்து? ஐ.பி.அட்ரெஸ் இருக்கா?" வந்தனா, "இருக்கு உடனே டெக்ஸ்ட் செய்யறேன்" ஷான், "எவ்வளவு நேரம் தகவல் பரிமாற்றம் நடந்து இருக்கு. எத்தனை தகவல்கள்?" வந்தனா, "ரெண்டே ரெண்டு. முதலில் ஒரு மணி ரெண்டு நிமிஷத்தில் 192.168.1.53 என்கிற ஐ.பி அட்ரெஸ்ஸில் இருந்து 66.206.84.151 என்கிற கேட்வே வழியா ஒரு சாட் மெஸ்ஸேஜ் வந்து இருக்கு. அப்பறம் இந்த கணிணி ஒரு மணி மூணூ நிமிஷத்தில் அதே ஐ.பி அட்ரெஸ்ஸுக்கு ஒரு சாட் மெஸ்ஸேஜ் அனுப்பி இருக்கு. அவ்வளவுதான்" ஷான், "என்னவா இருக்கும்?" வந்தனா, "அதை நாங்க அனலைஸ் பண்ணறோம். நீங்க அந்த ஐ.பி.அட்ரெஸ் யாருதுன்னு உடனே கண்டு பிடியுங்க" ஷான், "ஓ.கே. நான் உடனே க்ரிஸ்ஸுக்கு .. " வந்தனா, "ஷான், ஷான், ... திட்ட வட்டமா தெரிஞ்சதுக்கு அப்பறம் பெரிய தலைகளுக்கு சொல்லலாம். உங்களுக்கு என்ன விவரம் தெரிஞ்சாலும் உடனே எனக்கு சொல்லுங்க. ப்ளீஸ்" ஷான் சிரித்தபடி, "Oh! I forgot you know bureaucracy as well as I do!" என்றவாறு விடைபெற்றார்.தீபா அமர்ந்து இருந்த கணிணி எண் 68க்கு அருகே சேன்ற வந்தனா, "என்ன தீபா? என்ன நடந்து இருக்கு?" தீபா, "அமேஸிங்க்" வந்தனா, "என்னன்னு சொல்லு" தீபா, "அவங்க முதலில் அனுப்பி இருந்த மாங்க்ஸ் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் வைரஸ்ஸை அப்க்ரேட் செய்யும் மெஸ்ஸேஜ்கள் என்பது என் அனுமானம்." வந்தனா, "எப்படி சொல்றே?" தீபா, "வைரஸ் உருமாறி இருக்கு" வந்தனா, "வாட்? எப்படி?" தீபா, "அதன் அளவு அதிகமாகி இருக்கு" வந்தனா, "முதல் முறையா மாங்க்ஸ் பாட் நெட்டில் இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை பார்க்கறோம். இல்லையா?" தீபா, "ஆமா. இங்கே பாரு 9:38இல் இருந்து 9:47வரைக்கும் அந்த மாதிரி மெஸ்ஸேஜ்கள் வந்து இருக்கு. மொத்தம் சுமார் 1.2MB. அதுக்கு அப்பறம் வைரஸ்ஸின் அளவு 238KBஇல் இருந்து 312KBஆ மாறி இருக்கு" வந்தனா, "பாக்கி அந்த விண்டோஸ் வால் பேப்பரில் இருக்கா?" தீபா, "அதில் இல்லை. அதே மாதிரி வேறு எதாவது ஒரு ஜேபெக் ஃபைலுக்குள் இருக்கும். ஒவ்வொண்ணா தேடிப் பாத்தா கண்டு பிடிச்சுடலாம்" வந்தனா, "ஹேய், அதுக்கு அப்பறம் இந்த கணிணி அதே மாதிரி மெஸ்ஸேஜ்களை அனுப்பி இருக்கு பாரு" தீபா, "பார்த்தேன். க்ரூப் க்ரூப்பா இது வரைக்கும் சரியா 28 மெஸ்ஸேஜ் செட் அனுப்பி இருக்கு. சர்வரில் இருந்து வரும் ஈமெயில் மெஸ்ஸேஜ்களை மத்த கணிணிகளோட பகிர்ந்துக்கற மாதிரி இந்த மெஸ்ஸேஜ்களையும் மத்த கணிணிகளுக்கு அனுப்பி இருக்கு" வந்தனா, "இல்லை தீபா! ஈமெயில் அனுப்பும் ஆணைகள் இந்த மெஸ்ஸேஜ்களுக்கு நடுவில் வேறு கணிணிகளுக்கு போயிட்டே இருந்து இருக்கு. இந்த வகையான மெஸ்ஸேஜ்கள் மட்டும் அஞ்சு ஆறு நிமிஷத்துக்கு ஒரு முறை சில கணிணிகளுக்கு மட்டும் அனுப்பி இருக்கு" என்று சுட்டிக் காட்டினாள். தீபா மலைத்துப் போய் அமர்ந்து இருந்தாள், "எஸ்! என்னவா இருக்கும்?" என்றபடி மற்றொரு லாக் ஃபைலை திறந்து பார்த்தாள். பிறகு திடீரென தீபா, "வந்தனா, ஓ மை காட்! இங்கே பாரு. IRC சேனல் மூலம் தொடர்பு எத்தனை மணிக்கு தொடர்பு வந்து இருக்குன்னு" வந்தனா, "தெரியும் மதியம் 1:02க்கு" தீபா, "இப்ப இந்த மெஸ்ஸேஜ் லாக் ஃபைலைப் பார். 1:03க்கு அப்பறம் ஒரு மெஸ்ஸேஜ்ஜும் இந்த கணிணியில் இருந்து போகலை. அந்த நிமிடத்தில் இருந்து இந்த வைரஸ் ஸ்தம்பிச்சுப் போய் நின்னு இருக்கு. As though it has been suspended" வந்தனா, "என்னவா இருக்கும். முதலில் வைரஸ்ஸை அப்க்ரேட் செஞ்சு இருக்காங்க. அப்பறம் நேரடியா தொடர்பு கொண்டு அதன் இயக்கத்தை நிறுத்தி இருக்காங்க"Friday, 3 April 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, ஏப்ரல் 3, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அனைவரும் அமர்ந்து இருந்தனர். வந்தனாவும் தீபாவும் நேற்றைய தினத்தின் பரபரப்பான கண்டு பிடுப்புகளை விளக்கினர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ், இந்த ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் இழுத்துட்டே இருக்கேன்னு எதாவுது ஒரு ப்ரேக் கிடைக்காதான்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நான் ப்ரே பண்ண ஆரம்பிச்சேன்" முரளீதரன், "சக்தியும் நித்தினும் திரும்பி வரதுக்குள்ள இந்த அசைன்மெண்டை முடிக்கணும்ன்னு தீபாவும் வந்தனாவும் ப்ரே பண்ணறதை விட நீங்க அதிகமா பண்ணி இருக்க முடியாது. என்ன வந்தனா? நான் சொல்றது சரிதானே?" அந்த சூழலில் இருந்த பரபரப்பையும் மீறி வந்தனா வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள். தீபா, 'டேய் பிசாசே, என்னை ஏன் இப்படி ஆக்கிட்டே? வேலையில் ஒரு முக்கியமான திருப்புமுனை. அந்த சமயத்தில்கூட உன் பேரைக் கேட்டதும் எனக்கு உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு' என்று மனதுக்குள் நித்தினை சபித்தாள். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எப்படியோ இந்த அசைன்மெண்ட் முடியறதுக்கு ஒரு வாய்ப்பு அமைஞ்சு இருக்கு. ஷான் கிட்ட இருந்து அப்டேட் வந்துதா?" முரளீதரன், "இப்ப அவர்கூட டெலிகான்ஃபெரன்ஸில் பேசப் போறோம்" ஷான்னும் சான்ட்ராவும் அவர்களுடன் டெலிகான்ஃப்ரென்ஸ் மூலம் கலந்து கொண்டனர். நகத்தை கடித்தவாறு இருந்த தீபா மறுமுனையில் ஷான் வந்தவுடன் பொறுமை இழந்து, "ஷான், கண்டு பிடிச்சுட்டீங்களா?" ஷான், "நோ தீபா. கண்டு பிடிக்க முடியுமான்னும் தெரியலை" வந்தனா, "என்ன சொல்றீங்க ஷான்?" ஷான், "வந்தனா, நீ கொடுத்த ஐ.பி அட்ரெஸ்ஸ் ப்ளூ ஃபின் அப்படின்னு ப்ராட்வேயில் (Broadway - ஒரு பிரபலமான வீதி) இருக்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டோடது" தீபா, "அந்த ரெஸ்டாரண்ட் ஓனரை விசாரிச்சீங்களா?" ஷான், "அவசியமே இல்லை. அந்த ஐ.பி அட்ரெஸ் அந்த ரெஸ்டாரண்ட்டோட வை-ஃபை ஃஜோனின் கேட்வே (Wi-fi zone gateway). ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வாருபவர்கள் இலவசமா உபயோகிப்பதற்காக அந்த ரெஸ்டாரண்ட் அதை அமைச்சு இருக்கு. இதனாலேயே அந்த ரெஸ்டாரண்டில் சாலை ஓரம் இருக்கும் பகுதியில் எப்பவும் கூட்டம் இருக்கும். எல்லாரும் லாப்டாப் அல்லது வை-ஃபை எனேபிள்ட் ஸ்மார்ட் ஃபோன் (Wi-fi enabled smartphone) மூலம் ப்ரௌஸ் பண்ணிட்டு இருப்பாங்க. இன் ஃபாக்ட் அந்த வை-ஃபை ஃஜோனை உபயோகிக்க ரெஸ்டாரண்ட்டுக்குள் போக வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரோட்டில் ரெஸ்டாரண்ட் இருக்கும் சைட் முழுக்க பார்க்கிங்க் அனுமதிக்கப் பட்டு இருக்கு. ரெஸ்டாரண்ட் வாசலில் காரை நிறுத்தி காருக்கு உள்ளே இருந்துகூட வை-ஃபை ஃஜோனை உபயோகிச்சு இருக்க முடியும்" தீபா, "ஷான் நைன்-இலவனுக்கு பிறகு நியூ யார்க்கில் எல்லா இடத்திலும் சர்வேய்லன்ஸ் கேமரா இருக்குன்னு நீங்களே சொன்னீங்க இல்லையா? ஒவ்வொரு கேமராவில் ரெக்கார்ட் ஆனதை வெச்சு யாருன்னு கண்டு பிடிக்க முடியாதா?" முரளீதரன், "ஹெய், நீ எப்படி போலீஸ் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சே?" ஷான், "முரளீ, கடைசியில் தீபா சொன்னத்தான் செய்யப் போறோம். ஆனா அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டில் மற்றும் ரோட் ஓரத்தில் இருந்தவங்களோட முகத்தை வெச்சு அவங்களோட விலாசத்தை கண்டு பிடிச்சு அங்கே போய் விசாரிக்கணும். அதுவும் ரொம்ப நாசூக்கா செய்யணும்" வந்தனா, "ஏன்? இதில் நாசூக்கு எதுக்கு? கூப்பிட்டு விசாரிக்கத்தானே போறோம்? அரெஸ்ட் பண்ணப் போறது இல்லையே?" ஷான், "வந்தனா, இது இண்டியா இல்லை புரிஞ்சுக்கோ. சர்வேய்லன்ஸ் கேமரா எல்லா இடத்திலும் வெச்சதுக்கே பல மனித உரிமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. நாம் விசாரிக்கப் போறவங்களில் அந்த மாதிரி ஆளுங்க யாராவது இருந்தா Invasion of Privacyன்னு கேஸ் போட்டுடுவாங்க" முரளீதரன், "சோ, ஒவ்வொருத்தரையா யாருன்னு அடையாளம் கண்டு பிடிச்சு போய் விசாரிக்கப் போறீங்களா?" ஷான், "எஸ் முரளீ, முதலில் என்.எஸ்.ஏவின் உதவியோட அங்கே இருந்தவங்களை அடையாளம் கண்டு பிடிக்கணும். அப்பறம் ஒவ்வொருத்தரையா அணுகி விசாரிக்கணும். இந்த ஸர்ச்சுக்கு தீவிரவாதம் முக்கியத்துவம் இல்லை. அதனால் என்.எஸ்.ஏ உடனுக்கு உடன் செய்ய மாட்டாங்க. உடனுக்கு உடன் செய்யவும் முடியாது ஏன்னா நூறு பேருக்கு மேல் அந்த சமயத்தில் ரெஸ்டாரண்டுக்குள்ளும் சுற்று வட்டாரத்திலும் இருந்து இருக்காங்க. ரொம்ப நாள் ஆகும்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அப்ப நாங்க இப்ப செஞ்சுட்டு இருக்கும் வேலை .. " என்று இழுக்க முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், அதன் மூலம் நமக்கு சர்வர் ஐ.பி.அட்ரெஸ் கிடைச்சா அதுதான் அசைக்க முடியாத ஆதாரம். ப்ளீஸ் அதை நிறுத்தணும்ன்னு கனவிலும் நினைக்க வேண்டாம். உங்க வேலை தொடரட்டும். ஷான் அவங்க வேலையை செய்யட்டும். அவங்களுக்கு எந்த விதத்திலாவுது ப்ரேக் த்ரூ கிடைச்சா உடனே தெரிவிப்பாங்க. நீ என்ன சொல்றே ஷான்?" ஷான், "முரளி சொல்றதை நான் முழுவதும் ஆமோதிக்கறேன். பட், தீபா, வந்தனா, நீங்க மேலும் உங்க மாங்க்ச் பாட் நெட் கண்காணிப்பை தொடருங்க. அதிலும் எதாவுது க்ளூ கிடைக்கலாம்" முரளீதரன், "அஃப்கோர்ஸ் ஷான்" எல்லோரும் விடைபெற்றனர்.Friday, 3 April 2009 5:00 PM Bouchon Bakery, Time Warner Center, New York வெள்ளி, ஏப்ரல் 3, 2009 மாலை 5:00 பௌச்சன் பேக்கரி, டைம் வார்னர் சென்டர், நியூ யார்க் சக்தி, "என்ன ஜாஷ்? அவசரமா வரச்சொன்னே?" ஜாஷ்வா, "Something has come up" நித்தின், "என்ன?" ஜாஷ்வா, "நாம் 34 கணிணிகளை நேரடியா தொடர்பு கொண்டோம் இல்லையா? அதில் எஃப்.பி.ஐ கண்காணிக்கும் கணிணியும் இருந்து இருக்கு" சக்தி, "ஓ மை காட்" நித்தின், "God! It shows that we are running out of luck" எரிச்சலடைந்த சக்தி, "Oh shut up Nithin! Stop being a doomsayer!!" நித்தின், "பின்னே? நாலரை லட்சம் கணிணிகளில் எஃப்.பி.ஐ கண்காணிப்பில் இருக்கும் ஒரு கணிணியை நாம் வைரஸ்ஸை பரப்ப தேர்ந்து எடுத்து இருக்கோம்!" ஜாஷ்வா, "கய்ஸ், கய்ஸ்! நீங்க ரேண்டமாதானே தேர்ந்து எடுத்தீங்க? பிரச்சனை அது இல்லை" சக்தி, "வேறு எதாவுது இருக்குன்னு தெரியும். சொல்லு" ஜாஷ்வா, "சக்தி, நீ ஏன் அவ்வளவு நேரம் ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில் உக்காந்துட்டு இருந்தே?" சக்தி, "நான் முடிக்க வேண்டிய நாலு செட் கணிணிகளும் முடிச்சுட்டேன். நித்தின் அவனுதை முடிக்கட்டும்ன்னு அங்கேயே உக்காந்துட்டு இருந்தேன். அது சரி. நான் ப்ளூ ஃபின்னுக்கு போனேன்னு உன் கிட்ட சொலல்வே இல்லையே?" ஜாஷ்வா, "எஃப்.பி.ஐ கண்காணிப்பில் இருந்த கணிணிக்கு நீ ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில் இருந்து ஆணை கொடுத்து இருக்கே. என் கஸின் ஒருத்தன் அந்த ரெஸ்டாரண்டில் வேலை செய்யறான். அவன் உன்னை அந்த நைட் பாத்தும் இருக்கான். நீ என் ஃப்ரெண்டுன்னு அவனுக்கு தெரியும். இன்னைக்கு எஃப்.பி.ஐயில் இருந்து வந்து விசாரிச்சுட்டு போனதை அவன்தான் எனக்கு ஃபோன் பண்ணினான்" சக்தி, "ரெஸ்டாரண்டில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் இருந்தேன். ஆனா அவங்க வை-ஃபையை இருபது நிமிஷம்தான் உபயோகிச்சேன். அதுக்கு அப்பறம் டிஸ்கனெக்ட் பண்ணிட்டேன். அந்த சமயத்தில் என்னை சுத்தி நிறைய பேர் லாப்-டாப்பில் ப்ரௌஸ் செஞ்சுட்டு இருந்தாங்க. இதில் என்னை எப்படி சந்தேகப் படுவாங்க. முதலாவுது என்னை யாராவுது அடையாளம் காட்டினால் ஒழிய அவங்களுக்கு எப்படி என் மேல் சந்தேகம் வரும்" ஜாஷ்வா, "நியூ யார்க் முழுக்க இப்ப சர்வைலன்ஸ் கேமராக்கள் இருக்கு. நீ அவங்க கணிணியை நேரடியா தொடர்பு கொண்ட நேரத்தில் அந்த ரெஸ்டாரண்டில் இருந்த கேமராவில் ரெக்கார்ட் ஆனதை அவங்க பார்க்கப் போறாங்க. உன் முகம் நிச்சயம் அதில் இருக்கும்" சக்தியும் நித்தினும் சற்று நேரம் பேயறைந்த முகத்துடன் அமர்ந்து இருந்தனர். சக்தி, "உனக்கு எப்படி தெரியும்?" ஜாஷ்வா, "அவங்க ரெஸ்டாரண்ட்டில் இருந்த கேமராக்கள் மூலம் ரெக்கார்ட் ஆன டிஸ்க்கை எடுத்துட்டு போயிருக்காங்க" சக்தி, "ஓ மை காட்!"நித்தின், "அப்ப நிச்சயம் சக்தியை சந்தேகப் பட வாய்ப்பு இருக்கு இல்லையா?" ஜாஷ்வா, "அந்த சமயத்தில் அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு உள்ளேயும் அந்த ரெஸ்டாரண்டை சுத்தியும் லாப்-டாப் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகிச்சுட்டு இருந்த ஒவ்வொருத்தரையும் சந்தேகப் படுவாங்க. அதில் சக்தியும் அடக்கம்" சக்தி, "இந்த வீடியோவை வெச்சுட்டு எப்படி கண்டு பிடிப்பாங்க?" ஜாஷ்வா, "என்.எஸ்.ஏ வில் இருக்கும் ஃபோட்டோ ஐ.டி டேட்டா பேஸை பயன் படுத்தி அந்த வீடியோவில் இருக்கும் ஒவ்வொருத்தரும் யாருன்னு முதலில் கண்டு பிடிப்பாங்க" நித்தின், "சக்தியின் ஃபோட்டோ அவங்ககிட்ட இருக்குமா?" ஜாஷ்வா, "நிச்சயம் இருக்கும். உங்களுக்கு விசா கொடுக்கும் போதே உங்க ஃபோட்டோ அந்த டேட்டா பேஸில் சேர்ந்து இருக்கும்" சக்தி, "பட் வீடியோவில் என் பாஸ்போர்ட் ஃபோட்டோவுக்கு மாட்ச் ஆகறமாதிரி இருக்காது. An automated search will be impossible. Someone has to find the right frame that can be used" ஜாஷ்வா, "நான் ஒண்ணும் ஒரு நிமிஷத்தில் அவங்க கண்டு பிடிச்சுடுவாங்கன்னு சொல்லையே? வீடியோவில் இருக்கும் ஒரு முகத்தை அந்த டேட்டா பேஸில் தேடி கண்டு பிடிக்க அவங்களுக்கு குறைஞ்சது ஒரு நாளாவுது ஆகும்" நித்தின், "சோ, அவங்க எடுத்துட்டு போயிருக்கும் வீடியோவில் இருக்கும் ஒவ்வொருத்தரும் யாருன்னு கண்டு பிடிக்கறாங்க. அப்பறம்" ஜாஷ்வா, "ஒருவரை அடையாளம் கண்ட உடனே அந்த நபர் பேரில் ஏற்கனவே எதாவுது போலீஸ் ரெக்கார்ட் இருக்கான்னு பார்ப்பாங்க." என்றவன் தொடர்ந்து "அப்படி பார்க்கறதுக்கும் டேட்டா பேஸ் மற்றும் மென்பொருள் இருக்கு" நித்தின், "என் யூகத்தில் அந்த நேரத்தில் அந்த ரெஸ்டாரண்டிலோ அதுக்கு பக்கத்திலோ இருந்தவங்களில் போலீஸ் ரெக்கார்ட் இல்லாதவங்கதான் அதிகமா இருப்பாங்க. அதுக்கு அப்பறம் ஒவ்வொருத்தரையா அவங்க விலாசத்தை தேடி போய் பார்த்து நேரடி விசாரணை செய்வாங்க. இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "சக்தி, ஒண்ணும் பிரச்சனை இல்லை. அப்படி உன்னை வந்து கேட்டா அந்த நேரத்தில் நீ அங்கே இருந்ததுக்கு தகுந்த அலிபை (alibi - அங்கு இருந்ததற்கு காரணமான ஆதாரம்) இருந்தா போதும் உன்மேல் எந்த சந்தேகமும் வராது" ஜாஷ்வா, "நேரா அவன் ஃப்ளாட்டுக்கு வந்தாங்கன்னா? இல்லை அவன் இல்லாத நேரத்தில் ஃப்ளாட்டுக்குள் நுழைஞ்சு சோதனை போட்டா?" நித்தின், "எப்படியும் இன்னும் ஏழு எட்டு நாளில் பாட் நெட் முழுவதும் மாங்க்ஸ்-2 பரவிடும். அதுக்கு அப்பறம் நமக்கு சர்வர் அப்படின்னு ஒண்ணு தேவையே இல்லை. அது வரைக்கும் என் வீட்டில் இருக்கும் சர்வரையும் ஜாஷ், உன் வீட்டில் இருக்கும் சர்வரையும் தினம் தினம் மாத்தி மாத்தி இயக்கலாம். உடனே சக்திவீட்டில் இருக்கும் சர்வரை முழுக்க ஃபார்மாட் பண்ணி வெறும் விண்டோஸ் அப்பறம் பர்சனல் மேட்டர், கொஞ்சம் கேம்ஸ், மூவீஸ் மட்டும் லோட் பண்ணுவோம்" ஜாஷ்வா, "Sounds good. But what about alibi?" முகம் மலர்ந்த சக்தி, "கவலையே படாதே. அன்னைக்கு ப்ளூ ஃபின்னுக்கு போறதுக்கு முன்னாடி நான் என் ஆஃபீஸுக்கு போய் அங்கே இருந்த வை-ஃபை நெட்வொர்க்கை உபயோகிச்சேன். ஆஃபீஸ் செக்யூரிட்டி ஸ்டாஃப் கிட்ட ஒரு டாக்யூமெண்ட் விட்டுட்டு போயிட்டேன்; எடுத்துட்டு போக வந்தேன்னு சொல்லிட்டு உள்ளே போனேன். வெளியே வந்த பத்து நிமிஷத்துக்குள்ள ப்ளூ ஃபின்னில் இருந்தேன்" ஜாஷ்வாவின் முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்தது .. நித்தின், "டேய், அதான் அவ்வளவு சீக்கரம் அன்னைக்கு உன் வேலையை முடிச்சுட்டு எனக்கு ஃபோன் பண்ணினேயா? இலவச வை-ஃபை ஃஜோன் இருக்கும் இடங்களை தேடி நான் எங்கே எல்லாம் சுத்துனேன் தெரியுமா?" ஜாஷ்வா, "ஓ.கே. கய்ஸ், சக்தி ஃப்ளாட்டில் இருக்கும் சர்வரை இன்னைக்கே ஃபார்மாட் செஞ்சுடுங்க. அப்பறம் அந்த இணைய கனெக்க்ஷனையும் நாளைக்கே டிஸ்கனெக்ட் செய்யறதுக்கு ஏற்பாடு செஞ்சுடறேன். நீ ஃப்ளாட்டில் இருக்கணுங்கற அவசியம் இல்லை. உன் அப்பார்ட்மெண்ட் பில்டிங்க்கில் கீழ பேஸ்மெண்ட்டில் இருக்கும் ஜங்க்ஷன் பாக்ஸில் டிஸ்கனெக்ட் செஞ்சுடுவாங்க. எபப்டியும் உன் லாப்டாப் உபயோகிக்க இன்னும் ஒரு கனெக்க்ஷன் இருக்கு இல்லையா? அதையே அந்த கணிணியிலும் கனெக்ட் பண்ணிடுங்க" நித்தின், "ஓ.கே. டன்" ஜாஷ்வா விடைபெற்றான். நண்பர்கள் இருவரும் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருந்து மூன்று சர்வர்களில் ஒன்றுக்கு விடைகொடுப்பதில் அந்த இரவின் பாதியை கழித்தனர்.Monday, 13 April 2009, 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், ஏப்ரல் 13, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அந்த வார ரிவ்யூ மீட்டிங்குக்காக அனைவரும் கூடி இருந்தனர். முரளீதரன், "வந்தனா, ஷான் நம்முடன் சில விவரங்களை பகிர்ந்து கொள்ளணுமாம் இப்போ டெலிகான்ஃபரென்ஸில் வர்றார்" சிறுது நேரத்தில் டெலிகான்ஃபரென்ஸில் ஷான் அவர்களுடன் கலந்து கொண்டார். ஷான், "வீடியோவில் இருந்தவங்கள் எல்லோரையும் இன்னும் முழுசா அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. என்.எஸ்.ஏவில் இருப்பவங்க அவங்க ப்ரொஸீஜர் படி முதலில் பார்க்க வெளிநாட்டவர்களை மாதிரி இருப்பவங்களை மட்டும் அடையாளம் கண்டு பிடிச்சு எங்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. மொத்தம் நூற்று இருபது பேர்களில், பதினெட்டு பேர் வெளிநாட்டவர்கள். அதில் மூன்று பேர் இந்தியர்கள், மூணு பேரில் ரெண்டு பேர் நியூ யார்க்கில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்காங்க. லாங்க் டர்ம் விசாவில் வந்து இருப்பவர்கள். ஒருத்தர் அலுவலக வேலையா இந்தியாவில் இருந்து பிஸினஸ் விசாவில் வ்ந்து இருக்கார். பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருப்பவர். இவங்க மூணு பேரையும் பாக் க்ரௌண்ட் ஸர்ச் பண்ணனும். முரளீ, நான் உங்களுக்கு அனுப்பின மெயிலில் அவங்க டீடெயில்ஸ் இருக்கு. நீங்க மத்தவங்களுக்கு அதை காட்டுங்க. நான் லைன்ல இருக்கேன் மேற்கொண்டு எதாவுதுன்னா டிஸ்கஸ் பண்ணலாம்" முரளீதரன் தன் கணிணியில் இருந்த மெயிலை திறந்து அதில் இருந்த மூன்று அட்டாச்மெண்டுகளை ஒவ்வொன்றாக திறந்து காட்டினா. மூன்றாவதாக வந்த PDF ஃபைலில் இருந்த முகம் வந்தனாவில் கண்களை அகல வைத்தது. கீழே "சக்திவேல் முத்துசாமி" என்ற பெயரை எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். வந்தனா, "ஷான், நீங்க அனுப்பி இருக்கும் மூணாவது நபரை நான் கிளியர் பண்ணறேன். அது என் ஃபியான்ஸே" ஷான், "Don't tell me! என்ன மாதிரி கோயின்ஸிடன்ஸ் இது? என்னால் நம்ப முடியலை. அவன் அந்த நேரத்தில் அங்கே எதுக்கு இருந்தான்?" சக்தியை துளியும் சந்தேகிக்காவிட்டாலும், அவன் அங்கு இருக்க தகுந்த ஆதராம் இல்லை என்றால் அவனும் சந்தேகத்துக்கு உரியவனாக கருதப் படுவான் என்று உணர்ந்தாள். வந்தனா, "ஷான், அந்த ரெஸ்டாரண்ட் மார்கன் ஸ்டான்லி கட்டிடத்துக்கு பக்கத்தில் இருக்கா?" ஷான், "ஆமா, ரொம்ப பக்கத்தில்" வந்தனா, "அப்படின்னா நிச்சயம் அந்த வீடியோ ஃபுட்டேஜில் அவர் ஃபோனில் பேசற மாதிரி இருக்கும். உங்க டைம் சுமார் ஒரு மணிக்கு அந்த ரெஸ்டாரண்டில் இருந்து எனக்கு ஃபோன் செஞ்சார். அப்ப எந்த ரெஸ்டாரண்டில் இருக்கேன்னு சொல்லலை. ஆஃபீஸில் எதோ மறந்து விட்டுட்டு போனதை எடுத்துட்டு வீட்டுக்கு போற வழியில் காஃபி குடிக்க அந்த ரெஸ்டாரண்டுக்கு போனதா என்னிடம் ஃபோனில் சொன்னார். அவரோட ஆஃபீஸுக்கு அவர் போயிருந்தாரான்னு நீங்க விசாரிச்ச உங்க ட்வுட் கிளியர் ஆகிடும் இல்லையா? தவிர, அவரோட பாக்ரவுண்ட் விவரம் எல்லாம் நான் உங்களுக்கு மெயில் பண்ணறேன்"ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஷான், அவன் பாக்ரவுண்டை பத்தி கவலையே படவேண்டாம். இந்த சக்திவேல் இப்ப இந்தியாவில் இருந்து இருந்தா நாங்க எங்க வேட்டையில் உபயோகிச்சு இருப்போம். அவனோட ப்ரொஃபெஸ்ஸர் அவனைப் பத்தி அப்படி உயர்வா சொல்லி இருக்கார்" முரளீதரன், "ஷான், நான் இதுக்கு முன்னாடியே அவனை பத்தி நல்லா விசாரிச்ச அனுபவம் இருக்கு" என்று சொல்லும்போதே வந்தனா முகம் சிவந்தாள். ஷான், "நீங்க ஏன் விசாரிச்சீங்க?" என்றதும் முரளீதரன் வந்தனாவின் வீட்டாருக்காக விசாரித்ததையும் பிறகு நடந்தவற்றைப் பற்றியும் சொன்னார். முரளீதரன், "ஷான், பார்த்த உடனே சந்தேகப் படும்படி யாரும் இல்லையா?" ஷான், "மாங்க்ஸ் பாட் நெட் விஷயத்தில் சந்தேகப் படும்படி யாரும் இல்லை. ஆனா, வேறு விதத்தில் சந்தேகப் படும்படி ஒரு நபர் அந்த வீடியோவில் இருந்தார்" முரளீதரன், "வாட்? இது என்ன கோயின்ஸிடன்ஸ்?" ஷான், "ஆமா, அந்த நபர் அல்-கைதாவுடன் சம்மந்தப் பட்டவர்ன்னு நம்பகரமான இடங்களில் இருந்து தகவல் வந்து இருக்கு. இன்னும் ஃபோட்டோ ஐ.டி செக் செய்யாத எதோ துறைமுகம் வழியா அமெரிக்காவுக்குள் நுழைஞ்சு இருக்கான். அவனை இப்ப நாங்க க்ளோஸா வாட்ச் பண்ணிட்டு இருக்கோம்"
ஷான் விடைபெற்ற பிறகு ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன கோயின்ஸிடன்ஸ் வந்தனா இது? எதோ விதத்தில் உன் ஃபியான்ஸே நமக்கு உதவப் போறார்ன்னு எனக்கு தோணுது" முரளீதரன், "சரி, ப்ரொஃபெஸ்ஸர் உங்ககிட்ட இருந்து என்ன அப்டேட்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முரளி, நீங்க சொன்ன மாதிரி வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருக்கு சூப்பர் கம்ப்யூட்டரை உபயோகிக்க முடியுமா?" முரளீதரன், "ஏன் திடீர்ன்னு கேக்கறீங்க?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ரொம்ப இழுக்குது சார். சுற்றுக்கள் அதிகமாகும்போது கோட்ஐ மாத்தி எழுதும் நேரம் அப்பறம் இந்த கணிணி எடுத்துக்கும் நேரம் எல்லாம் அதிகமாகிட்டு வருது ரொம்ப காம்ப்ளிகேடட் சைஃபர் உபயோகிச்சு இருக்காங்க. ஜூலை கடைசியில் கூட முடிக்க முடியுமான்னு தெரியல" முரளீதரன், "சூப்பர் கம்ப்யூட்டர் உபயோகிக்கணும்ன்னா மென்பொருள் எல்லாம் மாத்தணும்ன்னு சொன்னீங்களே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எல்லாம் அனலைஸ் பண்ணிப் பார்த்தோம் மென்பொருளை மாத்த ஒரு மாசம் அனாலும். அதுக்கு அப்பறம் பதினைந்து நாளில் பாக்கி இருக்கும் சுற்றுகளை முடிச்சுடலாம்ன்னு தோணுது" முரளீதரன், "அதுக்கு முதலில் அரசாங்கத்திடம் இருந்து பர்மிஷன் கிடைக்கணும். முயற்சி செய்யறேன். உங்க கிட்ட ஃப்ரீயா ஆளுங்க இருந்தா மாத்தி எழுதும் வேலையை தொடங்குங்க. ஓ.கே? தீபா, வந்தனா உங்ககிட்ட எதாவுது அப்டேட்?" தீபா, "மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எல்லா கணிணியிலும் இப்ப அந்த புது வைரஸ் பரவி இருக்கு. ஆனா அன்னைக்கு மாதிரி நேரடி ஆணை எதுவும் வரலை" முரளீதரன், "இந்த புது வைரஸ் எந்த விதத்திலாவுது மாறுபட்டு இருக்கா?" தீபா, "ஆமா சார், முன்னே எல்லாம் நிறைய மெஸ்ஸேஜ்கள் வைரஸ்ஸிடம் இருந்து வெளியில் போகும். தான் இருப்பதை சர்வருக்கு தெரிவிக்கும் படியான மெஸ்ஸேஜ்கள் அப்படின்னு அவைகளை பத்தி நாங்க யூகிச்சு இருந்தோம். இப்ப அந்த மாதிரி மெஸ்ஸேஜ் ஒண்ணும் வெளியே போறது இல்லை. தவிர, நாம் முன்பு சேகரிச்ச மெஸ்ஸேஜகள் கூட ஒப்பிட்டுப் பார்த்தா இப்ப அதுக்கு வரும் மெஸ்ஸேஜ்கள், அது அனுப்பும் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் முற்றிலும் மாறு பட்டு இருக்கு" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு வேளை அவங்க சைஃபரை மாத்தி இருப்பாங்களோ?" வந்தனா, "அதைத் தான் நாங்களும் நினைக்கறோம். இது எல்லாம் அந்த நூறு மெஸ்ஸேஜ்கள் ஒண்ணா வந்ததில் இருந்து நடந்த மாற்றங்கள்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முன்னே மாதிரி இன்னொரு முறை டேம்பர் பண்ணிப் பாருங்களேன்" வந்தனா, "பாத்தோம். அதே மாதிரி தன்னை தானே அழிச்சுக்குது" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சைஃபரைத்தான் மாத்தி இருக்கணும். நம்மிடம் இருக்கும் மெஸ்ஸேஜ்களில் இருந்து சர்வர் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்கறதுதான் இப்போதைக்கு கூடிய சீக்கிரம் செய்யக்கூடிய ஒரே வழி. அதில் கவனம் செலுத்துவோம்"Tuesday, 14 April 2009 11:30 AM Make-shift Test Lab, R&AW, New Delhi செவ்வாய், ஏப்ரல் 14, 2009 காலை 11:30 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி சாலையில் நடந்து கொண்டு இருந்த வேலையினால் அவர்களது அலுவலகத்தின் லீஸ் லைன் எனப்படும் நெட் கனெக்க்ஷன் துண்டிக்கப் பட்டது. வந்தனா எழுந்து ஒரு உதவியாளரிடம் மாற்று இணைப்பை இணைக்கும்படி கூறியபிறகு தீபாவின் இருக்கைக்கு வந்தாள். தீபா மிக சுவாரஸ்ஸியமாக அங்கு இருந்த கணிணிகளை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வருவதைக் கண்டு அவளிடம் வந்தாள். வந்தனா, "என்ன பார்க்கறே? லீஸ் லைன் டவுன். பாக்-அப் கனெக்க்ஷனை கனெக்ட் பண்ணச் சொல்லி இருக்கேன்" தீபா, "தெரியும்." என்றவள் பரபரப்பான முகத்துடன் "அவங்களை கனெக்ட் பண்ண வேண்டாம்ன்னு சொல்லு" வந்தனா, "எதுக்கு?" தீபா, "சொல்றேன். முதல்ல அவங்ககிட்ட சொல்லிட்டு வா" துணுக்குற்ற வந்தனா தோழியின் சொல்லுக்கு பணிந்து மறுபடி அந்த உதவியாளரை நாடி தான் சொல்லும் வரை மாற்று இணைப்பை இணைக்க வேண்டாம் என்று கூறி வந்தாள். வந்தனா, "ஏய், என்னன்னு சொல்லு" தீபா, "மாங்க்ஸ் பாட் நெட் சர்வர் இல்லாமல் இயங்குது" வந்தனா, "வாட்?" தீபா, "இங்கே பார்" வந்தனா, "வைரஸ் எல்லாம் ஓடிட்டு இருக்குன்னு சொல்றியா? ஒரு மாசத்துக்கு மேல நெட் கனெக்க்ஷன் இல்லைன்னாத்தான் வைரஸ் ஸ்டாப் ஆகும். இது நமக்கு முதல்லயே தெரியுமே?" தீபா, "அது மட்டும் இல்லை. நேத்து சில கணிணிகளில் இருந்து போற மெஸ்ஸேஜ்ஜை மறுபடி டாம்பர் பண்ணி இருந்தேன். ஆனால் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் நேத்து சாயங்காலமே வந்துடுச்சு. இப்போ இன்னும் ஒரு கணிணியில் மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் பண்ணி இருக்கேன். என்ன ஆகுதுன்னு பாக்கலாம்" வந்தனா, "என்ன ஆகும்ன்னு நினைக்கறே?" தீபா, "என் கணிப்பு சரியா இருந்தா. இங்கே இருக்கும் வேறு ஒரு கணிணியே இந்த கணிணிக்கு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை கொடுக்கும்" வந்தனா, "சரி, சில மணி நேரங்கள் வெயிட் பண்ணலாம். நான் பாட்டர்ன் மாட்சிங்க் கணிணி இருக்கும் இடத்துக்கு போயிட்டு வர்றேன்" ஒரு மணி நேரத்தில் தீபா வந்தனாவை கைபேசியில் அழைத்தாள். தீபா, "எஸ்! நான் சொன்னது சரி. இங்கே பார் இந்த நூறு கணிணிகளும் .. இல்லை இல்லை தொண்ணூத்து ஆறு கணிணிகளும் ஒரு மாங்க்ஸ் பாட் நெட் மாதிரி இயங்குது. வெளி உலகத்தின் கூட கனெக்க்ஷன் இல்லை. இருந்தாலும் ஒரு கணிணியின் மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் செஞ்ச உடனே இந்தக் கணிணிகளுக்குள் ஒண்ணு அதுக்கு தன்னை தானே அழிச்சுக்க ஆணை அனுப்பி இருக்கு" வந்தனா, "இது எப்படி சாத்தியம்?" தீபா, "அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை சர்வர்லெஸ் பாட் நெட்டாக மாத்திட்டாங்க" வந்தனா, "அவங்க எதாவது ஆணை கொடுக்கணும்னா?" தீபா, "அன்னைக்கு பாத்த IRC சானல் மூலம் ஆணை கொடுக்க எதோ வழி இருக்கு. எந்த கணிணி மூலமும் கொடுக்க முடியும். அவ்வளவு ஏன்? அவங்க கிட்ட இருக்கும் கணிணியிலேயே வைரஸ்ஸை புகுத்தி அதை சர்வர் மாதிரி உபயோகிக்க முடியும்" வந்தனா, "சோ, இது தான் அவங்க வைரஸ்ஸில் செய்த மாற்றமா? நல்ல வேளை இவங்க இப்படி செய்யறதுக்கு முன்னாடி அந்த மெஸ்ஸேஜ்களை சேகரிச்சோம்" தீபா, "எனக்கு என்னமோ நாம் சேகரிச்சதனால் தான் இவங்க இப்படி செய்து இருக்காங்கன்னு தோணுது" சற்று நேரம் யோசித்த வந்தனா, "இல்லை. அவங்க யூ.எஸ்ஸை விட்டு வெளியே எங்கேயோ போகப் போறாங்க" தீபா, "யூ.எஸ்ஸில் இருந்தா? எப்படி சொல்றே?" வந்தனா, "அன்னைக்கு யூ.எஸ்ஸுக்கு உள்ளே அதுவும் நியூ யார்க்கில் இருந்துதான் அந்த நேரடி ஆணை வந்துது. அதனால் மாங்க்ஸ் பாட் நெட்டின் சூத்திரதாரிகள் நியூ யார்க்கில் தான் இருக்காங்க அப்படிங்கறது தெளிவாயிடுச்சு இல்லையா?" தீபா, "எஸ்! நான் அந்த லைன்ல யோசிக்கலை. ஆனா அங்கே இருந்து வெளியே போகப் போறாங்கன்னு எப்படி சொல்றே" வந்தனா, "பழைய படி சர்வர் இருக்கும்படி இருந்து இருந்தா, அவங்க நியூ யார்க்கை விட்டு வெளியில் போகணும்ன்னா என்ன செஞ்சு இருப்பாங்க?" தீபா, "சர்வரை இடம் மாற்றி அமைச்சு இருப்பாங்க. அல்லது வேணுங்கற இடத்தில் இன்னொரு சர்வர் அமைச்சுட்டு பழைய சர்வரின் இணைப்பை துண்டிச்சு இருப்பாங்க" வந்தனா, "சர்வர்ன்னு ஒண்ணு இல்லைன்னா?" தீபா, "அவங்க எங்கே இருந்து வேணும்னாலும் ஆபரேட் பண்ணலாம்" வந்தனா, "உடனே இதை முரளி சார் கிட்ட சொல்லணும்" என்றவாறு கைபேசியை எடுத்தாள்.Tuesday, 14 April 2009 1:00 PM Blue Fin Restaurant, Broadway, New York செவ்வாய், ஏப்ரல் 14, 2009 மதியம் 1:00 ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட், ப்ராட்வே சாலை, நியூ யார்க் நித்தின், "ஏண்டா? ஒரு தடவை இங்கே வந்து உன் முகம் வீடியோவில் ரெக்கார்ட் ஆகி இருக்கு. எதுக்கு மறுபடியும் இங்கே?" சக்தி, "மறுபடி வந்தாத்தான் என் மேல் சந்தேகம் வராது. எப்படியோ ஆஃபீஸுக்கு இவ்வளவு பக்கத்தில் இருக்கு. இவ்வளவு நாளா லஞ்ச் சமயத்தில் இங்கே வந்தது இல்லைன்னு இங்கே சஜ்ஜஸ்ட் பண்ணினேன்" உணவருந்திக் கொண்டு இருக்கையில் ஜாஷ்வா சக்தியை கைபேசியில் அழைத்தான். சக்தி, "என்ன ஜாஷ்வா?" ஜாஷ்வா, "இந்த வெள்ளிக் கிழமை சாயங்காலம் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா?" சக்தி, "நாம் எல்லாம் வெளியே டின்னருக்கு போலாம்ன்னு பேசிட்டு இருந்தோமே? மறந்துடுச்சா?" ஜாஷ்வா, "ஓ, ஆமா. மறந்துட்டேன்...." சக்தி, "என்ன விஷயம்? நீ என்னவோ சொல்ல தயங்கற மாதிரி இருக்கு" ஜாஷ்வா, "தயக்கம் இல்லை. எனக்கே ப்ரோஸீட் பண்ணலாமா வேண்டாமான்னு இருக்கு" சக்தி, "ஹேய் மேன், கொஞ்சம் விளக்கி சொன்னா நாங்களும் உன் கூட சேர்ந்து யோசிப்போம்" ஜாஷ்வா, "நீங்க எங்கே இருக்கீங்க இப்ப?" சக்தி, "ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிட்டுட்டு இருக்கோம்" ஜாஷ்வா சிரித்தபடி, "சோ உன் மேல் எந்த சந்தேகமும் வரக்கூடாதுன்னு அந்த ரெஸ்டாரண்டுக்கு வாடிக்கையாளர் ஆயிட்டையா? இரு நித்தினையும் கூப்பிட்டு கான்ஃபரென்ஸில் போடறேன்" சக்தி, "அவன் என் முன்னாலதான் உக்காந்துட்டு இருக்கான். நான் ஸ்பீக்கர் ஃபோனில் போடறேன்" ஜாஷ்வா, "அது வேண்டாம்ன்னுதான் நான் கான்ஃபரென்ஸ் போடறேன்னு சொன்னேன். வெயிட்" நித்தின், "ஹே ப்ரோ! என்ன விஷயம்" ஜாஷ்வா, "ஹாஃப்மன் நம்மை எல்லாம் அவன் வீட்டுக்கு டின்னருக்கு வர கூப்பிட்டான்" சக்தி, "நம்மை எல்லாம்ன்னா?" ஜாஷ்வா, "நான், சஞ்சனா, நீ அப்பறம் நித்தின்" நித்தின், "எங்களைப் பத்தி அவனுக்கு தெரியுமா?" ஜாஷ்வா, "எனக்கு கூட ரெண்டு பேர் வொர்க் பண்ணறாங்கன்னு அவன் கிட்ட சொல்லி இருக்கேன். அது உனக்கு தெரியும் இல்லையா?" நித்தின், "தெரியும். ஆனா யார்ன்னு அவனுக்கு தெரியுமா?" ஜாஷ்வா, "யாருன்னு அவனுக்கு தெரியாது. என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு உதவறாங்கன்னு மட்டும் தெரியும். இந்த ஆபரேஷன் முடியப் போகுது. அதுக்கு முன்னாடி ஒரு கெட் டுகெதர் அப்படின்னு கேட்டான். அதான் உங்க கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்ன்னு இருக்கேன்" நித்தின், "Do you smell anything fishy?" ஜாஷ்வா, "ஆக்சுவலா இல்லை .. But I am not comfortable" சக்தி, "ஆண்டர்ஸனும் வர்றானா?" ஜாஷ்வா, "காட்! நோ!! சக்தி, ஆண்டர்ஸன் மட்ட ரகமான ஆள். ட்ரக் கார்டல்காரங்களுக்கு அவன் ஒரு காண்டாக்ட் அவ்வளவுதான். ஹாஃப்மன் அவனுக்கு அதுக்கு மேல் மரியாதை கொடுக்க மாட்டான்" சக்தி, "உன் அபிப்பராயத்தில் ஹாஃப்மன் எப்படி பட்டவன்?" ஜாஷ்வா, "ரொம்ப ஸாஃபிஸ்டிகேடட் அண்ட் ஸ்மூத். மற்றபடி நம்மை மாதிரித்தான்" நித்தின், "அப்பறம் ஏன் நீ அன்ஈஸியா ஃபீல் பண்ணறே?" சக்தி, "அதுவும் வீட்டுக்குத்தானே கூப்பிட்டு இருக்கான்?" ஜாஷ்வா, "அதனால்தான் போலாம்ன்னு தோணுச்சு. உங்களுக்கு எதாவது பிரச்சனை இருக்கா?" சக்தி, "எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வாட் நித்தின்?" நித்தின், "நோ ப்ராப்ளம் ஜாஷ்" ஜாஷ்வா, "சரி, இந்த மாதிரி விஷயத்தில் சஞ்சனா ரொம்ப ஷார்ப். அவளைக் கேட்டுட்டு அப்பறம் கூப்பிடறேன்" மறுபடி அரை மணி நேரத்தில் ஜாஷ்வா கூப்பிட்டான். சக்தி, "சஞ்சனா என்ன் சொன்னா?" ஜாஷ்வா, "எதாவது பிரச்சனை பண்ணற ஆள் வீட்டுக்கு கூப்பிட மாட்டான்னு சொன்னா. சோ, போலாமா?" சக்தி, "ஓ.கே. நாங்க உன் வீட்டுக்கு வந்துடறோம் அங்கே இருந்த ஓண்ணா போலாம்"Friday, 17, April 2009 11:30 PM வெள்ளி, ஏப்ரல் 17, 2009 இரவு 11:30 க்ரீன்விச் வில்லேஜ் எனும் பகுதியில் இருந்த ஹாஃப்மனின் வீட்டில் இரவு விருந்தை முடித்து விட்டு நால்வரும் ஜாஷ்வாவின் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். ஜாஷவா ஒயின் மட்டும் குடித்து இருந்தாலும் சஞ்சனா அவனை காரோட்ட அனுமதிக்காமல் அவள் ஓட்டி வந்தாள். சஞ்சனா, "ஏன்பா? அந்த க்ரீன்விச் வில்லேஜ் ஏரியாவில் இடம் ரொம்ப காஸ்ட்லி இல்லை?" ஜாஷ்வா, "ரொம்பன்னு சொல்ல முடியாது. நியூ யார்க்கில் பாஷ் அப்படின்னு சொல்லக்கூடிய பகுதிகளில் ஒண்ணு" சஞ்சனா, "ஸ்டில் அவன் சம்பளத்தில் அந்த மாதிரி ஒரு ஏரியாவில் அப்படி ஒரு வீடு வாங்கி இருக்க முடியுமா?" ஜாஷ்வா, "இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனில் எங்க கூட அவனும் சேர்ந்துதானே சம்பாதிக்கறான்?" சஞ்சனா, "அப்பறம் எப்படி ரொம்ப நாளா அந்த வீட்டில் இருக்கறதா அவன் வைஃப் சொன்னா?" ஜாஷ்வா திகைப்புடன், "ஓ அப்படியா? வீடு மாமனார் வழி சொத்தா இருக்கணும். ஏன்னா அவன் ரொம்ப ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்ததா என்கிட்ட சொல்லி இருக்கான்" நித்தின், "ஜாஷ், நீ ஏன் அவன் டின்னருக்கு கூப்பிட்டப்ப எங்களை கூட்டிட்டு போக தயங்கினே?" ஜாஷ்வா, "கொஞ்ச நாளாவே நான் அவன் கிட்ட அன்ஈஸியா ஃபீல் பண்ணறேன்" சக்தி, "Any specific incidence that triggered it?" ஜாஷ்வா, "எஸ், எங்க பேங்கில் ஐ.டி டிபார்ட்மென்டில் நான் மட்டும்தான் அவனுக்கு தோஸ்துன்னு நினைச்சுட்டு இருந்தேன். அவனும் நான் சம்மந்தப் படாத விஷயமா இருந்தாலும் வலிய என்கிட்ட தான் வந்து கேட்பான். அப்படி இருந்தது ஒரு விதத்தில் நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனுக்கும் வசதியா இருந்துது" சஞ்சனா, "அதுக்கு ஏன் வசதியா இருந்துது?" ஜாஷ்வா, "ட்ரான்ஸ்ஃபர் நடக்கும் சமயத்தில் அது விஷயமா எதாவது பேசினாலும் எங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ஒண்ணா பார்க்கறதால யாருக்கும் எந்த சந்தேகமும் வராது" சக்தி, "சரி, இப்ப அதில் என்ன மாற்றம்? உன்னை அவாய்ட் பண்ணறானா?" ஜாஷ்வா, "என் கிட்ட எப்பவும் போலத்தான் பேசிட்டு இருக்கான். ஆனா, இப்ப எல்லாம் ஐ.டி டிபார்ட்மென்ட்டில் இன்னொருத்தனோடவும் நல்லா பேசிட்டு இருக்கறான்" நித்தின், "யார் அவன்?" ஜாஷ்வா, "அபிகெயில் ஹிர்ஷ் அப்படிங்கறவன். ஆன்-லை பாங்கிங்க் செய்ய உபயோகிக்கும் மென்பொருளுக்கு அவன் தான் பொறுப்பு. வாடிக்கையாளர் நிறுவனங்களில் அந்த மென்பொருளின் உபயோகத்தில் எதாவுது தடங்கல்ன்னா அவன் டீமில் இருந்துதான் யாராவுது அந்த நிறுவனத்துக்கு போய் சரிசெஞ்சுட்டு வருவாங்க" சக்தி, "ரெண்டு பேரும் ஜூய்ஷ் அப்படிங்கறதுனாலயா?" ஜாஷ்வா, "ஹாஃப்மன் பேருக்கு மட்டும் ஜூயிஷ். மத்தபடி அவனுக்கும் எந்த மதத்துக்கும் சம்மந்தம் இல்லை. அவன் மனைவிகூட கிரிஸ்டியன், ஜூயிஷ் இல்லை" நித்தின், "வேறு என்ன் கனெக்க்ஷன் இருக்க முடியும்?" ஜாஷ்வா, "தெரியலை. இந்த மாதத்தோடு நிறுத்திக்கப் போறோம்ன்னு சொன்னது அவனுக்கு பிடிக்கலைன்னு நினைக்கறேன். வேறு யார் மூலமாவுது அதை செய்ய முடியுமான்னு பார்க்கறானோன்னு தோணுது" சக்தி, "நம் பாட் நெட்டைப் பத்தி ஹாஃப்மனுக்கு தெரியுமா?" ஜாஷ்வா, "இல்லை. நாம் மூணு பேரும் ஹாக்கர்கள். கணிணிகளை ஹாக் செஞ்சு ட்ரான்ஸ்ஃபர் செய்யறோம்ன்னு மட்டும்தான் நான் சொல்லி இருக்கேன்" நித்தின், "ஜாஷ், நீ சந்தேகப் படறது சரியாத்தான் இருக்கும்ன்னு எனக்கு தோணுது" சக்தி, "எப்படி சொல்றே?" நித்தின், "என் கிட்ட அவன் பேசிட்டு இருந்தப்ப ஹாக்கிங்க், வைரஸ், டினையல் ஆஃப் சர்வீஸ் அட்டாக் பத்தி எல்லாம் விவரம் கேட்டுட்டு இருந்தான். அவ்வளவு தெரிஞ்சவன் பாட் நெட்டைப் பத்தி என்னன்னு கேள்விப்பட்டு இருக்கணும். அவனுக்கும் நாம் பாட் நெட்டை உபயோகிச்சு ட்ரான்ஸ்ஃபர் செய்யறோம்ன்னு நீ சொல்லி இருந்தேன்னு நினைச்சேன். ஆனா அந்த டாபிக்கை பர்பஸ்ஸா அவாய்ட் பண்ணி இருக்கான்" சக்தி, "இன்னும் ஒண்ணு நோட்டீஸ் பண்ணினீங்களா?" ஜாஷ்வா, "என்ன?" சக்தி, "அவன் உங்க பேங்கில் ஆடிட்டிங்க் பிரிவிலதானே இருக்கான்?" ஜாஷ்வா, "ஆமா?" சக்தி, "அப்பறம் எப்படி அவனுக்கு அத்தனை ஃபோன் கால்ஸ்? அதுவும் அவன் வெளியில் போய் நின்னுட்டு பேசிட்டு இருந்தப்ப அவன் முகத்தைப் பார்த்தா எல்லாம் கேஷுவல் கால்ஸ் மாதிரி தெரியலை. எதோ பிஸினஸ் டீலிங்க்கைப் பத்தி பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது" ஜாஷ்வா, "சரி, அவனைப் பத்தி உன்னோட இம்ப்ரெஷன் என்ன சக்தி?" சக்தி, "நிச்சயம் பரம்பரைப் பணக்காரன் இல்லை. தன்னிடம் பணம் இருக்கணும்ன்னு காட்டிக்க விரும்பறவன். எப்பவும் நிறைய பணம் இருக்கணும்ன்னு விரும்பறவன். பேங்க் வேலையை தவிர நம் ஆபரேஷனைத் தவிர வேற எதோ வேலையும் செய்யறான்னு என் மனசுக்குப் படுது." சஞ்சனா, "சரியா சொன்னேண்ணா" ஜாஷ்வா, "அப்படின்னா, உன் இம்ப்ரெஷன் என்ன ஹனி?" சஞ்சனா, "ஹாஃப்மன் மேலோட்டமா பாத்தா சந்தேகப் படும்படியா தெரியலை. ஆனா அவன் தன் மனைவியை நடத்தும் விதத்தை வெச்சுப் பாக்கும்போது, நீங்க அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்"Monday, 20 April 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், ஏப்ரல் 20, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அவர்களது வேட்டை சூடு பிடிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக இந்தியக் குழுவுடன் அன்று எஃப்.பி.ஐயின் ஷான் ஹென்றியை தவிர க்ரிஸ்டஃபர் மோரிஸ்ஸும் கான்ஃபரென்ஸ் கால் மூலம் கலந்து கொண்டார். ஷான், "முரளி, மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோலர்கள் அமெரிக்காவை விட்டு போகப் போறாங்க அதனால் தான் சர்வர்லெஸ் பாட் நெட்டாக மாத்தி இருக்காங்க அப்படிங்கற தியரியை நாங்க கொஞ்சம் அனலைஸ் பண்ணிப் பார்த்தோம். ஆனா அவங்க மத்த எந்த நாட்டில் இருப்பதையும் விட இங்கே இருப்பதைத் தான் சேஃபா கருதுவாங்க அப்படிங்கறது எங்க கணிப்பு" வந்தனா, "எப்படி சொல்றீங்க ஷான்" கிரிஸ்டஃபர், "பல சைபர் ப்ளாக் மார்கெட் கூட்டங்கள் மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு வலை வீசியபடி இருக்கின்றன. அந்த கூட்டங்களின் கைகளில் பிடிபடாமல் இருக்க அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி பாதுகாப்பான இடங்கள் இல்லை என்பது எங்க கணிப்பு. முரளீதரன், "சோ, அப்ப நாங்க முன்ன மாதிரி டார்கெட் டேட் ஜூலை கடைசி அப்படின்னு வெச்சுட்டு தொடரலாமா?" கிரிஸ்டஃபர், "இல்லை. மாங்க்ஸ் பாட் நெட்டை சீக்கிரமா கைப் பற்றணும் அல்லது எங்க மேற்பார்வைக்குள் கொண்டு வரணும். அதற்கு வேறு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஷான், அதை விளக்குங்க" ஷான், "வந்தனா, அன்னைக்கு ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட் சர்வெய்லன்ஸ் வீடியோ ரெக்கார்டிங்கில் அல்-கைதாவை சேர்ந்தவன் ஒருத்தன் இருந்தான்னு சொன்னேன் இல்லையா? அவன் ஒரு பாகிஸ்தானி. இதுக்கு முன்னால் துபாய்ல இருந்தான். அல்-கைதாவின் கணிணி மற்றும் தகவல் பரிமாற்ற பிரிவில் சின்ன லெவலில் இருப்பவன். அந்த மாதிரி ஆளுங்க யூ.எஸ்ஸுக்குள் கொண்டு வர அல்-கைதாவுக்கு அவசியமே இல்லை. ஒரு இன்ஃபார்மர் மூலம் அவனை அணுகி அவன்கிட்ட பேச்சுக் கொடுத்ததில் இன்னும் ரெண்டு முக்கியமான புள்ளிகள் இங்கே ஏற்கனவே இருப்பதாகவும் அவங்களுக்கு உதவ இவனை வரவெச்சு இருக்காங்க அப்படின்னும் தகவல் கிடைச்சுது. எதுக்கு உதவன்னு கேட்டப்ப மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிக்க உதவன்னு சொன்னான்" வந்தனாவின் முகம் இறுகியது .. வந்தனா, "பட், நம்மை விட அவங்க சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவாங்கன்னு நீங்க நம்பறீங்களா?" கிரிஸ்டஃபர், "நான் ஒண்ணு உங்களை எல்லாம் கேட்கிறேன். மாங்க்ஸ் பாட் நெட் எந்த விதமான சட்ட விரோத செயலிலும் ஈடுபடுத்தப் படவில்லை என்பதை நீங்க 100% நம்புவீங்களா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நோ! நல்லவங்களா இருந்தாலும், அவ்வளவு பவர்ஃபுல்லா ஒண்ணை உருவாக்கின கர்வம் நிச்சயம் இருக்கும். அந்த கர்வம் போதும் நாளடைவில் எதாவது தப்பான் வழியில் போறதுக்கு" கிரிஸ்டஃபர், "நீங்க ஃபிலசாஃபிகல்லா பார்க்கும் அதே விஷயத்தை நாங்க மனோதத்துவ ரீதியா ஆராய்ந்தோம். அவங்க குணாதிசயங்களை சித்தரிக்க ஒரு ஸைக்கலாஜிகல் ப்ரொஃபைல் (psycological profile) உருவாக்கினோம். அதன்படி அவங்க மனதில் சமுதாயத்தையோ அல்லது அரசாங்கத்தையோ எந்த விதத்திலாவது பழி வாங்கும் அல்லது ஏளனம் செய்யும் எண்ணம் இருக்கும் என்பது எங்க மனோதத்துவ நிபுணர்களின் கணிப்பு" தீபா, "அப்ப சட்ட விரோதம்ன்னு நீங்க சொல்றது ... " கிரிஸ்டஃபர், "கொலை, கொள்ளை இந்த மாதிரி வேலைகள் மட்டும் சட்ட விரோதச் செயல்கள் அப்படின்னு சொல்ல முடியாது இல்லையா?" தீபா, "பின்னே எப்படி?" கிரிஸ்டஃபர் "அரசாங்கத்தின் கண்ணுக்கு சட்ட விரோதம் அப்படின்னு படற நிறைய விஷயங்களை ஜனங்க நடைமுறையில் ஒத்துக்கறாங்க இல்லையா? அந்த மாதிரி செயல்கள் எதிலாவது ஈடு பட்டு இருக்கலாம்" வந்தனா, "சோ அப்படி அவங்க ஈடு பட்டு இருந்தா?" ஷான், "அந்த மாதிரி வேலை எதிலாவது ஈடுபட்டு இருந்தா, நம்மை விட அல்-கைதாக்காரங்கதான் சீக்கிரம் கண்டு பிடிப்பாங்க. ஏன்னா, பல பளாக் மார்க்கெட் கூட்டங்கள், மாஃபியா, போதைப் பொருள் மற்றும் பணம் கடத்தறவங்க, இவங்ககூட எல்லாம் அல்-கைதாவுக்கு தொடர்பு இருக்கும். இந்த கூட்டங்கள் மூலம் அவங்க கண்டு பிடிக்க முயற்சி செய்வாங்க" தீபா, "சோ?" கிரிஸ்டஃபர், "So it is a bloody race!" முரளீதரன், "என்ன செய்யலாம்?" கிரிஸ்டோஃபர், "ப்ரொஃபெஸ்ஸர், சூப்பர் கம்பியூட்டர் உபயோகிச்சா ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் இன்னும் வேகமா முடிக்க முடியும்ன்னு சொன்னீங்க இல்லையா? உங்களுக்கு தேவையான சூப்பர் கம்பியூட்டர் இன்னும் சில நாட்களில் ஏற்பாடு செஞ்சு கொடுக்கறோம். எனக்கு மாங்க்ஸ் பாட் நெட்டின் பழைய சர்வர் ஐ.பி.அட்ரெஸ் இன்னும் ஒரு மாதத்தில் வேணும். முடியுமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முயற்சி செய்யறோம் ஆனா ஒரு மாதம் ரொம்பவே கஷ்டமான டார்கெட். ஆனா நாற்பது நாளுக்குள்ள நிச்சயம் முடிச்சுடலாம்" கிரிஸ்டஃபர், "அப்ப, மே மாதம் கடைசி வாரத்தில் முடிச்சுடணும். ஓ.கே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "டன்!" அடுத்த சில நாட்களில் ப்ரொஃபெஸ்ஸர் சாரி ஒரு தனிக் குழு அமைத்து மென்பொருளை சூப்பர் கம்பியூட்டருக்கு ஏற்றதாக மாற்றும் பணியில் இறங்கினார். வந்தனாவும் தீபாவும் அவர்கள் முன்பு செய்து கொண்டு இருந்ததை தொடர்ந்தவாறு இருந்தனர். அவர்களது திட்டப் படி ஏப்ரல் முடிவில் சூப்பர் கம்பியூட்டருக்கான மென்பொருள் தயாராகிவிடும். அச்சமயம் நூற்று பதினாறு சுற்றுக்கள் முடிந்து இருக்கும். மே மாதத் தொடக்கத்தில் இருந்து சூப்பர் கம்பியூட்டரை உபயோகித்து தினம் நான்கு சுற்றுக்கள் என்ற வேகத்தில் தொடர முடியும் என்று திட்டமிட்டனர். அதிக பட்சமான 256 சுற்றுக்களும் தேவையெனிலும் ஜூன் நான்காம் தேதிக்கு மேல் தாமதமாகாது என்று திட்டமிட்டனர்.Sunday 26 April 2009 8:00 AM US-EST / Sunday 26 April 2009 7:00 PM IST Shakthivel's Flat, New York, USA / Rathod Mansons, Udaipur, India ஞாயிறு, ஏப்ரல் 26, 2009, அமெரிக்க நேரம் காலை 8:00 / இந்திய நேரப்படி ஞாயிறு, ஏப்ரல் 26, 2009 மாலை 7:00 சக்திவேலில் ஃப்ளாட், நியூ யார்க் / ராத்தோட் மான்ஷன்ஸ், உதைப்பூர் அடுத்த நான்கு நாட்களும் கொலம்பியன் ட்ரக் கார்டல்காரர்களுக்காக செய்யப் போகும் இறுதி ட்ரான்ஸ்ஃபர் வேலையை யோசித்தபடி இருந்த சக்தியை அவன் கைபேசி அழைத்தது. வந்தனா, "ஹாய் டியர், குட் மார்னிங்க். நான் உன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பலையே?" சக்தி வந்தனா வார இறுதியை கழிக்க உதைப்பூர் சென்று இருந்ததை எண்ணி, "இல்லை ஹனி, எப்படி இருக்கே?" வந்தனா, "நான் நல்லா இருக்கேன். இதோ அப்பாவும் அம்மாவும் பேசணுமாம் அவங்க உன்னிடம் பேசிட்டு கொடுக்கட்டும் அப்பறம் நாம் பேசலாம்" சக்தி, "ஸ்பீக்கர் ஃபோன் போட்டு எல்லாம் ஒண்ணா பேசலாம்ன்னு அவங்க சொல்லலையா?" வந்தனா, "இல்லை. நீ சொன்னா உனக்கு ஒதை" சக்தி, "சரி சரி, அவங்க கிட்ட கொடு" மஞ்சுநாத் ராத்தோட், "ஹெல்லோ?" சக்தி, "ஹெல்லோ அங்கிள்? எப்படி இருக்கீங்க? ஆண்டி எப்படி இருக்காங்க?" மஞ்சுநாத், "வீ போத் ஆர் ஃபைன் பேட்டா. நீ எப்படி இருக்கே?" சக்தி, "நான் நல்லா இருக்கேன் அங்கிள். உங்க டென்னிஸ் எல்போ (Tennis Elbow) ப்ராப்ளம் இப்ப பரவால்லையா?" மஞ்சுநாத், "மச் பெட்டர் பேட்டா. ஆனா, இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு டென்னிஸ் பக்கம் போகக் கூடாதுன்னு ஆர்தோபேடிஸ்ட் சொல்லிட்டார். அதான் வெறுப்பா இருக்கு" சக்தி, "நீங்க ரொம்ப லக்கி அங்கிள். டென்னிஸ் எல்போ ஈஸியா ட்ரீட் பண்ணக்கூடிய ப்ராப்ளம். இதுவே காலில் எந்த பகுதியில் வந்தாலும் டென்னிஸ்ஸையே மறந்துடுன்னு சொல்லி இருப்பாங்க" மஞ்சுநாத், "அது பொதுவா சிந்தெடிக் சர்ஃபேஸ் (Synthetic Surface) இருக்கும் டென்னிஸ் கோர்ட்டில் தொடர்ந்து ஆடினா வர்றது. நான் எப்பவும் க்ளே கோர்ட் (Clay Court), சில சமயம் க்ராஸ் கோர்ட்டில் (Grass Court) விளையாடுவேன்" சக்தி, "வாவ், க்ராஸ் கோர்ட்! அமெரிக்காவில் கூட அது ஒரு ஆடம்பரம்!!" மஞ்சுநாத், "உங்க மேரேஜ் முடியட்டும், டெல்லி, ஜெய்ப்பூர், உதைப்பூர் இந்த மூணு ஊரிலும் க்ராஸ் கோர்ட் இருக்கும் க்ளப்பில் நீ விளையாடலாம்" சக்தி, "ஓ, தாட் வுட் பீ நைஸ்" மஞ்சுநாத்,"தென், லாஸ்ட் வீக் மனோஹரி பெஹன்கூட உங்க கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்ன்னு பேசினேன். அவங்க முதலில் உங்க ரெண்டு பேருடைய டெஸிஷன் என்னன்னு தெரிஞ்சுட்டு முடிவெடுக்கலாம்ன்னு சொன்னாங்க. பட் ஷக்தி, கூடிய சீக்கிரம் வந்தனாவை மணக்கோலத்தில் பாக்கணும்ன்னு நாங்க எல்லோரும் ஆவலா இருக்கோம். நீ எப்ப பண்ணிக்கலாம்ன்னு யோசிச்சு வெச்சிருக்கே?" சக்தி, "நான் வந்தனாகிட்ட பேசிட்டு அவமூலமே சொல்றேன் அங்கிள் .... that is if you don't mind" மஞ்சுநாத், "Not at all Beta! But, இன்னைக்கே சொல்லிடு ஓ.கே? இரு ஆண்டி உன்னோட பேச ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஸ்பீக்கர்ஃபோன் போட்டு இருந்தா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உன்னோட பேசிட்டு அதுக்கு அப்பறம் வந்தனா ஸ்பீக்கர்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு கண்டின்யூ பண்ணி இருக்கலாம்" மன்னிப்புக் கோரும் முகத்துடன் வந்தனா தந்தையை பார்த்துப் புன்னகைத்தாள். ஹாண்ட் செட்டை கௌரியிடம் கொடுத்தபடி மகளை அணைத்து உச்சி முகர்ந்து, "I understand my Princess" என்றார்கௌரி, "ஹெல்லோ ஷக்தி?" சக்தி, "ஹெல்லோ ஆண்டி! எப்படி இருக்கீங்க?" கௌரி, "ஐ யம் ஃபைன் பேட்டா. நீ ஹிந்தி கத்துக்கறது எந்த லெவலில் இருக்கு?" சக்தி, "ஆண்டி, எனக்கு மராட்டி பேசத் தெரியும். ஹிந்தி கத்துக்கறது அவ்வளவு கஷ்டம் இல்லை" கௌரி, "அது எனக்கு தெரியும். இங்கே ஒருத்தர் நீ ஹிந்தி கத்துக்கறதுக்கு முன்னாடி அவங்க தமிழ் கத்துக்கப் போறதா சவால் விட்டு இருக்காங்க. அதான் உன் சைட் ப்ரோக்ரஸ் என்னன்னு தெரிஞ்சுக்க கேட்டேன்" சக்தி, "சோ ஃபார் நத்திங்க் ஆண்டி. ஆனா, இப்போ போட்டின்னு வந்துடுச்சு இல்லே? இனி பாருங்க என் ப்ரோக்ரஸ்ஸை" கௌரி, "சரி, வந்தனாகிட்ட கொடுக்கறேன்" சற்று தூரத்தில் இருந்த வந்தனவிடம் ஹாண்ட் செட்டை கௌரி எடுத்து செல்லும்போதே சக்தி, "ஹனி, ஐ லவ் யூ சோ மச்!" கௌரி, "கொஞ்சம் பொறுமையா இருப்பா! அவ கையில் எடுத்து ஹல்லோன்னு சொல்லட்டும்" சக்தி சற்று அசடு வழிந்து பிறகு அவசரமாக சுதாரித்து, "ஐய்யோ ஆண்டி நான் உங்களுக்கு தான் சொன்னேன்" என்று கிண்டலடிக்க கௌரி ஃபோனுக்கு வெளியே மகளையும் கணவரையும் பார்த்து, "அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளைஞன் எனக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கான். இனிமேல் என் தொடர்ந்த சேவை உங்களுக்கு வேணும்ன்னா கொஞ்சம் மரியாதையா நடந்துக்குங்க" என்றவாறு வந்தனாவிடம் கார்ட்லெஸ்ஸை கொடுக்க முகம் சிவந்த மகள் அதை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு ஓடுவதை தம்பதியினர் பார்த்துப் பூரித்தனர். வந்தனா, "அப்பா நாம் ரெண்டு பேருக்கும் எப்ப வசதியா இருக்கும்ன்னு இப்பவே டிஸைட் பண்ணச் சொன்னார்" சக்தி, "நான் இண்டியாவில் காலடி எடுத்து வைச்ச அடுத்த நாள் உன் கழுத்தில் தாலி கட்டத் தயார். ஆனா நீ உன் வசதியை சொல்லு" வந்தனா, "என் அசைன்மென்ட் நீ வரதுக்குள்ள முடிஞ்சுடும்ன்னு நினைச்சேன். ஆனா இழுத்துட்டே போயிட்டு இருக்கு. எப்படியும் ஜூன் நாலாம் தேதிக்கு மேல் ஆகாதுன்னு நினைக்கறேன். பட் டியர், எனக்கு இன்னும் ஒரு பத்து நாள் டைம் கொடுப்பியா? எடுத்ததை முழுசா முடிச்சுக் கொடுத்தா ஹனிமூன் போகும் போது எனக்கு நிம்மதியா இருக்கும்" சக்தி, "எப்படி ஜூன் 4ம் தேதின்னு சொல்றே? அந்த டேட்டும் ஸ்லிப் ஆக வாய்ப்பு இருக்கும் இல்லையா?" வந்தனா, "ம்ம்ஹூம் .. நாங்க செய்யறதை பல மடங்கு வேகமா செய்ய யூ.எஸ் சூப்பர் கம்பியூட்டர் ஓண்ணு மே மாதத் தொடக்கத்தில் இருந்து அலாட் பண்ணப் போறாங்க. அதுக்கு அப்பறம் அதிக பட்சம் ஜூன் 4இல் நாங்க ப்ளான் பண்ணின எல்லாம் முடிஞ்சுடும்" சக்தி, "வாவ், சூப்பர் கம்பியூட்டரா? நீங்க என்ன அவ்வளவு கணிதம் நிறைந்த வேலையா செய்யறீங்க? .. சாரி, நீ எதுவும் சொல்ல வேண்டாம் .. Assume that I didn't ask" வந்தனா, "ஐய்யோ. ப்ளீஸ் இப்படி எல்லாம் சொல்லி என்னை கில்டியா ஃபீல் பண்ண வெக்காதேயேன். கணிதம் அப்படின்ன உடனே உன் கண்ணில் திடீர்ன்னு ஒரு பிரகாசம் வந்து இருக்கும். எனக்கு தெரியும். ... " சக்தி, "இட்ஸ் ஓ.கே ஹனி .. எனக்கு புரியுது" என்று சொல்லும்போதே உயிர் காதலியை ஏமாற்றுவதை எண்ணி வெட்கினான். அவன் குரல் கரகரத்தது. வந்தனா சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "ஒரு க்ரிப்டோவை ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் உபயோகிச்சு ப்ரேக் பண்ணிட்டு இருக்கோம்" சக்தி, "அதுக்கு சரியான சாம்பிள் சைஸ் இருக்கா?" என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான். வந்தனா, "இருக்கு" சக்தி, "என்ன மாதிரி சைஃபர்? மோனொஃபோனிக்கா இல்லை பாலிஃபோனிக்கா?" வந்தனா, "பாலிஃபோனிக் ஆண்ட் பாலிசிலபிக் (Polyphonic and Polysyllabic). ஆனா இதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியாது. தீபாவும்கூட இதிலெல்லாம் ரொம்ப வீக்" சக்தி, "அப்பறம் எப்படி ப்ரேக் பண்ணறீங்க?" வந்தனா, "ப்ரொஃபெஸ்ஸர் சாரின்னு ஒருத்தர். ..." சக்தி, "Oh! என் ஐ.ஐ.டி ப்ரொஃபெஸ்ஸர் அவரைப் பத்தி நிறைய சொல்லி இருக்கார். சோ, அவர் உங்களுக்கு உதவி செய்யறார் இல்லையா? You are in good hands. Also, அவர் ஜூன் 4ம் தேதி முடிக்க முடியும்ன்னு சொன்னார்ன்னா நிச்சயம் முடிக்க முடியும். இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஜூன் பதினைந்தாம் தேதிக்கு அப்பறம் கல்யாணத்தை வெச்சுக்கலாம். நான் அம்மாகிட்ட சொல்லிடறேன். நீயும் உங்க அப்பாகிட்ட சொல்லிடு. அவங்க ரெண்டு பேரும் சேந்து தேதியை குறிக்கட்டும் ஓ.கே?" வந்தனா, "ஆனா, உன்னைப் பார்க்க இன்னும் பத்து நாள் அதிகமா வெய்ட் பண்ணனுமேன்னு இருக்கு ஷக்தி" சக்தி, "ஐ டூ மிஸ் யூ சோ மச் ஹனி" வந்தனா, "அப்பறம் கடைசியா அம்மாகிட்ட என்ன சொன்னே?" சக்தி, "ஐ லவ் யூன்னு சொன்னேன்" வந்தனா, "நீ என்னை லவ் பண்றது புதுசா என்ன? அதுக்கு ஏன் எங்க அம்மா என்னையும் அப்பாவையும் அதிகாரம் பண்ணினாங்க?" சக்தி, "நான் உன்னை லவ் பண்ணறதா சொல்லலை. அவங்களை லவ் பண்ணறதா சொன்னேன்" வந்தனா, "என்கிட்ட சர்வீஸ் பிஸ்டல் இருக்கு. அதை சுடறதுக்கும் எனக்கு அதிகாரம் இருக்கு. ஐ வில் கில் யூ. ஞாபகம் வெச்சுக்கோ" என்றவாறு விடைகொடுத்தாள்.Sunday 26 April 2009 9:00 AM US-EST / Sunday 26 April 2009 8:00 PM IST Nithin's Flat, New York, USA / Veerabhadra Rao's Residence, Hyderabad, India ஞாயிறு, ஏப்ரல் 26, 2009, அமெரிக்க நேரம் காலை 8:00 / இந்திய நேரப்படி ஞாயிறு, ஏப்ரல் 26, 2009 மாலை 7:00 நித்தினின் ஃப்ளாட், நியூ யார்க் / வீரபத்ர ராவ்வின் வீடு, ஹைதராபாத் நித்தினின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பதிலளித்தான். தீபா, "ஹெய் நித்தின், என்ன பண்ணிட்டு இருக்கே" நித்தின், "இதை கேக்கத்தான் காலையே இந்த காலுக்காக வெயிட் பண்ணச் சொல்லி ஈமெயில் அனுப்பினயா?" தீபா, "உனக்கு கொஞ்சம் கூட என் மேல பிரியமே இல்லைன்னு நல்லா தெரியுது. போனா போகுது. கல்யாணத்துக்கு எது வசதியான தேதின்னு நம்ம ரெண்டு பேரும் பேசி இன்னைக்கு முடிவு செஞ்சே ஆகணும்ன்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொல்லி இருக்காங்க. அதை டிஸ்கஸ் பண்ணத்தான் கூப்பிட்டேன்" நித்தின், "தீபா, நான் ஒண்ணு சொல்லட்டுமா?" தீபா, "என்ன சொல்லு" நித்தின், "இன்னும் கொஞ்ச நாள் நாம் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிஞ்சுட்டதுக்கு அப்பறம் கல்யாணத்தைப் பத்தி பேசுவோமே" எதிர்முனையில் தீபா விக்கித்துப் போவதை நித்தின் உணர்ந்தான் தீபா, "என்னை நீ இன்னும் முழுசா தெரிஞ்சுக்கலைன்னு நினைக்கறயா?" நித்தின், "அது கொஞ்சம்தான். ஆனா, அதைவிட உனக்கு என்னைப் பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சு இருக்காதுங்கற பயத்தில் சொல்றேன். ஒன்ஸ் கமிட் ஆனதுக்கு அப்பறம் நமக்குள்ள எந்த விதமான மனவேறுபாடும் இருக்கக் கூடாது" தீபா, "உன்னைப் பத்தினது எதுவான்னாலும் நான் ஏத்துப்பேன் நித்தின். நானும் உன்னை மாதிரி உன் கிட்ட கிண்டலடிச்சுட்டு பேசறேன். உண்மைதான். ஆனா நான் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்றேன் நித்தின்" என்று சொல்லச் சொல்ல அவள் குரல் கரகரத்தது. நித்தின், "தெரியும். இருந்தாலும் உனக்கு என்னைப் பத்தின எல்லா விஷயமும் தெரியணும் அதனால்தான் கொஞ்ச நாளைக்கு அப்பறம் தேதி ஃபைனலைஸ் பண்ணலாம்ன்னு சொன்னேன்" தீபா, "அது கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு தெரிய வந்தா என்ன நித்தின்? எதுவானாலும் நான் ஏத்துப்பேன் நித்தின். நீ எனக்கு வேணும்" என்று அவள் குரல் தழதழத்தது. நித்தின், "ப்ளீஸ் தீபா .. " தீபா இணைப்பைத் துண்டித்தபடி தன் அறைக்கு ஓடி தாளிட்டுக் கொண்டாள்.Friday, 1 May 2009 8:00 PM US-EST Blue Fin Restaurant, Broadway, New York வெள்ளி, மே 1, 2009 மாலை 8:00 ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட், ப்ராட்வே சாலை, நியூ யார்க் அந்த வாரத் தொடக்கத்தில் இருந்து நான்கு நாட்கள் கொலம்பியன் ட்ரக் கார்டலுக்கு அவர்களது இறுதி ட்ரான்ஸ்ஃபரை அவரவர் இல்லத்தில் இருந்தபடி சர்வர்லெஸ் மாங்க்ச் பாட் நெட்டின் உதவியுடன் வெற்றிகரமாக முடித்து இருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் சஞ்சனாவும் ஜாஷ்வாவும் பஹாமாஸ் செல்லவிருந்ததால் வெள்ளியன்று டின்னருக்கு ப்ளூ ஃபின்னில் கூடி இருந்தனர். சஞ்சனா, "என்ன அண்ணா? இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு நீ வாடிக்கையாளர் ஆயிட்டியாமே?" சக்தி, "ஆமா, ஆனா, சாப்பாடும் நல்லாத்தான் இருக்கு" நித்தின், "என்ன ஜாஷ், இப்ப எதுக்கு பஹாமாஸ் போறீங்க?" ஜாஷ்வா, "நாங்க வாங்கற கட்டிடத்தின் வீட்டுப் போர்ஷனை மட்டும் ரினவேட் பண்ண ஆரம்பிக்கறதுக்கு" சக்தி, "ஓ, அப்ப நீங்க அடுத்த மாசம் போகும் போது வீடு ரெடியா இருக்குமா?" ஜாஷ்வா, "முழுசா ரெடியாகுமான்னு தெரியலை. இப்போதைக்கு முன்னாடி நுழைஞ்ச உடனே இருக்கும் ஃபாயர், ஒரு பெட்ரூம், கிச்சன் அப்பறம் அதை ஒட்டினாப் போல இருக்கும் ஒரு சின்ன டைனிங்க் ஏரியா இதை மட்டும் ரினவேட் பண்ண ஏற்பாடு செய்யப் போறோம்" நித்தின், "நீ சொன்னதை தவிர வேற என்ன எல்லாம் இருக்கு ரினவேட் செய்ய?" சஞ்சனா, "நித்தின், அது ஒரு பெரிய்ய்ய்ய்ய வீடு. எங்க ரெண்டு பேரோட கனவு அந்த மாதிரி ஒரு வீட்டில் இருக்கணும்ன்னு" சக்தி, "பெருசுன்னா எவ்வளவு பெருசு?" ஜாஷவா, "முழுசா ரினவேட் பண்ணினதுக்கு அப்பறம் மொத்தம் அஞ்சு பெட்ரூம்ஸ் இருக்கும். தவிர லிவிங்க், டைனிங்க், லைப்ரரி-கம்-ஸ்டடி, நாலு கார்கள் நிறுத்தும் அளவுக்கு கராஜ், கார்டன், லான் அப்படின்னு நிறைய இருக்கு" நித்தின், "வாவ், க்ரேட்!" சக்தி, "கய்ஸ் ஐ ஹாவ் சம் நியூஸ் ..." ஜாஷ்வா, "என்ன?" சக்தி, "R&AWவும் FBIயும் என்னோட அந்த பழைய சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை ஜூன் 4ம் தேதிக்குள் கண்டு பிடிச்சுடுவாங்க" ஜாஷ்வா, "வந்தனா சொன்னாளா? எதுக்கு இப்படி துருவித் துருவி கேட்கறே. எப்பவோ கண்டு பிடிச்சுகிட்டும்ன்னு விட மாட்டியா?" சக்தி, "சத்தியமா நான் துருவித் துருவி கேட்கல. அவளே சொன்னா" நித்தின், "நீ எப்படி கேட்டு இருப்பேன்னு எனக்கு தெரியும்" சஞ்சனா, "எப்படி கேட்டு இருப்பான்?" நித்தின், "அவ எதாவது மேலோட்டமா சொல்லி இருப்பா. உடனே இவன் அதைப் பத்தி கொஞ்சம் ஆழமா கேட்டுட்டு, சாரி, என் தப்பு நீ எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருப்பான். அவ உடனே மனம் உருகி இன்னும் கொஞ்சம் டீடெயில் கொடுத்து இருப்பா. என்னடா நான் சொல்றது? சரி தானே?" சக்தியின் குறும்புச் சிரிப்பை மற்ற மூவரும் ரசிக்கவில்லை. நித்தின், "டேய், நாளைக்கு அவளுக்கு தெரிஞ்சதுக்கு அப்பறம் எப்படி ஃபீல் பண்ணுவா? உன்னை மன்னிப்பாளா?" சக்தி, "நிச்சயம் முதலில் ஏமாற்றப் பட்டதா ஃபீல் பண்ணுவா. அப்பறம் அவளே புரிஞ்சுப்பா. ஏன்னா என்னோட நிலமையில் அவ இருந்து இருந்தா அவளும் நான் செய்யறதைத்தான் செஞ்சு இருப்பா" சஞ்சனா, "ஆனா உன் நிலமையில் அவ இருக்க சான்ஸே இல்லை. அதை மறந்துடாதே" சக்தி, "நீ சொல்றது சரிதான். ஆனா, என்னைப் பொறுத்தவரை இது முகம் தெரியாத ப்ளேயர்கூட ஆடும் ஒரு ஆன்-லைன் செஸ் கேம் மாதிரி. இது கொஞ்சம் வித்தியாசமான கேம். எனக்கு ஆப்பனெண்ட் யாருன்னு தெரியும் ஆனா அவங்க மூவ்ஸ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். அவங்களுக்கும் என் மூவ்ஸ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் ஆனா அவங்களுக்கு ஆப்பனெண்ட் யாருன்னு தெரியாது. அவங்க ஆப்பனெண்ட் யாருன்னு கண்டு பிடிக்கறதுக்காகவே ஆடறாங்க. நான் சும்மா ஜாலியா ஆடறேன். நம் பாங்க் ட்ரான்ஸ்ஃபர் விஷயம் தெரியாத வரைக்கும் பெரிய பிரச்சனை ஒண்ணும் வராது" ஜாஷ்வா,"சரி, சக்தி, இதுவரைக்கும் நீ அவகிட்ட அவ வேலையை பத்தி பேசினது போதும். இண்டியா போய் சேரும்வரை நீ அவகிட்ட வாயை திறக்கக் கூடாது. அவளே எதாவுது சொன்னா சொல்ல வேண்டாம்ன்னு தடுத்துடு. ஓ,கே?" சக்தி, "ஒ.கே!"சஞ்சனா, "உன்னோட அஃப்ஃபேர் எப்படி போகுது மச்சான்?" என்று நித்தினைப் பார்த்துக் கேட்டாள். ஜாஷ்வா அவள் நித்தினுடன் கொண்டாடிய உறவைப் புரிந்து கொண்டு 'மச்சான்' என்று வாயசைத்து பூரிப்பில் முகம் மலர்ந்து புன்னகைத்தான். சக்திக்கு சிரிப்பாக இருந்தது. நித்தின், "நோ ப்ராப்ளம். லாஸ்ட் சண்டே வெட்டிங்க் எப்ப வெச்சுக்கலாம்ன்னு கேட்டா. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொன்னேன்" சக்தி, "எதுக்கு?" நித்தின், "ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுட்டதுக்கு அப்பறம் கல்யாணத்தைப் பத்தி பேசலாம்ன்னு சொன்னேன்" சஞ்சனா, "அவ அதுக்கு ஒத்துகிட்டாளா?" முகம் சுளித்த நித்தின், "கொஞ்சம் இமோஷனல் ஆனா. பட், புரிஞ்சுக்குவான்னு நினைக்கறேன்" சஞ்சனா, "பெருசா சக்திக்கு அறிவுரை சொன்னியே நீ என்னத்தை பண்ணி வெச்சு இருக்கே?" என்ற சஞ்சனாவின் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வெப்பத்தை கக்கியது. நித்தின், "என்ன பண்ணினேன்?" சஞ்சனா, "மடையா. அவளை மேலோட்டமா பாத்தா எப்பவும் விளையாட்டா இருக்கற மாதிரி தெரியும். ஆனா, உன்னை எந்த அளவுக்கு காதலிக்கறா தெரியுமா?" நித்தின் (முகம் இறுக), "தெரியும். அதனால் தான் அப்படி சொன்னேன்" சஞ்சனா, "இன்னும் என்ன புரிஞ்சுக்கணும் ..?" நித்தின், "நிறைய இருக்கு" சஞ்சனா, "போடா, உன்னை எல்லாம் ஒருத்தி காதலிக்கறா பாரு" நித்தின், "ஆமா காதலிச்சு இருக்கக் கூடாதுதான். ஆனா காதலிச்சா. என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டும்ன்னுதான் இப்போதைக்கு வேண்டாம்ன்னு சொன்னேன்" ஜாஷ்வா, "என்ன நித்தின் இது? சக்தியை பாரு அவனும் உன்னை மாதிரிதானே மாங்க்ஸ் பாட் நெட்டில் இன்வால்வ் ஆகி இருக்கான். நீ மட்டும் ஏன் இப்படி கிரிமினல் மாதிரி ஃபீல் பண்ணறே?" நித்தின், "BECAUSE I AM A BLOODY CRIMINAL AND A MURERER" என்று கத்தியபிறகு முகத்தை மூடி அழுது குலுங்கினான். சக்தி, "டேய், அதைப் பத்தி இப்ப ஏண்டா?" வாயடைத்துப் போன சஞ்சனா, "என்னண்ணா?" சக்தி நித்தின் முதுகை தட்டியவாறு இருந்தான். சற்று நேரத்திற்கு பிறகு எழுந்து வாஷ் ரூமுக்கு சென்று வந்த நித்தின் தன் தாயைப் பற்றிய வரலாற்றை சொன்னான். மற்ற மூவரும் அமைதி காத்தனர். சஞ்சனா, "நித்தின், நான் ஒண்ணு சொல்லட்டுமா? நீ இப்படி இழுத்து அடிக்கறது அனாவிசியம்ன்னு தோணுது. அந்த விளையாட்டு திரைக்கு பின்னால் தீபா ஒரு ஆழமான பொண்ணு" சக்தி, "உன்னை மாதிரியே" ஜாஷ்வா, "நித்தின். நீ எடுத்த முடிவு சரிதான். ஆனா, தீபா உன்னை இன்னமும் ஆழமா லவ் பண்ணுவான்னு நினைக்கறேன். சோ, தள்ளிப் போடாதே. நாளைக்கே அவளை கூப்பிட்டு சொல்லிடு" சஞ்சனா, "வேண்டாம் டியர். இந்த மாதிரி விஷயத்தை ஃபோனில் சொல்றது சரி இல்லை. நேரடியா பார்த்ததுக்கு அப்பறம் காலம் தாமதிக்காம சொல்லட்டும்" பெருமூச்செறிந்த நித்தின், "ஓ.கே! ட்ரிங்க்ஸ் போதும் டின்னர் ஆர்டர் பண்ணலாம். ஜாஷ், சஞ்சனா நாளைக்கு விடிகாலையில் உங்களுக்கு ஃப்ளைட்"சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் ஜாஷ்வா, "இன்னொரு முக்கியமான விஷயம்" சக்தி, "என்ன?" ஜாஷ்வா, "கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்க மூணு குட்டி குட்டி ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி கேட்டு இருக்காங்க. இதை ஒரு ஃபேவர் மாதிரி கேட்டு இருக்காங்க. நாம் வேண்டாம்ன்னா வற்புறுத்த மாட்டாங்கன்னு நினைக்கறேன்" நித்தின், "என்ன? கொஞ்சம் விளக்கி சொல்லு" ஜாஷ்வா, "இந்த மூணும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர்ஸ். அவங்க இங்கே சிலருக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்காம். அதை அவங்க யூ.எஸ்ஸுக்கு வெளியில் டெபாசிட் செஞ்சா இங்கே இருக்கும் அக்கௌண்டுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியுமான்னு கேட்டாங்க" சக்தி, "அதாவது, உன் பாங்கில் கணக்கு வெச்சு இருக்கும் கம்பெனிக்கு அவங்க வெளியில் இருந்து டெபாசிட் செய்வாங்க. நாம் இங்கே இருக்கும் அவங்க சொல்ற அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யணும். இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "ஒவ்வொரு மாதமும் வினியோகஸ்தர்களிடம் இருந்து அவ்வளவு பணம் போகுதே அதில் இருந்தே அவங்க எடுத்து கொடுக்கலாமே?" ஜாஷ்வா, "அவங்க இப்ப பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பார்ட்டிகளுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லையாம். இந்த பார்ட்டிகள் இருப்பதுகூட வினியோகஸ்தர்களுக்கு தெரியக் கூடாதாம். நான் அப்படி கேட்பேன்னு தெரிஞ்சு அவங்களே அந்த விளக்கத்தை கொடுத்ததா ஆண்டர்ஸன் சொன்னான்" சக்தி, "மூணு ட்ரான்ஸ்ஃபரா? குட்டி குட்டின்னா? எவ்வளவு?" ஜாஷ்வா, "மொத்தம் பதினெட்டு மில்லியன். முதலில் அஞ்சு, ரெண்டாவது மூணு அப்பறம் கடைசியா பத்து மில்லியன்" சக்தி, "எப்ப பண்ணனும்?" ஜாஷ்வா, "அடுத்து வரும் மூணு வெள்ளிக் கிழமைகளில்" நித்தின், "Funny! ஏன் வெள்ளிக் கிழமைகளில்?" ஜாஷ்வா, "நானும் கேட்டேன். இது வாரக் கடைசியில் செய்யும் பேமெண்ட் அப்படின்னு சொன்னான்" நித்தின், "பிரச்சனை எதுவும் இருக்காதுன்னு நினைக்கறேன். நீ என்ன சொல்றே சக்தி?" சக்தி, "லுக்ஸ் ஓ.கே" ஜாஷ்வா, "ஒரே ஒரு மாற்றம். அவங்களே, or rather ஹாஃப்மனே எந்த கம்பெனி அக்கௌண்ட் மூலம் செய்யணும்ன்னு சொல்லுவான்" சக்தி புருவங்கள் முடிச்சிட, "ஏன்?" ஜாஷ்வா, "ஹாஃப்மனோட செக்க்ஷன் மாறப் போகுது. அதுக்கு அப்பறம் நம் பழைய லிஸ்டில் இருக்கும் கம்பெனிகள் வேற ஆடிட்டருக்கு போயிடும். இந்த மூணும் அவனுக்கு ஷ்யூரா போகாதுன்னு தெரியுமாம். அதனால் சொல்றதா சொன்னான்" நித்தின், "Do you find anything fishy?" ஜாஷ்வா, "முதலில் கொஞ்சம் சந்தேகமா இருந்துது. அப்பறம் விசாரிச்சதில் அவன் சொன்னது சரிதான்னு தெரிஞ்சுது" சக்தி, "அப்ப செய்யலாம். After all we have made so much money thanks to them" ஜாஷ்வா, "எதுக்கும் நான் உங்களுக்கு புதன் கிழமை கன்ஃபர்ம் பண்ணறேன். எனக்கு இன்னும் ஒரு சின்ன ட்வுட் இருக்கு" நித்தின், "என்ன ட்வுட்?" ஜாஷ்வா, "ஹாஃப்மனே விண்ணப்பித்ததால்தான் இந்த செக்க்ஷன் மாற்றம்" சக்தி, "நம்மை மாதிரி அவனும் இந்த ஆபரேஷன் சம்மந்தப் பட்ட கம்பெனிகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளப் பார்க்கறான்னு நினைக்கறேன்" ஜாஷ்வா, "அது சரிதான். ஆனா எதுக்கு இந்த வாரமே விலகிக்கணும். அடுத்த மூணு ட்ரான்ஸ்ஃபரும் முடிஞ்சதுக்கு அப்பறம் விலகி இருக்கலாம் இல்லையா?" நித்தின், "நம்மை மாதிரியே அவனுக்கும் இப்பத்தான் ஆண்டர்ஸனிடம் இருந்து தெரிய வந்து இருக்கும்" ஜாஷ்வா, "அதைத்தான் நான் மறைமுகமா வெரிஃபை பண்ணப் போறேன். ஏன்னா, ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் அடிக்கடி பேசிப்பாங்க. எப்படி கடைசி நிமிஷம் வரை தெரியாம இருந்து இருக்கும்ன்னு யோசிக்கறேன்" சக்தி, "சரி, நீ விசாரிச்சுட்டு ப்ரொஸீட் பண்ணலாம்ன்னா சொல்லு. செய்யலாம்"Sunday, 3 May 2009, 10:00 AM General Rathod's Residence, New Delhi ஞாயிறு, மே 3, 2009 காலை 10:00 ஜெனரல் ராத்தோட்டின் இல்லம், புது தில்லி ஜெனரல் ராத்தோட் காலை உணவை முடித்தபின் அன்றைய தின செய்தித்தாளில் மூழ்கி இருந்தார். சாப்பாட்டு அறையில் இருந்து வந்தனா வந்து கொண்டு இருந்தாள். வாசலில் வந்து நின்ற பென்ஸ் காரில் இருந்து சுந்தர் தேஷ்பாண்டே இறங்கினார். அவர் வீட்டு வாசலை நெருங்க, வந்தனா பின் தொடர எழுந்து வந்த ஜெனரல் ராத்தோட், "எஸ் ப்ளீஸ்?" சுந்தர், "ஜெனரல் ராத்தோட்?" என்றவர் வ்ந்தனாவைப் பார்த்து புன்னகைத்து "வந்தனா?" ஜெனரல் ராத்தோட், "எஸ் தட்ஸ் ரைட்" சுந்தர் கையை நீட்டியவாறு, "ஐ யம் சுந்தர் தேஷ்பாண்டே" என்றபிறகு வந்தனாவைப் பார்த்து "நித்தினோட அப்பா" தேஷ்பாண்டே என்ற பெயரைக் கேட்டதும் யூகித்த வந்தனா முகம் மலர, "வாங்க அங்கிள்" என்று உள்ளே அழைத்துச் சென்றாள். வந்தனா, "அவ இன்னும் தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கறேன். கூப்பிடறேன். வாங்க நீங்க ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுங்க" சுந்தர், "பரவால்லை வந்தனா, வரும் வழியில் ஃப்ரெண்ட் ஒருத்தருடன் ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டுத்தான் வர்றேன். ஒரு டீ மட்டும் கொடு" ஜெனரல் ராத்தோட், "நீங்க இப்ப வந்து இருப்பது நல்லது. ஹைதராபாத்தில் இருந்து வந்ததில் இருந்து தீபா ரொம்ப டல்லா இருந்தா. என்ன பிரச்சனைன்னு வந்தனாகிட்டகூட சொல்லலையாம். நீங்க அவகூட பேசுங்க" சுந்தர், "அதுக்குத்தான் வந்து இருக்கேன்" ஜெனரல் ராத்தோட், "என்ன ப்ரிச்சனை? நான் தெரிஞ்சுக்கலாமா?" சுந்தர், "ஒண்ணும் இல்லை ஜெனரல். Lovers' quarrel. நான் என் மகனோடு நேத்து பேசும் போது சொன்னான். எனக்கும் நாளைக்கு இங்கே வேலை இருந்தது. நான் பொதுவா வார நாட்களில்தான் டெல்லி வருவேன். வரும்போது தீபாவை லஞ்சுக்கோ அல்லது டின்னருக்கோ கூட்டிட்டு போவேன். அப்படி செய்யறதுக்கு பதிலா இன்னைக்கு தீபாகூட அதிக நேரம் செலவிடலாம்ன்னு என் ட்ரிப்பை ப்ரிபோன் பண்ணிட்டு வந்து இருக்கேன்" ஜெனரல் ராத்தோட், "Oh that's very nice of you"மாடியில் இருந்து வந்தனாவுடன் வந்த தீபா சுந்தரின் அருகே அமர்ந்தாள். தீபா, "ஹல்லோ அங்கிள்" அவளது முக வாட்டம் சுந்தரின் மனதை வதைத்தது. சுந்தர், "ஹெல்லோ தீபா, எப்படி இருக்கே?" தீபா, "ஐ யம் ஃபைன் அங்கிள்" சுந்தர், "நான் இன்னைக்கு முழுக்க ஃப்ரீ. வா வெளியில் போய் எங்கேயாவுது சுத்தலாம்" தீபா, "சாரி, எனக்கு மூட் இல்லை அங்கிள்" சுந்தர், "அது எனக்கு தெரியும் அதனால்தான் வந்து இருக்கேன்" என்று அவர் சொல்லச் சொல்ல தீபா குலுங்கி அழத்தொடங்கினாள். வந்தனா, "ஏய், தீபா என்ன ஆச்சு?" தன் வருங்கால மருமகளின் அருகே நிருங்கி அமர்ந்த சுந்தர் அவள் தோள்களை பிடித்து அணைக்க அவர் தோளில் முகம் புதைத்த தீபா அழுகையை தொடர்ந்தாள். எல்லோரும் ஆறுதல் சொல்ல மெதுவாக அவளது அழுகை அடங்கியது. சுந்தர், "போய் சேஞ்ச் பண்ணிட்டு வா. வெளியில் போகலாம்" என்ற அன்புக் கட்டளைக்கு பணிந்த தீபா ஆடை மாற்றி அவருடன் வெளியில் சென்றாள் தான் அஃபிலியேட் மெம்பராக இருந்த டெல்லி கால்ஃப் க்ளப்பை அடைந்ததும் அழகான புல்வெளிகளைப் பார்த்தபடி இருந்த லௌஞ்சில் ஒரு மூலையில் இருந்த மேசையை தேர்ந்து எடுத்து அவளை அமரச் செய்து எதிரில் அமர்ந்தார். சுந்தர், "என்ன, நித்தின் கல்யாணம் இப்ப வேண்டாம்ன்னு சொன்னானா?" தீபா, "அப்படி சொல்லலை. இன்னும் முழுசா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுட்டதுக்கு அப்பறம் முடிவெடுக்கலாம்ன்னு சொன்னான்" சுந்தர், "நீ எப்ப இருந்து அவனை லவ் பண்ண ஆரம்பிச்சே?" தீபா, "அவனைப் பார்த்த முதல் நாளே" சுந்தர், "அவனும் உன்னை பார்த்த முதல் நாளே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்." தீபா, "நானும் அப்படித்தான் நினைச்சேன்" சுந்தர், "இன்னமும் உன்னை ரொம்ப ஆழமா லவ் பண்ணறான்" தீபா, "பின்னே எதுக்கு அப்படி சொல்றான். டீஸ் பண்ணற மாதிரி தெரியலை. This is not funny" என்று அவள் சொல்லச் சொல்ல கண்கள் குளமாகின. சுந்தர், "அவனுக்கு சில இன்செக்யூரிட்டீஸ் இருக்கும்மா" தீபா, "நோ வே! கர்வம்ன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்" சுந்தர், "இல்லை தீபா அவன் வாழ்க்கையில் நடந்ததை, எங்க ரெண்டு பேரையும் ரொம்ப பாதிச்ச விஷயத்தை சொல்றேன்" அதுக்கு அப்பறம் நீ சொல்லு.முதலில் மேனகாவைப் பற்றியும் அவர்களின் மணவாழ்வையும் பற்றிக் கூறினார். தாயுக்கும் மகனுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த பாசத்தையும் மகனது இரண்டு வருடப் பிரிவு மேனகாவின் மனத்தில் ஏற்படுத்திய வலியைப் பற்றிக் கூறினார். அச்சமயம் அவளை விலக்கி தன் வேலையே கதி என்று தான் இருந்ததாலும் அவளுக்குள் இருந்த பாலுணற்சியின் உந்துதலாலும் அவள் எடுத்த முடிவைப் பற்றிக் கூறினார். பிறகு தனக்கும் தன் மகனுக்கும் ஒரே சமயத்தில் அவளது நடத்தையைப் பற்றி தெரிய வந்ததைக் கூறினார். தானும் தன் மகனும் மேனகாவை தண்டிக்க எடுத்த முடிவுகளைக் கூறினார். பிறகு மேனகா தன் வாழ்வை முடித்துக் கொண்ட விதத்தைப் பற்றிக் கூறினார். பேசுவது அறியாமல் கண்கள் குளமாகி வழிந்தோட தீபா அமர்ந்து இருந்தாள். சுந்தர், "அதுக்கு அப்பறம் அவன் பைத்தியம் பிடிக்காமல் இருந்தான்னா அதுக்கு அவனுக்கு கணிதத்தின் மீதும் அல்காரிதங்களின் மீதும் இருந்த ஆர்வம் மட்டுமே காரணம். அப்படியும் ரொம்ப சினிகலா இருப்பான். கல்யாணம், காதல் இவைகளைப் பற்றி ரொம்ப கேவலமா பேசுவான். அவன் தன் தாயை ரொம்ப நேசிச்சான் அதே சமயம் அவளோட செயல்களை வெறுத்தான். எங்க அப்பா அம்மாவைக் கூட மதிக்காம நடந்துக்குவான். குடும்ப வாழ்க்கை எல்லாம் சுத்த வேஷம் அப்படின்னுகூட ஒரு காலகட்டத்தில் அவன் மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அவன் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணிப்பனான்னு நான் நிறைய நாள் கவலைப் பட்டது உண்டு" தீபா, "அங்கிள், நான் அவனை மீட் பண்ணும் போது அவன் அப்படி இல்லையே" சுந்தர், "சக்தியை சந்திச்சு அவனோட நட்பு கிடைச்சதுக்கு அப்பறம்தான் கொஞ்சம் மனுஷனானான். அதுக்கு அப்பறம் மனோகரி, சாந்தி இவங்க ரெண்டு பேரும் அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தாங்கன்னு சொல்லணும். அவன் பெங்களூரில் இருந்த ரெண்டு வருஷத்தில் மும்பைக்கு என்னை பார்க்க நாலஞ்சு தடவை வந்து இருப்பான். ஐ மீன், அவன் என்னை வெறுக்கலை. என் மேல அவனுக்கு ரொம்ப மதிப்பு இருக்கு. ஆனா, என் கிட்ட அவன் ரொம்ப க்ளோஸ்ன்னு சொல்ல முடியாது. நானும் அவனை ஒரு ஃப்ரெண்ட் மாதிரித்தான் நடத்தினேன். ஆனா அதே ரெண்டு வருஷத்தில் இருபது தடவையாவுது அவன் ஈரோட்டுக்கு வீக் எண்டுக்கு போயிருப்பான். Oh! I owe so much to Shakthi, Manohari and Shanthi" தீபாவுக்கு மனோகரி நித்தினும் அவளுக்கு ஒரு மகன்தான் என்று சொன்னதும் சாந்தி சக்தியிடம் இருந்தது போலவே நித்தினிடம் உறவு கொண்டாடியதும் நினைவுக்கு வந்தது. அவள் கண்கள் மீண்டும் பனித்தன. சுந்தர், "அவன் மனசில் ஒரு பெண்ணுக்கு உயர்ந்த உதாரணம்ன்னா அது அவன் தாய்தான். அதே சமயத்தில் அப்படிப் பட்ட ஒரு பெண் நம்பிக்கை துரோகம் செய்வான்னு பயந்தான். அவன் முதல் முதலில் பார்த்தப்ப உன்னை தன் தாய் மாதிரி ஒரு பெண்ணா பார்க்கலை. அவன் மனசில் அந்த சமயத்தில் இருந்த ஒரு பெண்ணோட இமேஜுக்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தே. உன்னை பார்த்த முதல் நாளில் இருந்து காதலிச்சான். உன்னோட அறிவையும் விளையாட்டுத் தனத்தையும் மட்டும் அவன் நோட்டீஸ் பண்ணல. நீ அவன் மேல எத்தனை அன்பு வெச்சு இருக்கேன்னு அவனுக்கு நல்லா தெரியும். ஆனா கல்யாணம்ன்னு பேச்சு வந்ததும் அவனுக்குள் சில பயங்கள், சந்தேகங்கள், தன்னைப் பத்தி, தான் செஞ்ச காரியத்தைப் பத்தி தாழ்வு மனப்பான்மை இது எல்லாம் சேர்ந்து அவன் குழம்பிப் போயிருக்கான்" தீபா, "அவன் உங்க கிட்ட சொன்னானா அங்கிள்?" சுந்தர், "முதலில் சக்தி என்னைக் கூப்பிட்டு பேசினான். உன் கிட்ட பேசினதைப் பத்தி சக்திக்கு சொல்லி இருப்பான் போல இருக்கு" சற்று எரிச்சலோட பார்த்த தீபாவைப் பார்த்து புன்னகைத்த சுந்தர், "தீபா, அவங்க ரெண்டு பேரோட ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப ஆழமானதும்மா. ஒருத்தனுக்காக ஒருத்தன் உயிரைக் கொடுபானுக. கொஞ்ச நாளா ஜாஷ்வாவைப் பத்தி நித்தின் சொல்லும்போது அவன் குரலில் அதே மாதிரி ஒரு அன்னியோன்னியத்தை பார்க்கறேன். தயவு செஞ்சு அதைப் பாத்து பொறாமை படாதே" தீபா, "சொல்லுங்க அங்கிள், நான் என்ன செய்யணும்" சுந்தர், "சக்தி, மனோகரியை அவன் கூட பேசச் சொல்லட்டுமான்னு கேட்டான். நான் தான் வேண்டாம் முதலில் தீபா பேசட்டும்ன்னு சொன்னேன். அவனுக்கு ஃபோன் பண்ணி கல்யாணம் எப்பன்னு நீ முடிவு செய்யப் போவதா ஆணித்தரமா சொல்லு. பேசாம கேட்டுப்பான். அதே சமயம் அவனோட அன்பா நடந்துக்கோ. அது போதும். மேனகா போனதுக்கு அப்பறம் அவனுக்கு அந்த மாதிரி அன்பு மனோகரிகிட்டதான் கிடைச்சுது. நீ அவனுக்கு அந்த மாதிரி அன்பை கொடும்மா. அது போதும்" தீபா, "ஐ அம் சாரி அங்கிள்! என் நித்தினை நானே தப்பா புரிஞ்சுட்டேன். இனி நீங்க கவலைப் படாதீங்க. I will take care of him" என்று தழ தழத்த குரலில் சொன்னதும் சுந்தரின் கண்கள் குளமாகின. சுந்தர், "Thank you my child" தீபா, "மனோகரி ஆண்டிகிட்டயும் பேசி அவங்களை நித்தின்கூட பேசச் சொல்லறேன்"Wednesday, 6 May 2009 11:30 AM புதன் மே 6, 2009 காலை 11:30 தீபா நித்தினை கைபேசியில் அழைத்தாள் தீபா, "ஹாய் நித்தின்" நித்தின், "ஹாய் தீபா" தீபா, "டின்னர் ஆச்சா? என்ன பண்ணிட்டு இருக்கே?" நித்தின், "ம்ம்ம் ... ஆச்சு. ஜஸ்ட் ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தேன். யூஷுவலா ஸ்கைப்பில் கூப்பிடுவே. இன்னைக்கு ஏன் ஃபோன்ல?" தீபா, "கேபினில் இருந்து பேசப் பிடிக்கல. வெளிய ஒரு காஃபீ ஷாப்பில் இருந்து பேசிட்டு இருக்கேன்" நித்தின், "ம்ம்ம் ... அப்பறம் என்ன விசேஷம்" தீபா, "விசேஷம் ஒண்ணும் இல்லை. நம்ம கல்யாணம்தான்" நித்தின், "வாட்?" தீபா, "ஆமா. சண்டே சுந்தர் அங்கிள் வந்து இருந்தார். நீயே ஒரு டேட் ஃபைனலைஸ் பண்ணுன்னு சொன்னார். அதுக்காகத்தான் கூப்பிட்டேன்" நித்தின், "ஏய், நான் லாஸ்ட் டைம் சொன்னது மறந்துடுச்சா?" தீபா, "என்ன சொன்னே?" நித்தின், "இன்னும் கொஞ்சம் நாள் .. " தீபா, "இன்னும் கொஞ்சம் நாள் என்ன செய்யறதா உத்தேசம்?" நித்தின், "ஒருத்தரை ஒருத்தர் ...." தீபா, "உன்னைப் பத்தி முழுசா நான் புரிஞ்சுகிட்டேன். நீ என் கிட்ட சொல்லாத ஒண்ணு ரெண்டையும் சுந்தர் அங்கிள் சொல்லிட்டார். என்னைப் பத்தி உனக்கு சொல்லாதது ஒண்ணுமே இல்லை. இன்னும் என்ன ஒருத்தரை ஒருத்தர்ன்னு? சொல்லு?" நித்தின், "அப்பா என்ன சொன்னார்?" தீபா, "எல்லாத்தையும் சொன்னார். முதல்ல உனக்கு நடந்ததை நினைச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுக்கு அப்பறம் உன் மேல எக்கச்சக்கமா கோபம் வந்தது. இன்னும் கோபமாத்தான் இருக்கேன்" நித்தின், "என்ன கோபம்?" தீபா, "என்ன திமிர் இருந்தா நீ ஐ லவ் யூ சொன்னதுக்கு அப்பறம், அவ்வளவு எல்லாம் சுத்தினதுக்கு அப்பறம், கிஸ்ஸெல்லாம் அடிச்சதுக்கு அப்பறம், இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்தை சாக்கா வெச்சு கல்யாணத்தை தள்ளி வெக்கலாம்பே?" நித்தின், "சின்ன விஷயமா? I wanted to murder my mom for God's sake!" தீபா, "சோ வாட்? அடிக்கடி நான் ஒரு க்ரிமினல் லாயரோட பொண்ணுங்கறதை மறந்துடற." நித்தின், "ஒரு க்ரிமினல் லாயரோட பொண்ணா யாரோ அப்படி செஞ்சதை கேள்விப் பட்டு இருப்பே. உன் கணவன் அந்த மாதிரி செஞ்சான் அப்படிங்கறதை உன்னால் ஜீரணிக்க முடியுமா?" தீபா, "ஜோரா முடியும்" நித்தின், "ஏன்?" தீபா, "ரொம்ப ஸிம்பிள். ஐ லவ் யூ. and I want to be Mrs. Deepa Deshpande. நீ எப்பவோ பண்ணினதைப் பத்தி எனக்கு கவலையே இல்லை" நித்தின், "Not only that Deeps. .." தீபா, "நித்தின் நீ சில விஷயங்களை புரிஞ்சுக்கணும். நீ உன் அப்பா இல்லை. நான் உன் அம்மா இல்லை. என்னைப் பத்தி கவலைப் படாமல் வேலையே கதின்னு உன்னால் இருக்க முடியாது. உன்னைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைச்சுக் கூட பாக்க முடியாது. You know that I love so much ... Don't you love me?" என்று தழதழத்த குரலில் முடித்தாள். நித்தின், "You know that I do baby" தீபா, "அப்படின்னா என்னை கல்யாணம் பண்ணிக்கறே. ஓ.கே?" நித்தின் "ஓ.கே" தீபா, "நீ என்னை பேபின்னு கூப்பிட்டதும் ஞாபகம் வருது. கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு ரெண்டு வருஷத்துக்கு நமக்கு குழந்தை வேண்டாம். ஒரு அம்மாவா எப்படி இருக்கணும்ன்னு நான் முதல்ல கத்துக்கணும். That is with your help" நித்தின், "நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?" தீபா, "ஒண்ணும் பண்ண வேண்டாம். எனக்கு நீ ஒரு குழந்தை மாதிரி இருந்தேன்னா போதும்" நித்தின், "I don't know what to say but I love you" தீபா, "ஐ நோ! சரி...., நான் கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணனும். எப்ப வெச்சுக்கலாம் நம் கல்யாணத்தை? சக்தி-வந்தனா ஜூன் பதினைந்தாம் தேதிக்கு அப்பறம்ன்னு முடிவு செஞ்சு இருக்காங்க. அவங்க அப்பாவும் மனோகரி ஆண்டியும் டேட் ஃபைனலைஸ் பண்ணும் போது நம்முதும் பண்ணி ஆகணும்" நித்தின், "எதுக்கு?" தீபா, "உடன் பிறவா சகோதரன் உன் கல்யாணத்துக்கு வரவேண்டாமா? சஞ்சனா நிச்சயம் சக்தி கல்யாணத்துக்கு வருவா. ஜாஷ், புது வேலையில் சேரப் போறார். நிறைய லீவ் கிடைக்காது. அவங்க கல்யாண தேதிக்கு பக்கத்திலேயே நம்முதும் இருந்தா ஒரே ட்ரிப்பில் அவங்களால ரெண்டு கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ண முடியும்" நித்தின், "எஸ், நான் அதைப் பத்தி நினைக்கவே இல்லை" தீபா, "தெரியும். சோ, நான் சுந்தர் அங்கிளை மனோகரி ஆண்டிகிட்ட பேசிட்டு டேட் ஃபைனலைஸ் பண்ணச் சொல்றேன். ஓ.கே?"நித்தின், "தீப்ஸ், இன்னும் என்னைப் பத்தி உனக்கு தெரியாதது எதாவுது இருந்தா என்ன செய்வே?" தீபா, "எதுவா இருந்தாலும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடி சொல்லிடு. இல்லைன்னா உனக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது" நித்தின், "ஹா! ஹா! சரி, எந்த அளவுக்கு உன் அசைன்மெண்ட் முடிஞ்சு இருக்கு?" தீபா, "எல்லாம் உனக்கு சக்தி சொல்லி இருப்பான். மறுபடி எதுக்கு கேக்கறே?" நித்தின், "இன்னும் ஒரு முறை கேட்டு வெரிஃபை பண்ணிக்கத்தான்?" தீபா, "சூப்பர் கம்பியூட்டர் உபயோகிச்சு டிக்ரிப்ட் செஞ்சுட்டு இருக்கோம்" நித்தின், "எதை டிக்ரிப்ட் செய்யறீங்க?" தீபா, "இண்டர்நெட் மூலம் வந்த மெஸ்ஸேஜஸ்" நித்தின், "அந்த மெஸ்ஸேஜஸ்ல எதாவது ரகஸியமான விவரம் இருக்கா? நீ என்ன விவரம்ன்னு சொல்ல வேண்டாம்." தீபா, "அந்த மெஸ்ஸேஜஸ்ல ஒரு ஐ.பி.அட்ரெஸ் இருக்கு. அதை கண்டுபிடிக்கணும்" நித்தின், "அந்த ஐ.பி.அட்ரெஸ் எந்த மெஸ்ஸேஜ்ல இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?" தீபா, "எல்லா மெஸ்ஸேஜஸ்லயும் அந்த ஐ.பி.அட்ரெஸ் இருக்குன்னு தெரியும். அது என்னன்னு கண்டுபிடிக்கணும்" நித்தின், "வாவ், ரொம்ப இன்டரெஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே?" தீபா, "கடுப்பு ஏத்தாதே. I find it so damn difficult. இதுக்குதான் உன்னால ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டேன்." நித்தின், "சாரி, எப்படியோ. சீக்கரம் உன் அசைன்மெண்ட்டை முடி. அதையும் இதையும் சொல்லி எனக்கு கல்யாண ஆசையை உண்டு பண்ணிட்டே. ஃபர்ஸ்ட் நைட்டில் அசைன்மென்ட்டை பத்தி பேசினா கொன்னுடுவேன்" தீபா, "எங்க அசைன்மென்ட் ஜூன் 4ம் தேதிக்குள்ள முடிஞ்சுடும்ன்னு சக்தி சொல்லலையா?" நித்தின், "உங்க பாட்டர்ன் மாட்சிங்க் ரௌன்ட்ஸ் எல்லாம் முடிஞ்சுடுமா?" தீபா, "ம்ம்ம் ... முடியணும்" நித்தின், "ஸ்டில் ... உங்க யூகம் எதாவது தப்பா இருந்தா இன்னும் சில சுற்றுக்கள் தேவைப் படும் இல்லையா?" தீபா, "So far our assumptions have proved right. பட், எதாவது தவறா யூகிச்சு இருந்தா இன்னும் சில சுற்றுக்கள் தேவைப் படும்தான். என்ன பண்ணறது?" நித்தின், "இதுவரைக்கும் ஊர்ஜிதப் படுத்தாத விவரம் எதையும் யூகிக்காமல் செஞ்சா கடைசி நிமிஷத்தில் புதுசா எந்த தடங்கலும் வராது" தீபா, "யூ ஹாவ் அ பாய்ண்ட்" நித்தின், "சரி, எதை வெச்சு உங்க டீகோடை வெரிஃபை செய்வீங்க?" தீபா, "அந்த மெஸ்ஸேஜ்களுக்குள்ள புதைந்து இருக்கும் வேறு ஒரு பகுதி எங்களுக்கு என்னன்னு தெரியும். அதாவது அந்த பகுதிமட்டும் என்க்ரிப்ட் செஞ்சதுக்கு (குறியீட்டு முறையில் எழுதுவதற்கு) முன்னால் எப்படி இருந்ததுன்னு தெரியும்" நித்தின், "அந்த பகுதி Numericஆ இல்லை alpha-numericஆ?" தீபா, "டெக்ஸ்ட் மேட்டர் ... alpha-numeric" நித்தின், "ஆனா ஐ.பி அட்ரெஸ் எண்களைக் கொண்டது இல்லையா?" தீபா, "ஆமா, ஆனா ஐ.பி.அட்ரெஸ்ஸும் டெக்ஸ்ட் மாதிரியே யூனிகோடில் ஸ்டோர் ஆகி இருக்குங்கறது எங்க யூகம். ஐ.பி அட்ரெஸ் இருக்கக்கூடிய பகுதிகள் எல்லாம் யூனிகோட் எண்களாகவும் மத்த பகுதிகள் யூனிகோட் எழுத்துக்களாகவும் இருக்கு" நித்தின், "யூனிகோட் எண்களா?" தீபா, "ஐ மீன் அரபிக் நியூமரல்" (i.e., 1, 2, 3, 4 etc) நித்தின், "எப்படி சொல்றே?" தீபா, "எண்களை வேற எப்படி எழுத முடியும்?" நித்தின், "ஏன் முடியாது, நீ சொல்றது டெஸிமலில். அதுக்கு பதிலா பைனரியில் (BINARY) எழுதலாம், ஆக்டலில் (OCTAL) எழுதலாம், ஹெக்ஸா டெஸிமலில் (HEXADECIMAL) எழுதலாம். அவ்வளவு ஏன் ஒன்று அப்படிங்கறதுக்கு A, ரெண்டு அப்படிங்கறதுக்கு B, மூணுக்கு C, நாலுக்கு D அப்படின்னு கூட எழுதலாம் இல்லையா. எழுதறவங்களுக்கும் படிக்கறவங்களுக்கும் புரியும்ன்னா எப்படி வேணும்னாலும் எழுதலாம்" தீபா, "மை காட்! இதுவும் நீ சொல்றது சரிதான். போடா நாயே. முதல்லயே நான் கூப்பிட்டப்ப எனக்கு ஹெல்ப் பண்ண வந்து இருக்கலாம் இல்லை?" நித்தின் வாய்விட்டு சிரித்தான் தீபா, "சரி, பார்க்கலாம். நான் அப்பறம் கூப்படறேன்" நித்தின், "ஹேய் ... " தீபா, "என்ன?" நித்தின், "ஐ லவ் யூ" தீபா, "மீ டூ ... " நித்தின், "பை. " தன் இருக்கைக்கு வந்த தீபா முதலில் வந்தனாவை தன் இருப்பிடத்துக்கு அழைத்து ப்ரொஃபெஸ்ஸரை தொலைபேசியில் அழைத்து ஸ்பீக்கர்ஃபோனை இயக்கினாள். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன தீபா?" தீபா, "ப்ராஃப், நம்ம யூகங்கள் எல்லத்தையும் ஒரு தடவை ரிவ்யூ செய்யலாமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன திடீர்ன்னு?" தீபா, "இந்த ஸ்டேஜ்ல யூகம்ன்னு எதுவும் இல்லாம டீஸைஃபர்மெண்ட்டில் ஈடுபட்டா புது சர்ப்ரைஸ் எதுவும் இருக்காதுன்னு தோணுது" வந்தனா, "எனக்கும் அது சரின்னு படுது" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, இப்போதைக்கு நாம் என்ன எல்லாம் அஸ்யூம் செஞ்சு இருக்கோம்? ஒவ்வொண்ணா அலசலாம். முதலில் ஈமெயில் மெஸ்ஸேஜ் பகுதிகள் இங்கிலீஷ் யூனிகோடில் இருக்கு" தீபா, "ப்ராஃப், அது ஒரு அளவுக்கு ஊர்ஜிதப் படுத்தப் பட்ட யூகம். ஊர்ஜிதப் படுத்த முடியாத யூகம் என்ன இருக்கலாம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எண்கள் கொண்ட பகுதிகள், அவைகளில் அளவை வைத்து யூனிகோடில் எண்களாக இருக்கணும் அப்படின்னு யூகிச்சு இருக்கோம்" தீபா, "அந்த யூகத்தை மட்டும் யூனிகோடில் எண்ணாகவோ அல்லது எழுத்தாகவும் கூட இருக்கலாம்ன்னு கொஞ்சம் மாத்திக்கலாமா சார்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஓ, அவங்க ஐ.பி.அட்ரெஸ்ஸையும் எதாவது நொடேஷன் உபயோகிச்சு எழுதி இருப்பாங்கன்னு நீ நினைக்கறயா?" தீபா, "தெரியலை ப்ராஃப். ஒரு வேளை அப்படி உபயோகிச்சு இருந்தா கடைசி நிமிஷத்தில் நமக்கு அது ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்காது. அதனால் தான் சொன்னேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீ சொல்றது சரிதான். பாக்கி இருக்கும் சுற்றுகளில் நாம் யூகிச்சு இருக்கும் எண்கள் கொண்ட பகுதிகளையும் எழுத்துக்களாகவே எடுத்துட்டு செய்யலாம். எண்களா இருந்தாலும் தப்பாக வாய்ப்பு இல்லை" தீபா, "ஓ,கே ப்ராஃப். தாங்க்ஸ்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "தீபா, தீடீர்ன்னு உனக்கு எப்படி இது தோணுச்சு?" தீபா, "எனக்கா தோணலை ப்ராஃப். நித்தின்கூட பேசிட்டு இருந்தேன். அப்ப அவன் சொன்னான்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வந்தனா, நீ சக்திவேல்கிட்ட எதுவும் கேக்கலையா?" வாய் விட்டு சிரித்த வந்தன, "அவசியம் இல்லை ப்ரொஃபெஸ்ஸர். நித்தினும் ஷக்தியும் இதைப் பத்தி பேசியிருப்பாங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவ்வளவு க்ளோஸா அவங்க ரெண்டு பேரும்?" தீபா, "எங்க ரெண்டு பேருக்கும் பொறாமை வரும் அளவுக்கு க்ளோஸ்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒண்ணு சொல்லட்டுமா? இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்களும் அப்படி க்ளோஸ்ஸாத்தான் இருக்கணும்" தீபா, "எப்படி சொல்றீங்க ப்ராஃப்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "இது ஒரு ஆள் செய்யக் கூடிய காரியம் இல்லை. அதே சமயம் ரெண்டு பேர் சேந்து செய்யும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்க் இல்லைன்னா செய்ய முடியாது. அதனால்தான் சொன்னேன். Anyway bye for now" என்று விடைபெற்றார். தீபாவும் வந்தனாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்து இருந்தனர்.Friday, 8 May 2009 1:30 PM Shankivel's Flat and Joshua's Flat, New York வெள்ளி, மே 8, 2009 பகல் 1:30 சக்திவேலின் ஃப்ளாட் மற்றும் ஜாஷ்வாவின் ஃப்ளாட், நியூ யார்க் சக்தி நித்தினுடன் தன் ஃப்ளாட்டிலும் ஜாஷ்வா தனது வீட்டிலும் இருந்தபடி அவர்களது முதல் எதிர் திசை பணமாற்றத்தை முடித்து இருந்தனர். மூவரது கைபேசிகளும் கான்ஃபெரன்ஸ் காலில் இணைக்கப் பட்டு இருந்தன. சக்தி, "எப்பவும் நாம் நைட்டில் செய்யும் வேலை இது. இப்படி பட்டப் பகலில் லீவ் போட்டுட்டு செய்யணும்ன்னு தெரிஞ்சு இருந்தா கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்" ஜாஷ்வா, "ஏன் ஆஃபீஸில் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கா?" நித்தின், "இல்லை ஜாஷ், பையனுக்கு வந்தனாகூட செலவழிக்க வேண்டிய லீவெல்லாம் இப்படி வீணாகப்போகுதேன்னு கவலை" ஜாஷ்வா, "ஏன் நித்தின்? உனக்கு அப்படி இல்லையா?" சக்தி, "போகற போக்கைப் பார்த்தா அவன் கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போவானாங்கறதே சந்தேகம்" ஜாஷ்வா, "ஒ.கே கய்ஸ். இன்னும் ரெண்டே ரெண்டு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர்ஸ். அப்பறம் கொஞ்ச நாளைக்கு மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்" நித்தின், "ஜாஷ், அடுத்ததும் இப்படி பகலில்தான் இருக்குமா?" ஜாஷ்வா, "அவங்க எப்ப டெபாசிட் செய்யறாங்கறதைப் பொறுத்தது அது. இந்த ட்ரான்ஸ்ஃபருக்கு நேத்து நைட் டெபாசிட் செஞ்சு இருக்காங்க. நாம் எப்பவும் போல அவங்க டெபாசிட் செஞ்ச எட்டு மணி நேரத்துக்குள் நாம் ட்ரான்ஸ்ஃபர் செய்யறோம்" சக்தி, "நேத்து நைட்டா?" ஜாஷ்வா, "ஆமா, நீ பாங்க் லொகேஷனை பார்க்கலையா? முதல் மில்லியன் ஸ்பெயினில் இருக்கும் எதோ ஒரு ஊரில் இருந்து டெபாசிட் ஆகி இருக்கு. ரெண்டாவது மில்லியன் லெபனானில் டெபாசிட் ஆகி இருக்கு. மூணாவது ஜெர்மனியில் ஃப்ராங்க்ஃபர்ட் நகரத்தில் டெபாசிட் ஆகி இருக்கு" நித்தின், "இந்த ஊருக்கும் கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "அவனுகளுக்கு உலகம் முழுக்க காண்டாக்ட் இருக்கு. கோல்டர் கிரஸண்ட்டிலயும் அவங்களுக்கு டீலிங்க் இருக்கு. இந்த நகரங்களில் எல்லாம் கோல்டன் கிரஸண்டின் ஆபரேஷன் நிறைய இருக்காம்" நித்தின், "கோல்டன் கிரஸண்ட்?" ஜாஷ்வா, "கோக்கெயினுக்கு எப்படி கொலம்பியா மற்றும் பெரு நாடுகளோ அதே மாதிரி ஹெராயினுக்கு வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் பர்மா சேர்ந்த கோல்டன் ட்ரையாங்கிள் (Refer Wikipedia "Golden Triangle (Southeast Asia)" for more info) எனப்படும் பகுதி. காலம் காலமா ஹெராயினுக்கு அது தான் முதல் ஸோர்ஸ். இப்ப பத்து இருபது வருஷங்களா ஈரானின் கிழக்கு பகுதி, அஃப்கானிஸ்தான் அப்பறம் பாகிஸ்தானின் மேற்கு பகுதி இது மூணும் சேர்ந்த கோல்டன் கிரஸண்ட் என அழைக்கப் படும் உலகப் படத்தில் பிறை போன்று தோன்றும் பகுதியில் ஓபியம் மற்றும் ஹெராயின் உற்பத்தி அதிகரிச்சு இருக்கு" சக்தி, "சோ, நம்ம கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்க கோக்கெயின் ஏற்றுமதி செஞ்சு ஹெராயின் இறக்குமதி செய்யறாங்களா?" ஜாஷ்வா, "அப்படித்தான் ஆண்டர்ஸன் சொன்னான்"aturday, 9 May 2009 1:30 PM Make-shift Test Lab, R&AW, New Delhi சனி, மே 9, 2009 பகல் 1:30 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி சனி, ஞாயிறு இருதினங்களிலும் தீபாவும் வந்தனாவும் அலுவலகத்துக்கு வருவது வழக்கமாகி இருந்தது. அன்றைய காலையில் முடிக்க வேண்டியவைகளை முடித்து வந்தனாவின் கேபினில் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தனர். வந்தனா, "தீபா, அன்னைக்கு ப்ராஃப் சொன்னதை யோசிச்சுப் பாத்தியா?" தீபா, "என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்களைப் பத்தித்தானே? எஸ் வெரி மச். அவர் சொன்னது மட்டும் இல்லை. சக்தி உனக்கு சொன்ன விஷயங்கள். நித்தின் எனக்கு சொன்ன விஷயங்கள் இதை எல்லாம் சேர்த்துப் பாரு" வந்தன, "ம்ம்ம் ... யோசிச்சுப் பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு" தீபா சற்று நேரம் மௌனமாக இருந்தாள். வந்தனா, "என்ன யோசிக்கறே?" தீபா, "நித்தின்-சக்தி .... கில்9-மோர்லா .... அந்த கோணத்தில் யோசிச்சேன்" வந்தனா, "அப்ப ஹார்ஷ்7?" தீபா, "Who else? Joshua!" புன்னகைத்த வந்தனா, "காட்! பயமா இல்லை?" தீபா, "நோ வே! அப்படி யோசிக்கவே எக்ஸைட்டடா இருக்கு!! I really wish these dudes have done that .. not that they are not capable" வந்தனா, "அதுதான் ... I don't have an iota of doubt on their capabilities .. the question is .. would they have? அவங்க செஞ்சு இருப்பாங்களா?" தீபா, "சான்ஸே இல்லை. பொதுவா ஹாக்கர் அப்படிங்கற முகமூடிக்குள்ள ஒளிஞ்சுட்டு இருக்கும் ஆளுங்களுக்கு நேர் மாறான ஆளுங்க இதுக மூணும். They are too sincere about everything" வந்தனா, "அதுதான் என் கணிப்பு. ரொம்ப சின்ஸியரான பேர்வழிகள் மூணும். மேலோட்டமா பார்த்தா தெரியலைன்னாலும் ஜாஷ்வா ஒரு hen-pecked husband. சஞ்சனா கஷ்டப் படற மாதிரி அவ ஆதரிக்காத எதுவும் செய்ய மாட்டார். அதே மாதிரிதான் சக்தியும்." தீபா, "ஓ, சக்தி ஆல்ரெடி பொண்டாட்டி தாசன் ஆயிட்டானா?" வந்தனா, "சீ, நான் அப்படி சொல்லலை. குடும்பம் அவனுக்கு ரொம்ப முக்கியம் அதை சொல்ல வந்தேன்"Friday, 15 May 2009 9:00 PM Joshua's Flat, Harlem, New York வெள்ளி, மே 15, 2009 இரவு 9:00 ஜாஷ்வாவின் இல்லம், ஹார்லம், நியூ யார்க் அன்றும் காலையில் இருந்து பகல் இரண்டு மணி வரை நண்பர்கள் மூவரும் தத்தம் வீடுகளில் இருந்தபடி அவர்கள் ஏற்றுக் கொண்ட இரண்டாவது ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரை முடித்து இருந்தனர். இரவு உணவுக்கு ஜாஷ்வாவின் வீட்டில் கூடி இருந்தனர். சஞ்சனா, "என்ன இன்னைக்கு மூணு பேரும் ரொம்ப டயர்டா இருக்கற மாதிரி இருக்கு?" சக்தி, "ஏண்டா இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபருக்கு ஒத்துகிட்டோம்ன்னு இருக்கு" சஞ்சனா, "ஏன்?" ஜாஷ்வா, "அஞ்சே அஞ்சு மில்லியன். ஆனா அவனுக்கு டெபாசிட் செஞ்ச ப்ரான்சில் இருந்து அந்த ட்ரேடிங்க் கம்பெனியின் கணக்கில் வந்து இருக்கான்னு வெரிஃபை செய்யறதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு" சக்தி, "எங்கே இருந்து பிடிச்சாங்க அந்த மாதிரி ஊர்களை?" சஞ்சனா, "எந்த ஊர்?" சக்தி, "கொயட்டான்னு பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஊர். ஜாஷ், எனக்கு ஒரு சந்தேகம். அங்கே இருக்கும் ஒரு பாங்கில் இருந்து எதுக்கு வயர் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சு இருக்காங்க. நேரடியா கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களோட யூ.எஸ் அக்கௌண்டுக்கே அவங்க செஞ்சு இருக்கலாமே" ஜாஷ்வா, "நான் ஆண்டர்ஸன் கிட்ட கேட்டேன். நான் அன்னைக்கு சொன்னதையே தான் இன்னைக்கும் சொன்னான். யாருக்கு பணம் போகுதுன்னு கொடுக்கறவங்களுக்கு தெரியக் கூடாதாம். அதனால்தான்" சஞ்சனா, "எல்லாப் பணமும் அந்த ஊரில் இருந்துதான் வந்ததா?" நித்தின், "மூணு மில்லியன் மட்டும் அங்கே இருந்து. மத்த ரெண்டு மில்லியனில் ஒண்ணு மறுபடி ஸ்பெயினில் இருக்கும் ஒரு ஊர், மத்தது லெபனானில் இருந்து" சஞ்சனா, "எனக்கு என்னமோ இது ட்ரக் ட்ரேட் சம்மந்தப் பட்ட பணம் இல்லைன்னு தொணுது" ஜாஷ்வா, "ஏன்?" சஞ்சனா, "நான் இருந்த இயக்கம் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடு பட்டு இருந்துது. கோல்டன் கிரஸண்ட்டின் பண போக்கு வரத்து ஈரானில் இருக்கும் டெஹ்ரானில்தான் நடக்கும். இல்லைன்னா பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில்" ஜாஷ்வா, "சக்தி, ப்ராஞ்ச் டீடெயில்ஸ் எல்லாம் தனியா ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கியா?" சக்தி, "Now that you asked .. போன தடவை செஞ்ச ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் டீடெயிலும் இருக்கு. அவங்க கிட்ட இருந்து எந்த கன்ஃபர்மேஷனும் வரலையே" ஜாஷ்வா, "அப்படி வந்தாலும் டிலீட் பண்ணாதே?" நித்தின், "எதுக்கு சொல்றே ஜாஷ்வா? அது நமக்குத்தானே ரிஸ்க்?" ஜாஷ்வா, "உங்க லாப்டாப்பில் இருக்கா இல்லை டெஸ்க்டாப்பிலா?" சக்தி, "டெஸ்க் டாப்பில்தான். லாப்டாப்பை இந்த மாதிரி விஷயம் எதுக்கும் உபயோகிக்க மாட்டேன்" ஜாஷ்வா, "மாங்க்ஸ் பாட் ஸோர்ஸ் கோட் எல்லாம் எங்கே இருக்கு?" நித்தின், "அது மட்டும் எங்க ரெண்டு பேர் லாப்டாப்பில் என்க்ரிப்ட் செஞ்சு ஸ்டோர் ஆகி இருக்கும். தவிர, இன்டர்நெட்டில் இருக்கும் ஒரு சர்வரிலும் ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்கோம்" ஜாஷ்வா, "அப்படின்னா இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் விவரங்களையும் என்க்ரிப்ட் செஞ்சு அந்த சர்வரில் ஸ்டோர் செஞ்சுடு" நித்தின், "எதுக்கு சொல்றே ஜாஷ்?" ஜாஷ்வா, "ஜஸ்ட் ஒரு முன் ஜாக்கிரதைக்காக .. " சக்தி, "சரி செய்யறோம் ஜாஷ். டேய், எதுக்கு முன் ஜாக்கிரதைன்னு கேக்காதே அப்பறம் அவன் ஒர் பெரிய லெக்சர் அடிப்பான். எனக்கு பசிக்குது"Monday, 18 May 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், மே 18, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி முரளீதரன், "என்ன ப்ரொஃபெஸ்ஸர்? எவ்வளவு தூரம் வந்து இருக்கோம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சனிக் கிழமை சாயங்காலத்தில் இருந்து நானும் உங்க டெஸ்ட் லாப்பில்தான் இருக்கேன். முடிஞ்ச மாதிரி இருக்கு ஆனா நமக்கு தேவையான விவரத்தைத் தவிர எல்லாம் கிடைச்சு இருக்கு" முரளீதரன், "என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க" வந்தனா, "நான் சொல்றேன் சார். சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸைத் தவிர மெஸ்ஸேஜ்களில் இருக்கும்மற்ற எல்லா பகுதிகளையும் டிக்ரிப்ட் செஞ்சாச்சு. ஒரு அளவுக்கு துல்லியமாவே செஞ்சு இருக்கோம்" முரளீதரன், "ஒரு அளவுக்குன்னா?" வந்தனா, "கமா, ஃபுல் ஸ்டாப் மாதிரி எழுத்துக்களை தவிர மத்த எழுத்துக்கள் எல்லாம் அப்படியே விளம்பர ஈமெயில் மெஸ்ஸேஜுக்கு மாட்ச் ஆகுது. அதே மாதிரி எந்த கணிணிக்கு மேஸ்ஸேஜ் வந்து இருக்கோ அந்த கணிணியின் ஐ.பி.அட்ரெஸ்ஸும் தெளிவா தெரியுது. ஆனா சர்வரின் ஐ,பி.அட்ரெஸ் மட்டும் இன்னும் scrambledஆ இருக்கு" முரளீதரன், "என்ன தீபா ரொம்ப சைலண்டா இருக்கே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவளுக்கு நேத்தில இருந்தே நாம் எங்கேயோ தப்பு பண்ணறோம்ன்னு தோணிட்டு இருக்கு" தீபா, "ஆமா சார். We are missing something out ... " முரளீதரன், "ஸ்க்ராம்பிள்டா இருக்குன்னா என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "இந்த சர்வர் ஐ.பி அட்ரெஸ் மட்டும் நாங்க மாட்ச் செய்யும் எந்த எண்ணுக்கும் எழுத்துக்கும் மாட்ச் ஆக மாட்டேங்குது" முரளீதரன், "ஐ.பி.அட்ரெஸ்ஸில் எண்கள் மட்டும்தானே இருக்கும். எழுத்துக்களுடன் எதுக்கு மாட்ச் செய்யறீங்க?" தீபா, "நான் தான் சார் அதை செய்யச் சொன்னேன். ஒரு வேளை அவங்க எண்களை அப்படியே 1, 2, 3ந்னு எழுதாமல் அதுக்கு பதிலா வேறு ஒரு நொடேஷன் உபயோகிச்சு இருந்தா கண்டு பிடிக்க வசதியா இருக்கும்ன்னு யூனிகோட் எழுத்துக்கள் கூடவும் மேட்ச் செஞ்சோம்" முரளீதரன், "யூனிகோட் எழுத்துக்கள்ன்னா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "யூனிகோடில் ஏராளமான எழுத்துக்கள் இருக்கும். உலகத்தில் இருக்கும் வெவ்வேறு மொழிகளில் இருக்கும் எழுத்துக்களும் யூனிகோடில் இருக்கு. ஆனா மாங்க்ஸ் பாட் நெட் காரங்க இதுவரைக்கும் ஆங்கிலத்தை தவிர எந்த மொழியும் உபயோகிச்சது இல்லை என்கிற காரணத்தினால யூனிகோடில் இருக்கும் எண்களுக்கான குறிகள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் இவைகளை மட்டும் வெச்சு மாட்ச் செஞ்சோம். மெஸ்ஸேஜில் எழுத்துக்கள் கொண்ட பகுதிகள் எல்லாம் துல்லியமா டீகோட் ஆகி இருக்கு. எண்கள் கொண்ட பகுதியான கணிணியின் ஐ.பி.அட்ரெஸ்கூட அழகா டீகோட் ஆகி இருக்கு." முரளீதரன், "கணிணியின் ஐ.பி அட்ரெஸ்ன்னா? யூ மீன் எந்த கணிணிக்கு மெஸ்ஸேஜ் வந்ததோ அந்த கணிணியின் ஐ.பி.அட்ரெஸ்ஸை சொல்றீங்களா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஆமா. ஆனா சர்வரின் ஐ.பி அட்ரெஸ் மட்டும் மாட்ச் ஆக மாட்டேங்குது" முரளீதரன், "அதை மட்டும் அவங்க வேறு மொழி எதிலாவுது எழுதி இருந்தாங்கன்னா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சார், ஐ.பி.அட்ரெஸ்ஸில் வெறும் எண்கள்தான் இருக்கும். எல்லா மொழிகளிலும் எண்கள் .... " என்று நிறுத்தினார் தீபா, "மை காட்! ப்ராஃப்!! They are using some other numerals .. like Roman, " ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீ சொல்றதும் சரிதான். ஆனா அதே லைனில் யோசிச்சா அவங்க மத்த மொழியில் இருக்கும் நியூமரலுக்கு பதிலா மத்த எழுத்துக்களை உபயோகிச்சு இருக்க முடியும்ன்னு தோணுது இல்லையா? அதாவது, நீ அன்னைக்கு சொன்ன மாதிரி Aன்னா ஒண்ணு, Bன்னா ரெண்டு, Cன்னா மூணுங்கற மாதிரி மத்த மொழியில் இருக்கும் alphabetsஐ உபயோகிச்சு இருந்தா? அப்படிப் பார்த்தா எத்தனை மொழிகளை மாட்ச் செய்வது" முரளீதரன், "சரி ப்ரொஃபெஸ்ஸர். நம்ம கிட்ட இப்ப சூப்பர் கம்பியூட்டர் இருக்கு. யூனிகோடில் இருக்கும் எல்லா மொழிகளையும் மாட்ச் செஞ்சு பாத்தா என்ன? அதுக்கு எத்தனை நாள் ஆகும். எப்படியும் மே மாசக் கடைசின்னுதான் நாம் கிரிஸ்டஃபருக்கு வாக்கு கொடுத்து இருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி அதையும் செஞ்சு பாத்துடலாம். இன்னும் ரெண்டு வாரம் ஆகும்" Thursday, 21 May 2009 4 Accused of Bombing Plot at Bronx Synagogues Four men were arrested Wednesday night in what the authorities said was a plot to bomb two synagogues in the Bronx and shoot down military planes at an Air National Guard base in Newburgh, N.Y. The men, all of whom live in Newburgh, about 60 miles north of New York City, were arrested around 9 p.m. after planting what they believed to be bombs in cars outside the Riverdale Temple and the nearby Riverdale Jewish Center, officials said. But the men did not know the bombs, obtained with the help of an informant for the Federal Bureau of Investigation, were fake. ..... வியாழன்ம், மே 21 2009 நியூ யார்க் டைம்ஸ் தினசரியில் வெளிவந்த ஒரு செய்தியின் சாரம் ப்ராங்க்ஸ் பகுதியில் இருக்கும் யூத மத ஆலயத்தை குண்டு வைத்து தகர்க்கவும் நியூபர்க் பகுதியில் இருக்கும் ஏர் நேஷனல் கார்ட் விமானத் தளத்தின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் திட்டமிட்ட நான்கு நபர்களை நேற்று இரவு எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நான்கு நபர்களும் நியூ யார்க் நகரத்தில் இருந்து 60 மைல் தொலைவில் இருக்கும் நியூபர்க் என்னும் இடத்தை சேர்ந்தவர்கள். நேற்று இரவு 9 மணி அளவில் ரிவர்டேல் யூத மத ஆலயத்தில் வெடி குண்டு வைத்த பிறகு அவர்கள் கைது செய்யப் பட்டனர். உண்மையான வெடி குண்டுகளுக்கு பதிலாக வெற்று குண்டுகளை எஃப்.பி.ஐ அவர்களுக்கு மறைமுகமாக கொடுத்து இருந்தது ...Friday, 22 May 2009 9:30 AM Federal Plaza - NYPD Head Quarters - US Attorney's Office வெள்ளி, மே 22, 2009 காலை 9:30 ஃபெடரல் ப்ளாஸா, FBI தலைமை அலுவலகம் - நியூ யார்க் காவல் துறை தலைமை அலுவலகம் - அரசாங்க வழக்கறிஞ்யர் அலுவலகம் FBI Agent சைமண்ட் வில்லியர்ஸ், "ஹல்லோ கமிஷனர் கெல்லி. ஹல்லோ அட்டார்னி ஸ்னைடர். இன்னைக்கு அந்த நாலு பேரையும் கோட்டில் ஆஜராக வைக்கப் போறீங்களா?" அரசாங்க வழக்கறிஞர் எரிக் ஸ்னைடர் (US Attorney Eric Snyder) "ஆஃபீஸர் வில்லியர்ஸ், நீங்க எங்களை இப்ப தர்மசங்கடமான நிலமையில் நிறுத்தி இருக்கீங்க. அந்த நாலு பேரையும் சுத்தி எதோ மர்மம் இருக்கு அதை மறைச்சு அவங்களாகவே இந்த காரியத்தை செஞ்சதா ப்ரெஸ்ல சொல்லச் சொல்லறீங்க. அவங்களுக்கு ஏது பணம் அப்படின்னு யாராவுது கேள்வி கேட்டா?" சைமண்ட் வில்லியர்ஸ், "ப்ரெஸ்ஸைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. நீங்க அந்த ப்ரெஸ் மீட்டில் பேசவேண்டிய பேச்சை ஏற்கனவே நாங்க எல்லா பத்திரிகைகளுக்கும் டி.வி சானல்களுக்கும் கொடுத்தாச்சு. They have alredy bought the story. அவங்க நாம் சொல்றதை நம்பறாங்க" நியூ யார்க் காவல் துறை தலைமை அதிகாரி ரேய்மண்ட்.W.கெல்லி (Raymond W Kelly), "Did you give them an option? அரசாங்க முத்திரையோட இதுதான் நடந்தது. இதுக்கு மேல் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லி இருப்பீங்க." சைமண்ட் வில்லியர்ஸ், "கமிஷனர், 9/11க்கு அப்பறம் நிறைய பேர் கேள்வி கேக்கறதை நிறுத்திட்டாங்க" எரிக் ஸ்னைடர், "சரி, என்னதான் நடந்தது? ஏன் இந்த ஹஷ் ஹஷ்?" சைமண்ட் வில்லியர்ஸ், "நிஜமா நாங்களே இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா நடந்ததை புரிஞ்சுக்க ஆரம்பிச்சு இருக்கோம். எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன். நம் நாட்டில் இருக்கும் பல சிறைச்சாலைகளில் இருந்து விடுதலையாகிப் போகும் கைதிகள் பலரை ஒரு அல்-கைதா தீவிரவாதி அணுகினதா எங்களுக்கு தகவல் வந்து இருந்தது. ஆனா, யார் அந்த தீவிரவாதி, யார் அவனுக்கு இங்கே அடைக்கலம் கொடுத்து இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியலை. இந்த நாலு பேரும் மே 2008ல் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனவங்க. எங்க இன்ஃபார்மர் ஒருத்தன்கிட்ட இவங்க நாலு பேரும் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பெரிய ஆபரேஷனில் கலந்துக்கப் போறதாவும் அது முடிஞ்ச உடனே நாட்டை விட்டு போகறதாவும் பெருமை அடிச்சுட்டு இருக்காங்க. இது நடந்தது ஜூன் 2008ல். இந்த விவரம் தெரிஞ்சதும் நாங்க இவங்களை வாட்ச் பண்ண தொடங்கினோம். நாங்களே எங்க ஆள் ஒருத்தனை ஆயுதம் சப்ளை செய்யறவன்னு மறைமுகமா அவங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சோம். ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு பிறகு இந்த நாலு பேரும் வெடி மருந்து மற்றும் ஏவு கணை வேணும்ன்னு அவனை அணுகி இருக்காங்க. அவன் உடனே எங்களுக்கும் சொன்னான். அதுக்கு அப்பறம் நடந்தது எல்லாம் உங்களுக்கும் தெரியுமே?" எரிக் ஸ்னைடர், "அல்-கைதாவுடன் அவங்க ஒப்பந்தம் என்ன?" சைமண்ட் வில்லியர்ஸ், "அல்-கைதா இவங்களுக்கு இந்த தாக்குதலுக்கு பதினெட்டு மில்லியன் டாலர் கொடுக்கறதா ஒத்துட்டு இருக்கு. எட்டு மில்லியன் தாக்குதலுக்கு முன்னால். பாக்கி பத்து மில்லியன் வெற்றிகரமா தாக்குதலை முடிச்சதும்ன்னு. எந்த இடங்களை தாக்கணும்ன்னு அல்-கைதா அவங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கு" கமிஷனர் கெல்லி, "அது சரி, இப்ப நீங்க ஏன் அல்-கைதா பின்னணியில் இருப்பதை சொல்ல வேண்டாம்ன்னு சொல்லறீங்க?" சைமண்ட் வில்லியர்ஸ், "இந்த தாக்குதலை அல்-கைதா முழுசா ப்ளான் பண்ணாமல் ஏதோ அவசரத்தில் தொடங்கின மாதிரி தெரியுது. சொன்ன மாதிரி அவங்களுக்கு எட்டு மில்லியன் ஒரு வங்கி கணக்கில் டெபாசிட் ஆகி இருப்பதை காண்பிச்சு இருக்காங்க. இவங்களும் அதில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து எங்க இன்ஃபார்மருக்கு கொடுத்து இருக்காங்க. ஆனா பாக்கி பணம் அவங்க கைக்கு போறதுக்கு முன்னால் அவங்களை கொல்ல அல்-கைதா திட்டம் போட்டு இருந்திருக்கு" கமிஷனர் கெல்லி, "ஓ, அதனால் தான் அன்னைக்கு அவங்களை அரெஸ்ட் செய்ய அவ்வளவு பந்தோபஸ்தா?" சைமண்ட் வில்லியர்ஸ், "ஆனா, எங்களால அல்-கைதா தீவிர வாதியை பிடிக்க முடியலை. நாங்க போறதுக்கு முன்னால் அவன் தப்பிச்சுட்டான்"எரிக் ஸ்னைடர், "அந்த வங்கி கணக்கைப் பத்தி விசாரிச்சு இருப்பீங்களே? அதில் இருந்து என்ன தெரிய வந்தது?" சைமண்ட் வில்லியர்ஸ், "அதிலும் நிறைய மர்மங்கள் இருக்கு" கமிஷனர் கெல்லி, "என்ன மர்மம்?" சைமண்ட் வில்லியர்ஸ், "விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்க அந்த கணக்குகளை பத்தி கேட்காதது எங்க தப்பு. இவங்க கிட்ட அந்த கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக கையெழுத்துப் போட்ட செக் லீஃப்ஸ் கொடுத்து இருக்காங்க. தவிர இருபத்து ஐந்து ஆயிரம் டாலர் வரைக்கும் லிமிட் இருக்கும் ஒரு டெபிட் கார்ட்டும் கொடுத்து இருக்காங்க. இவங்களும் அந்த டெபிட் கார்டை உபயோகிச்சுத்தான் பணம் எடுத்து இருக்காங்க. அந்த செக் லீஃப்களில் இருக்கும் கையெழுத்துக்கும் அந்த கணக்கை தொடங்கினவர் கையெழுத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்யறதுக்கு முன்னாடியே அதில் இருந்த பணம் எல்லாம் கேமன் ஐலண்டில் (Cayman Island) இருக்கும் ஒரு கணக்குக்கு அனுப்பிட்டாங்க. அது யாரோ பினாமியின் பெயரில் தொடங்கிய கணக்கு. அந்த கணக்கின் உரிமையாளர் இப்போ உயிரோடே இல்லை. ஆனா அந்த கணக்குக்கு ரெண்டு வியாபார நிறுவனங்களிடம் இருந்து அந்த எட்டு மில்லியன் வந்து இருக்கு. முதல் மூணு மில்லியன் ஒரு ஈரானியனுக்கு சொந்தமான நிறுவனம். நாங்க விசாரிக்கப் போனபோது அவன் கொல்லப் பட்டு இருந்தான். இரண்டாவது நிறுவனமும் லெபனானில் இருந்து இங்கே குடியேறிய ஒரு தனி ஆளுக்கு சொந்தமானதுதான். அவன் இப்போ அமெரிக்காவில் இல்லை. லெபனானுக்கு வியாபர விஷயமா போயிருப்பதா சொல்றாங்க. நாங்க அவனைப் பிடிக்க வலை வீசி இருக்கோம். ஆனா உண்மையா பிணமாத்தான் பிடிபடுவான் அப்படிங்கறது எங்க யூகம்" கமிஷனர் கெல்லி, "இந்த பணத்தை யார் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சது?"
சைமண்ட் வில்லியர்ஸ், "எல்லாம் ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர்ஸ். இந்த நிறுவனங்களின் சொந்தக்காரர்களே கணிணி மூலம் செஞ்சு இருக்காங்க. அந்த இரண்டு நிறுவனக் கணக்குகளையும் ஃப்ரீஸ் பண்ணி இருக்கோம். ஆனால், அதில் இருந்து எந்த தடயமும் கிடைக்கும்ன்னு எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை" எஃப்.பி.ஐ அந்த நிறுவனங்களின் கணிணிகளை பரிசோதிப்பதற்குள் அவைகளில் இருந்த மாங்க்ஸ்-2 தன்னை தானே அழித்துக் கொண்டு இருந்தது! மாங்க்ஸ்-2 மூலம் நடந்த ட்ரான்ஸ்ஃபர் என்று துளியும் எஃப்.பி.ஐ சந்தேகிக்க வில்லை!! எரிக் ஸ்னைடர், "ஆஃபீஸர் வில்லியர்ஸ். சரி, இது ஒரு ஸென்ஸிடிவான கேஸ். நீங்க சொல்ற மாதிரி ப்ரெஸ் மீட்டில் சொல்றேன். ஆனா, பணம் எப்படி வந்ததுன்னு நிச்சயம் யாராவது கேப்பாங்க. கேட்கலைன்னாலும் மக்கள் சந்தேகப் படும்படியா எழுதுவாங்க." சைமண்ட் வில்லியர்ஸ், "சரி, அப்படின்னா. எட்டு மில்லியன் டாலர் அவங்களுக்கு வெளி நாட்டில் இருந்து வந்து இருக்குன்னு மட்டும் ப்ரெஸ் மீட்டில் சொல்லுங்க. யாரிடம் இருந்து அந்த பணம் வந்து இருக்குன்னு நாங்க விசாரிச்சுட்டு இருப்பதா சொல்லுங்க. இது அந்த தீவிரவாதி எங்களை திசை திருப்பிட்டதா நினைக்க உதவும்" எரிக் ஸ்னைடர், "சரி" Monday, 25 May 2009 8:30 AM Shakthivel's Flat, New York திங்கள், மே 25, 2009 காலை 8:30 சக்தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளை புரட்டியபடி காலை உணவருந்திக் கொண்டு இருந்தான். இரண்டாம் பக்கத்தின் ஒரு மூலையில் போலீஸ் கமிஷனரும் அரசாங்க வழக்கறிஞரும் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி பதிவாகி இருந்தது. முந்தைய தினம் மதிய உணவின் போது போது போலி குண்டுகளை வைத்து கடந்த வாரம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நான்கு நபர்களை பற்றி நித்தினுடன் பேசி வயிறு வலிக்க சிரித்ததை நினைவு கூர்ந்தான். மேலும் அந்த பேட்டியைப் பற்றி படிககத் தொடங்கினான். முதலில் இருந்து படித்தவன் முடிவில் இருக்கும் சில வரிகளை படிக்கத் தொடங்கியதும் அவன் முகம் சுருங்கியது ... கைபேசியில் ஜாஷ்வாவை அழைத்தான். எங்கேஜ்டாக இருந்தது. சற்று நேரத்தில் ஜாஷ்வா அழைத்தான். ஜாஷ்வா, "ஹாய் ஷக்தி. நீ எதுக்கு கூப்பிட்டேன்னு யூகிச்சேன். நித்தினும் லைனில்தான் இருக்கான். உனக்கு முன்னால் அவன் என்னை கூப்பிட்டான். சொல்லு" சக்தி, " நம்ம முதல் ரெண்டு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரும் ..." ஜாஷ்வா, "முதலில் நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் மன்னிப்பு கேக்கறேன். இந்த மூணு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரும் ஆண்டர்ஸன் சொல்லித்தான் நான் செய்யச் சொன்னேன். அவனுக்கு பின்னாடி தீவிர வாதிகள் இருப்பதா நான் சந்தேகிக்கலை. ஏன்னா அவன் ஒரு பிஸினஸ் மேன். தொடர்ந்து அவனுக்கு அவன் ஏற்கனவே ஈடு பட்டு இருக்கும் பிஸினஸ்ஸை நடத்தணும்ன்னு பார்ப்பான். பதினெட்டு மில்லியனுக்காக தன் வாழ்க்கையை பணயம் வைப்பான்னு தோணலை" நித்தின், "அது நாம் செஞ்ச ட்ரான்ஸ்ஃபர்தான்னு உனக்கு நிச்சயம் தெரியுமா?" ஜாஷ்வா, "எஸ், எஃப்.பி.ஐ அந்த வங்கி கணக்குகளை ஃப்ரீஸ் பண்ணி இருக்காங்க. வங்கியில் இருக்கும் ஒருத்தன் மூலம் தெரிஞ்சுகிட்டேன். ஹாஃப்மனுக்கு இன்னும் தெரியாதுன்னு நினைக்கறேன்" சக்தி, "ஓ மை காட்!" நித்தின், "Damn, damn, damn .. " சக்தி, "உனக்கு எப்ப தெரியவந்தது?" ஜாஷ்வா, "வெள்ளிக் கிழமை காலையில்" சக்தி, "அப்பறம் ஏன் எங்க கிட்ட சொல்லலை. அந்த ட்ரான்ஸ்ஃபரை நிறுத்தி இருக்கலாம் இல்லையா?" ஜாஷ்வா, "எனக்கு மேலும் சில விவரங்கள் தேவைப் பட்டுது அதனால் அன்னையில் இருந்து நான் உங்ககிட்ட இன்னும் சில விவரங்களை மறைச்சு இருக்கேன்" நித்தின், "பட் சொல்லு ஜாஷ்வா, தெரிஞ்சே எதுக்கு கடைசி ட்ரான்ஸ்ஃபர் பண்ணச் சொன்னே?" ஜாஷ்வா, "இப்பவும் எனக்கு கன்ஃபர்ம்டா இந்த ட்ரான்ஸ்ஃபர் தீவிர வாதிகளுக்குத்தானான்னு தெரியலை. எப்படி இருந்தாலும் முதல் ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுட்டு மூணாவதை செய்ய மறுத்தா வீணா நம் மேல் சந்தேகம் வரும். யார் நம்மை ட்ரான்ஸ்ஃபர் செய்யச் சொல்லி இருந்தாலும் எதுக்கு அந்த பணம் உபயோகமாகுதுன்னு நமக்கு தெரியாது அப்படிங்கறது அவங்க கணிப்பு. மூணாவது ட்ரான்ஸஃபரை செய்ய மறுத்தா நம்மை சும்மா விடமாட்டாங்க. எப்படியும் இந்த வெள்ளிக் கிழமை நீங்க இந்தியா திரும்பறீங்க. நாங்க ரெண்டு பேரும் சனிக் கிழமை நைட்டு புறப்படறோம். நம்மை அவங்க எந்த விதத்திலும் சந்தேகிக்காத மாதிரி நடந்துட்டு போயிடலாம்ன்னுதான் உங்களை அந்த கடைசி ட்ரான்ஸ்ஃபரை செய்யச் சொன்னேன்" நித்தின், "எஃப்.பி.ஐ நிச்சயம் அந்த மூணு கம்பெனிகளையும் ட்ரேஸ் பண்ணும்" சக்தி, "பண்ணும். ஆனா மாங்க்ஸ்-2 மூலம் அந்த ட்ரான்ஸ்ஃபர் ஆச்சுங்கறதுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்காது. அந்த கம்பெனி உரிமையாளர்களை விசாரணை செய்வாங்க. பிறகு யாரோ உரிமையாளருக்கு தெரியாமல் செய்து இருப்பதா கண்டு பிடிப்பாங்க. யாருன்னு கண்டு பிடிக்க முடியாது" நித்தின், "பட், ஜாஷ் உன்னோட பாங்க் ஸ்டேட்மெண்ட் ... " ஜாஷ்வா, "மாசக் கடைசியில்தான் ஸ்டேட்மெண்ட் போகும். நான் வெள்ளிக் கிழமை மதியமே என்னோட வைரஸ்ஸை டிலீட் பண்ணிட்டேன். இந்த மூணு கம்பெனிகளுக்கு போகும் ஸ்டேட்மெண்டில் நாம் செஞ்ச மூணு ட்ரான்ஸ்ஃபரும் இருக்கும். எஃப்.பி.ஐ சக்தி சொன்ன மாதிரி யாருன்னு விசாரிச்சுட்டே இருப்பாங்க. ஒரு க்ளூவும் கிடைக்காது" சக்தி, "பட் ஜாஷ்வா, நாம் தீவிரவாதிகளுக்கு உதவி இருந்தா என்னால் அதை ஜீரணிக்க முடியாது" ஜாஷ்வா, "ரெண்டு நாளா நானும் அதையேதான் நினைச்சுட்டு குமுறிட்டு இருக்கேன். அப்படி தீவிரவாதத்துக்கு உதவி அது சஞ்சனாவுக்கு தெரிஞ்சா அவ மனசு ரொம்ப கஷ்டப் படும்"நித்தின், "ஓ.கே கய்ஸ். நடந்தது நடந்துடுச்சு. இனி என்ன செய்யலாம்" ஜாஷ்வா, "சில முன்னேற்பாடுகள் .. பர்டிகுலரா நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியது" நித்தின், "என்ன முன்னேற்பாடுகள்?" ஜாஷ்வா, "முதலில் நீங்க ரெண்டு பேரும் உங்க ஃப்ளாட்டை காலி செய்யுங்க. காலி செஞ்சுட்டு ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துட்டு தங்குங்க. இன்னும் நாலு நைட்தானே நியூ யார்க்கில் இருக்கப் போறீங்க. அப்பறம், உங்க ரெண்டு பேர் காரையும் திருப்பி கொடுங்க. புதுசா ரெண்டு பேருக்கும் சேர்ந்து ஒரு கார் வாடகைக்கு எடுத்துக்குங்க" சக்தி, "வெய்ட், வெய்ட் எதுக்கு இதெல்லாம்?" ஜாஷ்வா, "உங்களைப் பத்தி எந்த விதமான சந்தேகமும் வரக் கூடாது. உங்க ரெண்டு பேர் வீட்டிலும் இருந்த சர்வர்களின் ஐ.பி.அட்ரெஸ் எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் கண்டு பிடிக்கப் படும். சர்வர் இப்போ அங்கே இல்லைன்னாலும். எங்கேயாவுது டெலிஃபோன் கம்பெனி ரெக்கார்டில் நீங்க இப்போ இருக்கும் அட்ரெஸ் இருக்கும். அந்த ரெண்டு ஃப்ளாட்டும் என் கஸின் ஒருத்தன் பினாமி பேரில் எடுத்துக் கொடுத்தது. எந்த விதத்திலும் உங்க பேர் அதில் சம்மந்தப் படுத்த முடியாது" நித்தின், "பட், நீ உன் கஸினை மாட்ட விட மாட்டியே. உன்னை பிடிப்பாங்க" ஜாஷ்வா, "இலலை. ஐ.பி அட்ரெஸ் விஷயத்தில் மட்டும்தான் மாட்டுவேன். ஃப்ளாட் விஷயத்தில் இல்லை. " சக்தி, "என்ன சொல்றே? புரியலை" ஜாஷ்வா, "முதலில் அந்த ஐ.பி அட்ரெஸ் எந்த விலாசத்தில் இருந்ததுன்னு டெலிஃபோன் கம்பெனிகள் மூலம் தெரிஞ்சுட்டு அந்த விலாசத்துக்கு வந்து விசாரிப்பாங்க. அந்த விசாரணையில் ஒண்ணும் தெரியலைன்னாத்தான் அந்த ஐ.பி.அட்ரெஸ் யாருடையதுன்னு பார்ப்பாங்க. அதுக்கு அப்பறம் அந்த நிறுவனம் வெறும் பேப்பரில் இயங்கும் ஒரு நிறுவனம்ன்னு தெரிஞ்சுக்குவாங்க. அதுக்கு அப்பறம்தான் என்னோட இன்னொரு கஸின், அந்த நிறுவனத்தின உரிமையாளர், அவனை விசாரிப்பாங்க. அந்த சமயத்தில் அவன் என் பக்கம் கை காமிச்சுடுவான். அதுக்குள்ள அனேகமா நீங்க இந்தியாவில் இருப்பீங்க. ஆனா, ஃப்ளாட் விஷயத்தில் நான் மாட்ட மாட்டேன். என் கஸின் அந்த ஃப்ளாட்டை சப்-லெட் பண்ணினதா சொல்லுவான். யார் அதுன்னு தெரியாதுன்னு சொல்லுவான். வாடகையை கேஷா அட்வான்ஸா வாங்கிட்டதா சொல்லுவான். இது நிறைய நடக்கற விஷயம்தான்" நித்தின், "எப்படியோ நீ மாட்டுவேதானே?" ஜாஷ்வா, "நிச்சயம் ஐ.பி அட்ரெஸ் விஷயத்தில் எஃப்.பி.ஐ என்னை விசாரிக்கும். அதை முடிஞ்ச அளவுக்கு நாம் தாமதப் படுத்தினா நமக்கு நல்லது. We can then play by our strengths" சக்தி, "சரி, காரை எதுக்கு ரிடர்ன் பண்ணச் சொல்றே?" ஜாஷ்வா, "ஒரு வேளை சுத்தி இருப்பவங்ககிட்ட விசாரிச்சா. நீங்க உபயோகிச்ச காரை பத்தி யாராவது சொல்ல வாய்ப்பு இருக்கு. எல்லா ரெண்டல் கம்பெனியிலும் தேடுவாங்க. கார் உங்க பேரில் எடுத்தது. உடனே கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு" சக்தி, "சரி. எப்ப மீட் பண்ணறோம்?" ஜாஷ்வா, "நீங்க ரெண்டு பேரும் இந்த முன்னேற்பாடுகளை செய்யுங்க. இதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும். வெள்ளிக் கிழமை நைட் நீங்க புறப்படறீங்க. வியாழக் கிழமை டின்னருக்கு என் வீட்டில் மீட் பண்ணலாம். யூ.எஸ்ஸில் எங்க வீட்டில் கடைசி டின்னர்" மூவரும் மனம் தோய்ந்து இருந்தனர். மூவரின் மனதிலும் அளவிலா பதட்டம். ~~~~~~~~~~~~~~~~~~~~~ அடுத்த இரண்டு நாட்களில் ஒரு அளவுக்கு அவர்கள் மனம் தெளிவு அடைந்து இருந்தது. அவர்களையறியாமல் தீவிரவாதத்துக்கு உதவி இருந்ததால் முன்னர் மறைக்கலாம் என்று இருந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பற்றி வந்தனாவிடன் தானே கூறப் போவதாக சக்தி முடிவெடுத்தான். புதனன்று மதியம் இருவரையும் ஜாஷ்வா அழைத்து மாலை நாலு மணி அளவில் பர்ல் டைனரில் சந்திக்கும் படி அழைத்தான் இக்கதையின் முதல் இடுகையை காண்க .... Thursday, 28 May 2009 9:30 PM US-EST Basement of xyz Bank (where Joshua works) வியாழன், மே 28 2009 கிழக்கு அமெரிக்க நேரம் இரவு 9:30 ஜாஷ்வா பணிபுரியும் வங்கிக் கட்டிடத்தின் கீழ்த்தளம் நித்தினும் சக்தியும் ஜாஷ்வா சொன்னது போல் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து அந்த பேஸ்மெண்டை அடைந்தனர். மேல் தளத்தில் இருந்து வரும் படிகளின் பக்கத்தில் இருக்கும் பகுதி தெரியும்படியான அதே சமயம் அங்கு நின்று இருப்போரின் கண்ணுக்கு எளிதில் படாத ஒரு இடத்தில் காரை நிறுத்தி காரிலே அமர்ந்த வண்ணம் கைபேசியில் ஜாஷ்வாவை அழைத்தான். ஜாஷ்வா, "என்ன சக்தி, நித்தின், கான்ஃப்ரென்ஸ் காலில் கனெக்ட் பண்ணி இருக்கீங்களா?" சக்தி, "எஸ்" ஜாஷ்வா, "உங்க ரெண்டு பேர் ஃபோனிலும் அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு சார்ஜ் இருக்கா?" நித்தின், "ம்ம்ம் ..அதுக்கு மேலயே இருக்கு. பட், அடுத்த ரெண்டு மணி நேரம் ஆகுமா என்ன?" ஜாஷ்வா, "பொதுவா ஹாஃப்மன் சொன்னா சொன்ன நேரத்துக்கு கரெக்டா வந்துடுவான். அதனால் தான் நான் அவன் பார்க்கறதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேரையும் அங்கே வந்து வெய்ட் பண்ணச் சொன்னேன்" சக்தி, "ஜாஷ், எந்த விதமான பிரச்சனையும் இல்லைன்னா நீ சிக்னல் கொடுக்கும் போது அங்கேயே தூரத்தில் நிக்கும் காரில் இருந்து நாங்க இறங்கி வந்தா .. அவனுக தப்பா எடுத்துக்க மாட்டானுகளா?" ஜாஷ்வா, "தப்பா எடுத்துட்டா அது அவங்க ப்ராப்ளம். நம்மை பொறுத்தவரை நாம் முன் ஜாக்கிரதையா இருக்கோம்" நித்தின், "தமாஷா இருக்கப் போகுது ... எப்படியோ சரி" ஜாஷ்வா, "நித்தின், தயவு செஞ்சு லைட்டா எடுத்துக்காதே" நித்தின், "நோ ஜாஷ்வா, நிச்சயம் லைட்டா எடுத்துக்க மாட்டேன்" சக்தி, "சஞ்சனா எங்கே? நீ எங்கே இருக்கே?" ஜாஷ்வா, "கெஸ்? ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்டில்!" சஞ்சனா அவனிடம் இருந்து கைபேசியை வாங்கி, "என்ன அண்ணா? எங்க ஆளோட க்ளோக் அண்ட் டாகர் ப்ளான் எப்படி?" சக்தி, "என்ன நீயும் ஜோக் அடிக்கறே?" சஞ்சனா, "சும்மா சொன்னேன். இந்த மீட்டிங்க் ஜாலியாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அப்படி இல்லைன்னா அடுத்த செகண்ட் நான் சீரியஸ் ஆகிடுவேன். பயப்படாதே" சக்தி, "சஞ்சனா, ஜாஷ்வா ஒரு கன் எடுத்துட்டு வர்றான். உன் கிட்ட சொன்னானா?" சஞ்சனா, "நானும் இன்னொண்ணு எடுத்துட்டு வரேன். இந்த ஆளோட ஷூட்டிங்க் திறமையில் எனக்கு நம்பிக்கை இல்லை" நித்தின், "ஏய், சஞ்சனா, பீ சீரியஸ் .. எனக்கு பயமா இருக்கு" சஞ்சனா, "நீங்க ரெண்டு பேரும் பேசாம காரில் உக்காந்துட்டு வேடிக்கை பாத்துட்டு இருங்க ஒரு பிரச்சனையும் இல்லைன்னா மட்டும் வாங்க. பிரச்சனை எதுன்னாலும் நான் பாத்துக்கறேன். ஓ.கே? இரு ஜாஷ்கிட்ட கொடுக்கறேன்" ஜாஷ்வா, "என்ன சக்தி, எதாவது ஆள் நடமாட்டம் தென்படுதா?" சக்தி, "இல்லை. " ஜாஷ்வா, "சரி, நாங்க இங்கே இருந்து புறப்படறோம். சரியா அங்கே பத்து மணிக்கு எங்க கார் உள்ளே நுழையும். என் கஸின் க்ரிஸ் காரை ஓட்டிட்டு வருவான். நானும் சஞ்சனாவும் பின் சீட்டில் இருப்போம். நாங்க இறங்கினதுக்கு அப்பறம் பக்கத்தில் இருக்கும் பார்கிங்க் ஸ்லாட்டில் என் கஸின் காரை நிறுத்திட்டு வெய்ட் பண்ணுவான். ஓ,கே? எந்த காரணத்தைக் கொண்டும் லைனை கட் பண்ண வேண்டாம்" சக்தி, "ஓ.கே" சக்தியும் நித்தினும் காரில் அமர்ந்த வண்ணம் வெளியில் பார்த்துக் கொண்டு இருந்தனர். சரியாக பத்து மணிக்கு ஜாஷ்வாவின் கார் உள்ளே நுழையும் போது வங்கியின் மேல் தளத்தில் இருந்து வரும் படிகளில் ஹாஃப்மனும் ஆண்டர்சனும் இறங்கி வந்து கொண்டு இருந்தனர் .... ஜாஷ்வாவும் சஞ்சனாவும் காரில் இருந்து இறங்கி ஹாஃப்மனுக்கு கை குலுக்கி சிரித்தவண்ணம் பேசத்தொடங்கினர். ஜாஷ்வா, சஞ்சனாவை ஆண்டர்சனுக்கு அறிமுகப் படுத்தியதையும் சரளமாக சஞ்சனா ஹாஃபமனுடனும் ஆண்டர்ஸனுடனும் பேசிக் கொண்டு இருந்ததை காரில் இருந்த் நண்பர்கள் இருவரும் கண்டனர். நித்தின், "சீ .. ஒரு ப்ராப்ளமும் இல்லை .. " சக்தி, "இரு இரு .. பார்ககலாம் .. " அப்போது ஒரு கரு நீல நிற வேன் பேஸ்மெண்ட் வாசலில் இருந்து வேகமாக வந்து சற்று நேரத்துக்கு முன்னால் ஜாஷ்வாவும் சஞ்சனாவும் இறங்கிய இடத்தில் நின்றது ...Friday, 29 May 2009 8:30 AM IST Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, மே 29 2009 இந்திய நேரம் காலை 8:30 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி முரளீதரன், "என்ன ப்ரொஃபெஸ்ஸர் இவ்வளவு சீக்கிரம் வரச் சொன்னீங்க?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு வழியா வேலை முடிஞ்சுது. நான் சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கணும் அதுக்குத்தான்" தீபாவும் வந்தனாவும் ஒன்று சேர்ந்து "ஐ.பி.அட்ரெஸ் கிடைச்சுடுச்சா" என்றனர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "கிடைச்சு இருக்கு ஆனா எந்த மொழின்னு ஒவ்வொரு மொழி யூனிகோடையும் வெச்சு பார்க்கணும். அந்த சூப்பர் கம்பியூட்டரில் யூனிகோட் ஃபாண்ட் ஆங்கிலத்தைத் தவிர எதுவும் இல்லை" தீபா, "எங்கே அந்த டிக்ரிப்ட் செஞ்ச மெஸ்ஸேஜஸ்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி ஒரு பென் ட்ரைவை நீட்டினார். தீபா உடனே அதை தன் கணிணியில் இணைத்து அதில் இருந்ததை தன் கணிணிக்கு இறக்கம் செய்தபின் வந்தனாவிடம் பென் ட்ரைவை நீட்டினாள். வந்தனாவும் தன் கணிணியில் அதை காப்பி செய்த பிறகு தீபாவின் இருக்கையின் அருகே அமர்ந்தாள். தீபா அந்த மெஸ்ஸேஜகள் கொண்ட் ஃபைலை வர்ட் பேடில் திறந்தாள். அவள் கணிணியிலும் ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியின் ஃபாண்டும் இல்லை. தீபா, "ஏய், சாரி வன்ஸ். என் லாப்டாப்பிலும் எந்த ஃபாண்டும் இல்லை. உன்னுதில் இருக்கா?" வந்தனா, "என் லாப்டாப்பில் ஹிந்தி ஃபாண்ட்ஸ் மட்டும் இருந்தது. இப்ப ரீஸண்டா தமிழ் கத்துக்கறதுக்காக தமிழ் ஃபாண்டும் கூட லோட் பண்ணி இருக்கேன். எதுக்கும் என் லாப் டாப்பில் அந்த மெஸ்ஸேஜ் ஃபைலை திறந்து பார்க்கலாம்" வந்தனாவின் கணிணி ஐ.பி.அட்ரெஸ் இருக்கும் பகுதிகளை ௬१.௨३.௪५.௩७ என்று காட்டியது. வந்தனா, "ஹேய், இது தமிழா?" அருகே வந்து அதைப் பார்த்த ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஆமா, தமிழ் நியூமரல் ஆனா அதுக்கு பக்கத்தில் இருப்பது ஹிந்தி நியூமரல். எஸ், தமிழும் ஹிந்தியும் கலந்து இருக்கு" என்றவாறு இன்னொரு முறை கணிணித் திரையைப் பார்த்து 61.23.45.37 என்று அருகில வொயிட் போர்டில் எழுதினார். பேயறைந்த முகத்துடன் தோழிகள் இருவரும் பாத்துக் கொண்டு இருந்தனர் ... முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், மராட்டிக்கும் அதே நியூமரல்ஸ் தானே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஆமா, அது தவணகிரி ஃபாண்ட் நிறைய வட இந்திய மொழிகளுக்கு பொறுந்தும்" முரளீதரன், "அப்படின்னா அந்த ஐ.பி.அட்ரெஸ் தமிழும் மராட்டியும் கலந்து இருக்கு. What do you say girls?" தோழிகள் இருவரும் தங்கள் கைபேசியில் தங்கள் காதலர்களை அழைத்தனர். அவர்கள் இருவரது கைபேசிகளும் எங்கேஜ்ட்டாக இருந்தன. முரளீதரன், "என்ன வ்ந்தனா, தீபா, அவங்க ரெண்டு பேர்ன்னு உனக்கு சந்தேகமா இருக்கா?" தீபா, "அவங்க ரெண்டு பேரும் அவங்க இல்லைன்னு ப்ரூவ் ப்ண்ணற வரைக்கும் அவங்க ரெண்டு பேர்தான்னு முடிவா இருக்கோம். God! I am going to kill him!!" முரளீதரன், "நீ என்ன சொல்றே வந்தனா?" வந்தனா, "முதலில் அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்" முரளீதரன், "நான் இப்பவே ஷானுக்கு ஃபோன் பண்ணி இந்த ஐ.பி.அட்ரெஸ்ஸை ஃபாக்ஸில் அனுப்பறேன். அவங்க ஃபிஸிகலா லொகேட் பண்ணட்டும்" தீபா தன் கணிணியில் இருந்து தலையை நிமிர்த்தி, "இல்லை சார். அந்த ஐ.பி.அட்ரெஸ் இப்போ உபயோகத்தில் இல்லை. எப்ப அவங்க சர்வர்லெஸ்ஸா மாத்தினாங்களோ அப்பவே நாம் யூகிச்ச மாதிரி அந்த ஐ.பி.அட்ரெஸ்ஸை சரண்டர் பண்ணி இருப்பாங்க" முரளீதரன், "சரி, அவங்க யாருக்கு வழங்கப் பட்டு இருந்ததுன்னு கண்டு பிடிக்கட்டும்"
தோழிகள் இருவரும் தங்கள் கைபேசியில் தங்கள் காதலர்களை அழைத்த வண்ணம் இருந்தனர். அவர்கள் இருவரது கைபேசிகளும் எங்கேஜ்ட்டாக இருந்த வண்ணம் இருந்தன. நித்தினும் சக்தியும் அப்போது காருக்குள் இருந்தபடி சற்று தூரத்தில் நடக்கவிருக்கும் அகோரத்தைப் பார்க்கவிருந்தனர்.

No comments:

Post a Comment