Tuesday 12 June 2012

அழகான காதலி




கதிரவன் மறைந்து சந்திரன் தன் அழகை இந்த உலகிற்கு காட்டி கொண்டிருக்க இரவு மணி 11 தை தாண்டியிருக்க எல்லோருடைய வீட்டிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள்.

 அந்த ஒரு வீட்டை தவிர ...

 கயல்விழி வீட்டு பாத்திரங்களை சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள்... எல்லாம் முடிந்து தூங்க சென்ற்வளுக்கு தூக்கம் வர வில்லை. காலையில் கோவிலில் நடந்த அந்த நிகழ்க்ச்சியே நினைவில் வந்து கொண்டிருந்து....

 யார் அவன்.....
மீண்டும் மீண்டும் நடந்த நினைவுகளே மனதில் வந்து கொண்டிருந்தது. கயல்விழி தனது குறைகளை கடவுளிடம் முறையிட்டு கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கே ஒரு குழந்தையின் சிரிப்பு சத்தம் அவளின் கவனத்தை திசை திருப்பியது. குழந்தை தனது அம்மாவிடம் விளையாடி கொண்டிருந்தது.manmathan-ambu.blogspot.com அதை பார்த்து கொண்டே வந்தவள். கீழே உள்ள படியை கவனிக்காமல் கால்களை வைக்கவும் கால்கள் தடுமாறி கீழே விழப்போனவளை ஒரு உருவம் தாங்கி பிடித்தது.

 அவனது கைகள் அவளது இடுப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள அவன் அவளை தாங்கி பிடித்து கீழே விழுந்தான். அவளது மார்புகள் அவன் மீது மோதி கொண்டிருக்க அவள் உதடும் இவன் உதடும் இணைபிரியா நண்பர்கள் போல இணைந்திருந்தது. அவளுக்கு மின்னல் தாக்கியது போல உணர்வு உண்டானது. அவள் உடனே அவனை விட்டு எழுந்தாள். பயத்தில் அவள் உதடுகள் துடித்து கொண்டேயிருந்தது. அவனும் எழுந்தான்.

 Sorry, என்னை மன்னிச்சுருங்க.. நீங்க கீழே விழ போனீங்க அதான் பிடிச்சேன்.... என்று அவளை பார்க்க அவள் சென்று கொண்டிருந்தாள்.
அவன் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 அலாரம் அதிகமாக சத்தம் எழுப்பி அவளது நினைவுகளையும், கனவுகளையும் கலைத்தது. அவள் மணியை பார்க்க அது 5-தை காட்டியது. அவள் எழுந்து வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

 சனியனே – னு உள்ளே இருந்து குரல் வந்தது. அது வேற யாருமில்லை அவளது சித்தி தான். அவளது அப்பாவிற்கு இரண்டாவது தாரம். அவளது பெயர் மாதவி.. அந்த மாதவி-யோ கோவலனை கண்ணகிடமிருந்து பிரித்தாள். ஆனால் இவளோ கயல்விழி-யின் அப்பாவையும், அம்மாவையும் அவளிடமிருந்து பிரித்தாள்.

 சனியனே என்ன பண்ணுற – என்று மறுபடியும் குரல் கொடுத்தவாறே வந்து கொண்டிருந்தாள் மாதவி..

 இல்ல சித்தி இட்லி வச்சுட்டு இருக்கேன்- கயல்விழி சொல்ல சீக்கிரம் ஆகட்டும் … கொடுங்கோல் மன்னன் போல கூறிவிட்டு சென்றாள். அவளும் எல்லாவற்றையும் சீக்கிரம் முடித்தவாறே… சித்தியிடம் கூறிவிட்டு குளிக்க சென்றாள்

 குளிக்கும் போது அவனது நினைவுகள் வரவே.. அவன் தொட்ட இடத்தை தடவி பார்த்தாள். அவளுக்கு அவன் கைகளே வந்து அவளது இடுப்பை, உதடுகளை, மார்புகளையும் தடவுவது மாதிரியிருக்கவே… அவள் பெண்ணாய் பிறந்ததிற்கு ஒரு அர்த்தம் கிடைத்தது போலிருந்தது.

சனியனே உள்ள என்ன பண்ணுற சீக்கிரம் வெளிய வா என்று – மாதவியின் குரல் கேட்க அப்பொழுதான் தான் எங்கே இருக்கிறோம் என்ற நினைவு வர.. பட பட வென்று குளித்து முடித்து வெளியே சென்றாள்.

 உள்ள என்னடி ப்ண்ணுற இவ்வளவு நேரமா நா கதவ தட்டிட்டு இருக்கிறேன் – மாதவி

 இல்ல சித்தி தண்ணி சத்தத்துல உள்ள ஒண்ணுமே கேக்கல என்று கூறிக்கொண்டே பாத்ரூமை விட்டு வெளியே சென்றாள்.
manmathan-ambu.blogspot.com
குளித்து முடித்து உடையை அணிந்து கோவிலுக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கும் போது அக்கா என்று உள்ளே இருந்து குரல் வ்ந்தது...

 அக்கா அக்கா Please-கா இன்னும் 10 Minutes wait பண்ணுக்கா.. அதுக்குள்ளே ரெடியாடுவேன்.... என்று சொல்லியவாறே குளியல் அறையை நோக்கி ஓடினாள். -- அவளது அன்பு தங்கை திவ்யா...

 இந்த வீட்டில் அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவள் மட்டும் தான்.... கயல்விழியும்manmathan-ambu.blogspot.com தலையில் பூவை வைத்துக்கொண்டு தனது பெற்றோர் படத்திற்கும் பூவை மாட்டி விட்டு தனது தங்கைக்காக காத்திருக்கும் போது அவனது நினைவு வந்தது..

 இன்றும் அவன் வருவானா....



 விஜய் விஜய் என்று கூப்பிட்டவாறே அவனது அம்மா ராணி அவனை அழைத்தவாறே அவனது அறைக்குள் சென்றாள். அங்கே அவன் தலையணை இருக்கி அணைத்தவாறே புலம்பிக்கொண்டிருந்தான்..

 ஹலோ உன்னுடைய பெயரென்ன .... Please சொல்லுமா .... உன் கண்களை வைச்சி பார்க்கும் போது ஏதோ கண் சம்மந்தமாதான் பெயர் இருக்கும்... நான் சொல்லுறது சரி தானே Please Please என்றவாறே புலம்பிக்கொண்டிருந்தவனை ராணி எழுப்பினாள்.

 டேய் எந்திருடா டேய் விஜய் எந்திருடா ..... அவனை தட்ட ...

 அவன் உடனே என்னம்மா எப்பம்மா வந்த என்று கேட்க

 ராணி சிரித்துக்கொண்டே இப்பதாம்பா ஆமா யார் கிட்ட பெயர் கேட்டுகிட்டு இருந்த என்று அவனை கேட்க

 அவன் திகைத்துக்கொண்டு உ.....னக்கு எப்படிமா தெடியும் என்று தனது அம்மாவை கேட்க

 ராணி சிரித்துக்கொண்டே அதான் நீ பொலம்புறது கேட்டுச்சே என்று கூற...

 அவன் வெட்கி தலை குனிந்த வாறே இல்லம்மா அது அது என்று இழுக்க.. அவனது உணர்வுகளை புரிந்து கொண்டவளாக சரி சரி நான் எதுவும் கேட்கல என்று நகர முயன்றவளை என்னம்மா இதுக்கு போய் கோபப்படுற... நான் அவளை என தொடங்கி கோவில் இருந்து இப்ப வரைக்கும் எல்லாவற்றையும் கூறி முடித்தான்....

 ராணி திகைத்துக்கொண்டே நீ எப்படா கோவிலுக்கு போன....

 நம்ம ராஜா இருக்காம்ல அவன் வந்து ஒரு பொண்ண காதலிக்கிறான். அதான் அவன் கூட நேத்து போனேன்

 ராணி சிரித்துக்கொண்டே அதுதானே பார்த்தேன் நீ கோவிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சுட்டுயோ ... ஆமா ராஜா Love வேற பண்ணுறானா .... நல்ல Friend-டா சரி சீக்கிரம் Ready- ஆகிட்டு வா..... அவள் சென்றாள்.

 அம்மா இவ்வளவு சீக்கிரம் தனது காதலுக்கு சம்மதம் கொடுப்பாள் என்று அவன் நினைக்கவில்லை.... அந்த மகிழ்ச்சியிலே சீக்கிரம் Ready-யாகிக் கொண்டிருக்கும் போது "அவள் வருவாளா" என்று பாடலை பாடியவாறே அவனது Mobile அவனை அழைக்க அதை எடுத்துப்பார்த்தான்.
 Raja Calling... என்று வர அதை ஆண் பண்ணி

 என்னடா என்று கேட்க

 டேய் சீக்கிரம் வாடா... உனக்காக அரை மணி நேரமா காத்திருக்கேன்....

 டேய் உண்மையை சொல்லு எனக்காக காத்திருக்கியா இல்ல அவளுக்காக காத்திருக்கியா

 சரி சீக்கிரம் வாடா.... என்று அவன் கூற

 இன்னும் கால் மணி நேரத்துல அங்க இருப்பேன் போதுமா என்று Phone-ஐ cut செய்தான்...

 பட பட என கோவிலுக்கு கிளம்பி கீழே சென்றான்... விஜய் இன்னைக்கு கம்பெனில மீட்டிங் இருக்குடா Manager இப்பதான் Phone பண்ணிணார். அதான் சீக்கிரம் இன்னைக்கு கம்பெனிக்கு போ - என்று அவனிடம் கூற அவன் அம்மாவை தயக்கத்தோடு பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக இப்ப நீ கோவிலுக்கு போ... அங்க உன் கடவுளின் தரிசனத்த பார்த்ததுக்கு அப்புறமா நீ கம்பெனிக்கு போ அவனை கிண்டல் செய்ய ....

 போம்மா என்று சிரித்தவாறே காரை நோக்கி சென்றான்.....

கோவிலின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு கோவிலை நோக்கி வேகமாக சென்றான்....இன்றும் அவளை தரிசிக்கும் ஆசையோடு


சித்தி நா கோவிலுக்கு போயிற்று வரேன் .... என்று கிளம்பியவளை அக்கா என்று குரல் தடுத்தது.

 அக்கா அக்கா Please - கா இன்னும் 5 நிமிடத்துல Ready ஆயிடுவேன். Please - கா கொஞ்சம் நேரம் Wait பண்ணுக்கா அக்காவின் பதிலுக்காக காத்திருந்தாள் அவளின் அன்பு தங்கை திவ்யா.

 சித்தியின் மகளாக இருந்தாலும் சித்தியை போல் இல்லாது தனது அக்காவிடம் மிகவும் பாசமாயிருந்தாள். கயல்விழியும் தனது தங்கை மேல் மிகவும் பாசம் வைத்திருந்தாள். இந்த வீட்டில் இவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

 சரி - என்றவுடன் பௌர்ண்மி போல அவளது முகம் பிரகாசமாய் ஆனது....உடனே அக்காவை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு என் அன்பு அக்கா என்று கூறிவிட்டு குளியல் அறைக்குள் வேகமாய் நுழைந்தாள் திவ்யா...

 தலையில் மல்லிகை பூவை வைத்துக்கொண்டு, மீதி இருந்த பூவில் தனது தங்கைக்கு வைத்துக்கொண்டு மீதியை தனது பெற்றோரின் புகைபடத்திற்கு மாட்டிவிட்டு தனது தங்கைக்காக காத்திருந்தாள்.

 காத்திருக்கும் போது நேற்றைய ஞாபகங்கள் வந்தன. கூடவே அவனும் வந்தான்,,,,,

 அவன் இன்றும் வருவானா...................

 அவள் அவனை நினைத்து கொண்டிருக்கும் போதே அக்கா என்று திவ்யா ஓடி வந்தாள். Sorry - க்கா Late ஆயிடுச்சா வாக்கா போகலாம் என்று கூறியவாறே தலையில் மல்லிகை சூடினாள் திவ்யா....

 ஆமா நேற்று வரல இன்னைக்கு மட்டும் என்ன விஷயம்

 இல்லக்கா நேற்று ரொம்ப அசதியா இருந்ததால தூங்கிட்டேன் அதான் நேற்று கோவிலுக்கு வர முடியல

 சரி சரி வா போகலாம் - என்று தங்கையை அழைத்து கொண்டு சென்றாள்.





 டேய் விஜய் குரல் கேட்க திரும்பினான் விஜய்... அங்கே ராஜா வந்து கொண்டிருந்தான்....

 என்னடா அவ வந்துட்டாளா

 இல்லடா - இப்ப வந்திடுவா கொஞ்சம் Wait பண்ணலாம் வா

 டேய் என்னடா இது என்று சலிப்பாய் கூறுவது போல் நடித்தான். ஏனென்றால் அவனும் அவளை பார்க்கத்தான் வந்திருக்கிறான்

 நீ கோவிலுக்கு வந்து இரண்டு நாள்தான் ஆச்சு அதுக்குள்ள என்னடா சலிப்பு இது ... நா அவள பார்க்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆக போகுது இன்னும் அவகிட்ட பேச முடியில நீ எதாவது Help பண்ணுவானு உன்னைய கூட்டிட்டு வந்தா

 சரிடா சரி. இல்ல நேத்துதான் அவ வரலையே நேற்று காத்திருந்து Waste - ஆ போச்சுல அதான் கேட்டேன்....

 இல்லடாmanmathan-ambu.blogspot.com அவ வழக்கமா கோவிலுக்கு வருவாடா... நேற்று எதுக்கு கோவிலுக்கு வரலனு தெரியில..... என்று கூறியவாறே திரும்பி பார்க்க அங்கே அவள் வந்துகொண்டிருந்தாள்...

 டேய் வந்துட்டாட ....

 எங்கடா

 அங்க பாரு நீல கலருல சுடிதார் போட்டுகிட்டு வாரா பாரு - உடனே விஜய் திரும்பி பார்க்க நடந்து வந்து கொண்டிருந்தாள் திவ்யா..கூடவே கயல்விழியும் நடந்து வந்து கொண்டிருந்தாள்..இவன் இமைக்க மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.....
அவளை பார்த்ததும் அவனுக்குள் ஏதோ மாற்றம்........ அவனது கால்கள் அவனை அறியாமலே அவளை நோக்கி சென்றது. சிறிது தூரம் நடந்து சென்றவன் அமைதியாக நின்று யோசித்தான். நேற்று தான் அவளை கோவிலில் பார்த்தேன் அதுக்குள்ளே அவளை சந்தித்து பேசினால் தன்னை தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது.... இப்பொழுதான் காதல் என்னும் கோட்டை தன் இதயத்தில் கட்டிக்கொண்டிருக்கும் போது அது இடிந்து விழுந்தால் ..... நானும் அல்லவா இடிந்து போவேன்.... திடிரென ஒரு idea அவனது மூளையில் உதிக்க ... மறுபடியும் அவளை நோக்கி நடந்தான்.... விஜய்..

 நண்பனின் செயல்கள் திடிரென வித்தியாசமாக தெரிய ராஜா குழப்பத்தில் திவ்யா - வை பார்பதை விட்டுவிட்டு அவனை பார்க்க ஆரம்பித்தான்.....

 டேய் விஜய் எங்கடா போற .......

 விஜய் திரும்பி ராஜாவை பார்த்து தனது கைகளை அசைத்து பொறுமை காக்குமாறு சைகை செய்து விட்டு அவளை நோக்கி நடந்தான்....

 விஜயின் செயல்கள் அவனை குழப்பத்தில் ஆழ்த்த ... எல்லாம் நலமாக நடக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினான்....

 ....


 நேற்று கோவிலின் சந்தித்த ஒருவன் தன்னை நோக்கி வருவதை அறிந்து கயல்விழி-க்கு சிறிது நடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் தன்னை நோக்கிதான் வருகிறானா என்ற சந்தேகமும் எழுந்தது.. அவனுக்கும் என் ஞாபகம் இருக்குமா.. இல்லையேல் சும்மாதான் வருகிறானா.... என்று குழப்பத்தில் நட்ந்தாள்..

 இவ்வுளவு நேரம் சிரித்து பேசி வந்த அக்கா.... திடிரென ஏன் மௌனமானாள்.... என்ற குழப்பத்தில் அக்காவை பார்த்தாள்.. திவ்யா

 என்னக்கா ஆச்சு... ஏன் திடிரென மௌனமாயிட்ட.....

 தனது தங்கையின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என அவள் குழம்பி தலையை குனிந்து நிற்க.. திடிரென ஒரு உருவம் தன் அருகே நிற்பது போல் உணர தலையை தூக்கி பார்த்தாள்... எதிரே விஜய் புன்னகையுடன் நிற்க.... கயல்விழிக்கு மயக்கம் வராத குறைதான் ....



 விஜய் கயல்விழியை தனது ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டு திவ்யாவிடம் திரும்பி

 ஹலோ உங்க கிட்ட பேசனும்....

 சொல்லுங்க.. -- திவ்யா கூற..... கயல்விழியோ அவன் எதை பற்றிக்கூற போகிறானோ என்ற பயத்தில் அவளது உடல் சிறிதாக நடுங்கியது

 அதை கவனித்துக்கொண்டு .... என் பெயர் விஜய்.. அங்கே நிற்கிறானே அவன் என்னுடைய நண்பன் அவன் பெயர் ராஜா .... அவனுக்கு இன்னைக்கு ஒரு கம்பெனில வேலை ஒன்னு கிடச்சிருக்கு.. அதுனால அவன் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட வந்தோம். வந்த இடத்துல என் செல் போன் தொலைந்து போச்சு... அவனும் செல் கொண்டு வரல.. அதான் நீங்க கொஞ்சம் உங்க செல்லுல என் நம்பரை டயல் பண்ணீங்கனா.. அது எங்க இருக்குனு தெரிஞ்சும்... நீங்க தப்பாக நினைக்கலனா Plese... -- விஜய் கூறி மிடித்து கயல்விழியை பார்க்க அவள் முகம் எதையோ இழந்தது போலிருந்தது...

 கயல்விழி தனது தங்கையை பார்த்து அவனுக்கு உதவி செய்யக்கூறினாள்....

 திவ்யாவும் தனது செல்போனிலிருந்து விஜயின் நம்பெரை டயல் செய்ய அது சிறிது தூரம் தள்ளி கீழே கிடந்தது.... அதை பார்த்த பின்புதான் அவள் முகம் அமைதியானதை விஜயால் உணர்ந்து கொள்ள முடிந்தது. உடனே செல்லின் அருகே சென்று அதனை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்து விட்டு அவர்களை நோக்கி சென்றான்..


 ராஜா அங்கே நடப்பவற்றை ஒரு இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்...


 விஜய் அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு திரும்பும் போது ஒரு நிமிடம் .... என்று குரல் கேட்க ... ஆனால் அது நிச்சயமாக திவ்யாவின் குரல்
 கிடையாது.. என தெரியவும்... அவனுக்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு சந்தோஜம்... ஆனால் அதை வெளிக்காட்டாமல் கயல்விழியை நோக்கி திரும்பினான்..


 நேத்து நீங்க செய்த உதவிக்கு நன்றி ... நேத்து நீங்க என்னை கீழே விழாமே காப்பாதினீங்க ... ஆனா நா உங்க் கிட்ட எதுவும் சொல்லாம போயிட்டேன்.. என்னை தப்பா நினைக்காதீங்க ... என்று அவனை கெஞ்சுவது போல் கூறவும்


 அவனுக்கு அவளை இழுத்து தனது மார்போடு அணைத்துக்கொள்ள வேண்டும் என தோன்றிய மனதை கட்டுபடுத்தி

 அதெல்லாம் ஒண்ணும்மில்லங்க நீங்க அதையே நினைத்து வருத்தப்படாதீங்க.... .மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து விட்டு தனது நண்பனை நோக்கி சென்றான்...
டேய் என்னடா ஆச்சு.... சீக்கிரம் சொல்லுடா... இல்லனா என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு..... என்று ராஜா விஜயை நச்சரிக்க..... விஜய் அவனிடம் நேற்று கயல்விழியை கோவிலில் பார்த்தது முதல் சற்று முன் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.....

 ஏண்டா இத முதலையே சொல்லல..... எங்கிட்ட கேட்டா நா சொல்லியிருப்பேன்ல ...... சரி விடு... அக்கா உனக்கு தங்கை எனக்கு..... ok வா.....

 டேய் அவ பெயர் என்னடா....

 யார் பெயர்டா அக்காவா இல்ல தங்கச்சி பெயரா.... எனக்கு என் ஆளு பெயர்தான் தெரியும்..... அவ பெயர் திவ்யா...

 சரி விடு.. நானே என் ஆளு பெயரை கண்டுபிடிக்கிறேன்.... என்று விஜய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் கையிலிருந்த செல்போன் குரல் எழுப்பியது.... அவன் யாரென்று பார்க்க அவன் கம்பெனி Manager.... அவன் Cell Phone - ஆன் பன்னி பேசி முடித்து விட்டு ..

 டேய் Manager தான் பேசினார். இன்னும் half hour - ல Meeting Start ஆயிடுமா... நான் கிளம்புறேன்.... சாய்ந்தரம் மீட் பன்னுவோம்.... என்று கூறி விட்டு கிளம்பினான்..
இங்கே இவ்வளவும் நடந்து கொண்டிருக்க... திவ்யா தனது அக்காவை கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தாள்.... யார் அவன் ... என்ன அவன் கிட்ட Sorry - யெல்லாம் கேட்ட... தனது அக்காவை கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள் திவ்யா....

 இனியும் தனது த்ங்கையிடம் மறைக்க எதுவுமில்லை - யென்று நேற்று கோவிலில் தான் கீழே விழ போனபோது முதல் இப்போது வரை திவ்யாவிடம் கூறி முடித்தாள் கயல்விழி..

 தனது அக்காவின் கையை பிடித்து LOVE STORY -- START - ஆயிடுச்சா....

 கயல்விழி தங்கையிடம் ...எனக்கும் ஆசை தான் .... ஆனா அவர் யார் என்ன பண்ணுறார்?.. அவருக்கும் என்னை பிடிக்குமா என ஒண்ணுமே தெரியாம எப்படி எனக்கு பயமாயிருக்கு.. அது மட்டுமில்லாம அவர பார்த்தா பணக்காரவீட்டு பிள்ள போலடிருக்கார்.... அதான் கயல்விழி கவலையுடன் கூற...

 தனது அக்காவின் கவலையை போக்குவத்ற்க்காக.... அவ்வுளவுதானே.... வாக்கா... இப்பயெல்லாம் Dress வச்சு நீ யாரையும் பணக்காரன் ஏழைனு கண்டுபிடிக்க முடியாது.... அவர பார்த்தா நல்லவரு போலதான் தெரியுது... அதுனால நீ கவலையெல்லாம் படாதே.... எல்லாம் நன்மைக்குனு எடுத்துக்கோ.... சரியா....

 திவ்யா கூறியவற்றை கேட்டு தனது குழப்பம் கலைவது போலிருக்கவும்.... தனது தங்கையிடம் ஒரு புன்னகையை செலுத்திவிட்டு... வா சித்தி தேடுவாங்க.... சீக்கிரம் போகலாம்... தனது தங்கை அழைத்து சென்றாள்...

 வீட்டிற்கு செல்லுவதற்கு முன் திவ்யாவிடம் எப்படியாவது ஒரு வேலைக்கு Ready பண்ண வேண்டுமென கேட்டுக்கொண்டாள்....கயல்விழிக்கு Type WRitting , சிறிது Computer பற்றியும் தெரியும் என்பதால்....திவ்யாவும் தலை அசைத்து விட்டு இருவரும் வீட்டிற்க்கு சென்றனர்...

 கயல்விழி எப்போதும் போல வீட்டிற்க்கு சென்றவுடன் பம்பரமாக சுழல தொடன்ங்கினாள்....


 அப்படியே ஒரு வாரம் கடந்து சென்றது......
இரவு 11 மணியிருக்கும்... திவ்யா.... எழுந்து தனது அக்காவின் அறையை நோக்கி சென்றாள்... கயல்விழி அப்பொழுதான் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தன் அறைக்குள் வ்ந்தாள். திவ்யா தன் அறைக்குள் இருப்பதை கண்ட கயல்விழி திவ்யாவிடம் என்ன என்பது போல் கையசைக்க....

 திவ்யா ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள்.... அதை வாங்கி பார்த்தாள். அது ஒரு கம்பெனியில் Interview- க்கான Application Form.... கயல்விழி திவ்யாவை பார்க்க.... இத Fill பன்னிட்டேன்... ஒரு கையெழுத்து போடனும் அதான்....பேனாவை நீட்ட... கயல்விழி கண்களிலிருந்து கண்ணீர் வந்தது... அக்காவின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை கண்ட திவ்யா ... என்னவென்று புரியாமல் அக்காவை பார்க்க... கயல்விழி திவ்யாவை அணைத்துக்கொண்டாள்... தனக்காக தூங்காமல் கஸ்டபடும் தங்கை நினைக்க... திவ்யாவும் புரிந்துகொண்டவளாக ...

 என்னக்கா... எனக்காக நீ எவ்வளவு பண்ணிருக்க.... அதான் ... சீக்கிரம் கையெழுத்த போடு.... அம்மா எழுந்திட போராங்க....

 கயல்விழியும் அதில் கையெழுத்தை போட்டு தங்கையிடம் கொடுத்தாள்.... சரிக்கா எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத... நிம்மதியா தூங்கு....
 GOOD NIGHT.... சொல்லியவாறே தனது அறையை நோக்கி சென்றாள் திவ்யா......

 திவ்யாவும் அதை மறு நாள்... Post செய்தாள்.....


 விஜயும் தனது வேலைகளை முடித்து ....அப்படா என சேயரில் சாய்ந்தான்.. அவனுக்கு அவளின் நினைவுகள் வந்தன.. அவளை பார்த்து ஒரு வாரம் ஆக போகுது.....அவள் என்னை பற்றி நினைப்பாளா.... என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே Manager உள்ளே வந்தார்...

 சார்... நம்ம கம்பெனில Interview-க்கு Apply பன்னி வச்சுருக்காங்க.... நீங்க பார்த்து யாரெல்லாம் Interview பண்ணலாமுனு சொன்னா .... அவ்வுங்களுக்கு Interview-க்கு வர சொல்லி Card போட்டுலாம்....

 சரி... நீங்க அநத File ல வச்சுட்டு போங்க... நான் பாத்துக்கிடுறேன்.....

 அவரும் எல்லா File-லையும் வைத்டுவிட்டுஸ் செல்ல ....

 விஜயும் ஒவ்வொன்றாக பார்த்தான்...... பார்த்து முடித்து விட்டு... ஒரு 10 பேரை Select செய்து .... Manager-ரிடம் கொடுக்க எழும்பும் போது ஒரு கவர் கீழே விழுந்தது... அதை எடுத்து பிரித்து பார்த்தான்.....

 பெயர்: கயல்விழி

 என்றிருந்தது... அதை பார்த்தவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு கூறியது இது அவளாகத்தான் இருக்குமென்று.... எல்லாம் நன்மைக்கே- யென்று அந்த பெயருக்கும் Interview- க்கு வர சொல்லி INTERVIEW CARD- அனுப்பக்கூறினான்....
மறு நாள் காலை சுமார் காலை 11 மணியிருக்கும் போது மாதவி வேகமாக உள்ளே வந்தாள்... வந்தவள் நேரே கயலை நோக்கி சென்றாள்...
 கையில் ஒரு Letter இருந்தது...

 என்னடி இது... அந்த Letter-ரை காட்டி கேட்டாள்.... மாதவி

 என்ன சித்தி ... எனக்கு தெரியாதே.... கயல் கூற

 மாதவியோ அவளை விடுவதாக தெரியவில்லை ... இத பாரு என்று தனது கையிலிருந்த அந்த கவரை கயலிடம் கொடுத்தாள் மாதவி...

 கயல் Letter-ரை பிரித்து படித்தாள்.. படித்தவளுக்கு வேலைக்கான விஷயம் புரிய சித்தியிடம் என்ன சொல்லுவது என திரு திருவென முழித்து கொண்டிருக்கும் போது வில்லனிடமிருந்து ஹிரோயினை காபாற்றும் ஹிரோ போல வந்தாள்... அவளின் தங்கை திவ்யா....

 என்னமா.... என்ன விஷயம் என திவ்யா கேட்க....

 கயல்விழியோ அந்த கவரை திவ்யாவிடம் நீட்ட அவளுக்கும் புரிந்து போனது.... அம்மாவின் கோபத்திற்கு காரணம்.... எப்படியும் ஒரு நாள் அம்மாவிற்கு தெரிய வரும் அதற்காக திவ்யாவும் ஏற்கனவே இதற்கு யோசித்து வைத்திருந்ததால்....

 என்னம்மா இதுக்கு போய் கோபப்படுற..... நீ தானே அன்னைக்கு சொன்ன பக்கத்து வீட்டு பரிமளம் புதுசா WASHING MACHINE வாங்கிருக்கா... எனக்கும் ஆசையாதானிருக்கு.. ஆனா எங்க வாங்குறது.... புலம்பிட்டு இருந்தல......

 எனக்கு படிப்பு முடிய இன்னும் 6 மாசம் இருக்கு... அதுனால இன்னால இப்போதைக்கு வேலைக்கு போக முடியாது... அக்கா மட்டும் இந்த வேலை கிடைச்சுதுனா மாசம் ஆனா 10,000 கிடைக்கும்... அப்புறம் நீங்க WASHING MACHINE என்ன CAR-ரே வாங்கலாம்.... என திவ்யா கூறவும் மாதவியும் யோசிக்க தொடங்கினாள்.....

 சரி சரி..... ஆனா அவ வேலைக்கு போனாலும் என் சொல்ல மதிச்சுதான் நடக்கனும்..

 கயல்விழியும் தலை அசைத்தாள்.....

 மாதவி உள்ளே போகவும் கயல்விழி திவ்யாவிடம்....

 எனக்கு பயமாயிருக்கு.... நாளை மறுனாள் INTERVIEW....

 அதெல்லாம் பயப்பிடாதிங்க அக்கா ... உங்களுக்கு இந்த வேலை கண்டிப்பா கிடைக்கும்..........

 ஆமா உனக்கு எப்ப Semester Leave முடியுது... இன்னும் 3 நாள்தான் இருக்கு.....

 கயல்விழியோ திவ்யாவிடம் ... எனக்கு கொஞ்சம்manmathan-ambu.blogspot.com பயமாதானிருக்கு.... சாய்ந்தரம் கோவிலுக்கு போகலாமா.....

 சரிக்கா.... போலாம்....
விஜய் தனது வேலையெல்லாம் முடித்து விட்டு வரும்போது மணி 4 ஆகி விட்டது... அவன் களைப்புடன் இருப்பது போலிருக்க ... ராணி

 என்னப்பா ஆச்சு ரொம்ப களைப்பாயிருக்க....

 இல்லம்மா... கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு அதான்....

 சரிப்பா நீ போய் குளிச்சிட்டு வா.... நாம கோவிலுக்கு போகலாம்.... சரிமா...

 இருவரும் கோவிலுக்கு சென்றனர்..... கோவிலின் மரத்தடி நிழலில் உக்காந்திருக்கும் போது விஜயின் போன் தனது ஒலி எழுப்பியது.....விஜய் தனது போனை எடுத்து பார்க்க ராஜா... கால் பண்ணியிருக்க....


 என்னடா..... எங்க இருக்க....

 டேய். நான் கோவில்ல தான் இருக்கேன்... நீ எங்கயிருக்க....

 நானும் கோவில்ல தான் இருக்கேன்...

 டேய் விஜய் என் ஆளும் உன் ஆளும் கோவிலுக்கு வ்ந்திருக்காங்கடா.....

 உண்மையாவா என கத்தி பேச....

 ராணி என்னடா.... ஆச்சு போன்ல யாரு..... என விசாரிக்க.....

 விஜய் ராஜா.... அவனும் கோவில்ல தான் இருக்கானாம்.... ' என்று கூறியவாறே ராஜாவிடம் எங்கடா இருக்காங்க.....

 ஒரு பெரிய ஆலமரம் இருக்குல அது பக்கத்துல தான் இருக்காங்க...

 டேய் அங்கதான் நானும் இருக்கேன்... என கூறியவாறே தனது கண்களை சுழல விட ... அங்கே பார்வைக்கு வந்தாள்.... கயல்விழி.... இன்று பேசுவதை மறந்து அவளை பார்த்து கொண்டிருந்தான்....

 ஆனால் கயல்விழியோ விஜயை இன்னும் பார்க்கவில்லை.....

 ராஜாவும் விஜயை பார்த்துவிட அவனை நோக்கி நடந்தான்...

 ராணியோ இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவன் திடிரென அமைதியாக நிற்பது புரியாமல் அவனை பார்க்க.... ஆனால் அவனின் பார்வையின் திசையோ வேறெங்கு இருக்க .... ராணியும் அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்தாள்.... அங்கே கயல்விழியும், திவ்யாவும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.... ராணிக்கு ஓரளவு புரிய ஆனால் இரண்டு பேரில் அவள் யார் என குழம்பி நிற்க....

 ராணி விஜயை அழைக்க ... அம்மாவின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தவன்... அதற்குள் ராஜாவும் வந்து விட ... விஜய் அம்மாவிடம் White Colour சுடிதார் போட்டுக்காளே அவதான் நான் அன்னைக்கு சொன்னனே அவள்தான்... பக்கத்துல இருக்காளே அவள் ராஜா ஆளு... எனக்கூற...

 ராணியோ விஜயிடம் இரண்டு பேரும் தேவதை மாதிரி இருக்காங்க..... கூற.....

 திவ்யாவும், கயல்விழியும் இவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது........
கயல்விழியும் கவிதாவும் தங்களை நோக்கி வருவதை கண்ட மூவரும் குழம்பி நிற்க ....... கயல்விழியும் கவிதாவும் இருவரும் அவர்களை விட்டு ஓரமாக சென்றனர்.. அவ்வாறு அவர்களை கடக்கும் போது கயல்விழி விஜயை பார்த்து விட்டாள்..... அருவரின் க்ண்களும் சந்தித்து மீண்டும் பிரிந்து கொண்டன.....

 ராணி சுதாரித்துக்கொண்டு "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" சும்மாவா சொன்னாங்க.... வாங்கப்பா போலாம்.... அவர்களும் நகர ஆரம்பித்தனர்.

 ஆனால் கயல்விழி மனதிலும் விஜயின் மனதிலும் ஒரே மாதிரியான போராட்டம் ஓடிக்கொண்டிருந்தது.... போராட்டம் முற்றி இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்க மீண்டும் இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன.... இதை அறியாத ராஜாவோ திவ்யாவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என திவ்யாவை பார்த்துக்கொண்டிருந்தான்....

 சூரியன் வழக்கம் போல் உதித்து தன் வேலையை தொடங்கியது.......

 கயல்விழியும் Interview-க்காக தயாராகிக்கொண்டிருந்தாள்..... அப்போது உள்ளேயிருந்து வந்த திவ்யா கயல்விழியை பார்த்து சீக்கிரம்க்கா அங்கே 10 மணிக்கு இருக்கனும்.. மணி இப்போதே 9.30 ஆயாச்சு....

 சரிமா கிளம்பிட்டேன்..... கயல்விழியும் தயாராகி வந்தாள்... தனது பெற்றோர் படத்திற்க்கு முன்னாடி நின்று அவர்களின் ஆசீரை பெற்றுக்கொண்டு தங்கையிடமும் , சித்தியிடமும் கூறிவிட்டு கிள்ம்பினாள்....

 இங்கே விஜயோ INTERVIEW-க்கு அவள் வருவாளா.... அந்த APPLICATION அவளுடையதுதானா..... அவள் வருவாளா என்று எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது... அவள் வரவில்லை...கயல்விழியென எந்த பெண்ணும் வரவில்லை..... INTERVIEW TIME - முடிய இன்னும் அரைமணி நேரமேயிருந்தது.....

 அவள் வரவேயில்லை......

 விஜய் களைத்து போய் ஏமாற்றத்தோடு வரவேற்பரையில் உக்காந்திருந்தான்......

 அப்போது ராஜா அங்கே வந்தான்....

 என்ன ஆச்சு..... இங்க வந்து உக்காந்து இருக்க .... ANY PROBLEM......
டேய் நான் தான் அன்னைக்கு உன் கிட்ட சொன்னேம்ல கயல்விழி பெயர்ல ஒரு APPLICATION வந்திருக்கு .... ஒருவேள அந்த பெயர் அவளா இருக்குமோனு.... அதான் அந்த பெயர்லயிருந்து யாராவது வருவாங்கனு பார்த்தேன்.... INTERVIEW முடிஞ்சு போச்சு இன்னும் யாரும் வரல... அதான் கொஞ்சம் வருத்தமாயிருக்கு......


 அத நினைச்சு வருத்தபடாத..... இங்க பாரு நா திவ்யா காதலிச்சு ஒரு வருடம் வர போகுது.... அதுக்கு போய்.... அய்யோ ஒரு வருடம் ஆகி போச்சேனு வ்ருத்தபடல ஏன்னா நா அவகிட்ட அப்பவே சொல்லியிருந்து அவ ஏத்துக்கிட்டாலோ இல்ல ஏத்துகிடனாலும் .... அது அப்பவே முடிஞ்சு போய்யிருக்கும்ம.... வெற்றி பெற்றா சந்தோசம்... இல்ல தோல்வியடைஞ்சா துக்கம்... அது அப்பவே முடிஞ்சு போய்யிருக்கும்..... இந்த அவளுக்காக காத்திருக்கிறது... அவ நம்மள பாக்கமாட்டாளுனு ஏங்க வைக்கிறது இது எல்லாம் கிடைக்காது......


 அதுனால இத நினைச்சு வருத்தபடாத.... அது அந்த பொண்ணு இல்லாம இருக்கலாம்... இல்ல LATE ஆயிருக்கலாம்.... கொஞ்சம் நேரம் Wait ப்ண்ணி பார்ப்போம்.... சரி நீ இங்கயிருந்து REST எடு... நா பாத்துகிறேன்.. என்று கூறிவிட்டு ராஜா உள்ளே சென்றான்...

 ராஜா கூறியதை விஜய் நினைத்து பார்த்தான்.. அவன் சொல்லுவது ஞாயம் போல தோன்றியது...... இருந்தாலும் சிறிது கவலையாக இருந்தது... அவன் பெரிதும் எதிர்பார்த்தான்... சரி வீட்டிற்கு போவோம்.. இங்கிருந்தால் அதே ஞாபகமாக இருக்கும்..... என எழும்ப முயலும் போதுதான் அங்கே அந்த பிரளயம் நடந்தது.....


 ஆமாம் அங்கே கயல்விழி வந்துக்கொண்டிருந்தாள்..... தேவதை போல....... இல்லை தேவதையே தோற்று போய்விடும் .....


 விஜயோ அவளையே மெய்ம்றந்தது பார்த்துக்கொண்டிருந்தான்.....


 அவள் வேகமாக படப்படப்போடு வ்ந்துக்கொண்டிருந்தாள்..... வந்தவள் விஜயை பார்க்கவும் .... அவளை அறியாமலே அவள் உதடு அவனை பார்த்து புன்னகை செய்த்து.. இருந்தாலும் சற்று பயமாக இருந்தது.... இவன் இங்கே என்ன செய்கிறான்....

 உள்ளே வந்தவள்.... அவனிடம் INTERVIEW-க்கு வந்திருக்கிங்களா..... அவனிடம் மெல்ல கேட்க.... அவனுக்கு என்ன சொல்லுவது என புரியவில்லை... அவனுக்கு பேச வார்த்தைகளும் மற்ந்து போயிருந்தன....

 அவள் அவன் பேசாமல் நிற்பதை கண்டு மறுபடியும் நீங்க INTERVIEW-க்கு வந்தீங்களா.... எல்லாம் முடிஞ்சு போச்சா... என்று அவள் வருத்தமாக கேக்கவும்.....

 அவன் சிறிது சமாளித்து கொண்டு ... இல்லங்க LUNCH போயிருக்காங்க.... நானும் அதான் WAIT பண்ணுறேன்..... நீங்க கவலை படாதீங்க..... என்று அவள் கவலையை குறைக்க....

 அவள் முகம் இப்போது பூவை போல மலர்ந்தது.... அவன் அவளிடம்....

 கொஞ்சம் WAIT பண்ணுங்க இப்ப வந்திருற.... என்று கூறியவாறே உள்ளே சென்றான்...


 உள்ளே சென்றவன்.... ராஜாவை அழைத்து நடந்த கதைகளை கூறி அவளை INTERVIEW-க்கு அழைக்கும் மாறு கூறிவிட்டு சென்றவன்... INTERVIEW நீ எடுக்க வேண்டாம் என்றும் ஏன்னா அவளுக்கு உன்னை தெரியும்.. அதான் ... முதலில் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு கயல்விழியை நோக்கி சென்றான்...

 ராஜாவும் அவன் கூறியது போல் எல்லாவற்றையும் செய்து முடித்தான்.....
விஜய் INTERVIEW முடிந்து வருவது போல் வந்து அவள் அருகே அமர்ந்தான்... அவள் படப்படபோடு அவனை பார்த்து

 அவங்க என்ன கேட்டாங்க..... என்று கேட்க

 நீங்க கவலை படாதீங்க ..... உங்கள வரச்சொன்னாங்க.....

 அவளை போகச்சொன்னான்.... அவள் படப்படபோடு உள்ளே சென்றாள்...

 சிறிது நேரம் கழித்து வந்தாள்..... வந்தவள் அவனிடம்

 வீட்டிற்க்கு LETTER போடுறதா சொன்னாங்க..... என்று கவலையோடு கூற ......

 நீங்க கவலைபடாதீங்க........ எல்லாம் நல்லாதா நடக்கும்..... வாங்க போகலாம்....

 ஆமா நீங்க ஏன் LATE-ஆ வந்தீங்க என்று கேட்க

 அவள் முகம் சற்றென மாறியது..... அவனை பார்த்து

 "இந்த பணக்காரங்களே இப்படிதான் அவங்களுக்கு அவங்க சந்தோசம்தான் முக்கியம் மத்தவங்கள பத்தி கவலையில்ல".... நான் INTERVIEW-க்கூ வருகிற வழியில ஒரு கார் வேகமாக வந்து வயசான பாட்டிமேல மோதிட்டு போய்..... கொஞ்ச்ம் தூரம் தாண்டி நின்னுச்சு... இறங்கி வந்தான் திமிரு பிடிச்ச ஒருத்தன்... அவன நினைச்சாலே கோபமா வருது... பணத்த அந்த பாட்டி மேல தூக்கி எறிஞ்சிட்டு.... HOSPITAL க்கு போ.... சொல்லிட்டு போய்ட்டான்...


 நான் தான் அவன் கொடுத்த பணத்த அங்கையே விட்டுட்டு அந்த பாட்டியை HOSPITAL கூட்டிட்டு போய்ட்டு வந்தேன்... அதான் LATE ஆயிடுச்சு.....



 விஜயைக்கு ஒன்று ம்ட்டும் புரிந்தது.... அவளுக்கு பணக்காரகளை பிடிக்க்வில்லை...... அவளை ஒரு ஆட்டோவில் ஏத்தி விட்டு அன்றை நிகழ்ச்சிகளை அசை போட்டவாறே வீட்டிற்க்கு சென்றான்....
அன்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டவாறே விஜய் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான்..... அவன் சோர்வாய் இருப்பது போல் உணரவே ஒரு குளியலை போட்டு விட்டு தன் அறைக்கு சென்று தூக்கத்தில் ஆழ்ந்தான்....

 ............



 கயல்விழி வீட்டிற்க்கு சென்றதும்.... திவ்யா திவ்யா என குரல் கொடுத்தவாறே தனது தங்கையை தேடினாள்..... அக்காவின் குரல் கேட்டதும் கிச்சனிலிருந்து ஓடி வந்தாள்.....

 என்னாச்சுக்கா ..... வேலை கிடைச்சுசா...... என ஆர்வாமாக கேட்டாள்.....

 கயல்விழியோ பதிலுக்கு சித்தி எங்கே எனக் கேட்க......

 அம்மா பக்கத்து வீட்டு பரிமளம் அக்கா வீட்டிற்க்கு போயிருக்கு .... அத விடு எனக்கு நீ பதில சொல்லு.... என திவ்யா அக்காவை நச்சரிக்க ஆரம்பிக்க....

 கயல்விழி ஒன்று விடாமல் அனைத்தையும் திவ்யாவிடம் கூறினாள்...... பேசிக்கொண்டிருக்கும் போது அவனை பற்றி பேசும் போது மட்டும் கயல்விழியின் முகம் பிராகாசமாவதை திவ்யா உணராமலில்லை....

 உடனேmanmathan-ambu.blogspot.comதிவ்யா சிரித்துக்கொண்டு

 ஓ அக்கா சூப்பர்க்கா.... 2 IN 1 - ஆ..... திவ்யா கேட்க..... அவளின் கேட்வி புரியாமல் தனது உதட்டை சுழித்து காட்டி எனக்கு புரியில... கொஞ்சம் புரியிறமாதிரி சொல்லு.... கயல்விழி கூற....

 வேலைக்கு வேலை.....ஆச்சு.... லவ் பண்ண லவ்வரும் கிடைச்சாச்சு.... அதும் ஒரே கம்பெனில....... அதான் 2 IN 1 - ஆ கேட்டேன்.....என திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே மாதவி வந்துக்கொண்டிருந்தாள்....

 வரும்போதே குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள்......

 என்னாச்சு வேலை கிடைச்சுசா..... சம்பள்ம் எவ்வளவு? என ஆவலோடு கேட்க……

 கயல்விழி திவ்யாவை பார்க்க….. உடனே திவ்யா ….

 வேலை கிடைச்சுமா….. ஆனா ஒரு வாரம் கழிச்சுதான் வரச்சொன்னாங்களாம்…. சம்பளம், வேலை எல்லாத்தை பத்தியும் அன்னைக்கு தான் சொல்லுவாங்களாம்……

 கண்டிப்பா சொல்லுவாங்கல……. மாதவி கேட்க

 கண்டிப்பா சொல்லுவாங்கமா….. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க….. கண்டிப்பா கிடைக்குமாம் அதுனால நீங்க ஒன்னும் கவலை படாதீங்க…..
இங்கே விஜய் தனது அம்மாவிடம் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கூறினான். ராணியும் கவனாமாக கேட்டுக்கொண்டே வந்தாள். ஏனென்றால் இது மகனின் வாழ்க்கை அல்லவா…….

 அப்ப ஒன்னு பண்ணு …. நாளைக்கு அந்த பொண்ணு வீட்டு ADDRESS - க்கு வேலைல JOIN பண்ணிக்க ஒரு LETTER போடு…. நீ அந்த பொண்ணு கிட்ட உன் காதல சொல்லுற வரைக்கும் நீ அந்த கம்பெனில ஒரு சாதாரண வேலையாள்…..

 எக்காரணத்த கொண்டும் நீ அந்த கம்பெனியோட முதலாளினு தெரிய கூடாது….. நேரம் வரும் போது சொல்லு… புரியுதா….. அவசர குடுக்கமாதிரி எதுவும் பண்ணி தொலைச்சுறாத……

 விஜய் தனது அம்மாவை பார்த்துக்கொண்டிருந்தான்…. தனக்குள் எழுந்த கேள்வியை தனது அம்மாவிடம் கேட்டு விட்டான்….

 ஏம்மா எல்லா பெற்றோரும் தன் பொண்ணோ அல்லது பையனோ காதல சொன்னா எதிர்பாங்க….. ஆனா நீங்க என்னடானா எனக்கு IDEA கொடுத்து இருக்கிறீங்க…..

 ராணி சிரித்துக்கொண்டே ….. எல்லா பெற்றோரும் தான் பிள்ளை பாத்திருக்கிறது நல்ல பொண்ணுதானா இல்ல நல்ல பையன் தானா ஒரு சந்தேகம் வரும்…. நம்ம பிள்ளைங்க வருங்காலத்துல கஷ்டபடாம சந்தோசமா இருக்கனும் ஒரே காரணத்தால அது சரியில்லப்பா சொல்லுவாங்க….. அல்லது எதிர்பாங்க….

 எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது…. நீ காதலிக்கிற பொண்ணு எப்படி இருக்குமோ….. பயமாதான் இருந்தது… ஆனா உன் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது… நம்ம பையன் எடுக்கிற முடிவு சரியாயிருக்கும்….. நீ அன்னைக்கு கோவில்ல அந்த பொண்ண காட்டுனல …. அப்ப எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சு போச்சு… காரணம் அழகு இல்லப்பா….என்னை பொருத்தவரை அழகு என்பது மனசுல தான் இருக்கனும்….அன்னைக்கு அந்த பொண்ணோட DRESSING SENSE - எனக்கு ரொம்ப பிடிச்சது… இப்பயெல்லாம் யார் கோவிலுக்கு சேரி கட்டிட்டு வாராங்க…

 நான் உனக்கு சொல்லுறது ஒன்னே ஒன்னுதான்…. நீ அந்த பொண்ணுட்ட எத விருப்பப்பட்டு லவ் பண்ணுறனு எனக்கு தெரியாது… ஆனா நீ அந்த பொண்ணோட மனசு பாத்து லவ் பண்ணு.. ஏம்னா அதுதான் கடைசி வர கூட இருக்கும்…..

 சரியா…. ரொம்ப பேசிட்டனா…. என ராணி கேட்க

 இல்லம்மா …. சரியாதான் பேசினீங்க….. உங்க நம்பிக்கை படியே நான் நடப்பேன்….


 விஜயும் அம்மா சொன்னவாறே அனைத்தையும் செய்து முடித்தான்….
போஸ்ட் மேன் லெட்டரை கொடுக்கவும்…. திவ்யா தான் அதை வாங்கினாள்.. பிரித்து பரித்தவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை…. ஆர்வத்தை அடக்க முடியாமல் கத்தி கொண்டே வந்தாள்…

 அக்காவுக்கு வேலை கிடைச்சிடுச்சி…… அக்காவுக்கு வேலை கிடைச்சிடுச்சி……

 கயல்விழிக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை… முதல் INTERVIEW-லையே வேலை கிடைத்து விட்டதே…..

 அப்போது தான் அவளுக்கு விஜயின் ஞாபகமும் வந்தது… அவருக்கும் வேலை கிடைத்திருக்குமா….. கிடைக்கவில்லையெனில் … அதை நினைக்கும் அவளுக்கு வேதனையாக இருந்தது….

 அக்காவின் முகவாட்டத்தை படித்தவாறு….. என்னக்கா என்ன ஆச்சு… இவ்வளவு நேரம் சந்தோசமாதானே இருந்த பின்ன என்ன…. திவ்யா கேட்க…

 கயல்விழி தனது கவலையை கூற

 அக்கா அதெல்லாம் அவருக்கு கண்டிப்பா கிடைச்சுருக்கும்…. நீ கவலப்படாதே…. என்னைக்கு வர சொல்லியிருக்கு என திவ்யா கேட்க….

 நாளை மறுநாள்

 அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே … மாதவி குரல் கொடுத்தவாறே வந்தாள்….

 என்னடி என்ன ஆச்சு….. ஏ இப்படி கத்துற….

 திவ்யா தனது அம்மாவிற்கு அனைத்து விஷயங்களை கூறி முடித்தாள்…..

 மாதவிக்கோ தலை கால் புரியவில்லை….. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள்… பக்கத்து வீட்டு பரிமளம் மாதிரி நாமளும் நினைச்சது எல்லாம் வாங்கலாம்..


 ஆனாலும் உள்ளே மாதவிக்கு பயமாகத்தான் இருந்தது. அவள் வேலைக்கு போனால் தன்னை மதிப்பாளா…. இல்லை சம்பளத்தை நம்மளிடம் தான் தருவாளா….


 அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தாலும்…. அவள் வேலைக்கு சென்றாலும் … எங்கு சென்றாலும் இங்கேதான் வந்து ஆக வேண்டும்… அப்பொழுது அவள் நம்ம பேச்சை கேட்டுதான் ஆகனும்… -- என மாதவியே அவளுக்கு அவள் சமாதானம் செய்து கொண்டாள்…..


 எப்படியோ எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்க….. வேலையில் சேர வேண்டிய நாளும் வந்த்து…. தனது பெற்றோர் படத்திற்க்கு முன்னால் நின்று அவர்களின் ஆசீர்வாததை பெற்றுக்கொண்டு தனது சித்தியிடமும், திவ்யாவிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள்….

 OFFICE - வளாகத்தை நெருங்க நெருங்க அவளுக்கு பயமாயிருந்தது… புது இடம் புது மனிதர்கள்…. எப்படியிருக்குமோ…. என பயந்துக்கொண்டே வந்தாள். இடையிடையே விஜயையும் எதிர்பார்த்தாள்…. ஆனால் அவன் மட்டும் இவள் கண்களுக்கு தென்படவேயில்லை….


 RECEPTION - லில் தனது APPOINTMENT ORDER-ரை கொடுத்து எங்கே போக வேண்டுமென கேட்டாள்…. அங்கே இருந்த பணிபெண் அவளை சிறிது நேரம் காத்திருக்கமாறு கூறிவிட்டு MANAGER - க்கு தகவல் அனுப்பினாள்….

 ஆனால் கயல்விழிக்கோ இன்னும் அவன் ஏன் வரவில்லை …. அவள் மனம் பல கேள்விகளை எழுப்பியது…. அவளுடைய கண்கள் அவனை பார்க்க துடித்துக்கொண்டிருந்தது… அவள் விஜயை தேடிக்கொண்டிருக்கும் போதே RECEPTION - லிருந்த பணிப்பெண்…. அவளிடம் சென்று அவளை MANAGER - ROOM - ற்க்கு போக சொல்லி அவளுக்கு வழியை காட்ட…. கயல்விழியும் MANAGER ROOM - ற்க்கு சென்றாள்.
 ஆனால் அவள் மனம் மட்டும் விஜயை மட்டுமே தேடியது….

 கயல்விழி அவனை நினைத்துக்கொண்டே MANAGER ROOM அருகே வந்து விட்டாள்…

 கதவை தட்டி …. EXCUSE ME SIR… MAY I COME IN…. அவள் அனுமதி கேட்க….

 YES… COME IN… உள்ளேயிருந்து குரல் வர

 கதவை திறந்து உள்ளே சென்றாள் கயல்விழி.. சென்றவளின் கண்கள் அகலாமாக விரிந்தன….

 உள்ளே உக்காந்திருந்தான் விஜய்…. உதட்டில் புன்னகையை உதிர விட்டு…..

 SIT DOWN… PLEASE….

 அவள் அவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்….

 விஜய் மறுபடியும்…. HELLO… PLEASE TAKE UR SEATS….. எனக் கூற…. அப்பொழுதான் நினைவு வந்தவளாக ….

 நீங்க தான் MANAGER - ரா….. கயல்விழி கேட்க…..

 விஜய் சிரித்துக்கொண்டு ஏன் என்னை பார்த்தா MANAGER மாதிரி தெரியிலையா….

 இல்ல … அன்னைக்கு எங்கூடத்தானே INTERVIEW ATTEND பண்ணிங்கே … பின்ன எப்படி..

 நான் INTERVIEW ATTEND பண்ணுனது MANAGER POST - க்கு போதுமா….இப்ப உங்க DOUBT CLEAR ஆயிடுச்சா…. வேலைக்கு போகலாமா…. என விஜய் சிரித்துக்கொண்டு கேட்க அவன் சிரிப்பதையே பார்த்துகொண்டு தலை அசைத்தாள்….

 உங்களுடைய வேலை ....என்னோட PERSONAL SECRETARY …..
விஜய் சொன்னதை கேட்டு கய்விழி திரு திரு வென முழிக்க .... விஜய் லேசாக புன்னகைத்து

 இப்போதைக்கு நாம் போய் மத்த STAFF - கிட்ட போய் உங்கள அறிமுகப்படுத்தனும்..... வாங்க போகலாம் .. மத்தத அப்புறம் வந்து சொல்லிக்கொடுக்கிறேன்... இப்போதைக்கு வாங்க நாம போகலாம்

 என அவளை கூட்டிச்சென்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் .... அவளுடைய முகத்தை பார்த்தவனுக்கு அவள் பயந்தது போல் இருக்கவும்

 பயப்படாதீங்க .... நா இப்ப உங்களுக்கு இந்த கம்பெனி ப்த்தியும், உங்க வேலையப்பதியும் சொல்லப்போற கவனமா கேட்டுட்டு வாங்க என்ன DOUBT நாலும் கேளுங்க .... சரியா .... என்று கூறி தனது கம்பெனியை பற்றியும் அவளுடைய வேலையை பற்றியும் கவனமாகவும் அவளுக்கு எளிதில் புரியவும் கூறினான்.

 ஆனால் அவளோ அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ..... அவளின் முழு கவனமும் அவன் மேலே இருந்தது .... இடையிடையே அவள் கவனமாக கேட்டாலும் அவனின் சிறு புன்னகையும் அவனின் பேச்சும் அவளை ஈர்த்தது ....

 அவன் எல்லாவற்றையும் தெளிவாக கூறி முடித்து அவளை பார்த்து புரிந்ததா என கேட்க .... அப்போதுதான் அவளுக்கு புரிந்தது எதையும் அவள் கவனமாக கேட்கவில்லையென்று .. அவனை பார்த்து மன்னிப்பு கூறும் விதமாக முகத்தை காட்டி மனதுக்குள் அவனிடம் ஸோஓறி எனக் கேட்க அதற்கு விஜயோ அவளிடம்

 SORRY - யெல்லாம் வேண்டாம்.... போக போக சரியாகி விடும் ..... சொல்லி முடிக்கவும்

 கயல்விழியின் கண்கள் ஆச்சரியத்தில் பெரியதாக மாறியது ..... நான் நினைத்தது இவனுக்கு எப்படி கேட்டது .... ஒரு வேளை நான் வெளிப்படையாக தான் சாரி கேட்டனா என அவள் குழப்பத்தில் இருக்க

 விஜயோ அவளின் மனதை அறியாமல் LUNCH- க்கு என்ன கொண்டு வந்தீங்க எனக்கேட்க

 ஆனால் அவளோ அவன் கேட்டதை காதில் வாங்கவேயில்லை .... அவனுக்கு நான் நினைத்தது எப்படி கேட்டது ...... ஒரு வேளை நான் வயால் தான் சாரி கேட்டனா ..... என அவள் குழப்பம் மிகுந்த கவலையில்யிருக்க

 அவள் முகததை பார்த்த அவனுக்கு அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என புரிந்து .....

 என்ன ஆச்சு கயல்விழி .... ஏன் ஒருமாதிரி ஆயிட்டீங்க .... LUNCH எடுத்துட்டு வரலையா ..... ஏன் ஒருமாரிடி இருக்கீங்க .... என அவன் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க

 அவளோ பதில் சொல்ல முடயாமல் அவனையே பார்த்துக்கொண்டுடிருந்தாள்..... அவனிடமே கேட்டு விடலாமா இல்லை கேட்டால் தவறாக நினைப்பானா என அவள் அவனை பார்தது திரு திரு வென முழிக்க

 என்ன கயல் LUNCH கொண்டுவரலியா ... பரவாயில்லை என்னுடன் SHARE - பண்ணுனாலும் பண்ணுங்க ... இல்ல நம்ம SECURITY-கிட்ட கொடுத்து வாங்கிடலாம் .....

 கயல்விழி சுதாரித்துக்கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள் .... ஆனால் அவளுள் எழுந்த கேள்விக்கு மட்டும் விடையே கிடைக்கவில்லை ...... அவனிடம்manmathan-ambu.blogspot.com கூறிக்கொண்டு தனது இருக்கைக்கு வந்தாள்.

 விஜய்க்கோ கயல்விழி ஏன் திடிரென மவுனமானாள் என புரியவில்லை ....

 அப்போழுது ராஜா அங்கே வந்தான்... டேய் விஜய் என்ன பண்ணுற வா சாப்பிட போகலாம் .... கயல்விழி ராஜாவை பார்க்க விஜய் சுதாரித்து கொண்டு அன்னைக்கு கோவில்ல நான் சொன்னேன்முல அவன் இவன்தான்... பெயர் ராஜா .....

 கயல்விழி அவனை பார்த்து புன்னகைத்து வணக்கம் கூறினாள் .... ராஜாவும் பதிலுக்கு வண்க்கத்தை தெரிவிக்க .... விஜய் SECURITY-யிடம் சொல்லி ஒரு சாப்பாடு கயலுக்கு வாங்க சொல்லி விட்டு ராஜாவும் விஜயும் சாப்பிட செல்ல முன் அவளை பர்த்து .

 STAFF - எல்லோரும் 1 ம்ணிக்கு LUNCH போவாங்க ... நீங்க அவங்க கூட போங்க OK வா ....

 அவள் தலையசைக்க ....

 இருவரும் சாப்பிட கிளம்பினர் ..... கயல்விழியும் சாப்பிட சென்றாள். எல்லோரும் அவளிடம் சென்று விசாரித்தனர்... எல்லோரும் நன்றாக பழகினர்.

 அப்படியே ஒரு 2 மாதங்கள் ஓடியது ...... கயல்விழி ஆரம்பத்தில் சிறு சிறு தவறுகள் செய்தாலும் .... உடனே சரி செய்து கொண்டாள்..... எல்லோரிடமும் பழகவும் ஆரம்பித்து விட்டாள் ... விஜயும் அவள் மனதறிந்து அவளிடம் நடந்து கொண்டான்.... இருவருக்கும் அவரவர் மனதறிந்து செயல்பட்டனர்.
ஒரு நாள்

 ராஜா விஜய்யிடம் வந்து டேய் உன் லவ் OK ஆயிடுச்சி ... எனக்கு ஏதாவது HELP பண்ணுடா ..... அவள பார்த்து ஒரு வாரம் ஆச்சுடா .... PLEASE - டா

 அத்றகு விஜயோ அதுதெது அமையெனுடா .... சரி இன்னைக்கு கோவிலுக்கு போவியா .....

 ஆமாடா ..... ஏன் கேட்குற

 ஏதாவது பண்ணி உனக்கு HELP பண்ணத்தான் .......

 THANKS டா ... நான் 5.30 மணிக்கு போவேன் ... நீ எப்ப வருவ .....

 நான் அதே நேரம் வர TRY பண்ணுறேன்..... OK வா

 சரி டா நான் கிள்ம்புறேன் .... சீக்கிரம் வந்துரு ..... எனக் கூறிக்கொண்டு ராஜா கிளம்பினான். விஜயோ இவனுக்கு என்ன பண்ணுலாம் என யோசித்துக்கொண்டிருந்தான்....


 மாலையும் வந்தது.... திவ்யா மட்டும் தனியாக வந்தாள் ... ராஜா எப்பவும் போல சரியா வந்து விட்டான் ... ஆனால் விஜயோ இன்னும் வரவில்லை .... அவனுக்கு காத்திருந்தவனுக்கு பின்னால் யாரோ தன்னை அழைப்பதாக தோன்ற திரும்பி பார்த்தான்...

 அங்கே தேவதையின் தங்கை திவ்யா நின்று கொண்டுயிருந்தாள். அவனையே அவனால் நம்ப முடியாமல் அவளுக்கு தெரியாமல் தன் கையை கிள்ளி பார்த்தான். வலித்தது. அவளே தான் ..... அவன் ஏன் தன்னை கூப்பிட்டாள் .... என புரியாமல் அவளை குழப்பத்துடன் பார்க்க ....

 அவன் பார்வையின் அர்த்ததை புரிந்து கொண்டவளாக

 இல்லங்க ... அங்கே வயசான பாட்டி ஒன்னு மயங்கி கீழே விழுந்துட்டாங்க ... அவங்கள HOSPITAL - கூப்பிட்டு போகனும் .... கொஞ்சம் HELP பண்ணிறங்களா ...

 இதுதான் கடவுள் தனக்கு அந்த பாட்டி மூலம் உதவுகிறார் போல. வாங்க போகலாம்... எங்கே அந்த பாட்டி என அவளிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டே போனான்...

 இருவரும் அந்த பட்டியை HOSPITAL - லுக்கு அழைத்து சென்று .... பாட்டி மயக்கத்திலிருந்து தெளிய .... பாட்டி இவர்கள் இருவரையும் பார்த்து மனனிறைவுடன் நன்றி தெரிவித்தாள்....

 நீங்க இரண்டு பேரும் எந்த நோய் நொடி இல்லாம .... நிறைய குழ்ந்தைகளை பெற்று 100 வுருஷம் சந்தோசமா வாழனும்.... அந்த பாட்டி இவர்களை தம்பதியினர் என நினைத்து கூற ...

 திவ்யாவோ இல்ல பாட்டி எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல... இனிமேதான் ..... அவரு என்னுடைய FRIEND....

 ராஜாவோ அவள் சொல்லுவத்ற்க்கு தலையசைத்தான் ... ஏனென்றால் அவன் இங்கே இல்லை ..... அவன் வானில் மித்ந்து கொண்டிருந்தான் ..... திவ்யா கூரிய வர்த்தைகளை கேட்டு " எங்களுக்கு கல்யாணம் இனிமேதான்"

 சரி பாட்டி நீங்க REST - எடுங்க ... நாங்க உங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டோம் .. அவங்க வந்திட்டே இருக்காங்க ..... என திவ்யா சொல்லி முடிப்பதற்க்குள் அந்த பாட்டியின் குடும்பம் வந்தது.... அந்த குடும்பம் அவர்கள் இருவருக்கும் நன்றி கூறியது. இருவரும் அவர்களிடமிருந்து விடை பெற்று HOSPITAL - லை விடு வெளியே வந்தனர்.

 திவ்யா ராஜா - வை பார்த்து சினேகமாய் ஒரு புன்னகை உதித்து .... ரொம்ப நன்றி ... நீங்க வரலனா ரொம்ப கஷ்டமாய் போயிருக்கும் ... ம்றுபடியும் ரொம்ப நன்றி....

 நான் திவ்யா .... நீங்க அவனை பார்த்து கேட்க

 ராஜா ... அவன் கூற

 யாருக்கு என அவள் அவனை கிண்டல் அடித்தாள்....உதட்டை கடித்து கொண்டாள் ... SORRY - ங்க நா இப்படிதான் டக்குனு பேசிடுவேன் .....பெயர் நல்ல இருக்கு ... அப்ப சரி நான வரட்டுமா ... ரொம்ப நேரமாயிடுச்சி.... என அவள் கூற

 அவன் தலை மட்டும் அசைந்தது

 அவள் அவனுக்கு ஒரு புன்னகையை உதித்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தாள் ....

 ராஜாவுக்கு அவனிடமிருந்து யாரோ அவன் உயிரை பிரித்து செல்லுவது போல் தோன்றவே ..... அவன் கண்களிலிருந்து சந்தோசம் கலந்த கண்ணீர் வந்தது... மகிழ்ச்சியுடன் தனது வீட்டிற்க்கு கிளம்பினான.
மறுநாள் நேற்று நடந்த விஷயத்தை விஜயிடம் தெரிவித்தான் ராஜா. விஜயால் நம்ப முடியவில்லை. எப்படிடா ..... ஆச்சிரியத்தில் கேட்க ...

 நேத்து நீதானே சொன்ன ... எல்லாம் தானா நடக்கும்னு ... அதான் எனக்கு அந்த பாட்டி மூலம் அது நடந்திருக்க்கு... எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கு..நேத்து இரவு முழுசும் நான் தூங்கவே இல்லை... அதையே நினைச்சு பார்த்திட்டேயிருந்தேன்.....

 சந்தோசமாய் இருக்குடா .... நான் கவலை பட்டுட்டு இருந்தேன். உனக்கும் ஒரு வழி சீக்கிரம் உண்டாகனும் .... என இருவரும் சந்தோசத்தை மாறி மாறி பகிர்ந்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாய் COMPANY- க்கு கிளம்பினர்.

 ஆனால் இவர்கள் ஒன்று நினைக்க விதி வேறுரொன்று நினைத்தது.......

 விஜய் கம்பெனிக்கு சென்று தனது அறைக்கு சென்றான். ஆனால் அங்கே கயல்விழியை காணும் ..... உடனே அவளை பற்றி விசாரி க்க... MANAGER - வந்து தகவல் கூறினார் ....

 SIR இன்னைக்கு கயல்விழி LEAVE.... இப்பதான் PHONE பண்ணி சொன்னாங்க .... அவங்கள பொண்ணு பார்க்க வராங்களாம்.....

 இதை கேட்டதும் தலையே வெடித்து விடும் அளவிற்க்கு ஆத்திரமும் , அழுகையும் வந்தது... உடனடியாக அருகிலிருந்த MANAGER-ரை போக சொல்லிவிட்டு க்ஹாஈற்-லில் அமர்ந்தான்.

 அவன் மீதே அவனுக்கு கோவம் வந்த்து.... அப்போதே காதலை கூறியிருக்க வேண்டியதுதானே என தானே தன் மீது நெருப்பை கொட்டுவது போலிருந்தது.
 அவளுக்கு போன் பண்ணலாமா.... வேண்டாமா .... என யோசித்து கொண்டிருக்கும் போதே ராஜா வந்தான் ....

 என்னடா தலையில கைய வச்சி உக்காந்து இருக்க ... என்ன ஆச்சு ....

 விஜய் அவனிடம் எல்லாவற்றையும் கூற....

 என்னடா இதுக்கு போய் தலையில கையை வச்சி உக்காந்து இருக்க .... பொண்ணு தானே பார்க்க வாராங்க ... விடு ... அவ நாளைக்கு வரும் போது கேட்டு தெரிஞ்ச்சுக்கலாம்... பொண்ணு பார்க்க வந்தா உடனே எல்லாம் நடந்திடுமா.... பொண்ணுக்கு பையனை பிடிக்கனும் ... பையனுக்கு பொண்ணை பிடிக்கனும்.. அதெல்லாம் ஒன்னும் நடக்காது ... நீ தயரியமா இரு ... என்று ராஜா அவனுக்கு ஆருதல் சொன்னாலும் அவனுக்கும் சிறு பயமாதான் இருந்தது.

 இங்கே இப்படி நடந்து கொண்டிருக்க ...... கயல்விழி வீட்டில் கயல்விழிக்கு ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்த்து... சித்தி அவளுக்கே தெரியாமல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த்தாள்....

 கயல்விழிக்கு ஒன்றுமே புரியவில்லை... பயமும், அழுகையும் சேர்ந்து வந்தது... உதவிக்கு தங்கை கூட இல்லையே. அவள் கல்லூரி சென்று விட்டாள். அவளுக்கு எப்படி தகவல் சொல்லுவது .... அவளால் மட்டுமே இந்த கரியத்தை நிறுத்த முடியும்... என்ன செய்ய யோசித்து கொண்டிருந்தவளுக்கு நேரம் ஆக ஆக உடல் தளர்ச்சியுற்றது.... விஜயைக்கு கால் பண்ணலாமா யோசிக்கும் போதே சித்தி வந்தாள்.

 என்னடி இப்படி உக்காந்து இருக்க ..... இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோரும் இங்கே வந்திருவாங்க .... இந்த புடவையை கட்டிட்டு வா .... கோபமாகா கூறினாள்.

 இல்ல சித்தி என்னக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் சித்தி... PLEASE சித்தி.. அவளுக்கு கண்களிலிருந்து கண்ணீராக வந்தது.... ஆனால் மாதவியோ அதை எல்லாம் பொருப்படுத்தாமல்

 சீக்கிரம் ரெடி ஆகிடி.... இப்ப வந்துருவாங்க .... என சொல்லிக்கொண்டிருக்கும் போதே பொண்ணை பார்க்க அனைவரும் வந்து விட்டனர்....

 மாதவியோ அவர்களை கவனிக்க சென்று விட்டாள்... கயல்விழிக்கு அழுகையாய் வந்த்து. சித்தியை மீறி அவளால் ஒன்றுமே செய்ய முடியாது என அவளுக்கு தெரியும்... அவளுக்கு என்ன செய்ய எனதெரியாமல் அவள் பெற்றோரின் புகைபடத்துக்கு முன்னால் நின்று தன்னை காப்பாத்து மாறு வேண்டினாள்.

 அதே நேரம் மாதவி உள்ளே வந்தாள்...

 என்னடி பண்ணிட்டு இருக்க சீக்கிரம் ரெடியாகு இல்ல என்ன செய்வேனு என்னகே தெரியாது ... அவளை மிரட்ட கயல்விழி மிகவும் பயந்து போனாள்...
 வேறு வழியில்லாமல் புடவையை கட்டிக்கொண்டு வந்தாள்.
எல்லோருக்கும் கயல்விழியை பிடித்து விட..... அடுத்த மாதம் கல்யணத்தை வைத்துக்கொள்ளலாம்... என பேசிக்கொண்டிருக்கும் போது "கயல்விழி" என அந்த வீடே அதிர்ர மாதிரி சத்தம் கேட்க எல்லோரும் சத்தம் வந்த வழியை நோக்கினர். அங்கே விஜய் அதிர்ச்சியோடும் , கண்களில் கோபத்தோடும் நின்று கொண்டிருந்தான். விஜயை பார்த்த கயல்விழிக்கு எங்கேயிருந்து அவ்வளவு தையிரியம் வந்தது என தெரியவில்லை ....

 "விஜய்" எனக் கத்தி கொண்டே விஜயை நோக்கி ஓடினாள்... அவனை இறுக்கி அணைத்து கொண்டு அவன் கைக்குள்ளே அடங்கி போனாள். இதை பார்த்த அனைவரும் சிலை போல் நின்றன்ர். மாதவி பெரும் அதிர்ச்சியோடு அவற்றை பார்த்து கொண்டிருந்தாள். பின்னர் சுதாரித்து கொண்டு

 ஏய் நாயே என அந்த தெருவே அதிர்ர மாதிரி கத்தினாள்....

 அதை கேட்ட கயல்விழி சுய உணர்வுக்கு வந்தாள்... அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டாள். அவளின் உடம்பு நடுங்கி கொண்டிருந்த்து. அவளின் பயத்தை போக்குமாறு அவளை கையை பிடித்து விஜய்

 நான் பாத்துகிறேன்... என கூறிக்கொண்டு மாதவியை நோக்கி போனான்.

 பெண் பார்க்க வந்தவர்களை பார்த்து... யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.... நாங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறோம்... அது தெரியாம அவங்க இந்த ஏற்பாடு பண்ணிட்டாங்க.... அவங்க சார்பா நான் எல்லோர்கிட்டையும் மன்னிப்பு கேட்குறேன்.... PLEASE யரும் தப்பா நினைக்காதீங்க ....

 அவர்களில் ஒரு பெரியவ்ர் கோபமாகத்தான் இருக்கு தம்பி.... என்ன பண்ண .... எல்லோர்கிட்டையும் தப்பு இருக்கு.... இது இப்பவாச்சும் தெரிஞ்ச்சேனு சந்தோசமாய் இருக்கு... இல்லாட்ட பின்னாடி எல்லாருக்கும் கஷ்டம்.... எங்களுக்கு எங்க பையனோட வாழ்க்கை தான் முக்கியம்.... அந்த பெரியவர் மாதவியை பார்த்து பொண்ணோட மனசுக்கும் முக்கியத்துவம் கொடுங்க... நீங்க செய்ய நினைச்ச தப்பால உங்க பொண்ணு மட்டும் இல்ல.. எங்க பையனின் வாழ்க்கையும் தான் கேள்விகுறியாயிருக்கும்.... இனியாவது இப்படி நடக்காதீங்க.....

 பெரியவர் : சரிப்பா சரி எங்க ஆசீவாதம் உங்களுக்கு உண்டு.... மனசு இரண்டும் ஒன்னு சேர்ந்தா அத யாரும் பிரிக்க கூடாது தம்பி... நல்லா இருங்க ... நாங்க வரோம். என அவர் பெருந்தன்மையாக சொல்லிக்கொண்டு கிளம்பினர்....

 இப்போதைக்கு மூவர் மட்டுமே இருந்தனர். அதற்க்குள் விஷயம் கேட்டு திவ்யாவும் வர... கயல்விழி திவ்யாவை பார்த்ததும் ஓடி அவள் திவ்யாவை தோள்ளில் சாய்ந்து அழுதே விட்டாள்... அவள் அப்படி அழவும் திவ்யாவிற்க்கு என்ன சொல்லுவ்தென்றே புரியவில்லை.... சரிக்கா விடு. அதான் இப்ப எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதுல .... என சொல்லிக்கொண்டிருக்கும் போதே கயல்விழியின் துணிமணி அடங்கிய பெட்டியும் அவள் பெற்றோரின் புகைபடமும் வெளியே வந்து விழுந்தது....

 அதை கேட்டு மூவரும் மாதவியை பார்க்க அவளோ கொலை வெறியில் இருந்தாள்.... திவ்யா அம்மாவிடம் எல்லாம் உங்க தப்புதான் அக்ககிட்ட ஒருவார்த்தை கூட, அக்கவை விடுங்க என் கிட்டையாவது சொல்லியிருக்குலாம்ல.... எனக்கூற

 மாதவியே பேய் பிடித்தது போல் கத்தினாள்... திவ்யாவே மிரண்டு போய் பயத்துடன் அம்மாவை பார்த்தாள்....

 அவ இனி இங்க இருக்ககூடாது.... அவ இனி இங்க இருக்ககூடாது.... அவள போகச்சொல்லு .... என மாதவி பேய் பிடித்த மாதிரி கத்தினாள்... விஜய்தான் சுதாரித்து கொண்டு சரிமா அவ இனி இங்க இருக்க மாட்டா .... நாங்க வரோம்... என கூறி கயல்விழியை பார்க்க கயல்விழியோ தனது தங்கையை பார்த்தாள்....

 திவ்யாதான் அவர் சொல்லுறது CORRECT- க்கா... நீ இப்ப கிளம்பு... கொஞ்ச நாள் ஆகட்டும்... நான் அம்மாகிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன்... நீ கிளம்புக்கா ... நான் எல்லாத்தையும் பாத்துகிறேன்... என அவள் கூற கயல்விழி திவ்யாவிடம் கூறிக்கொண்டு தனது சித்தியை பார்க்க முடியாமல் விஜயை நோக்கி சென்றாள்.

 விஜயும் அவளை அழைத்து கொண்டு திவ்யாவிற்க்கு நன்றி தெரிவித்து விட்டு கிழம்பினான்.... அவன் காரின் START -பண்ணி அவளை அழைத்து கொண்டு வீடு திரும்பினான்.... அவன் வரும்போதே ராணிக்கு எல்லா தகவலையும் கூறி முடித்தான்... ஆனால் கயல்விழியோ ரொம்ப தளர்ச்சியோடு இருந்தாள்... அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். இருவரும் எதுவுமே பேசவில்லை. கார் வீட்டை அடைந்ததும் ராணி ஆர்த்தியோடு நின்று கொண்டிருந்தாள். ராணி ஆர்த்தி எடுக்கவும் கயல்விழிக்கு அழுகையாய் வந்தது... அதை ராணி பார்க்கவும் நீ ஒன்னும் கவல படாதேமா... எல்லாம் நல்ல படியா நடக்கும்...

 ராணி விஜய் பார்த்து கயல்விழியை அவனுடைய ROOM - மிற்க்கு கூட்டிட்டு போக சொன்னாள். அவனும் அவளை தன்னுடைய ROOM - மிற்க்கு கூட்டிட்டு போனான். உள்ளே சென்றதும் கயல்விழி விஜயை இறுக்கி அணைத்து கொண்டு அழுது விட்டாள். அவள் அழவும் பதறி போய்

 என்னமா இது .. அழதேமா PLEASE... அம்மா சொன்னாங்கள எல்லாம் நல்ல படியா நடக்கும்... PLEASE - மா அழாதே...

 ஆனால் கயல்விழிக்கு அழுகை குறையே வில்லை. இன்னும் அழுகை அதிகமானது. அவனும் வேறு வழியில்லமல் அவள் முதுகை தட்டி கொடுத்து கொண்டிருந்தான்.. சிறிது நேரம் கழித்து... கயல்விழி அவனை பார்த்து

 இல்லங்க... நா ரொம்ப கனவுகளோடு இருந்தேன்... என்னோட கல்யாணம் எல்லோருக்கும் மகிழ்ச்சியாவும், சந்தோசமாவும் இருக்கனும்... ஆனா இப்படி ஆயிடுச்சேமா எனக்கு கவலையா இருக்கு. இது நால என் தங்கை கல்யாணத்துக்கு ஏதாவது பிரச்சனை ஆகிடுமோனு எனக்கு கவலையாயிருக்கு.... திவ்யா தனியா எப்படி கஷட படுறளோ. சித்தி நினைச்சாதான் எனக்கு பயமாவும் இருக்கு. எனக் கூறி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

 நீ ஒன்னும் கவலப்படாதே... நா எல்லாத்தையும் பாத்துக்கிறேன்... நீ படுத்து REST - எடு. நான் இப்ப வறேன். அவள் அவனை பார்த்தாள்... அவள் பார்வையின் அர்த்ததை புரிந்து கொண்டு ... இதையும் உன் வீடு நினைச்சுக்கோ... கவலை படாமா REST - எடு .. எனக்கூறி அவள் நெற்றியில் மென்மையாக முத்தத்தை பரிசு அளித்து விட்டு சென்றான்... அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

 விஜய் வெளியே வந்து ராஜாவுக்கு கால் பண்ணி அனைத்து விஷயங்களையும் கூறினான்... அதை கேட்டு ராஜா அதிர்ச்சி அடைந்தாலும்

 எப்படா கல்யாணம்... ராஜா கேட்க

 இப்போதைக்கு இல்லடா .. அவ ரொம்ப கவலையா இருக்கா... இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு முடிவு வரட்டும். அப்போதைக்கு பாக்கலாம்.. நீ இப்போதைக்கு எனக்கு ஒரு HELP பண்ணு.. நேரே கயல்விழி - வீட்டுக்கு போய் இப்ப அங்க என்ன நிலவரம்னு பார்த்துட்டு அப்படியே திவ்யா கிட்ட என்னுடைய வீட்டு ADDRESS - கொடுத்துட்டு வா..

 டேய் எப்படிடா ... அங்க உள்ளவங்க என்னை யாரு கேட்டா ... நீ திவ்யா கிட்ட மட்டும் உண்மையை சொல்லு... OK வா.. எதவது IDEA பண்ணிட்டு போ .. சொதப்பிறாதே

 சரி டா. அவன் கூறி காலை கட் செய்தான்.....
ராஜா என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கும் போதே திடிரென ஒரு எண்ணம் உதிக்க அதை நிறைவேற்ற சீக்கிரம் கயல்விழி வீட்டை நோக்கி புறப்பட்டான்..

 ராஜா கயல்விழி வீடு இருக்கும் பகுதி சென்றான்.. வீட்டின் அருகே சென்ற போது தான் அவனுள் சிறு பயம் உண்டானது... எப்படி சமாளிக்க போறோம் என பயந்து கொண்டே வீட்டின் அருகே சென்று கதவை தட்டினான்...

 யாரது என உள்ளேயிருந்து சத்தமாக கொடுத்த வாறே மாதவி வரவும்... அவள் தோற்றத்தை பார்க்கும் போது தமிழ் பட வில்லி கதாபாத்திரத்திற்க்கு பொருந்துவது போல் இருந்தது. இதை பார்த்த ராஜா பயந்து போனான்... இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்

 நான் ICICI BANK-ல யிருந்து வரேன்... இங்கே யாருக்காவது LOAN வேண்டுமா... என ராஜா கேட்கவும்....

 இதை கேட்ட மாதவி

 ஏற்கனவே கயல்விழி மேல்யிருந்த கோவத்தை அடக்கி வைத்தவள். அதற்க்கு ஒரு வாய்க்கால் கிடைத்த மாதிரி இருக்கவும்... எல்லா கோவத்தையும் அவன் மேல் காட்டினாள். ராஜா என்ன சொல்லுவது என திரு திரு என முழித்து கொண்டிருந்தான்... அப்போது தான் சத்தம் கேட்டு அங்கே வந்தவள் .... அங்கே அம்மா ஒருவனை திட்டி கொண்டிருப்பதை பார்த்து யார் என பார்க்க அருகே சென்றாள்....

 திவ்யா அருகே வருவதை கண்ட அவன் மனம் மகிழ்ச்சியாய் இருந்தாலும்.... அவள் அம்மாவின் வார்த்தைகளால் அவன் முகம் மிகவும் கலையிழந்து போய்யிருந்தது...

 அருகே சென்றவளுக்கு அவனை பார்த்ததும்.... அன்றைக்கு கோவிலில் HELP செய்தவர்ல.. என அவனின் ஞாபகம் வரவும்... அவள் அம்மா அருகே சென்று என்னம்மா இது என்ன கேட்டாறு நீ இப்படி திட்டுற ... எல்லாரும் இங்க தான் பார்த்துட்டு இருக்காங்க.... போம்மா உள்ளே என திவ்யா சொல்லவும் ..... மாதவி அவனை முறைத்து கொண்டு உள்ளே சென்றாள்...

 அவன் அவளை பார்க்கவும்..... அவள் SORRY-ங்க அம்மா சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறேன்..... என்ன விஷயமா வந்தீங்க.... என அவள் கேட்கவும்....

 அதை கூற இந்த இடம் சரியானது இல்லை என உண்ர்ந்த ராஜா .... அவளை பார்த்து....

 நான் உங்க அக்காவ பத்தி பேச வந்தேன்... அவங்க தான் என்னை இங்க அனுப்பினாங்க... உங்க கிட்ட பேசனும் கொஞ்ச நேரம் கோவிலுக்கு வருவீங்களா என அவன் கேட்கவும்....

 அவள் அவனை பார்த்து புன்னகை செய்து .... என்னால இப்ப வர முடியாது.... நீங்க எனக்காக கொஞ்ச நேரம் காத்திருப்பீங்களா..... என அவள் கேட்கவும்....

 ராஜா அவன் மனதினுள்

 "நீ காத்திருக்க சொன்னால் .... ஐந்து நிமிடங்கள் என்ன ஐந்து ஜென்மம் உனக்காக காத்திருப்பேன்"

 என நினைத்து கொண்டே அவளிடமிருந்து விடை பெற்றான்...
விஜய் கீழே வந்து அவன் அம்மா அருகே அமரவும் .... அவள் என்ன நடந்தது என தெளிவா சொல்லு... போன்ல சொன்னது ஒன்னும் எனக்கு சரியா புரியல... ராணி கூறவும் விஜய் எல்லாவற்றையும் விளக்கமாக கூறவும்..... அதை கேட்ட ராணி நீ எப்படி அங்கே போன

 ராஜா என்ன சமாதனம் பண்ண அவன் என்னதான் கூறினாலும் எனக்கு பயமாதான் இருந்தது.... சரி அங்கே போய் என்னதான் நடக்கும் பாப்போம் நினைச்சுட்டு போனேன். ஏனா கயல்விழி பத்தி எனக்கு தெரிஞ்ச வர அவ சித்திக்கு ரொம்ப பயப்படுவானு... அதான் அவ சித்தி ஏதாவது ஏறபாடு செய்றதுக்குள்ளே போய் ஏதாவது பண்ணலாம் என நினைச்சுட்டு அவளோட ADDRESS- ச அவளோட BIO- DATA - ல இருந்து எடுத்துட்டு போனேன்.

 அவள் வீட்டு பக்கத்துல கார் BARKING பண்ணிட்டு அவ வீட்டுக்குள்ளே போனா அங்க எல்லாரும் எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சு போச்சு பேசிட்டுயிருந்தாங்க... எனக்கு ஒண்ணுமே புரியல... அந்த ஆத்திரத்துல கத்திட்டேன்.... திரும்பி பார்த்தவ என்னை வந்து கட்டி புடிச்சு அழுதுட்டா..... அப்பதான் அவளும் என்னை விரும்பியிருக்கானு புரிஞ்சுச்சு....

 சரி அப்புறம் எல்லார்கிட்டையும் பேசி அவங்கள அனுப்புறதுக்குள்ள போதும் என ஆயிடுச்சி... ஆனா அவங்க சித்தி தான் ... ரொம்ப கோபத்துல இருந்தாங்க.... அவ தங்கச்சி தான் வந்து நான் அம்மாவ சமாதானம் செய்து வைக்கிறேன்.. நீ இப்போதைக்கு கிளம்பு.... என எங்க இரண்டு பேரையும் அனுப்பி வச்சா...

 அதான் இப்ப அங்க என்ன நிலவரமும் பார்க்க ராஜா-வ அனுப்பியிருக்கேன்....

 இதை கேட்டு கொண்டிருந்த ராணி....

 சரி எல்லாம் நன்மைக்கு தாண்டா.... என நினைச்சுக்கோ...... ஆமா பொண்ணு பேரு என்னது கயல்விழி தானே
 ஆமா - என விஜய் தலையசைக்க

 கயல்விழி இனி கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம்....அங்க போனா எல்லாரும் என்ன ஆச்சு கேட்டு அந்த புள்ளைய நோகடிச்சுடுவாங்க..... அதான் கொஞ்ச நாள் போகட்டும்.... நீ அந்த பொண்ணோட தங்கச்சியும் பாத்து பேசு.... சரியா...... கயல்விழிய என்னோட ROOM-ல தங்க வை.... ராணி கூற

 விஜய் அம்மாவை பார்த்து....

 அம்மா நான் செய்த்து தப்பா என கேட்க.....

 இல்லப்பா .... நீங்க லவ் பண்ணிறீங்கனா அத முதலேயே சொல்லிடுங்க.... அப்பதான் நாளைக்கு எதாவது பிரச்சனை இல்லாம இருக்கும்.... இப்ப நான் உனக்கு இதே பாதிரி ஒரு பொண்ண பார்க்க கூட்டிட்டு போய் அங்க இதே மாதிரி நடந்தா எனக்கு எப்படி இருக்கும்....

 அதுனால நீங்க முதலேயே சொல்லியிருந்தா இது எல்லாம் நடந்திருக்காது... அத விடு ... இப்போதைக்கு அத விடு ... நடக்க வேண்டியத பாறு.... என கூறி விட்டு உள்ளே சென்றாள்...
ராஜா கோவிலின் உள்ளே வழக்கம் போல் காத்திருக்கும் இடத்திலே காத்திருந்தான்..... அவளின் நினைவுகள் அவனை சூழ்ந்துயிருக்க கண்மூடி அவளை ரசித்து கொண்டிருந்தான்... அப்போது ஹலோ என குரல் அவனின் நினைவுகளை கலைக்க ... கண்ணை திறந்து பார்த்தவனுக்கு வானத்தில் இருக்கும் தேவதை நேரே இறங்கி வந்து அவனிடம் பேசுவது போலிருக்கவும் மெய் மறந்து அவளை பார்த்தான்...

 திவ்யா மறுபடியும் ஹலோ என கூறவும் ....

 தன்னை சமாளித்து கொண்டு..... அவளை பார்த்து .... தன்னை நம்பி வந்தற்க்கு நன்றியை தெரிவித்து கொண்டு... தனது நண்பன் விஜயை பற்றியும் கயல்விழி கூறியதை பற்றியும் கூறி முடித்தான்...

 அவள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டு நீங்க கவலை படாதீங்க.... விஜய் அங்கள நல்லா பாத்துப்பான்.... இது தான் அவன் வீட்டு ADDRESS. AND PHONE NUMBER. நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்.. அது உங்க வீடு மாதிரி கவலை படாதீங்க....

 அது இல்லங்க.... எங்க அக்கா ரொம்ப பாவங்க... சின்ன வயசுலேயே அம்மாவை இழ்ந்து. அப்புறம் எங்க அம்மாவின் கொடுமையில வாழ்ந்து வந்து இப்பதான் அதுக்கு ஒரு விடிவு காலம் கிடைச்சுருக்கு நினைக்குறேன்.... திவ்யா பேச்சுக்கு ஒரு தடவை அக்கா அக்கா என கூறவும் அவளின் பாசத்தை எண்ணி அவளின் வேதனை குறைக்கும் விதமாக அவளின் கைகயை பிடித்து அவனின் கைகுள்ளே வைத்து அவளை ஆறுதல் படுத்தினான்....

 இதை எதிர்பார்க்காத திவ்யா.... அவனின் கண்களை பார்க்க... அவன் கண்களிலிருந்த அவனின் அக்கறை அவளின் வேதனை குறைக்க அவளும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் ராஜா அவள் என்ன நினைப்பாளோ என நினைத்து அவளது கைகளை தளர்த்தினான்... அவளிடம் தனது செல் நம்பரை கொடுத்து விட்டு ஏதாவது உதவி என்றால் கேட்குமாறு கூறி விட்டு... அவளை நாளைக்கு வீட்டிற்க்கு வருமாறு அழைத்து விட்டு நீங்க கிளம்புங்க... உங்க அம்மா உங்கள தேடுவாங்க....

 அவள் அவனுக்கு தனது நன்றியை தெரிவித்து விட்டு கிள்ம்பினாள்..... அவள் போகும் போது அவனை திரும்பி பார்த்து உங்க பேரு ராஜாதானே என கேட்கவும்.... அவன் அவளை பார்த்து தலையசைக்க

 அவள் அவனை பார்த்து "நீங்க நிஜமாகவே ராஜாதான்" என கூறி விட்டு அவனை பார்த்து புன்னகையை உதிர விட்டு சென்றாள்....

 அவளின் திடிர் தாக்குதலால் அவனின் மனம் அவனை விட்டு பிரிந்து நானும் அவள் கூடவே செல்கிறேன் என அவன் கூட சண்டை போட்டது.... அவன் அவள் செல்லுவதையே பார்த்து கொண்டிருந்தான்.

ராஜா திவ்யா செல்வதையே பார்த்துகொண்டிருந்தான்.. பின்னர் சிறிது நேரம் களித்து விஜய்க்கு கால் பண்ணினான். நடந்தவற்றை கூறினான்.

 விஜய் ராஜாவிடம் டேய் கொஞ்சம் பொறுமையா இரு… அவசரப்பட்டு நீ அவகிட்ட உன் காதல சொல்லிராத…. ஏனா இப்பதான் ஒரு பிரச்சனை தொடங்கியிருக்கு… அதான் நேரம் வரும் போது சொல்லிக்கலாம்…

 சரி டா… கயல்விழி என்ன பண்ணுறா…. என ராஜா கேட்க

 அவ இன்னும் தூங்கிட்டு தான் இருக்க்கா…..

 சரி… கயல்விழி எழும்புனதும் எல்லாத்தையும் சொல்லு…. திவ்யா நாளைக்கு அவள பார்க்க வரானு சொல்லு… நானும் நாளைக்கு வரேன். - என கூறி தனது போனை துண்டித்தான்… ராஜா…

 விஜய் அந்த செய்தியை கயல்விழியிடம் சொல்ல போகும் போது ராணி அவனிடம் அந்த புள்ளைய அழைச்சுட்டு வா… எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்….

 அவனும் அது சரியென உணர்ந்து சரிமா….. என்றவாறே கயல்விழியை பார்க்க சென்றான்.

 அங்கே கயல்விழி சிறு பிள்ளை போல் கால்களை மடக்கி தலையணை இறுக்கி அணைத்து கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். அவளீன் முகம் தாமரையை போல விரிந்து பிரகாசமாய் இருக்க….அவளின் உதட்டில் சிறு புன்னகை உதிர்ந்து கொண்டிருந்த்து.

 அவளை எழுப்ப மனம் இல்லாமல் அவளின் அருகே சென்று அமர்ந்து அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

 திடிரென முழிப்பு வந்து கயல்விழி கண்களை திறக்க அவன் அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்… அவனை பார்த்து எழும்ப முயற்ச்சிக்க அவன் அவளை பார்த்து புன்னகை செய்து அவளை நகர விடாமல் அவளின் தலையை எடுத்து அவனின் மடி மீது வைத்து அவளின் தலையை வருடினான்.

 அவளின் முகத்தை காதலாக பார்த்துகொண்டிருந்தான்.. அவனின் பார்வையின் கனம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டாள்…. விஜய் அவளின் முகத்திலிருந்த ஒருவித வெட்கம் அவனை என்னவோ பண்ண…. அவன் அவளின் இதழ்களை நோக்கி குனிந்தான்…

 அவனின் உதடுகள் அவளின் உதடுகளை மென்னையாய் கவ்வியிருக்க… கயல்விழிக்கோ அவனின் இந்த திடிர் தாக்குதலில் அவள் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அவளுக்கு திடிரென இரக்கைகள் முழைத்து அவள் வானத்தில் பறப்பது போல் இருக்க…. அவளின் சந்தோசத்தை அவனை இறுக்கி அணைத்து வெளிப்படுத்தினாள்….

 விஜய் தனது பணியை செம்மையாக சீறும் சிறப்புமாக செய்து முடித்து அவளை பார்க்க…. அவளோ அவனை பார்க்க முடியாமல் அவனின் மார்பில் முகத்தை வைத்து அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்… விஜய் அவளின் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தத்தை உதிர்த்து வா போய் சாப்பிடலாம். என்று அழைக்க

 அவளோ அவனை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவனை விட்டு விலகி அவனை பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றாள்…

 விஜய் அவளின் கையை பிடித்து இழுத்து அவளின் தோள்களை பிடித்து அவளின் முகத்தை நிமிர்த்தி அவளை தன் நெஞ்சோடு அணைத்து அவளின் உதட்டில் சிறு அன்பளிப்பை வழங்கி விட்டு

 கயல் என அவளை அழைக்க

 அவள் அவனை பார்க்க

 விஜய் அவள் கண்களை பார்த்த வாறே

 I LOVE YOU…. கயல் என கூறினான்..

கயல்விழி அவனை காதல் பொங்க பார்த்தாள். அவனை இறுக்கி அணைத்து கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளை அறியாமலே அவளுக்கு கண்ணீர் வந்தது... அவளின் கண்ணீரை பார்த்த விஜய்க்கு ஏதோ ஆக....அவளின் கண்ணீரை துடைத்து .... கண்களில் கண்ணீர் வந்ததற்க்கு தண்டனையாக அதற்க்கு ஒரு முத்தத்தை கொடுத்து ... இனி உன் கண்களிலிருந்து எதற்காகவும் கண்ணீர் வரக்கூடாது....

 நீ போய் FACE WASH பண்ணிட்டு வா.... நாம சாப்பிடலாம்... கீழே அம்மா WAIT-பண்ணிட்டு இருப்பாங்க.... என விஜய் அவளிடம் கூறிக்கொண்டு கீழே சென்றான்.
அவனின் வார்த்தைகள் அவளுக்கு ஏதோ ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் வரவழைத்தது. அவனை நினைத்து கொண்டே FACE WASH பண்ண குளியல் அறைக்கு சென்றவள்... முகத்தை கழுகும் போது அவன் கொடுத்த முத்தம் அவளின் உதட்டில் இனிக்க அவளின் முகம் குங்குமம் போல சிவந்தது... அவளை அறியாமலே அவளின் கைகள் உதட்டினை தடவி பார்த்தன.

 அவனின் நினைவுகள் அவளை ஏதோ பண்ண அவளின் உடம்பில் ஏதோ பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்க்கு முன்பு இது போல் அவள் அனுபவித்தது இல்லை... அதன் காரணமாக அந்த சுகத்திலே அவள் கிரங்கி போனாள்... நேரம் ஆக அவளுக்காக கீழே காத்திருப்பதாக சொன்ன ஞாபகம் வர.... அவசரமாக முகத்தை கழுவிக்கொண்டு கீழே சென்றாள்..

 அங்கே ராணியும், விஜயும் மட்டும் சாப்பாடு மேசையில் உக்காந்து இருந்தனர். கீழே இறங்கி வரும் போதுதான் அவள் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை உண்ர்ந்தாள். மிக பெரிய வீடு.... எல்லாம் மிக உயர்ந்த வேலைபாடுகளுடன் அந்த வீடே ஜொலித்தது... ஆனால் அந்த வீட்டில் அவர்கள் இரண்டு பேர் மட்டும் தான் இருந்தனர். அவனுக்கு வேறு யாரும் கிடையாதா என கேள்வி எழுந்தாலும் பின்னர் கேட்டு கொள்ளலாம் என நினைத்து கொண்டு விஜயின் அருகே போய் நின்றாள்....

 அதை பார்த்த ராணி... இதையும் உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ... கூச்சப்படாம உக்காருமா....

 கயல்விழியும் அவன் அருகே இருந்த நாற்காலியில் உக்காந்தாள்... விஜய் அவளுக்கு தட்டில் உணவை எடுத்து வைக்க .... அவள் சாப்பிடாமல் கையை பிசைந்து கொண்டிருந்தாள்.. அதை பார்த்த ராணி என்னம்மா சாப்பிடமா உக்காந்து இருக்க

 எனக்கு என் தங்கை ஞாபகம் வந்திடிச்சி... அவளும் நானும் தான் எப்போதும் சேர்ந்து சாப்பிடுவோம்... அதான் இப்ப அவ என்ன பண்ணிட்டு இருக்காளோ.... என அவள் கண்களில் கண்ணீர் வடிய

 அதை கண்ட விஜய்... அழாதமா... நீ சாப்பிடு உனக்கு நான் ஒரு சந்தோசமான விஷயத்தை சொல்லுறேன்... அவள் அவனை பார்க்க ...அவன் குழந்தைக்கு சொல்லுவது போல் நீ முதல சாப்பிடு அப்பதான் சொல்லுவேன்...

 அவளும் அவன் பேச்சுக்கு கட்டுபட்டு சாப்பிட தொடங்கினாள்... எல்லோரும் சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் ராணி சுத்தம் செய்ய போன போது கயல்விழி ராணி பார்த்து

 அம்மா இதெல்லாம் நான் பாத்துகிறேன்... நீங்க போங்க என அவள் கூற

 இல்லம்மா...கொஞ்ச நாள் போகட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்.. நீ ஏற்கனவே ரொம்ப அசதியாய் இருக்க.... நீ போமா என ராணி கூற

 என்னம்மா இது... இப்பதானே சொன்னீங்க.. இதையும் உன் வீடு மாதிரி நினைச்சுக்கோனு... இப்ப என்னடானா என்னை ஒரு விருந்தாளி மாதிரி நடத்துறீங்க... என்னையும் உங்க பொண்ணா நினைங்க... என கயல் கூற

 அவளின் சொல்லில் இருந்த கரிசனம் ராணிக்கு ஏதோ பண்ண... கயல்விழி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு உன்னுடைய மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்மா... உன்னை அன்னைக்கு கோவில் பார்த்த போதே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு.... நீ நல்லா இருப்பாம்மா என கூறிக்கொண்டு கண்களில் நீரோடு சென்றாள்...

 கயல்விழிக்கும் கண்களில் தண்ணீர் பெருகி அதே நேரம் விஜயும் வர... அவனை ஓடி சென்று அணைத்துக்கொண்டு அழுது விட்டாள்... அவளின் அழுகைக்கு காரணம் புரியாமல் என்னம்மா இது இப்பதானே சொன்னேன்.. நீ எதுக்குமே அழ கூடாதுனு.... என கூறி அவளது முதுகை மென்மையாக வருட...

 அவள் அவனிடம் நடந்தவற்றை கூற... இதுக்கு போய் எதுக்கு அழுகுற... என கூற

 என்னோட 6-வது வயசுல என்னுடைய அம்மா இறந்துட்டாங்க..... அப்புறம் என் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் கழுச்சி திவ்யா பிறந்தா... அப்ப என் சித்தி அவள கொஞ்சும் போது எனக்கும் ஆசையாய் இருக்கும்.... அப்புறம் அப்பாவும் இறந்து போக .. அப்பாவுக்கு சொந்தமாக இருந்த வீடு மட்டும்தான்... அதை என் பெயரிலும் , திவ்யா பெயரிலும் எழுதி வைச்சுட்டு செத்து போய்ட்டாங்க...

 அது தெடிஞ்ச சித்தி என்ன ஒரு அடிமை மாதிரி நடத்துனாங்க... எனக்கு அந்த வீட்டில் இருக்கும் ஒரே ஆதரவு என் தங்கை மட்டும் தான்... சின்ன வயசுலே இருந்து பாசத்துக்கு ஏங்கியிருக்க... இப்ப உங்க அம்மா அப்படி நடந்த உடனே எனக்கு அழுகை வந்திடுச்சி... என அணைப்பிலிருந்து மீளாமலே சொல்லி முடித்தாள்...

 எல்லாவற்றையும் கேட்ட விஜய்... அவளின் முகத்தை தூக்கி அவளின் உதட்டில் சிறு முத்தத்தை வழங்கி விட்டு... அதான் இப்ப நான் வந்திட்டேம்ல... இனி நீ எதுக்குமே கவலை பட கூடாது... இப்ப வா வீட்டிற்க்கு வெளிய போகலாம்... அங்க என்னோட நண்பன உனக்கு நான் அறிமுகம் படுத்துறேன்... என அவளை அழைத்து கொண்டு வீட்டின் வெளியே சென்றான்...
விஜய் அவளை வெளியே கூட்டி சென்றான். அங்கே மரத்தடியின் கீழே இரண்டு நாய் குட்டிகள் நாங்க்ளும் உங்களைmanmathan-ambu.blogspot.com போலதான் பிரிய மாட்டோம் என ஒன்றன் மேல் ஒன்று படுத்து தூங்கி கொண்டிருந்தது..

 அவற்றை பார்த்ததும் கயல்விழியின் கண்கள் அழகாக விரிந்தன. அதன் அருகே இருந்த மர பெஞ்சில் உக்காந்து அவை தூங்கும் அழ்கை ரசித்து கொண்டிருக்க… அவள் ரசிப்பதை பார்த்து விஜய் அவளை ரசித்து கொண்டிருந்தான்…

 கயல்விழி அவனை பார்த்து பெயர் ஏதாவது வைச்சீங்களா

 ஆமா… வெள்ளைல சாம்பல் நிறத்துல இருக்கானே அவன் பெயர் மணி… முழுசும் வெள்ளையா இருக்கானே அவன் பெயர் ஜேம்ஸ். இரண்டும் படு சுட்டி.. எனக்கு ஏதாவது கோபம் வந்ததுனா இங்க வந்து இவங்களோட தான் விளையாடுவேன்…

 கயல்விழி அவனிடம் ஒரு குழந்தை போல அவனிடம் அந்த நாய்குட்டிகளை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்க… அந்த சத்தத்தில் நாஉகுட்டி விழித்து கொள்ள... அதை பார்த்த கயல்விழி அவற்றின் அருகே சென்றாள். அவற்றை தூக்க அதன் அருகில் சென்றவள். இரண்டு நாய்குட்டியையும் தூக்கி தன் மடி மீது வைத்து கொண்டாள்… அவற்றின் மென்மையான ரோம்மங்களை தடவி கொண்டிருந்தாள்… அவளின் முகம் மிகவும் சந்தோசமாய் இருந்த்து…

 அவனை பார்த்து ….

 எனக்கு மறந்து போச்சு பாருங்க… ஆமா சாப்பிடும் போது ஏதோ சந்தோசமான விஷயம் சொல்லுறேன் சொன்னீங்களே.. என்ன அது
 அவன் அவளை ஒரு குறும்புடன் பார்த்து … அதை உனக்கு நான் சொல்லனும்னா எனக்கு நீ ஒரு பரிசு தரனும்… என்று அவளின் உதட்டை தடவி சொல்ல…

 ச்ச்சீ…..அதெல்லாம் முடியாது…

 அப்ப நானும் சொல்ல மாட்டேன்…

 PLEASE-ங்க சொல்லுங்க

 சரி முத்தம் வேண்டாம்… எங்கிட்ட இப்ப நீ I LOVE U-நு சொல்லனும்

 அவள் அவனை பார்த்து வெட்கத்துடன் தலையை குனிந்து கொள்ள

 அவன் அவளின் முகத்தை நிமிர்த்தி சொல்லுமா PLEASE......

 அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் காத்லும் ஏக்கமும் தெரிய அவனை இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து கொண்டாள்.. அவளின் இந்த செயலால் பூரிப்ப்டைந்த விஜய் ... அவளின் மார்பிலே தஞ்சம் அடைந்தான்....

 கயல்விழி அவனது நெற்றியில் அவளது இதழை பதித்து... அவனது காது மடல்களை அவனுக்கு வலிக்காமல் கடித்து நேரம் வரும் போது சொல்லுறேன்... மொதல நீங்க சொல்லுங்க....

 அவன் அவளை காதலாக பார்த்தான்... அவளின் மடியில் இருந்த நாய்குட்டியை எடுத்து கீழே விட்டு அதனிடம் இந்த மடி எனக்கு மட்டும் தான்
 சொந்தம்...

 அவன் அவளது மடியில் தலை வைக்க போகும் போது.... அவள் அவனை தடுத்து.....

 PLESE.... எனக்கு கூச்சமா இருக்கு வேண்டாங்க..... அவளது வார்த்தைகள் சொன்னாலும் அவளது மனம் அதை ஏங்கியது.....

 அவளது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தவனாக .... அவளிடம் இருந்து விலகி அமர்ந்து .... ராஜாவிடம் போன் மூலம் தொடர்பு கொண்டது முதல் இப்போது வரையிலான அனைத்தையும் அவளுக்கு சொல்லி முடித்தான்....

 அவன் சொல்லி முடிக்கவும்... அவனை இழுத்து இறுக்கி அணைத்து தனது சந்தோசத்தை முத்தங்களாக அவனுக்கு பரிசு அளித்தாள்.... அவளின் இந்த ஆவேசமான இன்ப தாக்குதலால் விஜய் நிலைகுலைந்து போனான்....
முத்த மழை முடிந்ததும்... அவனை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.... அவன் தனக்காக கஷ்ட படுவதை நினைக்கும் போது அவளை அறியாமளே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது... கண்ணீர் துளி அவன் கன்னத்தில் விழ .... அவன் அவளை பார்த்து நான் சொல்லியிருக்கேன்ல நீ எதுக்காகவும் இனி கஷ்ட படகூடாதுனு... இனி எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்.... என அவளது கண்ணீரை துடைத்தான்...

 அவனது வார்த்தை அவளை ஆறுதல் படுத்த அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.... இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க அவர்களின் அமைதியை கீழே இருந்த இரண்டு நாய் குட்டியும் கலைத்து விட்டது.... கயல்விழி கீழே இருந்த நாய்குட்டியை மறுபடியும் தூக்கி மடியில் வைத்து கொண்டு .... அவனிடம்

 ஆமா இவ்வுளவு பெரிய வீட்டுல நீங்களும் அம்மாவும் மட்டும்தானா....உங்களுக்கு வேற யாரும் கிடையாதா.....

 விஜய் அவளிடம் என்னுடைய அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம்.... வீட்டுல எதிர்ப்பு.. அதை மீறி அவங்க கல்யாணம் பண்ணிட்டாங்க.... அதுனால அவங்க இரண்டு பேரும் வீட்டுலையும் இவங்கள ஒதுக்கி வைச்சுட்டாங்க... பின்னர் அப்பாவும் அம்மாவும் தான் அவங்க முன்னாடி நாம இரண்டு பேரும் தலை நிமிர்ந்து வாழனும் கடுமையா உழைச்சு... ஒரு CONPUTER RELEATED - டா தொழில் தொடங்கினாங்க.. அது நல்லா போயிட்டு இருந்தபோதான் அப்பாவுக்கு HEART ATTACK வந்தது.. அதுவும் FIRST ATTACK-லே இறந்துட்டார். அப்ப எனக்கு 10 வயசு.... அப்புறம் அம்மாதான் கஷடப்பட்டு தனி ஆளா நின்னு COMPANY - ய முன்னுக்கு கொண்டு வந்தாங்க...

 அதை எனக்கும் சொல்லி தந்தாங்க.... நீ வேலை பாத்தியே அது நம்ம COMPANY தான்.... என்றவுடன்

 அவள் அவனை மிரண்டு பார்க்க.....

 நான் அத உங்கிட்ட சொல்லுலாம்முனு இருந்த போதுதான்... நீ அன்னைக்கு ஒரு பணக்காரன் ஏதோ தப்பு செய்தானு சொல்லிட்டு இருந்த.... அப்ப நானும் அத சொல்லி நீ என்னை வெறுத்திடீனா... அதான் சொல்லைல....

 அவனை பார்த்த கயல்விழிக்கு அவனின் முகம் கலையிழந்து போல் காணப்பட்டது... தனது பதிலுக்காக காத்திருப்பு அவனது முகத்தில் தெரிந்தது.... அவனின் பயத்தை போக்கும் விதமாக

 அவனின் முகத்தை கையில் ஏந்தி அவனும் நீங்களும் ஒண்ணா.... அவனை காதலுடன் பார்த்து தன் மடியினில் படுக்க வைத்தாள்...

 அவளின் இந்த செயல் அவள் தன் மேல் எத்தனை காதல் கொண்டியிருக்கிறாள் என அவனுக்கு உணர்த்தியது.... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்..
திவ்யா வீடு வந்து சேர்ந்ததும் கயல்விழி வீட்டு ADDRESS- பத்திரமாக தனது பர்சில் எடுத்து வைத்தாள்… பிறகு அம்மாவை தேடி அவளது அறைக்கு சென்றாள்.. அங்கே மாதவி கட்டிலில் படுத்து விட்டத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்….

 அவளின் அருகே சென்று அம்மாவை அழைத்தாள்…

 மாதவி அவளை பார்த்து …. நீயும் எதுக்கு வந்த … அவள மாதிரி நீயும் போக வேண்டியதுதானே

 அவளின் இந்த பேச்சு திவ்யாவிற்க்கு கோபம் வர…. என்னம்மா… நீங்க இத பத்தி மொதல சொல்லியிருக்கலாம்ல… அத சொல்லாம இருந்துட்டு எங்கிட்ட கூட ஒன்னும் சொல்லாம… யார் அவங்க…. எப்படி வந்தாங்க…

 எனக்கு என்ன தெரியும்… ஒரு நாள் ஒரு பெரியவரும் ஒரு பையனும் வந்தாங்க…. அவங்க கோவில் வைச்சு கயல்விழியை பாத்தாங்களாம்… ரொம்ப பிடிச்சுருக்கு… எங்களுக்கு வரதட்சணை எல்லாம் வேண்டாம்… நீங்க என்ன சொல்லிறீங்க கேட்டாங்க…

 நானும் சரி சொன்னேன்… எனக்கு என்ன தெரியும் அந்த நாதாரி இப்படி பண்ணும்னு….

 இதை கேட்டதும் … என்னம்மா இது … அவங்க சொன்னாங்கனும் சொல்லுறியே… அவங்க யார் என்ன விசாரிச்சியா… அந்த பையன பத்தி விசாரிச்சியா… அத விட்டுட்டு அக்கா மேல குத்தம் சொல்லிட்டு இருக்க…

 எனக்குனா நீ இப்படி பண்ணியிருப்பியா…. என்று கேட்க….

 அவள் கேள்வியின் உண்மை புரிந்து எதுவும் பேச முடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தாள்… தனது மகளா இப்படி பேசுவது

 சரி அத விடும்மா…. நீ சாப்பிடியா… வாம்மா சாப்பிடலாம் என்று மாதவியை அழைத்தாள் திவ்யா
 மாதவிக்கு தான் செய்தது தவறு என புரிந்த்து…

 .........................

 விஜய், கயல்விழி, ராணி மூவரும் உக்காந்து சாப்பிடும் போது... கயல்விழி ராணீயிடம்

 அம்மா.... விஜய் கம்பெனிக்கு போன பிறகு நீங்க தனியாதான் இருப்பீங்க... உங்களுக்கு ரொமப கஷ்டமா இருக்குமேமா.... நீங்க என்ன பண்ணுவீங்க....

 ராணி சிரித்து கொண்டே... நான் எதுக்கு இந்த வீட்டுக்கு வேலைக்கு ஆள் வைக்கலனா... அவங்க எல்லாத்தையும் செய்து தந்திடுவாங்க.... நம்ம சோம்பேறி ஆயிடுவோம்.. விஜய் அப்பா எவ்வளவோ சொன்னாங்க.... நான் கேட்கல.... அது மட்டும் இல்லாம என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும் எனக்குதானே தெரியும்.... அவனுக்கு நான் சமைச்சு போடுறப்ப எனக்கு ஒரு சந்தோசம்.... எனக்கு அப்படியே நேரம் ஓடிரும்.....

 கொஞ்சம் தனிமையா இருக்கிறமாதிரி இருந்ததுனா... நம்ம மணிகிட்டையும், ஜேம்ஸ்கிட்டையும் போய் உக்காந்து பேசிக்கிட்டு இருப்பேன்.. அதுகளுக்கு நான் சொல்லுறது புரியாட்டியும் அது வால ஆட்டிகிட்டு எங்கிட்ட வரும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கும்.... என சொல்லி அவள் கண்களில் இருந்து நீர் வர

 விஜய் பதறி போய் என்னம்மா இது... இதுக்கு போய் அழுறியியே.... அழதாமா....ராணி அழுவதை பார்த்ததும் கயல்விழிக்கு மனது கவலையாகி விட்டது.. தேவையில்லாமல் கேள்வியை கேட்டோமோ... என முகம் வாடியிருக்க....

 கயல்விழியின் முகம் வாடியிருப்பதை கண்ட ராணி... அவளை பார்த்து

 நான் இதுக்கு பிறகு எதுக்கு கவலை படனும்.... அதான் நீ வந்திட்டியே....
 சீக்கிரம் இரண்டு கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பேரனும் பேத்தியும் கொடுத்துடுங்க..... எனக்கு அது போதும்....
 அதை கேட்டதும்... கயல்விழிக்கு புதிதாய் ஒரு வெட்கம் வர... அதை கவனித்த விஜய் அவளை சீண்ட....
 அம்மா உங்களுக்கு ஒரு பேரன், பேத்தி மட்டும் போதுமா.... அதுக்கு மேல வேண்டாமா.....

 வேண்டானு யார் சொன்னது... இவ்வுளவு பெரிய வீட்டை எதுக்கு கட்டி வைச்சுருக்க.... அந்த காலத்துல பெரியவங்க சொல்லியிருக்காங்கல 16 பெத்து நல்லா வாழனும் சொல்லியிருக்காங்க. எனக்கு அது போதும்...

 விஜய் கயல்விழியை பார்க்க... அவள் முகம் குங்குமம் பூவை போல் வெட்கத்தால் சிவந்து இருக்க...

 என்னம்மா... நீ எல்லா பேர, பேத்தி கூட கொஞ்சும் போது... நா சும்மா இருக்கிறதா.... அதுனால உனக்கு 16-னா... எனக்கும் 16 போதும்... அதுக்கு மேல வேண்டாம்....என விஜய் கூற...

 ராணி அவனிடம்... எனக்கு 16 , உனக்கு 16... அப்ப கயல்விழிக்கு ஒன்னும் வேண்டாமா.... அவ என்ன சும்மையா இருப்பா... ஏம்மா கயல்விழி உனக்கு எத்தனை வேணும் என கேட்க

 கயல்விழி நிமிர்ந்து பார்க்க... இருவரும் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை அறிந்து ... வெட்கம் தாங்கமால் எழுந்து ஓடி விட்டாள்.... அவள் ஓடுவதை கண்ட விஜய்
 "கயல் எத்தனை சொல்லிட்டு போ"... சொல்லிக்கொண்டு அவள் பின்னால் ஓட ....

 அதை பார்த்த ராணிக்கு.... கண்களில் கண்ணீர் வந்தது... அவர்கள் இந்த ஜென்மம் மட்டும் அல்ல .. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சந்தோசமாய் இருக்கனும்... என கடவுளை வேண்டிக்கொண்டாள்.
அன்று இரவு கயல்விழியை தன்னுடன் படுக்குமாறு அழைத்து விட்டு... விஜயிடம் சொல்லிக்கொண்டு ராணியும் கயல்விழியிம் தூங்க சென்றனர்... விஜயும் வழக்கம் போல் தன் அறைக்கு தூங்க சென்றான்....

 அங்கே படுத்தவனுக்கு தூக்கம் வரவே இல்லை... இரவில் கயல்விழி கொடுத்த திகட்டாத முத்தம் அவனை இம்சை செய்ய .... எழுந்து மணியை பார்த்தான்... அங்கே மணி 11 ஆக இருந்தது... சரி வெளியில் சென்று வருவோம் என கிளம்பினான்...

 அங்கே அவன் கண்ட காட்சி... அவன் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது.... அங்கே கயல்விழி தனது மடியில் இரண்டு நாய்குட்டிகளை வைத்து நொண்டிருந்தாள்.

 அவள் அருகே சென்று குரல் கொடுக்க.... அவள் இவனை பார்த்ததும்.... நாய்குட்டையை கீழே விட்டு எழுந்து நின்றாள்.... அவள் முகம் இன்னும் சிவந்து போய் இருந்தது...

 என்ன இங்க வந்து இருக்கிற... தூங்கலையா

 இல்ல... புது இடமா தூக்கம் வரல.... அதான் எழும்பி இங்க வந்திட்டேன்....

 தூக்கம் வரலைனா என்ன எழுப்ப வேண்டியது தானே.... அவன் கூறிக்கொண்டு அவள் அருகே வர....

 அவள் பின்னால் நடக்க முயற்ச்சிக்கும் போது.... மர பெஞ்சின் கால் தட்டி கீழே போனவளை தாங்கி தன்னுள் அணைத்தான் விஜய்....

 அவனது அணைப்பில் கயல் தன்னை மறந்தாள்.... விஜய் மெதுவாக அவளது நெற்றியில் தனது உதட்டை வைத்து கோலம் போட துடங்கினான்.... அது அப்படியே கீழே இறங்கி உதட்டுக்கு வந்ததும்.... தனது உதட்டால் அவள் உதட்டோடு சண்டை போட்டான்... சண்டை தான்... ஆனால் இது அன்பு சண்டை .... அவனது முத்ததில் அவள் சொக்கி போனாள். அவளது கைகள் அவனது முதுகை இறுக்கி அணைத்து கொண்டிருந்தது... அவர்களின் நடுவே காற்று கூட போக முடியாத் அளவு அவ்வுளவு நெருக்கமா இயருந்தனர். அவன் அவளின் உதட்டில் அமிர்ததை கடந்து கொண்டிருக்க... அதன் விளைவாக அவளது உதட்டில் அமிர்தம் வர... அவள் உதடு வரண்டு போகும் அளவிற்க்கு அமிர்ததை உறிஞ்சு குடித்தான்.. அவன் குடிக்க குடிக்க அவனுக்கு திகட்ட வில்லை... மாறாக அவனுக்கு இன்னும் தாகம் தான் பலமடங்கு எடுத்தது... அவனின் முத்தம் அவளுக்கு மூச்சு விடுவதற்க்கு சிரமாக இருக்க ... அவனை தள்ள முயற்ச்சி செய்தாள்...

 அவளின் முயற்ச்சியை கண்டு அவளை விடுவித்தான்... விடுவித்து அவளை பார்க்க ... அவள் மிகவும் கஷ்டப்பட்டு மூச்சு விடுவது போல் இருக்கவும் தன்னை தானே கடிந்து கொண்டான்.. அவள் சிறிது நேரம் எடுத்து தன்னை தயார்படுத்தி கொண்டாள்...

 விஜய் அவளிடம்.... சாரி கயல் ரொம்ப முரட்டு தனமா நடந்துட்டேம்ல... சாரி... என அவள் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொள்ள... அவனது முகம் வாடியுருப்பதை அறிந்து .... அவனை இழுத்து அவன் விட்டதில் இருந்து இவள் தொடங்க..... அவனை விட இவள் வேகமாக செயல்பட ... அவளின் வேகத்தை கண்ட விஜய் முதலில் திணறினாலும் அவளுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்க ... அவள் அவனது உதட்டில் அவனுக்கு போட்டியாக அமிர்ததை கடைந்து கொண்டிருந்தாள்...

 அவன் அவள் முத்ததிலிருந்து விடுபட்டு அவளை அந்த மர பெஞ்சில் படுக்க வைக்க... அப்படியே கீழே இறங்கி... அவளது கழுத்தில் முத்தத்தை பரிசளித்து... அப்படியே இற்ங்கி அவளின் மார்பு கலசங்களை ஆராய தயார் ஆனான்... அவனின் கைகள் அவளின் மார்பின் அவளை கண்டறிய நைட்டியின் மேல் வைத்து அதனை தடவ.... அவளிடமிருந்து வினோதமான முனங்கல் சத்தம் வெளிப்பட.... அவளின் பார்பை நைட்டியின் மேல் வைத்து அதன் தன்மையை அறிய.... அவளின் கைகள் பட்டு அவளின் முலை காம்புகள் விறைத்து அவள் நைட்டியை முட்டிக்கொண்டு நிற்க... அவன் மேல் உதட்டை வைத்து நைட்டியோடு அவன் சுவைக்க... அவள் அப்படியே அவனை இறுக்கி அணைத்துகொண்டாள்... அவன் முலையை சுவைப்பதற்கு வசதியாக அவனுக்கு தூக்கி கொடுத்தாள்... அவளின் செயல் கண்டு அந்த நிலா வெளிச்சத்தில் அதனை காண முயற்பட.. அப்படியே நைட்டியின் முதல் பட்டனை கழட்ட.. முயற்ச்சிக்கும் போது... அவளுக்கு திடிரென நாம் செய்வது தவறா என தோன்ற.... அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர...

 அவளின் கண்ணீரை கண்ட விஜய் பதறி போய் அவளை தூக்கி என்ன வென்று கேட்க.... அவள் ஒன்றும் சொல்லாமல் அழ ஆரம்பிக்க.... அவள் ஏன் அழுகிறாள்... என புரியாமல் அவளை பார்க்க....

 நாம் தவறு செய்கிறோம்னு எனக்கு தோணுது.... எனக்கு பயமா இருக்கு என அவள் தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பிக்க... அவனுக்கும் நாம் கொஞ்சம் அதிகமாக நடந்து கொண்டோமோ என எண்ணம் உண்டாக.... அவளை சமாதானம் செய்யும் விதமாக....

 என்னை மன்னிச்சிறு.... உண்ர்ச்சி வேகத்துல அப்படி பண்ணிட்டேன். நான் இனி இந்த மாதிரி நடக்காம பாத்துகிறேன்... PLEASE.... நீ அழாத... என அவள் கண்ணீரை துடைத்து அவளை தன் மடி மேல் படுக்க வைத்தான்.... அவளும் மறுப்பேதும் இல்லாமல் அவனின் மடியில் படுத்து தூங்கி போனாள்....அவனும் அவளை பார்த்த வாறே மரபெஞ்சில் சாய்ந்து தூங்கி போனான்.

 காலையில் கண் விழித்தவளுக்கு அவன் மடியில் படுத்திருப்பதை உணர... அவனை பார்க்க... அவன் பெஞ்சில் சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டிருந்தான்.. அவனை பார்த்தவளுக்கு அவன் கஷ்டபடுவதை உண்ர அவள் அவனை விட்டு எழும்பி அவனருகில் உக்காந்து அவனை தன் மடி மீது படுக்க வைத்து கொண்டாள்.... இந்த செயலால் விழித்து கொண்டான் விஜய்..

 அவன் எழும்பியதை பார்த்ததும்... அவள் மனது வலிக்க... அவனை பார்த்து ... NIGHT என்னாலதானே இப்படி... நீங்க கஷ்ட பட்டீங்க... அவள் குரல் அழுவது போல் இருக்கவும்... அவளை பார்த்து சிரித்து கொண்டே உண்மைய சொல்லனும்னா... நான் நேத்து தான் நல்ல தூங்கினேன்...

 அவளுக்கு திடிரென ராணியின் ஞாபகம் வர.... ஐயோ... அம்மா எழுந்திட போறாங்க.... நான் வரேன்... அவள் வீட்டின் உள்ளே வேகமாக சென்றாள்.... விஜயும் இரவில் நடந்த அனைத்தையும் சின்னதாக அசை போட்டவாறே சென்றான்....
திவ்யா வேகமாக கிளம்பி கொண்டிருந்தாள்.... ராஜா கொடுத்த முகவரியை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பினாள். அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பிற்க்கு சென்று அந்த முகவரியை பற்றி விசாரிக்க .... அதற்கு ரொம்ப தூரம் போக வேண்டும் என தெரிய என்ன செய்ய என்று கைகளை பிசைந்து கொண்டிருக்கும் போது.... அவளின் CELL PHONE ஒலி எழுப்பவே.... அதை எடுத்து பார்க்க....

 ராஜா என தெரியவும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.... போனை ஆன் செய்து காதில் வைக்க.....

 என்ன திவ்யா கிளம்பிட்டீங்களா..... எங்க இருக்கீங்க.....

 இப்பதான் கிளம்பினேன்... ரொம்ப தூரமா இருக்கு... அதான் என்ன பண்ணுறது.... தெரியல.....

 என்ன திவ்யா... அதான் சொன்னனே திவ்யா... என்ன உதவினாலும் என் கிட்ட கேட்கலாம்னு

 இல்ல உங்கள எதுக்கு தொந்தரவு கொடுக்கனும்னு....

 சரி நீங்க இப்ப எங்க இருக்கீங்க சொல்லுங்க... நான் வரேன்....

 அவள் இடத்தை சொல்லவும்.. அடுத்த 10 நிமிடத்தில் ராஜா அங்கே இருந்தான்.... அவளை பார்த்து போகலாமா என்று கூற.... திவ்யா அவனை பார்த்து புன்னகை செய்து தனது சம்மதத்தை தெரிவித்தாள்....

 அவள் பைக்கில் பின்னால் ஏறி உக்காந்து அவனின் தோளை பற்றிக்கொண்டாள்.... அவனுக்கு எங்கிருந்து தான் அவ்வுளவு சந்தோசம் வந்தது என்று தெரியவில்லை.... இந்த நாளை அவள் மறந்தாலும் அவன் மறக்க மாட்டான்..... இருந்தாலும் தன்னை நம்பி வந்தவளை அவள் மனம் கோணாமல் கொண்டு சென்றான்.....

 வரும் வளியில் இருவரும் அமைதி காக்க ... அதை கலைக்கும் விதமாக..... திவ்யா அவனிடம்

 நீங்க எங்க இருக்கீங்க.....

 நான் இதே ஊர்தான்...... பக்கத்துல தான் நேதாஜி தெரு இருக்குல.... அங்கதான் இருக்கேன்....

 உங்க வீட்டுல எத்தனை பேரு...... உங்களுக்கு யார ரொம்ப பிடிக்கும் அம்மாவையா, அப்பாவையா

 அவன் மௌனம் காக்க.....

 நான் எதாவது தப்பா கேட்டனா..... என அவள் குரல் கவலை எதிரொலிக்க..... அவளின் முகத்தை கண்ணாடியில் பார்த்தவனுக்கு அவள் முகம் கவலையில் இருப்பது போல் இருக்க.....

 அவளிடம் நான் ஒரு அனாதை.... எனக்கு அம்மா அப்பா-னு யாரும் கிடையாது... எனக்கு இருக்கிர ஒரே உறவு என் நண்பன் விஜய் மட்டும் தான்... என்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் சுரக்க.... அது தெரியாமல் திவ்யா அவனிடம்

 SORRY-ங்க.... தெரியாம கேட்டுட்ட.....

 அவன் அவளுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்து..... பராவா இல்லீங்க.... ஆமா நீங்க இப்ப என்ன பண்ணுறீங்க..... என கேட்க

 நான் BSC COMPUTER SCIENCE.... FINAL YEAR..... இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.... அடுத்த வாரம் பரிச்சை ஆரம்பிக்குது.....

 எதாவது சந்தேகம்னா என்னை எதுவும் கேட்காதீங்க.... அப்புறம் ஏண்டா சந்தேகம் கேட்டேன்னு நீங்க வ்ருத்தபடுவீங்க,,...

 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே விஜயின் வீடு வந்து விட.... வீட்டை பார்த்தவள் மிரண்டு போக... அவளின் பயத்தை போக்கும் விதமாக.... இந்த வீட்டை போலதான் அவங்க மனசும்... நீங்க எதுவும் கவலைபடாதீங்க....

 திவ்யா அவனை ஆச்சரியமாக பார்த்தாள். தான் மனதில் நினைத்த எண்ணங்களை இவன் எப்படி அறிந்து கொண்டான்..... அவள் அவனை பார்த்து கொண்டிருக்கும் போதே கயல்விழி ஓடிச்சென்று அவளின் கைகளை பிடித்து உள்ளே கூட்டி சென்றாள்....

 விஜயும், ராணியும் வந்து விடவே..... திவ்யா ராணியின் கால்களில் விழுந்து நன்றி கூறினாள்.... பின்னர் சிறிது நேரம் அழுகை, சிறிது நேரம் சந்தோசம், என நேரம் போனதே தெரியாமல் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்....

 அப்போது திவ்யா..... விஜயிடம்

 என்ன .. மாமா ... எப்ப கல்யாணம்.... எனக் கேட்க....

 விஜய் கயல்விழியை பார்க்க.... கயல்விழியோ ராணியை பார்க்க..... இப்போது எல்லோரும் ராணியின் பதிலுக்கு காத்திருந்தனர்....
ராணி திவ்யாவை பார்த்து புன்னகை செய்து... உனக்கு முதல படிப்பு முடியட்டும்மா.... அதன் பிறகு நான் வந்து உங்க வீட்டுக்கு வாரேன். நீயும் கொஞ்ச கொஞ்சமா உங்க அம்மா மனச மாத்துமா....

 திவ்யா சரி என தலையாட்ட.... கயல்விழியிடம் நான் கிளம்புறேங்கா.... நேரம் ஆச்சு... லேட்டா போனா அம்மா சந்தேகம் படுவாங்க.... நாளைக்கு கோவிலுக்கு வாங்க.... நாம அங்கே சந்திக்கலாம்....

 அவ்வுளவு நேரம் மகிழ்ச்சியாய் இருந்த கயல்விழி முகம் வாட... அதை கண்ட திவ்யா என்னக்கா இது.... என்னக்காக இன்னும் ஒரு மாசம் பொருத்துக்கோ.... அதுக்குள்ள நான் எப்படியாவது அம்மாவை சமாதானம் படுத்துறேன்....

 சரிக்கா நான் வ்றேன்.... அவர்களிடம் இருந்து விடைபெற்று ராஜாவை பார்க்க.... அவனும் எழுந்தான் அப்ப நானும் வரேன் .... என்னடா நீயும் கிளம்புறியா என விஜய் ராஜாவை பார்த்து கேட்க...

 ஆமாடா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... COMING SUNDAY எல்லோரும் ரெடியா இருங்க.... நாம எல்லாரும் ஒரு முக்கியமான இடத்துக்கு போக போரோம்... அம்மா நீங்க கண்டிப்பா வரனும்....

 எங்கடா என விஜய் கேட்க .....

 SURPRISE..... அன்னைக்கு வாங்க நான் சொல்லுறேன்.....

 சரிமா கிளம்புறேன்.... வாங்க திவ்யா போகலாம்.... அவர்கள் கிளம்ப.... கயல்விழி அவர்கள் போவதையே பார்த்து கொண்டிருந்தாள்...

 .......

 ராஜா அவளை அவள் வீட்டு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு .... திவ்யா நீங்களும் கண்டிப்பா வரனும்.... PLEASE..... கொஞ்ச நேரம் தான்.... அப்ப நான் வரட்டுமா.....

 சரிங்க.... என அவள் தலையசைக்க

 அவன் அவளுக்கு புன்னகை பரிசாக அளித்து விட்டு அவளிடம் இருந்து கிளம்பினான்... அவளுக்கு ஏனோ இன்று மனதுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்த மாதிரி இருந்தது...

 .............

 திவ்யா வீட்டிற்க்கு போனதும் மாதவி எங்க போய்ட்டு வர

 COLLEGE- க்கு தாமா....

 சரி சரி.... வர்கின்ற ஞாயிற்று கிழமை நாம பக்கத்துல உள்ள கோவிலுக்கு போயிற்று வரோம்.... சரியா.... நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.... அவள் கூற

 திவ்யாக்கு என்ன சொல்லுவதென்று புரியவில்லை.....

 இல்லம்மா எனக்கு திங்கள் கிழமை பரிச்சை மா..... ஞாயிற்று கிழமை படிக்கனும் மா.... இன்னும் 10 நாள்ல பரிச்சை முடிஞ்சுடும்மா... அதுக்கு பிறகு போலாம்மா...

 இல்ல இல்ல... நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.... இரண்டு மணி நேரம் தான்.... நாம கண்டிப்பா போரோம்..... என அவள் செல்ல....

 திவ்யாவிற்கு அவள் கண்களில் நீர்துளி எட்டி பார்த்தது..... அவள் கண்ணீரை துடைத்து கொண்டு..... என்ன செய்வது என தெரியாமல் நின்றாள்...

 ......................
மறூனாள் மாலையில் ஏற்கனவே கூறியிருந்தது போல் திவ்யா கோவிலுக்கு சென்றாள்.... அங்கே ராணியும் கயல்விழியும் திவ்யாக்காக காத்திருக்க அவர்களிடம் செல்ல... மூவரும் அருகில் இருந்த குளத்தின் கடையில் உக்காந்து பேசிக்கொண்டிருக்கும் போது திவ்யா கயல்விழியிடம்

 என்னக்கா.... மாமா வரலியா? விஜயை குறிப்பிட....

 இல்ல ... விஜயும் ராஜாவும் வந்திட்டுதான் இருக்காங்க.....

 திவ்யா ராணியிடம் மெதுவாக ராஜாவை பற்றி விசாரித்தாள்... அம்மா அன்னைக்கு ராஜா சொன்னாரு அவருக்கு யார் கிடையாதுனு... அப்ப அவர் உங்க கூடையும் இல்ல... பின்ன அவர் தனியாவா இருக்காரு... அவர் அம்மா அப்பா எல்லாரும் எங்க? என வினவ

 ராணி அவளிடம் .... என்ன சொன்னா அவனுக்குனு யார் இல்லனு சொன்னானா? அவன் வரட்டும் அவங்கிட்ட கேட்குறேன் நாங்க எல்லாரும் செத்தா போய்ட்டோம்... அவங்கிட்ட எத்தனவாட்டி சொல்லியிருக்கேன் இத மாதிரி சொல்ல கூடாது... என கோபபட்டவாறு அவனை பற்றி பேச ஆரம்பித்தாள்...

 நம்ம விஜய் படிச்ச பள்ளியில தாமா அவனும் படிச்சான்.... அவன் சின்ன வயசு இருக்கும் போதே அவன் அம்மாவும் அப்பாவும் இறந்து போய்டாங்க.... அவனுக்கும் ஒரு பாட்டிதான் உண்டு... அவனை அவங்கதான் வளத்தாங்க... அந்த பாட்டி நீ வருகின்ற வழியில "அன்பு இல்லம்" ஒன்னு இருக்கே அங்கதான் வேலை பாத்தாங்க....அவனும் அங்கதான் இருந்தான்.. அவனுக்கு 7 வயசு இருக்கும் போது அந்த பாட்டியும் இறந்துடுச்சி... அப்ப அவன் அழுதுட்டே இருப்பான்.. விஜய்தான் அவன நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவான்... அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அவனும் மாறினான்... அவன மாதிரியே அந்த அன்பு இல்லத்துல நிறைய பேரு இருந்தாங்க... ராஜாவுக்கு நாங்க இருக்கோம்... அவன மாதிரி இன்னும் பல பேரு இருக்காங்கல... அத பாத்து எல்லாத்தையும் மாத்தனும்... இதே மாதிரி எல்லாரும் உதவும்னு சின்ன வயசுலே அவனுக்கு ஊறி போயிடுச்சி... நல்லா படிச்சான்... நல்ல வேலை கிடைச்சுச்சு... விஜய்தான் நீ வேற இடத்துல போய் கஷ்ட படுறத விட... நம்ம கம்பெனில வேலை பாரு உனக்கும் எங்களுக்கும் கஷ்ட இல்லமா இருக்கும்... சொல்லி அவன் இப்ப இங்க இருக்கான்... என் பயன விட 100 மடங்கு நல்ல பயன்... என ராணி ராஜாவை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்... திவ்யா அதை கேட்கும் போது அவன் அவளின் இதயத்தின் சிம்மாசனத்தில் ஏறி உக்காந்திருந்தான்..... அந்த நேரம் அவர்களும் வந்து விட....

 ராணிதான் ராஜாவிடம் கோபபட்டாள்.... அவன் ராணியிடம் மன்னிப்பு கேட்டு...மகிழ்ச்சியின் இடமாய் அந்த இடம் மாறியிருக்க எல்லோரும் மகிச்சியும் சந்தோசமாய் இருக்க திவ்யா மட்டும் கவலைகளின் உருவமாய் இருந்தாள்..... ஆனால் அதை முகத்தில் காட்டாதாவாறு எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்..... ராஜாவும் அதை கவனித்த வாறே இருக்க....

 திவ்யாவுக்கு அவனிடத்ல் எப்படி கூறுவது ... நாளை என்னால் வர முடியாது என்று.... அவன் தன்னை தவறாக நினைப்பானோ... எண்ணி இன்னும் வேதனையுற்றாள்... அவளுக்கு இப்போது அவனிடத்தில் பேச தனிமை தேவை பட்டது... ஆனால் எல்லோரும் இருக்க.... அவள் என்ன செயவது என யோசித்து கொண்டிருந்தாள்

 அப்போது சில மாதங்களுக்கு முன்பு .... திவ்யாவும் ராஜாவும் உதவி செய்த அந்த பாட்டி வரவே.... manmathan-ambu.blogspot.comஅதை கவனித்த ராஜா அந்த பாட்டியடம் சென்றான்....

 என்ன பாட்டி நல்லா இருக்கீங்களா

 ஆனால் அந்த பாட்டிக்கு முதலில் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சிரம்பட... அதை குறைக்கும் விதமாக ராஜா பாட்டிக்கு தாங்கள் உத்வி செய்ததை நினைவு கூற ....பாட்டி அவனை அடையாளம் கண்டு கொண்டாள்... அவனின் கைகளை படித்து ரொம்ப நன்றிப்பா.... சொன்ன அந்த பாட்டியின் கண்களில் சொல்ல முடியாத அளவிற்க்கு பாசமும் நன்றியும் இருந்தது.....

 ராசா.... ஆமா இன்னொரு பொண்ணு கூட இருந்துதே அதாப்பா உன் சம்சாரம் அத எங்கனு கேட்க.....

 அவனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளினாலும்... இல்ல பாட்டி அது என்னோட சம்சாரம் இல்ல... என்னோட தோழி..... அவளும் இங்க தான் இருக்கா....என கூறினான்.. ஆனால் அவன் கூறியது பாட்டியின் காதுகளில் விழவில்லை....

 திவ்யா பார்த்து வருமாறு சைகை காட்ட.... அவள் குழப்பத்தில் சென்றவள்.... அருகில் இருந்த பாட்டியை பார்த்ததும்.... அவளுக்கும் புரிந்து போக ஓடிச்சென்று பாட்டியின் கையை பிடித்து கொண்டாள்...

 என்ன பாட்டி நல்லா இருக்கீங்களா...... கோவிலுக்கு தனியாவா வந்தீங்க..... கூட யாரும் வரலியா

 ஆம்மா... நல்லா இருக்கேம்மா.... இல்லம்மா... நானும் என் பேரனும்தான் வந்தோம்... அவன் தேங்காய் வாங்க போய் இருக்கான்... நான் தான் அந்த வாசல உக்காருலாமு வந்தேன்... ஆனா உன் வீட்டுகார்தான் என்ன பாத்து கண்டுபிடிச்சுட்டாரு..... நீ நல்லா இருக்கியாமா - என அந்த பாட்டி திவ்யாவின் தலையை கோதியவாறு கேட்க....

 திவ்யாவிற்க்கு என்ன சொல்லுவதேன்று புரியாமல் ..... ஆமா பாட்டி நல்லா இருக்கேன்... என திணறி கூறினாள்.... ஆனால் அவள் முகம் மட்டும் ரோஜாவே தோற்று போய்விடும் அளவிற்க்கு சிவந்து போய் இருந்தது......

 அதற்க்குள் அந்த பாட்டியின் பேரனும் வந்து விட..... சரி கண்ணுங்களா.... நான் கிளம்புறேன்.... நீங்க நிறைய குழ்ந்தைகள பெத்து சந்தோசமா வாழனும்...... என அந்த பாட்டி வாழ்த்த....

 திவ்யா அந்த பாட்டியின் கால்களில் விழுந்து ஆசிர் வாங்கினாள்...... ராஜாவும் அவள் செய்வதை பார்த்து அவனும் அந்த பாட்டியின் கால்களில் விழ... அந்த பாட்டி மன நிறைவோடு அவர்களுக்கு ஆசிர் அளித்தது.....
 அவள் அவன் முகத்தை பார்க்க தையிரியம் இல்லாமல் தலையை குனிந்தே வந்தாள்.... அவர்கள் வரும்போது அங்கே மூவரையும் காண வில்லை.... அவள் கண்கள் அவர்களை தேடியது..... ரர்ஜா உடனே தனது செல்லை எடுத்து விஜய் தொடர்புகொண்டான்.....

 அவர்கள் கோவிலின் உள்ளே சென்றிருப்பதாகவும் வருவதற்கு அரை மணி நேரம் ஆகும் எனபதையும் குறிப்பிட்டு அவளிடம் மனசு விட்டு பேசவும் சொன்னான்....

 விஜய் அவளிடம் அவர்கள் கோவிலுக்குள் சென்றிருப்பதாகவும் வருவத்ற்கு அரைமணி நேரம் ஆகும் என்பதையும் அறிவித்தான்....

 திவ்யா மனதினுள் இது இறைவன் தனக்காக அவனிடம் பேச உருவாக்கி கொடுத்த வாய்ப்பு.... இதை தவற விட கூடாது என முடிவு செய்து... முதலில் எப்படி ஆரம்பிபிக்க்.... அவள் திணறி கொண்டிருக்கும் போது......

 திவ்யா என ராஜா அழைக்க..... அவள் அவனை பார்க்காமல் என்ன என கேட்க...... அவன் மட்டும் அவள் முகத்தை பார்த்தால் நிச்சயம் கண்டுபிடித்து விடுவான்.... அவளின் முகம் வெட்கத்தால் சிவந்து போய் இருந்தது....

 நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களல

 அவள் பதில் கூறாமல் தலையை மட்டும் அசைத்தாள்....

 சிறிது நேரத்துக்கு முன்னாடி உங்க முகத்த பார்த்தேன்.... கவலையா இருந்தது.... என்ன பிரச்சனை தெரிஞ்சுக்கலாமா

 இதை கேட்டவுடன் அவளின் வெட்கம் காணாமல் போய் அவளின் முகத்தில் கவலை குடிகொள்ள....

 அவனை நிமிர்ந்து பார்த்து..... என்னை தவறா நினைக்காதீங்க...... நாளைக்கு என்னால வர முடியாது..... எனக்கூறி வர முடியாதற்கு காரணத்தையும் கூறினாள்....இதை அவள் சொல்லி முடிக்கும் போது அவள் கண்களில் நீர்துளி எட்டி பார்க்க...

 அதை துடைக்க அவன் கைகள் முயலும் போது அவன் மனம் அதை தடுத்தது.... அவனும் கவலையாக தான் இருந்தது....ஆனால் அதை வெளிகாட்டாமல்.... சரி நீங்க எப்ப கிளம்புறீங்கனு தெரியுமா?

 இல்லை...அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்.....

 சரி.... அப்ப நீங்க கோவிலுக்கு போகும் போது எனக்கு SMS அனுப்புங்க..... பின்னாடி நீங்க அங்க கிளம்பும் போது எனக்கு SMS பண்ணுங்க.... நீங்க் பண்ணுற நேரத்த வச்சு நான் எதாவது ADJUST பண்ணி பார்க்கிறேன்.... இதுக்கு போய் இப்படி கவலை படுறீங்க..... முதல கண்ணீரை துடைங்க.....

 அவள் கண்ணீரை துடைத்து கொண்டே .... நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன்.... மறைக்காம சொல்லனும்... சரியா

 அவன் என்ன எனபது போல் அவளை பார்க்க

 நாளைக்கு SURPRISE- னு சொன்னீங்களே அது என்ன... என மெல்லிய குரலில் கேட்க....

 அவன் சிரித்தவாறே.... என்னங்க... அதான் SURPRISE- னு சொல்லிட்டேன்.... பின்ன அத சொன்னா எப்படி... நாளைக்கு நீங்க கண்டிப்பா வரனும்.... வருவீங்க....அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வழி வந்த இரு நாய்கள் நேரம் காலம் உணராமல் சண்டை போட்டு பயங்கரமாக கத்த ..... அவள் பயந்து போய் அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்.....

 அவளின் உதடுகள் பயத்தால் முணுமுணுத்து கொண்டிருக்க....அவளின் கைகள் அவனின் சட்டையை இறுக்கி பிடித்து இருந்தது..... அங்க உள்ளே ஒரு பெரியவர் அந்த நாய்களை விரட்டி விட....

 ராஜாவுக்கு என்ன செய்வதென்று புரியாமல்..... அவளை அணைக்கவும் முடியாமல்... அவளை தொடவும் முடியாமல்.... மிகவும் கஷ்ட பட்டான்... ஆனால் அந்த கஷ்டம் கூட அவனுக்கு சுகமாக இருக்க..... அவளை மெல்ல அழைத்தான்.....

 ஆனால் அவளுக்கு அவனின் சத்தம் கேட்கவே இல்லை..... அவன் மறுபடியும் சற்று அழுத்தமாக அழைக்க.... அவள் சுதாரித்து கொண்டு அவனை விட்டு விலகி நின்றாள்...

 அவளுக்கு சற்று வருத்தமாக இருந்தது... அவன் தன்னை என்ன நினைப்பான்... என எண்ண... அவள் முகத்தின் கவலைகள் அவனை தாக்க ... என்னங்க ஆச்சு அதான் நாய் இரண்டும் போய்யிடுச்சில்... பின்ன என்னங்க....

 அவள் தயங்கி கொண்டே என்னை தப்பா நினைக்காதீங்க.... எனக்கு நாய்னா ரொம்ம பயம்.... அதான் என்னை அறியாமலே என கூறி கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் கலங்கியிருக்க.....

 அய்யோ நான் உங்கள... எப்பவுமே தவறா நினைக்க பாட்டேன்.... போதுமா...... முதல கண்ணீர துடைங்க..... என சொல்லி விட்டு அக்கம் பக்கம் பார்த்தான்...

 அவள் என்ன பார்க்கிறீங்க.....

 இல்லங்க....நான் அந்த நாய்க்கு நன்றி சொல்லனும் தேடுறே ... இரண்டையுமே காணும் அதான் .... சொல்லி அவளை பார்க்க.....

 அவனின் பார்வை தாங்காமல் தரையை பார்க்க.... அதே நேரம் அவர்கள் வரவும் சரியாக இருக்க..... எல்லோரும் பேசி முடித்து விட்டு செல்லும் போது ராஜா நாளை அவன் வீட்டிற்க்கு வருமாறு அனைவரையும் அழைத்து விட்டு திவ்யாவிடமும் சொல்லி முடித்து அனைவரும் கிளம்பினர்.

காதலை படைத்த இறைவனே இரவு நேரத்தில் தூங்கி விடுவார். ஆனால் காதலில் இருப்பவர்களோ இரவில் தூங்க முடியாது.... என்பதை போல திவ்யா தூக்கம் வராமல் கட்டிலில் அங்கும் இங்கும் புரண்டு படுத்து கொண்டிருந்தாள்...... அவனின் நினைவுகள் அவளை தூங்க விடாமல் அவளை தொல்லை படுத்தி கொண்டிருந்தது... ஆனால் அந்த தொல்லை அவளுக்கு சுகமாகதான் இருந்தது......

 அவனை அணைக்கும் போது அவளுக்கு ஏற்பட்ட மாறுதல்கள் அவனின் ஆண்மை வாசமும் அவளை தூங்க விடமால் இம்சித்து கொண்டிருந்தது.... அப்படியே இரவு முழுவதும் அவனையே நினைத்து கொண்டு எப்போது உற்ங்கினோம் என அவளுக்கு தெரியவில்லை.....

 அவள் அங்கே அப்படியிருக்க.... ராஜாவோ அவளை விட மோசமாக இருந்தான்.... எப்போதுமே அவளை நினைத்து கொண்டுதான் தூங்குவான் .... இன்றும் அவளை தான் நினைத்துகொண்டிருக்கிறான்... ஆனால் தூங்க முடியவில்லை.... அவனின் நினைவுகளுக்கு அவளின் இறுக்கமான பதற்றமான அணைப்பும் அவளின் பரிசமும் தான் அவனுக்கு மறுபடியும் ஞாபகம் வந்தது.....

 அவனால் படுக்கவே முடியவில்லை.... கட்டிலை விட்டு எழுந்து மணியை பார்த்தான்.... மணியை பார்க்க அது 1-ஐ காட்ட.... இவன் என்ன செய்வது என தெரியாமல் தனது கைகளை பிசைந்து கொண்டிருந்தான்.... அவனின் எண்ணங்கள் அவளும் தன்னைதான் நினைத்து கொண்டிருப்பாளா.... இப்போது அவளை போய் பார்க்கலாமா...?
 சினிமாவில் கதாநாயகன் இரவில் கதாநாயகி வீட்டிற்க்கு சென்று அவளை பார்பது போல தானும் செல்வோமா....

 அவனின் இதயம் அவளை இப்போதே பார்க்க வேண்டும் என அவனை நச்சரித்தது.... அவனது பகுத்தறிவோ இப்போது செல்வது ஆபத்து என அவனுக்கு எச்சரித்தது... ஆனால் காதல் வந்து விட்டால் இதயம் சொல்வதை தானே மனிதன் கேட்பான்..... மனம் முழுக்க மகிழ்ச்சியோடு அவளை சந்திக்க தயாரான்...

 தனது பைக்கில் கால் வைத்ததுதான் தெரிந்தது... ஆனால் அடுத்த 5 நிமிடத்தில் அவள் வீட்டு வாசலில் பைக் நின்றது.... பைக்கை ஒரமாக வைத்து விட்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்....

 அவனுக்கு இப்போதுதான் பயமாக இருந்தது.... அவள் தன்னை முதலில் காதலிக்கிறாளா என தெரியவில்லை..... இந்த நேரத்தில் அவள் முன்னே போய் நின்றால் அவள் தன்னை என்ன நினைப்பாள்.... எதாவது தவறாக நினைத்து விட்டால்..... என அவன் பயந்தாலும் காதல் மீது இருந்த தைரியத்தில் அவளின் வீட்டின் அருகே சென்றான்...
 எப்படி உள்ளே போவது.... நல்லா நிலா வெளிச்சம்... வெளியே இருந்து யாராவது பார்த்தால் நிச்சயம் தெரியும்.....

 முதலில் அவளது அறை எது... எப்படி உள்ளே செல்வது.... என அடுக்கடுக்காய் கேள்விகள் வந்தாலும் ஏதோ நம்பிக்கையில் பின்பக்கம் போனான்.... அங்கே பின்பக்க கதவும் பூட்டியிருந்தது..... இப்போது என்ன செய்வது என யோசித்து கொண்டு வரும் வழியில் சன்னல் கதவு லேசாக திறந்து இருக்க அதன் வழியே சென்று பார்த்தான்... கட்டிலில் ஒரு தேவதை படுத்து தூங்கி கொண்டிருந்தது..... அவளை பார்த்த அவனுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்....

 அவளை எழுப்பலாமா.... என யோசித்து திவ்யா என மெல்ல அழைத்தான்..... அது அவளின் காது மடல்களுக்கு சென்று சேரவில்லை... அதனால் மறுபடியும் அவளை அழைத்தான்.... இம்முறையும் அவனுக்கு தோல்விதான்.... ஆனால் அதை பற்றி கவலை படாமல் கஜினி முகமது போல மறுபடியும் முயற்ச்சித்தான்... அவனின் முய்ற்ச்சிக்கு பலன் கிடைக்க.... அவள் கண்களை திறந்து பார்த்தாள்......

 பார்த்தவளுக்கு முதலில் தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.... அவள் அவனையை பார்த்துக்கொண்டிருந்தாள்..... அவனும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.... இருவரும் பேசாமல் அப்படியே இருக்க.... ராஜாதான் அவளிடம்

 உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.... அதான் வந்தேன்.....

 அவளுக்கு அவளையே நம்ப முடியவில்லை.... அவள் மறுபடியும் அவனை பார்க்க....

 உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.... அதான் வந்தேன்..... PLEASE.... என அவன் கண்கள் மூலம் கெஞ்ச....

 அவள் மெல்ல எழுந்து விளக்கை போடாமல்.... மெதுவாக நடந்து அம்மா அறைக்கு சென்று அவளை பார்த்து தூங்கி கொண்டிருப்பதை உறுது செய்துகொண்டு பின்வழி கதவை திறந்து வெளியே வந்தாள்.... பக்கத்தில் இருந்த துணிதுவைக்கும் கல் ஒரு ஆள் படுக்கும் அள்விற்க்கு இருந்தது... அதில் உக்காந்து கொண்டாள்... ராஜாவும் அதன் அருகே வந்து அமரந்தான்....

 இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்களே தவிர பேச வில்லை.... திவ்யா சிறிது பதற்றமாக இருந்தாள்..... அவளின் மனம் இவன் ஏன் இங்கே வந்தான்.... அக்காவிற்க்கு ஏதாவது பிரச்சனையா..? இல்லை தன்னை பார்க்க தான் வந்தானா..... என அவள் குழ்ம்பி கொண்டிருக்க....

 அவன் எழுந்து நின்று அவளை பார்க்க..... அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் அவள் முகம் தெளிவாக தெரிந்தது.... அவளின் முகத்தில் இருந்த கேள்விளை கண்டுபிடித்து அவளை பார்த்து

 திவ்யா.....

 அவள் எதுவும் சொல்லாமல் அவனை பார்க்க......

 அவன் சுற்றி பார்த்தான்... அங்கே ஒரு ரோஜா செடியில் ரோஜா பூத்திருந்தது அதன் அருகே சென்று அதனை பரித்தான்... வெளிச்சம் இல்லாதன் காரணமாக அதன் முட்கள் அவனை குத்தியது.... ஆனாலும் அவன் ரோஜாவை பறித்தான்.... அதனை எடுத்து அவள் அருகே சென்று அவள் கண்களை பார்த்து

 " நான் உன்னை காதலிக்கிறேன் "

 " நீ என்னை காதலிக்கிறாயா " எனக் கேட்டான்.....

 இதை கேட்டவுடன் அவள் எழுந்து விட்டாள்.... அவன் அதை கூறுவான் எனத் தெரியும் ஆனால் இந்த நேரத்தில் கூறுவான் அவள் எதிர்பார்க்க வில்லை.... அவள் பதில் எதுவும் கூறாமல் அவனை பார்த்தாள்....

 ஆனால் அவனோ அவளிடம் வழக்கமான தனது புன்னகையை வழங்கி விட்டு.... அவளிடம் பேச ஆரம்பித்தான்....அவளை முதல் முதலின் கோவிலில் பாத்ததிலிருந்து இப்போது வரை ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்....

 இப்போது உன்னுடன் பேசதான் வந்தேன்.... ஆனால் உனது முகத்தை பார்க்கும் போது என்னால் என் காதலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை..... என இத்தனை வருடம் தனது மனத்தில் இருந்த அனைத்தையும் அவளிடம் பேசி முடித்தான்.....

 திவ்யா அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அவன் கூறியவற்றை கேட்கும் போது... தலை சுற்றாத குறைதான்.... ஆனாலும் அமைதியாக இருந்தாள்.... அவளின் அமைதி அவனை தனிமை படுத்த.... அவன் அவள் அருகே சென்று அவளின் கைகளை பிடித்தான்...

 அவள் எதுவும் சொல்ல வில்லை..... முகத்தை தாழ்த்தி கொண்டாள்......

 அவன் அவளின் முகத்தை கைகளில் தாங்கி பிடித்து.... PLESE.....எதாவது சொல்லு...... நீ என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான்.....என அவன் அவளை பார்த்து சொல்ல....

 அவள் அவனை பார்த்தாள்.....
திவ்யா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு, கவலை, பயம், அமைதி எல்லாம் மாறி மாறி வந்தன..... அவன் கொடுத்த ரோஜா இன்னும் அவள் கைகளிலே இருந்தது..... அவனை பார்த்துக்கொண்டே அதனை அவனது கைகளில் கொடுத்தாள்...

 அதை பார்த்த அவனுக்கு புரியாமல் அவளையே பார்க்க.....

 அவள் அவனை பார்த்து புன்னகை செய்து ரோஜாவை தனது கூந்தலில் சூடுமாறு அவனுக்கு தனது முதுகை காட்டி நின்றாள்...... இப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது.... அவன் கண்களில் இருந்தது நீர் வ்ந்தது..... ரோஜாவை அவள் கூந்தலில் சூடிவிட்டு அவளை தன் பக்கம் திருப்பினான்....

 அவனின் கண்ணீர் அவளின் கன்னத்தில் விழ.... திவ்யா அவனை பார்த்தாள்.... அவன் கண்கள் கலங்கியிருந்தன.... அவள் அவனது கண்ணீரை துடைத்து கொண்டு இதுக்கெல்லாமா அழுவுறது.... அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.... அவன் அவளை இதமாக அணைத்து கொண்டான்.... அந்த இரவு பொழுதில் வந்த மென்மையான பனிக்காற்று அவர்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த....இருவரும் தங்களது நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தினர்....

 அந்த நெருக்கத்தை பக்கத்து வீட்டின் நாய் ஒன்று கலைத்து விட .... இருவரும் பிரிந்தனர்.... அவள் வேறு வழியில்லாமல் அவனை விட்டு பிரிய.... தனக்காக அங்கிருந்து இங்கே வந்தவனை எப்படி வெறு கையுடன் அனுப்புவது என யோசித்து அவன் எதிர்பாரா வண்ணம் அவனை இழுத்து

 தனது உதடு மூலம் அவன் உதடுக்கு அமுதத்தை வழங்கி கொண்டிருந்தாள்... அவனோ எதிர்பாரா நடந்த இந்த தாக்குதலால் நிலை குலைந்து போனான்... அவளிடம் தன்னையே இழந்தான். அவளோ நேரம் காலம் எவற்றையும் பார்க்காமல் அவனுக்கு எவ்வளவு அமுதத்தை வழங்க முடியுமோ அவற்றை திகட்ட திகட்ட வழங்கி கொண்டிருந்தாள்....

 அவளது முத்தத்தால் அவனது ஆண்மை அவனது கட்டுபாட்டில் இல்லாமல் அங்கும் இங்கும் மாக வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது.... அதன் தாக்கமாக அவனது கைகள் அவளது பின்புறத்தை இறுக்கமாக பற்றி கொள்ள அவனது ஆண்மை அவளது பெண்மையை அறிந்து கொள்ள அவள் பெண்மையின் வாசலை முற்றுகையிட்டது..... அவனது கை அவளது இடுப்பை இறுக பற்றி அதன் மேலாக வந்து அவளது மார்பு கலசங்களை அடைய... அவனது ஆண்மை அவளது பெண்மையை உசர அவள் சுதாரித்துக்கொண்டு அவனை விட்டுmanmathan-ambu.blogspot.com பிரிந்தாள்....

 இருவரும் ஒருவர் முகத்தை பார்க்க முடியாமல் நிற்க.... அந்த பக்கத்து வீட்டின் நாய் மறுபடியும் குலைக்க ஆரம்பிக்க.... அவள் பயந்து அவனை பார்த்து போகுமாறு கூற.... அவன் அவளை பற்றி இழுத்து அவளின் நெற்றியில் தனது அன்பின் வெளிப்பாடாக சிறு முத்தத்தை வழங்கி விட்டு வெளியே சென்றான்.... திவ்யாவிற்கு தன்னை நினைக்கும் போது தான் செய்த காரியத்தை பார்த்து அவளுக்கே ஆச்சிரியமாக இருந்தது....

 இந்த அவளவிற்கு அவள் போவாள் என அவளுக்கே தெரியாது..... வீட்டின் உள்ளே வந்து அம்மாவின் அறைக்கு சென்று அவளை பார்த்து விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.... சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள்.... மணி 2.50 -ஐ காட்டியது.... கட்டிலில் படுத்து கொண்டு அவனை பற்றி நினைக்க ஆரம்பித்தாள்....சற்று முன நடந்தவற்றை நினைக்க ஆரம்பித்தாள்.... அவளின் உடலில் அவளுக்கே புரியாமல் மாற்றங்கள் ஏற்பட ..... அந்த மாற்றங்கள் அவளுக்கு சுமாக இருக்க அவற்றை நினைத்து கொண்டே நிம்மதியாக உறங்கி போனாள்....

 காலையில் கண்விழித்த போது மணி 9-ஐ தாண்டியிருந்தது.... அவள் அம்மா மாதவி தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாள்.... மாதவி திவ்யாவிடம் என்னடி இது 9 மணிய தாண்டி தூக்கம் சீக்கிரம் ரெடியாகு

 திவ்யா பதில் ஏதும் கூறாமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.... அங்கு இருந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தாள்.... ஏதோ மாற்றம் இருப்பதாக தோன்றியது.... குளியல் அறையின் வெளியே அம்மாவின் குரல் ஒலிக்க... சீக்கிரம் குளித்து முடித்து ரெடியானாள்....

 இருவரும் கோவிலுக்கு சென்றனர்
 .........


 ராஜா காலையில் எழுந்ததுமே அவசரமாக விஜய்க்கு கால் பண்ணினான்..... விஜய் அதனை எடுத்து காதில் வைக்க

 என்னடா ஆச்சு போனை எடுக்க இவ்வளவு நேரமா

 டேய் அதான் மூணு ரிங்க்லேயே எடுத்துட்டெனே என்ன விஷயம் சொல்லு

 ராஜா நேற்று அவள் வீட்டுக்கு சென்றது முதல் அவள் காதலுக்கு சம்மதம் சொன்னதுவரை அனைத்தையும் சொல்லி முடிக்க.....

 டேய்... சூப்பர்டா.... எனது வாழ்த்துக்கள்..... எனக்கு என்ன சொல்லுறதுனு புரியில..... நீ எங்க இருக்க.... நான் நேர்ல வரேன்....

 இல்லடா.... இன்னைக்கு சாய்ந்தரம் முக்கியமான நிகழ்ச்சி இருக்கு.... நீ அம்மா, கயல்விழி எல்லாத்தையும் கூட்டிகிட்டு மறக்காம வந்திடு..... நானும் அதுக்காதான் ஏற்பாடு செய்ஞ்சுட்டு இருக்கேன்.... நாம சாய்ந்தரம் மீட் பண்ணுவோம் சரியா

 சரிடா.... அப்ப நான் வைக்கிறேன்....

 விஜய்க்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.... ஓடிசென்று ராஜா சொன்ன விஜயத்தை அம்மாவிடம் சொன்னான்.... ராணியோ அப்ப சரி இரண்டு பேரு கல்யாணத்தையும் ஒரே மேடையில நடத்திடலாம்.... சரியா... ஆமா இத கயல்விழிகிட்ட சொன்னியா

 இல்லம்மா....

 போய் சொல்லு....

 சரிமா..... சொல்லி விட்டு கயல்விழியை பார்க்க அவளது அறைக்குள் நுழைந்தான் விஜய்

 கயல் என குரல் கொடுத்துகொண்டு வரவும்.... அவள் குளித்து முடித்து கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.... அவன் மலைத்து போய் அவளை பார்த்தான்... ஏனென்றால் அவள் துண்டை மட்டுமே உடம்பில் கட்டியிருந்தாள்.... அவனின் பார்வையின் தாக்கம் தாங்கமல் ம்றுபடியும் குளியல் அறைக்குள்ளே புகுந்து கொண்டாள்.....

 அவள் ஓடிச்சென்று குளியல் அறைக்குள் புகுந்ததை பார்த்த விஜய்க்கு சிரிப்பு வர.... அதனை அடக்கி கொண்டே குளியல் அறையை நோக்கி சென்றான்.... PLEASE MADAM கொஞ்சம் வெளிய வர முடியுமா..... நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான சந்தோசமான விஷயத்தை சொல்லலாமு வந்தேன்... PLEASE கொஞ்சம் வருறீங்களா

 நீங்க போங்க... அப்பதான் வருவேன்......

 ஏன்... நான் உன்ன அவ்வுளவு பயங்கரமாவா இருக்கேன்... என்னை பார்த்து நீ பயப்பட....

 நான் வெளிய வந்தா நீ கைய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்க..... அது மட்டும் இல்லாம எனக்கு வெட்கமா இருக்கு.... PLEASE வெளிய போங்க.....

 நான் உன்னை எதாவது பண்ணுவேனா... நீ என்ன RAPE பண்ணாம இருந்தா சரி..... நான் வெளிய போறேன்... சீக்கிரம் வா.... அவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து வெளியே சென்றான்....

 அவள் வெளியே எட்டி பார்த்து விட்டு விரைவாக உடையை அணிந்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்..... அங்கே அவன் அவளின் வருகைக்காக நாற்காலியில் உக்காந்து காத்து கொண்டிருந்தான்.....

 அவனின் அருகே இருந்த நாற்காலியில் போய் உக்காந்து அவனை பார்த்து என்ன வென கேட்க..... அப்பொழுது ராணி அங்கே வந்தாள்..... விஜய் நம்ம பக்கத்து வீட்டு வெட்சுமி கூப்பிட்டா... ஏதோ அவசரமா.... நான் போய்ட்டு வந்திடுறேன்.... சரியா

 அம்மா நீ சாப்பிடியா....

 ஆமாடா நான் சாப்டேன்.... நீயும் கயலும் சாப்பிடுங்க...... என ராணி கிளம்பினாள்......
ராணி போனதும் விஜய் எழுந்து அவள் உக்காந்து இருந்த நாற்காலியில் போய் அவளை நெருக்கி உக்காந்தான்..... அவள் மறுப்பேதும் சொல்லாததுனால் விஜய் அவளின் கையை எடுத்து அதனை மெல்ல வருடியவாறே

 நான் இப்போது உன்கிட்ட ஒரு விஜயம் சொல்லுவேன்.... சந்தோசமான விஜயந்தான் ஆனா... நான் சொல்லி முடிக்கும் போது நீ உன்னோட கருத்த வெளிப்படையா சொல்லனும்... சரியா

 அவன் சொல்லுவது அவளுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும்.... சரி என தலையசைத்தாள்..

 சரி வா..... முதல சாப்ட்டு முடிப்போம்... அப்புறம் ஆரம்பிப்போம்... அவளை அழைத்து கொண்டு சாப்பிட சென்றான்.. இருவரும் சாப்பிட்ட பின்

 வா... வெளியே போய் பேசுவோம்..... இருவரும் அங்கே உள்ள மரபெஞ்சில் அமர்ந்தனர்....

 சரி... நான் இப்ப விஜயத்துக்கு வறேன்.... நீ நம்ம ராஜாவை பத்தி என்ன நினைக்கிறே...

 எதுக்குனு நான் தெரிஞ்சிக்கலாமா....

 நான் அப்புறம் கண்டிப்பா சொல்லுறேன்... இப்ப நீ சொல்லு

 அம்மா(ராணி)... சொன்னத வச்சு அவங்க நல்ல பையன் தெரியுது.... அன்னைக்கு கோவில வைச்சு அம்மா அவங்களோட கதைய சொன்னாங்க.... கொஞ்ச வருத்தமாவும் இருந்துச்சு... ஆனா அவர் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்காருனா இது அவரோட தன்னம்பிக்கை காட்டுது.... அவரு அவ்வுளவு படிச்சுருந்தாலும் வெளியே எங்கேயும் போகாம அவங்களுக்காக இன்னும் கஷ்டப்பட்டு இருக்காறே இது அவரோட இரக்க குணத்த காட்டுது... மொத்தத்ல அம்மா சொன்னது மாதிரி அவர் உங்கள விட நல்லவர்... -- இவற்றை கயல் கூறி முடித்ததும்

 சரி.... இவ்வுளவு நல்ல பையன் ஒரு பொண்ண காதலிக்கிறான்.... தெரியுமா

 யார்ங்க அந்த பொண்ணு... உண்மையிலே அந்த பொண்ணு கொடுத்துவச்சவ...

 அது... வேற யாருமில்லை .... உன் தங்கை தான்.... அவளும் அவன விரும்புறா

 என்னது.... அவள் எழுந்து விட்டாள்.... விஜய் அவள் முகத்தை பார்க்க ....அவள் முகத்தில் கவலையின், பயத்தின் ரேகைகள் தோன்றின....

 கயல்... அப்ப உனக்கு விஜய் உன் தங்கையை விரும்புறது உனக்கு பிடிக்கலையா.... என கவலையா கேட்க..

 அப்படி இல்லங்க.... என் தங்கச்சிக்கு அவர் ஏத்தவர் தான்... ஆனா

 அப்புறம்... என்ன

 எங்க சித்திய நினைச்சாதான் பயமா இருக்கு.... நான் காதலிச்சற்கே அவங்க ரொம்ப கோபபட்டாங்க.... இப்ப அவளும் காதலிச்சு சித்திக்கு தெரிஞ்சு போச்சுனா.... பாவம் என் தங்கச்சி....

 அது எல்லாம் நீ பயப்படுற மாதிரி நடக்காது.... நாங்க எல்லாம் அதுக்கு அவங்க விட மாட்டோம்.... நீ உன்னோட முடிவ சொல்லு.... உனக்கு சம்மதமா...?

 எனக்கு சம்மதம் தாங்க... என் தங்கை அவரோட வாழ்ந்தா ரொமப சந்தோசமா இருப்பா.... எனக்கு முழு சம்மதம்... அது சரி....அவங்க இரண்டு பேரும் காதலிக்கிறாங்க.... நீங்க என் கிட்ட வந்து சம்மதமானு கேட்குறீங்க.....

 அவங்க தான் காதலிக்கிறாங்க.... அத நான் ஒன்னும் சொல்லல.... இப்ப நம்மள எடுத்துக்கோ.... நாம இரண்டு பேரும் காதலிச்சோம்.... உன் சித்திய தவிர வேற யாருக்கும் மன கஷ்டம் இல்ல.... அவங்களும் போக போக சரியாடுவாங்க....

 அத மாதிரி... இப்ப.... உன் தங்கையும், என் நண்பனும் காதலிக்கிறாங்க..... இவங்க காதலிக்கிறதுனால யாருக்கும் மனக்கஷ்டம் வரக்கூடாது.... அப்பதான் அவங்களும் நல்லா இருப்பாங்க.... இப்ப புரியுதா இத ஏன் நான் உன் கிட்ட கேட்டேனு....

 கயல்விழி இதை யோசிக்கவே இல்லை....அவனின் பேச்சு அவளுக்கு ஏதோ பண்ண.... கண்கள் தானாக கலங்கின..... அவனை தன்பக்கம் இழுத்து தன் மார்பு மீது இறுக்கி அணைத்து கொண்டாள்.... அவனின் முகத்தை கையில் ஏந்தி முகத்தை காதலாக பார்த்தாள்..... இருவரின் கண்களும் சந்தித்து கொண்டன... மறுபடியும் அவனை இறுக்கி அணைத்து அவன் உதட்டிற்க்கு தன் உதட்டால் ஒரு முத்த கவிதை எழுதினாள்.....

 அவளுக்கு போட்டியா... நானும் உன்னை விட கவிதை நன்றாக எழுதுவேன்.... என அவனும் அவளது உதட்டில் அவனது காவியத்தை படைத்தான்.... இந்த இருவரின் காவிய, காதல் படைப்பை அவளர்களது வீட்டு செல்ல பிராணியான மணி(நாய் குட்டி)..... அவர்களின் காதல் விளையாட்டை தனது அழகான் குரலால் தடுத்து நிறுத்தியது....

 இருவரும் அந்த சத்ததால் திடிரென பிரிய.... மணி மறுபடியும் குறைத்து தானும் இங்குதான் இருப்பதாக அவர்களுக்கு உணர்த்த.....

 கயல்விழியும் விஜயும் மணியை பார்த்தனர்.... விஜய் மணியிடம் ஜேம்ஸ் எங்க....

 அது எதுவும் சொல்லாமல்... அது வந்த வழியே ஓடியது..... அது அவர்களுக்கு ஏதோ உணர்த்த.... அவர்களும் அதன் பின்னால் சென்றனர்....

 அங்கே ஜேம்ஸ்.... அதன் மொழியில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது... ஆனால் இருவருக்கும் புரியாமல் இருக்க.... விஜய்தான் ஜேம்ஸ் தூக்கி அதனை பார்த்தான்.... அதன் கால்களிலில் சின்ன ஆணி ஒன்று ஆழமாக குத்தி இருக்கிறது.... இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது.... இதை பார்த்த கயல் அழ தொடங்க.... விஜய் மெதுவாக அந்த ஆணியை வெளியே எடுத்தான்.... இரத்தம் அதிகமாக கசிய....

 கயல்விழி ஒடிச்சென்று வீட்டின் உள்ளே இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்தாள்.....

 விஜய் அவற்றை எடுத்து அதன் கால்களில் காயத்தை துடைத்து மருந்து போட்டு ஒரு வெள்ளை துணியை வைத்து கட்டினான்... அதற்கு இப்போது வி குறைந்து இருக்க வேண்டும்... அவர்களை நோக்கி வாலாட்டி நின்றது....

 கயல்விழி இன்னும் அழுதுகொண்டே இருந்தாள்..... விஜய் அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் என ஆகி விட்டது....
திவ்யாவும் மாதவியும் கோவிலில் போய் சேர்ந்து சாமி தரிசனம் செய்து அருகே உள்ள குளத்தின் படிகட்டில் உக்காந்தனர்..... இருவரும் அமைதியாக இருக்க..... மாதவி ஆரம்பித்தாள்...

 உன் அக்கா எப்படி இருக்கா....

 திவ்யா திகைத்து போய் அம்மாவை பார்த்தாள்.... அவள் இப்படி கேட்பாள் என அவள் நினைக்கவே இல்லை.....

 இல்லம்மா எனக்கு தெரியாதுமா......

 சும்மா நடிக்காத.... எனக்கு உங்க இரண்டு பேர் பத்தி நல்லாவே தெரியும்... ஒன்னு நீ போய் அவள பாத்துருப்ப.... இல்ல அவ வந்து ஒன்ன பாத்துருப்பா.... இப்ப சொல்லு அவ எப்படி இருக்கா....

 அது வந்துமா.... நல்லா இருக்கா.... நான் அக்காவ பாக்கும் போதெல்லாம் அவ உன்னை பத்திதான் கேட்பா.... please - மா அக்காவ மன்னிச்சுடுமா....

 மாதவி எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.... அம்மா அழவும் திவ்யா என்ன செய்வதென்று தெரியவில்லை.... அவளின் தோள்களை தொட்டு .... please -மா அழாதே .... என்னம்மா ஆச்சு .... சொல்லுமா என திவ்யா கேட்கவும்...

 எதுவும் சொல்லாமல் ... கையில் இருந்த NEWS PAPER- ன் ஒரு துண்டு செய்தியை அவளிடம் கொடுத்தாள்...

 அதை வாங்கி பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்து போனது..... அந்த NEWS PAPER- ல் "பல பெண்களை ஏமாற்றிய கல்யாண மாப்பிளை கைது" அதில் இருந்தவன் கயல்விழியை மாப்பிளை பார்க்க வந்தவன்....

 திவ்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும்.... அம்மாவிடம் அதான் தப்பா எதுவும் நடக்கலல... பின்ன ஏம்மா அழுவுற....

 மாதவி அவளை பார்த்து..... நான் கயல்விழி எப்படி போனாலும் பரவாயில்லைனு செய்யலமா....... அவள ஒரு இடத்துல கட்டி கொடுத்துட்டனா... எனக்கு அப்புறம் நீ மட்டும் தான்.... எனக்கு ஒரு பாரம் குறைஞ்சுடும்... அதான் அவங்க வரதட்சணை எதுவும் வேண்டாம்னு சொன்னதும்... எனக்கு வேற எதுவும் தோணல.... அதான் அவங்கள அன்னைக்கு வரச்சொன்னேன்.....

 அப்புறம் அந்த பையனும் அவளும் காதலிக்கிறது தெரிஞ்சதும் அவங்க முன்னாடி எனக்கு ஒரு மாதிரி ஆனதுனால.... மத்தவங்க முன்னாடி அவ இப்படி பண்ணிட்டாளே ஒரு கோபத்துலதான் அப்படி பேசினேன்மா.....

 மத்தபடி அவ நாசமா போணும்னு நான் நினைக்கவே இல்லம்மா.... இரண்டு நாளைக்கு முன்னாடி இந்த பேப்பரை பாக்கும் போதுதான் நான் எவ்வுளவு பெரிய தவறு செய்ய பாத்தேனு எனக்கு தோணிச்சுமா..... என் மனசு கேட்கவே இல்லமா... அதான் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்டா.... உன் கிட்ட எல்லைத்தையும் சொன்னா மனசுல உள்ள பாரம் குறையும்னு தோணிச்சு... அதாமா உன்ன கூட்டிட்டு வந்தேன்.... அக்காவ என்னை மன்னிக்க சொல்லுமா.... ஏனோ எனக்கு மனசுக்குள்ள அரிச்சுக்கிட்டு இருக்கு.... அவகிட்ட மன்னிப்பு கேட்டதான் என் மனசு ஆறும்....

 திவ்யா அமைதியா கேட்டவள்.... அக்கா மேல இவ்வுள்வு பாசம் வைச்சுருக்கால... பின்ன ஏம்மா... அக்கா வீட்டுல திட்டிட்டு இருப்ப.... அக்கா அம்மா போட்டோ முன்னாடி அழுதிட்டே இருக்கும் தெரியுமா.....

 இல்லம்மா....நீ பிறந்தப்போ உங்க அப்பா.... உன் கிட்டையும் பாசமாதான் இருப்பார்... ஆனா கயல்விழினா அவருக்கு தனி பாசமா.... ஏனோ அது எனக்கு பிடிக்கல.... அது மட்டும் இல்லாம... அவளுக்கு சுகந்திரம் கொடுத்தா.... நீ ரொம்ப கஷ்ட படுவியோனு தான்... அவள எப்புமே ஒரு கண்டிப்பா வச்சுருந்தேன்....

 சரிமா.... வா நான் இப்ப உன்ன அக்காகிட்ட கூட்டிட்டு போறேன்.. மன்சு விட்டு பேசு... வா.... அக்காவ பத்தி உனக்கே தெரியும்.... அக்கா உன்ன பத்திதான் நினைச்சுட்டே இருக்கு வா....

 இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி புறப்பட்டனர்.....

No comments:

Post a Comment