Thursday 24 December 2015

விஜயசுந்தரி 74

ஹோட்டலிலிருந்து பஸ் கிளம்ப தயாரானது. எல்லோரும் அவரவர்கள் ஒவ்வொரு சீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க, என்னையும் ராதாவையும் ட்ரைவர் அழைத்து

“தம்பி தம்பி, உங்க ரெண்டு பேருக்கு இந்த சீட் புடிச்சி வெச்சிருக்கேன்” என்று கூற நானும் ராதாவும் அங்கே உட்கார போக லதாவும் எங்களுடன் வந்து உட்கார்ந்தாள். 

“பாப்பா, நீ இந்த சீட்ல உட்காரும்மா” என்று தனக்கு அருகே இருந்த சீட்டை காட்டி லதாவை பார்த்து ட்ரைவர் சுந்தரம் சொல்ல 

“ஏன் நான் இவங்க கூடத்தான் உட்காருவேன்” என்று எங்களுடன் லதா வந்து உட்கார்ந்து கொண்டாள். சுந்தரம் தன் திட்டம் சொதப்பிவிடுமோ என்ற எண்ணத்துடன் தன் சீட்டில் சென்று உட்காந்து பஸ்ஸை ஸ்டார்ட் செய்ய அவன் செல் அடித்தது. எடுத்தான் கோபால் தான் செய்தான். 


“என்ன் சுந்தரம் எல்லா கரக்டா இருக்கா” என்று கெட்க 


“எங்கடா அந்த பொண்னு நான் சொன்ன் சீட்ட விட்டுட்டு மேடம் சொன்னவங்க கூட்வே போய் உட்கார்ந்துட்டா, ஆனா ஜன்னல் ஓரமாத்தான் உக்கார்ந்திருக்கா” என்றான். 

“பார்த்துடா, அவ் தப்பிச்சிட்டான்னா நமக்கு பணக் கெடைக்காது” என்று சொல்லிவிட்டு கோபால் இணைப்பை துண்டிக்க சுந்தரம் பஸ்ஸை ஸ்டார்ட் செய்து நகர்த்தினான். 

மழை விடாம்ல் பெய்து கொண்டிருந்தது. குளிராலும் மழையாலும் எல்லோரும் கண்களை மூடிக் கொண்டு பஸ்சுக்குள் படுத்திருந்தோம். லதா ஜன்னல் ஓரமும் நான் நடுவிலும் ராதா எனக்கு மறுபுறமும் இருக்க பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ராதா சட்டென்று எழுந்து

“லதா நீ இப்டி வா, எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு” என்று சொல்ல ராதாவை ஜன்னல் ஓரம் விட்டு லதா நகர இப்போது ராதா முதலில் அடுத்து லதா அவளுக்கு அடுத்து கடைசியாக நான் என்று உட்கார்ந்திருக்க பஸ் மழை பெய்த மலைப் பாதைகளில் மெல்ல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. 

அதே நேரம் கோபால் தன் காரில் அந்த இடத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்து காரை ஒரு மறைவான இடம் பார்த்து நிறுத்திவிட்டு அங்கிருந்து குடை பிடித்தபடி கையில் கடப்பாறையயுடன் ஜன நடமாட்டம் இல்லாத கொஞ்ச்ம காடு போன்ற பகுதிக்குள் நடந்தான். அவன் ஏற்கனவே மெக்கானிக் ஷெட்டிலிருந்து ஒரு பழுதான் காரி காரை வாங்கிக் கொண்டு வந்து அதை சரியாக பஸ் வந்து கொண்டிருக்கும் சாலையில் நிறுத்தினான். 

பஸ்சுக்கு முன்னால் வந்த வாகனங்கள் எல்லாம் அந்த காரை சுற்றிக் கொண்டு ஒரமாக சென்று கொண்டிருந்தன. வாகங்கள் செல்லும் சாலைக்கு மேலாக இருக்கும் மேட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தான் சுந்தரம். தூரத்தில் எங்கள் பஸ் வருவதை பார்த்ததும் பஸ்ஸை முதலில் நிறுத்தவேண்டும் அதற்கு தான் அந்த பழைய காரினை சாலையில் நிறுத்தியிருந்தான். 

மற்ற வாகனங்கங்களை போல் பஸ்சும் அந்த காரை சுற்றிக் கொண்டு சென்றுவிடாமல் இருக்க பஸ்சை பார்த்துமே அங்கே இருந்த ஒரு மேடான இடத்தை கடப்பாறையால் கிளறிவிட அது ஏற்கன்வே மழையால் பலமிழந்து இருந்ததால் இன்னும் அதிக மணல் குவியலோடு பள்ளமான் சாலை இருக்கும் இடத்தை நோக்கி நகர தொடங்கியது. 

கீழெ வர வர மண் சரிவு அதிகமாகிக் கொண்டே போய் இறுதியில் சாலையயை வந்து அடையும் போது அது பெரிய மண் குவியலாக மாறியது. பஸ்சுக்குள் பலர் தூக்க கலக்கத்தில் இருந்த நேரம் பஸ் திடீரென்று நிறுத்தப்பட எல்லோரும் கண் விழித்துப் பார்க்க முன்னால் ஒரு கார் மண் குவியலுக்குள் மாட்டி கிடந்தது. 

“அப்பா, கொஞ்ச்ம மிஸ் ஆகி இருந்தா நம்ம் பஸ் மேல் விழுந்திருக்கும்” என்று பஸ்சில் இருந்த பலர் சொல்லிக் கொள்ள அதே நேரம் மேலே இருந்த கோபால் அவன் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த அந்த பெரிய பாறையை கடப்பாறையை கொண்டு நெம்பித்தள்ள ஆரம்பித்தான். அது ஒன்றும் அவ்னுக்கு சுலபமாக் இருக்கவில்லை. 

அது மிகப்பெரிய் பாறை, எவ்வளவு முயன்றும் அந்த பாறை ஒரு இன்ச் கூட நகரவில்லை. கடைசியாக முட்டி நகர்த்த மழை பெய்து மண் கொழ கொழப்பாக இருந்ததால் அந்த சேற்றில் வழுக்கிக் கொண்டு பாறை நகர் தொடங்கியது. எங்கள் பஸ் வந்து நின்ற சில நொடிகளிலேயே பாறை உருண்டு வர தொடங்கியது. பஸ் ட்ரைவர் சுந்தரம் இதை ஏற்கன்வே எதிர்பார்த்திருந்ததால் 


அவ்ன ஸ்டீரியங்கை டைட்டாக பிடித்துக் கொண்டிருந்தான். நாங்கள் எதிர்பாராத நேரம் மேலே இருந்து பெரிய பாறை உருண்டு வந்து பஸ்ஸின் ஒரு பக்கம் இடித்து சாலையில் நிற்க நிலைதடுமாறிய பஸ் பக்கவாட்டில் சாய்ந்து உருள தொடங்கியது. ட்ரைவர் திட்டமிட்டபடி என்னையும் ராதாவையும் காப்பாற்ற உருண்டு கொண்டிருந்த பஸ்ஸில் முயற்சி செய்து எங்கள் அருகே வர முயன்றான். 

ஆனால் பஸ் உருண்டு கொண்டு வந்ததது சட்டென்று ஒரு மரத்தில் இடித்து திரும்ப அந்த நேரம் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த ஒரு மரக்கிளை சுந்தரத்தின் முதுகில் குத்தி அவன் முன்பக்கம் குடலை பிடுங்கிக் கொண்டு வ்ர பஸ் மீண்டும் நேரான நிலையில் பள்ளத்தை நோக்கி ஓடியது. பஸ் திரும்பியதால் மரக்கிளையில் மாட்டிய சுந்தரம் வாயிலும் கண், காதிலும் ரத்தம் கொப்பளிக்க் வெளியே சென்ற மரக்கிளையில் மாட்டி அப்படியே உயிரை விட்டான் உருண்டு சென்ற பஸ்ஸில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருண்டு கொண்டிருக்க பஸ் சீட் ஒன்று கழட்டிக் கொண்டு வந்து ஒரு மாணவன் மேல் விழ அவன் கைப்பிடி கம்பியில் குத்தி அவன் மண்டைய்போடு பிளந்து கொண்டு இறந்தான், 

அதே நேரம் ஜன்னல் ஒரம இருந்த ராதா லதாவை காப்பாற்ற எண்ணி நகர அவள் என் மேல் விழுந்து என்னுடம் உருள ராதா ஜன்னல் ஓரமாக மாட்டிக் கொண்டாள். பஸ் உருண்ட வேகத்தில் ராதா ஜன்னல் வழியாக் வெளியே தூக்கி அடிக்கப்பட அவள் உடல் பாதி வெளியேயும் பாதி உள்ளேயும் இருந்தது. பஸ் இரண்டு மரங்களின் பிடியில் மாட்டி நின்றது, மேலே இருந்து பாறையை உருட்டிவிட்ட கோபால் வேகமாக ஒன்றுமே நடக்காதது போல் கீழெ வந்து பார்க்க அங்கு சென்று கொண்டிருநத வாகன ஓட்டிகள் எல்லாம் பஸ் ஒன்று உருண்டு விட்டது என்று கூற எதுவுமே தெரியாதவன் போல 

“அய்யோ பாவம்” என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். தன் செல்போன் மூலமாக அனிதாவுக்கு கால் செய்கிறான். 

“ஹலோ மேடம் நான் கோபால் பேசுறேன்” என்று ரகசியமாய் சொல்ல பதிலுக்கு அவள் 

“சொல்லுங்கண்ணே, வேல முடிஞ்சிதா” என்று கேட்க 

“ப்ளான் பண்ண மாதிரி கல்ல் உருட்டிவிட்டு பஸ்ஸ கவுத்துட்டேன்” என்றதும் அனிதா மகிழ்ச்சியுடன் 

“சூப்பர்ண்ணே, மத்தபடி எல்லாம் ஓகேவா” என்று அவள் கேட்க 

“அதெல்லாம் இன்னும் உறுதியா தெரியல, ட்ரைவர் கிட்ட இருந்து இன்னும் எனக்கு எந்த போனும் வரல, இப்ப தான் ஃபயர் சர்வீஸ் ஆளுங்க வந்திருக்காங்க, நான் என்ன்னு பார்த்துட்டு அப்புறம் உங்களுக்கு போன் செய்றேன்” என்று இணைப்பை துண்டிக்கிறான். அனிதா தன் திட்டம் வெற்றியடைந்த்தை எண்ணி மகிழ்கிறாள். 

அதன் பின் ந்டந்தவை எல்லாம் எனக்கும் தெரியும், ட்ரைவர் இறந்த்தை எண்னி கோபால் வருந்தினாலும், இந்த கொலைக்கு இருந்த ஒரு ஆதாரம் இல்லாம்ல் போனதை எண்ணி அனிதா சந்தோஷப்பட்டுக் கொண்டாள். பேசியபடி பத்து லட்சத்தையும் கோபாலிடமே கொடுத்துவிட அதை வாங்கிக் கொண்டு அவ்ன அன்று இரவே தன் குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிடுகிறான், நடந்தவற்றை எல்லாம் கோபால் எங்களிடம் சொல்லி முடிக்க கும்ரன் என்னை பார்த்தான். 

“டேய் என்ண்டா, அந்த அனிதாவ என்னவோன்னு நெனச்சா, இவ்ளோ பெரிய கொலகாறியா இருக்காளே” என்று என்னிடம் கூற 

“சரி திருச்சிக்கு போன நீ இங்க எப்டி திரும்பவும்” என்று குமரன் அவனை நக்கலாக கேட்க 

“அதான் டா விதி, நம்ம கையில் இவன் மாட்டனும்னுதான் விதி இவன இங்க திரும்பவும் இழுத்துக்கிட்டு வந்திருக்கு” என்று நான் சொல்ல 

“கிட்ட்தட்ட அப்டித்தான் சார், திடீர்னு அவ்ளோ பணம் கையில் கெடச்சதும் எனக்கு தல காலு புரியாம செலவு பண்ணேன், எல்லாம் ரேசு சீட்டு அது இதுன்னு ஒரே வருஷத்துல முக்கால் வாசி காசு காலியாகிடுச்சி, இருந்த காசுல வண்டி ட்யூவ மட்டும் கட்டிட்டு திரும்பவும் இங்கயே வந்துட்டேன் சார்” என்று கூற நான் அனிதாவை பற்றி யோசிக்க தொடங்கினேன்.

“என்ன்டா என்ன் யோசிக்கிற, வா நேரா போலீஸ்க்கு போகலாம்” என்று கும்ரன் சொல்லும் நேரம் கீழெ இருந்த கோபால் 

“அய்யோ போலீஸ்க்கா” என்று அலறி அடித்துக் கொண்டு எழுந்து ஓட் அவனை கும்ரன் துரத்த முயல 

“டேய் அவ்ன விடுடா, இனிமே அவன் நமக்கு தேவ இல்ல. ஆனா அந்த அனிதாவ விடக்கூடாதுடா” என்று கூற இருவரும் சென்னைக்கு கிளம்ப தயாரானோம். சென்னைக்கு வரும் வழியெல்லாம் அனிதாவும் நானும் பழகிய நாட்கள் அவளுக்காக் நான் என் உயிரையும் பணயம் வைத்து ராஜாவுடனும் அவன் வைத்த அடியாட்களுடன் மோதியதும் என்று எல்லா நினைவுகலும் வந்து போனது. 

இப்படி எல்லாம் செய்த பின்னும் அவள் எனக்கு செய்த இந்த துரோகத்தை பற்றி ஒரு முறை கூட மூச்சு விட்ட்தில்லையே, நான் காதலித்த்து ராதாவைத்தானே, ஆனால் இவளின் கட்டாயத்தால் தான் நான் லதாவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன், ஆனால் அப்ப்டியும் செய்துவிட்டு கடைசியில் எந்த பாவமும் அறியாத லதாவை கொல்வதற்க்காக இப்ப்டி ஒரு திட்ட்த்தை போர்ட்டிருக்கிறாளே, ஒரு வேலை இதில் நானும் ராதாவும் இறந்து போயிருந்தால் அப்போது இவள் என்ன் செய்திருப்பாள். 

என் உயிரை பணயம் வைத்து லதாவை கொன்றிருக்கிறாள். என்று நினைக்க நினைக்க் எனக்கு அனிதாவின் மேல் இருந்த வெறி இன்னும் அதிகமானது. என் கையாலேயே அவள் கழுத்தை நெறித்துக் கொல்ல வேண்டும் என்று என் மனம் துடித்த்து. விமானம் த்ரை இறங்கியதும் என் வேகமும் வெறியும் அதிகமானது. 

நேராக் நானும் கும்ரனும் ஒரு டாக்சியில் ஏறி அனிதவின் வீடு நோக்கி கிளம்பினோம். செல்லும் வழியில் ராதாவுக்கு போன் செய்தேன். 

“என்ங்க சென்னக்கு வ்ந்திட்டீங்களா” என்று அவள் மகிழ்வுடன் கேட்க 

“இப்ப் நீ எங்க இருக்க்” என்று நான் கேட்க 

“அம்மா ஃப்ளாட்டுக்கு வந்தாங்க, அதான் நானும் அவங்களும் கோவிலுக்கு போய்ட்டு அப்டியே வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்”என்றாள். 

“அனிதா வீட்லதான இருக்காங்க” என்றதும் 

“ஆமாங்க வீட்லதான் இருப்பா” என்று கூற 

“சரி நீ சீக்கிரமா வீட்டுக்கு வா” என்று கூற 

“என்ன்ங்க ஏதாவது முக்கியமான் விஷயமா ஒரு மாதிரியா பேசுறீங்க” என்றாள்.

“ஆமா வீட்டுக்கு வா” என்று கூறி இணைப்பை துண்டித்தேன், கும்ரனை வேறு ஒரு காரில் அனுப்பிவிட்டு நேராக அனிதாவின் வீட்டுக்கு சென்றேன். 

காலிங் பெல் அடித்தேன். நீண்ட நேரம் கழித்தே கதவு திறக்கப்பட எதிரே அனிதா நின்றிருந்தாள். எனக்கு கைகள் ப்ரபரத்தன. 


நான் கும்ரனை காரிலிருந்து இறங்க சொன்னேன்.

“குமரா நீ வேற கார் அரேஞ்ச் பண்னி போ” என்று நான் சொல்ல

“முத்து நீ இப்ப் கோவமா இருக்க, நானும் உன் கூட வரேன்” என்று அவன் கூற

“இல்ல்டா நான் மட்டும் போறேன்” என்றதும்

“இல்ல்டா, இப்ப் நீ இருக்குற கோவத்துல ஏதாவது ஏடாகூடமா நடந்துடும் அதனால் நானும் வரேன்” என்று விடாப்பிடியாக காரிலேயே இருக்க

“கும்ரா எறங்கு நான் பார்த்துக்கிறேன்” என்று கொஞ்ச்ம கோவமாக் சொல்ல அவன் காரிலிருந்து இறங்கி வெளியே நின்றபடி

“முத்து பார்த்துடா, கொஞ்ச்ம பொறுமையா ஹேண்டில் பண்னு” என்று கூறும்போதெ கார் கிளமியது நேராக அனிதாவின் வீட்டு வாசலில் கார் நின்றது. நான் காலிங் பெல் அடித்தேன். நீண்ட நேரம் கழித்தே கதவு திறக்கப்பட எதிரே அனிதா நின்றிருந்தாள்.

எனக்கு கைகள் ப்ரபரத்தன. என்னை பார்த்தவள் உதட்டில் லேசான புன்னகையுடம்

“ஹாய் வா முத்து எப்ப ஊட்டியில் இருந்து வந்த” என்று சிரித்தபடி கேட்க எனக்கு உடல் சூடானது கோபம் தலைக்கேறி அவள் முன் மௌனமாக நிறக

“என்ன் முத்து எதுவும் பேசாம அமைதியா இருக்க” என்று அவள் என்னை பார்த்து கேட்க நான் நிமிர்ந்து அவளை பார்த்தேன்.

“லதாவ நீதான கொன்ன” என்று நான் கேட்கவும் அவள் லேசாக் அதிருந்து அதன் பின் சமாளித்துக் கொண்டு

“என்ன் முத்து, என்ன் கேக்குற, அது ஆக்சிடெண்ட் த”ன" என்று கொஞ்சமும் வியப்பில்லாமல் என்னை பார்த்து கேட்க

“உண்மியிலேயே நீ எதுவுமே செய்யலைனா, நான் இப்படி கேட்ட்தும் நீ துடிச்சிப் போயிருக்கனும், ஆனா நீ ரொம்ப கேஷிவலா பேசுற” என்று நான் சொல்ல அவள் கொஞ்ச்ம திமிராக

“இப்ப் உனக்கு என்ன் தெரியனும்” என்று கேட்டாள். நான் மிகுந்த கோவத்துடன்

“ஊட்டியில அந்த பஸ்ஸ கவிழ்க்க வெச்சது நீதான” என்று நான் கேட்க அவள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்

“நான் இல்ல, நான் அப்ப்டி பண்ணல” என்றாள்.

“அனிதா, நீ தான் செஞ்சேன்றது சந்தேகம் இல்லாம் எனக்கு தெரிஞ்சிடுச்சி” என்றதும்

“என்ன் தெரிஞ்சிது, யார் உனக்கு இப்படி எல்லாம் சொன்னது” என்று என்னை பார்த்து கேட்க

“நீ யார் ஏற்பாடு பண்ணி அந்த வேலய செஞ்சியோ அவந்தான்” என்றதும் அனிதா அதன் பின் எந்த சலனமும் இல்லாமல்

“ஓ, அந்த ட்ரைவர பார்த்துட்டியா, நீ ஊட்டிக்கு போறேன்னு சொல்லும்போதே இப்படி ஏதாவது நடக்கும்னு எதிர்பார்த்தேன்” என்றாள்.

“ஓ அதனால் தான் என்ன போக விடாம தடுக்க் என்னென்னவோ பண்ண” என்று நான் சொல்ல

“அதையும் மீறி போனதால் தான் இப்படி என்னையே கேள்வி கேக்குற” என்று திமிராக சொன்னாள்.

“ஏன் உன்ன் நான் கேள்வி கேக்க கூடாதா, நான் என்ன் உன் அடிமையா” என்று நான் கேட்க

“அந்த எண்ணத்துல தான் உன்ன் ராதாவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்” என்று நக்கலாக சொன்னவள் என்னை பார்த்து

“சரி ஏதோ தெரியகூடாதுன்னு நெனச்சது தெரிஞ்சி போச்சு, இத வேற யார் கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே, அப்ப்டியே நீ யார்கிட்ட சொன்னாலும்ன், ஏன் நீ போலீஸ்க்கே போனாலும் என்ன ஒன்னும் செய்ய முடியாது. ஏன்னா இது ஆக்சிடெண்ட்னு சொல்லி போலீஸ் இந்த கேச் மூடிடுச்சி, இனிமே நீ க்ழுதயா கத்துனாலும் யாரும் நீ சொல்றத நம்பி என் மேல் ஆக்ஷன் எடுக்க தயாரா இருக்க மாட்டாங்க” என்று கூறிக் கொண்டே சொஃபாவில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டாள். நான் அவள் எதிரே சென்று நின்றதும்

“என்ன் முத்து கெளம்பு எதுக்கு இன்னும் இங்க இருக்க” என்றாள்.

“எதுக்கு லதாவ கொல பண்ண அப்படி ஒரு ப்ளான் பண்ண” என்று நான் கேட்க அவள் சோஃபாலில் தன் கையை வைத்து தட்டியபடி

“என்ன் முத்து அதான் அவ கத முடிஞ்சி போச்சே, இப்ப் அத பத்தி பேசி என்ன் பண்ன போறே, அவளுக்காக பேசத்தான் இங்க யாருமே இல்லயே, அப்புறம் அவ சாவ பத்தி ஏன் பேசனும்” என்று மிகவும் ஆணவமாக் சொல்ல என் கோவம் எல்லை மீறிப் போனது.

“என்ன் பேசுற, நீ தான அவள் எனக்கு கல்யாணம் பண்ண முயற்சி பண்ண், என்ன் கட்டாயப்படுத்தினதும் நீ தான, என் ம்னசுல அவ மேல ஆசைய வளத்துவிட்டுட்டு இப்படி ஒரு காரியத்த ஏன் பண்ண” என்று நான் கேட்ட்தும்

“முத்து லதாவ உனக்கு கட்டி கொடுக்க எனக்கு என்ன கொழுப்பா, ராதா அவ க்ளோஸ் ஃப்ரெண்டுன்றதால லதாவ உனக்கு கட்டி வெக்க ஆச பட்டா, பாவம் என் தங்க்ச்சி, அப்பாவிடா அவ, உன் மேல எவ்ளோ ஆசையா இருந்தா தெரிய்மா, ஆனா நீ லதாவோட அம்மா மீனா கூட படுத்துட்டு அவ பொண்ணையே கல்யாணம் பண்னிக்கவும் சம்மதிச்ச, எப்படிடா உனக்கு மனசு வந்துச்சி” என்று என்னை பார்த்து கத்தினாள்.

“பேச்ச மாத்த ட்ரை பண்னாத, நான் கேட்ட்துக்கு டைரக்டா பதில் சொல்லு” என்று நான் அவளிடம் கேட்க

“என்ன் பதில் சொல்றது. ராதா சொன்னாளேன்னு தான் லதாவ கட்டிக்க சொல்லி உன் கிட்ட கேட்டேன், ஆனா நீ தான் ராதாவ கட்டிக்கனும்னு நான் ஆச பட்டேன், ராதாவும் அத்தான் ஆச பட்டா, ஆனா லதா மேல இருந்த நட்பு அவ கண்ண மறச்சதல தன் காதல விட்டு கொடுக்க அவ ஒத்துக்கிட்டா, ஆனா நான் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று கொஞ்ச்ம் வில்லத்த்னமாக சொன்னாள்.

“நீ என்ன் விட்டுகொடுக்க மாட்டேன்னு சொல்ற” என்று நான் கேட்க

“ஆமா எனக்கு நீ எப்ப்வும் வேணும்னு நான் நெனச்சேன், அது நீ ராதாவ கலயாணம் பண்னாதான் முடியும், அனிதாவ கல்யாணம் பண்னா முடியாது, அதனால் தான் ராதா முன்னால் உன்ன் லதாவ கட்டிக்க் சொல்லி கேட்டுட்டு பின்னால் லதாவ போட்டு தள்ள ஏற்பாடு பண்ணேன்” என்று கூலாக சொன்னாள்.

“அடிப்பாவி நீயெல்லாம் பொம்பளையா, என் மேல் இருந்த ஆசன்னு சொல்ற, ராதாவுக்காக்ன்னு சொல்ற, நீ பண்ன அந்த திட்ட்த்துல ஒரு வேல நானும் ராதவும் செத்து போயிருந்தா அப்ப என்ண்டீ பண்ணியிருப்ப” என்று நான் கேட்க அவள் என்னை பார்த்து லேசாக் சிரித்தபடி

“எனக்கு ராதவொட உயிர் முக்கியமில்ல, அவ போனா போகட்டும் நீ தான் எனக்கு முக்கியம், உன்ன் எப்ப்டியாவது காப்பாத்திடனும்னு தான் அந்த ட்ரைவர் கிட்ட சொல்லி இருந்தேன். கிட்ட்தட்ட நான் போட்ட ப்ளான் ஓகே ஆகிடுச்சு, ஆனா அந்த கார் ட்ரைவரலாதான் இது வெளியில் வந்துடிச்சு” ஏன்று கூறினாள். “


"ச்சீ, படு பாவி, இப்படிபட்டவன்னு எனக்கு தெரியாம் போச்சேடீ, தங்க்ச்சி செத்தாலும் பரவால்ல தான் ஆச பட்டவன் கூட எப்பவும் படுக்கனும்னு நெனக்கிறியேடீ நீயெல்லாம் உயிரோடவே இருக்க கூடாதுடீ” என்று தாவி சென்று அவள் கழுத்தை இறுக்கி பிடித்து அழுத்தினேன். அவள் என் கைகளை அவள் கழுத்திலிருந்து எடுக்க முயன்றாள் முடியவில்லை,

சத்தம் போட்டு உள்ளே இருந்த வேலைக்கார்ர்களை கூப்பிட அவர்கள் ஓடி வந்து என்னை அவளிடமிருந்து பிரித்துவிட எல்லோரும் என்னை பிடித்துக் கொண்டு அவளிடமிருந்து இழுத்து சென்றார்கள்., தன் கழுத்தை தடவிக் கொண்டே என்னை நோக்கி வந்தவள்

“டேய் உன்ன் ஒரு வேலக்காரன் மாதிரியும் எனக்கு ஆச வரும்போது தீர்த்து வைக்கறவனுமா இருக்கனும்னு தான் உன்ன் இந்த வீட்டூக்குள்ள் மருமகனா கொண்டு வந்தேன். ஆனா நீ என்னையே எதிர்க்க துணிந்திட்டியா” என்று கூறிக் கொண்டே என்னை நெறுங்கி வ்ந்தாள். அந்த நேரம் வாசலில்

“அக்கா” என்று ஒரு சத்தம் எல்லோரும் திரும்பி பார்க்க அங்கு ராதா தன் அம்மாவுடன் நின்றிருந்தாள். உள்ளே வந்தவள் என்னை பலர் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

“விடுங்க அவர” என்று வேலைக்கார்ர்களிடம் சொல்ல அவர்கள் என்னை விட்டுவிட்டு தள்ளி சென்றார்கள்.

“என்னக்கா என்ன் நடக்குது இங்க” என்று முகத்தில் கோவம் கொப்பளிக்க் அனிதாவை பார்த்து ராதா கேட்க அனிதாவோ அதுவரை முகத்தை கோவமாக் வைத்திருந்தவள் மிகவும் சாந்தமாகி

“ராதா, இவரு என்ன் பார்த்து கொலகாறின்னு சொறாருடீ” என்று சொல்ல

“வாசல்ல வரும்போது, நீ சொன்னத கேட்டேங்கா, உன் ஆசய தீர்த்துக்கவும், உன் வேலயெல்லாம் செஞ்சி போடவும் தான் இவர எனக்கு நீ கட்டி வெச்சியா” என்றாள். அனிதா எதுவும் சொல்லாமல் அமைதியாக அவளை பார்க்க

“ராதா பிரச்சின அது இல்ல, உங்க அக்கா தான் திட்டம் போட்டு லதாவ கொன்னிறுக்காங்க” என்றதும் ராதா அதிர்ச்சியுடன் என்னை பார்க்க

“என்னங்க சொல்றீங்க” என்றாள்.

“ஆமா ராதா ஊட்டியில ஆள் ரெடி பண்னி, நாம் டூர் போன் பஸ்ஸ் கவுத்தது உங்க அக்காவொட திட்டம்தான் அத கேட்டதுக்கு தான் என்ன் வேல காரங்கள விட்டு அடிகக் வராங்க” என்றதும் அனிதாவை கோவத்துடன் பார்த்தவள்

“என்னக்கா, ஏன் அப்டி செஞ்ச, லதா எனக்கு எவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்டு தெரியுமா, அவள ஏன் கொன்ன” ஏன்று ஆத்திரம் பொங்க அனிதாவிடம் கேட்க

“ஆமா ராதா, லதாவ நான் தான் கொல பண்ணேன், ஆனா எல்லாம் உனக்காகதான், நீ இவன் மேல் வெச்சிருந்த காதல் நிஜமாகி நீங்க ரெண்டு பெரும் ஒன்னா சேரனும்னு தான் அப்ப்டி செஞ்சேன்” என்றதும்

“ச்சீ, வாய மூடு, நீயெல்லாம் ஒரு பொண்ணா நீயே தான் ராதாவ இவருக்கு கட்டி வெக்கலாம்னு சொன்ன, அப்புறம் எப்டி உனக்கு அவள் கொல்ல மனசு வந்துச்சி” என்று அவள் முகத்தை உற்றுபபார்த்தவாறு கேட்க

“ராதா என்ன் புரின்ஞ்சிக்கோ, உன் மனசு நோகக் கூடாதுன்னுதான் லதாவ இவனுக்கு கட்டி வெக்க சம்மதிச்சேன், ஆனா நீ இவன் மேல எவ்ளோ ஆசையா இருந்தேன்னும் எனக்கு தெரியும், அந்த காதல் தோத்துட கூடாதுன்னு தான் நான் அப்டி செஞஜேன்”என்றதும்

“பொய் சொல்லாத, நீ அப்ப்டி நெனச்சி செய்யல, இந்த எல்லா சொத்தையும் நீ ஒரே ஆளு அனுபவிக்கனும்னு தான் அப்டி செஞ்சிருக்கே” என்று ராதா சத்தமாக கூறீயதும்

“என்ன் ராதா இப்டி சொலிட்ட” என்றாள்.

“ஆமா அந்த ஆக்ஸிடெண்ட் நடக்கும்போது பஸ்ல் லதா மட்டுமா இருந்தா நானும் இவரும் கூடதான் இருந்தோம், உன்னோட் குறி லதா இல்ல, நான் தான், எனக்கு நீ வெச்ச் குறி தான் லதாவ பலி வாங்கிடுச்சி” என்று சொல்ல அங்கு இருந்தவர்கள் அணைவரும் அதிர்ந்தோம்.

எனக்கே இந்த விஷயம் அப்போது தான் தோன்றியது. என்னைவிட்டால் இவளின் ஆசைக்கும் வேலைக்கும் ஆளா இல்லாமல் போய்விடும், எத்தனையோ பேர் கிடைப்பார்கள் ஆனால் இந்த சொத்து தான் இவளின் முக்கிய குறீயாக இருந்திருக்கிறது என்று என் மனம் சொல்லியது.

அப்போது ராதாவின் அம்மாவும் அப்பாவும் அருகே வர

“அனிதா என்ன் இது, ராதா சொல்றது உண்மையா, ஏன் உனக்கு இப்டி ஒரு வெறி, உனக்கு இல்லாததா, உன்ன நாங்க அப்படியா வ்ளர்த்தோம்” என்று ராமநாதன் கேட்க அனிதா தலை குனிந்து கொண்டாள்.

“அடிப்பாவி, உன்னையும் எங்க பொண்ணா நெனச்சிதான வளர்த்தோம், ஆனா நீ நாங்க பெத்த் பொண்னையே சொத்துக்காக கொல்ல பார்த்திருக்கியே” என்றார் என் மாமியார்


அனிதாவை பார்த்து கத்தியதும் எனக்கு தூக்கிவாரி போட்டது. இப்படி அவள் சொல்லி அழ நான் அவள் அருகே சென்று 


“அத்த என்ன அத்த் சொல்றீங்க” என்றேன். 


“ஆமா மாப்ளா இவ எங்க பொண்ணே இல்ல, எங்களுக்கு கல்யாணம் ஆகி மூனு வருஷமா கொழந்த இல்ல” என்று கூறியபடி என் மாமியார் என்னை பார்த்தாள். அதன் பின் 

“அதுக்கப்புறம்தான் எங்களுக்குனு ஒரு வாரிசு வேணுன்ம்னு வேண்டிக்க திருப்பதி போயிருந்தப்ப அங்க ஒரு பஸ் ஆக்சிடென்ட்ல இவ அம்மா அப்பா எல்லாரும் இறந்து போய் இவ அனாதையா நாலு வயசு கொழந்தயா இருந்தா, எங்களுக்கும் கொழந்த இல்லாததால் இவள் கூட்டி வந்து வளர்த்தோம், இவ வந்த அடுத்த வருஷமே எனக்கு ராதா பொறந்தா, ராதா பொறந்ததுக்கு அப்புறமும் நாங்க இவ மேல் பாசமாதான் இருந்தோம், ரெண்டு பேர் கிட்டயும் எந்த வித்தியாசமும் காட்டாம் தான் வளர்தத்தோம், ராதாவுக்கு இந்த உண்ம சின்ன் வயசுலயே தெரிஞ்சாலும், அவள் தன் கூட பொறாந்தவ மாதிரிதான் பாசமா இருந்தா ஆனா இண்டஹ் பாவி இப்படி ஒரு எண்னத்தோட தான் இத்தன நாளா இருந்திருக்காளே” என்றாள். 

நான் ராதாவை பார்க்க அவள் முகத்தில் எந்த அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லை. ஆக இந்த விஷயம் என்னை தவிர இங்கு எல்லோருக்கும் தெரியும் போல் என்று நினைத்துக் கொண்டு 

“ராதா இந்த விஷயம்...” என்று நான் இழுக்க 

“எனக்கு சின்ன வயசுலையே தெரியும்ங்க, இவ என் கூட பொறக்கலைனானும் என் கூட பொறந்தவள மாதிரி தான் நான் இவ கிட்ட பழகுனேன். ஆனா இவ சொத்துக்காக என்னையே கொல்ல பார்த்துருக்கா” என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

என் மாமியாரும் மாமனாரும் மாறி மாறி அனிதாவை திட்டி தீர்த்தார்கள். அனிதா தேம்பி தேம்பி அழுதாள்.

“சரி அனிதா எப்ப் சொத்துக்காக நீ இப்படியெல்லாம் பண்ண நெனச்சியோ இனிமே இந்த் வீட்ல நான் இருக்க விரும்பல, உன்னோட் ஃப்ளாட்டும் எனக்கு வேண்டாம், நான் எங்கயாவது போறேன்” என்று கிளம்ப 

“என்ங்க, இருங்க, நீங்க ஏன் இந்த வீட்ட விட்டு வெளியில போகனும் போக வேண்டியவ அவ தான்” என்று அனிதாவை காட்டி ராதா சொல்ல அனிதா அழுது கொண்டிருந்தாள் 

“இல்ல் ராதா, நான் எப்பவும் பணம் பதவிக்குனு ஆச பட்ட்தே இல்ல, உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட்தும் உன் மேல எனக்கு இருந்த காதலால தான் தவிற பணத்துக்காக இல்ல, ஆனா அனிதாவுக்கு இந்த வாழ்க்க பழகி போனதால் அவங்களால் இது இல்லாம் இருக்க முடியாது, அதனால் நான் போறேன்” என்று கிள்ம்ப என் கையை ராதா தாவி பிடித்தாள். 

“நீங்க இல்லாத எட்த்துல எனக்கு மட்டும் என்ன் வேல, நானும் உங்க கூடவே வந்திடுறேன்” என்று அவாளும் என்னுடன் நடக்க அனிதா ஓடி வந்து எங்கள் முன்னால் நின்று 

“முத்து ராதா ரெண்டு பேரும் என்ன் மன்னிச்சிடுங்க, நான் செஞ்சது தப்பு தான் ஆனா அத இப்ப் உணர்ந்துட்டேன்,. எல்லாரும் இங்கயே இருக்கலாம், ப்ளீஸ் யாரும் வெளியில் போக வேண்டாம்” என்று கண்ணில் கண்னீர் வழிய எங்களை கை கூப்பி கெஞ்சினாள். ராதா யோசித்தாள். 

“இப்படி எல்லாம் பேசி உங்க இங்க இருக்க சொல்வேன்னு நெனச்சிங்களா, இது ஃபுல்லா என்னோட் சொத்து, நான் சம்பாதிச்சு சேர்த்த்து, உங்களுக்கு மட்டுமில்ல இங்க இருக்குற யாருக்கு இது தேவ இல்லையோ அவங்க தாராளமா வெளியில் போகலாம்”என்று மீண்டும் திமிறாக சோஃபாவில் சென்று உட்கார்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு எங்களை ஏளனமாக பார்த்தாள். 

நானும் ராதாவும் எரிச்சலுடன் அந்த இட்த்திலிருந்து வெளியேறினோம். எங்கள் பின்னால் என் மாமியாரும் மாமனாரும் வந்து எங்களை சமாதானம் செய்ய முயன்றார்கள்.

“ராதா நீங்க ஏன் இங்கிருந்து வெளியில் போகனும், அந்த நாய வெளியில் தொரத்தலாம்” என்று என் மாமியார் எவ்வளவோ கூறினார், ஆனால் என மனம் சமாதானம் ஆகவில்லை, அவர்களை மீறி நாங்கள் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தோம். எங்கே செல்வது என்று தெரியாமல் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்க ஒரு கார் எங்கள் முன்னால் வந்து நின்றது. உள்ளிருந்து கும்ரனும் சங்கீதாவும் இறங்கி வந்தார்கள்.

“என்ன் முத்து, எங்க போற” என்று கேட்க 

“அது வந்து...” என்று நான் சொல்ல் தயங்கும் முன்பே 

“எனக்கு எல்லாம் தெரியும், வா எங்க வீட்டுக்கு போகலாம்” என்றதும் 

“இல்ல் கும்ரா வேண்டாம், நாங்க எங்கயாவது போறோம்” என்று ராதா விரக்தியுடன் சொல்ல 

“ராதா எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம், மொதல்ல கார்ல ஏறுங்க” என்று சங்கீதா சொல்ல இருவரும் தயக்கத்துடனே காரில் ஏறினோம். குமரனிம் வீட்டில் நாங்கு பேரும் உட்கார்ந்திருக்க 

“என்ன் ராதா அனிதா இந்த அளவுக்கா கொடீரமா நடந்துப்பாங்க, என்னால் கொஞ்ச்ம கூட நம்பவே முடியல” என்று சங்கீதா சொல்ல

“என்னாலயே அவ பண்ணத எல்லாம் நம்ப முடியல சங்கீதா, சின்ன வயசுல இருந்து அவ மேல நானும் என் மேல அவளும் எவ்ளோ பாசமா இருந்தோம் தெரியுமா, ஆனா இன்னைக்கு சொத்துக்காக என்னையே அவ கொல்ல பார்த்திருக்கான்னு தெரியும் போது, அவ பாசமெல்லாம் வெறும் நடிப்புத்தானொன்னு தோனுது” என்று கூறி ராதா அழ நான் அவளை சமாதானம் செய்ய முயன்றேன்.

“முத்து அனிதா மேல கேஸ் போட்டு உங்களுக்கு சேர வேண்டியத வாங்காம் விடாத” என்று குமரன் கூற 

“இல்ல்டா, இனிமே அவ முகத்துலயே முழிக்க கூடாதுன்னு தான் வெளியில் வந்துட்டேன். அவ சொத்தும் வேண்டாம், அவ் சொந்தமும் வேண்டாம், என் கூட என் ராதா மட்டும் இருந்தா போதும்” என்று நான் சொல்ல அனிதா என தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். 

“சரி முத்து அடுத்தபடியா என்ன பண்ண போறீங்க” என்று சங்கீதா கேடக் “அதுதான் தெரியல” என்று நான் சொன்ந்தும் 

“நீங்களும் ராதாவும் வேணா பழயபடி எங்க ஹாஸ்பிடல்லயே வந்து ஜாயிண்ட் பண்ணிக்கங்களேன்” என்று சங்கீதா சொல்ல நான் கும்ரனை பார்த்தேன். அவனுக்கு கண்டிப்பாக என் மன்நிலை புரிந்திருக்கும் அதனால் தலை குனிந்து கொண்டான். 

“இல்ல் சங்கீ, அது சரியா வராது. அனிதா இனிமே இங்க எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டா, அவ கண்லயே படாம எங்கயாவ்து போய்டனும்னு நெனைக்கிறேன்” என்று நான் சொல்ல குமரனும் சங்கீதாவும் யோசித்தார்கள். 

“சரி முத்து இந்த ஃபீல்டு வேண்டான்னா, நான் வேற ஒரு ஐடியா சொல்லட்டுமா” என்றாள். 

“என்ன் சங்கீதா”

“என்னோட மாமா ஒருத்தரு வேலூர்ல இருக்காரு, அங்கிருந்து வெளியாகுறா மனிதம்னு ஒரு வீக்ளிய அவர் தான் நட்த்துறாரு, அங்க வேணும்னா நீங்க போய் கேட்டுப்பாருங்களேன்” என்று சொல்ல 

“சரி சங்கீ, எனக்கும் அனிதா முகத்துல முழிக்காம் இருக்க் முடியும்” என்று சொல்ல சங்கீதா 

“நான் இப்பவே அவருக்கு போன் பண்றேன்” என்று தன் செல்லி இருந்து போன் செய்து பேசினாள். அதன் பின் எங்கள் எதிரே வந்து 

“முத்து நான் எல்லாத்தையும் பேசிட்டேன், அவரு உங்களா உடனே வர சொல்லி இருக்காரு, நீங்க ரெண்டு பேரும் தங்குறதுக்கு அவரே ஒரு எடமும் பார்த்து தரேன்னு சொல்லி இருக்காரு, நீங்க உடனே வேலூர் கெளம்புங்க” என்று கூறி ஒரு பேப்பரில் எதையோ எழுதினாள்.

“இதுதான் அவ்ரோட அட்ரஸ்” என்று என்னிடம் கொடுத்தாள். நானும் ராதாவும் அவ்ர்களிடமிருந்து விடைபெற்று வேலூர் செல்லும் பஸ்ஸி ஏறினோம், பஸ் புறப்பட்ட்து.

“ராதா, நீ எப்படியோ வளர்ந்தவ, என்னால் இப்படி மாத்து துணிகூட இல்லாம்” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கைகள் என் வாயை மூட 

“சந்தோஷத்துல மட்டும் ஷேர் பண்ணிக்க் ஆயிரம் ரிலேஷன்ஷிப் இருக்கு, ஆனா கஸ்ட்த்துலயும் கூட வாறது புருஷன் பொண்டாட்டி உறவுதாங்க, அப்படி இருந்தாதான் அது உண்மையான பாசம், உண்மையான குடும்பம்” என்று கூறிவிட்டு என்னை பார்த்தாள். என்னையும் அறியாமல் என் கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துவிட்டு 

“என்ன்ங்க, நாம் எதுக்கு எங்கயோ போகனும், உங்களுக்குன்னு தான் சொந்தமா ஒரு வீடு இருக்கே, நாம் அங்கயே தங்கி இருந்திருக்கலாமே” என்று ராதா கூற 

இருந்திருக்கலாம் ஆனா எப்ப்டி இருந்தாலும் அனிதா முகத்துல் முழிக்கிற மாதிரி தான் வரும், அதனால் தான் சென்னைய் விட்டு போகலாம்னு முடிவெடுத்தேன்” என்று கூற அவள் என தோளில் சாய்ந்து கொண்டாள். வேலூர் வந்து சேர்ந்த்தும் சங்கீதா சொன்ன முகவரிக்கு சென்று பார்த்தேன்.

அங்கு கணபதிராமன் என்பவர் தான் அந்த வார இதழை நட்த்திக் கொண்டிருந்தார். அப்படி ஒரு பத்திரிக்கை வருவதே பலருக்கு தெரியாத நிலையில் தான் அந்த வார இதழ் இருந்து கொண்டிருந்த்து. 

“வாங்க தம்பி, இப்பதான் சங்கீதா எனக்கு போன் பண்ணா, உங்கள பத்தி எல்லாத்தையும் சொன்னா, இந்தாங்க, உங்க வீட்டு சாவி, பக்கத்து தெருவுல் தான் வீடு இருக்கு, போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று என் கையில் சாவியை கொடுத்தார், நானும் ராதாவும் எங்கள் புது வாழ்க்கை துவங்க போகும் புது வீட்டை கண்டு பிடித்து வீட்டு கதவிலிருந்த பூட்டை திறந்தோம், 

வீடு கொஞ்ச்ம சின்னதாக இருந்தாலும் இருவருக்கு போதுமானதுதான். ராதா ஒரு பணக்கார பெண் என்ற எந்த அடையாளாமும் இல்லாமல் வீட்டை பெருக்கி சுத்தம் செய்தாள். எல்லாம் முடிந்த்து. காலை 8 மணிக்கு எங்களிடமிருந்து பொருகளையும் கொஞ்ச்ம வெளியே வாங்கிய பொருட்களையும் கொண்டு பால் காய்ச்சி இருவரும் குடித்தோம். 

அதன் பின் நான் மனிதம் வார இதழ் அலுவலகம் சென்று கணபதி சாரை சந்தித்தேன். 

“வாங்க முத்து. நம்ம வார இதழ எப்பவாவது நீங்க கேள்விப்படிருக்கிறீங்களா” என்று அவர் என்னிடம் கேட்க எனக்கு என்ன் சொல்வது என்று தெரியாமல் 

“இல்ல சார்” என்றேன். “தப்பில்ல தம்பி, இப்படி தான் நம்ம பத்திரிக்க இருக்கு, நீங்க வந்த நேரம் பார்க்கலாம், எப்படி இருக்குன்னு”என்று கூறிவிட்டு என்னை அந்த அலுவலகம் முழுவதும் சுற்றி காட்டினார். 

“சார் எனக்கு ஒரு யோசன சொல்ல்லாமா” என்று நான் கேட்க 

“சொல்லுங்க, தம்பி நல்ல் யோசனையா இருந்தா அத யார் சொன்னாலும் நான் கேட்டுப்பேன்” என்று கூறி ஆர்வமாக கேட்டார். 

“சார், இங்க வேலூர் ஜெயில்ல பல கைதிகள் இருப்பாங்க, இதுவரைக்கும் எத்தனையோ பத்திரிக்கைகல்ல எத்த்னையோ கதைகள் வந்திருக்கும், ஆனா நாம் புதுசா, ஜெயில் கைதிகள சந்திச்சி, அவங்க கதைகள ஏன் வெளியிட கூடாது, இப்ப்தான் எல்லா டிவி சானல்களும் வழக்குகள பத்தி நிகழ்ச்சிகள் போடுறாங்களே, நாம ஏன் அத கதைகளா போட கூடாது” என்றதும் அவர் யோசித்தார், 

“யோசன ரொம்ப நல்லா இருக்கு தம்பி, ஆனா ஜெயிலுக்குள்ள் போய் அவ்ளோ பொருமையா அத கேட்குற தைரியம் யாருக்கு இருக்கு” என்று கேட்க 

“ஏன் சார், நானெ போறேன், இதுவரைக்கும் யார் யாருக்கோ ரிஸ்க் எடுத்திருக்கேன், இப்ப் என் வேலைக்காக ரிஸ்க் எடுக்குறேன்”என்றேன். 




No comments:

Post a Comment