Thursday 24 December 2015

விஜயசுந்தரி 73

என் உடல் நடுங்கிக் கொண்டிருக்க என் முகம் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது. என் தோளில் கைவைத்திருந்த குமரன் என்னை பார்த்து 
“டேய் என்ண்டா, என்னாச்சு, உனக்கு ஏன் உடம்பு இப்டி நடுங்குது, என்ண்டா, ஊட்டி குளிர்ல உனக்கு இப்டி வியர்த்திருக்கு” என்று பதற்றத்துடன் கேட்க எனக்கு என்ன் நடந்தது, எய்ப்போது என்ன் நடக்கிறது என்றே உணர முடியவில்லை. 

அவ்னை பார்த்து முழித்துக் கொண்டிருந்தேன். 
“என்ன் முத்து என்னாச்சு, ஏன் இப்டி வியர்த்திருக்கு, உடம்பு ஏதாவது சரியில்லையா” என்று என் அருகே உட்கார்ந்து கேட்க எனக்கு எதுவும் பேச முடியாத அளவுக்கு நாக்கு மேல் அன்னத்தில் சென்று ஒட்டிக் கொண்ட்து. அதன் பின் மெல்ல அவனுடன் எழுந்து நடந்து எங்கள் ரூமுக்கு சென்று படுத்தேன். நீண்ட நேரம் நான் காட்சிகள் என் கண்ணை விட்டு விலகாமல் அப்படியே இருந்த்து. 

எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியாமல் தூங்கிப் போய் இருந்தேன்.
அடுத்த நாள் காலை கோவை கிளம்ப எல்லா ஏற்பாடுக்ளும் செய்யப்பட்ட்து. இருவரும் அந்த ஏரியாவிலிருந்த ஒரு காரை புக் செய்தோம். அந்த கார் ட்ரைவர் 


“வாங்க சார், போகலாம், இந்த ஹோட்டலுக்கு வரவங்க நெறைய பேர நான் தான் சார் ட்ராப் பண்ணி இருக்கேன்” என்று கும்ரனிடம் கூறிக் கொண்டிருக்க, நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவன் 

“என்ன் சார், இவருக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா” என்று கும்ரனிடம் என்னை காட்டி கேட்டான். அவனும் 

“ஆமா அவனுக்கு ரெண்டு நாளா ஜொரம்” என்று சொல்லி சமாளிக்க இருவரும் காரில் ஏறிக் கொண்டோம். கார் கிளம்பியது. கார் மலைப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்க அந்த கார் ட்ரைவர் கும்ரனிடம் தொன தொனத்துக் கொண்டே வந்தான். 

நான் அந்த சாலையை கவனிக்க அது அன்று எங்கள் பஸ் வந்த அதே சாலை என்பது புரிந்த்து. சட்டென கும்ரனை பார்த்து 

“கும்ரா இது அதே வழிதான” என்றதும் அவனும் சுதாரித்து 

“ட்ரைவர் வேற ரூட்ல போக முடியாதா” என்றான். 

“இல்ல் சார் இன்னொரு வழியில் வேல நடக்குது, இப்டித்தான் போயாகனும்” என்று காரை மெல்ல் ஓட்டி சென்றான் . நான் அந்த சாலையையும் அங்கிருந்த இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசித்தபடி சீட்டின் பின்பக்கம் சாய அப்ப்டியே கண் அசந்துவிட்டேன். 

சட்டென கண் திறந்து பார்க்க கார் நின்றிருந்த்து. காரின் முன் பக்க பேனட் திறந்திருக்க ட்ரைவரையும் கும்ரனையும் காணவில்லை, கதவை திறந்து கொண்டு இறங்கி வெளியே வந்து பார்க்க ட்ரைவர் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார். நான் கும்ரனை பார்த்து 

“என்னடா என்னாச்சு” என்றதும் 

“ஒன்னுமில்ல்டா, சின்ன ப்ராப்ளம்தான் இப்ப் கெளம்பிடலாம்” என்று கூற 

“ஆமா சார், மலப்பாதையில் கார் ஓட்னா இப்டித்தான் ஆகும், ஆனா என் வண்டி நேத்துதான் சர்வீஸ்க்கு போய்ட்டு வந்துச்சி, என்ன்னு தெரியல, சடனா ப்ரேக் போட்டு நிறுத்துன மாதிரி நின்னு போச்சு” என்று புலம்பியபடியே காரை நோண்டிக் கொண்டிருக்க நான் மெல்ல காருக்கு பக்க வாட்டில் திரும்பினேன். எனக்கு தலை சுற்றிக் கொண்டு வர கண்கள் இருட்டியது. 

அதே இடம், அன்று எங்கள் பஸ் நின்று மேலே இருந்து பாறை உருண்டு வந்து பஸ்ஸின் மேல் விழுந்து பஸ் உருண்டு ஓடிய அதே இட்த்தில் தான் நாங்கள் வந்த காரும் இப்போது நின்று போய் இருந்த்து. ஆனால் அன்று மழை பெய்து கொண்டிருந்த்து, இன்று வெய்யி அடித்துக் கொண்டிருந்த்து. அந்த இட்த்தை பார்த்த்துமே எனக்கு பழைய நியாபங்கள் வர, பண் உருண்டு விழுந்து கிடந்த அந்த இட்த்தை உற்றுப் பார்க்க, அங்கே மங்கலான ஒரு உருவம் நின்று கொண்டிருந்த்து.

நான் மெல்ல் என் கால்களை முன்னால் வைத்து நகர்ந்து அந்த உருவத்தை பார்த்தேன். அது லதாவின் உருவம் தான், அவள் இறக்கும் போது போட்டிருந்த அதே உடையில் இருந்தாள். என்னை பார்த்த்தும் சிரித்தாள். என்னை கை நீட்டி 

“வா, முத்து வா” என்றாள். நான் அவளை பார்த்தபடியே முன்னால் நடந்து செல்ல சாலையின் ஓரம் இருந்த தடுப்புக்கு மிக அருகே சென்றுவிட அப்போது காரை கவனித்துக் கொண்டிருந்த கும்ரன் சட்டென்று தலையை திருப்பி என்னை பார்த்துவிட்டு ஓடி வந்து என் கையை பிடித்து இழுத்தான். நான் அவனை பார்க்க 

“என்ண்டா எங்க போற” என்றான். நான் என் சுயநினைவில் இல்லாமல் 

“டேய் அதோ லதாடா, என்ன கூப்டுறாடா” என்றதும் அவன் என்னை பிடித்து இன்னும் பின்னுக்கு இழுத்துவிட்டு 

“கீழ் பாருடா” என்றான். நான் அப்போதுதான் கீழெ பார்க்க அதளபாதாளம் போனற பள்ளம், கும்ரன் என்னை இழுத்திருக்காவிட்டால் நானும் லதாவுடனே போய் சேர்ந்திருப்பேன். மெல்ல் பின்னால் வந்தவர்களை கார் ட்ரைவர் அப்போதுதான் கவனித்தான். கையை துடைத்துக் கொண்டே 

“என்ன சார், இந்த் இட்த்த அவ்ளோ மெய் மறந்து ரசிக்கிறீங்க” என்றான். 

“ஒன்னுமில்ல், கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் இங்க ஒரு பஸ் ஆக்சிடெண்ட் நடந்துச்சே, அத பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா” என்றான் கும்ரன். 

“ஆமா சார் தெரியும், நெறைய காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் செத்துட்டாங்க” என்று உச்சுக் கொட்டினான். 

“ஆமா சார் அத எதுக்கு கேக்குறீங்க” என்று மீண்டும் எங்களை பார்த்து கேட்க 

“இயற்கை எப்டியெல்லாம் வாழ்க்கைய மாற்றி போட்டுடுது பாருங்க” என்று என்னை ஓரு கண்ணால் பார்த்தபடி கும்ரன் சொல்ல, 

“அட நீங்க வேற சார், இயற்கையும் இல்ல மண்ணும் இல்ல, எல்லாம் திட்டம் போட்டு செஞ்சது” என்று கூறிவிட்டு கார் கதவை திறந்து உள்ளே ஏற சென்றான். அதிர்ச்சியடைந்த நானும் கும்ரனும் அவனை நெறுங்கி சென்று 

“என்ன்ங்க சொல்றீங்க, திட்டம் போட்ட சதியா” என்று எதுவும் தெரியாதவன் போல கும்ரன் கேட்க 

“ஆமா தம்பி, அந்த பஸ்ல போனவங்க யாரையோ கொல்லனும்னே இந்த ஆக்ஸிடெண்ட உருவாக்குனாங்க” என்றான் ட்ரைவர் எனக்கு ஆர்வமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வர கும்ரன் என் கையை பிடித்து அழுத்தி கண்களால் அமைதியாக் இரு என்பது போல் ஜாடை செய்துவிட்டு மீண்டும் ட்ரைவரை பார்த்து 

“அட பாவிங்களா, ஒருத்தர கொல்றதுக்காகவா, அத்தன பேரையும் கொல்ல சதி பண்ணாங்க” என்று மீண்டும் கேட்க 

“ஆமா தம்பி, இத்தனைக்கும் ஒரு பொம்பள அவளுக்கு எப்டித்தான் மனசு வந்துச்சோ, தெரியல” என்று சொல்லிவிட்டு மீண்டும் காருக்கு முன் பக்கம் சென்றான். எனக்கோ மூளை சூடானது. அனேகமாக் இது லதாவை கொல்ல நட்ந்த சதிதான்.

ஆனால் கொல்ல சொன்னது யார், லதாவை பிடிக்காதவர்கள் தான். அதுவும் ஒரு பெண் என்கிறானே, லதாவை கொல்ல நினைத்த பெண் யார் என்ற கேள்வி என் மூளையில் எழ என் சந்தேகம் முழுவதும் ராதாவின் மேல் பாய்ந்த்து. அவள் தான் என்னை காதலித்தாள். ஆனால் லதாவுக்காக் விட்டு கொடுப்பதாக கூறினாள் கடைசியாக் அவள் இல்லாவிட்டால் தன் காதல் கை கூடும் என்ற எண்ணத்தில் இப்படி செய்திருக்கிறாள். என்று என் மனம் சொல்லிட நான் மீண்டும் அந்த டரைவரின் அருகே சென்று நிற்க குமரன் அவன் வாயை கிளற தொடங்கினான். 

“ஆமா, யாருண்ணே, அவ்ளோ அரக்கத்தனமான பொம்பள” என்று கேட்க 

“அவ யாரோ பெரிய பணக்காரி தம்பி, பேரு கூட என்னவோ சொன்னாங்க, எனக்கு சரியா நியாபகம் இல்லை” என்றதும் எனக்கு என் மனதில் ராதாவா என்று கேட்க நினைக்க கேட்காமல் அமைதியாக இருந்தேன். 

“அது சரி இந்த விஷயம் எப்டிண்ணே உங்களுக்கு தெரியும்” என்று கும்ரன் மீண்டும் கேட்க 

“அது ஒரு பெரிய கத தம்பி, கார் இப்ப் ரெடியாகாது போல், மெக்கானிக் வந்தாதான்” என்று தன் கையை துடைக்க அவன் எங்களிடமிருந்த தப்ப் முயல்வதாக எனக்கு தோன்றியது. சட்டென அப்போது என் பார்வையில் தூரத்தில் இருந்த டாஸ்மார்க் பார் தெரிய, கும்ரனை லேசாக உசுப்ப் அவனும் பாரை பார்த்தான். 

“சரிண்ணே, உங்களுக்கு சரக்கு போடுற பழக்கம் இருக்கா” என்று கும்ரன ட்ரைவரை பார்த்து கேட்க 

“என்ன் தம்பி திடீர்னு” என்றான் அவன் 

“ஒன்னுமில்ல்ண்ணே, கார் ரெடி ஆகுற வரைக்கும் லைட்டா போய் போட்டு வந்தா குளிர் தெரியாம் இருக்குமில்ல அதான், உங்களுக்கு வேண்டாம்னா விட்டுடுங்க” என்றதும் 

“அட அப்டி எல்லாம் இல்ல தம்பி, வாங்க போகலாம், அதோ கட இருக்கு” என்று எங்களுக்கு முன் கிளம்பினான். போகும் போதே மெக்கானிக்குக்கு போன் செய்து வர சொல்லிவிட்டு மூவரும் பாருக்குள் சென்றோம். அந்த பாரில் இருந்த்திலேயே மிகவும் காஸ்ட்லியான பிராணட் பிராந்தியை வாங்கி முன்னால் வைத்த்தும் ட்ரவரின் வாயில் எச்சில் ஊறியது. 

“தம்பி இந்த ப்ராண்டா” என்று ஆர்வமாக பார்க்க 

“எடுத்து ஊத்துங்கண்ணே, எல்லாம் உங்களுக்குதான்” என்று கும்ரன் கூறவும் ஆர்வமாக் தட்டி திறந்தவன் டம்ப்ளரில் ராவாக ஊற்றி பாதி பாட்டிலை அவனே காலி செய்துவிட்டு தள்ளாட்ட்த்துடன் எங்க்ளை பார்த்தான். கும்ரன் என்னை பார்த்தான். எனக்கு கோவமும் வெறியும் பொங்கி வர அவற்றை அடக்கிக் கொண்டு அமைதியாக் உட்கார்ந்து கொண்டிருந்தேன். 


“சார் ரொம்ப தேங்க்ஸ் சார், என் வாழ்நாள்ல இப்டி ஒரு சரக்க இதுவரைக்கும் நான் குடிச்சதே இல்ல சார்” என்று போதை தலைக்கேற தள்ளாடியபடி உளறினான் ட்ரைவர். நான் குமரனை பார்த்து அந்த விஷயத்தை பற்றி கேட்கும்படி சைகை செய்ய அவனும் மெல்ல அவனிடம் பேச ஆரம்பித்தான். 

“ஏண்ணே, சரக்கு போதுமா, இல்ல் இன்னொரு ஆஃப் சொல்லவா” என்றான் 

“போதும் தம்பி, இதுவே போதும்” என்று மிச்சம் இருந்த சைட் டிஷ்ஷை எடுத்து கடித்துக் கொண்டே தள்ளாடிக் கொண்டிருக்க, மீண்டும் கும்ரன் அவனிடம் 

“அது சரிண்ணே, அந்த பஸ் கவிழ்ந்த்து திட்டம் போட்ட சதின்னு சொன்னீங்களே, அத பண்னது யாரு, பண்ண சொன்னது யாருண்ணே” என்று கும்ரன் மெல்லிய குரலில் கேட்க அவ்னோ கொஞ்ச்ம புன்னகையுடன் 

“அது பரம ரக்சியம், எனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்” என்று கர்வமாக் சிரித்துக் கொண்டே சொல்ல எனக்கு கோவம் மண்டைக்கேறியது, ஆனாலும் கும்ரன் விடாமல் 

“அண்னே உங்களுக்காக் இப்டி ஒரு சரக்கு வாங்கி கொடுத்திருக்கிறோம்,. அதுக்காகவாவது சொல்ல்லாம்ல” என்று கொஞ்ச்ம கெஞ்சுவது போல் கேட்க அவன் கும்ரனை பார்த்து 

“தம்பி, நீ ரொம்ப நல்லவன், எனக்காக் இப்டிபட்ட ஒரு சரக்க வாங்கி கொடுத்திருக்க், உனக்கு சொல்லாம் எப்டி கண்டிப்பா சொல்றேன்” என்று அவனை நெருங்கி வந்தான். குமரனும் அவ்னிடம் ஆர்வமாக நெருங்கி செல்ல அவன் 

“தம்பி அது வந்து அந்த பஸச கவுக்க சொன்னது....” என்று அவன் இழுக்கும்போதெ எனக்கும் கும்ரனுக்கும் ஆர்வம் அதிகமானது. 



“அந்த பஸ்ஸ கவுக்க சொன்னது” என்று அவன் இழுக்க நானும் கும்ரனும் அவனை ஆர்வமுடன் நெறுங்கி செல்ல அவ்னோ என்னை பார்த்து 

“தம்பி நீ ரொம்ப நல்லவன், ஆனா இந்த தம்பிய என்னால நம்ப முடியல” என்று சொல்ல எனக்கு கோவம் தலைக்கேறி சட்டென்று எழுந்து முன்னால் இருந்த காலி பாட்டிலை எடுத்து அந்த ட்ரைவரின் மண்டையில் ஓங்கி ஒரு அடி கொடுக்க் பாட்டில் உடைந்து தூள் தூளாக அந்த ட்ரைவரின் மண்டையிலிருந்து ரத்தம் ஊத்த 

“அய்ய்ய்யோ” ஏன்று கதறிக் கொண்டே எழுந்தான். பாரிலிருந்த எல்லோரும் எங்களையே பார்க்க நான் உடனே 

“ஏண்டா ஒரு கொலைய் பண்னிட்டு யாருன்னு சொல்லாம் அலைய விடுறியா” என்றதும் எழுந்து நின்ற ம்ற்றவர்கள் போலீஸ் போல் இருக்கு என்று கூறியபடி உட்கார்ந்துவிட ட்ரைவர் மண்டையில் ரத்தம் வடிய எங்களை பார்த்தான். 

நான் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு பாருக்கு பின்னால் இருந்த இட்த்திற்கு சென்றேன். அவன் 

“ஸார் என்ன் விட்டுடுங்க” என்று கத்தியபடி வந்தான், கும்ரனோ 

“மச்சி, பொருமையா இருடா” என்று என்னை இழுக்க 

“இல்ல்டா இதுக்கு மேல பொருமையா இருக்க முடியாது” என்று அந்த ட்ரைவரை ஒரு மூலையில் தள்ளிவிட்டு அவன் நெஞ்சில் என் ஒரு காலை தூக்கி வைத்து அருகே இருந்த ட்யூப் லைட்டை எடுத்தேன். 

“டேய் சொல்லுடா, யாரு அந்த வேலைய பண்ணது” என்று கேட்க

“எனக்கு தெரியாது சார்” என்றான், நான் கோவத்தில் என் கையில் இருந்த் ட்யூப் லைட்டை அவன் தலையில் ஓங்கி அடிக்க அது உடைந்து வெள்ளை நிற புகை பறக்க மண்டையில் மீண்டும் ரத்தம் வடிய அந்த ட்ரைவர் கத்தினான். 

“டேய் சொல்றியா இல்ல” என்று அருகே இருந்த ஒரு பெரிய உருட்டு கட்டையை எடுத்து ஓங்க 

“அய்ய்ய்யோ சார் சொல்லிடுறேன், என்ன் எதுவும் பண்ணிடாதீங்க” என்று என் காலை பிடித்துக் கொண்டு கதறினான். நான் அவ்னை மெல்ல எழுப்பி நிற்க வைத்து 

“சொல்லு, அந்த பஸ்ச அப்டி பண்ணது யாரு, பண்ண சொன்னது யாரு” என்றதும் அவன் 

“அந்த பாறைய உருட்டி விட்ட்து நாந்தான் சார்” எனறதும் எனக்கும் கும்ரனுக்கும் அதிர்ச்சி. 

“என்ண்டா சொல்ற” என்று இருவரும் ஒரே குரலில் கேட்க 

“ஆமா சார், நான் தான் அந்த் பாறைய உருட்டி விட்டேன் சார்” என்று மண்டையிலிருந்த் வடிந்த ரத்தம் வாயில் தெரிக்க சொன்னான். எனக்கு கைகள் உதறல் எடுக்க மீண்டும் அவன் சட்டையை பிடித்து 

“அந்த பாறைய உருட்டிவிட சொன்னது யாரு” என்றேன். அவன் கண்களில் பயம் தெரிய என்னை பார்த்து 

“அந்த பொம்பள பேரு.....” என்று யோசித்தான். 

“டேய் சொல்றியா இல்லயா” என்று என் கையில் இருந்த கட்டையை அவன் தலையை நோக்கி ஓங்க அவன் கைகளை முன்னால் தடுத்தவாறு 

“அய்யோ சார், அந்த் பொம்பள பேரு எனக்கு நியாபக் இல்ல, ஆனா” என்று தன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு தன் செல்போனை எடுத்து நோண்டினான். 

“இதுதான் சார் அந்த பொம்பள” என்று செல்போன் திரையை என்னை நோக்கி திருப்ப நானும் கும்ரனும் அதை பார்த்தோம். இருவருக்கும் கதி கலங்கிப் போனது. அவனை பிடித்திருந்த என் கைகள் தானாக அவனை விடுவிக்க அந்த செல்போனை நான் வாங்கி நன்றாக உற்றுப் பார்த்தேன். 

அந்த செல்போன் திரையில் நாங்கள் பார்த்த்து யாருமல்ல அனிதா தான், அவள் காருக்குள் ஏறும்போது காருக்கு உள்ளிருந்து ட்ரைவரால் எடுக்கப்பட்ட போட்டோ, எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்த்து. அந்த் போட்டோவை என்னால் நம்பவே முடியவில்லை,

கும்ரன் மீண்டும் அவனிடம் 

“டேய் உண்மைலயே இவங்க தான் அத பண்ண சொன்னாங்களா, இல்ல நீயே போட்டோ எடுத்து வெச்சிக்கிட்டு கத விடுறியா” என்று கேட்க 

“என்ன் தம்பி இப்டி சொல்றீங்க” என்று செல்போனை வாங்கி அதில் மீண்டும் எதையோ தேடினான். அதன் பின் ஒரு வீடியோவை இயக்கி எங்கள் முன் காட்ட அதில் அனிதா சாலையின் மறுபுறமிருந்து சாலையை கடந்து வந்து இவன் காருக்குள் ஏறுகிறாள். அதன் பின் இவனை பார்த்து 

“ஏன்ன் எல்லா ஏற்பாடும் ரெடியா” என்று கேட்கிறாள். அதற்கு இவன் 

“ரெடிய இருக்கு மேடம், இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் கெளம்பிடும், அதுக்கு முன்னால் நான் அந்த எட்த்துக்கு போய்டுவேன். ஏற்கனவே சொல்லிவெச்ச மாதிரி அந்த ரோட ப்ளாக் பண்ண் ஏற்பாடு செஞ்சிட்டேன், எல்லாம் க்ச்சிதமா முடிஞ்சிடும் மேடம்” என்று இவன் கூற அவளும் 

“சரி, இந்த் விஷயம் யாருக்கும் தெரிய கூடாது, தெரிஞ்சா அப்புறம் உனக்கும் ஒரு பாறைய உருட்ட வேண்டி இருக்கும்” என்று கூறி தன் ஹேண்ட் பேகுக்குள் கைவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்ரை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள். வீடியோ முடிகிறது. இதை பார்த்த்தும் எங்களுக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.

அனிதா மிகப்பெரிய பணக்காரியாக் இருந்தாலும் ஆணவம் அகங்காரம் இல்லாதவள், நல்ல ம்னம் கொண்டவள் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இப்படி ஒரு காரியத்தை செய்யும் அளவுக்கு அவள் கொடூரமானவள் என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் அதிகமாக த்லை சுற்றியது. லதாவை திருமணம் செய்துகொள்ள ராதாவுடன் சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தியவள் அவளே தான் ஆனால் அப்படி சொல்லியும்விட்டு இப்படி லதாவை கொல்ல ஏற்பாடும் செய்திருக்கிறாள் என்று நினைத்தாள் எனக்கு அவள் மேல் கொலைவெறி அதிகமானது. 

அதே நேரம் நடந்த அணைத்தையும் தெரிந்து கொள்ள என் மனம் விரும்பியது. அதனால் ட்ரைவரை பார்க்க அவன் என்னை பயத்துடன் பார்த்து 

“சார், என்ன எதுவும் பண்னிடாதீங்க சார். என்ன் போலீஸ்ல் மாட்டிவிட்றாதீங்க சார், நான் புள்ளகுட்டிகாரன் சார்” என்று என் காலில் விழுந்து அழுதான். நான் மெல்ல் அவன் அருகே உட்காருந்து 

“இதோ பார், நான் உன்ன் எதுவும் பண்ண மாட்டேன், ஆனா அன்னைக்கு ஆரம்பத்துல் இருந்து என்ன நடந்துச்சின்னு எல்லாத்தையும் ஒன்னுவிடாம சொல்லு” என்றதும் 

“சொலிடுறேன் சார்” என்று அன்று நடந்தவற்றை சொன்னான். 

நாங்கள் டூர் சென்ற இரண்டாவது நாள் அனிதா அதே ஊட்டிக்கு வருகிறாள். வந்தவள் ஊட்டியை சுற்றி பார்க்க வேண்டும் என்று இந்த ட்ரைவரை சந்தித்து கேட்கிறாள். அவனும் இவளை பார்த்த்தும் பெரிய பணக்காரி என்றும் இவளிடன் ந்ல்லா கறந்துவிடலாம் என்றும் முடிவெடுத்து ஊரை சுற்றிக்காட்ட சம்மதிக்கிறான். அனிதாவும் ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்தவள் போல்வே நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ அந்த இடங்களுக்கெல்லாம் வந்து என் நடவடிக்கைகளை எனக்கு தெரியாமல் கண்கானிக்கிறாள். 

நானும் லதாவும் ஓரளவுக்கு நெருக்கமாக் இருப்பதை பல இடங்களில் பார்க்கிறாள். ஒரு நாள் அனிதா காரில் சென்று கொண்டிருந்த நேரம் திடீரென்று ஒருவன் காரை நிறுத்துகிறான்., நிறுத்தியவன் இவனை பார்த்து 

“டேய் கோபாலு, நீயாடா” என்று வியப்புடன் கெட்க கார் ட்ரைவர் கோபால் அவனை பார்த்து 

“என்ண்டா சுந்தரம் இங்க என்ன் பண்ற, பார்த்து ரொம்ப நாள் ஆகுதெ, என்ன் சொல்லாம கொல்லாம் ஊட்டிக்கு வ்ந்திருக்க” என்று கேட்கிறான். 

“ஒன்னுமில்ல்டா, சென்னையில இருக்குற ஒரு மெடிக்கல் காலேஜ் பசங்கள் இங்க டூர் கூட்டி வந்தேன், அதான், இங்க வந்து பார்த்தா உன் காரு மாதிரி தெரிஞ்சிதா, அதான் நிறுத்தினேன். கடைசியில பார்த்தா, நீயே தான்” என்று கூற அவன் காருக்குள்ளிருந்த் அனிதாவை பார்த்து 

“என்ண்டா சவாரி போறியா, நான் வேணும்னா அப்புறமா வரட்டா” என்றதும் “

ஆமாண்டா, மேடமும் ஊட்டிய சுத்தி பார்க்க வந்திருக்காங்க” என்றான் கோபால், உடனே சுந்தரம் அனிதாவை பார்த்து 

“மேடம் நானும் இவனும் ரொம்ப நாள் ஃப்ரெண்டு இப்ப்தான் மீட் பண்றோம், கொஞ்ச நேரம் பேசிட்டு வந்திடுரோம்” எனறதும் 

“பரவால்ல கோபால் நீங்க போய்ட்டு வாங்க” என்று அனிதா கூற கோபால் இறங்கி சென்று சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருக்க அனிதாவுக்கோ எங்கள் பஸ் ட்ரைவரே தானாக தேடி வந்திருப்பது அவள் வேலையை இன்னும் எளிதாக்கிவிட போவதாக எண்ணிக் கொண்டாள். அதே நேரம் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க முயன்றாள். 

சுந்தரமும் கோபாலும் காருக்கு கொஞ்ச்ம அருகே இருந்து பேசியதால் அவர்கள் பேசிவது இவளுக்கு ஓரளவுக்கு கேட்ட்து. 

“என்ன் சுந்தரம் ரொம்ப முக்கியமான விஷயமா” என்று கோபால் கேட்க 

“ஆமாண்டா, கோபாலு, சென்னையில் எங்க ஆஃபீஸ்ல இருந்து நான் ஒரு லட்ச ரூபாய திருடிட்டேண்டா, அத எங்க மேனேஜர் கண்டுபுடிச்சிட்டான்” என்று சுந்தரம் சொன்னதும் 

“அய்ய்ய்யோ ஏண்டா அப்டி பண்ண, அப்புறம் என்ன ஆச்சு” என்று ஆர்வமுடன் கேட்க 

“அப்புறம் என்ன அந்த மேனேஜர் நல்லவன்றதால எனக்கு ஒரு வாரம் டைம் கொடுத்திருக்கான், அதுக்குள்ள பணத்த் கொடுக்கலனா, இந்த விஷயத்த ஓனர்கிட்ட் சொல்லி போலீஸ்ல் கம்ப்ளயிண்ட் கொப்பேன்னு சொல்லிருக்கான், ஏற்கனவே ரெண்டு நாள் ஆகிடுச்சி, இப்ப் நான் ஒரு லட்சத்த எப்டி ரெடி பண்றதுன்னு தெரியலடா” என்று அழாத குறையாக சொன்னான். அதை கேட்ட கோபால் 

“என்ண்டா இப்டி பண்ணிட்ட, ஒரு லட்சத்த திருடுற அளவுக்கு உனக்கு என்ன் செலவு” என்று திருப்பி கேட்க 

“என் சின்ன் வீட்டுக்கு ஒட்டியானம், ஜிமிக்கிலாம் வாங்கி கொடுக்க தாண்டா, ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தா, வாங்கி தரலன்னா, அவள ஓக்க மாட்டேன்னு சொல்லி பிளாக் மெயில் பண்ணா, அத்னால் வேற வழியில்லாம ஆஃபீஸ் பண்த்த ஆட்டய போட்டுட்டேன், இப்ப் என்ன் பண்றதுன்னே தெரியலடா, நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினான். கோபாலோ எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். 

“என்ண்டா நான் கேட்ட்துக்கு பதிலே சொல்லாம எதையோ யோசிச்சிக்கிட்டு இருக்கியே” என்று சுந்தரம் கேட்க 

“ஒன்னுமில்ல்டா, நானெ காருக்கு ட்யூ கட்ட முடியாம் இங்க அல்லாடுறேன், இதுல் நீ வேற ஒரு லட்சம் வேணும்னு சொல்றியே அதான் என்ன் பண்றதுன்னு தெரியலடா” என்றான். அந்த நேரம் அனிதா காரை விட்டு இறங்க 

“என்ன ட்ரைவர் நேரம் ஆகுமா” என்று கேட்க 

“இதோ வந்துட்டேன் மேடம்” என்று சொல்லிவிட்டு சுந்தரத்தை பார்த்து 

“சரி இப்ப் நீ வண்டியில் ஏறு, அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்ல சுந்தரமும் கோபாலும் காரில் ஏற அனிதாவும் ஏறிக் கொண்டாள். கார் கிளம்பியது. சுந்தரம் காரின் முன் சீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி அனிதாவை திரும்பி திரும்பி பார்த்தான்., அவளை பார்க்கும்போதே முகத்தில் பணக்கார் களை தெரிந்த்து. கார் ஒரு பூங்காவிற்கு செல்ல அங்கு நானும் லதாவும் இருப்பதை அனிதா பார்க்கிறாள். 

அவள் கோவம் இன்னும் அதிகமாகிறது. செல்லை எடுத்து ராதாவின் எண்ணுக்கு டயல் செய்கிறாள். ராதா போனை எடுத்து 

“ஹலோ அக்கா” என்றதும்

“ராதா நீ எங்க இருக்க” என்கிறாள். 


“ஹலோ ராதா நீ எங்க இருக்க” என்று அனிதா கேட்டதும் 

“என்னக்கா, நாங்க தான் ஊட்டிக்கு டூர் வந்தோமே, அப்ப ஊட்டியில தான் இருப்பேன்” என்று சொல்ல 

“அது தெரியும், ஊட்டியில் எங்க இருக்க” என்று அனிதா கேட்க 

“எங்க ரூம்ல இருக்கேங்கா, ஏன் என்ன் விஷ்யம்” என்று ராதா பதிலளிக்க 

“ஒன்னுமில்ல், ரூம்ல என்ன் பண்ற, முத்து கூட அப்டியே வெளியில் எங்கயாவது போய்ட்டு வரலாம்ல” என்றதும் 

“அக்கா, முத்துகூட் லதா தான் வெளியில் போகனும், ஏன்னா அவங்க தான் கல்யாணம் பண்ணிக்க் போறாங்க, நான் ஏன் போகனும்”எனறு ராதா கொஞ்ச்ம கோவத்துடன் கேட்க 

“அப்டி இல்லடீ, ஒரு வேல லதா முத்துவ கல்யாணம் பண்னிக்கலைனா....” என்று அனிதா இழுக்கவும் 

“அது எப்டி பண்ணிக்காம் போய்டுவா, அவளுக்குன்னு யாருக்கா, இருக்காங்க, நாம் தான் அவளுக்கு ஒரு வாழ்க்கைய அமச்சி தரணும்” என்றதும் அனிதாவுக்கு கோவம் தலைக்கேறியது ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 

“சரி ராதா நான் அப்புறமா போன் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்துவிட்டு காரை நோக்கி நடந்தாள். அங்கே சுந்தரம் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருக்க கோபால் அருகே சோகமான முகத்துடன் நின்றிருந்தான். சுந்தரக் யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருந்தான். அனிதா அருகே வருவதற்குள் அவன் பேசி முடித்து இணைப்பை துண்டித்துவிடு அருகே இருந்த கோபாலை பார்க்க அவன் 

“என்ண் உங்க மேனேஜரா” என்றான். 

“ஆமாண்டா, எப்ப் காச கட்டப்போற, சீக்கிரம் கட்டு இல்லனா, போலீஸ்ல கம்ப்ளயிண்ட் பண்ணுவேன்னு மெரட்டுறாண்டா” என்று கண்கள் கலங்கிட சொன்னான். கோபாலோ எதுவும் சொல்ல முடியாமல் நினறிருக்க

“டேய் இப்ப் என்ண்டா பணறது” என்று சுந்தரம் அழுது கொண்டிருக்க அனிதா அருகே சென்றதும் அவளை பார்த்துவிட்டு இருவரும் சகஜ நிலைக்கு வந்து காரில் ஏறினார்கள். அனிதா காரில் ஏறிக் கொள்ள கார் கிளம்பியது. சுந்தரமும் கோபாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அப்போது அனிதா அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள். 

“சுந்தரண்ணா, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க” என்று கேட்கவும் 

“அதெல்லாம் ஒன்னுமில்ல மேடம்” என்று சுந்தரம் சமாளிக்க் 

“இல்ல்யே, நேத்தெல்லாம் நல்லா இருந்தீங்க, இன்னைக்கு இவர பார்த்ததுல இருநதுதான் ஒரு மாதிரியா இருக்கீங்க, ஏண்ணா, ஏதாவது பிரச்சினையா, சொல்லுங்க என்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடிந்தா கண்டிப்பா பண்றேன்” என்று அனிதா கூறவும் கோபால் காரை ஓரமாக நிறுத்தினா. பின்னால் இருந்த அனிதாவை திரும்பி பார்த்து 

“ஒன்னுமில்ல் மேடம் இவன் என்னோட் க்ளோஸ் ஃப்ரெண்டு ரெண்டு பேரும் மூனு வயசுல இருந்து ஒன்னாதான் வளர்ந்தோம், சென்னக்யில் இவனுக்கு ட்ரைவர் வேல கெடச்சி போய்ட்டான், எப்பவாவது இங்க வந்தா என்ன வந்து பார்ப்பான், இந்த தட்வ பிரச்ச்னயோட வந்திருக்கான்” என்றதும் சுந்தரம் தலை குனிந்து கொண்டான். 

“என்ன் பிரச்சின” என்று அனிதா கேட்க 

“இவன் குடும்ப கஸ்டத்துக்காக கம்பனியில் இருந்து ஒரு லட்ச ரூபாய திருடிட்டு இருக்கான், இவன் வேல செய்ற கம்பனி மேனேஜர் அந்த காச் ரெண்டு நாளைக்குள்ள் கட்டலனா, இவன போலீஸ்ல் புடிச்சி கொடுத்துடுவேன்னு மெரட்டுறாரு, அதான் என்ன பண்றதுன்னு தெரியாம என் கிட்ட் கேட்டான், நானே வண்டிக்கு ட்யூ கூட கட்ட் முடியாம் இருக்கேன், அதான் என்ன் பண்றதுன்னே தெரியாம் ரெண்டு பேரும் முழிச்சிக்கிட்டு இருக்கோம்” என்று கூறி முடித்தான். 

குடும்ப கஸ்டம் என்று அவன் சொல்லும்போது அனிதா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அதன் பின் அவ்னை நோக்கி 

“அட பாவமே, அவ்ளோ கஸ்டமா” என்று உச்சு கொட்டிவிட்டு இருவரையும் ஒரு சேர பார்த்தவள். 

“நான் உங்களுக்கு ஆளுக்கு அஞ்சு லட்சம் தரேன்” என்றாள். அவள் சொன்னதை கேட்ட இருவரும் வாயடைத்து விக்கித்து அவளை பர்த்து “அஞ்சு லட்சமா” என்று வாயை பிளந்தார்கள். 

“ஆமா, ஆளுக்கு அஞ்சு லட்சம் தரேன், ஆனா அதுக்கு பதிலா நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு உதவி பண்ணனும்” என்றாள். இருவரும் ஒரே குரலில்

“என்ன் உதவி மேடம்” என்று ஆவலுடன் கேட்க அனிதா காரிலிருந்து இறங்கினாள். அவர்கள் இருவரும் காரிலிருந்து இறங்கி அவளையே ஆர்வமாக் பார்த்துக் கொண்டிருக்க அனிதா சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதை உறுதி படுத்திக் கொண்டு சுந்தரத்தின் அருகே வந்தாள். 

“அண்ணே, நீங்க அந்த மெடிக்கல் காலெஜ் ஸ்டூடன்ட்ச தான் டூருக்கு கூட்டி வந்திருக்கீங்க” என்றாள். 

“ஆமா மேடம்” என்று சொல்ல 

“சரி, நீங்க எத்தன வருஷமா பஸ் ஓட்றீங்க” என்று கேட்க அவனும் 

“நான் கிட்ட்தட்ட 10 வருஷமா பஸ் ட்ரைவ்ராத்தான் மேடம் இருக்கேன்” என்றான். 

“அப்ப்டினா ரொம்பநல்லா பஸ் ஓட்டுவீங்க” என்று கேட்க இடையில் புகுந்த கோபால் 

“ஆமா மேடம் ரொம்ப நல்லா ஓட்டுவான். ஊட்டியில்யே பஸ் ஓட்ற ட்ரைவருங்க கூட சில இடங்களல பஸ்ஸ கண்ட்ரோல் பண்ன தெணருவாங்க, ஆனா இவன் அப்படி பட்ட எடங்கள்ள கூட ஃபுல் ஸ்பீட்ல போவான், அந்தளவுக்கு இவனுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு” என்றதும் 

“ஆமா மேடம்” என்று சுந்தரமும் தலையாட்டினான். 

“அப்டின்னா, ஏதாவது ஆக்ஸிடென்ட் சமயத்துல நீங்களும் அந்த பஸ்ல இருக்குற ரெண்டு பேரையும் மட்டும் காப்பாத்தி குதிக்கிற அளாவுக்கு உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா” என்றதும் கொஞ்ச்ம அதிர்ச்சியும் குழப்பமும் கலந்த முகத்துடன் அவளை பார்த்து 

“என்ன் மேடம் சொல்றீங்க், ஒன்னுமே புடிய்லையே” என்று சுந்தரம் தலையை சொறிந்து கொண்டு கேட்க 

“நான் நேரா விஷயத்துக்கு வரேன், நீங்க் இப்ப ஓட்டிக்கிட்டு வந்திருக்கிற பஸ்ஸ மலப்பாதையில இருந்து உருட்டி விடனும்”என்றதும் இருவரும் உறைந்து போய் நின்றார்கள். ஒருவ்ரை ஒருவர் பார்த்தபடி 

“என்ன் மேடம் இப்டி கொல பண்ண சொல்றீங்களே” என்று சுந்தரம் கேட்க 

“ஆமா மேடம் காசுக்கு ஆசப்பட்டு இத செஞ்சா அப்புறம் ஆயுசுக்கும் கம்பி எண்ணனும்” என்றான் கோபால். 

“அது உங்க சாமர்த்தியம், மாட்டாத மாதிரி பக்காவா ப்ளான் பண்ணி செய்யனும், ஆக்ஸிடென்ட் மாதிரி இருக்கனும், நான் சொல்றவங்களையும் எதுவும் ஆகாம காப்பாத்தனும், அதே நேரம் நாம யாரும் மாட்டவும் கூடாது, அந்த மாதிரி ஒரு பக்கா பிளான் போட்டு செய்ங்க, எல்லாம் நல்லா மட்டும் முடிந்தா நான் ஆளுக்கு அஞ்சு இல்ல பத்து லட்சம் கூட கொடுக்கிறேன்” என்றதும் 

“பத்து லட்சமா” என்று வாயடைத்துப் போய் இருவரும் அவளை பார்க்க 

“என்ன் ஓகேவா” என்று அனிதா கேட்க மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு 

“சரி மேடம் சூப்பரா ஒரு ப்ளான் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றோம்” என்று கூற 

“சரி நான் தங்கி இருக்கிற ஹோட்டல் உங்களுக்கு தெரியுமில்ல, நாளைக்கு காலையில அங்க வாங்க, ப்ளான் என்ன்னு சொல்லுங்க” என்று கூறிவிட்டு காரில் ஏறிக் கொண்டாள் அவள் காரில் ஏறும் நேரம் கோபால் தன் செல் போனில் அவளை அவளுக்கே தெரியாமல் ஒரு போட்டோ எடுத்தான். கார் கிளம்பியது. 

சுந்தரமும் கோபாலும் தலையை பிய்த்துக் கொண்டார்கள். என்ன் செய்வது எப்ப்டி செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஆளுக்கு பத்து லட்சம் என்பது மட்டும் அடிக்கடி அவர்கள் கண்னுக்கு முன்னால் வந்து போனது. அந்த பணத்தை விட்டுவிட கூடாது, எப்படியாவது பணத்தை வாங்கிவிட வேண்டும் என்ற ஆவல் மட்டும் இருவருக்கும் இருந்த்து.

இரவு முழுவதும் உட்காந்து மண்டையை பிளந்து கொண்டு யோசித்தார்கள் விடிய விடிய யோசித்த்தில் ஒன்றும் தோன்றவில்லை. காலையில் சுந்தரம் தன் பஸ் இருக்கும் இட்த்துக்கு சென்றுவிட சுந்தரம் டிவியை போட்டான். அதில் கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு பஸ் மலையிலிருந்து உருண்டு விழுந்து பலர் மரணம் என்ற செய்தி வந்த்து. அதை பார்த்த்தும் அவன் ம்ண்டையில் பல்ப் எரிய உடனே தன் நண்பன் சுந்தரத்துக்கு போன் செய்தான். 

அவனிடம் தனக்கு தோன்றிய திட்ட்த்தை சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான். அனிதாவிடம் பேச அழைத்தான். ஆனால் சுந்தரம் கோபாலை மட்டும் சென்றுவர சொல்லிவட கோபால் தன் காரை எடுத்துக் கொண்டு அனிதா இருக்கும் ஹோட்டல் வாசலுக்கு சென்று நின்று அவளுக்காக் காத்திருந்தான். அதற்கு முன் அவனுக்கு இன்னொரு யோசனை தோன்றியது

“இந்த பொம்பளைய நமப முடியாது, நாளைக்கே எல்லாம் முடிந்த்தும் நம்மள மட்டும் கழட்டி விட்டுட்டான்னா என்ன் செய்றது” என்று தனக்குள் கூறிக் கொண்டு தன் செல்போனில் வீடியோ ரெக்கார்டரை ஆன் செய்தான். சரியாக அந்த நேரம் அனிதா ஹோட்டலை விட்டு வெளியே வந்தாள் சாலையை கடந்து நேராக காருக்குள் வந்து ஏறினாள். கோபால் அவளுக்கு தெரியாமல் தன் செல்லை காருக்கு முன்பக்க கண்னாடிக்கு அருகே வைத்துவிட்டு தன் திட்ட்த்தை சொன்னான்.

“மேடம் ஊட்டியில் எப்பவும் விட்டுவிட்டு மழ வரும், அடிக்கடி மண் சரியும், அத் நம்ம திட்ட்த்துக்கு யூஸ் பண்ணிக்கலாம், அதாவது மழ பெய்யிற நேரத்துல பஸ்ச மலப்பாதையில் நிறுத்துறோம், பஸ்ஸுக்கு மேல இருந்து பெரிய பாறைய தள்ளிவிட்டு பஸ்ஸ உருட்டிவிடுறோம், சுந்தரம் பஸ்ல் ரெடியா இருப்பான், நீங்க சொல்றவங்கள காப்பாத்திட்டு அவனும் தப்பிச்சிடுவான்” என்று சொல்ல 


“பரவால்ல, கொஞ்சம் பழய ஐடியாவா இருந்தாலும், ஓகே, ஆனா இது யாருக்கும் தெரிய கூடாது, ஒருவேள தெரிஞ்சா, எனக்கு போலீஸ்லாம் பெரிய விஷயமே இல்ல, உங்கள மாட்டிவிட்டுட்டு நான் தப்பிச்சிடுவேன்” என்றதும் அவன் கொஞ்ச்ம பயத்துடன் 


“எல்லாம் பக்காவா இருக்கு மேடம், வெளியில் தெரிய வாய்ப்பே இல்ல” என்று கூற 

“சரி எல்லாத்தையும் பக்காவா முடிங்க, என்று தன் ஹேண்ட் பேகிலிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை எடுத்து அவ்னிடம் கொடுத்து 

“இது அட்வான்ஸ் காரியத்த முடிச்சிட்டு மீதிய வாங்கிக்கங்க” என்றதும் அவன் மகிழ்ச்சியுடன் அவளிடமிருந்து காசை வாங்கிக் கொண்டான். 

“மேடம் இன்னைக்கு மதியம் அந்த டூரிஸ்ட் க்ரூப் கெளம்புது, நம்ம் திட்ட்த்த செயல்படுத்தப் போறோம்” என்றான். 

“ஓகே, நான் இப்பவே கோயம்பத்தூர் கெளம்புறேன், ஏன்னா அப்பதான் என் மேல யாருக்கும் சந்தேகம் வராது,நீங்க எல்லாம் முடிஞ்சதும் எனக்கு போன் பண்னுங்க” என கூறிவிட்டு அவனுக்கு தன் மொபைல் நம்பரை கொடுத்துவிட்டு இன்னொரு கார் மூலமாக் கோவை புறப்பட்டாள். 

மதியம் பஸ்கிளமப தயாரான நேரம் மழை பெய்ய ஆரம்பித்துவிட அவர்கள் திட்ட்த்துக்கு இது பெரிய உதவியாக இருநது. கோபால் மலைப்பாதைக்கு கிளம்பினான்.



No comments:

Post a Comment