Monday 21 December 2015

விஜயசுந்தரி 68

ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க குமார் ராதாவுடன் நானும் அங்கு காத்திருந்தேன். போலீஸுக்கு தகவல் போனதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு வ்ந்தார். எங்களிடம் விசாரித்தார். 

எங்களுக்கு தெரிந்த தகவல்களை சொன்னனோம். அவர்கள் யார் என்பதே எங்களுக்கு தெரியாது என்றோம். இரவு 9 மணி வரை ஹாஸ்பிடலில் இருந்துவிட்டு அதன் பின் நாங்கள் கிளம்பிவிட அடுத்த நாள் காலை அங்கு மீண்டும் வந்தோம். சிகிச்சை முடிந்து மூவரும் கண் திறந்து சுய நினைவுக்கு வநதிருந்தார்கள்.. நாங்கள் மூவரும் வருபோதே சங்கீதா அங்கு இருந்தாள். 

“என்ன் சங்கீதா அவகளுக்கு என்னாச்சு, பொழச்சிட்டாங்களா” என்று கேட்க 

“அவங்களுக்கு ஒன்னுமில்ல கண் விழிச்சிட்டாங்க, போய் பாருங்க” என்று கூற அவர்கள் இருந்த வார்டுக்கு சென்றோம்.
வரிசையாக படுக்க வைக்கப் பட்டிருந்தவர்கள் அருகே சென்று கொண்டிருக்கும்போதே எங்களுக்கு முன்னால் இன்ஸ்பெக்டர் அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார். 


அந்த நேரம் குமார் ஒரு போன் கால் வரவும் வெளியே சென்றுவிட்டான. நானும் ராதாவும் மட்டும் உள்ளே சென்றோம். இன்ஸ்பெக்டர் அவர்களை விசாரித்துக் கொண்டிருந்ததால் நாங்கள் இருவரும் ஓரமாக நின்று கொண்டிருந்தோம். 

“உங்க பேர் என்ன” என்று இன்ஸ்பெக்டர் கேட்க 

“என்னோட் பேர் உதய்கிரண், இவனுங்க என் ஃப்ரெண்டுங்க உமேஷ், அவன் என்னொட ட்ரைவர் ராஜேஷ்” என்று மற்றவர்களை பற்றி சொல்லிவிட்டு 

“ஆக்சிடென்ட்ல செத்து போன அந்த இன்னொருத்தன் யாரு” என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும் 

“அவனும் என்னோட ஃப்ரெண்டுதான், ராகேஷ்” என்று சொல்லிவிட்டு அழ தொடங்கிவிட்டான். 

“நீங்க எங்க இருக்கீங்க” என்றார் இன்ஸ்பெக்டர் 

“எங்களுக்கு சொந்த ஊர் மும்பாய், இங்க ஒருத்தர பார்க்கறதுக்காக வந்தோம்” என்றான். அவன் மும்பை என்று சொன்னதுமே என் மனதுக்குள் லேசான சந்தேகம் வர தொடங்கியது. உடனே ராதாவை பார்த்து

“நீ வெளியில போய் குமார உள்ள விடாம அங்கயே இருக்கற மாதிரி பார்த்துக்க எதுவும் சொல்லாத” என்று ராதாவை வெளியே அனுப்பிவிட்டு ந்டப்பதை கவனித்தேன். 

“யார் பார்க்கிறதுக்காக சென்னைக்கு வந்தீங்க”


“என்னொட மாமா பொண்னு சென்னையில் இருக்காங்க அவங்கள பார்த்து கல்யாண்த்துக்காக கூட்டி போகதான் வந்தேன்” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு விசாரித்துக் கொண்டிருந்தார், 

“இவரு தான் உங்கள காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேர்த்தார்” என்று இன்ஸ்பெக்டர் என்னை காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார், அவருக்கு சந்தேகம் வருபடி உதய் எத்வும் சொல்லவில்லை, அதனால் விசாரணை முடிந்து அவர் கிளம்பி விட உதய் என்னை பார்த்து 

“சார் ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க மட்டும் சரியான நேரத்துல கூட்டிக்கிட்டு வரலனா நான் செத்தே போய் இருப்ப்பேன்னு டாக்டர் கூட சொன்னாரு சார்” என்று என் கையை பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான். 

“ஏதோ என்னால் முடிஞ்ச சின்ன ஹெல்ப் இதுக்கு போய் ஏன் இப்டி ஃபீல் பண்றீங்க” என்று நான் சொல்லவும் 

“இல்ல் சார் நீங்க என் உசுர காப்பாத்துன சாமி சார்” என்று மீண்டும் அழ தொடங்கினான். நான் அவன் அருகே உட்கார்ந்து 

“உங்க மாமா பொண்ன் தேடி வந்திருக்கிறதா சொன்னீங்கல்ல” என்றதும் 

“ஆமா சார், அவள் தேடி கண்டுபிடிச்சி அவ கழுத்துல் தாலி கட்ட போறேன் சார் அதுக்குதான் இங்க வந்திருக்கேன்” என்றான். எனக்கு உள்ளுக்குள் பயம் அதிகமானது. 

“ஏன் உங்க மாமா பொண்ன உங்களுக்கு அவ்ளோ புடிக்குமா” என்று சிரித்தபடியே கேட்க 

“ஆமா சார் எனக்கு அவ்ள ரொம்ப புடிக்கும் சார் ஆனா அவ தான் என்ன கண்டுக்கவே மாட்றா, கட்டிக்க்வும் சம்மதிக்க மாட்றா”என்று புலம்பினான். 

“சரி உங்க மாமா பொண்ணு என்ன் படிச்சிருக்கா” என்றதும் “அவ டாக்டருக்கு படிச்சி இப்ப் டாக்டரா இருக்கா சார்” என்று பெருமை பொங்க சொன்னான். 

“சரி, நீங்க இப்ப் ரெஸ்ட் எடுங்க நான் அப்புறம் வந்து பார்க்குறேன்” என்று எழ் முயல 

“சார் நீங்க என்ன் சார் பண்றீங்க” என்றான். 

“நான் ஒரு டாக்டர், இந்த ஹாஸ்பிடல் என் ஃப்ரெண்டோட்து” என்றதும் 

“அப்டியா சார் ரொம்ப நல்லதா போச்சு, என் மாமா பொண்ணும் டாக்டரு நீங்களும் டாக்டரு, அவள் கண்டுபுடிக்க நீங்க தான் சார் ஹெல்ப் பண்ணனும்” என்றான். 

“ஏன் அவங்க அட்ரஸ் இல்லையா” என்று நான் கேட்க தன் சட்டைப் பைக்குள் கைவிட்டு ஒரு பேப்பரை எடுத்து என் முன் நீட்டினான். அது ரத்தக்கரை படிந்து எழுத்து எதுவுமே தெரியாம்ல் இருந்த்து. 

“ஆக்ஸிடென்ட் ஆனதுல ரத்த கரையாகி அட்ரஸ் அழிஞ்சி போச்சு சார், என் கெட்ட நேரம் சார்” என்றான். என் நல்ல நேரம்டா என்று நினைத்துக் கொண்டு 

“சரி உங்களுக்கு உடம்பு சரியானதும் தேடி கண்டுபிடிக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

“ஏய் சாரு ரொம்ப நல்லவருடா” என்று உதய் தன்னுடன் இருந்தவர்களிடம் கூறிக் கொண்டிருக்க நான் கதவை மூடிவிட்டு வெளியே வந்த்தும் எதிரே குமார் நின்று கொண்டிருக்க அருகே இருந்த சேரில் ராதா தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள். நான் ராதாவின் அருகே சென்று 

“என்ன் ராதா என்னாச்சு, நான் ஓரளவுக்கு பேசி பார்த்தேன்” என்றதும் 

“இவன என்ன்ன்னு கேளுங்க” என்று குமாரை காட்ட அவனோ முகத்தில் கோவக் கனல் பொங்க நின்று கொண்டிருந்தான். 

“என்ண்டா என்னாச்சு” என்றதும்

“டேய் இவன ஏண்டா இங்க சேர்த்தோம்” என்றதும் 

“என்ண்டா சொல்ற இவன இப்பதான் பார்க்குற மாதிரி பேசுற, ஹாஸ்பிடல் கூட்டி வரும்போது இவன பார்த்தல்ல” என்றதும்

“பார்த்தேன் ஆனா அப்ப ரத்த கரை முகத்துல இருந்த்தால் அடையாளம் தெரியல இப்ப் தான தெரியுது இவன் யாருன்னு” என்றதும் எனக்கு அதிர்ஷச்சியாக இருந்த்து. இவன் தான் ரம்யாவின் மாமா என்பது இவனுக்கு தெரிந்து விட்ட்தோ என்று நினைத்துக் கொண்டு

“என்ண்டா சொல்ற இவன் யாருன்னு உனக்கு முன்னாலேயே தெரியுமா” என்று கேடக் 

“ஏன் தெரியாது, இவன் தான் என் மாமா பொண்ன லவ் பண்றதா சொல்லி ஏமாத்தி, விட்டுட்டு போனவன், இவன தேடி போய்த்தான் ரம்யா என் மேல் கோவிச்சிக்கிட்டா” என்றதும் எனக்கு இன்னும் தூக்கிவாரி போட்ட்து. ராதா என்னை பார்த்தாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியாமல் அவள் அருகே சென்று உட்கார்ந்தேன். 

“டேய் இவன இப்பவே போட்டு தள்ள போறேண்டா” என்று கோவமாக கிளம்பியவனை 

“டேய் வாடா இங்க” என்று இழுத்து உட்கார வைத்து 

“ராதா இவனுக்கு எல்லாத்தையும் சொல்லிடலாமா” என்றதும் 

“சொல்லிடுங்க” என்று அவள் தலையாட்டினள். நான் இவனை பார்த்து 

“டேய் நீ அவன போட்டு தள்ள போறியா, அவன் யாரு தெரியுமா” என்றதும் 

“யார்ரா அவன்” என்று ஆக்ரோஷமாக கேட்டவன் 

“அவன் உன்ன் போட்டு தள்ள வந்தவண்டா, ரம்யாவோட மாமா” என்றதும் அப்ப்டியே ஆஃப் ஆனான். கண்கள் விரிய கைகள் உதறா என்னை பார்த்து 

“டேய் என்ண்டா சொல்ற. ரம்யாவோட மாமாவா” என்று அப்ப்டியே வாயை பிளந்தபடி என்னை பார்த்தான். 

“ஆமா, அவன் உன்ன போட வந்திருக்கான், ஆனா நீ அவன போடப்போறியா, போ .. போய் போடு” என்று சொல்ல அவன் பயத்துடன் “டேய் என்ண்டா இப்டி பயமுறுத்துற” என்று பயம் அடங்காமல் கேட்டான். 

“இங்க எதுவும் பேச வேண்டாம், வா வெளியில் போய்டலாம்” என்று மூவரும் ஹாஸ்பிடலை விட்டு வெளியே ஒரு ஹோட்டலுக்கு வநதோம், எங்களுடன் சங்கீதாவும் கும்ரனும் வந்தார்கள். எல்லோரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்க குமார் மட்டும் சாப்பாட்டை சாப்பிடாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 

“டேய் என்ண்டா சாப்டாம இருக்க” என்று நான் கேட்க 

“என்ண்டா என்ன ஒருத்தன் கொல்ல வந்திருக்கான், நீ அவன காப்பாத்தி ஹாஸ்பிட்ல்ல சேர்த்திருக்க இவரு அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டு இருக்காரு” என்று குமரனை காட்ட 

“டேய் அவன காப்பாத்துபோது அவன் உன்ன கொல்ல வந்தவன்னு எங்க யாருக்குமே தெரியாதுடா” என்று நான் சொல்ல 

“இப்ப தான் தெரிஞ்சி போச்சில்ல ஏதாவது சொல்லி அவன இந்த ஊர விட்டு அனுப்பிடு” என்றான். 

“எப்டிடா உன்ன் கொல்லனும்னு வெறிய்போட வந்திருக்கான், நான் சொன்னா எப்டி அவன் போய்டுவான்” என்றதும்

“விட்டா நீயே அவன் முன்னால் என்ன் கூட்டி போய் விட்டுடுவ போலிருக்கே” என்று கோவத்துடன் சொன்னான். அந்த நேரம் ராதா 

“பேசாம அவன போலீஸ்ல புடிச்சிக் கொடுத்துடலாமே” என்றதும் 

“டேய் சூப்பர் ஐடியாடா, மேடம் சொன்ன மாதிரி அவன் என்ன் கொல்ல வந்திடுக்கான்னு போலீஸ்ல சொல்லி அவன் உள்ள தள்ளிடலாம்டா” என்று ஆர்வாக குமார் சொல்லவும் சங்கீதாவுன்

“ஆமா முத்து எனக்கும் அது தான் சரின்னு தோனுது” என்று சொல்ல குமரனும் 

“அதான் முத்து எனக்கு பெஸ்ட்டுன்னு தோனுது அப்டியே செய்யலாமெ” என்று எல்லோரும் கூற நான் 

“அது சரியா வராது” என்றதும் குமார் வேகமாக் “ஏண்டா” எனறான். 

“அவன் போலீஸ்ல புடிச்சிக் கொடுத்தா, உன் மேல் அவனுக்கு இருக்குற கோவம் இன்னும் அதிகமாத்தான் ஆகும், போலீஸ்ல் புடிச்சி கொடுத்துட்டா, அவன் திரும்பி வரவே மாட்டானா, அவன் என்ன தூக்குலயா போட்டுவாங்க, என்னைக்கா இருந்தாலும் திரும்பிவந்து இன்னும் அதிகமான கோவத்தொட உன்னையும் ரம்யாவையும் தேடி புடிச்சி கொல்லுவான்” ஏன்றதும் குமார் பயந்து நடுங்கி 

“வேற என்ண்டா பண்றது” ஏன்று புலம்பலாய் கேடக் 

“அவனுக்கு உன் மேல் இருக்குற கோவத்த கொஞ்ச்ம கொஞ்ச்மா குறைக்கனும், அவனே ரம்யாவ உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்குற மாத்ரி ஏதாவது செய்யனும் அதவிட்டா வேற பெஸ்ட் ஐடியா இருக்க முடியாது” என்றதும் எல்லோரும் என்னையே பார்த்தார்கள். 

“அது எப்டி ந்டக்கும்” என்றான் குமார். 

“நடக்கும், நடந்தாகனும் அப்பதான் நீ பொழைக்க முடியும்” என்றேன் நான். 


அன்று மீண்டும் ஹாஸ்பிடலுக்கு சென்று உதயாவையும் அவன் நண்பர்களையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்தேன். என் மேல் உதய்க்கு நல்ல மரியாதை ஏற்பட்ட்து. அவனும் என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்தான். இரண்டு நாட்கள் கழித்து நான் ஹாஸ்பிடலுக்கு சென்றேன், உதயும் அவன் நண்பர்களும் நன்றாக குணமடைந்து ஒரளவுக்கு நடக்க தொடங்கி இருந்தார்கள். 

“சார் நாங்க இப்ப் ஓரளவுக்கு தேரிட்டோம், இப்ப் போய் என் மாமா பொண்ண தேடலாம்னு இருக்கோம்” என்றான். 

“எப்டி தேடுவிங்க அதான் நீங்க வெச்சிருந்த அட்ரஸ படிக்க முடியாதபடி போய்டுச்சே” என்று நான் சமாளிக்க் முயல அவனோ 

“ரம்யாவோட வீட்டு அட்ரஸ் தான் படிக்க முடியாதபடி போய்டுச்சி, ஆனா அவ வேல செய்ற ஆஸ்பிடல் பேரு எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, நாங்க கூட ஆக்சிடெண்ட் ஆனப்ப அங்க தான் போய்க்கிட்டு இருந்தோம்” என்று என்னுடைய ஹாஸ்பிடல் பெயரை சொன்னான். அட்டா இவன தடுக்க முடியாது போலிருக்கே. என்று நினைத்துக் கொண்டு 

“சரி நீங்க அங்க போகலாம், அதுக்கு முன்னால் நாம் கொஞ்ச நேரம் பேசலாமா” என்றதும் 

“என்ன் சார் பேசனும்” என்றான். எல்லோரும் அங்கே உட்கார்ந்தோம்.

“உதய் நான் நீங்க உங்க மாமா பொண்ண லவ் பண்ணீங்க, ஆனா அவங்க உங்கல லவ் பண்ணாங்களா” என்றதும் யோசித்தான். 

“இல்ல சார் அவ வேற எவனோ ஒரு நாதாரிய லவ் பண்ணா, அவனையும் தேடி போட்டு தள்ளனும்னுதான் வந்திருக்கேன்” என்றதும் என்னுடன் இருந்த சங்கீதா மௌனமாக் சிரித்தாள். நான் அவளை லேசாக தட்டி சிரிக்காதே என்பது போல் ஜாடை செய்துவிட்டு 

“ஏன் உதய் நீங்க அவ மேல் இவ்ளோ பாசமா இருக்கும்போது அவங்க ஏன் உங்கள் விட்டுட்டு இன்னொருத்தன லவ் பண்ணி அவன கல்யாணம் பண்ணிக்க் நினைக்கனும்” என்றதும் அவன் யோசித்தான். 

“என்ன உதய் பதில் தெரியலையா” என்று நான் கேட்க அவன் என்னை பார்த்தான். 

“நீங்க லவ் பண்லாம், ஆனா அவளும் உங்களத்தான் லவ பண்ணனும்னு நெனச்சா, அது என்ன் நியாயம்” என்று நான் கேட்ட்தற்க்கும் அவன் எதுவும் சொல்லாமல் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அதே நேரம் மறுபுறம் முமபையிலிருந்து குமாரின் மாமாவும் அவன் மகளும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஹாஸ்பிடல் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பெருமாள் கோவத்துடன் தன் ஆட்களுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்க போலீஸ் கெடுபிடியால் அவன் சித்தூரை தாண்டி வர முடியாமல் அங்கேயே தங்க வேண்டியதாய் போய்விட்ட்து,

நாளாக நாளாக அவனுக்கு என் மேல் இருந்த கோவம் அதிகமாகிக் கொண்டே போனது. இங்கு சென்னை ஹாஸ்பிடலில் உதய் நான் சொன்னதை கேட்டாலும் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“டாக்டர் சார் நான் ஒன்னு கேக்கவா” என்றான் உதய் 

“என்ன் கேளுங்க” என்றதும் 

“நீங்க ஏன் என் மாமா பொண்ண கண்டுபுடிக்க ஹெல்ப் பண்ணாம் அவ லவ்வ நியாயப்படுத்துறதுலேயே குறியா இருக்கீங்க, ரம்யாவ உங்களுக்கு தெரியுமா” என்றான். எனக்கு தூக்கிவாரி போட்ட்து, என்ன் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க அந்த ரூமின் கதவு திறக்கப்பட குமாரின் மாமாவும் அவள் மகளும் உள்ளே வந்தார்கள். 

அவர்களை பார்த்த்தும் உதய் ஆச்சர்யத்துடன் எழுந்து நின்றான். நானும் உதயை கவனித்தபடி எழுந்து நிற்க வந்தவர்களில் குமாரின் மாமா பாண்டியனும் அவர் மகள் அதாவது குமாரின் முறைப்பெண் சுமதியும் உதயை பார்த்தார்கள். உதய் என்னை பார்த்தான். 

“என்ன் உதய் சார் அதிர்ச்சியா இருக்கா, இவங்க எங்க இங்க வந்தாங்கன்னு பார்க்குறீங்களா” என்றதும் அவன் எதுவும் சொல்லாமல் சுமதியையே பார்த்துக் கொண்டிருக்க சுமதி கண்கள் கலங்கியபடி எங்கள் அருகே வந்தாள். 

“ஏன் உதய் என்ன் உனக்கு பிடிக்கவே இல்லையா, என்ன்லாம் சொல்லி என்ன் லவ் பண்ண, இப்ப் உன் மாமா பொண்ண் தேடி இங்க வந்திட்டயா” என்றதும் இவன் மெல்ல தலையை குனிந்து கொண்டான். “என்ன் உதய் சார் ஏன் தலய தொங்க போட்டுடீங்க, நீங்களும் இவங்களும் உண்மையாத்தான லவ் பண்ணீங்க” என்றதும் உதய் என்னை பார்த்து தலையசைத்தான். 

“அப்புறம் ஏன் இவங்கள் விட்டுட்டு ரம்யா பின்னால் வந்திருக்கீங்க” என்றதும் 

“அது.....வந்து “ என்று வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற 

“ஏன்னா இங்க கூட இருந்த லவ் இவங்க உடம்ப நீங்க அனுபவிக்கிற வரைக்கும் உண்மையா இருந்துச்சி, உடம்ப சலிக்க் சலிக்க் அனுபவிச்சதுக்கு அப்புறம் இவங்க மேல் இருந்த காதல் அலுத்துப்ப்போய் உங்க மாமா பொண்ண லவ் பண்ண ஆரம்பிச்சிங்க, அதாவது இன்னொரு உடமப தேடி வந்த்திருக்கீங்க, உங்கள பொறுத்தவரைக்கும் காதல்ன்றது உடம்ப அடையுற வரைக்கும்தான், அதுக்கப்புறம், அவள தூக்கி போட்றனும், நீங்க மட்டுமில்ல லவ பண்ற நெறைய பேரு அப்டித்தான், ஒரு பொண்ணோட உடம்ப டச் பண்ற வரைக்கும் அவ என்ன சொன்னாலும் கேக்குறது, என்ன் பண்ணாலும் கண்டுக்காம் அடங்கி போறது, ஒரு தடவ அவ கூட படுத்து அனுபவிச்சிட்டா, அதுக்கப்புறம், இன்னொருத்திய தேடி போய்ட வேண்டியது, 

நீங்க மட்டுமில்ல, நெறைய பொண்ணுங்களும் இப்டித்தான் இருக்காங்க, இதுக்கு பேரு காதல் இல்ல சார், தேவடியாத்தனம், ஒருத்தன காதலிக்கிறது, இன்னொருத்தன கட்டிக்க்கிறது, அப்புறம் அவனையும் விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போறது, இதுக்கெல்லாம் காதல்னு ஒரு பேர சொல்லி சமாளிக்க வேண்டியது” என்றதும் உதய் மட்டுமல்லாமல் எல்லோரும் தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

“ஏன் சார், நீங்க பத்தாவ்து கூட படிச்சிருக்க மாட்டீங்க, ஆனா டாக்டருக்கு படிச்ச் பொண்ன கட்டிக்க் மட்டும் ஆச படுவீங்க, அவளும் உங்கள மாதிரிதான ஆச படுவா, அதுல என்ன் தப்பு” என்று நிறுத்த் உதயின் முகம் மாறியது. கண்கள் லேசாக் கலங்கி இருந்த்து. 

மறுபுறம் ஆந்திராவிலிருந்து கிளம்பிய பெருமாள் பல் குறுக்கு வழிகளில் புகுந்து தமிழக எல்லையை தாண்டி திருவள்ளூரை வந்து சேர்ந்தான். என் ஹாஸ்பிடலுக்கு சென்று என்னை பற்றி ரம்யாவிடம் விசாரிக்கிறான் அவளும் இப்போது டாக்டர் இல்லை வெளியே சென்றிருக்கிறார் என்று சொல்ல, நான் இருக்கும் இட்த்தின் முகவரியை வாங்கிக் கொண்டு காரில் தன் ஆட்களுடன் சென்னை நோக்கி கிளம்பினான். 

அவன் கிளம்பும் நேரம் தன் ஆட்களிடம் கோவமாக் அவன விடக்கூடாதுடா என்று சத்தமாக சொல்லியபடி கிளம்பியதால் ரம்யா பயந்து போய் என் செல் நம்பருக்கு டயல் செய்ய நான் இங்கு இவர்களுடன் பேசிக் கொண்டிருந்த்தால் என் செல்லை சைலண்ட் மோடில் போட்டு வைத்திருக்க நீண்ட நேரம் ரிங் ஆகி கட்டான்து, மீண்டும் மீண்டும் பல முறை முயர்ச்சித்துவிட்டு உடனே ரம்யா ராதாவின் எண்ணுக்கும் குமாரின் எண்ணுக்கும் டயல் செய்கிறாள். 

ஆனால் அவர்கள் எண்கள் நாட் ரீச்சபல்ஸ் என்று வரவே என்னவோ ஏதோ என்று ஒரு காரை ஏறபாடு செய்து கொண்டு குமரன் ஹாஸ்பிடல் நோக்கி வருகிறாள். வரும் வழி எல்லாம் என் நம்பருக்கு டயல் செய்ய நான் இங்கு பேச்சு ஸ்வாரஸ்யத்தில் செல்லை எடுத்து பார்க்கவே இல்லை. 


இங்கு நான் சொன்னவற்றை கேட்ட உதயன் மனம் மாறி கண்ணீர் விட்டு அழுகிறான். 

“சார் என்ன் மன்னிச்சிடுங்க சார், என் கண்ண் தொறந்துட்டீங்க, என்னையே நம்பி என் மேல் பாசமாவும் விருப்பமாகவும் வந்த சுமதிய விட்டுட்டு என் மேல விருப்பம் இல்லாத ரம்யாவ நான் ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் சார், நான் சுமதியையே கட்டிக்கிறேன் சார்,அதொட ரம்யாவையும் அவ ஆசப்பட்டவனுக்கே கல்யாணம் பண்னி வெச்சிடுறேன் சார்” என்று கண்கள் கலங்க கூறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் தெரிந்த்து. 

இதே நேரம் காரில் வந்து கொண்டிருந்த ரம்யா வந்தவர்கள் யார் என்று தெரியாமல் குழப்பத்துடனே வந்து கொண்டிருந்தாள். ஒருவேலை வந்தவர்கள் தன் மாமாவின் ஆட்களாக இருக்குமோ, அவர்களால் குமாரின் உயிருக்கும் என் உயிருக்கும் ஏதாவது ஆபத்து வருமோ என்ற எண்ணத்தோடு அடிக்க்டி என் நம்பருக்கு ட்யல் செய்து கொண்டே இருக்க இங்கு நான் உதயாவிடம் பேசியதில் அவன் ஒரு வழியாக் சுமதியையே திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். 

“சரி நான் இப்ப் கெளம்புறேன் சார்” என்றான் உதயா, 

“ஏன் இப்ப் எங்க கெளம்புறீங்க” என்று நான் கேட்க 

“இல்ல் சார் ரம்யாவ மீட் பண்ணி அவ யார் லவ் பண்ணானு தெரிஞ்சிக்க வேண்டாமா, அப்ப தான அவளுக்கு அவ லவ் பண்ண் பையனையே கலயாணம் பண்ணி வெக்க முடியும்” என்றான். 

“உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்” என்று நான் பின்னால் இருந்த குமாரை பார்த்தபடி சொல்ல குமார் மெல்ல் என்னை நோக்கி நடநது வந்து என் அருகே நின்று கொள்ள், 

“என்ன் சார், அப்டின்னா அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா” என்று சந்தேகத்துடன் கேட்க 

“எனக்கு ரம்யாவையும் தெரியும், அவ யார லவ் பண்ணானும் தெரியும்” என்றதும் வியப்புடன் என்னை பார்த்தவன் 

“ரம்யாவ உங்களுக்கு தெரியுமா, எப்டி சார்” என்றான். 

“நீங்க தேடி வந்த ரம்யா என்னோட ஹாஸ்பிடல்ல தான் வேல செய்றாங்க, நீங்க தேடிக்கிட்டு போனதும் என்னோட ஹாஸ்பிடலதான்” என்றதும் 

“என்ன சார் சொல்றீங்க, நீங்க ஒரு ஹாஸ்பிடல் முதலாளியா” என்றான். 

“ஆமா ரம்யா லவ் பண்றது வேற யாரையும் இல்ல, என்னோட ஃப்ரெண்ட்தான், இதோ இருக்கானெ இவன்தான்” என்று குமாரை முன்னால் இழுத்து நிற்க வைத்து காட்ட உதயா அவனை பார்த்தான், 

“ஸார் இவனா இவன் சுமதியோட மாமா பையனாச்சே” என்றதும் 

“ஆமா, அவ்னே தான்” என்றதும் அமைதியான முகத்துடன் அவனை நெருங்கி வந்தான். 


உதயா குமாரை கொஞ்ச்ம கோவத்துடன் நெருங்கி வர இதை பார்த்த எங்களுக்கும் குமாருக்கும் மனதுக்குள் அவன் என்ன் செய்வானோ என்ற பயம் உறுவானது. குமாரை நெருங்கி வந்த உதய் அவன் தோள்களை பிடித்து

“ரம்யா நல்ல பையனத்தான் செலக்ட் பண்னி இருப்பா” என்று அவன் கைகளை பிடித்து குலுக்க அங்கிருந்த எல்லோருக்கும் அப்போதுதான் உயிர் திரும்ப வந்த்து போல் பெருமூச்சு விட்டோம். எல்லோரும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் நான் என் செல்லை எடுத்தேன்.

ரம்யாவிடமிருந்து 21 மிஸ்ட் கால்கள் வந்திருந்த்ன. அதை பார்த்து வியந்து போய் அவள் எண்ணுக்கு டயல் செய்ய அதற்குள் அவளே எனக்கு கால் செய்தாள் நான் அதை அட்டன்ட் செய்து காதில் வைக்க

“சார் எங்க சார் இருக்கீங்க” என்று பதற்றமான குரலில் ரம்யா கேட்க

“என்ன் ரம்யா என்னாச்சு, குமார் கூட நம்ம குமரன் ஹாஸ்பிடல்லதான் இருக்கேன், என்னாச்சு, ஏன் இப்டி பதற்றமா பேசுறீங்க”என்றதும் என்னை சுற்றி இருந்தவர்களும் பதற்றத்துடன் நான் பேசுவதை உற்று நோக்க

“சார் உங்கள தேடி அஞ்சி பேரு வந்தாங்க சார், நீங்க எங்கன்னு கேட்டாங்க, நான் உங்களுக்கு தெரிஞ்சவங்கனு நெனச்சி அட்ரஸ் கொடுத்துட்டேன், ஆனா அவங்க கெளம்பும்போது உங்கள கொல்ல போறதா சொல்லிக்கிட்டு கெளம்புனாங்க” என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது, இவன் யாருடா புது வில்லன் என்று நினைத்துக் கொண்டே

“அவனுங்க பார்க்க எப்ட் இருந்தானுங்க” என்று கேட்க

“அவனுங்க பார்க்க தெலுங்கு காரங்க மாதிரி இருந்தாங்க சார் அடிக்கடி தெலுங்கில் ஏதோ பேசிக்கிட்டங்க” என்றதும் அனேகமாக இது லாவண்யாவின் எதிரி கூட்டமாக் இருக்கவேண்டும் என்று தோன்றியது.

“சரி ரம்யா இப்ப் நீ எங்க இருக்க” எனறதும்

“நான் உங்கள தேடி தான் வந்துகிட்டு இருக்கேன் சார்” என்றாள்.

“சரி பார்த்து வா” என்று இணைப்பை துண்டித்துவிட்டு லாவண்யாவின் செல் எண்னுக்கு டயல் செய்தேன் அதற்குள் என்னை சுற்றி இருந்தவர்கள் பதற்றத்திலும் பயத்திலும்

“என்ன் முத்து என்னாச்சு” என்று மாறி மாறி கேட்க நான் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் செல்லை காதில் வைத்திருந்தேன். நீண்ட நேரம் ரிங் ஆனபின் லவண்யாவின் செல்லை வேறு யாரொ ஒரு பெண் எடுத்து

“ஹலோ எவரண்டி” என்றாள். எனக்கு தெலுங்கு புரியும் ஆனா பேச வராது இருந்தாலும்

“லாவண்யா இல்லயா” என்றேன்

“அவங்கள் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு சார்” என்று அவள் கூற

“அவங்களுக்கு என்னாச்சு” என்றேன்.

“அவங்க அணணன் ஜெயில்ல் இருந்து வந்து கோவமா இவங்கள அடிச்சிட்டு சென்னைக்கு கெளம்பிட்டாரு” என்றாள். மறு முனையில்

“யாரு எந்த அண்ணன்” என்று நான் எதுவும் புரியாம்ல் கேட்க

“அவங்க அண்ணன் பெருமாள் தான் சார்” என்றதும் எனக்கு அடிவ்யிறு கலங்கி போக செல்லை காதிலிருந்து எடுத்தேன். அதிர்ச்சி விலகாக முகத்துடன் நான் நிற்க

“என்ங்க என்னாச்சு, போன்ல் யாரு” என்று ராதா பதற்றத்துடன் கேட்க

“கொஞ்ச் நாளைக்கு முன்னால் ஆந்திரால் ஒரு பிரச்ச்னைன்னு போயிருந்தேன அதுல் என்னால் ஜெயிலுக்கு போனவன் இப்ப் என்ன் கொல்ல வந்துகிட்டு இருக்கானாம்” என்றதும் எல்லோரும் என்னை அதிர்ச்சியுடன் பார்க்க உதயா என்னை நெருங்கி வந்து

“ஸார் நான் இருக்கும்போது நீங்க ஏன் சார் கவல படுறீங்க” என்று என் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து தன்னுடன் இருந்த நண்பர்களை

“டேய் எல்லாரும் வெளியே போய் பாருங்க” என்றதும் அவனுடன் இருந்தவர்கள் வெளியே போய் தேடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் படிக்கட்டு வழியாக இறங்கும் நேரம் பெருமாள் கோஷ்டி லிஃப்ட்டில் வந்து கொண்டிருந்தது.

“முத்து ஒரு சேஃப்டிக்கு போலீஸ்ல சொல்லிடலாமா” என்று குமார் சொல்ல ராதா தன் செல்லை எடுத்து கமிஷ்னர் எண்ணுக்கு டயல் செய்ய அந்த நேரம் கதவு வேகமாக் இடித்து திறக்கப்பட எதிரே பெருமாளும் அவனுடன் 5 தடியர்களும் கையில் கத்திகளுடன் வெறியுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

தெலுங்கு வில்லன் கோட்டா சீனிவாசன் போல் முகத்தில் கோவம் கொப்பளிக்க் என்னை பார்த்த பெருமாள்.

“டேய் என்ன போலீஸ் மாட்டிவிட்டதும் இல்லாம என் தம்பியையும் கொன்னுட்டு நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா, உன்ன விடமாட்டேண்டா” என்று என்னை நோக்கி வந்தான். அப்போது உதய் எனக்கு முன்பாக வந்து நின்று கொண்டு

“ஏய் உனக்கும் அவருக்கும் என்ன பகையோ எனக்கு தெரியாது, ஆனா அவரு என் ஃப்ரெண்டு அவர் மேல் நீ கைய வெச்ச நான் என்ன பண்னுவேன்னு தெரியாது” என்று மிரட்ட பெருமாள் என்னை இன்னும் கோவமாக் பார்க்க அவன் அருகே இருந்த அவன் அடியாள் ஒருவன் இன்னும் கோவமாக

“அண்ண எனணண்ண பார்த்துக்கிட்டு இருக்கீங்க இவன போட்டுட்டு அவன் போடுங்கண்ண” என்று தன் கையில் இருந்த கத்தியை உதயாவை நோக்கி ஓங்கிய்படி வர அந்த நேரம் உள்ளே வந்த உதயாவின் நணபர்களில் ஒருவன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் அவனை சுட்டான். கையிலிருந்த கத்தியை கீழெ போட்டுவிட்டு திரும்ப அவன் நெஞ்சில் இன்னொரு குண்டு பாய்ந்தது.

பெருமாளும் அவனுடன் இருந்த மற்றவர்களும் ஆவேசமுடன் திரும்பி பார்க்க உதயாவின் நண்பர்கள் துப்பாக்கிகளை நீட்டியபடி

“டேய் நீங்க எவ்லோ பெரிய பூலா இருந்தாலும் எனக்கு கவல இல்ல் என் முன்னாடியே என் நண்கன கொல்ல வந்தா உன் ஆளா மட்டுமில்ல் உன்னையும் சுடுவேன், உயிர் மேல பயமிருந்தா ஓடி போய்டு” என்று துப்பாக்கியின் ட்ரிக்கரை இழுத்து பிடிக்க பெருமாளும் அவனுடன் இருந்த மற்ற 4 பேரும் கதவை நோக்கி பயத்துடன் நகர்ந்தார்கள்.

துப்பாக்கி வைத்திருந்த உதயாவின் நண்பர்கள் அவர்களுக்கு வழிவிட்டு அவர்களை வெளியே அணுப்ப அந்த நேரம் ரம்யா அங்கு வர என்னை நோக்கி

“சார் உங்களுக்கு ஒன்னுமில்லையே” என்றபடி பெருமாள் கோஷ்டி வருவதை கவனிக்காமல் வர ரம்யாவை பார்த்த் பெருமாள் சட்டென அவளை தாவி பிடித்து இழுத்து தன்னுடன் அணைத்து அவள் கழுத்தில் தன்னிடமிருந்த நீளமான் கத்தியை வைத்துக் கொண்டு

“இவ தாண்டா உன் அட்ரஸ எனக்கு கொடுத்தா, இப்ப் இவ தாண்டா நான் உன்ன் போட்ட்டு தள்ள உதவ போறா” என்று கத்தியை அவள் க்ழுத்தில் லேசாக வைத்து அழுத்த அந்த இடம் சிவந்த்து. உடனே அங்கிருந்த அணைவரும் ப்தறி அடித்துக் கொண்டு

“வேண்டாம் அவள விட்டுடு” என்று கூற உதயாவும் அவன் நண்பர்களும் துப்பாக்கியை காட்டியும் மிரளாமல் பெருமாள்.

“யாராவது கிட்ட வந்தீங்க, இதே இட்த்துல் இவ தலைய வெட்டி போட்டுடுவேன், எல்லாரும் துப்பாக்கிய கீழ் போடுங்கடா” என்றதும் உதயாவின் நண்பர்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியை கீழெ போட்டுவிட நான் பெருமாளை பார்த்து

“பெருமாள் அவள் விட்டுடு பிரச்சின உனக்கும் எனக்கும்தான் இவளுக்கு அதுல எந்த சம்பந்தமும் இல்ல” என்றதும் பெருமாள் கொடூரமாக என்னை பார்த்து

“இருக்கட்டும், எனக்கு கெடச்ச் துருப்பு சீட்டு இவதான்” என்று பின்னால் நகர எல்லோரும் அவனை நோக்கி நகரவும்

“டேய் அங்கயே நில்லுங்க யாராவது முன்னால் வந்திங்க இவ தலை உங்க முன்னால் இருக்கும்” என்று கூறி பின்னால் நகர தொடங்கினான்.

“பெருமாள் நான் திரும்பவும் சொல்றேன், அவள் விட்டுடு, என்ன என்ன் வேணா செஞ்சிக்கோ அவள் விட்டுடு” என்று நான் சொல்ல அவனோ கொஞ்சமும் அசராமல்

“இருக்கட்டும் ஆனா இவளுக்கு ஏதாவதுனா நீ சும்மா இருப்பியா, வருவல்ல, எனக்கு அது தான் வேணும்” என்று தன் ஆட்களுடன் பின்னால் நகர்ந்து சென்றான். எல்லோரும் கொஞ்ச்ம கொஞ்ச்மாக நகர அவன் ஆட்கள் அவனுக்கு முன்னால் ஓடி காரில் ஏறிக் கொள்ள பெருமாள் ரம்யாவுடன் அவள் கழுத்தில் கத்தியை வைத்தபடியே நடந்து செல்ல அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்ன் நடக்கிறது என்று தெரியாமல் பயத்துடன் பார்த்துக் கொன்டிருக்க ரம்யாவின் பார்வை என் அருகே இருந்த குமாரின் மேல் இருந்த்து.

அவளுக்கு தெரியாது அவள் மாமனுக்கும் குமாருக்கும் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்த்து. ஆனால் குமாரின் கண்களில் வருத்தம் இருந்த்து. எல்லா தொல்லைகளும் முடிந்து இருவரும் ஒன்றாக சேரும் நேரம் எங்கிருந்தோ வந்தான் ஒருவன் என்று அவன் நினைப்பது எனக்கு புரிந்த்து.

அந்த பிரச்சினை என்னால் வந்த்து தான் என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் வருத்தமாக் இருக்க ரம்யாவை எப்படியாவது பெருமாளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று என் மனதுக்குள் முடிவெடுத்து பெருமாளை நோக்கி மெல்ல் மெல்ல நகாந்தேன்.
பெருமாள் வந்த கார் ஸ்டார்ட் செய்யப்ப்ட அவன் ரம்யாவுடன் காரில் ஏறிக் கொண்டான்.

ஏறியவன் என்னை பார்த்து

“வாடா, வா உனக்காக் காத்துக்கிட்டு இருப்பேன் வா” என்று கூறிவிட்டு காரை கிளம்ப சொல்ல கார் வேகமாக் புழுதியை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது. குமார் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க

“அய்யோ ரம்யா” என்று வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

“என்னால் வந்த்த நானே பார்த்துக்குறேன்” என்று என்னுடைய காரை நோக்கி செல்ல கும்ரன் என் தோளை பற்றி

“எல்லத்துக்கும் கூட இருக்குறவந்தான் உண்மையான் ஃப்ரெண்டு நானும் வரேன்” என்று கூற இருவரும் காரை நோக்கி சென்றோம். காரை ஸ்டார்ட் செய்து கிளம்பும் நேரம்

“என் ரம்யா கூட்த்தான் வருவேன்” என்று பின் சீட்டில் குமார் ஏறிக் கொள்ள காரை அங்கிருந்து நகர்ந்த முயன்ற நேரம் காருக்கு முன்னால் உதயா வந்து நின்றான்.

“ரம்யாவ அவன் ஆச பட்டவன் கூட சேர்த்து வைக்காம நான் சென்னைய விட்டு போக மாட்டேன்” என்று அவனும் பின் சீட்டில் ஏறிக் கொண்டு தன் நண்பன் ஒருவனை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டான்,

கார் பெருமாள் காரை வேகமாக் பின் தொடர்ந்து சென்றது.



No comments:

Post a Comment