Monday 21 December 2015

விஜயசுந்தரி 67

ராதா உட்கார்ந்திருந்த நிலை என்னை பயமுற செய்த்து. என்ன் மூடில் இருக்கிறாளோ, நாம வேற கொஞ்ச்ம ஒவறா ஆட்டம் போட்டுட்டோம், நடுவுல் ஏதாவது சொதப்பி இருக்குமோ என்ற பயத்துடனே அவள் அருகே சென்றேன்.

”ராதா. என்னாச்சு” என்று கொஞ்ச்ம பயம் கலந்த குரலில் கேட்க நிமிர்ந்து என்னை பார்த்தவள் 

“நீங்க சாப்ட ஹோட்டலுக்கு போயிருந்தீங்களா” என்று கேட்டாள். 

“ஆமா ராதா, குமரன் வந்திருந்தான். அவன் கூட பேசிட்டு அப்டியே ரெண்டு பேரும் ஹோட்டலுக்கு போனோம், ஏன் என்னாச்சு” என்று நான் ஒன்றும் தெரியாதவன் போல கேட்க அவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. 

“என்ன ராதா என்னாச்சு” என்று மீண்டும் கேட்க 

“அங்க அந்த மஞ்சு வந்திருந்தாளா” என்று கேட்க நான் கொஞ்ச்ம முகத்தை மாற்றிக் கொண்டு 

“ஆமா வந்திருந்தா” என்று சொல்ல 

“அவ உங்க்கிட்ட திரும்பவும் தப்பா ஏதாவது கேட்டாளா” என்றாள். 

“ஆமா ராதா நான் ஏதோ அன்னைக்கு நீ கொஞ்ச்ம கோவமா பேசினீயேன்னு அவ கிட்ட போய் சாரி கேட்கலாம்னு போனேன், அதுவும் நானா தேடி போகல, எதேச்சியா பார்த்தேன், சரின்னு போனா, மொதல்ல சிரிச்சி பேசுனவ திடீர்னு இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வரீங்களான்னு கேடக ஆரம்பிச்சிட்டா, அப்புறம் நீங்க வர்ரேன்னு சொன்னீங்க இப்ப் ஏன் வர மாற்றீங்கன்னு என்ன்ன்னவொ சொல்ல ஆரம்பிச்சிட்டா, எனக்கு கோவம் வந்துடுச்சி, திட்டிட்டு அங்கிருந்து கெளம்பிட்டேன்” என்றதும் ராதாவின் கண்களில் கண்ணீர் பொலபொலவென்று வர தொடங்கியது.
 


“ஏன் ராதா எதுக்கு அழற, நான் ஏதாவது தப்பா செஞ்சிட்டேனா, உன் ஃப்ரெண்ட திட்டிட்டேனா” என்றதும் அவள் டேபிலின் மேல் இருந்த என் கையை பிடித்துக் கொண்டு 

“சாரிங்க, நேத்து வரைக்கும் கூட உங்கமேல் எனக்கு நம்பிக்க இல்லாமதான் இருந்துச்சி, ஆனா இன்னைக்கு நான் உங்களா பூரணமா நம்புறேன்” என்று கூறி அழ ஆரம்பித்தாள். 

“ராதா ப்ளீஸ் அழாதே” என்று அவள் தலையை செல்லமாக் கோதிவிட அவள் சில நிமிடங்களில் பழைய நிலைக்கு திருபினாள். மாலை இருவரும் ஒன்றாக வீட்டுக்கு சென்றோம். 

இரவு 8 மணி இருக்கும் நான் ராதா என் மாமியார் மூவரும் சாப்பிட உட்காரும் நேரம் ராதா என்னிடம் 

“என்ன்ங்க போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்றாள். எனக்கு அந்த பழக்கமே இல்லை, அதாவது இரவில் குளிக்கும் பழக்கம், எப்போதும் காலையில் தான் குளிப்பேன், ஆனால் இன்று ராதா இரவில் குளிக்க் சொல்கிறாளே என்று நினைத்துக் கொண்டே பாத்ரூமுக்கு சென்றேன். 

அங்கு என்க்கு ஒரு லுங்கியும் ஒரு பனியனும் ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டிருந்த்து. நானும் வியப்பை வெளிக்காட்டாமல் குளித்துவிட்டு நேராக டைனிக் டேபிள் வந்தேன். சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்க ராதாவை காணவில்லை, என் மாமியார் தான் எனக்கு மேற்கொண்டு சாப்பாடு பறிமாறினார். நானும் சாப்பிட்டு முடித்து அறைக்குள் சென்று என் தலையணையை எடுத்துவர சென்றேன். 

அறைக்கதவை திறந்த்தும் எனக்கு ஆச்சர்யம், எங்கள் கட்டில் நன்றாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடிக்கப்பட்டிருந்த்து. அந்த வாசத்திலேயே மூடு வரும் போல் இருந்த்து. நைட் லேப் மட்டும் எரிய ஊதுபத்தி புகை அந்த அறைக்குள் இன்னும் ரம்யமான் ஒரு நிலையை கொண்டு வந்து கொண்டிருக்க, நான் வியப்புடன் நின்று கொண்டிருந்த நேரம் அந்த அறைக்கதவை யாரொ திறப்பது தெரிந்து திரும்பி பார்த்தேன். 

எதிரே ராதா தொட்டு தொடரும் பட்டு புடவையில் தலை நிறைய மல்லிகை முல்லை என்று பூக்களை வைத்துக் கொண்டு அழ்காக லேசான மேக்கப்புடன் உத்டுகளை லிப்ஸ்டிக்கால் மென்மையாக அழகு படுத்தி, கழுத்தில் காதில் இடுப்பில் என்று ஜொலிக்குதே தொலிக்கிதே நகைகளை போட்டுக் கொண்டு கையில் வெள்ளி சொம்பில் அர்ஜுன் அம்மாவிடம் வாங்கிய பாலுடன் லேசான் வெட்கத்துடன் நின்றிருந்தாள். 

அவள் பின்னால் என் மாமியாரும் வெட்கத்துடன் நின்று கொண்டிருக்க நான் அவரை பார்த்த்தும் அவர் கதவை சாத்திவிட்டு சென்றுவிட ராதா என்னை நோக்கி நடந்து வந்தாள். எனக்கு ஏற்கனவே ஒரு முறை இதே மாதிரி ஒரு இட்த்தில் நடந்தவை நினைவுக்கு வர அமைதியாக நின்றிருந்தேன். ராதா கையில் இருந்த பாலை அருகே இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு என் காலில் பட்டென்று விழுந்தாள் 

நான் பதறி அடித்துக் கொண்டு அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து தூக்கினேன். 

“என்ன் ராதா இது” என்று கேட்க அவள் இன்னும் வெட்கம் கலையாத முகத்துடன் என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் 

“கல்யாணம் ஆனதும் மொறைய நடக்க வேண்டியது. என்னால நடக்காம போய்டுச்சி, அதுக்கு நான் உங்கள சந்தேகப்பட்ட்தும் நம்பாத்தும் தான் காரணம். அதுக்கப்புறமும் உங்கள பத்தி தெரிஞ்சிக்கிட்டு சேர்ந்திருக்கனும், உங்க மேல முழுசா எனக்கு நம்பிக்க வராத்தால் தான் அப்பவும் நான் உங்கள நெருங்க விடாம இருந்தேன். ஆனா இன்னைக்கு உங்கள பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டேன், முழுசா புரிஞ்சிக்கிட்டேன், இதுக்கப்பறமும் நாம இப்டியே இருக்கிறது நல்லா இருக்காது, அதான் இன்னைக்கு மறுபடியும் நம்ம முதலிரவ........” என்று வெட்கத்துடன் நகத்தை கடித்துக் கொண்டிருந்தவள் சட்டென என் மார்பில் சாய்ந்து கொண்டாள். 

எனக்கு ஒரு பக்கம் அவள் என்னை முழுசாக நம்பிவிட்ட்து மகிழ்வாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அவள் நம்பும் அளவுக்கு நான் இன்னும் நல்லவனாக மாறாவில்லையே என்று என் மனம் என்னை குத்திக் கிழித்த்து. இந்த அளவுக்கு நம்பும் ராதாவை நான் முழுவதுமாக மாறாமல் அவள் நம்பிக்கைக்கு உரியவனாக நான் மாறாமல் அவளுடன் இணைவது சரியாக தோன்றவில்லை. நான் இதை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க அவள் என் மார்பின் முடிகளில் விரலை வைத்து கோதி விளையாடிக் கொண்டிருந்தாள் 

என் கைகள அவளை தழுவிட துடித்தாலும் என் மனம் ஒத்துக் கொள்ளாமல் என்னை தடுத்து போரிட்டுக் கொண்டிருந்த்து. சாதாரணமாக ஒரு பெண் என்னை தொட்ட்துமே விறைத்து எழுந்து நிற்கும் என் தண்டும் இன்று என் மனைவி எனக்கு உரிமையுள்ளவள் என்னுடன் உடல் அளவிலும் மனதளவிலும் இணைய தகுதியானவள் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் மார்புகள் என் மார்பில் குத்திக் கொண்டிருக்கிறது. எங்கள் இருவரின் உடலுக்கும் நட்டுவே காற்று கூடா புகமுடியாத அளவுக்கு அவள் என்னை கட்டிக் கொண்டிருக்கிறாள்., ஆனால் இப்ப்டி ஒரு இணைப்பிலும் என் தண்டு எந்த உணர்வும் எழுச்சியும் இல்லாமல் தொங்கிப் போய் கிடந்த்து எனக்கு இன்னும் வியப்பை கொடுத்த்து. 

மனம் ஒத்துழைக்காமல் உடலும் ஒத்துழைக்காது என்பது தான் விதியோ என்று நினைத்துக் கொண்டிருக்க ராதா அப்பாவியாக இந்த படுபாவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள் கண்கள் அவள் என்னை அணைத்த பின்னும் நான் இன்னும் அவளை ஏன் அணைக்கவில்லை என்று கேட்பது போல் இருந்த்து. என் கைகள் சக்தி இழந்த மரக்கட்டைகள் போல் கிடந்தன. அவள் பார்வையை எதிர் நோக்க முடியாமலும் அவளுக்கு என்ன் சொல்வது என்று தெரியாமலும் என் உதடுகள் துடித்துக் கொண்டிருக்க என்னை பிடித்திருந்த அவள் கைகளின் பிடிகள் தானாக என்னை விட்டு விலகின. என்னிடமிருந்து விலகி நின்றவள் என்னை உற்றுப் பார்த்தாள். 

“என்ன்ங்க என்னாச்சு” என்றாள். நான் என்ன் சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க அவளே 

“உடம்பு ஏதாச்சும் சரி இல்லையாங்க” என்றாள். நானும் அதான் சரியான நேரம் என்று முகத்தை கொஞ்ச்ம சோகமாக வைத்துக் கொண்டு 

“ஆமா ராதா மதியத்துல இருந்து தலவலியா இருக்கு” என்றேன். 

“அய்ய்யோ இத அப்பவே சொல்லியிருக்கலாமேங்க” என்று என்னை படுக்க வைத்தாள்.

“நான் தைலம் ஏதாவது தேச்சு விடவாங்க” என்றாள். நானும் சொன்ன பொய்யை சமாளிக்க் வேண்டுமெ என்று தலையசைத்தேன். உடனே அவள் அருகில் இருந்த தைலத்தை எடுத்து விரலில் தொட்டுக் கொண்டு என்னை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு என் தலையில் தைலம் தேய்க்க தொடங்கினாள். அவள் முகத்தில் என் மேல் தெரிந்த அக்கறையும் பாசமும் என்னை நோகடித்த்து. இதற்கு மேலும் இவளுக்கு துரொகம் செய்ய வேண்டுமா என்று என் மனம் என்னை கேள்விக்கனைகளால் குத்தி எடுத்த்து. தைலம் தேய்த்துவிட்டு என்னை பார்த்து 

“இப்ப எப்டி இருக்குங்க” என்றாள். அந்த குரலில் தெரிந்த பாசம் அன்பும் என்னை சாகடித்துப் போட அவள் முகத்தை கூட நிமிருந்து பார்க்கும் துணிவு இல்லாமல் தலை குனிந்தபடியே 

“இப்ப பரவால்ல ராதா” என்று கூற 

“ஸரி நீங்க படுத்து தூங்குங்க, காலையில் பார்த்துக்கலாம்” என்று கூறி என தலையை தலையணையில் வைத்து விட்டு அவள் என் அருகே வந்து படுத்தாள். என்னால் அவள் முகத்தை பார்க்கவும் முடியவில்லை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவள் முகத்தை உற்றுப பார்த்துக் கொண்டிருக்க அவள் என் பக்கம் திரும்பி 

“ஏன்ன்ங்க” என்றாள். 

“ஒன்னுமில்ல், ராதா சாரிமா” என்றேன். 

“எதுக்கு” என்று அப்பாவித்தனமாக கேட்டாள். 

“இல்ல் உன்ன் ஏமாத்திட்டேனோன்னு தோனுது” என்று நான் சொல்லவும் 

“எதுக்கு ஏமாத்துனீங்க” என்று ஏதும் புரியாமல் அவள் கேட்க 

“இந்த ரூமுக்குள்ள் பல கனவுகளோட வந்திருப்ப ,உன்ன் இப்டி ஏமாத்திட்டேனே” என்றதும் 

“இதுல என்ன்ங்க இருக்கு, இன்னைக்கு இல்லாட்டி இன்னொரு நாளைக்கு” என்று சிரித்த் முகத்துடன் கூறிவிட்டு என் தலையை தொட்டு பார்த்து 

“இப்ப் தூங்கி ரெஸ்ட் எடுங்க அப்பத்தான் தலவலி சரியாகும்” என்று கூறிவிட்டு அவள் திரும்பி படுத்தாள். எனக்கோ தூக்கம் வராமல் தவிக்க ஆரம்பித்தேன். இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கமில்லை. 


அடுத்த் நாள் காலை நான் விழிக்கும் முன்னே ராதா விழித்து குளித்து எனக்காக காஃபி போட்டுக் கொண்டு வந்தாள். என் தோளில் தட்ட் என்னை எழுப்ப அதிகாலை பொழுதிலே அழகான மஞ்சள் முகத்துடன் தலை முடி ஈரத்துடன் என் எதிரே வந்து நின்றவளை பார்த்து எனக்கு தூக்கமும் இல்லாத தலைவலியும் பறந்து போனது. 

“இப்ப தலவலி எப்டி இருக்குங்க” என்றாள். 

“இப்ப் இல்ல ராதா” என்றதும் கையிலிருந்த காஃபி கப்பை கொடுத்துவிட்டு 

“தண்னி எடுத்து வெச்சிருக்கேன், குளிச்சி ரெடி ஆகுங்க கோவிலுக்கு போய்ட்டு அப்புறம் ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள். நான் கொஞ்ச்ம வியப்புடன் “கோவிலுக்கா எதுக்கு” என்றேன். 

“என்ன் மறந்துட்டீங்களா” என்று என்னை கேடக் 

“என்ன் ராதா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்” என்று எதுவும் புரியாமல் நானும் கேட்க என் அருகே நெருங்கி வந்து 

“விஷ்யூ மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தெ டே” என்று என் கையை பிடித்து குலுக்கினாள். எனக்கு என்ன் சொல்வது என்றே தெரியாமல் அவள் கைகளுக்கு நடுவே என் கையையும் வார்த்தைகளையும் தொலைத்திவிட்டு அவள் முகத்தில் தவழ்ந்த சிரிப்பை பார்த்துக் கொண்டே கையில் காஃபியை வைத்துக் கொண்டிருக்க அவள் 

“சீக்கிரமா போய் குளிச்சிட்டு வாங்க” என்று என்னை உசுப்பினாள். இன்று மார்ச் 18, என் பிறந்த நாள் என்பதை நானே மறந்துவிட்ட் நிலையில் அவள் எப்படியோ நியாபகம் வைத்திருக்கிறாள். என்ற் வியப்பிலேயே குளித்துவிட்டு துண்டுடன் வந்தேன். 

எனக்காக ஒரு புது ட்ரெஸ் அவளே வாங்கி இருந்தாள். எப்போது வாங்கினாள் என்று எனக்கே தெரியவில்லை. அதை போட்டுக் கொள்ள எடுத்துக் கொடுக்க நானும் அதை அணிந்து கொண்டேன். இருவரும் சாப்பிட்டு முடித்து கோவிலுக்கு கிளம்பினோம். திருவேற்காடு கோவிலில் சாமி கும்பிட்டு முடித்து அங்கிருந்து நேராக ஹாஸ்பிடலுக்கு செல்லும் பாதையில் கிளமப 

“என்ன்ங்க இன்னைக்கு ஹாஸ்பிடல் போகனுமா” என்றாள். நான் அவளை பார்த்து

“போக வேண்டாமா” என்றதும் 

“வேண்டாம்” என்றாள். அடுத்த சில மணி நேரங்களில் எங்கள் கார் மாயாஜாலில் இருக்க நானும் ராதாவும் ஒன்றாக சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம், அங்கிருந்து நேராக இருவரும் எம்.ஜி.எம் சென்று இருந்த ரைடுகள அணைத்திலும் விளையாடிவிட்டு அப்படியே கடற்க்ரையில் சற்று நேரம் உட்கார்ந்து க்டலின் அழகை ரசித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம். காரில் ராதா என் தோளில் சாய்ந்து கொண்டு 

“என்ன்ங்க என் லைஃப்லயே இன்னைக்கு இருந்த அளவுக்கு என்னைக்குமே சந்தோஷமா இருந்த்திலங்க” என்றாள். 

“எனக்கும் தான் ராதா” என்று நான் கூற என் கையில் முத்தமிட்டாள். ராதா எனக்கு கொடுக்கும் முதல் முத்தம். அனுபவித்து ரசித்தபடி காரை ஓட்டினேன். வீட்டிற்கு வரும் போது நேரம் இரவு 9 மணி ஆகியிருந்த்து. என் மாமியார் தூங்கிப் போய் இருக்க அவரை எழுப்பாமல் நாங்கள் இருவரும் சாப்பிட்டு தூங்கப் போனோம். 

ராதா இன்று என்னை இறுக்கி அணைத்தபடி படுத்துக் கொண்டாள். அடுத்த நாள் எப்போதும் போல் இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பிக் கொண்டிருந்தோம். 

அதே நாள் காலை மும்பையின் மத்திய சிறைச்சாலைக்குள்ளிருந்து ஒருவன் வெளியே விடுதலையாகி வருகிறான். அவனுக்காக சிறை வாசலில் மூன்று பேர் காத்திருக்கிறார்கள். இவன் வெளியே வந்த்தும் தனக்காக காத்திருந்தவர்களை நோக்கி செல்கிறான். அவர்களும் இவனை பார்த்த்தும் இவனை நோக்கி வருகிறார்கள். ஒருவன் தன் கையில் இருந்த மாலையை அவனுக்கு போட அவன் கடுப்பாகி அந்த மாலையை பிடுங்கி வீசி எரிந்துவிட்டு 

“என்ன் ஜெயிலுக்கு அனுப்புனவங்கள நான் பழிக்கு ப்ழி வாங்கனும்” என்று ஹிந்தியில் கூறிகிறான். அதற்கு மூன்று பேரில் ஒருவன் பதிலுக்கு ஹிந்தியில் 

“ஆமான்னா அவனுங்கள விட கூடாது” என்றதும் இன்னொருவன் தமிழில் 

“அதுக்கு இப்ப் நேரம் இல்ல” என்கிறான். உடனே அவனை பார்த்து ஜெயிலில் இருந்து வந்தவன் 

“என்னாச்சு” என்று தமிழில் கேட்க 

“உங்க மொறப்பொண்னு உங்கள கட்டிக்க் மாட்டேன்னு சொல்லி சென்னைக்கு ஓடி போய்ட்டா, அவ இங்க இருக்கும்போதே ஒருத்தன காதலிச்சது தெரியுமில்ல” என்றதும் இவன் 

“ஆமா. இப்ப் அவனுக்கென்ன” என்றதும் அவன்

“உங்க மாமா பொண்ணு லவ் பண்ணவனும் சென்னைக்குதான் போய் இருக்கான்” என்றதும் இவன் கோவத்துடன் 

“அவன விட கூடாது என் மாமா பொண்ன நான் தான் கட்டனும், உடனே சென்னைக்கு கெளம்புங்கடா” என்று கத்திவிட்டு மற்றவர்களுடன் அவனும் புறப்படுகிறான். 

சென்னையில்... ஹாஸ்பிடலில் நானும் ராதவும் எங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். ஹோட்டலில் இருந்த் வர வழைக்கப்பட்ட சாப்பாட்டை மதியம் நானும் ராதாவும் குமாருடன் சாப்பிட்டு கொண்டிருக்க குமார் பேச்சை தொடங்கினான். 

“முத்து ரம்யா கிட்ட பேசினியாடா” என்றான். ராதா என்னை முறைத்தாள். 

“அய்யோ ராதா நீ வேற எதையும் நெனச்சிக்காத, இவன் நம்ம ஹாஸ்பிடல்ல வேல செய்ற ரம்யாவ லவ் பண்றானாம்” என்றதும் ராதா குமாரை வியப்புடன் பார்த்து 

“குமார் நீங்க இங்க ஜாயிண் பண்னியே இன்னும் முழுசா பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ள் எப்டி” என்று கேட்க 


“அய்யோ மேடம் எனக்கு ரம்யாவ மூனு வருஷமா தெரியும்” என்றான். 


“மூனு வருஷமாவா, எப்டி” என்று ராதா மீண்டும் கேட்க 

“நானும் அவளும் மும்பையில ஒரே காலேஜ்லதான் படிச்சோம்....” என தொடங்கி என்னிடம் சொன்னதையெல்லாம் ராதாவிடம் சொல்லி முடித்தான். 

“அப்ப நீங்க இங்க ஒர்க் பண்ண வரல ரம்யாப சைட்டடிச்சி கரக்ட் பண்ணத்தான் வந்திருக்கீங்க” என்றதும் 

“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல் மேடம் எப்டியும் எங்கயாவது ஒர்க் பண்ணித்தான ஆகனும் அத ரம்யா இருக்குற இதே ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்லாமேன்னுதான்” என்று அசடு வழிய 

“சப்போஸ் ரம்யா உங்க தொல்ல தாங்க முடியாம இங்க ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு போய்ட்டா, நீங்களும் போய்டுவீங்களா” என்ற் ராதா மடக்கியதும் குமார் விழித்தான். எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் உடகார்ந்திருக்க அவன் என்னை பார்த்தான். 

“அப்டி இல்ல் மேடம், இதே வேற யாரோட ஹாஸ்பிடலா இருந்திருந்தா நீங்க சொல்ற மாதிரி போயிருப்பேன் ஆனா இது என் நண்பனோடதாச்சே, எப்பவும் அவன் கூடத்தான் இருப்பேன்” என்று ஒரு வழியாக சமாளித்தான். 

“பார்க்கலாம் அதையும்” என்று கூறி ராதா சாப்பிட தொடங்கினாள். மூவரும் சாப்பிட்டு முடித்தோம். ராதா அதே அறையில் இருக்க நானும் கும்ரனும் வெளியே வந்தோம். 

“என்ன் மச்சி, ராதா மேடம் இப்டி வளச்சி வளச்சி கேள்வி கேட்டு என்ன தெணறடிக்கிறாங்க” என்றான். 

“ஆமா என்ன் தான் ஈசியா ஏமாத்திடுறீங்க, அவளுக்கு பிஸ்னண் மைண்டாச்சே, அவ்ளே ஈசியா சமாளிக்க் முடியாது” என்று நான் சொல்லவும் எங்களுக்கு எதிரே ரம்யா வந்து கொண்டிருந்தாள். போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவள் முகம் பதற்றத்துடன் தெரிந்தது. 

எங்கள் அருகில் வரும் முன் போன் இணைப்பை துண்டித்துவிட்டு என்னை பார்த்து 

“குட் ஆஃப்டர்னூன் சார்” என்று கூறிவிட்டு குமாரை கண்டு கொள்ளாமல் சென்றாள். நான் உடனே 

“ரம்யா, ஒரு நிமிஷம்” என்றதும் என் அருகே வந்து நின்றாள். 

“என்ன் சார்” என்று பவ்யமாக கேட்டாள். 

“என்னாச்சு ரம்யா, ரொம்ப சீரியஸா இருக்கீங்க, ஏதாவது ப்ராப்ளமா” என்று நான் கேட்கவும் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு 

“அப்டி எல்லாம் ஒன்னுமில்ல சார்” என்று சமாளிக்க் பார்த்தாள். 

“உங்களோட பாஸா இல்லாம் ஒரு ஃப்ரெண்டா என்ன நெனச்சா சொல்லலாம்” என்றதும் அவள் உதட்டை கடித்துக் கொண்டு சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாம்ல் தவித்தாள். 

“என்ன் ரம்யா என் கிட்ட சொல்ல விருப்பம் இல்லையா” என்றதும் அவள் நிலையை பார்த்த குமாரும் பதற்றமானாம். என்ன் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவனும் ரம்யாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க ரம்யா தன் கர்சீப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு 

“ஒன்னுமில்ல சார் மும்பையில் இருந்த என்னொட மாமா என்ன் தேடி சென்னைக்கு வந்துகிட்டு இருக்காராம்” என்றாள் குமாருக்கு இதை கேட்டதும் தூக்கி வாரி போட 

“என்னது உங்க மாமா இங்க வரானா” என்றான். ரம்யா அவனை பார்த்து தலையசைததுவிட்டு என்னை பார்த்தாள். 

“வரட்டும் ரம்யா அதுக்காக ஏன் டென்ஷன் ஆகுறீங்க, வந்தா பேசலாம்” என்று நான் பொறுமையாக சொல்ல ரம்யா மீண்டும் என்னை பார்த்து 

“அவன் வரதே என்னையும் இவனையுய்ம் போட்டு தள்ளத்தான்” என்றதும் மூவருக்கும் வியர்க்க தொடங்கிவிட்டது. குமார் கை கால்கள் நடு நடுங்க என்னை பார்த்து 

“மச்சான் என்ன கொலறதுக்கு மும்பாய்ல இருநது ஆள வருதாண்டா” என்றான். 

“டேய் சும்மா இருடா, அதான் ரெண்டு பேரையும் கொல்ல போறாங்கள்ள அப்புறம் ஏன் நீ மட்டும் பயப்படுற” என்று நான் சொல்லவும் என்னை பார்த்தவன் 

“உனக்கு காமடியா இருக்கா, இவ அவனோட மாமா பொண்ணு அதனால் பாவம் பார்த்து விட்டுடுவான், ஆனா நான் அப்டியா என்ன கண்டிப்பா போட்டு தள்ளிடுவாண்டா” என்று புலம்ப ஆரம்பித்தான். 

“சார் நான் கெளம்புறேன்” என்று ரம்யா கிளம்ப முயல 

“ரம்யா நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசனும்” என்றதும் அவள் அமைதியாக என்னுடன் வர நாங்கள் மூவரும் ரெஸ்ட் ரூமுக்கு சென்றோம். குமார் இன்னும் உதறலுடனே இருக்க ரம்யா கொஞ்ச்ம பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். நான் ரம்யாவை பார்த்தேன் 

“ரம்யா உங்க மாமா உங்க ரெண்டு பேரையும் எதுவும் செய்யாம இருக்கனும்னா அதுக்கு ஓரே ஒரு வழிதான் இருக்கு” என்று நான் சொன்னதும் 

“அது என்ன மச்சான், சீக்கிரம் சொல்லு” என்று குமார் என்னை ஆர்வமுடன் கேட்க நான் ரம்யாவை பார்த்தேன் அவளும் ஆர்வமாக் இருந்தாள். 


“சொல்லுங்க சார் என்ன் வழி” என்று ரம்யா கேட்கவும்

“நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும்” என்றதும் ரம்யாவின் முகத்தில் கோவம் கொப்பளித்த்து. என்னை முறைத்தபடி பார்த்தவள்

“அது முடியாது சார்” என்றாள்.

“ஏன் ரம்யா நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவ் பண்ணவங்க தான” என்று நான் சொல்லவும்

“பண்ணோம் ஆனா எனக்கு ஒரு இக்கட்டான நெலம் வநது என்ன கூட்டி போன்னு சொன்னா கண்டுக்காம விட்டவன நான் எப்டி நம்பி கல்யாணம் பண்ணிக்கறது” என்று ரம்யா மிகவும் கோவமாக் சொன்னாள்.

“ரம்யா அவன் வந்து கூட்டி போகலன்றத மட்டும் சொல்ற, ஆனா ஏன் வந்து கூட்டி போகலன்னு இதுவரைக்கும் அவன கேட்டிருப்பியா” என்று நான் கேட்டதும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க நான் குமாரை பார்த்து

“சொல்றா, இப்ப்வாச்சும் கேட்கட்டும்” என்றதும் அவன் நடந்தவற்றை கூறினான். ரம்யா அமைதியாக அதை கேட்டுவிட்டு

“சாரி ,குமார்” என்றாள். “பரவால்ல ரம்யா” என்று இவனும் அவள் கையை பிடித்து பிசைந்து கொண்டே இருக்க இருவரும் மாறி மாறி சாரி கேட்டுக் கொண்டிருக்க நடுவில் இருந்த எனக்கு கடுப்பானது.

“டேய் நிறுத்துங்கடா, நடுவுல் ஒருத்தன் வெச்சிக்கிட்டு இப்டி போட்டு பெசையுற, கைய” என்று இருவரின் கையையும் தட்டிவிட்டேன்.

“ஓகே, ஒரு பெரிய பிரச்சன ஈசியா முடிஞ்சிப் போச்சு” என்று நான் நிம்மதி பெருமூக்சு விட்ட நேரம்

“ஆமா எங்க முடிஞ்சிது அதான் முக்கியமான வில்லன் சென்னைக்கு வந்துகிட்டு இருக்கானாமே” என்று பதற்றத்துடன் சொல்ல

“வரட்டும் மச்சான், பார்த்துக்கலாம்” என்றபடியே நான் அங்கிருந்து எழ

“டேய் அவன் என்ன கொல்ல வராண்டா” என்று குமார் அழாத குறையாக சொல்ல

“உன்ன் தான் கொல்ல போறான்” என்று நான் நக்கலாக சொல்லவும்

“அதான என்ன் தான் கொல்ல போறான், உனக்கு என்ன போச்சு” என்று அவன் வருத்தத்துடன் சொல்ல

“என்ன் மச்சி பொசுக்குன்னு இப்டி சொல்லிட்ட, உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் வர மாட்டேன்” என்று செண்டிமெண்டாக சொல்லவும்

“ஆமா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து என்ன் பிரயோஜனம்” என்று கிட்டதட்ட அழுதே விட்டான்.

“டேய் அப்டியெல்லாம் விட்டுட மாட்டேண்டா, அழாத வா” என்று அவனை தட்டிக் கொடுத்து என்னுடன் அழைத்து சென்றேன். ரம்யாவும் அவனுடன் வந்தாள். அன்று மாலை நான் ராதா குமார் மூவரும் காரில் ஒன்றாக வந்து கொண்டிருந்தோம். ராதா என்னுடன் முன் சீட்டில் உட்கார்ந்திருக்க குமார் பின் சீட்டில் இருந்தான். கார் திருவள்ளூர் பூந்தமல்லி சாலையில் கிட்டதட்ட பூந்தமல்லியை நெருங்கி வந்து கொண்டிருந்தது. குமார் பின்னால் பயத்துடன் உட்கார்ந்திருக்க

“ஏண்டா குமாரு இப்டி பயப்படுற” என்று நான் சிரித்துக் கொண்டே கேட்க

“போடா உனக்கு என்ன் தெரியும் என் பயம், வரவன் என்ன செய்ய போறானோ” என்று கைகள் உதற அவன் கூறினான்.

“ஆது சரி நீ ரம்யாவோட மாமன பார்த்திருக்கியா” என்று நான் கேட்கவும்

“இதுவரைக்கும் பார்த்ததில்ல” என்றான் குமார்.

“அவன் உன்ன பார்த்திருக்கானா” எனறு நான் கேட்கவும்

“இல்ல், இதுவரைக்கும் அவனும் என்ன் பார்த்தது இல்ல நானும் அவன பார்த்ததில்ல” எனறான்.

“அப்புறம் அவன் எப்டிடா உன்ன கண்டுபிடிச்சி கொல்லுவான்” என்று நான் கேட்க

“ஆமா ரம்யாவ புடிச்சா, அவ காட்டி கொடுக்க போறா” என்று மீண்டும் பயத்துடன் சொல்ல

“அப்ப ரம்யாவ நாம கடத்தி எங்கயாவது ஒளிச்சி வெச்சிடலாமா” என்று நான் சொன்னதும்

“டேய் சூப்பர் ஐடியாடா, அவ வெளியில் இருந்தா தான என்ன் கண்டுபிடிக்க் முடியும் ரம்யாவ எங்கயாவது ஒளிச்சி வெச்சிட்டா, அவ மாமன் தேடி பார்த்துட்டு திரும்பி போய்டுவான்ல” என்று குமார் மகிழ்வுடன் சொல்ல

“என்ன்ங்க இது ஏதோ கேங்க் லீடர்ஸ் மாதிரி கட்த்தல் அது இதுன்னு பேசிக்கிட்டு” என்று ராதா குறுக்கில் சொல்ல

“மேடம் நீங்க சும்மா இருங்க மேடம் அவன் இதுவரைக்கு சொன்னதுலயே சுமாரான ஐடியா இதுதான், இதையே செய்யலாம் மச்சி”என்று குமார் சொல்லவும்

“அது சரி நீங்க ரம்யாவ ஒளிச்சிவெச்சிட்டா மட்டும் உங்கள கண்டுபிடிக்க வழியே இல்லாமல போய்டும்” என்று ராதா சொல்லவும்

“அவ சொல்ல்லன என்ன அவ மாமனுக்கு அடையாளம் தெரியாது மேடம்” என்று குமார் சொன்னான்.

“ஏண்டா, ரம்யாவொட வீட்ல உன்ன வேற யாரும் பார்த்த்து இல்லையா” என்று நான் கேட்க குமார்

“டேய் ஏண்டா இப்டி கொழப்புற” என்று குமார் அழாத குறையாக மறுபடி புலம்ப

“அவ்ன் வரட்டும்டா அப்ப பார்த்துக்கலாம்” என்று மறுபடி நான் ஆறுதல் கூறிவிட்டு காரை ஓட்டினேன். அந்த நேரம் எங்களுக்கு முன்னால் தூரத்தில் ஒரு பெரிய கண்டய்னர் லாரி வந்து கொண்டிருக்க அந்த லாரியை ஒரு கார் வேகமாக முந்தி வந்து கொண்டிருந்த்து

எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரம் முன்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென்று நிலை தடுமாறு லாரிக்கு முன்னால் குறுக்காக நின்று போனது. லாரி மிகவும் வேகமாக் வந்து கொண்டிருந்த்தால் சட்டென கார் நின்றதும் ட்ரைவர் பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயல பிரேக் அறுந்த்தால் லாரி நிறக முடியாமல் முன்னால் இருந்த காரின் மேல் வேகமாக மோதி அந்த காருடனே சாலையில் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த்து.

இதை பார்த்த நொடி நான் காரை சாலையிலிருந்து ஒரமாக திருப்பி நிறுத்த அந்த லாரி காருடன் சாலையில் பயங்கர சத்த்த்துடன் நாங்கள் நின்றிருந்த இட்த்திற்கு சில அடி தூரம் முன்னால் வரும்போது காரின் அழுத்த்தால் அதன் வேகம் குறைய தொடங்கியது. எங்களை போல் பலர் வாகன்ங்களை ஓரம் கட்டிவிட்டு இந்த அகோரமான விபத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். பலர் தங்கள் மொபைல் போனிலும் ப்டமெடுத்தார்கள்.

லாரி எங்களை கடந்து சில அடி தூரம் காரை இழுத்து சென்று மெல்ல நின்றது. நாங்கள் அணைவரும் அந்த இடம் நோக்கி ஓடினோம். கார் கிட்ட்தட்ட முழுவதும் நசுங்கி இருந்த்து. அதிவேகமாக் லாரி இடித்த்தில் காருக்குள் ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒருவன் இறநதிருந்தான். டரைவருக்கும் அதிகமான காயங்கள். பின் சீட்டில் மூவர் இருந்தனர். அவர்களுக்கு பலமான அடிதான். அணைவரும் வலியால் துடித்துக் கொண்டிருக்க லாரி டரைவர் இறங்கி ஓட்டம் பிடித்தான்.

அவனை சிலர் துரத்தி செல்ல சிலர் காருக்குள் இருந்தவர்களை கவனித்தார்கள். அதற்குள் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன்ங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கிவிட்ட்து. காருக்குள் இருந்தவர்களை வெளியே எடுக்க முயன்று கொண்டிருந்த அதே நேரம் போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் சொல்லப்பட்ட்து.

காருக்குள் இருந்தவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்க ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகும் போல் தெரிந்த்து. மூவரில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்க இன்னும் தாமதித்தால் அவன் ரத்தப் போக்கால் இறந்துவிடுவான் என்று எல்லோரும் பேசிக் கொண்டே இருக்க ராதா இதை பார்த்து பொறுமை இழந்து

“என்ன்ங்க எல்லாரும் சுத்தி நின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க, ஏதாவது பண்ணுங்க இல்லாட்டி அவரு எறந்துடுவாரு” என்று கத்த

“ஆம்புலன்ஸ் வராம யாரு என்ன பண்ன முடியும்” என்று ஒருவன் கூட்ட்த்துக்குள்ளிருந்து சொல்ல உடனே ராதா என்னை பார்து

“என்ங்க எல்லாரையும் கார்ல் ஏத்துங்க உடனெ பக்கத்துல இருக்குற குமரன் ஹாஸ்பிடலுக்கு போகலாம்” என்றதும் எனக்கும் அது சரியாக தோன்றியது. உடனே இருவரை எங்கள் காரில் ஏற்றிக் கொள்ள ஒருவரை அங்கிருந்த மற்றொருவரின் காரில் ஏற்ற்க் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். இரண்டு கார்களும் அருகே இருந்த குமரனின் அதாவது சங்கீதாவின் ஹாஸ்பிடலுக்கு சென்றோம்.

ஆந்திராவில் லாவண்யாவின் வீடு, மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிடுவதற்க்காக வந்திருந்தாள் லாவண்யா, இப்போது வீட்டில் அவளும் ஒரே ஒரு வேலைக்காரியும், கார் ட்ரைவரும் மட்டும் தான் இருந்தார்கள். வீடு வெறிச்சோடி கிடக்க வீட்டுக்குள் ஒரு குவாலீஸ் வேகமாக வருகிறது. காருக்குள்ளிருந்து ஐந்து ஆறு பேர் வேகமாக் இறங்கி உள்ளே ஓடுகிறார்கள்.

அவர்கள் நேராக லாவண்யாவின் தலை முடியை பிடித்து அவளை இழுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து நிற்கிறார்கள். சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த கையோடு லாவண்யாவை இரண்டு பேர் இரண்டு பக்கம் பிடித்துக் கொண்டிருக்க அவள் வலியால் கத்திக் கொண்டும்


“நீங்கல்லாம் யாருடா” என்று தெலுங்கில் கத்திக் கொண்டிருக்க காரின் முன் பக்க கதவு திறக்க உள்ளே இருந்து பெருமாள் இறங்கி வருகிறான். வந்தவன் நேராக லாவண்யாவின் அருகே வந்து

“ஏண்டீ என்ன் ஜெயிலுக்கு அனுப்பிட்டு நீ இங்க சந்தோஷமா இருக்கியா, என்ன் உள்ள கலி திண்ண் வெச்சி, என் தம்பியையும் கொன்னுட்டு அவன் பொண்டாட்டியையும் வீட்ட விட்டு தொரத்திட்டு நீ இங்க சந்தோஷமா உக்கார்ந்து சாப்பிடுறியா” என்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறான். லாவண்யா வலியால் கததிக் கொண்டே

“அண்ணன நான் கொல்லல அவர் தான் அக்சிடென்ட்ல செத்துட்டாரு” என்று அவள் கூற

“நீ எல்லாத்தையும் செய்ய் துணிந்தவளாச்சே, பைத்தியமா நடிச்சி, எங்கள ஏமாத்துனவதான நீ இதையும் ஏன் செஞ்சிருக மாட்ட”என்று மீண்டும் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு

“எல்லாத்துக்கும் காரணம் அந்த டாக்டர் பையன் தான் போறேன், இப்ப்வே சென்னைக்கு போய் அவன கொன்னுட்டு அதே கையோட உன்னையும் வந்து கொன்னுட்டு நான் திரும்பவும் ஜெயிலுக்கே போறேன்” என்று கூறிவிட்டு

“டேய் எல்லாரும் வண்டியில் ஏறுங்கடா” என்று தன் ஆட்களை கூற எல்லோரும் காரில் ஏறிக் கொண்டார்கள். கார் கிளபியது.



No comments:

Post a Comment