Friday 23 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 2


ஒரு நிமிஷம் சார் என்றால் சங்கீதா....

 sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான் என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இலைஞன்.

 நீங்க யாரு, உங்க பேரு என்ன?மிகவும் ஆர்வத்துடன் கேட்டல் சங்கீதா..

 Mr.Raghav, CEO of India one fashion international என்றான்....

(தொடர்கிறது)

அந்த இலைஞன் தான் யார் என்று கூறியதை கேட்ட பிறகு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டாள் சங்கீதா....

ஒரு நிமிடம், என்னோட கணவரும் அங்கே தான் வேலை பார்கிறார் என்று சொல்ல வந்தாள், பிறகு அங்கே தனது கணவர் என்னென்ன வேலையை வெட்டி முறிக்கிராரோ என்று தெரியாமல் எதற்கு அனாவசியமாக சொல்லி பிறகு தனது மானத்தை எதுக்கு தானே வாங்கிக்கொள்வானேன் என்று நினைத்து சொல்லாமல் மௌனமானாள்.

“ ஐ அம் ரியல்லி சுர்ப்ரைஸ்டு டு ஹியர் தட்”– என்றால் சங்கீதா அவனிடம்.

“ஏன்”

“இல்லை அவ்வளவு பெரிய கம்பெனிக்கு CEO ஆக இருக்கும் நீங்கள் இங்கே சிம்பிளாக வந்து Cheque குடுத்து விட்டு செல்வது ஆச்சர்யமாக உள்ளது.”



“எனக்கும் வெளியில் நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டும், நமது சென்னை சிட்டியில் தினசரி வேலைக்கு செல்லும் மங்கையர்களின் fashion இன்னிக்கி தேதிக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஏன் என்றால் என்னுடைய அடுத்த assignment க்கு அது தேவைப்படும்.”

“எது?, பெண்களை பார்த்து அவர்களுக்கு live ஆக எந்த டிரஸ் போடலாம் என்று ஆலோசனை கொடுப்பதா?”– சாதாரனமாக சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“Excuse me, எனக்கு வேலை செய்ய பல அசிஸ்டெண்ட்ஸ் இருக்காங்க, இருந்தாலும் என் சொந்த வேலைகளுக்கு நானே வர வேண்டும் என்பதற்காக இங்கே வந்தேன், உங்க Branch (DGM) Deputy General Manager தான் queue வில் நிற்க வேண்டாம் என்றும், என்னை சிறப்பாக கவணிக்க வேண்டுமென்று சொல்லி உங்க cabin க்கு போயி இருக்கா சொன்னார். எனவே உங்க இடத்தில் காத்திருந்தேன், நீங்களும் வந்தீர்கள், நான் சில suggestions சொன்னேன், பிறகு என் வேலை என்னவென்று நீங்கள் கேட்டதற்கு சகஜமாக பதில் சொன்னேன். அனால் இப்போது நீங்கள் சிரித்துக்கொண்டு என்னிடம் கேட்ட கேள்வி என் தொழிலை கிண்டல் செய்வது போல் தெரிகிறது.” என்று வெறுப்பாக சொல்லாமல் அதையும் மென்மையாகவே சிரித்து சொல்லி தனது கை கடிகாரத்தில் மணி பார்த்தான், கிளம்புவதற்கு....

எப்படி சங்கீதாவிடம் பலர் சில விஷயங்களை அனாவசியதுக்கு பேசினால் அவள் அவர்களது பேச்சை நிறுத்தி வேலையை தொடருவாளோ, அதே போல Raghav முன் இப்படி யாரேனும் சிறிதளவு கூட அவன் வேலையை கிண்டல் செய்தால் அங்கேயே அவர்களுக்கு அசராது கூலாக பதில் குடுத்து எதிரில் இருப்பவர் பார்த்து பேச வேண்டும் என்கிற எண்ணத்தை குடுத்து விடுவான் என்று சங்கீதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் அவனது வயதும், துறுதுறுப்பும். மனதுக்குள் லேசாக தனக்கு குட்டு வைத்ததுபோல் உணர்ந்தாள் சங்கீதா..

“ Sir, நான் சொன்னதை தப்பா எடுத்துக்க வேண்டாம், நானும் ஏதோ எதேச்சையாக தான் சொன்னேன், உங்களை கிண்டல் செய்வதற்கில்லை. உங்க மனதிற்கு தவறாக பட்டால் மன்னிக்கவும்.”– சற்று தயக்கத்துடன் கூறினாள்.

“ மறுபடியும் Sir போட்டு கூப்பிடுறீங்களே Miz.சங்கீதா”– அவள் பெயர் இவனுக்கு தெரியாது, முகத்தை லேசாக சாய்த்து அவளின் மேஜை மீது இருக்கும் பெயர் பலகையில் “Sangeetha – Assistant Manager” ஐ பார்த்து விட்டு அவளிடம் கூறினான்.

“நான் மிஸ் இல்லை Mr.Raghav, மிஸ்ஸஸ்” என்று புன்னகைத்தாள்.

“நான் சொன்னது ஆங்கிலத்தில் Miz என்று, Miss க்கும் Miz க்கும் வித்யாசம் உள்ளது. Miz என்றால் கல்யாணம் ஆனவளாகவும் இருக்கலாம், இல்லை ஆகதவளாகவும் இருக்கலாம். நமக்கு ஒரு பெண் கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளா என்று தெரியாத பொது இதை சொல்லலாம் Mrs.சங்கீதா..”– லேசாக சிரித்தான்..


“ உங்களிடம் பேசிக்கொண்டே இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உங்க வயசு 23 என்று சொன்னீர்கள், ஆனா எப்படி ஒரு கம்பெனிக்கு CEO ஆக இருக்கிறீர்கள்? அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது....”–என்று சொல்லி மென்மையாக புன்னகைத்தாள்.

“ India one Fashion International என்னுடைய குடும்பம் நடத்துற கம்பெனி, its a big family tree, இருந்தாலும் குடும்பதுகுள்ளையும் நிறைய போட்டி இருக்கும். அதனால்தான் இன்னிக்கி கம்பெனி இந்திய அளவுல டாப் ரேங்க்கில் இருக்கிறது....அது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் சிறிய வயதில் எவளவோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இதெல்லாம் சாதாரணம்..”– என்று சாதாரனமாக சொன்னான்.


“அப்போ உங்களுக்கு என் கணவர் குமார்.....” என்று சங்கீதா ஆரம்பிக்க அவனுடைய செல் போன் சினுங்கியது..

“ஹலோ, ஒஹ் சொல்லுங்க, ஓகே இதோ வந்துட்டேன், bank ல் cash deposit பண்ண வந்தேன், வேலை முடிஞ்சிது, இப்போ கிளம்பினால் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லி போன் கட் செய்துவிட்டு சங்கீதாவை பார்த்து நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே” என்றான்..

“ஒன்னும் இல்லைங்க, முக்கியமானது ஒன்னும் இல்லை..” என்று புன்னகைத்தாள்....

“ஒகே குட்... அப்போ நான் கிளம்புறேன்.... nice meeting you” என்று சொல்லி அவளிடம் கை குலுக்க கை நீட்டினான், சங்கீதாவும் professional ஆக கை குலுக்கிவிட்டு அவன் கிளம்பும்போது விறு விறுயென நடப்பதை பார்த்து இந்த வயதில் ஒருவன் இப்படி இருக்கிறான், இவன் இருக்கும் அதே கம்பெனியில் 42 வயதான நம் கணவர் இவனுக்கும் கீழே உள்ளவர்களுக்கு Junior Designer ஆக report பண்ணுகிறார், என்று மனதில் நினைத்து சற்று லேசான சலனதுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்”

அவளுடைய மேல் அதிகாரியின் பெயர் Mr.Vasanthan, அவர் சங்கீதாவின் இடத்திற்கு ஒரு கடிதம் குடுக்க வந்தார். சங்கீதாவின் சின்சியரிட்டியை எப்போதும் மனமார பாராட்டுவார். அவர் சங்கீதாவின் well wisher. சங்கீதாவும் அவரிடம், வேளையிலும், வயதிலும் எப்போதும் பெரியவர் என்கிற மரியாதையை குடுக்க தவறுவதில்லை.

“சொல்லுங்க Mr.Vasanthan எதாவது accounts புக் பார்க்கணுமா?” என்றால்..

“இல்லைமா, Mr.Raghav நம்ம வங்கிக்கு 2 crores deposit பண்ணி இருக்காரு, அதுக்கு compliment ஆக நாம அவருக்கு இன்றைக்கு இருந்து 6 மாசம் வரைக்கும் அவருடைய பிசினஸ்ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாமல் ஆலோசனை வழங்க போகிறோம். அதற்கான official அக்ரிமென்ட் பேப்பர் இது. நான் sign பண்ணிட்டேன், நம்ம formality படி நீயும் ஒரு தடவ பார்த்து படிச்சி சீல் வெச்சி sign பண்ணிடும்மா” என்றார்.

“சரி sir” என்றால் கணிவோடு...

மாலை 5:00 மணிக்கு தனது hand bag ல் lunch box போட்டு மூடிவிட்டு தனது இருக்கையில் இருக்கும் computer ஐ அணைத்துவிட்டு, ரம்யா விடம் bye சொல்லி விட்டு, தனது Honda Activa வண்டி இருக்குமிடம் விரைந்தாள், தனது 4 வயது மகன் ரஞ்சித் தையும், 6 வயது மகள் ஸ்நேஹா வையும் மணம் முழுக்க நினைத்துக்கொண்டு..




வீட்டிற்கு வந்தவள் தனது குழந்தைகளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்... குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் குடுத்துவிட்டு தனக்கு சூடாக டீ போட்டு குடித்து கொண்டிருக்கொம்போது தன் மகனை பார்த்து இங்கே வா என்று கண் சிமிட்டி அழைக்க, அது அழகாக அவள் மடியின் மீது ஏறி அவள் மார்புகள் மீது தலை வைத்து படுத்து “ஏன் late மா” என்று கேட்க்க “sorry டா கன்னுகுட்டி அம்மாவை நல்லா திட்டு, அடி சரியா” என்று அவள் சொல்ல... “அதை நான் செய்யனும்டி”என்று வாசல் அருகே குரல் கேட்டது. அவள் கணவன் உள்ளே வருகிறான்..

“ என்னடி சமைச்ச இன்னிக்கி, கொஞ்சம் கூட உப்பு இல்லாம ச்சே, சும்மா காலைல ஆனா ஆபீசுக்கு மட்டும் நல்லா ஆடிக்குட்டு போக தெரியுது இல்ல, குடுக்குற சோற ஒழுங்க குடுக்க தெரியாது?” என்று கடித்து கொண்டான், டிபன் பாக்ஸ் ஐ தரையில் ஓங்கி அடித்தவாறு... இதை கண்ட குழந்தைகள் இருவரும் அவங்க பேட்ரூம்குள் சென்று லேசான பயத்தில் கதவை சாத்திக்கொண்டன..

“இப்போ என்ன? உப்பு இல்லை அவளோதானே, போடதப்போவே இவளோ கத்துற நீங்க உப்பு போட்டு சாபிட்டால் இன்னும் அதிகமா கதுவீங்க, போன தடவ எடுத்த master check up report படி BP இன்னும் குறையல, அதனால்தான் உங்களுக்கு கம்மியா போட்டேன்” என்று சொல்லிவிட்டு ரொம்பவும் மெதுவான குரலில் “உப்பு போட்டு சாபிட்டுட்டா மட்டும் அப்படியே over night ல ரோஷம் வந்துட போறா மாதிரி” என்று முனு முனுத்தாள்..

“என்னடி சொன்ன, சொல்லு என்ன சொன்ன, கேட்குற மாதிரி பேசுடி” என்று குமார் கோவமாக சங்கீதாவின் தோள்களை அழுத்தமாக பிடித்து கத்திக்கொண்டே திருப்ப முயற்சி செய்தான், அதற்க்கு மிகவும் கோவத்துடன் அவனை நேருக்கு நேராக திரும்பி முகம் பார்த்து “உப்பு போட்டு சாப்பிட்டுடா மட்டும் அப்படியே over night ல ரோஷம் பொத்துக்குட்டு வந்துட போறா மாதிரி னு சொன்னேன், வேலைல காமிக்க வேண்டிய ரோஷம் வீட்டுல மட்டும் தலை விரிச்சி ஆடுது.... நானும் பார்க்குறேன் கத்திகுட்டே இருக்கீங்க.. ஒரு ஒரு நாளும் தனியா இருக்கும்போது கத்துநீங்க சரினு நானும் பொருத்துகுட்டேன், இப்போ பசங்க சந்தோஷமா அதுங்க அம்மா கிட்ட இருக்கும்போது கூட அதுங்கள பயப்படுதுற மாதிரி வந்து டிபன் பாக்ஸ் தூக்கி அடிச்சி கத்தினா என்ன அர்த்தம்... பெத்த அப்பன்தானே நநீங்க, அதுன்களுகாக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது உன் கோவத்தை அடக்கிகுட்டு, போதாதுக்கு இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கீங்க....”பலத்த குரலில் எரிச்சல் அடக்க முடியாது கத்தினாள். விட்டு ரூமுக்குள் கதவு சந்து வழியே பசங்க பயத்தோட எட்டி பார்குறதை கவனித்த சங்கீதா, கிழே விழுந்த முந்தானையால் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தனது முந்தானையை செரியாக போட்டுக்கொண்டாள். அவள் கத்திய கத்தில் இதற்கு மேல இவளிடம் பேசினால் தேவை இல்லாத கேள்விகள் கேட்பாள், அதற்க்கு நம்மிடம் பதில் இருக்காது, அனாவசிய வம்பு என்று புரிந்து கொண்டு சற்று லேசாக அடங்கி தனது ரூமுக்கு சென்று பனியன் லுங்கிக்கு மாறிவிட்டு ஹாலுக்கு சாப்பிட வந்தான் குமார். பசங்களும் உடன் அமர்ந்தனர். அனைவருக்கும் தோசை குடுத்து சாப்பிடவைத்து விட்டு படுக்க வைத்து ரூமுக்குள் தானும் படுக்க சென்றாள் சங்கீதா..

பசிக்கு சாப்பிட்டு விட்டு சங்கீதா பேசியதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாமல் நன்றாக ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் அருகில் தன் வாழ்க்கை நிலையை பற்றி சற்று கவலையாக கலந்கியவாறு படுக்க சென்ற சங்கீதாவுக்கு ரூம் கதவுலேசாக திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அவளது சின்ன கண்மணி ரஞ்சித் உள்ளே வந்தான் கண்ணில் அழுகையுடன்.

“அம்மா, அப்பா எதாவது அடிச்சார மா” என்று பாவமாக கேட்டான்..

“இல்லைடா தங்கம்” என்று அவனை துக்கி இடுப்பில் வைத்து கொண்டு முத்தம் குடுத்து தன் அருகினில் படுக்க வைத்துக்கொண்டாள், ரஞ்சித் தனது 3 வயது வரை இருந்த பழக்கத்தை இப்போதும் தொடர்ந்தான்.. அது அவனுடைய பிஞ்சு கைகளில் இருக்கும் சுண்டு விரலை அவன் அம்மா சங்கீதாவின் தொப்புளில் வைத்து தூங்குவது, மற்றொரு கையின் விரல் அவனுடைய வாயில் ரப்பர் கு பதிலாக விரலை வைத்துகொள்வது, லேசாக அவன் தூங்கிய பிறகு திரும்பி படுக்க அவனது கை விரலை தொப்புளில் இருந்து சங்கீதா எடுக்க, “ஹ்மா” என்று அந்த மழலை அழு குறள் கேட்க்க “அய்யோ இல்லைட இல்லைட தங்கம்” என்று சொல்லி அந்த பிஞ்சு விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்துக்கொண்டாள், அவன் சின்னஞ்சிறு நெத்தியில் மென்மையாக முத்தங்கள் குடுத்தபோது குழந்தையின் கண்ணீரோடு இவளின் கண்ணீரும் இனைந்து அவளுடைய கண்ணன்களில் வழிவதை உணர்ந்த சங்கீதா அவள் கண்மணியை தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள்.

வழக்கம் போல , அடுத்த நாள் காலை 5:30 மணி ஆக...., ரேடியோவில் சுப்ரபாதம் போட்டு....., காபி குடுத்து....., கோலம் போட்டு, சுப்ரபாதத்தை பாடிக்கொண்டே குளித்து முடித்து, வேலைக்காரி வனிதாவிடம் வேலை வாங்கி, சுருசுருப்பாக அனைவருக்கும் சாப்பாடு குடுத்து, தனது Honda Activa வை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு late ஆவதை புரிந்து மின்னலாக வந்தடைந்தாள்.




வங்கியின் உள்ளே நுழைந்தவள், அவள் மேஜை மீது அவள் Manager Mr. Vasanthan ஒரு பேப்பரில் அவளுக்கு அடுத்த முக்கியமான வேலை என்ன என்று எழுதி வைத்திருந்தார். அது “You have to inspect Mr.Raghav’s factory for the purpose of providing consultation for a course of 2 days a week for next 6 months on behalf of our complimentary service agreement” என்றிருந்தது. படித்து முடித்த உடனே அவள் முதுகில் யாரோ தட்டியது போல உணர்ந்தாள், திரும்பி பார்த்தாள் சங்கீதா, ரம்யா சிரித்த படி“ஹாய் சங்கீதா மேடம்” என்றால். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சிரித்துக்கொண்டே தங்களது mini purse உடன் வங்கியில் உள்ள கன்டீனுக்கு coffee break க்கு சென்றார்கள்.



No comments:

Post a Comment