Tuesday 13 October 2015

கனியும் ஒரு காதல்.. 1

காலை மணி 9.00... அவசர அவசரமாய் ஆபீஸ்க்குள் நுழைந்தான் மோகன் கம்யூட்டர் ஆன் பண்ணி... விட்டு ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தான்...

அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்.... மோகனை பற்றி..... 27 வயது... அழகன் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு அந்த வயதுக்கே உரிய துடிப்பு... சுறு சுறுப்பு.....இந்த பன்னாட்டு கம்பனிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது....அதற்கு முன் வேறு கம்பனியில் ஒரு 5 வருட அனுப்வம்...அதனால் கிடைத்த வாய்பு இந்த கம்பனியில் மானேஜர்.... கமர்சியல்... ம்ம்ம் பேரு தான் மேனஜர்... ஆனா எல்லா உதவியாளர் வேலயும் பார்க்க வெண்டும் இன்னும் ஒரு ஆறு மாதம்.... இது ப்ரொபெசன்... பீரியட்... அப்புரம் அப்ப்ரைசல்... அப்புரம் சம்பள உயர்வு.. பதவி உயர்வு. இத்யாதி இத்யாதி...இப்போதைக்கு இது போதும்.....



மோகன் திரும்பி வந்தான் கம்ப்யூட்டர்.. ஆன் ஆகி இருந்தது....

சட சட வென்று... யாகூ மெசன்சர் லாகின் பண்ணினான்... அவன் பொழுது போக்கு சாட்.... நிறைய ரெக்வெஸ்ட் கொடுப்பான்... எதிர் பார்ப்பான்... சில வரும் சில வராது.... அப்படித்தான் இன்றும்....


டிங்.. சத்தம்... அட யாரோ அவனது அழைப்பை ஏற்று ஆக்சப் பண்ணி ... பெயர்.. மின்னியது மஞ்சளாய் ஹர்சினி.... பெண்....


முதல் வாசகம் ஹாய்..... ( எவன் கண்டு பிடிச்சான் )
அவனும் ஹாய்.. அறிமுக படலம்.



மொத்ததில். தெரிந்தது இவ்வளவு தான்...
அவள் பெயர் ஹர்சினி...( புனைப் பெயராக கூட இருக்கலாம் )
வயது 29..( ம்ம் இப்ப எல்லாம் 40 கூட 20 ந்னு சொல்லுது இதுக்கு கொஞ்சம் உண்மையாக கூட இருக்கலாம் )
கல்யாணம் ஆகி விட்டது.... ஒரு குழந்தை... இருப்பது ( இது கூட உண்மை தானோ )
இருப்பது புனே... ( அட இங்க அமிஞ்ச்கரையில் இருந்துக்கிட்டு அட்லாண்டா வில் இருக்கிறேன் என்று புருடா விடுபர்கள் மத்தியில் நான் இந்தியாவில் இருக்கிறென் என்று பாதி உண்மை சொல்லி இருக்கிறாள் )



அவளை நான் பெயர் சொல்லி கூப்பிடலாம் என் சொல்லி விட்டு பை ஆப் லன்...


மோகனுக்கு... காலையில் வந்ததும் இது தான் வேலை...யாரிடமாவது கடலை போட வேண்டும்... கொஞ்ச நேரம்...தான்.. அப்புறம் 9.30 ஆபிஸ் களை கட்ட ஆரம்பித்து விடும்....வேலைப்பளு கண்னைக் கட்டும்.....9.30.....எல்லோரும் வந்தாகி விட்டது... முன் காபினைப் பார்த்தான்... அவள் அவன் சீனியர் ...இன்னும் வரவில்லை....

மல்லிகையின் மனம் குப் பென்று வீச... வருகிறாள்... அவள் ... அவன் சீனியர்... அகிலா.....
திரும்பிப் பார்த்தான் குமார்... அப்சரஸ் பாத்திருக்கீங்களா... அது மாதிரி.... எவண்டா இவளை பெத்தான் பெத்தான்... என்று பாட வைக்கும் அழகு... பதுமை... எல்லாம் அளவாய் அழகாய், அவ அப்பன் கிட்ட போய் கேக்கனும் இவளை பெத்தீங்களா இல்லை உக்காந்து செய்ஜீங்களான்னு......



மோகன் அவளைப் பார்த்து குட் மார்னிங்க் சொல்ல... ஒரு புன் முருவலை தெளித்து விட்டு அவள் காபினில் நுழைந்தாள் அகிலா...



காபின் என்றால் அறை எல்லாம் கிடையாது அவர் அவருக்கு ஒரு பே ( பிரிவு). பஸ் நிக்கிற மாதிரி.. கொஞ்சம் உறக்க பேசினால் நாலவது சீட்ல இருக்குறவன் முறைப்பான். எவண்டா இவன் பட்டிகாட்டான்னு.



சீனியர் என்றால் ஆபிஸில் மட்டும் தான்.. வயது என்னமோ 24 இருக்கும்... இந்த ஆபிஸில் என்னைப் பொறுத்தவரை அவள் சீனியர்..


வந்த அன்றே சொல்லி விட்டாள்..நீங்க என்ன விட வயது அதிகம்.. தயங்காம என்ன பெயர் சொல்லி கூப்பிடலாம்... அனுமதி கொடுத்து விட்டாள் ...காபினில் இருந்து எட்டி பார்த்து..



"மோகன்.. அந்த புது கம்பனி கோட் செக் பன்னி இன்னிக்கு அவங்களுக்கு... பேமண்ட் அக்கவுண்ட்ஸ்ல சொல்லி அரேஞ் பண்னிடுங்க...." சொல்லி விட்டு அவள் வேலைய கவனிக்க ஆரம்பித்தாள்....


கொஞ்ச நேரத்தில்... அவனது பெர்சனல் மொபைல் போன் டிங்க் என்று சொல்ல மெஸஜ். படித்தான்...



.".ஐ அம் ஆன் லைன் "- ஈஸ்வரி .. மின்னியது....ஆகா.. இது ஒரு பெண்.... இப்பத்தான் கொஞ்ச நாளா.....



அவள் ஆன் லன் ல வந்ததும் ஒரு வெப்...ல இருந்து ஒரு குறுந்தகவல் வரும்... பெயர் இருக்கும் ஆனால் மொபைல் நம்பர் இருக்காது....மோகன் சாட்ல அவன் நம்பைரைக் கொடுத்து வைத்திருந்தான்.....



மெஸஞ்சர் ஒபன் பண்ண.. மஞ்சள் கலரில் மின்னினாள் ஈ ஏ எஸ்.... ( இவன் வைத்துக் கொண்டது ).....
வழக்கமாய் பேச ஆரம்பிக்க... கொஞ்ச நேரத்தில் எம் டி அழைக்க.. ஆப் பன்னிட்டு. அவரை பார்க்க....போய் விட்டான்.....



ஒரு மணி நேரம் கழித்து... வந்து வேலையில் மூழ்கியவன் ஈஸ்வரியை சாட்டில் இருந்ததை மறந்து போனான்.....



மதியம் சாப்பாட்டு நேரம்... பொதுவா...பியூன் வாங்கி வரும் சாம்பார் சாதம் தான் அதை சாப்பிட்டு கொண்டே.. மெசஞ்சரை ஓபன்
பண்ண... ஆப் லன் மெஸ்ஜ்... மின்னியது... ஈஸ்வரி தான்... திட்டி இருந்தாள்...



உனக்கு அறிவே இல்லை... முட்டாள்... என்ன இன்சல்ட் பண்னுற... நான் என்ன வேலை இல்லாமல் உன்னை கூப்பிடுறேனா... அது இது என்று ஏகத்துக்கும்.....அட இது என்னடா வம்பு.. நினைத்த மோகன்... மெல்ல நிலையை விளக்கி.. அதற்கு பதில் ஆப் ல்ன் நில் கொடுத்த படி.... சாப்பிட்டான்... கை கழுவி வந்தவன்... அகிலா சொன்ன வேலைய முடிக்க.. அவள் காபினில் நுழைந்து..பைல் எடுத்தவன் அவள் கம்யூட்டர் மானிடரை பார்த்தவன் திகைத்தான்....



மெசஞ்சர் ஓபென் ஆகி இருந்தது... கீழு டேப் பாரில்... பி கே எம்... என மின்ன.....ஆவலில் அதை கிளிக் செய்ய... விரிந்தது மெசஜ்....



மோகன் சற்று முன் கொடுத்த... அத்தனை மெசஸ்ஜ்.....அதில்...அப்படியே..... அதிர்ந்தான் குமார்....



அகிலா... இவளா ஈஸ்வரி.... சிங்கப்பூரில் இருப்பதாக சொன்னாளே... புருடாவா.... தில்லாங்கடி வேலையா...?????????



பதை பதைப்புடன்.. வந்து அமர்ந்தான் குமார்... இங்கு வருவதற்கு முன்பே ஈஸ்வரியை சாட்ல தெரியும்....


பழைய போன் நம்பர்.. இங்கு வரும் போது புது நம்பர் கொடுத்திருந்தான்... அவன் மொபைல் டுயல் சிம், அதுனால அவளுக்கு அவனைத் தெரியலை.


சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி.. ... "நீ ரெம்ப அழகுன்னு " ஒரு மெஸ்சஜ் கொடுத்தான்..... பின்னர் ஆப் பன்னிட்டான்....
மாலை 5.30க் கெல்லாம் டான்னு கிளம்பிடுவா.. அகிலா... அது போல் கிளம்பியவள். இன்னும் இருநத மோகனைப்பாத்து...



" என்ன மோகன் கிளம்பலை "
"இல்லை.. கொஞ்சம் வேலை அந்த கொட்டேசன் அக்கவுண்ட்ஸ்ல ல இன்னும் பணம் ரிலீஸ் பண்ணல.. அது தான் கொஞ்சம் வெயிட் பண்ணி... அனுபிட்டு கிளம்பலாமுன்னு."



"சரி வரென்... அவள் நடையில் என்றும் இல்லாமல் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான்..... மெசஜ் பார்திருப்பாளோ... அது தானோ....
குழம்பினான் மோகன்.....மீண்டும் அக்கவுண்ட்ஸ் போய் ஆன் லன்ல பணத்த கட்ட வைச்சு.. திரும்ப மணி 7.00 ஆகி இருந்தது



வழக்கம் போல்... சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி... பார்த்தவன் துள்ளினான்.....பதில் வந்திருந்தது.....



". போடா.... சீசீ.. நீ ரெம்ப மொசம்......"

பதில் போட்டான் . " உண்மையிலேயே நீ அழகு தான் டி "
கம்யூட்டரை ஆப் பன்னிட்டு கிளம்பினான்... சந்தோசத் துள்ளலுடன்..



வீடு ...மேடவாக்கம்... நண்பர்களுடன் தங்கிருந்தான்.. பிளாட் தான்..ஆனாலும் வசதியாக இருந்தது.. இறங்கிவுடன் பார்த்தான் ஒரு மெசஜ்.... மொபைலில்.. அவள் தான்..

" பொறுக்கி..." கொஞ்சம் முகம் வாடியது மோகனுக்கு...
இன்னொறு மெசஜ்...


"ஆன் லன் ல இருக்கேன் " லிப்டுக்கு காத்திராமல் நாலு படியாய் தாவி ஏறி.. ரூமைத்திறந்து கம்யூட்டர் ஆன் பண்ண....
மெஸஞ்சரில் ...
" பொறுக்கி....":
" நான் அழகில்லை...."
" நான் சுமாரா பல்லு எத்தி போய் இருப்பேன்...."
" என்னப் போய் அழகுன்னு சொல்லுற நீ குருடன் தான்..."



ஆப் லைன்லில் வந்த மெஸஜ்....மெசஞ்சர பாத்தா அவ ஆப் லன்ல இருக்கானு காட்டுது... அடச்சே... பாத்ரூம் போய்டு வந்தான்....
வரதுக்குள்ள ஆப் லன்ல போய்டா.....திருப்பி மெசஜ் அடித்தான்.....


" நீங்கள் அழகு தான்....."
" நீங்கள் சொன்னது போல் நீங்கள் ஹதிராபாத்தில் இல்லை... நீங்கள் சென்னை தான்..."
" இன்று நீங்கள் அந்த நீல நிறச் சேலையில்...தலையில் பூவோடு... சூப்பர்..."
"உங்க ஸ்கூட்டி கலர் சிவப்பு... இது போதுமா இன்னும் வேண்டுமா..."



கொஞ்ச நெரம் பொறுத்திருந்து பார்த்தான்.. அவள் வரவில்லை... ஆப் பன்னிட்டு... சாப்பிட கிளம்பினான்....
மறு நாள் ஆபிஸ்ல் நடக்கப் போவது தெரியாமல்....




காலைல வழக்கம் போல் ஆபிஸ் வந்ததும்.. சாட் ஓபென் பண்ணி பார்த்தான்.. ம்ம் ம்ம்ம்ம் ஒன்னும் மெஸ்ஜ் இல்லை...

என்ன ஆனாள் இவள் இன்னும் வரவில்லை..கொஞ்ச நேரத்தில் மிகவும் பதட்டமாக வந்தாள் அகிலா..



"மோகன்.. நேத்து கொடுத்த Quote that japan company, is that money paid yesterday... பதட்டமாய் கேட்டாள்....


"ம்ம்ம் நேத்து முடிச்சிட்டு தான் போனேன்.. ஏன்... 5.00 மனிக்கு ப்ரொசஸ் ஆகி...அவங்க கன்ஃபிர்ம் பன்னிடாங்க ஏன் அகிலா... எதாவது ப்ரொப்ஸ்.... "


"Oh thank god.. நான் முடிச்சிட்டு போயிருக்கனும்... ஏதோ ஒரு ஞாபத்துல போய்டேன்..போகலன்னா என் வேலை காலிடா...."


என்ன சொல்லுர...



"ஆமா மோகன் இன்னிக்கு டாலர் ரேட் 5 ரூபா ஏறிடுச்சு... கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் போயிருக்கும்... நல்ல வேளை நீ முடிச்சிட்ட..இல்லைன்னா நான் காலிடா.. "


"நான் தான பணணினேன்... உன்ன எதுக்கு ...."


"இல்லை மோகன் நீ தப்பு பண்ணினாலும் நான் தான் அதுக்கு பலி ஆகனும்.. தாங்க்ஸ் மோகன்.. "


இடையில் M.D. வந்தார்.. GOOD JOB.. AKILA... 2 CR... IN KITTY.. GOOD JOB KEEP IT UP...

மோகனுக்கு விளங்கவில்லை.....

அவர் போனவுடன் கேட்டான்.. என்ன அகிலா உன்னை குட்டின்னுட்டு போறார்....


"ஹைய் அவனை பார்த்து முறைத்தவள்.. "அது குட்டி இல்லை.. கிட்டி... அப்படீன்னா.. சேவிங்க்ஸ் ந்னு அர்த்தம்....."

இன்னிக்கு சாயுங்காலம் உனக்கு A 2 B ல ட்ரீட் உனக்கு.....

அது என்ன A 2 B....

நீ அம்மாஞ்சியா... ஒன்னும் தெரியலை... அடையார் ஆனந்த பவன்..ல டிரீட் உனக்கு.. நான் தரென்..

அவள் குரலில் மகிழ்ச்சி... பொங்கியபடி.... மோகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது...

மோகனுக்கு மனசு பறந்தது.. இன்னிக்கு சொல்லிடலாமா... அது நான் தான் என்று... சொல்லிட வேண்டியது தான்... மாலை வழக்கம் போல் 5.30 க்கு கிளம்பினாள் அகிலா,



"என்ன மோகன் கிளம்பலாமா..."
"ம்ம் இதோ வந்திட்டேன்....."
அன்று இருந்த வேலை பழுவில் அவன் மெசஜ்ஸ்ர் ஓபன் பண்ணவே இல்லை.. அவன் எண்ணம் முழுவதும்,
மாலை 5.30 லிருந்த்து...



இப்ப ஓபன் பண்ணிலால் இவளுக்கு தெரிந்து விடும்.. அப்படியே விட்டு விட்டான்...இரவு பாத்துக்கலாம்னு...

அங்க போனா.. ஏதோ திருவிழா கூட்டம் மாதிரி பாவிகளா திங்கறதுக்கு இப்படியா விழுவாங்க என்னமோ ஓசில கொடுக்கற மாதிரி, அடிச்சு பிடிச்சு இடத்த எப்ப பிடிக்க இந்த கூட்டத்தில எப்படி அவ கிட்ட பேச . மனசு அலை பாய்ந்தது மோகனுக்கு.

"என்ன மோகன் வந்ததில் இருந்து பாக்குரேன் அப்படி என்ன யோசனை, காசு நான் கொடுக்கிறென் எம் டி. 1000/- ரூபாய் கொடுத்திருக்கார்"

"என்னது.."
"ஆமாம்டா.. நான் எம்.டி கிட்ட சொல்லிட்டேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான்னு..."
"ஏன் சொன்ன.."
"இல்லை நான் அத செய்யலை நீதான் அத செஞ்ச... சோ த க்ரெடிட் ஈஸ் யுவர்ஸ்...."

"அதனால் என்ன நீ தான இன்ஸ்டரட் பன்னின...""
"நோடா இம்பிலிமெண்ட்டேசன் ... அது மேட்டர்ஸ்...நீயும் போயிருக்கலாம்ல... இருந்து முடிச்சிட்டு போனதனால் தான இந்த லாபம் கம்பனிக்கு..."
"சரி அப்ப நான் ஒன்னு சொல்லவா..."
"என்ன"
"இங்க வேண்டாம் வா காபி ஷாப்க்கு போயிடலாம்.. ஒரு பர்ஜர் ஐஸ் கிரீம்... காபி கலக்கிடுவோம்..."
"என்ன விளையாடுரியா... 1000 தான் இருக்கு.. அங்க போனா பழுத்திரும்.."
"எனக்கு தான ட்ரீட் "
"ஆமா"
"அப்ப வா என் கூட... "
"உன் கிட்ட பேச முடியாதுப்பா.. வா போகலாம்..." அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்... அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு.
ஓரமாக இடம் பிடித்து அமர்ந்தாள்.. அவன் சென்று ஆர்டர் செய்து விட்டு.. அவள் எதிரே அமர்ந்தான்.

"இன்னிக்கு என்ன ஒரே சந்தோசமா இருக்கறா மாதிரி இருக்கு..."
"ஆமா.. இருக்கு சந்தோசமா.."
"இதுக்கா இவ்வளவு சந்தோசம்...."
"இல்லை மோகன்.. அது வேற.."
"ம்ம்ம்ம் இன்னிக்கு நீ ரெம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது..."
"என்ன உளர்ற... நான் ட்ரீட் கொடுக்கிறது காபி மட்டும் தான்... நீ என்னமோ ட்ரிங்கஸ் அடிச்சமாதிரி உளர்ற.."
"இல்லை அகிலா.. இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா.."
"என்ன வித்தியாசம்... சொல்லு.."
"சொல்லிடுவேன்..."
"சொல்லு மோகன்..."
"உன் ட்ரெஸ்... எப்பவுமே..நீ டார்க் கலர்ல சேலை மேட்சிங்கா அதே டார்க் கலர்ல பிளவுஸ் போடுவ.."
"ம்ம்ம்ம்.."
"இன்னிக்கு அப்படி இல்லை... லைட் கலர் சேலை காண்டிராஸ்ட்டா... பிளவுஸ்..."
"இல்லையே நான் எப்பவாவது இப்படி போடுவது உண்டு...."
"அப்புறம்.... ம்ம்ம்... இல்லை வேன்டாம்...."
"என்ன வேன்டாம்.. சொல்லு..."
"இல்லை வேனாம்.. இரு நான் போய் நம்ம அயிட்டங்களை எடுத்திட்டு வந்திடுறேன்...."

மோகன் போய் ரெடியான அனைத்தையும் எடுத்து வந்தான்..ஒரு ப்ர்ஜர்.. ஒரு கேக் இரண்டு காபி...

"என்ன மோகன் எல்லாம் ஒன்னு ஒன்னு வாங்கீருக்க..."
"இல்லை எப்பவுமே வரைட்டி வரட்டியா சாப்பிடனும் அது தான் எனக்கு பிடிக்கும்... இப்ப ரெண்டு பர்ஜர் வாங்கினேன்னா ரெண்டு பேருமே அத தான் சாப்பிடனும்.. இப்ப இதுல ஒன்னு அதுல ஒன்னுன்ன்னா ரெண்டு அயிட்டம் ஒரே நெரத்துல சாப்பிட்ட மாத்ரி எப்படி...."
"உனக்கு தான்பா இப்படி எல்லாம் யோசனை வருது.. வடிவேலு சொன்ன மாதிரி உக்காந்து யோசிப்பையா இதெல்லாம்..." சொல்லி சிரித்தாள்

"ஆனா இந்த கான்சப்ட் எனக்கு பிடிச்சிருக்கு... வரைட்டி.. ம்ம்ம் குட்.. உன் கிட்ட சரக்கு இருக்கு...."
"சொல்லு மோகன் ஏதோ அப்ப சொன்ன நிறுத்திட்ட..."
"ம்ம்ம் கோவிக்காம கேட்டா சொல்லுவேன்..."
"சொல்லு அத அப்புறமா யோசிக்கலாம்... வெட்டிய பர்ஜரை ஒரு பகுதிய எடுத்து கடித்தபடி..."

" உன்ன யாராவது இதுவரை புரொபோஸ் பன்னி இருக்காங்களா?..."

" வாட் நோ நோப்....." மெசஞ்சர்ல சாட்ல சொல்லுற மாதிரி... தத்தி தத்தி விழுந்தன வார்த்தைகள்.. ஆனால் தடுமாறியது உதடு...
"என்ன ஏதோ மெசஞ்சர்ல மெசஜ் வந்த மாதிரி சொல்லுரீங்க...."
அவள் முகம் சிவந்தது.. குங்குமமாய்...

"இல்லையே.. இது வரை இல்லை.....ஆமா நீ ஏன் அத கேட்கிற...."

"இல்லை சும்மா கேட்டேன்'" ( மனசை அடக்கிக் கொண்டான் ) மடையா இது சொல்லும் நேரம் இது இல்லை,விதைய இப்பதானடா போட்ட, அதுக்கு முன்ன அருவடைக்கு அருவாளோட போனா எப்படிடா மனசு இடித்தது...மனதை அடக்கி கொண்டான் மோகன்.. இப்ப வேணாம்.. அப்புறம்.. இன்னொறு நாள்....

மாலை மணி 6.30 ஆகி விட்டது..

"மோகன் நான் கிளம்பபுரேன்.. இந்தா பில்லுக்கு உள்ள காசு.." அவனிடம் அவள் 1000 ரூபாய் நோட்டை நீட்ட...
மோகன் மறுத்தான்... " அகிலா என்னங்க இது நமக்குள்ள பார்மாலிட்டீஸ் வேனாம்.. இன்னொறு நாள் நீங்க பே பன்னுங்க..."

அவளை இன்னொறு நாள் வரவழைக்க வைத்த தந்திரம் அது... எலி பொறில மாட்டுமா இல்லையா இப்ப தெரிஞ்ச்டும்....

அவள் மோகனை உற்றுப் பார்த்தாள்..

"என்ன இன்னொறு நாளா...சான்ஸே இல்லை... ஆனா "
"என்ன ஆனா.."
":உனக்குத் தெரியுமா... நம்ம கம்பனில இருந்து மதுரைக்கு போறாங்க...ஆல் இந்தியா டீலர்ஸ் மீட் அரேஞ் பன்னுராங்க...
இந்த தடவை HR பாதி பொறுப்ப நம்ம தலைல கட்டிட்டான்... நீயும் வர... 15 நாள் இருக்கு இன்னும் "

"மதுரைல எங்க..."

" தி கேட்வே ஹோட்டல், பசுமைலை.... நல்ல இடம்... சின்ன மலை மேல 5 நட்சத்திரr ஹோட்டால்.... மதுரை முழுவதும் மண்டை காயிர மாதிரி வெயில் அடிச்சாலும் அங்க குளு குளுன்னு இருக்கும்... அப்படி ஒரு இடம்....அங்க இருந்து பார்த்தா மதுரை முழுவதும்
தெரியும்...." ( தெரியாத நண்பர்கள் கூகுள் ல போட்டு பாருங்க.. சும்மா அப்படி ஒரு இடம்...)

"நீங்க போயிருக்கீங்களா...."

"ம்ம் ஒரு தடவை போயிருக்கேன்.. ஒரு மூனு வருசம் முன்னால.... இப்ப இந்த வருசம்....அப்படியே குற்றாலம் போனாலுன் போவாங்க என்ன அங்கிருந்து ஒரு 150 கி.மீ தான்.... இப்ப சீசன் வேற....செட்யூல் இன்னும் வரலை.. வந்ததும் சொல்லுறேன்.".

மோகன் திகைத்தான்.. ஆகா..என்ன ஒரு அருமையான சான்ஸ்.. நல்ல வேளை இப்ப சொல்லடா சாமி....சொல்லி எதிர் மறையாக போயி..
அப்புரம் இந்த பொன்னான சான்ஸ் .. கிடைக்காதே.. 'ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்கனும் நண்பா '... மனசு இடித்து சொல்லியது... பொறு பொறு பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறாதார் பொண்டாட்டி ஆழ்வார்... கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சொல்லக் கேட்டது அவனுக்கு நினவு வந்தது... மோகன் பொறுக்க முடிவு செய்தான்.

அகிலா புறப்பட்டு விட்டாள்.. மோகன் அவள் போனதும் தன் பல்சரில் பறந்தான் வீட்டுக்கு....

அடித்து பிடித்து வந்து மெசஞ்ச்ர் ஓபன் பன்னினான்..

ஈஸ்வரி ... ஆப் லன் மெஸ்ஜ் கொடுத்திருந்தாள்...

'ஆமா நான் ஹதிராபாத்தில் இல்லை....'
'அப்ப இல்லை இப்ப சென்னையில் தான் இருக்கேன்...'
"'வேற எவளயோ பாத்திட்டு நான்னு நினக்கிறே...'
' பொறுக்கி அவ கிட்ட போய் அடி வாங்காத...'
' எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது ஸ்கூட்டி எப்படி ...'
' காமாலை கன்னுக்கு பாக்கிறது எல்லாம் மஞ்சளாத் தான் தெரியும்... பாத்து போ....'

' அப்புரம் நான் சுமாரா இருப்பேன் பை...'

குதித்தான் மோகன்.. ஆக அவ சென்னையில் இருப்பதை ஒத்துக் கொள்கிறாள்.. மோகன் பதில் அடித்தான்

' நீங்க அழகாவே இருக்கீங்க...."
"அது யாரு உங்ககூடவே ஒரு தடியன்...உங்க கூட ஒட்டிக்கிட்டு வந்தான் A2B ல....'
'உங்க லவ்வரா... ம்ம்ம்ம் ஆள் சுமார்ட்டா தான் இருக்கான்(ர்)..'
'எனக்கு பொறாமையா இருக்கு...அவன பாத்தா'
'ஏங்க ஆன் லன்லயே வர மாட்டீங்களா..'
அனுப்பிவிட்டு அதை ஆன் லன்லயே வச்சிட்டான் மோகன்.... அவள் வரவில்லை... ஆப் லைன் தான் காட்டியது...

கொஞ்ச நேரத்தில் ஹர்சினி ஆன் லன் ல வரவும்.. இவளை ஆப் லைன்ல போட்டுட்டு
ஹர்சினியிடம் சாட் பண்ண தொடங்கினான்.... ஒரு 1/2 மணி நேரம் ஓடியது...



திடீரென்று.. ஈஸ்வரி...யிடம் இருந்து மெசஸ்ஜ்.... ஆனால் அவள் பெயரில் ஆப் லன் தான் காட்டியது.. கள்ளி என்ன ஆப்
லன்ல போட்டுட்டு அங்க யாரிடமோ கதை பேசுகிறாள்.. மெசஸ்ஜ் பாத்து பதில் போடுறாள்...

'நான் ஆன் லன்ல இருந்தா என்ன ஆப் லன்ல இருந்தா என்ன...'
'உனக்கு மெஸஜ் வருதா அத மட்டும் பாரு...'
'நான் எங்கயும் போகலை வீட்ல தான் இருந்தேன் '
'நீ யாரிகிட்டயோ நல்லா அடி வாங்க போறப்பா பாத்து உடம்பு ஜாக்கிறதை..'

அடிப்பாவி இப்படியா புழுகுவீங்க .. ம்ம்ம் ... எல்லாரும் இப்படித்தானோ....மோகன் அதற்கு பதில் போடவில்லை... போட்டால் அவள் புரிந்து கொள்வாள்... நீயும் அப்படித்தானே என்று திருப்பிக் கேட்டால்.....அனைத்துவிட்டு தூங்க சென்றான்....


1 comment: