Monday 23 March 2015

சுகன்யா... 69

Recap starts:

"என் ஆசையை நீ மதிச்சாத்தானே?"

"உன் ஆசையை மதிக்கவேதான்... உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்..." அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான்.

"சனியனே... நான் அதைச் சொல்லலே?"

"பின்னே?" சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்.

"புரியாத மாதிரி பேசாதே... உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது... அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?"


"சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா... ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா..."

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது.

Recap ends:

***



"ஓ.கே.. எனக்குப்புரியுது மீனா..."

"என்னப் புரிஞ்சுது?" மீனாவின் குரலில் மெல்லிய கேலி பிறந்தது.

"ஸோ.. இதுக்கு ஒரு வழிதான் இருக்கு.." சீனுவின் குரலில் ஒரு சிறிய சீறல்.

"சொல்லு... என்னச் சொல்றே நீ?"

"நீ என்னை கிஸ் அடிக்கணும்ன்னா, நான் சிகரெட் பிடிக்கறதை விட்டுடணும் இல்லையா?" சீனுவின் முகத்தில் நமட்டு சிரிப்பு உண்டாகத் தொடங்கியது.

"எப்பா... ரொம்ப சந்தோஷம்... உன் மரமண்டையில நான் சொல்றது ஏறிட்டாப்ல இருக்கு.."

"நாளைக்கு... நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும்... 'மேட்டர்' வேணும்ன்னா... நான் சிகரெட் பிடிக்கக்கூடாது... இல்லையா?" சீனு குறும்பாக சிரித்தான்.

"இப்பவாவது என் மனசுல இருக்கறது புரிஞ்சுதே உனக்கு?" மீனு வெகுளியாக அவன் கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் சீரியஸாக பதில் சொன்னாள்.

"அதாவது... நீ சொல்றதை மட்டும் கேட்டு நடக்கிற ஒரு அடிமையா நான் இருக்கணும்... மீனா... உனக்கு ஒரு காதலன் வேண்டாம்.. உனக்கு ஒரு ஹஸ்பெண்ட் வேண்டாம்... அவனுக்குன்னு எந்த விருப்பமும் இருக்க வேணாம்... நீ சொல்றதையெல்லாம் கேக்கிற ஒரு ஆண் அடிமை உனக்கு வேணும்... மொத்தத்துலே உனக்கு ஒரு கைத்தடியா நான் இருக்கணும்... அவ்வளவுதானே?"

சீனுவின் முகம் மெல்ல மெல்ல சீரியஸாகிக் கொண்டிருந்தது. சட்டென மீனாவின் தோளிலிருந்த தன் கையை விலக்கிக்கொண்டான் சீனு. கைக்குட்டையை எடுத்து தன் முகத்தையும், உதடுகளையும் அழுத்தமாகத் துடைத்துக்கொண்டான்.

"இதுல நான் உன்னை அடிமைப்படுத்தறது எங்க வருது?" மீனா அவன் ஏளனம் புரிந்தவளாக கோபத்துடன் சீறினாள்.

"மீனா... நீ சொல்ற உன் காதல்... உனக்கு என் மேல இருக்கற அன்பு, இதையெல்லாத்தையும் நான் உணராம இல்லே; ஆனா என் அன்பை, என் காதலை, என் நேசத்தை, நீ சிகரெட் பிடிக்கற என் வழக்கத்தோட பிணை போட்டுக்கிட்டு, நீ வீணா தேவையில்லாம உன்னைக் குழப்பிக்கறே... எங்கப்பாவும் இப்படித்தான் ஒரு வருஷமா என் மனசை புரிஞ்சுக்காம, என் கிட்ட பிடிவாதமா பேசாம இருந்தார்."

"நீ என்னை, உனக்கு வலுக்கட்டாயமா, அடிமைப்படுத்திக்க விரும்பறே.. சிகரெட் பிடிக்கறவன்ல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையிலே ஒழுக்கமில்லாதவங்கன்னு நீ நினைக்கிறே...

"என் அப்பாவும் நீ நினைக்கற மாதிரித்தான் நெனைக்கிறார். இந்த மிடில் கிளாஸ் மென்டாலிட்டி ஹன்ட்ரட் பர்சென்ட் அப்படியே உங்கிட்டவும் இருக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியுது... ஆனா சிகரெட் பிடிக்கறதுங்கறதும்... அதனோட பின் விளைவுகளும் ஒரு ஹெல்த் இஸ்யூங்கறது எனக்கும் நல்லாத் தெரியும்..." சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்தினான். சிறிய பெருமூச்சு ஒன்றை தன் நெஞ்சிலிருந்து வெளியேற்றினான்.

"உனக்கு அப்பர் கிளாஸ் மென்டாலிட்டி இருக்குன்னு நான் ஒத்துக்கறேன்.. ஆனா சாவுக்கு அப்பர் கிளாஸ்... மிடில் கிளாஸ்ங்கற பேதமெல்லம் கிடையாது... எல்லாம் தெரிஞ்ச அப்பர் கிளாஸ் ஆளான ,நீ ஏன் அந்த சனியன் புடிச்ச சிகரெட்டை, கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசைப் போட்டு வாங்கி, அந்த புகையை நெஞ்சுக்குள்ள இழுத்து, ஏன் உன் நெஞ்சைக் கரியாக்கிக்கிறே? உன் உடம்பைக் கெடுத்துக்கறே? உன் பக்கத்துல இருக்கறவங்க ஆரோக்கியத்தையும் ஏன் வீணாக்கறே?"

"நீதான் எனக்கு புருஷனா வரணும்ன்னு ஒரே நிமிஷத்துல முடிவு பண்ணி... என் வாழ்க்கையை உன் கிட்ட பணயம் வெச்சிருக்கேன்; அரை மணி முன்னாடீ, என்கூட வாடீன்னு நீ கூப்பிட்டதும், எதையும் யோசனைப் பண்ணாமா உன் கூட குஷியா வந்திருக்கேனே, என் சந்தோஷத்தைப் பத்தியோ, ஏன் மூடைப் பத்தியோ, நீ கொஞ்சமாவது யோசனை பண்ணியா?"

"வர்ற வழியிலே என் வெக்கத்தை விட்டுட்டு, மனசுல இருக்கற ஆசையை அடக்கிக்க முடியாம உன்னை நான் கட்டிப்புடிச்சேன். ஆனா நீ இப்ப உன் பக்கத்துல உக்காந்து இருக்கற என்னை வாந்தி எடுக்க வெச்சே ஆகணுங்கற முடிவுல, கையில சிகரெட்டை எடுத்து வெச்சிக்கிட்டு, தீப்பெட்டி எவன் கிட்ட பிச்சை எடுக்கலாம்னு சுத்து முத்தும் பாக்கறே?

"இவ்வளவையும் நீ பண்ணிட்டு, நான் உன்னை அடிமைப்படுத்தறேன்னு வேற என் கிட்ட புதுசா ஒரு கதை சொல்றே? உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே?" சற்று நேரமாக தொடர்ந்து பொங்கும் மன உணர்ச்சிகளுடன் பேசவே, மீனாவுக்கு இலேசாக மூச்சிறைக்கத் தொடங்கியது. 

"எல்லாப் பொட்டைச்சிகளும் ஒரே மாதிரிதான் இருக்கீங்கடீ..!!" சீனு சட்டென மீனாவை விட்டு தள்ளி உட்க்கார்ந்து கொண்டான்.

"ம்ம்ம்... உங்களுக்கு எத்தனை பொட்டைச்சியைத் தெரியும்...? இதுவரைக்கும் எத்தனை பொம்பளைங்களோட இந்த பீச்சுல வந்து உக்காந்து இருக்கீங்க? எத்தனை பேரு மாரை தொட்டுப் பாத்து இருக்கீங்க... மெத்துன்னு இருக்கா இல்லே கல்லாட்டம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணியிருக்கீங்க...?"

மீனாவின் குரலில் ஏகத்திற்கு வெறுப்பு தொனித்தது. சீனு சற்று கோபமாக, சீரியஸாக பேசுகிறான் எனத் தெரிந்ததும், அவளும் சீரியஸாக பேச முடிவெடுத்தாள். தன் எதிரிலிருப்பவனை அவள் மரியாதையுடன் விளிக்க விரும்பி ஒருமையிலிருந்து பண்மைக்கு மாறினாள்.

"மீனா... ப்ளீஸ் என்னை நீ வெறுப்பேத்தாதடீ.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்டீ.. உங்கூடத்தான் நான் மொதல் தரமாம பீச்சுக்கு வந்திருக்கேன்... நம்புடீ..."

இவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்னு வேற சொல்லிட்டு வந்திருக்கேன்...? இப்படி புஸ்வானமா வார்த்தைக்கு வார்த்தை பொங்கறவளை எப்படி நான் சமாதானப்படுத்தப் போறேன்...? உன் வீட்டுக்கு நான் வரமாட்டேன்னு இப்ப இவ மொரண்டு புடிச்சாள்ன்னா நான் என்னப் பண்ணுவேன்? சீனு மனதுக்குள் திகைத்தான்.

ஒரு பொண்ணை காதலிக்கறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா? ரோடுல பாக்கறேன், அவனவன் ஒரு கையில சிகரெட்டும், மறு கையில பிகருமா அலையறானுங்க... எனக்குன்னு வந்து வாய்ச்சவ கட்டிங்க் வுடாதேங்கறா; என் கூட தனியா வந்த மொதல் நாளே, என்னை வாணாலில போட்டு தயவு தாட்சண்யம் இல்லாம, கடலைக்காயா வறுத்து எடுக்கறா; தெரியாத்தனமா இவளுக்கு சத்தியம் வேற பண்ணிக்கொடுத்துட்டேன்.. சீனு தன்னை தன் மனதுக்குள்ளேயே நொந்து கொண்டான்.

"சீனு... ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நான் என் மனசை, என் ஒடம்பை முழுசா உங்களுக்கு கொடுக்க விரும்பறேன்... அது மாதிரி நீங்க எனக்கு முழுமையா வேணும்... குறையில்லாத முழுசா வேணும்.."

"சீனு... என்னை உங்களுக்கு கொறைஞ்சது பதினைஞ்சு வருஷத்துக்கும் அதிகமா செல்வாவோட தங்கையாத் தெரியும். ஒரு இன்டூஜூவலா, என்னை, எனக்குள்ள இருக்கற ஆசாபாசங்கள் உங்களுக்குத் தெரியாது... இப்ப நான் உங்க காதலி... உங்களை கல்யாணம் பண்ணிக்கப் போறவ... இந்த முறையில என்னை நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..."

"உங்க சிகரெட் பிடிக்கற பழக்கத்தால, நாம சந்தோஷமா இருந்து அதனால நமக்கு பொறக்கப் போற குழந்தைக்கு, எந்த வியாதியும் பிறவியிலேயே வந்துடக்கூடாதுன்னு நான் பயப்படறேன். உங்களை, உங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்களை, உங்க காதலியா, உங்களோட வருங்கால மனைவியா நான் புரிஞ்சுக்க விரும்பறேன்..நான் உங்களை எந்த விதத்துலேயும் எனக்கு அடிமையாக்கிக்கணும்ன்னு நான் நெனக்கவேயில்லை."

"என்னை புரிஞ்சுக்கோங்க.. அதுக்கு அப்பறமா, எங்கிட்ட உங்களுக்கு என்னப் பிடிக்கலைன்னு சொல்லுங்க. என்னை நான் முடிஞ்ச அளவுக்கு, உண்மையா என்னை மாத்திக்கறதுக்கு, திருத்திக்கறதுக்கு முயற்சி பண்றேன்."

"நம்ம கூடவே பிறந்த சில குணங்களை, விருப்பங்களை சட்டுன்னு மாத்திக்கறது சிரமங்கறது எனக்கு நல்லாப் புரியுது... ஆனா சிகரெட் பிடிக்கற பழக்கம் நீங்க பொறந்தப்ப உங்க கூட வரலே; இது நீங்களா பிடிச்சிக்கிட்ட ஒண்ணு; நடுவுல வந்த ஒண்ணு; நடுவுல வந்த ஒண்ணை, நடுவுல விடறதுல உங்களுக்கு என்னப் பிரச்சனைங்கறதுதான் எனக்குப் புரியலை?" 

சீனு அடங்குடா; உன் ஆட்டம் இவகிட்ட செல்லாது; ஆனா உன் நல்ல காலம் ஒரு பொறுப்பான புத்தியுள்ள பொண்ணுகிட்ட நீ அடங்க வேண்டியதா இருக்குது; நீ கொஞ்சம் பொறுமையா இருடா... மீனா உன் பொண்டாட்டியா ஆகப்போறவ... இவ ஒரு பிரச்சனையை பல கோணத்துலேருந்து அணுகறா... உண்மையாகவே அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண நினைக்கறா; ரொம்பவே ரீசனபிளா பேசறா... அவ உணர்ச்சிகளுக்கும் நீ மதிப்பு குடுத்துத்தான் ஆகணும்...

அவ சொல்ற மாதிரி உன் உணர்ச்சிக்கு மதிப்பு குடுத்து, அவ அண்ணன் செல்வா, அவளை உன் கூட அனுப்பி இருக்கான். மீனாட்சியும், உன் உணர்வுகளை மதிச்சு, உன்னை நம்பி, உன் விருப்பத்துக்கு மதிப்பு குடுத்துத்தான் தனியா வந்து இப்ப உன் கூட பீச்சுல உக்காந்து இருக்கா...

சீனுவாசனுக்கு ஒரு பக்கம் மீனாட்சியின் மேல், அவனுக்குள் ஒரு இனம் புரியாத எரிச்சல் கிளம்பிய போதிலும், அவனுடைய நல்ல காலம், அவன் 'புத்தி' அவனுக்குப் பொறுமையை உபதேசித்தது. அவசியமில்லாமல் எதையும் பேசாதே என உபதேசம் செய்தது.

"மீனு... உனக்கு கோவம் வந்தா நீ பத்ரகாளி மாதிரி ஆயிடறே? உன் காதலை என்னைக்கு எனக்கு உணர்த்தினியோ, அன்னைக்கு எந்த முக பாவத்தோட இருந்தியோ அதே மீனாட்சியாத்தான் இன்னைக்கு என் முன்னாடி நீ உக்காந்திருக்கே..." சீனு தன் காதலியுடன் சமாதானமாக போக விரும்பினான்.

"இனிமே உங்களுக்கு வேற வழியில்லே... சத்தியம் பண்ணி என் கையை பிடிச்சிருக்கீங்க... என் மனசுக்குள்ள நானும் நீங்க தான் என் புருஷன்னு சத்தியம் பண்ணிக்கிட்டு, உங்களை ஆசையா கட்டித் தழுவிட்டேன்... இனிமே நீங்க என் மூஞ்சை சகிச்சுக்கிட்டுத்தான் ஆகணும்..." மீனாவின் முகம் பாறாங்கல்லைப் போலிருந்தது.

சீனுவின் முகம் சட்டென்று தொங்கிப் போனது. மீனாவும் என் அப்பா மாதிரியே இருக்காளே? மனசுல பட்டதை சட்டுன்னு ஒடைச்சிடறாளே?
இவ விரிச்ச காதல் வலையில நான் விழுந்தாச்சு... யாரோட வற்புறுத்தலுமில்லாம, என் விருப்பத்தோடத்தான் நான் இவகிட்ட விழுந்தேன். இனிமே எதை யோசிச்சும், என்ன யோசிச்சும், எந்தப் பலனுமில்லே; இனிமே இவ கையைப் பிடிச்சுக்கிட்டு, இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு, வாழ்க்கையை சந்தோஷமா ஓட்டித்தான் ஆகணும்?

கண்களில் அசைவில்லாமல், சீனு மவுனமாக உட்க்கார்ந்திருந்தான். மனம் மட்டும் திக்கு திசையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.

'அண்ணே... அண்ணிக்கு சுண்டல் வாங்கிக்கொடுங்கண்ணே...' சுண்டல் விற்கும் சிறுவனின் குரல் அவனை நனவுலகத்திற்கு இழுத்து வந்தது.

மீனாட்சி, சீனுவாசனின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள். ஒரே நாள்ல இவனை நான் ரொம்பவும் சீண்டறனா? ரொம்பவே லெக்சர் அடிச்சிட்டேனா? என் சீனுவை ரொம்ப சீண்டிறதும் தப்புதான்; இவன் ஒரு முசுடு. மனசால தங்கம். ரொம்ப சீண்டினா, என் கிட்ட இவனுக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச பயமும் விட்டுப்போயிடும்.

நான் சீனுவாசனை என் மனசார விரும்பறேன். நான் இவனை எந்தக் காரணத்துக்காகவும் இழக்க விரும்பலை. நானும் என் லிமிட்லத்தான் இருக்கணும்.. ஒரு அளவாத்தான் இவனை மெரட்டணும்... ஒரு அளவத்தான் இவனுக்கு மிடில் கிளாஸ் மென்டாலிட்டியைப் பத்தி பாடம் எடுக்கணும்...



பாவம்... ஆசையா, சந்தோஷமா என்னைப் பாக்க வந்த, என் சீனுக்குட்டியோட மூஞ்சி ரொம்பவே சுண்டிப் போயிடுச்சி.. மீனா தன் மனதை மெல்ல விருப்பு வெறுப்பில்லாமல் வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தாள்.

"சீனு... என் கிட்ட வாங்களேன்..." மீனாவின் குரல் குளிர்ச்சியாக வந்தது. குரலில் பாசங்கற்ற, போலியில்லாத, உண்மையான அன்பு வெள்ளமாக பெருக்கெடுத்தது.

"நான் கிட்ட வந்தா நீ வாந்தி எடுப்பே... உன் கழுத்துல இன்னும் தாலி வேற ஏறல... தேங்கா சுண்டல் விக்கறவன், ஓட்ட வடை விக்கறவன்ல்லாம் என்னை சந்தேகப்படறதுக்கா...?"

"இப்ப நீ என் கிட்ட வரப்போறியா இல்லையாடா?" மீனாட்சி தன் கண்களில் நமட்டுச் சிரிப்புடன் அவனை மிரட்டினாள்.

"நீ மட்டும் என்னை வாடா போடான்னு பேசலாமா?" சீனு இப்போது முருங்கை மரம் ஏற ஆரம்பித்தான்.

சீனுவின் இடதுகையை எடுத்து உரிமையுடன் தன் தோளில் போட்டுக் கொண்டாள், மீனா. தோளில் கிடந்த அவன் கைவிரல்களில் தன் கை விரல்களை கோத்துக் கொண்டாள். அவன் முகத்துடன் தன் முகத்தை ஒரு குழந்தையைப் போல் அழுத்தி இழைத்தாள். அவனுடன் ஊடுவது போல் ஊடி, அவனை அவள் சீண்டினாள். தன் காதலனை, தன் துணையை, சில நேரங்களில் தான் வகுத்த விதிகளுக்குட்பட்டு, அவனைத் தன்னுடன் விளையாட அனுமதித்தாள். பெண்களுக்கு இந்த கலை பிறப்பிலேயே வந்துவிடுகிறது.

சீனுவுக்கும் இது புரியாமல் இல்லை. சீனுவாசனின் மனமும் தன் மனதைக் கவர்ந்த மீனாட்சியிடம் முழுவதுமாக அடிமைப்படப் விரும்பியது. தன் மனதையும், தன் உடலையும் பூரணமாக அவளிடம், அவள் விருப்பப்படியே அவன் ஒப்படைக்க விரும்பினான். அவளுடன் விளையாடும் காதல் விளையாட்டை, இந்த கண்ணாமூச்சி விளையாட்டை, விதிகளுக்கு உட்பட்டே விளையாட அவன் மனம் மிகவும் விரும்பியது.

விதிகளுக்கு உட்பட்டு விளையாடப்படும் எந்த விளையாட்டும் முடிவில் சுகத்தைத்தானே தரும்...! இதுதானே இயற்கையின் நியதி...!!

"மீனா...குட்டி..."

"ம்ம்ம். சொல்லு.."

"ஐ நீட் சம் டயம்... ஒரே வழியா என்னோட எல்லாப் பழக்கத்தையும், உன் பார்வையில அது நல்லதோ, கெட்டதோ, சரியோ, தப்போ... மொத்தமா என்னை ஒரே நாள்லே மாத்திக்கறதுங்கறதும், எனக்கு ரொம்ப கடினம்ன்னு நீ புரிஞ்சுக்கணும்..."

"சரிப்பா.."

"நான் ஏற்கனவே சிகரெட் பிடிக்கறதை கொறைச்சுட்டேன்... கூடிய சீக்கிரத்துல மொத்தமா சிகரெட்டை விட்டுடறேன்."

"தேங்க்யூ டா செல்லம்" மீனா தன் தலையை அவன் தோளில் புதைத்துக் கொண்டாள்.

"மீனா..."

"ம்ம்ம்" மீனாவின் உதடுகள் சீனுவின் கழுத்தில் புதைந்திருந்தன.

"இப்ப உன் சந்தேகம் தீர்ந்து போச்சா?"

"என்னது?" மீனா அவன் முகத்தை தன் புறம் திருப்பிக்கொண்டே கேட்டாள்.

"நான் உன்னை உண்மையா காதலிக்கறனா... இல்லையான்னு?"

"உன்னை நான் சந்தேகப்படறேனா? சரியான மக்குடா நீ? என்னை நீ இன்னும் சரியா புரிஞ்சுகல்லே நீ.."

"என்னடீ சொல்றே..?"

"போக போகத் தெரியும்... இந்தப் பூவின் வாசம் புரியும்" அவள் கள்ளக்குரலில் அழகாகப் பாடினாள். சீனுவாசனின் கழுத்தை வளைத்து தன்னிடம் இழுத்தாள்.

"என்னை விட்டா உன்னை வேற எவ இந்த ஜென்மத்துல காதலிக்கப் போறா?" சுற்றுமுற்றும் பார்த்த மீனா, சட்டென தன் இதழ்களை அவன் கன்னத்தில் "ப்ச்ச்ச்சென" அழுத்திப் பதித்தாள்...

"ம்ம்ம்." சீனு முனகினான். அவன் விரல்கள் அவள் கை விரல்களை நெறித்தன.

"ஐ லவ் யூ ஸோ மச் சீனு" மீனா மெல்ல அவன் காதில் கூவினாள்.

மீனாவின் இதழ்கள் மெதுவாக மீண்டும் ஒரு முறை சீனுவின் கன்னத்தில் உருண்டு புரண்டன. அவள் உதடுகளின் மெலிதான ஈரத்தை அவன் தன் கன்னத்தில் உணர்ந்தான். அவள் ஈர இதழ்கள் சற்றே பிரிந்து, அவளின் வெண்மையான சிறிய முன் பற்கள் அவன் கன்னத்தை மெல்லக் கடித்தன. அவள் அவனை கடித்தப்போது, அவளின் இதழ்கள் சீனுவின் கன்னத்தில் எழுதிய ஈரக்கவிதையில், சீனுவின் உடல் சிலிர்க்க, அவன் பிடி அவள் உடலில் அதிகமாக, மீனா தன் முகத்தை விலக்கிகொண்டு அவனிடமிருந்து நகர்ந்து உட்க்கார்ந்தாள்.

"அவ்வளவுதானா..." சீனுவின் கை, மீனாவின் தோளிலிருந்து இடுப்புக்கு வந்தது. அவன் விரல்கள் அவள் ரவிக்கையின் கீழ், மடிப்புக்களே இல்லாத, வழவழவென இருந்த வெண்மையான இடுப்பை மென்மையாக வருட ஆரம்பித்தன.

"சீனு... நான் உன்னை எவ்வளவு டீப்பா லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதுடா.." மீனாவின் குரல் தழுதழுத்தது. தன் இடுப்பில், இடுப்பின் கீழ் வயிற்றில், தொப்புளைச் சுற்றி, சீனுவின் கைவிரல்களின் அலைச்சலால், அவள் உடலில் மெல்ல மெல்ல சிலிர்ப்பு ஏறிக்கொண்டிருந்தது.

"எனக்குத் தெரியும்டீ செல்லம்..." சீனுவின் கண்கள் பளபளத்தன.

"ஹூக்க்கும்.. உனக்கு என்னத் தெரியும்...?" உணர்ச்சிப் பெருக்கைத் தாங்கமுடியாமல் கிசுகிசுத்தாள் மீனாட்சி.

"நீ சொக்கத்தங்கம்ன்னு எனக்குத் தெரியும்..." சீனுவின் கண்கள் சூன்யத்தில் நிலைத்திருந்தது.

மீனாவின் விழிகளும், சீனுவின் முகத்தில் ஆர்வத்துடன் படிந்தது. அவன் விழிகளிலிருந்த பளபளப்பின் காரணம் அவளுக்குப் புரியாமலில்லை. அவளுடைய உடலும், உள்ளமும், உதடுகளும், தன் காதலனின் சூடான முத்தத்துக்காக வெகு நேரமாகத் துடித்துக் கொண்டிருந்தன.

சீனுவுக்கும், மீனாவுக்கும் இடையில் இருந்த இலேசான மனஇறுக்கம் குறைந்தவுடன் அவள் முகம் தெளிவடைந்திருந்தது. மீண்டும் அவள் சிரிக்க சிரிக்க பேச ஆரம்பித்தாள்.

"சீனு... உன்னோட முத்த செஷன் முடிஞ்சுப்போச்சாடா?" ஏக்கத்துடன் தன் உதடுகள் துடிக்கக் கேட்டாள், மீனா.

சீனு, தன் நண்பன் செல்வா சொன்ன, அதுவரை கடைபிடித்துக்கொண்டிருந்த தன் பொறுமையை முற்றிலுமாக இழந்தான். மீனாவை முரட்டுத்தனமாக தன் மார்போடு சேர்த்து அணைத்தான். மரத்தில் படரும் அவரைக்கொடியாக மீனாட்சி, சீனுவாசனின் மார்பில் படர்ந்தாள். அவள் கைகள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டன. விம்மிய மார்புகள், சீனுவின் பரந்த மார்பில் அழுந்தியது.

"சீனு... என் புடவை கசங்குதுடா... நேரமாவுது... உங்க வீட்டுக்கு வேற போவணும்.." மீனா பொய்யாக முனகினாள். அவள் முகத்தில் பாசங்கு விளையாடிக்கொண்டிருந்தது.

"பொம்பளை புடவை கட்டறதே... ஆம்பிளை மார்ல கசங்கத்தான்டீ செல்லம்..." சீனு முரடனாக மாறிக்கொண்டிருந்தான்.

மீனாவை வெறியுடன், இருக்கும் இடத்தை மறந்து வலுவாக அணைத்த சீனு, அவள் முகத்தை திருப்பி, அவள் கன்னங்களில் மாறி மாறி மனதில் இருக்கும் ஆசை தீர முத்தமிட்டான். மீனாவின் மனம் உவகையில் துள்ளியது. அவன் கைகளின் வலுவையும், மார்பின் திண்மையையும், உதடுகளின் வெறி கொண்ட வேட்க்கையையும், அவள் குறையில்லாமல் விழிகள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

மீனாவின் சிறிய மார்புகள், உடலில் வேகமாக ஓடிய ரத்த ஓட்டத்தில், மெல்ல அளவில் வளர ஆரம்பித்தன. அந்த இளம் கன்னிப்பெண்ணின் சுவாசம் மெல்ல மெல்ல வலுத்தது. தன் மூச்சில் வெப்பம் ஏற ஏற, அவள் ரவிக்கையினுள், மார்புகளுக்கிடையில் மெல்ல வியர்த்தாள். தன் பேண்டிக்குள், தன் தொடை இடுக்கில் ஏற்பட்ட மெல்லிய ஈரக்கசிவை முதன் முறையாக உணர்ந்தாள்..

இது வரை மீனா, இந்த அனுபவத்தை, தன் அந்தரங்கத்திலிருந்து சுரக்கும், நீர் சுரப்பை, அந்த சுரப்பின் சுகத்தை அனுபவித்தது இல்லை. அவள் உடல் மெல்ல காற்றிலாடும் கொடியாக நடுங்கியது.

"போதும்... விடுடா... சீனு... எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா... மயக்கம் வர்ற மாதிரி இருக்குடா... விட்டுடா ப்ளீஸ்" அவன் அணைப்பில் மீனா முரண்டினாள், முனகினாள்.

"ஐ லவ் யூ மீனா..." சீனு உரக்கக் கூவினான்.

பக்கத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு ஜோடி திரும்பி அவர்களைப் பார்த்தது. மீனாவால், அவர்களின் குறும்புப்பார்வையைத் தாளமுடியாமல், தன் முகத்தை சீனுவின் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் தவிப்பைக் கண்ட அந்த அனுபவசாலி ஜோடி, தங்கள் உதடுகளில் பூத்த புன்னகையுடன், சீனுவைப் பார்த்து தங்கள் கண்களை சிமிட்டியது. மெல்ல தன் வழியில் நடந்து போனது.

"இதுக்கே இப்படி நடுங்கறே? இன்னும் நிறைய மேட்டர் இருக்கே?" தன் கண்களில் காதலுடன் அவளைப் பார்த்த சீனு ஆசையுடன் சிரித்தான். நடுங்கிய உடலுடன், மீனா சீனுவின் கன்னத்தை அழுத்திக் கிள்ளினாள். சீனுவுடன் இன்னும் நெருங்கி அமர்ந்தாள். சீனுவின் முகத்தை தன் புறம் திருப்பினாள்.

மீனா தன் உதடுகளை குவித்து அவனை கண்களால் அழைத்தாள். தன் அன்புக்குரியவளின் மனசின் சிலிர்ப்பும், உடலின் நடுக்கமும் சீனுவுக்கு புரியாமலில்லை. சட்டென செல்வாவின் முகம் அவன் கண்களுக்கு முன் வந்தது. அவன் சொன்ன 'பொறுமை' என்ற சொல்லின் அர்த்தம் மனதில் அடிக்க, மீனாவின் உடலின் மீதிருந்த சீனுவின் பிடி தளர்ந்தது.

"மீனா... எழுந்திரு... உனக்காக என் வீட்டுல எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க..." சீனு எழுந்தான்.

"ஹூகூம்..." மீனா சிணுங்கியவாறு அவனைத் தன்னுடன் சேர்த்து இழுத்தாள்.

"என்னடீ வேணும் உனக்கு?"

"என் உதட்டுல ஒரே ஒரு முத்தம் வேணும்..." மீனாவின் விழிகளில் ஆசை ஒளியிட்டிருந்தது. சீனுவின் சதைப்பிடிப்பான உதடுகளை கடிக்கும் ஆசை உள்ளத்தில் பெருகி எழுந்தது.

"இன்னைக்கு நான் உன் உதட்டுல முத்தம் குடுக்கமாட்டேன்..." சீனு உறுதியுடன் பேசினான். அவள் இடுப்பில் தன் கையை செலுத்தி அவளை எழுப்பினான்.

"ஏன்... சீனு... என் மேல கோவமா?" மீனாவின் முகம் சட்டெனத் தொங்கிப்போனது.

"உன் மேல கோவமா... நிச்சயமா இல்லம்மா... ஐ லவ் யூ வெரி மச்... இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... உனக்கு விருப்பமில்லாத ஒரு காரியத்தை நான் பண்ணிட்டு வந்திருக்கேன்... எனக்காக நீ உன் மனசுக்கு பிடிக்காம எதையும் செய்ய வேண்டாம்..."

"அப்போ நீ சிகரெட்டை என்னைக்கு விடுவே? என் உதட்டுல நீ எப்ப முத்தம் குடுப்பே?" அவள் குரலில் ஒரு சலிப்பும், எதிர்பார்ப்பும் ஒருங்கே எழுந்தன.

"மீனா... அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லே..! இப்போதைக்கு நான் இதை மட்டும்தான் என்னால சொல்ல முடியும்..." நின்றிருந்த சீனு குனிந்தான். மீனாவின் இரு கன்னங்களிலும் மீண்டும் ஒரு முறை தன் முரட்டு இதழ்களைப் பதித்தான். இதழ்களைப் பதித்தவன் மெல்லக் கடித்தான்.

மனசுக்குள் ஒருவரை ஒருவர் மேலும் மேலும் நெருங்குவதை நினைத்து, அந்த நினைப்பு தரும் சுகத்தை மனதுக்குள் அசைபோட்டுக்கொண்டு, ஒருவர் இடுப்பில் இன்னொருவர் கை தவழந்திருக்க அவர்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள்.




No comments:

Post a Comment