Thursday 12 March 2015

சுகன்யா... 46

"நீ பொணமா ஏன் போவனும்? உன் புள்ளை கூட இன்னும் நூறு வருஷம், அவன் பண்ற அநியாயம் எல்லாத்துக்கும் ஆமாம் போட்டுக்கிட்டு... நல்லபடியா இருன்னு சொல்றேன்."

"உங்களுக்கு இப்ப என்ன வேணும்?" ராணி உக்கிரமானள். தனக்கு தன் கணவன் கொடுத்த வாக்கை மீறிவிட்டதை எண்ணி மனதுக்குள் எரிமலையாய் வெடித்தாள்.

"என்னை நிம்மதியா இருக்க விடுங்கன்னு சொல்றேன். அதனாலத்தான் உன் புள்ளைகிட்டச் சொன்னேன்; ரெண்டு பேருமா எங்கேயாவது போய் தொலையுங்கன்னு.." நல்லசிவத்தின் வாயில் அன்று நல்லதாக எதுவும் வரவில்லை. சிவன் அவர் வாயில் தப்புத்தப்பாகத் தாண்டவமாடிக்கொண்டிருந்தான்.

"நீங்க கருவண்டாட்டாம் இருந்துக்கிட்டு, அழகா செவப்பா, அம்சமா, பொண்டாட்டி வேணும்ன்னு ஆசைப்பட்டீங்களே இளமையிலே? அந்தப் பொண்டாட்டி நான் உங்களுக்கு இப்ப கசந்துப் போயிட்டேனா?"

"ஆமாண்டி... ஆசைப்பட்டுத்தான் மோசம் போனேன்..?"



"நீங்க என்னா மோசம் போயீட்டீங்க என்னைக் கட்டிக்கிட்டு...? அந்தக் கதையை அப்பறமா ஆற அமரப் பேசலாம்!"

"ம்ம்ம்ம்... வேற வேலை இல்லே எனக்கு? உன் கிட்ட ஆற அமர உன் கதையை உக்காந்து பேசணுமா?" அவரும் சளைக்கவில்லை. மெல்ல உட்க்கார்ந்திருந்த சேரை விட்டு எழுந்தார்.

"இப்ப என் புள்ளைக் கதையை முதல்ல பேசியே ஆகணும்... அவனை வீட்டைவிட்டு போன்னு ஏன் சொல்றீங்க... என்னையும் எதுக்காக வீட்டை விட்டு வெளியேப் போன்னு சொல்றீங்க?"

தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு... இனி ஜான் போனா என்ன? முழம் போனா என்ன என்ற முடிவுக்கு வந்த ராணி அவரிடம் ஜிம்ப ஆரம்பித்தாள். பெற்ற மகனைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, தன் வீயூகத்தை சற்றே மாற்றி அவரை மடக்க முயற்சி செய்ய ஆரம்பித்தாள்.

"என்னாடி பேசணும் அந்த தறுதலையைப் பத்தி இப்ப?"

"என் புள்ளைக்கு, அழகா, செவப்பா, அம்சமா, ஒரு பொண்ணு மனைவியா வரணும்ன்னு, அவனைப் பெத்தவ நான் ஆசைப்படக்கூடாதா? இல்லே என் புள்ளைதான் ஆசைப்படக்கூடாதா?"

"நிறுத்துடி... உங்க ரெண்டு பேரு கதையுமே எனக்கு வேண்டாங்கிறேன்." நல்லசிவம் அவளை முறைத்தார். தன் துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டவர், காலில் காதறுந்துப் போயிருந்த செருப்பை அணிந்தார்.

"எங்க போறீங்க இப்ப...நீங்க?"

ராணி தன் இருகைகளையும் நீட்டி அவரை வழி மறித்தாள்.. ஆவேசத்தில் அவள் முந்தானை தோளிலிருந்து சரிந்து தரையில் விழுந்து கிடந்தது. அவளுடைய வளப்பமான பருத்த மார்புகள், அவள் விட்ட வேகமான மூச்சுக்கு ஏற்றவாறு ஏறியிறங்கியது. ராணி தன் புடவையைத் தன் தொப்புளை மறைத்தும், மறைக்காமலும், இடுப்பில் கட்டியிருந்தாள். அவள் நாபியின் ஆழமும், நாபிக்குழியைச் சுற்றியிருந்த மெல்லிய கருத்த முடிவரிசையும், பளிச்சிட்ட அவள் இடுப்பின் வெண்மையும், மெல்லிய புடவைக்குள் அசையும், வலுவான துடைகளும், நல்லசிவத்தின் நாடியை, நரம்புகளை மொத்தமாக சிலிர்க்கவைத்தது.

"நீங்க ரெண்டு பேரும்தான் போகமாட்டீங்க...என்னையாவது போகவிடுங்கடீ...?

நல்லசிவத்தின் குரலில் ஒரு உறுதியும், வெறுப்பும் தெரிந்தது. அவர் தன் மனைவியின், இன்னும் கட்டுக்குலையாத, விம்மி விம்மித் தணியும் மார்பழகைப் பார்க்கமுடியாமல், அலையும் தன் மனதை ஓரிடத்தில் நிறுத்தமுடியாமல், தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

"என் புள்ளை கல்யாணத்தை நடத்திட்டு... உங்களுக்குப் பாக்கியா இருக்கற இந்த கடைசி கடமையையும் முடிச்சுட்டு, எங்க வேணா நீங்க போங்க... அதுக்கப்புறம் நீங்கப் போறதைப் பத்தி எனக்கு கவலையில்லே... ஆனா இப்ப நீங்க பாதி ஆட்டத்துல வெளியே போறதை நான் அனுமதிக்கமாட்டேன்." ராணி ஒரு பெண் நாகமாக அவர் முன்னால் நின்று படமெடுத்தாள். படமெடுத்து கொத்திவிடுவது போல் தன் தலையை ஆட்டினாள்.

நாகம் படமெடுக்கும் போது பாக்கறதுக்கு அழகாத்தான் இருக்கு... அதுக்காக எவ்வளவு நாளைக்குத்தான் இவளோட இந்த உடம்பு அழகுல நான் கட்டுப்பட்டு நிக்கறது... காமம்... காமம்...காமம்.... விசுவாமித்திரன் மொதல்கொண்டு இந்த நல்லசிவம் வரைக்கும் இந்த பெண் உடம்பின் மேல இருக்கற, ஆசையிலிருந்து, மோகத்துல இருந்து, விடுபட முடியாம தவிக்கிறாங்களே? இதுக்கு ஒரு விடிவே இல்லையா? இதுதான் ஆண்களோட தலையெழுத்தா? கையேந்தி நிக்கற பிச்சைக்காரன் மாதிரி இவ முன்னாடி, இதுக்காக அப்பப்ப ராத்திரி நேரத்துல நிக்க வேண்டியதா இருக்குது. அதுக்காக இவ போடற விதிகளுக்கு உட்பட்டு நிக்க வேண்டியதா இருக்குது?

ஆண்டவா! என் பார்வையில ஒரு தெளிவைக் கொடேன்! பெண்ணாசையை மனசுக்குள்ளிருந்து ஒழிக்கணுங்கற ஒரே எண்ணத்தையும், வலுவையும் கொடேன்...! என் மனதில் இருக்கும் பெண் மோகத்தை வேரோடு சுட்டுப் பொசுக்கி, சாம்பலாக்கும் வைராக்கியத்தைக் கொடேன்? நல்லசிவத்தின் மனது வெகுவாக அரற்றியது. ஓலமிட்டது. இவ தன் உடம்பை காமிச்சே என்னை கட்டிபோட்டு வெச்சிருக்காளே? எப்பவும் கட்டி போட்டுடறாளே? எனக்கு என்னைக்கு இதுலேருந்து விமோசனம்? அவர் சுவாசம் வேகமாகவும் வெப்பமாகவும் வந்தது. மூச்சின் வெப்பத்தால் தன் நெஞ்சு வெடித்துவிடுமோ என அவர் தன் மனதுக்குள் பயந்தார்.

என் மூச்சு இப்பவே, இந்த நொடியே நின்னாலும் பரவாயில்லையே? விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடன்னு போயிடுவேனே? ஆனா இந்த பொம்பளையோட உடம்பு மேல இருக்கற ஆசையும், சதை வெறியும், காமவேட்க்கையும் என்னைவிட்டுப் போகலையே? அறுபது வயசுல இந்த வேட்க்கை போகலன்னா, எப்ப அது என்னை விட்டுப் போகும்? உடல் ஓய்ந்தாலும், மனம் ஓயவில்லையே? ஒரு பெண்ணின் உடலுக்குள் இத்தனை வசீகரமா? அந்த வசீகரத்தில், ஆண் என்றுமே தன் அகம் அழிந்து நிற்க வேண்டியதுதானா? அவர் வெட்கத்தில் தன் தலை குனிந்து நின்றார்.

நல்லசிவம், தன் காலில் அணிந்த செருப்பை கழட்டி வேகமாக மூலையில் உதறினார். உதறித் தோளில் போட்டத் துண்டை வேகமாக மீண்டும் உதறி, வெரண்டாவில் கிடந்த மர ஈஸிச்சேரில் விரித்துப் போட்டு, சப்பனமிட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார். கண்களுக்குள் ராணியின் செழிப்பான சிவந்த மேனி வந்து நின்றது.

நல்லசிவம் ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்ட இள வயது ராணியின் உடல் மெல்ல மெல்ல வளர்ந்து விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது... நீளமான கைகள், கொழுத்துக் குலுங்கும் மார்புகள், சிறுத்த இடை, அகலமான பிருஷ்டங்கள், பருத்த இடுப்பிலிருந்து இறங்கும் நீளமான, அடிவாழைத் தொடைகள், வலுவான கெண்டைக்கால் சதைகள், கருத்த முடியின் நடுவில் அழகான, சுகமான பாம்பின் படத்தையொத்த அல்குல், அன்னைக்குப் பாத்தத்துக்கு இன்னைக்கும் ஒரு மாத்து கொறையாம இருக்காளே? அம்மா... இது என்ன வேதனை எனக்கு? திருப்பியும் இந்த முறையும் ராணிதான் ஜெயிச்சிட்டாளா? இவளை உதறித் தள்ளிட்டு ஓடணும்ன்னு பாக்கிறேன், முடியலியே?

ராணி ஜெயிச்சிட்டதா நான் ஏன் நெனைக்கணும்? இவளைப் பாத்து நான் ஏன் இந்த வயசுல வீட்டை விட்டு ஓட நினைக்கிறேன். வீட்டை விட்டு போனா என் புள்ளை பண்ற தப்புகள் என் கண்ணுல படமா இருக்கலாம்? அவனைப் பத்தி மத்தவங்க தப்பா பேசறது காதுல விழமா இருக்கலாம். ஆனா என் மனசுக்குள்ள இருக்கற காமம் என்னை விட்டு போயிடுமா? பெண்ணுடம்பு மோகத்தை மனதிலிருந்து தானே ஒழிக்கவேண்டும். மனசால நான் இவகிட்டேயிருந்து விலகாமல், உடலால் விலகி என்னப் பலன்?

இயல்பா இருடா நல்லசிவம்.. உன் இயல்பு என்ன? அதிகமாக பேசாமல் இருத்தல். உன் பிள்ளைக்கும் பொறுப்பு வரும். அதுவரைக்கும் நீ பொறுமையா இரேன். அவனை ஏன் நீ குறை சொல்லிக்கிட்டே இருக்கே? இருக்கப் போற கொஞ்ச நாளைக்கு மவுனமா இருந்துட்டுப் போயேன்?

உன்னை வேண்டாம்ன்னு சொன்ன ராணியை நீதான் விரும்பி அவதான் வேணும்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டே? மனைவியா ஏத்துக்கிட்டவளை, இந்த வயசுல என்னைக்கோ அவ பண்ணத் தப்பை மனசுக்குள்ள நெனைச்சு, விமர்சனம் பண்ணது சரியா? உன் பார்வையில் அது தப்பு? ராணி தன் பார்வையில அதை தப்புன்னு இதுவரைக்கும் ஒத்துக்கலையே? அவளை இந்த வயசுல உன் வயசுக்கு வந்த புள்ளை எதிர்ல விமர்சனம் செய்தது உன் தப்புத்தானே?

உன் வாழ்க்கையில, உன் இளமையிலேயே ஒரு ஆறுமாசம், ஒரே வீட்டுல நீ இவ கூடவே இருந்துக்கிட்டு, ஓரளவுக்கு மனசாலேயும், சுத்தமா உடம்பாலேயும், ஆறு மாசம், ராணியை விட்டு நீ பிரிஞ்சுத்தானே இருந்தே? உன் மனசாலே இவகிட்டேயிருந்து மீண்டும் உன்னால ஒதுங்க முடியாதா? மனசால் ஒதுங்கினால்... உடல் ஒதுங்கத்தானே போகுது? நல்லசிவத்தின் மனம் யோசித்து யோசித்து ஒருவாறு தன் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

"நல்லசிவத்தின் முன் ராணி மூச்சிறைத்துக்கொண்டு நின்றிருந்தாள். தரையில் கிடந்த தன் முந்தானையால் தன் வியர்த்த முகத்தையும், கழுத்தையும் துடைத்துக்கொண்டாள். முந்தானையை ஒழுங்காக போடாமல், கோபத்தில் ஏனோதானோவென மார்பின் மேல், புடவையை வீசியவள், கண்ணை மூடி அமர்ந்திருந்த நல்லசிவத்தின் முகத்தை ஒரு வினாடி உற்று நோக்கினாள். அவள் மனதிலும் விஷம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. 

முப்பத்தஞ்சு வருஷமா, உன் நாடியைப் புடிச்சுப்பாக்கற எங்கிட்டவே உன் ஆட்டத்தை காமிக்கிறியா? உன் நாடி எப்ப வேகமாத் துடிக்கும்ன்னு எனக்குத் தெரியாதா? என்னை அடிச்சி வீட்டை விட்டுத் தொரத்தணுங்கற எண்ணத்தை இவ்வளவு நாளா உன் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டுத்தான்... என் கூட பொய்யா உறவாடிக்கிட்டு இருக்கியா? உன்னை என்னமோ ஒரு பெரிய தியாகின்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்? 

பாம்பேயிலதான் சர்வீஸ் பண்ணும் போது சின்ன வீடு; பையனுக்கு ஒரு ரூமைக் குடுத்துட்டு, எப்பவும் நாம ஒரே ரூமுக்குள்ள அடைஞ்சு கிடந்தோம். இங்க கிராமத்துல பெரிய வீடு; எனக்கு தனி ரூம் வேணும்ன்னு சொன்னே? என்னமோ தனியா இருந்து, பொம்பளை ஆசையை கட்டுப்படுத்தப் போறேன்னு சொன்னே? உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? தெரிஞ்சாலும், சரி ஆசைப்படி இருந்துக்கோன்னு சொன்னேன்! ஆனா உன்னாலத் தனியா, முழுசா ஒரு வாரம் உனக்குன்னு இருக்கற ரூமுல படுக்க முடியலை. 

அறுபது வயசு முடிஞ்சும், இன்னும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம், ராத்திரிலே, அரை இருட்டுல, வெக்கம் கெட்டுப்போய் என் ரூமுக்கு வந்து, என் பக்கத்துலப் படுத்துக்கிட்டு, ராணீ... ராணீன்னு என்னை முழுசா தடவிப் பாக்கறே? என்னைத் தடவியாவது விடுடீங்கறே? என்னாச்சு...? எங்கப் போச்சு உன் வைராக்கிய சாதனையெல்லாம்...? எனக்கு இன்னைக்கு வேணாம்ன்னா அப்படி மூஞ்சை சுளிச்சுக்கறே? 

ராத்திரியில உனக்கு ஒரு வேஷம்? பகல்லே ஊருக்குன்னு ஒரு வேஷம் வெச்சிருக்கே! ராத்திரியில என் ரூம்ல உனக்கு ஒரு வேஷம்? ஹால்லே உன் புள்ளை எதிர்ல ஒரு வேஷமா? எத்தனை வேஷம் போட்டாலும், கடைசியா நீ இந்த வயசுல பொம்பளை உடம்புக்கு நாயா பேயா அலையலாம். ஆனா உன் புள்ளை ஆசையா, அழகா இருக்கற பொண்ணுங்க கூட பழகக்கூடாதா?

தன் பிள்ளைப் பாசத்தில், தன் கணவன், தன் உடல் அவஸ்தையில், தன் உடலின் அரிப்பை, தனக்கு உரிமையுள்ள, தன் மனைவியிடம்தானே தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் என்ற விஷயத்தை ராணி துரதிருஷ்டவசமாக அன்று மறந்தாள். தன் மகனை ஒரு பெண் மறுத்துவிட்டாள் என்ற கோபத்தில், தன் மகனின் கட்டுப்பாடற்ற இருபத்தைந்தின் இளமை அலைச்சலையும், அந்த இளமையின் பழிவாங்கும் பரபரப்பையும், அறுபதின் தேக அவஸ்தையையும் ஒன்றாக, சமமாக அவள் பார்த்தாள். 

என்னை வீட்டை விட்டுத் துரத்திடுவியா நீ? அப்புறம் ராத்திரியில நீ எப்படித் தனியாத் தூங்குவே? என் உடம்பு கதகதப்பு இல்லாம உன்னாலத் தூங்க முடியுமா? நல்லசிவம்ன்னு பேரு வெச்சுக்கிட்டா மட்டும் போதுமாய்யா? நீ நிஜமாவே சுத்த சிவமாயிடுவியா? உன் மனசுக்குள்ள எத்தனை சிவம்யா நீ? என் உடம்புக்காகத்தான் நீ என்னை இந்த வீட்டுக்குள்ள இவ்வளவு நாளா சோறு போட்டு, துணி குடுத்து வெச்சிருக்கியா? எனக்காக இல்லையா? 

இன்னொருதரம் என்னை இருட்டுல தேடுவே பாரு; அப்ப உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்தறேன். வெக்கறேன்.. உன் வெள்ளை வேஷ்ட்டி.. வெள்ளைத்துண்டு வேஷத்துக்கு ஒரு வேட்டு? என்ன போலியான ஒரு வாழ்க்கையை ரெண்டு பேரும் இந்த வீட்டுக்குள்ள் வாழ்ந்துகிட்டு இருக்கோம்...? நீ சொல்றதும் சரிதான் நான் எதுக்காக இன்னும் உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்? உனக்கு என்னை, என் மனசை, என் மனசின் மூலையில் இருக்கும் அழியாத ஒரு சின்ன ஆசையோடு, என்ன முழுசா ஏத்துக்கப் பிடிக்கலை. ஆனா என் உடம்பு மட்டும் உனக்கு முழுசா வேணும்? அவள் மனதுக்குள் குமைந்தாள். புகைந்தாள். எரிந்தாள். 

"அம்மா... இது என்னம்மா புதுக்கதை? உங்க ரெண்டு பேரோட லைப் ஸ்டோரியில, ஒரு தனி ட்ராக் எனக்குத் தெரியாம ஓடிகிட்டு இருக்கே? இட் சீம்ஸ் டு பி வெரி இன்ட்ரஸ்டிங்...!! ஹாலில் சோஃபாவில் படுத்திருந்த சம்பத், வேகமாக எழுந்து வெரண்டாவிற்கு வந்தான். 



"நீ பொத்திக்கிட்டு போடா உள்ளே... அந்தக் கதை எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல... எங்க கதையில நீ என்ட்ரி கொடுக்க வேண்டிய அவசியமில்லே...! உன்னை யாரும் இங்க தாம்பூலம் வெச்சு அழைக்கல" ராணி அவனை மூர்க்கத்துடன் இழுத்து ஹாலுக்குள் தள்ளினாள். தள்ளிய வேகத்தில் அவள் முந்தானை மீண்டும் அவள் தோளிலிருந்து நழுவியது. நெற்றி வியர்த்து, தன் புடவை முந்தானை தரையில் புரள, கோபத்தில் குங்குமமாய் சிவந்திருக்கும் தன் தாயின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அவள் எதிரில் நின்று பேச சம்பத்துக்கு அச்சமாக இருந்தது. இந்த கோலத்தில் தன் தாயை அவன் எப்போதும் பார்த்ததில்லை.

சம்பத் ஒரு நொடி அதிர்ந்தான். தன் தாயின் உடலில் இத்தனை பலமா? ஒரு கையால என்னைச் சுழற்றி எறிந்துவிட்டாளே? நிஜமாவே அம்மா வெறி பிடிச்ச மாதிரில்ல பேசறா? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நடுவுல அப்படி என்னப் பழங்கதை இருக்கு? அம்மா கோபப்பட்டுத்தான் நான் பாத்திருக்கேன். ஆனா இந்தமாதிரி ஒரு கோபத்தை நான் எப்பவும் பாத்தது இல்லையே? மெதுவாக நடந்து மீண்டும் வெராண்டாவிற்கு அவன் வந்தான். 

நம்ம அப்பா சாதுவான மனுஷன். என் மேல உயிரையே வெச்சிருக்கார். என்னை கோபத்துல அப்பப்ப ஏதோ பேசுவார்... ரெண்டு வார்த்தை திட்டுவார்... அரைமணி நேரத்துல பழையபடி நார்மலாயிடுவார். வீட்டை விட்டு வெளியில போடான்னுட்டாரே? அம்மாவையும் வீட்டை விட்டுப் போடீங்கறார்? என்னா ஆச்சு இவருக்கு? இன்னைக்கு சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கற மாதிரி அம்மாகிட்ட ஏன் நடந்துக்கறார்? நான் போறேன்னு, துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு கிளம்பிட்டாரே? 

நான் இன்னைக்கு கொஞ்சம் வழக்கத்தைவிட அதிகமாவே, இந்த வீடு என் தாத்தா சொத்து... பேரனுக்குத்தான் உரிமை, அது... இதுன்னு பேசி அவரை வெறுப்பேத்திட்டேனா? எப்பவும் பொறுமையா இருக்கற அப்பாவுக்கு தீடீர்ன்னு இன்னைக்கு என்ன ஆச்சு? 

இவங்க ரெண்டு பேருக்குள்ள, இந்த வயசுல, இப்ப என்ன தீவிரமான ஒரு புகைச்சல்? இவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டைப் போட்டு நான் பாத்தது இல்லையே? இதுல ஏதோ விஷயமிருக்கு?! இதுக்கு காரணம் யாரு? நானா? இல்லை வேற யாராவதா? பொறுத்துத்தான் பாக்கணும்.... கோபத்துடன் நிற்கும் தன் தாயையும், கண் மூடி உட்கார்ந்திருக்கும் தன் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான் அவன். 

"டேய் சொல்லேண்டா சிவதாணு வீட்டுல அப்படி என்னதான் நடந்தது?"

"நான் அவமானப்பட்ட கதையை நீ தெரிஞ்சிக்கிட்டே ஆவணுமா?" சம்பத்தின் குரலில் சிறிதே வன்மம் தொனித்தது.

"சம்பத்து... உனக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கு இல்லையாடா?" ராணி தன் மகனை சமாதானப்படுத்த முயன்றாள்.

"சுருக்கமா சொன்னா சுகன்யா ஒரு தரம் கூட என் மூஞ்சை ஏறெடுத்துப் பாக்கலைம்மா..."

"அப்படி எதுலடா நீ கொறைஞ்சுப் போயிட்டே அவளை விட?"

"இந்த ஒரு வார்த்தையை சொல்லி சொல்லித்தான் நீ என்னை ரொம்பவே ஏத்திவிட்டுட்டே.. உன்னாலத்தான் இன்னைக்கு நான் அந்த நாய் கிட்ட அவமானப்பட்டேன்..."

"என்னப்பா சொல்றே நீ?"

"அம்மா... சும்மா டயம் பாஸுக்கு பசங்களோட ஜாலியா சுத்தற பொண்ணுங்க, அவனுங்க ஃப்ர்சைத்தான் குறி வெப்பாளுங்க.."

"ம்ம்ம்..."

"அம்மா! சுகன்யாகிட்ட பணம் இருக்கு. அவ என் ட்ரஸ்க்கு மசியலை; என் படிப்புக்கு மசியலை; என் அந்தஸ்துக்கு மசியலை; என் கட்டான உடம்புக்கு மசியலை; இவ்வளவு ஏன்? நான் அவளுக்கு முறைப்பிள்ளைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், சொந்தத்துக்கும் மசியலே.. அவ எதுக்குமே மசியலை!"

"ம்ம்ம்..."

"நான் என் கையை நீட்டி ஹாய்ன்னு சொன்னேன்; சுகன்யா என் கையைக்கூட புடிச்சு குலுக்கலை; அசால்டா வணக்கம்ன்னு சொல்லி கையை கூப்பிட்டா. அப்படீன்னா என்ன அர்த்தம்?"

"நீயே சொல்லுடா"

"அவ செவப்பு; நான் கருப்புன்னு அவளுக்கு திமிர்; ஆணவம்; அகங்காரம்; வேறென்னா?"

"அடி செருப்பாலே!" ராணி மனதுக்குள் கொதித்தாள். சம்பத் தன் தாயின் காயத்தை, ஆறிய புண்ணை, அதன் தழும்பை சரியாக வருடி கிள்ளிவிட்டான்.

"இன்னைய தேதியில ஆணும், பெண்ணும் ஹாய்ன்னு சொல்லி, கையை குலுக்கறது ரொம்ப சாதாரண விஷயம்மா...."

"புரியுதுடா எனக்கு.."

"சுகன்யாவுக்கு என் கையை குலுக்க பிடிக்கலையா? ரொம்ப நார்மலான ஒரு காரியத்தை அவ செய்யாததால, என்னுடைய ஆர்வத்தை புரிஞ்சுக்காததாலே, அவ மகாத்திமிர் புடிச்சவன்னுதான் அந்த சமயத்துல எனக்குப் பட்டுது."

"ம்ம்ம்....சரிப்பா... அவ கைகுலுக்கலைன்னா என்ன? இதை நீ ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கறே?"

"எம்மா ... இந்த எண்ணம் சரியோ தப்போ இந்தப் மனப்போக்கை என்னால மாத்திக்கமுடியலை."

"இது தப்புடா சம்பத்து... எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லடா" ராணி தன்னால் முடிந்தவரை, தன் மகனை அவனுடைய வழக்கமான, இயல்பான மனநிலைமைக்கு கொண்டு வர முயன்றாள்.

"எம்ம்மா... நீ செவப்பா, அழகா இருக்கியே! என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்தே?" அவன் குரலில் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

"டேய் கண்ணு... ஒரு குழந்தையோட உடம்பு நெறத்தை ஒரு பொம்பளை மட்டும் முடிவு பண்ண முடியாதுடா... இவ்வளவு படிச்சிருக்கே! இதுகூடவா உனக்குப் புரியலை...?"

"அம்மா..." சம்பத்தின் கண்கள் இலேசாக கலங்கின..

"உன் உடம்பு நிறத்தையே ஏண்டா நினைச்சு நினைச்சு, எப்பவும் உனக்குள்ள கூனி குறுகிப் போறே?" ராணி தன் மகனின் முகத்தை தன் மார்போடு சேர்த்துக்கொண்டாள். அவன் தலையை மெல்ல வருடினாள்.



"அம்மா..."

"நீ படிக்கிற காலத்துலதான் கூடப் படிச்ச பசங்க அதைச்சொன்னாங்க; பொண்ணுங்க என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சாங்கன்னு அழுவே... இப்ப மன முதிர்ச்சியடைஞ்ச, கை நெறைய சம்பாதிக்கற, மெச்சூர்ட் யங் மேன் நீ... இன்னும் ஏண்டா உனக்கு இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை?"

"ம்மா... நீ அந்தக் காலத்துலேயே நெறைய படிச்சிருந்தே? ஓரளவுக்கு சொத்து சுகத்தோட இருந்த குடும்பத்துலத்தான் பொறந்தே? இப்பவும் உன் அம்பத்து நாலு வயசுலேயும் நீ மகாலட்சுமி மாதிரி அழகாத்தான் இருக்கே...! நீ ஏம்மா கருப்பா இருந்த என் அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே?"

"அடப் பாவி மவனே! ஒரு புள்ளை தன் பெத்தவகிட்ட கேக்கற கேள்வியாடா இது?" தன் மகனின் மன வருத்தத்தை புரிந்து கொண்ட ராணி, தன் மகனின் அர்த்தமில்லாத கேள்வியை கண்டு சம்பத்தின் மீது தன் மனதுக்குள் எரிச்சலுமுற்றாள்.


No comments:

Post a Comment