Wednesday 25 February 2015

சுகன்யா... 11


"எங்கடி போனான் உன் புள்ளை? ஆபீசுக்கு லீவைப் போட்டுட்டு நான் வீட்டுல மெனக்கெட்டு உக்காந்துகிட்டு இருக்கேன், நீ என்னமோ அவன் கிட்ட பேசி முடிவு எடுக்கணும்ன்னே?" நடராஜன் சலித்துக்கொண்டார். "அப்பா, செல்வா சுகன்யாவை பாக்கப் போயிருக்கான். இப்ப அவன் பீச்சுல அவ கிட்டத்தான் ஜொள்ளு விட்டுக்கிட்டு இருப்பான்; நீ சொன்னா அவனை நான் செல்லுல கூப்பிடறேன்" மீனா தன் அண்ணனை போட்டுக் குடுத்த குஷியில் சிரித்தாள். "நீ சும்மா கிடடி, வெட்டி பேச்சு பேசிகிட்டு" ஜானகியை எனக்கு புடிச்சிருக்குங்க, அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு, சொத்தோட வர்றா, கை நிறையவும் சம்பாதிக்கறா, மூக்கும் முழியுமா சிவப்பா, லட்சணமா இருக்கா; என்ன ... கொஞ்சம் குண்டாயிருக்கா, நல்லா பாலும் தயிருமா, வஞ்சனையில்லாமா சாப்பிட்டு வளந்து இருக்கா. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய்ட்டு வந்தா, வில்லு மாதிரி ஆயிடமாட்டாளா? இந்த காலத்துல பசங்களும் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குட்டிங்களா பாத்துதானே நூல் வுடறானுங்க, "நேத்து நாம பாத்தமே அந்த படத்துல அவ பேரு என்னாடி மீனா?" தன் பெண்ணைப் பார்த்தாள் மல்லிகா. "யாரு ஹன்ஷிகாவை சொல்றியாமா" மீனா புன்னகைத்தாள்.

"உனக்கு ஜானகியை புடிச்சி ஆவப் போறது என்னாடி? உன் புள்ளைக்கு பிடிக்கணுமே, அவன் தானே அவ கூட குப்பை கொட்டப் போறவன். ஆனாலும் அவ கொஞ்சமில்லடி, நிறையவே குண்டாயிருக்காடி, சொத்து இருந்தா போதுமாடி" நடராஜன் அலுத்துக்கொண்டார். "அம்மா, செல்வாவுக்கு ஜானகியை விட அந்த சுகன்யா நல்ல பொருத்தமா இருப்பாம்மா, அவளும் தான் சம்பாதிக்கறா, அவளும் ஒரே பொண்ணுதானே அவ வீட்டுல, நீ நினைக்கற மாதிரி அவளுக்குன்னு ஏதோ கொஞ்சம் சொத்து பத்து இல்லாமலா இருக்கும்? அப்படியே சொத்தே இல்லன்னாலும் என்னம்மா, அண்ணன் அவளை ஆசைப்படறான். உன் புள்ளை சந்தோஷம்தான் உனக்கு முக்கியம்ங்கறே; நீ இன்னும் அவளை பாக்கவே இல்லையே, அவளையும் ஒரு தரம் பாத்துட்டு முடிவு பண்ணும்மா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா? "மீனு, நீ அந்த பொண்ணை பாத்திருக்கியாம்மா?" நடராஜன் தன் புருவங்களை சுருக்கி தன் மகளை அன்புடன் பார்த்தார். நடராஜனுக்கும் ஜானகியை தன் பையனுக்கு கட்டிக்கொள்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. "அப்பா, செல்வா காலையில சுகன்யாவோட ஃபுல் சைஸ் ஃபோட்டோவை எனக்கு காட்டினாம்பா, சும்மா சொல்லக்கூடாது; அண்ணன் ஆளு சூப்பரா இருக்கா; நீ இப்ப பாக்கணும்ன்னா சொல்லு காட்டறேன்." "ஏய் மீனா, நீ பொத்திகிட்டு கிடடி, பெரியவங்க பேசறப்ப குறுக்க குறுக்க பூந்து ரவுசு பண்றே? நீ என்னா அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியறே? என் புள்ளைக்கு எவளைக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்." மல்லிகா பதறினாள். "எம்ம்மா, நீ உன் புள்ளை தலையில எவளை வேணா கட்டி வை; செல்வாவை நீ உன் அடிமையா ஆக்கி வெச்சிருக்க; இப்போதைக்கு அவன் உன் பேச்சைத் தட்டமாட்டான். ஆனா, எவ உனக்கு மருகளா வந்தாலும் அவ கையில நீ ஒரு பாடு படத்தான் போறே; எது எப்படியானாலும், என் கல்யாணத்தப்ப நீ குறுக்க பூந்து குட்டையை குழப்பக்கூடாது; எனக்கு புடிச்சவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்" அவள் டீபாயின் மேலிருந்த புத்தகத்தில் செருகியிருந்த சுகன்யாவின் படத்தை நடராஜனிடம் உருவிக் கொடுத்தாள். "இது என்னாடி அநியாயம் இந்த வூட்டுல, உங்கப்பா உனக்கு குடுக்கற செல்லத்துல, உன் வாய் இவ்வள நீளமா வளத்து வெச்சிருக்க ... குட்டி சுவரா போயிடுவே; நீயும் இப்பவே எவன் பின்னாலயாவது சுத்தறயா? நீ எழுந்து போடி உன் ரூமுக்கு; என்னாங்க நீங்க, அவ சொல்றதை கேட்டீங்களா, இவ பல்லு மேல பட்டுன்னு போடாம ... சும்மா வாயைப் பொளந்துகிட்டு அந்த போட்டோவை பாத்துகிட்டு இருக்கீங்க?" அவளைத் தவிர வீட்டிலிருக்கும் யாரும் ஜானகியின் பக்கம் சாயாதது கண்டு சற்றே அதிர்ச்சியடைந்த மல்லிகா முகம் சிவந்து கத்தினாள். "மல்லி, இது வரைக்கும் உன் புள்ள பண்ண காரியத்துலேயே, இந்த ஒரு காரியத்தைத்தான், அவன் ஒழுங்கா பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன். நீயும்தான் இந்த பொண்ணை ஒரு தரம் பாருடி, மாடர்னா ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு ட்ரெஸ் பண்ணியிருக்கா, ஆனா முகத்துல அமைதியா ஒரு ஹோம்லி லுக்கும் இருக்குடி. பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற மாதிரி இருக்காடி. இவளுக்கு அப்பன் இல்லன்னா என்னாடி; நமக்கு பொண்ணுதானேடி முக்கியம்" அவர் முகத்தில் திருப்தியின் கீற்று ஓடிக்கொண்டிருந்தது. "இந்த போட்டோவை எடுத்ததே செல்வாதானாம்பா, நல்லா பேக்ரவுண்ட் பாத்து எடுத்திருக்கான்ல்ல. படத்துல ஒரு நல்ல டெப்த் இருக்கு" தன் தாயின் முகத்தைப் பார்க்காமல், மீனா தலையை குனிந்து கொண்டு தன் செல்லில் செல்வாவை கூப்பிட்டாள். "சொல்லுடி, நான் தான் பேசறேன்", செல்வா எரிந்து விழுந்தான். "அப்பா உன்னை கூப்பிடாறார், வீட்டுல உன் விஷயமா ஒரே ரகளை நடக்குது, ஏண்டா உன் பக்கத்துல சுகன்யாவும் இருக்காளா, போனை அவகிட்ட குடுடா ஒரு ஹாய் சொல்றேன்?" "என் பக்கத்துல எவளும் இல்ல, வீட்டுக்கு வெளியிலதான் பைக்கை பார்க் பண்ணிகிட்டிருக்கேன்; உள்ளே வரேன்" களையிழந்து, கருத்த முகத்துடன், உர்றென்று வீட்டுக்குள் நுழைந்தான் செல்வா. "டேய் செல்வா, இந்த வீட்டுல நீங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டா சதி பண்ணிகிட்டு இருக்கீங்களா? என்னை என்னா கேனச்சின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா நீ? ராத்திரி நீ என்னடா சொன்னே எங்கிட்ட; அந்த ஜானகியை ஒரு தரம் இன்னைக்குப் தனியா பாத்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னியா இல்லியா? காலங்காத்தால அந்த ஊர் பேர் தெரியாத மேனா மிணுக்கியோட போட்டோவை மீனாகிட்ட குடுத்து நேரம் பாத்து உங்கப்பா கிட்ட காட்ட சொன்னியா, மீனாவை தூண்டிவிட்டுட்டு நீ போய் அவ பின்னால சுத்திகிட்டு இருக்கியா? அவ போட்டோவை பாத்துட்டு இவளும் உங்கப்பாரும் வாயெல்லாம் பல்லா பூரிச்சுப் போறாங்க? இங்க என்னடா நடக்குது?" செல்வா ஹாலில் நுழைந்தவுடன் மல்லிகா கூவத்தொடங்கினாள். "எம்மா எனக்கு கல்யாணமும் வேணாம் ஒரு எழவும் வேணாம். நான் உன்னை கேட்டனா, எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யுன்னு? என் உயிரை ஏன் எடுக்கறே நீ? என்னை நிம்மதியா இருக்கவிடு கொஞ்ச நாளைக்கு. இன்னொரு தரம் என் கல்யாணத்தைப் பத்தி பேசி பாரு, நான் இந்த வீட்டு உள்ளவே கால் வெக்க மாட்டேன்" செல்வாவும் கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமல் கத்தினான். சுகன்யா சற்று முன் அவனை பிடித்து உலுக்கிய உலுக்கலாலும், உலுக்கியப்பின் உன் உறவே எனக்கு வேண்டாம் என நிர்த்தாட்சண்யாமக அவனை உதறித் தள்ளிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் திரும்பி போனதாலும், போனவளின் மேல் எழுந்த மொத்த கோபத்தையும் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் அம்மாவின் மேல் திருப்பினான் செல்வா. "டேய் உங்க எல்லாருக்கும், ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டின்னு, இந்த வீட்டுல நான் ஒருத்திதான் கிடைச்சனா? அந்த எடுபட்ட சிறுக்கி உனக்கு ஏதாவது வேப்பிலை கீப்பலை அடிச்சு அனுப்பினாளா? இங்க வந்து எங்கிட்ட குதிக்கறே?" "அம்மா நான் தான் சொல்றனே, எல்லாம் உன்னால வந்த வினைன்னு; நீ சொன்னேன்னு சுகன்யா கிட்ட அவங்க அப்பாவை பத்தி நான் கேக்க, என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, எங்கப்பன் யாருன்னு கேட்டுட்டா காதலிச்சே? எங்கப்பனை பத்தி பேசினா, நீயும் வேணாம், உன் கூட எனக்கு கல்யாணமும் வேணாம்ன்னு, மூஞ்சியில அடிக்காத குறையா புடவையை தட்டிகிட்டு எழுந்து போயிட்டா; அவ எழுந்து போனதும் எனக்கு மனசே வெறிச்சுன்னு ஆயிப்போச்சும்மா; நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன். அவளை சிறுக்கி கிறுக்கின்னு தப்பா பேசாதம்மா, அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா" அவன் தலை நிமிராமல் பேசினான். நடராஜன் அவன் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். என்ன சொல்றான் இவன். என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள? "அவளே உன்னை உதறிட்டு போயிட்டாளா? நல்லாதா போச்சு, விட்டுது சனியன்னு, தலையை முழுவிட்டு போ. அடுத்த முகூர்த்தத்துல ராணி மாதிரி இருக்கற அந்த மகராசி ஜானகியை உனக்கு கட்டி வெக்கிறேன்." மல்லிகா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். "அப்படில்லாம் என்னால சுகன்யாவை சட்டுன்னு கை கழுவி விட்டுடமுடியாதும்மா. அம்மா, அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும், அவ அப்பனால வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு போயிருக்காங்கம்மா. சுகன்யாவோட அம்மா ரொம்ப நொந்து போயிருக்காங்களாம். வாழ்ந்து கெட்ட குடும்பம்மா அவங்க குடும்பம். சுகன்யா கதையை மொத்தமா நீ கேட்டின்னா, அவ மேல உனக்கு இருக்கற கோபம் போய், நீயே அய்யோன்னு அவளைப் பாத்து பரிதாப படுவே; சுகன்யா ரொம்ப நல்லவம்மா. அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் வாக்கு குடுத்து இருக்கம்மா; நான் அவ மேல உயிரையே வெச்சிருக்கம்மா. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா." விட்டால் அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. "என்னடா, மந்திரம் சொல்லி கண்ணுல மை வுட்டுட்டாளா உனக்கு அவ? "செய் வினை" ஏதாவது வெச்சுட்டாளா? நல்லா தானடா காலையில எழுந்து போனே? நல்ல குடும்பத்து பையன், பாக்க வாட்ட சாட்டமா இருக்கான், செலவு கிலவு இல்லாம ஃப்ரியா கிடைப்பானான்னு, பொண்ணுங்க உன்னைப்பாத்து சிரிக்கத்தாண்டா செய்வாளுங்க; ஆஃபீசுல உக்காரும் போது எழுந்திருக்கும் போது லேசா உரசித்தான் பாப்பாளுங்க. ஒரு லிப்ட் குடுன்னு உன் பைக்ல ஏறி உன் முதுகுல மார் உரச உக்காருவாளுங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது? "நேத்து வந்தவ உன் மேல உசுரையே வெச்சிருக்காளா? உன்னை பெத்து வளத்து, இத்தனை வருஷமா, வெளியில போனவன் நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு, வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேண்டா நான்; நான் தாண்டா பைத்தியக்காரி; அவ ரொம்ப ரொம்ப நல்லவன்னு அந்த வடிவேலு மாதிரி எங்கிட்ட கதை சொல்றே! அவ உனக்கு நல்லவ, நான் கெட்டவளா போயிட்டனா உனக்கு? எல்லாம் என்னால வந்த வினையா? நீ ஏண்டா பேச மாட்டே? அவதான் உங்கிட்ட தன் குடும்ப கதையை சொல்லி அனுப்பியிருக்காளே?" "என்னமோ ஊரிலேயே இல்லாத ஒருத்தியை கண்டுட்ட மாதிரி நீயும் ஆடி நிக்கறே? அவ என்னா தங்கத்துல அடிச்சு வெச்சிருக்காளா "அவளுதை" எல்லாருக்கும் "கருப்பு கலர் தோல் தாண்டா அங்க". ஒருத்திக்கு கருப்பா இருக்கும், இல்ல கொஞ்சம் கரும்சிவப்பா இருக்கும்; முழுசா அவுத்து கிவுத்து காட்டிட்டாளா உனக்கு? நீயும் அவளே எல்லாம்ன்னு மயங்கிப் போய் கிடக்கிற?" "எல்லாம் என் தலை எழுத்துடா? உன் ஜட்டியை உனக்கு இன்னும் சரியா தோச்சுக்கத் தெரியல; தினமும் உன் கரையான லுங்கியை நான் தோச்சுப் போடறேன். எத்தனை நாளைக்குடா நான் தோச்சிப்போடுவேன் உனக்கு? இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு எங்கிட்ட வந்து குதிக்கறான்? புள்ளைக்கு சுதந்திரம் குடுத்து வளக்கறாரம்! எல்லாம் குத்துக்கல்லாட்டம் உக்காந்து இருக்கற இந்த புத்திசாலி மனுசனால வந்ததுதான் இந்த வினை." "நீ ஏண்டா எதுவும் பேச மாட்டேங்கிறே". மல்லிகா தன் மூச்சிறைக்கப் பேசியவள், தன் தலை முடியை உதறி முடிந்து கொண்டு எழுந்தவள், செல்வாவின் தலை முடியை பிடித்து உலுக்கினாள் "கொஞ்சம் சும்மா இருடி மல்லிகா; சின்னப்பசங்க முன்னாடி என்ன பேசறது, ஏது பேசறதுன்னு இல்ல உனக்கு? கன்னா பின்னான்னு வெக்கமில்லாம பேசறீயே? இப்ப நீ ஏண்டி தடால்ன்னு என் தலையை போட்டு உருட்டறே? அந்த பொண்ணு போட்டோல அழகா இருக்கான்னு சொன்னேன். உண்மையைத்தாண்டி சொல்றேன். அந்த கோவத்தை என் மேல காட்டறீயே? அழகா ஒருத்தி மருமவளா வந்தா உனக்கு பெருமை இல்லையா? நாளைக்கு நம்ம பேரன் பேத்திங்க அழகா பொறக்கும்ல்ல" நடராஜன் லேசாக சிரித்து அங்கு நிலவும் இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த முனைந்தார். "டேய் செல்வா, உண்மையைச் சொல்லு, நீ ஒண்ணும் அந்தப் பொண்ணை தொட்டு கிட்டுப் பாத்துடலையே?" நடராஜன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார். மீனாவும் அவன் சொல்லப் போகும் பதிலை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து, தன் ஓரக்கண்ணால் செல்வாவை நோக்கினாள். "....." "என்னடா உன் வாயில கொழுக்கட்டையா இருக்கு, சொல்லித் தொலையேண்டா ... அடியே மீனா நீ ஏண்டி இங்கேயே உக்காந்த்துகிட்டு எங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கே, எங்கயாவது எழுந்து போய் தொலையேன்?" மல்லிகா தன் மகளை முறைத்தாள். "இல்ல.. இல்ல... அவளும் இங்க இருக்கட்டும்; அவளை எதுக்கு நீ இப்ப தொரத்துற; அவளுக்கும் இருபது வயசு முடிஞ்சு போச்சு; இந்த குடும்பத்தோட மான அவமானத்துல அவளுக்கும் பங்கு இருக்குது; அவ ஒண்ணும் நீ நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல; இவன் லட்சணத்தை அவளும் தெரிஞ்சுக்கட்டும். "சொல்லுடா" நடராஜன் தன் குரலை உயர்த்தினார். "அப்பா, நீங்க நெனக்கற மாதிரி பெரிய தப்பெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ணிடல; ஆனா ஒருத்தரை ஒருத்தர் தொட்டு ... கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்து இருக்கோம்" செல்வா அரையும் குறையுமாக புளுகினான். "நல்லா கேட்டுக்கடி; உன் புள்ள லட்சணத்தை; இவன் பீச்சுல ஒரு வயசு பொண்ணை கட்டி புடிச்சி முத்தம் குடுத்து இருக்கான். அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவ கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கான். இந்த காலத்து பசங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, நீயும் உன் ஃப்ரெண்டு சாவித்திரிக்கு வாக்கு குடுத்துட்டேன்னு, அவ பொண்ணு ஜானகியை இவனுக்கு சம்பந்தம் பேசற; நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்?" "அந்த பொண்ணு ஜானகியையாவது அவ விருப்பம் என்னான்னு கேட்டீங்களாடீ? நம்ம வீட்டுலயும் ஒரு வயசு பொண்ணை வெச்சிருக்கோம். ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு, இன்னொரு பொண்ணு சாபத்தை நீங்க ரெண்டு பேரும் வாங்கி கட்டிக்காதீங்கடி; சாவித்திரிக்குத்தான் இது புரியலன்னா, உனக்கும்மா இது புரியலடி?" குடும்பத்தலைவன் என்கிற ஹோதாவில் நடராஜன் தன் பங்குக்கு மையமாக கூவினார். "டேய் செல்வா, அந்த பொண்ணு சுகன்யா உன்னை உதறிட்டு போனான்னு சொன்னே; உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. எப்பவும் நீ மோர் கொழம்புல போட்ட வெண்டைக்காய் மாதிரி தான் கொழ கொழன்னுதான் பேசுவே? உனக்குன்னு எதுலயும் ஒரு தீர்க்கமான பார்வையும் கிடையாது. எந்த விஷயத்துலயும் நீ ஒரு திடமான முடிவை எடுத்து இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. நாளு நாள் போவட்டும்; அந்த பொண்ணு சுகன்யா கோபம் கொஞ்சம் தணியட்டும்; அப்புறமா அவளை போய் சமாதானம் பண்ணுடா; அவளைத் தொட்டு பழகிட்டேன்னு வேற சொல்றே; இது தான் எனக்கு தெரிஞ்ச நியாயம். அந்த பொண்ணு சுகன்யா வீட்டுலேருந்து யாரும் என் வீட்டுக்குள்ள வந்து கூச்சல் போடக்கூடாது. நான் மானஸ்தன், அப்புறம் இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது. இப்பவே சொல்லிட்டேன்." "அடியே மீனா நீ எழுந்து போய் உன் வேலையை பாருடி; அவன் பாடாச்சு; அவன் அம்மா பாடாச்சு; இதெல்லாம் நம்ம வேலைக்கு ஆவாது. ஒரு நாள் லீவு எனக்கு வேஸ்ட்," நடராஜன் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெராண்டவை நோக்கி சென்றார். "செல்வா, நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க, இன்னைக்கு எனக்காக, உன் அம்மாவுக்காக, நீ ஒரு தரம் அந்த ஜானகியை, அவங்க வீட்டுக்குப் போய் பாத்து பேசிட்டுத்தான் வரணும். அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா, உன் இஷ்டப்படி நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க; நான் உன் வழியில குறுக்க வரமாட்டேன்." மல்லிகா செல்வாவை கெஞ்சினாள். "சரிம்மா நீ சாவித்திரிகிட்ட என்னை அனுப்பறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் திருப்திக்காக நான் ஜானகியைப் பாத்து பேசிட்டு வரேன்; ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல, நீ ஏன் சுகன்யாவை பாக்காமலேயே, அவளைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்காம ஏன் அவளை வேண்டாங்கறே?" "செல்வா, உங்கப்பா சொல்ற மாதிரி அந்த சுகன்யா அழகா இருக்கலாம். அவ அழகுல இப்ப நீயும் மயங்கிப் போய் இருக்கலாம். ஒரு கல்யாணத்துக்கு, பொண்ணோட அழகு மட்டும் போதாதுடா. பொண்ணோட குடும்பம் என்னா? அவங்க அந்தஸ்து என்னா? அவங்க உறவு முறை என்னா? இதெல்லாமும் பாக்கணும்டா. பொம்பளை அழகெல்லாம், ஒரு புள்ளையை பெத்துக்கற வரைக்கும் தாண்டா? அதுக்கப்புறம் அவ திமித்துக்கிட்டு நிக்கற அவ மார் சதை தொங்கிப்போச்சுன்னா, பொம்பளை அழகுல பாதி போச்சுடா. பொம்பளை சும்மா தூக்கி கட்டிக்கிட்டு ஊரை வேணா ஏமாத்தலாம். அவளை அவளே எத்தனை நாள் ஏமாத்திக்க முடியும்?" "எல்லா பொம்பளையும் ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம், இடுப்புல சதை விழுந்து, உரல் மாதிரி தாண்டா ஆகிப்போவாளுங்க. அவ அடிவயித்துல வரி வரியா சுருக்கமும் கோடும் விழுந்ததுக்கு அப்புறம், அவ தொப்புளுக்கு மேலத்தாண்டா புடவையை ஏத்தி கட்டணும். கொஞ்ச நாள்ல அவ உடம்பும், அவ அந்தரங்கமும் தளந்து போயிடும்டா; தொடையும் புட்டமும் பெருத்து, ஒன்னோட ஒன்னு உரசி, அடித்தொடை கருப்பாயி அவளைப் பாக்க சகிக்காதுடா, அவ அந்தரங்கம் தளந்து போனா அவ பெருங்காயம் இருந்த டப்பா மாதிரிதாண்டா; இதுல சுகன்யா என்ன? ஜானகி என்ன? நாம வெச்சுக்கற பேருதான் வேற வேற." "லட்டு உருண்டையா, மஞ்சளா, பளபளன்னு இருக்கும். லட்டை கொஞ்சம் கடிச்சு தின்ணனும். உனக்கு பிடிச்ச மைசூர்ப்பாக்கு, நீள சதுரமா மிருதுவா இருக்கும், இதன் நெறமே வேற; வாய்ல போட்டா மணல் மாதிரி கரையும். உங்கப்பாவுக்கு பிடிச்ச அதிரசம் கருப்பா இருக்கும், இதை புட்டு வாயில போட்டு மெதுவா அசை போட்டு திங்கனும். அப்பத்தான் அது ருசியா இருக்கும். இந்த பண்டங்கள் எல்லாத்தையும் வாயில போட்டு மென்னு தின்னா ருசி என்னமோ ஒண்ணுதான். எல்லாமே தித்திப்புத்தான். அது மாதிரி பொம்பளை கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, குண்டோ, உயரமோ, குள்ளமோ, அவ உனக்கு குடுக்கப்போற உடம்பு சுகம் ஒண்ணுதாண்டா." "இப்ப ஆசையும், மோகமும், உன் கண்ணை மறைக்கும். மனசுல இருக்கற ஆசை உன் புத்தியை கெடுக்கும். நாப்பது வயசுல உனக்கும் நாய் குணம் வரும். "இந்த சுகன்யா, இந்த வீட்டுக்கு வரும் போது என்னத்தை கொண்டாந்தா, நமக்குன்னு பொண்டாட்டி தரப்புலேருந்து நாலு பேரு இல்லையே", அப்படிங்கற எண்ணம் உனக்கு வரும். "அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?" "சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்." ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா. "யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?" "சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?" அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள். "உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம். "எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான். "எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?" "அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா." அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது. "அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?" மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர். "அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா." வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது. "அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?" மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள். "இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார். "நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்." நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார். "கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் ... ஜாக்கிரதை." "அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு" மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான். "இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே ... அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள். "சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா ... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க ... அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்" மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு" செல்வா தன் மனம் தளர்ந்து போனான். சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா. ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா அவ ரூமுக்கு ஒழுங்கா போய் சேர்ந்திருப்பாளா ??? "எங்கடி போனான் உன் புள்ளை? ஆபீசுக்கு லீவைப் போட்டுட்டு நான் வீட்டுல மெனக்கெட்டு உக்காந்துகிட்டு இருக்கேன், நீ என்னமோ அவன் கிட்ட பேசி முடிவு எடுக்கணும்ன்னே?" நடராஜன் சலித்துக்கொண்டார்.

"அப்பா, செல்வா சுகன்யாவை பாக்கப் போயிருக்கான். இப்ப அவன் பீச்சுல அவ கிட்டத்தான் ஜொள்ளு விட்டுக்கிட்டு இருப்பான்; நீ சொன்னா அவனை நான் செல்லுல கூப்பிடறேன்" மீனா தன் அண்ணனை போட்டுக் குடுத்த குஷியில் சிரித்தாள். "நீ சும்மா கிடடி, வெட்டி பேச்சு பேசிகிட்டு" ஜானகியை எனக்கு புடிச்சிருக்குங்க, அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு, சொத்தோட வர்றா, கை நிறையவும் சம்பாதிக்கறா, மூக்கும் முழியுமா சிவப்பா, லட்சணமா இருக்கா; என்ன ... கொஞ்சம் குண்டாயிருக்கா, நல்லா பாலும் தயிருமா, வஞ்சனையில்லாமா சாப்பிட்டு வளந்து இருக்கா. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய்ட்டு வந்தா, வில்லு மாதிரி ஆயிடமாட்டாளா? இந்த காலத்துல பசங்களும் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குட்டிங்களா பாத்துதானே நூல் வுடறானுங்க, "நேத்து நாம பாத்தமே அந்த படத்துல அவ பேரு என்னாடி மீனா?" தன் பெண்ணைப் பார்த்தாள் மல்லிகா. "யாரு ஹன்ஷிகாவை சொல்றியாமா" மீனா புன்னகைத்தாள். "உனக்கு ஜானகியை புடிச்சி ஆவப் போறது என்னாடி? உன் புள்ளைக்கு பிடிக்கணுமே, அவன் தானே அவ கூட குப்பை கொட்டப் போறவன். ஆனாலும் அவ கொஞ்சமில்லடி, நிறையவே குண்டாயிருக்காடி, சொத்து இருந்தா போதுமாடி" நடராஜன் அலுத்துக்கொண்டார். "அம்மா, செல்வாவுக்கு ஜானகியை விட அந்த சுகன்யா நல்ல பொருத்தமா இருப்பாம்மா, அவளும் தான் சம்பாதிக்கறா, அவளும் ஒரே பொண்ணுதானே அவ வீட்டுல, நீ நினைக்கற மாதிரி அவளுக்குன்னு ஏதோ கொஞ்சம் சொத்து பத்து இல்லாமலா இருக்கும்? அப்படியே சொத்தே இல்லன்னாலும் என்னம்மா, அண்ணன் அவளை ஆசைப்படறான். உன் புள்ளை சந்தோஷம்தான் உனக்கு முக்கியம்ங்கறே; நீ இன்னும் அவளை பாக்கவே இல்லையே, அவளையும் ஒரு தரம் பாத்துட்டு முடிவு பண்ணும்மா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா? "மீனு, நீ அந்த பொண்ணை பாத்திருக்கியாம்மா?" நடராஜன் தன் புருவங்களை சுருக்கி தன் மகளை அன்புடன் பார்த்தார். நடராஜனுக்கும் ஜானகியை தன் பையனுக்கு கட்டிக்கொள்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. "அப்பா, செல்வா காலையில சுகன்யாவோட ஃபுல் சைஸ் ஃபோட்டோவை எனக்கு காட்டினாம்பா, சும்மா சொல்லக்கூடாது; அண்ணன் ஆளு சூப்பரா இருக்கா; நீ இப்ப பாக்கணும்ன்னா சொல்லு காட்டறேன்." "ஏய் மீனா, நீ பொத்திகிட்டு கிடடி, பெரியவங்க பேசறப்ப குறுக்க குறுக்க பூந்து ரவுசு பண்றே? நீ என்னா அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியறே? என் புள்ளைக்கு எவளைக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்." மல்லிகா பதறினாள். "எம்ம்மா, நீ உன் புள்ளை தலையில எவளை வேணா கட்டி வை; செல்வாவை நீ உன் அடிமையா ஆக்கி வெச்சிருக்க; இப்போதைக்கு அவன் உன் பேச்சைத் தட்டமாட்டான். ஆனா, எவ உனக்கு மருகளா வந்தாலும் அவ கையில நீ ஒரு பாடு படத்தான் போறே; எது எப்படியானாலும், என் கல்யாணத்தப்ப நீ குறுக்க பூந்து குட்டையை குழப்பக்கூடாது; எனக்கு புடிச்சவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்" அவள் டீபாயின் மேலிருந்த புத்தகத்தில் செருகியிருந்த சுகன்யாவின் படத்தை நடராஜனிடம் உருவிக் கொடுத்தாள். "இது என்னாடி அநியாயம் இந்த வூட்டுல, உங்கப்பா உனக்கு குடுக்கற செல்லத்துல, உன் வாய் இவ்வள நீளமா வளத்து வெச்சிருக்க ... குட்டி சுவரா போயிடுவே; நீயும் இப்பவே எவன் பின்னாலயாவது சுத்தறயா? நீ எழுந்து போடி உன் ரூமுக்கு; என்னாங்க நீங்க, அவ சொல்றதை கேட்டீங்களா, இவ பல்லு மேல பட்டுன்னு போடாம ... சும்மா வாயைப் பொளந்துகிட்டு அந்த போட்டோவை பாத்துகிட்டு இருக்கீங்க?" அவளைத் தவிர வீட்டிலிருக்கும் யாரும் ஜானகியின் பக்கம் சாயாதது கண்டு சற்றே அதிர்ச்சியடைந்த மல்லிகா முகம் சிவந்து கத்தினாள். "மல்லி, இது வரைக்கும் உன் புள்ள பண்ண காரியத்துலேயே, இந்த ஒரு காரியத்தைத்தான், அவன் ஒழுங்கா பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன். நீயும்தான் இந்த பொண்ணை ஒரு தரம் பாருடி, மாடர்னா ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு ட்ரெஸ் பண்ணியிருக்கா, ஆனா முகத்துல அமைதியா ஒரு ஹோம்லி லுக்கும் இருக்குடி. பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற மாதிரி இருக்காடி. இவளுக்கு அப்பன் இல்லன்னா என்னாடி; நமக்கு பொண்ணுதானேடி முக்கியம்" அவர் முகத்தில் திருப்தியின் கீற்று ஓடிக்கொண்டிருந்தது. "இந்த போட்டோவை எடுத்ததே செல்வாதானாம்பா, நல்லா பேக்ரவுண்ட் பாத்து எடுத்திருக்கான்ல்ல. படத்துல ஒரு நல்ல டெப்த் இருக்கு" தன் தாயின் முகத்தைப் பார்க்காமல், மீனா தலையை குனிந்து கொண்டு தன் செல்லில் செல்வாவை கூப்பிட்டாள். "சொல்லுடி, நான் தான் பேசறேன்", செல்வா எரிந்து விழுந்தான். "அப்பா உன்னை கூப்பிடாறார், வீட்டுல உன் விஷயமா ஒரே ரகளை நடக்குது, ஏண்டா உன் பக்கத்துல சுகன்யாவும் இருக்காளா, போனை அவகிட்ட குடுடா ஒரு ஹாய் சொல்றேன்?" "என் பக்கத்துல எவளும் இல்ல, வீட்டுக்கு வெளியிலதான் பைக்கை பார்க் பண்ணிகிட்டிருக்கேன்; உள்ளே வரேன்" களையிழந்து, கருத்த முகத்துடன், உர்றென்று வீட்டுக்குள் நுழைந்தான் செல்வா. "டேய் செல்வா, இந்த வீட்டுல நீங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டா சதி பண்ணிகிட்டு இருக்கீங்களா? என்னை என்னா கேனச்சின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா நீ? ராத்திரி நீ என்னடா சொன்னே எங்கிட்ட; அந்த ஜானகியை ஒரு தரம் இன்னைக்குப் தனியா பாத்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னியா இல்லியா? காலங்காத்தால அந்த ஊர் பேர் தெரியாத மேனா மிணுக்கியோட போட்டோவை மீனாகிட்ட குடுத்து நேரம் பாத்து உங்கப்பா கிட்ட காட்ட சொன்னியா, மீனாவை தூண்டிவிட்டுட்டு நீ போய் அவ பின்னால சுத்திகிட்டு இருக்கியா? அவ போட்டோவை பாத்துட்டு இவளும் உங்கப்பாரும் வாயெல்லாம் பல்லா பூரிச்சுப் போறாங்க? இங்க என்னடா நடக்குது?" செல்வா ஹாலில் நுழைந்தவுடன் மல்லிகா கூவத்தொடங்கினாள். "எம்மா எனக்கு கல்யாணமும் வேணாம் ஒரு எழவும் வேணாம். நான் உன்னை கேட்டனா, எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யுன்னு? என் உயிரை ஏன் எடுக்கறே நீ? என்னை நிம்மதியா இருக்கவிடு கொஞ்ச நாளைக்கு. இன்னொரு தரம் என் கல்யாணத்தைப் பத்தி பேசி பாரு, நான் இந்த வீட்டு உள்ளவே கால் வெக்க மாட்டேன்" செல்வாவும் கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமல் கத்தினான். சுகன்யா சற்று முன் அவனை பிடித்து உலுக்கிய உலுக்கலாலும், உலுக்கியப்பின் உன் உறவே எனக்கு வேண்டாம் என நிர்த்தாட்சண்யாமக அவனை உதறித் தள்ளிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் திரும்பி போனதாலும், போனவளின் மேல் எழுந்த மொத்த கோபத்தையும் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் அம்மாவின் மேல் திருப்பினான் செல்வா. "டேய் உங்க எல்லாருக்கும், ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டின்னு, இந்த வீட்டுல நான் ஒருத்திதான் கிடைச்சனா? அந்த எடுபட்ட சிறுக்கி உனக்கு ஏதாவது வேப்பிலை கீப்பலை அடிச்சு அனுப்பினாளா? இங்க வந்து எங்கிட்ட குதிக்கறே?" "அம்மா நான் தான் சொல்றனே, எல்லாம் உன்னால வந்த வினைன்னு; நீ சொன்னேன்னு சுகன்யா கிட்ட அவங்க அப்பாவை பத்தி நான் கேக்க, என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, எங்கப்பன் யாருன்னு கேட்டுட்டா காதலிச்சே? எங்கப்பனை பத்தி பேசினா, நீயும் வேணாம், உன் கூட எனக்கு கல்யாணமும் வேணாம்ன்னு, மூஞ்சியில அடிக்காத குறையா புடவையை தட்டிகிட்டு எழுந்து போயிட்டா; அவ எழுந்து போனதும் எனக்கு மனசே வெறிச்சுன்னு ஆயிப்போச்சும்மா; நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன். அவளை சிறுக்கி கிறுக்கின்னு தப்பா பேசாதம்மா, அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா" அவன் தலை நிமிராமல் பேசினான். நடராஜன் அவன் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். என்ன சொல்றான் இவன். என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள? "அவளே உன்னை உதறிட்டு போயிட்டாளா? நல்லாதா போச்சு, விட்டுது சனியன்னு, தலையை முழுவிட்டு போ. அடுத்த முகூர்த்தத்துல ராணி மாதிரி இருக்கற அந்த மகராசி ஜானகியை உனக்கு கட்டி வெக்கிறேன்." மல்லிகா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். "அப்படில்லாம் என்னால சுகன்யாவை சட்டுன்னு கை கழுவி விட்டுடமுடியாதும்மா. அம்மா, அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும், அவ அப்பனால வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு போயிருக்காங்கம்மா. சுகன்யாவோட அம்மா ரொம்ப நொந்து போயிருக்காங்களாம். வாழ்ந்து கெட்ட குடும்பம்மா அவங்க குடும்பம். சுகன்யா கதையை மொத்தமா நீ கேட்டின்னா, அவ மேல உனக்கு இருக்கற கோபம் போய், நீயே அய்யோன்னு அவளைப் பாத்து பரிதாப படுவே; சுகன்யா ரொம்ப நல்லவம்மா. அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் வாக்கு குடுத்து இருக்கம்மா; நான் அவ மேல உயிரையே வெச்சிருக்கம்மா. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா." விட்டால் அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. "என்னடா, மந்திரம் சொல்லி கண்ணுல மை வுட்டுட்டாளா உனக்கு அவ? "செய் வினை" ஏதாவது வெச்சுட்டாளா? நல்லா தானடா காலையில எழுந்து போனே? நல்ல குடும்பத்து பையன், பாக்க வாட்ட சாட்டமா இருக்கான், செலவு கிலவு இல்லாம ஃப்ரியா கிடைப்பானான்னு, பொண்ணுங்க உன்னைப்பாத்து சிரிக்கத்தாண்டா செய்வாளுங்க; ஆஃபீசுல உக்காரும் போது எழுந்திருக்கும் போது லேசா உரசித்தான் பாப்பாளுங்க. ஒரு லிப்ட் குடுன்னு உன் பைக்ல ஏறி உன் முதுகுல மார் உரச உக்காருவாளுங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது? "நேத்து வந்தவ உன் மேல உசுரையே வெச்சிருக்காளா? உன்னை பெத்து வளத்து, இத்தனை வருஷமா, வெளியில போனவன் நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு, வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேண்டா நான்; நான் தாண்டா பைத்தியக்காரி; அவ ரொம்ப ரொம்ப நல்லவன்னு அந்த வடிவேலு மாதிரி எங்கிட்ட கதை சொல்றே! அவ உனக்கு நல்லவ, நான் கெட்டவளா போயிட்டனா உனக்கு? எல்லாம் என்னால வந்த வினையா? நீ ஏண்டா பேச மாட்டே? அவதான் உங்கிட்ட தன் குடும்ப கதையை சொல்லி அனுப்பியிருக்காளே?" "என்னமோ ஊரிலேயே இல்லாத ஒருத்தியை கண்டுட்ட மாதிரி நீயும் ஆடி நிக்கறே? அவ என்னா தங்கத்துல அடிச்சு வெச்சிருக்காளா "அவளுதை" எல்லாருக்கும் "கருப்பு கலர் தோல் தாண்டா அங்க". ஒருத்திக்கு கருப்பா இருக்கும், இல்ல கொஞ்சம் கரும்சிவப்பா இருக்கும்; முழுசா அவுத்து கிவுத்து காட்டிட்டாளா உனக்கு? நீயும் அவளே எல்லாம்ன்னு மயங்கிப் போய் கிடக்கிற?" "எல்லாம் என் தலை எழுத்துடா? உன் ஜட்டியை உனக்கு இன்னும் சரியா தோச்சுக்கத் தெரியல; தினமும் உன் கரையான லுங்கியை நான் தோச்சுப் போடறேன். எத்தனை நாளைக்குடா நான் தோச்சிப்போடுவேன் உனக்கு? இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு எங்கிட்ட வந்து குதிக்கறான்? புள்ளைக்கு சுதந்திரம் குடுத்து வளக்கறாரம்! எல்லாம் குத்துக்கல்லாட்டம் உக்காந்து இருக்கற இந்த புத்திசாலி மனுசனால வந்ததுதான் இந்த வினை." "நீ ஏண்டா எதுவும் பேச மாட்டேங்கிறே". மல்லிகா தன் மூச்சிறைக்கப் பேசியவள், தன் தலை முடியை உதறி முடிந்து கொண்டு எழுந்தவள், செல்வாவின் தலை முடியை பிடித்து உலுக்கினாள் "கொஞ்சம் சும்மா இருடி மல்லிகா; சின்னப்பசங்க முன்னாடி என்ன பேசறது, ஏது பேசறதுன்னு இல்ல உனக்கு? கன்னா பின்னான்னு வெக்கமில்லாம பேசறீயே? இப்ப நீ ஏண்டி தடால்ன்னு என் தலையை போட்டு உருட்டறே? அந்த பொண்ணு போட்டோல அழகா இருக்கான்னு சொன்னேன். உண்மையைத்தாண்டி சொல்றேன். அந்த கோவத்தை என் மேல காட்டறீயே? அழகா ஒருத்தி மருமவளா வந்தா உனக்கு பெருமை இல்லையா? நாளைக்கு நம்ம பேரன் பேத்திங்க அழகா பொறக்கும்ல்ல" நடராஜன் லேசாக சிரித்து அங்கு நிலவும் இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த முனைந்தார். "டேய் செல்வா, உண்மையைச் சொல்லு, நீ ஒண்ணும் அந்தப் பொண்ணை தொட்டு கிட்டுப் பாத்துடலையே?" நடராஜன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார். மீனாவும் அவன் சொல்லப் போகும் பதிலை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து, தன் ஓரக்கண்ணால் செல்வாவை நோக்கினாள். "....." "என்னடா உன் வாயில கொழுக்கட்டையா இருக்கு, சொல்லித் தொலையேண்டா ... அடியே மீனா நீ ஏண்டி இங்கேயே உக்காந்த்துகிட்டு எங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கே, எங்கயாவது எழுந்து போய் தொலையேன்?" மல்லிகா தன் மகளை முறைத்தாள். "இல்ல.. இல்ல... அவளும் இங்க இருக்கட்டும்; அவளை எதுக்கு நீ இப்ப தொரத்துற; அவளுக்கும் இருபது வயசு முடிஞ்சு போச்சு; இந்த குடும்பத்தோட மான அவமானத்துல அவளுக்கும் பங்கு இருக்குது; அவ ஒண்ணும் நீ நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல; இவன் லட்சணத்தை அவளும் தெரிஞ்சுக்கட்டும். "சொல்லுடா" நடராஜன் தன் குரலை உயர்த்தினார். "அப்பா, நீங்க நெனக்கற மாதிரி பெரிய தப்பெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ணிடல; ஆனா ஒருத்தரை ஒருத்தர் தொட்டு ... கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்து இருக்கோம்" செல்வா அரையும் குறையுமாக புளுகினான். "நல்லா கேட்டுக்கடி; உன் புள்ள லட்சணத்தை; இவன் பீச்சுல ஒரு வயசு பொண்ணை கட்டி புடிச்சி முத்தம் குடுத்து இருக்கான். அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவ கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கான். இந்த காலத்து பசங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, நீயும் உன் ஃப்ரெண்டு சாவித்திரிக்கு வாக்கு குடுத்துட்டேன்னு, அவ பொண்ணு ஜானகியை இவனுக்கு சம்பந்தம் பேசற; நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்?" "அந்த பொண்ணு ஜானகியையாவது அவ விருப்பம் என்னான்னு கேட்டீங்களாடீ? நம்ம வீட்டுலயும் ஒரு வயசு பொண்ணை வெச்சிருக்கோம். ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு, இன்னொரு பொண்ணு சாபத்தை நீங்க ரெண்டு பேரும் வாங்கி கட்டிக்காதீங்கடி; சாவித்திரிக்குத்தான் இது புரியலன்னா, உனக்கும்மா இது புரியலடி?" குடும்பத்தலைவன் என்கிற ஹோதாவில் நடராஜன் தன் பங்குக்கு மையமாக கூவினார். "டேய் செல்வா, அந்த பொண்ணு சுகன்யா உன்னை உதறிட்டு போனான்னு சொன்னே; உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. எப்பவும் நீ மோர் கொழம்புல போட்ட வெண்டைக்காய் மாதிரி தான் கொழ கொழன்னுதான் பேசுவே? உனக்குன்னு எதுலயும் ஒரு தீர்க்கமான பார்வையும் கிடையாது. எந்த விஷயத்துலயும் நீ ஒரு திடமான முடிவை எடுத்து இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. நாளு நாள் போவட்டும்; அந்த பொண்ணு சுகன்யா கோபம் கொஞ்சம் தணியட்டும்; அப்புறமா அவளை போய் சமாதானம் பண்ணுடா; அவளைத் தொட்டு பழகிட்டேன்னு வேற சொல்றே; இது தான் எனக்கு தெரிஞ்ச நியாயம். அந்த பொண்ணு சுகன்யா வீட்டுலேருந்து யாரும் என் வீட்டுக்குள்ள வந்து கூச்சல் போடக்கூடாது. நான் மானஸ்தன், அப்புறம் இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது. இப்பவே சொல்லிட்டேன்." "அடியே மீனா நீ எழுந்து போய் உன் வேலையை பாருடி; அவன் பாடாச்சு; அவன் அம்மா பாடாச்சு; இதெல்லாம் நம்ம வேலைக்கு ஆவாது. ஒரு நாள் லீவு எனக்கு வேஸ்ட்," நடராஜன் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெராண்டவை நோக்கி சென்றார். "செல்வா, நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க, இன்னைக்கு எனக்காக, உன் அம்மாவுக்காக, நீ ஒரு தரம் அந்த ஜானகியை, அவங்க வீட்டுக்குப் போய் பாத்து பேசிட்டுத்தான் வரணும். அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா, உன் இஷ்டப்படி நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க; நான் உன் வழியில குறுக்க வரமாட்டேன்." மல்லிகா செல்வாவை கெஞ்சினாள். "சரிம்மா நீ சாவித்திரிகிட்ட என்னை அனுப்பறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் திருப்திக்காக நான் ஜானகியைப் பாத்து பேசிட்டு வரேன்; ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல, நீ ஏன் சுகன்யாவை பாக்காமலேயே, அவளைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்காம ஏன் அவளை வேண்டாங்கறே?" "செல்வா, உங்கப்பா சொல்ற மாதிரி அந்த சுகன்யா அழகா இருக்கலாம். அவ அழகுல இப்ப நீயும் மயங்கிப் போய் இருக்கலாம். ஒரு கல்யாணத்துக்கு, பொண்ணோட அழகு மட்டும் போதாதுடா. பொண்ணோட குடும்பம் என்னா? அவங்க அந்தஸ்து என்னா? அவங்க உறவு முறை என்னா? இதெல்லாமும் பாக்கணும்டா. பொம்பளை அழகெல்லாம், ஒரு புள்ளையை பெத்துக்கற வரைக்கும் தாண்டா? அதுக்கப்புறம் அவ திமித்துக்கிட்டு நிக்கற அவ மார் சதை தொங்கிப்போச்சுன்னா, பொம்பளை அழகுல பாதி போச்சுடா. பொம்பளை சும்மா தூக்கி கட்டிக்கிட்டு ஊரை வேணா ஏமாத்தலாம். அவளை அவளே எத்தனை நாள் ஏமாத்திக்க முடியும்?" "எல்லா பொம்பளையும் ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம், இடுப்புல சதை விழுந்து, உரல் மாதிரி தாண்டா ஆகிப்போவாளுங்க. அவ அடிவயித்துல வரி வரியா சுருக்கமும் கோடும் விழுந்ததுக்கு அப்புறம், அவ தொப்புளுக்கு மேலத்தாண்டா புடவையை ஏத்தி கட்டணும். கொஞ்ச நாள்ல அவ உடம்பும், அவ அந்தரங்கமும் தளந்து போயிடும்டா; தொடையும் புட்டமும் பெருத்து, ஒன்னோட ஒன்னு உரசி, அடித்தொடை கருப்பாயி அவளைப் பாக்க சகிக்காதுடா, அவ அந்தரங்கம் தளந்து போனா அவ பெருங்காயம் இருந்த டப்பா மாதிரிதாண்டா; இதுல சுகன்யா என்ன? ஜானகி என்ன? நாம வெச்சுக்கற பேருதான் வேற வேற." "லட்டு உருண்டையா, மஞ்சளா, பளபளன்னு இருக்கும். லட்டை கொஞ்சம் கடிச்சு தின்ணனும். உனக்கு பிடிச்ச மைசூர்ப்பாக்கு, நீள சதுரமா மிருதுவா இருக்கும், இதன் நெறமே வேற; வாய்ல போட்டா மணல் மாதிரி கரையும். உங்கப்பாவுக்கு பிடிச்ச அதிரசம் கருப்பா இருக்கும், இதை புட்டு வாயில போட்டு மெதுவா அசை போட்டு திங்கனும். அப்பத்தான் அது ருசியா இருக்கும். இந்த பண்டங்கள் எல்லாத்தையும் வாயில போட்டு மென்னு தின்னா ருசி என்னமோ ஒண்ணுதான். எல்லாமே தித்திப்புத்தான். அது மாதிரி பொம்பளை கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, குண்டோ, உயரமோ, குள்ளமோ, அவ உனக்கு குடுக்கப்போற உடம்பு சுகம் ஒண்ணுதாண்டா." "இப்ப ஆசையும், மோகமும், உன் கண்ணை மறைக்கும். மனசுல இருக்கற ஆசை உன் புத்தியை கெடுக்கும். நாப்பது வயசுல உனக்கும் நாய் குணம் வரும். "இந்த சுகன்யா, இந்த வீட்டுக்கு வரும் போது என்னத்தை கொண்டாந்தா, நமக்குன்னு பொண்டாட்டி தரப்புலேருந்து நாலு பேரு இல்லையே", அப்படிங்கற எண்ணம் உனக்கு வரும். "அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?" "சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்." ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா. "யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?" "சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?" அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள். "உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம். "எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான். "எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?" "அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா." அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது. "அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?" மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர். "அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா." வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது. "அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?" மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள். "இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார். "நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்." நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார். "கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் ... ஜாக்கிரதை." "அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு" மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான். "இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே ... அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள். "சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா ... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க ... அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்" மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு" செல்வா தன் மனம் தளர்ந்து போனான். சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா.

ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா அவ ரூமுக்கு ஒழுங்கா போய் சேர்ந்திருப்பாளா ???

No comments:

Post a Comment