Monday 23 February 2015

சுகன்யா... 07


சுகன்யா, தன் மூக்கு விடைக்க விம்மிக்கொண்டு வெளி வரத்துடித்த அழுகையை நெஞ்சுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, கேண்டீனிலிருந்து திரும்பி பார்க்காமல் விறுவிறுவென வேகமாக நடந்து சீட்டை அடைந்த போது சாவித்திரியும், மற்றவர்களும் அவரவர் வேலையில் மும்மரமாக மூழ்கி இருந்தார்கள். "சுகன்யா, உனக்கு ஏன் அழுகை வருது? உன் மனபலம் இவ்வளவு தானா? இது வரைக்கும் உன் காதல்ங்கற வண்டி சீராக ஓடிக்கிட்டு இருந்தது; செல்வாவோட இடமாற்றம் உன் கட்டுப்பாட்டுக்கு அப்பால இருக்கிற ஒண்ணு; திடீர்ன்னு நீங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்காத இந்த சின்னத் திருப்பத்தால், செல்வா வர திங்க கிழமைக்குள்ள புது இடத்துல போய்ச் சேர்ந்தாகணும்; உன் தரப்புலேருந்து இதுக்கு நீ என்ன செய்ய முடியும், அதை மட்டும் யோசி". "சாவித்திரியைப் பாத்து நீ ஏன் துவண்டு போறே? அவ போடற திட்டத்துல ஜெயிச்சு, செல்வாவை உன் கிட்ட இருந்து பிடுங்கிடுவாளோன்ற பயம் உனக்கு இப்பவே வந்துடுச்சு, உன் காதல் மேல உனக்கு நம்பிக்கையில்லயா? செல்வா உன்னை முழுமனசோட காதலிக்கிறானா? அவன் கடைசி வரைக்கும் உன் கூட வருவானான்னு நீ காலைல சந்தேகப்பட்டுட்ட; நீ என்ன சொன்னாலும் உண்மை இதுதானே? சந்தேகத்துலயும், பயத்துலயும் இருக்கற ஒருத்தரால காதல்ல எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?

"சுகன்யா, உன் கிட்ட இருக்கற அழகை வெச்சு முதல்ல இறுக்கமா அவனை உன் இடுப்புல முடி போட்டுக்கோ; முதல்ல பரஸ்பர உடல் கவர்ச்சியிலதான் எல்லா காதலும் ஆரம்பிக்குது; அப்புறம் உன் பாசத்தால, அன்பால, மனசால, அவனை கட்டி நிறுத்து. இப்போதைக்கு அவன் உன்னையும், உன் முந்தானையையும் தானே புடிச்சுக்கிட்டு சுத்தறான், இப்ப அவனே சோர்ந்து போய் இருக்கான்; சோர்ந்து போய் இருக்கறவனை நீயே உன் வார்த்தையால குத்தினா எப்படி?" "சாவித்திரியும், செல்வாவின் அம்மாவும் சேர்ந்து அவனுக்கு வேப்பில அடிச்சுட்டா என்ன பண்றதுன்ற பயத்துல நீ அவனை வெட்டுவேன்னு சொன்னது நிச்சயமா அவனுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்காது, மாறா நீ அவனை சந்தேகபடற விதத்துல பேசினது அவன் கோபத்தை கிளறியிருக்கலாம்". "ஒரு விதத்துல நீ பேசினதும் சரிதான். நீ அவன் காதலி, அந்த உரிமையில பேசிட்ட, இவளை விட்டுட்டு சுலபமா ஓடிட முடியாதுன்னு, கொஞ்சம் மனசுல அவனுக்கும் பயம் வந்திருக்கும், உன் மனசுல வந்த பயத்தை செல்வாகிட்ட கொஞ்சம் மிருதுவாக நேரம் பாத்து சொல்லியிருக்கலாம்; பேசினது பேசியாச்சு." " நீ தான் அவன் கிட்ட சாரி சொல்லிட்ட, ஈவினிங், அவனை பாக்கும் போது இன்னொரு தரம் சாரின்னு சொல்லிடு, இனிமே யோசிக்காம பேசாதே; அவ்வளதான், இப்ப உன் வேலையை கவனி, ஆபீஸ் வேலைல உன்னை குறை சொல்லற மாதிரி சாவித்திரிக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காதே, இது ரொம்ப முக்கியம்". சுகன்யா, தன் மனதுடன் வாக்கு வாதம் நடத்தி சற்றே தெளிவடைந்தாள். கிடுகிடுவென அன்று அக்கவுண்ட்ஸ்க்கு அனுப்ப வேண்டிய பேப்பர்களை தயார் செய்து, எடுக்க வேண்டிய நகல்களை எடுத்து ஒரு முறை சரி பார்த்தாள். லஞ்சுக்கும் போகாமல் அவள் விடுமுறையில் சென்ற போது, அவளுக்கு மார்க் பண்ணப்பட்ட விஷயங்களுக்கும் குறிப்பெழுதி, கோப்புகளை சரஸ்வதியின் டேபிளில் தானே கொண்டு போய் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது மணி மதியம் மூணு ஆகியிருந்தது. "சீக்கிரம் வாடிம்மா, வேலை கொஞ்சம் ஜாஸ்தின்னு சொன்னேன்; உண்மைதான்; அதுக்காக சாப்பிடாமக் கூட நீ இந்த ஆபீசுக்கு உழைக்க வேண்டாண்டி; உனக்கு இளம் ரத்தம்; எல்லாத்தையும் நீ சீரியஸா எடுத்துக்கறே! இங்க யார் வேலை செய்யறா, யார் ஒப்புக்கு மாரடிக்கறா, எல்லாம் நேக்குத் தெரியுண்டி", சாவித்திரி அந்த நேரத்தில் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள். "தேங்க்யூ மேடம் ... காலைல டீ டயம்ல்ல செல்வா, ரெண்டு வடை ஆசையா வாங்கிக் கொடுத்தார், சாப்பிட்டேன், அதுவே நெஞ்சை கரிச்சுது, வேலையை முடிச்சுட்டு நிதானமா சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்" உதட்டை சுழித்து இயல்பாக சொல்லுவது போல் சொல்லிக்கொண்டே அவளை ஆழம் பார்த்தாள். சாவித்திரியின் முகம் சட்டென இருண்டது. காலையில இவ எரிச்சல் மூட்டி உன்னை அழவெச்சா. உன் காதல் விவகாரத்தை சாவித்திரி ஆபீஸ்ல்ல போட்டு உடைச்சுட்டா, உன்னை அவன் கூட இவளே ஜோடி சேத்துட்டா! உன் காதலை ரகசியமா வெக்கறதுல இனி எந்த பிரயோசனமும் இல்லை. செல்வாவின் இட மாறுதலை உன்னால இப்போதைக்கு நிறுத்த முடியாது. ஆனா செல்வாகிட்ட உனக்கு இருக்கற உரிமையை இவளுக்கு காட்ட முடியுமே! செல்வாவை இங்க கூப்பிடு. உங்க நெருக்கத்தை இவளுக்கும் உன் செக்ஷனுக்கும் கோடி காட்டு. நாளைக்கு உன் கூட வேலை செய்யற இவங்க உன் பக்கம் நிப்பாங்க. "சுகன்யா...," முகத்துல எரிச்சலையோ, கோபத்தையோ காட்டாதே. நீ இவளை இவ வழியிலே போய் மடக்கு. முள்ளை முள்ளால மெதுவா எடுடி. குத்தின இடத்துலயும் வலிக்கக் கூடாது, முள்ளு முனையும் உடையக்கூடாது. சாவித்திரி ஒரு காயை நகர்த்தி உன்னை மடக்கியிருக்கா. உன் காயை நீ நிதானமாக நகர்த்து. அவள் உள் மனம் பேசியது. செல்லை எடுத்து செல்வாவின் நம்பரை அழுத்தினாள். "செல்வா, சுகன்யா பேசறேன் ... என்ன பண்றே?" அவன் பேரை அழுத்தி உரிமையுடன் சாவித்திரிக்கு கேட்கும்படி சொன்னாள். "என்ன வேணும் உங்களுக்கு" செல்வாவின் பேச்சில் மரியாதை கூடியிருந்தது - முதல் முறையாக அவளிடம் போசுவது போல் பேசினான். குழந்தை ரொம்ப கோபமா இருக்கு அதான் நீங்க... வாங்க போடுது ... சுகன்யாவின் உதடுகளில் முறுவல் விரிந்தது. "நீ என் செக்ஷனுக்கு கொஞ்சம் வரயா" ... சுகன்யா வேண்டுமென்றே "நீயில்" அழுத்தம் கொடுத்தவள், இன்னைக்கு எலுமிச்சம் சாதம் செய்தேன், உனக்கும் சேத்து கொண்டுக்கிட்டு வந்தேன் ... உனக்குத்தான் லெமன் ரைஸ் பிடிக்குமே ... ரெண்டு ஸ்பூன் எடுத்துக்கயேன்" சொல்லிக் கொண்டே தன் டிஃபன் பாக்ஸைத் திறந்தாள். எலுமிச்சை வாசம் கம கமவென ரூமை நிறைத்தது. "நான் சாப்பிட்டுட்டேன் ... இப்ப கொஞ்சம் பிஸி ... நீங்க சாப்பிடுங்க பிளீஸ்" அவன் மனதில் கோபம் இன்னும் தணியவில்லை. "ரெண்டு நிமிஷம் எனக்காக கீழ வரக்கூடாதா ... அவ்வளவு பிஸியா" கேட்டவாறே களிப்புடன் சிரித்த சுகன்யா, சாவித்திரியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் முகம் லேசாக நிறமிழந்து கொண்டிருந்தது. "லுக் சுகன்யா, நீங்க எந்த உரிமையில இப்படி என்னை வா... போன்னு ... பேசிகிட்டு இருக்கிறீங்கன்னு எனக்கு புரியல" அம்மாவிடம் கோபம் கொண்ட ஒரு சின்னக் குழந்தையைப் போல் இன்னும் அவளிடம் முறுக்கிக்கொண்டிருந்தான் அவன். "செல்வா"... தன் குரலைத் தாழ்த்திக் கொண்ட சுகன்யா பேசினாள், - "பீச்சுல நாலு பேர் பாக்கறதை கூட சட்டை பண்ணாம, உன் மடியில என்னை போட்டுகிட்டு, எந்த உரிமையில என் மூஞ்சி பூரா முத்தம் கொடுத்தியோ, அந்த உரிமையில நான் உங்கிட்ட பேசறேன் ... இப்ப நீ வரயா ... இல்ல நான் உன் ரூமுக்கு வரவா" புன்னகை தவழும் முகத்துடன் செல்லை கட் பண்ணினாள். "வணக்கம் மேடம்" சுகன்யாவின் ஹாலில் நுழைந்த செல்வா சாவித்திரியை விஷ் செய்து கொண்டே சுகன்யாவை நோக்கி நடந்தான். செல்வாவை பார்த்த சுகன்யாவின் நெஞ்சு விம்மியது. இவன் என் பேச்சைக் கேக்கறவன், இவன் எனக்கு சொந்தம், இவனை யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. "ம்ம்ம்... எப்பா செல்வா, உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் ஆபீசுல கிடைச்சிருக்கா, வீட்டுல இருந்து கலந்த சாதம் பண்ணிக் கொண்டாந்து உன்னை கூப்பிட்டு குடுக்கற ... அவளை மாதிரி ஒரு பொண்டாட்டியும் உனக்கு கூடிய சீக்கிரமே வரட்டும்பா ... நல்ல மனசோட சொல்றேன், தப்பா எடுத்துக்காதே", சொன்ன சாவித்திரியின் முகம் இறுகியிருந்தது. "மேடம்...ஆசிர்வாதம் மிஸ்டர் செல்வாவுக்கு மட்டும்தானா, எனக்கு கிடையாதா, என் மனசுல யாரை நினைச்சுக்கிட்டு இருக்கிறேனோ அவனே எனக்கு புருஷனா கிடைக்கணும்ன்னு, பெரியவங்க உங்க வாயால ஆசிர்வாதம் பண்ணுங்களேன்" சொல்லிக் கொண்டே, ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் லெமன் ரைஸை வைத்து, சாவித்திரியின் டேபிளின் மேல் கொண்டு வைத்தாள். "நன்னாத்தான் பண்ணியிருக்கேடிம்மா, உனக்கு வரப்போறவன் குடுத்து வெச்சவன்தான்" சனியன் புடிச்சதுங்க நம்ம வீட்டுலயும் தான் ரெண்டு வளந்து கழுதை கழுதையா நிக்குதுங்க, ஒரு புடி சாதம் வெக்கக்கூட துப்பில்லை, மனதுக்குள் நொந்துக்கொண்டாள். "தேங்க் யூ செல்வா... ரொம்ப சந்தோஷம் நீ வந்ததுக்கு ... ரொம்ப ரொம்ப சாரி ... நான் காலையில அவசரமா உன்னை சந்தேகப்பட்டு பேசினதுக்கு, இப்ப சொல்றேன்... கட்டினா உன் கையாலத்தான் தாலி கட்டிக்குவேன்" அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள். "ஏண்டா உம்முன்னு இருக்க, கொஞ்சம் சிரியேன்...செல்வா, ஆசையா உனக்காக செஞ்சு கொண்டாந்துருக்கேன், பிளீஸ் ... எடுத்து சாப்பிடு ... எனக்குத் தெரியும் நீ மத்தியானம் சாப்பிடலே ... பட்டினியா இருக்கேன்னு" தன் ஈர உதடுகள் பளப்பளக்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் காதல் பொங்கியது. "ச்ச்சே... இவ கிட்ட நான் வசமா மாட்டிக்கிட்டேன் ... கண்ணாலேயே என்னை கட்டிப்போட்டு பேசவிடாம பண்ணிடறா" மனதுக்குள் புலம்பியவன், அவன் அவளிடம் ஏதேதோ சூடாக கேட்க்க வேண்டும், சொல்ல வேண்டும் என்று வேகமாக வந்தவன், ஏதும் பேசத்தோன்றாமல் மவுனமாக சாப்பிட ஆரம்பித்தான். "அடியே சுகன்யா" - நீ உக்காருன்னா உக்காந்துக்கறன், எழுந்துருன்னா எழுந்துக்கறான் ... குட் ... நான் நினைக்கறது நடக்கணும்னா கொஞ்சம் கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும், நீயும் காயை நல்லாத்தான் நகர்த்தறடி ... சாவித்திரி நீண்ட பெருமூச்சுடன், இந்த ஆட்டத்தில் தன் காயை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என சாவித்திரி யோசிக்கத் தொடங்கினாள். சங்கர் அன்றிரவு வீடு திரும்பிய போது வேணி பரிமாறிக் கொண்டிருக்க, மாணிக்கமும், வசந்தியும் மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "வேணி நீயும் உக்காரேன்; மணி பத்தாவுது, எனக்கு டிஃபனை வெச்சிட்டு நீயும் சாப்பிடேன்". சங்கர் முகத்தைக் கழுவிக் கொண்டு, திறந்த மார்புடன் லுங்கியில் வந்து அமர்ந்தான். வேணி காலையில், மாப்பிள்ளை அசோக்கையும், ராதாவையும் ஸ்டேஷனுக்கு வழியனுப்பச் சென்றபோது உடுத்தியிருந்த அதே பச்சை நிற புடவையில் இருந்தாள். கையில்லா கறுப்பு ஜாக்கெட்டில் தங்கத்தால் அடித்து பொருத்தியது போல் மின்னிக் கொண்டிருந்த அவள் இரு கரங்களையும் பார்த்த சங்கர், மற்றவர்கள் கவனிக்காத போது தன் உதட்டை குவித்து காற்றில் அவளை முத்தமிட்டான். "ஏண்டா, ஆறு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சா பத்து மணிக்கு வீட்டுக்கு வரே, வேணி விடியல்ல அஞ்சு மணிக்கு எழுந்தவ; அவ நேரத்துக்கு தூங்கினாத்தானே காலையில எழுந்துக்க முடியும்; பாவம் உனக்காக எவ்வளவு நேரம் சாப்பிடாம காத்திருப்பா", வசந்தி சலித்துக்கொண்டாள். "அம்மா, ஆபீசுல ட்ரெய்னிங்க்கு வந்து இருக்கறாங்க, அதுல ஒருத்தன் என் பழைய தோஸ்தும்மா, நாளைக்கு அவங்க திரும்பி போறாங்க, பேசிகிட்டிருந்தோம் ... அதான் நேரமாயிடுச்சு", நான் என்ன தினம் தினம் லேட்டாவா வரேன் ... சொல்லிக்கொண்டே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். "இவ ஒருத்தி, எதையும் நேரா பேசமாட்டா; செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருவா, குடும்பத்துல எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னா, எதுவும் நேரத்துல நடக்கணும், வீட்டுக்கு வந்த பொம்பளையை சும்மா மருந்து, மாத்திரைன்னு, சாப்பிடச் சொன்னா அவ உடம்பு கெட்டுப் போயி நாளைக்கு குழந்தை வேணும்ன்னு நீங்க நினைக்கும் போது பிரச்சனையா போயிடலாம், அது மாதிரி ஊர்ல நடந்தும் இருக்கு; எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன். புரிஞ்சா சரி உன் புள்ளைக்கு", மாணிக்கம் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கையை கழுவச் சென்றார். அறைக் கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்த வேணி, புடவையை அவிழ்த்து நிதானமாக மடித்துக் கொண்டிருந்தாள். அவளின் தோள்கள் ஒரே சீராக அசைய, மின்னும் அவள் கரங்களையும், ரவிக்கையில் மிதமாகக் குலுங்கிய அவள் மார்புகளையும், ரவிக்கைக்கும் பாவாடைக்கும் இடையில் லேசான வியர்வையால் பளபளத்த அவள் இடுப்பையும், பார்த்த சங்கரின் உடம்பில் மெல்ல சூடு ஏறத்தொடங்கியது. நான்கு நாட்களாக ராதாவும், மாப்பிள்ளையும் வந்திருந்ததால், வேணிக்கு, தினசரி காரியங்களோடு அவர்களை உபசரிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டதால், இரவில் அடித்துப் போட்டது போல் தூங்கிக்கொண்டிருந்தாள், இன்னைக்கு இவளைத் தொடலாமா ... தொட்டால் சிணுங்குவாளா இல்லை சீறுவாளா, சங்கர் யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். "சங்கு அந்த நைட்டியை எடுங்களேன், உங்க பின்னாடி கட்டில் மூலையில கிடக்கு" மடித்த புடவையை நாற்காலியின் முதுகில் போட்டவள், தன் ரவிக்கையை கழற்றிக்கொண்டே, கட்டிலில் படுத்திருந்தவனை நோக்கித் தன் கையை நீட்டினாள். "நீயே வந்து எடுத்துக்கோ" அவன் கண்களை மூடிக்கிடந்தான். "நாலு நாளாச்சு ... உள்ள வந்ததும் இறுக்கி கட்டிக்குவான்னுப் பாத்தா... டல்லடிக்கிறான், இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு" உடலை இறுக்கிக்கொண்டிருந்த ப்ராவின் பட்டைகளை விரல்களால் ஒரு முறை இழுத்துவிட்டு தன் இரு முலைகளையும் போட்டிருந்த கச்சோடு தேய்த்துவிட்டுக் கொண்டவள், அவனை சீண்டிப்பார்க்க நினைத்து, தன் நைட்டியை எடுக்கும் சாக்கில் அவன் உடலின் குறுக்காக சாய்ந்த அவள், அவன் மார்பில் தன் மார்புகளை அழுத்தித் தேய்த்தாள். "ஆமாம் உன் மாமனார், எல்லாமே நேரத்துல நடக்கணும்ன்னு லெக்சர் குடுத்தாரே... என்னா கதை அது, எனக்கு ஒன்னும் புரியல, அவர் எதிர்ல எதுவும் பேச வேண்டாம்ன்னு இருந்தேன் ... நீ இன்னைக்குத்தான் இந்த வீட்டுக்கு வந்தவ மாதிரி தலையை குனிஞ்சுகிட்டு நின்னே" தன் வலக்கையை அவள் பாவாடையினுள் நுழைத்து புட்டங்களைத் தடவிக்கொண்டே, மழமழவென்று சுத்தமாக இருந்த அவள் அக்குளில் முத்தமிட்டவனின் தடி அவன் லுங்கிக்குள் கிளர்ந்தெழுந்தது. "முதல்ல உனக்கு அப்பா, அப்புறமா எனக்கு மாமனார்" நைட்டியை எடுத்துகொண்டு எழுந்தவள் வாய்விட்டு சிரித்ததால் அவள் முலைகள் குலுங்கி குலுங்கி அவனை படுத்தி எடுத்தன. "மேல விழுந்து, மொலையால உரசி சும்மா கிடந்த என்னை கிளப்பிவுட்டுட்டு எங்கடி போற இப்ப ... " வேணியை இழுத்து தன் மார்பில் இறுக்கி அவள் உதடுகளில் சூடாக முத்தமிட்டான் சங்கர். "உங்கம்மா, நேத்து மூச்சுக்கு முப்பது தரம், குட்டிப் பொண்ணு, என் பேத்தி, நாளைக்கு என்னை ஏமாத்திட்டு ஊருக்கு போயிடுவான்னு மருகிகிட்டே இருந்தாங்க. ராதா சும்மா இல்லாம அவங்களை உசுப்பேத்திட்டு போய்ட்டா." வேணி, தன் புட்டங்கள் இதமாக தடவப்பட்டதாலும், கணவனின் சூடான உதடுகளால் முத்தமிடப்பட்டதாலும், தினவெடுத்த முலைகள், அவள் போட்டிருந்த பிராவினுள் பருக்க ஆரம்பித்திருந்ததால், சங்கரின் லுங்கியை அவிழ்த்து, அவன் தண்டைத் தன் கையால் வளைத்து பிடித்து குலுக்கத் தொடங்கியவள், நாலு நாட்களாகக் களைத்திருக்கும் தன் உடலை அவனுடன் கூடி தளர்த்திக் கொள்ள விரும்பினாள். "ரா....ராதா என்ன சொல்லிட்டுப் போனா" சங்கர் திரும்பி அவள் கையை தூக்கி அவளின் முடியில்லா அக்குளை முகர்ந்து, தன் நாக்கால் நக்கி அவளை தன் பங்குக்கு சீண்டினான். "ச்ச்சீ...சனியன் புடிச்ச மனுஷன், என்ன பண்றீங்க ... எனக்கு கூசுது ... அங்க என்னை நக்காதீங்கன்னு ... எத்தனை தரம் சொல்லிட்டேன்" அவள் அவன் முகத்தை விலக்கித் தள்ளினாள். "எனக்கு இது ரொம்ப புடிக்குதுடி ... உன் அக்குள் வாசனையை இழுத்தன்னா, என் பையன் பட்டுன்னு கிளம்பிடறாண்டி" அவன் விரிந்து கிடந்த அவள் தலை முடியை அவள் முதுகின் பின் தள்ளி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். "நீ விஷயத்தைச் சொல்லு" "அதை இப்பச் சொன்னா உங்களுக்கு கோவம் வரும் ... நாளைக்கு பேசிக்கலாம்" அவள் அவன் வாயை கவ்வி முத்தமிட்டாள். "சொல்லுடின்ன்னா..." அவன் அவள் மாரை பிராவுடன் சேர்த்து பிசைந்து கொண்டே அவள் முகவாயை நக்கிக் கடிக்க, இருவரின் உடல்களும் உஷ்ணமேறி கொல்லன் பட்டறையில் அடிபடும் இரும்பை போலாகின. "வேணி தினமும் மாத்திரை போட்டுக்கறா ... இது உன் புள்ளையோட ஐடியா ... அதை நிறுத்தச் சொல்லும்மா ... அடுத்த வருசம் உன் மடில ராஜாவாட்டம் பேரன் துள்ளுவான், நீயும் அவனை கொஞ்சலாம்ன்னு, சிரிச்சுக்கிட்டே உங்க அம்மா கிட்டப் போட்டு குடுத்துட்டா?" அவள் சங்கரின் கன்னத்தை வலிக்கக் கடித்தாள். "அப்புறம்" "அப்புறம் என்னா...நேத்து மத்தியானம் பூரா நான் திட்டு வாங்கினேன் உங்கம்மாகிட்ட... அவன் வரட்டும் இன்னைக்கு ... அவன் மனசுக்குள்ள என்ன நெனைச்சுகிட்டு இருக்கான், இதுக்குத்தான் அவனுக்கு பாத்து பாத்து பொண்னைத் தேடி கல்யாணம் பண்ணி வெச்சனா ... அவனுக்குத்தான் அறிவில்லன்னா, உனக்கு எங்கடி போச்சு புத்தி, எங்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே? நான் நினைச்சேன், வூட்டுக்கு வந்த பொண்ணு சந்தோஷத்துல பெருக்கறான்னு ... இப்பத்தான் தெரியுது மாத்திரையாலன்னு..." "மாத்திரை போட்டுக்கற அளவுக்கு, இந்த வீட்டுல நீ எத்தனை புள்ள பெத்துட்டடி?, உன்னால அதுங்களை வளர்க்க முடியாத போச்சா, நான் எதுக்கு இருக்கறேன் இங்க குத்துக்கல்லாட்டாம், பெத்து குடுத்துட்டு ரெண்டு பேரும் எங்கயாவது உங்க வழியை பாத்துகிட்டுப் போங்க, நான் வளத்துக்குறேன் இந்த வூட்டு வாரிசைன்னு கூச்சல் போட்டாங்க. எங்கடி அந்த மாத்திரைங்கன்னு, என்னை கொண்டாற சொல்லி, மொத்தமா எல்லாத்தையும் பிரிச்சி போட்டு கல்லால நசுக்கி குப்பை கூடையில கொட்டிட்டாங்க ... எனக்கே ரொம்ப வருத்தமாப் போச்சு, இவ்வளவு ஆசையை மனசுக்குள்ள வெச்சிகிட்டு இருக்காங்க ஒரு பேரப்புள்ளைக்காக ". "இந்த வீட்டுக்கு வந்த இந்த ஒரு வருஷத்துல, எனக்கு கிடைச்ச முதல் அர்ச்சனை... அதுவும் உங்களால... நான் அழுதுகிட்டே பின்னாடி தோட்டத்துல போய் உக்காந்துட்டேன்; உங்கப்பா வந்து என்னை உள்ள கூப்பிட்டுகிட்டு வந்தார். உங்கம்மாவை ராதாதான் சமாதானம் பண்ணா, அண்ணியை ஏம்மா அர்த்தமில்லாம திட்டற; உன் செல்ல புள்ளையை கூப்பிட்டு விசாரின்னா" வேணி தன் ஒரு காலை தூக்கி அவன் மேல் போட்டு, அரிக்கும் தன் பெண்மையை அவன் இடுப்பில் தேய்த்தவாறே, அவன் மார்பை தன் கையால் தடவிக் கொடுத்தாள். "கொஞ்ச நாள், குழந்தை குட்டி, பிக்கல் பிடுங்கல் இல்லாம ஜாலியா இருக்கலாம்ன்னு நினைச்சேன்; எங்கம்மாவுக்கு கோபம் வராதுடி, வந்துச்சுன்னா சீக்கிரத்துல தணியாது, அவன் குரல் முணுமுணுப்பாக வந்தது. "புள்ளையை வளர்க்கறதுக்கு அத்தை ரெடி, பெத்துக்கறதுக்கு நான் ரெடி ... நான் கர்ப்பமாகணும், அதுக்கு உண்டான வேலையை பாக்க நீ ரெடியா?" அவள் அவன் மேல் ஏறி படுத்து, தன் கைகளை அவன் கழுத்துக்கு கீழ் நுழைத்து தன் நெஞ்சோடு அவனை தழுவி முகமெங்கும் முத்தமிட்டாள். "இந்த பிராவை அவுத்துத் தொலையேன்" தொலைத்த எதையோ தேடுவது போல் அவன் கைகள் அவள் முழு முதுகிலும் ஓடி ஆடிக்கொண்டிருந்தன. "அவுக்கறதுல நீதாண்டா எக்ஸ்பர்ட், உன் கை என் முதுவுலதானே இருக்கு... அவுறேன்" அவள் அவனை கொஞ்சினாள். "ஏண்டி இப்படி டைட்டா போட்டுத் தொலைக்கற, உடம்பு பூரா வரி வரியா சூடு போட்டா போல இருக்குது", முதுகை மென்மையாகத் தடவினான் அவன். "வெளியில போகும் போது தூக்கிக்கட்டிக்கிட்டு வாடி அப்பத்தான் அழகா இருக்குன்னு நீ தானே சொன்னே... அடுத்த சைசுக்கு மாறணும் நான், மூச்சு விடறேதே கஷ்டமா இருக்கு" "உன்னுது லேசா பெருசாயிருக்கு அதான் பிரச்சனை" "ஆம்பளைங்களுக்கு சின்னதா இருந்தாலும் பிரச்சனை... பெருசா போனாலும் தொல்லை... நான் தாலி கட்டிக்கிட்டு வந்தப்பா, சின்னதா அழகா இருக்குதும்பீங்க, அதுங்களை ஒரு பாடாவா படுத்தறீங்க; ராத்திரி பகலா, கசக்கி கசக்கி அதை புடிச்சுகிட்டு தொங்கினா, அதுங்க கதி என்னாவறது" அவன் மேல் படுத்திருந்தவள் தன் முழங்கைகளை அவன் இருபுறமும் ஊன்றி தன் மார்பை சற்றே நிமிர்த்தி, பிராவிலிருந்து விடுபட்டிருந்த தன் முலைகளை அவன் முகத்தில் தேய்த்தாள். "என்ன ... என் கண்ணுக்குட்டி இன்னிக்கு செம மூடுல இருக்கற மாதிரி தெரியுது" சங்கர் முகத்தில் உரசிய அவள் காம்பை தன் உதடுகளால் இறுக்கிப் பல்படாமல் அழுத்த, வேணியின் உதடுகளிலிருந்து "ம்ம்ம்ம்" முனகல் கிளம்பியது. "ராதா செம கில்லாடிங்க... செக்ஸ்ல்ல நெறய விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கா" . "அப்படியா" "பின்ன உங்க தங்கச்சி இல்லயா?" "என்னடி கிண்டலா" "கிண்டல் என்ன இருக்கு, நீங்கல்லாம் ரொம்ப படிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்" குரலில் சிறிது கேலி தொக்கியிருந்தது. "உங்களுக்கு குழந்தைங்கன்ன ஆசைதானே" வேணி அவன் கண்களில், நெற்றியில், கன்னத்தில் என மாறி மாறி முத்தமிட்டாள். "....." "நாலு நாளா ராதா குழந்தையை அவ்வளவு ஆசையா தோள் மேல ஏத்திக்கிட்டு கொஞ்சினீங்களே, நமக்குன்னா மட்டும் ஏன் தள்ளிப்போடறீங்க" "ராதா அப்படி செக்ஸைப் பத்தி என்ன சொன்னா உங்கிட்ட" "ரொம்ப மாத்திரை சாப்பிடாதே ... தொங்கிப் போயிடுங்கறா அப் ... அப்புறம்... செக்ஸ் மேல இருக்கற ஆசையே கொறஞ்சு போயிடும் அப்படின்னா ... என் மார் தொங்கியா இருக்கு", குரலில் மெல்லிய பயம் தொனித்தது. "ச்சீ..ச்சீ..அதெல்லாம் தொடர்ந்து ரொம்ப நாள் மாத்திரை போடறவங்களுக்கு, இனி நீ மாத்திரை எதுவும் போட்டுக்க வேண்டாண்டி கண்ணம்மா ... பயப்படாதே ... உன் குட்டானுங்க இரண்டும் சும்ம்ம்மா கும்முன்னு குத்திகிட்டு நிக்குதுடி, நமக்குன்னு ஒரு குழந்தையை பெத்துக்கலாம்டி ... இனிமே நான் தடையா இருக்க மாட்டேன்" அவளின் ஒரு பக்க முலையை முழுசாக தன் வாயில் இழுத்து சப்ப ஆரம்பித்தான். "ஆமா வேற என்னல்லாம் பேசிகிட்டீங்க" "ச்சே...ச்சே... பொம்பளைங்க நாங்க ஆயிரம் பேசிக்குவோம், உங்களுக்கு வெக்கமா இல்லை... திருப்பி திருப்பி உங்க தங்கச்சி என்ன சொன்னான்னு கேக்கறீங்க ... குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் அவ மாத்திரை போட்டுக்கறது இல்லயாம் ... அசோக்குக்கு ராத்திரில பலூன் போட்டு விட்டுடுவாளாம் ... சொல்லிக்கொண்டே அவன் வாயில் தன் அடுத்த முலையை திணித்து சப்பக்கொடுத்தாள். "வந்த மறுநாள் ராதா எங்கிட்ட பலூன் இருந்தா குடேன்னு கேட்டா" ... சப்பிய சங்கரின் ஈர உதடுகளின் அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டே சொன்னாள் "என் கிட்ட ஏது பலூனு... நான் சொன்னேன் உங்கண்ணனுக்கு ஆல் ரூட் பாஸ் குடுத்து வெச்சுருக்கேன்னு" சொல்லிவிட்டு உரக்கச்சிரித்தாள் வேணி. "வெக்கம் கெட்டவளே, என் தங்கச்சி கிட்ட என்னைப்பத்தி என்ன சொல்றதுன்னு இல்லை; என்னாடி இப்படி ஒழுவி இருக்குது" அவளுடைய செழிப்பான மார்பை சப்பிக்கொண்டே, தன் கையால் அவள் பாவாடை முடிச்சை அவிழ்த்து, அதை அவள் தலை வழியாக இழுத்து எறிந்தவன், அவள் புட்டப் பிளவில் தன் விரலை ஒடவிட்டு திகைத்துப் போனவனாக கேட்டான். "நாலு அஞ்சு நாளா உங்க நாக்கு என் உடம்புல படலியா... என் மாம்பழத்தை நீங்க ஒரு கடி கடிச்சு, உறிஞ்ச உடனே பொத்துக்கிச்சிங்க" அவன் மேலிருந்து புரண்டு இறங்கியவள் அவன் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவனையும் தன் முகம் பார்க்க திருப்பி அணைத்து, அவன் கீழ் உதட்டை கவ்வி உறிய ஆரம்பித்தாள். உதட்டை உறிய ஆரம்பித்தவள், ஒரு நிமிடத்துக்குப்பின் அவன் உதட்டை நறுக்கென கடித்தாள். "ஏண்டீயிப்படி கடிக்கறே வெறி புடிச்ச நாய் மாதிரி ... ஆரம்பிச்சுட்டான்னா அடங்க மாட்டா" சட்டென்று அவள் வாயிலிருந்து தன் உதடுகளை விலக்கிக்கொண்டவன், தன் வலக்கையால் வேணியின் ஈரப்பெண்மையை அழுத்தினான். அவள் பெண்மையை அழுத்தியவன், தன் அடுத்த கையை வேணியின் கழுத்துக்கீழ் கொடுத்து, அவளை தன் புறம் சேர்த்தணைத்து, அவள் உதடுகளை தன் வாயால் கவ்வி, தன் நாக்கை அவள் வாய்க்குள் செலுத்தி அவள் பற்களை நக்கின்னான். வேணி தன் முழு உடலும் சிலிர்க்க, அவன் தண்டைத் தன் கையால் வளைத்து, அவன் மொட்டை இறுக்கிப் பிடித்து குலுக்கத் தொடங்கினாள். "மெதுவாடி ... தண்ணி வந்துடப் போவுது ... எனக்கு இன்னைக்கு உன் ஆழக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கணும்ன்னு ஆசையா இருக்குடி" சொன்னவன் அவள் பெண்மைப்பிளவை தன் விரலால் மேலும் கீழும் நோண்டியவன், ஈரமாகிய தன் விரலால் அவள் பெண்மைப்பருப்பை தேய்த்தான். "ம்ம்ம்ம்...ஹப்பா...நல்ல்ல்லாருக்குங்க...வேகமா தேய்க்காதீங்க...மெதுவா பண்ணுங்க" அவன் இரு உதடுகளையும் சேர்த்து முத்தமிட்டுக் கொண்டே, அவன் தண்டை ஒரே சீராக குலுக்கினாள். சங்கர் தன் ஆசை மனைவியின் விருப்பத்தை புரிந்துகொண்டு பொறுமையுடன், அவள் பெண்மையின் இதழ்களுக்குள் தன் விரலை இடையிடையில் ஓட்டி ஈரமாக்கிக்கொண்டு, அவள் துடிக்கும் பருப்பை வருடிக்கொண்டிருந்தான். வினாடிகள் வேகமாக நழுவ, தன் கணவனின் தண்டை குலுக்கிக் கொண்டிருந்த வேணியின் கை அழுத்தம் இப்போது மெல்ல மேல்ல அதிகரிக்கத்தொடங்கியது. தன் கண்கள் இறுக மூடி கிடந்த அவள் உதடுகள் வலுவுடன் சங்கரின் இதழ்களை உறிஞ்சத்தொடங்கியது, இரு தொடைகளும் ஒன்றுடன் ஒன்று தேய்த்துக்கொள்ள, பாதங்கள் ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொள்ள, அவள் முழு உடம்பும் முறுக்கேறி, தன் உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க, சங்கரால் தன் விரலை அவள் பருப்பின் மேல் அசைக்க முடியாமல் திணறிய போது, எம்ம்ம்ம்மமா என கூவிய வேணி அற்புதமான ஒரு உச்சத்தை அன்று அடைந்தாள். தாலிக்கொடி அவள் மதர்த்த மார்புகளின் நடுவில் சுருண்டு படர்ந்திருக்க, மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக்கொண்டு, நெற்றியிலும், மேல் உதட்டிலும் லேசாக வியர்த்த வேணி புதிதாக அப்போதுதான் மலர்ந்த தாமரையைப் போல் தன் கைகளையும், பருத்த தொடைகளையும் அகலமாக விரித்துக்கொண்டு கட்டிலில் மல்லாந்து கிடந்தாள். அவள் மார்புகள் இன்னும் பொங்கி பொங்கித் தணிந்து கொண்டிருந்தன. நீண்டப் பெருமூச்சுடன், வேணி என்னும் "அழகை" வைத்த கண் வாங்காமல் பார்த்த சங்கர், அவள் வலக்காலைத் தூக்கி அவள் விரல்களில் முத்தமிட்டு மென்மையாக அவள் கட்டை விரலை அவள் துடிக்க துடிக்க கடித்தான். "சங்கர்! ... வேணி தன் மனம் நிறைந்த திருப்தியில், என் தாகத்தை நீ தீத்து வெச்சுட்ட ... வாடா! ... உள்ள வுடணும்ன்னே ... வந்து என் கிட்ட உன் சூட்டை தணிச்சுக்கடா" ... சினிமாவில் வரும் கதாநாயகி போல் வசனம் பேசிய அவள் சிரித்தவாறு எழுந்து தன் இடுப்பை முன்னால் தள்ளி, வளைந்து, நெளிந்து தன் அந்தரங்கத்தினை அவனுக்கு விரித்துக் காட்டினாள். ஈரம் சொட்டும் அவள் அந்தரங்கத்தை தன் கண் விரிய பார்த்துக் கொண்டிருந்த சங்கரை இழுத்து கட்டிலில் தள்ளி, அவன் தண்டை தன் கையில் எடுத்து ஆட்டியவாறு அவன் கண்களை நோக்கியவள், அவன் கண்களில் தெரிந்த தாபத்தை புரிந்து, தன் கைக்கடங்கமால் நெளிந்தாடிய அவன் தண்டின் முன் தோலை பின் தள்ளி, அவன் மொட்டை ஆசையோடும், விருப்பத்தோடும் தன் உதடுகளால் கவ்வி எச்சிலால் ஈரமாக்கினாள். வேணியின் வாய் எச்சிலால், கொழ கொழத்த நாக்கின் வருடல் தந்த சுகத்தை, உடல் சிலிர்த்து நடுங்க, கண் மூடி அனுபவித்த சங்கர், அவள் இதழ்கள் உறுதியாக அவன் தண்டைச் சுற்றியிருக்க, தன் இடுப்பை அவசரமில்லாமல் ஆட்ட, அவன் சாமான் அவள் வாயில் பருக்கத் தொடங்கியது. பருத்த அந்த தண்டின் திண்மையை தன் கன்னச்சதைகளில் உணர்ந்தவளின் கருங்குகையில் மீண்டும் நீர் ஊறத்தொடங்கி, அவள் அந்தரங்க சுவர்களில் படர்ந்திருந்த மெல்லிய கொடி நரம்புகள் அதிரத் தொடங்கி, அவளின் அடுத்த உச்சத்திற்கு அவை அச்சாரம் போட்டன. வேணியின் கன்னச்சதைகளின் துடிப்பை தன் தண்டில் உணர்ந்த சங்கர், தன் தடியை அவள் வாயிலிருந்து உருவ, அவள் கட்டில் முனையில் தன் கைகளை ஊன்றி தன் புட்டத்தை அவனுக்காக நிமிர்த்தி தன் புதையலை காட்டினாள். "பின்னாலேந்து உள்ள வுடுடா கண்ணு ... " அவள் முகம் சிவந்த செம்பருத்தியாகியிருந்தது. அப்பாவியைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு, தேர்ந்த ஒரு தாசியைப் போல் தன் முதுகை வளைத்து, இடுப்பை நெகிழ்த்தி, ஒரு வாரத்தின் கருமுடி படர்ந்திருந்த அவள் பெண்மை மேடும், மேட்டின் நடுவில், பெண்மையின் கருஞ்சிவப்பு மேலிதழ்களின் நடுவில் துருத்திக்கொண்டிருந்த முந்திரியும், துளித்துளியாக நீர் சொட்டிக் கொண்டிருக்கும் அவள் அந்தரங்கமும் சங்கரை வெறிகொள்ள வைத்தன. "ரொம்ப குஷியா இருக்கேடித் தங்கம் இன்னைக்கு" "ம்ம்ம் ... இந்த பொசிஷன் உனக்கு புடிக்கலையா" கண்களை சிமிட்டிக்கொண்டே அவனின் நீண்டு தடித்திருந்த கருந்தண்டைப் பார்த்தாள். சங்கர், வேணியின் பின் மேடுகளைப் பிரித்து, அவளின் குகை வாயிலில் முத்தமிட்டு, சிவந்திருந்த கொடி முந்திரியை தன் நாக்கால் வருட, அவள் முழுங்கால் உதறத் தன் புட்டச்சதைகளை அவன் முகத்தில் அழுத்தமாக தேய்த்தவள் "ம்ம்ம்....சங்கு சீக்கிரமா உள்ள்ள வுடுப்ப்பா" என முனகினாள். உணர்ச்சிப் பெருக்கால் முனகிய வேணியின் உருண்டு திரண்டிருந்த தொடை, கால்களின் மேல் படர்ந்ததிருந்த பூனை முடிகள் சிலிர்த்து எழுந்ததை கண்டதும் அவன் தடியின் நரம்புகள் முறுக்கேறத் தொடங்கின. முற்றிலும் தாக்குதலுக்குத் தயாராக இருந்த தன் ஆயுதத்தை ஒரு முறை தன் கையால் உறுவி, பின் வேணியின் கொழுத்து சிவந்த குண்டியை இறுகப்பற்றிக் கொண்டு, அவள் பெண்மையின் செவ்விதழ்களை தன் மொட்டால் திறந்து, அவள் பொத்தலில் சரியாக செருகியதும், ஏற்பட்ட உரசலால், "ம்ம்ம்ம்ம் ஹப்ப்பா" வென வேணியின் முனகல், உறுமலாக மாறி, தன் இடுப்பை வலுவாக பின்னோக்கி சொடுக்க, சங்கரின் கனத்த மட்டை அவள் நீர் நிறைந்த குட்டையில் வேகமாக இறங்கியது. சங்கர் அவள் பரந்த முதுகில், தன் உடலை சரித்து, அவள் மேல் முழுவதுமாகப் பரவி படர்ந்து, அவள் பின் தொடைகளில், அவனுடைய முன்புற தொடைகளைத் தேய்த்துக்கொண்டு, தன் இரு கைகளாலும் அவள் குலுங்கும் சதைப்பந்துகளை இதமாக பிசைந்து கொண்டே, அவள் குட்டையை தன் மட்டையால் நிதானமாக துழாவினான்.

"ச்ச்சங்குகூ, கொஞ்ச நேரம் உன்னை ஆட்டாம அப்படியே இருப்பா" அவன் ஆண்மையின் திண்மையை, அதன் முழுமையை தன் பெண்மையால், பெண்மைக்குள் சுவைக்க விரும்பினாள் வேணி. இருவரின் மனமும் ஒரே விஷய சுகத்தில் குவிந்திருந்தது. பதட்டமின்றி மனம் குவிந்ததால், இருவருள்ளும் அமைதி நிலவியது. சும்மா இருந்தால் சுகம் என அந்த பேதை நினைத்தாள். மனிதனின் இயல்பே சலித்துக் கொள்ளல். "சும்மா இருத்தல் அவ்வளவு சுலபமா!" ஆனானப்பட்ட அந்த பரம்பொருளே சும்மா இருக்க முடியாமல்தானே ஆண்மை, பெண்மை என தன்னை இரண்டாகப் பிளந்துகொண்டு கல்ப கோடி காலமாக சிருஷ்டியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. ஆண், பெண்ணின் கூடலே, வம்ச விருத்திக்காகத்தானே! அதுதானே இயற்கையின் நியதி! சங்கரால் சும்மா இருக்க முடியவில்லை. வேணியின் அந்தரங்கச் சூட்டினால், அவள் உள்ளிருந்த அவன் தண்டு தன்னால் துடித்தசைய, வினாடிகளில் அவன் தொடைகள் கனத்து, இயல்பான "காரணமாக" அவன் இடுப்பு அசைய, அதன் எதிர் "காரியமாக" வேணியின் இடுப்பும் சேர்ந்தசைய, அவள் தன் புழையை சுருக்க, அவன் தன்னுறுப்பை மெதுவாக வெளியேயிழுக்க, அவள் தன் சுருங்கிய புழையை விரிக்க, அவன் தன் தண்டை மீண்டும் உள்ளே தள்ள, இந்த தொடர்ந்த காமக்கிரியையால், இருவரின் ஜீவ நாடிகள் துல்லியமாக விழித்துக்கொள்ள, அவர்களின் நாளங்களில் குருதி புனலாக ஓட, இரத்தம் பாய்ந்த நரம்புகள் பூரணமாக சிலிர்த்து, துடித்து, அதிர்ந்து, நெளிந்து குதியாட்டம் போட்டன. மீண்டும் மீண்டும், தொடர்ச்சியாக ஆணின் உள்ளே தள்ளல், வெளியே இழுத்தல், பெண்ணின் சுருங்குதல், விரிதல் என்ற நாடகம் சீரான கதியில் நடந்தேற, உஷ்ணத்தால் இருவரின் நாக்கும் உலர்ந்து, பரஸ்பரம் அவர்கள் உறுப்புகளின் அசைவில் வேகம் கூட கூட, இருவரும் அவர்களுக்கே புரியாத மொழியில் உளறிக்கொண்டிருக்க, ஒரு தங்கத்தருணத்தில், சங்கரின் விதைகள் வீங்கி வெடித்து, தன்னுள்ளிருந்த விந்தை வெள்ளமாக, வெளியே வேகமாக வீச, இதை, இந்த கணத்தை, எதிர்பார்த்திருந்த வேணியின் சிப்பி அழகாக தன் வாய் திறந்து, வெள்ளமாக வந்த விந்தில் ஒரு அணுவை தன்னுள் வாங்கிக் கொள்ள, பிரம்மன் மீண்டும் ஒரு முறை ஒரு ஆனி முத்தை உருவாக்கியதில், தன் கர்மத்தை சரியாக பண்ணிய திருப்தியில் புன்முறுவல் புரிந்தான். வெய்யில் தாழ்ந்து கொண்டிருந்தது, காற்றடிக்கவில்லை என்ற போதிலும் வெளியில் புழுக்கம் அதிகம் இல்லை. வானம் முழு நீலமாக, மேகங்களின்றிருக்க, தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சுகன்யா, காலையிலிருந்த மனப்பதட்டம் சற்றே குறைந்து, அமைதியாக செல்வாவுக்காக நடைபாதையில் காத்துக் கொண்டிருந்தாள். பொதுவாக அவன்தான் இவளுக்காக காத்திருப்பது வழக்கம். சுகன்யா தன் கையைத் திருப்பி வாட்ச்சில் நேரத்தைப் பார்க்க, மணி ஆறாகி பத்து நிமிடங்களைத் தாண்டியிருந்தது. சுகன்யா, தன் உடல் பளுவை, இரு கால்களிலும் மாற்றி மாற்றி தாங்கி நிற்பதனால், கணுக்காலில் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கிய வலி, சாலையில் செல்லுபவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல், அவள் உடம்பை கண்களால் துளைப்பது, அவர்கள் பார்வையில் நிறைந்திருந்த சபலம், காத்திருப்பதில் உள்ள சிரமம் அவளுக்குப் மெதுவாக புரிய ஆரம்பித்தது. செல்வா, பாவம் தனக்காக அதிகமாக அலுத்துக்கொள்ளாமல் எப்போதும் காத்திருப்பதை நினைத்து அவள் மனதில் அவனுக்காக பரிதாபப்பட்டாள். எங்கே போனான் இவன்? செல்லில் அவனைக் கூப்பிடலாமா? தன் நிற்க முடியாத இயலாமையை அவனுக்கு இனங்காட்ட விருப்பமின்றி, சரி ... இன்னும் ஒரு அஞ்சு நிமிடம் அவனுக்காக காத்திருந்து பார்க்கலாமென யோசித்துக் கொண்டே நின்றாள் சுகன்யா. "தான் ஏன் இந்த காதல் என்னும் புதிய பந்தத்தில் அவனுடன் சிக்கிக் கொண்டோம். இந்த புதிய பந்தத்தால் இன்று இவனுக்காக காத்து நிற்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இனி என் வாழ்க்கையில் நான் என் விருப்பங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, அடுத்தவர்களுக்காக, அவர்கள் போடும் ஆட்ட விதிகளுக்குட்பட்டுத்தான் வாழவேண்டுமா? இருவருக்குமிடையே ஏற்படும் விருப்ப முரண்பாடுகளினால், அதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் நான் உழலத்தான் வேண்டுமா? தன் சுதந்திரம் மொத்தமாக பறி போகவில்லை என்றாலும், தான் ஒரு விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதான ஒரு உணர்வு அவளை அலை கழிக்க ஆரம்பித்தது". தன் தாய், அடுத்து தன் மாமா முதற்கொண்டு, இப்போது வேணி, செல்வா, சாவித்திரி, அந்த கிழக்கோட்டான் என ஒவ்வொருவராக தன் வாழ்க்கையில் நுழைகிறார்களே? இன்னும் எத்தனை பேரின் ஆதிக்கத்துக்கு தான் உட்ப்பட வேண்டும் என்று நினைத்த போது, இது என்ன காதல், கத்திரிக்காய் என்று நான் என் நேரத்தையும், மன அமைதியையும் இழந்து கொண்டிருக்கிறேன்; தீடிரென அவளுக்கு ஆயாசம் பொங்க தன் மீதே எரிச்சல் வந்தது. "ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா?" சுகன்யா செல்லில் மீண்டும் செல்வாவின் நம்பரை அழுத்திக்கொண்டிருந்த போது, அவன் சாலையை நிதானமாக கடந்து வந்து, அவளை நெருங்கியதும், முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் கேட்டான். "அஞ்சு மணியிலேருந்து கால் கடுக்க நிக்கறேன்; எத்தனை தரம் போன் பண்ணேன், போனை ஏன் நீ அட்டண்ட் பண்ணல?" உதடுகளை சுழித்துக் கொண்டாள். "ஒரு நாள் ... ஒரு நாள் நீ எனக்காக நின்ன; நா...நான்ன்ன் எத்தனை நாள் உனக்காக ..." வார்த்தையை முடிக்காமல் விட்ட அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தான். "ம்ம்ம்ம் ...Tit for tot ... அதானே ... என்னைக்கும் நான் உன்னை வேணும்ன்னு காத்திருக்க வெச்சது இல்ல ... நான் உனக்காக எவ்வளவு நாள் வேணா காத்திருக்க தயார் செல்வா. அதை மட்டும் நல்லா புரிஞ்சுக்க. ஆனா இந்த மாதிரி ரோட் ஓரத்துல இல்ல. ரெண்டு நிமிஷம் முன்னாடி, தெருல போற ஒரு சொறி நாய், தன் காரை நிறுத்தி வர்றியாடி; ஆள் டக்கராத்தான் இருக்க; என்ன ரேட்டுன்னு கண்ணடிச்சுக் கேட்டுது. காலைத் தூக்கி செருப்பைக் காட்டினேன். "அப்ப ஏண்டி இங்க ஒரு மணி நேரமா நிக்கறன்னான்; ஒரு மணி நேரமா அவன் என்னை தன் கண்ணாலயே, இந்த சமூகம் சொல்லுதே, கற்பு கற்புன்னு, எனக்கு வரப்போறவனுக்காக நான் பொத்தி வெச்சிருக்கற அந்த கற்பை அவன் அழிச்சிருக்கான், இதுல உனக்கு சந்தோஷம்ன்னா, அந்த மகிழ்ச்சியை நீ அனுபவிக்கறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லே" அவள் குரலில் கசப்புடன் ஏளனமும் கலந்திருந்தது. "சாரி சுகன்யா; நான் சாதாரணமாத்தான் சொன்னேன். நீ நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன். இரண்டு பேருக்குமே இன்னைக்கு மூடு சரியில்லை". அவள் எரிச்சலும், கோபமுமாக பேசியதை கேட்டதும், ஒரு நிமிடம் அவனுக்குத் தான் தலைக்குப்புற தடுக்கி விழுந்தது போலிருந்தது. நான் ஏதோ சொல்லப் போய் அது வேறு எதுவாவோ மாறிப்போயிடுச்சே, அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். "மத்தியானம் சாப்பிடக் கூப்பிட்டேன்; அப்ப பிஸின்னு சொன்னே; இப்ப ஆபீஸ் முடிஞ்சு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு, போனை கூட எடுக்க கூட முடியாம அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தே?" அவள் எரிச்சல் குறையவில்லை. "சார்ஜ் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் பட்டியல் போட்டுகிட்டு இருந்தேன். நம்ம சீப் என் கேபின்ல வந்து உட்க்கார்ந்துட்டான். அப்ப அந்த சனியன் புடிச்ச சாவித்திரியும் கூட நின்னுகிட்டு வரட்டு பந்தா பண்ணிகிட்டு இருந்தா. டக்குன்னு எல்லாத்தையும் போட்டுட்டு எழுந்து வரமுடியல" அவன் தன் கைகுட்டையால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டான். "பரவாயில்ல... நீ எப்படி வேணா சொல்லு ... காலையில நான் யோசிக்கமா உங்கிட்ட பேசிட்டேன். அது என் தப்புத்தான். அதை உங்கிட்ட நான் ஒத்துகிட்டு மூணு தரம் சாரி சொல்லிட்டேன்." "இப்ப ஏன் நடந்து வர்ரே உன் வண்டிக்கு என்ன ஆச்சு செல்வா?" சுகன்யா தான் இயல்பாக இருப்பதாக அவனுக்கு காட்ட முயற்சி செய்தாள். "சர்வீசுக்கு விட்டிருக்கிறேன். காலையில பஸ்லதான் ஆபீசுக்கு வந்தேன்" தன் கையை அவன் உதறிக்கொண்டான். "சரி போகலாமா ... கையில என்ன ஆச்சு உனக்கு? உன்மையான அன்புடன் கேட்டவள், எனக்கு பசிக்குது செல்வா" அவள் அவன் வலக்கையை தன் இடக்கையில் எடுத்து கோத்துக்கொண்டாள், அவன் தோளுடன் தன் தோள் உரச நெருங்கி நடந்தாள். "ம்ம்ம் ... புழுக்கமா இல்லே" அவளுடன் நடக்க ஆரம்பித்தவன், அவள் கையிலிருந்து தன் கையை இயல்பாக விடுவிப்பது போல் எடுத்துக்கொண்டவன், சட்டைக் காலரை தன் இருகைகளாலும் தூக்கிவிட்டு கொண்டு தன் மார்பில் வாயால் காற்றை ஊதினான். "செல்வா! மழை நின்னுப்போச்சு; ஆனா தூறல் நிக்கலங்கற மாதிரி உனக்கு என் மேல இருக்கற கோபம் இன்னும் போகல அதானே? அவன் கண்களை அவள் ஆழமாக நோக்கினாள். "ச்சே... ச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல" அவள் பார்வையை அவனால் நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை. "அப்ப ஏன் என் கையை விலக்கிட்டு தள்ளி நடக்கறே?" இது வரை உறுதியாக இருந்த அவள் மனம் சற்றே இளகி, அவள் கண்கள் சட்டென கலங்கத்தொடங்கி, குரல் லேசாக தழுதழுப்புடன் வந்தது. "ச்சே... சுகு என்னம்மா இது, சின்ன புள்ளையாட்டம் எதுக்கெடுத்தாலும் அழறே; இன்னைக்கு நான் எது பண்ணாலும், எது பேசினாலும் அது தப்புத் தப்பாகி பிரச்சனையில போய் முடியுது" அவள் கண் கலங்குவதைப் பார்த்தவுடன் செல்வாவுக்கு தன் நெஞ்சே கலங்குவது போல் இருந்தது. சட்டென நெருங்கி அவள் தோளில் தன் கையை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். "இப்ப திருப்தி தானே உனக்கு ... என்னை அழ வெச்சுப் பாக்கணும்ன்னு நீ நினைச்சது நடந்து போச்சுல்ல, செல்வா! நீ உன் மனசுல புழுங்கிக்கிட்டிருக்கே; வெளியில எல்லாம் கூலாத்தான் இருக்கு", அவள் உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. தன் தோளில் அவன் கை விழுந்ததும், அவனை ஜெயித்துவிட்டதாக ஒரு உணர்வும் அவளுள் எழ , துடிக்கும் அவள் இதழ் ஒரத்தில் புன்முறுவலும் பளிச்சிட ஆரம்பித்தது. அவன் இடுப்பை, சுகன்யா தன் இடது கையால் வளைத்துக்கொண்டாள். அவள் இடது மார்பின் பூரிப்பும், செழுமையும், அவன் விலாவில் பதியுமாறு, அவனை ஒட்டி அவள் நடந்தாள். அவர்கள் நெருங்கி நடப்பதால் உண்டான உரசலில், மெல்லிய மின்சார அலைகள் அவர்கள் உடலில் ஓடி இருவரின் தேகங்களும் கிளுகிளுப்பை உணரத் தொடங்கின. செல்வாவின் மனம் அவனைப்பார்த்துச் சிரித்தது. இது என்ன வெட்கம் கெட்டத்தனமா இருக்கு; இவள் ஒரு பெண்; உடலால் என்னை விட வலுவில் குறைந்தவள். இவள் என் அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமும்; அவள் உடல் அருகாமையும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிடுகிறது. இவள் கண்கள் லேசாக கலங்குவதை பார்த்தவுடன், என் உடல் வெலவெலத்து கால்களில் வலு குறைந்து போகிறது. இந்த கண்ணீரில் இவ்வளவு சக்தியா? எனக்கு மிகப்பிரியமானவர்களில் இவளும் ஒருத்தி. இந்த எண்ணம்தான் என்னை இந்த அளவுக்கு வலுவற்றவானக ஆக்கிவிடுகிறது. என் மனம் அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரக்கிறது. என் கை விரைந்து அவள் தோளைத் ஆதரவாக தழுவுகிறதே! சை... இவகிட்ட ஒரு அடிமை போல சரியாக சிக்கிக்கிட்டிருக்கேன் நான். இவளின் கை என் இடுப்பை வருடுகிறது; அவளின் மார்ச்சதை என் மேல் லேசாக உரசுகிறது; இத்தனையில், இவளை இனிமேல் நான் தொடமாட்டேன் என்று காலையில் நான் எடுத்த முடிவும், வைராக்கியமும் காற்றில் பறந்து விட்டன. தன் மனம் விட்டு அவன் உரக்கச் சிரித்தான். மனம் விட்டு சிரித்ததால், தான் லேசானதைப் போல் உணர்ந்தான் அவன். "அப்பாடா... இப்பத்தான் உன் மூஞ்சி ஒரிஜினல் மூஞ்சா இருக்கு" அவளும் தன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். "எனக்கு இருக்கறது ஒரு மூஞ்சிதானே சுகு, அதுல ஒரிஜினல் என்ன டுப்ளீகேட் என்ன?" "ஒரு மூஞ்சிதான் உனக்கு, அதுல ஒன்னும் சந்தேகம் இல்ல; ஆனா, அதை காத்தாலேருந்து, நீதான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிக்கிட்டு இருந்தே. ஆமா இப்ப எதுக்கு இத்தனை பெரிய சிரிப்பு சிரிச்சே என்னைப் பாத்து" அவர்கள் ஒரு ஃபாஸ்ட் ஃபூட் கடைக்கு முன் நின்றிருந்தார்கள். "சொல்றேன், என்ன சாப்பிடறே" அவள் முகத்தைப் பிரியத்துடன் பார்த்தான். "வாழைக்கா பஜ்ஜியும் காபியும்" "சுகு, முதல்லா நீ சாப்பிடு, அப்புறம் காஃபி வேறெங்காவது குடிக்கலாம்". செல்வா, அவளுக்கு பஜ்ஜியும் தனக்கு பூரியும் வாங்கிக்கொண்டு சற்று தள்ளி சாலையோரம் இருந்த ஒரு கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். "இன்னைக்கு காலைல நீ உன் கேபின்ல என்னைத் தொடாதேன்னு சொன்னே" "செல்வா, பொய் சொல்லாதே, திருப்பியும் எரிச்சல் மூட்டாதே! ஆபீசுக்குன்னு ஒரு டெக்கோரம் இருக்கு, அதனால அங்க என்னைத் தொடாதேன்னு சொன்னேன்" "சுகன்யா, கேண்டீன்ல சாவித்திரி பொண்ணு பின்னால நான் போயிடுவேன்னு நீ என்னை சந்தேகப்பட்டே. அப்புறம் என் கையாலத்தான் தாலிக் கட்டிக்குவேன்னு டிக்ளேர் பண்ணே."அவன் சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் "ம்ம்ம்" என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "அதனாலே" "இனிமே உன் கழுத்துல தாலியை கட்டிட்டுத்தான் உன்னைத் தொடறதுன்னு, காலைலத்தான் நான் ஒரு தீர்மானம் எடுத்தேன்" அவன் சொல்ல சொல்ல அவள் முகத்திலிருந்த புன்னகை சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது. "அந்த முடிவுக்கு இப்ப என்னா ஆச்சு" அவள் பஜ்ஜியை வைத்து தின்றுக் கொண்டிருந்த காகிதத்தில் தன் கையை துடைத்து எறிந்து விட்டு, அவனை நெருங்கி உட்க்கார்ந்து அவன் தோளில் தன் கையை போட்டுக் கொண்டாள். கையழுத்து மறையும் நேரமாகியிருந்தது. "அது கால் மணி நேரத்துக்கு முன்னே காத்துல பறந்து போச்சு, அதுக்கு காரணமும் நீதான், எல்லா பொம்பளைங்களும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க, கண்ணுல தண்ணியைக் காட்டி ஆம்பளைங்களை கலங்க அடிக்கறீங்க; அதுக்கு மேல இந்த மனசுக்கு வெக்கமே இல்லடி; இந்த உடம்போ, மனசோ என் பேச்சை எங்க கேக்குது. உன் கண்ணுல தண்ணியைப் பாத்தவுடனே, உன்னை தொட்டுத் தடவி உனக்கு ஆறுதல் சொல்லனும்ன்னு மனசு பேயா பறக்குது. நீ என் கையை தொட்டதும், உன்னை கட்டிக்கணும்ன்னு என் உள்ளம் துடிக்க ஆரம்பிச்சுடுத்து." அவன் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான். "செல்வா, வெக்கம் கெட்டாத்தான் சுகத்தை அனுபவிக்க முடியும் போல இருக்கு. நீ என்னைத் தொடவேண்டாம். நீதான் தீர்மானம் பண்ணியிருக்கே; நான் எந்த ரெசொல்யூஷனும் எடுக்கலயே. தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னை தொட்டுட்டேன். நான் உன்னைத் தொடுவேன். நீ என்னைத் தடுக்க முடியாது. உன் கிட்ட நான் சண்டையும் போடுவேன்; சரசமும் பண்ணுவேன்; நான் சாதாரண ஆசாபாசங்கள் இருக்கற பொண்ணா வெக்கம் கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன்." சுகன்யா தன் கள்ளக் குரலில் மனம் உருகியவள், தன் இருகைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா இதை எதிர்ப்பார்த்தவன் போல் தன் உதடுகளை அவள் முத்தமிட இசைவாக விரித்தான். உதடுகளை விரித்தவன் கைகள் சும்மா இல்லாமல் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது; விரல்கள் அவளை வருடத் தொடங்க, முத்தமிட்டுக் கொண்டிருந்த சுகன்யாவின் இதழ்களில் அழுத்தமும் சூடும் கூட கூட, அவன் சுவாசம் நீண்டு, மூச்சு வெப்பமாக மாறியது. சூடான அவன் மூச்சு அவள் முகத்தில் பரவ, சுகன்யாவின் விழிகள் செருகிக் கொள்ள ஆரம்பித்தன. செல்வா, இறுக்கமாக பற்றியிருந்த சுகன்யாவின் அதரங்களிலிருந்து தன் உதடுகளை விடுவித்துக் கொண்டவன், தன் வாயைத் துடைத்துக்கொண்டு பின் கண்களில் விஷமம் ததும்ப மெல்லிய குரலில் பாடினான்: "பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன்..." "என்ன சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திருநீலகண்ட நாயனாரா வேஷம் போட்டுக்கிட்டு நான் கையைத் தொட்டா, கையை இழுத்துக்கிட்டு விலகி ஓடினீங்க; இப்ப தொண்டரடிப்பொடி ஆழ்வாரா மாறிட்டீங்க? அப்புறம் மொத்தமா சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு திரும்பவும் என்னை விட்டு ஓடிட மாட்டீங்களே? அவள் அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். "சுகும்மா, ஆழ்வார் கண்ணனுடைய அழகையும், அந்த அழகை தரிசனம் பண்றதனால கிடைக்கிற ஆனந்தம், சுவை மட்டும் தனக்குப் போதும்ன்னார். ஊர்ல காணியோ, உறவோ, எதுவும் தனக்கு வேணாம்ன்னுட்டார். நான் அவ்வள தூரம் ஆசையைத் துறந்தவன் இல்லை. நீ சொன்னா மாதிரி நானும் ஒரு சராசரி இளைஞனாத்தான் இருக்க விரும்பறேன். "நீ இப்படியே என்னை கட்டிப்புடிச்சு கிஸ் அடிச்சுக்கிட்டே இரு; உன் உதட்டோட சுவையும் அது தர சுகமும் மட்டும் இப்போதைக்கு எனக்குப் போதும்; வீடு, நிலம், வேற உறவுகள், இந்திரலோகம் அப்படி எதுவும் எனக்கு வேணாம்ன்னு சொல்றேன்." அவன் குரலில் காம வேட்க்கை இல்லை ஆனால் கண்களில் காதலின் ஒளி மின்னிக்கொண்டிருந்தது. செல்வா அவர்கள் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான்.

"ஏன் எழுந்துட்டே? இன்னும் கொஞ்ச நேரம் உக்காரலாமே" சுகன்யா அவன் கையைப் பிடித்து இழுத்தாள். "உன் கூட இருக்கணும்ன்னு எனக்கு மட்டும் ஆசை இல்லயா? மணி ஏழேகால் ஆச்சு; இருட்டிப்போச்சு, இப்பவே குடிகாரனுங்க வட்டம் போட ஆரம்பிச்சுட்டானுங்க; நீ ஒழுங்கா வீடு போய் சேரணும்" சொல்லிக் கொண்டே எழுந்த செல்வா, அவளையும் எழுப்பி, தன் மார்புடன் லேசாக அணைத்து, அவள் வாயில் ஒரு முறை முத்தமிட்டவன் அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான். செல்வா, தன் மீது வைத்திருக்கும் ஆசையையும், அவன் குரலில் தொனித்த கனிவான அக்கறையையும் உணர்ந்த சுகன்யாவின் மனதில் மகிழ்ச்சியின் அலைகள் அடிக்கத் தொடங்கின. அவர்கள் நம்பிக்கையுடன் கையை கோத்துக்கொண்டு நடக்க நடக்க, அவர்களின் நிழல்கள் முன்னும் பின்னுமாக அவர்களை துரத்தத் தொடங்கின.

No comments:

Post a Comment